விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/3 250 345189 1930665 907320 2026-05-06T11:18:22Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ c 1930665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude> {{center|{{Xxx-larger|<b>விந்தன் இலக்கியத் தடம்</b>}} {{dhr|5em}} தொகுப்பாசிரியர்:<br> {{X-larger|<b>மு. பரமசிவம்</b>}} {{dhr|5em}} {{X-larger|<b>காவ்யா</b>}} }}<noinclude></noinclude> q70asshr4pbyjirfq76cy8xa6zeiixw பயனர்:TVA ARUN/common.js 2 417551 1930606 1930456 2026-05-06T06:08:13Z TVA ARUN 3777 001 1930606 javascript text/javascript //importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); importScript('பயனர்:Rtssathishkumar/SaduthiButtonInfo.js'); importScript('பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js'); g9uukjc71qg5qroppng6dmrtna3e47s பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/7 250 455517 1930522 1903177 2026-05-05T17:49:26Z Info-farmer 232 1930522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" />{{Rh|2| ஆருயிர் மருந்து| }}</noinclude>னும், தன் மகள் மணிமேகலையின் பொருட்டேனும் அவள் தன் துன்பம் ஆற்றியிருக்க வேண்டும் என அறிவுறுத்தினர் அயலவர். மாதவியும் ஆற்றியிருந்தாள். தன் சேயின் முகம் கண்டு ஒருவாறு வாட்டம் மறந்து, வாழ்ந்து வந்தாள் மாதவி. அவளது தாய் சித்திராபதி அவள் வருத்தம் மாற்றி, கோவலனை மறந்து, வேறு வகையில் வாழ வேண்டும் என்று வற்புறுத்தினாள். மாதவியின் மகள் மணிமேகலை தன் வயப்படுவாள் என எண்ணி மகிழ்ந்தாள் சித்திராபதி. என்றாலும் மாதவியின் மனமோ, எல்லாவற்றையும் கடந்து நின்றது. பிரிந்த கணவனை எண்ணி எண்ணி ஏங்கினாள்; வாழ்வில் வெறுப்புற்றவளாகித் துறவை விரும்பினாள். அதற்கேற்றாற் போன்று அன்று தமிழ் நாட்டில் பௌத்தம் தலைசிறந்து வாழ்ந்து வந்தது. அச்சமயத் துறவியாகிய அறவணவடிகள் அண்மையில் ஓரிடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்தாள் மாதவி. தான் கோவலனுடன் வாழ்ந்த வாழ்வினையும், அவன் பிரிந்த வரலாற்றினையும் கூறி, தான் பௌத்த தேவன் அடிபற்றி வாழ விரும்பிய வகையையும் சொன்னாள். அவள் வரலாற்றை கேட்ட அடிகள் உலக நிலையை நினைந்தார். மக்கள் பெறும் இன்ப துன்பங்களை எண்ணிப் பார்த்தார். அவற்றின் காரணங்களை ஆராய்ந்தார். ஆம், அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் பற்று என்பதை அறிந்தார். 'ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்' என்ற வள்ளுவரின் வாய்மொழியை எண்ணினார். மாதவியின் வருத்தத்துக்குக் காரணம், அவள் முன்னே கோவலன் மேல் அளவு கடந்த பற்றுக்<noinclude></noinclude> rhaq08qhc60jvx8e56d33r15kyeidfa அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1930496 1929826 2026-05-05T14:30:21Z Booradleyp1 1964 1930496 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] citwh5iahe6n0v5dya0ul6riacl75no பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/219 250 573685 1930485 1930372 2026-05-05T14:14:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 199}}</noinclude>விழாவை தமிழக அரசின் சார்பாக சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்து அவ்வாறு நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழாவினையொட்டி அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. அக்டோபர் முதல் நாள் மாலை காந்தி இல்லம் கண்காட்சி திறப்பு விழாவினை பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நான் நிறைவேற்றி வைத்தேன். அக்டோபர் 2-ஆம் நாள் காலை எட்டு மணி அளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார வண்டிகளின் பேரணி நடைபெற்றது. அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காந்தியடிகளின் நூற்றாண்டு விழா ஆளுநர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், திரு. சி. சுப்பிரமணியம். திரு. பி. ராமமூர்த்தி, திரு. எம். கல்யாணசுந்தரம், திரு. நல்லசிவம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., திருமதி. சௌந்திரம் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நாட்டின் மாபெரும் தலைவர்களைக் கழக அரசு பெருமைப்படுத்தத் தவறவில்லை என்பதற்கு இது போல் எண்ணிறந்த நிகழ்ச்சிகள் உண்டு! {{nop}}<noinclude></noinclude> gchmzxx65uu0wtzs7yg5v90av3zebyt பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/220 250 573686 1930486 1930376 2026-05-05T14:16:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>26</b>}} {{larger|<b>பஞ்சாப் பயணம்</b>}} {{X-larger|<b>“தொ</b>}}ழில்கள் தழைக்கட்டும், தொழிலாளர் செழிக்கட்டும் என்பதே கழக அரசின் முழக்கமாகும். தொழில் துறையில் அமைதி நிலவச் செய்வதற்குக் கருணாநிதி அரசில் முதலிடம் தரப்படுகிறது. இந்த முயற்சியின் வெற்றி, புள்ளி விவரத்தைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும். தொழில் துறையில் அமைதி நிலவினால்தான் புதிய தொழில்கள் துவங்கப்படும் என்பதை உணரும் ஆற்றல் படைத்தவராக அவர் இருந்ததால் மாநிலத்துக்குள்ளும், வெளியிலும் தொடர்பு கொண்டு புதுத் தொழில்களைத் தொடங்குகின்ற முயற்சியில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக தொழிலாளர் நலத்திற்கென்று ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தீரமுடனும், வருமுன் காக்கும் உணர்வுடனும் அச்சிக்கலைத் தமிழக அரசு தீர்த்தது. தமிழ்நாட்டின் முக்கியமான இரண்டு தொழில்கள் ஜவுளி ஆலைத் தொழிலும், தோட்டத் தொழிலும் ஆகும். அவ்விரு தொழில்களிலும் பெரிய வேலை நிறுத்தமோ நீண்ட கதவடைப்போ ஏற்படாமல் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உடன்பாடுகள் காணப்பட்டன. தொழில் உறவு முறையில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.” இவ்வாறு கழக அரசின் தொழில், தொழிலாளர் கொள்கை பற்றிப் பம்பாயிலிருந்து வெளிவரும் “எக்னாமிக் டைம்ஸ்” என்ற ஏடு 10-9-69 அன்று ஒரு கட்டுரை தீட்டியது. தொழில் துறையில் மாத்திரமல்லாமல் சாதாரண, சாமான்ய மக்களின் அன்றாடத் தேவைகள் பிரச்சினையிலும், அத்தியாவசியப் பிரச்சினையிலும் கழக அரசு உரிய முடிவுகளை விரைந்து எடுக்கத் தவறியதில்லை. 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு, செபடம்பர் மாதங்களில் தான் சென்னை நகரில் குடிநீருக்கான நெருக்கடி நிலை தோன்றியது. அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி<noinclude></noinclude> 459uf6pcrubprhe6zvg2dohsrbumua3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/221 250 573687 1930487 1930381 2026-05-05T14:17:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 201}}</noinclude>மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தருவதற்குச் சட்டசபையிலேயே ஒரு அறிக்கையினை வெளியிட்டேன். “சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பன்னிரண்டாயிரம் குழாய்க் கிணறுகள் இருபத்தைந்து இலட்சம் ரூபாய் செலவில் உடனடியாக அமைப்பதற்கு அரசு முடிவெடுத்திருக்கிறது” என்பதுதான் அந்த அறிக்கை. அதற்கேற்ப சென்னை நகரம் முழுவதும் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலை உடனடியாகத் தொடங்கியது. அது பற்றி “ஆனந்த விகடன்” ஏடு 14-9-69-இல் எழுதிய தலையங்கம் குறிப்பிடத்தக்கது. “புழலேரியிலும், சோழவரம் ஏரியிலும் நீர் வற்றிப் போய்விட்ட நிலையில், பம்புசெட்டு குழாய்க் கிணறுகளை தஞ்சம் அடைந்து தங்கள் தாகத்தைச் சிறிது தணித்துக் கொண்டனர் சென்னை மக்கள். இருப்பினும் இரண்டு மாதங்களுக்குள் மழை பொழியாமல் நிலைமை இப்படியே நீடித்தால் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு நகரவாசிகளை வெளியேற்ற வேண்டி வரலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர். கருமேகங்கள் கண்ணில் படாதா என்று மாநகராட்சினர் வேதனையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது முதலமைச்சர் கருணாநிதி துணிச்சலோடு செயலில் இறங்கினார். நேரத்தை வீணாக்காமல் இரண்டே வாரங்களில் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். மறு நாளிலிருந்து சென்னை நகர் வீதிகளிலும், சேரிகளிலும், சந்து பொந்துகளிலும் குழாய்க்கிணறுகள் அமைக்கும் வேலை அசுரவேகத்தில் நடைபெறத் தொடங்கியது. பத்து நாட்களுக்குள் எங்கு திரும்பினாலும் பம்புகளிலிருந்து தண்ணீர் கொட்டும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.” அந்தக் காலத்தில் யாரையும் எளிதில் புகழ்ந்து எழுதிட அவசரப்படாத ஆனந்தவிகடன் ஏடு கழக அரசின் இந்தச் சாதனையைப் புகழ்ந்து எழுதியது என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டினேன். நான் பொறுப்பேற்றுக் கொண்டபோது அறிவித்ததைப் போல அண்ணா அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகமெங்கும் அறுபதுக்கு மேற்பட்ட அண்ணாவின் சிலைகள் அந்த ஆண்டு செப்டம்பர் திங்கள்<noinclude></noinclude> qmrwf51axbr04a51vsuzptdrx1bxomz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/222 250 573688 1930488 1930389 2026-05-05T14:19:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|202 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>15-ஆம் நாள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடங்கின அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சீரணித் தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி பதினைந்தே நாட்களில் சென்னைக் கடற்கரையில் சீரணி மேடை ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவினை நான் நடத்தி வைத்தேன். பிறந்த நாள் விழாவையொட்டி அண்ணா அவர்களின் முழு உருவச் சிலை ஒன்று சேலம் நகரில் புதிய குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்களின் தலைமையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவிற்குக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தனது துணைவியாருடன் வந்திருந்தார். விழா ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜாராம், பெரியவர் ஜி. பி. சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். கிருஷ்ணன் ஆகியோர் முனைந்து கவனித்தனர். அந்த விழாவில் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்கள் தனது தலைமையுரையில் அண்ணா அவர்களின் அருமை பெருமைகளையும் அறிவாற்றலையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “கருணாநிதி கருணைக்கும் நிதிக்கும் கருவூலமாக விளங்குகிறார். அவரது கருணை வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. செயல் வடிவம் கொண்டது. தெற்கேயிருந்து கருணாநிதியும் அவரது தோழர்களும், அதைப்போல் வடக்கேயிருந்து குர்னாம்சிங்கும் அவரது தோழர்களும் நான் இந்தியக் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தார்கள் என்பதை நன்றியுணர்வோடு என்றைக்கும் நினைத்திடக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உருக்கத்துடனும் உணர்ச்சி ததும்பவும் வார்த்தைகளைக் கொட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்கள் என் பால் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். அஃதேபோல் நானும் அவரிடம் தனி அன்பு செலுத்தியவன். மாநிலங்கள் சுயாட்சி பெறவேண்டும் என்ற கொள்கையில் அவருக்கும் எனக்கும் ஒருமித்த கருத்து இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மோகன் குமாரமங்கலத்தையும், பாலதண்டாயுதத்தையும் பலி கொண்ட விமான விபத்து குர்னாம் சிங் அவர்களையும் நம்மிடமிருந்து பறித்துவிட்டது. அவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநில வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தலைசிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தார். {{nop}}<noinclude></noinclude> 5jn04xd7kak3d4gbnsf4vixhjzbydof பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/223 250 573689 1930489 1930394 2026-05-05T14:23:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 203}}</noinclude>இன்றைய பஞ்சாப் பல்வேறு தீர்வு காணப்படாத பிரச்சினைகளின் காரணமாக வன்முறைக் களமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றைய பஞ்சாப் அமைதியின் தொட்டிலாகக் காட்சி அளித்தது. அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர் குர்னாம்சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய எனக்கு அன்பழைப்பு விடுத்தார். முக்கியமாக சண்டிகர் நகரில் நடைபெற்ற குருநானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டதின் பேரில் நானும், பொதுப்பணி அமைச்சராக இருந்த சாதிக் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன், வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் 1969 நவம்பர் 26-ஆம் நாள் டெல்லி சென்று அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சண்டிகர் நகர் நோக்கிச் சென்றோம். சண்டிகருக்கு டெல்லியிலிருந்து இரவு நேரத்தில் கார் பயணம் செய்வது மிக இதமான ஒரு நிகழ்ச்சியாகும். காரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு இரவு 11 மணி அளவில் நல்ல பசியெடுத்தபோது சாலையோரத்தில் மினுக் மினுக்கென்று விளக்கு எரிந்துகொண்டிருந்த பழைய மண்டபம் – ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அருகே சென்றோம். சீக்கியர் உடையில் சாதுக் கோலம் பூண்டு அந்த மண்டபத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பேச முனைந்தோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி தனக்குத் தெரிந்த பஞ்சாப் மொழியில் அவரிடத்தில் இந்தப் பகுதியில் எங்கே உணவு கிடைக்கும் என்று கேட்டார். அந்த சாது எதுவும் பேசவில்லை. ஆனால் தன்னுடைய கையைத் தட்டி யாரையோ ஜாடையாகக் கூப்பிட்டார். அவரது பணியாளர் ஒருவர் ஓடி வந்தார். அவரிடத்தில் விரல் குறிப்பால் ஏதோ உணர்த்தினார். சில வினாடிகளில் எங்களுக்கு பசியாறத் தேவையான கோதுமை மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகள் வழங்கினர். அந்த ரொட்டிகளுக்கு சுவை சேர்க்க உருளைக் கிழங்கு குருமாவும் வைக்கப்பட்டது. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பணியாளரிடம் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினோம். பணியாளரைப் பார்த்து சாது தலையை ஆட்டினார். பணியாளர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு நன்றி<noinclude></noinclude> 5cqg9o7r2v9gnpdmtba10tjs38hku6z பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/224 250 573690 1930490 1930397 2026-05-05T14:24:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|204 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சொல்லிவிட்டு காரிலே ஏறிப் புறப்பட்டோம். பஞ்சாப்பில் பல இடங்களில் அது போன்ற சிறிய மண்டபங்களும் நடுத்தரமான குருத்துவாரங்களும் அமைந்து அவற்றில் இதுபோன்ற விருந்தோம்பல் நடைபெறுவது வாடிக்கை. அன்று இரவு சண்டிகரில் உள்ள பஞ்சாப் கவர்னர் மாளிகையில் நாங்கள் தங்கினோம். மறுநாள் அனந்தபூரிலுள்ள குரு கோவிந்ததாஸ் சிங் குருத்துவாராவிற்குச் சென்றோம். அதன் தலைமை மதகுரு, அனந்தபூர் நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர். குருத்துவாராவிற்குள்ளும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பக்ரா நங்கல் அணைக்குச் சென்று பார்வையிட்டோம். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினோம். பக்ரா நங்கல் உரத் தொழிற்சாலைக்குச் சென்றோம். அன்று மாலை சண்டிகர் தமிழ்ச் சங்கத் தலைவரும், உறுப்பினர்களும் எங்களைச் சந்தித்து அளவளாவினர். இரவு 7 மணி அளவில் குரு நானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டேன். குருநானக் சங்கீத் தர்பார் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு பஞ்சாப் உயர்நீதி மன்ற நீதிபதி ஹர்பான்சிங் தலைமை வகித்தார். முதலமைச்சர் குர்னாம்சிங் வரவேற்புரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் மக்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் உரையாற்றிய போது நான் குறிப்பிட்ட சில கருத்துக்களை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். “பஞ்சாப்புக்கும் தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன. எனக்கும் உங்கள் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மட்டும் நான் குறிப்பிடவில்லை சாதி, மத, மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்நாட்டில் வள்ளுவர் வழி நின்று அறிஞர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். பஞ்சாப்பிலும் குருநானக் வழி நின்று அதே கருத்தை முழங்கி வருகிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். பஞ்சாப் வீரன் பகவத் சிங்கும் தூக்குக் கயிறை முத்தமிட்டான். எங்கள் தமிழ்நாட்டில் வெள்ளையர்களின் கொலை வெறிக்கு ஆளான ஊமைத்துரை, பெரியமருது, சின்ன மருது ஆகியோரையும் சுகதேவ், ராஜ<noinclude></noinclude> 0a2ifrgng6qjpssdhy6hcmrjmd92snr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/225 250 573691 1930491 1930405 2026-05-05T14:26:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 205}}</noinclude>குரு ஆகியோரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். உடலெல்லாம் புல்லரிக்கிறது. அந்த வீரர்கள் ரத்தம் சிந்திய மண்ணை வணங்குகிறேன். அன்பையும், மனிதாபிமானத்தையும் கொன்று தின்கிறவன் ஆண்டவனை ஏப்பம்போல் வெளியே விட்டுவிடுகிறான். அன்பையும் மனிதாபிமானத்தையும் அள்ளி வழங்குகிறவன், ஆண்டவனையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கிறான். அவனே ஆண்டவன் ஆகிவிடுகிறான். இப்படி சுலபமாக ஆண்டவனாக வழி இருக்கும்போது அதைப் புறக்கணித்துவிட்டு மனிதர்கள் ஆண்டவனை எங்கேயோ தேடி அலைகிறார்கள். ஏழையின் சிரிப்பில்-குழந்தைகளின் மழலையில்-பாட்டாளியின் வியர்வையில்-பெண்ணின் கற்பில்-ஆடவனின் பண்பில்-விவேகியின் விழியில்-விஞ்ஞானியின் அறிவில்-ஆண்டவன் இருக்கிறான். அதை விட்டுவிட்டு குருட்டு மனிதன், இருட்டு அறையில், கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல் சிலர் கடவுளைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுளின் உண்மை விளக்கத்தை அளித்தவர்தான் குருநானக். {{left_margin|3em|<b><poem>எல்லா மதங்களும் ஒன்றே! எல்லா மனிதர்களும் ஒன்றே! உண்மை எல்லாவற்றுக்கும் மேலானது. ஆனால் அதற்கும் மேலானது ஒன்றுண்டு. அதுதான் உண்மையின் வழி வாழ்வது. இதைத்தான் குருநனாக் போதித்தார். ஒரே கடவுள், சமய சடங்குகள் வீணானவை. சாதி சமய வேறுபாடு கூடாது. இந்தக் கொள்கைகளைத்தான் அவர் முழங்கினார்.</poem></b>}} ஐநூறு ஆண்டுகளில் இயற்கையில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டாலும், குருநானக் போன்ற பெரியோர்களின் கீர்த்தியிலோ, பெயரிலோ எந்த மாறுதலும் இல்லை. <b><b><poem>குருநானக்கின் பெயர் சொல்லிப் பறவைகள் பாடுகின்றன. அந்தப் பாட்டைக் கேட்டு. மேகங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன.</poem></b> </b><noinclude></noinclude> egnq2oanx8r95bjai593alr8cl6d3uk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/226 250 573692 1930493 1930417 2026-05-05T14:28:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|206 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>{{left_margin|3em|<b><poem>நானக்கின் கீதம் காற்றிலே மிதக்கிறது. அந்தக் காற்று தமிழ்நாட்டைக் தழுவுகிறது. அந்தத் தழுவலிலே நான் என்னை மறக்கிறேன்”</poem></b> }} இவ்வாறு ஆங்கிலத்தில் அந்த விழாவில் நான் உரையாற்றினேன்” மறுநாள் பஞ்சாப்பில் உள்ள தொழில் நகரமான லூதியானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குள்ள விவசாயப் பல்கலைக் கழகத்தில் நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மனையியல் கல்லூரி கட்டிடம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தை நான் பார்வையிட்டதன் விளைவுதான் தமிழகத்தில் கோவையில் தொடங்கப்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று கூறினால் அது மிகையாகாது. லூதியானா நிகழ்ச்சி முடிவுற்று அமிர்தசரஸ் நகர் நகராட்சி வரவேற்பிற்குப் புறப்பட்டோம். எங்கள் வருகையையொட்டி அமிர்தசரஸ் நகரம் முழுவதும் மலர்ப் பந்தல்களாலும், வரவேற்பு வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகராட்சிமன்ற விழாவில் ஆயிரக்கணக்கான சீக்கிய பொது மக்கள், மதகுருமார்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து பதிலுரை ஆற்றினேன். அதன்பிறகு சீக்கிய தலைவர் சாந்த் பதேசிங் அவர்களோடு எங்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. “பஞ்சாப் பெரியார்” என அழைக்கப்பட்ட மாஸ்டர் தாராசிங் அவர்களுக்கு அடுத்து அந்தப் பெரும் பொறுப்பில் இருந்தவர் சாந்த் பதேசிங் அவர்கள் ஆவார்கள். அவர் இருப்பிடத்திற்கு நாங்கள் சென்றபோது வாயிற்புறத்தில் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான சீக்கிய மக்கள் அணிவகுத்து நின்று ஒவ்வொருவரும் எனக்கு மாலையணிவித்து அந்த மலர்மாலைகளுக்குள்ளேயே என்னை மறைத்துவிட்டனர். அந்த இனிய பாசம் பொழியும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு பதேசிங் அவர்கள் இருந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது அந்த முதியவர் ஆவலோடு எழுந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றார். சிறிது நேரம் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். {{nop}}<noinclude></noinclude> suncus04cui7dfmyfkhmlulisn2hi8p பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/227 250 573693 1930494 1930466 2026-05-05T14:29:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 207}}</noinclude>குருத்துவாரா கமிட்டியின் சார்பில் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே தரப்படும் வாள் ஒன்றை பதேசிங் அவர்கள் எனக்கு பரிசாக அளித்தார். அந்த பரிசளிப்பு நிகழ்ச்சி கண்டு குழுமியிருந்த சீக்கிய இளைஞர்களும், பெரியவர்களும் உணர்ச்சி வயப்பட்டு வாழ்த்து முழக்கங்கள் ஒலித்தனர். பின்னர் சீக்கியர்களின் புனித ஆலயமென போற்றப்படும் அமிர்தசரஸ் தங்கக்கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். அங்கும் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அன்று இரவு அமிர்தசரஸில் நடைபெற்ற குருநானக் விழா ஒன்றில் கலந்துகொண்டேன். அதையொட்டி குருநானக்கின் வாழ்க்கை வரலாறு பெரியதோர் மைதானத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய நிகழ்ச்சி அது. எங்களுடைய பஞ்சாப் பயணம் குறித்து லூதியானாவில் செய்தியாளர்கள் என்னைப் பேட்டி கண்டு பல கேள்விகளைக் கேட்டார்கள். “வருகையின் நோக்கம் என்ன” என்று அவர்கள் கேட்டபோது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பொருட்டு மாநில கட்சிகளுக்கிடையே ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டுமென்றும் நான் பஞ்சாப்புக்கு வந்திருப்பதை அந்த முயற்சிக்கான முதல்படியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினேன். மேலும் தொடர்ந்து “தி. மு. கழகம், அகாலி தளம் போன்ற கட்சிகள் அனைத்திந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும். மாநில கட்சிகளாக இயங்கி வரும் இவை மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன. அனைத்திந்திய அளவில் இத்தகைய கட்சிகள் தங்களுக்குள் ஒரு உடன்பாடு கொண்டு இயங்க முடியும். எனது பஞ்சாப் வருகையை அந்த முயற்சியின் முதல் கட்டமாகக் கருதலாம்” என்று பதிலளித்தேன். மறுநாள் ஜாலியன் வாலாபாக்கிற்குச் சென்றோம். பஞ்சாப் படுகொலையில் உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவுச் சின்னம் அங்கே இருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையையொட்டிய இதர வரலாற்றுச் சின்னங்களையும் பார்த்தோம். அந்தப் படுகொலையின்பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள் இன்னமும் அந்த வடுக்களைத் தாங்கி நிற்பதைக் கண்டபோது மெய் சிலிர்த்தது. {{nop}}<noinclude></noinclude> t3yd1qy0bj7n08n3igz8g2psf4uc7co பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/228 250 573694 1930495 1930469 2026-05-05T14:29:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>27</b>}} {{larger|<b>நற்பணியாற்றிய நான்கு குழுக்கள்</b>}} {{X-larger|<b>கா</b>}}ஷ்மீர் என்று நினைத்தவுடன் இயற்கையின் எழில்மிகு புன்னகையும், வான்தொடுமலைகளும், வண்ணப்படகுகளும் சுற்றுப் பயணிகளுக்குக் காட்சி தரக் கூடும். என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குக் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் நினைவே மேலோங்கும். மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி வேண்டுமென்ற குரலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தவராக அவர் விளங்கினார். காஷ்மீருக்குத் தனித்த அந்தஸ்து வேண்டுமென்பதற்காக அவர் வாழ்நாளில் பெரும் பகுதியைப் போராட்டத்தில் கழித்தார். போர்ப்புலியாகத் திகழ்ந்த அவர், பல ஆண்டுக் காலம் கைதியாக இருந்தபோது – அவற்றில் ஓரிரு ஆண்டுகள் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார். இறுதியாக இந்திய அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து, காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித்தபோது, பொறுப்பு ஏற்பதற்கு முன்பே என்னைச் சந்திக்க வேண்டுமென்று தகவல் கொடுத்தார். நானும் அவரது வருகையை விரும்பியேற்று உடனே பதில் அனுப்பினேன். குறிப்பிட்டபடி 1975 பிப்ரவரி 12-ஆம் நாள் அன்று சென்னைக்கு வந்து என் இல்லத்தில் காலை சிற்றுண்டி அருந்தினார். மாநில சுயாட்சி முழுமையான வெற்றி காணவும், மத்தியில் இருக்கும் அதிகாரக் குவிப்பு, குறைக்கப்படவும் இன்னும் நாம் பல துன்ப துயரங்களை ஏற்று தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது என அவர் உருக்கத்தோடு குறிப்பிட்டது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்தே இருக்கிறது. “நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு காஷ்மீர் மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் மாநில சுயாட்சிக் கொள்கையை விட்டு விட்டதாகக் கருத வேண்டாம்” என்ற உறுதிப்பாட்டை அறிவிப்பதற்காகவே என்னைச் சந்திக்க வந்ததாக அவர் சொன்னபோது அவரது கொள்கைப் பற்று தலைதூக்கி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது நான் இங்கு ஆட்சியில் இருந்தேன். அவர் 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது நான் எதிர்க்கட்சித்<noinclude></noinclude> h86v37tmqblygkvgjzwn4pzz2msqpvh பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/229 250 573695 1930640 1709764 2026-05-06T10:18:26Z ஹர்ஷியா பேகம் 15001 1930640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 209}}</noinclude>தலைவராகச் சட்டப் பேரவையில் வீற்றிருந்தேன். அவரது மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தில் நான் பேசியபோது “தமிழகத்தில் ஷேக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் கோகினூர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா நினைவு மாளிகை எனப் பெயரிட வேண்டு” மென வலியுறுத்திக் குறிப்பிட்டேன். இன்று அவரது மகன் பரூக் அப்துல்லா காஷ்மீரத்து முதலமைச்சர்! அவர் தந்தையின் வழி நின்று மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்கிறார். அதற்கென அவரே முன்னின்று காஷ்மீர் - ஸ்ரீநகரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தேன். திடீரென ஏற்பட்ட உடல் நலிவின் காரணமாக - எனது பயணம் ரத்து செய்யப்பட்டு, கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் சாதிக் அவர்களும், நாடாளுமன்ற மக்களவைக் கழகக் குழுத்தலைவர் சி. டி. தண்டபாணி அவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். காஷ்மீரில் - ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மத்திய - மாநில உறவு பற்றிய கருத்துக்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. மத்தியிலே கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாதென்று - மத்தியில் உள்ள அதிகாரங்கள் எவையெவை மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்; எவையெவை நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற விரிவான விபரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக 1969-ல் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களையும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரா ரெட்டி அவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு கழக அரசினால் அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் முரசொலி மாறன், இரா. செழியன் குழுவினர் கருத்துக்களையும் இணைத்து - அதன் பின்னர் அரசின் சார்பில் அமைச்சரவையில் விவாதித்து 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. {{nop}}<noinclude> நெ.—14</noinclude> mnc1580wfeoc0xle1xin942hp84d282 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/230 250 573696 1930643 1709765 2026-05-06T10:26:51Z ஹர்ஷியா பேகம் 15001 1930643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|210 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மத்திய - மாநில உறவுகள் எப்படி அமைந்திட வேண்டும் என விவாதித்து, மாநில சுயாட்சிக்கான ஆக்கபூர்வமான தீர்மானமொன்றை இந்தியாவிலேயே முதன் முதலாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தி. மு. கழக ஆட்சிக்கே உரியது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறப்பு மிக்க தீர்மானத்தை முன் மொழிந்த போது, “மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும் இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்று பணிவன்புடன் கோருகிறேன்” என, நான் விடுத்த அந்த வேண்டுகோள் வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் பெங்களூரிலும், காஷ்மீரிலும் நடைபெற்ற மாநாடுகள் அமைந்தன. தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974-ஆம் ஆண்டுக்கும் - பெங்களூர், காஷ்மீர் நகரங்களில் மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திடும் மாநாடுகள் நடைபெற்றுள்ள 1983-ஆம் ஆண்டுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன என்றாலும்; மத்தியில் அளவுக்குமீறி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு மாநிலங்கள் சுயாட்சி பெற்று மத்தியில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு உருவாக வேண்டுமென்ற முனைப்பான கருத்து பட்டுப் போய் விடவில்லை! மத்திய அரசு பலமுள்ளதாக இருக்கவேண்டும் என்ற பலவீனமான வாதத்தை வைத்துக் கொண்டே மாநிலங்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிட முடியாது! மாநிலங்கள் வலுவுள்ளவைகளாக இருந்தால் மட்டுமே மத்திய அரசும் வலுவுள்ளதாக இருந்திட இயலும்! இதுவரையில் எல்லையற்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் இந்தச் சுதந்திர இந்தியாவில் மத்தியப் பேரரசு பணக்காரர்களுக்கான சொர்க்கத்தையும், ஏழைகளின் நாகத்தையும் உலகத்திற்குக் காட்சியாக்கியதைத் தவிர உருப்படியாகச் செய்தது என்ன? {{nop}}<noinclude></noinclude> tf25gu960izuz6fkc40ftwax0p135u4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/231 250 573697 1930668 1709766 2026-05-06T11:39:48Z ஹர்ஷியா பேகம் 15001 1930668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 211}}</noinclude>இந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலாகத்தான்; மக்களைக் காப்பாற்ற மாநிலங்களுக்கு அதிகாரமும், மண்ணைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அதிகாரமும் தேவையான அளவுக்குப் பகிர்ந்திடப்படுமானால், வளமான மாநிலங்களும் வலுவான மத்திய அரசும் உருவாக வழியேற்படும் என்ற கருத்து அரசியல் அரங்கில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், அதன் அடிப்படையில் தமிழக தி. மு. கழக அரசு நிறைவேற்றிய தீர்மான விபரங்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் வடிவங் கொண்டு வெளிவந்திருந்தன. அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டே பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஹெக்டே (ஜனதா கட்சி) அவர்கள் கூட்டிய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் (1983-ல்) மத்திய-மாநில உறவுகள் பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அடுத்து காஷ்மீர் முதல்வர் பரூக் அவர்கள் கூட்டிய மாநாட்டில் ஆந்திர முதல்வர் ராமராவ் அவர்களும், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களும், மாநில சுயாட்சிக் கருத்துக்கு ஒத்துவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும், தி. மு. கழக அரசின் தீர்மானக் கருத்துரைகளையும் வெகுவாகப் பாராட்டினர் என்று; அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்த கழகப் பிரதிநிதிகள் நண்பர் சாதிக் பாட்சாவும், நண்பர் தண்டபாணியும் என்னிடம் தெரிவித்து மகிழ்ந்தனர். 1974-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் வந்தபோது எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் ராஜமன்னார் குழு அறிக்கையை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர் என்பது என் நினைவுக்கு வந்தது. மாநில சுயாட்சி தத்துவம் தேவையான ஒன்று என திட்டவட்டமாகத் தெரிவித்த அண்ணா அவர்களின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், “ராஜமன்னார் குழுவின் இந்த அறிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல-பள்ளி மாணவன்கூடப் பயன்படுத்த இதில் எவ்வித கருத்துமில்லை-இது, குப்பைக் கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை” என்று அவையிலேயே இழித்துரைத்தனர். {{nop}}<noinclude></noinclude> 0ndeociqixnci3yra3ud7eyq7ge5rql பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/232 250 573698 1930674 1709767 2026-05-06T11:50:37Z ஹர்ஷியா பேகம் 15001 1930674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|212 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இன்றைக்கு அந்த அறிக்கையில் அரசியல் சட்டத்தின் இன்ன பிரிவைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனத் தேடிப் பார்த்துத் தெளிவு பெறுகிற அளவுக்கு அரசியல் மேதைகள் ஆர்வங் காட்டுகிறார்கள் என்கிறபோது, அந்த அரிய பணிக்கு வித்திட்டவன் என்ற முறையில் மகிழ்ச்சியில் திளைப்பது இயற்கைதானே! 1969-ல் ராஜமன்னார் குழு மட்டுமல்லாமல் அரசின் சார்பில் வேறு குழுக்களும் வெவ்வேறு பணிகளுக்காக அமைக்கப்பட்டன. தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஏழு லட்சத்தை எட்டிப் பிடிக்கும் எண்ணிக்கை கொண்ட அரசு அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தமிழகக் காவல்துறையினருக்கு வீர விருதுகள், பண முடிப்புகள், பதக்கங்கள் அளிக்கப்படுமென்றும் அறிவித்ததோடு இந்தியாவிலேயே முதன் முதலாக “காவல் துறை கமிஷன்” ஒன்றையும் நியமிப்பதாக அறிவித்தேன். அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரியான ஆர். ஏ.கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சாமிநாதன், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என். கிருஷ்ணசாமி, சிலம்புச்செல்வர் ம. பொ. சி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும், கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பரிசீலித்து மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்காகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்றும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஏ. என். சட்ட நாதன் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளான சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர்! அரசு அலுவலர் இரண்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு எடுத்த முடிவுகளை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டினர். அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையை ஊதியக் குழு ஏற்று, அதனை அரசும் அறிவித்தது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, அலுவலர் ஊதிய உயர்வு<noinclude></noinclude> efaca4y0tm8sliwjda5tybg18bqzhd3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/233 250 573699 1930676 1709768 2026-05-06T11:56:32Z ஹர்ஷியா பேகம் 15001 1930676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 213}}</noinclude>பெற்றனர். அரசு அலுவலர்களின் பல்லாண்டு கால வேண்டுகோளாக இருந்து வந்த ரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்ததையொட்டி தந்தை பெரியார் தலைமையில் அரசு அலுவலர்கள் எனக்கு ஒரு சிறப்பான பாராட்டு விழாவே நடத்தினர். இந்தியாவிலேயே முதன் முதலாக; பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால் உடனடியாக அவர்கள் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் உதவி நிதி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. காவல்துறைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று முதல்நிலைக் காவலர் தகுதியில் ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக வேலை தரப்பட்டது. 1967-ல் காவலர்களின் ஊதியம் 129 ரூபாயாக இருந்தது 165 ரூபாயாகவும், தலைமைக் காவலர்களுக்கு 166 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு 140 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், இன்ஸ்பெக்டர்களுக்கு 225 ரூபாயிலிருந்து 425 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இவையன்னியில் பெரும்பாலான பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்; அவர்களுக்கு அரசுப்பணிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் 25 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியும் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 18 சதவிகிதமாக உயர்த்தியும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுப்பி வந்த உருது பேசும் முஸ்லீம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும், கொங்கு வேளாளரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கழக ஆட்சிக் காலத்திலே தான்! {{nop}}<noinclude></noinclude> gi81xr7sd7wruspop4o3p01o7p4s05o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/560 250 621499 1930567 1866414 2026-05-06T04:03:54Z Booradleyp1 1964 1930567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அயல்நாட்டு உதவி|524|அயல்நாட்டுக் கடன்}}</noinclude>{| |காலம் || || கட்டுப்பாடற்ற<br>கடன்<br>(உரூபாய் கோடியில்) || || மொத்த உதவியில்<br>கட்டுப்பாடற்ற<br>கடனின் அளவு<br>(விழுக்காட்டில்) || ||<br>கொடைகள்<br>(உரூபாய் கோடியில்) || || மொத்த உதவியில்<br>கொடைகளின்<br>அளவு<br>(விழுக்காட்டில்) |- |3–ஆம் ஐந்தாண்டுத்திட்டம் வரை || || 1761.6 || || 39.1 || || 336.9 || || 7.5 |- |1966—67 || || 183.1 || || 16.2 || || 97.1 || || 8.9 |- |1970—71 || || 160.6 || || 20.3 || || 43.5 || || 5.5 |- |1975—76 || || 854.8 || || 46.5 || || 283.3 || || 15.4 |- |1977—78 || || 288.4 || || 22.4 || || 260.6 || || 20.2 |- |1978—79 || || 306.2 || || 24.2 || || 273.4 || || 21.6 |- |1979—80 || || 291.3 || || 21.3 || || 304.5 || || 22.3 |- |1980—81 || || 376.5 || || 17.4 || || 396.4 || || 18.3 |} கொண்டே செல்லும். இதனால், சில வேளைகளில் கடனை வட்டியும் முதலுமாகச் சேர்த்து அடைப்பதற்கு அயல்நாட்டு உதவியையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால், பொருளாதார வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட கடன், கடனை அடைப்பதற்காகவே பயன்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது; நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இவ்வாறு அயல்நாட்டுக் கடனைப் பெறுவதிலும் அதனைப் பயன்படுத்துவதிலும் சில சிக்கல்களும் இடையூறுகளும் உண்டாகின்றன.{{float_right|டி.கா}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Benjamin lliggins.,</b> “Economic Development, Principles, Problems and Policies”, University Press, Allahabad, 1959. <b>Taneja, M.L., & Chopra, P.N.,</b> “Economics of Development and Planning” (With Special reference to India), S. Neigin & Co., Jullender, 1980. <b>Alak Ghosh.,</b> “Indian Economy Its Nature and Problem”, East End Printers, Calcutta, 1957. <b>Agarwal, A.N.,</b> “Indian Economy, Problems of Development and Planning”, Vikas Publishing House, New Delhi, 1975. <b>இராக்னர் நர்க்சு,</b> (தமிழாக்கம் மா. குமாரசுவாமி), “வளர்ச்சி குறைந்த நாடுகளின் முதலாக்கம் பற்றிய சிக்கல்கள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1974. {{larger|<b>அயல்நாட்டுக் கடன்:</b>}} பன்னாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கும் எளிய நாடுகளுக்கும் கடன் அளிக்கின்றன. இவ்வகையில் ஓர் அரசு வெளிநாட்டில் உள்ள தனியார்கள், அரசுகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து பெறும் கடன்கள் அயல்நாட்டுக் கடன்களாகும் (Foreign Debts). ஆனால், இப்போது தனியாரிடமிருந்து கடன் பெறுவது மிகுதியாகக் குறைந்து விட்டது. மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்யவும் அயற் செலாவணிச் சிக்கலைத் தீர்க்கவும் வெளிநாட்டு அரசுகளிடமிருந்து ஒப்பத்தங்களின் அடிப்படையில் அரசு கடன் பெறுகிறது. பன்னாட்டு மறு அமைப்பு வளர்ச்சி வங்கி (International Bank for Reconstruction and Development), பன்னாட்டுப் பணவாக்க நிதி (International Monetary Fund), பன்னாட்டு வளர்ச்சிச் சங்கம் (International Development Association) போன்ற உலக நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கடன் வழங்குகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான எந்திரங்கள், மூலப் பொருள்கள், தொழில்நுட்பம் போன்றவற்றை இறக்குமதி செய்ய அயற் செலாவணி தேவைப்படும். அயல்நாட்டுக் கடன் அயற் செலாவணித் தேவையை நிறைவு செய்கிறது. ஆனால், இக்கடனே பின்னர்ப் பெரும் பளுவாவதால் பல சிக்கல்கள் தோன்றலாம். கடன் வழங்கும் நாட்டிலிருந்து மிகுதியான விலைக்குப் பொருள்களை இறக்குமதி செய்யும்படியும் நேரலாம். அரசியல் உள்நோக்கத்தோடு அயல்நாட்டுக் கடன் வழங்கப்பட-<noinclude></noinclude> dfyuvt8nx861fsv1ri7bgwtfux4lhzr பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/19 250 625563 1930594 1875336 2026-05-06T05:14:35Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" />{{Rvh|18 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>-கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கமாகக் கூறியுள்ளார். {{left_margin|3em|<poem>அமைச்சர், புரோகிதர், சேனா பதியர் தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர் பார்த்திபர்க்கு ஐம்பெரும் குழுவெனப் படுமே </poem>}} என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும். அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாபதியர்கள், தூதுவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் ஐம்பெருங் குழுவினர் ஆவர். ஆட்சியை நடத்துவதற்கு வழிகாட்டுகிறவர்கள்- ஆட்சியை நடத்துகின்றவர்கள் - அமைச்சர் ஆவர். காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவோர், இன்ன காலத்திலே இன்ன செயல்களைச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவோர். பருவ காலங்களையும், அவற்றின் இயல்புகளையும் எண்ணிக் கூறுவோர் புரோகிதர் என்று அழைக்கப்பட்டனர். சேனாபதியர், படைத் தலைவர்கள், உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கும், வெளிநாடுகளுடன் ஒத்த உறவு கொண்டிருப்பதற்கும் துணையாக இருப்பவர்கள் படைத்தலைவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏதேனும் மாறுபாடு தோன்றினால். அதை மாற்றுவதற்குத் தூதுவர்கள் வேண்டும். நல்ல அரசியல் நுட்பமும், சொல் வன்மையும் உள்ளவர்களே தூதுவர்கள். வெளிநாட்டு உறவு வலுப்பட இத்தகைய தூதுவர்கள் இன்றியமையாதவர்கள். சாரணர்கள் என்பவர்கள் ஒற்றர்கள்: இரகசியப் போலீசார் போன்றவர்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்திற்கு அறிவிப்பவர்கள். அரசன் எக்காரியத்தைச் செய்வதாயினும் மேற்-<noinclude></noinclude> c2olem6y2szf9szz7ewln8w6flzsgop 1930595 1930594 2026-05-06T05:15:03Z TVA ARUN 3777 c 1930595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" />{{Rvh|18 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>-கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கமாகக் கூறியுள்ளார். {{left_margin|3em|<poem>அமைச்சர், புரோகிதர், சேனா பதியர் தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர் பார்த்திபர்க்கு ஐம்பெரும் குழுவெனப் படுமே </poem>}} என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும். அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாபதியர்கள், தூதுவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் ஐம்பெருங் குழுவினர் ஆவர். ஆட்சியை நடத்துவதற்கு வழிகாட்டுகிறவர்கள்- ஆட்சியை நடத்துகின்றவர்கள் - அமைச்சர் ஆவர். காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவோர், இன்ன காலத்திலே இன்ன செயல்களைச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவோர். பருவ காலங்களையும், அவற்றின் இயல்புகளையும் எண்ணிக் கூறுவோர் புரோகிதர் என்று அழைக்கப்பட்டனர். சேனாபதியர், படைத் தலைவர்கள், உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கும், வெளிநாடுகளுடன் ஒத்த உறவு கொண்டிருப்பதற்கும் துணையாக இருப்பவர்கள் படைத்தலைவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏதேனும் மாறுபாடு தோன்றினால். அதை மாற்றுவதற்குத் தூதுவர்கள் வேண்டும். நல்ல அரசியல் நுட்பமும், சொல் வன்மையும் உள்ளவர்களே தூதுவர்கள். வெளிநாட்டு உறவு வலுப்பட இத்தகைய தூதுவர்கள் இன்றியமையாதவர்கள். சாரணர்கள் என்பவர்கள் ஒற்றர்கள்: இரகசியப் போலீசார் போன்றவர்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்திற்கு அறிவிப்பவர்கள். அரசன் எக்காரியத்தைச் செய்வதாயினும் மேற்-<noinclude></noinclude> iakg9c9lf61we1c5fqzegllvmn6zxov பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/20 250 625564 1930601 1875337 2026-05-06T05:24:24Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" />{{Rvh|19 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>காட்டிய ஐவரையும் கலந்தே செய்யவேண்டும். இதற்காகவே இந்த ஐம்பெரும் குழு ஏற்பட்டது. <b>எண்பேராயம்</b> {{left_margin|3em|<poem>கரணத்து இயலவர், கரும காரர், கனகச் சுற்றம், கடைகாப் பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர், இனையர், எண்பே ராயம் என்ப</poem>}} என்பது அடியார்க்கு நல்லார் காட்டும் எண் வகையினரைக் கொண்ட பெரிய அவையாகும். தொழிலாளர்கள், அவர்களுடைய தலைவர்கள் இவர்களுக்குக் கரணத்தியலவர் என்று பெயர். அரசாங்க அலுவல்களைச் செய்துவருவோர், அவர்களுடைய தலைவர்கள், இவர்களுக்குக் கருமகாரர் என்று பெயர். அரசாங்கத்தின் செல்வத்தைப் பாதுகாப்போர் கனகச் சுற்றமாவர்: இவர்கள் நிதித்துறை உத்தியோகஸ்தர்கள். கனகம் - பொன். கடை காப்பாளர் என்பவர்கள். அரண்மனையையும், ஏனைய அரசாங்க அலுவல் இடங்களையும் காத்து நிற்போர்; போலீஸ் இலாகா போன்ற துறையினர். நகர மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நகர மாந்தர் ஆவர். சேனைத் தலைவர்களுக்குப் படைத்தலைவர்கள் என்று பெயர். யானையின்மேல் ஏறி ஊர்ந்து போர்செய்யும் வீரர்களுக்கு யானை வீரர் என்று பெயர். குதிரையின் மீதேறிச் செலுத்திப் போர்புரியும் வீரர்களுக்கு இவுளி மறவர் என்று பெயர்.<noinclude></noinclude> k3l6zducykskrzxcbv7139aubl7jf57 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/21 250 625565 1930602 1875338 2026-05-06T05:25:54Z TVA ARUN 3777 c & t 1930602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|20 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> மேலே கூறிய தொழிலாளர், அரசாங்க அலுவலர். நிதி காப்போர், காவல்காரர்கள், நகர மக்கள். படைத் தலைவர், யாளைவீரர், குதிரைவீரர் இவ்வெண்மரும் எண்பேராயம் என்று அழைக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு என்பது சிறிய சபை. அரசனுடைய நிர்வாக சபை : அதாவது செயற்குழுவாகும். மந்திரி சபை என்றும் கூறலாம். எண்பேர் ஆயம் என்பது பொதுமக்கள் சபையாகும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கரையுள்ள அனைவருடைய பிரதிநிதிகளும் எண்பேர் ஆயம் என்னும் சபையில் உறுப் பினராயிருந்தனர். இந்த எண்பேர் ஆயம் என்னும் சபை யிலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புள்ள ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களின் பிரதிநிதி களும் இருந்தனர். மக்களும், ஆட்சியினரும் சேர்ந்தே காட்டை ஆண்டனர் என்று இதனால் தெரிகின்றது. ஐம்பெரும் குழு. எண்பேராயம் இவைகளின் ஆலோ சனையின்படி நடைபெறும் அரசு சிறந்த அரசாகத்தான் இருக்கும். அந்த அரசாங்கத்தின் தலைவன். ஆளப்பிறந்த அரச குலத்தைச் சேர்ந்தவனாகவிருந்தாலும் அவன் தன் விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது. மக்களின் கருத்தறிந்துதான் ஆட்சி நடத்த முடியும். <b>வளர்ச்சிக்கு வழிகாட்டியது</b> இன்று மன்னர் ஆட்சிக்கு இடமில்லை ; மக்கள் ஆட்சிக் குத்தான் இடம் உண்டு: இந்நாட்டு மக்கள் அனைவருமே மன்னர்கள்' என்று கருதுகின்ற காலம் இது. பண்டைத் தமிழர்களின் அரசியல் கருத்தும் வளர்ச்சி யும், இன்றைய மக்களாட்சிக்கு வழிகாட்டியது :இன்றைய மக்களாட்சியை நோக்கி வளர்ந்து வந்திருக்கின்றது. இது வரலாறு கண்ட உண்மை. வளர்ச்சிதான் மனித சமுதாயத் இன் உயிர் நாடி. வளர்ச்சியில்லாத சமுதாயம் வாழ் முடியாது. இதற்குப் பழந்தமிழர் வரலாறு ஆதரவளிக் கின் ன்றது.