விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.1
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பயனர்:Info-farmer/common.js
2
405613
1930760
1929910
2026-05-07T00:25:47Z
Info-farmer
232
pagequalityChecker
1930760
javascript
text/javascript
/* சோதனை */
//alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது.");
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/WikisourceSimpleInterface.js&action=raw&ctype=text/javascript');
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' );
// mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' );
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript');
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool)
//mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript');
mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/pagequalityChecker.js&action=raw&ctype=text/javascript');
//importScript('User:Neechalkaran/Floatingbutton.js');
//importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css');
//importScript('User:Boopalan28012003/textareaEditor.js');
importScript('User:Boopalan28012003/dash.js');
importScript('User:Boopalan28012003/effort.js');
2v6smmyeq5yk4i6k4z8qgl9tjk38ja2
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1930727
1930496
2026-05-06T13:36:00Z
Booradleyp1
1964
1930727
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
178=பகுதி-21
185=பகுதி-22
193=பகுதி-23
202=பகுதி-24
212=பகுதி-25
220=பகுதி-26
228=பகுதி-27
234=பகுதி-28
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
561=பகுதி-74
568=பகுதி-75
574=பகுதி-76
580=பகுதி-77
585=பகுதி-78
590=பகுதி-79
595=பகுதி-80
602=பகுதி-81
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
qake832txs6r2ehlcpaq1zutbnlkhnu
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/229
250
573695
1930720
1930640
2026-05-06T13:28:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 209}}</noinclude>தலைவராகச் சட்டப் பேரவையில் வீற்றிருந்தேன். அவரது மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தில் நான் பேசியபோது “தமிழகத்தில் ஷேக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் கோகினூர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா நினைவு மாளிகை எனப் பெயரிட வேண்டு” மென வலியுறுத்திக் குறிப்பிட்டேன்.
இன்று அவரது மகன் பரூக் அப்துல்லா காஷ்மீரத்து முதலமைச்சர்! அவர் தந்தையின் வழி நின்று மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்கிறார். அதற்கென அவரே முன்னின்று காஷ்மீர் - ஸ்ரீநகரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தேன். திடீரென ஏற்பட்ட உடல் நலிவின் காரணமாக - எனது பயணம் ரத்து செய்யப்பட்டு, கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் சாதிக் அவர்களும், நாடாளுமன்ற மக்களவைக் கழகக் குழுத்தலைவர் சி. டி. தண்டபாணி அவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். காஷ்மீரில் - ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மத்திய - மாநில உறவு பற்றிய கருத்துக்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது.
மத்தியிலே கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாதென்று - மத்தியில் உள்ள அதிகாரங்கள் எவையெவை மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்; எவையெவை நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற விரிவான விபரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக 1969-ல் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களையும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரா ரெட்டி அவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு கழக அரசினால் அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் முரசொலி மாறன், இரா. செழியன் குழுவினர் கருத்துக்களையும் இணைத்து - அதன் பின்னர் அரசின் சார்பில் அமைச்சரவையில் விவாதித்து 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
{{nop}}<noinclude>
நெ.—14</noinclude>
1824msqzkqggaey8z55ld07xyz4uhql
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/230
250
573696
1930722
1930643
2026-05-06T13:30:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|210 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மத்திய - மாநில உறவுகள் எப்படி அமைந்திட வேண்டும் என விவாதித்து, மாநில சுயாட்சிக்கான ஆக்கபூர்வமான தீர்மானமொன்றை இந்தியாவிலேயே முதன் முதலாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தி. மு. கழக ஆட்சிக்கே உரியது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறப்பு மிக்க தீர்மானத்தை முன் மொழிந்த போது, “மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும் இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்று பணிவன்புடன் கோருகிறேன்” என, நான் விடுத்த அந்த வேண்டுகோள் வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் பெங்களூரிலும், காஷ்மீரிலும் நடைபெற்ற மாநாடுகள் அமைந்தன.
தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974-ஆம் ஆண்டுக்கும் - பெங்களூர், காஷ்மீர் நகரங்களில் மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திடும் மாநாடுகள் நடைபெற்றுள்ள 1983-ஆம் ஆண்டுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன என்றாலும்; மத்தியில் அளவுக்குமீறி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு மாநிலங்கள் சுயாட்சி பெற்று மத்தியில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு உருவாக வேண்டுமென்ற முனைப்பான கருத்து பட்டுப் போய் விடவில்லை!
மத்திய அரசு பலமுள்ளதாக இருக்கவேண்டும் என்ற பலவீனமான வாதத்தை வைத்துக் கொண்டே மாநிலங்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிட முடியாது! மாநிலங்கள் வலுவுள்ளவைகளாக இருந்தால் மட்டுமே மத்திய அரசும் வலுவுள்ளதாக இருந்திட இயலும்! இதுவரையில் எல்லையற்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் இந்தச் சுதந்திர இந்தியாவில் மத்தியப் பேரரசு பணக்காரர்களுக்கான சொர்க்கத்தையும், ஏழைகளின் நரகத்தையும் உலகத்திற்குக் காட்சியாக்கியதைத் தவிர உருப்படியாகச் செய்தது என்ன?
{{nop}}<noinclude></noinclude>
2x9zm42kd8d4ye39f1nrt4op5jtegts
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/231
250
573697
1930724
1930668
2026-05-06T13:31:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 211}}</noinclude>இந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலாகத்தான்; மக்களைக் காப்பாற்ற மாநிலங்களுக்கு அதிகாரமும், மண்ணைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அதிகாரமும் தேவையான அளவுக்குப் பகிர்ந்திடப்படுமானால், வளமான மாநிலங்களும் வலுவான மத்திய அரசும் உருவாக வழியேற்படும் என்ற கருத்து அரசியல் அரங்கில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது.
ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், அதன் அடிப்படையில் தமிழக தி. மு. கழக அரசு நிறைவேற்றிய தீர்மான விபரங்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் வடிவங் கொண்டு வெளிவந்திருந்தன.
அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டே பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஹெக்டே (ஜனதா கட்சி) அவர்கள் கூட்டிய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் (1983-ல்) மத்திய-மாநில உறவுகள் பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அடுத்து காஷ்மீர் முதல்வர் பரூக் அவர்கள் கூட்டிய மாநாட்டில் ஆந்திர முதல்வர் ராமராவ் அவர்களும், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களும், மாநில சுயாட்சிக் கருத்துக்கு ஒத்துவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும், தி. மு. கழக அரசின் தீர்மானக் கருத்துரைகளையும் வெகுவாகப் பாராட்டினர் என்று; அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்த கழகப் பிரதிநிதிகள் நண்பர் சாதிக் பாட்சாவும், நண்பர் தண்டபாணியும் என்னிடம் தெரிவித்து மகிழ்ந்தனர்.
1974-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் வந்தபோது எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் ராஜமன்னார் குழு அறிக்கையை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர் என்பது என் நினைவுக்கு வந்தது. மாநில சுயாட்சி தத்துவம் தேவையான ஒன்று என திட்டவட்டமாகத் தெரிவித்த அண்ணா அவர்களின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், “ராஜமன்னார் குழுவின் இந்த அறிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் படிப்பதற்குத் தகுதியுடைய புத்தகமல்ல-பள்ளி மாணவன்கூடப் பயன்படுத்த இதில் எவ்வித கருத்துமில்லை-இது, குப்பைக் கூடையில் தூக்கி எறியப்பட வேண்டிய அறிக்கை” என்று அவையிலேயே இழித்துரைத்தனர்.
{{nop}}<noinclude></noinclude>
6wyotn2kqcme7kjqftif6bny2v0ev7x
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/232
250
573698
1930725
1930674
2026-05-06T13:33:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|212 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இன்றைக்கு அந்த அறிக்கையில் அரசியல் சட்டத்தின் இன்ன பிரிவைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனத் தேடிப் பார்த்துத் தெளிவு பெறுகிற அளவுக்கு அரசியல் மேதைகள் ஆர்வங் காட்டுகிறார்கள் என்கிறபோது, அந்த அரிய பணிக்கு வித்திட்டவன் என்ற முறையில் மகிழ்ச்சியில் திளைப்பது இயற்கைதானே!
1969-ல் ராஜமன்னார் குழு மட்டுமல்லாமல் அரசின் சார்பில் வேறு குழுக்களும் வெவ்வேறு பணிகளுக்காக அமைக்கப்பட்டன. தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஏழு லட்சத்தை எட்டிப் பிடிக்கும் எண்ணிக்கை கொண்ட அரசு அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தமிழகக் காவல்துறையினருக்கு வீர விருதுகள், பண முடிப்புகள், பதக்கங்கள் அளிக்கப்படுமென்றும் அறிவித்ததோடு இந்தியாவிலேயே முதன் முதலாக “காவல் துறை கமிஷன்” ஒன்றையும் நியமிப்பதாக அறிவித்தேன். அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரியான ஆர். ஏ.கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சாமிநாதன், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என். கிருஷ்ணசாமி, சிலம்புச்செல்வர் ம. பொ. சி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும், கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பரிசீலித்து மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்காகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்றும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஏ. என். சட்ட நாதன் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளான சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர்!
அரசு அலுவலர் இரண்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு எடுத்த முடிவுகளை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டினர். அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையை ஊதியக் குழு ஏற்று, அதனை அரசும் அறிவித்தது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, அலுவலர் ஊதிய உயர்வு<noinclude></noinclude>
5phsnky419ebi0phxtkxwa9v8awqqv8
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/233
250
573699
1930726
1930676
2026-05-06T13:35:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 213}}</noinclude>பெற்றனர். அரசு அலுவலர்களின் பல்லாண்டு கால வேண்டுகோளாக இருந்து வந்த ரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்ததையொட்டி தந்தை பெரியார் தலைமையில் அரசு அலுவலர்கள் எனக்கு ஒரு சிறப்பான பாராட்டு விழாவே நடத்தினர். இந்தியாவிலேயே முதன் முதலாக; பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால் உடனடியாக அவர்கள் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் உதவி நிதி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
காவல்துறைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று முதல்நிலைக் காவலர் தகுதியில் ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக வேலை தரப்பட்டது. 1967-ல் காவலர்களின் ஊதியம் 129 ரூபாயாக இருந்தது 165 ரூபாயாகவும், தலைமைக் காவலர்களுக்கு 166 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு 140 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், இன்ஸ்பெக்டர்களுக்கு 225 ரூபாயிலிருந்து 425 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இவையன்னியில் பெரும்பாலான பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்; அவர்களுக்கு அரசுப்பணிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் 25 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியும் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்ததை 18 சதவிகிதமாக உயர்த்தியும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுப்பி வந்த உருது பேசும் முஸ்லீம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும், கொங்கு வேளாளரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கழக ஆட்சிக் காலத்திலே தான்!
{{nop}}<noinclude></noinclude>
atc8r1yjwp5oi52ox5jm4kvalefu3x3
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/234
250
573700
1930681
1709769
2026-05-06T12:14:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1930681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>28</b>}}
{{larger|<b>இறைவனுக்குப் பிடித்த பணி!</b>}}
{{X-larger|<b>கு</b>}}மாரவேலன், குழந்தைவேலன், கஸ்தூரி ராஜ், முல்லை சத்தி ஆகிய நால்வருடன் நானுட்பட ஐந்து பேர் 1953-ஆம் பெயரை ஆண்டில் டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் கல்லக்குடி என மாற்ற வேண்டுமென்று மாற்ற வேண்டுமென்று களம்சென்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற நிகழ்ச்சியை முதல் பாகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ரயிலை நிறுத்தியதற்காகத் திருச்சி சிறையில் ஆறுமாதக்கடுங்காவல் தண்டனையை அனுபவித்த எங்கள் ஐவரில் இப்போது நான் ஒருவன்தான் மிச்சமிருக்கிறேன். இடைப்பட்ட முப்பதாண்டு காலத்தில் மற்ற நால்வரையும் சாவு, தனது வாய்க்குள் போட்டுக்கொண்டு விட்டது.
சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்ட குமாரவேலன் விடுதலை பெற்ற சில நாட்களில் மறைந்து விட்டார். அவரைத் தொடர்ந்து குழந்தைவேலனும் பிரிந்துவிட்டார் முல்லை சத்தி என்னைக் கொழு கொம்பாக்கிக்கொண்டு என்மீது படர்ந்து நட்பு மணம் பரப்பிய இனிய தோழர்! வடஆற்காடு மாவட்டத்தில் வாணியம்பாடிக் கருகில் உள்ள முல்லைக்கொம்மை என்ற சிற்றூர் அவரது சொந்த ஊர் எனினும் சென்னையில் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.
ஒரு நாள் பிற்பகல் அவர் இல்லத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. வீட்டில் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர், வெளியில் புறப்பட்டு படிகளில் இறங்கியபொழுது “அம்மா!” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர் தான்; டாக்டர்கள் வருவதற்குள் உடல் சில்லிட்டு விட்டது. அதைப்போலத்தான் மணப்பாறை கஸ்தூரி ராஜ் - பழனிக்குச் செல்ல வேண்டுமென்று குடும்பத்தார் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அவருக்கு நெஞ்சு வலி! பழனி மலையில் ஏறுகிற மின்விசைச் சாதனத்தில் ஏகக் கூட்டம் - குடும்பத்தாரை அதில் ஏற்றி அனுப்பி விட்டு, அவர் அங்கே காத்திருக்க மனமின்றி, படிகளில் ஏறி மேலே சென்றிருக்கிறார். “அய்யோ, இந்த<noinclude></noinclude>
eranisq1s774i4mztkwndf0mh783e2v
1930729
1930681
2026-05-06T13:38:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>28</b>}}
{{larger|<b>இறைவனுக்குப் பிடித்த பணி!</b>}}
{{X-larger|<b>கு</b>}}மாரவேலன், குழந்தைவேலன், கஸ்தூரி ராஜ், முல்லை சத்தி ஆகிய நால்வருடன் நானுட்பட ஐந்து பேர் 1953-ஆம் பெயரை ஆண்டில் டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் கல்லக்குடி என மாற்ற வேண்டுமென்று மாற்ற வேண்டுமென்று களம்சென்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற நிகழ்ச்சியை முதல் பாகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து ரயிலை நிறுத்தியதற்காகத் திருச்சி சிறையில் ஆறுமாதக்கடுங்காவல் தண்டனையை அனுபவித்த எங்கள் ஐவரில் இப்போது நான் ஒருவன்தான் மிச்சமிருக்கிறேன். இடைப்பட்ட முப்பதாண்டு காலத்தில் மற்ற நால்வரையும் சாவு, தனது வாய்க்குள் போட்டுக்கொண்டு விட்டது.
சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்ட குமாரவேலன் விடுதலை பெற்ற சில நாட்களில் மறைந்து விட்டார். அவரைத் தொடர்ந்து குழந்தைவேலனும் பிரிந்துவிட்டார். முல்லை சத்தி என்னைக் கொழு கொம்பாக்கிக்கொண்டு என்மீது படர்ந்து நட்பு மணம் பரப்பிய இனிய தோழர்! வடஆற்காடு மாவட்டத்தில் வாணியம்பாடிக்கருகில் உள்ள முல்லைக்கொம்மை என்ற சிற்றூர் அவரது சொந்த ஊர் எனினும் சென்னையில் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.
ஒரு நாள் பிற்பகல் அவர் இல்லத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. வீட்டில் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர், வெளியில் புறப்பட்டு படிகளில் இறங்கியபொழுது “அம்மா!” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர் தான்; டாக்டர்கள் வருவதற்குள் உடல் சில்லிட்டு விட்டது. அதைப்போலத்தான் மணப்பாறை கஸ்தூரி ராஜ் - பழனிக்குச் செல்ல வேண்டுமென்று குடும்பத்தார் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அவருக்கு நெஞ்சு வலி! பழனி மலையில் ஏறுகிற மின்விசைச் சாதனத்தில் ஏகக் கூட்டம் - குடும்பத்தாரை அதில் ஏற்றி அனுப்பி விட்டு, அவர் அங்கே காத்திருக்க மனமின்றி, படிகளில் ஏறி மேலே சென்றிருக்கிறார். “அய்யோ, இந்த<noinclude></noinclude>
9mxmc41qh8wxf1wms0qwr1xoikss4hf
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/235
250
573701
1930687
1709770
2026-05-06T12:34:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1930687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /> {{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 215}}</noinclude>உடம்போடு படியேறியா வந்தீர்கள்?” என்று குடும்பத்தார் கேட்கும்போதே - படியில் சோர்ந்து உட்கார்ந்தார். சுருண்டுபோனார்.
இந்தச் சோக நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் அவ்வப்போது சம்மட்டி அடிகளாகத்தான் விழுந்தன. கல்லக்குடி தண்டவாளத்தில் நாங்கள் தலை வைத்துப்படுத்திருந்த போது வேகமாக விசில் ஊதிக்கொண்டு ரயில் புறப்பட்டதும்-நாங்கள் சற்றும் அசைவின்றி அதனை எதிர்நோக்கியதும் - பின்னர் சிறையில் ஒன்றாக இருந்ததும் - தி. மு. கழகத்தின் தியாக வரலாற்றில் ஒரு ஏடல்லவா? அந்த ஏட்டில் வைரமணிகளாக ஜொலிக்கும் வரிகள் அல்லவா முல்லை சத்தி, கஸ்தூரி ராஜ், குமாரவேலன், குழந்தைவேலன் என்ற பெயர்கள்!
