விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.24
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/178
250
22760
1926766
743991
2026-04-25T03:57:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|148||அழைப்பு}}</noinclude>என் கண் முன்னே காணமுடிகிறது. உனக்கு நினைப்பிருக்கிறதா?
உன் தலையில் ஒரு பூமாலை இருந்தது. நீ, சின்னஞ்சிறிய பெண்.
கல்லுக்குக் கல், ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லுக்குத் தாவிக்
குதித்தாய். நினைவிருக்கிறதா? அந்த நாள்தான், விசேஷமான
அந்த நாளில்தான், என் இதயம் தெறித்தது...”
முந்திய சந்தர்ப்பத்தைப் போலவே இப்போதும் நிகழ்ந்தது.
ஸோரோ தன் முழு உயரத்துக்குத் தன்னை
நிமிர்த்திக் கொண்டான். அவன் கண்கள் கலங்கின. தூரத்து மலைகளைப்
பார்த்தவாறே... கிழவி, அமைதியின்றி அவன் முன் நின்று,
பாதி மூடிய அவனது விழிகளைத் திருத்தமில்லாது பார்த்துக்
கொண்டு.
“உள்ளே போகலாம், சகோதரன் ஸோரோ.”
“இல்லை. உள்ளே வேண்டாம்; உள்ளே வேண்டாம்; என்
கண்ணே” என்று ஸோரோ பலமாக ஆட்சேபித்தான்.
தோட்டத்தின் உட்புறத்தில் இளம் ஆப்பிள் மரம் ஒன்று
நின்றது. “அங்கே, அந்த மரத்தடிக்கு!” என்றான் அவள்.
பிறகு, பித்தளைப் பாத்திரத்தில் ஒயின் கேட்டான். தன்
கம்பை எடுத்துக்கொண்டு நடந்துபோய் ஆப்பிள் மரத்தின் கீழே
உட்கார்ந்தான்.
“என் வியாபாரம் நேர்மையானது, அலெஹ்.” முதியவளின்
கையிலிருந்து அவன் ஒயினை எடுத்துக்கொண்டான். “மாராதுக்
எனக்கு உதவிபுரியட்டும்!” என்றான். ஒயினைக் குடித்துவிட்டு
வியாபார ரீதியில் அமர்ந்தான்.
“நல்லது. ஸோரோ ஏன் வந்திருக்கிறான் என்று இப்போது
கேள்.”
“நாம் அறிமுகமானவர்கள். நண்பர்கள்கூட, சகோதரன்
ஸோரோ, ஒரே ஊர்க்காரர்கள். இவ்விதம் பார்க்க வருவது
சர்வசாதாரணம். உலகம் நெடுகிலும் சகஜம்தானே!”
“இவ்வளவுதானா, அலெஹ்?... நான் உன்னிடம் சொல்லிக்
கொண்டிருந்தேனே.” ஸோரோ ஏப்ரிகாட் மரத்தை நோக்கிக்
கையை நீட்டினான். “அந்த நாள் இன்றுபோல் இனிமையானது.
என் இதயம் உனக்காகச் சிதறியது, அலெஹ்.”
லோரோ பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனால் முதியவள்
அவனை விசித்திரமாசுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“தின்பதற்கு ஏதாவது கொண்டு வரட்டுமா, சகோதரன்
ஸோரோ?”{{nop}}<noinclude></noinclude>
g9c505oa9lu8x3pc1q5l77qpa3hchh1
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/179
250
22761
1926770
743992
2026-04-25T04:04:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மூஷேக் கால்ஷோயன்||149}}</noinclude>“உணவு வேண்டாம். ஒயின் மட்டும். தயவுசெய்.”
“ஓ மாராதுக்!” ஸோரோ மவுனமாக உதவி வேண்டினான்.
“உனது புனிதக் கரத்தால் மூட்டிவிடப்பட்ட நெஞ்சத் தீ உன்
புனிதக் கரத்தாலேயே திருப்தி அடைந்து குளிரட்டும்!”
கிழவி திரும்பி வந்ததும் ஸோரோ தன் பேச்சைத் தொடர்ந்தான்:
“அன்று மாருத் மலையின் உயரமான மடம் உன் அன்பை
என் இதயத்துள் புகுத்திய அந்த வசந்த நாளில், அலெஹ்,
நீ இவ்வளவு உயரம்தான் இருந்தாய்...” அவள் தரைக்குமேல்
சிறிது அளவு அடையாளம் காட்டினான். “உனக்குத் தெரியுமா?
அன்றைக்கே, அலெஹ், காலணி எதுவுமின்றிப் பனி நனைத்த
பாதங்களுடன் இருந்த அலெஹ், பூமாலை சூடிய அலெஹ்,
என்னுடைய அலெஹ் என்று நான் உணர்ந்தேன். அவள் என்
அலெஹ். எனக்குச் சொந்தமான அலெஹ். தெரிகிறதா?...
அன்று மாருத் எனக்கு ஒரு காதலியைத் தந்தது. ஆனால்
மறுநாளே கட்டுப்பாடில்லாத ஜனங்கள் அவளை அபகரித்துச்
சென்றார்கள்.... ஒரு கடுவாய் இளம் பிராணிகளின் மந்தைக்குள்
புகுந்தது. அங்கே கொலையும் அழிவும், பிடுங்குவதும் ஓடுவதும்
கொள்ளையிடுவதும் நிகழ்ந்தன. சூரியன் கறுப்பாகிவிட்டது...
அன்று சூரிய கிரகணம். அலெஹ், நீயும் நானும் ஒருவரை
ஒருவர் இழந்தோம். நான் சொல்வது சரிதானா, என் கண்ணே?”
கிழவன் ஒயின் குடித்தான். சிகரெட் பற்ற வைத்தான்.
மறுமொழிக்காகக் காத்திருந்தான். கிழவி மவுனமாக
இருந்தாள். அவள் கழுத்து ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருந்தது.
அவளுடைய மெலிந்த விரல்கள் பச்சை இலைகளோடு விளையாடிக்
கொண்டிருந்தன.
“நீ இப்பவும் என் அலெஹ்தான்” என்று கிழவன் முணுமுணுத்தான்.
“அந்தத் தொலைதூர நாள் கெட்டுப்போகவில்லை,
அலெஹ். இன்றும் அது நிலைத்திருக்கிறது. அந்த
வசந்த நாள் இன்று போலவே என் கண் முன் நிற்கிறது... ஆடுகளும்
குட்டிகளும் மாருத் மலையின் அடிவாரத்தில் துள்ளிக்
கொண்டிருக்கின்றன. நீ...”
ஓ, முந்திய நாள் காலை நேரம் மாதிரித் தோன்றிய அந்தக்
கடந்துபோன வசந்த நாள், மென்மையான வெல்வட்டிலும்
வர்ணங்களிலும் அனைத்தையும் பொதிந்து வைத்த இனிய
பொழுது, அவனைவிட்டு அகன்று செல்லாது. ஸோரோ மீண்டும்
அதை வர்ணித்தான்.
“இப்படியாக.. மாராதுக் என்னில் காதலைப் பதிவு
செய்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் புனிதமான<noinclude></noinclude>
s2z0iatjb0od74twoqc7upxy732hjif
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/180
250
22762
1926772
743994
2026-04-25T04:11:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|150||அழைப்பு}}</noinclude>பாபம் என் உள்ளத்தில் இருக்கிறது, அலெஹ்... வா, உன்
இடுப்பு வாரைக் கட்டிக்கொள். நாம் போகலாம், என்
கண்ணே|”
முதியவள் திகைப்படைந்து, “எங்கே?” என்று கேட்டாள்.
“எங்கே என்றா கேட்கிறாய்? பின்னே நான் யாருக்காக
அந்தக் கதை எல்லாம் சொன்னேன் அலெஹ்? வா, நாம்
ஒன்றாகச் சேர்ந்து நம் கிராமத்துக்குப் போவோம். நன்மையைக்
கருதி நான் என் வீட்டிலிருந்து விலகிவிட்டேன். எனக்கு
இன்னும் சில வருஷ வாழ்வே எஞ்சியிருக்கிறது. அந்த வருஷங்களை
நாம் இருவரும் ஒன்றாய்ச் சேர்ந்து, மாராதுக்கின்
விருப்பத்துக்கிணங்க வாழ்வோம்.”
“இவனுக்குப் பைத்தியமா?” கிழவி தன் வாயைக் கையால்
பொத்திக்கொண்டு, தனிமொழிபோல் பேசினாள். ஸோரோ
முன் வைத்த ஒயினை எடுத்துவிடத் தயக்கத்துடன் முயன்றாள்.
“இல்லை. ஒயின் இல்லை...! அதுக்கும் ஒயினுக்கும் என்ன
சம்பந்தம்? அது ஒயினால் ஏற்படவில்லை, அலெஹ். இதனால்
வந்தது.” அவன் கையைத் தன் இதயத்தின்மேல் வைத்தான்.
“இதுதான், என் கண்ணே, இதுவே... யாருக்காக நான் அந்த
நேர்த்தியான கதையைச் சொன்னேன், அலெஹ்? நீயும் நானும்,
நமது இரண்டு தலைகளையும் ஒரே தலையணையில் வைத்துப் படுப்பதற்கில்லை
என்றால், பின் அந்தப் பிரகாசமான காலை நேரம்
உலகத்துக்கு ஏன் வந்தது?...”
“அது உண்மையாக வருவதற்கில்லை என்றால், அது உண்மையாகவே
நிகழாது போகுமானால், அந்த நீல வர்ணக் காலை ஏன்
பிறந்தது? ஸோரோ தனது சின்னஞ்சிறிய அன்பான அலெஹை
அன்று காலையில் கண்டு, மாலைக்குள் இழப்பது என்றால், அந்தப்
பிரகாசமான காலை ஏன் நிலைத்திருந்தது, அலெஹ்?... உலகத்தின்
பாபத்தை அதிகப்படுத்துவதற்காக அது வந்துவிட்டு அகன்று
போனதா? அது ஸோரோவின் உள்ளத்தை ரணப்படுத்திவிட்டுப்
போக வந்ததா? உலகத்தில் இத்தகைய இனிமையான விஷயம்
இருக்கிறது என்று ஸோரோவிடம் சும்மா சொல்லிப் போகவா
வந்தது, அலெஹ்? அது ஒரு கனவா? அழகிய கதையா? இல்லை.
அந்த ஒளிமயமான காலை இருந்தது, இன்னும் இருக்கிறது. வா.
உனது இடுப்பு வாரை மாட்டிக்கொள். நாம் போவோம்.”
ஸோரோவின் குரல் அதிகாரத்துடன் தொனித்தது.
“சகோதரன் ஸோரோ, நீ உன் அறிவை இழந்துவிட்டாய்.”
முதியவள் வருத்தப்பட்டாள்.{{nop}}<noinclude></noinclude>
tpw1ye7ojbdr48tws7gm2ikycth3jkx
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/181
250
22763
1926774
743995
2026-04-25T04:18:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மூஷேக் கால்ஷோயன்||181}}</noinclude>“நான் உன்னை பலவந்தமாய்த் தூக்கிப் போவேன்” என்று
ஸோரோ தரையை முஷ்டியால் தட்டிக்கொண்டே சொன்னான்.
கிழவி தன் உள்ளங்கைக்குள் அடக்கமாகச் சிரித்தாள்.
“நீ என்னை எப்படிக் கடத்திச் செல்வாய், சகோதரன்
ஸோரோ?”
“நீ ரொம்பச் பின்னவள். ஒரு கைப்பிடி அளவே இருக்கிறாய்.
நான் உன்னை ஒரு பைக்குள் திணித்து.. ஊரைவிட்டு
வெளியேறுகிற வரை சிரமமாக இருக்கும். அதன் பிறகு உலகம்
முழுவதுமே என்னைத் துரத்தி வந்தாலும் அலெஹ் என்னுடைய
அலெஹ்தான். நான் உன்னைக் கடத்திப் போவேன்” என்று
ஸோரோ உறுதியோடு திரும்பவும் சொன்னான்.
முற்றத்திலிருந்து ஒரு ஆண்குரல் அலெஹைக் கூப்பிட்டது.
அந்தக் குரல் டெலிபோன் அழைப்பு மாதிரி, “ஹல்லோ..!”
என்று ஸோரோ காதில் விழுந்தது.
“அது என் கணவர்” என்று முதியவள்
அவசரமாக எழுந்தவாறு சொன்னாள்.
“உன் புருஷன் நல்ல மனிதன்தாள். ஆனாலும் நான் உன்னைத்
தூக்கிப் போவேன்; இரவில்...” அவன் அவள் ஆடை விளிம்பைப்
பற்றி இழுத்து, ரகசியமாகச் சொன்னான்: “உன் வாயை மூடிக்
கொண்டிரு. ஒரு வார்த்தையைக்கூட வெளியிட்டுவிடாதே”
கிழவி திரும்பவும் அடக்கமாகச் சிரித்தாள். முன்தானை
ஓரத்தால் வாயைத் துடைத்துக்கொண்டாள்.
“எழுந்திரு.சகோதரன் ஸோரோ. வீட்டுக்குள் வா.”
“வீட்டுக்குள் நான் என்ன செய்யக் கிடக்கிறது? நான்
ஊருக்கு வெளியே பதுங்கியிருப்பேன். இருட்டு வந்ததும்,
திரும்பி வந்து உனக்காகக் காத்திருப்பேன். கடவுள் பேரால்
சொல்கிறேன், நான் அவ்விதம் செய்வேன்.”
வீட்டுக்காரன் மறுபடியும் கூப்பிட்டான்.
“நான் இங்கே இருக்கிறேன். சகோதரன் ஸோரோ
வந்திருக்கிறார்” என்று அலெஹ் பதிலளித்தாள்.
ஸோரோ திரும்பவும் கிழவியின் ஆடையைப் பற்றி
இழுத்தான்; பற்களைக் கடித்தான்; முஷ்டியை ஆட்டினான்.
“நான் உன்னைத் தூக்கிப் போவேன், அலெஹ், என்ன ஆனாலும் சரி, நான் உன்னைக் கடத்திச் செல்வேன்” என்று முணுமுணுத்தான்.{{nop}}<noinclude></noinclude>
enqeqnbdsofe621jhniowx9a0cx6yvp
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/182
250
22764
1926778
743996
2026-04-25T04:31:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|152||அழைப்பு}}</noinclude>வீட்டுக்காரன் அங்கே வந்தான். “நல்லது! நீயா? வாவா.
ஒயின் வேண்டுமா?” என்று கேட்டுச் சிரித்தான்.
“மிக அதிகம் தேவை, சகோதரா” என்று ஸோரோ
ஒப்புக்கொண்டான். “உன் ஒயினைப்போல் உலகத்தில் வேறு
எங்குமே இல்லை. இருக்கவும் இருக்காது. பெருமைப்படுவதற்கும்,
என் தலையை உடைப்பதற்கும் உனக்கு உரிமை இருக்கிறது.”
இப்படியும் அப்படியுமாக, அந்தக் குடும்பம் கூடியது.
இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள், பேரக் குழந்தைகள்
எல்லோரும் கூடி, உணவு உண்ண அமர்ந்தார்கள்.
“கலகலப்பான ஒரு வீட்டின் சாப்பாட்டு அறைதான்”
என்று ஸோரோ பாராட்டுதலாக எண்ணினான். “கல்யாண
விருந்து மாதிரி மாராதுக் பேரால், இது எனக்கும்
அலெஹுக்கும் கல்யாணம்.”
அது உண்மையிலேயே சந்தோஷமான குடும்பம்தான்.
அலெஹின் மகன்கள் உற்சாகத்தோடு இருந்தார்கள். அவன்
ஒயின் வாங்க வந்த தினத்தில் அவர்கள் வீட்டில் இல்லை. பிறகு
அவர்கள் தெரிந்துகொண்டார்கள்—ஒரு ஆள் வந்தான். அவர்களுடைய
அம்மாவின் ஊரைச் சேர்ந்த வயோதிகன். சுவாரஸ்யமான மனிதன்.
அவன் பித்தளைப் பாத்திரத்தால் மிக நிறைய
ஒயின் குடித்தான். பாடினான், குடித்தான். குடித்தான்,
பாடினான். அவனை நிலவறையிலிருந்து சிரமத்தோடுதான்
வெளியே கொண்டுவந்தார்கள். பிறகும் அவன் திரும்பி
வந்தான். ஆனால், பரிதாபம், அப்பொழுதும் அவர்கள் அவனைப்
பார்க்கவில்லை. இதோ அந்த சுவாரஸ்யமான கிழவன் இப்போது
அவர்களின் விருந்தாளி. அவன் அடர்த்தியான வெள்ளை மீசை
வைத்திருக்கிறான். ஆழ்ந்த சுருக்கங்கள் கொண்டிருக்கிறான்.
உரக்கப் பேசுகிறான். மதுவைச் சுவைத்து அடிவரை குடிக்கிறான்.
உடனேயே தன் கிளாஸை நிரப்புகிறான்.
“நீங்கள் எங்களுக்கு மாமா” என்றான் இளைய மகன்.
அவன் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான். “எங்களுக்கு
அம்மா வழியில் பந்துக்களே இல்லை. நீங்கள்தான் உண்மையில்
எங்கள் அம்மா வழி மாமா.”
“நீ என்னை அந்நியனாக, அல்லது உன் மாமாவாக மதிப்பது
உன் சொந்த விஷயம்” என்று மனசுக்குள் பதில் கூறினான்
ஸோரோ. “ஆனால் இன்றிரவு நான் உன் அம்மாவைக் கடத்திச்
செல்லப்போகிறேன். நான் அவளைத் தூக்கிப்போவேன், பையா.”
இளைய மகன் அதிகம் அம்மாவை ஒத்திருந்தான்.{{nop}}<noinclude></noinclude>
hmi9opldjzcd5bxaoo7h7zmevmirjso
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/183
250
22765
1926780
743997
2026-04-25T04:40:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மூஷேக் கால்ஷோயன்||153}}</noinclude>‘அந்தப் பையன் என் மகனாக இருந்திருக்க வேண்டியவன்’,
என்று ஸோரோ நினைத்தான். “யார் உன் மனைவி, என்
ஆட்டுக்குட்டியே?” எனக் கேட்டான். அவள் மனைவி,
ஸோரோவை அடுத்து உட்கார்ந்திருந்தவள், கருணை உள்ளம்
கொண்ட பெண்ணாகத் தோன்றினாள். அவன் அவள் கூந்தலை
வருடினான். (‘இந்த இனிய இளம் பெண் என் மருமகள்’ என்று
எண்ணினான்.
“உன் ஆரோக்கியத்துக்காக!” அவன் ஒன்றன் பின் ஒன்றாக
இரண்டு கிளாஸ்கள் குடித்தான். பையனை அதிகக் கூர்மையாகக்
கவனித்தான். பையனின் கருமணிகள் ஆனந்தத்தால் ஒளிர்ந்தன;
அவன் கண்களில் பாடல்கள் இருந்தன. நிச்சயமாகப் பாடல்கள்
இருந்தன. இந்தவிதமான கண்களை உடைய இளைஞர்கள்
அனைவரும் பொதுவாக நல்ல குரல் பெற்றிருந்தார்கள் என்பதை
அவன் கவனித்திருந்தான்.
“நீ பாடுவாயா, என் ஆட்டுக்குட்டியே?”
“பாடுவேன்” என்று பையன் சந்தோஷமாய்ச் சொன்னான்.
“அப்படியானால், என் குடிக்கு நீ ஒரு பாட்டுப் பாடு!”
பையன் பாடியபோது அவன் மீண்டும் குடித்தான். அவன்
கண்களில் பனி படர்ந்ததை உணர்ந்தான்... இவ்வளவு
சீக்கிரமா?... ஒரு சிறு கோப்பையால் ஒரு சில தடவைகள்
தானே அவன் குடித்திருந்தான்... இனிமேல் குடிக்கக்கூடாது...
ஸோரோ விருந்து சாப்பிட வரவில்லை... அவன் மகன்கள்
குடிக்கட்டும்... ஆனால் அவனுக்கு ஒரு தோக்கம் உண்டு...
அலெஹ் எங்கே இருக்கிறாள்?
முதியவள் உள்ளும் புறமுமாக, அழகாய் சீராக நடந்து
கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் புன்முறுவல் நிலைத்திருந்தது.
“நீ நீண்டகாலம் வாழ்வாயாக, என் சிறுவனே.” ஸோரோ
கோப்பையை உதட்டருகே கொண்டு போனான். தயங்கினான்
குடிக்கவா, வேண்டாமா? ஆனாலும் குடித்தான்.
“உனக்கு இதைவிடப் பெரும்பேறு சித்திக்கட்டும் ஆனால்
அது உன் பாடல் இல்லை. நீ பாட வேண்டிய பாட்டு வேறு
ரகமானது... இப்போ கவனி. நான் என் பாட்டைப்
பாடுகிறேன்.”
பாடத் துவங்குவதற்கு முன் ஸோரோ சுண்களை மூடி, தலை
குனிந்து இடுப்பையும் தோள்களையும் அங்கும் இங்குமாக<noinclude></noinclude>
s01y7m00qm5sx1gkdtkn834xh0j0tiz
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/184
250
22766
1926781
743998
2026-04-25T04:46:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|154||அழைப்பு}}</noinclude>அசைத்தான். ஆடியவாறே இருந்தான், பிறகு நீண்ட குரல்
எழுப்பினான். ஹேயீஈ... ஈ ஈ... ஆ.'' அந்த அழைப்போடு
அவன் தன் கையைத் தலைக்கு உயர்த்தினான், பாடலானான்...
முதுமையால் உடைந்து கரகரத்த குரலால் அவன் பாடினான்.
மூடிய கண்களோடு, தன்னையே மறந்து, ஓ. ரொம்ப வருத்தமாகவும்
துயரத்தோடும் தோன்றியபடி பாடினான்.
பாட்டு இயற்கை பற்றியது: கற்களும் வர்ணமயப் பூக்களும்
நிறைந்த, ஒரு வண்டியும் சரிவின்மேல் வளைந்து செல்லும்
பாதையும் கொண்ட, மலைகளைப்பற்றியது. உக்கிரமாக உழுகிற
ஒரு குழு வானத்தை நோக்கி உயர்ந்து செல்வதைப்பற்றியது.
மலைப்புறம் நெடுகிலும், சூரிய ஒளியில் மின்னியபடி பரந்து
கிடந்த தினை வயல்களைப்பற்றியது.
ஸோரோ கையைத் தலைக்கு மேல் தூக்கிப் பிறகு கீழே
போட்டான். ஒரு பாட்டில் உருண்டு விழுந்தது. அவனுக்கு
அருகே இருந்த இளம் பெண் கிழவனின் பாடும் கைக்கு இடம்
விட்டு ஒரு பக்கமாக ஒதுங்கினாள்.
பாட்டு, பச்சைக் கம்புகள் வைத்திருந்த ஆடு மேய்ப்பவர்கள்
பற்றியும், அழகிய முன்தானையோடு காய்கறிகள் சேகரித்த
பெண்கள்பற்றியும் இருந்தது.
பாட்டு இயற்கைபற்றியும், காதல்பற்றியும் இருந்தது.
ஸோரோ பாடி முடித்தான். ஆயினும் அவன் இன்னும்
பாடலோடு அசைந்தாடிக்கொண்டிருந்தாள். அவன் கண்கள்
இன்னும் மூடியிருந்தன. பக்கவாட்டில் சாய்ந்து அவன்
கூப்பிட்டான், “அலே-ஏஹ்...!”
அதுவும் ஒரு பாடலா, ஒரு பாட்டின் கடைசி அடியா?
அல்லது தன் முதிய மனைவியின் பெயரா? வீட்டுக்காரனால் புரிந்து
கொள்ள இயலவில்லை.
எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு,
அலெஹ் மேஜையின் ஓரத்தில் குறுகிக் குழம்பி உட்கார்ந்தாள்.
சற்று நேரத்துக்கு முன்பிருந்த மகிழ்ச்சி மறைந்துவிட்டது.
அவள் உதடுகளின் ஓரங்களில் ஒளிந்திருந்த புன்னகை போய்
விட்டது. வருத்தமும் கலக்கமும் கொண்ட சின்னஞ் சிறிய
கிழவி தன் ஊர்க்காரனையே பார்த்தவாறு இருந்தாள்.
“அலெஹ்!” ஸோரோ சன்னலுக்கு வெளியே பார்த்தான்.
சூரியன் இதற்குள் மலைகளின்மேலே சென்றுகொண்டிருந்தது.
“உலகத்தில் சூரிய அஸ்தமனமே இருக்கக்கூடாது என்று<noinclude></noinclude>
e9ph7bhrk9bp3o07etrb7ibni6rix3r
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/185
250
22767
1926785
743999
2026-04-25T04:52:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|மூஷேக் கால்ஷோயன்||155}}</noinclude>விரும்புகிறேன்” என்ற ஸோரோ பாட்டு மாதிரி நீட்டினான்:
“நண்பகல் வேண்டாம், அஸ்தமனம் வேண்டாம், மாலை நேரம்
வேண்டாம், இரவும் வேண்டாம், கோடை வேண்டாம், மாரிக்காலம்
வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். வசந்தம்
மட்டுமே இருக்கவேண்டும்... வசந்தகாலமும் காலை வேளையும்
மட்டுமே... முதியவராக வளர்வது இருக்கக்கூடாது என்று
விரும்புகிறேன், அலெஹ். குழந்தை குழந்தையாகவே இருக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் அந்த அழகிய கல்
மேலும், பனி படிந்த பச்சைப் பயிர்களுக்கு மத்தியில் நீ உன்
தலையில் ஒரு பூமாலையோடும் இருக்கவேண்டும், அலெஹ்...”
“அம்மா, அவர் உன்னை நோக்கித்தான் பேசுகிறார்!”
எல்லோரும் கிழவனின் தனிமொழியை அமைதியாய்க் கேட்டுக்
கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரனின் இனைய மகன் நெகிழ்ந்து
போனான். “ஸோரோ மாமா உன்னிடம்தான் சொல்கிறார்
அம்மா!... அவர் பக்கத்தில் வந்து உட்காரு.”
ஆனால் அம்மாவுக்கு எழுவதற்கே சிரமமாக இருந்தது.
மகன் உதவினான். அவன் அம்மாவை இட்டுவந்து ஸோரோ
அருகில் அமர்த்தினாள்.
“ஓ, மாராதுக்!” ஸோரோ எழுந்து, முதியவளை எடுத்துத்
தன் மடிமீது வைத்தான்.
உடனே அவள் தன் முகத்தைத் கிழவனின் மார்பில்
புதைத்தாள். ஸோரோ தனது தலையைத் தாழ்த்தினான். அவன்
கன்னம் அலெஹின் தலைமுடியைத் தொட்டது. அவன் லேசாக
அசைந்து, அரைவாசி மூடிய கண்களால் சன்னலுக்கு வெளியே
நோக்கி, இசைபோல் இழுத்துக் கூப்பிட்டான்!
“அலே-ஏஹ்...! அலெஹ், என் கண்ணே, அலே-ஏ-ஏஹ்...!”{{nop}}<noinclude></noinclude>
eoo7xhii6sqsca13tk8zfk402das5ap
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1926672
1926353
2026-04-24T14:36:16Z
Booradleyp1
1964
1926672
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
6qf7g6pgfuewixjdvkuveadqagv7pp4
1926699
1926672
2026-04-24T14:56:13Z
Booradleyp1
1964
1926699
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
aihhzpjd2gogw6vm50ox52syvyicysy
1926725
1926699
2026-04-24T15:11:21Z
Booradleyp1
1964
1926725
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
amdskiupnw3j3ok1psuignqjd0uad4l
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/530
250
573980
1926668
1926362
2026-04-24T14:35:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|508 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சமூக விரோதிகளை அடக்கவே ‘எமர்ஜென்சி’ கொண்டு வரப்பட்டது என்ற இந்திராகாந்தியின் வாதத்தை வலுவிழக்கச் செய்தது.
அவசர நிலைமைக்குப் பிறகு கைதாகி காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒரு தேதி குறிப்பிட்டுச் சொல்வது கடினம். முதலில் அந்தத் தலைவர்கள் வன்முறைகளைக் கைவிடுவார்கள் என்பது உறுதியாக வேண்டும். அதன்பின்னரே அடுத்த நடவடிக்கைகளைச் சிந்திக்க இயலும்” என்று கூறினார்.
அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பரூவா அவர்கள் பம்பாயில் சிவாஜி பூங்காவிலே பேசும்போது “பிரதமர் இந்திராகாந்தி ஆர். எஸ். எஸ். இயக்கத்தைத் தடை செய்து விட்டார். தி. மு. கழகமும் ஒழுங்காக நடக்காவிட்டால் அதற்கும் அதே கதி நேரலாம்”. என்று கூறினார். அதே பரூவா அவர்கள் டெல்லியிலே பேசும்போது “மத்திய அரசுதான் தேசிய அரசு, இந்தியாவின் மெட்ரோ பாலிடன் அரசு; மற்ற மாநில அரசுகள் எல்லாம் முனிசிபல் அரசுகளே” என்று கூறினார்.
{{nop}}<noinclude></noinclude>
nwrbp5acrofida22s5zq1o36pbhzjg9
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/531
250
573981
1926681
1926364
2026-04-24T14:41:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>70</b>}}
{{larger|<b>வையம் புகழ் வள்ளுவர் கோட்டம்</b>}}
{{X-larger|<b>1976 -</b>}} ஆண்டு ஜனவரித் திங்கள் இந்திய நாட்டு வரலாற்றிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற காலகட்டங்களில் ஒன்றாகும். அந்தத் திங்கள் கடைசி நாள் மாலையில்தான் கழக ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தியை எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செய்தி நிறுவனத்தின் இயந்திரம் ஆங்கிலத் தட்டச்சு எழுத்துக்களின் மூலம் வழங்கியது.
ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாக நெருக்கடி நிலையை எதிர்த்தமைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்திராகாந்தி அம்மையாரின் அரசு தந்த தண்டனை அது! ஆனால் கழகமோ அதனைக் களத்தில் பட்ட விழுப்புண்ணாகத் தான் கருதிக்கொண்டது.
கழக வரலாற்றில் ஒரு மாபெரும் சோதனைக் கட்டத்தையும், அடக்குமுறைகளைத் தாங்கும் உச்சக் கட்ட நிலையையும், இழித்தும் பழித்தும் அழித்துவிடத் துணிந்த மத்திய அரசினரின் கொடுமைகளை உறுதியோடு சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் அந்த ஜனவரி 31 –ஆம் நாள் மாலை நேரம்தான் தொடங்கி வைத்தது என்று கூறலாம்.
அந்த வேளை வருவதற்கு முன் அந்த மாதத்தில் உருண்டோடிய நிகழ்ச்சிகள் சிலவற்றை நினைவுகூர்தல் வேண்டாமா?
கன்யாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரேயுள்ள மற்றொரு பாறையில் 75 அடிஉயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றினை, பத்து லட்ச ரூபாய் செலவில் வைப்பது எனக் கழக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவு ஜனவரி முதல் நாள் ஏடுகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
கழக ஆட்சியின் அந்தத் திட்டம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியும்கூட இதுவரையில் நிறைவேறவில்லை. ஆனால் எனது உள்ளத்து உன்னத குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த வள்ளுவர் கோட்டத்தின் வேலைகள் அனைத்தும் முற்றுப் பெற்று அதன் திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும்,<noinclude></noinclude>
glzy8p6wccm2j1ms4ncloj6mkj06828
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/532
250
573982
1926682
1926373
2026-04-24T14:43:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|510 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விழா எத்தகைய சிறப்புடன் தமிழ்த் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்ற திட்டங்களைத் தீட்டவும் ஜனவரி 8 - ஆம் நாளன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான், நாவலர், பேராசிரியர், ப. உ. சண்முகம், மாதவன், ராஜாராம், ராமச்சந்திரன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், ஏ.வி. மெய்யப்ப செட்டியார், ஏ. எல். சீனுவாசன், எம். எம். ஏ. சின்னப்பாதேவர், நகர ஷெரீப் ராம கிருஷ்ணன், துணை ஷெரீப் சரவணன், கே. வி. சீனுவாசன், திரையரங்க உரிமையாளர் சார்பில் ராஜகோபால் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான திட்டங்கள் வகுத்தோம்.
பிப்ரவரி திங்கள் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவைக் கழக அரசு முன்னின்று நடத்துவதென நாள் குறிக்கப்பட்டது.
திருக்குறள் சுவடி பொறித்த வண்ணக்கொடியினை ஏந்திட திருக்குறளில் உள்ள 1,330 பாக்களை விளக்கும் வகையில் - 1,330 மாணவர்கள், 1,330 மாணவிகள், 1330 ஆசிரியர்கள், 1,330 ஆசிரியைகள் அந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வார்கள். திருக்குறளின் முப்பாலை எடுத்துக் காட்டும் வகையில் தஞ்சை முத்துப் பல்லக்குகள் மூன்றில் திருக்குறள் சுவடி வைத்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும். ஊர்வலத்தின் முகப்பில் 13 யானைகளும்-133 குறள் அதிகாரங்களை விளக்கும் வகையில் 133 குதிரைகளில் வீரர்களும் அமர்ந்து செல்வார்கள். அலங்கார வண்டிகளில் திருக்குறள் சிற்பங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரக் கச்சேரிகள் போன்றவை இடம் பெறும் என்றும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை கழக அரசு நிறைவேற்றுவதற்கு முன்பு ஜனவரி 31 மாலையிலேயே கலைக்கப்பட்டு விட்டது. அரசியல் சூழ்நிலையின் காரணமாக எஞ்சியிருந்த அதனுடைய அமைப்புப் பணிகளும், அதன் திறப்பு விழா நிகழ்ச்சியும் அறவே நின்றுவிடுமோ என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் கவலைப்பட்டன. ஆனால் 1976 - ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் என்ற செய்தி வந்தது.
{{nop}}<noinclude></noinclude>
rojm2iv414znu2j47guatoowrmw6yfz
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/533
250
573983
1926684
1926449
2026-04-24T14:44:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 511}}</noinclude>“கோட்டம் திறக்கப்படுகிறது. குறளோவியம் தீட்டப்படுகிறது” என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவான 15-4-76 அன்று நான் “கடிதம்” எழுதியிருந்தேன். “இன்று எழுதுவது பெரிய கடிதம்” என்று தொடங்கி எழுதப்பட்ட கடிதம் அது! “சில குறிப்புகள் “சுயபுராணம்” போல் தோன்றக்கூடும். இப்போது அந்தக் குறிப்புக்கள் தேவையோ இல்லையோ, எதிர்காலத்துக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இந்த மடலில் என்னைப்பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்” என்ற வேண்டுகோளுடன் நான் எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் இதோ:
உடன்பிறப்பே,
இன்று சென்னையில் ஒரு விழா!
திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா!
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்—காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்—வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்—மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்—நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்—எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.
மாசறு பொன்னாக, வலம்புரிமுத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால் உலகப்பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்—மகிழ்வான்—தகதகவெனக் குதிப்பான்—தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம்—தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ் மறைக்கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் நிகழ்கின்றது.
இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள்தானே இந்த நாள்!
{{nop}}<noinclude></noinclude>
o6jrcr7ueymr4nu2m3uzam4egf63ba1
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/534
250
573984
1926686
1926451
2026-04-24T14:45:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|512 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>“கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று இடைக்காடர் கூற, “அல்ல! அல்ல! அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத்தரித்த குறள்” என்று ஒளவையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!
கோட்டம் திறக்கப்படுகிறது! குறளோவியம் தீட்டப்படுகிறது.
“தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். தரணி எங்கும் பரவிட வேண்டும், மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும். அந்த மறுமலர்ச்சி, தமிழுக்கு ஏற்படத்தான், தி. மு. கழகம் ஆட்சி பீடம் ஏறிட விரும்புகிறது” என 1967 விருகம்பாக்கம் மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலேதான் தில்லையாடியில் வள்ளியம்மை நகர் உருவாக்கினோம்.
புதிய பூம்புகார், வாழ்ந்த தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக எழுந்து நிற்கிறது.
அன்னியரை எதிர்த்த அடலேறு கட்டபொம்மனுக்கு நினைவுக் கோட்டை கம்பீரமாகக் காட்சி தருகிறது.
காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஓர் ஆலயம். கலனாகிக் கிடந்த மயிலை வள்ளுவர் கோயிலுக்குப் புதிய திருப்பணி. நுங்கம்பாக்கத்தில் உலகோர் கவனத்தைத் திருப்பும் வண்ணம் ஒப்பற்ற வள்ளுவர் கோட்டம்.
உடன்பிறப்பே, இவைகளை எல்லாம் நினைக்கிறேன். நெஞ்சு இனிக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். தேன் பாய்கிறது, ‘இதயமெனும் கழனியிலே! உயிர், தமிழுக்கு எனும் உறுதிப்பயிர் விளைகிறது! களைகளுக்கு இங்கு இடமில்லை என்ற திடமும், தெம்பும் பிறக்கிறது.’
ஆகா! அதோ! அதோ! வள்ளுவர் கோட்டத்துத் தேரின் உச்சியிலே நானும் நாவலரும் இணைந்து கலசத்தை ஏற்றி வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி! மனத்திரையில் நிலைத்து நிற்கிறது.
கோட்டம் திறந்திட வருகிறவர் குடியரசுத் தலைவர். நமது அன்புக்குரியவர்! மேன்மை தங்கிய பக்ருதீன் அலி அகமது<noinclude></noinclude>
orkvtuaf9agqjyg2j19pwteojm6ijfs
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/535
250
573985
1926687
1926453
2026-04-24T14:46:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 513}}</noinclude>அவர்கள். வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்ற போது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன், அவர் அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு!
திறப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில். ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் கே. கே. ஷா அவர்களாவார்கள். அவர்கள் மனந்திறந்து பேசக்கூடிய பண்பாளர். தன் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான “கே. கே” என்பதைக்கூட “கலைஞர் கருணாநிதி ஷா” என்றும் இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறள் நெறிக்கேற்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும் மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்பு விழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடையதாகும்.
என் இனிய உடன்பிறப்பே! “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பதும் வெறும் சொல்லழகுக் கோவையல்ல. செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன. என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவதில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதால் எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களாகிறார்கள்.
நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக் காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள், மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திராதான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்!
{{nop}}<noinclude>
நெ.—33</noinclude>
1b8iazetc1fjjr2oy2bez83kbbiw817
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/536
250
573986
1926689
1926454
2026-04-24T14:47:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|514 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும் கூட நன்றாக நினைவிருக்கிறது. “சிறுமிகளே, நீங்கள் எல்லாம் இந்திராகாந்தி போல எதிர் காலத்தில் ஆகவேண்டும். சிறுவர்களே, நீங்கள் எல்லாம் கருணாநிதி போல், காமராஜர் போல் ஆகவேண்டும்” என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார். என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை. நான் கிடக்கிறேன், சாதாரணமானவன்; என்னை விட்டு விடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச்சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளி விட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான் இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.
செய்திகள், குழந்தைகளைப் போல! வரலாறுகள், தலைவர்களைப் போல! ஒரு சாராருக்கு களிபேருவுவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாக மனநோயைத் தரவல்ல தாகவும் விளங்கிடக்கூடும்.
இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் “வரலாற்றுச் செய்தி” என்பதுதான்.
இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா?
பூம்புகார் உருவாக்கியதும், பாஞ்சாலக்குரிச்சி கண்டதும், புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர், மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடொன்றைத் தந்தனர் என்னிடம்!
மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது. அதற்கென கருத்துரை வழங்கிட குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது. இதற்கிடையே அந்தக் கோயிலை அன்னியில் நகரில் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி<noinclude></noinclude>
tbif3wnwcjlk08s2oxuxw7cvra3mdkh
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/537
250
573987
1926691
1926455
2026-04-24T14:49:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 515}}</noinclude>விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம்.
பூம்புகார் கலைக்கூட பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் கோட்டம் பற்றிய விவாத அரங்குகளைத் தொடர்ந்து நடத்தினோம். கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான “கோணல்மாணல்” கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன். நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் கோணல் மாணல் கோடுகளாக இருந்தாலும் அடிப்படை எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதனைத் திருத்தியமைத்து சிற்பிகளும், அரசு அதிகாரிகளும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுற வேண்டி ஸ்தபதியார் எஸ். கே. ஆச்சார் அவர்களும் இணைத்துக் கொள்ளப் பட்டார். அவர்தான் குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்கவண்ணம் வடித்துத் தந்தவர்.
குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும் காவிரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும் சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம்தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம். சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரிதும் பாராட்டியுள்ளனர்.
“எத்தனையோ அற்புத சிற்பங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய கதையையே தொடர்ச்சியாக சிற்பங்களில பூம்புகாரில் வடிக்கச் செய்த அரசு, இந்த அரசுதான்” என்று கழக அரசை கணபதி ஸ்தபதி பாராட்டினார், “பூம்புகார் பெருந்தச்சன்” என்ற விருதினை மாமல்லபுரத்தில் எனக்கு சிற்பிகள் வழங்கிய விழாவில்!
“பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளை அவர்கள் தூண்டியிருக்கிறார்களே தவிர யாரும் தனது வாழ்நாளில் இப்படி ஒரு கல்தேரை பிரம்மாண்டமாக உருவாக்கும்படி கூறியதில்லை” என்று ஸ்தபதி எஸ். கே. ஆச்சார், ஒரு பத்திரிகை பேட்டியில் கருத்து வெளியிட்டார்.
நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்த திட்டங்கள்தான்<noinclude></noinclude>
k0arj7sv8058fbyc5o7gd0gwdwmyegl
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/538
250
573988
1926692
1926456
2026-04-24T14:50:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|516 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இவைகள். அதே நேரத்தில் தமிழ்மொழியின் மேன்மையை — கலாச்சார மாண்பை நிலைநிறுத்தும் பணியுமாகும்.
பாரதியின் பாட்டாக, பாரதிதாசனின் கவிதையாக, பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரையாக, மொழி பெயர்ப்புக்களாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு இதோ கோட்டம் அமைத்து விட்டோம். வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டுக்கு வரலாற்றுப் புகழ் கொண்ட வள்ளுவர் கோட்டம்!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று சென்று பார்த்து வந்தோம். கோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும் எங்கள் கவனத்திலிருந்து தப்பியதில்லை.
காலம், யாருடைய காலடியிலும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை. அது ஒரு காற்று! பல திசைகளிலும் வீசும் ஆற்றல் பெற்றது! அப்போது புரியும் அவர்களுக்கு சரித்திரத்தின் வல்லமை.
மீண்டும் நமது ஆளுநர் அவர்களின் சொற்பொழிவுக் குறிப்பு ஒன்றையே நான் நினைவுகூர்ந்திட விரும்புகிறேன்.
“கருணாநிதி அவர்களே! தாங்கள் ஒரு உண்மையை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். கீழ்த்தளத்திலிருந்து ஒரு மனிதன், மிக உன்னத நிலைக்கு வரமுடியுமென்று காட்டியதற்காக எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அரசியல்வாதிகள் இடையில் மறைந்துவிடலாம். ஆனால் எழுத்தாளராக — மனிதத்தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி, என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.”
ஜூலை 31-ஆம் நாள் 1971-ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது. அவர் கருணாநிதி என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும்கூட, நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சார்பில், அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது, தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைத்துள்ள இந்தக் கழகத்துக்கு, கழக அரசின் நற்சாதனைகளுக்கு தமிழ்ப் பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும்.
{{nop}}<noinclude></noinclude>
lo0wu0kn1uasss16sk3r7bh51n1miny
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/539
250
573989
1926697
1926635
2026-04-24T14:54:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 517}}</noinclude>சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக்கண்ணால் காணுகிறேன்.
உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலுட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலிகட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!
என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் நான் பெறுகிறேன் இன்று! ஆம்-என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப்பள்ளு பாடுகிறேன்.
{{left_margin|3em|<b><poem>
“நெடுநாள் ஆசை நிறைவேற்றம்
நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்”</poem></b>}}
நீயும் சேர்ந்து பாடுக இந்த மகிழ்ச்சிப் பாடலை! வாழ்க வள்ளுவர்! வெல்க குறள் நெறி!”
என்று நான் அந்த வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா அன்று எழுதினேன்.
வள்ளுவர் கோட்டத் திறப்பு ஆளுநர் தலைமையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். குடியரசுத் தலைவரின் உரையை திரவியம் மொழி பெயர்த்தார்.
அந்த விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப்படவில்லை. அழைக்கப்படாதது மாத்திரமல்ல, வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது அமைக்கப்பட்ட அந்த ‘கல்’ கூட அங்கே இருந்திடக் கூடாது என்று அப்புறப் படுத்தப்பட்டு விட்டதாகப் பின்னர் அறிந்தேன்.
{{nop}}<noinclude></noinclude>
07vooshv4n9q93esq6kzvfhvhnylels
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/540
250
573990
1926703
1926637
2026-04-24T14:58:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>71</b>}}
{{larger|<b>கழக ஆட்சி கலைக்கப்பட்டது!</b>}}
{{X-larger|<b>வ</b>}}ள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவுக்கான நாள் நிச்சயிக்கவும் விழா ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும் ஜனவரி எட்டாம் நாள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடினோம் என்பதைக் குறிப்பிடத் தொடங்கியதுமே. கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஏப்ரல் திங்கள் 15-ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆட்சியில் திறப்பு விழா நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளுக்கு என் நினைவுகள் பறந்தோடி விட்டன. அந்த நினைவுகள் தான் கடந்த அத்தியாயம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டன.
ஏப்ரல் திங்களில் இருந்து மீண்டும் ஜனவரி திங்களுக்கே வருகிறேன்.
என் இதயத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நண்பர்களாகவும் இடம் பெற்றுள்ள சிலரில் “சாவி” ஒருவர். நெருக்கடி நிலையில் எழுத்தாளர்கள் எல்லாம் மிரட்டப்பட்டுக் கைகள் கட்டப்பட்டிருந்த போது கூட ஏப்ரல் மாதம் நடந்த வள்ளுவர் கோட்ட விழாவில் நான் அழைக்கப்படாததை உருக்கமாகச் சுட்டிக்காட்டி “தினமணி கதிர்” இதழில் எழுதிய எழுத்தாளரும் அவர் ஒருவரே யாகும்.
அவருக்கு ஜனவரி திங்கள் 29-ஆம் நாள் அறுபதாம் ஆண்டு பிறந்த நாள் விழா! அந்த விழாவுக்கு நான் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன் — ஆனால் அதற்கு முதல் நாள் சற்று உடல் நலிவு. மருத்துவர்கள் இரண்டு நாள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருந்தார்கள். அதனைக் குறிப்பிட்டு சாவி அவர்களுக்கு எனது இயலாமையைத் தெரிவித்தேன். “தாங்க முடியாத காய்ச்சலோடு சுபாஷ் சந்திரபோஸ் திரிபுரா காங்கிரசுக்குச் சென்று படுத்துக் கொண்டே தனது உரையை ஆற்றினார்” என்று சாவி அவர்கள் எனக்கு பதில் அளித்தார்.
“காய்ச்சலாக இருந்தால் நானும் வந்து படுத்துக் கொண்டே உரையாற்றி விடுவேன். ஆனால் எனக்கு வந்துள்ள நோய் அடிக்கடி தொல்லை தரக்கூடிய வயிற்றுப் போக்கா-<noinclude></noinclude>
k5pzbj4ve5pftksxo9q3off9no2gy09
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/541
250
573991
1926706
1926638
2026-04-24T14:59:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 519}}</noinclude>யிற்றே!” எனக் கூறினேன். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாவி அவர்களின் அறுபதாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். “சாவி 60” என்ற சிறப்பு மலரினை அமைச்சர் ராஜாராம் வெளியிட அதன் முதல் படிவத்தை எம். ஏ. எம். இராமசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். ஏ. எல். சீனிவாசன், சௌந்தரா கைலாசம், கி. வா. ஜகந்நாதன், கல்கி ராஜேந்திரன், சோ. ராமசாமி, சிவசங்கரி ஆகியோர் எனது தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் சாவியின் எழுத்தாற்றலையும், எழுத்துலக அனுபவங்களையும் புகழ்ந்து போற்றி வாழ்த்தினர். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதலமைச்சரோடு பழகுகிறோம் என்றில்லாமல் அரசியல்வாதியாகவும் எழுத்தாளராகவும் இருக்கிற ஒரு நண்பரோடு பழகுகிறோம் என்ற முறையில் என்னிடம் நட்புறவு கொண்டுள்ள சாவி அவர்களின் சிறப்பியல்புகளைப் பாராட்டுவதாக அந்த விழாவில் நான் குறிப்பிட்டேன். எந்த நிலையிலும் நான் அவருடன் பழகிய அந்தக் கால கட்டத்தில் ஆட்சி பீடத்தில் இருப்பவனாயிற்றே என்ற எண்ணம் எங்கள் நட்புக்குக் குறுக்கே நிற்கவில்லை.
அந்த விழா நிகழ்ச்சி முடிவுற்று வீட்டுக்குச் சென்றபோது இன்னும் இரண்டொரு நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டு விடக் கூடும் என்று சில நண்பர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய முகத்தில் அவர்களாலேயே மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அச்சம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது! அன்று வெளி வந்த முரசொலி நாளிதழில் “வீரர்கள் பின் தொடரட்டும்” என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதினேன். ஏற்றுக் கொண்ட கொள்கையைக் காத்திடவும் நிறைவேற்றிடவும் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் ஒரு சலனமும் எனக்கு ஏற்படவில்லை.
இந்த அத்தியாயத்தை எழுதும்பொழுது ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையில் சிங்கள வெறியர்களாலும் இராணுவத்தினாலும் இனப் படுகொலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களைக் காப்பாற்றி அவர்களுக்குப் பாதுகாப்பு அரண் நிலையானதாக அமைவதற்காக நடைபெறும் முயற்சியில் ஒரு அங்கமாக நியூயார்க் தமிழர்கள் டாக்டர் பஞ்சாட்சரம் போன்றவர்கள் நியூயார்க்கில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து<noinclude></noinclude>
njc0n9675nk8rht0n8ytzwl0pp2pwdy
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/542
250
573992
1926708
1926639
2026-04-24T15:01:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|520 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>திராவிடர் கழப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், தி.மு.கழகத்தின் தலைமைக் கழகச் செயலாள்ர்களில் ஒருவரும் மாநிலங்களவையில் இலங்கைத் தமிழர்களுக்காக வீரக் குரல் கொடுக்கக் கூடியவர்களில் ஒருவரான தம்பி வை. கோபாலசாமி அவர்களும், தலைமை நிலைய வழக்கறிஞர் டி.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., மணவைத் தம்பி ஆகிய நண்பர்களும் மதுரை ஆதின கர்த்தர் அருணகிரி அடிகளாரும் சென்றிருந்தனர். லண்டனில் நடைபெற்ற அதே போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பி எல். கணேன் அவர்களும் சென்றிருந்தார். அவர்கள் எல்லாம் திரும்பி வந்து என்னைச் சந்தித்த போது ஏதேதோ சிறுசிறு பொருள்களை வாங்கி வந்து எனக்குப் பரிசாக அளித்தனர். ஷேவிங் ரேசர், கிரீம், சோப்பு, அழகான குதிரைப் பொம்மை, இப்படி இருந்தன அந்த பொருள்கள். அவற்றில் எல்லாம் விலை மதிப்பற்றதாக ஒரு பொருளை வீரமணி அவர்கள் என்னிடம் வழங்கினார். வேறொன்றுமில்லை—ஒரு நீல வண்ணமான அட்டைதான் அது! வானத்தில் பறவைகள் பறப்பது போன்ற நிழற்படம்! அதன் கீழே இந்த வாசகங்கள்! மார்ட்டின் லூதர் கிங் அவர்களுடைய பொன் மொழி!
“சுதந்திரத்திற்காக எந்த விலையும் கொடுக்கலாம். அதற்காக பதவியைக்கூட இழக்கலாம். சிறைக்கும் செல்லலாம். ஒரு பணக்கார அடிமையாக இருப்பதை விட சுதந்திரமுள்ள ஏழையாக இருப்பதே சிறப்பு. சுயமரியாதையை விட்டுவிட்டு வளத்துடன் வாழ்வதைக் காட்டிலும் கொள்கைப் பிடிப்புக்காக வறுமையில் உழன்று சாவதே பெருமையெனக் கருதுவேன்”
இந்த அட்டையும் இதில் பொறிக்கப்பட்டுள்ள மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியும் 1976 ஜனவரியில் என் கைக்குக் கிட்டவில்லையென்றாலும்—ஏறத்தாழ இதே உணர்வைத் தான் பெரியாரும் அண்ணாவும் என் இதயத்தில் ஒளி விளக்காக ஏற்றி வைத்திருந்தார்கள். அந்த உறுதியின் வெளிச்சம் தான் அப்போது என் ஒவ்வொரு பேச்சிலும், எழுத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது என்பதை இப்போதும் எண்ணி ஒரு உள்ளார்ந்த இன்பத்தில் மூழ்குகிறேன்.
சுதந்திரத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயார் எனத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட காந்தியடிகளின் நினைவு நாள் ஜனவரி 30-ஆம் தேதி!
{{nop}}<noinclude></noinclude>
1wtxjzi725s0gqgsd6gsv6wjrfft5zr
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/543
250
573993
1926710
1926640
2026-04-24T15:03:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 521}}</noinclude>அன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
அங்கிருந்து புறப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டப் பணிகளைப் பார்வையிடச் சென்றேன். நான் விரும்பியவாறு திருவாரூர்த் தேர் போன்ற முழுத் தோற்றமும் வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் சிலை அமையும் இடத்தில் ஏற்படுவதற்கு அந்தத் தேர் வடிவத்தில் “தொம்பை”கள் தொங்கவிடுமாறு யோசனை கூறினேன். பிற்பகல் இரண்டு மணி வரையில் அங்கேயே இருந்து கோட்டப்பணிகள் பற்றி சிற்பிகளுடன் விவாதித்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.
அன்று மாலை கவர்னர் கே.கே.ஷா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியடிகள் நினைவு நாள் — கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். விழாவுக்கு ஆளுநர் ஷா அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் காந்தியடிகளைப் பற்றிய பாடல்களை இசைத்தார். விழாவில் ஆர். வெங்கட்ராமன் அவர்களும், ம.பொ.சி. அவர்களும் கலந்து கொண்டனர்.
“காந்தியடிகளும் அவர் அணியில் நின்று தியாகத் தலைவர்களும் பெற்றுத் தந்த சுதந்திரத்தையும் அவர்கள் போற்றிய ஜனநாயகத்தையும் எல்லாவிதமான ஆபத்துக்களிலுமிருந்தும் நாம் காத்திட வேண்டும்”
என்று எனது உரையில் குறிப்பிட்டேன். காந்தியடிகளின் நினைவுநாள் விழாவில் ஜனவரி 30-ந் தேதி மாலையும், 31-ந் தேதி காலையும் உரையாற்றிய கவர்னர் கே.கே.ஷா அவர்கள்; “இந்தியாவில் காந்தியடிகளின் அடியொற்றி நடைபெற்று வருகிற ஆட்சியாகத் தி.மு.க. ஆட்சி விளங்குகிறது” எனக் கூறினார்.
30-ந் தேதி காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி முடிவுற்றதும் — அருகாமையில் கட்டப்பட்டு வந்த காமராஜர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடச் சென்றேன். அந்த மண்டப முகப்பில் மிகப் பெரிய “இராட்டை” ஒன்று இடம் பெற வேண்டுமென்று கூறியிருந்தேன். அதை எங்கே, எப்படி அமைக்க வேண்டுமென்பதை யெல்லாம் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கலந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.
{{nop}}<noinclude></noinclude>
cw2af4mp70c13bha76zq2mksgen60r1
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/544
250
573994
1926641
1920992
2026-04-24T12:03:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1926641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|522 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மறுநாள் காலையிலும் கிண்டியில் கவர்னரும், கழக அமைச்சர்களும் கலந்து கொண்ட காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று மாலை சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 5 மணி அளவில் சென்றேன். அந்த விழாவில் எம். ஏ. சிதம்பரம் செட்டியாரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். விழாவுக்கு என்னுடன் தம்பி துரைமுருகனும் வந்திருந்தார். டான்பாஸ்கோவில் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து விட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன்.
“அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்”
என்று எனது உரையினிடையே நான் சொன்னதும், விழாவுக்கு வந்திருந்தோர் “அப்படிச் சொல்லாதீர்கள்!” என்று உணர்ச்சி பொங்க ஒலியெழுப்பினர்.
மாலை ஆறரை மணி அளவில் விழா முடிவுற்றது. நானும் துரைமுருகனும் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டு வாசலில் இறங்கி உள்ளே செல்வதற்குப் படியேறுவதற்கு முன்பே எனது மருமகன்கள் அமிர்தம், செல்வம் இருவரும் கையில் ஒரு துண்டுத் தாளை வைத்துக் கொண்டு சிரித்தவாறு “ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்” என்றனர்! செய்தி நிறுவன இயந்திரத்தில் அடிக்கப்பட்ட செய்தி தான் அது! “அப்பாடா! சஸ்பென்ஸ் முடிந்தது!” என்று கூறிக் கொண்டே, தெருப்பக்கம் திரும்பிப் பார்த்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கக்காரை உடனே தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு மாடிக்குச் சென்றேன். என்னிடம் பணியாற்றிய தனி அலுவலர்கள் கண்ணீர் வடித்துக் கதறியழுதனர்.
“சே! இது என்ன; பைத்தியக்காரத்தனம்! தைரியமாக இருங்கள்!” எனக் கூறி விட்டு அந்த நல்ல செய்தியை நண்பர்களுக்குச் சொல்ல “டெலிபோனை” எடுத்தேன்! என்ன ஆச்சரியம்! அதற்குள் என் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சில நிமிடங்களில் எப்படித்தான் செய்தி சென்னை முழுவதும் பரவியதோ தெரியாது — வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரக் கணக்கானோர் அழுது புலம்பியவாறு கூடிவிட்டனர்.<noinclude></noinclude>
llxmfu2ox9da46bnwsmnk51jqsri0ep
1926713
1926641
2026-04-24T15:05:35Z
Booradleyp1
1964
1926713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|522 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மறுநாள் காலையிலும் கிண்டியில் கவர்னரும், கழக அமைச்சர்களும் கலந்து கொண்ட காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று மாலை சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 5 மணி அளவில் சென்றேன். அந்த விழாவில் எம். ஏ. சிதம்பரம் செட்டியாரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். விழாவுக்கு என்னுடன் தம்பி துரைமுருகனும் வந்திருந்தார். டான்பாஸ்கோவில் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து விட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன்.
“அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்”
என்று எனது உரையினிடையே நான் சொன்னதும், விழாவுக்கு வந்திருந்தோர் “அப்படிச் சொல்லாதீர்கள்!” என்று உணர்ச்சி பொங்க ஒலியெழுப்பினர்.
மாலை ஆறரை மணி அளவில் விழா முடிவுற்றது. நானும் துரைமுருகனும் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டு வாசலில் இறங்கி உள்ளே செல்வதற்குப் படியேறுவதற்கு முன்பே எனது மருமகன்கள் அமிர்தம், செல்வம் இருவரும் கையில் ஒரு துண்டுத் தாளை வைத்துக் கொண்டு சிரித்தவாறு “ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்” என்றனர்! செய்தி நிறுவன இயந்திரத்தில் அடிக்கப்பட்ட செய்தி தான் அது! “அப்பாடா! சஸ்பென்ஸ் முடிந்தது!” என்று கூறிக் கொண்டே, தெருப்பக்கம் திரும்பிப் பார்த்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கக் காரை உடனே தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு மாடிக்குச் சென்றேன். என்னிடம் பணியாற்றிய தனி அலுவலர்கள் கண்ணீர் வடித்துக் கதறியழுதனர்.
“சே! இது என்ன; பைத்தியக்காரத்தனம்! தைரியமாக இருங்கள்!” எனக் கூறி விட்டு அந்த நல்ல செய்தியை நண்பர்களுக்குச் சொல்ல “டெலிபோனை” எடுத்தேன்! என்ன ஆச்சரியம்! அதற்குள் என் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சில நிமிடங்களில் எப்படித்தான் செய்தி சென்னை முழுவதும் பரவியதோ தெரியாது — வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரக் கணக்கானோர் அழுது புலம்பியவாறு கூடிவிட்டனர்.<noinclude></noinclude>
gyjx1cbjbhgouqr8ptuq9mqqjl4exbm
1926723
1926713
2026-04-24T15:09:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|522 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மறுநாள் காலையிலும் கிண்டியில் கவர்னரும், கழக அமைச்சர்களும் கலந்து கொண்ட காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று மாலை சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக 5 மணி அளவில் சென்றேன். அந்த விழாவில் எம். ஏ. சிதம்பரம் செட்டியாரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். விழாவுக்கு என்னுடன் தம்பி துரைமுருகனும் வந்திருந்தார். டான்பாஸ்கோவில் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் செய்து விட்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன்.
“அநேகமாக முதலமைச்சர் என்ற நிலையில் நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்”
என்று எனது உரையினிடையே நான் சொன்னதும், விழாவுக்கு வந்திருந்தோர் “அப்படிச் சொல்லாதீர்கள்!” என்று உணர்ச்சி பொங்க ஒலியெழுப்பினர்.
மாலை ஆறரை மணி அளவில் விழா முடிவுற்றது. நானும் துரைமுருகனும் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டு வாசலில் இறங்கி உள்ளே செல்வதற்குப் படியேறுவதற்கு முன்பே எனது மருமகன்கள் அமிர்தம், செல்வம் இருவரும் கையில் ஒரு துண்டுத் தாளை வைத்துக் கொண்டு சிரித்தவாறு “ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்” என்றனர்! செய்தி நிறுவன இயந்திரத்தில் அடிக்கப்பட்ட செய்தி தான் அது! “அப்பாடா! சஸ்பென்ஸ் முடிந்தது!” என்று கூறிக் கொண்டே, தெருப்பக்கம் திரும்பிப் பார்த்து, நான் பயன்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கக் காரை உடனே தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று விடுமாறு சொல்லி விட்டு மாடிக்குச் சென்றேன். என்னிடம் பணியாற்றிய தனி அலுவலர்கள் கண்ணீர் வடித்துக் கதறியழுதனர்.
“சே! இது என்ன; பைத்தியக்காரத்தனம்! தைரியமாக இருங்கள்!” எனக் கூறி விட்டு அந்த நல்ல செய்தியை நண்பர்களுக்குச் சொல்ல “டெலிபோனை” எடுத்தேன்! என்ன ஆச்சரியம்! அதற்குள் என் டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சில நிமிடங்களில் எப்படித்தான் செய்தி சென்னை முழுவதும் பரவியதோ தெரியாது — வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரக் கணக்கானோர் அழுது புலம்பியவாறு கூடிவிட்டனர்.<noinclude></noinclude>
8r7ovmt8dthndnkjob831m960fbcg6b
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/545
250
573995
1926642
1920991
2026-04-24T12:13:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1926642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 523}}</noinclude>அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவது அன்றிரவு முழுவதும் பெரும் வேலையாகி விட்டது.
இரவு எட்டு மணியிருக்கும் — அதற்குள்ளாக முதலமைச்சர் பந்தோபஸத்துக்கு என்றிருந்த போலீசார் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டனர். என்னுடைய துணைவியர்கள் தயாளுவானாலும், ராஜியானாலும் எவ்விதக் கலக்கமுமின்றி மிகச் சாதாரண நிகழ்ச்சியாக அதனை எடுத்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் என் சகோதரிகள், பிள்ளைகள். பெண்கள், மருமகன்கள், எல்லோருமே அதனை ஒரு திடுக்கிடத் தக்க நிகழ்ச்சியாகக் கருதவில்லை. அதனால் அவர்கள் உள்ளத்தைக் கடுகளவு வேதனையும் தீண்டவில்லை.
எல்லோரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஒரு விழா நிகழ்ச்சி போல எண்ணிக் கொண்டிருந்தோம்.
“போலீஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்; உங்களைப் பார்க்க வேண்டுமாம்”
என்று வீட்டில் நீண்டகாலமாகப் பணியாற்றும் செயல் மணி ஓடி வந்து சொன்னான். கைது செய்ய வந்திருப்பது போல் தெரிகிறது என்றும் கூறினான்.
‘வரச்சொல்’ என்றேன்! வந்தார்கள் போலீஸ் அதிகாரிகள்!
“என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?” எனக் கேட்டேன்.
“இல்லை! உங்களை இல்லை” என ஒரு அதிகாரி அழுது காண்டே சொன்னார்.
“யாரைக் கைது செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.
“உங்கள் மகன் ஸ்டாலினை!” என்று கூறினார்கள்; தழுதழுத்த குரலில் கண்ணீர் சிந்தியவாறு!
“அவன் ஊரில் இல்லையே — நாளை மாலையில்தானே வருவான்” என்றேன்.
“வீட்டில் இருக்கிறாரா? என்று “சர்ச்” செய்து பார்க்கும் படி உத்திரவு!” என்றார்கள்.
“தாராளமாகச் ‘சர்ச்’ செய்யுங்கள்” என்றேன்.
{{nop}}<noinclude></noinclude>
aqx2k0b5c0e40w5r7z1ppacxs99y89e
1926717
1926642
2026-04-24T15:07:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 523}}</noinclude>அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்புவது அன்றிரவு முழுவதும் பெரும் வேலையாகி விட்டது.
இரவு எட்டு மணியிருக்கும் — அதற்குள்ளாக முதலமைச்சர் பந்தோபஸத்துக்கு என்றிருந்த போலீசார் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டனர். என்னுடைய துணைவியர்கள் தயாளுவானாலும், ராஜியானாலும் எவ்விதக் கலக்கமுமின்றி மிகச் சாதாரண நிகழ்ச்சியாக அதனை எடுத்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் என் சகோதரிகள், பிள்ளைகள். பெண்கள், மருமகன்கள், எல்லோருமே அதனை ஒரு திடுக்கிடத் தக்க நிகழ்ச்சியாகக் கருதவில்லை. அதனால் அவர்கள் உள்ளத்தைக் கடுகளவு வேதனையும் தீண்டவில்லை.
எல்லோரும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஒரு விழா நிகழ்ச்சி போல எண்ணிக் கொண்டிருந்தோம்.
“போலீஸ் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்; உங்களைப் பார்க்க வேண்டுமாம்”
என்று வீட்டில் நீண்டகாலமாகப் பணியாற்றும் செயல் மணி ஓடி வந்து சொன்னான். கைது செய்ய வந்திருப்பது போல் தெரிகிறது என்றும் கூறினான்.
‘வரச்சொல்’ என்றேன்! வந்தார்கள் போலீஸ் அதிகாரிகள்!
“என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?” எனக் கேட்டேன்.
“இல்லை! உங்களை இல்லை” என ஒரு அதிகாரி அழுது காண்டே சொன்னார்.
“யாரைக் கைது செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.
“உங்கள் மகன் ஸ்டாலினை!” என்று கூறினார்கள்; தழுதழுத்த குரலில் கண்ணீர் சிந்தியவாறு!
“அவன் ஊரில் இல்லையே — நாளை மாலையில்தானே வருவான்” என்றேன்.
“வீட்டில் இருக்கிறாரா? என்று “சர்ச்” செய்து பார்க்கும் படி உத்திரவு!” என்றார்கள்.
“தாராளமாகச் ‘சர்ச்’ செய்யுங்கள்” என்றேன்.
{{nop}}<noinclude></noinclude>
ojg5xvsbyg7yhv1tte156ntmcr6tlxg
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/546
250
573996
1926643
1920990
2026-04-24T12:16:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1926643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|524 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள். வீட்டில் ஸ்டாலின் இல்லை! அவர்களை வெறுங்கையுடன் அனுப்புவது எனக்கு என்னவோ போலிருந்தது—அதனால் அவர்களைப் பார்த்து “வேண்டுமானால் நாளைக்கு என்னைக் கைது செய்வதை, இப்போதே செய்து கொண்டு போங்களேன்” என்றேன்.
மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போலீசார் புறப்பட்டனர். ஆட்சிப் பொறுப்பு பறி போன ஓரிரு மணிநேர இடைவெளியில் இத்தனை நிகழ்ச்சிகள்!
{{nop}}<noinclude></noinclude>
b4lrsjpc1zuk26dgbzi324r8o4d6gjc
1926721
1926643
2026-04-24T15:09:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|524 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள். வீட்டில் ஸ்டாலின் இல்லை! அவர்களை வெறுங்கையுடன் அனுப்புவது எனக்கு என்னவோ போலிருந்தது—அதனால் அவர்களைப் பார்த்து “வேண்டுமானால் நாளைக்கு என்னைக் கைது செய்வதை, இப்போதே செய்து கொண்டு போங்களேன்” என்றேன்.
மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போலீசார் புறப்பட்டனர். ஆட்சிப் பொறுப்பு பறி போன ஓரிரு மணிநேர இடைவெளியில் இத்தனை நிகழ்ச்சிகள்!
{{nop}}<noinclude></noinclude>
szym41bcre2vuqmy3rdok9wwrr48hin
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/547
250
573997
1926644
1920989
2026-04-24T13:26:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1926644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>72</b>}}
{{larger|<b>அடக்குமுறை அடுக்கடுக்காக!</b>}}
{{X-larger|<b>ஆ</b>}}ட்சி பறிபோய் விட்டது என்ற செய்தி கேட்டு எந்தவிதச் சலனமும் சங்கடமும் தலைகாட்டாமல் இருந்த வீட்டில் என் மகன் ஸ்டாலினைக் கைது செய்யத் தேடுகிறார்கள் எனக் கேள்வியுற்றதும் என்னைத் தவிர அனைவரும் அதிர்ச்சியுற்றனர். அந்த அதிர்ச்சியை எனக்கு முன்னால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் ஸ்டாலினின் துணைவியோ; ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி வீட்டுக்கு வந்த புதிய மருமகள்! ஓரிரு மாத கர்ப்பவதி வேறு! இந்த நிலையில் கணவன், தன்னிடமிருந்து மிசாக் கொடுமையால் பிரிக்கப் படுவதை அந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் காலில் விழுந்து கோவெனக் கதறியழுதது. இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு ஆறுதல் கூறி-எல்லாவித தியாகத்திற்கும் எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்று உரக்கச் சப்தமிட்டேன். அதற்குள் தலைமைக் கழகத்தின் செயலாளர்களான வீராசாமி, நீலநாராயணன், சிட்டிபாபு, செ. கந்தப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி வந்தது.
மறுநாள் ஸ்டாலின் வீடு வந்து சேர்ந்ததும் போலீஸார் கைது செய்யத் தேடுகிற விஷயத்தைச் சொல்லிச் சிறைக் கோட்டப் பயணத்திற்குத் தயாராக இருக்குமாறு கூறினேன். அவனும் குளித்து முழுகித் தன் இளம் மனைவியைத் தேற்றிவிட்டு என் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுத் துணிமணிகளுடன் பயணத்திற்குத் தயாரானான். நானே போலீஸ் ஐ.ஜி.க்கு “போன்” செய்து ஸ்டாலின் வந்துவிட்ட விஷயத்தைக் கூறினேன். சில நிமிடங்களுக்கெல்லாம் “போலீஸ் வேன்” வந்து வீட்டு வாசலில் நின்றது. வீட்டாரும், அந்த வீதியில் வசித்தோரும், கழகச் செயல்வீரர்களும் சூழ்ந்து நின்று ஸ்டாலினைப் போலீஸ் வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். அவன் கையை அசைத்து விடைபெற்றுக் கொண்டபோது எல்லோருடைய இதயமும் குலுங்கி, விழிகள் குளமாகத்தான் காட்சியளித்தன! என் மகன் மட்டுமா; எத்தனை எத்தனை வீட்டு வீரப்புதல்வர்கள் அன்றைய தினம் மிசாக் கைதிகளாகச் சிறைச் சாலைகள் பலவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற செய்தி என் நெஞ்சத்தை மேலும் வலுப்படுத்தி என்னை வளையாமல் நிமிர்ந்து நிற்கச் செய்தது.
{{nop}}<noinclude></noinclude>
68y51wslxw2qnj599qpvoc39daxvab4
1926726
1926644
2026-04-24T15:12:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>72</b>}}
{{larger|<b>அடக்குமுறை அடுக்கடுக்காக!</b>}}
{{X-larger|<b>ஆ</b>}}ட்சி பறிபோய் விட்டது என்ற செய்தி கேட்டு எந்தவிதச் சலனமும் சங்கடமும் தலைகாட்டாமல் இருந்த வீட்டில் என் மகன் ஸ்டாலினைக் கைது செய்யத் தேடுகிறார்கள் எனக் கேள்வியுற்றதும் என்னைத் தவிர அனைவரும் அதிர்ச்சியுற்றனர். அந்த அதிர்ச்சியை எனக்கு முன்னால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் ஸ்டாலினின் துணைவியோ; ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி வீட்டுக்கு வந்த புதிய மருமகள்! ஓரிரு மாத கர்ப்பவதி வேறு! இந்த நிலையில் கணவன், தன்னிடமிருந்து மிசாக் கொடுமையால் பிரிக்கப் படுவதை அந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் காலில் விழுந்து கோவெனக் கதறியழுதது. இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு ஆறுதல் கூறி-எல்லாவித தியாகத்திற்கும் எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்று உரக்கச் சப்தமிட்டேன். அதற்குள் தலைமைக் கழகத்தின் செயலாளர்களான வீராசாமி, நீலநாராயணன், சிட்டிபாபு, செ. கந்தப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி வந்தது.
மறுநாள் ஸ்டாலின் வீடு வந்து சேர்ந்ததும் போலீஸார் கைது செய்யத் தேடுகிற விஷயத்தைச் சொல்லிச் சிறைக் கோட்டப் பயணத்திற்குத் தயாராக இருக்குமாறு கூறினேன். அவனும் குளித்து முழுகித் தன் இளம் மனைவியைத் தேற்றிவிட்டு என் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுத் துணிமணிகளுடன் பயணத்திற்குத் தயாரானான். நானே போலீஸ் ஐ.ஜி.க்கு “போன்” செய்து ஸ்டாலின் வந்துவிட்ட விஷயத்தைக் கூறினேன். சில நிமிடங்களுக்கெல்லாம் “போலீஸ் வேன்” வந்து வீட்டு வாசலில் நின்றது. வீட்டாரும், அந்த வீதியில் வசித்தோரும், கழகச் செயல்வீரர்களும் சூழ்ந்து நின்று ஸ்டாலினைப் போலீஸ் வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். அவன் கையை அசைத்து விடைபெற்றுக் கொண்டபோது எல்லோருடைய இதயமும் குலுங்கி, விழிகள் குளமாகத்தான் காட்சியளித்தன! என் மகன் மட்டுமா; எத்தனை எத்தனை வீட்டு வீரப்புதல்வர்கள் அன்றைய தினம் மிசாக் கைதிகளாகச் சிறைச் சாலைகள் பலவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற செய்தி என் நெஞ்சத்தை மேலும் வலுப்படுத்தி என்னை வளையாமல் நிமிர்ந்து நிற்கச் செய்தது.
{{nop}}<noinclude></noinclude>
jmflldqgznpf5q4uea0z9sz2ip5mw0e
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/548
250
573998
1926645
1920988
2026-04-24T13:42:23Z
ஹர்ஷியா பேகம்
15001
1926645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|526 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அன்றிரவு மீண்டும் போலீசார் பல லாரிகளில் வந்து வீட்டை முற்றுகையிட்டனர். என்னைத்தான் தேடி வந்திருக்கிறார்கள் என்று நான் பயணத்திற்குத் தயாரானேன். “உங்களையல்ல; உங்கள் மருமகன் மாறனைத் தேடி வந்திருக்கிறோம்” என்றார்கள். விடுவார்களா மாறனை? 1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தியதையொட்டி தி. மு. க. தனது எதிர்ப்பைத் தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்தியபோது-‘முரசொலி’ இதழில் “இட்லராகிறார் இந்திரா” என்ற கார்ட்டூனை வெளியிட்டவனாயிற்றே மாறன்! அந்தக் கார்ட்டூன் வெளிநாட்டு வார ஏடுகளில் கூட பிரசுரிக்கப்பட்டு இந்திராவின் சர்வாதிகாரத்தைத் தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதற்குச் சான்று காட்டி எழுதப்பட்டதே; அதனால் மாறனை மிசாச் சட்டம் விட்டுவிடுமா?
டெல்லியில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் வந்தவுடன் போலீசுக்குத் தகவல் அனுப்புவதாகவும் கூறினேன். போலீசார் விமான நிலையம் சென்று காத்திருந்தனர். ஆனால் மாறன், கமலநாதன், மாரிசாமி ஆகியோர் ஐதராபாத் வந்து இறங்கி வெவ்வேறு வழிகளில் ஊர் வந்து சேர்ந்தனர். மாறன் சென்னை வந்ததும், ஐ.ஜி.க்குப் போன் செய்தேன்; “நீங்கள் தேடுகிறவர் தயார்!” என்று! உடனே போலீஸ் வேன் வந்தது! கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டு வாசலில் குழுமி விட்டனர். மாறனின் துணைவியும், பிள்ளைகளும், தாயாரும் என்னதான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் கலங்கிய கண்கள் அவர்களது வெந்து நொந்த உள்ளங்களை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்தன. மாறனைக் கட்டித் தழுவி உச்சி மோந்து, “சென்று வா” எனச் சொல்லி போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்பினேன். கூடியிருந்தோர் வாழ்த்தொலி முழங்கினர் மாறன் விடைபெற்ற போதும்; ஸ்டாலின் விடைபெற்ற போதும்! அவை வாழ்த்தொலியாக இல்லை! எதேச்சாதிகார வெறியர்களை வீழ்த்துவதற்கு எழுந்த துளுரை போலத்தான் என் செவிகளில் ரீங்காரமிட்டது.
தொடர்ந்து கழகக் கண்மணிகள் மிசாக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தன. ஆனால் அவர்கள் சிறையில் அடைபட்டிருப்பதைக் கூட ஏடுகளில் வெளியிட முடியாத அளவுக்குத் தடை போட்டிருந்தது கவர்னரின் ஆட்சி! ஆம்; இந்திரகாந்தியின் ஏஜெண்டுகளாத இருந்த கவர்னர்கள் அந்த அம்மையார் ஆட்டி வைக்கப்படுகிறபடி ஆடுகிற பொம்மைகளாகத்தானே இருந்தார்கள்!
{{nop}}<noinclude></noinclude>
nxe4ltx0p12qfmaknxi6rbh19um2i32
1926727
1926645
2026-04-24T15:14:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|526 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அன்றிரவு மீண்டும் போலீசார் பல லாரிகளில் வந்து வீட்டை முற்றுகையிட்டனர். என்னைத்தான் தேடி வந்திருக்கிறார்கள் என்று நான் பயணத்திற்குத் தயாரானேன். “உங்களையல்ல; உங்கள் மருமகன் மாறனைத் தேடி வந்திருக்கிறோம்” என்றார்கள். விடுவார்களா மாறனை? 1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தியதையொட்டி தி. மு. க. தனது எதிர்ப்பைத் தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்தியபோது-‘முரசொலி’ இதழில் “இட்லராகிறார் இந்திரா” என்ற கார்ட்டூனை வெளியிட்டவனாயிற்றே மாறன்! அந்தக் கார்ட்டூன் வெளிநாட்டு வார ஏடுகளில் கூட பிரசுரிக்கப்பட்டு இந்திராவின் சர்வாதிகாரத்தைத் தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதற்குச் சான்று காட்டி எழுதப்பட்டதே; அதனால் மாறனை மிசாச் சட்டம் விட்டுவிடுமா?
டெல்லியில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் வந்தவுடன் போலீசுக்குத் தகவல் அனுப்புவதாகவும் கூறினேன். போலீசார் விமான நிலையம் சென்று காத்திருந்தனர். ஆனால் மாறன், கமலநாதன், மாரிசாமி ஆகியோர் ஐதராபாத் வந்து இறங்கி வெவ்வேறு வழிகளில் ஊர் வந்து சேர்ந்தனர். மாறன் சென்னை வந்ததும், ஐ.ஜி.க்குப் போன் செய்தேன்; “நீங்கள் தேடுகிறவர் தயார்!” என்று! உடனே போலீஸ் வேன் வந்தது! கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டு வாசலில் குழுமி விட்டனர். மாறனின் துணைவியும், பிள்ளைகளும், தாயாரும் என்னதான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் கலங்கிய கண்கள் அவர்களது வெந்து நொந்த உள்ளங்களை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்தன. மாறனைக் கட்டித் தழுவி உச்சி மோந்து, “சென்று வா” எனச் சொல்லி போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்பினேன். கூடியிருந்தோர் வாழ்த்தொலி முழங்கினர் மாறன் விடைபெற்ற போதும்; ஸ்டாலின் விடைபெற்ற போதும்! அவை வாழ்த்தொலியாக இல்லை! எதேச்சாதிகார வெறியர்களை வீழ்த்துவதற்கு எழுந்த சூளுரை போலத்தான் என் செவிகளில் ரீங்காரமிட்டது.
தொடர்ந்து கழகக் கண்மணிகள் மிசாக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தன. ஆனால் அவர்கள் சிறையில் அடைபட்டிருப்பதைக் கூட ஏடுகளில் வெளியிட முடியாத அளவுக்குத் தடை போட்டிருந்தது கவர்னரின் ஆட்சி! ஆம்; இந்திரகாந்தியின் ஏஜெண்டுகளாத இருந்த கவர்னர்கள் அந்த அம்மையார் ஆட்டி வைக்கப்படுகிறபடி ஆடுகிற பொம்மைகளாகத்தானே இருந்தார்கள்!
{{nop}}<noinclude></noinclude>
ikv3u7ks4bnye1tvtw2ggnpm1b420oc
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/549
250
573999
1926757
1920987
2026-04-24T16:37:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1926757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 527}}</noinclude>என் வாழ்வையும், என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கழகத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துச் சுழன்றோடுகிற இந்த சரித்திரப் பெருவெள்ளத்தில் இயக்கத்தை அழித்தொழிக்க எடுக்கப்பட்ட இறுதிக் கட்ட முயற்சியில் எத்தனை பேர் — யார் யார் - மிசாவெனும் அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்ற பட்டியலை இடம் பெறச் செய்வது என் கடமையல்லவா? அவர்களில் எத்தனை பேர் நிமிர்ந்து நின்று தாக்குப் பிடித்தார்கள்; எத்தனை பேர் வளைந்து நெளிந்து வதங்கிப் போனார்கள் என்பது எனக்கும் அவர்களது மனச்சாட்சிக்கும் மட்டுமே தெரிந்திருக்கட்டும்!
ஆட்சி கலைக்கப்பட்ட இரண்டொரு நாட்களுக்கெல்லாம் பிப்ரவரி 3-ஆம் நாள்! அதுதான் அண்ணா நினைவு நாள்! அண்ணா சதுக்கம் சென்று வழக்கம்போல மலர் வளையம் வைத்தோம்! அந்த நாளைப் பயன்படுத்திக் கொண்டு; “அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்” என்று முரசொலியில் வெளியிட்டு அந்தத் திரைமறைவில்; மிசாவில் கைதானோர் யார் என்பதை நாட்டுக்கு அறிவித்தேன்! தணிக்கை அதிகாரிகளை ஏமாற்ற அப்படியொரு
தந்திரம்-
இதோ; மிசாவில் மாவட்ட வாரியாகக் கைதானவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறேன்.
<b>சென்னை மாவட்டம்</b>
நீலநாராயணன், நா. வீராசாமி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன், சிட்டிபாபு, சீத்தாபதி, அ. செல்வராசன், டி. ஆர். பாலு, மு. க. ஸ்டாலின், புலவர் பொன்னிவளவன், மைனர் மோசஸ், சா. கணேசன், சோ. மா. ராமச்சந்திரன்,
பழக்கடை ஜெயராமன், வள்ளுவன், உசேன், கு. இராமலிங்கம், வழக்கறிஞர் ஆர். கணேசன், து. கணபதி, கோடம்பாக்கம் சவுந்தரராஜன், சுப்பு, செல்வம், ராயபுரம் கபடா ராஜு, மு. கன்னியப்பன், காட்டூர் கோபால், துறைமுகம் கிருஷ்ணன்,
மயிலை சம்பந்தம், ஆர். ஆறுமுகம், மாணவர் தமிழ்மணி;
<b>செங்கற்பட்டு மாவட்டம்</b>
சி. ஆறுமுகம், மா. வெ. நாராயணசாமி, பம்பல் நல்லதம்பி, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி, வி. பி. அகிலன், வீரராகவன், மாதவரம் வேதாசலம், எருக்கஞ்சேரி மதிவாணன்,<noinclude></noinclude>
a4zwrzw8z6jnmswh1lqebpk575m2eq7
1926957
1926757
2026-04-25T07:25:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 527}}</noinclude>என் வாழ்வையும், என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கழகத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துச் சுழன்றோடுகிற இந்த சரித்திரப் பெருவெள்ளத்தில் இயக்கத்தை அழித்தொழிக்க எடுக்கப்பட்ட இறுதிக் கட்ட முயற்சியில் எத்தனை பேர் — யார் யார் - மிசாவெனும் அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்ற பட்டியலை இடம் பெறச் செய்வது என் கடமையல்லவா? அவர்களில் எத்தனை பேர் நிமிர்ந்து நின்று தாக்குப் பிடித்தார்கள்; எத்தனை பேர் வளைந்து நெளிந்து வதங்கிப் போனார்கள் என்பது எனக்கும் அவர்களது மனச்சாட்சிக்கும் மட்டுமே தெரிந்திருக்கட்டும்!
ஆட்சி கலைக்கப்பட்ட இரண்டொரு நாட்களுக்கெல்லாம் பிப்ரவரி 3-ஆம் நாள்! அதுதான் அண்ணா நினைவு நாள்! அண்ணா சதுக்கம் சென்று வழக்கம்போல மலர் வளையம் வைத்தோம்! அந்த நாளைப் பயன்படுத்திக் கொண்டு; “அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்” என்று முரசொலியில் வெளியிட்டு அந்தத் திரைமறைவில்; மிசாவில் கைதானோர் யார் என்பதை நாட்டுக்கு அறிவித்தேன்! தணிக்கை அதிகாரிகளை ஏமாற்ற அப்படியொரு
தந்திரம்-
இதோ; மிசாவில் மாவட்ட வாரியாகக் கைதானவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறேன்.
<b>சென்னை மாவட்டம்</b>
நீலநாராயணன், நா. வீராசாமி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன், சிட்டிபாபு, சீத்தாபதி, அ. செல்வராசன், டி. ஆர். பாலு, மு. க. ஸ்டாலின், புலவர் பொன்னிவளவன், மைனர் மோசஸ், சா. கணேசன், சோ. மா. ராமச்சந்திரன்,
பழக்கடை ஜெயராமன், வள்ளுவன், உசேன், கு. இராமலிங்கம், வழக்கறிஞர் ஆர். கணேசன், து. கணபதி, கோடம்பாக்கம் சவுந்தரராஜன், சுப்பு, செல்வம், ராயபுரம் கபடா ராஜு, மு. கன்னியப்பன், காட்டூர் கோபால், துறைமுகம் கிருஷ்ணன்,
மயிலை சம்பந்தம், ஆர். ஆறுமுகம், மாணவர் தமிழ்மணி;
<b>செங்கற்பட்டு மாவட்டம்</b>
சி. ஆறுமுகம், மா. வெ. நாராயணசாமி, பம்பல் நல்லதம்பி, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி, வி. பி. அகிலன், வீரராகவன், மாதவரம் வேதாசலம், எருக்கஞ்சேரி மதிவாணன்,<noinclude></noinclude>
r5axfbn6ucmni496hwda7mlt356s119
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/550
250
574000
1926759
1920986
2026-04-24T17:22:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1926759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|528 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கும்மிடிப்பூண்டி வேணு, கோபாலகிருஷ்ணன், வேலு, ஊத்துக் கோட்டை ஸ்ரீராமலு, ஊத்துக் கோட்டை ஏ. டி. ஆறுமுகம், ஆலந்தூர் ஆப்ரகாம், பரங்கிமலை டில்லிபாபு, பல்லாவரம் பாலகிருஷ்ணன், காட்டாங்குளத்தூர் இராமு, கண்ணபிரான், ஓமலூர் கன்னியப்பன், செங்கற்பட்டு பசுபதி, அன்சர், செ. கோ.விசுவநாதன், திருக்கழுக்குன்றம் வகாப், சபாபதி, செங்குன்றம் ஏழுமலை, மதுராந்தம் சுந்தரமூர்த்தி, பிரேம்ராஜ், குலசேகரன், காஞ்சி வெங்கடேசன், ஏ.சுப்பிரமணியம், ராஜமாணிக்கம், டி. சீனிவாசன், மீஞ்சூர் கேசவன், பொன்னேரி நாகலிங்கம், விருகம்பாக்கம் லோகநாதன், போரூர், பி.கே.ராஜகோபால், பூவை டி. ராஜரத்தினம், அம்பத்தூர் ரவைக்கண்ணன், குப்புசாமி, குன்றத்தூர் பாலகிருஷ்ணன், தி. சு. லட்சுமணன் கம்பராசபுரம் எம். ராஜகோபால், செங்கை கே. ஆர். சந்திரன் பல்லாவரம் இருதயராஜ், பட்டாபிராம் கா. மு. பாபு மதுராந்தகம் சஞ்சீவி;
<b>வட ஆற்காடு மாவட்டம்</b>
வி. எம். தேவராஜ், துரைமுருகன், ஆரணி செல்வரசு, ஏ. சி. நரசிம்மன், வேலூர் வி. டி. தேவராஜன், மு. நடராஜன், திருப்பத்தூர் ஏ. டி. மணி, திருவத்திபுரம் பாண்டியன், குடியேற்றம் ஏ. கே. துரைசாமி, செங்கம் சி. பாண்டுரங்கம், எம். பி. வடிவேலு, களம்பூர் அண்ணாமலை;
<b>தென் ஆற்காடு மாவட்டம்</b>
விருத்தாசலம் எம். செல்லராஜ், பொன். சொக்கலிங்கம், நெல்லிக்குப்பம் வி. கிரூஷ்ணமூர்த்தி, சி. இராமகிருஷ்ணன் சி. குப்புசாமி, ஏ. வி. தண்டபாணி, ஏ. பாட்சா, வி. எஸ். மணி, வி. மாயவன், சி. ராஜகோபால், வி. துரை, வேங்கை மார்பன், சி. பாண்டுரங்கன்;
<b>தஞ்சை மாவட்டம்</b>
கோ.சி.மணி, எல். கணேசன், என். கிட்டப்பா, தாழை மு. கருணாநிதி, தஞ்சை எஸ். நடராஜன், நன்னிலம் நடராஜன், குடந்தை பத்மநாபன், வெங்கிடங்கால் ஏ.சந்தானம், வரதகோபாலகிருஷ்ணன், தஞ்சை டி. கே. கோவிந்தன், பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் தென்னன், சித்தமல்லி ந. சோமசுந்தரம், மன்னை பாலகிருஷ்னன், செம்பனார் கோவில் மதிவாணன், மாயவரம் செங்குட்டுவன், சிக்கல் கணபதி, ஏனாதி ஏ. பி. இராஜன், திருவாரூர் ராஜன், குடந்தை ஆர். துரை,<noinclude></noinclude>
217ucc3nvblslbxu46tho0xc35z9paz
1926958
1926759
2026-04-25T07:25:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|528 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கும்மிடிப்பூண்டி வேணு, கோபாலகிருஷ்ணன், வேலு, ஊத்துக் கோட்டை ஸ்ரீராமலு, ஊத்துக் கோட்டை ஏ. டி. ஆறுமுகம், ஆலந்தூர் ஆப்ரகாம், பரங்கிமலை டில்லிபாபு, பல்லாவரம் பாலகிருஷ்ணன், காட்டாங்குளத்தூர் இராமு, கண்ணபிரான், ஓமலூர் கன்னியப்பன், செங்கற்பட்டு பசுபதி, அன்சர், செ. கோ.விசுவநாதன், திருக்கழுக்குன்றம் வகாப், சபாபதி, செங்குன்றம் ஏழுமலை, மதுராந்தம் சுந்தரமூர்த்தி, பிரேம்ராஜ், குலசேகரன், காஞ்சி வெங்கடேசன், ஏ.சுப்பிரமணியம், ராஜமாணிக்கம், டி. சீனிவாசன், மீஞ்சூர் கேசவன், பொன்னேரி நாகலிங்கம், விருகம்பாக்கம் லோகநாதன், போரூர், பி.கே.ராஜகோபால், பூவை டி. ராஜரத்தினம், அம்பத்தூர் ரவைக்கண்ணன், குப்புசாமி, குன்றத்தூர் பாலகிருஷ்ணன், தி. சு. லட்சுமணன் கம்பராசபுரம் எம். ராஜகோபால், செங்கை கே. ஆர். சந்திரன் பல்லாவரம் இருதயராஜ், பட்டாபிராம் கா. மு. பாபு மதுராந்தகம் சஞ்சீவி;
<b>வட ஆற்காடு மாவட்டம்</b>
வி. எம். தேவராஜ், துரைமுருகன், ஆரணி செல்வரசு, ஏ. சி. நரசிம்மன், வேலூர் வி. டி. தேவராஜன், மு. நடராஜன், திருப்பத்தூர் ஏ. டி. மணி, திருவத்திபுரம் பாண்டியன், குடியேற்றம் ஏ. கே. துரைசாமி, செங்கம் சி. பாண்டுரங்கம், எம். பி. வடிவேலு, களம்பூர் அண்ணாமலை;
<b>தென் ஆற்காடு மாவட்டம்</b>
விருத்தாசலம் எம். செல்லராஜ், பொன். சொக்கலிங்கம், நெல்லிக்குப்பம் வி. கிரூஷ்ணமூர்த்தி, சி. இராமகிருஷ்ணன் சி. குப்புசாமி, ஏ. வி. தண்டபாணி, ஏ. பாட்சா, வி. எஸ். மணி, வி. மாயவன், சி. ராஜகோபால், வி. துரை, வேங்கை மார்பன், சி. பாண்டுரங்கன்;
<b>தஞ்சை மாவட்டம்</b>
கோ.சி.மணி, எல். கணேசன், என். கிட்டப்பா, தாழை மு. கருணாநிதி, தஞ்சை எஸ். நடராஜன், நன்னிலம் நடராஜன், குடந்தை பத்மநாபன், வெங்கிடங்கால் ஏ.சந்தானம், வரதகோபாலகிருஷ்ணன், தஞ்சை டி. கே. கோவிந்தன், பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் தென்னன், சித்தமல்லி ந. சோமசுந்தரம், மன்னை பாலகிருஷ்னன், செம்பனார் கோவில் மதிவாணன், மாயவரம் செங்குட்டுவன், சிக்கல் கணபதி, ஏனாதி ஏ. பி. இராஜன், திருவாரூர் ராஜன், குடந்தை ஆர். துரை,<noinclude></noinclude>
pglipyo289r21crg7dm20de09i6b335
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/551
250
574001
1926760
1920985
2026-04-24T17:22:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1926760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 529}}</noinclude>திருவாரூர் முருகு பாண்டியன், பட்டுக் கோட்டை அப்துல் சமது, மாயவரம் பாக்கியராஜு, தஞ்சாவூர் அறிவழகன், பழைய கூடலூர் ராஜமாணிக்கம், பொறையாறு சம்பந்தம், தஞ்சை இளங்கோவன், புலிவலம் ஜான், நாகை எஸ். பி. தங்கையன், எம். மீனாட்சிசுந்தரம், சீர்காழி குமாரசாமி, தஞ்சை கன்னையன், தஞ்சை கோபாலகிருஷ்ணன், மதுக்கூர் ஏ. வி. சுப்பிரமணியம், பூம்புகார் மனோகரன், தென்னவமணி, இலக்குமணன்குடி தட்சிணாமூர்த்தி;
<b>திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்</b>
பரமத்தி சண்முகம், திருச்சி மலர்மன்னன், இரா. வெற்றி கொண்டான், கரூர் எஸ். பி. இராசகோபால், பெரம்பலூர் ஜ. எஸ். ராஜு, திருச்சி எஸ். ஏ. ஜி. இராபி, எம். எஸ். வெங்கடாசலம், நாக சுந்தரம், பராங்குசம், ஆர். கே. சின்ன துரை, குளித்தலை முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ஏ. கே. மூர்த்தி, செட்டிக்குளம் அல்லாபிச்சை, குஞ்சிதபாதம், திருச்சி கரிகாலன், திருச்சி பி. சுப்பிரமணியம், ஏ. கோபாலகிருஷ்ணன், துவரங்குறிச்சி செங்குட்டுவன், திருச்சி இருதயராஜ், உறையூர் செவந்திலிங்கம், இடையாற்றுமங்கலம் சிவ. சண்முகம், திருச்சி டி. என். கோபாலகிருஷ்ணன், என். சுப்பிரமணியம், வி. கிருஷ்ணமூர்த்தி, சாக்ரடீஸ், ஏ. எம். சம்பந்தம்;
அ. பெரியண்ணன், காடுவெட்டி தியாகராஜன், சுப்பிரமணியபுரம் இரா. ராஜன், இராமையா, புதுக்கோட்டை அப்துல் மஜீத், ஆவுடையார்கோவில் துரை. மாணிக்கம், எஸ். இராமநாதன், சரவணமுத்து;
<b>சேலம் மாவட்டம்</b>
செ. கந்தப்பன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம், மு. பழனி வேலன், சேலம் அன்புக்கரசு, சேர்ந்தமங்கலம் பெரியசாமி, சேலம் மாரியப்பன், ஆத்தூர் மா. முத்து, மாயவன், ஏ. ஆறுமுக சாமி, என். நடேசன், இரத்தினம், வக்கீல் அப்புசாமி, கு. சி. வெங்கடாசலம், கே. பி. கணேசன், ஏ. பி. அப்புசாமி, ஆர். பெருமாள், எஸ். குப்புசாமி, என். நல்லப்பன், மின்னாம் பள்ளி நடேசன்;
<b>தர்மபுரி மாவட்டம்</b>
எம். கமலநாதன், ஆர். சின்னசாமி.
{{nop}}<noinclude>நெ—34</noinclude>
40lrw8sjio6xjhyj7a4xp2rcaf202ov
1926959
1926760
2026-04-25T07:26:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 529}}</noinclude>திருவாரூர் முருகு பாண்டியன், பட்டுக் கோட்டை அப்துல் சமது, மாயவரம் பாக்கியராஜு, தஞ்சாவூர் அறிவழகன், பழைய கூடலூர் ராஜமாணிக்கம், பொறையாறு சம்பந்தம், தஞ்சை இளங்கோவன், புலிவலம் ஜான், நாகை எஸ். பி. தங்கையன், எம். மீனாட்சிசுந்தரம், சீர்காழி குமாரசாமி, தஞ்சை கன்னையன், தஞ்சை கோபாலகிருஷ்ணன், மதுக்கூர் ஏ. வி. சுப்பிரமணியம், பூம்புகார் மனோகரன், தென்னவமணி, இலக்குமணன்குடி தட்சிணாமூர்த்தி;
<b>திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்</b>
பரமத்தி சண்முகம், திருச்சி மலர்மன்னன், இரா. வெற்றி கொண்டான், கரூர் எஸ். பி. இராசகோபால், பெரம்பலூர் ஜ. எஸ். ராஜு, திருச்சி எஸ். ஏ. ஜி. இராபி, எம். எஸ். வெங்கடாசலம், நாக சுந்தரம், பராங்குசம், ஆர். கே. சின்ன துரை, குளித்தலை முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ஏ. கே. மூர்த்தி, செட்டிக்குளம் அல்லாபிச்சை, குஞ்சிதபாதம், திருச்சி கரிகாலன், திருச்சி பி. சுப்பிரமணியம், ஏ. கோபாலகிருஷ்ணன், துவரங்குறிச்சி செங்குட்டுவன், திருச்சி இருதயராஜ், உறையூர் செவந்திலிங்கம், இடையாற்றுமங்கலம் சிவ. சண்முகம், திருச்சி டி. என். கோபாலகிருஷ்ணன், என். சுப்பிரமணியம், வி. கிருஷ்ணமூர்த்தி, சாக்ரடீஸ், ஏ. எம். சம்பந்தம்;
அ. பெரியண்ணன், காடுவெட்டி தியாகராஜன், சுப்பிரமணியபுரம் இரா. ராஜன், இராமையா, புதுக்கோட்டை அப்துல் மஜீத், ஆவுடையார்கோவில் துரை. மாணிக்கம், எஸ். இராமநாதன், சரவணமுத்து;
<b>சேலம் மாவட்டம்</b>
செ. கந்தப்பன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம், மு. பழனி வேலன், சேலம் அன்புக்கரசு, சேர்ந்தமங்கலம் பெரியசாமி, சேலம் மாரியப்பன், ஆத்தூர் மா. முத்து, மாயவன், ஏ. ஆறுமுக சாமி, என். நடேசன், இரத்தினம், வக்கீல் அப்புசாமி, கு. சி. வெங்கடாசலம், கே. பி. கணேசன், ஏ. பி. அப்புசாமி, ஆர். பெருமாள், எஸ். குப்புசாமி, என். நல்லப்பன், மின்னாம் பள்ளி நடேசன்;
<b>தர்மபுரி மாவட்டம்</b>
எம். கமலநாதன், ஆர். சின்னசாமி.
{{nop}}<noinclude>
நெ—34</noinclude>
6x3gh8np3j9bo84jlr4ioxrkjpk8sck
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/552
250
574002
1926761
1920984
2026-04-24T17:23:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1926761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|530 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude><b>கோவை, நீலகிரி மாவட்டங்கள்</b>
மு. கண்ணப்பன், எஸ். ஏ. இராஜமாணிக்கம், வெள்ளக் கோவில் பெரியசாமி, கோவை மு. இராமநாதன், பி. ஏ. சாமிநாதன், உதகமண்டலம் ராஜு, இரா. மோகன், வெள்ளக்கோவில் பழனிசாமி, இரா. மாணிக்கவாசகம், கோவை பி. எஸ் ஜானகிராமன், மேட்டுப்பாளையம் தூயமணி, கோவை கிருஷ்ணன், கோவை மணியன், உதகை நாகராஜன், ஈரோடு மா. சுப்பிரமணியம், திருப்பூர் முருகேசன், கொடுமுடி கிருஷ்ணன், சிவன்மலை முத்து, பொள்ளாச்சி இராமசாமி, பொள்ளாச்சி விஜயராகவன், குட்டப்பாளையம் சாமிநாதன், நீலகிரி என். மாணிக்கம், முருகன் மில்ஸ் இராமலிங்கம், குன்னூர் தங்கம், நீலகிரி குந்தா நஞ்சா கவுடர், உதகை கருப்பசாமி, கூடலூர் பகவத்சிங்;
<b>மதுரை மாவட்டம்</b>
பொன். முத்துராமலிங்கம், காவேரிமணியம், அக்கினிராஜ், துரை. எழில்விழியன், பழனி கிருஷ்ணமூர்த்தி, மதுரை ராமச்சந்திரன், வி. எஸ். லட்சுமணன், சங்கரன், மாரியப்பன், திண்டுக்கல் கே. ஜி. அந்தோணி, பாண்டி;
<b>ராமனாதபுரம் மாவட்டம்</b>
எஸ். எஸ். தென்னரசு, சித. சிதம்பரம், திருவில்லிப்புத்தூர் அமுதன், அருப்புக்கோட்டை கந்தசாமி, நயினார்கோவில் மணி, மானாமதுரை சாகுல் அமீது, சாத்தூர் வரதராஜன், திருவாடானை பெருமாள், சிவகங்கை நாராயணன், சிவகங்கை சேதுராமன் தேவகோட்டை காசிம், கட்டிக்குளம் முல்லைகிருஷ்ணன், புழுதிப்பட்டி இராசாங்கம், விருதுநகர் பாண்டியன், பரமக்குடி அரவரசன், மண்டபம் அப்துல்காதர், காரைக்குடி குறள்பித்தன், இராமநாதபுரம் சேக் சுல்தான், சிவகங்கை திருஞானம், அபிராமம் நடராஜன், சாத்தூர் பாலகிருஷ்ணன், திருச்சுழி பால்சாமி, ராஜபாளையம் ஆதிநாராயணன், திருமதி சக்தி, ராமேஸ்வரம் மாரிமுத்து, முறையூர் ராமநாதன், திருப்புவனம் சோனையா, உப்பூர் முத்துமன்னன், வத்திராயிருப்பு கொக்கு அருப்புக்கோட்டை பால்சாமி, முதுகுளத்தூர் நடராஜன், பெரி அழகு, புதுவீடு ராமசந்திரன், அகமது தம்பி, அகமது;
<b>நெல்லை மாவட்டம்</b>
வை. கோபால்சாமி, நெல்லை புகாரி, நெல்லை நெடுமாறன், நல்லை மஸ்தான், டி. தம்பித்துரை, தூத்துக்குடி செ. ரத்தினசாமி.<noinclude></noinclude>
6puth6oy09ts2m5ysaci5ptyg7gq1m5
1926961
1926761
2026-04-25T07:27:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|530 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude><b>கோவை, நீலகிரி மாவட்டங்கள்</b>
மு. கண்ணப்பன், எஸ். ஏ. இராஜமாணிக்கம், வெள்ளக் கோவில் பெரியசாமி, கோவை மு. இராமநாதன், பி. ஏ. சாமிநாதன், உதகமண்டலம் ராஜு, இரா. மோகன், வெள்ளக்கோவில் பழனிசாமி, இரா. மாணிக்கவாசகம், கோவை பி. எஸ் ஜானகிராமன், மேட்டுப்பாளையம் தூயமணி, கோவை கிருஷ்ணன், கோவை மணியன், உதகை நாகராஜன், ஈரோடு மா. சுப்பிரமணியம், திருப்பூர் முருகேசன், கொடுமுடி கிருஷ்ணன், சிவன்மலை முத்து, பொள்ளாச்சி இராமசாமி, பொள்ளாச்சி விஜயராகவன், குட்டப்பாளையம் சாமிநாதன், நீலகிரி என். மாணிக்கம், முருகன் மில்ஸ் இராமலிங்கம், குன்னூர் தங்கம், நீலகிரி குந்தா நஞ்சா கவுடர், உதகை கருப்பசாமி, கூடலூர் பகவத்சிங்;
<b>மதுரை மாவட்டம்</b>
பொன். முத்துராமலிங்கம், காவேரிமணியம், அக்கினிராஜ், துரை. எழில்விழியன், பழனி கிருஷ்ணமூர்த்தி, மதுரை ராமச்சந்திரன், வி. எஸ். லட்சுமணன், சங்கரன், மாரியப்பன், திண்டுக்கல் கே. ஜி. அந்தோணி, பாண்டி;
<b>ராமனாதபுரம் மாவட்டம்</b>
எஸ். எஸ். தென்னரசு, சித. சிதம்பரம், திருவில்லிப்புத்தூர் அமுதன், அருப்புக்கோட்டை கந்தசாமி, நயினார்கோவில் மணி, மானாமதுரை சாகுல் அமீது, சாத்தூர் வரதராஜன், திருவாடானை பெருமாள், சிவகங்கை நாராயணன், சிவகங்கை சேதுராமன் தேவகோட்டை காசிம், கட்டிக்குளம் முல்லைகிருஷ்ணன், புழுதிப்பட்டி இராசாங்கம், விருதுநகர் பாண்டியன், பரமக்குடி அரவரசன், மண்டபம் அப்துல்காதர், காரைக்குடி குறள்பித்தன், இராமநாதபுரம் சேக் சுல்தான், சிவகங்கை திருஞானம், அபிராமம் நடராஜன், சாத்தூர் பாலகிருஷ்ணன், திருச்சுழி பால்சாமி, ராஜபாளையம் ஆதிநாராயணன், திருமதி சக்தி, ராமேஸ்வரம் மாரிமுத்து, முறையூர் ராமநாதன், திருப்புவனம் சோனையா, உப்பூர் முத்துமன்னன், வத்திராயிருப்பு கொக்கு அருப்புக்கோட்டை பால்சாமி, முதுகுளத்தூர் நடராஜன், பெரி அழகு, புதுவீடு ராமசந்திரன், அகமது தம்பி, அகமது;
<b>நெல்லை மாவட்டம்</b>
வை. கோபால்சாமி, நெல்லை புகாரி, நெல்லை நெடுமாறன், நல்லை மஸ்தான், டி. தம்பித்துரை, தூத்துக்குடி செ. ரத்தினசாமி,<noinclude></noinclude>
04g5ad3ecmlyv90950vn3cycfv9jd5k
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/553
250
574003
1926762
1920983
2026-04-24T17:28:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1926762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 531}}</noinclude>நெல்லை இசக்கி, தூத்துக்குடி ராக்கட் ரத்தினசாமி, கேப்டன் நடராஜன், கிருஷ்ணன், கீழப்பாவூர் அரு. ராமநாதன், தூத்துக்குடி அப்யாசாமி, எஸ். சித்திரவேல், பாளையங்கோட்டை உசேன், டி. அய்யாத்துரை, திருநாவுக்கரசு, நெல்லை சூரிய நாராயணன், இ. நம்பி, சங்கரன்கோவில் பழனிச்சாமி, தென்காசி திரவியம், வழக்கறிஞர் சண்முகம்;
<b>குமரி மாவட்டம்</b>
நாகர்கோவில் இராசப்பா, தக்கலை டி. ஆர். சுந்தரம், குமரி பெர்னார்டு, மைக்கேல்ராஜ், அ. திரவியம், சி. ரசல்ராஜ், மு. சூரியநாரயணன், டாக்டர் ஆல்பன், கேசரி செல்வராஜ்.
மற்றும் ஆர். சுப்பிரமணியம், சாத்தையா, டி. கே. ராஜகோபால், கண்ணப்பன், ஏ. சண்முகம், பி. கண்ணன், எஸ். கிருஷ்ணன், குட்டை ரத்தினம், கே. எஸ். அற்புதம், டி. கன்னையன், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், ஏ. வி. சுப்பிரமணியம், எஸ். வெங்கடாசலம், வெங்கடசாமி, பி நாகராஜன், பம்பாய் நாராயணன் முன்னாள் அமைச்சர் கவிஞர் கா. வேழவேந்தன், பண்ருட்டி ஏ. மணி, ஆர். எஸ். மணி, கே. தட்சிணாமூர்த்தி, திண்டுக்கல் க. வே. விக்கிரமாதித்த ராசன், கன்யாகுமரி ஜி. ஷா, எஸ். எஸ். மாரிசாமி, சைதை சம்பந்தம், டி. கே. கபாலி, அடியார், மு. வரதராசன், க. அறிவழகன், அ. அ. ஜின்னா, வி. எஸ். கோவிந்தராஜன், கோடம்பாக்கம் குமார், தொட்டியம் எஸ். கே. வடிவேலு, விருதாசலம் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி என். பெரியசாமி, சாத்தான்குளம் தேவதாஸ், சங்கனாங்குளம் இளங்கோவன், சங்கரன், அழகிய நம்பி கோவில்பட்டி கலைமணி காசி, வே. தங்கபாண்டியன், சுப. தங்கவேலன், காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி, திருப்பத்தூர் சொக்கலிங்கம், மதுரை கு. திருப்பதி, நெல்லிப்பேட்டை சீனி, மேலூர் மலைச்சாமி, ஒக்கூர் மணிவாசகம், விடுதலை ரத்தினம், வையை நம்பி.
சென்னைச் சிறையில் மிசாக் கைதிகளாக இருந்தவர்களை—ஆம் — அரசியல்வாதிகளை — பெரும்பாலும் தி. மு. க., தி. க., மார்க்சிஸ்ட், பழைய காங்கிரஸ்காரர்களை அடித்து வதைத்துக் குற்றுயிரும் குலை உயிருமாக்கினர்.
தி.மு. கழகத்தினரைத் தங்கள் இஷ்டம்போல் இந்திரா அரசினர் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர், சென்னைச் சிறைச் சாலையில்!
ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் இருபத்து ஐயாயிரம் தி. மு. கழகத் தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
{{nop}}<noinclude></noinclude>
k4t934e56qwdpuo4ahvgej0qaewa66s
1926962
1926762
2026-04-25T07:28:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 531}}</noinclude>நெல்லை இசக்கி, தூத்துக்குடி ராக்கட் ரத்தினசாமி, கேப்டன் நடராஜன், கிருஷ்ணன், கீழப்பாவூர் அரு. ராமநாதன், தூத்துக்குடி அய்யாசாமி, எஸ். சித்திரவேல், பாளையங்கோட்டை உசேன், டி. அய்யாத்துரை, திருநாவுக்கரசு, நெல்லை சூரிய நாராயணன், இ. நம்பி, சங்கரன்கோவில் பழனிச்சாமி, தென்காசி திரவியம், வழக்கறிஞர் சண்முகம்;
<b>குமரி மாவட்டம்</b>
நாகர்கோவில் இராசப்பா, தக்கலை டி. ஆர். சுந்தரம், குமரி பெர்னார்டு, மைக்கேல்ராஜ், அ. திரவியம், சி. ரசல்ராஜ், மு. சூரியநாரயணன், டாக்டர் ஆல்பன், கேசரி செல்வராஜ்.
மற்றும் ஆர். சுப்பிரமணியம், சாத்தையா, டி. கே. ராஜகோபால், கண்ணப்பன், ஏ. சண்முகம், பி. கண்ணன், எஸ். கிருஷ்ணன், குட்டை ரத்தினம், கே. எஸ். அற்புதம், டி. கன்னையன், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், ஏ. வி. சுப்பிரமணியம், எஸ். வெங்கடாசலம், வெங்கடசாமி, பி நாகராஜன், பம்பாய் நாராயணன் முன்னாள் அமைச்சர் கவிஞர் கா. வேழவேந்தன், பண்ருட்டி ஏ. மணி, ஆர். எஸ். மணி, கே. தட்சிணாமூர்த்தி, திண்டுக்கல் க. வே. விக்கிரமாதித்த ராசன், கன்யாகுமரி ஜி. ஷா, எஸ். எஸ். மாரிசாமி, சைதை சம்பந்தம், டி. கே. கபாலி, அடியார், மு. வரதராசன், க. அறிவழகன், அ. அ. ஜின்னா, வி. எஸ். கோவிந்தராஜன், கோடம்பாக்கம் குமார், தொட்டியம் எஸ். கே. வடிவேலு, விருதாசலம் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி என். பெரியசாமி, சாத்தான்குளம் தேவதாஸ், சங்கனாங்குளம் இளங்கோவன், சங்கரன், அழகிய நம்பி கோவில்பட்டி கலைமணி காசி, வே. தங்கபாண்டியன், சுப. தங்கவேலன், காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி, திருப்பத்தூர் சொக்கலிங்கம், மதுரை கு. திருப்பதி, நெல்லிப்பேட்டை சீனி, மேலூர் மலைச்சாமி, ஒக்கூர் மணிவாசகம், விடுதலை ரத்தினம், வையை நம்பி.
சென்னைச் சிறையில் மிசாக் கைதிகளாக இருந்தவர்களை—ஆம் — அரசியல்வாதிகளை — பெரும்பாலும் தி. மு. க., தி. க., மார்க்சிஸ்ட், பழைய காங்கிரஸ்காரர்களை அடித்து வதைத்துக் குற்றுயிரும் குலை உயிருமாக்கினர்.
தி.மு. கழகத்தினரைத் தங்கள் இஷ்டம்போல் இந்திரா அரசினர் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர், சென்னைச் சிறைச் சாலையில்!
ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் இருபத்து ஐயாயிரம் தி. மு. கழகத் தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
{{nop}}<noinclude></noinclude>
eowyj7s9vo9l6eyq1i22sysy2d8osdp
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/554
250
574004
1926987
1920982
2026-04-25T09:41:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1926987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>73</b>}}
{{larger|<b>சட்டங்கள் பட்டபாடு!</b>}}
{{X-larger|<b>த</b>}}மிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கழக அமைச்சரவையைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று அமுல்படுத்தும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 31-ஆம் தேதி மாலையில் மத்திய அமைச்சரவை கூடி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ், தமிழ்நாடு மந்திரிசபையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்வதாக குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்கு பரிந்துரை செய்து, அன்று இரவு குடியரசுத் தலைவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுப்படி ஒரு மாநில அரசு தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதினால், அந்த அமைச்சரவையை நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அப்போது தமிழக அரசை தொடர்ந்து நடத்த முடியாத நிலை இருந்ததா? அப்போது தமிழக சட்டப்பேரவையில் தி. மு. கழகத்திற்குப் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நிலையிலே இருந்ததா என்றால்—அப்போது கழகத்திற்கு சட்டமன்றத்திலே இருந்த இடம் மொத்தம் 234 பேர்களில் தி.மு.கழகம் 167, அ.தி.மு.க. 17, ஸ்தாபன காங்கிரஸ் 13, இந்திரா காங்கிரஸ் 7, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 5, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 2, முஸ்லிம் லீக் 6, பார்வர்டுபிளாக் 7, சுதந்திரா 4, தமிழரசுக் கழகம் 1, சுயேச்சை 1, அவைத் தலைவர் 1, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 2, காலியான இடம் 1. இந்த அளவிற்கு தி.மு.கழகம் பெரும்பான்மையாக இருந்த போதிலும் கழக அமைச்சரவை கலைக்கப்பட்டது.
அமைச்சரவையைக் கலைத்ததோடு தமிழ்நாடு சட்டசபையையும் கலைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி 31-ஆம் தேதி காலையில் காந்தி விழாவில் உரையாற்றிய கவர்னர் அதுவரையில் தனது சிபாரிசை செய்யவில்லை. அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் அந்த<noinclude></noinclude>
bmge0zo8gegheh3ru2syvk54qc2gixj
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/555
250
574005
1926995
1920981
2026-04-25T10:03:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1926995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 533}}</noinclude>விழாவில் அவர் தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருக்கமாட்டார். மத்திய அரசின் விருப்பத்திற் கொப்ப, அங்கே தயாரிக்கப்பட்ட அறிக்கை இங்கே அனுப்பப்பட்டு கவர்னரிடம் அதற்குப்பிறகு கையெழுத்து பெறப்பட்டது.
அந்த அளவிற்கு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்காக அன்றைக்கே அவசரம் அவசரமாக இரண்டு பேர்களை கவர்னரின் ஆலோசர்களாக மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசில் பெட்ரோலியம் இலாகா செயலாளராக இருந்த பி.கே.தவே அவர்களையும், மின்சார இலாகா செயலாளராக இருந்த ஆர்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் கவர்னரின் ஆலோசகர்களாக மத்திய அரசு அறிவித்தது.
அமைச்சரவை கலைப்பு பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது நான் விடுத்த அறிக்கை வருமாறு:
“தமிழ்நாட்டு மக்கள் காந்திய வழியிலும், அண்ணா வழியிலும் நிரம்ப நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே அமைதி காப்பதிலும் வன்முறைகள் ஒருசிறிதும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்வதிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உணர்வுடன் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒன்பதாண்டு காலம் கழக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக மக்களுக்கும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
குடியரசுத் தலைவர் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த பதினான்கு நாட்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கவர்னரின் ஆலோசனையின் பேரில் தடை உத்தரவு பிறப்பித்தார்.
ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த சகோதரர் அரங்கண்ணல் அவர்களும், மாநில திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த கே. ஏ. மதியழகன் அவர்களும், குடிநீர் வாரியத் தலைவராக இருந்த செ. கந்தப்பன் அவர்களும், சுற்றுலா வளர்ச்சி வாரியத் தலைவராக இருந்த ஆசைத்தம்பி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
நானும் எனது உறவினர்களும் முப்பது கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டதாக ஒரு துண்டு நோட்டீசை அச்சடித்து<noinclude></noinclude>
51trpjy86sgghq1d8py77c8995fxv84
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/4
250
627466
1926695
1890348
2026-04-24T14:53:30Z
Arularasan. G
2537
1926695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude><center><big>'''பொருளடக்கம்'''</big></center>
{| align="center" cellpadding=5
|||பொருள் || ||பக்கம்
|-
| 1. ||[[விநோதரசமஞ்சரி/1.தெய்வங் கொள்கை|தெய்வங்கொள்கை]]||..||align="right" | [[Page:அங்கும் இங்கும்.pdf/9| 5]]
|-
| 2. ||[[விநோதரசமஞ்சரி/2.கற்பு நிலைமை|கற்பு நிலைமை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/16| 12]]
|-
| 3. ||[[விநோதரசமஞ்சரி/4.கற்றாய்ந் தொழுகல்|கற்றாய்ந்தொழுகல்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/22| 18]]
|-
| 4. ||[[விநோதரசமஞ்சரி/5.பயனிலுழவு|பயனில் உழவு]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/28| 24]]
|-
| 5. ||[[விநோதரசமஞ்சரி/6.மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/62| 57]]
|-
| 6. ||[[விநோதரசமஞ்சரி/8.நன்றி மறவாமை|நன்றி மறவாமை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/38|34]]
|-
| 7. ||[[விநோதரசமஞ்சரி/9.கம்பர் சரித்திரத்தின் ஒருபகுதி|கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/47| 43 ]]
|-
| 8. ||[[விநோதரசமஞ்சரி/10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது|கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/55| 51]]
|-
| 9. ||[[விநோதரசமஞ்சரி/11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது|ஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/61| 57]]
|-
| 10. ||[[விநோதரசமஞ்சரி/12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது|ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/70| 66]]
|-
| 11. ||[[விநோதரசமஞ்சரி/13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது|புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/75|71]]
|-
| 12. ||[[விநோதரசமஞ்சரி/14.காளமேகப்புலவர் சரித்திரம்|காளமேகப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/79|75]]
|-
| 13. ||[[விநோதரசமஞ்சரி/15.ஏகம்பவாணன் சரித்திரம்|ஏகம்பவாணன் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/85|81]]
|-
| 14. ||[[விநோதரசமஞ்சரி/16.ஔவையார் சரித்திரம்|ஔவையார் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/90|86]]
|-
| 15. ||[[விநோதரசமஞ்சரி/17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை|பரமார்த்தன் என்னும் அவிவேக பூரண குரு கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/95| 91]]
|-
| 16. ||[[விநோதரசமஞ்சரி/18.சிறுகூனன் கதை|சிறுகூனன் கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/100| 91]]
|-
| 17. ||[[விநோதரசமஞ்சரி/19.ஒரு பதிவிரதை சரித்திரம்|ஒரு பதிவிரதை சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 18. ||[[விநோதரசமஞ்சரி/20.காளிதாசப்புலவர் சரித்திரம்|காளிதாசப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 19. ||[[விநோதரசமஞ்சரி/3.கீதவாத்திய விநோதம்|கீதவாத்திய விநோதம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 20. ||[[விநோதரசமஞ்சரி/7.காலபேத வியல்பு|காலபேத வியல்பு]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 21. ||[[விநோதரசமஞ்சரி/தமிழறியும் பெருமாள்|தமிழறியும் பெருமாள்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/பழமொழி உவமைத் தொடர்|இப்புத்தகத்தில் வரும் பழமொழி உவமைத் தொடர் அகரவரிசை]] ||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி|மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
|
|}<noinclude></noinclude>
lawpsk05alj0q5ze48cx1d2re90322d
1926701
1926695
2026-04-24T14:57:53Z
Arularasan. G
2537
1926701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude><center><big>'''பொருளடக்கம்'''</big></center>
{| align="center" cellpadding=5
|||பொருள் || ||பக்கம்
|-
| 1. ||[[விநோதரசமஞ்சரி/1.தெய்வங் கொள்கை|தெய்வங்கொள்கை]]||..||align="right" | [[Page:விநோத ரச மஞ்சரி.pdf/14| 1]]
|-
| 2. ||[[விநோதரசமஞ்சரி/2.கற்பு நிலைமை|கற்பு நிலைமை]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/26| 21]]
|-
| 3. ||[[விநோதரசமஞ்சரி/4.கற்றாய்ந் தொழுகல்|கற்றாய்ந்தொழுகல்]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/42| 37]]
|-
| 4. ||[[விநோதரசமஞ்சரி/5.பயனிலுழவு|பயனில் உழவு]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/49| 44]]
|-
| 5. ||[[விநோதரசமஞ்சரி/6.மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/62| 57]]
|-
| 6. ||[[விநோதரசமஞ்சரி/8.நன்றி மறவாமை|நன்றி மறவாமை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/38|34]]
|-
| 7. ||[[விநோதரசமஞ்சரி/9.கம்பர் சரித்திரத்தின் ஒருபகுதி|கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/47| 43 ]]
|-
| 8. ||[[விநோதரசமஞ்சரி/10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது|கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/55| 51]]
|-
| 9. ||[[விநோதரசமஞ்சரி/11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது|ஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/61| 57]]
|-
| 10. ||[[விநோதரசமஞ்சரி/12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது|ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/70| 66]]
|-
| 11. ||[[விநோதரசமஞ்சரி/13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது|புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/75|71]]
|-
| 12. ||[[விநோதரசமஞ்சரி/14.காளமேகப்புலவர் சரித்திரம்|காளமேகப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/79|75]]
|-
| 13. ||[[விநோதரசமஞ்சரி/15.ஏகம்பவாணன் சரித்திரம்|ஏகம்பவாணன் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/85|81]]
|-
| 14. ||[[விநோதரசமஞ்சரி/16.ஔவையார் சரித்திரம்|ஔவையார் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/90|86]]
|-
| 15. ||[[விநோதரசமஞ்சரி/17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை|பரமார்த்தன் என்னும் அவிவேக பூரண குரு கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/95| 91]]
|-
| 16. ||[[விநோதரசமஞ்சரி/18.சிறுகூனன் கதை|சிறுகூனன் கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/100| 91]]
|-
| 17. ||[[விநோதரசமஞ்சரி/19.ஒரு பதிவிரதை சரித்திரம்|ஒரு பதிவிரதை சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 18. ||[[விநோதரசமஞ்சரி/20.காளிதாசப்புலவர் சரித்திரம்|காளிதாசப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 19. ||[[விநோதரசமஞ்சரி/3.கீதவாத்திய விநோதம்|கீதவாத்திய விநோதம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 20. ||[[விநோதரசமஞ்சரி/7.காலபேத வியல்பு|காலபேத வியல்பு]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 21. ||[[விநோதரசமஞ்சரி/தமிழறியும் பெருமாள்|தமிழறியும் பெருமாள்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/பழமொழி உவமைத் தொடர்|இப்புத்தகத்தில் வரும் பழமொழி உவமைத் தொடர் அகரவரிசை]] ||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி|மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
|
|}<noinclude></noinclude>
930thz846t1o5vv81yr3u70sj39olrq
1926704
1926701
2026-04-24T14:58:53Z
Arularasan. G
2537
1926704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude><center><big>'''பொருளடக்கம்'''</big></center>
{| align="center" cellpadding=5
|||பொருள் || ||பக்கம்
|-
| 1. ||[[விநோதரசமஞ்சரி/1.தெய்வங் கொள்கை|தெய்வங்கொள்கை]]||..||align="right" | [[Page:விநோத ரச மஞ்சரி.pdf/14| 1]]
|-
| 2. ||[[விநோதரசமஞ்சரி/2.கற்பு நிலைமை|கற்பு நிலைமை]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/26| 21]]
|-
| 3. ||[[விநோதரசமஞ்சரி/4.கற்றாய்ந் தொழுகல்|கற்றாய்ந்தொழுகல்]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/42| 37]]
|-
| 4. ||[[விநோதரசமஞ்சரி/5.பயனிலுழவு|பயனில் உழவு]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/49| 44]]
|-
| 5. ||[[விநோதரசமஞ்சரி/6.மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது]]||..||align="right" |[[Page:விநோத ரச மஞ்சரி.pdf/62| 57]]
|-
| 6. ||[[விநோதரசமஞ்சரி/8.நன்றி மறவாமை|நன்றி மறவாமை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/38|68]]
|-
| 7. ||[[விநோதரசமஞ்சரி/9.கம்பர் சரித்திரத்தின் ஒருபகுதி|கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/47| 43 ]]
|-
| 8. ||[[விநோதரசமஞ்சரி/10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது|கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/55| 51]]
|-
| 9. ||[[விநோதரசமஞ்சரி/11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது|ஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/61| 57]]
|-
| 10. ||[[விநோதரசமஞ்சரி/12.ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது|ஒட்டக்கூத்தர் சோழனுக்குப் பெண்பேசியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/70| 66]]
|-
| 11. ||[[விநோதரசமஞ்சரி/13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது|புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/75|71]]
|-
| 12. ||[[விநோதரசமஞ்சரி/14.காளமேகப்புலவர் சரித்திரம்|காளமேகப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/79|75]]
|-
| 13. ||[[விநோதரசமஞ்சரி/15.ஏகம்பவாணன் சரித்திரம்|ஏகம்பவாணன் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/85|81]]
|-
| 14. ||[[விநோதரசமஞ்சரி/16.ஔவையார் சரித்திரம்|ஔவையார் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/90|86]]
|-
| 15. ||[[விநோதரசமஞ்சரி/17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை|பரமார்த்தன் என்னும் அவிவேக பூரண குரு கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/95| 91]]
|-
| 16. ||[[விநோதரசமஞ்சரி/18.சிறுகூனன் கதை|சிறுகூனன் கதை]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/100| 91]]
|-
| 17. ||[[விநோதரசமஞ்சரி/19.ஒரு பதிவிரதை சரித்திரம்|ஒரு பதிவிரதை சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 18. ||[[விநோதரசமஞ்சரி/20.காளிதாசப்புலவர் சரித்திரம்|காளிதாசப்புலவர் சரித்திரம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 19. ||[[விநோதரசமஞ்சரி/3.கீதவாத்திய விநோதம்|கீதவாத்திய விநோதம்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 20. ||[[விநோதரசமஞ்சரி/7.காலபேத வியல்பு|காலபேத வியல்பு]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| 21. ||[[விநோதரசமஞ்சரி/தமிழறியும் பெருமாள்|தமிழறியும் பெருமாள்]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/பழமொழி உவமைத் தொடர்|இப்புத்தகத்தில் வரும் பழமொழி உவமைத் தொடர் அகரவரிசை]] ||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
| {{gap}} ||[[விநோதரசமஞ்சரி/மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி|மேற்கோட்செய்யுள் முதற்குறிப்பகராதி]]||..||align="right" |[[Page:அங்கும் இங்கும்.pdf/105| 101]]
|-
|
|}<noinclude></noinclude>
cjjoaxc4elu35eq7vcynvvltnooar3q
அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf
252
635214
1926649
1924955
2026-04-24T14:16:54Z
Booradleyp1
1964
1926649
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 6]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4to6=என்னுரை
7to8=பதிப்புரை
10to11=பொருளடக்கம்
12=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
hdw13ivmyjdvmrp5j8a6lwufxb12vk9
1926650
1926649
2026-04-24T14:17:12Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1926650
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 6]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
4to6=என்னுரை
7to8=பதிப்புரை
10to11=பொருளடக்கம்
12=முகப்பு
/>
|Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10}}
{{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
6oj300e3xxoslbxa6zy91dizu1qo9v0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/2
250
638862
1926651
1924883
2026-04-24T14:17:41Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1926651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{gap+|10}}{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}
{|
|-
|நூல் : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10
|-
|ஆண்டு : || 2003
|-
|உரிமை : || தமிழ் அரசிப் பதிப்பகம்,
|-
| || 189, டி.டி.கே. சாலை,
|-
| || ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
|-
|பக்கம் : || xxiv + 384 = 408
|-
|{{larger|<b>விலை : </b>}} || {{larger|<b>ரூ.130.00</b>}}
|}
{{dhr|20em}}
அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்
{{left_margin|4em|101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை
லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004
{{larger|✆}}: 24984693, 24661807}}<noinclude></noinclude>
l4xkm0o2xvmy8damm0ekmuu4gvwc29o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206
250
638865
1926733
1925462
2026-04-24T15:34:32Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|182||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம்—தருமம்—என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்!
{{left_margin|3em|ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம்.
தருமகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது.
அந்தப் புதிய முறையே சமதர்மம்—சோஷியலிசம்.}}
இந்தப் புதியமுறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயவாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, தர்மகர்த்தா’ முறை பற்றிப் பேச முற்படுகிறார், காமராஜர்.
இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக் கொண்டனர் என்பதனைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக்காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப்பல.
{{left_margin|3em|இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தருமகர்த்தாக்கள்!}}
இப்படித் தோற்றுப் போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக் கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர்.
சிலர் செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக் கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக் கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச்<noinclude></noinclude>
gukavrqm1s7hstn79ielwmqxvpdx0d5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203
250
639156
1926729
1925307
2026-04-24T15:24:46Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>
அவர் ஆற்றல் மிக்கவர், அஞ்சா நெஞ்சினர் என்ற நம்பிக்கையைப் பெறவேண்டும்.
{{left_margin|3em|இன்று காமராஜர் மூலம் அந்த நம்பிக்கை ஊட்டப்படும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சமூக அமைப்பும் பொருளாதார முறையும் புரட்சிகரமாக மாறாதிருக்கச் செய்திட, இப்படி ஒருவர் தேவைப்படுகிறார்.
ஆகவே, செல்வவான்களே இன்றைய தினம், காமராஜரின் செல்வாக்கை வலிவுள்ளதாக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.}}
உண்மையிலேயே காமராஜரால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்திடின், சீமான்கள் காமராஜரை கவிழ்த்திட முனைவர், உச்சி மோந்து முத்தமிட மாட்டார்கள்.
{{left_margin|3em|ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராஜர், தங்குவது மாளிகையில் குலவுவது சீமான்களுடன்!}}
அவர்களுடன் குலவிக் கொண்டே அவர்களின் கொட்டத்தை அடக்க முடியாதா என்று கேட்பரேல். தம்பி! முடியாது என்று கூறிட, ‘மாமேதை’ தேவையில்லை.
{{left_margin|3em|அதுமட்டுமல்லாமல், ஒரு சில பணக்காரர்கள் பீதி கொண்டுவிடப்போகிறார்கள் என்ற கவலையுடன் அவர் வெளிப்படையாகவே, தாம் பேசும் சோஷியலிசத்தில் பணக்காரர்கள் இருக்கலாம், பணம் திரட்டலாம், ஆனால், அவர்கள் ஏழைகளின் தர்மகர்த்தாக்களாக இருக்கவேண்டும் என்று அறிவித்துவிட்டார்.}}
இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல! பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உலவிக் கொண்டிருக்கிறது.
சீமான் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டிருக்கிறானே என்று எண்ணி அருவருப்பு அடையாதே! நேர்த்தி மிக்க நெசவாளர்களின் வாழ்க்கை உயருவதற்காகவே அவர் விலையுயர்ந்த வேலைப்பாடுமிக்க ஆடைகளை உடுத்திக் கொள்கிறார்.
