விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.24 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/6 250 108500 1927593 1889848 2026-04-28T06:04:36Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1927593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|திருக்குறளுக்கென ஓரகராதி<br> (Thirukkural Concordance)}} {{rule|15em|align=}} {{larger|<b>பதிப்புரை</b>}}}} தமிழுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர் நூலில், அகராதிகளுக்குரிய பண்புகள் சொல்லப்படவில்லை. ஆனால், அகராதிக் கூறுகள் அதில் அமைந்துள்ளதை நம்மால் காண முடிகின்றது. அதெப்படி என்று கேட்கின்றீர்களா? ‘அகர முதல் னகர இறுவாய்’ என்று வரும் காப்பிய இலக்கணத் தொடர், தமிழ் மொழியின் அகர வரிசையின் ஆரம்பமும் - முடிவும் என நிரல் வரிசையால் உணரலாம். மொழி முதல், மொழி ஈறு, இடைநிலை எழுத்துக்கள் கூறும் பண்புகளைக் கொண்டு எழுத்து நிரலில் மேலும் சில கருத்துக்களை அறியலாம். ஆனால், சொற்பொருள் பற்றி, அதன் அகர முதலியைப் பின்பற்றி அனைத்துச் சொற்களுக்கும் பொருள் சொல்லப்படவில்லை. திருவள்ளுவர் பெருமான்கூட, ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று தனது முதற் குறட்பாவைத் துவக்கி, 1330-வது குறளை முடிக்கும்போது ‘ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்’ என்றே முடிப்பதால், அவரது திருக்குறளிலும்கூட, அகர வரிசையின் துவக்கமும், முடிவும் அமையும் நிரல் வரிசையையும் காண முடிகின்றது. திருக்குறளுக்கு உரை கூற வந்த பழம்பெரு ஆசிரியர்கள் தான்; ‘பா’ வரிசையைப் பின்பற்றி எல்லாச் சொற்களுக்கும் பொருள் கூறியுள்ளார்கள். காரணம், அவர்கள் உரைமேதைகள்! அதனால் தங்களது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள் எனலாம்! தொல்காப்பியத்திற்குப் பிறகு ‘ஆதி திவாகரம்’, ‘சேந்தன் திவாகரம்’, ‘பிங்கல நிகண்டு’, ‘சூடாமணி நிகண்டு’, ‘அகராதி’ என்ற பெயராலேயே ‘அகராதி நிகண்டு’, ‘உரிச்சொல் நிகண்டு’, ‘கைலாச நிகண்டு’, ‘பொருள் தொகை நிகண்டு’, ‘பொதிகை நிகண்டு’, ‘நாம தீபநிகண்டு’ போன்ற நிகண்டுகள் சில வெளிவந்து சொற்களுக்குப் பொருள்கூறிட தொல்காப்பியம் நூல்தான் வழிகாட்டி இருக்கிறது எனலாம். இதற்கும் மேலாக, தமிழ்நாட்டிற்கு கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்ய ஐரோப்பியர் வந்தார்கள். அவர்களிலே முதன்முதலாக 1712-ஆம் ஆண்டில் வந்த <b>பார்த்லோமிய சீகன் பால்க்</b> என்பவர்தான் ‘தமிழ் அகராதி’ என்ற பெயரிலே அகராதியை எழுதினார்.<noinclude></noinclude> ke729n8rczsut6e6kns9i0kz7qhw636 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/7 250 108502 1927595 1890028 2026-04-28T06:11:48Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1927595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||5}}{{rule}}</noinclude> <b>வீரமா முனிவர் என்ற பெஸ்கி பாதிரியார்</b>, அடுத்தபடியாக 1732-ஆம் ஆண்டில் சதுர அகராதியை; பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்கு வகைப் பெயரில் அகர வரிசையைப் பின்பற்றி முதன்முதலாக அற்புதமான ஒரு சதுர அகராதியை அச்சிட்டு தமிழர்க்கு வழங்கிய பெருமை அவருக்கே உண்டு. தமிழ் - இலத்தீன், இலத்தீன் - தமிழ், தமிழ் - பிரெஞ்சு, தமிழ் - ஆங்கிலம் - போர்ச்சுக்கீசிய மொழி, இலத்தீன் - தமிழ் போன்ற அகராதிகளைப் பல மொழிகளில் எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? அதே வீரமா முனிவர்தான்! இதற்குப் பிறகு 1779-ஆம் ஆண்டில், <b>ஃபெப்ரிசியஸ்</b> என்பவர், தமிழ் - ஆங்கில அகராதியும், <b>வின்சுலோ பாதிரியாரின்</b> ஆங்கில - தமிழ் அகராதி 1842-லும், 1862-ல் அவராலேயே தமிழ் - ஆங்கில - அகராதியும் எழுதப்பட்டு வெளிவந்தன. இவையெல்லாம், ஐரோப்பியர் தமிழ் மொழியைக் கற்பதற்குப் பேருதவியாக அமைந்தன. <b>சதாவதானி, பண்டித நா. கதிரைவேற்பிள்ளையின்</b> ‘தமிழ் சொல்லகராதி’ 1904-ஆம் ஆண்டிலும், கலைக் களஞ்சியம் போல ‘அபிதான சிந்தாமணி’ என்ற பொருள் விளக்கம் கூறும் அகராதி ஒன்றும்; 1910-ஆம் ஆண்டில் வெளி வந்தது. <b>பேராசிரியர் டி. எஸ். வையாபுரி பிள்ளை</b> தலைமையில், சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரகராதியை (Lexicon) 1936-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதே காலக் கட்டத்தில் மதுரைத் தமிழ்ப் பேரகராதி வந்தது. இதன் பின்பு 1938-ஆம் ஆண்டில் - சொற் பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ஒன்றும் வெளியிடப்பட்டது. இவைகட்குப் பிறகு, இலக்கிய அகராதிகள் என்ற பெயரில், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரிய புராணம், பெருங்கதை, வில்லிபாரதம் போன்ற தமிழ் காப்பியங்களுக்குச் சொல்லடைவுகள் வெளி வந்தன. தேவாரம், வைணம் போன்ற சமைய நூல்களுக்கான அகராதி நூல்களும் வெளியிடப்பட்டன. இவ்வாறு, மேலும் எண்ணற்ற பல்துறை அகராதிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், திருக்குறள் வளர்ச்சிக்காக, மாணவர்களும் மற்றப் பிரிவு மக்களும் எளிமையாகத் திருக்குறளைக் கற்றிடத் திருக்குறளுக்கென்று அகராதிகள் ஏதாவது வெளி வந்துள்ளனவா என்று தேடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைதான் இன்று வரையும் உள்ளது. தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகின்ற <b>டாக்டர் உ. வே. சாமிநாதையர்</b> நூலகம் சென்னை மாநகரிலுள்ளது. அந்த நூலகத்துள் இன்று வரை வெளி வராத நூற்கள் எல்லாம் இருக்கின்றன. அகநானூறு அகராதி, தலக்குறிப்புகள், <b>திருக்குறள் பரிமேலழகர் அரும்பத அகராதி</b>, தேவார அருந்தொடரகாரதி, புலவர் வரலாறு, வாகட அகராதி போன்ற நூற்-<noinclude></noinclude> hg31s9z36hns6nw7bz4tirnrtqxdd1k பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/8 250 108504 1927596 1890029 2026-04-28T06:18:12Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1927596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|6||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}{{rule}}</noinclude>களெல்லாம் அச்சு ஏறாமலேயே அந்த நூலகத்தில் அழுக்குக் குப்பைகளாகக் கிடக்கின்றன. என்றைக்கு நற்காலம் நேருமோ அவற்றைத் தூசு தட்டிட: உலக மொழிகளில் ஒப்பியல் சொற்றொகை அகராதியை 1787-89ல் <b>பாலியஸ்</b> (Patias) என்பவர் எழுதினார். ஆசிய மொழிகளில் ஒப்பியல் அகராதியை 1868-ல் <b>ஹூண்டர்</b> எழுதினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை <b>கால்டுவெல்</b> எனும் வித்தகரால் சொற்பிறப்பு ஒப்பியற் கூறுகளோடு எழுதப்பட்டது. வடமொழிச் சொற்களின் வேர்களைத் தமிழில் காட்டிட <b>நீர்வேலி சங்கர பண்டிதர்</b>, 1908-ஆம் ஆண்டில் ‘தாது மாலை’ எனும் பெயருடைய ஒரு நூலை ஆராய்ந்து எழுதினார். சென்னைப் பல்கலைக் கழகத்தவர்களால் பேரகராதி எழுதி வெளியிடும் ஆற்றலும் சிந்தனையுமிருந்தது. ஆனால், உலக மக்களது வாழ்வியல் சட்டமான திருக்குறள் எனும் பொது மறைக்கு ஒரு திருக்குறள் அகராதி எழுதாமல் விடப்பட்டது. உலக மொழிச் சொற்களின் வேர், தமிழ் மொழியில் இருக்கிறது என்று ஆராய்ந்து எழுதிட ஈழத்துப் பேரறிஞர் <b>ஞானப் பிரகாசருக்கும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணருக்கும்</b> நேரமிருந்தது; திருக்குறளுக்கு ஓர் அகராதியை எழுதிட அவர்களுக்கு நேரமில்லையே என்று ஒரு தமிழ் மகன் வருந்துவதில் என்ன தவறு? தமிழ் மொழியிலே இருந்து இங்கிலீஷ் மொழிக்கு இரவல் சென்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்த <b>ஞானகிரி</b> எனும் மொழி வித்தகரால், 1972-ல் எழுத முடிந்தபோது, திருக்குறளுக்கென ஓர் சொற்பொருள் அகராதியைத் திரட்டிட முடியாததேன்? திருக்குறளுக்கு மரபுரை எழுத முடிந்த பாவாணரால், மறைமலையடிகளாரையும் தமிழகப் புலவர் குழு அறிவையும் மீறி, திருக்குறள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் நூலென ஆராய்ந்துக் கூற முடிந்த பாவாணரால், திருக்குறளுக்கு ஒரு சொற்பொருள் பட்டியல் எழுதாமல் போயிற்றே!, இது தமிழறமாகுமா? பௌத்த மதச் சொற்களை தனியாகத் தொகுத்து, 1900-ஆம் ஆண்டில் வெளியிட்ட <b>டாக்டர் உ.வே. சாமிநாதையர்</b> எனும் தமிழ்த் தாத்தாவால், ஏன் திருக்குறளுக்கென ஓர் அகராதியைத்தொகுக்கலாம் என்ற அக்கரை உண்டாகவில்லை? அட இவ்வளவு ஏன்? <b>தமிழ் அறிஞரான யாகப்பப் பிள்ளை</b> என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் “<b>கடினச் சொல் அகராதி</b>” என்ற ஓர் அகராதியை வெளியிட்டார். அவரால் முடியாதா திருக்குறளுக்கு சொற்பொருள் அகராதி - ஒன்று எழுதிட? <b>சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை</b>, இருபதாம் நூற்றாண்டில் ‘<b>இலக்கியச் சொல் அகாதி</b>’ எழுதுவதற்குச் சொற்களை தேடித் திரட்ட முடிந்ததல்லவா? ஏன் இயலவில்லை திருக்குறளுக்கு அகராதி தொகுக்க - நேரமில்லையா?<noinclude></noinclude> dk1on6mu8rrr6inown8gnvivo7d17wf பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/9 250 108506 1927598 1892471 2026-04-28T06:23:29Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1927598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||7}} {{rule}}</noinclude> எல்லாமே போகட்டும், இந்தியா விடுதலை பெற்ற பின்பு, தமிழ் நாடு அரசு பல துறைகளில் பல கலைச் சொற்றொகைகளைத் தக்காரைக் கொண்டு வெளியிட்டது. குறிப்பாகக் கூட்டுறவு சட்டம், புள்ளி விவரவியல், வருவாய் புள்ளியியல், வேளாண்மை போன்ற துறைகளுக் குரியச் <b>சிறப்புச் சொற்கள் துணையகராதி</b> வெளியிட்ட நேரத்தில், திருக்குறளும் தமிழ் வளர்ச்சி தானே, அதற்குரிய அகராதி ஒன்றை அரசு சார்பாக, தொண்டாக எண்ணி வெளியிட்டிருக்கலாம் இல்லையா? செய்ததா தமிழ்நாடு அரசு? <b>வி.டி. பண்டிதர், மத்தியாசு, வேலாயுதம், கீ. இராமலிங்கனார். கோ. முத்துப் பிள்ளை</b> போன்ற தனிப்பட்ட அறிஞர்கள், தாவரவியல், கணிதவியல், பொதுவியல், ஆட்சி சொல்லியல் போன்ற துறைக்கேற்ற கலைச் சொற்களையெல்லாம் திரட்டி அவரவர் செயலாண்மைக்கேற்ப செய்து தொண்டாற்றிய மனங்கள், திருக்குறள் அகராதி ஒன்றை உருவாக்குவோமே என்று பாடுபட அவர்களுக்கு முயற்சி ஏனெழவில்லை? பழமொழிகளைத் தொகுத்தப் பலர், சில அகராதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், <b>பெர்சிவல் பாதிரியார், இலாசரஸ், அனவரதநாயகம் பிள்ளை, நீலாம்பிகை அம்மையார், கோலார் பேராசிரியர் பெருமாள், திருமதி செயா மீனாட்சி சுந்தரம்</b> போன்றவர்களாவர். இவர்களுள் யாராவது ஒருவர் திருக்குறள் அகராதியைத் தொகுத்திருக்கலாம் இல்லையா? செய்யவில்லையே! இவ்வளவு ஏன்? எதிர்ச் சொற்களுக்கென ஒரு அகராதி, அடுக்கு மொழிக்கென அகராதி, ஐம்பொறிகளுக்கான அகராதி, தெய்வங்களுக்குரிய அடைமொழி அகராதி, சிலேடை அகராதி, மக்கட் பெயர் அகராதி, இல்லப் பெயர் அகராதி, முசுலிம் பெயர்கள் அகராதி, இந்து மக்கள் பெயர் அகராதி போன்ற அகராதிகளை எல்லாம் தொகுத்து வெளியிட்ட தமிழ் மகானுபவர்கள்; தமிழ் மறையான திருக்குறளுக்கென ஒரு சொற்பொருள் அகராதியைத் தொகுத்து வெளியிட ஊக்க உணர்வு இல்லையே! என்ன காரணமோ! <b>இவை எல்லாவற்றையும் ஊடுருவி பார்த்த பின்புதான் நமது கண்களுக்கும், உணர்வுகளுக்கும் மேதை வீரமாமுனிவர் தென்படுகிறார். அந்த மாமனிதர், தமிழ் மண்ணிலே பிறக்காதவர், தாய்மொழியாக, தமிழை ஏற்க முடியாதவர், 1886-ஆம் ஆண்டில் திருக்குறளுக்காகத் தனி அகராதியையும், சொற்குறிப்பு அகராதியையும் தொகுத்தளித்தார் - தமிழ் இனத்தின் பெருமைக்கு!</b> வீரமாமுனிவருக்குப் பிறகு நமக்கு அடையாளமாகக் காட்சி தருபவர் <b>திரு. மார்க்க சகாயம் செட்டியார்</b> என்பவர். இவர், 1924-ஆம் ஆண்டில், திருக்குறள் என்ற பொய்யா மொழிக்கு, ‘திருக்குறள் சொற்குறிப்பு அகராதி’ என்ற நூலை இயற்றித் தமிழ்மறைக்குத் தொண்டாற்றினார். இவருக்குப்பின், திருக்குறள் சொல்லடைவு எனும் ஒரு முழுமையான நூலை எழுதினார். அது சரி, சொல்லடைவு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?<noinclude></noinclude> ji2ux5r7ic3fh947fr9zkcig6orp0id பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/10 250 108508 1927599 1890059 2026-04-28T06:30:28Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1927599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|8||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> திருக்குறளில் அல்லது எந்த ஒரு நூலிலும் காணும் பெயர்கள், அருஞ்சொற்கள், அந்த சொற்கள் எங்கெங்கே, எப்படியெப்படி, ஏன், எதற்காகப் பயன்பட்டன என்ற இடங்களைக் குறிப்பிட்டுக் கூறி விளக்குவதற்குச் “<b>சொல்லடைவு</b>” என்று பெயர் ஆகும். இவ்வாறு வெளிவந்த சொல்லடைவு நூற்கள்தான், புறநூனுற்றுச் சொல்லடைவு, சிலப்பதிகாரச் சொல்லடைவு, ஐங்குறு நூற்றுச் சொல்லடைவு, கம்பராமாயணம் சொல்லடைவு, பெரிய புராணம், பெருங்கதை, வில்லிபாரதம் மற்றும் கல்வெட்டுக்களைப் பற்றியும் வெளிவந்த சில சொல்லடைவு நூற்களாகும். இந்தக் காலக் கட்டத்தில், பல பொருள் விளக்க அகராதிகளுக்குரிய மேற்கோள் விளக்க அகராதிகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று ‘திருக்குறள் மேற்கோள் விளக்க அகராதி’. இதனை இயற்றியவர் <b>தாமோதரன்</b> என்ற தமிழ்ப் பெருந்தகை ஆவார். இந்த அரிய நூல்கள் எல்லாம் இன்று புத்தக விற்பனைச் சந்தைகளில் உள்ளனவா என்றால், ஒரு நூல்கூட இல்லை; ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. எனவேதான், ‘அகராதிக் கலை’ என்ற அரும் நூலில் <b>டாக்டர் தா. வே. வீராசாமி</b> அவர்கள் குறிப்பிட்டுள்ள அரிய ஆய்வுகளை நாம் பொன்னே போல ஏற்றுக் கொண்டு; ‘திருக்குறள் சொற்பொருள் சுரபி’ என்ற இந்த நூலுக்குக் கிடைத்த சில ஆய்வுகளை இரு கையோடு ஏந்திக் கொண்டு எழுதினோம். இன்று வளர்ந்து வரும் அகராதியியல் (Lexicology) வளர்ச்சிக் கேற்றவாறு, திருக்குறளில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் குறித்து, தமிழியல் முறையிலும், அறிவியல் ஆய்வுக்கேற்பவும் பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல் வரலாறு, சொற்கூறு ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கி, அகராதியியல் கண்டுரைத்த ஆய்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு, ‘திருக்குறள் சொற்பொருள் சுரபி’ (Thirukkural Concordance) என்ற இந்த சொற்பிறப்பு பட்டியலைத் தயாரித்துள்ளோம். கல்லாரும், கற்றாரும் திருக்குறளை அனைவரும் சுலபமாகப் படித்திட; ஆசிரியர் உதவியின்றிக் கற்றிட; மாணவ, மாணவியர்களும் படித்துப் பயன்பெற்றிட எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள {{larger|<b>“திருக்குறள் சொற்பொருள் சுரபி”</b>}} (Thirukkural Concordance) எனும் இந்த நூல் உதவியாக இருக்குமென நம்புகிறோம். ஆசிரியர் பெருமக்களும் - பெற்றோர்களும் அன்பு கூர்ந்து இந்த நூலைப் பார்வையிட்டு கருத்துக் கூற வேண்டுகிறேன். {{Right|அன்பன் <br>{{larger|<b>வா. திருக்குறளார்</b>}}}}<noinclude></noinclude> 8nhcficzjo52syth4rgd8ntl804p14u அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1927505 1925656 2026-04-27T17:04:56Z TI Buhari 4634 1927505 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] 4z9386tcyxh77dy3pe8us230z551g8i அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1927438 1927199 2026-04-27T14:33:13Z Booradleyp1 1964 1927438 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 9letvf1w0v2k68ew9wl08wtjgylq0v1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/576 250 574026 1927397 1927252 2026-04-27T13:30:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|554 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கழகமாக ஆக்கிவிடலாம் என்றும் வற்புறுத்தினர். அவசரப்பட்டு அடிப்படையை இழந்துவிடக்கூடாது என்ற எனது கருத்துக்கு பேராசிரியர் மட்டுமே துணை நின்றார். இப்படியொரு சிந்தனை கழகத்தின் மேல்மட்டத்தில் இருப்பது தெரிந்தால்கூட கழகத் தொண்டன் உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கூறினேன். அதற்குள் இந்தச் செய்தி சென்னை சிறைச் சாலைக்குள் பரவி, அங்கு மிசாவில் இருந்த கழக முன்னணியினர் கையெழுத்திட்டு, “கழகத் தலைமையிலாகட்டும் அல்லது கழகப் பெயரிலாகட்டும் எந்த மாற்றமும் கூடாது!” என உறுதியாகத் தெரிவித்து எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்தை சலனமுற்றிருந்த நண்பர்களிடம் படித்துக்காட்டி “வாழ்ந்தாலும் கழகத்தோடு வாழ்வோம்! வீழ்ந்தாலும் கழகத்தோடு வீழ்வோம்” என்று உணர்ச்சி பொங்கிடக் கூறினேன். அதன்பிறகு சில நாட்கள், கழகத் தலைமை மாற்றம் — கழகப் பெயர் மாற்றம் இவை குறித்த விவாதங்கள் எழவில்லை. ஆனால் சில இடங்களில் குழுக்களாகக் கூடி முணு முணுத்துக் கொண்டிருந்தனர். ‘மிசா’ சட்டத்தின்கீழ் சிறையிலே அடைக்கப்பட்ட கழகத் தோழர்கள் பலரின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான நிலைமையிலே இருந்த காரணத்தால் அத்தகைய குடும்பங்களுக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வீதம் நிதியாகத் தர முடிவு செய்து கழகத்தின் சார்பில் அதனை வழங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டு தரப்பட்டது. குடும்பத் தலைவன் இல்லாத நிலையில் அந்தக் குடும்பத்தினரை அப்படியே விட்டுவிடாமல் கழகமே அத்தகைய குடும்பங்களைப் பாதுகாத்திட வழிவகை செய்தது. அடுத்து, ஜூன் மாதம் 6-ஆம் தேதியன்று திருச்சி மாவட்டம் அம்பில் கிராமத்தில் மறைந்த கழகத் தோழர் இரா. கோபால் அவர்களின் இல்லத் திருமணத்திற்கும் பொன்மலை நகரச் செயலாளர் ராமானுஜம் இல்லத் திருமணத்திற்கும் நான் வரவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். நெருக்கடி நிலை காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு சாத்தூர் பாலகிருஷ்ணன் மறைவிற்காக வெளியூர் சென்று வந்ததைத் தவிர வேறெங்கும் செல்லாததால், 5-ஆம் தேதி இரவு நான் திருச்சிக்கு ரயிலில் புறப்பட்டபோது புகைவண்டி நிலையத்திலேயே ஏராளமான பேர் வந்திருந்து வழியனுப்பி<noinclude></noinclude> a9nsdx9e2bh9job8f73agupi9wx55ut பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/577 250 574027 1927398 1927258 2026-04-27T13:34:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 555}}</noinclude>வைத்தார்கள். நான் அந்த புகைவண்டியில் வருவதறிந்து ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து இரவு முழுவதும் என்னைத் தூங்கிவிடாமல் வரவேற்றனர். அதன் காரணமாக புகைவண்டி பல மணி நேரம் தாமதமாகச் சென்றது. திருச்சியிலே வண்டியிலிருந்து என்னை இறக்கி காருக்கு அழைத்துச் செல்லவே முடியாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கானவர்களின் கூட்டம். எப்படியோ கூட்டத்தில் போட்டு நசுக்கி காரில் கொண்டுபோய் என்னைத் தள்ளினார்கள். திருச்சியிலிருந்து அம்பில் கிராமத்து திருமணவீட்டிற்கு சுமார் பதினைந்து மைல். காலை 9 மணிக்கு திருச்சியை விட்டுப் புறப்பட்டு 11 மணிக்குத்தான் அம்பில் சென்றடைந்தோம். 15 மைல்களைக் கடக்க இரண்டு மணி நேரமா என்றால், அந்த அளவிற்கு வழியெங்கும் எங்கள் கார் நிறுத்தப்பட்டு, உடன் பிறப்புக்களின் அன்பிற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. பின்னர் 12 மணி அளவில் அம்பிலை விட்டுப் புறப்பட்டு 11 மணி அளவில் தான் பொன்மலை திருமண விழாவிற்கு வந்து சேர முடிந்தது. என்னுடைய காருக்கு நண்பர் காமாட்சி தான் சாரதி. அன்பில், அழகமுத்து, மாவட்டச் செயலாளர் எம்.எஸ். வெங்கடாசலம், ஆலந்தூர் பாரதி, வி.எம்.ஆர். சபாதி ஆகியோர் உடன் வந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு தங்குமிடத்தில் மாலைவரை ‘கியூ’விலே நின்று விசாரணைக் கமிஷன் நிதியினைப் பெற்றுக்கொண்டேன். நிதி ஐயாயிரத்தைக் கடந்து ஆறாயிரத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு வசூலாயிற்று. இரவு சென்னைக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் இல்லை என்று 6 மணி அளவில் செய்தி சொன்னார்கள். மறுநாள் காலையில் சென்னையிலே ஒரு திருமணத்திற்கு நான் தலைமை தாங்கியாக வேண்டும். எனவே வேறு வழியில்லாமல் 7 மணிக்கு நண்பர் காமாட்சியின் காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டோம். இரவு 12 மணிக்கெல்லாம் சென்னையில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்தார். ஆனால் உளுந்தூர் பேட்டைக்கு முன்பாகவே கார் சக்கரத்தில் ஒன்று பழுதாகி விட்டது. உளுந்தூர்பேட்டையில் அதனை சரிசெய்துகொண்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தோம். மீண்டும் அதே சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஏதோ ஒரு தேய்ந்துபோன ஆணி குத்தி<noinclude></noinclude> 3enoqu3vx2bhgn8h6xhx4ppfk4gn3n4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/578 250 574028 1927399 1927266 2026-04-27T13:37:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|556 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஓட்டை விழுந்துவிட்டது. விழுப்புரத்தில் மீண்டும் அதனை சரி செய்துகொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மதுராந்தகம் தாண்டியதும் மறுபடியும் கார் சக்கரத்தில் பழுது! நல்லவேளையாக சென்னை நோக்கி வந்துகொண்டிருத ஒரு வாடகைக் காரில் இருந்தவர்கள், தங்கள் காரில் உள்ள ஒரு உபரி சக்கரத்தை எங்கள் காருக்குத் தந்தார்கள். அதை மாட்டிக்கொண்டு இரவு 12 மணிக்கு சென்னை வந்து சேர நேரம் குறித்தவர்கள், விடிய விடியக் கண்விழித்து விடிந்தபிறகு சென்னை வந்து சேர்ந்தோம். வந்தவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் அணையுடைத்த வெள்ளம்போல் மூன்று பேருந்துகளில் பண்ருட்டி, குளித்தலை, கோவையிலிருந்து உடன்பிறப்புக்களும், தாய்மார்களும் வந்து கூடிவிட்டார்கள். அவர்களையும், மற்ற பல பகுதிகளிலிருந்து வந்தவர்களையும் சந்தித்துவிட்டு அவர்கள் வழங்கிய தேர்தல் நிதியையும் பெற்றுகொண்டு சென்னையில் முருகேசன் இல்லத் திருமண விழாவிற்குப் புறப்பட்டுச் சென்றேன். 7-ஆம் தேதி சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் 8-ஆம் தேதியன்று கோவை மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன் இல்லத்து மணவிழாவிலும், கலந்து கொள்வதற்காக நீலகிரி துரித ரயில் வண்டி மூலமாகப் புறப்பட்டேன். என்னுடன் வழக்கறிஞர்கள் கணபதி, என். வி. என். சோமு, ராதகிருஷ்ணன், நல்லியண்ணன் ஆகியோர் உடன்வந்தனர். விடியற்காலை 4 1/2 மணிக்கு ஈரோட்டைச் சென்றடைந்தது நாங்கள் சென்ற புகைவண்டி. ஈரோடு ரயிலடியில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கொங்குமண்டல மக்கள் கூடியிருந்து அந்த விடியற்காலை நேரத்தில் எனக்கு வரவேற்பளித்தனர். புகைவண்டி நிலையத்தில் சாதிக், கண்ணப்பன், எஸ். ஏ. ராஜமாணிக்கம், ஜானகிராமன், சி. டி. தண்டபாணி, தேவசகாயம், ஈரோடு மு. சின்னசாமி, திருப்பூர் துரைசாமி, பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் நடராஜன், கல்லார் ராமசாமி, ஈரோடு விசுவநாதன், நகரச்செயலாளர் மதார்சா, இரா. பெருமாள், அத்தாணிபாபு, கணேசமூர்த்தி, மு. தமீம், சென்னியப்பன், விஜயராகவன், கருப்புசாமி, அல்லாபிச்சை, கலைமான், கோபி. வெங்கிடு, ஏ. என். சாமி, பெருந்துறை கந்தசாமி, மற்றும் பல்லாயிரக்கணககான உடன் பிறப்புக்கள் என்னை அன்போடு வரவேற்றனர். {{nop}}<noinclude></noinclude> j0kmhylvnengywxxe0w8rutj0qynbta பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/579 250 574029 1927400 1927270 2026-04-27T13:39:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 557}}</noinclude>வெள்ளாங்கோவிலில் கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கும் கனகாம்பரத்திற்கும் நடைபெற்ற மணவிழாவில் தலைமையேற்று மண விழாவினை நடத்தி வைத்தேன். மண விழாவிலே கூட நான் பேசக்கூடாது என்று காவல்துறையினர் ஒலிபெருக்கிக்கான லைசென்ஸ் வழங்கிடவில்லை. ‘மெகபோன்’ ஒன்று கொண்டு வரச் சொல்லி, அதை தோளிலே மாட்டிக்கொண்டு, அந்த மணவிழாவிலே மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். அடுத்து புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற சாமிநாதன் இல்லத் திருமணத்திலும், ஈரோட்டில் நடைபெற்ற அர்ச்சுனன் இல்லத் திருமணத்திலும் கலந்து கொண்டேன். (சாமிநாதன் அப்பொழுது சிறையில் இருந்தார்.) அன்று ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி மட்டும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் விசாரணைக் கமிஷன் செலவு நிதியை அளித்தது. ஈரோட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அதற்கு முன்பு ஈரோட்டிற்கு நான் பலமுறை சென்றபோது அளித்த வரவேற்பினையும், 1945-ஆம் ஆண்டு நான் முதன்முதலாக ஈரோடு சென்று பெரியாரிடம் பணியாற்றிய நிகழ்ச்சிகளையும் ஞாபகடுத்தி “பள்ளிக்குச் சென்று வந்தேன்” என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் எழுதினேன். {{nop}}<noinclude></noinclude> bwcsm2mvafw5k0bwbaaypc85gamin23 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/580 250 574030 1927401 1927302 2026-04-27T13:43:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>77</b>}} {{larger|<b>அண்ணா சாலையில் ஓர் அறப்போர்!</b>}} {{X-larger|<b>கோ</b>}}வையிலிருந்து திரும்பிய மறுநாளே கர்நாடகக் தலைநகரான பெங்களூரில் நடைபெறவிருந்த சிறப்புத் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து புகை வண்டி மூலமே சென்றேன். சிறப்புக் கூட்டத்திற்காக டிக்கெட் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. அதிலே கூட்டச் செலவிற்கு இரண்டாயிரம் ரூபாய் போக மீதம் பத்தாயிரம் ரூபாயும், நான் தங்கியிருந்த விடுதியின் முன்னால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மக்கள் ‘கியூ’ வரிசையில் நின்று 1 ரூபாய், 2 ரூபாய் என்று அளித்த வகையில் மட்டும் 6 ஆயரம் ரூபாயும் வழக்கு நிதியாக வசூலாயிற்று. மூன்று மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதியினைப் பெற்ற காரணத்தால் நான் களைத்துப்போய் ‘கியூ’ வரிசையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதால்தான் அது நிறுத்தப்பட்டது. வாங்கிக்கொண்டேயிருந்தால், அது எத்தனை மணி நேரம் ஆகியிருக்குமோ? நான் அங்கே கலந்துகொள்ளவிருந்த சிறப்புக் கூட்டம் பெங்களூர் ‘நகர் மண்டபத்தில்’ ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ‘இலக்கியத்தில் நாம்’ என்ற தலைப்பில் நான் பேச வேண்டுமென்றும் திராவிட மணி அன்று முதல் நாள் தொலைபேசி மூலமாகத் தெரிவித்திருந்தார். 12 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டண நன்கொடைச் சீட்டுகள் வாயிலாக வசூலாகியிருப்பதாகவும், அதற்கு மேல் மண்டபத்தில் இடம் இல்லாத காரணத்தால் நுழைவுச் சீட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதென்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் புகைவண்டி நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கடலிலே நீந்தி, காரிலே ஏறி அமர்ந்ததும், சிறப்புக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதென்றும், அதனால் டிக்கெட் வாங்கியவர்களும், கழகத்தினரும், பொது மக்களும் நான் தங்கியிருந்த இடத்திலேயே வந்து என்னைக் கண்டு செல்வார்கள் என்றும் கூறினார், நான் தங்கியிருந்த இடம் பெங்களூர் மாதவ நகரிலே உள்ள ‘ஓட்டல் ஹைலண்ட்ஸ்’ ஆகும். நான் பெரும்பாலும் பெங்களூர் செல்லும் போதெல்லாம் அங்கு தான் தங்குவது வழக்கம். அங்கே தங்கி பல படங்களுக்கு நான் திரைக்கதை<noinclude></noinclude> t3bynjbk83zjw4d3bp7x365ubnn4gcr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/581 250 574031 1927404 1927325 2026-04-27T13:46:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|559 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>எழுதியிருக்கிறேன். அந்த ஓட்டல் உரிமையாளர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாதில பழைய காங்கிரஸ் கட்சிப் பொருளாளருமான திரு. ராமரொட்டி அவர்களாகும். மாலை 4 மணி முதல் அன்று என்னைக் காண வந்த கர்நாடக வாழ் தமிழ் மக்கள் ஆயிரமாயிரவர்களை அனுமதித்து, என்னைக் கண்டு செல்வதற்கு அந்த நெருக்கடி நேரத்திலும் உரிமை வழங்கினார். பொது மக்கள் வரிசையாக என்னைக் கண்டு செல்வதற்கு அந்த மாநில காவல் துறையினரும் அப்போது பெரிதும் ஒத்துழைத்தனர். அந்த அன்பான வரவேற்பில் இதயத்தைப் பறிகொடுத்து விட்டு, சிறப்புக் கூட்டத்திலே பங்கு பெறாமலேயே சென்னைக்குத் திரும்பினேன். அடுத்து 17-6-76 அன்று சிதம்பரத்தில் நான் கலந்து கொண்ட திருமணத்தைப் பற்றி குறிப்பிடாமல் விட முடியாது. சிதம்பரம் வேணு அல்லது ஜெயங்கொண்டம் வேணு என்றால் கழகத்தில் அனைவரும் அறிவார்கள். ஒரு காலத்தில் ஜெயங்கொண்டத்தில் என்னை அழைத்து திராவிட மாணவர் கழகக் கூட்டத்தில் பேசிடச் செய்த அவர், உயிர் உடலை விட்டுச் செல்லும் வரையில் என்னுடனே இருந்தவர். அண்ணா காலத்தில் அவர் ஆணைக்கிணங்க அறப்போரில் குதித்துப் பலமுறை என்னுடன் சிறை புகுந்தவர். அவருடைய மகன் திருமணத்திலே கலந்து கொள்ளத்தான் சிதம்பரம் சென்றேன். காலை 5 மணிக்கு சென்னையிலே புறப்பட்டு பத்து மணி அளவில் சிதம்பரத்தில் மணவிழா நடைபெறும் மண்டபத்திற்கு சென்றடைந்தோம். காரில் இருந்து நான் இறங்கியது தான் தெரியும். திருமணத்திற்கென அமைக்கப்பட்ட பந்தலை எப்படி நான் கடந்தேன்? மண்டபத்துப் படிக்கட்டுகளில் எவ்வாறு எவ்வாறு நான் ஏறினேன்? மணவிழா மேடையை அடைந்தது எப்படி? இதற்கெல்லாம் என்னால் விளக்கமளிக்க முடியாது. ஆலையிட்ட கரும்பானேன் என்று உவமை கூறலாம். அவ்வளவு நசுக்கப்பட்டேன். அப்படி நசுக்கியதற்காக கரும்பு கோபித்துக் கொண்டு கசப்புக் காட்டுவதில்லையே; என் நிலையும் அந்தக் கரும்பின் நிலை தான். என்னைப் பத்திரமாகவும் இடிபாடு இல்லாமலும் அழைத்துச் செல்ல தோள்தட்டி முன்வந்த தேவசகாயம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி ஆகிறோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விளநகர் கணேசன் அந்தக் கூட்டத்தில் சிக்குண்டு மயக்கமுற்றார் என்று பிறகு நான் கேள்விப்பட்டேன். மணவிழா முடிந்ததும், பயணிகள்<noinclude></noinclude> gjpj9q3lh1s2xvmz0mbj6v8io7sqcy3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/582 250 574032 1927405 1927330 2026-04-27T13:48:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|560 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விடுதியில் ஐயாயிரம் ரூபாய் அளவிற்கு விசாரணைக் கமிஷன் நிதியை வரிசையாக வந்து தோழர்களும். பொதுமக்களும் அளித்தனர். இவ்வாறு மணவிழா நிகழ்ச்சிகளிலும், சிறப்புக் கூட்டங்களிலும், அவைற்றை அரசினர் தடுத்தாலும், பொது மக்களையும், கழகத்தினரையும் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன் என்பது கண்டு எரிச்சல் கொண்ட சில மாற்றுக் கட்சி ஏடுகள், “கருணாநிதியின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது; முரசொலி, விரைவிலேயே அடங்கும்; அல்லது அடக்கப்படும்” என்றெல்லாம் அச்சுறுத்தி எழுதின. “முரசொலி, நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமேயானால் நான் புறநானூற்றுத் தாய்போல மகிழ்ச்சி அடைவேனேயல்லாமல் அழுது புலம்பிட மாட்டேன். மாற்றார் ஏடுகள் எழுதியுள்ளது போல முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்; ஆம்—தியாகத் திருநாள்!” என்று முரசொலியிலேயே எழுதியிருந்தேன். தணிக்கையின் கெடுபிடியை எதிர்த்து நீதிமன்றத்திலே முரசொலியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, தணிக்கைக்கு ஓர் இடைக்காலத் தடை பெறப்பட்டது. அந்த இடைக்காலத் தடையிருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக எழுத முடிந்தது. பிறகு ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது. இவற்றுக்கிடையே ஜூன் மூன்றாம் நாள் எனது பிறந்த நாளையொட்டிய நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்த நாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. “என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என்மீது பொழிந்தார்” என்று அந்தக் கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிவிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது; ஜூன் முதல் நாள் இரவு! அன்றிரவுதான் அதிகாரியிடம் பேசினேன். காட்டுதர்பார் நடப்பதை நிரூபிக்கிற வகையில் அவர் பதில் அளித்ததும் அதனை எதிர்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன். {{nop}}<noinclude></noinclude> 5y88yha0pt7hdyjn3lcmchpfqi4cfjf பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/583 250 574033 1927406 1927344 2026-04-27T13:50:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 561}}</noinclude>ஜூன் 2-ந் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையிலிருந்து கிளம்பி, தணிக்கை அதிகாரி அலுவலகம் சென்று அங்கே உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுமென்றும்—எழுத்து சுதந்திரம் பெறநடைபெறும் ஜனநாயகப் போர் இது என்றும்—என் கைப்படவே எழுதினேன். அப்படி எழுதப்பட்டதை ரகசியமாக ‘பிளாக்’ செய்து கொண்டு வரச் சொன்னேன். அதனை முரசொலியில் அச்சியற்றினால் கூட மறுநாள் போராட்ட ரகசியப் வெளிப்பட்டுவிடக் கூடுமென்பதற்காக—இரவோடு இரவாக நானும் என்னுடைய மகன்கள் அழகிரி, தமிழரசன் ஆகியோரும் அந்த பிளாக்கை ஒவ்வொரு தாளாக ஒற்றி ஒற்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களாக ஆக்கினோம். ஜூன் 2-ம் நாள்! அதற்கு மறுநாள்தான் எனது பிறந்த நாள்! காலை 10 மணி அளவில் என் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன். அப்போது கழகத்தில் உறுதி மாறாத பற்றுக்கொண்ட இளமுருகு பொற்செல்வி அவர்கள் வந்தார். அவர் செய்தி அறிந்து கொண்டு, “உங்களைத் தனியாக அனுப்பமாட்டேன்! எங்கு சென்றாலும் நானும் வருவேன்” என்றுரைத்து என்னுடன் காரில் ஏறிக்கொண்டார். எனது காரைத் தொடர்ந்து செல்வமும், அழகிரி, தமிழரசு ஆகியோரும் வேறொரு காரில் வந்தனர். எனது காரை அண்ணா சாலையின் பக்கம் போகச் சொன்னேன். ஆயிரம் விளக்குப் பகுதியைத் தாண்டியதும் காரிலிருந்து இறங்கிவிட்டோம். நானே என் கையில் அறப்போர் விளக்கத் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அதனை அண்ணா சாலையில் செல்வோர் அனைவரிடமும் விநியோகிக்கத் தொடங்கினேன். மக்கள் ஆவலுடன், வியப்புடன் என்னைப் பின்தொடர்ந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்துப்போய் விட்டது. அப்படியே நடந்து கொண்டே, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் அடி பீடத்துக்கு வந்து சேர்ந்தேன். கழகக்காளை ஜெகதீசன் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டனர். “சர்வாதிகாரம்” என்று முழங்கினேன்! இளமுருகு அவர்களும் மற்றவர்களும் “வீழ்க!” என்று விண்முட்ட முழங்கினார்கள்! “ஜன நாயகம்” என்று ஒலித்தேன்! “வாழ்க” என இடியொலி எழுப்பினார்கள்! ஜனநாயகக் காவலர் அண்ணாவின்<noinclude> நெ.—36</noinclude> qrr2bgycc02bpwd48o6zsdndwklafx0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/584 250 574034 1927407 1927352 2026-04-27T13:52:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|562 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிலை முன்னால் ஜனநாயகம் காத்திடும் போராட்டம்! என் கையில் கழகக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் போலீஸ் பட்டாளம் வந்தது. அதிகாரிகள் என்னை அங்கிருந்து அகன்றிடுமாறு வேண்டினர்! பிறகு கட்டளையிட்டனர்! “முடியாது! இங்கிருந்து ஊர்வலமாக தணிக்கை அதிகாரியின் அலுவலகம் சென்று உண்ணா நோன்பு மேற்கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தேன். அதன் பிறகு நானும், இளமுருகு பொற்செல்வியும், கழகக் கண்மணிகள் பத்து பேரும் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம். சில நிமிடங்களில் செல்வம், அழகிரி, தமிழரசன் ஆகியோரையும் கைது செய்து கொண்டு வந்தனர். காவல் நிலையத்தைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி விடவே அந்தக் கூட்டத்தை போலீசார் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். பெரிய போலீஸ் அதிகாரியொருவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் என்னை வந்து சந்தித்தார். நீங்கள் விடுதலை செய்யப் படுகிறீர்கள் என்றார். ஆம், என்னை மட்டும் விடுதலை செய்வதாகச் சொன்னார். வேண்டுமானால் செல்வம். அழகிரி தமிழரசன் ஆகியோரையும் விடுவிக்கிறோம் என்றார். எங்களை விடுவித்துவிட்டு இளமுருகு பொற்செல்வி மற்றும் கழகக் கண்மணிகளை சிறையிலே பூட்டுவார்களாம். அதற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டுமாம். “முடியாது! என்னையும் என் மருமகன் செல்வம், மகன்களை மட்டும் விடுவித்தால் நாங்கள் அண்ணா சாலையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்று உறுதியுடன் தெரிவித்தேன். அந்தப் பெரிய அதிகாரியாருடனோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவசரமாக புறப்பட்டுப் போனார். கவர்னரைச் சந்திக்கப் போனார். போயிருக்கிறார் என்று காவல்நிலையத்திலே இருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னார். மறுநாள் ஜூன் மூன்றாம் நாள்! எனது பிறந்த நாள்—சிறையிலேயே கொண்டாடலாம் என்று மகிழ்ச்சியோடு இருந்தேன். {{nop}}<noinclude></noinclude> 8mdtrvadzu7m5ceim0rf5u7iw4il2sz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/585 250 574035 1927412 1927365 2026-04-27T13:55:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>78</b>}} {{larger|<b>வழக்குகள் தொடங்கின!</b>}} எங்களைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்துவிட்டு கவர்னர் மாளிகைக்குச் சென்ற அதிகாரி பிற்பகல் இரண்டு மணி அளவில் திரும்பி வந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் நாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி எங்களைக் கார்களில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னைச் சிறையில் மிசா கைதிகளாக அடைபட்டிருந்த கழகக் கண்மணிகளுடன் இருந்து பிறந்த நாளைக் கொண்டாடலாம் எனக் கருதியிருந்த எனக்கு ஏமாற்றம் தான்! மறுநாள் காலை ஜூன் மூன்றாம் நாள்! வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து பெற்றோர் படங்களுக்கு மாலை அணிவித்துவிட்டு, அண்ணா சதுக்கம், பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து விட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் திரள்வது போல உடன்பிறப்புக்கள் திரண்டு நின்றார்கள், வீட்டு வாசலில்! அவர்கள் அணிவித்த மாலைகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் போதே வேதனை தரும் செய்திகள் என் செவிகளில் விழுந்தன. வீட்டைச் சுற்றி நாலா திக்கிலும் போலீசார் நின்று கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக் கூற வருகிறவர்களை தடியடிப் பிரயோகம் செய்து கலைக்கிறார்கள் என்பது தான் அந்தச் செய்தி! ஒருவர் பின் ஒருவராகப் பத்துப் பதினைந்து பேர் தலையிலும் உடையிலும் ரத்தம் ஒழுகிட கையில் மாலைகளுடன் என் முன்னால் வந்து நின்று வாழ்த்து முழக்கங்களை ஆவேசமாக ஒலித்தனர். அவர்கள் எல்லாம் போலீசாரின் தடியடிப் பிரயோகத்திற்கு ஆட்பட்டுத் தப்பித்து எப்படியோ வீட்டுக்கு வந்து விட்டவர்கள். அந்தக் காட்சியைக் காணக் காண என் கண்கள் தணற்கட்டைகளாயின. இசைத்தட்டுகள் ஒலிபரப்புவதற்காக இருந்த ‘மைக் செட்’டை அருகே கொண்டு வரச்சொன்னேன். என்னைச் சுற்றியிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடையே பேசினேன். “பிறந்த நாளையொட்டி என்னைப் பார்க்க வருகிறவர்களைக் கூடத் துடிக்கத் துடிக்க அடித்து விரட்டுகிறார்கள் போலீசார்!<noinclude></noinclude> kqhpvp4nljcli752op47yemk8mbpk9j பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/586 250 574036 1927414 1927373 2026-04-27T13:58:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|564 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்தக் கொடுமைக்கு மத்தியில் எனக்குப் பிறந்த நாள் ஒரு கேடா? தேவையில்லை! வேண்டாம்! இப்போதே இங்குள்ள ஆயிரம் பேருடன் ஊர்வலமாகக் கோட்டை நோக்கி அணிவகுக்கிறேன். ஆனது ஆகட்டும். ஊர்வலம் வரும் எங்களைச் சுட்டுக் கொல்ல, போலீஸ் தயாராகட்டும்!” என்று உணர்சியுரை ஆற்றி விட்டுப் புறப்பட்டேன், சூழ்ந்திருந்தோரும் என்னைத் தொடர்ந்தனர். அதற்குள் ஒரு போலீஸ் அதிகாரி ஜீப் ஒன்றில் வேகமாக என்னை நோக்கி வந்தார். இறங்கியவர் என்னைப் பார்த்து “தயவு செய்து ஊர்வலத்தை நிறுத்துங்கள்! உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு வருகிற யாரையும் இனி போலீசார் தடுக்க மாட்டார்கள்” என்று உறுதி அளித்தார். அதற்குப் பிறகு எங்கள் போராட்டம் கைவிடப்பட்டது. மாலை வரையில் உடன்பிறப்புக்கள் தங்கு தடையின்றி வந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறிவிட்டு, கழக நிதியும் அளித்துச் சென்றனர். பின்னர் ஜூலைத் திங்கள் 3-ஆம் நாளும் 4-ஆம் நாளும்-இரண்டு நாட்கள் சென்னை அன்பகத்தில் கழகத்தின் செயற் குழு கூட்டம் நடைபெற்றது. கழகத்தின் வரவு செலவு கணக்குகள், எதிர்கால ஆக்கப் பணிகள் குறித்து அந்தச் செயற்குழு விவாதிக்குமென உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் சிறையிலிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே சபாநாயகராக இருந்து கொண்டே கழக அரசுக்கு விரோதமாகச் செயல்பட்டு கழகத்திலிருந்து விலகி எம்.ஜி.ஆர். அவர்களின் கட்சியிலிருந்த நண்பர் மதி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைந்து திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்தார். ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஒதுங்கியே இருந்த அவர், அந்தச் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தில் பொருளாளர் பேராசிரியர் அவர்கள் கட்சியின் கணக்கு விவரங்களைப் படித்தார், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த சம்பவங்களை விளக்கிப் பேசினார். திடீரென மதியழகன் எழுந்து என்னையும், நாவலரையும், பேராசிரியரையும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகிடுமாறு பேசினார். அவரை ஆதரித்துப் பேசினார் எஸ். எஸ். ஆர். மதியழகன் அமைதியாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!<noinclude></noinclude> 4374r7c2sx67nm1rv44t5r3wf97bdxi பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/587 250 574037 1927419 1927374 2026-04-27T14:02:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 565}}</noinclude>ஆனால் எஸ். எஸ். ஆர். மிகக்கடுமையானதும் தரக்குறைவானதுமான மொழிகளை உதிர்த்தார். இதற்கெல்லாம் மூல காரணமாக அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் நாளே அவர்களையெல்லாம் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் கட்டிவைத்து முடுக்கி விட்டிருந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரால் ஒரு துண்டு அறிக்கை செயற்குழு கூட்டம் நடைபெற்ற அன்பகத்திற்கு வெளியே விநியோகிக்கப்பட்டது. அதில் என்னைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டிருந்தது. மதியின் கருத்தையும், எஸ். எஸ். ஆர். கருத்தையும் செயற்குழுவில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. மதியழகன் வெளி நடப்புச் செய்து விட்டார். எஸ். எஸ். ஆர்., மேலும் மேலும் வரம்பு கடந்து பேசிக்கொண்டேயிருந்தார். அவரைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைதிப்படுத்த முயன்றனர். முடியவில்லை. எனது வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக உடனிருப்பார் என நான் கருதியிருந்த நண்பர்களில் ஒருவரான எஸ். எஸ். ஆரின் அந்தத் திடீர்ப்போக்கிற்கு முக்கிய காரணம், மத்திய அரசின் அச்சுறுத்தல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கட்டுப்படாமல் அவர் கூச்சல் போட்டுக் கொண்டேயிருந்த காரணத்தால் செயற்குழுவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அவர் அன்பகத்து வாசலில் கூடியிருந்த கழகச் செயல் வீரர்கள் மத்தியில் கழகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் தரமற்ற வார்த்தைகளைக் கூறிக் கூப்பாடு போட்ட காரணத்தால் அவருக்கும், கழகச் செயல்வீரர்களுக்குமிடையே சிறு மோதல் ஏற்பட்டது அந்த நிகழ்ச்சி கூட அன்பகத்திற்குள்ளே செயற்குழு கூட்டத்திலிருந்த எங்களுக்கு முதலில் தெரியாது. இந்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்குப் பிறகு போலீஸ் அதிகாரி தேவாரம் தலைமையிலே போலீசார் அன்பக கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். அங்கேயிருந்த கழகத் தோழர்கள் நாற்பதுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து கொண்டு போனார்கள். நெருக்கடி நிலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேந்திரன் தாக்கப்பட்டார் என்ற வகையில் முதலில் போடப்பட்ட வழக்கு பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி என்ற அளவிற்கு குற்றப் பிரிவுகள் எல்லாம் எம். ஜி. ஆர். ஆட்சியில் அதிகரிக்கப்பட்டு, அந்த கொலை முயற்சி வழக்கிலே என்னையும் சேர்த்து நானும் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சித்தேன் என்ற அளவிற்கு வழக்குப் போடப்பட்டது? அந்த வழக்கு நீதி<noinclude></noinclude> pftr3y80405e302bpp0dpeug4pi42s4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/588 250 574038 1927424 1927375 2026-04-27T14:07:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|566 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மன்றத்தில் பல நாட்கள் நடைபெற்று, போடப்பட்ட வழக்கு வேண்டுமென்றே போடப்பட்டது என்றும், அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகம் நன்றாக அறிந்த ஒன்றாகும். அவர்கள் இருவரும் வெளி நடப்பு செய்த பிறகு செயற்குழு தொடர்ந்து அன்றும், அதற்கு மறுநாளும் நடைபெற்று 22 தீர்மானங்களை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் மண்டபங்களில் பேசுவதற்குக் கூகி விதிக்கப்பட்டிருந்த தடை முதன்முதலாக 76ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சென்னை யோகலட்சுமி திருமணமண்டபத்தில் என். வி. என். அவர்களின் படத்திறப்பு விழாவின் போதுதான் தளர்த்தப்பட்டது. ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு பொதுமேடையில் அங்குதான் நான் பேசினேன். கூட்டம், நடைபெறும் அன்று காலையிலே தான் ஒரு சிறிய சுவரொட்டி அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் வகையில் சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று மாலை அந்தப் பெரிய சாலை முழுவதும் கடற்கரையிலே நடைபெறும் கூட்டத்திற்கு செல்வதைப்போல இருபக்கங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் வெள்ளம்! அந்த மண்டபம் நிரம்பி சாலையில் இரு பக்கத்திலும் மக்கள் அமர்ந்திருந்தனர். மழையையே காணாத மக்கள் பல நாட்களுக்குப் பிறகு பொழியும் மழையில் இறங்கி அங்குமிங்கும் ஓடி நனைவதைப் போல, அன்றையதினம் அந்தக் கூட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு சென்னை மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த இரா. மு. மனோகரன் தலைமை தாங்கி, சாதிக்பாட்சா, ராஜாராம் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஆர். ஆர். முனுசாமி, சற்குணம் திருப்பூர் துரைசாமி, இரா. சாம்பசிவம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நான் பேச எழுந்து “அன்பார்ந்த” என்று ஆரம்பித்தது தான் தாமதம்; எழுந்த கையொலி அடங்க ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆயிற்று. அந்த அளவிற்கு சென்னையிலே இருந்த கழக உடன்பிறப்புக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு அங்குக் கூடியிருந்தனர். ஆகஸ்ட் திங்கள் 29-ஆம் நாள் தென்னாற்காடு, தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரிலே புறப்பட்ட எனக்கு புதுவை மாநில எல்லையிலும், கோரிமேடு, கடலூர், பு. முட்ளூர், பரங்கிப்பேட்டை ஆதிராநல்லூர், தம்பிக்குநல்லான்பட்டிணம், புவனகிரி, வயலூர்,<noinclude></noinclude> afo9oj69njjerjbqy753h2bjwkntb57 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/589 250 574039 1927428 1927376 2026-04-27T14:10:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 567}}</noinclude>சிதம்பரம், கீழ்மூங்கிலடி, கி.முட்ளூர், கீழ்அனுவம்பட்டு, கிள்ளை, தில்லைவிடங்கள், கீழ்ச்சாவடி, கடவாச்சேரி, வேளுக்குடி, புத்தூர், சேந்தங்குடி ஆகிய வழியிலே உள்ள ஊர்களில் எல்லாம் வரவேற்பளித்தார்கள். கிள்ளையிலே ஒன்பது இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, சீர்காழி சிறப்புக் கூட்டத்திற்கு 1 1/2 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தச் சிறப்புக் கூட்டத்தில், விளநகர் கணேசன், தம்பி தேவேந்திரன், சுப்ரவேலு ஆகியோர் பேசிய பிறகு நான் பேசினேன். நான் சீர்காழியில் உள்ள நண்பர் குமாரசாமி வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு அன்று உணவு அளித்த குற்றத்திற்காக சென்னை திரும்புவதற்குள் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆம் அன்றைய ஆட்சியில் எனக்கு உணவு அளிப்பது கூட குற்றமாகக் கருதப்பட்டது. மறுநாள் பூம்புகார், கும்பகோணம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு விசாரணைக் கமிஷன் செலவு நிதியினைப் பெற்றேன். {{nop}}<noinclude></noinclude> 5ahcmkob9yp54x42zs92x90kt4pfvjl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/590 250 574040 1927391 1920945 2026-04-27T12:19:36Z ஹர்ஷியா பேகம் 15001 1927391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>79</b>}} {{larger|<b>இந்திரா காந்தி இறங்கி வந்தார்</b>}} {{X-larger|<b>க</b>}}டந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முரசொலியில் எனது எழுத்துக்களும் கழக உடன்பிறப்புக்களோடு தொடர்பு கொண்டு உலா வந்தன. சர்க்காரியா கமிஷன் விசாரணையும் சென்னையில் மிகுந்த விளம்பரத்தோடு நடத்தப்பட்டு, என்னைப் பற்றியும் கழக அமைச்சர்கள் பற்றியும் நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பிடும் பணியில் வானொலியும் ஏடுகளும் பயனபடுத்தப்பட்டன. என்னிடம் பணியாற்றிய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள், மற்றும் ஒருசில அரசாங்க அதிகாரிகள் மிகுந்த கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையிலே எனக்கு எதிராகப் பொய் சாட்சியங்கள் கூறுகிற அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அரசின் ஆணைக்கு அடங்கி எனக்கு எதிராகச் சாட்சியமளிக்கா விட்டால் என்ன நேருமோ என அஞ்சிய அவர்கள் மனச்சாட்சியை தொலைவில் துரத்திவிட்டுத் துணிந்து சர்க்காரியா கமிஷனில் பொய்யுரைகளைப் புகன்றனர். சர்க்காரியா கமிஷன் முன்னால் எனது சார்பிலும் மற்ற அமைச்சர்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் சாந்திபூஷன், ஜி. ராமசாமி, கோவிந்தசாமிநாதன், கே. கே. வேணுகோபால், கே. ராமசாமி, ஏ. சி. முத்தண்ணா, தர்மராஜ் சந்தோஷம், பாளை சண்முகம், தஞ்சை கோபாலய்யர், என். கணபதி, மதுரை ராசன், யு. என். ஆர். ராவ், குமார ராஜ ரத்தினம், பி. என். ஜார்ஜ், என்.வி.என். சோமு, ராதாகிருஷ்ணன், வெங்கடாசலம், வெங்கட்ராமன், நல்லியண்ணன், தேவதாஸ், வி.பி.சண்முக சுந்தரம், சிதம்பரநாதன், வி.டி. அரசன், என்.எஸ்.சிவம், கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு, பிரேமராஜ், அன்புரோசு ஆகியோர் ஆஜராகினர். அரசியலில் பழிவாங்கும் எண்ணத்துடன் போடப்பட்டதே சர்க்காரியா கமிஷன் என்று மொரார்ஜி தேசாய், பாபு ஜகஜீவன்ராம், அசோக்மேத்தா, சாந்திபூஷன் ஆகியோர் 1977-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது பொதுக் கூட்டங்களிலேயே பேசினர். அத்தகைய பழிவாங்கும் நினைவுடன் அமைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷனை<noinclude></noinclude> ik68pwtsyyoogapj3aj39br87vx4wk5 1927431 1927391 2026-04-27T14:17:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>79</b>}} {{larger|<b>இந்திரா காந்தி இறங்கி வந்தார்</b>}} {{X-larger|<b>க</b>}}டந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முரசொலியில் எனது எழுத்துக்களும் கழக உடன்பிறப்புக்களோடு தொடர்பு கொண்டு உலா வந்தன. சர்க்காரியா கமிஷன் விசாரணையும் சென்னையில் மிகுந்த விளம்பரத்தோடு நடத்தப்பட்டு, என்னைப் பற்றியும் கழக அமைச்சர்கள் பற்றியும் நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பிடும் பணியில் வானொலியும் ஏடுகளும் பயன்படுத்தப்பட்டன. என்னிடம் பணியாற்றிய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள், மற்றும் ஒருசில அரசாங்க அதிகாரிகள் மிகுந்த கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையிலே எனக்கு எதிராகப் பொய் சாட்சியங்கள் கூறுகிற அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அரசின் ஆணைக்கு அடங்கி எனக்கு எதிராகச் சாட்சியமளிக்கா விட்டால் என்ன நேருமோ என அஞ்சிய அவர்கள் மனச்சாட்சியை தொலைவில் துரத்திவிட்டுத் துணிந்து சர்க்காரியா கமிஷனில் பொய்யுரைகளைப் புகன்றனர். சர்க்காரியா கமிஷன் முன்னால் எனது சார்பிலும் மற்ற அமைச்சர்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் சாந்திபூஷன், ஜி. ராமசாமி, கோவிந்தசாமிநாதன், கே. கே. வேணுகோபால், கே. ராமசாமி, ஏ. சி. முத்தண்ணா, தர்மராஜ் சந்தோஷம், பாளை சண்முகம், தஞ்சை கோபாலய்யர், என். கணபதி, மதுரை ராசன், யு. என். ஆர். ராவ், குமார ராஜரத்தினம், பி. என். ஜார்ஜ், என்.வி.என். சோமு, ராதாகிருஷ்ணன், வெங்கடாசலம், வெங்கட்ராமன், நல்லியண்ணன், தேவதாஸ், வி.பி.சண்முக சுந்தரம், சிதம்பரநாதன், வி.டி. அரசன், என்.எஸ்.சிவம், கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு, பிரேமராஜ், அன்புரோசு ஆகியோர் ஆஜராகினர். அரசியலில் பழிவாங்கும் எண்ணத்துடன் போடப்பட்டதே சர்க்காரியா கமிஷன் என்று மொரார்ஜி தேசாய், பாபு ஜகஜீவன்ராம், அசோக்மேத்தா, சாந்திபூஷன் ஆகியோர் 1977-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது பொதுக் கூட்டங்களிலேயே பேசினர். அத்தகைய பழிவாங்கும் நினைவுடன் அமைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷனை<noinclude></noinclude> p317j5cgfx4jw3yhowwflzt8yt808jk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/591 250 574041 1927392 1920944 2026-04-27T12:20:22Z ஹர்ஷியா பேகம் 15001 1927392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 569}}</noinclude>முறைப்படி சந்தித்து உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே தி.மு.கழகம் தயாராக இருந்தது. ஆனால் சர்க்காரியா கமிஷன், முறைப்படி தனது விசாரணையை நடத்திட முன்வரவில்லை செப்டம்பர் திங்கள் சென்னையில் அந்தக் கமிஷன் விசாரணை தொடங்கியபோது, எங்களின் சார்பில் வழக்கறிஞர் சாந்திபூஷன் அவர்கள் நீதிபதி சர்க்காரியாவிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். என்மீதும், நாவலர் நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன், மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள திரு. எம்.ஜி.ஆர். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல கழகத்தினருக்கு எதிராக சர்க்காரியா கமிஷனில் சாட்சி கூறுகிற எல்லோரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு நீதிபதி சர்க்காரியா அவர்கள் மழுப்பலான ஒரு பதிலைத்தான் அளித்தார். (குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட வீராணம் திட்டம் குறித்த ஊழல் புகார்கள் கமிஷன் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு எழுதப்பட்டதை நினைவு படுத்த விரும்புகிறேன்.) எல்லாப் புகார்களிலுமே சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்தக் குற்றச்சாட்டுகள் பொடிப்பொடியாகி விடும் என்பது தெரிந்த காரணத்தாலோ என்னவோ அன்றைக்கு சர்க்காரியா கமிஷன் சாட்சிகள் அனைவரும் குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்ற உத்திரவாதத்தை வழங்கிட முன்வரவில்லை. அந்த மழுப்பலான பதிலை ஏற்றுக் கொள்ளாமல்—முறைப்படி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்காத காரணத்தால்—அந்தக் கமிஷன் விசாரணையிலிருந்து எங்களின் வழக்கறிஞர்கள் அனைவரும் வெளி நடப்புச் செய்துவிட்டனர். ஒரு அதிகாரி—அவர் பெயர் வைத்திலிங்கம்—கழக ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்டு—மீண்டும் மூன்று மாதம் கழித்து வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். எனது அந்தரங்கச் செயலாளராக இருந்தவர். வேலையை இழந்து மீண்டும் வேலையைப் பெற்ற அந்த இடைவேளையில் அவர் மிரட்டப்பட்டுஎனக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் முன்னால் ஆறரை மணி நேரம் சாட்சியமளித்தார் என்றால் இப்படி எதிரான சாட்சியங்களைத் திரட்ட நெருக்கடி<noinclude></noinclude> cjsshd9ewmha7jd33fgxgbenchf3fwg 1927432 1927392 2026-04-27T14:18:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 569}}</noinclude>முறைப்படி சந்தித்து உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே தி.மு.கழகம் தயாராக இருந்தது. ஆனால் சர்க்காரியா கமிஷன், முறைப்படி தனது விசாரணையை நடத்திட முன்வரவில்லை செப்டம்பர் திங்கள் சென்னையில் அந்தக் கமிஷன் விசாரணை தொடங்கியபோது, எங்களின் சார்பில் வழக்கறிஞர் சாந்திபூஷன் அவர்கள் நீதிபதி சர்க்காரியாவிடம் மனு ஒன்றைக் கொடுத்தார். என்மீதும், நாவலர் நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன், மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள திரு. எம்.ஜி.ஆர். அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல கழகத்தினருக்கு எதிராக சர்க்காரியா கமிஷனில் சாட்சி கூறுகிற எல்லோரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவுக்கு நீதிபதி சர்க்காரியா அவர்கள் மழுப்பலான ஒரு பதிலைத்தான் அளித்தார். (குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட வீராணம் திட்டம் குறித்த ஊழல் புகார்கள் கமிஷன் முன்னால் நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு எழுதப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.) எல்லாப் புகார்களிலுமே சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டால் அந்தக் குற்றச்சாட்டுகள் பொடிப்பொடியாகி விடும் என்பது தெரிந்த காரணத்தாலோ என்னவோ அன்றைக்கு சர்க்காரியா கமிஷன் சாட்சிகள் அனைவரும் குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்ற உத்திரவாதத்தை வழங்கிட முன்வரவில்லை. அந்த மழுப்பலான பதிலை ஏற்றுக் கொள்ளாமல்—முறைப்படி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்காத காரணத்தால்—அந்தக் கமிஷன் விசாரணையிலிருந்து எங்களின் வழக்கறிஞர்கள் அனைவரும் வெளி நடப்புச் செய்துவிட்டனர். ஒரு அதிகாரி—அவர் பெயர் வைத்திலிங்கம்—கழக ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்டு—மீண்டும் மூன்று மாதம் கழித்து வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். எனது அந்தரங்கச் செயலாளராக இருந்தவர். வேலையை இழந்து மீண்டும் வேலையைப் பெற்ற அந்த இடைவேளையில் அவர் மிரட்டப்பட்டு எனக்கு எதிராக சர்க்காரியா கமிஷன் முன்னால் ஆறரை மணி நேரம் சாட்சியமளித்தார் என்றால் இப்படி எதிரான சாட்சியங்களைத் திரட்ட நெருக்கடி<noinclude></noinclude> m0p2atv63wlhsb2mmjwmeu6gsbh6bej பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/592 250 574042 1927393 1920943 2026-04-27T12:21:28Z ஹர்ஷியா பேகம் 15001 1927393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|570 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காலத்தில் அரசு யந்திரம் எப்படியெல்லாம் முடுக்கி விடப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒருநாள் கோபாலபுரத்து வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறேன். வருமான வரித் துறையினர் கூட்டமாக வந்தனர். முதலமைச்சரான பிறகு வாங்கிய வீடுதானே இது—இதனை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றனர். 1956-ஆம் ஆண்டு வாங்கிய வீடய்யா இது; என்மீது புகார் கொடுத்த நண்பர் எம்.ஜி.ஆருக்கு இதுகூடவா தெரியாது என்று கேலியாகக் கேட்டேன். “அது என்னவோ சார்! வீட்டை அளந்து மதிப்பீடு செய்ய வேண்டும்” என்றனர். தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, உள்ளேயிருந்த என் மனைவி தயாளுவைக் கூப்பிட்டு—“இவர்கள் வீட்டை அளக்கப் போகிறார்களாம்—மதிப்பீடு செய்யப் போகிறார்களாம். நீயும் பிள்ளைகளும் உடனிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். முரசொலியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பத்து மணியிருக்கும் காலையில்! “திமு திமு” எனப் பத்துப் பதினைந்து அதிகாரிகள் ஏதோ “அதிரடிப் படை”யினர் போல அலுவலகத்தில் நுழைந்தனர். என் அறைக்குள்ளும் நுழைந்து எனது மேசையைச் சுற்றி நின்று கொண்டனர். வருமானவரி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சோதனை போட வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துவிட்டது. “சார்! இந்த ஆபீசை ‘ரைடு’ செய்யப்போகிறோம்.” என்றனர். “நான் எழுதிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு ஒன்றும் தொந்திரவு இருக்காதே!” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டு, நான் முரசொலிக்கு எழுதுவதில் கவனம் செலுத்தினேன். எனக்கு எதிரிலேயே தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. என்னைச் சுற்றி நாற்காலிகளில் சிலர் உட்கார்ந்து கொண்டனர். சிலர் அறையிலிருந்த பொருள்களை உருட்டினர். சிலர், என் மேசையைத் திறந்து அதிலிருந்த தாள்களைப் புரட்டினர். மதியம் ஒரு மணி அளவில் எனது எழுத்து வேலைகளை முடித்து விட்டு, சோதனையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு இரண்டு மணி வரையில் முரசொலி அலுவலகம் சோதனையிடப்பட்டு—சின்னாபின்னாமாக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> lyl0l64bgihf3uq744brlcelqslcy24 1927433 1927393 2026-04-27T14:21:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|570 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காலத்தில் அரசு யந்திரம் எப்படியெல்லாம் முடுக்கி விடப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒருநாள் கோபாலபுரத்து வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறேன். வருமான வரித் துறையினர் கூட்டமாக வந்தனர். முதலமைச்சரான பிறகு வாங்கிய வீடுதானே இது—இதனை மதிப்பீடு செய்ய வேண்டுமென்றனர். 1956-ஆம் ஆண்டு வாங்கிய வீடய்யா இது; என்மீது புகார் கொடுத்த நண்பர் எம்.ஜி.ஆருக்கு இதுகூடவா தெரியாது என்று கேலியாகக் கேட்டேன். “அது என்னவோ சார்! வீட்டை அளந்து மதிப்பீடு செய்ய வேண்டும்” என்றனர். தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, உள்ளேயிருந்த என் மனைவி தயாளுவைக் கூப்பிட்டு—“இவர்கள் வீட்டை அளக்கப் போகிறார்களாம்—மதிப்பீடு செய்யப் போகிறார்களாம். நீயும் பிள்ளைகளும் உடனிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். முரசொலியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். பத்து மணியிருக்கும் காலையில்! “திமு திமு” எனப் பத்துப் பதினைந்து அதிகாரிகள் ஏதோ “அதிரடிப் படை”யினர் போல அலுவலகத்தில் நுழைந்தனர். என் அறைக்குள்ளும் நுழைந்து எனது மேசையைச் சுற்றி நின்று கொண்டனர். வருமானவரி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சோதனை போட வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துவிட்டது. “சார்! இந்த ஆபீசை ‘ரைடு’ செய்யப்போகிறோம்.” என்றனர். “நான் எழுதிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு ஒன்றும் தொந்திரவு இருக்காதே!” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டு, நான் முரசொலிக்கு எழுதுவதில் கவனம் செலுத்தினேன். எனக்கு எதிரிலேயே தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. என்னைச் சுற்றி நாற்காலிகளில் சிலர் உட்கார்ந்து கொண்டனர். சிலர் அறையிலிருந்த பொருள்களை உருட்டினர். சிலர், என் மேசையைத் திறந்து அதிலிருந்த தாள்களைப் புரட்டினர். மதியம் ஒரு மணி அளவில் எனது எழுத்து வேலைகளை முடித்து விட்டு, சோதனையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு இரண்டு மணி வரையில் முரசொலி அலுவலகம் சோதனையிடப்பட்டு—சின்னாபின்னாமாக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> odrk988nuxahf4mfice7vi0bj2yqreh பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/593 250 574043 1927394 1920942 2026-04-27T12:21:54Z ஹர்ஷியா பேகம் 15001 1927394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 571}}</noinclude>ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் அண்ணாமலை புரத்திலுள்ள என் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போது அதிகாரிகள் பட்டாளம் வீட்டை ஆகரமித்துக் கொண்டிருந்தது. வருமானவரி அதிகாரிகள், அவர்களுடன் போலீஸ் பட்டாளம்! “ராஜி” என்று எனது மனவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். ராஜியைக் காணவில்லை. அந்த அதிகாரிகள் ஏற்கனவே எனக்குத் தெரிந்த அதிகாரிகள்தான். அவர்கள் என்னைப் பார்த்து “நீங்கள் யார் சார்? உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார்களே; அந்தக் கேள்வியை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு பகீர் என்கிறது! என்செய்வது; இப்படியெல்லாம் என்னை அவமானப்படுத்த வேண்டுமென்று திட்டம்! அந்த அதிகாரிகளுக்குப் பதில் கூறாமலே மாடிக்குப் போனேன். அங்கே ராஜியை சில பெண் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடைக்குள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கக் கூடுமென்று அப்படி சோதிக்கிறார்களாம். என்னைப் பார்த்ததும் ராஜியும், என் மகள் கனிமொழியும் கதறியழுதவாறு மயக்கமுற்றனர். அதன் பிறகும் இரவு எட்டு மணிவரையிலே ‘ரைடு’ முடியவில்லை. சே! சில கொள்கைளை அழுத்தமாகச் சொன்னதற்காக சர்வாதிகாரத்தை நேர் நின்று எதிர்த்தமைக்காக—எப்படிப்பட்ட பழிவாங்கும் குணத்தினர் ஒன்று கூடிக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் என் கட்சியின் முன்னணித் தோழர்களையும் எவ்வளவு கேவலப்படுத்தினர் என்பதை இப்போது நினைத்தாலும் இதயம் எரிமலையாகிறது! ஆனால் அந்தச் சோதனைகள், வேதனைகளிலும் மிரண்டு போகாமல் தலைநிமிர்ந்து நின்றோமே என்ற பெருமிதமும் ஏற்படத்தான் செய்கிறது. 1976-ஆம் ஆண்டு மையத்தில் நெருக்கடி நிலையின் கடுமை சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். 1975-ஆம் ஆண்டு எமர்ஜன்சி பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட வடபுலத்துத் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். நாடு தழுவிய அளவில் அப்படி மொத்தமாக அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழ் நாட்டில் மிசாவில் கைதான அரசியல்வாதிகள் யாரும் 1976-ஆம் ஆண்டு இறுதிவரையில் விடுவிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளில் இந்தியாவின் நெருக்கடி காலச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிக்கப்படுகிற நிலைமை பரவலாகப் பெருகிற்று. அந்த நிலை, பிரதமர் இந்திரா காந்தியின், மீது உலக<noinclude></noinclude> qccjn2mi2huol5wezz26rj445ndy99d 1927434 1927394 2026-04-27T14:24:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 571}}</noinclude>ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி அளவில் அண்ணாமலைபுரத்திலுள்ள என் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழையும்போது அதிகாரிகள் பட்டாளம் வீட்டை ஆகரமித்துக் கொண்டிருந்தது. வருமானவரி அதிகாரிகள், அவர்களுடன் போலீஸ் பட்டாளம்! “ராஜி” என்று எனது மனவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். ராஜியைக் காணவில்லை. அந்த அதிகாரிகள் ஏற்கனவே எனக்குத் தெரிந்த அதிகாரிகள்தான். அவர்கள் என்னைப் பார்த்து “நீங்கள் யார் சார்? உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார்களே; அந்தக் கேள்வியை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு பகீர் என்கிறது! என்செய்வது; இப்படியெல்லாம் என்னை அவமானப்படுத்த வேண்டுமென்று திட்டம்! அந்த அதிகாரிகளுக்குப் பதில் கூறாமலே மாடிக்குப் போனேன். அங்கே ராஜியை சில பெண் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடைக்குள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கக் கூடுமென்று அப்படி சோதிக்கிறார்களாம். என்னைப் பார்த்ததும் ராஜியும், என் மகள் கனிமொழியும் கதறியழுதவாறு மயக்கமுற்றனர். அதன் பிறகும் இரவு எட்டு மணிவரையிலே ‘ரைடு’ முடியவில்லை. சே! சில கொள்கைளை அழுத்தமாகச் சொன்னதற்காக சர்வாதிகாரத்தை நேர் நின்று எதிர்த்தமைக்காக—எப்படிப்பட்ட பழிவாங்கும் குணத்தினர் ஒன்று கூடிக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் என் கட்சியின் முன்னணித் தோழர்களையும் எவ்வளவு கேவலப்படுத்தினர் என்பதை இப்போது நினைத்தாலும் இதயம் எரிமலையாகிறது! ஆனால் அந்தச் சோதனைகள், வேதனைகளிலும் மிரண்டு போகாமல் தலைநிமிர்ந்து நின்றோமே என்ற பெருமிதமும் ஏற்படத்தான் செய்கிறது. 1976-ஆம் ஆண்டு மையத்தில் நெருக்கடி நிலையின் கடுமை சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். 1975-ஆம் ஆண்டு எமர்ஜன்சி பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட வடபுலத்துத் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். நாடு தழுவிய அளவில் அப்படி மொத்தமாக அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழ் நாட்டில் மிசாவில் கைதான அரசியல்வாதிகள் யாரும் 1976-ஆம் ஆண்டு இறுதிவரையில் விடுவிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளில் இந்தியாவின் நெருக்கடி காலச் சர்வாதிகாரம் பற்றி விமர்சிக்கப்படுகிற நிலைமை பரவலாகப் பெருகிற்று. அந்த நிலை, பிரதமர் இந்திரா காந்தியின், மீது உலக<noinclude></noinclude> 754p5w2z2lpguuvnur4amqfeh81ok7y பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/594 250 574044 1927395 1920941 2026-04-27T12:22:18Z ஹர்ஷியா பேகம் 15001 1927395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|572 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மக்களின் வெறுப்பை அதிகரிப்பதாக இருந்தது. எனவே, மெல்ல மெல்ல “எமர்ஜன்சி”க் கொடுமையிலிருந்து நாட்டை விடுவிக்க இந்திரா காந்தி அவர்களே முன்வர வேண்டியதாயிற்று. மிசாக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுடைய உடல்நிலையும் சிறைவாசத்தால் மிகவும் கெட்டுப் போய் விட்டதாகச் செய்திகள் வந்தன. சிறைச் சாலைகள், போலீஸ் லாக்கப்கள், இங்கெல்லாம் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட — சொல்லவே நாக்கூசுகின்ற துன்பங்களையும்’ இழிவுகளையும் பத்திரிகைகளில் வெளியிட முடியாவிட்டாலும் துண்டு அறிக்கைகளாக அச்சியற்றிப் பல்வேறு மொழிகளில் நாடெங்கும்-ஏன்; உலகெங்கும் பரப்புகின்ற பணி தொடர்ந்து நடைபெற்றது! தமிழ்நாட்டில் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை அச்சியற்றித் தர அச்சகங்கள் தயங்கின! ஓடி ஒளிந்தன. ஆனால் அந்த நேரத்தில் கழகச் சார்பில் நெருக்கடி நிலைக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை அச்சியற்றித்தரும் பணியை அருமை நண்பரும் தமிழ்ச் சங்கக் காப்பாளருமான க. திருநாவுக்கரசு அவர்கள் ஏற்றுக் கொண்டதை என்னால் மறக்க முடியாது! நிழல் போல இருந்தவர்கள் எல்லாம் தழல் போல என் உள்ளத்தை ஆக்கிவிட்டுப் பிரிந்தோடி விட்ட நேரத்தில் தொலைவில் இருந்தே என் மீது அன்பு காட்டிவரும் அந்த நண்பரின் தொண்டினை எவ்வாறு மறக்க இயலும்! இவ்வாறு எதற்கும் துணிந்தவர்கள் — இலட்சியததிற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் — அவர்களின் எண்ணிக்கை கூடுகிறதேயன்றிக் குறையவில்லை என்பதை உணர்ந்து தான் பிரதமர் இந்திரா அவர்கள் 1976 நவம்பர் திங்கள் கௌகத்தில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய போது எதிர் கட்சிகளுடன் ஓரளவு சமரசத்திற்கு வருவது போல ஜாடை காட்டிப் பேசினார். “எதிர்க் கட்சியினர் எங்களைக் குறைகூறக் கூடாது என நான் ஒருபோதும் கூறியதில்லை. அவர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொண்டு வளமான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என அரசாங்கம் உணர்ந்தால் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கும்.” இதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் கௌகத்தி மாநாட்டுப் பேச்சு! அம்மையார், கொஞ்சம் இறங்கி வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி! {{nop}}<noinclude></noinclude> dwqfv3yrlw443rk1a08b3kalvlrzvqp 1927435 1927395 2026-04-27T14:27:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|572 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மக்களின் வெறுப்பை அதிகரிப்பதாக இருந்தது. எனவே, மெல்ல மெல்ல “எமர்ஜன்சி”க் கொடுமையிலிருந்து நாட்டை விடுவிக்க இந்திரா காந்தி அவர்களே முன்வர வேண்டியதாயிற்று. மிசாக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுடைய உடல்நிலையும் சிறைவாசத்தால் மிகவும் கெட்டுப் போய் விட்டதாகச் செய்திகள் வந்தன. சிறைச் சாலைகள், போலீஸ் லாக்கப்கள், இங்கெல்லாம் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட — சொல்லவே நாக்கூசுகின்ற துன்பங்களையும்’ இழிவுகளையும் பத்திரிகைகளில் வெளியிட முடியாவிட்டாலும் துண்டு அறிக்கைகளாக அச்சியற்றிப் பல்வேறு மொழிகளில் நாடெங்கும்-ஏன்; உலகெங்கும் பரப்புகின்ற பணி தொடர்ந்து நடைபெற்றது! தமிழ்நாட்டில் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை அச்சியற்றித் தர அச்சகங்கள் தயங்கின! ஓடி ஒளிந்தன. ஆனால் அந்த நேரத்தில் கழகச் சார்பில் நெருக்கடி நிலைக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களை அச்சியற்றித்தரும் பணியை அருமை நண்பரும் தமிழ்ச் சங்கக் காப்பாளருமான க. திருநாவுக்கரசு அவர்கள் ஏற்றுக் கொண்டதை என்னால் மறக்க முடியாது! நிழல் போல இருந்தவர்கள் எல்லாம் தழல் போல என் உள்ளத்தை ஆக்கிவிட்டுப் பிரிந்தோடி விட்ட நேரத்தில் தொலைவில் இருந்தே என் மீது அன்பு காட்டிவரும் அந்த நண்பரின் தொண்டினை எவ்வாறு மறக்க இயலும்! இவ்வாறு எதற்கும் துணிந்தவர்கள் — இலட்சியததிற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் — அவர்களின் எண்ணிக்கை கூடுகிறதேயன்றிக் குறையவில்லை என்பதை உணர்ந்து தான் பிரதமர் இந்திரா அவர்கள் 1976 நவம்பர் திங்கள் கௌகத்தில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய போது எதிர் கட்சிகளுடன் ஓரளவு சமரசத்திற்கு வருவது போல ஜாடை காட்டிப் பேசினார். “எதிர்க் கட்சியினர் எங்களைக் குறைகூறக் கூடாது என நான் ஒருபோதும் கூறியதில்லை. அவர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொண்டு வளமான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என அரசாங்கம் உணர்ந்தால் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கும்.” இதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் கௌகத்தி மாநாட்டுப் பேச்சு! அம்மையார், கொஞ்சம் இறங்கி வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி! {{nop}}<noinclude></noinclude> ejx7qtegaxul02ogvb43qikz8deg0qd பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/595 250 574045 1927396 1920940 2026-04-27T12:22:37Z ஹர்ஷியா பேகம் 15001 1927396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>80</b>}} {{larger|<b>புதுடெல்லியில் ஒரு புதிய முயற்சி!