<noinclude></noinclude> 9m4za91fc5hcgb9upkdtrutq1oqcfo3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261 250 639257 1930483 1926142 2026-05-05T12:26:52Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude> கல்கத்தா 289.26 சென்னை 63.09 பாங்குகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ‘டிபாசிட்டு’ பணத்தின் அளவு, பம்பாயில் 442-கோடி ரூபாய்; வளம் கொழித்திடும் விதமாகத் தொழில் அமைச்சர் வெங்கடராமனால் ஆக்கப்பட்டிருக்கிறதாமே தமிழகம், அங்கு பாங்குகளில் உள்ள டிபாசிட்டுத் தொகை 63-கோடி. ::<b>442<br>63!</b> இடத்தின் இயல்பு ஒருபுறம் இருக்கட்டும், பிடி எவரிடம் என்பதைக் கவனிப்போம். தம்பி! எல்லா பாங்குகளிலும் சேர்ந்துள்ள ‘டிபாசிட்’ தொகை, 1960-ம் ஆண்டுக் கணக்குப்படி 1550-கோடி ரூபாய். இந்தத் தொகையில் ஐந்தே ஐந்து பாங்குகளில் மட்டும் 625-கோடி ரூபாய்! மிச்சத் தொகை நாட்டிலே உள்ள எல்லா பாங்குகளிலும்! இந்த ஐந்து பாங்குகள் எவை? 1. சென்ட்ரல் பாங்க் 2. பாங்க் ஆப் இந்தியா 3. யுனைடெட் கமர்ஷியல் பாங்க் 4. பரோடா பாங்க் 5. பஞ்சாப் நாஷனல் பாங்க் பெயர்கள் இருக்கட்டும், நாட்டிலே திரட்டப்படும் டிபாசிட் தொகையில் கிட்டத்தட்ட பாதி—625-கோடி ரூபாயைக் கைவசம் வைத்துக் கொண்டு, அதன்மூலம் தொழில் உலகில் பிடியை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த ஐந்து பாங்குகளின் அதிபர்கள் யார்? சென்டிரல் பாங்க், பாங்க் ஆப் இந்தியா இவை இரண்டும் டாடாவின் கரத்தில்! யுனைடெட் கமர்ஷியல் பாங்க் பரோடா பாங்க் இவை இரண்டும் பிர்லாவின் ஆட்சியில்!<noinclude> <references/></noinclude> te9yut0bm6ki8p7qcao8eabymlsvatp பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/188 250 641211 1930524 1926129 2026-05-05T18:01:43Z Ramya sugumar 15106 1930524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|கடிதம்||179}}</noinclude>பிள்ளை பேரன், பேத்தி, வரப்போகிற சந்ததி அனைத்துக்கும் சேர்த்து வைத்து விட்டுப் போக வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது! அதனால் அவனை எந்தத் தொல்லையிலும் இழுத்து விடாதே! இதயம்:- அவன் சந்ததியை எல்லோரும் வாழ்த்த வேண்டாமா? புகழ வேண்டாமா? வயிறு:- அதை, அவனிருந்து பார்த்துக்கொண்டாயிருக்கப் போகிறான்? இதயம்:- இப்படி எண்ணியிருந்தால் திலகர், காந்தி, நேரு முதல் திருப்பூர் குமரன் வரையில் நிலைத்துவிட்ட பெயர்கள் நாட்டில் இருக்க முடியாதே! வயிறு:- பைத்தியக்கார இதயமே! பெயரும் புகழும் சாப்பாடு போடுமா? சந்தோஷம் கொடுக்குமா? தேனாபிஷேகத்தை விட்டு விட்டு எவனாவது தீ மிதிக்கப் போவானா? இதயம்:- அப்படியானால், மனிதனை ஒரு யந்திரம்போல் இயங்கச் சொல்கிறாய்; யாருக்காகவும் உருக வேண்டாம் என்கிறாய் என்கிறாய் எதற்காகவும் கவலைப் படவேண்டாம இல்லையா? வயிறு:- இருக்கும் வரையில் இன்பமாக வாழச்சொல்கிறேன். மனிதன் நனக்காகவே கவலைப்பட வேண்டுமென்கிறேன். உடன்பிறப்பே, இந்த விவாதத்தில் வயிறுகள் ஜெயிப்பதும் உண்டு இதயங்கள் ஜெயிப்பதும் உண்டு! அதிகமாக வயிறுகள் தான் ஜெயிக்கின்றன என்பது கவிஞரின் கவலை. நான்கூட<noinclude></noinclude> hz2afhzao1kympr1i4smh7gfv38b4v6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/151 250 641279 1930581 1926264 2026-05-06T05:03:54Z Mohanraj20 15516 1930581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>வேண்டுகோளாகக் கருதிக்கொள்ளாமல் உடனடியாக ஆங்காங்கு தொண்டினைத் தொடங்கித் தொடர்ந்து நடத்திடுவாய் என்பதும் எனக்குத் தெரியும். {{left_margin|3em|<poem>ஃ அரசு அதிகாரிகளுடன் உடனிருந்து ஒத்து ழைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு ஆவன செய்தல். ஃ எங்கெங்கே மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை உரியவர்களிடத்திலே எடுத்துரைத்தல். ஃ அமைப்புக்களின் சார்பாக முடிந்த அளவு உணவு தயாரித்து இயன்ற அளவுக்கு ஏழை எளியோர்க்கு வழங்குதல்.</poem>}} இப்படிப் பல்வேறு இன்றியமையாத நற்பணிகளை ஆற்றிட நமது கழக உடன்பிறப்புக்கள் முன்வந்திட வேண்டும். இப்போது அந்தப் பணிகளில் சலியாது ஈடுபட்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் தொடரட்டும் துயர்துடைப்புப் பணி; என்று கேட்டுக்கொள்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 27—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 0e8vnrdmvqbb2rahxqujfwcrfdogn78 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/152 250 641280 1930582 1929470 2026-05-06T05:03:59Z Mohanraj20 15516 1930582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழ்த்திக் கொண்டே வளருவோம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> ::<b>அர்ச்சனை தொடருகிறது.</b> ::<b>அபிஷேகம் நடந்துகொண்டே இருக்கிறது.</b> ::<b>ஆராதனை நிற்கவில்லை.</b> என்ன சொல்லுகிறேன்; யாரைப் பற்றிச் சொல்லுகிறேன் என்று கேட்கிறாயா? நடிகர் கட்சி நண்பர்கள் சிலர் நம்மீது நடத்தும் அக்கினிச் சொல் அர்ச்சனைகளையும், அவதூறு அபிஷேகங்களையும், ஆபாச மொழி ஆராதனைகளையும் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். ஏன் அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் நமக்குப் புரியாமல் இல்லை. அவர்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிற உடைப்பு விளைவித்துள்ள வேதனைகளால் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள் பாவம்! அவர்களால் “பிரிவினைவாதிகள்” என்று குற்றம் சாட்டப்பெற்று விலக்கப்பட்டவர்களைப் பற்றி ஏதாவது பேசினாலோ, எழுதினாலோ, அதற்குச் சுடச் சுடப் பதில் அவர்கள் பாணியிலேயே கிடைக்கிறது. அந்த எதிரொலியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நம்மீது பாய்ச்சலைத் தொடருகிறார்கள். {{nop}}<noinclude></noinclude> 059xvz8badtgpmzma0llgu4vyl3bwbp பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/153 250 641281 1930583 1929421 2026-05-06T05:04:05Z Mohanraj20 15516 1930583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|140||கலைஞர்}}</noinclude>ஃ கட்சியின் சட்டதிட்டங்கள் பொதுக் குழுவில் அறிவித்தது ஒன்றாகவும், ஏடுகளில் வந்தது வேறொன்றாகவும் இருக்கிறதே; என்ன காரணம்? ஃ அண்ணா வழியில் நடப்பதாகச் சொல்லிக் கொண்டு “அனைத்து இந்தியா” என்ற அடை மொழியை முன் கூட்டியே பத்திரிகையில் பல நாட்கள் வெளியிட்டு விட்டு; அதற்குப் பிறகு பொதுக் குழுவைக் கூட்டி அனைத்து இந்தியக் கட்சி என்று ஒப்புக் கொள்ளச் சொல்கிறீர்களே; து என்ன ஜனநாயக முறை? ஃ பல செயலாளர்கள் மாநில அளவில் விலகிய பிறகு, இருக்கிற செயலாளர்களைக் கூட்டி, பொதுச் செயலாளராக எம். ஜி. ராமச் சந்திரனை மீண்டும் தேர்ந்தெடுத்ததாக ஏடு களில் செய்தி வெளியிடுகிறீர்களே; இது எந்தக் கட்சியிலும் இல்லாத முறையாக இருக்கிறதே! பொதுக்குழு அல்லவா பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? கட்சியின் பதினேழுலட்சம் உறுப்பினர்களும் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள் எனச் சொன்னீர்களே; அது என்னவாயிற்று? ஃ கணக்கு கேட்பதில் புலியெனப் பெயர் எடுத்தவரே! உமது கட்சியின் பதினேழு லட்சம் உறுப்பினர்கள் செலுத்திய சந்தாத் தொகை எந்த வங்கியில் இருக்கிறது? கணக்கு எங்கே? ஃ தேர்தல் நிதி — என்று பத்திரிகையில் வெளியிட்டு, முதல் நாள் வரை வந்த நிதியையும்<noinclude></noinclude> j379a85oscu3iem231strm7s5vnqgsz பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/154 250 641282 1930584 1926267 2026-05-06T05:04:11Z Mohanraj20 15516 1930584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||141}}</noinclude>குறிப்பிடாமல், ஒவ்வொரு நாளும் மொத்தம் கட்டிக் கூட்டிப் போடாமலும் பிரசுரிப்பதின் மர்மம் என்ன? ஃ கப்யூனிசம், சோஷலிசம், கேப்டலிசம் மூன்றும் சேர்ந்ததே அண்ணாயிசம் என்று விளக்கமளித்தீர்களே; அந்த விளக்கம், கட்சியின் சட்ட திட்டத்தில் இடம் பெறாத காரணமென்ன? ஃ இன்றைய இந்திய மக்கள் அனைவரும் திராவிடர்கள் தான் என்று அறிவித்தீரே; அந்தப் புதிய ஆராய்ச்சிப் புத்தகம் எப்போது வெளிவரப் போகிறது? ஃ கட்சிக்கு வருபவர்களை நீதிபதி விசாரணைக் குழு மூலம் விசாரித்து வடிக்கட்டிய பிறகு தான் கட்சியில் சேர்ப்பதாக அறிக்கை விடுத்தீரே; அந்த அறிக்கைக்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி என்ன ஆனார்? ஃ அந்த நீதிபதியிடம் எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்? திண்டுக் கல் வைரம் புகழ் ஜோதிமஸ்தான் திலகம் மதுரையாரின் நில புலங்கள், வீடுகள், பங்க ளாக்கள் பற்றியெல்லாம் விசாரணை முடிந்து தான் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டீர்களா? ஃ 1973 – ல் அடிக்கல் நாட்டப்பெற்று அண்ணா மேம்பாலத்தருகே பெரியார் சிலை அமைக்கப் பீடம் கட்டினீர்களே; சிலை ஏன் மூன்று ஆண்டுகள் முடிந்தும் வைக்கவில்லை? {{nop}}<noinclude></noinclude> 79xzcahvppm7ojq9onc68h426wfjoja பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/155 250 641283 1930585 1926268 2026-05-06T05:04:18Z Mohanraj20 15516 1930585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|142||கலைஞர்}}</noinclude>{{left_margin|3em|<poem>ஃ அண்ணாவின் உண்மையான தம்பிகள் கட்சிக்குக் கட்டுப்பட்டு பச்சை குத்திக் கொள்ளவேண்டும் என்று ஆணை பிறப்பித்து விட்டு — இப்போது அது கட்டாயமில்லை என்று அறிவித்திருக்கிறீரே; எது கட்டாய மில்லை? அண்ணாவின் உண்மையான தம்பியாக இருப்பதா? ஃ தி. மு. க. என்னைத் தூக்கி எறிந்து விட்டதும் என்று அலறிக்கொண்டிருந்த வராகிய நீர், புதிய கட்சி தொடங்கிய பிறகு இந்த நாலைந்து ஆண்டுகளில் பெட்டிச் செய்தி வெளியிட்டு தூக்கியெறிந்தவர்களின் எண்ணிக்கை ஏட்டில் அடங்குமா? எழுத்தில் கொள்ளுமா?</poem>}} இப்படிப்பட்ட கேள்விகளை நாமல்ல; நடிகர் கட்சியிலிருந்து அண்மையில் விலக்கப்பட்டவர்களும் விலகியவர்களும் சரமாரியாகத் தொடுத்தனர். அதற்குப் பதில் அளிக்க முடியாதவர்கள் — பயந்து பல்லைக்காட்டி நிற்பவர்கள் — நம்மீது நாராச மொழிகளை அள்ளி வீசுகின்றனர். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை நாடு, நன்கு உணர்ந்தே இருக்கிறது. {{left_margin|3em|<poem>நன்றாக அவர்கள் வசை பாடட்டும்! நாவலிக்கத் திட்டித் தீர்க்கட்டும்!</poem>}} “வாழ்க வசைவாளர்கள்” என்று அண்ணா அவர்கள் வாழ்த்தியது போலவே நாமும் அவர்களை வாழ்த்து வோம்! பல கட்டங்களைச் சந்தித்து வளர்ந்து வரும் நமது இயக்கம் இன்று ஏறுநடைச்சிங்கமென எதையும் தாங்கும் தயத்துடன் உலாவந்துகொண்டிருக்கிறது. {{left_margin|3em|<poem>வசைமாரி பொழிவோர், தங்கள் பணியை நிறுத்தாமல் நடத்தட்டும்!</poem>}} நாம் அவர்களை வாழ்த்திக் கொண்டே வளருவோம். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 31—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> fxzj8qvoq37ly9beh6lj164teasemv2 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/156 250 641284 1930587 1929479 2026-05-06T05:06:58Z Mohanraj20 15516 1930587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>நன்னாளை எதிர்நோக்குவோம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> இன்று காலை ஏடுகளில் ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. பினாமி சொத்துக்களும், பினாமி பேரங்களும் பரவலாக இருப்பதை ஒடுக்குவதற்காக மத்திய அரசின் சட்ட அமைச்சகம், ஒரு மசோதாவைத் தயாரித்து வருகிறது. இந்தப் பினாமி ஒழிப்புச் சட்டம் கடுமையானதாக இருக்குமென்றும் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் வரக்கூடுமென்றும் தெரிகிறது. பினாமி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதானது. நகர்ப்புற உச்சவரம் புச் சட்டங்களை அமலாக்கவும் வரிகளை நன்கு வசூலிக்கவும் உதவுவதோடு விவசாய சொத்து உச்சவரம்புச் சட்டங்களையும் நன்கு நடைமுறைப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மேற்குவங்கமும், தமிழ்நாடும் கணிசமான அக்கறையைக் காட்டியுள்ளன என்பது தான் நான் படித்த செய்தியின் சுவைக்குக் காரணமாகும். “நிலங்களில் மட்டுமல்ல வீடு, மனை போன்ற பல்வகை சொத்துடைமைகளிலேகூட இருக்கிற பினாமி முறைகளுக்கு ஒரு முடிவுகட்ட, மத்திய அரசு—தனது கவனத்தைத் திருப்பவேண்டும் என்பது நமது முறையீடாகும்” என்று நான் உனக்கு எழுதிய கடிதங்களில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நமது கழகம் இந்தக் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறது, {{nop}}<noinclude></noinclude> q98ea0tjw37rg0589nwn4g9fu83bf8b பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/157 250 641285 1930591 1930306 2026-05-06T05:10:20Z Mohanraj20 15516 1930591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|144||கலைஞர்}}</noinclude>நில உச்சவரம்பு, நகர்ப்புற உச்சவரம்பு போன்ற சட்டங்கள் எதிர்பார்த்திடும் அளவுக்கு வெற்றிகரமாக அமைய முடியாமல் இந்த பினாமிமுறைதான் குறுக்கே நின்று கொண்டிருக்கிறது. பினாமி ஒழிப்புச் சட்டம் ஒன்று விரைவில் நிறைவேற இருக்கிறது என்று ஆறு மாதங்களுக்கு முன்பு செய்திகள் அறிவிக்கப்பட்டபோதே சட்டம் கொண்டுவரும் அந்த நல்ல நோக்கத்தை வரவேற்று நமது கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். இப்போது அடுத்த கூட்டத் தொடரிலேயே அந்தச் சட்டம் வரப்போகிறது என்பது சமதர்ம நோக்குடை யோர்களுக்குத் தெம்பூட்டும் தகவலாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலச் சீர் திருத்தம், பல கட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று சட்டம் கொண்டுவரப்பட்ட போது முன் எச்சரிக்கையாகப் பலபேர் தங்கள் நிலங்களைப் பல பெயர்களில் பிரித்து வைத்துக்கொண்டார்கள். அந்தச் சட்டம் வந்தபோது கரும்பு சாகுபடி, மேய்ச்சல் நிலங்களுக்கு விதி விலக்குகள் அளிக்கப்பட்டது. அந்த விதிவிலக்குகளில் புகுந்து கொண்டு தங்கள் நிலங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள், பினாமி தாரர்களைப் பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்தது போலப் பத்திரங்களை எழுதிப் பதிவு செய்து கொண்டு உரிமையைப் பினாமிகளின் பெயரில் வைத்துக்கொண்டு பயனைத் தாங்கள் வளமாக அனுபவித்துக்கொண்டு சட்டத் திலிருந்து தப்பித்துக் கொண்டனர். தஞ்சை மாவட்டத்திலே மட்டுமே 1959 ஆம் ஆண்டு 138 நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்த மொத்த<noinclude></noinclude> o9rvyushot4y1gz8nvik22204m87rgo பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/158 250 641286 1930593 1930305 2026-05-06T05:13:19Z Mohanraj20 15516 1930593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||145}}</noinclude>நிலம் 48,924 ஏக்கர்கள். ஆனால் 1960 ஆம் ஆண்டு உச்ச வரம்பு சட்டப்படி அரசுக்கு அந்த 138 பிரபுக்களிடமும் இருந்து கிடைத்த உபரி நிலம் 6624 ஏக்கர்கள் தான்! எனவே பினாமிமுறை எந்த அளவுக்கு அந்த உச்சவரம்பு சட்டத்தைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு நிலக்கிழார், தன்னுடைய வீட்டில் உள்ள கிருஷ்ணன் படத்து பூஜைக்கு என்று பெருமளவு நிலத்தை டிரஸ்ட் எழுதி வைத்துவிட்டு அதன் பயனைத் தானே அனுபவித்துக்கொண்டார். இந்தக் காரணங்களால் 1960 ஆம் ஆண்டு உச்சவரம்பு சட்டப்படி அரசுக்கு உபரியாகக் கிடைத்த நிலம் 16, 350 ஏக்கர்களாக மட்டுமே இருந்தது. 1970ஆம் ஆண்டு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கர் என்பதை பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கர் எனக்குறைத்து உச்சவரம்பை நிர்ணயித்தும், கரும்பு, மேய்ச்சல் நிலங்களுக்கு இருந்த விதிவிலக்குகளை ரத்து செய்தும் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, மாணவர் விடுதி, அனாதை இல்லங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்காமல் அந்த அறக்கட்டளைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உச்சவரம்பு நிலங்களை அனுமதித்தும் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு அரசுக்குக் கிடைத்த உபரி நிலம் 1975 ஆம் ஆண்டு கணச்கின்படி 1, 08 068 ஏக்கர்களாகும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்த நிலச் சீர்திருத்த சட்ட ஆய்வுக் குழுவினர் தமிழ்நாட்டில் உச்ச வரம்பு சட்டம் நல்ல முறையில் பலன் அளித்து பெரும் பான்மையோருக்கு உபரி நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன எனப்பாராட்டி ஒரு அறிக்கையே கூட அப்போது வெளியிட்டிருக்கிறார்கள். {{nop}}<noinclude>க—9—10</noinclude> esv3r72xo1m51xfb66si8x0jtdy5q3r பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/159 250 641287 1930598 1926272 2026-05-06T05:18:11Z Mohanraj20 15516 1930598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|146||கலைஞர்}}</noinclude>படிப்படியாக செய்யப்பட்டுள்ள இந்த நில உச்ச வரம்புச்சட்டத்தின் முழுப்பயனையும் பெறவேண்டுமென்றாலும், இன்னும் அதிகமான உபரி நிலங்களை அரசு எடுத்து நிலமற்றோருக்கு வழங்கவேண்டுமென்றாலும், அதற்குத் தடைக்கல்லாக இருக்கிற பினாமி முறையைத் தகர்த்து எறிந்தாக வேண்டும். பினாமிகளின் பெயரால் உள்ள நிலமானாலும் வேறு சொத்துக்களானாலும் அதை அவர்களுக்கே உரிமையாக்கி விடவேண்டும் என்ற அடிப்படையில்கூட சட்டத்தை உருவாக்கப் போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு யூகங்கள் கூறப்பட்டன. இப்போதே பல விவகாரங்களில் பினாமிகளின் பெயரால்தான் நிலங்களோ வேறு உடைமைகளோ இருக்கின்றன. ஆனால் அதன் பயன்கள் அவர்களுக்குக் கிடைகாமல் தனியார் சிலர்தான் மறைமுகமாகத் தங்களைக் கொழுக்க வைத்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு தந்திரமான ஏற்பாடு நிலவி வருகிறது. இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதை மத்திய அரசு ஆழ்ந்து சிந்தித்து சட்டத்தைத் தயாரிக்கிறது என்ற செய்தி, மகிழ்வூட்டத் தக்கதாகும். விரைவில் அந்தச் சட்டம் உருப்பெற்று நடை முறைக்கு வரும் நன்னாளை எதிர்நோக்குவோமாக! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 1—12—79</b>}}}} {{nop}}<noinclude></noinclude> nrzvwspy1bqvzmakbsgu4k7aocn0eio பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/160 250 641288 1930600 1926273 2026-05-06T05:20:10Z Mohanraj20 15516 1930600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பெருநாள் வாழ்த்துக்கள்</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிற இஸ்லாமியப் பெருமக்கள் இத்திங்கள் இரண்டாம் நாளன்று பக்ரீத் பண்டிகையினைக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியச் சகோதரர்களோடு இரண்டறக் கலந்து பாசமும் பற்றும் குறையா இதயங்களின் பிணைப்போடு வாழ்ந்து வருகிற இயக்கத்தின் சார்பில் இந்தத் திருநாளில் நமது வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று நினைத்து இன்று வழங்குகிற வாழ்த்துக்கள் அல்ல இவை! நீண்ட நெடுங்காலமாக அவர்களுக்கும் நமக்கும் இந்த உறவு இருந்து வருகிறது. “அவர்களுக்கும் நமக்கும்” என்று தனித்தனியாகக் குறிப்பிடுவது கூடத் தவறானதாகும். “நாம்” என்பதில் அவர்களும் அடங்குகிறார்கள். இஸ்லாமியர்களுக்கென அமைந்துள்ள நீதி முறைகள், கடமைகள் — அதைப்போலவே மற்ற மதங்களில் எடுத்துக்கூறப்படும் நீதிமுறைகள், கடமைகள் — ஆகியவற்றுக் கிடையே சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் வாழ்க்கை நெறியைப் பொறுத்தமட்டில் அடிப்படை முரண்பாடுகள் எதுவுமில்லை. {{nop}}<noinclude></noinclude> 8podtzn2zce2b8c2ooh2dtiomrzmkn7 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/162 250 641290 1930588 1926276 2026-05-06T05:07:14Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/164 250 641292 1930590 1926278 2026-05-06T05:07:48Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/165 250 641293 1930592 1926280 2026-05-06T05:10:40Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1930592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/58 250 641686 1930527 1928961 2026-05-05T18:11:59Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம் : 106 ஜனநாயகச் சர்வாதிகாரி மேனாட்டுச் சர்வாதிகாரிகள்- ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு- திராவிட நாடு. தம்பி! ‘சர்வாதிகார ஆட்சி’ என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாயமின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்பதாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலையினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை! இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது? ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே,<noinclude></noinclude> nl7jzlwieony2evsv04vpzx1rgywhgl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59 250 641687 1930529 1928962 2026-05-05T18:14:15Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude>தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டு விடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறும்போது, தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டு விடுகிறது-என்ன தலைக்கனம் இவனுக்கு எல்லாம் தெரியுமாம் இவனுக்கு -ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன் போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ!! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!!-என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது. அவன் வீரன்!-என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி. அவன் அறிவாளி!-என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது. அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப்பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்!-என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது. ‘எல்லாம் செய்திடுபவன்’ எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடுவதிலே, எதெது கேடு தருமோ, எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு, கேடு பல செய்து, ‘இது ஆகுமோ’ என்று கேட்டிடின், “யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!” என்று கொக்கரித்துக் கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறி விட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது?-என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும். அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா? சர்வாதிகாரம்-என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது. சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர். நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கி வைத்து<noinclude></noinclude> qqv0n8gisuqdlta7zpmsgvbn04ri4ah பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/60 250 641688 1930530 1928963 2026-05-05T18:16:59Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|36||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விட்டு, ‘எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும். ஆபத்தைப் போக்க’ என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், ‘இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!’ ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம். ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரிகளாகிவிட்ட <b>பிரான்கோவும், சலாசடும்</b> என்றென்றும் சர்வாதிகார முறை தான் இருந்திட வேண்டும் என்று, அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திட வேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விட்டனர். சர்வாதிகாரம்-ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும். வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெறும்வெற்றி, புதிய சமுதாய அமைப்பு. தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி என்பன போன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும். ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது-மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி எது வேதனை? எது முற்போக்கு. எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக் காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக் கிடந்திட வேண்டியவராகின்றனர். இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது. இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், ‘ஆம்’ என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, ‘கசப்பு’ தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர். அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன. இருபத்துநான்கு மணிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் பேச்சாளர்- ரேடியோ-பத்திரிகை-கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன. தொடர்ந்து திறமையுடன் இந்தமுறை கையாளப்பட்டு வந்ததால், மக்கள், எதைப்பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக் கூடப் பெற்றுவிட்டனர். தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும் தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!<noinclude></noinclude> owxed0fmxqqdv2hxyvy75lg95rn2w4c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/61 250 641689 1930531 1928964 2026-05-05T18:18:54Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||37}}{{rule}}</noinclude> தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு. ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழிஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன்போன்றோர் இருக்கவேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூறவேண்டும். இரு கருத்துக்களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும்-எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும். கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாதாகிறது. சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்து விடுகிறது. சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம், சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும். உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மையைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம். சர்வாதிகாரிகளுக்கு. எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கவேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாதவனாக்கிடத் தக்கதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடுகின்றனர். கொடுமைபுரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டுவிடுகிறது. தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு. சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை-எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு. எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் ‘முறை’யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு. முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார். “என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்<noinclude></noinclude> i77antwdru5puf4hlh8yp5n1v94dhjm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62 250 641690 1930533 1928965 2026-05-05T18:20:44Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|38||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே,” என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன். ‘இரண்டாமவர்’ என்றேனே, அப்படிப்பட்ட ‘சர்வாதிகாரி’யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா. வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது. பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை! சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார். அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர். மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர். நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார். நீதி : கைதியைக் கொண்டுவா.. (போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி) போலீ : அங்ஙனமே, பெருந்தகையே! (போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்) (நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.) (தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி. ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.<noinclude></noinclude> 80ebpmze1wurgfzfikxagc8u6zzfksr 1930551 1930533 2026-05-05T19:08:49Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|38||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே,” என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன். ‘இரண்டாமவர்’ என்றேனே, அப்படிப்பட்ட ‘சர்வாதிகாரி’யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா. வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது. பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை! சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார். அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர். மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர். நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார். {{dialogue indented |நீதி : |கைதியைக் கொண்டுவா.. (போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி) |போலீ : |அங்ஙனமே, பெருந்தகையே! (போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்) (நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.) (தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி. ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது. }}<noinclude></noinclude> mxu62cn48khlnjnx4p4jrmb51dlsrjd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63 250 641691 1930534 1928966 2026-05-05T18:23:01Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில். அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார். குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் ‘சக்தி’ டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!) நீதிபதி (பணிவாக ) : ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில். (டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.) (கவனித்தாயா. தம்பி! ‘வழக்கை விசாரிக்கிறேன்’. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.) குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார். குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன். ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார். தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude> s64qxecnw8elyzkijfkgt8s4ldde83q 1930552 1930534 2026-05-05T19:10:54Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude> அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில். அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார். குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் ‘சக்தி’ டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!) {{dialogue indented |நீதிபதி |: (பணிவாக) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில். (டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.) (கவனித்தாயா. தம்பி! ‘வழக்கை விசாரிக்கிறேன்’. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.) குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார். குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன். ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார். தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.}}<noinclude></noinclude> ld5siqqiwtjyc60jwdlwow2waj7jr48 1930553 1930552 2026-05-05T19:11:42Z Fathima Shaila 6101 1930553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில். அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார். குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் ‘சக்தி’ டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!) {{dialogue indented |நீதிபதி |: (பணிவாக) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில்.}} (டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.) (கவனித்தாயா. தம்பி! ‘வழக்கை விசாரிக்கிறேன்’. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.) குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார். குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன். ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார். தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude> h34w1u6652iysbm1lnb2n1ahhb9jxq5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64 250 641692 1930535 1928967 2026-05-05T18:26:56Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|40||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வரப்படுபவன் கொல்லப்பட வேண்டியவன்- என்பதை, டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார். (அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!) (பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.) குறிப் : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன். நீதி : சரி. பேசலாம். குறி : வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். (பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!) (போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.) போலீ : பெருந்தகையே! இதோ, கைதி. நீதி : இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா? போலீ : ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. நீதி : கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...? போலீ : ஆமாம்...ஆனால்... நீதி : ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!<noinclude></noinclude> ggjqzlddox0n8nkicyn1rr5uouwpcw3 1930554 1930535 2026-05-05T19:14:00Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|40||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வரப்படுபவன் கொல்லப்பட வேண்டியவன்- என்பதை, டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார். (அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!) (பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.) {{dialogue indented |குறிப் : |பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன். |நீதி : |சரி. பேசலாம். |குறி : |வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். }} (பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!) (போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.) {{dialogue indented |போலீ : |பெருந்தகையே! இதோ, கைதி. |நீதி : |இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா? |போலீ : |ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. |நீதி : |கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...? |போலீ : |ஆமாம்...ஆனால்... |நீதி : |ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!}}<noinclude></noinclude> n7dzavnu5x81ctuy83wnvgrq46dwg1n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65 250 641693 1930536 1928968 2026-05-05T18:29:52Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude> போலீ : கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன. நீதி : கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்! (நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர். பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர். ஏதேது, இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார். ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன். குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான். நடுத்தர வயதினன் - எந்தக்கேடும் செய்திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.) நீதி : குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா? போலீ : ஆமாம்.... நீதி : எப்போது நடத்தினீர்கள், சோதனை? போலீ : தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்! நீதி : ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா? போலீ : தேடினோம்-கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!! (போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude> lt667fk1lfascagx9zx2emyddjie2fd 1930555 1930536 2026-05-05T19:16:37Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>{{dialogue indented |போலீ : |கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன. |நீதி : |கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!}} (நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர். பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர். ஏதேது, இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார். ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன். குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான். நடுத்தர வயதினன் - எந்தக்கேடும் செய்திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.) {{dialogue indented |நீதி : |குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா? |போலீ : |ஆமாம்.... |நீதி : |எப்போது நடத்தினீர்கள், சோதனை? |போலீ : |தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்! |நீதி : |ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா? |போலீ : |தேடினோம்-கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!!}} (போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude> izmnxgfnwntuemyj08h833hkaqs56c9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/66 250 641694 1930537 1928969 2026-05-05T18:34:27Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> (குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.) குறி : (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது. நீதிபதி : வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்.... தொடுப் : பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நீதி : குற்றம் கொடியதே! அறியாதார் யார்? தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ? நீதி : இவன் செய்த குற்றம்? தொடுப்: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்! (நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.) நீதி : சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன். தொடுப் : எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு, வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது! நீதி : அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்! தொடுப்: அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான். நீதி : கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்<noinclude></noinclude> rakbwco7yso7c3ckj37uo19z0ztypjv 1930556 1930537 2026-05-05T19:19:09Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> (குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.) {{dialogue indented |குறி |: (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது. |நீதிபதி |: வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்.... |தொடுப் : |பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். |நீதி : |குற்றம் கொடியதே! அறியாதார் யார்? |தொடுப் |: சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ? |நீதி |: இவன் செய்த குற்றம்? |தொடுப் |: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!}} (நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.) {{dialogue indented |நீதி : |சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன். |தொடுப் : |எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு, வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது! |நீதி : |அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்! |தொடுப்: |அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான். |நீதி : |கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்}}<noinclude></noinclude> 6r9hdx9mtgy6pri8f5eilhykihd6j4c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67 250 641695 1930538 1928970 2026-05-05T18:38:53Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? கைதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். நீதி : நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்? கைதி : சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.<noinclude></noinclude> f016cuzbinxr4fqwstk1lbkxfsqqtim 1930557 1930538 2026-05-05T19:20:34Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>{{dialogue indented | |அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? |கைதி : |குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். |நீதி : |நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்? |கைதி : |சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.}}<noinclude></noinclude> inuv3gt587mb5tbhtq8ikk6mcr4gdr1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68 250 641696 1930539 1928971 2026-05-05T18:42:06Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|44||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தொடுப்: நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, துரோகம் செய்கிறாய்? கைதி : மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப்பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன். தொடுப்: சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு. கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்? தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம். கைதி : : நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...? நீதி : குழப்பமோ இவனுக்கு மனதில்... கைதி : : ஆமாம்...குழப்பம்... நீதி : ஏன் ஏற்படுகிறது? கைதி :: தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்... நீதி : யார் அவன்? தேவதையோ? கைதி : தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று. நீதி : குட்டிப் பிசாசா...? கைதி : ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது. நீதி :உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?<noinclude></noinclude> nmlh353q1tcrk9zek8ss9wfkls3vxik 1930558 1930539 2026-05-05T19:23:28Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|44||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented |தொடுப்: |நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, துரோகம் செய்கிறாய்? |கைதி : |மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப்பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன். |தொடுப் : |சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு. |கைதி : |கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்? |தொடுப் : |எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம். |கைதி : |நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...? |நீதி : |குழப்பமோ இவனுக்கு மனதில்... |கைதி : |ஆமாம்...குழப்பம்... |நீதி : |ஏன் ஏற்படுகிறது? |கைதி : |தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்... |நீதி : |யார் அவன்? தேவதையோ? |கைதி : |தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று. |நீதி : |குட்டிப் பிசாசா...? |கைதி : |ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது. |நீதி : |உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?}}<noinclude></noinclude> skfwdk4hvc6spwnv8synhimmpgsrw6f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69 250 641697 1930540 1928972 2026-05-05T18:44:46Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude> கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? (சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.) (தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர். நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர். நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.) நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா? தொடுப் : மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்! நீதி : சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்... (நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.) நீதி : குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!<noinclude></noinclude> huau1vkv4mbrmvj2fhzdgpg52fs7gqr 1930559 1930540 2026-05-05T19:24:59Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>{{dialogue indented |கைதி : |எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்?}} (சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.) (தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர். நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர். நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.) {{dialogue indented |நீதிபதி : |வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா? |தொடுப் : |மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்! |நீதி : |சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்... (நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.) |நீதி : |குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!}}<noinclude></noinclude> h560lohrwz96333m5yhokkoyl7yej6x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70 250 641698 1930541 1928973 2026-05-05T18:48:16Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள். (கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.) தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக... நீதி : செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே! தொடுப் : முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... நீதி : அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது. (மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.) தொடுப்: செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா? மருத் : பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான். நீதி : மூளை கெட்டுவிட்டிருந்ததோ? மருத் : ஆமாம்.. நீதி : மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ? மருத் : ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. நீதி : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்<noinclude></noinclude> e1c532qmvn5gq2vsuocsi419sz6tjdw 1930560 1930541 2026-05-05T19:27:03Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented | |குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள். (கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.) |தொடுப் : |பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக... |நீதி : | செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே! |தொடுப் : |முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... |நீதி : |அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது. (மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.) |தொடுப்: |செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா? |மருத் : |பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான். |நீதி : |மூளை கெட்டுவிட்டிருந்ததோ? |மருத் : |ஆமாம்.. |நீதி : |மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ? |மருத் : |ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. |நீதி : |அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்}}<noinclude></noinclude> 6qnkmcfj5edi48gdje29wv5ijywj8w4 1930561 1930560 2026-05-05T19:27:23Z Fathima Shaila 6101 1930561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented | |குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள். (கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.) |தொடுப் : |பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக... |நீதி : | செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே! |தொடுப் : |முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... |நீதி : |அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது. (மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.) |தொடுப்: |செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா? |மருத் : |பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான். |நீதி : |மூளை கெட்டுவிட்டிருந்ததோ? |மருத் : |ஆமாம்.. |நீதி : |மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ? |மருத் : |ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. |நீதி : |அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்}}<noinclude></noinclude> 0vqu7pcxpde9kcwzprqvj3goli15rsy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/71 250 641699 1930542 1928974 2026-05-05T18:51:06Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude> மருத் : ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடுப்: அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ? மருத் : ஒருக்காலும், நோய் போகாது. தொடுப்: நோயின் குறிகள் யாவை? மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை. தொடுத்: கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? மருத் : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு. நீதி : அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? மருத் : ஐயமென்ன!! ஐயமென்ன!! (குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.) நீதி : (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ? மரு : பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.