கோட்டைபோன்ற மாளிகையில் கொலுவிருக்கிறாரே என்றெண்ணிக் கொதிப்படையாதே! கட்டடக் கலைஞர்கள் புகழ்பெற்றிடட்டும் என்ற நோக்கத்தால்தான் மாட மாளிகை கட்டினார்; தன் சுகபோகத்துக்கு அல்ல!—என்று தத்துவம் பேசப்பட்டது.
இவைகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது! இன்று? இவைகளை ஏற்பார் இல்லை.<noinclude>
<references/></noinclude>
f7xl1yg845c1boi5dwvtfuavv8930rf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204
250
639157
1926731
1925308
2026-04-24T15:27:02Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|180||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|காலமும் கருத்தும் மாறிவிட்டிருப்பதை அறியாததால் காமராஜர், இந்தத் தர்மகர்த்தா தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறார்.}}
தர்மகர்த்தா வேலை பார்ப்பதே ஒரு புண்ணிய காரியம் என்றும்,
தர்மகர்த்தாவைத் தட்டிக் கேட்பதே பாபகாரியம் என்றும்,
தர்மகர்த்தாவின் பொறுப்பிலேயே சொத்து இருக்க வேண்டும், அதுதான் முறை என்றும் நம்பப் பட்டு வந்த காலம் அல்ல இது.
அத்தகைய நம்பிக்கை இருந்து வந்த நாட்களிலேயே கூட தர்மகர்த்தாக்களாக இருந்து வந்தவர்கள், நெறி தவறி நடந்துகொண்டனர், சுயநலக்காரராயினர் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக உலவின. அந்த நிலை இன்று மேலும் எந்த அளவுக்கு ஆகிவிட்டிருக்கும் என்று கூறத் தேவையில்லை.
{{left_margin|3em|செல்வவானாக ஒருவன் இருப்பது அவன் செய்த புண்ணியத்தால் என்றும், ஏழையாக ஒருவன் நெளிவது அவன் செய்த பாபத்தால் என்றும் நம்பப்பட்டு வந்தது, முன்பு. இன்று அந்த விதமான பேச்சு ஏளனம் செய்யப்படும் கட்டம் பிறந்துவிட்டிருக்கிறது.
ஆனால் காமராஜர் மூலம் அந்தப் பத்தாம்பசலி நம்பிக்கையை மீண்டும் புகுத்திடலாம் என்று அரசியலில் இடம்பெற்றுக் கொண்டுள்ள செல்வவான்கள் எண்ணுகின்றனர்.}}
நெறி தவறாதவராக ஒரு தர்மகர்த்தா இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அத்தகையவர் என்ன செய்திடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்?
{{left_margin|3em|உள்ள சொத்து தன் சுகபோகத்துக்கு என்று கருதிவிடாமல், பொது நன்மைக்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியோர்களின் நன்மைக்காகச் செலவிடப்பட வேண்டும், அதற்காகவே அந்தச் செல்வம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று கருதவேண்டும்.
அந்தக் கருத்தின் அடிப்படையில், ஏழைக்கு இதம் செய்யத்தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அன்னதானம், சத்திரம் சாவடி கட்டுதல், பண உதவி தருவது போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.
வானமே கூரையாய், விண்மீன்களே விளக்காய், தலையே பஞ்சணையாகக் கொண்டு தத்தளிக்கும் தரித்திரவானுக்கு வீடுகட்டித் தரவேண்டும்.}}<noinclude>
<references/></noinclude>
asxpp0tp8tq5lflm1p1ygfe4y5se1od
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205
250
639158
1926732
1925310
2026-04-24T15:31:55Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அவன் பிழைக்க வழியின்றி வேதனைப்படும்போது, காப்பாற்றுவதற்காகப் பண உதவி செய்திட வேண்டும்.
ஐயோ பாவம்! அவனும் மனிதன்! அவன் வதைபடப் பார்த்திடப்போமா! என்று எண்ணி, ஏழையின் வேதனையைத் துடைத்திடத் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தந்துதவவேண்டும்.
இருளும் அழுக்கும் நிரம்பிய இடத்திலே ஏழையை இடர்ப்பட விடாமல், அவன் வாழ்வுக்கு ஒளியும் நறுமணமும் கிடைத்திடச் செய்திட வேண்டும்.}}
தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு, தன் மூன்றடுக்கு மாடியை நான்கு அடுக்கு உள்ளதாக மாற்றிக் கொள்ளாமல், இருட்குகை போலுள்ள இடத்திலிருந்து ஏழையை விடுவித்து அவனுக்கு இல்லம் அமைத்துத் தரச் செலவிட வேண்டும்.
தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு, செயற்கைக் குளம் அமைத்து அதிலே பன்னீரைத் தேக்கி வைத்து, அதிலே நீந்தி விளையாடி மகிழ்ந்திட முனையாமல், அந்தப் பணத்தைக் கொண்டு, ஏழைக்குப் போதுமான குடிதண்ணீர் கிடைத்திட ஊருணி அமைத்தளிக்க வேண்டும்.
உள்ள பணத்தைக் கொண்டு தனக்கொரு மணிமுடி தயாரித்துக்கொள்ள முனையாமல், ஏழையின் பிணிபோக்க அப்பணத்தைச் செலவிட வேண்டும்.
தம்பி! யோசித்துப் பார்த்தால் இப்படிப் பல செய்திடலாம் என்பது புரியும்.
செல்வவான்கள் இவ்விதமாகவா தமது செல்வத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்திடின், நம்மைக் கவலை கப்பிக்கொள்ளும். ஆனால் நான் உன்னை அது பற்றிக்கூட ஆராய்ந்திடச் சொல்லவில்லை. நான் கூறுவது வேறு; ஒரு அடிப்படைப் பிரச்சினை.
{{left_margin|3em|தர்மகர்த்தா, நெறி தவறாது நடந்திடினும் சமூக அமைப்பு மாறாது!
ஒருவர் தர்மகர்த்தாவாக இருக்கும் நிலை எதைக் காட்டும் என்றால், அவர் போன்ற ஒருவருடைய தரும சிந்தனையை எதிர்பார்த்துப் பலர் ஏழைகளாக இருந்தாக வேண்டும் என்பதனை.
ஏழ்மை இருந்து தீரவேண்டும்; அப்போதுதான் ஏழை பங்காளர் என்று ஒருவர் திகழ்ந்திட முடியும்; ஆக, தர்மகர்த்தா முறை என்பது, ஏழை என்றும் பணக்காரர் என்றும் சமூகம் இரு பிரிவாக இருப்பதையும் அதனால் விளைந்திடும் வேதனையையும் மாற்றி விடாது! சொல்லப் போனால் அந்த முறை இருந்து தீரும்.}}<noinclude>
<references/></noinclude>
rp8t9v1wttso0ttrcaekquqbrk09a80
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207
250
639159
1926734
1925466
2026-04-24T15:35:26Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>
செடி நட்டு வைத்துக் காட்டுவது
போன்றதாகும்; கூரையைக் கொளுத்திவிட்டு, குடம் குடமாகத் தண்ணீர் தர முனைவது போன்றதாகும்.
{{left_margin|3em|இது பிரச்சினையைத் தீர்த்திடும் முறை அல்ல; மூடி மறைக்கும் முயற்சி.}}
ஆகவேதான் தம்பி! நாம் இந்தத் தர்மகர்த்தா முறை பற்றிய பேச்சினை ஏற்க மறுக்கிறோம்.
மேலும், தம்பி! இந்தப் போதனையை இவருக்கு முன்னாலே எப்படிப்பட்டவர்களெல்லாம் செய்து பார்த்துப் பலன் காணாது வாடிப் போயினர் என்பதை எண்ணிப் பார்த்திடும்போது, கவலை அதிகமாகித்தான் தீரும்.
{{left_margin|3em|மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத்தான் செய்து வந்தார்!
ரஷிய நாட்டு தத்துவ மேதை டால்ஸ்டாய் வேதாந்த வித்தகர் இந்தப் போதனை நடத்தியவர்— அறிவோமே.}}
அவர்களின் உபதேசங்கள் ‘பூஜ மாட’ ஏடுகளாக்கப்பட்டு விட்டனவேயன்றி, புதிய முறையையா, சமூகத்திலே புகுத்தின? இல்லையே!
{{left_margin|3em|மகாத்மாவின் உபதேசம் சாதித்துக் கொடுக்காத தர்மகர்த்தா முறையையா, புதிய பெரியவரின் பேச்சு தந்திடப் போகிறது? அப்படிச் சொல்லிட ஒன்று நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும் அல்லது ஏய்க்கும் திறமை மிகுந்திருக்க வேண்டும்.}}
தருமகர்த்தா முறை செயல்பட்ட காலத்திலே கட்டப்பட்ட சத்திரங்களும் சாவடிகளும் ஏராளம். ஆனால் வளர்ந்து விட்ட ஏழையின் தொகையோ அதனினும் ஏராளம்.
{{left_margin|3em|தருமகர்த்தாக்களாகச் சிலர் விளங்கிட வேண்டுமென்றால், அவர்களிடம் பெருநிதி சேர்ந்திட வேண்டுமென்றால், நாட்டிலே உற்பத்தியாகிற செல்வத்திலே பெரும்பகுதி அவர்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; பெரும்பகுதிச் செல்வம் செல்வர் சிலரிடம் சேர்ந்திடுமானால், சமூகத்தில் பெரும்பகுதி வறண்டுதானே கிடந்தாக வேண்டும்.}}
இதனால்தான், தம்பி! ஏழை பணக்காரன் பேதம் நீடித்து கொண்டு வருகிறது. இதனால்தான் தம்பி! வறுமையால் தாக்குண்டோர் தொகை வளர்ந்தபடி இருக்கிறது. இதனால்தான் தம்பி! வறுமையின் தாக்குதல், குடும்பங்களிலே குமுறலை, காரணமற்ற கோபம் கொண்டிடும் நிலையினை மூட்டி வைக்கிறது. இதனை உணர்ந்தோர், உயர் பதவியினர்<noinclude>
<references/></noinclude>
5b0owlgsnwifs11c8vev3krk4qzh9g9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208
250
639160
1926735
1925468
2026-04-24T15:36:00Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|184||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
தர்மகர்த்தா தத்துவம் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போதே, எள்ளி நகையாடத்தான் செய்வர்.
தருமகர்த்தா தத்துவத்தைப் பற்றிக் காமராஜர் பேசி அதுகேட்டு செல்வவான்கள் மனம் உருகி, ஐயகோ! நாம் சுகபோகத்தில் இருக்கிறோம், நமது உடன் பிறந்தோர் வறுமையிலே உழல்கிறார்களே! நாம் கனிச்சாறு பருகுகிறோம், அவர்கள் கால்வயிற்றுக் கூழும் கிடைக்காமல் தவிக்கிறார்களே! நமக்குப் பஞ்சணை, அவர்களுக்குக் கட்டாந்தரை! நாம் மாளிகையில், அவர்கள் மரத்தடியில்! நாம் புதுப்புது இன்பம் தேடிப் பெறுகிறோம், அவர்கள் புழுப் போலத் துடிக்கிறார்களே! இது சரியா, முறையா? மக்களிலே பெரும் பகுதியினர் வேதனையில் உழலும்போது, நாம் வாழ்க்கையையே விழாவாக்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதா! மனிதாபிமானமாகுமா இது! சேச்சே! என்ன கொடுமை! என்ன கொடுமை! இரும்புப் பெட்டியிலே பணம்; ஏழை, குடிசையில் பிணமாகிறான், பசி நோயினால்! எதற்கு இந்தப் பணம்? என்னிடம் உள்ள பணம்? என்னிடம் உள்ள பணம் என் பணமா? ஏழையின் வியர்வை அல்லவா பணமாக மாறி என்னிடம் வந்தது? அந்த ஏழைகளைக் காத்திட இந்தப் பணம் பயன்படட்டும் என்றல்லவா இத்தனை பணம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது? குளத்திலே நீரைத் தேக்கி வைப்பது எதற்கு? ஊரார் பருகிட உதவவேண்டும் என்பதற்கல்லவா? முதலைகள் புரண்டிடவா தடாகம்!! நான் தனவான்! கனவான்! சீமான்! பொருள் என்ன? தனவான் என்பது தருமவான் என்பதன் மறுபெயரல்லவா? கனவான் என்றால் மக்களைக் கவனிப்பான் என்றல்லவா பொருள்? சீமான் என்றால் சீர்செய்வோன் என்றல்லவா பொருள்! இதுதானே தருமகர்த்தா முறை! இதனை இதுநாள்வரை மறந்து கிடந்தேனே! மக்கள் துரோகியாகிக் கிடந்தேனே! இப்போதல்லவா உண்மையை உணர்ந்தேன்! கண்திறந்தது! இதயம் மலர்ந்தது! எல்லாம் பெரியவர் காமராஜர் தந்த தருமகர்த்தா உபதேசம் கேட்டதனால். இதோ, இனி என் செல்வம், ஏழைக்கு இதம் அளிக்க! என் கடன் பணி செய்து கிடப்பதே! யான் பெற்ற செல்வம் யாவர்க்கும் சொந்தம்! தந்தேன்! தந்தேன்! நான் தர்மகர்த்தா! தர்மகர்த்தா— என்றெல்லாம் நெஞ்சு நெக்குருகக் கூறி, தம்மிடம் உள்ள செல்வத்தை அள்ளித் தந்து ஏழையின் அல்லலைப் போக்கிடவா கிளம்புகின்றனர்? இல்லையே! ஒரு புன்னகையை உதிர்க்கின்றனர்; புதுத் தெம்பு கொள்கின்றனர்!
மதியற்றோரே! கேட்டீரா காமராஜர் பேச்சை! பணக்காரர்கள் என்றாலே பாதகர்கள் என்று பேசிவந்தீரே! சீமான் என்றால் ஏழைக்கு வைரி என்று ஏசி வந்தீரே! முதலாளி என்றால் பாட்டாளிக்குப் பகையாளி என்று பழி சுமத்தி வந்தீர்களே! காமராஜர் பேச்சைக் கேட்டீர்களா?<noinclude>
<references/></noinclude>
1gkf0u8ix316cj2a6as2dfcpkymsn5c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209
250
639161
1926736
1925582
2026-04-24T15:36:40Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude>
நாங்கள் தர்மகர்த்தாக்கள்! ஆமாம்! தர்மகர்த்தாக்கள்! எம்மிடம், எமது தகுதி, திறமை, பண்பு பார்த்துச்செல்வம் வந்து குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எமக்கேவா சொந்தம்? இந்தப் பணத்தைக் கொண்டு நாங்களா சுகபோகத்தில் மூழ்கிடப் போகிறோம். நீரைத் தன்னிடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் குளம் எப்படி ஊராருக்குப் பயன் தருகிறதோ அப்படி ஏழைகளுக்கு இதம் செய்திட இந்தச் செல்வம். எம்மிடம் பணம் இருக்கிறதே என்பதற்காக, பகைத்துக் கொள்ளலாமா? உங்கள் நலனுக்காக அல்லவா இந்தப் பணம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! நாங்கள் தந்திட! நீங்கள் பெற்றிட! நாங்கள் தந்திட வேண்டுமானால், எம்மிடம் பணம் சேர்ந்திட வேண்டுமல்லவா? அப்படிச் சேர்ந்திடும்போது, அடிக்கிறான் கொள்ளை, குவிக்கிறான் கோடி என்று கொக்கரிக்கிறீர்களே, நியாயமா? நாங்கள் குவித்திடாவிட்டால், உங்களுக்கு உதவி யார் செய்திடுவர்? எப்படிச் செய்திட முடியும்!! தருமகர்த்தா இல்லாவிட்டால் தருமம் எப்படி நடக்கும்? தருமம் நடக்காவிட்டால், தரித்திரத்தால் தவித்திடும் உங்கள் வேதனை எப்படிப் போகும்? ஆகவே இனியாகிலும், அருவருப்பு, பொறாமை, பகை கொள்ளாதீர்கள்! மாளிகையில் மந்தகாசமாக வாழ்கிறான் என்று கோபம் கொள்ளாதீர்! மாளிகை வாசியினால் தானே மண் குடிசைக்காரரின் இன்னலைத் துடைக்க முடியும். உங்கள் இன்னலைத் துடைக்கத்தானே எம்மிடம் இலட்சங்கள் உள்ளன! நாங்கள் தர்மகர்த்தாக்கள்! எங்களை வாழவிடுங்கள், வளர விடுங்கள்!! வாழ்த்துங்கள்! வணங்குங்கள்! உமக்கு வாழ்வளிக்கும் வல்லமையாளர் நாங்கள்!! என்று ஏழையைப் பார்த்துக் கூறிடும் துணிவு பெறுகின்றனர்.
{{left_margin|3em|<poem>சுயநலக்காரன்
சுரண்டல்காரன்
சுகபோகி
பணம் பெருத்தான்
இரும்புப் பெட்டிக்காரன்</poem>}}
என்றெல்லாம் பணக்காரர்கள் கண்டிக்கப்பட்டால், ஒரு கொதிப்பு எழும்; குமுறிக் கிடந்தவர்கள் சீறி எழுவர்; கூப்பிய கரங்கள் தாக்கிட எழும்; புனல் சொரிந்த கண்கள் கக்கும், புரட்சி மூளும், நமது நிலை அழியும். ஆனால் நாம் தர்மகர்த்தாக்கள் என்று காமராஜரே கூறிவிட்டார். ஆகவே ஏழை எளியோர் நம்மை வாழ்த்துவர், வணங்குவர்! நமக்கு எதிர்ப்பு எழாது, பகை மூண்டிடாது, நமது ஆதிபத்தியம் அழிந்துபடாது!!—என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஒரு துணிவைத் தருகின்றது.
{{left_margin|3em|காமராஜரின் தர்மகர்த்தாப் பேச்சு எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி அஞ்சிக் கிடந்த பணக்காரர்களுக்குப் புதுத் தெம்பும், துணிவும் தந்து விட்டது.}}<noinclude></noinclude>
qlj41nk75sxpkh5hian3bwqfoh26e4r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210
250
639162
1926737
1925587
2026-04-24T15:37:24Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|186||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|முதலாளித்துவ முறைக்கு இருந்து வரும் எதிர்ப்பு முறிந்திட வழி செய்கிறது.
ஏழையைச் சீமானிடம் பணிந்திடச் செய்கிறது.}}
தம்பி, இவைகளை அறிந்து திட்டமிட்டுக் காமராஜர் இந்தத் தர்மகர்த்தா முறைபற்றிப் பேசுகிறார் என்று நான் கூறவில்லை. தமது பேச்சு எதற்குப் பயன்படுத்தப் பட்டுவிடும் என்பதை உணர்ந்தறியாமல்,—தித்திப்புப் பேச்சுப் பேசிவைப்போம், ஏழையின் உள்ளக்குமுறல் குறையட்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார். தம்மீது வீசப்பட்டு வந்த பகைச் சொற்களும், எறியப்பட்ட எதிர்ப்புகளும் மாறி, மதிப்புமிக்க ஒரு பட்டப் பெயர் — தர்மகர்த்தா — என்ற பெயரல்லவா கிடைக்கிறது, இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் காமராஜர் அல்லவா? அவரல்லவா நமக்கு உண்மை நண்பர்! அவர் வாழ்க! அவர் கூறிடும் தர்மகர்த்தா தத்துவம் வாழ்க!—என்று வாழ்த்துகின்றனர்.‘சோடசோபசாரம் செய்யவும் சொர்ணாபிஷேகம் செய்யவும் முனைகின்றனர்! திருடர்களுக்கு நடுநிசி உழைப்பாளர் என்று சிறப்புப் பெயர் கொடுத்திடுவார் உண்டா? இல்லையல்லவா? அப்படி யாரேனும் துணிந்து கூறிடின், கூறுபவர் பெருந்தலைவர் வரிசையினராகவுமிருப்பின், <b>‘நடுநிசி உழைப்பாளிகள்’</b> திருவிழா அல்லவா கொண்டாடுவர்!
{{left_margin|3em|காமராஜர் நடத்தும் ஜனநாயக சோஷியலிச விழாவில், சீமான்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வதன் காரணம், தமக்கு மதிப்புமிக்க ஒரு பட்டத்தை– தருமகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டினாரே, நம்மை எதிர்த்திடுவோரை அழைத்து, ஏமாளிகளே! இவர்களை யாரென்று எண்ணிக்கொண்டு எரிச்சல் கொள்ளுகிறீர்கள்? இவர்கள் தர்மகர்த்தாக்கள்! என்று கூறுவதன் மூலம், நமக்கு ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருக்கிறாரே! இவருக்கல்லவா விழா எடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.}}
ஆனால், அவர்களும் உண்மையைக் கண்டறிய முனையவில்லை. இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் சாஸ்திரமாக, காப்பியமாக, கதையாக, கவிதையாக, எப்படிப்பட்ட மாமேதைகளால் முன்பு தரப்பட்டது! எவ்வளவு சடுதியில், எளிதாக ஏழை மக்கள் அதனை மறந்துவிட்டார்கள்! முன்பு தத்துவம் பேசியவர்கள், இன்றைய காமராஜரைக் காட்டிலும், பெரியவர்களல்லவா? அவர்களில் அருளாளர்கள் இருந்தனர்; கவிவாணர்கள் இருந்தனர்; புலமைமிக்கோர் இருந்தனர்; புவி எங்கும் உள்ள நிலைமைகளைத் தெரிந்த அறிவாளர்கள் இருந்தனரே! அவர்கள் அன்று பேசினர் தருமகர்த்தா முறை பற்றி பேசி? கேட்டனர், தலை அசைத்தனர்! ஆனால், மீண்டும் மீண்டுமல்லவா அறம் அழிந்துபட்டது, செல்வச் செருக்கு கொக்கரித்துக் கூத்தாடிற்று.<noinclude>
<references/></noinclude>
0m5whik4w3lk96uf1bg7xiqbqdvpw2z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211
250
639163
1926738
1925611
2026-04-24T15:38:21Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude>
அகவலாகவும் வெண்பாவாகவும் அறுசீராகவும் பிறவகையினதாகவும், உரைநடையாகவும் உரையாடலாகவும், பேரறிவாளர்கள் எடுத்துக் கூறிவந்த தர்மகர்த்தா முறையினை — மிக எளிதான முறையில்,
அறம் செய விரும்பு
என்று நம் ஆன்றோர் சொல்லிவைக்கவில்லையா! அதனைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதால் விளையப் போகும் பலன் என்ன?
செல்வவான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற பேச்சு, சமூகப் புரட்சி ஏற்படுத்தத் துணிவற்றவர்கள் நடத்திக் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு!
செல்வவான்களை தர்மகர்த்தாக்கள் என்று நாடாளும் பெரியவர்கள் கூறுவதைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக்
கொள்வர்.
{{left_margin|3em|இன்று காங்கிரசின் துணைகொண்டு முதலாளிகள் அந்தக் காரியத்தைத்தான் நடத்திக் கொண்டுள்ளனர்.}}
பணம் சிலரிடம் குவிந்திருக்கும்போது அதனை தர்மகர்த்தா முறை என்று பேசி, பூசி மெழுகுகிறார்கள். ஏராளமான நிலபுலன்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜெமீன்தாரர்களை ஒழித்தபோது இந்தத் தர்மகர்த்தர் தத்துவம் எங்கே போய்விட்டிருந்தது?
ஐநூற்றுச் சொச்சம் சமஸ்தானாதிபதிகளின் பட்டத்தைத் தட்டிவிட்டபோது, இந்தத் தர்மகர்த்தா தத்துவம் ஏன் பதுங்கிக் கொண்டது?
{{left_margin|3em|செல்வவான்கள், தர்மவான்கள் என்றால் ராஜாக்களும் ஜெமீன்தாரர்களும், கடவுளின் பிரதிபிம்பங்கள் அல்லவா!! ஒப்புக் கொள்வார்களா?}}
பணக்காரர்கள் ஏழைகளுக்காகவே சொத்தைப் பயன்படுத்தும் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என்ற தத்துவம், அரசன் ஆண்டவனின் பிரதிநிதி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற தத்துவத்தோடு சேர்ந்து பிறந்ததாயிற்றே; அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்ற தத்துவம் தகர்க்கப்பட்டுப் போனது போலவே, சீமான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற தத்துவமும் தூளாகிப் போகாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா?
{{left_margin|3em|ஆனால் பலிக்கிறவரையில் பார்க்கலாம் என்ற முறையில் காமராஜர் இந்தத் தருமகர்த்தா முறை பற்றிப் பேசிவரலாம் என்று இருக்கிறார். இந்தத் தத்துவத்தில் முன்பு மக்களுக்கு இருந்துவந்த மயக்கம் இன்று பெருமளவு போய்விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள், காமராஜர், தருமகர்த்தா தத்துவம் பற்றிப் பேசிடக் கேட்டுக் கேலிப் புன்னகை செய்கின்றனர்.}}<noinclude>
<references/></noinclude>
9gynp3kixdawl8wvktfhv5v649mgbnk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212
250
639164
1926739
1926132
2026-04-24T15:39:04Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|188||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர் இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம்.
பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம்.
ஆனால், இதே தர்மகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தர்மகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன் வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர்.
{{left_margin|3em|தர்மகர்த்தா என்ற பட்டத்தை, தனவான், கனவான், சீமான்! என்ற பழைய பட்டங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள மட்டுமே பணக்காரர்கள் இசைவார்கள். அந்தத் தத்துவத்தின்படி, தன் சொத்து தனது சுகபோகத்துக்கு அல்ல, ஏழையின் நன்மைக்கு என்று கருதிச் செலவிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.}}
காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக்கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தர்மகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின், என்ன கிடைத்திடும்?
{{left_margin|3em|<poem>தடியடி
சிறை
துப்பாக்கிச் சூடு!</poem>}}
‘கேட்பதும் கிடைப்பதும்’ என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன்.
{{left_margin|3em|<poem><b>“வாழ்வில்லை வளமில்லை
வலிவில்லை செழிப்பில்லை
சூழ்தொல்லை சிறிதில்லை
சுகமில்லை நலமில்லை” என்றால்
மரமுண்டு கயிறுண்டு}}</poem></b>}}<noinclude>
<references/></noinclude>
4e56db6qy30v9jlr7exl56z00twjbmx
1926740
1926739
2026-04-24T15:39:27Z
Saranya V R
14232
1926740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|188||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர் இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம்.
பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம்.
ஆனால், இதே தர்மகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தர்மகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன் வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர்.
{{left_margin|3em|தர்மகர்த்தா என்ற பட்டத்தை, தனவான், கனவான், சீமான்! என்ற பழைய பட்டங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள மட்டுமே பணக்காரர்கள் இசைவார்கள். அந்தத் தத்துவத்தின்படி, தன் சொத்து தனது சுகபோகத்துக்கு அல்ல, ஏழையின் நன்மைக்கு என்று கருதிச் செலவிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.}}
காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக்கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தர்மகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின், என்ன கிடைத்திடும்?
{{left_margin|3em|<poem>தடியடி
சிறை
துப்பாக்கிச் சூடு!</poem>}}
‘கேட்பதும் கிடைப்பதும்’ என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன்.
{{left_margin|3em|<poem><b>“வாழ்வில்லை வளமில்லை
வலிவில்லை செழிப்பில்லை
சூழ்தொல்லை சிறிதில்லை
சுகமில்லை நலமில்லை” என்றால்
மரமுண்டு கயிறுண்டு</poem></b>}}<noinclude>
<references/></noinclude>
ofg8gnnnn9ia61dad6o6a7w90zp6kr9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213
250
639165
1926741
1926133
2026-04-24T15:40:35Z
Saranya V R
14232
1926741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||189}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
மரணத்தில் சுகமுண்டு
பிறகென்ன துயருண்டு?
பேசாதே போவென்று சொல்வார்—இவர்
கூசாமல் சாவென்று சொல்வார்—இங்கே
வாழ்வுக்கு வழிகேட்டால்
சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!</b></poem>}}
அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் ‘ஓரிரவு’ என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்கவேண்டும்.
{{left_margin|3em|வாழ்வுக்கு வழி கேட்டால், வகையற்ற பேச்சைத் தத்துவமாக்கியா தருவது!}}
இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்துவைக்கத்தக்கது! அதைத்தான் தரமுடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
தம்பி! துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்!
ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன் என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான்.
போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாருக்கும் வருகிறதா! காரணமற்றுக் கோபம் வருகிறதா! சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள். சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!!— என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!!
{{rh|<br>9.10.'66||அண்ணன்,<br>அண்ணாதுரை}}<noinclude>
<references/></noinclude>
jky54q2mi9mdnycr1egznot3ld39tw0
1926742
1926741
2026-04-24T15:42:02Z
Saranya V R
14232
1926742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||189}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
மரணத்தில் சுகமுண்டு
பிறகென்ன துயருண்டு?
பேசாதே போவென்று சொல்வார்—இவர்
கூசாமல் சாவென்று சொல்வார்—இங்கே
வாழ்வுக்கு வழிகேட்டால்
சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!</b></poem>}}
அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் ‘ஓரிரவு’ என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்கவேண்டும்.
{{left_margin|3em|வாழ்வுக்கு வழி கேட்டால், வகையற்ற பேச்சைத் தத்துவமாக்கியா தருவது!}}
இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்துவைக்கத்தக்கது! அதைத்தான் தரமுடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
தம்பி! துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்!
ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன் என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான்.
போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாருக்கும் வருகிறதா! காரணமற்றுக் கோபம் வருகிறதா! சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள். சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!!— என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!!
{{rh|<br>9.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
9gma174a1jwthxxuehjkmx8zfsq92db
1926743
1926742
2026-04-24T15:42:19Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||189}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>
மரணத்தில் சுகமுண்டு
பிறகென்ன துயருண்டு?
பேசாதே போவென்று சொல்வார்—இவர்
கூசாமல் சாவென்று சொல்வார்—இங்கே
வாழ்வுக்கு வழிகேட்டால்
சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!</b></poem>}}
அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் ‘ஓரிரவு’ என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்கவேண்டும்.
{{left_margin|3em|வாழ்வுக்கு வழி கேட்டால், வகையற்ற பேச்சைத் தத்துவமாக்கியா தருவது!}}
இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்துவைக்கத்தக்கது! அதைத்தான் தரமுடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
தம்பி! துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்!
ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன் என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான்.
போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாருக்கும் வருகிறதா! காரணமற்றுக் கோபம் வருகிறதா! சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள். சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!!— என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!!
{{rh|<br>9.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
he4aoel1fjak6njgmqq9lvdl87izzwx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215
250
639171
1926744
1925718
2026-04-24T15:43:33Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>
கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர்.
பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன்.
சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள்.
‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும்.
மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது.
எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்!
வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!!
தம்பி! இது ஏழ்மையின் விளைவு.
ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude>
<references/></noinclude>
his73jeb4x810079ee1btkerkt9h7gt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216
250
639172
1926745
1925594
2026-04-24T15:44:10Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|192||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
உண்மையான அன்பு காரணமாக, எதையும் இழந்திட, எத்தகைய இன்னலையும் ஏற்றிடத் தயாராக உள்ள தூயவர்களைத் தொண்டர்களாகப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றிடும் தலைவர்கள் உளர்.
{{left_margin|3em|அந்தத் தலைவர்களை விடத் தூய்மை மிக்க அந்தத் தொண்டர்களே, பொதுவாழ்க்கைத் துறைக்கு உயிரூட்டம் தருபவர்.}}
நான், தம்பி! அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நற்குணம் கொண்ட தூயவர்களைப்பற்றி அல்ல கூறுவது.
சீமானான உடன் அவனை ‘எஜமானர்’ என்று கொண்டாடிடுவோர் போல, ஒருவர் அரசியலில் பெரிய பதவியில் இடம்பெற்றவுடன் அவர் முன்நின்று அவர் நாமாவளி பாடுகிறார்களே, அவர்களைக் குறிப்பிடுகிறேன்; துதி பாடகர்களை,
{{left_margin|3em|துதி பாடகர்கள் வரம்வேண்டிப் புதிய தேவதை முன் வேண்டி நிற்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்பதும் மற்ற எவரையும் மட்டமாகக் கருதி ஏசுவதும், தமது புதிய எஜமானருக்குத் திருப்தி தரும் என்ற நினைப்பில் இருப்பர்.
தன்னைப் பாராட்டிப் பேசுவதுடன், தனக்கு ‘ஆகாதவர்களை’க் கடுமையாக ஏசுசிறான் என்பதறிந்து அகமகிழ்ந்து, தட்டிக் கொடுக்கும் போக்கினர் உளர்.}}
‘தலைவர்’ மகிழ்ச்சி அடைகிறார், தட்டிக் கொடுக்கிறார் என்று தெரிந்தால், தூற்றும் பேர்வழிகளுக்குத் தெம்பும் துணிவும் பன்மடங்கு அதிகமாகிடத்தானே செய்யும். வகை பாடுவதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்! அதிலேயே ஈடுபட்டு ஈடுபட்டு, பிறகு வேறு எதற்குமே தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.
தம்முடன் உள்ளவர்கள் பிரச்சினைகளை விளக்க வேண்டும், வாதங்களைக் காட்டவேண்டும், புள்ளி விவரத்தைத் தரவேண்டும், பேச்சிலே பொருளும் பொறுப்பும் இருக்கவேண்டும், கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்பிடுவது, ஒரு தலைவரின் தரத்தை மட்டுமல்ல, பொதுத் தொண்டின் தரத்தையே உயர்த்தும்.
அதற்கு மாறாகத் தரம்கெட்ட பேச்சுக்குத் தலையாட்டுவதும் தட்டிக் கொடுப்பதும், தூபமிடுவதுமாக அந்தத் தலைவர் இருந்திடின், என்ன நேரிடும்? சாக்கடைச் சரக்கினை நாக்கிடைகொண்டு, உமிழ்வோரின் தொகை பெருகும், துணிவு வளரும். இன்று அதனைத்தான் காண்கிறோம்.
தேர்தல் நெருங்க நெருங்க, இழிமொழிகள் உமிழ்வோர் கும்பல் கும்பலாகக் கிளம்புவர். ஆந்தை அலுத்துவிட்டது கோட்டான் தோற்று<noinclude>
<references/></noinclude>
2ppxtqe2tri4vo66t6s9bizn1bd0h4s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217
250
639173
1926746
1925625
2026-04-24T15:49:55Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>
விட்டது என்று கூறத்தக்க விதமான ஒலி கிளம்பிடும்; காது குடைச்சல் எடுத்திடும் விதமாக. கவலையோ, கோபமோ துளியும் ஏற்படவிடக் கூடாது.
தரமற்றவர்கள், கீழ் நிலையில் உள்ளவர்கள் எதையோ பேசட்டும், எப்படியோ ஏசட்டும் அண்ணா! மேல் நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள் பீடத்தில் அமர்பவர்கள் இவர்களெல்லாமோ, இழித்தும் பழித்தும் பேசுவது, இட்டுக் கட்டிப் பேசுவது என்று கேட்கிறாய். கேள்வி, நியாயமானதுதான் தம்பி! ஆனால் சற்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாய்.
{{left_margin|3em|உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள்.
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்.
பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைத்திடுகிறது வைரம்! உயரத்தில் அல்ல!! எனினும் வைரம் உயர்ந்த பொருள்!! கட்டுவீரியன் குட்டி! மரத்தின் உச்சாணிக் கிளையிலே போய் இருந்து கொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமோ ஆகாதன்றோ!}}
உயரம்—தாழ்ந்த இடம்—மலை—மடு—சரிவு, —பள்ளத்தாக்கு—சம நிலம்—இவை, இடங்களின் அமைப்பைக் குறிக்கின்றன; தரத்தை அல்ல. ஆகவே உயர்ந்த இடம்— மேலான பதவி—இங்கு உள்ளவர்களெல்லாமோ, இழிமொழி பேசுவது என்று கேட்டுக் கவலைப்பட்டுக் கொள்ளாதே.
இடமும் இயல்பும் பொருந்தி இருந்துவிடுவது, இலட்சத்தில் ஒன்று இருக்கலாம்.
இடத்திற்குத் தக்க இயல்பு பெற்றிட முனைபவர், பதினாயிரத்தில் ஒருவராக இருக்கலாம்.
ஆனால், உயர இருப்பதனைத்தும் உயர்ந்தது என்று பொது இலக்கணமாக்கிடக் கூடாது.
உயர்ந்த இடத்திலுமா இப்படிப்பட்ட இயல்பினர் உள்ளனர் என்று கூறினால், பொருளுண்டு.
உயர்ந்த இடம் அடைந்தபிறகாவது, தமது இயல்பினைப் சிறந்ததாக்கிக் கொள்ளக்கூடாது, உயர்ந்த இயல்பினைப் பயின்று கொள்ளக்கூடாதா என்று கேட்கத் தோன்றும். அது நல்ல கேள்வி. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறதே, என்ன செய்ய!<noinclude>
<references/></noinclude>
f6m88exral2kfg9pldf6f6hw3945vhx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218
250
639174
1926656
1925640
2026-04-24T14:27:01Z
Sridharrv2000
12752
1926656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
{{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}}
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர்.
{{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம்.
போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude>
<references/></noinclude>
ipnpzcfvz3nbhiqiaj9g20mjz4yv74c
1926747
1926656
2026-04-24T15:50:49Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
{{left_margin|3em|ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.}}
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர்.
{{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம்.
போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude>
<references/></noinclude>
gid7z7tgslzcsw1yf1wdw6w7qe5vd3l
1926748
1926747
2026-04-24T15:51:33Z
Saranya V R
14232
1926748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
{{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}}
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர்.
{{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம்.
போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude>
<references/></noinclude>
56erokefjtmfw25uvpwodntmeh70a14
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219
250
639175
1926659
1925651
2026-04-24T14:27:46Z
Sridharrv2000
12752
1926659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
தமது அறிவாற்றலை மிகப் பெரும் அளவு வளர்த்துக் கொள்ள நேரமோ, வாய்ப்போ, முறையோ இருந்ததாக அவருடைய துதி பாடகர்கள் கூடக் கூறமாட்டார்கள்!
ஆனால் அவர் உயர் இடம் சென்றார், போற்றிடுவோரின் குரல் உயர்ந்தது!</poem>}}
இடத்தின் உயர்வுகண்டு அதிலே உள்ளவர்களைப் போற்றிப் புகழ்ந்திட முற்படும் போக்கு, இன்று நேற்றல்ல, நெடுங்காலத்துப் பழக்கம்.
புகழுரை கேட்டுக்கேட்டு, உயர் இடம் சென்றடைந்தவர்கள் முதலில் மகிழ்கின்றனர், பிறகு மயங்குகின்றனர், பிறகு மமதை அடைகின்றனர், இறுதியில், புகழுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அருங்குணங்கள் அனைத்தும் தமக்கு உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கை கொண்டு விடுதின்றனர். அந்த நம்பிக்கை தடித்துவிட்டால், எவரேனும் தன்னிடம் ஒரு சிறு குறை இருப்பதனை மிகப் பணிவுடன் சுட்டிக் காட்டிடினும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பொங்கி எழுவர்! யார்! அவன்! அவனுக்கு என்ன தெரியும்? என்ன தகுதி அவனுக்கு இருக்கிறது!— என்று முழக்கமெழுப்புவர்.
அந்த நிலைக்குச் சென்றுவிட்டவர்கள், பிறகு எதையும் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூட ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் எளிதாக அவர்களுக்குத் தென்படும். எதையும் முடித்துவிட முடியும் என்ற துணிவு பிறந்திடும். அது இறுதியில் அவர்களை எங்குத் துரத்திடும் என்பதனை வரலாற்று ஏடுகளில் பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
{{left_margin|3em|<poem>அழாதே! ஏதோ ஆத்திரத்திலே அடித்து விட்டேன். பொறுத்துக்கொள்; புத்திகெட்டு அடித்துவிட்டேன்.
அடிக்காமல் விட்டுவிட முடியுமா? நீ செய்த வேலைக்கு இந்த அடி போதாது, நானாக இருக்கவே இந்த அளவோடு விட்டுவிட்டேன். வேறு ஒருவனாக இருப்பின் முதுகுத்தோலை உரித்து உப்புத் தடவி வெயிலிலே உருட்டிவிடுவார்கள் உன்னை, பயல்! தப்பித்துக்கொண்டாய், போ! போ!!
காரணம் தெரிவிக்க வேண்டுமோ, பயலுக்கு! அடித்தேன்! ஏன் என்றா கேட்கிறாய்? ஏன் என்று கேட்டதற்கே மற்றோர் தடவை உன்னைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்......</poem>}}
தம்பி! செல்வச் செருக்கின் வளர்ச்சியிலே, ஒவ்வொரு கட்டத்தில் இவ்விதம் ஒவ்வொரு விதமாகச் ‘சீமான்’, பேசுகிறார் அல்லவா! உயர்ந்த பதவி பெறப் பெற, சிலருக்கு இந்தச் ‘சீமான்’ போக்கு தடித்துப் போய்விடுகிறது.<noinclude></noinclude>
shkk4qrb881qz1npmmwvf61v4mvtqwz
1926749
1926659
2026-04-24T15:52:53Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|தமது அறிவாற்றலை மிகப் பெரும் அளவு வளர்த்துக் கொள்ள நேரமோ, வாய்ப்போ, முறையோ இருந்ததாக அவருடைய துதி பாடகர்கள் கூடக் கூறமாட்டார்கள்!
ஆனால் அவர் உயர் இடம் சென்றார், போற்றிடுவோரின் குரல் உயர்ந்தது!}}
இடத்தின் உயர்வுகண்டு அதிலே உள்ளவர்களைப் போற்றிப் புகழ்ந்திட முற்படும் போக்கு, இன்று நேற்றல்ல, நெடுங்காலத்துப் பழக்கம்.
புகழுரை கேட்டுக்கேட்டு, உயர் இடம் சென்றடைந்தவர்கள் முதலில் மகிழ்கின்றனர், பிறகு மயங்குகின்றனர், பிறகு மமதை அடைகின்றனர், இறுதியில், புகழுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அருங்குணங்கள் அனைத்தும் தமக்கு உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கை கொண்டு விடுதின்றனர். அந்த நம்பிக்கை தடித்துவிட்டால், எவரேனும் தன்னிடம் ஒரு சிறு குறை இருப்பதனை மிகப் பணிவுடன் சுட்டிக் காட்டிடினும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பொங்கி எழுவர்! யார்! அவன்! அவனுக்கு என்ன தெரியும்? என்ன தகுதி அவனுக்கு இருக்கிறது!— என்று முழக்கமெழுப்புவர்.
அந்த நிலைக்குச் சென்றுவிட்டவர்கள், பிறகு எதையும் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூட ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் எளிதாக அவர்களுக்குத் தென்படும். எதையும் முடித்துவிட முடியும் என்ற துணிவு பிறந்திடும். அது இறுதியில் அவர்களை எங்குத் துரத்திடும் என்பதனை வரலாற்று ஏடுகளில் பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
{{left_margin|3em|அழாதே! ஏதோ ஆத்திரத்திலே அடித்து விட்டேன். பொறுத்துக்கொள்; புத்திகெட்டு அடித்துவிட்டேன்.
அடிக்காமல் விட்டுவிட முடியுமா? நீ செய்த வேலைக்கு இந்த அடி போதாது, நானாக இருக்கவே இந்த அளவோடு விட்டுவிட்டேன். வேறு ஒருவனாக இருப்பின் முதுகுத்தோலை உரித்து உப்புத் தடவி வெயிலிலே உருட்டிவிடுவார்கள் உன்னை, பயல்! தப்பித்துக்கொண்டாய், போ! போ!!
காரணம் தெரிவிக்க வேண்டுமோ, பயலுக்கு! அடித்தேன்! ஏன் என்றா கேட்கிறாய்? ஏன் என்று கேட்டதற்கே மற்றோர் தடவை உன்னைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்......}}
தம்பி! செல்வச் செருக்கின் வளர்ச்சியிலே, ஒவ்வொரு கட்டத்தில் இவ்விதம் ஒவ்வொரு விதமாகச் ‘சீமான்’, பேசுகிறார் அல்லவா! உயர்ந்த பதவி பெறப் பெற, சிலருக்கு இந்தச் ‘சீமான்’ போக்கு தடித்துப் போய்விடுகிறது.<noinclude></noinclude>
ih8pmqb5na4py2wm746mtrn0t50713a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220
250
639176
1926750
1925755
2026-04-24T15:54:20Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|196||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
அந்தப் போக்குக்கு முதற் காரணமாக அமைவது, உயர்ந்த இடம் சென்றுவிட்டவர்களை, பொருத்தமும் பொருளும்கூடப் பாராமல், போற்றிப் புகழ்ந்திட ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே, அதுவேதான்!!
உயர்ந்த இடம் சென்று விட்டவர்கள், இனியாகிலும் உயர்ந்த குணம் பெற்றுக் கொள்ளுவோம் என்று முயற்சி எடுத்துக்கொள்ளக் கூடும்; அந்த முயற்சியே தேவையில்லை என்று இந்தத் துதிபாடகர்கள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர்.
{{left_margin|3em|<poem>தன்னை, பல்வேறு துறைகளிலே உள்ளவர்கள்,
எல்லாம் இவர் அறிவார்!</poem>}}
என்று போற்றிப் புகழ்ந்திடக் கேட்டால்,
{{left_margin|3em|எதையும் இனி நாம் தெரிந்துகொள்ளத் தேவை இல்லை}}
என்ற எண்ணம் எப்படி வளராமல் போய்விடும்! அந்த எண்ணம் வரத்தான் செய்யும்.
அடுத்த கட்டமாக அமைவது மேலும் வேடிக்கையானது.
{{left_margin|3em|<poem>புகழ்பவர்கள்
புரிந்தவர்கள்;
புகழாதவர்கள்
புத்திக்கெட்டவர்கள்</poem>}}
என்ற புது இலக்கணத்தையே உயர் இடம் சென்று ‘துதி பாடகர்’களைப் பெற்றுக் கொண்டவர் ஆக்கிக் கொள்கிறார்.
மருத்துவர்கள் கூறிடும் முறைகளை அவர் மறுப்பார்; மருத்துவர்கள் வாய் பொத்திக்கொள்வர்; அவர் அறியாரா? அறிந்துதான் கூறுகிறார்! ஏடுகளிலே உள்ளவற்றை நாம் கூறுகிறோம்; அவரோ, அவருடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறார்; அவருடைய சொல்லை மறுத்துப் பேசிட நாம் யார்! அவருடைய நிலை என்ன, ஆற்றலென்ன அறிவென்ன! அவருக்குள்ள தகுதி என்ன! திறமை என்ன! அவருக்கு முன் நாம் எம்மாத்திரம்! அவர் நட்சத்திரம், நாம் மின்மினி!—என்று கூறுவர்; ஒப்புக்கு அல்ல; உண்மையாகவே அவ்விதம் நம்பிக் கொண்டே பேசுகின்றனர்.
{{left_margin|3em|அவ்விதம் பேசுபவர் ஆதாயமும் அடைகின்றனர். ஆதாயம் சுவை அளிக்கிறது. அந்தச் சுவை அவர்களை மேலும் புகழ் பாடச் செய்கிறது. அஃது ஒரு கலையாகவே வடிவம் கொள்கிறது.}}
ஆதாயம் பெறவே பலரும் தன்னைப் புகழ்கிறார்கள் என்பது முதலிலே புரிகிறது, பிறகு அதுகூட மறந்து போய்விடுகிறது, போற்றுதலைப் பெற்றுப் பழக்கப்பட்டுப் போய்விட்டவருக்கு.<noinclude>
<references/></noinclude>
3sepktx7u6zslzh7zshfmfhto32q580
1926751
1926750
2026-04-24T15:55:15Z
Saranya V R
14232
1926751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|196||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
அந்தப் போக்குக்கு முதற் காரணமாக அமைவது, உயர்ந்த இடம் சென்றுவிட்டவர்களை, பொருத்தமும் பொருளும்கூடப் பாராமல், போற்றிப் புகழ்ந்திட ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே, அதுவேதான்!!
உயர்ந்த இடம் சென்று விட்டவர்கள், இனியாகிலும் உயர்ந்த குணம் பெற்றுக் கொள்ளுவோம் என்று முயற்சி எடுத்துக்கொள்ளக் கூடும்; அந்த முயற்சியே தேவையில்லை என்று இந்தத் துதிபாடகர்கள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர்.
தன்னை, பல்வேறு துறைகளிலே உள்ளவர்கள்,
{{left_margin|3em|எல்லாம் இவர் அறிவார்!}}
என்று போற்றிப் புகழ்ந்திடக் கேட்டால்,
{{left_margin|3em|எதையும் இனி நாம் தெரிந்துகொள்ளத் தேவை இல்லை}}
என்ற எண்ணம் எப்படி வளராமல் போய்விடும்! அந்த எண்ணம் வரத்தான் செய்யும்.
அடுத்த கட்டமாக அமைவது மேலும் வேடிக்கையானது.
{{left_margin|3em|<poem>புகழ்பவர்கள்
புரிந்தவர்கள்;
புகழாதவர்கள்
புத்திக்கெட்டவர்கள்</poem>}}
என்ற புது இலக்கணத்தையே உயர் இடம் சென்று ‘துதி பாடகர்’களைப் பெற்றுக் கொண்டவர் ஆக்கிக் கொள்கிறார்.
மருத்துவர்கள் கூறிடும் முறைகளை அவர் மறுப்பார்; மருத்துவர்கள் வாய் பொத்திக்கொள்வர்; அவர் அறியாரா? அறிந்துதான் கூறுகிறார்! ஏடுகளிலே உள்ளவற்றை நாம் கூறுகிறோம்; அவரோ, அவருடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறார்; அவருடைய சொல்லை மறுத்துப் பேசிட நாம் யார்! அவருடைய நிலை என்ன, ஆற்றலென்ன அறிவென்ன! அவருக்குள்ள தகுதி என்ன! திறமை என்ன! அவருக்கு முன் நாம் எம்மாத்திரம்! அவர் நட்சத்திரம், நாம் மின்மினி!—என்று கூறுவர்; ஒப்புக்கு அல்ல; உண்மையாகவே அவ்விதம் நம்பிக் கொண்டே பேசுகின்றனர்.
{{left_margin|3em|அவ்விதம் பேசுபவர் ஆதாயமும் அடைகின்றனர். ஆதாயம் சுவை அளிக்கிறது. அந்தச் சுவை அவர்களை மேலும் புகழ் பாடச் செய்கிறது. அஃது ஒரு கலையாகவே வடிவம் கொள்கிறது.}}
ஆதாயம் பெறவே பலரும் தன்னைப் புகழ்கிறார்கள் என்பது முதலிலே புரிகிறது, பிறகு அதுகூட மறந்து போய்விடுகிறது, போற்றுதலைப் பெற்றுப் பழக்கப்பட்டுப் போய்விட்டவருக்கு.<noinclude>
<references/></noinclude>
1kujcikvdn9sljv144jcpmotevu7lpo
1926752
1926751
2026-04-24T15:55:51Z
Saranya V R
14232
1926752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|196||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
அந்தப் போக்குக்கு முதற் காரணமாக அமைவது, உயர்ந்த இடம் சென்றுவிட்டவர்களை, பொருத்தமும் பொருளும்கூடப் பாராமல், போற்றிப் புகழ்ந்திட ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே, அதுவேதான்!!
உயர்ந்த இடம் சென்று விட்டவர்கள், இனியாகிலும் உயர்ந்த குணம் பெற்றுக் கொள்ளுவோம் என்று முயற்சி எடுத்துக்கொள்ளக் கூடும்; அந்த முயற்சியே தேவையில்லை என்று இந்தத் துதிபாடகர்கள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர்.
தன்னை, பல்வேறு துறைகளிலே உள்ளவர்கள்,
{{left_margin|6em|எல்லாம் இவர் அறிவார்!}}
என்று போற்றிப் புகழ்ந்திடக் கேட்டால்,
{{left_margin|3em|எதையும் இனி நாம் தெரிந்துகொள்ளத் தேவை இல்லை}}
என்ற எண்ணம் எப்படி வளராமல் போய்விடும்! அந்த எண்ணம் வரத்தான் செய்யும்.
அடுத்த கட்டமாக அமைவது மேலும் வேடிக்கையானது.
{{left_margin|3em|<poem>புகழ்பவர்கள்
புரிந்தவர்கள்;
புகழாதவர்கள்
புத்திக்கெட்டவர்கள்</poem>}}
என்ற புது இலக்கணத்தையே உயர் இடம் சென்று ‘துதி பாடகர்’களைப் பெற்றுக் கொண்டவர் ஆக்கிக் கொள்கிறார்.
மருத்துவர்கள் கூறிடும் முறைகளை அவர் மறுப்பார்; மருத்துவர்கள் வாய் பொத்திக்கொள்வர்; அவர் அறியாரா? அறிந்துதான் கூறுகிறார்! ஏடுகளிலே உள்ளவற்றை நாம் கூறுகிறோம்; அவரோ, அவருடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறார்; அவருடைய சொல்லை மறுத்துப் பேசிட நாம் யார்! அவருடைய நிலை என்ன, ஆற்றலென்ன அறிவென்ன! அவருக்குள்ள தகுதி என்ன! திறமை என்ன! அவருக்கு முன் நாம் எம்மாத்திரம்! அவர் நட்சத்திரம், நாம் மின்மினி!—என்று கூறுவர்; ஒப்புக்கு அல்ல; உண்மையாகவே அவ்விதம் நம்பிக் கொண்டே பேசுகின்றனர்.
{{left_margin|3em|அவ்விதம் பேசுபவர் ஆதாயமும் அடைகின்றனர். ஆதாயம் சுவை அளிக்கிறது. அந்தச் சுவை அவர்களை மேலும் புகழ் பாடச் செய்கிறது. அஃது ஒரு கலையாகவே வடிவம் கொள்கிறது.}}
ஆதாயம் பெறவே பலரும் தன்னைப் புகழ்கிறார்கள் என்பது முதலிலே புரிகிறது, பிறகு அதுகூட மறந்து போய்விடுகிறது, போற்றுதலைப் பெற்றுப் பழக்கப்பட்டுப் போய்விட்டவருக்கு.<noinclude>
<references/></noinclude>
2cpk8kbo2fkfhfg8xocp3xu2jtkr71c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221
250
639177
1926663
1925757
2026-04-24T14:30:57Z
Sridharrv2000
12752
1926663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இவ்வளவு பேர் புகழ்கிறார்கள்; போற்றுகிறார்கள்: பின்பற்றுகிறார்கள்; பணிந்து கிடக்கிறார்கள்; ஆனால்! இந்தச் சிறு கூட்டம் மட்டும் நம்மிடம் குறை காண்கிறதே, எதிர்க்கிறதே! என்ன துணிவு! என்ன ஆணவம்! இதுகளை விட்டு வைக்கலாமா; கூடாது! கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்!—}}
என்ற எண்ணம் முளைத்து விடுகிறது; அதன்படி திட்டமிட முனைகிறார்.
இதற்கான திட்டத்திலே முதற்கட்டம் தன்னிடம் பணியாது இருப்பவர்களிலிருந்து ஒரு சிலரையாவது அச்சமூட்டியோ ஆசை காட்டியோ தன் பக்கம் இழுத்துக் கொள்வது.
{{left_margin|3em|<poem>மரத்தை வெட்டப் பயன்படும் கோடாரிக்குக் காம்பு வேண்டுமல்லவா! அந்தக் காம்பினை, மரத்திலிருந்து தானே தயாரிக்கிறார்கள்; அது போலத்தான்.</poem>}}
திட்டத்தின் இந்தக் கட்டத்தின்போது, புதுத் துதி பாடகர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
தம்பி! துதிபாடகர்களைத் தயாரித்துக் கொள்ளும் கட்டம் இருக்கிறதே, அப்போது உயர் இடம், மெத்தப் பயன் அளிக்கிறது. சுவையுள்ள பண்டங்களைத் தர முடிகிறதல்லவா, துதி பாடகர்களுக்கு!!
{{left_margin|3em|ஐயோ! அந்த ஆசாமியா! அந்த ஆளிடம் பேசினாலே ஆபத்து! போலீஸ் சந்தேகப்படும். நமக்கு ஏன் வீண் வம்பு}}
என்று இதே காமராஜர் குறித்துப் பேசிய சீமான்கள்தானே சுயராஜ்யம் அமைந்த பிறகு, காமராஜர் பெரும் பதவிவகித்திடத் தொடங்கிய பிறகு—
{{left_margin|3em|ஐயாவா! வரணும், வரணும்! தங்கள் சித்தம் என்பாக்கியம். என்னால் என்ன காரியம் ஆகவேண்டும் சொல்லுங்கள்; செய்யச் சித்தமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்}}
என்று பேசத் தொடங்கினர். காரணம்? காமராஜர், ஒரு மாபெருந் தலைவருக்குத் தேவைப்படும் அறிவாற்றல் பெற்றவர் என்பதனை இப்போதுதான் உணர்ந்து கொண்டனரா, உல்லாச புரியினர்...? இல்லை! இப்போதுதான், உல்லாசபுரியினருக்கு உதவி செய்திடும் இடத்திற்குக் காமராஜர் வந்திருக்கிறார் என்ற காரணத்தால்.
துவக்கத்தில் துதி பாடகர்களைத் தடுத்திடவும், இத்தனை ஆராதனையும் அர்ச்சனையும் தமக்குத் தேவை இல்லை என்ற உணர்வு, மிக அதிகமாகத் தம்மைப் பாராட்டுகிறார்கள் அது கூடாது, அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடக்க உணர்ச்சியும் தோன்றுகிறது.
{{left_margin|3em|துதிபாடகர்கள் பற்றிச் சந்தேகமே கூட எழுகிறது.}}<noinclude>
<references/></noinclude>
b0wag1u61zwyuavc1kpybhattumimtb
1926753
1926663
2026-04-24T15:56:53Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இவ்வளவு பேர் புகழ்கிறார்கள்; போற்றுகிறார்கள்: பின்பற்றுகிறார்கள்; பணிந்து கிடக்கிறார்கள்; ஆனால்! இந்தச் சிறு கூட்டம் மட்டும் நம்மிடம் குறை காண்கிறதே, எதிர்க்கிறதே! என்ன துணிவு! என்ன ஆணவம்! இதுகளை விட்டு வைக்கலாமா; கூடாது! கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்!—}}
என்ற எண்ணம் முளைத்து விடுகிறது; அதன்படி திட்டமிட முனைகிறார்.
இதற்கான திட்டத்திலே முதற்கட்டம் தன்னிடம் பணியாது இருப்பவர்களிலிருந்து ஒரு சிலரையாவது அச்சமூட்டியோ ஆசை காட்டியோ தன் பக்கம் இழுத்துக் கொள்வது.
{{left_margin|3em|மரத்தை வெட்டப் பயன்படும் கோடாரிக்குக் காம்பு வேண்டுமல்லவா! அந்தக் காம்பினை, மரத்திலிருந்து தானே தயாரிக்கிறார்கள்; அது போலத்தான்.}}
திட்டத்தின் இந்தக் கட்டத்தின்போது, புதுத் துதி பாடகர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
தம்பி! துதிபாடகர்களைத் தயாரித்துக் கொள்ளும் கட்டம் இருக்கிறதே, அப்போது உயர் இடம், மெத்தப் பயன் அளிக்கிறது. சுவையுள்ள பண்டங்களைத் தர முடிகிறதல்லவா, துதி பாடகர்களுக்கு!!
{{left_margin|3em|ஐயோ! அந்த ஆசாமியா! அந்த ஆளிடம் பேசினாலே ஆபத்து! போலீஸ் சந்தேகப்படும். நமக்கு ஏன் வீண் வம்பு}}
என்று இதே காமராஜர் குறித்துப் பேசிய சீமான்கள்தானே சுயராஜ்யம் அமைந்த பிறகு, காமராஜர் பெரும் பதவிவகித்திடத் தொடங்கிய பிறகு—
{{left_margin|3em|ஐயாவா! வரணும், வரணும்! தங்கள் சித்தம் என்பாக்கியம். என்னால் என்ன காரியம் ஆகவேண்டும் சொல்லுங்கள்; செய்யச் சித்தமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்}}
என்று பேசத் தொடங்கினர். காரணம்? காமராஜர், ஒரு மாபெருந் தலைவருக்குத் தேவைப்படும் அறிவாற்றல் பெற்றவர் என்பதனை இப்போதுதான் உணர்ந்து கொண்டனரா, உல்லாச புரியினர்...? இல்லை! இப்போதுதான், உல்லாசபுரியினருக்கு உதவி செய்திடும் இடத்திற்குக் காமராஜர் வந்திருக்கிறார் என்ற காரணத்தால்.
துவக்கத்தில் துதி பாடகர்களைத் தடுத்திடவும், இத்தனை ஆராதனையும் அர்ச்சனையும் தமக்குத் தேவை இல்லை என்ற உணர்வு, மிக அதிகமாகத் தம்மைப் பாராட்டுகிறார்கள் அது கூடாது, அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடக்க உணர்ச்சியும் தோன்றுகிறது.
{{left_margin|3em|துதிபாடகர்கள் பற்றிச் சந்தேகமே கூட எழுகிறது.}}<noinclude>
<references/></noinclude>
52p9e29kojgj6tm3ohxbfslj9bwvtf9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222
250
639178
1926754
1925840
2026-04-24T15:57:38Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|198||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|துதிகேட்டு, மனத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது. தடுக்க முயலுவர்.}}
வேண்டாமப்பா இந்த வீண் புகழ்மாலை என்றும், நான் ஏமாளி அல்ல உன் பாராட்டுதலை உண்மை என்று ஏற்றுக்கொள்ள என்றும் சொல்லும்போது கூட, பாராட்டுதலைப் பெற்றதிலே கிடைத்த தனி மகிழ்ச்சி இருக்கிறதே, அது குறைவதில்லை. சொல்லப்போனால், மகிழ்ச்சி வளருகிறது.
கொடுப்பவன் எதையும் இழப்பதில்லை என்ற பேச்சு வேதாந்தத்தில் என்ன பொருள் தருகிறதோ தெரியாது. ஆனால், ஒருவரை மற்றொருவர் பாராட்டுவது இருக்கிறதே அதைப் பொறுத்தவரையில், கொடுப்பவன் எதையும் இழப்பதில்லை என்பது பெருமளவு உண்மை.
அவர் குணத்திலே தங்கம், அறிவுத் தெளிவிலே வள்ளுவன், பற்றற்ற தன்மையிலே புத்தன் என்று பாராட்டுவதாலே பாராட்டுபவனுக்கு என்ன நட்டம்! சொல்லப் போனால் ஒரு விதமான ஆதாயம் கிடைக்கிறது என்றும் கூறலாம். எவர் இவருடைய பாராட்டுதலைப் பெற்றாரோ அவர் நாலு பேரிடம் இவர், வள்ளுவனையும் புத்தனையும் நன்றாகக் கற்றறிந்தவர், எதையும் எடைபோட்டு பார்த்துத்தான் பேசுவார் என்று சொல்லி வைப்பார் அல்லவா !
ஆகவே கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை என்பது மட்டுமல்ல, கொடுப்பவர் ஏதாகிலும் பெறுவார் என்றே கூடக் கூறலாம். அது சிற்றுண்டியாக இருக்கலாம், சிறு கடன் தொகையாக இருக்கலாம், அரிய பொருளாக இருக்கலாம், வசதியான வேலையாக இருக்கலாம். பெறுவது எத்தனையோ வடிவத்தில், வகையில் இருந்திடக் கூடும், இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கபடி.
கொடுப்பவர் இழப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்வோம்; ஆனால் பெறுபவர்? அதிலேதான் வேடிக்கை இருப்பதாக எனக்குப் படுகிறது; பலரும் இந்தக் கருத்துக் கொண்டுள்ளனர்.
புகழ் மொழியைப் பிறர் கூறக் கேட்டு மகிழ்ச்சி கொண்டிடும் பழக்கம் வளர வளர, ஏதேனும் சிலவற்றில், எவரேனும் சில பேர்கள், எப்போதோ சில வேளைகளில், புகழ்மொழி வழங்காது போயிடின் புகழ்மொழி கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுள்ளவர், என்றுமில்லாத மனப் புழுக்கம் கொண்டுவிடுகிறார். ஏதேதோ ஐயப்பாடுகள்! அச்சம்! அருவருப்பு! பகை உணர்ச்சியேகூட!
சே! இந்த மாந்தரின் இயல்புதான் என்ன! எத்தனை ‘வர்ணஜாலம்’ காட்டி என் தோகையை விரித்து ஆடுகிறேன்! கண்டு சொக்கி நிற்பார்கள் என்று!! பார்த்து விட்டு ஒருகணம் புன்சிரிப்பு உதிர்த்து விட்டு அவனவன்<noinclude>
<references/></noinclude>
inky8g38ulihi380xzc7gzn7i1ko3yn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223
250
639179
1926755
1926063
2026-04-24T15:58:23Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>
அவனவனுக்கு உள்ள வேலையைக் கவனிக்கச் சென்று விடுகிறானே! என் நடனம் நயனங்களுக்கு விருந்து என்று கவிகள் பாடியுள்ளனர்; ஓவியம் தீட்டியுள்ளனர். எனினும் பாரேன் கலைரசம் அற்றவனை; என்னைக் கண்டான் ஒரு கணம். பிறகோ காளையை ஓட்டிக் கொண்டு கழனி சென்று விட்டான், சேற்றிலே சந்தனம் காண!—என்று மயில் கருதிக் கொள்கிறதோ என்னவோ, ‘முகஸ்துதி’ கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி மது உண்டு விட்டவன், ஒரு வேளை அது கிடைக்காவிட்டாலும் சலிப்பும் மனக்களைப்பும் கொண்டு விடுகிறான்; அதனால், தனக்குத் தேவைப்பட்டே தீரும் மகிழ்ச்சியை, இன்பத்தை எப்போதும் பெற்றிட வேண்டும் என்பதற்காக, புகழ் பேசுபவர்களைத் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது; எப்போதும் புகழ்பாடியபடி அவர்கள் இருக்கவேண்டுமானால் அவர்களைக் ‘கவனித்துக் கொள்ள’ வேண்டி வருகிறது! அந்தக் கட்டம் மேலும் வளராமலிருப்பதில்லை. புகழ் பாடுபவர்களைக் கவனித்துக் கொள்ளவும் தயாராக வைத்துக் கொண்டிருக்கவுமான கட்டத்திலிருந்து, புகழ் பாடிகளைத் தயாரிக்கவே வேண்டி வருகிறது. ஓட்டலில் பாடப்படும் கிராமபோன் இசையைக் கேட்டுக் கேட்டுப் பழகி விடுபவன், தன் இல்லத்திலேயே அந்த இசையைப் பெறவழி தேடிக் கொள்ள முயற்சிப்பது போல, புகழ் பேசுவோர் பேசிடுவது கேட்டு மகிழ்ச்சி பெற்று, அதிலே மயங்குபவன் பிறகு புகழ் பேசுவோரையே தயாரிக்க வேண்டிய கட்டம் சென்று விடுகிறான். அதிலே இயல்பாக உள்ள உயர்வு இல்லை என்றாலும், எப்போதும் கிடைக்கிறது. தட்டாமல் தயங்காமல் கிடைக்கிறது. தெவிட்டும் அளவு கிடைக்கிறது என்பதிலே ஒரு திருப்தி கிடைத்திடத்தான் செய்யும். ஆனால், அதற்காக ஆகிடும் செலவு! அதற்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சிரமம்! அதனைக் கணக்குப் பார்க்கும்போது, பெறுபவன் இழக்கிறான் என்று கூறிவிடலாம்; கணக்கு அதைத் தெளிவாகக் காட்டுகிறது.
கணக்கு அந்த அளவோடு நிற்பதில்லை. மது குடித்துப் பழக்கப்பட்டுப் போய்விட்டவனுக்கு வேறு எதிலேயும் அந்த இனிப்பும், விறுவிறுப்பும் கிடைப்பதில்லை என்பதால் வேறு எந்தவிதமான பானத்தையும் விரும்ப மாட்டான் என்கிறார்கள். அந்த ‘விறுவிறுப்பு’ கிடைக்காதபோது எல்லாவற்றையுமே இழந்துவிட்டது போன்ற ஓர் ஏக்க நிலை பிறந்துவிடுகிறது. இந்தத் துறையிலே எல்லாம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். மது பருகிப் பருகிப் பழக்கத்தை அழுத்தமாக்கிக் கொண்டவர்களுக்கு, சில காலம் கழிந்த பிறகு வழக்கமாகப் பருகிடுவது போதுமானதாகப் படுவதில்லையாம்; அதைவிட அதிக ‘விறு விறுப்பு’ உள்ளது வேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறார்களாம். உண்மையோ அல்லாவா தெரியவில்லை, எல்லா விதமான மது வகையையும் பருகியான<noinclude>
<references/></noinclude>
4oi0flayp1qmu8j4u0dxi2s1pp486w1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228
250
639184
1926791
1925758
2026-04-25T05:41:19Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|204||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
கூறிடின் கொதித்தெழுவர். ஆம்! ஆனால்? கூறாது இருந்திடின்? மக்களுக்கு அல்லவா பெருந்தீங்கு செய்தவராவர்!
இந்தத் தயக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆட்சி முறையிலே காணப்படும் கேடுகளைக் கண்டித்திட, நல்லறிவு தந்திட, பலர் இன்று முன்வருகின்றனர். மகிழ்ச்சி!
ஐந்தாண்டுத் திட்டம் – நாணய மதிப்புக்குறைப்பு —போன்றவைகளிலே நெளியும் குறைபாடுகளை, அமெரிக்காவின் பிடி வலுவாகிக்கொண்டு வருவது, உணவுப் பிரச்சினையிலே நெருக்கடி நீடிப்பது போன்ற பிரச்சினைகளிலே, பல்கலைக் கழகப் பேராசிரியர் பலர் தெளிவான கருத்தையும், துணிவான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினராக இருந்தும் முன்னாள் அமைச்சர், க. சந்தானம் அவர்கள் இந்தத் துறையிலே பாராட்டத்தக்க பணியாற்றி வருகின்றார்கள்.
துதிபாடகர்கள் கிளப்பிடும் ஒலியில், இவர்களின் குரல் வெளியே தெரியவிடாமல் செய்யப்பட்டு விடுகின்றது; என்றாலும் இவை மூலம் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
நிலை கண்டு நடுங்கி உண்மையைக் கூறிடத் தயங்குவது பெரும்பாலோருக்கு இயல்பு: சிலரேனும் அந்த இயல்பினை நீக்கிக்கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக் குரியது.
இன்னும் சிலர், உண்மையைக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பும் கொள்கின்றனர்; கூறிடின் கேடடைவோமோ என்ற அச்சமும் கொள்கின்றனர். அதன் காரணமாக, உள்ள குறைகளை, ‘இலை மறை காய்’ என்ற முறையிலே எடுத்துக் காட்டியுள்ளனர்.
தம்பி! பிரிட்டனை ஆண்டுவந்து இரண்டாவது சார்லஸ் என்ற மன்னன், தன்னைப் பெரிய கவிஞன் என்று எண்ணிக்கொண்டான்! ஏதேதோ கிறுக்கித் தள்ளியபடி இருந்தான் — கவிதைகள் என்ற நினைப்பில். கருத்தில்லை, கற்பனைத் திறம் இல்லை, இலக்கணம் இல்லை. எழில் இல்லை—ஆயினும் குப்பை வார்த்தைக் கோவை என்று கூறிடலாமா? மன்னன் எழுதியது!!
மன்னன் அத்துடன் இல்லை. அரச அவையின் மதிப்பு மிக்க கவிஞனை அழைத்து எமது கவிதையினைப் பற்றிய உமது கருத்தைக் கூறிடுவீர் என்றான். என்றானா? கட்டளை பிறப்பித்தான்!
கவிஞன் பார்க்கின்றான், கடுங்கோபம் கொள்கின்றான், வெறும் குப்பையைக் கவி என்று கூறியது பற்றி. என் செய்வான்? கவி உள்ளம் சொல்கிறது, இஃது கவிதை அல்ல என்று சொல்லிவிடு என்று. மன்னன் எழுதியதாயிற்றே என்ற நினைவு குதித்தெழுந்து கூறுகிறது, நாடாளும்<noinclude>
<references/></noinclude>
ozn2vjy3re9h6qhyc01jwexcoeg7e7o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
639185
1926792
1925756
2026-04-25T05:44:47Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>
மன்னன் எழுதியது! ஏடு தூக்கிடுவோனே! இஃது நற்கவிதையே என்று கூறிடு! இல்லையேல், மன்னன் ஏற்றம் உன்னைத் தாக்கிடும் என்று. கூறுவாயோ அங்ஙனம்! கூறிடின் குவலயம் உன்னை என்னசொல்லும்? நற்கவிதை எது என்று அறியாத நீயோ கவிஞன்? உனக்கோ நீள் புகழ்? என்று கேலி பேசும். இப்போது மட்டுமா இழுக்கு? வழிவழி வருவோர் உன் கல்லறைமீது காறித்துப்புவர் என்று அவனுடைய கவிதை உள்ளம் கூறுகிறது. என் செய்வான்! திகைத்தான், திணறினான், திடுக்கிட்டுப் போனான்! நெடு நேரத்திற்குப் பிறகு ஒரு யோசனை பிறந்தது.
“அரசே!” என்றான்; “அரசே! தாங்கள் சகலவல்லமையும் பொருந்தியவர்! தங்களால் ஆகாததும் ஒன்று உண்டா! எதனையும் செய்து முடித்திடும் ஆற்றல் படைத்தவர் தாங்கள்! என்ன காரணத்தாலோ, மிகமிக மட்டமான முறையிலே கவிதை எழுதிக்காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டீர்கள். தங்களின் பேராற்றலையும், கவிதா சக்தியையும் வேண்டுமென்றே எங்கோ ஒளிந்திருக்கச் செய்துவிட்டு, குப்பை என்று சொல்லத்தக்க இந்தக் கவிதையை இயற்றினீர்கள்! நல்ல கவிதையை மட்டும் அல்ல இப்படிப் பட்டதையும் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதில், மன்னர்! தாங்கள் மகத்தான வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்க நற்கவிதை!... என்றுகூறித் தப்பித்துக் கொண்டானாம் அந்தக்கவிஞன்!
இன்றைய ஆட்சியின் விளைவுகள் பற்றி எழுதிடும் பலர், இதுபோல, உண்மையை அப்பட்டமாகக் கூறிடின் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, பஞ்சத்தைப் பற்றாக்குறை என்றும், வேதனையைச் சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் பட்டாடை உடுத்திக் காட்டுகின்றனர்.
துதிபாடகர்களின் துந்துபி ஒரு புறம், அறிந்தோர் அச்சம் காரணமாகக் காட்டிடும் தயக்கம் மற்றோர்புறம், எடுத்துரைப்போரும் இலைமறை காய் என்ற முறையில் உண்மையைக் காட்டிடும் தன்மை பிறிதோர் புறம் என்றுள்ள இந்தச் சூழ்நிலையை நமது சுறுசுறுப்பான பிரசாரம் மட்டுமே மாற்றிட முடியும்; மக்கள் தெளிவு பெற்றிடச் செய்யமுடியும்.
அதற்குத் தம்பி! நமது பேச்சிலும் எழுத்திலும் சூடு அல்ல, ஒளிதான் அதிகம் இருக்கவேண்டும்.
அந்த ஒளியினைத் தந்திடும் வல்லமை உனக்கு உண்டு என்பதால்தானே தம்பி! நான் அன்புடன் அழைத்த வண்ணம் இருக்கிறேன், ஒளிபடைத்த கண்ணினாய்! வா! வா! வா! என்று.
{{rh|<br>16-10-'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
a7w286ogeavskl928fsta11svxpmuqi
1926793
1926792
2026-04-25T05:45:35Z
Saranya V R
14232
1926793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>
மன்னன் எழுதியது! ஏடு தூக்கிடுவோனே! இஃது நற்கவிதையே என்று கூறிடு! இல்லையேல், மன்னன் ஏற்றம் உன்னைத் தாக்கிடும் என்று. கூறுவாயோ அங்ஙனம்! கூறிடின் குவலயம் உன்னை என்னசொல்லும்? நற்கவிதை எது என்று அறியாத நீயோ கவிஞன்? உனக்கோ நீள் புகழ்? என்று கேலி பேசும். இப்போது மட்டுமா இழுக்கு? வழிவழி வருவோர் உன் கல்லறைமீது காறித்துப்புவர் என்று அவனுடைய கவிதை உள்ளம் கூறுகிறது. என் செய்வான்! திகைத்தான், திணறினான், திடுக்கிட்டுப் போனான்! நெடு நேரத்திற்குப் பிறகு ஒரு யோசனை பிறந்தது.
“அரசே!” என்றான்; “அரசே! தாங்கள் சகலவல்லமையும் பொருந்தியவர்! தங்களால் ஆகாததும் ஒன்று உண்டா! எதனையும் செய்து முடித்திடும் ஆற்றல் படைத்தவர் தாங்கள்! என்ன காரணத்தாலோ, மிகமிக மட்டமான முறையிலே கவிதை எழுதிக்காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டீர்கள். தங்களின் பேராற்றலையும், கவிதா சக்தியையும் வேண்டுமென்றே எங்கோ ஒளிந்திருக்கச் செய்துவிட்டு, குப்பை என்று சொல்லத்தக்க இந்தக் கவிதையை இயற்றினீர்கள்! நல்ல கவிதையை மட்டும் அல்ல இப்படிப் பட்டதையும் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதில், மன்னர்! தாங்கள் மகத்தான வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்க நற்கவிதை!... என்றுகூறித் தப்பித்துக் கொண்டானாம் அந்தக்கவிஞன்!
இன்றைய ஆட்சியின் விளைவுகள் பற்றி எழுதிடும் பலர், இதுபோல, உண்மையை அப்பட்டமாகக் கூறிடின் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, பஞ்சத்தைப் பற்றாக்குறை என்றும், வேதனையைச் சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் பட்டாடை உடுத்திக் காட்டுகின்றனர்.
துதிபாடகர்களின் துந்துபி ஒரு புறம், அறிந்தோர் அச்சம் காரணமாகக் காட்டிடும் தயக்கம் மற்றோர்புறம், எடுத்துரைப்போரும் இலைமறை காய் என்ற முறையில் உண்மையைக் காட்டிடும் தன்மை பிறிதோர் புறம் என்றுள்ள இந்தச் சூழ்நிலையை நமது சுறுசுறுப்பான பிரசாரம் மட்டுமே மாற்றிட முடியும்; மக்கள் தெளிவு பெற்றிடச் செய்யமுடியும்.
அதற்குத் தம்பி! நமது பேச்சிலும் எழுத்திலும் சூடு அல்ல, ஒளிதான் அதிகம் இருக்கவேண்டும்.
அந்த ஒளியினைத் தந்திடும் வல்லமை உனக்கு உண்டு என்பதால்தானே தம்பி! நான் அன்புடன் அழைத்த வண்ணம் இருக்கிறேன், ஒளிபடைத்த கண்ணினாய்! வா! வா! வா! என்று.
{{rh|<br>16.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
b9r8wfmchs2dfsi7zubg4ha4s6qmwjt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230
250
639193
1926795
1925513
2026-04-25T05:48:42Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம்: 277}}
{{Right|{{x-larger|<b>நரி பரியான கதை!</b>}}}}
}}
:<b>★ அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன் நான்!
:★ ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை!
:★ கிளிப் பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்துவிட்டது!
:★ ‘கேட்டால் கேள்! விட்டால் விடு!’ என்பதல்ல நமது முறை!
:★ ‘துக்க தினம்’ என்ற பெரியார் காங்கிரசுக்கு வேண்டியவர்!
:★ ‘விழா நாள்’ என்ற நான் காங்கிரசால் கண்டிக்கப்படுபவன்!
:★ வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது!
:★ மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு!
:★ ஜனநாயக சோஷியலிசம் பாறை மீது தூவிய விதை
:★ காமராஜர் முதலாளி நரிகளைச் சோஷியலிசப் பரிகளாக்கிக் காட்ட முனைகிறார்!</b>
தம்பி,
காங்கிரஸ் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘ஆமாம் அண்ணாத்துரை! என்ன நீங்கள் கூட அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து விட்டீர்களே?’ என்று கேட்டார். நான் சிறிதளவு விவரம் புரியாமலிருக்கக்கண்டு அவரே விளக்கமும் தந்தார்; “அதாவது அமெரிக்காவிடமிருந்து இந்தியா உதவி பெறுவதைக் கண்டிக்கிறீர்களே—கடன் சுமை ஏறுகிறது என்றும் இந்தியாவின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டது என்றும் பேசுகிறீர்களே? இது என்ன புதிய போக்காக இருக்கிறதே” என்று கேட்டார்.
நீண்ட நேரம் பேசவேண்டுமே என்பதனால், அவருடைய கேள்வி பற்றிக் கவலை காட்ட வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, நான் சுருக்கமாக, “ஆமாம்! அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்; அது தீதானது என்றும் எண்ணுகிறேன்; அதனால்தான் கண்டிக்கிறேன். ஆனால், இது புதிய போக்கு அல்லவே!” என்று கூறினேன், விவாதம் வளராது என்ற நினைப்புடன்.
நண்பர் விடவில்லை; “இல்லை! இல்லை! இப்போதுதான் இந்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது; அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் “சகவாசதோஷம்” என்றார்.<noinclude>
<references/></noinclude>
cl2rmyu4jr19kiapcb0bnif2xzjr3l3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231
250
639194
1926796
1925514
2026-04-25T05:54:47Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
“அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.
“ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட.
{{c|<b>காட்சி-1</b>}}
{{dialogue indented
|இடம் |: கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்
|காலம் |: காலை
|உறுப்பினர் |: வாயில் காப்போன், ஒரு சீமான்}}
மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.
மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.<noinclude>
<references/></noinclude>
213d8529etpklngsrrzj1mvgt7lhuv4
1926797
1926796
2026-04-25T05:55:16Z
Saranya V R
14232
1926797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
“அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.
“ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட.
{{c|<b>காட்சி - 1</b>}}
{{dialogue indented
|இடம் |: கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்
|காலம் |: காலை
|உறுப்பினர் |: வாயில் காப்போன், ஒரு சீமான்}}
மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.
மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.<noinclude>
<references/></noinclude>
rqyxlt0ush64dxqv4ftgx093dqw7hxr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232
250
639195
1926799
1925566
2026-04-25T05:59:40Z
Saranya V R
14232
1926799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|காவ : நமஸ்தே!
|சீமான் :
|நமஸ்த்தே...
|காவ :
|வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
awxaqcbqvvdgh6ysduak5t6536qph52
1926806
1926799
2026-04-25T06:02:21Z
Saranya V R
14232
1926806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|காவ :
|நமஸ்தே!
|சீமான் :
|நமஸ்த்தே...
|காவ :
|வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
o3ds3ad1om6kpw9hgr27mrqqhznx1a0
1926809
1926806
2026-04-25T06:03:27Z
Saranya V R
14232
1926809
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|காவ |:
|நமஸ்தே!
|சீமான் |:
|நமஸ்த்தே...
|காவ |:
|வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
kn7p0p0x7k76ixfjp29lllqv7l999y3
1926822
1926809
2026-04-25T06:07:08Z
Saranya V R
14232
1926822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|காவ : நமஸ்தே!
|சீமான் : நமஸ்த்தே...
|காவ : வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
163m7ejlzyc31v3prbx5rak0ks650y3
1926827
1926822
2026-04-25T06:08:33Z
Saranya V R
14232
1926827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|காவ :
|நமஸ்தே!
|சீமான் :
|நமஸ்த்தே...
|காவ :
|வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
o3ds3ad1om6kpw9hgr27mrqqhznx1a0
1926836
1926827
2026-04-25T06:12:00Z
Saranya V R
14232
1926836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா
|: நமஸ்தே!
|சீமான்
|: நமஸ்த்தே...
|காவ
|: வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
கா : நிறையக் கிடைக்கும்.
சீ : இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
கா : அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
சீ : பேசுகிறார்களா? யார்?
கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
6eeto2kb1fm0mm8qvgictvfg1nee0jg
1926847
1926836
2026-04-25T06:18:33Z
Saranya V R
14232
1926847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா |: நமஸ்தே!
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ |: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா |: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!}}
(<b>சீமான் வேகமாக உள்ளே போகிறார்</b>)
{{c|<b>காட்சி-2</b>}}
<b>இடம்</b> : மாளிகை உட்புற மண்டபம்.
<b>உறுப்பினர்</b> : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.<noinclude>
<references/></noinclude>
0linrx8gti1qbnkjnthkn3kumsx3ui6
1926852
1926847
2026-04-25T06:21:17Z
Saranya V R
14232
1926852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா |: நமஸ்தே!
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!}}
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
0lpzx8w1b9xiqiaxktvenwllxtg1zqo
1926858
1926852
2026-04-25T06:24:52Z
Saranya V R
14232
1926858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா| |:| நமஸ்தே!
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
2wxgwdrhmuvagn9hdwb1y5ecuefteor
1926881
1926858
2026-04-25T06:38:37Z
Saranya V R
14232
1926881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா |: |நமஸ்தே!}}
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
58ep15jor6bxg3q2wbrrpl6r5x28rx6
1926882
1926881
2026-04-25T06:38:59Z
Saranya V R
14232
1926882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா |:
நமஸ்தே!}}
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
dr51ibwdlu2z3md2o1w0mlazuec5fmf
1926923
1926882
2026-04-25T07:00:11Z
Saranya V R
14232
1926923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா
|:{{gap}}நமஸ்தே!}}
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
jnckeanqu23aaspumhm112tmldw2iar
1926924
1926923
2026-04-25T07:00:46Z
Saranya V R
14232
1926924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!}}
|சீமான் |: நமஸ்த்தே...
|காவ |: வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
4ckzv7n2cifn241lcgvczbahvl6os42
1926926
1926924
2026-04-25T07:01:30Z
Saranya V R
14232
1926926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!
|சீமான்{{gap}} |:{{gap}} நமஸ்த்தே...
|காவ{{gap}} |:{{gap}} வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ |: சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா |: நிறையக் கிடைக்கும்.
|சீ |: இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா |: அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ |: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா |: ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ
|: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா
|: செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ |: பேசுகிறார்களா? யார்?
|கா |: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம் |: மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர் |: மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
abfnitdsvv1ppvpqwlk8hlqg0bnq32k
1926930
1926926
2026-04-25T07:04:34Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!
|சீமான்{{gap}} |:{{gap}} நமஸ்த்தே...
|காவ{{gap}} |:{{gap}} வாருங்கள்!
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
|சீ{{gap}} |:{{gap}} சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா{{gap}} |:{{gap}} நிறையக் கிடைக்கும்.
|சீ{{gap}} |:{{gap}} இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா{{gap}} |:{{gap}} அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ{{gap}} |:{{gap}} (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா{{gap}} |:{{gap}} ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ{{gap}} |:{{gap}} அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா{{gap}} |:{{gap}} செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ{{gap}} |:{{gap}} பேசுகிறார்களா? யார்?
|கா{{gap}} |:{{gap}} மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)}}
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம்{{gap}} |:{{gap}} மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர்{{gap}} |:{{gap}} மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
rivjkfa2tryqsofnrdwp6f3z1wraxdg
1926932
1926930
2026-04-25T07:05:52Z
Saranya V R
14232
1926932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!
|சீமான்{{gap}} |:{{gap}} நமஸ்த்தே...
|காவ{{gap}} |:{{gap}} வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
{{dialogue indented
|சீ{{gap}} |:{{gap}} சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா{{gap}} |:{{gap}} நிறையக் கிடைக்கும்.
|சீ{{gap}} |:{{gap}} இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா{{gap}} |:{{gap}} அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ{{gap}} |:{{gap}} (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா{{gap}} |:{{gap}} ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ{{gap}} |:{{gap}} அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா{{gap}} |:{{gap}} செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ{{gap}} |:{{gap}} பேசுகிறார்களா? யார்?
|கா{{gap}} |:{{gap}} மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!}}
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம்{{gap}} |:{{gap}} மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர்{{gap}} |:{{gap}} மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
9hisn21evtpgkyofh4o48eszfveir1i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
639196
1926680
1925576
2026-04-24T14:41:38Z
Sridharrv2000
12752
1926680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்தி விட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).
பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.
{{left_margin|5em|(<b>உள்ளே நுழைந்த சீமான்</b>)}}
சீ : உலகமே பாராட்டுகிறது.
பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.
{{left_margin|5em|(ஒரு குரல்: யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}}
பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...
சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.
பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.
சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude>
<references/></noinclude>
5c9nnh98qfp7ymhyws8rv79dzq4ghzo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263
250
639259
1926983
1920735
2026-04-25T09:18:09Z
KarunyaRanjith
10815
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது
1926983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude>
{{dhr|10em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம்: 86</b>}}
{{center|{{X-larger|<b>சிங்கத்தை அடக்கினேன்!</b>}}}}
{{rule}}
:<b>★ தடுத்தது யார்? துடிப்பது ஏன்?
:★ ஆடுகளுக்கு ஓநாய் இரத்ததானம் தரப்போகிறதாம்!
:★ ஏழையின் பெருமூச்சு பேச்சை விட வலிவு மிக்கது!
:★ முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது!
:★ சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது!</b>
தம்பி,
<b></b>இப்படி ஒரு உரையாடல் உன் செவியில் விழுந்தால் என்ன எண்ணிக் கொள்வாய்?
ஒரு குரல்:– நான் சிங்கத்தின் மீது சவாரி செய்தேன்.
மற்றோர் குரல்:– நான் யானை மீது உட்கார்ந்தேன்.
வேறோர் குரல்:– ஜோரான குதிரைமீது நான் உட்கார்ந்து கொண்டேன்.
இன்னோர் குரல்:– நான் அன்னப்பட்சி மீது உட்கார்ந்திருந்தேன்.
மற்றோர் குரல்:– அழகான மயில்மீது நான் உட்கார்ந்து கொண்டேன்.
இவ்விதமாகக்கூட ஒரு உரையாடல் நடைபெற்றிருக்க முடியுமா? கற்பனை இருக்க வேண்டியதுதான், ஆனால் இப்படியா சிங்கத்தின் மீது அமர்ந்தேன், யானை மீது அமர்ந்தேன் — என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலைமை எங்கே இருக்க முடியும்?—என்று கேட்கத் தோன்றும்.
இப்படி ஒரு உரையாடல், நடைபெற்றிருக்கவே முடியாது என்று அடித்துப் பேசிவிடாதே தம்பி! நன்றாக யோசித்துப் பார்த்துச் சொல்லு, இவ்விதமான பேச்சு உன் காதில் விழுந்தால், என்ன எண்ணிக் கொள்வாய்? யார் இப்படிப் பேசியிருக்க முடியும்? எந்த இடத்தில் இவ்விதமான பேச்சு இருந்திருக்க முடியும்? விளங்கவில்லையா? சரி! நானே கவனப்படுத்துகிறேன்.
திருவிழா, பேரூரில். உள்ளூர் வெளியூர் கூட்டம் நிரம்ப. மகிழ்ச்சி. ஆரவாரம்! கடைகள், அலங்காரமாக! களியாட்டம்! கரக ஆட்டம்! மயிலாட்டம் ஒயிலாட்டம்! சிறுவர் சிறுமியர் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்! இங்கு ஒரு பக்கத்தில் குடைராட்டினம்– (சில இடங்களிலே<noinclude>
<references/></noinclude>
kzr8nh56sjcjwwzruealbb9qig7gecr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
639260
1926986
1922318
2026-04-25T09:40:01Z
KarunyaRanjith
10815
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது.
1926986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|240||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ரங்க ராட்டினம் என்பார்கள்) அமைத்திருக்கிறான் ஒருவன், சிறார்களுக்காக! குடைராட்டினம் தெரியுமல்லவா ! சிங்கம், புலி, யானை, குதிரை, அன்னம், மயில், மாடு, ஆடு, கட்டில், தொட்டில், சோபா, இப்படி மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்; காசு கொடுத்துவிட்டு அவரவர் தத்தமக்கு விருப்பமானதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம்; கீழே நின்றபடி, குடைராட்டினக்காரன், அவைகள் சுற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசையைத் திருப்பிவிடுவான்; உடனே ரங்கராட்டினம் சுழலும், வேகமாக; வேடிக்கையாக சிங்கத்தின் மீது சவாரி செய்வதுபோல, யானை மீது ஏறி ஓட்டுவதுபோல, சிறார்களுக்கு ஒரு மகிழ்ச்சி; குடைராட்டினம் சுற்றச் சுற்ற, சிறார்களுக்குத் தாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கும் சிங்கம், புலி, யானை, குதிரை ஆகியவைகளைத் தாமே வேகமாக ஓட்டிக் கொண்டு போவதாக ஒரு நினைப்பு : அதிலே ஒரு மகிழ்ச்சி; ஒரு ஆரவாரம்.
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாக சிறுவர்களுக்கிடையே எழும் உரையாடல்தான், நான் முதலில் குறிப்பிட்டிருந்தது.
இப்போது மறுபடியும் துவக்கத்தை படித்துப் பார், தம்பி! இவ்விதமான உரையாடல் நடைபெற்றிருக்கவோ முடியாது; சொல்லு. இவ்விதமான உரையாடல் உன் காதிலே விழுந்ததும் என்ன தோன்றும்? சிறுவர்கள் மகிழ்ச்சியால் பேசுகிறார்கள்!—என்று தோன்றுமே தவிர, ஏ! அப்பா! எத்தனைப் பெரிய வீரனாக இருக்கவேண்டும் சிங்கத்தின் மீது சவாரி செய்தவன்!! என்று வியந்து, அவன் எதிரே அஞ்சி நின்றிடவேண்டும் என்றா தோன்றும்? குழந்தைகள் பேசுகின்றன! குடைராட்டினத்திலே உட்கார்ந்து மகிழ்ச்சி பெற்றதால், பேசுகிறார்கள்!—என்றுதான் எண்ணிடத் தோன்றும்.
சிறார்கள், மகிழ்ச்சி காரணமாக இது போலப் பேசுவதைக் கேட்கும்போது, நமக்கேகூட இனிப்பாக இருக்கும்.
போயும் போயும் உனக்கு ஆடுதானா கிடைத்தது; ஏன் யானை கிடைக்கவில்லையா? என்று கேட்டு மகிழ்வோம்.
ஏ! பயலே! நீ பெரிய போக்கிரியடா! கொஞ்சம் கூடப் பயப்படாமல், அவ்வளவு பெரிய யானைமீது உட்கார்ந்து கொண்டாயே!! என்று கேட்டுக்கொண்டே கன்னத்தைக் கிள்ளிவிடுவோம்.
கேட்டாயா சேதி! நம்ம மகனை என்னமோ மட்டமாகக் கணக்குப் போட்டாயே! தெரியுமா விஷயம்! சிங்கத்தையே அடக்கி, அதன் மீது ஏறி உட்கார்ந்து, பிடரியைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டான், நம்ம மகன்! என்று பெருமிதத்துடன் கூறி மகிழ்வோரும் உண்டு!</poem>}}<noinclude>
<references/></noinclude>
ikc9bdqd3jy1ivn8m66tjms49e2djyn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
639261
1926992
1922319
2026-04-25T09:49:06Z
KarunyaRanjith
10815
மெய்ப்புப்பார்க்கப்பட்டது
1926992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>
ஆனால், சிறார்கள் அல்ல, பெரியவர்கள் — மிகப் பெரியவர்கள்—குடை ராட்டினத்துப் பொம்மைகளின் மீது உட்கார்ந்து சுற்றிவிட்டு, உண்மையாகவே சிங்கத்தையும் யானையையும் அடக்கிய மாவீரர் போலப் பேசிடக் கேட்டால், எப்படி இருக்ரும்? தாங்கிக்கொள்ள முடியாத எரிச்சலைத்தானே மூட்டிவிடும்.
:எவனும் என்னைக் கவிழ்க்க முடியாது!
:யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!
:எல்லாப் பணக்காரர்களையும் ஒழித்துக் கட்டிவிடப் போகிறேன்!
இவ்விதம், காமராஜர் பேசுகிறார்! குடைராட்டினத்தில் ஏறி, வேடிக்கை பெற்ற குழந்தைப் பருவத்தினரா, இவர்? இவரா இப்படி, சிங்க பொம்மைமீது உட்கார்ந்து நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன் என்று குதூகலமாகக் கூவிடும் குழந்தைபோல, பணக்காரர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் குடைராட்டினம் போன்ற செல்வாக்கின் மீது அமர்ந்து சுற்றிக்கொண்டு, நான் பணக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன், ஒருவருக்கும் பயப்படமாட்டேன் என்று வீராவேசப் பேச்சுப் பேசுவது! ஆனால் பேசுகிறார்! அந்தப் பேச்சு கேட்டு, நாடே, தமது வீரதீரத்தை வியந்து பாராட்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்! நாட்டு மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டார் போல இருக்கிறது.
:நான் எப்படியும் சோஷியலிசத்தை நடத்தி வெற்றி காணத்தான் போகிறேன்! யாரும் தடுக்க முடியாது!— என்கிறார்.
:யாரய்யா பெரியவரே! சோஷியலிசத்தைத் தாங்கள் கொண்டு வருவதைத் தடுக்கிறார்கள்? என்று கேட்டால், எல்லோருந்தான்! கம்யூனிஸ்டு கட்சிகள், பிரஜா–சோஷியலிஸ்டு கட்சி, தி.மு.க., தமிழரசுக் கழகம், சுதந்திரா கட்சி, எல்லாமேதான்! நான் சோஷியலிசத்தைக் கொண்டு வருவதைத் தடுக்கப் பார்க்கின்றன; கெடுக்கப் பார்க்கின்றன!— என்று இடி முழக்கம் செய்கிறார்.
:இந்த நாட்டிலே உள்ள எல்லாக் கட்சிகளுமே, சோஷியலிசத்தை இவர் கொண்டு வருவதைத் தடுக்கின்றனவாம்; எதிர்க்கின்றனவாம். இவருடைய கட்சியில் உள்ள முதலாளிகள் தவிர, மற்ற எல்லோரும் சோஷியலிச விரோதிகளாம்!!
தம்பி! குடைராட்டினம் ஏறி மகிழ்ந்திடும் குழந்தைகள் கூட இப்படி ஒரு வேடிக்கை காட்ட முடியாது! அவ்வளவு வேடிக்கை காட்ட இந்த அகில இந்தியா! தம்மைச் சுற்றிலும், பகைவர்கள் நிற்பது போலவும், தமது வீர தீரத்தால் மட்டுமே அந்தப் பகையை வீழ்த்தி, சோஷியலிசத்தை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்; அவருடைய பேச்சைக் கேட்டு, அக மகிழ்கிறார்கள். காந்தியார் காட்டிய<noinclude>
<references/></noinclude>
d2q2by5vf19juwn35tb2519tlo5xjsv
1926994
1926992
2026-04-25T10:02:13Z
KarunyaRanjith
10815
/* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது.
1926994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>
ஆனால், சிறார்கள் அல்ல, பெரியவர்கள் — மிகப் பெரியவர்கள்—குடை ராட்டினத்துப் பொம்மைகளின் மீது உட்கார்ந்து சுற்றிவிட்டு, உண்மையாகவே சிங்கத்தையும் யானையையும் அடக்கிய மாவீரர் போலப் பேசிடக் கேட்டால், எப்படி இருக்கும்? தாங்கிக்கொள்ள முடியாத எரிச்சலைத்தானே மூட்டிவிடும்.
:எவனும் என்னைக் கவிழ்க்க முடியாது!
:யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்!
:எல்லாப் பணக்காரர்களையும் ஒழித்துக் கட்டிவிடப் போகிறேன்!
இவ்விதம், காமராஜர் பேசுகிறார்! குடைராட்டினத்தில் ஏறி, வேடிக்கை பெற்ற குழந்தைப் பருவத்தினரா, இவர்? இவரா இப்படி, சிங்க பொம்மை மீது உட்கார்ந்து நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன் என்று குதூகலமாகக் கூவிடும் குழந்தைபோல, பணக்காரர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் குடைராட்டினம் போன்ற செல்வாக்கின் மீது அமர்ந்து சுற்றிக்கொண்டு, நான் பணக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன், ஒருவருக்கும் பயப்படமாட்டேன் என்று வீராவேசப் பேச்சுப் பேசுவது! ஆனால் பேசுகிறார்! அந்தப் பேச்சு கேட்டு, நாடே, தமது வீரதீரத்தை வியந்து பாராட்டும் என்று வேறு எதிர்பார்க்கிறார்! நாட்டு மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்துவிட்டார் போல இருக்கிறது.
:நான் எப்படியும் சோஷியலிசத்தை நடத்தி வெற்றி காணத்தான் போகிறேன்! யாரும் தடுக்க முடியாது!— என்கிறார்.
:யாரய்யா பெரியவரே! சோஷியலிசத்தைத் தாங்கள் கொண்டு வருவதைத் தடுக்கிறார்கள்? என்று கேட்டால், எல்லோருந்தான்! கம்யூனிஸ்டு கட்சிகள், பிரஜா–சோஷியலிஸ்டு கட்சி, தி.மு.க., தமிழரசுக் கழகம், சுதந்திரா கட்சி, எல்லாமேதான்! நான் சோஷியலிசத்தைக் கொண்டு வருவதைத் தடுக்கப் பார்க்கின்றன; கெடுக்கப் பார்க்கின்றன!— என்று இடி முழக்கம் செய்கிறார்.
:இந்த நாட்டிலே உள்ள எல்லாக் கட்சிகளுமே, சோஷியலிசத்தை இவர் கொண்டு வருவதைத் தடுக்கின்றனவாம்; எதிர்க்கின்றனவாம். இவருடைய கட்சியில் உள்ள முதலாளிகள் தவிர, மற்ற எல்லோரும் சோஷியலிச விரோதிகளாம்!!
தம்பி! குடைராட்டினம் ஏறி மகிழ்ந்திடும் குழந்தைகள் கூட இப்படி ஒரு வேடிக்கை காட்ட முடியாது! அவ்வளவு வேடிக்கை காட்ட இந்த அகில இந்தியா! தம்மைச் சுற்றிலும், பகைவர்கள் நிற்பது போலவும், தமது வீர தீரத்தால் மட்டுமே அந்தப் பகையை வீழ்த்தி, சோஷியலிசத்தை வெற்றி பெறச் செய்யமுடியும் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்; அவருடைய பேச்சைக் கேட்டு, அக மகிழ்கிறார்கள். காந்தியார் காட்டிய<noinclude>
<references/></noinclude>
9a1nj6uc1xgqfegwk2kq83vabhsqm45
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/56
250
639306
1926652
1926573
2026-04-24T14:20:55Z
Saranya V R
14232
1926652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|32||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இது பெருமைக்குரிய நிலையா?
மேதையும் கூறிடான்!}}
ஆனால், இந்த மேதை ஏதோ தமது கீர்த்தி கொடி கட்டிப் பறப்பதாகக் கருதிக்கொண்டு கிளம்புகிறார் கழகத்தைத் தாக்கிட!
{{left_margin|3em|கழகம் ஆட்சி நடத்தினால், பெண்கள் நகை போட்டுக் கொண்டு ஊரிலே உலவ முடியாதாம்!}}
கேட்டனையா இந்தப் பேச்சை! என்ன அறிவுத் தெளிவப்பா இந்த அனுபவசாலிக்கு!
{{left_margin|3em|கழகம் ஆட்சி செய்தால், பெண்களை வழிமறித்துப் பொருளைக் களவாடுவார்களாம்! நகைகளைப் பறித்துக்கொள்வார்களாம்! அப்படிப்பட்ட காலித்தனம் நடக்குமாம்! அவ்வளவு அராஜகம் இருக்குமாம்!}}
இவ்வளவும் எந்த ஆராய்ச்சி மூலம் இவருக்கு கிடைத்திருக்கிறது? கூறக் காணோம்.
{{left_margin|3em|கழகத்தைப்பற்றி இத்தகைய இழிவான கருத்தைக் கொண்டிருப்பின், சென்ற தேர்தலின் போது 30-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவு காட்டி, ஓட்டு அளித்திருப்பார்களா? என்று கேட்டால் என்ன பதில் அளிப்பாரோ இந்த அறிவுக்கரசர்!}}
சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சியாக, தமிழகத்தில் கொலுவிருக்கும் ஒரு அரசியல் கட்சியைப் பற்றி இத்தனை பெரிய பதவி வகித்தவர் இப்படியா பொறுப்பற்ற முறையில் பேசுவது! இதுதானா காங்கிரஸ் காட்டும் ஜனநாயகம்?
{{left_margin|3em|கழகத்தின் கொள்கைத் திட்டம் குறை மிக்கது என்று வாதிடட்டும்... அறிவுத் தெளிவுடன்.
அறிவு அற்றவர்கள் பேசுவதுபோல, கழகத்திற்குக் கொள்கை இல்லை, திட்டம் இல்லை என்றாகிலும் குளறட்டும். கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடக்கும்—பெண்களின் நகை பறிபோகும் என்றா பேசுவது.
ஆணவத்துக்குக்கூட ஒரு வரம்பு வேண்டாமா?
ஆளுங்கட்சி, ஆகவே நாக்கு எந்த அளவும் நீளலாம் என்றா கருதுவது?
நாடாளும் கட்சியினர் நாங்கள், ஆகவே நாராச நடையில்தான் பேசுவோம் என்றா போக்கு இருப்பது?
சே! இத்தனை இழிநடையா!}}<noinclude>
<references/></noinclude>
kpyzaz2fvf5y671dr4xy805sjje2uvy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62
250
639312
1926654
1923948
2026-04-24T14:24:56Z
Saranya V R
14232
1926654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|38||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
என்று பேசிவிட முடிகிறதா! ஒவ்வொரு பிரச்சினைக்கும் விளக்கம் — கேட்போர் ஒப்புக் கொள்ளத்தக்க விதமான விளக்கம்-தரவேண்டி இருக்கிறது. பிரச்சினைகளோ சிக்கல் மிக்கனவாகி விட்டுள்ளன; பொதுமக்களுக்கோ அவைகளை ஆராய்ந்து கொண்டிருக்கப் போதுமான நேரமோ மன அமைதியோ கிடைப்பதில்லை. வாழ்க்கையின் சுமை அவ்வளவு அழுத்துகிறது; அல்லல்கள் அவர்களுக்கு அடுக்கடுக்காக.
ஆளுங்கட்சியினரோ பல பிரச்சினைகள் சிக்கலாகி விட்டிருக்கின்றன என்று தெரிந்தும், துளிகூடத் திகைப்புக் கொள்ளாமல், எல்லாம் தன்னாலே சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சினைகள் உள்ளன என்று ஒப்புக்கொள்வதற்கே கூட அவர்களுக்கு மனம் வருவதில்லை; மறைக்கப்பட முடியாதவிதமாகப் பிரச்சினைகள் அழுத்த ஆரம்பித்த பிறகு தான், பிரச்சினை இருப்பதாகவே ஒப்புக் கொள்கிறார்கள். ஒப்புக்கொண்ட பிறகாகிலும், தக்க பரிகாரம் தேட முற்படுகின்றனரா என்றால், இல்லை! அப்படித்தான் இருக்கும் என்று கூறிக்கொண்டே காலத்தை ஓட்டப் பார்க்கிறார்கள்; பிறகு என்ன பரிகாரம் தேடலாம் என்பதுபற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கிறார்கள்; பிறகு கமிட்டியின் கருத்து பற்றி விவாதிக்கிறார்கள்; பிறகு பரிகாரத்துக்கான முறைபற்றி அறிவிப்பு அளிக்கிறார்கள்! செயல்படத் தொடங்குவதோ மிகுந்த காலதாமதத்துக்குப் பிறகு; செயல் மூலம் கிடைத்திடும் பலனோ மலையைக் கெல்லி எலி பிடித்த கதை கூறுவார்களே அதுபோல! ஏன் இந்த அலட்சியப்போக்கு ஏற்படுகிறது என்றால்,
{{left_margin|3em|அல்லலைத் தாங்கிப் பொறுத்துக் கொண்ட மக்கள், மேலும் சில காலம் அல்லலைத் தாங்கிக் கொள்வார்கள்.
தாங்க முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்தாலும் மக்கள் சீறி எழமாட்டார்கள்.
சீறி எழுந்திடினும் அவர்களை அடக்கி ஒடுக்கிட நம்மிடம் அடக்குமுறை இருக்கிறது.
அடக்குமுறை ஆட்சியை மாற்றிடத்தக்க ஆற்றல் நாட்டிலே எழவில்லை.}}
என்ற இந்த எண்ணம் ஆட்சியினருக்குத் தடித்து விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களைப் பற்றிய கவலையற்று இருக்கின்றனர்.
{{left_margin|3em|ஜனநாயகத்திலே இந்த நிலை வளர்ந்துவிடுவது பேராபத்தை மூட்டிவிடும்.
வளைக்க முடியாதது பிறகோர் நாள் முறிக்கப்பட்டுப் போகும் என்பதுபோல, ஆட்சியைத் திருத்த இயலாமல் போய்}}<noinclude>
<references/></noinclude>
13omykqdt6ugf53rvqi1qnwr3z64bg0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63
250
639313
1926655
1923949
2026-04-24T14:26:06Z
Saranya V R
14232
1926655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|விடுமானால், சட்டம், சமாதானம், ஒழுங்கு, அமைதி ஆகியவைகள் அழியினும் சரி, பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி மேலோங்கும்.
அந்த நிலை சமூகத்தின் கட்டுக்கோப்பையேகூடக் கெடுத்துவிடும்.}}
மக்களை வாழவைப்பதிலே வெற்றிபெறத் தவறிவிடும் துரைத்தனத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ள பொதுமக்கள்,அறிவாற்றலுடன் பணியாற்றி ஆட்சியை மாற்றிட முனைய வேண்டுமேயன்றி, நம்மால் ஆகுமா என்று நெடுங்காலம் பெருமூச்செறிந்து கொண்டிருந்து விட்டு, பிறகோர் நாள் எரிமலையாகி விடுகிறபோக்கு கூடாது.
இவ்விதமான போக்கு எழும் என்று, அந்தப் போக்கு வெடித்துக் கிளம்புகிற வரையில், எந்தக் கொடுங்கோலரும் எதிர்பார்ப்பதில்லை; யாரேனும் துணிந்து எச்சரித்தாலும் ஏளனம் செய்வர்; நம்பிட மாட்டார்கள்.
{{left_margin|3em|ஊமைகளா இத்தனை முழக்கம் எழுப்புகிறார்கள்
அடங்கிக் கிடந்தவர்களா இத்தனை ஆர்ப்பரிப்புச் செய்கின்றனர்!
சவுக்கடிக்கு நடுங்கிக் கொண்டிருந்தவர்களா இன்று துப்பாக்கிக்கு மார் காட்டுகின்றனர்!
அடிபணிந்து கிடந்தவர்களா இன்று முடிபறிப்பேன் என்று கூவுகின்றனர்!}}
என்று வியந்துதான் கொடுங்கோலர் கேட்டனர், ஒவ்வொரு புரட்சி வெடித்தபோதும்; இப்படித்தான் நடக்கும் என்று முன்பே தெரியும் என்று எந்தக் கொடுங்கோலனும் கூறினதில்லை.
முடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காரணமாக இருந்து வந்தது குருட்டுப் போக்கு.
குடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காட்ட இயலுவதில்லை; முறை மாறியிருக்கிறது. நெறித்த புருவம் அல்ல! புன்னகை! பாகுமொழி! இவைகளைக் கருவியாக்கிக் கொண்டு மக்களை மயக்கிக் கட்டுப்படுத்துவதிலே முனைகின்றனர்.
முரட்டுப் போக்குடன் முடிதரித்தோன் நடந்து கொண்டால், பல கொடுமைகளைத் தாங்கித் தவித்த மக்களிடமிருந்து ஓர் நாள், எதற்கும் அஞ்சாத ஒரு வீரன் எழுவான்! கொடுங்கோலன் வீழ்வான், இடையே இரத்தம்! தீ! பலி! நிறைய!
மக்களைத் தமது புன்னகையாலும் பாகுமொழியாலும் மயக்கிடும் போக்கிலே குடியாட்சிக் கோமான்கள் நடந்திடும்போது, எதிர்ப்பு<noinclude>
<references/></noinclude>
t8g6086yk3lv33przjfcj7rqexnkm45
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64
250
639314
1926657
1923950
2026-04-24T14:27:09Z
Saranya V R
14232
1926657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|40||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
உணர்ச்சி மங்கிடுவது இயல்பு. இந்த இயல்பு காரணமாகவே, அல்லல் பல தொடர்ந்து கிளம்பித் தாக்கியும், மக்கள், இந்தக் கொடுமைகளை மூட்டிவிட்ட ஆட்சியினருக்கு எதிராகப் பொங்கி எழ முடியாதவர்களாகின்றனர்.
{{left_margin|3em|இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆளவந்தார்கள் தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.}}
ஆனால் தம்பி! மெள்ள மெள்ள அந்த மயக்கம் நீங்கிக் கொண்டு வருகிறது; தேளிவும் துணிவும் மிகுதியாகிக் கொண்டு வருகிறது-இனி நீண்ட நாட்களுக்கு மக்களை மயக்கிக் கொண்டிருக்க முடியாது பழைய பேச்சினால் என்று கண்டுகொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது புதிய மயக்கம் தரும் பானத்தைத் தயாரித்துத் தருகின்றனர்; இந்த மயக்க மருந்து இன்னும் சிலகாலம் வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த மயக்க மருந்து தான், தம்பி, இப்போது இவர்கள் வெகுவேகமாகப் பேசிக் கொண்டிருக்கும். ஜனநாயக சோஷியலிசம் என்பது.
பழைய மயக்க மருந்து வேலை செய்வதில்லை முன்பு போல!
‘சுயராஜ்யம்’ என்ற சொல் காதில் பாய்ந்ததும் காதில் தேன் வந்து பாய்ந்திடும் நிலை; முன்பு!
சுயராஜ்யம் வருகிறது! என்று அறிவித்ததும் பொதுமக்கள் கண்முன்பு, அவர்கள் மனத்திலே இருந்து வந்த ஆசைகள் அவ்வளவும் வடிவம் கொண்டு நின்றன!
சுயராஜ்யம் வருகிறது, இனி வறுமை இல்லை. வாட்டம் இல்லை, வரிக்கொடுமை இல்லை; உண்ண உணவு, உடுக்க உடை, குடி இருக்க வீடு, செய்யத் தொழில், தொழிலில் நீதி நிம்மதி எல்லாம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர்.
அத்தகைய ஒரு இன்ப வாழ்க்கையைப் பெற்றுத் தந்திடுவோர் காட்டிடும் பாதை நடந்திடுவோம், கேட்டிடுவதைத் தட்டாமல் தயங்காமல் கொடுத்திடுவோம் என்று சூளுரைத்தனர்; செயல்பட்டனர்.
சுயராஜ்யம் வந்தது! கொட்டு முழக்குடன் கோலாகல விழாவுடன்! கொடி பறந்தது, பட்டொளி வீசி! கூனன் நிமிருவான்! குருடன் பார்வை பெறுவான்! என்றனர் குதூகலத்துடன். ஆடுவமே! பள்ளுப் பாடுவமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்பதாகக் கவிதைகள் இசைக்கப்பட்டன! ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது, மனக்கண் முன்பு. ஆனால் நாட்கள் உருண்டோடின, ஆண்டுகள் புரண்டோடின, ஆசைக் கனவுகள் நிறைவேறவில்லை. அல்லல் அகலவில்லை, தொல்லை<noinclude>
<references/></noinclude>
k2n7bdjtrex5l24rxxbbtou7s62uh28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65
250
639315
1926660
1923951
2026-04-24T14:27:53Z
Saranya V R
14232
1926660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>
தொடர்ந்தது; சுயராஜ்யம் என்றால் சுகராஜ்யம் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே, ஒரு சுகத்தையும் காணவில்லையே, கண்ணீர்விட்டா வளர்த்தோம்; செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம் சுதந்திரத்தை, நமக்கு ஒரு பயனும் கிடைக்கக் காணோமே என்று ஏக்கப்பட்டனர் மக்கள்.
{{left_margin|3em|ஆனால் இதுதானா ஐயா! சுயராஜ்யம்! என்று கேட்கக் கூச்சம்!! அச்சம்!!}}
ஒரு நூற்றாண்டாக உம்மைக் கப்பிக் கொண்டிருந்த அவதிகள், சுயராஜ்யம் கிடைத்த மறுநாளேவா ஓடிவிடும்! காலம் வேண்டும் நண்பர்களே! காலம் வேண்டும்! வேலையைத் தொடங்கிவிட்டோம், விரைவிலே பலனைக் காணப் போகிறீர்கள். அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று அன்று தலைவர்கள் சொல்லக் கேட்ட மக்கள், “ஆமாம்! அவசரப்படக் கூடாது!!” என்று கூறினர்; பொறுத்துக் கொண்டனர்; எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
ஆனால் ஆண்டுகள் பதினெட்டுக்கு மேலாகிவிட்ட பிறகும் எதிர்பார்த்த இன்ப வாழ்வு கிடைக்காமல் போனதையும், அதேபோது ஒரு சில செல்வந்தர்களுக்கும், ஆளுங்கட்சியின் ஆலவட்டங்களுக்கும் இன்ப வாழ்வு கிடைத்திருப்பதையும் கண்ட மக்கள், வெகுண்டு எழுந்து, இதற்குப் பெயர்தான் சுயராஜ்யமா! என்று முழக்கமிடலாயினர்! சுயராஜ்யம் என்ற சொல்லால் மயக்கினீர்கள்—கண்டு கொண்டோம்; மயக்கத்தின் பிடியிலிருந்து இதோ விடுபட்டோம்; காட்டு கணக்கினை! என்று மக்கள் கேட்டிடலாயினர். ஓ! ஓ! பழைய மயக்க மருந்து போதுமானதாக இல்லை; புதிதாக ஒன்று தந்தாக வேண்டும் என்பதனை அறிந்த தந்திரத் தலைவர்கள், ஜனநாயக சோஷியலிசம் என்ற சுவையினையே மயக்க மருந்து ஆக்கித் தர முயன்று கொண்டிருக்கின்றனர்.
நாளைக்கு ஒரு சூரணம் தருகிறேன், அதனைத் தேனிலே குழைத்து மூன்றே வேளை சாப்பிடு, நோய் கட்டாயம் பறந்துபோகும்—என்று மருத்துவர் சொல்லும் போது, இவ்வளவு நாள் இவர் கொடுத்த மருந்து துளியும் பயன் தரவில்லையே; ஒவ்வொரு வகையான மருந்து தருகிறபோதும் இதுபோலத்தானே இவர் கூறினார் என்ற எண்ணம் எளிதிலே ஏற்பட்டு விடுவதில்லை. இந்த மருந்தாவது வேலை செய்கிறதா பார்க்கலாம்! மருத்துவர்தான் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லுகிறாரே, இதைச் சாப்பிட்டுப் பார்ப்போம் என்றுதான் எண்ணம் கொள்ளச் செய்கிறது. மனித இயல்பு! அதிலும் நம்முடைய நாட்டு மக்களின் இயல்பு பற்றிக் கூறிடவா வேண்டும்!!
இதிலாவது பலன் கிடைக்கிறதா பார்க்கலாம், இவராலாவது நலன் கிடைக்கிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கிடந்திடும் போக்கு; கொண்டுள்ளவர்கள்.<noinclude>
<references/></noinclude>
m1ksh5vug8lj39lzr65ikkxqz3s3eae
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67
250
639318
1926661
1923953
2026-04-24T14:29:20Z
Saranya V R
14232
1926661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>
அத்தகைய போக்கினை மேற்கொண்டு விட்டவர்கள், ஜனநாயகப் பாதுகாவலர்கள் என்று வேறு தங்களைக் கூறிக் கொள்கின்றனர்.
மக்களின் ஆதரவினைப் பெற்றிடும் வாய்ப்புப் பெற்ற எவரும் நாடாளும் தகுதி பெறுகின்றனர்; மக்களின் நல்வாழ்வுக்கான முறையிலே ஆட்சி நடத்திடும் எவரும், மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற்றிடும் தகுதியைத் தேடிக் கொள்கின்றனர்.
{{left_margin|3em|காங்கிரஸ் ஆட்சியாளர்களோ, நாட்டிலே வேறு யாருக்குமே நாடாளும் தகுதி இல்லை என்ற அகம்பாவம் பேசி, நாட்டை ஆண்டு கொண்டு வருகின்றனர், தொடர்ந்து.}}
உள்ளபடி, எவர் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் திறமையால் கிடைத்திடும் பலனைக் காட்டிலும் மிகுதியான பலன் கிடைத்திடத்தக்க முறையிலே ஆட்சி நடத்திட மற்றொரு கட்சியினர் வாய்ப்புப் பெற்று, பழைய ஆட்சியுடன் புதிய ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தால் மட்டுமே, நாடாளும் தகுதி உள்ளவர்கள் எவர் என்பது பற்றிய உண்மையான மதிப்பீடு கிடைத்திட முடியும்.
{{left_margin|3em|ஓட்டப்பந்தயத்தில் ஒன்பது பேர் கலந்து கொண்டால்தான், யார் அதிக வேகமாக ஓடுகிறார்கள் என்று கண்டறிந்து பரிசளிக்க முடியும். பந்தய மைதானத்திலே நுழையும் தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறிக்கொண்டு ஒரே ஆசாமி திடலில் ஓடுகிறான் என்றால், கேலிக்கூத்தாக அல்லவா கருதிடுவர்.}}
ஆனால் அத்தகைய முறையைத்தான் காங்கிரஸ் ஆட்சியினர், ஜனநாயகம் என்று கொண்டுள்ளனர். அது ஜனநாயகம் ஆகாது. மக்கள் இதனை அறிந்துகொண்டதால்தான், எதிர்க்கட்சிகளின் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
{{left_margin|3em|ஆகவே மக்களை மறுபடியும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்தித் தமது பக்கம் இழுத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், கேட்பதற்கு இனிப்பாக இருக்கும் ‘சோஷியலிசம்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.}}
அதிலே அவர்கள் எவ்வளவு நாணயத்தோடு உள்ளனர் என்பதும், அதனைச் செயல்படுத்த எந்த முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.
{{left_margin|3em|அந்த சோஷியலிசத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் தகுதி, தமக்கன்றி மற்ற எந்தக் கட்சிக்கும் இல்லை என்று கூறும் உரிமை இவர்களுக்கு யார் அளித்தது? என்ன காரணம் காட்டி இவர்கள் அந்த உரிமை தமக்கே இருப்பதாகக் கூறுகிறார்கள்.}}<noinclude>
<references/></noinclude>
qcfak7daq74fsrzqwzdihyad1vv210c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68
250
639319
1926664
1923954
2026-04-24T14:31:03Z
Saranya V R
14232
1926664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|44||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நம்முடைய பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்கின்ற மக்கள் யார்? மேடையிலே அமர்ந்திருக்கிற கழக முன்னணியினர் எவரெவர்? மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் யார்? சட்ட மன்றம், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் உறுப்பினராகியுள்ள கழகத் தோழர்கள் எப்படிப்பட்டவர்? மிட்டா மிராசுகளா! எட்டயாபுரம், போடி ஜெமீன் வழிவந்தவர்களா! பெரும் பண்ணைக்குச் சொந்தக்காரர்களா! நம்மிடம் தீராதபகை கொண்டவனும் அவ்விதம் கூறிடமாட்டானே! காமராஜரே ஒருமுறை கழகத்தில் உள்ளவர்களைப் பிச்சைக் காரர்கள்!—என்றே கேலி பேசியிருக்கிறாரே.
{{left_margin|3em|இவர்களைக் கொண்டதும் இப்படிப்பட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதுமான திராவிட முன்னேற்றக் கழகம் சோஷியலிசத்தைச் செயல்படுத்தாதா?}}
சோஷியலிசம் வேண்டும்! ஒப்புக்கொள்கிறோம், வரவேற்கிறோம்! ஆனால் அதனைச் செயல்படுத்தும் திறமையும், உரிமையும், கழகம் போன்ற மற்றக் கட்சிகளுக்கு இல்லை, எமக்குத்தான் உண்டு என்று கூறிக் கொள்ளக் காங்கிரசுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?
சோஷியலிசத்தைச் செயல்படுத்திக் கொடுத்திடத் தக்கவர்களாலா காங்கிரஸ் நடத்தப்பட்டு வருகிறது? ஊரூருக்கும் அந்தக் கட்சியிலே உள்ள மூலவர்கள் எப்படிப்பட்ட பெரிய புள்ளிகள் என்பது மக்களுக்குத் தெரியாதா! அப்படிப்பட்ட பெரிய புள்ளிகளின் ஆதிக்கம் காரணமாகத்தான், ஏழைகளின் தொகை பெருகியிருக்கிறது, அவர்களின் அல்லல் — வளர்ந்து விட்டிருக்கிறது என்பதனை மக்கள் அறியமாட்டார்களா? அதே பேர்வழிகளின் பிடியிலே உள்ள காங்கிரசுக் கட்சியினால் எப்படி சோஷியலிசத்தைச் செயலாக்கிட முடியும்!—என்பது பற்றியெல்லாம் மக்கள் எண்ணி பார்க்காமலா இருக்கிறார்கள்?
{{left_margin|3em|சோஷியலிசம் பேசும் காமராஜர் பவனி வருகிற போதும் கொலுவீற்றிருக்கிறபோதும் சீமான்கள் பக்கம் நின்று பராக்குக் கூறுவதையும் மக்கள் பார்க்கத் தானே செய்கிறார்கள்!
கழகத்தை நடத்துகின்றவர்கள் வருகின்ற விழாக்களிலே, எந்தப் பெரிய புள்ளியும் கலந்து கொள்வதில்லை என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.}}
அப்படி இருக்கும்போது, சோஷியலிசத்தை எம்மால்தான் செயல்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கட்சி பேசுவதை எப்படி மக்களாலே நம்ப முடியும்!
பணக்காரர்கள் புடைசூழப் பவனி வந்து கொண்டே பணக்கார ஆதிக்கத்தை ஒழிக்கப் போகிறோம் பாரீர்! ஆதரவு தாரீர்?— என்று<noinclude>
<references/></noinclude>
jfmcwv7s5sgqqhsrugmyy0u5ujahn7r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69
250
639320
1926665
1923955
2026-04-24T14:32:33Z
Saranya V R
14232
1926665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>
முழக்கம் எழுப்புகின்றனர் ஆளவந்தார்கள், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிக்கொள்கிறார்கள் என்ற நினைப்பில். ஆனால் மக்கள் அத்தனை தெளிவற்றவர்களாக இல்லை.
{{left_margin|3em|அவர்கள், காகிதப் பூவில் மணம் இருக்காது என்பதை அறியாதவர்கள் அல்லர்.}}
அதனை நன்கு அறிந்து கொண்டிருப்பதனால் தம்பி! நம்மிடம் அத்தனை பற்றும் பாசமும் காட்டுகின்றனர்.
புதிய மயக்க மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் காங்கிரசாரே இப்போது மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டு வருகின்றனர். ‘சுயராஜ்யம்’—என்று சொன்ன போது மக்களிடம் கிளம்பிய எழுச்சி இப்போது காணோமே என்று ஏக்கமடைந்து கொண்டு வருகின்றனர். திங்கள் தவறாமல் விழா நடத்துகிறார்கள்; ஜனநாயக சோஷியலிச விழாவாம்!
அவ்விதமான ஒரு விழாவுக்கான அறிவிப்பு, கொட்டை எழுத்துக்களிலே மாயவரம் சுவரிலே — எழுதிவைக்கப் பட்டிருந்ததைக் காண நேரிட்டது; என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு துணிந்து போலி நாடகமாடிடும் சாமர்த்தியம் கொண்டவர்களாகக் காங்கிரசார் இருக்கிறார்களே என்பதை எண்ணி வியப்படையாமலும் இருக்க முடியவில்லை.
{{left_margin|3em|ஜனநாயக சோஷியலிச விழா; தம்பி! மாயவரத்தில். யார் தலைமை?
தலைமை வகித்தவர், சக்தி விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி பார்த்தசாரதி என்பவர்.}}
நான் முதலில், யாரோ வேண்டுமென்றே சக்தி விலாஸ்காரரைக் கேலி செய்ய, இதுபோல எழுதி இருக்கிறார்களோ என்று எண்ணிக் கொண்டேன்; நண்பர்கள் சொன்னார்கள், அவர்தான் தலைவர், அறிவிப்பு அதிகாரபூர்வமானதுதான் என்று.
இந்தப் போலி நாடகம் நடத்த, தம்பி! மெத்த நெஞ்சுரம் வேண்டும்.
கேட்டுப்பாரேன், இது எப்படி ஐயா பொருந்துகிறது; விழா சோஷியலிசத்துக்காக! தலைமை வகிப்பவரோ, பெரிய பஸ் முதலாளி! சோஷியலிசம் வெற்றி பெற அவரா வழி அறிந்து கூறுவார்!—என்று. ஒரு விளக்கம் வெடித்துக்கொண்டு கிளம்பும், எமது சோஷியலிசத்தில் முதலாளியும் உண்டு!— என்பதாக.
காங்கிரசார் கூறிடும் சோஷியலிசம் அப்படிப்பட்டது.<noinclude>
<references/></noinclude>
5urv6taeqofwt1n2cs3egroxkaeahzn
1926670
1926665
2026-04-24T14:35:39Z
Saranya V R
14232
1926670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>
முழக்கம் எழுப்புகின்றனர் ஆளவந்தார்கள், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிக்கொள்கிறார்கள் என்ற நினைப்பில். ஆனால் மக்கள் அத்தனை தெளிவற்றவர்களாக இல்லை.
{{left_margin|3em|அவர்கள், காகிதப் பூவில் மணம் இருக்காது என்பதை அறியாதவர்கள் அல்லர்.}}
அதனை நன்கு அறிந்து கொண்டிருப்பதனால் தம்பி! நம்மிடம் அத்தனை பற்றும் பாசமும் காட்டுகின்றனர்.
புதிய மயக்க மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் காங்கிரசாரே இப்போது மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டு வருகின்றனர். ‘சுயராஜ்யம்’—என்று சொன்ன போது மக்களிடம் கிளம்பிய எழுச்சி இப்போது காணோமே என்று ஏக்கமடைந்து கொண்டு வருகின்றனர். திங்கள் தவறாமல் விழா நடத்துகிறார்கள்; ஜனநாயக சோஷியலிச விழாவாம்!
அவ்விதமான ஒரு விழாவுக்கான அறிவிப்பு, கொட்டை எழுத்துக்களிலே மாயவரம் சுவரிலே — எழுதிவைக்கப் பட்டிருந்ததைக் காண நேரிட்டது; என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு துணிந்து போலி நாடகமாடிடும் சாமர்த்தியம் கொண்டவர்களாகக் காங்கிரசார் இருக்கிறார்களே என்பதை எண்ணி வியப்படையாமலும் இருக்க முடியவில்லை.
ஜனநாயக சோஷியலிச விழா; தம்பி! மாயவரத்தில். யார் தலைமை?
{{left_margin|3em|தலைமை வகித்தவர், சக்தி விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி பார்த்தசாரதி என்பவர்.}}
நான் முதலில், யாரோ வேண்டுமென்றே சக்தி விலாஸ்காரரைக் கேலி செய்ய, இதுபோல எழுதி இருக்கிறார்களோ என்று எண்ணிக் கொண்டேன்; நண்பர்கள் சொன்னார்கள், அவர்தான் தலைவர், அறிவிப்பு அதிகாரபூர்வமானதுதான் என்று.
இந்தப் போலி நாடகம் நடத்த, தம்பி! மெத்த நெஞ்சுரம் வேண்டும்.
கேட்டுப்பாரேன், இது எப்படி ஐயா பொருந்துகிறது; விழா சோஷியலிசத்துக்காக! தலைமை வகிப்பவரோ, பெரிய பஸ் முதலாளி! சோஷியலிசம் வெற்றி பெற அவரா வழி அறிந்து கூறுவார்!—என்று. ஒரு விளக்கம் வெடித்துக்கொண்டு கிளம்பும், எமது சோஷியலிசத்தில் முதலாளியும் உண்டு!— என்பதாக.
காங்கிரசார் கூறிடும் சோஷியலிசம் அப்படிப்பட்டது.<noinclude>
<references/></noinclude>
klfyewy7gobryxap5qot3v2wq3v6bis
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70
250
639321
1926675
1923956
2026-04-24T14:36:56Z
Saranya V R
14232
1926675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|46||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
சைவ ஓட்டல் – கோழி பிரியாணி தயார்!-என்பது போன்றது!
சைவ ஓட்டல் என்கிறீர்களே, கோழி பிரியாணி அங்கு இருக்கலாமா என்றால், பதில் என்ன கூற முடியும்? கேட்டுப்பாருங்கள், காங்கிரஸ் பேச்சாளர்களை!
பைத்தியக்காரா! நாங்கள் நடத்தும் ஓட்டல் சைவ ஓட்டல். சந்தேகம் வேண்டாம்; உள்ளே வந்து பார், அவரைப் பொறியலும் கத்தரிக் கூட்டும் வெண்டைக் குழம்பும் இருப்பதை—என்பார்.
ஆனால் கோழி பிரியாணி தயார் என்று ‘போர்டு’ இருக்கிறதே என்று கேட்டால், திகைத்துப் போய்விடுவாரா என்கிறீர்களா? திகைக்க மாட்டார்கள்; துணிச்சல் மிக்கவர்கள்!
ஆமாம்! கோழி பிரியாணியும் உண்டு! அதனால் என்ன? சைவ ஓட்டல் இது, ஆகவே சைவ பதார்த்தங்கள் உள்ளன. சைவ ஓட்டல் என்றால், வெண்டையும், கத்தரியும், அவரையும் பிற காய்களும் உண்டு என்றுதானே பொருள்; இருக்கின்றன! சைவ ஓட்டல் என்று அறிவித்திருப்பதாலேயே, இங்கு இறைச்சி இல்லை என்றா பொருள்! அப்படியா அறிவிப்புப் பலகை சொல்லுகிறது.
{{left_margin|3em|இங்கு ஆட்டு இறைச்சி, கோழிக்கறி போன்றவை கிடைக்காது.}}
என்றா எழுதியிருக்கிறோம். எமது ஓட்டல், சைவ ஓட்டல், —ஆனால் எமது சைவ ஒட்டலில் கோழிக்கறியும் இருக்கும் என்று கூறிவிட்டு, அடுத்த கூட்டத்திற்காக அவசரமாகக் கிளம்புவார். இடையிலே வேறோர் காரணம் மனத்திலே ததும்பும்; உடனே, திகைத்துப் போயுள்ள உன்னை இழுத்து நிறுத்தி, இன்னொரு காரணம் கூறுகிறேன்- இது சைவ ஓட்டல் என்பதை உறுதிப்படுத்த. முதலாளி இருக்கிறாரே, அவர் சுத்தச் சைவர், முட்டைகூடச் சாப்பிட மாட்டார், தெரியுமா? அவர் நடத்தும் கடையைச் சைவ ஓட்டல் என்று கூறுவது தவறா? – என்று கேட்டுவிட்டு – இன்று ஒரு போடு போட்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் நடையைக் கட்டுவார்!