</b>}} {{X-larger|<b>பி</b>}}ரதமரின் கௌகத்தி காங்கிரஸ் பேச்சினையொட்டி பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால் அப்போது எதிர்க் கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் கழகத்தின் சார்பில் அப்போது சிந்திக்கப்பட்டது. தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்கு தடங்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பது கழகத்தின் எண்ணமாக இருந்தது. அந்த அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஓர் இடத்தில் கூடிக் கலந்து விவாதித்து பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் ஒருமித்த கருத்துக்கு வருவதே சிறந்தது என்றும் கழகம் கருதியது. இவைகளை மனதிற் கொண்டு, அனைத்திந்திய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் கழகச் சார்பில் தொடர்பு கொண்டு நான் பேசியதில் அந்த முயற்சிக்கான ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தது. எனவே எல்லா தலைவர்களையும் கூட்டி கலந்து விவாதிக்க வேண்டுமென்று எண்ணிய நான் அதற்கான தொடர்புகளை மேற்கொண்டேன். சென்னையிலோ அல்லது வேறு பகுதியிலோ அந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டால், பயண சிரமங்கள் இருக்குமென்பதால் டெல்லியிலேயே அந்த கலந்துரையாடல் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, 76-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாளன்று டெல்லியில் நண்பர் இரா. செழியன் (அப்போதைய நாடாளுமன்றக் கழகக்குழுத் தலைவர்) இல்லத்தில் அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எந்தவொரு எதிர்க் கட்சிகளின் தனிப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறப் போகின்ற கூட்டமல்ல என்பதும் முன்னதாகவே தெளிவாக்கப்பட்டது. இந்தியாவின் வலிவும் வளமும் ஓங்கிடவும் காப்பாற்றப் படவும் எதிர்க் கட்சிகள் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன?”<noinclude></noinclude> te7yt79fqm5ixsf7za4338yc42fejju 1927437 1927396 2026-04-27T14:32:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>80</b>}} {{larger|<b>புதுடெல்லியில் ஒரு புதிய முயற்சி!</b>}} {{X-larger|<b>பி</b>}}ரதமரின் கௌகத்தி காங்கிரஸ் பேச்சினையொட்டி பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால் அப்போது எதிர்க் கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் கழகத்தின் சார்பில் அப்போது சிந்திக்கப்பட்டது. தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்கு தடங்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்பது கழகத்தின் எண்ணமாக இருந்தது. அந்த அடிப்படையில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஓர் இடத்தில் கூடிக் கலந்து விவாதித்து பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் ஒருமித்த கருத்துக்கு வருவதே சிறந்தது என்றும் கழகம் கருதியது. இவைகளை மனதிற் கொண்டு, அனைத்திந்திய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் கழகச் சார்பில் தொடர்பு கொண்டு நான் பேசியதில் அந்த முயற்சிக்கான ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தது. எனவே எல்லா தலைவர்களையும் கூட்டி கலந்து விவாதிக்க வேண்டுமென்று எண்ணிய நான் அதற்கான தொடர்புகளை மேற்கொண்டேன். சென்னையிலோ அல்லது வேறு பகுதியிலோ அந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டால், பயண சிரமங்கள் இருக்குமென்பதால் டெல்லியிலேயே அந்த கலந்துரையாடல் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, 76-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாளன்று டெல்லியில் நண்பர் இரா. செழியன் (அப்போதைய நாடாளுமன்றக் கழகக்குழுத் தலைவர்) இல்லத்தில் அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எந்தவொரு எதிர்க் கட்சிகளின் தனிப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகளை முன்வைத்து நடைபெறப் போகின்ற கூட்டமல்ல என்பதும் முன்னதாகவே தெளிவாக்கப்பட்டது. “இந்தியாவின் வலிவும் வளமும் ஓங்கிடவும் காப்பாற்றப்படவும் எதிர்க் கட்சிகள் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன?”<noinclude></noinclude> 4hzzky13bu69ga3pz7wxak4xe1oucyf பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/596 250 574046 1927614 1920939 2026-04-28T09:38:34Z ஹர்ஷியா பேகம் 15001 1927614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|574 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்று பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே — பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும் என்றும் நான் முதலிலேயே நன்றாகத் தெளிவுபடுத்தினேன். பழைய காங்கிரஸ் கட்சி, பாரதீய லோக்தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு நான் அழைப்பு அனுப்பியிருந்தேன். “மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தத் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கக் தயாராக இருக்கிறது” என்று அப்போது பி. ராமமூர்த்தி அவர்கள் கூறியதின் அடிப்படையில் தான் அந்தக் கட்சிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். அழைப்பு அனுப்பியிருந்தேனே தவிர அந்தக் கட்சி கலந்து கொள்கிறது என்று நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்த ஒரு மாலைப் பத்திரிகை அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து சொல்வார்கள் என்று கருணாநிதி கூறியிருப்பதை நம்பூதிரி பாத்தும், பி. ராமமூர்த்தியும் மறுத்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டது. பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக்மேத்தா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியிருந்ததோடு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அவரைப் போலவே பி.எல்.டி. கட்சியின் தலைவரான சரண்சிங் அவர்களும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் கோரே பம்பாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று செய்தியாளர்கள் மூலமாகவும், முரசொலியில் எழுதிய கடிதத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். இருந்தாலும் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. டிசம்பர் 15-ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நானும் நண்பர்கள் ராஜாராமும், ஜி. லெட்சுமணனும்<noinclude></noinclude> g73xp81pab3500l057i3i4zittr7hkh பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/597 250 574047 1927618 1920938 2026-04-28T09:45:19Z ஹர்ஷியா பேகம் 15001 1927618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 575}}</noinclude>ரெயில் மூலமாகப் மூலமாகப் புறப்பட்டோம். சென்னை புகைவண்டி நிலையத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்து என்னை வழியனுப்பி வைத்தனர். 14-ஆம் தேதியன்று காலையில் புதுடெல்லி போய்ச் சேர்ந்தேன். அன்று காலையில் டெல்லிக்கு அருகில் உள்ள சத்திரப்பூருக்குச் சென்று அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நண்பர் இரா. செழியனும் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அன்றைக்கு முதல்நாள்தான் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன். அவர் 15 - ஆம் தேசிய கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். டிசம்பர் 15-ஆம் தேதியன்று காலை 10மணிக்கு டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது இந்தக்கூட்டத்தில் அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக்மேத்தா, திருமதி மொகிந்தர் கவுர் (அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்), திக்விஜய் நாராயணன்சிங் எம். பி. (பழைய காங்கிரஸ்), பிலுமோடி எம். பி (தலைவர், பாரதீய லோக்தளம்), எச். எம். படேல், எம். பி. (பாரதீய லோக் தளம்), பிஜு பட்நாய்க் (துணைத் தலைவர், சோஷலிஸ்ட் கட்சி), சமர்குகா எம். பி. (சோஷலிஸ்ட் கட்சி). சுரேந்திர மோகன் எம். பி. வாஜ்பாய் எம். பி. (தலைவர் ஜனசங்கம்), கிருஷ்ண காந்த் எம்.பி., பேராசிரியர் ஷெர்சிங் எம்.பி. (முன்னால் மத்திய அமைச்சர்), க. ராஜாராம் (தி.மு.க) ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில கட்சியின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அகில இந்திய கட்சியின் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரவேற்று நான் ஆற்றிய வரவேற்புரை இதோ :— “கட்சித் தலைவர்களே, நண்பர்களே, எனது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கத்தை நான் தங்களுக்கு விடுத்த அழைப்பு மட்லிலேயே<noinclude></noinclude> nmnptnbmcsilwmz3w0o5jh9kweg0i0r பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/598 250 574048 1927623 1920937 2026-04-28T09:50:47Z ஹர்ஷியா பேகம் 15001 1927623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|576 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். கெளகத்தி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையினிடையே எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமையும் என்பது குறித்து அறிவித்துள்ள கருத்து அனைவரும் அறிந்ததேயாகும். அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் இயல்பேயாகும் “நாடு எதிர்நோக்கும் இயல்பானதும், சுமுக மானதுமான சூழ்நிலை விரைவில் உருவாகாதா?” என்று நாட்டின் எதிர்கால நல்வாழ்விலே நாட்ட முள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களது போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், இந்திய நாட்டின் வலிவையும் வளத்தையும் வளர்த்துப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க முன்வரவேண்டு மென்றும் அப்போதுதான் பேச்சுவார்த்தைக்குப் பொருள் இருக்க முடியுமென்றும் பிரதமர் கூறியுள்ளார். “பேச்சுவார்த்தை தொடங்குவதென்றால் நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறவேண்டும்.” சில எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து இப்படி ஒரு கருத்தும் எடுத்து வைக்கப்படுகிறது. நிபந்தனைகள், இருதரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு அவைகளை இரு தரப்பாரும் நிறைவேற்ற உடன் பட்ட பிறகே பேச்சு வார்த்தைக்கு இணங்க முடியுமென்று வாதிப்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்தாகும். சகிப்புத் தன்மையுடன் மனம் விட்டுப் பேசி மீண்டும் நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொண்டு நமது பணிகளை வகுத்துக் கொள்வதே சிறப்புடைய தாகுமென, நான் சார்ந்துள்ள தி.மு. கழகம் எண்ணுகிறது. பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட வாய்ப்பு கிட்டுமேயானால் அதன் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித் தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டு விட்டு அரசாங்கக் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘ஆமாம்’ போடுகிறவைகளாக ஆகவேண்டுமென்று நினைத்துப் பார்ப்பதற்குக்கூட இடமில்லை. {{nop}}<noinclude></noinclude> mwaq0zz0tqnwuvhu4frdezte3fkdaiv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/599 250 574049 1927628 1920936 2026-04-28T09:59:08Z ஹர்ஷியா பேகம் 15001 1927628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 577}}</noinclude>அதே நேரத்தில் இந்தியாவின் வலிவுக்கும், வளத்துக்கும் கேடு ஏற்பட வேண்டுமென்று எண்ணுகின்ற யாரும் இங்கில்லை. ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு நிலைமைகளை மறு பரிசீலனை செய்வதற்கான சிந்தனையும் ஆர்வமும் எழுந்திருப்பது இருதரப்பாரின் சார்பில் நாட்டின் நல்லதோர் எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை அளிக்குமென்றே நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்திருக்கிறது என்றே கூறவேண்டும். அந்தக் குறிக்கோளுடன் செயல் முறைகளை வகுப்பதற்கே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இதில் தனிப்பட்ட கட்சிகளின் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இடமில்லை. அனைவரும் ஏற்றிடத்தக்க ஒரு பொதுவான உடன்பாடு நமக்குள்ளே ஏற்படுவதற்கு இந்தக் கூட்டம் வகை செய்யும், துணை புரியும் என்று நான் நம்புகிறேன்.” என்னுடைய வரவேற்புரைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள், அந்தக் கூட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நிலைமையை இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடக்கக்கூடிய எத்தகைய பேச்சிலும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து மறு நாள் 16 - 12 - 76 அன்று மீண்டும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு எச். எம். படேல் எம். பி. அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு அசோக்மேத்தா அவர்களும் பிலுமோடி அவர்களும் என்னை டெல்லியிலே சந்தித்து உரையாடினார்கள். 1976-ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் டெல்லியிலே கூட்டப்பட்ட அந்த அனைத்துக் கட்சி (எதிர்க்கட்சிகள்) கூட்டம் தான் ஜனதா கட்சி இந்திய அரசியலும் உருவாக முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. டெல்லியிலே நடைபெற்ற அந்தக் கூட்டம் குறித்து 16 - ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலே குல்தீப் நய்யார்<noinclude> நெ.—37</noinclude> 9sv6jms78bnxg15xqnyrm1ymeifsni6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/600 250 574050 1927634 1920935 2026-04-28T10:06:48Z ஹர்ஷியா பேகம் 15001 1927634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|578 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அவர்கள் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார். அதிலே “எதிர்க் கட்சிகளும் ஆளும் காங்கிரசும் முன்னிருந்ததுபோல் இப்போதும் வடதுருவம், தென்துருவமாக இல்லை என்பது வெளிப்படை. சமாதானம் சாத்தியமே என்பதைக் காட்டும் வண்ணம் சிலபல நடந்துள்ளன. இல்லாவிடின், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய திரு. கருணாநிதி கூறியுள்ளதுபோல், ஆளும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அதில் தாம் என்னென்ன விவரங்களை விவாதிக்க வேண்டும் என்ற விவரங்களை முடிவு செய்ய டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்திராது” என்று குறிப்பிட்டிருந்தார். டெல்லி கூட்டத்தில் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஒரு மனதான முடிவெடுக்கப்பட்டு, முன் நிபந்தனைகள் எதுவுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவதே சுமுகமான சூழ்நிலைக்கு வழிகோலும் என்பது விளக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை விளக்கி ஒரு கருத்துரையை வெளியிடவேண்டுமென்று முதல்நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கருத்துரை தயாரிக்கப்பட்டு 16 - 12 - 76 அன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடைய பார்வைக்கு அனுப்பப்பட்டு, அன்று மாலை திரு. எச். எம். படேல் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தக் கருத்துரையின் வரைவினை வைத்துக் கொண்டு கலந்துரையாடி பிறகு அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் “எதிர்க்கட்சிகள் ஜனநாயக செயல்முறைகளில் ஈடுபாடு உள்ளவை. தேசீய பிரச்சினைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசவும், குறிப்பாக நாட்டில் அரசியல் வாழ்வை சகஜப் படுத்துவது மிக அவசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில் அரசுடன் பேச்சு நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டு, அது பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டம் டெல்லியில் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றும், கழகத்தின் முயற்சி கைகூட வேண்டுமென்றும், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து பேசுகிற நாள் விரைவில் வர வேண்டுமென்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் பாட்னாவிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> e2pzkmmwpmf80iqvb24bw89mjiqxao8 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/601 250 574051 1927639 1920934 2026-04-28T10:11:37Z ஹர்ஷியா பேகம் 15001 1927639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 579}}</noinclude>கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தெரிவித்து பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். “சுயேச்சையான, வெளிப்படையான விவாதத்தின் மூலம் நாட்டில் எதிர்ப்பட்டுள்ள பிரச்சினைகளை நம்மால் தீர்க்க இயலும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன” என்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கடிதத்தினுடன் எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பினேன். அதற்குப் பின்னர் டிசம்பர் மாதம் 23 - ஆம் தேதி புதுடெல்லியில் காங்கிரஸ் ஊழியர்களின் முகாமில் பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக, அந்தக் கட்சிகளின் போக்கு பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என்றார். அதாவது எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்து வதையும் - பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினை தீருவதையும் - தனக்கு ஏற்படும் கௌரவக்குறைவு என அவர் கருதினார் என்றே எண்ணிட வேண்டும். ஆனால் அந்த வீம்பு நீண்டநாள் இருக்கவில்லை. “எமர்ஜன்சி” எனும் சர்வாதிகாரக் கொடுமையாட்சியிலிருந்து பின் வாங்கவே அவர் முனைந்தார். அதற்குமேல் தமது எதேச்சாதிகாரப் பிடிவாதப் போக்கை நாடு தாங்காது எனப் புரிந்து கொண்டார். {{nop}}<noinclude></noinclude> k368t47e2tmmeh1j1xkxppyaexhw2vt பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/602 250 574052 1927645 1920933 2026-04-28T10:17:31Z ஹர்ஷியா பேகம் 15001 1927645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>81</b>}} {{larger|<b>இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது!</b>}} {{X-larger|<b>நெ</b>}}ருக்கடி நிலை கொடுமைகளில் ஒன்றாக கைது செய்யப்பட்ட தியாகமறவன், கொள்கைக் குன்று, என்னுடைய அன்பு உடன் பிறப்பு, கழக நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலே பயங்கரமாக அதிகாரிகளால் தாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு முரடன் கொடுத்த உதை காரணமாக வயிற்றிலே அடிபட்டு அதன் காரணமாக வயிற்றுக்குள் சில கோளாறுகள் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிறையிலே அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அந்த நோய் குணமாகாமலேயே டிசம்பர் மாதம் சென்னை பொது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கே சிட்டிபாபுவின் வயிற்றிலே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலும் முற்றிலும் குணமாகாத நிலையிலே ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை அதே இடத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி காலையிலே மருத்துவமனையிலே ஆபத்தான நிலையிலே சிட்டிபாபு இருப்பதாக தொலைபேசி மூலம் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கே மிசா கைதியாக இருந்த நண்பர் கமலநாதனும், மருத்துவனையில் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் காஞ்சனா கமலநாதனும் சிட்டிபாபுவுக்கு அருகே நின்று கதறியழுது கொண்டிருந்தனர். சிட்டிபாபுவின் துணைவியாரும் துடித்துப் புலம்பினர். எனக்காகவே தன்னுடைய இறுதிமூச்சை நிறுத்தி வைத்திருந்ததைப் போல என்னைக் கண்டவுடன் அந்த ஆறுதலோடு கண்ணை மூடினார் 45 வயதே நிறைந்த அந்தக் கழகக் காளை. கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக அரும்பணியாற்றி கடமை உணர்வோடு பணியாற்றிய சிட்டிபாபு மறைந்தவுடன் எனக்கு ஆறுதல் கூற வந்தவர்களிடம் எல்லாம் “என்னை சிறிது நேரம் அழவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். சிட்டிபாபு இறந்தது குறித்து உண்மையான விவரங்களை எல்லாகூட தெளிவாக பத்திரிகைகளில் தர முடியாத அளவிற்கு தணிக்கைக் கொடுமை! கழகத் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று சிட்டி பாபு<noinclude></noinclude> b8ifvo0jqda10kww5vtxugcg3r0mw13 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/603 250 574053 1927647 1920932 2026-04-28T10:25:55Z ஹர்ஷியா பேகம் 15001 1927647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 581}}</noinclude>மரணமடைந்த அன்று இரவு சென்னை நகரத்தில் கழகத்தோழர்கள் எல்லாம் போலீசாரால் வேட்டையாடப்பட்டனர். சிட்டிபாபுவின் மறைவையொட்டி நான் வெளியிட்ட இரங்கல் செய்தி இதோ:— {{left_margin|3em|<poem><b>சிட்டீ, நீ மறைந்துவிட்டாயா? அய்யோ! என்னால் நம்ப முடியவில்லையே! கொள்கை முரசே! தியாக மறவனே! கழகத்தின் தூணே! எங்கள் துணையே! நீ போய் விட்டாயா? அய்யகோ! இன்று இந்தக் காட்சியையா நான் காண வேண்டும்? அந்தோ! நான் யாருக்கப்பா ஆறுதல் சொல்வேன்! என்னால் தாங்க முடியவில்லையே! நான் என் செய்வேன்!</b></poem>}} காலை 8.45 மணி அளவில் பொது மருத்துவமனையில் உயிர் துறந்த சிட்டிபாபுவின் உடலை எங்களிடம் 11.50 மணிக்குத்தான் தந்தனர். 12 மணிக்கு அவரது சடலத்தை அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள நாகப்பையர் தெருவில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்தோம். சென்னை நகரமே அந்தத் தெருவில் திரண்டுவிட்டது. மறுநாள் காலையில் சிட்டிபாபுவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு கிருஷ்ணாம் பேட்டையில் அவரது சடலம் எரி யூட்டப்பட்டது. அன்றைய முரசொலியில் “மறையாத மாணிக்கப் பரிதி” என்ற தலைப்பில் சிட்டியைப் பற்றி நான் கடிதம் எழுதியிருந்தேன். இவ்வாறு ஜனவரி 5-ஆம் தேதி இறந்த சிட்டிபாபு மரணம் குறித்து பெப்ரவரி 20-ஆம் தேதி அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிகையில், சிட்டிபாபுவிற்கு நீரழிவு, மாரடைப்பு, குடலிறக்கம், மலஜலம் கழிப்பதில் தடை ஆகிய வியாதிகள் உண்டு என்றும், 5-1-77 அன்று மத்திய மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என்றும் தெரிவித்திருந்தார்கள். அரசின் அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு முரசொலிமாறன், அப்போது முரசொலி மூலம் எழுப்பிய கேள்விகள் வருமாறு:- {{nop}}<noinclude></noinclude> bb0zhhc69qwf3b1cphshld84legvcpz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/604 250 574054 1927648 1920931 2026-04-28T10:31:11Z ஹர்ஷியா பேகம் 15001 1927648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|582 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிறைச்சாலையில் சிட்டிபாபு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது உண்மையா? இல்லையா? முன்பே அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் என்று அரசாங்க அறிக்கை கூறுகிறது. அத்தகைய நோயாளி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படக் காரணம் என்ன? அத்தகைய நோயாளி மூர்க்கத் தனமாகத் தாக்கப்பட்டது ஏன்? பொது மருத்துவமனைக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற அனுப்பப்பட வேண்டுமென்று அவர் கேட்டதுண்டா? இல்லையா? எப்போது அவரை முதல் தடவையாக வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற பொது மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்? அதற்கு இடைப்பட்ட நாட்கள் எத்தனை? உடனடியாக அவர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் காலங்கடந்து அனுப்பியதன் காரணம் என்ன? இதுபோன்ற முரசொலி மாறனின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறையில் பிணமாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமா? இந்தியா முழுமையும் சிறைச்சாலைகளில் இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சிக் கொடுமையால் எத்தனை சித்திரவதைகள்! சில அரசியல் கைதிகளை சிறைக் கோட்டத்தில் நாள் முழுவதும் பனிக்கட்டியில் படுக்க வைத்தனர். சிநேகலதா என்ற பெண்மணிக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லவே குலைநடுங்குகிறது. அரியானா மாநிலத்தில் ஒரு போலீஸ் லாக்அப்பில் எமர்ஜன்சியை எதிர்த்த குற்றத்திற்காக ஒரு அண்ணனையும் அவன் தங்கையையும் நிர்வாணமாக்கி போலீசார் எதிரிலேயே அவர்களை உடலுறவு கொள்ளச் செய்யுமாறு வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி-அவர்களது மர்ம உறுப்புக்களில் மிளகாய்ப் பொடியையும் தூவினார்கள். இப்படி நாசநர்த்தனமாடிய நெருக்கடி நிலையின் வெறிப்பற்களின் தினவு சற்று அடங்கியதற்கு அடையாளமாகத்தான் 1977 ஜனவரி 18-ஆம் நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, “நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்” என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்டவாறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> 24q99cwrw3u9xo33gcz6pu9aj60mwu9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/605 250 574055 1927649 1920930 2026-04-28T10:42:17Z ஹர்ஷியா பேகம் 15001 1927649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 583}}</noinclude>1. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை விரைவுபடுத்தவேண்டும். அத்துடன் இந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகளின்கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை மறு ஆய்வு செய்யவேண்டும். 2. சகஜமான அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் தேர்தல் காரியங்களுக்காகவும் பொதுக்கூட்டங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும். 3. நபர்கள், வாகனங்கள் நடமாட்டம் மீதான கட்டுப்பாடு, பாதகமான செயல்களுக்கு தண்டனை விதிப்பது, பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய விஷயங்களின்கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை வாபஸ் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தவிர மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்த வி.சி.சுக்லா விடுத்த அறிவிப்பில் “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மக்களிடம் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்குத் தேவையான எல்லா நியாயமான நடவடிக்கைகளையும் அனுமதிப்பதே அரசின் நோக்கம் என்று பிரதமர் தனது வானொலி உரையில் அறிவித்தார். பத்திரிகைகள் அதற்கான சாதனங்களில் ஒன்று. பிரதமர் கூறிய அந்த உறுதி மொழிக்கு இணங்க செய்தித் தணிக்கை உத்தரவை அமல்படுத்துவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத நான்கு பெரிய எதிர்க்கட்சிகளான பழைய காங்கிரஸ், பாரதீய லோக்தளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பொதுப்பெயரில் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக மொரார்ஜி தேசாய் அறிவித்தார். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்புகளுக்குப்பிறகும் தமிழ்நாட்டில் கைது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவில்லை. எனவே நானும் ராஜாராமும் கவர்னர் சுகாதியா அவர்களைச் சந்தித்து மத்திய அரசு உத்தரவிற்குப் பிறகும் தமிழகத்தில் இன்னும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வில்லை என்பதை அறிவித்தோம். அதன்பிறகு ஜனவரி 23-ஆம் நாள் தொடங்கி, படிப்படியாக பிப்ரவரி 2-ஆம் நாள் முடிய கழகத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். {{nop}}<noinclude></noinclude> l5qa43rm4rsivxx31lhv6e37v8nmzx7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118 250 638866 1927537 1927229 2026-04-28T02:37:35Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|94||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நமது நாட்டில் இன்று வளர்ந்து, வலிவு ஏறியுள்ள முதலாளித்துவம், இந்த முறையானது. ஜவுளியிலிருந்து துவங்கி பாங்க் வரையில், பல்வேறு தொழில்களுக்கு ஒரே அதிபதி! இதனைத்தான் பொருளாதார ஏகாதிபத்தியம் என்பர். இந்தியா, பர்மா, சிலோன், இப்படிப் பல நாடுகளுக்கு அதிபதியாக இருந்து பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை பல நூற்றாண்டுகள் நடத்தியதால், உலக வல்லரசு ஆகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்து வந்தது. பொருளாதாரத் துறையிலே இன்று வளர்ந்து விட்டிருக்கும் ஏகாதிபத்தியம் அரசியல்துறை ஏகாதிபத்தியத்தை விட ஆபத்தானது; நாட்டு வளத்தை ஒருசிலர் உறிஞ்சிக் கொள்ளுவதால். யார்மீதும் பகை கொண்டோ, பொறாமை காரணமாகவோ, அருவருப்புக்கொண்டோ, கூறவில்லை; விளக்கத்துக்காகக் கூறுகிறேன்; நான் குறிப்பிடும் பொருளாதார ஏகாதிபத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், உதாரணத்துக்காக இந்த இருபது ஆண்டுகளில் டி. வி. எஸ் கம்பெனி வளர்ந்துள்ள வகையையும், பொள்ளாட்சி மகாலிங்கம் தமது தொழிலை விரிவாக்கியுள்ள வகையையும், பார்! நிலைமை புரியும்! பார்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள், கோபப்படும் காங்கிரஸ் நண்பரை; அவருக்கும் உண்மை உள்ளத்தைத் தைக்கும். பொள்ளாச்சி மகாலிங்கம், காங்கிரஸ்காரர்; சட்ட மன்ற உறுப்பினர்! படித்தவர்; நல்லவர், எனக்கு நண்பர் கூட. அவர், காங்கிரஸ்கட்சி கூறும், சோஷியலிசத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஏன்? அந்த சோஷியலிசம், பஸ் தொழில் சர்க்கரை ஆலைத் தொழில் செயற்கை வைரத் தொழில் என்ற முறையில் நண்பர் மகாலிங்கம் தமது தொழில் சாம்ராஜ்யத்தைப் பெரிதாக்கிக்கொண்டு, இப்போது சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில், இரும்புக் குழாய் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை அமைக்கும் அளவு, அனுமதித்திருக்கிறது. இந்த நிலையிலே, காங்கிரஸ் பேசும் சோஷியலிசத்தை ஏற்றுக்கொள்ள அவருக்குக் கசக்குமா? {{left_margin|3em|சோஷியலிசம் என்றால், இலாபம்தரும் தொழில் பலவும் ஒரு சிலரிடம் போய்ச் சிக்கக்கூடாது, சிக்கிடின் ஏழை பணக்காரன்}}<noinclude></noinclude> jpg9omkj6k7cd5qpsy9ikkseslxz7cf 1927542 1927537 2026-04-28T02:40:47Z YasmineFaisal2 16644 1927542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|94||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நமது நாட்டில் இன்று வளர்ந்து, வலிவு ஏறியுள்ள முதலாளித்துவம், இந்த முறையானது. ஜவுளியிலிருந்து துவங்கி பாங்க் வரையில், பல்வேறு தொழில்களுக்கு ஒரே அதிபதி! இதனைத்தான் பொருளாதார ஏகாதிபத்தியம் என்பர். இந்தியா, பர்மா, சிலோன், இப்படிப் பல நாடுகளுக்கு அதிபதியாக இருந்து பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை பல நூற்றாண்டுகள் நடத்தியதால், உலக வல்லரசு ஆகவும், செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்து வந்தது. பொருளாதாரத் துறையிலே இன்று வளர்ந்து விட்டிருக்கும் ஏகாதிபத்தியம் அரசியல்துறை ஏகாதிபத்தியத்தை விட ஆபத்தானது; நாட்டு வளத்தை ஒருசிலர் உறிஞ்சிக் கொள்ளுவதால். யார்மீதும் பகை கொண்டோ, பொறாமை காரணமாகவோ, அருவருப்புக்கொண்டோ, கூறவில்லை; விளக்கத்துக்காகக் கூறுகிறேன்; நான் குறிப்பிடும் பொருளாதார ஏகாதிபத்தியத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், உதாரணத்துக்காக இந்த இருபது ஆண்டுகளில் டி. வி. எஸ் கம்பெனி வளர்ந்துள்ள வகையையும், பொள்ளாட்சி மகாலிங்கம் தமது தொழிலை விரிவாக்கியுள்ள வகையையும், பார்! நிலைமை புரியும்! பார்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள், கோபப்படும் காங்கிரஸ் நண்பரை; அவருக்கும் உண்மை உள்ளத்தைத் தைக்கும். பொள்ளாச்சி மகாலிங்கம், காங்கிரஸ்காரர்; சட்ட மன்ற உறுப்பினர்! படித்தவர்; நல்லவர், எனக்கு நண்பர் கூட. அவர், காங்கிரஸ்கட்சி கூறும், சோஷியலிசத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஏன்? அந்த சோஷியலிசம், பஸ் தொழில் சர்க்கரை ஆலைத் தொழில் செயற்கை வைரத் தொழில் என்ற முறையில் நண்பர் மகாலிங்கம் தமது தொழில் சாம்ராஜ்யத்தைப் பெரிதாக்கிக்கொண்டு, இப்போது சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில், இரும்புக் குழாய் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை அமைக்கும் அளவு, அனுமதித்திருக்கிறது. இந்த நிலையிலே, காங்கிரஸ் பேசும் சோஷியலிசத்தை ஏற்றுக்கொள்ள அவருக்குக் கசக்குமா? {{left_margin|3em|சோஷியலிசம் என்றால், இலாபம்தரும் தொழில் பலவும் ஒரு சிலரிடம் போய்ச் சிக்கக்கூடாது, சிக்கிடின் ஏழை பணக்காரன்}}<noinclude></noinclude> czwozq5ntpzihdrp11uf52p2tzl8ysx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/113 250 639050 1927546 1927024 2026-04-28T02:44:08Z YasmineFaisal2 16644 1927546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||89}}{{rule}}</noinclude> அவன் சொன்னான்! நாங்கள் செய்கிறோம்! புரிகிறதா வித்தியாசம் என்று பொறி கிளப்புவோர் பேசுவர்; பேசட்டும், தம்பி! அடுத்த கிழமை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறேன். இந்தக் கிழமை, இவர்கள் இன்று பேசுவதிலே புதுமையும் இல்லை புரட்சியும் இல்லை. இதைப் பேச அபாரமான ஆற்றலோ ஏழைகளிடம் ததும்பிய வழியும் அன்போ கூட இருந்திடத் தேவையில்லை, இதுபோல ஒரு வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஏஜண்டினாலேயே பேச முடிந்தது—இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே—என்பது வரையில் கூறினால் போதும் என்று கருதுகிறேன். {{rh|<br>14.8.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> hi06f5mqqx0nz9ux4pzwjix569o9mwo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129 250 639052 1927558 1924001 2026-04-28T03:02:45Z YasmineFaisal2 16644 1927558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude> முறையில் எழுச்சியூட்டத்தக்க முறையில் எவரையும் தம் வசம் ஈர்க்கத்தக்க வகையில் பேசுவார், தாம் மிகப்பெரிய தலைவர் என்பதனை மெய்ப்பித்துக் காட்டுவார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு போயிருக்கிறார்கள், அவரோ பாவம் அந்தப் பழைய பாணிப் பேச்சையேதான் பேசிக்காட்டி இருக்கிறார். நாடு பல சென்று வந்தவர் ஏதேது பேசுகிறார் கேட்போம் என்று பற்பல நாட்டுத் தூதரகத்தினர்கூட ஆவலாக இருந்திருப்பார்களே; பெரியவர் அந்தப் பழைய பாட்டையே பாடிவிட்டாரே, விட்டேனா பார்! என்ற பாட்டை; அதனைக் கேட்ட பிறநாட்டுத் தூதரகத்தினர் இவ்வளவுதானா இவர் சரக்கு என்றல்லவா எண்ணிக்கொள்வார்கள் என்பதனை நினைத்து உண்மைக் காங்கிரஸ்காரர்கள் உள்ளபடி வெட்கப்பட்டுத்தான் இருப்பார்கள். மண்டலம் பல சென்று திரும்பிய மாமன்னன் உரைகேட்டிடச் சிற்றரசரும், புலவர் பெருமக்களும், வணிகரும் மற்றும் வகையான வாழ்வினரும் கூடி இருந்த அவைதனில் அமர்ந்து மாமன்னன், அவையினரே! நாட்டிலே உள்ள ஏரி குளம் குட்டைகளிலே உள்ள மீன்களைக் குவியல் குவியலாகப் பிடித்திடத் தக்க வலை உண்டு நம்மிடம் அறிவீரன்றோ!—என்று பேசிடின், அவையினர் என்ன எண்ணுவர்; தனியே சென்று தலைதலையென்று அடித்துக் கொள்வர். காசி சென்று திரும்பியவரைக் கண்டு பேசச் சென்றவரிடம் காசித் தலத்தின் மகிமை பற்றியும் கங்கையின் எழில் பற்றியும், அங்குச் சென்றதால் தமக்கு ஏற்பட்ட மன அமைதி பற்றியும் கூறாமல், “கருவாடு மிக மலிவு” என்று பேசிகுலன் என்ன எண்ணிக்கொள்வர்; கைபிசைந்து கொள்வர், காசிக்குப்போய்க் கற்றுக் கொண்டு வந்தது இதைத்தானா என்று. எதிர்க் கட்சிகளை—குறிப்பாக நமது கழகத்தை வழக்கம்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத்தான் அவ்வளவு பெரியவரால் முடிந்ததேயன்றி, பொதுவுடைமை நாடுகளிலே உலவியதால் பெற்ற புதுக்கருத்துகள் பற்றிப்பேசினாரோ? நினைப்பே வரவில்லை! அவருடைய நினைவு முழுவதும், கழகத்தின் மீதுதான் இருந்திருக்கிறது. சிலருக்குக் கோபம், சிலருக்கு வருத்தம், உண்மைக் காங்கிரசாருக்கு வெட்கம் ஏற்பட்டது அந்தப் பேச்சைக் கேட்டு—எனக்கோ நம்பி! ஒரு திருப்தி! ஒரு மகிழ்ச்சி! அவர் உலகத் தலைவர்களின் வரிசையிலே சேர்ந்துவிட்டார் என்றும், உலகத் தலைவராக உயர்ந்து விட்டார் என்றும் கூறி உடுக்கை அடிக்கிறார்களே, உண்மையிலேயே அவர் உயர்ந்துபோய், எங்கே நம்மைப் பற்றிய நினைப்பற்றுப் போய்விடுகிறதோ—ஒரே அடியாக அலட்சியப்படுத்தி விடுவாரோ—கழகமா! அதை<noinclude></noinclude> 8nvgf0umjdp1r2vs22tqogn8p2k1k6u 1927559 1927558 2026-04-28T03:04:10Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude> முறையில் எழுச்சியூட்டத்தக்க முறையில் எவரையும் தம் வசம் ஈர்க்கத்தக்க வகையில் பேசுவார், தாம் மிகப்பெரிய தலைவர் என்பதனை மெய்ப்பித்துக் காட்டுவார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு போயிருக்கிறார்கள், அவரோ பாவம் அந்தப் பழைய பாணிப் பேச்சையேதான் பேசிக்காட்டி இருக்கிறார். நாடு பல சென்று வந்தவர் ஏதேது பேசுகிறார் கேட்போம் என்று பற்பல நாட்டுத் தூதரகத்தினர்கூட ஆவலாக இருந்திருப்பார்களே; பெரியவர் அந்தப் பழைய பாட்டையே பாடிவிட்டாரே, விட்டேனா பார்! என்ற பாட்டை; அதனைக் கேட்ட பிறநாட்டுத் தூதரகத்தினர் இவ்வளவுதானா இவர் சரக்கு என்றல்லவா எண்ணிக்கொள்வார்கள் என்பதனை நினைத்து உண்மைக் காங்கிரஸ்காரர்கள் உள்ளபடி வெட்கப்பட்டுத்தான் இருப்பார்கள். மண்டலம் பல சென்று திரும்பிய மாமன்னன் உரைகேட்டிடச் சிற்றரசரும், புலவர் பெருமக்களும், வணிகரும் மற்றும் வகையான வாழ்வினரும் கூடி இருந்த அவைதனில் அமர்ந்து மாமன்னன், அவையினரே! நாட்டிலே உள்ள ஏரி குளம் குட்டைகளிலே உள்ள மீன்களைக் குவியல் குவியலாகப் பிடித்திடத் தக்க வலை உண்டு நம்மிடம் அறிவீரன்றோ!—என்று பேசிடின், அவையினர் என்ன எண்ணுவர்; தனியே சென்று தலைதலையென்று அடித்துக் கொள்வர். காசி சென்று திரும்பியவரைக் கண்டு பேசச் சென்றவரிடம் காசித் தலத்தின் மகிமை பற்றியும் கங்கையின் எழில் பற்றியும், அங்குச் சென்றதால் தமக்கு ஏற்பட்ட மன அமைதி பற்றியும் கூறாமல், “கருவாடு மிக மலிவு” என்று பேசிகுலன் என்ன எண்ணிக்கொள்வர்; கைபிசைந்து கொள்வர், காசிக்குப்போய்க் கற்றுக் கொண்டு வந்தது இதைத்தானா என்று. எதிர்க் கட்சிகளை—குறிப்பாக நமது கழகத்தை வழக்கம்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத்தான் அவ்வளவு பெரியவரால் முடிந்ததேயன்றி, பொதுவுடைமை நாடுகளிலே உலவியதால் பெற்ற புதுக்கருத்துகள் பற்றிப்பேசினாரோ? நினைப்பே வரவில்லை! அவருடைய நினைவு முழுவதும், கழகத்தின் மீதுதான் இருந்திருக்கிறது. சிலருக்குக் கோபம், சிலருக்கு வருத்தம், உண்மைக் காங்கிரசாருக்கு வெட்கம் ஏற்பட்டது அந்தப் பேச்சைக் கேட்டு—எனக்கோ நம்பி! ஒரு திருப்தி! ஒரு மகிழ்ச்சி! அவர் உலகத் தலைவர்களின் வரிசையிலே சேர்ந்துவிட்டார் என்றும், உலகத் தலைவராக உயர்ந்து விட்டார் என்றும் கூறி உடுக்கை அடிக்கிறார்களே, உண்மையிலேயே அவர் உயர்ந்துபோய், எங்கே நம்மைப் பற்றிய நினைப்பற்றுப் போய்விடுகிறதோ—ஒரே அடியாக அலட்சியப்படுத்தி விடுவாரோ—கழகமா! அதை<noinclude></noinclude> tlxtsve4u2w2xpexvamf4c4h7grt79n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 639201 1927408 1925681 2026-04-27T13:53:13Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude> இப்படி மனம் போன போக்கிலே, ஒரு நாடகம் தீட்டுவதா, என்று கோபிக்கத் தோன்றும், அன்பர்களுக்கு. இந்திய விடுதலை விழாவிலிருந்து, அமெரிக்க நாட்டுத் தூதுவர், ஹென்றி கிரேடி இந்தியாவிடம் காட்டிவரும் ‘அக்கறை’ அனைவரும் அறிந்த விஷயம்; அதை ஆதாரமாக வைத்து இந்நாடகம் தீட்டப்பட்டது. போதாது என்கிறீர்களா? சரி! இதோ, மேலும் இரண்டு ஆதாரங்கள். கிரேடி பேசியிருக்கிறார், சின்னாட்களுக்கு முன்பு, “வெளிநாடுகளிலிருந்து, மூலதனம் உதவி பெறாமலே கூட நீங்கள் நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்—ஆனால் மூலதனம் ஏராளமாக ஏற்கனவே உள்ள நாடுகளின் உதவியைப் பெறாவிட்டால், உங்கள் நாட்டு அபிவிருத்தி, தாமதப்படும். தக்க நிபந்தனைகளுடனும், சரியான நிலைமையிலும், பலர் பணம் கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை, என் நாட்டு முதலாளிமார்கள் சார்பாக நான் கூறமுடியும். ஆனால், இந்த நாட்டிலேயோ வேறு நாட்டிலேயோ சென்று, எங்களிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சமாட்டோம். அதற்கு ஒத்து ஊதும் முறையில் சாகல் சந்ஷா எனும் வடநாட்டு வணிகத் தலைவர்— “வெளிநாட்டுத் தொழிலரசர்கள், இங்கு பெரிய தொழிற்சாலைகளை எல்லாம் சில வருஷங்களுக்குள் சர்க்கார் ஏற்றுக்கொள்ளும் என்று பயப்படுகிறார்கள், சந்தேகிக்கிறார்கள்— இந்திய சர்க்கார், உடனடியாக இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்கவேண்டும்” என்று பேசினார். நாடகம், தவறா! {{c|★★★}} படித்து முடித்த நண்பர், “அதுசரி! சுவையைக் கூட்டித் தந்திருக்கிறாய்; புரிகிறது; எதிர்பார்க்காததுமல்ல” என்றார். “கோபம் குறையாமலே இருக்கிறது, அதனால்தான் விளக்கம் தரும் கட்டுரையைப் படித்த பிறகும் சுமத்திய குற்றச்சாட்டை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீர். போகட்டும், கட்டுரையின் சுவை, கிடக்கட்டும், அந்தச் சுவை இருக்கும் என்று எதிர்பார்த்த தன்மை இருக்கட்டும்; கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனியும்” என்றேன். நண்பர் கவனித்துப் பார்த்துவிட்டு, “அப்போதே எழுதியதா இது?” என்று கேட்டார். “ஆமாம் கட்டுரை, இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொடர்பு காரணமாக எழுதப்பட்டது அல்ல; தேர்தலுக்காக எழுதப்பட்டதும் அல்ல; மனதிலே பட்டது; அதனால் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பிடி இந்த அளவு அழுத்திக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட வேதனையால்<noinclude> <references/></noinclude> kkqlfrqlhbr4fdrkaii6wf0ixyxodpq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 639202 1927409 1925682 2026-04-27T13:54:17Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்தபோதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21—12—47ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது. தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது <b>‘காங்கிரஸ் நண்பர்’</b> என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது! காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். {{c|★★★}} ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள் என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude> <references/></noinclude> 02szl0dsb1teft3yxjoyzip38x9w6nb 1927410 1927409 2026-04-27T13:54:43Z Subisena 16382 1927410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்தபோதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21—12—47ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது. தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது ‘காங்கிரஸ் நண்பர்’ என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது! காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். {{c|★★★}} ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள் என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude> <references/></noinclude> hf8t2omac6sjf40jwdxe6waue4qx7j0 1927411 1927410 2026-04-27T13:55:16Z Subisena 16382 1927411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்தபோதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21.12.47-ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது. தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது ‘காங்கிரஸ் நண்பர்’ என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது! காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். {{c|★★★}} ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள் என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude> <references/></noinclude> godvox3k7py8pqa85vqizt82zevsuj1 1927413 1927411 2026-04-27T13:56:09Z Subisena 16382 1927413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்த போதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21.12.47-ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது. தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது ‘காங்கிரஸ் நண்பர்’ என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது! காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். {{c|★★★}} ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள் என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude> <references/></noinclude> ro6onkx5cbysslc0t8zcmjstxsfb3k8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 639203 1927415 1925705 2026-04-27T13:59:04Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude> இவருக்குப் போடும் “ஓட்டு” இவருக்காக அல்ல காங்கிரசுக்காக!— இவர், முன்பு “ஒருமாதிரி” ஆளாக இருந்தாரே—வட்டித்தொழிலால் கொழுத்தவராச்சே—அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகிவிடும் குணவானாயிற்றே!— என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி—சாக்கடைத் தண்ணீரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், ‘பரிசுத்தமான புண்ணிய தீர்த்தம்’—மறவாதே! நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, இவருடைய பணபலத்தின் மீது ஏற்பட்ட பாசத்துக்குக் கட்டுப்பட்டு, காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தி வைக்கிறதே, இது அனியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் ‘தேச சேவை டைரியைக் காட்டி அல்ல, தமது ‘செக்புத்தகத்தை’க் காட்டிப் பெற்றாராமே’ என்று பேசாதே! எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன! என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால்தான் உனக்கென்ன! ஏன் அவைகளைப் பற்றி யோசிக்கிறாய்! அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்துவிட்டதோ, அப்போதே அவர், ‘உங்கள் ஓட்டுக்களை’ப் பெறும் யோக்யதையைப் பெற்றுவிட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை! தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான், ‘வெற்றி’ பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை, திறமை அனுபவம் என்ன, என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாதபடியான, பிரசாரம் நடைபெற்றது; இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று—ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக்கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறுசெய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து—மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது! {{c|<b>★★★</b>}} சில ‘தொகுதிகளில்’, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, “ஓட்டு” அளித்தனர்—காரணம், அவர்கள், தாங்கள் தரும் ‘ஓட்டு’ அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு—என்று நம்பினர்—நம்பும்படி செய்யப்பட்டனர். “இது வெறும் ‘கைகாட்டி’ தானேப்பா!”<noinclude> <references/></noinclude> 14pe9b97jkj9zdtt98zwarx8pln4ndo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240 250 639204 1927416 1925707 2026-04-27T14:00:28Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|216||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> “கல்லுப்பிள்ளையார் போல இருக்கும்—வாயைத்திறக்காது” “திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது” “ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு!” “உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே...” “இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு! காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால்தான்.” “அதுசரி இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக் கொண்டது?” “ஊரிலே பெரிய ஆள்—பணக்காரன் என்பதனாலேதான்” “பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு—அவனை நிற்க வைத்திருக்கலாம்” “ஆமாம்! அவன்கூடக் கேட்டானாம் கெஞ்சினானாம்!” “கடைசியில், ‘எதற்கும் உதவாததை’ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.” “இது போய் அங்கே என்ன செய்யும்?” “செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!” {{c|<b>★ ★ ★</b>}} பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக்கொண்டனர் அபேட்சகர்களின் ‘யோக்யதாம்சங்களை’ப் பற்றி; ‘ஓட்’ மட்டும் போட்டனர்—ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று—ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்—மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் ‘குன்றுக்கு’ ஒரு ‘மகிமை’ கற்பித்து, அதன்மீது இருக்கும் ‘எதை’ எடுத்து உபயோகித்தாலும் ‘புண்யம்’ என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா<noinclude> <references/></noinclude> h2i0vz3rz0g7r6009lgi2nc5v4wwt28 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241 250 639205 1927417 1925708 2026-04-27T14:00:58Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude> முள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று, தேர்தல்! யாரும் ‘வர முடிந்தது’ முலாம் பூசிக்கொண்டதும்! மக்கள் அளித்த ‘ஓட்டு’ தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு—என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது—யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே “எனக்கா ‘ஓட்டு’ தந்தனர்— என்ன செய்தாய், ஏது செய்தாய், என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!” என்று பேசிக்கொண்டனர். தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். “நான் சாமான்யன்— எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை – மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்” என்று அடக்கமாகப் பேசி ‘ஓட்டு’ பெற்றனர் – பிறகு, “என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஒட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் – போக்கும்படி சொல்லு—இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ” என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, ‘ஓட்டு’ பெற்றுக் கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் ‘உயர்ந்தவர்களின்’ உருவம் கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்து கொண்டு சட்டசபை சென்ற ‘பெருமான்களின்’ ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது. கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு, ஆடிக்காட்டுகிறான் – கத்தி கொண்டு வயிற்றில் குத்திக்காட்டுகிறான். அதைக் காணும் நாம், கைகொட்டுகிறோம் சபாஷ் கூறுகிறோம் ஆச்சரியமடைகிறோம் அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன், “என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த்தலைவனாகக் கொள்ளக்கூடாது!” என்று கேட்கமாட்டான்—கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தைபல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் – ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக்காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச்<noinclude> <references/></noinclude> asutjpe9nnmhnnfpkbpzlyxzzb4f5er பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 639206 1927418 1925711 2026-04-27T14:01:48Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|218||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்ய வல்லவர், என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் ‘வீரன்’ சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் – ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை, ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற, தேவையான கருவியும் வேறுவேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர்புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒருகட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும்—போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, ‘தேசியமாக’ கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது – ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது – மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று. {{c|<b>★★★</b>}} பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. —சமையல் காரியம் முடிந்ததும். நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அது போலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட ‘படை’யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்கவேண்டும் —ஆனால், நடந்தது வேறு – விபரீதமானது – அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள் – நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், கதர் உள்ள போதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக்கிளம்பிவிட்டனர். வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக்கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி<noinclude> <references/></noinclude> hzn7u6zmyc7coawb8v4dw7sck0w7geh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 639207 1927420 1925710 2026-04-27T14:03:20Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude> அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள். கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக்<noinclude> <references/></noinclude> t3wzij7kknjf7y14nvombfvd3ow1z64 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244 250 639208 1927421 1925709 2026-04-27T14:04:39Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|220||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள். {{c|★★★}} காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர். ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன் கேட்டால் கேள்; விட்டால் விடு! என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது, நமது பிரசாரமுறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும், என்ற எண்ணம் தோன்ற வேண்டுமே தவிர, எரிச்சல் எழக்கூடாது. எடுபிடி ஆகியாகிலும் இனிப்புப் பெற்றிடவேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டுவிடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன். {{left_margin|3em|வேடிக்கை என்பதா வேதனை தருவது என்பதா பாரேன், தம்பி! 1947ல் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை <b>‘துக்க தினம்’</b> என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்ட்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழாநாள்! என்று, (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான}}<noinclude> <references/></noinclude> axw7audv0tdkaw18fnggwg90uxl7sgr 1927422 1927421 2026-04-27T14:05:06Z Subisena 16382 1927422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|220||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள். {{c|★★★}} காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர். ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன் கேட்டால் கேள்; விட்டால் விடு! என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது, நமது பிரசாரமுறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும், என்ற எண்ணம் தோன்ற வேண்டுமே தவிர, எரிச்சல் எழக்கூடாது. எடுபிடி ஆகியாகிலும் இனிப்புப் பெற்றிடவேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டுவிடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன். {{left_margin|3em|வேடிக்கை என்பதா வேதனை தருவது என்பதா பாரேன், தம்பி! 1947ல் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை ‘துக்க தினம்’ என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்ட்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழாநாள்! என்று, (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான}}<noinclude> <references/></noinclude> 785vtssi8vmih3zbgirxl5o3yfyhsnp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245 250 639209 1927423 1925706 2026-04-27T14:07:07Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude> நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன். விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்? {{left_margin|3em|காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!}} காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது. {{left_margin|3em|அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.}} தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்? இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு. இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர். இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் <b>‘சூத்திர தாரிகள்’</b> வந்துள்ளனர். அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,‘சோஷியலிசம்’ பேசுகின்றனர். {{c|<b>★★★</b>}}<noinclude> <references/></noinclude> 4h88mdj5im0i0q039z3rtzws9iznxlx 1927425 1927423 2026-04-27T14:07:40Z Subisena 16382 1927425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude> நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன். விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்? {{left_margin|3em|காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!}} காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது. {{left_margin|3em|அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.}} தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்? இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு. இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர். இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் ‘சூத்திர தாரிகள்’ வந்துள்ளனர். அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,‘சோஷியலிசம்’ பேசுகின்றனர். {{c|<b>★★★</b>}}<noinclude> <references/></noinclude> 41kldq9a2j1zj8m9ti3hn2t94i5u7yt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 639210 1927426 1925685 2026-04-27T14:08:53Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|222||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் — வந்தவர் குறுநகை புரிகிறார்– வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணுகிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் கூரிய வாள், மின்னுகிறது–மன்னனின் மார்பில் பாய்கிறது – அவர் சாய்கிறார்– சதிகாரன் களிக்கிறான்– வேடம் பலித்தது–வெற்றி கிடைத்தது! வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது – இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான். இரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி – மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக்குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக்கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீரவேந்தனைத் தனியாகக் கண்டு சிலபேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி – தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான். மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர். இதனைப் பெரிய புராணத்தில் – வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவபக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர்; கதைகளைப் பக்தர்கள்,எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவவேடம்’ பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம். நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச்சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம்<noinclude> <references/></noinclude> 3hpjb1p11bfb3xtr5iphwf9e8f30vat பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 639211 1927427 1925677 2026-04-27T14:09:28Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர். மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர். யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது. இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும். நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன் கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்! விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது! நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!<noinclude> <references/></noinclude> aablj3sqdmqxysa9a0cw29856dy5bqu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 639212 1927429 1925598 2026-04-27T14:10:36Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|224||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பாறை மீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின்போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும். {{left_margin|3em|உடன் இருப்போர் ஊர்க் குடிகெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும்.}} ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார், பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!!–என்கிறார்கள். {{left_margin|3em|இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்று தான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக் கொண்டே!!}} இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதை போலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!! காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அவுைக்குத் தாழ்ந்து போகவும், தரக்குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை. அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார்; முதலாளிகளை சோஷியலிஸ்டுகள் ஆக்கிக் காட்டுகிறார். தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த ‘பக்தனை’க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர். குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சிகொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக்கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடுநோக்கி ஓடிவிட்டன என்பர்.<noinclude> <references/></noinclude> 4jeho0zc4maebtesdc01sgnbyzhjzxh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 639213 1927430 1925526 2026-04-27T14:12:27Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude> கண்ணுதற் பெருங்கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது. நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட! ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகள் ஆக்கிடமுடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!! ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டுகிறது–காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்? மக்களுக்கு நம்பிக்கை எழாது; நிச்சயமாக! ஆனால் ஒரு மயக்கம் ஏற்படும் அல்லவா? அதுபோதும் ஓட்டுக்களைத் தட்டிப் பறித்திட என்று அவர் திட்டமிடுகிறார். அந்த மயக்கத்தைப் போக்கிடும் தொண்டினில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தன் திட்டத்தைத் தாக்குகிறார்களே என்பதாலே அவருக்கு நம்மீது ஆத்திரம்! விநாடிக்கு விநாடி அந்த ஆத்திரம் வளருகிறது;பொங்குகிறது. காமராஜர் தயவால் ஒரு புதிய வேட்டை கிடைக்க இருக்கிறதே, அதனை இந்தப் ‘பாவிகள்’ கெடுத்துத் தொலைக்கிறார்களே என்பதை எண்ணிடும்போது முதலாளிமார்களுக்கு நம்மீது கோபம்–கொதிப்பு! இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் நாம் பணியாற்ற வேண்டி இருக்கிறது, நமது பணி பெரிது! பொறுப்பு அதனைவிடப் பெரிது! எதிர்ப்பு, பலவகையின, மிகப் பெரிய அளவினதுமாகும்! “அப்படியா அண்ணா!” என்று ஆயாசக் குரலிலே கூறிடமாட்டாய், அதனால் என்ன அண்ணா நான் தான் அந்தப் பணிக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனே! அஞ்சாதே அண்ணா! அறம் வெல்லும்!! என்று உறுதியுடன் பேசிடுவாய் என்பதை உணர்ந்தே தம்பி! உன்னை அழைக்கிறேன். வேறு யாரை நான் அழைப்பேன்! {{rh|<br>23.10.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude> <references/></noinclude> s4wyrfzsg6nceetrcbygbc1xmpqh42j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 639214 1927436 1926123 2026-04-27T14:30:34Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 278}} {{x-larger|<b>எல்லாம் தருமத்துக்கு!</b>}}}} }} :<b>★ 'எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்து விட்டேன்’- சீமான். :★ 'பாங்குகளைச் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறோம்.-காங்கிரஸ் :★ ஏழைகளின் ஓட்டும் வேண்டும்! முதலாளிகளின் நோட்டும் வேண்டும்! :★ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள். :★ பாங்குக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெடிகுண்டு அல்ல! வெறும் புஷ்வாணம்! தம்பி, எங்கோ படித்ததாக நினைவு; நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்; என்றாலும் நான் கூற நினைக்கும் பிரச்சினைக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதால் அதனைச் சொல்லுகிறேன். ஒரு சீமான்; பிள்ளை குட்டிகள் இல்லை; பெரிய சொத்து! இவ்வளவு சொத்தும் யாருக்குப் போய்ச் சேரப் போகிறதோ, யார் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்களோ என்று ஊரார் பேசிக்கொண்டனர். ஒருநாள் அந்தச் சீமான் பத்திரிகை நிருபரிடம் சொன்னார். {{left_margin|3em|என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்து விட்டேன் என்று.}} துள்ளிக் குதித்தோடினார் நிருபர், இதழகத்துக்கு; கொட்டை எழுத்தில் செய்தியை வெளியிட்டார், இன்ன சீமான் தன் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டார் என்று. சீமானின் படம், புன்னகை பூத்த முகத்துடன்! பாராட்டுக் குறிப்பு அவருடைய இயல்பை மெச்சி. மற்ற இதழ் நிருபர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டாரே இந்த நிருபர் என்று அவருக்குப் பாராட்டும்!<noinclude></noinclude> 7513udhomi1zqsbpwdfep1a71ey4up5 1927440 1927436 2026-04-27T14:43:24Z Subisena 16382 1927440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 278}} {{x-larger|<b>எல்லாம் தருமத்துக்கு!</b>}}}} }} :<b>★ 'எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்து விட்டேன்’- சீமான். :★ 'பாங்குகளைச் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறோம்.-காங்கிரஸ் :★ ஏழைகளின் ஓட்டும் வேண்டும்! முதலாளிகளின் நோட்டும் வேண்டும்! :★ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள். :★ பாங்குக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெடிகுண்டு அல்ல! வெறும் புஷ்வாணம்!</b> தம்பி, எங்கோ படித்ததாக நினைவு; நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்; என்றாலும் நான் கூற நினைக்கும் பிரச்சினைக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதால் அதனைச் சொல்லுகிறேன். ஒரு சீமான்; பிள்ளை குட்டிகள் இல்லை; பெரிய சொத்து! இவ்வளவு சொத்தும் யாருக்குப் போய்ச் சேரப் போகிறதோ, யார் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறார்களோ என்று ஊரார் பேசிக்கொண்டனர். ஒருநாள் அந்தச் சீமான் பத்திரிகை நிருபரிடம் சொன்னார். {{left_margin|3em|என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்து விட்டேன் என்று.}} துள்ளிக் குதித்தோடினார் நிருபர், இதழகத்துக்கு; கொட்டை எழுத்தில் செய்தியை வெளியிட்டார், இன்ன சீமான் தன் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டார் என்று. சீமானின் படம், புன்னகை பூத்த முகத்துடன்! பாராட்டுக் குறிப்பு அவருடைய இயல்பை மெச்சி. மற்ற இதழ் நிருபர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைத் தட்டிப் பறித்துக் கொண்டாரே இந்த நிருபர் என்று அவருக்குப் பாராட்டும்!<noinclude></noinclude> k382hsyz4sd2beobpuux38amxrad0fo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 639256 1927601 1926141 2026-04-28T06:44:39Z Info-farmer 232 {{gap}} 1927601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|236||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> :a ridiculous proposition என்றே கூறியிருக்கிறார். தம்பி! வேறோர் நாடு தாங்கிக்கொள்ளாது இப்படிப்பட்ட போக்கினை. ஏழைகளை மயக்க, தீவிரமான திட்டம்—ஏட்டில்! முதலாளிகளிடம் சென்றோ, முகத்தைத் துடைத்து விடுவது! மிகப் பெரியவர்கள் அங்கு உள்ளவர்கள் என்பதால் முகத்தைத் துடைத்துவிடுவது என்று மட்டுமே கூறுகிறேன். நமது பேச்சின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக, இவர்கள் மேற்கொள்ளும் போக்குக்கு ஏற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்கிறேன். திட்டம் என்று ஒன்றைக் காட்டுகிறார்கள், இது முதலாளிக் கோட்டையைத் தகர்த்திடும் வெடிகுண்டு என்று வீரம் பேசுகிறார்கள்; பிறகு அவர்களே, அது வெடிகுண்டு அல்ல, வெறும் புஸ்வாணம் என்றும் எடுத்து காட்டுகிறார்கள். ஏன்? :எதைச் சொன்னாலும் கேட்டுத் தீர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்ற நினைப்பினாலா? இதுவா மக்களாட்சியின் மாண்பு! இந்த மோசடியா காந்தியாரின் அறநெறி அரசியல்! தம்பி! பாங்குக்காரர்களையும் செல்வபுரியினரையும் கூட்டி வைத்துப் பேசுகிறாரே பட்டீல், பயம் வேண்டாம், உங்கள் அமைப்புக்கோ ஆதிக்கத்துக்கோ ஆபத்து ஏற்படாது என்று, அவர்கள் எந்த அளவு ஆதிக்கம் இன்று செலுத்துகிறார்கள் தெரியுமா? பொருளாதாரத் துறையில், தொழில் துறையில், திடுக்கிட வைக்கத்தக்க அளவு! ஒரு கணக்குத் தருகிறேன், பார் தம்பி! பாடமும் அறிந்துகொள். தொழில் வளர முதல் வேண்டும்; ‘முதல்’ யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் ‘தொழில் உலகை’த் தம் கரத்தில் கொண்டு வரமுடியும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பொருளாதாரப் பிடிக்குப் பயன்படும் கருவிகள், பாங்குகள்! ஆங்கு உள்ள பணம் எவ்வளவு? பாரேன், கணக்கினை. {| |1962-ம் ஆண்டு ||{{gap}} கோடிகள் |- |பம்பாயில் ||{{gap}} 442.83 |- |டில்லி ||{{gap}} 316.11 |- |}<noinclude> <references/></noinclude> mnbabilyyqve3947u6ryv1c9ng2yv4t 1927602 1927601 2026-04-28T06:45:30Z Info-farmer 232 {{gap+|1}} 1927602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|236||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> :a ridiculous proposition என்றே கூறியிருக்கிறார். தம்பி! வேறோர் நாடு தாங்கிக்கொள்ளாது இப்படிப்பட்ட போக்கினை. ஏழைகளை மயக்க, தீவிரமான திட்டம்—ஏட்டில்! முதலாளிகளிடம் சென்றோ, முகத்தைத் துடைத்து விடுவது! மிகப் பெரியவர்கள் அங்கு உள்ளவர்கள் என்பதால் முகத்தைத் துடைத்துவிடுவது என்று மட்டுமே கூறுகிறேன். நமது பேச்சின் தரம் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக, இவர்கள் மேற்கொள்ளும் போக்குக்கு ஏற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்கிறேன். திட்டம் என்று ஒன்றைக் காட்டுகிறார்கள், இது முதலாளிக் கோட்டையைத் தகர்த்திடும் வெடிகுண்டு என்று வீரம் பேசுகிறார்கள்; பிறகு அவர்களே, அது வெடிகுண்டு அல்ல, வெறும் புஸ்வாணம் என்றும் எடுத்து காட்டுகிறார்கள். ஏன்? :எதைச் சொன்னாலும் கேட்டுத் தீர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்ற நினைப்பினாலா? இதுவா மக்களாட்சியின் மாண்பு! இந்த மோசடியா காந்தியாரின் அறநெறி அரசியல்! தம்பி! பாங்குக்காரர்களையும் செல்வபுரியினரையும் கூட்டி வைத்துப் பேசுகிறாரே பட்டீல், பயம் வேண்டாம், உங்கள் அமைப்புக்கோ ஆதிக்கத்துக்கோ ஆபத்து ஏற்படாது என்று, அவர்கள் எந்த அளவு ஆதிக்கம் இன்று செலுத்துகிறார்கள் தெரியுமா? பொருளாதாரத் துறையில், தொழில் துறையில், திடுக்கிட வைக்கத்தக்க அளவு! ஒரு கணக்குத் தருகிறேன், பார் தம்பி! பாடமும் அறிந்துகொள். தொழில் வளர முதல் வேண்டும்; ‘முதல்’ யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்கள் ‘தொழில் உலகை’த் தம் கரத்தில் கொண்டு வரமுடியும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பொருளாதாரப் பிடிக்குப் பயன்படும் கருவிகள், பாங்குகள்! ஆங்கு உள்ள பணம் எவ்வளவு? பாரேன், கணக்கினை. {| |1962-ம் ஆண்டு ||{{gap}} கோடிகள் |- |{{gap+|1}}பம்பாயில் ||{{gap}} 442.83 |- |{{gap+|1}}டில்லி ||{{gap}} 316.11 |- |}<noinclude></noinclude> rnrsn9kkvnnxm459n94jkn56gbv6as6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 639262 1927385 1927380 2026-04-27T12:01:16Z Saranya V R 14232 1927385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா? {{left_margin|3em|<poem>வாண்டையார் வடபாதி மங்கலத்தார் நெடும்பலத்தார் குன்னியூரார் மூப்பனார் மன்றாடியார் மகாலிங்க ஏழையார் பேட்டையார் பெரும்பண்ணையார் செய்யூரார் வலிவலத்தார் இலஞ்சியார் ராமநாதபுரத்தார் செட்டிநாட்டார் சிவகெங்கைச் சீமையார் மோட்டார் மன்னர் சிமிட்டிச் சீமான் இரும்புக்கோமான் அலுமினிய அதிபர் ஆலை ஆள்வோர்</poem>}} இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்! சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude> <references/></noinclude> szxau1fy5lxpu0aaacd9cep4wavxq7e 1927386 1927385 2026-04-27T12:01:34Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா? {{left_margin|3em|<poem>வாண்டையார் வடபாதி மங்கலத்தார் நெடும்பலத்தார் குன்னியூரார் மூப்பனார் மன்றாடியார் மகாலிங்க ஏழையார் பேட்டையார் பெரும்பண்ணையார் செய்யூரார் வலிவலத்தார் இலஞ்சியார் ராமநாதபுரத்தார் செட்டிநாட்டார் சிவகெங்கைச் சீமையார் மோட்டார் மன்னர் சிமிட்டிச் சீமான் இரும்புக்கோமான் அலுமினிய அதிபர் ஆலை ஆள்வோர்</poem>}} இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்! சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude> <references/></noinclude> q14hlwvalp8t58y0e1cguahof2bz042 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267 250 639263 1927387 1927381 2026-04-27T12:03:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude> எப்போது வரும் இந்த சோஷியலிசம்! கண் குளிரக் காணவேண்டும். -என்று வழிமேலே விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்; நம்பச் சொல்லுகிறார், காமராஜப் பெரியவர். {{left_margin|3em|மதப்புரட்டுகளை ஒழிக்கப் போகிறேன் என்று ரஸ்புடீன் சொன்னதில்லை. கொடுங்கோலாட்சியை வீழ்த்தப் போகிறேன் என்று ஜார் சொன்னதில்லை. எதேச்சதிகாரத்தை அழித்திடப் போகிறேன் என்று பிரன்ச்சு நாட்டு மன்னன், லூயி சொன்னதில்லை. ஆனால், காங்கிரசிலே உள்ள முதலாளிகள், சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறோம், சோஷியலிசத்தைக் கொண்டு வரச் சொல்லி, எமது தலைவர் காமராஜரை வற்புறுத்திக் கொண்டு வருகிறோம், அவர் சோஷியலிசம் கொண்டுவர அரும்பாடுபடுவதற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம், அவருடைய துணை கொண்டு சோஷியலிசத்தைக் கொண்டு வந்தே தீருவோம்—என்று சொல்லுகிறார்களாம். நம்பச் சொல்லுகிறார்கள், காங்கிரஸ் கூடாரத்தில் நாவாணிபம் நடாத்திடும் நல்லோர்கள்!!}} இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆடுகளுக்கு, ஓநாய் ‘இரத்த தானம்’ தரப் போகிறதாம்! டாக்டர் காமராஜர் இரத்தம் எடுத்து, ஆடுகளுக்குச் செலுத்தப்போகிறாராம்! நம்பச் சொல்லுகிறார்கள், நாட்டுமக்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுவார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு. {{left_margin|3em|நிலமில்லாத உழவன் நிம்மதியில்லாத பாட்டாளி மாடாய் உழைக்கும் தொழிலாளி வறண்ட தலையினன் இருண்ட கண்ணினன் இல்லையே ! இல்லையே! என்று ஏங்குபவன், கொண்டு போய்விடு கடவுளே, என்று இறைஞ்சுபவன், குளம் தேடுபவன்! மரக்கிளை நாடுபவன்! குமுறிக் கிடப்பவன்! குற்றுயிரான்!