<noinclude></noinclude> kvjljdf9r4ftvreqif1mclzxl9vcchs 1930562 1930542 2026-05-05T19:29:08Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude>{{dialogue indented |மருத் : |ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. |தொடுப்: |அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ? |மருத் : |ஒருக்காலும், நோய் போகாது. |தொடுப்: |நோயின் குறிகள் யாவை? |மருத் : |கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை. |தொடுத்: |கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? |மருத் : |அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு. |நீதி : |அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? |மருத் : |ஐயமென்ன!! ஐயமென்ன!! (குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.) |நீதி : |(கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ? |மரு : |பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.}}<noinclude></noinclude> bk3gtokiuobvgd6m4xkzj2xsrtnf0jo 1930563 1930562 2026-05-05T19:29:27Z Fathima Shaila 6101 1930563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude>{{dialogue indented |மருத் : |ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. |தொடுப்: |அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ? |மருத் : |ஒருக்காலும், நோய் போகாது. |தொடுப்: |நோயின் குறிகள் யாவை? |மருத் : |கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை. |தொடுத்: |கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? |மருத் : |அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு. |நீதி : |அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? |மருத் : |ஐயமென்ன!! ஐயமென்ன!! (குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.) |நீதி : |(கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ? |மரு : |பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.}}<noinclude></noinclude> 9vt04pdtspmbtb8wtfrlt3u31jm0wh7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/72 250 641700 1930543 1928975 2026-05-05T18:53:45Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|48||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நீதி : கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ? மரு : இருக்கும். நீதி : அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே! மரு : ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப்பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும். நீதி : நோயை நீக்க, வழியே இல்லையா ? மரு : இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது! நீதி: என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர். மரு : உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது! தம்பி மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது. சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங்கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும். சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார். அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude> 5kv096g9c7784xistxsnuu0s6le2tu8 1930564 1930543 2026-05-05T19:30:59Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|48||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented |நீதி : |கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ? |மரு : |இருக்கும். |நீதி : |அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே! |மரு : |ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப்பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும். |நீதி : |நோயை நீக்க, வழியே இல்லையா ? |மரு : |இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது! |நீதி: |என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர். |மரு : |உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!}} தம்பி மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது. சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங்கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும். சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார். அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude> sf08dttpsdre2xpodi3duzt4niy9mm5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/73 250 641701 1930544 1928976 2026-05-05T18:55:55Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude>பறிகொடுக்க மறுத்த காரணத்தால்-அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான்-அவனன்றோ ஆண் மகன்-அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும்-இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர், என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார். பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!! வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன்-போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன்-தாங்களோ, ஓர் கோமாளி! பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை!- என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார். சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை!-என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன். பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப்புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான்-குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான்-கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்! இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு! நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது. ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! 'மேலவர்' பேசுகிறார்- நீதிபதி பதறுகிறார். “நச்சுப்பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!” என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.<noinclude></noinclude> m46wrqc7iokd0z50v60e36hrvgz9a99 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/74 250 641702 1930545 1928977 2026-05-05T18:57:18Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|50||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை" நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள். குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப் பிசாசு! நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு! "இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும்பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன். "இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன். ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன். எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன். நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன். நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!! தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்குவார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப்பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது. கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.<noinclude></noinclude> pfpow3c8e09w8dkebm0uz1vqpx00lwb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75 250 641703 1930546 1928978 2026-05-05T18:59:29Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude> ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தாராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர், குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!" என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர். "நாங்கள் மட்டும் நினைத்திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம்" என்று கொக்கரிக்கிறார்கள். இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை. எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும்-பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா? சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான்-நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசுகிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக! சர்வாதிகாரி, பேச்சுரிமை பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான்-காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ. பேச்சுரிமை தந்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சி யினரும் நாசகாரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி.மு. கழகத்தவர், 'அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும்பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அயிசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சிபெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார். கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச்<noinclude></noinclude> picf1i1ta0uxg9ei4nlnzlvs8kc1p8j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76 250 641704 1930547 1928979 2026-05-05T19:01:17Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|52||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு. காங்கிரஸ் அரசியலில்! இவருடைய 'அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சர் ஆக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு! திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றார் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத்தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை! இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!! நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறை தவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு. "ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக்காகப் பெற்றதாக எண்ணுகிறார்களோ!!"- என்று எக்காளமிடுகின்றனர். தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் 'ஏனோ தானோ’ அல்ல! பிறந்தது செல்வக்குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத் துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக் கூடம் போனதே இல்லை, என்று கூறிக்கொண்டு. பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு 'அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே, அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார்புகழும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர். உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, 'ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது: அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப்போர் நடாத்த முனைந்தார். கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப்படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.<noinclude></noinclude> ejfyiw5nrl8o5lv3hfzjo6md6dd01ib பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77 250 641705 1930548 1928980 2026-05-05T19:02:46Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude> அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான்-1931-ல், கமால் பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார். பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்துவந்தார். 1950-லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது. மிகப் பெரிய தேக்கங்கள், அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளரவேண்டும், பொருளாதாரம் பலப்படவேண்டும் என்பதற்காக. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளுமன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது! அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும், என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்துபேச வேண்டும் என்ற அக்கரை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தார். ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள்- வருவாய் குறைவு; மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை!-என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்துகிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார். அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன்-அவனை அடியோடு அழித்து விடுவேன்- என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும், நோயின் குறி! அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!<noinclude></noinclude> ip6g7xjh1wb0y19q3arbdjp5o2y7x0m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78 250 641706 1930549 1928981 2026-05-05T19:03:56Z Fathima Shaila 6101 /* Problematic */ 1930549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|54||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்குமிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா? தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா? 'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா! அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன. பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது? எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா? ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!! ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா? வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா? தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை. அண்ணன்,<noinclude></noinclude> gyjvgpc8j8lv5v6ys5ldpva9p2nfxdz 1930550 1930549 2026-05-05T19:05:39Z Fathima Shaila 6101 /* Proofread */ 1930550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|54||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்குமிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா? தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா? 'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா! அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன. பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது? எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா? ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!! ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா? வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா? தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை. {{rh|||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> esy0oaw7k54skhzcrwj1ov82o349h4p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118 250 641746 1930603 1929746 2026-05-06T05:30:13Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|94||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது. அந்தத் தமிழ்மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும்-தழைக்கும்-மணம் பரப்பும்-என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிகமிக மட்டம், என்பதை எடுத்துக்காட்டவா, வேண்டும். ஆட்சிமொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் ‘பயபக்தி விசுவாசம்’ காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என்கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் போது. ஆட்சிமொழியாக இந்தி புகுந்தால், உலகு. நம்மை அம்மொழி கொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா, அறிந்திட முயலும். தமிழ் மன்னர்கள் காலத்து ‘நாணயங்கள்’ இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக் கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச் சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே. தமிழ் மொழிக்கும் அரசோச்ச, ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது. உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து, கிருமிகள் உயிரையே குடித்து விடுகின்றன!! “செம்மொழி, எம் தமிழ் மொழி!”- என்று செப்பிக் கொண்டிருக்கலாம் சின்னாட்கள். பிறகு, “எம்மொழி, ஆட்சி மொழி?” என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சிமொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்? நாவலர் நெடுஞ்செழியன், இந்திமொழியின் இயலாத தன்மையினையையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர்-அவர் பேசிடும்போது காண்போர், அரிமா நோக்கு என்கின்றனர் அவர் அள்ளித்தரும் சான்றுக்களை கவனிப்போர். அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர் மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொளும் காட்சியே தெரிகிறது.<noinclude></noinclude> hs3a38kk548ddyue3kxkcee4tisectb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119 250 641747 1930604 1929747 2026-05-06T05:33:20Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude> இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது. உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங் கடலாகிறது. தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை. இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது. ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!! <b>“தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது, அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்”.</b> மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான், இப்படித்தான் பேசினேன். ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம். “இந்தியா ஒரு நாடு அல்ல!” என்ற உண்மையைக் கூறி, டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்! 1937-38-ல், இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர், அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்றபோக்கு, என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி.வி.எம். அண்ணாமலை திறப்பு விழாஉரையாற்றிய மாநாடு. முதன்முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு. வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து, நாம். முரசு கொட்டக் கூடினோம். அதுபோது நான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன்-எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude> ait9l7sz1zay2ybn8b9x9icipxwgsei பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120 250 641748 1930605 1929748 2026-05-06T05:36:45Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|96||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையதினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்து விடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப்பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன். தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக் கொண்டு, இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான்-நமக்கு ஏற்றமொழிதான்- தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று, தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு ‘உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை’ எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமே யொழிய, அதற்கு வாதங்கள் தேவையில்லை. ‘என்னுடைய மொழியைவிடச் சிறந்தமொழி உலகத்திலே வேறொன்றில்லை’ என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான். “நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக் காலமாகவா இந்தமொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு<noinclude></noinclude> o576c3ytt0p1753ubzxlu45a62g6i1a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 641774 1930630 1928556 2026-05-06T09:52:45Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கடிதம் : 111 சட்டம் வழக்கு மன்றத்தில் தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம். தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> bkumd2piuhidurgh15gjz4nviw0g48n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 641775 1930631 1929773 2026-05-06T10:00:34Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude> கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், "உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!! நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்! உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று! நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!<noinclude></noinclude> 8pui5wl9i6gvtt8tkmf77k3zteqsh0h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 641776 1930636 1929774 2026-05-06T10:14:17Z Saranya V R 14232 1930636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நீ மாளிகையில்! அவன், சிறையில்!! தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு. மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்! வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர். பலர் இருக்கிறார்கள். தம்பி அவர்கள், என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி! சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல. தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப" அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும். கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது. பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான். தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude> 72bxh8qbkilthjn12t5j47uaxx3s21o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 641778 1930646 1929776 2026-05-06T10:30:09Z Saranya V R 14232 1930646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!! சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு. "செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை! 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்! "ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான். கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாவம்!எதிர்த்தால். அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!! ஆனால். தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று. காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை! 'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும். இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும் நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான். யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்? யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்? என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான். இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude> ft83ovpgrcecx2390pj8r7zxky04l8r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151 250 641779 1930649 1929777 2026-05-06T10:42:05Z Saranya V R 14232 1930649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude> வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம். இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது. மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று, அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும். "எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?" "இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்". "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்". "விளக்கம்". "இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..." "ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்". "நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம் இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது". "இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்". "உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.." "காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude> jueam629v2w80cf7e9v38j1ot8h1ekk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152 250 641780 1930655 1929778 2026-05-06T10:47:40Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|128||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..." "இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..." "ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது". "செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?" "முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!" "அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்!" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" "மறுக்கிறானா?" "மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!" "கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி". "சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்-கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..." "நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..." "துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப்பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்". "மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்". "அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude> cna6aakb1g73jx2y6syd6wijg4eat43 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153 250 641781 1930657 1929779 2026-05-06T10:51:52Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude> "செல்லரித்த படத்தைக் காட்டி!" "மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.." "இழிவு படுத்தினான்". "படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.." "இந்த மூன்றாவது ஆசாமி?" "இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகிகளை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..." "என்ன செய்துகொண்டிருந்தான்?'' "காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!'' "பதறாமல்". "அமைதியாக!' "அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!" தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன். மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா? அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர. இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude> h9eydw1iljnpycka3q4bshhzj1qjai2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154 250 641782 1930661 1929780 2026-05-06T10:58:49Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|130||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அக்ரமத்தை?-என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம். இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன. தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!! டாக்டர் வெர்வுட்! தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர். கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ, அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட். அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும் அல்ல. அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது. நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும். மருத்துவராக இருக்கலாம், மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி, கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல. கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude> s858ozbuno2isy2nuyvfzatqmwcabis பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155 250 641783 1930662 1929781 2026-05-06T11:04:16Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude> வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும்-வேறு வேறுதான்! பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி. வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!! இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு! தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!! உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார். இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் இது சட்டமல்ல! - என்று கூறப்படுகிறதே. தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது; வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!! சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும். சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- இவைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude> k2wmol8pm996tssaku2l5u0pnlcax8c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 641874 1930620 1929897 2026-05-06T08:30:58Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) (நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள். தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> iy62lgrw7o7yycyqtz0zy829uhomaav பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 641875 1930621 1929898 2026-05-06T08:35:33Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று. 'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம். இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல. நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே! நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும், இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்ற கேள்வியை. 28.8.'60 அண்ணன்.<noinclude></noinclude> oz6n7j9v9p1ytff0k8hpnmbq6sfqb94 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 641876 1930624 1929012 2026-05-06T08:50:12Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude> கடிதம்: 118 மற்றொரு கூவம்! அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் - தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை தம்பி! 'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம். "என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார். ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude> j8zcbj7oe8fu5oae5es8gkdlrx8uz8i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 641877 1930629 1929899 2026-05-06T09:34:31Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude> போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடுகின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு, ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது. அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் - அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம். யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்! அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude> 41ijq9wdyfcugxwaocb1qj7tjmwv3eg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 641878 1930639 1929900 2026-05-06T10:15:00Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால். இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால், யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி. கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியோ, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம், வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!! தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டுமே பார்ப்போம். பார்த்தோமே பொறுத்திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும். கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை. ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்! கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude> 8v9p06hqf0bql4ya8fb93vy5twkl0ep பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251 250 641879 1930645 1929993 2026-05-06T10:28:20Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude> தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன! கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு, முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!! அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார்களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!! ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர். தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை - சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா, எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude> n6xla58rhjvt8cotjfuqu2wnvwij8d3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252 250 641880 1930651 1929994 2026-05-06T10:42:53Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு. காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது, தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள். ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான், பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள். ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் - என்று பொதுமக்களே, மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு, இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து, குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற்கில்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது, இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட? என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude> ojecckcoxmg72jcqgxg58izkufyb6ms பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253 250 641881 1930660 1929995 2026-05-06T10:57:17Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude> 'எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார். தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு, சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவறவில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய மாட்டார்கள். அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள். -<noinclude></noinclude> 7jlk4ajf7qvth63kfgu1tnjag0gaq07 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254 250 641882 1930663 1929996 2026-05-06T11:05:14Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|230||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார். சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு; இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள். 'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள். அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது. மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude> 7cznycm9xhujp1mq1jglsn3hfws1s04 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255 250 641883 1930664 1929997 2026-05-06T11:14:06Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude> போய்விடும்! என்று பேசி, நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம், டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று. இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி! தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி! எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத்திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது! பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்,<noinclude></noinclude> anflafy3cc11o2ulm3hb6xybptzdasf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256 250 641884 1930666 1929998 2026-05-06T11:30:50Z Subisena 16382 1930666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டி ருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> 3klas1bmveer7yairb8v7mdqb37r7yp 1930667 1930666 2026-05-06T11:36:48Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டிருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> 3wouj8wuuyzf7kzmsf51y3i9rnzr9tk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257 250 641885 1930672 1929999 2026-05-06T11:48:32Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude> பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார். மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள். அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன? இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள். பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!! கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா! அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று. பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள்! சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர். கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம்' வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன். தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude> 1xfppq07svkclvb734w8h20xgbk8xcn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258 250 641886 1930675 1930000 2026-05-06T11:56:18Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|234||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன். நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள். பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக்களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம்பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம். கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி, அமைச்சருக்கு, ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது. இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் - அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்! 4.9.1960 அண்ணன், Jimmzqnz<noinclude></noinclude> 7an68sdanxmokzjpi5zr23cngmxjyap பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296 250 641924 1930476 1930253 2026-05-05T12:01:10Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|272||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார். "நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார். "காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான். "நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும், கேட்போம்" என்றார் ஆயாசத்துடன். "சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன். "இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி, வேறு அல்ல, உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை". தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம். புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude> 6m5iiyfweydxkiqwp6xedpi731q76vo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297 250 641925 1930477 1930270 2026-05-05T12:04:34Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude> "உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங்களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால். நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல், காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா? கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம். காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்: "இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும். நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை. "இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது". தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude> hk60zyy7a53161iiouvdiaune1yrn44 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300 250 641928 1930478 1930257 2026-05-05T12:08:33Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|276||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அம்மா! என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை. காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண! "குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. உயர்ந்த சலவைக் கற்களாலான தரை; ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். 'இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்". கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude> h1kqqu4k136tyq3gy5o974k1rwzejjj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301 250 641929 1930479 1930271 2026-05-05T12:13:14Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||277}}{{rule}}</noinclude>பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா! {{left_margin|3em|<poem>பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு!</poem>}} தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும், வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும். கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> 6ok3y7amwjwo2p0oisz0noe5y3k2nak பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302 250 641930 1930480 1930272 2026-05-05T12:18:47Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|278||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது. தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி! இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமையானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் - பண்டாவுக்கு - பூஜாரிக்கு! இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார், ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை! பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்! ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக! காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்! சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார், காந்தியார்? இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன். எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude> 6yb6psrrpl8aydsu6b67k1x6ucxkbz8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303 250 641931 1930482 1930273 2026-05-05T12:22:35Z Rabiyathul 5890 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||279}}{{rule}}</noinclude> தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி. "போய்த்தொலை, உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்! சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள், தம்பி! சுவை காண்பாய். "தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். "பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். "எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்". தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா! இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர். ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது. கொடுத்தது தம்படி! கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே, அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude> dqt35mqtqi0kk1x4p8qtew9buhj0j0b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304 250 641932 1930481 1930275 2026-05-05T12:18:57Z Subisena 16382 /* சரிபார்க்கப்பட்டவை */ 1930481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Subisena" /> {{Rh|280||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். {{rh|<br>16.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> svctgv1ljzaw7viz8zqqmacyf4jk4sj பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/70 250 642203 1930565 1929328 2026-05-06T00:44:38Z Arularasan. G 2537 1930565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{rh||மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|65}}{{rule}}</noinclude>பட்டு, நாளைக்கு வந்தால், நம்மைக் கண்டு பேசிப் போகச் சொல்லுங்கள்,' என்று நியமித்தார். மற்றைநாள், அவர், 'நாம் நேற்றுக் கொண்டுபோய்க் கொடாது நிறுத்தினதனால் யாமுனாரி யருக்குக் கேள்வியாய் இருக்கலாம் ; இன்றைக்கு நமது மனோரதம் முடியும்' என்று வழக்கப்படி தூதுளங்கீரை கொண்டுவந்த பொழுது ஆளவந்தார் அவரைக் கண்டு, 'எங்கிருந்து வந்தீர்? உமது திருநாமம் யாது? என்ன காரியார்த்தமாய் இங்ஙனம் நடத்தி வருகிறீர்?' என்ன, அவர், 'நாம் மணக்கால் என்னும் ஊரில் வசிக்கும் காரணத்தால் நமக்கு மணக்கால் நம்பி என்பது பெயர் : நுமது பிதாமகனாராகிய ஸ்ரீமந்நாதமுனிகள் தேக வியோகமாகும் காலத்தில், அவரது ஆர்ச்சிதமாகிய திரவிய நிக்ஷேபத்தை எமது அடைக்கலத்தில் வைத்து, ' இதை நம்முடைய பெயரனாரிடத்தில் நீர் ஒப்பிக்க வேண்டும்,' என்று நியமித்துப் போனார். அதை உம்மி டத்திற் சேர்ப்பிக்கும்பொருட்டு நம்பெருமாள் கோயிலிலிருந்து வந்தோம்,' என்றார். ஸ்ரீ ஆளவந்தார், அந்த நிக்ஷேபதனம் எப்படிப்பட்டது? எவ்வகையால் காண்பது? என்ன உபாயத்தால் கைவசமாம்? எவ்விடத்திலுள்ளது ? வெளியிட வேண்டும்,' என்ன, மணக்கால் நம்பி அவரை நோக்கி, 'அரசர் முதலானவர்களிடத்திலுள்ள நிதி போல, வெள்ளம் முதலானவைகளால் அதற்கு அபாயமில்லாமை யால், அது அழியாநிதி. நிரஞ்சனதிருஷ்டியாலன்றி அஞ்சன திருஷ்டி யால் காணப்படாதது. மிருக பலி, நரபலி இடவேண்டுவதில்லை. வெறும்பச்சிலையைக் கிள்ளியிட்டு எளிதில் கைப்பற்றிக்கொள்ளப் படும். இரண்டு ஆற்றுக்கு நடுவே ஏழு சுற்றுக் கோட்டைக்குள், பிரணவ பீஜ யந்திரத்தில் இருக்கிறது. அதை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு நிற்கிறது. பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு முறை அவ் விடத்திற்குத் தென்சமுத்திர மத்தியிலிருந்து ஒரு ராட்சசன் வந்து அதைப் பார்வையிட்டுப் போவதுண்டு. இத்தன்மையாய் இருக் கின்ற நுமது பிதிரார்ச்சிதமாகிய க்ஷேம திரவியத்தை நாம் எத்தனை காலமாய்ப் பாதுகாத்து வருவோம் ? இனித் தாம் கிருபை செய்து வந்து கைப்பற்றிக்கொள்ள வேண்டும்,' என்றார். அரசாள்பவ திரவியமென்ற மாத்திரத்தில், ஆளவந்தார் ராகையாலும், பாட்டனுடைய ஸ்திதியாகிய பைதிருக தனத் துக்குப் பெயரன் உரியவன் என்பதனாலும், அதன்மேல் அபேக்ஷை கொண்டு, 'எதோ, அதைக் காண்பியும், வருகிறோம்,' என்று தமது பரிஜனங்களுடனே பிரயாணப்பட்டார். மணக்கால்நம்பி, 'இந்தக் கூட்டத்தை நிராகரித்து, நீர் மாத்திரம் வந்தாற் காண்பிக்கிறோம், என்ன, அப்படியே அவர் தனித்து வர அழைத்துப்போய், அத் திருவரங்கம் பெரிய கோயிலிலே சயனத் திருக்கோலமாய் எழுந் தருளிய எம்பெருமானைக் காட்டி, 'உங்கள் பாட்டனார் நம்முடைய அடைக்கலமாக வைத்து உமது வசம் ஒப்புக்கொடுக்கும்படி நியமித்த பரமதனத்தைப் பாரும் !' என்றார்<noinclude></noinclude> jcwu4dl6e8wm7uu6f6exyenvbf2kkk8 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1930484 1930377 2026-05-05T14:12:42Z Booradleyp1 1964 1930484 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் |col2= அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா |col2= அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் }} 8w1o3lbr32ifx46mhkgqbomd1k03qx6 1930566 1930484 2026-05-06T03:49:01Z Booradleyp1 1964 1930566 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col4= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col5= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col6= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் }} 5mrs3deieubozo0z32vm668ns6y1rnr 1930570 1930566 2026-05-06T04:16:59Z Booradleyp1 1964 1930570 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col4= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col5= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col6= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் <b>அய்-</b> அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col7= <b>அர்-</b> அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு }} qaounscahcwja46qi0zftynkj7qe5fu பயனர்:Info-farmer/WikisourceSimpleInterface.js 2 642292 1930506 1930287 2026-05-05T16:04:50Z Info-farmer 232 இக்கருவிக்கான தனிப்பொத்தான் அமைக்கிறேன். 