-
1953-ல் அந்தப் போராட்டம் நடைபெற்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969 இறுதியில் டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயரை “கல்லக்குடி - பழங்காநத்தம்” என மாற்றுவதற்கான ஒப்புதலை அளித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். அந்தச் செய்தியைக் கேட்டு பெரியார் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து திருச்சியில் இருந்தவாறு எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.
ஒன்று நடைபெற்றுவிட்ட பிறகு அது எளிதான காரியமாகத் தோன்றுகிறது. ஆனால் அது நடை பெற எத்தனை முயற்சி - எத்தனை போராட்டம் - எத்தனை இழப்பு - இவற்றை யெல்லாம் எண்ணி பார்க்கும்போதுதான் கிடைத்த வெற்றியின் பெருமை தெரிகிறது!
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரே வாக்கியத்தில் அண்ணா அவர்கள் கழக ஆட்சியில் சட்டப் பேரவையில் அறிவித்து விட்டார். ஆனால் அப்படியொரு நிலையைப் பக்குவமாக உருவாக்க பெரியார் தலைமையில் அண்ணா உள்ளிட்ட அனைவரும் எத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எதிர்ப்புக்கிடையே பட்டி தொட்டிகளில் எல்லாம் பகைவர்களின் கத்தி கட்டாரிகளுக்கு நடுவில் நின்று பணியாற்றிட வேண்டியிருந்தது!
சென்னை ராஜ்யம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது அது ஒரு துளி மையினால் செய்யப்பட்ட சாதாரண காரியமாகத்தான் பலருக்குப் பட்டது! ஆனால், அதற்-<noinclude></noinclude>
09cdzuw5xe9gcorx9qx9bkqr2r1y1ck
1930689
1930687
2026-05-06T12:34:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1930689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /> {{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 215}}</noinclude>உடம்போடு படியேறியா வந்தீர்கள்?” என்று குடும்பத்தார் கேட்கும்போதே - படியில் சோர்ந்து உட்கார்ந்தார். சுருண்டுபோனார்.
இந்தச் சோக நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் அவ்வப்போது சம்மட்டி அடிகளாகத்தான் விழுந்தன. கல்லக்குடி தண்டவாளத்தில் நாங்கள் தலை வைத்துப்படுத்திருந்த போது வேகமாக விசில் ஊதிக்கொண்டு ரயில் புறப்பட்டதும்-நாங்கள் சற்றும் அசைவின்றி அதனை எதிர்நோக்கியதும் - பின்னர் சிறையில் ஒன்றாக இருந்ததும் - தி. மு. கழகத்தின் தியாக வரலாற்றில் ஒரு ஏடல்லவா? அந்த ஏட்டில் வைரமணிகளாக ஜொலிக்கும் வரிகள் அல்லவா முல்லை சத்தி, கஸ்தூரி ராஜ், குமாரவேலன், குழந்தைவேலன் என்ற பெயர்கள்!
1953-ல் அந்தப் போராட்டம் நடைபெற்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969 இறுதியில் டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயரை “கல்லக்குடி - பழங்காநத்தம்” என மாற்றுவதற்கான ஒப்புதலை அளித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். அந்தச் செய்தியைக் கேட்டு பெரியார் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து திருச்சியில் இருந்தவாறு எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.
ஒன்று நடைபெற்றுவிட்ட பிறகு அது எளிதான காரியமாகத் தோன்றுகிறது. ஆனால் அது நடை பெற எத்தனை முயற்சி - எத்தனை போராட்டம் - எத்தனை இழப்பு - இவற்றை யெல்லாம் எண்ணி பார்க்கும்போதுதான் கிடைத்த வெற்றியின் பெருமை தெரிகிறது!
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரே வாக்கியத்தில் அண்ணா அவர்கள் கழக ஆட்சியில் சட்டப் பேரவையில் அறிவித்து விட்டார். ஆனால் அப்படியொரு நிலையைப் பக்குவமாக உருவாக்க பெரியார் தலைமையில் அண்ணா உள்ளிட்ட அனைவரும் எத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எதிர்ப்புக்கிடையே பட்டி தொட்டிகளில் எல்லாம் பகைவர்களின் கத்தி கட்டாரிகளுக்கு நடுவில் நின்று பணியாற்றிட வேண்டியிருந்தது!
சென்னை ராஜ்யம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது அது ஒரு துளி மையினால் செய்யப்பட்ட சாதாரண காரியமாகத்தான் பலருக்குப் பட்டது! ஆனால், அதற்-<noinclude></noinclude>
3klx28uplyniq1e26owmpbpy5m46t4m
1930731
1930689
2026-05-06T13:40:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /> {{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 215}}</noinclude>உடம்போடு படியேறியா வந்தீர்கள்?” என்று குடும்பத்தார் கேட்கும்போதே - படியில் சோர்ந்து உட்கார்ந்தார். சுருண்டுபோனார்.
இந்தச் சோக நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் அவ்வப்போது சம்மட்டி அடிகளாகத்தான் விழுந்தன. கல்லக்குடி தண்டவாளத்தில் நாங்கள் தலை வைத்துப்படுத்திருந்த போது வேகமாக விசில் ஊதிக்கொண்டு ரயில் புறப்பட்டதும்-நாங்கள் சற்றும் அசைவின்றி அதனை எதிர்நோக்கியதும் - பின்னர் சிறையில் ஒன்றாக இருந்ததும் - தி. மு. கழகத்தின் தியாக வரலாற்றில் ஒரு ஏடல்லவா? அந்த ஏட்டில் வைரமணிகளாக ஜொலிக்கும் வரிகள் அல்லவா முல்லை சத்தி, கஸ்தூரி ராஜ், குமாரவேலன், குழந்தைவேலன் என்ற பெயர்கள்!
1953-ல் அந்தப் போராட்டம் நடைபெற்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969 இறுதியில் டால்மியாபுரம் ரயில் நிலையத்தின் பெயரை “கல்லக்குடி - பழங்காநத்தம்” என மாற்றுவதற்கான ஒப்புதலை அளித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். அந்தச் செய்தியைக் கேட்டு பெரியார் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து திருச்சியில் இருந்தவாறு எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.
ஒன்று நடைபெற்றுவிட்ட பிறகு அது எளிதான காரியமாகத் தோன்றுகிறது. ஆனால் அது நடைபெற எத்தனை முயற்சி - எத்தனை போராட்டம் - எத்தனை இழப்பு - இவற்றை யெல்லாம் எண்ணி பார்க்கும்போதுதான் கிடைத்த வெற்றியின் பெருமை தெரிகிறது!
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரே வாக்கியத்தில் அண்ணா அவர்கள் கழக ஆட்சியில் சட்டப் பேரவையில் அறிவித்து விட்டார். ஆனால் அப்படியொரு நிலையைப் பக்குவமாக உருவாக்க பெரியார் தலைமையில் அண்ணா உள்ளிட்ட அனைவரும் எத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எதிர்ப்புக்கிடையே பட்டி தொட்டிகளில் எல்லாம் பகைவர்களின் கத்தி கட்டாரிகளுக்கு நடுவில் நின்று பணியாற்றிட வேண்டியிருந்தது!
சென்னை ராஜ்யம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது அது ஒரு துளி மையினால் செய்யப்பட்ட சாதாரண காரியமாகத்தான் பலருக்குப் பட்டது! ஆனால், அதற்-<noinclude></noinclude>
byqvpsxh66nxwnkt81ptv7hi6wd01sw
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/236
250
573702
1930714
1709771
2026-05-06T13:07:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1930714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|216 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காகக் கழகத்தினர் கண்ட களங்கள் எத்தனை - எத்தனை! விருதுநகரில் சங்கரலிங்கனார் என்ற பெரியவர் அந்தக் கோரிக்கைக்காகத் தனது உயிரையே உண்ணா நோன்பின் வாயிலாக விலையாகத் தரவில்லையா?
இனிமேல் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இருமொழித் திட்டம்தான் - இந்திக்கு இடமில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் முழங்கியது இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! ஒரு உத்திரவுதானே; அது என்ன பெரிய காரியம் என்று சில மேதாவிலாசங்கள் அலட்சியமாகப் பேசக்கூடும். ஆனால் அந்த ஒரு உத்திரவுக்காக - 1938 - ஆம் ஆண்டு முதல் இந்தத் தமிழகத்தில் கொட்டப்பட்ட குருதி எவ்வளவு? சிறைச்சாலையில் சித்ரவதைக்காளானோர் எத்தனை பேர்! தீக்குளித்துச் செத்த தியாக மணிவிளக்குகளை மறக்க முடியுமா? அடுக்கப்பட்ட பிணங்கள்; அம்மவோ-அவலம்! அவலம்! முப்பதாண்டு காலத் தொடர் போராட்டம்! 1965-ல் மொழிப் புரட்சி! அதற்குப் பிறகு முகிழ்த்ததல்லவோ இருமொழித் திட்டம் - இந்தித் திணிப்பை விரட்டும் திட்டம்!
எனது ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பலன் பெற்றனர். அந்தச் சட்டத்தை ஆதரித்துத் திருத்துறைப்பூண்டியில் ஒரு விழாவில் பேசிய கம்யூனிஸ்டுக் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமி அவர்கள்; “இந்தச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றைக்கு ஒரு துளி ‘இங்க்’ செலவில் பிரகடனப் படுத்திவிட்டார். லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளிகள் இன்றிரவு தங்களது சொந்த வீட்டில் படுக்கிறோம் என்ற ஆனந்த உணர்வோடு படுப்பார்கள்! இதற்காக விவசாயத் தொழிலாளர் வர்க்கம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிந்திய ரத்தத்துளிகள் கொஞ்சமல்ல” என்று உணர்ச்சி வசப்பட்டுக் குறிப்பிட்டார்.
அப்படித்தான் மத்திய அமைச்சர் சவான் அவர்கள், ஒரு கடிதமூலம் “கல்லக்குடி” பெயருக்கான ஒப்புதலைத் தந்து விட்டார். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட களம், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, விழுந்த பிணங்கள், அன்பில் மீதும், கண்ணதாசன் மீதும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு-அந்தத்<noinclude></noinclude>
sn3ilqtyhbcb859uwovdvqw0ea8hhkz
1930733
1930714
2026-05-06T13:41:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|216 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>காகக் கழகத்தினர் கண்ட களங்கள் எத்தனை - எத்தனை! விருதுநகரில் சங்கரலிங்கனார் என்ற பெரியவர் அந்தக் கோரிக்கைக்காகத் தனது உயிரையே உண்ணா நோன்பின் வாயிலாக விலையாகத் தரவில்லையா?
இனிமேல் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் இருமொழித் திட்டம்தான் - இந்திக்கு இடமில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் முழங்கியது இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! ஒரு உத்திரவுதானே; அது என்ன பெரிய காரியம் என்று சில மேதாவிலாசங்கள் அலட்சியமாகப் பேசக்கூடும். ஆனால் அந்த ஒரு உத்திரவுக்காக - 1938 - ஆம் ஆண்டு முதல் இந்தத் தமிழகத்தில் கொட்டப்பட்ட குருதி எவ்வளவு? சிறைச்சாலையில் சித்ரவதைக்காளானோர் எத்தனை பேர்! தீக்குளித்துச் செத்த தியாக மணிவிளக்குகளை மறக்க முடியுமா? அடுக்கப்பட்ட பிணங்கள்; அம்மவோ-அவலம்! அவலம்! முப்பதாண்டு காலத் தொடர் போராட்டம்! 1965-ல் மொழிப் புரட்சி! அதற்குப் பிறகு முகிழ்த்ததல்லவோ இருமொழித் திட்டம் - இந்தித் திணிப்பை விரட்டும் திட்டம்!
எனது ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கும் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பலன் பெற்றனர். அந்தச் சட்டத்தை ஆதரித்துத் திருத்துறைப்பூண்டியில் ஒரு விழாவில் பேசிய கம்யூனிஸ்டுக் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவரான மணலி கந்தசாமி அவர்கள்; “இந்தச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றைக்கு ஒரு துளி ‘இங்க்’ செலவில் பிரகடனப் படுத்திவிட்டார். லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளிகள் இன்றிரவு தங்களது சொந்த வீட்டில் படுக்கிறோம் என்ற ஆனந்த உணர்வோடு படுப்பார்கள்! இதற்காக விவசாயத் தொழிலாளர் வர்க்கம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிந்திய ரத்தத்துளிகள் கொஞ்சமல்ல” என்று உணர்ச்சி வசப்பட்டுக் குறிப்பிட்டார்.
அப்படித்தான் மத்திய அமைச்சர் சவான் அவர்கள், ஒரு கடிதமூலம் “கல்லக்குடி” பெயருக்கான ஒப்புதலைத் தந்து விட்டார். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட களம், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, விழுந்த பிணங்கள், அன்பில் மீதும், கண்ணதாசன் மீதும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு-அந்தத்<noinclude></noinclude>
b7y3hhw79cfmedp286gaouakbf3x4em
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/237
250
573703
1930718
1709772
2026-05-06T13:20:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1930718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 217}}</noinclude>தியாக வரலாற்றின் தொடர்ச்சிதான் அந்த வெற்றி என்பதை மறந்துவிட முடியுமா?
களங் கண்ட சரித்திரங்கள், கனவாய்ப் பழங் கதையாய்ப் போய் - தியாகங்களைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு இருண்ட காலத்திலே இன்றைக்குத் தமிழ் நாடு இருக்கும்போது இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன்.
அன்று 1970-ஆம் ஆண்டு கல்லக்குடி பெயர் மாற்றம் கிடைத்தமைக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டது பொதுச் செயலாளர் நாவலர் அவர்களின் வேண்டுகோள் அறிக்கைக்கிணங்க மாநில முழுதும் வெற்றி விழாக் கூட்டங்கள் நடைபெற்றன. அன்று சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில் இன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது இதோ:
“அண்ணா இட்ட கட்டளையை ஏற்று அன்று கலைஞர் தண்டவாளத்திலே படுத்தபோது ரயிலில் அடிபட்டு இறந்து விடுவோமே என்றோ, நமக்குப்பிறகு நமது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவிக்க நேரிடுமே என்றோ, கிஞ்சித்தும் சிந்தித்துப் பாராமல் ஒரே சிந்தனையுடன் இருந்தார். அவர் உள்ளத்திலிருந்து ஒலித்த குரல் எல்லாம்; தமிழ், தமிழகம், அண்ணா என்பவைதான். கலைஞர் போராட்டத்திற்குப் புறப்பட்டபோது “சென்று வா” என்று அண்ணா கூறினார். தனக்குப் பிறகு கலைஞர் வரவேண்டும் என்று அண்ணா விரும்பியதால்தான் “சென்று வா” என்று கூறினார்.”
சென்னைக்கு அடுத்து பெரியதோர் விழாவை நண்பர் அன்பில் அவர்கள் கல்லக்குடியிலேயே ஏற்பாடு செய்தார். விழாவுக்கு முன்னர் நானும் நண்பர்களும் கல்லக்குடி ரயில் நிலையம் சென்று 1953-ல் போராட்டம் நடைபெற்ற இடங்களை யெல்லாம் பார்வையிட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தோம். விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள், “கல்லக்குடி கொண்டான்” என்ற பட்டயத்தை எனக்கு வழங்கியதோடு விரைவில் “சுயாட்சி கொண்டான்” என்ற விருதையும் பெறவேண்டும்-அந்த விருதையும் தனது கையாலேயே கொடுக்கவேண்டும் என்று மிக்கப் பரவசத்தோடு கூறினார். அந்த விழாவினையொட்டி “கல்லக் குடி பழங்காநத்தம்” என்ற பெயர் பலகையைத் திறந்து வைத்தேன்.
{{nop}}<noinclude></noinclude>
hs52o3a24pfk90n11jlhfyve5lo89u7
1930734
1930718
2026-05-06T13:43:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 217}}</noinclude>தியாக வரலாற்றின் தொடர்ச்சிதான் அந்த வெற்றி என்பதை மறந்துவிட முடியுமா?
களங் கண்ட சரித்திரங்கள், கனவாய்ப் பழங் கதையாய்ப் போய் - தியாகங்களைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு இருண்ட காலத்திலே இன்றைக்குத் தமிழ் நாடு இருக்கும்போது இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன்.
அன்று 1970-ஆம் ஆண்டு கல்லக்குடி பெயர் மாற்றம் கிடைத்தமைக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டது பொதுச் செயலாளர் நாவலர் அவர்களின் வேண்டுகோள் அறிக்கைக்கிணங்க மாநில முழுதும் வெற்றி விழாக் கூட்டங்கள் நடைபெற்றன. அன்று சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில் இன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது இதோ:
“அண்ணா இட்ட கட்டளையை ஏற்று அன்று கலைஞர் தண்டவாளத்திலே படுத்தபோது ரயிலில் அடிபட்டு இறந்து விடுவோமே என்றோ, நமக்குப்பிறகு நமது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவிக்க நேரிடுமே என்றோ, கிஞ்சித்தும் சிந்தித்துப் பாராமல் ஒரே சிந்தனையுடன் இருந்தார். அவர் உள்ளத்திலிருந்து ஒலித்த குரல் எல்லாம்; தமிழ், தமிழகம், அண்ணா என்பவைதான். கலைஞர் போராட்டத்திற்குப் புறப்பட்டபோது “சென்று வா” என்று அண்ணா கூறினார். தனக்குப் பிறகு கலைஞர் வரவேண்டும் என்று அண்ணா விரும்பியதால்தான் “சென்று வா” என்று கூறினார்.”