}} தம்பி! இவர்களெல்லாம் கூடப் பெறமுடியாத ஆனந்தத்தை ஊரை அடித்து உலையிலே போட்டிடும் உத்தமர்கள், ஒன்றை ஒன்பதிற்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்திடும் குணாளர்கள், இருப்பை மறைப்போர், இருப்பதை மறைப்போர், இலாபத்தை மறைப்போர் போன்ற<noinclude> <references/></noinclude> oxcdkwjbk029vp41ie0xnkh8ker7a1r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268 250 639264 1927388 1927382 2026-04-27T12:04:23Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|244||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு; நம்பச் சொல்லுகிறார்கள்! {{left_margin|3em|இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று! இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க!—என்று, நம்பச் சொல்லுகிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!!}} சோஷியலிசம் வெற்றி பெற்றால்...! என்று கூறி விட்டு, காங்கிரஸ் பேச்சாளர்— காங்கிரஸ்காரர் அல்ல—பேச்சாளர்!— கண்களை மூடுகிறார்; அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார். மாளிகையிலே சிலர் மண்குடிசையிலே பலர்! அரண்மனைகளிலே சிலர் ஆலமரத்தடியில் பலர்! செல்வத்தில் புரண்டபடி சிலர் செல்லரித்த வாழ்வினர் பலர்! இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!! இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல ‘ஏக போக மிராசு’ பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா? இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச்சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? பெரிய நிலச்சுவான்தாரர்கள் மாஜி–மன்னர்கள் பல கம்பெனிகளின் அதிபர்கள் என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு ‘லாலி’ பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?<noinclude> <references/></noinclude> svixwus2b7465spurdl2bkyh6vvajk8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 639265 1927389 1927383 2026-04-27T12:06:31Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude> {{left_margin|3em|துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானை மீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது. காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக் கொள்வார்கள். சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு.}} ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள்; மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்! {{left_margin|3em|உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த ‘இலாபவேட்டைக்காரர்கள்’ இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்! பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே!}} சிறார்களின் பேச்சுக்கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், {{left_margin|3em|காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான். காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக் கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக் கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான்.}} அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப் போவதில்லை, செயலிலே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமே கூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவது போல அல்லவா. இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டு வரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மை பற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்! ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக் கொண்டிருப்பினும், வெகு எளிதாக<noinclude> <references/></noinclude> eduoz41e441aktsc81qdtdsfct7hbav பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 639266 1927390 1927384 2026-04-27T12:08:23Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|246||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> மனமயக்கம் கொண்டுவிடக் கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப் போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா! {{left_margin|3em|கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக் கொண்டவன், விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை!— என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன், கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக் கொண்ட பரந்தாமன்—}} இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது! அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால்? ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக் கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு!— என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள்—என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது. {{left_margin|3em|ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கருதிக் கொள்கிறார்கள். ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு, பேச்சைவிட வலிவு மிக்கது. பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது; பல்வேறு நாடுகளில். ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம்}}<noinclude> <references/></noinclude> g33ayfafprw6vga5lpdpqg9vss25gtw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/57 250 639307 1927459 1927340 2026-04-27T15:44:24Z YasmineFaisal2 16644 -Clean 1927459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||33}}{{rule}}</noinclude> பதவி பறிபோய்விடுமோ, பசையும் ருசியும் கெட்டு விடுமோ என்ற கவலை எவ்வளவு தரக் குறைவான பேச்சையும் கொட்டச் செய்கிறதே! எதைச் சொல்லியாவது கழகத்தை இழிவுபடுத்த வேண்டும், எரிச்சல் மூட்ட வேண்டும் என்ற நினைப்பு நெளிந்திடக் காரணம் என்ன? கிலி! அச்சம்! பதவி பறிபோய்விடுமோ என்ற பதைப்பு! பெண்களின் நகை பறிபோய்விடும் என்று பேசினால் மக்கள் பீதி அடைவார்கள், கழகத்தை ஆதரிக்க மறுப்பார்கள் என்றா எண்ணுகிறார் இவ்வளவு படித்தவர்! ஏமாளியும் அவ்விதம் எண்ணிட மாட்டானே! {{left_margin|3em|காந்தியார் காலத்திலேயே இந்திப் பிரசார விடுதியில், விபசாரம் நடைபெற்றதாகப் புகார் வந்ததே! நாடு அறியாதா அதனை. திங்கள் சில தானே ஓடியுள்ளன, ஒரு காங்கிரஸ் அமைச்சர் மீது ஒரு மாதிடம் வம்பு செய்ததாகப் புகார் கிளம்பி. நாடு மறந்துவிட்டதா! குடித்துப் புரளுவதும் மனைவியை அடித்துக் கொடுமை செய்வதுமாக இருந்தார் என்ற புகார் கிளம்பியது யார் மீது? ஒரு காங்கிரஸ் அமைச்சர் மீது அல்லவா?}} குடித்துவிட்டுப் புரளும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர் என்று மொரார்ஜிதேசாயே கூறினாரே சென்ற ஆண்டு! நாடு மறந்து விட்டதா? என்ன நினைப்பிலே பேசுகிறார்? இருந்ததை இழந்துவிட்ட எரிச்சலிலா? இடிபட்ட வருத்தத்திலா? ஒரு முறைக்கு இரு முறை புகார் தாக்கியதாலா? இப்படியா, மற்ற ஜனநாயக நாடுகளிலே பேசுகிறார்கள். கழகம் ஆட்சிக்கு வந்தால், வழிப்பறி நடத்திடும் என்ற இழி மொழி பேசிடுகின்றாரே இந்த மூதறிஞர், இவருடைய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் நாட்களில்தானே, டில்லியில் முதியவர், நீதிபதி வேலை பார்த்தவர், அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நாட்களில்தானே கெய்ரோன் சுட்டுக் கொல்லப்பட்டார்! காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிற போதுதானே கொள்ளைக்காரக் கூட்டம் மத்தியப் பிரதேசத்தில் கொட்டமடித்தபடி இருக்கிறது! {{left_margin|3em|கொள்ளைக்காரத் தலைவர்களிலே ஒருவன் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அழைத்து, காங்கிரசின் தேர்தல் நிதிக்குக் கணிசமான தொகை நன்கொடை தந்தான் என்று சில காலத்துக்கு முன்பு செய்தி வெளிவந்ததே; நாடு மறந்துவிடுமா?}} மக்கள் ஏதுமறியாதவர்கள், அவர்களிடம் எதனையும் கூறிடலாம், நம்பிவிடுவார்கள் என்ற நினைப்புடன் நாப்பறை நடாத்திடுகின்றனர்; மக்கள் தெளிவு பெற்று விட்டுள்ளனர் என்ற உண்மை அறியாது.<noinclude></noinclude> phrib7x4tbir552u2icoaygld6erv9c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59 250 639309 1927458 1927343 2026-04-27T15:43:18Z YasmineFaisal2 16644 Clean 1927458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude> தம்பி! நான் தந்துள்ள கணக்கு 1962ம் ஆண்டுக்கானது. அந்த ஆண்டிலே என்ன காரணத்தாலோ குற்றங்களும் கொடுமைகளும் அதிக அளவிலே இருந்தன போலும், காங்கிரசின் மாபெருந்தலைவர்கள் உபதேசம் செய்யச் செய்ய, அந்தக் குற்றங்கள் குறைந்துகொண்டு வந்துள்ளன போலும் என்று எண்ணிக் கொண்டுவிடாதே! வளர்ந்தபடி இருக்கிறது என்று சர்க்கார் அறிக்கையே தெரிவித்திருக்கிறது. 1965ம் ஆண்டில், மூன்றே மாதங்களில், குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கைக் கூட சர்க்கார் தந்திருக்கிறது. மூன்றே மாதங்களிலே, தம்பி! காங்கிரசின் புனிதமான ஆட்சியிலே ஒரு இலட்சத்து எண்பத்து மூன்றாயிரம் குற்றங்கள்! வகையும் வேண்டுமா? பார்த்துக் கொள்ளேன். ::கொலை — 3162 ::பெண் கடத்தல் — 1873 ::கொள்ளை — 1138 ::வழிப்பறி — 1910 இது 1965-ம் ஆண்டில், மூன்று மாதத்துக் கணக்கு. 1961-ம் ஆண்டு, மூன்று மாதத்துக் கணக்குடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்போமா? இவர்கள் ஆட்சி காரணமாகப் புனிதத் தன்மையும் ஒழுக்கமும் எந்த அளவு வளர்ந்திருக்கிறது (!) என்பது விளங்கிவிடும். ::{| | ||||1961||—||1965 |- | ||||(3 மாதம்)||—||(3 மாதம்) |- |கொலை||—||2792||—||3162 |- |பெண் கடத்தல்||—||1674||—||1873 |- |கொள்ளை||—||1053||—||1133 |- |வழிப்பறி||—||1607||—||1910 |} இப்படி வளர்ந்திருக்கிறது கொலையும் கொள்ளையும், பெண்களைக் கடத்திச் செல்லும் கொடுமையும், காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நாட்களில். இதற்காக வெட்கப்படாமல், வாயில் வந்ததைப் பேசுகிறார், பெரிய இடத்தில் இருந்தவர். காங்கிரஸ் ஆட்சியிலே கொலையும் கொள்ளையும் கற்பழித்தலும் வழிப்பறியும் போன்ற கொடுமைகள் வளர்ந்துகொண்டே போகின்றன; நாம் ‘பண்பு’ காரணமாக இதனை எடுத்துக் காட்டிடவில்லை; இதற்காக இந்த ஆட்சியை இடித்துரைக்கவில்லை. ஆனால், பாரேன் அந்த இடத்துப் பேச்சு எவ்வளவு தரம் கெட்டதாக இருக்கிறது என்பதனை.<noinclude></noinclude> ih6cqo0fkrq6sri7qdd23cfqw9gjmu8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62 250 639312 1927402 1926654 2026-04-27T13:46:02Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|38||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> என்று பேசிவிட முடிகிறதா! ஒவ்வொரு பிரச்சினைக்கும் விளக்கம் — கேட்போர் ஒப்புக் கொள்ளத்தக்க விதமான விளக்கம்-தரவேண்டி இருக்கிறது. பிரச்சினைகளோ சிக்கல் மிக்கனவாகி விட்டுள்ளன; பொதுமக்களுக்கோ அவைகளை ஆராய்ந்து கொண்டிருக்கப் போதுமான நேரமோ மன அமைதியோ கிடைப்பதில்லை. வாழ்க்கையின் சுமை அவ்வளவு அழுத்துகிறது; அல்லல்கள் அவர்களுக்கு அடுக்கடுக்காக. ஆளுங்கட்சியினரோ பல பிரச்சினைகள் சிக்கலாகி விட்டிருக்கின்றன என்று தெரிந்தும், துளிகூடத் திகைப்புக் கொள்ளாமல், எல்லாம் தன்னாலே சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சினைகள் உள்ளன என்று ஒப்புக்கொள்வதற்கே கூட அவர்களுக்கு மனம் வருவதில்லை; மறைக்கப்பட முடியாதவிதமாகப் பிரச்சினைகள் அழுத்த ஆரம்பித்த பிறகு தான், பிரச்சினை இருப்பதாகவே ஒப்புக் கொள்கிறார்கள். ஒப்புக்கொண்ட பிறகாகிலும், தக்க பரிகாரம் தேட முற்படுகின்றனரா என்றால், இல்லை! அப்படித்தான் இருக்கும் என்று கூறிக்கொண்டே காலத்தை ஓட்டப் பார்க்கிறார்கள்; பிறகு என்ன பரிகாரம் தேடலாம் என்பதுபற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கிறார்கள்; பிறகு கமிட்டியின் கருத்து பற்றி விவாதிக்கிறார்கள்; பிறகு பரிகாரத்துக்கான முறைபற்றி அறிவிப்பு அளிக்கிறார்கள்! செயல்படத் தொடங்குவதோ மிகுந்த காலதாமதத்துக்குப் பிறகு; செயல் மூலம் கிடைத்திடும் பலனோ மலையைக் கெல்லி எலி பிடித்த கதை கூறுவார்களே அதுபோல! ஏன் இந்த அலட்சியப்போக்கு ஏற்படுகிறது என்றால், {{left_margin|3em|அல்லலைத் தாங்கிப் பொறுத்துக் கொண்ட மக்கள், மேலும் சில காலம் அல்லலைத் தாங்கிக் கொள்வார்கள். தாங்க முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்தாலும் மக்கள் சீறி எழமாட்டார்கள். சீறி எழுந்திடினும் அவர்களை அடக்கி ஒடுக்கிட நம்மிடம் அடக்குமுறை இருக்கிறது. அடக்குமுறை ஆட்சியை மாற்றிடத்தக்க ஆற்றல் நாட்டிலே எழவில்லை.}} என்ற இந்த எண்ணம் ஆட்சியினருக்குத் தடித்து விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களைப் பற்றிய கவலையற்று இருக்கின்றனர். {{left_margin|3em|ஜனநாயகத்திலே இந்த நிலை வளர்ந்துவிடுவது பேராபத்தை மூட்டிவிடும். வளைக்க முடியாதது பிறகோர் நாள் முறிக்கப்பட்டுப் போகும் என்பதுபோல, ஆட்சியைத் திருத்த இயலாமல் போய்}}<noinclude> <references/></noinclude> 9jxicdk5emnu3j4jkxd55huy9kzmytu 1927457 1927402 2026-04-27T15:41:55Z YasmineFaisal2 16644 Clean.. 1927457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|38||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> என்று பேசிவிட முடிகிறதா! ஒவ்வொரு பிரச்சினைக்கும் விளக்கம் — கேட்போர் ஒப்புக் கொள்ளத்தக்க விதமான விளக்கம்-தரவேண்டி இருக்கிறது. பிரச்சினைகளோ சிக்கல் மிக்கனவாகி விட்டுள்ளன; பொதுமக்களுக்கோ அவைகளை ஆராய்ந்து கொண்டிருக்கப் போதுமான நேரமோ மன அமைதியோ கிடைப்பதில்லை. வாழ்க்கையின் சுமை அவ்வளவு அழுத்துகிறது; அல்லல்கள் அவர்களுக்கு அடுக்கடுக்காக. ஆளுங்கட்சியினரோ பல பிரச்சினைகள் சிக்கலாகி விட்டிருக்கின்றன என்று தெரிந்தும், துளிகூடத் திகைப்புக் கொள்ளாமல், எல்லாம் தன்னாலே சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சினைகள் உள்ளன என்று ஒப்புக்கொள்வதற்கே கூட அவர்களுக்கு மனம் வருவதில்லை; மறைக்கப்பட முடியாதவிதமாகப் பிரச்சினைகள் அழுத்த ஆரம்பித்த பிறகு தான், பிரச்சினை இருப்பதாகவே ஒப்புக் கொள்கிறார்கள். ஒப்புக்கொண்ட பிறகாகிலும், தக்க பரிகாரம் தேட முற்படுகின்றனரா என்றால், இல்லை! அப்படித்தான் இருக்கும் என்று கூறிக்கொண்டே காலத்தை ஓட்டப் பார்க்கிறார்கள்; பிறகு என்ன பரிகாரம் தேடலாம் என்பதுபற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கிறார்கள்; பிறகு கமிட்டியின் கருத்து பற்றி விவாதிக்கிறார்கள்; பிறகு பரிகாரத்துக்கான முறைபற்றி அறிவிப்பு அளிக்கிறார்கள்! செயல்படத் தொடங்குவதோ மிகுந்த காலதாமதத்துக்குப் பிறகு; செயல் மூலம் கிடைத்திடும் பலனோ மலையைக் கெல்லி எலி பிடித்த கதை கூறுவார்களே அதுபோல! ஏன் இந்த அலட்சியப்போக்கு ஏற்படுகிறது என்றால், {{left_margin|3em|அல்லலைத் தாங்கிப் பொறுத்துக் கொண்ட மக்கள், மேலும் சில காலம் அல்லலைத் தாங்கிக் கொள்வார்கள். தாங்க முடியாத அளவுக்கு அல்லல் வளர்ந்தாலும் மக்கள் சீறி எழமாட்டார்கள். சீறி எழுந்திடினும் அவர்களை அடக்கி ஒடுக்கிட நம்மிடம் அடக்குமுறை இருக்கிறது. அடக்குமுறை ஆட்சியை மாற்றிடத்தக்க ஆற்றல் நாட்டிலே எழவில்லை.}} என்ற இந்த எண்ணம் ஆட்சியினருக்குத் தடித்து விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் மக்களைப் பற்றிய கவலையற்று இருக்கின்றனர். {{left_margin|3em|ஜனநாயகத்திலே இந்த நிலை வளர்ந்துவிடுவது பேராபத்தை மூட்டிவிடும். வளைக்க முடியாதது பிறகோர் நாள் முறிக்கப்பட்டுப் போகும் என்பதுபோல, ஆட்சியைத் திருத்த இயலாமல் போய்}}<noinclude></noinclude> ccipcr22kq88z5kmptyzlvqxotac5ey பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63 250 639313 1927403 1926655 2026-04-27T13:46:24Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude> {{left_margin|3em|விடுமானால், சட்டம், சமாதானம், ஒழுங்கு, அமைதி ஆகியவைகள் அழியினும் சரி, பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி மேலோங்கும். அந்த நிலை சமூகத்தின் கட்டுக்கோப்பையேகூடக் கெடுத்துவிடும்.}} மக்களை வாழவைப்பதிலே வெற்றிபெறத் தவறிவிடும் துரைத்தனத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ள பொதுமக்கள்,அறிவாற்றலுடன் பணியாற்றி ஆட்சியை மாற்றிட முனைய வேண்டுமேயன்றி, நம்மால் ஆகுமா என்று நெடுங்காலம் பெருமூச்செறிந்து கொண்டிருந்து விட்டு, பிறகோர் நாள் எரிமலையாகி விடுகிறபோக்கு கூடாது. இவ்விதமான போக்கு எழும் என்று, அந்தப் போக்கு வெடித்துக் கிளம்புகிற வரையில், எந்தக் கொடுங்கோலரும் எதிர்பார்ப்பதில்லை; யாரேனும் துணிந்து எச்சரித்தாலும் ஏளனம் செய்வர்; நம்பிட மாட்டார்கள். {{left_margin|3em|ஊமைகளா இத்தனை முழக்கம் எழுப்புகிறார்கள் அடங்கிக் கிடந்தவர்களா இத்தனை ஆர்ப்பரிப்புச் செய்கின்றனர்! சவுக்கடிக்கு நடுங்கிக் கொண்டிருந்தவர்களா இன்று துப்பாக்கிக்கு மார் காட்டுகின்றனர்! அடிபணிந்து கிடந்தவர்களா இன்று முடிபறிப்பேன் என்று கூவுகின்றனர்!}} என்று வியந்துதான் கொடுங்கோலர் கேட்டனர், ஒவ்வொரு புரட்சி வெடித்தபோதும்; இப்படித்தான் நடக்கும் என்று முன்பே தெரியும் என்று எந்தக் கொடுங்கோலனும் கூறினதில்லை. முடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காரணமாக இருந்து வந்தது குருட்டுப் போக்கு. குடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காட்ட இயலுவதில்லை; முறை மாறியிருக்கிறது. நெறித்த புருவம் அல்ல! புன்னகை! பாகுமொழி! இவைகளைக் கருவியாக்கிக் கொண்டு மக்களை மயக்கிக் கட்டுப்படுத்துவதிலே முனைகின்றனர். முரட்டுப் போக்குடன் முடிதரித்தோன் நடந்து கொண்டால், பல கொடுமைகளைத் தாங்கித் தவித்த மக்களிடமிருந்து ஓர் நாள், எதற்கும் அஞ்சாத ஒரு வீரன் எழுவான்! கொடுங்கோலன் வீழ்வான், இடையே இரத்தம்! தீ! பலி! நிறைய! மக்களைத் தமது புன்னகையாலும் பாகுமொழியாலும் மயக்கிடும் போக்கிலே குடியாட்சிக் கோமான்கள் நடந்திடும்போது, எதிர்ப்பு<noinclude> <references/></noinclude> bqxov1f5qnizj7qtlq5uaxb79ay4kxs 1927456 1927403 2026-04-27T15:39:29Z YasmineFaisal2 16644 Clean 1927456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude> {{left_margin|3em|விடுமானால், சட்டம், சமாதானம், ஒழுங்கு, அமைதி ஆகியவைகள் அழியினும் சரி, பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற ஆத்திர உணர்ச்சி மேலோங்கும். அந்த நிலை சமூகத்தின் கட்டுக்கோப்பையேகூடக் கெடுத்துவிடும்.}} மக்களை வாழவைப்பதிலே வெற்றிபெறத் தவறிவிடும் துரைத்தனத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ள பொதுமக்கள்,அறிவாற்றலுடன் பணியாற்றி ஆட்சியை மாற்றிட முனைய வேண்டுமேயன்றி, நம்மால் ஆகுமா என்று நெடுங்காலம் பெருமூச்செறிந்து கொண்டிருந்து விட்டு, பிறகோர் நாள் எரிமலையாகி விடுகிறபோக்கு கூடாது. இவ்விதமான போக்கு எழும் என்று, அந்தப் போக்கு வெடித்துக் கிளம்புகிற வரையில், எந்தக் கொடுங்கோலரும் எதிர்பார்ப்பதில்லை; யாரேனும் துணிந்து எச்சரித்தாலும் ஏளனம் செய்வர்; நம்பிட மாட்டார்கள். {{left_margin|3em|ஊமைகளா இத்தனை முழக்கம் எழுப்புகிறார்கள் அடங்கிக் கிடந்தவர்களா இத்தனை ஆர்ப்பரிப்புச் செய்கின்றனர்! சவுக்கடிக்கு நடுங்கிக் கொண்டிருந்தவர்களா இன்று துப்பாக்கிக்கு மார் காட்டுகின்றனர்! அடிபணிந்து கிடந்தவர்களா இன்று முடிபறிப்பேன் என்று கூவுகின்றனர்!}} என்று வியந்துதான் கொடுங்கோலர் கேட்டனர், ஒவ்வொரு புரட்சி வெடித்தபோதும்; இப்படித்தான் நடக்கும் என்று முன்பே தெரியும் என்று எந்தக் கொடுங்கோலனும் கூறினதில்லை. முடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காரணமாக இருந்து வந்தது குருட்டுப் போக்கு. குடியாட்சிக் காலத்திலே முரட்டுப் போக்கு காட்ட இயலுவதில்லை; முறை மாறியிருக்கிறது. நெறித்த புருவம் அல்ல! புன்னகை! பாகுமொழி! இவைகளைக் கருவியாக்கிக் கொண்டு மக்களை மயக்கிக் கட்டுப்படுத்துவதிலே முனைகின்றனர். முரட்டுப் போக்குடன் முடிதரித்தோன் நடந்து கொண்டால், பல கொடுமைகளைத் தாங்கித் தவித்த மக்களிடமிருந்து ஓர் நாள், எதற்கும் அஞ்சாத ஒரு வீரன் எழுவான்! கொடுங்கோலன் வீழ்வான், இடையே இரத்தம்! தீ! பலி! நிறைய! மக்களைத் தமது புன்னகையாலும் பாகுமொழியாலும் மயக்கிடும் போக்கிலே குடியாட்சிக் கோமான்கள் நடந்திடும்போது, எதிர்ப்பு<noinclude></noinclude> qre8d5nz5s1hp9b2ueycapehgggzx7m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64 250 639314 1927450 1926657 2026-04-27T15:33:08Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|40||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> உணர்ச்சி மங்கிடுவது இயல்பு. இந்த இயல்பு காரணமாகவே, அல்லல் பல தொடர்ந்து கிளம்பித் தாக்கியும், மக்கள், இந்தக் கொடுமைகளை மூட்டிவிட்ட ஆட்சியினருக்கு எதிராகப் பொங்கி எழ முடியாதவர்களாகின்றனர். {{left_margin|3em|இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆளவந்தார்கள் தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.}} ஆனால் தம்பி! மெள்ள மெள்ள அந்த மயக்கம் நீங்கிக் கொண்டு வருகிறது; தேளிவும் துணிவும் மிகுதியாகிக் கொண்டு வருகிறது-இனி நீண்ட நாட்களுக்கு மக்களை மயக்கிக் கொண்டிருக்க முடியாது பழைய பேச்சினால் என்று கண்டுகொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது புதிய மயக்கம் தரும் பானத்தைத் தயாரித்துத் தருகின்றனர்; இந்த மயக்க மருந்து இன்னும் சிலகாலம் வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த மயக்க மருந்து தான், தம்பி, இப்போது இவர்கள் வெகுவேகமாகப் பேசிக் கொண்டிருக்கும். ஜனநாயக சோஷியலிசம் என்பது. பழைய மயக்க மருந்து வேலை செய்வதில்லை முன்பு போல! ‘சுயராஜ்யம்’ என்ற சொல் காதில் பாய்ந்ததும் காதில் தேன் வந்து பாய்ந்திடும் நிலை; முன்பு! சுயராஜ்யம் வருகிறது! என்று அறிவித்ததும் பொதுமக்கள் கண்முன்பு, அவர்கள் மனத்திலே இருந்து வந்த ஆசைகள் அவ்வளவும் வடிவம் கொண்டு நின்றன! சுயராஜ்யம் வருகிறது, இனி வறுமை இல்லை. வாட்டம் இல்லை, வரிக்கொடுமை இல்லை; உண்ண உணவு, உடுக்க உடை, குடி இருக்க வீடு, செய்யத் தொழில், தொழிலில் நீதி நிம்மதி எல்லாம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். அத்தகைய ஒரு இன்ப வாழ்க்கையைப் பெற்றுத் தந்திடுவோர் காட்டிடும் பாதை நடந்திடுவோம், கேட்டிடுவதைத் தட்டாமல் தயங்காமல் கொடுத்திடுவோம் என்று சூளுரைத்தனர்; செயல்பட்டனர். சுயராஜ்யம் வந்தது! கொட்டு முழக்குடன் கோலாகல விழாவுடன்! கொடி பறந்தது, பட்டொளி வீசி! கூனன் நிமிருவான்! குருடன் பார்வை பெறுவான்! என்றனர் குதூகலத்துடன். ஆடுவமே! பள்ளுப் பாடுவமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்பதாகக் கவிதைகள் இசைக்கப்பட்டன! ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது, மனக்கண் முன்பு. ஆனால் நாட்கள் உருண்டோடின, ஆண்டுகள் புரண்டோடின, ஆசைக் கனவுகள் நிறைவேறவில்லை. அல்லல் அகலவில்லை, தொல்லை<noinclude> <references/></noinclude> 6c2zgewak8que4p66zjuaqr37mdc8f2 1927455 1927450 2026-04-27T15:38:48Z YasmineFaisal2 16644 Clean 1927455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|40||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> உணர்ச்சி மங்கிடுவது இயல்பு. இந்த இயல்பு காரணமாகவே, அல்லல் பல தொடர்ந்து கிளம்பித் தாக்கியும், மக்கள், இந்தக் கொடுமைகளை மூட்டிவிட்ட ஆட்சியினருக்கு எதிராகப் பொங்கி எழ முடியாதவர்களாகின்றனர். {{left_margin|3em|இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆளவந்தார்கள் தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்.}} ஆனால் தம்பி! மெள்ள மெள்ள அந்த மயக்கம் நீங்கிக் கொண்டு வருகிறது; தேளிவும் துணிவும் மிகுதியாகிக் கொண்டு வருகிறது-இனி நீண்ட நாட்களுக்கு மக்களை மயக்கிக் கொண்டிருக்க முடியாது பழைய பேச்சினால் என்று கண்டுகொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது புதிய மயக்கம் தரும் பானத்தைத் தயாரித்துத் தருகின்றனர்; இந்த மயக்க மருந்து இன்னும் சிலகாலம் வேலை செய்யும் என்று நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். அந்த மயக்க மருந்து தான், தம்பி, இப்போது இவர்கள் வெகுவேகமாகப் பேசிக் கொண்டிருக்கும். ஜனநாயக சோஷியலிசம் என்பது. பழைய மயக்க மருந்து வேலை செய்வதில்லை முன்பு போல! ‘சுயராஜ்யம்’ என்ற சொல் காதில் பாய்ந்ததும் காதில் தேன் வந்து பாய்ந்திடும் நிலை; முன்பு! சுயராஜ்யம் வருகிறது! என்று அறிவித்ததும் பொதுமக்கள் கண்முன்பு, அவர்கள் மனத்திலே இருந்து வந்த ஆசைகள் அவ்வளவும் வடிவம் கொண்டு நின்றன! சுயராஜ்யம் வருகிறது, இனி வறுமை இல்லை. வாட்டம் இல்லை, வரிக்கொடுமை இல்லை; உண்ண உணவு, உடுக்க உடை, குடி இருக்க வீடு, செய்யத் தொழில், தொழிலில் நீதி நிம்மதி எல்லாம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர். அத்தகைய ஒரு இன்ப வாழ்க்கையைப் பெற்றுத் தந்திடுவோர் காட்டிடும் பாதை நடந்திடுவோம், கேட்டிடுவதைத் தட்டாமல் தயங்காமல் கொடுத்திடுவோம் என்று சூளுரைத்தனர்; செயல்பட்டனர். சுயராஜ்யம் வந்தது! கொட்டு முழக்குடன் கோலாகல விழாவுடன்! கொடி பறந்தது, பட்டொளி வீசி! கூனன் நிமிருவான்! குருடன் பார்வை பெறுவான்! என்றனர் குதூகலத்துடன். ஆடுவமே! பள்ளுப் பாடுவமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்பதாகக் கவிதைகள் இசைக்கப்பட்டன! ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது, மனக்கண் முன்பு. ஆனால் நாட்கள் உருண்டோடின, ஆண்டுகள் புரண்டோடின, ஆசைக் கனவுகள் நிறைவேறவில்லை. அல்லல் அகலவில்லை, தொல்லை<noinclude></noinclude> be5cxn0zc07azxb40olk6gbmq68acc4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65 250 639315 1927451 1926660 2026-04-27T15:35:51Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>தொடர்ந்தது; சுயராஜ்யம் என்றால் சுகராஜ்யம் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே, ஒரு சுகத்தையும் காணவில்லையே, கண்ணீர்விட்டா வளர்த்தோம்; செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம் சுதந்திரத்தை, நமக்கு ஒரு பயனும் கிடைக்கக் காணோமே என்று ஏக்கப்பட்டனர் மக்கள். {{left_margin|3em|ஆனால் இதுதானா ஐயா! சுயராஜ்யம்! என்று கேட்கக் கூச்சம்!! அச்சம்!!}} ஒரு நூற்றாண்டாக உம்மைக் கப்பிக் கொண்டிருந்த அவதிகள், சுயராஜ்யம் கிடைத்த மறுநாளேவா ஓடிவிடும்! காலம் வேண்டும் நண்பர்களே! காலம் வேண்டும்! வேலையைத் தொடங்கிவிட்டோம், விரைவிலே பலனைக் காணப் போகிறீர்கள். அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று அன்று தலைவர்கள் சொல்லக் கேட்ட மக்கள், “ஆமாம்! அவசரப்படக் கூடாது!!” என்று கூறினர்; பொறுத்துக் கொண்டனர்; எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். ஆனால் ஆண்டுகள் பதினெட்டுக்கு மேலாகிவிட்ட பிறகும் எதிர்பார்த்த இன்ப வாழ்வு கிடைக்காமல் போனதையும், அதேபோது ஒரு சில செல்வந்தர்களுக்கும், ஆளுங்கட்சியின் ஆலவட்டங்களுக்கும் இன்ப வாழ்வு கிடைத்திருப்பதையும் கண்ட மக்கள், வெகுண்டு எழுந்து, இதற்குப் பெயர்தான் சுயராஜ்யமா! என்று முழக்கமிடலாயினர்! சுயராஜ்யம் என்ற சொல்லால் மயக்கினீர்கள்—கண்டு கொண்டோம்; மயக்கத்தின் பிடியிலிருந்து இதோ விடுபட்டோம்; காட்டு கணக்கினை! என்று மக்கள் கேட்டிடலாயினர். ஓ! ஓ! பழைய மயக்க மருந்து போதுமானதாக இல்லை; புதிதாக ஒன்று தந்தாக வேண்டும் என்பதனை அறிந்த தந்திரத் தலைவர்கள், ஜனநாயக சோஷியலிசம் என்ற சுவையினையே மயக்க மருந்து ஆக்கித் தர முயன்று கொண்டிருக்கின்றனர். நாளைக்கு ஒரு சூரணம் தருகிறேன், அதனைத் தேனிலே குழைத்து மூன்றே வேளை சாப்பிடு, நோய் கட்டாயம் பறந்துபோகும்—என்று மருத்துவர் சொல்லும் போது, இவ்வளவு நாள் இவர் கொடுத்த மருந்து துளியும் பயன் தரவில்லையே; ஒவ்வொரு வகையான மருந்து தருகிறபோதும் இதுபோலத்தானே இவர் கூறினார் என்ற எண்ணம் எளிதிலே ஏற்பட்டு விடுவதில்லை. இந்த மருந்தாவது வேலை செய்கிறதா பார்க்கலாம்! மருத்துவர்தான் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லுகிறாரே, இதைச் சாப்பிட்டுப் பார்ப்போம் என்றுதான் எண்ணம் கொள்ளச் செய்கிறது. மனித இயல்பு! அதிலும் நம்முடைய நாட்டு மக்களின் இயல்பு பற்றிக் கூறிடவா வேண்டும்!! இதிலாவது பலன் கிடைக்கிறதா பார்க்கலாம், இவராலாவது நலன் கிடைக்கிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கிடந்திடும் போக்கு; கொண்டுள்ளவர்கள்.<noinclude> <references/></noinclude> 2kvihhs7j6io5rx0tzktsdrjimf2ktd 1927454 1927451 2026-04-27T15:38:12Z YasmineFaisal2 16644 Clean 1927454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>தொடர்ந்தது; சுயராஜ்யம் என்றால் சுகராஜ்யம் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே, ஒரு சுகத்தையும் காணவில்லையே, கண்ணீர்விட்டா வளர்த்தோம்; செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம் சுதந்திரத்தை, நமக்கு ஒரு பயனும் கிடைக்கக் காணோமே என்று ஏக்கப்பட்டனர் மக்கள். {{left_margin|3em|ஆனால் இதுதானா ஐயா! சுயராஜ்யம்! என்று கேட்கக் கூச்சம்!! அச்சம்!!}} ஒரு நூற்றாண்டாக உம்மைக் கப்பிக் கொண்டிருந்த அவதிகள், சுயராஜ்யம் கிடைத்த மறுநாளேவா ஓடிவிடும்! காலம் வேண்டும் நண்பர்களே! காலம் வேண்டும்! வேலையைத் தொடங்கிவிட்டோம், விரைவிலே பலனைக் காணப் போகிறீர்கள். அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று அன்று தலைவர்கள் சொல்லக் கேட்ட மக்கள், “ஆமாம்! அவசரப்படக் கூடாது!!” என்று கூறினர்; பொறுத்துக் கொண்டனர்; எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். ஆனால் ஆண்டுகள் பதினெட்டுக்கு மேலாகிவிட்ட பிறகும் எதிர்பார்த்த இன்ப வாழ்வு கிடைக்காமல் போனதையும், அதேபோது ஒரு சில செல்வந்தர்களுக்கும், ஆளுங்கட்சியின் ஆலவட்டங்களுக்கும் இன்ப வாழ்வு கிடைத்திருப்பதையும் கண்ட மக்கள், வெகுண்டு எழுந்து, இதற்குப் பெயர்தான் சுயராஜ்யமா! என்று முழக்கமிடலாயினர்! சுயராஜ்யம் என்ற சொல்லால் மயக்கினீர்கள்—கண்டு கொண்டோம்; மயக்கத்தின் பிடியிலிருந்து இதோ விடுபட்டோம்; காட்டு கணக்கினை! என்று மக்கள் கேட்டிடலாயினர். ஓ! ஓ! பழைய மயக்க மருந்து போதுமானதாக இல்லை; புதிதாக ஒன்று தந்தாக வேண்டும் என்பதனை அறிந்த தந்திரத் தலைவர்கள், ஜனநாயக சோஷியலிசம் என்ற சுவையினையே மயக்க மருந்து ஆக்கித் தர முயன்று கொண்டிருக்கின்றனர். நாளைக்கு ஒரு சூரணம் தருகிறேன், அதனைத் தேனிலே குழைத்து மூன்றே வேளை சாப்பிடு, நோய் கட்டாயம் பறந்துபோகும்—என்று மருத்துவர் சொல்லும் போது, இவ்வளவு நாள் இவர் கொடுத்த மருந்து துளியும் பயன் தரவில்லையே; ஒவ்வொரு வகையான மருந்து தருகிறபோதும் இதுபோலத்தானே இவர் கூறினார் என்ற எண்ணம் எளிதிலே ஏற்பட்டு விடுவதில்லை. இந்த மருந்தாவது வேலை செய்கிறதா பார்க்கலாம்! மருத்துவர்தான் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லுகிறாரே, இதைச் சாப்பிட்டுப் பார்ப்போம் என்றுதான் எண்ணம் கொள்ளச் செய்கிறது. மனித இயல்பு! அதிலும் நம்முடைய நாட்டு மக்களின் இயல்பு பற்றிக் கூறிடவா வேண்டும்!! இதிலாவது பலன் கிடைக்கிறதா பார்க்கலாம், இவராலாவது நலன் கிடைக்கிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கிடந்திடும் போக்கு; கொண்டுள்ளவர்கள்.<noinclude></noinclude> r2tiacylzh5fq7ejgih2b3nl1aosj4v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/66 250 639317 1927452 1923952 2026-04-27T15:36:55Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|42||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>மிகுதியாக. அந்த இயல்பைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி தமது சொல்லை மாற்றிக் கொண்டு வருவதிலே வல்லவர்கள், நம்மை ஆண்டு கொண்டுள்ளவர்கள். நாம் தம்பி! மக்களின் அந்த இயல்பையும் மாற்ற வேண்டி இருக்கிறது; ஆளவந்தார்களின் போக்கையும் திருத்தவேண்டி இருக்கிறது. துவக்கத்திலே இதுகுறித்து அக்கறை காட்டாமலிருந்து வந்த மக்கள் இப்போது நாம் எடுத்துச் சொல்வதைக் கேட்டுத் தெளிவு தேடிக் கொள்வதிலும், அதன் காரணமாகத் தமது இயல்பை மாற்றிக் கொள்வதிலும் முனைந்து நிற்கின்றனர். இதனை நாம் பொதுக் கூட்டங்களில் காணுகின்றோம். மாநாடுகளிலே இதனை மிக விளக்கமாகக் காணுகின்றோம். வேலூர் மாநாட்டிலே, மக்கள் காட்டிய இந்த அக்கறை குறித்து நான் அன்பழகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அவர் தந்த விளக்க உரைக்காகப் பாராட்டினேன். அன்று அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறது இந்தக் காங்கிரஸ் ஆட்சி; ஆனால் அதனுடைய செயலிலே ஜனநாயகமும் இல்லை, சோஷியலிசமும் காணோம் என்பதற்கான விளக்கத்தை அவர் மிகத் தெளிவாகத் தந்திருந்தார். எதிர்க்கட்சிகள் வளருவது கண்டாலே எறிந்து விழும் போக்கும், ஆங்கு உள்ளவர்களை வலைவீசிப் பிடிக்கும் போக்கும், ஜனநாயகமாகுமா! நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் தமக்கன்றி பிறர் எவருக்கும் இல்லை என்று பேசிடும் அகம்பாவம் ஜனநாயகமாகுமா! மன்னன் மகேசன் பிரதிநிதி! அரசன் ஆண்டவனுக்குத்தான் பதில் கூறவேண்டியவன்; மக்களுக்கு அல்ல! மன்னன் செய்திடும் காரியம் கொடுமை உள்ளதாயினும் எதிர்த்திடலாகாது; முறையிட்டுக் கொள்ளலாம்; கடவுளை வேண்டிக் கொள்ளலாம்— என்ற தத்துவத்தின்மீது பலப்பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டு, கெட்டிப்படுத்தப்பட்டிருந்த முடியாட்சி முறையை உடைத்தெறியுமுன்பு பல ஆயிரவரின் மண்டைகள் பிளந்தெறியப்பட்டன! எவ்வளவோ இரத்தத்தைக் குடித்துக் கொக்கரித்து, பிறகே குடியாட்சி முறை மலர்ந்தது. முடியாட்சியிலே நெளிந்து கொண்டிருந்த கருத்து மெள்ள மெள்ளக் குடியாட்சியிலும் தலைகாட்டுகிறது என்றுதானே கூறவேண்டும், இன்றைய ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்று ஆணவம் கக்கும்போது! அந்தப் போக்கு, ஜனநாயகமாகுமா!<noinclude> <references/></noinclude> k8ayp7szukhsvde6rxyxxpo3jokecsy 1927453 1927452 2026-04-27T15:37:34Z YasmineFaisal2 16644 Ok 1927453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|42||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>மிகுதியாக. அந்த இயல்பைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி தமது சொல்லை மாற்றிக் கொண்டு வருவதிலே வல்லவர்கள், நம்மை ஆண்டு கொண்டுள்ளவர்கள். நாம் தம்பி! மக்களின் அந்த இயல்பையும் மாற்ற வேண்டி இருக்கிறது; ஆளவந்தார்களின் போக்கையும் திருத்தவேண்டி இருக்கிறது. துவக்கத்திலே இதுகுறித்து அக்கறை காட்டாமலிருந்து வந்த மக்கள் இப்போது நாம் எடுத்துச் சொல்வதைக் கேட்டுத் தெளிவு தேடிக் கொள்வதிலும், அதன் காரணமாகத் தமது இயல்பை மாற்றிக் கொள்வதிலும் முனைந்து நிற்கின்றனர். இதனை நாம் பொதுக் கூட்டங்களில் காணுகின்றோம். மாநாடுகளிலே இதனை மிக விளக்கமாகக் காணுகின்றோம். வேலூர் மாநாட்டிலே, மக்கள் காட்டிய இந்த அக்கறை குறித்து நான் அன்பழகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அவர் தந்த விளக்க உரைக்காகப் பாராட்டினேன். அன்று அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறது இந்தக் காங்கிரஸ் ஆட்சி; ஆனால் அதனுடைய செயலிலே ஜனநாயகமும் இல்லை, சோஷியலிசமும் காணோம் என்பதற்கான விளக்கத்தை அவர் மிகத் தெளிவாகத் தந்திருந்தார். எதிர்க்கட்சிகள் வளருவது கண்டாலே எறிந்து விழும் போக்கும், ஆங்கு உள்ளவர்களை வலைவீசிப் பிடிக்கும் போக்கும், ஜனநாயகமாகுமா! நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் தமக்கன்றி பிறர் எவருக்கும் இல்லை என்று பேசிடும் அகம்பாவம் ஜனநாயகமாகுமா! மன்னன் மகேசன் பிரதிநிதி! அரசன் ஆண்டவனுக்குத்தான் பதில் கூறவேண்டியவன்; மக்களுக்கு அல்ல! மன்னன் செய்திடும் காரியம் கொடுமை உள்ளதாயினும் எதிர்த்திடலாகாது; முறையிட்டுக் கொள்ளலாம்; கடவுளை வேண்டிக் கொள்ளலாம்— என்ற தத்துவத்தின்மீது பலப்பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டு, கெட்டிப்படுத்தப்பட்டிருந்த முடியாட்சி முறையை உடைத்தெறியுமுன்பு பல ஆயிரவரின் மண்டைகள் பிளந்தெறியப்பட்டன! எவ்வளவோ இரத்தத்தைக் குடித்துக் கொக்கரித்து, பிறகே குடியாட்சி முறை மலர்ந்தது. முடியாட்சியிலே நெளிந்து கொண்டிருந்த கருத்து மெள்ள மெள்ளக் குடியாட்சியிலும் தலைகாட்டுகிறது என்றுதானே கூறவேண்டும், இன்றைய ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்று ஆணவம் கக்கும்போது! அந்தப் போக்கு, ஜனநாயகமாகுமா!<noinclude></noinclude> o45jeani1qhvf509r30nh683rugp7ot பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67 250 639318 1927461 1926661 2026-04-27T15:47:48Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude> அத்தகைய போக்கினை மேற்கொண்டு விட்டவர்கள், ஜனநாயகப் பாதுகாவலர்கள் என்று வேறு தங்களைக் கூறிக் கொள்கின்றனர். மக்களின் ஆதரவினைப் பெற்றிடும் வாய்ப்புப் பெற்ற எவரும் நாடாளும் தகுதி பெறுகின்றனர்; மக்களின் நல்வாழ்வுக்கான முறையிலே ஆட்சி நடத்திடும் எவரும், மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற்றிடும் தகுதியைத் தேடிக் கொள்கின்றனர். {{left_margin|3em|காங்கிரஸ் ஆட்சியாளர்களோ, நாட்டிலே வேறு யாருக்குமே நாடாளும் தகுதி இல்லை என்ற அகம்பாவம் பேசி, நாட்டை ஆண்டு கொண்டு வருகின்றனர், தொடர்ந்து.}} உள்ளபடி, எவர் ஆட்சி நடத்தினாலும் அவர்களின் திறமையால் கிடைத்திடும் பலனைக் காட்டிலும் மிகுதியான பலன் கிடைத்திடத்தக்க முறையிலே ஆட்சி நடத்திட மற்றொரு கட்சியினர் வாய்ப்புப் பெற்று, பழைய ஆட்சியுடன் புதிய ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தால் மட்டுமே, நாடாளும் தகுதி உள்ளவர்கள் எவர் என்பது பற்றிய உண்மையான மதிப்பீடு கிடைத்திட முடியும். {{left_margin|3em|ஓட்டப்பந்தயத்தில் ஒன்பது பேர் கலந்து கொண்டால்தான், யார் அதிக வேகமாக ஓடுகிறார்கள் என்று கண்டறிந்து பரிசளிக்க முடியும். பந்தய மைதானத்திலே நுழையும் தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறிக்கொண்டு ஒரே ஆசாமி திடலில் ஓடுகிறான் என்றால், கேலிக்கூத்தாக அல்லவா கருதிடுவர்.}} ஆனால் அத்தகைய முறையைத்தான் காங்கிரஸ் ஆட்சியினர், ஜனநாயகம் என்று கொண்டுள்ளனர். அது ஜனநாயகம் ஆகாது. மக்கள் இதனை அறிந்துகொண்டதால்தான், எதிர்க்கட்சிகளின் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். {{left_margin|3em|ஆகவே மக்களை மறுபடியும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்தித் தமது பக்கம் இழுத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், கேட்பதற்கு இனிப்பாக இருக்கும் ‘சோஷியலிசம்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.}} அதிலே அவர்கள் எவ்வளவு நாணயத்தோடு உள்ளனர் என்பதும், அதனைச் செயல்படுத்த எந்த முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். {{left_margin|3em|அந்த சோஷியலிசத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் தகுதி, தமக்கன்றி மற்ற எந்தக் கட்சிக்கும் இல்லை என்று கூறும் உரிமை இவர்களுக்கு யார் அளித்தது? என்ன காரணம் காட்டி இவர்கள் அந்த உரிமை தமக்கே இருப்பதாகக் கூறுகிறார்கள்.}}<noinclude></noinclude> boe0lygeml9f23ikw9kbh35ys3nigd4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68 250 639319 1927462 1926664 2026-04-27T15:48:20Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|44||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நம்முடைய பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்கின்ற மக்கள் யார்? மேடையிலே அமர்ந்திருக்கிற கழக முன்னணியினர் எவரெவர்? மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் யார்? சட்ட மன்றம், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் உறுப்பினராகியுள்ள கழகத் தோழர்கள் எப்படிப்பட்டவர்? மிட்டா மிராசுகளா! எட்டயாபுரம், போடி ஜெமீன் வழிவந்தவர்களா! பெரும் பண்ணைக்குச் சொந்தக்காரர்களா! நம்மிடம் தீராதபகை கொண்டவனும் அவ்விதம் கூறிடமாட்டானே! காமராஜரே ஒருமுறை கழகத்தில் உள்ளவர்களைப் பிச்சைக் காரர்கள்!—என்றே கேலி பேசியிருக்கிறாரே. {{left_margin|3em|இவர்களைக் கொண்டதும் இப்படிப்பட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதுமான திராவிட முன்னேற்றக் கழகம் சோஷியலிசத்தைச் செயல்படுத்தாதா?}} சோஷியலிசம் வேண்டும்! ஒப்புக்கொள்கிறோம், வரவேற்கிறோம்! ஆனால் அதனைச் செயல்படுத்தும் திறமையும், உரிமையும், கழகம் போன்ற மற்றக் கட்சிகளுக்கு இல்லை, எமக்குத்தான் உண்டு என்று கூறிக் கொள்ளக் காங்கிரசுக்கு என்ன யோக்யதை இருக்கிறது? சோஷியலிசத்தைச் செயல்படுத்திக் கொடுத்திடத் தக்கவர்களாலா காங்கிரஸ் நடத்தப்பட்டு வருகிறது? ஊரூருக்கும் அந்தக் கட்சியிலே உள்ள மூலவர்கள் எப்படிப்பட்ட பெரிய புள்ளிகள் என்பது மக்களுக்குத் தெரியாதா! அப்படிப்பட்ட பெரிய புள்ளிகளின் ஆதிக்கம் காரணமாகத்தான், ஏழைகளின் தொகை பெருகியிருக்கிறது, அவர்களின் அல்லல் — வளர்ந்து விட்டிருக்கிறது என்பதனை மக்கள் அறியமாட்டார்களா? அதே பேர்வழிகளின் பிடியிலே உள்ள காங்கிரசுக் கட்சியினால் எப்படி சோஷியலிசத்தைச் செயலாக்கிட முடியும்!—என்பது பற்றியெல்லாம் மக்கள் எண்ணி பார்க்காமலா இருக்கிறார்கள்? {{left_margin|3em|சோஷியலிசம் பேசும் காமராஜர் பவனி வருகிற போதும் கொலுவீற்றிருக்கிறபோதும் சீமான்கள் பக்கம் நின்று பராக்குக் கூறுவதையும் மக்கள் பார்க்கத் தானே செய்கிறார்கள்! கழகத்தை நடத்துகின்றவர்கள் வருகின்ற விழாக்களிலே, எந்தப் பெரிய புள்ளியும் கலந்து கொள்வதில்லை என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.}} அப்படி இருக்கும்போது, சோஷியலிசத்தை எம்மால்தான் செயல்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கட்சி பேசுவதை எப்படி மக்களாலே நம்ப முடியும்! பணக்காரர்கள் புடைசூழப் பவனி வந்து கொண்டே பணக்கார ஆதிக்கத்தை ஒழிக்கப் போகிறோம் பாரீர்! ஆதரவு தாரீர்?— என்று<noinclude></noinclude> oagnmvucpxwm6nysqp2djut25yw8m4i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69 250 639320 1927463 1926670 2026-04-27T15:49:53Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>முழக்கம் எழுப்புகின்றனர் ஆளவந்தார்கள், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிக்கொள்கிறார்கள் என்ற நினைப்பில். ஆனால் மக்கள் அத்தனை தெளிவற்றவர்களாக இல்லை. {{left_margin|3em|அவர்கள், காகிதப் பூவில் மணம் இருக்காது என்பதை அறியாதவர்கள் அல்லர்.}} அதனை நன்கு அறிந்து கொண்டிருப்பதனால் தம்பி! நம்மிடம் அத்தனை பற்றும் பாசமும் காட்டுகின்றனர். புதிய மயக்க மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் காங்கிரசாரே இப்போது மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டு வருகின்றனர். ‘சுயராஜ்யம்’—என்று சொன்ன போது மக்களிடம் கிளம்பிய எழுச்சி இப்போது காணோமே என்று ஏக்கமடைந்து கொண்டு வருகின்றனர். திங்கள் தவறாமல் விழா நடத்துகிறார்கள்; ஜனநாயக சோஷியலிச விழாவாம்! அவ்விதமான ஒரு விழாவுக்கான அறிவிப்பு, கொட்டை எழுத்துக்களிலே மாயவரம் சுவரிலே — எழுதிவைக்கப் பட்டிருந்ததைக் காண நேரிட்டது; என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு துணிந்து போலி நாடகமாடிடும் சாமர்த்தியம் கொண்டவர்களாகக் காங்கிரசார் இருக்கிறார்களே என்பதை எண்ணி வியப்படையாமலும் இருக்க முடியவில்லை. ஜனநாயக சோஷியலிச விழா; தம்பி! மாயவரத்தில். யார் தலைமை? {{left_margin|3em|தலைமை வகித்தவர், சக்தி விலாஸ் பஸ் கம்பெனி முதலாளி பார்த்தசாரதி என்பவர்.}} நான் முதலில், யாரோ வேண்டுமென்றே சக்தி விலாஸ்காரரைக் கேலி செய்ய, இதுபோல எழுதி இருக்கிறார்களோ என்று எண்ணிக் கொண்டேன்; நண்பர்கள் சொன்னார்கள், அவர்தான் தலைவர், அறிவிப்பு அதிகாரபூர்வமானதுதான் என்று. இந்தப் போலி நாடகம் நடத்த, தம்பி! மெத்த நெஞ்சுரம் வேண்டும். கேட்டுப்பாரேன், இது எப்படி ஐயா பொருந்துகிறது; விழா சோஷியலிசத்துக்காக! தலைமை வகிப்பவரோ, பெரிய பஸ் முதலாளி! சோஷியலிசம் வெற்றி பெற அவரா வழி அறிந்து கூறுவார்!—என்று. ஒரு விளக்கம் வெடித்துக்கொண்டு கிளம்பும், எமது சோஷியலிசத்தில் முதலாளியும் உண்டு!— என்பதாக. காங்கிரசார் கூறிடும் சோஷியலிசம் அப்படிப்பட்டது.<noinclude></noinclude> d1lm7uln3vivpbh6o3h570e7sr4mnry பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70 250 639321 1927466 1926675 2026-04-27T15:51:06Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது.m 1927466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|46||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சைவ ஓட்டல் – கோழி பிரியாணி தயார்!-என்பது போன்றது! சைவ ஓட்டல் என்கிறீர்களே, கோழி பிரியாணி அங்கு இருக்கலாமா என்றால், பதில் என்ன கூற முடியும்? கேட்டுப்பாருங்கள், காங்கிரஸ் பேச்சாளர்களை! பைத்தியக்காரா! நாங்கள் நடத்தும் ஓட்டல் சைவ ஓட்டல். சந்தேகம் வேண்டாம்; உள்ளே வந்து பார், அவரைப் பொறியலும் கத்தரிக் கூட்டும் வெண்டைக் குழம்பும் இருப்பதை—என்பார். ஆனால் கோழி பிரியாணி தயார் என்று ‘போர்டு’ இருக்கிறதே என்று கேட்டால், திகைத்துப் போய்விடுவாரா என்கிறீர்களா? திகைக்க மாட்டார்கள்; துணிச்சல் மிக்கவர்கள்! ஆமாம்! கோழி பிரியாணியும் உண்டு! அதனால் என்ன? சைவ ஓட்டல் இது, ஆகவே சைவ பதார்த்தங்கள் உள்ளன. சைவ ஓட்டல் என்றால், வெண்டையும், கத்தரியும், அவரையும் பிற காய்களும் உண்டு என்றுதானே பொருள்; இருக்கின்றன! சைவ ஓட்டல் என்று அறிவித்திருப்பதாலேயே, இங்கு இறைச்சி இல்லை என்றா பொருள்! அப்படியா அறிவிப்புப் பலகை சொல்லுகிறது. {{left_margin|3em|இங்கு ஆட்டு இறைச்சி, கோழிக்கறி போன்றவை கிடைக்காது.}} என்றா எழுதியிருக்கிறோம். எமது ஓட்டல், சைவ ஓட்டல், —ஆனால் எமது சைவ ஒட்டலில் கோழிக்கறியும் இருக்கும் என்று கூறிவிட்டு, அடுத்த கூட்டத்திற்காக அவசரமாகக் கிளம்புவார். இடையிலே வேறோர் காரணம் மனத்திலே ததும்பும்; உடனே, திகைத்துப் போயுள்ள உன்னை இழுத்து நிறுத்தி, இன்னொரு காரணம் கூறுகிறேன்- இது சைவ ஓட்டல் என்பதை உறுதிப்படுத்த. முதலாளி இருக்கிறாரே, அவர் சுத்தச் சைவர், முட்டைகூடச் சாப்பிட மாட்டார், தெரியுமா? அவர் நடத்தும் கடையைச் சைவ ஓட்டல் என்று கூறுவது தவறா? – என்று கேட்டுவிட்டு – இன்று ஒரு போடு போட்டுவிட்டோம் என்ற திருப்தியுடன் நடையைக் கட்டுவார்! தம்பி! கோழி பிரியாணி தயார்! என்ற அறிவிப்புடன், சைவ ஓட்டல் என்ற பலகையைத் தொங்கவிட்டு யாரும் கடை நடத்த இன்னும் துணியவில்லை. காங்கிரஸ் கட்சியினரோ தனிப்பட்ட முதலாளிகளும் உண்டு எமது சோஷியலிசத்தல் என்று துணிச்சலுடன் கூறுகின்றனர். கோழி பிரியாணியும் வைத்துக்கொண்டு இந்த ஓட்டலுக்குச் சைவ ஓட்டல் என்று பெயரிடலாமா என்று கேட்டதும், கடை நடத்தும்<noinclude></noinclude> e5pxzqo4xe808eylu258bs9ccsleur1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/71 250 639322 1927469 1923957 2026-04-27T15:53:49Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude> முதலாளி சுத்தச் சைவர் – முட்டை கூடச் சாப்பிடமாட்டார் என்று கூறும் துணிச்சல்காரரைப் போல, முதலாளிகளையும் வளர்த்துக் கொண்டு சோஷியலிசம் தழைக்கும் என்றும் பேசுவது பொருளற்றதாக இருக்கிறதே என்று கேட்பவர்களுக்கு, காமராஜரைக் காட்டுகிறார்கள்; பாருங்கள்! இவர் முதலாளி அல்ல! ஏழைபங்காளர்!—என்று. ஆளுங் கட்சியில் இருக்கிறோம் என்பதாலே தன்னாலே ஒரு துணிச்சல் வந்துவிடுகிறது. அந்தத் துணிச்சலுடன் பேசுகிறார்கள்; இடம் பேசுகிறது என்பதைப் புரிந்து கொண்ட மக்கள், இவர்களிடம் வாதாடுவானேன் என்று இருந்து விடுகிறார்கள்; ஒப்புக் கொண்டு அல்ல, நமக்கு ஏன் வீண் வம்பு என்ற எண்ணத்தில். ஆனால் தம்பி! அந்தத் துணிச்சல் மிக்க பேச்சுப் பேசிடும் திறனும், பாராட்டத்தக்கதுதானே! எல்லோருக்கும் வருமா பொய்யையும் பொருளற்றதையும் மளமளவென்று பேசிட? ஒரு எத்தன், தம்பி! அவன் அலுவலகத்திலே சில காலம் ‘லீவ்’ பெற எண்ணினான்; தனக்குக் கண் பார்வை சரியாக இல்லை என்று கூறினான். மருத்துவரிடம் அனுப்பினார்கள் பரிசோதனைக்கு. டாக்டர், சுவரிலே அச்சடித்த எழுத்துக்கள் கொண்ட படத்தை மாட்டி, எழுத்துக்களைப் படி, ஐயா! என்றார். எந்த எழுத்துக்களைப் படிக்கச் சொல்லுகிறீர் டாக்டர் என்று கேட்டான் எத்தன். எதிர்ப்புறம் உள்ள சுவரிலே தொங்கவிடப்பட்டிருக்கும் படத்தில் உள்ள எழுத்துக்களை என்று விளக்கமளித்தார் டாக்டர். அவன்தான் ஏமாற்றித் தீருவது என்று துணிந்து வந்திருக்கிறானே, சிக்கிக் கொள்வானா! சுவரா? எதிரே இருப்பது சுவரா!—என்று கேட்டான்; டாக்டர் ஏமாந்து போனார். ஆசாமிக்கு எதிரே வெள்ளைச் சுவர் இருப்பதும், அதிலே படம் தொங்கவிடப் பட்டிருப்பதும் கூடத் தெரியவில்லை; பாவம் கண் அந்த அளவுக்குப் பழுதாகிவிட்டிருக்கிறது என்று பரிதாபப்பட்டு, கண் மிகவும் கெட்டுவிட்டிருக்கிறது என்று எழுதிக் கொடுத்தார். ஒரு மணி நேரம் ஓடிற்று. தன் நடிப்பால் டாக்டரை ஏய்த்து விட்டவன், புதிய படம் ஒன்று கண்டு களித்திட சினிமாக் கொட்டகை<noinclude></noinclude> 854328jvshmj0koqpy0p4lcv5gku1au பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/72 250 639323 1927472 1923958 2026-04-27T15:55:27Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|48||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சென்று அமர்ந்தான்; படம் துவக்கப்பட வில்லை; இசைவிருந்து மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது; அந்த நேரத்தில் அவனைத் தூக்கி வாரிப் போடத்தக்க நிகழ்ச்சி நேரிட்டது. எந்த டாக்டரை தனக்கு அடியோடு பார்வை கெட்டு விட்டது என்று நம்ப வைத்தானோ, நடிப்பால், அதே டாக்டர், படம்பார்க்க, அதே கொட்டகைக்கு வந்து, பக்கத்திலேயே வந்து அமர்ந்தார்! ஒருகணம் அவன் திடுக்கிட்டுப் போனான், தன் குட்டு உடைப்பட்டுவிடுமே என்று எண்ணி; மறுகணம் சமாளித்துக் கொண்டு, தன்னைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்த டாக்டரின் பக்கம் திரும்பி, “அம்மா, இந்த பஸ் புறப்பட இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்” என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான். கண் அடியோடு பழுதாகிப் போய்விட்டதால், சினிமாக் கொட்டகையை மோட்டார் பஸ் என்று தவறாக எண்ணிக்கொண்டு விட்டான் பாவம், என்று டாக்டர் எண்ணிக் கொள்ளுவார் என்று தந்திரம் செய்தான். டாக்டர் ஏமாந்து போனார்; பரிதாபம் கலந்த குரலிலே அவர் பேசினார், “யாரப்பா, உன்னை ஏமாற்றி இங்கே கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டார்கள், இது மோடார் பஸ் அல்ல! இது ஒரு சினிமா கொட்டகை!—வா! உன்னை நான் மோடார் பஸ் இருக்குமிடம் அழைத்துச் செல்கிறேன்; நான்தான் உன் கண்களைப் பரிசோதித்த டாக்டர்!’ என்று. “டாக்டர்! டாக்டர்! பார்த்தீர்களா டாக்டர், உலகம் எவ்வளவு பொல்லாதது என்பதை, அப்பா! எனக்குக் கண் சரியாக இல்லை; மெள்ள என்னை மோடார் பஸ் இருக்குமிடம் அழைத்துக்கொண்டு போய்விடு” என்று கேட்டேன் ஒருவனை. அவன் “வா! ஐயா! உன்னை மோடார் பஸ்ஸிலேயே உட்காரவைத்துவிட்டு வருகிறேன்!’ என்று அன்பாகப் பேசி, இங்கு அழைத்துவந்து உட்கார வைத்துவிட்டுப் போய் விட்டான். நான் என்னடா இன்னும் பஸ் புறப்படவில்லையே, நேரம் ஆகிறதே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்; நல்ல வேளை, நீங்கள் வந்தீர்கள்: மிக்க நன்றி!” என்றான்; டாக்டர் உருகிப் போனார். இந்தக் கதையிலே வருகிறானே குருடனாக நடித்தவன், அவன் ஒரு மண்டலம் பாடம் கேட்கவேண்டும் தம்பி! காங்கிரஸ் பேச்சாளர்களிடம். அவ்வளவு துணிவுடன் போலி நாடகத்தைத் திறமையாக நடத்துகின்றனர்; முதலாளிகளையும் கொண்டுள்ளது எமது சோஷியலிசம் என்று பேசுகின்றனர்.<noinclude> <references/></noinclude> 777xuev0tv8sidowz9i2izc3n22kf8x 1927473 1927472 2026-04-27T15:56:08Z YasmineFaisal2 16644 Clean 1927473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|48||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சென்று அமர்ந்தான்; படம் துவக்கப்பட வில்லை; இசைவிருந்து மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது; அந்த நேரத்தில் அவனைத் தூக்கி வாரிப் போடத்தக்க நிகழ்ச்சி நேரிட்டது. எந்த டாக்டரை தனக்கு அடியோடு பார்வை கெட்டு விட்டது என்று நம்ப வைத்தானோ, நடிப்பால், அதே டாக்டர், படம்பார்க்க, அதே கொட்டகைக்கு வந்து, பக்கத்திலேயே வந்து அமர்ந்தார்! ஒருகணம் அவன் திடுக்கிட்டுப் போனான், தன் குட்டு உடைப்பட்டுவிடுமே என்று எண்ணி; மறுகணம் சமாளித்துக் கொண்டு, தன்னைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்த டாக்டரின் பக்கம் திரும்பி, “அம்மா, இந்த பஸ் புறப்பட இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்” என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான். கண் அடியோடு பழுதாகிப் போய்விட்டதால், சினிமாக் கொட்டகையை மோட்டார் பஸ் என்று தவறாக எண்ணிக்கொண்டு விட்டான் பாவம், என்று டாக்டர் எண்ணிக் கொள்ளுவார் என்று தந்திரம் செய்தான். டாக்டர் ஏமாந்து போனார்; பரிதாபம் கலந்த குரலிலே அவர் பேசினார், “யாரப்பா, உன்னை ஏமாற்றி இங்கே கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டார்கள், இது மோடார் பஸ் அல்ல! இது ஒரு சினிமா கொட்டகை!—வா! உன்னை நான் மோடார் பஸ் இருக்குமிடம் அழைத்துச் செல்கிறேன்; நான்தான் உன் கண்களைப் பரிசோதித்த டாக்டர்!’ என்று. “டாக்டர்! டாக்டர்! பார்த்தீர்களா டாக்டர், உலகம் எவ்வளவு பொல்லாதது என்பதை, அப்பா! எனக்குக் கண் சரியாக இல்லை; மெள்ள என்னை மோடார் பஸ் இருக்குமிடம் அழைத்துக்கொண்டு போய்விடு” என்று கேட்டேன் ஒருவனை. அவன் “வா! ஐயா! உன்னை மோடார் பஸ்ஸிலேயே உட்காரவைத்துவிட்டு வருகிறேன்!’ என்று அன்பாகப் பேசி, இங்கு அழைத்துவந்து உட்கார வைத்துவிட்டுப் போய் விட்டான். நான் என்னடா இன்னும் பஸ் புறப்படவில்லையே, நேரம் ஆகிறதே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்; நல்ல வேளை, நீங்கள் வந்தீர்கள்: மிக்க நன்றி!” என்றான்; டாக்டர் உருகிப் போனார். இந்தக் கதையிலே வருகிறானே குருடனாக நடித்தவன், அவன் ஒரு மண்டலம் பாடம் கேட்கவேண்டும் தம்பி! காங்கிரஸ் பேச்சாளர்களிடம். அவ்வளவு துணிவுடன் போலி நாடகத்தைத் திறமையாக நடத்துகின்றனர்; முதலாளிகளையும் கொண்டுள்ளது எமது சோஷியலிசம் என்று பேசுகின்றனர்.<noinclude></noinclude> mslm64z596ncuxa9rvo8ggm3oidt4vf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/73 250 639324 1927474 1924677 2026-04-27T15:56:53Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude> தம்பி! ஆட்சி நடத்தும் கட்சியிலே இருக்கிறோம் என்ற உடன் துணிச்சலும் அதற்குத் தேவைப்படும் திறமையும் தன்னாலே பொங்கி வழிகிறது; அதனால்தான் அவர்கள் முதலாளிகளும் கொலுவிருக்கும் சோஷியலிசம் எம்முடையது என்று பேசுகிறார்கள், அவர்களுக்கு வளர்ந்து விட்டிருக்கிற துணிச்சலில். இனி அவர்கள், ::இனிக்கும் எட்டி ::பாடும் ஊமை ::ஓடும் நொண்டி ::கருப்பு மல்லிகை என்று பலப் பல பேசுவார்கள்! அவர்கள் அந்தத் துணிச்சல் கொண்டிருப்பதிலே நான் வியப்படையவில்லை; ஆனால் மக்கள் அந்தப் பேச்சையெல்லாம் நம்பிக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்களே அது கண்டுதான் வியப்படைகிறேன்? மக்கள் விவரமறியாதவர்கள் அல்ல; அவர்கள் நன்றாக அறிவார்கள், பேசுபவர் அறிவுத் தெளிவுடன் பேசவில்லை; அதிகார போதையிலே பேசுகிறார் என்பதனை. அந்தப் போதை தெளியட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்; போதையைத் தெளியவைக்கும் நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். {{rh|<br>24.7.1966||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> 0mkc38ltvi9mka98w2p49f225c0p361 1927475 1927474 2026-04-27T15:58:20Z YasmineFaisal2 16644 Ldhr 1927475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude> தம்பி! ஆட்சி நடத்தும் கட்சியிலே இருக்கிறோம் என்ற உடன் துணிச்சலும் அதற்குத் தேவைப்படும் திறமையும் தன்னாலே பொங்கி வழிகிறது; அதனால்தான் அவர்கள் முதலாளிகளும் கொலுவிருக்கும் சோஷியலிசம் எம்முடையது என்று பேசுகிறார்கள், அவர்களுக்கு வளர்ந்து விட்டிருக்கிற துணிச்சலில். இனி அவர்கள், ::இனிக்கும் எட்டி ::பாடும் ஊமை ::ஓடும் நொண்டி ::கருப்பு மல்லிகை என்று பலப் பல பேசுவார்கள்! அவர்கள் அந்தத் துணிச்சல் கொண்டிருப்பதிலே நான் வியப்படையவில்லை; ஆனால் மக்கள் அந்தப் பேச்சையெல்லாம் நம்பிக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்களே அது கண்டுதான் வியப்படைகிறேன்? மக்கள் விவரமறியாதவர்கள் அல்ல; அவர்கள் நன்றாக அறிவார்கள், பேசுபவர் அறிவுத் தெளிவுடன் பேசவில்லை; அதிகார போதையிலே பேசுகிறார் என்பதனை. அந்தப் போதை தெளியட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்; போதையைத் தெளியவைக்கும் நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். {{rh|<br>24.7.1966||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 9purqe6sg7tmqa7kcllc9nrg2g2cc47 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75 250 639326 1927476 1926678 2026-04-27T15:59:34Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது... 1927476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude> அதிலும் தகுதி திறமை ஆகியவைகளைக் காட்டிலும், பெரிய இடத்துச் சிபாரிசு, எந்த இடத்திற்கும் நுழைவுச் சீட்டாகப் பெரிதும் பயன்படும் நாட்டிலே, பதவியில் உள்ளவர்களைப் பலரும் மொய்த்துக் கொண்டிருப்பது எளிதாகப் புரியக்கூடியதுதானே. அதிலும், ‘வரம்’ கொடுப்பதிலே காங்கிரசார், வேறு எவரும் போட்டியிட முடியாத அளவு வல்லமை காட்டிப் பழக்கப்பட்டவர்கள். {{left_margin|3em|புதிய பாதைகள் போடுகிறார்கள்! பள்ளிக்கூடமா? புதிது புதிதாக! மருந்தகம்! படிப்பகம்! மனமகிழ் மன்றம்! மாதர் சங்கம்! இவைகளுக்கான திறப்புவிழாக்கள், ஆண்டு விழாக்கள்! அமைச்சர்களின் பேருரைகள்! ஒவ்வோர் நாளும்!! காளை வாங்க, கிணறு வெட்ட, உரம் வாங்க வரப்பு அமைக்க கடன் கேட்டிருந்தவர்கள், கேட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, இனி எங்கே கிடைக்கப் போகிறது என்று எண்ணி ஏக்கமடைந்து, சோர்ந்து கிடக்கிறார்களல்லவா, பலர்—அவர்களைத் தட்டி எழுப்புகிறார்கள், தர்பார் நடத்துபவர்கள், கடனா கேட்டிருந்தீர்கள்? அடுத்த வெள்ளிக் கிழமை கிடைக்கும் என்று வாக்களிக்கிறார்கள். உமது மகனா உத்தண்டன்? தெரியாமலே போய்விட்டதே! போன வருடமே இடம் வாங்கி இருக்கலாமே! இந்த வருடம் இடம் நிச்சயம்—என்று கூறுகிறார் மண்டலம். முகங்களிலே புதிய மலர்ச்சி! வார்த்தைகளிலே தனியானதோர் குளிர்ச்சி! நடவடிக்கைகளிலே ஒரு நட்புணர்ச்சி! எல்லாம் பளிச்சிடுகின்றன!}} இவை ‘போலி’ என்பதனைக் காட்ட மட்டுமல்ல இவை குறித்து நான் கூறுவது; வாக்காளர்களை மயக்க, ஆட்சி நடாத்திடும் கட்சியினரால் முடிகின்ற அளவு, எதிர்க் கட்சிகளால் முடியாது என்பதையும் உணர்த்துவதற்குத்தான். உடனடியாக உள்ளம் மகிழ்ந்திடும் செயலைச் செய்வதன் மூலமோ இனிப்புப் பேச்சுப் பேசுவதன் மூலமோ, நீண்ட காலமாக நடத்திக் கொண்டுவந்த கொடுமைகளை மறைத்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். {{left_margin|3em|ஆனால், உள்ளத்துக்கு மகிழ்ச்சி ஊட்டும் பொருள் தருவதன் மூலமாகவே, மக்களை மயக்கிவிட முடியும் என்ற நிலை இருக்குமானால், ஆளுங் கட்சியான காங்கிரசு, சென்ற தேர்தலிலே 100-க்கு 42 என்ற அளவு ஓட்டுகள்தானா பெற்றிருக்கும்!}}<noinclude></noinclude> 5f16rtx68mt5srdy5386oob222zxmcv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76 250 639327 1927477 1926679 2026-04-27T16:00:43Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|52||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஏழ்மை, அறியாமை, மனக் குழப்பம், மருட்சி என்பவைகளின் பிடியிலே சிக்கிக் கிடப்பினும், தமிழகத்துப் பொதுமக்கள் ஜனநாயக உணர்வை, நீதி நியாயத்தில் கொண்டுள்ள பற்றினை விட்டுவிடவில்லை. அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப இருப்பதனால் மட்டுமே, எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்தப் பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபட்டு வெற்றி வாகை சூடும் என்று அறிவித்திருக்கிறேன்.}} கொடுமைகளுக்கு ஆளான மக்கள் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், மீண்டும் கொடுமையின் பிடியிலே சிக்கிவிடக்கூடாது என்பதிலே உறுதியாக உள்ளனர் என்பதையும், அதற்கான பணியாற்றுவதிலே ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதையும் ஒவ்வொரு கூட்டத்திலும் நான் காண்பது போலவே, பொதுமக்களிடம் தோழமைத் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்கள் அனைவரும் காண்கின்றனர். அதனால்தான் அவர்களின் பேச்சிலே ஒரு தெம்பும், உறுதியும் காணப்படுகிறது. {{left_margin|3em|தொகுதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் தமக்கு ஏற்பட்ட கருத்து பற்றி நாவலர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; அவரிடமே கூட, அந்தத் தெம்பு ததும்பிக் கொண்டிருக்கக் கண்டேன்.}} சென்ற தேர்தலின்போது கழகத்திற்கு இருந்த செல்வாக்கு இம்முறை இன்னின்ன காரணங்களால் இந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பது குறித்து என்னிடம் எடுத்துக் கூறும் போதே கழகத் தோழரின் முகத்திலே ஒரு பொலிவு புதிதாகத் தவழ்ந்திடக் காண்கின்றேன். {{left_margin|3em|அவர் மாளிகைவாசி அல்ல! அம்பாரம் அம்பாரமாகச் செந்நெல்லைக் குவித்து வைத்துள்ள பெருநிலக்கிழார் அல்ல. ஏழை அல்லது நடுந்தரக் குடும்பத்தினர்!}} அவர்களிடம், தெளிவும் செயலார்வமும் இருந்திடக் காண்கின்றேன். செய்வதைத் திட்டமிட்டு, வகைப்படுத்தி, முறைப்படுத்திச் செய்திட வேண்டும் என்ற ஆர்வம் நல்ல அளவு இருந்திடக் காண்கிறேன். {{left_margin|3em|கூட்டு முயற்சியிலே எத்தனை சாதிக்க முடியும் என்பதனை நாட்டுக்கு எடுத்துக் காட்டியதுடன், நாமே உணர்ந்து கொள்ளும்படி செய்திருப்பது நமது கழகம்.}} ஆத்திரத்தினாலோ, அருவருப்பினாலோ, வெறும் பிரசாரம் என்ற போக்கினாலோ நம்மைப் பற்றி, காங்கிரசிலுள்ளவர்கள் எவ்வளவு<noinclude></noinclude> m7rs34dgqilrp73f3954cuuxbqn58cd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77 250 639328 1927478 1926683 2026-04-27T16:01:35Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude> வேகமாக மேடைகளிலே பேசினாலும், இவனைப்பார்! அவனைப்பார்! என்று இழித்துரைத்தாலும், ஒரு நேரமாகிலும் அவர்கள் உண்மையை உணரும்போது {{left_margin|3em|எப்படியோ இப்படி ஒரு வலிவினைத் திரட்டிவிட்டார்களே!}} என்று தம்மையும் அறியாமல், பேசாமலிருக்க முடியாது. {{left_margin|3em|இதனாலா? அதனாலா? இப்படியா? அப்படியா?}} என்றெல்லாம் ஆராய்ச்சி நடத்தி நடத்தி, தமது முறைகளைக்கூட அவர்கள் நம்முடைய முறைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு உண்மையைத்தான் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். {{left_margin|3em|மக்களின் மனக்குமுறலின் வடிவமாக, மக்களின் பெருமூச்சின் வடிவமாக}} திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது என்ற உண்மையை. மற்றொரு நம்பிக்கை ஆளவந்தார்களுக்கு இருக்கிறது; பணம் பத்தும் செய்யும் என்பதிலே உள்ள நம்பிக்கை. ஆனால் பணத்திற்கு உள்ள மதிப்பே இன்று வேகமாகக் கெட்டுக்கொண்டு வருகிறது. {{left_margin|3em|டில்லியில் மூண்டிடும் கலவரங்களைப் பற்றிய செய்தி கேட்டு, இந்தியாவுக்குக் கடன் தொகை எந்த அளவு கொடுக்கலாம் என்பதற்காகக் கலந்து பேசிய குழுவினர், இத்தனை குழப்பம் மூண்டுகிடக்கும் நாட்டுக்குப் பெரிய அளவு தொகை கடன் கொடுப்பது நல்லதுதானா? என்று யோசிக்கின்றனர்; கவலையைத் தெரிவித்துள்ளனர் என்பதும், வெளிநாடுகளிலே வாங்கியுள்ள கடனைத் திருப்பித் தருவதற்கான தவணையில் மாறுதல் தேவை; அதாவது பிறகு திருப்பித் தருகிறோம் என்று கூறித் தவணை வாங்கவேண்டும் என்ற யோசனை டில்லி வட்டாரத்தில் உலவுகிறது என்பதும், இந்தியாவிலே தொழில் நடத்த ‘முதல்’ போடுவதற்குப் பணத்திலே குறியாக உள்ள ஜப்பான் தயக்கம் காட்டுகிறது என்பதும்,}} இன்றுள்ள பொருளாதார நெருக்கடியை எடுத்துக் காட்டுவதனை எத்தனை வேகமான காங்கிரஸ் பிரசாரகரும் மறுத்துவிடமாட்டார். {{left_margin|3em|நிலைமை, பல முனைகளில் நல்லபடியாக இல்லை. சமூகத்தில், ஒழுங்கும் சாந்தியும் பெரிய அளவில் குலைக்கப்பட்டிருக்கிறது.}}<noinclude></noinclude> k92g3kmpsygstnsyom4z5w5jhdihvxd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78 250 639329 1927479 1926685 2026-04-27T16:03:04Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|54||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|பசியும் பட்டினியும் கொட்டும் கொடுமை வளர்ந்தபடி இருக்கிறது. இவைகளிலே ஒன்றைக் கூடச் சீர்ப்படுத்தக் காங்கிரஸ் அரசினால் முடியவில்லை.}} இருப்பினும் தேர்தலிலே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் மார்தட்டுகிறார்கள் என்றால், எதை நம்பிக்கொண்டு அவ்விதம் பேசுகிறார்கள் என்று யோசிக்க வேண்டாமா? {{left_margin|3em|படி அரிசி நாலு ரூபாயாம்! இந்த அக்கிரமம் வேறு எங்காவது நடந்திடுமா? அனுமதிப்பார்களா? என்று பதறுகிற மக்களிடம் எப்படியும் நாங்கள் ஓட்டுக்களைப் பறித்திடுவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது என்றால், பணத்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்பது தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?}} காலை மலர்ந்ததும்,மக்கள் கண்களிலே படுவது, பட்டினிச் சாவு, துப்பாக்கிச் சூடு, சிறை பிடித்தல், வெளி நடப்புகள், புகார்கள், உட்பூசல்கள் என்பன பற்றியே. ஒரு நாடு மிகச் சீர்கேடான நிலையிலே இழுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்? நம்ம சர்க்கார் நல்லவர் சர்க்கார் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்; இதற்கா எதிர்ப்புக் காட்டுவது என்று கேட்கிறார்கள்; மக்களோ இருண்ட கண்களையும் வறண்ட தலையையும் காய்ந்த வயிற்றையும் காட்டுகிறார்கள்; நம்ம சர்க்கார் தந்தவை! ஆனந்தத் தாண்டவமாடச் சொல்லுகிறீர்களா ஐயா! என்று கேட்கிறார்கள். இந்த நிலையிலும் ‘ஓட்டு’ எமக்குத்தான் என்று எந்தத் தைரியத்தில் பேசுகிறார்கள் ஆளுங்கட்சியினர்? {{left_margin|3em|பணம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்ற ஒரே தைரியத்தில்.}} போக போக்கியத்திலே மூழ்கி, வலிவிழந்து கிடந்த ஐந்நூறு சிற்றரசர்களையும், செல்வச் செருக்குமிக்கோரையும் பதவிக்காகவும் பட்டத்துக்காகவும் பல்லிளித்துக் கிடப்போரையும், ஆலவட்டங்களையும் ஆமாம்சாமிகளையும் பக்கத்துணையாக வைத்துக் கொண்டு இருநூறு ஆண்டுகள் வெள்ளை ஏகாதிபத்தியம் ஆட்சி நடத்த முடிந்ததல்லவா? இவர்கள் அதே ‘பாணி’யில் தமது ஆட்சியை நடத்திச் செல்லமுடியும் என்று நம்புகிறார்கள்.<noinclude></noinclude> kjzv6e9sl6ocakcaaaoqzj22vjs5qsc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79 250 639330 1927480 1926688 2026-04-27T16:03:40Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||55}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அவர்களால் முடிகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை; நாடு இன்னமும் அவர்களின் ஆட்சியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சினை.}} தம்பி, காங்கிரசாட்சி துவக்கப்பட்டபோது, மக்களின் வாழ்விலே வளம் உண்டாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது, ஒரு வசீகரமான புன்னகையுடன் காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். {{left_margin|3em|ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப் போகிறோம் என்று.}} மூன்று முடிந்து, நாலாவது நடமாட விடப்பட்டிருக்கக் காண்கிறோம். திட்டங்களால் கிடைத்த பலன் என்ன? எங்கு சென்றுள்ளது? என்று கேட்கிறார்கள். {{left_margin|3em|நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன், ஐந்தாண்டுத் திட்டங்களால் விளைந்த பலன், எங்குப் போயிற்று என்றுதான் தெரியவில்லை; ஏழைக்கு அந்தப் பலன் வந்து சேரவில்லை என்று காமராஜர் கூறுகிறார்.}} திட்டத்தை நிறைவேற்றினோம்; ஆகவே எமக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதற்கான நியாயம் எங்கே இருக்கிறது. பலன், போன இடம் தெரியவில்லை என்று பெருந்தலைவரே பேசுகிறாரே! {{left_margin|3em|திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள் குவிய, வரி கொடுத்துக் கொடுத்து ஏழை எளியோர்கள், மேலும் இளைத்துப்போய், களைத்துப்போய் இருப்பது தெரிகிறது; திட்டத்தால் பெற்ற பலன் வேறு என்ன, எங்கே இருக்கிறது என்று காட்டக் கூடக் கூச்சப்படுகிறார்கள் காங்கிரசின் பெரிய தலைவர்கள்.}} ஆராய்ச்சி நடத்துகிறார்கள், திட்டம் ஏன் எதிர்பார்த்த பலனைச் சமூகத்துக்குத் தரவில்லை என்று. {{left_margin|3em|திட்டம் சரியாகத் தீட்டப்படவில்லை. திட்டம் நடைமுறைக்கு ஏற்றதாகத் தீட்டப்படவில்லை. திட்டம் சரியாகவே தீட்டப்பட்டது, செயல் படுத்துவதிலேதான் தவறுகள் நேரிட்டு விட்டன. செயல்முறை சரியாக வகுக்கப்படவில்லை. செயல்படுவதற்குத் தக்கவர்களை அமர்த்தவில்லை. செயல்படுத்தியவர்களுக்குப் போதிய அக்கறை இல்லை. திட்டத்தின் உட்பொருளைச் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.}}<noinclude></noinclude> cwsn7qb8hywcfni1lfawyxgcl1ewq44 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80 250 639331 1927481 1926690 2026-04-27T16:05:25Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|56||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|திட்டத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கவில்லை.}} இப்படி ஆளாளுக்கு ஒரு குட்டுக்குட்டியபடி உள்ளனர். குட்டுபவர்கள் எல்லோருமே காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்று கூறிவிட முடியாது. காங்கிரஸ்காரர்களிலேயே பலர், குறை காணுகின்றனர். {{left_margin|3em|எல்லோரும் ஒருசேர இன்று ஒப்புக்கொண்டிருப்பது, திட்டங்கள் எதிர்பார்த்த பலனை சமூகத்துக்கு தரவில்லை என்பது.}} ஆகவே, எந்தத் திட்டங்களைத் தமது சாதனையிலே சிகரம் போன்றது என்று இவர்கள் கூறிக்கொண்டு வந்தார்களோ, அந்தத் திட்டங்களே தோல்வி அடைந்துவிட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஆனால் பயங்கரமான உண்மையாகிவிட்டது. இந்தத் திட்டங்களுக்காகச் செலவாகி இருக்கும் பணத்தின் அளவு, எவருடைய தலையையும் சுற்றச் செய்துவிடும்; அத்தனை பெரிய தொகை. “விடமாட்டோம் இந்தியாவை” என்று வெள்ளையர் வீம்பு பேசிக் கொண்டிருந்த நாட்களில் டில்லிப் பாராளுமன்றத்தில் வீற்றிருந்த கோவிந்த வல்லப பந்த் கோபாவேசமாக ஒருமுறை சுயராஜ்ய திட்டம் பற்றிப் பேசியபோது, வெள்ளையர் ஒருவர் குறும்புத்தனமாகக் குறுக்கிட்டு, {{left_margin|3em|சுயராஜ்யம் கிடைத்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?}} என்று கேட்டபோது, பந்த் அவர்கள் பதிலளித்தார், சுடச் சுட. அவரால் அன்று, எந்த அளவுக்குச் செல்ல முடிந்தது? {{left_margin|3em|சுயராஜ்யம் கிடைத்ததும் நாட்டை வளப்படுத்த திட்டம் தீட்டுவோம். நூறு கோடி ரூபாய் அளவு செலவிட்டுத் திட்டம் நிறைவேற்றுவோம்!}} என்று கூறினார். கவனித்தனையா தம்பி! 100 கோடி! அது அன்று பிரம்மாண்டமான தொகை! ஆனால் காங்கிரஸ் அரசு இந்த ஐந்தாண்டுத் திட்டங்களுக்காகச் செலவிட்டிருக்கும் தொகை, 20000 கோடி ரூபாய்! பண்டித பந்த்தினால் நினைத்துப் பார்த்திருக்கக் கூட முடியாத தொகை!! இவ்வளவு செலவான பிறகும், இன்று நாட்டிலே இல்லாமை, போதாமை! அமெரிக்கா பறக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியம், உணவுக்காக! சௌத்ரி, ஐரோப்பா பயணமாவார், கடன் கேட்க! மேத்தா, ரஷியா செல்லக்கூடும்! இந்திரா அம்மையார், உலக சமாதானம் உண்டாக்க யூகோ செல்லக்கூடும். {{left_margin|3em|பாவம், அவர்களால் இங்கு இருக்க முடியவில்லை. காது குடையும் கூச்சல்! கண்ணைக் கெடுக்கும் காட்சி! மனதை மருட்டும் செய்திகள்! நிம்மதி இல்லை! நிலைகொள்ளவில்லை.}}<noinclude></noinclude> nsblhrezjqdqfxecybhmrz1jq6ncofk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81 250 639332 1927482 1926693 2026-04-27T16:06:10Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude> {{left_margin|3em|பாரிசோ, மாஸ்கோவோ, நியூயார்க்கோ, இலண்டனோ எங்காவது சென்று சிறிதளவு நிம்மதியாவது பெறலாம் என்று எண்ணுகிறார்கள். துல்லியமான மேக மண்டலங்களுக்கு மேலே விமானம் செல்லும்போது, ஆர்ப்பரிப்பும். பேரணியும் கடை அடைப்பும் கலவரமும் இல்லாதநிலை காண்கின்றனர்! ஒரு நிம்மதி! இலஞ்சக் குற்றச்சாட்டுகள் கூறிடுவோர், குறுக்குக் கேள்விகள் பூட்டிடுவோர், ஊழல்களை அம்பலப்படுத்துவோர், அமீர்சந்த் பியாரிலால் போன்றவர்கள் பற்றிக் கிளறிவிடுவோர் இல்லாத இடம்; ஒரு மகிழ்ச்சி!}} இந்த விதத்தில் அவர்களும் பாவம், தங்கள் மனத்திலே குமுறிக் கொண்டிருக்கும் கவலையை மறந்துவிட முயற்சிக்கிறார்கள். {{left_margin|3em|20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு, தோல்வி கண்ட கட்சி, கூனிக் குறுகிப் போக வேண்டியது முறையாக இருக்க, இந்தத் திட்டங்களின் கர்த்தாக்களாகிய எமக்கே ஓட்டுகள்!—என்று பாத்யதை வேறு கொண்டாடுகிறார்கள்!! தெளிவும் ஜனநாயக உணர்வும் இருக்க வேண்டிய அளவிலும் வேகத்திலும் இந்த நாட்டில் இருந்திடுமானால், 20 ஆயிரம் கோடி ரூபாயைப் பாழாக்கினதற்காகக் காங்கிரஸ் கட்சியைக் கூண்டிலே நிற்க வைத்து விசாரணை நடத்தி இருப்பார்கள்! இன்றோ, இந்த ஆட்சியின் போக்கை எதிர்க்கத் துணிபவர்களை, காரணம் கூடக் காட்டாமல் சிறையில் தள்ளிவைக்க, தடுப்புக் காவல் சட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பது என்று பாராளுமன்றத்தில் பலமான எதிர்ப்பைத் துச்சமென்றுத் தள்ளிவிட்டு நிறைவேற்றி வைத்துக் கொண்டுவிட்டார்கள்.}} உரிமைகள் குலைக்கப்படுகின்றன. இது நாம் ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டத்திற்கே ஒவ்வாதது என்று கண்டிக்காத மேதைகள் இல்லை; சட்ட நிபுணர்கள் இல்லை. இன்னமும் நெருக்கடி நிலைமையை நீடித்துக் கொண்டிருப்பது அறமாகாது; அதன் பெயரால் பாதுகாப்புச் சட்டத்தை ஏதாவது ஒரு வடிவத்தில் நீட்டிக் கொண்டு போவது அடாத செயலாகும் என்று, நீதி மன்றங்களில் கீர்த்திமிக்க நிலை பெற்றிருந்தவர்களெல்லாம் எடுத்துக் கூறிவிட்டனர். சர்வாதிகார நாடுகளில் தவிர வேறு எங்கும் இப்படிப்பட்ட ஆள்தூக்கிச் சட்டங்கள், நாக்கறுப்புச் சட்டங்கள் இல்லையே என்றுகூறிக் கண்டிக்கின்றனர் சான்றோர் பலர். {{left_margin|3em|இந்தியாவின் முன்னாள் சட்ட அமைச்சர் ஏ. கே. சென் அவர்களே இந்தப் போக்கைக் கண்டித்துப் பேசுகிறார்.}}<noinclude></noinclude> gd2mw61uma7opdtnegb6c35kzdqqve5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82 250 639333 1927483 1926694 2026-04-27T16:07:06Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|58||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், தம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் மிக்கார் எவர் உளர் என்ற நினைப்புத் தடித்துப் போன நிலையில் தடுப்புக் காவல் சட்டம் கூடத் தேவைதான் என்று காங்கிரசார் வாதாடுகின்றனர்; எண்ணிக்கை வலிவினைக் காட்டி அக்கிரமத்தை நியாயமாக்கிக் காட்டுகின்றனர்! தடுப்புக்காவல் சட்டம், ஒப்புக் கொள்ளப்பட்ட சாதாரண சட்ட முறையாகிவிட்டது என்றே பேசுகிறார், உள்துறை அமைச்சர்—புதியவர்—சவாண்! மனித உரிமைகள் அவ்வளவு கேவலப்படுத்தப்பட்டு விடப்பட்டுள்ளன. {{left_margin|3em|உணவு போதுமான அளவு இல்லை. உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சாந்தி இல்லை, சமாதானம் இல்லை. என்றாலும், ஓட்டு இருக்கிறதல்லவா, அதை எமக்குக் கொடுத்திடுக! என்று கேட்கிறார்கள். ஓட்டாண்டியாக்கிவிட்டு ஓட்டும் கேட்கிறார்கள். புதுடில்லியில், ‘ஜனநாயக நிலை’ பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய மேனாட்டு அரசியல்துறைப் பேராசிரியர் ஒருவர், ‘மக்கள் காங்கிரசாட்சியிலும் வெறுப்படைந்துள்ளனர்; ஆனாலும் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகின்றனர். இந்த விந்தை இந்திய ஜனநாயகத்திலே காணப்படுகிறது. இது ஆராயப்படவேண்டிய பிரச்சினையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.