தம்பி! கோழி பிரியாணி தயார்! என்ற அறிவிப்புடன், சைவ ஓட்டல் என்ற பலகையைத் தொங்கவிட்டு யாரும் கடை நடத்த இன்னும் துணியவில்லை.
காங்கிரஸ் கட்சியினரோ தனிப்பட்ட முதலாளிகளும் உண்டு எமது சோஷியலிசத்தல் என்று துணிச்சலுடன் கூறுகின்றனர்.
கோழி பிரியாணியும் வைத்துக்கொண்டு இந்த ஓட்டலுக்குச் சைவ ஓட்டல் என்று பெயரிடலாமா என்று கேட்டதும், கடை நடத்தும்<noinclude>
<references/></noinclude>
6isy0qrb9lpuo3ddl8zg3lts60gosy4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75
250
639326
1926678
1923961
2026-04-24T14:39:39Z
Saranya V R
14232
1926678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude>
அதிலும் தகுதி திறமை ஆகியவைகளைக் காட்டிலும், பெரிய இடத்துச் சிபாரிசு, எந்த இடத்திற்கும் நுழைவுச் சீட்டாகப் பெரிதும் பயன்படும் நாட்டிலே, பதவியில் உள்ளவர்களைப் பலரும் மொய்த்துக் கொண்டிருப்பது எளிதாகப் புரியக்கூடியதுதானே. அதிலும், ‘வரம்’ கொடுப்பதிலே காங்கிரசார், வேறு எவரும் போட்டியிட முடியாத அளவு வல்லமை காட்டிப் பழக்கப்பட்டவர்கள்.
{{left_margin|3em|புதிய பாதைகள் போடுகிறார்கள்!
பள்ளிக்கூடமா? புதிது புதிதாக!
மருந்தகம்! படிப்பகம்! மனமகிழ் மன்றம்! மாதர் சங்கம்! இவைகளுக்கான திறப்புவிழாக்கள், ஆண்டு விழாக்கள்! அமைச்சர்களின் பேருரைகள்! ஒவ்வோர் நாளும்!!
காளை வாங்க, கிணறு வெட்ட, உரம் வாங்க வரப்பு அமைக்க கடன் கேட்டிருந்தவர்கள், கேட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இனி எங்கே கிடைக்கப் போகிறது என்று எண்ணி ஏக்கமடைந்து, சோர்ந்து கிடக்கிறார்களல்லவா, பலர்—அவர்களைத் தட்டி எழுப்புகிறார்கள், தர்பார் நடத்துபவர்கள், கடனா கேட்டிருந்தீர்கள்? அடுத்த வெள்ளிக் கிழமை கிடைக்கும் என்று வாக்களிக்கிறார்கள்.
உமது மகனா உத்தண்டன்? தெரியாமலே போய்விட்டதே! போன வருடமே இடம் வாங்கி இருக்கலாமே! இந்த வருடம் இடம் நிச்சயம்—என்று கூறுகிறார் மண்டலம்.
முகங்களிலே புதிய மலர்ச்சி! வார்த்தைகளிலே தனியானதோர் குளிர்ச்சி! நடவடிக்கைகளிலே ஒரு நட்புணர்ச்சி! எல்லாம் பளிச்சிடுகின்றன!}}
இவை ‘போலி’ என்பதனைக் காட்ட மட்டுமல்ல இவை குறித்து நான் கூறுவது; வாக்காளர்களை மயக்க, ஆட்சி நடாத்திடும் கட்சியினரால் முடிகின்ற அளவு, எதிர்க் கட்சிகளால் முடியாது என்பதையும் உணர்த்துவதற்குத்தான்.
உடனடியாக உள்ளம் மகிழ்ந்திடும் செயலைச் செய்வதன் மூலமோ இனிப்புப் பேச்சுப் பேசுவதன் மூலமோ, நீண்ட காலமாக நடத்திக் கொண்டுவந்த கொடுமைகளை மறைத்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர்.
{{left_margin|3em|ஆனால், உள்ளத்துக்கு மகிழ்ச்சி ஊட்டும் பொருள் தருவதன் மூலமாகவே, மக்களை மயக்கிவிட முடியும் என்ற நிலை இருக்குமானால், ஆளுங் கட்சியான காங்கிரசு, சென்ற தேர்தலிலே 100-க்கு 42 என்ற அளவு ஓட்டுகள்தானா பெற்றிருக்கும்!}}<noinclude>
<references/></noinclude>
sobl290c2zsvcfb3m6fzp0jrcttxuxr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76
250
639327
1926679
1923962
2026-04-24T14:41:22Z
Saranya V R
14232
1926679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|52||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|ஏழ்மை, அறியாமை, மனக் குழப்பம், மருட்சி என்பவைகளின் பிடியிலே சிக்கிக் கிடப்பினும், தமிழகத்துப் பொதுமக்கள் ஜனநாயக உணர்வை, நீதி நியாயத்தில் கொண்டுள்ள பற்றினை விட்டுவிடவில்லை.
அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப இருப்பதனால் மட்டுமே, எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தப் பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபட்டு வெற்றி வாகை சூடும் என்று அறிவித்திருக்கிறேன்.}}
கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், மீண்டும் கொடுமையின் பிடியிலே சிக்கிவிடக்கூடாது என்பதிலே உறுதியாக உள்ளனர் என்பதையும், அதற்கான பணியாற்றுவதிலே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதையும் ஒவ்வொரு கூட்டத்திலும் நான் காண்பது போலவே, பொதுமக்களிடம் தோழமைத் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்கள் அனைவரும் காண்கின்றனர். அதனால்தான் அவர்களின் பேச்சிலே ஒரு தெம்பும், உறுதியும் காணப்படுகிறது.
{{left_margin|3em|தொகுதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் தமக்கு ஏற்பட்ட கருத்து பற்றி நாவலர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; அவரிடமே கூட, அந்தத் தெம்பு ததும்பிக் கொண்டிருக்கக் கண்டேன்.}}
சென்ற தேர்தலின்போது கழகத்திற்கு இருந்த செல்வாக்கு இம்முறை இன்னின்ன காரணங்களால் இந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பது குறித்து என்னிடம் எடுத்துக் கூறும் போதே கழகத் தோழரின் முகத்திலே ஒரு பொலிவு புதிதாகத் தவழ்ந்திடக் காண்கின்றேன்.
{{left_margin|3em|அவர் மாளிகைவாசி அல்ல!
அம்பாரம் அம்பாரமாகச் செந்நெல்லைக் குவித்து வைத்துள்ள பெருநிலக்கிழார் அல்ல.
ஏழை அல்லது நடுந்தரக் குடும்பத்தினர்!}}
அவர்களிடம், தெளிவும் செயலார்வமும் இருந்திடக் காண்கின்றேன். செய்வதைத் திட்டமிட்டு, வகைப்படுத்தி, முறைப்படுத்திச் செய்திட வேண்டும் என்ற ஆர்வம் நல்ல அளவு இருந்திடக் காண்கிறேன்.
{{left_margin|3em|கூட்டு முயற்சியிலே எத்தனை சாதிக்க முடியும் என்பதனை நாட்டுக்கு எடுத்துக் காட்டியதுடன், நாமே உணர்ந்து கொள்ளும்படி செய்திருப்பது நமது கழகம்.}}
ஆத்திரத்தினாலோ, அருவருப்பினாலோ, வெறும் பிரசாரம் என்ற போக்கினாலோ நம்மைப் பற்றி, காங்கிரசிலுள்ளவர்கள் எவ்வளவு<noinclude>
<references/></noinclude>
33p9pg2vb584uvd6yintkjrgf37037a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77
250
639328
1926683
1923963
2026-04-24T14:43:37Z
Saranya V R
14232
1926683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude>
வேகமாக மேடைகளிலே பேசினாலும், இவனைப்பார்! அவனைப்பார்! என்று இழித்துரைத்தாலும், ஒரு நேரமாகிலும் அவர்கள் உண்மையை உணரும்போது
{{left_margin|3em|எப்படியோ இப்படி ஒரு வலிவினைத் திரட்டிவிட்டார்களே!}}
என்று தம்மையும் அறியாமல், பேசாமலிருக்க முடியாது.
{{left_margin|3em|இதனாலா? அதனாலா? இப்படியா? அப்படியா?}}
என்றெல்லாம் ஆராய்ச்சி நடத்தி நடத்தி, தமது முறைகளைக்கூட அவர்கள் நம்முடைய முறைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு உண்மையைத்தான் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
{{left_margin|3em|மக்களின் மனக்குமுறலின் வடிவமாக, மக்களின் பெருமூச்சின் வடிவமாக}}
திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது என்ற உண்மையை.
மற்றொரு நம்பிக்கை ஆளவந்தார்களுக்கு இருக்கிறது; பணம் பத்தும் செய்யும் என்பதிலே உள்ள நம்பிக்கை.
ஆனால் பணத்திற்கு உள்ள மதிப்பே இன்று வேகமாகக் கெட்டுக்கொண்டு வருகிறது.
{{left_margin|3em|டில்லியில் மூண்டிடும் கலவரங்களைப் பற்றிய செய்தி கேட்டு, இந்தியாவுக்குக் கடன் தொகை எந்த அளவு கொடுக்கலாம் என்பதற்காகக் கலந்து பேசிய குழுவினர், இத்தனை குழப்பம் மூண்டுகிடக்கும் நாட்டுக்குப் பெரிய அளவு தொகை கடன் கொடுப்பது நல்லதுதானா? என்று யோசிக்கின்றனர்; கவலையைத் தெரிவித்துள்ளனர் என்பதும்,
வெளிநாடுகளிலே வாங்கியுள்ள கடனைத் திருப்பித் தருவதற்கான தவணையில் மாறுதல் தேவை; அதாவது பிறகு திருப்பித் தருகிறோம் என்று கூறித் தவணை வாங்கவேண்டும் என்ற யோசனை டில்லி வட்டாரத்தில் உலவுகிறது என்பதும்,
இந்தியாவிலே தொழில் நடத்த ‘முதல்’ போடுவதற்குப் பணத்திலே குறியாக உள்ள ஜப்பான் தயக்கம் காட்டுகிறது என்பதும்,}}
இன்றுள்ள பொருளாதார நெருக்கடியை எடுத்துக் காட்டுவதனை எத்தனை வேகமான காங்கிரஸ் பிரசாரகரும் மறுத்துவிடமாட்டார்.
{{left_margin|3em|நிலைமை, பல முனைகளில் நல்லபடியாக இல்லை.
சமூகத்தில், ஒழுங்கும் சாந்தியும் பெரிய அளவில் குலைக்கப்பட்டிருக்கிறது.}}<noinclude>
<references/></noinclude>
pisll7fx8w9shc97tov3ygeo4fh1qm4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78
250
639329
1926685
1923964
2026-04-24T14:45:15Z
Saranya V R
14232
1926685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|54||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|பசியும் பட்டினியும் கொட்டும் கொடுமை வளர்ந்தபடி இருக்கிறது.
இவைகளிலே ஒன்றைக் கூடச் சீர்ப்படுத்தக் காங்கிரஸ் அரசினால் முடியவில்லை.}}
இருப்பினும் தேர்தலிலே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் மார்தட்டுகிறார்கள் என்றால், எதை நம்பிக்கொண்டு அவ்விதம் பேசுகிறார்கள் என்று யோசிக்க வேண்டாமா?
{{left_margin|3em|படி அரிசி நாலு ரூபாயாம்! இந்த அக்கிரமம் வேறு எங்காவது நடந்திடுமா? அனுமதிப்பார்களா? என்று பதறுகிற மக்களிடம் எப்படியும் நாங்கள் ஓட்டுக்களைப் பறித்திடுவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது என்றால், பணத்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்பது தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?}}
காலை மலர்ந்ததும்,மக்கள் கண்களிலே படுவது, பட்டினிச் சாவு, துப்பாக்கிச் சூடு, சிறை பிடித்தல், வெளி நடப்புகள், புகார்கள், உட்பூசல்கள் என்பன பற்றியே. ஒரு நாடு மிகச் சீர்கேடான நிலையிலே இழுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?
நம்ம சர்க்கார்
நல்லவர் சர்க்கார்
என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்; இதற்கா எதிர்ப்புக் காட்டுவது என்று கேட்கிறார்கள்; மக்களோ
இருண்ட கண்களையும்
வறண்ட தலையையும்
காய்ந்த வயிற்றையும்
காட்டுகிறார்கள்; நம்ம சர்க்கார் தந்தவை! ஆனந்தத் தாண்டவமாடச் சொல்லுகிறீர்களா ஐயா! என்று கேட்கிறார்கள். இந்த நிலையிலும் ‘ஓட்டு’ எமக்குத்தான் என்று எந்தத் தைரியத்தில் பேசுகிறார்கள் ஆளுங்கட்சியினர்?
{{left_margin|3em|பணம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரே தைரியத்தில்.}}
போக போக்கியத்திலே மூழ்கி, வலிவிழந்து கிடந்த ஐந்நூறு சிற்றரசர்களையும், செல்வச் செருக்குமிக்கோரையும் பதவிக்காகவும் பட்டத்துக்காகவும் பல்லிளித்துக் கிடப்போரையும், ஆலவட்டங்களையும் ஆமாம்சாமிகளையும் பக்கத்துணையாக வைத்துக் கொண்டு இருநூறு ஆண்டுகள் வெள்ளை ஏகாதிபத்தியம் ஆட்சி நடத்த முடிந்ததல்லவா? இவர்கள் அதே ‘பாணி’யில் தமது ஆட்சியை நடத்திச் செல்லமுடியும் என்று நம்புகிறார்கள்.<noinclude>
<references/></noinclude>
hgmmp7jd02ays5ncbue41ra77dr2uym
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79
250
639330
1926688
1923965
2026-04-24T14:47:05Z
Saranya V R
14232
1926688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||55}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அவர்களால் முடிகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை; நாடு இன்னமும் அவர்களின் ஆட்சியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சினை.}}
தம்பி, காங்கிரசாட்சி துவக்கப்பட்டபோது, மக்களின் வாழ்விலே வளம் உண்டாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு வசீகரமான புன்னகையுடன் காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.
{{left_margin|3em|ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப் போகிறோம் என்று.}}
மூன்று முடிந்து, நாலாவது நடமாட விடப்பட்டிருக்கக் காண்கிறோம். திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? எங்கு சென்றுள்ளது? என்று கேட்கிறார்கள்.
{{left_margin|3em|நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன், ஐந்தாண்டுத் திட்டங்களால் விளைந்த பலன், எங்குப் போயிற்று என்றுதான் தெரியவில்லை; ஏழைக்கு அந்தப் பலன் வந்து சேரவில்லை என்று காமராஜர் கூறுகிறார்.}}
திட்டத்தை நிறைவேற்றினோம்; ஆகவே எமக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதற்கான நியாயம் எங்கே இருக்கிறது. பலன், போன இடம் தெரியவில்லை என்று பெருந்தலைவரே பேசுகிறாரே!
{{left_margin|3em|திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள் குவிய, வரி கொடுத்துக் கொடுத்து ஏழை எளியோர்கள், மேலும் இளைத்துப்போய், களைத்துப்போய் இருப்பது தெரிகிறது; திட்டத்தால் பெற்ற பலன் வேறு என்ன, எங்கே இருக்கிறது என்று காட்டக் கூடக் கூச்சப்படுகிறார்கள் காங்கிரசின் பெரிய தலைவர்கள்.}}
ஆராய்ச்சி நடத்துகிறார்கள், திட்டம் ஏன் எதிர்பார்த்த பலனைச் சமூகத்துக்குத் தரவில்லை என்று.
{{left_margin|3em|திட்டம் சரியாகத் தீட்டப்படவில்லை.
திட்டம் நடைமுறைக்கு ஏற்றதாகத் தீட்டப்படவில்லை.
திட்டம் சரியாகவே தீட்டப்பட்டது, செயல் படுத்துவதிலேதான் தவறுகள் நேரிட்டு விட்டன.
செயல்முறை சரியாக வகுக்கப்படவில்லை.
செயல்படுவதற்குத் தக்கவர்களை அமர்த்தவில்லை.
செயல்படுத்தியவர்களுக்குப் போதிய அக்கறை இல்லை.
திட்டத்தின் உட்பொருளைச் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.}}<noinclude>
<references/></noinclude>
b05wxb8rd0suc5v4mglyuheg7wc2rl0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80
250
639331
1926690
1923966
2026-04-24T14:48:50Z
Saranya V R
14232
1926690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|56||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கவில்லை.}}
இப்படி ஆளாளுக்கு ஒரு குட்டுக்குட்டியபடி உள்ளனர். குட்டுபவர்கள் எல்லோருமே காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்று கூறிவிட முடியாது. காங்கிரஸ்காரர்களிலேயே பலர், குறை காணுகின்றனர்.
{{left_margin|3em|எல்லோரும் ஒருசேர இன்று ஒப்புக்கொண்டிருப்பது, திட்டங்கள் எதிர்பார்த்த பலனை சமூகத்துக்கு தரவில்லை என்பது.}}
ஆகவே, எந்தத் திட்டங்களைத் தமது சாதனையிலே சிகரம் போன்றது என்று இவர்கள் கூறிக்கொண்டு வந்தார்களோ, அந்தத் திட்டங்களே தோல்வி அடைந்துவிட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஆனால் பயங்கரமான உண்மையாகிவிட்டது. இந்தத் திட்டங்களுக்காகச் செலவாகி இருக்கும் பணத்தின் அளவு, எவருடைய தலையையும் சுற்றச் செய்துவிடும்; அத்தனை பெரிய தொகை.
“விடமாட்டோம் இந்தியாவை” என்று வெள்ளையர் வீம்பு பேசிக் கொண்டிருந்த நாட்களில் டில்லிப் பாராளுமன்றத்தில் வீற்றிருந்த கோவிந்த வல்லப பந்த் கோபாவேசமாக ஒருமுறை சுயராஜ்ய திட்டம் பற்றிப் பேசியபோது, வெள்ளையர் ஒருவர் குறும்புத்தனமாகக் குறுக்கிட்டு,
{{left_margin|3em|சுயராஜ்யம் கிடைத்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?}}
என்று கேட்டபோது, பந்த் அவர்கள் பதிலளித்தார், சுடச் சுட. அவரால் அன்று, எந்த அளவுக்குச் செல்ல முடிந்தது?
{{left_margin|3em|சுயராஜ்யம் கிடைத்ததும் நாட்டை வளப்படுத்த திட்டம் தீட்டுவோம். நூறு கோடி ரூபாய் அளவு செலவிட்டுத் திட்டம் நிறைவேற்றுவோம்!}}
என்று கூறினார். கவனித்தனையா தம்பி! 100 கோடி! அது அன்று பிரம்மாண்டமான தொகை!
ஆனால் காங்கிரஸ் அரசு இந்த ஐந்தாண்டுத் திட்டங்களுக்காகச் செலவிட்டிருக்கும் தொகை, 20000 கோடி ரூபாய்! பண்டித பந்த்தினால் நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாத தொகை!! இவ்வளவு செலவான பிறகும், இன்று நாட்டிலே இல்லாமை, போதாமை! அமெரிக்கா பறக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியம், உணவுக்காக! சௌத்ரி, ஐரோப்பா பயணமாவார், கடன் கேட்க! மேத்தா, ரஷியா செல்லக்கூடும்! இந்திரா அம்மையார், உலக சமாதானம் உண்டாக்க யூகோ செல்லக்கூடும்.
{{left_margin|3em|பாவம், அவர்களால் இங்கு இருக்க முடியவில்லை.
காது குடையும் கூச்சல்! கண்ணைக் கெடுக்கும் காட்சி! மனதை மருட்டும் செய்திகள்! நிம்மதி இல்லை! நிலைகொள்ளவில்லை.}}<noinclude>
<references/></noinclude>
s1tvunvfgbtjewx7kurtbail1ojnwx6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81
250
639332
1926693
1923969
2026-04-24T14:51:30Z
Saranya V R
14232
1926693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|பாரிசோ, மாஸ்கோவோ, நியூயார்க்கோ, இலண்டனோ எங்காவது சென்று சிறிதளவு நிம்மதியாவது பெறலாம் என்று எண்ணுகிறார்கள். துல்லியமான மேக மண்டலங்களுக்கு மேலே விமானம் செல்லும்போது, ஆர்ப்பரிப்பும். பேரணியும் கடை அடைப்பும் கலவரமும் இல்லாதநிலை காண்கின்றனர்! ஒரு நிம்மதி!
இலஞ்சக் குற்றச்சாட்டுகள் கூறிடுவோர், குறுக்குக் கேள்விகள் பூட்டிடுவோர், ஊழல்களை அம்பலப்படுத்துவோர், அமீர்சந்த் பியாரிலால் போன்றவர்கள் பற்றிக் கிளறிவிடுவோர் இல்லாத இடம்; ஒரு மகிழ்ச்சி!}}
இந்த விதத்தில் அவர்களும் பாவம், தங்கள் மனத்திலே குமுறிக் கொண்டிருக்கும் கவலையை மறந்துவிட முயற்சிக்கிறார்கள்.
{{left_margin|3em|20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, தோல்வி கண்ட கட்சி, கூனிக் குறுகிப் போக வேண்டியது முறையாக இருக்க, இந்தத் திட்டங்களின் கர்த்தாக்களாகிய எமக்கே ஓட்டுகள்!—என்று பாத்யதை வேறு கொண்டாடுகிறார்கள்!!
தெளிவும் ஜனநாயக உணர்வும் இருக்க வேண்டிய அளவிலும் வேகத்திலும் இந்த நாட்டில் இருந்திடுமானால், 20 ஆயிரம் கோடி ரூபாயைப் பாழாக்கினதற்காகக் காங்கிரஸ் கட்சியைக் கூண்டிலே நிற்க வைத்து விசாரணை நடத்தி இருப்பார்கள்!
இன்றோ, இந்த ஆட்சியின் போக்கை எதிர்க்கத் துணிபவர்களை, காரணம் கூடக் காட்டாமல் சிறையில் தள்ளிவைக்க, தடுப்புக் காவல் சட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பது என்று பாராளுமன்றத்தில் பலமான எதிர்ப்பைத் துச்சமென்றுத் தள்ளிவிட்டு நிறைவேற்றி வைத்துக் கொண்டுவிட்டார்கள்.}}
உரிமைகள் குலைக்கப்படுகின்றன. இது நாம் ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டத்திற்கே ஒவ்வாதது என்று கண்டிக்காத மேதைகள் இல்லை; சட்ட நிபுணர்கள் இல்லை. இன்னமும் நெருக்கடி நிலைமையை நீடித்துக் கொண்டிருப்பது அறமாகாது; அதன் பெயரால் பாதுகாப்புச் சட்டத்தை ஏதாவது ஒரு வடிவத்தில் நீட்டிக் கொண்டு போவது அடாத செயலாகும் என்று, நீதி மன்றங்களில் கீர்த்திமிக்க நிலை பெற்றிருந்தவர்களெல்லாம் எடுத்துக் கூறிவிட்டனர். சர்வாதிகார நாடுகளில் தவிர வேறு எங்கும் இப்படிப்பட்ட ஆள்தூக்கிச் சட்டங்கள், நாக்கறுப்புச் சட்டங்கள் இல்லையே என்றுகூறிக் கண்டிக்கின்றனர் சான்றோர் பலர்.
{{left_margin|3em|இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் ஏ. கே. சென் அவர்களே இந்தப் போக்கைக் கண்டித்துப் பேசுகிறார்.}}<noinclude>
<references/></noinclude>
eq4ka0xr5i110s2z47nton7dm07ox7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82
250
639333
1926694
1923970
2026-04-24T14:52:58Z
Saranya V R
14232
1926694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|58||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால், தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் மிக்கார் எவர் உளர் என்ற நினைப்புத் தடித்துப் போன நிலையில் தடுப்புக் காவல் சட்டம் கூடத் தேவைதான் என்று காங்கிரசார் வாதாடுகின்றனர்; எண்ணிக்கை வலிவினைக் காட்டி அக்கிரமத்தை நியாயமாக்கிக் காட்டுகின்றனர்!
தடுப்புக்காவல் சட்டம், ஒப்புக் கொள்ளப்பட்ட சாதாரண சட்ட முறையாகிவிட்டது என்றே பேசுகிறார், உள்துறை அமைச்சர்—புதியவர்—சவாண்! மனித உரிமைகள் அவ்வளவு கேவலப்படுத்தப்பட்டு விடப்பட்டுள்ளன.
{{left_margin|3em|உணவு போதுமான அளவு இல்லை.
உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
சாந்தி இல்லை, சமாதானம் இல்லை.
என்றாலும், ஓட்டு இருக்கிறதல்லவா, அதை எமக்குக் கொடுத்திடுக! என்று கேட்கிறார்கள்.
ஓட்டாண்டியாக்கிவிட்டு ஓட்டும் கேட்கிறார்கள். புதுடில்லியில், ‘ஜனநாயக நிலை’ பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய மேனாட்டு அரசியல்துறைப் பேராசிரியர் ஒருவர்,
‘மக்கள் காங்கிரசாட்சியிலும் வெறுப்படைந்துள்ளனர்; ஆனாலும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகின்றனர். இந்த விந்தை இந்திய ஜனநாயகத்திலே காணப்படுகிறது. இது ஆராயப்படவேண்டிய பிரச்சினையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.}}
உள்ளபடியே தம்பி! காங்கிரசாட்சியிடம் மக்கள் கொண்டுள்ள கோபமும் கொதிப்பும், வெளிநாடுகளிலே உள்ள ஆய்வாளர்களும் அறிந்துள்ளனர். மக்களிடையே இவ்வளவு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் மூட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் என்று கருதுகிறார்கள். ஏனெனில், இங்குக் காங்கிரசாட்சி செய்திருப்பது போன்ற தவறுகளிலே நூற்றிலே ஒரு பங்கு தவறு செய்திடினும் போதும், அங்கு அத்தகைய ஆட்சியை மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயக உணர்வு அங்கெல்லாம் அந்த அளவு இருக்கிறது.
{{left_margin|3em|இங்கோ ஆட்சியினிடம் மக்களுக்கு அச்சம் மூண்டுவிடுகிறது.
அக்கிரமம் செய்திடினும், ஆட்சி தன்னிடம் சிக்கிக் கொண்டுள்ள வலிவினைக் கொண்டே, எதிர்ப்புச் சக்திகளை முறியடித்துவிடும் என்ற பீதி பிடித்தாட்டுகிறது.}}
இந்த அச்சத்தை, தம்பி உன் இடைவிடாத முயற்சியின் துணைகொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் அளவுக்கு ஓட்டிவிட்டிருக்கிறது.<noinclude>
<references/></noinclude>
osvq9nox5zkv53aoxktffhndrc5ofkw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83
250
639334
1926696
1923971
2026-04-24T14:54:11Z
Saranya V R
14232
1926696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude>
இந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்ட காங்கிரசார் இம்முறை ‘கடைசி ஊசி’ போடுவது என்பார்களே அதுபோல உள்ள பணம் அவ்வளவையும் வீசிப் பார்த்து விடுவது என்று துணிந்து விட்டுள்ளனர். பார்க்கட்டும்! பாசி பிடித்துப் போன பணமெல்லாம் வெளியே வரட்டும்! பாட்டாளியின் வயிற்றில் அடித்துச் சேர்த்து வைத்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! ஒன்றை ஒன்பதிற்கு விற்றுச் சேர்த்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! கள்ளப்பணம், கருப்புச் சந்தைப் பணம், வரி கொடுக்காமல் ஏய்த்துச் சேர்த்த பணம் எல்லாம் வெளியே வரட்டும்!! ஏன் வருகிறது என்பதா மக்களுக்குத் தெரியாது; புரியாது!! மிக நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பேரூர்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலே எல்லாம் பார்க்கிறேன்.
என் ஆவல் தீருமளவுக்கும் தோழர்களின் அன்பழைப்பை நிறைவேற்றும் அளவுக்கும் என்னால் எல்லா இடங்களுக்கும் சென்று வர முடியவில்லையே, அதற்குப் போதுமான வலிவு இல்லையே என்றுதான் வருத்தப்படுகிறேன்.
நண்பர்கள் அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுரீல் என்று கோபம்கூட வந்துவிடுகிறது. இப்படி ‘வேலை வாங்குகிறார்களே’ என்று. ஆனால், சென்று, அங்கு ஆர்வம் ததும்பும் நிலையில் ஆடவரும் பெண்டிரும், முதியோரும் இளைஞரும் திரண்டு இருந்திடக் காணும்போது எல்லாக் கஷ்டங்களும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தே போய்விடுகின்றன.
{{left_margin|3em|இவ்வளவு பேரும் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பவர்கள்.
காங்கிரசினால் மூட்டிவிடப் பட்டுவிட்ட கொடுமைகளை எதிர்ப்பவர்கள்.
காங்கிரசுக்கும் கனதனவான்களுக்கும் ஏற்பட்டுவிட்டுள்ள கூட்டுச் சதித் திட்டத்தைத் தகர்த்திடத் துடிப்பவர்கள்.
ஏழை வாழ்ந்திடவேண்டும்; இல்லாமை ஒழிய வேண்டும்; நிம்மதி ஓங்கவேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துக்காகப் போராடுபவர்கள்.
மொழி காத்திட, உரிமை காத்திட, எதனையும் இழந்திடும் துணிவு பெற்ற தூய உள்ளத்தினர்.
இவர்களை ஆசை அலைக்கழிக்கவில்லை; அச்சம் மருட்டவில்லை; ஆளவந்தார்களின் அட்டகாசம் அடக்கிட முடியவில்லை.}}
ஏடு பல காட்டி இவர்களை மயக்கிட முடியவில்லை.
ஏதேதோ செய்கிறோம் என்று தித்திப்புத் தடவி இவர்களை இழுத்திட முடியவில்லை.<noinclude>
<references/></noinclude>
4x2yr3uj1ybt37u90a9y1hwwlzhp7t3
1926698
1926696
2026-04-24T14:55:35Z
Saranya V R
14232
1926698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude>
இந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்ட காங்கிரசார் இம்முறை ‘கடைசி ஊசி’ போடுவது என்பார்களே அதுபோல உள்ள பணம் அவ்வளவையும் வீசிப் பார்த்து விடுவது என்று துணிந்து விட்டுள்ளனர். பார்க்கட்டும்! பாசி பிடித்துப் போன பணமெல்லாம் வெளியே வரட்டும்! பாட்டாளியின் வயிற்றில் அடித்துச் சேர்த்து வைத்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! ஒன்றை ஒன்பதிற்கு விற்றுச் சேர்த்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! கள்ளப்பணம், கருப்புச் சந்தைப் பணம், வரி கொடுக்காமல் ஏய்த்துச் சேர்த்த பணம் எல்லாம் வெளியே வரட்டும்!! ஏன் வருகிறது என்பதா மக்களுக்குத் தெரியாது; புரியாது!! மிக நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பேரூர்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலே எல்லாம் பார்க்கிறேன்.
என் ஆவல் தீருமளவுக்கும் தோழர்களின் அன்பழைப்பை நிறைவேற்றும் அளவுக்கும் என்னால் எல்லா இடங்களுக்கும் சென்று வர முடியவில்லையே, அதற்குப் போதுமான வலிவு இல்லையே என்றுதான் வருத்தப்படுகிறேன்.
நண்பர்கள் அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுரீல் என்று கோபம்கூட வந்துவிடுகிறது. இப்படி ‘வேலை வாங்குகிறார்களே’ என்று. ஆனால், சென்று, அங்கு ஆர்வம் ததும்பும் நிலையில் ஆடவரும் பெண்டிரும், முதியோரும் இளைஞரும் திரண்டு இருந்திடக் காணும்போது எல்லாக் கஷ்டங்களும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தே போய்விடுகின்றன.
{{left_margin|3em|இவ்வளவு பேரும் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பவர்கள்.
காங்கிரசினால் மூட்டிவிடப் பட்டுவிட்ட கொடுமைகளை எதிர்ப்பவர்கள்.
காங்கிரசுக்கும் கனதனவான்களுக்கும் ஏற்பட்டுவிட்டுள்ள கூட்டுச் சதித் திட்டத்தைத் தகர்த்திடத் துடிப்பவர்கள்.
ஏழை வாழ்ந்திடவேண்டும்; இல்லாமை ஒழிய வேண்டும்; நிம்மதி ஓங்கவேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துக்காகப் போராடுபவர்கள்.
மொழி காத்திட, உரிமை காத்திட, எதனையும் இழந்திடும் துணிவு பெற்ற தூய உள்ளத்தினர்.
இவர்களை ஆசை அலைக்கழிக்கவில்லை; அச்சம் மருட்டவில்லை; ஆளவந்தார்களின் அட்டகாசம் அடக்கிட முடியவில்லை.
ஏடு பல காட்டி இவர்களை மயக்கிட முடியவில்லை.
ஏதேதோ செய்கிறோம் என்று தித்திப்புத் தடவி இவர்களை இழுத்திட முடியவில்லை.}}<noinclude>
<references/></noinclude>
9s8wykon4kimqrfo9p1xdg8nvovsvqj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84
250
639335
1926700
1923972
2026-04-24T14:56:39Z
Saranya V R
14232
1926700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|60||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இவர்கள் அஞ்சா நெஞ்சினர்; அறப்போர் இயல்பினர்,
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!
இவர்கள் பலர்! மிகப் பலர்! இவர்களை வீழ்த்திட முனைபவரோ சிலர்!}}
இவ்விதமான எண்ணமெல்லாம் கொள்ளுகின்றேன்; இதயத்திலே ஓர் இசையே சுரக்கிறது. அவர்களைக் காண்கிறேன்; கனிவு என்றால் என்ன என்பது விளக்கமாகிறது, அவர்களிடம் பேசுகிறேன்; பாசம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறேன்; புதியதோர் ஆர்வம் பெறுகிறேன்.
என் உள்ளத்தில் எழுந்திடும் ஆர்வத்தின் அளவு எவ்வளவோ, அந்த அளவு என் உடலில் வலிவு இருக்கக் கூடாதா, இல்லையே என்று எண்ணி ஏக்கம்கொள்கிறேன்.
ஒவ்வொரு கூட்டமும் என்னை அந்த மக்களுடன் பிணைத்துவிடுவதை உணருகிறேன்—பாசப் பிணைப்பு அஃது என்பதால் பெருமிதம் கொள்கிறேன்.
நான் பெற்றிடும் இந்தப் பெருமிதத்தைத்தான் மற்ற பேச்சாளர்களும் பெறுவர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்; மிகப் பெரியதோர் குடும்பம் நமது கழகம் என்ற இலக்கணம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
<poem>
{{Multicol}}
புதுப்பாளையம்
சிறுவாளூர்
தூக்கநாய்க்கன் பாளையம்
தாசப்பகவுண்டன் புதூர்
கூடக்கரை
நம்பியூர்
பவானிசாகர்
புஞ்சைபுளியம்பட்டி
காவலிபாளையம்
உக்கரம்
சத்தியமங்கலம்
கோபிசெட்டிபாளையம்
தாளக்கொம்புபுதூர்
பெருந்தலையூர்
பொத்தபாளையம்
உடையாம்பாளையம்
கெம்பநாயக்கன் பாளையம்
{{Multicol-break}}
பகத்தூர்
வடுகபாவையம்
மேட்டுப்பாளையம்
காளிங்கராயன்பாளையம்
தொட்டிபாளையம்'
அத்தாணி
சவுண்டப்பூர்
பவானி
கவுந்தப்பாடி
அந்தியூர்
ஒலகடம்
ஆண்டிபாளையம்
குருவரெட்டியூர்
கந்தாம்பாளையம்
கீரனூர்
ஆலாம்பாடி
பச்சாம்பாளையம்
</poem><noinclude>
<references/></noinclude>
15yeapjg61l0tmby9mriok7a0slwlrh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86
250
639337
1926702
1923974
2026-04-24T14:57:58Z
Saranya V R
14232
1926702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|62||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
<poem>
{{Multicol}}
மலையாண்டி கவுண்டனூர்
கண்ணம நாயக்கனூர்
உடுமலைப்பேட்டை
தேவனூர் புதூர்
காரத்தொழுவு
வால்பாறை
வாட்டர் பால்ஸ்
கல்லூர்
பச்சைமலை
பழனியூர்
பெத்த நாயக்கன் பாளையம்
{{Multicol-break}}
மேலப்பாளையம்
புதுப்பாளையம்
குமாரபுரி
ஈங்கூர்
வீரப்பன் சத்திரம்
பெரிய அக்ரகாரம்
ஈரோடு
குன்னத்தூர்
ஊத்துக்குளி
பெருமாநல்லூர்
பெங்கால்மட்டம்
மஞ்சூர்
குன்னூர்
உதகமண்டலம்
</poem>
தம்பி! புஞ்சை புளியம்பட்டி தோழர் சாமிநாதன் அனுப்பிய கடிதத்தின் மூலம், நான் கோவை மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஊர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
இத்தனை ஊர்களிலும்-இவைகளில் பல, பாளையங்கள்–நமது கழகத்திடம் பற்று நிரம்பக் கொண்டவர் பல்லாயிரவர் இருந்திடக்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டேன். அவர்கள் ஆர்வத்துடன் கூறுகின்றனர். “அண்ணா! இந்த முறை வெற்றி நமக்குத்தான்!! கவலைப்படாதீர்கள்” என்று.
அவர்களுக்குப் புள்ளிவிவரம் போதுமான அளவு தெரியாது. மேற்கோள்கள் அவர்கட்கு மனப்பாடமாகவில்லை. வரலாற்றுச் சான்றுகளை இவர்கள் தேடி அலைந்து கொண்டில்லை.
{{left_margin|3em|கண் இருக்கிறது, காண்கின்றனர்; காங்கிரசாட்சியால் நாடு கொண்டுவிட்ட அலங்கோலத்தை.
காது இருக்கிறது; விம்மல், குமுறல், பெருமூச்சு, கதறல் விழுகிறது.
அறிவு இருக்கிறது; தூய்மை கெடாத அறிவு; சிந்திக்கிறார்கள்! தெளிவு பிறக்கிறது.
வயலைப் பார்க்கிறார்கள் வயிற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்!
வரட்டும்! வரட்டும் இந்த முறை ஓட்டுக்கு-என்று மெல்லிய குரலில் ஆனால் உறுதி நிரம்பிய தன்மையில் கூறுகிறார்கள்.}}
இவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் சென்று, நாங்கள் இப்போது நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் போட்டிருக்கிறோம் என்று சொன்ன உடனே, பூரித்துப்போய் விடுவார்களோ! ஏமாளித்தனமான எண்ணம்!<noinclude>
<references/></noinclude>
dv8f0j02p07qe68vfsn4fa65z85qvb7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87
250
639338
1926705
1923975
2026-04-24T14:59:26Z
Saranya V R
14232
1926705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|திட்டம்தானே ஐயா! ஐந்தாண்டுத் திட்டம்!! தெரியுமே! பார்த்தோமே!! அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறோம் திட்டங்களை!!}}
—என்றுதான் சலிப்புடன் பேசுவார்கள். அவர்கள் திட்டங்களுக்கு விரோதிகள் அல்ல! ஆனால் திட்டங்கள், ஏழைக்கு பயன்படவில்லையே என்ற வேதனையால் தவிக்கின்றார்கள்.
அவர்களின் சார்பிலே பணியாற்றிடும் ஆச்சார்ய வினேபா பாவே, அவ்வப்போது காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகளை விளக்கிக்கொண்டு வருகிறார்.
{{left_margin|3em|அவருக்குப் பூசை நடத்தக்கூடக் காங்கிரஸ் தலைவர்கள் முன்வருகிறார்கள். ஆனால் அவருடைய அறிவுரையின்படி நடந்திட மட்டும் மறுக்கிறார்கள். முடியவில்லை!!}}
தம்பி, இந்த ஐந்தாண்டுத் திட்டம்பற்றி வினேபா மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதனைக் ‘குருட்டுத் திட்டம்’ என்றே கூறுகிறார். நிலைமையைத் தெரிந்துகொள்ளாதவர்கள் தீட்டிடும் திட்டம். அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் ஏழைகளை அவர்கள் கண்டதில்லை!!— என்று சாடுகிறார்.
{{left_margin|3em|நிலைமை மிகவும் சீர்கேடடைந்துவருகிறது. இதைத் தில்லியிலுள்ள நமது தலைவர்கள் பார்க்காமல் இல்லை. அவர்கள் அவற்றை நன்கு அறிவார்கள். ஆனால் அவற்றிற்கு மாற்று என்ன என்பதைக் கண்டறியத் திறனில்லாதவர்கள் என்றே நான் வருத்தத்துடன் கூறவேண்டியிருக்கிறது.
திட்டத்தை இயற்றியவர்கள் மிகப் பெரியவர்கள், அவர்களில் சிந்தனையாளர்கள், பொருளாதார சமூக சாஸ்திர நிபுணர்கள் அனைவரும் இருக்கிறார்கள், ஆனால் அனைவருமே இந்தத் தேசத்தின் ஏழையைக் கண்டறியாதவர்கள்.
எல்லோரும் பட்டணத்தையும் பட்டணத்தின் பகட்டான வாழ்க்கையையும் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். முதுகோடு முதுகாக ஒட்டிக்கிடக்கும் விவசாயியின் வயிற்றையோ மற்ற ஏழைக் கிராம மக்களின் நிலைமையையோ அவர்கள் கண்டறிந்ததில்லை என்றே கூறவேண்டும். அதைத்தான் திட்டமும் பிரதிபலிக்கிறது.}}
பதவிபெறும் நோக்குடன் காங்கிரசைக் குறைகூறித் திரிகிறார் என்று வினோபாவேயைக் கூறிடும் துணிவு வராது என்று நம்புகிறேன். இதுவரையில் அத்தகைய துணிவு வரவில்லை.
அவருடைய கண்டனம், மனம் வெதும்பி வெளிவந்திருக்கிறது, இந்த இலட்சணத்தில் திட்டத்தைத் தீட்டியும் நடத்தியும் வந்திருக்கும் காங்கிரசு, மீண்டும் ஆதரவு கேட்கிறதே, என்ன நியாயம்?<noinclude>
<references/></noinclude>
1rssl3ms70jqsrl6s77wjch7i0oy6dv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88
250
639339
1926707
1924718
2026-04-24T15:00:08Z
Saranya V R
14232
1926707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />
{{Rh|64||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நியாயமற்றதுதான், ஆனால் நிதி இருக்கிறதே நிரம்ப! பணம் இருக்கிறதே, கோடிகோடியாக!! பணம் பாதாளம் வரை பாயுமே!—என்கிறார்கள்.
தம்பி! நாடு என்ன பதில் அளிக்கவேண்டும்? என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பது, உன் உழைப்பைப் பொறுத்து இருக்கிறது
இடையே உள்ள நாட்கள் அதிகமில்லை; அவை வேகமாகவும் உருண்டோடிக் கொண்டுள்ளன. எனவே உன் நேரம் முழுவதும், நினைப்பு முழுவதும், அறிவாற்றல் அவ்வளவும், இந்த ஒரே காரியத்துக்கு என்ற உறுதியுடன் இன்றே பணியாற்றக் கிளம்பிடுவாயேல், தம்பி! வெற்றி நிச்சயம். நாடு வாழ்ந்திடும்; வாழ்த்திடும்! உன்னால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றுத்தந்திட முடியும்: ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; மற்ற எதற்கும் இரண்டாவது இடமே—முதல் இடம், ஜனநாயகப் பாதுகாப்புக்கே—கழக வெற்றிக்காகப் பணியாற்றுவதற்கே—என்ற உறுதியுடன் தொண்டாற்றவேண்டும். முடியுமா? செய்வாயா?
கேள்வி கேட்கிறேன் பார், கேள்வி–செய்வாயா? என்று இப்போதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய்!! அந்த மகிழ்ச்சி தந்திடும் வலிவுதானே என்னையும் வேலை செய்திடச் செய்கிறது.
{{rh|<br>31.7.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}<noinclude>
<references/></noinclude>
pvhn24lo8xjch6ptmr49605nwqfrcpc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91
250
639342
1926709
1923978
2026-04-24T15:01:51Z
Saranya V R
14232
1926709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இந்தியாவில் பேசப்பட்டுவரும் சோஷியலிசம் பற்றிப் பயம் கொள்ளாதீர்கள் என்று.}}
மேடையிலே ‘சோஷியலிசம்’ பேசிவிட்டு, சீமான்களின் மாளிகைகளில் விருந்து சாப்பிடும்போது, காங்கிரஸ் தலைவர்கள், விளக்கம் தருகிறார்கள்; விவரமறிந்த சீமான்கள்,
:‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’
என்று குதூகலத்துடன் கூறிவிட்டு
பாவம், ஏழைகளும் வாழத்தானே வேண்டும்.
என்று உருகுகிறார்கள்.
ஐயோ! பாவம்! ஏழை! அவனும் மனிதன்!— என்ற இரக்கப் பேச்சு இன்று நேற்று தோன்றியது அல்ல; பஞ்சையும் பராரியும் தோன்றிய போதே தோன்றியது. அது பேச்சாக, பாட்டாக, நாடகமாக, காவியமாக, பேருரையாக, உபதேசமாக, வெளிவந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அந்தப் பேச்சு நீக்கிவிடவில்லை.
:உழைப்பே, செல்வத்தை உற்பத்தி செய்கிறது.
உழைப்போரின் தொகை அதிகம்.
உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செல்வம், உழைப்போர் அனைவருக்கும் ஒரு சீராகக் கிடைக்குமானால், சமூகம் முழுவதும், பலன் பெறும்; ஒருபுறம் சோலை, சுற்றிலும் பாலை என்ற நிலை ஏற்படாது.
ஒரு சீராகக் கிடைக்குமானால்!—என்று கூறிவிட்டோமே தம்பி! எளிதாக! இது தன்னாலே நடைபெற்றுவிடுமா, பாவ புண்ணியம் பற்றிய உணர்ச்சி மூலமாக ஏற்பட்டுவிடுமா? ஏற்பட்டு விடுவதில்லை!
வருவாய் அல்லது செல்வ உற்பத்தி சமூகத்தில் ஒரு சீராகப் போய்ச் சேராததால்தான், இத்தனைக் கேடுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.
இந்தக் கேடுபாடுகளை நீக்க வேண்டுமானால், உற்பத்தி ஆகிற செல்வம் ஒரு சீராக, சமூகம் முழுவதற்கும் பரவிடும் முறையைச் செயல்படுத்த வேண்டும். அதனை ஒரு அரசுதான் துணிந்து மேற்கொள்ள முடியும். அந்தத் துணிவு ஒரு அரசுக்கு ஏற்பட வேண்டுமானால் அது, செல்வத்தைத் தமதாக்கிக் கொள்ள முனைந்திடும் செல்வவான்களின் செல்லப் பிள்ளையாகிவிடக் கூடாது.
{{left_margin|3em|சில திங்களுக்கு முன்பு இந்தியப் பூபாகத்திலே மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ள பிர்லா முதலாளிகளைக் கூட்டிவைத்து,}}<noinclude>
<references/></noinclude>
hgxierqvw8qy5zf6jyah819cs44j4vo
1926715
1926709
2026-04-24T15:06:31Z
Saranya V R
14232
1926715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இந்தியாவில் பேசப்பட்டுவரும் சோஷியலிசம் பற்றிப் பயம் கொள்ளாதீர்கள் என்று.}}
மேடையிலே ‘சோஷியலிசம்’ பேசிவிட்டு, சீமான்களின் மாளிகைகளில் விருந்து சாப்பிடும்போது, காங்கிரஸ் தலைவர்கள், விளக்கம் தருகிறார்கள்; விவரமறிந்த சீமான்கள்,
‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’
என்று குதூகலத்துடன் கூறிவிட்டு
பாவம், ஏழைகளும் வாழத்தானே வேண்டும்.
என்று உருகுகிறார்கள்.
ஐயோ! பாவம்! ஏழை! அவனும் மனிதன்!— என்ற இரக்கப் பேச்சு இன்று நேற்று தோன்றியது அல்ல; பஞ்சையும் பராரியும் தோன்றிய போதே தோன்றியது. அது பேச்சாக, பாட்டாக, நாடகமாக, காவியமாக, பேருரையாக, உபதேசமாக, வெளிவந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அந்தப் பேச்சு நீக்கிவிடவில்லை.
:உழைப்பே, செல்வத்தை உற்பத்தி செய்கிறது.
உழைப்போரின் தொகை அதிகம்.
உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செல்வம், உழைப்போர் அனைவருக்கும் ஒரு சீராகக் கிடைக்குமானால், சமூகம் முழுவதும், பலன் பெறும்; ஒருபுறம் சோலை, சுற்றிலும் பாலை என்ற நிலை ஏற்படாது.
ஒரு சீராகக் கிடைக்குமானால்!—என்று கூறிவிட்டோமே தம்பி! எளிதாக! இது தன்னாலே நடைபெற்றுவிடுமா, பாவ புண்ணியம் பற்றிய உணர்ச்சி மூலமாக ஏற்பட்டுவிடுமா? ஏற்பட்டு விடுவதில்லை!
வருவாய் அல்லது செல்வ உற்பத்தி சமூகத்தில் ஒரு சீராகப் போய்ச் சேராததால்தான், இத்தனைக் கேடுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.
இந்தக் கேடுபாடுகளை நீக்க வேண்டுமானால், உற்பத்தி ஆகிற செல்வம் ஒரு சீராக, சமூகம் முழுவதற்கும் பரவிடும் முறையைச் செயல்படுத்த வேண்டும். அதனை ஒரு அரசுதான் துணிந்து மேற்கொள்ள முடியும். அந்தத் துணிவு ஒரு அரசுக்கு ஏற்பட வேண்டுமானால் அது, செல்வத்தைத் தமதாக்கிக் கொள்ள முனைந்திடும் செல்வவான்களின் செல்லப் பிள்ளையாகிவிடக் கூடாது.
{{left_margin|3em|சில திங்களுக்கு முன்பு இந்தியப் பூபாகத்திலே மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ள பிர்லா முதலாளிகளைக் கூட்டிவைத்து,}}<noinclude>
<references/></noinclude>
rcrb7kc3rhocqpf4cn86krm1qfi3ntc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92
250
639343
1926712
1923979
2026-04-24T15:04:11Z
Saranya V R
14232
1926712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|68||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|நாம் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமைவதற்காகப் பாடுபட வேண்டும்; ஏனெனில் நம்மைப் பாதுகாக்கக்கூடியது காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் என்று பேசினார்.}}
கட்டுப்பாடுகள் சில விதிக்கும்போது கடுங்கோபம் கொள்கிறார்கள்; வரி கூடுதலாக்கும் போது வெகுண்டெழுகிறார்கள்; ஆனாலும் அதே முதலாளிகள் ஆர அமர யோசித்துப் பார்க்கும்போது, உண்மையான ‘சோஷியலிசத்தை’ வர விடாமல் தடுத்து நிறுத்தவும், அதேபோது சோஷியலிசம் பேசி ஏழைகளை மயக்கத்திலாழ்த்தி வைக்கவும் காங்கிரசை விடத் திறமையான கட்சி எதுவுமில்லை என்பதை உணருகிறார்கள்; காங்கிரசுக்கு ஆதரவு திரட்டித் தருகிறார்கள்.
{{left_margin|3em|வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட கணக்கின்படி, சென்ற பொதுத் தேர்தலிலே காங்கிரசுக்கு முதலாளிகள் கொடுத்த நன்கொடைத் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயல்லவா?
இந்த ஒரு கோடி, எதற்கு? எவ்வளவு வேண்டுமானாலும் சோஷியலிசம் பேசுங்கள்; ஆனால் நடைமுறைக்குக் கொண்டு வராதீர்கள் என்று கேட்டுக் கொள்வதற்குத்தானே!}}
தம்பி! சோஷியலிசம் பேசிவிடுபவர்களெல்லாம் ஏழையை வாழவைத்து விடுவார்கள் என்று கூறிவிடுவதற்கில்லை. இட்லர் பேசாத சோஷியலிசமா!
நாஜிசம் என்று கூறப்படுகிறதே, இட்லர் புகுத்திய முறை நினைவிலிருக்கிறதல்லவா, அதுகூட சோஷியலிசம் என்ற பெயருடன் இணைந்ததுதான்.
இதோ இவர்கள் தமது சோஷியலிசத்துக்கு ஒரு அடைமொழி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா, ஜனநாயக சோஷியலிசம், என்று; அதுபோல, இட்லர் தம்முடைய சோஷியலிசத்துக்கும் ஒரு அடைமொழி சேர்த்துக் கொண்டார், தேசீய சமதர்மம்–என்பதாக.
அந்த ‘National Socialism’ என்பதுதான் சுருங்கி மருவி, நாஜிசம் என்ற பெயராயிற்று.
என்ன கண்டனர் ஜெர்மன் மக்கள்? பயங்கரமான போர்!
என்ன தந்தது இந்த நாஜிசம், உலகுக்கு? அமளி அழிவு!
இவர்கள் ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறார்கள்:
{{left_margin|3em|எங்கள் சோஷியலிசத்தில் முதலாளியும் இருப்பான்; ஆனால் அவன் வெறும் சுரண்டல்காரனாக இருக்கமாட்டான்; இலாபவேட்டைக்காரனாக இருக்கமாட்டான்; ஏழையை வாழவைக்கும் கருணாமூர்த்தியாக இருப்பான்; அவனை அப்படி மாற்றுவோம் என்று.}}<noinclude>
<references/></noinclude>
6uruz5cgxn0qsz87bi8uw68oa94raad
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93
250
639344
1926714
1923980
2026-04-24T15:06:04Z
Saranya V R
14232
1926714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அதுபோலவே, இட்லர் சொன்னான் என்னுடைய நேஷனல் சோஷியலிசத்தில் (தேசீய சமதர்மத்தில்), முதலாளி இருப்பான், ஆனால் அவன் தேசீய முதலாளியாக, நாட்டு நலனைக் காத்திடும் முதலாளியாக, அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, நாட்டு வளத்தைப் பெருக்கிடும் முதலாளியாக இருப்பான் என்று பேசினான்! உரத்த குரலில்! கேட்போர் மயங்கும் வண்ணம்! இதோ ஓர் புது தத்துவம் என்று பலரும் பாராட்டத்தக்கவிதமாக.}}
தம்பி! பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், —இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கம் தயாரித்து அளித்தனர், வெறும் சோஷியலிசத்தைவிட, இட்லர் தந்திடும் நேஷனல் சோஷியலிசம் சிலாக்கியமானது, நாட்டுக்கு ஏற்றது, என்றெல்லாம்.
{{left_margin|3em|இட்லருடைய நாஜிசத்தில், அதாவது நேஷனல் சோஷியலிசத்தில், ‘க்ருப் தைசன்’ போன்ற பெரும் முதலாளிகள் கோட்டை கட்டி வாழ்ந்தனர்; தம்மை தேசீய முதலாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, தமது கோட்டைகளிலே சுவஸ்திக் கொடியை (இட்லரின் கொடியை)ப் பறக்க விட்டனர்.
அந்த நாஜிசம் ஜெர்மன் நாட்டு ஏழைகளைக் காப்பாற்றிற்றா? பயங்கரமான அழிவைத் தந்தது; நாடே அடிமைக் காடு ஆக்கப்பட்டது.}}
இவர்கள் கூடத் தம்பி! வெறும் சோஷியலிசம் என்பதை விட, நேஷனல் சோஷியலிசம் என்று கூறுவது வசீகரமாக இருக்கும் என்ற கருத்துடையவர்கள் தாம். ஆனால், நேஷனல் சோஷியலிசம் எனும் நாஜிசம் உலகிலே—ஒரு கெட்ட பெயர் எடுத்துவிட்டதால், மக்கள் வெறுப்பதால், நேஷனல் சோஷியலிசம் என்று கூறக் கூடாது என்று தீர்மானித்து ஜனநாயக சோஷியலிசம் என்று பேசிவருகிறார்கள்.
{{left_margin|3em|இட்லர் முதலாளிகளை கொலுவிருக்கச்செய்தான், அவர்கள் தனக்குக் கொடிபிடிப்போர்களாக இருந்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன். இவர்களும் எத்தனை பிர்லாக்களும் இருக்கலாம், தொழில் நடத்தலாம், செல்வபுரி அமைக்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை, எமது ‘போஷகர்களாக’ இருக்கவேண்டும் என்று கூறிவிட்டனர்.
இங்கும் தைசன்கள் வளருகிறார்கள்.
அன்று தைசனை வளரவிட்டபடி நேஷனல் சோஷியலிசம் பேசினான் இட்லர்.
இன்று பிர்லாக்களைக் கொழுக்க வைத்துக் கொண்டே காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் பேசிவருகிறது.}}<noinclude>
<references/></noinclude>
mitx2alt2uydq52pha95dfzsrm9j3kp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94
250
639345
1926718
1923981
2026-04-24T15:07:53Z
Saranya V R
14232
1926718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|70||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
முதலாளி, போகபோக்கியத்தில் புரளுவதற்காகத் தன் செல்வத்தைப் பயன்படுத்தினால், அது கெடுதல், ஆனால் அவன் தன்செல்வத்தை நாட்டு வளத்தை அதிகமாக்க, எழில் கூட்ட, ஏற்றம் உண்டாக்க, பிற நாட்டார் கண்டு அஞ்சத்தக்கவலிவு நமது நாட்டுக்கு ஏற்படப் பயன்படுத்தினால், நல்லது தானே என்று கேட்டான் இட்லர். அவனிடம் சொக்கிப்போன மக்கள் ஆம்! ஆம்! என்றனர்.
அதுதான், என் அருமை மக்களே! நாஜிசம்!!—என்றான் இட்லர்; வாழ்க நாஜிசம் என்று ஜெர்மன் மக்கள் முழக்கமிட்டனர்!
இங்கே அதேபாணியில் பேச்சு!!
தொழில் பெருக வேண்டுமல்லவா?— ஆமாம்!
தொழில் பெருகவேண்டுமானால் புதியபுதிய தொழில் நடத்தும் முதலாளிகள் வேண்டுமல்லவா, அதனால் நமது சோஷியலிசத்தில் முதலாளிகள் இருக்கிறார்கள்; தவறா? —என்று கேட்கின்றனர், ஆளவந்தார்கள்.
“ஆம்” என்பவன் அணைத்துக்கொள்ளப்படுகிறான், அது சரியில்லையே! என்பவன் அடித்து நொறுக்கப்படுகிறான்.
{{left_margin|3em|இட்லரின் நேஷனல் சோஷியலிசத்தில் சுவஸ்திக் திரைக்குப் பின்னாலே இருந்துகொண்டு முதலாளிகள் கொட்டமடித்தார்கள். காங்கிரசாட்சியில், மூவர்ணக் கொடி மறைவிலே இருந்துகொண்டு, முதலாளிகள் பெருத்துக்கொண்டு வருகிறார்கள்; காங்கிரஸ் கட்சியையே குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டும் வருகிறார்கள்.}}
அரண்மனை போன்ற மாளிகைகள், அன்னங்கள் ஊர்ந்து செல்லும் அழகிய செயற்கைக் குளங்கள், அவைகளிலே துள்ளிடும் பல வண்ணமீன்கள், அவற்றினைக்கண்டு கலகலவெனச் சிரிப்பொலி எழுப்பும் சிங்காரிகள், அந்தச் சிங்காரிகளின் இதழ்கண்டு ஏங்கிடும் சீமான்கள், இந்தக் காட்சியை ஓவியமாக்கியவர்கள், கவிதை இயற்றியவர்கள், இவை எல்லாமே இருந்தன, பிரான்சு நாட்டில். இவற்றை அந்த நாட்டு ஆட்சியாளர்கள், சீமான்கள் போகபோக்கியத்தில் புரளும் நிலை என்று கருதவில்லை; மாறாக அவர்கள் இந்த நிலையினை,
{{left_margin|3em|பிரன்ச்சு நாட்டு எழில், ஏற்றம்!
பிரன்ச்சு நாட்டுச் சிற்பக் கலையின் சிறப்பு!
பிரன்ச்சு நாட்டு ஓவியத்திறமை!
பிரன்ச்சு நாட்டுக் காவியப்புலமை!
பிரன்ச்சு நாட்டில் காதல், ஒரு கலையாகி இருக்கும் நேர்த்தி என்றுதான் பெருமிதம் கொண்டனர்.}}<noinclude>
<references/></noinclude>
6wvk7wrcyfvurhv024ynbvbq0k9l8o4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/95
250
639346
1926722
1923982
2026-04-24T15:09:13Z
Saranya V R
14232
1926722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||71}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|பிரன்ச்சு நாட்டு மக்கள்கூட, நெடுங்காலம் நம்பினர்! உண்மை பிறகுதான் வெடித்துக் கிளம்பிற்று!!}}
அதுபோன்றே, இங்கு முதலாளிகள் அமைத்துள்ள பணக்கோட்டையை பாரதநாட்டுச் சிறப்பு என்று காங்கிரசார் பேசுகின்றனர்; நம்பச் சொல்லுகின்றனர்.
ஒரு அமைச்சர் தம்பி! துணிந்து, வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார். முதலாளிகள் பணத்தைக் குவித்துக் கொள்கிறார்கள் என்று கொதிப்படைகின்றீர்களே, எங்கே போய்விடும் அவர்களிடம் குவிந்துள்ள பணம்? இந்த நாட்டில்தானே இருக்கிறது! வெளிநாடுகளுக்கா போய்ச் சேர்ந்துவிட்டது அந்தப் பணம்? இங்கேயே, நம் நாட்டிலேயே-
தான் இருக்கிறது! இந்தநாடு, அவர்களுக்குமட்டுமா சொந்தம்? இல்லையே! இது உனக்கும் சொந்தமான நாடுதானே? அப்படியானால், அந்தப்பணம், உன்னுடைய நாட்டில் தானே இருக்கிறது!! இதை அறியாமல் முதலாளிகளிடம் போய்க் குவிகிறதே பணம் என்று கொதித்துப் பேசுகிறாயே தவறல்லவா! விவரம் தெரியாததால் வேதனைப்படுகிறாய்! தெரிந்துகொள், அவ்வளவு பணமும் இங்கேயேதான் இருக்கிறது நம்நாட்டிலேதான் இருக்கிறது. கவலைபடாதே, நாம் விரும்பும்போது அந்தப் பணத்தை வரிபோட்டு எடுத்துக்கொள்ளலாம். பணம் எங்கும் போய்விடவில்லை, இங்கேதான் இருக்கிறது—என்று பேசினார்—துணிந்து!!
{{left_margin|3em|தம்பி! கொள்ளைக்காரன், கன்னக்கோலன், காது அறுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் போன்றார் திருடுகிறார்களே, அந்தச் செல்வமெல்லாம் கூட இங்கேதான் இருக்கிறது, நம்முடைய நாட்டிலேயேதான்! அவர்கள், களவாடியதை கனடா நாட்டுக்கோ, காங்கோ நாட்டுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, கொண்டோடி விடவில்லை ; இங்கேயேதான் இருக்கிறது; இந்த நாட்டிலேயேதான் புண்ய பூமியாம் பாரத நாட்டிலேயே இருக்கிறது. ஆகவே பொருள் களவு போய் விட்டதே என்று கூச்சல் எழுப்பாதே; உன் பொருள் வேறு எந்த நாட்டுக்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே, உன் சொந்த நாட்டிலேயே இருக்கிறது என்று எவனும் கதைக்காகக் கூடத் துணிய மாட்டான். ஆனால், நாடாள வந்துள்ள நல்லவர்கள், துணிந்து பேசுகிறார்கள். ஏழையின் வயிற்றில் அடித்து முதலாளிகள் குவிக்கும் பணம் வேறு எங்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே இருக்கிறது என்று!
கேட்டுக் கொள்கிறார்கள், கேட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.}}
முதலாளித்தனத்தை நீக்க மனமற்றவர்கள், துணிவற்றவர்கள் ஏன் ‘சோஷியலிசம்’ என்று பேசுகிறார்கள்? காரணமற்று அல்ல!<noinclude>
<references/></noinclude>
qowtp493q4c3st54jpf3k4ncttcmfwy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/99
250
639351
1926724
1924719
2026-04-24T15:10:44Z
Saranya V R
14232
1926724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude>
இவன் கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத பேர்வழி. அவன் வீட்டுக் கோழி, கூரையிலே ஏறிக்கொண்டது; கூரை ஏறிக் கோழியைப் பிடிக்க முடியாமல், கல்லை எடுத்து அதன்மீது வீச, குறி தவறி, வழியே வந்து கொண்டிருந்த மணியக்காரர் பிள்ளை தலை மீது விழ, மணியக்காரரின் ஆட்கள் இவனை நையப்புடைத்தார்கள். மண்டையில் பலத்த அடி; மூளை குழம்பிவிட்டது; அது முதற்கொண்டு இவன் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து, வைகுந்தத்துக்கு வழி காட்டுகிறேன் என்று குளறிக் கொண்டிருக் கிறான். “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத இவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழி காட்டப் போகிறான்!” என்று விளக்கமளித்தானாம்.
அதுபோல, ஓரளவு கூட சோஷியலிசத்தைப் புகுத்த முடியாதவர்கள் என்று காங்கிரசைக் கண்டித்துக்கொண்டு, ஆனாலும் காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் தந்திடும் என்றும் அந்த முன்னணியினர் பேசுகின்றனர், விந்தை அல்லவா?
விந்தை மட்டுமல்ல; இது விபரீதமான யோசனை என்பதை உணர்ந்து கொண்டு வருகிறது நாடு.
நாடு பெற்றுள்ள அந்த உணர்வினைத் தந்திட, தம்பி! நீ மிகுந்த பாடுபட்டிருக்கிறாய்.
நீ, பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனைப் பெறுவதற்கான நாளும் நெருங்கிக் கொண்டு வருகிறது. உன் நடையிலேயும் புது வேகம் காண்கிறேன்; மகிழ்கிறேன்.
{{rh|<br>7.8.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
<section end="10"/><noinclude>
<references/></noinclude>
7tm63gy3gm7qr1xziujw2budh4wuajq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291
250
639691
1926988
1922365
2026-04-25T09:43:27Z
Femeena Sufrin S
16628
/* மேம்படுத்த வேண்டியவை */
1926988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||267}}{{rule}}</noinclude>இதனை அவர்கள் மிக வலிவுள்ள திட்டமென்றும் நம்புகின்றனர்.
தி.மு.கழகம் மிகமிகச் சாமான்யர்களாலே நடத்தப்பட்டு வருவது அதன்
வளர்ச்சிகண்டு அருவருப்புகொண்டோர் உளர், அவர்களைத் தட்டிவிட்டுப்
போட்டியை மூட்டி விடலாம் என்று கருதுகின்றனர்.
தம்பி! முதன் முதல் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்றபோது,
காங்கிரசைக் காலமெல்லாம் எதிர்த்து வந்தவர் ஒருவர்-ஆனால் நமது
கழகம் அல்ல-என்னைத் தருவித்து, தமது வாழ்த்தையும் பாராட்டுதலையும்
தெரிவித்ததுடன், இந்த விதமான வெற்றியும் வளர்ச்சியும் கழகத்துக்குக்
கிடைத்திடும், அதிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் என்று நான்
எண்ணிடவே இயலவில்லை, எப்படியோ நல்ல இடம் கிடைத்து
விட்டது; இனி அதனைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.
மகிழ்ச்சி அடைந்தேன். 'இதுவரையில் கழகத்துக்கு ஆதரவு காட்டாதிருந்து
வந்தவர்களெல்லாம்கூட, இது வளருகிற கட்சிதான் என்பது இப்போது
மெய்ப்பிக்கப்பட்டு விட்டதால், இனி ஆதரவு அளித்திட முன்
வருவார்கள் என்று பேசி என் ஆவலைக் கிளறினார்.
அந்த ஆவலுடன் எனக்கோர் ஐயப்பாடு கிளம்பிற்று. ஆதரவு
கிடைத்திடும் என்கிறாரே, எந்த இடத்து ஆதரவோ என்பது பற்றிய
ஐயப்பாடுதான் அவரே அதனைப் போக்கிவிட்டார்; "நான் சில
கம்பெனிகளுக்குச் செல்ல முடியும், ஆதரவு காட்டச் சொல்லி; அவர்
களுக்கெல்லாம் சில இலட்சங்களை நன்கொடையாகக் கொடுப்பது
என்பது மிக எளிதான காரியம்” என்றார்.
கிணறு வெட்டுகிறார், கிளம்புவது கிளம்பட்டும் என்று எண்ணிக்
கொண்டு நான் ஏதும் பேசாதிருந்தேன்; அவர் தமது பேச்சைத் தொடர்ந்தார்.
"ஒரு காரியம் செய்யவேண்டும் நீங்கள்; தொழில்களை - பஸ்கள்
போன்ற தொழில்களை - தேசிய மயமாக்க வேண்டும் என்ற பேச்சை
விட்டுவிட வேண்டும்; அது சரியான திட்டமல்ல; அதனை மட்டும்
கழகம் மறுத்து விடுமானால், தொழிற் கோட்டங்கள் உமது கழகத்துக்கு
நன்கொடை தந்திடத் தாராளமாக முன்வரத் தயக்கம் கொண்டிடா"
என்றார்.
புரிகிறதல்லவா, தம்பி! நமது கொள்கையை விலை பேசுகிறார்!
என்னிடம்! எந்தக் கொள்கையைக் கூறி மக்களின் பேராதரவைப்
பெற்றோமோ. அதே கொள்கையை, கம்பெனிகளிடம் நன்கொடை
வாங்கிட, 'விட்டுவிட'ச் சொல்லுகிறார்!!
நமது வளர்ச்சியும் வெற்றியும் அவருடைய மனத்திலே அந்த
அளவுக்குத்தான் மதிப்பைக் கொடுத்தது.<noinclude></noinclude>
i5o5iy4qfm1lvozv5o7ckctz430rql6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292
250
639692
1926990
1922366
2026-04-25T09:45:48Z
Femeena Sufrin S
16628
/* மேம்படுத்த வேண்டியவை */
1926990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|268||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>நான் கோபம் கொள்ளவில்லை, வீண்வேலை அல்லவா! அவர்.
அவருடைய 'அரசியலை'ப் பேசினார். எங்கள் அரசியல் வேறு என்று
கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கழகம் வளர வளர இது போல வளைந்து கொடுக்கும் என்ற
நினைப்பு நிரம்ப இருந்து வந்தது. இப்போது வெகுவாகக் குறைந்து
விட்டது. என்றாலும், கழகத்தில் சிலரிடமாவது இந்த வலையை
வீசிடலாம். ஏதாவது பிடிபடக் கூடும் என்ற நப்பாசை கொண்டோர்
சிலர் உளர்.
அது ஒரு காரணம், கழக ஆதரவாளர்களை வீழச் செய்து
விடலாம் என்று எண்ணித் திட்டமிடுவதற்கு.
ஆனால் இவைகளையெல்லாம்விட தம்பி! அவர்கள் மிகப் பலமாக
நம்பிக் கொண்டிருப்பது. உணர்ச்சி ஒரு செல்வம், அதனை அடக்கி
ஆண்டால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதனை அறியாது. ஓடி
ஆடி உணர்ச்சியைப்பாழாக்கிக் கொள்ளுவோம் என்பதிலேதான். அதனை
உணர்ந்துதான் தம்பி! தெளிந்த சிந்தனையாளர் திரு.வி.க.வின்
மணிமொழியைத் துவக்கத்திலே தந்துள்ளேன்; உணர்ச்சியைப் பதப்படுத்தி
பயன் பெற்றிட முனையவேண்டும்.
மின்னல் கண்ணைப் பறித்திடும், இருளைப் போக்கிடாது.
அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட.
உணர்ச்சியைச் சிதறடித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் தம்பி!
அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது, நமதுபணி நின்று நிதானமாக.
தட்டாமல் தயங்காமல், தொடர்ந்து இருக்க முடியாது என்பதிலே.
இவர்களோ ஏழைகள், இல்லாமை கொட்டிக் கொண்டிருக்கும்;
இந்நிலையில் இவர்கள் ஆர்வம் மிக்கவராயினும், தொடர்ந்து எங்கிருந்து
தொண்டாற்றப் போகிறார்கள்; இடையிலே சோர்ந்து போவர். தளர்ந்து
போய்விடுவர்-என்று நம்புகின்றனர்.
கூட்டம் கூட்டுவர் கோலாகலமாக
கொடிகளை நாட்டுவர் கொண்டாட்டமாக.
முழக்கம் எழுப்புவர் இடிபோன்றதாக.
ஆனால், பரபரப்பான வேலையிலே தம்மை ஈடுபடுத்திக்
கொள்வதன் காரணமாகவே, அலுத்துப் போய்விடுவர்; தொடர்ந்து
பணியாற்றும் இயல்பு எழாது; வலிவு இராது; பழக்கம் இல்லை;
பயிற்சி இல்லை என்று பேசிக்கொள்கின்றனர்.<noinclude></noinclude>
cnishcat1q2xzhpe0xjgfwt8dex1sne
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293
250
639693
1926991
1922367
2026-04-25T09:49:05Z
Femeena Sufrin S
16628
/* மேம்படுத்த வேண்டியவை */
1926991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||269}}{{rule}}</noinclude>ஒருவிதத்திலே இதிலே பெருமளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது
என்பதனை நான் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலேயே
பார்த்திருக்கிறேன்; அதற்காக வருத்தப்பட்டும் இருக்கிறேன்.
தொகுதியின் அமைப்பு. வாக்காளர் நிலை, அவர்களின்
தொடர்புகள். உள்ள வாக்காளர்களில் எத்தனை சதவிகிதத்தவர்
வாக்கு அளித்திடுவர் ஏன் மற்றவர் வந்திடுவதில்லை என்பன
போன்ற தகவல்களைத் திரட்டி அவற்றிற்கு ஏற்ப வேலையை
அமைத்துச் செல்வது என்பதிலே, நமது கழகத் தோழர்களுக்கு
இருப்பதைக் காட்டிலும் அதிக அளவிலும் நேர்த்தியான
முறையிலும் பயிற்சி, காங்கிரசில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலை இப்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது
என்பது மகிழ்ச்சி தருகிறது. என்றாலும் இந்தத் துறையிலே நமது கழகத்
தோழர்களின் பயிற்சி மேலும் செம்மைப்பட்டாக வேண்டும்.
பொதுத் தேர்தலிலே நாம் நமது கடமையாகக் கருதி ஒட்டுச்
சாவடி சென்றாகவேண்டும் என்ற உணர்வு கொண்டவர் தொகை
வளர்ந்து வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் கடமை என்று
கொள்ளாதாரின் தொகை பெரும் அளவு இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தந்திரம் அறிந்தவர்கள்,
மேற்கொள்ளும் சூழ்ச்சி காரணமாக,
ஓட்டுச் சாவடிக்கு வராதவர்களின் ஓட்டுகளெல்லாம்
காங்கிரசு கட்சிக்குக் கிடைத்திடும் விந்தை நடைபெற்றுவிடுகிறது.
ஆகவே, நமது கழகத் தோழர்களிடம் எழுச்சி இருந்தால் மட்டும் போதாது,
தொடர்ந்து செயலாற்றும் இயல்பு வளர வேண்டும்; அவற்றுடன்
விழிப்புணர்ச்சி வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டிடும்
குறுக்குவழிச் செயல்களைக் கண்டறிந்து தடுத்திட!
தம்பி! அவரவரும் தத்தமது தொகுதியைப் பொறுத்த மட்டில்,
இப்போதிருந்தே, இந்தத் துறை பற்றி அக்கறை செலுத்தியாக வேண்டும்.
முறைகளைச் செம்மைப்படுத்தியாக வேண்டும். நாம் வளர்ந்திருக்கிறோம்:
அதனை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; நம்மை ஒழித்தாலன்றி தமது
ஒய்யார வாழ்வுக்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள்
உணர்ந்து கொண்டுவிட்டுள்ளனர்; ஆகவே இந்த முறை அவர்களின்
தாக்குதலிலே கடுமை மிகுதியாக இருக்கும்; முறைகளிலே சூழ்ச்சி
அதிக அளவில் இருக்கும்.
காங்கிரசுக் கட்சி இலட்சியத்தை இழந்துவிட்டது; கொள்கை
வலிவு அதனிடம் இல்லை; ஆகவே காங்கிரசுக்கு மக்களைத் தன்பால்<noinclude></noinclude>
0e78bbh80me8pu42n9dd7s3t80krf7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294
250
639694
1926993
1922368
2026-04-25T09:52:42Z
Femeena Sufrin S
16628
/* மேம்படுத்த வேண்டியவை */
1926993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|270||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஈர்த்திடும் சக்தி கிடையாது என்கிறோம். இது உண்மையுங்கூட.
கொள்கை வலிவு இழந்து விட்டது. காங்கிரஸ் கட்சி என்பது வரையில்.
ஆனால் கொள்கையாளர்கள் இருந்த நாட்களை விட ஓட்டு
வேட்டையில் வல்லவர்கள் சேர்ந்திருக்கும் இந்த நாட்களில்
காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மீது வலைவீசும் சக்தி வளர்ந்திருக்கிறது.
தம்பி காங்கிரஸ் தூய்மை மிக்கதாக, நாட்டு மக்கள் அனைவரும் 'பயபக்தி
விசுவாசம்' செலுத்திடத் தக்க நிலையினதாக இருந்தபோது, தேர்தலில்
வெற்றிபெற அந்தக் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும் தூய்மை
இழந்த இன்றைய நிலையில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கும்
வித்தியாசம் இருக்கிறது.
தூய்மை மிக்க தேசிய ஸ்தாபனமாகக் காங்கிரஸ் விளங்கிய
போது, காங்கிரசின் பெயரால் யாரை நிற்க வைத்தாலும்
ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றனர்.
மக்கள் அது போன்றே, தேர்தலில் யார் நிற்கிறார் என்பதைப் பற்றிக்
கவலைப்படாமல் மகாத்மா கட்சிக்கு ஓட்டுப் போட முனைந்தனர்.
யாரை நிற்கவைத்தாலும் என்று நான் மரியாதைக்காகச்
சொன்னது, காங்கிரசின் பேரால் எதை நிற்க வைத்தாலும் என்பதாகும்.
காங்கிரஸ் கட்சியைச் சுற்றி வளர்ந்திருந்த ஒரு எழுச்சி யூட்டும் வரலாறு.
அந்த அளவுக்கு வலிவளித்தது. முதன் முறை. ஆனால் ஒரே ஒரு முறை தான்!
அடுத்த முறையே, காங்கிரஸ், யாரை நிறுத்தி வைத்தாலும் என்ற
பேச்சை விட்டுவிட்டது.
காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பெருமையைப் பற்றிக் கூறியதுடன்,
தேர்தலுக்கு நிற்பவரின் நாட்டுப் பற்று, தொண்டு, தியாகம்.
அறிவாற்றில் ஆகியவை பற்றியே அதிகமாக, விளக்கமாகப்
பேசித்தான் ஓட்டுக் கேட்க முடிந்தது.
அந்த அளவு மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு
விட்டிருக்கிறது; இடையில்.
பிறகோ, காங்கிரசுக் கட்சியின் பேரால் தியாகிகள். அறப்போர் வீரர்கள்,
அஞ்சா நெஞ்சினர். அண்ணல் காந்தியாரின் வழி நின்றிடுவார்
என்போர்களைத் தேர்தலிலே நிற்க வைக்கவில்லை.
அவர்களின் தொகை குறைந்துகொண்டு வந்ததும் அவர்களிலே
பலர், காங்கிரசாட்சியின் போக்கு கண்டு மனம் வெதும்பி.
கட்சியை விட்டு வெளியேறி விட்டதும்.
இதற்கான காரணங்கள் என்று கொள்ளலாம்.
தியாகிகளுக்குப் பதிலாக, கனதனவான்களைத் தேடிப் பிடித்தனர்.<noinclude></noinclude>
8d75r3ctr6ncofz43orha9lzx5k3765
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/18
250
640080
1926764
1923546
2026-04-25T03:52:35Z
Ramya sugumar
15106
1926764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||9}}</noinclude>உறுப்பினர் சேர்த்தல்;
கிளை முதலிய அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல்; கடமையாற்றுதல்;
கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.
இவைகளைச் சுட்டிக்காட்டி 'அமைதியுடன் செயல் படுக!" என நானும், கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும் அடிக்கடி விடுகின்ற அறிக்கைகள் வெளிப்படை யானவைதான்!
முன்பெல்லாம் ஏன், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடக் கூட்டங்களில் நமது நாவலர், நம் கழகத்துக்கு வன் முறையில் நம்பிக்கை கிடையாது என்பதை விளக்கிட தனது பேச்சில் கால்பகுதி நேரத்தைச் செலவிடுவாரே! மறந்தா போய்விட்டது!
காரிருள்!
இரவு 12 மணி!
கடப்பாறை!
கத்தி!
ரகசியக் கூட்டம்!
இவைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முறைகளாக மாட்டா! கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு! என்ற அறிஞர் அண்ணாவின் வழி நடப் பவர்கள்தான் நாம்!
இதனை அவர் நயம்பட, நீட்டிக் குறுக்கி ஏற்றி, இறக்கி எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் கூட, ஒரே வார்த் தையில் பெரியவர் '"ரகசிய வேலை'' என்று குற்றம் சுமத்திட முயலுகிறாரே - பார்த்தனையா!
26-2-1956 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் நமது கழகத்தவர் மீது எப்படிப் வட்ட பழிகள் எல்லாம் சுமத்தப்படுகின்றன என்பதை<noinclude></noinclude>
q9tobbmcx5r95vjqaqrm6ksa91dwsad
1926765
1926764
2026-04-25T03:56:32Z
Ramya sugumar
15106
1926765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||9}}</noinclude>:உறுப்பினர் சேர்த்தல்;
:கிளை முதலிய அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல்; :கடமையாற்றுதல்;
:கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.
இவைகளைச் சுட்டிக்காட்டி “அமைதியுடன் செயல் படுக!” என நானும், கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும் அடிக்கடி விடுகின்ற அறிக்கைகள் வெளிப்படை யானவைதான்!
முன்பெல்லாம் ஏன், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடக் கூட்டங்களில் நமது நாவலர், நம் கழகத்துக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என்பதை விளக்கிட தனது பேச்சில் கால்பகுதி நேரத்தைச் செலவிடுவாரே! மறந்தா போய்விட்டது!
:காரிருள்!
:இரவு 12 மணி!
:கடப்பாறை!
:கத்தி!
:ரகசியக் கூட்டம்!
இவைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முறைகளாக மாட்டா! கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு! என்ற அறிஞர் அண்ணாவின் வழி நடப்பவர்கள்தான் நாம்!
இதனை அவர் நயம்பட, நீட்டிக் குறுக்கி ஏற்றி, இறக்கி எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் கூட, ஒரே வார்த்தையில் பெரியவர் “ரகசிய வேலை” என்று குற்றம் சுமத்திட முயலுகிறாரே — பார்த்தனையா!
26—2—1956 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் நமது கழகத்தவர் மீது எப்படிப்பட்ட பழிகள் எல்லாம் சுமத்தப்படுகின்றன என்பதை<noinclude></noinclude>
1xepa3rj0u5k5jf7s9rgsuvmfg6atbo
1926767
1926765
2026-04-25T03:57:36Z
Ramya sugumar
15106
1926767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||9}}</noinclude>:உறுப்பினர் சேர்த்தல்;
:கிளை முதலிய அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல்;
:கடமையாற்றுதல்;
:கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.
இவைகளைச் சுட்டிக்காட்டி “அமைதியுடன் செயல் படுக!” என நானும், கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும் அடிக்கடி விடுகின்ற அறிக்கைகள் வெளிப்படை யானவைதான்!
முன்பெல்லாம் ஏன், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடக் கூட்டங்களில் நமது நாவலர், நம் கழகத்துக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என்பதை விளக்கிட தனது பேச்சில் கால்பகுதி நேரத்தைச் செலவிடுவாரே! மறந்தா போய்விட்டது!
:காரிருள்!
:இரவு 12 மணி!
:கடப்பாறை!
:கத்தி!
:ரகசியக் கூட்டம்!
இவைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முறைகளாக மாட்டா! கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு! என்ற அறிஞர் அண்ணாவின் வழி நடப்பவர்கள்தான் நாம்!
இதனை அவர் நயம்பட, நீட்டிக் குறுக்கி ஏற்றி, இறக்கி எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் கூட, ஒரே வார்த்தையில் பெரியவர் “ரகசிய வேலை” என்று குற்றம் சுமத்திட முயலுகிறாரே — பார்த்தனையா!
26—2—1956 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் நமது கழகத்தவர் மீது எப்படிப்பட்ட பழிகள் எல்லாம் சுமத்தப்படுகின்றன என்பதை<noinclude></noinclude>
qpbbr3qosavf7knt5apdoxu2hdz6r5g
1926768
1926767
2026-04-25T03:58:25Z
Ramya sugumar
15106
1926768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||9}}</noinclude>::உறுப்பினர் சேர்த்தல்;
::கிளை முதலிய அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல்;
::கடமையாற்றுதல்;
::கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.
இவைகளைச் சுட்டிக்காட்டி “அமைதியுடன் செயல் படுக!” என நானும், கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும் அடிக்கடி விடுகின்ற அறிக்கைகள் வெளிப்படை யானவைதான்!
முன்பெல்லாம் ஏன், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடக் கூட்டங்களில் நமது நாவலர், நம் கழகத்துக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என்பதை விளக்கிட தனது பேச்சில் கால்பகுதி நேரத்தைச் செலவிடுவாரே! மறந்தா போய்விட்டது!
::காரிருள்!
::இரவு 12 மணி!
::கடப்பாறை!
::கத்தி!
::ரகசியக் கூட்டம்!
இவைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முறைகளாக மாட்டா! கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு! என்ற அறிஞர் அண்ணாவின் வழி நடப்பவர்கள்தான் நாம்!
இதனை அவர் நயம்பட, நீட்டிக் குறுக்கி ஏற்றி, இறக்கி எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் கூட, ஒரே வார்த்தையில் பெரியவர் “ரகசிய வேலை” என்று குற்றம் சுமத்திட முயலுகிறாரே — பார்த்தனையா!
26—2—1956 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் நமது கழகத்தவர் மீது எப்படிப்பட்ட பழிகள் எல்லாம் சுமத்தப்படுகின்றன என்பதை<noinclude></noinclude>
lflye8aufubhs8afmsag1ysvc1tcq82
1926963
1926768
2026-04-25T07:30:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||9}}</noinclude>::உறுப்பினர் சேர்த்தல்;
::கிளை முதலிய அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல்;
::கடமையாற்றுதல்;
::கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தல்.
இவைகளைச் சுட்டிக்காட்டி “அமைதியுடன் செயல் படுக!” என நானும், கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களும் அடிக்கடி விடுகின்ற அறிக்கைகள் வெளிப்படையானவைதான்!
முன்பெல்லாம் ஏன், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடக் கூட்டங்களில் நமது நாவலர், நம் கழகத்துக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என்பதை விளக்கிட தனது பேச்சில் கால்பகுதி நேரத்தைச் செலவிடுவாரே! மறந்தா போய்விட்டது!
::காரிருள்!
::இரவு 12 மணி!
::கடப்பாறை!
::கத்தி!
::ரகசியக் கூட்டம்!
இவைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முறைகளாக மாட்டா! கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு! என்ற அறிஞர் அண்ணாவின் வழி நடப்பவர்கள்தான் நாம்!
இதனை அவர் நயம்பட, நீட்டிக் குறுக்கி, ஏற்றி இறக்கி எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் கூட, ஒரே வார்த்தையில் பெரியவர் “ரகசிய வேலை” என்று குற்றம் சுமத்திட முயலுகிறாரே — பார்த்தனையா!
26—2—1956 - ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் நமது கழகத்தவர் மீது எப்படிப்பட்ட பழிகள் எல்லாம் சுமத்தப்படுகின்றன என்பதை<noinclude></noinclude>
er1m4bjc1zk9krm4gomozerppyoszif
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/19
250
640081
1926769
1923547
2026-04-25T04:01:12Z
Ramya sugumar
15106
1926769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|10||கலைஞர்}}</noinclude>எவ்வளவு வேதனையோடு குறிப்பிடுகிறார்; கொஞ்சம் படித்துப்பார்!
::தம்பீ! தோழர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கடலூரில் கைதானார். குற்றம் என்ன தெரியுமா தம்பீ, கொள்ளை அடித்தார் என்பது! நம்ம கோவிந்தசாமியேதான். வாக்குறுதி காப்பாற்றப் படவேண்டும், மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது. பதவி அல்ல முக்கியம், பண்புதான் என்று உணர்ந்து, உழைப்பாளர் கட்சியை உரு வின்றிப் போகச் செய்ததைக் கண்டித்துவிட்டு தி.மு. கழகத்துடன் தோழமை கொண்டு பணி யாற்றி வருகிறாரே புன்னகை மாறாத முகமும். புன்மொழி பேசிடா வாயும், எவரிடமும் இன் மொழியே பேசிப் பழக்கமும் பெற்றுள்ள பண் பாளர் இருக்கிறாரே அவர், 'என்னை மீறி நடக் கிறானே பார்! பார்!! ஒழித்துக் கட்டிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்" என்று மிரட்டியபோதும் மனம் தளராமல் மக்கள் தொண்டனாகி மகத்தான செயலாற்றிக்கொண்டு வரும் அந்த கோவிந்த சாமிதான், தம்பி கொள்ளைக்காரனாக்கப்படுகிறார். வழக்கு இருக்கிறது. அதனால் அதற்குமேல் கூறு வதற்கில்லை"
56 ஆம் ஆண்டு கோவிந்தசாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழி பற்றி அண்ணா பட்ட வேதனைதான் இந்த எழுத்துக்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதுபோலப் பழி சுமத்தும் படலம் தொடருகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகத்தானே, பெரியவர் பக்தவத்சலம் ‘'ரகசிய வேலை” என்று பீடிகை போடுகிறார்!
உடன்பிறப்பே, நாம் அவரைப் போன்ற பெரியவர்களைப் பார்த்து வேண்டுவது இதுதான்! தேவைப்-<noinclude></noinclude>
ar6g6pxzyx07wa04kiikwemkjsjooju
1926771
1926769
2026-04-25T04:10:28Z
Ramya sugumar
15106
1926771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|10||கலைஞர்}}</noinclude>எவ்வளவு வேதனையோடு குறிப்பிடுகிறார்; கொஞ்சம் படித்துப்பார்!
::“தம்பீ! தோழர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கடலூரில் கைதானார். குற்றம் என்ன தெரியுமா தம்பீ, கொள்ளை அடித்தார் என்பது! நம்ம கோவிந்தசாமியேதான். வாக்குறுதி காப்பாற்றப் படவேண்டும், மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது. பதவி அல்ல முக்கியம், பண்புதான் என்று உணர்ந்து, உழைப்பாளர் கட்சியை உருவின்றிப் போகச் செய்ததைக் கண்டித்துவிட்டு தி.மு. கழகத்துடன் தோழமை கொண்டு பணியாற்றி வருகிறாரே புன்னகை மாறாத முகமும். புன்மொழி பேசிடா வாயும், எவரிடமும் இன்மொழியே பேசிப் பழக்கமும் பெற்றுள்ள பண்பாளர் இருக்கிறாரே அவர், “என்னை மீறி நடக்கிறானே பார்! பார்!! ஒழித்துக் கட்டிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்” என்று மிரட்டியபோதும் மனம் தளராமல் மக்கள் தொண்டனாகி மகத்தான செயலாற்றிக்கொண்டு வரும் அந்த கோவிந்த சாமிதான், தம்பி கொள்ளைக்காரனாக்கப்படுகிறார். வழக்கு இருக்கிறது. அதனால் அதற்குமேல் கூறு வதற்கில்லை”
56 ஆம் ஆண்டு கோவிந்தசாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழி பற்றி அண்ணா பட்ட வேதனைதான் இந்த எழுத்துக்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதுபோலப் பழி சுமத்தும் படலம் தொடருகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகத்தானே, பெரியவர் பக்தவத்சலம் “ரகசிய வேலை” என்று பீடிகை போடுகிறார்!
உடன்பிறப்பே, நாம் அவரைப் போன்ற பெரியவர்களைப் பார்த்து வேண்டுவது இதுதான்! தேவைப்-<noinclude></noinclude>
hh5sbw2j7ngddna1xshgncoc6qqr3kb
1926964
1926771
2026-04-25T07:32:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|10||கலைஞர்}}</noinclude>எவ்வளவு வேதனையோடு குறிப்பிடுகிறார்; கொஞ்சம் படித்துப்பார்!
::“தம்பீ! தோழர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கடலூரில் கைதானார். குற்றம் என்ன தெரியுமா தம்பீ, கொள்ளை அடித்தார் என்பது! நம்ம கோவிந்தசாமியேதான். வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும், மக்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது. பதவி அல்ல முக்கியம், பண்புதான் என்று உணர்ந்து, உழைப்பாளர் கட்சியை உருவின்றிப் போகச் செய்ததைக் கண்டித்துவிட்டு தி.மு. கழகத்துடன் தோழமை கொண்டு பணியாற்றி வருகிறாரே புன்னகை மாறாத முகமும், புன்மொழி பேசிடா வாயும், எவரிடமும் இன்மொழியே பேசிப் பழக்கமும் பெற்றுள்ள பண்பாளர் இருக்கிறாரே அவர், “என்னை மீறி நடக்கிறானே பார்! பார்!! ஒழித்துக் கட்டிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்” என்று மிரட்டியபோதும் மனம் தளராமல் மக்கள் தொண்டனாகி மகத்தான செயலாற்றிக்கொண்டு வரும் அந்த கோவிந்தசாமிதான், தம்பி கொள்ளைக்காரனாக்கப்படுகிறார். வழக்கு இருக்கிறது. அதனால் அதற்குமேல் கூறுவதற்கில்லை”
56 ஆம் ஆண்டு கோவிந்தசாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழி பற்றி அண்ணா பட்ட வேதனைதான் இந்த எழுத்துக்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதுபோலப் பழி சுமத்தும் படலம் தொடருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தானே, பெரியவர் பக்தவத்சலம் “ரகசிய வேலை” என்று பீடிகை போடுகிறார்!
உடன்பிறப்பே, நாம் அவரைப் போன்ற பெரியவர்களைப் பார்த்து வேண்டுவது இதுதான்! தேவைப்-<noinclude></noinclude>
2rcla8vqvjx0xnu3j4h8j68uptnnaa5
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/20
250
640082
1926773
1923548
2026-04-25T04:16:42Z
Ramya sugumar
15106
1926773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||11}}</noinclude>பட்டால் எங்கள் குருதியை — வேண்டுமளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் — இப்படியெல்லாம் புழுதியை வாரித்தூற்றாதீர்கள்!
::கழகம், காந்திய வழியில் கனிவும்—
::பெரியார் வழியில் துணிவும்—
::அண்ணா வழியில் தெளிவும்—
கொண்டு கடந்த காலத்தில் செயலாற்றியதற்கும், நிகழ்காலத்தில் செயலாற்றுவதற்கும் சான்றுகள் உண்டு.
எதிர்காலத்திலும் அவ்வாறே அவர்களின் அறவழியில் அன்பு வழியில். அமைதி வழியில் கழகம் தளரா நடைபோடும் என்ற உறுதியினை உன் வாயிலாகப் பெற்று நாட்டுக்கு அறிவிக்கிறேன். நல்லோர்க்கு அறிவிக்கிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
8 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
a3397oafhzdqg6ov3q91px1vlahglqv
1926965
1926773
2026-04-25T07:33:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||11}}</noinclude>பட்டால் எங்கள் குருதியை — வேண்டுமளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் — இப்படியெல்லாம் புழுதியை வாரித்தூற்றாதீர்கள்!
::கழகம், காந்திய வழியில் கனிவும்—
::பெரியார் வழியில் துணிவும்—
::அண்ணா வழியில் தெளிவும்—
கொண்டு கடந்த காலத்தில் செயலாற்றியதற்கும், நிகழ்காலத்தில் செயலாற்றுவதற்கும் சான்றுகள் உண்டு.
எதிர்காலத்திலும் அவ்வாறே அவர்களின் அறவழியில் அன்பு வழியில், அமைதி வழியில் கழகம் தளரா நடைபோடும் என்ற உறுதியினை உன் வாயிலாகப் பெற்று நாட்டுக்கு அறிவிக்கிறேன். நல்லோர்க்கு அறிவிக்கிறேன்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
8 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
2oa4fthfms51t81xwm159rhickmnuuf
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/21
250
640100
1926775
1923647
2026-04-25T04:25:17Z
Ramya sugumar
15106
1926775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வடிவேலருக்கு வந்த வாழ்வு!</b>}}
உடன்பிறப்பே,
நீண்ட நாட்கள் ஆகின்றன நாடகம் எழுதி! இன்று ஒரு சிறிய நாடகம்! பெயர், “வடிவேலருக்கு வந்த வாழ்வு!”
முதல் மணி அடிக்கிறது! இரண்டாவது மணியும் ஒலிக்கிறது! மூன்றாவது மணியைத் தொடர்ந்து “கோரஸ்” பாடப்படுகிறது.
:“வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
:பதவி கொடுத்தவரை வாழ்த்துவோம்!
:தாழ்த்துவோம்! தாழ்த்துவோம்!
:பதவி போன பின்னர் அவரைத் தாழ்த்துவோம்!
:பாடுவோம்! பாடுவோம்! பதவி நீடிப்பு தந்தவரைப்
:பாடுவோம்! பாடுவோம்! அவரைச்
:சாடுவோம்! சாடுவோம்! சாகும்வரைப்
:பதவி கொடுக்காததால் சாடுவோம்!
:கூடுவோம்! கூடுவோம்! கூட்டம் கண்ட இடம்
:கூடுவோம்!
:ஆடுவோம்! ஆடுவோம்! சமயம்போல ஆடுவோம்! :சந்தர்ப்பவாதம் வெல்க என்று ஆடுவோம்!
:ஓடுவோம்! ஓடுவோம்! கண்டஇடம் ஒடுவோம்;
{{Right|பதவி எனும்}}
கரும்புத்துண்டு கண்ட இடம் ஓடுவோம்.”
:(கோரஸ் முடிகிறது. திரை விலகுகிறது.){{nop}}<noinclude></noinclude>
q5mzff3yl21s34fte8o3k9mquizp832
1926776
1926775
2026-04-25T04:25:48Z
Ramya sugumar
15106
1926776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வடிவேலருக்கு வந்த வாழ்வு!</b>}}
உடன்பிறப்பே,
நீண்ட நாட்கள் ஆகின்றன நாடகம் எழுதி! இன்று ஒரு சிறிய நாடகம்! பெயர், “வடிவேலருக்கு வந்த வாழ்வு!”
முதல் மணி அடிக்கிறது! இரண்டாவது மணியும் ஒலிக்கிறது! மூன்றாவது மணியைத் தொடர்ந்து “கோரஸ்” பாடப்படுகிறது.
:“வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
:பதவி கொடுத்தவரை வாழ்த்துவோம்!
:தாழ்த்துவோம்! தாழ்த்துவோம்!
:பதவி போன பின்னர் அவரைத் தாழ்த்துவோம்!
:பாடுவோம்! பாடுவோம்! பதவி நீடிப்பு தந்தவரைப்
:பாடுவோம்! பாடுவோம்! அவரைச்
:சாடுவோம்! சாடுவோம்! சாகும்வரைப்
:பதவி கொடுக்காததால் சாடுவோம்!
:கூடுவோம்! கூடுவோம்! கூட்டம் கண்ட இடம்
:கூடுவோம்!
:ஆடுவோம்! ஆடுவோம்! சமயம்போல ஆடுவோம்!
:சந்தர்ப்பவாதம் வெல்க என்று ஆடுவோம்!
:ஓடுவோம்! ஓடுவோம்! கண்டஇடம் ஒடுவோம்;
{{Right|பதவி எனும்}}
கரும்புத்துண்டு கண்ட இடம் ஓடுவோம்.”
:(கோரஸ் முடிகிறது. திரை விலகுகிறது.){{nop}}<noinclude></noinclude>
ntm5zozv2vrc12rd4khrtcwngs0v5ef
1926966
1926776
2026-04-25T07:36:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>வடிவேலருக்கு வந்த வாழ்வு!</b>}}
உடன்பிறப்பே,
நீண்ட நாட்கள் ஆகின்றன நாடகம் எழுதி! இன்று ஒரு சிறிய நாடகம்! பெயர், “வடிவேலருக்கு வந்த வாழ்வு!”
முதல் மணி அடிக்கிறது! இரண்டாவது மணியும் ஒலிக்கிறது! மூன்றாவது மணியைத் தொடர்ந்து “கோரஸ்” பாடப்படுகிறது.
{{left_margin|3em|<poem>“வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
பதவி கொடுத்தவரை வாழ்த்துவோம்!
தாழ்த்துவோம்! தாழ்த்துவோம்!
பதவி போன பின்னர் அவரைத் தாழ்த்துவோம்!
பாடுவோம்! பாடுவோம்! பதவி நீடிப்பு தந்தவரைப்
பாடுவோம்! பாடுவோம்! அவரைச்
சாடுவோம்! சாடுவோம்! சாகும்வரைப்
பதவி கொடுக்காததால் சாடுவோம்!
கூடுவோம்! கூடுவோம்! கூட்டம் கண்ட இடம்
கூடுவோம்!
ஆடுவோம்! ஆடுவோம்! சமயம்போல ஆடுவோம்!
சந்தர்ப்பவாதம் வெல்க என்று ஆடுவோம்!
ஓடுவோம்! ஓடுவோம்! கண்டஇடம் ஓடுவோம்;
பதவி எனும்
கரும்புத்துண்டு கண்ட இடம் ஓடுவோம்.”
(கோரஸ் முடிகிறது. திரை விலகுகிறது.)</poem>}}{{nop}}<noinclude></noinclude>
e0ryl3l804as6k5dshgjg9xyqj4jhjk
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/26
250
640104
1926647
1926606
2026-04-24T14:09:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||17}}</noinclude>வடிவேலர்:- அவுனுங்க கேட்கவில்லை, கிடைக்கவில்லை!
நான் கேட்டும் கிடைக்கவில்லையே!
சுவாமிகள்:- என்ன செய்றது! உம்ம அதிர்ஷ்டம்; தன்மானத் தாத்தா அதற்குள்ளே காலமாயிட்டார்.
வடிவேலர்:- கிழவன், செத்து தொலைந்தவரு என் பதவி நீடிப்பு பிரச்சினைக்குப் பிறகு செத்துத் தொலைஞ்சிருக்கக் கூடாதா?
சுவாமிகள்:- சரி! சரி! போனது போகட்டும்-இப்ப என்ன செய்யிறதா உத்தேச?
வடிவேலர்:- அய்யங்கார் சுவாமிதான் ஒரு “ஐடியா” கொடுக்கணும்.
சுவாமிகள்:- பேஷா கொடுக்கிறேன்! வாரும் மேடையைப் போடுவோம்! புத்தகங்களை வெளியிடுவோம்! கறைபடாத கை உள்ளவர்களாப் பாத்து முதல் பிரதியை வாங்கச் சொல்வோம். அந்த மேடையிலேயே அருட்செல்வன், தலையாலங்கானத்தான் எல்லோரையும் தாக்கு தாக்குன்னு தாக்குவோம்!
வடிவேலர்:- சரியான யோசனை! நம்ப புத்தகத்தை –முதல் பிரதியை வாங்க “கறை படாதகை” ஒன்று வேண்டும்னு சொன்னீங்களே - அந்தக் கையை எங்க தேடுறது?
சுவாமிகள்:- நாசமாப் போச்சு! நம்ப ராமச்சந்திர மூர்த்தி சர்டிபிகேட் கொடுத்த ‘கை’ ஒண்ணு இருக்கு! எங்க “வைரமணி” இருக்காரே, அவரும் எங்க தலைவர் “மணவழகர்” அவர்களும் கையெழுத்துப் போட்டே நற்சான்று வழங்கிய கைஒன்று இருக்கு! அந்தக் கையிலே முதல் பிரதியை கொடுத்தா போச்சு!{{nop}}<noinclude></noinclude>
amhsjfg39vxbaheulwgdwnosu8ker3r
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/25
250
640235
1926646
1926604
2026-04-24T13:57:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16||கலைஞர்}}</noinclude>:[தலையாலங்கானத்தார், அருட்செல்வரின் முகத்தைப் பார்க்கிறார். அருட்செல்வர் இந்த மாதிரி விஷங்களில் இரக்கம் காட்டி, ஏமாந்து விடக்கூடியவர். தலையாலங்கானத்தாரின் முகக்குறிப்பை உணர்ந்து அருட்செல்வர் சமாளித்துக் கொள்கிறார்.]
அருட்:- பார்க்கலாங்க! யோசிக்கலாங்க!
வடிவேலர்:- நேற்று மாலையில் கூட “கூன்பிறை” கல்லூரித் திறப்பு விழாவில் இதுபோன்ற ஆட்சி இதுவரை இருந்ததுமில்லை. இனி இது போல ஒரு ஆட்சி வரவும் முடியாது என்று சொற்பொழிவாற்றினேன். எல்லா ஏடுகளிலும் வந்திருக்கிறது.
:[மூவரும் புன்னகை புரிந்தவாறு “பார்த்தோம்! பார்த்தோம்!!” என்கிறார்கள்.]
வடிவேலர்:- கவனமிருக்கட்டும் மூன்றாவது கடைசிமுறை! வாழ்க உங்கள் கொற்றம்! வாழ்க நமது ஆட்சி! வணக்கம்! வணக்கம்!
:[திரும்பாமல், பின்னோக்கியவாறு நகருகிறார்]
{{block_right|-திரை விழுகிறது.}}
{{center|{{larger|<b>காட்சி 3</b>}}}}
:வடிவேலர் வீடு—அவரது நண்பர் அய்யங்கார் சுவாமிகள் வருகிறார். இருவரும் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.
சுவாமிகள்:- என்ன வடிவேலரே! உமக்கு மூன்றாவது முறை நீட்டிப்புத்தரவில்லை! அவுனுங்களுக்கு ஒரு முறை நீட்டிப்புகூடக் கிடைக்கவில்லை பார்த்தீரா?
{{nop}}<noinclude></noinclude>
8l6ldnwsf9fis7joghgjb84aot9ledf
1926648
1926646
2026-04-24T14:13:56Z
Booradleyp1
1964
1926648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|16||கலைஞர்}}</noinclude>:[தலையாலங்கானத்தார், அருட்செல்வரின் முகத்தைப் பார்க்கிறார். அருட்செல்வர் இந்த மாதிரி விஷங்களில் இரக்கம் காட்டி, ஏமாந்து விடக்கூடியவர். தலையாலங்கானத்தாரின் முகக்குறிப்பை உணர்ந்து அருட்செல்வர் சமாளித்துக் கொள்கிறார்.]
அருட்:- பார்க்கலாங்க! யோசிக்கலாங்க!
வடிவேலர்:- நேற்று மாலையில் கூட “கூன்பிறை” கல்லூரித் திறப்பு விழாவில் இதுபோன்ற ஆட்சி இதுவரை இருந்ததுமில்லை. இனி இது போல ஒரு ஆட்சி வரவும் முடியாது என்று சொற்பொழிவாற்றினேன். எல்லா ஏடுகளிலும் வந்திருக்கிறது.
:[மூவரும் புன்னகை புரிந்தவாறு “பார்த்தோம்! பார்த்தோம்!!” என்கிறார்கள்.]
வடிவேலர்:- கவனமிருக்கட்டும் மூன்றாவது கடைசிமுறை! வாழ்க உங்கள் கொற்றம்! வாழ்க நமது ஆட்சி! வணக்கம்! வணக்கம்!
:[திரும்பாமல், பின்னோக்கியவாறு நகருகிறார்]
{{c|(திரை விழுகிறது.)}}
{{center|{{larger|<b>காட்சி 3</b>}}}}
:வடிவேலர் வீடு—அவரது நண்பர் அய்யங்கார் சுவாமிகள் வருகிறார். இருவரும் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.
சுவாமிகள்:- என்ன வடிவேலரே! உமக்கு மூன்றாவது முறை நீட்டிப்புத்தரவில்லை! அவுனுங்களுக்கு ஒரு முறை நீட்டிப்புகூடக் கிடைக்கவில்லை பார்த்தீரா?
{{nop}}<noinclude></noinclude>
j1plqclvczw20fsfjetx2tg4wtwywk9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/643
250
640353
1926666
1924566
2026-04-24T14:34:00Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|611|இந்தியா}}</noinclude>அமைத்தார். இதனால் மக்கள் நிலையான நன்மைகளைப் பெற்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 643
|bSize = 450
|cWidth = 180
|cHeight = 95
|oTop = 47
|oLeft = 14
|Location = center
|Description =
}}
{{c|மொகலாயப் பேரரசு}}
அக்பரின் அரண்மனையில் அக்காலத்தில் திறமை மிக்கவர்களாய்க் கருதப்பட்ட சில பெருமக்கள் அவையை அணிசெய்தனர். அபுல் பைசி (Abul Faizi), அபுல் பசல் (Abul Fazl) என்போர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். பைசி தலைசிறந்த இலக்கியக்கவிஞர்; அபுல்பசலோ சிறந்த கல்விமான், நூலாசிரியர், அவைக்கலைஞர் என்று போற்றப்பட்டவர். அபுல்பசல் அக்பரின் நம்பிக்கைக்குகந்த நண்பரும் அறிவுரையாளருமாவார். அவர் எழுதிய நூலான ‘அய்னி அக்பரி’ பேரரசரின் ஆட்சியை அறித்துகொள்ள உதவும் அடிப்படை நூலாகும். அக்பரின் மூத்த மகன் சலீம் அபுல்பசலின் கொலையைத் தூண்டியதால் பேரரசர் ஆழ்ந்த வருத்தமுற்றார். இராசா மான்சிங்கு அக்பரின் படைத்தலைவர், கடுமையான படையெடுப்புகளை நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்பர் திறமையான அலுவலர்களை ஆராய்ந்து தேர்த்தெடுத்தமைக்கு இராசா தோடர்மால் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவரும் சிறந்த போர்வீரரே. எனினும் நிலவரித் துறையைத் திருந்தி அமைத்ததே அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது பீர்பாலும் தான்சேனும் அக்பரின் அரண்மனையை அணிசெய்த ஏனையோருள் குறிப்பிடத்தக்கவர்கள். பீர்பால் நகைச்சுவைக்கும் தான்சேன் இசைக்கும் பெயர்பெற்ற கலைஞர்கள்.
இந்தியாவில் மொகலாயப் பேரரசை உறுதிப்படுத்த அக்பர் தமக்கெனக் கொள்கை யொன்றை உருவாக்கினார். பெரும் பகுதிகளை வெல்லுவதால் மட்டும் பேரரசு காக்கப்படமாட்டாது என்பதை நன்குணர்ந்து இந்துக்கள், இசுலாமியர்கள் போன்ற அனைத்துக் குடிமக்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரந்த அடிப்படையில் ஆட்சியை அமைக்க வேண்டுமென அவர் கருதினார். எனவே முதன் முதலாக இந்துக்களின் நம்பிக்கையைப் பெற அவர் கவனம் செலுத்தினார். ஆம்பர் மன்னர் இராசா பீகாரிமால் என்பாரின் மகளை அவர் (1562) மணந்து கொண்டார்; ஏனைய இராசபுத்திர அரசுகளுடனும் அத்தகைய மணவுறவுகளைச் செய்துகொண்டார். இந்துக்கள் வெறுத்த செசியா வரியை நீக்கினார். இந்துப்பயணிகள் மீது சுமத்தப்பட்ட பிறிதொருவரியும் விலக்கிக் கொள்ளப்பட்டது; உயர்ந்த பதவிகளில் இந்துக்களை அமர்த்தினார். அவர் இந்துக்களை முழுதும் நம்பினார். இதன் விளைவாக இந்துப் பெருங்குடிமக்களும் மொகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக விளங்கினார்கள்.
அக்பர் அனைவருக்கும் இணக்கமானவர்; பெருந்தன்மையாளர்; கருணையுடையவராயினும் கொடுமையாகவும் இருக்கக்கூடியவர், நீதியில் நடுநிலைமை தவறாதவர், அவர் கல்லாதவர்; எனினும் வரலாறு, சமயநூல்கள் கவிதை போன்றவற்றை அவர் திரட்டியதுடன், அவற்றைப் பிறர் படிக்கக் கேட்டு அறிந்தார். நினைவாற்றல் மிகுந்த பேரரசர்; கண்டும் கேட்டும் கற்றுக்கொண்டவர். இலக்கியம், தத்துவம், சமயம் போன்றவற்றுள் எழும் ஐயங்களை உரையாடல்கள் மூலம் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்ட அவர், தாமும் அவ்வுரையாடல்களில் பங்கு கொண்டார்.
அவர் சுன்னி முசுலிமாகவே வளர்க்கப்பட்ட வராயினும், சூபிக் கோட்பாடுகளிடம் அவருக்கிருந்த ஈடுபாட்டினால் அவருடைய வைதிகக் கொள்கை தளரலாயிற்று, ‘இபதத் கானா’ என்னும் அரண்மனையில் நள்ளிரவில் இந்து, சமணம், சொராசுடிரியம், கிறித்தவம் போன்ற வெவ்வேறுகளைப் பற்றியவிளக்கங்களைப் பேரரசர் பொறுமையாகக் கேட்டுத் தெளிந்தார். மேற்கூறிய நான்கு சமயங்களையும் போற்றிப் பாராட்டிய அக்பர் அவற்றின் சடங்குகளையும் பின்பற்றினார். சமணப் பெரியார்கள் கூறிய கொல்லாமைக் கோட்பாட்டின் செல்வாக்கினால், விலங்குகளைக் கொல்லக்கூடா தென்றும் அகிம்சைக் கோட்பாட்டைப் பின்பற்றினார்; வேட்டையாடுதலையும் துறந்து மீன் பிடித்தலையும் குறைத்துக் கொண்டார். குறிப்பிட்ட சில நாள்களில் புலால் உண்பதைத் தவிர்த்ததுடன்<noinclude>
வா. க. 3 - 39அ</noinclude>
bb7gii693rvgsppchxlkep3uiywb0vs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/661
250
640412
1926667
1924781
2026-04-24T14:34:52Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|629|இந்தியா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 661
|bSize = 450
|cWidth = 320
|cHeight = 171
|oTop = 24
|oLeft = 54
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - ஆங்கிலேயர் ஆட்சியில்}}
ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், இடைக்கால அரசு செம்மையாகச் செயற்பட முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் 1946 செப்தம்பர் மாதம் அரசியல் நிருணய அவை அரசியலமைப்பை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. இங்கிலாந்து அரசு அதிகாரத்தை இந்தியர்களிடமே ஒப்படைத்துவிட்டு இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாக அறிவித்து, அம்மாற்றத்தை விரைத்து செயற்படுத்த மவுண்டு பேட்டன் பிரபுவை அரசப் பேராளராக அனுப்பியது. இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் அதன் அடிப்படையில்தான் இந்திய சுதந்திரம் கிட்டும் என்பதையும் உணர்ந்த மவுண்ட்டுபேட்டன் பிரபு, நேரு போன்ற தலைவர்களைப் பிரிவினைக்கு இணங்க வைத்தார். காந்தியடிகள் உட்படக் காங்கிரசுத் தலைவர்கள் பிரிவினையைத் தவிர்க்க முடியாத ஒரு கட்டாயமாக விருப்பமின்றி ஏற்றனர். இந்தியா, பாகிசுத்தான் ஆகிய இரு சுதந்திர நாடுகள் 1947 ஆகசுட்டுப் பதினைந்தாம் நாள் உருவாயின. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மவுண்ட்டுபேட்டன் பிரபுவே அமர்த்தப்பட்டு 1948-சூன் வரை அப்பதவியில் தொடர்த்து இருந்தார். அதற்குப் பிறகு சி. இராசகோபாலாச்சாரி தலைமை ஆளுநர் பதவியை ஏற்று 1950 சனவரி வரை அப்பதவியிலிருந்தார். புதிய அரசியலமைப்பு 1950 சனவரி 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்து இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டபொழுது, இராசேந்திர பிரசாத்து குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude>
n12ui9qt8ok8izvby34cdimg5vto7bj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/664
250
640422
1926669
1924800
2026-04-24T14:35:12Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|632|இந்தியா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 664
|bSize = 450
|cWidth = 345
|cHeight = 171
|oTop = 26
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - விடுதலைக்குப்பின்}}
ஏற்படுத்தப் பாடுபட்டார். இந்து-முசுலிம் ஒற்றுமைக்கே தம் வாழ்வை அளித்த காந்தியடிகள் வகுப்புவாத வெறியன் ஒருவனால் 1948-ஆம் ஆண்டு சனவரி மாதம் 30-ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டது சுதந்திர இந்தியாவிற்கு ஒரு பேரிழப்பாகும். பிரிவினையின் விளைவாக இடம் பெயர்த்து வந்த எண்ணற்ற அகதிகளுக்கு (ஏதுமிலிகள்) மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது சுதந்திர இந்தியாவின் மற்றொரு பெரும் பணியாக அமைந்தது. பெரியதும் சிறியதுமான 562 சுதேச சமசுதானங்களையும் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமான கோவா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளையும் இந்தியாவுடன் இணைக்கும் சிக்கல், அரசியல் அறிவும் அஞ்சா நெஞ்சமும் படைத்த உள்நாட்டுத்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலினால் தீர்த்து வைக்கப்பட்டடது. சுதந்திர இந்தியாவுக்கு ஒரு செம்மையான அரசியலமைப்பை உருவாக்கியது இந்தியத் தலைவர்களின் பெருஞ்சாதனையாகும். சுதந்திர இந்தியாவின் முதலமைச்சர் நேருவின் தலைமையில் இந்தியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. {{float_right|தி.நா.வா.}}
<b>இந்திய வரலாறு (1950-ஆம் ஆண்டிற்குப் பின்):</b> இந்திய வரலாற்றில் 1950-ஆம் ஆண்டு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. அந்த ஆண்டில் தான் இந்திய அரசு, இந்திய அரசியல் ஆகியவை<noinclude></noinclude>
9hsorin532b6npnfil1rjz48lcmgtse
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/671
250
640484
1926671
1925000
2026-04-24T14:35:44Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|639|இந்தியா}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 671
|bSize = 450
|cWidth = 281
|cHeight = 170
|oTop = 30
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{c|இந்தியா - மாநிலங்கள்}}
றும் விலகிற்று என்றும் கருதலாம். ஆப்கானிசுத்தானத்தை 1978-இல் உருசியப் படைகள் தாக்கிச் செயலாற்றியதையும் இந்திய அரசு கண்டிக்காதது மேற்கூறிய கருத்துக்குச் சற்று ஆதரவு அளிக்கும்.
உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரித்து ஒன்றை ஒன்று எதிர்த்து வருவதால், உலக அமைதி சீரழிகிறது என்னும் கருத்தால் இந்தியா கூட்டுசேராக் கொள்கையை அறிவித்தது. அதன் விளைவாக மூன்றாம் உலகம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. கூட்டுசேராக் கூட்டணி நாடுகளின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. கூட்டுசேரா நாடுகளின் மாநாடு இந்தியாவில் 1985-இல் நடைபெற்றது. இந்தியா அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றது. தென் ஆசிய நாடுகளின் மண்டலக் கூட்டுறவுச் சங்கம் (S.A.A.R.C.) 1985-இல் அமைக்கப்பட்டது. அதில் இந்தியா சேர்ந்துள்ளது. அதே காலத்தில் 1971-இல் இந்தியா உருசியாவுடன் நட்புறவு உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டது. பொருளாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நிலையை உருவாக்க 1950-ஆம் ஆண்டில் திட்டக் குழு அமைக்கப்பட்டது. நாட்டு வாய்ப்பு வளங்களைச் சமமாகவும் மிக்க பயனுள்ளளவாகவும் பயன்படுத்துவதே அதன் நோக்கமாகும். இதுவரை ஆறு ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில்<noinclude></noinclude>
hz87rp0k00tlmgstbddyqvyisp6vaql
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/686
250
640721
1926673
1925315
2026-04-24T14:36:29Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியானா|654|இந்தியானா}}</noinclude>வருமன் என்பார் யூதருக்குத் தங்க இடம் கொடுத்த பட்டயம் இவர்களின் வரலாற்றைக் குறிக்கும் சான்றாகும். யூதர்கள் நல்ல செல்வர்கள்; திறமைமிக்க வணிகர்கள்.
இன்றும் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரான பம்பாயில் பல யூதர்களின் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்துவருகின்றன. இவர்கள் ஏமன் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுவர். இவர்கள் கி.பி. 2-ஆம் நூற்றாண்டளவில் பம்பாய் கொலாபாவில் குடியேறியதாக அறியலாம்.
இன்றைய கேரள மாநிலத்தின் பெரும் நகரங்களுள் ஒன்றான கொச்சி-எர்ணாகுளத்தில் யூதர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இங்கு யூதர்களின் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. இந்தியாவில் குடியேறிய யூதர்களுள் இந்தியப் பெண்களை மணந்துகொண்டவர்களும் உண்டு. இந்துக்கள் காட்டிய சமயப்பொறையை யூதர்கள் இன்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
<b>இந்தியானா</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பத்தொன்பதாம் மாநிலமாகும். இந்தியானா (Indiana) வின் மேற்கில் இல்லியனாய்சும், வடக்கில் மிச்சிகனும் மிச்சிகன் ஏரியும், கிழக்கில் ஒகையோவும், தெற்கில் கெண்டகியும் எல்லைகளாகும்.
இம்மாநிலத்தின் பரப்பளவு 93,993 ச.கி.மீ. இதில் 502 ச.கி.மீ. பரப்பளவில் நீர்நிலைகள் உள்ளன. மிச்சிகன் ஏரி இதனுள் அடங்காது.
இந்தியானா மாநிலத்தின் மக்கள்தொகை 54,90,224 (1980), சிறிய மாநிலம் பெருமளவு மக்கள் தொலை கொண்டுள்ளமைக்கு இந்தியானா ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்தியானா பாபாலிசு இம்மாநிலத்தின் தலை நகராகும். இதன் மக்கள்தொகை 7,11,539 (1980). போர்ட்டு வெயின், கேரி, இவான்கவிலி, சௌத் பெண்டு, ஏமண்டு, மன்சி, ஆண்டர்சன், தெர்ரா ஆட்டு என்பன பிற நகரங்களாகும்.
இந்தியானாவின் நில அமைப்பு ஏறத்தாழ்ச்சீராக அமைந்துள்ளது. இம்மாநிலம் கடல்மட்டத்தைவிட 170 மீ, முதல் 335 மீ. வரை உயரமுடையது. படிப்படியாகச் சரியும் வண்டம்மண் படிந்தது இம்மாநிலம்.
இந்தியானா குளிர்கால மழையும் வெப்பமான கோடைக்காலத்தையும் கொண்ட தட்பவெப்பநிலையுடையது. ஆண்டுக்கு 100 செ.மீ. வரை மழை பெறும் இந்தியானாவின் தென்பகுதியில், வட பகுதியைவிட மழை மிகுதி. தென்பகுதியில் ஆண்டுக்கு 200 நாள்களுக்கு மேல் பனிமூட்டம் இருப்பதில்லை. ஆனால், வடக்கில் இது 150 நாள்களுக்குள்ளாகவே இருக்கும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 686
|bSize = 450
|cWidth = 194
|cHeight = 168
|oTop = 32
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{c|வேளாண்மை, தொழில், முல வளங்கள்}}
<b>நிலப்பிரிவுகள்:</b> இந்தியானாவை மூன்று நிலப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடக்கிலிருந்து தெற்காக அவை 1. பெரும் ஏரிச் சமவெளிகள், 2. தில் சமவெளிகள், 3.தென்பாகத்துக் குன்றுகளும் தாழ் நிலங்களும் ஆம்.
<b>ஆறுகள்:</b> வாபாசு ஆறும் அதன் கிளைகளான வெள்ளாறும் திப்பிகானோ ஆறும் இம்மாநிலத்தின் மூன்றிலிரண்டு பாகத்திற்கு நீர் வழங்குகின்றன. செயிண்டு சோசபு ஆறு, கன் காகீ, ஒயிட்வாட்டர் ஆறு போன்றவை பிற ஆறுகள், ஓகையோ ஆறு இம்-<noinclude></noinclude>
0p7jqeqpg4frtwy89gd54g046mhwlqo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/687
250
640722
1926674
1925316
2026-04-24T14:36:45Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியானா|655|இந்தியானா}}</noinclude>மாநிலத்தின் தென் எல்லையாயிருந்தாலும் இவ்வாற்றின் பகுதிகள் இந்தியானாவில் பாய்வதில்லை. வாவாசி ஏரி இந்தியானாவின் பெரிய ஏரி. இம்மாநிலத்திலுள்ள 36 ஏரிகளும் 12 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளன. இந்தியானாவின் வடகிழக்கில் உள்ள இவற்றுடன் வேறு பலபெரும் ஏரிகளையும் குறிப்பிடலாம். அவை மணிடோ, மாக்சின்குக்கி, தர்க்கி என்பனவாம். கிளிப்டி நீர்வீழ்ச்சி இந்தியானாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும். ஏறத்தாழ 30 மீ. உயரத்திலிருந்து இந்நீர்வீழ்ச்சி விழுகிறது.
<b>பொருளாதாரம்:</b> செய்தொழிலும் வேளாண்மையுமே இம்மாநிலத்தின் முதன்மையான வருமானத்தை அளிக்கின்றன. கிரே பகுதியில் மிகப் பெரிய உருக்கு ஆலைகளும் எண்ணெய் தூய்யை செய்யும் ஆலைகளும் உள்ளன. இந்தியானா பாலிசு முதன்மையான செய்தொழில் மையமாகும். பரந்து செழித்த சமவெளிகளிலிருந்து உணவுப்பயிர்கள் மிக்க அளவில் விளைகின்றன,
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 687
|bSize = 450
|cWidth = 303
|cHeight = 188
|oTop = 80
|oLeft = 71
|Location = center
|Description =
}}
{{c|இந்தியானா}}
செழித்த மண்வளமே இந்தியானாவின் மிகப்<noinclude></noinclude>
qjwhoxepvn74pbu0696ihqjamrywpbq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/688
250
640723
1926676
1925318
2026-04-24T14:37:00Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியானா|656|இந்திரகாளி}}</noinclude>பெரும் இயற்கைச் செல்வமாகும். காடுகள், கனிமப் படிவங்கள், நீர் ஊற்றுகள் அளவுக்கு மீறிய தண்ணீர் ஆகியவை பிற இயற்கைச் செல்வங்கள்.
இந்தியானாவுக்குத் தேவையான மின்சாரம் நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. இங்கு நீர் மின்சக்தி குறைவாகவே கிடைக்கிறது.
இந்தியானா போக்குவரத்துக்கு ஏற்ற வானவூர்தி நிலையங்களையும் இருப்புப்பாதைத் தொடர்களையும் பேருந்து வழிகளையும் மிகுதியாய்ப் பெற்றுள்ளது. இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் 320 விமான நிலையங்கள் உள்ளன.
<b>வரலாறு:</b> இந்திய மரபு வழியினரே இத்தியானாவின் பழங்குடிகள். அவர்களை மேடுகட்டிகள் (Mound Builders) என்று கூறினர். இறந்தவர்களைப் புதைக்கும் மணல்மேடுகளைக் கட்டியதால் இப்பெயர் வந்தது போலும், இந்தியானாப் பகுதியில் காலடி வைத்த முதல் வெள்ளையர் இராபர்ட்டு கவலியர் என்ற பிரான்சுப் புவியியல் ஆய்வாளர் ஆவார். அவர் கி.பி. 1679-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகிய கனடாவிலிருந்து வந்தார். அவர் கி.பி. 1731-ஆம் ஆண்டில் இந்தியானாவில் வின்சினசு (Vincennes) என்னுமிடத்தில் பிரான்சு மக்கள்தம் முதல் குடியேற்றத்தை நிலை நாட்டிக் கி.பி. 1733-இல் கோட்டையொன்றையும் கட்டினார்.
ஆங்கிலேயப் படைகள் கி.பி. 1778-இல் இந்தியா பகுதியைக் கைப்பற்றத் தொடங்கின; கோட்டையையும் கைப்பற்றின. அமெரிக்காவின் வர்சீனியாப் படைகள் கி.பி. 1778-இல் கோட்டையைக் கைப்பற்றின. ஆங்கிலேயப் படைகள் திரும்பவும் அதனைக் கைப்பற்றின. எனினும், கி.பி. 1779-இல் அமெரிக்கரின் படைத்தலைவரான கிளார்க்கு என்பவர் அதைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டார். கி.பி. 1787–இல் இந்தியானா அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியின் பாகமாயிற்று.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 688
|bSize = 450
|cWidth = 200
|cHeight = 66
|oTop = 209
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{c|மாநிலச் சட்டமன்றம்}}
அமெரிக்கக் காங்கிரசு சட்ட மன்றம் கி.பி. 1800-ஆம் ஆண்டில் இந்தியானாப் பகுதியைத் தன் பகுதியாக நிலைநாட்டியது. பின் இது 1816-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பத்தொன்பதாம். மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியானாவை ஊசியர் அரசு (Hoosier State) என்றும் குறிப்பிடுவர். ஊசியர் என்னும் சொல்லுக்குச் சண்டைக்காரன் என்பது பொருள்.
<b>இந்தியானா பாலீசு</b> அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள இந்தியானா மாநிலத்தின் தலை நகரம். இந்நகரம் வெண்ணாற்றங்கரையில் (White River) அமைக்கப்பட்டுள்ளது. இந்தியானா மாநிலத்தலைநகரமாக இந்தியானா பாலிசு (India-napolis) கி.பி. 1820-ஆம் ஆண்டில் ஆக்கப்பட்டது. உணவுத் தானியங்களைப் பதப்படுத்தும் முதன்மையான வேளாண்மைப் பகுதியில் அமைத்துள்ள இவ்வூர் உணவுத் தானியம், கால்நடைகள் போன்றவற்றின் சிறப்பான சந்தையாகவும் கருதப்படுகிறது. இரசாயனப் பொருள்கள், மருந்து வகைகள், வானவூர்திகள், பேருந்துகளின் பகுதிகள் தொலைபேசில் கருவிகள், மின்னியல் கருவிகள், சாலை அமைப்பு, இயந்திரங்கள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நகரம் கல்வி நிறுவனங்கள் பலவற்றின் மையமாகும். இங்குள்ள பட்லர் பல்கலைக்கழகம் (Batler University) அவற்றுள் ஒன்று. ஓய்வு பெற்ற அமெரிக்கப் படைவீரர் இயக்கத்தின் தேரியத் தலைமையிடம் இவ்வூரில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலச் சட்டமன்ற மாளிகை (State Capital) யும், சேம்சு விட்காம்பு இரிலே (James Whitecomb Riley) என்னும் கவிஞரின் வீடும், அவர் இறந்தபின் அடக்கம் செய்யப்பட்ட இடமும், குடியரசுத் தலைவராயிருந்த பெஞ்சமின் ஆரிசன் (Benjamin Harrison) என்பாரின் வீடும், படைவீரர்கள் மற்றும் மாலுமிகளின் நினைவுச் சின்னமும் இந்நகரில் அமைந்துள்ள சிறப்பான சின்னங்களாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பேருந்துப் பந்தயத்திடலும் உள்ளது. பெஞ்சமின் ஆரிசன் கோட்டை இவ்வூருக்கு அண்மையிலுள்ளது. இந்தியானாபாலிசுவின் மக்கள்தொகை 7,11,539 (1980).
<b>இந்திரகாளி</b> என்பது தமிழிலுள்ள பாட்டியல் நூல்களுள் ஒன்று. பாட்டியல் நூல்களுள் பழமை-<noinclude></noinclude>
7b6fyinzgk9zzaozn6p7j20y2gq70da
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/34
250
640873
1926849
1925654
2026-04-25T06:19:07Z
Ramya sugumar
15106
1926849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>காரிருளால் சூரியன்தான்<br>
மறைவதுண்டோ?</b>}}
உடன்பிறப்பே,
:“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
:கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
:பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?”
இது புரட்சிக் கவிஞரின் பொருள் பொதிந்த கேள்வி! இந்தக் கேள்விக்குச் சரியான விடையாக நம் முன்னால் நிற்கின்ற கடந்த கால நிகழ்ச்சி பற்றிய சில குறிப்புக்களை உனக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
கலைமாமணிகள் அவர்கள்! தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். திரையுலகிலும், நாடக அரங்கிலும் வைரமணிகளென ஒளிவிட்டவர்கள். அவர்களைக் காண்பதற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நாள் முழுதும் காத்துக் கிடப்பார்கள். அவர் தம் நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் இதயத்தைப் பறிகொடுப்பார்கள். அவர்கள் பங்கு பெருகிற படமானாலும், கலந்துகொள்கிற இசை அல்லது நாடக நிகழ்ச்சியானாலும் வெற்றி! வெற்றி! என்றே முழங்கிக் கொண்டிருந்தன.
ஒருவர் தியாகராஜ பாகவதர்! ஏழிசை மன்னர் எழிலிசைத் திலகம், என்றெல்லாம் இசையரங்குகள், அவரைச் சிறப்பித்துப் பாராட்டின. குழலோ, யாழோ?<noinclude></noinclude>
8moa4redwr0ce73fy94kmwgruzr3xuf
1926973
1926849
2026-04-25T07:42:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>காரிருளால் சூரியன்தான்<br>
மறைவதுண்டோ?</b>}}
உடன்பிறப்பே,
::“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
::கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
::பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?”
இது புரட்சிக் கவிஞரின் பொருள் பொதிந்த கேள்வி! இந்தக் கேள்விக்குச் சரியான விடையாக நம் முன்னால் நிற்கின்ற கடந்த கால நிகழ்ச்சி பற்றிய சில குறிப்புக்களை உனக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
கலைமாமணிகள் அவர்கள்! தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். திரையுலகிலும், நாடக அரங்கிலும் வைரமணிகளென ஒளிவிட்டவர்கள். அவர்களைக் காண்பதற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நாள் முழுதும் காத்துக் கிடப்பார்கள். அவர் தம் நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் இதயத்தைப் பறிகொடுப்பார்கள். அவர்கள் பங்கு பெருகிற படமானாலும், கலந்துகொள்கிற இசை அல்லது நாடக நிகழ்ச்சியானாலும் வெற்றி! வெற்றி! என்றே முழங்கிக் கொண்டிருந்தன.