சென்னைக்கு அடுத்து பெரியதோர் விழாவை நண்பர் அன்பில் அவர்கள் கல்லக்குடியிலேயே ஏற்பாடு செய்தார். விழாவுக்கு முன்னர் நானும் நண்பர்களும் கல்லக்குடி ரயில் நிலையம் சென்று 1953-ல் போராட்டம் நடைபெற்ற இடங்களை யெல்லாம் பார்வையிட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தோம். விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள், “கல்லக்குடி கொண்டான்” என்ற பட்டயத்தை எனக்கு வழங்கியதோடு விரைவில் “சுயாட்சி கொண்டான்” என்ற விருதையும் பெறவேண்டும்-அந்த விருதையும் தனது கையாலேயே கொடுக்கவேண்டும் என்று மிக்கப் பரவசத்தோடு கூறினார். அந்த விழாவினையொட்டி “கல்லக்குடி பழங்காநத்தம்” என்ற பெயர் பலகையைத் திறந்து வைத்தேன்.
{{nop}}<noinclude></noinclude>
8m99w94yir3my9x9frmh4u21junxry9
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/238
250
573704
1930723
1709773
2026-05-06T13:31:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1930723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|218 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இன்றைக்கும் அந்த வழியாக ரயிலிலோ, காரிலோ செல்லும் போது - என் தலைமையில் நடைபெற்ற அறப்போராட்ட ஊர்வலம் ரயிலடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் - நடராசன், கேசவன் என்ற இரு இளைஞர்களின் நெஞ்சாங்குழியில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து அவர்கள் மாண்டு மடிந்த சம்பவம் - அனைத்துமே என் இதயத்திரையில் நிழலாடத் தொடங்கி விடும்.
கல்லக்குடி வெற்றிச் செய்தி கிட்டிய காலகட்டத்திலே தான் எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார்கான் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார்.
அவரது பொதுப்பணிக்காக இந்தியாவில் நிதி திரட்ட வந்த அவரை சென்னை மாநகராட்சி மன்றச் சார்பாக வரவேற்றோம். ஒரு லட்ச ரூபாய் நிதியும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன், எல்லைக் காந்தி அவர்கள், தமது இயக்கத்தைத் தொண்டர்களின் இயக்கமாக நடத்திக் கொண்டிருந்தார். அவரது இளமைக்கால பொதுப்பணியின் தீவிரத்தைக் கண்ட ஒரு போலீஸ் அதிகாரி, அவரை அடக்கிவைக்குமாறு அவரது தந்தையிடம் கூறி மிரட்டினாராம். உடனே தந்தை, கபார்கானை அழைத்து, “நீ மட்டுந்தானா பொதுத்தொண்டாற்ற வேண்டும்? மற்றவர்களுக்கில்லாத அக்கறை உனக்கு ஏன்?” என்று கடிந்து கொண்டாராம். “அருமைத் தந்தையே! நீங்கள் ஏன் தொழுகை நடத்துகிறீர்கள்? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு அதில் எதற்காக?” என்று கபார்கான் கேட்டாராம். “அது எனது கடமை! விட முடியாத கடமை! முக்கிய கடமை” என்றாராம் தந்தை! “அதைப்போலவே, நானும் பொதுத் தொண்டை, விடமுடியாத கடமையாகக் கருதுகிறேன்” என்று விடையளித்தாராம் கபார்கான்! அவர்தான் எளிய வாழ்க்கையின் இனிய வடிவாய்த் திகழும் எல்லைக் காந்தியானார்.
அண்ணா காலத்தில் தொடங்கப்பட்டிருந்த, சீரணி போன்ற அமைப்புகளையும், கழக ஆட்சியில் ஏழை எளியோருக்காக நடத்தப்பட்ட சாதனைகளையும், எல்லைக் காந்தி அவர்கள் பாராட்டிப் பேசியதோடு, என்னையும் அழைத்து மகிழ்ச்சியுடன் உறவாடி, “இறைவனுக்குப் பிடித்த பணியைச் செய்து வருகிறீர்கள்” என்று புகழ்ந்துரைத்தார்.
{{nop}}<noinclude></noinclude>
950nyquaek4jowhz7id7x6jy3rw1xji
1930735
1930723
2026-05-06T13:44:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|218 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இன்றைக்கும் அந்த வழியாக ரயிலிலோ, காரிலோ செல்லும் போது - என் தலைமையில் நடைபெற்ற அறப்போராட்ட ஊர்வலம் ரயிலடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் - நடராசன், கேசவன் என்ற இரு இளைஞர்களின் நெஞ்சாங்குழியில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து அவர்கள் மாண்டு மடிந்த சம்பவம் - அனைத்துமே என் இதயத்திரையில் நிழலாடத் தொடங்கி விடும்.
கல்லக்குடி வெற்றிச் செய்தி கிட்டிய காலகட்டத்திலே தான் எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார்கான் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார்.
அவரது பொதுப்பணிக்காக இந்தியாவில் நிதி திரட்ட வந்த அவரை சென்னை மாநகராட்சி மன்றச் சார்பாக வரவேற்றோம். ஒரு லட்ச ரூபாய் நிதியும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன், எல்லைக் காந்தி அவர்கள், தமது இயக்கத்தைத் தொண்டர்களின் இயக்கமாக நடத்திக் கொண்டிருந்தார். அவரது இளமைக்கால பொதுப்பணியின் தீவிரத்தைக் கண்ட ஒரு போலீஸ் அதிகாரி, அவரை அடக்கிவைக்குமாறு அவரது தந்தையிடம் கூறி மிரட்டினாராம். உடனே தந்தை, கபார்கானை அழைத்து, “நீ மட்டுந்தானா பொதுத்தொண்டாற்ற வேண்டும்? மற்றவர்களுக்கில்லாத அக்கறை உனக்கு ஏன்?” என்று கடிந்து கொண்டாராம். “அருமைத் தந்தையே! நீங்கள் ஏன் தொழுகை நடத்துகிறீர்கள்? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு அதில் எதற்காக?” என்று கபார்கான் கேட்டாராம். “அது எனது கடமை! விட முடியாத கடமை! முக்கிய கடமை” என்றாராம் தந்தை! “அதைப்போலவே, நானும் பொதுத் தொண்டை, விடமுடியாத கடமையாகக் கருதுகிறேன்” என்று விடையளித்தாராம் கபார்கான்! அவர்தான் எளிய வாழ்க்கையின் இனிய வடிவாய்த் திகழும் எல்லைக் காந்தியானார்.
அண்ணா காலத்தில் தொடங்கப்பட்டிருந்த, சீரணி போன்ற அமைப்புகளையும், கழக ஆட்சியில் ஏழை எளியோருக்காக நடத்தப்பட்ட சாதனைகளையும், எல்லைக் காந்தி அவர்கள் பாராட்டிப் பேசியதோடு, என்னையும் அழைத்து மகிழ்ச்சியுடன் உறவாடி, “இறைவனுக்குப் பிடித்த பணியைச் செய்து வருகிறீர்கள்” என்று புகழ்ந்துரைத்தார்.
{{nop}}<noinclude></noinclude>
g72hr9oatrpcmmfx98vp5qzqssepqo3
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/239
250
573705
1930747
1709774
2026-05-06T15:03:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1930747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>29</b>}}
{{larger|<b>அர்ச்சகர் சட்டம்</b>}}
{{X-larger|<b>“அ</b>}}றுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்” என்று விடுதலையில் ஒரு தலையங்கம் 1972-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தலையங்கம் தீட்டியவர் இன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்-எனது இளவல்-தளபதி வீரமணி அவர்களாவார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் உள்ளக் குமுறலை அப்படியே படம் பிடித்து வெளியிடப்பட்ட தலையங்கம் அது! எக்காரணம் பற்றி அந்தத் தலையங்கம் தீட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? அறிந்து கொண்டால் தானே இந்த நாட்டில் “சமத்துவம்” என்பது வெறும் உதட்டலங்காரச் சொல்லாக உச்சரிக்கப்படுகிறது என்பதும், அந்த சமத்துவம் நிலைக்கச் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முடியாமல் அரசியல் சட்டம் என்பது பொம்மலாட்டக்காரனின் கைப்பதுமையாக இருக்கிறது என்பதும் தெளிவாகப் புரிய முடியும்.
1970-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள்.
ஆலயங்களில் கர்ப்பக் கிரகம் வரையில் சாதிப்பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவர்க்கும் சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.
அப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டுவர சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்து, நான்; தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன்.
“குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது<noinclude></noinclude>
ddeb2r9lm2oyb2knnkmcn1c0hf18s5n
1930908
1930747
2026-05-07T11:56:25Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>29</b>}}
{{larger|<b>அர்ச்சகர் சட்டம்</b>}}
{{X-larger|<b>“அ</b>}}றுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்” என்று விடுதலையில் ஒரு தலையங்கம் 1972-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தலையங்கம் தீட்டியவர் இன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்-எனது இளவல்-தளபதி வீரமணி அவர்களாவார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் உள்ளக் குமுறலை அப்படியே படம் பிடித்து வெளியிடப்பட்ட தலையங்கம் அது! எக்காரணம் பற்றி அந்தத் தலையங்கம் தீட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? அறிந்து கொண்டால் தானே இந்த நாட்டில் “சமத்துவம்” என்பது வெறும் உதட்டலங்காரச் சொல்லாக உச்சரிக்கப்படுகிறது என்பதும், அந்த சமத்துவம் நிலைக்கச் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முடியாமல் அரசியல் சட்டம் என்பது பொம்மலாட்டக்காரனின் கைப்பதுமையாக இருக்கிறது என்பதும் தெளிவாகப் புரிய முடியும்.
1970-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள்.
ஆலயங்களில் கர்ப்பக் கிரகம் வரையில் சாதிப்பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவர்க்கும் சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.
அப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டுவர சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்து, நான்; தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன்.
“குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது<noinclude></noinclude>
f0qt82osvfhyudtj52mx1q05wg8uc85
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/240
250
573706
1930753
1709775
2026-05-06T15:30:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1930753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|220 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள்; ஆண்டவனுக்கு அர்ச்சகராக குறிப்பிட்ட சாதியினர்தான் இருந்திடல் வேண்டுமெனல் அநியாயமாகும். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதியொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடையில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக்கொள்கிற எல்லோரும் ஏற்றுக்கொண்டே தீர்வர்.
ஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட - ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதி முறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்குமிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார்.
{{nop}}<noinclude></noinclude>
rvawzjwg48juwkrzyvxa7635el6bedm
1930909
1930753
2026-05-07T11:57:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|220 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள்; ஆண்டவனுக்கு அர்ச்சகராக குறிப்பிட்ட சாதியினர்தான் இருந்திடல் வேண்டுமெனல் அநியாயமாகும். அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதியொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடையில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக்கொள்கிற எல்லோரும் ஏற்றுக்கொண்டே தீர்வர்.
ஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட - ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதி முறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்குமிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார்.
{{nop}}<noinclude></noinclude>
lpdwjczl7iww8lrepc3aq21p6vekemi
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/241
250
573707
1930756
1709776
2026-05-06T16:13:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1930756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 221}}</noinclude>அந்த உறுதிமொழிக்கேற்ப 2-12-70-ல் சட்டப் பேரவையில் “அர்ச்சகர் சட்டம்” கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. இந்து சமய அறக்கட்டளைத் திருத்த மசோதா என்ற பெயரால் விவாதிக்கப்பட்டு நிறைவேறிய அந்தச் சட்ட முன்வடிவை ஆதரித்துப் பேரவையில் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், மேலவையில் குன்றக்குடி அடிகளார் அவர்களும் பேசியது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல; அந்தச் சட்ட முன்வடிவின் அறிமுகம் கண்டு ஐயத்திற்கு ஆளாகியிருந்த சிலருக்கு ஐயம் போக்கும் வகையிலும் அமைந்தது எனலாம்.
அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்து ஆண்டவனை பூஜை செய்யலாம்-என்ற உரிமையை வழங்கும் அந்தச் சட்டத்தைப் புரட்சிகரமான சட்டம் என சமத்துவம் விரும்பிடும் சான்றோர் அனைவரும் பாராட்டினர்.
ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டுமென்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா? அதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத்திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் “ரிட்” மனுக்கள் அளித்திருந்தனர். அந்த வழக்கில் 1972-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடிவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம், மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ<noinclude></noinclude>
95ych6s5r2b3651jzgykmub05eh64p1
1930910
1930756
2026-05-07T11:58:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 221}}</noinclude>அந்த உறுதிமொழிக்கேற்ப 2-12-70-ல் சட்டப் பேரவையில் “அர்ச்சகர் சட்டம்” கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. இந்து சமய அறக்கட்டளைத் திருத்த மசோதா என்ற பெயரால் விவாதிக்கப்பட்டு நிறைவேறிய அந்தச் சட்ட முன்வடிவை ஆதரித்துப் பேரவையில் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும், மேலவையில் குன்றக்குடி அடிகளார் அவர்களும் பேசியது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல; அந்தச் சட்ட முன்வடிவின் அறிமுகம் கண்டு ஐயத்திற்கு ஆளாகியிருந்த சிலருக்கு ஐயம் போக்கும் வகையிலும் அமைந்தது எனலாம்.
அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்து ஆண்டவனை பூஜை செய்யலாம்-என்ற உரிமையை வழங்கும் அந்தச் சட்டத்தைப் புரட்சிகரமான சட்டம் என சமத்துவம் விரும்பிடும் சான்றோர் அனைவரும் பாராட்டினர்.
ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டுமென்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா? அதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத்திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் “ரிட்” மனுக்கள் அளித்திருந்தனர். அந்த வழக்கில் 1972-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடிவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம், மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ<noinclude></noinclude>
kozafvl7spo0sad8v8b6efdmf02onpx
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/242
250
573708
1930879
1709777
2026-05-07T09:42:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1930879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|222 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லுபடியானதே - என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்தபோதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டுவிட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்படவேண்டும்.
இப்படியொரு தீர்ப்பு வந்ததைக் கண்டுதான், “விடுதலை” இதழில் “அறுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்!” என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது.
எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத் திருத்தப் பணி நடைபெறவே இல்லை.
இது கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள், 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஆனால் அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள்.
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் முதலமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசும்போது,
“அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி. அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த பெரியார் திட்ட மிட்டிருந்தார். அதற்குள் மறைந்து விட்டார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில்<noinclude></noinclude>
e1yrckxow14nqmbiexm7312d2a7ugiw
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/243
250
573709
1930881
1709778
2026-05-07T10:00:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1930881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 223}}</noinclude>ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம்; ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன்னார். முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவர்களே, அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள்” என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.
மணியம்மையார் அவர்கள் இவ்வாறு அந்த விழாவில் பெரியாரின் கடைசி ஆசையைப்பற்றித் தெரிவித்துப் பேசியதற்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அதே விழாவில் பதில் சொன்னார்.
“இங்கே பேசிய மணியம்மையார் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் விரும்பினார்; அதை கருணாநிதி நிறைவேற்றினார் என்றார். நான் மறுத்துச் சொல்வதற்காக அம்மையார் கோபித்துக் கொள்ளக்கூடாது. கோயில்களையே வேண்டாம் என்ற பெரியார் அர்ச்சகராவது பற்றிப் பேசினாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.
“பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பெரியாரைப் பற்றிப் பேசாமல் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறார்” என்று மணியம்மையார் அவர்கள் அது பற்றி பின்னர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார்.
கோயில்கள் இருக்கும்வரையில்-அங்கு அர்ச்சனைகள் நடைபெறும் வரையில் அங்கே மனித சமூகத்தின் சமநீதி காக்கப்பட வேண்டுமென்பதுதான் பெரியாரின் கருத்து அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் எம். ஜி. ஆர். அப்போது அப்படிக் கூறினார்.
1978-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளில்- “பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற<noinclude></noinclude>
anhdxajpx735tx22iyitnlkjy9ljmx0
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/244
250
573710
1930882
1709779
2026-05-07T10:09:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1930882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|224 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டுமென்று பெரியார் ஆசைப்பட்டார் என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன என்றாலும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்துவிட்டார். ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள்” என்பதாகும்.
ஆனால் இந்த வேண்டுகோள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.
{{nop}}<noinclude></noinclude>
36g03mxtse0h2i0al682c0ejou7d16l
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/245
250
573711
1930883
1709780
2026-05-07T10:20:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1930883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>30</b>}}
{{larger|<b>ஐம்பெரும் முழக்கம்</b>}}
{{X-larger|<b>நா</b>}}மக்கல் கவிஞர், பரலி சு. நெல்லையப்பர், வீரவாஞ்சியின் உறவினர் ஆகியோர்க்கு அரசின் சார்பில் நிதியுதவி செய்தது போல தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு காலவரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டு காமராஜர் ஆட்சிக் காலத்திலே உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களின் துணைவியார் செந்தியம்மாள் அவர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் 150 ரூபாய் வழங்கிட ஆணையொன்றும் 1970 பிப்ரவரி திங்களில் பிறப்பித்தேன்.
1970-பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா அவர்களின் முதலாண்டு நினைவு நாள்! அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அன்று மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அண்ணா அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் அண்ணா பற்றிப் பாடிய பாடல் விழா மண்டபத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியது.