}} உள்ளபடியே தம்பி! காங்கிரசாட்சியிடம் மக்கள் கொண்டுள்ள கோபமும் கொதிப்பும், வெளிநாடுகளிலே உள்ள ஆய்வாளர்களும் அறிந்துள்ளனர். மக்களிடையே இவ்வளவு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் மூட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் என்று கருதுகிறார்கள். ஏனெனில், இங்குக் காங்கிரசாட்சி செய்திருப்பது போன்ற தவறுகளிலே நூற்றிலே ஒரு பங்கு தவறு செய்திடினும் போதும், அங்கு அத்தகைய ஆட்சியை மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயக உணர்வு அங்கெல்லாம் அந்த அளவு இருக்கிறது. {{left_margin|3em|இங்கோ ஆட்சியினிடம் மக்களுக்கு அச்சம் மூண்டுவிடுகிறது. அக்கிரமம் செய்திடினும், ஆட்சி தன்னிடம் சிக்கிக் கொண்டுள்ள வலிவினைக் கொண்டே, எதிர்ப்புச் சக்திகளை முறியடித்துவிடும் என்ற பீதி பிடித்தாட்டுகிறது.}} இந்த அச்சத்தை, தம்பி உன் இடைவிடாத முயற்சியின் துணைகொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் அளவுக்கு ஓட்டிவிட்டிருக்கிறது.<noinclude></noinclude> 6ai68o0x2f9lklxjle7d6avr2z1jmt2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83 250 639334 1927484 1926698 2026-04-27T16:09:04Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude> இந்த நிலைமையை நன்கு புரிந்துகொண்ட காங்கிரசார் இம்முறை ‘கடைசி ஊசி’ போடுவது என்பார்களே அதுபோல உள்ள பணம் அவ்வளவையும் வீசிப் பார்த்து விடுவது என்று துணிந்து விட்டுள்ளனர். பார்க்கட்டும்! பாசி பிடித்துப் போன பணமெல்லாம் வெளியே வரட்டும்! பாட்டாளியின் வயிற்றில் அடித்துச் சேர்த்து வைத்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! ஒன்றை ஒன்பதிற்கு விற்றுச் சேர்த்துள்ள பணமெல்லாம் வெளியே வரட்டும்! கள்ளப்பணம், கருப்புச் சந்தைப் பணம், வரி கொடுக்காமல் ஏய்த்துச் சேர்த்த பணம் எல்லாம் வெளியே வரட்டும்!! ஏன் வருகிறது என்பதா மக்களுக்குத் தெரியாது; புரியாது!! மிக நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பேரூர்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலே எல்லாம் பார்க்கிறேன். என் ஆவல் தீருமளவுக்கும் தோழர்களின் அன்பழைப்பை நிறைவேற்றும் அளவுக்கும் என்னால் எல்லா இடங்களுக்கும் சென்று வர முடியவில்லையே, அதற்குப் போதுமான வலிவு இல்லையே என்றுதான் வருத்தப்படுகிறேன். நண்பர்கள் அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுரீல் என்று கோபம்கூட வந்துவிடுகிறது. இப்படி ‘வேலை வாங்குகிறார்களே’ என்று. ஆனால், சென்று, அங்கு ஆர்வம் ததும்பும் நிலையில் ஆடவரும் பெண்டிரும், முதியோரும் இளைஞரும் திரண்டு இருந்திடக் காணும்போது எல்லாக் கஷ்டங்களும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தே போய்விடுகின்றன. {{left_margin|3em|இவ்வளவு பேரும் எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பவர்கள். காங்கிரசினால் மூட்டிவிடப் பட்டுவிட்ட கொடுமைகளை எதிர்ப்பவர்கள். காங்கிரசுக்கும் கனதனவான்களுக்கும் ஏற்பட்டுவிட்டுள்ள கூட்டுச் சதித் திட்டத்தைத் தகர்த்திடத் துடிப்பவர்கள். ஏழை வாழ்ந்திடவேண்டும்; இல்லாமை ஒழிய வேண்டும்; நிம்மதி ஓங்கவேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துக்காகப் போராடுபவர்கள். மொழி காத்திட, உரிமை காத்திட, எதனையும் இழந்திடும் துணிவு பெற்ற தூய உள்ளத்தினர். இவர்களை ஆசை அலைக்கழிக்கவில்லை; அச்சம் மருட்டவில்லை; ஆளவந்தார்களின் அட்டகாசம் அடக்கிட முடியவில்லை. ஏடு பல காட்டி இவர்களை மயக்கிட முடியவில்லை. ஏதேதோ செய்கிறோம் என்று தித்திப்புத் தடவி இவர்களை இழுத்திட முடியவில்லை.}}<noinclude></noinclude> 20tox98z7n2lauw51edbosdbo53bt5v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84 250 639335 1927485 1926700 2026-04-27T16:10:13Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|60||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இவர்கள் அஞ்சா நெஞ்சினர்; அறப்போர் இயல்பினர், இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்! இவர்கள் பலர்! மிகப் பலர்! இவர்களை வீழ்த்திட முனைபவரோ சிலர்!}} இவ்விதமான எண்ணமெல்லாம் கொள்ளுகின்றேன்; இதயத்திலே ஓர் இசையே சுரக்கிறது. அவர்களைக் காண்கிறேன்; கனிவு என்றால் என்ன என்பது விளக்கமாகிறது, அவர்களிடம் பேசுகிறேன்; பாசம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறேன்; புதியதோர் ஆர்வம் பெறுகிறேன். என் உள்ளத்தில் எழுந்திடும் ஆர்வத்தின் அளவு எவ்வளவோ, அந்த அளவு என் உடலில் வலிவு இருக்கக் கூடாதா, இல்லையே என்று எண்ணி ஏக்கம்கொள்கிறேன். ஒவ்வொரு கூட்டமும் என்னை அந்த மக்களுடன் பிணைத்துவிடுவதை உணருகிறேன்—பாசப் பிணைப்பு அஃது என்பதால் பெருமிதம் கொள்கிறேன். நான் பெற்றிடும் இந்தப் பெருமிதத்தைத்தான் மற்ற பேச்சாளர்களும் பெறுவர் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்; மிகப் பெரியதோர் குடும்பம் நமது கழகம் என்ற இலக்கணம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து மகிழ்கிறேன். <poem> {{Multicol}} புதுப்பாளையம் சிறுவாளூர் தூக்கநாய்க்கன் பாளையம் தாசப்பகவுண்டன் புதூர் கூடக்கரை நம்பியூர் பவானிசாகர் புஞ்சைபுளியம்பட்டி காவலிபாளையம் உக்கரம் சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் தாளக்கொம்புபுதூர் பெருந்தலையூர் பொத்தபாளையம் உடையாம்பாளையம் கெம்பநாயக்கன் பாளையம் {{Multicol-break}} பகத்தூர் வடுகபாவையம் மேட்டுப்பாளையம் காளிங்கராயன்பாளையம் தொட்டிபாளையம்' அத்தாணி சவுண்டப்பூர் பவானி கவுந்தப்பாடி அந்தியூர் ஒலகடம் ஆண்டிபாளையம் குருவரெட்டியூர் கந்தாம்பாளையம் கீரனூர் ஆலாம்பாடி பச்சாம்பாளையம் </poem><noinclude></noinclude> rfazilw0ujvk1p8sgh23dxs8kx3q5ol பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/85 250 639336 1927486 1923973 2026-04-27T16:11:01Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||61}}{{rule}}</noinclude> <poem> {{Multicol}} கோவை நகர உட்கிளைகள் கோவை நகரம் தாயனூர் தோலம்பாளையம் கெண்டேபாளையம் காரமடை எல்லப்பாளையம் வரதய்யன்பாளையம் அன்னூர் நீலிபாளையம் கருவலூர் பெரிய ஆயிபாளையம் ராக்கியாபாளையம் அம்மாபாளையம் அவினாசி சேவூர் சாவக்கட்டுபாளையம் திருமுருகன் பூண்டி சிறுமுகைபுதூர் ராசி பாளையம் அருகம் பாளையம் திருப்பூர் சோமனூர் கோம்பக்காடு பல்லடம் பள்ளபாளையம் வதம்பச்சேரி சேகம்பாளையம் காமநாயக்ககன்பாளையம் பூலவாடி துங்காவி தாமரைப் பாடி கணியூர் சோழமாதேவி மடத்துக் குளம் கொழுமம் கொமரலிங்கம் சாமராயப்பட்டி {{Multicol-break}} நாச்சிபாளையம் புதுப்பை எரசனம்பாளையம் கன்னிவாடி மூலனூர் புளியம்பட்டி லக்கமநாயக்கன்பட்டி வெள்ளகோயில் முத்தூர் காங்கயம் வரப்பாளையம் தாராபுரம் எலகாம்வலசு கெல்லிபாளையம் சிவன்மலை வெள்ளவாவிபுதூர் காமாட்சிபுரம் கண்ணம்பாளையம் பட்டணம் பாப்பம்பட்டி அப்பநாயக்கன்பட்டி சூலூர் வாகராயம்பாளையம் ஆனைமலை காளியாபுரம் பழனிக் கவுண்டனூர் பொள்ளாச்சி - பல வட்டங்கள். கோடம்பட்டி புளியம்பட்டி ராசக்கா பாளையம் கொப்பம் புதூர் வடசித்தூர் வெள்ளே கவுண்டன் புதூர் அரசன் பாளையம் கிணத்துக் கடவு சேரி பாளையம் மொடக் குறிச்சி அரச்சலுர் </poem><noinclude></noinclude> tcgsyer9nb4bb3uha5mf7lii4yiiesr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86 250 639337 1927487 1926702 2026-04-27T16:11:53Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|62||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> <poem> {{Multicol}} மலையாண்டி கவுண்டனூர் கண்ணம நாயக்கனூர் உடுமலைப்பேட்டை தேவனூர் புதூர் காரத்தொழுவு வால்பாறை வாட்டர் பால்ஸ் கல்லூர் பச்சைமலை பழனியூர் பெத்த நாயக்கன் பாளையம் {{Multicol-break}} மேலப்பாளையம் புதுப்பாளையம் குமாரபுரி ஈங்கூர் வீரப்பன் சத்திரம் பெரிய அக்ரகாரம் ஈரோடு குன்னத்தூர் ஊத்துக்குளி பெருமாநல்லூர் பெங்கால்மட்டம் மஞ்சூர் குன்னூர் உதகமண்டலம் </poem> தம்பி! புஞ்சை புளியம்பட்டி தோழர் சாமிநாதன் அனுப்பிய கடிதத்தின் மூலம், நான் கோவை மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஊர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். இத்தனை ஊர்களிலும்-இவைகளில் பல, பாளையங்கள்–நமது கழகத்திடம் பற்று நிரம்பக் கொண்டவர் பல்லாயிரவர் இருந்திடக்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டேன். அவர்கள் ஆர்வத்துடன் கூறுகின்றனர். “அண்ணா! இந்த முறை வெற்றி நமக்குத்தான்!! கவலைப்படாதீர்கள்” என்று. அவர்களுக்குப் புள்ளிவிவரம் போதுமான அளவு தெரியாது. மேற்கோள்கள் அவர்கட்கு மனப்பாடமாகவில்லை. வரலாற்றுச் சான்றுகளை இவர்கள் தேடி அலைந்து கொண்டில்லை. {{left_margin|3em|கண் இருக்கிறது, காண்கின்றனர்; காங்கிரசாட்சியால் நாடு கொண்டுவிட்ட அலங்கோலத்தை. காது இருக்கிறது; விம்மல், குமுறல், பெருமூச்சு, கதறல் விழுகிறது. அறிவு இருக்கிறது; தூய்மை கெடாத அறிவு; சிந்திக்கிறார்கள்! தெளிவு பிறக்கிறது. வயலைப் பார்க்கிறார்கள் வயிற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்! வரட்டும்! வரட்டும் இந்த முறை ஓட்டுக்கு-என்று மெல்லிய குரலில் ஆனால் உறுதி நிரம்பிய தன்மையில் கூறுகிறார்கள்.}} இவர்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் சென்று, நாங்கள் இப்போது நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் போட்டிருக்கிறோம் என்று சொன்ன உடனே, பூரித்துப்போய் விடுவார்களோ! ஏமாளித்தனமான எண்ணம்!<noinclude></noinclude> 0o308xckh7pxguawf5cmjz55o0pg2z5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87 250 639338 1927488 1926705 2026-04-27T16:12:58Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude> {{left_margin|3em|திட்டம்தானே ஐயா! ஐந்தாண்டுத் திட்டம்!! தெரியுமே! பார்த்தோமே!! அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறோம் திட்டங்களை!!}} —என்றுதான் சலிப்புடன் பேசுவார்கள். அவர்கள் திட்டங்களுக்கு விரோதிகள் அல்ல! ஆனால் திட்டங்கள், ஏழைக்கு பயன்படவில்லையே என்ற வேதனையால் தவிக்கின்றார்கள். அவர்களின் சார்பிலே பணியாற்றிடும் ஆச்சார்ய வினேபா பாவே, அவ்வப்போது காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகளை விளக்கிக்கொண்டு வருகிறார். {{left_margin|3em|அவருக்குப் பூசை நடத்தக்கூடக் காங்கிரஸ் தலைவர்கள் முன்வருகிறார்கள். ஆனால் அவருடைய அறிவுரையின்படி நடந்திட மட்டும் மறுக்கிறார்கள். முடியவில்லை!!}} தம்பி, இந்த ஐந்தாண்டுத் திட்டம்பற்றி வினேபா மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதனைக் ‘குருட்டுத் திட்டம்’ என்றே கூறுகிறார். நிலைமையைத் தெரிந்துகொள்ளாதவர்கள் தீட்டிடும் திட்டம். அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் ஏழைகளை அவர்கள் கண்டதில்லை!!— என்று சாடுகிறார். {{left_margin|3em|நிலைமை மிகவும் சீர்கேடடைந்துவருகிறது. இதைத் தில்லியிலுள்ள நமது தலைவர்கள் பார்க்காமல் இல்லை. அவர்கள் அவற்றை நன்கு அறிவார்கள். ஆனால் அவற்றிற்கு மாற்று என்ன என்பதைக் கண்டறியத் திறனில்லாதவர்கள் என்றே நான் வருத்தத்துடன் கூறவேண்டியிருக்கிறது. திட்டத்தை இயற்றியவர்கள் மிகப் பெரியவர்கள், அவர்களில் சிந்தனையாளர்கள், பொருளாதார சமூக சாஸ்திர நிபுணர்கள் அனைவரும் இருக்கிறார்கள், ஆனால் அனைவருமே இந்தத் தேசத்தின் ஏழையைக் கண்டறியாதவர்கள். எல்லோரும் பட்டணத்தையும் பட்டணத்தின் பகட்டான வாழ்க்கையையும் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். முதுகோடு முதுகாக ஒட்டிக்கிடக்கும் விவசாயியின் வயிற்றையோ மற்ற ஏழைக் கிராம மக்களின் நிலைமையையோ அவர்கள் கண்டறிந்ததில்லை என்றே கூறவேண்டும். அதைத்தான் திட்டமும் பிரதிபலிக்கிறது.}} பதவிபெறும் நோக்குடன் காங்கிரசைக் குறைகூறித் திரிகிறார் என்று வினோபாவேயைக் கூறிடும் துணிவு வராது என்று நம்புகிறேன். இதுவரையில் அத்தகைய துணிவு வரவில்லை. அவருடைய கண்டனம், மனம் வெதும்பி வெளிவந்திருக்கிறது, இந்த இலட்சணத்தில் திட்டத்தைத் தீட்டியும் நடத்தியும் வந்திருக்கும் காங்கிரசு, மீண்டும் ஆதரவு கேட்கிறதே, என்ன நியாயம்?<noinclude></noinclude> o5tffvwt0ltm9iv19up45nctftnxba3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88 250 639339 1927489 1926707 2026-04-27T16:14:11Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|64||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நியாயமற்றதுதான், ஆனால் நிதி இருக்கிறதே நிரம்ப! பணம் இருக்கிறதே, கோடிகோடியாக!! பணம் பாதாளம் வரை பாயுமே!—என்கிறார்கள். தம்பி! நாடு என்ன பதில் அளிக்கவேண்டும்? என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பது, உன் உழைப்பைப் பொறுத்து இருக்கிறது இடையே உள்ள நாட்கள் அதிகமில்லை; அவை வேகமாகவும் உருண்டோடிக் கொண்டுள்ளன. எனவே உன் நேரம் முழுவதும், நினைப்பு முழுவதும், அறிவாற்றல் அவ்வளவும், இந்த ஒரே காரியத்துக்கு என்ற உறுதியுடன் இன்றே பணியாற்றக் கிளம்பிடுவாயேல், தம்பி! வெற்றி நிச்சயம். நாடு வாழ்ந்திடும்; வாழ்த்திடும்! உன்னால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றுத்தந்திட முடியும்: ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; மற்ற எதற்கும் இரண்டாவது இடமே—முதல் இடம், ஜனநாயகப் பாதுகாப்புக்கே—கழக வெற்றிக்காகப் பணியாற்றுவதற்கே—என்ற உறுதியுடன் தொண்டாற்றவேண்டும். முடியுமா? செய்வாயா? கேள்வி கேட்கிறேன் பார், கேள்வி–செய்வாயா? என்று இப்போதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய்!! அந்த மகிழ்ச்சி தந்திடும் வலிவுதானே என்னையும் வேலை செய்திடச் செய்கிறது. {{rh|<br>31.7.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}} {{dhr|3em}}<noinclude></noinclude> cdaku4fdp859cxakewxogpeksd06opt 1927490 1927489 2026-04-27T16:14:56Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|64||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நியாயமற்றதுதான், ஆனால் நிதி இருக்கிறதே நிரம்ப! பணம் இருக்கிறதே, கோடிகோடியாக!! பணம் பாதாளம் வரை பாயுமே!—என்கிறார்கள். தம்பி! நாடு என்ன பதில் அளிக்கவேண்டும்? என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பது, உன் உழைப்பைப் பொறுத்து இருக்கிறது இடையே உள்ள நாட்கள் அதிகமில்லை; அவை வேகமாகவும் உருண்டோடிக் கொண்டுள்ளன. எனவே உன் நேரம் முழுவதும், நினைப்பு முழுவதும், அறிவாற்றல் அவ்வளவும், இந்த ஒரே காரியத்துக்கு என்ற உறுதியுடன் இன்றே பணியாற்றக் கிளம்பிடுவாயேல், தம்பி! வெற்றி நிச்சயம். நாடு வாழ்ந்திடும்; வாழ்த்திடும்! உன்னால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றுத்தந்திட முடியும்: ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; மற்ற எதற்கும் இரண்டாவது இடமே—முதல் இடம், ஜனநாயகப் பாதுகாப்புக்கே—கழக வெற்றிக்காகப் பணியாற்றுவதற்கே—என்ற உறுதியுடன் தொண்டாற்றவேண்டும். முடியுமா? செய்வாயா? கேள்வி கேட்கிறேன் பார், கேள்வி–செய்வாயா? என்று இப்போதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய்!! அந்த மகிழ்ச்சி தந்திடும் வலிவுதானே என்னையும் வேலை செய்திடச் செய்கிறது. {{rh|<br>31.7.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }} {{dhr|3em}}<noinclude></noinclude> spje2lnfln5hqp0s394jn9wnmwc69xz 1927491 1927490 2026-04-27T16:16:09Z YasmineFaisal2 16644 1927491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|64||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நியாயமற்றதுதான், ஆனால் நிதி இருக்கிறதே நிரம்ப! பணம் இருக்கிறதே, கோடிகோடியாக!! பணம் பாதாளம் வரை பாயுமே!—என்கிறார்கள். தம்பி! நாடு என்ன பதில் அளிக்கவேண்டும்? என்ன பதில் கிடைக்கப்போகிறது என்பது, உன் உழைப்பைப் பொறுத்து இருக்கிறது இடையே உள்ள நாட்கள் அதிகமில்லை; அவை வேகமாகவும் உருண்டோடிக் கொண்டுள்ளன. எனவே உன் நேரம் முழுவதும், நினைப்பு முழுவதும், அறிவாற்றல் அவ்வளவும், இந்த ஒரே காரியத்துக்கு என்ற உறுதியுடன் இன்றே பணியாற்றக் கிளம்பிடுவாயேல், தம்பி! வெற்றி நிச்சயம். நாடு வாழ்ந்திடும்; வாழ்த்திடும்! உன்னால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றுத்தந்திட முடியும்: ஆனால் ஒரே ஒரு நிபந்தனை; மற்ற எதற்கும் இரண்டாவது இடமே—முதல் இடம், ஜனநாயகப் பாதுகாப்புக்கே—கழக வெற்றிக்காகப் பணியாற்றுவதற்கே—என்ற உறுதியுடன் தொண்டாற்றவேண்டும். முடியுமா? செய்வாயா? கேள்வி கேட்கிறேன் பார், கேள்வி–செய்வாயா? என்று இப்போதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறாய்!! அந்த மகிழ்ச்சி தந்திடும் வலிவுதானே என்னையும் வேலை செய்திடச் செய்கிறது. {{rh|<br>31.7.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|3em}}<noinclude></noinclude> 35efiewykd6mkmmgd40mhm4wp93erjj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/90 250 639341 1927492 1923977 2026-04-27T16:17:43Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|66||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஏழை, பணக்காரன் என்ற நிலைமைகள், மனித இயல்பை வேறுவேறு தரமுள்ளதாக்குவது மட்டுமல்ல, சமூகத்திலே கசப்பும் கொதிப்பும், பேதமும் பிளவும், பகையும் சமரும் மூண்டுவிடுவதற்கும் அந்த நிலைமைகளும், அவற்றின் தொடர்பாக அமைந்துவிடும் இயல்பும் காரணமாகிவிடுகிறது. நிலைமையை மாற்றுவதன் மூலம் இயல்பை மாற்றி, இந்த விரும்பத்தகாத சூழ்நிலையை அப்புறப்படுத்த முடியுமே தவிர, நிலைமையை அப்படியே வைத்துக் கொண்டு, கசப்பும் கொதிப்பும் போகவேண்டும், பேதமும் பிளவும் தொலையவேண்டும், பகையும் சமரும் கூடாது என்று ‘உபதேசம்’ செய்து பார்ப்பது, படகிலே உள்ள ஓட்டையைச் செப்பனிடாமல், உள்ளே புகும் தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டிக்கொண்டே இருக்கும் முயற்சி போன்றதாகும். காங்கிரசாட்சிக்கு, நிலைமையை மாற்ற வேண்டும் என்ற துணிவும் இல்லை; எண்ணமும் இல்லை. சொல்லப்போனால், இந்த நிலைமை தீதானது ஆபத்தை மூட்ட வல்லது என்ற கருத்தே இல்லை; இந்த நிலைமை மாற்றப்படத்தக்கது தான் என்ற நம்பிக்கையும் இல்லை. நிலைமையை மாற்றாமல், இயல்பை மாற்ற முடியும் என்ற தவறான போக்கைக் காங்கிரசாட்சி மேற்கொண்டிருக்கிறது. அந்தத் தவறான போக்கு காரணமாகத்தான், காங்கிரசாட்சி எங்கள் சோஷியலிசத்தில், ஏழைக்கும் இதம் கிடைக்கும், பணக்காரனுக்கும் இடம் கிடைக்கும் என்று பேசுகிறது. சோஷியலிசம் என்பது திட்டவட்டமான ஒரு ஏற்பாடு; எல்லோருக்கும் இரண்டொரு சொட்டு தேன் தெளித்துவிடுகிற தந்திரம் அல்ல. காங்கிரஸ் பேசும் சோஷியலிசம், இந்நாட்டுச் சீமான்களை மட்டுமல்ல அமெரிக்க நாட்டுப் பெரிய முதலாளிகளையே அச்சம் கொள்ளச் செய்யாததற்குக் காரணம் இதுதான்; காங்கிரசின் சோஷியலிசப் பேச்சு விவரமறியாத ஏழைக்கென்றே தயாரிக்கப்படும் இனிப்புப் பானம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். :இந்தியாவிலே ‘முதல்’ போட்டு தொழில் நடத்தச் சொல்லுகிறீர்களே; இந்தியா சோஷியலிசம் பேசுகிறதே; அங்கு பெரிய முதல் போட்டு தொழில் நடத்துவது ஆபத்து அல்லவா என்று அமெரிக்க நாட்டு முதலாளிகள் கேட்டபோது, அமெரிக்க அரசியல் தலைவரொருவர் புன்னகையுடன் கூறினார்.<noinclude></noinclude> gonnogjwnr6ctpuea4z1xlt8h4ucnr2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91 250 639342 1927493 1926715 2026-04-27T16:18:27Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இந்தியாவில் பேசப்பட்டுவரும் சோஷியலிசம் பற்றிப் பயம் கொள்ளாதீர்கள் என்று.}} மேடையிலே ‘சோஷியலிசம்’ பேசிவிட்டு, சீமான்களின் மாளிகைகளில் விருந்து சாப்பிடும்போது, காங்கிரஸ் தலைவர்கள், விளக்கம் தருகிறார்கள்; விவரமறிந்த சீமான்கள், ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று குதூகலத்துடன் கூறிவிட்டு பாவம், ஏழைகளும் வாழத்தானே வேண்டும். என்று உருகுகிறார்கள். ஐயோ! பாவம்! ஏழை! அவனும் மனிதன்!— என்ற இரக்கப் பேச்சு இன்று நேற்று தோன்றியது அல்ல; பஞ்சையும் பராரியும் தோன்றிய போதே தோன்றியது. அது பேச்சாக, பாட்டாக, நாடகமாக, காவியமாக, பேருரையாக, உபதேசமாக, வெளிவந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அந்தப் பேச்சு நீக்கிவிடவில்லை. :உழைப்பே, செல்வத்தை உற்பத்தி செய்கிறது. உழைப்போரின் தொகை அதிகம். உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செல்வம், உழைப்போர் அனைவருக்கும் ஒரு சீராகக் கிடைக்குமானால், சமூகம் முழுவதும், பலன் பெறும்; ஒருபுறம் சோலை, சுற்றிலும் பாலை என்ற நிலை ஏற்படாது. ஒரு சீராகக் கிடைக்குமானால்!—என்று கூறிவிட்டோமே தம்பி! எளிதாக! இது தன்னாலே நடைபெற்றுவிடுமா, பாவ புண்ணியம் பற்றிய உணர்ச்சி மூலமாக ஏற்பட்டுவிடுமா? ஏற்பட்டு விடுவதில்லை! வருவாய் அல்லது செல்வ உற்பத்தி சமூகத்தில் ஒரு சீராகப் போய்ச் சேராததால்தான், இத்தனைக் கேடுபாடுகள் ஏற்பட்டுவிட்டன. இந்தக் கேடுபாடுகளை நீக்க வேண்டுமானால், உற்பத்தி ஆகிற செல்வம் ஒரு சீராக, சமூகம் முழுவதற்கும் பரவிடும் முறையைச் செயல்படுத்த வேண்டும். அதனை ஒரு அரசுதான் துணிந்து மேற்கொள்ள முடியும். அந்தத் துணிவு ஒரு அரசுக்கு ஏற்பட வேண்டுமானால் அது, செல்வத்தைத் தமதாக்கிக் கொள்ள முனைந்திடும் செல்வவான்களின் செல்லப் பிள்ளையாகிவிடக் கூடாது. {{left_margin|3em|சில திங்களுக்கு முன்பு இந்தியப் பூபாகத்திலே மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ள பிர்லா முதலாளிகளைக் கூட்டிவைத்து,}}<noinclude></noinclude> g9ztvt7kxuy34nuh09826eb07vyd94t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92 250 639343 1927494 1926712 2026-04-27T16:19:16Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|68||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|நாம் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமைவதற்காகப் பாடுபட வேண்டும்; ஏனெனில் நம்மைப் பாதுகாக்கக்கூடியது காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் என்று பேசினார்.}} கட்டுப்பாடுகள் சில விதிக்கும்போது கடுங்கோபம் கொள்கிறார்கள்; வரி கூடுதலாக்கும் போது வெகுண்டெழுகிறார்கள்; ஆனாலும் அதே முதலாளிகள் ஆர அமர யோசித்துப் பார்க்கும்போது, உண்மையான ‘சோஷியலிசத்தை’ வர விடாமல் தடுத்து நிறுத்தவும், அதேபோது சோஷியலிசம் பேசி ஏழைகளை மயக்கத்திலாழ்த்தி வைக்கவும் காங்கிரசை விடத் திறமையான கட்சி எதுவுமில்லை என்பதை உணருகிறார்கள்; காங்கிரசுக்கு ஆதரவு திரட்டித் தருகிறார்கள். {{left_margin|3em|வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட கணக்கின்படி, சென்ற பொதுத் தேர்தலிலே காங்கிரசுக்கு முதலாளிகள் கொடுத்த நன்கொடைத் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயல்லவா? இந்த ஒரு கோடி, எதற்கு? எவ்வளவு வேண்டுமானாலும் சோஷியலிசம் பேசுங்கள்; ஆனால் நடைமுறைக்குக் கொண்டு வராதீர்கள் என்று கேட்டுக் கொள்வதற்குத்தானே!}} தம்பி! சோஷியலிசம் பேசிவிடுபவர்களெல்லாம் ஏழையை வாழவைத்து விடுவார்கள் என்று கூறிவிடுவதற்கில்லை. இட்லர் பேசாத சோஷியலிசமா! நாஜிசம் என்று கூறப்படுகிறதே, இட்லர் புகுத்திய முறை நினைவிலிருக்கிறதல்லவா, அதுகூட சோஷியலிசம் என்ற பெயருடன் இணைந்ததுதான். இதோ இவர்கள் தமது சோஷியலிசத்துக்கு ஒரு அடைமொழி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா, ஜனநாயக சோஷியலிசம், என்று; அதுபோல, இட்லர் தம்முடைய சோஷியலிசத்துக்கும் ஒரு அடைமொழி சேர்த்துக் கொண்டார், தேசீய சமதர்மம்–என்பதாக. அந்த ‘National Socialism’ என்பதுதான் சுருங்கி மருவி, நாஜிசம் என்ற பெயராயிற்று. என்ன கண்டனர் ஜெர்மன் மக்கள்? பயங்கரமான போர்! என்ன தந்தது இந்த நாஜிசம், உலகுக்கு? அமளி அழிவு! இவர்கள் ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறார்கள்: {{left_margin|3em|எங்கள் சோஷியலிசத்தில் முதலாளியும் இருப்பான்; ஆனால் அவன் வெறும் சுரண்டல்காரனாக இருக்கமாட்டான்; இலாபவேட்டைக்காரனாக இருக்கமாட்டான்; ஏழையை வாழவைக்கும் கருணாமூர்த்தியாக இருப்பான்; அவனை அப்படி மாற்றுவோம் என்று.}}<noinclude></noinclude> 80g5hlv4s6mkck3wa0s0hvl9ofna6i7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93 250 639344 1927495 1926714 2026-04-27T16:19:54Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதுபோலவே, இட்லர் சொன்னான் என்னுடைய நேஷனல் சோஷியலிசத்தில் (தேசீய சமதர்மத்தில்), முதலாளி இருப்பான், ஆனால் அவன் தேசீய முதலாளியாக, நாட்டு நலனைக் காத்திடும் முதலாளியாக, அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, நாட்டு வளத்தைப் பெருக்கிடும் முதலாளியாக இருப்பான் என்று பேசினான்! உரத்த குரலில்! கேட்போர் மயங்கும் வண்ணம்! இதோ ஓர் புது தத்துவம் என்று பலரும் பாராட்டத்தக்கவிதமாக.}} தம்பி! பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், —இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கம் தயாரித்து அளித்தனர், வெறும் சோஷியலிசத்தைவிட, இட்லர் தந்திடும் நேஷனல் சோஷியலிசம் சிலாக்கியமானது, நாட்டுக்கு ஏற்றது, என்றெல்லாம். {{left_margin|3em|இட்லருடைய நாஜிசத்தில், அதாவது நேஷனல் சோஷியலிசத்தில், ‘க்ருப் தைசன்’ போன்ற பெரும் முதலாளிகள் கோட்டை கட்டி வாழ்ந்தனர்; தம்மை தேசீய முதலாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, தமது கோட்டைகளிலே சுவஸ்திக் கொடியை (இட்லரின் கொடியை)ப் பறக்க விட்டனர். அந்த நாஜிசம் ஜெர்மன் நாட்டு ஏழைகளைக் காப்பாற்றிற்றா? பயங்கரமான அழிவைத் தந்தது; நாடே அடிமைக் காடு ஆக்கப்பட்டது.}} இவர்கள் கூடத் தம்பி! வெறும் சோஷியலிசம் என்பதை விட, நேஷனல் சோஷியலிசம் என்று கூறுவது வசீகரமாக இருக்கும் என்ற கருத்துடையவர்கள் தாம். ஆனால், நேஷனல் சோஷியலிசம் எனும் நாஜிசம் உலகிலே—ஒரு கெட்ட பெயர் எடுத்துவிட்டதால், மக்கள் வெறுப்பதால், நேஷனல் சோஷியலிசம் என்று கூறக் கூடாது என்று தீர்மானித்து ஜனநாயக சோஷியலிசம் என்று பேசிவருகிறார்கள். {{left_margin|3em|இட்லர் முதலாளிகளை கொலுவிருக்கச்செய்தான், அவர்கள் தனக்குக் கொடிபிடிப்போர்களாக இருந்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன். இவர்களும் எத்தனை பிர்லாக்களும் இருக்கலாம், தொழில் நடத்தலாம், செல்வபுரி அமைக்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை, எமது ‘போஷகர்களாக’ இருக்கவேண்டும் என்று கூறிவிட்டனர். இங்கும் தைசன்கள் வளருகிறார்கள். அன்று தைசனை வளரவிட்டபடி நேஷனல் சோஷியலிசம் பேசினான் இட்லர். இன்று பிர்லாக்களைக் கொழுக்க வைத்துக் கொண்டே காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் பேசிவருகிறது.}}<noinclude></noinclude> 863jwlltdmrz1xjdgmb7fzqwxiywgsv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94 250 639345 1927496 1926718 2026-04-27T16:20:22Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|70||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> முதலாளி, போகபோக்கியத்தில் புரளுவதற்காகத் தன் செல்வத்தைப் பயன்படுத்தினால், அது கெடுதல், ஆனால் அவன் தன்செல்வத்தை நாட்டு வளத்தை அதிகமாக்க, எழில் கூட்ட, ஏற்றம் உண்டாக்க, பிற நாட்டார் கண்டு அஞ்சத்தக்கவலிவு நமது நாட்டுக்கு ஏற்படப் பயன்படுத்தினால், நல்லது தானே என்று கேட்டான் இட்லர். அவனிடம் சொக்கிப்போன மக்கள் ஆம்! ஆம்! என்றனர். அதுதான், என் அருமை மக்களே! நாஜிசம்!!—என்றான் இட்லர்; வாழ்க நாஜிசம் என்று ஜெர்மன் மக்கள் முழக்கமிட்டனர்! இங்கே அதேபாணியில் பேச்சு!! தொழில் பெருக வேண்டுமல்லவா?— ஆமாம்! தொழில் பெருகவேண்டுமானால் புதியபுதிய தொழில் நடத்தும் முதலாளிகள் வேண்டுமல்லவா, அதனால் நமது சோஷியலிசத்தில் முதலாளிகள் இருக்கிறார்கள்; தவறா? —என்று கேட்கின்றனர், ஆளவந்தார்கள். “ஆம்” என்பவன் அணைத்துக்கொள்ளப்படுகிறான், அது சரியில்லையே! என்பவன் அடித்து நொறுக்கப்படுகிறான். {{left_margin|3em|இட்லரின் நேஷனல் சோஷியலிசத்தில் சுவஸ்திக் திரைக்குப் பின்னாலே இருந்துகொண்டு முதலாளிகள் கொட்டமடித்தார்கள். காங்கிரசாட்சியில், மூவர்ணக் கொடி மறைவிலே இருந்துகொண்டு, முதலாளிகள் பெருத்துக்கொண்டு வருகிறார்கள்; காங்கிரஸ் கட்சியையே குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டும் வருகிறார்கள்.}} அரண்மனை போன்ற மாளிகைகள், அன்னங்கள் ஊர்ந்து செல்லும் அழகிய செயற்கைக் குளங்கள், அவைகளிலே துள்ளிடும் பல வண்ணமீன்கள், அவற்றினைக்கண்டு கலகலவெனச் சிரிப்பொலி எழுப்பும் சிங்காரிகள், அந்தச் சிங்காரிகளின் இதழ்கண்டு ஏங்கிடும் சீமான்கள், இந்தக் காட்சியை ஓவியமாக்கியவர்கள், கவிதை இயற்றியவர்கள், இவை எல்லாமே இருந்தன, பிரான்சு நாட்டில். இவற்றை அந்த நாட்டு ஆட்சியாளர்கள், சீமான்கள் போகபோக்கியத்தில் புரளும் நிலை என்று கருதவில்லை; மாறாக அவர்கள் இந்த நிலையினை, {{left_margin|3em|பிரன்ச்சு நாட்டு எழில், ஏற்றம்! பிரன்ச்சு நாட்டுச் சிற்பக் கலையின் சிறப்பு! பிரன்ச்சு நாட்டு ஓவியத்திறமை! பிரன்ச்சு நாட்டுக் காவியப்புலமை! பிரன்ச்சு நாட்டில் காதல், ஒரு கலையாகி இருக்கும் நேர்த்தி என்றுதான் பெருமிதம் கொண்டனர்.}}<noinclude></noinclude> qb0oqnsp4n68vxgtjlxl68m2hqpz5ml பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/95 250 639346 1927497 1926722 2026-04-27T16:21:16Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||71}}{{rule}}</noinclude> {{left_margin|3em|பிரன்ச்சு நாட்டு மக்கள்கூட, நெடுங்காலம் நம்பினர்! உண்மை பிறகுதான் வெடித்துக் கிளம்பிற்று!!}} அதுபோன்றே, இங்கு முதலாளிகள் அமைத்துள்ள பணக்கோட்டையை பாரதநாட்டுச் சிறப்பு என்று காங்கிரசார் பேசுகின்றனர்; நம்பச் சொல்லுகின்றனர். ஒரு அமைச்சர் தம்பி! துணிந்து, வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார். முதலாளிகள் பணத்தைக் குவித்துக் கொள்கிறார்கள் என்று கொதிப்படைகின்றீர்களே, எங்கே போய்விடும் அவர்களிடம் குவிந்துள்ள பணம்? இந்த நாட்டில்தானே இருக்கிறது! வெளிநாடுகளுக்கா போய்ச் சேர்ந்துவிட்டது அந்தப் பணம்? இங்கேயே, நம் நாட்டிலேயே- தான் இருக்கிறது! இந்தநாடு, அவர்களுக்குமட்டுமா சொந்தம்? இல்லையே! இது உனக்கும் சொந்தமான நாடுதானே? அப்படியானால், அந்தப்பணம், உன்னுடைய நாட்டில் தானே இருக்கிறது!! இதை அறியாமல் முதலாளிகளிடம் போய்க் குவிகிறதே பணம் என்று கொதித்துப் பேசுகிறாயே தவறல்லவா! விவரம் தெரியாததால் வேதனைப்படுகிறாய்! தெரிந்துகொள், அவ்வளவு பணமும் இங்கேயேதான் இருக்கிறது நம்நாட்டிலேதான் இருக்கிறது. கவலைபடாதே, நாம் விரும்பும்போது அந்தப் பணத்தை வரிபோட்டு எடுத்துக்கொள்ளலாம். பணம் எங்கும் போய்விடவில்லை, இங்கேதான் இருக்கிறது—என்று பேசினார்—துணிந்து!! {{left_margin|3em|தம்பி! கொள்ளைக்காரன், கன்னக்கோலன், காது அறுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் போன்றார் திருடுகிறார்களே, அந்தச் செல்வமெல்லாம் கூட இங்கேதான் இருக்கிறது, நம்முடைய நாட்டிலேயேதான்! அவர்கள், களவாடியதை கனடா நாட்டுக்கோ, காங்கோ நாட்டுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, கொண்டோடி விடவில்லை ; இங்கேயேதான் இருக்கிறது; இந்த நாட்டிலேயேதான் புண்ய பூமியாம் பாரத நாட்டிலேயே இருக்கிறது. ஆகவே பொருள் களவு போய் விட்டதே என்று கூச்சல் எழுப்பாதே; உன் பொருள் வேறு எந்த நாட்டுக்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே, உன் சொந்த நாட்டிலேயே இருக்கிறது என்று எவனும் கதைக்காகக் கூடத் துணிய மாட்டான். ஆனால், நாடாள வந்துள்ள நல்லவர்கள், துணிந்து பேசுகிறார்கள். ஏழையின் வயிற்றில் அடித்து முதலாளிகள் குவிக்கும் பணம் வேறு எங்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே இருக்கிறது என்று! கேட்டுக் கொள்கிறார்கள், கேட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.}} முதலாளித்தனத்தை நீக்க மனமற்றவர்கள், துணிவற்றவர்கள் ஏன் ‘சோஷியலிசம்’ என்று பேசுகிறார்கள்? காரணமற்று அல்ல!<noinclude></noinclude> dfnacgcep93xkppri6ayz81q6xszz4j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/96 250 639347 1927498 1923983 2026-04-27T16:21:55Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|72||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சோஷியலிசம் என்பதனை நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. உண்மையிலேயே சோஷியலிசத்தைச் செயல்படுத்தக் கூடியவர்கள் மக்களை அணுகினால் பேராதரவு பெற்று விடுவார்களே என்ற அச்சம் காரணமாக, மற்றவர்களை சோஷியலிசம் பேசவிடுவதா. அதையும் நாமே பேசி, உண்மை சோஷியலிஸ்டுகள் மக்களிடம் தொடர்பு கொள்ளாதபடி செய்துவிடலாம் என்ற நைப்பாசை காரணமாகவே காங்கிரசாட்சியினர் சோஷியலிசம் பேசுகின்றனர். அவர்களின் பேச்சு போலி என்பதையும், அவர்களின் போக்கு வெறும் பசப்பு என்பதையும் உணர்ந்தும், கட்டுக் கோப்புள்ள காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்கும் துணிவற்று, காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து இடம்பெற்று, மெள்ளமெள்ள, காங்கிரஸ் கட்சியையே கருவியாக்கிக் கொண்டு சோஷியலிசம் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சிலர் இருக்கிறார்கள். அதுபோலவே காங்கிரசின் செல்வாக்கைப் பழுதுபடாதபடி பார்த்துக் கொள்ளப் பெரும்பொருள் செலவிட்டு, அதனைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, கருவியாக்கி தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துணிவுடன் செல்வவான்கள் இன்று காங்கிரசில் இடம் பெற்றுள்ளனர். :இந்த இருதரப்பினருக்கும் பலப்பரிட்சை நடத்தப்படுவதில், இன்றுவரையில் செல்வவான்களின் கரமே ஓங்கிக் காணப்பட்டு வருகிறது. அப்பழுக்கற்ற, உண்மையான சோஷியலிசத்தை மேற்கொண்டால், காங்கிரஸ் கட்சியில் மாஜி மகாராஜாக்களையும், ஆலை அரசர்களையும், வணிகக் கோமான்களையும் காணமுடியாது. அவர்கள் தனித்திட்டிலே சிக்கிக் கொள்வார்கள்; அவர்களின் ஆதிக்கத்தை நீக்கிடும் திட்டம் எது கொண்டுவரப்பட்டாலும் எதிர்த்திடும் வலிவு அவர்களுக்குக் கிடைக்காது. போன மாதத்திலே தான் தம்பி! ராம்கார் ராஜா சேர்த்துக்கொள்ளப்பட்டார்; இதழ்களில் காங்கிரசில் பார்த்திருப்பாயே! ராம்கார் ராஜா காங்கிரசில் நுழைகிறார். பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் அஜாய்குமார் முகர்ஜி காங்கிரசைவிட்டு வெளியேறுகிறார். நிலைமை புரிகிறதல்லவா! உனக்குப் புரிகிறது, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் எங்கே இதனைப் புரிந்து கொள்ளுகிறார்கள். இந்த ராம்கார் ராஜா சுதந்திரக் கட்சியில் இருந்தபோது எதிர்த்தனர்; இன்று அணைத்துக் கொள்கின்றனர்; அகமகிழ்கின்றனர். எதனால்? அவர் தியாகி என்பதனாலா? ஏழை பங்காளர் என்பதனாலா?<noinclude></noinclude> m5fcktouj90k8vevcyp6xynm2zcz1qe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/97 250 639349 1927499 1923984 2026-04-27T16:22:49Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||73}}{{rule}}</noinclude> தொண்டு பல செய்த தூயவர் என்பதனாலா? இல்லையே! அவரிடம் உள்ள இலட்சங்கள், ஓட்டு வேட்டைக்குப் பயன்படும் என்பதனால்! அவர் நோட்டுகளை நீட்டி ஓட்டுகளை வாங்குவார், பிறகு காங்கிரஸ் வெற்றி! என்று முழக்கமிட்டு மகிழ்ச்சி அடையலாம் என்ற ஆசை காரணமாக! இத்தகையவர்கள் இருக்கும்போது காங்கிரசால் எப்படி சோஷியலிசம் புகுத்துவதில் வெற்றி காணமுடியும்! தங்களை ஆதிக்கம் செலுத்தவும், தொழில் அமைப்புகளில் தர்பார் நடத்தவும் உரிமை கொடுத்து, வசதி ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாப்பும் செய்து கொடுத்துவிட்டு, ஏழைகளின் மனம் குளிர்ச்சி கொள்வதற்காக சோஷியலிசம் பேசுகிறோம், அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும்போது, அந்த முதலாளிகளுக்கு, காங்கிரசிலே இருப்பதாலே என்ன நட்டம்; கசக்குமா, குமட்டுமா! :பெரிய அளவிலே வளர்ந்து, நாடாளும் வாய்ப்பும் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலே இடம் பெற்றுக்கொள்வதன் மூலம், முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், ஏழை எளியோரின் பகையும் தங்கள்மீது பாயாமல் ஒரு கேடயத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். படிப்படியாகவாகிலும் சோஷியலிசம் வருகிறதா என்று பார்த்தாலும், வராதது மட்டுமல்ல, நாளாகவாக, முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துகொண்டு வருகிறது. :உள்நாட்டு முதலாளிகளுக்கு இப்போது வெளிநாட்டு முதலாளிகளின் துணை, குறிப்பாக அமெரிக்க முதலாளிகளின் துணை அதிக அளவிலே கிடைத்துக் கொண்டு வருகிறது. உள்நாட்டு முதலாளிகளிடம் காட்டும் பரிவு மரியாதையைக் காட்டிலும் அதிக அளவுக்கு அமெரிக்க முதலாளிகளுக்கு இந்தியப் பேரரசை நடத்திச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள் காட்டிக்கொண்டு வருகிறார்கள். காங்கிரசின் மூலமாக, எப்படியாகிலும் சோஷியலிசத்தைப் புகுத்திவிடலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டு, காங்கிரசிலே இருந்து வருபவர்களும், இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி சிற்சில நேரங்களில், கண்டனம் உமிழ்கிறார்கள். பிறகோ, கட்சிக் கட்டுப்பாடு அவர்களை ஒடுக்கி விடுகிறது. காங்கிரசுக்கு ஓட்டு தேட அவர்களே கிளம்பிவிட வேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, ஒரு சமதர்ம முன்னணி இருக்கிறது! காங்கிரஸ் கட்சி போலியாகத்தான் சோஷியலிசம் பேசுகிறது என்பதற்கு இதனைவிடச் சான்று தேவையில்லை, அல்லவா?<noinclude></noinclude> td4lhaxox8do92ooszbbpq0zhf51c4h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/98 250 639350 1927500 1923985 2026-04-27T16:23:44Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|74||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> மெய்வழிச் சபைக்குள் ஒரு உண்மை நாடுவோர் சங்கமும், சைவ மெய்யன்பர் கூட்டத்திற்குள், இறைச்சி விரும்பாதார் மன்றமும் இருந்திடின், விந்தை என்பீர்கள் அல்லவா! ஆனால் ஜனநாயக சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷியலிச முன்னணி என்ற ஒரு பிரிவும் இருக்கிறது!! அந்த முன்னணியினர் சின்னாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளனர்; :காங்கிரஸ், இவ்வளவு ஆண்டுகளாகியும் சோஷியலிசத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை, :சோஷியலிசத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவேயில்லை. :சோஷியலிசப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கிற இதே நேரத்தில் முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதாக. இந்த ‘கண்டுபிடிப்புக்கு’ப் பிறகும் அவர்கள் ஏன் காங்கிரசிலே இருக்கவேண்டும் என்று கேட்கிறாய். நியாயமான கேள்வி! அதைவிடத் தேவையான கேள்வி, உள்ளே இருப்பவர்களே மனம் குமுறிக் கிடக்கும் போது, ஊராரைப் பார்த்து ஜனநாயக சோஷியலிசம் வேண்டுமானால், காங்கிரசில் வந்து கூடுங்கள் என்று அழைக்கிறார்களே, பொருள் இருக்கிறதா! ஆனால் அழைக்கிறார்கள்! ஏன்? சோஷியலிசம் என்பதன் கவர்ச்சி மக்களை ஈர்த்துக்கொண்டு வரும் என்பதால். வைகுந்தம் போக விரும்புவோரெல்லாம் என்னோடு வருக!— என்று அழைத்தான் ஒருவன். நெற்றியிலே திருநாமமும் கழுத்திலே துளசி மணிமாலையும் இருந்தது. கண்டவர்கள், அவனை நம்பி, “வைகுந்தம் போக வழி எது, சொல்லுங்கள் வருகிறோம்” என்றார்கள். ‘பள்ளி கொண்டான் கோயில் கோபுரம் தெரியுமா அதன் மீது ஏறவேண்டும்! அங்கே சென்றதும், வைகுந்தம் போகும் வழியை நான் காட்டுகிறேன்’ என்றான் திருநாமதாரி. மக்கள் யோசித்தனர், சிறிதளவு தயக்கம் அவர்களுக்கு. கட கடவெனச் சிரித்தான் ஒருவன்; மக்கள் அவனைத் திரும்பிப் பார்த்தனர். வைகுந்தத்துக்கு வழி காட்டுவதாகக் கூறுகிறாரா இவர்! கோபுரம் ஏறிக் காட்டப் போகிறாரா? ஏமாளிகளே! இவன் யார் தெரியுமா?<noinclude></noinclude> ljzdi01a4gxz0yc5phl1xm73cbxlqjp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/99 250 639351 1927501 1926724 2026-04-27T16:24:21Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude> இவன் கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத பேர்வழி. அவன் வீட்டுக் கோழி, கூரையிலே ஏறிக்கொண்டது; கூரை ஏறிக் கோழியைப் பிடிக்க முடியாமல், கல்லை எடுத்து அதன்மீது வீச, குறி தவறி, வழியே வந்து கொண்டிருந்த மணியக்காரர் பிள்ளை தலை மீது விழ, மணியக்காரரின் ஆட்கள் இவனை நையப்புடைத்தார்கள். மண்டையில் பலத்த அடி; மூளை குழம்பிவிட்டது; அது முதற்கொண்டு இவன் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து, வைகுந்தத்துக்கு வழி காட்டுகிறேன் என்று குளறிக் கொண்டிருக் கிறான். “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத இவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழி காட்டப் போகிறான்!” என்று விளக்கமளித்தானாம். அதுபோல, ஓரளவு கூட சோஷியலிசத்தைப் புகுத்த முடியாதவர்கள் என்று காங்கிரசைக் கண்டித்துக்கொண்டு, ஆனாலும் காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் தந்திடும் என்றும் அந்த முன்னணியினர் பேசுகின்றனர், விந்தை அல்லவா? விந்தை மட்டுமல்ல; இது விபரீதமான யோசனை என்பதை உணர்ந்து கொண்டு வருகிறது நாடு. நாடு பெற்றுள்ள அந்த உணர்வினைத் தந்திட, தம்பி! நீ மிகுந்த பாடுபட்டிருக்கிறாய். நீ, பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனைப் பெறுவதற்கான நாளும் நெருங்கிக் கொண்டு வருகிறது. உன் நடையிலேயும் புது வேகம் காண்கிறேன்; மகிழ்கிறேன். {{rh|<br>7.8.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} <section end="10"/><noinclude></noinclude> ideh2hqir2l35qu3tuepylk3a5zz8dx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/101 250 639353 1927502 1923620 2026-04-27T16:26:30Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||77}}{{rule}}</noinclude>தம்பி! பேயாண்டி பேசுவதைக் கேள். ‘ஆக மொத்தம்’ இருக்கட்டும் ஓய்! கானூர் என்ன இப்படிக் குறைந்து விட்டது? முந்திரி போனவருடம் நாலு இந்த வருடம் மூணு ஆகிவிட்ட காரணம் என்ன? சூளை போட இடத்தைக் குத்தகைக்கு விட்ட கணக்கையே காணோம். என்ன பெரிய புரட்டு நடக்குது என்றே தெரியவில்லை. தம்பி! காரியஸ்தர் ஏட்டைப் புரட்டுகிறார்; ஏதாவது காரணம் கிடைக்கும்; கூறுவார்; ஐயா சமாதானமாகமாட்டார்; ஏசுவார்; அதைக் கேட்டுக்கொண்டிருப்பானேன், வா, வா! போய்விடலாம்! ‘உடையவர்’ வருவாய் எத்தனை வழிகளிலே பெறுகிறார் என்பதைக் காணவேண்டும் என்பதற்குத்தான் இங்கு அழைத்து வந்தேன். கவனித்தாய் அல்லவா, கானூர், சீனூர், சோரனூர், கல்லூர், இப்படிப் பல சிற்றூர்களிலே உள்ள நிலபுலத்திலிருந்து வருவாய், மாந்தோப்பு, முந்திரித்தோப்பு, சவுக்குத் தோப்பு இவைகளிலிருந்து வருவாய், வாடகைப் பணம், வட்டிப் பணம், வியாபார இலாபம் இப்படி வேறு வகையிலும் வருவாய்; கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது, தருமகருத்தா வேலை பார்த்தது, சத்திர நிர்வாகம் போன்ற ‘புண்ணிய’ காரியத்தின் மூலம்கூட ‘வருவாய்’ உண்டு. தம்பி! நாம் தெரிந்துகொள்ள வேண்டியது விவரம் அல்ல; அவைகளுடன் பிணைந்துள்ள ஒரு பொது உண்மை; ::சீமான் பல வழிகளில் வருவாய் பெறுகிறார் என்பதுதான். ஏழைப் பாட்டாளி அதுபோல, சிம்சன் கம்பெனி மூலம் ஆறு ரூபாய், சிவராமன் கடைமூலம் மூன்று ரூபாய், ராம்சேட் மண்டிமூலம் நாலு ரூபாய், சுந்தரம் ஸ்டோர் மூலம் எட்டு ரூபாய், ஆகமொத்தம் கிடைத்த வருமானம்... என்று கணக்குக்கூற முடியாதல்லவா? அவன் பெறக்கூடிய வருவாய், இவைகளிலே ஏதாவது ஒரு இடத்தில் மட்டுந்தான்; அதுவும் வேலை நிலைத்திருந்தால். ::ஏழைக்கு வருவாய் உழைக்கும் இடம் ஒன்றில் இருந்து மட்டுமே கிடைக்கும். ::சீமானுக்கு வருவாய் பல இடங்களிலிருந்து கிடைக்கும். ::ஏழைக்கும் சீமானுக்கும் ஒரே வயிறுதான்; அதிலே வித்தியாசம் இல்லை. ::ஆனால் வருவாய்த்துறை ஏழைக்கு பல இருப்பதில்லை; சீமானுக்குப் பலப் பல. ::ஆகவே ஏழை உழைக்கிறான் பிழைத்திருக்க! ::சீமான், மேலும் சீமானாகிறான், பணம் குவிகிறது; குவிந்த பணம் சீமானுக்குப் புதுப்புது வருவாய்த்துறைகளைப் பெற்றுத் தருகிறது.{{nop}}<noinclude></noinclude> fvaqc0q5epwghn0q4cnnkhwvxj24ztq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/102 250 639354 1927517 1923619 2026-04-28T02:04:00Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|78||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கானூர் நிலத்திலே கிடைத்த வருவாய் குவியக் குவிய, சீனூரில் புதிதாக நிலம் வாங்க முடிந்தது—சீமானால். கானூரில் இவருடைய நிலத்தை உழுதுகொண்டிருக்கிறானே, அவனுக்கு இவர் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அவன் பெற முடிந்தது என்ன? கேட்டுப் பார்த்தால், கண் கலங்குவாய்! ‘அவளுக்கு ஆஸ்த்துமா! எனக்குக் குடல்நோய்! என் தாயாருக்கு முடக்கு வியாதி! பிள்ளையா? அதைப் பற்றிக் கேட்க வேண்டாமய்யா, அது எனக்குப் பிள்ளை அல்ல, என்னைச் சாகடிக்க வந்துள்ள எமன்!!’—என்று சொல்லிப் புலம்புவான். கானூர் நிலத்தை வாங்கிய வேளை நல்ல வேளைங்க....அதற்குப் பிறகுதான், பகவானோட கடாட்சத்தாலே, முந்திரித் தோப்பும், மாந்தோப்பும் கிடைச்சுது என்று ‘அம்மா’ பேசுவார்கள், ‘ஐயா’ சந்தோஷமாக இருக்கும்போது. ::அங்கே பணம், பணத்தைப் பெற்றுத் தருகிறது. ::இங்கே (ஏழையிடம்) உழைப்பு உடலை வாட்டி, உள்ளத்தைக் கசக்கிப் போடுகிறது. ::அங்கே, செலவு போக இருந்திடும் மிச்சம் முந்திரித் தோப்பாக, மூன்றடுக்கு மாடியாக மாறுகிறது. ::இங்கே உழைத்து உழைத்து உருக்குலைந்ததன் பலன், காசம், குன்மம், கடன், இப்படி. இந்த நிலை, சமூகத்திலே பெரும் அளவு பரவி இருக்கும் கொடுமையை நீக்கினாலொழிய மனித குலம் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது என்பதனை உணர்ந்ததன் விளைவு தந்த திட்டந்தான் சோஷியலிசம். ஏழை—பணக்காரன் பேதத்தைப் போக்கியாக வேண்டுமானால் ஏழை—பணக்காரன் பேதம் எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தாக வேண்டும். ஏழ்மை ஒரு நோய்; அது யாரைப் பீடித்துக் கொள்கிறதோ அவனை மட்டுமல்ல, அவனைச் சூழ உள்ளவர்களை, அவன் உலவும் சமூகத்தையே பீடித்துக் கொள்வது; ஒட்டுவார் ஒட்டி! ஆகவே அந்த நோயைப் போக்குவது, அவனிடம் பரிவும் பச்சாதாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல; அவனைப் பிடித்துக்கொண்டுள்ள நோய் மூலம் கிளம்பிப் பரவிடும் கிருமிகள், சமூகத்தின் நல்லவைகள் யாவற்றையும் அரித்து அழித்துவிடும்; அந்த நோயைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காக; சமூகத்தை காப்பாற்ற; எதிர்காலத்தைப் பாதுகாத்திட<noinclude> <references/></noinclude> fajk4jglfmzvgxw2u9u5x42is0inmm7 1927552 1927517 2026-04-28T02:49:20Z YasmineFaisal2 16644 1927552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|78||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கானூர் நிலத்திலே கிடைத்த வருவாய் குவியக் குவிய, சீனூரில் புதிதாக நிலம் வாங்க முடிந்தது—சீமானால். கானூரில் இவருடைய நிலத்தை உழுதுகொண்டிருக்கிறானே, அவனுக்கு இவர் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அவன் பெற முடிந்தது என்ன? கேட்டுப் பார்த்தால், கண் கலங்குவாய்! ‘அவளுக்கு ஆஸ்த்துமா! எனக்குக் குடல்நோய்! என் தாயாருக்கு முடக்கு வியாதி! பிள்ளையா? அதைப் பற்றிக் கேட்க வேண்டாமய்யா, அது எனக்குப் பிள்ளை அல்ல, என்னைச் சாகடிக்க வந்துள்ள எமன்!!’—என்று சொல்லிப் புலம்புவான். கானூர் நிலத்தை வாங்கிய வேளை நல்ல வேளைங்க....அதற்குப் பிறகுதான், பகவானோட கடாட்சத்தாலே, முந்திரித் தோப்பும், மாந்தோப்பும் கிடைச்சுது என்று ‘அம்மா’ பேசுவார்கள், ‘ஐயா’ சந்தோஷமாக இருக்கும்போது. ::அங்கே பணம், பணத்தைப் பெற்றுத் தருகிறது. ::இங்கே (ஏழையிடம்) உழைப்பு உடலை வாட்டி, உள்ளத்தைக் கசக்கிப் போடுகிறது. ::அங்கே, செலவு போக இருந்திடும் மிச்சம் முந்திரித் தோப்பாக, மூன்றடுக்கு மாடியாக மாறுகிறது. ::இங்கே உழைத்து உழைத்து உருக்குலைந்ததன் பலன், காசம், குன்மம், கடன், இப்படி. இந்த நிலை, சமூகத்திலே பெரும் அளவு பரவி இருக்கும் கொடுமையை நீக்கினாலொழிய மனித குலம் நிம்மதியாக வாழ்ந்திட முடியாது என்பதனை உணர்ந்ததன் விளைவு தந்த திட்டந்தான் சோஷியலிசம். ஏழை—பணக்காரன் பேதத்தைப் போக்கியாக வேண்டுமானால் ஏழை—பணக்காரன் பேதம் எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தாக வேண்டும். ஏழ்மை ஒரு நோய்; அது யாரைப் பீடித்துக் கொள்கிறதோ அவனை மட்டுமல்ல, அவனைச் சூழ உள்ளவர்களை, அவன் உலவும் சமூகத்தையே பீடித்துக் கொள்வது; ஒட்டுவார் ஒட்டி! ஆகவே அந்த நோயைப் போக்குவது, அவனிடம் பரிவும் பச்சாதாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல; அவனைப் பிடித்துக்கொண்டுள்ள நோய் மூலம் கிளம்பிப் பரவிடும் கிருமிகள், சமூகத்தின் நல்லவைகள் யாவற்றையும் அரித்து அழித்துவிடும்; அந்த நோயைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காக; சமூகத்தை காப்பாற்ற; எதிர்காலத்தைப் பாதுகாத்திட<noinclude></noinclude> pwelzjapvii2alzpdobk661hueg93o4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/103 250 639355 1927518 1923621 2026-04-28T02:04:57Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude>கானூருக்கும் சீனூருக்கும் சொந்தம் கொண்டாடும் சீமானுக்கும் அவரிடம் கைகட்டி வாய் பொத்தி வேலை செய்யும் பாட்டாளிக்கும், பஞ்சம், பிணி, குழப்பம், கலகம் போர் போன்ற விபத்துக்கள் ஒரே விதமான இன்னலையும் இழப்பையும் தான் தரும், ஐயமில்லை. ::ஆனால், ‘உடையவர்’ அந்த விபத்துக்களைத் தாங்கிக்கொள்ள முடிகின்ற அளவுக்கு உழைப்பாளியால் முடிவதில்லை. அதனால்தான் பணம் படைத்தவர்கள் பல்வேறு விதமான அரசியல் மாறுதல்களையும், அதிர்ச்சி தரத்தக்க மாறுதல்களையும் தாங்கிக் கொண்ட பிறகும், ‘சகஜ’ நிலைமை ஏற்பட்டதும், மெள்ள மெள்ள, தங்களின் பழைய நிலையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தப் பொதுவிதிக்கு, சில குறிப்பிடத்தக்க விலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன ஆனால் பொதுவான உண்மை என்னவென்றால், ::பணம், பயங்கரமான விபத்துக்களையும் தாங்கிக் கொள்ளச்செய்திடும் கேடயமாக, பணக்காரர்களுக்கு பயன்படுகிறது. அதிலும், அரசியல் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் கேடு பயப்பனவாக இருந்திடின், அந்தக் கேடுகளின் முழுத்தாக்குதல், ஏழையின்மீதுதான் விழும்; பணக்காரனைத் தாக்கிடக் கிளம்பிடும், அவன் பணம் எனும் கேடயம் கொண்டு தடுத்துக்கொள்கிறான். இந்தியாவின் வரலாற்றிலே இதற்கான சான்றுகளை நிரம்பக் காணலாம். வெள்ளையர் வந்தனர்; சிற்றரசர்களும், சீமான்களும் போர்ச் சூழ்நிலை காரணமாக அல்லற்பட்டனர்; ஆனால் விரைவிலேயே நிலைமை அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எதிர்த்து நிற்கமுடியாது—என்பதைக் கண்டுகொண்ட—சீமான்கள், வெள்ளையரை ‘எஜமானர்கள்’ என்று ஒப்புக்கொண்டனர்; அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்ட வெள்ளை அரசு, சீமான்களைத் தமது கொலுப் பொம்மைகள் ஆக்கிக் கொண்டது? அந்தக் கொலுப் பொம்மைகள், எப்போதும் போல கோலாகல வாழ்வு நடாத்தவும், கானூர் வரவு என்ன? வானூர் வரவு என்ன என்ற கணக்குப் பார்க்கவும், ஏழைகளின் உழைப்பை மிரட்டிப் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது. வெள்ளை அரசு அதனை அனுமதித்தது!! ::பணம் படைத்தவர்கள் எந்த அரசு அமைந்திடினும் அதனைத் தமக்குச் சொந்தமுள்ள அரசு ஆக்கிக்கொள்வர்; தமது பணபலத்தைக் காப்பாற்றிக் கொள்ள. இந்த நிலைமை, வெள்ளை அரசு அமைத்ததோடு முடிந்து விடவில்லை. ::காங்கிரஸ் அரசு அமைந்ததும், அதே சீமான்கள் அந்த அரசைத் தமக்குச் சொந்தமுள்ள அரசு ஆக ஆக்கிக்கொண்டு விட்டுள்ளனர்.{{nop}}<noinclude> <references/></noinclude> f1yq2lr55xdfmae5rc4scackok7add2 1927551 1927518 2026-04-28T02:48:56Z YasmineFaisal2 16644 1927551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude> கானூருக்கும் சீனூருக்கும் சொந்தம் கொண்டாடும் சீமானுக்கும் அவரிடம் கைகட்டி வாய் பொத்தி வேலை செய்யும் பாட்டாளிக்கும், பஞ்சம், பிணி, குழப்பம், கலகம் போர் போன்ற விபத்துக்கள் ஒரே விதமான இன்னலையும் இழப்பையும் தான் தரும், ஐயமில்லை. ::ஆனால், ‘உடையவர்’ அந்த விபத்துக்களைத் தாங்கிக்கொள்ள முடிகின்ற அளவுக்கு உழைப்பாளியால் முடிவதில்லை. அதனால்தான் பணம் படைத்தவர்கள் பல்வேறு விதமான அரசியல் மாறுதல்களையும், அதிர்ச்சி தரத்தக்க மாறுதல்களையும் தாங்கிக் கொண்ட பிறகும், ‘சகஜ’ நிலைமை ஏற்பட்டதும், மெள்ள மெள்ள, தங்களின் பழைய நிலையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தப் பொதுவிதிக்கு, சில குறிப்பிடத்தக்க விலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன ஆனால் பொதுவான உண்மை என்னவென்றால், ::பணம், பயங்கரமான விபத்துக்களையும் தாங்கிக் கொள்ளச்செய்திடும் கேடயமாக, பணக்காரர்களுக்கு பயன்படுகிறது. அதிலும், அரசியல் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் கேடு பயப்பனவாக இருந்திடின், அந்தக் கேடுகளின் முழுத்தாக்குதல், ஏழையின்மீதுதான் விழும்; பணக்காரனைத் தாக்கிடக் கிளம்பிடும், அவன் பணம் எனும் கேடயம் கொண்டு தடுத்துக்கொள்கிறான். இந்தியாவின் வரலாற்றிலே இதற்கான சான்றுகளை நிரம்பக் காணலாம். வெள்ளையர் வந்தனர்; சிற்றரசர்களும், சீமான்களும் போர்ச் சூழ்நிலை காரணமாக அல்லற்பட்டனர்; ஆனால் விரைவிலேயே நிலைமை அவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எதிர்த்து நிற்கமுடியாது—என்பதைக் கண்டுகொண்ட—சீமான்கள், வெள்ளையரை ‘எஜமானர்கள்’ என்று ஒப்புக்கொண்டனர்; அந்தச் சரணாகதியை ஏற்றுக்கொண்ட வெள்ளை அரசு, சீமான்களைத் தமது கொலுப் பொம்மைகள் ஆக்கிக் கொண்டது? அந்தக் கொலுப் பொம்மைகள், எப்போதும் போல கோலாகல வாழ்வு நடாத்தவும், கானூர் வரவு என்ன? வானூர் வரவு என்ன என்ற கணக்குப் பார்க்கவும், ஏழைகளின் உழைப்பை மிரட்டிப் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது. வெள்ளை அரசு அதனை அனுமதித்தது!! ::பணம் படைத்தவர்கள் எந்த அரசு அமைந்திடினும் அதனைத் தமக்குச் சொந்தமுள்ள அரசு ஆக்கிக்கொள்வர்; தமது பணபலத்தைக் காப்பாற்றிக் கொள்ள. இந்த நிலைமை, வெள்ளை அரசு அமைத்ததோடு முடிந்து விடவில்லை. ::காங்கிரஸ் அரசு அமைந்ததும், அதே சீமான்கள் அந்த அரசைத் தமக்குச் சொந்தமுள்ள அரசு ஆக ஆக்கிக்கொண்டு விட்டுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> j4bt7gahfuwpj7ifwoblbmmbshupg77 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/104 250 639356 1927519 1923623 2026-04-28T02:06:56Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|80||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ::சான்று வேண்டிடுவோர் தத்தமது வட்டாரத்தில் உள்ள ‘பெரிய புள்ளிகள்’ இன்று எந்தக் கட்சியில் இடம் பெற்றுள்ளனர் என்பதனைக் கணக்கெடுத்தாலே போதும். முதலமைச்சர் இருக்கிறாரே பக்தவத்சலனார், அவருடைய குடும்பத்தினரே, நவாப் காலத்திலே ‘மானியம்’ வாங்கிய குடும்பமாம். விவரம் கேட்கிறாயா, தம்பி! விசாரித்துச் சொல்கிறேன், ராமநாதபுரம் ராஜா குடும்பம் இருக்கிறதே, ‘சேதுபதிகள்’ வெள்ளையர் காலத்திலும் இதே செல்வாக்குத்தான்; ராஜாக்களையும் ஜெமீன்தாரர்களையும் அழித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின்போதும் அதே செல்வாக்குத்தான்! வெள்ளைக்காரன்கூட, சேதுபதிகளை, ராமநாதபுரம் ராஜாவாக மட்டுமே இருக்கச் செய்தான். காங்கிரசாட்சியிலேதான் ராமநாதபுரம் ராஜா, தமிழ் நாடு முழுவதற்கும் ‘மந்திரி’யாகி ஆட்சி நடத்தினார். சிவகங்கை ராஜா குடும்பம் அதே நிலைமை! செட்டி நாட்டு ராஜா குடும்பம்? அதே நிலைமை!! வெள்ளையர் ஆண்டபோது, எப்படி அவர்கள் இந்தப் பெரிய புள்ளிகளைத் தமது கொலுமண்டபத்தில் இடம் கொடுத்து, துணைக்கு, துதி பாடவும் வைத்துக் கொண்டிருந்தனரோ, அதுபோலவேதான், காங்கிரஸ் ஆட்சியும் பெரிய புள்ளிகளைத் தமது நண்பர்கள் ஆக்கிக்கொண்டு விட்டிருக்கிறது. ::பணம் படைத்தவர்களை எந்த அரசும், தனது பரிவாரத்தினர் ஆக்கிக்கொள்ளும் என்பதையும், இந்த எழுதாத ஒப்பந்தம் இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக இருந்து வருகிறது என்பதையும் உணர்ந்திடின் இன்றைய அரசியல் நிலைமை நன்கு விளங்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துவது என்பது, ஆராய்ந்து பார்க்கும்போது, இதற்கு முன்பு அமைந்திருந்த ஆட்சிகளின்போது, எந்தச் சீமான்கள்—பெரியபுள்ளிகள்—செல்வாக்குப் பெற்று வந்திருந்தனரோ, அதே திருக்கூட்டத்தார், தமது நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் நடத்தப்பட்டுவரும் ஆட்சி என்பது புரிகிறது. அதனால்தான், நாம் அந்த ஆட்சியை மாற்றியாகவேண்டும் என்கிறோம். ::புலித்தோல்மீது அமர்ந்து கண்களை மூடிக்கொள்வதாலேயே, முன்னாள் வழிப்பறிக்காரன், யோகி ஆகிவிடமுடியாது.{{nop}}<noinclude> <references/></noinclude> 0ksncebam2k4vcnj1i662ka7ve8kzm1 1927550 1927519 2026-04-28T02:48:22Z YasmineFaisal2 16644 1927550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|80||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ::சான்று வேண்டிடுவோர் தத்தமது வட்டாரத்தில் உள்ள ‘பெரிய புள்ளிகள்’ இன்று எந்தக் கட்சியில் இடம் பெற்றுள்ளனர் என்பதனைக் கணக்கெடுத்தாலே போதும். முதலமைச்சர் இருக்கிறாரே பக்தவத்சலனார், அவருடைய குடும்பத்தினரே, நவாப் காலத்திலே ‘மானியம்’ வாங்கிய குடும்பமாம். விவரம் கேட்கிறாயா, தம்பி! விசாரித்துச் சொல்கிறேன், ராமநாதபுரம் ராஜா குடும்பம் இருக்கிறதே, ‘சேதுபதிகள்’ வெள்ளையர் காலத்திலும் இதே செல்வாக்குத்தான்; ராஜாக்களையும் ஜெமீன்தாரர்களையும் அழித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின்போதும் அதே செல்வாக்குத்தான்! வெள்ளைக்காரன்கூட, சேதுபதிகளை, ராமநாதபுரம் ராஜாவாக மட்டுமே இருக்கச் செய்தான். காங்கிரசாட்சியிலேதான் ராமநாதபுரம் ராஜா, தமிழ் நாடு முழுவதற்கும் ‘மந்திரி’யாகி ஆட்சி நடத்தினார். சிவகங்கை ராஜா குடும்பம் அதே நிலைமை! செட்டி நாட்டு ராஜா குடும்பம்? அதே நிலைமை!! வெள்ளையர் ஆண்டபோது, எப்படி அவர்கள் இந்தப் பெரிய புள்ளிகளைத் தமது கொலுமண்டபத்தில் இடம் கொடுத்து, துணைக்கு, துதி பாடவும் வைத்துக் கொண்டிருந்தனரோ, அதுபோலவேதான், காங்கிரஸ் ஆட்சியும் பெரிய புள்ளிகளைத் தமது நண்பர்கள் ஆக்கிக்கொண்டு விட்டிருக்கிறது. ::பணம் படைத்தவர்களை எந்த அரசும், தனது பரிவாரத்தினர் ஆக்கிக்கொள்ளும் என்பதையும், இந்த எழுதாத ஒப்பந்தம் இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக இருந்து வருகிறது என்பதையும் உணர்ந்திடின் இன்றைய அரசியல் நிலைமை நன்கு விளங்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துவது என்பது, ஆராய்ந்து பார்க்கும்போது, இதற்கு முன்பு அமைந்திருந்த ஆட்சிகளின்போது, எந்தச் சீமான்கள்—பெரியபுள்ளிகள்—செல்வாக்குப் பெற்று வந்திருந்தனரோ, அதே திருக்கூட்டத்தார், தமது நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் நடத்தப்பட்டுவரும் ஆட்சி என்பது புரிகிறது. அதனால்தான், நாம் அந்த ஆட்சியை மாற்றியாகவேண்டும் என்கிறோம். ::புலித்தோல்மீது அமர்ந்து கண்களை மூடிக்கொள்வதாலேயே, முன்னாள் வழிப்பறிக்காரன், யோகி ஆகிவிடமுடியாது.{{nop}}<noinclude></noinclude> 9n830wp9avmdfm7nzpi2nussim565an பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/105 250 639357 1927520 1923626 2026-04-28T02:08:21Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude>::சிலகாலம், விவரம் தெரியாதவர்கள் மயங்கிக் கிடக்கலாம். ::எல்லோரும் ஏமாளிகளாகிவிட மாட்டார்கள். ::ஏமாளிகளாகிவிடுபவர்களும் கடைசி வரையில் விழித்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணுவதும் பேதைமை. அந்த விழிப்புணர்ச்சியை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஏற்படுத்துவதிலே நமது கழகத்துக்குச் சிறப்பான, பெரும் பங்கு உண்டு-அந்தப் பெருமைக்கு முழு உரிமை பெற்ற உன்னைத் தம்பியாக கொண்டதனால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ::காங்கிரஸ் ஆட்சி என்பது கனதனவான்களின் ஆட்சிதான் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்றவுடன் தான், காங்கிரஸ் கட்சி, எங்களைச் சாமான்யமாக எண்ணி விடாதீர்கள், நாங்கள் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம்; சோஷியலிசம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். தம்பி! நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேடிக்கை நடைபெற்றது. அன்னியச் சாமான்களை விலக்குவது என்ற திட்டம் மும்முரமாகப் பரவிய நேரம். குறிப்பாக அன்னிய ஆலைத் துணிகளைப் போட்டுக் கொளுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். என் நண்பன் ஒருவன், ‘சிகரட்’ பிடிப்பவன்; முன்பு மறைவாகப் பிடித்து வந்தவன், தைரியமாக நாலு பேருக்கு முன்பாகவே சிகரட் பற்றவைக்கத் தொடங்கினான். திடுக்கிட்டுப் போனவர்கள் அந்த நண்பனைக் கேட்டார்கள், இப்படிச் செய்யலாமா? என்று. ஒரு குறும்புப் புன்னகையுடன் அந்த நண்பன் சொன்னான், “நான் என்ன செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டீர்கள்? நான் அன்னியச் சாமானைக் கொளுத்துகிறேன்; இது இங்கிலாந்து நாட்டுச் சிகரெட்டு; இதைக் கொளுத்தித் தள்ளுகிறேன்” என்றான். இது வேடிக்கை நிகழ்ச்சி! காங்கிரஸ் கட்சியோ, ஏழை பணக்காரன் பேதத்தை ஒழித்துக் கட்டுகிறோம்! எப்படி என்றால், ஏழை பணக்காரன் இருவரையும் ‘ஓட்டர்கள்’ ஆக்கி, அந்த ஓட்டுகளிலே, இது ஏழையின் ஓட்டு, இது பணக்காரன் ஓட்டு என்று பாகுபாடு பார்க்காமல், இரண்டு பேர்களுடைய ஓட்டுகளையும் கேட்டு வாங்கிக் கொள்கிறோம்; பேதத்தை ஒழிக்கிறோம் என்று வாதாடும்போல இருக்கிறது.{{nop}}<noinclude> <references/></noinclude> als6c85tlcbcepn2gvhfey6w8lcn700 1927531 1927520 2026-04-28T02:22:10Z YasmineFaisal2 16644 1927531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude>::சிலகாலம், விவரம் தெரியாதவர்கள் மயங்கிக் கிடக்கலாம். ::எல்லோரும் ஏமாளிகளாகிவிட மாட்டார்கள். ::ஏமாளிகளாகிவிடுபவர்களும் கடைசி வரையில் விழித்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணுவதும் பேதைமை. அந்த விழிப்புணர்ச்சியை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஏற்படுத்துவதிலே நமது கழகத்துக்குச் சிறப்பான, பெரும் பங்கு உண்டு-அந்தப் பெருமைக்கு முழு உரிமை பெற்ற உன்னைத் தம்பியாக கொண்டதனால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ::காங்கிரஸ் ஆட்சி என்பது கனதனவான்களின் ஆட்சிதான் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்றவுடன் தான், காங்கிரஸ் கட்சி, எங்களைச் சாமான்யமாக எண்ணி விடாதீர்கள், நாங்கள் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம்; சோஷியலிசம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். தம்பி! நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேடிக்கை நடைபெற்றது. அன்னியச் சாமான்களை விலக்குவது என்ற திட்டம் மும்முரமாகப் பரவிய நேரம். குறிப்பாக அன்னிய ஆலைத் துணிகளைப் போட்டுக் கொளுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். என் நண்பன் ஒருவன், ‘சிகரட்’ பிடிப்பவன்; முன்பு மறைவாகப் பிடித்து வந்தவன், தைரியமாக நாலு பேருக்கு முன்பாகவே சிகரட் பற்றவைக்கத் தொடங்கினான். திடுக்கிட்டுப் போனவர்கள் அந்த நண்பனைக் கேட்டார்கள், இப்படிச் செய்யலாமா? என்று. ஒரு குறும்புப் புன்னகையுடன் அந்த நண்பன் சொன்னான், “நான் என்ன செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டீர்கள்? நான் அன்னியச் சாமானைக் கொளுத்துகிறேன்; இது இங்கிலாந்து நாட்டுச் சிகரெட்டு; இதைக் கொளுத்தித் தள்ளுகிறேன்” என்றான். இது வேடிக்கை நிகழ்ச்சி! காங்கிரஸ் கட்சியோ, ஏழை பணக்காரன் பேதத்தை ஒழித்துக் கட்டுகிறோம்! எப்படி என்றால், ஏழை பணக்காரன் இருவரையும் ‘ஓட்டர்கள்’ ஆக்கி, அந்த ஓட்டுகளிலே, இது ஏழையின் ஓட்டு, இது பணக்காரன் ஓட்டு என்று பாகுபாடு பார்க்காமல், இரண்டு பேர்களுடைய ஓட்டுகளையும் கேட்டு வாங்கிக் கொள்கிறோம்; பேதத்தை ஒழிக்கிறோம் என்று வாதாடும்போல இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> 39bzsazdg3wfxm2fwmnobqlsct1leoj 1927549 1927531 2026-04-28T02:47:29Z YasmineFaisal2 16644 1927549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude> ::சிலகாலம், விவரம் தெரியாதவர்கள் மயங்கிக் கிடக்கலாம். ::எல்லோரும் ஏமாளிகளாகிவிட மாட்டார்கள். ::ஏமாளிகளாகிவிடுபவர்களும் கடைசி வரையில் விழித்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணுவதும் பேதைமை. அந்த விழிப்புணர்ச்சியை, தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஏற்படுத்துவதிலே நமது கழகத்துக்குச் சிறப்பான, பெரும் பங்கு உண்டு-அந்தப் பெருமைக்கு முழு உரிமை பெற்ற உன்னைத் தம்பியாக கொண்டதனால் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். ::காங்கிரஸ் ஆட்சி என்பது கனதனவான்களின் ஆட்சிதான் என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்றவுடன் தான், காங்கிரஸ் கட்சி, எங்களைச் சாமான்யமாக எண்ணி விடாதீர்கள், நாங்கள் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம்; சோஷியலிசம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். தம்பி! நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வேடிக்கை நடைபெற்றது. அன்னியச் சாமான்களை விலக்குவது என்ற திட்டம் மும்முரமாகப் பரவிய நேரம். குறிப்பாக அன்னிய ஆலைத் துணிகளைப் போட்டுக் கொளுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். என் நண்பன் ஒருவன், ‘சிகரட்’ பிடிப்பவன்; முன்பு மறைவாகப் பிடித்து வந்தவன், தைரியமாக நாலு பேருக்கு முன்பாகவே சிகரட் பற்றவைக்கத் தொடங்கினான். திடுக்கிட்டுப் போனவர்கள் அந்த நண்பனைக் கேட்டார்கள், இப்படிச் செய்யலாமா? என்று. ஒரு குறும்புப் புன்னகையுடன் அந்த நண்பன் சொன்னான், “நான் என்ன செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டீர்கள்? நான் அன்னியச் சாமானைக் கொளுத்துகிறேன்; இது இங்கிலாந்து நாட்டுச் சிகரெட்டு; இதைக் கொளுத்தித் தள்ளுகிறேன்” என்றான். இது வேடிக்கை நிகழ்ச்சி! காங்கிரஸ் கட்சியோ, ஏழை பணக்காரன் பேதத்தை ஒழித்துக் கட்டுகிறோம்! எப்படி என்றால், ஏழை பணக்காரன் இருவரையும் ‘ஓட்டர்கள்’ ஆக்கி, அந்த ஓட்டுகளிலே, இது ஏழையின் ஓட்டு, இது பணக்காரன் ஓட்டு என்று பாகுபாடு பார்க்காமல், இரண்டு பேர்களுடைய ஓட்டுகளையும் கேட்டு வாங்கிக் கொள்கிறோம்; பேதத்தை ஒழிக்கிறோம் என்று வாதாடும்போல இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude> gt84szu5kfdk9vbdcsmf6tsogihom1b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/106 250 639358 1927521 1923631 2026-04-28T02:09:53Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|82||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>::யார் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் கெட்டிப்படுத்திக் கொள்ளக் காங்கிரஸ் கட்சியிலே புகுந்து கொண்டுள்ளனரோ, அந்தப் பெரிய புள்ளிகளைக் கொலுமண்டபத்திலே வைத்துக்கொண்டே ஏழை...பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம் என்று பேசுவது, காளையைக் காட்டி கலம்பால் கறந்து தருகிறேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். தம்பி! குள்ளர்களை ஒழிக்கப் போகிறேன் என்று நான் பேசினால் எப்படி இருக்கும் உறுதி! உறுதி! உறுதி! காங்கிரஸ் கொள்கையிலே நாங்கள் உறுதியாக நிற்போம் என்று ‘புகுந்தவர்கள்’ முழக்கமிட்டால் எப்படி இருக்கும், கேட்க! தாடி ஒழிப்புச் சங்கத்தைப் பெரியாரும், மீசை ஒழிப்புச் சங்கத்தை நண்பர் ம. பொ.சிவஞானமும் துவக்கினால் எப்படி இருக்கும்; தாடியும் மீசையும் இப்போது உள்ளபடியே வைத்துக்கொண்டு. காங்கிரஸ் கட்சி ஊரில் உள்ள எல்லாப் பெரிய புள்ளிகளையும் உடன் வைத்துக் கொண்டு, நாங்கள் சோஷியலிசம் கொண்டு வரப்போகிறோம் என்று பேசுவதை நினைக்கும்போது, எனக்கு இவ்விதமெல்லாம் தோன்றுகிறது. ஆனால் பேசுகிறார்களே! தம்பி, துணிந்து! நாடு கேட்டுக் கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்களே!! எதனால்? எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் இயல்பினர் நாட்டிலே ஏராளமானவர்கள் உள்ளனர் என்ற எண்ணம். ஆனால் நாடு இன்று அவ்விதமாகவா இருக்கிறது? நாட்டு நிலையை நன்கு பார்க்கிறாயே, தம்பி! எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலா நாட்டவர் உள்ளனர்? இல்லையே! மக்களின் கண்களே கேள்விக் குறிகளாக அல்லவா உள்ளன!! முதலாளிகளை ஒழிப்பதுதான் சோஷியலிசம் என்று கருதாதீர்கள், அவர்களையும் வாழவிட்டு, ஏழையையும் வாழ வைப்பதுதான் எங்கள் சோஷியலிசம் என்று விசித்திரமாக வாதாடுகிறார்கள். ::வாதிக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் பிரதிவாதிக்கும் தோல்வி ஏற்படக்கூடாது என்கிறார்கள்! ::முட்டையும் உடையக்கூடாது அடையும் சுட்டாக வேண்டும் என்கிறார்கள்! ::புயலும் அடிக்கவேண்டும் மரமும் விழக்கூடாது என்கிறார்கள்! பணம் படைத்தவர்களும், பணம் திரட்டிக் குவிப்பவர்களும் இருப்பார்கள்; ஏழையும் நிம்மதியான வாழ்வு பெறுவான் என்கிறார்கள்! பணக்காரர்கள் என்று சமூகத்தில் ஒரு பகுதியினரும், ஏழைகள் என்று மற்றோர் பகுதியினரும் இருக்கும் நிலைமை சோஷியலிசம் ஆகாது.<noinclude> <references/></noinclude> 7o4dl8b1ah6voxv108ueje84dknnl8p 1927530 1927521 2026-04-28T02:21:31Z YasmineFaisal2 16644 1927530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|82||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>::யார் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் கெட்டிப்படுத்திக் கொள்ளக் காங்கிரஸ் கட்சியிலே புகுந்து கொண்டுள்ளனரோ, அந்தப் பெரிய புள்ளிகளைக் கொலுமண்டபத்திலே வைத்துக்கொண்டே ஏழை...பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம் என்று பேசுவது, காளையைக் காட்டி கலம்பால் கறந்து தருகிறேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். தம்பி! குள்ளர்களை ஒழிக்கப் போகிறேன் என்று நான் பேசினால் எப்படி இருக்கும் உறுதி! உறுதி! உறுதி! காங்கிரஸ் கொள்கையிலே நாங்கள் உறுதியாக நிற்போம் என்று ‘புகுந்தவர்கள்’ முழக்கமிட்டால் எப்படி இருக்கும், கேட்க! தாடி ஒழிப்புச் சங்கத்தைப் பெரியாரும், மீசை ஒழிப்புச் சங்கத்தை நண்பர் ம. பொ.சிவஞானமும் துவக்கினால் எப்படி இருக்கும்; தாடியும் மீசையும் இப்போது உள்ளபடியே வைத்துக்கொண்டு. காங்கிரஸ் கட்சி ஊரில் உள்ள எல்லாப் பெரிய புள்ளிகளையும் உடன் வைத்துக் கொண்டு, நாங்கள் சோஷியலிசம் கொண்டு வரப்போகிறோம் என்று பேசுவதை நினைக்கும்போது, எனக்கு இவ்விதமெல்லாம் தோன்றுகிறது. ஆனால் பேசுகிறார்களே! தம்பி, துணிந்து! நாடு கேட்டுக் கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்களே!! எதனால்? எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் இயல்பினர் நாட்டிலே ஏராளமானவர்கள் உள்ளனர் என்ற எண்ணம். ஆனால் நாடு இன்று அவ்விதமாகவா இருக்கிறது? நாட்டு நிலையை நன்கு பார்க்கிறாயே, தம்பி! எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலா நாட்டவர் உள்ளனர்? இல்லையே! மக்களின் கண்களே கேள்விக் குறிகளாக அல்லவா உள்ளன!! முதலாளிகளை ஒழிப்பதுதான் சோஷியலிசம் என்று கருதாதீர்கள், அவர்களையும் வாழவிட்டு, ஏழையையும் வாழ வைப்பதுதான் எங்கள் சோஷியலிசம் என்று விசித்திரமாக வாதாடுகிறார்கள். ::வாதிக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் பிரதிவாதிக்கும் தோல்வி ஏற்படக்கூடாது என்கிறார்கள்! ::முட்டையும் உடையக்கூடாது அடையும் சுட்டாக வேண்டும் என்கிறார்கள்! ::புயலும் அடிக்கவேண்டும் மரமும் விழக்கூடாது என்கிறார்கள்! பணம் படைத்தவர்களும், பணம் திரட்டிக் குவிப்பவர்களும் இருப்பார்கள்; ஏழையும் நிம்மதியான வாழ்வு பெறுவான் என்கிறார்கள்! பணக்காரர்கள் என்று சமூகத்தில் ஒரு பகுதியினரும், ஏழைகள் என்று மற்றோர் பகுதியினரும் இருக்கும் நிலைமை சோஷியலிசம் ஆகாது.<noinclude></noinclude> f8plq07u8uk8ldiu34yqd1cq1ud56pw 1927548 1927530 2026-04-28T02:46:59Z YasmineFaisal2 16644 1927548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|82||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ::யார் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் கெட்டிப்படுத்திக் கொள்ளக் காங்கிரஸ் கட்சியிலே புகுந்து கொண்டுள்ளனரோ, அந்தப் பெரிய புள்ளிகளைக் கொலுமண்டபத்திலே வைத்துக்கொண்டே ஏழை...பணக்காரன் வித்தியாசத்தை ஒழிக்கப் போகிறோம் என்று பேசுவது, காளையைக் காட்டி கலம்பால் கறந்து தருகிறேன் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். தம்பி! குள்ளர்களை ஒழிக்கப் போகிறேன் என்று நான் பேசினால் எப்படி இருக்கும் உறுதி! உறுதி! உறுதி! காங்கிரஸ் கொள்கையிலே நாங்கள் உறுதியாக நிற்போம் என்று ‘புகுந்தவர்கள்’ முழக்கமிட்டால் எப்படி இருக்கும், கேட்க! தாடி ஒழிப்புச் சங்கத்தைப் பெரியாரும், மீசை ஒழிப்புச் சங்கத்தை நண்பர் ம. பொ.சிவஞானமும் துவக்கினால் எப்படி இருக்கும்; தாடியும் மீசையும் இப்போது உள்ளபடியே வைத்துக்கொண்டு. காங்கிரஸ் கட்சி ஊரில் உள்ள எல்லாப் பெரிய புள்ளிகளையும் உடன் வைத்துக் கொண்டு, நாங்கள் சோஷியலிசம் கொண்டு வரப்போகிறோம் என்று பேசுவதை நினைக்கும்போது, எனக்கு இவ்விதமெல்லாம் தோன்றுகிறது. ஆனால் பேசுகிறார்களே! தம்பி, துணிந்து! நாடு கேட்டுக் கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்களே!! எதனால்? எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் இயல்பினர் நாட்டிலே ஏராளமானவர்கள் உள்ளனர் என்ற எண்ணம். ஆனால் நாடு இன்று அவ்விதமாகவா இருக்கிறது? நாட்டு நிலையை நன்கு பார்க்கிறாயே, தம்பி! எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலா நாட்டவர் உள்ளனர்? இல்லையே! மக்களின் கண்களே கேள்விக் குறிகளாக அல்லவா உள்ளன!! முதலாளிகளை ஒழிப்பதுதான் சோஷியலிசம் என்று கருதாதீர்கள், அவர்களையும் வாழவிட்டு, ஏழையையும் வாழ வைப்பதுதான் எங்கள் சோஷியலிசம் என்று விசித்திரமாக வாதாடுகிறார்கள். ::வாதிக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் பிரதிவாதிக்கும் தோல்வி ஏற்படக்கூடாது என்கிறார்கள்! ::முட்டையும் உடையக்கூடாது அடையும் சுட்டாக வேண்டும் என்கிறார்கள்! ::புயலும் அடிக்கவேண்டும் மரமும் விழக்கூடாது என்கிறார்கள்! பணம் படைத்தவர்களும், பணம் திரட்டிக் குவிப்பவர்களும் இருப்பார்கள்; ஏழையும் நிம்மதியான வாழ்வு பெறுவான் என்கிறார்கள்! பணக்காரர்கள் என்று சமூகத்தில் ஒரு பகுதியினரும், ஏழைகள் என்று மற்றோர் பகுதியினரும் இருக்கும் நிலைமை சோஷியலிசம் ஆகாது.<noinclude></noinclude> 64rtrvrlzbd5tl1vhsfx490a3b2cohl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/107 250 639359 1927522 1923637 2026-04-28T02:10:57Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude>ஆனால் இதைத்தான் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி பேசுகிறது. ::திருப்பதி செல்லும் பஐனைக் கோஷ்டியும், கோவிந்தா! கோவிந்தா! என்று முழக்கம் எழுப்புகிறது. ::பிணத்தைச் சுமந்துசெல்லும்போதும், கோவிந்தா! கோவிந்தா! என்று கூச்சல் எழுப்புகிறார்கள். ::இரண்டு நிலைமைகளின் போதும், ‘கோவிந்தா!’ கேட்கிறது. ஆனால் அந்த இரண்டு ‘கோவிந்தா’வும் ஒன்றா? ::அதுபோலத்தான், சமூகத்திலே ஒரு பகுதி பணம் படைத்தோர்களாகவும், பெரும் பகுதியினர் வாழ முடியாமல் தத்தளிக்கும் ஏழைகளாகவும் இருக்கக்கூடாது. இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற புரட்சித் திட்டம் மேற்கொள்பவர்களும், சோஷியலிசம் பேசுகிறார்கள். ::பணக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள், சிலர் பணம் திரட்டுவது நடந்து கொண்டுதான் இருக்கும். அதனை அனுமதித்துக்கொண்டுதான் இருப்போம். ஆனால் ஏழைக்கும் நல்லது செய்வோம், வாழ்வு கொடுப்போம் என்று பேசும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற போக்கினராக உள்ள காங்கிரஸ் கட்சினரும் சோஷியலிசம் பேசுகிறார்கள்! ::இந்த இருவகை சோஷியலிசப் பேச்சில், எது பொருள் உள்ளது, பயன் தருவது, நேர்மையானது என்பதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி. காடும் மேடும் கழனியாக வேண்டுமானால், கள்ளியும் முள்ளும் களைந்தெறியப்பட்டாக வேண்டும்; மேடு பள்ளம் சமமாக்கப்பட வேண்டும். ஒழுங்குபடுத்தப்பட்ட ‘பள்ளம்’ பயன்படும்; குளமாக, குட்டையாக. சமப்படுத்தப்பட்ட இடம் வயலாகும்; விளைச்சல் இடமாகும். எமது வயலில் ஆங்காங்கு சிறு சிறு பள்ளங்களும் இருக்கும், கேடுகளும் இருக்கும், ஒருபுறம் கள்ளி கிடக்கும், மற்றோர் புறம் புற்றும் இருக்கும் அதிலே பாம்பும் இருக்கும், வேறோர் புறம் புதர் இருக்கும், அதிலே நரியாவது இருக்கும், சேறு இருக்கும், அதிலே எருமை புரளும், இந்தச் சூழ்நிலையிலும், விளைச்சல் மட்டும் அமோகமாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புதமான வயல் எம்முடையது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இன்று உள்ள முறைப்படி சமூகத்தில் பணக்காரர்களும் இருப்பார்கள், அவர்கள் பணம் தேடிட, குவித்திட, சேமித்திட, உரிமையும் இருக்கும்;<noinclude> <references/></noinclude> l2es3q0sudysxyuy1iu8ab7l6f7y6nj 1927529 1927522 2026-04-28T02:20:08Z YasmineFaisal2 16644 1927529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude>ஆனால் இதைத்தான் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி பேசுகிறது. ::திருப்பதி செல்லும் பஐனைக் கோஷ்டியும், கோவிந்தா! கோவிந்தா! என்று முழக்கம் எழுப்புகிறது. ::பிணத்தைச் சுமந்துசெல்லும்போதும், கோவிந்தா! கோவிந்தா! என்று கூச்சல் எழுப்புகிறார்கள். ::இரண்டு நிலைமைகளின் போதும், ‘கோவிந்தா!’ கேட்கிறது. ஆனால் அந்த இரண்டு ‘கோவிந்தா’வும் ஒன்றா? ::அதுபோலத்தான், சமூகத்திலே ஒரு பகுதி பணம் படைத்தோர்களாகவும், பெரும் பகுதியினர் வாழ முடியாமல் தத்தளிக்கும் ஏழைகளாகவும் இருக்கக்கூடாது. இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற புரட்சித் திட்டம் மேற்கொள்பவர்களும், சோஷியலிசம் பேசுகிறார்கள். ::பணக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள், சிலர் பணம் திரட்டுவது நடந்து கொண்டுதான் இருக்கும். அதனை அனுமதித்துக்கொண்டுதான் இருப்போம். ஆனால் ஏழைக்கும் நல்லது செய்வோம், வாழ்வு கொடுப்போம் என்று பேசும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற போக்கினராக உள்ள காங்கிரஸ் கட்சினரும் சோஷியலிசம் பேசுகிறார்கள்! ::இந்த இருவகை சோஷியலிசப் பேச்சில், எது பொருள் உள்ளது, பயன் தருவது, நேர்மையானது என்பதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி. காடும் மேடும் கழனியாக வேண்டுமானால், கள்ளியும் முள்ளும் களைந்தெறியப்பட்டாக வேண்டும்; மேடு பள்ளம் சமமாக்கப்பட வேண்டும். ஒழுங்குபடுத்தப்பட்ட ‘பள்ளம்’ பயன்படும்; குளமாக, குட்டையாக. சமப்படுத்தப்பட்ட இடம் வயலாகும்; விளைச்சல் இடமாகும். எமது வயலில் ஆங்காங்கு சிறு சிறு பள்ளங்களும் இருக்கும், கேடுகளும் இருக்கும், ஒருபுறம் கள்ளி கிடக்கும், மற்றோர் புறம் புற்றும் இருக்கும் அதிலே பாம்பும் இருக்கும், வேறோர் புறம் புதர் இருக்கும், அதிலே நரியாவது இருக்கும், சேறு இருக்கும், அதிலே எருமை புரளும், இந்தச் சூழ்நிலையிலும், விளைச்சல் மட்டும் அமோகமாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புதமான வயல் எம்முடையது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இன்று உள்ள முறைப்படி சமூகத்தில் பணக்காரர்களும் இருப்பார்கள், அவர்கள் பணம் தேடிட, குவித்திட, சேமித்திட, உரிமையும் இருக்கும்;<noinclude></noinclude> mm023sp9a4do7q7vxxskty0kus6b5nl 1927547 1927529 2026-04-28T02:45:56Z YasmineFaisal2 16644 1927547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude> ஆனால் இதைத்தான் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி பேசுகிறது. ::திருப்பதி செல்லும் பஐனைக் கோஷ்டியும், கோவிந்தா! கோவிந்தா! என்று முழக்கம் எழுப்புகிறது. ::பிணத்தைச் சுமந்துசெல்லும்போதும், கோவிந்தா! கோவிந்தா! என்று கூச்சல் எழுப்புகிறார்கள். ::இரண்டு நிலைமைகளின் போதும், ‘கோவிந்தா!’ கேட்கிறது. ஆனால் அந்த இரண்டு ‘கோவிந்தா’வும் ஒன்றா? ::அதுபோலத்தான், சமூகத்திலே ஒரு பகுதி பணம் படைத்தோர்களாகவும், பெரும் பகுதியினர் வாழ முடியாமல் தத்தளிக்கும் ஏழைகளாகவும் இருக்கக்கூடாது. இந்த நிலைமையை மாற்றியாக வேண்டும் என்ற புரட்சித் திட்டம் மேற்கொள்பவர்களும், சோஷியலிசம் பேசுகிறார்கள். ::பணக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள், சிலர் பணம் திரட்டுவது நடந்து கொண்டுதான் இருக்கும். அதனை அனுமதித்துக்கொண்டுதான் இருப்போம். ஆனால் ஏழைக்கும் நல்லது செய்வோம், வாழ்வு கொடுப்போம் என்று பேசும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற போக்கினராக உள்ள காங்கிரஸ் கட்சினரும் சோஷியலிசம் பேசுகிறார்கள்! ::இந்த இருவகை சோஷியலிசப் பேச்சில், எது பொருள் உள்ளது, பயன் தருவது, நேர்மையானது என்பதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி. காடும் மேடும் கழனியாக வேண்டுமானால், கள்ளியும் முள்ளும் களைந்தெறியப்பட்டாக வேண்டும்; மேடு பள்ளம் சமமாக்கப்பட வேண்டும். ஒழுங்குபடுத்தப்பட்ட ‘பள்ளம்’ பயன்படும்; குளமாக, குட்டையாக. சமப்படுத்தப்பட்ட இடம் வயலாகும்; விளைச்சல் இடமாகும். எமது வயலில் ஆங்காங்கு சிறு சிறு பள்ளங்களும் இருக்கும், கேடுகளும் இருக்கும், ஒருபுறம் கள்ளி கிடக்கும், மற்றோர் புறம் புற்றும் இருக்கும் அதிலே பாம்பும் இருக்கும், வேறோர் புறம் புதர் இருக்கும், அதிலே நரியாவது இருக்கும், சேறு இருக்கும், அதிலே எருமை புரளும், இந்தச் சூழ்நிலையிலும், விளைச்சல் மட்டும் அமோகமாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புதமான வயல் எம்முடையது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இன்று உள்ள முறைப்படி சமூகத்தில் பணக்காரர்களும் இருப்பார்கள், அவர்கள் பணம் தேடிட, குவித்திட, சேமித்திட, உரிமையும் இருக்கும்;<noinclude></noinclude> sslagqsggr5m5acjp19q3np2y4dy1ek பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/108 250 639360 1927523 1923638 2026-04-28T02:12:10Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|84||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>அதே போது ஏழைக்கு வாழ்வும் உயரும் என்பது, சோஷியலிசம் அல்ல என்பது மட்டுமல்ல, தம்பி! அது நடைமுறைக்கு வர இயலாததுமாகும். ::ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட வேண்டுமானால், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகத் தேவைப்படும் பணம், நாட்டின் பொது வருவாயில் இருந்துதான் எடுத்தாக வேண்டும். நாட்டின் பொது வருவாயைத் தமக்காக என்று பணக்காரர்கள் மடக்கிக் கொள்ளுகிற வரையில் ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்குத் தேவைப்படும் பணம் கிடைக்காது. ::காங்கிரஸ் ஆட்சியோ பணக்காரர்கள் செல்வம் தேடிடும் உரிமையை இழக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டிருக்கிறது. ::அப்படியானால், ஏழையின் வாழ்வை வளப்படுத்தத் தேவைப்படும் பணம் எங்கிருந்து கிடைக்கும்? ::விளக்கம் காணோம். கேட்டால் கோபம்தான் பொத்துக்கொண்டு வருகிறது. ஏழையை வாழவைக்கப் போகிறோம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறோம். நாட்டிலே பல்வேறு துறைகளிலே உற்பத்தியாகும் செல்வம், அதற்கே பயன்படும் என்று பேசுவது, நடைமுறைக்கு வரவேண்டுமானால், அந்தச் செல்வத்தைச் சிலர் தமதாக்கிக் கொள்ளும் முறை மாற்றப்பட்டாக வேண்டும். அந்த முறையை மாற்றாமல், ஏழையை வாழவைக்கப் போகிறோம் என்று பேசுகின்றனர் காங்கிரசார். இந்தப் பேச்சு புதுமையானது, புரட்சிகரமானது என்றும் புகழ்ந்து பேசிடச் சிலர் உளர்; சீமான் கொட்டாவி விட்டு எழுப்பும் சத்தத்திலேயே ‘சங்கீதம்’ கேட்பதாகத் துதி பாடிக் காசு தேடும் ‘தின்று தீர்த்தான்கள்’ போன்றார்! எல்லோரும் வாழவேண்டும் என்ற பேச்சுக்கா பஞ்சம்! அதை எப்படி நடைமுறையாக்குவது என்பது பற்றிய செயலுக்குத்தானே தொடர்ந்து பஞ்சம் இருந்து வருகிறது. ::Our task is to use rightly and to best advantage her great economic assets not to increase the wealth of the few but to raise the many from poverty to a decent standard of comfort. ::We must lift the poor man of India from poverty to security, from ill-health to Vigour, from ignorance to understanding.{{nop}}<noinclude> <references/></noinclude> 6rhlr6hd9ndi3db5p1gq3s7403bug7b 1927528 1927523 2026-04-28T02:19:39Z YasmineFaisal2 16644 1927528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|84||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>அதே போது ஏழைக்கு வாழ்வும் உயரும் என்பது, சோஷியலிசம் அல்ல என்பது மட்டுமல்ல, தம்பி! அது நடைமுறைக்கு வர இயலாததுமாகும். ::ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட வேண்டுமானால், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகத் தேவைப்படும் பணம், நாட்டின் பொது வருவாயில் இருந்துதான் எடுத்தாக வேண்டும். நாட்டின் பொது வருவாயைத் தமக்காக என்று பணக்காரர்கள் மடக்கிக் கொள்ளுகிற வரையில் ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வாழ்வைச் செம்மைப்படுத்துவதற்குத் தேவைப்படும் பணம் கிடைக்காது. ::காங்கிரஸ் ஆட்சியோ பணக்காரர்கள் செல்வம் தேடிடும் உரிமையை இழக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டிருக்கிறது. ::அப்படியானால், ஏழையின் வாழ்வை வளப்படுத்தத் தேவைப்படும் பணம் எங்கிருந்து கிடைக்கும்? ::விளக்கம் காணோம். கேட்டால் கோபம்தான் பொத்துக்கொண்டு வருகிறது. ஏழையை வாழவைக்கப் போகிறோம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகிறோம். நாட்டிலே பல்வேறு துறைகளிலே உற்பத்தியாகும் செல்வம், அதற்கே பயன்படும் என்று பேசுவது, நடைமுறைக்கு வரவேண்டுமானால், அந்தச் செல்வத்தைச் சிலர் தமதாக்கிக் கொள்ளும் முறை மாற்றப்பட்டாக வேண்டும். அந்த முறையை மாற்றாமல், ஏழையை வாழவைக்கப் போகிறோம் என்று பேசுகின்றனர் காங்கிரசார். இந்தப் பேச்சு புதுமையானது, புரட்சிகரமானது என்றும் புகழ்ந்து பேசிடச் சிலர் உளர்; சீமான் கொட்டாவி விட்டு எழுப்பும் சத்தத்திலேயே ‘சங்கீதம்’ கேட்பதாகத் துதி பாடிக் காசு தேடும் ‘தின்று தீர்த்தான்கள்’ போன்றார்! எல்லோரும் வாழவேண்டும் என்ற பேச்சுக்கா பஞ்சம்! அதை எப்படி நடைமுறையாக்குவது என்பது பற்றிய செயலுக்குத்தானே தொடர்ந்து பஞ்சம் இருந்து வருகிறது. ::Our task is to use rightly and to best advantage her great economic assets not to increase the wealth of the few but to raise the many from poverty to a decent standard of comfort. ::We must lift the poor man of India from poverty to security, from ill-health to Vigour, from ignorance to understanding.{{nop}}<noinclude></noinclude> 6rl7qzgmqiw40pxr01hjpuwd0gafcw6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/109 250 639361 1927524 1923639 2026-04-28T02:14:16Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்.க்கப்பட்டது 1927524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude>::And our rate of progress must no longer be at the bullockcart standard but atleast at the pace of the handy and servicable jeep. இந்தியாவின் பொருளாதார வளத்தை, தக்க முறையில், பலன் தரத்தக்க வகையிலே பயன்படுத்துவதுதான் நமது பணியாகும்—ஒரு சிலருடைய செல்வத்தை அதிகப்படுத்துவதற்காக அல்ல; ஆனால் பெரும்பாலோர்களை வறுமையிலிருந்து எழச்செய்து, வசதியுள்ள, நாகரிகமான வாழ்க்கைத் தரம் பெறும்படிச் செய்வதற்காக. இந்தியாவிலுள்ள ஏழையை வறுமையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு உயர்த்திட வேண்டும்; நலிவை நீக்கி ஆற்றலுள்ளவனாக்கிட வேண்டும்; அறியாமையிலிருந்து தெளிவுள்ள நிலைக்கு உயர்த்த வேண்டும். நமது முன்னேற்ற வேகம் இனி, கட்டை வண்டி அளவினதாக இருந்திடக் கூடாது, குறைந்த பட்சம் கைக்கு அடக்கமான, பயன்படுகிற ஜீப் (மோடார்) வேகத்தின் அளவாவது இருக்கவேண்டும். இலக்கிய நயமே கூட இருக்கிறதல்லவா, தம்பி! இந்தப் பேச்சில். ::இந்தியாவிலே இயற்கையான பொருளாதார வளம் இருக்கிறது. ::அந்த வளத்தைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். ::அப்படிப் பயன்படுத்துவது ஒரு சிலர் செல்வம் சேர்ப்பதற்காக இருக்கக் கூடாது. ::மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அந்தப் பொருளாதார வளர்ச்சி பயன்படவேண்டும். ::ஏழை, வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். ::ஏழையின் வாழ்விலே ஒரு நிம்மதியும், நிலையான தன்மையும் ஏற்படவேண்டும். ::ஏழையின் நலிவு நீங்க வேண்டும்; வலிவு மிக வேண்டும். அறியாமை போகவேண்டும்; தெளிவு பிறந்திட வேண்டும். ::அதற்கான முன்னேற்றம் கட்டை வண்டி வேகத்தில் இருக்கக் கூடாது. ::முன்னேற்ற வேகம், குறைந்தது ஜீப் மோடாரின் வேகத்தின் அளவுக்காவது இருக்கவேண்டும். இப்படியெல்லாம் மெருகு கூட்டிப் பேசமாட்டார் எங்க காமராஜர். மனத்திலே பட்டதை அப்படியே மெருகு கலவாமல், சுத்தமாகச் சொல்லுவார். வேறு சிலர் போல அவர் தமது பேச்சுக்கு அழகு கூட்டிக் கொண்டிருக்க மாட்டார். ஆனால், இப்போது உங்கள் அண்ணாதுரை எடுத்துக் காட்டினானே, இதையேதான் ‘எங்க தலைவர்’ ஒவ்வொருநாளும் சொல்லுகிறார், ஓயாமல்<noinclude> <references/></noinclude> 2ms1f07rd2vynqbily4q1t64z7o4esb 1927527 1927524 2026-04-28T02:17:48Z YasmineFaisal2 16644 1927527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude>::And our rate of progress must no longer be at the bullockcart standard but atleast at the pace of the handy and servicable jeep. இந்தியாவின் பொருளாதார வளத்தை, தக்க முறையில், பலன் தரத்தக்க வகையிலே பயன்படுத்துவதுதான் நமது பணியாகும்—ஒரு சிலருடைய செல்வத்தை அதிகப்படுத்துவதற்காக அல்ல; ஆனால் பெரும்பாலோர்களை வறுமையிலிருந்து எழச்செய்து, வசதியுள்ள, நாகரிகமான வாழ்க்கைத் தரம் பெறும்படிச் செய்வதற்காக. இந்தியாவிலுள்ள ஏழையை வறுமையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு உயர்த்திட வேண்டும்; நலிவை நீக்கி ஆற்றலுள்ளவனாக்கிட வேண்டும்; அறியாமையிலிருந்து தெளிவுள்ள நிலைக்கு உயர்த்த வேண்டும். நமது முன்னேற்ற வேகம் இனி, கட்டை வண்டி அளவினதாக இருந்திடக் கூடாது, குறைந்த பட்சம் கைக்கு அடக்கமான, பயன்படுகிற ஜீப் (மோடார்) வேகத்தின் அளவாவது இருக்கவேண்டும். இலக்கிய நயமே கூட இருக்கிறதல்லவா, தம்பி! இந்தப் பேச்சில். ::இந்தியாவிலே இயற்கையான பொருளாதார வளம் இருக்கிறது. ::அந்த வளத்தைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். ::அப்படிப் பயன்படுத்துவது ஒரு சிலர் செல்வம் சேர்ப்பதற்காக இருக்கக் கூடாது. ::மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அந்தப் பொருளாதார வளர்ச்சி பயன்படவேண்டும். ::ஏழை, வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். ::ஏழையின் வாழ்விலே ஒரு நிம்மதியும், நிலையான தன்மையும் ஏற்படவேண்டும். ::ஏழையின் நலிவு நீங்க வேண்டும்; வலிவு மிக வேண்டும். அறியாமை போகவேண்டும்; தெளிவு பிறந்திட வேண்டும். ::அதற்கான முன்னேற்றம் கட்டை வண்டி வேகத்தில் இருக்கக் கூடாது. ::முன்னேற்ற வேகம், குறைந்தது ஜீப் மோடாரின் வேகத்தின் அளவுக்காவது இருக்கவேண்டும். இப்படியெல்லாம் மெருகு கூட்டிப் பேசமாட்டார் எங்க காமராஜர். மனத்திலே பட்டதை அப்படியே மெருகு கலவாமல், சுத்தமாகச் சொல்லுவார். வேறு சிலர் போல அவர் தமது பேச்சுக்கு அழகு கூட்டிக் கொண்டிருக்க மாட்டார். ஆனால், இப்போது உங்கள் அண்ணாதுரை எடுத்துக் காட்டினானே, இதையேதான் ‘எங்க தலைவர்’ ஒவ்வொருநாளும் சொல்லுகிறார், ஓயாமல்<noinclude></noinclude> 9jhypqaapv8tu0zwd5lme4rvov8ku6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/110 250 639362 1927525 1923641 2026-04-28T02:14:55Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்க்கப்பட்டது 1927525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|86||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>சொல்லுகிறார். ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறார். உள்ளன்போடு சொல்லுகிறார். உணர்ந்து சொல்லுகிறார்—என்றெல்லாம், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கூறக்கூடும். அதிலேயே சிலர், இதுபோல இலக்கிய அழகு சொட்டச் சொட்டப் பேசினாரே, எமது பண்டிதர், அறிவாயா!!—என்று கேள்வியைக் கிளப்புவார்கள். தம்பி! நான் இந்தப் பேச்சை எடுத்துக் காட்டுவது, காமராஜர் ‘கொச்சை’யாகக் கூறுவதை, ஏன் இதுபோல இலக்கிய அழகுடன் கூறக்கூடாது என்று கேட்கவுமல்ல; இலக்கிய நடைப் பேச்சில் பண்டிதர் வல்லவர் என்பதை மறுப்பதற்கும் அல்ல. என் நோக்கம் வேறு. மறுமுறையும், அந்தப் பேச்சைப் படித்துப் பார், தம்பி! அதிலே ஒரு இடத்திலாவது சோஷியலிசம் என்ற வார்த்தை இருக்கிறதா என்று பார்! இல்லையல்லவா!! இப்போது காங்கிரஸ் கூறுவது அவ்வளவும் அந்தப் பேச்சிலே இருக்கிறது. ::பொருளாதார முன்னேற்றம். ::இது பத்துப் பணக்காரர்களுக்கு மட்டும் பயன்படுவதாக இருந்துவிடக் கூடாது, ஏழையை வாழவைப்பதாக இருக்க வேண்டும். ::முன்னேற்றம் வேகமாக இருக்க வேண்டும். இவை யாவும் காங்கிரஸ் பேச்சிலே உள்ளவையே! ::ஆனால் இந்தப் பேச்சிலே சோஷியலிசம் என்ற சொல்லே இல்லை. ::இதே பேச்சைப் பேசிக்கொண்டு, இதுதான் சோஷியலிசம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றனர். ::பேசுவது மட்டுமல்ல, இதைக் காமராஜர் பேசும் போது, கேட்டாலும் கேட்டேன், உன் பேச்சைப் போலக் கேட்கல்லே;—என்றும் பாடுகிறார்கள்! ::இதனைப் புதிய கண்டுபிடிப்பு என்கிறார்கள்! ::இதற்குக் காமராஜர் தந்தையாம்! சிற்பியாம்!! ::ஜனநாயகம் — சோஷியலிசம் என்ற வார்த்தைகளைச் சொல்லத் துணிவின்றி ஜவஹர்லால் நேருகூட இருந்துவிட்டுப் போய்விட்டார். இப்போது ‘நேசப்பிதா’ வந்துதான் இதனைப்பேசுகிறார் என்கிறார்கள். ::அர்ச்சனை செய்வது என்று கிளம்பிவிட்ட பிறகு, ‘சஹஸ்ரநாமம்’ வரையில் போக வேண்டியதுதான்! போகிறார்கள்.{{nop}}<noinclude> <references/></noinclude> o130nonksrls097gb0z2sgfh4i0ts1j 1927526 1927525 2026-04-28T02:15:35Z YasmineFaisal2 16644 1927526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|86||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>சொல்லுகிறார். ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறார். உள்ளன்போடு சொல்லுகிறார். உணர்ந்து சொல்லுகிறார்—என்றெல்லாம், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கூறக்கூடும். அதிலேயே சிலர், இதுபோல இலக்கிய அழகு சொட்டச் சொட்டப் பேசினாரே, எமது பண்டிதர், அறிவாயா!!—என்று கேள்வியைக் கிளப்புவார்கள். தம்பி! நான் இந்தப் பேச்சை எடுத்துக் காட்டுவது, காமராஜர் ‘கொச்சை’யாகக் கூறுவதை, ஏன் இதுபோல இலக்கிய அழகுடன் கூறக்கூடாது என்று கேட்கவுமல்ல; இலக்கிய நடைப் பேச்சில் பண்டிதர் வல்லவர் என்பதை மறுப்பதற்கும் அல்ல. என் நோக்கம் வேறு. மறுமுறையும், அந்தப் பேச்சைப் படித்துப் பார், தம்பி! அதிலே ஒரு இடத்திலாவது சோஷியலிசம் என்ற வார்த்தை இருக்கிறதா என்று பார்! இல்லையல்லவா!! இப்போது காங்கிரஸ் கூறுவது அவ்வளவும் அந்தப் பேச்சிலே இருக்கிறது. ::பொருளாதார முன்னேற்றம். ::இது பத்துப் பணக்காரர்களுக்கு மட்டும் பயன்படுவதாக இருந்துவிடக் கூடாது, ஏழையை வாழவைப்பதாக இருக்க வேண்டும். ::முன்னேற்றம் வேகமாக இருக்க வேண்டும். இவை யாவும் காங்கிரஸ் பேச்சிலே உள்ளவையே! ::ஆனால் இந்தப் பேச்சிலே சோஷியலிசம் என்ற சொல்லே இல்லை. ::இதே பேச்சைப் பேசிக்கொண்டு, இதுதான் சோஷியலிசம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றனர். ::பேசுவது மட்டுமல்ல, இதைக் காமராஜர் பேசும் போது, கேட்டாலும் கேட்டேன், உன் பேச்சைப் போலக் கேட்கல்லே;—என்றும் பாடுகிறார்கள்! ::இதனைப் புதிய கண்டுபிடிப்பு என்கிறார்கள்! ::இதற்குக் காமராஜர் தந்தையாம்! சிற்பியாம்!! ::ஜனநாயகம் — சோஷியலிசம் என்ற வார்த்தைகளைச் சொல்லத் துணிவின்றி ஜவஹர்லால் நேருகூட இருந்துவிட்டுப் போய்விட்டார். இப்போது ‘நேசப்பிதா’ வந்துதான் இதனைப்பேசுகிறார் என்கிறார்கள். ::அர்ச்சனை செய்வது என்று கிளம்பிவிட்ட பிறகு, ‘சஹஸ்ரநாமம்’ வரையில் போக வேண்டியதுதான்! போகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> tjwlr1nd8xn9fz3zoeligw6r5p5sba5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/111 250 639363 1927532 1923645 2026-04-28T02:32:25Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>அதற்காக அல்ல, தம்பி! நான் இதனைச் சொல்வது. நான் காட்டிய பேச்சுதான்; இப்போதும் காங்கிரஸ் கட்சி பேசிவருகிறது. அந்தப் பேச்சிலும் சரி, இப்போது பேசப்படுவதிலும் சரி, பணக்காரர்கள் என்ற ஒரு வர்க்கம் இருக்க அனுமதிக்க மாட்டோம் என்ற திட்டவட்டமான அறிவிப்பு இல்லை. நாட்டு வளம், ஒரு சிலர் செல்வத்தைக் குவித்திடப் பயன்பட விடக்கூடாது; ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அது சோஷியலிசம் அல்ல என்பதால்தான். நான் எடுத்துக் காட்டிய பேச்சில், சோஷியலிசம் என்ற வார்த்தை இணைக்கப்படவில்லை. சிறகை விரித்தாடும் பறவை என்பதற்கும் மயில் என்பதற்கும், வித்தியாசம் இல்லையா, தம்பி! மயில் மட்டுமா சிறகை விரித்தாடுகிறது; வான் கோழி கூடத்தானே! மயில் என்று கூறினால், மயிலாக இருக்கவேண்டுமேயன்றி, சிறகை விரித்தாடுவது மயில், இதோ இதுவும் சிறகை விரித்தாடுகிறது; ஆகவே இதற்கு மயில் என்றே நான் பெயரிடுகிறேன் என்று கூறி ஒரு துணிந்த பேர்வழி, வான்கோழியைக் கொண்டு வந்து காட்டினால், தம்பி! என்ன எண்ணிக் கொள்வது? அந்த நெஞ்சழுத்தத்தை வியந்திடத்தானே வேண்டும்! சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா? நான் எடுத்துக் காட்டிய பேச்சிலே, ஏழையை வாழவைத்தாக வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டிருப்பினும், அதிலே சோஷியலிசம் என்ற வார்த்தை காணப்படாததற்குக் காரணம், இதனைச் சோஷியலிசம் என்று கூறினால், நம்மை விவரமறியாதவன் என்று அறிவாளர் எண்ணி எண்ணி நகையாடுவார்களே என்ற அச்சம், கூச்சம். அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே; அறிந்தோர் தொகை நூற்றில் ஒரு முப்பதே என்பதனாலே! என்று காங்கிரசின் பெருந்தலைவர்கள் துணிந்துவிட்டார்கள்; அதனால்தான் அந்தப் பழைய பேச்சுக்கே ‘சோஷியலிசம்’ என்று பெயரிட்டுவிட்டார்கள். பெயர் முக்கியமல்ல, நோக்கம்தான் முக்கியம் என்று வாதாடுவார் உளர். உண்மை! ஒப்புக் கொள்வோம், தம்பி! ஆனால் ஒரு பொருந்தாத பெயரைத் தேடி எடுத்து ஏன் சூட்டவேண்டும்! அந்தப் பெயர் மக்களைச் சொக்கவைக்கும் என்பதால்தானே! அந்த நோக்கம், நேர்மையானதுதானா? பூவோ பூ!—என்று முருங்கைப் பூவை விற்பாரைப் பார்த்ததுண்டா? பார்த்திருக்க முடியாது! இதோ! விற்கிறார்களே ஜனநாயக சோஷியலிசம்<noinclude></noinclude> s997xul9mmi6fpq0x2uzaqd2gypxhuk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/112 250 639364 1927533 1923643 2026-04-28T02:33:28Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|88||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>என்று — ஐயோ! பாவம்! ஏழையும் வாழட்டும் என்ற பழைய பேச்சை, புதிய ‘லேபிள்’ ஒட்டி. பாரேன்! ::ஏழையை வாழ வைப்பதே எமது நோக்கம் என்ற இந்தப் பேச்சு, புரட்சிப் பேச்சாக, புதுமைப் பேச்சாக, சோஷியலிச கீதமாக விளம்பரப்படுத்தப்படுகிறதே, தம்பி! இதே கருத்தைக் கொண்ட பேச்சு நான் எடுத்துக் காட்டினேனே, அது யாருடையது தெரியுமா? ::ஜவஹர்லால் நேருவுடையதா? ::லால்பகதூர் சாஸ்திரியுடையதா? ::லாலா லஜபதிராயுடையதா? ::மோதிலால் நேருவுடையதா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம் தம்பி! இது எந்தக் காங்கிரஸ் தலைவருடைய பேச்சும் அல்ல; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட எவருடைய பேச்சுமல்ல, சொல்லப்போனால் ‘பாரத புத்திரர்’ எவரும் பேசியது அல்ல; ஏகாதிபத்திய ஏஜண்டு பேச்சு. ஆமாம்! தம்பி! பதறுவர் காங்கிரஸ்காரர். ஏழை வாழவேண்டும். பணக்காரனுக்காக நாட்டுச் செல்வம் இல்லை. ஏழைக்காக, அவனுக்கு நல்வாழ்வு அளிக்க!— என்று பேசும் திறமையும்நேர்மையும், உரிமையும் உணர்ச்சியும் எமக்கன்றோ உண்டு! நாட்டு விடுதலை வீரர்களாம் நாங்கள் மட்டுமே பேசக்கூடிய இந்த உருக்கமான பேச்சை, எழுச்சியூட்டக்கூடிய பேச்சை, ஒரு ஏகாதிபத்திய ஏஜண்டா பேசினான்? யார் அவன்? — என்றெல்லாம் கேட்பர். பதறிப் பயன் இல்லையே! தம்பி! உள்ளபடி, இன்று இவர்கள் பேசும் இதே பேச்சை, இவர்களைப் போல லேபிள் ஒட்டாமல் பேசியவர், இந்தியாவின் வைசிராயாக இருந்தவர்; வெள்ளையர்! 1944-ம் ஆண்டு வைசிராய் பேசிய பேச்சு இது. 1944-ல் — இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்கார வைசிராய் பேசியதை, அதே கருத்தை 1964-ல் போலி லேபிள் ஒன்று ஒட்டி, இவர்கள் பேசுகிறார்கள். இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு கேட்ட அதே பேச்சு, இன்று சோஷியலிசம் என்ற பெயர் ஒட்டப் பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒரு வெள்ளைக்கார ஏஜண்டு, எதைச் சொன்னானோ அதை இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் சொல்லுகிறார்கள்; இதிலே புதுமை இருக்கிறதாம், புரட்சி இருக்கிறதாம்; நம்பச் சொல்லுகிறார்கள்!{{nop}}<noinclude></noinclude> rmht8n1v75ay51ewkelch01qak7x8ge பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115 250 639576 1927534 1927225 2026-04-28T02:35:24Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude> ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி! ராஜான்னு அனுப்பி வைச்சான்! அதுபோல ‘ராஜா’வாகத்தான் முந்திரா அனுபவித்துக் கொண்டிருந்தான்—மோசடி வெளியே வெடித்துக்கொண்டு கிளம்பும் வரையில். சிக்கிக்கொண்டான் சிறை சென்றான்; ஆனால், அவன் குவித்திருந்த செல்வம்? இருக்கிறது! அந்தச் செல்வத்தைப்பற்றி இப்போது ஒரு புதுத் தகவல் கிடைத்து புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முந்திரா, சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை, பல இலட்சக்கணக்கான பவுன்களை, தன் மனைவி பெயரால் இலண்டனில் பாங்கியில் போட்டு வைத்திருப்பதாக ஒரு தகவல் கிளம்பி, அதுபற்றிய துப்பு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலண்டன் பாங்கியில் ஒரு வெள்ளைக்காரன் பெயரால் இலட்சக்கணக்கான பவுன் போடப்பட்டிருக்கிறது; ஆனால், உண்மையில் அந்தப் பணம் அவனுடையது அல்ல; அவன் திருமதி முந்திராவுக்காக, அவர்களின் ஏஜண்டாக அந்தப் பணத்தைப் பரிபாலித்து வருகிறான் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. வழக்கப்படி புலன் விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். நான் தம்பி! இதைச் சொல்லுவதற்குக் காரணம், முந்திரா பற்றிய புதுத் தகவலின் முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த சர்க்கார் அனுமதிக்கும்போது, பணம் குவித்திட என்னென்ன விதமான புரட்டுகள் நடைபெறக்கூடும் என்பதைக் காட்டிடவே இதனைக் கூறினேன். சர்க்கார் பணத்தையும், நம்பிக் கொடுத்தவர்களின் பணத்தையும், ஒன்றைப்போட்டு ஒன்றை இழுத்தும், இதைக் காட்டி அதை வாங்கியும், இப்படிப் பல செப்படி வித்தைகளைச் செய்ய முடிந்தது முந்திராவால்; அதன் காரணமாகப் பலவழிகளிலே பணம்கிடைத்தபடி இருந்தது; பணம், பணத்தை இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தது. {{left_margin|3em|இப்படி ஒரே ஆசாமியிடம் பல தொழில்கள் சிக்கிக்கொண்டால், பல தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அவ்வளவும் ஒரே ஆசாமியிடம் போய்ச் சேர்ந்தால், அவன் கோடீஸ்வரன் ஆவதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கை வறண்டு போகத்தானே செய்யும்!}}<noinclude></noinclude> oixwe8av22hbs9wjenm2oah952kw5lc 1927545 1927534 2026-04-28T02:42:49Z YasmineFaisal2 16644 T 1927545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||91}}{{rule}}</noinclude> ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி! ராஜான்னு அனுப்பி வைச்சான்! அதுபோல ‘ராஜா’வாகத்தான் முந்திரா அனுபவித்துக் கொண்டிருந்தான்—மோசடி வெளியே வெடித்துக்கொண்டு கிளம்பும் வரையில். சிக்கிக்கொண்டான் சிறை சென்றான்; ஆனால், அவன் குவித்திருந்த செல்வம்? இருக்கிறது! அந்தச் செல்வத்தைப்பற்றி இப்போது ஒரு புதுத் தகவல் கிடைத்து புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முந்திரா, சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை, பல இலட்சக்கணக்கான பவுன்களை, தன் மனைவி பெயரால் இலண்டனில் பாங்கியில் போட்டு வைத்திருப்பதாக ஒரு தகவல் கிளம்பி, அதுபற்றிய துப்பு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலண்டன் பாங்கியில் ஒரு வெள்ளைக்காரன் பெயரால் இலட்சக்கணக்கான பவுன் போடப்பட்டிருக்கிறது; ஆனால், உண்மையில் அந்தப் பணம் அவனுடையது அல்ல; அவன் திருமதி முந்திராவுக்காக, அவர்களின் ஏஜண்டாக அந்தப் பணத்தைப் பரிபாலித்து வருகிறான் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. வழக்கப்படி புலன் விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். நான் தம்பி! இதைச் சொல்லுவதற்குக் காரணம், முந்திரா பற்றிய புதுத் தகவலின் முழு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த சர்க்கார் அனுமதிக்கும்போது, பணம் குவித்திட என்னென்ன விதமான புரட்டுகள் நடைபெறக்கூடும் என்பதைக் காட்டிடவே இதனைக் கூறினேன். சர்க்கார் பணத்தையும், நம்பிக் கொடுத்தவர்களின் பணத்தையும், ஒன்றைப்போட்டு ஒன்றை இழுத்தும், இதைக் காட்டி அதை வாங்கியும், இப்படிப் பல செப்படி வித்தைகளைச் செய்ய முடிந்தது முந்திராவால்; அதன் காரணமாகப் பலவழிகளிலே பணம்கிடைத்தபடி இருந்தது; பணம், பணத்தை இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தது. {{left_margin|3em|இப்படி ஒரே ஆசாமியிடம் பல தொழில்கள் சிக்கிக்கொண்டால், பல தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அவ்வளவும் ஒரே ஆசாமியிடம் போய்ச் சேர்ந்தால், அவன் கோடீஸ்வரன் ஆவதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கை வறண்டு போகத்தானே செய்யும்!}}<noinclude></noinclude> tiy6z44hixscrb65jtmb2k9rqlex5xy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116 250 639595 1927535 1927226 2026-04-28T02:36:38Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|92||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இந்த நிலையை அனுமதித்துவிட்டுப் பிறகு, சோஷியலிசம் பேசுவதினால் என்ன பயன்? முந்திராபோல மோசடி செய்யாமலேயேகூட, சட்டப்படி கிடைத்திடும் சலுகைகளைக் கொண்டேகூட, முதலாளிகள் பணத்தை மேலும் மேலும் குவித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இன்றைய காங்கிரஸ் அரசினால் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்டவர்கள் இதுபோலப் பல தொழில்களைச் செய்து பணம் குவித்துக்கொள்ளும் முறையை அமெரிக்காவில், முதாளித்துவ முறை என்கிறார்கள். அதனையே இங்கு காங்கிரஸ் அரசு, ஜனநாயக சோஷியலிசம் என்று பெயரிட்டிருக்கிறது. {{left_margin|3em|சர்க்கார், பொதுத் துறையிலே சில தொழில்களை நடத்துவதைக்கொண்டே இங்கு சோஷியலிசம் இருப்பதாகக் கூறிக் கொள்வது தவறான வாதம்; சொத்தையான தத்துவம். பணம், ஒரு சிலரிடம் போய்க் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷியலிசம் பேசுவது, கன்றுக்குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின்மீது அதன் தோலைப் போர்த்திவைத்து, அதைக் காட்டிப் பசுவை ஏய்த்துப் பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.}} எத்தர்கள், புரட்டர்கள் கிடக்கட்டும்; என்றேனும் ஓர் நாள் அவர்கள் பிடிபட்டுக் கொள்வார்கள். ஆனால் தம்பி! சட்டத்திற்கு உட்பட்ட முறையிலேயே நடந்து பெரும் பொருளைத் திரட்டிக்கொள்ள இடம் இருக்கிறது. அப்படி ஒரு சிலரிடம் தொழில் சிக்கிக் கொள்வதால், உற்பத்தியாகும் செல்வம் அந்த ஒரு சிலரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. பல இலட்சக் கணக்கானவர்கள் ‘கூலி’ மட்டும் பெற்று, குமுறிக்கிடக்கும் நிலையினராகின்றனர்! ஏழை பணக்காரன் வித்தியாசம் விரிவாகிக் கொண்டு வருகிறது. {{left_margin|3em|காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு புதிய பணக்காரர்கள், புதிய புதிய தொழிலதிபர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறார்கள் என்பதை மக்கள் அறியமாட்டார்களா!}} முன்பெல்லாம் தம்பி! ஒரு குடும்பம் பணக்காரக் குடும்பமாக வேண்டுமானால், ஒரு தலைமுறை உழைத்துப் பணம் சேர்த்து, அடுத்த தலைமுறையில்தான், அந்தக் குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகமுடியும். இருபது வருடமாக மண்டி வியாபாரம்; முப்பது வருடமாக நகை வியாபாரம்; பதினைந்து வருடமாக ஜவுளி வியாபாரம்; பாட்டனார் கால முதற்கொண்டு ‘காண்ட்ராக்டு’ த் தொழில்—இப்படித்தான் பணக்காரக் குடும்பங்கள் பற்றிய ‘வரலாறு’ இருக்கும்.<noinclude></noinclude> klajk5qv5ihn47c6gve0il4aef2pu4o 1927544 1927535 2026-04-28T02:42:22Z YasmineFaisal2 16644 1927544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|92||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இந்த நிலையை அனுமதித்துவிட்டுப் பிறகு, சோஷியலிசம் பேசுவதினால் என்ன பயன்? முந்திராபோல மோசடி செய்யாமலேயேகூட, சட்டப்படி கிடைத்திடும் சலுகைகளைக் கொண்டேகூட, முதலாளிகள் பணத்தை மேலும் மேலும் குவித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இன்றைய காங்கிரஸ் அரசினால் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்டவர்கள் இதுபோலப் பல தொழில்களைச் செய்து பணம் குவித்துக்கொள்ளும் முறையை அமெரிக்காவில், முதாளித்துவ முறை என்கிறார்கள். அதனையே இங்கு காங்கிரஸ் அரசு, ஜனநாயக சோஷியலிசம் என்று பெயரிட்டிருக்கிறது. {{left_margin|3em|சர்க்கார், பொதுத் துறையிலே சில தொழில்களை நடத்துவதைக்கொண்டே இங்கு சோஷியலிசம் இருப்பதாகக் கூறிக் கொள்வது தவறான வாதம்; சொத்தையான தத்துவம். பணம், ஒரு சிலரிடம் போய்க் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷியலிசம் பேசுவது, கன்றுக்குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின்மீது அதன் தோலைப் போர்த்திவைத்து, அதைக் காட்டிப் பசுவை ஏய்த்துப் பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.}} எத்தர்கள், புரட்டர்கள் கிடக்கட்டும்; என்றேனும் ஓர் நாள் அவர்கள் பிடிபட்டுக் கொள்வார்கள். ஆனால் தம்பி! சட்டத்திற்கு உட்பட்ட முறையிலேயே நடந்து பெரும் பொருளைத் திரட்டிக்கொள்ள இடம் இருக்கிறது. அப்படி ஒரு சிலரிடம் தொழில் சிக்கிக் கொள்வதால், உற்பத்தியாகும் செல்வம் அந்த ஒரு சிலரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. பல இலட்சக் கணக்கானவர்கள் ‘கூலி’ மட்டும் பெற்று, குமுறிக்கிடக்கும் நிலையினராகின்றனர்! ஏழை பணக்காரன் வித்தியாசம் விரிவாகிக் கொண்டு வருகிறது. {{left_margin|3em|காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு புதிய பணக்காரர்கள், புதிய புதிய தொழிலதிபர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறார்கள் என்பதை மக்கள் அறியமாட்டார்களா!}} முன்பெல்லாம் தம்பி! ஒரு குடும்பம் பணக்காரக் குடும்பமாக வேண்டுமானால், ஒரு தலைமுறை உழைத்துப் பணம் சேர்த்து, அடுத்த தலைமுறையில்தான், அந்தக் குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகமுடியும். இருபது வருடமாக மண்டி வியாபாரம்; முப்பது வருடமாக நகை வியாபாரம்; பதினைந்து வருடமாக ஜவுளி வியாபாரம்; பாட்டனார் கால முதற்கொண்டு ‘காண்ட்ராக்டு’ த் தொழில்—இப்படித்தான் பணக்காரக் குடும்பங்கள் பற்றிய ‘வரலாறு’ இருக்கும்.<noinclude></noinclude> 9aax5labtz5e5h54yra1nj838kcns0l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117 250 639596 1927536 1927228 2026-04-28T02:37:00Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude> காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பணக்காரர்கள் உண்டாகிவிடுகிறார்கள். ஆறு வருடத்திற்கு முன்பு மோடார் துடைத்தவன், ஆண்டவன் தயவாலே, இப்போது அறுபது பஸ்ஸுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள்! ஏழு வருடத்திற்கு முன்னாலே எடுபிடி! ஏழுமலையான் தயவாலே, இப்போது பத்து பங்களாவுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள். {{left_margin|3em|இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பணம், ஒரே ஒரு தொழிலிலே கிடைத்தது அல்ல; ஒரு தொழிலிலே கிடைத்த பணத்தைக் கொண்டு மற்றொரு புதிய தொழில், அதிலே கிடைத்ததைக் கொண்டு மற்றோர் தொழில், இப்படிக் குட்டிபோடுகிறது! இதைக் காங்கிரஸ் அரசு அனுமதிக்கிறது.}} ஒரு தொழிலில்,—பல சரக்கு மண்டி—ஜவுளிக் கடை—காண்ட்ராக்ட்—எதுவாகவேனும் இருக்கட்டும், அது சிறிய அளவிலே துவங்கி, பிறகு அது மெள்ள மெள்ளப் பெரிய அளவாகி, ஒரு இடத்தில் இருப்பது; பிறகு பல இடத்திலே கிளைகள் விட்டு எல்லாவற்றிலும் இருந்து வருவாய் கிடைத்து, மொத்தமாகப் பல இலட்சங்கள் சேருவது ஒரு முறை. உதாரணமாக, கடைவீதிக் கோடியில் இருபது ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் ஜவுளிக் கடை ஆரம்பித்து, பிறகு அது வளர்ந்து, இருநூறு ரூபாய் வாடகையுள்ள புதிய பெரிய கட்டிடத்தில் கடை நடந்து, பிறகு கடைவீதியில் மையமான இடத்தில் புதிய கட்டிடமே சொந்தத்தில் அமைந்து, அதிலே பெரிய அளவிலே கடை நடத்தி, இலாபம் கூடுதலாகக் கிடைக்கக் கிடைக்க வேறு சில ஊர்களிலேயும் ஜவுளிக் கடைகளைத் துவக்கி, இலாபம் சேர்ப்பது ஒருமுறை. அந்தவிதமாக மட்டும் இருந்தால்கூட, ஒரு சிலரிடம் இவ்வளவு வேகமாகப் பணம் சேராது. {{left_margin|3em|முதலில் சிறிய அளவில் ஜவுளிக் கடை பிறகு பெரிய அளவில் ஜவுளிக் கடை பிறகு ஜவுளி தயாரிக்கும் ஆலை. பிறகு ஆலைக்குத் தேவையான பருத்திக்காடு! பிறகு ஆலைக்குத் தேவையான இயந்திர உற்பத்தி. பிறகு இயந்திரத்துக்குத் தேவையான இரும்புத் தொழில். பிறகு இவ்வளவுக்கும் தேவைப்படும் பணத்துக்காக பாங்க்!}} இப்படி, பல கால்களை உண்டாக்கிக் கொள்வது ஒருமுறை.<noinclude></noinclude> 7dza8ob3o8am53nvxhv5gmk78npa7n7 1927543 1927536 2026-04-28T02:41:09Z YasmineFaisal2 16644 1927543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||93}}{{rule}}</noinclude> காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பணக்காரர்கள் உண்டாகிவிடுகிறார்கள். ஆறு வருடத்திற்கு முன்பு மோடார் துடைத்தவன், ஆண்டவன் தயவாலே, இப்போது அறுபது பஸ்ஸுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள்! ஏழு வருடத்திற்கு முன்னாலே எடுபிடி! ஏழுமலையான் தயவாலே, இப்போது பத்து பங்களாவுக்குச் சொந்தக்காரன் என்கிறார்கள். {{left_margin|3em|இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பணம், ஒரே ஒரு தொழிலிலே கிடைத்தது அல்ல; ஒரு தொழிலிலே கிடைத்த பணத்தைக் கொண்டு மற்றொரு புதிய தொழில், அதிலே கிடைத்ததைக் கொண்டு மற்றோர் தொழில், இப்படிக் குட்டிபோடுகிறது! இதைக் காங்கிரஸ் அரசு அனுமதிக்கிறது.}} ஒரு தொழிலில்,—பல சரக்கு மண்டி—ஜவுளிக் கடை—காண்ட்ராக்ட்—எதுவாகவேனும் இருக்கட்டும், அது சிறிய அளவிலே துவங்கி, பிறகு அது மெள்ள மெள்ளப் பெரிய அளவாகி, ஒரு இடத்தில் இருப்பது; பிறகு பல இடத்திலே கிளைகள் விட்டு எல்லாவற்றிலும் இருந்து வருவாய் கிடைத்து, மொத்தமாகப் பல இலட்சங்கள் சேருவது ஒரு முறை. உதாரணமாக, கடைவீதிக் கோடியில் இருபது ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் ஜவுளிக் கடை ஆரம்பித்து, பிறகு அது வளர்ந்து, இருநூறு ரூபாய் வாடகையுள்ள புதிய பெரிய கட்டிடத்தில் கடை நடந்து, பிறகு கடைவீதியில் மையமான இடத்தில் புதிய கட்டிடமே சொந்தத்தில் அமைந்து, அதிலே பெரிய அளவிலே கடை நடத்தி, இலாபம் கூடுதலாகக் கிடைக்கக் கிடைக்க வேறு சில ஊர்களிலேயும் ஜவுளிக் கடைகளைத் துவக்கி, இலாபம் சேர்ப்பது ஒருமுறை. அந்தவிதமாக மட்டும் இருந்தால்கூட, ஒரு சிலரிடம் இவ்வளவு வேகமாகப் பணம் சேராது. {{left_margin|3em|முதலில் சிறிய அளவில் ஜவுளிக் கடை பிறகு பெரிய அளவில் ஜவுளிக் கடை பிறகு ஜவுளி தயாரிக்கும் ஆலை. பிறகு ஆலைக்குத் தேவையான பருத்திக்காடு! பிறகு ஆலைக்குத் தேவையான இயந்திர உற்பத்தி. பிறகு இயந்திரத்துக்குத் தேவையான இரும்புத் தொழில். பிறகு இவ்வளவுக்கும் தேவைப்படும் பணத்துக்காக பாங்க்!}} இப்படி, பல கால்களை உண்டாக்கிக் கொள்வது ஒருமுறை.<noinclude></noinclude> oynyeg9k6yy3il0cyqc2vo38uicj310 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119 250 639597 1927538 1923991 2026-04-28T02:38:19Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude> பேதம் அதிகமாகிவிடும். ஆகவே மகாலிங்கம் அவர்களே! பஸ்தொழிலோடு திருப்திப்படுங்கள்! புதிய புதிய தொழில்களைத் துவக்கி, புதிய புதிய வருவாயைப் பெருக்கிக்கொண்டே போனால், செல்வம் பரவாது! என்று காங்கிரசின் சோஷியலிசம் கூறினால், மகாலிங்கம், இது அக்கிரமம்! இது கொடுமை! என்று கோபித்துக்கொள்ளக்கூடும். எந்தத் தொழிலையும் நடத்தலாம், எவ்வளவு பெரிய தொழிலையும் நடத்தலாம், எந்த இடத்திலும் நடத்தலாம், எல்லாத் தொழிலிலும் கிடைக்கும் இலாபத்தை அடையலாம், ஆனால் ஜனநாயக சோஷியலிசத்தை மட்டும் பேசவேண்டும் என்றுதானே காங்கிரஸ் கட்சி கூறுகிறது. முதலாளிகள் ஏன் தலை அசைக்கமாட்டார்கள்! தாளமே போடுகிறார்கள், இது அல்லவா கீதம் என்று!! ஒரு முதலாளி, பல்வேறு தொழில்களை நடத்துவது மட்டுமல்ல; பல்வேறு பெயர்களில், பல அமைப்புகளை நடத்திக்கொள்ளவும் முடிகிறது. ஒரு பத்து நாட்களாக, பத்திரிகைகளிலே பலமாக அடிபடுகிறதே தம்பி! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி—அதன் கதை அப்படித்தான். பல (கம்பெனிகள்) அமைப்புகள்—தனித் தனிப் பெயருடன்; எல்லாவற்றிலும் இலாபம்; எல்லாம் ஒரே இடத்திற்குச் செல்ல வழி! ஆண்டவனுக்கு ஆயிரம் நாமம்—அர்ச்சிக்க. புதிய முதலாளிகளுக்கு பல கம்பெனிகள், தனித் தனிப் பெயருடன்—எல்லாம் இலாபம் பெற! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி என்ற ஒரே பெயரில் தொழிலை விரிவாக நடத்துவதைவிட, தனித்தனிப் பெயருடன் பல கம்பெனிகளை நடத்துவதிலே பல வசதிகள்; பல இலாபங்கள்; வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அமைச்சர் சுப்பிரமணியம் முதலிலே போட்ட ஒரு உத்தரவைப் பிறகு மாற்றினாரே, அது ஏன்? அது முறையா? என்ற கேள்வி கிளப்பிவிடும் சத்தத்தில், பொது மக்கள்—அதிலும் குறிப்பாக காங்கிரஸ் பேசி வரும் ஜனநாயக சோஷியலிசம் போலியானது என்பதை உணராதிருக்கும் பொதுமக்கள்—ஒரு பேருண்மையை அறிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள். எத்தனை பெரிய அளவிலும், எத்தனை வடிவங்களுடனும் ஒரு முதலாளித்துவ அமைப்பு இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது, இந்த அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி.<noinclude></noinclude> 6esdm06ybb5e02hclr5zharkvnckba6 1927541 1927538 2026-04-28T02:40:26Z YasmineFaisal2 16644 T 1927541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude>பேதம் அதிகமாகிவிடும். ஆகவே மகாலிங்கம் அவர்களே! பஸ்தொழிலோடு திருப்திப்படுங்கள்! புதிய புதிய தொழில்களைத் துவக்கி, புதிய புதிய வருவாயைப் பெருக்கிக்கொண்டே போனால், செல்வம் பரவாது! என்று காங்கிரசின் சோஷியலிசம் கூறினால், மகாலிங்கம், இது அக்கிரமம்! இது கொடுமை! என்று கோபித்துக்கொள்ளக்கூடும். எந்தத் தொழிலையும் நடத்தலாம், எவ்வளவு பெரிய தொழிலையும் நடத்தலாம், எந்த இடத்திலும் நடத்தலாம், எல்லாத் தொழிலிலும் கிடைக்கும் இலாபத்தை அடையலாம், ஆனால் ஜனநாயக சோஷியலிசத்தை மட்டும் பேசவேண்டும் என்றுதானே காங்கிரஸ் கட்சி கூறுகிறது. முதலாளிகள் ஏன் தலை அசைக்கமாட்டார்கள்! தாளமே போடுகிறார்கள், இது அல்லவா கீதம் என்று!! ஒரு முதலாளி, பல்வேறு தொழில்களை நடத்துவது மட்டுமல்ல; பல்வேறு பெயர்களில், பல அமைப்புகளை நடத்திக்கொள்ளவும் முடிகிறது. ஒரு பத்து நாட்களாக, பத்திரிகைகளிலே பலமாக அடிபடுகிறதே தம்பி! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி—அதன் கதை அப்படித்தான். பல (கம்பெனிகள்) அமைப்புகள்—தனித் தனிப் பெயருடன்; எல்லாவற்றிலும் இலாபம்; எல்லாம் ஒரே இடத்திற்குச் செல்ல வழி! ஆண்டவனுக்கு ஆயிரம் நாமம்—அர்ச்சிக்க. புதிய முதலாளிகளுக்கு பல கம்பெனிகள், தனித் தனிப் பெயருடன்—எல்லாம் இலாபம் பெற! அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி என்ற ஒரே பெயரில் தொழிலை விரிவாக நடத்துவதைவிட, தனித்தனிப் பெயருடன் பல கம்பெனிகளை நடத்துவதிலே பல வசதிகள்; பல இலாபங்கள்; வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அமைச்சர் சுப்பிரமணியம் முதலிலே போட்ட ஒரு உத்தரவைப் பிறகு மாற்றினாரே, அது ஏன்? அது முறையா? என்ற கேள்வி கிளப்பிவிடும் சத்தத்தில், பொது மக்கள்—அதிலும் குறிப்பாக காங்கிரஸ் பேசி வரும் ஜனநாயக சோஷியலிசம் போலியானது என்பதை உணராதிருக்கும் பொதுமக்கள்—ஒரு பேருண்மையை அறிந்துகொள்ள முடியாமலிருக்கிறார்கள். எத்தனை பெரிய அளவிலும், எத்தனை வடிவங்களுடனும் ஒரு முதலாளித்துவ அமைப்பு இருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது, இந்த அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி.<noinclude></noinclude> 58173958m4xpychrakcddbef5c0w3m6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120 250 639598 1927539 1924729 2026-04-28T02:38:49Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|96||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி! இந்தக் கம்பெனி 1910-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று எஃகு வியாபாரத்தில் மட்டும் ஈடுபட்டுள்ள இதன் அமைப்புகளின் எண்ணிக்கை 20. இந்த இருபதும், முதலாளிகளைக் கொழுக்க வைக்கவே ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்களே வெள்ளைக்கார அரசை—அப்போது ஏற்பட்டவை அல்ல. அப்போது, அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மட்டுந்தான். மற்ற இருபது கம்பெனிகளும் காங்கிரஸ் ஆட்சியின்போது—1948-லிருந்து ஏற்பட்டவை. பொதுக் கணக்குக் குழுவினர் கண்டறிந்து வெளியிட்ட தகவலைத் தருகிறேன்—எந்த விதமான முதலாளித்துவ அமைப்பு, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சொல்லு தம்பி! பொங்கி எழுகின்ற காங்கிரஸ் நண்பர்களை. {| | || || || வருடம் |- |1. ||அமீர்சந்த் பியாரிலால் || ||1910 |- |2. ||சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் || ||1948 |- |3. ||சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் || ||1948 |- |4. ||அசோசியேடட் ஒயர்ஸ் கண்டக்டர்ஸ் கம்பெனி || ||— |- |5. ||அபிஜே பிரைவேட் லிமிடெட் || ||1959 |- |6. || அபிஜே கம்பெனி, கல்கத்தா || ||1962 |- |7. ||அபிஐே ஸ்டீல் காஸ்டிங், ஜலந்தர் || ||தகவல் இல்லை |- |8. ||ஸ்டீல் கிரீட் பிரைவேட் லிமிடெட் || || |- |9. ||ஸ்டீல் ரோலிங் மில்ஸ், கல்கத்தா || ||1963 |- |10. ||காஷ்மீர் சிராமிக்ஸ் || ||1961 |- |11. ||ஓரியண்டல் ஸ்பூன்பைப் கம்பெனி || ||1961 |- |12. ||ஏரான் ஸ்டில் ரோலிங் மில்ஸ், ஐலந்தர் || ||1957 |- |13. ||ஏரான் ஸ்டீல் ரோலிங் மில்ஸ், பம்பாய் || ||தகவல் இல்லை |- |14. ||இன்டர் நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ், டில்லி || || ❠ |- |15. ||இந்தியா என்ஜினிரிங் ஒர்க்ஸ், கல்கத்தா || || ❠ |- |16. ||மெட்டல் இம்போர்ட், கல்கத்தா || || ❠ |- |17. ||அமீர் சந்த் பியாரிலால் லிமிடெட் || ||1963 |- |18. ||சுரேந்திரா என்ஜினியரிங் ஒர்க்ஸ் || ||1960 |- |19. ||அபிஜே பிரைவேட் லிமிடெட், கல்கத்தா || || |- |20. ||அமீன்சந்த் பியாரிலால் டின் கன்ட்டெயினர் லிமிடெட் || || |- |21. ||அபிஜே ஸ்டீல் ஒர்க்ஸ், ஜம்மு. |- |} டில்லி, பம்பாய், கல்கத்தா, ஜம்மு, ஜலந்தர் இப்படிப் பல ஊர்களில்!<noinclude></noinclude> 7t10dri7gct4ays35dzz5g69oc8o6f6 1927540 1927539 2026-04-28T02:39:57Z YasmineFaisal2 16644 1927540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|96||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இந்தக் கம்பெனி 1910-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று எஃகு வியாபாரத்தில் மட்டும் ஈடுபட்டுள்ள இதன் அமைப்புகளின் எண்ணிக்கை 20. இந்த இருபதும், முதலாளிகளைக் கொழுக்க வைக்கவே ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்களே வெள்ளைக்கார அரசை—அப்போது ஏற்பட்டவை அல்ல. அப்போது, அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மட்டுந்தான். மற்ற இருபது கம்பெனிகளும் காங்கிரஸ் ஆட்சியின்போது—1948-லிருந்து ஏற்பட்டவை. பொதுக் கணக்குக் குழுவினர் கண்டறிந்து வெளியிட்ட தகவலைத் தருகிறேன்—எந்த விதமான முதலாளித்துவ அமைப்பு, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சொல்லு தம்பி! பொங்கி எழுகின்ற காங்கிரஸ் நண்பர்களை. {| | || || || வருடம் |- |1. ||அமீர்சந்த் பியாரிலால் || ||1910 |- |2. ||சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் || ||1948 |- |3. ||சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் || ||1948 |- |4. ||அசோசியேடட் ஒயர்ஸ் கண்டக்டர்ஸ் கம்பெனி || ||— |- |5. ||அபிஜே பிரைவேட் லிமிடெட் || ||1959 |- |6. || அபிஜே கம்பெனி, கல்கத்தா || ||1962 |- |7. ||அபிஐே ஸ்டீல் காஸ்டிங், ஜலந்தர் || ||தகவல் இல்லை |- |8. ||ஸ்டீல் கிரீட் பிரைவேட் லிமிடெட் || || |- |9. ||ஸ்டீல் ரோலிங் மில்ஸ், கல்கத்தா || ||1963 |- |10. ||காஷ்மீர் சிராமிக்ஸ் || ||1961 |- |11. ||ஓரியண்டல் ஸ்பூன்பைப் கம்பெனி || ||1961 |- |12. ||ஏரான் ஸ்டில் ரோலிங் மில்ஸ், ஐலந்தர் || ||1957 |- |13. ||ஏரான் ஸ்டீல் ரோலிங் மில்ஸ், பம்பாய் || ||தகவல் இல்லை |- |14. ||இன்டர் நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ், டில்லி || || ❠ |- |15. ||இந்தியா என்ஜினிரிங் ஒர்க்ஸ், கல்கத்தா || || ❠ |- |16. ||மெட்டல் இம்போர்ட், கல்கத்தா || || ❠ |- |17. ||அமீர் சந்த் பியாரிலால் லிமிடெட் || ||1963 |- |18. ||சுரேந்திரா என்ஜினியரிங் ஒர்க்ஸ் || ||1960 |- |19. ||அபிஜே பிரைவேட் லிமிடெட், கல்கத்தா || || |- |20. ||அமீன்சந்த் பியாரிலால் டின் கன்ட்டெயினர் லிமிடெட் || || |- |21. ||அபிஜே ஸ்டீல் ஒர்க்ஸ், ஜம்மு. |- |} டில்லி, பம்பாய், கல்கத்தா, ஜம்மு, ஜலந்தர் இப்படிப் பல ஊர்களில்!<noinclude></noinclude> d8swzfl68jb37kmxzbt6z3pbvm3wioh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121 250 639599 1927554 1924730 2026-04-28T02:59:16Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>எஃகு ஆலை, குழாய் தயாரிப்புத் தொழில், வேலைப்பாடுள்ள மண்பாண்டத் தொழில், இப்படிப் பல வகை. முதலாளியின் பெயரில், பொது மக்களிடம் பங்குகள் வாங்கி நடத்தப்படும் கம்பெனி, குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பங்குத் தொகை வாங்கி நடத்தப்படும் கம்பெனி இப்படிப் பலமுறை. எல்லாவற்றிலும் கிடைக்கும் இலாபம், ஒரே இடத்திற்குப் போய்ச் சேருவதற்கான வாய்ப்பு. ::இதை அனுமதித்துக் கொண்டு, சோஷியலிசம் பேசுவதிலே, பொருள் இருக்கிறதா? நேர்மை இருக்கிறதா? கேட்டால், கோபம் வருகிறதே! இத்தனை தொழில் அமைப்புகள் என்றால், இத்தனை வருவாய்த் துறைகள் என்று பொருள். இத்தனை வருவாய்த் துறையும் ஒரே இடத்திற்கு என்றால், பணம் அங்கு குவிவதும், பிற இடங்கள் வறண்டு போவதும் இயல்பு தானே? எப்படி இந்த நிலைமையை வைத்துக் கொண்டு ஏழை பணக்காரன் வித்தியாசத்தை ஒழிப்பது? இத்தனைத் தனித் தனி அமைப்புகள், ஒரே முதலாளியிடம் இருப்பதிலே வேறோர் வசதி கிடைக்கிறது. சர்க்காரிடம், பர்மிட் லைசென்சு, வியாபார ஒப்பந்தம், தரகு இவைகளைப் பெறும்போது, ஒவ்வொன்றின் பேராலும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு அமைப்பு ஏதாவது தவறு நடத்தி அது கண்டுபிடிக்கப்பட்டு, சர்க்காரின் கோபம் பாய்ந்தால், மற்ற அமைப்புகளின் பேரால், சர்க்காரிடம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். விளக்கிட விளக்கிட விதவிதமான ஆதாயம், இதன் பலனாகக் கிடைப்பது புரியும். சர்க்கார், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவே இல்லையே என்று கேட்கிறாய். கட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று பேசுகிறார்களே, இதன் பொருள் என்ன என்று அறிந்துகொள்ள ஆசைப்படுகிறாய். ::காங்கிரஸ் அரசு தொழில் நடத்தும் அனுமதியில், ஏற்றுமதி இறக்குமதி நடத்துவதற்கான அனுமதியில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது. ::அதாவது, எம்மிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இன்ன உற்பத்தித் தொழிலில் ஈடுபடலாம், இன்ன சரக்கை ஏற்றுமதி செய்யலாம், இன்ன சரக்கை இறக்குமதி செய்யலாம் என்ற கட்டுப்பாட்டை சர்க்கார் வைத்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> mmig0jx7m2t3o4izyiubr3m6dk3jh8g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122 250 639600 1927553 1927231 2026-04-28T02:57:07Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|98||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஆனால் இன்ன அளவுக்கு மேல், இன்ன வகைகளுக்கு மேல், ஒருவர் தொழில் நடத்தி விரிவாக்கி முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை அமைத்துக் கொள்ளக்கூடாது என்ற தடையோ, நிபந்தனையோ, கட்டுப்பாடோ இல்லை! எம்மிடம் அனுமதி பெறுக!—என்கிறார்கள்! முதலாளிகள் ‘அனுமதி’யைப் பெற்றுக் கொள்கிறார்கள்! அதுவேகூட அவர்களுக்கு இலாபமாக முடிகிறது. அதே தொழிலில் பலர் ஈடுபட்டால், அந்தத் தொழில் மூலம் கிடைக்கும் இலாபம் பல பேர்களுக்குப் பங்கு போடப்பட்டு விடும்; ஒருவருக்கும் கொழுத்த இலாபம் கிடைக்காது. சர்க்காரின் அனுமதியைப் பெற்றவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யலாம், ஏற்றுமதி இறக்குமதி நடத்தலாம் என்று இருப்பதால், அதற்கான சர்க்கார் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடிந்த ‘பாக்கியவான்கள்’, மற்றவர்களுடைய போட்டித் தொல்லை இல்லாமல், இலாபம் முழுவதையும் அவர்களே பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது, தம்பி! பாட்டு ஒன்று குறிப்பிட்டேனே, அதுபோல, சர்க்கார் அனுபவி ராஜா என்று சிலரை அனுப்பி வைக்கிறார்கள்!! சர்க்காரிடம் சட்டம் இருக்கிறது—சுமை சுமையாக! போலீசும் பட்டாளமும் இருக்கிறது—பலம் பொருந்தியதாக!}} ஆனால், அமீர் சந்த்களிடம் பணத் தோட்டம் இருக்கிறது. அதனுடைய பொலிவு இருக்கிறதே, மயக்கும்: வலிவு இருக்கிறதே, மிரட்டும்; சட்டமே வளையும்; சர்க்காரே மலைக்கும்! முதலாளித்துவ அமைப்பு இவ்வளவு விரிவாகவும் விழுதுவிட்ட தன்மையிலும் வளரவளர, அதனை அடக்கிடும் ஆற்றலை சர்க்கார் மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக இழந்துகொண்டேதான் வரும். தவறுகள் செய்தால், விடமாட்டோம், தண்டிப்போம் என்கிறார்கள். தவறுகள் நடந்தன; கண்டனமும், தண்டனையும் தரப்பட்டது; ஆனால் அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு அவ்வளவையும் தாங்கிக்கொள்ள முடிந்தது; தகர்ந்து போய்விடவில்லை: மூல பலம் அப்படி அமைந்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட்ட கம்பெனிகள் தவறு செய்தால், சர்க்கார் அவைகளை ‘கருப்புக் கோடிட்டு’த் தண்டிக்க முறை இருக்கிறது; அதாவது அந்தக் கம்பெனிகளுடன் சர்க்கார் எந்த வியாபார ஒப்பந்தமும் செய்து கொள்ளாது—ஒருவன் பலமுறை<noinclude></noinclude> 6669njz3o9e8q4ya4j2wropz2ffk1yy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124 250 639602 1927555 1927028 2026-04-28T03:00:13Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|100||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த அனுமதிப்போமே தவிர, ஏராளமாக இலாபம் குவித்துக் கொழுக்க விடமாட்டோம் என்கிறார்கள், தனிப்பட்டவர்கள் நடத்தும் தொழிலில் தவறு நடந்தால், விடமாட்டோம் என்று வீரம் பேசுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். மறுபடியும் ஒரு தடவை, அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு பற்றி நான் தந்துள்ள தகவல்களைப் படித்துப் பார்த்து விட்டு பண்பு கெடாத காங்கிரஸ்காரரிடம் படித்துக்காட்டி அவரையே நியாயம் கூறச் சொல்லு; இதுவா சோஷியலிசம் கொண்டு வரும் இலட்சணம் என்பது பற்றி. அடக்கிவிடுவோம், ஒடுக்கி விடுவோம் என்று வீரம் பேசுகிறார்கள் தம்பி! அதைக்கேட்டு உண்மையான காங்கிரஸ் பற்றுக் கொண்டவர்கள் ஓரளவு மயங்கிப் போகிறார்கள். ஆனால் இவ்வளவு முறை கேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டு, சர்க்கார் சூடிட்டும், அமீர்சந்த் பியாரிலால் எனும் அமைப்பு எத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? சர்க்காரின் அனுமதியில்லாமல், ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட முடியாது என்பதை அறிவாய். அந்தத் துறையில் இந்த அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு. 1959ல் இறக்குமதியில் 100-க்கு 9 என்ற அளவு பங்கும், ஏற்றுமதியில் 100-க்கு 12 என்ற அளவு பங்கும் பெற்றிருந்தது. {{left_margin|3em|ஆனால் 1960-ல், இதே கம்பெனி, இறக்குமதியில் 100-க்கு 59 என்ற அளவிலும், ஏற்றுமதியில் 100-க்கு 60 வளர்ச்சியை! எந்த அமைப்பு? பல அமைச்சரகங்களால், பலமுறை முறைகேடாக நடந்து கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, முகத்தில் கரி பூசப்பட்ட அமைப்பு!}} முகத்திலே கரி பூசுவதுபோல இந்த அமைப்பு, முறைகேடாக நடந்து கொண்டதற்காக, இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று சூடிட்டிருந்தும், எப்படி இந்த அமைப்பு இந்த வேகமான வளர்ச்சியைப் பெற முடிந்தது என்று கேட்கத் தோன்றும். தம்பி! அந்த வேடிக்கையையும் சொல்லுகிறேன் கேளேன். 1954 ஆகஸ்ட்—செப்டம்பரில், அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு. முறைகேடாக நடந்ததற்காக, வீட்டமைப்பு அமைச்சரகம்! சூடிட்டது, இந்த அமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தமும் கொள்ளக்கூடாது என்று. முதலாளி திணறிப் போயிருப்பார் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்! பணம், தம்பி! பணம்; கோடி கோடியாக! தந்திரம் தன்னாலே வருமே!<noinclude></noinclude> gylrt1swwqzspb1i4q74psquqsufz3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 639603 1927556 1927233 2026-04-28T03:00:35Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude> அமீர்சந்த் பியாரிலால் என்ற பெயருடைய அமைப்பின் மீதுதானே நடவடிக்கை! இருக்கட்டுமே என்று கூறிவிட்டு, முதலாளி ஒரு புன்னகை காட்டுகிறார்; திட்டம் தயாராகிறது. சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய அமைப்பு துவக்கப்படுகிறது. சர்க்காரின் கோபப் பார்வை அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பின் மீதுதானே! இது புத்தம் புதிது! சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்!! 52 காண்ட்ராக்டுகள் ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன சுரேந்திராவுக்கு!! எஃகு இறக்குமதி செய்வதற்கான அனுமதி! தொகை? 23 கோடி ரூபாய். சுரேந்திரா ஓவர்சீஸ் பிரைவேட் கம்பெனி எவருடையது? பொதுக்கணக்குக் குழு தெரிவிக்கிறது, அதுவும் அமீர்சந்த் பியாரிலால் அமைப்புக்கு உட்பட்டதுதான் என்று. உரையாடல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாரேன், தம்பி! சுவையாக இருக்கும். {{left_margin|3em|எஃகு இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும். யாருக்கு? உனக்கா? முறைகேடாக நடந்ததற்காகக் கரி பூசப்பட்ட கம்பெனிக்கா? என்ன துணிவு! ஐயையே! அனுமதி யார் கேட்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள்? கரி பூசப்பட்டது யார்மீது? அமீர்சந்த் பியாரிலால் கம்பெனி மீது! ஆமாம்! அந்த அமைப்பின்மீது தான். இது, அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு அல்ல. இது சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட்! இந்த அமைப்பின்மீது மாசு மறுவு கிடையாது. புதிய கம்பெனியா? ஆனால் இரண்டும் ஒன்று அல்லவா? சட்டப்படி, இது ஒரு தனிக் கம்பெனி! இந்த அமைப்பிற்கு, இறக்குமதி அனுமதி தரமுடியாது என்று மறுக்க காரணம் ஒன்றும் கிடையாது...ஆகவே...}} இப்படித்தான் தம்பி! சர்க்கார் சூடிட்டாலும், இந்த அமைப்பு வளர்ச்சி அடைந்திட முடிந்தது. இவ்விதமாக, பணபலத்தாலும் சட்டத்தின் சந்து பொந்துகளிலே நுழைந்து தப்பித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தாலும் பல அமைப்புகள் இன்று, அரசையே ஆட்டிப் படைக்கத்தக்க அளவு வலிவு பெற்று<noinclude></noinclude> 5xkhf8w65ts3a6cznzvefh7zbjf5zn5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126 250 639604 1927557 1923997 2026-04-28T03:01:00Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1927557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|102||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> விளங்குகின்றன. பாட்டாளிகளின் உழைப்பினாலும் பொதுமக்கள் விலை கொடுத்துப் பண்டம் பலவற்றை வாங்குவதாலும் குவியும் செல்வத்தை, இத்தகைய அமைப்புகளின் அதிபர்கள் தமதாக்கிக் கொள்கின்றனர். நாட்டிலே வளர்ச்சியேவா இல்லை; செல்வம் பெருகவே இல்லையா? என்று சிறிதளவு கோபத்துடன் கேட்கின்றனர், காங்கிரசிலே உள்ள நல்லவர்கள். வளர்ச்சியும் செல்வப் பெருக்கமும் நிச்சயம் ஏற்பட்டுள்ளன; மறுப்பார் இல்லை. ஆனால் வளர்ச்சியால் வசதி பெற்றவர்கள் யாரார்? செல்வப்பெருக்கம் எவரிடம் போய்ச் சேர்ந்தது என்பதுதான் தம்பி! நாம் கேட்கும் கேள்வி. மான் எங்கேயும் போய்விடவில்லை, வேங்கையின் வயிற்றிலேதான் இருக்கிறது என்று கூறுவதுபோல, செல்வப் பெருக்கம் எங்கேயும் போய்விடவில்லை முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்று கூறிடும் துணிச்சலே பிறந்திருக்கிறது சில அமைச்சர்களுக்கு. தம்பி! 1949—50-ல் சுரங்கத் தொழில் மூலம் உற்பத்தியான செல்வம் 110 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதே துறையில் 1960—61-ல் 183 கோடி ரூபாய் அளவு கிடைத்திருக்கிறது. வளர்ச்சி! சந்தேகமில்லை! புலியின் வயிறு பெருத்திருக்கிறது! உள்ளே புள்ளிமான் குட்டி!! தேயிலைத் தொழிலின் மூலம், 1949 — 50-ல் 133 கோடி, 1960 — 61-ல் 4003 கோடி! கப்பல் துறை மூலம் 1949—50ல் 18 கோடி, 1960—61-ல் 135 கோடி! பாங்கித் தொழில், இன்ஷூரன்ஸ் தொழில் மூலம் 1949—50-ல் கிடைத்தது 68 கோடி, 1960—61-ல் கிடைத்தது 138 கோடி. தம்பி! மொத்தத்தில் பல்வேறு துறைகளின் மூலம் உற்பத்தியான செல்வம், 1949—50-ல் 1662 கோடி. 1960—61-ல் 4741 கோடி!! இந்தச் செல்வம், சமூகத்தில் சீராகப் பரவி இருந்தால் மக்களின் வாழ்க்கை இத்தனைக் சீர்கேடாகவா இருக்கும்! இந்தச் செல்வத்தில் மிகப் பெரும் பகுதி, நிபுணர்கள் கூறுகிறார்கள்—காங்கிரஸ் தலைவர்களும் மறுக்கவில்லை-ஏழைக்கு வந்து சேரவில்லை—பணக்காரனை மேலும் பணக்காரனாக்கி இருக்கிறது. இந்தச் செல்வத்திலே பெரும் பகுதி, இந்தியாவிலே ஒரு நூறு பேர்களிடம்—கோடீஸ்வரர்களிடம்—போய்க் குவிந்திருக்கிறது என்ற உண்மையை மறுப்பவர் எவரும் இல்லை.<noinclude></noinclude> ay2qbe3c60rzjuoeeyvwyjzqcvewolq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295 250 639695 1927635 1922369 2026-04-28T10:07:46Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1927635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 271 கட்சியின் சாதனைகள் பற்றிப் பெருமிதத்துடன் பேசி ஓட்டுக் கேட்பதற்குப் பதிலாக, வேட்பாளர்களின் நாட்டுப் பற்று. தியாக உள்ளம். மக்கள் தொடர்பு, ஆகியவை குறித்து எடுத்துக் கூறி ஒட்டுக் கேட்பதற்குப் பதிலாக, இவர் இந்தப் பகுதியில் மிக்க செல்வாக்குள்ளவர். பெரிய நிலச்சுவான்தாரர். கோயில் தர்மகர்த்தா சத்திரம் சாவடி கட்டியவர். ஆயிரம் பேர்களுக்குப் பிழைப்பு தருகிறார்; தமது தொழிலகங்களில். இவருடைய பேச்சைத் தட்டி நடந்திடுவோர் எவரும் இந்தப் பக்கத்திலே கிடையாது. இவர்தான், இங்கு ஜாதித் தலைவர்-குலத் தலைவர்-பெரிய தனக்காரர். இவர் பாளையக்காரர் பரம்பரை, ஆள் அம்பு இவரிடம் ஏராளம். என்ற இவ்விதமான நாமாவளி பாடி ஓட்டுக் கேட்டிடலாயினர். காங்கிரசுக் கட்சி அதற்குள் அந்த விதமாக, பெரிய புள்ளிகளிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது. தம்பி! கோவை சுற்றுப் பயணத்தின்போது கேள்விப்பட்டேன். இப்போதைய அமைச்சர் இருக்கிறாரே. பழைய கோட்டை பட்டக்காரர்- காங்கிரசல்லவா அவர்-அவருடைய, தகப்பனார் காங்கிரசை எதிர்த்துத் தேர்தலிலே நின்று தமது செல்வம், செல்வாக்கு, ஆள்கட்டு எல்லாவற்றையும் காட்டியும், குட்டபாளையம் பெரியசாமி என்ற காங்கிரஸ்காரரால் தோற்கடிக்கப் பட்டார். பெரியசாமி என்பவர் சிறு நிலச்சுவான்தாரர்தானாம். காங்கிரஸ் என்ற அமைப்புகள் அன்று இருந்து வந்த அப்பழுக்கற்ற செல்வாக்கைக் காட்டுகிறது அந்த நிகழ்ச்சி. இன்று அவர் திருக் குமாரர், காங்கிரசின் மீது பழிதீர்த்துக் கொண்டுவிட்டார்! எந்தக் காங்கிரஸ் என் தகப்பனாரைத் தோற்கடித்ததோ அந்தக் காங்கிரஸ் இன்று என் அரண்மனைத் தாழ்வாரத்தில்! அதன் தலைவர்கள். என் எதிரில், சிரித்த முகத்துடன்! அதன் தொண்டர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர!<noinclude></noinclude> 3ogbwuntf7f3rdkdig8x80jn5gugi8t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296 250 639696 1927644 1922370 2026-04-28T10:17:13Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1927644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|272||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>272 'காஞ்சி ' இதழில் இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப்படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்| தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும்போது, தூக்கிவர ஆளா அனுப்பவேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார், மன்றாடியார்! தம்பி/ இடையிலே காங்கிரசுக் கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்து விட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகி விட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று, சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார். ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு. வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்திவிட்டது. மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில் அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்து விட்டிருக்கிறது. இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு. பணம் ஜாதிச் செல்வாக்கு துணிந்த நடவடிக்கை என்பவைகளைக் கொண்டது. தூக்கிவாடா அவளை| கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை!-என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள் இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக் கொண்டுவிட்டதால். ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு, தேர்தல் வெற்றியிலே நம்பிக்கை கொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது.<noinclude></noinclude> pc7pccj2jwrn5ywd02oackt99v4b0sy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326 250 639725 1927615 1925485 2026-04-28T09:41:55Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|302||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஒரே தொகுதிக்காக இரண்டு மூன்று வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்; இது சிக்கலுள்ள பிரச்சினையாகக் கூடும் என்பதை நான் மறைக்க விரும்பவில்லை. இந்த சிக்கலிலே, இறுதியான முடிவினை நானே தெரிவிக்க வேண்டுமெனக் கூறிடும்போது, மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவுங்கூட இருக்கிறது. என்றாலும், பணிவன்புடன் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், நிலைமையையும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பையும் நன்கு எண்ணிப் பார்த்து, என்னுடைய 'முடிவு' வரட்டும் என்று, என் மீதே முழுப் பளுவையும் போட்டு விடாமல், வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பினை உணர்ந்து, தாமாகவே ஒரு சமரசம் கண்டு, ஒருமித்த முடிவு காணவேண்டும் என்று பணிவன்புடன் அவர்களை விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மிக அருமையாக அமைத்துள்ள ஒரு அணியினை, நமக்கென்று ஏற்பட்டு விட்டுள்ள விருப்பத்தை மட்டுமே பெரிதாகக் கருதி, உடைபடும்படி விட்டுவிடக் கூடாது என்பதனை நினைவுபடுத்துகிறேன். அவ்விதம் நமது அணி உடைபட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என்பதையும் நாம் உணர வேண்டும். ஆகவே நமது நோக்கம், நமது விருப்பம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதைக் காட்டிலும், நமக்காக உருவாகியுள்ள அணி, எந்தக் காரணத்தாலும் உடைபடாமல் இருக்கிறதா என்பதிலே தான் இருந்திட வேண்டும்.}} இந்த நேர்த்தியான நிலையை காண்பதற்காக நம்மிலே ஒவ்வொருவரும் தனது நலம், தனது வலிவு, தனது நோக்கம் என்பவைகளைப் பின்னணிக்குத் தள்ளிவைத்து, கழகத்தின் பொதுநலனை முன்னணியில் கொலுவிருக்கச் செய்திட வேண்டும். நமது கழகத் தோழர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள், அதிலும் வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்திருப்பவர்கள், இளமைப் பருவத்தினர், எளிதிலே கோபதாபத்துக்குத் தம்மை ஒப்படைத்து விடக்கூடிய நிலையினர். ஆகவே அவர்கள் தமது பருவத்திற்கு ஏற்பட்டுள்ள இயல்பினையும் மீறிய, பொறுமை உணர்ச்சியையும், பொறுப்பு உணர்ச்சியையும் காட்டித் தீரவேண்டும். {{left_margin|3em|மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆங்காங்கே தோன்றிடும் சிக்கல்களை அந்த அந்த இடத்திலேயே நீக்கிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாக்கி, உருட்டித் திரட்டி ஓர் பேருருவாக்கி, என் முன் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்.}}<noinclude></noinclude> 6ejt8r4ngmlzyvcgg8m0qwznmkczcu2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327 250 639726 1927616 1925798 2026-04-28T09:43:29Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude>{{left_margin|3em|எனக்குள்ள பொறுத்துக் கொள்ளும் உணர்ச்சி வலிவுள்ளது என்றாலும், சிக்கல்களை அறுத்து, எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தக்க தீர்வு அளிப்பதற்கான ஆற்றல் பெரிய அளவில் என்னிடம் இல்லை. எனக்கென்று சொந்தத்தில் விருப்பு வெறுப்பு அதிக அளவிலே இல்லை என்றாலும், உடன் இருப்போரின் விருப்பு வெறுப்புகளை ஒரே அடியாகத் தள்ளிவிட்டு 'முடிவு' காணும் 'கண்டிப்பு' என்னிடம் போதுமான அளவு இருக்கிறதா என்பதிலே எனக்கே நிரம்ப ஐயப்பாடு உண்டு, ஆகவே, சிக்கல் எழும் ஒவ்வொரு கட்டத்திலும், அந்தந்த வரிசையில் உள்ள பொறுப்புள்ள கழகத் தோழர்கள், அந்தச் சிக்கல்களை நீக்குவதற்கான காரியத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றிட வேண்டும். எல்லாம் என்னிடம் விட்டுவிடலாம் - என்ற பேச்சிலே எனக்கு இனிப்பும் கிடைப்பதில்லை, அதனை நான் விரும்புவது மில்லை; எல்லாவற்றையும் ஏற்ற முறையில் தீர்த்து வைத்திடும் ஆற்றல் என்னிடம் நிரம்ப இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. ஆகவே, விரைவிலே, ஒரே தொகுதியில் விருப்பம் தெரிவித்துள்ள வேட்பாளர்கள், பொது நன்மையைக் கருதி, ஒரு சமரசம் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.}} தம்பி! இப்போது நாம் மிகவும் முக்கியமான கட்டத்தில் அடி எடுத்து வைக்கின்றோம். {{left_margin|3em|நமக்குள்ளாகவே உள்ள போட்டிகளைத் தவிர்த்துக் கொள்வதும், நமக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டாக வேண்டிய உடன்பாடு பற்றிய ஏற்பாட்டினைச் செம்மைப் படுத்துவதும்.}} இந்த இரு செயல்களிலும், நமது கழகத் தோழர்கள் வேறு எதிலும் மேற்கொள்ளாத அளவு பொறுப்புணர்ச்சியினை மேற்கொண்டாக வேண்டும். வெண்ணெய் திரண்டு வரும்போது எத்தனை பக்குவம் தேவையோ, அத்தனை நேர்த்தியான பக்குவம் தேவை. மற்ற கட்டங்களிலே எப்படி நான் விரும்பிய விதத்திலும், மகிழத் தக்க வகையிலும், தம்பி! நீ உன் திறமையைக் காட்டினாயோ அஃதே போல இந்தக் கட்டத்திலும், உன் திறமையினைக் காட்டிடுவாய், வெற்றி யினைப் பெற்றளித்திடுவாய் என்பதிலே நான் உறுதிமிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.<noinclude></noinclude> 96o5m6veptlt7hp0urcxksob10grar0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328 250 639727 1927617 1925800 2026-04-28T09:45:13Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|304||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பணபலம், பிரசாரபலம், பதவிபலம் மிக்க எதேச்சாதிகார வெறிபிடித்த கட்சியின் பிடியினின்றும் இந்நாட்டு மக்களை விடுவிக்கும் மகத்தான தொண்டிலே, உன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாய். அதிலே குறிப்பிடத்தக்க அளவு சிறப்புள்ள வெற்றியும் ஈட்டியுள்ளாய். உன் சீரிய தொண்டு காரணமாகவே. நாட்டிலே இன்று காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை நல்ல அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது. உன் வல்லமையிலே நம்பிக்கை மிகுதியும் இருப்பதாலேயே,பல கட்சிகள் இன்று நமது கழகத்துடன் 'தோழமை' கொண்டிட ஆவலைத் தெரிவித்துள்ளன. உன் ஆற்றலின் துணைகொண்டு ஆணவ அரசை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை மிகுதியினாலேயே, நமது தோழர்கள், 'நான் - நீ' என்று ஒரே தொகுதிக்கே பலர் போட்டியிட்டுக் கொண்டு, வேட்பாளர்களாக வந்துள்ளனர். உன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமை. மகிழ்ச்சி தருவது போலவே, இந்த நிலைமையுடன் சேர்ந்து சில சிக்கல்களும் தோன்றியுள்ளன. அவைகளை நீக்கும் பொறுப்பும் உன்னுடையதே! அதற்கான ஆற்றலும் உன்னிடமே உள்ளது! ரோஜா மலர்ந்திருக்கிறது; முள்ளும் உடன் இருக்கிறது! முள்ளை நீக்கி மலரினைப் பறித்தெடுத்திட வேண்டும். தோட்டம் கண்டு, பாத்தி கட்டி, பயிரிட்டு, மொட்டு மலராகும் வரையில் பாதுகாத்திட்ட உன்னால், முள்ளை நீக்கி மலரினைப் பறித்திடவா முடியாது! முடியும், முயன்றால்!! {{rh|<br>4.12.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 4zz89otmrif3f9z6bu5583i25ce203b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329 250 639728 1927619 1925801 2026-04-28T09:47:56Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>{{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 284}} {{x-larger|<b>உள்ளுணர்வு</b>}}}} }} :<b>★ இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்! :★ காங்கிரசார் மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்! :★ பட்ட கடனையும் கட்ட முடியவில்லை! :★ புதிய கடனையும் பெற முடியவில்லை! :★ கழகம் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண முயல்கிறது! :★ தொகுதி உடன்பாட்டுக்கு என் தூய்மையும் நேர்மையுமே தகுதிகள்! தம்பி, {{left_margin|3em|<poem>எப்படி வாழ்வேன் இனிமேல்! ஏன் பிறந்தேன் இப்புவியில்! ஏழைக்கு ஏது இன்பம்! உழைக்கிறேன்; உழல்கிறேன்! வாழ வழியின்றித் திகைக்கிறேன்! முதுகெலும்பு முறிய மூட்டை சுமக்கிறேன்! குடும்பம் தவிக்கிறது, குமுறிச் சாகிறேன்! தற்கொலை தவிர வேறு வழி தெரியவில்லை. சாவே! வா! சர்வேசா! அழைத்துக்கொள்!</poem>}} இவ்விதமான 'ஓலம்' நாட்டிலே மிகுந்து விட்டிருக்கக் காண்கின்றோம். வயலை வளமாக்குகிறான்; அவன் வாழ்வோ, 'பாலை'யாகிக் கிடக்கிறது. மலையைக் குடைகிறான், தேக்கம் அமைக்கிறான், பாதை போடுகிறான்; பல்வேறு பொருளை உற்பத்தி செய்கிறான்; அவனோ பசியுடன் போராடுகிறான்; பட்டினியால் தாக்கப்படுகிறான். காலமெல்லாம் உழைக்கிறான், கண்ணீர் வடிக்கிறான்; உழைப்பின் விளைவுகள் வேறு எங்கோ சென்று முடங்கிவிடக் காண்கிறான்; கலக்கம் கொள்கிறான். அணி அணியாகத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள், ஆலைச் சங்க அலறியதும்; நெஞ்சற்ற இயந்திரங்களை நடத்திச் செல்கிறார்கள்;<noinclude></noinclude> rc9s8oj0vsrjjresfkzfdik3d45da9v 1927620 1927619 2026-04-28T09:48:26Z Femeena Sufrin S 16628 1927620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>{{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 284}} {{x-larger|<b>உள்ளுணர்வு</b>}}}} }} :<b>★ இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்! :★ காங்கிரசார் மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்! :★ பட்ட கடனையும் கட்ட முடியவில்லை! :★ புதிய கடனையும் பெற முடியவில்லை! :★ கழகம் தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண முயல்கிறது! :★ தொகுதி உடன்பாட்டுக்கு என் தூய்மையும் நேர்மையுமே தகுதிகள்!