1930506 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); // பக்கம் 250 (Page Namespace) ஆக இருந்தால் மட்டுமே செயல்படும் if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" என்ற புதிய தத்தலை (Tab) உருவாக்குதல் var pageName = mw.config.get('wgPageName'); var customEditUrl = mw.util.getUrl(pageName) + '?action=edit&customedit=true'; mw.util.addPortletLink('p-views', customEditUrl, 'தனித்தொகு', 'ca-customedit', 'சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க'); // 2. URL-ல் 'customedit=true' இருக்கிறதா எனச் சோதித்தல் var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { // படிவத்தைச் சேமிக்கும்போதும் (Preview/Save) இந்த வசதி மாறாமல் இருக்க URL-ஐப் பாதுகாத்தல் $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 3. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 4. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 5. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="உரலியை மறைத்து முழுத்திரைக்கு மாறு (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); // 6. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 7. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 8. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 9. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } } }); }); n5mfv45xus53y2ttgs9g8vwfhn7nn70 1930507 1930506 2026-05-05T16:17:10Z Info-farmer 232 தனிப்பொத்தானுக்கான நிலை தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 1930507 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); // பக்கம் 250 (Page Namespace) ஆக இருந்தால் மட்டுமே செயல்படும் if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடப்புறம் "தனித்தொகு" தத்தலை உருவாக்குதல் if ($('#ca-customedit').length === 0) { var pageName = mw.config.get('wgPageName'); var customEditUrl = mw.util.getUrl(pageName) + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="collapsible"><span><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க" style="color: #007bff; font-weight: bold;">தனித்தொகு</a></span></li>'; // "வாசி" (ca-view) அல்லது "தொகு" (ca-edit) தத்தலுக்கு இடதுபுறம் சரியாகப் பொருத்துதல் if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } } // 2. URL-ல் 'customedit=true' இருக்கிறதா எனச் சோதித்தல் var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { // படிவத்தைச் சேமிக்கும்போதும் (Preview/Save) இந்த வசதி மாறாமல் இருக்க URL-ஐப் பாதுகாத்தல் $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 3. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 4. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 5. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="உரலியை மறைத்து முழுத்திரைக்கு மாறு (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); // 6. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 7. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 8. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 9. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } } }); }); a85bioeepo2069sol9wc8fiolvtu3bk 1930508 1930507 2026-05-05T16:22:54Z Info-farmer 232 ஒரே வரிசையில் தனித்தொகு, வாசி, தொகு தத்தல் வரிசை அமைக்கப்பட்டன. 1930508 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); // பக்கம் 250 (Page Namespace) ஆக இருந்தால் மட்டுமே செயல்படும் if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடதுபுறம் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var customEditUrl = mw.util.getUrl(pageName) + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; // "வாசி" (#ca-view) தத்தலுக்கு சரியாக இடதுபுறம் சேர்க்க if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { // ஒருவேளை வாசி தத்தல் இல்லையென்றால் தொகு தத்தலுக்கு முன் சேர்க்க $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } // 2. URL-ல் 'customedit=true' இருக்கிறதா எனச் சோதித்தல் var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { // படிவத்தைச் சேமிக்கும்போதும் இந்த வசதி மாறாமல் இருக்க URL-ஐப் பாதுகாத்தல் $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 3. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 4. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 5. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="font-size: 14px; font-weight: bold;">தொகுப்புச் சாளரம்: ' + mw.config.get('wgTitle') + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="உரலியை மறைத்து முழுத்திரைக்கு மாறு (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); // 6. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 7. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 8. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 9. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); $toolbar.append('<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 10px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:12px;">வெளியேறு</a>'); $toolbar.append('<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 10px; cursor:pointer; border-radius:4px; margin-right:25px; font-size:12px; font-weight:bold;">சேமி</a>'); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:14px; font-weight:bold;">&gt;&lt;</span>', '#f0f0f0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } } }); }); bc76llx6u90puhwjr1fwx82jm3l8j7e 1930509 1930508 2026-05-05T16:31:18Z Info-farmer 232 பொத்தான்களை முதல் வரிசையில் இடமாற்றுகிறேன். 1930509 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); // பக்கம் 250 (Page Namespace) ஆக இருந்தால் மட்டுமே செயல்படும் if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடதுபுறம் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var customEditUrl = mw.util.getUrl(pageName) + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 2. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 3. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 20px; font-weight: bold; font-size: 16px; transition: color 0.2s; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow-y: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); // 4. சாளரத்தின் HTML கட்டமைப்பு (வெளியேறு, சேமி பொத்தான்கள் மேலடிக்கு மாற்றப்பட்டுள்ளன) var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 12px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:13px;">வெளியேறு</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 12px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:13px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="உரலியை மறைத்து முழுத்திரைக்கு மாறு (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">X</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); // சேமி பொத்தானின் செயல்பாடு $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // 5. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 6. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 7. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 8. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; // 5வது பொத்தான் உருவாக்கம் (நூல் இடைவெளி, பெரிய எழுத்து, அடர் சாம்பல் நிறம்) createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); // 5வது பொத்தானின் எல்லையை கருமையாக்குதல் (Dark Border) $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } } } }); }); 1sp11ipocc5eeg7i0p7lm7nhft51q53 1930510 1930509 2026-05-05T16:45:14Z Info-farmer 232 + எழுத்துருக்களை படத்தை பெரிதாக்கும் வசதி 1930510 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடதுபுறம் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var customEditUrl = mw.util.getUrl(pageName) + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 2. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 3. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS (சாளரப் பொத்தான்கள் 32px ஆகப் பெரிதாக்கப்பட்டுள்ளன) $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + // overflow: auto பட நகர்த்தலுக்கு '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); var viewUrl = mw.util.getUrl(mw.config.get('wgPageName')); // 4. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a href="' + viewUrl + '" title="வெளியேறு" style="background:#28a745; color:#fff; padding:4px 12px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:13px;">வெளியேறு</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:4px 12px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:13px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="மூடிவிட்டு விக்கிமூலப் பெட்டிக்குச் செல்க" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // 5. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 6. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); $proTextarea.one('click', function() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); } }); function hideProEditor() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); } $('#ws-btn-min, #ws-btn-close').on('click', hideProEditor); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 7. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 8. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; // 5வது பொத்தான் createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 9. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் (Zoom Controls) // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + // எழுத்து அளவு கட்டுப்பாடுகள் '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<span style="font-size: 15px; font-weight: bold; color: #495057; user-select: none;">எழுத்து</span>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + // பட அளவு கட்டுப்பாடுகள் '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<span style="font-size: 15px; font-weight: bold; color: #495057; user-select: none;">படம்</span>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); // எழுத்து அளவுக்கான நிரல் (Text Zoom Logic) var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { // குறைந்தபட்ச அளவு currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); // பட அளவுக்கான நிரல் (Image Zoom Logic) var currentImgWidth = 100; // சதவீதம் $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { // குறைந்தபட்ச அளவு currentImgWidth -= 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); } }); } } }); }); qumavbr6vl22o4it9z57yu2ez1i8nkn 1930512 1930510 2026-05-05T17:08:11Z Info-farmer 232 தற்போதுள்ள பொத்தான்களில் சீர்மை. அதாவது இயல்பு தொகுத்தலுக்குச் செல் என்ற பொத்தானும், நடுவில் சொடுக்கினால் முழுத்திரை படம் அழுத்தினால் இயல்பு நிலை கட்டமைத்து உள்ளேன். 1930512 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடதுபுறம் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 2. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 3. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS (புதிய பொத்தான்கள், நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன) $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; }' + '#ws-pro-image { max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 4. சாளரத்தின் HTML கட்டமைப்பு (பொத்தான்கள் 20% பெரிதாக்கப்பட்டுள்ளன) var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); // சேமி பொத்தான் $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); // இயல்புதொகுசெல் (சாதாரண விக்கிமூலத் தொகுப்புப் பெட்டிக்குச் செல்லுதல்) $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); // X பொத்தான் (தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேறி வாசிப்புப் பக்கத்திற்குச் செல்லுதல்) $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); // 5. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 6. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); // உரைப்பெட்டியை முதல்முறை தொட்டவுடனேயே தானாக முழுத்திரைக்கு மாறுதல் var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); // _ பொத்தான் (சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்க) $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 7. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 8. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + '<div class="ws-num-dot"><span style="font-size: 12px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 20px; color: #aaa; font-weight: bold; line-height: 0.6;">•</span></div>' + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-3 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span>'); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); $('#ws-pro-btn-4 .ws-num-dot span:last-child').replaceWith('<span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height:0.6;">&minus;</span>'); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; // 5வது பொத்தான் createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 9. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் (Zoom Controls) // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + // எழுத்து அளவு கட்டுப்பாடுகள் (சாம்பல் நிற Reset பொத்தான்) '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + // பட அளவு கட்டுப்பாடுகள் (சாம்பல் நிற Reset பொத்தான்) '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); // எழுத்து அளவுக்கான நிரல் (Text Zoom Logic) var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); // பட அளவுக்கான நிரல் (Image Zoom Logic) var currentImgWidth = 100; // சதவீதம் $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); }); } } }); }); pxgds3b8azbzi31tk4k0bu1rlyf4uc8 1930514 1930512 2026-05-05T17:23:33Z Info-farmer 232 பொத்தான்களின் எண் அளவு அதிகம்+ படத்தை பெரிதாக்கும் போது நடுப்புள்ளியை வைத்தே பெரிதாகும். 1930514 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "வாசி" தத்தலுக்கு இடதுபுறம் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 2. விக்கிமூலத்தின் இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 3. புதிய மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 4. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); // 5. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } // 6. முழுத்திரை வசதி மற்றும் சாளரக் கட்டுப்பாடுகள் function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); // 7. பிரிப்பான் மூலம் அளவை மாற்றுதல் var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); // 8. கருவிப்பட்டை (Toolbar) & பொத்தான்களை உருவாக்குதல் var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; // 3வது மற்றும் 4வது பொத்தான்களுக்கு மட்டும் பழைய குறியீடு அமைப்பு if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { // மற்ற பொத்தான்களுக்கு இருமடங்கு பெரிய எண்கள், புள்ளி கிடையாது dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); for (var i = 6; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 9. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் (Zoom Controls) // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); // பட அளவுக்கான நிரல் (Image Zoom Logic) var currentImgWidth = 100; function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); var scrollPos = ($img.width() - $container.width()) / 2; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); // அகலம் மாறிய பிறகு மையப்படுத்துதல் }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); }); } } }); }); nlbdm7nzmosxdp6359oz0ku52mbb99i 1930519 1930514 2026-05-05T17:46:37Z Info-farmer 232 எழுத்தைப் பெரிதாக்கும் உருபெருக்கி 1930519 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // 2. "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" அறிவிப்பு (3 நொடிகள்) var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>'; $('body').append(fsToast); setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); // சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); // 3. நினைவில் கொள்ளும் நுட்பம் (Local Storage) var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom'); var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1200, iiurlpage: pageNum, format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } setTimeout(adjustImageScroll, 500); // படம் வந்ததும் ஸ்க்ரோலை நகர்த்த }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); setTimeout(adjustImageScroll, 500); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); setTimeout(adjustImageScroll, 500); } function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); // ========================================================================= // 5. 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe) // ========================================================================= var isMagnifierActive = false; createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() { isMagnifierActive = !isMagnifierActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image'); if (isMagnifierActive) { $innerBtn.css('background-color', '#ffeb3b'); // மஞ்சள் நிறமாக மாறும் if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top;"></div>'); } if ($('#ws-loupe').length === 0) { // அகலம் படத்திரைக்கு ஏற்றவாறும், உயரம் 120px ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>'; $('#ws-img-wrapper').append(loupeHtml); } var $loupe = $('#ws-loupe'); $loupe.show(); function updateLoupeBg() { var zoom = 2; // 2 மடங்குப் பெருக்கம் var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom; $loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' }); var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0; $loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px'); } updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg; // ஜூம் மாறும்போது இதையும் புதுப்பிக்க var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft; $loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) { isDraggingLoupe = true; startY = e.pageY; startX = e.pageX; startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; $loupe.css('cursor', 'grabbing'); e.preventDefault(); }); $(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) { if (!isDraggingLoupe) return; var dy = e.pageY - startY; var dx = e.pageX - startX; $loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' }); updateLoupeBg(); }); $(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() { isDraggingLoupe = false; if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move'); }); } else { $innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide(); $(document).off('mousemove.loupe mouseup.loupe'); window.updateMagnifier = null; } }); for (var i = 7; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 6. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); // 15% நகர்வுடன் மையப்படுத்தும் புதிய கணிதச் சூத்திரம் (0.65) function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); // 0.5 (மையம்) + 0.15 (15% வலப்பக்கம் நகர்த்த) = 0.65 var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } if (window.updateMagnifier) window.updateMagnifier(); } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); // நினைவில் சேமித்தல் $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); // நினைவில் சேமித்தல் $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); // நினைவில் சேமித்தல் $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); if (window.updateMagnifier) window.updateMagnifier(); }); } } }); }); lejv80fjk1ye3fqnvpqv1ejh3p77lf9 1930523 1930519 2026-05-05T17:54:21Z Info-farmer 232 உரிய மின்வருடல் படமே இனி வரும். 1930523 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" அறிவிப்பு (3 நொடிகள்) var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>'; $('body').append(fsToast); setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); // சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom'); var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); // ========================================================================= // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் (பிழை திருத்தப்பட்டது: iipage) // ========================================================================= var titleParts = mw.config.get('wgTitle').match(/(.+?)\/(\d+)$/); if (titleParts) { var fileName = 'File:' + titleParts[1]; var pageNum = parseInt(titleParts[2], 10); new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: fileName, iiprop: 'url', iiurlwidth: 1400, // தெளிவுத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது iipage: pageNum, // <--- பிழை திருத்தப்பட்ட இடம் (iiurlpage இல்லை, iipage தான் சரி) format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } setTimeout(adjustImageScroll, 500); }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); setTimeout(adjustImageScroll, 500); }); } else { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); setTimeout(adjustImageScroll, 500); } function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); // 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe) var isMagnifierActive = false; createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() { isMagnifierActive = !isMagnifierActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image'); if (isMagnifierActive) { $innerBtn.css('background-color', '#ffeb3b'); if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>'); } if ($('#ws-loupe').length === 0) { var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>'; $('#ws-img-wrapper').append(loupeHtml); } var $loupe = $('#ws-loupe'); $loupe.show(); function updateLoupeBg() { var zoom = 2.5; // உருப்பெருக்கத்தின் அளவு (2.5 மடங்கு) var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom; $loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' }); var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0; $loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px'); } updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg; var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft; $loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) { isDraggingLoupe = true; startY = e.pageY; startX = e.pageX; startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; $loupe.css('cursor', 'grabbing'); e.preventDefault(); }); $(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) { if (!isDraggingLoupe) return; var dy = e.pageY - startY; var dx = e.pageX - startX; $loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' }); updateLoupeBg(); }); $(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() { isDraggingLoupe = false; if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move'); }); } else { $innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide(); $(document).off('mousemove.loupe mouseup.loupe'); window.updateMagnifier = null; } }); for (var i = 7; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } if (window.updateMagnifier) window.updateMagnifier(); } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); if (window.updateMagnifier) window.updateMagnifier(); }); } } }); }); 9ehpiega8uswqh0ks100qtf7c9nnxv3 1930525 1930523 2026-05-05T18:04:12Z Info-farmer 232 மீளமைத்து உரிய பட வழு நீக்கம் 1930525 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // மிதக்கும் சாளரத்திற்கான CSS (முழுமையானது) $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" அறிவிப்பு (3 நொடிகள்) var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>'; $('body').append(fsToast); setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); // சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right"><img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு ஏற்றப்படுகிறது..." /></div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom'); var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); // ========================================================================= // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் (துல்லியமான பக்க எண் பிரித்தெடுத்தல்) // ========================================================================= var titleStr = mw.config.get('wgTitle'); // எ.கா: "நூல்.pdf/7" var slashIdx = titleStr.lastIndexOf('/'); var fileBaseName = titleStr; var pageNumForApi = 1; // / குறியீடு இருந்தால் கோப்பின் பெயரையும், பக்க எண்ணையும் பிரித்தெடுத்தல் if (slashIdx !== -1) { fileBaseName = titleStr.substring(0, slashIdx); pageNumForApi = parseInt(titleStr.substring(slashIdx + 1), 10); } var apiFileName = 'File:' + fileBaseName; new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: apiFileName, iiprop: 'url', iiurlwidth: 1400, // தெளிவான படம் iiurlpage: pageNumForApi, // சரியான கட்டளை: iiurlpage format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { $('#ws-pro-image').attr('src', pages[p].imageinfo[0].thumburl); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); } setTimeout(adjustImageScroll, 500); }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')); setTimeout(adjustImageScroll, 500); }); function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); // ========================================================================= // 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe) // ========================================================================= var isMagnifierActive = false; createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() { isMagnifierActive = !isMagnifierActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image'); if (isMagnifierActive) { $innerBtn.css('background-color', '#ffeb3b'); if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>'); } if ($('#ws-loupe').length === 0) { var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>'; $('#ws-img-wrapper').append(loupeHtml); } var $loupe = $('#ws-loupe'); $loupe.show(); function updateLoupeBg() { var zoom = 2.5; var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom; $loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' }); var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0; $loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px'); } updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg; var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft; $loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) { isDraggingLoupe = true; startY = e.pageY; startX = e.pageX; startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; $loupe.css('cursor', 'grabbing'); e.preventDefault(); }); $(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) { if (!isDraggingLoupe) return; var dy = e.pageY - startY; var dx = e.pageX - startX; $loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' }); updateLoupeBg(); }); $(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() { isDraggingLoupe = false; if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move'); }); } else { $innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide(); $(document).off('mousemove.loupe mouseup.loupe'); window.updateMagnifier = null; } }); for (var i = 7; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 9. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } if (window.updateMagnifier) window.updateMagnifier(); } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); if (window.updateMagnifier) window.updateMagnifier(); }); } } }); }); qzb3essbprmcxscpxuf5o1ejvsklc4w 1930526 1930525 2026-05-05T18:11:42Z Info-farmer 232 பட வழு நீக்கம் மாற்றுத்திட்ட படக் கொணர்தல் 1930526 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // 2. இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // 3. மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" அறிவிப்பு var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>'; $('body').append(fsToast); setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); // 4. சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right">' + '<div id="ws-img-loader" style="margin-top: 40%; font-size: 18px; font-weight: bold; color: #6c757d;">படம் ஏற்றப்படுகிறது...</div>' + '<img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு" style="display:none;" />' + '</div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom'); var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); // ========================================================================= // 5. வழு நீக்கப்பட்ட நேரடிப் பட இணைப்பு (Special:FilePath) // ========================================================================= var titleStr = mw.config.get('wgTitle'); var slashIdx = titleStr.lastIndexOf('/'); var fileBaseName = titleStr; var pageNumForUrl = '1'; // பக்க எண்ணைத் துல்லியமாகப் பிரித்தெடுத்தல் if (slashIdx !== -1) { fileBaseName = titleStr.substring(0, slashIdx); pageNumForUrl = titleStr.substring(slashIdx + 1); } // API-ஐ நம்பாமல், விக்கிமீடியாவின் நேரடி URL-ஐப் பயன்படுத்துதல் var directImgUrl = mw.config.get('wgServer') + mw.config.get('wgScriptPath') + '/index.php?title=Special:FilePath/' + encodeURIComponent(fileBaseName) + '&width=1400&page=' + pageNumForUrl; var $imgElem = $('#ws-pro-image'); $imgElem.on('load', function() { $('#ws-img-loader').hide(); $(this).show(); setTimeout(adjustImageScroll, 100); }).on('error', function() { // பிழை ஏற்பட்டால் தானாகவே பழைய நீட்சியின் படத்தைப் பயன்படுத்தும் (Fallback) var prpImgSrc = $('.prp-page-image img').attr('src'); if (prpImgSrc && !$(this).hasClass('ws-fallback')) { $(this).addClass('ws-fallback'); $(this).attr('src', prpImgSrc); } else { $('#ws-img-loader').text('படம் ஏற்றுவதில் பிழை!').css('color', 'red'); } }); // படத்திற்கான கட்டளையை இயக்குதல் $imgElem.attr('src', directImgUrl); // ========================================================================= function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); // 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe) var isMagnifierActive = false; createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() { isMagnifierActive = !isMagnifierActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image'); if (isMagnifierActive) { $innerBtn.css('background-color', '#ffeb3b'); if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>'); } if ($('#ws-loupe').length === 0) { var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>'; $('#ws-img-wrapper').append(loupeHtml); } var $loupe = $('#ws-loupe'); $loupe.show(); function updateLoupeBg() { var zoom = 2.5; var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom; $loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' }); var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0; $loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px'); } updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg; var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft; $loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) { isDraggingLoupe = true; startY = e.pageY; startX = e.pageX; startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; $loupe.css('cursor', 'grabbing'); e.preventDefault(); }); $(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) { if (!isDraggingLoupe) return; var dy = e.pageY - startY; var dx = e.pageX - startX; $loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' }); updateLoupeBg(); }); $(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() { isDraggingLoupe = false; if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move'); }); } else { $innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide(); $(document).off('mousemove.loupe mouseup.loupe'); window.updateMagnifier = null; } }); for (var i = 7; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 7. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); if (!$img.is(':visible')) return; var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } if (window.updateMagnifier) window.updateMagnifier(); } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); if (window.updateMagnifier) window.updateMagnifier(); }); } } }); }); 87s8o3vis1w1020n4ytfml3jr1pu0h2 1930532 1930526 2026-05-05T18:20:10Z Info-farmer 232 படவழு நீக்கம்3 1930532 javascript text/javascript mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() { $(function() { var namespace = mw.config.get('wgNamespaceNumber'); var action = mw.config.get('wgAction'); if (namespace === 250) { // 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல் var pageName = mw.config.get('wgPageName'); var viewUrl = mw.util.getUrl(pageName); var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true'; var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>'; if ($('#ca-view').length > 0) { $('#ca-view').before(customTabHtml); } else if ($('#ca-edit').length > 0) { $('#ca-edit').before(customTabHtml); } else { $('#p-views ul').prepend(customTabHtml); } var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true'; if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) { $('#editform').attr('action', function(i, val) { return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true'; }); // இயல்பான இடைமுகத்தை மறைத்தல் $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide(); $('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%'); // மிதக்கும் சாளரத்திற்கான CSS $('head').append('<style>' + 'body.ws-modal-open { overflow: hidden !important; }' + '#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' + '#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' + '#ws-pro-controls { display: flex; align-items: center; }' + '#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' + '#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' + '#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' + '#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' + '#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' + '#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' + '#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' + '#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' + '#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' + '#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' + '#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' + '@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' + '.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' + '.ws-pulsing span { color: white !important; }' + '.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' + '.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' + '.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' + '.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' + '.ws-zoom-btn:active { background:#ccc; }' + '.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' + '.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' + '</style>'); $('body').addClass('ws-modal-open'); // "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" அறிவிப்பு (3 நொடிகள்) var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>'; $('body').append(fsToast); setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000); // சாளரத்தின் HTML கட்டமைப்பு var editorHtml = '<div id="ws-pro-editor">' + '<div id="ws-pro-header">' + '<div style="display: flex; align-items: center;">' + '<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' + '<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' + '<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' + '</div>' + '<div id="ws-pro-controls">' + '<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' + '<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' + '<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">&times;</span>' + '</div>' + '</div>' + '<div id="ws-pro-toolbar"></div>' + '<div id="ws-pro-workspace">' + '<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' + '<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' + '<div id="ws-pro-right">' + '<div id="ws-img-loader" style="margin-top: 40%; font-size: 18px; font-weight: bold; color: #6c757d;">படம் ஏற்றப்படுகிறது...</div>' + '<img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு" style="display:none;" />' + '</div>' + '</div>' + '</div>'; $('body').append(editorHtml); var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>'; $('body').append(centerBtnHtml); var $proEditor = $('#ws-pro-editor'); var $proTextarea = $('#ws-pro-textarea'); var $oldTextarea = $('#wpTextbox1'); var $reopenBtn = $('#ws-center-reopen-btn'); $proTextarea.val($oldTextarea.val()); $('#ws-pro-save').on('click', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, '')); $oldTextarea.val($proTextarea.val()); $('#wpSave').click(); }); $('#ws-pro-normal-edit').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.remove(); $reopenBtn.remove(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn(); }); $('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; }); var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom'); var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100; $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); // ========================================================================= // 4. API மூலம் நேரடிப் படத்தைப் பெறுதல் (துல்லியமான வழு நீக்கம்) // ========================================================================= var titleStr = mw.config.get('wgTitle'); var slashIdx = titleStr.lastIndexOf('/'); var fileBaseName = titleStr; var pageNumForApi = 1; // பக்க எண்ணைத் துல்லியமாகப் பிரித்தெடுத்தல் if (slashIdx !== -1) { fileBaseName = titleStr.substring(0, slashIdx); pageNumForApi = parseInt(titleStr.substring(slashIdx + 1), 10); } var apiFileName = 'File:' + fileBaseName; // API கட்டளை (iipage என்பதுதான் சரியான கட்டளை) new mw.Api().get({ action: 'query', prop: 'imageinfo', titles: apiFileName, iiprop: 'url', iiurlwidth: 400, // நீங்கள் கேட்ட 400px பிக்சல் அளவு iipage: pageNumForApi, // சரியான பக்க எண்ணைக் குறிக்கும் கட்டளை (திருத்தப்பட்டது) format: 'json' }).done(function(data) { var pages = data.query.pages; var imgFound = false; for (var p in pages) { if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) { var imgUrl = pages[p].imageinfo[0].thumburl; $('#ws-pro-image').attr('src', imgUrl).on('load', function() { $('#ws-img-loader').hide(); $(this).show(); setTimeout(adjustImageScroll, 100); }); imgFound = true; } } if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show(); $('#ws-img-loader').hide(); } }).fail(function() { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show(); $('#ws-img-loader').hide(); }); // ========================================================================= function toggleFullScreen() { if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); } else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } } } $('#ws-btn-full').on('click', toggleFullScreen); var hasTriggeredFullscreen = false; $proEditor.on('click', function() { if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(e) {}); hasTriggeredFullscreen = true; } }); $('#ws-btn-min').on('click', function() { $oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide(); $('body').removeClass('ws-modal-open'); if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200); }); $reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); }); var isDragging = false; $('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); }); $(document).on('mousemove', function(e) { if (!isDragging) return; var containerWidth = $('#ws-pro-workspace').width(); var leftWidth = (e.pageX / containerWidth) * 100; if (leftWidth > 10 && leftWidth < 90) { $('#ws-pro-left').css('width', leftWidth + '%'); $('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%'); } }).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); }); var $toolbar = $('#ws-pro-toolbar'); function createBtn(num, iconHtml, bgColor, onClick) { var dotHtml = ''; if (num === 3) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>'; } else if (num === 4) { dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">&minus;</span></div>'; } else { dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>'; } var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' + dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' + '</div>'; $toolbar.append(btn); $('#ws-pro-btn-' + num).on('click', onClick); } createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){}); createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); }); createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); }); var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null; createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">&gt;&thinsp;&lt;</span>', '#d0d0d0', function() { isAutoJoinActive = !isAutoJoinActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-5'); function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); } if (isAutoJoinActive) { $innerBtn.addClass('ws-pulsing'); $proTextarea.on('click.wsAutoJoin', function(e) { var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart; if (pos === $proTextarea[0].selectionEnd) { var startSpace = pos, endSpace = pos; while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; } while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; } if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) { lastUndoState = { text: text, pos: pos }; $proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace)); $proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace); removeFloatingUndo(); var timeLeft = 4; $('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>'); $('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } }); floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000); } } }); } else { $innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo(); } }); $('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' }); // 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe) var isMagnifierActive = false; createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() { isMagnifierActive = !isMagnifierActive; var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image'); if (isMagnifierActive) { $innerBtn.css('background-color', '#ffeb3b'); if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>'); } if ($('#ws-loupe').length === 0) { var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>'; $('#ws-img-wrapper').append(loupeHtml); } var $loupe = $('#ws-loupe'); $loupe.show(); function updateLoupeBg() { var zoom = 2.5; var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom; $loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' }); var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0; $loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px'); } updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg; var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft; $loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) { isDraggingLoupe = true; startY = e.pageY; startX = e.pageX; startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; $loupe.css('cursor', 'grabbing'); e.preventDefault(); }); $(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) { if (!isDraggingLoupe) return; var dy = e.pageY - startY; var dx = e.pageX - startX; $loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' }); updateLoupeBg(); }); $(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() { isDraggingLoupe = false; if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move'); }); } else { $innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide(); $(document).off('mousemove.loupe mouseup.loupe'); window.updateMagnifier = null; } }); for (var i = 7; i <= 10; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); } // ========================================================================= // 7. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள் // ========================================================================= var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' + '<div style="display: flex; align-items: center; gap: 10px;">' + '<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' + '<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' + '<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">&minus;</span>' + '<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' + '<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' + '</div>' + '</div>'; $toolbar.append(zoomControlsHtml); var currentTxtSize = 15; $('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); }); $('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } }); $('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); }); function adjustImageScroll() { var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right'); if (!$img.is(':visible')) return; var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65; if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); } if (window.updateMagnifier) window.updateMagnifier(); } $('#ws-img-plus').on('click', function() { currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); }); $('#ws-img-minus').on('click', function() { if (currentImgWidth > 40) { currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50); } }); $('#ws-img-reset').on('click', function() { currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth); $('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0); if (window.updateMagnifier) window.updateMagnifier(); }); } } }); }); 9rus89ywvg72oeazgkjncwmpxmfo6cr பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/183 250 642312 1930515 1930290 2026-05-05T17:26:23Z Ramya sugumar 15106 1930515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>இதயமேன் தோற்கிறது?</b>}} உடன்பிறப்பே, வயிறு தனக்காக அழுகிறது; இதயம் மற்றவர்களுக்காக உருகுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். :“வயிற்றுக்கு மேலே வைத்தேன் இதயத்தை? :வயிற்றைவிட இதயம் மேலான தென்பதனால்! :வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடக்கின்ற போரில் :வயிறேன் வெல்கிறது? இதயமேன் தோற்கிறது? :படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் {{Right|பாராமல்}} :வயிறே பெரிதென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” இந்தக் கவிதை எழுதியவர் ஒரு இளைஞர்தான்! வாரிச் சீவிய முடியும், வசீகர விழியும், வரைந்த நேர் கோடுபோல் புது மீசையும் கொண்டவர்! குருவிக் கரம்பை சண்முகம் என்பது இந்தக் கவிஞரின் பெயர். பாரதியார், பாரதிதாசனுக்குப் பிறகு வளர்ந்துவரும் கவிஞர் பரம்பரையில் இவருக்கோர் சிறப்பான இடமுண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவர். இவரை அதிகம் பாராட்டப் பயமாக இருக்கிறது! எனக்காக அல்ல! அவருக்காகத்தான்! அவரை விட்டுவிட்டு அவரது கவிதை வரிகளைப் பார்ப்போம். {{nop}}<noinclude></noinclude> ofiestld0ep0ozagfjnnh1i0ssir16f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/868 250 642342 1930492 2026-05-05T14:26:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 868 |bSize = 480 |cWidth = 372 |cHeight = 248 |oTop = 44 |oLeft = 54 |Location = center |Description = }} {{center|கலாட்சேத்திரம் (அடையாறு)}} பயில்கின்றனர். இந்தமையம் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலாட்சேத்திரம்‌|840|கலாட்சேத்திரம்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 868 |bSize = 480 |cWidth = 372 |cHeight = 248 |oTop = 44 |oLeft = 54 |Location = center |Description = }} {{center|கலாட்சேத்திரம் (அடையாறு)}} பயில்கின்றனர். இந்தமையம் குருகுல முறையில் செயற்படுகின்றது. மாணவ மாணவியர் எளிய வாழ்க்கை வாழுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இசை வல்லுநர்களான இசைப்புலி வரதாச்சாரியர், காரைக்குடி வீணை சாம்பசிவ அய்யர், நாட்டிய மேதை சொக்கலிங்கம் பிள்ளை போன்ற கலை அறிஞர்கள் மாணவ மாணவியருக்கு அருங்கலைகளைப் போதித்து வந்துள்ளனர். உலகப்‌ புகழ்‌ பெற்ற மாண்டிசோரிக்‌ கல்வி முறையைத்‌ தமிழகத்தில்‌ முதன்‌ முதலில்‌ புகுத்தி இவர்‌ மரியா மாண்டிசோரிப்‌ பள்ளியை ஏற்படுத்தினார்‌. மேலும்‌ பெசண்டு தியாசாபிகல்‌ உயர்நிலைப்‌ பள்ளி, பெசண்டு அருண்டேல்‌ மேல்‌ நிலைப்பள்ளி, கைவினைப்‌ பொருள்கள்‌ ஆராய்ச்சி மையம்‌, நெசவுப்‌ பிரிவு போன்ற நிறுவனங்கள்‌ கலாட்சேத்திர வளாகத்‌தில்‌ செயற்படுகின்றன. கைவிடப்பட்ட பெண்களுக்‌கும்‌, ஊனமுற்ற பெண்களுக்கும்‌ கைவினைப்‌ பொருள்‌கள்‌ செய்யும்‌ கலையில்‌ ஈண்டுப்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது. திருமதி உருக்குமணிதேவி சிறந்த நாட்டிய மேதை, இசையிலும்‌ நல்ல தேர்ச்சிபெற்றவர்‌. இவர்‌ குற்றாலக்‌ குறவஞ்சி, சாகுந்தலம்‌ போன்ற இருபதுக்‌கும்‌ மேற்பட்ட நாட்டிய நாடகங்களை உருவாக்கி நடத்தி அக்கலைக்குப்‌ புத்துயிர்‌ தந்தார்‌. சங்க இலக்கியங்களுக்குப்‌ புத்துயிர்‌ வழங்கிய தமிழ்த்‌ தாத்தா என்று அழைக்கப்படும்‌ டாக்டர்‌ உ.வே. சாமிநாதையர்‌ பெயரில்‌ ஒரு நூலகத்தைத்‌ திருமதி உருக்குமணிதேவி 1943–ஆம்‌ ஆண்டு ஏற்படுத்‌தினார்‌. டாக்டர்‌ ஐயரவர்கள்‌ சேகரித்த இலக்கியச்‌ செல்லங்கள்‌ அழிந்துவிடாமல்‌ காத்து, அவரது படைப்புளை நூல்களாகவும்‌ வெளியிட்டுள்ளார்‌. இவ்வாறு தமிழுக்குச்‌ சிறந்த தொண்டாற்றி வருகின்றது கலாட்சேத்திரம்‌. இது மேற்போக்காகப் பார்த்தால்‌, நாட்டியம்‌, இசை, ஓவியம்‌ போன்ற நுண்கலைகளைக்‌ கற்பிக்கும்‌ கல்விக்‌ கூடமாகத்‌ தோன்றும்‌. ஆழ்ந்து நோக்கினால்‌ ஒவ்வொரு மாணவனிடமும்‌ புதைந்துள்ள கலையாக்கத்‌ திறமையை வெளிப்படுத்த ஊக்குவிப்பதே இதன்‌ நோக்கம்‌ என்பது புலனாகும்‌. கலை, பண்பாட்டுத் துறைகளில் கலாட்சேத்திரத்‌தின்‌ சாதனைகள்‌ குறிப்பிடத்தக்கவை. சமூக சேவையிலும்‌ இது சிறந்து விளங்குகின்றது. அடையாறு பிரமஞான சபையின்‌ வளாகத்திலுள்ள ஆலமரத்தின்‌ நிழலில்‌<noinclude></noinclude> t8emrad7y95pry0bfnkrcvx8wamfd4b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/869 250 642343 1930497 2026-05-05T14:47:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1936–ஆம் ஆண்டு ஒரே ஒரு மாணவியுடன் தொடங்கப்பட்ட இக்கலைப்பள்ளி, அவ்வாலமர விழுதைப் போலவே இன்று ஆயிரக்கணக்கில் மாணவர்களைக் கொண்டு, கலைத் தொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலாட்டு|841|கலிக்கம்பர்}}</noinclude>1936–ஆம் ஆண்டு ஒரே ஒரு மாணவியுடன் தொடங்கப்பட்ட இக்கலைப்பள்ளி, அவ்வாலமர விழுதைப் போலவே இன்று ஆயிரக்கணக்கில் மாணவர்களைக் கொண்டு, கலைத் தொண்டாற்றி வருகின்றது. இந்தியப் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்குக் காரணமாகவும் இது விளங்குகிறது. இதைத் தோற்றுவித்து, வளர்த்துவிட்ட திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் 1986–ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் காலமானார். {{Right|<b>செ.ஆ.</b>}} {{larger|<b>கலாட்டு:</b>}} மதில்களையும் கோட்டையையுமுடைய இந்நகர் பாகிசுத்தானத்தில் 6600 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது உள்ளது. இந்நகரைச் (Kalat) சுற்றியுள்ள பகுதி ஆதிக்குடிகள் வாழும் ஒரு முகம்மதிய இராச்சியம். அதன் தலைவர்களுக்குக் ‘கான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. பலுச்சித்தானப் பகுதியில் கலாட்டும் குவெட்டாவும் சிறப்பு வாய்ந்த நகரங்களாகும். பழங்களும் பேரீச்சையும் இங்கு மிகுதியாக விளைகின்றன. கலாட்டு இராச்சியத்தின் பரப்பு 80,077 சதுர கி.மீ. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலாப்பகோசுத் தீவுகள்:</b>}} கோலன் தீவுக் கூட்டம் எனப்படும் கலாப்பகோசுத்தீவுகள் பசிபிக்கு மாக்கடலில் நிலநடுப்பகுதியில் உள்ளன. கலாப்பகோசுத் தீவுகளின் (Calapagos) பரப்பு 7845.1 ச.கி.மீ. இசுபானியக் கடற்பயணி ஒருவர் இத்தீவுகளை முதலில் கண்டுபிடித்தார். ஈக்குவடார் நாட்டுக்கு இவை சொந்தமாயின. மிகப்பெரியனவாகிய ஆமைகள் இங்குக் காணப்பட்டதால் ஆமை என்ற பொருளுடைய கலாப்பகோசு என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்கு ஏற்பட்டது. அத்தகைய ஆமைகள் இப்பொழுது அங்கு இல்லை. ஈக்குவடார் கி.பி. 1832–ஆம் ஆண்டில் இந்தத் தீவுக் கூட்டத்தைப் பெற்றது. வனவிலங்குகள் பல இங்கு உள்ளன. சார்லசு தார்வின் தம் ஆராய்ச்சிக்காக கி.பி. 1835–இல் இத்தீவுகளின் காடுகளுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. மனித குல பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக்குத் தார்வினுக்கு இக்காடுகள் மிக உதவின. வனவிலங்குப் புகலிடம் ஒன்று இங்கே அமைந்துள்ளது. இத்தீவுகள் எரிமலைச் சிகரங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ஈக்குவடாருக்கும் இத்தீவுக் கூட்டத்திற்குமிடையே உள்ள தொலைவு 960 கி.மீ. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலாபிரியா:</b>}} தெற்கு இத்தாலியிலுள்ள ஒரு முந்நீரகம். இதன் பரப்பு 15,079 சதுர கி.மீ. திர்ரேனியன் கடலுக்கும் அயோனியன் கடலுக்குமிடையே உள்ள கலாப்பிரியா (Calabria), மெசினா கடற்காலினால், சிசிலித் தீவினின்று பிரிக்கப்படுகிறது. இம்முந்நீரகத்தை, இத்தாலியக் கால் புதை மிதி விரற்பகுதி (Toe of the Italian boot) என்று கூறலாம். கட்டன்சாரோ (Catanzaro) இதன் தலைநகராகும். மலைப்பாங்கான இப்பகுதியில் வேளாண்மை முக்கிய தொழில், ஒலிவு, உலர்ந்த கொடி முந்திரிப் பழங்கள், திராட்சை, நாரத்தை, எலுமிச்சை, கிச்சிலிப் பழங்கள், கோதுமை முதலியன இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. ஆடு மாடுகள் வளர்த்தல், மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் முக்கியமானவை. வரலாறு: இப்பகுதியின் பழைய பெயர் புரூட்டியம் (Bruttium). இது கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து தான் கலாபிரியா என்று வழங்கப்படுகிறது. இ பகுதி கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சிசிலியன் நார்மானிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி. 1822-க்குப் பிறகு நேபிள்சு அரசின் ஒரு பகுதியாயிற்று. கரிபால்டி கி.பி. 1860-இல் புதிய இதாலியுடன் ஐக்கியப்படுத்தும் நோக்கத்துடன் இதை வென்றான். இங்குக் காணப்பட்ட நிலமானியக் கட்டுப்பாடுகள், மலேரியா நோய், நில நடுக்கங்கள் (குறிப்பாக, 1905, 1908–ஆம் ஆண்டுகளில்) பஞ்சம், போக்குவரவுச் சாதனக் குறைவுகள் முதலியன இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலிக்கம்பர்:</b>}} அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய கலிக்கம்பர் ‘செம்மை நீதியார்’ என்று சேக்கிழாரால் போற்றப்பட்டவர். இவர் தில்லையின் மேற்கில் உள்ள திருப்பெண்ணாகடத்தில் வணிகர் குலத்தே தோன்றியவர். இவர் அவ்வூரில் உள்ள தூங்கானைமாடத்தமர்ந்த சிவபெருமானுக்கு நாளும் திருத்தொண்டு செய்துவந்தார். மற்றோர் பற்றிலாது வாழ்ந்த இவ்வன்பர் அரனார் அடியார்க்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றார். இவர் நாடோறும் போனகம் நறுநெய் தயிர் தீம்பால் இனிய கனி ஆகிய எல்லாவற்றையும் விருப்பமுடன் கொடுத்து, மேலும் நிதியமும் வழங்கும் நியதியை மேற்கொண்டார். இவ்வாறு அடியார்க்கு அமுதுபடைக்கும் திருத்தொண்டு புரிந்துவரும் கலிக்கம்பர், தமது இல்லத்தில் திரு அமுது செய்யவரும் தொண்டர்களை எல்லாம் அன்புடன் முன்னர் சென்று அழைத்துத் திருவடிகளை விளக்குவார். அன்புடைய மனைவி உணவும் கறியமுதும் மற்ற சுவைப் பொருள்களையும் பக்குவமாக்கிய அளவில் பரிமாறத் தொண்டர்கள் உணவருந்திய பின் அவர்தம் மனைவி நீரளிக்க விருப்பத்துடன் திருவடிகளைத் தூய்மை செய்து இன்புறுவார். {{nop}}<noinclude></noinclude> 5cfppk85x361wjvf70ba89tjw2vg76s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/15 250 642344 1930498 2026-05-05T15:27:58Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|XV}}</noinclude>கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை.” <b>இரு காட்சிகள்</b> சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய இரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு, {{left_margin|3em|<poem><b>“மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும்”</b></poem>}} ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார். வெறும் நாரையை மட்டும் அல்ல. {{left_margin|3em|<poem><b>‘கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும்’.</b></poem>}} நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது. <b>நடைநலம்</b> நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude></noinclude> srs0hemvu0r3xeccbx0tsdyw5wsbr5q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/870 250 642345 1930499 2026-05-05T15:32:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இங்ஙனம் ஒழுகும் காலத்து ஒருநாள் தம் இல்லத்துப் பணி செய்த ஏவலர் ஒருவர் அடியவராகி அன்று கலிக்கம்பர் இல்லத்திற்கு வர அவர்க்கும் தொண்டர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிக்காம நாயனார்‌|842|கலிகூலா}}</noinclude>இங்ஙனம் ஒழுகும் காலத்து ஒருநாள் தம் இல்லத்துப் பணி செய்த ஏவலர் ஒருவர் அடியவராகி அன்று கலிக்கம்பர் இல்லத்திற்கு வர அவர்க்கும் தொண்டர் திருப்பாதம் விளக்க முற்பட்டார். அப்போது மனைவியார் முன்பு ஏவல் செய்தவர் என்று கருதித் தயங்கினார். அது கண்ட கலிக்கம்பர் கொன்றை முடியார் அடியராகிய அவரை முன்பிருந்த நிலை கருதி வெட்கப்பட்டு இவள் நீர்வாரா தொழிந்தாள் என மனத்துள் எண்ணி, மனைவியார் கையிலிருந்த கரகத்தை வாங்கி வைத்துவிட்டு அவளது கையை வாளால் வெட்டி அக்கரசு நீரைத் தாமே எடுத்துத் திருத்தொண்டர் திருவடிகளை விளக்கி, ஆர்வமுடன் அமுது செய்வித்தார். இவ்வாறு அடியார் மீது கொண்ட பத்தியின் மேலீட்டால் கலிக்கம்பர் செய்த அச்செயலைச் சுந்தரர் ‘கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்’ எனத் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். மனைவியார் கை தடிந்த கலிக்கம்பர், இறைவன் மலர்ச் சேவடி வணங்கித் திருத்தொண்டு புரிந்து சிவபதம் அடைந்தார். {{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} {{larger|<b>கலிக்காம நாயனார்‌:</b>}} சோழநாட்டில்‌ காவிரியின்‌ வடகரையில்‌ உள்ள திருப்பெருமங்கலம்‌ என்னும்‌ ஊரில்‌ சோழமன்னர்க்குப்‌ படைத்‌ தலைமைத்‌ தொழில்‌ பூண்ட வேளாளர்‌ குடியில்‌, சிறப்பாக ஏயர்கோக்‌ குடியில்‌ தோன்றியவர்‌ கலிக்காமனார்‌. இவர்‌ ‘நிதியமாவன நீறுகந்தார்‌ கழல்‌’ என்று துதியினால்‌ வணங்கும்‌ இயல்பினர்‌. சிவநெறியிலும்‌ அடியார்‌ பத்தியிலும்‌ சிறந்து விளங்கிய இவர்‌ மானக்கஞ்‌சார நாயனாரின்‌ அருமை மகளை மணந்துகொண்‌டார்‌; திருப்புன்கூர்‌ இறைவனுக்குத்‌ திருப்பணி செய்து மகிழ்ந்தார்‌. சுந்தரமூர்த்தி ஆரூர்ப்‌ பெருமானைத்‌ தூதுவிட்ட செய்தி கேட்டு ‘ஆண்டவனை அடியான்‌ ஏவும்‌ செயல்‌ நன்றோ’ என வெகுண்டு, அவர்‌ பால்‌ சினங்கொண்டார்‌. அது கேட்டுத்‌ தம்‌ பிழையுணர்ந்த சுந்தரர்‌, தம்பால்‌ கலிக்காமர்‌ கொண்ட கடுஞ்சினத்தை மாற்றியருளுமாறு இறைவனை வேண்டினார்‌. இவ்விருவரையும்‌ நண்பராக்கத்‌ திருவுளங்‌ கொண்ட இறைவன்‌ கலிக்காமர்க்கு வாட்டும்‌ சூலை நோய்தன்னை அருளினார்‌. அனல்‌ செய்‌ வேல்‌ குடைவதுபோல்‌ வேதனை தரும்‌ சூலைநோயால்‌ வருந்திய கலிக்காமர்‌ இறைவனை வேண்ட ஈசர்‌, வன்றொண்டர்‌ தீர்க்கில்‌ அன்றி அது தீராது என்‌றார். ‘வழிவழியாகச்‌ சிவத்தொண்டு செய்து வரும்‌ குடியில்‌ பிறந்த என் நோயை அவனோ தீர்ப்பது’ எனக்‌ கலிக்காமர்‌ நினைத்தார்‌. இறைவனும்‌ சுந்தரை அணுகி ஏயர்கோன்‌ உற்ற சூலை நோயை ‘நீ சென்று தீர்ப்பாயாக’ எனப்‌ பணித்தார்‌. ஆணை கேட்ட ஆரூரர்‌ விரைந்துவர, ‘ஆரூரர்‌ வந்தால்‌ தீரும்‌ இச்சூலை என்னில்‌ இவ்வயிற்றினைக்‌ கிழிப்பேன்‌’ என்று கூறி உடைவாளால்‌ கிழித்தார்‌. கலிக்காமருடன்‌ உயிர்விட அவர்தம்‌ மனைவியார்‌ துணியும்போது, நம்பி ஆரூரர்‌ நண்ணினார்‌ என்று அடியவர்கள்‌ கூற, உயிர்விட முனையாது, மற்றவர்‌களோடு அவரைப்‌ பூரண கும்பத்துடன்‌ வரவேற்‌றார்‌. கலிக்காமர்‌ நோம்‌ தீர்க்க இறைவன்‌ பணித்தனன்‌ என்று கூறும்‌ சுந்தரர்முன்‌ அவர்கள்‌ கலிக்காமனார்‌ பள்ளி கொள்கிறார்‌ என்றனர்‌. சுந்தரர்‌ அது கேட்டு அமையாது அவரை நான்‌ விரைந்து காணுதல்வேண்டும்‌ என்றார்‌. சென்று அவரது நிலை கண்ட சுந்தரர்‌ யானும்‌ உயிர்‌ துறப்பேன்‌ எனக்‌ குற்றுடைவாள்‌ பற்றினார்‌. அப்போது இறையருளால்‌ கலிக்காமர்‌ உயிர்‌ பெற்றுச்‌ சுந்தரரைத்‌ தடுத்‌தார்‌. இருவரும்‌ அன்புடன்‌ தழுவிப்‌ பிரியா நட்பு கொண்டு புன்கூர்ப்‌ பெருமானைப்‌ போற்றினர்‌. ஏயர்‌கோன்‌ சிவத்தொண்டு புரிந்து சிவனடி, சேர்ந்தார்‌. சுந்தரர்‌ வரலாற்றோடு இயைபுடைமையால்‌ இவர்‌ வரலாறு கூறும்‌ பகுதியினைச்‌ சேக்கிழார்‌ மிக விரிவாக 409 செய்யுட்களில்‌ கூறியுள்ளார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ இவரை ஏயர்கோன்‌ கலிக்காமன்‌, என்று தம்‌ திருத்தொண்டத்‌ தொகையுள்‌ குறிப்பிட்‌டுள்ளார்‌. {{Right|<b>ஜி.ஆர்‌.கி.</b>}} {{larger|<b>கலிகூலா:</b>}} உரோமப்‌ பேரரசின்‌ வரலாறு பல சிறப்புகளைப்‌ பெற்றிருப்பதைப்‌ போன்று பல குறைபாடுகளையும்‌ உடையது. செங்கோலோச்சிய மன்னர்‌களும்‌ அங்கு உண்டு; கொடுங்கோலர்களும்‌ உண்டு. இரண்டும்‌ கலந்த தன்மையைப்‌ பெற்ற பேரரசர்‌களுள் கலிகூலாவும்‌ ஒருவன்‌. பொற்காலம்‌ கண்ட அகசுதசு சீசருக்குப்பின்‌ (Augustus Caesar) தைபீரியசு (Tiberius), ஆட்டிபுரிந்தான்‌. பிறகு கி.பி. 37–ஆம்‌ ஆண்டில்‌ அகசுதசு செர்மானிகசு (Augustus Germanicus) என்பவன்‌ தனது 25-ஆம்‌ வயதில்‌ பட்டத்திற்கு வந்தான்‌. பாசறையில்‌ கி.பி. 12-ஆம்‌ ஆண்டில்‌ இவன்‌ பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும்போது காலிகே (Galigae) என்னும்‌ போர்வீரரின்‌ செருப்பை இவன்‌ அணிந்திருந்ததால்‌ இவனைக் கலிகூலா (Caligula) என்று குறிப்பிட்டனர்‌. அப்பெயரே இவனுக்கு நிலையாக அமைந்துவிட்டது. கயசுசீசர்‌ (Gaius Caeser) என்று அவன்‌ தன்னைப்‌ பெருமையாகக்‌ கூறிக்‌ கொண்ட போதிலும்‌, கலிகூலா என்றே இவனை வரலாற்றறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. இவன்‌ தனது ஆட்சியின்‌ தொடக்கக்‌ காலத்தில்‌ செங்கோலோச்சினான்‌. மக்‌-<noinclude></noinclude> 9s295899gcceat5temx8u4ajih9hrot பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/16 250 642346 1930500 2026-05-05T15:32:58Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xvi}}</noinclude>அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா (‘காடழிக’ - 103). அவர் எழுதுகிறார் : “வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும் நமக்கு. முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய். அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மை யாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்.” <b>தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று</b> ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து ‘நெடுஞ்செழியன் அன்றும், இன்றும்’ என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான ‘வாகையூர்’’ என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும். ‘திரு. வி.க. கூறுகிறார்’ என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, “உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது” என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.{{nop}}<noinclude></noinclude> innb72ti6aul50zx4bg14vtpq8q5qbq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/17 250 642347 1930501 2026-05-05T15:37:51Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " <b>தொடர் மடல்கள்</b> ‘போலீஸ் போலீஸ்’. ‘தண்டோரா சர்க்கார்’, ‘வெகுண்டெழுந்தான் பிள்ளை’, ‘நாடகமாடிடலாம்’, ‘படமும் பாடமும்’, ‘எல்லோரும் இந்நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh||xvii|}}</noinclude> <b>தொடர் மடல்கள்</b> ‘போலீஸ் போலீஸ்’. ‘தண்டோரா சர்க்கார்’, ‘வெகுண்டெழுந்தான் பிள்ளை’, ‘நாடகமாடிடலாம்’, ‘படமும் பாடமும்’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘கைராட்டைக் காவேரி’, ‘இந்தியர் ஆகின்றனர்’, ‘பட்டப்பகலில்’, ‘அறுவடையும் அணிவகுப்பும்’, ‘சூடும் சுவையும்’, ‘கைதி எண் 6348’, ‘கங்கா தீர்த்தம்’, ‘கனடா பயணம்’, ‘பற்று’, ‘பொருத்தம்’, ‘கனிவும் கசப்பும்’, ‘அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே’, ‘வெள்ளை மாளிகை’ ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், ‘குன்றின் மேலிட்ட விளக்கு’, ‘கைதி எண் 6342’, ‘வெள்ளை மாளிகையில்’ ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். மொழிபெயர்ப்புகள் கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில் என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, 1. மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு என்பன.<noinclude></noinclude> eaoqduj0s8n5oos07y05rbmhfgdvcie 1930502 1930501 2026-05-05T15:46:45Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh||xvii|}}</noinclude> <b>தொடர் மடல்கள்</b> ‘போலீஸ் போலீஸ்’. ‘தண்டோரா சர்க்கார்’, ‘வெகுண்டெழுந்தான் பிள்ளை’, ‘நாடகமாடிடலாம்’, ‘படமும் பாடமும்’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘கைராட்டைக் காவேரி’, ‘இந்தியர் ஆகின்றனர்’, ‘பட்டப்பகலில்’, ‘அறுவடையும் அணிவகுப்பும்’, ‘சூடும் சுவையும்’, ‘கைதி எண் 6348’, ‘கங்கா தீர்த்தம்’, ‘கனடா பயணம்’, ‘பற்று’, ‘பொருத்தம்’, ‘கனிவும் கசப்பும்’, ‘அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே’, ‘வெள்ளை மாளிகை’ ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், ‘குன்றின் மேலிட்ட விளக்கு’, ‘கைதி எண் 6342’, ‘வெள்ளை மாளிகையில்’ ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். <b>மொழிபெயர்ப்புகள்</b> கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது ‘வெள்ளை மாளிகையில்’ என்னும் படைப்பாகும். ‘கதைகள் கருத்தரிக்க’ என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, {{left_margin|3em|<poem>1. மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு</poem>}} என்பன.{{nop}}<noinclude></noinclude> 0x3wvlrg6iltmlq449wtf611y13evs4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/871 250 642348 1930503 2026-05-05T15:51:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் இவளைப் பாராட்டினர். பிறகு தனக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு கொடுங்கோலனாக மாறிவிட்டான். தன்னை மதிக்காதவர்களைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கத்துப்‌ பரணி|843|கலிங்கத்துப்‌ பரணி}}</noinclude>கள் இவளைப் பாராட்டினர். பிறகு தனக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு கொடுங்கோலனாக மாறிவிட்டான். தன்னை மதிக்காதவர்களைக் கொலை செய்ய அவன் தயங்கவில்லை. தானே கடவுள் என்று கூறித் தன்னை வழிபடக் கோயில் ஒன்றையும் கட்டுவித்தான். அவனுடைய செயல்கள் யாவும் குடியாட்சி முறைக்கு எதிராக இருந்தன. குடியாட்சியில் அவனுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. இவனைக் கி.பி. 41-இல் இவன் மெய்காப்பாளர்களே வெட்டி வீழ்த்தினர். {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலிங்கத்துப் பரணி:</b>}} முதல் குலோத்துங்க சோழனது (கி.பி. 1078-1118) கலிங்க வெற்றியைச் சிறப்பித்துப் பேசுவது இந்நூல்; சந்தநயம் பொருந்திய 594 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகும். வடகங்கர் குல வேந்தன் அனந்தபன்மன், முதற்குலோத்துங்கனுக்கு இரண்டு முறை திறை செலுத்தவில்லை. எனவே, படைத்தலைவனாகிய வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்தின்மீது படையெடுக்கப் பணித்தான் சோழன். வலிய மலையரண் கொண்ட கலிங்கத்தைக் கருணாகரன், நால்வகைப் படைகளையும் நடத்திச் சென்று வென்று மிக்க பொருளையும் கைப்பற்றினான். அனந்தபன்மனைப் பற்றிய சுவடு ஒன்றும் தென்படவில்லை. வென்ற பொருள்களுடன் சோழனை வந்து வணங்கினான். இந்த அரிய வரலாற்று நிகழ்ச்சி இந்நூலின் தோற்றத்துக்கு அடிப்படையாகும். இந்நூலை எழுதிய புலவர் கவிச்சக்கரவர்த்தி செயங் கொண்டார் ஆவர். இவர் சோழனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய ‘பரணி’ என்னும் பிரபந்த முறையில் இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயினை, மன்னன் பரிசாக அளித்தான் என்று கூறுவர். தோல்வியுற்றவர் பெயரைச் சார்ந்து பரணி இலக்கியம் வழங்கப்படும் மரபை ஒட்டி இந்தாத் பெயரும் அமைந்துள்ளது. தினைப்புனத்தில் பரணில் அமர்ந்து பறவைகளை ஓட்டுதல் போல், போர்க்களத்தில் யானை மீதமர்ந்து பகை வீரர்களைத் துரத்துவதால் செய்தி பற்றிக் கூறும் நூல் பரணி எனப்பட்டது என்பர். அரசனின் படைக்கலங்களால் அமைக்கப்பட்ட போர்ப்பரண் மீதிருந்து புலவர் இந்நூலைப் பாடுதலாலும் இப்பெயர் அமைந்தது என்பர். பரணி நாளில் பிறந்தானைப் பாடுதல் காரணமாகவும், பரணி நாளில் கொற்றவைக்கு வழிபாடு செய்தல் காரணமாகவும் இப்பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். பரணியின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் கூறப்படும். எழுநூறு யானைகளை வென்றவனுக்குப் பாடப்படுவது பரணி என்று பன்னிரு பாட்டியலும், ஆயிரம் யானைகளை வென்றவனுக்கு வகுப்பது பரணி என்று இலக்கண விளக்க பாட்டியலும் கூறுகின்றன. இவ்வகையில் கலிங்கத்தை வென்ற சோழனுக்கு இப்பரணி நூல் பாடப்பட்டதாகும். செயங்கொண்டார் தீபங்குடியைச் சேர்ந்தவர் என்பது தமிழ்நாவலர் சரிதையால் அறியப்படுகிறது. எனவே, சமணர் என்று சிலர் கருதுவர். ஆயின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உமாபதி முதலிய கடவுளரை வாழ்த்திப் பாடியிருத்தலின் இவர் சைவரென்றே தெரிகிறது என்று கா. சுப்பிரமணியபிள்ளை தனிய அறிஞர்கள் கூறுவர். பரணி இலக்கியங்களுள், காலத்தால் முற்பட்ட இப்பரணியைச் செய்த புலவர் ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார். ஒட்டக்கூத்தர் தம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில், கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ் செய்த சோழன் என்று புலவரையும், மன்னனையும் பாராட்டியுள்ளார். போர்க்களத்திலிருந்து மீண்ட தலைமகன்பால் ஊடல் கொண்ட தலைமகளது ஊடலைத் தீர்த்தற் பொருட்டுப் புலவர்கள் வாயிலாக நின்று ஊடல் தீர்த்தபின் தலைவன் சென்ற காட்டின் கொடுமை, அவனது வீரம், காட்டிலுள்ள பேய்கள் காளிக்குக் கூறுதல், காளிபேய்களுக்கு உரைத்தல் என்று இயற்றைக் கூறும் முறையில் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியை இந்நூல் கூறுகிறது. இந்நூல் 13 பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை யாவன: கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம், காளிக்குக் கூளி கூறுயது, போர் பாடியது, களம் பாடியது. கடவுள் வாழ்த்தில் குலோத்துங்கன் நீடுவாழ்வ எதற்கு உமாபதி, திருமால், நான்முகன், சூரியன் கணபதி, முருகன், நாமகள், உமையம்மை, சத்தமாதர்கள் ஆகியோர் வாழ்த்தப்படுகின்றனர். மறையவர், மழை, நாடு பற்றிய வாழ்த்தும் கூறப்படுகிறது. கடைதிறப்புப் பகுதி இன்பச் சுவையை இனிமையுற எடுத்துரைப்பதாகும். பிரிவு நீட்டித்ததால் ஊடல் கொண்டு, தாளிட்ட கதவுகளைத் திறக்க மகளிர் மறுக்கின்றனர்; அதாவது வாயில் மறுக்கின்றனர். இந்நிலையில் புலவர் ஊடல் தணிக்கும்<noinclude></noinclude> qmo5ki1p90od1cyigccs2pxa8pf63fs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/18 250 642349 1930504 2026-05-05T15:52:40Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xviii}}</noinclude>மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய ‘எலினார் அந்தனி கதை’, ஓ. என்ரீஇ எழுதிய ‘உலகநாதன் கதை’, ‘ஒரு சீமான் மகன் கதை’ ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய ‘சாடர் லீ சீமாட்டியின் காதலன்’ என்பன குறிப்பிடத்தக்கன. <b>எலினார் அந்தனி கதை</b> அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்’ என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63-3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு ‘6342’ என்கிற கடிதத் தலைப்பாகும். <b>நாடகத்துறை வித்தகர்</b> பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு. வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் ‘இந்நாட்டு இங்கர்சால்<noinclude></noinclude> lhek5zom327lgjao5qlp6zi1a4ge2hq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/19 250 642350 1930505 2026-05-05T15:55:16Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{center|xix}}</noinclude>‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', 'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. 'செல்வ சீமானின் மகன்' பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும். உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும் உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude> o05xxfs2to55vr7o0fpkotuee1ywa85 1930573 1930505 2026-05-06T04:24:48Z Deepa arul 5675 1930573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{center|xix}}</noinclude>‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். ‘பெரிய மனுஷா’, ‘அப்படித்தான்’, ‘கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்’, ‘சகவாசதோஷம்’, ‘ஆவடிக்கும் பணம் திரட்டியது’, ‘ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு’, ‘மங்களபுரி மைனர்’, ‘செல்வ சீமானின் மகன்’ போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. <b>‘செல்வ சீமானின் மகன்’</b> பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டிவிடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும். உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும் உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude> kp0e4u71anfhso0fh66wn7q04t2kx09 1930632 1930573 2026-05-06T10:06:47Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|xix}}</noinclude>‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். ‘பெரிய மனுஷா’, ‘அப்படித்தான்’, ‘கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்’, ‘சகவாசதோஷம்’, ‘ஆவடிக்கும் பணம் திரட்டியது’, ‘ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு’, ‘மங்களபுரி மைனர்’, ‘செல்வ சீமானின் மகன்’ போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. <b>‘செல்வ சீமானின் மகன்’</b> பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டிவிடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். ‘இவன் தன்னுடைய திறமையாலும். உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்’ என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். ‘செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே’ என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். <b>கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்</b> உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude> tdl8v3cw9sknffa3b4vot1cgk1rddsb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/872 250 642351 1930511 2026-05-05T16:58:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாயிலாக நின்று, பெண்களின் உடலுறுப்புகளையும், மனவிருப்பங்களையும், இயல்புகளையும் காமச் சுவை பட வருணித்துப் பாடிக் கதவுகளைத் திறக்க வேண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கத்துப்‌ பரணி|844|கலிங்கத்துப்‌ பரணி}}</noinclude>வாயிலாக நின்று, பெண்களின் உடலுறுப்புகளையும், மனவிருப்பங்களையும், இயல்புகளையும் காமச் சுவை பட வருணித்துப் பாடிக் கதவுகளைத் திறக்க வேண்டுகிறார். காடு பாடியது என்பது, பாலைநிலத்தைப் பற்றிப் பாடியதாகும். பாலைத் தெய்வமாகிய கொற்றவையும், அவளுக்குக் குற்றேவல் புரியும் பேய்க்கூட்டமும் வாழும் பாலைநிலத்து மரஞ்செடி கொடிகள் வெப்பக் கொடுமையால் விளங்கும் நிலை சொன்னயம் பெருகக் காட்டப்பட்டுள்ளது. கோயில் பாடியது என்பது காளிதேவியின் கோவிலைப் பாடியதாகும். சோழன் வாளுக்கு இரையான வீரர்களின் உடலால் சமைத்த கோயில் காளி கோயில். அறுபட்ட தலைகளாலும், நிணத்தாலும், குருதியாலும், யானைக் கொம்புகளாலும், எலும்புகளாலும் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தலைத் தோரணங்கள் தொங்குகின்றன. பிணங்களின் ஈம எரியே விளக்காக உள்ளது. வீர மறவர்கள் தேவியிடம் வரம் தருமாறு கேட்டு, அதற்குப் பலியாகத் தம் உறுப்புகளை அறுத்து வைப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் தம் தலைகளை அரிந்து காளியின் கையில் கொடுத்து நிற்கும் நிலையிலும் வாயால் வழிபடுகின்றனர். குறைபட்ட உடல் கூப்பிய கையுடன் நிற்கிறது. எருமைகள் பலியிடப்படுகின்றன. பேய்கள் சுற்றித் திரிகின்றன. நரிகள் பிணங்களுக்காகச் சண்டையிடுகின்றன. இவ்வாறு அச்சமும், வீரமும் தோன்றச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. தேவியைப் பாடியது என்னும் பகுதி, காளிதேவியின் தோற்றத்தைப் பாதாதிகேசமாக விரிவாக வருணிக்கிறது. ஆதிசேடன், வாசுகி ஆகிய இரு பாம்புகளும் தேவிக்குப் பாதச்சிலம்புகள்; முகம்மதியை உணர்த்தும். நெற்றியில் உள்ள திலகம் இளம் பரிதியை உணர்த்தும், ஆதிசேடனும் அட்டத்திக்கு யானைகளும் பூமியைத் தாங்கினாலும், தேவி நடக்கும்போது குழிவே ஏற்படுவதாயிற்று. அக்குறையை அகற்றிக் குலோத்துங்கன் பூமியை நிலை பெறச் செய்ததால் அவன் மீதுள்ள மகிழ்ச்சிக் களிப்பில் நடமிடுவதுபோன்றே அன்னை நடக்கின்றாள். அவளுடைய கொங்கை, உடை, வயிறு, மேலாடை, கை, இதழ், கண், வாய் ஆகியவற்றின் அழகு பாடப்படுகிறது. உலகத்தையே அன்னையின் உறுப்புகளாகவும், அணிகலன்களாகவும் வருணித்துள்ளார் புலவர். பேய்களைப் பாடியது என்பதில் பேய்களைப் பற்றிய வருணனைகள் இடம்பெற்றுள்ளன. பேய்களின் நிலையால், இரண்டு வகையில் சோழன் மாட்சி உணர்த்தப்படுகிறது. மாற்றரசர்கள் யாவரும் திறை செலுத்துவதால் அதிகமாகப் போர் நடக்க வழியில்லை. எனவே, பேய்கள் பசியால் வாடுகின்றன. சோழன் நடத்தும் போர்களால் மகிழ்ந்து உறுப்புகளில் ஊனம் உண்டாகுமளவு துள்ளி விளங்குகின்றன சில பேய்கள். இந்திரசாலம் என்பதில், ஒரு முதிய பேய் காளிதேவியின் கோபத்துக்கு அஞ்சி, இமயமலை சென்று நெடுங்காலம் அங்கே தங்கிப் பல வகையான மாய வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டு திரும்பி வந்து, காளிதேவியின் அனுமதி பெற்று, அவள் முன்னிலையில் கற்றுவந்த வித்தைகளை இந்திரசால விரித்துக் காட்டுவது இடம்பெறுகிறது. இராசபாரம்பரியம் என்பது பிற பரணி நூல்களில் கூறப்படாத பகுதியாகும். சோழ மன்னர் குல முறை இதில் கூறப்படுகிறது. பாட்டுடைத் தலைவனின் பெயரும், புகழும் விரித்துரைக்கப்படுதல் நோக்கமாகும். சோழர் வரலாற்றை நாரதர் சொல்லக் கரிகாலன் இமயத்தில் எழுதினானாம். இந்திரசாலம் செய்த பேயே, கரிகாலன் எழுதியதை இமயத்தின் கற்று வந்ததாகச் சோழர்குல வரலாற்றை விவரிக்கிறது. புராண, இதிகாச காலச் சோழ வரலாறுகளும், நிகழ்ச்சிகளும் இமயத்தில் புலி பொறித்தமையும், கோச்செங்கட் சோழன் மீது களவழி நாற்பது பாடப்பட்டமையும், கரிகாலன் சிற்றரசர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை அமைத்தமையும், கண்ணனே முதற்குலோத்துங்கனாக அவதரித்துள்ளான் என்பதும், பிறவும் கூறப்பட்டுள்ளன. இப்பகுதி வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் பயன்படுவது. இதில் கூறப்பட்டுள்ள வரலாற்றை யாரேனும் தவறாக உரை செய்தால் அவர்களுடைய குறைகளைச் சோழர்குல மன்னர்கள் பொறுத்துக் கொள்வார்களாக என்றும் குறிக்கப்பட்டுள்ளது. பேய்முறைப்பாடு என்பது பசிக் கொடுமைக்கு ஆற்றாது பேய்கள் எல்லாம் தேவியிடம் முறையிடுவதைப் பேசுகிறது. ஒரு முதுபேய், கலிங்க நாட்டில் தான் கண்ட தீய சகுனங்களை எடுத்துச் சொல்கிறது. கலிங்கத்தில் பெரும்போர் நிகழும். அதனால், பேய்களின் பசிதீரும் என்று காளி தேவி உரைக்கப் பேய்கள் மகிழ்ந்து குதிக்கின்றன. கலிங்கப்போர் இவ்வாறு தோற்றுவாய் செய்யப்படுகிறது. கலிங்கப் போர், இலங்கைப் போரைப் போல் இரண்டு மடங்கு நடக்கும் என்று தேவி கூறுகிறாள். அவதாரம் என்பதில், முதற் குலோத்துங்கன் அவதரித்த பெருமை, வளர்ந்த அருமை, கலை பயின்ற மேம்பாடு, வீரச்சிறப்பு, அவன் முடிதர்க்கும் முன் இருந்த நாட்டு நிலை, முடிதரித்தபின் உள்ள<noinclude></noinclude> kky7d9ohnw6z3dswvcz6gbg81mgrjuq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/873 250 642352 1930513 2026-05-05T17:21:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டுநிலை ஆகியவற்றைக் காளிதேவி கூறுகிறாள். புலவர் அரசனைப் புகழ்வதில் கொண்டுள்ள ஈடுபாடு இப்பகுதியில் விளங்குகிறது. குலோத்துங்கன் ஆட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கத்துப்‌ பரணி|845|கலிங்கப்போர்}}</noinclude>நாட்டுநிலை ஆகியவற்றைக் காளிதேவி கூறுகிறாள். புலவர் அரசனைப் புகழ்வதில் கொண்டுள்ள ஈடுபாடு இப்பகுதியில் விளங்குகிறது. குலோத்துங்கன் ஆட்சிச் சிறப்பு வியந்து பாராட்டப்படுகிறது. கலிங்கப் போரின் வித்து இப்பகுதியில் ஊன்றப்படுகிறது. காளிக்குக் கூளி கூறியது என்பதில், கலிங்கப் போரைக் கண்ணால் கண்டுவந்த கூளி, காளிதேவியிடம், போரின் போக்கு, பயன், போருக்கான காரணங்கள் ஆகியவற்றைக் கூறுகிறது. சோழன் படைச் சிறப்பு, கருணாகரன் படை நடத்திய திறம், படை சென்ற வழிகள், கடந்து சென்ற ஆறுகள் ஆகியவை விளக்கப்படுகின்றன. ‘சோழனுக்கு எளியனேயன்றி அவன் படைக்கு எளியனல்லன்’ என்று இகழ்ந்துரைத்த கலிங்க மன்னனுக்கு அமைச்சன் எங்கராயன் இடித்துக் கூறி அறிவுறுத்துகிறான். அதனைப் பொருட்படுத்தாமல் கலிங்க அரசன் போருக்குத் துணிகிறான். இருபடைகளும் போர்புரிகின்றன. போர்பாடியது என்னும் பகுதி கலிங்கப்போர் பற்றியது. போர் நிகழ்ச்சிகள் துடிப்பான சொற்களால் வருணிக்கப்படுகின்றன. சோழப் படைகளின் செயல்திறத்தால் குருதி ஆறு பெருகியது; எரி பரவிற்று; வெட்டிய உடல்கள் குவிந்தன. வீரர்கள் கண்களை மூடினால் அவர்களைத் தாக்காமல் விடுத்த போரறமும் அங்குக் காணப்பட்டது. கலிங்க அரசன் எங்கோ ஓடி விட்டான். கலிங்க வீரர்கள் தப்பிப் பிழைக்க முந்திக்கொண்டு தமிழர், தமிழன் என்று அலறி ஓடினர்; ஆடையிழந்த சில கலிங்க வீரர், தம்மை அமணர் என்று சொல்லி உயிர்தப்பினர்; சிலர் வில் நாணைப் பூணூலாக அணிந்து, கங்கையாட வந்தவர்கள் என்று கூறிப் பிழைத்தனர்; சிலர் குருதி தோய்ந்த ஆடைகளைக் காவியாடைகளாகப் புனைந்து, தலைமுடி களைந்து, சாக்கியர் என்று கூறித் தப்பினர், சிலர் தம்மைத் தெலுங்கர் என்று கூறியும், யானை மணியைத் தாளமிட்டுக்கொண்டு, பாடிப்பிழைக்கும் பாணர்கள் என்று கூறியும், பிழைத்தனர். இவ்வாறு வேடமிட்டவர்களும், சித்திரங்களில் வரையப்பட்டிருந்தவர்களுமே தப்பியவர்கள். வெற்றி பெற்ற தொண்டைமான் கைப்பற்றிய பல்வகைப் பொருள்களையும் திரட்டி அபயன் முன் கொண்டு வந்து வைத்து வணங்குகிறான். களம் பாடியது என்னும் பகுதியில், கலிங்கப் போரை எடுத்துரைத்த பேய், போர்க்களத்தை நேரில் சென்று காணும்படி தேவியை வேண்டிக் கொள்கிறது. தேவியும் பேய்கள் சூழச் செல்கிறாள்; அங்குக் காணப்பெறும் வீரக் காட்சிகளையும், கொடிய தோற்றங்களையும், பரிவாரங்களுக்குக் காட்டுகிறாள். இப்பதின்மூன்று உறுப்புகளுள் கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, இராசபாரம்பரியம், அவதாரம் என்ற நான்கு தவிர ஏனைய ஒன்பதும் கொடிய போர் வருணனைகளைக் கொண்டு விளங்குகின்றன என்பது சுட்டத்தகும். இப்பரணி நூலை ஆங்கிலத்தில் சுருக்கமாகத் திரு.வி. கனகசபைப் பிள்ளை கி.பி. 1890–இல் மொழிபெயர்த்து இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளார். இக்காலத்தில் இந்நூல் பற்றி ஆராய்ச்சி நூல்கள் பல வந்துள்ளன. {{Right|<b>ந.மா.</b>}} {{larger|<b>கலிங்கப்போர்:</b>}} மௌரியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் ஏறக்குறைய பாரத தேசத்தின் அனைத்துப் பகுதிகளும் அடங்கியிருந்த சமயத்தில், மகாநதிக்கும். கோதாவரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியாக இருந்த கலிங்கம் மௌரியப் பேரரசின் ஆளுகைக்கு உட்படாமல் ஒரு சிற்றரசின் கீழ் இருந்தது. இது வங்கத்திற்கும் பாரதத்தின் தென்பகுதிக்கும் இடையே கடல் போக்குவரத்துக்கும், தென்னகத்தின் சாலைப் போக்குவரத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகி குறுநில மன்னரால் ஆளப்பட்டு வந்தமையால் மௌரியப் பேரரசின் ஆதிக்கப் போருக்கு இலக்கானது. ஏனைய பல சிற்றரசுகள் மௌரியப் பேரரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டே செயல்பட்டன. ஆனால், போர்ச்சிறப்புப்பெற்ற கலிங்கம் அசோகரின் ஆளுகைக்கு உட்பட மறுத்ததால் கலிங்கப்போர் தவிர்க்க முடியாததாயிற்று. அசோகர் முடிசூடிய 8–ஆம் ஆண்டில் தொடங்கிய கலிங்கப்போர் ஏறக்குறைய ஓராண்டுக் காலம் நடந்தது. அசோகரின் 13–ஆம் ஆட்சி ஆண்டின் (கி.மு. 256) 13-ஆம் கல்வெட்டு, கலிங்கப்போர் பற்றிய செய்திகளைத் தருகிறது. இப்போரில் ஏறக்குறைய 1,50,000 பேர் நாடு கடத்தப்பட்டனர்; 1,00,000 பேர் படுகாயம் அடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். துறவிகளும், அந்தணர்களும், கல்விமான்களும் கலிங்கப் போரின் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதுவரை யாரும் வெற்றி கொள்ள முடியாத கலிங்கம், பல்லாயிரக் கணக்கானோரின் இரத்த வெள்ளத்தில் அசோகரின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. நாடு பிடிக்கத் துடித்த அசோகனுக்குக் கலிங்கப்போரே கடைசிப் போரானது. வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த கலிங்கப் போரினால் அசோகப் பேரரசு இந்தியாவில் எந்தப் பேரரசும் அதுவரை பெறாத அளவு விரிவடைந்தது. பலரின் இறப்பைப் பார்த்த அசோகர் தம் நாடு பிடிக்கும் எண்ணம் மாறி, ஒரு புத்த துறவியாகி, இனிப்போர் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இவ்வகை-<noinclude></noinclude> 2hrxi8gc40hzo4g1uux427k3zddnstc பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/184 250 642353 1930516 2026-05-05T17:32:10Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":“வயிறேன் வெல்கிறது? :இதயமேன் தோற்கிறது?” இப்படிக் கேள்வி எழுப்புகிற நண்பர், “வயிறே பெரி தென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” என்று விடையை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||175}}</noinclude>:“வயிறேன் வெல்கிறது? :இதயமேன் தோற்கிறது?” இப்படிக் கேள்வி எழுப்புகிற நண்பர், “வயிறே பெரி தென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” என்று விடையையும் அளித்துக் கவிதையை முடிக்கிறார். வயிறே பெரிதென்று வாழ்கின்றவர்கள், படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் பார்க்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு! படைப்பின் மகத்துவம் என்ன? வயிறு கீழே இருக்கிறது! வயிற்றைவிட இதயம் மேலானது என்பதை இந்தப் படைப்பின் மகத்துவம் விளக்குகிறது என்பது கவிதையின் தொடக்கம். பசித் தீயினால் பற்றியெறிந்த வயிறுகளுக்கும்; பளிங்கு மாளிகையில் பாவையர் அணைப்பில் சுகங்கண்ட மன்னர்களின் இதயங்களுக்கும் நடைபெற்ற போராட்டங்களில், இறுதியில் வயிற்றுப்பட்டாளங்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. பிரஞ்சு நாட்டு லூயிமன்னனின் பாஸ்டிலி சிறைக் கொடுமைகளையும், ரஷ்ய நாட்டு ஜார் மன்னனின் “உம்” என்றால் சிறைவாசம்—“ஏன்?” என்றால் வனவாசம்! என்ற வெறியாட்டங்களையும் புறங்கண்டு புதிய வரலாறுகளைப் படைத்த தொழிலாளர்களை உசுப்பிவிட்டது; வறுமை! வறுமை! வேதனை! வேதனை! பசி! பசி! அதாவது ஆணவங்கொண்ட இதயத்துக்கும், அல்லற்பட்டு ஆற்றாத அளவுக்கு மூண்ட, பசிக்கொடுமைக்கும் இடையில் எழுந்த போராட்டத்தில் வயிறுவென்றது! அதுதான் நியாயமும்கூட! கவிஞர் குறிப்பிடுவது அந்தப் போராட்டத்தையல்ல! பல மனிதர்களுடைய வயிற்றுக்கும் சில மனிதர்களுடைய இதயத்துக்கும் நடக்கிற போராட்டத்தில் நல்லோர் அனுதாபம் வயிற்றின் பக்கம்தான்!{{nop}}<noinclude></noinclude> n665e6tsv4l30qldof67y56un15nyys பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/185 250 642354 1930517 2026-05-05T17:37:00Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆனால், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் இதயம் வெல்வது சரியா? அல்லது வயிறு வெல்வது சரியா? என்பதுதான் பிரச்சினை! வயிறா? இதயமா? என்ற கேள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|176||கலைஞர்}}</noinclude>ஆனால், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் இதயம் வெல்வது சரியா? அல்லது வயிறு வெல்வது சரியா? என்பதுதான் பிரச்சினை! வயிறா? இதயமா? என்ற கேள்வியைக் கேட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டும்போது, சோவியத் ரஷ்யா, பிரான்சு, போன்ற நாடுகள் வயிற்றின் வெற்றியை வளிப்படுத்துகின்றன! ஆனால்! அந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அடங்கிய இந்த உலகில், ஒவ்வொரு தனி மனிதனும் தனது இதயத்துக்கு முக்கியம் கொடுக்கிறானா? அல்லது வயிற்றுக்கா? இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? வயிறா? இதயமா? என்ற கேள்வி, தனி மனிதனின் வாழ்வில் எழுபோது இரண்டில் எந்த ஒன்றை அவன் தேர்ந்தெடுக்கவேண்டும்? “நீ யாரை இதுவரை நேசித்து வந்தாயோ, அவனைக் காட்டிக்கொடு! அதற்குப் பரிசு இதோ பார்!” இப்படி ஒரு கவர்ச்சியான ஆசை காட்டப்படும்போது தனி மனிதனுடைய வாழ்வில் பிரச்சினை உருவாகிறது! :“வயிறா? இதயமா?” இந்தக் கேள்விக்கு அவன் விடை காண வேண்டியவனாகிறான். “நீ, அவனை இனியும் நேசித்தால், அவனுடைய அன்புக்குரிய தோழனாக இருந்தால் ஏன்; அவனைப்பற்றிப் பேசினால் கூட! இல்லை! இல்லை! நினைத்தால்கூட! உனக்குக் கேடு வரும்! வாழ்வு கெடும்! வளம் இழப்பாய்!” இப்படி ஒரு அச்சுறுத்தல் கிளம்புகிறதோ இல்லையோ — அவனே இதுபோல ஒரு கனவு காணுகிறான் என்றுவைத்துக் கொள்வோம்! அப்போதும் இதோ பிரச்சினைதான்!{{nop}}<noinclude></noinclude> bw7aa5n1i014ltll08s2sisc1mjx4ry பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/186 250 642355 1930518 2026-05-05T17:42:17Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "“வயிறா? இதயமா?” “இங்கிலாந்து மன்னரைப் பற்றிப் புகழ்ந்து பேசு! இங்கிருக்கும் காந்தியடிகளைப் பற்றி வாய் திறக்காதே! திறந்தால், சிறைக்கதவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||177}}</noinclude>“வயிறா? இதயமா?” “இங்கிலாந்து மன்னரைப் பற்றிப் புகழ்ந்து பேசு! இங்கிருக்கும் காந்தியடிகளைப் பற்றி வாய் திறக்காதே! திறந்தால், சிறைக்கதவு திறக்கும்!” வெள்ளையர் விடுத்த ஆணைகள் இடியென முழங்கியபோது; இந்திய விடுதலை வீரர்களின், இதயங்களும் வயிறுகளும் வாதிட்டுக் கொண்டன! வயிறுகள் பின்வாங்கின! இதயங்கள் வென்றன! உலகம் தோன்றி, மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வயிற்றுக்கும் இதயத்துக்கும் போராட்டம் நடந்து கொண்டுதானிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன்; வயிறுகள் பல, ஒரு அணியிலும்; இதயங்கள் சில, ஒரு அணியிலும் நின்று நடைபெறுகிற வர்க்கப் போராட்டங்களை நான் விவரிக்க இந்தக் கடிதம் எழுதவில்லை. இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் அந்த வர்க்கப் போராட்டத்தை, முற்போக்கான திட்டங்களின் மூலம் தவிர்த்து — நிலத் திமிங்கலங்கள், பூர்ஷுவாக்கள், ஆலை அரசர்கள் — முதலியவர்களிடமிருந்து பாட்டாளிச் சமுதாயத்தைக் காப்பாற்றி விடுவிக்கவும், அவர்தம் வாழ்வில் ஒளியேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை நிறுவிடவும் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளைக் கழகம் ஆதரித்து வந்திருக்கிறது. தொடர்ந்து ஆதரிக்கும்! எனவே, வர்க்கப் போராட்டத்தில் வயிற்றின் போர்க் கொடியை அலட்சியப்படுத்துகிற இதயங்களுக்கு நமது ஆதரவு இல்லை. இங்கே, கவிஞரும் நானும் வாதாடுவது அந்த இதயத்தைப்பற்றியல்ல!