அஞ்சல்தலை தயாரிப்பதற் கேற்ற அண்ணாவின் புகைப்பட மொன்றை மத்தியில் உள்ளோர் கேட்டபோது, அந்த அஞ்சல் தலையில் தமிழும் இடம்பெற வேண்டுமென்பதற்காக, அந்தப் படத்துடன் “அண்ணாதுரை” என்ற அண்ணாவின் கையெழுத்தையும் இணைத்து ஒட்டி அனுப்பியிருந்தோம். இல்லாவிட்டால் அந்த அஞ்சல் தலையில் தமிழே தலைகாட்டியிருக்காது. ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சர் ஷெர்சிங் அவர்கள் வெளியிட அஞ்சல் தலையை நான் பெற்றுக் கொண்டேன். அப்போது என் கண்ணீரில் அந்த அஞ்சல் தலை நனைந்தது.
அந்தக் கண்ணீர் அதே பிப்ரவரி திங்கள் திருச்சியில் நடைபெற்ற தி.மு. கழக மாநாட்டில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. அண்ணா இல்லாமல் நடைபெற்ற முதல் தி.மு.க. மாநாடு அதுதான். அந்த மாநாட்டில் பஞ்சாப் முதலமைச்சர்<noinclude>
நெ.—15</noinclude>
dzhc0aj97dxftgeurgtoxg8gbzjauj3
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/246
250
573712
1930891
1709781
2026-05-07T10:45:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1930891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|226 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன்.
<poem><b>1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்;
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்;
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்;
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது.</b></poem>
நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர்.
ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன்.
“ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி பல மாநாடு விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.
அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!
திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.<noinclude></noinclude>
33b8y2btf0jjmu8hi3b33s1mh5s0tdw
1930892
1930891
2026-05-07T10:45:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1930892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|226 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன்.
<poem><b>1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்;
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்;
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்;
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது.</b></poem>
நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர்.
ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன்.
“ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி பல மாநாடு விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.
அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!
திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.<noinclude></noinclude>
alfio4o5150sgp5bpnlkvexk0aq300e
1930893
1930892
2026-05-07T10:46:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1930893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|226 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன்.
<poem><b>1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்;
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்;
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்;
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது.</b></poem>
நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர்.
ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன்.
“ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி பல மாநாடு விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.
அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!
திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.<noinclude></noinclude>
33b8y2btf0jjmu8hi3b33s1mh5s0tdw
1930894
1930893
2026-05-07T10:48:23Z
ஹர்ஷியா பேகம்
15001
1930894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|226 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன்.
<poem><b>1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்;
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்;
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்;
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது.</b></poem>
நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர்.
ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன்.
“ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி பல மாநாடு விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.
அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!
திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
{{nop}}<noinclude></noinclude>
sqyn3til3raz21cnjgcla4z2um5bc6i
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/247
250
573713
1930898
1709782
2026-05-07T10:59:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1930898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 227}}</noinclude>சொற்பொழிவு-நாடகம்-கலை நிகழ்ச்சி - பத்திரிகை - சுவரொட்டி ஆகியவற்றை பலமான பிரச்சார ஆயுதங்களாக தி. மு. கழகம் பயன்படுத்தி வருவதுபோல உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்துவதில்லை என்று நமது இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு அமெரிக்க மாணவர் என்னிடம் குறிப்பிட்டார்! அந்தப் பட்டியலிலே நாம் ஊர்வலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஊர்வலக் கலையிலே நாம் வல்லவர்களாக இருப்பதால் தான் இந்தியாவிலேயே இதுவரை நடந்ததில்லை என்று கூறத்தகும் அளவிற்கு உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை நடத்த முடிந்தது. ஊர்வலத்தை நேரில் கண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. ஜாகிர் உசேன், டெல்லி குடியரசு நாள் ஊர்வலத்திலே கூட இத்தகைய கலையழகு மிகுந்த பவனியைக் கண்டதில்லை என்றல்லவா நமது அண்ணனிடம் கூறினார்.
நினைவில்லையா உனக்கு நமது பழைய ஊர்வல வரலாறு!
கல்லக்குடி போராட்ட சிறை வாசமேற்று கலைஞர் எழும்பூர் வந்திறங்கிய நேரம் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றது தலைநகரத்துவாசிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லையா?
விலைவாசி போராட்ட சிறைவாசம் முடித்து நமது அண்ணன் வேலூரிலிருந்து தலைநகரம் வந்த காலை, ஊர்வலத்தில் அண்ணன் வந்த பவனியை அப்போதைய சுதேசமித்திரன் வார ஏடு எப்படி வர்ணித்திருந்தது தெரியுமா?
உலகெங்கும் வெற்றிகளைக் குவித்து ஜூலியஸ் சீசர்ரோம் நகரம் வந்தபோது அவருக்குத் தரப்பட்ட வரவேற்புக்கும், ஐரோப்பிய வெற்றிகளை ஈட்டி பாரீஸ் திரும்பியபோது நெப்போலியனுக்குத் தரப்பட்ட வரவேற்பிற்கும் அல்லவா அந்த ஏடு ஒப்பிட்டிருந்தது.
முதன் முதலில் மதுரை மாநாட்டு ஊர்வலத்தில்தான் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கண்டு மகிழ்ந்த அண்ணன் அதை அல்ஜீரிய விடுதலை வீரர்களின் அணி வகுப்பிற்கல்லவா ஒப்பிட்டார்!
திருச்சி ஊர்வலம் அலங்கார ஒளிவிளக்கு ரதங்களால்-கிராமிய கலைநிகழ்ச்சிகளால் சிறப்புப் பெறுகிறது. எத்தனை<noinclude></noinclude>
dg4v5s87azfzan50nb0y6h4z12f742k
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/248
250
573714
1930901
1709783
2026-05-07T11:34:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1930901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|228 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விதமான அண்ணனின் திரு உருவங்களை ஏந்தி வந்தார்கள் தெரியுமா? அண்ணன் இருந்திருந்தால், அன்று மதுரை மாநாட்டு ஊர்வலத்தை அல்ஜீரிய அணிவகுப்பிற்கு ஒப்பிட்டவர் இந்த ஊர்வலத்திற்கு என்ன உவமை கூறிடுவார் என்று எண்ணத்தக்க விதத்திலே திருச்சியின் எழுச்சிமிகு ஊர்வலம் அமைந்திருந்தது!”
ஆனால் ஒன்று, அந்த எழிலும் எழுச்சியும் கொண்ட ஊர்வலத்தின் தொடக்கத்தில் நான் ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் தெரியவில்லை.
ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம். எஸ். மணியும், ராபியும் அழைத்துச் சென்றார்கள், சிலையை யொட்டி வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகளில் ஏறி, சிலையருகே நின்று கொண்டு மிகப்பெரிய மாலையொன்றை அண்ணா சிலையின் கழுத்தில் அணிவித்தேன். ஒரு இமைப் பொழுது நானே என்னைக் கீழே தள்ளிக் கொள்ளும் திடீர் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அண்ணாவின் சிலையைக் கட்டித்தழுவியபடி பிணமாக ஆகியிருப்பேன்.
மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரம் நிறைந்த மாலையை அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான “ஷாக்” அடித்து என்னை மிக வேகமாக இழுத்திருக்கிறது. ஒருக்கணத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டதால் மல்லாந்தபடியே அந்தப் பீடத்திலிருந்து கீழே சாய்ந்தேன். ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்ற திகிலோடு பராங்குசமும் குளித்தலை முத்துகிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் என்னை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள்.
அந்த ஒரு கால் விநாடிக்கும் குறைவான நேரம் - நான் மட்டும் சமாளித்திருக்காவிட்டால் என் ஆருயிர் அண்ணனின் சிலையைக் கட்டிப்பிடித்தவாறே அமைதி அடைந்திருப்பேன்! என்ன செய்வது; அது மட்டும் அன்றைக்கு நடந்திருந்தால்<noinclude></noinclude>
69rq57wwqbzqfj47xg8ex0kg9h74tn1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/713
250
622604
1930799
1886752
2026-05-07T03:45:09Z
Booradleyp1
1964
1930799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசியலமைப்புச் சட்டம்|677|அரசியலமைப்புத் திட்டங்கள்}}</noinclude>இயற்ற வேண்டிய முறை, சட்டங்கள் இயற்ற வேண்டிய செய்திகள், நாட்டுப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்புக்காகப் படைகளை அமைப்பது, அவற்றின் பொறுப்பு, சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய முறை, வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிமன்றங்களின் அதிகாரம், தீர்ப்பு ஆணைகள் முதலியன பற்றியது.
மேலும், மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் செல்லும் பகுதி, அப்பகுதியின் எல்லைகள், அதனுடன் இணைத்தல் அல்லது நீக்குதல், குடிகளாவதற்குரிய தகுதிகள் ஆகியவற்றையும் அது வகுக்கும்.
அரசியலமைப்பு பெரும்பாலும் எழுதப்பட்டதாகவே (Written Constitution) இருக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இந்தியா போன்ற சில நாடுகளின் அரசியல் அமைப்புகள் எழுத்து வடிவில் அமைந்துள்ளன. இங்கிலாந்தின் அரசியலமைப்பு மட்டும் எழுதப்படாத அரசியலமைப்பாக விளங்குகிறது (Unwritten Constitution). எழுதப்படாத அரசியல் அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்பை மாற்ற விரும்பினால் எளிதில் மாற்றி விடலாம். ஆனால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறையினைத் தழுவியே, அரசியல் அமைப்பினை மாற்ற இயலும். அன்றியும் நெகிழும் (Flexible) அல்லது நெகிழாத (Rigid) அரசியலமைப்பு என மற்றொரு வகை அரசியலமைப்பும் உள்ளது. எழுதப்படாத அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவது எளிது; எழுதப்பட்ட அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யச் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பினைக் கொண்டது இந்தியா. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 395 விதிகளும் 10 இணைப்புகளும் கொண்ட நீண்ட ஆவணமாகும்.
அனைத்து அதிகாரங்களும் சட்டங்களும் ஆணைகளும் ஒரே சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்திடமிருந்து பிறந்தால், அதனை ஒற்றையாட்சி முறை (Unitary Type) என்று கூறுவர். எடுத்துக்காட்டாக இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, சப்பான் ஆகிய நாடுகளைக் கூறலாம்.
கூட்டாட்சி முறை (Federal Type) நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளைக் கூறலாம்.
உருசியா, பொதுவுடைமை அடிப்படையில் அமைந்த அரசாங்கத்தைப் பெற்றிருந்தபோதிலும், அது “மக்களாட்சியில் அதிகாரக் குவிப்பு” (Democratic Centralization) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி நாடே ஆகும்.
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட நாடுகளில் அரசு செயற்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் எழுதப்பட்டிரா. வரையப்படும் விதிகளுடன் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைகளைப் பற்றி எழுதப்படாத வழக்கங்கள் (Customs) நாளடைவில் தோன்றி நிலைத்துச் சட்டத்துக்கு இணையாக வலுப்பெற்றுவிடும். இத்தகைய வழக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டு அரசருக்கு வழங்கப்பட்டுள்ள மறுப்பாணை (Veto)யைக் குறிப்பிடலாம். பாராளுமன்றம் இயற்றும் எச்சட்டத்தினையும் புறக்கணிக்கும் அதிகாரம் அரசருக்குச் சட்டப்படியாக இருந்தபோதிலும், இவ்வதிகாரத்தினைக் கி.பி. 1704–ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்து நாட்டு அரசர் எவரும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காண்க: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
{{larger|<b>அரசியலமைப்புத் திட்டங்கள்</b>}} நாடுகளின் அரசு எத்தன்மையதாக இருக்கவேண்டும் என்பதை நிருணயம் செய்கின்றன. “அரசியலமைப்பு என்பது அரசின் அதிகாரங்கள், மக்களின் உரிமைகள் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று சரிசெய்துகொண்டு ஒழுகும் விதிமுறைகளின் தொகுப்பேயாகும்” என்கிறார் சி.எப். இசுடிராங்கு (C.F. Strong). அரசின் தன்மைகளைப் பொறுத்தே அரசியல் அமைப்புகள் உள்ளன. இதுவே ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டங்கள் எனலாம்.
அரசியல் அமைப்புத் திட்டங்கள், அரசின் அங்கங்கள், அங்கங்களின் அதிகாரங்கள், அவற்றைச் செலுத்தும் விதம், மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியல் அமைப்புத் திருத்த வகைகள் ஆகியவற்றை வரையறை செய்ய வேண்டும்.
ஒரு நாட்டின் அரசியல் திட்டம் எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்; எழுதப்படாததாகவும் இருக்கலாம். இருப்பினும் அது அந்நாட்டின் அரசியல் சூழ்நிலையையும் நிருவாகத்தையும் பாதிக்கிறது. அதன் பாதிப்பில்தான் மக்களின் உயிரினும் மேலாகிய உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
அரசியல் அமைப்புத் திட்டங்கள் கீழ்க்காணுமாறு பிரிக்கப்படும். அவையாவன: 1) எழுதப்பட்ட அரசியல் அமைப்புத் திட்டம், 2) எழுதப்படாத அரசியல் அமைப்புத் திட்டம், 3) நெகிழும் அரசியல் அமைப்புத் திட்டம், 4) ஒற்றையாட்சியுடைய அரசியல் அமைப்புத் திட்டம், 5) கூட்டாட்சியுடைய அரசியல் அமைப்புத் திட்டம், 6) ஓரவைச் சட்டமன்றமுடைய அரசியல் அமைப்புத் திட்டம், 7) ஈரவைச்<noinclude></noinclude>
pw7npacdi26y9grcrhk6pjnywvgwrdm
அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf
252
635215
1930876
1926098
2026-05-07T08:54:27Z
Booradleyp1
1964
added [[Category:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1930876
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 9]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
10to12=பொருளடக்கம்
13=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
kraw6j1i1rjam3xxa7o5p1ioy96j9ue
1930877
1930876
2026-05-07T08:54:48Z
Booradleyp1
1964
added [[Category:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1930877
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[கலைஞர் கடிதம் 9]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]]
|School=
|Publisher=
|Address=
|Year=1986
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5to7=என்னுரை
8to9=பதிப்புரை
10to12=பொருளடக்கம்
13=முகப்பு
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]]
[[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]]
pskdk3p9tu2qxb01387gnvg1n48emet
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1930796
1928128
2026-05-07T03:04:04Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]]
1930796
wikitext
text/x-wiki
{{Under_construction}}
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[c:Category:]]
** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள்
** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள்
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]]
=== நடப்பு ===
* கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.
=== குறிப்பு ===
o1lzzndhph35ox58tg8jdpz70thdhbk
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/151
250
641279
1930736
1930581
2026-05-06T13:48:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>வேண்டுகோளாகக் கருதிக்கொள்ளாமல் உடனடியாக ஆங்காங்கு தொண்டினைத் தொடங்கித் தொடர்ந்து நடத்திடுவாய் என்பதும் எனக்குத் தெரியும்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} அரசு அதிகாரிகளுடன் உடனிருந்து ஒத்து ழைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு ஆவன
செய்தல்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}எங்கெங்கே மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை உரியவர்களிடத்திலே எடுத்துரைத்தல்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}அமைப்புக்களின் சார்பாக முடிந்த அளவு உணவு தயாரித்து இயன்ற அளவுக்கு ஏழை எளியோர்க்கு வழங்குதல்.
இப்படிப் பல்வேறு இன்றியமையாத நற்பணிகளை ஆற்றிட நமது கழக உடன்பிறப்புக்கள் முன்வந்திட வேண்டும்.
இப்போது அந்தப் பணிகளில் சலியாது ஈடுபட்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
மேலும் தொடரட்டும் துயர்துடைப்புப் பணி; என்று கேட்டுக்கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
27—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
sgx93n2isiibbmvae5qgsxxx130yodw
1930800
1930736
2026-05-07T04:11:41Z
Mohanraj20
15516
1930800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|138||கலைஞர்}}</noinclude>வேண்டுகோளாகக் கருதிக்கொள்ளாமல் உடனடியாக ஆங்காங்கு தொண்டினைத் தொடங்கித் தொடர்ந்து நடத்திடுவாய் என்பதும் எனக்குத் தெரியும்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} அரசு அதிகாரிகளுடன் உடனிருந்து ஒத்து ழைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு ஆவன
செய்தல்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}எங்கெங்கே மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை உரியவர்களிடத்திலே எடுத்துரைத்தல்.
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}அமைப்புக்களின் சார்பாக முடிந்த அளவு உணவு தயாரித்து இயன்ற அளவுக்கு ஏழை எளியோர்க்கு வழங்குதல்.
இப்படிப் பல்வேறு இன்றியமையாத நற்பணிகளை ஆற்றிட நமது கழக உடன்பிறப்புக்கள் முன்வந்திட வேண்டும்.
இப்போது அந்தப் பணிகளில் சலியாது ஈடுபட்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
மேலும் தொடரட்டும் துயர்துடைப்புப் பணி; என்று கேட்டுக்கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
27—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
qbinehwcsuf79rjshgm1gz4c6cc9zoo
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/152
250
641280
1930737
1930582
2026-05-06T13:49:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ்த்திக் கொண்டே வளருவோம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
::<b>அர்ச்சனை தொடருகிறது.</b>
::<b>அபிஷேகம் நடந்துகொண்டே இருக்கிறது.</b>
::<b>ஆராதனை நிற்கவில்லை.</b>
என்ன சொல்லுகிறேன்; யாரைப் பற்றிச் சொல்லுகிறேன் என்று கேட்கிறாயா?
நடிகர் கட்சி நண்பர்கள் சிலர் நம்மீது நடத்தும் அக்கினிச் சொல் அர்ச்சனைகளையும், அவதூறு அபிஷேகங்களையும், ஆபாச மொழி ஆராதனைகளையும் பற்றித்தான்
குறிப்பிடுகிறேன்.