ஒருவர் தியாகராஜ பாகவதர்! ஏழிசை மன்னர் எழிலிசைத் திலகம், என்றெல்லாம் இசையரங்குகள், அவரைச் சிறப்பித்துப் பாராட்டின. குழலோ, யாழோ?<noinclude></noinclude>
ggveb0ljtlp25k79oqfee4xz9is8vge
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/697
250
640884
1926677
1925678
2026-04-24T14:37:31Z
Illiyas noor mohammed
14490
/* மேம்படுத்த வேண்டியவை */
1926677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திரா காந்தி|665|இந்திரா காந்தி}}</noinclude>னர் இங்கிலாந்து சென்று ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 697
|bSize = 450
|cWidth = 152
|cHeight = 119
|oTop = 44
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{c|திருமதி இந்திரா காந்தி}}
இந்திரா காந்தி 1938-ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசின் உறுப்பினரானார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரான பெரோசு காந்தியை 1942-இல் மணந்தார். இவர்களுக்கு இராசீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இவர் 1942-இல் காந்தியடிகளால் கொண்டுவரப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானம் பற்றிய அகில இந்திய காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டார்.
சுதந்திரமடைந்த பின்னர் இந்திரா பிரதமரின் வீட்டு நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்; சமுதாயப் பணியிலும் ஆர்வம் கொண்டிருந்தார்; இவர் 1955-ஆம் ஆண்டு காங்கிரசுச் செயற் குழுவின் உறுப்பினர் ஆனார். பீன்னர் 1958-இல் மத்திய பாராளுமன்றக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்; இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக
1959-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்; தேசியப் பணியில் பங்கு கொள்ள இளைஞர்களை ஊக்குவித்தார்.
நேரு 1964-இல் மறையவே இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சரானார். அவரது அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா பணியாற்றினார். இக்காலத்தில் தான் இவர் முதல் முறையாகப் பன்னாட்டுத் திரைப்பட விழாவைத் தில்லியில் அமைத்து, நல்ல திரைப்படங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத் திரையிட்டுச் சிறந்த படங்களுக்குப் பரிசு அளிக்கும் முறையையும் புகுத்தினார். இந்தியாவில் தொலைக்காட்சியை முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர், இந்திரா காந்திதான். தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் போது இந்திரா தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார். திறமையான பரிவு மிக்க இவர்தம் நடவடிக்கை மக்களில் கொதிப்பைத் தணித்தது; நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்தியா மீது பாகிசுத்தான் 1965-இல் போர் தொடுத்தது. செய்தி ஒலிபரப்பு அமைச்சரான இந்திராகாந்தி இந்திய வீரர்களை ஊக்குவித்தார்.
இலால்பகதூர் சாத்திரி 1966 சனவரி 19-ஆம் நாள் மறைந்தார். இந்திரா காந்தி காங்கிரசுப் பாராளுமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 சனவரி 26-ஆம் நாள் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரசு 1967 பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. அப்பொழுது புரட்சிகரமான சமூகப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயற்படுத்தப் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். காங்கிரசுக் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1969-இல் காங்கிரசுக் கட்சி பிளவுற்றது. பெரும்பான்மைக் காங்கிரசு உறுப்பினர்களும் தலைவர்களும் இந்திரா காந்திக்குத் துணை நின்றனர். இவர் 1971-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுத் தமது கொள்கைக்கு மக்கள் அளித்த பேராதரவுடன் ஆட்சி அமைத்தார்.
அரசியல் சட்டத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிப்பதற்காக 1975 சூன் மாதத்தில் உள்நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் (1977) காங்கிரசுக் கட்சி தோற்றது. சனதாக் கட்சி பதவியில் அமர்ந்தது. மொரார்சி தேசாய் இந்தியாவின் தலைமை அமைச்சரானார். சனதாக் கட்சியின் வீழ்ச்சிக்குப்பின் 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
சமதிலைச் சமுதாயச் சிந்தனை அடிப்படையில்<noinclude>
வா. க. 3-84</noinclude>
op3n42k6giu1jbp5c3w9hagm62e7bgr
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/27
250
641230
1926653
1926609
2026-04-24T14:22:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18||கலைஞர்}}</noinclude>வடிவேலர்:- அது யார் கை? யார் கை?
சுவாமிகள்:- சத்தியமா சொல்றேன்; அது கறைபடாத கை! நம்ப “வாணிமுத்து”வின் கை! அவுங்களை அழைக்கலாம் நம்ப நிகழ்ச்சிக்கு!
வடிவேலர்:- அருமையான யோசனை!... பிரமாதம்! அய்யங்கார் சுவாமிகளுக்கு ஜே! ஜே!!
சுவாமிகள்:- பயப்படாதீர்! இனிமேல் வடிவேலர் வாழ்வில் புதிய திருப்பம்! வடிவேலரே! உமக்கு மட்டுமல்ல; நன்றி. விசுவாசம், நாணயம், கொள்கை இந்த முட்டாள்தனமான தத்துவங்களுக்கெல்லாம் இனி உலகத்தில் வேலை இல்லை! சந்தர்ப்பவாதம்! அதுவும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்! அதற்குத்தான் இனிமேல் வாழ்வு! அதுவே இப்போது இந்த வடிவேலருக்கு வந்த வாழ்வு!
:[சுவாமிகள், உணர்ச்சிமயமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார். வடிவேலர் மகிழ்ச்சி பொங்க நிற்கிறார்.]
{{c|(திரை விழுகிறது.)}}
:[மீண்டும் பழைய “கோரஸ்” பாட்டுடன் நாடகம் முடிகிறது.]
{{Right|அன்புள்ள,<br>
மு.க.<br>
9 - 4 - 76}}
{{nop}}<noinclude></noinclude>
tctx5ome60quop54lblpr2l7374p49d
1926658
1926653
2026-04-24T14:27:29Z
Booradleyp1
1964
1926658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|18||கலைஞர்}}</noinclude>வடிவேலர்:- அது யார் கை? யார் கை?
சுவாமிகள்:- சத்தியமா சொல்றேன்; அது கறைபடாத கை! நம்ப “வாணிமுத்து”வின் கை! அவுங்களை அழைக்கலாம் நம்ப நிகழ்ச்சிக்கு!
வடிவேலர்:- அருமையான யோசனை!... பிரமாதம்! அய்யங்கார் சுவாமிகளுக்கு ஜே! ஜே!!
சுவாமிகள்:- பயப்படாதீர்! இனிமேல் வடிவேலர் வாழ்வில் புதிய திருப்பம்! வடிவேலரே! உமக்கு மட்டுமல்ல; நன்றி. விசுவாசம், நாணயம், கொள்கை இந்த முட்டாள்தனமான தத்துவங்களுக்கெல்லாம் இனி உலகத்தில் வேலை இல்லை! சந்தர்ப்பவாதம்! அதுவும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்! அதற்குத்தான் இனிமேல் வாழ்வு! அதுவே இப்போது இந்த வடிவேலருக்கு வந்த வாழ்வு!
:[சுவாமிகள், உணர்ச்சிமயமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார். வடிவேலர் மகிழ்ச்சி பொங்க நிற்கிறார்.]
{{c|(திரை விழுகிறது.)}}
:[மீண்டும் பழைய “கோரஸ்” பாட்டுடன் நாடகம் முடிகிறது.]
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
9o5ujpf08mwls3bgsv32ch491i6be1g
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/43
250
641391
1926662
2026-04-24T14:30:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "34 கலைஞர் பேச, பார்க்க, சுவாசிக்க, சிந்திக்க, நடக்க. இப்படி எல்லா சக்திகளும் பொருந்திய 'ஆவிமனிதன்' ஒருவன் இருப்பதைப் போலவும், அவன், தனக்கிடப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>34
கலைஞர்
பேச, பார்க்க, சுவாசிக்க, சிந்திக்க, நடக்க. இப்படி
எல்லா சக்திகளும் பொருந்திய 'ஆவிமனிதன்' ஒருவன்
இருப்பதைப் போலவும், அவன், தனக்கிடப்பட்ட ஆணை
யின்படி - குறிப்பிட்ட உயிரினங்களாக உருவமெடுக்கிறான்
என்பதைப் போலவும் - இந்த விஞ்ஞான யுகத்திலும்
விளம்பரம் செய்து கொண்டிருப்பது மனித சமுதாயத்துக்கு
நல்லதல்ல!
யைச்
CO
ஆவியோடு பேசலாம் என்று ஏமாற்றுவது-முற்பிறவி
சொல்லுகிறாள் என்று கதைகட்டுவது - அற்புத
சித்து வேலைகள்
ஜாலங்கள்
-
-
அவதார
மகிமைகள்
மந்திர மாயங்கள் - இப்படி எத்திப் பிழைப்பது, இவை
களுக்கெல்லாம் முடிவுகட்ட கடுமையான சட்டங்கள் பிறப்
பிக்கப்படாவிட்டால், மேலும் பல மெய்வழிச் சாலைகள்
ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது.
"கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய்
மோர்புகா
துடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! ''
என்று அந்தக் காலத்திலேயே சிவவாக்கியர் அழுத்தம்
திருத்தமாகப் பாடியுள்ளதை, உடன்பிறப்பே நீ மட்டும்
நினைவில் வைத்துக்கொண்டால் போதாது மற்றவர்
களுக்கும் நினைவுபடுத்திட வேண்டும்.
சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும்,
நேர்மையையும், நெறியையும் மூட நம்பிக்கைகளால் நிலை
நிறுத்த முடியாது. அறிவுத் தெளிவின் வாயிலாகவும்,
அர சின் முறையான சட்டங்களின் மூலமாகவும் தான்
சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க முடியும்.
12
அன்புள்ள,
மு.க.
4 76<noinclude></noinclude>
szyiuhdz45zqbdtkdkorqozpsg39ct0
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/62
250
641392
1926711
2026-04-24T15:04:01Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{left_margin|3em|<poem>[{{smaller|“சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர் பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்”}}</poem>}} '''வித்வாஜன கோலாகலன்''' எல்லாம் கற்றவன்; ஆனால், கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" /></noinclude>{{left_margin|3em|<poem>[{{smaller|“சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர்
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்”}}</poem>}}
'''வித்வாஜன கோலாகலன்''' எல்லாம் கற்றவன்; ஆனால், கல்விக்கேற்ற அடக்கம் இல்லாதவன்; ஆணவத்தின் சிகரம் ஆனவன்; தற்பெருமையின் தனிப்பிறவி ; வயதில் பெரியவன். யாமுனாரியரோ வயதில் இளையவர்; மாணவப் பருவத்தினர்; தம் நுட்பமதியால் மூன்று கேள்விகளை விடுத்து வித்வஜன கோலாகலனது கொட்டத்தை அடக்குகிறார். இடையிடையே இனிய பழமொழிகள் பல பின்னிக் கிடக்கும் இக்கதை படிக்கப் படிக்கப் பரவசப்படுத்தும்.
—'''பதிப்பாசிரியர்.''']
{{center|{{x-larger|<b>5<br>மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது</b>}}}}
பூமாதேவியின் முகதிலகம் போன்ற செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் ராஜதானியாகிய மதுரை மாநகரத்தில் எழுநூறு வருஷத்திற்கு முன்பு அரசாண்ட பாண்டிய குலத்தரசன் ஒருவ னுடைய சம்ஸ்தானத்தில் வித்வஜன கோலாகலன் என்று எண் டிசையிலும் பிரசித்தமாகப் பெயர்பெற்ற சம்ஸ்தான வித்துவான் ஒருவன் இருந்தான். அவன் தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, தர்ம சாஸ்திரம் என்கிற நான்கிலும் பூரண பாண்டித்தியம் உள்ளவன். மற்ற வித்வஜனர்கள் யாவரும் அவனைக் காணு மிடத்தில் கருடனைக் கண்ட பாம்பு போலவும், யமனைக் கண்ட உயிர் போலவும் நடுங்குவார்கள். அவன் அத்தன்மையாகிய வித்தியா சாமர்த்தியம் உடையவனாதலால், பாண்டியன் அவனைச் சன்மானித்துத் தன்னருகில் அதிக கௌரவமாக வைத்துச் சம்ரக்ஷணை செய்து வந்தான் ; அவ்வித்வான் தனக்கு உண்டான வித்யா கர்வத்தினாலும், 'கொண்டவன் பலமிருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்,' என்பதற்கிசைய, அரசன் தன்மேல் வைத்த தயையினாலும் ஒருவரையும் மதிக்கிறதே இல்லை. பச்சோந்தி
Qi-5<noinclude></noinclude>
sb1lhitom16nj28ag7thjhod8qp8cc4
1926716
1926711
2026-04-24T15:06:57Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop
|Image = விநோத_ரச_மஞ்சரி.pdf
|Page = 62
|bSize = 521
|cWidth = 174
|cHeight = 165
|oTop = 80
|oLeft = 51
|Location = left
|Description =
}}
{{left_margin|3em|<poem>[{{smaller|“சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர்
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்”}}</poem>}}
'''வித்வாஜன கோலாகலன்''' எல்லாம் கற்றவன்; ஆனால், கல்விக்கேற்ற அடக்கம் இல்லாதவன்; ஆணவத்தின் சிகரம் ஆனவன்; தற்பெருமையின் தனிப்பிறவி ; வயதில் பெரியவன். யாமுனாரியரோ வயதில் இளையவர்; மாணவப் பருவத்தினர்; தம் நுட்பமதியால் மூன்று கேள்விகளை விடுத்து வித்வஜன கோலாகலனது கொட்டத்தை அடக்குகிறார். இடையிடையே இனிய பழமொழிகள் பல பின்னிக் கிடக்கும் இக்கதை படிக்கப் படிக்கப் பரவசப்படுத்தும்.
—'''பதிப்பாசிரியர்.''']
{{center|{{x-larger|<b>5<br>மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது</b>}}}}
{{larger|<b>பூ</b>}}மாதேவியின் முகதிலகம் போன்ற செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் ராஜதானியாகிய மதுரை மாநகரத்தில் எழுநூறு வருஷத்திற்கு முன்பு அரசாண்ட பாண்டிய குலத்தரசன் ஒருவனுடைய சம்ஸ்தானத்தில் வித்வஜன கோலாகலன் என்று எண்டிசையிலும் பிரசித்தமாகப் பெயர்பெற்ற சம்ஸ்தான வித்துவான் ஒருவன் இருந்தான். அவன் தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, தர்ம சாஸ்திரம் என்கிற நான்கிலும் பூரண பாண்டித்தியம் உள்ளவன். மற்ற வித்வஜனர்கள் யாவரும் அவனைக் காணுமிடத்தில் கருடனைக் கண்ட பாம்பு போலவும், யமனைக் கண்ட உயிர் போலவும் நடுங்குவார்கள். அவன் அத்தன்மையாகிய வித்தியா சாமர்த்தியம் உடையவனாதலால், பாண்டியன் அவனைச் சன்மானித்துத் தன்னருகில் அதிக கௌரவமாக வைத்துச் சம்ரக்ஷணை செய்து வந்தான் ; அவ்வித்வான் தனக்கு உண்டான வித்யா கர்வத்தினாலும், ‘கொண்டவன் பலமிருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்,’ என்பதற்கிசைய, அரசன் தன்மேல் வைத்த தயையினாலும் ஒருவரையும் மதிக்கிறதே இல்லை. பச்சோந்தி<noinclude>{{rh|வி—5||}}</noinclude>
acy2lpgtvs9y6430jrlyoa63oklv3j1
1926720
1926716
2026-04-24T15:08:28Z
Arularasan. G
2537
1926720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" /></noinclude>{{Css image crop
|Image = விநோத_ரச_மஞ்சரி.pdf
|Page = 62
|bSize = 521
|cWidth = 174
|cHeight = 165
|oTop = 80
|oLeft = 51
|Location = left
|Description =
}}
{{left_margin|3em|<poem>[{{smaller|“சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர்
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்”}}</poem>}}
'''வித்வாஜன கோலாகலன்''' எல்லாம் கற்றவன்; ஆனால், கல்விக்கேற்ற அடக்கம் இல்லாதவன்; ஆணவத்தின் சிகரம் ஆனவன்; தற்பெருமையின் தனிப்பிறவி ; வயதில் பெரியவன். யாமுனாரியரோ வயதில் இளையவர்; மாணவப் பருவத்தினர்; தம் நுட்பமதியால் மூன்று கேள்விகளை விடுத்து வித்வஜன கோலாகலனது கொட்டத்தை அடக்குகிறார். இடையிடையே இனிய பழமொழிகள் பல பின்னிக் கிடக்கும் இக்கதை படிக்கப் படிக்கப் பரவசப்படுத்தும்.
—'''பதிப்பாசிரியர்.''']
{{center|{{x-larger|<b>5<br>மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது</b>}}}}
{{larger|<b>பூ</b>}}மாதேவியின் முகதிலகம் போன்ற செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் ராஜதானியாகிய மதுரை மாநகரத்தில் எழுநூறு வருஷத்திற்கு முன்பு அரசாண்ட பாண்டிய குலத்தரசன் ஒருவனுடைய சம்ஸ்தானத்தில் வித்வஜன கோலாகலன் என்று எண்டிசையிலும் பிரசித்தமாகப் பெயர்பெற்ற சம்ஸ்தான வித்துவான் ஒருவன் இருந்தான். அவன் தர்க்கம், வியாகரணம், மீமாஞ்சை, தர்ம சாஸ்திரம் என்கிற நான்கிலும் பூரண பாண்டித்தியம் உள்ளவன். மற்ற வித்வஜனர்கள் யாவரும் அவனைக் காணுமிடத்தில் கருடனைக் கண்ட பாம்பு போலவும், யமனைக் கண்ட உயிர் போலவும் நடுங்குவார்கள். அவன் அத்தன்மையாகிய வித்தியா சாமர்த்தியம் உடையவனாதலால், பாண்டியன் அவனைச் சன்மானித்துத் தன்னருகில் அதிக கௌரவமாக வைத்துச் சம்ரக்ஷணை செய்து வந்தான் ; அவ்வித்வான் தனக்கு உண்டான வித்யா கர்வத்தினாலும், ‘கொண்டவன் பலமிருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்,’ என்பதற்கிசைய, அரசன் தன்மேல் வைத்த தயையினாலும் ஒருவரையும் மதிக்கிறதே இல்லை. பச்சோந்தி-<noinclude>{{rh|வி—5||}}</noinclude>
9vm8kascgjyfte28ze11ptelcv33eff
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/63
250
641393
1926719
2026-04-24T15:08:04Z
Arularasan. G
2537
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கப்பம் யைக் கண்டு பயந்து மயில் தன் கண்ணை அதனிடத்தில் கொண்டு போய்க் கொடுப்பது போல,பல தேசங்களிலும் இருக்கின்ற கவிஜனர்களெல்லாம் அவனுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh|58|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>கப்பம்
யைக் கண்டு பயந்து மயில் தன் கண்ணை அதனிடத்தில் கொண்டு போய்க் கொடுப்பது போல,பல தேசங்களிலும் இருக்கின்ற கவிஜனர்களெல்லாம் அவனுக்கு அஞ்சி வருஷாந்தரம் கொடுத்து வந்தார்கள். கையில் ஏடும் எழுத்தாணியும் எடுத்தவர் களிடத்திலெல்லாம் அவன் கப்பம் வாங்கி வருகையில் ஸ்ரீவைஷ்ணவ சமயாசாரியர்களுக்குள் மகிமை தங்கிய யமுனைத் துறைவர் என்றும், யாமுனாரியர் என்றும், ஸ்ரீ ஆளவந்தார் என்றும் திருநாமமுடைய அவதார புருஷரொருவர், ஏறக்குறையப் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள சிறு பிள்ளையாய்ப் பாஷியாசாரியர் என்னும் உபாத்தியாயருடைய பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந் தார். ஒரு நாள் காலையில் ஏழெட்டு நாழிகைக்கு அப்பள்ளிக் கூடத்தில் இப்பிள்ளையைக் காவலாக வைத்துவிட்டு, மற்றப் பிள்ளைகளும் உபாத்தியாயரும் போஜனத்திற்குப் போயிருந் தார்கள். அத்தருணத்தில் அந்த உபாத்தியாயர் நாலைந்து வருஷத்துக்கு வரி கொடுக்கவில்லை என்று அதைக் கேட்டு வாங்கிவர வித்வஜன கோலாகலன் அனுப்பிய தண்டற்காரன் வந்து, உபாத்தியாயர் எங்கே போனார் ?' என்று கேட்க, காவலாயிருந்த யமுனைத்துறைவர், 'எங்கள் உபாத்தியாயரைத் தேடுகிற விதம் என்ன ?' என்று கேட்டார். அச்சேவகன், 'வித்வஜனகோலாகலர் என்னும் எங்கள் வித்வசிரோமணி உங்கள் உபாத்தியாயரிடத்தில் கப்பம் வாங்கிவரச் சொன்னார் ; அது நிமித்தம் அவரைத் தேடு கிறேன், என்ன, யாமுனாரியர், ' வரி வாங்குவது எதுக்காக ?' என்ன, அவன், எங்கள் வித்வான் சகல பண்டிதர்களுக்கும் சிரேஷ்டராகையால், அவருக்கு ஏடும் எழுத்தாணியும் பிடிக்கிறவர் களெல்லாம் கொடுக்கிறது வழக்கந்தான்,' என்றான். அதைக் கேட்டு யமுனைத்துறைவர், இதென்ன வழக்கம் ? நியாயவிரோத மாய் இருக்கின்றதே ! ' பிடித்தவருக்கெல்லாம் பெண்டு போல உலகாள்பவருக்கும் வரி கொடுக்கிறது, இவனுக்கும் வரி கொடுக் கிறதா? நன்றாய் இருக்கிறது!' என்று அதிசயித்து, 'வரி கொடுக் கிறது இல்லை எனப் போய்ச் சொல்,' என்றார். அச்சமயத்தில் உபாத்தியாயர் வந்து, அதை அறிந்து, 'சிங்க சொப்பனம் கண்ட யானையைப் போல 'க் கைகால் விலவிலக்க, குடி முழுகிப் போயிற்றே! சுபாவத்திலேயே அவன் கொடியவன் ; அப்படியிருக்க, இதைக் கேட்டால் அவன் சும்மா விடுவானோ? வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு ஒரு வாய் அவல் அகப்பட்டது போலுமல்லவா? என்னை வாதுக்கு அழைப்பானே ! அந்த யமகண்டனை ஆர் வெல்லுகிறது!' என்று பயந்தார். யாமுனாரியர், தேவரீர் அதைப் பற்றிக் கண் கலக்கம் கொள்ள வேண்டுவதில்லை ; வெந்நீரில் வீடு வேகுமா ? இருப்புத் தூணைச் செல்லரிக்குமா ? அப்படியே வருமானால் நீரொன்றும் சிந்தியாமல் அடியேனை ஏவி னால், நான் போய் உமது கடாக்ஷத்தினால் ஜெயிக்கிறேன்,' என்று விண்ணப்பம் செய்தார். இவர் எத்தனை விதத்தில் சொன்னாலும்<noinclude></noinclude>
3a0cokoijpgrkkzf27m0pf0vg3yxc1h
1926728
1926719
2026-04-24T15:16:33Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|58|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>யைக் கண்டு பயந்து மயில் தன் கண்ணை அதனிடத்தில் கொண்டு போய்க் கொடுப்பது போல, பல தேசங்களிலும் இருக்கின்ற கவிஜனர்களெல்லாம் அவனுக்கு அஞ்சி வருஷாந்தரம் கப்பம் கொடுத்து வந்தார்கள். கையில் ஏடும் எழுத்தாணியும் எடுத்தவர்களிடத்திலெல்லாம் அவன் கப்பம் வாங்கி வருகையில் ஸ்ரீவைஷ்ணவ சமயாசாரியர்களுக்குள் மகிமை தங்கிய '''யமுனைத் துறைவர்''' என்றும், யாமுனாரியர் என்றும், '''ஸ்ரீ ஆளவந்தார்''' என்றும் திருநாமமுடைய அவதார புருஷரொருவர், ஏறக்குறையப் பத்துப் பன்னிரண்டு வயதுள்ள சிறு பிள்ளையாய்ப் பாஷியாசாரியர் என்னும் உபாத்தியாயருடைய பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் காலையில் ஏழெட்டு நாழிகைக்கு அப்பள்ளிக் கூடத்தில் இப்பிள்ளையைக் காவலாக வைத்துவிட்டு, மற்றப் பிள்ளைகளும் உபாத்தியாயரும் போஜனத்திற்குப் போயிருந்தார்கள். அத்தருணத்தில் அந்த உபாத்தியாயர் நாலைந்து வருஷத்துக்கு வரி கொடுக்கவில்லை என்று அதைக் கேட்டு வாங்கிவர '''வித்வஜன கோலாகலன்''' அனுப்பிய தண்டற்காரன் வந்து, ‘உபாத்தியாயர் எங்கே போனார் ?’ என்று கேட்க, காவலாயிருந்த '''யமுனைத்துறைவர்''', ‘எங்கள் உபாத்தியாயரைத் தேடுகிற விதம் என்ன ?’ என்று கேட்டார். அச்சேவகன், ‘வித்வஜனகோலாகலர் என்னும் எங்கள் வித்வசிரோமணி உங்கள் உபாத்தியாயரிடத்தில் கப்பம் வாங்கிவரச் சொன்னார் ; அது நிமித்தம் அவரைத் தேடுகிறேன்,’ என்ன, யாமுனாரியர், ‘வரி வாங்குவது எதுக்காக ?’ என்ன, அவன், ‘எங்கள் வித்வான் சகல பண்டிதர்களுக்கும் சிரேஷ்டராகையால், அவருக்கு ஏடும் எழுத்தாணியும் பிடிக்கிறவர்களெல்லாம் கொடுக்கிறது வழக்கந்தான்,' ’என்றான். அதைக் கேட்டு யமுனைத்துறைவர், ‘இதென்ன வழக்கம் ? நியாயவிரோதமாய் இருக்கின்றதே ! ’ ‘பிடித்தவருக்கெல்லாம் பெண்டு போல’ உலகாள்பவருக்கும் வரி கொடுக்கிறது, இவனுக்கும் வரி கொடுக்கிறதா? நன்றாய் இருக்கிறது!’ என்று அதிசயித்து, ‘வரி கொடுக்கிறது இல்லை எனப் போய்ச் சொல்,’ என்றார். அச்சமயத்தில் உபாத்தியாயர் வந்து, அதை அறிந்து, ‘சிங்க சொப்பனம் கண்ட யானையைப் போல ’க் கைகால் விலவிலக்க, ‘குடி முழுகிப் போயிற்றே! சுபாவத்திலேயே அவன் கொடியவன் ; அப்படியிருக்க, இதைக் கேட்டால் அவன் சும்மா விடுவானோ? வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு ஒரு வாய் அவல் அகப்பட்டது போலுமல்லவா? என்னை வாதுக்கு அழைப்பானே ! அந்த யமகண்டனை ஆர் வெல்லுகிறது!’ என்று பயந்தார். யாமுனாரியர், ‘தேவரீர் அதைப் பற்றிக் கண் கலக்கம் கொள்ள வேண்டுவதில்லை ; வெந்நீரில் வீடு வேகுமா ? இருப்புத் தூணைச் செல்லரிக்குமா ? அப்படியே வருமானால் நீரொன்றும் சிந்தியாமல் அடியேனை ஏவினால், நான் போய் உமது கடாக்ஷத்தினால் ஜெயிக்கிறேன்,’ என்று விண்ணப்பம் செய்தார். இவர் எத்தனை விதத்தில் சொன்னாலும்<noinclude></noinclude>
ia532k1i08dzs7vbcr77017qxg4biem
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/64
250
641394
1926730
2026-04-24T15:25:45Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh||மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|59}}{{rule}}</noinclude>அவைகளை உபாத்தியாயர், ‘கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தும் கண்கட்டு வித்தை’ என்பார் போல, நம்பவில்லை.
இப்படி வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் போய் இங்கே நிகழ்ந்தனவெல்லாம் சொல்ல, அவ்வித்வான், ‘கொட்டினால் தேளும் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியுமா?’ என்று கோபித்துக்கொண்டு, அந்தச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, அவனுடைய அனுமதிப்படி வாதுக்கு வரச் சொன்னான். அது கேட்டு உபாத்தியாயர் மனம் கலங்கி, ‘ஐயையோ! யாமுனாரியா, நீ என் தலைமேலே கல்லைப் போட்டாயே ! இனி நானெப்படித் தலை எடுப்பது ?’ என்று துக்கித்தார். யமுனைத் துறைவர் அவருக்கு நிர்ப்பயமாகும்படி தைரியம் சொல்லிச் சேவகனைப் பார்த்து, ‘வாது செய்கிறதற்கு உங்கள் வித்வானை இங்கே வரச் சொல்; அல்லவென்று நம்மை அவ்விடத்திற்கு அழைப்பிக்கிறதானால், மரியாதைப்படி நடந்துகொள்ளச் சொல்,’ என்றார். உடனே சத்திரசாமரம் முதலிய பரிவட்டணைகளோடு பல்லக்கு வர, அதன்மேலேறிச் சென்று மதுரையின் ராஜவீதியில் பிரவேசிக்கும் போது, உப்பரிகை மேல் உலாவிக்கொண்டிருந்த பாண்டியராஜன் கண்டு, மிகவும் ஆச்சரியம் கொண்டு, கைகொட்டிச் சிரித்தான். அவனருகிலிருந்த இராணியானவள், ‘மகா பிரபு,
நீர் நகைக்கின்ற காரணமென்ன ?’ என்றாள். மகாராஜன், ‘பெண்ணே, இதோ பார், வீதியில் பல்லக்கில் வருகிற இந்தக் குழந்தை நமது வித்வஜன கோலாகலனுடனே வாது செய்ய வருகிறதாம்!’ என்றான். இராஜ பத்தினி அக்குழந்தையின் திருமுக தேஜஸை நன்றாய் உற்றுப் பார்த்து, மகிழ்ச்சி கூர்ந்து, ‘இவர் வாது செய்வதன்றி, நமது வித்வானையும் அவருக்கு மேலானவர்களையும் ஜெயிப்பதும் அருமையல்ல,’ என்றாள். அரசனுக்கு அந்தச் சொல், ‘புண்ணிலே கோலிட்டது போல’ வருத்தத்தை விளைக்க, அவன், ‘போபோ ! நீயென்ன பேதையாய் இருக்கிறாய்! நமது வித்வானுக்கு மேலானவர்களும் உண்டென்று சொல்வது, ‘பெட்டைக் குதிரைக்கு இரட்டைக் கொம்பு முளைத்தது’ என்பது போல் இருக்கிறது. இச்சிறுபிள்ளையும் அவரை வெல்லுமா? ‘காலில்லாத முடவனும் கடலைத் தாண்டுவானா ?’ ‘மண் பூனையும் எலியைப் பிடிக்குமா ?’ இது சொப்பனந்தான்,’ என்றான். இராஜமஹிஷி, ‘வித்வான் தோற்பது நிச்சயமே ; அது இவர் முகக் குறியால் எனக்கு உள்ளங்கைப் பொருள் போல விளங்குகின்றது; சந்தேகமில்லை,’ என்றாள். இவ்வாறு இருவரும் சம்பாஷிக்கையில் அரசன், ‘நீ இந்தப் பிள்ளையை எவ்வளவு சிறப்பித்துச் சொன்னாலும், நான் நம்ப மாட்டேன்;’ ‘விரல் உரலானால், உரல் எப்படியாக மாட்டாது?’ நமது வித்வானே ஜெயிப்பார். இவர் ஆரம்பத்திலேயே தோற்பார். தோற்றால், நீ என்ன செய்வாய்?’ என, இராக்கினி, ‘மெய்யாய் இவர் தோற்றாரானால், நான் உமது தாசிக்குத் தாதியாகி, அவளிட்ட வேலை செய்வேன்!’ என்றாள்.<noinclude></noinclude>
2e75n3521769sd4qel6mqtgwtvhbewh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/830
250
641395
1926756
2026-04-24T16:28:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருள்வகையாலும் தொல்காப்பியர் காட்டிய அகத்திணை இயல்பை விடுத்து வளர்ந்த அகப்பொருள் வளர்ச்சியைக் காணலாம். இத்தகைய வளர்ச்சியை இலக்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடம்|802|கல்லாடர்}}</noinclude>பொருள்வகையாலும் தொல்காப்பியர் காட்டிய அகத்திணை இயல்பை விடுத்து வளர்ந்த அகப்பொருள் வளர்ச்சியைக் காணலாம். இத்தகைய வளர்ச்சியை இலக்கிய வகைமை வளர்ச்சி என்று ஏற்காமல் எதிர்த்த புலவர்கள் பற்றிய கதை அக்காலத்தில் உண்டு. திருக்கோவையாரின் அகப்பொருளியல்பினைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்லாடலும், அன்று சில புலவரிடையே இருந்தது என்பதனை அக்கதை மூலம் அறியலாம்.
திருக்கோவையாரில் அகத்திணை மரபு அடைந்த தளர்ச்சியினைப் பற்றிச் சிலர் சொல்லாட, அதனைக் கல்லாடனார் கண்டு திருக்கோவையாரின் சீரினை நிலைநாட்ட விழைந்து ‘கல்லாடம்’ என்னும் நூலினை யாத்தனர் என்பது தெரிகிறது. கல்லாடம் திருக்கோவையாரின் வழிநூலாகும். திருக்கோவையாரின் சீரினையும் சிறப்பினையும் நிலை நாட்டிய நூல் கல்லாடம் ஆகும்.
கல்லாடம் கற்றவர், திருக்கோவையை அகம் நுதலிய நூலாய் ஏற்பர் என்பது திண்ணம். கல்லாடம் கற்காதவர்கள் திருக்கோவையாரை அகப்பொருள் மரபினைச் சார்ந்த நூலாய் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே கல்லாடம் கற்றவனோடு கோவை நூலைக் குறைத்துக் கூறிச் சொல்லாடாதே என்னும் பொருள்படக் ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்ற முதுமொழி தோன்றியிருத்தல் கூடும். அதனால், இம்முதுமொழியும் சீரிய பொருளுடையதாகிறது.
செந்தமிழ் மொழியினது சீரினையும் தெய்வத் திருவருளின் சிறப்பினையும் கல்லாடனார் தம் நூல் முழுவதிலும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் இந்நூலாசிரியர் நற்புலமை பெற்றவர் என்பதனைக் கல்லாடம் கற்போர் தெளிவர்.
சங்க இலக்கிய அகப்பாடல்கள் இறைச்சிப் பொருளையும் உள்ளுறை உவமத்தினையும் உயிர் நாடிகளாகக் கொண்டவை. ஆனால், கல்லாடமோ இறைவனுடைய திருவிளையாடல்களைக் குறித்துக் கூறும் குறிப்புகள் கொண்டவை. சிவபெருமான் செருக்குமிக்க பிரமன் தலையைக் கிள்ளித் தன் கையிற் பலிப்பாண்டமாகக் கொண்டதும், அப்பெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியதும், இடைக்காடர் பொருட்டு இறைவன் மதுரையை விடுத்து அப்புலவரைத் தொடர்ந்து போனலும், இலங்கை வேந்தன் செருக்குற்றுக் கைலையை அகழ்ந்தபோது இறைவன் தன் காற் பெருவிரலால் ஊன்றி அவனை அழுத்தியதும், பின்னர் அவன் துயர்க்கிரங்கி அருள் செய்ததும் முதலிய இன்னபிற தொன்மங்கள் பத்திச் சுவையுடன் கல்லாடத்தில் பாடப்படுகின்றன.
மேலும், சைவ சமயத் தத்துவங்கள் இந்நூலின் கண் ஊடாடும் நுவல் பொருளாய்ச் சிறக்கின்றன. அன்றியும், பலவிடங்களில் சிற்றின்பத்தைக் காட்டிப் பேரின்பத்தைக் குறிப்பாற் சுட்டும் வித்தகம் இந்நூலின் மாண்பு எனல் வேண்டும்.
{{Right|<b>கதிர்.ம.</b>}}
<b>கல்லாடம்{{sup|1}}:</b> திருவாசகத்தால் அறியலாகும் ஒரு சிவத்தலம். இது தமிழகத்தில் விளங்கிய ஒரூராகும். இங்குச் சிவபெருமான் உமையம்மை யொடு இனிதிருந்து அருளியவற்றைக் ‘கல்லாடத்துக் கலந்தினிதருளி, நல்லாளோடு நயப்புறவெய்தியும்’ (திருவா. கீர்த்தி. 11, 12) என்று மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார். கல்லாடீச்சுரமுடையார் கோயில் என்னும் ஒரு குறிப்பு, கல்வெட்டில் உள்ளதனை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{larger|<b>கல்லாடர்</b>}} சங்க காலப் புலவருள் ஒருவர். இவர் கல்லாடனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். காண்க: கல்லாடனார்.
<b>கல்லாடர்{{sup|2}}</b> கலாவியல் என்னும் பாட்டியல் நூலைச் செய்தவர். இவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறார். இவரது நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவருடைய நூற்பாக்களுள் சில பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல் உரைகளில் எடுத்தாளப் பெற்றுள்ளன. நூற்பாக்களால் ஆகிய இவரதுநூலில் சில குறட்பாக்களும் உள்ளன.
<b>கல்லாடர்{{sup|3}}:</b> இவர் சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பதினோராந் திருமுறையினைச் சேர்ந்த திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் நூலை இயற்றியவர். ‘பிரிவின் தன்மை’ எனத் தொடங்கும் அந்நூல் 38 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவாலமைந்துள்ளது. சங்க காலக் கல்லாடர், அகப்பொருள் நூலாகிய கல்லாடத்தைச் செய்த கல்லாடர் முதலிய பிற கல்லாடர்களினின்றும் வேறு பிரித்து அறியும் வகையில் இவர் பெயர் கல்லாட தேவ நாயனார் என்று திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சிவனடியார்களுள் ஒருவராகத் திகழ்ந்த பாங்கினைக் கல்லாடதேவ நாயனார் என்ற பெயரும், சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இவர்தம் நூலும் உணர்த்துகின்றன. இவர் தொல்காப்பிய உரையாளராகிய இளம்பூரணருக்குக் காலத்தால் முற்பட்டவர். இவர் இயற்றிய திருக்கண்ணப்ப<noinclude></noinclude>
a31eh5j6x3hvpi7aih727xint2gk5x2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/831
250
641396
1926758
2026-04-24T16:50:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேவர் திருமறம், கண்ணப்ப நாயனாரின், அன்பின் வழிவந்த வீரச்செயலை விளக்குவதாக உள்ளது. திருக்காளத்தி மலையில் கண்ணப்பர் சிறப்பினை விளக்கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடர்|803|கல்லாடர்}}</noinclude>தேவர் திருமறம், கண்ணப்ப நாயனாரின், அன்பின் வழிவந்த வீரச்செயலை விளக்குவதாக உள்ளது. திருக்காளத்தி மலையில் கண்ணப்பர் சிறப்பினை விளக்கும் இவர், அங்குள்ள சிவபெருமானைக் குறிப்பிடும்போது, ‘கானப் பேருறை கண்ணுதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுகொண்டு இவ்வாசிரியர், பாண்டி நாட்டில் வாழ்ந்தவராவார் என்றும், கானப் பேர் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கும் இறைவனிடம் நேயம் மிக்கவர் என்றும் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.
<b>கல்லாடர்{{sup|4}}</b> தமிழிலுள்ள கல்லாடம் என்னும் அகப்பொருள் நூலினை இயற்றியவர். கல்லாடர் என்னும் பெயரில் சங்கப்புலவர் ஒருவர் இருப்பது கொண்டு, அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய இவரது இயற்பெயரே கல்லாடர் என்று அமைந்திருத்தல் வேண்டும் என உய்த்துணரலாம். கல்லாடம் என்னும் நூலினை இயற்றியமையால் இப்பெயர் பெற்றார் எனில், அவ்வாறு நூல் இயற்றாமல், சங்கப் புலவருள் ஒருவரும், சைவ சமயப் புலவர்களுள் ஒருவரும் இப்பெயரில் விளங்குவது கொண்டு இது இவர் இயற்பெயர் எனக் கொள்ளுவது ஏற்புடையதாகும். கல்லாடரால் செய்யப்பட்ட நூலாதலின் அந்நூல் கல்லாடம் எனப் பெயர் பெற்றது.
நூற்பாயிரத்தில் யானைமுகன் வணக்கமும் முருகன் வணக்கமும் பாடியிருப்பதாலும், நூலினுட் பலவிடங்களில் சிவபெருமான் திருவிளையாடற் செய்திகள் விதந்தோதப்பட்டிருப்பதாலும் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலனாகிறது. இந்நூலினை இயற்றி இதன் ஒவ்வொரு பாடலையும் இவர் ஆலவாய்ப் பெருமான் முன்பு ஓதிய அளவில், ஒவ்வொரு பாடலும் முடிவுறும்போது, சிவபெருமான் திருமுடி அசைத்து மகிழ்ந்தார் என்றொரு பழமரபுச் செய்தி கூறப்படுகிறது. இவரது காலம் பற்றிக் கருத்து வேறுபாடு உளதாயினும், இவர் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுவது நேரிதாகும். இரு பாயிரச் செய்யுள் நீங்கலாக 100 ஆசிரியப்பாவால் அமைந்த இவரது நூலில் ஆசிரியப்பாவுக்குரிய சிறப்புகளனைத்தையும் காணக்கூடும். இவரது கவிதையாற்றலை வியந்துரைக்கும் ஓர் ஆய்வாளர், ‘ஒத்த ஒலிகளும் வேற்றொலிகளும் இடத்திற்கேற்ப ஒருங்கிணைந்தும், அண்மையில் இணைந்தும் இடை விட்டுக் கூடியும் சேய்மையில் நின்றும் விளங்கப்’ பாடியுள்ளார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்ததாகும். காண்க: கல்லாடம்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<b>கல்லாடர்{{sup|5}}</b> தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர். இளம்பூரணர் உரை ஒன்றே தொல்காப்பியம் முழுமைக்கும் கிடைக்க, ஏனையோர் உரைகள் பகுதியாகவே கிடைத்துள்ளன, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர், பழைய உரைகாரர் ஆகியவர்களின் உரைகள் உள்ளன. இவ்வுரைகளுள் கல்லாடர் உரை சொல்லதிகாரத்தில் இடையியல் 10–ஆம் நூற்பா வரை கிடைத்துள்ளது. அவ்வுரையும் பல இடங்களில் சிதைந்து காணப்படுகிறது.
கல்லாடர் எந்நாட்டைச் சேர்ந்தவர், எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுதற்கான சான்றுகள் இல்லை. உரைவழிக் காணப்பெறும் சிறு குறிப்புகள் அவரைப் பற்றிக் கருதுவதற்குத் துணை செய்கின்றன. ‘நும் நாடு யாது என்றாற்குப் பாண்டி நாடு’ (நூ. 13 உரை) என்று கூறுவதும், நிலை என்பதற்குப் ‘பெண்ணாகத்துப் பெருஞ் சங்கரனாரது நிலை’ (நூ. 81 உரை) என்று கூறுவதும் இவர்தம் நாட்டையும் சமயத்தையும் உணர்த்துகின்றன எனக் கருதலாம்.
கல்லாடர், தமக்கு முன்னிருந்த எந்த உரையாசிரியர்களையும் பெயர் கூறிக் கருத்துகளை ஏற்பதோ மறுப்பதோ இல்லை. அதனால், இவர் எக்காலத்தைச் சேர்ந்தவர் என்று கூற இயலவில்லை. இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் போன்றோர் கொண்ட பாடங்களிலும் ஏற்பனவற்றை ஏற்றுச் செல்லும் தன்மை இவரிடம் காணப்படுகிறது.
பிரயோக விவேக நூலாசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர், ‘மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாடரும் பின்மொழியாகுபெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத்தொகையென்பர்’ (நூ. 22 உரை) என்று கல்லாடரைச் சுட்டுவர். பிரயோக விவேக நூலாசிரியர் காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டாகும். எனவே, கல்லாடர் இவருக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராய் இருத்தல் கூடும்.
தமிழ்நாட்டில் சின்னசேலம் பகுதியைத் ‘தரையர்’ என்ற இனத்தினர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்டு வந்துள்ளனர். அத்தகைய அரசர்களின் குடிப்பெயரைக் குறிக்கும் ‘தரையன்’ என்ற சொல் கல்லாடர் உரையில் (நூ. 177 உரை) காணப்படுகிறது. எனவே, கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அளவில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் எனலாம்.
சுப்பிரமணிய தீட்சிதர் குறிப்பிட்ட அப்பகுதி இப்பொழுதுள்ள கல்லாடர் உரையில் காணப்பெற<noinclude>
<b>வா.க. 6 – 51அ</b></noinclude>
6ng8vrnhlazpuyg35wlg8l5kzt9to2k
பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/65
250
641397
1926763
2026-04-25T00:45:35Z
Arularasan. G
2537
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|60|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>வேந்தன், ‘பைத்தியக்காரி, ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவார் போல’ யோசியாமல் பேசுகிறாய்; உன் சொற்படியே இவர் ஜயித்தால், நான் இவருக்கு எனது ராச்சியத்தில் பாதி பகிர்ந்து கொடுப்பேன்,’ என்றான்.
பின்பு, யமுனைத்துறைவர் அவ்வரசன் சமுகத்தில் வந்தார். அப்பொழுது அங்கு வந்த வித்வஜன கோலாகலன் அவர் வடிவைப் பார்த்து வயதைக் குறித்துக் குலுங்க நகைத்து, ‘நெடிய மகாமேருவுடனே அற்பமாகிய ஒரு திரணமானது எதிர்ப்பது போல, சுண்டு விரலத்தனை சிறுபையல் நம்முடனே வாது செய்ய வந்தானே!’ என்று அலக்ஷியம் பண்ணி, மிகவும் கர்வத்தோடே அவரை நோக்கி, ‘ஓய் சிறு பிள்ளாய், ஹரிச்சுவடி வாசித்தாயா ? உனக்கு எழுத்துக் கூட்டத் தெரியுமா ? உன் பெயரைப் பிழை இல்லாமல் எழுது வையா ? ஒரு பூனைக் குட்டியானது வேங்கைப் புலியை வெல்ல வருவது போல, கவிச் சிங்கமாகிய நம்முடன் வாதுக்கு வந்தவன் நீதானா?’ என்றான். யாமுனாரியர், இவன் ஆரம்ப சூரத்தனமாய்ப் பேசுகிறானென்று புன்னகை புரிந்து, ‘ நீர் பெரியவராயும் நாம் சிறு பிள்ளையாயும் இருப்பதைப் பற்றி நம்மை அவமதிக்கிறீர். யானை எத்தனை பெரிது ! அதைக் கண்ட உடனே உக்கிரம் கொண்டு விசையாய் எழும்பிப் பாய்ந்து அதன் மஸ்தகத்தைப் பிளக்கின்ற சிங்கக்குட்டி எத்தனை சிறிது ! மலை பிரமாண்டமானதாய் இருந்தும் அதை ஒரு விரலளவான சிற்றுளி சக்கை சக்கையாகப் பெயர்த்து எறியவில்லையா ? அறுகம்புல் நுனியில் தங்கி நிற்கின்ற தினையளவாகிய பனித்துளி பெரிய பனையளவையும் தனக்குள் அடக்கிக் காட்டவில்லையா? ஒரு பயறளவாகிய நெருப்புப் பொறியும் அல்லவோ ஆகாசமளாவிய வைக்கோற்போரைச் சுட்டெரிக் கின்றது! சிறிய மீன் சினையிலும் அதிநுட்பமாகிய வித்திலிருந்து வெகுதூரமட்டும் கிளைத்து நன்றாய்த் தழைத்து ஓங்கி மேலெழுந்து வளர்ந்து, பூமியின் கீழ் இரண்டு மூன்று புருஷபாகம் வேர்வீழ்த்து, அடர விழுது விட்டு, மட்டற்ற யானை சேனைகளோடு அரசர்களுக்கு இருக்க நிழல் கொடுக்கின்ற ஆலவிருக்ஷம் உற்பத்தியாகின்றதே! பெருந்தாழி நிறையப் பூரிக்கப்பட்ட பாலைத் துளி மோர்ப் பிரை யானது தயிராய்ப் பரிணமிக்கப் பண்ணுகின்றதே ! உலகமெங்கும் வியாபிக்கின்ற சூரியனை ஒரு கைக்குடையும் அல்லவோ மறைக்கின்றது ! இருபத்தொரு நிலைக் கோபுரம் போல உயர்ந்த தேரை நடத்துவது இறையத்தனை அச்சாணி அல்லவா ? அன்றியும், அங்குஷ்ட பிரமாண தேகத்தையுடைய அகஸ்திய முனிவர் அண்டத்தை முட்டிய விந்திய பர்வதத்தை அடக்கி, மகா சமுத்தி ரத்தையும் உட்கொள்ளவில்லையா ? இவைகளை எல்லாம் ஆலோசியாமல், இளையவர் என்றும் முதியவர் என்றும் விவரித்துக்கொண்டு வீண் காலம் போக்குவானேன் ? எடுத்த காரியத்தை நடத்தத் துணிவதே யுக்தம்,’ என்றார். வித்வான் அப்பொழுதும் இறுமாப்படங்காமல், அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, முட்டைப்<noinclude></noinclude>
4158awoi0ds0wrqzt19loadl5itg9mm
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/29
250
641398
1926777
2026-04-25T04:27:15Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மற்ற தலைமை முன்னணியினரோ அழிந்தாலோ, அல்லது அழிக்கப்பட்டாலோ கழகத்தின் "உயிர்ச்சக்தி" ஒடுங்கி விடும் என்று யார் எதிர்பார்த்தாலும் அது வீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|20||கலைஞர்}}</noinclude>மற்ற தலைமை முன்னணியினரோ அழிந்தாலோ, அல்லது அழிக்கப்பட்டாலோ கழகத்தின் "உயிர்ச்சக்தி" ஒடுங்கி விடும் என்று யார் எதிர்பார்த்தாலும் அது வீண் கனவே யாகும்.
ஒரு இயக்கத்தின் தலைவர்களும், மனிதர்கள்தான்! அவர்களைக் கல்லால் செய்து நடமாடவிடவில்லை. கல்லே தேய்ந்திடும்போது, மனித தேகம் மட்டும் என்ன
நிலையானதா?
எனவே தனி மனிதர்களையும், அவர்களது புகழ், செல் வாக்கு, திறமை இவைகளையும் மட்டுமே நம்பிக்கொண்டு ஒரு இயக்கம், தன்னுை ய இலட்சியப் பயணத்தை நடத்திட முடியாது. அந்தத் தனி மனிதர்களின் வரலாற் றுடன் ஒரு இயக்கம் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக் கலாம். ஆனால் அந்தத் தனி மனிதர்களின் வரலாற்றுடன் இயக்க வரலாறுகள் முடிந்து விடுவதில்லை. சில இயக் கங்கள், வெறும் எலும்புக் கூடுகளாகத் தோன்றி அவ்வாறே சிதைந்துவிடவும கூடும். நமது கழகம் அது வல்ல; இது எஃகுக் கோடடை!
நமது கழகத்தைப் பொறுத்தவரையில் பல்லாண்டு காலமாகப் பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தோரைக் கைதூக்கி விடுவதைத் தன் பெரும் பணியாகக் கொண்டு பாடுபட்டு வந்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனா கவும். ஏழை நடுத்தர மக்களுக்குத் துணையாகவும் திகழ்கிற கழகத்தின் வலுவையும், வளர்ச்சியையும் குன்றிடச் செய் தால்தான், தன் கட்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற தீர்மானமான முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இங்குள்ள பூர்ஷ்வாக்கள் மீது கோபமில்லை. ஆலை அதிபர்கள் மீது ஆத்திரமில்லை. நிலத்திமிங்கிலங்கள் பலர் அவர்களின் தோழர்களாகக்கூட இருக்கின்றனர். ஆனால் தி. மு. கழகத்தின் மீதுதான் சீறி விழுகிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
nqpwmh5kfcqi8rt10o1l1ek91osmee4
1926779
1926777
2026-04-25T04:32:25Z
Ramya sugumar
15106
1926779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|20||கலைஞர்}}</noinclude>மற்ற தலைமை முன்னணியினரோ அழிந்தாலோ, அல்லது அழிக்கப்பட்டாலோ கழகத்தின் “உயிர்ச்சக்தி” ஒடுங்கிவிடும் என்று யார் எதிர்பார்த்தாலும் அது வீண் கனவேயாகும்.
ஒரு இயக்கத்தின் தலைவர்களும், மனிதர்கள்தான்! அவர்களைக் கல்லால் செய்து நடமாடவிடவில்லை. கல்லே தேய்ந்திடும்போது, மனித தேகம் மட்டும் என்ன
நிலையானதா?
எனவே தனி மனிதர்களையும், அவர்களது புகழ், செல்வாக்கு, திறமை இவைகளையும் மட்டுமே நம்பிக்கொண்டு ஒரு இயக்கம், தன்னுடைய இலட்சியப் பயணத்தை நடத்திட முடியாது. அந்தத் தனி மனிதர்களின் வரலாற்றுடன் ஒரு இயக்கம் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் தனி மனிதர்களின் வரலாற்றுடன் இயக்க வரலாறுகள் முடிந்து விடுவதில்லை. சில இயக்கங்கள், வெறும் எலும்புக் கூடுகளாகத் தோன்றி அவ்வாறே சிதைந்துவிடவும கூடும். நமது கழகம் அதுவல்ல; இது எஃகுக் கோட்டை!
நமது கழகத்தைப் பொறுத்தவரையில் பல்லாண்டு காலமாகப் பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தோரைக் கைதூக்கி விடுவதைத் தன் பெரும் பணியாகக் கொண்டு பாடுபட்டு வந்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனாகவும். ஏழை நடுத்தர மக்களுக்குத் துணையாகவும் திகழ்கிற கழகத்தின் வலுவையும், வளர்ச்சியையும் குன்றிடச் செய்தால்தான், தன் கட்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற தீர்மானமான முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இங்குள்ள பூர்ஷ்வாக்கள் மீது கோபமில்லை. ஆலை அதிபர்கள் மீது ஆத்திரமில்லை. நிலத்திமிங்கிலங்கள் பலர் அவர்களின் தோழர்களாகக்கூட இருக்கின்றனர். ஆனால் தி. மு. கழகத்தின் மீதுதான் சீறி விழுகிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
6jdptm3uxysnfoauugrj0j5e2yqhxsm
1926967
1926779
2026-04-25T07:37:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|20||கலைஞர்}}</noinclude>மற்ற தலைமை முன்னணியினரோ அழிந்தாலோ, அல்லது அழிக்கப்பட்டாலோ கழகத்தின் “உயிர்ச்சக்தி” ஒடுங்கிவிடும் என்று யார் எதிர்பார்த்தாலும் அது வீண் கனவேயாகும்.
ஒரு இயக்கத்தின் தலைவர்களும், மனிதர்கள்தான்! அவர்களைக் கல்லால் செய்து நடமாடவிடவில்லை. கல்லே தேய்ந்திடும்போது, மனித தேகம் மட்டும் என்ன
நிலையானதா?
எனவே தனி மனிதர்களையும், அவர்களது புகழ், செல்வாக்கு, திறமை இவைகளையும் மட்டுமே நம்பிக்கொண்டு ஒரு இயக்கம், தன்னுடைய இலட்சியப் பயணத்தை நடத்திட முடியாது. அந்தத் தனி மனிதர்களின் வரலாற்றுடன் ஒரு இயக்கம் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் தனி மனிதர்களின் வரலாற்றுடன் இயக்க வரலாறுகள் முடிந்து விடுவதில்லை. சில இயக்கங்கள், வெறும் எலும்புக் கூடுகளாகத் தோன்றி அவ்வாறே சிதைந்துவிடவும கூடும். நமது கழகம் அதுவல்ல; இது எஃகுக் கோட்டை!
நமது கழகத்தைப் பொறுத்தவரையில் பல்லாண்டு காலமாகப் பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தோரைக் கைதூக்கி விடுவதைத் தன் பெரும் பணியாகக் கொண்டு பாடுபட்டு வந்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனாகவும். ஏழை நடுத்தர மக்களுக்குத் துணையாகவும் திகழ்கிற கழகத்தின் வலுவையும், வளர்ச்சியையும் குன்றிடச் செய்தால்தான், தன் கட்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற தீர்மானமான முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இங்குள்ள பூர்ஷ்வாக்கள் மீது கோபமில்லை. ஆலை அதிபர்கள் மீது ஆத்திரமில்லை. நிலத் திமிங்கிலங்கள் பலர் அவர்களின் தோழர்களாகக்கூட இருக்கின்றனர். ஆனால் தி. மு. கழகத்தின் மீதுதான் சீறி விழுகிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
gopm001yyi7z3ion4769zrqh3c6z933
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/30
250
641399
1926782
2026-04-25T04:47:08Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்ன காரணம் தெரியுமா? ஆலயத்துக்கு அருகாமையில் பூக்கடை வைத்திருப்பவனுக்கு தேங்காய்க் கடைக்காரன் மீது பொறாமை எழாது! புதிதாக ஒரு பூக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||21}}</noinclude>என்ன காரணம் தெரியுமா?
ஆலயத்துக்கு அருகாமையில் பூக்கடை வைத்திருப்பவனுக்கு தேங்காய்க் கடைக்காரன் மீது பொறாமை எழாது! புதிதாக ஒரு பூக்கடை அருகாமையிலே வந்து பூக்களும் மலிவான விலைக்குத் தரப்படுபவைகளாக இருந்து; ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்கேயே பூ வாங்குகிற நிலைமையும் உருவாகிவிட்டால், அந்தக் கடையின் மீது பொறாமையும் புகைச்சலும் பழைய கடைக்காரனுக்கு ஏற்படத்தான் செய்யும். அதுவும் இவன் ரோஜாவுக்கு இடையே சிகப்பு அரளியையும் சேர்த்துக் கட்டி எல்லாமே ரோஜா எனக்கூறி கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன். அதனால் புதிய பூக்கடை மீது காய்ந்து விழத்தான் செய்வான். கல்லையும் மண்ணையும் வாரி இறைக்கத்தான் செய்வான். அந்த மலர்களில் ‘பூ நாகம்’ ஒளிந்திருக்கிறது என்று கூச்சல் போடத்தான் செய்வான். “சவத்துக்குப் போடும் மலர் அது! சாமிக்குப் போடலாமா?” என்று ஓலமிடத்தான் செய்வான். அந்தப் பழைய பூக்கடைக்காரன் நிலைமையிலேதான் இன்றைய இந்தியகம்யூனிஸ்டுகள் வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள். புதிய பூக்கடையை எப்படியும் ஒழிக்கலாம் என்று முயன்று, முடியாத காரணத்தால் “பூ நாகம் இருக்கிறது” என்று
பயமுறுத்துவதுபோல, பாட்டாளிச் சமூகத்திற்காகவும், ஏழை நடுத்தர மக்களுக்காகவும் பாடுபடுகிற கழகத்தினரைப் பார்த்து “ஆகா! இவர்கள் அமெரிக்க ஏஜண்டுகள்!” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
தி. மு. கழகம். தன் மீது “கம்யூனிஸ்டு” என்ற லேபிளை, நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளாவிட்டாலும்—சமதர்ம, சமத்துவ சமுதாயம் காண உ ழைத்து வருகிறது. பொதுவுடமைக் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறது. சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல்வாய்க்காலும் நெற்சேர உழுதுஉழுது பயன்-<noinclude>
க—7-2</noinclude>
8py7mr8hs2m4sqk6doisykxcn6xe9uh
1926969
1926782
2026-04-25T07:39:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||21}}</noinclude>என்ன காரணம் தெரியுமா?
ஆலயத்துக்கு அருகாமையில் பூக்கடை வைத்திருப்பவனுக்கு தேங்காய்க் கடைக்காரன் மீது பொறாமை எழாது! புதிதாக ஒரு பூக்கடை அருகாமையிலே வந்து பூக்களும் மலிவான விலைக்குத் தரப்படுபவைகளாக இருந்து; ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்கேயே பூ வாங்குகிற நிலைமையும் உருவாகிவிட்டால், அந்தக் கடையின் மீது பொறாமையும் புகைச்சலும் பழைய கடைக்காரனுக்கு ஏற்படத்தான் செய்யும். அதுவும் இவன் ரோஜாவுக்கு இடையே சிகப்பு அரளியையும் சேர்த்துக் கட்டி எல்லாமே ரோஜா எனக்கூறி கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன். அதனால் புதிய பூக்கடை மீது காய்ந்து விழத்தான் செய்வான். கல்லையும் மண்ணையும் வாரி இறைக்கத்தான் செய்வான். அந்த மலர்களில் ‘பூ நாகம்’ ஒளிந்திருக்கிறது என்று கூச்சல் போடத்தான் செய்வான். “சவத்துக்குப் போடும் மலர் அது! சாமிக்குப் போடலாமா?” என்று ஓலமிடத்தான் செய்வான். அந்தப் பழைய பூக்கடைக்காரன் நிலைமையிலேதான் இன்றைய இந்தியகம்யூனிஸ்டுகள் வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள். புதிய பூக்கடையை எப்படியும் ஒழிக்கலாம் என்று முயன்று, முடியாத காரணத்தால் “பூ நாகம் இருக்கிறது” என்று
பயமுறுத்துவதுபோல, பாட்டாளிச் சமூகத்திற்காகவும், ஏழை நடுத்தர மக்களுக்காகவும் பாடுபடுகிற கழகத்தினரைப் பார்த்து “ஆகா! இவர்கள் அமெரிக்க ஏஜண்டுகள்!” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
தி. மு. கழகம், தன் மீது “கம்யூனிஸ்டு” என்ற லேபிளை, நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளாவிட்டாலும்—சமதர்ம, சமத்துவ சமுதாயம் காண உ ழைத்து வருகிறது. பொதுவுடமைக் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறது. சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல்வாய்க்காலும் நெற்சேர உழுதுஉழுது பயன்-<noinclude>
க—7-2</noinclude>
edmf6lq68yjv43hx9u0co86aitu03ip
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/31
250
641400
1926783
2026-04-25T04:47:43Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 22 கலைஞர் ha விளைக்கும் நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? என்று கேள்விக்குறி எழுப்பி வருகிறது. தான் ஆற்றவேண்டிய பணிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
22
கலைஞர்
ha
விளைக்கும் நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? என்று கேள்விக்குறி எழுப்பி வருகிறது.
தான் ஆற்றவேண்டிய பணியைக் கழகம் தன்னம்பிக் கையுடன் ஆற்றுவதாலும், ஆர்வத்துடன் ஆற்றுவ தாலும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் வழியில்லாமற் போய்விட்டது! யாருடனாவது துணை சேர வேண்டியது, பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு பிறகு அவர்களை வசைபாட வேண்டியது. இதுவே தமிழ்நாட்டில் அவர்களின் வரலாறு! அந்த வசை பாடும் காண்டத்தின் ஒரு கட்டமே கழகத்தை அமெரிக் காவின் ஏஜெண்டு நிறுவனம் என்று கூறுவதாகும்.
இந்தியப் பேரரசின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்பவே கழகம் தனது செயல்முறைத் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு, எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜெண்டு நிறுவனங்களாக இங்குள்ள கட்சிகளை அனுமதிக்காது; அனுமதிக்கவும் கூடாது. அமெரிக்காவுக்கு ஏஜெண்டு என்றாலும்; ரஷ்யாவுக்கு ஏஜெண்டு என்றாலும் பண்டித நேரு காலத்தில்-"சீனா வுக்கு ஏஜெண்டு" என்ற நிலையில் சிலபேர் இருந்தார். களே; அதுபோல எதுவாயினும் ஒரே ரகம்தான்!
வெளிநாடுகளுடன் நட்புறவு தேவை! நிலைமைகளுக் கேற்ப, இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து, உரிய நாடுகளுடன் நட்புறவு கொள்கிறது. இந்திய அரசு, வெளிநாட்டுக் கொள்கை பற்றி எடுத்த முடிவை, கழகம் என்றைக்குமே எதிர்த்தது கிடையாது. அமெரிக்க நாட்டு உதவியை இந்தியா பெற்றதும் உண்டு; பிறகு ஒதுக்கியதும் உண்டு. ரஷ்ய நாட்டு உதவிகளை இந்தியா பெருமளவு பெற்று நல்ல நட்புறவுடன் திகழ் கிறது என்றால், அதிலே நமக்கு இருவித கருத்துக் களுக்கே இடமில்லை.<noinclude></noinclude>
54gu6jz9bwjkrxhafpqis1cn4lcmpjy
1926784
1926783
2026-04-25T04:49:06Z
Ramya sugumar
15106
1926784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|22||கலைஞர்}}</noinclude>விளைக்கும் நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? என்று கேள்விக்குறி எழுப்பி வருகிறது.
தான் ஆற்றவேண்டிய பணியைக் கழகம் தன்னம்பிக் கையுடன் ஆற்றுவதாலும், ஆர்வத்துடன் ஆற்றுவ தாலும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் வழியில்லாமற் போய்விட்டது! யாருடனாவது துணை சேர வேண்டியது, பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு பிறகு அவர்களை வசைபாட வேண்டியது. இதுவே தமிழ்நாட்டில் அவர்களின் வரலாறு! அந்த வசை பாடும் காண்டத்தின் ஒரு கட்டமே கழகத்தை அமெரிக் காவின் ஏஜெண்டு நிறுவனம் என்று கூறுவதாகும்.
இந்தியப் பேரரசின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்பவே கழகம் தனது செயல்முறைத் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு, எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜெண்டு நிறுவனங்களாக இங்குள்ள கட்சிகளை அனுமதிக்காது; அனுமதிக்கவும் கூடாது. அமெரிக்காவுக்கு ஏஜெண்டு என்றாலும்; ரஷ்யாவுக்கு ஏஜெண்டு என்றாலும் பண்டித நேரு காலத்தில்-"சீனா வுக்கு ஏஜெண்டு" என்ற நிலையில் சிலபேர் இருந்தார். களே; அதுபோல எதுவாயினும் ஒரே ரகம்தான்!
வெளிநாடுகளுடன் நட்புறவு தேவை! நிலைமைகளுக் கேற்ப, இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து, உரிய நாடுகளுடன் நட்புறவு கொள்கிறது. இந்திய அரசு, வெளிநாட்டுக் கொள்கை பற்றி எடுத்த முடிவை, கழகம் என்றைக்குமே எதிர்த்தது கிடையாது. அமெரிக்க நாட்டு உதவியை இந்தியா பெற்றதும் உண்டு; பிறகு ஒதுக்கியதும் உண்டு. ரஷ்ய நாட்டு உதவிகளை இந்தியா பெருமளவு பெற்று நல்ல நட்புறவுடன் திகழ் கிறது என்றால், அதிலே நமக்கு இருவித கருத்துக் களுக்கே இடமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
947pfworco0hvrzklt0n9uz7j6lwewx
1926786
1926784
2026-04-25T04:53:11Z
Ramya sugumar
15106
1926786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|22||கலைஞர்}}</noinclude>விளைக்கும் நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? என்று கேள்விக்குறி எழுப்பி வருகிறது.
தான் ஆற்றவேண்டிய பணியைக் கழகம் தன்னம்பிக்கையுடன் ஆற்றுவதாலும், ஆர்வத்துடன் ஆற்றுவதாலும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் வழியில்லாமற் போய்விட்டது! யாருடனாவது துணை சேர வேண்டியது, பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு பிறகு அவர்களை வசைபாட வேண்டியது. இதுவே தமிழ்நாட்டில் அவர்களின் வரலாறு! அந்த வசைபாடும் காண்டத்தின் ஒரு கட்டமே கழகத்தை அமெரிக்காவின் ஏஜெண்டு நிறுவனம் என்று கூறுவதாகும்.
இந்தியப் பேரரசின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்பவே கழகம் தனது செயல்முறைத் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு, எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜெண்டு நிறுவனங்களாக இங்குள்ள கட்சிகளை அனுமதிக்காது; அனுமதிக்கவும் கூடாது. அமெரிக்காவுக்கு ஏஜெண்டு என்றாலும்; ரஷ்யாவுக்கு ஏஜெண்டு என்றாலும் பண்டித நேரு காலத்தில்—“சீனாவுக்கு ஏஜெண்டு” என்ற நிலையில் சிலபேர் இருந்தார்களே; அதுபோல எதுவாயினும் ஒரே ரகம்தான்!
வெளிநாடுகளுடன் நட்புறவு தேவை! நிலைமைகளுக்கேற்ப, இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து, உரிய நாடுகளுடன் நட்புறவு கொள்கிறது. இந்திய அரசு, வெளிநாட்டுக் கொள்கை பற்றி எடுத்த முடிவை, கழகம் என்றைக்குமே எதிர்த்தது கிடையாது. அமெரிக்க நாட்டு உதவியை இந்தியா பெற்றதும் உண்டு; பிறகு ஒதுக்கியதும் உண்டு. ரஷ்ய நாட்டு உதவிகளை இந்தியா பெருமளவு பெற்று நல்ல நட்புறவுடன் திகழ்கிறது என்றால், அதிலே நமக்கு இருவித கருத்துக்களுக்கே இடமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
q19r004ji38lk6lc58uvzkmreg3xvsa
1926970
1926786
2026-04-25T07:40:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|22||கலைஞர்}}</noinclude>விளைக்கும் நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்? என்று கேள்விக்குறி எழுப்பி வருகிறது.
தான் ஆற்றவேண்டிய பணியைக் கழகம் தன்னம்பிக்கையுடன் ஆற்றுவதாலும், ஆர்வத்துடன் ஆற்றுவதாலும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் வழியில்லாமற் போய்விட்டது! யாருடனாவது துணை சேர வேண்டியது, பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டு பிறகு அவர்களை வசைபாட வேண்டியது. இதுவே தமிழ்நாட்டில் அவர்களின் வரலாறு! அந்த வசைபாடும் காண்டத்தின் ஒரு கட்டமே கழகத்தை அமெரிக்காவின் ஏஜெண்டு நிறுவனம் என்று கூறுவதாகும்.
இந்தியப் பேரரசின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்பவே கழகம் தனது செயல்முறைத் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு, எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜெண்டு நிறுவனங்களாக இங்குள்ள கட்சிகளை அனுமதிக்காது; அனுமதிக்கவும் கூடாது. அமெரிக்காவுக்கு ஏஜெண்டு என்றாலும்; ரஷ்யாவுக்கு ஏஜெண்டு என்றாலும் பண்டித நேரு காலத்தில்—“சீனாவுக்கு ஏஜெண்டு” என்ற நிலையில் சிலபேர் இருந்தார்களே; அதுபோல எதுவாயினும் ஒரே ரகம்தான்!
வெளிநாடுகளுடன் நட்புறவு தேவை! நிலைமைகளுக்கேற்ப, இந்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து, உரிய நாடுகளுடன் நட்புறவு கொள்கிறது. இந்திய அரசு, வெளிநாட்டுக் கொள்கை பற்றி எடுத்த முடிவை, கழகம் என்றைக்குமே எதிர்த்தது கிடையாது. அமெரிக்க நாட்டு உதவியை இந்தியா பெற்றதும் உண்டு; பிறகு ஒதுக்கியதும் உண்டு. ரஷ்ய நாட்டு உதவிகளை இந்தியா பெருமளவு பெற்று நல்ல நட்புறவுடன் திகழ்கிறது என்றால், அதிலே நமக்கு இருவித கருத்துக்களுக்கே இடமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
ss1o0qpm47qcay0vu2rtzmoj1dq0m2b
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/32
250
641401
1926787
2026-04-25T04:54:03Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 23 எந்த உறவும், மற்றவர்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்தி விடக் கூடாது என்பதிலே மத்திய அரசு, கவனமாகத் தானிருக்கிறது. கவனமாகத் தானிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
23
எந்த உறவும், மற்றவர்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்தி விடக் கூடாது என்பதிலே மத்திய அரசு, கவனமாகத் தானிருக்கிறது. கவனமாகத் தானிருக்க வேண்டும்.
'பங்களாதேஷ்' போரின்போது அமெரிக்கக் கப்பம் படை இந்துமாக் கடல் நோக்கி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், தமிழகத்தில் தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் அமெரிக்காவை நோக்கி எதிர்ப்புக்குரல் கொடுத்ததை, இந்திய கம்யூனிஸ்டுகள் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிடவில்லை தி. மு.க. மற்றும் எல்லாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அமெரிக்கத் தூதரகத் துக்கு ஊர்வலமாகச் சென்று தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர்.
நேற்றுக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சவான் அவர்கள், "சோவியத் யூனிய னுடன் இந்திய உறவு நன்றாக இருக்கிறது. அமெரிக்கா வுடன் இந்திய உறவை அபிவிருத்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"
என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். வெளி நாட்டு உறவுகள் எப்படி அமைந்திடல் நன்று என்பதை சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுப்புமிக்க இடத்திலே இருக்கும் திரு. சவானைப் போன்றவர்களின் கருத்தைக் கழகம், என்றைக்குமே புறக்கணித்ததில்லை பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களோ, மத்திய அரசில் உள்ளவர் களோ, வெளிநாட்டு உறவு நிலைமைகளைப் பற்றி சிந்தித்துச் செயல்படுகிற பொறுப்புக்களில் இருக்கிறபோது, இங்குள்ள இந்திய கம்யூனிஸ்டுகள். “இதோ! அமெரிக்க ஏஜெண்டு! அதோ! அமெரிக்க. என்று தேவையற்ற பொய்க் கூப்பாசிக் போட்டு, உங்களை ஏற்படுத்து கிற போக்கு
தமிழ் நூை
அவர்களது கட்சியின் அரசியல்
கருதியே அல்லாமல் வேறல்ல
லாபம்
தமிழ்
100 905<noinclude></noinclude>
iapwy6oe4jnfx5o1t938i8ny5tscxlh
1926788
1926787
2026-04-25T05:02:12Z
Ramya sugumar
15106
1926788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||23}}</noinclude>எந்த உறவும், மற்றவர்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்தி விடக் கூடாது என்பதிலே மத்திய அரசு, கவனமாகத் தானிருக்கிறது. கவனமாகத் தானிருக்க வேண்டும்.
பங்களாதேஷ்' போரின்போது அமெரிக்கக் கப்பம் படை இந்துமாக் கடல் நோக்கி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், தமிழகத்தில் தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் அமெரிக்காவை நோக்கி எதிர்ப்புக்குரல் கொடுத்ததை, இந்திய கம்யூனிஸ்டுகள் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிடவில்லை தி. மு.க. மற்றும் எல்லாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அமெரிக்கத் தூதரகத் துக்கு ஊர்வலமாகச் சென்று தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர்.
நேற்றுக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சவான் அவர்கள், "சோவியத் யூனிய னுடன் இந்திய உறவு நன்றாக இருக்கிறது. அமெரிக்கா வுடன் இந்திய உறவை அபிவிருத்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"
என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். வெளி நாட்டு உறவுகள் எப்படி அமைந்திடல் நன்று என்பதை சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுப்புமிக்க இடத்திலே இருக்கும் திரு. சவானைப் போன்றவர்களின் கருத்தைக் கழகம், என்றைக்குமே புறக்கணித்ததில்லை பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களோ, மத்திய அரசில் உள்ளவர்களோ, வெளிநாட்டு உறவு நிலைமைகளைப் பற்றி சிந்தித்துச் செயல்படுகிற பொறுப்புக்களில் இருக்கிறபோது, இங்குள்ள இந்திய கம்யூனிஸ்டுகள். “இதோ! அமெரிக்க ஏஜெண்டு! அதோ! அமெரிக்க ஏஜெண்டு என்று தேவையற்ற பொய்க் கூப்பாடுக்களை போட்டு, குழப்பகளை ஏற்படுத்துகிற போக்கு; அவர்களது கட்சியின் அரசியல் லாபம் கருதியே அல்லாமல் வேறல்ல!
{{nop}}<noinclude></noinclude>
cd1rh43qi9grmc5g23fws7p4zq3ivyf
1926789
1926788
2026-04-25T05:04:39Z
Ramya sugumar
15106
1926789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||23}}</noinclude>எந்த உறவும், மற்றவர்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதிலே மத்திய அரசு, கவனமாகத் தானிருக்கிறது. கவனமாகத் தானிருக்க வேண்டும்.
‘பங்களாதேஷ்’ போரின்போது அமெரிக்கக் கப்பற் படை இந்துமாக் கடல் நோக்கி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், தமிழகத்தில் தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் அமெரிக்காவை நோக்கி எதிர்ப்புக்குரல் கொடுத்ததை, இந்திய கம்யூனிஸ்டுகள் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிடவில்லை தி. மு.க. மற்றும் எல்லாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அமெரிக்கத் தூதரகத்துக்கு ஊர்வலமாகச் சென்று தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர்.
நேற்றுக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சவான் அவர்கள், “சோவியத் யூனியனுடன் இந்திய உறவு நன்றாக இருக்கிறது. அமெரிக்காவுடன் இந்திய உறவை அபிவிருத்தி செய்ய தக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”
என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். வெளி நாட்டு உறவுகள் எப்படி அமைந்திடல் நன்று என்பதை சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுப்புமிக்க இடத்திலே இருக்கும் திரு. சவானைப் போன்றவர்களின் கருத்தைக் கழகம், என்றைக்குமே புறக்கணித்ததில்லை பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களோ, மத்திய அரசில் உள்ளவர்களோ, வெளிநாட்டு உறவு நிலைமைகளைப் பற்றி சிந்தித்துச் செயல்படுகிற பொறுப்புக்களில் இருக்கிறபோது, இங்குள்ள இந்திய கம்யூனிஸ்டுகள். “இதோ! அமெரிக்க ஏஜெண்டு! அதோ! அமெரிக்க ஏஜெண்டு என்று தேவையற்ற பொய்க் கூப்பாடுக்களை போட்டு, குழப்பகளை ஏற்படுத்துகிற போக்கு; அவர்களது கட்சியின் அரசியல் லாபம் கருதியே அல்லாமல் வேறல்ல!
{{nop}}<noinclude></noinclude>
qkbk2qvsyaf9iztv62sf0cvs8suxo4l
1926971
1926789
2026-04-25T07:41:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||23}}</noinclude>எந்த உறவும், மற்றவர்களுக்கு நம்மைக் கட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதிலே மத்திய அரசு, கவனமாகத் தானிருக்கிறது. கவனமாகத் தானிருக்க வேண்டும்.
‘பங்களாதேஷ்’ போரின்போது அமெரிக்கக் கப்பற் படை இந்துமாக் கடல் நோக்கி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், தமிழகத்தில் தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் அமெரிக்காவை நோக்கி எதிர்ப்புக்குரல் கொடுத்ததை, இந்திய கம்யூனிஸ்டுகள் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிடவில்லை தி. மு.க. மற்றும் எல்லாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அமெரிக்கத் தூதரகத்துக்கு ஊர்வலமாகச் சென்று தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர்.
நேற்றுக்கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சவான் அவர்கள், “சோவியத் யூனியனுடன் இந்திய உறவு நன்றாக இருக்கிறது. அமெரிக்காவுடன் இந்திய உறவை அபிவிருத்தி செய்ய தக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”
என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். வெளி நாட்டு உறவுகள் எப்படி அமைந்திடல் நன்று என்பதை சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுப்புமிக்க இடத்திலே இருக்கும் திரு. சவானைப் போன்றவர்களின் கருத்தைக் கழகம், என்றைக்குமே புறக்கணித்ததில்லை பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களோ, மத்திய அரசில் உள்ளவர்களோ, வெளிநாட்டு உறவு நிலைமைகளைப் பற்றி சிந்தித்துச் செயல்படுகிற பொறுப்புக்களில் இருக்கிறபோது, இங்குள்ள இந்திய கம்யூனிஸ்டுகள். “இதோ! அமெரிக்க ஏஜெண்டு! அதோ! அமெரிக்க ஏஜெண்டு என்று தேவையற்ற பொய்க் கூப்பாடுக்களை போட்டு, குழப்பகளை ஏற்படுத்துகிற போக்கு; அவர்களது கட்சியின் அரசியல் லாபம் கருதியே அல்லாமல் வேறல்ல!
{{nop}}<noinclude></noinclude>
0v59tj7a4garhxpbiep06xhte8q9kxo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/581
250
641402
1926790
2026-04-25T05:30:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேற்றுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பெறச் சட்டம், குடிமதிப்பு ஆணையகத்திற்கு மிகையான உயர் அதிகாரங்களை (Extraordinary Powers) வழங்கியுள்ளது. கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமதிப்பு|553|குடிமதிப்பு}}</noinclude>வேற்றுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பெறச் சட்டம், குடிமதிப்பு ஆணையகத்திற்கு மிகையான உயர் அதிகாரங்களை (Extraordinary Powers) வழங்கியுள்ளது.
குடிமதிப்பு ஆணையகம் மைய அரசில் உள்நாட்டுத் துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) கீழ் ஓர் அரசுத் துறையாக விளங்குகிறது. குடிமதிப்பிற்கான திட்டங்களை வரைதல், வினா நிரலை உருவாக்கல், புள்ளி விவரங்களைத் தொகுத்தல், வெளியிடுதல் போன்ற தொடர் பணிகளைச் சிறப்பான முறையில் நிறைவேற்றக் குடிமதிப்பு ஆணையகத்தில் நிலையான பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். குடிமதிப்பு நடத்தப்படும் ஆண்டு. திங்கள், வார நாட்களில் மட்டும் தேவைப்படும் பல பணிகளுக்கு மைய, மாநில அரசுப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். குடிமதிப்பு ஆணையகம் குடிமதிப்புக் கணிப்பில் ஈடுபடும் பலவகைப்பட்ட பணியாளர்களுக்கும், மாவட்டக் குடிமதிப்பு அலுவலர்களுக்கும் புள்ளி விவரச் சேகரிப்புப் பணி, இடம், நடத்தை ஆகியன பற்றிய செறிந்த பயிற்சி (Intensive Training) அளிக்கிறது, முன்குறித்த ஆய்வுகளின்படி (Pilot Study) வினாநிரல்களை நிரப்பிச் சேகரித்த புள்ளி விவரங்களைப் பகுத்தாராய்ந்து, சீரான (Uniform) மாற்றங்களை நடைமுறையில் செயற்படுத்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியருக்குக் (Collector of District) கீழ் மாவட்டக் குடிமதிப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள் அவர்களின் கண்காணிப்பின்கீழ் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் விருப்பத் தொண்டர்கள் (Volunteers) போன்றோர் இல்லந்தோறும் சென்று வினாநிரலைப் பயன்படுத்திப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கப் பணிக்கப்படுவர், இப்பணியாளர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர் என்பதால் இப்பணியையும் தங்கள் பணியின் ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றப் பணிக்கப்படுகின்றனர். இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியரல்லாதோர் நாட்டுக்கு அளிக்கும் தொண்டாகக் கருதிப் பணியாற்றுகின்றனர். குடிமதிப்புப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பவர்களுக்கும் (Enumerators) கண்காணிப்பாளர்களுக்கும் 1951 வரை எவ்வகையான ஊதியமும் வழங்கப்படவில்லை. அதற்கு அடுத்த 1961-ஆம் ஆண்டைய குடிமதிப்பிலிருந்து புள்ளிவிவரங்களைச் சோரிப்பவர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் 93 சிறுதொகை மதிப்பூதியமாகக் (Honorarium) கொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் 1931-ஆம் ஆண்டுவரை ஓரிரவுக் கணிப்பு முறை பின்பற்றப்பட்டது. இக்கணிப்பு முறையினால் குடிமதிப்புக் கணிப்பிற்கு ஆகும் செலவும், பணியாளர்களின் எண்ணிக்கையும் மிகை எனவும் சிலர் இருமுறை எண்ணப்படுகின்றனர் எனவும் கருதப்பட்டன. மேலும் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களைச் சரிபார்க்கத் தேவையான முறைகள் உருவாகவில்லை, சமூகப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படவில்லை. கணிப்பு நாளை வரையறுப்பதிலும் சிக்கல்கள் காணப்பட்டன. காங்கிரசுக் கட்சி குடிமதிப்பிற்கு ஒத்துழைப்பு நல்காததுடன்மர்களும் அதன் இன்றியமையாமை, இலக்குகள் ஆகியவற்றை உணர்ந்து பொறுப்புடன் உண்மை விவரங்களைக் கொடுக்கவில்லை, பொதுவாக எல்லாக் குடிமதிப்புக் கணிப்பிற்கும் முன்னர் எடுத்துக்காட்டு ஆய்வுக் (Sample Survey) கணிப்பு நடத்தி, அதன் பகுத்தாய்வின் மூலம் மாற்றங்களைப்புகுத்தி, நிகழக் கூடிய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கின்றனர்.
இந்தியாவின் எட்டாம் குடிமதிப்புக் கணிப்பு 1941-இல் இரண்டாம் உலகப்போரின் காலத்தில் நடைபெற்றது. அக்கணிப்பில் ஓரிரவுக் கணிப்பு முறை கைவிடப்பட்டு கணிப்புக் காலமுறை பின்பற்றப்பட்டது. பொது வினாப் பட்டியலுக்குப் (Schedule) பதில் தனி ஆன் விவர வினாத் தாளைப் (Slips) பயன்படுத்தினர். விவரங்களைச் சொற்களில் எழுதாமல் அதற்கென வகைப்படுத்தப்பட்ட குறியீடுகளில் எழுதினர். அதனால் புள்ளிவிவரத் தொகுப்பு எளிதாயிற்று, இக்கணிப்பில் முந்தைய கணிப்புகளை விடக் கூடுதலான மக்கள்தொகை விவரங்கள், ஆண் பெண் விகிதம், பிறப்பு-இறப்பு விகிதம், வயதுப் பிரிவு, கல்வியறிவு போன்றவை. குறித்த விரிவான விளக்கங்கள் பெறப்பட்டன. போர் நடந்துகொண்டிருந்ததால் வேலைப்பகுப்பு பற்றிய விவரம் சேகரித்தலில்லை. சேகரிக்கப்பட்ட விவரங்களும் முழுமையற்றனவாகவும், தரக் குறைவானவையாகவும் இருந்தன. கணக்கீடு முடிவுற்றவுடன் இரண்டு விழுக்காடு வினாநிரல்களை மறு ஆய்வு செய்தனர்.
நாடு விடுதலையடைத்த பின் 1951-இல் முதலாம் குடிமதிப்புக் கணிப்பு நடைபெற்றது. கணிப்பு அணுகுமுறையிலும், மிகுதியான புள்ளி விவரங்கள் சேகரிப்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் புகுத்தப்பட்டன. குடிமக்களின் நாட்டுப் பதிவேடு (National Register of Citizan) ஊரகங்களுக்கும் நகரங்களுக்கும் உருவாக்கப்பட்டன. தனித்தானில் சேரிக்கபடும் விவரங்களை நாட்டுப் பதிவேட்டில் எழுதினர்.<noinclude></noinclude>
kzaxduak0iaj86a58d3ljmyahtkto4t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/582
250
641403
1926794
2026-04-25T05:47:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாதி, இனம் பற்றிய விவரங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேகரிக்கப்பட்டன. இடப்பெயர்வு (Migration), பொருளாதார நிலை, வேலைவாய்ப்புகள், வேலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமதிப்பு|554|குடிமதிப்பு}}</noinclude>சாதி, இனம் பற்றிய விவரங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேகரிக்கப்பட்டன. இடப்பெயர்வு (Migration), பொருளாதார நிலை, வேலைவாய்ப்புகள், வேலையின்மை போன்றவை குறித்த விவரங்கள், சேகரிக்கப்பட்டமை இக்கணிப்பின் சிறப்புத் தன்மையாகும். புள்ளி விவரங்களின் மறு ஆய்வின் மூலம், 11 விழுக்காடு மக்கள்தொகை குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 1961-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடிமதிப்புக் கணிப்பிலும், கூடுதல் பொருளாதார, சமூகப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தியக் குடிமதிப்புக் கணிப்பின் நூறாண்டு நிறைவேறும் நிலையில் 1971-ஆம் ஆண்டுக் குடிமதிப்புக் கணக்கிடு செய்யப்பட்டது. இக்கணிப்பில் முதன்முதலாக நிறுவனங்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. பெண்களின் மகப்பேறு நிலை, தொழில் நுட்பக் கல்வி, நகரியல் (Urbanisation) இடப்பெயர்வு ஆகியன பற்றிய புள்ளிவிவரங்களைச் சேரிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் இக்குடிமதிப்புக் கணிப்பின் சிறப்பியல்புகளாகும்.
இந்தியாவின் 1981-ஆம் ஆண்டைய குடிமதிப்பு பிப்பிரவர், மார்ச்சு திங்களில் கணக்கீடு செய்யப்பட்டது. மார்ச்சுத் திங்கள் முதலாம் நாள் சூரிய உதயம் (Sun Rise) குடிமதிப்புக் கணிப்பின் மறுயக்கப்பட்ட காலமாகக் (Reference Point of Time) குறிக்கப்பட்டது. உறைவிடமற்றோச் (Homeless), பிப்பிரவரி 28-ஆம் நாள் இரவுக் கணிப்பில் சேர்க்கப்பட்டனர். பனி மிகையான பகுதிகள் அடங்கிய சம்முகாசுமீர் (Jammu&Kashmir) இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சிக்கீம், அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களில் மே திங்கள் 6 முதல் 10-ஆம் நாள் வரை கணக்கீடு செய்யப்பட்டது. குடிமதிப்பிற்கென வரையறுக்கப்பட்ட காலம் மே திங்கள் ஆறாம் நாளின் சூரிய உதயமாகும்.
அசாம் (Assam) மாநிலத்தின் அமைதியின்மை காரணமாக அங்குக் குடிமதிப்பு 1981-இல் நடைபெறவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகைப் பட்டியலிலும், மாநிலப் பட்டியங்களிலும் அசாம் மாநில மக்கள்தொகைக் கருத்துருவமைப்பின்படி (Projected Population) கணிப்பீடு செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுத்துப் பட்டியலிடப்பட்ட 1981-ஆம் ஆண்டைய இந்தியக் குடிமதிப்பின் சிறப்புத் தொடர் தலைப்புகளாவன (Tabulation Series) : 1) பொது மக்கள்தொகைப் பட்டியல்கள், 2) பொதுப் பொருளாதாரப் பட்டியல்கள், 3) சமூகப் பண்பாட்டுப் பட்டியல்கள், 4) சமூக இடப்பெயர்வுப் பட்டியல்கள், 5) சமூகக் கருவளப் பட்டியல்கள். 6) உறைவிடங்களும் உடல் ஊனமுற்றோர் மக்கள்தொகைப் பட்டியல்களும், 7) குடும்ப விவரப்பட்டியல்கள், 8) அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்கள், 9) அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடி வகுப்பினர் பட்டியல்கள், 10) ஊரகங்களும் நகரங்களும் பற்றிய குறிப்புகள், புள்ளிவிவரங்களை விரைவாகவும் விரிவாகவும் சிறந்தமுறையிலும் தொகுத்து வெளியிடக் கணிப்பொறிகள் பயன்படுத்தப்பட்டன.
இக்கணிப்பிற்குப் பயன்படுத்திய தனி ஆன் விவரத்தாளின் வினாக்களாவன: 1) பெயர், 2) குடும்பத் தலைவரோடுள்ள உறவு, 3)ஆண்/பெண். 4) வயது 5) திருமண நிலை, 6) தாய் மொழி, 7) தெரிந்த இரு பிற மொழிகள், 8) சமயம், 9) தாழ்த்தப்பட்ட வகுப்பு/பழங்குடி, 10) சாதி, 11) எழுத்தறிவு, 12) கல்வி 13) மாணவர் பள்ளி கல்லூரி, 14) வேலை; கடந்த ஆண்டில் குறுகிய காலம்/நீண்ட காலம், 15) கடந்த ஆண்டின் முதன்மைத் தொழில்/துணைத் தொழில் 16) வேலையின்மை/வேலை தேடுபவர், உடன் வேலை செய்ய விருப்பம்.
<b>மதிப்பீடு</b>: இந்தியா மிகப்பெரிய நாடாகப் பல மொழிகளையும் பண்பாடுகளைவும் கொண்ட மக்களை உள்ளடக்குவதால் அதன் நுட்பமான, குறைகலில்லாத முழுமையான குடிமதிப்பைக் கணக்கீடு செய்வதில் எண்ணிலடங்கா நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஒரு நூற்றாண்டுக் காலம் வரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் போற்றுதற் குரியவையாகவும், பல முன்னேற்றங்களை உள்ளடக்கியும் உள்ளன. பல இடையூறுகள் அவ்வப்போது தோன்றின. பொதுவாக இந்தியக் குடிமதிப்பில் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு வெளிவர அதிக காலங்கடத்துவிடுகிறது. அகனால் அதன் பயன் குன்றிப்போகிறது.
இந்தியக் குடிமதிப்புக் கணிப்பில் திருமண நிலை, வேலை, கல்வி போன்ற பல விவரங்களைக் குறித்த சொற்களும் கருத்துகளும் தேவையான இலக்கண வரையறையுடன் குறிப்பிடப்படாததால் அவை திட்டவட்டமான தெளிவான விளக்கங்களை அளிப்பதில்லை. இவற்றோடு தொடர்பான புள்ளி விவரங்களை முழுமையாகச் சேகரிக்கவில்லை.
எனவே, வரையறுக்கப்படாத முழுமையற்ற புள்ளிவிவரங்கள் தவறான விளக்கங்களுக்கு இடமளிக்கலாம். மேலும் ஒவ்வொரு கணிப்பிலும் சில<noinclude></noinclude>
rmdqo2kfs0claq9k0frdx83bgpmjtcn
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/106
250
641404
1926798
2026-04-25T05:58:50Z
Magizh Sundram
16422
OCR
1926798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சாந்தன்.
சோதிடப் பேரகராதி.
சாந்திராயணம்.
கூகூ
சாதாரண - நாற்பத்துநாலாவது சாந்திரமாசம் சந்திரன் சுற்றி
வருடம்.
சாந்திரமாதம்
வருவதைக்
சாத்திரமானமாசம் (கொண்டு கணி
சாதாரணவருடப்பலன்- பின்மழை சாந்திரமானமாதம் ) க்கப்படும் மா
யும், வேளாண்மை பலிதமும்,
வெண்மைப்பொருள்களாகிய
பருத்தி, உப்பு முதலியன குறை
வும், இலாட தேயத்திற் சிறிது
பஞ்சக்குறியு முண்டாம்.
உதாரணம்;- சாதா ரணவரு
டந்தானியங்க ளோங்குமே,
ஆதார மாமழைபின் னாகுமே-
தீதாக, இல்லையெனும் பஞ்சமிலா
டத்திற்றோன்றும் மென்றே,சொ
ல்லுப்பு வெள்ளைசுருங்கும்.
(இடைக்காடர்.)
சாதுர்ப்பாகம் - நாலத்தொன்று.
சாத்திகம் - சிற்பநூல் முப்பத்திர
ண்டினொன்று.
சாத்தியம் -- சாத்மீகம், கித்தியயோகத்
தொன்று.
சாத்திரக்காரர் - சோதிடர்.
சாஸ்திரம்
சாத்திரம் 5
சோதிடநூல்.
சாஸ்திரி 2 கணிதன், நிமித்தஞ்
சாத்திரி சொல்வோன்.
சாத்மீகம்
சாத்துவிகம்
முக்குணவேளையி
சாத்வீகம்
னொன்று.
சாத்துவீகக்கிரகம் - சந்திரன்,
சூரி
யன், வியாழன்.
சாந்தபனம் - ஓர் விரதநாள்.
சாந்தன் - சந்திரன்.
தம். அவை - சுக்கில (வளர்பிறை)
பக்கம் பிரதமை முதல் கிருட்டிண
(தேய்பிறை) பக்கம் அமாவாசி
முடிய மேடராசி முதற்கொண்டு
ஒவ்வொரு ராசியிலும் சூரியனி
ருக்கும்பொழுதுகணிக்கப்படுவது:
அன்றியும், அந்த அந்த சாந்திர
மான மாதத்தின் பூரணையன்று
சந்திக்கும் நட்சத்திரத்தின் பெய
ரை யொட்டியே மேற்படி மாதங்
களுக்குப் பெயரிடப்பெற்று வழங்
குகின்றது.
சாந்திரமானம் - சாந்திரமாதங்களால்
வரும் வருடம்.
சாந்திரமானதினம் - சந்திரன், சூரிய
னில் நின்றும் பனிரண்டு பா
கைகள் பிரிவதற்கு வேண்டிய
காலம். இதுவே திதி.
சாந்திரமானவருடம் - சந்திரமான
மாதங்களால் வரும் வருடம். இது-
சவரமான வருடத்தைப் பார்க்கி
லும் சிறிது குறைந்தது. சாதா
ரணமாய் பனிரண்டு, அலலது
பதின்மூன்று சாந்திரமான மாதத்
துடனும் வரும்.
சாத்திரம் - சந்திர சம்பந்தமுள்ளது;
சுக்கிலபட்சம்.
சாந்திராண்டு - சாத்திரமான வரு
டம்.
சாந்திராயணம் - ஓர் நோம்புகாள்.<noinclude></noinclude>
7b50ughgp0dmahah3w2qdvt43pjcgoq
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/107
250
641405
1926800
2026-04-25T05:59:41Z
Magizh Sundram
16422
OCR
1926800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சாமரயோகம்.
சந்திராயனம் - சந்திரன் வீதி,
சாபம்-- தனுசுராசி.
சாபலம் - சாகொண்டு பெற்றபலம்.
இது - கணிதமுறையினொன்று.
சாமம் - இரா, ஏழரை நாழிகை கொ
ண்ட காலம், பாதிராத்திரி, இயா
மம்.
சாமரயோகம்-ஓர்சுபயோகம், இவை
இலக்கினத்தோன் கேந்திரம், உச்
சமிவைகளிலிருக்க குரு நேர்பார்
வை பெற்று நின்றாலும்,
(2) இலக்கினத்தோன் குருவோடு
கூடி பணபரத்திருக்க, அதைச்
சுக்கிரன் பார்த்தாலும்,
(3) இலக்கினம் சரராசியாக இலக்
கினத்தோன் ஒன்பது, பத்து
இவைகளில் நின்றாலும்,
(4) இலக்கினத்தில் இரண்டு சுபக்
கிரகமிருக்க, அல்லது வேறு கிர
கங்களிலிருந்து ஏழு, ஒன்பது
சாயாபதி.
(8) இலக்கினம் சரராசியாக பனி
ரண்டில் இலக்கினாதிபனிருக்க,
குரு கேந்திரித்து பூர்வபட்சமாக
விருந்தாலும்,
(9) திரராசி உதயமாகி இலக்கி
னாதிபதி உச்சத்திலிருந்து இலா
பாதிபன் பாக்கியமேறி யிருந்தா
லும்,
(10) பூரணையிற் பிறந்த சாதகரு
க்கு, இலக்கினாதிபன் உச்சத்திரு
க்க இலக்கினத்தில் கிரகங்களிலி
ருந்தாலும்,
(11) புதன், சுக்கிரன், சூரியன்
ஒன்றுக்கொன்று கேந்திரிக்க அல்
லது கூடிநின்றாலும்,
(12) இலக்கினத்தில் பர்களிலி
ருக்க, அல்லது பார்க்க, இலக்கி
னாதிபதி ஆறெட்டுப் பனிரண்டு
நீங்கிய இடங்களில் ஆச்சி யுச்சம்
பெற்று நின்றாலுமாம்,
இவ் வீட்டதிபர்கள் பத்திலிருந் சாமன்-புதன்.
தாலும்,
(5) மூன்று, பதினொன்றில் பாக சாமிநாதன் }இக்கினாதிபன், குரு.
ரிருக்க, அல்லது சுபக்கிரகமாவது சாமுத்திரீகம்
அங்கலட்
இருக்க, இலக்கினாதிபன் அதிக/சாமுத்திரீகாலட்சணம் 5 சணம்,
வலுவுற்றிருந்தாலும்,
(6) சூரியன் வர்க்கோத்தமமாக
வும் இலக்கினாதிபன் உச்சமாயும்
ஐந்து, ஒன்பதில் புதனிருந்தா
லும்,
(7) இலக்கினம் சரராசியாக விரு
ந்து நாலேழுக்குடையவர்கள் அதி
பெலம் பெற்றிருந்தாலும்,
அங்க இலக்கண நூல்.
சாயந்திரம் - அந்திப்பொழுது
சாயரட்சை - அந்தி.
சாயனம் - கிரகபுடம்,
சாமாக்கிரகம் - இராகு, கேது, தூமா
திபஞ்சக்கிரகம்.
சாயாதனயன் - சனி.
சாயாபதி - சூரியன்.<noinclude></noinclude>
18dc2w5zmbgd1inmfi8cfbj5l9c5rwm
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/108
250
641406
1926801
2026-04-25T06:00:09Z
Magizh Sundram
16422
OCR
1926801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சார்வரிவருடப்பலன்.
சாயாபுத்திரன் - சனி.
சாயாபுருடதரிசனம் - தன்னிழலால்
ஆயுள் அறிவது. அது சூரியனை
யாவது சந்திரனையாவது தன்பின்
புறமாகவிட்டு சித்தசுத்தியாய்
தனது சாயையைப் பூமியிற் பார்
த்து அவ்வகையாகவே ஆகாயத்
தைநோக்க அவ்வுரு ஆகாயத்தில்
தோன்றும். இவ்வுரு தலையில்
லாது தோன்றுமானால் ஆறு மாத
த்தில் மரணமென்பதாம்.
சாரங்கம் - இரா, பூமி, மேகம்.
சாரஸ்வதம் - தாரா பல சந்திர பல
பொருத்தமுள்ள ஆதிவாரம்.
சாரதயோகம் - ஓர்சுபயோகம். இவை
இலக்கினம் வர்க்கோத்தமமாக
இலக்கினாதிபதி சுபக்கிரகத்தோடு
கூட, இவர்களை இலாபாதிபன்நோ
க்கி நிற்பதாம்.
சாரதீயம் -குளிர்காலம்.
சாரவரக்கியம் - கிரகமானம்.
சார்வரி - முப்பத்து நாலாவது வரு
டம்.
சார்வரிவருடப்பலன்- மழையில்லை,
பூமி விளையாது, பதினெட்டு வகை
யான தொழிலாளிகளும் பஞ்சத்
தாலேங்கியும் நோயால்மெலிந்தும்
மரணங்களுமடைவார்கள்.
உதாரணம் - சாருவரி யாண்ட
தனிற் சாதிபதினெட்டுமே, தீர
மறு நோயாற் றிரிவார்கள்- மாரி
யில்லை,பூமிவிளை வில்லாமற் புத்
சாலிவாகனசகாப்தம்.
ளக
திரரு மற்றவரும், ஏமமின்றிச் சா
வா ரியம்பு.(இடைக்காடர்)
சாலயோகம் - ஓர்சுபயோகம். இதுநா
லோன் பத்தோன் கிரக மாறியிரு
க்க இலக்கினாதிபன் உச்சம் பெற்று
நிற்பதாம்.
சாலிவாகனசகாப்தம்
சாலிவாகன
வருடம். இது - சாலிவாகனன்,
விக்கிரமார்க்கனோடு போர்புரிந்து
நருமதா நதிக்கு வடக்கில் முறிய
அடித்தோட்டி, தன்னரசாட்சியை
நிலை நாட்டிய வருடமானதால்,
நருமதாகதிக்கு வடக்கிலுள்ளோர்
விக்கிரமார்க்க சகாப்தத்தையும்,
மேற்படி நதிக்குத் தெற்கிலுள்
ளோர், சாலிவாகன சகாப்தத்தை
யும் ஆதியாயனுஷ்டித்து வருகின்
றனர். இவ்வரசாட்சி கலியுகாதி
வருடம் மூவாயிரத்து நூற்றெ
ழுபத்தொன்பதில் தொடங்கிற்று.
இவன் அரசபூண்ட முன்னூற்
றைம்பதாம் வருடத்துவக்கத்தில்
கணிதசாஸ்திரிகளால் வரையறு
த்து இதன் முன்சென்ற முன்னூ
ற்று நாற்பத்தொன்பது கணக்கை
யே கணிதத்திற்குத் துருவமாக
வகுத்து வைத்திருக்கின்றனர்.
அவ்விதம் முன்னூற்று நாற்பத்
தொன்பதாம் வருடத்துடன் அட்
சய முடிந்தபடியால் பிரபவ முதல்
அட்சய கடையாகவரும் ஒரு சுற்
றைப் பரிவிர்த்தியாகக்கொண்டு
கணிக்கப்பெற்று வருகின்ற<noinclude></noinclude>
g75gfzc77baa0018w91ihifug98u9m7
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/109
250
641407
1926802
2026-04-25T06:00:39Z
Magizh Sundram
16422
OCR
1926802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஉ
சோதிடப் பேரகராதி.
சிங்கவுருவம்.
அதன்படி இப்போது நடக்கும்
இங்கிலீஷ் ஆயிரத்துத் தொளா
யிரத்து இருபத்துநாலாவது வருட
மானது இருபத்து மூன்றாவது
பரிவிர்த்தியாகும்.
சாவகன்- சனி.
.
சாவாக்கியம் கணிதமுறையினொ
ன்று.
சாவித்திரன் - சூரியன்.
சாவித்திரி - சூரியகிரகணம்.
சித்திரபானு வருடப்பலன்.
சிங்காங்கம் - மார்பு.
சிங்கிலி- இரண்டு.
சிசிரம்
-
ஆறு பருவத்தொன்றாகிய
மாசி, பங்குனியின் பருவம்.
சிதகன்- சுக்கிரன்.
சிதம் - நட்சத்திரம், வெள்ளி.
சிதன்- சுக்கிரன்.
-
சித்தம் - நித்தியயோகத்தொன்று,
இலக்கினத்திற்கைந்தாமிடம்.
சித்தயோகம் - சுபயோகம்.
சித்தார்த்தி - ஐம்பத்து மூன்றாவது
வருடம்.
சாவித்திரி விரதம்-ஆனிமாதத்துப் சித்தாந்தி - கணிதன்.
பூரணையில், மங்கிலியப் பெண்கள்
கணவன் ஆயுளைக்கோரிச் செய்
யும் விரதம்.
சான்றோன் - சூரியன்.
சிகண்டிசன்
சிகண்டிதன் 5
சிகம் - கிரணம்.
சி
வியாழன்.
சிகரகேந்திரம் --சூரியனுக்கும் மற்றக்
கிரகத்துக்கு முன்ன ராம்.
சிகி- கேது.
சிகை - கிரணம்.
சிங்கநிறம் - சிவப்பு.
சிங்கத்திக்கு
சிங்கத் திசை}
தெற்கு.
சிங்கமாதம் - ஆவணிமாதம்.
சிங்கம் - அரிமா, ஆளி,ஐயானனம்,
புவி, சிம்மம். இன்னுஞ் சிங்கத்தின்
பெயரெல்லாம் பொருந்தும்.
சிங்காவி - ஆவணிமாதம், சிங்கத்தில்
சூரியனிற்றல்.
சிங்கவுருவம் - சிம்மம்.
சித்தார்த்தி வருடப்பலன்- குறைந்த
மழையும், இளம்வித்தாகிய தினை
முதலிய தானிய விளைவும், வட
தேசத்தில் அரசர்களுக்குள் சண்
டையும், கெடுதியுமுண்டாம்.
உதாரணம்:- ஆனசித் தார்த்தி
தனில் அற்பமழை யுண்டாகும்,
ஏனல்கப்பிராச்சியத்தி லேமிகுதி-
ஊனமுடன், வெட்டிமடி வாரர
சர் வேற்றாசர் நாடாகும், நட்டி
வடக்கிலென்றே நாட்டு
(இடைக்காடர்.)
சித்தி - நித்தியயோகத் தொன்று.
சித்திரகெண்டிசன் - வியாழன்.
சித்திரபானு - சூரியன், பதினாறாவ
தாண்டு.
சித்திரபானு வருடப்பலன்- எல்லா
விடங்களிலும் நல்லமழையும்,நா
னாவகை மூலப்பொருள்களவிருத்தி
யும், எல்லாவகைத் தானியங்கள்<noinclude></noinclude>
ierkro8k76d4umhxy53zkb4cu35x31y
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/110
250
641408
1926803
2026-04-25T06:01:08Z
Magizh Sundram
16422
OCR
1926803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சித்திரைமாதப்பிறப்பின்பலன்.
விளைவும், அரசாங்கத்திற்கு நன்
மையும், அதனால் குடிகளுக்குச்
சுகமும், இதற்கு இடையூற யிருக்
கும் பார்ப்பாருக்குத் தீங்கும்,
சிறிது பூமி பயமு முண்டாம்.
உதாரணம்:- சித்திர பானிற்
சிறக்க மழைமிகுத்து, வித்துள்ள
தெல்லாம் விளையுமே - எத்திசை
யும், பார்ப்பாருக் காகாது பார்
வேந்தர்க் கோலமாம், தீர்ப்பாகப்
பூமிபயஞ் செப்பு.(இடைக்காடர்)
சித்திரயோகம்
-
ஓர் சுபயோகம்.
இதுதனாதிபன் ஒன்பதி லிருக்க,
பாக்கியாதிபன் லாபமுற, இலா
பாதிபன் உச்சம்பெற் றிருப்பதாம்.
சித்திரம் - சிற்பநூல்முப்பத்திரண்டி
லொன்று, கிரகங்களினது திசை
யில், உள்ளுக்குள்ளான காலம்.
சித்திராதன் - சூரியன்.
சித்திராபூரணை சித்திரை மாதத்
-
திய பௌரணை.
சித்திரை - அறுவை, ஆடை, சவை,
செவ்வி, தச்சன், துவட்டாநாள்,
தூசு, நெய், பயறு, மீன், சித்தி
ரைமாதத்திற்கும் பெயர்.
சித்திரைமாதப்பிறப்பின்பலன் - சித்
திரைமாதப் பிறப்பு, ஞாயிறில்
வரில் அற்பமழை, திங்களில்வரில்
வெள்ளங் காணும், செவ்வாயில்
வரில் கலகம்,புதனில் வரில் காற்
றதிகம், வியாழனில் வரில் சுகம்,
வெள்ளியில்!வரில் பெருமழை,
சனியில்வரில் மழையில்லை, சஷ்டி,
சிம்சுமாரம்.
ளஙு
அஷ்டமி, உவா, இருத்தை இவை
களில் வரில் கெடுதி. உத்திரம், உத்
திராடம், உத்திரட்டாதி, அத்தம்,
திருவோணம், அவிட்டம், ரேவதி,
மிருகசீரிடம், மூலம் இவைகளில்
வரில் உத்தமம். சோதி, சித்திரை,
ரோகணி, சதயம், புனர்பூசம்,
பூசம், மகம், அசுபதி, அனுசம்,
இவைகளில் வரில் மத்திமம். மற்ற
வை ஆகாவாம்.
சித்திரைமாதம் - காலச்சக்கரம்,சை
த்திரம், மது, முதல்மாதம்.
சிகேந்திரமாலை-ஆரூட சாஸ்திரங்
களில் முதன்மை பெற்ற அருமை
யான நூல். இது ;- சங்க காலத்
திய சைாமுனிவராகிய,சினேக்
திரராற் செய்யப் பெற்றது.
சிந்திதம் - இலக்கினம்.
சிந்துநந்தனன் - சந்திரன்.
சிந்தை
சிந்தைகூரியன்
சிம்சுமாரம்
-
}
புதன்.
-வானத்தின் கண்ணு
ள்ள சோதிச்சக்கரம். இச்சக்கரம்
துருவன், இந்திரன். வருணன்,
கசியன் முதலியோர் கூடி பிரதட்
சணமாகத் தினந்தோறுஞ் செல்
லப் பெற்றுள்ளது. இதன் வாற்
பாகத்திற் பிரசாபதி, அக்கினி,
இந்திரன், தருமன் முதலியோ
ரும், வால்மூலத்திலே தாதா,
விதாதாவும், கடிதடத்திலே சத்
தரிசிகளும், மேல்வாயிலே அகத்
தியரும், கீழ்மோவாயிலே யம<noinclude></noinclude>
s9oh49fd16jai4lhvmdmxktlhmn2e88
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/111
250
641409
1926804
2026-04-25T06:01:39Z
Magizh Sundram
16422
OCR
1926804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ச
சோதிடப் பேரகராதி.
சிரோ தயக்கோள்.
னும், முகத்திலே அங்காரகனும்,
குய்யத்திலே சனியும், பீசத்திலே
குருவும், பக்கத்திலே சூரியனும்,
காபியிற் சுக்கிரனும், நெஞ்சிற் சக்
திரனும், ஸ்தனத்திலே அசுவினி
தேவர்களும், பிராணவாயு, அபா
னவாயு ஆகியவைகளிலே புதனும்,
சர்வாங்கத்தில் சனி கேதுக்களும்,
சிற்பநூல்.
சிரோதயராசி - த லை யுதயராசி.
இவை - மிதுனம், சிங்கம், கன்னி,
துலாம்,விருச்சிகம், கும்பம் என்
பனவாம்.
சிலை-தனுவிராசி, மூலநட்சத்திரம்.
சில்லிகை - சூரியகிரணம்.
சிவகன்மகன் - செவ்வாய்.
சிவசதுர்த்தசி - மார்கழிமாதத்தின்
ரோமங்களிலே நட்சத்திரங்களு பூருவபக்கத்துப் பதினாலாந் திதி.
மாக, அதிகரித்து நிற்பர். இச்சக்/சிவசன்- சுக்கிரன்.
கரம் (மகரம்) முதலை வடிவ முன்
ளதாம்.
சிம்மம் - சிங்கவிராசி.
சிரகயோகம் - ஓர் சுபயோகம். இது-
குரு,புதன்,சுக்கிரன்,இவர்கள்
அமிசராசியில் மூன்று கேந்திரங்
களிலிருக்க, மற்றொரு கேந்திரத்
தில் பாவரில்லா திருப்பதாம்.
சிரபிருட்டோதயக்கோள் - சந்தி
ரன்,கேது.
சிரபிருட்டோதயராசி - மீனம்.
சிவசேகரன் - சக்திரன்.
சிவம் - நித்திய யோகத்தொன்று.
சிவயோகம் - (1) பனிரண்டா
மிடம்.
(2) பஞ்சமலாபாதிபர்கள் பாக்கி
யத்திருக்க, தர்மகர்மாதிபர் ஐந்தா
மிடத்திருப்பதாம். இது ஓர் நல்ல
யோகம்.
சிவராத்திரி - மாசிமாதத்து அமரபக்
கத்து சதுர்த்தசியோடு கூடி ய
அர்த்தராத்திரி காலம்.
சிரவணத்துவாதசி - திருவோணநட் / சிவேதை - தெற்கு
சத்திரத்தோடு கூடிய துவாதசி.
சிரவணம் - திருவோண நட்சத்திரம்.
சிராமம் - காலம், மாதம்.
சிராவணம் - ஆவணிமாதம், திருவோ
ண நட்சத்திரம்.
சிரீமுகம் - ஸ்திரிமுகவருடம்.
சிருட்டம் - சிற்பநூல் முப்பத்திரண்
டினொன்று.
சிறகுக்கால்ராசி-பறக்கும் ராசி.
இது -மகரம், மீனம்.
சிறுத்தொண்ட நாயனார் திருநட்சத்
திரம் - சித்திரை மாதத்தில் வரும்
பரணி நட்சத்திரம்.
சிரோதயக்கோன் - தலையுதயக் கிர
கம்.
இவை-புதன், குரு, சுக்கி
ரன், இராகு என்பனவாம்.
சிறுபொழுது - மாலை, யாமம், வைக
றை.
சிற்பசாஸ்திரம் சில்ப சாஸ்திரம்.
சிற்பநூல் இது - முப்பத்திர
ண்டு விதமுள்ளது.விபரம்:-விச்
சுவதருமம், விச்சுவேசம், விச்சுவ<noinclude></noinclude>
foflu8a29wzu72zidtgwkpvznqlo286
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/112
250
641410
1926805
2026-04-25T06:02:02Z
Magizh Sundram
16422
OCR
1926805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சீதகன்.
சோதிடப் பேரகராதி.
சாரம்,விருத்தம்,தாவட்டம்,சீதகிரணன்)
சிருங்காடயோகம்.
நளம்,மயம், அனுமான், பானு,
சீதபாலு
சந்திரன்.
சீதமயூகன்
கற்பாரியம், சிருட்டம், மானசா சீதமரீசி
ரம், வத்துவித்தியாபதி, பாராசா சீதம்-நீர்; மாரிகாலம், மேகம்
ரியம், அருடிகம், சயித்தகம்,வாத்/சீதனன்]
சுபோதம், வித்தாரம், இந்திரம், தேன்ன்}
சந்திரன்.
வச்சிரம், சவுமம், விச்சுவகாசிபம், சீமந்தம் - கருப்பந்தரித்து ஆறாமா
மகதநதிரம், விசாலம், சித்திரம், தம் உச்சிவகிர்ந்து செய்யுமோர்
காபிலகாலயூபம்,
நாமசங்கிதை,
சாத்திகம், விச்சுவபோதம், அதி
சாரம், வெகுச்சுருதம், மானபே
தம் என்பனவாம்.
சிற்பம் - சிற்பநூல். அது கோயில்
வீடு முதலிய கட்டுவதற்குள்ள
முறையறிதல்.
-
சிற்பாசாரியார்-
முறையறிந்தோர்.
மண்ணீட்டாளர்,
சினீவாலி - அமாவாசைக்கு முதனா
ளிரவு, சுக்கிலபக்கம்.
சீ
சீகண்டயோகம் - ஓர் சுபயோகம்.
து இலக்கினாதிபன்,சூரியன்,
சந்திரன் இம்மூவர்களும கேந்திர
திரிகோணங்களில் ஆச்சியுச்சம்,
நட்புப்பெற்று நிற்பதாம்.
சீக்கிரகேந்திரம் - சூரியனுக்குங் கிர
கத்துக்கு முன்ள தூரம்.
சீணசந்திரன் - அமரபக்கத்துச்
ரன்,தேய்பிறை.
சீதகரன் - சந்திரன்.
இதகன்- சந்திரன், சுக்கிரன்.
சக்தி
சடங்கு.
ஸ்ரீமு} முக வருடம்.!
சீமுகவருடம் - ஏழர்வதாண்டு.
சீமுகவருடப்பலன் - முன்பாகத்தில்
மழையில்லை. பின்பாகத்தில் நல்ல
மழை பெய்து நவதானிய முத
விய வேளாண்மை விருத்தியுண்
டாகி நாடு செழிக்கும், என்றாலும்
நோயினால் சனங்களுக்குப் பீடை
யுண்டாகும்.
உதாரணம் - தேடுகற் சீமுகத்
திற் றேசஞ் செழித்தோங்கும்,
நாடியே முன்மழைதஈன் எல்
காது - நீடியபின், ஞானமழை யுண்
டு நவதா னியம்பெருகுந், தானோ
வு முண்டென்றே சாற்று.
சீயம் - சிங்கவிராசி.
(இடைக்காடர்)
சீரம் -சூரியன்.
சீராமநவமி - சித்திரை மாதத்திய
முன் பக்கத்து ஒன்பதாந் திதி.
ஒருங்காடயோகம் - ஓர் சுபயோகம்
இது ஒன்று,ஐந்து, ஒன்பது ஆகிய
இவ்விடங்களில் சூரியாதி ஏழு
கிரகங்கள் நிற்பதாம்,
14<noinclude></noinclude>
jepbv7urul96hcints713ama2u2nyi3
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/113
250
641411
1926807
2026-04-25T06:02:35Z
Magizh Sundram
16422
OCR
1926807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சுக்கிர நட்சத்திரம்.
ஓர்- துலாராசி.
சுக்கிரோதய அஸ்த
தமனபலன்.
சுக்கிரநிறம் - வெள்ளை.
சீவக்கிரகம் 2 சந்திரன், குரு,
சீவக்கோன்
புதன்.
சீவதிசை - பிராணதிசை.
சீவகாள்- ஆயுள்காலம்.
சீவராசி - மிதுனம், கன்னி, தனுசு,
மீனம்,
ஓவனம் - பனிரண்டாமிடம்.
சீவன்- வியாழன்.
சீவிதேசன் - சந்திரன், சூரியன்.
சீவியம் - ஆயுள்.
சுகத்தானம்
சு
நாலாமிடம்.
சுகருமம் - நித்தியயோகத்தொன்று.
சுக்திரகாரகம்-களத்திரம், சந்தோ
ஷம், சுகம், மாணிக்கம், மந்திரம்.
சம்போகம், வாசனைத் திரவியம்,
மங்களகரம், அலங்காரம், வா
கனம், பசுமந்தை, சுகிர்தம்,மற்
றும் சுகமுள்ளவைகளுமாம்.
சுக்கிரகுணம்-இராசதம்.
சுக்கிரசமித்து - அத்தி.
சுக்கிரசுவை - தித்திப்பு.
சுக்கிரதானியம் - மொச்சை.
சுக்கிரதிக்கு - சுக்கிரனுக்குரிய திக்கு
இது மேற்றிசை, கீழத்திசை
என்பாருமுளர்.
சுக்கிரதிசை - சுக்கிரனில் நடக்குல்
காலம். இதன் வருடம் இருபது.
சுக்கிராட்சத்திரம் -உரோகணி,கார்
த்திகை, சோதி, மிருகசீரிடம்,
விசாசம் என்பனவாம்.
சுக்கிரபகவான் - வெள்ளி.
சுக்கிரபாசை2
சுக்கிரபாடை வடமொழி.
சுக்கிரபார்வை - ஒரு கண் பார்வை,
சாந்தபார்வை.
சுக்கிரபிணி -- சிலேத்துமம்.
சுக்கிரபுட்பம் - வெண்டாமரை
சுக்கிரபுத்தி - ஒவ்வொரு திசையி
னுள் நடக்குங்காலம்.
சுக்கிரபுத்திரன் - விசகடிகன்.
சுக்கிரம் - ஆனிமாதம்.
சுக்கிரத்தினம் வயிரம்,
சுக்கிரராசி - இடபம், துலாபம்.
சுக்கிரலிங்கம் - பெண்.
சுக்கிரவடிவம்-சமம்.
சுக்கிரவாகனம் — கருடன்.
சுக்கிரவாரம் - வெள்ளிக்கிழமை.
சுக்கிரவார விரதம் உமாதேவி,
விநாயகர், சுப்பிரமணியர் இவர்
களைக் குறித்துச்செய்யும் நோன்பு
நாள்,
-
சுக்கிரன் - அசுரமந்திரி, அநாவிலன்,
ஆசான்,உசனன், ஒள்ளியோன்,
கவி, காப்பியன், சல்லியன்,சீதன்,
சீதகன், சுங்கன், தயித்தியமந்திரி,
நற்கோள், பளிங்கு, பார்க்கவன்,
பிரசுரன், பிருகு, புகர், புயல்,
மழைக்கோள், வெள்ளி.
சுக்கிரனுலோகம் - வெள்ளி.
சுக்கிராசாரியன் - சுக்கிரன்.
சுக்கிரோதய அஸ்தமனபலன்-சக்
கிரன் ஒவ்வொரு காலத்திலும்
உதயமாவதற்கும் அஸ்தமனமாவ<noinclude></noinclude>
gwst1d8qh1yqz7lm45yid3cm8wz0ib8
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/114
250
641412
1926808
2026-04-25T06:03:02Z
Magizh Sundram
16422
OCR
1926808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சுக்கிலவருடப்பலன்.
தற்கு முன்ன பலன். விபரம்;-
சித்திரையில் உதய அஸ்தமனமரீ
னால் அரசனுக்குச் சம்பத்து. மனி
தர்களுக்கு நன்மை. வைகாசியி
லானால் உலகத்திற்குக் கேடு.
ஆடு மாடு முதலிய கால்நடைகளு
க்கு ராசம். ஆனியிலானால் மனி
தர்கட்கு நோய். ஆடியிலானால்
மழையில்லை, நீர்வற்றும். ஆவணி
யிலானால் பயமுண்டாம். புரட்
டாசியிலானால் தானிய விருத்தி
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி
இவைளிலானால் தேசத்திற்குக்
கெடுதி. தை, மாசி இவைகளிலா
னால் தேசத்திற்கு நன்மை. பங்
குனியிலானால் அஃகமலிவும்,பொ
ருள் விருத்தியுமுண்டாம்.
சுக்கில - மூன்றாவது வருடம்.
சுக்கில கிருட்டிண ஏகாதசி.
கழி மாதம் பூருவபக்கத்தில் வரும்
-
மார்
பதினோராந்திதி.
சுக்கிலபக்கம் பூருவபக்கம், சி நீ
சுக்கிலபட்சம்) வாலி.
சுக்கிலம் - வெள்ளி.
சுதாபிரீதி.
ள்எ
பருத்தி, உப்பு முதலியன குறை
யும்.
உதாரணம்; - நன்மைபெருஞ்
சுக்கிலத்தில் நாடெங்கு மேசெழி
க்கும், புன்மைவினை நீங்கிப் பொ
ருள்சேரும் - நன்மை, இருக்கும்
பசுக்கறக்கு மெங்குமழை யோங்
கும், பருத்தியுப்புத் தான் குறையும்
பார். (இடைக்காடர்)
சுக்கை - நட்சத்திரம்,மாலை,
சுங்கன் - சுக்கிரன்.
சுசி - ஆடிமாதம், கோடைகாலம்,
சந்திரன்,சுக்கிரன், சூரியன்.
சுசிரோசி - சந்திரன்.
சுசுபயோகம் - ஓர் நல்ல யோகம்.
இது தனத்தானத்திற் சுபக்கிரகங்
களிருக்க, பாவிகன்பார்க்காதிருப்பு
தாம்.
சுடரோன் - சூரியன்.
சுடர் - சந்திரன், சூரியன்.
சுட்ககாள்-வறட்சிநாள். அது அன
பதி, பரணி, கார்த்திகை, திருவா
திரை, மகம், பூரம், உத்திரம், அணு
சம், மூலம், உத்திராடம், அவிட்
டம், சதயம், பூரட்டாதி, உத்தி
சுக்கில வருடம் - மூன்றாவதாண்டு. ரட்டாதி, ரேவதி.
சுக்கிலவருடப் பலன்- எல்லாவிடங் சுட்கராசி - மிதுனம், சிங்கம், கன்னி.
களிலு மழை பெய்யும், நீர்நிலை சுணங்கத்திசை - தென்மேற்றிசை.
கள் நிறைந்து நாடு செழிக்கும், சுண்டன் - சதயம்.
மனிதர்கள் கெடுதியுண்டாகுங் சுதாகரன்
காரியங்களை விட்டுப் பொருள் சுதாங்கன்
சேர்க்கு முயற்சியிற் முற்படுவார்
சுதாகுதி
சுதாதாரன்
சந்திரன்.
கள், பாற்பசு விருத்தியுண்டாகும், சுதாநிதி
ஆனால் வெண்மைப் பொருளாகிய சுதாபிரீதி)<noinclude></noinclude>
1ptqg4m1de9mxyoldza9co54ij6wg25
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/115
250
641413
1926810
2026-04-25T06:03:27Z
Magizh Sundram
16422
OCR
1926810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>87அ
சுபம்.
சோதிடப் பேரகராதி.
சுத்ததினம் - சென்றநாள், வருடத்
தின் முதல்நாள், கல்லகான்,
சுத்தம் - பூரணை.
சுபகிருது - முப்பத்தாறாவது வரு
3டம்.
சுபகிருது வருடப்பலன் - ராட்டில்
கல்ல மழையும், வேளாண்மைப்
பவீதமும், மனிதர்களுக்கு நன்
மையுமுண்டாம், என்றாலும்
சோழதேசத்தில்
வேளாண்மை
நட்டமும், பசுவினங்களுக்கு மர
ணமுமுண்டாம்.
உதாரணம்:- சுபசிருது. தன்
னிலே சோழதே சம்பாழ், அப
மாம் விலைகுறையும் ஆன்சாம்-
சுபமாகும், நாடெங்கு மாரிமிகும்
நல்லவிளை வுண்டாகும், கேடெ
ங்கு மில்லையிதிற் கேள்.
(இடைக்காடர்)
சுபக்கிரகம் - சுபக்கோன், இது -சந்
திரன்,சுக்கிரன்,வியாழன்,புதன்.
சுபசத்தமி
- ஐப்பசிமாதத்து பூருவ
பக்கத்து ஏழாந்திதி.
சுபமாலாயோகம் - ஓர்கல்லயோகம்.
இது எல்லாக்கிரகங்களும் ஐந்து,
ஆறு, ஏழு இத்தானங்களில் வரி
சையாய் நிற்பதாம்,
சுபமாலிகாயோகம் - ஓர் நல்ல யோ
கம். அதுஒன்பதாமிடமுதல் மூன்றா
மிடம் வரை ஏழு கிரகங்கள் நிற்
பது.
சூமம் - நித்தியயோகத்தொன்று,
சுபானுவருடப்பலன்.
சுபயோகம் -ஒரு நல்ல யோகம்.
இது இரண்டாமிடத்தில் சந்திர
னும் சுக்கிரனும நிற்க பதினொன்
றக்குடையவன்ஒன்பதாமிடத்தில்
கின்றாலும்,
(2) இலக்கினாதிபதி உச்சம்பெற்
றிருக்க இரண்டுக்குடையவன்
எழுக்கு
சொட்சேத்திரமடைய
டையவன் மூலத்திரிகோணம்
பெற்று நின்றாலும்,
(3) ஒன்பதுக்குடையவன் நின்ற
அங்கிசாதிபதி உச்சம் பெற்றும்
இரண்டுக்குடையவனும், ஒன்ப
துக்குடையவனும் இரண்டாமிடத்
தில் நின்றாலும் சுபயோகமாம்.
அன்றியும்,ஞாயிறில் அட்டமியும்
திங்களில் நவமியும், செவ்வாயில்
சஷ்டியும், புதனில் திருதியை
யும், வியாழனில் ஏகாதசியும்,
வெள்ளியில் திரயோதசியும், சனி
யில் சதுர்த்தசியும் வந்தாலும் சுப
யோசமாம்.
சுபவாரம் - திங்கள், புதன், வியா
ழம், வெள்ளி.
சுபாவநாள் - கார்த்திகை, விசாகம்.
சுபானு - பதினேழாவது வருடம்.
சுபானுவருடப்பலன்-- சொற்பமழை
யும், பிற்பாகத்தில் விளைச்சல்
குறைவும், விண் வீழ் கொள்ளி
முதலிய உற்பாதங்களும்,ஆடு மாடு
முதலிய விலங்கினங்களுக்கு மா
ணமும், மனிதர்களுக்குக் கெடுதி
யும் உண்டாகும்.<noinclude></noinclude>
4qwynnlf101h315locvfmxc7tt5hk7f
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/116
250
641414
1926811
2026-04-25T06:03:44Z
Magizh Sundram
16422
OCR
1926811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சூன்.
சோதிடப் பேரகராதி.
சொன்னேன்
உதாரணம்;
சுபானுதனிற் றோன்றமழை தொ
ஞ்சமாம், பின்னே விளைவு பெரு
காது - மன்னேதுன், மத்திமக்
கோ ளுண்டாம் மடியும்நாற் காற்
சீவன், சற்றுஞ் சுகமில்லை தான்.
(இடைக்காடர்)
சுப்பிரம் - நித்தியயோகத் தொன்று.
சுரகுரு
சுரர்குரு
வியாழன்.
சுரபி - சித்திரை மாதம்.
சுரன் - சூரியன்.
சராட்புருடன் - வாஸ்துபுருடன்.
சுரோத்தமன் - சூரியன்.
சுவசந்தம் - சித்திராபூரணை.
சுவர்ப்பானன்-இராகு.
சுவனன் - சந்திரன், சூரியன்.
சுவாதிராள் }னிேல்,நலம், ஏற்று,
அனிலநாள், காற்று,
துளக்கம், மரக்கால், விளக்கு, வீழ்
க்கை, பெறுநுகம் என்பனவாம்.
சுவாமி - வியாழன், லக்கினாதிபதி.
சுவேதன் - சுக்கிரன்.
சுவை - சித்திரை நட்சத்திரம்.
சுளகு - விசாகம்.
சுறா - மகரராசி,
சுற்றத்தார்பதி- நாலாமிடம்.
சுனகன் - நிருதிமூலை.
சுனபாயோகம்- ஒரு நல்ல யோகம்
இது சந்திரனுக்கு இரண்டில் சூரி
சூரியசித்தாந்தம்.
சூடாமணியுள்ளமுடையான்
சோதிட நூல்.
சூதன் - சூரியன்.
சூது - பதினோராமிடம்.
சூரசூதன் - புதன்.
சூரன்
சூரி }
சூரியன்.
-
ளகூ
சூரியன் ஆட்சிவீடு -சிங்கம்.
சூரியநீசராசி - துலாம்.
சூரியவுச்சராசி-மேடம்.
சூரியகடியாரம்-பகல்நாழிகை யதி
விக்கும் ஓர் கருவி.
சூரியகதி
- சூரியசெலவு.
சூரியகாந்தி - சூரியப்பிரபை,
சூரியகாரம் - பகல்.
சூரியகாரகம் - தகப்பன், கீர்த்திப்
-
பிரதாபம், உஷ்ணம், சத்தியம்,
ஞானம், ஆன்மா, உத்தியோகம்,
பயித்தியம், பரிபாலிப்ப, சித்தம்
இவைசட்கு அதிபதி யென்பதாம்.
சூரியகிரகம்-இராகு, கேது.
சூரியகிரகணம் - கிரகணத்திற்
காண்க,து.
சூரியகிரணம் - சதிர், கரம், தீவிரம்,
வேகம், சூரியனைச் சூழத்தோன்
றும் வட்டம், பரிவேடம், உட்
கோள்.
சூரியகுணம் - தாமதம்.
யனைத் தவிர மற்றக்கிரகங்கள் நிற் சூரியசலாராந்தி} மாதப்பிறப்பு.
பதாம்.
சன் - சனி LD
சூரியசமித்து - எருக்கு.
சூரியகித்தாந்தம்-ஓர் சோதிடநூல்.<noinclude></noinclude>
60v9hdh4if6epu805r34bvwy3fi107p
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/117
250
641415
1926812
2026-04-25T06:04:02Z
Magizh Sundram
16422
OCR
1926812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளய
சூரியன்.
சோதிடப் பேரகராதி.
சூரியசுவை - கார்ப்பு.
சூரியதானியம் - கோதுமை.
சூரியதிக்கு -நடு.
சூரியதிசை - சூரியனில் நடக்குங்
காலம், இதன் வருடம் ஆறு,கீழ்த்
திசை.
சூரியதிருட்டி- ஆத்தபார்வை. விப
ரம்:- ஆதித்த பார்வையிற் காண்க.
சூரியநட்சத்திரம் - பூரம், மகம்.
சூரியநட்புவீடு - கடகம், தனுசு, கும்
பம், மீனம்.
சூரியநிறம்
- செவப்பு,
சூரியபகவான் - சூரியன்.
சூரியபாசை 1
சூரியபாடை
வடமொழி.
சூரியபார்வை - குரூரபார்வை.
சூரியபிணி - பித்தம்.
சூரியபுத்தி - ஒவ்வொரு திசையிலும்
உள்நடக்குஞ் சூரியனின் காலம்.
சூரியபுத்திரன் - காலன், சனி.