{{nop}}<noinclude></noinclude> ie0kdh162vnefthfskgapocmdnc01j9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/874 250 642356 1930520 2026-05-05T17:47:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யில், கலிங்கப்போர் மௌரியப் பேரரசின் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது. பிற்கால மௌரியரின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கம்‌|846|கலித்தாழிசை}}</noinclude>யில், கலிங்கப்போர் மௌரியப் பேரரசின் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது. பிற்கால மௌரியரின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்போர், ஒரு மாபெரும் பேரரசின் சமயக் கொள்கையைப் பாதித்ததுடன் அதுவே அப்பேரரசு அழியவும் காரணமாயிற்று. {{Right|<b>இ.கா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Sen, R.K.,</b> Rock Edicts of Asoka, Calcutta, 1955. <b>Thapar, Romila;</b> Asoka and Decline of Mauryas, Oxford, 1963. {{larger|<b>கலிங்கம்:</b>}} இன்றைய தென் ஒரிசா பகுதி முற்காலத்தில் கலிங்கம் எனக் கூறப்பட்டது. கலிங்க நாடு வரலாற்றுச் சிறப்புடைய நாடாகும். பாலி என்ற அரசனின் மகன் ஒருவன் கலிங்கத்தை ஆண்டதாக மகாபாரதம் கூறுகிறது. அரிவமிசம், கருடபுராணம் போன்ற நூல்களில் கலிங்க நாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. யானைகளுக்குப் புகழ் பெற்ற நாடாகக் கலிங்கம் விளங்கியதைக் கௌடில்யரின் அர்த்தசாத்திரம் கூறுகிறது. பிளினி என்பவர் இந்நாட்டைக் ‘கலிங்காய்’ (Calingae) எனவும், இங்கு வாழ்ந்த மக்களை ‘மல்லர்’ என்றும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நாடு பௌத்தத்துடனும் தொடர்புடையதாக விளங்கியது. பௌத்த சமய நூல்களில் கலிங்க வரலாறு, பண்பாடு குறித்த செய்திகள் உள்ளன. அக்காலத்தில் இந்தியாவின் ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றாக இது விளங்கியது. புராணங்கள் கூறும் இரேனு (Renu) என்ற அரசரின் காலத்தில் இந்தியாவில் இருந்த ஏழு அரசுப் பிரிவுகளில் ஒன்றாக இது விளங்கியது. கலிங்க நாட்டின் முதல் தலைநகரம் ‘தண்டபுரம்’. கலிங்கத்தில் வறட்சி ஒன்று ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. கலிங்க நாடு இலங்கை, சிரீவிசயம் ஆகியநாடு நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கலிங்க நாட்டைப் பற்றிச் சிங்களர்களும் கிரேக்கர்களும் உரோமானியர்களும் அறிந்திருந்தவர். இலங்கையின் புத்தசமய நூல்களான மகாவமிசம், தீபவமிசம், ஆகிய நூல்களில் இலங்கை அரசர்கள் கலிங்க நாட்டு அரசர்களிடம் திருமண உறவு கொண்டமை கூறப்பட்டுள்ளது. மகத நாட்டை ஆண்ட நந்த மரபைச் சார்ந்த அரசர்கள் கலிங்கத்தைத் தங்களின் ஆளுகையின் கீழ்க் கொணர்ந்தனர் எனப் புராணங்கள் கூறுகின்றன. மௌரியப் பேரரசர் அசோகர் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து அப்பகுதியை மகதப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இப்போரே அசோகரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. அசோகருக்குப் பின், காரவேலன் என்ற அரசர் கலிங்க நாட்டின் சிறந்த அரசராக விளங்கினார். கீழைக் கங்கர்கள் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிங்கத்தை ஆண்டனர். கலிங்கம், சிங்கபுரம், கபிலை ஆகிய இரு நகரங்களைக் கொண்டு விளங்கியது எனத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. தமிழகத்தை ஆண்ட சோழ அரசர்கள் இந்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கலிங்கத்தைக் கிழைச் சாளுக்கியக் குறுநில மன்னர் மதுகாமார்ணவர் என்பவர் ஆட்சி செய்த பொழுது (கி.பி. 1019–1038) சோழ அரசர் முதலாம் இராசேந்திரன் கலிங்கத்தின் வழியாகக் கங்கைவரை படையெடுத்து வென்றார். கலிங்கத்தை கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அனந்தவர்மன் சோட கங்கன் சோழ மன்னருக்குத் திறை கொடுக்க மறுத்ததால், முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தலைவர் தொண்டைமான் கலிங்கத்தின் மீது படையெடுத்து அனந்தவர்மனை வென்றதாகக் கல்வெட்டுகளும், செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் கூறுகின்றன. அனந்தவர்மனுக்குப் பின்னர் வந்தவர்கள் வங்காள இசுலாமியரின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திக் கலிங்கத்தைப் பாதுகாத்தனர். கலிங்க மன்னரான முதலாம் நரசிம்மன் (கி.பி. 1238–1264) என்ற அரசர் கொனாரக்கு என்னுமிடத்தில் சூரியனுக்குக் கோயிலமைத்தார். இவர் பூரி என்னுமிடத்திலுள்ள சகந்நாதர் கோயிலையும் புதுப்பித்தார். கங்க மரபின் கடைசி அரசரான நான்காம் பானு தேவரை அவர் தம் அமைச்சர் கபிலேந்திரர் கி.பி. 1434–இல் ஆட்சிப்பீடத்திலிருந்து இறக்கி விட்டுத் தாமே அரசரானார். கசபதி என்னும் மரபு கபிலேந்திரர் காலத்திலிருந்து கலிங்கத்தை ஆட்சி புரிந்தது. கபிலேந்திரர் தனது ஆளுகையை விரிவுபடுத்தினார். கசபதி மரபினர் கி.பி. 1541 வரை கலிங்கப் பகுதியை ஆட்சி செய்தனர். கலிங்கம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாமினி, விசய நகர அரசுகளுடன் தொடர்பு கொண்டு விளங்கியது. கலிங்கம் சிறந்த நூலாடைகளுக்குப் பெயர் பெற்றது. தமிழிலக்கியங்கள் இங்கு நெய்யப்பட்ட ‘கலிங்கம்’ என்னும் ஆடைகளின் நேர்த்தியை விவரிக்கின்றன. வடஇந்திய நூல்களிலும், உரோமானியப் பயணிகளின் குறிப்புகளிலும் இங்கு நெய்யப்பட்ட கலிங்க ஆடைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. {{Right|<b>சு.இரா.</b>}} {{larger|<b>கலித்தாழிசை:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்-<noinclude></noinclude> fk3z85qxd37375jh0w76lcoqrhzs3m6 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/187 250 642357 1930521 2026-05-05T17:47:24Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனி மனிதனின் வாழ்வில் பிரச்சினை உருவாகிறது! வயிறும் இதயமும் விவாதிக்கின்றன! வயிறு:- ஏ, இதயமே; ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்? நீ எடுக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|178||கலைஞர்}}</noinclude>தனி மனிதனின் வாழ்வில் பிரச்சினை உருவாகிறது! வயிறும் இதயமும் விவாதிக்கின்றன! வயிறு:- ஏ, இதயமே; ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்? நீ எடுக்கும் அவசர முடிவுகளால் நம்மைச் சுமக்கும் இந்த மனிதனின் கதி என்ன ஆகும் என்று யோசித்துப்பார்! இதயம்:- வயிறே! எந்த முடிவையும் நான் அவசரமாக எடுக்க மாட்டேன்! நம்மைத் தூக்கிச் சுமக்கிற மனிதனின் வாழ்க்கையில் எனக்கு மிகுந்த அக்கறையுண்டு. ஒன்றை மறந்துவிடாதே! என்றைக்கோ ஒருநாள் இந்த மனிதன் சாகப்போகிறான்; அவனோடு சேர்ந்து நாமும் மண்ணாகவோ, சாம்பலாகவோ ஆகப்போகிறோம்! அப்படிச் சாகிறவனை அவன் செத்த பிறகும் சரித்திரத்தில் வாழவைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆனால் நீயோ, அவன் சாகிறவரையில் சந்தோஷமாக வாழ்ந்தால் போதுமென்கிறாய்! வயிறு:- இதயமே! மனித வாழ்க்கை என்பது ஒரு முறை முடிந்துவிட்டால் மறுபடியும் கிடைக்கக் கூடியதா? ‘கார் டயரில்’ காற்றுப் போய் விட்டால். மறுபடியும் அடித்துக்கொள்வது போல; செத்துவிட்ட மனிதனுக்கு மூச்சைத் திணித்து எழுப்ப உலவவிட முடியாது! எனவே கிடைத்த வாழ்வை சுகமாக அனுபவிக்க வேண்டும். அவன் மட்டுமல்ல, அவன் பெண்டு<noinclude></noinclude> 7wouewkzhlcqeiu5vv6vqp09urqqzjx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/875 250 642358 1930528 2026-05-05T18:12:56Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள் பிற்கால யாப்பியல் நூல்களாகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலித்துறை|847|கலித்தொகை}}</noinclude>கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள் பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றுள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கலித் தாழிசை என்பது கலிப்பாவினத்தின் மூன்று வகைகளுள் ஒன்றினைக் குறிக்கிறது. ஒத்த அடிகள் சிலவும் பலவும் வந்து, கடைசி அடி மிக்கு வருமாறு அமையும் செய்யுட்கள் கலித்தாழிசை எனப்படும். இரண்டடிகள் கொண்டு ஈற்றடி மிக்குவருவனவும், ஈற்றடி மிகுந்து மற்ற அடிகள் ஒவ்வாது வருவனவும் இவ்வகையில் அடங்கும். இத்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றாய் அடுக்கி வரும்போது, கலியொத்தாழிசை எனப்படும். தாழிசை ஒன்றாகவோ இரண்டாகவோ மூன்றின் மிகுந்தோ வருவதும் கலித்தாழிசை எனப்படும். தாழிசை மூன்றாய் அமைந்து வெவ்வேறு பொருள் பற்றி வந்தாலும் இப்பெயர் பெறும். ஈற்றடி மிகுந்தும் ஏனைய அடிகள் ஒத்தும் வரும் தாழிசைகள் ‘சிறப்புடைக் கலித்தாழிசை’ என்றும், ஏனைய அடிகள் ஒவ்வாது வருவன ‘சிறப்பில் தாழிசை’ என்றும் சொல்லப்பெறும். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலித்துறை:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள், பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கலித்துறை என்பது கலிப்பாவினத்தின் மூன்று வகைகளுள் ஒன்றினைக் குறிக்கிறது. ஐஞ்சீரடிகளாகிய நெடிலடிகள் நான்கு கொண்டு அமையும் செய்யுள் கலித்துறை எனப்படும். இக்கலித்துறைச் செய்யுள்கள், அடிமறியாய் அமையுமாயின் கலிமண்டிலத்துறை என்றும், அடிமறியாய் அமையாவிடின் கலிநிலைத்துறை என்றும் கூறப்படும். அடிமறியாவது செய்யுளின் நான்கடிகளும் அடிதோறும் பொருள் முடிவுற, அவற்றை முறைமாற்றி வைப்பினும் பொருள் மாறுபடாதவாறு இருக்குமாறு பாடப்படுவதாகும். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலித்தொகை:</b>}} பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் என வழங்கப்பெறும். பாட்டு எனப்படுவது பத்துப் பாட்டாகும். தொகை எனப்படுவது எட்டுத்தொகை நூல்களைக் குறிக்கும். கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று, எட்டுத்தொகை நூல்களுள், பாவின் பெயராலமைந்த தொகை நூல்கள் பரிபாடலும் கலித் தொகையுமாகும். கலித்தொகை, ‘கற்றறிந்தார்‌ ஏத்தும்‌ கலி’ என்‌றும்‌, ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும்‌ இறப்‌பித்துக்‌ கூறப்பெறுகிறது. அகன்‌ ஐந்திணையாகிய அகப்பொருட்‌ செய்திகளைப்‌ பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாக்களாகத்‌ தொல்காப்பியனார்‌ கலிப்பாவினையும்‌ பரிபாட்டினையும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. அவர்‌ காலத்திற்கு முன்பேயே அகப்பொருள்‌ இலக்‌கிய வழக்கில்‌ பரிபாடலும்‌ கலிப்பாவும்‌ முதன்மை பெற்று விளங்கி என்பது தெரியவரும்‌. கலிப்பா வெண்பா நடைத்து எனத்‌ தொல்காப்‌பியனார்‌ சுட்டுவர்‌. கொச்சகம்‌, அராகம்‌, சுரிதகம்‌, எருத்து என்னும்‌ உறுப்புகள்‌ கலிப்பாவிற்கு உரியனவாகும். இது இசைப்பாட்டு வகையைச்‌ சார்ந்தது. சங்கத்துச்‌ சான்றோர்‌ தொகுத்த கலிப்பாட்டுகள்‌ எனப்‌ பேராசிரியர்‌ தொல்காப்பியச்‌ செய்யுளியல்‌ உரையிலும்‌, (தொல்‌. செய்‌. 149, 153, 153, 160) நக்கீரர்‌ இறையனார்‌ அகப்பொருள்‌ உரையிலும்‌ (இறை.நூ. 1) இந்நூலின்‌ பாடல்‌ எண்ணிக்கையினைப்‌ புலப்படுத்தியுள்ளனர். சங்கத்‌ தொகை நூல்களிற்‌ சிதைவும்‌ குறைவும்‌ இன்றி, இன்று 150 கலிப்பாடல்‌களும்‌ கிடைத்திருப்பது தமிழ்‌ மக்களின்‌ பேறு எனலாம்‌. சிவபெருமான்‌ வாழ்த்தாக அமைந்துள்ள கடவுள்‌ வாழ்த்துடன்‌, பாலைக்‌ கலி 35 பாடல்களும்‌, குறிஞ்சிக்கலி 29 பாடல்களும்‌, மருதக்கலி 35 பாடல்‌களும்‌, முல்லைக்கலி 17 பாடல்களும்‌, நெய்கற்கலி 33 பாடல்களும்‌ கொண்டு கலித்தொகை விளங்குகிறது. இவ்வைந்தனுள்‌ மருதக்கலி, முல்லைக்கலி, குறிஞ்சிக்‌ கலி ஆதிய மூன்றும்‌, மருதப்பாட்டு, முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு என்றும்‌ வழங்கின எனப்‌ பேராசிரியர்‌ தம்‌ உரையில்‌ குறித்துள்ளார்‌. பாலைக்கலியினைச்‌ சேரமான்‌ பாலைபாடிய பெருங்கடுங்கோவும்‌, குறிஞ்சிக் கலியினைக்‌ கபிலரும்‌, மருதக்கலியினை மருதன்‌ இள நாகனாரும்‌, முல்லைக்‌ கலியினைச் சோழன்‌ நல்லுருத்திரனாரும்‌, நெய்தல்‌ கலியினை நல்லந்துவனாரும்‌ பாடியுள்ளனர்‌. இந்‌நூலினைத்‌ தொகுத்தார்‌, தொகுப்பித்தார்‌ பற்றிய குறிப்பு யாண்டும்‌ காணப்படவில்லை. நச்சினார்க்கினியர்‌ உரைக்‌ குறிப்பிலிருந்து நெய்தற்கலியைப்‌ பாடிய நல்லந்துவனாரே இத்தொகை நூலைத்‌ தொகுத்துக்‌ கடவுள்‌ வாழ்த்துப்‌ பாடலையும்‌ பாடியுள்ளார்‌ என்று கொள்ள இடம்‌ ஏற்படுகிறது. கலித்தொகையின்‌ ஒவ்வொரு பாடலின்‌ கீழும்‌ அவ்வப்‌ பாடலுக்குரிய கூற்றுவிளக்கம்‌ பற்றிய<noinclude></noinclude> jfhojip3pb49n596kuwgdce69f414az அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 252 642359 1930568 2026-05-06T04:07:13Z Info-farmer 232 + தொடக்கம் 1930568 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 40=கடிதம் 58=கடிதம் 79=கடிதம் 95=கடிதம் 113=கடிதம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] jw92s0ekyuveoem493ntd24sc99evga அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 253 642360 1930569 2026-05-06T04:13:12Z Info-farmer 232 தரவு 1930569 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 4iopipwtlpv11vg8zpxmnjyrrzncyne பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9 250 642361 1930571 2026-05-06T04:20:16Z Info-farmer 232 17 1930571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 87. ஆலிங்கனமும் - அழிவும்! 17 }} 88, இனியன பல இனி! 89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! .27 90. *கல்லணை 41 91. ‘நெடுநல்வாடை' நின்ற பிறகு 52 92. முள்ளு முனையிலே... 93. “ஆட்டம்பாம்” ஆண்டியப்பன் 94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! கத 63 81 101 95. தல யாத்திரை 119 96. தென்னகம் பொன்னகம் 134 97. எழுச்சி வெள்ளம் 147. 98. தீவில் தங்கியவன் கதை 159<noinclude></noinclude> i7gdyrgw0gp9c09ogkqvrq4pqf6xrit 1930572 1930571 2026-05-06T04:20:54Z Info-farmer 232 17 1930572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 87. ஆலிங்கனமும் - அழிவும்! 1 }} 88, இனியன பல இனி! 17 89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! .27 90. *கல்லணை 41 91. ‘நெடுநல்வாடை' நின்ற பிறகு 52 92. முள்ளு முனையிலே... 93. “ஆட்டம்பாம்” ஆண்டியப்பன் 94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! கத 63 81 101 95. தல யாத்திரை 119 96. தென்னகம் பொன்னகம் 134 97. எழுச்சி வெள்ளம் 147. 98. தீவில் தங்கியவன் கதை 159<noinclude></noinclude> 0ittbjuwb6tjr85zeo5hg7vnzlpaiv9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/10 250 642362 1930574 2026-05-06T04:26:39Z Info-farmer 232 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|20em}} {{rule}} {{rule}} <b>{{c|{{Xxx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 8}}}}</b> {{dhr|2em}} {{rule}} {{rule}} {{dhr|20em}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|20em}} {{rule}} {{rule}} <b>{{c|{{Xxx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 8}}}}</b> {{dhr|2em}} {{rule}} {{rule}} {{dhr|20em}}<noinclude></noinclude> oz7647wp5jy087y4cfjahfuhn57tyuw 1930575 1930574 2026-05-06T04:30:59Z Info-farmer 232 1930575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|20em}} {{rule}} {{rule|height=3px}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 8}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px}} {{rule}} {{dhr|20em}}<noinclude></noinclude> rk8nl2wpn4rfu7hpqjghvqzdlp4bs3d 1930576 1930575 2026-05-06T04:36:51Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ {{rule|width=44em}} 1930576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 8}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> 8bx173mzflkvwa3s9axwl8ohuqum6ji பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/27 250 642363 1930577 2026-05-06T04:58:36Z TVA ARUN 3777 எழுத்து வடிவம் 1930577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|26 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> "தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந் தவன் நீ. {{left_margin|3em|<poem> சினனே, காமம், கழிகண் ணோட்டம் அச்சம். பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து; கடலும், கானமும், பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம் அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” {{float_right|(பதிற்று பா.22)}} </poem>}} இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச் சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும். யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் கடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறி யிருக்கின்றார். சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.<noinclude></noinclude> gpbbmm5lct5kim8882xgsv2m81sk9nx 1930596 1930577 2026-05-06T05:15:32Z TVA ARUN 3777 02 1930596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|26 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> "தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந் தவன் நீ. {{left_margin|3em|<poem> சினனே, காமம், கழிகண் ணோட்டம் அச்சம். பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து; கடலும், கானமும், பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம் அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” {{float_right|(பதிற்று பா.22)}} </poem>}} இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச் சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும். யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் கடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறி யிருக்கின்றார். <ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref><noinclude>{{rule|10em|align=left}} {{Reflist}}</noinclude> a4il593gj47y9l0j65rd587iuyhcvxa 1930597 1930596 2026-05-06T05:16:55Z TVA ARUN 3777 c 1930597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|26 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> "தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந் தவன் நீ. {{left_margin|3em|<poem> சினனே, காமம், கழிகண் ணோட்டம் அச்சம். பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து; கடலும், கானமும், பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம் அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” {{Right|(பதிற்று பா.22)}}</poem>}} இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச் சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும். யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் கடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறி யிருக்கின்றார். <ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref><noinclude>{{rule|10em|align=left}} {{Reflist}}</noinclude> hc5j9obtku6h097esmwv9fz1ydw9mdt பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/28 250 642364 1930578 2026-05-06T04:59:45Z TVA ARUN 3777 எழுத்து வடிவம் 1930578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|27 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> "கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறை யிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள். நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடை யும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர் களின் குடிப்பெருமையைக் காத்தவனே! கொடிது கடிந்து, கோல்திருத்திப் படுவது உண்டு,பகல்ஆற்றி, இனிது உருண்ட சுடர்நேமி முழுது ஆண்டோர் வழிகாவல !" (புறநா. 17) இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான் மையை விளக்கிக் காட்டுகின்றது. சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என் பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடி யிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப் பாடலிலே காணலாம். ''உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல் லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட் டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய்.ஒருவன் உண்மையிலேயே குற்றவாளி யாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால். நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம் படுவது -தாமே வருவது. பகல் நடுநிலைமை.<noinclude></noinclude> 6sye0vwzsai1pvc1s0a630n238tqwas பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/29 250 642365 1930579 2026-05-06T05:01:51Z TVA ARUN 3777 எழுத்து வடிவம் 1930579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய், வழிபடு வோரை வல்அறி தீயே? பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ! நீமெய் கண்ட தீமை காணின். ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி ! வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே." (புறநா.10) இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது. பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது. ''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன். அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்." (பத்து. பெரும்.36-37) வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில், அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:<noinclude></noinclude> rez0eohg16u6gd5m25686cmkhm6hm93 1930589 1930579 2026-05-06T05:07:25Z TVA ARUN 3777 tag + 1930589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய், {{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே? பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ! நீமெய் கண்ட தீமை காணின். ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி ! வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே." (புறநா.10)</poem>}} இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது. பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது. ''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன். {{left_margin|3em|<poem> அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்." (பத்து. பெரும்.36-37) </poem>}} வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில், அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:<noinclude></noinclude> lhx2mhhu1nkktphh4jv173eahpy6mex 1930599 1930589 2026-05-06T05:19:21Z TVA ARUN 3777 c2 1930599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய், {{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே? பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ! நீமெய் கண்ட தீமை காணின். ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி ! வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே."<ref>1.வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில்,</ref> (புறநா.10)</poem>}} இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது. பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது. ''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன். {{left_margin|3em|<poem> அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்."<ref>2.அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:</ref> (பத்து. பெரும்.36-37) </poem>}}<noinclude>{{rule|10em|align=left}} {{Reflist}}</noinclude> pjkszf8ep51h9ns5943rj6p3u4ahnyk பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/30 250 642366 1930580 2026-05-06T05:03:10Z TVA ARUN 3777 1 txt \ n 1930580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|29 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவ னுடைய பெருமையைப் பாராட்டுகின்றார். நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர் கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும். வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்." (பத்து - பெரும், 443-441) மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்க களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர் களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம். முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.<noinclude></noinclude> kmhw3gwpgo7d4427ybhnhy68c1nkcod பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/31 250 642367 1930586 2026-05-06T05:06:33Z TVA ARUN 3777 tag 1 + text n 1930586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|30 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> <b>தந்நலமற்ற மன்னர்கள்</b> பழந்தமிழ் வேந்தர்களிலே பலர், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர். குடிகள் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற் கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப் பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என் னும் பாண்டிய மன்னனாலேயே பாடப்பட்டது பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப் பாடல் ஒரு தூண்டா விளக்காகத் துலங்குகின்றது. ''என்னையும், எனது எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விடமாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசை யும். அவர்களையும் பிடித்துக்கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடை நிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி 'எமது அரசன் கொடுங்கோலன் என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன். {{left_margin|3em|<poem> சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர், செல்நிழல் காணாது 'கொடியன்எம் இறை' எனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக." {{float_right|(புறநா. 72)}} </poem>}} இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொண்டுவர வடநாட் டிற்குப் புறப்படுகின்றான். அப்பொழுது அவன். 'என்னை இகழ்ந்த வடதிசை மன்னர்களின் தலையிலே கண்ணகி சிலை சிறுசொல்-பழிச்சொல், சமம் போர்.<noinclude></noinclude> 37n0tc0e7dwzudestn77l9324d2dp0m பக்கம்:அருகன் அருகே அல்லது விடுதலை வழி.pdf/7 250 642368 1930607 2026-05-06T06:12:16Z TVA ARUN 3777 nt1 1930607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rh||6| }}</noinclude>இந்நூலும் ஒன்று. சன்மார்க்கத்தைப் பற்றி என் உள்ளத்தில் அரும்பிய கருத்துக்களைச் 'சன்மார்க்க போதம்', 'பொதுமை வேட்டல்', 'கிறிஸ்துவின் அருள்வேட்டல்', 'புதுமை வேட்டல்' முதலிய நூல்களில் வெளியிட்டுள்ளேன். செல்வச் சிறுமை, தவப் பெருமை, விருஷபர் வரலாறு, அவர்தம் போதனை - சாதனைகள், அஹிம்சா தர்மம், மிகு பொருள் உவவாமை, பொதுமை அறம், நிர்வாணம், அறிவுறுத்தல், போற்றல் முதலிய பொருள்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்நூற்கண் ஓரிடத்தில் கூறப்பெற்ற பொருள், வேறு பலவிடங்களிலும் விளக்கப்பெற்றிருக்கும். அது கூறியது கூறல் அன்று; அநுவாதம். எனது கட்புலன்களைப் படலம் மறைத்தநாள்தொட்டு, என் கருத்துக்களை வாய்மொழியால் சொல்லிவருகிறேன். அச்சொற்கள் பிறரால் எழுத்தில் பொறிக்கப்படும். இந் நூலை யான் சொல்லிவந்தபோது, எனது சொல்ஒலியை, வரிவடிவாக்கியவர் சாது அச்சகப் பொறுப்பாளர் - திரு. மு. நாராயணசாமி. அவர்க்கு எனது நன்றி உரியதாக. அச்சுத் தாள்களைப் பார்வையிட்டுத் துணை புரிந்தவர் இருவர். ஒருவர் டாக்டர் - மு. வரதராசனார்; மற்றொருவர் ஜீவபந்து ஸ்ரீபால் இவ்விருவர்க்கும் எனது வாழ்த்து உரியதாக.. பல அன்புடன் அணிந்துரை வரைந்து தந்தவர், ஆண்டு அரசாங்கக் கல்லூரிகளில் தத்துவப் பேராசிரிய ராகவும் தலைவராகவும் அமர்ந்து சேவைசெய்த பேரறிஞர் அ.சக்கரவர்த்தி நயினார். அவர்க்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். யான் மனிதன் ; குறையுடையவன். முதுமை என்னை அடர்ந்துள்ளது. படலம் என் கண்களை மறைத்துவிட்டது. இந்நிலையில் என்னால் இயற்றப்பெற்ற இந்நூற்கண் போந் துள்ள பிழைகளைப் பொறுக்குமாறு நேயர்களை வேண்டுகிறேன். இராயப்பேட்டை 5-1-1951 திருவாரூர்-வி.கலியாணசுந்தரன்<noinclude></noinclude> sfjdkgozwi3okgnqkkuz11ucjrmnx65 பக்கம்:அருகன் அருகே அல்லது விடுதலை வழி.pdf/8 250 642369 1930608 2026-05-06T06:14:25Z TVA ARUN 3777 txt n 1930608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rh||7| }}</noinclude> அருகன் அருகே அல்லது விடுதலை வழி பெருமன் என்னும் திருவன் ஒருவனும் அவனொடு பயின்ற தவனன் ஒருவனும் தண்கடல் மணலில் கண்டனர் தழுவினர், "நன்னாள் இந்நாள் பன்னாள் பிரிந்தனம் ஓதம் உலவும் ஓரம் செல்வம் பேசுவம் பழைய நேசச் செயல்களை வருக' என்று பெருமித மாக நடந்தனன் தவனன் தொடர்ந்து பெருமனும் பெயர்ந்து பின்னே அயர்ந்து நடந்தனன் 10 ஓதம் ஓடிப் பாதம் வருட ஒதுங்கி அமர்ந்தனர் உயர்ந்த மணலில் ; இயற்கை மணல்விரி வெண்மையும் அணிஅணி அலைகளின் ஆடலும் பாடலும் அலவன் ஓடலும் மாலை மதியக் கோல உதயமும் தென்றல் தவழ்வும் இன்பம் ஊட்டத், தவமிகு சீலன் தவனன், "நண்ப! 1. திருவன் - செல்வம் உடையவன். 5. ஓதம் - அலை ; கடை அலை.ஒங்கு மாகடல் ஓதம்வந்து லவும் ஒற்றி யூரெனும் ஊருறை வானே; ஓதம் வந்துல வுங் கரை தன்மேல் ஒற்றி யூருறை செல்வனை'- சுந்தரர். 10.வருட - தைவர ; தடவ. 13. அலவன் - நண்டு. 14. மாலைச் சந்திரனது அழகிய உதயம்.<noinclude></noinclude> 7h7blb4zwxstaygpvk5a86c4k9iez3b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/686 250 642370 1930609 2026-05-06T07:02:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லும் போது இடைவழியில் தங்க நேரிட்டது. அங்கு எழிபாடாற்றிய பூசைப் பெட்டகத்தை உடன் வந்தவர்கள் மறந்து வைத்துவிடத் திருவண்ணாமலை சென்ற தேசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமிப்புலவர்|658|குமாரசாமிப்புலவர்}}</noinclude>லும் போது இடைவழியில் தங்க நேரிட்டது. அங்கு எழிபாடாற்றிய பூசைப் பெட்டகத்தை உடன் வந்தவர்கள் மறந்து வைத்துவிடத் திருவண்ணாமலை சென்ற தேசிகர், இறைவன் உணர்த்திய வண்ணம் சிவலிங்கத்தை இடையறாது தரித்துக் கொள்ளும் வீர சைவ ஒழுக்கத்தைப் பூண்டனர் என்பர். இவருக்குச் சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம் என்ற மூன்று ஆண்மக்களும், ஞானாம்பிகை என்னும் ஒரு பெண் மகவும் பிறந்தனர், தம்முடைய மக்களுக்குத் தாமே கல்வி கற்பித்தார், இவர் மக்களுள் ஒருவரான சிவப்பிரகாசர் இளமைப் பருவத்தினராக இருக்குங்கால், ஒருநாள் கொல்லையில் எருமைக் கன்றுகள் சில நுழைந்து வாழைக் கன்றுகளைத் கின்று கொண்டிருந்த காட்சியைக் கண்டு தம் தந்தையை விளித்து, ‘அப்பா, அப்பா தம்முடைய தோட்டத்திலே உள்ள வாழைக் கன்றுகளை எருமைக் கன்றுகள் சில மென்று மென்று தின்கின்றன’ என இலக்கண வழுவின்றித் தூய தமிழில் கூறினார். அது கேட்ட தந்தையார் வழுவின்றிப் பேசிய தம் மகனின் ஆற்றலைப் பெரிதும் வியந்தனர். எனினும் நம் மக்களுக்கு முழுமையாகக் கல்வி கற்பிக்கும்வரை இவர் இவ்வுலகில் வாழவில்லை. இவர் இயற்றிய நூல்களைப் பற்றி ஏதும் தெரிந்திவது. இவர் பாடிய பாடலொன்று மட்டும் கிடைத்துளது. அப்பாடல், ‘கயல் வாய்ந்த கண்ணி உலகின்ற வல்லி’ என்னும் தொடக்கங் கொண்டது, மீன் போன்ற கண்களை உடையவளும் உலகனைத்தும் ஈன்றவளுமான உமையம்மையை இடமாகக் கொண்டவனே! நல்லற நூல்களில் சொல்லப்பட்ட இயல்பினதாய இவ்வாழ்வை உடைய என் தந்தைக்கு, நான் மகனாகப் பிறந்ததுவும், பிறந்த எனக்கு வயல் வளம் சான்ற செல்வம் கிடைத்ததுவும், மங்கலம் என்னும் மனைமாட்சி சிறக்க வாழ்க்கைத் துணை நலம் வாய்த்ததுவும், அதன் நன்கலமாய நன்மக்கட்பேறு வாய்ந்ததுவும் நினது திருவருள் நலம் பெற்ற அன்பர்கட்கும் அல்லாதவர்க்கும் நகை விளைக்கத் தக்கன அல்லவோ என்பது அப்பாடற் கருத்தாகும். இதனால் இறைவன் தமக்கு வழங்கிய பேறுகளனைத்தும் அவனது பெருங் கருணைக்கு இலக்காகுமேயன்றித் தம் தகுதி அப்பேறுகளைப் பெறற்குரியது அன்று என இவர் கருதினார் என்பது, விளங்கும். இவர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.{{Right|<b>கு.க.</b>}} <b>குமாரசாமிப் புலவர்</b>: இவர் யாழ்பாணத்துச் கன்னாகத்தைச் சேர்ந்தவர், அம்பலவாணுபிள்ளை, சிதம்பர அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாக கி.பி.1855-ஆம் ஆண்டு தைத்திங்கள் 18-ஆம் நாள் தோன்றியவர். இளமையில் மல்லாகம் ஆங்கிலப் பள்ளியில் பயின்று பின் முருகேச பண்டிதரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நாகதாத பண்டிதரிடம் கொழியையும் கற்றவர்; கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் உடையவர்: சொற்பொழி வாற்றுதலிலும், செய்யுள் பாடுதலிலும் வல்லவர். இவர், சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்க ஏழாலையில் அவர் தொடங்கிய சைவ வித்தியா சாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பல ஆண்டுகள் அப்பணியைச் சீரொடும் சிறப்பொடும் ஆற்றி வந்தார். இவர் கி.பி. 1802-இல் மணவாழ்க்கையை ஏற்றார். விசாலாட்சி, அம்பலவாணன், முத்துக்குமாரன் ஆகிய மூவரும் இவர்தம் மக்களாவர். ஏழாலையில் ஆற்றிய பணிக்குப்பின் கு. கதிர் வேல்பிள்ளை என்பவரின் அகராதித் தொகுப்புப் பணிக்குத் துணை நின்றார். பின் 1902-ஆம் ஆண்டு முதல் ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியா சாலையின் தலைமையாசிரியராகப் பணி புரிந்து வந்தார். பாண்டித்துரைத் தேவர் தாம் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இவரை ஓர் உறுப்பினராக ஏற்றார். அதன் வாயிலாகத் தமிழ்ச் சங்கப் பணிகள் பலவற்றையும் ஆற்றிவந்தார். ஈழத்திலிருந்து இரண்டு மூன்றுமுறை தமிழகத்திற்கு வந்த இவர், பல சிவப்பதிகளை வணங்கிச் சென்றார் ஒருமுறை திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சென்றார். அதுபொழுது அவ்வாதீனத்திலிருந்த குருமூர்த்திகள் இவரைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். இவர் எழுதிய நூல்கள் பல, அவை: 1.கம்பராமாயணம் பாலகாண்ட அரும்பதவுரை 2. நீதிநெறி விளக்கப் புத்துரை 3. தண்டியலங்காரப் புத்துரை 4. யாப்பருங்கலக்காரிகைப் புத்துரை 5. வினைப் பகுபத விளக்கம் 6. சாணக்கிய நீதிவெண்பா 7. இலக்கியச் சொல்லகராதி 8. தமிழ்ப் புலவர் சரித்திரம் 9. இதோபதேசம் 10. கெபால சரிதம் 11. இராமோ தந்தம் 12. இரகுவமிச சரிதாமிருதம் 13. சிவத்தோத்திரக் கவித்திரட்டு 14. மேகதூதக்காரிகை 15. ஏசுமிருத்த பாரதாதி 16. மாவைப் பதிகம் 17. கலைசைச் சிலேடைவெண்பா அரும்பதவுரை 18, இலக்கண சந்திரிகை என்பன. இவற்றுள் மேகதூதக்காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா ஆகிய மூன்றும் இவர் யாத்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். சிசுபால சரிதம் இவர் மொழிபெயர்த்தெழுதிய சிறந்த உரைநடைநூலாகும். இவர் எழுதிய தமிழ்ப் புலவர் சரிதத்தில் ஏறக்குறைய 400 புலவர்களின் அரலாறுகள் அமைந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude> gd1fvn8k8946fky1u7ffzakjxhu350g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/876 250 642371 1930610 2026-05-06T07:15:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பழங்குறிப்புளது. சில பாடல்களின் குறிப்புகள் தொல்காப்பிய மேற்கோள்களுடன் மிக நீண்டும் செல்கின்றன. வேறு சில பாடல்களில் முன் பாடலுக்குரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலித்தொகை|848|கலித்தொகை}}</noinclude>பழங்குறிப்புளது. சில பாடல்களின் குறிப்புகள் தொல்காப்பிய மேற்கோள்களுடன் மிக நீண்டும் செல்கின்றன. வேறு சில பாடல்களில் முன் பாடலுக்குரிய கூற்றே மீண்டும் இடம்பெற்றால், ‘இதுவும் அது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் ‘இன்னார் கூற்று’ என்பது விளக்கமுறும் வகையில் தலைப்பு இடம் பெற்றுள்ளது. கலித்தொகை முழுவதற்கும் நச்சினார்க்கினியரின் நல்லுரை உண்டு. முதன்முதலில் ஏட்டுச் சுவடிகளை ஆய்ந்து கலித்தொகையைப் பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களாவர். இப்பதிப்பு கி.பி. 1887–ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் இப்பதிப்பில் ‘நல்லந்துவனார் கலித்தொகை’ என்றே குறித்துள்ளமையினை நோக்கக் கலித்தொகை முழுமைக்கும் ஆசிரியராக இவர் ‘நல்லந்துவனாரையே கொண்டார்’ என்று நினைக்க வேண்டியுளது. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையும் தாம்எழுதிய ‘தமிழ்மொழி இலக்கிய வரலாறு’ என்னும் ஆங்கில நூலில், கலித்தொகையினை ஐவர் பாடியதாகக் கூறும் தனிப்பாடல் மிகப் பிற்பட்ட காலத்தது என்றும், நூலின் அமைப்பு, நடை, போக்கு முதலிய சில தனி இயல்புகளைக் கவனித்தாலும் இது ஒரே ஆசிரியர் இயற்றியதாகும் என்றே கொள்ளத்தக்கதாயுள்ளது என்றும், நெய்தற் பகுதியின் ஆசிரியராகக் குறிக்கப்பெற்ற நல்லந்துவனாரே ஏனைய பகுதிகளுக்கும் ஆசிரியராக இருத்தல் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், ஐந்து கலிகளின் ஆசிரியர் ஐவர் எனத் தனித்தனியே பெயர் சுட்டப்பெறும் பழம் பாடல் ஓர் உண்மையின் அடிப்படையில்தான் பன்னெடுங்காலமாக நிலவி வந்திருக்கவேண்டும் என்று கொண்டு, வெவ்வேறு ஆசிரியர்கனே ஒவ்வொரு கலியின் ஆசிரியர்களாக இருக்கவேண்டும் என்று கொள்வதே நேரிதாகப்படுகிறது. முதலில் இடம் பெற்றுள்ள பாலைக்கலியின் ஆசிரியர் பாலை பாடிய பெருங் கடுங்கோ ஆவர். இவர் பாலை நிலத்தை வருணிப்பதில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்கிறார். உவமைகளைக் கையாள்வதிலும் இவருக்கு நிகர் இவராகவே விளங்குகின்றார். ‘வறியவன் இளமை போல் வாடிய சினை’ என்றும், சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி என்றும் கூடிவாழ்ந்து பின்னர்ப் பிரிந்து போனால் அது சூடி மகிழ்ந்து கீழே போட்ட பூவிற்குச் சமம் என்றும் இவர் கூறும் உவமைகள் நயமிக்கவை. காட்டின் கவர்த்த வழிகளில் வழிச் செல்வோரிடம் எடுத்துக் கொள்ளத் தக்க பொருள் இல்லையென்றாலும் ஆறலை கள்வர்கள் மறைந்திருந்து வழிச் செல்வோர் மேல் நஞ்சு தோய்ந்த அம்பினைப் பாய்ச்சி, அவர்கள் துடிதுடித்து இறப்பதைப் பார்த்து மகிழ்கிறார்கள் என்ற செய்தி, பாலை நிலத்தின் பயணக் கொடுமையை மிகுவிப்பதாயுளது. ‘துன்பம் துணையாக நாடின், அதுவல்லது; இன்பமும் உண்டோ எமக்கு’ என்றும், சந்தனக் கட்டை தம்மைத் தேய்த்துப் பூசிக் கொள்பவருக்கே மணம் ஊட்டுவது போல, ஒரு வீட்டிற் பிறந்த பெண் பிறந்த வீட்டிலன்றிப் புகுந்த வீட்டிற் சென்றே மணம் பரப்பவேண்டும் என்றும், ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆனாலும் மனத்தால் ஒன்று பட்டவர் வாழ்க்கையே வாழ்க்கை என்றும், கழிந்து போன இளமையினை ஒருநாளும் ஒருவராலும் மீட்டுத் தர முடியாது என்றும் அமைந்த பல அரிய கருத்துகள் பாலைக் கலியுள் உள. வற்றிய பாலையிலும் வற்றாத அன்புக் காட்சிகளாகப் பெண் யானைக்கு நீரூட்டிவிட்டுப் பின்னர் மிகுந்ததைக் குடிக்கும் ஆண் யானையும், பெண் புறாவின் கோடை வெப்பம் வருத்தம் தீரத் தன் மென்சிறகால் வீசி வெப்பத்தைத் தணிக்கும் ஆண்புறாவும், தன் நிழலைத் தந்து தன் பெண்மானின் கதிர் வெம்மையினைப் போக்கும் ஆண்மானின் அன்புள்ளமும் நன்கு காட்டப்பட்டுள்ளன. ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்பர். குறிஞ்சிக் கலியைப் பாடியவர் கபிலர். குறிஞ்சிக் கலிப் பாடல்களில் பல நாடகப் போக்கில் அமைந்திருக்கக் காணலாம். ‘கயமலர் உண்கணாய் காணாய் ஒருவன்’ என்ற முதற் பாடலும், ‘சுடர்த் தொடீஇ கேளாய்’ என்ற பதினைந்தாம் பாடலும், ‘முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து’ பற்றிப் பேசும் இறுதிப்பாடலும் (29) நாடகப்போக்கில் நன்கமைந்த பாடல்களாகும். இராவணனைப் பற்றிய குறிப்பு இரண்டாம் பாடலில் இடம்பெற்றிருக்கக் காணலாம். தலைமகன் முன்னிரவில் தலைமகளைச் சந்திக்க வரும் பொழுது நீரற்ற புலமாகவும், பொருளில்லான் இளமையாகவும் அறஞ்சாரான் மூப்பாகவும் விளங்கியவள் அவன்தன் தண்ணளியால் வைகறையில், கார் பெற்ற புலமாகவும், அருள் வல்லான் ஆக்கமாகவும், திறஞ்சேர்ந்தான் ஆக்கமாகவும் திகழ்வதனைக் கபிலர் நன்கு காட்டுவர். தன்னைக் காமர் கரும்புனலிலிருந்து காப்பாற்றிய காதலனையே கணவனாக மனத்தில் முடிவு செய்து கொண்ட அளவில் அப்பெண் ‘அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையள்’ ஆகிவிட்டாள். தலைவன் தலைவியைப் பிரியமாட்டேன் எனச் சூளுரைத்து விட்டு, அச்சூள் பொய்த்தால், அச்செயல் திங்களுள் தீத்தோன்றியது போலவும், நிழற்கயத்து நீருள் குவளை வெந்தது போலவும், விசும்புச் சுடருள்<noinclude></noinclude> ljzs67okzvd4pn3oy8fp1tee9iyzlut பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/687 250 642372 1930611 2026-05-06T07:17:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவையன்றிப் பற்பல திருக்கோயில்களில் அவ்வக் கோவில்களின் தலைவர்களின் வேண்டுகோட்கினாங்கப் பல பதிகங்களும் ஊஞ்சலும் பாடியுள்ளார். மேலும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமி மடம்|659|குமாரசாமி ராசா, பூ.ச.}}</noinclude>இவையன்றிப் பற்பல திருக்கோயில்களில் அவ்வக் கோவில்களின் தலைவர்களின் வேண்டுகோட்கினாங்கப் பல பதிகங்களும் ஊஞ்சலும் பாடியுள்ளார். மேலும், அவ்வப்பொழுது இவர் பாடிய தனிக்கவிகளும், சிறப்புக் கவிகளும், கையறுநிலைகளும் பலப்பல. மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழிற்கு இவர் வழங்கிய கட்டுரைகள் பல. இவையன்றிச் சில நூல்கள் இவரால் திருத்தப்பட்டும், உரை எழுதப்பட்டும் புதிதாக இயற்றப்பட்டும் உள்ளன திருத்தப்பட்டவை உரிச்சொல் நிகண்டு, பழமொழி விளக்கம் என்பன. உரை எழுதப்பட்ட கலைசைச் சிலேடைவெண்பா என்பதாகும். இவர் உரையே இந்நூற்கமைந்த முதலுரையாகும். இவர் நல்ல பதிப்பாசிரியர்; மாணாக்கருக்குப் பயன் கருதாது பாடம் சொல்வார். தாம் அறிந்த நுண் பொருள்களையெல்லாம் அவர்களுக்கு வஞ்சியாது உணர்த்துவார். இவர் தம் நூல்களை மாணாக்கர்க்குக் கொடுத்துக் கற்பிக்கும் அறநெஞ்சினர், தமிழ்க்கல்வி கற்குமாறு அனைவரையும் தூண்டியவர், எளிய உடையும் நடையும் உடைய இவர் இலங்கை அரசால் பரிசளித்துப் பாராட்டப் பெற்றவர். தம் வாழ்நாள் முழுதும் அரிய பல தொண்டாற்றி வந்த இவர் 1922 ஆம் ஆண்டில், தம் அறுபத்தேழாம் வயதில் காலமானார்.{{Right|<b>கு.ச.</b>}} <b>குமாரசாமி மடம்</b>: காண்க: திருமடங்கள். <b>குமாரசாமி முதலியார்,</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்பாணத் தமிழ்ப் புலவர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உடுப்பிட்டியில் உள்ள வல்லுவேட்டி என்னும் ஊரில் கதிர்காம முதலியாருக்கும் வள்ளியம்மைக்கும் மகளாக கி.பி. 1791 இல் தோன்றினார். சைவ வேளாளக் குடும்பத்தில் தோன்றிய இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து விளங்கினார். இவர் மனைவி சிவகாமி. இவர் ச. குமாரசாமி முதலியாரின் மருமகன் தமிழ்ப் பேரகராதியை ஆக்கிய கு.கதிரை வேற்பிள்ளை இவர்தம் இளைய மகனாவார். இவர் இந்திர குமார நாடகம், அருளம்பலக் கோவை, சிருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூவாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல், கந்தவனநாதர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை முதலிய நூல்களையும் பல தனிச் செய்யுட்களையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. 1874-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <b>குமாரசாமி ராசா, பூ.ச.</b>: இவர் கி.பி. 1898-இல் இராமநாதபுரம் மாவட்டம் இராசபாளையத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பூசப்பாடி சஞ்சீவிராசா ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முன்பு ஆந்திராவிலிருந்து கிருட்டிணதேவராயர் காலத்தில் இராசக்கள் தமிழகத்தில் இராசபாளையத்தின் குடியேறி நகரமைத்துக் சிறப்புற்றனர். இவர் இளமையிலேயே தாய், தந்தையரை இழந்தார். இவருக்கு 1920-இல் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் உருக்குமணி. இவர்கட்கு மகப்பேறு இல்லை. இவர் உயர்பள்ளிப் படிப்புடன் அமைத்துவிட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 687 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 135 |oTop = 130 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|குமாரசாமி ராசா, பூ.ச.}} காந்தியடிகள் 1919 இல் தமிழகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்துக் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார். இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் (1931) ஈடுபட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனையும் பெற்றார். இராசபாளையத்தில் நூற்றுக்கணக்கான தியாகிகளை உருவாக்கிய இராசா தன்னலம் சிறிதுமின்றிப் பொது நலமே குறிக்கோளாகக் கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர், கூட்டுறவு ஆகியவற்றிலும் ஆர்வமுடன் ஈடுபட்டார். இவர் கூட்டுறவு இயக்கத்தின் மிகப் புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்ததோடு பல நிறுவனங்களின் தலைவராகவும் விளங்கினார். இவர் இராசபாளையத்தில் இன்று சிறப்புடன் திகழும் பூபதிராக கூட்டுறவு வங்கியை நிறுவினார். இவர் மத்திய சட்டசபைக்கு 1934-இல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1938 இல் 40-ஆம் தமிழ்நாடு அரசியல் மாநாடு இராசபாவை<noinclude> <b>வா. க. 7 - 42அ</b></noinclude> 6lslnvivr412g3rv2om3e1ay7oh0tah பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/688 250 642373 1930612 2026-05-06T07:25:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யத்தில் நடந்தது. வரவேற்புக் குழுத் தலைவராக இவர் திறமையுடன் செயற்பட்டார். தனி ஆன் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 1941-இல் 9 மாதங்கள் சிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமி ராசா. பூ.ச.|660|குமாரசாமி ராசா. பூ.ச.}}</noinclude>யத்தில் நடந்தது. வரவேற்புக் குழுத் தலைவராக இவர் திறமையுடன் செயற்பட்டார். தனி ஆன் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 1941-இல் 9 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலை அடைந்தபின் இராமநாதபுர மாவட்ட ஆட்சிக்குழுத் தலைவராக (1941) அமர்ந்து நற்பணி புரிந்தார். பழைய சென்னை மாநிலத்தில் ஆந்திரகேசரி டி. பிரகாசம் பந்துலு அவர்களின் அமைச்சரவையில் (1946) இவர் வேளாண்மைத் துறை அமைச்சரானார். நாடு சுதந்திரம் பெற்றபின், 1949 ஏப்பிரல் மாதம் குமாரசாமி ராசா சென்னை மாநில முதலமைச்சராகப் பதவி ஏற்றார். நீதித் துறைக்கும் நிருவாகத் துறைக்கும் இருந்து பிணைப்பை நீக்கி அவை தனித்தனியாக இயங்க இவர் வழிவகை செய்தார். குமாரசாமி ராசா 1952 முதல் பண்பாடு, கலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு அவற்றை வளர்த்தார். அதன் விளைவாகத் தம் சொந்த இல்லத்தையும் நில புலங்களையும் இவர் பொதுமக்கட்கு வழங்கிக் ‘காந்தி கலை மன்றம்’ என்னும் பண்பாட்டு மையத்தை நிறுவினார். தமிழ் இலக்கியம், கலை பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனம் 1953-இல் நிறுவப்பட்டது. இங்குச் சிறந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இராசா அவர்கள் 1954-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் ஓரிசா மாநில ஆளுநராகப் பதவி ஏற்றார். உடல் நலனை முன்னிட்டும், காந்தி கலை மன்றத்தைப் பேணி வளர்க்கும் நோக்குடனும், பதவி ஆசை சிறிதும் இல்லாத இராசா ஆளுநர் பதவியை 1954-இல் துறந்தார். பின் காந்தி கலை மன்றத்தை உருவாக்குவதற்காகத் தம் ஆற்றல், பொருள் அனைத்தையும் ஈடுபடுத்தினார். நேர்மையும், அறச்சார்பும் உடைய சான்றோராகத் திகழ்ந்த குமாரசாமி ராசா 1957-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் சென்னைப் பொது மருத்துவமனையில் காலமானார் பொதுநலமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இராசாவின் நினைவுச் சின்னமாகக் காந்தி கலைமன்றம் திகழ்கிறது. காந்தியடிகள், நேரு முதலிய பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர்தம் உருவச் சிலையைக் குடியரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டி அவர்கள் 1978-இல் இராசபாளையத்தில் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.{{Right|<b>மு.கு.ஜெ.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 688 |bSize = 375 |cWidth = 302 |cHeight = 210 |oTop = 225 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|காந்தி கலை மன்றம்.}}<noinclude></noinclude> guczzrznk0hh0r01ovv7gmfyklvftog பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/689 250 642374 1930613 2026-05-06T07:36:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குமாரதேவர்</b>: இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த வீரசைவத் துறவியாவார். கன்னட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரதேவர்|661|குமார விசயகிரி...