ஏன் அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் நமக்குப் புரியாமல் இல்லை.
அவர்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிற உடைப்பு விளைவித்துள்ள வேதனைகளால் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள் பாவம்!
அவர்களால் “பிரிவினைவாதிகள்” என்று குற்றம் சாட்டப்பெற்று விலக்கப்பட்டவர்களைப் பற்றி ஏதாவது பேசினாலோ, எழுதினாலோ, அதற்குச் சுடச் சுடப் பதில் அவர்கள் பாணியிலேயே கிடைக்கிறது. அந்த எதிரொலியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நம்மீது பாய்ச்சலைத் தொடருகிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
fdhe96y2ris34fsjhq4gm3ihnlknrwh
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/153
250
641281
1930739
1930583
2026-05-06T13:51:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|140||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}கட்சியின் சட்டதிட்டங்கள் பொதுக் குழுவில் அறிவித்தது ஒன்றாகவும், ஏடுகளில் வந்தது வேறொன்றாகவும் இருக்கிறதே; என்ன காரணம்?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}அண்ணா வழியில் நடப்பதாகச் சொல்லிக் கொண்டு “அனைத்து இந்தியா” என்ற அடை மொழியை முன் கூட்டியே பத்திரிகையில் பல நாட்கள் வெளியிட்டு விட்டு; அதற்குப் பிறகு பொதுக் குழுவைக் கூட்டி அனைத்து இந்தியக் கட்சி என்று ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்களே; இது என்ன ஜனநாயக முறை?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}பல செயலாளர்கள் மாநில அளவில் விலகிய பிறகு, இருக்கிற செயலாளர்களைக் கூட்டி, பொதுச் செயலாளராக எம். ஜி. ராமச்சந்திரனை மீண்டும் தேர்ந்தெடுத்ததாக ஏடுகளில் செய்தி வெளியிடுகிறீர்களே; இது எந்தக் கட்சியிலும் இல்லாத முறையாக இருக்கிறதே! பொதுக்குழு அல்லவா பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்? கட்சியின் பதினேழுலட்சம் உறுப்பினர்களும் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள் எனச் சொன்னீர்களே; அது என்னவாயிற்று?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}கணக்கு கேட்பதில் புலியெனப் பெயர் எடுத்தவரே! உமது கட்சியின் பதினேழு லட்சம் உறுப்பினர்கள் செலுத்திய சந்தாத் தொகை எந்த வங்கியில் இருக்கிறது? கணக்கு எங்கே?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}}தேர்தல் நிதி — என்று பத்திரிகையில் வெளியிட்டு, முதல் நாள் வரை வந்த நிதியையும்<noinclude></noinclude>
43r0n3qduk40t43jdqnkkdy92bslcq1
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/154
250
641282
1930740
1930584
2026-05-06T13:55:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||141}}</noinclude>குறிப்பிடாமல், ஒவ்வொரு நாளும் மொத்தம் கட்டிக் கூட்டிப் போடாமலும்
பிரசுரிப்பதின் மர்மம் என்ன?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} கப்யூனிசம், சோஷலிசம், கேப்டலிசம் மூன்றும் சேர்ந்ததே அண்ணாயிசம் என்று விளக்கமளித்தீர்களே; அந்த விளக்கம், கட்சியின் சட்ட திட்டத்தில் இடம் பெறாத காரணமென்ன?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} இன்றைய இந்திய மக்கள் அனைவரும் திராவிடர்கள் தான் என்று அறிவித்தீரே;அந்தப் புதிய ஆராய்ச்சிப் புத்தகம் எப்போது வெளிவரப் போகிறது?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} கட்சிக்கு வருபவர்களை நீதிபதி விசாரணைக் குழு மூலம் விசாரித்து வடிக்கட்டிய பிறகு தான் கட்சியில் சேர்ப்பதாக அறிக்கை விடுத்தீரே; அந்த அறிக்கைக்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி என்ன ஆனார்?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} அந்த நீதிபதியிடம் எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்? திண்டுக்கல் வைரம் புகழ் ஜோதிமஸ்தான் திலகம் மதுரையாரின் நிலபுலங்கள், வீடுகள், பங்களாக்கள் பற்றியெல்லாம் விசாரணை முடிந்து தான் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டீர்களா?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} 1973 – ல் அடிக்கல் நாட்டப்பெற்று அண்ணா மேம்பாலத்தருகே பெரியார் சிலை அமைக்கப் பீடம் கட்டினீர்களே; சிலை ஏன் மூன்று ஆண்டுகள் முடிந்தும் வைக்கவில்லை?
{{nop}}<noinclude></noinclude>
9teuqfs963j3ge6wk60f9bsmysn2572
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/155
250
641283
1930741
1930585
2026-05-06T13:58:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|142||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} அண்ணாவின் உண்மையான தம்பிகள் கட்சிக்குக் கட்டுப்பட்டு பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்று ஆணை பிறப்பித்து விட்டு — இப்போது அது கட்டாயமில்லை என்று அறிவித்திருக்கிறீரே; எது கட்டாயமில்லை? அண்ணாவின் உண்மையான தம்பியாக இருப்பதா?
::{{overfloat left|align=right|padding=1em|ஃ}} “தி. மு. க. என்னைத் தூக்கி எறிந்து விட்டது” என்று அலறிக்கொண்டிருந்தவராகிய நீர், புதிய கட்சி தொடங்கிய பிறகு இந்த நாலைந்து ஆண்டுகளில் பெட்டிச்செய்தி வெளியிட்டு தூக்கியெறிந்தவர்களின் எண்ணிக்கை ஏட்டில் அடங்குமா? எழுத்தில் கொள்ளுமா?
இப்படிப்பட்ட கேள்விகளை நாமல்ல; நடிகர் கட்சியிலிருந்து அண்மையில் விலக்கப்பட்டவர்களும் விலகியவர்களும் சரமாரியாகத் தொடுத்தனர்.
அதற்குப் பதில் அளிக்க முடியாதவர்கள் — பயந்து பல்லைக்காட்டி நிற்பவர்கள் — நம்மீது நாராச மொழிகளை அள்ளி வீசுகின்றனர்.
அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதை நாடு, நன்கு உணர்ந்தே இருக்கிறது.
{{left_margin|3em|<poem>நன்றாக அவர்கள் வசை பாடட்டும்!
நாவலிக்கத் திட்டித் தீர்க்கட்டும்!</poem>}}
“வாழ்க வசைவாளர்கள்” என்று அண்ணா அவர்கள் வாழ்த்தியது போலவே நாமும் அவர்களை வாழ்த்து வோம்!
பல கட்டங்களைச் சந்தித்து வளர்ந்து வரும் நமது இயக்கம் இன்று ஏறுநடைச்சிங்கமென எதையும் தாங்கும் தயத்துடன் உலாவந்துகொண்டிருக்கிறது.
{{left_margin|3em|<poem>வசைமாரி பொழிவோர், தங்கள்
பணியை நிறுத்தாமல் நடத்தட்டும்!</poem>}}
நாம் அவர்களை வாழ்த்திக் கொண்டே வளருவோம்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
31—11—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
nozormrapew3t4hte57ie9gfeoag4mw
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/156
250
641284
1930742
1930587
2026-05-06T14:00:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நன்னாளை எதிர்நோக்குவோம்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
இன்று காலை ஏடுகளில் ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. “பினாமி சொத்துக்களும், பினாமி பேரங்களும் பரவலாக இருப்பதை ஒடுக்குவதற்காக மத்திய அரசின் சட்ட அமைச்சகம், ஒரு மசோதாவைத் தயாரித்து வருகிறது. இந்தப் பினாமி ஒழிப்புச் சட்டம் கடுமையானதாக இருக்குமென்றும் பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் வரக்கூடுமென்றும் தெரிகிறது. பினாமி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதானது, நகர்ப்புற உச்சவரம் புச் சட்டங்களை அமலாக்கவும் வரிகளை நன்கு வசூலிக்கவும் உதவுவதோடு விவசாய சொத்து உச்சவரம்புச் சட்டங்களையும் நன்கு நடைமுறைப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மேற்குவங்கமும், தமிழ்நாடும் கணிசமான அக்கறையைக் காட்டியுள்ளன” என்பது தான் நான் படித்த செய்தியின் சுவைக்குக் காரணமாகும்.
“நிலங்களில் மட்டுமல்ல வீடு, மனை போன்ற பல்வகை சொத்துடைமைகளிலேகூட இருக்கிற பினாமி முறைகளுக்கு ஒரு முடிவுகட்ட, மத்திய அரசு—தனது கவனத்தைத் திருப்பவேண்டும் என்பது நமது முறையீடாகும்”
என்று நான் உனக்கு எழுதிய கடிதங்களில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நமது கழகம் இந்தக் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறது,
{{nop}}<noinclude></noinclude>
fy4am5k8fnzgy77nqdw1bhg2rmkkkrq
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/157
250
641285
1930743
1930591
2026-05-06T14:07:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|144||கலைஞர்}}</noinclude>நில உச்சவரம்பு, நகர்ப்புற உச்சவரம்பு போன்ற சட்டங்கள் எதிர்பார்த்திடும் அளவுக்கு வெற்றிகரமாக அமைய முடியாமல் இந்த பினாமிமுறைதான் குறுக்கே நின்று கொண்டிருக்கிறது.
பினாமி ஒழிப்புச் சட்டம் ஒன்று விரைவில் நிறைவேற இருக்கிறது என்று ஆறு மாதங்களுக்கு முன்பு செய்திகள் அறிவிக்கப்பட்டபோதே சட்டம் கொண்டுவரும் அந்த
நல்ல நோக்கத்தை வரவேற்று நமது கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்.
இப்போது அடுத்த கூட்டத் தொடரிலேயே அந்தச் சட்டம் வரப்போகிறது என்பது சமதர்ம நோக்குடை யோர்களுக்குத் தெம்பூட்டும் தகவலாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நிலச் சீர் திருத்தம், பல கட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று சட்டம் கொண்டுவரப்பட்ட போது முன் எச்சரிக்கையாகப் பலபேர் தங்கள் நிலங்களைப் பல பெயர்களில் பிரித்து வைத்துக்கொண்டார்கள். அந்தச் சட்டம் வந்தபோது கரும்பு சாகுபடி, மேய்ச்சல் நிலங்களுக்கு விதி விலக்குகள் அளிக்கப்பட்டது.
அந்த விதிவிலக்குகளில் புகுந்து கொண்டு தங்கள் நிலங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள், பினாமிதாரர்களைப் பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்தது
போலப் பத்திரங்களை எழுதிப் பதிவு செய்து கொண்டு உரிமையைப் பினாமிகளின் பெயரில் வைத்துக்கொண்டு பயனைத் தாங்கள் வளமாக அனுபவித்துக்கொண்டு சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்திலே மட்டுமே 1959 ஆம் ஆண்டு 138 நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்த மொத்த<noinclude></noinclude>
jxpru9fi9bfe0l366ihohur7omta8r7
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/158
250
641286
1930744
1930593
2026-05-06T14:09:22Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||145}}</noinclude>நிலம் 48,924 ஏக்கர்கள். ஆனால் 1960 ஆம் ஆண்டு உச்ச வரம்பு சட்டப்படி அரசுக்கு அந்த 138 பிரபுக்களிடமும் இருந்து கிடைத்த உபரி நிலம் 6624 ஏக்கர்கள் தான்!
எனவே பினாமிமுறை எந்த அளவுக்கு அந்த உச்சவரம்பு சட்டத்தைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு நிலக்கிழார், தன்னுடைய வீட்டில் உள்ள கிருஷ்ணன் படத்து பூஜைக்கு என்று பெருமளவு நிலத்தை டிரஸ்ட் எழுதி வைத்துவிட்டு அதன் பயனைத் தானே அனுபவித்துக்கொண்டார். இந்தக் காரணங்களால் 1960 ஆம் ஆண்டு உச்சவரம்பு சட்டப்படி அரசுக்கு உபரியாகக் கிடைத்த நிலம் 16, 350 ஏக்கர்களாக மட்டுமே இருந்தது.
1970ஆம் ஆண்டு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கர் என்பதை பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கர் எனக்குறைத்து உச்சவரம்பை நிர்ணயித்தும், கரும்பு, மேய்ச்சல் நிலங்களுக்கு இருந்த விதிவிலக்குகளை ரத்து செய்தும் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, மாணவர் விடுதி, அனாதை இல்லங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்காமல் அந்த அறக்கட்டளைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உச்சவரம்பு நிலங்களை அனுமதித்தும் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு அரசுக்குக் கிடைத்த உபரி நிலம் 1975 ஆம் ஆண்டு கணச்கின்படி 1, 08 068 ஏக்கர்களாகும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்த நிலச் சீர்திருத்த சட்ட ஆய்வுக் குழுவினர் தமிழ்நாட்டில் உச்ச வரம்பு சட்டம் நல்ல முறையில் பலன் அளித்து பெரும்பான்மையோருக்கு உபரி நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன எனப்பாராட்டி ஒரு அறிக்கையே கூட அப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
{{nop}}<noinclude>
க—9—10</noinclude>
87zlk251csp2bas6843dc3j7t29p5zl
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/159
250
641287
1930745
1930598
2026-05-06T14:10:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|146||கலைஞர்}}</noinclude>படிப்படியாக செய்யப்பட்டுள்ள இந்த நில உச்ச வரம்புச்சட்டத்தின் முழுப்பயனையும் பெறவேண்டுமென்றாலும், இன்னும் அதிகமான உபரி நிலங்களை அரசு எடுத்து
நிலமற்றோருக்கு வழங்கவேண்டுமென்றாலும், அதற்குத் தடைக்கல்லாக இருக்கிற பினாமி முறையைத் தகர்த்து எறிந்தாக வேண்டும்.
பினாமிகளின் பெயரால் உள்ள நிலமானாலும் வேறு சொத்துக்களானாலும் அதை அவர்களுக்கே உரிமையாக்கி விடவேண்டும் என்ற அடிப்படையில்கூட சட்டத்தை
உருவாக்கப் போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு யூகங்கள் கூறப்பட்டன.
இப்போதே பல விவகாரங்களில் பினாமிகளின் பெயரால்தான் நிலங்களோ வேறு உடைமைகளோ இருக்கின்றன. ஆனால் அதன் பயன்கள் அவர்களுக்குக் கிடைகாமல் தனியார் சிலர்தான் மறைமுகமாகத் தங்களைக் கொழுக்க வைத்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு தந்திரமான ஏற்பாடு நிலவி வருகிறது.
இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதை மத்திய அரசு ஆழ்ந்து சிந்தித்து சட்டத்தைத் தயாரிக்கிறது என்ற செய்தி, மகிழ்வூட்டத் தக்கதாகும்.
விரைவில் அந்தச் சட்டம் உருப்பெற்று நடை முறைக்கு வரும் நன்னாளை எதிர்நோக்குவோமாக!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
1—12—79</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
japk2uzfm5gnxktq7wprg2pvy6m70qg
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/160
250
641288
1930746
1930600
2026-05-06T14:10:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருநாள் வாழ்த்துக்கள்</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிற இஸ்லாமியப் பெருமக்கள் இத்திங்கள் இரண்டாம் நாளன்று பக்ரீத் பண்டிகையினைக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியச்
சகோதரர்களோடு இரண்டறக் கலந்து பாசமும் பற்றும் குறையா இதயங்களின் பிணைப்போடு வாழ்ந்து வருகிற இயக்கத்தின் சார்பில் இந்தத் திருநாளில் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று நினைத்து இன்று வழங்குகிற வாழ்த்துக்கள் அல்ல இவை!
நீண்ட நெடுங்காலமாக அவர்களுக்கும் நமக்கும் இந்த உறவு இருந்து வருகிறது. “அவர்களுக்கும் நமக்கும்” என்று தனித்தனியாகக் குறிப்பிடுவது கூடத் தவறானதாகும். “நாம்” என்பதில் அவர்களும் அடங்குகிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கென அமைந்துள்ள நீதி முறைகள், கடமைகள் — அதைப்போலவே மற்ற மதங்களில் எடுத்துக்கூறப்படும் நீதிமுறைகள், கடமைகள் — ஆகியவற்றுக்கிடையே சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் வாழ்க்கை நெறியைப் பொறுத்தமட்டில் அடிப்படை முரண்பாடுகள் எதுவுமில்லை.
{{nop}}<noinclude></noinclude>
com0hcth036cni1fvo7in4gvxfjieyk
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/161
250
641289
1930803
1930308
2026-05-07T04:17:05Z
Mohanraj20
15516
1930803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|148||கலைஞர்}}</noinclude>அந்தந்த மார்க்கங்களைப் பின்பற்றுகிற மனித சமுதாயத்தினர், தாங்கள் ஏற்றுக்கொண்ட மார்க்கங்களைப் பெயரளவுக்குப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வழிகளைத் தனி வழிகளாக அமைத்துக் கொண்டதால் கால கட்டத்தில் அந்தத் தனி வழிகள், தவறான வழிகளாக அமைந்து விட்டன.
நேர்வழி,நேர்மை வழி செல்வதற்கேற்ற கடமை களை உணர்த்துகிற தங்கள் கோட்பாடுகளை நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டு இந்த நாளில் எடுக்கும் விழா
மூலம் நல்ல விளைவுகளை உருவாக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு நமது வாழ்த்துக்கள் உரியவையாகின்றன.
இந்தக் கருத்தை வலியுறுத்துகிற வகையில்தான் திரு மறையின் வாசகமொன்று அமைந்திருக்கிறது.