சூரியப்பிரபை பரிவேடம்.
சூரியமண்டலம் - சூரியபதவி, சூரிய
னிருக்குமண்டலம்.
சூரியமலர் - செந்தாமரை,
சூரியமூர்த்தி - சூரியன்.
சூரியாத்தினம் - மாணிக்கம்.
சூரியலிங்கம்-ஆண்.
சூரியலோகம் - தம்பாக்கு.
சூரியவடிவம்-சமம்.
சூரியவாகனம் - தேர்
சூரியவிம்பம் - சூரியனொளி.
சூரியன் - அண்டயோனி, அரி, அரி
சூர்மகள்.
அருணன், அலரி, அருக்கன்,
அனலி, ஆதபன், ஆதவன், ஆதித்
தன், ஆபிரஞ் சோதி, இரவி,
இருன்வலி, இனன், உதயன்,எல்,
எல்லை, எல்லோன், என்று, என்
றூழ், ஏழ்பரியோன், ஒளி, ஒளி
யோன், ஒற்றையாழியோன், கதி
ரவன், கனலி, கிரணமாலி, சண்
டன், சவிதா, சான்றோன், சித்திர
பானு, சுடரோன், சூரன், செங்
கதிரோன், சோதி, ஞாயிறு, தப
னன்,தாணி, திவாகரன், தினக
ரன், தினமணி, நபோமணி, பக்
லோன், பகல், பங்கயன், பதங்
கன்,பரிதி, பார்க்கன், பார்க்கரன்,
பனிப்பகை, பானு, மார்த்தாண்
டன், மித்திரன், விகர்த்தனன்,
விண்மணி, விரிச்சிகன், விரோச
னன் வெஞ்சுடர், வெயில், வெய்
யவன், வெய்யோன் என்பதாம்.
சூரியன் வீதி - மேட, இடப, மிதுன
வீதிகள்.
சூரியாஸ்தமனம்
சூரியன் அத்தமித்
சூரியாத்தமனம் தல், மாலைப்பொ
சூரியாஸ்தம்
சூரியாத்தம்
முது.
சூரியாலோகம் - சூரியகிரணம்.
சூரியேந்துசங்கமம் அமாவாசை.
சூரியோதயம் - உதயகாலம்.
சூரியோரை 2 சூரியனிருக்குமிரா
சூரியவோரை சி, சூரியன்காலம்,
சூரிய ஓரை.
மா,அழலோன், அழற்நியோன், சூர்மாள்}
யோகினி.<noinclude></noinclude>
ttp6j409cel5mn2gxgz5edzhdooe829
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/583
250
641416
1926813
2026-04-25T06:04:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலைச்சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம், புள்ளிவிவரம் சேகரித்த முறை, இடம் ஆகியன வேறுபடுவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் உன்னிப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமல்லம்|555|குடிமல்லம்}}</noinclude>கலைச்சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம், புள்ளிவிவரம் சேகரித்த முறை, இடம் ஆகியன வேறுபடுவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் உன்னிப்பான கவனம் தேவைப்படுகிறது.
புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ஆய்வாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் ஊதியமும் போதுமான திறனையும் ஊக்கத்தையும் அளிப்பதாக இல்லை. எனவே, அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை; சேகரிக்கும் புள்ளி விவரங்களும் பல குறைபாடுகளுடன் தரம் குறைந்து காணப்படுகின்றன. இந்திய மக்களுள் பெரும்பாலானவர்கள் கல்வியறிவற்றவர்களாகவும் பழமைப்பற்றுடையவர்களாகவும் இருப்பதால் பிறப்பு, வயது, குடும்பத்தினரின் எண்ணிக்கை போன்ற உண்மை விவரங்களைக் கொடுப்பதில்லை. காடு, மலைப்பகுதிகள், தீவுகள், முன்னேற்றமடையா ஊரகங்கள் போன்ற இடங்களில் வாழும் மக்கள் நாடோடிகள் ஆகியோரிடம் சென்று புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் பலமொழி, போக்குவரத்து, காலநிலை போன்ற இடையூறுகள் உள்ளன. இவற்றால் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது.
பிற நாடுகளில் புதிய முறையிலான அறிவியல் அடிப்படையில், முதன்முதலாகக் கனடாவின் கி.பி. 1666-இல் குடிமதிப்புக் கணக்கீடு நடைபெற்றதாக மக்கள் தொகையியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கனடா, பத்தாண்டுக்கொரு முறை நடைபெறும் தொடர் குடிமதிப்பை கி.பி. 1871-இலிருந்து கணக்கீடு செய்கிறது. ஐகலாத்தும் இசுவீடனும் (Iceland & Sweden) 18-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்பைக் கணக்கீடு செய்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்புக் கணக்கீடு செய்வதைத் தொடங்கின. ஆசுத்திரேலியாவும், நியூசிலாந்தும் முதன்முதலாக கி.பி. 1880-இல் குடிமதிப்புக் கணக்கீட்டைத் தொடங்கின. பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் குடிமதிப்புக் கணிப்பு 1960-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காண்க: இந்திய மக்கள் தொகை.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Padmanabha, P.,</b> Census of India, 1981, The Cenus Commission of India, New Delhi, 1985.
<b>குடிமல்லம்</b> ஆந்திரப்பிரதேசத்தில் இரேணி குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். இது கட்டடக்களைச் சிறப்புப்பெற்றது. இங்குள்ள சிவன்கோயிலிலுள்ள சிவலிங்கத்தில் சிவன் உருவம் காணப்படுகிறது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவ்வுருவம் இரண்டு கைகளுடனுர் குட்டையான யட்சன்மீது நிற்கும் நிலையிலும் உள்ளது. பெரிய குண்டலங்களும், அகலமான கழுத்தணியும், தலைப்பாகையும் (Ushnisa), கைகளில் வங்கியும் கொண்டு இவ்வுருவம் உள்ளது. இதன் வலக்கையில் ஆட்டுக்கடாவும், இடக்கையில் கோடரியும், புனித தெய்ப்பாத்திரமும் உள்ளன. இத்தகைய உருவ அமைதி வேறெங்கிலும் காணக்கிடைக்கவில்லை. குடிமல்லம் கோயில் இலாட வடிவ அமைப்புடைய கருவறையையும், இடைக்கழி, முன்மண்டபம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 583
|bSize = 375
|cWidth = 98
|cHeight = 236
|oTop = 135
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|சிவலிங்கம்-குடிமல்லாம்.}}
ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் கோடியில் நந்தி காணப்படுகிறது. கோலிலின் சுவர்களில் சிவன், பிரமன், துர்க்கை, திருமால் கணேசர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கல்லெட்டுகளின்படி இது பல்லவர் காலத்திலும் விக்கிரம சோழன் காலத்திலும் (கி.பி. 1126) பழுது பார்க்கப்பட்டது.{{Right|<b>சு.பிரா.</b>}}<noinclude></noinclude>
3kj3683lrbmxjbostp3dtxozkhk914h
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/118
250
641417
1926814
2026-04-25T06:04:30Z
Magizh Sundram
16422
OCR
1926814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
செஞ்சுடர்ப்பகவன்.
ளயக
செவ்வாய்.
சூலம் - இரேவதி கட்சத்திரம், கித் செந்தழல்-கேட்டை.
திய யோகத்தொன்று. செவ்வாய் செந்தீவண்ணன்-செவ்வாய்.
நின்ற நட்சத்திரத்துக்கு ஏழாம் செந்நாகம்- கேது
கட்சத்திரம், அன்றியும் வாரசூலை செச்நிறக்கிரகம் சூரியன், செவ்
யுமாம். விபரம்;-வாரசூலம் பார் செக்நிறக்கோன்வாய், கேது
க்க.
சூல்யோகம் - ஒரு
-
கெட்டயோகம்.
து இராகு,கேதுகளல்லாத சூரி
யனாதி எழுவரும் மூன்று ராசியில்
நிற்பதாம்.
சூலவிரதம் - தை அமாவாசையன்று
சூலத்திற்குச் செய்யும் ஓர் பூசை.
சூவி- யோகினி.
சூனன்
சூனியன்
}
சூரியன்.
சூனியமாதம் - ஐடி,புரட்டாசி, மாசி,
மார்கழி மாதங்கள்.
சூனியதிசை- இயங்காத்திசை,
தென்கீழ்த் திசை.
சூனு - சூரியன்.
செ
செகராசசேகரமாலை-ஓர் சோதிட
நூல். இது ஈழத்தரசனாவியற்றப்
பெற்றது.
செக்கு - சதயாட்சத்திரம்,
செஙகதிரோன்} சூரியன்.
செங்கதிர்பிற தாள்} நட்சத்திரம்.
செங்கை - திருவாதிரை நட்சத்திரம்.
செச்சை - உதயசந்திரன்.
செஞ்சுடர்ப்பசுவன்}
சூரியன்.
செம்பாம்பு - கேது.
செய
ஜெய
இருபத்தெட்டாவ
செயவருடம் தாண்டு.
செயவருடப் பலன் - எல்லா நாடுக
ளிலும் வேளாண்மை விளையும்,
தானியங்கள் பொலிவுறும், அரசர்
களும் ஆசைகொள்ளும் வண்ணம்
குடிகள் சுகவா வாழ்வை யடைவார்
கள்.
உதாரணம்:- செயவருடந்தன்
னிற் செய்புவன மெல்லாம், விய
னுறவே பைங்கூழ் விளையும்-நய
முடனே, அஃகம் பெரிதா மனவி
ற்சு கம்பெருகும், வெஃகுவார்
மன்னரிறை மேல்.
(இடைக்காடர்)
செய்யவன் - சூரியன், செவ்வாய்.
செய்யோன் - செவ்வாய்.
செலவு-பனிரண்டாமிடம்.
செல்காலம் - நிகழ்காலம், யோககா
லம்.
செவ்வாயின் சுவை - துவர்ப்பு.
செவ்வாய்-- செவ்வாய்க்கிழமை, நவக்
கிரகங்களினொன்று. இது அங்கா
ரகன், அரத்தன், அழலோன்,
அழல், அறிவன், ஆால், உதிரன்,
குசன், குருதி, செந்திவண்ணன்,<noinclude></noinclude>
k9h0iwjo4r7kjdwffdcz2yiozjj8w0k
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/119
250
641418
1926815
2026-04-25T06:04:58Z
Magizh Sundram
16422
OCR
1926815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளயஉ
சோதிடப் பேரகராதி.
செனனபத்திரிகை.
சென்மலக்கினம்.
சேய், நிலமகன், பெளமன், மங் சென்மகாள் -பிறந்த நட்சத்திரம்.
கலன், வக்கிரன் என்பனவாம்.
ஜென்மம்
உதயலக்கினம்.
சென்மானுசென்மநான்
சென்ம
செவ்வாய்காரகம்-சகோதரம், சிறந் சென்மம்
தபோர், பூமி, பித்தரோகம்,பரா
க்கிரமமுமாம்.
செவ்வாய்
சமித்து கருங்காலி.
செவ்வாய்த்தானியம் - துவரை
செவ்வாய்திக்கு செவ்வாயில் நடக்
செவ்வாய்திசைகுந் திசாகாலம்,
இதன் வருசம் எழு, தென்கீழ்த்
நிசை யென்பதுமாம்.
செவ்வாய்தோசம் - அங்காரக தோ
சம். விபரம்:- அங்காரக தோசத்
திற் காண்க.
செவ்வாய்கட்சத்திரம் - அ சுபதி,
கேட்டை, பரணி, விசாகமென்ப
தாம்.
செவ்வாய் நோக்கு எட்டு, ஏழு, நாம்
செவ்வாய்பார்வை இவ்விடங்களைப்
பார்க்கும். அன்றியும் குரூர பார்
வையுமாம்.
செவ்வாய்நோய்
செவ்வாய்பிணி
பித்தம்.
செவ்வாய்புட்பம் - செண்பகம்.
செவ்வாய்புத்தி - ஒவ்வொரு சிரக
திசையினுன் நடக்குங் காலம்.
செவ்வாய்புத்திரன்-கரேசன்.
செவ்வாய்லிங்கம் -ஆண்.
செவ்வாய்லோகம் -செம்பு.
செவ்வாய்வடிவம் - குறிமை.
செவ்வாய்வாகனம் - அன்னம்.
செவ்வி - காலம், சித்திரை நட்சத்
திரம், பருவம், பொழுது.
செனனபத்திரிகை - சாதகக்குறிப்பு.
-
நட்சத்திரந்தொட்டுபத்தாவது
நட்சத்திரம். விபரம் : - அசுபதிக்கு
மகமும் மூலமும், பரணிக்கு
பூரமும் பூராடமும்,கார்த்திகைக்கு
உத்திரமும் உத்திராடமும், ரோக
ணிக்கு அஸ்தமும் திருவோண
மும், மிருககிரிடத்திற்கு சித்திரை
யும் அவிட்டமும், திருவாதிரை
க்கு சுவாதியும் சதயமும், புனர்
பூசத்துக்கு விசாகமும் பூரட்டாதி
யும், பூசத்திற்கு அனுசமும் உத்தி
ரட்டாதியும், ஆயி.லியத்திற்கு
கேட்டையும் இரேவதியுமாம்.
சென்மலக்கினம் - உதயலக்கினம்.
இதை அறியும் வகை - உதய
லக்கினங்காணும் விபரம்: குறிப்பு -
பங்குனி மாதம் பதினைந்தாந்தேதி
பகல் முப்பது நாழிகைக்கு ஒரு
குழந்தை சனனமானால் சென்ம
லக்கினங்காணவேண்டிய விபரம்.
மேற்படி மாதத்துக்குரிய மீன
இராசியின் மொத்த நாழிகை
நாலேசாவில், அந்தமாதத்துக்கு
முப்பது தேதியானதால் பதினைக்
தாந் தேதியின் உதயகாலத்தில்
பாக்கியாயிருந்த விகடிகை நூற்று
முப்பத்தாறு, தே தி ஒன்றுக்கு
எட்டரை விகடிகை வீதமாய்
மேற்படி இராசியில் சூரியன் நட<noinclude></noinclude>
9zofgcmf6bokmz19m7od047q7vbyaaf
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/120
250
641419
1926816
2026-04-25T06:05:21Z
Magizh Sundram
16422
OCR
1926816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
சேட்டம்.
ந்து வருவதால் பதினைந்தாந்தேதி சேட்டை
சோடு சஞ்யொ
பகல் முப்பது
நாழிகைக்கும் சேஷ்டை } கேட்டை, விசாகம்.
அரைத் தேதிக்குள்ள வீதமாய்க்
கடந்தவிகடிகை நாலேகால்,
இதை
மேற்கண்ட விகடிகை நூற்றுமுப்
பத்தாறில் கழித்துவந்த மிச்ச
விகடிகை நூற்றுமுப்பத்தொன்றே
முக்கால், இதையும் இதுமுதல்
மேஷம் நாலேகால், ரிஷபம்நாலே
முக்கால், மிதுனம் ஐந்தேகால்,
கடகம்ஐந்தரை, சிம்மம்ஐந்தேகால்
இவ் வாறு இராசிகளின் தொகை
களையும் ஒன்று சேர்க்கவந்த நாழி
கை யிருபத்தேழு, விநாடி பதி
னொன்றே முக்காலுக்குமேல்,கன்
னிலக்கினம் நாழிகைஐந்து உடன்
சேர்க்க, வந்தகாழிகை முப்பத்தி
ரண்டு, விநாடி பதினொன்றே முக்
கால் வரைக்கும் கன்னியாலக்கி
னம். இதில் குழந்தை ஜனனமான
நாழிகை முப்பதைக் கழித்து வந்த
சேதம் T விரையம், பனிரண்கா
விடம் 10
சேத்திரம் - இடம் இரு
சேத்துமக்கிரகம் சித்திரன், சுத்D
சேத்துமக்கோள் ர்ன்,
சேயவன்
சேய்
செவ்வாய்,
பண்வ
சேய்த்தானம் - ஐந்தாமிடம் இது
புத்திரத்தானம்.பே
சேவகாவிருத்தித்தானம் மூன்றாம்
மிடம். திக்க
சைங்கிகேயம் - இராகு.
சைத்திரகம் சித்திரை மாதம்.
சைத்திரம் 5
சைத்திராவலி - சித்திராபூரணை.
சைத்திரி ே
சைத்திரிகம் 5
சித்திரைமாதம்,
சொ ஒருபொ
மிச்சநாழிகை யிரண்டு வினாடி சொச்சேத்திரம் 2 கிரக ஆச்சிவீடு,
பதினொன்
ன்றே முக்காலும் சொட்சேத்திரம்சொந்தவீடு,
மேற்படி இலக்கினத்தில் செல் தனது வீடு.
லானதுபோக பாக்கியாம். ஜனன சொரூபம் - இலக்கினம்;
மான நாழிகை கன்னிராசியி
கன்னியே
சென்மலக்கின மென்பதாம்.
லொட்டினபடியால்
சென்னி - அசுபதி.
சே
சே - இடபவிராசி,
சேக்கை - கடக விராசி.
சேட்டம்- ஆனிமாதம்.
J
இப
பே
ே
15
சொர்க்கஏகாதசி வைகுண்டம்
தசியைக் காண்க, வள்
சோ
ஏகா
சோசியம்-சோதிடசாஸ்திரம்."
சோசியன் - சோதிடஞ் சொல்
வோன்.
B
சோட்சம்-பதினா
இது நடாகிக்குக்பெய
சோடு-இரண்டு.<noinclude></noinclude>
gwn2rdkmnknrfh3t9gs8jeek83ma0o8
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/121
250
641420
1926817
2026-04-25T06:05:40Z
Magizh Sundram
16422
OCR
1926817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளயச
சோதிடப் பேரகராதி.
சோபகிருதுவருடப்பலன்.
சௌமியன்,
சோதி- சுவாதிநட்சத்திரம்,சூரியன்,
நட்சத்திரம்.
சோதிடசாஸ்திரம் திரிகாலத்தை
சோதிடநூல் 5யும் அறிவிக்
குஞ் சாஸ்திரம், கணிதநூல்.
சோதிடம் - சோதிடசாஸ்திரம், கன்
னிமித்த சாஸ்திரம்.
சோதிடர்- சோசியர்.
சோதிமண்டலம் -வானசோதி
களின் மண்டலம்.
-
மழைக்குறியினொ
சோதிமின்னல்
ன்று, அது ஐப்பசிமாதம் சோதி
நட்சத்திரத்தில் சூரியன் வரும்
நாளில் கிழக்கில் மின்னினால்
மழையுண்டென்பதாம்.
சோதிராத்திரி -நடுஇரவு.
சோத்தியம் - ஏகாதிபத்தியம், இரா
சிகுணாகரம்,கிரககுணாகரம்,
சமுகம், சுத்தபிண்டம், ஏகசமுக
மென்பதாம்.
சோபகிருது
ஆண்டு.
-
குண
முப்பத்தேழாவது
டாகு மாரி யொழியாமற் பெய்யு
மெல்லா, முண்டாகு மென்றே
யுரை, (இடைக்காடர்)
சோபம்-பத்துக்கோடி கோடா
கோடி,
சோபனம் - சுபம், நித்திய யோகத்
தொன்று.
சோமசுதன் - புதன்.
சோமபந்து - சூரியன், புதன்.
சோமமண்டலம் -சந்திரமண்ட
லம்.
சோமம் - ஆகாயம், ஆரியர் செய்யும்
கெட்ட யாகங்களுளொன்று.
சோமவாரம் - திங்கட்கிழமை.
சோமன் அட்டவசுக்களிலொரு
வன், சந்திரன், புதன்.
சோரத்தானம்-ஆறாமிடம்.
சோழக்கச்சான் - தென்மேற்றிசை.
சோழக்ககொண்டல் - தென்கீழ்த்
திசை.
சோழகம் - தெற்கு, தென்காற்று.
சோறு
சோபகிருதுவருடப்பலன்- எங்கும் சோறும் பரணி நட்சத்திரம்.
நல்லமழைபெய்யும்,கேணி,குளம்,
குட்டை, ஏரி முதலிய நீர்நிலைக
சோனை - திருவோண நட்சத்திரம்.
சௌ
ளின் பெருக்கால் உலகஞ் செழி
க்கும், மனிதர்கள் நற்குணத் தொன்று.
தோடும் இன்பத்துடனு மிருப் சௌமன்-புதன்.
சௌபாக்கியம் - நித்திய யோகத்
பார்கள்.
சௌமிய
-
நாற்பத்துமூன்றாவதா
உதாரணம்:- சோபகிரு தாண் ண்டு.
டதனிற் றொல்லுலகெல் லாஞ் சௌமியக்கிரகம்
செழிக்கும்,கோப மகன்று குணம் சௌமியக்கோன்
பெருகுஞ் - சோபனங்கள், உண் | சௌமியன் - புதன்.
சுபக்கிரகம்,<noinclude></noinclude>
7jiel6tf91e5zb4fe8whzhovvtofr2n
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/122
250
641421
1926818
2026-04-25T06:06:05Z
Magizh Sundram
16422
OCR
1926818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ஞானகாரன்.
ளயரு
தசவர்க்கம்.
-
சௌமியவருடப்பலன்-எங்கும் ஞானத்தானம் - ஐந்தாம் பத்தாமி
நல்ல மழைபெய்யும், நானாவகை டங்கள்.
உயிர் வர்க்கங்கள் விருத்தியடை ஞானி - கேது.
யும், மனிதர்கள் கெட்ட காரியங்
களைவிட்டு நற்காரியங்களைச் செய்
ஞான்று - காலம்,நாள்.
ெ
ஞ
வார்கள், எல்லாவகைச் செல்வங் ஞெண்டு - கடகவிராசி.
களும் குறைவில்லாதிருக்கும்.
உதாரணம்:- செய்ய சவுமியத்
த
தகர் - மேடவிராசி.
திற் றேசத்திற் பல்லுயிரும், உய்ய
தக்கணம் - தெற்கு, வலப்பக்கம்.
தக்கணாயனம்
மழைமிகுதி யுண்டாகும்- வெய்ய,
வினையகலும் பூமி விளையுமினுஞ் தக்கனாயனம்
செல்வம், மனையகலா தென்றே தசகம் பத்து.'
மதி.
சௌரமாதம்
சௌரமானம்
(இடைக்காடர்)
சூரியமாதம்.
சௌரம் - சூரியமாதம், நாள்.
சௌரன் - சனி, சூரியன்.
சௌரி - சனி.
தெட்சணாயனம்.
தசகரதசமி - ஆனிமாதம் பூருவபக்
கத்துப் பத்தாந்திதி.
தசகோடி - பத்துக்கோடி.
தசநா - காந்தாரி,குரு, சங்கினி, சுழி
முனை, பிங்கலை,
தசப்பொருத்தம் - செய்யுட்பொருத்
தம், மணப்பொருத்தத்தொன்று.
சௌரியோகம் - ஒரு நல்லயோகம்.
அது மூன்றாமிடம் சுபருடைய
பார்வைபெற, மூன்றுக்குடைய தசமம்
வன் ஆறு, எட்டு, பனிரண்டு
நீங்கிய சுபர்வீட்டில் ஆச்சியுச்சத்
தோடிருப்பதாம்.
ஞ
ஞண்டு - கடகவிராசி.
ஞமகண்டன் - காணாக்கிரகத்
தொன்று.
ஞெண்டு - கர்க்கடகவிராசி.
ஞா
ஞாயிறு-சூரியன், ஆதிவாரம்.
ஞானகாரகன்
ஞானகாரன்
கேது.
தசமபாகம்
பத்தில் ஒருபங்கு.
அது
தசமி - பத்தாந்திதி, பத்தாவது.
தசம்- பத்து.
தசராத்திரம் - பத்துநாள்.
தசலட்சம் - பத்துலட்சம்.
தசவர்க்கம் - பத்துவர்க்கம்,
(1) கிரகமிருக்கிற ராசிவர்க்கம்,
(2) சூரியசந்திர வோரை, (3)
திரேக்காணம், (4) திரிம்சாங்கி
ஷம், (5) சத்தமாமிசம், (6)
வாம்சம். (7) தசாம்சம்,(8)துவா
தசாம்சம், (9) கலாம்சம், (10)
சட்டியாம்சம் என்பனவாம்.<noinclude></noinclude>
05e3f531kg5lhvpwcvzrwu588v7du42
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/123
250
641422
1926819
2026-04-25T06:06:30Z
Magizh Sundram
16422
OCR
1926819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளயகாா
சோதிடப் பேரகராதி
தட்சிணாயனம்.
தத்துப்புரட்சி.
தசவாஜி
தசவாசி
சந்திரன்.
தட்சை - பூமி.
தட்டற்புறு - ஐம்பது.
தசாகம் - பத்துநாள்.
தண்கதிர் 2
தண்சுடர்
சந்திரன்.
தசாமிசம்1
தசாம்சம்
தசவர்க்கத்தொன்று.
தண்டனைத்தானம்-எட்டாமிடம்,
தசாசுபன் - சந்திரன்..
தச்சன் - சித்திரை நட்சத்திரம்.
தடம் - துலாராசி.
தடவற்புறு - அறுபது.
தடாகயோகம் ஒரு நல்ல யோகம்.
அது இரண்டு, ஐந்து, எட்டு, இவ்
விடங்களில்ல
எழுகிரகமிருந்தாலும்,
(2) மூன்று, ஆறு, ஒன்பது இவ்
விடங்களில் எழு கிரகங்களிருந்
தடி - அளவுகோல், மின்னல், வில்,
தாலுமாம்.
லிச்
தடிகை மின்னல்,
தடித்துபதி - மேகம்.
சந்திரன்.
தட்சஜாபதி
தட்சண துருவம் - பூமியின் தென்
முனை.
தட்சணம்= தெற்கு, வலப்பக்கம்.
தட்சணாங்கராசி-மேடம், இடபம்,
மிதுனம், கடகம், சிங்கம், கன்னி
இந்த ஆறு ராசிகளுமாம்?
தீட்சணாயனம் மசூரியன் தெற்கில்
ய்சஞ்சரிக்கும் ஐடிமுதல் மார்கழி
(வேரையுமுள்ள இம்மாதங்களாம்.
திசண்பதம் - தொய்சண்வீதி,
தன்பக்கம் 2
தட்சினசைல+தெற்கு )வ்ங்ாம
தட்சிணாயனம்.--சூரியுன்ல் மூவகை
வீதியினென்று கவ்
தண்டயாமம் - நினம்.
தண்டயோகம்-ஒருமத்திமயோகம்.
அது இராகு, கேது நீங்கிய சூரி
யாதி எழுவர் பத்து, பதினொன்று,
பனிரண்டு ஆகியவைகளில் நின்றா
லும்,
தண்டு
மூன்
(2) மூன்றோன் உச்சமாக
றிற் குருவிருக்க, சுக்கிரன் பார்
வை பெற்றிருத்தலுமாம்.
- தராசுக்கோல், மிதுனவி
ராசி, வில், வீணை,
தண்ணவன்-சந்திரன்.
ததி - கிரகம், பரக்கியம்.
தத்தயோகம் - இன்ன கிழமையில்
இன்னதிதி வருவதென்பது, விப
ரம் -ஞாயிற்றுக்கிழமையில் துவா
தசியும், திங்கட்கிழமையில் ஏகா
தசியும், செவ்வாய்க் கிழமையிற்
பஞ்சமியும், புதன்கிழமையில் துதி
யையும், வியாழக்கிழமையில் சஷ்
டியும், வெள்ளிக்கிழமையில் அட்
டமியும், சனிக்கிழமையில் நவமி
யும் வருவதாம்.
தத்தினம் - நடுநாள், நாடோறும்.
தத்து - அவமிருத்து, கண்டம், கிரக
வொழுங்கு, சுவிகாரம்,பாய்ச்சல்.
தந்துப்புரட்சி டே ஓர்பாடையினோர்
விகாரம்,க<noinclude></noinclude>
n5pny35c7icmqepy3na0t2ouxvtni6r
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/124
250
641423
1926820
2026-04-25T06:06:50Z
Magizh Sundram
16422
OCR
1926820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
தரிசவிபத்து.
தபசன் - சந்திரன்
தபசியம் - பங்குனிமாதம்.
தபம் - மாசிமாதம், வெயிற்காலம்.
தபனகரம் - சூரியகிரணம்.
தபனம் - வெய்யிற்காலம்.
தபனன் - அக்கினிதேவன், சூரியன்,
நெருப்பு.
தபன் - அக்கினி,சூரியன்.
தமம் - இராகு.
தமனியன் - சனி.
தமன் - இராகு, சந்திரன்.
தமிஇரவு.
தமிசிரப்பக்கம் - அமரபக்கம்.
தமோகான் - சந்திரன்.
தமோக்கினன் - அக்கினி, சந்திரன்,
சூரியன்.
தமோபகம் - வெளிச்சம்.
தமோபகன் - சந்திரன், சூரியன்.
தமோனுதன் - சந்திரன், சூரியன்,
விளக்கு.
தம்
- நன்முகூர்த்தம், பங்கிடுதல்.
தயித்தியமந்திரி-சுக்கிரன்.
தரணம் - இமயமலை, சூரியன், தாண்
டுதல், பாவம், பூமி
தரணி - சூரியன், பூமி,மலை.
தாந்தம் - கடல், விடாமழை
தரம் கூட்டம், வீதம்,
தரா பூசநான்,பூமி.
தராள் துலாராசி, பரணிநாள்.
தராசுக்கோல் துலாராசி
தராத்துமசன் - செவ்வாய்
தராபுதி --இராசர
தரிசயாமினி அமாவாசியினிரவு.
தரிசவிபத்து - சந்திரன்.
தவளபட்சம்.
மளயஎ
தரித்திர மாலிகா யோகம் ஒரு
கெட்ட யோகம். அது ஆறாமிட
முதல்
பனிரண்டாமிடம் வரை
ஏழு கிரகங்கள் நிற்பதாம்.
தருணி. - சூரியன்.
தருமஸ்தானம்
தருமத்தானம் 5
ஒன்பதாமிடம்.
தருமநான் - பரணிநட்சத்திரம்.
தருமவாசரம் - பூரணை.
தலை - இலக்கினம், திசை.
தலைநாள்-அ சு பதி நட்சத்திரம்
முதல் நட்சத்திரம், முதல்நாள்.
தலைப்பணி - முன்பனி.
தலையற்றகாள் - புனர்பூசம், பூரட்
டாதி,விசாகம், விபரம்:- காலற்ற
நாளிலறிக.
தலையுதயராசி
-
மிதுனம், சிங்கம்,
கன்னி, துலாம், விருச்சிகம், கும்
பம் என்பனவாம். இவைகள் பகல்
வலிதுள்ளதென்பது.
தலையுவா - அமாவாசை.
தலைவாசற்கால்வைக்கும் விதி - வீதி
வாசற்கால் காட்டும் விபரம்:- கிழ
மேல் வீதியானால் ஒன்பது பங்கு
கிழக்கே தள்ளியும், தென்வடல்
வீதியானால் தெற்கில் மூன்று
பங்கு தள்ளியும் வாசற்கால் வைப்
பது நன்றென்பதாம்.
தவத்தானம் 2
தவம்
இவலப்பக்கம்
ஒன்பதாமிடம்.
தவலபட்சம் மடிதவசுக்கிலபட்சம்,
தவனபக்கம் [ வளர்பிறை
தவளபட்சம்.<noinclude></noinclude>
3zc3kfnnjv8g6k0qx4opikekex2tseu
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/125
250
641424
1926821
2026-04-25T06:07:06Z
Magizh Sundram
16422
OCR
1926821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளயஅ
சோதிடப் பேரகராதி.
தறிக்கால்ராசி,
தவனன் - சூரியன்.
தழல் - கார்த்திகை நட்சத்திரம்.
தறிக்கால்ராசி -- சூரியனுக்கு-கன்னி,
துலாம், விருச்சிகம், தனுசு, மக
ரம், கும்பம், கடகம் இவைகளின்
மூன்றாங்காலும், கடகம், சிங்கம்,
இவைகளின் முதற்காலும்,மிது
னத்தில் நாலாங்காலுமாம்.
சந்திரனுக்கு - கும்பத்தில் இர
ண்டாங்காலும், மிதுனத்தில்
மூன்றாங்காலும், மேடத்தில் நா
லாங்காலுமரம்.
தனிட்டாபஞ்சமி.
பம் முதற்காலும்,சிங்கம்,மிது
னம், கன்னி, மகரம், விருச்சிகம்,
மீனம் இவைகளின் இரண்டாங்
காலுமாம்.
-
தற்காலக்கிரகநிலை - குறித்தகாலத்
துக் கிரகம் நிற்கும் நிலை.
தற்காலசுத்தபுடம் - குறித்த காலத்
தில் கிரகங்கள் நிற்கும் நிலையைச்
சரியாயறியும் சுத்த கணிதம்.
தற்காலமத்திமம் -குறித்தகாலத்திற்
குக் கிரகங்கள் நிற்கும் நிலையைப்
பொதுவாக அறியும் மத்திம கணி
தம்.
தற்காலமித்துருக்கிரகம் -- ஒவ்வொரு
கிரகத்திற்கும் தானிருக்குமிராசி
க்கு இரண்டு,மூன்று,நாலு,பத்து,
பதினொன்று, பனிரண்டு இவ்
விராசிகளிலிருக்குங் கிரகங்களாம்.
செவ்வாய்க்கு - சிங்கம், கன்னி
இவைகளின் நாலாங்காலும், இட
பத்தில் மூன்றாங்காலும்,மேடம்,
தனுசு, விருச்சிகம், மிதுனம்
இவைகளில் முதற்காலுமரம்.
புதனுக்கு - தனுசு, மேடம்,
கடகம், துலாம் இவைகளின் இர தனஸ்தானம்
ண்டாங்காலும், கும்பத்தில் நா
லாங்காலுமாம்.
வியாழனுக்கு - விருச்சிகம்,
தனுசு, துலாம், மீனம் இவைக
ளின் நாலாங்காலும்,மீனம், மகரம்,
கன்னி இவைகளின் முதற்காலும்,
இடபம் இரண்டாங்காலுமாம்.
சுக்கிரனுக்கு - சிங்கம், மேடம்
இவைகளின் மூன்றாங்காலும்,கும்
பம், துலாம் இவைகளின் முதற்
காலும், இடபம், கடகம் இவை
களின் காலாங்காலுமரம்.
-
சனிக்கு - மகரம் காலாங்கா
லும், மீனம் மூன்றாங்காலும், இ
தனத்தானம் இரண்டாமிடம்.
தனம்
தனாயனம் - கிரகச் சுற்றோட்டவழி,
நீண்டவழி.
தனிஷ்டாபஞ்சமி ) மரணத்திற்
தனிட்டாபஞ்சமி ) காகா நாட்க
ளாம். விபரம்;- அவிட்டம், சத
யம், பூரட்டாதி, உத்திரட்டாதி,
ரேவதி இவைகளில் மரணமானால்
ஆறுமாதம் வீடுமூடவேண்டுமென்
றும், இவை போன்றே ரோகணி
க்கு நாலுமாதமும், கார்த்திகை,
உத்திரமிவைகட்கு மூன்றுமா
மாத
மும், மிருகசீரிடம், சித்திரை,
புனர்பூசம், விசாகம், உத்திராடம்<noinclude></noinclude>
l716g3j00j7plxg5f5ww26mh7d0c2iq
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/126
250
641425
1926823
2026-04-25T06:07:23Z
Magizh Sundram
16422
OCR
1926823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>தனுசு.
சோதிடப் பேரகராதி.
ளயகூ
தாதுக்கோள்.
இவைகட்கு இரண்டு மாதமும் தனுசுஉருவம் -வில்.
வீடு மூடுவதென்பதாம். குறிப்பு :-தனுசுாவி தனுசில் சூரியன் நிற்
இக்கொள்கை அநேக நாடுகளிற் தனுவி றல், மார்கழிமாதம்,
கிடையாது.
தனிட்டை - அவிட்ட நட்சத்திரம்.
தனிநாள் அசுபநான், செய் யுங்
தனியநான் காரியகளுக்காகாகாள்
விபரம் - சித்திரைமாதம் பதினொ
ன்று, இருபத்தெட்டுத்தேதிகளும்,
வைகாசிமாதம் பதினாலு, இருபத்
தேழு தேதிகளும், ஆனிமாதம்
பதினாறு, முப்பது ஆகிய தேதிக
ளும், ஆடிமாதம் பனிரண்டு,
இருபத்தைந்து தேதிகளும்,
தனுசு-தனுசு,
தனுர் அங்கம் - தொடை.
தனுர்த்திசை - மேற்கு.
/தனுர்நிறம்- செவப்பு
தனுர்மாதம் - மார்கழிமாதம்.
தனுர்யோகம் - ஒரு நல்ல யோகம்.
அது இராகு கேது நீங்கிய சூரி
யாதி எழுவரும் பத்து, பதினொ
ன்று, பனிரண்டு, ஒன்று, இர
ண்டு,மூன்று நாலு ஆகிய இவ்வி
ராசிகள் வரை நிற்பதாம்.
ஆவணிமாதம் பதினைந்து, இருபத்தனுவிராசி - தனுசு.
தைந்து ஆகிய தேதிகளும், புரட்தனை - எண்.
டாசிமாதம் பதினாலு, முப்பத் தன்வந்திரி - சூரியன்.
தொன்று ஆகிய தேதிகளும்,ஐப் தன்னமதி - பிறைச்சந்திரன்.
பசிமாதம் பதினாலு இருபத்தேழு,
தேதிகளும், கார்த்திகை மாதம்
பதினேழு,இருபத்திரண்டு தேதி
தா
தா-பகை, பாய்தல், வியாழன்.
தாசி
-பரணிநரள்.
களும், மார்கழிமாதம்பதினைந்து, தாசு-இரண்டரை நாழிகை
இருபத்தைந்து தேதிகளும், தை கொண்ட நேரம்.
மாதம் ஒன்பது, இருபத்தொன்று தாச்சாயணி இருபத்தேழு நட்சத்
ஆகிய தேதிகளும், மாசிமாதம் தாட்சாயணி திரப்பொதுப்பெயர்,
இருபத்தாறு,இருபத்தெட்டு ஆகிய உரோகணி.
தேதிகளும், பங்குனிமாதம் இரு தாட்சாயணிபன் } சக்திரன்.
பத்தேழு, இருபத்தெட்டு ஆகிய தாட்சாயணீபன்
தேதிகளுமாம்.
தனு தனுவிராசி, காண்டீபம்,
தனுசுகொடுமரம், சாபம், சிலை,
தனுர், துரோணம், வில், அன்றி
யும் மார்கழி மாதத்திற்கும்
பெயர்.
தாது - பஞ்சபூதம், பத்தாவது வரு
டம்.
-ச
தாதுக்கோன் - சனி, செவ்வாய்,
பாம்பு என்பதாம். அன்றியும் சந்
திரனையுஞ் சொல்லும் நூல்களு
முள்.<noinclude></noinclude>
jttob6ztq11hay26ogbixb3cbak3zmm
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/127
250
641426
1926824
2026-04-25T06:07:41Z
Magizh Sundram
16422
OCR
1926824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஉய
தாயான்.
சோதிடப் பேரகராதி.
தாராபலம்.
தாதுராசி-மேடம், கடகம், துலாம், தாரகம் - சூரியன்நின்ற நட்சத்திரத்
மகரம்
திற்குப் பத்தாம் நட்சத்திரம்.
தாதுவருடப்பலன் காலந்தவறாத தாரகாபதி - சந்திரன், வியாழன்.
மழையும், எல்லாவிதமான விளை | தாரகினி- இரவு
பலன்களும், மனிதருக்கு வேண் தாரகை-விண்மீன், கட்சத்திரம்.
டியசகலசாதனங்களும் உண்டாகி தாரசங்கிரகம் - விவாகம்
சனங்கள் சேமமடைவார்கள்.
உதாரணம்:- தாது வருடந்த
ராதலத்தோர் வாழ்ந்திருப்பர்,
வேதனையு மில்லை விளைவுண்
டாஞ் - சீதமழை, பெய்யும் பரிவா
ரம் பேருடனே யெந்நாளும்,
உய்யும் படியுலகி லுண்டு.
(இடைக்காடர்)
தாதை - ஒன்பதாமிடத்ததிபதி.
தாபான் - சூரியன்.
தாபனம் - சூரியகிரணம்.
தாமதக்கிரகம் - இராகு, சூரியன்,
செவ்வாய், புதன், சனி என்ப
தாம்.
2
நாமரவேனை } ஒக்குளவேளையி
றேமுக்கால் நாழிகைகொண்ட
முகூர்த்த காலம்.
தாமநிதி -சூரியன்.
தாமயோகம் - ஒரு நல்ல யோகம்.
அது இராகு, கேது நீங்கிய சூரிய
னாதி எழுவர் ஆறுார்சிகளிலிருப்ப
தாம் மாகாற்
தாமரைாண்பன்
தாமரைநாயகன் 5
}
சூரியன்.
தாமனபருவம் - சித்திரைமாதம் சுக்
கிலபக்கத்து ஏழாக்திதி.
தாயான் - ஒன்பது.
தாரண
- பதினெட்டாவதாண்டு,
தாரணவருடப்பலன்
மழையில்லா
ததால் உலகத்திற் பஞ்சமும்,கோ
யும், சீவராசிகளுக்கு மரணமும்,
அஃகவிலைக் குறைவும், துட்டர்க
ளாற் பயமும், சகல சீவராசிகளுக்
குங் கஷ்டமுமுண்டாம்.
உதாரணம்:-
தாரணத்தில் மாரி
யறுந் தாரணியிற் கேடுமுண்டாம்,
ஓராய் சீவன்களுய்யாது-பார்
பிணியால், ஐய மடியுமே யஃகங்
குறைவாமே, வெய்யர் பயமே
மிகும். (இடைக்காடர்)
நட்சத்திரம்,விவாகம்.
ராரா-பிண்மீன், நட்சத்திரம்
தாராகணம்- நட்சத்திரம்.
தாராபதம் -- நட்சத்திரபதவி, வானம்.
தாராபதி- சந்திரன், வியாழன்.
தாராபலம் - நட்சத்திர பலன்களி
னொன்று.அது சென்மநட்சத்திர
முதல் தற்கால நட்சத்திரம் வரை
எண்ணிவந்த தொகையில் ஒன்று,
பத்தொன்பது மத்திபம். இரண்டு,
பதினொன்று, இருபது உத்தமம்.
மூன்று, பனிரண்டு, இருபத்தொ
ன்று அதமம்,சாலு, பதின்மூன்று,
இருபத்திரண்டு சேமம்,ஐந்து,<noinclude></noinclude>
750ulae37lxs5oclccmeouk3uov2lff
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/128
250
641427
1926825
2026-04-25T06:08:08Z
Magizh Sundram
16422
OCR
1926825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பதினான்கு
திகை.
சோதிடப் பேரகராதி.
ளஉக
திங்கள்.
மத்திபம்,ஆறு,பதினை/திக்கங்கம் - அட்டபாலகர்குறி. அது
ந்து, இருபத்துநாலு உத்தமம்.
ஏழு அதமம், எட்டு, பதினேழு,
இருபத்தாறு உத்தமம், ஒன்பது,
கிழக்காதி முறையே கொடி,
புகை, சீயம்,நாய், இடபம், கழு
தை, யானை, காகம் என்பனவாம்.
பதினெட்டு சமம். பத்து மத்தி/திக்கடைப்பு - திக்கெல்லை.
பம். பதினாறு அதமம்.இருபத்து
மூன்று, இருபத்தைந்து அதமாத
மம். இருபத்தேழு அதமமென்ப
தாம்.
தாராபீடன் - சந்திரன்.
தாராபூடணம் - இரவு.
தாராமண்டலம் - நட்சத்திரமண்ட
லம்.
தாருண - தாரணவருடம்.
தாரை - இராசி, நட்சத்திரம்.
தாரையோன் - இலக்கினாதிபதி.
தார்மிகை - ஏகாதசி திதி.
தாலிப்பொருத்தம் -மங்கிலியப்
பொருத்தம்.
தாவட்டம் - சிற்பநூல்
முப்பத்தி
ரண்டினொன்று.
தாவுரி - இடபவிராசி.
தாழி - பரணிநாள்.
தாளி- அனுடநாள்.
தானத்திரை - தானாதிபதி.
தானவன் - சந்திரன்.
தானி - இருப்பிடம், தானத்திலும்
ளது.
தானியாதிபதி
பதி.
-
தானியத்துக்கதி
திக்கு-திசை, அது கிழக்கு, தென்
கிழக்கு, தெற்கு, தென்மேற்கு,
மேற்கு, வடமேற்கு, வடக்கு, வட
கிழக்கு. இவையன்றி ஆகாயம்,
பாதானம் இவையுஞ்சேர்த்து, பத்
துத் திக்கென்பாருமுளர்.
குறிப்பு :- இவற்றுன் கிழக்கு
கருடன் திசை, தென்கிழக்கு
பூனைத்திசை,தெற்கு சிங்கத்திசை,
தென்மேற்கு சுணங்கன் திசை,
மேற்கு நாகத்திசை, வடமேற்கு
எலித்திசை,வடக்குயானைத்திசை,
வடகிழக்கு முயற்றிசை,ஆகாயம்
விசும்புத்திசை,பூமி பாதாளதிசை
திகதி - தேதி.
திகை - திசை
16
என்பனவாம்.
திக்குபதிக்கிரகம் - இன்னதிக்குக்கு
இன்னகிரகம் அதிபதி என்பதாம்.
விபரம்:- கிழக்காதி முறையே
சூரியன், சுக்கிரன், செவ்வாய்,
இராகு, சனி, சந்திரன்,புதன்,
வியாழன் என்பனவாம்.
திக்குப்பாலகர் - அட்டதிக்குப் பால
கரைப் பார்க்க.
திக்குவிபாகம் - திக்கின்பகுதி.
திங்கள் நாள் - மிருகசீரிடம், திங்கட்
கிழமை.
திங்கள் திங்கட்கிழமை, சந்திரன்,
மாதம், பன்னிரு மாதங்
களுக்கும் பொதுப்பெயர்.<noinclude></noinclude>
hhw7npjd795n3t268opmtcor5pjv8ac
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/129
250
641428
1926826
2026-04-25T06:08:29Z
Magizh Sundram
16422
OCR
1926826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஉஉ
திதிச்சூலம்.
சோதிடப் பேரகராதி.
திசி - திசை, திசையையுடையது.
திசிலன் - சந்திரன்.
திசை - ஒவ்வோர்திக்குப்புறமும் அர
சாளும் அதிகாரிகளிருக்குந் திசை,
திதியமிர்தயோகம்.
வாசை மேற்கு. தசமி, பூரணை
வடமேற்கு. அட்டமி, சதுர்த்தசி
வடக்கு. பஞ்சமி,திரயோதசி வட
கிழக்கு என்பதாம்.
நிலை, நோக்கு, ஒவ்வோர் கிரகத் திதிச்சயம்
தின் அதிகாரம். இது நட்சத்திர திதிட்சயம்
அமாவாசை.
திசை முதலியனவாம். விபரம்;-திதித்திரயம்-ஒரு நாளில் மூன்று
(1) ரகங்களுக்கு விதித்த நட்சத்
திரதிசை, (2) உற்பன்ன னதிசை,
(3) மிருத்துதிசை, (4) பிராண
திசை, (5) ஆதானதிசை, (6)
வாமதிசை, (7) உடுதிசை, (8)
கிரியாணதிசை, (9) மகாப்பிராண
திசை, (10) குளிககிரியாணதிசை,
(11) காலச்சக்கிர திசை என்ப
னவாம்.
திசையோகினிநிலை- கருடன் கிழ
க்கு, பாம்பு மேற்கு, சிங்கம் தெற்
கு, யானை வடக்கு, பூனை தென்
கிழக்கு, எலி வட டமேற்கு, நாய்
தென்மேற்கு, முசல் வடகிழக்கு
என்பதாம்.
திட்டிதோசம் - கண்ணேறு.
திட்பம் - காலநுட்பம்.
திதி - பஞ்சாங்க உறுப்பினொன்று.
இது சந்திரநாள்.
திதிச்சூலம் - இன்னத்திக்கு இன்ன
திக்கு சூலமென்பது. இவை பிர
தமை,நவமி கிழக்கு.துதிகை,
சத்தமி தென்கிழக்கு. திருதிகை,
ஏகாதசி தெற்கு, சதுர்த்தி, துவா
தரி தென்மேற்கு, சஷ்டி, அமா
நிதி வருவது.
திதித்தியாச்சியம் - திதியில் கழிவு
நாழிகை.விபரம்:-பிரதமை இரு
பத்துகாலு, அஷ்டமி இருபது,
துதிகை பனிரண்டு, திருதிகை
ஐம்பத்தைந்து, சதுர்த்தி நவமி
ஐந்து,பஞ்சமி சஷ்டி ஐம்பத்து
நாலு, சப்தமி முப்பத்தொன்று,
தசமி முப்பத்துமூன்று, ஏகாதசி
ஒன்று, துவாதசி பதினைந்து, திர
யோதசி இருபத்துநாலு, சதுர்த்
தசி ஏழு, பூரணை இருபத்தொன்
பது, அமாவாசை ஆறு, விஷக
டிகை ஆரம்பித்த நாழிகை முதல்
மூன்றேமுக்கால் நாழிகை வரை
தியாச்சியமாம்.
ராச
திதித்துவயம் - ஒருநாளில் இரண்டு
திதி வருவது.
நிதிகாசயோகம்
திதி நட்சத்திரநாசயோகம் யோகம்
விபரம் - நாசயோகத்திற்காண்க.
திதிநிர்ணயம் -- திதியை நிச்சயிப்பது,
இது பஞ்சாங்க கணிதமுறையு
ளொன்று.
திதிப்பிரணி - சந்திரன்.
திதியமிர்தயோகம் - இன்ன கிழமை
யில்இன்ன திதி வருவதென்பது.<noinclude></noinclude>
9hh8l10vzqp2ohzaoe8l9rpzqb86k9p
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/130
250
641429
1926828
2026-04-25T06:08:48Z
Magizh Sundram
16422
OCR
1926828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
திரயாங்கம்.
விபரம்:-
ஞாயிறில் பிரதமையுஞ்
சஷ்டியும்,திங்களில் துதிகையுஞ்
சத்தமியும், செவ்வாயில் சதுர்த்
தசியும், புதனில் அஷ்டமியும்,
திருதிகையும், திரயோதசியும்.
வியாழனில் நவமியும், வெள்ளி
யில் ஏகாதசியும், சனியில் சதுர்த்
தசியும் வருவதாம்.
திதீ - இரவு.
திமிதம் - ஒரு கணக்கு.
திமிரம் - இருள்.
திமிரரிபு
திமிராரி
சூரியன்.
திம் - திக்கு.
தியாச்சியம் - ஒவ்வொருநாளிற் கழி
வாகியதாக விலக்கப்பட்ட மூன்
அவை
றே முக்கால் நாழிகை.
லக்கினத்தியாச்சியம், நச்சத்திரத்
தியாச்சியம்
படும்.
எனப் பலவகைப்
தியுகம் - கிரணம்.
தியுதி - கிரணம், வெளிச்சம்.
தியுதிகரன் - துருவன்.
தியுநிசம் - இராப்பகல்.
தியுபதி
தியுமணி
சனி.
திரட்டு-இருது.
திருசங்குமண்டலம்.
ளஉங
ரம். குறிப்பு:- பலவருடங்களுக்கு
முன்னால் தற்காலம் உபயோகப்
பட்டு வருகிற பஞ்சாங்கத்திற்குப்
பதிலாக இத்திரயாங்கமே சனங்
களால்
தது.
கையாளப்பெற்று வச்
திரயீத்து - சூரியன்.
திரயோதசி - பதின்மூன்றாந்திதி.
திரராசி
கும்பம்.
திரலக்கினம் } இடபம், சிங்கம், வீரு
திரவியத்தானம் (இரண்டாமிடம்,
திரவியம் ஒன்பதாமிடம்.
திரி -மூன்று.
திரிகதம் - மூன்றுபங்கு.
திரிகாலசந்தி - காலை, மாலை, உச்சி
திரிகம் - மூன்று கூடியது.
களிற் செய்யும் அனுட்டானம்.
திரிகாலம் - முக்காலம; அவை உச்சி,
காலை,மாலை. அன்றியும் இறந்த
காலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்பதுமாம்.
திரிகாலவர்த்தமானம் -மூன்று கால
ங்களிலும் நடக்கும் சம்பவங்கள்.
திரிகாலவர்த்தமானி - மூன்றுகாலங்
களுமறிந்தோன், சோதிடன்,
திரநாள் - உத்திரம், உத்திராடம்,
உத்திரட்டாதி, ரேவதி.
திரமாதம் - வைகாசி, ஆவணி, கார்த்
திகை, மாசி.
திரயம் - மூன்று.
திரயாங்கம் - மூவாங்கம், மூன்றன்
கம்; இது திதி, வாரம், கட்சத்தி
ஞானி.
திரிகோணம்
-
முக்கோணம்.
இது இலக்கினம், ஐந்தாமிடம்,
ஒன்பதாமிடம். அன்றியும் அஷ்ட
வர்க்கத்துளொன்றாகிய திரிகோ
ணசோதனையுமாம்.
திருசங்குமண்டலம் -நட்சத்திர
மண்டலம்.<noinclude></noinclude>
975ofh2emsmao4bm5zdh2ejpdr45zqo
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/131
250
641430
1926829
2026-04-25T06:09:30Z
Magizh Sundram
16422
OCR
1926829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஉச.
சோதிடப் பேரகராதி.
திரிமூர்த்தியோகம்.
திரிசவனம் - திரிகாலம்.
திரிசிருங்கம் - முக்கோணம்.
திரிதசாசாரியார் - வியாழன்,
திரிதசி - திரயோதசி.
திரிதம் - மூன்று.
திரிதிகை
திரிதியை
மூன்றாந்திதி.
திரிதினஸ்பிர்க்கு - ஒரு திதியாவது
ஒரு நட்சத்திரமாவது, ஒரு யோக
மாவது மூன்றுநாளிற் கலந்திருப்
பது.
திரிநேத்திரசூடாமணி - சந்திரன்.
திரிமூர்த்தியோகம் - ஒரு ராஜயோ
கம்.இது சந்திரன் சிங்காசனாங்கிச
மாகவும், குரு பாரிசாதாங்கிசமாக
வும், சுக்கிரன் ஐராவதாங்கிசமா
கவு மிருந்தாலும்,
(2) சுக்கிரன் பர்வதாங்கிசத்திலா
வது, குரு சிங்காசனாங்கிசத்திலா
வது, சந்திரன் ஐராவதாங்கிசத்தி
லாவது இருந்தாலும்,
(3) இரண்டாமிடத் ததிபதிக்கு
இரண்டு, எட்டு ஆகிய இவ்விடங்
களில் பாபரும் சுபருங்கூடி யிருந்
தாலும்,
(4) பத்துக்குடையோன் நின்ற
ராசியாதிபதியின் அங்கிசாதிபதி
கேந்திர உச்சமாக விருந்தாலும்
திரைக்காணம்.
ஆகிய
நாலு,பத்து, பனிரண்டு
இவ்விடங்களில் சூரியன், செவ்
வாய், சுக்கிரன் ஆகிய இவர்கள்
தனித்தனியே நின்றாலும் இவ்
யோகமாம்.
திரிம்சாம்சம் - தசவர்க்கத்தொன்று.
இது இலக்கினத்தை முப்பது
பங்கு செய்வதாம்.
திரியாங்கம் - திரயாங்கம் பார்க்க.
திரிலோகேசன் - சூரியன்.
திருக்குறிப்புத்தொண்டர் திருநட்சத்
திரம் - சித்திரை மாதத்தில் வரும்
சுவாதி நட்சத்திரம்.
திருதி - நித்திய யோகத்தொன்று.
திருநாவுக்கரசர் திருநட்சத்திரம் -
சித்திரைமாதத்தில் வரும் சதைய
நட்சத்திரம்.
திருநாள் —பெருநாள், விசேடநாள்.
திருப்பணி - ஒன்பதாமிடம்.
திருமண்டலம் - துருவமண்டலம்.
திரும்பு - சந்திரன்.
திருவாதிரை - ஆதிரை, ஈசநான்,
செங்கை, மூதிரை, யாழ்.
திருவோணம் - உலக்கை, ஓணம்,
சிரவணம், சோனை, நள்ளு,மாயோ
னாள்,முக்கோல், வயிரம்.
திரேகம்-மூன்று,
திரேக்கரணம் - திரேக்காணம்.
அல்லது அத்தத்தானத்துக்குடை திரேக்காணாதிபன் - திரேக்காணத்
யோனும் ஒன்பது, எட்டு, நாலு
ஆகிய இவ்விடங்களில் குரு,புதன்,
சுக்கிரன் ஆகியவர்கள் தனித்
தனியே நின்றாலும், அல்லது
ததிபன்.
-
திரேக்காணம் 2 தசவர்க்கத் தொன்
திரைக்காணம் று; அது உதையாா
சியை மூன்றாகப் பகிர்தல்.<noinclude></noinclude>
f7ohn61i0sh17wgto1xejcmwk5n8leo
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/132
250
641431
1926830
2026-04-25T06:09:58Z
Magizh Sundram
16422
OCR
1926830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>தினமகாதிசை.
சோதிடப் பேரகராதி.
தினத்திரயம்.
திரேதம் - இரண்டாம்யுகம்
தியுமணி
சூரியன்.
தியுதம்
திறு -மூன்று.
திலுப்புலு - முப்பது.
திவசகான் - சூரியன், விடியல்.
திவசமுகம் - உதையகாலம்.
திவசம் - நாள்.
திவசாத்தியம் 2
திவசாவசானம்
அந்தி.
திவம் - ஆகாயம், நாள், பகல்.
திவா - நாள், பகல்.
திவாகரம் - ஒரு நிகண்டு.
திவாகரன் - சூரியன்.
திவாநிசம் - பகலிரவு.
திவாமணி - சூரியன்.
திவாமத்தியம் நடுப்பகல்.
திவாமானம் - பகற்காலம்.
திவாராத்திரம்
திவாராத்திரி 5
பகலிரவு.
திவார்த்தம் - பகலிற்பாதி, மத்தியா
னம், நடுப்பகல், நண்பகல்.
ள உரு
தினந்தினம் - நாளுக்குநாள்.
தினபலம் - ஐந்தாம், ஆறாம், ஏழாம்,
எட்டாம், பதினொன்றாம், பனி
ரண்டாமிராசிகள். நிதம் நடக்
கும்பலன்.
தினபலன் - நிதம் நடக்கும் பலன்.
விபரம்:- சன்மநட்சத்திர முதல்
அன்றைய நட்சத்திரவரை எண்
ணிக்கண்ட தொகையுடன், ஞா
யிறுமுதல் அன்றைய வாரம் வரை
யிலும் பிரதமை முதல் அன்றைய
திதிவரையிலும் கூட்டிக்கண்ட
தொகையைச் சேர்த்து, ஒன்பதில்
கழித்த மிச்சம் ஒன்றுக்கு வியா
கூலம், இரண்டுக்கு சுபம், மூன்
றுக்கு ஓர்வார்த்தை, நாலுக்கு
விருந்தினர்வரவு,ஐந்துக்கு பெண்
போகம், ஆறுக்கு சுபம், ஏழுக்கு
கலகம், எட்டுக்கு ரோகம், ஒன்ப
துக்கு ஞானவாக்கியமெனக் கொ
ள்வதாம்.
தினப்பாடு - தினசேரி.
திவேச்சுரன் பன்னிரு சூரியரி தினப்பிரணி-சூரியன்.
லொருவன்.
திவ்வியவருஷம்- தேவவருடம். இது
மானிடவருடம் முன்னூற்றறுபத்
தைந்து கொண்டது.
திறி - மூன்று.
தினகரன் - சூரியன்
தினசேசவம்- இருள்.
தினசேரி - நித்தம்.
-
தினத்திரயம் - ஒருநாளில் மூன்று
பெருநாள் சம்பவிப்பது.
-
தினமகாதிசை நித்தம் நடக்குக்
திசை. விபரம் - சூரியன் நின்ற
நட்சத்திரமுதல் அன்றைய நட்
சத்திரம் வரை எண்ணிக்கண்ட
தொகையை இரண்டிற் பெருக்கி
இதனோடு சென்மநட்சத்திர
முதல் அன்றைய நட்சத்திரம்
எண்ணிக்கண்ட தொகை
யையும் ஞாயிறுமுதல் அன்றைய
வாரம் வரையுள்ள தொகையை
வரை<noinclude></noinclude>
48rvgw8kdtidrhd0h7fjbb21q4nkpe3
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/133
250
641432
1926831
2026-04-25T06:10:18Z
Magizh Sundram
16422
OCR
1926831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஉக
தினம்.
சோதிடப் பேரகராதி.
யும் கூட்டி ஒன்பதில் கழித்து
வந்த மிச்சம் ஒன்றுக்குச் சூரிய
திசை, இரண்டுக்குச் சந்திரதிசை,
மூன்றுக்குச் செவ்வாய்திசை,
நான்குக்கு இராகுதிசை, ஐந்துக்
கு வியாழதிசை, ஆறுக்குச் சனி
திசை, ஏழுக்குப் புததிசை, எட்டு
க்குக் கேதுதிசை, ஒன்பதுக்குச்
சுக்கிரதிசையாகக்கொள்க.
தினமணி - சூரியன்.
தினமானம் - தினத்தினளவு, நித்த
மும்.
தீபகம்.
கூற்று. இதை ஆரிய கணிதசாஸ்
திரசித்தாந்தத்தால் மறுக்கப்பெற்
றிருக்கிறது.
உதாரணம்:- "நமக்குக் கிழக்கு
முகத்தா லறுபது நாழிகையிற்,
சுமப்புறு பூட்டையிற் சக்கரம்
போற்புவி சூழ்தலினால், இமைக்
கும் பகலிரவாகுந் துருவ ரியற்கை
யிற்குங், குமக்கொங் கையாய்பசு
லதுசூழு மண்ணெனக் கூறல்
பொய்யே'' என்னும் செய்யுளா
லறிக.
தினம் - திருநாள், பெருநாள், முழு தினவிருத்தி - நாள்தோறும், நித்தம்.
நாள், பகல். குறிப்பு:- இயற்கையை தினாங்கிசம் - சாமம்.
அறிவிக்கும் கணிதசாஸ்திர சித் தினாதி- விடியல்.
தாந்தப்படி பூமி துருவச்சக்காதினாதினம் - பிரதானநான்.
மென்ற நாராசத்திற் சுற்றிவரு தினாந்தம் - மாலைப்பொழுது.
கின்றது. அப்படிச் சுற்றிவரும் தினாந்தகம்- இரவு.
போது சூரியனுக்கு எ எதிர்ப்படும்
பூமியின் பாகத்தில் வாசம்பண்
ணுகிறவர்களுக்கு வெளிச்சமுண்
டாகின்றது. இதுவே பகற்கால
மாகவும், சூரியன் மறைந்தபின்
வரும் பூமியின் பாகத்தில் வாசம்
பண்ணுகிறவர்களுக்கு இருட்டு
தினாந்தரம்-ஒன்றைவிட்டொரு
நாள், தினமும்.
தினாமிசம் - நாளின்பங்கு.
தினாரம்பம் - வைகறை.
தினாவசானம் - அந்தி.
உண்டாகின்றது. இதுவே இராக் தீ-பஞ்சபூதத்தொன்று.
காலமாகவும், இப்படி இயற்கை தீகன் - சந்திரன்.
முறையாய் நடந்துவரும் இரவு
பகலின் மொத்தமாகிய காலத்தை
ஒரு தினம் அதாவது ஒரு நாளெ
ன்று சொல்லப்படும்.
தீக்கதிர் -சூரியன்.
தீக்குறி -துற்குறி, அபசகுனம்.
தீதை- கன்னி.
தீத்தம்ல்கலம்}
சிங்கம்.
சூரியன் பூமியைச் சுற்றிவரு தீத்தங்கலம்
கிறதென்பது புராணங்களின் தீபகம் - சந்திரகிரணம்.<noinclude></noinclude>
ru4kah1zrp00sfqpm6yz8tlnhxyz5yu
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/134
250
641433
1926832
2026-04-25T06:10:37Z
Magizh Sundram
16422
OCR
1926832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>துங்கீபதி.
சோதிடப் பேரகராதி.
தீபம் - சோதிகட்சத்திரம்.
தீபாவளி - விசேடமான ஒர் பெரு
நாள், இது ஐப்பசிமாதம் அமர
பக்கத்துச் சதுர்த்தசித் திதியின்
இரவு நாலாஞ்சாமத்திற் கொண்
டாடுவதாம்.
தீமான் - பண்டிதன், வியாழன்.
தீர்க்கதரிசனம் - முக்காலவர்த்தமா
னமறிதல்.
தீர்க்கபாதன் - சூரியன்.
தீர்க்கம் - அந்தரம், ஆறாம் ஏழாமி
ராசிகள்.
தீர்க்கராத்திரம் - நீண்டராத்திரி,
நெடுங்காலம்.
தீர்க்காயுசியம் - நெடுங்காலம்.
தீர்த்தம் - திருநான், திருமஞ்சனநீர்,
தீ, நீர்
தீவளி - தீபாவாளி.
தீவிரம் - சூரியகிரணம்.
தவேள்வில்} கலியாணம்.
து
துகினம் - சந்திரகிரணம், பனி.
துக்ககாரகன் - சனி.
துங்கமத்தோட்சம் கிரகவட்டத்தி
-
னது தூரமான நிலை.
துங்கன் - கிரகவட்டத்தின் தூரமான
முனை.
துங்கி- இரவு.
துங்கீசன் - சந்திரன், சூரியன்.
துங்கீபதி - சந்திரன்.
துரிதநாள்.
ள உஎ
துடி -- காலதசப்பிரமாணத்தொன்று.
இது நிமிடம் எட்டுக்கொண்டது
காலநுட்பம்.
துடி நூல் - தேகாங்கத் துடிப்பினால்
வரும் சுகதுக்க மறிவிக்கும் ஓர்
சாஸ்திரம்.
துடை - பத்தாமிடம்.
துட்டக்கோள் - தீக்கிரம், பாவக்கிர
கம்.
துட்டன் - தேள், விருச்சிகம்.
துணங்கால் - இருள், திருநாள்.
துணி-சோதி நட்சத்திரம்.
துணை
-அளவு, சல்வியம்.
துதியை - இரண்டாந்திதி.
துது - இருபது.
துந்துபி
துந்துமி
ஐம்பத்தாறாவதுவருடம்.
துந்துமிவருடப் பலன் - நல்லமழை
யும், செந்நெல் முதலிய தானியங்
கள் அதிக விளைவும், சனங்கள்
அதேகநல்ல காரியங்களைச்செய்து
மனக்களிப்பையும் இலட்சுமி
கடாக்ஷத்தையுமடைவர்.
உதாரணம்;-- துந்துமியில் மிக்க
சுப சோபனமுண் டாம்புவியிற்,
சந்ததமும் வாசமலர்த் தாமரை
மேல்- இந்திரையும், செல்வ மிகக்
கொடுப்பாள் செர்நெல்விளை
வுண்டாகும், நல்லமழை யுண்டு
நவில். (இடைக்காடர்)
துயம்- இரண்டு.
துரிதநாள் - அசுபதி, அஸ்தம்,
மூலம்.<noinclude></noinclude>
64j4vaw8o2vq44ixlqi4w485oljzary
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/135
250
641434
1926833
2026-04-25T06:11:10Z
Magizh Sundram
16422
OCR
1926833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ள உஅ
சோதிடப் பேரகராதி.
துர்துராயோகம்.
துரிதம் - காலதசப் பிரமாணத்தொ
ன்று. அது துடி இரண்டுகொண்
டது.
துருவங்கட்டுதல் -சூத்திரமுண்டா
க்குதல், வகை பண்ணுதல்.
துருவச்சக்கரம் - துருவத்திற்கு இரு
துவர்ப்பு.
துர்மதி - துன்மதி வருடம்.
துர்முகி - துன்முகி வருடம்.
துலா - துலாராசி, நிறைகோல்.
துலாகோடி - பத்துக்கோடி.
துலாங்கம் - முதுகு.
துலாச்சாதி - செட்டி,வியாபாரி.
பத்து மூன்றரைப்பாகையளவில் | துலாதரன் - சூரியன்.
நிற்பது, வான்சோதி மண்டலம்.
துருவநட்சத்திரம்
-
வடதிசையின்
அடிவானத்தில் தனித்திருக்கும்
பிரகாசமுள்ள ஒற்றை நட்சத்தி
ரம்.
துருவமண்டலம் - துருவபதம்.
துருவம் - அசையாநிலை, கிரகாடை
யின்றூரம், துருவ நட்சத்திரம்,
நிச்சயம், நித்தியயோகத்தொன்று,
வட்டத்தின் முனை.
துருவம்பண்ணுதல் - துருவங்கட்டு
தல்,
துருவயம் - அளவு.
ஒருவன் - முனையில் நிற்கும் கட்சத்
திரம்; இது துருவநட்சத்திரம்.
துரோணம் - தனுவிராசி,பதக்கெ
ன்னு மோரளவை,மண்மாரி பெய்
சத்தமேகங்களுளொன்று,
யும்
வில்.
துர்க்கை - பூரநட்சத்திரம்.
துர்த்தானம் - எட்டு, ஆறு, பனி
ரண்டாமிடங்கள்.
துலாத்திசை - மேற்கு.
துலாநிறம் - வெள்ளை.
துலாமாதம் - ஐப்பசிமாதம்.
துலாமானம் - நிறை.
துலாம் - கட்டளை, கோல், சீர்,
தராசு, துலை, தூக்கு, நிறை, வணி
கன்.
துலாரவி - ஐப்பசி மாதம், துலாத்
தில் சூரியனிற்றல்.
துலாவிசுவம் ? துலாராசியிற் சூரி
நிலாவிடுவம் யன் வருங்காலம்.
துலாவுருவம் - தராசு.
துலுக்குமாதம் - முகமதிய மாதம்
விபரம் - இஜரிமாதத்திற் காண்க.
துலுக்குவருடம்- இஜரிவருடத்திற்
காண்க.
துலை - துலா, துலாராசி, நிறை.
துவட்டன்- பன்னிருசூரியருளொ
ருவன்.
துவட்டாகான் - சித்திரை நட்சத்தி
ரம்.
துவந்தம்
இரட்டித்தது, இரண்டு
ஒன்றிற்கொன்று தொ
துவந்துவம் ) டர்ந்திருப்பது.
துர்த்தினம் - கெட்டநாள், மழை.
துர்தூராயோகம் - ஒரு சுபயோகம். துவந்தனை
இது சந்திரனுக்கு முன்னும் பின்
னும் எல்லாக் கிரகங்களும் நிற்பதுவயம் 5
தாம்;
துவம்
இரண்டு.
துவர்ப்பு-பத்து.<noinclude></noinclude>
kr1k4hcmejhf9umftln0lc6u6bx0nvn
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/136
250
641435
1926834
2026-04-25T06:11:28Z
Magizh Sundram
16422
OCR
1926834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>துவாதசி.
துவா-இரண்டு.
துவாதசம்
-
ண்டாமிராசி.
சோதிடப் பேரகராதி.
துற்பேலராசி.
துவந்தாராதி - சூரியன்.
பனிரண்டு, பனி: துவாபரம் மூன்றாம் யுகம்.
துவாதசகரன் - வியாழன்.
துவாதசலக்கினம் பன்னிரு லக்கி
னம். விபரம்:- ஒன்று சென்மலக்
கினம், இரண்டு ஓராலக்கினம்,
மூன்று கடிகாலக்கினம், நாலு
ஆருடலக்கினம், ஐந்து நட்
சத்திரலக்கினம், ஆறு காரக லக்கி
னம். ஏழுஆதெரிசலக்கினம்,
எட்டு ஆயுளிலக்கினம், ஒன்பது
திரேக்காணலக்கினம்,பத்து அங்
பதினொன்று
பனிரண்டு
கிச லக்கினம்,
நவாங்கிசலக்கினம்,
பரவலக்கினம் என்பதாம்.
துவாதசாங்கிசம் தசவர்க்கத் தொ
துவாதசாம்சம் ன்று, அது ஒரு
இராசியைப் பனிரண்டாய்ப் பகி
ர்தல்.
துவாதசாதித்தர் -பன்னிரு சூரியர்.
இவர் தாத்துரு,சக்கான், அரிய
மன், மித்திரன், வருணன், அஞ்,
சுமரன், இரணியன், பகவான்,
திவாச்சுவரன், பூடன், சவித்
திரு, துவட்டன் என்பவராம்.
குறிப்பு:- சித்திரை மாதம் மே
டவிராசி முதல் ஒவ்வொரு மாதத்
தொவ்வொரு ராசியிற் புகுஞ்
சூரியனுக்கு முறையே சொல்லும்
பெயராம்.
துவாதசான்மா - சூரியன்.
துவாதசிட பனிரண்டாந்திதி.
17
துவாப்புறு-இருபது
-
ளஉகூ
துவாரராசி - சரராசி நான்குமாம்.
இவை மேடம், கடகம், துலாம்,
மகரம் என்பனவாம்.
துவி - இரண்டு.
துவிசபதி -சந்திரன்.
-
துவிதகேந்திரம் - இரண்டாங் கேந்
திரம்.
துவிதசம் - இருபது.
துவிதம்- இரண்டு, இருமடங்கு.
துவிதியம் - இரண்டாவது, இரண்டு.
துவியகேந்திரம் - துவிதகேந்திரம்,
இரண்டாங்கேந்திரம்.
துவிரதாந்தகம் - சிங்கம்.
துளக்கம் - சோதிநாள்.
துளங்கொளி -கேட்டைநாள்.
துற்கரணம் - சுப காரி யங் களுக்கு
விலக்கப்பட்ட கரணங்கள். அவை
வனசை, சகுனி, சதுர்பாதம், நாக
வம், கிமிஸ்துக்கினம் என்பன
வாம்.
துற்காவேமி - புரட்டாசிமாதம் முன்
பக்கத்தில் வரும் ஒன்பதாந்திதி.
துற்பாக்கியமாலிகாயோகம் - ஒரு
நல்ல யோகம். இது எட்டாமிட
முதல் இரண்டாமிடம் வரை ஏழு
கிரகங்களிருப்பது.
துற்பெலராசி - சரராசி நான்குமாம்.
இது மேடம், கடகம், துலாம், மக
ரம் என்பதாம்.<noinclude></noinclude>
h8n2hfblw86dmdi8xpr6rkg1z7h7krp
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/33
250
641436
1926835
2026-04-25T06:11:51Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எந்த ஒரு நாடும். அது அமெரிக்காவானாலும், அல்லது சோவியத் ரஷியாவானாலும், இந்தியாவுடன் நல்லெண்ண அடிப்படையில் உறவும் நட்பும் கொண்டிருந்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|24||கலைஞர்}}</noinclude>எந்த ஒரு நாடும். அது அமெரிக்காவானாலும், அல்லது சோவியத் ரஷியாவானாலும், இந்தியாவுடன் நல்லெண்ண அடிப்படையில் உறவும் நட்பும் கொண்டிருந்தால்தான் அந்த நாடு பற்றி நமக்கு அன்பு ஏற்படுமே யல்லாமல், இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்ள விரும்புகிற எந்த நாட்டுடனும். அல்லது இந்தியாவின் நட்பைத் தனக்கு மட்டும் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிற எந்த நாட்டுடனும் கடுகளவு அனுதாபங்காட்டவும், நமது கழகத்தினர் என்றைக்குமே எண்ணிய தில்லை.
வீண்பழி சுமத்துவதின் மூலம், கழகத்தை வேரோடு சாய்த்துவிடலாம் என்று இந்திய கம்யூனிஸ்டுகள் வகுத்துள்ள திட்டம், கருவிலேயே சிதைந்துவிடும்! வஞ்சகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அது ஏதோ பேரொளி போலத் தெரியும்! கண்ணைக்கூடப் பறிக்கும் வண்ணம் ஜொலிக்கும்! அது மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!
கழகக் கதிர் முன்னே இந்தக் கம்யூனிஸ்டுகளின் தந்திரம் பொசுங்கிவிடும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
jkpo9dv1qr2kdr3hvua8zp0nqiqopkl
1926972
1926835
2026-04-25T07:41:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|24||கலைஞர்}}</noinclude>எந்த ஒரு நாடும், அது அமெரிக்காவானாலும், அல்லது சோவியத் ரஷியாவானாலும், இந்தியாவுடன் நல்லெண்ண அடிப்படையில் உறவும் நட்பும் கொண்டிருந்தால்தான் அந்த நாடு பற்றி நமக்கு அன்பு ஏற்படுமே யல்லாமல், இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்ள விரும்புகிற எந்த நாட்டுடனும். அல்லது இந்தியாவின் நட்பைத் தனக்கு மட்டும் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிடுகிற எந்த நாட்டுடனும் கடுகளவு அனுதாபங்காட்டவும், நமது கழகத்தினர் என்றைக்குமே எண்ணியதில்லை.
வீண்பழி சுமத்துவதின் மூலம், கழகத்தை வேரோடு சாய்த்துவிடலாம் என்று இந்திய கம்யூனிஸ்டுகள் வகுத்துள்ள திட்டம், கருவிலேயே சிதைந்துவிடும்! வஞ்சகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அது ஏதோ பேரொளி போலத் தெரியும்! கண்ணைக்கூடப் பறிக்கும் வண்ணம் ஜொலிக்கும்! அது மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!
கழகக் கதிர் முன்னே இந்தக் கம்யூனிஸ்டுகளின் தந்திரம் பொசுங்கிவிடும்.
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
9 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
iwj9xxkck4a4wrkgc6bducdi9ry70j9
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/137
250
641437
1926837
2026-04-25T06:12:20Z
Magizh Sundram
16422
OCR
1926837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
துன்முகிவருடப்பலன்.
துன்மதி - ஐம்பத்தைந்தாவது வரு
-
தெட்சணபூமி.
தூ
சொற்ப
தூக்கு - துலாவிராசி, நிறைகோல்.
தூசு - சித்திரைநட்சத்திரம்.
புதன்.
மாகா
டம்
துன்மதி வருடப்பலன்
மழையும், கெட்ட மனிதர்களுக்
கும்மிருகங்களுக்கும் கஷ்டமும்,
துங்கபத்திரி முதற் கோதாவிரி
வரை பஞ்சமும், மத்திம
ணத்திலும் அவ்விதமேயாம்.
உதாரணம்:- துன்மதியில்
மாரியற்பஞ் சோகமுறுங் கீழ்சாதி,
நன்மையில்லை மத்தியான்
னில் - உண்மையாய்க்,கொண்டுது
ங்க பத்ரிமுதற் கோதா விரியன
வும், விண்டுபஞ்ச மாகி விடும்.
(இடைக்காடர்)
துன்மரணம் - எட்டாமிடம்.
துன்னிமித்தம் - துற்சகுனம்.
துன்முகி - முப்பதாவது வருடம்.
துன்முகிவருடபலன் - முன்மழை
கொஞ்சமும், பின்மழை யதிகமு
மாகப் பெய்யும், வேளாண்மை
பொலிவுடன் விளையும், கூர்ச்சா
தேசத்தாருக்கு யாதொரு கெடு
தியுமில்லை: ஆனால் பருத்தியுப்பு
முதலிய வெண்மைப் பொருள்கள்
குறைவுண்டாம்.
உதாரணம்:-மிக்கான துன்மு
கியில் வேளாண்மை யேறுமே,
தொக்கமழை பின்னே சொரியு
மே-மிக்கான, குச்சா தேசத்திற்
குறைதீர வேவிளையும், அச்சமி
ல்லை வெள்ளையரி தாம்.
(இடைக்காடர்)
தூதன்
தூதுவன்
தூபயோகம் - ஒரு சுபயோகம். இது
செவ்வாயின் அங்கிசாதிபதி சந்
திரலக்கினாதிபதி ஆகியவர்களுக்கு
ஐந்து, ஒன்பது ஆகிய இவ்விடம்
களில் குரு, சுக்கிரன், இருக்க
பத்தாமிடத்திற் சனி உச்சமாயிரு
த்தலுமாம்.
(2) இலக்கினாதிபதி நின்ற அங்கி
சாதிபதி ஐந்திலிருக்க, சுக்கிரன்
பார்ப்பதுமாம்.
தூமகம்பம் - ஓர் உற்பாதம்.
தூமகேது - அக்கினி, கேது, கொடு
மை, வால் நட்சத்திரம், விண்
வீழ் கொள்ளி.
தூமன் - உபக்கிரகங்களைந்தினிலொ
ன்று,
தூமாதிகிரகங்கள்
-
உபக்கிரகங்க
ளைந்து. அவை தூமன், விதிபா
தன், பரிவேடம், இந்திரதனுசு,
துமகேது.
தூர்க்கை - பூரநாள்.
துர்வாட்டமி - புரட்டாசிமாதம்பூருவ
பக்கத்து எட்டாந்திதி.
தெ
தெக்கணம் - தெற்கு.
தெட்சண துருவம்-தென்முனை
தெட்சணபூமி - தென்பூமி.<noinclude></noinclude>
kc0ngxpizpt2qt90wgqp2ulwuzttzrv
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/138
250
641438
1926838
2026-04-25T06:12:59Z
Magizh Sundram
16422
OCR
1926838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ளஙக
தென்பால்.
தேதிமழை.
தெட்சணம் - தெற்கு, வலப்பக்கம்.
தெட்சணாதி - மேருவுக்குத் தென்
தென்பால்விதேகம்
நவகண்டத்
தொன்று.
பாரிசமுள்ள பூமி.
தெட்சணவேதை - சனி,செவ்வாய்
தென்புறம் - தென்பக்கம்.
தென்பூமி -மகாமேருவிற்குத் தென்
பக்கமுள்ள பூமி.
நின்ற நட்சத்திரத்திற்கு ஐந்து
இறு, ஏழு, எட்டு, பனிரண்டு, தென்முனை
பதின்மூன்று, பதினாலு
நட்சத்திரங்களாம்.
ஆகிய
தெட்சிணம்- தெற்கு, வலப்பக்கம்.
தெய்வபத்தித்தானம் -பத்தாமிடம்.
தெய்வமந்திரி - வியாழன்.
தெய்வம் - எண்வகை மணத்தினொ
ன்று, வருடம்.
தெய்வதம் - வருடம்.
தெரிமா - சிங்கம்.
தெவ்வு - சந்திரன்.
தெவ்வூன்றி - இராகு.
தெறுக்கால் - தேன், விருச்சிகராசி.
தெற்கு - அவாசி, சிவேதை, தக்க
ணம், தெக்கணத்திக்கு, தென்
யாமம், யாமியம், யாமினியம்.
தெனாது - தெற்கு, தெற்குள்ளது.
தென்- தெற்கு.
தென்கிழக்கு
தென்கீழ்த்திசை
அக்கினிமூலை.
அக்கினி
தென்கீழ்த்திசைபாலன்
தென்கீழ்த்திசையிறை தேவன்.
தென்பாரதம் - நவகண்டத்தொன்று.
அது பரதகண்டதிற்றென்பாகம்.
தென்பாரிசம் - தென்றிசை.
தென்பாலிரேபதம்
நவகண்டத்
தொன்று.
தென்பால் - தென்பக்கம்.
கோடி.
பூமியின் றென்புறக்
கிருதிதிசை.
தென்மேற்கு}
தென்மேற்றிசைப்பாலன்- நிருதி.
தென்யாமம் - தெற்கு.
தென்றல் - தென்காற்று, முன்பனிப்
பருவத்தின் காற்று.
தென்றி - தெற்கு, தென்காற்று.
தென்றிசை - தெற்கு.
தென்றிசைக்கோன்
தென்றிசைப்பாலன்
தே
இயமன்.
தேகபலக்காரகன்- செவ்வாய்.
தேகம் - இலக்கினம், சந்திரலக்கி
னம்.
-
தேசகாலம் - இடமும் காலமும்,
நெடும்பொழுது.
தேசாந்திரம் - பனிரண்டாமிடம்.
தேசிகன் - வீயாழன்.
தேட்கடை - மூலநட்சத்திரம்.
தேதிமழை - இன்னமாதம் இன்ன
தேதியில் மழை பெய்தால் அவ்
வருடம் நல்லமழை யென்பதாம்.
விபரம்:- ஆனிமாதம் பத்தாந்
தேதி, ஆடிமாதம் எட்டாந்தேதி,
ஆவணிமாதம் இறந்தேதி, புரட்
3<noinclude></noinclude>
qnxhd8jssjnup371on7de0kd53ahqlo
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/139
250
641439
1926839
2026-04-25T06:13:15Z
Magizh Sundram
16422
OCR
1926839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஙஉ
சோதிடப் பேரகராதி.
தேனுயோகம்.
டாசிமாதம் காலரந்தேதி, ஐப்பசி
மாதம் இரண்டாந்தேதி, கார்த்தி
கைமாதம் ஒன்றாந்தேதி ஓகிய இத்
தேதிகளாம்.
தேயுக்கிரகம் - சூரியன், வியாழன்.
தேய்பிறை அமரபக்கத்துச் சந்தி
தேய்மதி ரன், பௌரணைக்குப்
பின் வருஞ் சந்திரன்.
தேரோன்-சூரியன்.
தேர் - உரோகணிநாள்.
தேர்ப்பாகன் - புதன்.
தேவதாடம் - இராகு, தீ.
தேவமந்திரி - வியாழன்.
தேவாண்டு
-
தேவவருடம்.அது
முன்னூற்றறுபத்தைந்து மானிட
வருடங்கொண்டது.
தேவிவிரதம் - ஓர்நோம்புநாள், அது
சித்திரைமாதம் பூருவபக்கம்
வெள்ளிவாரமுதல் தொடங்கிச்
செய்வதாம்.
தேவேந்திரயோகம் - ஒரு நல்லயோ
தைன்யயோகம்.
பனிரண்டு நீங்கிய சுபவீட்டில்
ஆச்சியுச்சனாயிருப்பது.
தேனெல் - அசுபதிகள்.
தை
தை தைமாதம், பூசநான்,மகரராசி.
தைடம் - தைமாதம்.
தைசதம் - மகரராசி,
தைதிலம் - தை துலம்.
தைலம்
தைதுலை
கழுதைக்கரணம்,
}
சுக்கிரன்.
தைத்தியகுரு
தைத்தியபுரோகிதன்
தைத்தியமந்திரி
தைத்தியமா துரு - திதி.
தைத்தியயுகம் - சதுர்யுகங்கொண்
டது,
தைத்தியாகோராத்திரம் - ஒரு வரு
டம். அது அசுரர்க்கோரிராப்பகல்.
தைப்பூசம் - தைமாதத்தில் வரும்
பூசநட்சத்திரம்.
கம். இது இலக்கினந்திரராசியாகி / தையல்- பெண், கன்னிராசி
இலக்கினாதிபதி இலாபத்திலும்
குடும்பாதிபதி கருமத்தானத்தி
லும், பஞ்சமாதிபதி குடும்பத்தா
னத்திலும், பாக்கியாதிபதி இலக்
கினகேந்திரத்திலும் நிற்றலாம்.
தேள் - விருச்சிகராசி, தெருக்கால்,
அனுடநட்சத்திரம்.
-
தேனுயோகம் - ஒரு நல்லயோகம்.
இது இரண்டில் சுபக்கோள் சம்
பந்தம் அல்லது பார்வைபெற்றே
னும், தனாதிபன் முறு, எட்டு,
தைரியத்தானம் - மூன்றாமிடம்.
தைவலேககன் - சோதிடன்.
தைவாகரி - சனி, நமன்.
தைம் - தினம்.
தைன்யயோகம் - பரிவர்த்தனயோ
கம், கிரகமாற்றுயோகம். அது
விரையாதிபன் ஒன்றுமுதற் பதி
னொன்றுவரை எந்தவீட்டிலாவது
இருந்து அவ்வீட்டதிபர் பனிரண்
டில் நிற்பது. இத்தானமாறுதல்
பதினொருவகையாகும்.<noinclude></noinclude>
62xh1lnup1b8kgx9kmlx36gu1t24ogr
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/140
250
641440
1926840
2026-04-25T06:13:35Z
Magizh Sundram
16422
OCR
1926840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
தோரை
பத்து, பதினொன்று, ஒன்று, இர
ஆறுக்குடையவன் ஒன்பது, தோற்றம்
தோற்றரவு
தோற்றுதல் 2
தோன்றுதல்
நட்சத்திர அதிதேவதை.
உதையம்,கணிப்பு.
உறித்தல், பிறத்தல்.
ந
நடக்கும்ராசி - சரராசி நான்குமாம்.
ஒன்பது,
ண்டு, மூன்று, நான்கு,ஐந்து இவை
களில் எவ்வீட்டிலாவது இருந்து
அவ்வீட்டதிபர்கள் ஆறில் நிற்ப
தாம். இத்தானமாறுதல் பத்து நகபதி - சந்திரன்.
வகையாகும்.
எட்டுக்குடையவன்
பத்து, பதினொன்று, ஒன்று, இர
ண்டு, மூன்று, நான்கு, ஐந்து,
ஆறு, ஏழு இவ்விடங்களில் எவ்
வீட்டிலாவது இருந்து அவ்வீட்
டதிபர்கள் எட்டில் நிற்பராம்.
இத்தானமாறுதல் ஒன்பது வகை
யாகும், பொதுவாய் இவை நல்ல
யோகமல்ல.
தொ
தொடை - பத்தாமிடம்.
தொண்டு - ஒன்பது.
தொழில்தானம் - பத்தாமிடம், ஏழா
மிடம்.
தொழு
- இரேவதிநாள்.
தோ
தோசம் 2
தோடம் 5
இரவு.
தோணி-
இரேவதி நட்சத்திரம்.
தோணியோகம் - ஒரு நல்லயோகம்.
இது பஞ்சமாதிபன் குடும்பத்தி
லிருக்க இலாபாதிபன் சந்திர
னைக் கூடி நிற்பதாம்.
m
தோரை - ஒரெண்,
இது மேடம், கடகம், துலாம்,மக
ரம்.
சுக்கிரன்.
நடக்குங்கிரகம்
நடக்குங்கோள்
நடிராசி- இடைராசி.
நடுச்சாமம் - அத்தசாமம், பாதி இரவு
நடுநாள் - சித்திரை நட்சத்திரம்,
பாதிநாள்.
நடுப்பகல் - உச்சிநேரம்,
னம்.
நடுமதியம்
நடுமத்தியானம்
மத்தியா
உச்சிக்காலம்.
நடுமையம் - உச்சம், நடு.
நடுராசி-இடைராசி.
கட்சத்திர அதிதேவதை
-
இன்ன
நட்சத்திரத்துக்கு இன்னது அதி
தேவதையெனல். விபரம் : - அசுப
திக்கு சரசுவதி, பரணிக்கு துர்க்
சை, கார்த்திகைக்கு அக்கினி,
உரோகணிக்கு பிரமன், மிருகசீரி
டத்துக்கு சந்திரன், திருவா
திரைக்கு ஈசுரன், புனர்பூசத்து
க்கு அதிதி, பூசத்துக்கு வியாழன்,
ஆயிலியத்திற்கு ஆதிசேடன், மக
த்திற்கு சுக்கிரன், பூரத்திற்கு பார்
வதி, உத்திரத்திற்கு சூரியன்,அஸ்<noinclude></noinclude>
k6nim7c0888gb6gdyjts92z1tcr7o8p
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/141
250
641441
1926841
2026-04-25T06:13:56Z
Magizh Sundram
16422
OCR
1926841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
நட்சத்திர ஆதாயவிரையம்.
தத்திற்கு சாத்தான், சித்திரைக்கு
விசுவகன்மா, சோதிக்கு வாயு,
விசாகத்திற்கு குமரன், அனுசத்
திற்கு இலக்குமி, கேட்டைக்கு
இந்திரன், மூலத்திற்கு அசுரர்,
பூராடத்திற்கு வருணன், உத்தி
ராடத்திற்கு கணபதி, திருவோ
ணத்திற்கு விட்டுணு, அவிட்டத்
துக்கு வசுக்கள், சதயத்துக்கு
நமன், பூரட்டாதிக்கு குபேரன்,
உத்திரட்டாதிக்கு கா ம தேனு,
ரேவதிக்கு சனி என்பனவாம்.
நட்சத்திர ஆதாயவிரையம் - நட்சத்
திரத்தாற் சொல்லும் வருட மொ
த்தப்பலன். விபரம்:- (1) சித்
திரைமாதம் முதல் தேதியன்று
சூரிய உதையகாலத்திலுள்ள திதி
வாரம் நட்சத்திரமாகிய இம் மூன்
றையுங் கூட்டினது துருவமாம்.
இத்துருவத் தொகையுடன் ஒன்று
கூட்டி ஆற, இரண்டு, ஐந்து,
மூன்று,நான்கு,ஒன்று, ஆறு, ஒன்று
இந்தத் தொகைகளால் முறை
யே வெருக்கி, எட்டால் வகுத்து
வந்தயீதங்கள் ஒவ்வொன்றும் அசு
பதி, ஆயிலியம், அனுசம், பூரட்
டாதி இந்நாலு நட்சத்திரங்களுக்
குமுள்ள ஆதாயவிரையம். ஆரோ
க்கியம், அனாரோக்கியம், சுகம்,
துக்கம், அலைச்சல், ஒரே இடத்தி
லிருத்தல் என்று சொல்லப்படு
கிற கங்கியைகளாகும்.
நட்சத்திர ஆதாயவிரையம்.
(2) மறுபடியும் மேற்படி, துரு
வத்திலிரண்டு கூட்டி முன்போற்
கணக்குக் கிரியைகள் செய்ய,
பரணி, மகம், கேட்டை,உத்திரட்
டாதி இந்நாலு நட்சத்திரங்களுக்
கும்,
(3) மறுபடியும் மேற்படி துரு
வத்தில் மூன்றுகூட்டி முன்போற்
கிரியைகள் செய்ய, கார்த்திகை,
பூரம், மூலம், இரேவதி இந்காலு
நட்சத்திரங்களுக்கும்,
(4) மறுபடியும் மேற்படி துரு
வத்தில் நான்குகூட்டி முன்போற்
கிரியைகள் செய்ய, உரோகணி,
உத்திரம், பூராடம் இம்மூன்று
நட்சத்திரங்களுக்கும்,
(5) மறுபடியும் மேற்படி துரு
வத்தில் ஐந்துகூட்டி முன்போற்
கிரியைகள் செய்ய மிருசசீரிடம்,
அஸ்தம், உத்திராடம் இம்மூன்று
நட்சத்திரங்களுக்கும்,
(6) மறுபடியும் மேற்படி துரு
வத்தில் ஆறுகூட்டி முன்போற்
கிரியைகள் செய்ய, திருவாதிரை
சித்திரை, திருவோணம் இம்
மூன்று நட்சத்திரங்களுக்கும்,
(7) மறுபடியும் மேற்படி துரு
வத்தில் ஏழுகூட்டி, முன்போற்
கிரியைகள் செய்ய, புனர்பூசம்,
சுவாதி, அவிட்டம் இம்மூன்று
நட்சத்திரங்களுக்கும்,
(8) மறுபடியும் மேற்படி துரு
வத்துடன் எட்டுக்கூட்டி முன்<noinclude></noinclude>
aw009p9cs1k0bafvlfpcpvnnin02cxk
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/142
250
641442
1926842
2026-04-25T06:16:55Z
Magizh Sundram
16422
OCR
1926842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
நட்சத்திர இருப்பிடம்.
போற் கிரியைசெய்ய, பூசம், விசா
கம், சதையம் இம்மூன்று நட்சத்
திரங்களுக்கும் முதற்பாராவிற்
நட்சத்திரகந்தாயம்.
ளஙுரு
திக்குத் தெரு, உத்திரட்டாதிக்கு
அக்கினி, ரேவதிக்கு பூஞ்சோலை
யென்பனவாம்.
சொல்லியபடி, ஆதாயவிரையம் நட்சத்திரகணம் - இருபத்தேழு நட்
முதலியவைகளாம்.
குறிப்பு - முற்கூறியபடி கணக்
கிட்டு எட்டால் வகுப்பதில் மிச்ச
மில்லாமல் (0) பூச்சியமாய் வந்
தால், எட்டு என்றும் இதற்கே
பூரணமான பலன் என்றும் வைத்
துக்கொள்வதாம்.
நட்சத்திர இருப்பிடம் - இன்ன நட்
சத்திரத்திற்கு இன்னது இருப்
பிடமென்பது, விபரம்: அசுபதி
க்கு ஊர்,பாணிக்கு மரம், கார்த்
திகைக்கு வனம், ரோகணிக்கு கா
டிச்சால், மிருகசீரிடத்திற்குக்
கட்டிலின்கீழ், திருவாதிரைக்கு
தோடி, புனர்பூசத்துக்கு நெற்
குதிர், பூசத்திற்கு மனை, ஆயிலியத்
துக்கு கும்பை, அதாவது குடம்,
மகத்திற்கு நெற்கதிர், பூரத்திற்கு
வெறும்வீடு, உத்திரத்துக்கு நீர்,
அஸ்தத்துக்கு நீர்க்கரை, சித்தி
ரைக்கு வயல், சோதிக்கு பருத்தி,
விசாகத்திற்கு முற்றம், அனுசத்
துக்கு பாழ்வனம், கேட்டைக்கு
கடை, மூலத்துக்கு குதிரைக்
கொட்டாரம், பூராடத்திற்குக்
கூரை, உத்திராடத்துக்கு வண்
ணான் துறை, திருவோணத்துக்குக்
கோயில், அவிட்டத்துக்கு ஆலை,
சதயத்திற்குச் செக்கு, பூரட்டா
சத்திரத்தையும் மனிதர், தேவர்,
இராக்கதர் என்ற மூவகைக்கணங்
களாகப் பகுக்கப்படுவது விபரம்;-
பரணி, ரோகணி, திருவாதிரை,
பூரம், உத்திரம், பூராடம், உத்தி
ராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி
இவ்வொன்பது நட்சத்திரங்களும்
மனிதகணமாம்.
கார்த்திகை, ஆயிலியம்,மகம்,
சித்திரை, விசாகம், கேட்டை,
மூலம், அவிட்டம், சதையம் இவ்
வொன்பது நட்சத்திரங்களும்
இராக்கதகணமாம்.
அசுபதி, மிருகசீரிடம், புனர்
பூசம், பூசம், அஸ்தம், சுவாதி,
அனுசம், திருவோணம், ரேவதி
இவ்வொன்பது நட்சத்திரங்களுக்
தேவகணமாம்.
சட்சத்திரகந்தாயம் - வருடப்பலன்.
விபரம்;(1) முதற்கந்தாயமா
வது, அவ்வருடத்தின் சித்திரை
மாதம் முதற்றேதியன்று வரும்
கிழமை, திதி, நட்சத்திரம், யோ
கம், கரணம் இவ்வைந்து தொகை
களையும் ஒன்றாய்க்கூட்டி வருவது
கந்தாயத்துருவமாம். இத்துருவத்
துடன் அசுபதிமுதலுள்ள நட்சத்
திரங்களுக்கு அந்தந்த நட்சத்திர<noinclude></noinclude>
l6vffzn7plzsvhqcyeex0x4ft0yycw0
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/143
250
641443
1926843
2026-04-25T06:17:13Z
Magizh Sundram
16422
OCR
1926843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
கட்சத்திர கந்தாயம்.
சங்கியையைக் கூட்டி மூன்றால்
பெருக்கி எட்டால் வகுக்க வரு
கிற மீதம் முதற்கந்தாயமாகும்.
(2) நடுக்கந்தாயமாவது முன்
துருவத்துடன் அந்தந்த நட்சத்
திர சங்கியையைக்கூட்டி ஏழாற்
பெருக்கி மூன்றால் வகுக்க வரு
கிற மீதமே நடுக்கந்தாய மென்ப
தாம்.
(3) கடைக்கந்தாயமாவது முன்
துருவத்துடன் அந்தந்த நட்சத்
திரத்தின் சங்கியையைக்கூட்டி
மூன்றாற்பெருக்கி ஐந்தால் வகுக்க
வருகிற மீதமே கடைக்கந்தாய
மென்பதாம். இந்த மூன்று கந்
தாயங்களிலும் மீதமில்லாவிட்
டால் பூச்சியமாக (0) வைத்துக்
கொள்ளவேண்டும்.
(4) கந்தாயபலன் விபரம்;-முத
லாவது (0) பூச்சியம் வியாதி,
இரண்டாவது (0) பூச்சியம் கடன்,
மூன்றாவது (0) பூச்சியம் தன
விரையம், அதாவது பலன் சொற்
பம்,மூன்றும் (0) பூச்சியமானால்
ஒரு பலனுமில்லை, மூன்றும் (0)
பூச்சியமில்லாமலிருந்தால் நல்ல
பலன். இத்தொகை ஒற்றையாய்
வரில் தனலாபம், இரட்டையாய்
வரில் சமபலன், வகுப்பதில் மிச்
சமில்லாது சூனியமானாற் பய
னொன்றுமில்லை.
வேறொரு வழியாகப் பார்க்கும்
விபரம்;-
அசுபதிக்கும் ரேவதிக்
நட்சத்திரதியாச்சியம்.
கும் கந்தாயங்களைக் க ணி தஞ்
செய்துகொண்டு அசுபதி முத
லாக ஆரம்பித்து முதற்கந்தாயத்
துக்கு ஒன்று, நான்கு, இரண்டு,
ஐந்து, (0) பூச்சியம், மூன்று, ஆறு
என்றும் இரண்டாங்கந்தாயத்து
க்கு (0) பூச்சியம், மூன்று, இர
ண்டு என்றும், மூன்றாங்கந்தாயத்
துக்கு (0) பூச்சியம், மூன்று,
ஒன்று,நான்கு, இரண்டு என்றும்
அந்தந்தக் கந்தாயங்களை முறை
யே யெழுதவேண்டும்.
நட்சத்திர சக்கரம் - நட்சத்திர மண்
டலம்.
கட்சத்திர சாகினி
-
திருவாதிரை
நட்சத்திரம்.
நட்சத்திர சூலம் -இன்ன நட்சத்தி
ரத்திற்கு இன்ன திக்கு சூலமென்
பது. விபரம்;-அவிட்டம், கேட்
டை கிழக்கு. அசுபதி, திருவோ
ணம் தெற்கு, பூசம், ரோகணி
மேற்கு. உத்திரம், அஸ்தம் வட
க்கு என்பதாம்.
நட்சத்திர தியாச்சியம் - இன்ன நட்
சத்திரத்துக்கு இவ்வளவு நாழிகை
தியாச்சியமென்பது. விபரம்;-
அனுசம், திருவோணம், அவிட்
டம் இவைகட்கு பத்து. சுவாதி,
விசாகம், கேட்டை, மிருகசீரிடம்
இவைகட்கு பதினாலு. பூரட்
டாதிக்கு பதினாறு, உத்திரம், சதை
யம் இவைகட்கு பதினெட்டு.
பூசம், பூரம்,மூலம்,உத்திராடம்,<noinclude></noinclude>
oh6gz4w2qkji3lnvu4hgilseg0hrftf
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/144
250
641444
1926844
2026-04-25T06:17:48Z
Magizh Sundram
16422
OCR
1926844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
நட்சத்திரநோக்கு.
இவைகட்கு இருபது. திருவாதி
ரைக்கு இருபத்தொன்று, அஸ்தத்
திற்கு இருபத்திரண்டு, பரணி,
பூராடம், உத்திரட்டாதி இவை
கட்கு இருபத்துநாலு. கார்த்தி
கை, புனர்பூசம், மகம், ரேவதி
இவைகட்கு முப்பது, ஆயிலியத்
திற்கு முப்பத்திரண்டு. உரோ
கணிக்கு நாற்பது, அசுபதிக்கு
ஐம்பது, சித்திரைக்கு ஐம்பத்தாறு,
இவைகள் ஒவ்வொரு தினத்திலும்
அன்றைய நட்சத்திரங்கள் ஆரம்
பித்து அதின் தியாச்சிய துருவம்
எவ்வளவோ அந்த நாழிகைமுதல்
விஷகடி கை, மூன்றேமுக்கால்
நாழிகை இருக்கும். அன்றியும்
திருவாதிரைக்கு பதினொரு
நாழிகை முதலும், சித்திரைக்கு
இருபது நாழிகை முதலும்,மூலத்
திற்கு ஐம்பத்தாறு நாழிகை முத
லும் விஷகடிகையுண்டாகுங் கால
மென்றும், இதையுந் தியாச்சிய
மென்றுஞ் சொல்லும் நூல்களு
நட்சத்திர நாசயோகம் - மரணயோ
கத்துக்குள்ள நட்சத்திரம் விபரம்-
நாசயோகத்தைப் பார்க்க.
நட்சத்திரநேமி - சந்திரன், துருவன்.
நட்சத்திரகோக்கு - நட்சத்திர பார்
வை.விபரம்:- சூரியன் நின்ற நட்
சத்திரத்துக்கு இருபத்தாறு,பதி
னாறு, எட்டு,ஏழு,இருபத்தொன்று,
18
நட்சத்திரபட்சி.
ளஙஎ
பதினொன்றாம் நட்சத்திரத்தையும்
சந்திரன் நின்ற நட்சத்திரத்துக்கு
நாலு, எட்டு, பதினெட்டு, பதி
னைந்து, பத்தாம் நட்சத்திரத்
தையும் செவ்வாய் நின்ற நட்சத்
திரத்துக்கு, மூன்று, பதினைந்து,
ஏழு, எட்டாம் நட்சத்திரத்தையும்
புதன், வியாழன், சுக்கிரன், சனி
இவர்கள் நின்ற நட்சத்திரங்களு
க்கு மூன்று, ஐந்தாம் நட்சத்திரங்
களையும் பார்க்கும். சனிக்கு பத்
தொன்பது பதினைந்தாம் நட்சத்
திரத்தையும், வியாழனுக்கு பத்
தொன்பது பத்தாம் நட்சத்திரத்
தையும், அதிகபார்வையாகப் பார்
க்கும்.
சட்சத்திரபட்சி— இன்ன நட்சத்திரத்
திற்கு இன்ன பட்சி யென்பது.
விபரம்;- அசுபதிக்கு இரரசானி,
பரணிக்கு காக்கை, கார்த்திகைக்கு
மயில், உரோகணிக்கு ஆந்தை
மிருகசீரிடத்திற்கு கோழி, திரு
வாதிரைக்கு அன்றில், புனர்பூசத்
திற்கு அன்னம், பூசத்திற்கு நீர்க்
காக்கை, ஆயிலியத்திற்கு சிச்சிலி,
மகத்திற்கு ஆண்கழுகு, பூரத்திற்கு
பெண்கழுகு, உத்திரத்திற்கு சில்
வண்டு, அஸ்தத்திற்கு பருந்து,
சித்திரைக்கு மரங்கொத்தி, சோதி
க்கு ஈ, விசாகத்திற்கு செவ்வாற்
குருவி, அனுசத்திற்கு வானம்
பாடி, கேட்டைக்கு சக்கரவாகம்,<noinclude></noinclude>
9op4lx9v3inenf3vhbyvp2f2dvylool
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/584
250
641445
1926845
2026-04-25T06:18:07Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குடிமை</b>: குறிப்பிட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ள அரசில் (State) வாழும் மக்கள் அவ்வரசின் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டும் பாதுகாக்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமை|556|குடிமை}}</noinclude><b>குடிமை</b>: குறிப்பிட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ள அரசில் (State) வாழும் மக்கள் அவ்வரசின் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் உரிமைகளைப் பெற்று இருக்கும் நிலையே குடிமை (Citizenship) என்று சொல்லப்பெறும், அரசில் அல்லது அரசியல் சமுதாயத்தில் உறுப்பினராக இருப்பவரே குடியாள் (Citizen) எனப்படுவார். ஆகையால் குடிமை என்பது ஓர் அரசின் உறுப்பினராக அல்லது குடியானாக இருப்பவர் சில உரிமைகளைப் பெற்றிருக்கும் நிலையையே குறிப்பிடுகிறது. மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டும், தற்காப்புக்காகவும் பிறரோடு கூடி வாழும் இயல்புடையவனாகையால், அந்த இயல்பினின்றும் சமூகம் (Society) தோன்றிற்று; அச்சமூகத்தில் எல்லோருடைய உரிமைகளையும் பாதுகாப்பதற்காகச் சட்ட விதிகளும் ஆட்சி அமைப்பும் தோன்றின. மனிதனுடைய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் வாயிலாக அவனுடைய பண்புச் சிறப்புகள் (Personality) வெளிப்படுதற்கு வாய்ப்புகள் (உரிமைகள்) இருந்தால்தான் அவன் முழு வளர்ச்சி பெற்ற வாழ்க்கை வாழ்தல் இயலும்; உரிமைகளோடு கூட அவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பும் (அரசாங்கமும்) இருத்தல் வேண்டும். எனவே, ஒரு நாட்டின் குடியாளுக்குச்சமூக, அரசியல், பொருளியல் உரிமைகளும், அவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பாக ஓர் அரசாங்கமும் இருத்தல் வேண்டும் என்பதும், குடிமை என்பது ஓர் அரசிலே அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டுச் சில உரிமைகளுடன் வாழும் நிலை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன.
<b>குடிமை பெறும் வகை</b>: எவரெவர் குடிமையைப் பெறுதற்குரியவர். என்று சில தகுதிகளை விதித்துச் சட்டங்களின் வாயிலாக அவற்றை வரையறை செய்தற்கு அந்தந்த அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. பொதுவாக ஒருவர்தம் முன்னோர்கள் ஒரு நாட்டிலே வாழ்ந்து வந்த காரணத்தால், அவர் வழிவந்தோர் அந்நாட்டில் வாழும் தகுதியினடிப்படையில் அவ்வரசில் குடியாளாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதாதையர் வாழ்ந்தாலும் அவர் வழி வந்நோர் வேற்று நாடுகளில் வாழ்ந்து, பின்னர் முதாதையர் வாழ்ந்த நாட்டின் அரசாங்க இசைவு பெற்று அந்நாட்டில் குடிமை பெறலாம். வேற்று நாட்டினர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமையை அந்நாட்டின் அரசாங்கம் சில காரங்களுக்காக வழங்குதலும் கூடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில விதிகள் இந்தியாவில் குடிமை நிலையைப் பெறுதற்கான வழிகளைக் கூறுகின்றன. இச்சட்டம் தொடங்கிய நாளிலும், அதனை ஒட்டிய முன் ஐந்து ஆண்டுகளிலும் இந்தியாவில் குடியிருந்து வந்தவராயிருப்பின், அவர் இந்தியக் குடியாளாரும் தகுதி பெறுவர். மேலும், இச்சட்டம் தொடங்கிய நாளில், பாகிசுத்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவராக இருந்தால் அவகும்; அவர் பெற்றோருன் ஒருவர் அல்லது மூதாதையருள் ஒருவர் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட இந்திய நாட்டில் பிறந்தவராக இருந்தால் அவரும் இந்தியக் குடியாளாரும் தகுதி உடையவர், ஒருவர் 1948, சூலை 19-ஆம் நாளுக்கு முன்னர்ப் பாதிசுத்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்த்து, அந்நாளிலிருந்து இந்தியாவில் வாழ்வாராயில் அவரும் குடிமை பெறலாம். ஒருவர் 1948, சூலை 19-ஆம் நாளுக்கு முன்போ பின்போ இந்தியாவுக்குக் குடிபெயர்த்து, இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் அவர் இந்தியக் குடியாள் என்று பதிவு செய்யப்பட்டிருந்து, அவர் பதிவு செய்யப்படுதற்கான விண்ணப்பத்தை இந்திய அரசாங்க அதிகாரிக்கு அளித்தற்கு முன்னர்க் குறைந்தது ஆறுமாதங்களாவது இந்தியாவில் குடியிருந்தவராயிருப்பின் அவர் இந்தியக் குடியாளாவர். எவரேனும் 1947, மார்ச்சு முதல் நாளுக்குப் பின்னர்ப் பாகிசுத்தானுக்குக் குடிபெயர்த்திருப்பின், அவர் இந்தியக் குடியாளாக மாட்டார். ஆயினும் அவ்வாறு பாகிசுத்தானுக்குக் குடி பெயர்த்தோர் மீண்டும் இந்தியாவுக்கு நிலையாகத் திரும்பி வந்து, இந்திய அரசாங்க அதிகாசி சட்டப்படி அளித்த ஓர் இசைவு ஆணையின்படி (Permit) இந்தியாவில் நிலையாகத் தங்கினால் அவர் இந்திய குடியாளாகலாம். வேற்று நாட்டில் வாழும் இந்தியரோ அவருடைய பெற்றோருள் அல்லது மூதாதையருள் ஒருவரோ இந்தியாவில் பிறந்தும், அவர் வாழும் பிற நாட்டிலுள்ள இந்தியத் தூதுவரால் அவர் இந்தியக் குடியாள் என்று பதிவு செய்யப்பட்டும் இருப்பாராவின், அவர் இந்தியக் குடியாள் ஆவர். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அயல் குடிமை பேறும் இந்தியர் இந்தியக் குடிமையை இழந்து விடுவார்; இந்தியக் குடிமையை வழங்குதற்கும் நீக்குதற்குமுரிய சட்டங்களைச் செய்தற்கு இந்தியப் பாராளுமன்றத்துக்கு முழு அதிகராமும் உண்டு.
<b>குடிமை உரிமைகள்</b>: குடிமை என்பது சமூகத்தில் ஒருவர் சில உரிமைகளும், அவற்றுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பும் பெற்றிருக்கும் நிலையைக் குறிப்பதாகையால், குடிமை என்ற கருத்தில் குடிமை உரிமைகளும் (Citizenship Rights) அடங்கியிருந்தல் வெளிப்படை இக்கால நாகரிகத்தில் தனி ஒருவருடைய இன்ப வாழ்வுக்கு இன்றியமையாத சமூகச் சூழ்நிலைகளின்<noinclude></noinclude>
rexcojrvemyqiecl5y5lx5rm5ltf0im
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/145
250
641446
1926846
2026-04-25T06:18:18Z
Magizh Sundram
16422
OCR
1926846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஙு அ
சோதிடப் பேரகராதி.
நட்சத்திரப் பொருத்தம்.
மூலத்திற்கு செம்போத்து, பூரா
டத்திற்கு கவுதாரி, உத்திராடத்
திற்கு வலியன், திருவோணத்
திற்கு நாரை, அவிட்டத்திற்கு
வண்டு, சதையத்திற்கு அண்டங்
காக்கை, பூரட்டாதிக்கு உள்
ளான், உத்திரட்டாதிக்கு கோட்
டான், ரேவதிக்கு வல்லூறு என்
பனவாம்.
நட்சத்திரபஞ்சபட்சி - இன்ன நட்
சத்திரத்துக்கு பஞ்சபட்சிகளுள்
இன்ன பட்சியென்பது. விபரம் ;-
திருவாதிரை முதல் பூரம் வரை
ஆறுக்கும் ஆந்தை, உத்திரமுதல்
விசாகம் வரை ஐந்துக்கும் காகம்,
அனுசமுதல் திருவோணம் வரை
ஆறுக்குங் கோழி, அவிட்டமுதல்
ரேவதிவரை ஐந்துக்கும் மயில்,
அசுபதிமுதல் மிருகசீரிடம் வரை
ஐந்துக்கும் வல்லூறு என்பதாம்,
நட்சத்திரபதம் நட்சத்திர மண்ட
நட்சத்திரபதவிலம்.
நட்சத்திரபார்வை - கட்சத்திரசோக்கி
லறிக.
மணப்
நட்சத்திரப் பொதுப் பெயர் - உடு,
உற்கை, ஒளி, கணம், சிதம், சுக்
சை, சோதி, தாரகை, தாரா,தாரை,
பம், மீன், வெள்ளி யென்பனவாம்.
நட்சத்திரப் பொருத்தம்
பொருத்தத் தொன்று. விபரம்;-
பெண்கட்சத்திர முதல் ஆண்நட்
சத்திரம் வரை எண்ணிக்கண்ட
தொகையை ஆறில் கழித்து மிச்
-
நட்சத்திர மகாதிசை.
சம் இரண்டு, நாலு, ஆறு, எட்டு
இவைகளுத்தமம். ஒன்று, ஐந்து,
ஒன்பது ஆனால் மத்திபம்,மூன்று,
ஏழு ஆனால் அதமமென்பதாம்.
நட்சத்திர மகாதிசை - நட்சத்திரங்க
ளைக் கொண்டு மகாதிசை கணிப்
விபரம் - அசுபதி, மகம்,
பது.
மூலம் ஆகிய இம்மூன்று நட்சத்
திரங்களுக்குங் கேதுதிசை வருட
மேழு.கார்த்திகை,உத்திரம்,உத்
திராடம் ஆகிய இம்மூன்று நட்
த்திரங்களுக்கும் சூரியதிசை வரு
டம் ஆறு. உரோகணி, அஸ்தம்,
திருவோணம் ஆகிய இம்மூன்று
நட்சத்திரங்களுக்கும் சந்திரதிசை
வருடம் பத்து. மிருகசீரிடம், சித்
ரை, அவிட்டம் ஆகிய இம்மூன்று
நட்ரத்திரங்களுக்கும் செவ்வாய்
திசை வருடமேழு. திருவாதிரை,
சுவாதி, சதையம் ஆகிய இம்
மூன்று நட்சத்திரங்களுக்கும்
இராகுதிசை வருடம் பதினெட்டு.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ஆகிய இம்மூன்று நட்சத்திரங்க
ளுக்கும் வியாழதிசை வருடம்
பதினாறு, பூசம், அனுசம், உத்தி
ரட்டாதி ஆகிய இம்மூன்று நட்
சத்திரங்களுக்கும் சனிதிசை வரு
டம் பத்தொன்பது. ஆயிலியம்,
கேட்டை, ரேவதி ஆகிய இம்
மூன்று நட்சத்திரங்களுக்கும் புத
திசை வருடம் பதினேழு என்ப
தாழ்.<noinclude></noinclude>
o23eh3jf8pemrckzcqsa7xhfsmgodg4
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/146
250
641447
1926848
2026-04-25T06:18:36Z
Magizh Sundram
16422
OCR
1926848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
நட்சத்திரமானவருடம்.
நட்சத்திரமண்டலம்
-
நட்சத்திர
பதம். இது சத்தஇருடியர், உல்
கைகள், மின்னல், தூமகேதுக்கள்,
உரோகிணேயர், உட்ணபாத முத
லிய கணதேவர்களிருக்குமிடம்.
நட்சத்திரமரம் - இன்ன நட்சத்திரத்
துக்கு இன்ன மரமென்பது, விப
ரம்:- அசுபதிக்கு எட்டி, பரணிக்கு
நெல்லி, கார்த்திகைக்கு அத்தி,
உரோகணிக்கு நாவல், மிருகசீரி
டத்திற்குக் கருங்காலி, திருவாதி
ரைக்கு செங்காலி, புனர்பூசத்தி
ற்கு மூங்கில், பூசத்திற்கு அரசு,
ஆயிலியத்திற்குப் புன்னை, மகத்
திற்கு ஆல், பூரத்திற்கு பலாசு,
உத்திரத்திற்கு அலரி, அஸ்தத்தி
ற்கு ஆத்தி, சித்திரைக்கு வில்வம்,
சோதிக்கு மருது, விசாகத்திற்கு
கனா, அனுசத்திற்கு மகிழ், கேட்
டைக்கு பிராய், மூலத்திற்கு மரா,
பூராடத்திற்கு வஞ்சி, உத்திராடத்
திற்கு பலா, திருவோணத்திற்கு
எருக்கு, அவிட்டத்திற்கு வன்னி,
சதையத்திற்கு கடம்பு, பூாட்டா
திக்கு தேமா, உத்திரட்டாதிக்கு
வேம்பு, ரேவதிக்கு இலுப்பை
யென்பனவாம்.
நட்சத்திரமாலை -ஓர் சோதிடநூல்.
நட்சத்திரமானதினம்-ஒரு நட்சத்
திர உதயகாலமுதல் மறுநட்சத்
திரம் வரை மிகழுங்காலமாம்.
சட்சத்திரமானவருடம்- சவுரமான
வருடத்தைப் பார்க்கிலுஞ் சற்று
நட்சத்திரம்.
பெரியதேயாகும். இதன் வருடப்
பிரமாணம் மூன்னூற் றறுபத்
தாறு நாள், பதினைந்து நாழிகை,
முப்பத்தொருவினாடி, பதினைந்து
தர்ப்பரையாம்.
நட்சத்திரமிருகம் - இன்ன நட்சத்
திரத்துக்கு இன்ன மிருகமென்
பது. விபரம்:- அசுபதி ஆண்குதி
ரை, பரணி ஆண்யானை, கார்த்தி
கை பெண் ஆடு, உரோகணி பெண்
நாகம், மிருகசீரிடம் பெண்சாரை,
திருவாதிரை ஆண்நாய், புனர்
யூசம் பெண்பூனை, பூசம் வெங்
கடா, ஆயிலியம் ஆண்பூனை, மகம்
ஆண்எலி, பூரம் பெண்எலி, உத்
திரம் ஆண்எருது, அஸ்தம் பெண்
சித்திரை ஆண்புலி,
எருமை,
சுவாதி எருமைக்கடா, விசாகம்
பெண்புலி, அனுசம் பெண்மான்,
கேட்டை ஆண்மான்; மூலம்
பெண்நாய், பூராடம் ஆண்குரங்கு,
உத்திராடம் மலட்டுப்பசு, திரு
வோணம் பெண்குரங்கு,அவிட்
டம் பெண்சிங்கம், சதயம் பெண்
குதிரை, பூரட்டாதி ஆண்சிங்கம்
உத்திரட்டாதி பாற்பசு, ரேவதி
பெண்யானை என்பனவாம்.
நட்சத்திரம் - அசுபதி,பரணி,கார்த்
திசை, உரோகணி, மிருகசீரிடம்,
திருவாதிரை, புனர்பூசம், பூசம்,
ஆயிலியம், மகம், பூரம், உத்திரம்,
அஸ்தம், சித்திரை, சுவாதி, விசா
கம், அனுசம், கேட்டை, மூலம்<noinclude></noinclude>
c3zu0plnuwjfg5phvxbbnwg4uigjp59
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/147
250
641448
1926850
2026-04-25T06:19:11Z
Magizh Sundram
16422
OCR
1926850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளசய
சோதிடப் பேரகராதி.
நட்சத்திரராசி.
பூராடம், உத்திராடம், திருவோ
ணம், அவிட்டம், சதையம், பூர
ட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி
ஆக இருபத்தேழு நட்சத்திரங்க
ளாம். அன்றியும் உத்திராடத்தி
ற்கும் திருவோணத்திற்கும் இடை
யில் அபிசித்து என்ற கட்சத்திர
த்தைச்சேர்த்து இருபத்தெட்டெ
ன்பதுமரம், நாள், விண்மீனுக்கும்
பெயர்.
நட்சத்திராசி -இன்னின்ன நட்சத்
திரங்கள் இன்னின்ன ராசிகளில்
நிற்குமென்பதாம். விபரம்:- அசு
பதி, பரணி, கார்த்திகை முதற்
கால் வரை மேடத்திலும், கார்த்தி
கையின் மற்ற மூன்று கால்களும்
உரோகணி மிருகசீரிடத்தின் மு
ன் இரண்டு கால்களும் இடபத்தி
நட்பு.
ராடம், உத்திராடம் முதற்கால்
வரை தனுசிலும், உத்திராடத்தின்
மற்ற மூன்று காலும், திருவோ
ணம், அவிட்டத்தின் முன்னிரண்
டு கால்களும் மகரத்திலும், அவி
ட்டத்தின் பின்னிரு கால்களும்,
சதையம் பூரட்டாதி முன் மூன்று
கால்களும் கும்பத்திலும், பூரட்டா
தியில் காலாங்காலும் உத்திரட்
டாதி, ரேவதி இவைகள் மீனத்தி
லும் நிற்குமென்பதாம்.
நட்சத்திரேசன் - சந்திரன்.
நட்சத்திரவாக்கியம் - பஞ்சாங்ககணி
த முறையுளொன்று.
நட்டசந்திரன் - ஆவணி மாதத்தின்
பூருவ பக்கத்திய சதுர்த்தி யன்று
தோன்றும் பிறை.
கட்டாமூட்டி
லும், மிருகசீரிடத்தின் பின்னிரு கட்டாமுட்டி சிந்தனை ஆரூட மு
றையாக
சுக துக்கமறிவிக்கும் சோதிடம்.
இது சினேந்திர மாலை முதலிய
நூல்களிற்சொல்லும் முறையாம்.
நட்டாறு - விதை விதைக்க ஆகாத
கால்களும், திருவாதிரை, புனர்
பூசத்தின் முன்மூன்று கால்களும்
மிதுனத்திலும், புனர் பூசத்தின்
நாலாங்காலும்,பூசம்,ஆயிலியம்
கடகத்திலும், மகம், பூரம், உத்தி
ரத்தின் முதற்காலும் சிங்கத்திலு
ம்,உத்திரத்தின் மற்றமூன்றுகால்
களும் அஸ்தம்,சித்திரையின் மு
ன் இரண்டு கால்களும் கன்னியி
லும், சித்திரையின் பின்னிருகாலு
ம்,சுவாதி,விசாகத்தின் முன்மூன்
'றுகாலும் துலாத்திலும்,விசாகத்தி
ன்நாலாங்காலும் அனுடம், கேட்
டை விருச்சிகத்திலும்,மூலம்,பூ நட்பு -உறவு, சினேகம்.
அக்கினி நட்சத்திர நானென்னுங்
காலம். இது சூரியன் சிம்மராசி
யிற் பிரவேசித்தது முதல் அதா
வது ஆவணி மாதப்பிறப்பு முதல்
ஐந்து நாள், ஐம்பத்தைந்து நாழி
கைக்கு மேல்வரும் முப்பது நாழி
கை நேரங்கொண்ட கால அளவு.
நட்டேந்துகலை - பூர்வபக்கத்துப் பிர
தமை.<noinclude></noinclude>
37j7crh7s9z5zyqexk57mywf2y7sa96
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/148
250
641449
1926851
2026-04-25T06:20:13Z
Magizh Sundram
16422
OCR
1926851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>நபமணி.
சோதிடப் பேரகராதி.
ளசக
நவதானியம்.
நட்புக்கிரகம் கிரகசிலை ஐந்தினொ நபம்-ஆகாயம், ஆவணிமாதம்.
நட்புக்கோள் ஒன்று, விபரம் : கிரசு
நட்புவிற் காண்க.
நட்புத்தானம் (கிரகம் நட்புப் பெற்
ராசி றிருக்கு மிராசி, விப
நட்பு வீடு ரம்சக கட்பு ராசி
யிலறிக.
நண்டு - கடகவிராசி.
நண்பகல் - மத்தியானம்.
நதம் - உச்சத்திலிருந்து கிரகத்துக்
குள்ள தூரம்.
நத்தமுகை - இரவு.
நத்தம் - இராத்திரி, இருள், நடு.
2
நந்தனம் இருபத்தாறாவது வருடம்.
நந்தன வருடப்பலன் - தேசத்தில்
மழை பெய்யாததால் எல்லாநாடு
நகரங்களிலும் பஞ்சமும், நானா
வித உயிர்வர்க்கங்களுக்கு நோயும்
மரணமும் தூமகேது முதலிய வி
ண் வீழ் கொள்ளிகளின் உதிர்ச்சி
யும் அரசருக்குக்கெடுதியும் உண்
டாம்.
உதாரணம் ;- நந்தனத்தில் மர
ரியறும் நாடெங்கும் பஞ்சமிகும்,
நந்துமுயிர் நோயால் நலியுமே -
அந்தரத்தின், மீனுதிருந் துமமெ
ழு மிக்க கெடுதி யுண்டாம்,
கோன்மடிவ னென்றேநீ கூறு.
(இடைக்காடர்)
நந்தி - இடபவிராசி.
நந்தை- பிரதமை, சஷ்டி, ஏகாதசி.
சூரியன்.
நபச்சட்சு
சுபமணி 5
நபோமணி - சூரியன்.
நரசிம்மசயந்தி-வைகாசிமாதம் பூர்
வபக்கத்தில் வரும் சதுர்த்தசித்
திதி.
நரகசதுர்த்தசி - ஐப்பசிமாதம் அமர
பக்கத்தில் வரும் பதினாலாக்திதி.
இதுவே தீபாவளிகரள்.
கரிப்புறம் - மிருகசீரிடம்.
நரை - இடபவிராசி.
கர்மடன்-சூரியன்.
கல்யோகம் - ஓர் சுபவோகம்.
இலக்கினமுதல் ஏழாமிடம் வரை
இராகு கேது நீங்கிய ஏழு இரகங்
கள் ஒன்றின்பின் னென்றாய் நிற்
றல்.
(2) மிதுனம், கன்னி, தனுசு,
மீனம் ஆகிய ராசிகளில் இராகு
கேது நீங்கியசூரியாதி வழு கிர
கங்கள் நிற்றல்.
நவகண்டம்
-
ஒன்பது கண்டம்.
இது கீழ்விதேகம், மேல் விதேகம்,
வடவிதேகம், தென்விதேகம், வட
விரேபதம், தென்னிரேபதம் வட
பரதம், தென்பாதம், மத்திமகண்ட
மென்பனவாம்.
சவகம்- ஒன்பது.
நவக்கிரகம் ஒன்பதுகிரகம். அவை
கவக்கோள் சந்திரன், சனி, சுக்கி
ரன், சூரியன், செவ்வாய், புதன்,
வியாழன், இராகு, கேது என்பன
வாம்.
நவதானியம் - ஒன்பதுவகைத் தானி
யம்,அவைஉழுந்து, எள்ளு, கடலை,<noinclude></noinclude>
oe1mwgyqlp8z569pz6td7o3awujzivp
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/149
250
641450
1926853
2026-04-25T06:21:55Z
Magizh Sundram
16422
OCR
1926853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளசஉ
சோதிடப் பேரகராதி.
களவருடப்பலன்.
நாசயோகம்.
கொள்ளு, சாமை, தினை, துவரை,களினம் - நிலம், நீர்
நெல்று, பயறு என்பனவாம்.
கவதி - தொண்ணூறு,
நவமி - ஒன்பதாந்திதி.
நவம் - ஒன்பது, கார்காலம்.
'சுயராத்திரம் புரட்டாசிமாதம்பூர்வ
நவராத்திரி பக்கத்துப் பிரதமை
முதல் ஒன்பது இராத்திரி, இதன்
ஒன்பதாம் நாளன்று தான், சரசு
வதி பூசை அல்லது ஆயுத பூசை
செய்வது.
கவாகம் - பிரதமை.
நவாங்கிஷம் தசவர்க்கத் தொன்று.
நவாமிசம் அது ; - இராசியை ஒன்
பது பங்கு செய்வது.
நவ்வி - அஸ்த நட்சத்திரம்.
நள - ஐம்பதாவது வருடம்.
மனம்
-
சிற்பநூல் முப்பத்திரண்டி
னொன்று.
-
நள் - உச்சிப்பொழுது, திருவோ
ணம், நடு.
நள்ளி - கடகவிராசி, நண்டு.
கள்ளிருன் - நடு இரவு.
நள்ளு - திருவோண நட்சத்திரம்,
நடுநாள்.
நற்கடினம் - நன்னிமித்தம்.
நற்கரணம் - சுபகாரியங்களுக்கு சல்
லன வாகக் கருதப்படும் பவம்,
பாலவம், கௌலவம், தைதுலை
கரசை, பத்திரை யென்னும்
கரணங்களாம்.
நற்கோள் - சுபக்கிரகம். விபரம்:-
சுபக்கிரகத்திற்காண்க.
நற்சங்கலிதம் - ஒன்று தொடுத்து
முறையே தானங்களேறி நிற்பது.
நன்பகல் - நண்பகல்.
நன்மை - அதிட்டம்
நன்மைப்படுதல் - இருதுவாதல், பக்
குவப்படுதல், பூத்தல்.
நா
நளயோகம் - ஒருசுபயோகம். இது
பாக்கியாதி பதி நின்ற அங்கிசாதி
பதி, இலக்கினாதிபனோடு கூடி உச்
சம் பெற்றுகிற்றல்.
களவருடப்பலன் - மழை பெய்வாத
தால் விபசாய நட்டமும் பஞ்ச
மும், வடக்குத் தேசத்தில் அரசர்
சண்டையுஞ் சேனைகன் மடிவும்
இரத்தப் பெருக்கு முண்டாம். பக்கத்து ஐந்தாந்திதி.
உதாரணம்:- சீர்தீர் நளவருடஞ் நாகப்பகை-கருடன்.
சேர்வடக்கி லேகலகம், பரரோர் நாகவம் - பாம்புக்கரணம்.
மடிவார் பகரக்கேள் -காரோ, நாக்கு
நாகதைவிகை - தசமித்திதி.
காகத்திசை - மேற்குத்திசை.
நாகபஞ்சமி - ஆவணிமாதம் பூர்வ
இரண்டாமிடம்,
பொழியா துரத்தப் புணரி பெரு காக்குத்தானம் வாக்குத்தானம்.
கும், அழியு மாசர் படை.
(இடைக்காடர்.)
நாசயோகம் - மரணயோகம். அவை
மூன்று வகைப்படும்.<noinclude></noinclude>
8v4aleo30zfgsnxt46iyyefy2bkkidn
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/150
250
641451
1926854
2026-04-25T06:22:12Z
Magizh Sundram
16422
OCR
1926854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>நாடி.
சோதிடப் பேரகராதி.
ளச௩
நாட்பொருத்தம்.
சோதிடசாஸ்திரம்.
(1) ஞாயிறில் சதுர்த்தசியும், திங்/நாடிக்கிரந்தம்
களில் சஷ்டியும், செவ்வாய், சனி நாடிசாஸ்திரம் அவை சூரிய நாடி,
நாடி நூல்
யில் சத்தமியும், புதனில் துதிகை
யும், வியாழனில் அஷ்டமியும்,
வெள்ளியில் ஏவமியும் வருவன
திதி நாசயோகமாம்.
(2) ஞாயிறில் விசாகமும், திங்
களில் சதயமும், செவ்வாயில்
அவிட்டமும், புதனில் இரேவதி
சந்திரநாடி, சுக்கிர
நாடி, சாமிநாடி, இராகுநாடி,பாவ
நாடி, துருவநாடி, சுகர்காடி,தேவி
நாடி, செவ்வாய்காடி, புதன்காடி,
குருநாடி, கேதுநாடி, சர்வ சங்
கிரகநாடி, சர்வாரடி எனப்பலநாடி
நூல்களுள்ளன.
யும், வியாழனில் உரோகணியும், காடிப்பொருத்தம் - மணப்பொருத்
வெள்ளியில் பூசமும், சனியில்
உத்திரமும் வருவன நட்சத்திர
நாசயோகமாம்.
(3) ஞாயிறில் பஞ்சமியும் கார்த்
திசையும், திங்களில் துதிகையும்
சித்திரையும், செவ்வாயில் பூரணை
யும் உரோகணியும், புதனில் சத்
தமியும் பரணியும், வியாழனில்
திரயோதசியும் அனுசமும், வெள்
ளியில் சஷ்டியும் திருவோண
மும், சனியில் அட்டமியும் ரேவ
தியும் வருவது திதிநட்சத்திரகாச
யோகமென்பதாம்.