}}</noinclude><b>குமாரதேவர்</b>: இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த வீரசைவத் துறவியாவார். கன்னட நாட்டின் அரச மரபில் தோன்றிய இவர் அரச வாழ்வின் வெறுமையையும், ஆன்மீக வாழ்வின் பெருமையையும் உணர்ந்து துறவு மேற்கொண்ட பெருமகனாவார். அரச வாழ்வையும் இல்லற வாழ்வையும் துறந்த இப்பெரியார் சாத்தலிங்க அடிகள் என்னும் வீரசைவப் பெரியார்பால் சார்ந்து அருளாசி பெற்றாரென்றும், அவர் கட்டளையை மேற்கொண்டு தமிழகம் போத்து புகழ்மிக்க சிவத்தலங்களுள் ஒன்றான திருமுதுகுன்றத்தில் வாழ்ந்து வீடு பெற்றாரென்றும் அறிய முடிகிறது. திருமுது குன்றத்தில் வாழ்ந்தபோது பெரியநாயகியம்மன் திருவருட்டுணையுடன் அரும் பெரும் நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். குமாரதேவர் இயற்றியனவாக இன்று அறியப்படும் நூல்கள் அத்துவித உண்மை, விஞ்ஞான சாரம், பிரமாறுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகமநெறி அகவல், பிரமானுபூதி அகவல், வேதாந்த தசாவத்தைக் கட்டளை, வேதாந்த தரிசாரியக் கட்டளை, ஞான அம்மானை, பிரமசித்தி அகவல், உபதேசச் சித்தாத்தக் கட்டளை, சிவதரிசன அகவல், சில சமரச வாத அகவல், சுத்த சாதகம், சகச திட்டை, வேத நெறியாவல் ஆகியனவாகும். பொதுவாகச் சமயப் பெரியார்கள் வாழ்க்கை வரலாற்றில் இயல் கடந்த செய்திகள் பலவும் வழங்குவதுபோல் இவர் வாழ்க்கை பற்றியும் பல செய்திகள் கூறப்படுகின்றன. முற்பிறவியில் இவர் மல்லிகார்ச்சுன மலைக்கண் இருந்து சில பரம் பொருளை நோக்கித் தவம் செய்தாரென்பர், அதற்கு முன்பு இவர் ஐந்து உடல்கலெடுத்தவரென்றும் கன்னட நாட்டில் ஏழாம் பிறப்பெடுத்தாரென்றும் இவர் பற்றிய புராணம் கூறுகிறது. சாந்தலிங்க அடிகள் இவருடைய தகுதியை ஆராய அரிவாள் கொண்டு புல்லறுக்குமாறு கட்டனை விட்டாரென்றும் இவரும் அதற்குடன்பட்டு அங்ளமே செய்தாரென்றும் கூறுவர், சாந்தலிங்கரின் அருண்மொழி பெற்றுத் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில் சிவபெருமான் இவர்பொருட்டு மனித வுருத்தாங்கிவந்து தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர் வேட்கை தவிர்த்தாரென்றும் கூறுவர். மணிமுத்தாற்றுக் கரையிலிருந்த ஓரரச மரத்தடியில் இவர் அமர்ந்திருந்தபோது அருள்மிகு பெரிய நாயகி அன்னை ஒரு முதிய மாதுபோல் தோன்றி இவர் தலையைத் தம் மடி மீது கிடத்திப் பால முதூட்டினார் என்றும் ‘நீ எப்பொழுதும் எம்மிடத்திலேயே இருப்பாய்’ என அருளினார் என்றும் கதை வழங்குகிறது.{{Right|<b>அ.த.</b>}} <b>குமாரதேவி</b> இலிச்சாலி நாட்டு இளவரசி: குப்தப் பேரரசை நிறுவிய முதலாம் சத்திரகுப்தரின் (கி.பி.320-330) மனைவி, வைசாலியைச் சேர்ந்த இவிச்சாவி மரபு, வட இந்தியாவில் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது. முதலாம் சந்திரகுப்தன் இலிச்சாவி இளவரசியான குமாரதேவியை மணந்த பின்புதான், பெரும் புகழ் பெற்றான் என்பது அவனுடைய காசுகளில் இருந்து அறியக்கிடக்கிறது. இவன் தனது பொற்காசுகளில் தன் பெயரையும் தன் மனைவியின் பெயரையும் பொறித்தான், அதனால் தனது மனைவியின் மரபால், இவன் பெற்ற புகழை நன்கறியலாம். தன் உருவத்துடன், தன் மனைவியின் உருவத்தையும், இவன் காசுகளில் பொறித்ததால் அக்காலத்திலேயே அரசிக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டதென்பது புலனாகும். சந்திரகுப்தன் அண்டை அரசுகளை வெல்லவும், அரசினை நிலைப்படுத்தவும் வீரப் பெருங்குடியினரான இலிச்சாலிகள் பெருந்துணை புரிந்தனர். இவரது மகனான சமுத்திரகுப்தரும் தனது நாணயங்களில் ‘இலிச் சாவி-தௌகித்ரா’ (Lichchavi-dauhitra=இலிச் சாலி புத்திரியின் புத்திரன்) என்று பெருமையுடன் பொறித்துள்ளதால் குமாரதேவியின் பெருமை புலனாகும். குமாரதேவி, சாதாரண மன்னராக இருந்த தனது கணவனைப் பெருமன்னனாக ஆக்குவதில் துணைபுரிந்தான் என்பது புலனாகும். <b>குமாரதேவி</b>{{sup|<b>1</b>}} ககடலாலர் மாபினைச் சேர்ந்த மன்னன் கோவிந்த சந்திரன் (கி.பி. 1114-1155) என்பான் நான்கு மனைவியரைக் கொண்டிருந்தான், அவர்களுள் குமாரதேவி என்பவளும் ஒருத்தி ஆவாள். காண்க: ககடவாலர்.{{Right|<b>ம.இ.</b>}} <b>குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்</b> இவர் இன்று அண்ணா மாவட்டம் எனப்படும் பழனி வட்டத்திலுள்ள பாலசமுத்திரத்தில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் சமீன்தாராக இருந்தவர், இவருடைய தந்தையார் விசயதிரி வேல்ச் சின்னோவையன், பாட்டனார் குமாரச் சின்னோவன், இவர்களளைவரும் பழனி முருகனிடம் மிகுந்த பாதி கொண்டிருந்தனர். இவர்கள் வேடர் பிரீவில் கண்டன் குலத்தவர் என்று கூறப்படுகிறது. கொங்கு நாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய வையாபுரிய நாட்டில் பழனிக்கு ‘விசயகிரி’ என்ற பெயரும் உண்டு. ‘சின்னோவன்’ என்பது இவர்களது குலதெய்வம்.<noinclude></noinclude> i72qblw9dy1bh076h4mzhyhtnard8q5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/877 250 642375 1930614 2026-05-06T07:40:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருள் தோன்றியதுபோலவும் கருதப்படும். அவன் வரைந்து கொள்ளுங்கால் தலைவியின் மேனியிற்றோன்றிய பசலை நோய் கதிரவன்முன் மாயும் இருளாகிவிடும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலித்தொகை|849|கலிப்பகையார்‌}}</noinclude>இருள் தோன்றியதுபோலவும் கருதப்படும். அவன் வரைந்து கொள்ளுங்கால் தலைவியின் மேனியிற்றோன்றிய பசலை நோய் கதிரவன்முன் மாயும் இருளாகிவிடும். மருதக்கலி பாடியவர் புலவர் மருதன் இளநாகனார் ஆவர். மதுரையின் சிறப்பும் வையையாற்றின் வளமும் மருதக்கலியில் இடம் பெற்றுள்ளன. மதுரைக்கு வையைநீர்ப் பகையுண்டேயொழியப் போர்ப் பகை கிடையாது. மதுரையில் புலன்நா உழவர்கள் புது மொழி கூட்டுண்ணுகிறார்கள். வாழிய பூவொடு வாரல் எம் மனை எனக் கூறும் மதுரைத் தலைவி, ‘பரத்த’ என்று தகாதவொழுக்கம் மேற்கொள்ளும் தலைவனைக் குறிப்பிடுகிறாள். ‘முந்தையிருந்து மகன் செய்த நோய்த்தலை, லெந்த புண் வேல் எறிந்தற்றால்’ என்ற உவமை உன்னுந்தொறும் நயம் பயப்பதாகும். ‘நீயும் தவறிலை; நின் கை இது தந்த பூஎழில் உண்கண் அவளும் தவறிலள்,... யானே தவறுடையேன்’ எனத் தன்னையே நொந்துகொள்ளும் தலைவியின் பொருமல் இரங்கத்தக்கது. சோழன் நல்லுருத்திரனார் பாடியது முல்லைக் கலியாகும். துச்சாதனனைக் கொன்ற வீமனின் வீரம் முல்லைக் கலியின் முதற் பாடலில் இடம்பெற்றுள்ளது. ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் கிளத்தப்பட்டுள்ளது. ஏறடக்கித் தான், தான் விரும்பிய பெண்ணின் தோளினைத் தழுவுதல் வேண்டும். ஏனெனில், கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையிலும் ஆயமகள் தழுவ மாட்டாள். ஏறு தழுவி அடக்கிய நிலம், கௌரவர் நூற்று வரைப் பாண்டவர் ஐவர் வென்று அடக்கிய போர்க் களம் போலிருந்தது என்கிறார் சோழன் நல்லுருத்திரனார். ஆயரிடையில் காதல் மணம் கமழ்ந்தது. ஐந்தாவதாக அமைந்துள்ள நெய்தற் கலியினைப் பாடியவர் நல்லந்துவனார் ஆவர். மாலைக் காலம் பிரிந்துறையும் தலைவிக்குத் துயர் செய்வது நன்கு புனையப்பட்டுள்ளது. நெய்தற்கலிப் பாடல்கள் அவலச் சுவையை மிகுவிப்பனவாகும். தலைவிக்கு மாலைக்காலம் வந்ததும் பசலை நோயும் உடன் வந்துவிடுகிறது. காதலர் தலைவியை விட்டு நீங்கும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் தலைவியின் அருகில் மேனியை வந்தடைந்து விடுகிறது. அவர் வந்து அவளைத் தொடும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் அவளை விட்டு நீக்கி விடுகிறது. மாலைநேரத்தில் இடையர் புல்லாங்குழல் இசைக்கத் தலைவியின் காதல் நோய் கைம்மிகுகிறது. நிரை வளை நெகிழ்ந்து கை முன் இறையினின்றும் கழன்று விழுகிறது. நெய்தல் கலியின் பாடலொன்று (16) ஆற்றுதல், போற்றுதல், பண்பு முதலானவற்றிற்கு விளக்கம் தருகிறது. இவ்வாறாகக் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகைப் பாடல்கள் அகப்பொருள் நுட்பம் வாய்ந்தனவாய், வாழ்வியல் உண்மைகளை வகைமை பெற எடுத்துரைப்பனவாய் அமைந்து, படிக்குந்தோறும் இன்பம் பயப்பனவாய் விளங்குகின்றன. {{Right|<b>சி.பா.</b>}} {{larger|<b>கலிப்பகையார்,</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் சான்றோர்களுள் ஒருவர். இவர் வரலாறு திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் காணப்படுகிறது. திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும். மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியார். அவர்க்குப் பன்னிரு வயது ஆன அளவில் அக்கால முறைப்படி ஒத்த சிறப்புடைய வேளாண் குலத் தலைவர் கலிப்பகையாரை மணம் பேசுமாறு திருநாவுக்கரசர் தந்தையார் புகழனார் மேலோரை அனுப்பிவைத்தார். கலிப்பகையார் மின்னார் செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமானுக்கு உண்மைத் தொண்டு செய்பவர். நாட்டை ஆளும் மன்னனிடம் அன்புடையவர். சிங்கமெனத் திகழும் வீரமுடையவர். காண்பதற்கு விருப்பத்தைத் தரும் பெருவனப்புக் கொண்டவர். அழகுமிக்க திலகவதியாரை மணம் பேச வந்தவர்களை வரவேற்று, குலம் பேசிக் குணம் பேசிக் குற்றமற்ற புகழனார் மணத்திற்கு இசைந்தார். இதனை மேலோர் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். மணவினை முடிவதன் முன்னதாக அந்நாட்டு அரசனோடு வடநாட்டரசன் பகை கொண்டு போர் தொடுக்க, அரசனின் ஆணைமேற்கொண்டு கலிப்பகையார் படையுடன் சென்றார். போர்க்களத்தில் பகையரசனுடன் கடுஞ்சமர் நடந்தது. பன்னாட்கள் அப்போர் வினையில் ஈடுபட்டிருந்தார் கலிப்பகையார். ஆயினும் முடிவில் பகையார் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார். உயிர் கொடுத்துப் புகழ்கொண்டார். அரசனின் ஏவலின்படி போர் முனைக்குச் சென்ற கலிப்பகையார் பகை அழிந்து, அமரர் உலகம் ஆள்வதற்குச் சென்றார் என்னும் சொல்லை உலகோர் கூறக்கேட்டார் திலகவதியார், எந்தையும் என் அன்னையும் அவர்க்கு என்னைக் கொடுக்க இசைந்தார்கள். அந்த முறையால் நான் அவர்க்கே உரியதாகிய இந்த உடலைச் சுமந்து வாழாமல், இந்த உயிரை அவர் உயிரொடு இசைவிப்பேன் எனத் துணிந்தார். தமக்கையாரின் இக்கொள்கையினை<noinclude> <b>வா.க. 6 – 54</b></noinclude> pakxdll65pg2lavt59bmw8c7dfi9wjx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/690 250 642376 1930615 2026-05-06T07:46:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகவே, இம்மரபினர் ‘விசயகிரி’ என்னும் சொல்லைத் தம் பொருக்கு அடையாகவும், குலதெய்வத்தின் பெயரை நினைவுறுத்தச் ‘சின்னோப வையன்’ என்பதைத் தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார விட்டுணு|662|குமார வியாசன்}}</noinclude>ஆகவே, இம்மரபினர் ‘விசயகிரி’ என்னும் சொல்லைத் தம் பொருக்கு அடையாகவும், குலதெய்வத்தின் பெயரை நினைவுறுத்தச் ‘சின்னோப வையன்’ என்பதைத் தம் பையருக்குப் பின் அடையாகவும் கொண்டனர். ‘சின்னோவன்’ என்ற தெய்வத்தின் பெயர், தலைவன் என்று பொருள்படும் ‘ஐயன்’ என்ற சொல்லோடு சேர்ந்து ‘சின்னோவன் ஐயன்’ என்றாகிப் பின்னம் ‘சிக்னோவையன்’ என்று மருவிற்று. குமார விசயகிரி வேலச் பின்னோலையன் நல்ல தமிழறிவு படைத்தவர். இவர் பாடிய நூல் ‘வையா புரிப்பள்ளு’. ‘சமய மாலை’ என்பதும் இவர் பாடிய தாகவே கொள்ளத்தக்கது. ‘வையாபுரிப்பள்ளு’ வெண்பா, கலிப்பா முதலிய பாக்களையும், விருத்தம், சிந்து முதலிய பாவினங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இந்நூல் முக்கூடற் பள்ளு நூலையே பெரும்பாலும் பின்பற்றியுள்ளது. இந்நூலின் பல பாடங்களுக்கு இராகம், தாளம் குறிக்கப்பட்டிருப்பதால் இவர் இசையறிவு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். வையாபுரிப் பள்ளுவில் பழனிப் பகுதி மக்கள் அன்று வழிபட்ட சிறு தெய்வங்களைப் பற்றிய செய்திகளும், பழனி முருகனுக்கு வழிபாட்டுப் பொருள்களை அவர்கள் மகிழ்ச்சியோடு கொடுத்த செய்தியும் காணப்படுகின்றன. நெல்லின் ஐம்பத்தைந்து வகைகனைக் கூறுவதிலிருந்து இவருக்கிருந்த வேளாண்மை அறிவு வெளிப்படுகிறது. சம்யமாலை அறுபது பாடல்களைக் கொண்ட சிறு நூல், இவர் பழனித் திருக்கோவிலுக்குச் செய்த திருப்பணிகள் தைப்பூசத் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடிய நிகழ்ச்சி, சிலையமைத்தது முதலிய செய்திகள் இத்நூலில் காணப்படுகின்றன.{{Right|<b>எம்.செ.</b>}} <b>குமார வீட்டுணு</b>: தமிழகத்தில் தொண்டை மண்டலத்திலிருந்து ஆட்சி செய்த பல்லவ மன்னர்களும் மூவர் குமார விட்டுணு என்னும் பெயரில் பல காலங்களில் ஆட்சி புரிந்தனர். <b>முதலாம் குமார விட்டுணு</b>: (ஏறத்தாழ கி.பி. 225-260) தொடக்க காலப் பல்லவ மன்னர்களுள் முதன்மையானவன், இவன் பெயரன் விசயகத்தவர்மனின் முதலாம் ஓங்கோட்டுப் பட்டயம் இதனை உறுதி செய்கிறது இவனே பப்பதேவன் எனச் சிலர் கூறுவர். <b>இரண்டாம் குமார விட்டுணு</b> ஏறத்தாழ கி.பி. 460 முதல் 490 வரை ஆட்சி செய்தவன். மூன்றாம் குமார வீட்டுணு என்பவன் வெளியிட்ட சேந்தலூர் செப்புப் பட்டயும் மூலம் இரண்டாம் குமார விட்டுணு என்பவன் மூன்றாம் குமார விட்டுணுவின் பாட்டனார் எனவும் புத்தவர்மனின் தந்தை எனவும், மூன்றாம் கந்தவர்மனின் மகன் எனவும் அறிய முடிகிறது. <b>மூன்றாம் குமார விட்டுணு</b> ஏறக்குறைய கி.பி. 340 முதல் 580 வரை ஆட்சி செய்தவன்; சேந்தலூர் செப்புப் பட்டயத்தை வெளியிட்டவன். அதில் காணப்பெறும் அரசர் வரிசை மூலம் இம்மன்னன் இரண்டாம் குமார விட்டுணுவின் பெயரனென்பதும், புத்தவர்மனின் மகனென்பதும் புலனாகின்றன. காஞ்சியினின்றும் இத்தானம் வெளியிடப்பட்டுள்ளமையால், இம்மன்னன் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களின் வழித்தோன்றலென்பதும் தெளிவு. இம்மன்னன் தன்னைப் பரத்துவாச கோத்திரனென்றும், தர்ம மகாராசன் எனவும் கூறிக் கொள்ளுகிறான்.{{Right|<b>மா.கா.</b>}} <b>குமார வியாசன்</b>: கன்னட மொழியின் இடைக்காலக் கவிஞர்களுள் முதன்மையான இடத்தைப் பெறுபவர் குமார வியாசன் ஆவார். இவரது இயற்பெயர் நாரணப்பன், கருநாடகத்தில் கதுகின் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ‘கோழிவாடை’ என்பது இவருடைய சொந்த ஊர் என்று கூறப்படுகின்றது. சிறந்த பக்தராகவும் யோகியாகவும் இவர் திகழ்ந்தார். கருநாடக வரலாற்றில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க காலப்பகுதியாகத் திகழ்கின்றது. இந்த நூற்றாண்டில் கருநாடக மக்களின் வாழ்வும் பண்பாட்டுக் கூறுகளும் மிக உயர்ந்த நிலையினை அடைந்தன. விசயநகரப் பேரரசின் எழுச்சி காரணமாக நாட்டுச் செல்வம், வாழ்க்கை வசதிகள், படைபலம் ஆகியவை உயர்ந்தோங்கின. விசயநகரப் பேரரசு பிற சமயங்களின் வளர்ச்சிக்கும் துணையாக நின்றது. இதனால், எல்லாச் சமயங்களையும் சார்ந்த இலக்கிய வகைகள் செழித்து வளர்ந்தன. இக்காலகட்டத்தில் இலக்கியங்களின் போக்கு பொதுமக்களை நோக்கித் திரும்பியதாகவும், சட்பதி, சாங்கத்யம் முதலிய பாவடிவங்களில் நூல்கள் இயற்றும் போக்கு வளர்ந்ததாகவும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணங்களைத் தழுவிக் கன்னடத்தில் நூல்கள் இயற்றுவதில் கவிஞர்கள் பலர் ஈடுபட்டனர். அவர்களுள் முதன்மையானவர் குமாரவியாசன். குமாரவியாசனின் கன்னட பாரதம் ‘கதுகின பாரதம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. அது பத்துப்-<noinclude></noinclude> c9du0a6mgqxjo6f8kzll61mvnrh9dqo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/691 250 642377 1930616 2026-05-06T07:59:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பருவங்களும், நூற்றைம்பது சந்திகளும், 8500 பாமினி சட்பதிப் பாடல்களும் கொண்ட நூலாகும். அது ஆதிபருவம் முதல் கதா பருவம் வரை அமைந்தது. அந்நாளில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார வியாசன்|663|குமாரன் ஆசான்}}</noinclude>பருவங்களும், நூற்றைம்பது சந்திகளும், 8500 பாமினி சட்பதிப் பாடல்களும் கொண்ட நூலாகும். அது ஆதிபருவம் முதல் கதா பருவம் வரை அமைந்தது. அந்நாளில் அரசர்கட்கு வீரம், அந்தணர்கட்குப் பரம வேதசாரம், யோகியர்க்குத் தத்துவ விசாரம், அமைச் சரிகட்கு அறிவுரை, பிரித்தவர்கட்கு உவகை, கலைஞர்கட்கு அணி என்று குமாரவியாசன் குறிப்பிடுகின்றார், கதையமைப்பில் செறிவான கட்டுக் கோப்பையும், உணர்த்தும் வாழ்க்கை நோக்கில் பத்தியையும் கலந்து கருவது குமாரவியாச பாரதத்தின் தளிச் சிறப்பாகும். மூல நூலின் சில பகுதிகளை விரிவாகக் கூறியும் சில பகுதிகளை விட்டும் குமாரவியாசன் தம் பாரதத்தைப் படைத்திருக்கிறார்; சில பகுதிகளைத் தமது கற்பனைத் திறத்தால் புதிதாகச் சேர்த்தும் படைத்திருக்கிறார், சான்றாகச் சில பகுதிகளைக் காணலாம். வசந்த காலத்தின் வருகையை, ‘கூடியிருப்பவர் கட்குச் சிறந்த வான்முனை பிரிந்திருப்பவர்களை எதிர்க்கும் ஈட்டி, உயர்ந்த யோகிகளின் குலதெய்வம் எனும் மலர்மயமான காலம்’ என்று கவிஞர் குறிப்பிடுகின்றார். முனிவனது சாபத்தினால் மனைவியைத் தீண்ட இலலாத நிலையில் இருக்கும் பாண்டுவின் நிலைக்கு இவ்வருணனை பொருத்தமாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. சூதில் தோற்றுக் கௌரவர் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்படும்போது தருமனும் பிறகும் வாளாவிருக்கின்றனர். வீமன், முன்ளே பாய்ந்து சென்று ‘பெண்ணே! துர்ச்சாதனன் இரத்தத்தை தின் கூந்தலுக்குப் பூகவேன், அவன் பற்களாகிய சீப்பினால் வாரிவிடுவேன் பேய்களுக்கு நின் கையான் அவன் குடல்மாலையை வழங்குவேன்’ என்று சபதம் செய்கின்றான். மூலத்தைப் பின்பற்றிய இந்நூல் இப்பகுதியில் விஞ்சி நிற்கிறது. பொய்மை, வஞ்சகம், அநீது ஆகியவற்றைக் கண்டு வெகுண்டெழும் வீரமிக்க மனநிலை இப்பகுதியில் வெளிப்படுகின்றது. ‘குடல் மாலையைக் கொண்டு கூந்தல் முடிப்பது’ மூலநூலில் இல்லை, ஆயின் பம்ப பாரதத்தில் இது வருகின்றது. அதிலிருந்து குமாரலியாசன் இத்தொடரை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும். ‘பல் சிப்பினால் வாழி’ என்ற பகுதியிலும் ‘தந்தச்சீப்பு’ என்பதைப் பயன்படுத்துவது சிலேடைநயம் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. இதேபோல் கீசகவதம் பற்றிய பகுதியில் பாஞ்சாலி கூறும் கூற்றுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தனவாகவும் மனித உணர்ச்சிகளைக் காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. வாழ்க்கை வெறும் மனித சக்தியின் போராட்டம் மட்டுமன்று, மனித சக்தியும் தெய்வ சக்தியும் இணைந்த திருவிளையாடல் என்தே பாகவத நோக்கம். இது குமாரவியாச பாரதத்தில் நன்கு வெளிப்படுகிறது, நீதிக் கருத்துகளும் கிளைக்கதைகளும் முதற்கதையுடன் இணைத்து பெருங்காடு போல் தோற்றமளிக்கும் மகாபாரதம் குமாரவிலாசன் கைவண்ணத்தில் அழகிய பூஞ்சோமையாக மாற்றம் பெற்றுத் திகழ்கின்றது. புராணக் கதைமாந்தர்கல் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு, சாதாரண மக்களுக்கும் நன்கு புலப்படுத்தப்படுகின்றனர். உயிரோட்டம், கற்பனை, எளிமை, புதுமை ஆகிய பண்புகளினால் குமாரவியாச பாரதம் கன்னட இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.{{Right|<b>ம.தி.</b>}} <b>குமாரன் ஆசான்</b> மலையாள இலக்கியத்தில் புனைவியல் கவிஞர்களின் வரிசையில் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்ற குமாரன் ஆசான் காயிக்கர என்னும் சிற்றூரில் கி.பி. 1873-இல் பிறந்தார். இவர் தந்தை பெயர் நாராவணன்; தாயாரி பெயர் காளியம்மா. குமாரன் ஆசான் ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த பின்னா விஞ்ஞான சந்தாயினி எனும் சமசுகிருதப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும் காலத்திலேயே நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்த ‘வல்லி விவாகம்’, ‘உசா கல்யாணம்’ போன்ற நூல்களைப் படைத்தார். சில ஆண்டுப் பள்ளிக் கல்விக்குப் பின்னர் தமது சொந்த முயற்சியால் புதுப்புது நூல்களைப் பயின்றார்; பயின்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கவும் செய்தார். இதனால், அவருக்கு ஆசான் என்ற பெயரும் ஏற்பட்டது. கேரளத்தில் தோன்றிய மிகச்சிறந்த சீர்திருத்த வாதியான நாராயண குருவுடன் ஆசானுக்குத் தொடர்பு ஏற்பட்டது, அதன் விளைவாகப் பக்திப் பாடல்கள் எழுதும் பண்பு இவரிடம் வளர்த்தது. ஆசான் ஒரு கவிஞராக மலர்ந்த காலத்தில் அவர் தோன்றிய சமூகமான ஈழவச் சமூகம் மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்தது. நாராயண குரு ஈழவச் சமூக முன்னேற்றத்திற்காக இயக்க அடிப்படையில் பாடுபட்டுக் கொண்டிருந்தார்; அவருடன் இணைந்து டாக்டர் பல்பு போன்றவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ஆசான் இவர்களுடன் இணைந்து செயற்பட்டார். நாராயண குருவால் ஏற்படுத்தப்பட்ட எசு.என்.டி.பி. யோகம் என்ற அமைப்பின் பொதுச் செயலானராகவும் ஆசான் தொண்டாற்றினார். ஆசான் தம் நாற்பத்தைந்தாம் வயதில் காதல் மணம் செய்துகொண்டதை அனைவரும். எதிர்க்கவே, அவர் தாம் ஏற்றிருந்த பதவியைத்-<noinclude></noinclude> queuosl05hbxald0fiw7imrz5kdp5v4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/692 250 642378 1930617 2026-05-06T08:09:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறந்தார். தொடர்ந்து கவிதைகள் புனைந்து வந்த குமாரன் ஆசான் தம் ஐம்பத்திரண்டாம் வயதில் படகு விபத்து ஒன்றில் காலமானார். குமாரன் ஆசானின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரன் ஆசான்|664|குமாரில்பட்டா}}</noinclude>துறந்தார். தொடர்ந்து கவிதைகள் புனைந்து வந்த குமாரன் ஆசான் தம் ஐம்பத்திரண்டாம் வயதில் படகு விபத்து ஒன்றில் காலமானார். குமாரன் ஆசானின் தொடக்க காலப் படைப்புகள் மரபு வழியான சிந்தனைகளைத் தாங்கி நின்றன: வடமொழி இலக்கியத்தின் தாக்கத்திற்குட்பட்டிருந்தன. இவ்வகையில் ஆசானின் ‘சௌத்தர்ய வாரி’ ‘மேகசத்தேசம்’, ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற மொழிபெயர்ப்பு நூல்களும் ‘சிவதோத்திர மாலா’ என்ற வழிபாட்டுப் பாடலும் ‘விசித்திர விசயம்’ என்ற நாடகமும் குறிப்பிடத்தக்கன. சமூகச் சீர்திருந்தச் இந்தனைகளுடன் இயக்க அடிப்படையில் ஆசான் செயற்படத் தொடங்கியவுடன் அவரது கவிதைப் போக்கிலும் மாறுதல் ஏற்பட்டது: புதிய சிந்தனைகள் கவிதைகளில் இடம் பெற்றன. ‘வீழ்ந்த மலர்’ என்ற கவிதை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தரையில் கிடக்கும் மலரின் வாழ்க்கையுடன் மனித வாழ்க்கைளை ஒப்பிட்டு மெய்மையைத் தேடும் கவிஞரின் உள்ளத்தை இதில் காணமுடியும். மலையாளக் கவிதையுலகில் புனைவியல் இயக்கம் (Romanticism) இக்கவிதையுடன் தொடங்குகின்றது. மளவேட்கைகள், புலனின்பங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல; அவைகளும் வாழ்வின் கூறுகளே என்பதை உணர்த்தும் வகையில் ‘நளினி (1911)’, ‘இலிலோ (1914)’ ஆகிய கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரும்புலவரான ஏ.ஆர். இராசராசவாமாளின் மறைவினையொட்டி, ஆசான் ‘பிரரோதனம்’ என்ற இரங்கற்பாவினைப் பாடினார். இராமாயணச் சீதையைப் புதிய கோணத்தில் பார்க்கும் முறையில் 'சித்தனையில் மூழ்கிய சீதை" என்று கவிதையையும் ஆசான் பாடியிருக்கிறார். (1919). இராமனால் காட்டுக்கு அனுப்பப்பட்டுப் பன் விரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் மாலை நேரத்தில் தனியே சீதை தன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தனை செய்யும் முறையில் இக்காப்பியம் அமைத் திருக்கின்றது. தடைமுறையில் காணப்படுகின்ற சமூக நிகழ்ச்சி ஒன்றின் மூலமும் புதுமைக் கருத்துகளை ஆசான் கூறுவதை ‘துரவசுத்த’ என்ற காப்பியத்தின் மூலம் அறியலாம்; 1921-ஆம் ஆண்டில் நடந்த மலபார் முசுலீம்களின் கலகம் இதில் பின்னணியாக அமைந்துள்ளது. இது உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த ஆடவனை விரும்பி மணந்து கொள்ளும் கதையைக் கூறுகிறது. இதேபோன்று, ‘சண்டான பீசசுகி’ என்ற கவிதையும் தாழ்ந்த இளப்பெண் புத்த துறவியாக மாறுவதைக் காட்டுகின்றது. இவ்விரண்டு கவிதைகளுமே சாதி வேறுபாடுகளைக் கண்டிக்கும் முறையில் அமைந்தவை. குமாரன் ஆசாவின் பிறிதொரு படைப்பான ‘கருண’ (1923) நிலைபேறுடைய இன்பம் எது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சமயம் என்பது சமுதாயத்தை உய்விக்கும் கருவியாகத் திகழவேண்டும் என்பது இக்காப்பியத்தில் மிகவும் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. ‘புட்ப வாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ என்ற கவிதைத் தொகுப்புகளும் ‘குழந்தையும் தாயும்’ என்ற குழந்தைப் பாடலும் ‘கிராமத்து மரக்கிளையில் குயில்’, ‘ஒரு ஈழவக் குழந்தையில் எண்ணங்கள்’ போன்ற தன்னுணர்ச்சிப் பாடங்களும் ‘புத்தசரிதம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். உலக இயக்கத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அன்பே அடிப்படை என்பது இவரது படைப்புகள் அனைத்திலும் ஊடாடிக் கொண்டிருக்கும் இழையாகும்.{{Right|<b>ம.தி.</b>}} <b>குமாரிலபட்டர்</b> வடமொழி தத்துவ இலக்கிய ஆசிரியர்களுள் தலைமை சான்றவர். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர், மீமாம்சை என்னும் வைதிக வழியைப் பின்பற்றித் தம் தத்துவக் கருத்துகளை எடுத்துரைத்தவர், இவரால் நிலைநாட்டப்பட்ட ஆராய்ச்சி ‘பாட்டமதம்’ என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. இவர் புத்தசமயக் கொள்கைகளை மறுத்துக்கூறி அவர்கள் வாதங்களை முனைப்புடன் முறியடித்தவர், இவ்வகையில் இவர் சங்கராச்சாரியார், உதயணாச்சாரியார் ஆகிய இருவருடனும் ஒப்புமை கூறத்தக்கவர். இவர் குமரிவர் எனவும் துதாதிதர் எனவும் சொல்லப்படுகிறார். இவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதனைப் பல ஆதாரங்களால் அறியலாம். இவர் பௌத்த நாத்திக வாதத்தை எதிர்த்து ஆத்திகத்தை நிலைநாட்டிய இலக்கிய வித்தகர். இவர் மீமாம்சை உரையாசிரியரான பிரபாகரரின் சீடர் எனவும் பெளத்த சமயச் சான்றோரான தருமகீர்த்தியின் கருத்துகளைச் சாடியவர் எனவும் அறியப்படுகிறது. வடமொழி இலக்கிய இலக்கணங்களில் நல்ல நேர்ச்சி பெற்ற குமாரிலர் மீமாம்சையின் முதல் நூலான சைமீனி சூத்திரங்களுக்கும் சபரசுவாமி<noinclude></noinclude> 18lj2uvzaqzaotxgk2mvm3rq6iepnwc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/693 250 642379 1930618 2026-05-06T08:18:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்றிய நூலான பாகயத்தின்மீது வார்த்திகம் என்னும் விரிவுரையை இயற்றினார். குமாரிலபட்டர், முருகப்பெருமானின் அவதாரமாகப் போற்றப்படுகிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரிலர்|665|குமுழி ஞாழலார் நப்பசலையார்}}</noinclude>இயற்றிய நூலான பாகயத்தின்மீது வார்த்திகம் என்னும் விரிவுரையை இயற்றினார். குமாரிலபட்டர், முருகப்பெருமானின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். சித்தாத்தியாகவும், பேரறிஞராகவும் திகழ்ந்த இவருக்குச் சீடர் பலர் இருந்தனர். இவர்களுள் மண்டன மிசிரர், சயமிச்ரர் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மண்டனமிசிரர் மீமாம்சையிலும் வேதாந்தத்திலும் வல்லவர். உம் வேகளும் (வடமொழிக் கவி பவபூதி) இவரது சீடராகக் கருதப்படுகிறார். உம்வேகர், குமாரிலபட்டரது சுலோகவார்த்திகத்திற்கு உரை இயற்றியுள்ளார். குமாரிவரது மகளான சயமிச்ரர் சிறந்த மீமாம்சசுராகத் திகழ்ந்ததுடன், தம் தந்தையாரின் சுலோக வார்த்திகத்திற்கு உரையும் செய்துள்ளார். இவ்வுரை நூல் ‘சர்க்கரிகை’ எனப்படுகிறது.{{Right|<b>ம.இ.</b>}} <b>குமாரிலர்</b>: வடமொழி இலக்கிய வரலாற்றில் கி.பி. 600க்கும் கி.பி. 900க்கும் இடைப்பட்ட காலம் குமாரிலரின் காலம் என வழங்கப்பட்டதென அறிவது அம்மொழி இலக்கிய மாணவருக்குச் சுவைதரும் செய்தி. ஏனெனில் இக்காலத்தில்தான் வடமொழியில் அனைத்துத் தத்துவ சாத்திரத் துறைகளிலும் மிகப் பெரிய வல்லுநர் தோன்றினர். சிறப்பாக மீமாம்சா (Desire for Knowledge) என்ற தத்துவ சாத்திரத் துறையில், இக்காலத்தில்தான் குமாரினர், பிரபாகர மிச்சீரர், மண்டனமிச்சிரர் (இவர் அத்துவைதக் கொள்கையைப் பின்னர்க் கொண்டார்) சாலீகநாதமிச்சிரர், வாசசுபதிமிச்சிரர் ஆகியோர் தோன்றினர். அவர்கள் தம் அரிய நூல்களால் ‘பூருவ மீமாம் சை’யை வளம்பெறச் செய்தனர். மேலும் இத்துறை பட்டர்கொள்கை, பிரபாகர் கொள்கை என இரு கூறுகளாகப் பிரிவு படவும் காரணமாயினர். குமாரிலர் பட்டபாதர், துதாதர், குமாரர் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவர் மிகப் பெரிய தத்துவ சாத்திர வல்லுநீர், மீமாம்சா வார்த்திகம் என்ற நூலைக் கி.பி. 620க்கும் 700க்குமிடையே இயற்றினார். அது பற்றி, பூர்வமீமாம்சா சாத்திரத்தின் வளர்ச்சிக் காலத்தை மூன்றாகப் பிரித்துக் குமாரிலருக்குமுன் காலம் எனவும், குமாரியலரின் காலமொவும், குமாரிலருக்குப்பின் காலமெனவும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவது வழக்கம். ஆக, குமாரிலர் மீமாம்சா சாத்திரத்தில் ஒரு நடுப்பொறுப்பாளராகக் கருதப்பட்டார். அவர் முருகக் கடவுளில் மறுவவதாரமெனவும், ஆத்திக தர்சனம் என்ற வேத்தெறி தத்துவ சாத்திரம் ஆகியவற்றில் திண்ணிய புலமை பெற்றவர் எனவும், பின் புத்தமதத் துறவி வேடத்தில் அம்மதகுருவினிடம் புத்தமதக் கொள்கைகளை ஐயமறக் கற்றுத் தேர்த்து, சாபர பாடியத்தின் தருக்கவாத விளக்கவுரையான தனது சுலோக வார்த்திகத்தில் அம்மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார் எனவும், எனவே புத்த மதகுருவின் சாபத்தை நீக்கவும், தூய்மைபெறவும் உமித்தீயில் தம்மை எரித்தார் எனவும் பரம்பரைக் கதையொன்று கூறுகிறது. அவரும் ஆதிசங்கரரும் சமகாலத்தவர் என்றும் கூறுவர். தமது தந்தர வார்த்திகத்தில் அவர், பர்த்ருகரியின் வாக்யபிதீபத்தைக் குறிப்பிடுகிறார். ஆகவே பர்த்ருகரிக்குப்பிற்பட்டவர் இவர் எனத் தெரிகிறது. இட்சிங்கின் கூற்றுப்படி பர்த்ருகரி கி.பி. 650-இல் இறந்தார் என நம்பலாம். மேலும் இவர் (குமாரிலர்) மண்டனமிச்சிரரின் (கி.பி. 670-740) ஆசிரியராகக் கருதப்படுவதால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனக் கருதலாம். பல அறிஞர் குமாரினர் தென்னாட்டவர் எனக் கூறுவர். அதற்குச் சான்றாக அவர் தந்திரவார்த்திகத்தில் (1.3.5) பல திராவிடமொழிச் சொற்களைக் கையாள்வதாய்ல் கூறுவர். அங்கு அவர் வடமொழிச் சொற்களுக்கும் திராவிட மொழிச் சொற்களுக்கும் கருத்துவழித் தொடர்பை வலியுறுத்துகிறார். எனினும் சாலிகநாதர் (மீமாம்சை வல்லுநர்) அவரை மிச்சிரர் எனக் கூறினமையால் அவர் வடநாட்டினராய் இருக்கலாம் என்று வி.ஏ. இராமசுவாமி சாத்திரியார் கூறுவார். சுலோக வார்த்திகம், தந்திரவார்த்திகம், உடுப்டீகா என்பவை. சையிலி சூத்திரத்தின்மேல் சபரர் எழுதிய பாடியத்திற்கு உரைநூல்களாகும். அவை தவிர பிரகத்டீகை, மத்யமடீகை என்ற உரை நூல்களையும் இவர் இயற்றியதாக மாதவசரசுவதி கூறுவார். ஆனால், அவை இப்போது கிடைத்தற்கரியன.{{Right|<b>எஸ்.சீ.</b>}} <b>குழி ஞாழலார் நப்பசலையார்</b>: இவர் சங்க காலப் பெண்பாத் புலவர். இவரினும் வேறாகக் காமக்கணிப் பசலையார் (பூப்பசலையார்) என்றொரு புலவர் காணப்பெறுகிறார். குமுழி ஞாழலார் நப்பசலையார் பாடிய அகநானூற்று 160-ஆம் பாடலைக் காமக்கணிப் பசலையார் பாடியதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கருதுவர். குமுழி ஞாழல் எனபதை இவரது ஊர்ப் பெயர் எனச் சிலர் கருதுகின்றனர். சங்கத்தொகை நூல்களுள் இவர் இயற்றியதாக அகநானூற்று 160-ஆம் பாடல் ஒன்றே காணப்பெறுகிறது. இப்பாடல் தோழி வரைவு மலிந்து கூறியது என்னும் துறையைச் சார்ந்தது. இப்பாடலில், இது சாறும் இரவில் வந்த தலைவனது நேர் இன்று<noinclude></noinclude> h8ceoled3ufmee9zr1ets0c7maro2ix பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/694 250 642380 1930619 2026-05-06T08:27:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆரவாரம் மிக்க இளையரோடு அவர் கூறும் ஊர்ப் பெண்டிர் பலரும் காண, வெளிப்படையாகப் பகற் பொழுதில் வத்தமை கண்டு என் நெஞ்சம் தடுக்கம் எய்துகிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குயூபெக்கு|665|குயூபெக்கு}}</noinclude>ஆரவாரம் மிக்க இளையரோடு அவர் கூறும் ஊர்ப் பெண்டிர் பலரும் காண, வெளிப்படையாகப் பகற் பொழுதில் வத்தமை கண்டு என் நெஞ்சம் தடுக்கம் எய்துகிறது. தோழி, உனக்கு இந்நடுக்கம் உண்டாகிறதா? என்று தலைவியிடத்து வினவுவான் போலத் தோழி, தலைவனது வரைவு மலிவை நயம்பட உணர்த்துகிறாள். தலைவன் உப்பங்கழியைக் கடந்து வரும் போது. அவனுடைய தேரின் ஆழியால் அறுக்கப்பெற்ற அரும்புகளையுடைய நெய்தல், பாம்பு தன் தலையை மேலே தூக்கியதுபோல வாடி மேலெழுந்தது என்னும் இயற்கை உலமை இப்பாடற்கண் இடம்பெற்றுள்ளது. கடற்கரையில், மணல்மேட்டின் பக்கம், யாமை ஈன்று புதைத்த முட்டைகளை அவற்றினின்றும் குஞ்சுகள் வெளிப்படும் வரை ஆண் யாமை காத்தோம்பும் என்னும் யாமையியல்பை இப்புலவர் உள்ளுறை அமையப் பாடியுள்ளார்.{{Right|<b>இரா.சா.</b>}} <b>குயூபெக்கு</b> கனடாவிலுள்ள மாநிலங்களுள் ஒன்று. கனடாவின் மிகப்பெரிய மாநிலமான குயூபெக்கு (Qusbec), மக்கள் தொகையில் ஓண்டாரிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. இது சல்நார் உற்பத்தியில் உலகில் முதலிடம் வழிக்கிறது, உலக உற்பத்தியில் 80% கல்நார் இங்கு உற்பத்தியாகிறது. இங்குத் தயாரிக்கப்படும் வெண்ணெய் உலகப் புகழ் பெற்றுள்ளது. இங்கு 80% பிரெஞ்சுக் கனடியர் வாழ்ந்து வருகின்றனர். பிரெஞ்சு மொழி இங்கு மிகுதியும் பேசப்படுகிறது. இம்மாநிலத்தின் தலைநகரம் குழுபெக்கு ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 694 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 120 |oTop = 285 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|குயூபெக்கு}} அட்சன் சலசந்திக்கும் ஒட்டாவா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள குயூபெக்கு ஒரு செழிப்பு மிக்க மாநிலம். இதன் மேற்கில் அட்சன் வளைகுடா வடக்கில்வும் ஒண்டாரியோ (Ontario) ததியும், அட்சன் சலசந்தியும், கிழக்கில் நியூபௌண்டுமாத்தும், தெற்கில் நியூ பிரன்சுலிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்ளன. இம்மாநிலத்தின் பெரும் பகுதி மலைப்பகுதியாகும். இம்மலைப்பகுதிகளில் தாதுப் பொருள்கள் மிருதியாகக் கிடைக்கின்றன. புனித இலாரன்சு (St. Lawrence) தாழ்நிலப் பகுதி செழுமை மிக்கது. இங்கு மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். இலாரன்சு ஆற்றின் இருமருங்கிலும் நாட்டர்டாம் மலைத்தொடரும், இலாரன்சியன் மலைத்தொடரும் அணி செய்கின்றன. இம்மாநிலத்தின் உயர்ந்த பகுதி சேகூசு கார்டியர் மலையாரும். காசுபே தீபகற்பத்தில் உள்ள இப்பகுதி 1630 மீட்டர் உயரம் கொண்டது. இம்மாநிலத்தில் இலாரன்சு ஆறும் அதன் துணையாறுகளும் மட்டுமன்றி ஓட்டாவா, புனித மாரிசு, சாகனே போன்ற ஆறுகளும் பாய்ந்து வளம் பெருக்குகின்றன. சாகனே ஆற்றில் சிப்சர் அணை என்னும் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதில் மின்சக்தி எடுக்கப்படுகிறது. புனித சான் முதலான ஏரிகளும் இம்மாநிலத்தில் உண்டு. குயூபெக்கு மாநிலத்தில் புகழ்மிக்க, எழில்மிக்க பூங்காக்களும் உள்ளன. அவற்றுள் தேசிய வரலாற்றுப் பூங்கா இரண்டும், மாகாணப் பூங்கா நான்கும் குறிப்பிடத்தக்கவையாகும். இம்மாநிலத்தின் தட்பவெப்பநிலை இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. தென்பகுதியைத் தவிரப்பிற இடங்களில் கோடைக்காலம் குறுகியதாகவும் மிகுந்த வெப்பமின்றியும் உள்ளது; குளிர் காலத்தில் மிகுந்த குளிராக உள்ளது. மழையளவு 86.4-114.3 செ.மீ; பனிப்பெய்வு தெற்கில் 246,4-421.6 செ.மீ. அளவும், வடக்கிம் 175.3 -327.6 செ.மீ. அளவும் உள்ளது. இம்மாநிலத்தின் மக்கள் தொகை 5,984,000 ஆகும்; பரப்பளவு 1,540,687 ச.கி.மீ. தலைநகரான குயூபெக்கைத் தவிர மாண்ட்ரியல், இவவல், வர்துன், திரீ மீவச்சு, சர் புரூக்கு, அல் ஆகிய நகரங்களும் உள்ளன. பெரிய மாண்ட்ரியல் இங்குள்ள புகழ்பெற்ற துறைமுகமாகும். உள்நாட்டில் நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன. மக்களுள் 78 விழுக்காட்டினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இங்குக்<noinclude></noinclude> jmxrtq7xnd8i9xc4uwez0hrgth6ol1z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/695 250 642381 1930622 2026-05-06T08:37:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கத்தோலிக்கரும் சீர்திருத்தக் கிறித்தவரும் (Protestants) வாழ்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 695 |bSize = 375 |cWidth = 157 |cHeight = 118 |oTop = 63 |oLeft = 28 |Location = center |Descript..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குயூபெக்கு|667|குயூபெக்கு}}</noinclude>கத்தோலிக்கரும் சீர்திருத்தக் கிறித்தவரும் (Protestants) வாழ்கின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 695 |bSize = 375 |cWidth = 157 |cHeight = 118 |oTop = 63 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|மாண்ட்ரியல் நகரம்}} மக்கள் தொகையுள் பெரும்பான்மையினர் வேளாண்மை, பால்பண்ணைத் தொழில், ஆடுமாடு மேய்த்தல், மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் முதலான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். காகிதம் தயாரிக்கும் தொழில், இரும்பு எஃகுத் தொழில், நெசவுத் தொழில் ஆகியனவும் இங்கு நடைபெறுகின்றன. கனிப் பொருள்களும் இங்கு வெட்டியெடுக்கப்படுகின்றன. பொன், துத்தநாகம் போன்ற தாதுப் பொருள்களும் இங்குக் கிடைக்கின்றன. அண்மையில் இம்மாநிலத்தின் கிழக்கே லேப்ரடார்ப் பகுதியில் இரும்புக் கவிகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் ஆகாய விமானங்களும் அதன் பாகங்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்குக் கோதுமை, பார்லி, ஒரு வகைக் கம்பு (Rye), ஓட்சு, பழங்கள், உருளைக்கிழங்கு ஆகியன பயிர் செய்யப்படுகின்றன. தென் பகுதிகளில் பழ வகைகள் மிகுதியாக விளைகின்றன. தானியங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு இங்கே உணவுத் தானியங்கள் மிகுதியாகப் பயிர் செய்யப்படுகின்றன. குயூபெக்கில் பிரெஞ்சுக்காரர்களே முதன் முதலில் குடியேறினர். இப்பகுதி கி.பி. 166-இல் பிரெஞ்சு மாநிலங்களுள் ஒன்றாக ஆயிற்று. ஏறத்தாழ நூறு ஆண்டுகட்குப் இப்பகுதி இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலப்படை கி.பி. 1759-இல் குயூபெக்கு நகரைக் கைப்பற்றியது. இது கி.பி. 1867-இல் கனடாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அதன் பகுதி ஆயிற்று, பிரெஞ்சு, ஆங்கில மொழி பேசும் குயூபெக்கு மக்களிடையே நீண்ட காலம் தகராறுகள் நிலவின. இங்கு வாழ்ந்து வரும் பிரெஞ்சு மக்களுன் பெரும்பாலோர். உரோமன் கத்தோலிக்கர்கள். சில ஆண்டுகட்கு முன்பு கூடப் பிரெஞ்சுக் குடிமக்கள் குறுபெக்கில் தனிப் பிரெஞ்சு நாடு வேண்டிப் போராடினா, இங்கு 108 உறுப்பினர் கொண்ட தேசிய சபை ஒன்றுள்ளது; பிரதம மந்திரியின் தலைமையில் அமைச்சரவை ஒன்றுனது. இங்கிலாந்து மன்னரின் சார்பாளராக உதவி ஆளுநர் ஒருவர் இங்குள்ளார். இவருக்கு அதிகாரங்கள் குறைவு தான், கனடாவின் பெரிய மாநிலமாகவும், தொழில் மிக்க மாநிலமாகவும் திகழ்ந்துவரும் குயூபெக்கு தொழில் துறையில் வேசமாக முன்னேறி வருகிறது. <b>குயூபெக்கு நகரம்</b>: கனடாவிலுள்ள குயூபெக்கு மாநிலத்தின் தலைநகரம்; சிறந்த துறைமுகப்பட்டினம்: சுறுவறுப்பான வணிக நகரம். இந்நகரம் தொழில் வளர்ச்சியில் மேம்பட்டு விளங்குகிறது. புனித இலாரன்சு ஆறும், புனித சார்லசு ஆறும் கூடு ஒன்ற இடத்தில் புனித இலாரன்சு ஆற்றில் அமைந்துள்ள குயூபெக்கு நகரம், புதிய துறைமுகமாகவும் விளங்குவதால் உலகின் மாபெரும் துறைமுகங்களுடன் கப்பல் போக்குவரத்தைக் கொண்டுள்ளது. வடஅமெரிக்காவிலேயே குயூபெக்கு நகரம் ஒன்றுதான் சுற்றிலும் நடுப்புச் சுவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றான இலவால் பல்கலைக்கழகம், இந்த குயூபெக்கு நகரத்திற்கு அருகில் தான் உள்ளது. இந்நகரில் வாழும் மிகப் பெரும்பான்மையினர் (ஏறத்தாழ 92மீ) பிரெஞ்சு மொழியைத்தான் பேசுகின்றனர். ஆங்கில மொழியில் ஒளிபரப்பும் வானொலி நிலையங்களைக் காட்டிலும் பிரெஞ்சு மொழியில் ஒலிபரப்பும் நிலையங்களே இங்கு மிகுதி. குயூபெக்கு நகரின் மொத்த மக்கள் தொகை 167,000 ஆகும். காகிதம் தயாரித்தல், நெசவு, இறைச்பெதப்படுதல், காலணி (செருப்பு) தயாரித்தல், கப்பல் கட்டுதல் ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய தொழில்கள் ஆகும். மரங்களும் கால்நடைகளும் இங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கேப்பு தயமண்டிலுள்ள (Cape Diamond) மேலை நகரத்தில் (Upper Town) மிகு கிறித்தவக் கோயில் ஒன்றும், உயர்ந்த கோட்டை ஒன்றும், பல வரலாற்றுப் புகழ்மிக்க தொன்மையான கட்டடங்களும் உள்ளன, கீழை நகரமோ (Lower Town) தொழில், வாணிக மையமாகத் திகழ்கிறது. இங்குள்ள பள்ளிகள் பெரும்பாலும் உரோமன் கத்தோலிக்கப் பள்ளிகளாகவே உள்ளன. பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் குயூபெக்கில் கி.பி. 1759-இல் நிகழ்ந்த போர்<noinclude></noinclude> ho0q7s6f8ky4fanhysrxcb0wqx49t7l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/696 250 642382 1930623 2026-05-06T08:46:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 696 |bSize = 375 |cWidth = 346 |cHeight = 155 |oTop = 45 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|குயூபெக்கு நகரம்}} அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குர்திசுத்தானம்|668|குரங்காடுதுரை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 696 |bSize = 375 |cWidth = 346 |cHeight = 155 |oTop = 45 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|குயூபெக்கு நகரம்}} அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்குள்ள கவின்மிகு வீடுகளும் நேர்த்தியான, நேரான தெருக்களும், கண்கவர் கிறித்தவக் கோயில்களும் அயல்நாட்டுப் பயணிகளின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துள்ளன. அழகிய நகரமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகவும் விளங்குகின்ற குயூபெக்கு நகரம் கனடாவிற்குப் பெருமை தேடித்தருகிறது.{{Right|<b>ம.இ.</b>}} <b>குர்திசுத்தானம்</b> 115184 சதுர கி.மீ. பரப்புள்ளது. இது ஆசியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக் காலத்தில் விளங்கிய அசீரியப் பேரரசு குர்திசுத்தானத்தையும் (Kurdistan) தன்னுள் கொண்டிருந்தது. இப்பகுதி மக்கள் குர்தியர்கள் எனப்படுவர், பலர் முகம்மதிய சமயத்தைச் சேர்ந்துள்ளனர், குர்திய மொழி மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு, கிர்க்கூக்கு (Kirkuk) என்னும் நகரில் எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. நாட்டின் தென் பகுதியில் வேளாண்மை செழிப்புற்றிருக்கிறது. வான் (Van), உர்மியா (Urmiah) என்னும் இரண்டு பெரிய ஏரிகள் இங்கு இருக்கின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 696 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 115 |oTop = 310 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|குர்திசுத்தானம் அமைவிடம்}} <b>குரங்காடுதுறை</b> என்ற பெயருடைய ஊர்கள் காவிரிக் கரையின் இரு பக்கத்திலும் விளங்குகின்றன. இயற்கைக் காட்சிகளைக் காட்டும் துறைகளில் இரு குரங்காடுதுறைகளும் சிறப்புற்று விளங்குகின்றன. காவிரியின் வடகரையில் வடகுரங்காடுதுறை, காவிரியின் தென்கரையில் குரங்காடுதுறை (ஆடுதுறை) என வழங்கப்பெறுகின்றன. தென்குரங்காடு துறையாகிய ஆடுதுறை, கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் இடையில் இருக்கிறது. வடகுரங்காடுதுறை, கும்பகோணம் திருவையாறு பேருந்துச் சாலையின் இடையில் இருக்கிறது. இவ்விரு தலங்களும் தேவாரப் பாடல்பெற்ற தலங்கள். மேலும் இவை, இராமாயணத்தில் இடம்<noinclude></noinclude> cdbj1n0ztk2fd1u41trjtqy5o8fum6n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/697 250 642383 1930625 2026-05-06T08:57:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெற்ற சுக்கிரீவனும் வாலியும் பூரித்ததலங்களுமாகும். தென்குரங்காடுதுறை சுக்கிரிவன் வழிபட்ட தலம்; வடகுரங்காடுதுறை வாலி பூசித்த தலம். வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரவைக்கூத்து|669|குரான்}}</noinclude>பெற்ற சுக்கிரீவனும் வாலியும் பூரித்ததலங்களுமாகும். தென்குரங்காடுதுறை சுக்கிரிவன் வழிபட்ட தலம்; வடகுரங்காடுதுறை வாலி பூசித்த தலம். வடகுரங்காடுதுறை கருவுற்ற ஒரு வணிகப் பெண்ணிற்கு இளநீர் தருவதற்குத் தென்னை மரத்தினையே குலை வணங்கச் செய்த பெருமையுடையது. தென்குரங்காடுதுறை கருவுற்ற பெண்ணிற்காக இறைவர் அப்பெண்ணின் தாயாக ‘ஆபத் சகாயராக’ விளங்கிய தலம். வடகுரங்காடுதுறை நடராசர் சபை சிறப்புடையது. இங்கு நடராசர் மூலவராகச் சிறந்த சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கிறார். தென்குரங் காடுதுறையிலும் நடராசர் சபை சிறப்புடையது. வடகுரங்காடுதுறைக் கோவிலில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்க சோழன், விக்கிரம பாண்டியன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன. தென்குரங்காடுதுறைக் கோயிலிலும் செம்பியன் மாதேவியார் திருப்பணி முதலியவற்றை விளக்கும் கல்வெட்டுகள் கரணப் பெறுகின்றன. வடகுரங்காடுதுறையில் இறைவர். பெயர் குலைவணங்சேர் ஆகும். இறைவி பெயர் அழகு சடைமுடியம்மை, தென்குரங்காடுதுறையில் இறைவன் திருப்பெயர் ஆபத்சகாயர், இறைவி பவளக் கொடியம்மை. இவ்விரு குரங்காடுதுறைகளும் இயற்கைச் சூழல் சிறப்புற்ற திருவூர்களாகும்.{{Right|<b>க.சு.</b>}} <b>குரவைக்கூத்து</b> என்பது கூத்து வகைகளுள் ஒன்று, இது விதோதக்கூத்து வகையில் என்பது, ‘குரலை வரியே கோலம் மூன்றும், விரலிய விநோதம் ஆகும் என்ப’ என்னும் பஞ்சமரபு காப்புப் பகுதி விளக்கத்தில் காணப்படும் உரைச் சூத்திரத்தால் தெரிகிறது. ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்னும் இடம் இரு குரவைக் கூத்துகள் சிலப்பதிகாரத்தில் பெற்றுள்ளன. இவற்றுள் முன்னது முல்லைநில மக்களாலும், பின்னது குறிஞ்சி நில மக்களாலும் ஆடப்பெற்றன. ஆயர்பாடியில் கண்ணனும் பலராமனும் தப்பின்னையுடன் ஆடிய கூத்து குரவைக் கூத்து என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. ‘மண்ணின் மாதர்க்கு அணியாகிய கண்ணகியுந்தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடியவால சகிதை நாடகங்களில் வேல்நெடுங்கள் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம் என்றான்.......’ என்பது ஆய்ச்சியர் குரவையில் காணப்படும் குறிப்பாகும். இக்கூத்தினை மாதரி என்பவள் கறவை கன்றுகளின் துவர் நீங்குவதற்காக ஆடினாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மாதரி, கன்னியர் எழுவரை நிறுத்தி ஏழிசையின் பெயர்களாகிய குரல் முதலியவற்றை அவர்களுக்குப் பெயர்களாக இட்டாள். அவர்களுள் குரலாகியவளைக் கண்ணன் என்றும், இனியா இயவனைப் பலராமன் என்றும், துத்தம் ஆகியவளைப் பிள்ளை என்றும், ஏனைய நரம்புகளாகியோரை மற்றை நால்வர் என்றும் பெயரிட்டாள். அவர்கள் கற்கடகக் (தண்டு வடிவில்) கைகோத்து நின்று மாயோனைப் பாடிக் குரவை ஆடினர். இப்பகுதியில் முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலாகவும் திருமாலின் பல்வேறு சிறப்புகள் அழகுறப் பேசப்பட்டுள்ளன. கண்ணகி கணவனுடன் விமானம் ஏறிச் செல்லக் கண்ட மலைவாழ் வேட்டுவகும், வேட்டுவிச்சிவரும் அவன் பொருட்டுக் குரவைக் கூத்து நிகழ்த்தினர். இக்கூத்தில் முருகனின் வேலின் சிறப்பினை விரித்துரைக்கும் பாடல்களைப் பாடினர், மேலும், அகப்பொருட்சுவை நிரம்பிய பாடல்கள் சிலவற்றையும் முருகனோடு தொடர்புபடுத்திப் பாடியாடினர். குரவை என்பது தனியொருவர் ஆடும் கூத்தாக அமையாமல் குழுவாக ஆடும் கூத்தாக அமைந்துள்ளது. இக்கூத்து தெய்வத்தின் சிறப்பினைப் பரப்புவதாக இருந்துள்ளது. பண்டைத் தமிழகத்தில் பாமர மக்களிடம் பெருவழக்காக இருந்த கூத்துவகையுள் ஒன்று குரவைக் கூத்து எனலாம்.{{Right|<b>தே.ஞா.</b>}} <b>குரான் (குர் ஆன்)</b> இசுலாமியர்களின் புனித நூல். இப்புனித குர்ஆன் 114 படவங்களையும் 6666 சொற்றொடர்களையும் கொண்டது, அப்படலங்கள் அரபி மொழியில் சூரா (Sara) என்று சொல்லப்படுகின்றன. ஓவ்வொரு படலத்திற்கும் தலைப்பு உண்டு. அதுபோலவே எந்த இடத்தில் அது நபிகள் நாயகம் அவர்களால் திருவாய் மலர்த்தருளப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆனின் சொற்றொடர் ஆயத்து (Ayat) என்று அரபிமொழியில் சொல்லபடுகிறது. ஒன்பதாம் படலத்தைத் தவிர மற்றவை ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால்’ என்று தொடங்குகின்றன. படிக்கும் வசதிக்காகக் குர்-ஆன் முப்பது பாகங்களாகப் (Parts) பகுக்கப்பட்டுள்ளது. அவை அச்சாவு (Ajznu) என்று அரபியில் சொல்லப்படுகின்றன. குர் ஆனின் முதற் படலம் தவிரப் பெரும்பாலான படலங்கள் இறைவன் தன்னிலையில் கூறுவதாகவே<noinclude></noinclude> 4ryddkbq6jahwax9q8mgqmcdh6m3gcy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/698 250 642384 1930626 2026-05-06T09:06:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ளன. இந்நூல், இறைவனால் முகம்மது நபி அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டதாகக் குர் ஆனில் (25:32) குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயல் சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரான்|670|குரு}}</noinclude>உள்ளன. இந்நூல், இறைவனால் முகம்மது நபி அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டதாகக் குர் ஆனில் (25:32) குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயல் சிப்ரயில் (Gabriel) என்னும் புனித தேவதூதர் மூலம் நடந்ததாகவும் அதில் சொல்லப்படுகிறது. இக் குர் ஆன் நபிகள் நாயகம் காலத்திலேயே சிலரால் எழுதப்பட்டுப் பலரால் மனனம் செய்யப்பட்டது. கலீபா அபுபக்கர் அவர்களின் காலத்தில் சைத்து இபுறு தாபித்து (Zayd-ibn Thabit) என்பவரால் இது முதலில் தொகுக்கப்பட்டது. இது பிற கலிபாக்களில் காலத்திலும் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு வந்தது. கலீபா உமரின் காலத்திற்குப் பின் இது நபிகள் நாயகத்தின் விதவை மனைவியும் உமரின் மகளுமாள அப்சா (Hafsa) அவர்களிடமிருந்தது. பின்னர், இவ்வம்மையாரிடமிருந்த குர் ஆனின் நகல் தவிர மற்ற அனைத்தும் தீயிட ஆணையிடப்பட்டது. அதன் படி உறுமான் காலத்தில் பெறப்பட்ட குர்ஆனே இன்றளவும் ஒரு புள்ளிகூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இன்று உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் குர் ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், இறைவனைத் தொழுவதற்குக் குர் ஆனில் உள்ள அரபி மொழிச் சொற்றொடர்களே உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இறைவனின் தனித்தன்மை, எல்லாம் வல்ல ஆற்றல், நேர்மை, நீதி முதலியன குர் ஆனின் செய்திகளில் அடங்கியுள்ளன. உருவ வழிபாடும் இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களை வணங்குவதும் கண்டிக்கப்பட்டுள்ளன. துறக்கத்தின் சிறப்பும் நரகத்தின் கொடுமையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இவ்வுலகத்தின் இறுதி நாள் (கியாமத்) பற்றிய எச்சறிக்கையும் தீர்ப்புநாள் (Day of Judgement) பற்றிய அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளன. மதத்தைப் பின்பற்றுகின்ற நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரைகளும் வழிகாட்டும் நெறிமுறைகளும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இறைவணக்கத்தின் இன்றியமையாமை, இறைவனை வேண்டும் முறை, நோன்பு தோற்றம், தருமம் செய்தல், புனிதப் பயணம் மேற்கொள்ளல் முதலியன கூறப்பட்டுள்ளன. மேலும், கல்லியின் இன்றியமையாமை, மருத்துவம், சுகாதாரம், உரிமை இயல் (Civil code), குற்றவியல் (Criminal code), வாரிசுரிமை (Inheritance), பெண்ணுரிமை, திருமணம், மண முறிவு ஆகியன பற்றிச் செய்ய வேண்டியவைகளைச் சட்டமாகக் கூறுகிறது. கடன் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் அவற்றைச் சாட்சிகளோடு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற அதே சமயத்தில், வட்டி வாங்கக் கூடாது எனவும் குர்ஆன் கட்டளை இடுகிறது. கலப்படம், பிறர்மனை நயத்தல், திருட்டு, கொலை போன்ற குற்றங்களைக் கண்டிக்கும் குர்-ஆன் அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடுகிறது.{{Right|<b>எச்.சா.அ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>குர்சித் அகமத்,</b> இசுலாம் ஓர் அறிமுகம், இசுலாமிய நிறுவன வெளியீடு, சென்னை, 1982.<br> <b>Selwyn Gurney Champion & Dorathy short,</b> Readings from World Religions, Fawcett World Library Publication, New York. 1951. <b>குரு</b>: சூரியனைச் சுற்றிவரும் கோள்களுன் புதன், சுக்கிரன் (வெள்ளி), செவ்வாய், வியாழன், சனி என்பவை சிறப்பானவை. அவற்றுள் வியாழன் என்பதையே ஒரு என்று குறிப்பிடுகிறார்கள். எல்லாக் கோள்களிறும் இது பெரியது. எனினும் இது மிகுந்த தொலைவில் இருப்பதால் விண்மீன் போன்றே கண்ணுக்குத் தோன்றுகிறது. இது சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். எனவே, இது ஆண்டுக்கு ஓர் இராசியாக 12 இராசிகளோடும் செயற்படும். மிகவும் துல்லியமாக அளந்து கூறியவர்கள் ஒவ்வோர் இராசியோடும் 399 நாள்கள் இதன் செயற்பாடு அமையும் என்பர். இச்செயற்பாட்டினை ஒரு ‘பரிவிருத்தி’ என்பர். பதினொரு பரிவிருத்திகள் சூரியனைச் சுற்றிவரத் தேவைப்படும். ஒரு பரிவிருத்தியின் 399 நாள்களில் 14-ஆம் நாளில் குரு கிழக்கே தோன்றும். 139-ஆம் நாளில் வக்கிரம் (பின்னோக்கி நகருதல்) தொடங்கும். 259-ஆம் நாளில் வக்கிரம் நீங்கும். சோதிட நூல் குருவை வேந்தன், பிரகசுபதி என்னும் பெயர்களாலும் குறிப்பிடும். இதற்குத் தனுசு, மீனம் என்னும் இராசிகள் சொந்த வீடுகள் ஆகும். அந்த இடங்களில் இது ஆட்சி பெற்று நிற்பதாகக் கருதுவர், கற்கடத்தில் (நண்டில்) இது உச்சமடையும்; மாறாக மகரத்தில் நீசமடையும், இதற்கு மேடம், விருச்சிகம் என்னும் இடங்கள் பகை வீடுகள்; இடயம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் என்பன நட்பு வீடுகள். குருதிசை 16 ஆண்டுகள் நடைபெறும். அதில் பிற கிரகங்களின் புத்தி நடைபெறும்போது பலன்கள் மாறுபடும். குருதிசைக்கு வேதகன் சூரியன்; அவன் வேறுபண்ணித் தட்டுலிப்பான். போதகன் செவ்வாய்; அவன், ‘கூறும் பலனைக் கொடு’ என்பான். பாசகன் சனி; அவனோ தெறுபலனைக் கூட்டுவிப்பான். காரகன் சந்திரன்; அவன் ஈட்டு பொருளை ஈவான். பொதுவாகக் குருவைத் தெய்வம் என்பர், தான் நின்ற இராசியில் இருந்து 5, 7, 9 என்னும் இடங்-<noinclude></noinclude> 4ckvzaxdxfilrfs1ljl1tloiyh4evfu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/699 250 642385 1930627 2026-05-06T09:16:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை இது பார்ப்பதால் தன்மை ஏற்படும். குரு பார்த்தால் கோடி இன்னல் நீங்கும். சந்திரனுக்கு 2, 5, 7, 9, 11 என்னும் இடங்களில் குரு வரும்போது வியாழ நோக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரு அர்கன்சிங்கு|671|குரு அரகோவிந்தர்}}</noinclude>களை இது பார்ப்பதால் தன்மை ஏற்படும். குரு பார்த்தால் கோடி இன்னல் நீங்கும். சந்திரனுக்கு 2, 5, 7, 9, 11 என்னும் இடங்களில் குரு வரும்போது வியாழ நோக்கு வந்து விட்டது; திருமணத்திற்கு ஏற்ற காலம் என்பர். இலக்கினம் அல்லது சந்திரனுக்கு 7-இல் இது இருந்தால் மணவாழ்வு நன்றாக அமையும். திருமண இடத்தில் குரு மணக்க இருந்தால் திருமகள் போல் மனைவி வாய்ப்பான், சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் இது நின்றால் கசகேசரி யோகம் ஏற்படும் என்பா. இலக்கினத்திற்கு 6-ஆம் இடத்தில் செவ்வாய் நிற்க, அதனைக் குரு நோக்கினால் வீட்டில் குலதெய்வம் வாழும் என்பர். குரு 4-ஆம் வீட்டில் நிற்பதைப் பல நூல்கள் பாராட்டும். குழந்தைக் காரகன் என்றும் குருவிற்குப் பெயருண்டு. குழந்தைக் காரகன் குழந்தைக்குரிய 5-ஆம் வீட்டில் நிற்றல் கூடாது. இருந்தாலும் பரி வருத்தனை, சந்திர கேந்திரம், சுபர் பார்வை முதலியவற்றால் தீமை குறையும் என்பர். குரு, 4. 7. 10 முதலிய இடங்களுக்கு அதிபதியாக வந்தால் தன்மை தருவதில்லை என்பதும் உண்டு. சோதிட நூல் கிரகங்களுக்கு நிறம், குலம், கலை, அறிவு, இரத்தினம், கானியம் முதலியவற்றைக் குறிப்பிடும். அம்முறையில் இதற்குப் பொன் நிறம், அந்தணர்குலம், இனிப்புச்சுவை, ஐயறிவு, கனகபுட்பராகம், கடலை முதலியவற்றைக் குறிப்பிடும்-இது சலௗசக்தி, சலியா உழைப்பு, தியாகம், தன்னம்பிக்கை, கொள்கைப் பிடிப்பு, சுயமரியாதை, மானம் என்னும் குணங்களைக் காட்டும்.{{Right|<b>தே.ஆ.</b>}} <b>குரு அர்சுன்சிங்கு (கி.பி. 1581-1606)</b> சீக்கிய குருவாகப் பதவியேற்ற பின்பு சீக்கிய மதம் புதுப் பொலிவும் புத்துணர்ச்சியும் பெற்றது. சீக்கியரின் வேத புத்தகமான ஆதி-கிரந்தத்தைத் தொகுத்தளித்தமை இவரது சாதனைகளுள் முக்கியமானது. அமிர்தசரசு நகரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த இவர் தாரன் தாரன் (Taran Taran) கர்த்தார்பூர் -முதலான நகரங்களையும், இனாகூரில் சீக்கியக் கோயில் (Boali) ஒன்றினையும் கட்டுவித்தார், பொற்கோயிலைக் கட்டி முடித்த இக்குரு இராமதாசர் என்னும் குருவின் மகனாவார். மதகுருவாக கி.பி.1581 முதல் 1606 முடிய இருந்த இவர் சீக்கிய மதத்தைப் பரவச் செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். ஆதிகிரந்தத்தைத் தொகுக்கும் பணியினை கி.பி. 1604-ஆம் ஆண்டில் இவர் முடித்தார். இப்புனித நூலில் சீக்கிய குருக்கள் ஐவரின் போதனைகளும் பாடல்களும், கபீர், பரித்து, நாமதேவர், இராம தாசர்-முதலான 16 இந்து சமயப் பெரியோர்களின் போதனைகளும் அடங்கியுள்ளன. குரு அர்கன்சிங்கு (Guru Arjan Singh) மசத்து முறையை (Masand System) அறிமுகப்படுத்தினார். அதன்படி சீக்கியர்கள் தமது வருவாயில் 1/10 பங்கினைக் குருவிற்குச் செலுத்த வேண்டும். வசூலிக்கப்பட்ட அத்தொகை பைசாகி நாளன்று அமிர்தாரசிற்கு அனுப்பப்படும். அக்பர் தம் ஆட்சிக் காலத்தில் இக்குருவுடன் சுமுகமான உறவு கொண்டிருந்தார். ஆனால் சகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இவ்வுறவுமுறை மாறியது. முகலாய வேத்துர் சீக்கியர்களின் வளர்ச்சி குறித்து ஆத்திரம் கொண்டார். அடுத்து, தமது ஆட்சிக்கெதிராகப் புரட்சி செய்த, தம் மகனான இளவரசர் குருகுவிற்கு அர்கள் சிங்கு நல்வாசி வழங்கியதையும், உரூ. 5000 உதவியதையும் கேட்டுச் சகாங்கீர் கடும் கோபம் கொண்டார். இந்துக்கனையும் முசுலிம்கயையும் அர்கன்சிங்கு சீக்கிய மதத்கீற்கு மாற்றிய செயல் முகலாய மன்னருக்கு எரிச்சலை மூட்டியது, எனவே சகாங்கீர், அர்சுன்சிங்கு இரண்டு இலட்சம் உரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென்றும், ஆதிகிரத்தத்தில் உள்ள இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் எதிரான பாடல்கள் நீக்கப்பட வேண்டுமென்றும் ஆணையிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அர்சுன் சிங்கு, கி.பி.1605-இல் பித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இக்குருவின் மரணம், சீக்கியர்களை ஆயுதம் தாங்கிய போராளிகளாக மாற்றியது. சீக்கியர் வரலாற்றில் பெரியதோர் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அர்சுன் சிங்கைச் சாரும்.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>தங்கவேலு, கோ.,</b> இந்திய வரலாறு - பாகம் 3 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 1980.<br> <b>Mahajan, V.D,</b> History of India Since 1526, Chand Publications, Delhi, 1980. <b>குரு அரகோவிந்தர் (கி.பி. 1606-45)</b> என்ற சீக்கிய குரு தம் தந்தையான குரு அர்கள் சிங்கை அடுத்துப் பதவியேற்றார், சச்சாபாதுசா (Sachacha Padshah) என்னும் விருதுப் பெயரினைப் பூண்ட இவர், தொடக்க காலத்திலிருந்தே முகலாயர்களின் பெரும் பசைவராக இருந்தார். எப்போதும் ஆயுதம் வைத்துக் கொண்டு, முகலாயரின் கொடுங்கோள்மையை ஒடுக்க வேண்டும் என்று குரு அரகோவிந்தர் தம்சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார், படைவீரனின் உடையணிந்த இவர் குடை, கத்தி, கருடன் (Hawk) ஆகிய அரசுச் சின்னங்களையும் அணிந்து கொண்டார். தம் ஆன்மிச மேலாண்மையையும், தனிப்பட்ட<noinclude></noinclude> djeh6q15iylwqhk4ocno8m0k40x8c6r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/700 250 642386 1930628 2026-05-06T09:26:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலாண்மையையும் குறிக்கும் வகையில், இக்குரு இரு கத்திகளை அணிந்தார். உலோகரை (Lohgarh) வலுப்படுத்திய இவர் இறைவனின் சிம்மாசனமான அகால்தக்டையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரு கீதை|672|குரு கீதை}}</noinclude>மேலாண்மையையும் குறிக்கும் வகையில், இக்குரு இரு கத்திகளை அணிந்தார். உலோகரை (Lohgarh) வலுப்படுத்திய இவர் இறைவனின் சிம்மாசனமான அகால்தக்டையும் (Akal Takht) கட்டினார். ஆயுதம் தரித்த தொண்டர்களைப் (Volunteers) பெருமளவில் சேர்த்த அரகோவித்தர், பணத்திற்குப் பதில் குதிரைகளையும் ஆயுதங்களையும் தமக்கு வழங்க வேண்டும் எனத்தம் சீடர்களைக் கேட்டுக் கொண்டார். சீக்கிய இனத்தைக் காக்க வேண்டுமென்றால், சீக்கியர் அனைவரும் போராலிகளாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனை இவர் நன்கு உணர்ந்தார். குரு அரகோவித்தரின் தீவிர போர்க்குணப் போக்கினை முகலாய சகாங்கீர் (கி.பி. 1605-1627) ஏற்றுக் கொள்ள மறுத்து, அவரைக்கைது செய்து, குவாவியர் கோட்டையில் சிறை வைத்தார், வரீர்கான், மியான் மீர் ஆகியோரின் தலையீட்டால் சில ஆண்டுகளில் அரகோவித்தர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரகோவித்தரும் சகாங்கீரும் பகைமைதனை மறந்து தட்புப் பூண்டனர், சாசகான் (கி.பி. 1627-1658) காலத்தில் சீக்கியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமிர்தாரசு, கர்த்தார்பூர் முதமான இடங்களில் நகலால-சீக்கிய மோதல்கள் ஏற்பட்டன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இறுதியாகக் குரு அரகோவிந்தர் காட்டில் தஞ்சம் புகுந்தார். இவ்வாறாக இவர் சீக்கியரைப் போர்க்குணம் படைத்த படையினராக மாற்றி, அவர்களின் பாதுகாவலராகவும் ஆசானாகவும் விளங்கினார், பேராதிக்கம் படைத்த முகலாய மன்னன் சாசகானையே எதிர்த்ததும், தம் சீடர்களுக்கு வீரம் ஊட்டியதும், சீக்கிய வரலாற்றில் இவருக்குத் தனித்ததோர் இடத்தைப் பெற்றுத் தந்தன.{{Right|<b>ம.இ.</b>}} <b>குரு கீதை</b>: பகவத் கீதை, இதிபு கீதை, பிரம இதை, உத்தர கீதை போலக் குருகீதையும் சிறந்த வடமொழி நூல்களில் ஒன்று. இது வியாசமுனிவர் வட மொழியில் இயற்றிய காத்த புராணத்தில், உத்தர காண்டத்தில் உமா மகேசுவரர்களின் உரையாடலாக இருநூற்று எழுபத்து நான்கு கலோகங்களளக் கொண்டுள்ளது; மூன்று அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் குருவாகிய ஆசிரியரின் சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘குருகீதை’ தமிழில் தஞ்சை, வெ. குப்புசாமிராக அவர்களால் 1910 இல் மொழிபொர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் நாகரி, செந்த எழுத்துகளில் மூலமும், தமிழில் பொழிப்புரையும் கொண்டு அமைந்துள்ளது. சூத பௌராணிகர் இருடிகட்ரூக் கூறியதாகத் தொடங்கி, உமையம்மை தன் கேள்வனான மகேசுவரனிடம் ‘உடல் பெற்ற மனிதன் எவ்வழியினால் பிரம்ம மயன் ஆகிறான்?’ என்று கேட்க அதற்கு இறைவன் மறுமொழி கூறும் பாங்கில் குருகீதை அமைந்துள்ளது. ::‘மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ::ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!’ என்று தைத்திரியம் கூறுவது போல, இந்தியப் பண்பாட்டில் நல்லாசிரியன் இதைவனோடொப்பக் கருதப்படுகிறான். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பதே நம் முன்னோர் கொள்கை. அதனையே புராணப் பாங்கில் எடுத்துக்கூறும் நூல் குருகீதையாகும். நல்லாசிரியன் இலக்கணமும், ஆசிரியனைப் போற்றும் வகையும் மரபும் இந்நூலில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. குரு என்ற சொல்லில் குகரம் இருளையும், குகரம் அதனை அழிக்கும் ஒளியையும் குறிக்கும் என்று அறிஞர்கள் காட்டியுள்ளனர். குருவின் பெருமை கூறும் குரூர் பிரம எனத் தொடங்கும் சுலோகம் குருகீதையில் 45-ஆம் சுலோகமாக அளமத்துள்ளது. மும்மூர்த்திகளாகவும் பரப்பிரம்மமாகவும் குருவைப் போற்றும் சிறப்பு இந்நூல் முழுவதும் காணப்படுகிறது. தாய் தந்தையர், உற்றார் உறவினர், தெய்வம் எல்லாம் குருவே என்றும், அறிவுச்சுடர் கொண்டு வினைகளைச் கட்டெரித்து வீடு பேறு தங்குபவர் குருவே என்றும், தெய்வம் சினத்தாலும் கடைத் தேற்றம் உண்டு, ஆனால் குரு சினந்தால் கடைத் தேற்றம் இல்லை என்றும், ஆசிரியரின் பெருமையை இந்நூல் விரித்துரைக்கின்றது. தேனை நாடும் வண்டு பல மலர்களைத் தேடிச் செல்வது போல, அறிவை நாடும் மாணவனும் ஒரு ஆசிரியனிடமிருந்து மற்றொரு ஆசிரியனை நாடிச் சென்று பயன்பெற வேண்டும் என்றும், குளவி ஒரு புழுவைக் கொணர்ந்து கொட்டிக் கொட்டி அதனைக் குளவியாக்குவது போல (பிரமரடே தியாயம்) ஆசிரியன் சீடனைத் தன் வடிவமாக்குகிறான் என்றும், வேத வேதாங்கங்களை எத்துணை சுற்றாலும் குரு முகமாக வன்றி மெய்ப்பொருள் உணர முடிய தேன்றும் கூறப்பட்டுள்ளது. மாணவரின் ஐயங்களை<noinclude></noinclude> 4mgmngjg1bdotilkaz9dmx9dt1ji62r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/20 250 642387 1930633 2026-05-06T10:13:19Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{center|XXX}}</noinclude>‘முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?’, ‘யானை உண்ட முலாம்பழம் போல’ ‘பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல’, ‘இதயத்தில் பூத்த மலர்’, ‘சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்’?. ‘வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்’ ‘கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்’ என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் ‘பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?’ என்ற பழமொழியைக் குறிப்பிடலாம். <b>கொள்கை உறுதி</b> தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை’ தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதிவரை கொண்டார். “நான் கண்ட தலைவர் ஒருவரே கொண்ட தலைவரும் ஒருவரே அவர்தான் பெரியார்” எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா. பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய ‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம். இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த ‘யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்’ உரிமையாளர் திரு. இரா. கௌதமசங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி. {{Right|{{larger|<b>ம. நடராசன்</b>}}}}<noinclude></noinclude> 5erqs3anifj51uwunizugrdxpt8r022 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/21 250 642388 1930634 2026-05-06T10:13:44Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளடக்கம் (தொகுதி 10) 261. கண்ணீர் 262. கோட்டை வெளியில்... 263. கழுகும் கிளியும் பக்கம் 1 13 24 24 264. கருப்பு மல்லி 37 265. ஓட்டாண்டியாக்கிவிட்டு...! 50 266. இட்லர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude>பொருளடக்கம் (தொகுதி 10) 261. கண்ணீர் 262. கோட்டை வெளியில்... 263. கழுகும் கிளியும் பக்கம் 1 13 24 24 264. கருப்பு மல்லி 37 265. ஓட்டாண்டியாக்கிவிட்டு...! 50 266. இட்லர்கூடச் சோஷியலிசம் பேசினான்! 65 267. சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா? 76 268. அனுபவி ராஜா! 90 269. குன்று, குடை பிடித்துக்கொள்ளுமா? 104 270. ஆழமான குழியாம்! 115 271. மலர் மணம் (ஆண்டு மலர்) 128 272. தீமிதித் திருவிழா! 136 273. மரண அடி கொடுப்பாராம்! 149 274. படமாம் படம்! 159 275. போஜராஜனும் காமராஜரும் 175 276. ஒளிபடைத்த கண்ணினாய்! 190 277. நரி பரியான கதை! 206 278. எல்லாம் தருமத்துக்கு! 226<noinclude></noinclude> psfjrk80qhrcu4bkwetkd6hwfmkemvw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/22 250 642389 1930635 2026-05-06T10:14:02Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "xxii 279. சிங்கத்தை அடக்கினேன்! 280. பறக்கும் குதிரை! 239 251 281. திரு.வி.க கூறுகிறார்! 282. ஓட்டாண்டியாக்கிவிட்டு..! 283.முடியும். முயன்றால்! 263 276 292 284. உள்ளுணர்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude>xxii 279. சிங்கத்தை அடக்கினேன்! 280. பறக்கும் குதிரை! 239 251 281. திரு.வி.க கூறுகிறார்! 282. ஓட்டாண்டியாக்கிவிட்டு..! 283.முடியும். முயன்றால்! 263 276 292 284. உள்ளுணர்வு 305 285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்! 323 286. செந்தமிழே.வா! 340 287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்) 351 288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்) 356 289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்) 363 290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்) 367<noinclude></noinclude> n18x8ooovhfc0mpwvyesdgtn6w6vjs2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/23 250 642390 1930637 2026-05-06T10:14:23Z Deepa arul 5675 /* உரையில்லாதவை */ 1930637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Deepa arul" /></noinclude><noinclude></noinclude> a3lrqy85e5a1ntg0gq4om394lz4zirx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/24 250 642391 1930638 2026-05-06T10:14:45Z Deepa arul 5675 /* உரையில்லாதவை */ 1930638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Deepa arul" /></noinclude><noinclude></noinclude> a3lrqy85e5a1ntg0gq4om394lz4zirx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/25 250 642392 1930641 2026-05-06T10:20:27Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|||காஞ்சிக் கடிதம் : 261}}</noinclude>{{Right|{{X-larger|<b>கண்ணீர்!</b>}}}} {{left_margin|3em|<poem><b>★ சுகர்ணோ, பூட்டோ, நிக்ருமா கண்களில் கசிவு-ஏன்? ★ கனல் கக்குபவன் ஓர் நாள் கண்ணீர் சிந்துவன்! ★ ஆணவம் மிகுந்தது! அழிவு நேர்ந்தது! ★ செருக்குடன் சிரித்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்! ★ ஆணவக்காரரின் அழுகைகள் புகட்டும் பாடம்!</b></poem>}} தம்பி! புன்னகை, பூங்காற்று, இன்னிசை, பொற்கொடி, மழலை, விழி மொழி என்பவை குறித்து எழுதிடின், படித்திட இனிமையாகத்தான் இருக்கும்; எழுதிடவும் எளிதுதான், ஆனால், அவை குறித்து நான் இன்று எழுதப்போவது இல்லை. சோலையில் உலவுதல், அருவியில் நீராடல், கனிரசம் பருகிடல், நடனம் கண்டு மகிழ்ந்திடல், மண அறை அமர்ந்திடல், மங்கை நல்லாளின் ‘‘முதல் இரவு’ பெற்றிடல், பெற்றெடுத்த செல்வத்தின் உச்சி மோந்து கழிபேருவகை அடைந்திடல், தான் பெற்ற முதல் ஊதியத்தைத் தாயிடம் கொடுத்து அவர்கள் தந்திடும் பெருமிதம் கலந்த கனிவினை நுகர்தல் என்பவை பற்றியும் எழுதிடலாம், தித்திப்பு நிரம்பக் கிடைக்கும். ஆனால், அவை குறித்து எழுதிட இன்று மனம் இல்லை. செய்தொழிலிலே பெற்றிடும் நேர்த்தியான வெற்றி, களத்திலே மாற்றான் மண்டியிடக் காணும் போது ஏற்படும் பெருமித உணர்ச்சி, உலா, முடிசூட்டு விழா போன்றவை குறித்து எழுதிடலாம்; மகிழ்ச்சியும் எழுச்சியும் நிரம்பிடத்தக்க விதமாக; ஆனால், அவை பற்றியும் இன்று எழுதிடப் போவதில்லை. நான் இன்று எழுதுவது கண்ணீர் பற்றி! ஆமாம் தம்பி ஆமாம். கண்ணீரைப் பற்றியேதான்! நமக்கும் கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே அறிவாயே; பெரியார் நமக்கு இட்ட பெயரே, கண்ணீர்த்துளிகள் என்பதல்லவா! பெரியாரின் பொருந்தாத் திருமணம் பற்றி மனம் குமுறிய பல்லோர் தெரிவித்திருந்த கருத்துக்களை முதலில் கண்டனக் கணைகள் என்ற தலைப்பிட்டு நமது இதழில் வெளியிட்டனர்; எனக்கு அந்தத் தலைப்பு<noinclude></noinclude> flosnjiu9f2hzbl5oztu89ru8a2ki8k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/26 250 642393 1930642 2026-05-06T10:24:24Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|2||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>பிடிக்கவில்லை. ஆகவே, அந்தக் கருத்துக்களைக் கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பிட்டு வெளியிடச் செய்தேன். அதனையே நமக்குப் ‘பெயர்’ ஆக்கிவிட்டார். பெரியார். அவர் எனக்காகவென்று வெகு அருமையாகப் பாடுபட்டுத் தேடிக் கொடுத்த செல்வம் என்றே நான் அந்த ‘கண்ணீர்த் துளிகள்’ என்ற பெயரை வரவேற்று மகிழ்ந்தேன். அது ஆண்டு பலவற்றுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. இப்போது எதற்காக அண்ணா! அந்த நினைவு என்று கேட்கிறாயா? தம்பி! காரணமற்றும் தொடர்பற்றும், பொருத்தமற்றும் பொருளற்றும் எனக்குப் பழைய நினைவுகள் ததும்பிடுவதில்லை. இப்போதும் அப்படித்தான். ஒரு பெரிய தலைவர். நாட்டின் அதிபர் புரட்சி வீரர், புவியோர் மெச்சிடத்தக்க பேறு பெற்றவர். கண்ணீர் வடித்தார் என்று இதழ்களில் கண்டேன்; உடனே எனக்குக் கண்ணீர் பற்றிய பல்வேறு நினைவுகள் மனத்திலே ததும்பிடலாயின தம்பி! கண்ணீரில் பலவகை உண்டு! நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்பக் கண்ணீரின் வகை அமைகிறது. வெற்றிக் களிப்பு, தியாக உணர்ச்சி, மகிழ்ச்சிப்பெருக்கு, வேதனை, கோபம் எனும் பல்வேறு உணர்ச்சிகளின் போதும் கண்ணீர் வெளிப்படுகிறது. வகை பல என்றேன். முறைகூடப் பலப்பல, அதனால்தான் கசிந்தான், பொழிந்தான், கதறினான். வடித்தான் என்று பலவிதமான பதங்களைக் கண்ணீருடன் இணைக்கிறோம். நான் குறிப்பிட்டேனே, நாட்டுத் தலைவரொருவரின் கண்ணீர் பற்றி அவர் கண்ணீர் வடிக்கவில்லை; கண்களிலே நீர் கசிந்தது. மற்றவர்கள் கதறினால், கண்ணீர் பொழிந்தால், வடித்தால் காண உருக்கம் எழும். ஆனால், அவர் கண் கசிந்ததைக் காணவேண்டி ஏற்பட்டுவிட்டபோது ஒரு புன்னகை பிறந்திடும் நிலை, பலருக்கு மிகப்பலருக்கு சிரித்திடப் பிறந்தவர் அவர்; அவர் கண் கசிகிறது. பலருடைய கண்களிலே நீர் கொப்பளித்துக் குபுகுபுவெனக் கிளம்பிடும் நிலைமைகளை மூட்டினார் அவர்: அவர் கண்களிலே நீர் கசிகிறது. அவருடைய கண்ணீர் தனித்தன்மை வாய்ந்தது. அந்தக் கண்கள் களைப்பு. திகைப்பு, ஏக்கம், கோபம் ஆகியவற்றினை வெளிப்படுத்தினதுண்டு. இப்போது அந்தக் கண்களிலே கசிவு!{{nop}}<noinclude></noinclude> 1dvxgsr0w9uw9m37zf18umrh0x0bw8c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/27 250 642394 1930644 2026-05-06T10:27:45Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||3}}{{rule}}</noinclude>கண்ணீர் சிந்திடு முன்பு அவருடைய கண்கள் அகம்பாவத்தைக் கக்கின! அடுத்துக் கண்ணீர் சிந்திட வேண்டி நேரிடும் என்று அவர் துளியும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. அவ்வளவு உன்னதமான இடம் அவருடையது! ஒரு நாடே அவருடைய காலடியில்! உலகமே அவர் சுட்டு விரல் அசைவு கண்டு! அதற்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பு தடித்துப் போயிருந்த நிலை! அவருடைய கோபம் போதும் எவரையும் சுட்டெரிக்க! அவருடைய புன்னகை போதும் வாழ்க்கையைப் பூங்காவாக்கிட! அவர் சொல்லே சட்டம்! அவர் கண் கசிந்திடும் நிலை பெற்றார் என்றால், அது தனித்தன்மை வாய்ந்ததல்லவா? பேரிடி, பேரிழப்பு, மூட்டப்பட்ட வேதனை ஆகியவைகளால் கிளம்பிடும் கண்ணீர் வேறு! இவர் சிந்திய கண்ணீர் வேறு. செய்த தவறுகளை எண்ணி, தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களை எண்ணி, சிந்திடும் கண்ணீர் வேறு, இவர் கண்களிலே கசிந்திட கண்ணீர் வேறு. எடுத்த காரியத்தை முடித்திட முடியாது போகிறதே. போட்டதிட்டப்படி செயல், வடிவம் கொள்ளவில்லை, எதிர்பார்த்துக் கணக்கிட்ட பலன் கைக்குக் கிட்டவில்லையே என்பதாலே கண்ணீர் சிந்திடும் நிலைமைக்கும், இனி நமது விருப்பத்தின்படி காரியம் நடவாது போலிருக்கிறதே. இனி நமது கட்டுக்கு மற்றவர் அடங்கிட மாட்டார்கள் போலிருக்கிறதே, இனி நம்முடைய நிலை, தாழ்வாக்கிடப்படும் போல இருக்கிறதே, எப்படி நாம் அதனைத் தாங்கிக் கொள்வது, தாள் பணிந்து கிடந்ததுகளெல்லாம் தட்டிக் கேட்கத் துணிந்து விட்டனவே; அதுகளை மட்டந் தட்டக்தக்க வலிவு நமக்குக் குறைந்துபோய் விட்டிருப்பது, அவர்களுக்கும் புரிந்து விட்டிருக்கிறதே, இனி என்ன செய்வது என்று எண்ணியதால் கண்ணீர் கசியும் நிலை. அது தனி இயல்புடையது. அதனைக் காண்போர், அந்தக் கண்ணீரைத் துடைத்திடவோ, வந்துற்ற இன்னல் யாவும் நீங்கிப் போகும் என்று ஆறுதல் கூறிடவோ மாட்டார்கள். அப்படிப்பட்ட விதமான கண்ணீர் வடித்தார், இந்தோனேஷிய நாட்டு அதிபர் டாக்டர் சுகர்ணோ சின்னாட்களுக்கு முன்பு என்றோர் செய்தி கண்டேன். அதனால் தான் தம்பி! கண்ணீர் பற்றிய நினைவு எழுந்தது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டதோர் அவை; அங்குப் பேசுகிறார் டாக்டர் சுகர்ணோ, கண்ணீர் சிந்திடும் நிலையினில். அந்த அவையின் முன்பு அவர் பலமுறை இடி முழக்கமிட்டிருக்கிறார்; எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி இருக்கிறார்; புத்திமதி கூறியிருக்கிறார்; சூளுரைத்திருக்கிறார்; கண்டனக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்; விளக்கம் அளித்திருக்கிறார்; பேருரை நிகழ்த்தியிருக்கிறார்; செயல்முறை பற்றிக் கூறியிருக்கிறார்; வெற்றிக்களிப்புடன் பேசியதுண்டு.<noinclude></noinclude> qx30iw46fp8o7tnrwvod1m8n84py2s1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/28 250 642395 1930647 2026-05-06T10:31:30Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|4||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>வீராவேசம் காட்டியதுண்டு; அறைகூவலை எழுப்பியதுண்டு; கோபக் கனலை வீசியதுண்டு, ஒருநாளும் கண்கலக்கத்துடன் பேசினதில்லை. அந்த நிலை பிறந்திடும் என்று அவர் கனவிலும் எண்ணினதில்லை. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட அழைப்புவிடுத்தவர், எதனையும் இழந்திடலாம் உரிமையைப் பெற்றிட என்ற உறுதியை நாட்டவர் அனைவருக்கும் ஊட்டியவர், டாக்டர் சுகர்ணோ; மறுப்பார் இல்லை; வரலாற்றுச் சுவடியிலே பதிக்கப்பட்டுவிட்ட நிகழ்ச்சி அந்தவீரக் காதை. விடுதலை கிடைத்துவிட்டது என்ற வெற்றிச் செய்தியை நாட்டவருக்கு அறிவித்து அனைவரையும் அகமகிழ்ச்சி கொள்ளச் செய்தவர் டாக்டர் சுகர்ணோ. அன்னியரின் பிடியினை நீக்கிக்கொண்டோம்: இனி இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள செல்வத்தைத் திரட்டி நாட்டினைச் சீர்படுத்திடுவோம்; வெளி நாட்டார் விரும்பிப் பெற்றிடத்தக்க பொருள் நிரம்பிய களஞ்சியம் நம் நாடு : பொன்னும் மணியும் குவித்திடலாம், புவியோர் மெச்சிட வாழ்ந்திடலாம், புகழ்க் கொடியைப் பறந்திடச் செய்திடலாம் என்றெல்லாம் கூறினவர். டாக்டர் சுகர்ணோ பேசினால் ஆயிரம் ஆயிரம் மக்கள் அப்படியே சொக்கிப் போவார்களாம். சொற்சிலம்பம் கண்டு வியந்திடுவார்களாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தம்பி! அவரை அந்நாட்டு மக்கள் கண்கண்ட கடவுளாகக் கொண்டனர். அவரினும் அறிவாற்றல் மிக்கவர் எவரும் இல்லை என்று நம்பிக் கிடந்தனர். நாட்டுப்பற்று மிக்கவர் நமது தலைவர், தன்மானம் காத்திடுபவர் நமது தலைவர், நமக்கு நல்வாழ்வு அளித்திட வல்லவர் நம் தலைவர், நமக்கு எதுதேவை எது நல்லது என்பதனை முற்றிலும் உணர்ந்தவர் நமது தலைவர் என்று கொண்டாடினர். பிரச்சினை எதுவாயினும், சிக்கல் எதுவென்றாலும், அவர் அறிவார் என்ன செய்ய வேண்டும் என்பதனை என்று அந்நாட்டு மக்கள் திடமாக நம்பினர். கப்பலோட்டியின் திறமையிலே மிகுந்த நம்பிக்கை கொண்டவர், சீறிடும் அலைகளைக் கண்டோ, பாய்ந்து வந்திடும் பெருமீன்களைக் கண்டோ கவலை கொள்வார்களா! கட்டளையிடுங்கள் காவலரே! வழிகாட்டுங்கள் தலைவரே! அழைத்துச் செல்லுங்கள் அதிபரே-என்று துதிபாடினர் அந்நாட்டு மக்கள்.{{nop}}<noinclude></noinclude> ekk1cnrulhi1lce6icstmjanywcmhkq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/29 250 642396 1930648 2026-05-06T10:38:26Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||5}}{{rule}}</noinclude>அவரிடம் அளவிட முடியாத மதிப்பும் நம்பிக்கையும், பற்றும் பாசமும் கொண்டதுடன், அவருடைய போக்கு நோக்கு, சொல், செயல் எனும் எதிலேயும் எந்தத் தலைவருக்கேனும் நிபுணருக்கேனும் ஐயப்பாடு ஏற்பட்டு, விளக்கம் கேட்டிடின், வாதம் செய்திடின், மறுத்தும் பேசிடின், என்ன துடுக்குத்தனம்! நமது தலைவரிடமா குறைகாணுகிறான்! அத்தனை பெரிய அறிவாளியோ இவன்!-என்று பேசிட, சீறிப் பாய்ந்திடவும் அந்த நாட்டு மக்கள் முனைந்தனர். எதனையும் சிந்திக்கப் பார்த்திடும் உரிமையைத் தாமாகவே விட்டுவிட்டனர், அதற்கான தகுதியும் திறமையும் தமக்குக் கிடையாது என்ற எண்ணத்தில். நம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகத் தான், மக்கள் எல்லாப் பிரச்சினைகளையும் நம்மிடமே ஒப்படைத்துவிட்டனர். அவ்வளவு நல்ல இயல்பு கொண்டவர் நமது மக்கள் என்று துவக்கத்தில் ‘அதிபர்’ எண்ணிக்கொண்டார். பிறகோ! பாவம் ஏதுமறியாதவர்கள் இந்த மக்கள் என்று எண்ணிடலானார். பிறகு, {{left_margin|3em|<poem>{{gap}}எதனையும் நானல்லவா சொல்லவேண்டி இருக்கிறது, செய்ய வேண்டி இருக்கிறது,</poem>}} என்று பேசிடலானார். அதற்குப் பிறகு {{left_margin|3em|<poem>{{gap}}ஏ! மூடமே! இப்படிச் செய்! இதைச் செய்!</poem>}} என்று கட்டளையிடலானார். பிறகு. {{left_margin|3em|<poem>{{gap}}எதையாவது ஒழுங்காக. திறமையாகச் செய்திட தெரிகிறதா இதுகளுக்கு!</poem>}} என்று கேலி பேசிடலானார். {{left_margin|3em|<poem>{{gap}}இப்படிச் செய்யாவிட்டால், இன்னின்ன தண்டனை விதிக்கப்படும்,</poem>}} என்ற மிரட்டல் பேச்சும், அதைத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளலானார் அதிபர் சுகர்ணோ. {{left_margin|3em|<poem>புதிய புதிய சட்டங்களைப் பிறப்பிப்பார்! மேலும் மேலும் வரிகளை விதிப்பார்! எண்ணிட எழுதிட, கூடிட, பேசிட தடைகள் போட்டிடுவார்! இவன் உன் பகைவன், இவனை ஒழித்துக்கட்டு என்பார்!</poem>}}<noinclude></noinclude> 00mj1wuzw1mm571rmp3qfc931zsuovn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/30 250 642397 1930650 2026-05-06T10:42:40Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|6||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|உரிமை கேட்காதே. உடைமையும் உயிரும் கூட உனக்கே உரியது என்று எண்ணிக் கொள்ளாதே! எல்லாம் நாட்டுக்காக! நாட்டுக்காக நான்! என் சொற்படி நடந்திட நீங்கள்! நான் இல்லையேல், இந்த நாடு இல்லை. இந்த நாடு இல்லையேல். நீங்கள் இல்லை}} என்று உரத்த குரலில் பேசி, உருட்டு விழி காட்டலானார். நாட்டு மக்கள் சிறிதளவு கலங்கினர். ஆனால், அவரைப் பின்பற்ற, அவர் சொற்படி நடந்திடத் தவறவில்லை. {{left_margin|3em|<poem>{{gap}}நமக்குப் புரியவில்லை, ஆனால், நமது தலைவர் எதனையும் நமது நன்மைக்காக; நாட்டு நலனுக்காகத் தான் செய்திடுவார்</poem>}} என்று கூறி அமைதி பெற்றனர். தத்துவ விளக்கத்தில் அக்கறை கொண்டோர் மட்டும் அதிபர் மேற்கொள்ளும் போக்குத் தவறானது, அதன் பயனாக நாடு சீர்கேட்டையும், மக்கள் வேதனையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துப் பார்த்தனர். {{left_margin|3em|<poem><b>எச்சரித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர், மக்கள் அதிபருக்குத் துணை நின்றனர்.</b></poem>}} மெள்ள மெள்ளக் கட்டங்கள் புதிது புதிதாக வளர்ந்தன. இறுதியில் அதிபர்-கை கட்டி வாய் பொத்தி நின்றிடும் ஏவலர்-அடிமைத்தனத்தைத் தாமாகவே மூட்டிவிட்டுக் கொண்ட-மக்கள். என்ற நிலை பிறந்தது. உரிமையின் அருமையும் சிந்தனைச் செல்வத்தின் பெருமையும் கிடக்கட்டும்; அவர் நடாத்திடும் ஆட்சியில், நாம் நல்வாழ்வு பெற்றிருக்கிறோம்; அதுபோதும், ஏடு தூக்கிடுவோர், எதற்கும் வாதாடிடும் இயல்பினர். எதனையாவது கதைத்துக் கொண்டு கிடக்கட்டும் நாம் புதுவாழ்வு, முழு வாழ்வு பெற்றிருக்கிறோம், நமக்கு அதுபோதும் என்று இந்தோனேஷிய மக்கள் எண்ணி நிம்மதி பெற்றிட முடியவில்லை. {{left_margin|3em|<poem><b>நாடு சீர்கேடடைந்தது. வளம் பாழாக்கப்பட்டது. தொழில்கள் நசித்திடாலாயின. வீண் பகை வளர்ந்தது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது! நாணயத்தின் மதிப்பு தேய்ந்தது. பண்டங்களின் விலைகள் விஷம்போல் ஏறின. வாழ முடியாதாரின் தொகை பெருகிற்று;</b></poem>}}<noinclude></noinclude> ebutp880clqvp5fposiowiv2nbw5s4n 1930652 1930650 2026-05-06T10:43:06Z Deepa arul 5675 1930652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|6||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|உரிமை கேட்காதே. உடைமையும் உயிரும் கூட உனக்கே உரியது என்று எண்ணிக் கொள்ளாதே! எல்லாம் நாட்டுக்காக! நாட்டுக்காக நான்! என் சொற்படி நடந்திட நீங்கள்! நான் இல்லையேல், இந்த நாடு இல்லை. இந்த நாடு இல்லையேல். நீங்கள் இல்லை}} என்று உரத்த குரலில் பேசி, உருட்டு விழி காட்டலானார். நாட்டு மக்கள் சிறிதளவு கலங்கினர். ஆனால், அவரைப் பின்பற்ற, அவர் சொற்படி நடந்திடத் தவறவில்லை. {{left_margin|3em|<poem>{{gap}}நமக்குப் புரியவில்லை, ஆனால், நமது தலைவர் எதனையும் நமது நன்மைக்காக; நாட்டு நலனுக்காகத் தான் செய்திடுவார்</poem>}} என்று கூறி அமைதி பெற்றனர். தத்துவ விளக்கத்தில் அக்கறை கொண்டோர் மட்டும் அதிபர் மேற்கொள்ளும் போக்குத் தவறானது, அதன் பயனாக நாடு சீர்கேட்டையும், மக்கள் வேதனையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துப் பார்த்தனர். {{left_margin|3em|<poem>எச்சரித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர், மக்கள் அதிபருக்குத் துணை நின்றனர்.</poem>}} மெள்ள மெள்ளக் கட்டங்கள் புதிது புதிதாக வளர்ந்தன. இறுதியில் அதிபர்-கை கட்டி வாய் பொத்தி நின்றிடும் ஏவலர்-அடிமைத்தனத்தைத் தாமாகவே மூட்டிவிட்டுக் கொண்ட-மக்கள். என்ற நிலை பிறந்தது. உரிமையின் அருமையும் சிந்தனைச் செல்வத்தின் பெருமையும் கிடக்கட்டும்; அவர் நடாத்திடும் ஆட்சியில், நாம் நல்வாழ்வு பெற்றிருக்கிறோம்; அதுபோதும், ஏடு தூக்கிடுவோர், எதற்கும் வாதாடிடும் இயல்பினர். எதனையாவது கதைத்துக் கொண்டு கிடக்கட்டும் நாம் புதுவாழ்வு, முழு வாழ்வு பெற்றிருக்கிறோம், நமக்கு அதுபோதும் என்று இந்தோனேஷிய மக்கள் எண்ணி நிம்மதி பெற்றிட முடியவில்லை. {{left_margin|3em|<poem><b>நாடு சீர்கேடடைந்தது. வளம் பாழாக்கப்பட்டது. தொழில்கள் நசித்திடாலாயின. வீண் பகை வளர்ந்தது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது! நாணயத்தின் மதிப்பு தேய்ந்தது. பண்டங்களின் விலைகள் விஷம்போல் ஏறின. வாழ முடியாதாரின் தொகை பெருகிற்று;</b></poem>}}<noinclude></noinclude> okihe7yktde261b5u23tn8kirjzfru5 1930653 1930652 2026-05-06T10:43:37Z Deepa arul 5675 1930653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|6||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|உரிமை கேட்காதே. உடைமையும் உயிரும் கூட உனக்கே உரியது என்று எண்ணிக் கொள்ளாதே! எல்லாம் நாட்டுக்காக! நாட்டுக்காக நான்! என் சொற்படி நடந்திட நீங்கள்! நான் இல்லையேல், இந்த நாடு இல்லை. இந்த நாடு இல்லையேல். நீங்கள் இல்லை}} என்று உரத்த குரலில் பேசி, உருட்டு விழி காட்டலானார். நாட்டு மக்கள் சிறிதளவு கலங்கினர். ஆனால், அவரைப் பின்பற்ற, அவர் சொற்படி நடந்திடத் தவறவில்லை. {{left_margin|3em|<poem>{{gap}}நமக்குப் புரியவில்லை, ஆனால், நமது தலைவர் எதனையும் நமது நன்மைக்காக; நாட்டு நலனுக்காகத் தான் செய்திடுவார்</poem>}} என்று கூறி அமைதி பெற்றனர். தத்துவ விளக்கத்தில் அக்கறை கொண்டோர் மட்டும் அதிபர் மேற்கொள்ளும் போக்குத் தவறானது, அதன் பயனாக நாடு சீர்கேட்டையும், மக்கள் வேதனையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துப் பார்த்தனர். {{left_margin|3em|<poem>எச்சரித்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர், மக்கள் அதிபருக்குத் துணை நின்றனர்.</poem>}} மெள்ள மெள்ளக் கட்டங்கள் புதிது புதிதாக வளர்ந்தன. இறுதியில் அதிபர்-கை கட்டி வாய் பொத்தி நின்றிடும் ஏவலர்-அடிமைத்தனத்தைத் தாமாகவே மூட்டிவிட்டுக் கொண்ட-மக்கள். என்ற நிலை பிறந்தது. உரிமையின் அருமையும் சிந்தனைச் செல்வத்தின் பெருமையும் கிடக்கட்டும்; அவர் நடாத்திடும் ஆட்சியில், நாம் நல்வாழ்வு பெற்றிருக்கிறோம்; அதுபோதும், ஏடு தூக்கிடுவோர், எதற்கும் வாதாடிடும் இயல்பினர். எதனையாவது கதைத்துக் கொண்டு கிடக்கட்டும் நாம் புதுவாழ்வு, முழு வாழ்வு பெற்றிருக்கிறோம், நமக்கு அதுபோதும் என்று இந்தோனேஷிய மக்கள் எண்ணி நிம்மதி பெற்றிட முடியவில்லை. {{left_margin|3em|<poem>நாடு சீர்கேடடைந்தது. வளம் பாழாக்கப்பட்டது. தொழில்கள் நசித்திடாலாயின. வீண் பகை வளர்ந்தது. பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது! நாணயத்தின் மதிப்பு தேய்ந்தது. பண்டங்களின் விலைகள் விஷம்போல் ஏறின. வாழ முடியாதாரின் தொகை பெருகிற்று;</poem>}}<noinclude></noinclude> 1h6im9xkcq4rc1p9v9udh3dbavpzptd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/31 250 642398 1930654 2026-05-06T10:47:15Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பெருமூச்சுக் கிளம்பிப் பெரும் புயலாகி விட்டது! நம்பிக்கை முறிந்தது. கண்கள் சிவந்தன! வழி திறந்தது! கேள்விகள் கிளம்பின! எதிர்ப்பு வலுத்தது, எங்கும் பரவிற்று! அதிபரின் அக்ரமப் போக்கு கண்டிக்கப் பட்டது! மக்கள் பொங்கி எழுந்தனர், புது வேகத்துடன்! புரட்சி வெடித்துக் கிளம்பிற்று. போதும் உமது அலங்கோல ஆட்சி என்றனர் மக்கள்!</poem>}} இனிப் பொறுத்திட முடியாது, பட்டதெல்லாம் போதும் என்று குமுறினர் மக்கள். அடக்கு முறையை அவிழத்து விட்டார் அதிபர்! அதன் பசி தீருமளவு ‘பலி’ கிடைத்தது; ஆனால், புரட்சி மங்கிட மறுத்தது. உடனிருந்தோர்களை உருக்குலையச் செய்திட்டார் அதிபர்! அவர்க்குப் பரிவு காட்டிட முனைந்தனர் மக்கள்! சூறைக்காற்று கிளம்பிற்று; தோணி ஓட்டம் தடுமாறிடலாயிற்று. துரத்தப்பட்டுப் போய்விடுவோமோ என்ற கிலிபிடித்துக்கொண்டது அதிபரை! ஆண்டது போதும்! மக்கள்மாண்டது போதும்; வளம் வறண்டது போதும் இனி நாட்டு வாழ்வுக்கான வழிகண்டிடத் துணிவு கொண்டோம் என்றனர் மக்கள்! {{left_margin|3em|என்னையா எதிர்க்கத் துணிந்தீர்கள்! என் வீரதீரம் அறியீரா! என்று ஆர்ப்பரித்தார் அதிபர்! மக்களின் மகத்தான சக்தியின் முன்பு எந்த மன்னனும் எம்மாத்திரம் என்று கேட்டனர் மக்கள். இளைஞர் அணி திரண்டது! மாணவர் படை முனைந்து செயலில் ஈடுபடலாயிற்று! அதிபர் சுகர்ணோ தமதுபிடிதளர்ந்து விட்டதனை உணர்ந்தார்; கொதித்தார்; மிரட்டினார்; கடைசியில்? அழுதார்! அவையைக் கூட்டி வைத்துக் கண்ணீர் கசிந்திடும் நிலையினராகி, நாட்டு விடுதலைக்காக நான் இன்னலும் பட்டஇழப்பும் கொஞ்சமா? என்னை இதயத்தில் வைத்திருந்தீரே! என்னையா இப்போது எதிர்க்கின்றீர் என்று கேட்டார்!}}<noinclude></noinclude> m00a913yxoxxqqepe143rgxdg8kp8r3 1930656 1930654 2026-05-06T10:47:56Z Deepa arul 5675 1930656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||7}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பெருமூச்சுக் கிளம்பிப் பெரும் புயலாகி விட்டது! நம்பிக்கை முறிந்தது. கண்கள் சிவந்தன! வழி திறந்தது! கேள்விகள் கிளம்பின! எதிர்ப்பு வலுத்தது, எங்கும் பரவிற்று! அதிபரின் அக்ரமப் போக்கு கண்டிக்கப் பட்டது! மக்கள் பொங்கி எழுந்தனர், புது வேகத்துடன்! புரட்சி வெடித்துக் கிளம்பிற்று. போதும் உமது அலங்கோல ஆட்சி என்றனர் மக்கள்!</poem>}} இனிப் பொறுத்திட முடியாது, பட்டதெல்லாம் போதும் என்று குமுறினர் மக்கள். அடக்கு முறையை அவிழத்து விட்டார் அதிபர்! அதன் பசி தீருமளவு ‘பலி’ கிடைத்தது; ஆனால், புரட்சி மங்கிட மறுத்தது. உடனிருந்தோர்களை உருக்குலையச் செய்திட்டார் அதிபர்! அவர்க்குப் பரிவு காட்டிட முனைந்தனர் மக்கள்! சூறைக்காற்று கிளம்பிற்று; தோணி ஓட்டம் தடுமாறிடலாயிற்று. துரத்தப்பட்டுப் போய்விடுவோமோ என்ற கிலிபிடித்துக்கொண்டது அதிபரை! ஆண்டது போதும்! மக்கள்மாண்டது போதும்; வளம் வறண்டது போதும் இனி நாட்டு வாழ்வுக்கான வழிகண்டிடத் துணிவு கொண்டோம் என்றனர் மக்கள்! {{left_margin|3em|என்னையா எதிர்க்கத் துணிந்தீர்கள்! என் வீரதீரம் அறியீரா! என்று ஆர்ப்பரித்தார் அதிபர்! மக்களின் மகத்தான சக்தியின் முன்பு எந்த மன்னனும் எம்மாத்திரம் என்று கேட்டனர் மக்கள். இளைஞர் அணி திரண்டது! மாணவர் படை முனைந்து செயலில் ஈடுபடலாயிற்று! அதிபர் சுகர்ணோ தமதுபிடிதளர்ந்து விட்டதனை உணர்ந்தார்; கொதித்தார்; மிரட்டினார்; கடைசியில்? அழுதார்! அவையைக் கூட்டி வைத்துக் கண்ணீர் கசிந்திடும் நிலையினராகி, நாட்டு விடுதலைக்காக நான் இன்னலும் பட்டஇழப்பும் கொஞ்சமா? என்னை இதயத்தில் வைத்திருந்தீரே! என்னையா இப்போது எதிர்க்கின்றீர் என்று கேட்டார்!}}<noinclude></noinclude> c87tbtu6um93cfuf8nbh0znezks2uw5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/32 250 642399 1930658 2026-05-06T10:52:59Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|8||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>பேச்சுடன் நிற்கவில்லை! கண் கசிந்தது!! மக்களின் மனம் இளகவில்லை. ஏன்? டாக்டர் சுகர்ணோவின் போக்கு அந்த நெஞ்சங்களைக் கல்லாக்கிவிட்டது. துவக்கத்தில், மக்கள் துயரம் கொட்டிடுகிறதே, அதிபரே! என்று முறையிட்ட நேரத்தில், அதிபர், ஒரு தலை அசைவு, ஒரு இலேசான புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, துளியேனும் மதிப்பு காட்டியிருந்திருந்தால், மக்கள் தமது இன்னலைக்கூட மறந்துவிட்டிருப்பர். அதிபர் சுகர்ணோவோ, கனலைக் கக்கினார், அது மக்களின் நெஞ்சிலே ததும்பிக்கொண்டிருந்த பற்று பாசத்தை அடியோடு பொசுக்கிக் கருக்கிப் போட்டுவிட்டது! மக்களின் மனம் வெதும்பிப் போய்விட்டது; அவர்கள்ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்; இல்லை, இல்லை துரத்தப்பட்டு விட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் மனம் இளகுமா? பரிவு காட்டும் முறையில் அவர் பேசினாலும், அதனைப் பாசாங்கு என்றே மக்கள் கொண்டிடலாயினர். {{left_margin|3em|நாட்டுக்காக நாளும் உழைத்தேனே என்று அவர் கூறும்போது, அறிவோமே! நாட்டைக் காடாக்கியதை! மக்களை மாக்களாக்கியதை! செல்வத்தை நாசமாக்கியதை! என்று மக்கள் முணுமுணுத்திடலாயினர். அது மெள்ள மெள்ள வேகமடைந்து அதிபரின் நிலையைக் குலைத்திடும் எதிர்ப்பாகிவிட்டது! சீறிடும் மக்களை அடக்கிடும் திறனற்றுப்போன நிலையில்-அதிபர் சுகர்ணோ ‘அழுது கொண்டே’ பேசினாராம்!}} ஆனால் அவருடைய கண்ணீர் காலங்கடந்து வெளிப்பட்டது; ஆகவே, பலன் கிடைக்கவில்லை-அது மட்டுமல்ல ஆணவத்துடன் அரசு நடாத்தியதால் அவதி பல கண்டோர் கண்ணீர் வடித்தபோது, காவலன் கேலிப் புன்னகையோ அலட்சியமோ காட்டினான்; இரக்கம் காட்டினானில்லை, கண்ணீருக்கு மதிப்பளித்திட்டானில்லை. அத்தகைய போக்கினன், பிடி இழந்து நடை தளர்ந்து தடுமாறித் தத்தளித்துக் கண்ணீர் உகுத்திடின், எவர் இரக்கம் காட்டுவர்! தம்பி! டாக்டர் சுகர்ணோவின் கண்ணீர். இரக்க உணர்ச்சியைத் தூண்டிடவில்லை எனினும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாரனைவருக்கும், பாடம் புகட்டத்தக்கது! ஆர்ப்பரித்துக் கிடப்பவன் ஓர் நாள் அழுது தீர வேண்டும். மக்களைக் கசக்கிப் பிழிபவன் ஓர்நாள் கண்கலங்கி நிற்க வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> 1lhbwpr5kfl80tujlcoqohj8iux2ojg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/33 250 642400 1930659 2026-05-06T10:53:28Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கனல் கக்கிக் கிடப்பவன் நாள் கண்ணீர் சிந்திடவேண்டி வந்திடும். 9 இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கனல் கக்கிக் கிடப்பவன் நாள் கண்ணீர் சிந்திடவேண்டி வந்திடும். 9 இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில் தீரத்தில் அறிவாற்றலில், தியாகத்தில் டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத்தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் 'அன்றொரு நாள்' ஆற்றிய அரும்பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கி விடாது! நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை; அதனால் நம்மை நசுக்கி, உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ் படுத்துவதா! விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா? புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை: நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெரு நெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே! என்று பலமுறை, ஆற்றோரத்தில் அங்காடியில், சாலையில் சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக்குமுறினோர் பல்லோர்: அவர் களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா! இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது. பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் 'நாய்' என்றே ஏசிப்பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம். லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!<noinclude></noinclude> gox53gajt96pygam7nhmndmp0uco5tx பக்கம்:சாமுத்திரிகாலட்சணம்.pdf/2 250 642401 1930669 2026-05-06T11:43:42Z TVA ARUN 3777 /* உரையில்லாதவை */ 1930669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="TVA ARUN" /></noinclude><noinclude></noinclude> rvp9ajwv64w5hnpmm89ije22t3irpx2 பக்கம்:சாமுத்திரிகாலட்சணம்.pdf/3 250 642402 1930670 2026-05-06T11:46:05Z TVA ARUN 3777 n\ txt 1930670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>வே. சாமிநாதையர் நூல் நிலைய அடையாறு, சென்னை-20. சிவமயம். சாமுத்திரிகாலட்சணம், > லை உலகினிற்குருவாய்வநத வுபர்குமரேசன் கும்பத் திலகியமுனிக்கேசரமுத் திரிகமாமிலக்கணத்தை யலகொடு சொற்றானந்த வருங்கலைசாற்றநம்முள் விலகிடாக்குடிலைதன்னை வியந்துவந்தனை செய்வோமே முத்தினரயின் காரணம். ஆதியிற்புருடனுக்கே யங்கமுத்திரைகள் செய்து நீதியாயிரவாண்டெல்லை நிறுத்தினன்படைத்ததேவ னோதியொழுக்கநீத்த வுறுபவங்குறியால்மெய்யிற் கோதுகாண்பிக்குமென்று குமரவேண்முனிக்குக்கூறும் முப்பத்திரண்டுலட்சணசூத்திரம். தொகுத்துக்காட்டல். ஐந்துநீண்டைந்து நொய்ந்தேயாறுயர்ந்தேழ்சி வந்து,குந்த மூன்றகன்று மூன்று குறுசிமூன்றாழ்ந்தி ருக்கு, மந்த்மில் குணங்கண் முப்பா னிரண்டொடுமம ரந்தமார்க்க,ளிந்திரன் றிருவு நோக்கவினிது வீற்றிரு ப்பர்மாதோ.<noinclude></noinclude> 1ezwzvo8kyfq1a53ytwffg58l6jzvt6 பக்கம்:சாமுத்திரிகாலட்சணம்.pdf/4 250 642403 1930671 2026-05-06T11:47:08Z TVA ARUN 3777 nt1 1930671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>சாமுத்திரிகாலக்ஷணம். நீளம் -ரு-மிருது-ரு-உயரம்-ச. நீண்டிடமைந்துகண்கை தனநடுதொடைநீண் மூக்கு, மீண்டுமெண்மிருதுவைந்து விரலுகிருரோம ந்தோல்பல், லீண்டுயராறுநெற்றி தோள்வயினிரு கமூலம், பூண்டுயில்கொள்ளுமார்பம் பொற்புடைப் புறங்கையாமால். 0 (ச) சிவப்பு-எ-அகலம் - ௩-குறுகல்-௩. ஏழிஞ்சிவத்தலங்கையிணையடி கடைக்கண்வாய்மே கீழிதழுகிர்நாவாகுங் கிள ததியவகலமூன்று காழுரஞ் சென்னிநெற்றி கதித்திடக்குறுகனமூன்று பாழியமுழந்தாள் கண்டம் பற்றுறுமிலிங்கமாமே. (கு) ஆழம் - ஙு - பக்குவம். மூன்றிடமாழந்தொப்புண்முரண்பொருத்துள் ளங்காலா, மான்றவிற்சிறுவன்றன்பா லன்றிமுப்பா னிரண்டென், றூன்றியவிலக்கணங்க ளொத்திருப்ப வனேயாகிற், றோன்றலாயிருந்துமண்மேற் சுகமுற் றுவாழ்வனன்றே. ராசிச்சூத்திரம். சரீரராசிநிலை வேறு. (Jn) நோக்கும் பாதமுதற்கே நூலின்படியேயளவி ட்டுப், பார்க்கும்பொழுதிராசிபலன் பத்தோடிரண் டும்பகர்வதற்குச், சேர்க்குமுடற்கண்வளப்புறத்தின்<noinclude></noinclude> 0gc52att8s2d1ljmcoh66zd98abq9wh பக்கம்:சாமுத்திரிகாலட்சணம்.pdf/5 250 642404 1930673 2026-05-06T11:49:02Z TVA ARUN 3777 n txt 1930673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />சாமுத்திரிகாலக்ஷணம்.</noinclude>சிறந்தபாதம்ஸ்ரீ புருஷன், யார்க்குமேடமிடந்தாண் மீனறிந்து சொலவீர் தமிழ்முனியே. (எ) மேட - விடப-மிதுன - கடக - அங்சநிலை. இருந்திராசிநிலைகேளீ ரேகும்பா தம்படமேடம் திருந்தபடமேன்முழந்தாளை விளங்குமிடபமெனந சில, பரிந்தவுந்திய தன்கீழேபலன் கொண் மிதுனமெ னப்பகர்க, தெரிந்தமூலைகீழ்க்கடகமெனச் சிறந்து சொல்கத்திருமகற்கே. (அ) சிங்கமுங் - கன்னியு-மற்றும்-அன்+நிலை. செஞ்சொலடுத்தகண்டமதேசிங்கக்கூறா நாடியி மேற், கஞ்சங்கடுத்தமுகம்பாதி கன்னிக்கூறாமெ னப்புகல்சு, அஞ்சலடைந்தவிடப்பாகந் துலைக்கூறா திமீனர்வரை, மிஞ்சிவிடா தபடிவரைந்து வினைகளவி ளங்க விளம்புகவே. மேடமுத்திரை-வேறு. சேரா (5) மேடமாம்விரலினாப்பண் விரன்மிகின்வயது நூறா மூடியங்குலிசணீங்கி யுயர்ந்திடிற்கிளைகள் கூடியபெருவிரற்கே குறைந்திடினான் குஞ்செல்வ நீடியவதிலுரோமம் நிலைமறுவுறின் வேந்தாமே, (ய) இடபமுத்திரை, இடபமாமுழங் காண்மீனொத் திடினுலகாளுமென்பு கடினமாக்குறுகிற்செல்வங் கதித்தது நீளிலெண்மை<noinclude></noinclude> e5xv6n16xo87fp77a6hvarsfddzlrxn