::“மனிதன், தன் செய்கைகளை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைக்கின்றானா? அவனுக்குக் கண்கள் இல்லையா? நாவும் உதடுகளும் அருளப் படவில்லையா? அவனுக்குத் தெளிவான வழி காட்டப்படவில்லையா? ஆனால் அவனோ கடின
மாயுள்ள “அகபா” என்னும் கரடுமுரடான மலை வழியை நோக்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. தனக்குக் கடினமாகத் தோன்றும் வழிமுறையைப்
பின்பற்றாமல், இலகுவாகத் தோன்றும் பாதையில் செல்லவே முனைகிறான். கடின வழியில் செல்வோர் யார்? ஆதரவற்றவர்களை நேசிப்பவர்கள், உண்மையின் விசுவாசிகள், பொறுமையின் மேன்மையை உணர்ந்தவர்கள், கருணையைப்
பிறர் மீது பொழிபவர்கள்.”
கடின வழி எது என்பதற்குத் திருமறை அளிக்கும் விளக்கம் இது.
{{nop}}<noinclude></noinclude>
nrkk7hfflfwzlymctl83lfdg489c110
1930851
1930803
2026-05-07T07:59:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|148||கலைஞர்}}</noinclude>அந்தந்த மார்க்கங்களைப் பின்பற்றுகிற மனித சமுதாயத்தினர், தாங்கள் ஏற்றுக்கொண்ட மார்க்கங்களைப் பெயரளவுக்குப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வழிகளைத் தனி வழிகளாக அமைத்துக் கொண்டதால் கால கட்டத்தில் அந்தத் தனி வழிகள், தவறான வழிகளாக அமைந்து விட்டன.
நேர்வழி, நேர்மை வழி செல்வதற்கேற்ற கடமைகளை உணர்த்துகிற தங்கள் கோட்பாடுகளை நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டு இந்த நாளில் எடுக்கும் விழாமூலம் நல்ல விளைவுகளை உருவாக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு நமது வாழ்த்துக்கள் உரியவையாகின்றன.
இந்தக் கருத்தை வலியுறுத்துகிற வகையில்தான் திருமறையின் வாசகமொன்று அமைந்திருக்கிறது.
::“மனிதன், தன் செய்கைகளை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைக்கின்றானா? அவனுக்குக் கண்கள் இல்லையா? நாவும் உதடுகளும் அருளப் படவில்லையா? அவனுக்குத் தெளிவான வழி காட்டப்படவில்லையா? ஆனால் அவனோ கடினமாயுள்ள “அகபா” என்னும் கரடுமுரடான மலை வழியை நோக்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. தனக்குக் கடினமாகத் தோன்றும் வழிமுறையைப்
பின்பற்றாமல், இலகுவாகத் தோன்றும் பாதையில் செல்லவே முனைகிறான். கடின வழியில் செல்வோர் யார்? ஆதரவற்றவர்களை நேசிப்பவர்கள், உண்மையின் விசுவாசிகள், பொறுமையின் மேன்மையை உணர்ந்தவர்கள், கருணையைப் பிறர் மீது பொழிபவர்கள்.”
கடின வழி எது என்பதற்குத் திருமறை அளிக்கும் விளக்கம் இது.
{{nop}}<noinclude></noinclude>
gjg4o9fbhfl8969md2dhkbl9z9zr9kw
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/162
250
641290
1930805
1930588
2026-05-07T04:19:13Z
Mohanraj20
15516
1930805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||149}}</noinclude>இன்னல்களும், இடையூறுகளும் நிறைந்த வழியில்
நெடும்பயணம் நடத்தித்தான் நபிகள் நாயகம், உலகத்து
இஸ்லாமியப் பெருமக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.
கொண்ட கொள்கையை எடுத்துச் சொல்லக் குன்றென நிமிர்ந்து நின்ற நாயகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்றிவைக்கப்பட்ட தியாகச் சுடர்களின் ஒளி வெள்ளப்
பெருக்கின் சின்னங்களாகத்தானே மெக்காவும், மெதினாவும் திகழ்கின்றன.
அந்தத் திருநகர்களுக்குச் செல்வதைத் தங்கள் வாழ்வின் பெருங் குறிக்கோளாகக் கொண்டல்லவோ இஸ்லாமியர் திகழ்கின்றார்கள்.
அந்த இனிய உடன்பிறப்புக்கள் கொண்டாடுகின்ற இந்தத் திருநாளில் என்றும் போல் நமது நட்பும் உறவும் தழைக்கட்டும் என்று கூறி என் வாழ்த்துக்களை ஏற்றுக்
கொள்ளுமாறு என்றும் வற்றாத அன்புடன் வேண்டுகிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
2—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
9hfocbljc3y2qsuq1gtknar36wdj3wh
1930853
1930805
2026-05-07T08:00:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||149}}</noinclude>இன்னல்களும், இடையூறுகளும் நிறைந்த வழியில்
நெடும்பயணம் நடத்தித்தான் நபிகள் நாயகம், உலகத்து
இஸ்லாமியப் பெருமக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.
கொண்ட கொள்கையை எடுத்துச் சொல்லக் குன்றென நிமிர்ந்து நின்ற நாயகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்றிவைக்கப்பட்ட தியாகச் சுடர்களின் ஒளி வெள்ளப்
பெருக்கின் சின்னங்களாகத்தானே மெக்காவும், மெதினாவும் திகழ்கின்றன.
அந்தத் திருநகர்களுக்குச் செல்வதைத் தங்கள் வாழ்வின் பெருங் குறிக்கோளாகக் கொண்டல்லவோ இஸ்லாமியர் திகழ்கின்றார்கள்.
அந்த இனிய உடன்பிறப்புக்கள் கொண்டாடுகின்ற இந்தத் திருநாளில் என்றும் போல் நமது நட்பும் உறவும் தழைக்கட்டும் என்று கூறி என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு என்றும் வற்றாத அன்புடன் வேண்டுகிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
2—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
d5z4yafbrkdwzt45i289qqo2d3ju7i5
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/163
250
641291
1930807
1926277
2026-05-07T04:24:46Z
Mohanraj20
15516
1930807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உடுப்பியில் ஒரு பேட்டி!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி என்னுமிடத்தில் படப் பிடிப்புக்கு போயிருக்கிற நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் சென்னை மாநகரத்து வெள்ளத்தைக் கேள்விப்
பட்டு உடனே விமானத்தில் பறந்து சென்னைக்கு வருவதற்காக எவ்வளவோ முயற்சி செய்தாராம். கடந்த ஒன்பது அல்லது பத்து நாட்களாக மழையின் காரணமாக
விமானப்போக்கு வரத்துத் தடைப்பட்டுவிட்டதால் அவரால் வரமுடியவில்லையாம். இப்படி அவருடைய கட்சியின் முதல் வரிசைத் தலைவர்கள் கூட்டங்களில் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
மழை, புயலின் காரணமாக ஒருநாள் விமானப் போக்குவரத்து தடைப்பட்டது உண்மை! அதற்குப்பிறகு எந்தத் தொல்லையும் இல்லாமல் விமானங்கள் சென்னைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன.
டெல்லியிலிருந்து சஞ்சய் காந்தி, ஓம் மேத்தா ஆகி யோரும், ராஜஸ் தான் சென்றிருந்த கவர்னர் சுகாதியாவும் விமானங்களின் மூலம்தான் சென்னைக்கு வந்து பாதிக்கப்ட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கினர்.
நடிக நண்பர் வராவிட்டாலும் கூட அவரது கட்சியினர் ஆங்காங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் ஒத்துழைத்தனர் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
{{nop}}<noinclude></noinclude>
n6teztge37yzqvigp7hk9nt59e3ig0d
1930854
1930807
2026-05-07T08:02:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உடுப்பியில் ஒரு பேட்டி!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி என்னுமிடத்தில் படப்பிடிப்புக்கு போயிருக்கிற நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் சென்னை மாநகரத்து வெள்ளத்தைக் கேள்விப்பட்டு உடனே விமானத்தில் பறந்து சென்னைக்கு வருவதற்காக எவ்வளவோ முயற்சி செய்தாராம். கடந்த ஒன்பது அல்லது பத்து நாட்களாக மழையின் காரணமாக விமானப்போக்குவரத்துத் தடைப்பட்டுவிட்டதால் அவரால் வரமுடியவில்லையாம். இப்படி அவருடைய கட்சியின் முதல் வரிசைத் தலைவர்கள் கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
மழை, புயலின் காரணமாக ஒருநாள் விமானப் போக்குவரத்து தடைப்பட்டது உண்மை! அதற்குப்பிறகு எந்தத் தொல்லையும் இல்லாமல் விமானங்கள் சென்னைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன.
டெல்லியிலிருந்து சஞ்சய் காந்தி, ஓம் மேத்தா ஆகியோரும், ராஜஸ்தான் சென்றிருந்த கவர்னர் சுகாதியாவும் விமானங்களின் மூலம்தான் சென்னைக்கு வந்து பாதிக்கப்ட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கினர்.
நடிக நண்பர் வராவிட்டாலும் கூட அவரது கட்சியினர் ஆங்காங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் ஒத்துழைத்தனர் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
{{nop}}<noinclude></noinclude>
2uuf5a9d7tqv7giil308w46gzct6klb
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/164
250
641292
1930808
1930590
2026-05-07T04:28:40Z
Mohanraj20
15516
1930808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>கட்சிச் சார்பற்ற முறையில் பொதுத் தொண்டில் ஈடுபட்டு இப்படிப்பட்ட நேரங்களில் ஓரணியில் நின்று அனைவரும் பணியாற்றுவதே பாராட்டுக்குரிய பண்பாடாகும். இந்த மாதிரி இன்னல்களைக் களைய கட்சிக் கண் ணோட்டமின்றி செயல்படும் பரந்த மனப்பான்மை; வர வேற்கத்தக்க அரசியல் நாகரீகமாகும். அந்த வகையில்
நடிகர் கட்சித் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்டோருக்கு உறுதுணை புரிந்திருக்கின்றனர்.
அத்துடன் அதனை விட்டுவிடாமல், தங்கள் தலைவர் உடுப்பி படப்பிடிப்பிலிருந்து வரமுடியாததற்கு ஒருதேவை யற்ற கற்பனைக் காரணத்தை அந்தக் கட்சியின் முதல்
வரிசை முன்னோடிகள் சிருஷ்டிக்க நினைத்தது கேலிக்குரிய தாக ஆகிவிட்டது மட்டுமல்ல; விமானப் போக்குவரத்தே பத்து நாட்களாக சென்னைக்குக் கிடையாது என்ற உண்மைக்கு மாறான தகவலையும் தருவதாக அமைந்துவிட்டது.
சரி; வரமுடியாதவர்—உடுப்பியிலிருந்து படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே நிருபர்களைச் சந்திக்கிறார். அந்த நிருபர்கள் பேட்டியில் அகில உலக விஷயங்களை அலசு
கிறார். “சோலை” நடுவே இருந்து அவர் அளிக்கிற அற்புதமான பேட்டிகளில், நமது கழகத்தையும் எதற்காக வீண் வம்புக்கு இழுக்கிறார் என்பதுதான் புரியவில்லை.
ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். மிக முக்கியத்துவ வாய்ந்த அரசியல் கேள்வி.
::“நீங்கள் இப்போது நடிக்கும் இந்தப் படத்தின் மையக் கருத்து என்ன?”
{{nop}}<noinclude></noinclude>
dbmm2di2nt2lmsfl61qr0ipfgo7im44
1930855
1930808
2026-05-07T08:03:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>கட்சிச் சார்பற்ற முறையில் பொதுத் தொண்டில் ஈடுபட்டு இப்படிப்பட்ட நேரங்களில் ஓரணியில் நின்று அனைவரும் பணியாற்றுவதே பாராட்டுக்குரிய பண்பாடாகும். இந்த மாதிரி இன்னல்களைக் களைய கட்சிக் கண் ணோட்டமின்றி செயல்படும் பரந்த மனப்பான்மை; வர வேற்கத்தக்க அரசியல் நாகரீகமாகும். அந்த வகையில் நடிகர் கட்சித் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்டோருக்கு உறுதுணை புரிந்திருக்கின்றனர்.
அத்துடன் அதனை விட்டுவிடாமல், தங்கள் தலைவர் உடுப்பி படப்பிடிப்பிலிருந்து வரமுடியாததற்கு ஒருதேவை யற்ற கற்பனைக் காரணத்தை அந்தக் கட்சியின் முதல்வரிசை முன்னோடிகள் சிருஷ்டிக்க நினைத்தது கேலிக்குரிய தாக ஆகிவிட்டது மட்டுமல்ல; விமானப் போக்குவரத்தே பத்து நாட்களாக சென்னைக்குக் கிடையாது என்ற உண்மைக்கு மாறான தகவலையும் தருவதாக அமைந்துவிட்டது.
சரி; வரமுடியாதவர்—உடுப்பியிலிருந்து படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே நிருபர்களைச் சந்திக்கிறார். அந்த நிருபர்கள் பேட்டியில் அகில உலக விஷயங்களை அலசு
கிறார். “சோலை” நடுவே இருந்து அவர் அளிக்கிற அற்புதமான பேட்டிகளில், நமது கழகத்தையும் எதற்காக வீண் வம்புக்கு இழுக்கிறார் என்பதுதான் புரியவில்லை.
ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். மிக முக்கியத்துவ வாய்ந்த அரசியல் கேள்வி.
::“நீங்கள் இப்போது நடிக்கும் இந்தப் படத்தின் மையக் கருத்து என்ன?”
{{nop}}<noinclude></noinclude>
tejd8ht3pfnjkdwniw860wo3zpjrv08
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/165
250
641293
1930810
1930592
2026-05-07T04:33:13Z
Mohanraj20
15516
1930810
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|152||கலைஞர்}}</noinclude>::“ஏகபோக முதலாளித்துவத்தை எதிர்க்கின்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட
கதை”
::“இருபது அம்சத் திட்டத்தின் கருத்துக்கள் இந்தப் படத்தில் இருக்கின்றதா?”
::“இருபது அம்சத் திட்டம் என்றால் தொழிலாளர், மாணவர், பெண்கள், மீனவர் என்று
எல்லோருக்கும் பொதுவான திட்டம். அதன் வெற்றி செயல்படுத்தும் போதுதான் தெரியும். எந்த முன்னேற்றக் கருத்துக்களையும் தீவிரம் — மிதவாதம் இரண்டின் மூலமும் செயல்படுத்தலாம்”
உடன்பிறப்பே, இந்தப் படத்தில் இருபது அம்சத் திட்டத்திற்கு இடம் உண்டா என்று கேட்ட நிருபர் திணறித்தான் போயிருப்பார்.
இந்த அருமையான பதிலை, இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு ஒரு “புரட்சிப்பரிசு” என்ற வகையில் விழா நடத்திக்கூட வழங்கலாம்.
முன்னேற்றக் கருத்துக்களைப் படிப்படியாகச் செயல் படுத்தவேண்டும்—செயல்படுத்தலாம்—என்று அவர் கருதியிருக்கக் கூடும். அதற்குச் சரியான வார்த்தை “மித வாதம்” என்று அவர் எண்ணியிருக்கக்கூடும்.
தலைவரின் பெயருக்கு முன்னால் அடைமொழியாக ஆர்த்தெழுந்து நிற்கிற சொல்; “புரட்சி” என்பதாகும்.
அந்தப் புரட்சி, மிதவாதத்திற்கு வக்காலத்து வாங்கு கிற காட்சியைப் பார்த்து அவரது முற்போக்கு அணியினர் திகைக்கக் கூடும்.
{{nop}}<noinclude></noinclude>
rxznlqt436vgp9fy416y1grytr2neg4
1930857
1930810
2026-05-07T08:04:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|152||கலைஞர்}}</noinclude>::“ஏகபோக முதலாளித்துவத்தை எதிர்க்கின்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கதை”
::“இருபது அம்சத் திட்டத்தின் கருத்துக்கள் இந்தப் படத்தில் இருக்கின்றதா?”
::“இருபது அம்சத் திட்டம் என்றால் தொழிலாளர், மாணவர், பெண்கள், மீனவர் என்று
எல்லோருக்கும் பொதுவான திட்டம். அதன் வெற்றி செயல்படுத்தும் போதுதான் தெரியும். எந்த முன்னேற்றக் கருத்துக்களையும் தீவிரம் — மிதவாதம் இரண்டின் மூலமும் செயல்படுத்தலாம்”
உடன்பிறப்பே, இந்தப் படத்தில் இருபது அம்சத் திட்டத்திற்கு இடம் உண்டா என்று கேட்ட நிருபர் திணறித்தான் போயிருப்பார்.
இந்த அருமையான பதிலை, இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு ஒரு “புரட்சிப்பரிசு” என்ற வகையில் விழா நடத்திக்கூட வழங்கலாம்.
முன்னேற்றக் கருத்துக்களைப் படிப்படியாகச் செயல்படுத்தவேண்டும்—செயல்படுத்தலாம்—என்று அவர் கருதியிருக்கக் கூடும். அதற்குச் சரியான வார்த்தை “மித வாதம்” என்று அவர் எண்ணியிருக்கக்கூடும்.
தலைவரின் பெயருக்கு முன்னால் அடைமொழியாக ஆர்த்தெழுந்து நிற்கிற சொல்; “புரட்சி” என்பதாகும்.
அந்தப் புரட்சி, மிதவாதத்திற்கு வக்காலத்து வாங்குகிற காட்சியைப் பார்த்து அவரது முற்போக்கு அணியினர் திகைக்கக் கூடும்.