காசிகாயோகம் - ஒரு நல்லயோகம்.
இது உயிராதிபன், வியாழன்
ஆகிய இவர்கள் பத்திலும், சந்தி
ரன் இரண்டிலும், சத்தமாதிபதி
இலக்கினத்திலு மிருக்க, இலக்கி
னாதிபதியால் பார்க்க பெற்றிரு
த்தலுமாம்.
நாடன்-கார்த்திகை நட்சத்திரம்.
நாடி - இருபத்து நாலு நிமிடங்கொ
ண்டது,நாழிகை.
தத் தொன்று.அது அசுபதி, திரு
வாதிரை, புனர்பூசம், உத்திரம்,
அத்தம், கேட்டை, மூலம், சதை
யம், பூரட்டாதி இந்த ஒன்பதும்
இடைநாடியாம். பரணி, மிருக
சிரிடம், பூசம், பூரம், சித்திரை,
அனுஷம், பூராடம், அவிட்டம்,
உத்திரட்டாதி இந்த ஒன்பதுஞ்
சுழிமுனைநாடியாம்.மற்ற ஒன்ப
தும் பிங்கலைசாடியாம். பெண்
கட்சத்திரமும் ஆண் நட்சத்திர
மும் ஒரே நாடியானால் பொருக்
தாது. மாறியிருந்தால் நன்மை
யாம்.
நாடிமண்டலம் -ஆகாயசமரேகை.
காட்குறித்தல் -நன்னிமித்தம் நிய
மித்தல், நாள்பார்த்தல்.
நாட்டாச்சால் - விதை விதைப்புக்கு
நீங்கிய அக்கினி நட்சத்திரம்,
நாட்பார்த்தல் கல்வேளை பார்த்
தல்.
காட்பொருத்தம் - மணப்பொருத்
தத்தொன்று, அது சென்மாட்சத்<noinclude></noinclude>
iz7v7ubsemeouf1xo4cpjuq06amgw9b
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/151
250
641452
1926855
2026-04-25T06:22:54Z
Magizh Sundram
16422
OCR
1926855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளசச
சோதிடப் பேரகராதி.
நாபியோகம்.
திரப் பொருத்தம், விபரம் ;-நட்
சத்திரப் பொருத்தத்திற்காண்க.
நாட்பொருத்தவகை - கட்சத்திரப்
பொருத்த வகைகளுளொன்று.
அதாவது ஒரு கவிஞன் தெய்வத்
தின் பேரிலோ மனிதன் பேரி
லோ கவிபாடுவதற்குள்ள பொருத்
தம்.
விபரம்:- உயிரெழுத்தும், உயிர்
மெய்யெழுத்தும் இருபத்தேழு
நட்சத்திரங்களாக வகுக்கப்பெற்
றிருத்தலால் பாட்டுடைத் தலை
வன் பெயரின் முதலெழுத்துக்
கமைந்த முதற்பாட்டின் முதற்
சீரிலுள்ள எழுத்தின் நட்சத்திரத்
திற்கு பின் வரும் எழுத்திற்கமை
ந்த நட்சத்திரம் நன்மையாம்.
அதாவது பாட்டின் முதலெழுத்
திற்கும் நான்காமெழுத்திற்கும்
ஆறாமெழுத்திற்கும் எட்டாமெழு
த்திற்கும் ஒன்பதாமெழுத்திற்கு
முரிய நட்சத்திரங்களும் நட்பு
நட்சத்திரங்களென்பதாம். எழு
த்து நட்சத்திரம் காணவேண்டில்
நாமநட்சத்திரத்திற் காண்க.
நாண்மீன் - நட்சத்திரம்.
நாதன் - உடையவன், ஒவ்வொன்
றுக்குமதிபதி,குரு,தலைவன்.
ராபியோகம் - ஒரு நல்ல யோகம்.
இது பன்னொன்றில் குரு நிற்க
அதற்குப் பன்னொன்றில் இலா
பாதிபன் சந்திரனோடு கூடிநிற்ப
தரம்.
நாமநட்சத்திரம்.
நாமசங்கிதை - சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று.
நாமாட்சத்திரம்
-
லெழுத்துக்குள்ள
பெயரின் முத
நட்சத்திரம்.
விபரம்:- சு, சே, சொ, ல அசுபதி.
லி, லு, லே, லோ பரணி, அ,இ,
உ, எ கார்த்திகை, ஒ, வ, வி, வு
உரோகணி. வே, வோ, க, .
மிருகசீரிடம். கூ, க, ங, ச்சா
திருவாதிரை. கெ, கொ, ஹ,
ஹா புனர்பூசம்,ஹு,ஹெ,
ஹொ, ட பூசம். டி, டூ, டே,
டோ ஆயிலியம், ம, மி, மு, மெ
மகம். மோ, ட, டி, டு பூரம்.
டே, டோ, ப, பி உத்திரம். பு,
ஷ, ணா, டா அஸ்தம்,பெ,பொ,
ரா, ரீ சித்திரை. ரு, ரே, ரோ, த
சுவாதி. தீ, து, தே, தோ விசா
கம்,ந,நி,நு, நே அனுடம்.நோ,
ய, யி, யு கேட்டை, யெ,யொ,
ப,பி மூலம்.பூ.தா.பா, டா
பூராடம். பெ, பொ, ஜ, ஜி த்
திராடம். ஜூ,ஜெ,ஜொ, கா
திருவோணம். க, கீ, கூ,
அவிட்டம். கொ, ஸ, ஸி, ஸீ சத
யம். ஸெ, ஸோ, தா, தீ பூரட்
டாதி. தூ,ச்ச,ஞ,த உத்திரட்
டாதி,தெ,தொ,ச,சீ இரேவதி
என்பனவாம்.
கே
மற்றொருவிதம் -சு, சூ,செ,
சே. சை அசுபதி, சொ, சோ,
சௌ பரணி, அ, ஆ, இ, ஈ கார்
த்திகை. வ, வா, வி, வீ உரோ<noinclude></noinclude>
bi4o1yglzkmjw7q43e0ojmmpyx9qvha
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/152
250
641453
1926856
2026-04-25T06:24:07Z
Magizh Sundram
16422
OCR
1926856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>நாவாய்.
சோதிடப் பேரகராதி.
நாள்வட்டம்.
ளசரு
நாவிதன் - கார்த்திகை, பூரம் ஆகிய
நட்சத்திரங்கள்.
நாழி - நாழிகை, பூரட்டாதி நட்சத்
திரம்.
கணி. வெ, வே, வை, வௌ
மிருகசீரிடம். கு, கூ திருவாதிரை.
கெ, கே, கை, புனர்பூசம். கொ,
கோ, கெள பூசம், மெ, மே, மை
ஆயிலியம்.ம,மா,மி,மீ,மு,மூ நாழிகை
மகம், மொ,மோ, மௌ, பூரம்
ப,பா,பி,பீ உத்திரம், பு, பூ
அஸ்தம். பெ, பே, பை, பொ,
போ, பெள சித்திரை. ததா
சோதி.தி, தீ, து, தூ,தெ,தே,
உத்திரட்டாதி, விநாடி
அறுபது கொண்டது, கடிகை,
கன்னல், விகலை.
நாழிகைவட்டம் - கால அளலைக்
காட்டுமோர் சூத்திரம், சூரிய கடி
காயம்,
தை விசாகம், ந, நா, கி,நீ,து,நாழிகை வட்டில் -- இருத்தை, கடிகை,
நூ அனுசம், நெ, நே, சை கேட்
கன்னல்,நாழி, பதம், விகலை.
காளயோகம் - ஒரு நல்ல யோகம்.
டை.யு, யூ மூலம்,உ,ஊ,எ,ஏ, நாளம்- நான்
ஐ பூராடம். ஒ, ஓ, ஒள உத்திரா
டம். க, கா, கி, கீ திருவோணம்,
ஞ,ஞா, ஞி அவிட்டம். தொ.
தோ, தெள சதயம்.கொ, கோ,
நௌ பூரட்டாதி. யா உத்திரட்
டாதி. ச, சா, சி, சீ இரேவதி
யென்பனவாம்.
நாமராசி - இராசிப்பொருத்தம்,பெ
யர்ப்பொருத்தம்.
அது ஒன்பதில் பூருவபக்கத்துச்
சந்திரன்,வியாழன், சுக்கிரன்
ஆகிய இவர்கள் ஒன்றுபட்டிருக்க
புதன் இலக்கினாங்கிஷம் பெற்று
நிற்பதாம்.
கானெல்லை - அத்தமனம், மரணகள
லம்.
நாளை - மற்றகாள்.
காயகன் - நடத்துவோன், ஒவ்வொன் காளோலை - சாதகம்.
றுக்குமதிபதி.
நாயிறு - ஒரு கிழமை,சூரியன்.
நாய்- தென்மேற்றிசை பாலன்குறி.
நாய்க்கரணம் - சதுர்ப்பாதகரணம்.
காய்த்திசை - தென்மேற்கு.
நாராயணன்- சந்திரன்.
நாலாமிடம் - நான்காமிராசி.
கால்-நான்கு.
நாவாய் - இரேவதி நட்சத்திரம்.
19
நாள்
அல்கல், அளவை, இராப்
பகல் கொண்ட பொழுது, ஆனி
யம்,எல், எல்லை, எல்வை,காலம்,
திவசம், திவா, தினம், நட்சத்தி
ரம்,நன்முகூர்த்தம், பகல், பெரு
நான், முகூர்த்தம், வாசரம்,வாரம்,
வைகல். இதன் பாதி, அரைநாள்
அத்தகாள்,பானாள்.
நாள்வட்டம்-நாள்சுற்று,<noinclude></noinclude>
nd55y29g9suvbfzqpto3gnx3c8v2smu
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/153
250
641454
1926857
2026-04-25T06:24:46Z
Magizh Sundram
16422
OCR
1926857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளசசு
சோதிடப் பேரகராதி.
நான்காமிடத்தின் காரகப்பெயர்.
நிசி.
நாள்விழிப்பு - இன்னகிழமைஇன்ன
விதமான விழிப்பு, குருடு என்
பது. விபரம்; - புதன், வியாழம்,
வெள்ளி இவைகள் இருகண் விழி
ப்பு நாள். ஞாயிறு, திங்கள் ஒரு
கண் விழிப்பு நாள், செவ்வாய்,
சனி குருட்டு நாள் என்பனவாம்.
உதாரணம் - "புந்திவி யாழம் புகர்க்
கிரு கண்ணாம், இந்துவ ருக்கரி நான்கு-சது, நாறு.
வர்க்கொரு கண்ணாம், செந்துவர்
க்கை, வேதநூல், கடவுன்கிட்
சேய மென்பவைகளாம்.
கான்காம்பக்கம் - இருத்தை. அதா
வது பூர்வபக்கம், அமரபக்கமென்
னும் இருபட்சங்களிலும் வரும்
நான்காம், ஒன்பதாம், பதினான்
காம் பக்கங்களாய் வரும் திதி
களாம்.
வாயாய் சேய்சனிக் கில்லை, முந்
நி
தினரோர்ந்து மொழிந்தனர் நிகப்பிரபை இருள்.
மாதோ' என்னுஞ் செய்யுனா நிகழ்காலம் - தற்காலம், நடக்குங்
லறிக.
நாற்கால்கிரகம் நாலுகாலுள்ள கிர
நாற்காற்கோள் கம்.அவைசூரியன்,
செவ்வாய், சனி.
நாற்கால்ராசி - மேடம், இடபம், சிங்
கம், தனுசு.
நாற்கோணவேதை
-
சனி, செவ்
வாய்நின்ற நட்சத்திரத்துக்கு இரு
பத்தாறு, இருபத்தொன்று,
மூன்று, இருபதாவது நட்சத்திரங்
களாம்.
காலம், வர்த்தமானகாலம்.
நிகழ்காலராசி
இடபம், சிங்கம்,
விருச்சிகம்,கும்பம்,
நிகற்பம் - நூறுகற்பங்கொண்ட ஒரு
கால அளவு.
நிகற்புதம் - பதினாயிரங்கோடி.
நிசமனம் - பார்வை.
நிசா- இரவு.
கிசாகரன் 2
சோகேது
சந்திரன்.
நிசாந்தகன் - சூரியன்.
நிசாந்தம் - விடியற்காலம்.
காற்றிசை - கிழக்கு,தெற்கு, மேற்கு, கிசாபதி
வடக்கு.
நான்காமிடம் -நான்காமிராசி.
நான்காமிடத்தின் காரகப்பெயர்
கல்வி, வாகனம், பூமி, சுகசயனம்,
சௌக்கியம், பந்துக்கள், நிட்
நிசாமணி
சந்திரன்.
நிசாமனம் - பார்வை.
நிசாமானம் - இராத்திரிகால அளவு.
நிசாரி-சூரியன், சந்திரன்.
நிசார்த்தம் - பாதிராத்திரி,
சேபம், வஸ்திரம், தடாகம்,கிணறு,நிசார்த்துனன் - சந்திரன்.
தாய், வியாபாரம், கண்டம், வல நிசி-இரா, இருள்.<noinclude></noinclude>
pcina969f8dghmq7e2j0nlogq2o855r
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/154
250
641455
1926859
2026-04-25T06:25:41Z
Magizh Sundram
16422
OCR
1926859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
நிர்வாணிநிலை.
ளசஎ
நிமித்தம் - பல்லி முதலியவற்றின்
நிமித்தசூடாமணி.
நிகிமணி - சந்திரன்.
நிசீதம் - அர்த்தசாமம்,இரவு.
நிசீதினி
நித்தியை
இரவு.
நிட்சேபம் - நாலாமிடம், புதையல்
நிதாககரன் - சூரியன்.
நிதாந்தம் - விடியற்காலம்.
நிதிஸ்தானம் ? இரண்டாமொன்ப
நிதித்தானம் தாமிடங்கள்.
நிதேசினி - திக்கு.
நித்தியதிசை - தினமகாதிசை. விப
ரம் :- தினமகாதிசையிற் காண்க.
நித்தியயோகம் - பஞ்சாங்க உறுப்பு
ளொன்றாகிய தினயோகம். இது
அதிகண்டம், அரிடணம், ஆயுஷ்
மான், ஐந்திரம், கண்டம், சாத்தி
யம்,சித்தம், சித்தி, சிவம், சுகர்
குறி.
நிமித்தர்
நிமித்திகப்புலவன்
/விமித்திகன்
வள்ளுவன்,
வருங்காரியஞ்
சொல்லுவோ
ன்,சோதிடன்,
நீயிர்ச்சி - கிரகநடையினொன்று.
நியற்புதம் - பதினாயிரங்கோடி.
நியுதம் - எண்வகுப்பினொன்று. அது
இலட்சம், நூறாயிரம்.
நிரஞ்சனை - பூரணை.
நிரட்சதேசம் - இராப்பகல் நாழிகை
சரியாயிருக்குந் தேசம்.
நிரட்சம் - பூகோளசமரேகை.
நிரம்புதல் - இருதுவாதல்.
நிராதமை -இரவு.
நிரியாணசக்கிரம் - மரண சக்கிரம்.
மம், சுபம், சுப்ரம்,சூலம்,சோப நீரியாணதிசை - சனி புடத்திற்
னம், செனபாக்கியம், திருதி,துரு
வம், பரிகம் பிரமம், பிரீதி, வச்சி
-ச
கண்ட நட்சத்திரதிசை, மரண
திசை.
நிருதி - தென்மேற்றிசைப் பாலன்
அஷ்டதிக்குப்
ரம், வரியான், விட்கம்பம், விதி
பாதம், வியாபாதம், விருத்தி,
வைதிருதி என்பனவாம். அன்றி வன்.
பாலகருளொரு
யும் தின அதிட்டத்திற்கும் பேர். நிருதிதிசை - தென்மேற்றிசை.
நித்தியானத்தியாயம் - அட்டமி, நிர்வாணி - அமங்கலை, யோகினிக்கும்
அமாவாசை, சதுர்த்தசி, பூரணை
யென்னுந் தினங்களாம்.
நிபுணன் - புதன்.
நிமிஷம் காலநுட்பம். அது காட்
நிமிடம் டையெட்டுக்கொண்டது.
நிமித்தகாரன் - வருங்காரியஞ்சொல்
வோன்.
நிமித்தசூடாமணி - சனசாஸ்திரம்.
பெயர்.
நிர்வாணிநிலை - ஞாயிறு, வியாழன்
தென்கிழக்கு. திங்கள், வெள்ளி
தென்மேற்கு. செவ்வாய், சனி
வடமேற்கு. புதன் வடகிழக்கு
இவள் பின்நிற்குந்திக்கில் பயணத்
திற்கு நன்று, எதிர் நிற்குத்திசை
யின்நேரிற் போகலாகாது.<noinclude></noinclude>
a3i8kucled1lfrm3a5le0bwns2dfcqg
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/35
250
641456
1926860
2026-04-25T06:25:55Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குளிர்தென்றலின் இனிமையையும் வெற்றி கொள்ளும் இந்தச் சங்கீத இன்பத்தை எப்படித்தான் போற்றிப் புகழ்வதோ- இசை ஞானமிக்கவர்கள் வியந்து களித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|26||கலைஞர்}}</noinclude>குளிர்தென்றலின் இனிமையையும் வெற்றி கொள்ளும் இந்தச் சங்கீத இன்பத்தை எப்படித்தான் போற்றிப் புகழ்வதோ- இசை ஞானமிக்கவர்கள் வியந்து களித்தனர். பாமர மக்களின் உள்ளங்களையும் வசீகரிக்கக்கூடிய வசந்தமாக இருந்தது அவரது இசை! குற்றாலத்து அருவியாக, கொடைக்கானல் தரும் சுகமாக, கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனமுதமாக எம். கே. டி. பாகவதரின் பாடல்கள் விளங்கின. சிவகவி, திருநீலகண்டர், அரிதாஸ், அசோக்குமார், சிந்தாமணி, என ஆண்டுக் கணக்கில் இடைவிடாது ஒடிக்கொண்டிருந்தன அவர் நடித்த திரைச் சித்திரங்கள்.
இன்னொருவர் கலைவாணர் கிருஷ்ணன். ஆம்! காணக் கிடைக்காத தங்கம். கலையுலகப் புகழ் மலையின் உச்சியிலே கொடிபோட்டவர். அறிவியக்கக் கருத்துக்களை, தான் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும் மக்கள் மனத்திலே பதிய வைத்தவர்.
:கொள்கை வைரம் பாய்ந்த நெஞ்சம்.
:கொடை வழங்கும் கை.
:ஏழை எளிய மக்களின் இன்னல் கண்டு ஏங்குகின்ற இயல்பு.
:பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.
அண்ணாவின் உயிருக்குயிரானவர். அவர்கள் கூறும் கருத்துக்களை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் இணைத்து தேனில் குழைத்த மருந்துபோல் மக்களுக்கு வழங்கும் ஆற்றல் படைத்தவர். நந்தனாரைக் கிந்தனாராக்கி, இன்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் போடப்படும் தடைகளைத் தகர்த்திட புதிய கதாகாலட்சேபமே தயாரித் தவர். வில்லுப்பாட்டின் மூலம், காந்திமகான் கதையும். கழகத்தின் புகழும் கூறியவர். அனைத்துக் கட்சித் தலைவர்களிடத்திலும் அன்பும் மரியாதையும் கொண்டவர்.{{nop}}<noinclude></noinclude>
dpxfmq8vaexcbwivw5w1lxuzp47rt41
1926974
1926860
2026-04-25T07:43:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|26||கலைஞர்}}</noinclude>குளிர்தென்றலின் இனிமையையும் வெற்றி கொள்ளும் இந்தச் சங்கீத இன்பத்தை எப்படித்தான் போற்றிப் புகழ்வதோ- இசை ஞானமிக்கவர்கள் வியந்து களித்தனர். பாமர மக்களின் உள்ளங்களையும் வசீகரிக்கக்கூடிய வசந்தமாக இருந்தது அவரது இசை! குற்றாலத்து அருவியாக, கொடைக்கானல் தரும் சுகமாக, கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனமுதமாக எம். கே. டி. பாகவதரின் பாடல்கள் விளங்கின. சிவகவி, திருநீலகண்டர், அரிதாஸ், அசோக்குமார், சிந்தாமணி, என ஆண்டுக் கணக்கில் இடைவிடாது ஒடிக்கொண்டிருந்தன அவர் நடித்த திரைச் சித்திரங்கள்.
இன்னொருவர் கலைவாணர் கிருஷ்ணன். ஆம்! காணக் கிடைக்காத தங்கம். கலையுலகப் புகழ் மலையின் உச்சியிலே கொடிபோட்டவர். அறிவியக்கக் கருத்துக்களை, தான் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும் மக்கள் மனத்திலே பதிய வைத்தவர்.
::கொள்கை வைரம் பாய்ந்த நெஞ்சம்.
::கொடை வழங்கும் கை.
::ஏழை எளிய மக்களின் இன்னல் கண்டு ஏங்குகின்ற இயல்பு.
::பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்.
அண்ணாவின் உயிருக்குயிரானவர். அவர்கள் கூறும் கருத்துக்களை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் இணைத்து தேனில் குழைத்த மருந்துபோல் மக்களுக்கு வழங்கும் ஆற்றல் படைத்தவர். நந்தனாரைக் கிந்தனாராக்கி, இன்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் போடப்படும் தடைகளைத் தகர்த்திட புதிய கதாகாலட்சேபமே தயாரித் தவர். வில்லுப்பாட்டின் மூலம், காந்திமகான் கதையும். கழகத்தின் புகழும் கூறியவர். அனைத்துக் கட்சித் தலைவர்களிடத்திலும் அன்பும் மரியாதையும் கொண்டவர்.{{nop}}<noinclude></noinclude>
kzc4lgi2ew7wko45w5wdt7enebkczvd
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/155
250
641457
1926861
2026-04-25T06:27:07Z
Magizh Sundram
16422
OCR
1926861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ளச
அ
நீசத்தானம்.
நிலமகன் - செவ்வாய்.
நிலமெடுத்தல் -மனை முதலியவற்
றிற்கு நிலங்குறித்தல்.
நிலவு - சந்திரன், சந்திரிகை.
நிலவுநாழிகை - நிலவின் அடிகொ
ண்டு கணிக்கும் நாழிகை.
நிலா- சந்திரன்.
நிலாக்கிரணம் - சந்திரகிரணம்.
நிலாக்கொழுந்து - இளம்பிறை.
நீலாமண்டலம் - சந்திரமண்டலம்.
நிலை - நேரம், பொழுது, காலம்.
நிலைபோடுதல் - அடியிடுதல்,இது
-
சிற்பசாஸ்திரத்தின் விதி.
நிலைமாறுதல் - வைகாசி.
நிறம் - இலக்கினம், குணம்,சரீரம்.
துலாராசி.
நீயப்பான்}
நிறைகலை
நிறைமதி 5
பூரணசந்திரன்.
நீற்குல்ரேசம் } சக்திரன்,செவ்வாய்.
நிற்குமிராசி - கன்னி, தனுசு, மிது
னம், மீனம்.
நிற்புதம் - ஓரெண்.
நினைத்தகாரியம்
-
நெடுமன்.
நீசபங்கராசயோகம் - நீசம் பெற்ற
கிரகம், நீசங்கெட்டு இராஜ யோ
கத்தைத் தருவதாம். விபரம்:--
நீசக்கிரக மிருந்த வீட்டுக் குடை
யவன், ஆச்சி அல்லது உச்சம்
பெற்றாவது, சந்திரனுக்குக் கேந்
திரம் பெற்றாவது நிற்பதாம்.
நீசம் - உச்சத்திற் கேழாமிடம்.
நீசராசி- கிரகங்கள் நீசம் பெறுமி
ராசி, விபரம் கிரக நீசத்திற் கா
ண்க.
நீபம் - உத்திரட்டாதி நட்சத்திரம்.
நீர்-பூராட நட்சத்திரம்.
நீர்க்கீழ் - உதயத்திற்கு நாலாமிராசி.
நீர்க்கோள் -- சலக்கிரகம். விபரம்:-
சலக்கோளிற் காண்க.
நீர்நாள் - பூராட நட்சத்திரம்.
நீலவசனம்
நீலவண்ணன்
நீலன்
சனி
நீலவாசான்
நு
நுழைச்சல்- ஏழு.
எண்ணிய பொ
நுழைச்சற்புலு - எழுபது
நூ
ருள், அது ஆரூட சோதனை யி
லொன்று.
நீகம் மேகம்.
நீசக்கிரகம் இராகு, உச்சத்திற்கே
ரீசக்கோள் ழாமிடக்கிரகம்,கேது,
நீசத்தானமடைந்த கிரகம்.
நீசத்தானம் - உச்சத்திற் கேழாமி
டம்
தூபம் இடபவிராசி.
நூல் - சாஸ்திரம்.
நூறாயிரம் - இலட்சம், நியுதம்.
நூறு - சதம்.
நெ
நெடுங்காலம் - வெகுகாலம்.
நெடுமன் - பாம்பு.<noinclude></noinclude>
hbya7bqvkgsfzvnzw8c7lbmra6wndm8
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/156
250
641458
1926862
2026-04-25T06:27:36Z
Magizh Sundram
16422
OCR
1926862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகாதி.
நைசர்க்கிகதிசை.
நெட்டைக்கிரகம் இ கு, குரு'
நெட்டைக்கோன் கேது, புதன்.
நெய் - சித்திரை நட்சத்திரம்.
நெரிவு- பகை.
நெருப்புவட்டம் - அக்கினி மண்ட
லம்.
நெற்குறி - நெற்கொண்டு சொல்
லுஞ் சோதிடம்.
நெற்றித்தானம் - இரண்டாமிடம்.
நென்னல் - முன்னைநாள்.
நே
நேத்திரயோனி - சந்திரன்.
நேத்திரத்தானம் - இரண்டாமிடம்.
நேமம் - சாயங்காலம், கேரம், பங்கு.
கேரகாலம் - தற்காலம்.
நேர்வான் - சித்திரை நாள்.
நேர்பட எதிர்தல் - கூடுதல்.
நேற்று - முதனாள்.
நேற்றையத்தினம் -கழிநாள், நெரு
நல், நென்னல்.
நை
நைசர்க்கிகதிசை - இருபாம்பு நீங்கிய
ஏழு கிரகங்களில் சந்திரனை ஆதி
சக
பகல்.
செவ்வாயிருந்த ராசிமுதற்கொண்
டும், புதனுக்கு புதனிருந்த ராசி
முதற்கொண்டும், சுக்கிரனுக்கு
சென்மலக்கின முதற்கொண்டும்,
குருவுக்கு இலக்கினாதிபனிருந்த
ராசி முதற்கொண்டும், சனிக்கு
சூரியனிருந்த ராசி முதற்கொண்
டுந் திசை நடத்துவதாம்.
கைச்சி - பாம்பு.
கைருதி - நிருதி, நிருதிதிசை.
நொ
நொடி- காலநுட்பம், கைநொடி
நோ
நோக்கு - நோக்குதல், பார்வை.
நோய்முகன் - சனி.
நௌ
நெனயோகம் - ஒருசமயோகம். அது
ப-
இராகு கேது நீங்கிய சூரியாதி
எழுவர் தனித்தனியாக இலக்கின
முதல் ஏழாமிராசி வரையி லிருப்
பதாம்.
ப
யாக வைத்து, செவ்வாய்,புதன்,ப -இருபதிலோர் பாகத்தைக் காட்
சுக்கிரன், குரு, சூரியன், சனி
அந்தமாகக் கொள்வதாம். இவர்
டும் கீழ்வாயிலக்கக் குறி, காற்று,
பெருங்காற்று.
களுக்கு திசை வருடமுறையே/பஃறி - இரேவதி நட்சத்திரம்.
ஒன்று, இரண்டு, ஒன்பது,இரு/பகலவன் - சூரியன், பரணி நட்சத்
பது, பத்து, எட்டு, இருபது, ஐம் திரம்.
பது என்பதாம். சக்திரன், சூரிய பகலோன் - சூரியன்.
னிவர்களுக்கு சந்திர லெக்கின/பகல் - சூரியன், தினம், நடு, பகற்
முதற்கொண்டும், செவ்வாய்க்கு காலம், மத்தியானம், முசுடர்த்தம்.<noinclude></noinclude>
6lhutryry7czi8ptfg6tdzn22viej1i
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/157
250
641459
1926863
2026-04-25T06:28:32Z
Magizh Sundram
16422
OCR
1926863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளருய
பகன்.
சோதிடப் போகராதி.
பகல்மானம் - பகல் நாழிகை.
அவை
பகல்வவிக்கிரகம் ? பகலில் வலியுள்
பகல்வலிக்கோள்ள கிரகம்.
சுக்கிரன், சூரியன், வியாழன்.
பகல்விழிப்பு ராசி - சிங்கம், கன்னி,
துலாம், விருச்சிகம், கும்பம், மீனம்
என்பனவாம்.
பகல்வலி ராசி
யைக் காண்க.
தலையுதைய ராசி
பகல்வாயில் - கீழ்த்திசை.
பகவதிநாள் - பூரம்,
பகவான் - சூரியன்.
பகற்காலக்கிரகம் சுக்கிரன், சூரி
பகற்காலக்கோள்யன்,புதன்,குரு.
பகற்குளிகன் - பகற்கால குளிகை
காலம். அவை ஞாயிறு இருபத்
தாறேகால், திங்கள் இருபத்திரண்
டரை, செவ்வாய் பதினெட்டே
முக்கால், புதன் பதினைந்து,வியா
ழன் பதினொன்றே கால், வெள்ளி
ஏழரை சனி மூன்றே முக்கா
லென்பதாம்.
உதாரணம்:- " ஞாயிறு முகூர்த்த
மேழாம் நன்மதிக் காறாஞ் செவ்
வாய்க், கேயவைத் தாகும் புந்திக்
கீரிரண் டாம்பொன் மூன்றாம்,
தூயாற் புகர்க்கி ரண்டாஞ் சுன்
னவன் றனக்கொன் றாகும்,
விம் முகூர்த்தத் தோடே யற்றி
டுங் குளிக னெல்லில்" என்னுஞ்
செய்யுளாலு மறிக.
பாற்பாடு - பகற்காலம்.
பகன் - பன்னிருமாதச்சூரியருளொ
ருவன்.
ஆய
பகுளசத்தமி
பக்காந்தம்.
-
கிருட்ணபக்கத்து
ஏழாந்திதி.
பகுனம் - கிருட்டிணபக்கம்.
பகை - விரோதம்.
பகைக்கிரகம் - பகைக்கோள்.
பகைக்கோள் - பகைக்கிரகம். அவை
இன்ன இரகத்துக்கு இன்ன கிர
கம் பகையென்பது. விபரம் - கிரக
பகையிற் காண்க.
பகைத்தானம் - ஆறாமிடம். அன்றி
யும் இன்ன ராசி இன்ன கிரகத்
திற்குப் பகையென்பது. விபரம் ;-
கிரக பகையிற் காண்க.
பகைநாள் - பிறந்த நாளுக்கு முத
னாள்.
பகைராசி - பகை வீடு.
பகைவீடு - கிரகராசிப் பகையிற் கா
ண்க.
பக்கசரம்
பக்கசன்மனம்
சந்திரன்.
பக்கதி - பிரதமை.
பக்தித்தானம் - ஐந்தாமிடம்.
பக்கநோக்குக்கிரகம் பக்கபார்வை
பக்கநோக்குக்கோள் யுள்ள கிரகம்.
அவை செவ்வாய்.
பக்கநோக்குராசி—பக்க பார்வையுன்
ளராசி. அவை மேடம், இடபம்,
சிங்கம், தனுசு என்பனவாம்.
பக்கபாதம் - வாரம்.
பக்கம் - சந்திரனான், பட்சம், பதி
னைந்து நாள்,பூர்வ பக்கம், அமர
பக்க மென்பதுமாம்.
பக்காந்தம் - பட்சத்தின் கடைநான்.<noinclude></noinclude>
jxtapjmq8ef5dhztgcdxuyiozefxmfl
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/158
250
641460
1926864
2026-04-25T06:28:51Z
Magizh Sundram
16422
OCR
1926864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பசலி வருடம்.
பங்கயன்-சூரியன்.
பங்கு - சனி, முடவன், நாள், வாரம்,
பங்குக்கிராகம் - மகர விராசி.
பங்குபட்டநான்-இரண்டு ராசியிற்
றன் னங்கிசஞ் சேர்ந்து நிற்கும்
பெருநாள்.
பங்குபாதன் - சனி.
பங்குனி - உத்திரகள், ஒருமாதம்,
பங்குனிமாதம் - பாற்குனம், பாற்கு
நிகம்.
பசதன் - சூரியன்.
பசந்தம் - நேரம்.
பசலி வருடம் - தற்காலம் பிரிட்டீஷ்
இராசாங்கத்தார் அரசிறை நிருவா
பஞ்சகம்.
ள ருக
லிக்கணக்கு அங்கீகரிக்கப் பெற்று
வருகிறது. நமது கணிதப்படி இப்
பசலி கலியுகாதி மூவாயிரத்த
றுநூற்றுத் தொண்ணூற் றொன்
நாம் வருடத்தில் ஆரம்பம்.
பசு-இடபவிராசி.
பசுங்கதிர்
பசுங்கதிர்த்தே
}சந்திரன்.
பசூசகன் - சோதிடன்.
பசேலிமன் - சூரியன், தீ.
பச்சிமப்பிறை - இளம்பிறை.
பச்சிமம் - மேற்கு.
பச்சை
பச்சைநிறக்கோன்
பஞ்ச
ககாரியங்களுக்காக உபயோகித்து
வரும் வருடமாம். இது முகம பஞ்சம்
}புதன்.
ஐந்து.
திய அச்சனாகிய அக்பர் அரசாட்சி பஞ்சகம்—ஐந்தின் கூட்டம். அவை
காலத்தில் அரசிறை வசூலிப்புக்
காக இந்தியாவின் வடபாகத்தில்
அனுட்டிக்கப் பெற்றுவந்தது. மே
ற்படி யரசரின் குமாரன் ஹாஜி
கானால் மேற்படி யனுட்டானத்
திற்கு இரண்டு வருடத்திற்குப்
பின் தென்னிந்தியாவில் வழக்க
லாயிற்று. இவ்வருட ஆரம்பம்
கர்நாடக தேசத்தில் சூலை மாதம்
பதினாலாந்தேதி தொட்டு ஆடி
மாதமுதல் தேதியாக வழங்கி
வந்தது. இது இருவகைத் தேதி
கன் கலந்து குழப்பத்திற் கேது
வாயிருந்ததால் சூலைமாத முதல்
தேதியையே ஆங்கில அரசாங்கத்
தார் தீர்மானித்து அதன்படி பச
பார்க்கும் விபரம் -ஞாயிறு முதல்
அன்றையவாரம் வரையும், பிரத
மை முதல் அன்றையத்திதிவரை
யும், அசுபதி முதல் அன்றைய
நட்சத்திரம் வரையும்,மேடமுதல்
அப்போது உதய மாகும் இலக்
கினம் வரையும் எண்ணிக்கண்ட
தொகையை ஒன்பதில் கழித்த
மிச்சம் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்
பது உத்தமம். மற்றவை நீக்கப்
படுவதாம். (1) மிருத்து பஞ்சகம்,
(2) அக்கினி பஞ்சகம், (4)இராஜ
பஞ்சகம், (6) சோரபஞ்சகம், (8)
ரோகபஞ்சகம் ஆகிய இவற்றுள்
இராஜபஞ்சகமும், அக்கினிபஞ்ச
கமும், இரவில் சோரபஞ்சகமும்'<noinclude></noinclude>
dli9bb321cbqk3ndfd474w7gwgnjosv
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/159
250
641461
1926865
2026-04-25T06:29:11Z
Magizh Sundram
16422
OCR
1926865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளருஉ
சோதிடப் பேரகராதி.
பஞ்சக்கோள் நின்ற தோஷம்.
ரோகபஞ்சகமும், சகலகாரியங்
களுக்கு மிருத்து பஞ்சகமும், ஆகா
தென்பதாம்.
பஞ்சகாரன் - கணிதசாஸ்திரி.
பஞ்சகோணமண்டலம் - சுக்கிர
மண்டலம்.
பஞ்சக்கிரகம் ஐந்துகிரகம். அவை-
பஞ்சக்கோள்செய்வாய், புதன்,
வியாழன் வெள்ளி, சனி என்ப
னவாம்.
பஞ்சக்கோள் நின்ற தோஷம் -சூரி
யன் நின்ற நட்சத்திரத்துக்கு
ஏழாம் நட்சத்திரம் உற்பாத
மெனவும், பத்தாம் நட்சத்திரம்
தாரகமெனவும், பனைந்தாம் நட்
சத்திரம் பிரமதண்ட மெனவும்,
இருபத்தொன்றாம் நட்சத்திரம்
காலனெனவும் பெயராம்.
செவ்வாய்க்கு ஏழாம் நட்சத்தி
ரம் சூலமெனவும், பதினைந்தாம்
நட்சத்திரம் கண்டமெனவும், இரு
பத்தொன்றாம் நட்சத்திரம் கால
னெனவும் பெயராம். அன்றியும்
பத்துச் சக்கரமென்றும், பதினை
ந்து காலமென்று சொல்லும் நூல்
களுமுள்
புதனுக்கு எட்டு, பதினெட்டு,
இருபத்துநாலு ஆகிய நட்சத்திரங்
கள் கண்டமென்பதாம்.
குருவுக்கு ஏழு, ஒன்பது ஆகிய
நட்சத்திரங்கள் கொடுமையாம்.
சுக்கிரனுக்கு ஏழு, ஒன்பது
ஆகிய நட்சததிரங்கள் கொடுமை
யாம்.
பஞ்சபட்சி சாஸ்திரம்.
சனிக்கு ஐந்து, ஆறு, பத்து,
பதினொன்ற, பனிரண்டு ஆகிய
கட்சத்திரங்கள் பந்தமென்பதாம்.
இராகு-கேதுக்களுக்கு ஏழாம்
நட்சத்திரம் பரிகமெனவும் பெய
ராம். இவைகளைச் சுபகாரியங்
களுக்கு விலக்கப்பெற்றிருக்கிறது,
பஞ்சசதம் - ஐறு.
ப
பஞ்சதசகம்
பஞ்சதசம்
பதினைந்து.
பஞ்சசது - நேரம்.
பஞ்சசித்தாந்தம் - ஒருவன் சீவிய
காலத்தின் சுகதுக்கத்தை உறுதி
செய்ய ஐந்து வகையாய் ஆராய்
ந்து முடிவு கட்டுவதாம்.விபரம்;-
(1) நட்சத்திர சுபாசுபம்,
(2) கிரகங்களின் சீலம், (3) கிர
கங்களின் காரகத்தன்மை, (4)
உச்சாதிவர்க்கம், (5) ஆதிபத்திய
மென்பதாம். சோதிடபஞ்ச சித்
தாந்தமென்னும் நூலுமுண்டு.
பஞ்சதசி - பூரணை.
பஞ்சத்துவம் - பஞ்சகமென்னும்ஐந்
தின் கூட்டம்.
பஞ்சபட்சி - எழுத்துப் பொருத்த
மறியும் ஐந்து பட்சி. அவை;-
வல்லூறு, ஆந்தை,காகம், கோழி,
மயில். இவற்றிற்கு முறையே
எழுத்து, அ, இ, உ, எ, ஒ, இவற்
றின் செய்கைஉண்டி,எடை அரசு,
தூக்கம், சாவு என்பனவாம்.
.
ஐந்துபட்சி
பஞ்சபட்சிக்காதல்
பஞ்சபட்சி சாஸ்திரம் களைக்கொ
ண்டு நலந் தீது சொல்லும் நூல்.<noinclude></noinclude>
8r7j7tfi8oe0gz1z1pjzzdwo0m9u9ll
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/160
250
641462
1926866
2026-04-25T06:29:32Z
Magizh Sundram
16422
OCR
1926866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பஞ்சபூதப்பொருத்தம்.
பஞ்சபட்சிப்பொருத்தம்
-
மணப்
பொருத்தத்தொன்று, அது மயி
லுக்குங் கோழிக்கும் - வல்லூறும்,
ஆந்தையும், காகத்திற்கு - ஆந்தை
யும், வல்லூறுக்கு - ஆந்தையும், மயி
லும், கோழியும் பகையாம்; மற்
றவை உறவாம். பெண்ணுக்கும்
ஆணுக்கும் பகையில்லாதிருந்தா
லும் ஒரே பட்சியானாலும் பொரு
த்தமாம்.
பஞ்சபூதக்கிரகம்) ஐந்து பூதங்களுக்
பஞ்சபூதக்கோள் [ சூரிய கிரகம்.
விபரம்:-
பிருதிவிக் (பூமி) கிரகம்
செவ்வாய். அப்புக்(சீர்) கிரகம் சுக்
கிரன்.தேயுக்(தீ)கிரகம் வியாழன்.
வாயுக்(காற்று) கிரகம் புதன். ஆகா
யக் (அகண்டவெளி) கிரகம்
என்பனவாம்.
சனி
அன்றியும் முற்
கூறிய கிரகங்களுடன் அப்புக்கு
சந்திரனும்,தேயுக்கு சூரியனும்,
ஆகாயத்திற்கு இராகு,
கேது
ஆகிய இவர்களும் என்று கூறும்
நூல்களு முள.
பஞ்சபூதப்பொருத்தம் - மணப்பொ
பஞ்சானனம்.
ஆகாயமென்றும் பெயர். இதில்
பெண்ணும் ஆணும் ஒரே பூதமா
னால் உத்தமம். அப்புந் தேயுவு
மாகில் அதமம், மற்றவை மத்திம
மாம்.
பஞ்சபூதம் - பிருகிவி, அப்பு, தேயு,
வாயு, ஆகாயம் முறையே மண்,
நீர், தீ, காற்று, வெளி (ஆகாயம்)
என்பதாம்.
பஞ்சமத்தானம் - ஐந்தாமிடம்.
பஞ்சமம் - ஐந்து
பஞ்சமி-அவிட்டமுதல் ஐந்துநாள்;
ஐந்தாந்திதி.
பஞ்சலோகம் - ஐந்துலோகம். அவை
இரும்பு, ஈயம், செம்பு, பொன்
வெள்ளி யென்பனவாம்.
பஞ்சாங்கபலன் - பஞ்சாங்கங் கணிப்
பதிற்கண்ட பலன்.
பஞ்சாங்கம்
-
சோதிடத்துக்குரிய
ஐந்துறுப்பு. அவை கரணம், திதி,
நட்சத்திரம்,யோகம்,வாரம் என்
பனவாம்.
பஞ்சாங்கவாக்கியம் - கணிதமுறையி
னொன்று.
ருத்தத்தொன்று. அவை அசுபதி பஞ்சாசியம் - சிங்கம்.
முதல் ஐந்து நட்சத்திரங்களும் /பஞ்சாரம் - எருது, குதிரை, இவற்
பிருதிவி என்றும், திருவாதிரை
றினாயுள்.
-
ஐந்தருக்கத்
முதல், ஆறு நட்சத்திரங்களும் பஞ்சார்க்கதோசம்
அப்புவென்றும், உத்திரமுதல் ஆறு தால் வருந்தோசம்.
நட்சத்திரங்களும் தேயுவென்றும், பஞ்சார்க்கம் — ஐந்தருக்கம். அலை
கேட்டை முதல் ஐந்து நட்சத்தி
ரங்களும் வாயுவென்றும், அவிட்ட
முதல் ஐந்து நட்சத்திரங்களும்
20
இந்திரவில், கேது, தூமம், பரிவே
டம், விதிபாதம் என்பனவாம்.
பஞ்சானனம் - சிங்கம்.<noinclude></noinclude>
2xw01mml7lnmhoxinb8v2s5prq5rtpe
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/161
250
641463
1926867
2026-04-25T06:30:01Z
Magizh Sundram
16422
OCR
1926867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>எருச
சோதிடப் பேரகராதி.
பண்டிகை.
பஞ்சி - பஞ்சாங்கம்.
பஞ்சிகை - கணிதம்,பஞ்சாங்கம்.
பஞ்சிதம் - விண்மீன்.
படர்க்கை - மூன்றாமிடம்.
5-
படலம் திசை.
படல்-அஸ்தமித்தல்.
படி
-ஓரளவு, குணம், பூமி.
படிஞாயிறு - அத்தமசூரியன்.
படுதல் - அஸ்தமித்தல்,
படுவான் - மேற்றிசை.
பட்சபாதம் - ஒருவாரம்.
பட்சம்
-
-பக்கம்,
பத்தாமிடத்தின் காரகப்பெயர்.
பண்டிதன் - சுக்கிரன்,புதன்.
பண்ணவர்சாமி-இலக்கினாதிபன்.
பண்ணவன்- குரு, வியாழன்.
பதங்கன் - சூரியன்.
பதசம் - சந்திரன்.
பதம் - நாழிகை, பூரட்டாதி, பொ
ழுது,காலம்,பருவம்.
பதனகேந்திரம் - இலக்கினத்திலிரு
ந்து நாலாம்,ஏழாம்,பத்தாமிடங்
கணாகிய இராசி,
பதி - குரு, வியாழன், வீடு.
பதினைந்துநாள்/பதிற்றுப்பத்து - நூறு.
கொண்டது, பாட்டியமி.
பட்சாந்தம் - அமாவாசை, பூரணை,
பட்சிசாஸ்திரம்-பஞ்சபட்சிநூல்,
பட்சிதோசம் - குழந்தைகளுக்குவரும்
பரவைத்தோசம்.
பட்சியோகம்
- ஒரு கெட்டயோகம்.
அது நாலாமிடம் பத்தாமிடமிவை
களில் எல்லாக் கிரகங்களும் நிற்
றல்.
பட்டப்பகல் - நடுப்ப
பட்டாரகன்-சூரியன்.
பணகரம்-
பாம்பு, இராகு கேதுக்
களின் பொதுப்பெயர்.
நற்பகல்.
பணபரம்-இரண்டு, ஐந்து, எட்டு,
பதினொன்று ஆகிய இவ்விடங்
களாம்.
பணகரம் இராகு கேதுக்களின்
பதிற்றொன்பான் - தொண்ணூறு
பதினாறுகோணம்-எட்டுத்திசையும்
அதனுள்ளந்தராளமெட்டுமாம்.
பதினோராமிடக் காரகத்தின் பெயர்-
இடதுசெவி, இடது கன்னம், இட
துகால், இடதுதொடை, புதை
யல், துயர்கிவர்த்தி, மூத்தசகோ
தரம், களவு, வம்பு, மூர்க்கம்,
துர்ச்சேர்க்கை, சூது, இரசவாதம்,
கபடம், துன்மார்க்கம், அறிவு,
சிவிகை,ஆயம்,லாபம்,விரையம்,
இலக்கினமூல மென்றும் பெயர்.
பதுகம் - சோதிநட்சத்திரம்.
பதுமபந்து
பரமபாணி}
சூரியன்.
பதுமம் - கோடாகோடி.
பதுமவாஞ்சனன் - சூரியன்.
பணாதரம் பொதுப்பெயர், பதுமவிரோதி - சந்திரன்.
பணாபவம் பாம்பு.
பண்டகேந்திரம்-ஓர் ; கணிதம்.
பண்டி-உரோகணி நட்சத்திரம்.
பண்டிகை பெருகாள்,
பதுமாப்தன்
பதுமினிகாந்தன்
}சூரியன்.
-
பத்தாமிடத்தின் காரகப்பெயர்
இடதுகை, வெகுமானம், காரியம்,<noinclude></noinclude>
2wcxrzqfr0poafy250bb2uosfx1694k
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/162
250
641464
1926868
2026-04-25T06:30:19Z
Magizh Sundram
16422
OCR
1926868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பயானகம்.
சோதிடப் பேரகராதி.
ளருரு
பராபவவருடப்பலன்.
கருமம், தொழில், வியாபாரம், பயித்தியகாரன் - சூரியன்.
உத்தியோகம், தெய்வபக்தி,பிர பரக்குமிராசி-மகரம்,மீனம்,
திட்டை, பூர்வகருமம்,சற்கருமம்,/பாணம் - பரணி.
மெஞ்ஞானம், கருணை, வேளாண் பரணிநட்சத்திரம் - அடுப்பு, காடு,
மை யென்பதாம்.
பத்திரபதை - இரேவதி, உத்திரட்
டாதி.
பத்திரம் - அதிட்டம். பத்திரவாகர
ணம்.
பத்திரயோகம் - ஒரு நல்லயோகம்,
கிழவன்,சோறு, தருமநாள், தாசி,
தாழி, பகலவன், பாகு, பூதம்,
போதம், முக்கூட்டு.
பாணிகான்- பரணிநட்சத்திரம்.
பரதகண்டம் -- நவகண்டத்தொன்று.
பரதம் - இலட்சங் கோடி, கோடா
அது சந்திரனுக்கு ஒன்பதில் குரு கோடி, நவகண்டத்தொன்று.
வும், இலக்கினத்துக்கொன்பதில் பரமநாழிகை - முற்றுமுள்ள நாழி
சுக்கிரனும் நிற்பதாம்.
சை.
(2) இராகு, கேது, சூரியன்,சச்பரமானு-காலநுட்பம்.
திரன் இவர்கள் நீங்கிய குசாதி பரமானந்தயோகம் - ஒரு நல்லயோ
பஞ்சக் கோள்கள் ஆச்சியிலாவது,
உச்சத்திலாவது கேந்திரித்து நிற்
பதாம்.
பத்திரவகரணம் - விட்டிக்கரணம்.
பத்திராசுவம் -- நவகண்டத்தொன்று.
பத்திரை - துதிசை, சத்தமி, துவா
தசி, கோழிக்கரணம்.
பத்மயோகம்
ஒரு நல்லயோகம்.
அது நான்கு கேந்திரங்களிலும்,
சுபரும் பாவருங்கலத்திருப்பதாம்.
பந்தன் - புதன்.
பந்துத்தானம் - நாலாமிடம்.
பபதி- சந்திரன்.
பம் - கிரகம், நட்சத்திரம்.
பயநாள் - திருவாதிரை, ஆயிலியம்,
கேட்டை, மூலம்.
பயறு - சித்திரை நட்சத்திரம்.
பயானகம் - இராகு.
கம். அது இலக்கினந்திரமாகவும்,
ஏழு, ஐந்து, பதினொன்று இவை
களில் சூரியன், சந்திரன், சனி
இவர்கள் தனித்தனியே நின்று
குருஉச்சம் பெற்றிருப்பதாம்.
பராகம் - கிரணம், மற்றைநாள்.
பராக்கிரமகாரகன்- செவ்வாய்.
பராக்கிரமத்தானம் - மூன்றாமிடம்.
பராசரியம் - சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று
பரார்த்தம் - எண் வகுப்பினொன்று,
அது
ஆயிரங்கோடி, கோடாகோடி.
பராபவ - நாற்பதாவது வருடம்.
பராபவவருடப்பலன் முன்மழை
-
யில்லை, பின்மழையுண்டு, பசுக்
கள் விருத்தியடையும், கரும்பு
கள் முதலியனவும், மற்றும் நால்
வகைப்பொருளுங்குறையும்,எல்<noinclude></noinclude>
nr3z3sisfciederejyr2gb73ui89e84
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/585
250
641465
1926869
2026-04-25T06:30:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீது கட்டுப்பாடு இல்லாமையே சுதந்திரம் ஆகும் (Liberty) என்று பேராசிரியர் எச்.சே இலாசுகி (Laski) கூறும் சுதந்திரக் கருத்து உரிமைகளடங்கிய குடிமைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமை|557|குடியரசுக்}}</noinclude>மீது கட்டுப்பாடு இல்லாமையே சுதந்திரம் ஆகும் (Liberty) என்று பேராசிரியர் எச்.சே இலாசுகி (Laski) கூறும் சுதந்திரக் கருத்து உரிமைகளடங்கிய குடிமைக்கு ஆதாரமாகும். உரிமைகன், சமூக உரிமைகள் (Civil Rights), அரசியலுரிமைகள் (Political Rights), பொருளாதார உரிமைகள் (Economic Rights) என மூவகைப்படும், சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டும், அரசினால் பாதுகாக்கப்பட்டும் இருக்கின்ற உரிமைகளின் மொத்தத் தொகுப்பே சமூக உரிமைகளாகும். சமூக உரிமைகளை அரசு குடிகளுக்காகத் தோற்றுவித்துக் காப்பாற்றுகிறது. எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் செயல்முறையிலிருக்கின்ற சமூக உரிமைகளாவன: உயிர் வாழும் உரிமை, வேலை செய்யும் உரிமை, ஆள் சுதந்திரப் பாதுகாப்புரிமை (எவரொருவரும் தரு சட்டமுறையினாலல்லாமல் (Due Process of Law) தாக்கப்பாடவோ காயப்படுத்தப்படவோ சிறைப்படுத்தப்படவோ கூடாது) தற்பெயர் உரிமை, சமய உரிமை, கல்வி பெறும் உரிமை, சில விதிகளுக்கு உட்பட்டுப் பேசவும் கூட்டம் கூடவும் கருத்துகளை வெளியிடவும் உரிமை, கழகம் அமைக்கும் உரிமை, குடும்ப உரிமைகள், சொத்துரிமை, பொதுவான சுமூக வாழ்வுக்குகந்த நலன்களைப் பெற உரிமை, இச்சமூக உரிமை கனேல்லாம் அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்குட்பட்டுச் சமூக வாழ்வுக்கு இடையூறு ஏற்படாதவாறு குடிமக்களால் கையாளப்படுதல் வேண்டும். அரசியல் உரிமைகளிலே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை, தகுதி பெற்றோர் வேட்பாளராகத் தேர்தல்களில் போட்டி விடும் உரிமை, குறிப்பிட்ட காலங்களில் தேர்தல்களை நடத்துதற்கான உரிமை, தொழில் தகுதி பெற்றோருக்கு அரசாங்க அலுவல்களைப் பெறும் உரிமை, அரசாங்கத்தின் தவறுகளை எடுத்து இடித்துரைக்கும் உரிமை (Right to Criticise the Government) முதலியவை அடங்கும். இவ்வரசியலுரிமைகளில் பலவும் தாராளக் குடியாட்சியிலேதான் காணப்படும், வேலை செய்யும் உரிமை, நியாயமான பணிக்கான உரிமை, போதிய ஊதியம் பெறும் உரிமை, தொழிலில் தன்னாட்சி உரிமை முதலியவை ஒவ்வொருவருக்கும் அன்றாட உணவைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் பாதுகாப்பையும் தகுதலால் அவை பொருளாதார உரிமைகளாகும். ஆகையால், குடிமை உரிமைகளும், அரசின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலும், அரசுக்குரிய வரிகளைச் செலுத்துதலும், நாட்டின் நீதிமன்றத்திலே தீர்ப்புச் சான்றாளராகவோ (Jury), சான்றானராகவோ பணிபுரியுமாறு அழைக்கப்படும்போது, அவ்வாறு பணிபுரிதலும், நீதீமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்தலும், நாட்டின் பாதுகாப்புக்காகச் சட்டம் கட்டாய இராணுவப் பணியைக் கொண்டு வருமானால், அவ்வாறு பணிபுரிதலும் குடிமையில் அடங்கிய கடமைகளாகும்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>குடியம்</b>: தமிழகத்தில் பழங்கற்கால மனிதன் வாழ்ந்த குகை உள்ள இடம். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது. இந்தியத் தொல்பொருளாய்வுத்துறையினர் இங்கு 1962-64-ஆம் ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டனர். பழங்கற்காலக் கருவிகள் இங்குள்ள குகையிலும் இதற்கடுத்துள்ள பகுதிகளிலும் பெருமளவில் கிடைத்துள்ளன, கற்கால மனிதன் இங்குத் தொடர்ச்சியாக வாழ்வில்லை: சில சமயங்களில் மட்டும் தங்குவதற்காக இக்குகையைப் பயன்படுத்தியுள்ளான். இங்கு மூன்று அகழாய்வுக் குமிகள் வெட்டப்பட்டன, குடியம் 1. குடியம் 2, குடியம்-3 என அவை பெயரிடப்பட்டன், குடிவம் 1 குழி, மலைக் குகையில் அகழப்பட்டது. அகழாய்வுக் குழிகளில் இருந்து பழங்கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 585
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 122
|oTop = 130
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|குடியம் குகை}}
<b>குடியரசு</b>: காண்க: குடியரசுக் கொள்கை.
<b>குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்</b>: குடியாட்சி நன்கு செயற்படுதற்கு அரசியற் கட்சிகள் இன்றியமையாதளவு எல்லாவகை அரசாங்கங்களிலும் அரசியற் கட்சிகள் செயற்படுகின்றன. பாராளுமன்ற முறை அரசாங்கமோ, தலைவர் அல்லது அதிபர் முறை அரசாங்கமோ செயற்பட அரசியற் கட்சிகள் தேவை. எதேச்சாதிகார நாடுகள் கூட அரசியற் கட்சிகளின் உதவியுடன் தான் பதவிக்கு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரு பெரும் கட்சிகளாகக் குடியரசுக் கட்சியும், குடியாட்சிக்-<noinclude></noinclude>
22e4js55w8brvk2lrtg6pbtrjcz5126
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/163
250
641466
1926870
2026-04-25T06:30:51Z
Magizh Sundram
16422
OCR
1926870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ளருக
பரிவருத்தம்.
பரிவேடக்குறி.
டரிவர்த்தனம் 5 வீடுமாறி நிற்றல்,
பிரபவமுதல் அச்சயவரையற்பது
லாப் பிராணிகளுக்குங்கஷ்டமுமு/பரிவருத்தனம்) சுற்று, கிரகங்கள்
ண்டாம்.
உதாரணம்;--மிக்க பராபவத்
தில் மேதினியிற் பின்மழையாம், வருடங்கொண்ட ஒருசுற்றுமாம்.
தக்க பசுக்க டழைக்குமே - இக்குப்,
பலிக்காது நான்குவகைப் பல்லு
யிர்க்கு மின்பங்,கலிக்கா தென
வே கருது.(இடைக்காடர்)
பராயணம் - இராசி மண்டலம்.
பரார்த்தம் - எண்வகுப்பினொன்று.
பரி
- அசுபதி, அச்சுவினி.
பரிகம் - நித்தியயோகத்தொன்று.
பரிணயம் - கடைப்பிராயம், கலியா
ணம், முதிர்வு.
பரிதாவி - நாற்பத்தாறாவதாண்டு,
பரிதாவிவருடப்பலன்- சொற்ப
மழையுண்டு.பருத்தி, உப்பு, ஆம
ணக்கு முதலியன குறையும் ஆகி
னும் தானியவிளைவும் பொன்
முதலிய திரவியவிருத்தியும், எல்
லாச் சீவவர்க்கங்களுக்குஞ் சகமு
முண்டாம்.
உதாரணம்;- சொன்னபரி தா
விதனிற் றொல்லுலகில் மாரிகொ
ஞ்சம், பொன்னே விளைவுளதாம்
பூதலத்தில் - பன்னும்,பருத்தியுப்
போ டாமணக்குப் பாரிற் குறை
யும், வருத்தமற வேயுயிர்வா
ழும்.(இடைக்காடர்)
பரிதி - சூரியன்,வட்டம்.
பரிதிமண்டலம் - சூரியமண்டலம்.
பரிவருத்தம் - உலகமுடிவு, சதுர்யுக
முடிவு.
பரிவர்த்தனயோகம் - ஒருநல்லயோ
கம்.
ஒருவர் வீட்டி லொருவர்
மாறி நிற்பதால் வரும் யோகம்.
இதில் பனிரண்டு, ஆறு, எட்டு
இவ்வதிபர்களாலுண்டாகும் யோ
கம் முப்பது, மூன்றாமதிபனால்
வரும் யோகம் எட்டு, ஒன்று, இர
ண்டு, நாலு, ஐந்து, ஏழு, ஒன்
பது, பத்து இவ்வதிபர்களாலுண்
டாகும் யோகம் இருபத்தெட்டு.
ஆகமொத்தம் அறுபத்தாறு வகை
யாகும். விபரம் :- தைந்யயோகம்,
கலயோகம், மகாயோகம் இவை
களிற் காண்க.
பரிவற்சரம்- வருடம்.
பரிவிருத்திமுழுவட்டம், பிரபவ
பரிவிருத்தம் கிரகச்சுற்று, முடிவு,
வருடமுதல் அட்சய வருடம்வரை
யறுபது வருடங்கொண்ட ஒரு
சுற்று.விபரம்:- சாலிவாகன சகாப்
தத்திற் காண்க.
பரிவேசம் சந்திரசூரியரைச் சூழத்
பரிவேடம் தோன்றும் வட்டம்.
ஊர்க்கோள்.
பரிவேடக்குறி - மழைக்குறியினொ
ன்று. அது ஆடிமாதம் பூரணையின்
முதல் பத்து நாழிகையில் சந்திர
னைப் பரிவேடமிட்டால் ஐப்பசி
மாதத்தில் மழையுண்டென்றும்,<noinclude></noinclude>
otpcba2zb614g53oqjri3wrkqx4xca9
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/164
250
641467
1926871
2026-04-25T06:31:14Z
Magizh Sundram
16422
OCR
1926871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பருவம்.
சோதிடப் பேரகராதி.
ளருஎ
பல்லிசாஸ்திரம்.
இரண்டாம் பத்து நாழிகையிற் பருவதயோகம் - ஒரு நல்லயோகம்.
பரிவேடமிட்டால் கார்த்திகையில்
மழையுண்டென்றும், மூன்றாம்
பத்து நாழிகையில் பரிவேடமிட்
டால் மார்கழியில் மழையுண்
டென்றும், இரவில் பரிவேடமிட்
டிருந்தால், இந்த மூன்று மாதங்
களிலும் மழையுண்டென்றும்
சொல்லப்படும். சந்திரன், குரு,
சுக்கிரனிவர்களுடன் பரிவேட
மிட்டிருந்தால் நல்ல மழையுண்
டென்றும், செவ்வாய், சனி இவர்
களுடன் பரிவேடமிட்டிருந்தால்
மழையில்லை யென்றும், கிரகணகா
லத்தில் பரிவேடமுண்டானால்
இராசாக்களுக்கு ஆகாதென்றுஞ்
சொல்லப்படும்.
பரீகம் - நித்தியயோகத்தொன்று.
பரதாவி - நாற்பத்தாறாவதுவருடம்.
பருதி- பரிதி.
பருவகாலம் - ஏற்றகாலம் அது ஆறு
பருவகாலம். விபரம்:-கார், கூதிர்,
முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதிர்வேனில். இவை முறையே
ஆவணிமுதல் இரண்டிரண்டு
மாதங்களாகக் கொள்க.
பருவசந்தி - அமாவாசை, பூரணை
இவைகளின் கடையும் பிரதமை
முதலும் பொருந்தும் சந்தி.
பருவமழை காலமழை.
பருவமாதல்-இருதுவாதல்.
பருவம்- அமாவாசை, இருதுகாலம்,
பருவகாலம், பூரணை, பெருநாள்,
பொழுது, வயது.
அது இலக்கினாதிபன், ஏ ழு
குடையவன் ஆகியவர்கள் கேந்திர
திரிகோணங்களில் ஆட்சியுச்சம்
பெற்று நின்றாலும்,
(2) இலக்கினாதிபன் விரையாதி
பன் ஆகிய இவர்கள் நட்புவீட்
டில் கேந்திரம் பெற்று நட்புக்
கிரகங்களாற் பார்வைபெற்று நின்
றாலும்,
(3) தனாதிபன் இலாபாதிபன்
ஆகியவர்கள் உச்சம்பெற்று நின்
றலும்,
(4) ஏழில் சுடக்கிராமிருக்க எட்
டிற் பாவக்கிரகமிருக்க, இலாபாதி
பன்
பாபருடனே கூடி நின்றா
லும் இவ்யோகமாம்.
பலகாற்கிரகம் 2 சந்திரன், இருபாம்
பலகாற்சோன் புகளுமாம்.
பலகால்ராசி - கடகம், விருச்சிகம்.
பலசதம் - பல நூறு.
பலதீபிகை
-
பலபாகஞ்சொல்லும்
ஓர் சோதிடநூல். அது மந்திரேச
முனிவரால் வடமொழியிற் செய்
யப்பெற்று பின் தமிழில் வெளி
யிடப்பெற்றது.
பலபை- - சூரியன் மையவரியில் நிற்
கையில் கடிகாரமத்தியில் வீழும்
நிழல்.
பலமுகம் - பலதிசை.
பல்லிக்காதல் கெவுளிநூல். விப
பல்லிசாஸ்திரம் ) ரம்;-ஒவ்வொரு
தினத்துக்குமுரிய பலலியின்
அடையாளம்,<noinclude></noinclude>
eq7xecly6yqtm259ii4j7va7a2q9jow
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/36
250
641468
1926872
2026-04-25T06:33:36Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாகவதரின் பாடல்கள் பாபநாசம் சிவன் அவர்களின் கைவண்ணமெனில்; கலைவாணரின் பாடல்கள் உடுமலைக் கவியின் கருத்து வண்ணங்களாக அமைந்தன. கலையுலகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||27}}</noinclude>பாகவதரின் பாடல்கள் பாபநாசம் சிவன் அவர்களின் கைவண்ணமெனில்; கலைவாணரின் பாடல்கள் உடுமலைக் கவியின் கருத்து வண்ணங்களாக அமைந்தன.
கலையுலகில் ஈடு இணையற்ற புகழ் மாமணிகளாக அவர்கள் ஜொலித்துக்கொண்டிருந்தபோதுதான், அவர்களின் தங்கு தடையற்ற முன்னேற்றம் கண்டு சிலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டனர். அவர்களது கீர்த்தியைச் சிதைக்கத் திட்டமிட்டனர். தமிழன்னையின் அன்புப் புதல்வர்களான அவர்கள் மீது புழுதி வாரித்தூற்றும் பணி ஆரம்பமாயிற்று! பொறுத்துக்கொள்ள முடியுமா பொறாமைக்காரர்களால்! அடுத்த வீட்டில் அடுப்பு எரியப் பொறுக்காத பரந்த நோக்கம் படைத்தவர் களாயிற்றே அந்தப் பொறாமை மனிதர்கள்!
எங்கேயோ குமரி மாவட்டத்து ஒழுகினசேரியில் பிறந்த சாதாரண கிருஷ்ணன். இன்று சபை நடுவே சரியாசனம் போட்டு உட்காருகிறான். மக்கள் அவனைச் சுற்றித் தேன்குடத்தை மொய்க்கும் ஈக்கள் போல மொய்க்கிறார்கள். இவனை இப்படியே விட்டுக்கொண்டு போனால்—சே! சே! கூடாது! கூடாது! இவ்வாறு எழுந்தது முணு முணுப்பு! மூலைக்கு மூலை!
சாமான்யக் குடும்பம்! செய்ய வேண்டிய குலத்தொழிலோ வேறு! அதையெல்லாம் விட்டுவிட்டு, இவன் ‘பாகவதர்’ என்ற பட்டமுடன், எண்ணிறந்த விருதுகளுடன், ஏராள ஆதரவுடன்- மளமளவென்று கலையுலக சாம்ராஜ்யத்தில் தனிக்கொடி நாட்டிவிட்டானே-அந்தக் கொடி முறிந்திட, இவன் கொட்டம் அடங்கிட வழி கண்டே ஆகவேண்டுமென வஞ்சகத்தின் வாய் ஓலமிடத் தொடங்கியது.
அதன் விளைவாக, இருவரையும் இழித்தும் பழித்தும் தரக்குறைவாக எழுதுகிற ஏடுகளுக்கு அந்த நெஞ்சு எரிச்சல்காரர்கள் ஆக்கமும் <b>ஊக்கமும்</b> தந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
aykmt4i23nl9xl8f0cse6spax2n7kc2
1926975
1926872
2026-04-25T07:46:24Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||27}}</noinclude>பாகவதரின் பாடல்கள் பாபநாசம் சிவன் அவர்களின் கைவண்ணமெனில்; கலைவாணரின் பாடல்கள் உடுமலைக் கவியின் கருத்து வண்ணங்களாக அமைந்தன.
கலையுலகில் ஈடு இணையற்ற புகழ் மாமணிகளாக அவர்கள் ஜொலித்துக்கொண்டிருந்தபோதுதான், அவர்களின் தங்கு தடையற்ற முன்னேற்றம் கண்டு சிலர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டனர். அவர்களது கீர்த்தியைச் சிதைக்கத் திட்டமிட்டனர். தமிழன்னையின் அன்புப் புதல்வர்களான அவர்கள் மீது புழுதி வாரித்தூற்றும் பணி ஆரம்பமாயிற்று! பொறுத்துக்கொள்ள முடியுமா பொறாமைக்காரர்களால்! அடுத்த வீட்டில் அடுப்பு எரியப் பொறுக்காத பரந்த நோக்கம் படைத்தவர் களாயிற்றே அந்தப் பொறாமை மனிதர்கள்!
எங்கேயோ குமரி மாவட்டத்து ஒழுகினசேரியில் பிறந்த சாதாரண கிருஷ்ணன், இன்று சபை நடுவே சரியாசனம் போட்டு உட்காருகிறான். மக்கள் அவனைச் சுற்றித் தேன்குடத்தை மொய்க்கும் ஈக்கள் போல மொய்க்கிறார்கள். இவனை இப்படியே விட்டுக்கொண்டு போனால்—சே! சே! கூடாது! கூடாது! இவ்வாறு எழுந்தது முணு முணுப்பு! மூலைக்கு மூலை!
சாமான்யக் குடும்பம்! செய்ய வேண்டிய குலத்தொழிலோ வேறு! அதையெல்லாம் விட்டுவிட்டு, இவன் ‘பாகவதர்’ என்ற பட்டமுடன், எண்ணிறந்த விருதுகளுடன், ஏராள ஆதரவுடன்- மளமளவென்று கலையுலக சாம்ராஜ்யத்தில் தனிக்கொடி நாட்டிவிட்டானே-அந்தக் கொடி முறிந்திட, இவன் கொட்டம் அடங்கிட வழி கண்டே ஆகவேண்டுமென வஞ்சகத்தின் வாய் ஓலமிடத் தொடங்கியது.
அதன் விளைவாக, இருவரையும் இழித்தும் பழித்தும் தரக்குறைவாக எழுதுகிற ஏடுகளுக்கு அந்த நெஞ்சு எரிச்சல்காரர்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
9z7ufj0swq5zxs36yfn1tz5tav4kncn
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/165
250
641469
1926873
2026-04-25T06:34:15Z
Magizh Sundram
16422
OCR
1926873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ருஅ
சோதிடப் பேரகராதி.
பல்லிசாஸ்திரம்.
ஞாயிறில் - சிவந்த வர்ணமுள்ள
தாயும் முதுகில் வரிரேகையுள்ள
தாயுமுள்ள பல்லி ஆகாரங்கொள்
ளுதலிலிருந்து ஒலிக்கும்.
திங்களில் - முதுகில்பத்துரேகை
யுள்ள இரண்டு பல்லிகள் ஆண்
ஒன்றும் பெண்ஒன்றுமாக ஆகாரங்
கொள்ளத் திரிவதிலிருந்து ஒலிக்
கும்.
செவ்வாயில் - சாம்பல் வர்ண
மும் எட்டுரேகையுமுள்ள பெண்
பல்லியும், நீலவர்ணமுள்ள ஆண்
பல்லியும் ஆகாரங்கொள்ளத்
தெற்கு முகமாகவிருந்து ஒலிக்
கும்.
புதனில் - பொன்னிறமுள்ள
தும் முதுகில் ஆறுவரி ரேகை
யுள்ளதுமான ஆண்பல்லி வடக்கு
முகமாய்ப் பெண் பல்லியோடு
ஆகாரங்கொள்ளவிருக்கும்.
வியாழனில் - ஆண்பல்லி, நீல
வர்ணங்கொண்ட பெண்பல்லி
யோடு ஆகாரங்கொள்ள விருக்கும்
போது ஒலிக்கும்.
வெள்ளியில் - முதுகின் முற்பக்
கத்தில் மூன்றுவரியுடைய பல
நிறமுள்ள ஆண்பல்லி ஆகாரமதி
கமாய்ச் சாப்பிட்டுப் பின் நித்தி
ரைபோ யெழுந்திருக்கும்போது
ஒலிக்கும்.
சனியில் - ஆகாரமில்லாமல் கறு
ப்பு நிறமுள்ள ஆண்பல்லி பெண்
பல்லிசாஸ்திரம்.
பல்லியோடு துக்கமுற்றுக்கொண்
டிருக்கும்போது ஒலிக்கும்.
2-பல்லிசொல்லும் பலன்
விபரம்.
அத்
முதலில் பல்லி யொலிக்குஞ்
சப்தமானது எந்தத்திசை அல்லது
கோணத்தினின்றும் வந்ததென்று
திட்டமாய்க் கவனிக்கவேண்டும்.
அப்படிக் கவனித்தபின் திசை
அல்லது கோணத்தை ஞாபகத்
தில் வைத்துக்கொண்டு,
தினம் ஒரு வாரத்துக்குள்ள ஏழு
தினங்களில் எந்தக்கிழமை யென்
றறிந்து இதன்கீழ் கிழமைப் பாரா
வில் விவரித்திருக்கும் பல்லி சப்
தித்த திசையைக் குறிப்பிக்கும்
இலக்கத்தை திசைகோண விப
த்திற்கண்டுகொண்டு அவ்விலக்
கத்திற்கு நேரே அத்தினத்தி
லென்ன பலன் கூறப்பட்டிருக்
கிறதோ அதுவே நமக்குரியபல
னாகும். அப்பலனும் அங்குள்ளார்
பலருக்கும் பொதுவாயும் பல்லி
யின் சப்தத்தைக் கவனித்த ஒரு
வருக்கே சிறப்பாயு மிருக்கினு
மிருக்கும்.
3-திசைகோணமீவைகளின்
விபரம்.
(1) வடக்கு, (2) வடக்கிற்கும்
வடகிழக்கிற்கு மிடையிலுள்ள
கோணம், (3) வடகிழக்கு, (4)
வடகிழக்கிற்கும் கிழக்குக்குமிடை
யிலுள்ள கோணம், (5) கிழக்கு,<noinclude></noinclude>
9ud2jrv8ijafjppegxst47pzr85knxd
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/166
250
641470
1926874
2026-04-25T06:35:33Z
Magizh Sundram
16422
OCR
1926874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பல்லிசாஸ்திரம்.
(6) கிழக்கிற்குந் தென்கிழக்கிற்கு
மிடையிலுள்ள கோணம், (7)
தென்கிழக்கு, (8) தென்கிழக்கிற்
குந் தெற்குக்கு மிடையிலுள்ள
கோணம், (9) தெற்கு,(10)தெற்
குக்குந் தென்மேற்குக்கு மிடை
யிலுள்ள கோணம், (11) தென்
மேற்கு, (12) தென்மேற்கிற்கும்
மேற்கிற்கு மிடையிலுள்ள கோ
ணம், (13) மேற்கு, (14) மேற்
கிற்கும் வடமேற்கிற்கு மிடையி
லுள்ள கோணம், 15) வடமேற்
கு,(16) வடமேற்கிற்கும் வடக்
கிற்கு மிடையிலுள்ள கோணம்,
(17) ஆகாயம்,(18) பூமி.
(4) மேற்படி பல்லியின் நிறம்,
செயல் ஆகியவைகளையும் திசை
கள், கோணங்கள், ஆகாயம், பூமி
ஆகிய இவைகளையும் கீழ்க்கண்ட
ஒவ்வொரு கிழமையிலும் குறிப்
பிட்டுள்ள பதினெட்டு இலக்கங்
(நம்பர்)களையும் ஞாபகத்தில்வைத்
து குறிப்பிட்ட கிழமையில் பல்லி
ஒலிக்குத் திசையையும் அதற்குரிய
இலக்கத்தையும் கவனித்து அந்த
லக்கத்திற்கு கேரே அத்தினத்தி
லென்ன பலன் கூறப்பட்டிருக்
கிறதோ அதுவே நமக்குரிய பல
னாகக் கொள்ளவேண்டும்.
ஞாயிறு.
1(மேஷம்) தனலாபம், 2 பரி
மளசுகந்தம், 3 (சுக்கிரன்) ஒலை
வரும், 4 உறவினர் வருவார்கள்,
பல்லிசாஸ்திரம்.
ளருகூ
5 பயணமுண்டு, 6 கெடுவார்த்தை,
(கேது) சாவ, 8 கலகம்,9 (செவ்
வாய்) ராஜகலகம், 10 காரியமா
காது, 11 (புதன்) உற்றவர் வரவு,
12 சோபனவார்த்தை, 13 (சனி)
கலசம், 14 கெடுவார்த்தை, 15
(இந்திரன்) உண்ணும் வஸ்து
வரும், 16 பூமிலாபம், 17 (கரி
யன்) வெகுமனஸ்தாபம் 18 (தே
வேந்திரன்) காரியசித்தி.
திங்கள்.
1-(புதன் ) வஸ்திராபரணம்வரும்,
2- வெற்றியுண்டாம்,3-(சுக்கிரன்)
பயிர்விருத்தி, 4- தன்னாவார்த்தை,
5-(மேஷம்) தனலாபம், 6-பிர
பல வார்த்தை,உரவினர்வரவு,
7- அக்கினிகலகம், 8-சொல்லாத
வார்த்தை வரும், 9-(ராகு) பகை
யாளி வருவான், 10 பொல்லாத
வார்த்தை,காரியமாகாது, 11-(சூரி
யன்) சாவு, 12-கலகம்' 13-(சக்
திரன்) ராஜாவினால் சந்தோசம்,
14-உற்றாருறவு, 15-(கேது) சாவு.
16 - பகையாளிவரவு,17- (ராகு)
பொல்லாத வார்த்தை, 18-(சந்தி
ரன்) சகல சம்பத்து.
செவ்வாய்,
1-(ராகு) அக்கினிபயம், 2- கெடு
வார்த்தை, 3-காலுகாற் பிராணி
வரும், 4 - நல்ல பெண்வார்த்தை,
5-(இந்திரன்) புத்திரசம்பத்து,
6-நல்லவார்த்தை, 7-(சுக்கிரன்)
உற்றார்வரவு,S - சுதேசத்தார்வரவு,<noinclude></noinclude>
ew0nb66n8rlpb4dvdtm9eqk9aaprbp8
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/167
250
641471
1926875
2026-04-25T06:36:12Z
Magizh Sundram
16422
OCR
1926875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூய
சோதிடப் பேரகராதி.
பல்லிசாஸ்திரம்.
9- (கேது) சாவு, 10 - அதிகப்பயம்,
வியாதி, 11-(ராகு) பகைவனாற்
பயம், 12- இராஜகலகம், 13-(சூரி
யன்) காரியம் வெகு விஸ்தாரம்,
14-பொருள்போம், 15 - தூரதேச
வுற்றார்வரவு,16-நல்லவார்த்தை,
17- (சூரியன்) இதரபயம், 18-(மே
ஷம்) தனலாபம்.
புதன்.
.
1- (சுக்கிரன்) சுகம், 2- மற்ற
வருக்குப் புத்திசொல்லுங் காரி
யம், 3-(சூரியன்) நினைத்தகாரி
யஞ் சோர்வு, 4- மனைவிகாரியம்,
5-(இந்திரன்) சருவகாரியசெயம்,
6-தேங்காய் பழம் உண்ணும்
வஸ்து வரும், 7-(மேஷபதி ) சம்
பத்து, 8 - நல்லவார்த்தை, 9-(சந்
திரன்) சந்தோஷவார்த்தை, 10-
சாவுபயம், 11-(ராகு) உற்றார்
வரவு, பொல்லாதகாரியம், 12-கள்
ளர் பயம், 13- கேது) அதிகப்பய
முண்டு, 14-(அக்கினி) பொருள்
நாசம், 15-(அக்கினி) பொருள்
காசம், 16- அக்கினிபயம், 17-
சனி, பிறரால் சாவுவார்த்தைவரும்,
18 - உற்றார்
வரும்.
உண்ணும் வஸ்து
வியாழன்.
1-கலகக்காரியம், வியாதி. 2-
பொல்லாத வார்த்தை, 3-(சுக்கி
ரன) நல்லபெண்வரும், 4- பல
பல துன்பம், மனஸ்தாபம், 5-
(ராகு) மரணவார்த்தை, 6-கள்ளர்
பல்லிசாஸ்திரம்.
பயம், 7-(புதன்) உற்றார்வரவு,
8- சந்தோஷவார்த்தை, 9-(மேஷ
பதி) தனலாபம்,10 - (அக்கினி)
கன்னர்பயம்,11-(சந்திரன்) நாடிய
பொருள் கைகூடும், 12- சந்தோஷ
வார்த்தை,18-(அங்காரகன்)மரண
வார்த்தை, 14-அக்கினிபயம்,15-
(இந்திரன்) கலியாணவார்த்தை,
16- பெண்வரத்து, 17-(சனி)
கலகம், கன்னர்பயம்,18 - (கேது)
பொல்லாதகாரியம்.
வெள்ளி.
1-(சனி) துக்கம், 2-கூக்குரல்
கேட்கும், 3-(சூரியன்) பகையாளி
யால் அதிகபயம், 4 ராஜபயம்,
5-புதிய நல்லவார்த்தை, 6-பரி
மன சுகந்தம், 7- (கேது) உறவின்
முறையார் உற்றார்க்குப் பொல்
லாத வார்த்தை, 8-அக்கினிபயம்,
9- (புதன்) உற்றார் சிநேகிதர்வரவு,
10- வஸ்திராபரணம் வரவு, 11-
(மேஷம்) வெகுமதி, 12- தூரத்தி
லுள்ள பகைவரால் நன்மை, 13-
(சந்திரன்) சந்தோசமாய்ப் பணம்
வாவு,14 - தூரப்பயணம், 15-(இந்
திரன்) சோபனவார்த்தை, 16-
நல்ல செய்தியுள்ள ஒலை, 17- (சுக்
கிரன்) உடையால் மேன்மை,
18- (எமன்) சாவு, குற்றம்.
சனீ.
1- (கேது) கெடுவார்த்தை, 2-
சண்டை யினாலே குடிபோவான்,
3-(சனி) அதிகக் கேடுவார்த்தை,<noinclude></noinclude>
fw2scjw5d1dbtn1hmjtqdgccwpgz6zl
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/168
250
641472
1926876
2026-04-25T06:36:50Z
Magizh Sundram
16422
OCR
1926876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பல்லிசாஸ்திரம்.
கக
பல்லிவிழும் பலன்.
யாத்திரைகா ணாறோ டைந்து,
அகமகிழ்ச்சி கலியாண மாறோ
டாறு, பத்திவருங் காணிக்கை
பதின்மூன் றுக்கு, பரந்துவரு மிழ
வோலை பதினா லுக்கு, மெத்தவரு
முறவின்முறை யேழு மெட்டு,
மேன்மேலும் யோகமுண்டா மீ
ரெட் டிற்கே.
4 - ஐசுவரியம், 5-மிடி, ராசகலகம்,
பொல்லாதவார்த்தை, 6 .பித்தம்,
சாவு, 7 - (சந்திரன்) நல்லபோச
னம், சுகந்தம், 8 - தள்ளாதவார்த்
தை, 9 - (சுக்கிரன்) ராஜாவிடத்
திற் காரியம், 10-காய்பழம்வரவு,
11- (அங்காரகன் ) நிரூபம், ரொக்
கம் வரவு, 12- வெளிப்பயணம்,
13-(வியாழன்) புதுவஸ்திரம், 14. பல்லிலான்
உறவின்முறை வரவு, 15-(இந்தி பல்லிலி
ரன்) குருச்சந்திரலாபம், 16-பிரிய பல்லிவிழும் பலன்
மான வஸ்துவரும், 17- (இந்திரன்)
நினைத்தகாரியம் நலம், (18 - சுக்கி
ரன்) சுகவார்த்தை.
மற்றொருவிதம் பதினாறு திக்கி
லும் அருக்கன் எத்திக்கிலிருக்கின்
றானென்று தெரிந்து அதிலிரு
ந்து பதினாறுதிக்குக்கும் முறையே
பின்வரு மிரண்டு கவியாலறியவும்.
விபரம் - அருக்கன்மேற் பயநாச
மிரண்டிற் சாவு, அகன்றவர்பின்
மீண்டிடுவார் மூன்றே யாகில்,
உருக்கமுள்ள சாவதனைக் கேட்க
நாலு, ஒருசண்டை யுண்டைந்தா
முறவா மாறு, விரிதலையு மழுகு
ரலு மழையு நோயு, மேன்மேலுக்
துக்கமுண் டாகு மேழு, தரித்தி
டும்பூச் சந்தனமு மணமுங் கொ
ண்டு, தகுதியுள்ளோர் கூடிவர
மெட்டே.
லாகு
சித்தமிக மகிழ்ச்சியுண்டாம்
நாலோ டைந்து, தீதாக வேயுரை
க்கத் தெரியும் பத்து, அத்தமிசை
21
சூரியன்.
-
விபரம்:- சிரசு
நடுவில் பிதாமாதா பீடை, சிர
சின் வலதுபுறம் சேஷ்டசகோதா
பீடை, இடைப்பாரிசங் கனிஷ்ட
சகோதர பீடை, பிடரியில் மாதுல
பீடை, நெற்றியில் தனவிருத்தி,
நேத்திரம் மூக்கு சாது முகமிவை
களில் பீடை, காதுப்புறங்களில்
சகோதரபீடை, பசுப்பீடை, புஜங்
களில் ஸ்திரீபீடை, மார்பு சரீர
பீடை, இடது கையில் அபமிரு
த்தியுபயம், வலது கையில் அப
மிருத்தியுபயம், மாதாபீடை,
வலதுகைவிரல்களில் இராஜதெரி
சனம், இடதுகைவிரல்களில் ஞாதி
நாசம், வயிற்றினில் தானியார
சம், இடுப்பில் வஸ்திரநாசம், முது
கில் தனநாசம், பின் தட்டில் அதிக
தனலாபம், வலதுதொடையில்
புத்திரபீடை, இடது தொடை
யில்புத்திரபீடை, முழங்கால்களில்
பொருட்செலவு, பாதங்களில் வில
ங்கு, நகங்களில் பந்தனம், இடது<noinclude></noinclude>
clwl30q6f4mo6zoeq0wdwbupuixo2r3
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/37
250
641473
1926877
2026-04-25T06:37:06Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 28 கலைஞர் கலைவாணர், பாகவதர் இருவரின் பெருமையும் இந்த இழிதகைத் தாக்குதலால் குலைந்துவிடும் என்று எண்ணி யவர்கள் ஏமாற்றமடையும் வித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________
28
கலைஞர்
கலைவாணர், பாகவதர் இருவரின் பெருமையும் இந்த இழிதகைத் தாக்குதலால் குலைந்துவிடும் என்று எண்ணி யவர்கள் ஏமாற்றமடையும் விதத்தில் அவர்கள் மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கினர்.
வஞ்சகர்க்குக் கிடைத்த எதிர்பாராத வா ய்ப்பாக, ஒரு கொலைக் குற்றத்தில் பாகவதர் - கிருஷ்ணன், சிக்க வைக்கப்பட்டனர். அப்போது தமிழகமே அலறியது. ''அய்யோ! கிருஷ்ணா! உனக்கா இந்த கதி" என்று பெரி யார், தன் கைப்படக் 'குடியரசு' இதழில் கண்ணீரைக் கொட்டித் தலையங்கம் எழுதினார். பாகவதர், கலைவாணர் இருவரையும் விடுதலை செய்யவேண்டுமென்று தமிழக மக்களின் சார்பில் கோரிக்கைகளைப் பெற்று அறிஞர் அண்ணா, அன்றைய மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களை விடுதலை செய்யக் கோரும் கூட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. செஷன்ஸ் நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் பாகவதரையும், கலைவாணரையும் குற்றவாளிகள் எனக் கூறி, அதற்கு ஏராள சாட்சியங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. இரண்டாண்டு காலத்துக்கு மேலாக சிறையி லிருந்தவாறே அவர்கள் "பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்" நீதிமன்றத்துக்குத் அப்பீல் செய்து கொண்டனர். புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் வாதாடினார். இறுதியில், தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த தங்கங்கள் விடுதலையானார்கள்.
e
அவர்கள் இன்று நம்மிடையே இல்லையானாலும், அவர் களின் பெயர், புகழ், அவர்கள் வளர்த்த கலை, பெற்றி ருந்த பெருமை -இவை பற்றிய வரலாறு அப்படியே இருக் கிறது.
அவர்களது செல்வாக்கைச் சீர்குலைக்க, எதுபோன்ற சந்தர்ப்பம் உருவாயிற்று என்பதையும், இறுதியில் நீதி, சற்றுக் காலங் கடந்தாயினும் வென்றது என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
அ<noinclude></noinclude>
3dt5sj32mfo2p2zrkkhe0r6danewwky
1926895
1926877
2026-04-25T06:46:27Z
Ramya sugumar
15106
1926895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|28||கலைஞர்}}</noinclude>கலைவாணர், பாகவதர் இருவரின் பெருமையும் இந்த இழிதகைத் தாக்குதலால் குலைந்துவிடும் என்று எண்ணியவர்கள் ஏமாற்றமடையும் விதத்தில் அவர்கள் மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கினர்.
வஞ்சகர்க்குக் கிடைத்த எதிர்பாராத வாய்ப்பாக, ஒரு கொலைக் குற்றத்தில் பாகவதர் — கிருஷ்ணன், சிக்கவைக்கப்பட்டனர். அப்போது தமிழகமே அலறியது. “அய்யோ! கிருஷ்ணா! உனக்கா இந்த கதி” என்று பெரியார், தன் கைப்படக் ‘குடியரசு’ இதழில் கண்ணீரைக் கொட்டித் தலையங்கம் எழுதினார். பாகவதர், கலைவாணர் இருவரையும் விடுதலை செய்யவேண்டுமென்று தமிழக மக்களின் சார்பில் கோரிக்கைகளைப் பெற்று அறிஞர் அண்ணா, அன்றைய மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களை விடுதலை செய்யக் கோரும் கூட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. செஷன்ஸ் நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் பாகவதரையும், கலைவாணரையும் குற்றவாளிகள் எனக் கூறி, அதற்கு ஏராள சாட்சியங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. இரண்டாண்டு காலத்துக்கு மேலாக சிறையி லிருந்தவாறே அவர்கள் “பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்” நீதிமன்றத்துக்குத் அப்பீல் செய்து கொண்டனர். புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் வாதாடினார். இறுதியில், தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த தங்கங்கள் விடுதலையானார்கள்.
அவர்கள் இன்று நம்மிடையே இல்லையானாலும், அவர்களின் பெயர், புகழ், அவர்கள் வளர்த்த கலை, பெற்றிருந்த பெருமை —இவை பற்றிய வரலாறு அப்படியே இருக்கிறது.
அவர்களது செல்வாக்கைச் சீர்குலைக்க, எதுபோன்ற சந்தர்ப்பம் உருவாயிற்று என்பதையும், இறுதியில் நீதி, சற்றுக் காலங் கடந்தாயினும் வென்றது என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
{{nop}}<noinclude></noinclude>
dv9chg639hq7v3cbnuj84wwj5m68amp
1926976
1926895
2026-04-25T07:47:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|28||கலைஞர்}}</noinclude>கலைவாணர், பாகவதர் இருவரின் பெருமையும் இந்த இழிதகைத் தாக்குதலால் குலைந்துவிடும் என்று எண்ணியவர்கள் ஏமாற்றமடையும் விதத்தில் அவர்கள் மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கினர்.
வஞ்சகர்க்குக் கிடைத்த எதிர்பாராத வாய்ப்பாக, ஒரு கொலைக் குற்றத்தில் பாகவதர் — கிருஷ்ணன், சிக்கவைக்கப்பட்டனர். அப்போது தமிழகமே அலறியது. “அய்யோ! கிருஷ்ணா! உனக்கா இந்த கதி” என்று பெரியார், தன் கைப்படக் ‘குடியரசு’ இதழில் கண்ணீரைக் கொட்டித் தலையங்கம் எழுதினார். பாகவதர், கலைவாணர் இருவரையும் விடுதலை செய்யவேண்டுமென்று தமிழக மக்களின் சார்பில் கோரிக்கைகளைப் பெற்று அறிஞர் அண்ணா, அன்றைய மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களை விடுதலை செய்யக் கோரும் கூட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. செஷன்ஸ் நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும் பாகவதரையும், கலைவாணரையும் குற்றவாளிகள் எனக் கூறி, அதற்கு ஏராள சாட்சியங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. இரண்டாண்டு காலத்துக்கு மேலாக சிறையிலிருந்தவாறே அவர்கள் “பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்” நீதிமன்றத்துக்குத் அப்பீல் செய்து கொண்டனர். புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் வாதாடினார். இறுதியில், தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த தங்கங்கள் விடுதலையானார்கள்.
அவர்கள் இன்று நம்மிடையே இல்லையானாலும், அவர்களின் பெயர், புகழ், அவர்கள் வளர்த்த கலை, பெற்றிருந்த பெருமை —இவை பற்றிய வரலாறு அப்படியே இருக்கிறது.
அவர்களது செல்வாக்கைச் சீர்குலைக்க, எதுபோன்ற சந்தர்ப்பம் உருவாயிற்று என்பதையும், இறுதியில் நீதி, சற்றுக் காலங் கடந்தாயினும் வென்றது என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
{{nop}}<noinclude></noinclude>
3nfdjig8vxspb3teritqyksdnnarulo
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/169
250
641474
1926878
2026-04-25T06:37:10Z
Magizh Sundram
16422
OCR
1926878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகஉ
சோதிடப் பேரகராதி.
பவவருடப்பலன்.
கட்டைவிரலில் இராஜபயம்,
வலது கட்டை விரலில் பந்தனம்,
கால்விரல்களில் விவாதங்கள்,
பனிரண்டாமிடக் காரகப்பெயர்.
பெய்யுமழை தானதிகம் பிள்ளை
பெறு மாதர்தாம், ஐய மடிவ ரறி.
(இடைக்காடர்)
உள்ளங்கை உள்ளங்கால்களில் பவனம்-இடம், இராசி, பொழுது.
ஐசுவரிய விருத்தியாம். மேற்சொ/பவனாசம்-பாம்பு
ல்லிய அவயவங்களில் ஆரோகண பவிடியம்
மாக விழுந்தால் அசுப பலனும் பவுசியம் எதிர்காலம், வருங்காலம்.
சுபமாயிருக்கும். அவரோகணமாக
பவுடியம்
விழுந்தால் தோசபலன் தோச பவுரணமி)
பவுரணை
மாகவும், குணபலன் குணமாக பவ்வம்
வும் பலிக்கும். திங்கள், புதன், பழிங்கு
வியாழன், வெள்ளி இவ்வாரங்க பளிங்கி
பௌரணை.
சுக்கிரன்.
ளில் விழுந்தால் அசுப பலனுக்கு பறக்குமிராசி - மகரம், மீனம்.
அதற்குப்பரிகாரம் ஸ்நானஞ் செய்
மேற்பார்வையுள்ளது.
யவும். ஞாயிறு, செவ்வாய்,சனி பறப்பன - விருச்சிகராசி.
வாரங்களில் விழுந்தாற் கடவுளை
வணங்கவும் வேண்டும்.
பல்லுத்தானம் - இரண்டாமிடம்.
பவ- எட்டாவது வருடம்.
பவம் - சிங்கக்கரணம், பலன், பாவம்,
பிறப்பு.
பவரணை - பூரணை.
பவவருடப்பலன்- நாட்டுக்கு வேண்
டிய எல்லா நன்மையும், அதிக
மழையுமுண்டாம், சனங்கன் சந்
பறவை-அவிட்டநாள்.
பற்கன் - சூரியன்.
-
பற்குனி உத்திரநட்சத்திரம்,பங்
குனி.
பற்பறிகொடுத்தோன்
பற்பரீகம்
இத்தோன்} சூரியன்.
பனிகாலம் - மார்கழிமுதலியகான்கு
மாதங்களுமாம்.
பனிக்கதிர் - சந்திரன்.
பனிப்பதை - சூரியன்.
பனிமகன் - புதன்.
தோசமாக விருப்பர்,இருந்தபோ/பனிரண்டாமிடக் காரகப்பெயர்
திலும் வெப்பத்தால் அக்கினி
யால் மனிதர்களுக்குப் பீடையும்,
பிள்ளைப் பிறப்பும், தாய்மார்களு
க்கு மரண பீடைகளு முண்டாம்.
உதாரணம்:- பவவருடந் தோ
ன்றிற் பரிவார மோங்குந், தவமி
குதி யாகுந் தலத்தில் - நவமதிகம்,
சீவனம், வேள் வி, வியாச்சியக்
கவலை, சன்னியாசம், சுகக்கேடு,
ஊழ், தனநட்டம், தேசாந்திரம்,
சாவு, துர்ச்சேர்க்கை, செலவு,
மோட்சம், தியாகம், சயனம்,
அழிவு, பதவி, சிவயோகம், சமாதி,
இடதுகண் என்பதாம்.<noinclude></noinclude>
mecojjs2bpk0kz9dbif5552eexmp26y
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/170
250
641475
1926879
2026-04-25T06:37:28Z
Magizh Sundram
16422
OCR
1926879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பாசயோகம்.
சோதிடப் பேரகராதி.
பனை - அனுடாட்சத்திரம்.
பன்றிக்கரணம் - கவுலவகரணம்.
யன்னணம் - பன்னால்கு.
பன்னிருசூரியர் - துவாதசாதித்த
ரைக்காண்க.
பாதச்சனி.
ளகாங
ஆறாமிடத்திற் சுபக்கிரகமுமிருந்
தாலும்,
(2) ஐந்து ராசியில் இராகு
கேது
நீங்கிய சூரியனாதி எழுவர் நின்றா
லும் இவ்யோகமாம்.
பன்னிருலக்கினம் - துவாதசு பாச்சல் - எழுச்சி, பாய்தல்.
லக்கினத்தைப் மார்க்க.
பா
பாக்கம் - பிரிக்குந்தொகை.
பாகம் - ஓர் கணிதம், பங்கு, பாகை,
பாதி.
பரகனம் - ஒருவருடம்.
பாகன்- புதன்.
பாகாரம் - கணிதமுறையினொன்று.
அது பங்கிடல்.
பாகு - பங்கு, பரணி நட்சத்திரம்.
பாகுலம் - கார்த்திகைமாதம்.
பாகை - பகுதி, வட்டத்தின் முன்
நூற்றறுபதி லொருபங்கு.
பாகோடன் - சூரியன்.
பாக்கியத்தானம் - ஒன்பதாமிடம்.
பாக்கியம் அபிட்டம், 219, செல
வம், தனம், பேறு, ஒன்பதா
மிடம்.
பாக்கியலட்சுமி - அட்டலட்சுமியி
னொன்று.
பாசகன் - போதனைக் காண்க.
பாசகாதிபர்திசை
-
திசையிற் காண்க.
வேதகாதிபர்
பாசம் - ஒளவைப் பிரமாணம்.
பாசயோகம் - ஒருநல்லயோகம்.அது
மூன்றாதிபன்
ஒன்பதாமிடத்தி
லும், எட்டாமிடத்திற் சுக்கிரனும்?
பாச்சியம் பங்கு, பிரிக்கப்படும்.
தொகை.
பாடவள்
பாடவன்
பாடவை
மிதுனவிராசி.
பாடாவாரி நட்சத்திரம் -கெட்ட
நட்சத்திரம். அது திருவோணம்,
பரணி,சதயம்,கேட்டை, சோதி,
விசாகம், அனுசம். அன்றியும் அசு
பதி, மூலமுமாம்.
பாடு - இலக்கினத்திற் கேழாமிடம்.
பாட்டியமிடு
பாட்டியம் 5
பிரதமை.
பாணி - காலம்,பருவம், பொழுது.
பாண்டவாப்தம் - பாண்டவர்களரசு
பூண்ட வருடம்.அது கலியுகாரம்
பத்திற்குச் சிறிதுகாலமுந்தியதாம்.
பாண்டில் - இடபவிராசி.
பாண்டுரோககாரகன் இராகு.
பாதங்கி - சனி.
பாதசாரம் - நவக்கோள்கள் நட்சத்
திர பாதங்களில் அன்றன்று நிற்
கும் நிலை.
பாதச்சனி -- வாக்குத்தானத்துச்சனி.
அது இலக்கினத்திற்காவது, அல்
லது சந்திர லக்கினத்துக்காவது
இரண்டாமிடத்தில் நிற்கும் சனி<noinclude></noinclude>
4yd3rfvuxnbym2bxh8uwbvnknx8g8v8
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/171
250
641476
1926880
2026-04-25T06:37:47Z
Magizh Sundram
16422
OCR
1926880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>காச
பாநுவிதியை.
சோதிடப் பேரகராதி.
பார்த்திவவருடப்பலன்.
பாதம் - கால், கிரணம், நாவிலொரு பாநேமி - சூரியன்
பங்கு, வட்டத்தினான்கினொன்று, பாபக்கிரகம் - இராகு, கேது, சனி,
வைகறை.
பாதலம் - சூரியனிற்கு மிராசிக்கு
நாலாமிராசி.
பாதன் - சூரியன்.
பாதாரம்-கிரணம்.
பாதார்த்தம் - எட்டிலொருபங்கு
பாதாளகிரணம் -காணாக்கிரகணம்.
பாதாளயோகம் - ஒரு நல்லயோகம்.
சுக்கிரன் வியாழனோடுகூட விரை
செவ்வாய், சூரியன், தேய்மதியு
மாம்.
பாமன்-சூரியன்.
பாம்பு - ஆயிலியநான், இராகு, கே
துக்களின் பொதுப்பெயர்.
பாரதகண்டம்
தொன்று.
நவகண்டத்
பாரதவருடம் - பரதகண்டம்.
பாராசாரி- சுக்கிரன்.
யாதிபன் உச்சனாகி, பாக்கியாதி /பாராசாரியம் - பராசரியம் இது பரா
பனுடன் கூடி நிற்றலாம்.
பாதிமதி - அர்த்தசந்திரன்.
பாதிமம் - நான்கினொன்று.
பாதியிரா அர்த்தசாமம்,கள்
பாதியிராத்திரி 5 ளிரவு.
பாது - சூரியன், பங்கு
பாதேயம் - கன்னியாவிராசி.
பாத்திரபுதம் - இரேவதி, உத்திரட்
புரட்டாசிமாதம்.
டாதி,
பாத்திரம் -புரட்டாசி.
பாத்து - நான்கு, பங்கு, பாதி.
பாத்துப்புலு - நாற்பது.
பாத்துமகற்பம் - பிரமனது ஆயுட்கா
லத்தின் முற்பாதி, வராககற்பமெ
ன்பதுமாம்.
பாரான் - அத்தசாமம்,பாதிநாள்,மத்
தியானம்,
பாநுவிதியை - சித்திரைமாதம்ஞாயி
ற்றுக்கிழமையில் வரும் இரண்
டாந்திதி. இது சூரியனை நோக்கிச்
செய்யும் விரதநான்.
நூல்,
சரராற்செய்யப்பட்ட ஓர் சோதிட
பாரிசம் - திசை,பக்கம்.
பாரிசக்கிரணம் -பக்கக்கிரகணம்.
பாரு -சூரியன்.
பார் - உரோகணிநாள்.
பார்க்கரன் - சூரியன்.
பார்க்கவன் - சுக்கிரன்.
பார்க்கன் - சூரியன்.
பார்க்குணம் - பாற்குணம்.
பார்த்திப பத்தொன்பதாவது வரு
பார்த்திவ டம்,
பார்த்திவவருடப்பலன் - சிங்களதே
சத்தாருக்குக் கெடுதியும், நம்மு
டைய அரசருக்கு நன்மையும்,
அனியாயஞ் செய்யும் வேற்றரசர்
கட்கு நாசமும்,எங்கும் நல்லமழை
யும், வேளாண்மைப் பலிதமுமுண்
டாம்.
உதாரணம்:- தேச மிசைபார்த்
திபவருடஞ் சிங்கனத்தார், தேசங்<noinclude></noinclude>
exth4tufkw9s4tz5d0pvfh1knwd7d2f
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/172
250
641477
1926883
2026-04-25T06:39:21Z
Magizh Sundram
16422
OCR
1926883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பாலசந்திரன்.
சோதிடப் பேரகராதி.
கெடுமனந்த தேசத்து -ராசர், அனி
யாயஞ் செய்வர் அதமேறு மாரி,
இனிதாம் விளைவுமுள தே.
(இடைக்காடர்)
பார்த்தீப - பார்த்திபவருடம்.
பார்வணம் - பூரணை.
=
பார்வணன் - சந்திரன்.
பார்வை - கண்ணோட்டம், நோக்கு.
பாலக்கிரகதோசம்
குழந்தைகளு
க்கு வரும் பரலாரிட்ட தோசங்
கள். அது கந்தம்,விசாகம், மேடம்,
ஸ்வானம், பிதுர் என்னும் ஐந்து
ஆண் கிரகங்களும், ஈகுனி, பூதனா,
சீதபூதனா, அதிட்டிபூதனா, முக
மண்டலிகா, ரேவதி, சுட்கரே
வதி என்னும் ஏழு பெண் கிரகங்
களும் குழந்தைகள் அசுத்தமாதர்
கள் பாலைக்குடித்த காலத்தும்
மலசலத்தால் அசுத்தமாகக் கிட
க்குங் காலத்தும்,நித்திரா நித்தி
ரை காலத்தும், பருவகாலத்தும்,
வருடமாதஞ் சந்திகாலத்தும்,
பட்சி,பூனை, ஆந்தை, கரடி முத
லியவைகளைப்போல் மேற்படி கிர
கங்களின் தோசம் பற்றி நிற்கு
மாம்.
1
இவையன்றி நந்தனா, சுகந்
தனா, முகமண்டவிகா, பிடாலிகா,
சகுனி, சுட்கரேவதி, அந்நியவோ
டலிகா, மதபேதனா, ரேவதி, அர்ச்
சகா, அற்புதா முதலியனவாகவு
முண்டாம்.
பாலசந்திரன் - பிறைச்சந்திரன்.
பாலாரிட்டம்.
கரு
பாலசூரியன் - உதயாதித்தன்.
பாலவம் - கரணம் பதினொன்றினே
ன்று, அது புலிக்கரணம்.
பாலன் - எழுவயதுக்குட்பட்டவன்.
பாலாரிட்டம்--பாலகிரக தோ
சத்தாலும் நவக்கிரக தோசத்தா
லும் வரும் அரிட்ட தோசங்கள்.
விபரம்;-(1) இலக்கினத்தில் சனி
யும், நாலாமிடத்தில் செவ்வாயும்,
ஏழாமிடத்தில் சூரியனு மிருந்தா
லும்,
(2) இலக்கினத்தில் இராகுகேதுக்
களும், நாவில் செவ்வாயும், ஏழில்
சூரியனும் இருந்தாலும்,
(3) இலக்கினத்தில் அல்லது
ஏழு, எட்டு, பனிரண்டு ஆகிய
இவ்விடங்களில் அமரபக்கத்துச்
சந்திரன் பாவிகளுடன் கூடி நின்
றாலும்,
(4) இலக்கினத்துக்கு ஏழாமிடத்
தில் செவ்வாயும், எட்டாமிடத்தில்
சூரியனும் இருந்தாலும்,
(5) இலக்கினத்தில் சூரியன் சனி
கூடியிருக்க செவ்வாய் பார்த்தா
லும்,
(6) இலக்கினத்துக்கு ஏழாமிடத்
தில் செவ்வாய், சுக்கிரன், சனி
இருந்தாலும்,
(7) இலக்கினத்துக்கு ஏழு, எட்
டாமிடங்களில் செவ்வாய் சனி
இருந்தாலும்,
(8) இலக்கினத்துக்கு நாலாமிடத்
தில் செவ்வாயும், எட்டாமிடத்<noinclude></noinclude>
prd76dqvchh2iy1n3ni516mceehf2vc
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/173
250
641478
1926884
2026-04-25T06:39:56Z
Magizh Sundram
16422
OCR
1926884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>கக
பாலாரிட்டம்.
சோதிடப் பேரகராதி.
தில் ராகுவும், பனிரண்டாமிடத்
தில் சனியும் இருந்தாலும்,
(9) இலக்கினத்துக்கு எட்டு, ஒன்
பது, பனிரண்டாமிடங்களில்,
சூரியன் தேய்பிறைச் சந்திரன்,
செவ்வாய், சனி ஆகிய இவர்கள்
இருந்தாலும்,
(10) இலக்கினத்துக்கு நஈ லு,
எட்டு ஆகிய இடங்களில் பாபக்
கிரகங்களிருந்தாலும்,
(11) இலக்கினத்துக்கு ஐந்து,
எட்டு, ஒன்பது, பனிரண்டு ஆகிய
இவ்விடங்களில் சூரியன் அமர
பட்சத்துச் சந்திரன் இவர்கள்கூடி
தனித்தனியாகவாவது
யாவது
இருந்தாலும்,
(12) இலக்கினத்துக்கு ஆறு, ஏழு,
எட்டு, பனிரண்டு ஆகிய இவ்வி
பாஸ்கராசாரி.
(17) இலக்கினத்துக்கு ஆறாமிடத்
தில் சூரியனிருக்க, ஏழாமிடத்
தில் செவ்வாய் சனி ஆகிய இவர்
கள் இருக்க பிதாவுக்குஞ் சிசுவுக்
கும் அரிஷ்டமாம்.
(18) சந்திரன் இலக்கினம் இவை
களில் பாவர்களிருந்தாலும், சிசு
வுக்கு அரிட்டமாம்.
முற்கூறிய அரிட்டதோசங்கள்
சுபக்கிரகம் இருக்க அல்லது பார்
க்க நீங்கும்.
குறிப்பு:- ஒன்றுமுதல் பனி
ரண்டு வயதுவர பாலாரிஷ்
டம். பதின்மூன்று முதல் இரு
பது வயதுவரை யௌவன அரிட்
டம். இருபத்தொன்று முதல் முப்
பத்திரண்டு வயதுவரை கௌமார
அரிட்டமாகக் கொள்க.
டங்களில் தேய்பிறைச் சந்திரன் பாலை-புனர்பூசம், மிருகசீரிடம்.
பாவர்களுடன் கூடியிருந்தாலும், பால் - திக்கு, பலன்,பாதி.
கையிற் றோன்றுஞ் சோதிவரி.
பாவம்- அதிட்ட ஈனம், கெட்டது,
பாபம்.
(13) இலக்கினத்துக்கு ஐந்தில், பால்வீதிமண்டலம் -வாணாட்சரே
பத்தில் சனி இருந்தாலுஞ் சிசுவு
க்கு அரிஷ்டமாம்.
(14) இலக்கினத்துக்கு ஆறாமிடத்
தில் சந்திரனும், அதற்கு ஏழா
மிடத்தில் செவ்வாய், சனி ஆகிய
வர்கள் இருந்தாலும்,
(15) இலக்கினத்தில் சந்திரனும்,
நாலு, ஏழு, எட்டு ஆகிய இவ்வி
டங்களில் பாவிகள் இருந்தாலும்,
பாவி-தீயோன், பாவக்கிரகம்,பா
வத்தானாதிபதி.
பாழ் - ஆகாயம், எட்டாமிடம், நட்
டம், மரணம்.
பாறல்- இடபவிராசி.
பாற்கரன்
(16) இலக்கினத்துக்கு இருபுற பாஸ்கரன்
சூரியன்.
மும் பாவிகளிருந்தாலும் தாய்க் / பாற்கராசாரி 2 இவர் ஒரு பிரபல
கும் சிசுவுக்கும் அரிஷ்டமாம். பாஸ்கராசாளி சோதிட நூலார்.<noinclude></noinclude>
hyiw0i3utngp3mn3hvq1s7td9hwqo28
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/174
250
641479
1926885
2026-04-25T06:40:32Z
Magizh Sundram
16422
OCR
1926885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude><noinclude></noinclude>
mh2xofwrp8gmcso636vph7uc99iugt0
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/175
250
641480
1926886
2026-04-25T06:41:00Z
Magizh Sundram
16422
OCR
1926886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகஅ
சோதிடப் பேரகராதி.
பிரசோற்பத்திவருடப்பலன்.
இராகு, கேது, சூரியன், செவ்
வாய்.
பித்தரோககாரன்-செவ்வாய்.
பிப்பலாதம் - சூரியகிரணம்.
பிம்பகம்
பிம்பம் சந்திர சூரிய மண்டலம்.
பிம்பிகை
பிரகநேமி - சந்திரன்.
பிரகஸ்பதி
பிரஹஸ்பதி
பிரகற்பதி
வியாழன்.
பிரகாசாத்துமா - சூரியன்.
பிரகிருதி - பஞ்சபூதம்.
பிரகிருத்தானம் - இலக்கினம்.
பிரக்கிரமம் - கிரணம்.
பிரசரம் இடம்,கதி,சமயம்.
பிரசாபதி - சூரியன்.
பிரசினதூதி - நொடி.
பிரசுரன் - சந்திரன்.
பிரசோற்பத்தி - ஐந்தாவதுவருடம்.
பிரசோற்பத்திவருடப்பலன்- சென்
றவருடங்களில் மனிதர்களுக்குண்
டாகிய வறுமையும்,துன்பமும்,
மாறும். எல்லா நாடுகளிலும் நல்ல
மழையும்,வேளாண்மை மிகுதியும்,
மனிதர்கள் சுகவாழ்வுடனு மிருப்
பர். ஆடுமாடு முதலிய நாற்காலி
களும், பறவைகளும் விருத்தியடை
யும்.
உதாரணம்:- துய்யபிர சோற்
பதியிற் றோன்றுமே நற்காலம்,
பெய்யு மழையதிகம் பேருளவாம் -
பிரத்தியோதம்.
உயிர்தழைத்து வாழ்ந்திருப்பர்,
கன்னமிலை யென்றேநீ காண்.
(இடைக்காடர்)
பிரட்டானம் - நிதிவிசேடம்.
பிரதமகாலம் - உதயகாலம், பூருவ
காலம், வீடியற்காலம்.
பிரதமை - ஒன்று, முதல் திதி,
பி : திசம் - கோணதிசை.
பிரநிதேவன் - சூரியன், நாள்.
பிரதிநிசம் - இரவோடிரவு.
பிரதீசி
பிரதீசீனம்
மேற்கு.
பிரதோசகாலம் - திரயோதசித் திதி
யிற் பொழுது அத்தமித்தற்கு
முன்,மூன்றேமுக்கால் நாழிகை
தொடங்கி அத்தமித்து, மூன்றே
முக்கால் நாழிகை வரையுள்ள
நேரம்.அதாவது பொழுதத்தமிப்
பதற்கு முன்னும், பின்னும் மூன்
றேமுக்கால் நாழிகை. இரவின்
முதற்சாமம், இது பகல் இருபத்
தாறேகால் நாழிகைக்கு மேல்
இரவு முப்பத்திரண்டேகால் நாழி
கைவரை திரயோதசி இருக்க
வேண்டுமென்பது. இதில் சதுர்த்
தசி வியாபித்தால் அமரபக்கத்தில்
திரயோதசி தினத்திலும், பூருவ
பக்கத்தில் துவாதசி தினத்திலும்
பிரகாசமாம்.
பிரத்தியக்கு-மேற்கு
பிரத்தியுசன் அட்டவசுக்களிலொ
பிரத்தியூசன் ருவன்.
வையகத்தில், உள்ள வகைச்சாதி பிரத்தியோதம் - திரணம்.<noinclude></noinclude>
04qbcs7jheip6fnx542ew307r1d5p3a
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/176
250
641481
1926887
2026-04-25T06:41:30Z
Magizh Sundram
16422
OCR
1926887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பிரமயோகம்.
சோதிடப் பேரகராதி.
ளகாகூ
பிரமாயுதம்.
பிரத்தியோதனன்-சூரியன்.
குரு சுக்கிரன் ஆகிய இவர்கள்
பிரபலானிஷ்டயோகம் - அமிர்தாதி
இடமாறி நின்றாலுமாம்.
யோகத்திற் காண்க.
பிரபவ - முதல்வருடம்.
பிரமனாள்-உரோகணி, கற்பகாலம்.
பிரமாணம்-அளவுள்ளவை, எல்லை,
பிரபவவருடப்பலன் - நல்ல மழை போழ்து.
யும் அதனால் விருக்ஷப்பொருள், பிரமாதி - பதின்மூன்றாவது வருடம்.
தானியப்பொருள் ஆகியவைகள் பிரமாதிவருடப்பலன் - பஞ்சமும்,
விருத்தியும், பருத்தி உப்பு ஆம
ணக்கு முதலிய பொருள்களுக்கு
நட்டமும், மனிதர்களுக்குத் துன்ப
மும், மரணமும் உண்டாம்.
உதாரணம்:-ஆதி பிரபவத்தில்
அம்புவியின் மானிடர்க்குச், சோ
தனையாய்ச் சாவுதுன்பந் தோன்
றுமே - தீதில, தருப்பொலியு மஃக
மிகுந் தான்மாரி யோங்கும்,பரு
த்தியுப்பு மாமணக்கும் பாழ்.
(இடைக்காடர்)
பிரபாகரன் - சந்திரன், சூரியன்.
அட்டவசுக்களிலொரு
பிரபாசன்
வன்.
-
பிரபாதசமயம் - விடியற்காலம்.
பிரபாதம் - வைகறை,
பிரபுத்தானம் - ஐந்தாமிடம்.
பிரமதண்டம் - சூரியன் நின்ற கட்
சத்திரத்துக்குப் பதினைந்தாம் கட்
சத்திரம்.
அரசரால் தீமையும், பசுக்களுக்
கும் மனிதர்களுக்குங் கஷ்டமு
முண்டாம்.
உதாரணம்:- வெய்யபிர மாதி
யினில் வேந்தர் கொடுமையுறும்,
ஐயகேன் பஞ்ச மடுக்குமே-
செய்ய, பசுக்கள் மெலியும் பாளிற்
குடிகள், சிசுக்க ளூடனலைவர்
தேர். (இடைக்காடர்)
நாற்பத்தேழாவது வரு
பிரமாதீச
பிரமாதீட்சடம்.
பிரமாதீட்ச வருடப்பலன் - மனித
ருக்கு வறுமையும்,பஞ்சமும், அம்
மை முதலிய தொத்து நோய்க
ளும், ஒருவர்க்கொருவர் சண்டை
யும், அதனால் மாணமும், மொத்
தத்தில் உலகில் துக்கபலமுமே
யுண்டாம்.
உதாரணம்:- நற்பிரமா தீட்சத்
தில் நாட்டிலே சாவதிகம், சொற்
பெரிய மாரிமிகத் தோன்றுமே-
விற்பிடித்து, மல்லிட்டு மாண்டிரு
வார் வாளினா லேயறுவர், கொல்
லும் வறுமையெனக் கூறு.
பிரமம் - சந்திரன்,சூரியன், நித்திய
யோகத்தொன்று.
பிரமயோகம் -- ஒருகல்லயோகம்.அது
கேந்திர திரிகோணங்களில் குரு
நிற்க, இலாபம் கேந்திர மிவைக
ளில் சுக்கிரனிருக்க, அல்லது பிரமாயுதம் - பத்துலட்சம்.
22
(இடைக்காடர்)<noinclude></noinclude>
tudjeihehl14vm375191h3470rfk38k
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/177
250
641482
1926888
2026-04-25T06:41:55Z
Magizh Sundram
16422
OCR
1926888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஎய
சோதிடப் பேரகராதி.
பிராணிப்பொருந்தம்.
-
பிரமுகம் - நிகழ்காலம்.
பிரமோறுத - நான்காவது வருடம்
யிரமோதூதவருடபலன் - சொற்ப
மழையும், கரும்புப்பயிர் விர்த்தி
யும், மனிதர்களுக்குப் பயமும்,
பூமிவிளைவுக் குறைவும், அரசர்க
ளுக்கு நன்மையுமுண்டாம்.
உதாரணம்: வரும்பிரமோ
தூத வருடமழை கொஞ்சம், கரு
ம்பு மிகப்பலிக்குங் கண்டாய் -
திரும்பப், பயமுண்டு பூமி பலி
யாது வேந்தர், நயமுன்னா ராயிரு
ப்பர் நன்கு. (இடைக்காடர்)
பிரயுதம் - பத்துலட்சம்.
பிரளயகாலம் -- அழிவுகாலம், வாகினி
மூன்றுபங்குகொண்ட அளவு.
பிரளயமுடிவு - யுகாந்தம்.
பிராகம் - கிழக்கு.
பிராகிண்ணம் - முற்பொழுது.
பிராசி-கிழக்கு.
பிராசீனதிலம் - சந்திரன்.
பிராசீனம்
பிராசு
கிழக்கு.
பிராண திசை - சூரியபுடத்திற்கண்ட
நட்சத்திரதிசை.
பிராணந்தியம் - நவக்கிரகம்.
பிராணிப்பொருத்தம் - மணப்பொ
ருத்தத்தொன்று, அது பெண்ணு
க்கும் ஆணுக்கும் ஒரு பிராணி
பிலவ.
பகையில்லாதிருந்தாலும் நன்றாம்.
பிராதக்காலம் - விடியல்.
பிராதாத்தானம் - மூத்த சகோதரத்
தானம். அது பதினோராமிடம்.
பிராத்தியக்கு - மேற்கு.
பிராபோதம் - விடியல்.
பிராமி - உரோகணி.
பிராயம்-அளவு, மரணம், வயது.
பிரார்த்தசீயம் - துவாபரயுகம்.
பிரிதிவுக்கிசகம் - செவ்வாய்.
பிருகச்சங்கிதை -வராகமிகிரர் செய்
த ஒரு நூல். இதிலே சூரிய சக்
திர கிரகண விபரபலாபலன்க
ளும் தூமகேதுக்கள் வரலாறும்
சகுனம் முதலியனவுங் கூறப்பெற்
றிருக்கிறது.
-
பிருகத்சாதகம் - வராகமிசிரரால்
வடமொழியிற் செய்த சோதிட
நூல். இதுவே தமிழில் மங்களேஸ்
பரியமாம்.
பிருகு
பிருகுசுதன்
பிருட்டி- கிரணம்.
சுக்கிரன்.
பிருட்டோதயக்கோள்
சனி, செவ்வாய்.
-
-
சூரியன்
பிருட்டோதயராசி - மேடம்,
பம், கடகம், தனுசு, மகரம்.
பிரேதபக்கம் - அமரபக்கம்.
நட்சத்திரமானால் உத்தமம். இதில்/பிரேதம்- தெற்கு
ஆண் ஆணாகவும் பெண் பெண் பிரேதலோகம் - பிதிர்திசை.
ணாகவுமிருந்தால் அதிக உத்தமம்/பிர்மலக்கினம் - எட்டாமிடம்.
இராபிராணி நட்சத்திரமானாலும் பிலவ - முப்பத்தைந்தாவதுவருடம்.<noinclude></noinclude>
2wpk1akceib3y901iu7z0ecul4sb1zz
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/178
250
641483
1926889
2026-04-25T06:42:18Z
Magizh Sundram
16422
OCR
1926889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பிறத்தானம்.
சோதிடப் பேரகராதி.
பின்னவியவகலிதம்.
ளஎச
பிலவவருடப்பலன் சொற்பமான/பிறவு - உற்பத்தி, சகோதரம், பிற
மழையும் இராசர்களுக்குப் பீடை ப்பு.
யும் நாற்கால் சீவராசிகளுக்கு நட் பிறை - சந்திரப்பிரபை. பாலசந்தி
டமும், வேளாண்மை நட்டத் ரன்.
தாற் பஞ்சமும்,மொத்தத்தில் உல பிறைக்கொழுத்து இளம்பிறை
கிற்கே கேடுமுண்டாம்.
உதாரணம்:- பிலவத்தில்
மாரிகொஞ்சம் பீடை மிகும்ராசர்,
சலமிகுதி துன்பந் தருகும் -ஈல
மில்லை, நாலுகாற் சீவனெல்லாம்
காசமாம் வேளாண்மை, பாலு
மின்றிச் செய்புவனம் பாழ்.
(இடைக்காடர்)
பிலவங்க - நாற்பத்தோராவது வரு
டம்.
பிலவங்கவருடபலன் - ரல்ல மழை
யும், வேளாண்மை விர்த்தியும்,
தானிய மலிவுமுண்டாம். ஆயி
னும் மனித ஒழுக்கத்துக்குப் பொ
ருத்தமில்லாத கற்பனா பேதங்க
ளால், சனங்களுக்குள் கலகமும்
மரணமுமுண்டாம்.
உதாரணம்:- பிலவங்க வாண்
டதனிற் பேதங்கண் மிஞ்சிப், பல
வந்த மாய்மடிவர் பாரில் - நலமிக்க
வேளாண்மை மெத்த விளையுமே
யஃகமோ, கேனா யதிகமதிகம்.
(இடைக்காடர்)
பிழைத்தானம் - எட்டாமிடம்.
பிறகரம் - சாமம்.
பிறத்தானம் புறத்தானம். அது
மறைவிடத்தானம். ஆறு, எட்டு,
-
பனிரண்டாமிடங்களாம்.
பிற்காலம்
காலம்.
பிற்கொழுங்கோல் - உத்திரட்டாதி
எதிர்காலம், வருங்
நட்சத்திரம்.
பிற்சாமம் - நான்காஞ்சாமம்.
பிற்பக்கம் அமரபக்கம், கிருட்டின
பிற்பட்சம் பக்கம், தேய்பிறை,
பிற்றை - பின்னைநான்,
பின்சரிவு - பின்நேரம்.
பின்பனி
-
ஆறு பருவத்தொன்று.
அது மாசி, பங்குனி ஆகிய மாதல்
களின் பருவம்,
பின்மாரிகாலம் -மார்கழி,
தை மா
தங்களாகிய மழைக்காலம்.
பின்மாலிகாயோகம் - ஒரு நல்ல
யோகம். அது ஐந்தாமிட முதல்
பதினோராமிடம் வரை இராகு
கேதுக்கள் நீங்கிய ஏழு கிரகங்
கள் நிற்பது.
பின்னகனம்
கீழ்வாயிலக்கத்தை
சமமாகிய அவ்விலக்கத்தாற்றாக்கி
வந்த இலக்கத்தை மறுமுறையும்
பெருக்கல்.
-
பின்னகுணனம் கீழ்வாயிலக்கத்
தைப் பெருக்கல்.
பின்னம் - சிதைவு, பங்கு,
பின்ன வியவகலிதம் - கீழ்வாய்
கழிவு கணக்கு.<noinclude></noinclude>
cwe9x3onsuqfo3g50jml9s3sw4zfu76
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/179
250
641484
1926890
2026-04-25T06:42:47Z
Magizh Sundram
16422
OCR
1926890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஎஉ
புசாகோடி.
சோதிடப் பேரகராதி.
பின்னிலவு - அமரபக்கம்.
பின்னேரம் - சாயங்காலம்.
பின்னைநாள் - பின்னாள், மறுநாள்.
பின்னோக்கு - பிற்பார்வை.
பீ
பீடைகழித்தல் - துன்பம் விலக்கல்.
அது மார்கழிமாதத்தில் செய்யு
மோர்சடங்கு.
பீடைத்தானம் - ஆறாமிடம்.
பீடைமாதம் - மார்கழிமாதம்.
பீதகன் - வியாழன்.
பீதம் - நேரம்.
பீதன் - சூரியன்.
பீதாபன் - இந்திரன், குபேரன்,
பீமகாதன் - சிங்கம்.
பிறந்த எழுபத்
பீமரதி - ஒருவன்
தேழாமாண்டின் ஏழாமாதத்தேழா
மிரவு.
பீயு - காலம், சூரியன்.
பு
புகர் - சுக்கிரன்.
புகுடி- பருவம்.
புகை -
துபம். இது தென்கீழ்த்
திசைப் பாலன்குறி, பனிப்பட
லம், யோசனை தூரம்.
புக்கை - உதயம்.
புங்கவன்-குரு.
புங்கசவனம் -- குழந்தை பிறந்த ஐந்
தாமாதத்திற் செய்யுமோர் சட
ங்கு.
புசாகோடி - ஏறுமிறங்குமிராசி.
புண்ணியஸ்தானம்.
புசாபலம் -- கணிதமுறையுனொன்று.
அது புசாகோடி களைந்தபின் மிஞ்
சின தொகை.
புசியம் - தைமாதம்.
புசுண்டர்நாடி-ஓர் சோதிடநூல்.
புசை - ஒன்றாம் இரண்டாம் மூன்றா
மேழா மெட்டாம் ஒன்பதாமிராசி
-
கருப்பங் கொண்ட
புஞ்சவனம்
மூன்றாத்திங்களிற் செய்யுமோர்
சடங்கு.
புட்கலயோகம் அமாவாசையா
புஷ்கலயோகம்னது திங்கள்,செவ்
வாய், வியாழம் இக்கிழமைகளிற்
கூடிவருவது.
புட்களயோகம்ஒரு நல்லயோகம்.
புஷ்களயோகம் அது சந்திரனிரு
ந்த வீட்டிற்குடையவனும் இலக்
கினத்திற்குடையவனும் ஒன்றாய்க்
கூடி கேந்திரம் அல்லது நட்பு
வீட்டிலிருப்பதாம்.
புட்பமாதம்}
தளிர்காலம்.
புட்பயோகம் ஒரு நல்ல யோகம்.
புஷ்பயோகம் ஒன்பதாமதிபன்
ஆட்சி பெற்று கருமாதிபன் குடும்
பத்தான மடைந்து இலக்கினாதி
பன் பன்னொன்றில் உச்சம்பெற்று
நிற்பதாம்.
புணர்தம் - புநர்பூசம்.
புணர்பூசம் - அதிதிநான், புநர்பூசம்.
புண்ணியத்தானம் இலக்கினத்
புண்ணியஸ்தானம் திற் கொன்ப
தாமிடம்.<noinclude></noinclude>
10i807qk97wrhx6d6rzuucugwfgjf3f
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/180
250
641485
1926891
2026-04-25T06:43:23Z
Magizh Sundram
16422
OCR
1926891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
புதன்நிறம்.
புண்ணியத்திசை - வடதிசை
புதன்பாசை
ள எஙு
புந்தி.
சோதிடம்.
புதன்பார்வை --சாந்தபார்வை, ஏழாம்
பார்வை.
புண்ணியராசி - கட்சத்திரலோகம், புதன்பாடை 5
ஐந்தாம், ஒன்பதாமிடங்களுமாம்.
புண்ணியோத்யம் - அதிட்டம்.
புதகாரகம் - வித்தை, தாய்மாமன்,
பந்துத்துவம், கேள்வி, செட்டு,
வியாபார முதலியனவாம்.
புததிசை - புதனில் நடக்குங்காலம்.
இதன் வருடம் பதினேமு.
புதநட்சத்திரம் - அத்தம், உத்திரம்,
சித்திரை, திருவாதிரை, புனர்
பூசம் என்பனவாம்.
புதபுத்தி - ஒவ்வொரு திசையினுள்
நடக்கும் புதனுடைய காலம்.
புதபுத்திரன் - அர்த்த பிரகரன்.
புதவாரம் - புதன்கிழமை.
புதன் - அருணன், அறிஞன், அனு
வழி, அனுரு, கணக்கன், சவுமன்,
சாமன், சிந்தை, கூரியன், சௌ
மியன், தூதுவன், தேர்ப்பாகன்,
நற்கோள், நிபுணன், பச்சை,பண்
புதன்பிணி - வாதரோகம்.
புதன்புட்பம்- வெண்காந்தன்.
புதன்ரத்தினம் - பச்சை.
புதன்ராசி-கன்னி, மிதுனம்.
புதன் லிங்கம் - அலி.
புதன்லோகம் - பித்தளை.
புதன்வடிவம் - நெடுமை.
புதன்வாகனம் - குதிரை.
புதன்வீடு - கன்னி, மிதுனம்.
புதானன் - குரு.
புதை - மறைவிடம்,
புதையற்றானம் - பதினோராமிடம்.
புத்தரதன் - சந்திரன்.
புத்திரகாரகன் - வியாழன்.
புத்திரத்தானம் இலக்கினத்திற்
கைத்தாமிடம், அதற்கைந்தாமிட
மரகிய ஒன்பதாமிடமுமாம்.
-
புத்திரத்தானாதிபன்
டிதன், பனிமகன், பாகன், புந்தி, புத்திரத்தானாதிபதி
புலவன், மதிமகன், மாலவன்,
மால்,மேதை, புதன்கிழமைக்கும்
பெயர்.
புதன்குணம் - தாமதகுணம்.
புதன் சமித்து - நாயுருவி.
புதன்சுவை - உப்பு.
புதன்தானியம் - பச்சைப்பயறு.
புதன்திக்கு (தென்மேற்கு, வடகீழ்த்
புதன் திசை திசையென்பாரு
முளர்.
புதன்நிறம் - பச்சை,
வன்.
புத்திரநாதன்
குடையவன்.
ஐந்தாமிடத்
துக்குடைய
-
ஐந்தாமிடத்துக்
புத்திரயோகம் - ஒரு சுபயோகம்.
அது இலக்கினம், கேந்திரம், மூ
லத்திரிகோணம், உச்சம் ஆகிய
இவ்விடங்களில் புதன் நிற்பதாம்.
புனர்தம்
புனர்வசு 5
புந்தி - புதன்.
புனர்பூசம்.<noinclude></noinclude>
jr3l3sq1mkoq6lely0elkobwxrspkd7
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/181
250
641486
1926892
2026-04-25T06:43:49Z
Magizh Sundram
16422
OCR
1926892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ரஎச
புனர்பூசம்.
புந்திவாரம் - புதன்கிழமை.
பூகோளம்.
புனர்வசு - புனர்பூசம்.
புயங்கம் - பாம்பு.
புனீதம் - நட்சத்திரம், புனர்பூசம்.
டியல் - சுக்கீசன், பெருங்காற்று, புன்செக்கர்-
மழைக்கோள், மேகம்.
புரட்சி - கிரகப்புரள்வு, கீழ்மே
-
லாய் வருதல்,திரும்புதல்.
மாலை நேரம்.
பூ
பாத்திர
பூ-பூமி.
பூகம் - நேரம்.
புரட்டாசி (ஒருமாதம்,
புரட்டாதி பரம், பாத்திரம், பூரட்
டாதி.
புரட்டை - பூரட்டாதி.
புரவி - அசுபதி நட்சத்திரம்.
புருசநாள் ஆண்நட்சத்திரம். அது
புருடநான் அசுபதி, பரணி, உரோ
புருஷநான்) கணி, ஆயிலியம்,மகம்,
உத்திரம், சித்திரை, சோதி,
கேட்டை,மூலம்,பூராடம்,உத்
திராடம், பூரட்டாதி. அன்றியும்
இரேவதியுமாம்.
புருவத்தானம் - இரண்டாமிடம்.
டிரோகிதன்- சோதிடன்.
புலம் திக்கு.
புலரி - உதயமாதல், விடியல்.
புலவன் - புதன்.
புலி-சிங்கவிராசி.
புலிப்பாணி சோதிடம் - ஓர் சோதிட
நூல்.
A
புல் -அனுடநட்சத்திரம்.
புல்லம் - இடபவிராசி.