</b> தம்பி, {{left_margin|3em|<poem>எப்படி வாழ்வேன் இனிமேல்! ஏன் பிறந்தேன் இப்புவியில்! ஏழைக்கு ஏது இன்பம்! உழைக்கிறேன்; உழல்கிறேன்! வாழ வழியின்றித் திகைக்கிறேன்! முதுகெலும்பு முறிய மூட்டை சுமக்கிறேன்! குடும்பம் தவிக்கிறது, குமுறிச் சாகிறேன்! தற்கொலை தவிர வேறு வழி தெரியவில்லை. சாவே! வா! சர்வேசா! அழைத்துக்கொள்!</poem>}} இவ்விதமான 'ஓலம்' நாட்டிலே மிகுந்து விட்டிருக்கக் காண்கின்றோம். வயலை வளமாக்குகிறான்; அவன் வாழ்வோ, 'பாலை'யாகிக் கிடக்கிறது. மலையைக் குடைகிறான், தேக்கம் அமைக்கிறான், பாதை போடுகிறான்; பல்வேறு பொருளை உற்பத்தி செய்கிறான்; அவனோ பசியுடன் போராடுகிறான்; பட்டினியால் தாக்கப்படுகிறான். காலமெல்லாம் உழைக்கிறான், கண்ணீர் வடிக்கிறான்; உழைப்பின் விளைவுகள் வேறு எங்கோ சென்று முடங்கிவிடக் காண்கிறான்; கலக்கம் கொள்கிறான். அணி அணியாகத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள், ஆலைச் சங்க அலறியதும்; நெஞ்சற்ற இயந்திரங்களை நடத்திச் செல்கிறார்கள்;<noinclude></noinclude> ob3xe2e36w0rthxmyhldjam40xpyjt7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330 250 639729 1927621 1925802 2026-04-28T09:48:59Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|306||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>நேர்மையற்ற முதலாளிகள் கொழுத்திட இலாபத்தைக் குவித்துத் தருகிறார்கள்; குடும்பத்துக்குத் தேவைப்படும் ஊதியமும் கிடைக்கப் பெறாது நொந்து கிடக்கிறார்கள். நீதி எங்கே! என்று கேட்கிறார்கள். எமது நலனைக் காத்திடும் நேர்மையாளர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். பெருமூச்சு தவிர வேறு எந்த ஒலியும் பதிலாகக் கிடைக்காது தவிக்கிறார்கள். வேலை! வேலை! வேலை! ஓயாது வேலை! உடலையும் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்திடும் கொடுமை நிறைந்த வேலை! எல்லாம் ஒரு கவளம் சோற்றுக்காக! அதுவும் கிடைக்காது. தேம்புகின்றனர்; கொளுத்தும் வெய்யில்! கொட்டும் பனி! இடி! மின்னல்! பெருமழை! எதையும் தாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர். பசியைத் தாங்கிக் கொள்ள முடியாதே, பட்டினி கிடக்கும் மனைவி மக்களைக் காத்திட வேண்டுமே என்ற உணர்வு சவுக்காகி விடுவதால்! புதிய புதிய தொழிற்கூடங்கள் எழக் காண்கின்றனர்; புது மெருகு பெற்றிடும் பூமான்கள் வளரக் காண்கின்றனர். காகிதம் செய்வோம், ஆயுதம் செய்வோம், இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோம், எண்ணற்றப் புதுப்பொருள் சமைத்திடுவோம்; செல்வம் பெருகிடச் செய்வோம்; நமக்கு உரிய பங்கினைப் பெற்று வாழ்விலே சீர் பெற்றிடுவோம் என்று நம்பிப் பாடுபடுகின்றனர்; மாடாக உழைத்து ஓடாகிப் போவதன்றி, வேறு நிலை காணாது. இதற்கோ இத்தனை கடினமாக உழைத்தோம் என்று ஏக்கம் கொள்கின்றனர். உழைப்பின் விளைவுகளாகப் பல பொருள் மின்னிடக் காண்கின்றனர் நாட்டிலே வீட்டிலேயோ பசிக்கொடுமையால் பஞ்சடைந்த கண்ணினராகிக் கிடக்கின்றனர். எமக்கு வாழ்வு அளித்திடத்தக்க அரசு இல்லையே எம்மை வாழவைத்திடா இந்த அரசினை எங்ஙனம் எமது அரசு என்போம்! நல்லரசு என்று எப்படி இதனைக் கூறுவோம் என்று கேட்கின்றனர். விம்மலுக்கு இடையில். ஆண்டுக்கோர் முறையோ, நமது அரசு! பொதுநலம் பேணிடும் அரசு ! புதுவாழ்வு தந்திடும் அரசு! ஜனநாயக அரசு! சோஷியலிசம் தந்திடும் அரசு! - என்று சிந்துபாடி, கொடி ஏற்றுகின்றனர்; கோலாகல விழா நடத்துகின்றனர். புள்ளி விவரங்களை, பளபளப்பும் வழவழப்பும் மிக்க ஏடுகளில் அச்சடித்து வழங்குகின்றனர்!<noinclude></noinclude> 6ui30a45xun2pcnht8jh6fqplqcogna பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331 250 639730 1927622 1925804 2026-04-28T09:50:34Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude> புதிய தொழில் முயற்சிகளைப் பாராட்டி அமைச்சர்கள் பேருரை ஆற்றுகின்றனர். நாட்டுச் செல்வத்தைப் பெருக்கிடுவீர்; உற்பத்தி முதலில், உரிய பங்கு பிறகு - என்று தத்துவ விளக்கம் தருகின்றனர் பேராசிரியர்கள். உலகின் பல பகுதிகளிலிருந்து புதுப்புது யந்திரங்கள், விஞ்ஞான நுணுக்க முறைகள். செயல் திறமைகள் தருவிக்கப்படுகின்றன; அதன்பயனாக ஒன்று ஒன்பதாகிறது. வளம் பெருகிக்கொண்டு வருகிறது என்று விளக்கமளித்துப் பேசுகின்றனர் அமைச்சர்கள்! தொழில் வளம் மிக்க நாடாகிக் கொண்டு வருகிறது நமது நாடு; நமது நாட்டு உற்பத்திப் பொருள் வெளிநாட்டுச் சந்தைகளுக்குச் செல்கின்றன; வெளிநாட்டுத் தொழில் விற்பன்னர்கள் நம் நாட்டு நுண்ணறிவினையும் தொழிலார்வத்தையும், தொழிலாளரின் தனித்திறனையும் வெகுவாகப் பாராட்டுகின்றனர் என்ற தேன் துளிகளைத் தெளிக்கின்றனர் நாடாளும் நல்லோர்கள்! ஜெர்மனியே வியந்து பாராட்டுகிறது; ரஷியாவே ஆர்வத்துடன் விரும்புகிறது; இங்கிலாந்தே இன்னும் அனுப்புக என்று கேட்கிறது; அந்த அளவுக்கு நமது பொருள்களுக்கு உலகிலே மதிப்பு மிகுந்திருக்கிறது; எல்லாம் எதனால்? காங்கிரசு ஆட்சியினால்! இதனை உணராமல் சிலர், எதிர்த்து வருகின்றனரே! என்ன மடைமை இது! என்ன கொடுமை இது! - என்று முழக்கம் எழுப்புகின்றனர், காங்கிரஸ் முத்திரையைப் பொறித்துக் கொண்டு நா வாணிபம் நடாத்திடக் கிளம்பிடுவோர். இந்தச் சிந்துக்கு இடையிலேதான், கிளம்புகிறது, ஐயோ! அப்பா! ஆண்டவனே! சாவு வரவில்லையே! ஏன் பிறந்து தொலைத்தீர்கள்! எங்காவது சென்று செத்துத் தொலையுங்கள்! - என்ற அழுகுரல்! அவ்வப்போது இதழ்களிலே காணப்படும் 'தற்கொலை' பற்றிய செய்திகள், நாட்டிலே கப்பிக்கொண்டுள்ள இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றன. காட்டி? கண்ணீர் வடிக்கிறோம்! கணநேரம் கலக்கம் கொள்கிறோம். அந்த நிலை நமக்கு வராமலிருக்க வேண்டுமே என்று கவலை கொள்கிறோம். பிறகோ? இந்த நிலையை மாற்றும் கடமை நம்முடையதாயிற்றே? இது மக்களாட்சிக் காலமாயிற்றே? நாமல்லவா 'அரசு' அமைக்கிறோம்! அப்படி 'அரசு' அமைப்பதிலே நாம் போதுமான அக்கறையும் திறமையும் காட்டினால் இந்த அவதிகளைப் போக்கிக் கொள்ளலாமே என்பது பற்றிய தீவிரம் காட்டுகின்றோமா? இல்லையே? இருந்திருப்பின் இத்தகைய இன்னலா தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும்?<noinclude></noinclude> 7c1pfsissdva7vl9upvqy16ytk11e2t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332 250 639731 1927624 1925806 2026-04-28T09:56:43Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|308||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள் அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித் தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும் இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்கமுறையிலே பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறோம். {{left_margin|3em|ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம்; இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி. ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக் கொண்டுள்ளனர்.}} நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும் கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும் குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும், இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. {{left_margin|3em|தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.}} காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு? {{left_margin|3em|மக்கள் தெளிவற்றவர்கள்; துணிவற்றவர்கள்; விலைகொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்ற போதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.}} ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின் நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,<noinclude></noinclude> 1o07rjvppcxp0mxt4p65y26zpnr1h6a 1927625 1927624 2026-04-28T09:57:17Z Femeena Sufrin S 16628 1927625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|308||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள் அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித் தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும் இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்கமுறையிலே பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறோம். {{left_margin|3em|ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம்; இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி. ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக் கொண்டுள்ளனர்.}} நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும் கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும் குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும், இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. {{left_margin|3em|தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.}} காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு? {{left_margin|3em|மக்கள் தெளிவற்றவர்கள்; துணிவற்றவர்கள்; விலைகொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்ற போதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.}} ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின் நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,<noinclude></noinclude> nrw58df4jps6wmylyvzu01tgojk2889 1927626 1927625 2026-04-28T09:58:03Z Femeena Sufrin S 16628 1927626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|308||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள் அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித் தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும் இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்கமுறையிலே பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறோம். {{left_margin|3em|ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம்; இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி. ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக் கொண்டுள்ளனர்.}} நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும் கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும் குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும், இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. {{left_margin|3em|தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.}} காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு? {{left_margin|3em|மக்கள் தெளிவற்றவர்கள்; துணிவற்றவர்கள்; விலைகொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்ற போதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.}} ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின் நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,<noinclude></noinclude> k950aq50dz0huinnav7k0ubnnazphos 1927627 1927626 2026-04-28T09:58:32Z Femeena Sufrin S 16628 1927627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|308||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இந்த முறையாகிலும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள் அரசு அமைக்கும் கடமையைச் செம்மையான முறையிலே நடத்தித் தருவார்கள் என்று நம்புகிறோம்; மக்கள் இந்தத் தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்வத்துடன் முனைந்து நிற்கிறது. இல்லாமை, போதாமை எனும் இடர்ப்பாடுகளிலே சிக்கிச் சீரழியும் மக்கள், தமது நிலையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் நமது கழகத்தைத் தக்கமுறையிலே பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறோம். {{left_margin|3em|ஆனால் இந்த ஏழ்மை நிலைமையையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பணத்தை வீசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம்; இல்லாமையால் தாக்கப்படும் ஏழையிடம் இரண்டு என்பதற்குப் பதில் நான்கு என்று ரூபாய்களை வீசினால், இப்போதைய கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இதாவது கிடைத்ததே என்று எண்ணி. ஓட்டுப் போடுவான் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திட்டம் வகுத்துக் கொண்டுள்ளனர்.}} நாட்டிலே உள்ள நிலைமை, உலக நாடுகள் நமது நாட்டைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, நமது நாட்டு நிர்வாகம் பற்றி நிபுணர்கள் கூறிடும் கண்டனம், நமது ஆட்சியாளர்களே அவ்வப்போது ஒப்புக்கொள்ளும் குறைபாடுகள், சீர்கேடுகள் ஆகிய எதனைக் கவனித்துப் பார்த்தாலும், இன்றைய ஆட்சி முறை மாற்றப்பட்டாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. {{left_margin|3em|தெரிந்தும், மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.}} காரணம் என்ன, அவர்களின் நம்பிக்கைக்கு? {{left_margin|3em|மக்கள் தெளிவற்றவர்கள்; துணிவற்றவர்கள்; விலைகொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள் என்ற எண்ணமும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் சக்தி திரண்டிருக்கிறது, கொதிப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது என்ற போதிலும், கட்சிகள் பலவாக உள்ளன, ஆகவே எப்படியும் காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போய்விடும். இடையிலே நாம் முடிசூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமும், காங்கிரசுக்குப் பலமாக இருந்து வருகிறது.}} ஆகவே காங்கிரஸ் கட்சி, தன் சொந்தப் பலம் அல்லது மக்களின் நல்லெண்ணம் ஆகியவற்றிலே நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும்,<noinclude></noinclude> qzrf8tmmv7yfcm1bniceh5zld4g5brs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333 250 639732 1927629 1925808 2026-04-28T10:00:26Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude> மக்களின் ஏழ்மை நிலைமை எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும் தன்மை என்பதிலேயே அதிகமான நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் போதும் எழுப்பப்படும் பிரச்சினைகள், வெடித்துக் கிளம்பிடும் புகார்கள், கேட்கச் சகிக்காதனவாக உள்ளன. {{left_margin|3em|அமைச்சர்களின் நடவடிக்கைகள், தொடர்புகள் கேலிக்குரியன வாக்கப்படுகின்றன.}} தம்பி! சின்னாட்களுக்கு முன்பு கிளறிவிடப்பட்ட ஒரு விஷயத்தைக் கூறலாம் என்று கருதுகிறேன். எதிர்க்கட்சியினர் எடுத்துக் கூறிய அந்தப் புகாரில் ஒரு பகுதியை சர்க்காராலேயே அடியோடு மறுத்துவிட முடியவில்லை. ராஜஸ்தானத்து முதலமைச்சராக உள்ளவர் சுகாததியா என்பவர். திறமை மிக்கவர் என்றும், ஆட்களை வளையக் கட்டக் கூடியவர் என்றும் பாராட்டப்படுபவர். அவருடைய பேச்சிலேயும் அதைவிட அதிகமாக அவருடைய பார்வையிலேயும் மற்றவர்களைக் கவ்விக்கொள்ளும் தன்மை இருப்பதை நானே நேரடியாகப் பார்த்தேன். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தினர் ஜெய்பூரில் நடத்திய ஒரு கருத்தரங்குக்கு நான் சென்றிருந்தபோது, சுகாதியா, ஒரு விருந்தளித்தார்; தமது மாளிகையில். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நீண்ட காலமாக என்னிடம் பழகியவர் போல, கனிவு காட்டினார். "பாராளுமன்ற உறுப்பினர் அல்லவா அண்ணாதுரை! ராஜ்யங்களுக்கு உள்ள அதிகாரங்களைப் பறித்துக் கொண்டுபோய் மத்திய சர்க்காருக்குக் கொடுத்து விடுவாரே!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். "இல்லை ஐயா! அதற்கு மாறாக நான், ராஜ்யங்களுக்கு முழு அளவு அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற கருத்துள்ளவன்" என்று கூறினேன்; உடனே மிக்க ஆர்வம் காட்டி, "எனக்கும் அதே கருத்துத்தான்!" என்று கூறினார்; விவரம் பேசிடலானார்.<noinclude></noinclude> bhmfvf7yhwnxykes6i3i3xfrsx81gdr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334 250 639733 1927630 1925812 2026-04-28T10:02:10Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|310||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> எவரிடமும் இலகுவாகப் பழகிடும் இயல்பு படைத்த சுகாதியா ஒரு முறை தமது மாநிலத்து கனவான் ஒருவர். லால்பகதூர் அவர் களைத் தங்கத்தால் நிறுத்து அந்தத் தங்கத்தை நாட்டுப் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை தர இசைவதாகவும், லால்பகதூர் அதற்கு ஒரு நாள் குறிப்பிட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த 'துலாபாரம்' நடைபெறவில்லை; லால் பகதூரும் இன்று இல்லை; ஆனால் வெளியாகி இருக்கும் பயங்கரமான உண்மை என்ன வென்றால், {{left_margin|3em|துலாபாரம் செய்ய விரும்பிய கனவான், தங்கக் கள்ளக்கடத்தல் செய்பவர் என்றும், அந்த கள்ளக்கடத்தல் தங்கத்திலே ஒரு பகுதியைத்தான் துலாபாரம் என்ற பெயராலே சர்க்காருக்குக் கொடுத்துவிட்டு. தன்மீது சட்டம் பாயாமல் தடுத்துக்கொள்ள தந்திரத் திட்டமிட்டிருந்தார் என்பதும் இப்போது வெளியாகி இருக்கிறது. இதிலே சுகாதியாவுக்குத் தொடர்பு உண்டா? பங்கு உண்டா? உடந்தையாக இருந்தாரா? என்பவை பற்றி எதிர்க்கட்சியினர் கிளப்பியவை ஆதாரமற்றவை, வீண் புகார் என்று எடுத்துக் காட்டப்பட்டன என்ற போதிலும், குறிப்பிட்ட அந்தக் கனவானின் மாளிகையும் தோட்டமும் சோதனையிடப்பட்டு, ஐம்பது தங்கக் கட்டிகள் செங்கற்கள் வடிவம் கொண்டவை - கைப்பற்றப்பட்டன என்பது, சர்க்காரே ஒப்புக்கொண்டாக வேண்டிய உண்மையாகி விட்டிருக்கிறது.}} இப்படிப்பட்ட கள்ளக் கடத்தல் பேர்வழிகள் பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம். அவர்களிலே பலர், காங்கிரசுக் கட்சியைக் காத்திடும் 'தருமவான்'களாக இருப்பதும் மெய்ப்பிக்கப்படுகின்றன. இன்று எழுத உட்காருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இதழொன்றில் பார்த்தேன். {{left_margin|3em|அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், செல்வாக்கு மிக்க தொழிலதிபருமான ராம்ரதன்குப்தா என்பவரின் தொழிற்கூடம் ஒரு நாள் முழுவதும் இரகசியத் தகவல் இலாகாவினரால் சோதனையிடப்பட்டது என்ற செய்தியினை.}} தொழிலதிபர்களின் தோழமையைப் பெற்றிருப்பதால் கோடிக்கணக்கில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நன்கொடைத் தொகை கிடைத்திருப்பதைக் காங்கிரசுத் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான கணக்கும் வெளியிடப்பட்டு விட்டிருக்கிறது.<noinclude></noinclude> 6wkf5pnfdc8uc61xcwo63b4fvzg0ded பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335 250 639734 1927631 1925826 2026-04-28T10:04:08Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஆக ஒரு புறத்திலே காங்கிரஸ் ஆட்சி ஏழையைத் தத்தளிக்க விட்டிருக்கிறது; மற்றோர் புறத்திலே கள்ளக்கடத்தல் பேர்வழிகள் தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நன்கொடை திரட்டி அவர்களை ஆதரிக்கும் விதமான ஒரு சர்க்காரை நடத்தும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறது.}} இவ்வளவு வெளிப்படையாக உண்மை தெரிந்திருந்தும். மக்கள் ஆத்திரத்தால் தம்மைக் கவிழ்த்து விடுவார்களே என்ற அச்சம் ஆளவந்தார்களுக்கு எழக் காணோம். இது வேதனை தரும் விசித்திரமல்லவா? {{left_margin|3em|தொழில் துறையிலும் ஆதிக்கம் வைத்துக் கொண்டு, ஆட்சித்துறையிலும் தொடர்பு வைத்துக் கொண்டு ஒன்றுக்கு மற்றொன்று துணையாக இருக்கும்படி செயலை அமைத்துக் கொள்ளும் சீலர்களும் இருக்கின்றார்கள்.}} ஒரிசா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவரும், எந்த நேரத்திலும் முதலமைச்சர்களை உண்டாக்கித் தமது கரத்தில் வைத்துக் கொள்ளக் கூடியவருமான பட்நாயக் என்பவர் பற்றிய செய்திகளைத் தம்பி! அடிக்கடி காண்கின்றாய். ஒரு சில வருடங்களிலே பல கோடி ரூபாய்களைத் திரட்டிய இலாபவேட்டைக்காரர், இந்த பட்நாயக். இவர் பற்றிய புகார்கள் பல விசாரணைக் குழுவிடம்கூட ஒப்படைக்கப்பட்டன இந்தப் புகார்கள். {{left_margin|3em|இந்த விசாரணையின்போது வெளிவந்த உண்மைகள், சர்க்காரின் இரகசியங்களாக இருந்து வந்தன; எதிர்க்கட்சியினர் எப்படியோ அந்த விசாரணைக் குறிப்பேட்டைக்கூட வெளியே கொண்டு வந்து விட்டனர்! பாராளுமன்றத்திலேயே அதனை வழங்கவும் செய்தனர்.}} இத்தகைய 'புகார்களை' புகழாரமாகக் கொண்டுள்ள இந்தப் பெரியவரைத் தான். ஒரிசாவில் காங்கிரசுக்கு வெற்றி பெற்றளிக்கும் பொறுப்பேற்கும் தலைவராகக் காமராஜர் நியமித்துள்ளார். {{left_margin|3em|புகார்கள் பலமாக! ஆனால் காங்கிரசின் பெரிய தலைவர் காமராஜரின் அரவணைப்பு இவருக்கு!}} எந்த அதிகாரி இந்த நிலையில் பட்நாயக் மீது நெருங்கத் துணிய முடியும்? விசாரணையா நடத்தப் போகிறீர்கள்! பைத்யக்காரர்களே! என்னிடம் ஒரிசாவையே ஒப்படைத்திருக்கிறார் காமராஜர்! நான் நினைத்தால்<noinclude></noinclude> pbp79zmyb2byr7dtuyjxqxxw67kxhkm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336 250 639735 1927632 1925829 2026-04-28T10:04:48Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|312||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஒரிசாவில் காங்கிரசை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எனக்கு உள்ள அந்த ஆற்றலை அறிந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் முழுப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்! காங்கிரசின் மந்திராலோசனைக் கூடத்தில் எனக்கு நடு இடம் தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட என்மீது உள்ள புகார்களை விசாரிக்கவா துணிகிறீர்கள்?- என்று பட்நாயக் கேட்டிடின், எந்த அதிகாரி, அஞ்சாதிருக்க முடியும். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று கூறிட ஒரே ஒரு நக்கீரனைத்தானே காட்ட முடிகிறது, நேர்மை அரசோச்சிய நாட்களிலேயே! இன்று யாராக இருந்தாலும் உரிய விலை கொடுத்தால் வாங்கிவிட முடியும் என்ற பேச்சு மிகச் சாதாரணமாகப் பரவியுள்ள. நாட்களல்லவா! பட்நாயக்குக்குக் காமராஜர் தந்து விட்டுள்ள 'இடம்' எத்தனை உயர்வானது என்பதைப் பார்த்த பிறகும், பயப்படாமல், விசாரணை நடத்திட எத்தனை அதிகாரிகளைக் காண முடியும். இவ்வளவு புகார்கள் எவர்மீது எழுந்துள்ளனவோ அவரிடமா, இத்தனைப் பொறுப்பை ஒப்படைப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ், ஒரிசாவில் வெற்றி பெற வேண்டு மென்றால், பட்நாயக்கிடம் பொறுப்பை ஒப்படைப்பது தவிர வேறு வழி இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. புகார்கள் அவர்மீது எழும்பியுள்ளது மட்டுமல்ல, ஏராளமான தொகை அவர் செலுத்த வேண்டுமாம்; வருமான வரியாக! அதனை வசூலிக்க முடியவில்லை, இலாகாவினால்; இன்னமும் அதுபற்றிக் கூடக் கேட்கிறார்கள் பதில் என்ன? அமைச்சர்கள் அளித்திடும் பதில் வசூலைத் துரிதப்படுத்த முயற்சி எடுத்துக் கொள்கிறோம் என்பது. பட்நாயக் தரும் பதில்? காங்கிரஸ் ஆளவந்தார்களையே கேலி செய்யும் விதமான பதில்! "வருமான வரி பாக்கியா? கேட்கட்டும். தருகிறேன்; நியாயமாக இருந்தால்! இருக்கவே இருக்கிறதே கோர்ட்டு! அங்குச் சந்திப்போமே" என்கிறார். இவை மட்டுமல்ல; தம்பி! பட்நாயக்கின் பல தொழில் அமைப்பு களிலே ஒன்று, கலிங்கா விமான கம்பெனி? இந்தக் கம்பெனியிடம், வடகிழக்கு எல்லைப் பகுதியில் போர்க்காலத்தில் பொருளை எடுத்துச் செல்லும் அலுவல் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், முறைப்படி இல்லை என்றும், வேறு கம்பெனிகள் எதிர்பார்த்ததைவிட அதிகத் தொகை கலிங்கா கம்பெனிக்கு சர்க்கார்,<noinclude></noinclude> n4dmhpt9qywdwmslqoix36xrg7hdf18 1927633 1927632 2026-04-28T10:05:41Z Femeena Sufrin S 16628 1927633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|312||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>ஒரிசாவில் காங்கிரசை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எனக்கு உள்ள அந்த ஆற்றலை அறிந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் முழுப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்! காங்கிரசின் மந்திராலோசனைக் கூடத்தில் எனக்கு நடு இடம் தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட என்மீது உள்ள புகார்களை விசாரிக்கவா துணிகிறீர்கள்?- என்று பட்நாயக் கேட்டிடின், எந்த அதிகாரி, அஞ்சாதிருக்க முடியும். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று கூறிட ஒரே ஒரு நக்கீரனைத்தானே காட்ட முடிகிறது, நேர்மை அரசோச்சிய நாட்களிலேயே! இன்று யாராக இருந்தாலும் உரிய விலை கொடுத்தால் வாங்கிவிட முடியும் என்ற பேச்சு மிகச் சாதாரணமாகப் பரவியுள்ள. நாட்களல்லவா! பட்நாயக்குக்குக் காமராஜர் தந்து விட்டுள்ள 'இடம்' எத்தனை உயர்வானது என்பதைப் பார்த்த பிறகும், பயப்படாமல், விசாரணை நடத்திட எத்தனை அதிகாரிகளைக் காண முடியும். இவ்வளவு புகார்கள் எவர்மீது எழுந்துள்ளனவோ அவரிடமா, இத்தனைப் பொறுப்பை ஒப்படைப்பது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ், ஒரிசாவில் வெற்றி பெற வேண்டுமென்றால், பட்நாயக்கிடம் பொறுப்பை ஒப்படைப்பது தவிர வேறு வழி இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. புகார்கள் அவர்மீது எழும்பியுள்ளது மட்டுமல்ல, ஏராளமான தொகை அவர் செலுத்த வேண்டுமாம்; வருமான வரியாக! அதனை வசூலிக்க முடியவில்லை, இலாகாவினால்; இன்னமும் அதுபற்றிக் கூடக் கேட்கிறார்கள் பதில் என்ன? அமைச்சர்கள் அளித்திடும் பதில் வசூலைத் துரிதப்படுத்த முயற்சி எடுத்துக் கொள்கிறோம் என்பது. பட்நாயக் தரும் பதில்? காங்கிரஸ் ஆளவந்தார்களையே கேலி செய்யும் விதமான பதில்! "வருமான வரி பாக்கியா? கேட்கட்டும். தருகிறேன்; நியாயமாக இருந்தால்! இருக்கவே இருக்கிறதே கோர்ட்டு! அங்குச் சந்திப்போமே" என்கிறார். இவை மட்டுமல்ல; தம்பி! பட்நாயக்கின் பல தொழில் அமைப்புகளிலே ஒன்று, கலிங்கா விமான கம்பெனி? இந்தக் கம்பெனியிடம், வடகிழக்கு எல்லைப் பகுதியில் போர்க்காலத்தில் பொருளை எடுத்துச் செல்லும் அலுவல் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், முறைப்படி இல்லை என்றும், வேறு கம்பெனிகள் எதிர்பார்த்ததைவிட அதிகத் தொகை கலிங்கா கம்பெனிக்கு சர்க்கார்,<noinclude></noinclude> pqh1sgx5syicwwv7rum8fc73g1ol5ua பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337 250 639736 1927636 1925830 2026-04-28T10:09:28Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude>கட்டணமாகத் தந்தார்கள் என்பதும், ஒப்பந்தப்படி இந்தக் கம்பெனி ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியானபடி செய்யவில்லை என்பதும் இதனாலே சர்க்காருக்கு வீண் நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதையும் பொதுக் கணக்குக் கமிட்டி எடுத்துக் காட்டி, சர்க்காரை இடித்துரைக்கிறது. {{left_margin|3em|தர வேண்டிய தொகையைவிட அதிகப்பணம், இந்தக் கம்பெனிக்கு தரப்பட்டது என்றும் கமிட்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.}} இது கேட்டு பட்நாயக் பதறினாரா? பாவிகளா! இப்படியா பழி சுமத்துவது? என்னுடைய கட்சி நடத்திச் செல்லும் சர்க்காருக்கு நானா வீண் நஷ்டம் உண்டாக்குவேன்? என்னை என்ன அத்தகைய சுயநலக்காரன் என்றா எண்ணிக்கொண்டீர்கள்? பணம்தான் பெரிது என்று நானா கருதுபவன்? என்றெல்லாம் கூவினாரா? இல்லை! {{left_margin|3em|பத்திரிகை நிருபர்கள் இது பற்றிக் கேட்டபோது பட்நாயக் துளியும் பதறாமல் அதிகப் பணம் கொடுத்து விட்டதா சர்க்கார், கலிங்கா கம்பெனிக்கு, சுத்த அதிர்ஷ்டக்கட்டையான சர்க்கார் ஜாக்ரதையாக நடந்து கொள்ளவேண்டும்! என்று கேலி பேசியிருக்கிறார்}}. ஆட்சி நடத்தும் கட்சியிடம் நேசத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதனைப் பயன்படுத்தி தொழில் துறையிலே ஆதிக்கம் ஏற்படுத்திக் கொண்டு, முறை தவறுகளைத் துணிவுடன் செய்து, விசாரணை நடத்தப்படும் கட்டம் பிறந்திடின் உருட்டி மிரட்டிச் சர்க்காரைச் செயலற்றதாக்கி தமது செல்வாக்கு காங்கிரசுக்குப் பயன்பட வேண்டுமானால், எந்த விதமான கட்டு திட்டமும் தமக்கு விதிக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டிடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் கோடீஸ்வரர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்களை ஊட்டி வளர்த்துவிட்டதே காங்கிரஸ் கட்சிதான். இன்று அவர்கள் புருவத்தை நெரித்தால் காங்கிரசின் மூலவர்களுக்கே குலைநடுக்கம் எடுக்கிறது. தம்பி! விளைநிலங்களிலே புகுந்து களவாடுபவர்களைக் கண்டு பிடிக்கவும், விரட்டவும், காவலாளிகளையும், வேட்டை நாய்களையும் அமர்த்துகின்றனர் பண்ணை முதலாளிகள் இந்தோனீஷியாவில், வயல்களிலே காவல் புரியவும். களவாடுபவர் நுழையாது தடுத்திடவும். நுழைந்திடின் விரட்டிடவும், பயிற்சி அளிக்கப்பட்ட புலிகளை அமர்த்தி இருக்கிறார்களாம்! விசித்திரம் ஆனால் உண்மை. புலி, பதுங்கிப் பாயும்; மோப்பம் பிடித்து ஆளைத் தாக்குமல்லவா? அப்படிப்பட்ட புலிகளை வயல்களிலே காவலுக்கு வைக்கிறார்களாம்; களவாட வருபவனை புலிகள் கண்டுபிடித்து. கடித்துப் போடும் அல்லவா; அதற்காக!<noinclude></noinclude> 9rdxrbtc7z2r96ghlowtxw4hll0ukm5 1927637 1927636 2026-04-28T10:09:50Z Femeena Sufrin S 16628 1927637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude>கட்டணமாகத் தந்தார்கள் என்பதும், ஒப்பந்தப்படி இந்தக் கம்பெனி ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியானபடி செய்யவில்லை என்பதும் இதனாலே சர்க்காருக்கு வீண் நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதையும் பொதுக் கணக்குக் கமிட்டி எடுத்துக் காட்டி, சர்க்காரை இடித்துரைக்கிறது. {{left_margin|3em|தர வேண்டிய தொகையைவிட அதிகப்பணம், இந்தக் கம்பெனிக்கு தரப்பட்டது என்றும் கமிட்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.}} இது கேட்டு பட்நாயக் பதறினாரா? பாவிகளா! இப்படியா பழி சுமத்துவது? என்னுடைய கட்சி நடத்திச் செல்லும் சர்க்காருக்கு நானா வீண் நஷ்டம் உண்டாக்குவேன்? என்னை என்ன அத்தகைய சுயநலக்காரன் என்றா எண்ணிக்கொண்டீர்கள்? பணம்தான் பெரிது என்று நானா கருதுபவன்? என்றெல்லாம் கூவினாரா? இல்லை! {{left_margin|3em|பத்திரிகை நிருபர்கள் இது பற்றிக் கேட்டபோது பட்நாயக் துளியும் பதறாமல் அதிகப் பணம் கொடுத்து விட்டதா சர்க்கார், கலிங்கா கம்பெனிக்கு, சுத்த அதிர்ஷ்டக்கட்டையான சர்க்கார் ஜாக்ரதையாக நடந்து கொள்ளவேண்டும்! என்று கேலி பேசியிருக்கிறார்}}. ஆட்சி நடத்தும் கட்சியிடம் நேசத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதனைப் பயன்படுத்தி தொழில் துறையிலே ஆதிக்கம் ஏற்படுத்திக் கொண்டு, முறை தவறுகளைத் துணிவுடன் செய்து, விசாரணை நடத்தப்படும் கட்டம் பிறந்திடின் உருட்டி மிரட்டிச் சர்க்காரைச் செயலற்றதாக்கி தமது செல்வாக்கு காங்கிரசுக்குப் பயன்பட வேண்டுமானால், எந்த விதமான கட்டு திட்டமும் தமக்கு விதிக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டிடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் கோடீஸ்வரர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்களை ஊட்டி வளர்த்துவிட்டதே காங்கிரஸ் கட்சிதான். இன்று அவர்கள் புருவத்தை நெரித்தால் காங்கிரசின் மூலவர்களுக்கே குலைநடுக்கம் எடுக்கிறது. தம்பி! விளைநிலங்களிலே புகுந்து களவாடுபவர்களைக் கண்டு பிடிக்கவும், விரட்டவும், காவலாளிகளையும், வேட்டை நாய்களையும் அமர்த்துகின்றனர் பண்ணை முதலாளிகள் இந்தோனீஷியாவில், வயல்களிலே காவல் புரியவும். களவாடுபவர் நுழையாது தடுத்திடவும். நுழைந்திடின் விரட்டிடவும், பயிற்சி அளிக்கப்பட்ட புலிகளை அமர்த்தி இருக்கிறார்களாம்! விசித்திரம் ஆனால் உண்மை. புலி, பதுங்கிப் பாயும்; மோப்பம் பிடித்து ஆளைத் தாக்குமல்லவா? அப்படிப்பட்ட புலிகளை வயல்களிலே காவலுக்கு வைக்கிறார்களாம்; களவாட வருபவனை புலிகள் கண்டுபிடித்து. கடித்துப் போடும் அல்லவா; அதற்காக!<noinclude></noinclude> 0b1cvjwmbkcw8lvijwjluvmwioiiuo8 1927638 1927637 2026-04-28T10:10:16Z Femeena Sufrin S 16628 1927638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude>கட்டணமாகத் தந்தார்கள் என்பதும், ஒப்பந்தப்படி இந்தக் கம்பெனி ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியானபடி செய்யவில்லை என்பதும் இதனாலே சர்க்காருக்கு வீண் நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதையும் பொதுக் கணக்குக் கமிட்டி எடுத்துக் காட்டி, சர்க்காரை இடித்துரைக்கிறது. {{left_margin|3em|தர வேண்டிய தொகையைவிட அதிகப்பணம், இந்தக் கம்பெனிக்கு தரப்பட்டது என்றும் கமிட்டி சுட்டிக் காட்டியிருக்கிறது.}} இது கேட்டு பட்நாயக் பதறினாரா? பாவிகளா! இப்படியா பழி சுமத்துவது? என்னுடைய கட்சி நடத்திச் செல்லும் சர்க்காருக்கு நானா வீண் நஷ்டம் உண்டாக்குவேன்? என்னை என்ன அத்தகைய சுயநலக்காரன் என்றா எண்ணிக்கொண்டீர்கள்? பணம்தான் பெரிது என்று நானா கருதுபவன்? என்றெல்லாம் கூவினாரா? இல்லை! {{left_margin|3em|பத்திரிகை நிருபர்கள் இது பற்றிக் கேட்டபோது பட்நாயக் துளியும் பதறாமல் அதிகப் பணம் கொடுத்து விட்டதா சர்க்கார், கலிங்கா கம்பெனிக்கு, சுத்த அதிர்ஷ்டக்கட்டையான சர்க்கார் ஜாக்ரதையாக நடந்து கொள்ளவேண்டும்! என்று கேலி பேசியிருக்கிறார்.}} ஆட்சி நடத்தும் கட்சியிடம் நேசத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதனைப் பயன்படுத்தி தொழில் துறையிலே ஆதிக்கம் ஏற்படுத்திக் கொண்டு, முறை தவறுகளைத் துணிவுடன் செய்து, விசாரணை நடத்தப்படும் கட்டம் பிறந்திடின் உருட்டி மிரட்டிச் சர்க்காரைச் செயலற்றதாக்கி தமது செல்வாக்கு காங்கிரசுக்குப் பயன்பட வேண்டுமானால், எந்த விதமான கட்டு திட்டமும் தமக்கு விதிக்கக் கூடாது என்று நிபந்தனை போட்டிடும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் கோடீஸ்வரர்கள் பலர் இன்று உள்ளனர். இவர்களை ஊட்டி வளர்த்துவிட்டதே காங்கிரஸ் கட்சிதான். இன்று அவர்கள் புருவத்தை நெரித்தால் காங்கிரசின் மூலவர்களுக்கே குலைநடுக்கம் எடுக்கிறது. தம்பி! விளைநிலங்களிலே புகுந்து களவாடுபவர்களைக் கண்டு பிடிக்கவும், விரட்டவும், காவலாளிகளையும், வேட்டை நாய்களையும் அமர்த்துகின்றனர் பண்ணை முதலாளிகள் இந்தோனீஷியாவில், வயல்களிலே காவல் புரியவும். களவாடுபவர் நுழையாது தடுத்திடவும். நுழைந்திடின் விரட்டிடவும், பயிற்சி அளிக்கப்பட்ட புலிகளை அமர்த்தி இருக்கிறார்களாம்! விசித்திரம் ஆனால் உண்மை. புலி, பதுங்கிப் பாயும்; மோப்பம் பிடித்து ஆளைத் தாக்குமல்லவா? அப்படிப்பட்ட புலிகளை வயல்களிலே காவலுக்கு வைக்கிறார்களாம்; களவாட வருபவனை புலிகள் கண்டுபிடித்து. கடித்துப் போடும் அல்லவா; அதற்காக!<noinclude></noinclude> 993gvehvk7ub03xkpb8p3e4g12hhmf1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338 250 639737 1927640 1925831 2026-04-28T10:12:02Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|314||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பயிற்சி அளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், களவாட வருபவனைத் துரத்திவிடும். அல்லது இலேசாகக் காயம் உண்டாக்கி விரண்டோடச் செய்திடும், புலி? ஆள் பிடிபட்டால், விட்டா வைக்கும்? விரட்டி அடிப்பதோடா நின்றுவிடும்? கடித்துக்குதறி. இரத்தத்தைக் குடித்துவிடும்! ஆள். பிழைப்பானா? புலியை ஏவி ஆளைச் சாகடிக்கும் கொடுமையை, வயலைக் காத்திடும் முறை என்று கருதி, இந்தோனீஷியாவிலே சிலர் மேற்கொண்டுள்ளனர் என்று ஒரு இதழில் படித்தேன். அந்த இதழ். இந்தக் கொடுமையைக் கண்டித்து எழுதியிருந்தது. காங்கிரசின் மூலவர்கள். தமது கட்சிக்குத் தேர்தலிலே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கின்றனர்!! இந்த மனிதப் புலிகள் ஏழையின் குருதியைக் குடித்துச் சுவை கண்டு கொழுத்துக் கிடக்கின்றன. வெறி முற்றிய நிலையில் இந்த மனிதப் புலிகள், தம்மை ஊட்டி வளர்ப்பவர்களே சிறிது உருட்டி மிரட்டினால், உறுமிடவும். மேலே பாய்ந்து கடித்திடவும் தயங்கப் போவதில்லை. {{left_margin|3em|என்னை மனிதப் புலிகள் விரட்டி விட்டன என்று முன்பு டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறினார். கவனமிருக்கிறதல்லவா!}} இப்போது வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளான குல்சாரிலால் நந்தாகூட பெரிய முதலாளிகளின் சதி காரணமாகவே தனக்குப் பதவி பறிபோயிற்று என்ற கருத்துப் படப் பேசி இருக்கிறார். {{left_margin|3em|ஆகவே காங்கிரசுக் கட்சியை ஆட்டிப் படைக்கும் ஆதிக்கத்துடன் முதலாளிகள் உள்ளனர் என்பதும், அவர்களிலே கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், ஆட்சியாளர்களின் நேசத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களும், சட்டத்திற்கு ஒவ்வாத முறையிலே பணம் திரட்டி சட்டத்தின் பிடியிலே சிக்கிடாது தப்பித்துக் கொள்பவர்களும், சர்க்காருக்கு விரயம் ஏற்படுத்துபவர்களும், சர்க்காருக்கு அஞ்ச மறுப்பவர்களும், எமது தயவில்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சி சர்க்கார் அமைக்க முடியும் என்று இறுமாப்புடன் கேட்பவர்களும் இருக்கின்றனர்; கொட்ட மடிக்கின்றனர்.}} இந்த நிலையில் மக்களின் உரிமையைக் காத்திடவல்ல ஜனநாயகமோ, வாழ்வினைச் செம்மைப்படுத்தவல்ல சோஷியலிசமோ எப்படிக் காப்பாற்றப்பட முடியும்? எங்ஙனம் வெற்றிபெற முடியும்? இத்தகையவர்கள்<noinclude></noinclude> b43opxtgubfescjjhxbp5bvysxf2ixn 1927641 1927640 2026-04-28T10:12:32Z Femeena Sufrin S 16628 1927641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|314||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பயிற்சி அளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், களவாட வருபவனைத் துரத்திவிடும். அல்லது இலேசாகக் காயம் உண்டாக்கி விரண்டோடச் செய்திடும், புலி? ஆள் பிடிபட்டால், விட்டா வைக்கும்? விரட்டி அடிப்பதோடா நின்றுவிடும்? கடித்துக்குதறி. இரத்தத்தைக் குடித்துவிடும்! ஆள். பிழைப்பானா? புலியை ஏவி ஆளைச் சாகடிக்கும் கொடுமையை, வயலைக் காத்திடும் முறை என்று கருதி, இந்தோனீஷியாவிலே சிலர் மேற்கொண்டுள்ளனர் என்று ஒரு இதழில் படித்தேன். அந்த இதழ். இந்தக் கொடுமையைக் கண்டித்து எழுதியிருந்தது. காங்கிரசின் மூலவர்கள். தமது கட்சிக்குத் தேர்தலிலே வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மனிதப் புலிகளை ஊட்டி வளர்க்கின்றனர்!! இந்த மனிதப் புலிகள் ஏழையின் குருதியைக் குடித்துச் சுவை கண்டு கொழுத்துக் கிடக்கின்றன. வெறி முற்றிய நிலையில் இந்த மனிதப் புலிகள், தம்மை ஊட்டி வளர்ப்பவர்களே சிறிது உருட்டி மிரட்டினால், உறுமிடவும். மேலே பாய்ந்து கடித்திடவும் தயங்கப் போவதில்லை. {{left_margin|3em|என்னை மனிதப் புலிகள் விரட்டி விட்டன என்று முன்பு டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறினார். கவனமிருக்கிறதல்லவா!}} இப்போது வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளான குல்சாரிலால் நந்தாகூட பெரிய முதலாளிகளின் சதி காரணமாகவே தனக்குப் பதவி பறிபோயிற்று என்ற கருத்துப் படப் பேசி இருக்கிறார். {{left_margin|3em|ஆகவே காங்கிரசுக் கட்சியை ஆட்டிப் படைக்கும் ஆதிக்கத்துடன் முதலாளிகள் உள்ளனர் என்பதும், அவர்களிலே கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், ஆட்சியாளர்களின் நேசத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களும், சட்டத்திற்கு ஒவ்வாத முறையிலே பணம் திரட்டி சட்டத்தின் பிடியிலே சிக்கிடாது தப்பித்துக் கொள்பவர்களும், சர்க்காருக்கு விரயம் ஏற்படுத்துபவர்களும், சர்க்காருக்கு அஞ்ச மறுப்பவர்களும், எமது தயவில்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சி சர்க்கார் அமைக்க முடியும் என்று இறுமாப்புடன் கேட்பவர்களும் இருக்கின்றனர்; கொட்ட மடிக்கின்றனர்.}} இந்த நிலையில் மக்களின் உரிமையைக் காத்திடவல்ல ஜனநாயகமோ, வாழ்வினைச் செம்மைப்படுத்தவல்ல சோஷியலிசமோ எப்படிக் காப்பாற்றப்பட முடியும்? எங்ஙனம் வெற்றிபெற முடியும்? இத்தகையவர்கள்<noinclude></noinclude> 14exn62d7l58abuo7fh36qcrp3yz5c3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339 250 639738 1927642 1925832 2026-04-28T10:14:03Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude>குறித்தும், இவர்களின் போக்கினாலே ஏற்படும் பெரு நஷ்டம் குறித்தும், பாராளுமன்றத்திலே அடிக்கடி பேசுகிறார்கள். தயக்கம் கலந்த சமாதானம் தான் தர முடிகிறதே தவிர காங்கிரஸ் அமைச்சர்களால், இவைகளை அடியோடு மறுத்துப் பேச முடியவில்லை. இன்று இதழிலே பார்த்தேன், மற்றும் ஒரு ஊழல் என்ற தலைப்பிலே எழுதப்பட்டுள்ள ஒரு கண்டனத்தை. பாதுகாப்புத் துறைக்குத் தேவையான மோடார் டையர்கள், சுமார் 25 இலட்ச ரூபாய் பெறுமானமுள்ளவை, சர்க்கார் நடத்தும் வணிகத் துறையினால் விற்கப்பட்டிருக்கிறது. இந்த டையர்கள் பழுதானவை! இவை இலாயக்கில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் துறையினரே அறிவித்துமிருந்தனர். என்றாலும் அந்த அறிவிப்பை வேண்டுமென்றே அனுப்பவேண்டிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்காமல், கெட்டுப்போன டையர்களை பாதுகாப்பு இலாகாவின் தலையிலே கட்டிவிட்டனர்! இந்த கெட்டுப்போன டையர்களை ஐரோப்பிய நாடொன்றில் இருந்து தருவிக்கும் ஏஜண்டாக வேலை பார்த்தது ஒரு தனிப்பட்ட முதலாளியின் கம்பெனி. அந்தக் கம்பெனியுடன் கூடிக்கொண்டு, கெட்டுப்போன டையர் களைப் பாதுகாப்பு இலாகாவுக்கு விற்று, பொருள் நஷ்டம் ஏற்படுத்து வதற்கு, சர்க்காரின் வணிகத்துறை உடந்தையாக இருந்திருக்கிறது. ஏஜண்டு வேலை பார்த்த கம்பெனி, டையர்களை சோதனை பார்த்த அதிகாரி, விற்ற அதிகாரி ஆகியவர்கள் கூட்டாக இந்த மோசடியைச் செய்தனர் என்று பொது கணக்குக் கமிட்டி சுட்டிக் காட்டி கண்டித்திருக்கிறது. {{left_margin|3em|இதுபோல நிர்வாகம் மோசமாகிக் கொண்டு வருவது எடுத்துக் காட்டப்படுகிறது.}} காங்கிரஸ் சர்க்காரின் பெரிய சாதனை என்று விளம்பரம் செய்யப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றி அவர்களே முன்பு காட்டிய ஆர்வத்தைக் காட்ட முடியவில்லை. ஐந்தாண்டுத் திட்டத்தின் பலன் ஏழைகளுக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டுள்ளனர். இப்போது அவர்களிலேயே பலர் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்ததாகத் தீட்டப்படவில்லை என்றும், அவைகளை நிறைவேற்றுவதிலே போதுமான திறமை காட்டப்படவில்லை என்றும், திட்டங்களுக்காகச் செலவிடப் படுவதற்காகக் குறிக்கப்பட்ட பணம் மட்டும் அதே அளவு செலவாகிவிட்டிருக்கிறதே தவிர, திட்டத்தின் மூலமாக அடையப் போவதாகச் சொன்ன 'இலக்குகளை' அடைய முடியவில்லை என்றும், ஒப்புக் கொள்கிறார்கள்.<noinclude></noinclude> 1v6488tak9j7oyjipupdmdampzq7pcn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341 250 639740 1927643 1925835 2026-04-28T10:16:40Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude>டிராக்டர்கள் 10000 வீடுகள் 4 இலட்சம் டீசல் என்ஜின் 1.66 இலட்சம் போக்குவரத்து வண்டிகள் 60,000 4000 2.2 இலட்சம் 84,800 40,000 உடனடியாகப் பலன் தர முடியாத திட்டங்களுக்காகப் பெரும் பணத்தைச் செலவிடுவது, பண வீக்கத்தை உண்டாக்கி, அதன் காரணமாக விலைகளை அதிகப்படுத்தி, ஏழைகளை வாட்டி வதைக்கிறது என்பதையும் அவர்களே இப்போது ஒப்புக்கொண்டு பேசுகின்றனர். பெரிய அளவிலேயே திட்டங்கள் இருந்தாக வேண்டும் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டாக வேண்டும் என்று இப்போது பேசுகின்றனர். உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களுக்கே முதலிடம் தரவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் நீண்ட காலமாகக் கூறிக்கொண்டிருப்பது இப்போதுதான் இவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. {{left_margin|3em|புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டிலே தலைமைப் பேருரையில் காமராஜரே இது பற்றிப் பேசி நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காகக் குறிக்கப்படும் தொகையின் அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும், உடனடிப் பலன் தரத்தக்க திட்டங்களையே முதலிலே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை; பொருட்படுத்தியதாகக்கூடத் தெரியவில்லை. திட்டத்துக்கான தொகை பெரிய அளவிலேயே அமைந்திருக்கிறது. திட்டங்களும் உடனடிப் பலன் தருவனவாக அமைக்கவில்லை. இவ்வளவுதானா என் பேச்சுக்கு நீங்கள் தரும் மதிப்பு. மரியாதை என்று காமராஜர் கேட்பதாகவும் தெரியவில்லை. திட்டம் தீட்டுபவர்கள் தமது காரியத்திலே குறுக்கிடும் தகுதி காமராஜருக்கு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்க வில்லையே தவிர நடவடிக்கை மூலம் அதைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் நாட்டுக்குப் பெரிய வளம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டு விடாதீர்கள் என்று நமது மாநிலத் தொழிலமைச்சர் வெளிப்படையாகவே பேசிவிட்டார்.}}<noinclude></noinclude> 28erot4zp8xshfym8hvi9z5w9djs71d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342 250 639741 1927646 1925836 2026-04-28T10:18:24Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|318||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இந்த இலட்சணத்திலே உள்ள இந்தத் திட்டத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய கடன் தொகை உதவித் தொகை எந்த அளவு இருக்கும். எந்தெந்த முறையிலே கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட முடியவில்லை. அமைச்சர்கள் 'யாத்திரை' சென்றவண்ணம் உள்ளனர்; வரம் தருவதிலே காட்டும் ஆர்வம் நிறைவேற்றப்படுவதிலே காட்ட, பல நாடுகள் முன்வரவில்லை. {{left_margin|3em|உதவி அளித்திட உருவாகியுள்ள அமைப்பு அடிக்கடி கூடுகிறது, விவாதிக்கிறது; புதிய புதிய பிரச்சினைகளை எழுப்புகிறது; உதவி அளித்திடுவதிலே தீவிரம் காட்டக் காணோம். கொடுத்த கடன் பெரிய அளவு-திருப்பித் தந்திடும் வாய்ப்பு எந்த வகையில் இருக்கிறது என்று, உதவி தந்திடும் நாடுகள் பேசிக் கொள்கின்றன. அமெரிக்காவால்தான் இவ்வளவு பெரிய தொகை கடனாகவோ, உதவியாகவோ தரமுடியும் என்று பிற நாடுகள் கூறுகின்றன. எல்லாப் பளுவையும் எம்மையே சுமக்கச் சொல்லாதீர்கள்; மற்ற நாடுகளும் தத்தமது வசதிக்கேற்ப உதவித்தொகை தந்திட வேண்டும் என்று அமெரிக்கா, பிற நாடுகளுக்குக் கூறுகிறது.}} வாணிபம் நடாத்தி நொடித்துப் போய்விட்டவனிடம், பச்சாதாப உணர்ச்சி காட்டி, அவன் ஒரே அடியாக அழிந்து போய்விட்டால், முன்பு கொடுத்த கடனே திருப்பிப் பெற்றிட முடியாது. ஆசாமியை நடமாட விட்டு வாணிபம் நடத்தவிட்டால்தான், ஏதாகிலும் சம்பாதித்து கடனை அடைக்க முடியும், அதற்காக அவன் வாணிபம் நடத்துவதற்குத் தேவைப்படும் பணம், கடனாகக் கொடுத்துத் தானே ஆகவேண்டும் என்று பெரிய புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசுவது போல இந்தியா பற்றி பணம் படைத்த நாடுகள் இன்று பேசுகின்றன. {{left_margin|3em|நாட்டின் தன்மானம் மிகவும் சீரழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. நாணயத்தின் மதிப்பைக் குறைத்தது. இந்தச் சீரழிவை அதிகமாக்கி விட்டிருக்கிறது.}} சொல்வதற்குக் கூச்சமாகக்கூட இருக்கிறது. பாகிஸ்தானுக்குக் கடன் தருவதிலே இருக்கும் ஆர்வமும் கொடுத்த கடனைத் திருப்பிப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கும் அளவுக்கு இந்தியா விஷயத்திலே பிற நாடுகளுக்கு ஏற்படவில்லை. பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரம் நலிவற்றதாகக் கருதப்படுகிறது; இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி அவ்விதமான எண்ணம் இல்லை. சென்ற திங்கள் டில்லியில் நடைபெற்ற கலவரங்கள் பற்றிக் கவலை தெரிவித்து எழுதிய வெளிநாட்டு இதழ்களெல்லாம்.<noinclude></noinclude> 99qvsj8yttzhjei24d88x977efvzvhh பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/91 250 641216 1927439 1927217 2026-04-27T14:36:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|78||கலைஞர்}}</noinclude>லிக் கொண்டானாம். அதைப் போல அந்த ஏடு நமது நாடியைப் பிடித்துப் பார்த்ததாகக் கூறி, “சே! சே! இது பிழைக்காது” என்று உதட்டைப் பிதுக்குகிறது! பாவம்; அது பிடித்துப்பார்த்தது நாடியை அல்ல—தாடியை என்று விரைவில் புரிந்துக் கொள்ளத்தான் போகிறது. அதன் விழிக்கு ஒளியை எதிர் காலத்தில் மக்கள் வழங்கிடுவர். அதுவரையில் அந்த ஏடு தனது கண்மூடி வைத்தியத்தை நிறுத்தி வைப்பது நல்லது. கண்ணொளியற்றவர்களிலே கூட சிலபேர் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களாகத் திகழ்ந்து நோயின் தன்மையையும் அதன் விளைவையும் முன்கூட்டி அறிவிக்கின்ற ஆற்றல் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போதும்கூட இருக்கிறார்கள். விழியில் ஒளியில்லாவிட்டாலும் அவர்களுக்கு அறிவு ஒளி துணை நிற்கிறது. இந்த இரு ஒளியுமற்றவர்களின் பட்டியலிலே சிலர் இடம்பெற்று, தங்களைப் பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறிக் கொண்டு திரிந்தால்; அது எவ்வளவு வேடிக்கையோ – அவ்வளவு வேடிக்கை, அந்த வார ஏடு — நமது நாடியைப் பார்த்ததாகச் சொல்லி நாம் எதிர்காலத்தில் இல்லாமலே போய்விடுவோம் என்று குறிப்பிடுகிற கேலிக்கூத்து! இராமாயணத்தில் இலங்கைப் போரில் இந்திரஜித்தின் மாயக்கணையினால் மயங்கி விழுந்த இராம இலக்குமணர் படைவீரர்கள் இனி எழமாட்டார் என்று முடிவு கட்டிய போதுதான் சஞ்சீவி பர்வதத்தின் மூலிகை மகிமையினால் மீண்டும் உயிர் பெற்றெழுந்தனர் என்பதைக் கம்பர் அழகாகப் பாடுகிறார். {{left_margin|3em|<poem>“ஏற்றமும் பெருவலி அழகோ டெய்தினார் கூற்றினை வென்று தம் உருவுங் கூடினார்”</poem>}} இந்தக் கவிதை வரிகளுக்கு ஒப்ப, நமது கழகத்திற்கு ஏற்பட்ட சோதனை, தமிழ் நாட்டு மக்கள் எனும் சஞ்சீவி மலையின் மூலிகைத் திறத்தால் விலகி, கழகம்; ஏற்றமும்<noinclude></noinclude> effxt78ksp22zeluevvfmdb8kxp7yph பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/92 250 641217 1927441 1927218 2026-04-27T14:46:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||79}}</noinclude>பெருவலிமையும் எழிலும் எய்தி கூற்றினைவென்று நடை. போடுகிற காட்சியினைக் காணுகிறோம். ::<b>எரிச்சல் ஏட்டாளர் எண்ணுவதுபோல என்றைக்கும் கழகம் விழப் போவதில்லை.</b> அன்பு உடன்பிறப்பே, வாதத்திற்காகச் சொல்லுகிறேன் — அப்படிக் கழகம் விழுந்து விடுவதாக இருந்தாலும் “விழுந்தாலும் விதை போல விழுவோம்!” என்று கவிஞர் அப்துல்ரகுமான் பாடினாரே; அதைப் போல விழுவோமே தவிர, முளைப்பதற்காக விழுவோமே தவிர ஆல்போல் தழைப்பதற்காக விழுவோமே தவிர — அழிவதற்காக விழ மாட்டோம்! நாம் எதற்காக அழிய வேண்டும்? நாம் என்ன வன்முறையாளர்களா? சட்டம் ஒழுங்கு அமைதிக்கு மதிப்புத்தராத கூட்டமா? நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் நமதிரு விழிகள் எனக் கருதி அண்ணா வழியில் அமைதிகாக்கும் நமக்கு அழிவை அணைத்துக்கொள்ள வேண்டிய அவசியமென்ன வந்தது? அசூயை — ஆத்திரம் — எரிச்சல் — இன்னும் வளர்கிறார்களே என்ற மனப் புழுக்கம் — இவைகளின் காரணமாக மக்களைக் குழப்புவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றுகிற அந்த ஏட்டாளர்களின் எண்ணம் கனவிலேகூட பலிக்காது என்பதை, உடன்பிறப்பே! உனக்கு நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ::சஞ்சீவியாக நீயிருக்கும் போது ::சாவு நெருங்குமோ நமது கழகத்தை! ::இல்லை — ஒருக்காலும் இல்லை! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 30—10—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> td9s684j2nftvq45h89t8vrhl6q65u8 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/93 250 641218 1927442 1927221 2026-04-27T14:47:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முதுகில் விழுந்த குத்து!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> “என் முதுகிலே குத்திவிட்டார்கள்” இந்த உருக்கமான வாசகத்தை ஜூலியஸ் சீசரின் வரலாற்றுப் புத்தகத்தின் கடைசி பக்கத்திலே காணமுடியும். இராவணனை, விபீஷணன் கைவிட்டு எதிரிப்படைக்குத் தளகர்த்தனாகச் சென்றபோது விபீஷணன் கூட்டத்தாரைப் பார்த்து இராவணன் கூறியிருக்க முடியும். வாலி மன்னன் வதைக்கப்பட்டபோது அவனது இளவல் சுக்ரீவன் குழுவினரைப் பார்த்து வாலி உதிர்த்த வார்த்தைகள் “என் முதுகில் குத்திவிட்டார்கள்” என்பதாகத்தான் அமைந்திருக்க முடியும். வீரபாண்டியக் கட்டபொம்மன், எட்டப்பன் கும்பலைப்பார்த்து நெஞ்சு வெடிக்கச் சொன்ன வார்த்தைகளும் “என் முதுகில் குத்திவிட்டார்கள்” என்பதுதான். அறிஞர் அண்ணாவுக்கு எதிராக திரைமறைவில் சூழ்ச்சி செய்து எதிர்முகாம் அமைத்து “திருவாளர் அண்ணாத்துரையார்” என்று மேடைகளில் ஏகடியம் செய்தவர்களை நோக்கி, நாடு “முதுகில் குத்தியவர்கள்” என்றுதான் வர்ணித்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு, சொந்த சுய லாபங்களுக்காகவும், சிக்கல்களுக்காகவும் அண்ணாவின் பெயரைச்<noinclude></noinclude> bubp0ubooh9o9pn17y273cgls1gsocv பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/94 250 641219 1927443 1927222 2026-04-27T14:51:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||81}}</noinclude>சொல்லிக் கொண்டே அவர் உருவாக்கிய இயக்கமாம், தி. மு. கழகத்தின் முதுகில் குத்திடச் சிலபேர் கிளம்பினார்கள். முதுகில் குத்தவும் செய்தார்கள். அப்படி முதுகில் குத்திய நடிகர் கட்சியின் நண்பர் ஒருவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையொன்றில், தன்னை; யாரோ முதுகில் குத்திவிட்டதாக முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். முதுகில் குத்தும் துரோகிகளைப் பழைய நூல்களிலும் வரலாறுகளிலும், நிகழ்கால வாழ்க்கையிலும் நாம் காணுகிறோம். இப்போது அதிலே ஒரு புதுமை என்னவென்றால்; முதுகில் குத்துவதையே தனதியல்பாகக் கொண்டவர்கள்; தங்கள் முதுகில் சிலபேர் குத்திவிட்டதாகக் கூச்சல் போடுகிறார்கள். உடன் பிறப்பே, ஒரு நிகழ்ச்சியை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொழிப் போராட்டத்தின் உச்சகட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது அந்த இயக்கத்தில் மாணவர் மத்தியில் தொடர்பு வைத்துக்கொண்டு, தனது பொறிஇயல் துறைப் பணியையும் கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவர். 1967 ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நடிக நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் கழகக் கட்டுப்பாடுகளை மீறி நடந்து அறிக்கைகள் விட்டபோது அதனைக் கண்டித்தும் பேசினார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர். {{nop}}<noinclude> க—9—6</noinclude> safce5hxyr4gcwyqf2ilb9m3s45g3qh பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/95 250 641220 1927444 1927223 2026-04-27T14:52:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|82||கலைஞர்}}</noinclude>பிறகு கழகத்தின் செயற்குழு நடிகரிடம் விளக்கம் கேட்டு, அதை அவர் மறுத்த காரணத்தால் கழகப் பொதுக் குழுவில் நடிகரை கட்சியிலிருந்து விலக்கப்படு கிறது. அதற்குப் பிறகு தஞ்சை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் ஒரு பொதுக் கூட்டம். நான் பேசுகிறேன். இந்த நாடாளு மன்ற உறுப்பினரும் வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல; கழகத்திலிருந்து ஓராண்டுக்கு முன்பு விலக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய நண்பரான ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து வந்து கழகத்தில் மீண்டும் சேர்த்திடுகிறார், மாயூரம் பயணிகள் விடுதியில்! அன்றிரவு குத்தாலம் பொதுக்கூட்டத்தில் நடிகரைப் பற்றி மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் கூடப்பேசுகிறார். நான்கூட அவரிடம்; இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டியதில்லை என்று குறிப்பிடுகிறேன். அந்தச் சுற்றுப்பயணம் முழுதும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என் காரிலேயே என்னுடன் அளவளாவியவாறு வருகிறார். பிறகு சென்னை திரும்புகிறோம். ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடிகர் மாயையில் சிக்கியிருப்பதாகவும் அவரைச் சந்தித்து விவாதித்து என்னிடம் அழைத்து வருவதாகவும் சொல்கிறார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு அவரை அனுப்பி வைக்கிறேன். சென்றவர், மறுநாள் திரும்பி வருகிறார். அவர் யாரைச் சந்திக்கப் போனாரோ; அவர் துரோகியாகிவிட்டார் என்றும் அவர் இனி நம் கட்சிக்கே தேவையில்லையென்றும் என்னிடம் கூறுகிறார். “முயற்சியைக் கைவிடவேண்டாம். அவரது குறை என்ன என்பதைக் கேட்டு வாருங்கள்” என்று கூறி அவரை, அவரிடம் மீண்டும் அனுப்பி வைக்கிறேன். {{nop}}<noinclude></noinclude> le942c2haovk5t3gpm3jb1u2x6bv58a பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/96 250 641221 1927445 1927224 2026-04-27T14:53:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||83}}</noinclude>இரண்டு நாட்கள் கழித்து பத்திரிகையைப் பார்த்தால் “இவரும் நடிகர் கட்சியில் சேர்ந்துவிட்டார்” என்று செய்தி வருகிறது. பிறகு அவருக்கு நடிகர் கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு கிடைக்கிறது. எனக்கு அவர்மீது கோபம் வரவில்லை. இன்னமும் கூட அவர் மேல் உள்ள அன்பு எனக்குக் குறையவில்லை. அப்போது நினைத்துக்கொண்டேன்; யாரையோ அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போய், இவரும் அங்கே போய்விட்டாரே; “இப்படி முதுகில் குத்துவார் என்று தெரியாதே!” என்பதாக! அப்படி அன்றைக்கு நமது முதுகில் குத்தியவர். முதுகில் குத்தியவர்களின் அணிக்குத் தளநாயகராக விளங்கியவர். இன்றைக்குத் தனது நண்பர்கள் சிலர் தன் முதுகில் குத்திவிட்டதாக வருந்தி அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. முதுகில் குத்தியவர்களுக்கு அந்த வலியும் வேதனையும் மனப்புண்ணும் எப்படியிருக்கும் என்று தங்கள் முதுகில் அதே குத்து விழும்போதுதானே தெரியும்! அப்போத தானே தெரியமுடியும். எதற்கெடுத்தாலும் ஒரு பல்லவி வைத்திருக்கிறார்கள்—“அண்ணா கொள்கையைத் தி. மு. க. தலைமை, சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” — இதுதான் அவர்களது பல்லவி! அண்ணாவின் கொள்கையை 1972 அக்டோபர் முதல் இந்த நாலைந்து ஆண்டு காலமாக அக்குவேறு ஆணி வேறாகச் சிதைத்து அலங்கோலமாக்கியவர்களுக்கு அண்ணாவின் கொள்கைபற்றிப் பேச என்ன தான் ‘தகுதி’ இருக்கிறதோ; புரியவில்லை. {{nop}}<noinclude></noinclude> 78vc8oklpx0o73hjfk4gaa5znytuq9z பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/97 250 641222 1927446 1927227 2026-04-27T14:54:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|84||கலைஞர்}}</noinclude>அண்ணா உருவாக்கிய தி. மு. கழகத்தின் சட்டதிட்டமென்ன? இவர்கள் நாலைந்து முறை அவர்களது ஏடுகளில் வெளியிட்ட அவர்கள் கட்சியின் சட்டதிட்டத்தின் கடைசிக் கதி என்ன? “இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் திராவிடர்கள்” என்று அண்ணா எப்போது கூறினார்? இப்படி கேள்விகள் ஆயிரம் கிளம்பும். பதில் சொல்ல இயலாது அண்ணாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களால்! இப்போது கதறுகிறார்கள்; முதுகில் குத்திவிட்டதாக! தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்பது உண்மையாகிவிட்டதல்லவா? {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 2—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 82b15rfy82lrtxfbm956reefwllpiw9 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/98 250 641223 1927447 1927230 2026-04-27T14:56:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மார்க்கண்டேயன் மண விழா!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> மார்க்கண்டேயனுக்கு மணவிழா என்றதும் உனக்கு வியப்பு மேலிடுகிறது அல்லவா? மார்க்கண்டேயன் கதையைப் புராணங்களில் படிக்கும்போது அவன் என்றைக்கும் பதினாறு வயதுடைய சிரஞ்சீவி வரம் பெற்றவன் என்பதை மட்டும்தான் அறிந்திருக்கிறோம். அவனை அழித்திடக் காலன் வந்தபோது அவன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். உடனே சிவலிங்கம் இரு கூறாகப் பிளந்து சிவனார் சூலாயுதபாணியாக வெளிப்பட்டு மார்க்கண்டேயனை அழிக்க வந்த மரண தேவனை அங்கிருந்து விரட்டியதோடு மார்க்கண்டேயனுக்கும் அழியாத வரம் அளித்து என்றைக்கும் பதினாறு வயது படைத்த இளங்காளையாகத் திகழுமாறு அருள் பாலிக்கிறார். இந்த தலபுராணம் திருக்கடையூர் கோயிலைப்பற்றி எழுதப்பட்டு அங்குள்ள சிவனுக்குக்கூட அமிர்தகடேசன் என்று பெயர் உண்டு என்பதை நான் இளம் வயதில் படித்த நினைவுண்டு. இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் அல்லவா; அப்போது திடீரென்று மார்க்கண்டேயனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வனப்பு மிகுந்த அந்த வாலிபனுக்கு மண விழாவை நடத்தி வைக்கிற பெருமையும் கூட எனக்குக் கிடைத்தது. {{nop}}<noinclude></noinclude> gtkzp78qt2dc3i1h4kauuikwpwdn082 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/99 250 641224 1927448 1927232 2026-04-27T14:58:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|86||கலைஞர்}}</noinclude>ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுக்காலம் பொது வாழ்வில் எத்தனையோ திருமணங்களுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். எத்தனையோ திருமணங்களில் வாழ்த்துரை வழங்குபவனாகக் கலந்துகொண்டிருக்கிறேன். மாநாட்டு மேடைகளில் திருமண விழாக்களை நடத்தி வைப்பதுண்டு. சிறப்புக்கூட்ட மேடைகளில் மண விழாக்கள் நடத்தப்படுவதுண்டு. இந்தச் சுற்றுப் பயணத்தில் கூட திருப்பத்தூரில் நடைபெற்றது சிறப்புக் கூட்டமா? அல்லது மாநாடா? என்று எண்ணத்தக்க அளவு நடைபெற்ற மாபெரும் எழுச்சி மிகு நிகழ்ச்சியில் ஒரு திருமண விழாவை நடத்தி வைத்தேன். சென்னை நோக்கி இல்லத்திற்கே வந்து தங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ மண விழா நிகழ்ச்சிகளை என் தலைமையில் நிறைவேற்றிக் கொள்பவர்களின் தொகையும் அண்மைக் காலத்தில் பெருகிய வண்ணமுள்ளது. உடன்பிறப்பே, நான் ஏதோ இறுமாப்புடன் குறிப்பிடுவதாகத் தயவு செய்து எண்ணிக்கொள்ளாதே. சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழகத்தில் அறிவித்து வெற்றி கண்ட வெண்தாடி வேந்தர் பெரியார் அவர்களுக்குக்கூட கிட்டாத ஒரு வாய்ப்பு— அவரது தானைத் தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையிலேகூட நடந்திராத நிகழ்ச்சி— எனது சுற்றுப் பயணத்தின்போது எனக்குப் பெரு வாய்ப்பாக அமைந்தது. ஆமாம்— மார்க்கண்டேயனுக்கு மண விழா நடத்தி வைப்பதென்றால் சாதாரணமா? தர்மபுரி மாவட்ட நிகழ்ச்சிகளில் சிறப்புக் கூட்டங்கள், அண்ணா சிலை திறப்பு விழாக்கள் மட்டுமன்றி நாலைந்து திருமண விழாக்களிலும் கலந்துகொண்டேன். கங்காவரத்தில் காசிராஜன்— ரத்தினம்; அரங்கநாதன்—<noinclude></noinclude> an11ojcyh4pxrmnzriofpg2trfyw5kw பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/100 250 641225 1927449 1927234 2026-04-27T15:01:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||87}}</noinclude>இலட்சுமி ஆகியோருக்கு நடைபெற்ற மணவிழாக்கள் பெரும் பந்தலிட்டு கொடிகள், பதாகைகள், விளங்கிட எழிலுற மேடை அமைக்கப்பெற்று நடந்தேறின. வீரமலையெனும் சிற்றூரில் வீதிக்கு வீதி வாழ்த்தொலி முழங்க வரவேற்று, மண விழா நடைபெறும் மேடைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். விழாப் பந்தல் கண் கொள்ளாக்காட்சி! பந்தல் நிரம்பி வழிந்தது மக்கள் வெள்ளம். முனுசாமி— வசந்தா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்புற நிறைவேறியது. தர்மபுரியில் காந்தி அண்ணா மணிமண்டபத்தில் உள்ளும் புறமும் பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருக்க— சம்பத்துக்கும் சொருபராணிக்கும், செல்வத்துக்கும் – ராணிக்கும் மணவிழாக்கள் நடைபெற்றன. அதிலே ஒரு இணைக்கு நான் செல்வதற்கு முன்பே மணவிழா நடந்து விட்டது காரணம் சம்பந்தி வீட்டார், இராகுகாலத்திற்கு முன்பே திருமணத்தை நடத்த வேண்டுமென்று விரும்பியதுதான்! மற்றொரு மண விழா, இராகுகாலம் என்றாலும் பரவாயில்லை; நான் வரும் வரையில் காத்திருப்போம் என்ற கொள்கைப் பற்றோடு நடைபெற்ற விழா. அதாவது புதன்கிழமை பனிரெண்டு மணிக்குமேல் நடைபெற்ற மணவிழா. வழிநெடுக இருந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பனிரெண்டு மணிக்குமேல் தான் தர்மபுரிப் போய்ச்சேர முடிந்தது. இராகு காலத்தில் நடந்த அந்தத் திருமண விழாவில் எல்லோரும் காலமாறுதல்-விஞ்ஞான வளர்ச்சி– இப்படிப்பட்ட விரிவான விளக்கங்களைத் தந்து உரையாற்றினர். மறுநாள் வியாழனன்று காலை கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கருங்காலிப்பட்டி என்னும் கிராமத்தில் ஞானசுந்தரம்— வனஜா மன்றல் விழா ஏற்பாடுகள் அந்த ஊரையே வளைத்துக்கொண்-<noinclude></noinclude> nonx8mwh6juen6my0y420sov9n6yqit பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/101 250 641232 1927568 1927239 2026-04-28T04:40:30Z Mohanraj20 15516 1927568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|88||கலைஞர்}}</noinclude>டிருந்தன. நீண்ட நெடுங்காலமாகத் தன்மான இயக்கக் கோட்டையாக விளங்கும் அந்தச் சிற்றூர் அழகிய அந்தக். காலை நேரத்தில் அந்த மண விழா வாயிலாகப் புகழ்மணம் பரப்பிக்கொண்டிருந்தது. முத்துப்பந்தலிட்ட மேடையில் மணமக்கள் வீற்றிருந்த காட்சியும், ஆயிரமாயிரம் மக்கள் அந்த மணமக்களை வாழ்த்தி நின்ற மாட்சியும்— இதயத்திற்கு இதமூட்டுவதாக அமைந்ததெனில் அது மிகையாகாது. “இப்படி ஐந்தாறு திருமணங்கள் எல்லாவகைச் சிறப்புக்களோடும் நடைபெற்றிருக்கும்போது—மார்க் கண்டேயன் மண விழாவுக்கு அப்படியென்ன புதிய சிறப்பு?—ஒருவேளை; அந்த சிரஞ்சீவி வரம்பெற்ற மார்க் கண்டேயனே உன் தலைமையில் மண விழா நடத்திக் கொண்டானா?” என்றெல்லாம் உடன்பிறப்பே, கேட்கத்தோன்றும் உனக்கு! நீ கேட்பாய்—அதுவும் எனக்குத் தெரியும்! தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் நீயும் மற்ற உடன்பிறப்புக்களும் காட்டிய உற்சாகத்திற்கு, பொழிந்த அன்புக்கு, கழகத்தின் மீது கொண்டிருக்கிற வற்றாத பாசத்துக்கு எப்படி நன்றி கூறுவது எனத் தெரியாமல் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருக்கிற எனக்கு அந்த மார்க்கண்டேயன் மண விழாவைப்பற்றி உனக்கு. எழுதவேண்டும்போல் தோன்றியது. அதனால்தான் எழுதுகிறேன். இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை அனைத்தையும் எழுதத்தான் வேண்டும். அவற்றை எண்ணி எண்ணி உவகை கொண்டிருக்கிறேன். என் உயிரனைய உடன்பிறப்புக்கள் தங்கள் ஆர்வத்தை இன்னும் சிறிது கட்டுப்படுத்திக் கொண்டால்<noinclude></noinclude> 0sig4ccv5o0vedq567lrygmuj40n2nt பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/102 250 641233 1927571 1926202 2026-04-28T04:44:46Z Mohanraj20 15516 1927571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||89}}</noinclude>நலமாக இருக்குமென்று மீண்டும் மீண்டும் நான் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. கடலூர், தர்மபுரி, பொம்மிடி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றவை சிறப்புக் கூட்டங்கள் என்றாலும் — மாவட்டக் கழகச் சிறப்பு மாநாடுகள் போலவே விளங்கின அந்தச் சிறப்புக்கெனப் பாடுபட்ட கழகக் கண்மணிகளுக்கெல்லாம் என் இதயம் வாழ்த்துக்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது. ஓரிரு இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்துக் கிடையே நான்பட்ட தொல்லைகளின் காரணமாக இரண்டொரு உடன்பிறப்புக்களின் மீது கடுமை காட்டியிருப்பேன். அவர்கள் அதனை மனத்திற்கொள்ளாமல் பொறுத்தருள வேண்டுகிறேன். கொடியேற்றக் கயிற்றைக் கையிலே ஒருவர் கொடுப்பது— அதே சமயம் ஒருவர் பின்னாலிருந்து கழுத்திலே மாலை போடுவது— அதைச் சமாளித்துக் கொடிக் கயிற்றை இழுக்கும்போது குழந்தையை கயிற்றுக் கிடையே நீட்டிப் “பெயர் சூட்டுங்கள்” என்பது—அதைக்கவனிப்பதற்குள் கைகுலுக்க ஒருவர் முனைவது—இன்னொருவர் வழக்கு நிதியைக் கரத்தில் திணிப்பது—இத்தனையும் ஒரு சில நொடிகளுக்குள் என்றால், இந்த உடல் தாங்குமா? அதனால் சற்றுக் கடுமைகாட்டியிருந்தால் அது உரிமையின் அடிப்படையில், உடன்பிறப்பு என்ற சொந்தத்தில் என்ற வகையில் அவர்கள் எடுத்துக் கொள் வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்ன இது; மார்க்கண்டேயனை நடுவீதியில் விட்டு விட்டு “மன்னிப்புப் படலம்” எழுத ஆரம்பித்து விட்டாய் என்று கேட்கிறாயல்லவா? அதோ பார், மார்க்கண்டேயனை! மணமகள் காந்தாவுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்! {{nop}}<noinclude></noinclude> 1v6nmsrwvixrcnbnq9q3rpeacvyp05h பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/103 250 641234 1927573 1926203 2026-04-28T04:48:25Z Mohanraj20 15516 1927573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|90||கலைஞர்}}</noinclude>நடுவீதியில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள் — ஆனால் நம்பிக்கையோடு நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன இது புதிர்? வா விஷயத்துக்கு; என அவசரப் படுகிறாயா? கருங்காலிப்பட்டி மணவிழாவை முடித்துவிட்டு, திருப்பத்தூர் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம்— நாங்கள் சென்ற வழியில் நடுச் சாலையில் நாலைந்து பேர் மேளம் முழங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் கார்கள் நிறுத்தப்பட்டன. அந்தச் சாலையோரத்து மர நிழலில் மாப்பிள்ளையும் பெண்ணும் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சுற்றி அவர்தம் உற்றார் உறவினர். அனைவரும் கார் அருகே வருகிறார்கள். மணமக்கள் கூட கார் அருகே அழைத்துவரப்படுகிறார்கள். “கொஞ்சம் இறங்கி, இங்கேயே இவர்கள் திருமணத்தை நடத்தி விட்டுப் போய்விடுங்கள்” இவ்வாறு சூழ இருப்போர் கூறுகிறார்கள். அதற்குள் அந்தச் சாலையில் கூட்டம் பெருகிவிடுகிறது. புழுதி நிறைந்த சாலையான தால் கூட்ட நெரிசலில், மணமக்களின் புத்தாடைகள் கூட வீணாகின்றன. சிறிது தாமதித்தால் மணமகன் மார்க்கண்டேயன் ஒரு புறமும்—மணமகள் காந்தா மற்றொரு புறமுமாகத் தள்ளப்பட்டு விடுவார்கள். என்னால் காரின் கதவைத் திறந்து கீழே இறங்கவும் முடியவில்லை. பிறகு மிகுந்த சிரமத்திற்கிடையே மணவீட்டார் தட்டில் வைத்திருந்த மாலைகளை எடுத்து மணமக்கள் கையிலே தந்து மாற்றிக் கொள்ளச் செய்து அந்த மண விழாவை நிறைவேற்றி வைத்தேன். நடுச்சாலையிலேயே கெட்டிமேளம் கொட்ட, கார் அருகே இருந்தவாறே மண விழாவை முடித்தவுடன்தான், காருக்குள்ளே இருந்த நண்பர் எல். கணேசன், மணமக்களின் பெயர் களைக் கேட்டறிந்தார். {{nop}}<noinclude></noinclude> khy757271q44ecfxah9swuimvrl5uih பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/104 250 641235 1927577 1927238 2026-04-28T04:58:09Z Mohanraj20 15516 1927577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||91}}</noinclude>மணவிழா முடிந்தது — எங்கள் பயணம் தொடர்ந்தது. உடன்பிறப்பே, இப்போது சொல்—மார்க்கண் டேயன் மணவிழா, ஒரு மண் சாலையின் ஓரத்திலே, மரத்தடியிலே, நடைபெற்றாலுங்கூட அது; இது வரையில் நாம் கண்ட மணவிழாக்களைவிட — நமதில்லங்களில் நடத்திய மணவிழாக்களைவிட — மகிமை வாய்ந்ததா – அல்லவா? இந்தச் சுற்றுப் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், வழங்கப்பட்ட வழக்குநிதி, பேரார்வப் பெருக்கு — அனைத்தும் என்னைக் கவர்ந்தன எனினும்; “மார்க்கண்டேயன் மணவிழா” அவற்றைக் காட்டிலும் சிறிது கூடுதலாகவே என்னைக் கவர்ந்து விட்டது. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 6—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> ae8bwo41ajbw88f3nfj2gfehqnwxywa பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/105 250 641236 1927464 1926205 2026-04-27T15:50:19Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927579 1927464 2026-04-28T05:02:32Z Mohanraj20 15516 1927579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓய்வுக்கு – ஒரு வேலை !