{{nop}}<noinclude></noinclude>
8n9dbs302jxx1jt8uhh8ir2grjo2kua
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/166
250
641294
1930801
1926281
2026-05-07T04:12:38Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930811
1930801
2026-05-07T04:43:01Z
Mohanraj20
15516
1930811
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||153}}</noinclude>அவர் எதையோ சொல்லிவிட்டுப் போகிறார்; உனக்கென்ன வந்தது என்று நீ சலிப்புடன் கேட்கிறாய்—அதுவும் என் காதில் விழுகிறது!
ஆனால் அந்தப் படப்பிடிப்புச் சோலையின் பேட்டியில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதாவது;
::<b>“பழைய காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கு அதிக அளவில் கருணாநிதிக் கட்சி
யினர் சென்று கலந்து கொள்வதாகவும், கருணாநிதிக் கட்சிக் கூட்டங்களுக்கு
பழைய காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் செல்வதாகவும் பேசப்படுகிறது. என்
காதிலும் விழுகிறது”</b>
இனால் பழைய காங்கிரசுக்கும், தி. மு. க. வுக்கும் உறவு இருப்பதாகத் தந்திரமாக நிரூபிக்க முனைகிறாராம்; அப்படி ஒரு நினைப்பு அவருக்கு!
அந்தந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தந்தக் கட்சி, யைத்தவிர வேறு கட்சியினர் செல்லக்கூடாது என்பதும், அப்படி சென்றால் அவர்களுக்குள்ளே உறவு இருக்கிறது
என்பதும் அவருடைய வாதம் போலும்!
எத்தனையோ கூட்டங்களில் நமது கழக முன்னணியினர் பேசும்போது, இப்போதல்ல — பல ஆண்டுக்காலமாகவே — பேச்சை ஆரம்பிக்கும்போது – “தலைவர் அவர்களே! தோழர்களே! ஒலிபெருக்கி வாயிலாக எங்கள் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாற்றுக் கட்சி நண்பர்களே!” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்.
ஆக, மற்றக் கட்சி கூட்டங்களுக்கு பிற கட்சியினர் வருவதென்பது தொன்று தொட்டு வழக்கமான ஒன்று!
{{nop}}<noinclude></noinclude>
iczt4l54u2hurtxbdqe6ymeeqybx817
1930812
1930811
2026-05-07T04:43:57Z
Mohanraj20
15516
1930812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||153}}</noinclude>அவர் எதையோ சொல்லிவிட்டுப் போகிறார்; உனக்கென்ன வந்தது என்று நீ சலிப்புடன் கேட்கிறாய்—அதுவும் என் காதில் விழுகிறது!
ஆனால் அந்தப் படப்பிடிப்புச் சோலையின் பேட்டியில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதாவது;
::<b>“பழைய காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கு அதிக அளவில் கருணாநிதிக் கட்சியினர் சென்று கலந்து கொள்வதாகவும், கருணாநிதிக் கட்சிக் கூட்டங்களுக்கு
பழைய காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் செல்வதாகவும் பேசப்படுகிறது. என்
காதிலும் விழுகிறது”</b>
இனால் பழைய காங்கிரசுக்கும், தி. மு. க. வுக்கும் உறவு இருப்பதாகத் தந்திரமாக நிரூபிக்க முனைகிறாராம்; அப்படி ஒரு நினைப்பு அவருக்கு!
அந்தந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தந்தக் கட்சி, யைத்தவிர வேறு கட்சியினர் செல்லக்கூடாது என்பதும், அப்படி சென்றால் அவர்களுக்குள்ளே உறவு இருக்கிறது
என்பதும் அவருடைய வாதம் போலும்!
எத்தனையோ கூட்டங்களில் நமது கழக முன்னணியினர் பேசும்போது, இப்போதல்ல — பல ஆண்டுக்காலமாகவே — பேச்சை ஆரம்பிக்கும்போது – “தலைவர் அவர்களே! தோழர்களே! ஒலிபெருக்கி வாயிலாக எங்கள் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாற்றுக் கட்சி நண்பர்களே!” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்.
ஆக, மற்றக் கட்சி கூட்டங்களுக்கு பிற கட்சியினர் வருவதென்பது தொன்று தொட்டு வழக்கமான ஒன்று!
{{nop}}<noinclude></noinclude>
f3ogd5msass2zgsr7wfjo34be38cjyp
1930813
1930812
2026-05-07T04:45:03Z
Mohanraj20
15516
1930813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||153}}</noinclude>அவர் எதையோ சொல்லிவிட்டுப் போகிறார்; உனக்கென்ன வந்தது என்று நீ சலிப்புடன் கேட்கிறாய்—அதுவும் என் காதில் விழுகிறது!
ஆனால் அந்தப் படப்பிடிப்புச் சோலையின் பேட்டியில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதாவது;
::<b>“பழைய காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கு அதிக அளவில் கருணாநிதிக் கட்சியினர் சென்று கலந்து கொள்வதாகவும், கருணாநிதிக் கட்சிக் கூட்டங்களுக்கு பழைய காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் செல்வதாகவும் பேசப்படுகிறது. என்
காதிலும் விழுகிறது”</b>
இனால் பழைய காங்கிரசுக்கும், தி. மு. க. வுக்கும் உறவு இருப்பதாகத் தந்திரமாக நிரூபிக்க முனைகிறாராம்; அப்படி ஒரு நினைப்பு அவருக்கு!
அந்தந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தந்தக் கட்சி, யைத்தவிர வேறு கட்சியினர் செல்லக்கூடாது என்பதும், அப்படி சென்றால் அவர்களுக்குள்ளே உறவு இருக்கிறது
என்பதும் அவருடைய வாதம் போலும்!
எத்தனையோ கூட்டங்களில் நமது கழக முன்னணியினர் பேசும்போது, இப்போதல்ல — பல ஆண்டுக்காலமாகவே — பேச்சை ஆரம்பிக்கும்போது – “தலைவர் அவர்களே! தோழர்களே! ஒலிபெருக்கி வாயிலாக எங்கள் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாற்றுக் கட்சி நண்பர்களே!” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்.
ஆக, மற்றக் கட்சி கூட்டங்களுக்கு பிற கட்சியினர் வருவதென்பது தொன்று தொட்டு வழக்கமான ஒன்று!
{{nop}}<noinclude></noinclude>
gfj9aq1tsicf6mgxm52dbboygf12uaw
1930858
1930813
2026-05-07T08:05:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||153}}</noinclude>அவர் எதையோ சொல்லிவிட்டுப் போகிறார்; உனக்கென்ன வந்தது என்று நீ சலிப்புடன் கேட்கிறாய்—அதுவும் என் காதில் விழுகிறது!
ஆனால் அந்தப் படப்பிடிப்புச் சோலையின் பேட்டியில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதாவது;
::<b>“பழைய காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களுக்கு அதிக அளவில் கருணாநிதிக் கட்சியினர் சென்று கலந்து கொள்வதாகவும், கருணாநிதிக் கட்சிக் கூட்டங்களுக்கு பழைய காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் செல்வதாகவும் பேசப்படுகிறது. என் காதிலும் விழுகிறது”</b>
இதனால் பழைய காங்கிரசுக்கும், தி. மு. க. வுக்கும் உறவு இருப்பதாகத் தந்திரமாக நிரூபிக்க முனைகிறாராம்; அப்படி ஒரு நினைப்பு அவருக்கு!
அந்தந்தக் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தந்தக் கட்சியைத்தவிர வேறு கட்சியினர் செல்லக்கூடாது என்பதும், அப்படி சென்றால் அவர்களுக்குள்ளே உறவு இருக்கிறது என்பதும் அவருடைய வாதம் போலும்!
எத்தனையோ கூட்டங்களில் நமது கழக முன்னணியினர் பேசும்போது, இப்போதல்ல — பல ஆண்டுக்காலமாகவே — பேச்சை ஆரம்பிக்கும்போது – “தலைவர் அவர்களே! தோழர்களே! ஒலிபெருக்கி வாயிலாக எங்கள் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாற்றுக் கட்சி நண்பர்களே!” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்.
ஆக, மற்றக் கட்சி கூட்டங்களுக்கு பிற கட்சியினர் வருவதென்பது தொன்றுதொட்டு வழக்கமான ஒன்று!
{{nop}}<noinclude></noinclude>
7p7fiokhg5960zzh6e88qkipn76ta7c
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/167
250
641295
1930802
1926282
2026-05-07T04:14:18Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930814
1930802
2026-05-07T04:55:34Z
Mohanraj20
15516
1930814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|44||கலைஞர்}}</noinclude>அண்மையில் நான் தஞ்சை சிறப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு நடிகர் கட்சியைச் சேர்ந்த முக்கியமானவர்களே கூட வந்திருந்தார்கள். இது யாரோ சொல்லி என் காதில் விழுந்ததல்ல. அவர்கள் கூட்டத்தில் இருப்பதை நானே நேரடியாகவே பார்த்தேன்.
இதிலிருந்து கழகத்துக்கும் நடிகர் கட்சிக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட தாகச் சொல்லிவிட முடியுமா?
பழைய காங்கிரசுக்கும் தி. மு. க.வுக்கும் உறவு என்ற கற்பனையை உருவாக்கி நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் எத்தகைய அரசியல் ஆதாயம் அடையப் பார்க்
கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.
இந்த விதமான தந்திரப்பேச்சுக்களில் உடுப்பி நிருபர் ஏமாறலாம் — இங்குள்ளோர் யாரும் ஏமாறத் தயாராக இல்லை!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
5—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
3ckirfnyj3e2hqay9208xsro1xj3fzd
1930859
1930814
2026-05-07T08:06:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|44||கலைஞர்}}</noinclude>அண்மையில் நான் தஞ்சை சிறப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு நடிகர் கட்சியைச் சேர்ந்த முக்கியமானவர்களே கூட வந்திருந்தார்கள். இது யாரோ சொல்லி என் காதில் விழுந்ததல்ல. அவர்கள் கூட்டத்தில் இருப்பதை நானே நேரடியாகவே பார்த்தேன்.
இதிலிருந்து கழகத்துக்கும் நடிகர் கட்சிக்கும் உறவு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லிவிட முடியுமா?
பழைய காங்கிரசுக்கும் தி. மு. க.வுக்கும் உறவு என்ற கற்பனையை உருவாக்கி நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் எத்தகைய அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.
இந்த விதமான தந்திரப்பேச்சுக்களில் உடுப்பி நிருபர் ஏமாறலாம் — இங்குள்ளோர் யாரும் ஏமாறத் தயாராக இல்லை!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
5—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
97iaei11bp182af0agpb3pneeqoq79r
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/168
250
641296
1930804
1926283
2026-05-07T04:17:29Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930816
1930804
2026-05-07T04:58:03Z
Mohanraj20
15516
1930816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கோட்டூர்புரமும் – குமுதமும்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
சென்னையில் மழை; வெள்ளப்பெருக்கு; வேதனையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு, துயர் தணிப்புப் பணிகளை அரசாங்கமும், அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் பொது
நலனில் நாட்டமுள்ளோரும், கட்சிச் சார்பற்ற முறையில் அனைவருமே மேற்கொண்டு; நிலைமைகள் இப்போது படிப்படியாக சீர்பெற்று வருகின்றன.
சில ஏடுகளில் மட்டும் இந்த வெள்ளக் கொடுமையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் தி. மு. க. ஆட்சிதான் காரணம் என்று கற்பனைக் கதைகளைத் தீட்டி, உண்மை களைத் திசை திருப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.
“கோட்டூர்புரம் கோட்டூர்புரம்” என்று மனம் போன போக்கில் எழுதித் தீர்க்கிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை அடையாற்றில் விடவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் — அடையாறு திடீரென கோட்டூர்புரத்துக்குள்ளே உடைப்பெடுத்துக் கொண்டு பெருகிவிட்டது. கோட்டூர் புரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாகக் கட்டப் பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் — முதல் தளத்தின் முக்கால் பகுதி வரையில் தண்ணீரில் மூழ்கி மேலே யிருந்த இரண்டு மாடிகளில் மக்கள் போய்
அமர்ந்து கொண்டார்கள். இரண்டொரு நாட்கள் அந்தக் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டிருந்த இடம் ஒரு தீவு போல் விளங்க வேண்டியிருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
hljyeq0j6m6h6njdbfh3v55dpmy7mgw
1930860
1930816
2026-05-07T08:08:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கோட்டூர்புரமும் – குமுதமும்!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
சென்னையில் மழை; வெள்ளப்பெருக்கு; வேதனையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு, துயர் தணிப்புப் பணிகளை அரசாங்கமும், அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் பொது
நலனில் நாட்டமுள்ளோரும், கட்சிச் சார்பற்ற முறையில் அனைவருமே மேற்கொண்டு; நிலைமைகள் இப்போது படிப்படியாக சீர்பெற்று வருகின்றன.
சில ஏடுகளில் மட்டும் இந்த வெள்ளக் கொடுமையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் தி. மு. க. ஆட்சிதான் காரணம் என்று கற்பனைக் கதைகளைத் தீட்டி, உண்மைகளைத் திசை திருப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.
“கோட்டூர்புரம் கோட்டூர்புரம்” என்று மனம் போன போக்கில் எழுதித் தீர்க்கிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை அடையாற்றில் விடவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் — அடையாறு திடீரென கோட்டூர்புரத்துக்குள்ளே உடைப்பெடுத்துக் கொண்டு பெருகிவிட்டது. கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாகக் கட்டப் பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் — முதல் தளத்தின் முக்கால் பகுதி வரையில் தண்ணீரில் மூழ்கி மேலேயிருந்த இரண்டு மாடிகளில் மக்கள் போய் அமர்ந்து கொண்டார்கள். இரண்டொரு நாட்கள் அந்தக் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டிருந்த இடம் ஒரு தீவு போல் விளங்க வேண்டியிருந்தது.
{{nop}}<noinclude></noinclude>
e18ooiehbpfxhv8s8xo00vuu7wpkv9n
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/169
250
641297
1930818
1926284
2026-05-07T05:01:53Z
Mohanraj20
15516
1930818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|156||கலைஞர்}}</noinclude>அந்த வீடுகள், கட்டப்படாமல் இருந்திருந்தால் அங்கே சுமார் இரண்டாயிரம் குடிசைகள் இருந்திருக்கும், பொங்கியெழுந்த அடையாறு வெள்ளத்தில் அத்தனை குடிசைகளும், அதில் வாழும் உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கும்.
தண்ணீரெல்லாம் இப்போது வடிந்து காந்தி மண்டபத்தில் தங்கி இருந்த மக்கள் கோட்டூர்புர குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களுக்கு மீண்டும் குடி புகுந்து விட்டார்
கள் என்று செய்தி வந்துள்ளது. துயர் தணிப்புப் பணிகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றும் அதிகாரி திரு. கே. ஆர். ஷெனாய் அவர்களிடம் விசாரித்தபோது—
கோட்டூர்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கியதால் வசிக்க லாயக்கானவைகள்தானா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட பொறியியல் துறை வல்லுநர் குழுவினர்; அந்தக்
குடியிருப்புக்களைப் பார்வையிட்டு, அவை வசிக்கத் தகுதியானவைதான் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
நமது கழகப் பொறுப்பாளர் சாதிக் அவர்களும், நண்பர் ராஜாராம் அவர்களும் இன்றுகூட பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டூர்புரம் பகுதிக்கும் சென்று வந்து விவரங்களைக் கூறினார்கள்.
கோட்டூர்புரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 1974 ஆம் ஆண்டு தொடங்கி,
தொடங்கி, 1976 ஜூன் மாதம் முடிவுற்ற கட்டிடங்களில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து
அதில் 24 குடியிருப்புகள் சேதமுற்றிருக்கின்றன.
அதுபற்றி விசாரணை செய்து அறிக்கை தருமாறு அரசாங்க சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது தேவையான ஒன்றேயாகும்.
{{nop}}<noinclude></noinclude>
bam2cz2yko49p96z45r7gzzlx07rfpp
1930862
1930818
2026-05-07T08:10:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|156||கலைஞர்}}</noinclude>அந்த வீடுகள், கட்டப்படாமல் இருந்திருந்தால் அங்கே சுமார் இரண்டாயிரம் குடிசைகள் இருந்திருக்கும், பொங்கியெழுந்த அடையாறு வெள்ளத்தில் அத்தனை குடிசைகளும், அதில் வாழும் உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கும்.
தண்ணீரெல்லாம் இப்போது வடிந்து காந்தி மண்டபத்தில் தங்கி இருந்த மக்கள் கோட்டூர்புர குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களுக்கு மீண்டும் குடி புகுந்து விட்டார்கள் என்று செய்தி வந்துள்ளது. துயர்தணிப்புப் பணிகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றும் அதிகாரி திரு. கே. ஆர். ஷெனாய் அவர்களிடம் விசாரித்தபோது—கோட்டூர்புரத்தில் வெள்ளத்தில் மூழ்கியதால் வசிக்க லாயக்கானவைகள்தானா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட பொறியியல் துறை வல்லுநர் குழுவினர்; அந்தக் குடியிருப்புக்களைப் பார்வையிட்டு, அவை வசிக்கத் தகுதியானவைதான் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தியும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
நமது கழகப் பொறுப்பாளர் சாதிக் அவர்களும், நண்பர் ராஜாராம் அவர்களும் இன்றுகூட பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டூர்புரம் பகுதிக்கும் சென்று வந்து விவரங்களைக் கூறினார்கள்.