புள்—அவீட்டகாள்.
யுற்பதி
புற்றாளி
அனுஷாட்சத்திரம்.
புனர்தம் - புனர்பூசம்.
புனர்பூசம் - அதிதிகாள், ஆவணம்,
எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி,
புனர்தம்.
பூமிநடுங்கல்.
பூகம்பம்
பூகம்பனம் 5
பூகோளம் - பூமியின் வட்டம், பூமி
பின் இயற்கையளவு.விபரம்-பூமி
யினிடையே மேருவும், கடலினி
டையே வடவைத்தீவு மிருக்கின்ற
தாம். இவை முறையே வடதுருவ
மென்றும், தென்துருவமென்றுங்
கூறப்படும். பூமத்தியமென்று
ஆரிய சாஸ்திரத்திற் சொல்லப்
பட்டபடி வடதுருவமுனை, பூமி
யை மேகலாரேகையைஎல்லையாக
வைத்து,
உத்தரகோளார்த்தம்,
தட்சணகோளார்த்தம் என்று இரு
கூறாகப் பிரித்து உத்தரகோளார்
த்த முழுதும் நிலமென்றும், தட்
சணகோளார்த்தமுழுதும் நீரென்
றுஞ் சித்தாந்தமாம்.
முழுதும்
உத்தரகோனார்த்த
நிலமென்பதால் அதன் மத்தியத்
தானம் வடதுருவத்திலுள்ள
சுமேருவாகிநின்றது. இனிகடலின்
மத்தியமெனவே தட்சண
கோளார்த்த முழுதும் நீராக
அதன் மத்தியத்தானம் தென் துரு
வத்திலுள்ள வடவாமுகமாகின்<noinclude></noinclude>
389c92wtpnnmmrg9dgp3quaqv1rxbwq
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/182
250
641487
1926893
2026-04-25T06:44:46Z
Magizh Sundram
16422
OCR
1926893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பூமிநிலைக்கோள்.
--
ளஎரு
பூருவம்.
றது. உத்தரகோளாரித்த முழுவ | பூரட்டாதி நாழி, முற்கொழுங்
தையும் ஜம்புத்தீபம் நவகண்டங்
களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாம்.
கோல்.
பூரணசந்திரன் - சிறைகாலச் சந்தி
பூரணமி - பூரணை.
பூரணமை- பௌரணமி.
பூசாட்சத்திரம் - காற்குளம்,
ரன்.
குரு
நான், கொடிறு, தை, வண்டு.
பூசசான் - பூச்சட்சத்திரம்.
பூசுதன்- செவ்வாய்,
பூரணாயனம் - இடபலீதி.
பூச்சக்கரம் - சூரியனோடும்
பூமிச்சுற்று.
பாதை,
பூணி- இடபவிராசி.
பூதகாலம்-- இறந்தகாலம்,
கடந்த
காலம், சென்றகாலம்.
பூதனன் - சந்திரகிரணம்.
இறந்தகாலம், பஞ்சபூதம்,
பூதம்
-
பரணி நட்சத்திரம்.
பூதக்கிரகம் 2 பஞ்சபூதக் கிரகம்.
பூதக்கோள் விபரம் - பஞ்சபூதக்
பூரணானசம் - சந்திரகிரணம்.
பூரணேந்து - பூரணசந்திரன்,
பூரணை - அநுமதி, இடை, உவா, பவ்
வம், சந்திரன்,ஐந்தாம் பத்
திதி, பெளரணை.
பூரநான் ? இடையெழுஞ்சனி, எலி,
பூரம் கணை, காவிதன், பகவதி
நாள்,
பூராடநான் ? உடைகுளம், நீர்நான்,
முற்குளம்
பூராடம்
கிரகத்திற் காண்க.
பூரி -
பூதன் - கிருட்டிணயக்கத்துப்பத்தினா
எண்வகுப்பினொன்று. அது
நூறுகோடி,கோடிகோடாகோடி
லாந்திதி.
பகல்.
பூபயோகம் - ஒரு நல்ல யோகம். பூருவகாட்டை-கிழக்கு.
அது சந்திரன் ஐந்தில் நிற்க ஐந் பூருவசத்தியை- விடியல்.
தோன் உச்சம்பெற பாக்கியாதி பூருவசென்மத்தானம்
பன் குடும்பமேறி நிற்பதாம்.
மிடம்.
(2) இலக்கினமுதல் நாலாமிராசி பூருவதிக்கு
வரை இருபாம்புகள் நீங்கிய ஏழு
கிரகங்கள் நிற்பதாம்.
பூப்பிரிதி- அயனவரி.
பூமகன்
பூமன்
செவ்வாய்.
பூமிகாரகன்
பூமித்தானம் - ராலாமிடம்.
பூமியிலைக்கோன்
பாம்பு.
பூமிநிலைக்கிரகம் சனி,சூரியன்,
செவ்வரய்,
பூருவதிசை
இரண்டா
கிழக்கு.
பூருவபக்கம் சுக்கிலபக்கம், முன்
பூருவபட்சம் பக்கம், வளர்பிறைப்
பக்கம்.
பூருவபற்குனி -பூரம்.
பூருவபற்குனியன் - வியாழன்.
பூருவம்-கிழக்கு, சந்திரனின் முன்
பக்கம்.<noinclude></noinclude>
40mrqhszjtsftmi49tdh9lyb0p8pb7w
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/183
250
641488
1926894
2026-04-25T06:45:46Z
Magizh Sundram
16422
OCR
1926894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஎசு
சோதிடப் பேரகராதி.
பெருக்குக்கணக்கு.
பூருவாசாடம்-பூராடம்
பூருவாண்ணம் பகலின் முன்னே
பூருவாண்ணியம்]ரம்.
பூருவோத்தரம் - வடகீழ்த்திசை
பூர்வம் - பூருவம். இது கிழக்கு.
பூர்வராத்ரம் - முன்னிரவு.
பூர்வார்த்தம் - முற்பாதி
பூர்வான்னம் - பகலின் முற்பாதி.
பூனைத்திசை - தென்கிழக்கு.
பெ
பெண் - கன்னியாராசி.
பெண்கிரகம் சந்திரன், சுக்கிரன்,
பெண்கோள் மாகு.
பெண்டீர் - கன்னியாராசி.
பெண்ணட்சத்திரம்
பெண்ணாள்
பேரிகையோகம்.
பெருக்குவேளை - உச்சிப்பொழுது
பெருநாள் - அச்சுவினி முதவிய
கான், இரேவதி, கொண்டாட்ட
மான நாள்.
பெரும்பொழுது -ஆறுபருவம்.
அவை கார், கூதிர், முன்பனி, பின்
பனி, இளவேனில், முதுவேனில்
என்பனவாம்.
பெலராசி
-
திரராசி நான்குமாம்.
அது இடபம், சிங்கம், விருச்சிகம்,
கும்பம் என்பதாம்.
பெலன் - மூன்றாமிடம்.
பெற்றம் - இடபவிராசி.
கார்த்திகை,
பே
திருவாதிரை,
புனர்பூசம், பூசம், பூரம், அஸ்தம்,
விசாகம், அனுஷம், திருவோணம்,
அவிட்டம், உத்திரட்டாதி, ரே
வதி யென்பனவாம்.
பெண் தீர்க்கப்பொருத்தம் - மணப்
பொருத்தத்தொன்று.அது பெண்
நட்சத்திரமுதல் ஆண் கட்சத்
திரம் பதின்மூன்றுக்கு மேல் வரு
வதாம்.
பெண்ராசி
பார்க்க.
இரட்டை ராசியைப்
பெண்ணை - அனுடநட்சத்திரம்.
பதினொரு வயதுப்
பெதும்பை
-
பெண்.
பெரியபுலு - நூறு.
பெருக்கல் - எண்கூட்டித்தாக்கல்.
பெருக்குக்கணக்கு}
கணக்கு வகை
நான்கி
னொன்று.
பே மேகம்.
போன் - சந்திரன், சூரியன்.
பேதை - ஏழுவயதுப் பெண்.
பேராண்டு
-
அற்பது வருடங்
கொண்ட காலம்.
பேராளன் - மிருகசீரிடம்.
பேரிகையோகம் - ஒருவிசேட நல்ல
யோகம். அது இரண்டு,ஏழு,பனி
ரண்டு ஆகிய இவ்விடங்களில் கிர
கங்களிருந்து பத்தாதிபன் பெல
ந்து நின்றாலும்,
(2) வியாழன், சுக்கிரன், இலக்கி
னாதிபன் இவர்களோடு கூடி கேக்
திரத்தில் நிற்க, பாக்கியாதிபதி
பெலத்து நின்றாலும்,
(3) செவ்வாய்க்கு கேந்திரதிரி
கோணத்தில் சுக்கிரன், வியாழன்
ஆகிய இவர்களிருக்க, இலாபாதி
பதி பெலத்து நின்றாலும்,<noinclude></noinclude>
cobqkmfd0ikm352420lfvglz4hypzb6
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/184
250
641489
1926896
2026-04-25T06:46:31Z
Magizh Sundram
16422
OCR
1926896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
பேரிகையோகம்.
(4) இலாபாதிபதிக்கு சுக்கிரன்
கேந்திரதிரிகோணம் பெற்று நின்
றாலும்,
(5) சனிக்கு ஆறு, எட்டு இவை
களில் செவ்வாயிருக்க, செவ்வாய்
க்கு ஆறு, எட்டு இவைகளில் வியா
ழனிருக்க, வியாழனுக்கு ஆறு,
எட்டு இவைகளிற் சூரியன் நின்
றாலும்,
(6) ஐந்தொன்பதில் பாபக்கோ
ளிருக்க கேந்திரத்தில் சுபக்கோ
ளிருக்க சூரியன் பெலத்து நின்
றாலும்,
.
பொன்.
ளஎஎ
ன்று நட்பாய்ப் பார்த்தாலும்;
வெள்ளி யுச்சம்பெற்று நின்றா
லும்,
(12) குரு, புதன், இலக்கினத்தைப்
பார்க்க இலக்கினாதிபதி உச்சம்
பெற்று நின்றாலும்,
(13) இராகுவிருந்த இராசியாதி
பதி உச்சகேந்திர திரிகோணத்
திருக்க, இராகு சுபவீடேறி சுப
வர்க்கம் பெற்றாலும் பேரினை
யோகமாம்.
பேரினம்பெண் - நாற்பது வயதுப்
பெண்.
(7) வியாழனுக்கு மூன்று, ஐந்து, பேரு - சூரியன்.
ஏழு இவைகளில் புதனிருக்க, பேனவர்கி-இடி.
புதனுக்குப்பத்தில் குருவிருந்தா
லும்,
(8) இலக்கினாதிபதி, குரு, செவ்
வாய் இவர்கள் மூன்றில் நிற்க,
அல்லது பார்க்க இரண்டு, ஒன்ப
தில் பாபக்கோளிருந்தாலும்,
(9) இலாபாதிபதி உச்சனாகி இலா
பத்தானத்தைக் குருபார்க்க சுக்கி
ரன் கேந்திர கோணத்திலிருந்தா
லும்,
(10) ஒன்பது பனிரண்டில் புத
னிருக்க ஒன்று, ஐந்து இவைக
ளில் குருவிருக்க, அட்டமாதிபன்
பெலத்து நின்றாலும்,
(11)நாலோனும், குருவும் பாக்
கியத்தைப் பார்த்தாலு மிருந்தா
லும், குரு உச்சம் பெற்றாலும்,
வெள்ளியும் குருவும் ஒன்றுக்கொ
பொ
பொங்குசனி - ஏழரைநாட்டுச் சனி
யில் இரண்டாமுறையாய் வருஞ்
சனி.
பொருத்தம்
-
இணக்கம், தகுதி,
விவாகப்பொருத்த முதலியன.
பொழுது - அமையம், ஆனியம், எல்
வை, கடி, காலம், காலை, கால்,
கொன், சூரியன், செவ்வி, நிலை
பதம், பருவம், பாணி, போழ்து,
வேலை, அன்றியும் மாலை, யாமம்,
வைகறை, விடியல், நண்பகல், ஏற்
பாடு இவை அத்தமனகாலமிருந்து
பத்து நாழிகை வீதமாம்.
பொழுதுபடுதல் சூரியன் அத்த
பொழுதுபுகுதல் மித்தல்.
பொழுதுவிடிதல் - சூரியனுதித்தல்.
பொன் - சூரியன், வியாழன்.
28.<noinclude></noinclude>
rjvdygml8ignqy4vyfhy94dts5og4kr
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/185
250
641490
1926897
2026-04-25T06:47:03Z
Magizh Sundram
16422
OCR
1926897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளஎ அ
போதகன்.
சோதிடப் பேரகராதி.
பொன்னவன் - வியாழன்.
போ
போகத்தானம் - ஏழாமிடம்.
போகபோக்கிய யோகம் - ஒரு நல்ல
யோகம். அது ஒன்பதுக்குடைய
வன் நின்ற திரேக்காண ராசியில்
ஐந்தாதிபனிருக்க ஐந்தில், குரு
விருப்பதாம்.
போசராசாப்தம் - போசனரசாண்ட
வருடம். து கலியுகம் மூவாயி
ரத்து நூற்று நாற்பத்தொன்றில்
ஆரம்பம்.
கிழக்கு
போசனம் புசிக்குந்திக்கு இன்ன
போசனம் புசிக்குந் திசைதிசையி
லிருந்து போசனஞ் செய்தால்
நன்மை தீமை என்பது.
முகம் ஆயுள்விருத்தி, தெற்கு
முகம் கீர்த்தி, மேற்கு முகம் சம்
பத்து, வடக்கு முகம் சத்தியநட
கையுண்டென்பதாம்.
போதகன்-இராகு, கேதுக்கள் நீங்
கிய ஏழு கிரகங்களில் ஒவ்வொரு
மகர அங்கம்.
ரம்: வேதகாதிபர் திசையிற்
காண்க.
போதகாதிபர் திசை - வேதகாதிபர்
திசையிற் காண்க.
போதம் - பரணி நட்சத்திரம்.
போது- காலம்.
போந்து 2
போந்தை
அனுசநட்சத்திரம்.
போரேறு - செவ்வாய்.
போர் - சதய நட்சத்திரம்,
போழ்து - காலம், நான், பருவம்,
பொழுது.
பௌஷம்?
பௌடம் 5
பௌ
தைமாதம்.
பௌதி
- இராத்திரி.
பௌமன்- செவ்வாய்.
பௌரணமி
பௌரணைமி |
பௌரணை
பௌர்ணிமி
பௌவம்
பூரணை.
ண்டி னொன்று.
மகத்திருநாள் - மாசிமகம்.
மகம்
திசையில் வரும் புத்திக்கிரகங் ம - காலம், சந்திரன்,நேரம்.
களின் தனது பாகப்பலனைக் மகதந்திரம் - சிற்பநூல் முப்பத்திர
கொடுக்கச்செய்யுங் கிரகம், இது
வே போதகனென்பது. அப்பாகப்
பலனை மாறுபடுத்துங் கிரகம்
வேதகனென்றும், தேரியபலனைக்
கிடைக்கச்செய்யுங் கிரகம் பாசக
னென்றும், சம்பாதித்த பொருளை
யடையச்செய்யுங் கிரகம் காரக
னென்றுஞ் சொல்லப்படும்.
ஆதிச்சனி,எழுவா
மகநாள் யெழுஞ்சனி, கொடுமு
கம், பிதிர்நாள், மாசி,வாய்க்கால்,
வேட்டுவன், வேள்வி, அன்றி இரு
பத்தொன்றுக்கும் பெயர்.
விப/மகாஅங்கம் - முழங்கால்.<noinclude></noinclude>
bieeng4s3uvex6iiq4dn98scd92psmb
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/186
250
641491
1926898
2026-04-25T06:47:33Z
Magizh Sundram
16422
OCR
1926898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ளஎகூ
மகாதிசை.
மகாகிதி
மகாச்சா-பஞ்சாங்ககணிதமுறையின் மகாக்ஷிதி கோடிகோடாகோடி
மகாகாலம்.
மகரஉருவம் - முதலை.
சாவாக்கியத் தொன்று.
மகரத்திசை - வடக்கு.
மகரநிறம் - கறுப்பு.
மகரமாதம் - தைமாதம்.
மகரம் கலை, சுஞ, தை, பங்குக்
மகரராசி கிராகம்,மான்.
மகராவி
-
தைமாதம், மகரத்தில்
சூரியனிற்றல்.
மகவோட்டம் - மாசிமாதம் பூரணை
யில் சந்திரனும் மகநட்சத்திர
மும் உச்சமாகும்போது சந்திர
னுக்கு வடக்கில் ஒரு நட்சத்திரம்
தள்ளினால் கால்பங்கு தானிய
நாசம், இரண்டுதள்ளினால் அரைப்
பங்கு நாசம், மூன்று தள்ளினால்
முக்காற்பங்கு நாசம், நாலு தள்ளி
னால்முழுதுங் கெடுதியாம். மேற்
கண்டபடி தெற்கில் தள்ளினால்
மிகவுஞ்சௌக்கியம்.
உதாரணம்:- ; காணுமாசிக்
கலைமதியைக் கருது மரமீ னான்க
தனிற், பேணுந் தென்பால மீன்
சேரிற் பெரிதா மஃகந் தானென்
ப, பூணி விரண்டு முக்காலாம்
பொருந்து மூன்றிற் பாதியதாம்,
சேணில் வடபால் மீன்சேரிற் செ
கத்தி லன்னஞ் சிறிதாமே' என்
னுஞ் செய்யுளாலறிக.
மகாகருவம் 2
மகாகர்வம் பத்துலட்சல்கோடி,
மகாகாலம் - நெடுங்காலம்.
மகாகோணி 2 இலட்சங்கோடா
மகரகோணி
கோடி.
மகாசங்கம் - ஆயிரங்கோடாகோடி.
மகாசந்தபனம் - ஒரு விரதநாள்.
மகாசிவராத்திரி - சிவராத்திரியைக்
காண்க.
மகாசோபம்
மகாக்ஷேபம் கோடி.
மகாட்டமி - ஐப்பசிமாத சுக்கிலபக்
கத்திய எட்டாந்திதி.
மகாதசை உடுதிசை அல்லது ஈட்
மகாதிசை சத்திர திசை.
ஏறுகோடி கோடா
விபரம்:- கார்த்திகை, உத்திரம்,
உத்திராடம் சூரியதிசை ; இதன்
வருஷம் ஆறு. ரோகணி, அத்தம்,
திருவோணம் சந்திரதிசை, இதன்
வருஷம் பத்து. மிருகசீரிடம், சித்
திரை, அவிட்டம் செவ்வாய்திசை.
இதன் வருஷம் ஏழு. திருவா
திரை, சுவாதி, சதையம் இராகு
திசை. இதன் வருஷம் பதினெட்டு.
புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி
வியாழதிசை; இதன் வருஷம் பதி
னாறு. பூசம், அனுசம், உத்திரட்
டாதி சனிதிசை; இதன் வருஷம்
பத்தொன்பது; ஆயிலியம், கேட்
டை, ரேவதி புதன்திசை ; இதன்
வருஷம் பதினேழு; அசுபதி,மகம்,
மூலம் சேதுதிசை; இதன் வரு
ஷம் ஏழு. பரணி, பூரம், பூரா
டம் சுக்கிரதிசை; இதன் வருஷம்
இருபது என்பதாம்.<noinclude></noinclude>
slj0x47ak30mlqm92yensfqjiuys2mi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/832
250
641492
1926899
2026-04-25T06:47:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வில்லை. இருப்பினும் எச்சவியலுள் தொகை கூறும் நூற்பாக்களுள் இடம்பெற்றிருக்கக்கூடும். கல்லாடர் சொல்லதிகாரம் முழுமைக்கும் உரையெழுதியிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடர்|804|கல்லாடர்}}</noinclude>வில்லை. இருப்பினும் எச்சவியலுள் தொகை கூறும் நூற்பாக்களுள் இடம்பெற்றிருக்கக்கூடும். கல்லாடர் சொல்லதிகாரம் முழுமைக்கும் உரையெழுதியிருந்தார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
கல்லாடரின் உரைப்போக்கு தெளிவுடையதாக அமைந்துள்ளது. நூற்பா, நூற்பா விளக்கம், பொழிப்புரை, இலேசுவிளக்கம், எடுத்துக்காட்டு, நூற்பாப் பயன் என்ற வகையில் இவ்வுரை அமைந்துள்ளது. இலேசால் பெறப்படுகிற விளக்கத்திற்கும், உரிய எடுத்துக்காட்டுகளைத் தருதல் இவரிடத்துக் காணப்படுகிறது. நூற்பாப் பயனுரைத்தல் என்பது நூற்பாப் பொருண்மை கருதி அந்நூற்பாவாற் சொல்லப்பட்ட மூலக்கருத்தை உரைப்பதாக அமைகிறது. இது, ‘தேனாற் சொல்லியது’, ‘இச்சூத்திரத்தாற் சொல்லியது’ என்ற முகப்போடு அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ‘இதனாற் சொல்லியது செப்பினையும் வினாவினையும் பற்றிப் பொருளின் கண்ணும் உவமத்தின் கண்ணும் எண்ணின்கண்ணும் பிறக்கும் மரபிலக்கணமும், மரபுவழுவமைதியும் என உணர்க’ (நூ. 16 உரை) என்பதைக் காட்டலாம். இலக்கிய உரையாசிரியர்களிடத்து இம்முறை பெரிதும் காணப் பெறும்.
வகைப்படுத்திக் கூறுதல் இலக்கண உரையாசிரியர்களுக்கு இன்றியமையாததொன்று. இந்நெறியால் இலக்கணம் எளிமையும் தெளியும் பெறும். இத்தகைய முறை கல்லாடரிடம் நிரம்பவும் காணப்படுகிறது. வழுவை அமையும் வழு, அமையா (நூ. 13 உரை) என்றும், வழுவமைதியை இலக்கண முள்வழிக் கூறும் வழுவமைதி, இலக்கணமில்வழிக் கூறும் வழுவமைதி (நூ. 12 உரை) என்றும், மரூஉ வழக்கைச் சொல் சிதைய வருவன, படுபொருள் சிதைய வருவன (நூ. 17 உரை) என்றும், ஐயத்தைக் கண்டவழி ஐயம், காணாவழி ஐயம் என்றும் காணப்படுகிற வகைப்பாடுகள் இலக்கணத்தை எளிமைப்படுத்த வல்லனவாய் உள்ளன. வேற்றுமை மயக்கத்தை இருபது வகைகளாக்கிக் (நூ. 86 உரை) கூறுவதனாலேயே கல்லாடரது வகைகூறும் திறனை உணரலாம்.
முந்தைய உரையாசிரியர்கள் கூறிய சொல் விளக்கங்களை எளிமைப்படுத்துவதும், அரிய சொற்களுக்கு விளக்கம் கூறுவதும் இவரிடம் சிறப்பாகக் காணப்படுகின்றன. ‘செயப்படு பொருளாவது வினை முதற்றொழிற் பயனுறுவது’ என்று சேனாவரையர் (நூ. 71 உரை) கூறுவர். அதனைச் செயப்படு பொருளாவது ‘ஒருவன் செய்யும் தொழிலினைத் தானுறுவது’ (நூ. 73 உரை) என்று கல்லாடர் எளிமைப்படுத்தியுள்ளார். பிறரிடம் இல்லாத உரைத்தெளிவு இவரிடம் காணப்படுகிறது. பிறர் பொருள் கூறாது விடுத்த சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருதலைக் கொண்டு இதனை உணரலாம். சான்றாக, ‘மாறோக்கம்’ என்று முன் உரைகாரர் கூறிய சொல்லுக்கு ‘இவர் கொற்கை சூழ்ந்த நாடு’ (நூ. 167 உரை) என்று விளக்கம் தருவதைக் கூறலாம்.
இலேசு என்ற சொல்லிற்கு இதுவரை எந்த இலக்கண உரையாசிரியரும் தம் இலக்கண உரையில் தொடர் விளக்கம் கூறியதாகத் தெரியவில்லை. நச்சினாக்கினியர் ‘சிறுமையாகிய ஊதியம்’ (சீவக. சிந். 700 உரை) என்று கூறுவர். இலக்கணத்தில் அது ‘மிகைச்சொல்’ என்று கூறப்படும். இதற்குரிய சரியான தொடர்விளக்கத்தைக் கல்லாடர் கூற முற்பட்டிருக்கிறார். ஆனால் அவ்வுரை பொருள் விளங்காத வகையில் சிதைந்துபோயுள்ளது. இலேசு என்பது ... ... ... யந்து கூறுதல்; குறிப்பால் வெளிப்படுவது (நூ. 231 உரை ) என்பதே அவ்வுரை வடிவம்.
முறைவைப்புக் கூறுவதில் இலக்கண உரையாசிரியர்களுள் இளம் பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரும், இலக்கிய உரையாசிரியர்களுள் பரிமேலழகரும் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் கூறும் முறைவைப்புகள் இனிமையும் இலக்கண நயமும் உடையன.
இளம்பூரணரைப் போன்று உரைமுறையில் ஐயத்திற்குரிய கருத்தைப் ‘போலும்’ என்று உரைக்கும் பாங்கு பல நூற்பாக்களில் சிறந்து காணப்படுகிறது.
தெரியாதனவற்றைத் தெரியாது என்று கூறுவதாகிய சிறந்த பண்பு கல்லாடரிடம் பெரிதும் காணப்படுகிறது. ‘பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்’ (நூ. 222 உரை), ‘ஓகார வீற்று விரவுப் பெயர் கண்டதில்லை; ரகார கார ஈறாய் வரும் விரவுப்பெயர் கண்டதில்லை’ (நூ. 153 உரை) போன்ற உரைகளால் அதனை அறியலாம்.
சொல்லாராய்ச்சிக்குப் பொருளாராய்ச்சி பெருந்துணை புரிவதாக அமையும், இத்தகைய கருத்தைப் ‘பொருளாராய்ச்சியும் இச்சொல்லாராய்ச்சிக்குப் பயன்படும் நிலைமைத் தாகலானும் அமையும்’ (நூ. 91 உரை) என்ற உரைவழிச் சுட்டுகிறார்.
மாணாக்கன் இடர்ப்படும் இடத்தில் தாமே இடர்ப்படுவதாகக் கொண்டு ஐயம் எழுப்பி விளக்கங் கூறுவது உரையாசிரியர் கடமை. ‘ஆஓ ஆகும் பெயருமா ருளவே, ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே’<noinclude></noinclude>
o5mwdyej7a3yu83dz2x7uu0wbe1poby
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/187
250
641493
1926900
2026-04-25T06:48:07Z
Magizh Sundram
16422
OCR
1926900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
ளஅய
மகாயோகம்.
மகாநிசி - அத்தசாமம்.
மகாபதுமம் - பத்துக்கோடாகோடி.
மகாபவன் - சுக்கிரன்.
மகாபிரளயம் - நானூற்று முப்பத்திர
ண்டு கோடிவருட முடிவில்வரும்
அழிவுகாலம்.
மகாபிராணதிசை
-
சந்திரசூரிய
லக்கினபுடங்களைக் கூட்டிக்கண்ட
நட்சத்திரதிசை.
மகாபூரி- ஆயிரங்கோடி, கோடிகோ
டாகோடி.
மகாமகம் - மகநட்சத்திரத்தில் குரு
வரும் வருடத்தில் மாசிமாதப்
பூரணை.
மகாமகவாருணி
-
சித்திரை மாதம்
அமரபக்கத்துத் திரயோதசியன்று
சனிவாரமுஞ் சதய நட்சத்திரமுங்
கூடிவருவது.
மகாயுகம் - சதுர்யுகம். இது நாற்
பத்துமூன்று லட்சத்து இருபதி
னாயிரம் (4320000) வருடங்கொண்
டது.
மகாயோகம் - பரிவர்த்தன யோகம்,
அது இலக்கினாதிபன் இரண்டு,
நாலு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து,
பதினொன்று ஆகிய இவைகளில்
இருக்க, அவ்வீட்டதிபர் இலக்கி
னத்தில் நிற்பது.
(2) இரண்டுக்குடையவன் நாலு,
ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதி
னொன்று ஆகிய இவைகளிலிருக்க
அவ்வீட்டதிபர் இரண்டில் நிற்
பது
மகாயோகம்.
(3) நாலுக்குடையவன் ஐந்து,
ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்
று ஆகிய இவைகளிலிருக்க அவ்
வீட்டதிபர் நாலில் நிற்பது.
(4) ஐந்துக்குடையவன் ஏழு, ஒன்
பது, பத்து, பதினொன்று ஆகிய
இவைகளிலிருக்க அவ்வீட்டதிபர்
ஐத்தில் நிற்பது.
(5) ஏழுக்குடையவன் ஒன்பது,
பத்து, பதினொன்று ஆகிய இவை
களிலிருக்க அவ்வீட்டதிபர் ஏழில்
நிற்பது.
(6) பாக்கியாதிபன் பத்து, பதி
னொன்று ஆகிய இவைகளிலிருக்க
அவ்வீட்டதிபர் பாக்கியத்திலிருப்
பது.
(7) பத்தோன் பன்னொன்றிலிரு
க்க, பன்னொன்றோன் பத்தில் நிற்
பது.
குறிப்பு ;-- மேற்காட்டியுள்ள ஏழு
பிரிவுகளில் முதலாவது பிரியிற்
கண்டவை ஏழுவகையாய்க் கிரகங்
கள் மாறிகிற்கும். இரண்டாவதில்
ஆறுவகையாய் மாறிநிற்கும். மூன்
றாவதில் ஐந்து வகையாய் மாறி
நிற்கும். நான்காவதில் நாலுவகை
யாய் மாறிவிற்கும். ஐந்தாவதில்
மூன்றுவகையாய் மாறிகிற்கும்.
ஆறாவதில் இரண்டுவகையாய்
மாறிகிற்கும். ஏழாவதில் ஒரே
வகையாய் நிற்கும். இவை
கள் இருபத்தெட்டு வகையாய்<noinclude></noinclude>
g2690siyft94z2l2chr46fa244prk3j
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/188
250
641494
1926901
2026-04-25T06:48:29Z
Magizh Sundram
16422
OCR
1926901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>மங்கை.
சோதிடப் பேரகராதி.
மாறிசிற்கும். இவைகள் விசேட
நல்ல யோகமாம்.
மகாவற்புதம் - ஒருபேரெண்.
மகாவாருணி - சித்திரைமாதம் அமர
பக்கத்தில் வரும் பதின்மூன்றாந்
நிதி.
மகாவிசுவம் - மேடசங்கிராந்தி.
மகாவிந்தம் - ஓரெண்.
மகிரன்-சூரியன்.
கீசுதன் - செவ்வாய்.
மகுடயோகம் - ஒரு நல்ல யோகம்.
அது ஐந்தில் குருவிருக்க ஐந்
தோன் ஒன்பதிலிருக்க. பத்தில்
சனி நிற்பதாம்.
மகோதயம் அறுபது வருடத்திற்
மஹோதயம் கொருமுறை வரும்
விசேடநாள்; அது அருத்தோயத்
திற் கூறியபடி அமாவாசையானது
திங்கட்கிழமையோடு
தாம்.
கூடிவருவ
மங்கையர்க்கரசியார் திருநட்சத்திரம்-
சித்திரை மாதத்தில் வரும் ரோ
கணி நட்சத்திரம்.
மங்கலம் - கலியாணம், நன்மை.
மங்கலவாரம் - செவ்வாய்க்கிழமை,
நல்லநாள்.
மங்கலன் - செவ்வாய்.
மங்கலாதிபன் - ஏழுக்குடையவன்.
மங்களை -- யோகினிதிசையினொன்று.
மங்குசனி - முதல்முறை வரும் ஏழ
ரைநாட்டுச்சனி.
மங்குல் - ஆகாயம், இரவு,மேகம்.
மங்கை - பதின்மூன்று வயதுடைய
பெண்.
மச்சயோகம்.
ள அக
மங்கைதீர்க்கப் பொருத்தம் - மணப்
பொருத்தத்தொன்று; அது பெண்
நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்தி
ரம் பதின்மூன்றுக்கு மேலாயிருத்
தல்.
மசண்டை -- அந்திநேரம், கருகுமாலை
மச்சம் - மீனவிராசி.
மச்சயோகம்--ஒருநல்லயோகம். அது
ஒன்று, ஒன்பது இவைகளில் பாவ
ரிருக்க ஐந்தில் பாபருஞ் சுபரு
மிருக்க நாலில் பாவிகளிருந்தா
லும்,
சுப
(2) சரராசி இலக்கினமாக இலக்
கினத்தைச் சுபர்கோக்க சரத்தில்
குருவிருக்க கேந்திரத்தில்
ரிருக்க இலக்கினாங்கிச கேந்திர
கோணத்தை ஐந்தாதிபன் பார்த்
தாலும்,
(3) திரராசியிற் குரு சுக்கிரனிரு
க்க திரிகோணத்தில் கிரகங்களி
ருக்க இலக்கினத்தில் கிரகங்கள்
வலுவுற்று இருந்தாலும்,
(4) மூன்றுக் குடையவனுடைய
அங்கிசாதிபதி உச்சம்பெற்றிருக்க
சுபக்கிரகம் பார்த்தாலும்,
(5) பாக்கியாதிபனிருந்த அங்கி
சாதிபதி குரு சுக்கிரனாக கேந்திர
திரிகோணங்களிலிருந்தாலும்,
(6) இலக்கினாதிபதி சுப அங்கிசம்
பெற்று தேவலோகாங்கிசமுமாகி
பாக்கியாதிபதி சிங்காங்கிசம்பெற
அல்லது கேந்திரமிருக்க, சாராசி<noinclude></noinclude>
60myy05qbrt02y1f14lfg1nu6qwgpn6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/586
250
641495
1926902
2026-04-25T06:48:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்சியும் (Republican Party and Democratic Party) விளங்குகின்றன. <b>வளர்ந்த முறை</b>: கூட்டாட்சியாளர்கள் (Federalists) கட்சி கி.பி. 1800-இல் உருவெடுத்தது. அலெக்சாண்டர் ஆமில்ட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியரசுக்...|558|குடியரசுக்...}}</noinclude>கட்சியும் (Republican Party and Democratic Party) விளங்குகின்றன.
<b>வளர்ந்த முறை</b>: கூட்டாட்சியாளர்கள் (Federalists) கட்சி கி.பி. 1800-இல் உருவெடுத்தது. அலெக்சாண்டர் ஆமில்ட்டனும் (Hamilton) சான் ஆடம்சும் இக்கட்சியின் தலைவர்களாக விளங்கினர். புதிய அரசியலமைப்பையும் கூட்டாட்சியையும் இக்கட்சி ஆதரித்தது. கருத்துவேற்றுமை காரணமாகத் தாமசு செபர்சனும், சேம்சு மாடிசனும் குடியாட்சி-குடியரசு (Democratic Republians) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். மாநிலங்களின் உரிமைகளுக்காக இக்கட்சி வாதிட்டது. காலப்போக்கில் கூட்டாட்சியாளர் கட்சிக்கு ஆதரவு குறைந்தது. கூட்டாட்சியாளர்கள் கட்சியின் இடத்தை கி.பி. 1834 இல் விக்குக் (Whigs) கட்சி பிடித்தது. விக்குக் கட்சியே 1960-இல் குடியரசுக் கட்சியாக உருவெடுத்தது. ஆண்ட்கு சாக் சன் குடியாட்சி - குடியரசுக் கட்சி என்று பெயரைக் குடியாட்சிக் கட்சி என்று மாற்றினார். குடியரசுக் கட்சிக்கும், குடியாட்சிக் கட்சிக்கும் கி.பி. 1860-ஆம் ஆண்டு முதல் இந்தாள் வரை தேர்தல் போட்டிகள் கடந்து வந்திருக்கின்றன, ஆபிரகாம் லிங்கன், ஐசன் ஓவர் ஆகியோர் குடியரசுக் கட்சியின் முக்கிய குடியரசுத் தவைவர்கள் ஆவார்கள், உட்ரோவில்சன் பிராங்க்ளின் உரூசுவெல்ட்டு, சான் கென்னடி, இலிண்டன் சான்சன், சிம்மி கார்ட்டர் ஆகியோர் குடியாட்சிக் கட்டுயின் முக்கிய குடியரசுத் தலைவராவார்கள்.
<b>இரு கட்சி முறைத் தோற்றத்தின் காரணங்கள்</b>: அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரு கட்சி தோன்றியதற்கு முக்கிய காரணம், அக்குடியரசின் தொடக்க காலத்திலிருந்தே இருபெரும் தலைவர்களான அலெக்சாண்டா ஆமில்டனுக்கும், தாமசு செபர்சனுக்கும் இடையே தோன்றிய கருத்து வேற்றுமையாகும். மரபு வழி, முதாதையர் வழி, பிரதேசவாரி ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையிலும் இரு கட்சி முறை தோன்றியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம், அவர் தகப்பனாரும், மூதாதையரும் அக்கட்சியில் இருந்தனர் என்பதனாலும் அவர் வாழும் பிரதேசத்தில் அக்கட்சி வேரூன்றியிருக்கிறது என்பதனாலும் ஆகும். கட்சி முறைக்கும், தேர்தல் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஒரே வாக்கெடுப்பில் சாதாரணப் பெரும்பான்மை காணும் தேர்தல் முறை, இரு கட்சிமுறை தோன்றக் காரணமாகியது. அமெரிக்க நாடுகளில் குடியரசுக் கட்சியையும், குடியாட்சிக் கட்சியையும் தவிர்த்து, பொது உடைமைக் கட்சி, சமநிலைக் கட்சி சுதந்திர வீரர்கள் கட்சி என்ற பல்வேறு கட்சிகள் இருந்தானும், இக்கட்சிதன் தேசிய அளவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான பலம் பெற்றிருக்காததால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருகட்சி முறையே இருப்பதாகக் கருதுகின்றனர்.
அமெரிந்த ஐக்கிய நாடுகளைப் போன்று, இங்கிலாத்திலும் இரு கட்சி முறை இருக்கிறது. இங்கிலாந்திலுள்ள இரு கட்சிகளும் குறிக்கோள் அடிப்படையில் தோன்றியவை. கட்சிகளில் கடுமையான கட்டுப்பாடு உண்டு. ஆனால் குடியரசுக் கட்சியும். குடியாட்சிக் கட்சியும் குறிக்கோள் அடிப்படையில் தோன்றியவையல்ல. இரு கட்சிகளிடையே கடுமையான கட்டுப்பாடு கிடையாது. குடியாட்சிக் கட்சியின் முன்னோடியான குடியாட்சி-குடியரசுக் கட்சி 1233-ஆம் ஆண்டு வரை மாநில உரிமைகளுக்கும், தடையிலா வாணிகத்துக்கும் ஆதரவு அளித்தது. குடியரசுக் கட்சியின் முன்னோடிகளான கூட்டாட்சியாளர் கட்சியும், விக்குக்கட்சியும் கூட்டாட்சி அரசின் அதிகாரங்களைப் பெருக்குதற்கு ஆதரவு அளித்தன. குடியாட்சிக் கட்சியின் கொள்கைகளை 1933-ஆம் ஆண்டிற்குப் பிறகு, முற்போக்குக் கொள்கைகளாகவும், குடியரசுக் கட்சியின் கொள்கைகளை பழமை வாதக் கொள்கைகளாகவும் குடிமக்கள் கருதத் தொடங்கினர். அதற்கு முக்கிய காரணம் குடியாட்சிக் கட்சி, பிராங்க்லின் உரூசுலெல்ட்டின் தலைமையில் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதை ஆதரித்தது. உரூசுவெல்ட்டின் புதிய திட்டத்தைக் குடியரசுக் கட்சியின் முற்போக்கு வாதிகளும் ஆதரித்தனர். அதுபோலவே, குடியரசுக் கட்சியின் கொள்கைகாை, குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரிப்பதுண்டு. ஆகவே, கொள்கையடிப் படையில் இரு கட்சிகளுக்குமிடையே பெரும் வேறுபாடுகள் கிடையா. இரு கட்சிகளும், மக்களாட்சி முறையையும், பிரதிநிதித்துவ அரசாங்கத்தையும் ஆதரிக்கின்றன. இவ்வாறு மிகுந்த வேறுபாடின்றி இருகட்சிகளும் இயங்கி வருகின்றன. சூழ்நிலைகளுக்கேற்ப இக்கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று நான்காண்டுக்கொருமுறை ஆட்சியைக் கைப்பற்றுகின்றன.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>James Jupp,</b> Political Parties, Routledge & Kegan Paul, London, 1968.<br>
<b>Maurice Dewerger,</b> Political Parties, Methuen & Co. Ltd., London, 1955.<br>
<b>Wilfred E. Binkeley,</b> American Political Parties, Alfred A. Knopf, New York. 1968.
{{nop}}<noinclude></noinclude>
4g53yh2kovmqkat1mpwydrhmf904612
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/189
250
641496
1926903
2026-04-25T06:49:01Z
Magizh Sundram
16422
OCR
1926903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ள அஉ
சோதிடப் பேரகராதி.
மண்டலம்.
மத்தியராத்திரம்.
மச்சயோக
மண்டலமேழு
-
வாயுமண்டலம்,
இலக்கினமானாலும்
மாம்.
மஞ்சன்நிறக் கிரகம் - வியாழன்.
மடங்கல் - இடி, சிங்கம், யுகமுடிவு.
ப்பொருத்தம் கலியாணப்
ம
பொருத்தம்,விவாகப்பொருத்தம்.
இவை பதினாறு வகைப்படும்; விப
ரம்: (1) இராசிப் பொருத்தம்
(2) இராசியதிபதிப் பொருத்தம்,
(5) இரட்சுப் பொருத்தம். (4)
கணப்பொருத்தம், (5) பெண் தீர்
க்கப்பொருத்தம்,(6) தினப்பொ
ருத்தம், (7) மகேந்திரப்பொருத்
தம், (8) யோனிப்பொருத்தம்,
(9) வசியப்பொருத்தம்,(10) வே
தைப்பொருத்தம்,(11) ஆயுள்
பொருத்தம்,(12) நட்சத்திரப்
வருணமண்டலம், சந்திரமண்ட
லம், சூரியமண்டலம், கட்சத்திர
மண்டலம், அக்கினிமண்டலம்,
திரிசங்குமண்டலமென்பனவாம்.
மண்டலம் வகுத்தல் -நவக்கிரகமண்
டலமிரேகித்தல்.
மதனகேந்திரம் - சந்திரன்.
மதனதுவாதசி - சித்திரைமாதப் பூரு
வபக்கத்துப் பன்னிரண்டாந்திதி,
இது ஓர் விரதநாள்.
மதனயோகம் - ஒரு நல்ல யோகம்.
அது ஐந்துக்குடையவன் நட்புக்
கிரகத்தோடும் சுக்கிரனோடுங்கூடி
இலக்கினத்திலிருக்க,
லாபாதி
பதி நட்பு, ஆட்சி, உச்சமிவைகள்
பெற்று நிற்பதாம்.
பொருத்தம்,(13)விருட்சப்பொரு மதி - கடகவிராசி, சந்திரன்,மாதம்.
மதிக்கணம் - சந்திரகணம்.
த்தம், (14) பச்சிப்பொருத்தம்,
(15) பஞ்சபூதப்பொருத்தம்,(16) மதிக்கலை - பதினாறு.
நாடிப்பொருத்தம் என்பதாம்.
மணி - நேரம். அது ஆங்கிலக்கணக்
குப்படி இரண்டரை நாழிகை
கொண்ட காலஅளவு; ஒரு ஓரை
யின்கால அளவுமாம், சோதிடம்
மதிதிசை - சந்திரதிசை, வடதிசை.
மதிநாள் - திங்கட்கிழமை, மிருகசீரி
மணிதனு - வானவில்.
மணிப்பவம் - இருபது.
மணிமான் - சூரியன்.
மண்டலகம் - சூரியவட்டாகாரம்.
மண்டலம் - சூரியமண்டல முதலி
யன; நாற்பது நாள் கொண்டது,
நாற்பத்தெட்டு நாள்கொண்டது
மாம்; பூமி.
டம்.
மதிப்பகை - இராகு, கேது.
மதிமகன் - புதன்.
மதிமண்டலம் - சந்திரமண்டலம்.
மதியம் - சந்திரன், நடு, மத்தியா
னம்.
மதியுணி- இராகு, கேது.
மது - சித்திரைமாதம், வசந்தகாலம்.
மத்திமகண்டம்
ன்று,
-
நவகண்டத்தொ
மத்தியராத்திரம் - நள்ளிரவு.<noinclude></noinclude>
biw4jilfyfy9eo6l6n6mn9ip3dniwh2
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/190
250
641497
1926904
2026-04-25T06:49:21Z
Magizh Sundram
16422
OCR
1926904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>மரக்கால்.
சோதிடப் பேரகராதி.
மத்தியானம் - இராசி, உச்சி, உரு
மம், ஈடுப்பகல், நண்பகல்.
மந்தகேந்திரம்
-
கிரகநடையினொ
சனிக்கிழமை.
ன்று,
மந்தவாசாரம்
மந்தவாரம்
மந்தன் - சனி.
மந்தாகினியோகம் - ஒரு நல்லயோ
கம், அது அட்டமத்திற் குரு
சுக்கிரனிருக்க, சரராசி இலக்கின
மாக அதில் புதனிருக்க ஐந்து,
ஏழு, பதினொன்றில் சூரியன் சந்
திரன் சனி இவர்களிருப்பதாம்.
மந்தாரசத்தமி - மாசிமாதத்தின் பூரு
வபக்கத்து ஏழாந்திதி. இது ஓர்
விரதநாள்.
மந்தார்த்தம் - சூரியனது மையத்தி
லிருந்து வேறொரு கிரகத்திற்கு
ள்ள தூரஅளவு.
மந்திரி - சுக்கிரன்,
புதன், வியாழன்.
சோதிடன்,
மழைக்குறி.
ளஅங
மரணகண்டி மாரககாலத்தைத்
மரணகண்டிகை] தெளிவுபெறக்கூ
றும் சோதிடநூல்.
மரணகண்டிதம் - மாரககால நீண்ண
யம்.
மரணச்சனி
மூன்றாமுறையாக
வரும ஏழரைநாட்டுச்சனி, மாரகச்
சனி.
மரணத்தானம் - மாரகத்தானம்.
மரணயோகம் - ஒரு கெட்டயோகம்.
அது நாலாமிராசிமுதல் ஏழாமி
ராசிவரை ஏழு கிரகங்கள் நிற்பது.
அன்றியும் கெட்டயோகம். விப
ரம்: - அமிர்தாதி யோகத்திற்
காண்க.
மருங்கை - குழந்தை பிறந்த ஐந்தா
நான்.
மருத்துவநாள் - அசுபதி நட்சத்திரம்.
மருவகம்- இராகு.
மலமாதம் - இரண்டமாவாசை அல்
லது இரண்டு பூரணை வரும்மாதம்.
மலை -இலக்கினம்.
மந்தோச்சம் - கிரகவட்டத்தின் தூர மலைநட்சத்திரம் - அத்தம், இரே
மானமுனை.
2
மயநூல் 1 சிற்பநூல் முப்பத்திரண்டி
னொன்று.
மயம்
மயன் - சிற்பசாஸ்திரஞ் செய்த ஒரு
தேவதச்சன்; இவன் காசிபமுனிக்
குத் திதிவயிற்றிற் பிறந்தவன்.
மயிலை- மீனவிராசி.
மயில் - பஞ்சபட்சியினொன்று.
மயூகம் - கிரணம், பிரபை.
மரக்கால் - ஆயிலியம், சோதிநாள்.
வதி, உத்திராடம், உத்திரட்டாதி,
சித்திரை, திருவாதிரை, புனர்
பூசம், பூராடம் என்பனவாம்.
மழைக்குறி - வைகாசிமாதம், தேய்
பிறை சதுர்த்தசியில் மழைபெய்
தால், அவ்வருடம் நல்ல மழை
யுண்டாம். சுக்கிரனிருக்கு மிரா
சிக்கு நாலு எட்டில் சனி நிற்கில்
மழையுண்டாம், மத்தியில் பாவக்
கோள் நிற்கில் மழையில்லை.<noinclude></noinclude>
j1534brw3ba8uv4llvo1nssb7mqc07u
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/191
250
641498
1926905
2026-04-25T06:49:48Z
Magizh Sundram
16422
OCR
1926905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ள அச
சோதிடப் பேரகராதி.
மனையிலக்கணம்.
மழைக்குறிமூலங்கள்
மனையிலக்கணம்.
மழைபெய் மனையிலக்கணம்
வதை அறியுங்குறிக்குஆதாரங்கள்.
அது அதிவெப்பம்,இடி,காற்று,
குளிர், மழைக்கால், மின்னல்,
மேகம், பரிவேடம், வானவில்
என்பனவாம்.
மழைக்கோன் - சுக்கிரன்.
மறி-மேடவிராசி.
மறைத்தானம்
- நாலாமிடம்.
மறையவன்
மறையோன்
வியாழன்.
மறைவிடத்தானம் - இலக்கினத்து
க்கு மூன்று, ஆறு, எட்டு, பன்னி
ரண்டாமிடங்கள்; அன்றியும் சூரி
யன், செவ்வாய், சனி, இராகு
கேது இவர்களுக்கு எட்டு, பனி
ரண்டாமிடங்களும்,சந்திரன்,
புதன், வியாழமிவர்களுக்கு, மூன்று,
ஆறு, எட்டு, பனிரண்டாமிடங்
களும் சுக்கிரனுக்கு மூன்று, எட்
டாமிடங்களுமாம்.
மனு-இலக்கினம்.
மனை
-
இரண்டாயிரத்து நானூறு
குழிகொண்ட நிலம், பதினாறரை
யேயரைக்கால் குழிகொண்ட
நிலம்,வீடு.
மனைகோலுமாதங்கள்
-
வீடுகட்டு
மாதங்களைக் காண்க.
மனையடிசாஸ்திரம் மனை யிலக்க
மனையடிசாத்திரம் ணம், வீடு
முதலியன கட்டும் விதிவிளக்கும்
நூல்.இதன் விபரங்களனைத்தையும்
சிற்பநூற் பொக்கிஷமென்னும்
புத்தகத்தில் விரிவாயறியலாம்.
நானூ
-
வீடு முதலியன
கட்டும் விதி; அது மனையை(தலை
வன் கைமுழம் இரண்டுகொண்
டது.) தச்சு முழத்தாலளந்து
குழியாக்கி அந்தக் குழியை எட்
டிற் பெருக்கி பனிரண்டிற் கழி
த்த மிச்சம் ஆதாயம்: ஒன்பதில்
பெருக்கிப் பத்தில் கழித்த மிச்
சம் செலவு, காலில் பெரு
னூறிற் கழித்த மிச்சம் வயது,
எட்டு ஏழில் பெருக்கி இருபத்
தேழிற் கழித்த மிச்சம நட்சத்தி
ரம், மூன்றில் பெருக்கி எட்டிற்
கழித்த மிச்சம் யோனி, ஒன்பதிற்
பெருக்கி ஏழிற் கழித்த மிச்சம்
வாரம், ஒன்பதிற் பெருக்கி நாலிற்
கழித்த மிச்சம் சாதி, காலிற் பெரு
க்கி ஒன்பதிற் கழித்த மிச்சம் அம்
சம், ஒன்பதிற் பெருக்கி முப்பதிற்
கழித்த மிச்சம் திதி, இதில் பதி
னைந்துக்குட்பட்டால் வளர்பிறை
யாகவும், பதினைந்துக்கு மேல்
தேய்பிறையாகவுங் கொள்க; நா
லிற் பெருக்கி ஐந்திற் கழித்த மிச்
சம் சூத்திரமாகக்கொள்ளவும், நா
லிற் பெருக்கி பனிரண்டில் கழி
த்த மிச்சம் இராசி. இவற்றுக்கு
யோனியாவன:-
ஒன்றுக்கு கெருடன், இரண்
டிற்கு பூனை, மூன்றுக்கு சிங்கம்,
நாலுக்கு நாய், ஐந்துக்குப் பாம்பு,
ஆறுக்கு எலி, ஏழுக்கு யானை, எட்
டுக்கு முயல் எனக்கொள்க; இவற்
றுள் பூனை, எலி, முயல் ஆகாவாம்,<noinclude></noinclude>
6ip85z2t42pbodq5zpzpz7fbfie3028
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/192
250
641499
1926906
2026-04-25T06:50:07Z
Magizh Sundram
16422
OCR
1926906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
மனையிலக்கணம்.
அம்சம் - ஒன்றுக்கு சோரம், இர
ண்டுக்குப் புத்தி,மூன்றுக்கு சத்தி,
நாலுக்கு தானியம், ஐந்துக்கு ராச்
சியம், ஆறுக்கு கிலீபம், அல்லது
பேடு, ஏழுக்கு வருத்தம், எட்டு
க்கு ரோகம், ஒன்பதுக்கு சுபம்.
இவைகளில் ஒன்று, ஆறு, ஏழு
எட்டு ஆகாவாம்.
சூத்திரம் - ஒன்றுக்கு பாலன்,
இரண்டுக்கு குமாரன், மூன்றுக்கு
இராசன், நாலுக்கு கிழவன், ஐந்
துக்கு மரணம். இவற்றுள் நாலு
ஐந்து ஆகாவாம்.
வீட்டின் அகலத்தை ஒன்பது
பங்காக்கி வலத்தில் ஐந்து பங்கு
தள்ளி, கின்ற பங்கில் தெருவாசற்
படி வைக்கவும், வலத்திலிரண்டு
பங்கும் இடத்தில் மூன்றுபங்குக்
தள்ளி நின்ற பங்கு நாலில் உள்
முற்றமாக்க நன்று. இம்முற்றம்
தென்வடல் நீளமாகிய சந்திர
பத்தியாக வைப்பது விசேட
மென்றும், கிழமேல் நீளமாகிய
சூரியபத்தியாக வைப்பது மத்திம
மென்றும் கூறுவாருமுளர்.
மன்மத
Dள அரு
கிழக்கில் அடுக்களை வீடுகட்டவும்;
கிழக்கில் ஆட்டுக்கொட்டில் கட்ட
வும், தென்கிழக்கிற் கொக்கிஷவீ
டியற்றவும் நன்றாம், மற்றும் கிழக்
கில் குளிக்குமிடமும்,அக்கினியிற்
சமைக்குமிடமும், தெற்கில் படுக்
கைவீடும், நிருதி மூலையில் சாத்
திரமுதலியன வைக்குமிடமும்,
மேற்கில் போசனஞ் செய்யுமிட
மும், வாயுமூலையில் பசுத்தொழு
வமும், வடக்கில் தனதானிய
வீடும், ஈசானியத்தில் பூசைவீடும்
அமைக்கவும் நன்றாம்.
சந்திரனின்ற லக்கினத்தில்
அஸ்திபாரம் (அடிப்படை)செய்து
புதன்கின்ற லக்கினத்திற் கட்டி,
சுக்கிரன்நின்ற லக்கினத்தில்
வேய்ந்து (வீடுமூடி), குருநின்ற
லக்கினத்திற் கிரகப்பிரவேசஞ்
செய்தால் இந்திரபோக முண்
டென்பதாம்.
உதாரணம்:- மதியுதிக்கக் கால்
நாட்டி மாறுதிக்கக் கட்டி, விதி
வெள்ளி தானுதிக்க வேய்ந்து-
பதிதனிலே, மந்திரி தானுதிக்க
மாடங் குடிபுகுந்தால், இந்திரன்
போல் வாழ்ந்திருக்க லாம். என்
னுஞ் செய்யுளாலு முணர்க.
மனைவித்தானம் - ஏழாமிடம்.
மனோகாரகன் - சந்திரன்.
தானிருக்கு மனைக்குத் தெற்
கில் குப்பைகொட்டவும், தென்
மேற்கில் வைக்கோல்போர் கட்ட
வும், மேறகில் எருமைத்தொழு
இடவும், வடமேற்கிற் தானியக்
களஞ்சியம் அமைக்கவும்,வடக்கில் மன்மத
பசுத்தொழுவங் கட்டவும், வட வருடம்.
24
-
இருபத்தொன்பதாவது<noinclude></noinclude>
hivl3w2x879cmc01xylotiawl3ep813
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/193
250
641500
1926907
2026-04-25T06:50:32Z
Magizh Sundram
16422
OCR
1926907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>அக
மாகாணி.
சோதிடப் பேரகராதி.
மாசதிசையின் காலங்கள்.
மன்மதவருடப்பலன்-நல்ல மழை மாகேந்திரம் - நித்தியயோகத் தொ
யும், மனிதர்கட்கியைந்த எல்லா
ன்று.
வகைப்பொருள்களும் வீர்த்தியும் மாகேந்திரப்பொருத்தம்
நானாவித சீவவர்க்கங்கள் சுகவாழ்
வும் அடையும். ஆயினும் சீனா
முதலிய தேசங்களில் அரசர்களுக்
குள் கலகங்களும், இந்தியாவின்
தென்பாகத்தில் அதிகக்காற்றும்,
2 தேன்முதலிய வனாந்திரப் பொரு
ன்கள் குறைவு முண்டாம்.
உதாரணம்;-மன்மதத்தில்
மாரியுண்டு வாழுமுயி ரெல்லா
மே, நன்மைமிகும் பல்பொரு
ளும் ஈண்ணுமே - மன்னவரால்,
சீனத்திற் சண்டையுண்டு தென்
றிசையிற் காற்றுமிகும், கானப்
பொருள்குறையுங் காண்.
(இடைக்காடர்)
மன்னன் - அரசன், ஆடவர் பருவத்
தொன்று, இது முப்பத்திரண்டு
க்கு மேல் நாற்பத்தெட்டுக்குட்
மா
பட்டது, உத்திரட்டாதி நட்சத்
திரமுமரம்.
மா
- இருபதில் ஒரு பகுதிகொண்ட
ஓரெண்.
மாகண்டம்
-
அதிகண்டம், இது
யோகம் இருபத்தேழினொன்று.
மாகம் - ஆகாயம், மகநட்சத்திரம்,
மாசிமாதம்.
மாகலி - சந்திரன்.
-
மாகாணி பசினாறிலொருபங்கு
'கொண்ட எண்,
-
மணப்
பொருத்தத்தொன்று, அதுபெண்
நட்சத்திர முதல்
ஆண் நட்சத்
திரம் நாலு, ஏழு, பத்து, பதின்
மூன்று, பதினாறு, பத்தொன்பது,
இருபத்திரண்டு, இருபத்தைந்து
ஆனால் உத்தமமென்பதாம்.
மாசதிசை - ஒருமாத அளவுக்குள்
நடக்குங் கிரசதிசை. அவை சென்
மகட்சத்திர முதற்கொண்டுமாதம்
பிறந்த நட்சத்திரம் வரைக்கும்
எண்ணிய தொகையை ஏழில்
பெருக்கி ஒன்பதில் கழித்த மிச்
சம் 1 - க்கு சூரியதிசை, 2-க்கு
புததிசை, 3-க்கு இராகுதிசை
4 - க்கு குருதிசை, 5-க்கு கேது
திசை, 6 - க்கு சந்திரதிசை, 7-
க்கு சனிதிசை, 8-க்கு சுக்கிர
திசை,9-க்கு செவ்வாய்திசை
என்பதாம்.
-
சூரிய
மாசதிசையின் காலங்கள்
திசை நாள் ஒன்றரை, புதன்றிசை
நாள் நாலேகால், இராகுதிசை
நாள் நாலரை, குருதிசை நாள்
நாலு, கேதுதிசை நாள் ஒன்றே
முக்கால், சந்திரதிசை நாள் இரண்
டரை, சனிதிசை நாள் நாலேமுக்
கால், சுக்கிரதிசை நாள் ஐந்து,
செவ்வாய்திசை நாள் ஒன்றே
முக்கால் என்பதாம்.<noinclude></noinclude>
m2u44asf1qljb4ojgdozjuaf96hvggk
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/194
250
641501
1926908
2026-04-25T06:50:59Z
Magizh Sundram
16422
OCR
1926908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
மாதசூன்யம்.
-
மாசதிசையின் பலாபலன் - சூரிய
திசையில் அலைச்சல், தலைவலி,
பகை, புதனில் பந்துக்கன் வரவு,
சுகம், ஆலையதரிசனம், ராகுவில்
துர்ச்சனர் நேசம், விபசாரதோ
சம், விரோதம், குருவில் சுகபோ
ஜனம், தானியலாபம், வாகன
யோகம், கேதுவில் சரீரபீடை,
விபசாரதோசம்; சந்திரனில் தன
லாபம், தேய்பிறையானால் தன
நஷ்டம்; சனியில் களத்திரபகை,
புண்ணோய், கலகம், சுக்கிரனில்
இரத்தின லாபம், செவ்வாயில்,
கலகம் என்பதாம்.
இப்பலாபலன்களைக் கோசரத்தை
யனுசரித்துக் கண்டுகொள்க,
மாசத்தியாச்சியம் - மாதக்கழிவு.
மாசப்பிரவேசம் மாதப்பிறப்பு.
இது இராசியிற் சூரியன் பிரவே
சித்தல்.
மாசமானம் - வருடம்.
மரசம் - மாதம், மாதத்திற்காண்க.
மரசாந்தம் - அமாவாசை, மாதத்தின்
கடை டசி.
மாசி - கும்பாவி, கும்பராசி, மகநட்
சத்திரம், மாகம்,மேகம்.
மாசிமகம் - மகாமகத்திற் காண்க.
மாதசங்கிரமம் - மாதப்பிறப்பு.
மாதசூன்யம் - ஒவ்வொரு மாதத்தி
லும் இன்ன இன்ன திதி, நட்சத்
திரம், இராசி ஆகிய இவைகள்
வரில் சூனியமென்பது, விபரம்;-
சித்திரையில் அஷ்டமி, ஏகாதசி,
மாதபலன்.
ளஅஎ
ரோகணி, கும்பம் ஆகியவைகளும்,
வைகாசியில் துவாதசி, சித்திதை
சோதி, உத்திராடம், மீனம் ஆகிய
வைகளும், ஆனியில் திரயோதசி,
புனர்பூசம், இடபம் ஆகியவைக
ளும், ஆடியில் சஷ்டி, அவிட்டம்,
மிதுனம் ஆகியவைகளும், ஆவணி
யில் அமாவாசை, பூரணை, பூரா
டம், மேடம் ஆகியவைகளும்,புர
ட்டாசியில் சத்தமி, சதையம், பூர
ட்டாதி, ரேவதி,கன்னி, தனுசு
ஆகியவைகளும்,ஐப்பசியில் நவமி,
பூரட்டாதி, விருச்சிகம் ஆகியவை
களும், கார்த்திகையில் பஞ்சமி,
கார்த்திகை, பூசம், மகம்,துலாம்
ஆகியவைகளும், மார்கழியில் துதி
யை, நவமி, அனுசம், உத்திரட்
டாதி, விசாகம், தனுசு ஆகியவை
களும், தையில் பிரதமை,அஸ்
தம், திருவாதிரை, ஆயிலியம், கட
கம்
ஆகியவைகளும், மாசியில்
சதுர்த்தி, தசமி,மூலம்,திருவோ
ணம், மகரம் ஆகியவைகளும், பங்
குனியில் சதுர்த்தி, பரணி, கேட்
டை, சிங்கம் ஆகிய இவைகளும்
சுபகாரியங்களுக்கு விலக்காம்.
மாதபலன் - மாதம் பிறந்த நட்சத்
திரத்தைக்கொண்டு சுகதுக்கமறி
வது.விபரம்:- சென்மநட்சத்திர
முதல் மாதம் பிறந்த நட்சத்திரம்
எண்ணிக்கண்ட தொகை
வரை
யை ஏழிற்பெருக்கி எட்டிற் கழி
த்த மிச்சம் 1-க்கு பிணி, 2-க்கு<noinclude></noinclude>
fxqofmn46dvazcc0gq6x61ahd0q9lxb
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/195
250
641502
1926909
2026-04-25T06:51:16Z
Magizh Sundram
16422
OCR
1926909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூய
மாலை.
சோதிடப் பேரகராதி.
மிதுனநிறம்.
நின்ற ராசிக்குத் திரிகோணத்தில் | மாலைக்காதம் - மாலைநேரம்.
சனிவருங்காலமு மாரகமாம்.
இரண்டாமிடத்தில் பாபக்கிர
சங்களிருக்க அல்லது பார்க்க இல
க்கினாதிபதியும், வியாழனும் பாபக்
கிரகங்களும் ஒரே இராசியிலிரு
க்க எட்டில் இராகுவிருக்க விஷத்
தினால் மாரகமாம்.
மாரிகாலம் -ஐப்பசி, கார்த்திகை
யின் பருவகாலம்.
மாரிக்குடா -வடகீழ்த்திசை.
மாரிகாள் - உத்திரநட்சத்திரம்,மழை
காலம்.
மார்பு - ஐந்தாமிடம்.
மார்கழி
மார்கழிமாதம், மார்க்க
சிரம், மிருகசீரிட நட்சத்திரம்.
மார்க்கசிரம்
கிரம்} மார்கழி மாதம்.
மார்க்கம்
மார்த்தண்டம் - சூரியனுடைய மண்
டலம்.
மார்த்தாண்டன் - சூரியன்.
மார்பதை - மாதம்.
மாலதி - இரவு,சந்திரகிரணம்.
மாலவன் - புதன்.
மாலி - ஆதித்தன்.
மாலிகாயோகம் - ஒரு விசேட நல்ல
யோகம். அது இலக்கின முதல்
ஏழு ராசிவரையில் இராகு கேது
மாலைப்பொழுது - அந்திக்காலம்.
மாலைவாரம் - அந்திப்பொழுது.
மாலைவெள்ளி - அந்திவெள்ளி.
மாலோன்
மால்
புதன்.
மாழ்கு - மிருகசீரிட நட்சத்திரம்.
மாளயபக்கம் புரட்டாசி மாதம்,
மாளயபட்சம் 5அமரபக்கத்துப் பிர
தமை முதல் பூருவபக்கத்துப் பிர
தமை மட்டு முள்ள காலமாம்.
மாளவயோகம் - இரு பாம்பு மதி
இரவி ஆகியவர்கள் நீங்கிய பஞ்சக்
கிரகங்கள் ஆச்சியுச்சமிவைகளிற்
கேந்திரித்து நிற்பதாம்.
(2) சுக்கிரன்,மூலத்திரிகோணம்,
ஆச்சி, உச்சம், கேந்திரம், உதய
மிவைகளில் நிற்பதாம்.
மானபோதம் - சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று,
மானம்- அளவு,கணிதம்.
மானேந்தி - சந்திரன்.
மானேறு - உத்திரகட்சத்திரம், மகர
விராசி.
மான் - மகரவிராசி,
மான்றலை - மிருகசீரிடகான்.
மி
நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாம்./மிகிரன் - சந்திரன், சூரியன்.
(2) நாலாமிடமுதல் பத்தாமிடம் மிதுனஉருவம் - ஆணும் பெண்ணுஞ்
வரை இராகு கேது நீங்கிய ஏழு
கிரகங்கள் நிற்பதாம்
மாலை - அந்திப்பொழுது, இரா.
சேர்ந்த இரட்டையுருவம்.
மிதுனதிக்கு - கிழக்கு.
மிதுனகிறம் - கறுப்பு.<noinclude></noinclude>
5moahh3hep1f29at1nl4kxpwxl3jhqo
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/196
250
641503
1926910
2026-04-25T06:51:48Z
Magizh Sundram
16422
OCR
1926910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
மிருகயோகம்.
மிதுனம் - இரட்டை, சயமகள்,
தண்டு, பாடவள்,பாடவை, யாழ்,
விழவு.
மிதுனமாதம் - ஆனிமாதம்.
மிதுனரவி - ஆனிமாதம், மிதுனத்
தில் சூரியன் கிற்றல்.
மிதுன வீதி - சூரியன் வீதி யினொ
ன்று. அது தனுசு,மகரம்,கும்பம்,
விருச்சிகம் என்பனவாம்.
மிதுனாங்கம் - கழுத்து.
மித்திரநாள் - அனுடநட்சத்திரம்.
மித்திரன் - சிநேகிதன், பன்னிரு
சூரியருளொருவன், நாலாயிரே
-
வதி, சூரினுக்கும் பெயர்.
மித்துரு - சினேகிதன்.
மித்துருத்தானம் - இலக்கினத்திற்கு
நாலாமிடம், நட்பு, வீடு.
மிருகசிரம் - மிருகசீரிடம்.
மிருகசீரிஷம் )இந்திரன்,ஐந்தானம்,
மிருகசீரிடம் கரிப்புறம், பரலை,
பேராளன், மதிகான், மார்கழி,
மாழ்கு, மான்றலை, மும்மீன்,
வெய்யோன் என்பனவரம்.
மிருகதரன் - சந்திரன்.
மிருகம் - மிருகசீரிடம்.
மிருகயோகம் - ஒரு நல்ல யோகம்.
அது எட்டோன் நின்ற அங்கிசாதி
பன் சுபக்கோளோடு பாக்கியத்
திருக்க பாக்கியாதிபதி யுச்சம்
பெற்று நின்றாலும்,
(2) விரையாதிபன் ஆச்சிபெற
அட்டமாதிபன் நாலு, பனிரண்டு
இவைகளிலிருக்க பாக்கியாதிபன்
மிருதவேளை.
ளகூக
பார்வைபெற்று நின்றாலும்
யோகமாம்.
மிருகலாஞ்சனன் - சந்திரன்.
மிருகாங்கம் - கரற்று, சந்திரன்.
மிருகாங்கன் - சந்திரன்.
மிருதங்கயோகம் - ஒரு நல்ல யோ
கம். அதுஇலக்கினாதிபதியின் அங்
கிசாதிபதி அமிசையில் அமிசை
பெற்றிருக்கின்றானோ அதற்கு
டையவன் உச்சகேந்திரகோணத்
தில் சுபக்கிரகத்துடன் கூடி நின்
றாலும்,
(2) செவ்வாய் ஆச்சிபெற்று அமி
சையில் உச்சாங்கிஷம் பெற்று
நிற்க வியாழன் ஏழாம் நோக்குப்
பெற்று சின்றாலும்,
(3) ஐந்தோன் நின்ற அங்கிசாதி
பன் கேந்திர கோணத்திலாவது
அல்லது உச்சாங்கிசத்திலாவது
நின்றாலும்,
(4) சூரியன், செவ்வாய் ஆகிய
இவர்கள் ஆறு, எட்டில் நிற்க சூரி
யன் நின்ற அங்கிசத்துக்கு சனி
கேந்திர கோணத்தில் இருந்தா
லும்,
(5) இலாபாதிபன் உச்சமாய் சுக்
கிரனோடு நிற்க இவர்களிருந்த
இராசியாதிபர் கேந்திரத்தில் நின்
றாலும் இவ்யோகமாம்.
மிருதண்டன் - சூரியன்.
மிருதவேளை - பூர்வான்னமாகிய ஆறு
நாழிகைக்குள் மேடமும், விருச்சி
கமும் ஆறு நாழிகைக்குமேல்<noinclude></noinclude>
8x0yrcy9onnoi16kgu1zs3t7jvfreqy
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/197
250
641504
1926911
2026-04-25T06:52:09Z
Magizh Sundram
16422
OCR
1926911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூஉ
மின்னல்,
சோதிடப் பேரகராதி.
முகூர்த்தம்,
மீ
ஆகாயம், மேல்புறம்.
மீன அங்கம்ட பாதம்,
மீனஉருவம்-மின்.'
பரான்னமாகிய பனிரண்டு நாழி
கைக்குள் கன்னி, கடகம், மிது
ளம் ஆகியவைகளும் பனிரண்டு
க்குமேல் மத்தியான்னமாகிய பதி
னெட்டு நாழிகைக்குள் சிங்கமும்,
கும்பமும், பதினெட்டு நாழிகை
க்குமேல் அபரசன்னமாகிய இரு மீனத்திசை-வடக்கு
பத்துநாலு நாழிகைக்குள் இடப மீனநிறம் - பச்சை.
மும்,துலாமும், இருபத்துநாலு மீனமாதம் - பங்குனிமாதம்.
நாழிகைக்கு மேல் சாயான்னமா
கிய முப்பது நாழிகைக்குள் மக
ரம், மீனம் ஆகிய இவைகள் வருவ
தாம்.
மிருதாகரம் - இடி.
மிருதாண்டன் - சூரியன்.
மிருத்தியபுத்திரன் - கேது
மிருத்தியதிசை-மிருத்துதிசை, மர
ணதிசை.
மிருத்திபூ - இயமன், மரணம்.
மிருந்து - பூமி, மண், மரணம்.
மிருத்துகாரகன்
மிருத்துகிரகம்
மிருந்துகோள்
மாரகஞ்செய்யுங்
கிரகம்.
மிருத்துதிசை - சென்ம நட்சத்திரத்
துக்கு மூன்றாவது நட்சத்திர
சித்திரை, அனு
திசை.
மிருத்துநட்சத்திரம் மிரு க சிரம்,
மிருந்துநான்
டம், இரேவதி.
மிருந்துநிலை - மிருத்துகிரககிலை.
மிருந்துபஞ்சகம் - பஞ்சக பலனி
லொன்று. அது மரணபயம்,
மின்னல் - மின், வானத்திலெழுஞ்
சோதி.
வீணச்சதி - பறையன். மார்ப்பான்.
மீனம் - சலசரம், சலசலம், மச்சம்,
மயிலை,மீன்.
மீனயோகம்
இலாபாதிபனுடன்
வெள்ளி கூடி யுச்சம்பெற்றும்,
இலக்கினாதிபன் கேந்திரம் பெற்
றும் நிற்பதாம்.
மீனாவி- மீனத்தில் சூரியனிற்றல்,
பங்குனிமாதம்.
மீன் - சித்திரை நட்சத்திரம், நட்சத்
திரப்பொதுப்பெயர், மீனவிராசி.
மீன்சுவை - சித்திரை நட்சத்திரம்.
மு
முகம் - இரண்டாமிடம்.
முகில் - மேகம்.
முகிவுகாலம் - மரணகாலம், முடிவு
காலம்.
முகடர்த்தபலன் - முகூர்த்தாயம்.
முகூர்த்தம் - இரண்டு நாழிகைகொ
ண்ட நேரம், இரண்டரை நாழி
கைகொண்டதென்பாருமுளர். சுப
வேளை, நற்காலம், மூன்றேமுக்
கால் நாழிகை கொண்டதுமாம்.<noinclude></noinclude>
e6dew1g8izv34zs18s3fciafbvnp39a
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/198
250
641505
1926912
2026-04-25T06:52:45Z
Magizh Sundram
16422
OCR
1926912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
முண்டீரபாதி.
முப்பிணிக்கோள்.
முகூர்த்தத்திரயம் - உதயம், மத்தி முதலெழுஞ்சனி - மகம்
யானம், அத்தமனம்.
முகூர்த்தவிசேடம்--முகூர்த்தபலன்.
முக்காலம் - மூன்றுகாலம்; அது
இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்
-
காலம் என்பனவாம்.
முக்கானோக்கு.
ன்று.
-
-
கிரகநோக்கினொ
முக்குணம் - மூன்றுகுணம், அது
இராசதம், சாத்வீகம், தாமதம்
என்பனவாம்.
முக்குளம் - பூராடநட்சத்திரம்.
முக்கூட்டு - பரணிநட்சத்திரம்.
முக்கோணம்
கோணம்.
மூன்றுமூலை, திரி
முக்கோல்
ரம்.
முசலயோகம் - ஒரு நல்ல யோகம்
அது பத்தில்பாம்பிருக்க பத்தாதிப
னுச்சம்பெற்று சனிபார்வையோடி
ருந்தாலும்,
திருவோண நட்சத்தி
கிர
(2) இராகு கேது நீங்கிய ஏழு
சங்கள் திரராசியில் நின்றாலும்
இவ்யோகமாம்.
முசலி - சந்திரன்.
முச்சுடர் - சந்திரன்,சூரியன்,நீ
முடவன் - அருணன், சனி.
முடி - இலக்கினம்,
முடிவுகாலம் - யுகாந்தகாலம்.
முண்டபேறான்} சூரியன்.
முண்டன்-இராகு.
முண்டீர பாதி - சூரியன்.
25
25
முதனாள் - அசுபதி நட்சத்திரம்,தலை
நாள், முந்தின நாள்.
முதிர்வயது - கிழப்பருவம்.
முதிர்வேனிலுரிமை -கோடைக்
காற்று வீசலும் கானல் தோன்ற
லும் காடை, வலியான், வானம்
பாடி, காகம், கவுதாரி இவைகள்
மகிழ்தலும், மல்லிகை, புளி, பா
திரி இவைகள் மலர்தலும்,பாலை
காஞ்சிரம், நாவல், இலுப்பை
இவைகள் காய்த்தலுமாம்.
முதிர்வேனில் - ஆனி, ஆடியின்
பருவம்.
முதி - சந்திர கிரணம்.
முதுநீர்ச்சடங்கு - சீமந்தச் சடங்கு.
முதுமகன் - சனி.
முதுவேனில் - ஆனி, ஆடியின் பரு
வம்.
முத்தி -திசை, பிறப்பு, சாவு.
முத்தித்தானம் - பனிரண்டாமிடம்
முத்தொகைவினா - ஒருவகைக் கண
க்கு.
முந்திரி - ஒரு சிற்றிலக்கம். அது
முன்னூற்றிருபது பாகத்தொ
ன்று.
முக்திரிகை - ஒரெண்,
முந்தைநாள் - முதனான்.
முப்பிணிக்கிரகம்)மூவகைப்பிணிக்
முப்பிணிக்கோன்குள்ள கிரகம்.
அது வாதக்கிரகம், பித்தக்கிரகம்,
சிலேத்துமக்கிரகம் என்பனவாம்.<noinclude></noinclude>
s1yf713os03ujpz6u8tt4w877wpn05a
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/199
250
641506
1926913
2026-04-25T06:53:06Z
Magizh Sundram
16422
OCR
1926913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூச
முழுமதி.
சோதிடப் பேரகராதி.
மும்மண்டலம் - பூமி, அந்தரம்,சுவ
ர்க்கம். அன்றியும் அக்கினிமண்
டலம், ஆகித்தமண்டலம், சந்திர
மண்டல மென்பதுமாம்.
மும்மீன் - மிருகசீரிடம்.
மும்மை - முக்காலம், மூன்றாயிருக்
குந் தன்மை, மூன்று,
முயலின் கூடு - சந்திரன்.
முயல் - முசல், இது வடகீழ்த்தி
சைப் பாலன்குறி.
முயற்களங்கம் - சந்திரகளங்கம்.
முயற்காதிலை
முயற்க
சந்திரன்.
முயற்றிசை - வடகீழ்த்திசை.
முரசு - உத்திரட்டாதி நட்சத்திரம்.
முல்லைமுதற்பொருள் - புறவும், புற
வுசார்ந்த இடமும்,கார், மாலை
என்னும் பெரும்பொழுது, சிறு
பொழுது என்பதுமாம்.
முழுகர் (அறுபது நாழிகை, அல்
முழுநாள்லது இருபத்துநான்கு
துரை, அல்லது இருபத்துகாறு
மணி கொண்ட நேரம். இராசிக்
குப்பங்குபடாநட்சத்திரம். இது
அசுபதி, பரணி, ரோகணி, திரு
வாதிரை, பூசம், ஆயிலியம், மகம்,
பூரம், உத்திரம், அஸ்தம், சுவாதி,
அனுசம், கேட்டை,மூலம்,பூரா
டம்,திருவோணம், சதயம், உத்
திரட்டாதி, ரேவதி என்பனவாம்.
முழுநோக்கு - பூரணபார்வை,
முழுப்பார்வை.
முழுமதி - பூரணசந்திரன்.
முன்பனியுரிமை.
முழுமதிக்குடையோன்- சந்திரன்.
முழுமனை - அறுபதடி நீளமும் நாற்
பதடி யகலமுங் கொண்ட நிலம்.
முளரிப்பகை - சந்திரன்.
முறம் - விசாகநட்சத்திரம்.
முறைதெரிந்தோன்
திரி
-
சிற்பசாஸ்
முற்குளம் - பூராடநட்சத்திரம்.
முற்கூறு - முற்பாகம்.
முற்கொளுங்கோல்
நாள்.
பூரட்டாதி
முற்சனி - மகநட்சத்திரம்.
முற்சாமம் - முதற்சாமம்.
முற்பகல் - ஒரு பாலின் முற்பகுதி,
பதினைந்து நாழிகை, அல்லது
ஆறு ஓரை கொண்ட நேரம், ஆறு
மணிகொண்ட காலமுமாம்.
முற்பக்கம் 2 பூருவபட்சம், வனர்
முற்பட்சம்பிறை.
-
முற்பனி - மார்கழி தை மாதங்க
ளின் பனி.
முற்பால்- முற்கூறு,
முற்றில்-விசாகாட்சத்திரம்.
முற்றும் - மூலநட்சத்திரம்.
முன்பக்கம் - பூருவபட்சம்.
முன்பனி - மார்கழி தை மாதங்க
ளின் பருவம்.
முன்பனியுரிமை- கொண்டல் வீச
லும், தூக்கணான், கூகை, ஆந்தை
இவை மகிழ்தலும், மாவும், சிவத்
தியு மலர்தலும் இலந்தை பழுத்
தலும், செந்நெல் விளைதலும்,
கரும்பு முதிர்தலுமாம்.<noinclude></noinclude>
4ofzekwq785xibv0gbo6h5f54823b0z
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/200
250
641507
1926914
2026-04-25T06:53:29Z
Magizh Sundram
16422
OCR
1926914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
மூலகாள்.
முன்னிரவு இரவின் முற்பகுதி,
முன்னிரா சூரியன் அத்தமித்து
பதினைந்து நாழிகை, அல்
லது ஆறு ஓரை, அல்ல.
ஆறுமணி நேரங்கொண்ட காலம்.
முன்னிருட்டு -முன்னிரவினிருள்.
முன்னிலவு - முன்னிரவின் நிலவு.
மூ
மூக்குத்தானம் - இரண்டாமிடம்.
மூக்குசாத்திரம் - சானல்.
மூடம்-மந்தாரம்.
கூரு
மூன்றாமிடத்தின் காரகப்பேர்.
மூலம் - மூலநட்சத்திரம். எந்தத்
தொகையாற் பெருக்கப்படுகிற
தோ அந்தத்தொகைக்கும் பெயர்.
மூலராசி-திரராசி காலு, அது இ-
பம்,சிங்கம், விருச்சிகம்,கும்பம்
என்பனவாம்.
மூலைச்சூலம் - வாரசூலத்தொன்று.
அது திங்கள் சனி தென்மேற்கு
வியாழம் வடமேற்கு, வெள்ளி
ஞாயிறு வடகிழக்கு, செவ்வாய்
புதன் தென்கிழக்கு என்பதாம்.
மூதிரை - திருவாதிரை நட்சத்திரம் : மூன்றாம்பிறை - பங்குனி சித்திரை
மூரி - இடபம்.
மூர்த்தம் -
முகூர்த்தம்.
மூலக்கிரகம் (சுக்கிரன், சூரியன்.
மூலக்கோள் 5.அது மரஞ்செடி முத
லியவைகட்குரியவை.
மூலத்தம்பம் - சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று.
மூலத்திரிகோணம் - சூரியனுக்குச்
சிங்கமும், சந்திரனுக்குக் கடக
மும், செவ்வாய்க்கு மேடமும்,
புதனுக்குக் கன்னியும், குருவுக்
குத் தனு சும், சுக்கிரனுக்குத்
துலாமும், சனி ராகுவுக்குக் கும்
பமும், கேதுவுக்குச்சிங்கமும்,குளி
கனுக்கு மீனமுமாம்.
மூலத்துருவம் - கிரகவீதியின் மூல
நீள அளவு.
மூலாட்சத்திரம் அசுாநான், அன்
(pல,ஜ் ளி,குருகு,
கொக்கு, சிலை, தேக்கடை, வில்
என்பனவாம்.
தென்கோடுயர்ந்தும்,
வைகாசி
முதல் மார்கழி வரை வடகோடு
யர்ந்தும், தையும் மாசியும் சமனா
யுமிருக்கவேண்டும். இல்லாவிடில்
கலகமும் பஞ்சமுமுண்டாம்.
-
உதாரணம்; - மீனாடு தெற்கு
யர மிக்கெட்டு மேவடக்காம், தா
னேமான் கும்பஞ் சரியாக-மா
னேகேன், சொன்னபடி சோம
னிரானெனிலோகோன்மடி
வான், அன்னமரி தாகிவிடு மாம்
என்னுஞ் செய்யுளாலு மறிக.
மூன்றாமிடத்தின் காரகப்பேர்-வல்
லமை, கீர்த்தி, விஜயம், வெற்றி,
பராக்கிரமம், தைரியம், சகோ
தாம்,காவியம், அடிமை, வலது
காது,ஆயுள்,ஆபரணம், சேவகா
விருத்தி, வலதுகன்னம்,
தேச வர்த்தமானம், கேள்வி முத
லியனவாம்.
பல்<noinclude></noinclude>
hg5zl1fjo5neh4dfvqzjpi9ufmjreo9
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/201
250
641508
1926915
2026-04-25T06:53:51Z
Magizh Sundram
16422
OCR
1926915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூ
மேகசம்.
மெ
சோதிடப் பேரகராதி.
மெய் - இலக்கினம், சந்திரலக்கின
முமாம்.
மெய்ப்பீரம் - மேகம்.
மெய்யுவமம் - சூரியப்பிரகாசம்.
மே
மேககாலம் - கார்காலம்.
-
மேககர்ச்சனம் - இடி.
மேகதீபம் - மின்.
மேகபூதி-இடி.
மேகமண்டலம் - முகின்மண்டலம்.
மேகயோகம் ஒரு நல்லயோகம்.
அது வியாழனுக்கு மூன்றில்
வெள்ளியும், வெள்ளிக்கு ஒன்ப
பதில் சூரியனும், பத்துக்குடைய
வன் நாலிலுமிருப்பதாம்.
மேகவிரோதி - பெருங்காற்று.
மேகாகமம் - கார்காலமழை
மேகோற்பத்தியிடம் - இன்ன கிர
கம் மேகாதிபதியானால் இன்ன
மேரு
மேசம்- ஆடு, உதள், கொறி, தகர்,
மறி, மேடம், மை,யாடு, வருடை
என்பனவாம்.
மேடகம் - மேடம்.
மேஷமதி
மேடமதி
மேஷமாதம்
மேடமாதம்
சித்திரைமாதம்.
மேடம் - மேசவிராசி, மேசத்தைக்
காண்க.
மேடவுருவம் - வெள்ளாடு.
மேடச்சாதி - சத்திரியன், வெள்ளா
ளன்.
மேடத்திக்கு -கிழக்கு.
மேடகிறம் - செவப்பு.
மேடாவி - சித்திரைமாதம், மேடத்
தில் சூரியனிற்றல்.
மேடவிடபம் - மேடாயனம்.
மேடவீதி - சூரியவீதியினொன்று.
அது இடபம், சிங்கம்,மிதுனம்,
-
கடகம் என்பனவாம்.
மேடாங்கம் - தலை
திக்கில் மேகோற்பத்தியென்பது. மேடாயனம் சூரியனிடபவிராசி
அது சூரியனாகில் கிழக்கிலும்,
சந்திரனாகில் தென்மேற்கிலும்,
செவ்வாயாகில் தெற்கிலும், புத
னாகில் வடக்கிலும், வியாழனாகில்
வடகிழக்கிலும், வெள்ளியாகில்
தென்கிழக்கிலும், சனி யாகில்
மேற்கிலு மேகவுற்பத்தி என்ப
தாம்.
மேக்கு - மேற்கு.
மேகசம் - இருன், முகில்.
மேஷாயனம் [ யினின்று கற்கடக
விராசிக்குச் செல்லும்பாதை, உத்
தராயணமூலம்.
மேதினியோகம் - ஒரு சமயோகம்.
அது ஐந்து, ஒன்பது, ஏழு, பத்து
இவைகளில் சுபர்களிருக்க,பாவர்
கோக்கில்லாதிருப்பதாம்.
மேதை - புதன்.
மேரு - இலக்கினம், பூமிக்கு நாரா
சம்போல் தென்துருவ முதல்
வடதுருவம் வரை உள்ளே முளை<noinclude></noinclude>
78gr5mn6roofa3pr204fosdxtncga7z
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/202
250
641509
1926916
2026-04-25T06:54:16Z
Magizh Sundram
16422
OCR
1926916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
மேனோக்குநாள்.
கஎ
பாவயோகம்.
த்து வடதுருவத்தில் வளர்ந்திருக் மேனோக்குராசி -மகரம், மீனம்.
கும் மலை, வடதுருவஞ் சுமேரு
வென்றும், தென் துருவங்குமேரு
வென்றும், வடவாமுகமென்றுங்
மை
மை
கூறப்படும். சுமேருவை சாதா
இருள், மேடவிராசி,
மைதுனம் - மிதுனம்.
மைனம்-மீன்.
ணமாக மேருவென்று வழங்கப்
படும். இந்த மேருப்பிரதேசத்தி
மொ
தொகை.
மோ
சுக்கிரன்.
மோககாரன்
லிருப்பவர்களுக்கு உத்தராயண மொத்தம்
காலமாகிய ஆறுமாதம் பகலும்: மொத்தளம்)
தெட்சணாயன காலமாகிய ஆறு
மாதம் இரவுமாகும்.
மேலை- மேல், மேற்கு, வருங்காலம்.
மேலைத்திசை - மேற்றிசை.
மேலைநாள் - முன்னாள்.
மேல் - ஆகாயம், மேற்கு, மேற்புறம்,
வருங்காலம்.
மேல்காற்று - கோடைக்காற்று.
மேல்கை- மேற்கு.
மேல்நோக்குக்கிரகம் 2 மேற்பார்
மேல்நோக்குக்கோள்
கிரகம். அது சூரியன்.
மேல்பார்
மேல்பால்
வையுள்ள
மேற்கு.
மேல்வாய் - ஒன்று முதலாய் மேற்
பட்ட கணக்கு,
மேற்கு -
மேல், மேற்றிசை.
மேற்கோள் - சனி.
மேற்றிசை - மேற்குத்திக்கு.
மேற்றிசைப்பாலன்-வருணன்.
மேனோக்கு நட்சத்திரம்
மேனோக்குநாள்
ஆயிலியம்
கார்த்தி
கை, பரணி, பூரம், பூராடம், பூர
ட்டாதி, மகம், மூலம், விசாகம்
என்பனவாம்.
மோக்கம் இலக்கினத்திற்குப் பனி
2
மோட்சம் ரண்டாமிடம்.
மோனம்-உரோகணிகட்சத்திரம்.
ய
உக்கராத்திரி - கார்த்திகை மாதத்
தில் வரும் பெளரணை; இது ஓர்
விரதநாள்.
யக்கியநாழிகை - மகநட்சத்திரம்.
மக்கியம் - துவாபரயுகம்.
யமகண்டம்
-
எமகண்டம்; இது
விலக்கப்பட்ட வேளைகளிலொ
ன்று.
யமதேவதை - பரணிநட்சத்திரம்.
யமம் - இயமம், சனி,
யமன் - அட்டதிக்குப் பாலகருளொ
தென்றிசைக்குடை
ருவனாகிய
யோன்.
யமுனாசனகன் - சூரியன்.
யவயோகம் - ஒரு நல்ல யோகம்.
அது ஒன்றாம் ஏழாமிடங்களிற்<noinclude></noinclude>
8rjqlcfapd525zz1lx7j604456dqpti
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/203
250
641510
1926917
2026-04-25T06:54:41Z
Magizh Sundram
16422
OCR
1926917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>ளகூஅ
யாமம்.
சோதிடப் பேரகராதி.
பாவரும், நாலுபக்கத்திற் சுபரும்,
மற்றவிடத்திற் கிரகமில்லாதிருப்
பதுமாம்.
யவனகாவியம் - ஓர் சோதிடநூல்.
யவனாசாரியன் - ஓர் சோதிட அறி
ஞன்
யா
யாடு - மேடவிராசி.
யாண்டு - வருடம்.
யாத்திரைத்தானம் -ஏழாமிடம்.
யாத்திரைநாள் - திங்கள், புதன்,
வியாழம், வெள்ளியும், துதிகை
திருதிகை, பஞ்சமி,சத்தமி, தசமி,
திரயோதசியும், அசுபதி, மிருந
சீரிடம், புனர்பூசம், பூசம், அத்
தம்,அநுசம், திருவோணம், அவி
ட்டம், இரேவதி ஆகிய இவை
களும் உத்தமமாம், உத்திரம், உத்
திரட்டாதி இவைகள் மத்திம
மாம். கரணங்களில் பத்திரவாகர
மணம் ஆகாது; இலக்கினங்களில்
இடபம், மிதுனம், கடகம், சிங்
கம், துலாம், தனுசு, மகரம், மீனம்
இவைகள் சுபமாம்; யாத்திரைக்கு
முக்கியமாய் யோகினி வராசூலை
இவைகள் பார்க்கவேண்டு மென்
பதாம்.
யாமகோடம் - நாழிகைவட்டம்.
யாமநீ- இரவு.
யாமபதி - சந்திரன்.
யாமம் - இராத்திரி, சாமம், தெற்கு,
மாலைப்பொழுதின் பின் பத்து
காழிகை.
யுகசந்தி
யாமவதி - இராத்திரி.
யாமி - இரவு, தெற்கு.
யாயிகை- இரவு.
யாமிநீபதி - சந்திரன்.
யாமியம் - தெற்கு
யாமியாயனம் - தெட்சணாயனம்,
யாமியை
யாமினி 5
இரவு.
யாமினியம் - தெற்கு.
யாமீரன் - சந்திரன்.
யாமீரை-
இரவு.
யாமை -இரவு, தெற்கு, பரணி.
யாழ் - அசுபதிகான்,
மிதுனவிராசி.
யாளி - சிங்கவிராசி.
யானைத்திசை- வடக்கு.
யு
திருவாதிரை,
யுகங்கள் - கிரேதாயுகம், திரேதாயு
கம், துவாபரயுகம், கலியுகம் என்
பனவாம். இதன் வருடங்கள்
கிரேதாயுகத்திற்கு பதினே முழு
லட்சத்து இருபத்தெண்ணாயிரம்,
திரேதாயுகத்திற்கு பனிரண்டு
லட்சத்துத் தொண்ணூற்றாறா
யிரம், துவாபரயுகத்திற்கு எட்டு
லட்சத்து அறுபத்துநாலாயிரம்,
கலியுகத்திற்கு நாலுலட்சத்து முப்
பத்தீராயிரம். மற்றவிபரம் காலத்
திலறிக.
யுகசந்தி - கிரேதாயுகத்திற்கு தேவ
வருடம் எண்ணூறும் மற்ற யுகங்
களுக்குத் தனித்தனியே இரு
நூறு வருடங்களுமாம்.<noinclude></noinclude>
2btmcucncp9bcnlxulyg7kpe2f2pwxw
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/38
250
641511
1926918
2026-04-25T06:54:52Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடையில் பாய்ந்த எதிர்பாரத சோதனை கண்டு பாகவதர் பதைத்துப் போனார் என்றும்—கலைவாணர் அப்போதும் கலங்காமல்தான் இருந்தார் என்றும்—அருகில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||29}}</noinclude>இடையில் பாய்ந்த எதிர்பாரத சோதனை கண்டு பாகவதர் பதைத்துப் போனார் என்றும்—கலைவாணர் அப்போதும் கலங்காமல்தான் இருந்தார் என்றும்—அருகில் இருந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பதைத்தாலும், பதைப்படையாமல் இருந்தாலும் பலன் ஒன்றுதான் என்கிறபோது, பதைப்படையாமலேயே இருந்துவிடுவோமே என்பது நெஞ்சுறுதி கொண்ட கலைவாணரின் கொள்கை!
உருவத்தால் அவர்கள் இருவரும் நம்மிடம் இல்லை. ஆனால் இன்றைக்கும் அவர்களது இசையை, இனிய கருத்துரையை, இசைத்தட்டுக்களில், வானொலியில் கேட்டு இன்புறுகிறோம். அவர்களது புகழைப் பெருமையைப் பேசுகிறோம்.
:“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
:கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
:பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?”
என்ற பாரதிதாசனின் பாடல், பாகவதர்—கலைவாணர் வாழ்வுக்கும், அவர்கள் வாழ்வில் வந்த சோதனை நீங்கியதற்கும் எத்துணைப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது பார்த்தாயா?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
11 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
6vgn6phrp9ig8yieqx0y98o9beut9ov
1926978
1926918
2026-04-25T07:48:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||29}}</noinclude>இடையில் பாய்ந்த எதிர்பாரத சோதனை கண்டு பாகவதர் பதைத்துப் போனார் என்றும்—கலைவாணர் அப்போதும் கலங்காமல்தான் இருந்தார் என்றும்—அருகில் இருந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பதைத்தாலும், பதைப்படையாமல் இருந்தாலும் பலன் ஒன்றுதான் என்கிறபோது, பதைப்படையாமலேயே இருந்துவிடுவோமே என்பது நெஞ்சுறுதி கொண்ட கலைவாணரின் கொள்கை!
உருவத்தால் அவர்கள் இருவரும் நம்மிடம் இல்லை. ஆனால் இன்றைக்கும் அவர்களது இசையை, இனிய கருத்துரையை, இசைத்தட்டுக்களில், வானொலியில் கேட்டு இன்புறுகிறோம். அவர்களது புகழைப் பெருமையைப் பேசுகிறோம்.
:“காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
:கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
:பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?”
என்ற பாரதிதாசனின் பாடல், பாகவதர்—கலைவாணர் வாழ்வுக்கும், அவர்கள் வாழ்வில் வந்த சோதனை நீங்கியதற்கும் எத்துணைப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது பார்த்தாயா?
{{Right|அன்புள்ள,<br>
<b>மு.க.</b><br>
11 – 4 – 76}}
{{nop}}<noinclude></noinclude>
e69bir44tx7yp0adfdcrfemq0941l7i
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/204
250
641512
1926919
2026-04-25T06:55:07Z
Magizh Sundram
16422
OCR
1926919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
யுவவருடப்பலன்.
யுகப்பிரளயம் - யுகாந்தம்.
யுகமுடிவு - உலகமுடிவு.
யுகம் - இரண்டு, ஒருகாலத்தளவு,
நாலு முழங்கொண்ட நீளம், பூமி,
யுகங்களுக்கும் பேராம்.
யுகயோகம் - இராகு கேது நீங்கிய
சூரியனாதி எழுவரும் இரண்டு
ராசியில் நிற்பதாம்.
கெட்ட யோகம்.
யுகளம்
யுகளி
இரண்டு.
யுகாதி – வருடாரம்பம்.
. ஒரு
யுகாந்தம் - உலகமுடிவு, யுகழடிவு.
யுக்மம்
யுதகம் 5
இரண்டு.
யுத்தத்தானம் - ஆறாமிடம்.
யுவ - ஒன்பதாவது வருடம்.
யுவதி- பதினாறுவயதுப்பெண்.
யுவவருடப்பலன் - நல்லமழையும்,
நன்செய் விளைவும், நவதானிய
விருத்தியும், எல்லாப்பிராணிகளுக்
குஞ் சுகழம், விசேடமாகப் பசு
விருத்தியும், மனிதர்களுக்குக்
குறைவில்லாத சந்தோசமுமுண்
டாம்; என்றாலும் மனிதர்கள்
வியாதி பீடையால் வருந்துவார்
கள்.
உதாரணம்
-
யுவவருடம் பூவு
லகி லுள்ளவர்க ணோயாற், றவவ
ருந்து வார்பசுமா தங்கும் - நவமாக,
வாழ்வாம் பரிவாரம் மாரியுண்டு
நெல்விளையுந், தாழ்வான தொன்
றுமில்லைத் தான். (இடைக்காடர்)
யோகம்.
ளகூகூ
யுவன் - பதினாறு வயதுக்கு மேல்
முப்பது வயதுக்குட்பட்ட ஆண்.
யூ
ஐபயோகம் -- ஒரு நல்ல யோகம்.
அது இலக்கினமுதல் நான்காமி
ராசி வரை இராகு கேது நீங்கிய
சூரியாதி எழுவர் நிற்பதாம்.
யூழி - பனிரண்டாமிடம்.
யோ
யோகத்தியாச்சியம்
-
நித்தியயோ
கத்தின் கழிவு நாழிகை. அது விச
கடிகை ஆரம்பித்த நாழிகைமுதல்
மூன்றேமுக்கால்
நாழிகைவரை
யாம். இவை இருபத்தேழுயோகங்
களிற் சில யோகங்களுக்குமட்டு
மேயாம்; விபரம் - பின்வருமாறு:
விஷ்கம்பத்திற்கு மூன்று, சூலத்
திற்கு ஐந்து, கண்டத்திற்கு ஆறு,
அதிகண்டத்திற்கு ஆறு, வியாகா
தத்திற்கு ஒன்பது, வச்சிரத்திற்கு
ஒன்பது,வைதிருதிக்கு அறுபது,
பரிகத்திற்கு அறுபது என்பதாம்.
யோகம் - (1) அதிட்டம், பலம்,
பொருத்தம்.
(2) அமிர்தாதியோக முதலியன.
(3) ஆனந்தாதியோக முதலியன.
(4) சாதகயோக முதலியன. இது
உத்தமம், மத்திமம், அதமம் என்
னும் மூவகையுள்ளது. இதன் ஒவ்
வொன்றுள்ளும் பல பிரிவுகளுள்
ளதாம்.<noinclude></noinclude>
2583ufyvvbvw51rj5iboz8p6wydb7wc
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/205
250
641513
1926920
2026-04-25T06:56:27Z
Magizh Sundram
16422
OCR
1926920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உள
யோகினி.
சோதிடப் பேரகராதி.
(5) பஞ்சாங்க உறுப்பினொன்று,
இது விஷ்கம்பம், பிரீதி, ஆயுஸ்
மான், சௌபாக்கியம், சோபனம்,
அதிகண்டம். சுகர்மம்,திருதி,
சூலம், கண்டம், விருத்தி, துரு
வம், வியாகாதம், அரிஷணம், வச்
சிரம், சித்தி, விதிபாதம், வரிமான்,
பரிகம், சிவம்,சித்தம், சாத்தியம்,
சுபம், சுப்பிரம், பிரமம், ஐந்திரம்,
வைதிருதி. இவைகட்கு முறையே
கம்பம், பிரியம், வாழ்நாள், புண்
ணியம், நலம், மாகண்டம், அறம்,
துணை, சூலம், கண்டம், ஆக்கம்,
நிலை, அரவு, எக்களிப்பு, வேல்,
வல்லமை, கொலை, காயம், தாழ்வு,
காட்சி, திறம், புகழ், காவல்,
தெளிவு, பிரமா,இந்திரன்,பேய்
என்பதாக தென்மொழிப் பெய
ராம், இவற்றுன் கம்பம், கண்
டம், அதிகண்டம், சூலம், வியா
காதம், வச்சிரம், விதிபாதம்,பரீ
கம், வைதிருதி இவ்வொன்பது
நீங்கிய மற்றவை கல்லனவாம்.
இவற்றுள்ளும்;-சம்பத்தில்
மூன்றும், சூலத்தில் ஐந்தும், கண்
டத்திலும் அதிகண்டத்திலும்.ஆறு
ம்,வியாகாதத்தில் ஒன்பதும் கழி
த்து நின்ற காழிகையே ஆசா
வாம்.
யோனிப்பொருத்தம்.
மும், விரித்ததலையும், தேகத்தில்
இவண்ணீறும், சங்காபரண முத
லிய அமங்கலமும், இரத்த நிறழ
முடையவள்.
யோகினிதிசை - யோகினி நிற்குக்
திசை, விபரம்:- பூர்வபக்கத்திற்கு
பிரதமை முதல் மேற்படி பூரணை
வரை முறையே கிழக்கு, வடக்கு,
தென்கிழக்கு, தென்மேற்கு, தெ
ர்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழ
க்கு, ஆகாசம்,பூமி,கிழக்கு, வட
க்கு, தென்கிழக்கு, தென்மேற்கு,
தெற்கு ஆகிய இத்திசைகளில்
நிற்கும்.
அமாபக்கத்திற்கு பிரதமை
முதல் மேற்படி அமாவாசை வரை
முறையே மேற்கு, வடமேற்கு
வடகிழக்கு, ஆகாசம், பூமி, கிழ
க்கு, வடக்கு, தென்கிழக்கு,தென்
மேற்கு, தெற்கு, மேற்கு, வடமே
ற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி
ஆகிய இத்திசைகளில் பிற்குமென்
பதாம்.
மேற்கூறிய இருபட்சத் திதிக
ளுக்குரிய எத்தத்திக்கியோகினி
நிற்கின்றதோ அந்தத்திக்கிற்கு
எதிராகவும், வலப்பக்கமும் பிர
யாணஞ் செய்யலாகாது.
யோசியம் - சோசியம், சோதிடம்.
(6) அட்டாங்கயோக முதலியன யோசியர்- சோதிடர்.
வாம்.
யோகினி - காளி, சன்மினி, ஞர்ம
கள், நிர்வாணி. இவன் நிர்வாண
மணப்பொ
யோனிப்பொருத்தம்
ருத்தத்தொன்று, விபரம்:- யானை
க்கு மனிதனும், குதிரைக்கு பசு<noinclude></noinclude>
2mjalq9cbwbyfxncpeutgzv6a2wp6ls
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/206
250
641514
1926921
2026-04-25T06:57:47Z
Magizh Sundram
16422
OCR
1926921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
உளக
ராஜன்.
வக்கிராத்தமனம்
உம், எருமையும், பசு, எருமை,
ரு
கடா, மான், காய் இவைகளுக்குப் ருசிதான் - குரு.
புலியும், குரங்குக்கு ஆடும், எலி
க்குப் பூனையும், பாம்பும், பாம்புக்
ரே
குக்கீரியும், ஆடும்,பூனைக்கு நாயும் ரேவதி - இரேவதி நட்சத்திரம்.
புலியும் பகையாம்.மானுக்குப் பசு
வும்,ஆட்டுக்குக் குதிரையும், நாய்
க்கு மனிதனும் நட்பாம்; இவைக
ளல்லாதவை சமமரம்; சகல யோ
னிகளுக்குங் குரங்கு நட்பென்பது
மாம்.
ரோ
ரோமகசித்தாந்தம் - உரோமக சித்
தாந்தத்திற் காண்க.
ரோமகபுரி - உரோமக புரியிற்
காண்க.
ரோகினி உரோகினி நட்சத்தி
குறிப்பு ;-பெண், ஆண்களுக்கு ரோஹிணி ஓரம்
யோனி ஒன்றாயினும், நட்பு யோ
னியில் இருவருக்கும் பெண்யோ
ல்
னியானாலும், ஆணுக்கு ஆண்யோ லங்காபுரி இலங்காபுரியிற் காண்க;
னியானாலும்,பெண்ணுக்குப்பெண்
யோனியானாலும் உத்தமம்; இரு
லீ
வரு க் கு ம் ஆண்யோனியானால் லீலாவதி- இலீலாவதியிற் காண்க,
மத்திபம், ஆணுக்குப் பெண்யோ
னியும், பெண்ணுக்கு ஆண்யோ
னியாயினும், இருவருக்கும் சத்
துருயோனி யாயினும் பொருந்
தாது என்பதாம்.
ர
ரசாதலம் - கீழேழுலகத் தொன்று.
ராகு- இராகு
ரா
ராசி இராசி. இது மேட முதல்
மீனம் வரையுள்ள பன்னிரு இரா
சிகள்.
ராஜன்- சந்திரன்.
லோ
லோகபாலர் - உலோகபாலரைக் கா
ண்க.
லோகாலோகம் - உலோகாலோகத்
திற் காண்க.
வ
வக்கிரசந்திரன் - இளம்பிறை.
வக்கிரம் மீளமடங்குதல், மீளுதல்,
பின்றிரும்புதல். இவை கிரக
கடையினொன்று.
வக்கிரன் - சனி, செவ்வாய், குரூ
ரன்.
வக்கிராஸ்தமனம்கிரகங்கள் வக்கி
வக்கிராத்தமனம் [ரத்தோடு அத்த
மனமடைதல்.
26<noinclude></noinclude>
jmtsri2272q3tq9kgw4xy25akb1axtd
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/207
250
641515
1926922
2026-04-25T06:58:27Z
Magizh Sundram
16422
OCR
1926922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உளஉ
சோதிடப் பேரகராதி.
வசியப்பொருத்தம்.
வக்கிரித்தல் - திரும்புதல், கிரக
கடையினொன்று.
வக்கிரோதயம் - கிரகங்கள் திரும்பு
தலோடுதித்தல்.
வசந்தகாலம்
-
யின் பருவம்.
சித்திரை, வைகாசி
வசந்தநூதம் - சித்திரைமாதம்,
வசந்தமாதம்
-
மாதம்.
வசந்தம்
காற்று.
-
சித்திரை, வைகாசி
இளவேனில், தென்றற்
வசந்தருது - இளவேனிற் பருவம்;
இவை சித்திரை வைகாசியின் பரு
வம்.
வசந்தன் - தென்காற்ற.
வசியம் - அட்டகருமத்துளொன்று,
மணப்பொருத்தத்தொன்று.
வசியப்பொருத்தம் - மணப்பொருத்
தத்தொன்று; விபரம் - மேடத்திற்
குச் சிங்கமும், விருச்சிகமும், இட
வத்திற்குக் கடகமுந் துலாமும்,
மிதுனத்திற்குக் கன்னியும், கட
கத்திற்கு விருச்சிகமும், தனுசும்,
சிங்கத்திற்குத் துலாமும், கன்னி
க்கு மிதுனமும், மீனமும், துலாத்
திற்கு மகரமும், விருச்சிகத்திற்கு
கடகமுங் கன்னியும், தனுசுக்கு
மீனமும், மகரத்திற்கு மேடமுங்
கும்பமும், கும்பத்திற்கு மேட
மும், மீனத்திற்கு மகரமும் வசிய
வடக்கு.
மம். ஆண்ராசிக்குப் பெண்ராசி
வசியமானால் மத்திமம்; மற்றவை
அதமமாம்.
வசு- அட்டவசுக்கள்,கிரணம்,கு
போன்,சூரியன்.
வசுநாள் - அவிட்டநாள்.
வசுபை - புனர்பூச நட்சத்திரம்.
வசுமத்யோகம் - சந்திரனுக்காவது
இலக்கினத்திற்காவது உபசெயத்
தானத்தில் எல்லாச் சுபகிரகங்க
ளும் நிற்பது; இதன்பலன் திரவிய
விர்த்தி.
வச்சிரம் -இடி, சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று, பஞ்சாங்கவுறுப்
பினொன்றாகிய நித்தியயோகத்
தொன்று.
வச்சிரயோகம் - ஒரு நல்ல யோகம்;
அது நாலுபத்து ஆகிய இடங்களில்
பாபக்கிரகங்களிருக்க மற்ற விடங்
களிற் சுபர்களிருப்பதாம்.
வச்சிரீகரணம் - இடை, பிங்கலை,சுழி
முனை.
ச.
வஞ்சுளஏகரதசி- சூரியோதயத்தில்
தசமி சம்பந்தமாய் வரும் ஏகாதசி
திதி, அது ஒர் நோன்புநாள்.
வடகீழ்த்திசை
வடகீழ்த்திசைப்பாலன்
வடகீழ்த்திசைப்பாலன்குறி -காகம்.
வடகீழ்த்திசையானை - சுப்பிரதீபம்.
வடகோடு
-
னன்.
இளம்பிறைச் சந்திர
மாம். இதில் பெண் ராசிக்கு னின் வடமுனை, வடக்கு மூலை.
ஆண்ராசி வசியமானாலும், இருவ வடக்கு - உதக்கு, உத்தரம்,வட
குடைய ராசி ஒன்றானாலும் உத்த திசை.<noinclude></noinclude>
d3thk7itggc9zlvzk17ksarq91djzim
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/39
250
641516
1926925
2026-04-25T07:01:18Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} சமுதாய மறுமலர்ச்சி காண...! உடன்பிறப்பே, அதிசயச் செய்திகள், அற்புதங்களைப் பற்றிய கட்டுரைகள், மீண்டும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
சமுதாய மறுமலர்ச்சி காண...!
உடன்பிறப்பே,
அதிசயச் செய்திகள், அற்புதங்களைப் பற்றிய கட்டுரைகள், மீண்டும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட
மூட நம்பிக்கைக் கதைகளை ஏடுகளின் வாயிலாகப் பரப்பிடாவிட்டால் இங்குள்ள சனாதனிகளுக்குத் தூக்கமே வருவதில்லை.
அவரவர்களுக்குரிய கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவைகளைப் பற்றி அவர்தம் மனம் புண்படும் படியாக விமர்சிக்கக்கூடாது என்பதுதான் நமது கருத்து எனினும், அந்தக் கடவுளின் பெயரால் ஆயிரக் கணக்கான கதைகளையும், மதத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுகிற செய்திகளையும் பரப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல!
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள் தன்மை—மதத்தின் மாண்பு இவைகளுக்கே கூட இழிவு கற்பிக்கும் வகையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நம்பமுடியாத கதைகள் ஏராளம் இருக்கும்போது இன்னும் ஏன், அந்த முயற்சியில் ஈடுபட்டு, புதிய புதிய அவதார புருடர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
சமுதாயத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும் நிலைத்திட கடவுளைக் கூறி, அவருக்குப் பயந்து நடக்கவேண்டும் என்று அச்சுறுத்தி, அதனையொட்டிய விதிமுறைகளை வரையறுத்-<noinclude></noinclude>
d3fw599jo7zzusx0oowh32my3f9sqjj
1926927
1926925
2026-04-25T07:01:42Z
Ramya sugumar
15106
1926927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>சமுதாய மறுமலர்ச்சி காண...!</b>}}
உடன்பிறப்பே,
அதிசயச் செய்திகள், அற்புதங்களைப் பற்றிய கட்டுரைகள், மீண்டும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட
மூட நம்பிக்கைக் கதைகளை ஏடுகளின் வாயிலாகப் பரப்பிடாவிட்டால் இங்குள்ள சனாதனிகளுக்குத் தூக்கமே வருவதில்லை.
அவரவர்களுக்குரிய கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவைகளைப் பற்றி அவர்தம் மனம் புண்படும் படியாக விமர்சிக்கக்கூடாது என்பதுதான் நமது கருத்து எனினும், அந்தக் கடவுளின் பெயரால் ஆயிரக் கணக்கான கதைகளையும், மதத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுகிற செய்திகளையும் பரப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல!
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள் தன்மை—மதத்தின் மாண்பு இவைகளுக்கே கூட இழிவு கற்பிக்கும் வகையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நம்பமுடியாத கதைகள் ஏராளம் இருக்கும்போது இன்னும் ஏன், அந்த முயற்சியில் ஈடுபட்டு, புதிய புதிய அவதார புருடர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
சமுதாயத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும் நிலைத்திட கடவுளைக் கூறி, அவருக்குப் பயந்து நடக்கவேண்டும் என்று அச்சுறுத்தி, அதனையொட்டிய விதிமுறைகளை வரையறுத்-<noinclude></noinclude>
gucrv7mp4eczzco398zbcuy6hw92596
1926979
1926927
2026-04-25T07:48:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{larger|<b>சமுதாய மறுமலர்ச்சி காண...!</b>}}
உடன்பிறப்பே,
அதிசயச் செய்திகள், அற்புதங்களைப் பற்றிய கட்டுரைகள், மீண்டும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட
மூட நம்பிக்கைக் கதைகளை ஏடுகளின் வாயிலாகப் பரப்பிடாவிட்டால் இங்குள்ள சனாதனிகளுக்குத் தூக்கமே வருவதில்லை.
அவரவர்களுக்குரிய கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவைகளைப் பற்றி அவர்தம் மனம் புண்படும் படியாக விமர்சிக்கக்கூடாது என்பதுதான் நமது கருத்து எனினும், அந்தக் கடவுளின் பெயரால் ஆயிரக் கணக்கான கதைகளையும், மதத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுகிற செய்திகளையும் பரப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல!
அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள் தன்மை—மதத்தின் மாண்பு இவைகளுக்கே கூட இழிவு கற்பிக்கும் வகையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நம்பமுடியாத கதைகள் ஏராளம் இருக்கும்போது இன்னும் ஏன், அந்த முயற்சியில் ஈடுபட்டு, புதிய புதிய அவதார புருடர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
சமுதாயத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும் நிலைத்திட கடவுளைக் கூறி, அவருக்குப் பயந்து நடக்கவேண்டும் என்று அச்சுறுத்தி, அதனையொட்டிய விதிமுறைகளை வரையறுத்-<noinclude></noinclude>
rxwsxa7z0yhjjidm755n1242col3hbj
பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/40
250
641517
1926928
2026-04-25T07:03:09Z
Ramya sugumar
15106
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 31 திருப்பதே கடவுள், மதம் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்து வதின் நோக்கம் என ஆத்தீகர் வாதிடுவர். அப்படிப் பயமுறுத்தி மக்களை, கடவுள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________
31
திருப்பதே கடவுள், மதம் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்து வதின் நோக்கம் என ஆத்தீகர் வாதிடுவர்.
அப்படிப் பயமுறுத்தி மக்களை, கடவுள் மதக்கொள்கை களுக்குக் கீழ்ப்படிய வைக்காமலே சிறந்த அறிவுரைகளின் மூலமும், சமுதாய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நிலை நாட்ட முடியும் என்பது நாத்திகர்களின் வாதமாகும்.
இரண்டுக்கும் நடுநிலையாக நின்று ஒன்றே குலம், ஒன்றே தெய்வம் எனும் கொள்கை வகுத்துக் கொண்டு- மதப்போட்டி, கடவுள் போட்டி, புராணக் கதைப் போட்டி ஆகியவற்றைத் தவிர்த்துக் கொண்டு- அதே நேரத்தில் சமுதாயம் தனக்காக வகுத்துக் கொள்கிற ஒழுங்கு. கட்டுப்பாடு போற்றி வாழ்ந்திட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப் பெற்று வருகிறது.
.
கடவுள் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சையில் இறங்கி. பட்டிமன்வும் நிகழ்த்திறிம் எண்ணம் எனக்கில்லை. நமது கழகத்துக்கும் இல்லை. கடவுளை நாம் ஏற்றுக் கொள் கிறோமா என்பது பிரச்சினை அல்ல! கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா? என்பதுதான் பிரச்சினை என்று ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்பதே நமது அண்ணா அடிக்கடி எடுத்துக்கூறிய வாசகமாகும்.
பலமுறையும் நான் விளக்கியிருக்கிறேன்.
பல உருவங்கள் இருப்பினும் ஆண்டவன் ஒருவன்தான் என்று ஆத்தீகரும் ஒப்புகின்றனர். அதற்கான விளக்கங் கள், உவமைகள் இவைகளை வழங்குகிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் ஒரு நாளைக்கு ஒரு அவதார புருடரை ஊருக்குக் காட்டுகிறார்களே, ஏன்?
மெய்வழிச் சாலையின் மாய்மாலங்கள் அப்பலமாகிக் கொண்டிருக்கின்றன. கொட்டை எழுத்துக்களில் ஏடுகளில் செய்திகள் வருகின்றன. தோண்டி எடுக்கப்படும் தங்கம்-<noinclude></noinclude>
jw24mdyzj2r19ai940rrkbgydffnvrs
1926941
1926928
2026-04-25T07:08:58Z
Ramya sugumar
15106
1926941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||31}}</noinclude>திருப்பதே கடவுள், மதம் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்து வதின் நோக்கம் என ஆத்தீகர் வாதிடுவர்.
அப்படிப் பயமுறுத்தி மக்களை, கடவுள் மதக்கொள்கை களுக்குக் கீழ்ப்படிய வைக்காமலே சிறந்த அறிவுரைகளின் மூலமும், சமுதாய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நிலை நாட்ட முடியும் என்பது நாத்திகர்களின் வாதமாகும்.
இரண்டுக்கும் நடுநிலையாக நின்று ஒன்றே குலம், ஒன்றே தெய்வம் எனும் கொள்கை வகுத்துக் கொண்டு—மதப்போட்டி, கடவுள் போட்டி, புராணக் கதைப் போட்டி ஆகியவற்றைத் தவிர்த்துக் கொண்டு—அதே நேரத்தில் சமுதாயம் தனக்காக வகுத்துக் கொள்கிற ஒழுங்கு. கட்டுப்பாடு போற்றி வாழ்ந்திட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப் பெற்று வருகிறது.
கடவுள் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சையில் இறங்கி. பட்டிமன்வும் நிகழ்த்திறிம் எண்ணம் எனக்கில்லை. நமது கழகத்துக்கும் இல்லை. கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பது பிரச்சினை அல்ல! கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா? என்பதுதான் பிரச்சினை என்று ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்பதே நமது அண்ணா அடிக்கடி எடுத்துக்கூறிய வாசகமாகும்.
பல உருவங்கள் இருப்பினும் ஆண்டவன் ஒருவன்தான் என்று ஆத்தீகரும் ஒப்புகின்றனர். அதற்கான விளக்கங்கள், உவமைகள் இவைகளை வழங்குகிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் ஒரு நாளைக்கு ஒரு அவதார புருடரை ஊருக்குக் காட்டுகிறார்களே, ஏன்?
மெய்வழிச் சாலையின் மாய்மாலங்கள் அப்பலமாகிக் கொண்டிருக்கின்றன. கொட்டை எழுத்துக்களில் ஏடுகளில் செய்திகள் வருகின்றன. தோண்டி எடுக்கப்படும் தங்கம்—<noinclude></noinclude>
o2c3iuwv8s9gemjmltre587jlp2nl36
1926980
1926941
2026-04-25T07:50:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1926980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||31}}</noinclude>திருப்பதே கடவுள், மதம் பற்றிய நம்பிக்கையை வலியுறுத்துவதின் நோக்கம் என ஆத்தீகர் வாதிடுவர்.
அப்படிப் பயமுறுத்தி மக்களை, கடவுள் மதக்கொள்கைகளுக்குக் கீழ்ப்படிய வைக்காமலே சிறந்த அறிவுரைகளின் மூலமும், சமுதாய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நிலை நாட்ட முடியும் என்பது நாத்திகர்களின் வாதமாகும்.
இரண்டுக்கும் நடுநிலையாக நின்று ஒன்றே குலம், ஒன்றே தெய்வம் எனும் கொள்கை வகுத்துக் கொண்டு—மதப்போட்டி, கடவுள் போட்டி, புராணக் கதைப் போட்டி ஆகியவற்றைத் தவிர்த்துக் கொண்டு—அதே நேரத்தில் சமுதாயம் தனக்காக வகுத்துக் கொள்கிற ஒழுங்கு. கட்டுப்பாடு போற்றி வாழ்ந்திட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப் பெற்று வருகிறது.
கடவுள் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சையில் இறங்கி, பட்டிமன்வும் நிகழ்த்திடும் எண்ணம் எனக்கில்லை. நமது கழகத்துக்கும் இல்லை. கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பது பிரச்சினை அல்ல! கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா? என்பதுதான் பிரச்சினை என்று ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்பதே நமது அண்ணா அடிக்கடி எடுத்துக்கூறிய வாசகமாகும்.
பல உருவங்கள் இருப்பினும் ஆண்டவன் ஒருவன்தான் என்று ஆத்தீகரும் ஒப்புகின்றனர். அதற்கான விளக்கங்கள், உவமைகள் இவைகளை வழங்குகிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் ஒரு நாளைக்கு ஒரு அவதார புருடரை ஊருக்குக் காட்டுகிறார்களே, ஏன்?
மெய்வழிச் சாலையின் மாய்மாலங்கள் அப்பலமாகிக் கொண்டிருக்கின்றன. கொட்டை எழுத்துக்களில் ஏடுகளில் செய்திகள் வருகின்றன. தோண்டி எடுக்கப்படும் தங்கம்—<noinclude></noinclude>
0kn8y2p3zpa2iyk6n1sd7erq3itibr7
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/208
250
641518
1926929
2026-04-25T07:04:08Z
Magizh Sundram
16422
OCR
1926929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வரீயான்.
வடந்தை - வடகாற்று.
சோதிடப் பேரகராதி.
வடவை - அச்சுவினிநாள்.
வடாது - வடக்கு.
வட்டம் - பரிவேடம்.
வணசி - எருதுக்கரணம்.
வணிகம் - துலாராசி.
வணிகன் - புதன்.
வணிசம் - எருதுக்கரணம்.
வணிர் - துலாம்.
வண்டு - பூசகாள்.
வத்தகாலம் - நிகழ்காலம்.
வத்து வித்தியாபதி சிற்பநூல் முப்
பத்திரண்டினொன்று.
வம்சயோகம் - ஒரு நல்ல யோகம்;
அது ஏழாதிபனேறிய அங்கிசாதி
பதி உச்சனாய் கருமாதிபனுடன்
கூடி நிற்பது.
வம்பல்- திசை.
வயது - ஆயுசு,யௌவனம்.
வயிரம் - திருவோண நட்சத்திரம்.
வரயோகம் - சுபயோகத்தொன்று.
வாலட்சுமி விரதம் -ஆவணி மாதத்
துச் சுக்கிலபக்ஷத்து வெள்ளிக்
கிழமையாம்.
வராகமிகிரர் - ஓர் சோதிடசாஸ்திரி.
இவர் கலியுகம் மூவாயிரத்தறுநூற்
றிலிருந்தவர், இவர் செய்த நூல்
கள்பிருஹத்சம்ஹிதையும், பி ரு
ஹத் சாதகமுமாம்.
வராளி - சந்திரன்.
பரிசம் - வருஷம்.
வருடாயுதம்.
வருகாலம் - எதிர்காலம்.
வருக்ககனம் - கனவருக்கம்.
-
உறங
வருக்கமூலம் - வருக்கத்தொகையி
னின்றதன் மூலமறிதல்.
வருக்கம் - ஒழுங்கு, சமமாகிய வீரெ
ண்ணின் பெருக்கம். விபரம் -வர்
க்கமூலத்திற் காண்க.
வருங்காரியஞ் சொல்லுவோர் - சோ
திடர்,வள்ளுவர்.
வருசதரதுக்கள் - மழைக்குறிக்காதா
ரங்கள்; விபரம் - மழைக்குறி மூலத்
தி லறிக.
வருசருது - கார்காலம். இதுஆவணி
புரட்டாசி மாதங்கள்.
வருசாதிநூல் - சோதிடநூல்களினி
ன்றுந் திரட்டி எடுத்த சோதிட
முதனூல்,
வருடதேவதை - அவ்வவ்வருடங்க
ளுக்குரிய தேவதை.
வருடபலம்
அவ்வவ்வருடத்திற்
குரிய பலன்.
வருடப்பிறப்பு - புதுவருடத் தோற்
றம்.
வருடம் ஆண்டு, ஆயனம்; கண்
வருஷம்
Vடம்,
சமை, தெய்வம்,
தெய்வதம், மழை, யாண்டு, வற்
சரம், இதன்பாதி, அயனம்.
வருடாகாலம் - மழைகாலம்.
வருடாங்கம் - மாதம்.
வருடாந்தம்
வருடாந்தரம்
வருடாந்திரம்
வருஷமுடிவு
வரியான் கித்தியயோகத்தொன்று. வருடாயுதம்-பதிஞாவிரம்,<noinclude></noinclude>
ehes6rrovs6jf3z6zeibex6fycd2f39
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/209
250
641519
1926931
2026-04-25T07:05:23Z
Magizh Sundram
16422
OCR
1926931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
உளச
வர்க்கசித்தாந்தம்.
வருடாரம்பம் - மழைத்தொடக்கம்.
வருஷத்தொடக்கம், வருஷப்பிற
ப்பு.
வருடை - மேடவிராசி
--
வருடோதயம் - வருடப்பிறப்பு. இது
ஒவ்வொரு வருடங்களும் எந்த
வாரத்தில் பிறந்ததோ அதற்கு
அடுத்த வாரத்திலும், எந்தத் திதி
யிற் பிறந்ததோ அதற்கு பனிர
ண்டாவது திதியிலும், எந்த நட்
சத்திரத்திற் பிறந்ததோ அதற்கு
பதினோராவது நட்சத்திரத்திலும்,
எந்த நாழிகையிற் பிறந்ததோ
அதற்கு பதினாறு நாழிகைக்கு
மேலும் வருடம் பிறக்கும்.
வருணகாள் - சதையநட்சத்திரம்.
வருணப்பொருத்தம் - நிறப்பொருத்
வழிநாள்.
வர்க்கமூலம் - ஒரு குறிப்பிட்ட
தொகையை அதே தொகையிற்
கைக்
பெருக்க வருகிற மொத்தத்தொ
கக்கு வர்க்கமென்றும் எந்தத்
தொகையாற் பெருக்கப்படுகிற
தோ அந்தத் தொகைக்கு மூல
மென்றும் ஆகிய இவ்விரண்டிற்
குமே வர்க்கமூல மென்றுபெயர்,
வர்க்கம் - வர்க்கமூலத்திலறிக.
வர்க்கோத்தமம் - இராசியிற் கிரகங்
கள் நிற்பதுபோல நவாமிசத்திலும்
மிருப்பதாம்.
வர்த்தகத்தானம் - நாலாமிடம்.
வர்த்தமானகாலம் - நிகழ்காலம், அப்
பொழுது நடக்குங்காலம்.
வலவோட்டு - சூரியன் முதலிய சத்
தக் கிரகங்களின் சுற்று.
தம். அது மணப்பொருத்தத்தொ வலவோட்டுநட்சத்திரம் அசுபதி,
ன்று; விபரம் - பெண்ணும் ஆணும்
சிவப்பு நிறமானால் உத்தமம்;
இருபேரும் மால் நிறமானாலும்,
பெண் கறுப்பு நிறமும், ஆண்
சிவப்பு நிறமுமானாலும், பெண்
சிவப்பும், ஆண் கறுப்புநிறமுமா
னாலும் மத்திபம், இருவரும் சுறு
ப்பு நிறமானால் அதமம். பொருந்
தாதென்பதாம்.
வருணவில் - வானவில்
வருணன்
-
சமுத்திரம், பன்னிரு
கார்த்திகை, புனர்பூசம், பூசம்,
ஆயிலியம, அஸ்தம், சித்திரை,
சுவாதி, மூலம், பூராடம், உத்தி
ராடம், பூரட்டாதி, உத்திரட்
டாதி, ரேவதி என்பனவாம்.
வலிபம் - கீழேழுலகத்தொன்று.
அது மகாதலம்,
வல்லகியோகம் - வீணையோகம் பார்
க்க.
வல்லமைத்தானம் - மூன்றாமிடம்.
மாதச் சூரியனிலொருமாதச் சூரி வல்லா } கேட்டைநட்சத்திரம்.
யன், மேற்றிசைப் பாலன்.
வர்க்கசித்தாந்தம் - சட்வர்க்கம்.
வல்லூறு - பஞ்சபக்ஷியினொன்று.
வழிகாள்- பின்னைநாள்.<noinclude></noinclude>
pzdmzegz8rqyv8gk13s1ze356he7htb
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/210
250
641520
1926933
2026-04-25T07:06:03Z
Magizh Sundram
16422
OCR
1926933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வாசி.
சோதிடப் பேரகராதி.
உளரு
வாதரோகக்காரன்.
வளர்பிறை - பூருவபக்கத்துச் சந்தி / வாசியோகம் - ஒரு சுப யோகம்;
ரன்.
வள்ளுவசாத்திரம் - ஓர் சோதிடம்.
வள்ளுவன் - சோதிடன், வருங்காரி
யஞ் சொல்லுவோன், புரோகி
தன் மேன்மகன்.
வற்கசங்கலிதம் - வருக்கசங்கலிதம்,
வற்கடகம் - பஞ்சகாலம், வறப்புக்
காலம்.
வற்கமூலம் - வருக்கத்தொகையின்
மூலம்.
வற்கம்
-
வற்கராடம்
சமமாகிய வீரெண்ணின்
பெருக்கம்.
ணம்.
மத்தியானக் கிர
வற்கித்தல் - ஒரு தொகையை அத்
தொகையிற் பெருக்கல்.
வற்சரம-வருடம்.
வனசை - எருதுக்கரணம்.
வா
வாகனத்தானம்- இலக்கினத்திற்கு
நாலாமிடம்.
வாக்குத்தானம் - இலக்கினத்திற்கு
இரண்டாமிடம்.
வாக்குதேவதை
வாக்குபதி
வியாழன்,
வாக்பதி
வாசதேயி - இரவு.
வாசபதி - வியாழன்.
வாசம் 2
வாசரம் 5
நாள், வாரம்.
அது (1) சூரியனுக்கு முன்னே
சுக்கிரன் நின்றாலும்,
(2) சூரியனுக்கு முன்னே சனி
நின்றாலும்,
(3) சூரியனுக்குப் பின் எல்லாக்
கிரசங்களும் நின்றாலும்,
(4) சூரியனுக்குப் பின் சனி,செவ்
வாய் நின்றாலும்,
(5) சூரியனுக்குப் பின் புதன்
நின்றாலும்,
(6) சூரியனுக்குப் பின் குரு, சுக்
கிரன் கூடி நின்றாலும் இவ்யோக
மாம்.
(7) சுபமல்லாத யோகம் சூரிய
னுக்குப் பின் சனி நின்றாலும்,
(8) சூரியனுக்கு விரையத்தில் சந்
திரன் நீங்கிய சுபக்கிரகங்கள் நின்
றாலும் இவ்யோகமாம்.
வாசுரை - இரவு, பூமி.
வாடை - காற்று, வடகாற்று, வட
க்கு.
வாடைக்கச்சான் -வடமேற்குக்
காற்று.
வாடைக்கொண்டல்-வடகீழ்க்காற்று
வாணன் - கார்த்திகைநட்சத்திரம்.
வாணாள் - வாழ் நாள்.
வாணிகன் - துலாராசி.
வாதக்கிரகம்
முப்பிணிக்கிரகத்
அது
வாதக்கோள் 5 தொன்று.
சனி, குரு, புதன் என்பனவாம்.
வாசி - அசுபதிகட்சத்திரம், நிமித் வாதரூடம் - காற்று, வானவில்,
தம்.
வாதரோகக்காரன் -சனி;<noinclude></noinclude>
8d2wr1wauo9xew0nmrvs29fv88e18u9
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/211
250
641521
1926934
2026-04-25T07:06:23Z
Magizh Sundram
16422
OCR
1926934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
வாஸ்துபுருடன நித்திரைவிடுதல். வாஸ்துபுருடன் நித்திரைவிடுதல்.
வாத்து- வாஸ்துபுருசன்.
வாஸ்துபுருடன் நித்திரை செய்யுந்
திசைகளுக்கு மாதங்கள் - சித்தி
ரை, வைகாசி, கிழக்கு; ஆவணி,
ஐப்பசி, கார்த்திகை, தை, வடக்கு;
ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி,
மாசி,தெற்கு; பங்குனி, மேற்கு
என்பதாம்.