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> பல நாட்களாகத் தொடர்ந்து அரசியல் கடிதங்களே எழுதிவிட்டேன் உனக்கு. அப்படியானால் இன்றையக் கடிதம்; அகமா? புறமா? கலித்தொகையா? என நீ கேட்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டுப் பழம்பெரும் புலவர்களையெல்லாம் விட்டு விட்டு — உன்னை உலக மகாக் கவிஞன் ஹோமரிடம் அழைத்துச் செல்லப் போகிறேன். கிரேக்கத்து மண்ணின் அந்தக் கீர்த்தி மிகுந்த கவிஞன், “இலியத்” “ஒதஸ்ஸே” என்ற இணையற்ற இரு காவியங்களை இலக்கியப் பெண்ணின் கண்கள் எனப் படைத்தவன் எனினும், அவனோ இரு கண்களுமற்ற குருடனாக — இளைஞன் ஒருவனின் துணை யோடு நாட்டின் வீதிதோறும் தனது பாடல்களை இசைத்துத்கொண்டே போவானாம். இலியத் — ஒதஸ்ஸே — என்ற இரு காவியங்களும் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பெற்றன, அந்தக் கற்பனைக் கவியின் பேராற்றலின் மொத்த உருவங்களாக! திடீர்த் தேவதைகள் — அக்கினித் தெய்வங்கள் — கடலைக் கலக்கும் பூதங்கள் — புயலைப் பெருமூச்சாக விடும் பயங்கரக் கடவுள்கள் — இவைகள் எல்லாம் அவன் காவியங்களில் நடமாடும் பாத்திரங்கள் என்றாலும், உவமைகள் — அலங்கரித்துக் கொண்டு ஆட்டம் பழகும் சொற்கள் — கதையோட்டத்தின் மின்னல் திருப்பங்கள் —<noinclude></noinclude> bqhvv6d5tlh62ijnclkpgf3ie0w90p6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/106 250 641237 1927465 1926206 2026-04-27T15:50:27Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927584 1927465 2026-04-28T05:27:53Z Mohanraj20 15516 1927584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||93}}</noinclude>குறைவில்லாமல் கிடைக்கும் கடற்கரையில் தானே வந்து ஒதுங்கிக் கிடக்கும் ஒளி முத்துக்களைப்போல! அவனது முதற் படைப்பான “இலியத்” கிரேக்க மாவீரர்கள் “டிராய்” எனும் நகரை, பத்தாண்டுக் காலம் முற்றுகையிட்டு இறுதியில் அந்நகரை, மண் மேடாக்கி வெற்றி பெற்ற நிகழ்ச்சியை வீரம் சொட்டச் சொட்ட எடுத்துக்காட்டும் காவியமாகும். லெசிடமோன் நாட்டு மன்னன் மெனிலசின் அழகிற் சிறந்த மனைவியின் மீது மையல் கொண்டு, பிரியாம் அரசின் மைந்தன் பாரிஸ் என்பவன், அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறான். மெனிலஸ், பெரும் படை திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்படுகிறான். டிராய் நகரம் முற்றுகையிடப்படுகிறது. ஒன்பதாண்டுக் காலத்திற்கு மேலாக முற்றுகை தொடர்ந்து பின்னர், போரில் வெற்றி வாகை சூடி, இழந்த மனைவியை அழைத்துக் கொண்டு மெனிலஸ் திரும்புகிறான். இந்த நீண்ட போருக் கிடையே எத்தனையோ சுவைமிகு நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், காதல் விளையாட்டுக்கள், வீரங்கொப்பளிக்கும் கட்டங்கள். இந்த ‘இலியத்’ காவியத்தின் தொடர்ச்சிதான், ‘ஒதஸ்ஸே’ என்ற ஹோமரின் மற்றொரு பெருங் காவியமாகும். ‘டிராய்’ நகரை முற்றுகையிட்ட கிரேக்க மாவீரர்களில் ஒருவன் ஒதிசியஸ்—அஞ்சா நெஞ்சு கொண்டவன். ‘இதாக்கா’ என்ற பகுதியின் மன்னவன் அவன், அந்தப் பகுதி ஒரு தீவாகும். பத்தாண்டுக்காலப் போரை முடித்துவிட்டுத் தன்னுடைய தாயகம் திரும்பி, அன்பு மனைவியையும் ஆசை மகனையும் காணவேண்டுமென்ற துடிப்புடன் கடற்பயணம் மேற்கொள்கிறான். அந்தக் கடற்பயணமும் அவனுக்குப் போராட்ட மாகவே ஆகிவிடுகிறது. ஓராண்டு, ஈராண்டு அல்ல — பத்து ஆண்டுக் காலப் போராட்டம் — கடல் அலைகளோடு<noinclude></noinclude> 8srbz5frn6ou1jy4r92imxemhzsabk3 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/107 250 641238 1927467 1926207 2026-04-27T15:52:45Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927586 1927467 2026-04-28T05:30:14Z Mohanraj20 15516 1927586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|94||கலைஞர்}}</noinclude>கொடிய புயல்களோடு! முரட்டுத் தேவதைகளோடு! அதுவும் தன்னந்தனியனாகத் தொல்லைகளை ஏற்கிறான். நிம்மதி மூச்சுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறான். டிராய் நகரில் போர் செய்து களைத்துப் போனவன், மீண்டும் பத்தாண்டுகள் கடற் பயணத்தையே ஒரு போராட்டமாக மேற் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற் கிடையே “இதாக்கா” தீவில் அவனது மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பிரபுக்கள் கும்மாளமடிக்கிறார்கள். அந்தப் பிரப்புக்களில் ஒருவனை, ஒதீசியசின் மனைவி, திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று தினந்தோறும் வற்புறுத்தப்படுகிறாள். அந்தக் கயவர்களை எதிர்த்துத் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மங்கை நல்லாள் பெரும் பாடுபடுகிறாள் கணவன் கடல் பயணத்திலே — கடும் சோதனைகளுக் கிடையிலே! காரிகையோ காமுகர்களின் குடிவெறிக் கூத்துக்கிடையிலே! பயங்கரப் பயணத்தின் ஒரு கட்டமாக ஒதீசியஸ், கலிப்சா என்ற தெய்வப் பெண்ணுக்குரிய அழகிய தீவு ஒன்றுக்குப் போய்ச்சேர நேரிடுகிறது. அங்கே அவனுக்கு சுகவாசம்தான். கொடிய கோடைபோன்ற துன்பத்திற்கு மத்தியில் குளிர்ந்த தென்றல் வீசுவதுபோலத்தான் அந்தத் தீவு அவனுக்கு இருந்தது. நல்ல உள்ளம் படைத்த அந்தத் தெய்வப் பெண்ணும், அவனை மீண்டும் கடற் பயணம் மேற்கொள்ள வேண்டாமென்றும், அந்தத் தீவிலேயே தங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நல்லதென்றும், அவனுக்குத் தேவையானது அனைத்தையும் வழங்குவதாகவும் கூறுகிறாள். எதை வேண்டுமானாலும் அந்தத் தூய இதயம் படைத்த தோகையாள் வழங்கிடமுடியும்; ஆனால்<noinclude></noinclude> ir8znkse4zhnzzcojln2js2kcsm3sd6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/108 250 641239 1927468 1926208 2026-04-27T15:53:47Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927589 1927468 2026-04-28T05:34:39Z Mohanraj20 15516 1927589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||95}}</noinclude>அவனது ‘இதாக்கா’ தீவையும், இனிமை வாய்ந்த இல்லத்தையும் வழங்க இயலுமா? இந்தப் பிரச்சினையைக் கேள்விக்குறியாக ஆக்கி, ஹோமர் எவ்வளவு அற்புதமான கட்டத்தை உருவாக்கித் தருகிறார் பார்! “அன்பும் ஆற்றலும் வாய்ந்த, ஒதீசியஸ்! நீ, மனமார நேசிக்கும் ‘இதாக்கா’ வுக்கு எப்படியும் திரும்பிப் போய், உன் இல்லத்தாரையும் உன் மக்களையும் பார்த்தே தீரவேண்டுமென்று அவா மிகுதியால் கவலை கொண்டிருக்கிறாய். ஆனால் ஒன்று – நீ உன் தாய்நாடு திரும்பக் கூடு மானால் எனக்கு மகிழ்ச்சியே! இடையில் உன்னைத் தொடர்ந்து எதிர்க்கும் கடல் கடவுள்கள் சில வற்றின் கடுமையான சோதனைகளை உன்னால் சமாளிக்க முடியாது என்றே கருதுகிறேன். எனவே நீ விரும்பினால் இந்த மாளிகையில் என்றும் மாறாத வாலிப வனப்புடன் என்னுடன் சிரஞ்சீவியாக வாழலாம், என்ன சொல்கிறாய்? ஒரு தேவ கன்னிகையின் அழைப்பைப் புறக்கணித்து மானிடப் பிறவியான உன் மனைவியிடமே சென்றிட முடிவு கட்டிவிட்டாயா?” கலிபசா என்ற கடற் கன்னியின் கேள்வி இது! ஆம்; கனியிதழ்கள் மட்டுமல்ல — அவள் கடை விழியும் கேட்கிறது இந்தக் கவர்ச்சி மிக்கக் கேள்வியை! அதற்கு ஒதீசியஸ் சொல்லும் பதிலை, ஹோமர் விவரிக்கிற அருமையே அருமை! “தேவமாதே! என் சினத் தீயை மூட்டி விடாதே! கடவுள் தன்மை வாய்ந்த உன் கட்டழ குடன் ஒப்பிடும்போது மானிட ஜாதியில் தோன்றிய என் மனைவி அழகு குறைந்தவள்<noinclude></noinclude> qj1iv7hi5rfs6e8zm2pzlstddse1xhc பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/109 250 641240 1927470 1926209 2026-04-27T15:53:54Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927590 1927470 2026-04-28T05:42:41Z Mohanraj20 15516 1927590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|96||கலைஞர்}}</noinclude>தான். மாறாத இளமையும்-மங்காத வாழ்வும் உன்னைப் போலவே எனக்கும் கிடைக்குமென்று நீ கூறிய போதிலும், என் மனம் என் வீட்டையும் என் மக்களையும் காண்பதற்கே முந்துகிறது. நீ அச்சுறுத்துகிறபடி இதுவரை நான் அனுப வித்ததைப் போலவே இனியும் நான் மேற் கொள்கிற கடற் பயணத்தில் “பூகம்ப தேவனான பொசிதன்” எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதென்ற முடிவுடன் புறப்பட்டுவிட்டேன் ஒதீசியசின் பதில், அவளுக்கு மகிழ்ச்சியே அளித்தது. அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அந்த நல்ல பெண்மணி, அவனை மீண்டும் கடலில் வழி அனுப்பிவைக்கிறாள். கடலின் நடுவே, பூகம்ப தேவன், அவனைப் பார்த்து விட்டான். அவ்வளவுதான். மேகங்களையெல்லாம் கருமையாக்கி ஒரு அணியில் திரட்டி நிறுத்தி, தன் கையிலுள்ள வேலாயுதத்தால் ஆழ்கடலைக் குத்துகிறான். உடனே புயல் — சூறாவளி — கொந்தளிப்பு — ஒதீசியசைச் சுருட்டிக்கொள்ள அலைகளின் நீண்ட நாக்குகள் நீளுகின்றன. அதிலிருந்து எப்படித் தப்புகிறான்? எப்படித் தன் அன்புக்குரிய ‘இதாக்கா’ வுக்குச் செல்கிறான்? இவைகளைத் ‘திரையில் காண்க’என்று கூறமாட்டேன். ஓய்விருக்கும்போது ஹோமரின் ஒதீசியசைப் படித்துப்பார்! உணர்ச்சிக் காவியம் அது! எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 7—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> lzg98dcjpceuha4tto4aiq77nch8nq6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/110 250 641241 1927471 1926210 2026-04-27T15:54:02Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1927471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1927591 1927471 2026-04-28T05:44:54Z Mohanraj20 15516 1927591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிங்கங்களும் சிறுநரிகளும்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> குட்டிக்கதை எழுதுவதில் தங்களை மூதறிஞர் ராஜாஜி என்றும், உவமைக் கதைகள் கூறுவதில் தங்களைப் பேரறிஞர் அண்ணா என்றும் எண்ணிக்கொண்டு வண்ணக் கலா பங்களுடன் சில வான்கோழிகள் போட்டி போடுகின் ன்றன. ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதற்கு முடக்கு வாதமாம். குகையை விட்டு அது வெளியே வர முடியவில்லையாம். எனவே அது தந்திரமாக காக்கைகளையும்,வாத்துக்களையும், கழுதைகளையும், ஆடுகளையும், நரி களையும் “உடன்பிறப்புக்களே!” என்று அன்பொழுக அழைத்ததாம். அதை நம்பி, முதலில் ஆடுகள், பிறகு கழுதைகள், மூன்றாவதாக வாத்துக்கள், குகைக்குள்ளே சென்று சிங்கத்திற்கு இரையாகி விட்டனவாம். நான்கா வதாகச் சென்ற நரி, சிங்கத்தை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டதாம். சிங்கம், “வழக்கு” எனும் முடக்கு வாத நோயின் கொடுமை தாங்க முடியாமல் நாளடைவில் மாண்டு மறைந்து விட்டதாம். இப்படி ஒரு ஏட்டில் ஒரு குட்டிக்கதை! முடக்குவாத நோய் சிங்கத்திற்கு வந்தாலும் சரி; அல்லது மனிதர்களுக்கு வந்தாலும் சரி; நாளடைவில் மாண்டுதான் போக வேண்டும். உலகில் உயிரினமாகத் தோன்றுகிற எதுவும் அழியா<noinclude>க—9—7</noinclude> 5wyurg18cpysqnuxuebcc5nf08bcs2n பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/123 250 641589 1927460 2026-04-27T15:47:45Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்‌ அளவு 101}}</noinclude>தடித்த முரட்டுக்‌ கயிறுகளுக்கும்‌ இரு வகை அலகுகள்‌ தோற்றுவிக்கப் பட்டன. நுண்ணிய நூல்களுக்கு மில்லி டெக்ஸ்‌ எனவும்‌, முரட்டு நூல்களுக்குக்‌ கிலோ டெக்ஸ்‌ எனவும்,‌ அலகுகள்‌ வரையறுக்கப்‌ பட்டுள்ளன. 1 மில்லி டெக்ஸ்‌ = 1 கி.மீ. நூலின்‌ எடை (மி.கிராமில்‌)<br> 1 கிலோடெக்ஸ்‌ = 1 கி.மீ. நூலின்‌ எடை (மி.கிராமில்‌) டெக்ஸ்‌ அலகு முழுமையாக நெசவுத்‌ தொழிலில்‌ ஏற்றுக் கொள்ளப் படவில்லை. எடுத்துக் காட்டாக, பருத்தி நூலின்‌ முறுக்கு கீழக் காணும்‌ சமன்பாட்டின் படி, குறிப்பிடப் படுகிறது.<br> முறுக்குக் காரணி = {{sfrac|1 அங்குலத்தில்‌ இடம் பெறும்‌ சுற்று|√ சிணுக்கு எண்‌}} டெக்ஸ்‌ அமைப்பில்‌ 1 அங்குலத்திற்கான சுற்று என்னும்‌ நிலை, 1 மீட்டருக்கான சுற்று என மாற்றம்‌ பெறும்‌. மேலும்‌, டெக்ஸ்‌ சிணுக்கு எண்‌ என்னும்‌ துணையகின்‌ மதிப்பு, பருத்திச்‌ சிணுக்கு எண்‌ என்னும்‌ துணையலகின்‌ மதிப்பிலிருந்து மாறு படும்‌. எனவே, முறுக்குக்‌ காரணியின்‌ மதிப்பு வேறு படும்‌. மேலும்‌, டெக்ஸ்‌ வழி முறை ஒரு நேரடி வழி முறையாகும்., பருத்திச்‌ சிணுக்கு எண்‌ முறையோ ஒரு மறைமுக வழி முறையாகும்‌. எனவே, அலகு நீளத்தில்‌ சுற்றுகள்‌, முறுக்குக் காரணி, இழைச்‌ சிணுக்கு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புச்‌ சமன்பாட்டின்‌ வடிவமும்‌ மாறு படும்‌. 1 மீ. இடைவெளியில்‌ உள்ள சுற்று = {{sfrac|முறுக்குக் காரணி|√ டெக்ஸ்‌ சிணுக்கு எண்‌}}<br> ஒரு துணியின்‌ நெசவு நெருக்கத்தைக்‌ குறிப்பிடும்‌ மூடு காரணி (Cover factor) பழைய முறையில்‌ K = {{sfrac|ஒரு அங்குல இடைவெளியில்‌ பாவு நூல்‌ எண்ணிக்கை|√ பருத்திச்‌ சிணுக்கு எண்‌}} எனவும் டெக்ஸ் முறையில், K = 1 செ.மீ. இடைவெளியில்‌ நூல்‌ எண்ணிக்கை X √டெக்ஸ்‌ சிணுக்கு எண்‌ எனவும்‌ ஆகும்‌.<br> டெக்ஸ்‌ = {{sfrac|590.5|பருத்திச்‌ சிணுக்கு எண்‌}}<br> டெக்ஸ்‌ = டெனியர்‌ X 0.111<br> <b>சிணுக்கு எண்‌ அளவை முறை</b>. சிணுக்கு எண்‌ எந்த அலகில்‌ குறிப்பிடப் பட்டாலும்‌, நூலின்‌ நீளத்தையும்‌, எடையையும்‌ துல்லியமாக ,அளப்பதற்கு விரிவான வழி முறைகள்‌ தேவைப் படுகின்றன. இம்முறைகள் பெரும்பாலும்‌ ஆய்வுக்காகக்‌ கிட்டும்‌ மாதிரிப்‌ பொருளின்‌ நீளத்தைப்‌ பொறுத்து வகுக்கப் படுகின்றன. <b>நீள அளவை</b>. சிட்ட வடிவில்‌ நூல்‌ தார்க்‌ குழலிலோ, கூம்புக்‌ கூடுகளிலோ சுற்றப்‌ பட்டிருந்தால்‌, ஒரு போர்த்தும்‌ திருகு வட்டத்தைச்‌ கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில்‌ நூற்கண்டுகளைச்‌ சுற்றலாம்‌. இதனைச்‌ கையாலோ, விசையாலோ இயக்கலாம்‌. பருத்தி நூல்களுக்கு இத்திருகு வட்டத்தின்‌ சுற்றளவு 54 அங்குலம்‌. எனவே, 80 சுற்றுகள்‌, 120 கெஜம்‌ (அல்லது ஒரு குஞ்சம்‌) கொண்ட நூற்கண்டைத் தருகின்றன. ஒவ்வொரு பயன் முறைக்கும்‌ தக்கவாறு திருகு வட்டச்‌ சுற்றளவும்‌, கண்டு நீளமும்‌ தேர்ந்‌தெடுக்கப் படும்‌. நூல்‌ கண்டு கட்டப் படும்‌ இழு விசையைப்‌ பொறுத்து, நீளம்‌ மாறக் கூடுமாதலால்‌, ஒரு நூற்கண்டு அளவியைக்‌ கொண்டு திருகு வட்டத்தின்‌ இழுவையைத்‌ துல்லியமாக அளத்தல்‌ வேண்டும்‌. நூல் கண்டு 440 கெஜ நீள நூலின்‌ பளுவால்‌, இழுக்கப் படும் போது, நூல் கண்டின்‌ சுற்றளவு திருகு வட்டத்தின்‌ சுற்றளவிலிருந்து 0.5Hக்கு மேற்படாதவாறு வேறு பட்டிருக்க வேண்டும்‌. இவ்வாறிருப்பின்‌, திருகு வட்டத்தின்‌ இழு விசை சரியாக இருப்பது போன்று தோன்றும்‌. சிட்டத்திலிருந்து நூலைப்‌ பிரிக்கும்‌ போது இழு விசை அகற்றப் படுவதால்‌, நூல்‌ சற்றே சுருங்குகிறது. இதனைத்‌ தவிர்ப்பதற்கு நூலைச்‌ சிட்டத்தில்‌ இழுத்துக்‌ கட்டிய பின்பு, ஆய்வுச்‌ சூழ்நிலையில்‌, மூன்று மணிகளுக்குக்‌ குறையாமல்‌ தளரச்‌ செய்து, பின்பு திருகு வட்டத்தில்‌ சுற்ற வேண்டும்‌. <b>குட்டையான நூல்கள்</b>‌. துணியிலுள்ள நூல்கள்‌ ஏறக் குறைய ஒரு கெஜத்திற்கு மேல்‌ நீளமுடையனவாக இருப்பதில்லையாதலால்‌, இந்நூல்களுக்கு ஆய்வு முறைகள்‌ சற்றே திருத்தப் படுகின்றன. ஆய்வுச்‌ சூழ்நிலையில்,‌ 24 மணி நேரத்திற்குப்‌ பதப் படுத்தப் பட்ட பின்பு, செவ்வக வடிவில்‌ இரு பாவுக்‌ குறுந் துண்டுகளும்‌ (strips), ஐந்து ஊடு வகைக்‌ குறுந் துண்டுகளும்‌ வெட்டி எடுக்கப் படுகின்றன. இத்துண்டுகள்‌ ஒவ்வொன்றும்‌ குறைந்தது 20' நீளமுடையனவாகவும்‌, அகல வாக்கில்‌ குறைந்தது 50 நூல்கள்‌ பிரித்தெடுக்கப்‌ பட வல்லனவாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இரு பாவு வகைத்‌ துண்டுகள்,‌ ஏறத் தாழ 100 பாவு வகைச்‌ சிட்டங்களைக்‌ குறிப்பிடுவனவாதலால்‌,<noinclude></noinclude> 98szh98gne146mttoo03driqw3wmp5o பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/124 250 641590 1927503 2026-04-27T16:41:59Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|102 நூல்‌ அளவு}}</noinclude>இயைபிலா மாதிரி (random sample) தயாரிக்கப்‌ பட்டதாகக்‌ கொள்ளலாம்‌. ஆனால்,‌ ஐந்து ஊடு குறுந்துண்டுகள்‌ ஐந்து ஊடு வகைச்‌ சிட்டங்களை மட்டுமே பதிலிட இயலும்‌. நூல்கள்‌ ஒன்றுக்கொன்று பிணைப்புறுவதால்,‌ துணியிலிருந்து அகற்றப்படும்‌ நூலில்‌ அலைவு இருக்கும்‌. அலைவின்‌ அளவு தெரிந்திருந்தாலன்றி, நீட்டப் பட்ட நிலையில்‌ நூல்‌ நீளம்‌ அறியப் பட வாய்ப்பில்லை. அலைவு விழுக்காடு = {{sfrac|நீட்டப்பட்ட நிலையில்‌ நீளம்‌–அலைவு நிலை நீளம்|அலைவு நிலை நீளம்}} X 100 இறுதியாகச்‌ சிணுக்குக்‌ கணக்கீடுகளில்‌ பயன் படுத்தப் படும்‌ நூல்‌ நீளத்தின்‌ மதிப்பு = {{sfrac|குறுந்துண்டு மாதிரியின்‌ நீளம்‌ X நூல்‌ எண்ணிக்கை X (100 + அலைவு விழுக்காடு)|100}} ஆகும்‌. மிகச்‌ சிறிய துணி மாதிரிகளுக்குச்‌ சிறப்பான ஆசுப் பலகைகள்‌ நூல்களை வெட்டுவதற்கான அமைக்கப்‌ படுகின்றன. <b>எடை அளவை</b>. நூலின்‌ எடையைக்‌ கண்டறியப்‌ பயன் படும்‌ தராசுகளின்‌ துல்லியம்‌ {[sfrac|1|500}}க்குக்‌ குறையாதிருத்தல்‌ வேண்டும்‌. நூல்‌ நிறுத்தலில்‌ எதிர் கொள்ளப் படும்‌ பெரும்‌ சிக்கல்‌ ஈர ஏற்பு ஆகும்‌. இதற்கென இரு வழி முறைகள்‌ பரிந்துரைக்கப்‌ பட்டுள்ளன. 1. {{sfrac|100 + நியம ஈர மறு ஈர்ப்பு|100}} என்னும்‌ காரணியினால்‌ அடுப்பில்‌ உலர்த்தப்பட்ட நூலின்‌ எடையைப்‌ பெருக்க வேண்டும்‌. 2. ஆய்வுச்‌ சூழ்நிலையில்‌ சம நிலை எய்திய பிறகு, அதே சூழ்நிலையில்‌ நிறுத்த வேண்டும்‌. இரு வழி முறைகளின்‌ ஆய்வுகளும்‌ சமமாக இருப்பதில்லை; ஏனெனில்‌, நடை முறை ஈர ஏற்பும்‌, செயற்கை நியமச்‌ சூழ்நிலையில்‌ தோன்றும்‌ சம நிலை ஈர ஏற்பும்‌ ஒன்றாக இரா. முதல்‌ முறை, துல்லியமான முடிவுகளைத்‌ தரக்‌ கூடியது என்றாலும்‌, இரண்டாம்‌ முறை அனறாட ஆய்வுக்கு எளிதான முறையாகையால்,‌ பெரிதும்‌ விரும்பப் படுகிறது. இவை தவிர, கம்பளித்‌ தொழில்‌ ஆராய்ச்சிக்‌ கழகம்‌ அறிமுகப் படுத்தியுள்ள முறையில்‌, உலர்த்தும்‌ அமைப்பிலேயே அளவைகள்‌ நிகழ்த்தப்‌ படுகின்றன. <b>சேர்க்கை மற்றும்‌ விலக்கப்‌ பொருள்கள்</b>‌. நூற்புக்‌ கதிருக்கும்‌, முழுமையாக்கப்பட்ட துணிக்கும்‌ இடைப்பட்ட கட்டங்களில்,‌ நூல்‌ பல திருத்தங்களுக்குள்ளாகிறது. இவற்றில்,‌ துணியின்‌ நிறை மாறுவதற்கு வாய்ப்புண்டு. பாவு நூல்‌ கஞ்சியிடல்‌ போன்ற செயல்கள்‌ துணியின்‌ நிறையைக்‌ கூடுதலாக்குகின்றன; கழுவுதல்‌, நிற நீக்கம்‌ போன்ற முறைகளினால்‌ துணியின்‌ நிறை குறையக் கூடும்‌. இதன்‌ விளைவாக, ஒரு மாதிரிப்‌ பொருளின்‌ ஆய்வுச்‌ சிணுக்கு எண்ணில்‌ திருத்தம்‌ செய்ய வேண்டி வரும்‌. இழைச்‌ சிணுக்கு அளவையை, நேரடியாகக்‌ காண்பிக்க நோல்ஸ்‌ தராசு (Knowles balance), கால்‌ வட்ட வடிவத்‌ தராசு ( quadrant balance) போன்றன பயன்‌ படுகின்றன. பீஸ்லி (Beesley) தராசு என்னும்‌ கருவியில்,‌ ஆதாரத்தின்‌ ஒரு புறம்‌ ஒரு கொக்கியும்,‌ மறு புறம்‌ ஒரு காட்டியும்‌ பொருத்தப்‌ பட்டுள்ளன. ஆதாரக்‌ கம்பியை முதற்கட்டமாக ஒரு தரவுக்‌ கோட்டைக்‌ ( datum line) காட்டி நோக்குமாறு சரி செய்ய வேண்டும்‌. காட்டியின்‌ பக்கத்தில்‌, ஆதாரக்‌ கம்பியிலிருந்து ஒரு காடியிலிருந்து ஒரு நியம எடை தொங்க விடப் படுகிறது. நூலை ஆசுப் பலகையினால்‌, சிறு துண்டுகளாக வெட்டி, இத்துண்டுகளைக்‌ கொக்கியில்‌ மாட்டி, காட்டி தொடக்க நிலையை மீண்டும்‌ தொடுமாறு சரி செய்தல்‌ வேண்டும்‌. இச்சமன் செய்தலுக்குத்‌ தேவைப் படும்‌ நூல்‌ துண்டுகளின்‌ எண்ணிக்கையே நூலின்‌ சிணுக்கு எண்ணாகும்‌. <b>இரட்டிப்பாக்கப் பட்ட நூல்கள்</b>‌. இரு நூல்கள்‌ இணைக்கப் பட்டுத்‌ தயாரிக்கப் படும்‌ நூலின்‌ சிணுக்கு எண்ணை அறிவதற்கு, விரிவான வழி முறைகள்‌ உள்ளன. இருமடி பருத்தி நூலொன்றின்‌ சிணுக்கு எண்‌ 145 என்றும்‌, இரட்டிப்பு முறையின் போது, 10% சுருக்கம்‌ நேரும்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. மறைமுக முறையில்‌ உள்ளுறை நகல்களின்‌ சிணுக்கு எண்களின்‌ தலை கீழ்‌ மதிப்புகளின்‌ கூட்டுத்‌ தொகை இருமடி நூலின்‌ விளைவு, சிணுக்கு எண்ணின்‌ தலை கீழ்‌ மதிப்பாகும்‌. <math>\frac{1}{N_1} + \frac{1}{N_2} = \frac{1}{N} = N_2</math> எனில்‌, <math>\frac{2}{N_1} = \frac{1}{N}, N_1 = 28s</math> சுருக்கத்தினால்‌ ஒற்றை இழைகள்‌ இரண்டும்‌ சன்னம்‌<noinclude></noinclude> 4leiticzujabhmekshyeho7mgs4dvwp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/125 250 641591 1927504 2026-04-27T16:56:47Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்‌ அளவு103}}</noinclude>குறைந்து விட்டமையால்‌, மேற்கூறிய மதிப்பீட்டின்‌ சன்னத்தை 10% உயர்த்த வேண்டும்‌. அதாவது, 28 X 1.1 = 30.8s. சிலவற்றில்,‌ இரட்டிப்புச்‌ செயலினால்‌ உட்கூறு நூல்களின்‌ நீளம்‌ கூடுதலாகி விடும்‌. இங்கு மதிப்பிட்டுத்‌ திருத்தம்‌ எதிர்த்‌ திசையில்‌ செல்லும்‌. இரட்டிப்‌பாக்கப் பட்ட நூல்களுள்‌ இரண்டினை இணைத்து, மீண்டும்‌ இரட்டிப்பாக்கலாம்‌. இம்முறை டயர்‌ (tyre) தொழில் நுட்பத்தில்‌ முதன்மை பெறுகிறது. இங்கு சிணுக்கு எண்ணை அறிவது எளிதாயினும்,‌ துல்லியமான மதிப்புகள்‌ பெறப்‌ படுவதில்லை. <b>சிணுக்கு எண்ணும்‌ நூல்‌ குறுக்களவும்</b>‌: நூலின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றம்,‌ வட்டமாக இருப்பதாகக்‌ கொள்ளப் படுகிறது. இதன்‌ அடிப்படையில்‌ பருத்தி வகை நூல்களின்‌ விட்டத்திற்கு வாய்ப்பாடுகள்‌ கண்டு பிடிக்கப்‌ பட்டுள்ளன: விட்டம்‌ (அங்குலங்களில்‌) = {{sfrac|1|√ 800 X சிணுக்கு எண்}} மணிக் கம்பளி வகை நூல்களுக்கு விட்டம் ‌(அங்குலங்களில்‌) = {{sfrac|1|√ 500 X சிணுக்கு எண்}} பொதுவாக, விட்டம் = <math>3.75 \times 10^{-3} \sqrt {N} </math>செ.மீ. N = டெக்ஸ்‌ மதிப்பு <b>முறுக்கு அளவை</b>. நூலின்‌ உட்கூறு இழைகளை ஒருங்கிணைத்து வைப்பதற்குத்‌ தேவைப் படும்‌ சுருள்களின்‌ அளவு முறுக்கு எனப் படுகிறது. நூலின்‌ அச்சுக்கு இணையானதொரு கோட்டை, மையமாகக்‌ கொண்டு நூலைச்‌ சுழற்றும்‌ இயக்கம்‌ முறுக்காகும்‌. முறுக்கேற்றத்தினால்‌, நூலுக்கு வலியும்,‌ ஓரியல்பும்‌ (coherence) ஏற்படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 125 |bSize = 815 |cWidth = 353 |cHeight = 238 |oTop = 770 |oLeft = 34 |Location = center}} <b>முறுக்கின்‌ திசை</b>. ஆங்கில எழுத்துக்களான S மற்றும்‌ Z ஆகியனவற்றைக்‌ கொண்டு எதிரெதிர்த் திசை முறுக்குகளைக்‌ குறிப்பிடலாம்‌ (படம்‌ 1). முறுக்கின்‌ அளவு = {{sfrac|சுற்றுகளின் எண்ணிக்கை|நூலின் நீளம்}} இவ்வழி முறையின் படி, முறுக்கைக்‌ குறிப்பிடுதல்‌ பெரும்பாலான சூழ்நிலைகளில்,‌ நிறைவு தருவதாக இருந்தாலும்,‌ நூலின்‌ சிணுக்கு எண்ணுக்குத்‌ தொடர்‌ பற்றுள்ளது. முறுக்குக்‌ காரணி (twist factor) என்னும்‌ துணையலகைக்‌ கொண்டு, சிணுக்கு எண்ணைப்‌ பற்றித்‌ தெரிந்து கொள்ளாமலே, முறுக்கு இயல்பை அறியலாம்‌. ஓர்‌ அங்குலத்தின்‌ சம அளவு சுற்றுகளைக்‌ கொண்ட முரட்டு நூலும்,‌ சன்ன நூலும்‌ வெவ்வேறு முறுக்கு இயல்புகளைக்‌ கொண்டிருக்கின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 125 |bSize = 815 |cWidth = 353 |cHeight = 270 |oTop = 570 |oLeft = 420 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூலின்‌ கருத்தியல்‌ வழிக்‌ கூறு ஒன்று படம்‌.2 இல்‌ காட்ட ப்பட்டுள்ளது. நூலின்‌ புறப் பரப்பில்,‌ ஓர்‌ இழை திருகு பாதையில்,‌ நூலின்‌ அச்சை ஒரு சுற்று வருவதைக்‌ காணலாம்‌. திருகு சுற்றின்‌ தொடு கோட்டிற்கும்,‌ நூலின்‌ அச்சுக்கும்‌ இடைப் பட்ட கோணம்‌ முறுக்குக்‌ கோணம்‌ (twist angle, θ) எனப் படுகிறது. புறப் பரப்பு அடுக்கைத்‌ தட்டையாகக்‌ கற்பனை செய்கையில்,‌ இழை ஒரு செங்கோண முக்கோணத்தின்‌ செம்பக்கம்‌ (hypotenuse) ஆவதைக்‌ காணலாம்‌. நூலின்‌ குறுக்களவு d அங்குலம்‌, ஒரு முறுக்கின்‌ நீளம்‌ l எனில்‌, <math> tan \theta = \frac {\pi d}{l}</math>{{nop}}<noinclude></noinclude> 33n4tjjs6w1nkqr0nzh33j1v77zkge0 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/46 250 641592 1927506 2026-04-27T17:16:12Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலே தான் தில்லையாடியில் வள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||37}}</noinclude>மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலே தான் தில்லையாடியில் வள்ளியம்மை நகர் உருவாக்கினோம். புதிய பூம்புகார், வாழ்ந்த தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக எழுந்து நிற்கிறது. அன்னியரை எதிர்த்த அடலேறு கட்டபொம்மனுக்கு நினைவுக்கோட்டை கம்பீரமாகக் காட்சி தருகிறது. காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஓர் ஆலயம். கலனாகிக்கிடந்த மயிலை வள்ளுவர் கோயிலுக்குப் புதிய திருப்பணி. நுங்கம்பாக்கத்தில் உலகோர் கவனத்தைத் திருப்பும் வண்ணம் ஒப்பற்ற வள்ளுவர் கோட்டம். உடன்பிறப்பே, இவைகளையெல்லாம் நினைக்கிறேன் நெஞ்சு இனிக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன்; தேன் பாய்கிறது, இதயமெனும் கழனியிலே! உயிர், தமிழுக்கு எனும் உறுதிப் பயிர் விளைகிறது! களைகளுக்கு இங்கு இடமில்லை என்ற திறமும், தெம்பும் பிறக்கிறது! ஆகா! அதோ! அதோ! வள்ளுவர் கோட்டத்துத் தேரின் உச்சியிலே நானும் நாவலரும் இணைந்து கலசத்தை ஏற்றிவைக்கும் உணர்ச்சிமிகு காட்சி! மனத்திரையில் நிலைத்து நிற்கிறது. கோட்டம் திறந்திட வருகிறவர் குடியரசுத் தலைவர்! நமது அன்புக்குரியவர்! மேன்மை தங்கிய பக்ருதீன் அலி அகமது அவர்கள். வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றபோது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட<noinclude> க—7–3</noinclude> 1tux78a4jiu9nff4x3mwbjx6o2tcy4c பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/47 250 641593 1927507 2026-04-27T17:16:59Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 38 கலைஞர் என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|38||}}</noinclude>________________ 38 கலைஞர் என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று அடைகிறேன்; அவர் கோட்டம் திறக்க வ நான் கண்டு! வருவது திறப்புவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில் ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் திரு. கே.கே. ஷா அவர்களாவார்கள். ஆளுநர் அவர்கள் மனந்திறந்து பேசக் கூடிய பண் பாளர் ஆவார். தன்னுடைய பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான .. ''கே. கே '' என்பதைக்கூட "கலைஞர் கருணாநிதி ஷா” என்று இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழை யாகப் பொழிந்தவர். .. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" என்ற குறள்நெறிக்கொப்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும்; மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்புவிழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடைய தாகும். என் இனிய உடன்பிறப்பே. "இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பது வெறும் சொல்லழகுக் கோவை யல்ல! செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவ தில்லை. இன்றையக் குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ப தால்; எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆசிவிடுவ தில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களா கிறார்கள்.<noinclude></noinclude> 5zx0adqriccvfds093d7abfxd3p869f 1927508 1927507 2026-04-27T17:24:40Z Ramya sugumar 15106 1927508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|38||கலைஞர்}}</noinclude>என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன்; அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு! திறப்புவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில் ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் திரு. கே.கே. ஷா அவர்களாவார்கள். ஆளுநர் அவர்கள் மனந்திறந்து பேசக் கூடிய பண்பாளர் ஆவார். தன்னுடைய பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான “கே. கே” என்பதைக்கூட “கலைஞர் கருணாநிதி ஷா” என்று இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர். :“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து :அதனை அவன் கண் விடல்” என்ற குறள்நெறிக்கொப்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும்; மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்புவிழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடைய தாகும். என் இனிய உடன்பிறப்பே. "இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பது வெறும் சொல்லழகுக் கோவை யல்ல! செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவ தில்லை. இன்றையக் குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதால்; எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆசிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களாகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> tw4mpogocrvdvf9rj06q14414d5ya8b பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/48 250 641594 1927509 2026-04-27T17:32:54Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக்காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||39}}</noinclude>நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக்காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள், மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது—மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திராதான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்! நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும்கூட நன்றாக நினைவிருக்திறது; “சிறுமிகளே! நீங்கள் எல்லாம் இந்திரா காந்திபோல எதிர் காலத்தில் ஆகவேண்டும். சிறுவர்களே! நீங்கள் எல்லாம் கருணாநிதிபோல, காமராஜர்போல ஆகவேண்டும்!” என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார். என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை. நான் கிடக்கிறேன், சாதாரணமானவன்! என்னை விட்டுவிடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச் சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளிவிட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான், இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். :செய்திகள், குழந்தைகளைப்போல! :வரலாறுகள், தலைவர்களைப்போல! பல செய்திகள் தோன்றும் போதே, வரலாறாக வளர முடியாத நிலைபெற்றுக் கருவிலேயே சிதைந்தும் விடுகின்றன! சில செய்திகளோ, பிறக்கும்போதே வரலாற்றுக் குரியவைகளாகப் பிறந்து விடுகின்றன. அந்தச் சில செய்திகளும் களிப்பூட்டும் தன்மை கொண்டவைகளாகவும் இருந்திடலாம்; கவலையூட்டும் வண்ணமும் அமைந்திடலாம்.{{nop}}<noinclude></noinclude> 9er395zw84iyl2f1uba67govixdhkdr பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/49 250 641595 1927510 2026-04-27T17:42:22Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருசாரருக்குக் களிபேருவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாத மனநோயைத் தரவல்ல தாகவும் விளங்கிடக் கூடும். இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|40||கலைஞர்}}</noinclude>ஒருசாரருக்குக் களிபேருவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாத மனநோயைத் தரவல்ல தாகவும் விளங்கிடக் கூடும். இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் “வரலாற்றுச் செய்தி” என்பது தான்! இந்தக் கோட்டம் அமைக்க வேண்டுமென்று திட்ட தொடக்கவிழா எப்போது மிட்டு அதற்கான பெற்றது என்பது நடை உனக்கு நினைவிருக்கிறதா? அதுவும் வெறும் செய்தியல்ல; வரலாற்றுச் செய்திதான் என்பதால் உன் குறிப்புக்காகவும், எதிர்கால வரலாற்றுக் குறிப்புக் காகவும் இப்போது அதை நினைவு படுத்துகிறேன். அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாளையொட்டிய அண்ணா பிறந்த நாள் வாரத்தில், அதாவது 1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் மொழிநூல் அறிஞர் தேவ நேயப்பாவாணரும், முத்தமிழ்க் காவலர் விசுவநாதமும் வீற்றிருந்தவிழா மேடையில் பொதுப்பணி அமைச்சர் ப.உ. சண்முகம் வரவேற்புரையாற்றிட, கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமையில், மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் முன்னிலையில், அன்று தமிழக முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான், வள்ளுவர் கோட்டத்துக்கான பணிகளைத் தொடங்கி அடிக்கல் நாட்டு விழாவை நிறை வேற்றி வைத்தேன். நயமான தமிழ் எடுத்து நாவலரும்; பேரருவியின் பெருக்கெனத் தமிழ் முழக்கிப் பேராசிரியரும்; தமிழ் நிலத்தில் ஆழ உழுது அரும் பொருட் கருவூலங்களை வழங்கு<noinclude></noinclude> ays1ugow8s5uhrlqvicsubjvpnxde04 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/50 250 641596 1927511 2026-04-27T17:42:56Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude><noinclude></noinclude> rnotjq6urwis740p86f4arn4ocdwq8n 1927512 1927511 2026-04-27T17:47:06Z Ramya sugumar 15106 1927512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||41}}</noinclude>கின்ற பாவாணரும்! சிந்துபாடும் சிற்றாறு என முத்தமிழ்க் காவலரும்; அவர்களோடு இணைந்த காரணத்தால் நானும் அன்று ஆற்றிய உரைகள்! நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சி! கல்லில் உளிகொண்டு செதுக்கிச் சிற்பவேலையைத் தொடங்கிய காட்சி! அதே சமயம் நூற்றுக்கணக்கான சிற்றுளிகள் கற்களில் பரதமாடி எழுப்பிய சதங்கை நிகர்த்த சங்கீத ஒலி! அடடா! கரும்புத் தூண் நட்டு, கற்கண்டுக் கூறை வேய்ந்து, கனிச்சாறு கொண்டு தரைமெழுகி, சர்க்கரையால் கோலமிட்டாற் போன்றிருந்தது அந்த விழா! உடன்பிறப்பே! அன்று தொடங்கிய முயற்சிக்குத் தொய்வு நேராமல் பணிகள் நடைபெற்றன! இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா? பூம்புகார் உருவாக்கியதும், பாஞ்சாலங்குறிச்சி கண்டதும், புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர், மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடு ஒன்றை தந்தனர் என்னிடம்! மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதற்கென கருத்துரை வழங்கிடக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதற்கு இடையே அந்தக்கோயிலையன்னியில் நகரின் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம். பூம்புகார்க் கலைக்கூடப் பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி, கணபதி ஸ்தபதியாரிடம் கோட்டம் பற்றிய விவாத அரங்குகளைத் தொடர்ந்து நடத்தினோம்.{{nop}}<noinclude></noinclude> ebsbhvpbftrqt4mtevejs9ug63s92xg பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/51 250 641597 1927513 2026-04-27T17:48:16Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 42 கலைஞர் கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும்; வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற் கான கோணல்மாணல்" கோட்டுச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 42 கலைஞர் கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும்; வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற் கான கோணல்மாணல்" கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன். . திருவாரூர் தேர்போல ஒருபகுதி அமைய வேண்டும். கலையரங்கம் ஒன்று இலக்கிய விழாக்கள் நடத்திட மிகப் பெரும் அளவில் உருவாக்க வேண்டும். திருக்குறள் முதலிய தமிழ்ப்பனுவல்களை ஆய்ந்திடும் ஆராய்ச்சி மன்றமொன்றும் அங்கே இடம்பெற வேண்டும். குறளுக்கெனவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற ஐந்தாறு பெரும். புலவர்கள்(கிறித்துவ ஆலயத்து பாதிரிமார்களைப்போல) வள்ளுவர் கோட்டத்திலேயே இருந்து குறள் பரப்பும் தூய்மைப்பணி ஆற்றிட வேண்டும். உலகில் எந்த நாட்டில் இருந்து வருகின்றவராயினும் இந்தக் கோட்டத்திற்கு. வந்து பெற்றுத் திரும்பிட வேண்டும். குறள் பரவிடும் எளிமையான வழிகளைக் கற்றுத் தந்திட வேண்டும். எல்லாக் குறட்பாக்களும் கல்லில் செதுக்கிப் பதிப்பிக்கப்பட வேண்டும். தேரில் வள்ளுவர் சிலை விளங்கிட வேண்டும். கலையரங்கில் தொல்காப்பியரும்; அதங்கோட்டாசானும் சிலைவடிவில் அமைக்கப்பட வேண்டும். இத்தனை கருத்துக்களையும் எடுத்துரைத்தோம். நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் “கோணல் மாணல்'' கோடுகளாக. இருந்தாலும், அடிப்படை எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதனைத் திருத்தியமைத்து சிற்பிகளும், அரசு அதிகாரி களும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுறவேண்டி ஸ்தபதியார் எஸ். கே.ஆச்சார் அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டார்! அவர் தான் குமரிமுனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத் தக்க வண்ணம் வடித்துத் தந்தவர். குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும், காவீரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும்<noinclude></noinclude> dkve3vyahq273ktupvtpdvv5nrj4od3 1927514 1927513 2026-04-27T17:54:07Z Ramya sugumar 15106 1927514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|42||கலைஞர்}}</noinclude>கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும்; வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான “கோணல்மாணல்” கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன். திருவாரூர் தேர்போல ஒருபகுதி அமைய வேண்டும். கலையரங்கம் ஒன்று இலக்கிய விழாக்கள் நடத்திட மிகப் பெரும் அளவில் உருவாக்க வேண்டும். திருக்குறள் முதலிய தமிழ்ப்பனுவல்களை ஆய்ந்திடும் ஆராய்ச்சி மன்றமொன்றும் அங்கே இடம்பெற வேண்டும். குறளுக்கெனவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற ஐந்தாறு பெரும். புலவர்கள்(கிறித்துவ ஆலயத்து பாதிரிமார்களைப்போல) வள்ளுவர் கோட்டத்திலேயே இருந்து குறள் பரப்பும் தூய்மைப்பணி ஆற்றிட வேண்டும். உலகில் எந்த நாட்டில் இருந்து வருகின்றவராயினும் இந்தக் கோட்டத்திற்கு வந்து பயன் பெற்றுத் திரும்பிட வேண்டும். குறள் பரவிடும் எளிமையான வழிகளைக் கற்றுத் தந்திட வேண்டும். எல்லாக் குறட்பாக்களும் கல்லில் செதுக்கிப் பதிப்பிக்கப்பட வேண்டும். தேரில் வள்ளுவர் சிலை விளங்கிட வேண்டும். கலையரங்கில் தொல்காப்பியரும்; அதங்கோட்டாசானும் சிலைவடிவில் அமைக்கப்பட வேண்டும். இத்தனை கருத்துக்களையும் எடுத்துரைத்தோம். நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் “கோணல் மாணல்” கோடுகளாக இருந்தாலும், அடிப்படை எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதனைத் திருத்தியமைத்து சிற்பிகளும், அரசு அதிகாரிகளும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுறவேண்டி ஸ்தபதியார் எஸ். கே. ஆச்சார் அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டார்! அவர் தான் குமரிமுனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்க வண்ணம் வடித்துத் தந்தவர். குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும், காவீரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும்<noinclude></noinclude> jw3vebk6dabznohz85ae07zjqimk9p9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/126 250 641598 1927515 2026-04-27T23:26:41Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|104 நூல்‌ அளவு}}</noinclude>இங்கு <sup>1</sup>&frasl;<sub>l</sub> ஓர்‌ அங்குலத்திலுள்ள சுற்றுகள்‌.<br> <math>\tan \theta \times dx</math> ஓர்‌ அங்குலத்திலுள்ள சுற்றுகள்‌.<br> dx{{sfrac|1|√சிணுக்கு எண்}} ஆதலால்‌, tanθ X {{sfrac|ஓர்‌அங்குலத்தில்‌ சுற்றுகள்‌|√சிணுக்கு எண்}}, இதனை<br> 1 அங்குலத்தில்‌ சுற்றுகள் = K√சிணுக்கு எண், K = முறுக்குக்‌ காரணி எனும்‌ மாறிலியாகும்‌. இது முறுக்குக்‌ கோணத்தின்‌ தொடு கோட்டுக்கு நேர்‌ விகிதமாகும்‌. முறுக்குக்‌ காரணி சமமாக இருக்கும்‌. ஓரளவுக்கு முறுக்குக்‌ காரணி நூலின்‌ தன்மையையும்‌ சுட்டும்‌. முறுக்குக்‌ காரணி = 3 எனக்‌ கொண்ட பருத்தி நூல்‌ மென்மையுடையதாகவும்‌, முறுக்குக்‌ காரணி = 6 எனக்‌ கொண்ட நூல்‌ கடினத் தன்மை கொண்டதாகவும்‌ இருக்கும்‌. பாவு, ஊடு, பின்னல்‌, தையல்‌ எனப்‌ பயன்களைப்‌ பொறுத்தே நூலின்‌ முறுக்குக்‌ காரணி தேர்ந்தெடுக்கப் படும்‌. நேரடி நூல்‌ எண்‌ முறை தேர்ந்தெடுக்கப்‌ பட்டால்‌, அலகு நீளத்தில்‌ சுற்றுக்களின்‌ எண்ணிக்கை, முறுக்குக்‌ காரணி, இழைச்‌ சிணுக்கு எண்‌ ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு வடிவம்‌ மாறும்‌. இந்நிலையில்‌, நூலின்‌ குறுக்களவு நூல்‌, இழைச்‌ சிணுக்கு எண்ணின்‌ வர்க்க மூலத்திற்கு நேர்‌ விகிதத்தில்‌ அமையும்‌. <b>டெக்ஸ்‌ வழி முறை</b>. டெக்ஸ்‌ முறுக்குக்‌ காரணி = ஒரு மீட்டரில்‌ உள்ள சுற்றுகள்‌ <math> 1 \times \sqrt{N} </math>. இக்கணக்கீட்டின்படி தளர்‌ முறுக்கு நூல்களுக்கு முறுக்குக்‌ காரணி ஏறத் தாழ, 2000 ஆகவும்‌, இறுக்கி முறுக்கப் பட்ட நூல்களுக்கு முறுக்கு காரணி ஏறத் தாழ 10000 ஆகவும்‌ இருக்கும்‌. இவ்வெண்‌ மதிப்புகள்‌ சற்றே எளிதில்‌ கையாள முடியாதனவாகத்‌ தோன்றுகின்றன. <b>நூலின்‌ கட்டமைப்பின்‌ முறுக்கேற்றத்தின்‌ பங்கு</b>. நூலுக்கு வலிமை இணக்கம்‌, ஓரியல்பு ஆகிய பண்புகள்‌ முறுக்கேற்றத்தினால்‌ மட்டுமே கூடுகின்றன. எனினும்,‌ ஒரு குறிப்பிட்ட முறுக்கேற்றத்தில்‌ நூலில்‌ வலிமை பெரும நிலையை அடைகின்றது (படம்‌ 3.) {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 126 |bSize = 900 |cWidth = 350 |cHeight = 300 |oTop = 82 |oLeft = 488 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> முறுக்கேற்றத்தின்‌ அளவையும்‌ திசையையும்‌ கட்டுப்‌ படுத்தி அல்லது மாற்றியமைத்துத்‌ துணியின்‌ தோற்றத்தில்‌ பொலிவை உருவாக்கலாம்‌. போலிக்‌ கோடு (Shadow stripe) என்னும்‌ காட்சி விளைவு இவற்றுள்‌ ஒன்றாகும்‌. S மற்றும்‌ முறுக்குகளை மாற்றியமைத்துப்‌ பாவு நெசவு செய்து பெறப் படும்‌ துணியில்‌ நிழல்‌ வரிகள்‌ தோன்றும்‌. இவ்விரு முறுக்கேற்ற வகை நூல்களிலிருந்தும்,‌ ஒளி எதிரொளிப்பு (reflection) மாறுபட்டிருப்பதனால்‌, இவ்விளைவு தோன்றுகிறது. வெட்டப் பட்டு, சமதளமாக்கப்‌ பட்ட புல்வெளியைப்‌ போன்ற தோற்றம்‌ இதில்‌ இருக்கும்‌. இரு படை நெசவில்‌ (twill weave) முறுக்கேற்றத்‌ திசையைத்‌ தக்கவாறு அமைத்து, இரு படை வரியை வெளிக்‌ கொணரவோ, மறைக்கவோ இயலும்‌. இந்நெசவில்,‌ பாவு நூல்‌ Z வகை முறுக்குக்‌ கொண்டிருப்பின்‌, ஊடு நூல்‌ S வகையாக இருப்பின்‌, இரு படை வரி அழுத்தமாகவும்‌, ஊடு நூல்‌ Z–வகை முறுக்கேற்றத்திலிருப்பின்,‌ இரு படை வரி தெளிவாகவும்‌ தோற்றமளிக்கும்‌. <b>முறுக்கேற்ற அளவை</b>. பொதுவான பயன்களுக்கான நூல்‌ வகைகளின்‌ முறுக்கேற்ற அளவை முறைகள்‌ பல உள்ளன. முறுக்கேற்ற ஆய்வுக்குத்‌ தேவைப்படும்‌ மாதிரிப்‌ பொருள்‌ தேர்வில்‌ மிகுந்த கவனம்‌ தேவை. நூலின்‌ தடித்த பகுதிகளிலும்‌, மெலிந்த பகுதிகளிலும்‌ முறுக்கேற்றம்‌ மாறுபட்டிருக்கும்‌. எனவே, மாதிரி நூல்களைத்‌ தேர்ந்தெடுக்கும்‌ போது, மொத்த நூலில்‌ ஏறக் குறைய கெஜ இடைவெளியில்‌ மாதிரித்‌ துண்டு நூல்களை வெட்டி எடுக்க வேண்டும்‌. முறுக்‌கேற்றத்தைக்‌ கண்டறிவதற்குச்‌ செய்ய வேண்டிய ஆய்வுகளின்‌ எண்ணிக்கை அறியப் பட்டுள்ளது. ஆய்வுக்‌கான நூலைக்‌ கையாளுவதிலும்‌ மிகுந்த கவனம்‌ தேவை. இல்லையெனில்‌, முறுக்குப்‌ பங்கீடு பாதிக்கப் படும்‌. கை விரல்களால்‌ நூலைத்‌ தொடுதலைத்‌ தவிர்த்தல்‌ நலம்‌.{{nop}}<noinclude></noinclude> 7neyi4kx5ccu8tktq13wjp379dbxwhv பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/66 250 641599 1927516 2026-04-28T00:44:33Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh||மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|61}}{{rule}}</noinclude>பணியாரம் போலக் குதித்தெழும்பித் தன் அறிவின்மையால் ஆழமறியாமல், ‘இவனுக்கும் சாஸ்திரத்திற்கும் எவ்வளவு தூரம்! ‘கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியுமா ?’ நாம் அது வியாஜமாக வேறு எதையாவது பேசி அரைக்கணத்தில் விரட்டித் துரத்திவிடலாம்!’ என்று, அவருடனே தர்க்கம் முதலிய சாஸ்திர விஷயத்தைப்பற்றிச் சில நேரம் சம்வாதித்து, அதனால் அசைக்கக் கூடாமை கண்டு, அவரை நோக்கி, ‘சாஸ்திரவாதம் செய்யத் தொடங்கினால் வெகுநாள் செல்லும்; நீரும் சிறு பிள்ளை; ‘குருவியின் தலைமேலே பனங்காயை வைப்பது போல’ உமக்கு அதிக பிரயாசத்தைத் தர நமக்குச் சம்மதி இல்லை. ஆகையால், அது நிற்க, மற்றெந்த விஷயத்தையாவது நீரே பேசும், பார்ப்போம்,’ என்று கபடமாகச் சொன்னான். யமுனைத்துறைவர், ‘ஏது ! இவன் நம்மிடத்தில் பரிவுள்ளவன் போலப் பேசுகிறான்? இது உண்மையா ?’ ‘ஆடு நனைகிறதென்று ஓநாய் குந்தி அழுமா ?’ ஜாலமே அல்லாமல் வேறன்று,’ என்று நினைத்துக்கொண்டு, அவனை, ‘நீர் பார்க்கிறதென்பதென்ன? உமது அனுமதிப்படியே செய்வோம். அதிகமாய்ப் பேச வேண்டுவதில்லை. நாம், ‘'''ஆம்'''’ என்கிற மூன்று கேள்வியை மாத்திரம், ‘'''அல்ல'''’ என்று மறுப்பீரானால், நம்மை ஜயித்ததாக ஒப்புக்கொள்ளுகிறோம்; உமக்குச் சம்மதிதானா?’ என்றார். அதற்கு அவனும் அரசனும், ‘சரிதான்’ என்று சம்மதித்து உடன்படிக்கை செய்தார்கள். '''முதற்கேள்வி:''' சிறு குழந்தையாகிய யாமுனாரியர் அவ்வித்வானையே குறித்து, ‘ஐயா, உமது தாய் புத்திரவதி என்கிறோம். நீர் உம்முடைய வாக்கு வல்லமையால் புத்திரவதி அல்லள் என்று மறுத்துவிடும், பார்ப்போம்!’ என்று கேட்டார். அது கேட்டு வித்வான் நெடுநேரமாகப் பல விதத்திலும் ஆராய்ந்து, மறுக்கக் கூடாமையால், அவன், ‘என்னைப் பெற்ற தாய் மலடிதான் என்று வீண் குதர்க்கம் செய்வேனானால், கேட்பவர்கள் பார்ப்பவர்கள் அனைவரும், ‘என்னகாணும் நீ அவள் கர்ப்பத்திலிருந்து கொழுக்கட்டை போலப் பிறந்து, குட்டிச் சுவர் போல நட்டநடுவில் இருந்துகொண்டு, வாய் கூசாமல் அவளை மலடியென்று பிரத்யட்ச விரோதமாக விதண்டாவாதம் செய்கிறையே!’ என்பார்களே ! ‘அதற்கு என்ன உத்தரம் சொல்லுகிறது ? இதேது! முதற்கோணல் முற்றும் கோணலாய் முடிவது போலக் காண்கிறதே ! இப்படி இறங்கும் துறையிலேயே நீச்சலாய் இருந்தால், எதிர்கரை ஏறுவ தெப்படி?’ என்று மயங்கினான். '''இரண்டாம் கேள்வி :''' யமுனைத் துறைவர் வித்வானைப் பார்த்துப் பாண்டியனைக் குறித்து,‘ இந்த அரசர் தர்மவான் என்கிறோம். எதோ, நீர் மறுக்கக் கூடுமானால் மறுக்கலாம்,’ என்றார். வித்வஜன கோலாகலன் அந்தக் கேள்வியை மறுக்க வேண்டுமென்று தன் கருத்தினால் கூடிய வரையில் எட்டிப்<noinclude></noinclude> o5b8l9dz6s0ngq9zbhq8qf5q1qwj1za பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/52 250 641600 1927560 2026-04-28T03:07:57Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம் தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம்! சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||43}}</noinclude>சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம் தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம்! சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரிதும் பாராட்டியுள்ளனர். “எத்தனையோ அற்புத சிற்பங்கள் இருக்கலாம்! ஆனால் ஒரு பெரிய கதையையே தொடர்ச்சியாக சிற்பங்களில் பூம்புகாரில் வடிக்கச் செய்த அரசு, இந்த அரசு தான்!” என்று கழக அரசைக் கணபதி ஸ்தபதி பாராட்டினார்; “பூம்புகார்ப் பெருந்தச்சன்” என்ற விருதினை மாமல்லபுரத்தில் எனக்கு சிற்பிகள் வழங்கிய விழாவில்! “பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளை அவர்கள் தூண்டியிருக்கிறார்களே தவிர, யாரும் தனது வாழ்நாளில் இப்படி ஒரு கல் தேரை பிரம்மாண்டமாக உருவாக்கும்படிக் கூறியதில்லை” —என்று ஸ்தபதி எஸ், கே. ஆச்சார், ஒரு பத்திரிகைப் பேட்டியில் கருத்து வெளியிட்டார். நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்த திட்டங்கள் தான் இவைகள்! அதே நேரத்தில் தமிழ் மொழியின் மேன்மையை —கலாச்சார மாண்பை நிலை நிறுத்தும் பணியுமாகும்! இந்தியா ஒரே நாடு! ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்போம்! என்று கூறுகிற அதே நேரத்தில் கலாச் சாரங்களைப் போட்டுக் குழப்பவேண்டும் என்று யாரும் வாதிட இயலாது! கலாச்சார உறவுகள் தேவை! வளர்க்கப்பட வேண்டியவை! அதற்காக எல்லாவற்றையும் சேர்த்து “அவியல்<noinclude></noinclude> tkn18qskt32yxhdun8bkhi6p2i5qpet பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/53 250 641601 1927561 2026-04-28T03:16:04Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலாச்சாரம்” ஒன்றை சமைத்திடக் கூடாது! முடியாததுங்கூட! இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் ஆண்டுப் பிறப்பு கொண்டாடினோம்! அதற்குப் பதினைந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|44||கலைஞர்}}</noinclude>கலாச்சாரம்” ஒன்றை சமைத்திடக் கூடாது! முடியாததுங்கூட! இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் ஆண்டுப் பிறப்பு கொண்டாடினோம்! அதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பு. தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டது! தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கரும். ஆந்திரத்தில் உள்ள தமிழரும், தங்கள் தங்களுக்குரிய புத்தாண்டுகளைத் தான் கொண்டாடியிருக்கிறார்கள். எனவே, இந்தியா ஒரே நாடு என்பது ஒற்றுமைக்கு— ஒருமைப்பாட்டுக்கு —பாதுகாப்புக்கு —இப்படிப் பல நன்மைகளுக்காக நாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை! அதற்காக அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய கலை, இலக்கியம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டுமென்று கருதி விடக்கூடாது. தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி! அதங்கோட்டசானிடம் மாணவராக இருந்தவர் தொல்காப்பியர் அவர் காலத்திலே இலக்கணம் எழுதப்பட்டது என்றாலும் அதற்கு முன்பு ஒரு ஐயாயிரம் ஆண்டுகளாவது தமிழ் மொழி மெல்லமெல்ல பண்படுத்தப்பட்டிருந்தால் தான், அதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் கண்டிருக்க முடியும். தொல்காப்பியர் காலமே மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பு ஐயாயிரம் ஆண்டு வளர்ச்சி, தமிழுக்கு! ஆக எண்ணாயிரம் ஆண்டுக்கால வரலாறு படைத்த பழம் பெரும் மொழி தமிழ் மொழி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குக் கிடைத்த கருவூலம், திருக்குறள்! நூல்களின் தன்மைப்பற்றிக் கூறவந்த ஆங்கில அறிஞன் ஜான்சன், “வாழ்க்கை அறிவு புகட்டாத நூல்கள் பயன் அற்றவை! வாழும் கலையைத் தவிர வேறு எதைக் கற்பிக்க நூல்கள் இருக்கின்றன?” என்று கேட்கிறான்.{{nop}}<noinclude></noinclude> in5y34mvlt5plxos6ie8muo9lnibucg பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/54 250 641602 1927562 2026-04-28T03:21:18Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அந்த அடிப்படையில் நோக்கினால், எந்த வகையில் வாழ்ந்தால் வாழ்வு இனியதாக, எழிலுடையதாக, பண் அடையதாக பயனுடையதாக இருக்குமென்பதை வலி யுறுத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||45}}</noinclude>அந்த அடிப்படையில் நோக்கினால், எந்த வகையில் வாழ்ந்தால் வாழ்வு இனியதாக, எழிலுடையதாக, பண் அடையதாக பயனுடையதாக இருக்குமென்பதை வலி யுறுத்திக் கூறும் உயர் தனிப் பெருநூல் திருக்குறளாகும். நோபிள் பரிசுபெற்ற அறிஞர் ஆல்பர்ட் சுவைட்சர், “இந்தியக் கருத்தும் அதன் வளர்ச்சியும்” என்று எழுதியுள்ள ஆராய்ச்சி நூலில், :“திருக்குறள், உயர்ந்த —தலைசிறந்த அறங்கள் :அடங்கிய ஒப்பற்ற உலக இலக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானே “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” எனக் கவிச்சக்ரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் எக்காளமிடுகிறார்! :“தெள்ளு தமிழ் நடை ::சின்னஞ் சிறிய இரண்டடிகள் :அள்ளு தொறுஞ் சுவை ::உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம் :கொள்ளும் அறம், பொருள் ::இன்பம் அனைத்தும் கொடுத்த திரு :வள்ளுவனைப் பெற்ற ::தாற் பெற்றதே புகழ் வையகமே!” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாடுகிறார். வள்ளுவனைப் பெற்றதால் வையகமே புகழ்பெற்றது என அந்தப் பாவேந்தர் பெருமைப்படுகிறார். குறளுக்குப் பெருமை சேர்ப்பதும், குறள்நெறி மங்கியதை உணாந்து அதனை மீண்டும் தமிழ் மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் முயற்சியினை மேற்கொள்வதும் நமது கழகத் தினரால் இன்று நேற்று தொடங்கப்பட்ட தொண்டல்ல! சுமார் இருபத்தி எட்டு ஆண்டுகட்கு முன்பு பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முன்னின்று சென்னை<noinclude></noinclude> 7zvznje1qog6hkhomx80xomxnwz9k65 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/55 250 641603 1927563 2026-04-28T03:29:13Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நகரத்தில் “குறள் மாநாடு” ஒன்றையே மிகச் சிறப்புற நடத்தியிருக்கிறார்கள். :“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் :மெய்ப்பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|46||கலைஞர்}}</noinclude>நகரத்தில் “குறள் மாநாடு” ஒன்றையே மிகச் சிறப்புற நடத்தியிருக்கிறார்கள். :“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் :மெய்ப்பொருள் காண்ப தறிவு” இந்தக் குறள் வழி நின்றுதான் பகுத்தறிவு இயக்கமே மலர்ந்தது. அந்த இயக்கத்தின் கொள்கை பரப்பும் பணிக்குக் குறள் ஒரு பெருந்துணை எனில் அது மிகையாகாது. தமிழன் பெருமையை ஏட்டில், இலக்கியத்தில் மட்டும் வாழ வைக்காமல் புதியதோர் எழுச்சியுடன் வருங்கால முழுமைக்கும் வாழவைக்கப் பூம்புகாரின் பதிப்பெடுத்தோம். கடலில் ஆழ்ந்து போன பூம்புகார் நிலத்தில் விளைந்தது. பாரதியின் பாட்டாக, பாரதிதாசனின் கவிதையாக. பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரை உரையாக மொழி பெயர்ப்புக்களாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு இதோ. கோட்டம் அமைத்துவிட்டோம். வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டுக்கு வரலாற்றுப் புகழ்கொண்ட வள்ளுவர் கோட்டம்! இந்தப் பணி நடைபெறும்போது எத்தனை விமர்சனங்கள்! எத்தனை கண்டனங்கள்! அரசுத்துறை வாயிலாக நிகழ்த்தப்பட்டஇந்தப் பணியை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு ஊழல் நடந்ததாக ஒரே கூப்பாடு! இறுதி வரையில் இந்தப் பணி அரசுத்துறை வாயிலாகத்தான் நடைபெற்றிருக்கிறது. எந்த நல்ல காரியம் நடந்தாலும், அதற்கு ஒரு ஊனம் உண்டாக்க முயலுகிற எரிச்சல்காரர்களைப்பற்றிக் கவலைப்படாமலே, :“ஏதிலார் குற்றம்போல் தன் குற்றங் காண்கிற்பின் :தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” —என்ற குறளை அவர்களுக்கு நினைவுபடுத்தியவாறு வள்ளுவர் கோட்டப் பணிகளைக் கழக அரசு கவனித்தது.{{nop}}<noinclude></noinclude> 2o178cayhfzms1d9pwvtwp11elty5qu பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/56 250 641604 1927564 2026-04-28T03:38:34Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று பார்த்து வந்தோம். கோட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||47}}</noinclude>நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று பார்த்து வந்தோம். கோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும் எங்கள் கவனத்திலிருந்து தப்பியதில்லை. இப்போதும் சிலர் என்ன கூறினார்கள்? ஆட்சி மாறிவிட்டது—வள்ளுவர் கோட்டம் அவ்வளவுதான்! அதை இனி யாரும் திறந்து வைக்கமாட்டார்கள்! என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அதற்குமாறாக, நமக்கோர் நற்செய்தியாக மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்களே அந்த அற்புதக் கோட்டத்தைத் திறந்துவைக்க இசைந்து வருகை தருகிறார்கள். “வள்ளுவர் கோட்டம் போன்ற முயற்சிகள், விளம் பரத்திற்காக” இப்படியும் எழுதினர்! பேசினர்! இன்றுங்கூட சிலர் அப்படித்தான் எழுதுகின்றனர், பேசுகின்றனர், உடன்பிறப்பே, இன்றைக்குத் தெரியாது—அவர்களுக்கு! காலம், யாருடைய காலடியிலும் அடிமைப்பட்டுக் கிடப்பதில்லை. அது ஒரு காற்று! பல திசைகளிலும் வீசும் ஆற்றல் பெற்றது! அப்போது புரியும் அவர்களுக்கு சரித்திரத்தின் வல்லமை! மீண்டும் நமது ஆளுநர் அவர்களின் சொற்பொழிவுக் குறிப்பு ஒன்றையே நான் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். :“கருணாநிதி அவர்களே; தாங்கள் ஒரு உண்மையை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். கீழ்த்தளத்திலிருந்து ஒரு மனிதன். மிக உன்னத நிலைக்கு வரமுடியுமென்று காட்டியதற்காக, எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம். ஆனால் எழுத்தாளராக—மனிதத்<noinclude></noinclude> 49svh5efpe9j3d0tvbnu0rn3hc4oxpr பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/57 250 641605 1927565 2026-04-28T03:40:56Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 48 கலைஞர் தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி; என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.' ய .. ஜூலை 31ஆம் நாள் 1971ஆம் ஆண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 48 கலைஞர் தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி; என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.' ய .. ஜூலை 31ஆம் நாள் 1971ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது! அவர், "கருணாநிதி" என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலுங்கூட, நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சார்பில், அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது, தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைந்துள்ள இந்தக் கழகத்துக்கு; கழக அரசின் நற்சாதனைகளுக்கு; தமிழ்ப்பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும். நமது அடிச்சுவடே தெரியாமல் அழித்துவிடக் கூடிய முயற்சிகள் செய்யப்பட்டாலுங்கூட அறுபது ஆண்டுக் கால மாக வளர்க்கப்பட்டுள்ள உணர்ச்சிகளின் இழையோட் டத்தை யாரும் அறுத்துவிட இயலாது. 66 ஆறு, நீரின்றி வறண்டு கிடப்பது போல் தோன்றும். ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக் கால் உல கூட்டும்' என்ற பாடலை கவனி! வறண்டுபோன ஆற்றுக்கு அடியிலேயும் குளிர் நீர் ஊற்று இருப்பது போல- நமது அடையாளங்களே இல்லாமற் போய்விட்டாலும் நிலத்தடியில் இருக்கின்ற் நீர்ஊற்றுபோல, நமது கொள்கை- நமது உழைப்பு - நமது தியாகம் - நமது சாதனை-அனைத் தும் உணர்வு பூர்வமாக இருந்தே தீரும். எனவே சரித்திரத்தில் நமக்குக்கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக் கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.<noinclude></noinclude> or53mdvn16ug52pwrthy72we7ygdcah 1927567 1927565 2026-04-28T04:39:09Z Ramya sugumar 15106 1927567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|48||கலைஞர்}}</noinclude>:தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி; என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.” ஜூலை 31ஆம் நாள் 1971ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது! அவர், “கருணாநிதி” என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலுங்கூட, நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சார்பில், அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது, தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைந்துள்ள இந்தக் கழகத்துக்கு; கழக அரசின் நற்சாதனைகளுக்கு; தமிழ்ப்பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும். நமது அடிச்சுவடே தெரியாமல் அழித்துவிடக் கூடிய முயற்சிகள் செய்யப்பட்டாலுங்கூட அறுபது ஆண்டுக் காலமாக வளர்க்கப்பட்டுள்ள உணர்ச்சிகளின் இழையோட்டத்தை யாரும் அறுத்துவிட இயலாது. ஆறு, நீரின்றி வறண்டு கிடப்பது போல் தோன்றும். “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கால் உல கூட்டும்” என்ற பாடலை கவனி! வறண்டுபோன ஆற்றுக்கு அடியிலேயும் குளிர் நீர் ஊற்று இருப்பது போல— நமது அடையாளங்களே இல்லாமற் போய்விட்டாலும் நிலத்தடியில் இருக்கின்ற் நீர்ஊற்றுபோல, நமது கொள்கை— நமது உழைப்பு - நமது தியாகம் - நமது சாதனை-அனைத்தும் உணர்வு பூர்வமாக இருந்தே தீரும். எனவே சரித்திரத்தில் நமக்குக்கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன். {{nop}}<noinclude></noinclude> hsjkn2trfuuny59rm2svs4805uic8rr பயனர் பேச்சு:YasmineFaisal2 3 641606 1927566 2026-04-28T04:36:55Z Saranya V R 14232 "{{புதுப்பயனர்}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927566 wikitext text/x-wiki {{புதுப்பயனர்}} sfw310ra9giqq8n3g6a8rbqxsqfa9at பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/58 250 641607 1927569 2026-04-28T04:40:37Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude><noinclude></noinclude> m0uxjjgfwypaooy0dd45jbuzaa832ga 1927570 1927569 2026-04-28T04:42:12Z Ramya sugumar 15106 1927570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் 49 உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு; பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றை தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும் போது, தாலி கட்டும் காட்சி யினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் தான், நான் பெறுகிறேன் இன்று! ஆம்- என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணு கிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன். "நெடுநாள் ஆசை நிறைவேற்றம் நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்" நீயும் சேர்ந்து பாடுக! இந்த மகிழ்ச்சிப் பாடலை வாழ்க வள்ளுவர்! வெல்க குறள்நெறி! (குறிப்பு:- 'எமர்ஜன்சி' அன்புள்ள, மு.க. 15-4-76 தணிக்கைக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடைபெற்று சில நாட்கள் முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்களில் ஒன்று இது.)<noinclude></noinclude> hs51y2i4yqqm1h8e96aanqmb5xeetpe 1927572 1927570 2026-04-28T04:47:05Z Ramya sugumar 15106 1927572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||49}}</noinclude>உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு; பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றை தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும் போது, தாலி கட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் தான், நான் பெறுகிறேன் இன்று! ஆம்- என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணு கிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன். ::“நெடுநாள் ஆசை நிறைவேற்றம் ::நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்” நீயும் சேர்ந்து பாடுக! இந்த மகிழ்ச்சிப் பாடலை வாழ்க வள்ளுவர்! வெல்க குறள்நெறி! {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 15 – 4 – 76}} (குறிப்பு:— ‘எமர்ஜன்சி’ தணிக்கைக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடைபெற்று சில நாட்கள் முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்களில் ஒன்று இது.){{nop}}<noinclude></noinclude> f0c8ootxea2rgl5ch9r1dzjsxn1yhye பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/59 250 641608 1927574 2026-04-28T04:52:08Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>அமைதி காத்துப் பணிபுரிவோம்!<br> அமைப்பு ரீதியாக இயங்குவோம்!</b>}} உடன்பிறப்பே, கழகத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>அமைதி காத்துப் பணிபுரிவோம்!<br> அமைப்பு ரீதியாக இயங்குவோம்!</b>}} உடன்பிறப்பே, கழகத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் உறுப்பினர் உரிமையைப் புதுப்பித்திடவு மான பணிகளைக் கழக அமைப்புக்கள் ஆங்காங்கு தொடங்கிட வேண்டுமென நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமைக் கழகச் சார்பில் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையினை, நீ மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றிருப்பாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் பொதுச் செயலாளர் நாவலரும், பொருளாளர் பேராசிரியரும், மற்றும் கழக பொறுப்பாளர்களும், காப்பாளர்களுமான செயற்குழு உறுப்பினர்கள் இயன்ற அளவு கூடி, அன்பகத்தில் கலந்து பேசி, அதன் தொடர்பாக இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே திங்கள் முதல் நாளில் இருந்து அந்தப் பணியினைத் தொடங்க, நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டமியா, நவமியா, ஆகும் நாளா, ஆகா நாளா என்று பஞ்சாங்கம் பாரித்து அறிவிக்கப்பட்ட நாள் அல்ல அந்த நாள்! உலகப் பட்டாளி மக்கள் கொண்டாடும் உழைப்பின் மேன்மைக்கோர் திருநாளாம் மே திருநாளில் பாட்டாளிகளின் பாசறையாம் திராவிட முன்னேற்றக் கழகம், வழக்கம்போல் தனது ஆக்கப் பணியைத் தொடங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> eq8q2aq0q5sbtua9etkwe4yv40fytew பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/60 250 641609 1927575 2026-04-28T04:56:27Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அருமைத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கழகத்தைத் தொடங்கிய நாளில் இருந்து ஜனநாயக நெறியிலிருந்து கடுகளவும் விலகாமல் கழகச் செயல் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||51}}</noinclude>அருமைத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கழகத்தைத் தொடங்கிய நாளில் இருந்து ஜனநாயக நெறியிலிருந்து கடுகளவும் விலகாமல் கழகச் செயல் முறைகள் வகுக்கப்பெற்று இன்றுவரையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1949-ஆம் ஆண்டு தழகம், தொடங்கப்பெற்றவுடனேயே கழகத்திற்கான சட்ட திட்டங்களை வகுக்கின்ற குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் பலமுறையும் கூடி, கலந்துபேசி விவாதித்து, சட்ட திட்டங்களுக்கான இறுதி வடிவம், மதுரைமாநகரில் 1951-ஆம் ஆண்டு கூடிய பொதுக் குழுவில் நீண்ட நேர விவாதத்திற்குப்பிறகு முழுமை பெற்றது. 1951-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் சென்னையில் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் மாநிலப் பொது மாநாடு நடைபெற்றது. முதல் பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபடுவது இல்லையென்றும் நேசக் கரம் நீட்டுகின்ற கட்சிகளுக்கு, நிபந்தனைக்குட்பட்ட ஆதரவைத் தருவதென்றும் அந்த மாநாட்டில் தான் முடிவு எடுக்கப்பட்டது. தழிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி தி.மு. கழகம்தான் என்று அண்ணா அவர்கள் பிரகடனம் செய்த மாநாடும் அந்த மாநாடுதான். பொதுத் தேர்தல் முடிந்த பிறகு, கழகத்தின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற தோழமைக் கட்சிகள் தங்களைத் தாங்களே கலைத்துக்கொண்டும். அல்லது சிதைத்துக் கொண்டும் அமைச்சரவையில் இடம் தேடிப் பிடித்துக் கொண்டன. விக்ரவாண்டி தொகுதியில் நமது ஆதரவுடன் வெற்றி பெற்ற வீரர் கோவிந்தசாமி போன்ற சிலர் தான், கடைசி வரையில் கழகத்துக்கு நன்றியுடையர்களாக இருந்தார்கள் என்செய்வது. கழகத்தின் ஆரம்ப ‘ஜாதகமே’ அப்படித்தான் அமைந்தது.{{nop}}<noinclude></noinclude> 604t9yovjtl5hipekf7yj995ymsfwyf பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/61 250 641610 1927576 2026-04-28T04:56:57Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 52 ஜனநாயகக் கோட்பாடுகளையும், ஏற்றுக்கொண்ட இலட்சியங்களையும் அறநெறியில், அமைதி வழியில் நிறை வேற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொண்ட கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 52 ஜனநாயகக் கோட்பாடுகளையும், ஏற்றுக்கொண்ட இலட்சியங்களையும் அறநெறியில், அமைதி வழியில் நிறை வேற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொண்ட கழகம், தனக்கென அமைத்துக்கொண்ட சட்ட திட்டங்களின்படி உறுப்பினர் களைச் சேர்த்தும், ஏற்கனவே இருந்த உறுப்பினர்களின் உரிமையைப் புதுப்பித்தும் 1955-ஆம் ஆண்டு கழக அமைப் புக்களுக்கான தேர்தலை நடத்தி; இறுதியாகத் தலைமைக் கழகத் தேர்தலையும் நடத்தி, நமது நாவலர் அவர்களைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. புதிய பொதுச் செயலாளர் தலைமையில் 1956- ஆம் ஆண்டு திருச்சியில் கழகத்தின் இரண்டாவது மாநிலப் பொது மாநாடு நடைபெற்றது. "தம்பீ! வா தலைமை ஏற்க வா? உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம், வா". என்று நாவலரை. அண்ணா வழிமொழுந்து அழைத்த மாநாடும், நாடாளுமன்ற சட்டமன்றங்களுக் கான பொதுத் தேர்தலில் 1957-ஆம் ஆண்டு ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநாடும் அந்த மாநாடு தான்! உடன்பிறப்பே. இதில ஒன்றை நினைவுபடுத்தாமல் இருக்க முடியவில்லை எனக்கு! " இந்திய அரசியல் கட்சி களின் கொள்கைக் குழப்பம்” என்று நமது 'பழைய நண்பர்" ஒருவர் சிறப்புத் தலைப்பில் பேசியதும் இந்தத் திருச்சி மாநாட்டில்தான்? பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடங்களிலும், சட்டமன்றத்துக்கு அண்ணா தலைமையில் பதினைந்து இடங்களிலும் கழகம் வென்றது. மீண்டும் கழக சட்ட திட்டங்களின்படி உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு, 1960-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தலைமைக் கழகத்தின் தேர்தலில் அறிஞர் அண்ணா பொதுச் செயலாள ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<noinclude></noinclude> 2h3snn8nh53gijp6dqkbpsxibdeihbc 1927578 1927576 2026-04-28T05:01:52Z Ramya sugumar 15106 1927578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|52||கலைஞர்}}</noinclude>ஜனநாயகக் கோட்பாடுகளையும், ஏற்றுக்கொண்ட இலட்சியங்களையும் அறநெறியில், அமைதி வழியில் நிறை வேற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொண்ட கழகம், தனக்கென அமைத்துக்கொண்ட சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்களைச் சேர்த்தும், ஏற்கனவே இருந்த உறுப்பினர்களின் உரிமையைப் புதுப்பித்தும் 1955-ஆம் ஆண்டு கழக அமைப்புக்களுக்கான தேர்தலை நடத்தி; இறுதியாகத் தலைமைக் கழகத் தேர்தலையும் நடத்தி, நமது நாவலர் அவர்களைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. புதிய பொதுச் செயலாளர் தலைமையில் 1956- ஆம் ஆண்டு திருச்சியில் கழகத்தின் இரண்டாவது மாநிலப் பொது மாநாடு நடைபெற்றது. “தம்பீ! வா தலைமை ஏற்க வா? உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம், வா”. என்று நாவலரை. அண்ணா வழிமொழுந்து அழைத்த மாநாடும், நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலில் 1957-ஆம் ஆண்டு ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநாடும் அந்த மாநாடு தான்! உடன்பிறப்பே. இதில ஒன்றை நினைவுபடுத்தாமல் இருக்க முடியவில்லை எனக்கு! “இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைக் குழப்பம்” என்று நமது “பழைய நண்பர்” ஒருவர் சிறப்புத் தலைப்பில் பேசியதும் இந்தத் திருச்சி மாநாட்டில்தான்? பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடங்களிலும், சட்டமன்றத்துக்கு அண்ணா தலைமையில் பதினைந்து இடங்களிலும் கழகம் வென்றது. மீண்டும் கழக சட்ட திட்டங்களின்படி உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு, 1960-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தலைமைக் கழகத்தின் தேர்தலில் அறிஞர் அண்ணா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude> ckovsch785ytt1u2i4zq0aa7cz52j9p பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/62 250 641611 1927580 2026-04-28T05:10:29Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதற்குப் பிறகு கட்சிக்குள்ளே உட்பூசலை எழுப்பி, அறிஞர் அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமாயிருந்தவர்களே அவரை இழித்தும் பழித்தும் பேசி பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||53}}</noinclude>அதற்குப் பிறகு கட்சிக்குள்ளே உட்பூசலை எழுப்பி, அறிஞர் அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமாயிருந்தவர்களே அவரை இழித்தும் பழித்தும் பேசி புதிய கட்சி தொடங்கினர். தொடங்கிய வேகத்தில் தேர்தலிலும் நின்று தோல்வியைத் தழுவினர். தழுவிய வேகத்தில் தங்கள் கட்சியைக் கலைத்துவிட்டுக் காங்கிரசோடு போய் இணைந்து கொண்டனர். இப்போது அவர்கள், எங்கெங்கே இருக்கிறார்கள் — எப்படி இருக்கிறார்கள் — காமராஜர் அவர்கள் உயிரோடு இருந்தபோது என்னென்ன பேசினார்கள் என்பதை யெல்லாம் சுலபமாகவே தெரிந்து கொள்ள முடியும். நான் விளக்கத் தேவையில்லை. அந்த உட்பூசல் காரணமாகவும், தொடர்ந்து 1962- ஆம் ஆண்டு பொதுத்தேர் தலைச் சந்திக்க நேர்ந்ததின் காரணமாகவும் கழகத்தின் அமைப்புத்தேர்தல்கள் தள்ளிப் போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனினும், 1961-ஆம் ஆண்டு மதுரை திருப்பரங் குன்றத்தில் கழகத்தின் மாநிலப் பொது மாநாடு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது மூன்றாவது மாநிலப் பொது மாநாடு ஆகும்! 1966-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் சென்னை விருகம் பாக்கத்தில் கழகப் பொதுச் செயலாளரான அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க மாநாடுதான் கழகத்தின் நான்காவது பொது மாநாடு ஆகும். மூதறிஞர் இராஜாஜி, காய்தே மில்லத், சிலம்புச் செல்வர் ஆகியோர் கலந்து கொண்ட மாநாடு அது! அந்த மாநாட்டில் தான் கழகப் பொருளாளர் பொறுப்பிலே இருந்த நான், கழகச் சார்பில் வழங்கிய பதினொரு லட்ச ரூபாய் தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள், :“நான் கேட்டது பத்து லட்சம்! நீ :கொடுத்தது பதினொரு லட்சம் ! :தமிழ் மொழியில் உள்ள சொற்கள்<noinclude> க—7-4</noinclude> jb0bn3vup3k8rbpvqaw91apxujo8tur பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/63 250 641612 1927581 2026-04-28T05:11:16Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude><noinclude></noinclude> rnotjq6urwis740p86f4arn4ocdwq8n 1927582 1927581 2026-04-28T05:17:08Z Ramya sugumar 15106 1927582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|54||கலைஞர்}}</noinclude>::பொருள் உள்ளவை என்பதில் நான் ::அசையாத நம்பிக்கை உடையவன். ::தம்பீ, உன் தாயார் உனக்கு “நிதி” என்று ::பெயரிட்டதே உன்னை நாட்டு மக்கள் ::நன்கு பயன்படுத்திக் கொள்ளட்டும் ::என்று தான்" என்று கொஞ்சு தமிழில் பேசியதை இன்னும் என் நெஞ்சம் மறக்கவில்லை. 1967-ல் ஆட்சிப் பொறுப்பு! அதன் பிறகு அண்ணாவின் உடல் நலிவு! 1969. பிப்ரவரி மூன்றாம் நாள் நமக்கு ஏற்பட்ட மாறாத சோகம்! இதற்குப் பிறகும். கழகம் தனது கட்டுக் கோப்பைப் பாதுகாத்துக்கொண்டு, ஜனநாயகமுறையில் கட்சி அமைப்புக்களின் தேர்தலை நடத்தி 1969-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்ட திட்டங்களின்படி அதே ஆண்டில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தேர்தல்களும், தலைமைக்கழக ஏனைய அமைப்புக்களின் தேர்தல்களும் நிறைவேறின. அதன் பிறகும், கழகத்துக்குப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு கழக அமைப்புக்களின் தேர்தல்கள் நடைபெற்று, 1974-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தலைமைக் கழகத் தேர்தல்களும் நடந்து முடிவுற்றன. இடையிலே தவிர்க்க முடிபாத நிலைமைகளால் 1960-க்கும் 1969-க்கும் இடையே, குறிப்பிட்ட கால கட்டத்தில் அமைப்புக்களின் தேர்தல்கள் நடைபெற இயலாமற் போயின. 1969-க்குப் பிறகு 1974-ல் கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது என்றாலும், இன்னும் முன்கூட்டி நடைபெற முடியா தவாறு 1972-ல் கழகத்தின் கட்டுப்பாடு காத் திடாத சிலர்மீது எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக<noinclude></noinclude> 5jb1lstggbmkct7py0cdak0jv8d7wod பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/64 250 641613 1927583 2026-04-28T05:17:58Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 55 ஏற்பட்ட பிரச்சினைகள் குறுக்கே நின்றதை யாரும் மறந் திருக்க முடியாது. இப்போது நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிற ஜனநாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் 55 ஏற்பட்ட பிரச்சினைகள் குறுக்கே நின்றதை யாரும் மறந் திருக்க முடியாது. இப்போது நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிற ஜனநாயக முறைப்படி கழக உறுப்பினர் சேர்த்தல் - புதுப் பித்தல் அமைப்புக்கள் தேர்தல் தலைமைக்கழகத் - 1 தேர்தல் - என்பதற்கு ஓராண்டுக் கால நேரம் தந்து நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் அறிக்கை தந்துள்ளார்கள். எத்தனை இடர்பாடுகள் வரினும், நமது அமைப்புக்கள் கட்டுப்பாட்டுடன் திகழ்வதும் ஜனநாயக செயல்படுவதும் - அண்ணா — — முறையில் வழியில் அமைதி காத்து ஆக்கப்பணிகளை ஆற்றுவதும் நமது கழகம் கொண்டுள்ள அரசியல் தெளிவு மிக்கப்பண்பாடாகும். கோவையில் நடைபெற்ற ஐந்தாவது மாநிலப் பொது மாநாட்டுக்குப் பிறகு, நமது கழகம் எத்தனையோ சூழ்நிலை களைச் சந்திக்க வேண்டியிருந்தது-சந்தித்துக் கொண்டிருக் கிறது என்றாலும், கடமைகளை மறவாமல் கழகப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் - ஆற்றிட பதைச் சுட்டிக்காட்டுவதுதான் வேண்டுகோள் அறிக்கையாகும். - "மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள் — என் வேண்டும். பொதுச்செயலாளரின் நான் நிலையாக இருப்பேன்'' என்று "சிற்றருவி" கூறுவதாக பெருங் கவிஞர் டென் னிசன் எழுதியது போல், கழகம் நிலையாக இருக்கும்- அமைப்பு ரீதியாக இயங்கும் அமைதிகாத்துப் பணிபுரியும் - என்ற உறுதி வாய்ந்த உள்ளத்தோடு, நீ செயல்பட வேண்டுகிறேன், உடன்பிறப்பே, அன்புள்ள, மு.க. 174-76<noinclude></noinclude> p3bp90zt1wcciwwbgpvmj3szt56eofe 1927585 1927583 2026-04-28T05:28:15Z Ramya sugumar 15106 1927585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||55}}</noinclude>ஏற்பட்ட பிரச்சினைகள் குறுக்கே நின்றதை யாரும் மறந் திருக்க முடியாது. இப்போது நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிற ஜனநாயக முறைப்படி கழக உறுப்பினர் சேர்த்தல் — புதுப்பித்தல் — அமைப்புக்கள் தேர்தல் — தலைமைக்கழகத் — தேர்தல் — என்பதற்கு ஓராண்டுக் கால நேரம் தந்து நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் அறிக்கை தந்துள்ளார்கள். எத்தனை இடர்பாடுகள் வரினும், நமது அமைப்புக்கள் கட்டுப்பாட்டுடன் திகழ்வதும் — ஜனநாயக முறையில் செயல்படுவதும் — அண்ணா வழியில் அமைதி காத்து ஆக்கப்பணிகளை ஆற்றுவதும் நமது கழகம் கொண்டுள்ள அரசியல் தெளிவு மிக்கப்பண்பாடாகும். கோவையில் நடைபெற்ற ஐந்தாவது மாநிலப் பொது மாநாட்டுக்குப் பிறகு, நமது கழகம் எத்தனையோ சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது—சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், கடமைகளை மறவாமல் கழகப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் — ஆற்றிட வேண்டும் — என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் பொதுச்செயலாளரின் வேண்டுகோள் அறிக்கையாகும். :“மனிதர்கள் வருவார்கள் :மனிதர்கள் போவார்கள் :நான் நிலையாக இருப்பேன்” என்று “சிற்றருவி” கூறுவதாக பெருங் கவிஞர் டென்னிசன் எழுதியது போல், :கழகம் நிலையாக இருக்கும்- :அமைப்பு ரீதியாக இயங்கும்- :அமைதிகாத்துப் பணிபுரியும்- என்ற உறுதி வாய்ந்த உள்ளத்தோடு, உடன்பிறப்பே, நீ செயல்பட வேண்டுகிறேன், {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 17 – 4 – 76}}{{nop}}<noinclude></noinclude> j2g4bq7iqszxdubfv67xa3do6gog33a பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/65 250 641614 1927587 2026-04-28T05:32:30Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} வினாக்கள் குடைகின்றன, விடைதான் கிடைக்கவில்லை! உடன்பிறப்பே, ☐ தி.மு.கழகத்தினரை இருபது அடி நீளக் குச்சியால் கூடத் தொடுவதற்கு மக்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} வினாக்கள் குடைகின்றன, விடைதான் கிடைக்கவில்லை! உடன்பிறப்பே, ☐ தி.மு.கழகத்தினரை இருபது அடி நீளக் குச்சியால் கூடத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள். ☐ தி.மு.க. வினர் ஜனநாயக முறைகளை அசிங்கப் படுத்திவிட்டனர். ☐ தி.மு.க. ஒரு அரசியல் எதிரி மட்டுமல்ல. அது ஒரு ஊழல் புழு. ☐ தி.மு.க. புரையோடிக் கிடக்கும் புற்று நோயைப் போன்றது. ☐ தி.மு.க. அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். தரம் வாய்ந்த தஞ்சைமண்ணில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியபோது தரம் வாய்ந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. டி. கே. பரூவா அவர்கள் பேசிய பேச்சில் சிந்திய மணிவாசகங்கள் தான் மேலே காணப்படுபவை. திரு. பரூவா அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறத் தொடங்கி இரண்டரை<noinclude></noinclude> raoanqyop2gx299zssfvnazs2wck0lb 1927588 1927587 2026-04-28T05:33:03Z Ramya sugumar 15106 1927588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>வினாக்கள் குடைகின்றன,<br> விடைதான் கிடைக்கவில்லை!</b>}} உடன்பிறப்பே, ☐ தி.மு.கழகத்தினரை இருபது அடி நீளக் குச்சியால் கூடத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள். ☐ தி.மு.க. வினர் ஜனநாயக முறைகளை அசிங்கப் படுத்திவிட்டனர். ☐ தி.மு.க. ஒரு அரசியல் எதிரி மட்டுமல்ல. அது ஒரு ஊழல் புழு. ☐ தி.மு.க. புரையோடிக் கிடக்கும் புற்று நோயைப் போன்றது. ☐ தி.மு.க. அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். தரம் வாய்ந்த தஞ்சைமண்ணில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியபோது தரம் வாய்ந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. டி. கே. பரூவா அவர்கள் பேசிய பேச்சில் சிந்திய மணிவாசகங்கள் தான் மேலே காணப்படுபவை. திரு. பரூவா அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறத் தொடங்கி இரண்டரை<noinclude></noinclude> pj1hdnwwoo591syzdyqwrdghwih9kyx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/616 250 641615 1927592 2026-04-28T05:49:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘ஒரு-குழந்தை’ நெறியை மீறி இரண்டு அல்லது மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் தம்பதிகளுக்குத் தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. அவர்கள் பிறருடைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|588|குடும்பநலத் திட்டம்}}</noinclude>‘ஒரு-குழந்தை’ நெறியை மீறி இரண்டு அல்லது மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் தம்பதிகளுக்குத் தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. அவர்கள் பிறருடைய கேலிக்கும், நகைப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இரண்டாம் முறை கருத்தரிக்கும் பெண்கள், அவர்கள் வேலையில் இருந்தால், அவர்கள் கருச் சிதைவு செய்து கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு செய்து கொள்ள மறுத்தால் அவர்கள் சம்பளத்தில் 20 விழுக்காடு தண்டத் தொகையாகப் போடப்படுகிறது. குழத்தை பிறந்ததும், மேற்கொண்டு, கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுப் பிரிக்கப்படுகின்றனர். ஆயினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்படுகிறது. அனுமதி கிடைத்த பிறகே ஒரு தம் இரண்டாம் குழந்தையைப் பெற முடியும். ஆயினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மூன்றாம் பிள்ளைக்கு அனுமதி கிடையாது. பெண்களுடைய திருமண வயது 18-இலிருந்து. 20-க்கும் ஆண்களுடைய திருமண வயது 20-இலிருந்து 22-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் பெண்கள் 25 வயதுக்குக் கீழும், ஆண்கள் 28 வயதுக்குக் கீழும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. திருமணமான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்தே குழந்தை பெற அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இரண்டாம் குழந்தை பெற அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு 35 அல்லது 40 வயது ஆகிவிட்டால் அவர்கள் குழந்தை பெற வேண்டாம் என்று வற்புறுத்தப்படுகின்றனர். மக்களுக்குக் கருத்தடைச் சாதனங்கள் தங்கு தடையில்லாமல் நாடெங்கும் கிடைக்க அரசு வழி வகை செய்துள்ளது. உள்ளுக்குச் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள், கருத்தடை வளையங்கள் (IUD) அறுவை மருத்துவ முறைகள் முதலியவற்றை அதிக அளவில் வழங்குகிறது. மக்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தீவிர பிரசாரமும் செய்கிறது. இதற்காக ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் குடும்பக் கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டுச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகச் சீனாவில் திருமணமான தகுதியான பெண்களுள் 60 விழுக்காடு கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது (1980). குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பெண்களுள் 40 விழுக்காட்டினர் அறுவை மருத்துவ முறையையே தேர்தெடுக்கின்றனர். இங்கு 1962-இலிருந்து தொடங்கப்பட்ட தீவிர குடும்பக்கட்டுப்பாடு இயக்கத்தின் காரணமாக 1960-இல் ஆயிரம் பேருக்கு 40 என்று இருந்த பிறப்பு விகிதம் 1979-இல் 18-ஆகக் குறைந்தது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் ஆயிரம் பேருக்கு 26 என்ற விகிதத்திலிருந்து (1970) ஆயிரம் பேருக்கு 11.7 என்ற விகிதத்திற்குக் (1979) குறைந்தது. இந்தப் பிறப்பு விகித, மக்கள் தொகை வளர்ச்சி விகித வீழ்ச்சியினால் 1984-இல் இருந்த 105.1 கோடி மக்கள் தொகையளவு 2028-ஆம் ஆண்டில் 96 கோடியாகவும், 200-இல் 61.3 கோடியாகவும் 2080-இல் 37 கோடியாகவும் குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <b>சிங்கப்பூர்</b>: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அடுத்தபடியாகக் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் சிங்கப்பூரில் சிறப்பாகச் செயற்படுகிறது. மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகிப் போனதன் காரணமாக (ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 4000 பேர்) சிங்கப்பூர் அரசு மக்கள்தொகை வளர்ச்சி. விகிதத்தைக் கட்டுப்படுத்த 1955-இல் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது. 2000-ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சியைப் பூச்சியத்துத்துக் கொண்டு வரும் இவக்குடன் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ்க் குடும்பக் கட்டுப்பாடு வசதிகளும் கருசிதைவுச் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ‘உங்கள் குடும்பத்தைத் திட்டமிடுங்கள்’ என்ற முழக்கமே எழுப்பப்பட்டது. நாளடையில் ‘உங்கள் குடும்பத்தைச் சிறியதாக வைத்துக் கொள்ளத் திட்டமிருங்கள்’ என்ற முழக்கமும் அதைத் தொடர்ந்து ‘மூன்று குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்ற முழக்கமும் 1972-இல் ‘இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்ற முழக்கமும் வந்தன. சிங்கப்பூர் அரசு அன்றிருந்து இன்றுவரை இரண்டு குழந்தை நெறியைப் போற்றி வருகிறது. இரண்டு-குழந்தை நெறியை மக்களிடம் பரப்பப் பல வழிகளிலும் அரசு முயல்கிறது. பேறுகால விடுதிகளிலும், குழந்தைகள் நல மருத்துவ மனைகளிலும் பெண்களுக்கு இந்நெறி எடுத்துச் சொல்லப்படுகிறது. தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு இந்நெறியைப் பின்பற்றுமாறு அறிவுரை கூறப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude> r5lw2rjj36f4o7rtyuobi8186h1v97j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/617 250 641616 1927594 2026-04-28T06:06:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நெறியை மக்கள் கடைப்பிடிக்க அரசு பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அரசுப் பணிகளில் உள்ள பெண்களுக்கு முதல் இரண்டு பேறு கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|589|குடும்பநலத் திட்டம்}}</noinclude>இந்நெறியை மக்கள் கடைப்பிடிக்க அரசு பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அரசுப் பணிகளில் உள்ள பெண்களுக்கு முதல் இரண்டு பேறு காலங்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய நான்கு வாரப்பேது கால விடுப்பு அனுமதிக்கிறது. பேறுகாலத்திற்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் பெண்களிடமிருந்து அவர்களின் கல்வி வருமான நிலையைப் பொறுத்து முதல் குழந்தைக்கு 60 இலிருந்து 300 தாலர் வரையிலும், இரண்டாம் குழந்தைக்கு 90-இலிருந்து 360 தாலர் வரையிலும், மூன்றாம் குழைந்தைக்கு 120 இலிருந்து 420 தாலர்வரையிலும், நான்காம் குழந்தைக்கு 240-இலிருந்து 480 தாலர் வரையிலும், ஐந்தாம் குழந்தைக்கு 300-இலிருந்து 480 தாலா வரையிலும், பேறுகாலக் கட்டணங்கள் பெறப்படுகின்றன. அறுவை மருத்துவம் செய்து கொள்ள இசையும் பேறு காலம் பெண்களுக்குப் பேறுகாலக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஏழை ஆண்-பெண் ஆகிய இருபால் நோயாளிகளுக்கும் உள்ளுறைக் கட்டணத்திலிருந்து விலக்கு தரப்படுகிறது. அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய ஒரு வாரச் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட ஆறு மாதங்களுக்கும் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்குச் சிறப்பு மருத்துவ விடுப்பு வழங்கப்படுகிறது. ஏதாவதொரு குடும்பக் கட்டுப்பாட்டு முறையின் மூலம் ஒரே குழந்தையோடு நிறுத்திக் கொள்ளும் குறைந்த கல்வித் தகுதியும், மாதம் 500 தாலருக்குக் குறைவான வருமானமும் உடைய ஏழைகளுக்கு அரசு 5000 தாலர் ஊக்கத் தொகையாகக் கொடுக்கிறது. ஊக்கப் பரிசு பெற்றுக் கொண்டவர்கள் பின்னாளில் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொண்டால் 10 விழுக்காடு கூட்டு வட்டியுடன் பரிசுத் தொகையைத் திருப்பித் தந்து விட வேண்டும். முதல் இரண்டு குழந்தைகளுக்கு அரசு வருமானத்தில் 5 விழுக்காட்டை வரி விலக்குச் செய்கிறது. ஆனால் முன்றாம் குழந்தைக்கு 2 விழுக்காடு தான் வரி விலக்கு செய்யப்படுகிறது. இரண்டு குழந்தைகள் உடையவர்களுக்கு அரசின் வீட்டு வசதி, மற்றும் மேம்பாட்டு வாசியக் குடியிருப்புகளில் வீட்டு ஒதுக்கீட்டில் தரப்படுகிறது. அவர்கள் விரும்பினால் வீட்டின் ஒரு பகுதியைப் பிறருக்கு வாடகைக்கு விடலாம். ஆனால், பெரிய குடும்பத்தைக் கொண்டவர்களுக்கு வீடுகள் கிடைத்தாலும், அவர்கள் அவற்றை மேற்கொண்டு யாருக்கும் வாடகைக்கு விடமுடியாது. அவ்வாறே குழந்தைகளைப் பள்ளிகளின் சோக்கும் காரியத்திலும் இரண்டு குழந்தைகள் பெற்ற, அறுவை மருத்துவம் செய்து கொண்ட பெற்றோர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே அனைத்து நிலையிலுள்ள மக்களும் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். திருமணமான பெண்களில் 7) விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் (1980). 1960-இல் இருந்த 38.4 என்ற பிறப்பு விகிதம். 1970-இல் 22.1 விகிதமாகவும் 1980 இல் 17.8 விகிதமாகவும் குறைந்துள்ளது. <b>பிறநாடுகள்</b>: மேற்கண்ட நாடுகளேயன்றி வேறு பல நாடுகளும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன. அவற்றில் ஒன்று மலேசியா, விரைவான நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் பலள்கள் நீடித்து நிறபதற்காக மவேயா 1966 இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 1985-க்கு 2 விழுக்காட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தைச் செயற்படுத்த ஒரு தேசிய வாரியமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாரியத்தின் குடும்பக்கட்டுப்பாட்டுப் பணிகள் காரணமாகத் திருமணமான பெண்களில் 36 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். (1987), பிறப்பு விகிதம் 1960-இல் இருந்த 44.3 (ஆயிரம் பேருக்கு) என்ற அளவில் இருந்து 1970-இல் 37- க்கும், 1980-இல் 31,9-க்கும் குறைந்துள்ளது. இலங்கையில் 1965-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தைச் செயற்படுத்த நாடு முழுவதும் ஒரு விரியான மருத்துவ குடும்ப நல அமைப்பு இயங்குகிறது, குடும்பக் கட்டுப்பாட்டுக்கான சேவை தாராளமாகவும் பரவலாகவும் எங்கும் கிடைக்கின்றது. திருமணமான பெண்கள் 41 விழுக்காடு குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடித்து விடுகின்றனரி (1980). இத்திட்டத்தின் காரணமாகப் பிதப்பு விகிதம் 36.6-இலிருந்து (1960) 29.4 க்கும் (1970) பிறகு 27.6 க்கும் (1980) குறைந்துள்ளது. தென் கொரியா 1961-இலிருந்து குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது 1981-ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை<noinclude></noinclude> hukndwla333576mkpy36am781zpetu2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/618 250 641617 1927597 2026-04-28T06:20:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1.6 விழுக்காடாகக் குறைக்கும் இலக்குடன் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்காகக் குடும்பத் கட்டுப்பாடு, கருச்சிதைவு வசதிகளை அமைத்துக் கொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|590|குடும்பநலத் திட்டம்}}</noinclude>1.6 விழுக்காடாகக் குறைக்கும் இலக்குடன் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்காகக் குடும்பத் கட்டுப்பாடு, கருச்சிதைவு வசதிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருமணமான பெண்களுள் 49.1 விழுக்காட்டினர். குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர் (1980). இதன் விளைவாகப் பிறப்பு விகிதம் 38.7-இலிருந்து (1960), 30-க்கும் (1970), பிறகு 24.7-க்கும் (1980) குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் 1.69 விழுக்காட்டிற்கு வத்துள்ளது (1980). பாகிசுத்தான் 1960-இலிருந்து குடும்பகட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பிறப்பு விகிதத்தை 1983-இல் 35,5-ஆகக் குறைப்பது என்ற இலக்குடன் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்காகக் குடும்பக் கட்டுப்பாடு வசதிகளையும், குறிப்பிட்ட அளவுக்குக் கருச்சிதைவு வசதிகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆயினும், நாட்டில் நிலவும் அரசியற் சிக்கல்களால் குடும்பக் கட்டுப்பாட்டிம் முன்னேற்றம் ஏற்படவில்லை. திருமணமான பெண்களும் 12 விழுக்காடு நாம் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் (1980). இருப்பினும்,1960-இல் 48.1-ஆக இருந்த பிறப்பு விகிதம் 1970-இல் 47.3-க்கும் 1980-இல் 42,4-க்கும் மட்டுமே இறங்கியிருக்கிறது. தேபானம், பிறப்பு விகிதத்தை 1980-ஆம் ஆண்டில் 38-ஆகக் குறைப்பது என்ற இலக்குடன், 1966 இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது. நாடு முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு வசதிகளையும், கருச்சிதைவு வசதிகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆயினும், பொருளாதார மந்தம் காரணமாகக் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் முன்னேற இயலாமல் முடங்கிக் கிடக்கிறது. திருமணமான பெண்கள் 2 விழுக்காடு மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் (1980), பிறப்பு விகிதம் 1960-இல் இருந்த 45.8 என்ற அளவில் இருந்து 1970-இல் 43.7 க்கும், 1980-இல் 42.6 க்கும் மட்டுமே இறங்கியுள்ளது. இப்பொழுது நேபாளத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு வலிமையூட்ட மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா. நிதியம் (United Nations Fund for Population Activities) போர்டு நிறுவனம் (Ford Foundation) முதலிய அனைத்துலக நிதி நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன. ஈரானில் 1967-இலிருந்து குடும்பக் கட்டுப்பாடு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 1982-இல் 1.9 விழுக்காடாகக் குறைப்பது என்ற இலக்குடன் இத்திட்டம் வெளி வந்தது. ஆனால் ஈரானில் நிலவும் அரசியல் அமைதியற்ற குழ்நிலையால் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் சரிவரக் கவனிக்கப்படாமல் இருக்கிறது. திருமணமான பெண்களில் 4 விழுக்காட்டினர் தாம் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் 1983-இல் 3.04 விழுக்காடாக இருந்தது. பிசித் தீவுகளில் 1962-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறப்பு விகிதத்தை 1980-இல் 22-ஆகக் குறைப்பது என்ற இலக்குடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் திட்டப் பணிகளில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் 1960-இல் 30.9 ஆக இருந்த பிறப்பு விகிதம் 1980-இல் 29.9 என்ற அளவுக்குத் தான் குறைந்தது. தாய்லாந்து 1970-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 1986-இல் 1.5 விழுக்காடாகக் குறைக்கும் இலக்குடன் கொண்டு வந்தது. குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களைத் தாராளமாக வழங்கி, குடும்பக் கட்டுப்பாடு திட்டம் முன்னேற வழி செய்துள்ளது. திருமணமான பெண்களுள் 39 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் (1980). இங்கு 1970-இல் 39,4 என்ற விகிதத்தில் இருந்த பிறப்பு விகிதம் 1980-இல் 31-க்குக் குறைந்துள்ளது. பிலிப்பைன்சு நாட்டில் 1970-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் நடைமுறைக்கு வந்தது. நிகர மனித உற்பத்தி விகிதத்தை (Net Reproduction Rate) 2000-இல் 1 விழுக்காட்டுக்குக் கொண்டு வரும் இலக்குடன் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ்க் கருத்தடை வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் கருச்சிதைவு அனுமதிக்கப்படுவதில்லை. திருமணமான பெண்களுள் 37 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். (1980) பிறப்பு விகிதம் 39.7-இலிருந்து (1970)35-க்குக் (1980) குறைந்துள்ளது. வங்காளதேசம் 1971-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. மனித உற்பத்தி விகிதத்தை 1985-இல் 1 விழுக்காடாகக் குறைப்பது என்ற இலக்குடன் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆயினும், பொருளாதார மந்தம் காரணமாக மக்களிடையே குடும்பக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பதில் ஆர்வம் எழவில்லை. திருமணமான பெண்களுள் 8.9 விழுக்காட்டினர் தாம் குடும்பக் கட்டுப்பாட்டைக்<noinclude></noinclude> 771wd6c1xd03mvlz5527me6a8pwg2kp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/619 250 641618 1927600 2026-04-28T06:32:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடைப்பிடிக்கின்றனர் (1980). பிறப்பு விகிதமும் 47.7 இலிருந்து (1970) 46-க்கு மட்டுமே (1980) குறைந்துள்ளது. ஆங்காங் 1973-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|591|குடும்பம்}}</noinclude>கடைப்பிடிக்கின்றனர் (1980). பிறப்பு விகிதமும் 47.7 இலிருந்து (1970) 46-க்கு மட்டுமே (1980) குறைந்துள்ளது. ஆங்காங் 1973-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் விரைவான குடும்பக் கட்டுப்பாட்டுப் பணிகளால் திருமணமான பெண்களுள் 79 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிற நிலையும் (1980), பிறப்பு விகிதம் 1970-இல் இருந்த 20.0 என்ற அளவில் இருந்து 1980-இல் 19.2 என்ற அளவுக்கு இறங்கி வந்துள்ள நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்தோனேசியா 1973-இலிருந்து குடும்பக் கட்டும்பாடு திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. மூன்று-குழந்தை நெறியை இத்திட்டம் வலியுறுத்துகிறது. முதல் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால விடுப்பும், குழந்தைகளுக்கான சலுகைப் படிகளும் (Allowances), பயணப் படிகளும் வழங்கப்படுகின்றன. பிற குழந்தைகளுக்கு இச்சலுகைகள் இல்லை. திருமணமான பெண்களுள் 24 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். பிறப்பு விகிதம் 43.2-இலிருந்து (1970) 32,2-க்குக் (1980) குறைந்துள்ளது. வியட்நாம்-1977-இல் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை 2000-இல் 1 விழுக்காடாகக் குறைப்பது என்ற இலக்குடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ்க் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் தாய்-சேய் நலச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மேற்கூறிய நாடுகளேயன்றி, கானா (1969), ஆப்கானிசுத்தான் (1970), கம்பூச்சியா (1977), தைவான், எகிப்து, கென்யா, பிரேசில், சிலி, கியூபா, தோங்கா முதலிய நாடுகளும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் பிறப்பு விகிதத்தைக் குறைத்து, மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் ஆகியோருடைய நலத்தைப் பேணிப் பாதுகாக்கவும் முயலுகின்றன.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhende, Asha A. and Kanitkar, Tara,</b> Principles of Population Studies, Himalaya Publishing House, (Bombay), 1985.<br> <b>Narain Vatsala and Prakasam C.P.,</b> Population Policy and Perspectives in Developing Countries, Himalayan Publishing House, (Bombay), 1983.<br> <b>Raj. Hans,</b> Fundamentals of Demography (Population Studies with Special Reference to India) Surjcet Publications, Delhi, 1984.<br> <b>Thompson, Warren S. and Lewis, David T.,</b> Population Problems, Tata McGraw-Hill Publishing Company, (New Delhi), 1980. <b>குடும்பம்</b> மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு குழுக்களில் பங்கேற்றுச் செயற்படுகிறான். அவற்றுள் முதன்மையானது குடும்பம், நிதிலதான் அவனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி அமைகிறது, பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் இக்குழுவோடு பிணைப்பு வைத்திருக்கிறான். அவனுடைய உடல் உள்ளத் தேவைகளைப் பெரிதும் நிறைவேற்றி, அவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பமே. குடும்பம் (Family) ஒரு சிறிய குழு குறைந்த அளவு, இது ஓர் ஆணையும் பெண்ணையும் உறுப்பினராகக் கொண்டிருக்கும். ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவி என்ற ஓர் உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுது அவர்கள் ஒரு குடும்பமாக அமைகிறார்கள். அவர்கள் கணவன்-மனைவியாக அமைத்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒன்றாக உண்டு, சேர்த்து வாழுகிற நிலையில் குடும்பம் அமைகிறது. இதில் அவர்களுக்கிடையே அமையும் உறவுதான், அதாவது மணவாழ்க்கை உறவுதான், அவர்கள் ஒரு குடும்பமாக அமைய அடிப்படையாக அமைகிறது. அவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தாலும், அல்லது தனித்தனியே பிரிந்து வசித்தாலும்; அவர்கள் ஒன்றாகச் சேர்த்து உண்டாலும் அல்லது தனித் தனியாகச் சமைத்து உண்டு வாழ்ந்தாலும் அவர்களிடையே கணவன்-மனைவி என்ற உறவு நிலவும் வரையிலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே கருதப்படுவர். எனவே, இந்த உறவு முறைதான் ஒரு குழுவை ஒரு குடும்பம் என்று அடையாளங்காட்ட அடிப்படையாய் அமைகிறது. ஒரே வீட்டில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து எரித்தாலும் சேர்ந்து உண்டாலும் அவர்களிடையே கணவன் மனைவி என்ற உறவு அமையாத நிலையில் அவர்கள் ஒரு குடும்பமாக அமைய இயலாது. அவர்கள் கணவன்-மனைவி என்ற உறவு நிலையில் இணைந்தபின்தான் அவர்கள் ஒரு குடும்பமாக ஆகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> nl008g4lun53gbr6sfjklvlfw5yf6fy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/620 250 641619 1927603 2026-04-28T06:45:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மணவாழ்க்கையைத் தொடர்ந்து குழந்தைகள் பிறக்கிறபோது, குடும்பத்தின் அளவு மட்டுமன்றி, குடும்ப உறவுகளின் எண்ணிக்கை, வகைகள் ஆகியவையும் கூடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|592|குடும்பம்}}</noinclude>மணவாழ்க்கையைத் தொடர்ந்து குழந்தைகள் பிறக்கிறபோது, குடும்பத்தின் அளவு மட்டுமன்றி, குடும்ப உறவுகளின் எண்ணிக்கை, வகைகள் ஆகியவையும் கூடுகின்றன. கணவன்-மனைவி என்ற உறவோடு, பெற்றோர்-மக்கள் என்ற நேர் வரை உறவும், உடன்பிறந்தோர் என்ற இணை வரை உறவும் முகிழ்க்கின்றன. இந்த உறவுகள் குடும்பத்தை முழுமையான நிலையில் குடும்பம் என்பது கணவன்-மனைவி என்ற கதவு, பெற்றோர்-மக்கள் என்ற நேர்வரை உறவு. உடன் பிறந்தோர் என்ற இணை வரை உறவு ஆகிய பல உறவுகள் பின்னிப் பிணைந்திருக்கும் தொகுதியாக அமைகிறது. இத்தகைய உறவுகளின் பின்னனில் இணைத்தவர்களே அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களாக ஆகிறார்கள். ஓர் ஆண்-ஒரு பெண் ஆகியோர் கணவன் மனைவியாக இணைந்து வாழ்க்கை தொடங்குகிறபொழுது உருவாகும் குடும்பம் அவர்களின் மண வாழ்க்கை முடியும்போது அல்லது அவர்கள் இறக்கும்போது அழிந்து விடுகிறது. துவக்கத்திலிருந்து முடிவு வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் குடும்பம் பல நிலைகளைத் தாண்டி வருகிறது. முதலில் இந்த ஆணும், பெண்ணும் சந்தித்துக் காதலித்து நெருக்கம் கொள்ளுகிறபோது, திருமணத்திற்கு முந்திய தொடக்க நிலை (Formative Prenuptial Stage) என்ற நிலை அமைகிறது. ஆணும் பெண்ணும் காதலில் இணைவது பொதுவாக மேலை நாட்டுச் சமூகங்களில் திகழ்கிறது. மற்றைய சமூகங்களில் இத்தகைய நிலை அமைவதில்லை, குறி (அசாம்), முதுவர் (கேரளா) முதலிய பழங்குடிகனில் ஆணும் பெண்ணும் சந்தித்துச் கொஞ்ச காலம் வரை ஓரிடத்தில் சேர்ந்து வாழ்வது என்று தீர்மாளிக்கிறார்கள். அப்படி ஒரு குறிப்பிட்ட காலம் வரை சேர்ந்து வாழ்ந்தபின் அவர்களுக்கிடையே மன ஒற்றுமை ஏற்பட்டால் இருவரும் கணவன்-மனைவியாக மணமுடிப்பது என்று முடிவெடுக்கிறார்கள். அவர்கனிருவருக்கும் மன ஒற்றுமை ஏற்படாவிடில் பிரிவது என்று தீர்மானித்துப் பிரிகிறார்கள். இந்தியச் சமூகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதோ, ஒன்று சேர்ந்து தம்மிச்சையாக முடிவெடுப்பதோ கிடையாது. ஆணின் பெற்றொர்களும், பெண்ணின் பெற்றோர்களும் கூடிக் கலந்து பேசித் திருமணத்தை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடத்தி, அதில் அந்த ஆணையும் பெண்ணையும் கணவன்-மனைவியாக இணைப்பது என்று முடிவு செய்கின்றனர். அந்த முடிவுக்கு ஆணும், பெண்ணும் இசைகிறார்கள். இந்த முடிவை அல்லது சொந்த முடிவைத் தொடர்ந்து இந்த ஆணும் பெண்ணும் மணம் முடித்துக் கணவன்-மனைவியாக ஆகும்பொழுது, இரண்டாம் நிலை அமைகிறது. இந்த நிலை மணநிலை (Nuptial Stage) எனப்படும். மணமுடித்த ஆணும் பெண்ணும் ஒருவீட்டை அமர்த்திக் கொண்டு, இல் ஒரு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு சேர்ந்து வாழ்கிறார்கள். உண்மையில் இந்த மண நிலையிலதான் குடும்பத்தின் தோற்றம் அமைகிறது. மூன்றாவதாக, குழந்தை வளர்ப்பு நிலை (Child rearing Stage) என்ற நிலை அமைகிறது. இந்த ஆண்-பெண் ஆகிய இருவரின் இல்லற வாழ்க்கையின் சின்னமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்ற தகுதி நிலையிலிருந்து தந்தை-தாய் என்று தகுதி நிலையை அடைகிறார்கள். குடும்பத்தின் சூழ்நிலை மாறி, அதன் செயற்பாடுகளும் விரிவடைந்து, புதிய பற்றுக் கோடுகளும், புதிய பொறுப்புககும் குடுபத்திற்கு வந்து சேருகின்றன. பிறந்த குழந்தைகளைப் பேணுதல், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுதல், அவர்களைக் கட்டுப்பாடாக வளர்த்து ஆளாக்குதல், அவர்களுடைய எதிர்காலத்துக்கும், பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள் குடும்பத்திற்கு வந்து சேருகின்றன. பெற்றோருடைய பொறுப்பான கவனிப்பிலும் ஆகரவிலும் குழந்தைகள் வளர்ந்து தமக்கென ஓர் இவ்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது குடும்பம் நான்காம் நிலையான முதிர்ச்சி நிலை (Maturity Stage) என்ற நிலையை அடைகிறது. இந்த நிலைக்குப் பிறகு குடும்பம் அமைத்த கணவன் மனைவியின் மரணம் வருகிறபோது குடும்பத்தின் இறுதில் கட்டம் வந்து சேருகிறது. இந்த நான்கு நிலைகளும் பொதுப்படையாளவையே. எல்லாக் குடும்பங்களும் இந்த நான்கு நிலைகளையும் கொண்டு அமைவதில்லை, குழந்தை பிறக்காத குடும்பங்கள், மண முறிவால் அல்லது இடையில் ஏற்பட்ட கணவன் அல்லது மனைவியின் மரணத்தால் இல்வாழ்க்கை உடைத்த குடும்பங்கள் ஆகியவை மேற்கண்ட எல்லா நான்கு நிலைகளையும் கொண்டு அமைவதில்லை. <b>குடும்பத்தின் சிறப்பியல்புகள்</b>: 1.குடும்பம் ஒரு குழுவானாலும், அது ஒரு வித்தியாசமான குழு. மற்றையக் குழுக்களில் காணப்படாத சில சிறப்பியல்புகள்<noinclude></noinclude> llc7vzas3fetwkv2tkjmf34dt4g5u5q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/621 250 641620 1927604 2026-04-28T06:58:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடும்பத்திற்கு உண்டு. அவை: முதலாவதாக, குடும்பம் ஓர் உலகளாவிய குழு ஆகும். அது எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் நிலவி வருகிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|593|குடும்பம்}}</noinclude>குடும்பத்திற்கு உண்டு. அவை: முதலாவதாக, குடும்பம் ஓர் உலகளாவிய குழு ஆகும். அது எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் நிலவி வருகிறது. மானிட சமூகத்தின் தொடக்க காலத்திலிருந்து அது நிலவி வருகிறது. 2. சமூக நிலையமைப்பின் கருவாகக் குடும்பம் விளங்குகிறது. சொல்லப்போனால் சமூக நிலையமைப்பின் தோற்றத்திற்கே குடும்பத் தான் அடிப்படை அலகாக அமைகிறது. ஓர் ஆணும், ஒரு பெண்ணும் உணர்வு அடிப்படையில் இணைந்து ஆழமான உறவோடு குடும்பம் அமைக்கிறபொழுது, காலப்போக்கின் அந்தக் குடும்பம் வளர்ந்து, பல கிளைகளாகப் பெருகி அவை இணைத்து ஒன்றும் நிலையில் சமூதாயம் என்ற அமைப்பு தோன்றுகிறது. பிறகு சமுதாயம் வளர்ந்து பல பிரிவுகளாகப் பெருகி, அவை இணைந்து ஒன்றும் நிலையில் தேசிய குழு என்ற சமூக அமைப்பு உருவெடுக்கிறது. இவ்வாறு சமூக நிலையமைப்பு உருவாவதற்குக் குடும்பம்தான் கருவாக அடிப்படை அலகாக அமைகிறது. கருவலுவாக, உறுதியாக இருக்கும் வரையில் சமூக நிலையமைப்பும் உறுதியாக விளங்கும். கரு அதாவது குடும்ப அமைப்பு முறை சிதைந்தால், சமூக நிலையமைப்பும் கலகலகத்துச் சரியத் தொடங்கும். 3. குடும்பம் உணர்ச்சியின் அடிப்படையில் அறைகிறது, பல வகையான ஆழமான உணர்ச்சிகளின் அடிப்படையில் அது அமைகிறது பாலின வேட்கை, இனப் பெருக்கம், தாய்மை, குழந்தை ஆசை முதலிய உணர்ச்சிகளில் அடிப்படையில் ஆணும் பெண்ணும் இணைந்து இல்வாழ்க்கை தொடங்கக் குடும்பம் அமைகிறது. இந்த உணர்ச்சிகளோடு காதல், பிரிவு, பொறாமை, தனக்குரியது என்ற முனைப்பு, குடும்பப் பெருமை, பொருளாதாரப் பாதுகாப்பில் நாட்டம் முதலிய இரண்டாம் நிலை உணர்ச்சிகளும். சேர்த்து, அவற்றை வலுப்படுத்தி, ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும், உடன் பிறந்தோருக்கும் இடையேயுள்ள உறவையும் பிணைப்பையும் உறுதியாக்கிக் குடும்பத்தைக் கட்டுறுதி செய்கின்றன. 4. குடும்பம் சமூக நெறிகள், சட்ட விதிகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் அடைகிறது. குடும்பம் அமையும் முறையை இந்த நெறிகளும் விதிகளும்தாம் முடிவு செய்கின்றன. ஓர் ஆணும் பெண்ணும் உணர்ச்சிகளின் உந்துதலால் ஒன்று சேர்த்து கணவன் மனைவியாக இணைவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பார்வத்தின் விளைவானாலும், அவர்கள் இணையும் முறையைச் சமூக நெறிகளும், சட்ட விதிகளுமே முடிவு செய்கின்றன. அந்த முடிவுக்கேற்பவே அவர்கள் இணைப்பும் நிகழ்கிறது. உடன் பிறப்புகள் அல் அது பெற்றோர் மக்கள் என்ற உறவு நிலையில் இருப் பவர்கள் மண உறவு வைத்துக் கொள்வது எல்லாச் சமூகங்களிலும் முறை தகாப்புணர்ச்சி (Incest) என்று கருதப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருக்கிறது, வேறுசில உறவுகளும் (எடுத்துக்காட்டு: பெரியப்பா-சிற்றப்பா மக்கள், சித்தி-மகன்) மண உறவுக்குத் தக்கவையல்ல என்று பல சமூகங்களில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அது போலவே, திருமணம் புரிபவர்களின் வயது திருமண நிலை, மன நிலை முதலியவை தொடர்பாகவும் சமூக, சட்ட அடிப்படையிலும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளுக் கேற்பவே குடும்பம் அமைகிறது. குடும்பம் அமைந்த பிறகும் சமூக நெறிகளும் சட்ட விதிகளும், கணவனும் மனைவியும் பெற்றோரும் குழந்தைகளும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை, ஆற்ற வேண்டிய கடமைகளை முடிவு செய்கின்றன. கணவனும் மனைவியும் மணமுறிவு பெற்று விலக முடிவு செய்தாலும் சமூக, சட்ட நெறிகள் கூறும் விதிமுறைகளுக்கேற்பவே மண முறிவு பெற்று விலகமுடியும். இவ்வாறு சமூக, சட்ட நெறிகள் குடும்பம் அமைவதையும், இயங்குவதையும் கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய நிலை வேறு குழுக்களில் அமைவதில்லை. 5. குடும்ப உறுப்பினர்களிடையே வேறு எத்தக் குழவிலும் காணப்படாத பொறுப்புகள் உண்டு, குடும்ப வாழ்க்கையில் பல பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக இணைகிறபோதே பல பொறுப்புகளும், பணிகளும் அவர்களுக்கு வந்து சேருகின்றன. ஒருவருக்கொருவர் உடல், உள்ளத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், உண்மையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டிய இன்றியமையாமையும் ஏற்படுகின்றன. குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி அவர்களை ஆளாக்கவும் பெற்றோருக்குப் பொறுப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பொறுப்புகள் ஒரு வழியானவை அல்ல; இரு சாராருக்கும். பொதுவானவை கணவன் மனைவிக் இடையே, பெற்றோர்-குழந்தைகளுக்கிடையே அமையும் பொறுப்புகள் அறநெறி அடிப்படையில் மட்டுமன்றிச் சட்டப்படியும் அமைகின்றன. இப்பொறுப்புகள் விலக்க முடியாதவை. 6. குடும்பத்திற்கு ஒரு வரையறையான அளவு உண்டு. அதனுடைய அளவு உயிரியல் காரணியால் கட்டுப்படுத்தப்படுவதால் அதன் அளவு ஒரு வரை<noinclude> <b>வா.க. 7-38</b></noinclude> 9uafk3eshp4p63r3bxeektplpmq2f4t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/622 250 641621 1927605 2026-04-28T07:12:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யறைக்குள்தான் அமைகிறது. பொதுவாக ஓர் ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைத்து அமைக்கும் குடும்பம் இனப் பெருக்கத்தின் மூலமாகவே தன் உறுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|594|குடும்பம்}}</noinclude>யறைக்குள்தான் அமைகிறது. பொதுவாக ஓர் ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைத்து அமைக்கும் குடும்பம் இனப் பெருக்கத்தின் மூலமாகவே தன் உறுப்பினர்களைப் பெறுகிறது. தொழிற் சங்கம், அரசியற் கட்சி, தற்பணி மன்றம், மனமகிழ் மன்றம் முதலிய மற்றைய குழுக்களைப் போல, குடும்பம் பிற குழுக்களிலிருந்து தன் உறுப்பினர்களைப் பெறுவதில்லை. குழந்தைகளுக்குத் திருமணம் நடக்கும் போது மருமக்கள் பிற குடும்பங்களிலிருந்து எடுக்கப்பட்டுக் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், மணமான பிள்ளைகள் பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்பினால்தான் இத்தகைய நிலை ஏற்படக்கூடும். இவ்வாறே தத்து எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒழிய, ஒரு குடும்பம் பிற குழுக்களிலிருந்து உறுப்பினர்களை-குழந்தைகளை எடுக்கும் நிலை ஏற்படாது, இனப்பெருக்கம் உயிரியம் வரையறைக்குட்பட்டதால் குழந்தைகளும் ஒரு வரையறைக்குள்தான் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். 7. குடும்ப முறை என்பது உலகில் எங்கும் நிலவுகிற ஒரு நிலைபேறுள்ள நிறுவனம். அது மானிட சமூகத்தின் தொடக்க காலத்திலிருந்து நீடித்து வருகிறது; மக்கள் இருக்கும் வரை அதுவும் இருக்கும் ஆனால் ஓர் ஆணும் ஒரு பெண்ணும், கணவனும் மனைவியுமாக அமையும் குடும்பம் என்ற ஒரு அமைப்பிற்கு நிலைபேறு கிடையாது அவர்கள் ஒன்றாகக் கூடி வாழ்கிற வரை அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அதற்கு ஆயுள் உண்டு. இந்த வகையில் குடும்பத்திற்குத் தற்காலிகத் தன்மைதான் இருக்கிறது. அப்படித் தற்காலிகமாக இருக்கும் வரையிலும் அது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதன் கட்டமைப்பும் செயற்பாடும் மாற்றங்களுக்கு உள்ளாகும். <b>குடும்பத்தின் உருவகைகள்</b>: குடும்பம் என்பது பெரும்பாலும் கணவன், மனைவி, அவர்களுடைய குழந்தைகள் என்ற உருவில்தான் எண்ணப்படுகிறது. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக இணைகிற பொழுதுதான் தோன்றும் குடும்பத்தை மணவாழ்க்கைக் குடும்பம் (Conjugal Family) என்பர். இன்று கருக்குடும்பம் (Nuclear Family) என்ற சொல்லே இதற்கு மாற்றாக அதிக வழக்கில் உள்ளது. கருக்குடும்பம் மன உறவின் அடிப்படையில் அமைவதால், கணவனும் மனைவியுமே இக்குடும்பத்தின் தலையாய உறுப்பினராக அமைகின்றனர். இவர்களில் ஒருவர் இறக்க நேரிட்டாலோ மணவாழ்க்கையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டாலோ இந்நிலை மறையும்; கருக்குடும்பத்தின் வடிவம் சிதையும். ஒரு கருக்குடும்பத்தின் குழந்தைகள் திருமணமானபின் அவர்கள் தம் தாய் தந்தையருடனேயே ஒன்றாக ஒரே வீட்டில் உண்டு வாழ்ந்தால், அது கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படும். திருமணமான அண்ணன்-தம்பிகளும் ஒன்றாக ஒரே வீட்டில் கூட்டாக உண்டு உறைந்து வாழ்ந்தால் அத்தகைய உடன்பிறப்புக் குடும்பங்களும் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படும். கூட்டுக் குடும்பத்தின் அடிப்படை கருக்குடும்பங்களிடையே நிலவும் இரத்த உறவுதான். இதனால்தான் கூட்டுக் குடும்பம் இரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) என்று அழைக்கப்படுகிறது. கூட்டுக் குடும்பம் நேர் வரை, இணை வரை இரத்த உறவு கொண்டவர்களின் கருக்குடும்பங்களை அலகுகளாகக் கொண்டு அமைவதால், மேற்படி இரத்த உறவு கொண்டவர்களே கூட்டுக் குடும்பத்தின் தலையாய உறுப்பினர்களாக அமைகின்றனர். இவர்கள் இறக்க நேரிட்டால் அல்லது பிரிந்து சென்றால் கூட்டுக் குடும்பத்தின் வடிவம் சிதைவுறும். மேற்குறித்த வகைகளன்றி வேறு பலவகைகளும் குடும்பத்தில் உண்டு, மண முடிக்கிற துணைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துக் குடும்பம் பல உருவகைகளில் அமைவதுண்டு. ஒருவன்-ஒருத்தி என்ற ஒரு துணை மணக் குடும்பமாகவும் (Monogamous family). ஒருவலுக்குப் பல மனைவியர் என்ற பல மனைவியர் மணக் குடும்பமாகவும் (Polygynous கணவர்கள் family), ஒருத்திக்குப் பல பல கணவர் என்ற மணக்குடும்பமாகவும் (Polyandrous family) குடும்பம் அமைவதுண்டு. திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி எங்கே தங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தும் குடும்ப உருவகைகள் அமைவதுண்டு. அவை தந்தையகத்துக் குடும்பம் (Patrilocal family), தாயகத்துக் குடும்பம் (Matrilocal family), தனியகத்துக் குடும்பம் (Neolocat family) என்பன ஆகும். குடும்ப ஆட்சி நிருவாக முறையில் அமையும் வேறுபாடுகளை ஒட்டிக் குடும்பம் தந்தையாட்சிக் குடும்பம் (Patriarchal family), தாயாட்சிக் குடும்பம் (Matriarchal family), சமத்துவக் குடும்பம் (Equalitarian family) என்று அமைவதுண்டு. தந்தையாட்சிச் குடும்பத்தில் கணவனிடம் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு, குடும்பத்தை நிருவாகம் செய்யும் அதிகாரம் ஆகியன அமைந்திருக்கும். தாயாட்சிக குடும்பத்தில் மனைவியிடம் இந்த உரிமைகள் அமைந்திருக்கும். சமத்துவக் குடும்பத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இந்த உரிமைகள் சமமாக அமைந்திருக்கும்.<noinclude></noinclude> 8rxzwtuq4ujdruwe79a7u52vhtl8gnh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/623 250 641622 1927606 2026-04-28T07:21:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குலமுறை, சொத்துரிமை ஆகியவற்றில் அமையும் வேறுபாடுகளை ஒட்டிக் குடும்பம் தந்தை தாயக் குடும்பம் (Patrilineal family), தாய் தாயக் குடும்பம் (Matrilineal family) என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|595|குடும்பம்}}</noinclude>குலமுறை, சொத்துரிமை ஆகியவற்றில் அமையும் வேறுபாடுகளை ஒட்டிக் குடும்பம் தந்தை தாயக் குடும்பம் (Patrilineal family), தாய் தாயக் குடும்பம் (Matrilineal family) என்று அமைவதுண்டு, தந்தை தாயக் குடும்பத்தில் தந்தை வழியில் குலமுறை தொடரும். தந்தையிடமிருந்து ஆண்மக்களுக்குச் சொத்துரிமை போகும். இதற்கு மாறாகத் தாய் தாயச் குடும்பத்தில் தாய் வழியில் குலமுறை தொடர்வதும், தாயிடமிருந்து பெண்மக்களுக்குச் சொத்துரிமை போவதும் நிகழும். குழந்தைகளுக்குத் தந்தையின் பெயர் அல்லது தாயின் பெயர் குட்டப்படுவதைப் பொறுத்தும் குடும்ப உருவகைகள் வேறுபட்டு அமைவதுண்டு. தந்தையின் பெயரைக் குழந்தைகள் ஏற்றால் தந்தை பெயர் குடும்பம் (Patronymic family) என்றும், தாயின் பெயரைக் குழந்தைகள் ஏற்றால் தாய் பெயர் குடும்பம் (Matronymic family) என்றும் பெயர் பெறும். <b>குடும்பத்தின் செயற்பாடுகள்</b>: குடும்பத்தில் பல உருவகைகள் இருந்தாலும், அவையெல்லாம் ஒரே வகையான பணிகளையே ஆற்றுகின்றன. அந்தப் பணிகளுள் முதன்மையானது பாலினத் தேவையை நிறைவேற்றுவது. குடும்ப எல்லைக்கு அப்பாலும் ஒருவன் தன் பாலினத் தேவையை நிறைவு செய்ய முடியும் என்றாலும் குடும்பத்தின் மூலமாகத்தான் ஒருவன் உரிமையோடு முறையாக நிலையான, உறுதியான, பாதுகாப்பான பாலினத்திருப்தியைப் பெற முடியும், முறையான வழியில்தான் ஒருவன் தன் பாலினத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமூகத்தில் குடும்ப முறை நிறுவப்பட்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். திருமணத்திற்கு முன்பே ஒருவன் பாலின உறவை வைத்துக் கொள்ளப் பெரும்பான்மையான சமூகங்கள் அனுமதிக்கின்றன (மச்டாக்). அவற்றிலும் குடும்ப அமைப்பு நிறுவப்பட்டு இருப்பது, உகிமையோடு முறையாக ஒருவன் தன் பாலினத் தேவையை நிறைவு செய்து கொள்ளக் கூடிய மையம் குடும்பமே என்பதை அவை உணர்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பத்தின் இன்னொரு முதன்மையான பணி இனப் பெருக்கம். ஒரு சமூகம் நீடித்து நிலைபெற இனப் பெருக்கம் அவசியம். குடும்பம் இனப் பெருக்கத்திற்கு வழிகோலிச் சமூகம் நீடித்து நிற்க உதவுகிறது, பாலின உறவின் விளைவாக எழும் இளப் பெருக்கம் குடும்ப எல்லைக்கு அப்பாலும் நிகழக் கூடிய உயிரியல் சாத்தியம் உண்டு, ஆயினும் குடும்பம் வளையத்திற்குள் நடைபெறும் இனப்பெருக்கமே சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. குடும்ப வளையத்திற்கு வெளியே - திருமணத்திற்கு முன்னும் பின்னும் - பாலின உறவுகளை அனுமதிக்கும் சமூகங்கன் கூட அந்த உறவுகளின் விளைவாக எழும். பிறப்புகளை முறையானவை, சட்டபூர்வமானவை என்று ஒப்புக்கொள்வதில்லை. குடும்ப வளையத்திற்கு வெளியே பாலின உறவு நிகழ்ந்திருந்தாலும், குழந்தைப் பிறப்பு, திருமணம் மூலமாக அமைகிற குடும்பத்தின் எல்லைக்குள் தான் நிகழ வேண்டும் என்று விதி வகுத்திருக்கின்றன. ஆகவேதான் எல்லாச் சமூகங்களிலும் குடும்ப அமைப்பிற்குள் பிறக்கும் குழந்தைகளே முறையான, சட்டபூர்வமான பிறப்புகள் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். சமூகமயமாக்குதல் (Socialization) குடும்பத்தின் மற்றொரு பணி. சமூகத்தில் பங்கேற்பதற்கும், சமூகத்தோடு இயைந்து நடப்பதற்கும் குழந்தைகளுக்குக் குடும்பம் பயிற்சி அளிக்கிறது. சமூகத்தில் நிலவும் நெறிகள், மரபுகள், நடத்தை முறைகள் முதலியற்றைக் குடும்பம் குழந்தைகளுக்குக் கற்பித்துச் சமூகத்தில் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுக்கொடுக்கிறது. வேறு வழிகளிலும் குடும்பம் குழந்தைகளைச் சமூகப்படுத்துகிறது, பெற்றோர்கள் நம் நடத்தைக் கோலங்களைச் செம்மைப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் தம் குழந்தைகளுக்குத் தம்மை முன்மாதிரியாக அமைத்துக் கொள்ளுகின்றார். குழந்தைகள் அவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தமது நடத்தைக் கோலங்களையும் அமைத்துக் கொள்ளுகின்றனர். வயது வந்ததும் அவர்கள் கணவர்களாக (அல்லது மனைவியராக), தந்தையராகப் (அல்லது தாயார்களாக) பங்காற்ற இப்பயிற்சி கை கொடுக்கிறது. பல்வேறு உத்திகளைக் கடைபிடித்துக் குடும்பம் மயமாதற் குழந்தைகளுக்குச் சமூக பயிற்சி தருகிறது. சில வேளைகளின் அன்பாகவும், சில வேளைகளில் அதிகாரம் செலுத்தியும், பரிசுகள் (எடுத்துக்காட்டு: பாராட்டு) கொடுத்தும், தண்டனைகள் (எடுத்துக்காட்டு: கண்டித்தல்) கொடுத்தும் பயிற்சி தருகிறது. ஒரு மனிதனின் ஆளுமை அவன் வளர்க்கப்படுகிற சமூகமயமாக்கப்படுகிற விதத்தைப் பொறுத்து அமைகிறது. பிராய்டு (Freud), ஆட்லர் (Adler) போன்ற உளப்பகுப்பாய்வியல் அறிஞர்கள், மனிதன் குடும்பத்தில் எவ்வாறு அமைகிறானோ அவ்வாறே<noinclude> <b>வா.க. 7-38அ </b></noinclude> avb3dwvliv202vxs161ainol990a8gm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/624 250 641623 1927607 2026-04-28T07:30:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூகத்திலும் நடந்து கொள்ளுகிறான் என்கிறார்கள், அவன் கட்டுப் பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கப்படும்போது, அவனுடைய ஆளுமை செம்மைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|596|குடும்பம்}}</noinclude>சமூகத்திலும் நடந்து கொள்ளுகிறான் என்கிறார்கள், அவன் கட்டுப் பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்கப்படும்போது, அவனுடைய ஆளுமை செம்மைப்படுத்தப்பட்டு, அவன் சமூகத்தில் நல்லவனாக, ஒழுக்கமுடையவனாக விளங்குகிறான், குடும்பம் நிலை கெட்டுக் குலைந்து போனால், அந்த நிலையில் குடும்பத்தில் அவளால் நல்ல முறையில் கட்டுப்பாடாக வரை வாய்ப்பு இன்றிப் போகிறது. இக்கருத்தை கிலி (Healy), பிரான்னர் (Bronner) ஆகியோர் உறுதி செய்கிறார்கள். இதற்கு ஆதரவாக இளங்குற்றவாளிகள் பெரும்பாலும் நிலை குலைந்த குடும்பங்களிலிருந்து வருவதை அவர்கள் கட்டிக் காட்டுகிறார்கள். இந்தச் சமூகமயமாக்கும் செயல், குடும்பத்தில் மட்டுமன்றி வேறு குழுக்களிலும் எடுத்துக்காட்டாக ஒப்பார் குழு (Peer group), அண்டையம், பள்ளிக்கூடம், அலுவலகம் முதலிய குழுக்களிலும் கூட நடைபெறுகிறது. ஆனால், குடும்பத்தில் தரப்படுகிற பயிற்சியின் தன்மை, அளவு, தரப்படும் விதம், வலிமை இக்குழுக்களில் தரப்படுகிற பயிற்சிக்குக் கிடையாது. குடும்பத்தின் பயிற்சி வலிமையானது; ஆழமானது: நிலையானது. பிளாட்டோவிலிருந்து ஆல்டசு அருசலி வரை பல சிந்தனையாளர்கள் சமூகமயமாக்கம் குடும்ப அமைப்பிலிருந்து எடுக்கப்பட்டு வேறு ஏற்பாடுகள் மூலம் தரப்பட்டால் அது வெற்றிகாமாகவும் சிறப்பாகவும் வலிமையானதாகவும் இருக்கக் கூடும் என்று கருதினார்கள். அந்தக் கருத்தின் அடிப்படையில் பல சோதனைகளும் அங்கங்கு நடைபெற்றன. உருசியப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனில் குழந்தைகளைக் குடும்பங்களிலிருந்து விலக்கிக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு அறிவியல் முறையில் வளர்க்கும் ஏற்பாட்டைத் தொடங்கினார்கள். ஆனால் விரைவிலேயே அந்த ஏற்பாடு குடும்ப முறைக்கு மாற்றாக அமைய இயலாது என்று கண்டறிந்து அதைக் கைவிட்டனர் மீண்டும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைக் குடும்பத்திடமே ஒப்படைத்தனர். இன்று அந்நாட்டில் பள்ளிக்கூடமும், குடும்பம் சேர்ந்து குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்துச் சமூகப்படுத்தி ஆளாக்கும் பொறுப்பைச் செய்து வருகின்றன. அவ்வாறே இசுரேலிலும் ஆரம்பத்தில் குழந்தைகளைக் கிப்புட்க (Kibbutz) என்ற கட்டுப் பண்ணைகளில் இருந்த சமுதாயக் குடில்களில் விட்டு வளர்க்கும் ஏற்பாடு அமைக்கப்பட்டது. பெற்றோர்கள் ஓரிரு மணி நேரமே குழந்தைகளை வந்து பார்த்துக் கொஞ்சிட அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நாளடைவில் இப்புட்களில் வளர்ந்து ஆளான குழந்தைகளுக்குக் கிப்புட்சு வாழ்க்கை சலிப்படையத் தொடங்கியது. இன்று அந்தந்தக் குடும்பங்களே தத்தம் குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்று வருகின்றன. குடும்பமே குழந்தைகளை வளர்த்து ஆளாக்கத்தக்க அமைப்பு என்ற கருத்து உறுதியாகி விட்டது. முதலில் குழந்தைகள் கலந்து கொள்ளும் குழு குடும்பமே. இங்கேதான் அவர்களுக்கு முறையான, சமூகமயமாகும் - பயிற்சி தரப்பட்டு, அவர்களுடைய ஆளுமை மேம்படுத்தப்படுகிறது. அவர்கள் வளர்ந்து ஆளாகிற வரையிலும் - ஆனாகிய பிறகும் கூடக் குடும்பம் தொடர்ந்து அவர்களுக்குச் சமூகமயமாதற்க பயிற்சியைத் தருகிறது, அதன் காரணமாக அவர்களின் ஆளுமை சீராக, தொடர்ச்சியாக மேம்பாடு அடைந்து, அவர்கள் நல்ல குடிமக்களாக, சமூக உறுப்பினர்களாக உருவாகின்றனர். அன்பு பாராட்டுதல் குடும்பத்தின் இன்னொரு பணி, பெற்றோரிடமிருந்தும், உடன் பிறந்தோரிடமிருந்தும் கிடைக்கிற அன்பு, பரிவு, அரவணைப்பு வேறு எந்தக் குழுவிலும் ஒரு குழந்தைக்குக் கிடைக்காது, பாசத்தைத் தழுவி எழுகிற இந்தத் தூய், இதமான, உணர்வுகலந்த அன்பு குழந்தையின் மன- உணச்ச்சி நிலை வளர்ச்சியடைத்து சீராக அமையச் செய்கிறது. குடும்பப் பாசமும், அன்பும் ஒருவனுக்குக் கிட்டாமல் போனால் அல்லது மறுக்கப்படுமானால் அவனுடைய மன-உணர்ச்சி நிலை பாதிப்படையும். ஒருவனுக்கு ஏற்படுகிற மனச் சிக்கல்களுக்கும், உணர்ச்சி நிலை குலைவுகளுக்கும், உடல் நிலைக் கோளாறுகளுக்கும் கூடக் குடும்பப் பாசம் அன்பும் கிட்டாமல் போவதுதான் முதன்மையான காரணம் என்று புராம் (Fromm), சிண்ட்லர் (Schindlar) முதலிய உண மருத்துவலியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் நல்ல உணவுடன் நன்றாகப் பராமரிக்கப்பட்டாலும், அவர்களுக்குக் குடும்பப்பாசம், அரவணைப்பு, சீராட்டல் முதலியவை கிடைக்காமல் போனால், அது அவர்களின் மனநிலையைப் பாதித்து, அதன் மூலம் உடல் நலனைப் பாதிக்கும். அவர்கள் உடல் மெலிந்து, உடல் நலம் குன்றி உடல்கரைவு நோய்க்கு (இத்தோய் ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படுவது) ஆனாகி இறக்கவும் கூடும். இக்கருத்தை ஆய்வுகள் மூலம் இரிப்பிள் (Ribble) சவான்சு (Evans), மசுசென் (Mussen) முதலான உளவியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். மருத்துவமனைகளிலும், குழந்தைக் காப்பகங்களிலும் வளர்க்கப்படுகிற குழந்தைகளுக்கு உணர்ச்சி நிலை மேம்பாடு அடைவதில்லை என்றும், அதன் விளைவாக அவர்கன் உடல் நலம் கெட்டு இறப்பைத் தழுவுவர் என்றும் சில ஆய்வுகள் மூலம் இசுபிட்சு (Spitz) என்பவர் தெரி-<noinclude></noinclude> dgzh3m4cvz52jwbt6meimnuaj035sau பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/625 250 641624 1927608 2026-04-28T07:40:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விக்கிறார். அந்நிலையங்களின் குழந்தைகளுக்குக் கவனிப்பும் பராமரிப்பும் இடைத்தாலும், அவை கடமைக்குத் தரப்படுவதும், உணர்ச்சியில்லாமல் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|597|குடுமியா மலை}}</noinclude>விக்கிறார். அந்நிலையங்களின் குழந்தைகளுக்குக் கவனிப்பும் பராமரிப்பும் இடைத்தாலும், அவை கடமைக்குத் தரப்படுவதும், உணர்ச்சியில்லாமல் இருப்பதுவுமே இதற்குச் காரணம் என்கிறார். குடும்பச் சூழ்நிளையில் கிடைக்கக் கூடிய உணர்வு கலந்த அன்பும் பாசமும் இதமான அரவணைப்பும் அவர்களுக்கு அங்கே கிடைப்பதில்லை. தாமசு (Thomas) என்ற அறிஞர் ஒரு மனிதனுக்கு உள்ள அடிப்படை விருப்பங்களில் ஒன்று தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்பத என்று கூறுகிறார். இந்த விருப்பம் ஒரு முதன்மையான மனித விருப்பம். கார்ட்டன் (Harten), கண்ட்டு (Hunt) ஆகிய அறிஞர்கள் பாலின உறவை விட மனிதனுக்கு இது மிக முக்கியமான, வலிமையான சமூகத் தேவை என்கிறார்கள். இந்தத் தேவையைக் குடும்பம் தன் அரவணைப்பு, கவனிப்பு இவற்றின் மூலம் நிறைவேற்றித் தருகிறது. திருமணமாகாமல் தனித்து வாழ்கிற மக்கள் கூட மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழக்கூடும். ஆனால் பிறருடைய அன்பும், கவனிப்பும் இல்லாமல் வாழ்கிற மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியோ ஆரோக்கியமோ நிலவாது. இந்த அன்பும் கவனிப்பும் குடும்பத்தில் மட்டும் கிடைக்கும் என்பதில்லை, நண்பர் குழாங்களில் கூட இவை கிடைக்கும். ஆனால் அவை குடும்பத்தில் கிடைக்கும் அன்புக்கும் கவனிப்புக்கும் இணையாகா. குடும்பம் பாதுகாப்பு நல்கும் பணியும் செய்கிறது. ஓர் உறைவிடத்தை அமைத்துத் தன் உறுப்பினர்களுக்குப் புறப்பாதுகாப்புக் கிடைக்க வழி செய்கிறது. சிக்கல்கள் அல்லது இடர்கள் ஏற்படும்போது உறுப்பினர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் காக்கிறது. முக்கியமாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உடற்குறை உடையவர்களுக்கும் அது பாதுகாப்பு மையமாக இருந்து அவர்களைக் காக்கிறது. ஒரு குடும்பத்தில இருக்கிறோம் என்ற உணர்வே குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். குடும்பம் ஆற்றும் மற்றொரு பணி தகுதியை அளிப்பது. இனக்குழு, மதம், சாதி, பொருளாதார வகுப்பு ஆகிய அடிப்படைகளில் ஒருவனுக்கு அமையும் தகுதியை குடும்பம் மூலமாகவே அமைகிறது. குடும்பத்தின் இனக்குழுச் சார்பு, மதச்சார்பு, சாதிச் சார்பு, பொருளாதார வகுப்புச்சார்பு ஆகியவற்றுக் கேற்பக்குடும்பத்து உறுப்பினர்களின் சார்பு நிலையும் அமைகிறது. குடும்பம் சார்ந்துள்ள குழுக்களின் சமூகத் தகுதி நிலைக்கேற்பக் குடும்ப உறுப்பினர்களின் சமூகத் தகுநிலையும் அமைகிறது. குடும்பம் சார்ந்துள்ள குழக்களின் சமூகத் தகுநிலை உயர்வாக அல்லது தாழ்வாக இருந்தால், அதையொட்டிக் குடும்ப உறுப்பினர்களின் சமூகத் தகுநிலையும் உயர்வாகவோ தாழ்வாகவோ அமைகிறது. குடும்பம் ஒரு பொருளாதார அலவாகச் செயல்பட்டு உறுப்பினர்களின் உணவு, உடை முதலிய தேவைகளை நிறைவேற்றித் தருகிறது. பழங்குடிச் சமுதாயங்களிலும், கிராமச் சமுதாயங்களிலும் குடும்பத்தில் இருக்கும் ஆண் பெண் அனைவரும் வயது வேறுபாடு இல்லாமல், உழைத்துக் குடும்பத்தின் உணவுத் தேவை நிறைவுபெறச் செய்கிறார்கள். பல சமூகங்களில் ஆண்கள் செய்ய வேண்டிய பணிகள், பெண்கள் செய்ய வேண்டிய பணிகள் என்று வேலைப் பங்கீடு செய்யப்பட்டுக் குடும்பத்தின் தேவைகள் நிறைவு பெற உறுப்பினர்கள் எல்லோரும் பணி புரிகிறார்கள். இப்படிக் கூட்டாகப் பணி புரிவதன் மூலம் குடும்பு உறுப்பினர்கள் தத்தம் தேவைகளை மட்டுமன்றிப் பிறகுடைய தேவைகளையும் நிறைவு செய்கின்றனர். மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ குழுக்களைச் சந்திக்கிறான், அவற்றில் கலந்து கொள்கிறான். அவை அவன் வாழ்விலும், ஆளுமையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அந்தத் தாக்கம் நீடித்து நிற்காது. ஆனால், குடும்பத்தின் தாக்கம் நிலையானதாக, உறுதியானதாக இருக்கும்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bierytedt, Robert,</b> Social Order, Tata McGraw-Hill Publishing Company, New Delhi, 1970.<br> <b>Goode, William J.,</b> The Family, Prentice-Hall of India. New Delhi, 1979.<br> <b>Horton, Paul B.</b> and Hunt, Chester L., Sociology. 6th Ed. McGraw-Hill International Book Company, Auckland, 1984.<br> <b>MacIver, R.M.</b> and Page, Charles H. Society, In Introductory Analysis, Macmillan & Co., London, 1955. <b>குடுமியா மலை</b> புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையிலிருந்து விராலிமவை செல்லும் சாலையில் ஏறக்குறைய 20 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது. சமணர் படுக்கைகளும், முற்காலப் பாண்டியரின் குடைவரைக் கோயிலும், அந்தக் காலத்-<noinclude></noinclude> 9ktxx3anlmo05hk0ft0npvrvmdqjkou பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/626 250 641625 1927609 2026-04-28T08:24:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசைக் கல்வெட்டும் இடம்பெற்றுள்ள இவ்வூர் வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. பாண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடுமியா மலை|598|குடைவரைக்கலை}}</noinclude>தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசைக் கல்வெட்டும் இடம்பெற்றுள்ள இவ்வூர் வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. பாண்டியர்களின் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் திருநலக்குன்றம் என வழங்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் 12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சிகாநல்லூர் என்னும் வடமொழிப் பெயரை இவ்வூர் பெற்றுள்ளது. இன்னுள்ள குடுமியா மலை என்னும் பெயர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் வந்தது. இவ்வூரிலுள்ள மலையின்மேல் பிற்காலப் பாண்டியரின் முருகன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளும் கற்படுக்கைகளும் சிதைந்த பிராமிக் கல்வெட்டும் உள்ளன. மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள குடைவரையின் வாயிற்காவலர் சிற்பங்கள் பாண்டி நாட்டுத் திருமெய்யம், திருக்குன்றக்குடி ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களின் வாயிற்காவலர் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்க வளப்பும் அமைப்பும் கொண்டவை, இக்குடைவரையில் உள்ள கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள் இரண்டு, இக்குடைவரைக் கோயில் பாண்டியர் காலத்ததே எனக் கருத உதவுகின்றன. குடைவரைக் கோயிலின் உள்ளவரில் கிரந்த கல்வெட்டுச் எழுத்துகளில் ‘பரிவாதினி’ என்னும் சொல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோயிலுக்கு வெளியே தென்புறப் பாதையில் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்ட 38 வரிகளைக் கொண்ட இசைக் கல்வெட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அண்மையிலூள்ள திருமெய்யம், மலையடிப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களிலும் இந்த இசைக் கல்வெட்டோடு ஒப்பிடத்தக்க வகையில் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடைவரைக் கோயிலுக்கு முன்புறமாக கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலக் கட்டடக் கோயில் அமைந்துள்ளது. இது கலைச் செல்வங்கள் நிறைந்தது. இருக்குவேளிர், முத்தரையர், சோழர், பாண்டியர், நாயக்கர், பாணர், பல்லவரையர், தொண்டைமான் ஆகிய பல அரச குடும்பத்தாரின் கொடைகளை இக்கோயில் பெற்றுள்ளது. ஏறக்குறைய 120 கல்வெட்டுகன் இங்குள்ளன. அவை சமூக நிலைமைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன. இக்கோயிலின் கருவறையின் உள்ள இலிங்கத்தில் குடுமிபோன்ற அமைப்பு முன்புறம் காட்டப்பட்டுள்ளது. குடைவரைக் கோயிலுக்கு அருகில் தெற்காகச் சௌந்தர நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது, இக்கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் ஒரு தேவரடியாரின் பொருளுதவியால் கட்டப்பட்டது. குடுமிநாதர் கோயிலுக்கு இடப்புறமாக அலொண்டேசுவரி அம்மன் கோயில் உள்ளது. இல்வம்மன் கோயிலின் முன் மண்டபத்தில் பன்னிருகால் மண்டபம் ஒன்றும், அறுகோணக் கற்பீடம் ஒன்றும் அமைந்துள்ளன. இதனை அடுத்து இருபத்து நாலுகால் சொக்கட்டான் மண்டபம் ஒன்னும் உள்ளது. இவை யாவும் பல்லவராயர் காலத்தில் கட்டப்பட்டன என்று இங்குள்ள கல்வெட்டால் அறியக்கிடக்கிறது. அறுகோணக் கற்பீடத்தில் அமர்ந்து பல்லவராயர்களும் தொண்டைமான்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பர். குடுமிநாதர் கோயிலில் உள்ள நாயக்கர் கால வசந்த மண்டபச் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இங்குள்ள உமாசகிதர், சோமாசுகந்தர், ஆடவல்லான். சிவகாம சுந்தரி, முருகன், சண்டிகேசுவரர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பைரவர், பிட்சாடனர் முதலான 30 செப்புத் திருமேனிகள் எழில் வாய்த்த வையாகும். இன்வூரின் மலை முகட்டில் 63 தாயன்மார் வணங்க இறைவன் இடப வாகனத்தில் உமையுடன் காட்சியளிக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கிலும் தெற்கிலும் அண்ணன் கிணறு, தம்பிக்கிணறு, செங்கழுநீர் ஓடை முதலிய நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகக் குடுரியாமலை நெடிய வரலாற்றுத் தொடர்புடைய ஊராகும்.{{Right|<b>சொ.சா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Meenakshi, C.,</b> Administration and Social life Under Pallavas, Madras University, 1938.<br> <b>Thirumalai R.</b> Studies in Ancient Townships of Pudukottai, State Dept. of Archaeology, Madras, 1981. <b>குடைவரைக்கலை</b>: மனிதன் கடவுளை வழிபடத் தொடங்கிய காலத்தில் முதலில் குகைகளையே கோயில்களாக ஆக்கினான், உலகில் பல்வேறு இடங்களில் குடைவரைக்கலை மிகப் பழங்காலத்திலிருந்தே நிலவிவந்தது. மத்தியதரைக்கடற் பகுதிகளில் உள்ள சில குடைவரைக் கோயில்கள் ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாகும். இக்குடைவரைக் கோயில்கள் அழகுமிக்க<noinclude></noinclude> 220j4fj4t5bczazirafbei2lh7e739u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/627 250 641626 1927610 2026-04-28T08:33:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 627 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 175 |oTop = 45 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|பைரவ கொண்டாலிலுள்ள குடைவரைகள்}} சிற்பங்களையும் கதவுகளைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடைவரைக்கலை|599|குடைவரைக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 627 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 175 |oTop = 45 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|பைரவ கொண்டாலிலுள்ள குடைவரைகள்}} சிற்பங்களையும் கதவுகளையும் பீடங்களையும் கொண்டு விளங்குகின்றன. இதனுள் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடும் காணப்பட்டது. எகிப்து, சீனா ஆகிய நாடுகளில் கி.மு. 3000 ஆண்டுகளைச் சார்ந்த குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. எனினும், இந்தியாவில் தான் குடைவரைக்கலை பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் குடைவரைக்கலை அசோகப் பேரரசர் காலம் முதல் (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை நிலவியது. பெரிய இயற்கைப் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்துச் சிற்பங்களை அழகுற செதுக்கும் கலையை இந்தியர் அறிந்திருந்தனர். இந்தியாவில் குடைவரைக் கோயில் அமைக்கும் வழக்கத்தை மௌரியப் பேரரசர் அசோகரே முதன் முதலில் ஏற்படுத்தினார். இயற்கையான பாறைகளை வெட்டியும் குடைந்தும் இக்குடையரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. அசோசரும் அவருக்குப் பின் வந்த அவர் பேரர் தசரதனும் பீகார் மாநிலத்தில் கயாவிற்கு அருகில் பராபர், நாகார்ச்சுனா மலைகளிலும் சிதமார்கி என்ற இடத்திலும் எட்டுக் குடை வரைக் கோயில்களை அமைத்தனர். பௌத்த சமயம் தோன்றியபின் புத்த துறவிகள் தங்குவதற்காக இத்தகைய குடைவரைகள் மேற்கு இந்தியாவில் மிகுதியாக அமைக்கப்பட்டன. மேற்கிந்தியாவில் பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான ஈனயானத்தைப் பின்பற்றியவர்கள் பௌத்த சைத்தியங்கள், மடாலயங்கள் ஆகியவற்றை மலையைக் குடைந்து அமைத்தனர். மடாலயங்கள் பொதுவாக நான்கு அறைகளைக் கொண்டு விளங்கின. பௌத்த துறவிகள் படுத்துறங்குவதற்காகக் கல்மேடைகள் அவற்றில் காணப்பட்டன. நான்கு அறைகளுள் கடைசி அறை துறவிகள் தனியாகப் படிப்பதற்காக அமைக்கப்பட்டது. இவ்வறை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுத் தனியறையாகப் பிரிந்து காணப்பட்டது. இம்மடாலயங்களில் குளிப்பதற்கான வசதிகளும் இருந்தன. அதற்காகக் கல்தொட்டிகள் பலவும் குடையப்பட்டா பாறைகளைச் செங்குத்தாகச் செதுக்கியபின் மேனிருந்து கீழே கட்டடத்தைச் செதுக்கி இக்குடைவரைகளை அமைத்துள்ளனர். உட்புறத்தை நடுவிலிருந்து குடைந்து கொண்டபின் அடிப்புறத்தைப் பின்னர்ச் செதுக்கினர், கல்மேடைகள் 9 அடி சதுரமானவை. பொதுவாக இவ்வகை மடாலயங்கள் நகரைவிட்டு மலைப்பகுதிகளிலேயே காணப்பட்டன. பௌத்த துறவிகள் அமைதியான சூழலில் இறைவனை வழி<noinclude></noinclude> qvt28dgpzhwohkm0dpfpx0ow3ycvrxb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/628 250 641627 1927611 2026-04-28T08:42:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 628 |bSize = 375 |cWidth = 340 |cHeight = 137 |oTop = 45 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|அசந்தாக் குடைவரைகளின் தோற்றம்}} பட இவை உதவி புரிந்தன, கனய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடைவரைக்கலை|600|குடைவரைக்கலை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 628 |bSize = 375 |cWidth = 340 |cHeight = 137 |oTop = 45 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|அசந்தாக் குடைவரைகளின் தோற்றம்}} பட இவை உதவி புரிந்தன, கனயால பௌத்த மது வளர்ச்சிக் காலத்தில் பாசா (Bhaja) கோன்டென், பித்தம்கோரா, அசர்ந்தா பெட்சா, நாசிக் கன்னார் காச்லே, ஒரிசா ஆகிய இடங்களில் குடைவரைகளை அமைத்தனர், இவற்றுள் பாசாவிலுன்ள குடைவரை மிகப் பழைமையானது. இது 55 அடி நீளமும் 33 அடி அகலமும் 29 அடி உயரமும் உடைய 90 பெரிய அறையைக் கொண்டுள்ளது குடைவரையின் நடுவில் அழகுமிக்க விகாரைகள் காணப்படுகின்றன. கார்வேவிலும் இந்த அமைப்பில் உள்ள அறை உள்ளது. இது 124 அடி நீளமும் 46.5 அடி அகலமும் 45 அடி உயரமும் உடையது. வளைவுகளை 37 தூண்கள் நெருக்கமான முறையில் சிற்பங்கள் பலவற்றைக் கொண்டு தாங்கி நிற்கின்றன. அசந்தாவிலுள்ள 8, 9, 10, 12, 13 எண்ணுள்ள குடைவரை மடாலயங்கள் சனயானப் பிரிவைச் சார்ந்தவை, ஒன்பது, பத்து எண்களுள்ள மடாலய மண்டபங்களும் இக்காலத்தைச் சார்ந்தவை. இவற்றுள் 12-ஆம் குடைவரை மிக எளிமையும் ஒரே தனமுடையதாகவும் உள்ளது. நடுக்கூடம் இலாட வடிவ அமைப்பைப் பெற்று உள்ளது. மகாயானப் பிரிவைச் சாரந்த குடைவரைகள் இங்கு 23 உள்ளன. இக்குடைவரைகளின் உள்ளே புத்த சிற்பங்கள் பல கருவறைகள் அமைத்து அமைக்கப்பட்டன. சைத்தியங்களில் மடாலயங்களைவிட அழகிய சிற்பங்கள் பல இக்காலத்தில் செதுக்கப்பட்டன, குகைக் கட்டடச் சிற்பத்திறன் வளர்ச்சி இக்காலத்தில் பெரிதும் காணபடுகிறது. ஆந்திர மாநிலத்தில் குண்டபள்ளியி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 628 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 150 |oTop = 270 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|எல்லோரக் குடைவரை-இந்திரசபை}}<noinclude></noinclude> i6re0nvbq9ui8rdenf3t67zo8ei9qhs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/629 250 641628 1927612 2026-04-28T08:52:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பௌத்த மடாலயங்கள் காணப்படுகின்றன. இவை கி.மு. 200-ஆம் ஆண்டைச் சார்ந்தவை. எல்லோராக் குடைவரைகள் பௌத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் இந்து மதத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடைவரைக் கலை|601|குடைவரைக் கலை}}</noinclude>பௌத்த மடாலயங்கள் காணப்படுகின்றன. இவை கி.மு. 200-ஆம் ஆண்டைச் சார்ந்தவை. எல்லோராக் குடைவரைகள் பௌத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் உரியவை. பாறையைக் குடைந்து ஒரு முழுக் கோயிவையே இங்கு மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கியுள்ளனர். இக்கோயில், நத்திக்கோயில், கருவதை, அதனைச் சுற்றியுள்ள தடைகள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள உண்டவல்லி என்னும் இடத்தில் அமைந்துள்ள குடை வரையின் அமைப்பு எல்லோராக் குடை வரையின் அமைப்பை ஒத்துள்ளது. இடைக்காலத்தைச் சார்ந்த குடைவரைகள் பல பம்பாய் நகருக்கருகில் எலிபெண்டா என்ற இடத்தில் உள்ளன. இவை இந்து சமயத்தைப் பற்றியவை இங்குள்ள சிற்பங்களுள் மகேச மூர்த்தியின் சிற்பம் மிக நேர்த்தியானது. இங்குள்ள சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கவை திரிமூர்த்தி, நடராசர், சிவன், பார்வதி, அர்த்தநாரீசுவரர் முதலியவை ஆகும். இந்து சமயல் குடைவரைகளும் பௌத்த சமயல் குடைவளர்களுக குப்பித்தியவையாகும். சாஞ்சியிலிருந்து 7.கி.மீ. தொலைவிலுள்ள உதயகிரிக் குடைவரைகன் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை, தக்காணத்தில் பாதாமியிலுள்ள குகைக் கோயில்கள் காலத்தவை, இவை இந்துக் கோயில் அமைப்பில் குடையப்பட்டுள்ளன. அய்கொளேவிலுள்ள சமணக் குடைவரைகள் பாதாமிக்குடைவரைகளின் அமைப்பை உடையவை ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 629 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 270 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|பாதாமிக் குடைவரையின் உள் மண்டபம்.}} தமிழ்நாட்டில் பல்லவர்தம் காலமே குடைவரைகளின் தோற்றக் காலம் ஆகும். முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல அமைக்கப்பட்டன. இளவு இந்து சமயக் கடவுளாகனான பிரமன், சிவன், திருமால் ஆகியோருக்காக அமைக்கப்பட்டன. பல்லவர்காலக் குடைவரைக் கோயில்கள் தமிழகத்தில் மண்டகப்பட்டு, பல்லாவரம், வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, சீலமங்கலம், தளவானூர், திருச்சிராப்பள்ளி, மகாபலிபுரம் குரல் கணில் முட்டம், விளாப்பாக்கம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்குடைவரைக் கோயில்கள் பொதுவாக ஒரு செவ்வக வடிவிலான முகமண்டபத்தையும், இடை மண்டபத்தையும் கொண்டுள்ளன. முகமண்டபத்தில் நான்கு சதுரத் தூண்கள் உள்ளன. சுவர்களில் உள்ள மாடங்களில் தெய்வங்கள் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்கள் திருத்தாங்கல், திருப்பரங்குன்றம், ஆனை மலை, பிரான் மலை, மலையாடிக்குறிச்சி. குடுமியாமலை, சித்தன்ன வாசல் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. சித்தன்னவாசயில் ஏழடிப்பட்டம் என்ற குகை 17 படுக்கைகளைக் கொண்டது; பிராமிக் கல்வெட்டை உடையது. இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டாகும். முத்தரையர் காலக் குடை வரைகள் திருவள்ளரை, நார்த்தாமலை, குன்றாண்டார்கோயில், பூவாலைக்குடி ஆகிய இடங்களில் உள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 629 |bSize = 375 |cWidth = 158 |cHeight = 140 |oTop = 280 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|மண்டகப்பட்டுக் குடைவரை}}<noinclude></noinclude> d9vs36bfh1gct3ywfkv5nzfddqa8e33 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/630 250 641629 1927613 2026-04-28T09:01:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடைவரைகளைத் தவிர தமிழகத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் கட்டடக் கோயில் அமைப்பில் பாறையைச் செதுக்கிக் கோயில்கள் அமைத்தனர். முதலாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1927613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டலகேசி|602|குண்டுகட் பாலியாதனார்}}</noinclude>குடைவரைகளைத் தவிர தமிழகத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் கட்டடக் கோயில் அமைப்பில் பாறையைச் செதுக்கிக் கோயில்கள் அமைத்தனர். முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தைச் சார்ந்த மகாபலிபுரம் இரதங்கள் (தேர்கள்) இவற்றுள் புகழ் பெற்றவையாகும். இவை எல்லோராலிலுள்ள கைலாசநாதர் கோயில் அமைப்பில் செதுக்கப்பட்டன. இதுபோன்ற செதுக்குக் கோயில் பாண்டியர் கழுகு மலையில் உள்ளது. இக்கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வட இந்தியாவிலும் இது போன்று பாறைகளைச் செதுக்கிக் கோயிலாக அமைத்துள்ளமை தெரியவருகிறது. தம்னர், மகரூர் போன்ற இடங்களில் இவ்வகைக் கோயில்கள் உள்ளன.{{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Brown, Perey,</b> Indian Architecture, Buddhist and Hindu Periods, Bombay, 1942.<br> <b>Burgess, James,</b> Notes on the Buddhist Rock temples of Ajanta and Paintings of the Baga caves Asia, Bombay, 1879. <b>குண்டலகேசி</b> தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது விருத்த யாப்பில் அமைத்துள்ளமையின் குண்டலகேசி விருத்தம் எனவும் வழங்கப்படும். முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்களுள் குண்டலகேசியும் அடங்கும். இந்நூற் செய்யுட்கள் பல தொல்காப்பியவுரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழியவுரை, நீலகேசி சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரை ஆகியவற்றுட் காணப்படுகின்றன. இங்ஙனம் கிடைக்கும் இந்நூற் செய்யுட்களின் எண்ணிக்கை 29 என்பது ஒரு சாரார் கருத்து. எனிலும் கழக வெளியீடாக அமையும் குண்டலகேசியில் 19 செய்யுட்கனே காணப்பெறுகின்றன. நீலகேசி எனினும் சமண நூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்ததாகும். நீலகேசிக்ருச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 செய்யுட்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இச்செய்யுட்களின் முதற்குறிப்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. குண்டலகேசி பௌத்த சமயச் சார்பு நூலாகும் அச்சமயத்திற்குப் பெரும் பகையாகவிருந்த சமண சமயத்தின் கொள்கைகளை மறுப்பதன் பொருட்டு எழுந்த சொற்போர் நூலாக இது கருதப்படும். இந்நூலின் ஆசிரியர் இன்னாரென அறிய இயலவில்லை. ஆனால், நாதகுத்தனார் என்பவரே அவ்வாசிரியர் எனச் சிலர் கருதுகின்றனர். நீலகேசிக்குரிய கூரையில் குண்டலகேசி என்னும் பெண் ஆவணம் என்னும் நகரில் சமண ஆசிரியரான நாதகுத்தனாரோடு வாதிட்டு வென்றாள் என்னும் செய்தி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். குண்டலகேசி என்னும் வணிகப் பெண் பௌத்தச் சார்புடையவனும் வணிக மரபினனும், களவுத் தொழிலோனுமான கானன் என்பவனைக் காதலித்து மணக்கிறான். ஊடல் மிகுதியால் சினந்திருந்தகாலை தன் கணவனைக் கல்வன் என அவள் இகழ்ந்துரைக்கின்றாள். வெறுப்புற்ற காளன் அவனைக் கொல்லச் சூழ்ந்து வஞ்சத்துடன் ஒரு மலை முகட்டிற்குக் கொண்டேகுகிறான். அவன் வஞ்சத்தினையுணர்ந்த குண்டலகேசி தானும் ஒரு சூழ்ச்சி செய்கிறாள். இறுதியாசத் தன் காதலனை ஒரு முறை வளம் வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, அவன் ஒப்புதலைப் பெறுகிறாள். தன் கணவனை மலை முகட்டினின்றும் வீழ்த்திக் கொன்றுவிடுகிறாள். அதன்பின் உஞ்சை மாநகர் சென்று அருகச் சந்திரன் என்னும் பௌத்தத் துறவிபால் அறம் கேட்டுணர்கின்றாள்; பல சமயத்தவரோடும் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகிறான், இது குண்டலகேசியின் வரலாறாகும். இன்பமும் புகமும் மனத்தூய்மையுடையவர்க்கே உரியன என்றும், புலடைக்கமே மெய்யான தவமென்றும், அவாலினை நுகர்ந்து அழிக்கலாம் என்பது எரியும் பெருந்தீயை நெய்யினால் அவிக்கலாம் என்பதனோடு ஒக்கும் என்றும், மாந்தர் நாளும் சாகும் இயல்பினர் என்றும், நாளென்னும் வாளின் வாயில் மாந்தர் தலை வைத்துள்ளனர் என்றும் இந்நூலாசிரியர் கூறும் செய்திகள் எண்ணத்தக்கனவாகும். எல்லாம் ஊழினாற்றலால் நிகழ்வனவாதலின் இழப்பின்போது வருந்தாதும், ஆக்கத்தின் போது பெரிதும் களியாதும் வாழ்தல் நன்று என்றும் அறிவுறுத்தியுள்ளார்.{{Right|<b>அ.த.</b>}} <b>குண்டலகேசி விருத்தம்</b> காண்க; குண்டலகேசி. <b>குண்டுகட் பாலியாதனார்</b>: சங்கத் தொகை நூல்களில் இடம்பெற்ற புலவர்களுள் இவரும் ஒருவர். ஆதன் என்பதுவே இவர்தம் இயற் பெயராதல் வேண்டும். ‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு, பெயரெற்றகரத் துவரக் கெடுமே’ எனத் தொல்காப்பியர் (தொல். எழுத். 348) இப்பெயரைச் கட்டியுள்ளார். ஆதன் அவினி, ஆதன்<noinclude></noinclude> 15vvuoc16po6flmejhqf1j4pww8d393