உதாரணம்:- ஆடு விடைகிழக்
கா மாவணிதே ளைப்பசிதை, கூடு
வடக்காங் குளிர்மிதுனம் - நீடுசிலை,
பெண்கும்பந் தெற்காகும் பேச
ரிய மேற்காமீன், வண்வாஸ்து
சென்னிவைக்கு மால் என்னும்
செய்யுளாலு மறிக. அன்றியும்,
சித்திரை, வைகாசி, பங்குனி
மாதங்களில் கிழக்கு மேற்கு வீதி
யிலும், ஆவணி, ஐப்பசி, கார்த்தி
கை, தை இந்த மாதங்களில் தெ
ற்கு வடக்கு வீதியிலும் குடிபுக
மனைகோல உத்தமமுமாம்.
ஆனி, ஆடி, புரட்டாசி, மார்
கழி, மாசி மாதங்கள் குடிபுக
மனைகோல ஆகாதென்று சில
நூல்களிற் சொல்லப்படுகின்றன.
உதாரணம்:- ஆடுவிடை மீன
மதி யாங்கிழக்கு மேற்காகும்,
தேடுசிங்கந் தேன்மரிமான் தென்
வடக்காம் - நீடுதெரு, வீடெடுக்க
விற்புகுத வேண்டினார் மேலோர்
கன், நாடதனி லுள்ளோர்க்கு
நன்கு.
வாஸ்துபுருடன் நித்திரை விடுதல்-
சித்திரைமீ பத்தாந்தேதி அஞ்சு
நாழிகை, வைகாசிமாதம் இருபத்
தோராகதேதி இரண்டு நாழிகை,
ஆடி மாதம் பதினோராந்தேதி
இரண்டு நாழிகை, ஆவணி மாதம்
ஆறாந்தேதி பத்துநாழிகை, ஐப்
பசிமாதம், பதினோராந்தேதி இர
ண்டு நாழிகை, கார்த்திகைமாதம்
எட்டாந்தேதி பத்து நாழிகை,
தைமாதம் பனிரண்டார் தேதி
இருபத்திரண்டு நாழிகை, மாசி
மாதம் இருபத்திரண்டாந்தேதி
பதினெட்டு நாழிகை, பங்குனி
மாதம் இருபத்திரண்டாந் தேதி
பதினெட்டு ஆகிய இக்காழிகை
க்கு மேல் மூன்றேமுக்கால் நாழி
கை விழிக்குங் காலமாம்.
உதாரணம்:- மேட மாதியீ
ரைந்துதே தியினில் விளங்கிடு
கடிகையோ ரைந்தாம்,விடைமதி
மூவேழ் தெய்நியீர் கடிகை விருச்
சிகத் தெட்டிலீ ரைந்தாம்; ஆடி
யைப் பசிபன் னொன்றினி லிரண்
டாம் ஆவணி யாறிலோர் பத்
தாம், அணிகுட மீன மிருபதோ
டிரண்டி லாம்பத்து மெட்டென
வறையக்;கூடுதை மதியீ ராறு
தெய் தியினிற் குலவிரு பானின்
மே லிரண்டாம், கூடிடும் கடிகை
வரஸ்துவாம் புருடன் கூர்துயில்
நீங்குநா ளென்பர்; பீடிலா வானி
புரட்டையா மதியின் பெருந்துயில்
பேசுவர்
நீங்கிடா னென்றே,
பெரியோர் குடிபுகுந் திடவும்<noinclude></noinclude>
59yk15t9r1kel6v4nnc4m1xba6d8l28
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/212
250
641522
1926935
2026-04-25T07:06:43Z
Magizh Sundram
16422
OCR
1926935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வாய்க்கால்.
சோதிடப் பேரகராதி.
உளஎ
வாராசூலபரிகாரம்.
துதிங்க
பெருமனை கோலவுந் தீதே என் | வாரசூலம்-வாரசூலை.
னுஞ் செய்யுளாலு மறிக.
வாத்துபோதம் - சிற்பநூல் முப்பத்
திரண்டி னொன்று.
வாத்துமன் - வாஸ்துபுருடன்.
வாமத்தோன் - சந்திரன்.
வாமபாகம்
வாமம்
6} இடப்பக்கம்.
வாமதேவதை - சனி செவ்வாய் நின்ற
நட்சத்திரத்துக்கு
பதினேழு,
பதினெட்டு, பத்தொன்பது, இரு
பத்திரண்டு ஆகிய நட்சத்திரங்க
ளாம்.
வாமனசயந்தி - ஒர் விசேடகாள்.
அது பாட்டாசிமாத சுக்கிலபட்ச
துவாதசியில் திருவோணக் கூடி
வரும் நாள்.
வாமனம் - தென்றிசை யானை.
வாமாங்கராசி - துலாமுதல்
ஆடி
ராசிகளாம்.
வாயசவாகனன் -
காகவாகனன்,
சனி.
வாயவி-வடமேற்கு
வாயு - காற்ற இது வாயுமண்டலத்
திற்கு அதிதேவதை.
வாயுகோணம் - வாயுமூலை
வாயுக்கிரகம் பஞ்சபூதக் கிரகத்
-
தொன்று அது புதன்.
வாயுபலம் - மழை, வானவில்.
வாயுமூலை வடமேற்கு.
வாய் - வாக்கு, இலக்கினத்திற்கிரண்
டாமிடம்.
வாய்க்கால் - மகநட்சத்திரம்.
ளுஞ் சனியும் கிழக்கிலும், செவ்
வாயும் புதனும் வடக்கிலும், வெ
ள்ளியும் ஞாயிறும் மேற்கிலும்,
வியாழன் தெற்கிலுமாம்.
வாரசூலகாழிகை - இன்ன கிழமை
க்கு இன்ன திசையில் இவ்வளவு
நாழிகைக்குச் சூலமென்பது.
விபரம் - திங்களுஞ் சனியுங் கிழக்
கில் எட்டு நாழிகையும், வியாழன்
தெற்கில் இருபது நாழிகையும்
வெள்ளி ஞாயிறு மேற்கில் பனி
ரண்டு நாழிகையும், செவ்வாய்
வடக்கில் பனிரண்டு நாழிகையும்
புதன் வடக்கில்பதினாறு நாழிகை
யுமாம்.
உதாரணம்;- திங்களுஞ் சனியு
மித்திரன் றிசையிலோ ரெட்ட
தாகும், பொங்குபொன் னிரு
பான் தெற்கு புகர்கதிர் மேற்கீ
ராறாம், தங்குசேய் வடக்கீ ராறாஞ்
சார்புத னதிலீ ரெட்டுச், சங்கான்
கையிற் சூலந் தரணியில் வைக்
குங் கன்னல் என்னுஞ் செய்யு
னாலு மறிக.
வாரசூலபரிகாரம் - சூலகாலத்தில்
வடக்கே போக வேண்டுமானால்
பாலும், கிழக்கே தயிரும், தெற்
கே தயிலமும், மேற்கே வெல்ல
மும் ஆகிய இவைகளை உண்டே
னும் கொண்டேனும் செல்வது
நன்றென்பதாம்.
உதாரணம்:- சூலத் திசையிற்
சொற்பயணம் போகவெனிற்<noinclude></noinclude>
fa6r2ura4ndznl92lh89ywgwtvfdfst
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/213
250
641523
1926936
2026-04-25T07:07:03Z
Magizh Sundram
16422
OCR
1926936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உளஅ
சோதிடப் பேரகராதி.
வாரத்தியாச்சியம்.
சீலத் துடனுண்டு செல்வடக்குப-
பாலாம், தயிர்கிழக்குத் தெற்குத்
தயிலமா மேற்குச், செயிர்தீர்ந்த
வெல்லமெனச் செப்பு என்னுஞ்
செய்யுளாலு மறிக.
கிழமையில்
வாரசூனியம் - இன்ன
இன்ன நட்சத்திரம் வந்தால்
சூனியமென்பது.விபரம்- ஞாயி
றில் அனுடம், கேட்டை, மகம்,
விசாகம், பரணி, மிருகசீரிடம்
ஆகியவைகளும், திங்களில் பூரா
டம், அனுடம், மகம், பூரட்டாதி,
கார்த்திகை, விசாகம் ஆகியவைக
ளும், செவ்வாயில் அவிட்டம்,
சதையம், திருவோணம், கேட்
டை, திருவாதிரை ஆகியவைக
ளும், புதனில் மூலம், திருவோ
ணம், கார்த்திகை, அவிட்டம்,
அசுபதி, பரணி ஆகியவைகளும்,
வியாழனில் மிருகசீரிடம், பூரா
டம், ரேவதி, புனர்பூசம், பூசம்
ஆகியவைகளும், வெள்ளியில்
பூசம், விசாகம், உரோகணி, அவி
ட்டம், மிருகசீரிடம், அத்தம்,
அனுடம் ஆகியவைகளும், சனி
யில் அத்தம், பூசம், புனர்பூசம்,
உத்திரம், ரேவதி ஆகிய இவைக
ளும் வருவதாம்.
வாரத்தியாச்சியம் - ஒவ்வொரு கிழ
மையிலும் நீக்கப்பெற்ற கழிவு
நாழிசை; விபரம்:-ஞாயிறு முப்
பத்திரண்டுக்கு மேலும், திங்கள்
நாற்பத்திரண்டுக்குமேலும், செவ்
வாரவிசேடம்.
வாய் முப்பத்தொன்றுக்குமேலும்,
புதன் நாற்பத்தொன்றுக் கு
மேலும், வியாழன் முப்பத்தொன்
றுக்கு மேலும், வெள்ளி இருபத்
தொன்றுக்கு மேலும், சனி பதி
னாலுக்கு மேலும், மூன்றேமுக்
நாழிகையை நீக்கப்படுவ
கால்
தாம்.
வாரமிச்சம் - மாதம் பிறந்த கிழமை
தொடங்கி சனிக்கிழமை வரை
எண்ணிக்கண்ட தொகையாம்.
வாரமுக்குணவேளை இன்ன கிழ
மையின் முதலில் இன்ன குண
வேளை வருவதென்பது அது திங்
கன், வியாழம், சாத்மீகமும் வென்
ளி செவ்வாய், இராசதமும் புதன்
ஞாயிறு, சனி, தாமதமும் முத
லில் வரும் வேளையாம். இதன்
காலம் மூன்றேமுக்கால் நாழிை கை
யாகக் கொள்க.
வாரம்
கிழமை, சமையம்,நாள்,
பக்கபாதம், பங்கு, பஞ்சாங்கஉறு
ப்பினொன்று, வாசரம். அன்றியும்
ஏழு கிழமை கொண்டதுமாம்;
இது ஞாயிறு, திங்கள், செவ்வாய்,
புதன், வியாழம், வெள்ளி, சனி
என்பன.
வாரவாணி-வருடம்.
வாரவிசேடம் - இன்ன கிழமையில்
இன்ன காரியஞ்செய்ய நன்மை
என்பதாம்; அது ஞாயிறில் உத்தி
யோகஞ்செய்ய, திங்களில் விதை<noinclude></noinclude>
al4tbmjaru9powbgfm1avdtc08p88ur
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/214
250
641524
1926937
2026-04-25T07:07:34Z
Magizh Sundram
16422
OCR
1926937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வானவில்.
சோதிடப் பேரகராதி.
விதைக்க, செவ்வாயில் போர்தொ
டங்க, புதனில் கல்விகற்க, வியா
ழனில் மணஞ்செய்ய, வெள்ளி
யில் மயிர்கழிக்க, சனியில் தெய்வ
பூசனைசெய்ய உத்தமமென்ப
தாம்.
ரையிற்
வாரவோரை - காலவோரை
காண்க.
வாராதிபன் - கி ழமைக்க தி பதி,
ஓரைக்கதிபதியுமாம்.
வாருணம் - மேற்கு.
வாருணி - சதையநட்சத்திரம், மேற்
குமத்தியத்திற்கு அதிதேவதை.
வார்த்தலம் - கெட்டநாள்.
வார்த்தவம் - இருது.
வாலசந்திரன் - இளம்பிறை
வாலசூரியன் - இளவாதித்தன், உத
யசூரியன்.
வாலவம் - புலிக்காணம்.
வாலாதித்தன் - உதயகாலசூரியன்.
வாலை - பன்னிருவயதுள்ளபெண்.
வால்வெள்ளிவால்கட்சத்திரம்,
வாழ்நாள் - ஆயுகம், ஆயுள், உறை,
சீவியகாலம்.
வான விற்குறி
விகங்கம்.
உளகூ
இந்திரவிற்குறி
இது மழைக்குறியுளொன்று. விப
ரம் - ஆனி, ஆடி, ஆவணி இந்த
மாதங்களில் கிழக்கே இந்திரன்
வில்லுண்டானால் பஞ்சமுண்டாகு
மென்பதாம்.
உதாரணம்:- ஆனியுட னாடி
யாவணியித் திங்களிலே,
கூனி
பூவின்
யே வான்விற் குணதிசையில்-
மானேகேன்,மேவில் மழையறுமே
விண்ணாட ருக்குமே,
விழைவறுந்து போம் என்னும்
செய்யுளாலுமறிக.
வானேறு-இடி.
வான்மீகம் - இந்திரவில்.
வான்மீன் - உடு, உற்கை, ஒளி,சிதம்,
சுக்கை, சோதி, தாரகை, தாரா,
தாரை, பம், மீன், அன்றியும் அசு
பதி முதலிய இருபத்தேழு நட்
சத்திரங்களுமாம்.
வான்மியராசி - திரராசி நான்குமாம்.
இவை இடபம், சிங்கம், விருச்சி
கம்,கும்பம்.
வி
வானசாஸ்திரம் (வானசோதிகளின் வி-ஆகாயம்,காற்று,திசை.
வானசாத்திரம் போக்குவரவு அறி விககம் - கிரகம், சந்திரன், சூரியன்,
யும் நூல்.
வானசோதி -- ஆகாயப்பிரபாரூபிகள்,
இவை நட்சத்திர கணங்களாம்.
வானட்சத்திரம் -வால்வெள்ளி.
வானம் - ஆகாயம்,மழை.
வானவில்- இந்திரவில்,இது மழைக்
குறியினொன்று.
மேகம்.
விககயோகம் - ஒரு மத்திமயோகம்.
அது சூரியாதி எழுவர் நாலாம்,
பத்தாமிடங்களிலிருப்பதாம்.
-சந்திரன், சூரியன்,
விகங்கம்
மேகம்.
27<noinclude></noinclude>
lk6xhauwfxpsh28turbip4zozo9a3mq
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/215
250
641525
1926938
2026-04-25T07:08:01Z
Magizh Sundram
16422
OCR
1926938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உளய
சோதிடப் பேரகராதி.
விகிர்திவருடப்பலன்.
விகசன் - சந்திரன்.
விகடயோகம் - ஒரு தீயபலன். அது
நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு,
ஒன்பது, பத்து இத்தானங்களில்
எழு கிரகங்கள் கூடிநிற்பது.
விகடிகை - விநாடி.
விகணனம் - கணித்தல்.
விகர்த்தனன் - சூரியன்.
விகலை
நாழிகை.
காலநுட்பம், காலம்,
-
விகாரி - முப்பத்துமூன்றாவது வரு
டம்.
விகாரிவருடப்பலன் -மழையில்லை.
ஏரி, கேணி முதலிய நீர்நிலைகள்
வற்றி வேளாண்மை நட்டமும்,
தீயோர்களால் மனிதர்களுக்குத்
துன்பமும், மனிதர்கள் தங்களு
டைய பழைய பொருள்களை
விற்று உண்ணும் பஞ்ச நிலையை
யும் அடைவார்கள்.
உதாரணம்:- ர விகாரித
னிற் பாதலக் ருங்குறையும், மாரி
யில்லை வேளாண்மை மத்திம
மாம் - சோரர், பயமதிக முண்டாம்
பழையோர்கள் சம்பாத், தியவுடை
மை விற்றுண்பார் தேர்.
(இடைக்காடர்)
விகாலிகம் - காழிகை யறிவிக்கும்
இல்விக்குடம்.
விகிசிரன் - சந்திரன்.
காலாவது
விகிர்தி இருபத்து
விகிர்த்தி வருடம்.
விகிர்திவருடப்பலன்-
எங்கும் நல்ல
மழையும், சிறந்த விளைபலனும்,
விக்கிரமார்க்க சகாப்தம்.
நானாவிதச் செல்வங்கள் விருத்தி
யும், மனிதர்கள் சுகவாழ்வையு
மடைவார்கள்; ஆகினும் மாடு,
குதிரை, கழுதை முதலிய விலங்
கினங்களுக்கு நோயுண்டாகும்.
உதாரணம்;- வையந் தனில்வி
கிர்தி மாரி விளைவதிகம், செய்ய
வளங்கள் சிறக்குமே - ஐயகேள்,
மாடு கழுதை வயப்பரி நோய்மிக்
குச், சாட மெலியுமே தான்.
(இடைக்காடர்)
விக்கிரம - பதினாலாவது வருடம்.
விக்கிரமவருடப்பலன் - முன் மழை
யில்லாததால் பயிர்களுக்கு நட்ட
மும், சீவராசிகளுக்கு மரணமும்,
மனிதர்களுக்குப் பிணியும், பாவ
காரியங்களால் துன்பமும் உண்
டாகும்; என்றாலும் வருடத்தின்
பின் பாகத்தில் ஒரேயொரு நல்ல
மழையுண்டாம்.
உதாரணம்; - விக்கிரம வாண்
டதனில் மேவியமுன் மாரிகொஞ்
சம், அக்க னுயிர்க ளழியுமே-
தொக்க, பயிர்தீயும் நோயும் பழி
யுமாம் பின்பு, செயிர்தீர்ந்த வோ
ர்மழையாஞ் செப்பு.
(இடைக்காடர்)
விக்கிரமத்தானம் இலக்கினத்தி
ற்கு மூன்றாமிடம்.
விக்கிரமார்க்க சகாப்தம் - விக்கிர
மார்க்கன் அரசரட்சி தொட்டு
எண்ணிவரும் வருடம்; இது கலி
யுகம் மூவாயிரத்து நாற்பத்தைந்<noinclude></noinclude>
554jnqflnmszjbkyo71kyefgxby6q0m
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/216
250
641526
1926939
2026-04-25T07:08:22Z
Magizh Sundram
16422
OCR
1926939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
விசயமாலிகாயோகம்.
தில் விக்கிரமார்க்கன், டில்லி அர
சனைத் தோற்கடித்த காலமுதல்
ஆரம்பம்.
விசகம்- கேது.
விசகன் - சந்திரன்.
விசங்கடம் - சிங்கம்.
விசசூன்யம் - இன்ன திதியில்
இன்ன இலக்கினம் வருவதென்
பது; விபரம் - பிரதமையில் துலா
மும், மசுரமும், துதிகையில் தனு
சும், மீனமும், திருத்திகையில் மக
ரமும், சிங்கமும், சதுர்த்தியில்
கும்பமும், இடபமும்,பஞ்சமியிற்
கன்னியும், மிதுனமும், சஷ்டி
யில் மேடமும், சிங்கமும், சத்தமி
யில் தனுசும், கடகமும்,அட்டமி
யில் கன்னியும், மிதுனமும், நவ
மி தசமி இவைகளில் சிங்கமும்,
விருச்சிகமும், ஏகாதசியில் தனு
சும், மீனமும், துவாதசியில் துலா
மும்,மகரமும், திரயோதசியில்
இடபமுஞ், சிங்கமும், சதுர்த்தசி
யில் மிதுனமும், கன்னியும், அமா
வாசை பூணை இவைகளில்
தனுசு, மீனம் ஆகிய
வருவதாம்.
வைகள்
விசய இருபத்தேழாவது வருடம்.
விசயதசமி - ஐப்பசிமாதம் பூருவபக்
கத்தில் வரும் பத்தாத்திதி.இது
ஓர் விசேடநான்.
விசயமாலிகா யோகம்
ஒரு நல்ல
யோகம். அது பதினோராமிட
விசுவகர்மா.
உகக
ம்பு நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்
பது.
விசயம் - சூரியமண்டலம்.
விசயவருடப்பலன் - அளவுக்கு மிஞ்
சிய மழையும், எல்லாவகைச் சிறு
தானியங்களின் விர்த்தியுமுண்டு
டாம்; இதற்கு முந்திய வருடத்
தில் மக்களடைந்த துக்கமெல்
லாம் நீங்கிச் சுகவாழ்வை யடை
வார்கள்.
உதாரணம்:- மண்ணில் விசய
வருட மழைமிகுதி, எண்ணுசிறு
தானியங்க ளெங்குமே-நண்ணும்,
பயம்பெருகி நொந்த பரிவார
மெல்லாம், நயம்பெருகி வாழு
மென நாட்டு. (இடைக்காடர்)
விசயை-மூன்றாம், எட்டாம், பதி
னைந்தாந்திதிகள்.
விசர்க்கம் தெட்சணாயனப் பாதை.
விசாகநான்- விசாகநட்சத்திரம்.
விசாகம் - அணிலகாள், காற்றுமுந்து
நாள், சுளகு, சேட்டை, முறம்,
முற்றில், வைகாசி என்பனவாம்.
விசாலம் - சிற்ப நூல்முப்பத்திரண்டி
னொன்று.
விசிகை - வைத்தியக்கிரகம்.
விசு
விஷு
பதினைந்தாவ தாண்டு, சட
சீதி புண்ணியகாலங்கள்
வரும் நாட்கள்.
விசும்பு - ஆகாயம்,திசை.
விசும்புத்திசை - உச்சி.
விசுவகர்மன் ( சிற்பசாஸ்திரி, சூரி
2
முதல் ஐந்தாமிடம்வரை இருபா | விசுவகர்மா யன்.<noinclude></noinclude>
iuw34qgsfhw77uumq7jwuxgumssdskg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/587
250
641527
1926940
2026-04-25T07:08:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குடியரசுக் கொள்கை</b>: குடியரசு என்பது முடியாட்சிக்கு (Monarchy) நேர்மாறான அரசியலமைப்பை உடையது என்று பொருள்படும். பண்டைக் காலத்திலிருந்தே, பர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியரசுக் கொள்கை|559|குடியரசுக் கொள்கை}}</noinclude><b>குடியரசுக் கொள்கை</b>: குடியரசு என்பது முடியாட்சிக்கு (Monarchy) நேர்மாறான அரசியலமைப்பை உடையது என்று பொருள்படும். பண்டைக் காலத்திலிருந்தே, பரம்பரையான அல்லது வழிவழியான தாய முறையிலமைந்துள்ள ஒருவர் ஆட்சியை முடியாட்சி என்றும், குடிகளால் நேரடியாககோ மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டுக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருவராலோ, பலராலோ ஆளப்படும் அரசைக் குடியரசு (Republic) என்றும் வகைப்படுத்தினர். குடிகளே ஆளுபவராக உள்ளனர் என்ற கோட்பாட்டை எடுத்துக்காட்டுபவராக, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் அல்லது பலர் இருப்பதால், அவருடைய ஆட்சி முறையைக் குடியரசு என்று கூறினர். குடிகளுக்கு ஆட்சியில் பங்கு இருக்கிற தென்ற குடியாட்சிக் கருத்தும் குடிவரசுக் கொள்கையில் (Republicanism) இருப்பதனால், குடியரசுக் கொள்கை சிறப்புடையதாகப் பண்டைக் காலமுதலே பல அரசியற் சிந்தனையாளர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
<b>மாக்கியவெல்லி</b>: இத்தாலியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியற் சிந்தனையாளர் மாக்கியவெல்லி தம் ‘இளவரசர்’ (The Prince) என்ற நூலிலும் ‘விளக்கங்கள்’ (Discourses) என்ற நூலிலும் அரசுகளின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமுள்ள காரணங்களையும், அரசுகள் அழியாமல் பாதுகாத்தற்கு அரலியலறிஞர்கள் கையாளும் திறமான வழிகளையும் ஆராய்ந்து கூறியுள்ளார். அவர், அரசாங்கங்கள் பெருமளவு வலுக்காட்டாயத்தையும் (Force), சூழ்ச்சித் திறனையுமே (Craft) சார்த்துள்ள காரணத்தால், ஆளுவோர் அரசியல நோக்கங்களுக்காக ஒழுக்கவரம் புகளுக்கப்பாற்பட்ட வழிகளைக் கையாளுதலைப் பற்றிச் சிறிதும் கவலைப் படலாகாது என்றும், அரசாங்கத்தின் செயல் திறங்கள், அரசுகளை வலுவாக ஆக்கும் வழிகள், அவற்றின் அதிகார எல்லையை விரிவாக்குதற்கு ஏற்ற கொள்கைகள், அரசுகளின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய தவறுகள் முதவியவைகளைப் பற்றியும் அவர் கூறுகிறார். தாமே தலைமை அதிகாரி என்னும் எண்ணமும் தாமே எல்லா மறித்தவரென்ற தன்முனைப்பான போக்கும், தம் சட்ட அதிகாரத்தின் வழியாகத் தேசிய ஒழுக்கத்தையே உருவாக்கக் கூடிய செயலும் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.
<b>சமப்படுத்துவோர் கருத்து</b>: இங்கிலாத்தில் அரசர் முதலாம் சார்லசுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே நடத்த உள்நாட்டுப்போரில் (Civil War கி.பி. 1642-1649) பாராளுமன்றத்தின் பக்கத்திலும், அதற்கு உதவியாக வந்த புதுமாதிரிப்படையிலும் சேர்ந்த தீவிர குடியரசுக் கட்சியாரே சமப்படுத்துவோர் (Levellers) எனப்படுவோர். குடியரசு அமைப்பே நல்லதொரு அரசாங்க அமைப்புக்கு ஏற்றதொரு வழியாகும். வயதுவந்தோருக்கு வாக்குரிமை இருந்தால்தான், மக்களுடைய ஒப்புதலின்பேரில் சட்டங்கள் இயற்றமுடியும். அதன் காரணமாக மக்கள் சட்டத்துக்குக் கட்டுப்படுதற்கு வழி உண்டாகும். சமப்படுத்துவோருடைய கருத்துகளின் போக்கிலேயே இங்கிலாந்தில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆகிங்டன் (Harrington), சான்மில்ட்டன் (John Milton), சிட்னி (Sidney), முதலிய சிந்தனையானாகள் குடியரசுக் கொள்கையைப் பற்றிச் சில கருத்துகளைக் கூறினர். ஆரிங்டன், குடியரசுக் கொள்கை என்பது இயற்கையின் சட்டத்திலேயே குறிப்பாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், மக்களே இறைமை அதிகாரம் உடையவர்களென்ற கொள்கையிலும் குடியரசுக் கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென்றும் கூறினார். சான்மில்ட்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் அறிவுச் சுதந்திரத்தை ஆர்வத்துடன் ஆதரித்தார். ஆய்வு முறையும், விவாதமும் உண்மையைக் கண்டறியவும், தவற்றைத் தள்ளிவிடுதற்கும் உதவுகின்றன. மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது குடியரசு அரசாங்கமே தவிர, முடியாட்சி அன்று, அரசாங்கமென்பது ஒவ்வொருவருடைய உரிமையையும் பாதுகாப்பதற்ருந்தான் இருக்கிறது. அதன் பொருட்டே சட்டமும் அரசாங்க அதிகாரத்துக்கு வரம்புகளை ஏற்படுத்துகிறது. அரசாங்க அதிகாரியின் அதிகாரமானது மக்களுடைய நலலுக்காக மக்களிடமிருந்தே பெறப்படுன்றுதாதையால், கொடுங்கோலனுக்கெதிராக மக்களுடைய நலனைப் பாதுகாக்கும் உரிமை மக்களிடம் இருக்கிறது. இவை மில்ட்டனின் கருந்துகளாகும். அல்செர்னான் சிட்னி (Algeruon Sidney) தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் குடியரசு பற்றிய பின்வரும் சில கருத்துகளைக் கூறுகிறார். எல்லா மக்கட்பிரிவினருக்கும் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் இயற்கையான உரிமை இருக்கிறது. தங்களுடைய சுருத்தின்படி தகுதி உடையவர்களை அவர்கள் தங்களுடைய ஆட்சியாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு உரிமை பெற்றுள்ளவர். அரசாங்கம் தன் அதிகாரங்களை எல்லாம் மக்களிடமிருந்தே பெறுகிறது. அது அவர்களுடைய பாதுகாப்புக்காகவும் நலத்துக்காகவுமே இருக்கிறது; இந்நோக்கங்களைப் பொறுந்தமட்டில் அது அவர்களுக்கே பொறுப்புடையது.
<b>மாண்டசுக்கியூ கூறிய குடியரசுக் கருத்து</b>: பிரஞ்சு அரசியற்சிந்தனையாளருள் சிறந்த ஒருவராகி மாண்டசுக்கியூ (Montesquicu) தமது சட்டங்களின்<noinclude></noinclude>
g4gaa0uq3j61ly7kwghdmvigeo5uocg
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/217
250
641528
1926942
2026-04-25T07:09:03Z
Magizh Sundram
16422
OCR
1926942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உகஉ
சோதிடப் பேரகராதி.
விசுவாவசுவருடப்பலன்.
விசுசங்கராந்தி - சூரியன் விசுபத்தி
னின்றும் அடுத்த ராசிக்குப்போ
வது.
விசுவதினம் - இராப்பகல் நாழிகை
சரியாக இருக்கும் நான்.
விசுவநாள் - உத்திராடம், அவிட்டம்.
விசுபவை - சந்திரன்,சூரியன்.
விசுவம்
-
விஷ்டிதோசம்.
டாடும் பலிக்கும் சிசுநாசம், மற்
றையரோ வாழ்வார்கள் மாதவங்
கள் மீறுமே,
மழை யுண்டு. (இடைக்காடர்.)
உற்றுலகில் நல்ல
விசோகதூவாதசி
ஐப்பசிமாதம்
பூருவபக்கத் துவாதசிதிதி.
விச்சுவகாசிபம்
-
சிற்பநூல் முப்பத்
திரண்டினொன்று.
விச்சுவபோதம்
விச்சுவரேகை -வானவரை.
விச்சுவா - சூரியகிரணத்தொன்று.
விச்சுவேசம் - சிற்பநூல் முப்பத்தி
ரண்டினொன்று.
விடபம் - இடபராசி.
விடலை - முப்பதுவயதிற் குட்பட்ட
பூமியின் சமரேகையும், விச்சுவசாரம்
சூரியன் பாதையுஞ் சந்திக்குமி விச்சுவதருமம்
டம்.
விசுவருடப்பலன் - காலமழை பெய்
யாது, ஏரி, குள முதலிய நீர் நிலை
கள் பெருகாது, சிசுக்களுக்குப்
பிணியுண்டாம்.ஆகினும்பின்மழை
பெய்யும், மனிதர்கள் மத்திமமான
சுகத்தை யடையவார்கள்.
உதாரணம்:- பாரில் விசுவருடம்
பாலருக்குப் பீடையுண்டாம், கார்
பொழிவ தில்லைமுற் காலத்தில்-
ஏரி,பெருகாது பிற்காலம் பெய்யு
மே மாரி, இருகால முஞ்சமமென்
றெண். (இடைக்காடர்)
விசுவாவசு --முப்பத்தொன்பதாவது
வருடம்.
விசுவாவசுவருடப்பலன்
எல்லா
நாடுகளிலும் நல்லமழைபெய்யும்,
நானாவிதமான தானியங்கள் நன்
றாய் விளையும்,ஆடு,மாடு முதலிய
வன்.
விடிதல் - உதயமாதல்.
விடியல் - உதயம், காலை,
புலரி,
விடியற்காலம், வைகல், வைகறை.
விடியற்றாம் - விடியற்காலம்.
விடிவெள்ளி
-
வைகறை வெள்ளி.
அது சூரியோதயத்திற்கு முன்
உதயமாகும் வெள்ளி.
விடை - இடபவிராசி.
விட்கம்பம் 7
விஷ்கம்பம்
நித்தியயோகத்
தொன்று.
விட்சேபம்-வானாட்ச இரேகை.
நாற்காலிகள் விருத்தியுண்டாகும், விட்டம் - உத்திரம்.
வெளிகாட்டாருஞ் சுகமடைவார்விட்டி - சோழிக்கரணம், பத்திரவா
கள், என்றாலும் குழந்தைகட்குச்
சேதமுண்டாகும்.
உதாரணம்:- விசுவா வசுவருடம்
வேளாண்மையேறும், பசுமாடோ
கரணம்.
விட்டிதோசம் சுபகாரியங்களுக்கு
விஷ்டிதோசம் விலக்கப்பெற்ற
நாள், அவை - பூருவபக்கச் சதுர்த்<noinclude></noinclude>
fufoyyglgyyb25653k3hwavlxbhq4rt
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/218
250
641529
1926943
2026-04-25T07:09:22Z
Magizh Sundram
16422
OCR
1926943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>விதிக்கு.
சோதிடப் பேரகராதி.
தசியில் ஐந்தாஞ்சாமம் மேற்கி
லும், அட்டமியில் இரண்டாஞ்
சாமம் தென்கிழக்கிலும், ஏகாத
சியில் ஏழாஞ்சாமம் வடக்கிலும்,
பூரணையில் நாலாஞ்சாமம் தென்
மேற்கிலும், அமரபக்கத்திருத்திகை
யில் ஆறாஞ்சாமம் வடமேற்கிலும்,
சத்தமியில் மூன்றாஞ்சாமம் தெற்
கிலும், தசமியில் எட்டாஞ்சாமம்
வடக்கிலும், சதுர்த்தசியில் முதற்
சாமம் கிழக்கிலும், விஷ்டியுண்
ணுங் காலமாம்.
விட்ணுயோகம் ஒரு நல்லயோகம்
விஷ்ணுயோகம் அது - கருமாதிபதி
பாக்கியாங்கிசமேறி பாக்கியத்தா
னத்தில் பாக்கியாதிபனோடு கூடி
நிற்பது.
விண்டு - ஆகாயம்,மேகம்.
விண்டலம் - ஆகாயம்.
விண்ணேறு-இடி.
விண்மணி - சூரியன்.
விண்மீண் - உடு,தாரகை, உற்கை,
கணம், சுட்கை,பம், மீன், அசுபதி
முதலிய இருபத்தேழு நட்சத்தி
ரங்களுமாம்.
விண்வீழ்கொள்ளி - உற்கை.
கீழேழுலகங்களுளிரண்
விதலம்
-
டாவது; இது இருளால் மூடப்
பெற்றுள்ளது.
விதானமாலை - ஓர்சோதிடநூல்.
விதி- எட்டாமிடம், காலம், பிற
ப்பு.
விதிக்கு - கோணதிசை.
விந்தசன்.
உக௩
விதிபாதம் - வியதிபாதம்.
விதியை - இரண்டாந்திதி.
விது - சந்திரன்.
விதுட்சயம் - தேய்பிறை.
விதுந்துதம் - இராகு.
விதுப்பிரியை - உரோகணி.
வித்தாரம் சிற்பநூல் முப்பத்திர
விஸ்தாரம்(ண்டினொன்று.
வித்தியாகாரகன் -புதன்.
வித்தியாரம்பம் - கல்விகற்கத்தொட
ங்கள்: இது பிள்ளைச்சடங்குகளில்
னென்று.
வித்துரு - மின்னல்.
வித்தைகாரகன் - புதன்.
வித்தைத்தானம் - இரண்டாமிடம்,
நாலாமிடம், அன்றியும் ஒன்பதா
மிடமுமாம்.
விநாடி காலநுட்பம்.அதுக்ஷணி
விநாடிகைகம் பனிரண்டு கொண்
டதி.
விநாயகசஷ்டி கார்த்திகை மாதத்
விநாயகசட்டி தில் கார்த்திகை
கழிந்த இருபத்தோராம் நாள்
வரும் ஆறாந்திதி.
விநாயகசதுர்த்தி
ஆவணிமாதம்
பூருவபக்கத்தில் வரும் நாலாந்
திதி.
விநாயகவிரதம் - வைகாசிமாதம் சுக்
கிலபக்கத்தின் முதல் வெள்ளிக்
கிழமை தொடங்கி சுக்கிரவாரந்
தோறும், விநாயகரை நோக்கி
யனுட்டிக்கும் விரதகான்.
விநிகதம் - உற்பாதம்.
விந்தசன் - சந்திரன்,<noinclude></noinclude>
cm6ncb7gn1fuwx3v3hgrailuxrsqqst
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/219
250
641530
1926944
2026-04-25T07:10:05Z
Magizh Sundram
16422
OCR
1926944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உகசா
விபுதன்.
விந்தம்- ஓரெண்.
சோதிடப் பேரகராதி.
விபகலனம் 7 கணிதமுறையினொ
விபகலிதம் என்று, அது கழித்தல்.
விபலம் - காலநுட்பம்,
விபரீதவேதை கோசரவேதையி
-
வியவருடப்பலன்.
விபூதிதுவாதசி சித்திரை, வைகாசி,
கார்த்திகை, மார்கழி, பங்குனி,
ஆடி இம்மாதங்களில் வரும்
பூருவபக்கத்துப்
திதி.
னொன்று; அது சந்திரலக்கினத் விபை - கிரணம்.
பனிரண்டாந்
திற்கு ஐந்து, ஒன்பது, நாலு, பனி/விப்பிராந்தசீலம் - சூரியசந்திர வட்
ரண்டு ஆகியவைகளிற் சூரியனிரு
டம்.
க்க, பதினொன்று, மூன்று, பத்து/விமர்த்தனம் - கிரகணம்.
ஆறு ஆகியவைகளில் வேறு கிரக விமர்த்தார்த்தம் - கிரகணந்தொட்
மிருப்பதாம்.
விபவ - இரண்டாவது வருடம்.
விபவவருடப்பலன் - எஙகும் நல்ல
மழை பெய்து ஆறு, குளம் முத
விய நீர்நிலைகள் பெருகி பூமியில்
நல்ல விளைவையும் மனிதர்கள்
டது முதல் விடுதல் வரைக்கு
முள்ள காலம்.
விம்சகம - இருபது கூடியது.
விம்சதி - இருபது.
விம்பம் - சந்திரசூரியர்களின் மண்
டலம், சாயை.
சுகவாழ்க்கையையும் அடைவார் விய - இருபதாவது வருடம்.
கன். அரசன் செங்கோலுயர்ச்சியி வியசனம் - அரிட்டம்.
னால், மக்கள் அரசனிடத்து மிக்க/வியதிபாதம் - துன்னிவித்தம், நித்
நம்பிக்கை வைத்தும் வாழ்வார்
கள்.
உதாரணம்:- செய்யவிய வவ்
வருடஞ் செய்புவனந் தான்விளை
யும், பெய்யுமழை யெங்கும் பெரு
குமே - ஐயமின்றி, மிக்க சுகம்பெறு
வர் மேதினியோர் வேந்தருக்குத்,
தக்கவபி மானமுண்டு தான்.
(இடைக்காடர்)
விபாகரன் - சூரியன்.
விபாதம் - உதயகாலம்.
விபாவசு - சந்திரன், சூரியன்.
விபாவரி - இராத்திரி.
விபுதன் - சந்திரன்,
திய யோகத்தொன்று. இது - சுப
காரியங்களுக்கு விலக்காம், அன்
றியும் திருவோணம், அசுபதி,
அவிட்டம், திருவாதிரை, ஆயிலி
யம் ஆகிய இவைகள் அமாவா
சை,ஞாயிற்றுக்கிழமை ஆகிய யவை
களிற் கூடி தை, மாசி மாதங்க
ளில் வருவதுமாம்.
வியதீபாதம் - நித்தியயோகத் தொ
ன்று.
வியம்- பனிரண்டாமிடம்.
வியவருடப்பலன்
-
நல்லமழையும்
வேளாண்மைப் பலிதமும், நவதா
னிய முதலிய பதினெட்டு வகை<noinclude></noinclude>
h007l79c9nd4cao7ghrvu00jva76o6v
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/220
250
641531
1926945
2026-04-25T07:10:52Z
Magizh Sundram
16422
OCR
1926945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
வியாழதிக்கு.
வித்துப்பொருள விர்த்தியும், தா
னிய மலிவும் சீனதேசத்திற்குச்
சேமமுமுண்டாம்.
உதாரணம்:- வியவருடம் மாரி
விளைவுண்டாஞ் சீனம், சுயவாழ்
வடனே சுகமாம் - உயர்வாய்ப், பதி
னெட்டுவித்தும் பதிவாய்ப் பலிக்
கும், சதிர்பெறுநல் லஃகமிகுந்
தான். (இடைக்காடர்)
வியனசமனசங்கிலிதம் -கணிதமுறை
யுளொன்று.
வியன்மணி - சூரியன்.
வியாகம் - காற்று, ஒரு நட்சத்திரம்,
கல்யாணம்.
வியாகாதம் - நித்தியயோகத் தொ
ன்று.
வியாச்சியகவலை
டத்துப்பலன்.
வியா
வியுட்டி.
உகரு
வியாழதிசை - வியாழனுக்குச்செல்
லுங்காலம்.இதன்வருடம் பதினா
று, தெற்குத்திசையென்பதுமாம்.
வியாழநட்சத்திரம் - இரேவதி, உத்
திரட்டாதி, பூராடம், மூலம்.
வியாழநிறம் - மஞ்சன்.
ழபாசை - ஆரியமொழி.
வியாழபார்வை - சாந்தம்.
வியாழபிணி - வாதம்.
வியாழபுட்பம் - முல்லை.
வியாழபுத்தி - ஒவ்வொரு திசையி
னுள் நடக்குங்காலம்.
வியாழபுத்திரன் - எமகண்டன்.
வியாழம் - அந்தணன், அமைச்சன்,
அரசன், ஆசான், ஆண்டளப்பான்,
குரு, சிகண்டிசன், சிகண்டிதன்,
சீவன், சுரகுரு, ராராபதி, தெய்வ
மந்திரி, நற்கோள், பிரகஸ்பதி,
பீதகன், பொன், மறையோன்,
-
பனிரண்டாமி
வியாதாபம்
வியாதாமம்
இடி
வியாழத்தின் காரகம்
-
புத்திரன்,
வேந்தன். அன்றியும் வியாழக்கிழ
மைக்கும் பெயர்.
கலைக்கியானம், நாணயம், ஆபரண வியாழரத்தினம் -புட்பராகம்.
முதலியவையாம்.
வியாழகுணம் - சத்துவம்.
வியாழகேந்திரம் - வியாழ வீதியின்
மத்தி, வியாழன் கேந்திரத்தில்
நிற்றல்.
வியாழசமித்து - அரசு.
வியாழசுவை - தித்திப்பு.
வியாழதானியம் -கடலை
வியாழதிக்கு - வடக்கு. அன்றியும்
தெற்கென்பாரு முனர்.
வியாழராசி - தனுசு, மீனம்.
வியாழலிங்கம் - பெண்.
வியாழலோகம் - பொன்.
வியாழவடிவம் - நெடுமை
வியாழவட்டம் - குரு சூரியனைச் சுற்
றிவருகிற பனிரண்டு வருடங்
கொண்ட கால அளவு.
வியாழவாகனம் - யானை.
வியாழன்-வியாழம்.
வியுட்டம் -நாள், பலன், வைகறை.
வியுட்டி-பலன்.<noinclude></noinclude>
2e79c0gzv0opzkp3xlk313zm91kp3qa
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/221
250
641532
1926946
2026-04-25T07:11:25Z
Magizh Sundram
16422
OCR
1926946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உதன்
சோதிடப் பேரகராதி.
விருட்சப்பொருத்தம்.
விரசனன் - சந்திரன்,சூரியன்.
விரன்மிண்ட நாயனார் சித்திரை மா
திருநட்சத்திரம் தத்தில்வரும்
திருவாதிரை நட்சத்திரம்.
விரிஞ்சியோகம் - ஒருகல்லயோகம்.
அது - இலக்கினாதிபன், குரு, சனி
ஆகிய இவர்கள் கேந்திரகோணங்
களில் ஆச்சி, உச்சம், நட்பு இவை
கள் பெற்று நிற்பதாம்.
விரிச்சி - நன்னிமித்தம்.
விரோதிகிருதுவருடப்பலன்.
இருவரும் பால்மரமாகில் அதிக
நன்மையும் மக்களுமுண்டாம்.
விருட்டுணுயோகம் - விட்டுணுயோ
கம் பார்க்க.
விருத்சபாவம் - முதிர்வயது.
விருத்தம் - சிற்பநூல் முப்பத்திரண்
டினொன்று.
விரையத்தானம் - இலக்கினத்திற்கு
பனிரண்டாமிடம்.
விரோசனன் - சந்திரன், சூரியன்,
விரோதத்தானம் -ஆறு, எட்டாமிட
ங்கள்.
விரிச்சிகம் - விருச்சிகம்.
விரிச்சிகன் - சூரியன்.
விருகற்பதி
- வியாழன்.
விரோதி
-
விருகாராதி
சிங்கம்.
வருடம்.
விருகாரி
இருபத்துமூன்றாவது
விருச்சி- சொன்னிமித்தம்.
விருச்சிக அங்கம் - பீசம்.
விருச்சிக உருவம்-தேள்.
விருச்சிகதிசை - மேற்கு.
விருச்சிகநிறம் - பச்சை
விருச்சிகமாதம் - கார்த்திகைமாதம்.
விருச்சிகம் (தெருக்கால், தேன்,
விருக்ஷிகம் பறப்பன். அன்றியும்
கார்த்திகைமாதமுமாம்.
விருச்சிகாவி - கார்த்திகைமாதம்,
விருச்சிகத்தில் சூரியனிற்றல்.
விருட்சப்பொருத்தம் - மணப்பொ
ருத்தத்தொன்று; அது ஆண்நட்
சத்திரம் வயிரமரமும், பெண்நட்
சத்திரம் பால்மரமுமாகில் மக்க
ளுண்டாம்; பெண் வயிரமாமும்
ஆண் பால்மரமுமாகில் மக்கனி
ல்லை; இருவரும் வயிரமானால்
மக்களும் பொருளும் நட்டமாம்;
விரோதி வருடப்பலன்--- அதிகமழை
பெய்து மேடுகாடுகள் முதலிய
எல்லாவிடங்களும் விளைவுண்டா
கும், ஆனால் அரசர்களுக்குள் சண்
டையும் மனிதர்களுக்கு நோயும்,
பொதுவாய் உலகத்திற்குக் நெடு
தியுமுண்டாம்.
உதாரணம்; - நீடு விரோதி நில
த்தில் மழைமிகுதி, மேடுகா டெ
ல்லாம் விளைவுண்டாம் - நாடும்,
அரசர்போ ராலே யழியு முலகம்,
திரமிகுநோய் சேருமெனச் செ
ப்பு. (இடைக்காடர்)
விரோதிகிருது -- நாற்பத்தைந்தாவது
வருடம்.
விரோதிகிருதுவருடப்பலன் - சல்ல
மழையும், தானியங்கள் விளைவும்,
கரும்பு பவளமுதலிய சிவப்புப்
பொருள்கள், ஆமணக்கு முதலிய<noinclude></noinclude>
ktvce6vuns8j785l5ar261sgzlocg9a
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/222
250
641533
1926947
2026-04-25T07:11:46Z
Magizh Sundram
16422
OCR
1926947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
விளம்பிவருடப்பலன்.
தயிலப்பொருள்கள் ஆகியவை
கள் விருத்தியும், மனிதர்களுக்
குத் திரவியவிர்த்தியு முண்டாம்;
உப்பு பருத்தி முதலிய வெண்
மைப்பொருளகள் குறையுமென்
பதாம்.
உதாரணம்:- மிக்க விரோதி
விளைவுண்டு மாரியுண்டு, தக்க
சிறப்புந் தனமுண்டு - இக்குண்டு,
உப்பு பருத்தி யுலகத்தி லேகுறை
யும், துப்புமிகு மாமணக்காஞ்
சொல், (இடைக்காடர்)
விலங்+ரசு
விலங்கிறை
சிங்கம்.
விலாசி- சந்திரன், பாம்பு,
வில் - தனுராசி, மூலநட்சத்திரம்.
விவசுதன் - சூரியன்.
விவாகப்பொருத்தம் - மணப்பொரு
த்தம். விபரம்:-மணப்பொருத்தத்
திலறிக
விவாகம்- உபயம்,கடி,கலிபாணர்,
கைப்பற்றல், பரிணயம், மங்க
லம், மணம், மன்றல், வதுவை,
வரைவு, விதியுளி, வேட்டல்.
விழவு-
மிதுனராசி.
விளக்கம் - சந்திரனாள்.
விளக்கீடு - ஒருகினம் அது கோவில்
களில் விளக்கேற்றுதல்.
விளக்கு - சோதிகட்சத்திரம், தீபம்.
விளங்குதிங்கள் - சுக்கிரன்.
விளம்பி - முப்பத்திரண்டாவது வரு
டம்,
-
குறைந்த
விளம்பிவருடப்பலன்
மழையும், வேளாண்மை நட்ட
28
உகள்
வீட்டிற்கு லக்கின கேந்திர
மும், அரசர்களுக்குப் பிணியுங்
கவலையும், மனிதர்களுக்குத் துன்
பமு முண்டாம்.
உதாரணம் - விளம்பி வருடம்
விளைவுகொஞ் சம்மாரி, அனந்து
பொழியு மரசர்-களங்கமுடன்,
நோவால் மெலிவரே கோக்கரிதா
குங்கொடுமை, ஆவா புகல்வதரி
தாம். (இடைக்காடர்)
வினை - இரண்டு, பிறப்பு.
வீ
வீசகணிதம் - அச்சரகணிதம்.
வீசம் - ஓர்கணிதம், மாகாணி.
வீசி திரணம்.
வீடுகட்டுமாதங்கள் - சித்திரை, வை
காசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்
த்திகை, தை, மாசி என்பனவாம்;
ஆடிமாதம் வீடு கட்டலாகா
தென்று சில நூல்களில் சொல்லி
யுள்ளன; விபரம் - வாஸ்துபுருடன்
நித்திரை செய்யுந் திசைகளும்,
மாதங்களுமென்றதிலறிக.
வீட்டுக்கிரியை சாச்சடங்கி
னொன்று.
வீட்டிற்கு லக்கினசேச்) குருவிருக்
திர கிரகபலன் கும் இலக்
கினத்தில் முகூர்த்தக்கால் நாட்டி
புதனிருக்கும் இலக்கினத்தில்
தூலமேற்றி வீடுவேய்ந்தால்
அந்த வீட்டிற்கு அக்கினி, திரு
டர், ராசபய முதலியவைகளில்லை.
ஐந்து, ஆறு ஆகியவிடங்களில்
சந்திரனிருக்க, வெள்ளிக்கிழமை<noinclude></noinclude>
jezri203up6nrg32bdz7cr14xs6j4zm
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/223
250
641534
1926948
2026-04-25T07:12:17Z
Magizh Sundram
16422
OCR
1926948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>சோதிடப் பேரகராதி.
உகஅ
வீட்டிற்கு அறைமுதலியன
யில் வீடுகட்டினால் சம்பத்துண்
டாம்.
வீட்டிற்கு அறைமுதலி
யன கட்டும்விதி
மனை வீட்
டிற்கு
அறைகள், கூடங்கள், வாசல்கள்
முதலியன வைத்துக் கட்டுவதற்கு
அகலம் நீளம், அடியளவு விபரம்
ஆறு அடி வைத்தால் நன்மை,
எழுக்குத் தரித்திரம், எட்டுக்குச்
சேமம், ஒன்பதுக்கு பீடை, பத்
துக்கு பாக்கியம், பதினொன்றுக்கு
சன்மை, பனிரண்டுக்குப் புத்திர
நாசம், பதின்முன்றுக்கு வியாதி,
பதினாலுக்கு சஞ்சலம், பதினைந்
துக்கு துன்பம்,பதினாறுக்கு செல்
வவிருத்தி, பதினேழுக்கு சத்துரு
வெகுதானிய.
த்துநாலுக்கு நிலையாவாசம், முப்
பத்தைந்திற்கு இலக்குமிகடாட்
சம், முப்பத்தாறுக்கு வீரலட்சுமி
கடாக்ஷமுண்டாம். மற்றும் விபா
மாயறிய வேண்டில் சிற்பநூல்
பொக்கிஷமென்ற புத்தகத்திற்
காண்க.
--
வீணை - மிதுனம், மின்னல்.
வீணையோகம் - ஒரு நல்ல யோகம்;
அது அட்டமத்தோன் உச்சனாகி
மூன்றில்நிற்க, லரபாதிபன் தனத்
தானத்தில் நிற்பது.
(2) இராகு கேது நீங்கிய சூரிய
னாதி எழுவர் ஒன்றுமுதல் ஏழு
ராசிவரை தனித்தனி நிற்பது
மாம்.
செயம், பதினெட்டுக்கு மனைவீதம் - பங்கு, வேறுவேறாய்ப்பகுத்த
பாழ், பத்தொன்பதுக்கு தரித்
திரம், இருபதுக்கு இன்பமுண்
டாம், இருபத்தொன்றுக்கு நன்
மை, இருபத்திரண்டிற்கு தைரிய
விருத்தி, இருபத்துமூன்றுக்குத்
தீமை, இருபத்துநாலுக்கு மத்தி
சம்
மம், இருபத்தைந்துக்கு மனைவி
தோசம், இருபத்தாறுக்கு
பத்து,இருபத்தேழுக்கு செல்வ
விர்த்தி, இருபத்தெட்டுக்கு
தெய்வகடாட்சம், இருபத்தொன்
பதுக்கு பாக்கியம், முப்பதுக்கு
இலக்குமிவாசம், முப்பத்தொன்
பகுப்பினளவு.
வீதிகோத்திரன் - சூரியன்.
வீதிவாசற் கால் ? தலைவாசற் கால்
வைக்கும்விதி வைக்கும் விதி. விப
ரம் - தலைவாசற்கால்வைக்கும் விதி
யிற் காண்க.
வீபத்து - சந்திரன்.
வீமேசுர உள்ளமுடையான்
சோதிடநூல்.
-
வீரியத்தானம் - மூன்றாமிடம்.
வீழ்க்கை - சோதிநட்சத்திரம்.
வீழ்காள்- இழந்தநாள்.
வெ
ஓர்
வெகுசுருதம் - சிற்பநூல் முப்பத்தி
றுக்குத் துன்பமில்லை, முப்பத்தி ரண்டினொன்று.
ரண்டுக்குப் பொருள்விர்த்தி,முப் வெகுதானிய
பத்துமூன்றுக்கு நன்மை,முப்ப
வருடம்.
-
பளிரண்டாவது<noinclude></noinclude>
24qfbdcuhs754a73v053r8r2jueoddb
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/224
250
641535
1926949
2026-04-25T07:12:46Z
Magizh Sundram
16422
OCR
1926949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வெள்ளி.
சோதிடப் பேரகராதி.
உககூ
வேதகாதிபர்திசை.
வெகுதானிய வருடப்பலன் - முன் வென்ளிக்கிழமை - சுக்கிரவாரம்.
மழை குறையும், பின்மழை பெய்
யும், கரும்புப் பயிரும் விருட்ச
வெள்ளிடி
மழைக்குணமில்லாது
விழுமிடி.
-
சுக்கிரோத
சாதிகளும் விருத்தியுண்டாம், பரு/வெள்ளித்தோற்றம்
த்தியும் உப்பும் குறையும், என்றா யம்.
லும் சிறிது பஞ்சமுமுண்டாகும்.
உதாரணம் - வெகுதா னிய
வருட
மேதினியி லெல்லாம்,
தகுமாரி பின்பெய்யுந் தான்முன்-
முகில்சோர்ந்து,
கொஞ்சமழை
பெய்யுங் குலவு கழைதழைக்கும்,
பஞ்சம் பருத்தியுப்பு பாழ்.
(இடைக்காடர்)
வெங்கதிர்
வெங்கதிர்ச்செல்வன்
வெஞ்சுடர்க்கிரணம்
}
சூரியன்
வெடி- இடி.
வெண்கதிரோன்
வெண்கதிர்
வெண்சுடர்
சந்திரன்.
வெண்ணிறக்கிரகம் சந்திரன்,சுக்
வெண்ணிறக்கோள் கிரன்.
வெயில் - ஒளி, சூரியகிரணம், சூரி
யன்.
-
வெய்யவன்.
நட்சத்திரம்.
வெய்யோன் - சூரியன், வெய்யவன்,
மிருகசீரிட நட்சத்திரம்.
வெளி- ஆகாயம்.
வெளிராசி-மேடம், கடகம், துலாம்,
சூரியன் மிருகசீரிட
மகரம்.
வெள்ளம் - எண்வகுப்புளொன்று.
வெள்ளி - சுக்கிரன், வெள்ளிக்கிழ
மை,
-
வெள்ளிப்பிரிவு சுக்கிரனிருந்த
ராசிவிட்டுப் பிரிதல்.
வெள்ளிவாரம் - வெள்ளிக்கிழமை.
வெறுதுகம் - சோதிநட்சத்திரம்.
வெற்றித்தானம் - மூன்றாமிடம்.
வே
வேசியோகம்
-
ஒரு நல்லயோகம்.
அது சூரியனுக்கு முன்னே கிர
கங்கள் நிற்பது.
(2) சூரியனுக்கு இரண்டில் சந்தி
ரன் நீங்கிய சுபக்கிரகங்கள் நிற்
பதுமாம்.
வேட்டுவன் - மக நட்சத்திரம்.
வேதகன் - போதகனைக் காண்க.
வேதகாதிபர்திசை - பாசகன், போத
கன், காரகன், வேதகன் என்னும்
நால்வர்களில், இன்னவர்
திசையில் இன்னவர், பாசகன்,
இன்னவர் போதகன், இன்னவர்
காரகன், இன்னவர் வேதகன்
என்பது. விபரம்:—(1) சூரிய
திசையில் சனிபாசகனாம்,செவ்
வாய் போதகனாம், வியாழன்காரக
னாம், புதன் வேதகனாம்,
(2) சந்திரதிசையில் - சுக்கிரன்
பாசகனாம், செவ்வாய் போதக
னாம், சனி காரகனாம், சூரியன்
வேதகனாம்,<noinclude></noinclude>
m855ab7orw06hoamhw74q5ods0hsbtx
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/225
250
641536
1926950
2026-04-25T07:13:04Z
Magizh Sundram
16422
OCR
1926950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>உஉய
சோதிடப் பேரகராதி.
வேதகாதிபர்திசைக்கு
(3) செவ்வாய் திசையில் - சூரியன்
பாசகனாம், சந்திரன் போதகனாம்,
சனி காரகனாம், வியாழன் வேதக
னாம்.
வேளை.
இவர்கள் பகையாம். மேற்கூறிய
வைகளன்றிமற்றக்கிரங்கள் நட்பு
என்பீதாம்.
வேதம் - நாலாமிடம்.
வேதன் - வியாழம், நாலாமிடத்ததி
பதி,
(4) புதன் திசையில்-சந்திரன் பா
சகனாம், வியாழன் போதகனாம்
சுக்கிரன் காரகனாம், செவ்வாய்/வேதா - சூரியன்.
வேதகனாம்.
(5) வியாழதிசையில் - சனி ப-சக
னாம், செவ்வாய் போதகளும்,சந்
திரன் காரகனாம், சூரியன் வேத
சனாம்.
(6) சுக்கிரதிசையில்-புதன் பாசக
னாம், சூரியன் போதகனாம், சந்தி
ரன் காரகனாம்,சனிவேதகனாம்.
(7) சனிதிசையில் · சுக்கிரன் பாச
கனாம், சந்திரன் போசகனாம்,
வியாழன் காரகனாம், செவ்வாய்
வேதகனாம்.
வேதகாதிபர் திசைக்கு பாசாதி
சத்துரு மித்துரு பர்களில்
இன்னவர் திசையில் இன்னவர்
பகை, இன்னவர் நட்பு என்பது.
விபரம்:- சூரியதிசைக்கு பாசகன்
பகையாம், சந்திரதிசைக்கு - போ
தகன், காரகன், வேதகன், இவர்
கள் பகையாம். செவ்வாய், புதன்
இவர்கள் திசைக்கு, வேதகன்
பகையாம். வியாழதிசைக்கு, பாச
கன் வேதகன் இவர்கள் பகை
வேதி - கேட்டை நட்சத்திரம்.
வேதை- இரேகை, துன்பம்.
வேதைப்பொருத்தம் - மணப்பொ
ருத்தத்தொன்று, அது அசுபதிக்கு
மகமும், மூலமும் ஒன்றுக்கொ
ன்று பொருந்தாது, பரணிக்குக்
கேட்டையும், கார்த்திகைக்கு அனு
சமும், உரோகணிக்கு விசாகமும்,
மிருக சீரிடத்திற்கு சோதியும்,
திருவாதிரைக்கு அவிட்டமும்,புனர்
பூசத்துக்கு திருவோணமும்,
பூசத்திற்கு உத்திராடமும், ஆபி
லியத்துக்கு பூராடமும், பூரத்தி
ற்கு ரேவதியும், உத்திரத்துக்கு
உத்திரட்டாதியும், அஸ்தத்திற்கு
பூரட்டாதியும், சித்திரைக்குச்
சதையமும் பொருந்தாது. மற்ற
நட்சத்திரங்கள் பொருந்து மென்
பதாம்.
வேதோதயன் - சூரியன்.
வேந்தன் - அரசன், சந்திரன், சூரி
யன், வியாழன்.
யாம். சுக்கிரதிசைக்கு--காரகன் வேலை - அவமிருத்து, எல்லை, கா
வேதகன் இவர்கள் பகையாம்,
லம், நிகழ்காலம், பனி, பொழுது,
சனிதிசைக்கு - பாசகன் காரகன் | வேளை - காலம்<noinclude></noinclude>
fwppydkio6lchd2nu1rozltieqhloy3
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/226
250
641537
1926951
2026-04-25T07:13:33Z
Magizh Sundram
16422
OCR
1926951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>வைசாகி
சோதிடப் பேரகராதி.
வேள்வி - மகநட்சத்திரம், பனிரண்
டாவிடம்.
வேனிற்காலம் - கோடைகாலம்.
வை
வைகல் - கழிவுநாள், காள், விடியல்
வைகறை - விடிய முதற்பத்து நாழி
கை யளவு காலம், விடியற்காலம்.
வைகாசம் - வைகாசி மாதம், விசா
கம், விடியற்காலம்.
வைகாசி - விசாகம், வைசாகம், வை
காசி மாதம்.
வைகாலம் - சாயங்காலம்.
வைகுண்டஏகாதசி - மார்கழி மாதம்
பூர்வபக்கத்தில்வரும் பதினொரார்
திதி.
ஹேமந்தருது
உஉக
வைச்சுதன் - சனி.
வைதிருதி - இலாடகாளுக்குப் பதி
னான்காம் நாள், நித்தியயோகத்
தொன்று.
வைகாசிகம் - ஓர் யோகம்.
வைநாசிககட்சத்திரம் - சென்மலக்
கினத்திற்கு இருபத்திரண்டாம்
நட்சத்திரம்.
வைநாயிகை - சதுர்த்தி திதி.
வையகம் 2 உரோகணி நட்சத்தி
வையம் ரம்.
வைரோசனன் - சூரியன்.
வைவஸ்வதன் - சனி.
வைவஸ்வதி- தென்றிசை.
மாதம் பூர்வபக்கத்தில்வரும் பதி/ஹில்வலை - மிருகசீரிட நட்சத்திரத்
ஹ
வைகுண்டசதுர்த்தசி - கார்த்திகை
ஹரிணாங்கன் - சந்திரன்.
னாலாந்திதி.
தினது தலையிலுள்ள உப நட்சத்
திரங்களாம்.
முன்பனிக்காலம்,
வைகுறு - வைகறை.
வைசனனம் - பிள்ளைப்பேறுமாதம் /ஹேமந்தருது
வைசாகம் வைகாசி மாதம், விசா இது மார்கழி, தை மாதங்களாம்.
வைசாகி ஏம், வைகாசம்.
சோதிடப்பேரகராதி.
ஜு முற்றிற்று.<noinclude></noinclude>
q71g1cxeoff6mujctnpbz0fiuw7puqt
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/227
250
641538
1926952
2026-04-25T07:13:53Z
Magizh Sundram
16422
OCR
1926952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>பிழை திருத்தம்.
பக்கம்.
2228888210
12
வரி
4|கிறன்றன
பிழை.
215 கும் நட்சத்திரமாம்
218 எட்டி
124 அதமவிமிசதி
128
அற்பது
180 அதிககான் வருமாதம்
திருத்தம்.
கின்றன
கும் காலம் நட்சத்திரமாம்
ஒன்பதி
அதமவிம்சதி
அதிகமாகுமாதம்
அது கிருட்டிண
2 5 அதிசாரத்தில்வரும் வக்கிரகதி அதிசாரமும் வக்கிரமுமாம்
116 அதுகிருட்டினன்
15 120 சூரியனை பூமி சுற்றி வரும் துருவனைப் பூமி சுற்றி வரும்
போது
16 1 32 கிடதபுரி
231 இலம்பயோம்
25
37
58
12233205589
29 2 24 டாம்
2 12 நிற்
110 கணிதசாதிஸ்ரம்.
225 பிரஞ்ஞானதீகையிற்
222 இக்கினாதிபன்
232 இராஜபஞ்சகமும்
115 பனைந்தாம்.
72
100
151
152
188
191
210
211
2
124 வித்தியாதரண்யர்
8 அமிசையில் என்றது
5 வரி
121 பா-ரவிகாரி
128 ஐப்பசி மாதம்
212 116 சுகத்தையடைவார்கள்
215
227 குரு சூரியனைச்சுற்றி
போது
கிடதகிரி
இலம்பயோகம்
டம்
நின்
கணிதசாஸ்திரம்
பிரஞ்ஞானதீபிகையிற்
இலக்கினாதிபன்
பகலில் இராஜபஞ்சகமும்
பதினைந்தாம்
வித்தியாரண்யர்
முதல் இருந்த வீட்டோன் கேந்திர
உச்சமிவை க ளிலிருக்க
ஏழோன் பார்த்தாலும்
பாரவிகாரி
புரட்டாசி மாதம்
சுகத்தையடைவார்கள்
ருருபன்னிரு ராசிகளைச் சுற்றி<noinclude></noinclude>
fg9pswbr0g0dfz54gb11jzdr0xb1ps6
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/228
250
641539
1926953
2026-04-25T07:14:14Z
Magizh Sundram
16422
OCR
1926953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>இது
கந்தபுராண 4 காண்ட உரை.
கச்சியப்பசிவாசாரியாரால் ஆக்கப்பெற்ற 6 காண்டங்களில்
மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தட்சகாண்டம் ஆகிய
வைகளுக்கு பானுகவியவர்களா வியற்றிய கலாபூஷண உரையுடனுள்ளது.
சொற்பப் பிரதிகளே கைவசமுள்ளதால் முந்தினவர்களுக்குப் புத்தகம்
கிடைக்கும். விலை ரூ. 15-0-0. தபால்கூலி ரூ.1-0-0.
மங்கம்மாள் அல்லது மதுரைக்கரசி.
இது சரித்திர சம்பந்தமான துப்பறியும் இனிய செந்தமிழ் நாவல்.
வாசிப்போர்களுக்கும் சரித்திர ஆராய்ச்சிக்காரர்களுக்கும் இது ஒரு நல்
வீருந்தாகும். எல்லா பத்திரிகாசிரியர்களாலும் புகழப்பெற்று சென்னை
துரைத்தனத்தாராலும் அங்கீகரிக்கப் பெற்றுள்ளதாகையால் இதன் பெரு
மையை இங்கு விரிக்காது விடுத்தோம். விலை. 1-8-0. தபால்கூலி அணா 5.
வைத்திய நூல்கள்.
தற்கால வைத்தியபோதினி
பதிணென்சித்தர்காடி
வைத்திய அரிச்சுவடி 1, 2பாகம் 06 அகஸ்தியர்குருநாடி
ஷை நயம்
0
8
14
05
வைத்தியசார சங்கிரஹம்
1 8 குணவாகடத்திரட்டு
0 5
28
சுப்பிரமணியர்ஞானம் 200
04
பதார்த்த குணசிந்தாமணி
1 4
500
10
ஷநயம்
0 5
40
பாக்கெட் வைத்தியம்
012 க்ஷை தேவ
40
புலிப்பாணி 500
78
112 வைத்திய ரத்தின சுருக்கம்
வைத்திய சில்லரைக்கோர்வை 1 8 அனுபோகவைத்தியம் 8 கா
புலிப்பாணி பலதிரட்டு
மலையகராதி
பசுமூலிகையகராதி
வைத்தியமூலிகையகராதி
சிகிச்சாரதனதீபம்
கண்ணுசாமியம்
நவரத்தின வைத்திய சிந்தா
மணி
பெருநூல் நாலுகாண்டம்
வைத்திய ராஜசிந்தாமணி
நோயில்லா வாழ்வு
போகர் 700 (எழுநூற)
போகர் 7000 (ஏழாயிரம்)
போகர் ஜெனனசாகரம்
ஆயுள்வேதச்சுருக்கம்
ரோமரிஷி 500
அகஸ்தியர் வைத்தியம் 1500
மணிமந்திர வைத்தியம்
வைத்தியத்திரவுகோல்
மாட்டுவாகடம் தனி
மாட்டுவாகடமும் அசுவசாஸ்
திரமும்
0 6 ஜீவரக்ஷரமிர்தம்
04
04
பாகசாஸ்திரம்.
010
0 10
14
20
1 0 மில்டேரிபாகசாஸ்திரம்
14 சைவபரகசாஸ்திரம்
2 8 நளவீமபாகசாஸ்திரம்
18 சிவேந்திரபாகசாஸ்திரம்
1 4
1
மாந்திரீக நூல்கள்.
0 4
04
04
0 மலையாளமாந்திரீக அரிச்சுவடி 0 4
1 0 கடல்கட்டு மீன்மந்திரம்
012 மூலிகை ஜாலரத்தினம்
010ஷை 2ம் பாகம்
40மலையாளமாந்திரீக ரத்னாகரம்
14
° 4
04
0 12 8 பாகங்கள் ஒரேகட்டடம் 10
012பீதாம்பரையர்ஜாலம்
012 மாந்திரீகபோதினி
1 0 வராகிமாலை சக்கரம்
10 சடாாவிஞ்சைசக்கரத்துடன்0 4
010 கந்தரனுபூதி சக்கரத்துடன் 04
01210பாகம் ஜாலக்கண்ணாடி
அகஸ்தியர் மாந்திரீக காவியம்
1000
1 8
06
012<noinclude></noinclude>
r4ord8x4dc6948mn9v827by2kemz20n
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/229
250
641540
1926954
2026-04-25T07:14:38Z
Magizh Sundram
16422
OCR
1926954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>3
3
8
012
18
பலவித புத்தகங்கள்.
திருவிளையாடற் புராணம் 2
வசனம்
க்ஷைகிளேஷ்
ஷை கவி
பெரியபுராண வசனம்
க்ஷைகிளேஷ்
கலி
கந்தபுராணவசனம்
கன்னியாகுமரித்தலபுராணம்
அரிச்சந்திர புராணம்
3
0
தனிச்செய்யுட்சித்தரம
தனிப்பாடற்றிரட்டு மூலம் 1
3) உரையுடன் 1ம் பாகம் 2
2ம் பாகம்' 2
33
28 திருக்குறன் மூலம்
ரூ28
3 0
4 0 வினோதாசமஞ்சரி
நயம் பதிப்பு
20
3 0
06
உரையுடன்
20
நயம் பதிப்பு
40
30
40
30
12 0
நைடதம் உரையுடன்
"விருத்தி உரை
நல்லாபிள்ளை பாரதக்கவி
2 வால்யம்
4 0
4 0
4 0
பாட்டும் வசனமும்
1 0
வில்லிபாரதக்கவி
0
0
120
20
10
உரையுடன்
258
கம்பராமாயண வசனம்
க்ஷதிக் 2 வால்யம் சேர்ந்தது 8
க்ஷை கிளேஷ்
ராமர் அஸ்வமேதயாகம்
கம்பராமாயணக்கவி 2வரல்யம்
உள்ளது
அயோத்தியா காண்டம் உரை 3
பாலகாண்டம் உரை
சுந்தரகாண்டம் உரை
கிஷ்கிந்தாகாண்டம் மூலம்
தாயுமானவர் பாடல் மூலம்
நயம்
பாரத வசனம் 4 வால்யம்
39 .இக்கு
கினேஸ்
25
"
" சுருக்கம் ஒரேபயிண்டு 3
விராடபர்வம்
0 ஆதிபர்வம்
8 யாழ்ப்பாணம் போகராதி
8 காலாயிர திவ்யப்பிரபந்தம்
பகவற்கீதை வசனம்
0
14
20
10 0
4 0
18
க்ஷை உரையுடன்
3
4
1 0 க்ஷை பாக்கெட் சைஸ்
இராமலிங்க ஸ்வாமிகன்
திருவருட்பா
அகத்தியதேவாரத்திரட்டுநயம்1 12
0 10
5 0
விருத்தி உரை 4
0
திருவாசகம்
10
பாகவத வசனம்
க்ஷ 2 வால்யம்
5
0
நயம்
1
4
"
99
கிளேஷ்
120
பக்தவிசயம் 1 - வது
1
"
2-வது
3,4 பாகங்கள்
80 சூடாமணி நிகண்டு 11, 12
மட்டும்
81முதல்12 தொகுதிசேர்ந்தது2
30விநாயகர் கொத்து
0 12
1 8
3 0
"
நயம் பதிப்பு
20
ஷை நயம்
212
0
பட்டணத்தார் பாடல்
உரையுடன்
குணங்குடி மஸ்தான் பாடல் 1
0
அருணாசலபுராணம்
உரையுடன்
மற்றும் சகலமான புத்தகங்களும் நமது புத்தகசாலையில் விலை சகாய
மாகக்கிடைக்கும். வேண்டுவோர்கள் காட்லாக்குக்கு எழுதுங்கள்.
சோதிட சாஸ்திரி,
எஸ்.கூடலிங்கம் பிள்ளை,
புத்தகசாலை, மதுரை
20
4 விநாயகபுராண வசனம்
5 0<noinclude></noinclude>
t0z1q61k2jaovf3ebkrcn538kccbf08
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/230
250
641541
1926955
2026-04-25T07:15:01Z
Magizh Sundram
16422
OCR
1926955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>புதிய சோதிடப் புத்தக விளம்பரம்.
சிற்பநூற் பொக்கிஷம்.
தற்காலம் அச்சில் வழங்கிவரும் 40 அடி அளவுவரைக்குள்ள விதி
முறைகள் போலல்லாது இராஜமாளிகை முதல் சிறு வீடுகள் வரை கட்டு
வதற்கு 120 அடி அனவு வரைக்குள்ள விதிமுறைகளனைத்தையும் தமிழா
சிரியரும், ஜோதிட சாஸ்திரியுமாகிய சந்தனம்பிள்ளையவர்களின் பழைய
ஏட்டுப்பிரதியிலிருந்தெடுத்துத் திரட்டி அருமையான அநேக புதிய விஷ
யங்களோடு உயர்ந்த கினேஸ் கடிதத்தில் சுத்தமாக அச்சிட்டு நேர்த்தியான
பயிண்டு செய்துள்ளது. சொற்பப்பிரிதிகளே அச்சிட்டிருக்கிறபடியால்
வேண்டுவோர் முன்னாடியே எழுதிப் பெற்றுக்கொள்ளுங்கள். விலை ரூ.
100, தபால் கூவி அணு 5.
பாராசாரியம்.
இது தற்காலம் அச்சில் வழங்கும் பிழையோடுள்ளதுபோலல்லாது
பழைய எட்டுப்பிரதியிலிருந்து பரிசோதித்து சுத்தப்பதிப்பாக அச்சிட்டுன்
ளது. திசாபுத்தி பலன் அறிய விரும்புவோர்களுக்கு மிகுந்த உபயோகமுன்
ளது. விலைரூ.0- 12 -0. தபாற்கூலி அணா4.
வானசேகர சப்தகோள தீவம்.
இது யாழ்ப்பாணம் பண்டிதரால் எழுதப்பட்டது. ஜோதிடர்களுக்
கும் மற்றோர்களுக்கும் அதிக உபயோகமான சூரியனார் 7கீரகங்களின்
ககோள சக்கரல்கள், சத்தி, சிவபீசாட்சர சக்கரங்கள், நாற்பத்து முக்கோ
ணம், மானுடகிருந்தியம், சாபிண்டசமஸ்காரம், தினவோரை, தறிக்கால்,
பிரயாணம, எட்டுதிக்குத் ஆகிய பலவிதங்களையும் விபரமாக விளக்கும் 8 வித
ச்சச்கரங்களுடன் 160 ஆராய்ச்சி விஷயங்களோடு வேறு பல
மான விஷயங்களுஞ் சேர்த்து அச்சிட்டிருக்கிறது. விலை ரூ 1-0-0
தபால்கூலி அணா4.
சூடாமணி உள்ளமுடையான்.
உபயோக
இது முகர்த்தாதி கணிதமுறை முதலிய ஜோதிடங்களனைத்தையும்
தெளிவாக விவரிக்கும் அருமையான ல். விலை ரூ 1-00 தபாற்கூலி
சாதகசிந்தாமணி.
4.
து சோதிடசாஸ்திரங்களுள் மிக்க பழமையானதும்
முதன்மை
யுள்ளதுமாகும். துவாதசபாவகங்களனைத்தும் மிக்க விவரமாகக் கூறப்பட்
டிருக்கிறது.பிழையறப் பரிசோதித்தது, திக்குக்கடிதத்தில் அச்சிட்ட சுத்
தப்பதிப்பு விலை ரூ. 2-8-0 தபாற்கூலி அனா 6.
ஜெயமுனி ஜோதிடம் 12000 கவிகள்.
இலட்சக்கணக்கான செய்யுள்கனடங்கிய ஜோதிட சாஸ்திரங்கள்
(ஓலைப்பிரதி) என்னிடமிருக்கிறதென்பது தமிழ் நாட்டாரனைவருக்குத்
தெரியும். இதில் ஜோதிடர்களுக்கும், மற்றோர்களுக்கும் மிக்க உபயோக
மானதும் இதுவரை அச்சிற்குவராததுமாயிருக்கும் பலசாஸ்திரங்களில்
மேற்கண்ட 12000த்தை அச்சிட்டு வெளியிட உத்தேசித்திருக்கின்றே
னாகையால், இப்புத்தகத்தை விரும்புவோர்கள் தங்கள் விலாசத்தைத் தெரி
வித்தால் பதிவு செய்துகொண்டு புத்தகம் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.<noinclude></noinclude>
1sszoako2k983qnvbtoklne9i0tmprr
பக்கம்:சோதிடப் பேரகராதி.pdf/231
250
641542
1926956
2026-04-25T07:15:32Z
Magizh Sundram
16422
OCR
1926956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" /></noinclude>புதிய சோதிடப் புதத்க விளம்பரம்,
சோதிட அரிச்சவடி
க்ஷ2யந் பூழகம்
சோதிடசிதா
கணியென்லும்
வருசாதியில்
க்ஷ நயம்பதிப்பு
சுந்தரசேகரம்
டிை 2ம் பாகம்
ஷை 8ம் பாசமாகிய
தியாகராஜஜோசியம்
புலிப்பாணிஜோதிடம்
க்ஷை தாய்மகளேசல்
சாதக அலங்காரம்
ஷை உரையுடன்
வீமேசாஉள்ள முடை
யான் உரையுடன்
}
மங்களேஸ்பரியம் உரை
யுடன்
நந்திவாக்கியம்
க்ஷை 2ம் பாகம்
சினேந்திரமாலை
0-4-0 அவகையாருடம்
சவக்கிரகமாலை
10 சாதலைத்தெளிவானந்த
1-4-0
0-10-0
}0-1
0-10--0
-0-0
1-8-0 அனுபோக பிரச்னை-ஒரு
0-12-0
டம்
0.12--0
0-12-0
சிந்தாமணி
0-12-0 சாதாபாரிசாதாம்
0-12-0 அனுபோகசாதகாகியம் 0-12-0
ஜோதிடக்களஞ்சியம்
0-12-0 ஜோதிட குணகரம்
0-12-0 மணிகண்டகோளம்
0-12-0 துய்ய கோளம்
2-0-0 மரணாண்டி
18-0 சர்வார்த்த சிற்பசித்ாமணி
2-0-0
க்ஷை அத்தப்பதிப்பு
ஜோதிடல்லலாக்
கோவை
குமாரசாமியம் உரையுடன் 1- - 0 ஜெயமுனிவாக்கியம்
க்ஷைக்ஷஸ்திரிஜெனன
ருது சாதாம்
கௌசிகசிந்தாமணி
லை 2ம் பாகம்
3ம் பாகம்
சர்லகனவின்பலன்
1-8-0 கனவுகாணுஞ்சாஸ்திரம்
போகர்பஞ்சபட்சி உனர
51--80 ராம ைமூலம்
0-14-0 ஷ உரை
1-00 ைஉனர
1-0-0
0-12--0
9
1-4--0 அகஸ்தியர் பட்சி மூலம்
3-பாகம் சேர்ந்தது
800
கயலமுனி இரேகை
சத்தரிசிவாக்கியம் 5500 2
பாடல்
38- 0 -
இராமதேவர் இரேகை
ஸ்திரிபுருஷ சாமுத்திரி
வீடிசவி
0-10-0
கா லட்சணம்
ஜோதிடகணிதம்
08-0
செவுளி சாஸ்திரம்
பஞ்சாங்ககணிதம் 5 பா2
நொடுகுறி சாஸ்திரம்
பலதீபிகை
கணிதமுருகசேகரம்
ஓராசாஸ்திரம்
சந்திரகாவியமூலம்
கோட்சாரகித்தாமணி
கம் 3 புத்தகம் 55-00 வால்மீக ஆளுடம்
300 அம்மணி ஐயாச்சாமியம்
100 ஜோதிடமாலை
புட்பபந்தம் மழைக்குறி 0 -8-0
மணிமந்திரம்
1 - 0 0 ஜோதிடநூலாதாரம்
0-2-0 புசுண்டர்காடி
10-0 சந்தனநூல்
01315
0-2-0
மற்றும் சகலமான புத்தகங்களும் நமது புத்தகசாலையில் விலை சகாய
மாகக்கிடைக்கும். வேண்டுவோர்கள் காட்லாக்குக்கு எழுதுங்கள்.
சோதிட சாஸ்திரி,
எஸ்.கூடலிங்கம் பிள்ளை,
புத்தகசாலை, மதுரை.<noinclude></noinclude>
fexscd2wz8d71seppeyuyrmmu5laupr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/588
250
641543
1926960
2026-04-25T07:27:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயல்பு’ என்னும் நூலில் உரோமானியக் குடியரசில் தான் குடிமக்கள் பண்பு (Virtus) அல்லது பொது நலக் கருத்து (Public Spirit) என்பது நன்கு வளர்ச்சியடைந்திருந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியரசுத் தலைவர் ஆட்சி|568|குடியரசுத் தலைவர் ஆட்சி}}</noinclude>இயல்பு’ என்னும் நூலில் உரோமானியக் குடியரசில் தான் குடிமக்கள் பண்பு (Virtus) அல்லது பொது நலக் கருத்து (Public Spirit) என்பது நன்கு வளர்ச்சியடைந்திருந்தது என்றும், உரோமானியக் குடியால் ஒவ்வொருவருடைய தனிவாழ்வு உரிமைகளும் (Private rights), பொது வாழ்வுரிமைகளும் (Public rights) நன்கு வரையதுக்கப்பட்டுப் பழக்கத்துக்கு வந்தன என்றும், ஒவ்வோர் உரோமானியக் குடியரசின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் நன்கு பாதுகாக்கக் கூடியவாறு அரசாங்க அதிகாரங்கள் அரசாங்கத்தில் குவிக்கப்படாமல், மூன்று உறுப்புகளுக்கிடையே பிரிக்கப்பட்டும், அரசாங்கமே தடை: சமன் கோட்பாட்டில் இயங்குமாறு (Principle of Checks and Balances) ....... அமைக்கப்பட்டும் இருந்தல் என்றும் கூறி, பண்டைய உரோமானியக் குடியரசு தான் சிறந்த ஒரு நடியரசின் அமைப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். மனித சுதந்திரம் என்பது ஓர் ஆனின் சிறந்த குடிமைப் பண்பிலிருந்து தோன்றாமல், அரசாங்கத்தைச் சரிவர அளமத்தலின் விளைவாகவே தோன்றுகின்றது என்றும், அரசியலமைப்புகளைச் சரிவர அமைத்தல் என்பது அவற்றை அதிகாரப் பிரிவினைக் கொள்கையினடிப்படையில் அமைத்தலாருமென்றும், ஆகையால் அதிகாரப் பிரிவினைக் கொள்கையினாப் படையில் அரசாங்கங்களை அமைத்தலே குடியாளின் சுதந்திரத்துக்குத் தக்கதொரு பாதுகாப்பு ஆகுமென்றும் அவர் சில முடிபுகளைக் கூறினார்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Fletcher, F.T.H..</b> Montesquieu and English Politics (1750-1800). London, 1939.<br>
<b>Gooch G.P..</b> Politicial Thought in England: From Bacon to Halifax, London, 1946.
<b>குடியரசுத் தலைவர் ஆட்சி</b>: இங்கிலாந்தைப் போன்று நாடாகுமன்ற நிருவாக முறையையும், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்று நடுவண் கூட்டாட்சி அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கங்களுக்குரிடையே அதிகாரப் பகிர்வு முறையையும் இணைத்துள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், சாதாரண சூழ்நிலைகளில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவராக விளங்கும் குடியரசுத் தலைவருக்கு, குறிப்பிட்ட சில நெருக்கடியான சூழ்நிலைகளில், ஒரு மாநில அரசையோ பல மாநிலங்களின் அரசுகலையோ, எல்லா மாநில அரசுகளையுமோ தாமே ஏற்று, தமது நடுவண் அரசு அதிகாரிகளின் வாயிலாக நடத்துவதற்கு, பாகம் 18-இல், பிரிவு 352 முதல் பிரிவு 360 வரை மிக விரிவான அதிகாரங்கள் வழங்கப்படடுள்ளன; அவற்றைக் கையாண்டு குடியரசுத் தலைவர் நடத்தும் நேர்முக ஆட்சியே குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) எனப்படும்.
<b>தனிப்பட்ட அதிகாரங்கள்</b>: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352-ஆம் பிரிவின்படி, இந்தியா முழுவதன் பாதுகாப்போ, அதனுடைய எந்த ஒரு நிலப் பகுதியின் பாதுகாப்போ, போர் அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் அல்லது உள்நாட்டுக்க கலகம் முதலியவற்றால் அழிக்கப்படக் கூடுமென்ற அஞ்சத்தக்க சூழ்நிலை தோன்றுவதாகக் குடியரசுத் தலைவர் கருதுவாராயின், அவர் ஒரு நெருக்கடி நிலைப் பேரறிக்கையை (Proclamation of Emergency) விடுத்தற்கு அதிகாரம் உடையவர்; இப்பேரறிக்கையானது அவரால் வீடுக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக நாடாளுமன்றத்தின் இரு மன்றங்களினாலும் ஒப்புக்கொள்ளப்பட்டால் தான் அது செல்லுபடியாகும். குரயரசுத் தலைவர் ஆட்சியை நிறுவும் பேரழிக்கையானது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்றாலும், அது ஆறுமாத காலத்திற்குத்தான் நடைமுறையினிருக்கும் (பிரிவு 356): அப்பேரறிக்கை தொடர்ந்து இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாயின், மேலும் 6 மாத காலத்துக்கு நடைமுறையிலிருக்கும். ஆனால், எந்த தெருக்கடி நிலை பேரறிக்கையும் 3 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையிலிருந்தல் இயலாது. நெருக்கடிப் பேரறிக்கை நடைமுறையிலிருக்கும்போது, மாநில அரசின் நிருவாக அதிகாரமானது கையாளப்பட வேண்டி வழிகளை நடுவண் அரசு மாநிலத்துக்கு விடுக்கலாம்; நெருக்கடிக காலத்தில் நாடாளுமன்றம் மாநிலங்களுக்காகச் சட்டங்களைச் செய்யவும், வரிகளை விதிக்கவும் அதிகாரம் உடையது (பிரிவு 35-4) ஏதேனும் ஒரு மாநில அரசு இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நடைபெற இயலாதவாறு தடுக்கவல்ல ஒரு சூழ்நிலை அம்மாநிலத்தில் தோன்றியுள்ளதாக அதன் ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவர் செய்தி பெறுவாராயின், அப்போது ஒரு பேரறிக்கையை விடுத்து, மாநில அரசு அதிகாரங்களனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றை அதன் ஆளுநர் அல்லது வேறெந்த அதிகாரியின் அதிகாரங்களையும் தாமே எடுத்துக் கையாளலாம். மாநிலச் சட்டமன்றம் தன் அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் ஆணைப்படி கையாளுதல் வேண்டுமென்று கூறலாம். நெருக்கடிக் காலத்தில் அரசியலமைப்பின் எந்தப் பிரிவையும் செயற்படாமல் நிறுத்திவைக்கலாம் (பிரிவு 356, நெருக்கடிக் காலத்தின் அரசியலமைப்பிள் 19-ஆம்<noinclude></noinclude>
enb4345sdm27bs6b5bjg4jjbh8fxu0k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/589
250
641544
1926968
2026-04-25T07:38:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விதியில் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, முதலிய அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்படலாம் (பிரிவு 358). நாடாளுமன்றத்துக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சி|561|குடியாட்சி}}</noinclude>விதியில் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, முதலிய அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்படலாம் (பிரிவு 358). நாடாளுமன்றத்துக்கு மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள எந்தப் பொருளையும் பற்றிச் சட்டம் செய்தற்கு நெருக்கடிக் காலத்தில் அதிகாரம் உண்டு.
<b>அதிகாரங்களைப் பற்றிய சில கருத்துகள்</b>: வேறெந்தக் கூட்டாட்சி நாட்டிலும் காணப்படாத அளவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அதிகாரங்கள் பெருமளவுக்குக் குவிக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்தியக் கூட்டாட்சி பெயரளவில்தான காணப்படுகிறதே தவிர நடைமுறையில் இல்லை என்றும் உண்மையில் இந்தியா ஓர் ஒற்றை அரசு நாடு தான் என்றும் (Unitary State) கூறுகின்றனர். இக்கருத்து முழுவதும் உண்மை அன்று: குடியரசுத் தலைவருக்களிக்கப்பட்டுள்ள விரித்த அதிகாரங்களெல்லாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில், நெருக்கடி நிலை உள்ள காலத்துக்கு மட்டுமே அவரால் கையாளப்படுவளயாகும். மேலும் இந்தியாவை ஒரு நாடாக இணைத்த ஆங்கிலேயர் நெடுங்காலமாக, 1919-ஆம் ஆண்டு வரையிலேனும், அதை ஒற்றை அரசு நாடாகவே ஆண்டுவந்தனர்; ஆட்சித்துறையில் சில வசதிகளுக்காக அவர்கள் மாகாணங்களுக்குச் சிறிது சிறிதாகக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி அவற்றைத் தன்னாட்சி உரிமையுடையனவாக ஆக்கி, 1935 இல் ஒரு கூட்டாட்சி முறையை மேல்நிலையிலிருந்து கீழ் நோக்கியவாறு ஏற்படுத்தினர். அதனால் மாகாணங்களின் மீது நடுவண் அரசின் கட்டுப்பாடு உறுதியாக இருக்கும் பொருட்டு நடுவண் அரசிடம் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்தினர். இந்த முறையைப் பின்பற்றியே இந்திய அரசியலமைப்புச் சட்டமும் வரையப்பட்டது. இந்திய இணையம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பொருட்டும், இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் ஒரே சீரான வளர்ச்சிசம் முன்னேற்றமும் எல்லாத்துறைகளிலும் இருக்கும் பொருட்டும் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளையுடைய இந்தியக் கூட்டாட்சி முறை நிறுவப்பட்டது.{{Right|<b>பா.சூ</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gennings, Ivor,</b> Some Characteristics of the Indian Constitution, Oxford, 1953.<br>
<b>Keith. A. B.,</b> A Constitutional History of India. 1600-1935, Methuen, 1938.
<b>குடியாட்சி</b>: ஒருசில கோட்பாடுகளையும், ஒரு குறிப்பிட்ட அரசியல் முறையையும் குறிப்பிடுவதுதாள் குடியாட்சி என்ற சொல், இருப்பினும் இதற் இச்சரியான விளக்கம் அளிப்பது எளிதன்று, மக்களின் அதிகாரம் என்ற பதத்திலிருந்து தோன்றியது. தான் குடியாட்சி என்ற சொல் குடியாட்சி என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடு (Realistic Normativism) கருதப்பட்டால் இருக்கக்கூடியதொன்றை அது சுட்டிக்காட்டுகின்றது என்று கூறலாம். குடியாட்சி (Democracy) என்பது ஒரு கற்பனையன் விலான நெறிமுறை (Utopian Normativism) என்று கருதப்பட்டால் குறைபாடற்ற சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அது குறிப்பிடுகிறது என்று கூறலாம். இப்பதத்திற்கு விளக்கம் அளிக்க முயற்சி எடுத்தவர்களிடையே கருத்தொற்றுமை காண்பதற்கில்லை, கட்சிகளிடையே போட்டி காணப்படும் அமைப்பில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பெரும்பான்மையினர். சிறுபான்மையினருடைய உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுதான் குடியாட்சி என்பது பெரும்பாலோரால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேது ஆட்சி முறைகளுள் ஒன்று நான் குடியாட்சி என்று கூறும்பொழுது பிற ஆட்சி முறைகளிலிருந்து இதனை வேறுபடுத்தும் பண்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. எதேச்சாதிகார முறையைத் தவிர்த்துப் பிற எல்லா அரசியல் முறைகளையும் குடியாட்சி என்று குறிப்பிடுவதும் வழக்கமாகி விட்டது. ஆனால் அது பொருத்த மற்றது.
குடியாட்சி (Demokratia) என்ற சொல் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில்தான் முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது. குடியாட் என்பதை கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஓர் அரசியல் கோட்பாடாக மட்டுமே கருதி வத்தனர். குடியாட்சியின் சமூகப் பண்புகளை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் அலெக்கி த தாக்கலில் (Alexis De Tocqueville) என்ற பிரஞ்சு அறிஞர், அதன் பின்பு சமூகக் குடியாட்சி (Social Democracy) என்ற பதம் பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பொருளாதாரக் குடியாட்சி (Econimoic Democracy) என்ற சொல்லை மார்க்சிசம் கையாண்டது. தொழிற் குடியாட்சி (Industrial Democracy) என்ற சொல்லை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கூட்டுறவுக் குழுச் சமவுடைமையைச் சரும் சமூகக் குடியாட்சியும் சமநிலைக் குடியாட்சியும் (Socialist Democracy) ஒன்றல்ல. அரசால் செயற்படுத்தப்படும் ஒரு கொள்கையைந்தான் பின்னது குறிப்பிடுகிறது. குடியாட்சிப் பண்புடைய தாகர் சமுதாயத்தை மாற்றும் முறைதான் சமூகக் குடியாட்சி எனப்படும். இதனை ஒரு வாழ்க்கை முறை என்றும் கூறலாம்.{{nop}}<noinclude>
<b>வா.க. 7-36</b></noinclude>
fnqi4gajkcjwmkrto7ayx5mja06glt3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/590
250
641545
1926977
2026-04-25T07:47:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசியலையும் நீதி சமத்துவத்தையும் குறிக்கோளாகக் கொண்டது அரசியற் குடியாட்சி (Political Democracy). தகுதிச் சமநிலையைக் காட்டுவது சமூகக் குடியாட்சி, ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சி|562|குடியாட்சி}}</noinclude>அரசியலையும் நீதி சமத்துவத்தையும் குறிக்கோளாகக் கொண்டது அரசியற் குடியாட்சி (Political Democracy). தகுதிச் சமநிலையைக் காட்டுவது சமூகக் குடியாட்சி, பொருளாதாரச் சமநிலையைக் காட்டுவது பொருளாதாரக் குடியாட்சி அரசியல் குடியாட்சி இல்லாவிடில் பொருளாதாரக் குடியாட்சியை அடைய முடியாது. ஆனால், மார்க்சியக கோட்பாட்டின்படி பொருளாதாரக் குடியாட்சியானது அரசியல் குடியாட்சியை அகற்றுன்றது. பொருளாதாரக் குடியாட்சியுடன் தொடர்புடையது தான் தொழிற்குடியாட்சி, தொழிற்சாலைகளுக்குள் காணப்படும் குடியாட்சி முறையைக் குறிப்பிடுவது தான் தொழிற்குடியாட்சி.
மக்களின் குடியாட்சி (People's Democracy), முற்போக்குக் குடியாட்சி (Progressive Democracy) சோவியத்துக் குடியாட்சி (Soviet Democracy) ஆகியவற்றை வகைப்படுத்துவது எனிதன்று. மக்களின் குடியாட்சி என்ற சொல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்புதான் வழக்கத்திற்கு வந்தது.
குடியாட்சி என்பதை ஆட்சிமுறையாகவும் கருதலாம். குடியாட்சி என்ற சொல்லின் பொருளுக்கு எந்த முறையில் செயற்பட்ட ஆட்சிமுறை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்சு (Athens) நகரத்தில் மட்டுமே காணப்பட்டது. அதீனிய மக்களுக்கிருந்த அதிகாரத்திற்கு இணையாக அதன் பின் எந்த மக்களுக்கும் அதிகாரம் இருந்ததில்லை, இன்றைய குடியாட்சி முறை அதனின்றும். முற்றிலும் மாறுபட்டதாரும். பங்கேற்பிற்குமாறாகப் பிரநி நிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இன்றைய குடியாட்சி, அதிகாரப் பயன்படுத்தலுக்கு மாறாக அதிகார ஒப்படைத்தலைத்தான் இன்று குடியாட்சியில் காணமுடிகிறது, மக்களால் மக்கள் மீது செலுத்தப்படும் ஆட்சி என்று கிரேக்கக் குடியாட்சியை வருணிக்க முடியும். இந்த விளக்கம் இன்றுள்ள மக்களாட்சிகளுக்குப் பொருந்தாது, ஏனென்றால் ஆட்சி புரிவோர் ஆட்சி புரியப்படுவதில்லை. கிரேக்க முறைக் குடியாட்சி இன்றுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றதன்று. ஆனால், எல்லாக் காலங்களிலுமிருந்த குடியாட்சிகளிலும் குடிமக்கள், சமூக சமத்துவத்துக்கான சமூ உரிமைகளையும், ஆட்சியில் பங்கேற்றுக் கொள்ளுவதற்கு உதவும் அரசியலுரிமைகளையும் பெற்றிருந்தார்கள் என்பது காணப்படுகிறது.{{Right|<b>ஆ.ஜா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Aimond, Gabriel, A. and Coleman, James, S.</b> (Eds) The Politics of the Developing Areas, Print ceton University Press, 1960.<br>
<b>Bryce, James,</b> Modern Democracies, 2 Vols, Macmillan, New York, 1921.<br>
<b>Clegg. Hagha,</b> A New Approach to Industrial Democracy, Oxford, Blackwell, 1960.
<b>குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு</b> என்பது சமநிலைக் கோட்பாட்டின் (Socialism) ஒருவகை (School) ஆகும். பொதுவாகப் புரட்சி வழியிலல்லாமல், சமநிலைக் கோட்பாட்டின் குறிக்கோள்களை அடைவதற்குக் குடியாட்சி முறைகளைச் கூறும் கோட்பாடே குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு (Democratic Socialism) என்று கூறப்படுகிறது. இக்கோட்பாடு அண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப்பின் சுதந்திரத்துடன் தோன்றிய இந்தியா போன்ற புதிய நாடுகளில் மக்களுடைய ஆதரவைப் பெற்றது. அதற்குக் காரணம், இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக, இருந்து வந்த நடியாட்சிமுறையானது அரசியல் சமத்துவம் (Politicial Equality) என்ற அடிப்படையிலமைந்து, ஓரளவேனும் பொருளியல் சமத்துவமில்லாமல், உண்மையில் செல்வர்களுடைய ஆட்சியாக
(Oligarchy) இயங்கியதே ஆகும். குடியாட்சி நிறுவன அமைப்புகளுக்குப் பின்னர் உண்மையில் ஆட்சியில் உரிமை பெற்றிருந்தவர் செல்வர்களாக இருப்பின், அது உண்மையில் குடியாட்சி ஆகாது. ஆகையால், உண்மையான குடியாட்சியிலே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெரிதும் குறைக்கப்பட்டு, எல்லாக் குடிகளுக்கும் பெருமளவு பொருளாதார சமத்துவம் இருந்தால் தான் குடிகள் யாவரும் ஆட்சியில் சம அரசியல் உரிமையோடு பங்கு கொள்ள இயலும் என்ற கருத்து வேரூன்றிறறு. இக்கருத்தே பல புதிய சுதந்திர நாடுகளிலும், பழைய முதலாளித்துவ முறையைப் பின்பற்றிய நாடுகளிலும் ஆளுவோரால் பின்பற்றப்பட்டுத் தொழில், வாணிகத் துறைகளில் பெருமளவு செயற்படுத்தப்பட்டது.
<b>கோட்பாட்டின் கூறுகள்</b>: மக்களுக்கு அரசாங்கத்தில் பங்கு இருத்தல் வேண்டுமென்ற குடியாட்சிக் கொள்கையும், குடியாட்சி உரிமைகளைத் திறமாகக் கையாளுதற்கு உதவியாகச் சமூகத்தில் பெருமளவு ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமளிக்காத பொருளாதார சமத்துவம் இருத்தல் வேண்டுமென்ற சமநிலைக் கொள்கையும் மனித சமூக வரலாற்றின் தொடக்கத்திலேயே காணப்பட்டன. குடியாட்சியின் இயல்பும்,<noinclude></noinclude>
7yv5q0a87am73xbnvhgbv9y8t8mfrqj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/591
250
641546
1926981
2026-04-25T08:26:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடிவமும் காலந்தோறும் மாறுபட்டன. பண்டைய ஏதென்சு நகரரசில் அடிமை வகுப்பாருக்கும். அயலவருக்கும், வணிகருக்கும். அதீனியக் குடிகளின் பெண்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிச்...|563|குடியாட்சிச்...}}</noinclude>வடிவமும் காலந்தோறும் மாறுபட்டன. பண்டைய ஏதென்சு நகரரசில் அடிமை வகுப்பாருக்கும். அயலவருக்கும், வணிகருக்கும். அதீனியக் குடிகளின் பெண்களுக்கும் அரசியலில் பங்கு இல்லாத வகையில் ஒரு வகைக் குடியாட்சி நடைபெற்றது. இங்கிலாத்தில் கி.பி.18,19-ஆம் நூற்றாண்டுகளில் நிலவுடைமையாளர்களுக்கும் வணிகருக்கும் முதல் வளமுடையோருக்கும் அரசியலில் பங்கு இருக்கத்தக்க வகையில் குடியாட்சி நடைபெற்றது. எவ்வாறாயினும், ஒரு நாட்டில் குடிமக்களுக்கு அரசாங்கத்தில் பங்கு இருத்தல் வேண்டுமாயின், அங்கு வயது வந்த எல்லாக் குடியாட்களுக்கும் தேர்தல்களில் வாக்கு அளிக்கவும், வேட்பாளராகப் போட்டியிடவும் குறித்த காலங்களில் தேர்தல்கள் நடத்தவும், பணித்தகுதி உடையோர் அரசாங்க அலுவல்களைப் பெறவும் உரிமை இருத்தல் வேண்டும். சமமான உரிமைகளும், பேச்சுரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும், கழகம் அமைக்கும் உரிமையும் யாவர்க்கும் இருந்தல் வேண்டும். நீதிமன்றமானது நிருவாகத்தின் கிளையாகச் செயற்படாமல், அதன் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டு, சட்டங்களை ஆதாரமாகக் கொண்டு பணி செய்தல் வேண்டும். செய்தியாளருக்குச் சுதந்திரம் இருத்தல் வேண்டும். சட்டத்தின் ஆட்சியே தவிர அங்கு ஒரு குறிப்பிட்ட ஆனின் கருத்துக்கேற்ப ஆட்சி நடைபெறுதல் கூடாது. ஒருவர் கருத்தை மற்றவர் அறியுமளவுக்குப் பொறுமைப் பண்பும், கல்வி பெறும் வாய்ப்புகளும், சாதாரண மக்களிடத்து ஓரளவேனும் திறமையும், பண்பும், தகுதிகளுடைய தலைவர்கள் தோன்றுதற்கு வாய்ப்புகளும் இருந்தல் வேண்டும். இவையே குடியாட்சியின் கூறுகளாம்.
நாட்டின் செல்வ ஆதாரங்களும், தொழிலும், வாணிகமும் அரசாங்கத்தின் உடைமைகளாதலும், உற்பத்திரையும் பங்கிடுதலையும் தேசிய தலத்தின் பொருட்டு அரசின் சார்பாக அரசாங்கம் கட்டுப்படுத்துதலும், சமநிலைக் கோட்பாட்டின் பொருளாகும். இக்குறிக்கோள்களே சமநிலைக் கோட்பாடாகவும் இயக்கமாகவும் அமைந்துள்ளன. கி.பி. 15, 16- ஆம் நூற்றாண்டுகளிலும், பின்னரும் ஏற்பட்ட புதிய நாடுகள் கண்டுபிடிப்பும் குடியேற்றங்களை நிறுவும் கொள்கையும், வாணிக வளர்ச்சியும், கி.பி. 1760-1830-ஆம் ஆண்டுகளிலேற்பட்ட தொழிற்புரட்சியும் (Industrial Revolution) தொழில் வளர்ச்சிக்கும் மூலதன வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. ஆதவின், இங்கிலாந்தில் தொழிற்சாலைகளை நிறுவி, பொருள் உற்பத்தி செய்யவும், பொருள்களை வாங்கவும், விற்கவும் கூடிய முதலாளி வகுப்புத் தோன்றிற்று நாட்டில் யாவருக்கும் அரசியலுரிமைகன் சமமாக இருந்தாலும். உண்மையில் இவ்வுரிமைகளைப் பயன்படுத்திப் பாராளுமன்றத்துக்குத் நேர்ந்தெடுக்கப்படுதற்கும், அமைச்சரவைகளை அமைத்தற்கும் முதலாளி வகுப்பாருக்கே வாய்ப்புகள் இருந்தன, அவர்கள் அரசாங்கங்களை அமைத்துத் தம்தொழில், வணிக நலன்களைப் பாதுகாத்தற்கே விரும்பில் காரணத்தால், அதற்கேற்ற சட்டச் செயள்முறைகளைக் கொண்டுவந்து, தொழிலாளர் நலனைப் புறக்கணித்தனர். அரசாங்கம் அமைதி, பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு முதலியவை பற்றிய பணிகளைத் தவிரப் பொருளாதாரத் துறைகளில் ஈடுபடலாகாது என்ற தனியார் சுதந்திரக் கொள்கையைக் (The Individualistic Theory or Laissez Faire) கடைபிடித்துப் பொருளாதாரத் துறையில் சமத்துவமின்மையை உண்டாக்கினர். அச்சூழ்நிலைகளில் சமநிலைக் கோட்பாடு உருவாயிற்து. எல்லாப் பெரிய தொழில்களும், விளை நிலமும் அரசின் உடைமையாக அதாவது சமூகம் முழுவதன் உடைமையாக ஆக்கப்படுதலும், அவையெல்லாம் ஒரு சிலருடைய நலனுக்காக அல்லாமல், பொது நன்மைக்காக ஒரு தேசியப் பொருளாதாரத் திட்டத்துக்கேற்பா நடத்தப்படுதலும் வேண்டும் என்பதும் சமநிலைக் கொள்கையின் கூறுகளாகும்.
உருசியா நாட்டில் 1917-ஆம் ஆண்டுப் பொதுவுடைமைப் புரட்சிக்குப்பின் நிறுவப்பட்ட புதிய பொதுவுடைமை அரசாங்கமானது, மார்க்சின் சமநிலைத் கோட்பாட்டைச் (Marzian Socialim) செயற்படுத்தும் பொருட்டு, அங்குப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றே செயற்படவும், தேர்தல்களில் போட்டியிட்டு அரசாங்கத்தை அமைக்கவும், தொழிலையும், வாணிகத்தையும் அரசாங்கமே ஏற்று நடத்திப் பல பொருளாதாரத் திட்டங்களை எதேச்சதிகாரமான முறையில் செயற்படுத்தவும் செய்தது. அதனால் பொருளாதாரச் சமத்துவமின்மை ஓரளவு நீக்கப்பட்டது. அரசாங்கம் குடியாட்சியின் சில கூறுகளை உடையதாயிருப்பீனும், அங்கு மேலை நாடுகளில் காணப்பட்ட குடியாட்சி மரபுகளாடுய அரசியற் கட்சிகளமைக்கும் சுதந்திரம், அரசாங்கத் தவறுகளை அச்சமின்றிச் சுட்டிக்காட்டும் உரிமை முதலியவை. இல்லை எனினும், பொருளாதாரச் சமநிலை ஏற்படுதற்கு அரசாங்கக் கட்டுப்பாடு பெருமளவு பொருளாதாரத் துறையில் கொண்டு வரப்படுதல் வேண்டுமென்றும், அதனைச் செயற்படுத்துதலும், குடியாட்சி மரபுகளாகிய கட்சி அமைக்கும் உரிமை, அரசாங்கத்தை மாற்றுதற்கு உரிமை முதலியவற்றின் வாயிலாக நடைபெறுதல்வேண்டுமென்றும், மேலைநாட்டுக் குடியாட்சிகள் ஒப்புக் கொண்டு, குடியாட்சிக் கூறுகளைச் சமநிலைக்கூறுகளோடு இணைத்துச்-<noinclude>
<b>வா.க. 7-36அ</b></noinclude>
tsrq2wfx4bfqxci83ttvnn14f2tjiwq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/592
250
641547
1926982
2026-04-25T08:35:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சருவாதிகார முறையில் சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்தாமல் விடுத்தன. அதனால் புதிய வகைச் சமநிலைக் கோட்பாடுகள் தோன்றின. ஆங்கில நாட்டின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிச்...|564|குடியாட்சிசார்...}}</noinclude>சருவாதிகார முறையில் சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்தாமல் விடுத்தன. அதனால் புதிய வகைச் சமநிலைக் கோட்பாடுகள் தோன்றின. ஆங்கில நாட்டின் குடியாட்சி மரபுகளின் வழியிலே சமநிலைக் கொள்கையின் குறிக்கோள்களை அடைதற்காகத் தொழிற்கட்சி என்னும் அரசியற் கட்சி கி.பி. 19-ஆம் நூற்றாண்டினிறுதியில் தோன்றிற்று. அது அதிக வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விடுதத்தை உயர்த்தியும், பல தாராள சீர்திருத்தங்களைச் செய்தும், ஓரளவு சமூக, பொருளியல் சமத்துவத்தைத் தோற்றுவித்தது. புரட்சி வாயிலாகவோ, சருவாதிகார ஆட்சியின் வாயிலாவோ சமநிலைக் குறிக்கோள்களை அடையாமல், மக்களுடைய பெரும்பான்மை ஆதரவைச் சுதந்திரத் தேர்தல்கள் வாயிலாகப் பெற்று, ஆட்சியை அமைத்துப் பல பொருளியற் சீர்திருத்தங்களைச் செய்தல் இயலுமென்று அந்நாடு எடுத்துக்காட்டிற்று.
<b>இந்தியாவில் குடியாட்சிச் சமநிலைக் கொள்கை</b>: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க இயல்பு. அதில் கூறப்பட்டிருக்கும் மத்திய மாநில அரசாங்கங்கள் ஆங்கிலப் பாராளுமன்றக் குடியாட்சி வகையைச் சார்ந்து இருப்பதே ஆகும். அவைவெல்லாம் குடியாட்சி அரசாங்கத்தின் கூறுகளைப் பெற்றுள்ளன. அவ்வரசியலமைப்பு சமூக, அரசியல் துறைகளில் சம உரிமைகளை வழங்குவதோடு, பொருளியல் துறையில் சமத்துவத்தை நிலை நிறுத்தற்கு ஆவன செய்யுமாறு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு அரசு இயக்க நெறி விதிகளை (Directive Principles of State Policy) வகுத்துள்ளது. மேலும், உருசியாவில் செய்யப்படுதலைப் போல, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி (Planned Economic Development) என்ற அதிகாரத்தை மத்திய அரசாங்கத்துக்கு அளித்துள்ளது. ஆறு ஐந்தாண்டுத் திட்டங்கள் 1951-இலிருந்து கொண்டு வரப்பட்டு மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்குப் பொறுப்பாக இயங்கும் மத்திய, மாநில அரசாங்கங்களின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சி தான் நடத்திய ஆவடி மாநாட்டிலும் (1955), புலனேசுவர மாநாட்லும் (1964) குடியாட்சிக் சமநிலைக் கொள்கையை நிறைவேற்றுதலே தன் பணி என்று கூறிற்று. இக்கொள்கையின் விளைவாகப் பெருமளவு முதலீடு தேவைப்படுகிற பல களரகத்தொழில்களை அரசாங்கமே முதல் போட்டு நடத்துகிறது; சிலவற்றில் பெருமளவு பங்கை அரசும், மீதியைத் தனியாரும் போடுகின்றனர்; சில தொழில்கனை நடத்துதற்கு அரசாங்கம், மானிய உதவியும், குறைந்த வட்டிக்குக் கடனுதவியும் அளிக்கின்றது. அது ஏழை மாணவருக்கு இலவசக் கல்வி, மருத்துவம், வேலை, உயிர் காப்பீட்டு வசதி முதலியவற்றை அளிக்கிறது. வருமான அளவுக்கேற்பப் படி நிலைகளில் (Slab Systems) வரி விகிதத்தை உயர்த்திப் பொருளாதாரத் துறையில் சமத்துவத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Joad. C.E.M.</b> Introduction to Modern Political Theory, Oxford, 1924.<br>
<b>Coker E.W..</b> Recent Political Thought, Appleton, 1934.<br>
<b>Laidler ri.W.,</b> Sociol Economic Movements. Routledge & Kegan Paul, 1949.
<b>குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு</b>: பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டையும் தரத்தையும் காப்பாற்றும் பொருட்டுச் சோவியத்து யூனியனின் மக்கள் தொகையில், ஒரு மிகச் சிறிய பகுதியினரே பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கட்சியின் வலிமையானதுகட்சி உறுப்பினர்களிடையே காணப்படும் கருத்தொருமைப்பாடு, கட்சிக் கட்டுப்பாடு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்களின் வாழ்க்கை, கட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து பிறழாத உறுப்பினர்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. ஆகையால், சோவியத்துக் குடிமக்கள் கட்சி உறுப்பினர்களாக ஆவதற்குக் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சோவியத்துக் குடிமகன் ஒரு கட்சி உறுப்பினராக வரவேண்டுமெனில் திறமையும் தகுதியும் பெற்றிருந்தல் வேண்டும். உள்ளூர்க்கட்சி நிறுவனம் நடத்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது மூன்று ஆண்டுகளாவது மூன்று கட்சி உறுப்பினர்கள். அவர் உறுப்பினர் ஆவதற்குப் பரிந்துரை செய்து, மாவட்டக் கட்சிக்குழு அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால்தான் அவர் உறுப்பினராக முடியும்.
சோவியத்து அரசியலமைப்பின் 6-ஆம் விதி பொதுவுடைமைக் கட்சிக்கு மிகப் பெரிய பங்கு அளித்திருகிறது. இங்விதி பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட உரிமை அளித்திருக்கிறது சோவியத்து அரசாங்கத்தில் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள். அரசாங்கத்தின் பணிகளைச் செய்வதற்கு வழி வகுக்கப்பட்டிருந்த போதிலும், அவை பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்களின்<noinclude></noinclude>
fha2pvnhl76q1b2l08ylpaz78yd07qd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/593
250
641548
1926984
2026-04-25T09:22:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டுப்பாட்டில்தான் செயற்பட வேண்டும் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிசார்...|565|குடியாட்சிசார்...}}</noinclude>கட்டுப்பாட்டில்தான் செயற்பட வேண்டும் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்க நிருவனங்களில் முக்கிய பங்கேற்றுச் செயற்படுகிறார்கள். எனவே சோவியத்து ஒன்றியத்தில் அரசாங்கச் செயல்களையும் கட்சியின் செயல்களையும் வேறுபடுத்திக் காணமுடியாது. கட்சி உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே வேறுபாடோ சச்சரவோ ஏற்படுவதில்லை.
பொதுவுடைமைக் கட்சி ஒரு கூம்பின் அமைப்பைக் கொண்டுள்ளது. அடிமட்டத்தில் கட்சிச் சிறு குழுக்கல் (Party Cells) அமைக்கப்பட்டுள்ளன. அவையே பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படை உறுப்புகளாகும். ஒவ்வொரு கட்சிக்குழுவும் குறைந்தது மூன்று கட்சி உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கூட்டுப் பண்ணையிலும் படைப்பிரிவிலும் இக்கட்சிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவையே கொள்கைப் பரப்புதலின் வாயிலாகச் சாதாரண மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டுகின்றன. ஒவ்வொரு அடிப்படை உறுப்பும் ஒரு செயலரையும் நிருவாகக் குழுவையும் கொண்டுள்ளது. இவ்வடிப்படை உறுப்பு நகர அல்லது மாவட்டக் கட்சி மாநாட்டிற்குப் பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. கட்சியின் அடிப்படை உறுப்புகளின் உயர் உறுப்புகளாக நகர மாநாடுகளும் மாவட்ட மாநாடுகளும் (City and District Conferences) விளங்குகின்றன. இம்மாநாடு, ஐந்திலிருந்து எழுபேருக்கு மிகைபடாத ஒரு செயற்குழு செயலர் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. இவற்றிற்கு மேற்பட்ட நிலையில் கட்சி உறுப்பான வட்டார மாநாடு (Regional Conference), குடியரசுக் காங்கிரசுக்கு (Republican Congress) உறுப்பினர்களைத் தேர்த்தெடுத்து அனுப்புகிறது. இம்மாநாடு 18 மாதத்திற்கு ஒரு முறை கூடுகிறது. இம்மாநாடு அல்லது காங்கிரசு அனைத்து ஒன்றிய காங்கிரசுக்குப் (All Union Congress) பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. அனைத்து ஒன்றியக் காங்கிரக ஏறக்குறைய 5000 உறுப்பினர்களைக் கொண்டது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. இவ்வமைப்பு ஒரு மையக் குழுவைத் (Central Committee) தேர்ந்தெடுக்கிறது. மையக் குழு கட்சிக் கொள்கைகளைத் தேவையான திருத்தங்களுடன் செயற்படுத்துகிறது பொதுவுடைமைத் கட்சியின் மிகவும் வலுவான உறுப்பு மையக்குழுவாகும். மையக் குழுவில் மூன்று வித அமைப்புகள் உள்ளன. அவையாவன: அரசியற் குழு (Polit hurcau), செயலகம் (Secretariat), கட்சிக் கட்டுப்பாட்டுக் குழு (Disciplinary Committee), அரசியற் குழுவில் மையக் குழுவின் எல்லா அதிகாரங்களும் தேங்கிக் கிடக்கின்றன. சோவியத்து யூனியனின் கொள்கைகளை உருவாக்குவது அரசியற் குழுவாகும். பொதுச் செயலர், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். இதன் கூட்ட நடவடிக்கைள் இரசியமாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. செயலகம் கட்சி உறுப்புகளுள் மிகச் செல்வாக்கு பெற்றதாகும். இது மையக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. உறுப்பினர்கள் தொடர்புடைய அரசாங்கத் துறையைக் கட்டுப்படுத்துகிறார்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்குழு, கட்டுப்பாட்டினைக் காக்கும் உச்ச உறுப்பாகும். கட்சி உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுதலில் இக்குழுவின் தீர்ப்பு இறுதியானது.
பொதுவுடைமைக் கட்சி குடியாட்சிசார் அதிகாரக் குவிப்புக் (Democratic Centralism) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. குடியாட்சிசார் அதிகாரக் குவிப்புக் கோட்பாட்டில், அடிமட்டத்திலுள்ள கட்சி உறுப்பினர் அனைவர்க்கும் விவாதங்களில் பங்கு பெறும் உரிமை இருக்கும். அதிகாரங்கள் அனைத்தும் மேல்மட்டத் தலைவர்களிடம் இருக்கும். இக்கோட்பாடு கீழ்க்காணும் நான்கு கூறுகளைக் கொண்டது.
:1. மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரையிலுள்ள கட்சியின் எல்லா உறுப்புகளும் தேர்ந்தெடுக்கம்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
:2. கட்சியின் கீழ் உறுப்புகள், கட்சிக்கும், கட்சியின் மேல் உறுப்புகளுக்கும் பொறுப்புடையவை.
:3. கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் கருத்தை ஏற்க வேண்டும்.
:4. கட்சியின் மேல்மட்ட உறுப்புகளின் தீர்மானங்கள் கீழ்பட்ட உறுப்புகளைக் கட்டுப்படுத்தும்.
கொள்கையைப் பற்றி இறுதியாக முடிவு செய்வதற்கு முன்னர், கட்சி அக்கொள்கையைப் பற்றி விவாதிப்பதற்கு, உறுப்பினர்களுக்கு முழு உரிமை அளிக்கிறது. ஆனால், அக்கொள்கையைப் பற்றி முடிவு எடுத்துவிட்டால், அதை உறுப்பினர்கள் அனைவரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி முடிவு செய்த பிறகு, கட்சி முடிவுக்கு எதிராக ஆதரவு திரட்டுவது சோவியத்து ஒன்றியத்தில் மாபெரும் குற்றமாகும்.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b><br>
<b>Leonard Schapiro,</b> The Communist Party of Soviet Union, New York, 1960.<noinclude></noinclude>
mvpcjr0wicwtoypbu4qpb4gln7qe865
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/594
250
641549
1926985
2026-04-25T09:33:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>John N. Hazard,,</b> The Soviet System of Government, Chicago, 1957. <b>குடியாட்சிசார் அதிகாரப் பரவல்</b>: மக்களுக்காக, மக்களுடைய பிரதிநிதிகளால் ஆளப்படும் ஆட்சி குடியாட்சி என ஆபிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியாட்சிசார்.....|566|குடியாத்தம்}}</noinclude><b>John N. Hazard,,</b> The Soviet System of Government, Chicago, 1957.
<b>குடியாட்சிசார் அதிகாரப் பரவல்</b>: மக்களுக்காக, மக்களுடைய பிரதிநிதிகளால் ஆளப்படும் ஆட்சி குடியாட்சி என ஆபிரகாம் லிங்கன் குடியாட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். குடியாட்சியுடைய நாடுகளில் அரசியலமைப்புச் சட்டம் உயர் அதிகாரம் பெற்று விளங்குகிறது. இவ்வரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியாக இருந்தால் நடுவண் அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் அதிகாரத்தைப் பிரித்து வழங்குகிறது. ஒற்றையாட்சி அமைப்புடைய அரசாக இருந்தால், நடுவண் அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்குகிறது. குடியாட்சியுடைய நாடுகள், பல்வேறு பணிகளைச் செயற்படுத்துகின்றன. இப்பணிகள் நடுவண் அரசாங்க அதிகார மூலமாகவோ, நடுவண் - மாநில அரசாங்க அதிகார மூலமாகவோ மாநில அதிகார மூலமாகவோ செயற்படுத்தப்படுகின்றன. நடுவண் - மாநில அரசாங்கங்களின் பணிகள், சட்டம் ஒழுங்கு காப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் வரி வாங்குவதும், நாணயம் அச்சிட்டு வெளியிடுவதும், வெளி உறவுகளைக் கவனிப்பதுமாக இருந்த காலத்தில், நடுவண் - மாநில அரசாங்கங்கள் தந்தம் அரசாங்க அதிகாரிகள் வழியாக மேற்கூறிய பணிகளைச் செயற்படுத்தி வந்தன. ஆனால், இப்பொழுது எல்லாக் குடியாட்சி நாடுகளும் வேளாண்மை, கால்நடை, கூட்டுறவு, நீர்ப்பாசனம், குடிசைத் தொழில்கள், அடிப்படைக் கல்வி, உள்ளூர்ச் செய்தித் தொடர்பு, சுகாதாரம், மருத்துவ வசதி, உள்ளுர்த் தேவைகள் போன்ற பல்வேறு வளர்ச்சிய பணிகளை நிறைவேற்றுகின்றன. வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செயற்படுத்தப் போதுமான அளவு அதிகாரமும், குறிப்பிட்ட நிதிவசதிகளும் கொண்ட புதியதொரு ஊரக உள்ளாட்சி நிறுவன அமைப்புகளை உருவாக்குவதுதான் குடியாட்சிசார் அதிகாரப்பரவம் (Democratic Decentralisation) எனப்படும்.
<b>இந்தியாவில் செயற்படும் வகை</b>: இந்தியாவில் பல்வந்தரே மேத்தா, குடியாட்சிசார் பன்முகப்படுத்தல் அடிப்படையில் மூன்று படிநிலை அமைப்பில் புதிய உள்ளாட்சி நிறுவனங்கள் ஏற்படப் பரிந்துரை செய்தார். (காண்க: உள்ளாட்சி முறை), அவரது பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி என்ற மூன்று படிநிலை அமைப்பில் ஊரக உள்ளட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற உள்ளாட்சி நிறுவனம் பெரிய அளவிலான பகுதியாகவோ சிறிய அளவிலான பகுதியாகவோ இருக்கக் கூடாது. பெரிய பகுதியாக இருந்தால் மக்களின் ஆர்வத்தை வளர்ச்சிப் பணிகளில் அதிக அளவில் ஊக்குவிக்க இயலாது. சிறிய பகுதியாக இருந்தால் தேவையான அளவிற்குத் திறமையான பணியை வருமானக் குறைவினால் செய்ய இயலாது. குடியாட்சி பன்முகப்படுத்தல் அடிப்படையில் அமைத்த ஊரக உள்ளாட்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டுமானால், உள்ளாட்சி நிறுவனங்களுக்குப் போதுமான அதிகாரங்களும் பொறுப்புகளும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட ஒப்படைக்கப்படவேண்டும். உள்ளாட்சி நிறுவனம் பிரதிநிதிகள் தேர்த்தெடுக்கப்பட்டு நன்கு செயற்பட, உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடைபெறவேண்டும். மேற்கூறிய குறைபாடுகள் நீக்கப்பட்டால் குடியாட்சிசார் அதிகாரப்பரவல் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயற்பட முடியும்.{{Right|<b>கே.பா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Maheshwari, S.R.,</b> Local Government in India, Lakshmi Agarwal, Agra, 1984.
<b>குடியாத்தம்</b> தமிழ் நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதொரு நகரம், குடியேற்றம் என்ற சொல் மருவி குடியாத்தமாகியது. இந்நகரம் வாரத்தோறும் நடைபெறும் சந்தைக்கும் கால்நடைச் சந்தைக்கும் சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் முதன்மைத் தொழில் நெசவுத் தொழிலாகும். இவ்வூரிலிருந்து புகையிலை, புவி, தோல், வெல்லம், தீப்பெட்டி முதலியன தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நகர் கி.பி.1885-ஆம் ஆண்டு முதல் நகராட்சிக் கழக நிருவாகத்தின் கீழ் வளர்ந்து வந்துள்ளது. கடந்த எண்பது ஆண்டுகளில், நகராட்சி இந்நகரின் பல முன்னேற்றங்களுக்கான வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியில் அண்மை மாநிலங்களிலிருந்து மக்கள் குடியேறிய பிறகு இப்பகுதி ஏற்றம் பெற்றதால், இதற்கு ‘குடி ஏற்றம்’ என்று பெயர் அமைந்தது என்று கூறுவாரு முளர், பல்வேறு வகையான மக்கள் இங்குக் குடியேறியிருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாது ஒற்றுமையாக இருந்து வத்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இதைச் சுற்றியுள்ள, ஆத்திரா, கருநாடகம், கேரளம் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் மக்கள் அக்காலத்தில் இங்குக் குடியேறியிருக்கக் கூடும். என்று நம்பப்படுகிறது. பல மூலப் பொருள்<noinclude></noinclude>
krb5o961a3w4gv6wl8atbe1d034qotq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/595
250
641550
1926989
2026-04-25T09:45:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை வெளியிலிருந்து கொணர்ந்து இங்கு உள்ள மக்கள், பல தொழில்களை நடத்தி வந்துள்ளனர், அத்தகைய தொழில்களில் முக்கியமாகத் தீப்பெட்டித் தொழிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1926989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியானவர் கலகங்கள்|567|குடியானவர் கலகங்கள்}}</noinclude>களை வெளியிலிருந்து கொணர்ந்து இங்கு உள்ள மக்கள், பல தொழில்களை நடத்தி வந்துள்ளனர், அத்தகைய தொழில்களில் முக்கியமாகத் தீப்பெட்டித் தொழிற்சாலை குறிப்பிடத்தக்கது. சிவகாசிக்கு அடுத்தபடியாக, சிறப்பான இடத்தை இந்நகரம பெறுகிறது. அரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இத்தொழிற்சாலையால் பயன் பெறுகின்றனர். இந்த நிலையத்தில், 10,000 தொழிலாளர்களுக்கு இயல் வேலை செய்கின்றனர். ஊருக்குக் கிழக்கில் ஒரு சிறப்புப் பெற்ற விநாயகர் கோயிலும் மேற்கில் கரும்புலீசுவரர் கோயிலும் வீளங்குகின்றன, ஒரு காலத்தில் ஒரு கரும்புலி ஒரு குழந்தையைக் கல்விக் கொண்டு ஓடியதாகவும், இக்கோயிலின் அருகே சென்றதும் அதை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டதாகவும் ஒரு எதை வழங்குகிறது. கரும்புலியின் அச்செயலுக்குக் காரணமான ஈசனைக் கரும்புனீசுவரர் என்று பெயர் கொடுத்து மக்கள் வழிபாடு செய்து வத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தகரம் கௌண்டன்ய மகாநதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் கங்கை அம்மன் திருவிழா புகழ் பெற்றது. இந்நகரம் பல போட்டைகளைக் கொண்டு விளங்குகிறது. புகைவண்டி நிலையமும் உள்ளது இந்நகரத்தின் அருகில் உள்ள மேல் ஆலந்தூர் என்ற இடத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஒன்றைத் தமிழக அரசு நிறுமியுள்ளது, இந்நகரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தேங்காய், கரும்பு, நெல் முதலிய பயிர் வகைகள் மிகச் சிறந்த அளவில் பயிரிடப்படுகின்றன.
இவ்வூரில் மேல்நிலைப் பள்ளிகளும் ஒரு கல்லூரியும் ஒரு பல்துறைத் தொழில்நுட்பக் கல்லூரியும் உள்ளன. விரைவாக வளர்த்து வரும் வட்டங்களில் குடியாத்தமும் ஒன்று, இந்நகரத்திம் மக்கள்தொகை 74,408 (1981).{{Right|<b>சு.இரா.</b>}}
<b>குடியானவர் கலகங்கள்</b>: சமத்துவத்தைப் பற்றித் தொழிலாளருடைய கோட்பாடு ஒன்றை முதன்முதலில் ஆங்கில வரலாற்றில் தோற்றுவித்த நிகழ்ச்சி 1381-ஆம் ஆண்டின் குடியானவர் கலகம் (Peasants' Revolt) ஆகும். இதைப்போலவே பிரான்சில் கி.பி.1351-இல் குடியானவர் கலகமும், செருமனியில் மார்ட்டின் லூதருடைய மறுப்புச் சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற காலத்தில் தோன்றிய கி.பி. 1524-25-ஆம் ஆண்டுக் குடியானவர் போரும் பலவித சமூக, அரசியல் கருத்துகளையும் விளைவுகளையும் தோற்றுவித்தன.
<b>ஆங்கிலக் குடியானவர் கலகம்</b> இங்கிலாத்தின் வரலாற்றில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கலகமாகும். இரண்டாம் இரிச்சர்டு (Richand II) என்பவர் இங்கிலாந்தின் மன்னராக இருந்தபெழுது ஏற்பட்ட முக்கியமான நிகழ்ச்சி குடியானவர் கலகம் (The Peasants Revolt). இது 1381-இல் நடைபெற்றது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன பொதுவாக அம்மன்னன் ஆட்சி விரும்பத்தக்கதாக இல்லை. மன்னன் பட்டத்திற்கு வரும்போது பதினோரு வயதினை இருந்ததால், ஒன்பதின்மர் குழு அரசியலை இந்த ஒன்பது உறுப்பினர்களும் ஒற்றுமையாக இயங்கவில்லை. பாராளுமன்றம் தனது உமீமைகளுக்காகப் போராட்டம் நடத்த முற்பட்டது. ஒரு நிலையான கொள்கை அரசியலின் பின்பற்றப்படவில்லை. நாட்டின் செல்வர்கள் சுயநலத்திற்காக மக்கள் துன்புறும்வகையில் சட்டங்களை நிறைவேற்றிவந்தனர், கருங்கொள்ளை நோய் பல தொழிலாளர்களை மாய்த்துவிட்டதால் நாட்டின் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. லேளாண்மைப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. ஏழை உழவர்கள் உயிர் வாழ்வதற்கே போராட வேண்டியதாயிற்று. பல நெருக்கடிகளுக்கு உள்ளாயிருந்த குடியானவர்கள் மீது மடாலய அதிபர்களும், பிரபுக்களும் தொழிலாளர் சட்டங்களை இரக்கமின்றி நிறைவேற்ற முற்பட்டதால் அவர்கள் நிலை மிகவுள் வருந்தத்தக்கதாயிற்று. சட்டங்களை எதிர்த்துக் குடியானவர்கள் கலகம் செய்து, மடாலயங்களையும் தாக்கலாயினர் நாட்டின் பிரபுக்களும் அவர்களுக்கு உதவி செய்ய முற்பட்ட சட்ட வல்லுநர்களும் தாக்குதல்களுக்கு உட்பட்டனர். பல சட்ட அறிஞர்கள் கொலையுண்டனர்.
அங்காலத்தில் பிரான்சுகளும் இங்கிலாந்துக்குமிடையே ‘நூறாண்டுப் போர்’ தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிரான்சு நாட்டில் ஆங்கிலேயப் படையினர் படுதோல்வியடைந்து வந்தனர். போசி திறமையான முறையில் நடத்தப்படாததால் மந்தனின் மனக்கசப்பு மேலும் அதிகரித்தது. போவரத் தொடர்ந்து நடத்த அரசியலாருக்குப் பொருள் தேவைப்பட்டதால் புதிய வரிகள் விதிக்கப்பெற்றன. பாராளுமன்றம் கி.பி 1381-இல் தலைவர் ஒன்றை விதித்தது (Polltax). அதன்படி ஏழை ஒவ்வொருவரும் ஒரு சில்லிங்கும் (Shilling), பணக்காரர் ஒவ்வொரு வரும் 3 பவுன்களும் கொடுக்கவேண்டுமெனவும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த வரி மூலம் 1,60,000 பவுன் வசூலிப்பது என்று பாராளுமன்றம் முடிவு செய்தது, இந்த வரி குடியானவர்களைப் பெரிதும் பாதித்தது. முன்னரே மனம் நொந்து வருந்திக்கொண்டி<noinclude></noinclude>
2f6gg94pvr1modo13rufffo4hsll2gw