கோட்டூர்புரத்தில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 1974 ஆம் ஆண்டு தொடங்கி,
தொடங்கி, 1976 ஜூன் மாதம் முடிவுற்ற கட்டிடங்களில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து
அதில் 24 குடியிருப்புகள் சேதமுற்றிருக்கின்றன.
அதுபற்றி விசாரணை செய்து அறிக்கை தருமாறு அரசாங்க சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது தேவையான ஒன்றேயாகும்.
{{nop}}<noinclude></noinclude>
mdu3oe5ba46yjvro6wrdvhmzyzrsqbw
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/170
250
641298
1930806
1926285
2026-05-07T04:19:47Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930819
1930806
2026-05-07T05:04:58Z
Mohanraj20
15516
1930819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||157}}</noinclude>இதற்கிடையே ‘குமுதம்’ போன்ற சில ஏடுகள், கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளுமே தரைமட்டமாகி
விட்டதைப் போலக் கேலிச் சித்திரம் வரைந்து நிலைமையைக் குழப்பித் தங்களுக்குத் தாங்களே மன நிம்மதி கொள்கின்றன.
அதே குமுதம் ஏட்டில் வெளிவந்துள்ள கட்டுரையில்
“மழை ஓய்ந்து நாலு நாட்கள் ஆன பிறகும் யார்க்க வேதனையாக இருந்த பகுதிகளில் ஒன்று வியாசர்பாடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“சுமார் நாலாயிரம் குடிசைகள் இங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளே கால் வைக்க இயலாமல் சகதியாகிக் கீழே சாய்ந்து விட்டன” என்றும் குமுதம்
எழுதியிருக்கிறது.
அதே இதழில், குமுதம் அலுவலகத்தில் உள்ள இயந்திரங்களும், தாள்கட்டுக்களும் தண்ணீரில் மூழ்கியிருக்கிற புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது,
நாங்கள் நேரிலே சென்று பல பகுதிகளைப் பார்த்த போது ஐ. சி. எப். தொழிலாளர்களுக்கு அண்ணா நகருக்கு அருகே கட்டித் தரப்பட்டுள்ள நூற்றுக்கு
மேற்பட்ட “காங்ரீட்” வீடுகள், தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடந்த காட்சியைக் கண்டோம்.
சென்னை நகரிலும். நகரைச் சுற்றிலும் பல பகுதிகளில் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதியுற்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
{{nop}}<noinclude></noinclude>
244h9mta1qvhwwyn8afk4ne5kcr7cub
1930863
1930819
2026-05-07T08:12:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||157}}</noinclude>இதற்கிடையே ‘குமுதம்’ போன்ற சில ஏடுகள், கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட, ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளுமே தரைமட்டமாகி
விட்டதைப் போலக் கேலிச் சித்திரம் வரைந்து நிலைமையைக் குழப்பித் தங்களுக்குத் தாங்களே மன நிம்மதி கொள்கின்றன.
அதே குமுதம் ஏட்டில் வெளிவந்துள்ள கட்டுரையில்;
<b>“மழை ஓய்ந்து நாலு நாட்கள் ஆன பிறகும் யார்க்க வேதனையாக இருந்த பகுதிகளில் ஒன்று வியாசர்பாடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</b>
“சுமார் நாலாயிரம் குடிசைகள் இங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளே கால் வைக்க இயலாமல் சகதியாகிக் கீழே சாய்ந்து விட்டன” என்றும் குமுதம் எழுதியிருக்கிறது.
அதே இதழில், குமுதம் அலுவலகத்தில் உள்ள இயந்திரங்களும், தாள்கட்டுக்களும் தண்ணீரில் மூழ்கியிருக்கிற புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது,
நாங்கள் நேரிலே சென்று பல பகுதிகளைப் பார்த்த போது ஐ. சி. எப். தொழிலாளர்களுக்கு அண்ணா நகருக்கு அருகே கட்டித் தரப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட “காங்ரீட்” வீடுகள், தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடந்த காட்சியைக் கண்டோம்.
சென்னை நகரிலும். நகரைச் சுற்றிலும் பல பகுதிகளில் பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதியுற்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
{{nop}}<noinclude></noinclude>
6dj5fddauou7g31ucnp6rstoflmcrvs
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/171
250
641299
1930815
1926287
2026-05-07T04:55:40Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930823
1930815
2026-05-07T05:20:18Z
Mohanraj20
15516
1930823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|158||கலைஞர்}}</noinclude>எங்கே. குடியிருப்பு கட்டுவதானாலும் அங்குள்ள குடிசைவாழ் மக்கள் அங்கிருந்து வேறுபகுதி குடியிருப் புக்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. தங்களுடைய
தொழில்களை முன்னிட்டு, தங்கள் குடிசைகள் இருந்த பகுதியிலேயே குடியிருப்புக் கட்டிடங்களை விரும்புகிறார்கள்.
இவ்வளவு குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள். தங்களைப் பாதுகாத்துக் கொண்டதோடு, குடிசையிழந்த மக்களுக்கும் அந்தப் பகுதிகள் இந்த வெள்ள நேரத்தில் பயன்பட்டிருக்கின்றன.
குடிசை மாற்று வாரியத்தின் அவசியத்தை உணர்ந்த காரணத்தால்தான் இன்றுள்ள அரசு தொடர்ந்து அந்த வாரியப் பணிகள் நடைபெற வழிவகைகளை வகுத்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
துயரமிகுந்த இந்த வெள்ளக் கொடுமையில் துயர் தணிப்பு முயற்சிகளில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பதை ஏனோ, சில ஏடுகள் மறந்து விட்டன.
கோட்டூர்புரத்தில் பெரும் சீமான்கள் வீடுகள் எல்லாம் கூட இருக்கின்றன. அவைகள் கூட தண்ணீரால் சூழப்பட்டுத்தான் இருந்திருக்கின்றன.
வீட்டு வசதி வாரியத்தின் 24 குடியிருப்பு அடங்கிய ஒரு கட்டிடம்தான் விழுந்திருக்கிறது. அதன் காரணத்தையும் குழு, ஆராய்கிறது. அங்கே ஒரு பிள்ளையார் கோயில் கூட இடிந்து விழுந்து நொறுங்கிக் கிடப்பதை ஏடுகள் படமெடுத்து வெளியிட்டிருந்தன.
தண்ணீர் — மென்மையானதுதான்! ஆனால் அது வெள்ளமாகச் சீறும்போது மிக வன்மையானதாக மாறி<noinclude></noinclude>
azj3wj5cehkvafqp8ms6504lsg0wila
1930864
1930823
2026-05-07T08:13:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||கலைஞர்}}</noinclude>எங்கே. குடியிருப்பு கட்டுவதானாலும் அங்குள்ள குடிசைவாழ் மக்கள் அங்கிருந்து வேறுபகுதி குடியிருப்புக்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. தங்களுடைய தொழில்களை முன்னிட்டு, தங்கள் குடிசைகள் இருந்த பகுதியிலேயே குடியிருப்புக் கட்டிடங்களை விரும்புகிறார்கள்.
இவ்வளவு குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதோடு, குடிசையிழந்த மக்களுக்கும் அந்தப் பகுதிகள் இந்த வெள்ள நேரத்தில் பயன்பட்டிருக்கின்றன.
குடிசை மாற்று வாரியத்தின் அவசியத்தை உணர்ந்த காரணத்தால்தான் இன்றுள்ள அரசு தொடர்ந்து அந்த வாரியப் பணிகள் நடைபெற வழிவகைகளை வகுத்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
துயரமிகுந்த இந்த வெள்ளக் கொடுமையில் துயர் தணிப்பு முயற்சிகளில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பதை ஏனோ, சில ஏடுகள் மறந்து விட்டன.
கோட்டூர்புரத்தில் பெரும் சீமான்கள் வீடுகள் எல்லாம் கூட இருக்கின்றன. அவைகள் கூட தண்ணீரால் சூழப்பட்டுத்தான் இருந்திருக்கின்றன.
வீட்டு வசதி வாரியத்தின் 24 குடியிருப்பு அடங்கிய ஒரு கட்டிடம்தான் விழுந்திருக்கிறது. அதன் காரணத்தையும் குழு, ஆராய்கிறது. அங்கே ஒரு பிள்ளையார் கோயில் கூட இடிந்து விழுந்து நொறுங்கிக் கிடப்பதை ஏடுகள் படமெடுத்து வெளியிட்டிருந்தன.
தண்ணீர் — மென்மையானதுதான்! ஆனால் அது வெள்ளமாகச் சீறும்போது மிக வன்மையானதாக மாறி<noinclude></noinclude>
0wkxpttif23o0eaie59cykx98inp9f3
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/172
250
641300
1930817
1926288
2026-05-07T04:58:11Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930825
1930817
2026-05-07T05:22:11Z
Mohanraj20
15516
1930825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||159}}</noinclude>விடுகிறது. அதன் வேகத்தைத் தடுப்பது சாதாரண மல்ல.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளம் இது!
சென்னையில் பல பகுதிகள், ஏற்கனவே ஏரிகளாக இருந்தவைதான்—இன்று நகரப் பகுதிகளாக மாறியிருக்கின்றன.
நடந்ததை எண்ணி, இனி எதிர்காலத்துக்கு ஏற்ற திட்டங்களைத் தீட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனையும் ஒத்துழைப்பும் வழங்குவதை விடுத்து; இதிலும் கழகத்தைக் காய்வதற்கு வாய்ப்பு கிட்டாதா என்று குமுதம் போன்ற ஏடுகள் ஏங்கி நிற்பது வேடிக்கையானது — வேதனையான துங்கூட!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
6—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
s00uh7udylfz7wpxs5bgsol33hzfctp
1930865
1930825
2026-05-07T08:13:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||159}}</noinclude>விடுகிறது. அதன் வேகத்தைத் தடுப்பது சாதாரணமல்ல.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளம் இது!
சென்னையில் பல பகுதிகள், ஏற்கனவே ஏரிகளாக இருந்தவைதான்—இன்று நகரப் பகுதிகளாக மாறியிருக்கின்றன.
நடந்ததை எண்ணி, இனி எதிர்காலத்துக்கு ஏற்ற திட்டங்களைத் தீட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனையும் ஒத்துழைப்பும் வழங்குவதை விடுத்து; இதிலும் கழகத்தைக் காய்வதற்கு வாய்ப்பு கிட்டாதா என்று குமுதம் போன்ற ஏடுகள் ஏங்கி நிற்பது வேடிக்கையானது — வேதனையானதுங்கூட!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
6—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
pyx7h8se0naf26zvb8tf4f8o2kjxhmw
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/173
250
641301
1930826
1926289
2026-05-07T05:24:24Z
Mohanraj20
15516
1930826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஒவ்வொருநாளும் – நினைவு நாளே!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
அண்ணன் தம்பி இரண்டுபேர், அன்பால் பிணைக்கப் பட்டவர்கள். பள்ளியொன்றில் பயின்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்குத் தங்கள் தந்தையைக் காண
வேண்டுமென்று ஆவல் எழுந்தது. தந்தையோ வேறு ஒரு ஊரில் பணியாற்றி வருகிறார். அந்த ஊருக்குச்செல்ல முதலில் புகைவண்டியில் ஏற வேண்டும். பிறகு புகைவண்டி நிற்கும் ஊரிலிருந்து நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோ செல்ல வேண்டும். தாங்கள் வரும் நாளைக் குறித்துத் தந்தைக்குக் கடிதம் எழுதிவிட்டு, அதேபோலத் தந்தையும் குறிப்பிட்ட ரயிலடிக்கு வந்திருப்பார் என்று எதிர்பார்த்து அண்ணனும் தம்பியும் பயணம் புறப்பட்டார்கள்.
குறித்த நேரத்தில் தந்தைக்குக் கடிதம் கிடைக்காததால் அவர் ரயிலடிக்கு வரவில்லை. அதனால் ஏமாற்ற மடைந்த அந்தச் சகோதரர்கள், ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதில் தங்கள் தந்தையிருக்கும் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் வண்டிக்காரன் அந்தச் சிறுவர்களைப் பற்றிய விபரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினான். அவர்களும், வண்டிக்காரன் தங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வியந்தவாறு தங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இரு இளைஞர்களும்<noinclude></noinclude>
bmfl29tr4n964clg75bkyuqhonk72ec
1930866
1930826
2026-05-07T08:14:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஒவ்வொருநாளும் – நினைவு நாளே!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
அண்ணன் தம்பி இரண்டுபேர், அன்பால் பிணைக்கப் பட்டவர்கள். பள்ளியொன்றில் பயின்று கொண்டிருந்த அந்த இளைஞர்களுக்குத் தங்கள் தந்தையைக் காண
வேண்டுமென்று ஆவல் எழுந்தது. தந்தையோ வேறு ஒரு ஊரில் பணியாற்றி வருகிறார். அந்த ஊருக்குச்செல்ல முதலில் புகைவண்டியில் ஏற வேண்டும். பிறகு புகைவண்டி நிற்கும் ஊரிலிருந்து நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோ செல்ல வேண்டும். தாங்கள் வரும் நாளைக் குறித்துத் தந்தைக்குக் கடிதம் எழுதிவிட்டு, அதேபோலத் தந்தையும் குறிப்பிட்ட ரயிலடிக்கு வந்திருப்பார் என்று எதிர்பார்த்து அண்ணனும் தம்பியும் பயணம் புறப்பட்டார்கள்.
குறித்த நேரத்தில் தந்தைக்குக் கடிதம் கிடைக்காததால் அவர் ரயிலடிக்கு வரவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த அந்தச் சகோதரர்கள், ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதில் தங்கள் தந்தையிருக்கும் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் வண்டிக்காரன் அந்தச் சிறுவர்களைப் பற்றிய விபரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினான். அவர்களும், வண்டிக்காரன் தங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வியந்தவாறு தங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இரு இளைஞர்களும்<noinclude></noinclude>
7lqvd8jefuixvnlqcfm62r5u4aohtsh
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174
250
641302
1930820
1926290
2026-05-07T05:15:11Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
1930827
1930820
2026-05-07T05:27:36Z
Mohanraj20
15516
1930827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள்.
தாழ்த்தப்பட்ட இனம்—என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின.
“பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றிய தால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான்.
சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்ட தைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான்.
::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும்.
{{nop}}<noinclude>க—9—11</noinclude>
8md3caw1xxt7rrxoituq59duj0v4i9v
1930868
1930827
2026-05-07T08:16:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள்.
தாழ்த்தப்பட்ட இனம்—என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன. வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின.
“பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றியதால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான்.
சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்டதைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான்.
::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும்.
{{nop}}<noinclude>
க—9—11</noinclude>
lc3xhb3p9u74oxgoubn5dgnc7hgl0qf
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/176
250
641303
1930821
1926291
2026-05-07T05:17:57Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/175
250
641304
1930828
1926292
2026-05-07T05:50:11Z
Mohanraj20
15516
1930828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|164||கலைஞர்}}</noinclude>மதத்தின் பெயரால் — கடவுளின் பெயரால் — கட்டுக்கதைகளின் பெயரால் — மக்களை மாக்களாக்கிடும் கொடுமைகளை எதிர்த்துப் போர் வாள் தூக்கினார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளக் கேற்றும் தலைவனாகப் பீடு நடை போட்டார்.
புரட்சிகரமான சீர்திருத்தச் சிற்பியான அவர் இறுதியில் புத்த மார்க்கமே தனது புதிய பாதைக்கும், புரட்சிக் கருத்துக்களுக்கும் ஏற்ற மார்க்கமெனக் கொண்டு அதில் இணைந்தார்.
1956 ஆம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் நாள் அவர் பிறந்த மராட்டிய மண்டிலத்தில் பத்து லட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள், புத்த மதத்தில் சேருவார்கள் என்று அறிவித்தார்.
அதற்குள் டிசம்பர் ஆறாம் நாள் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளையும் இணைத்து “குடியரசு கட்சி” எனும் புதிய கட்சியை அவர் தொடங்கி, அந்த முயற்சியில் முழு வெற்றி பெறுவதற்குள்
அவர் மறைந்துவிட்டார்.
அந்த அறிவுலகப் புரட்சி மேதையின் நினைவுநாள் டிசம்பர் ஆறாம் நாள் என்றாலும்— ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழும் ஒவ்வொருநாளும் அவர் நினைவு நாளேயாகும்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
7—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
kqxta9bae0epp8wu5rd9rq1g304kbxd
1930870
1930828
2026-05-07T08:17:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|164||கலைஞர்}}</noinclude>மதத்தின் பெயரால் — கடவுளின் பெயரால் — கட்டுக்கதைகளின் பெயரால் — மக்களை மாக்களாக்கிடும் கொடுமைகளை எதிர்த்துப் போர் வாள் தூக்கினார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் தலைவனாகப் பீடு நடை போட்டார்.
புரட்சிகரமான சீர்திருத்தச் சிற்பியான அவர் இறுதியில் புத்த மார்க்கமே தனது புதிய பாதைக்கும், புரட்சிக் கருத்துக்களுக்கும் ஏற்ற மார்க்கமெனக் கொண்டு அதில் இணைந்தார்.
1956 ஆம் ஆண்டு டிசம்பர் பதினாறாம் நாள் அவர் பிறந்த மராட்டிய மண்டிலத்தில் பத்து லட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள், புத்த மதத்தில் சேருவார்கள் என்று அறிவித்தார்.
அதற்குள் டிசம்பர் ஆறாம் நாள் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளையும் இணைத்து “குடியரசு கட்சி” எனும் புதிய கட்சியை அவர் தொடங்கி, அந்த முயற்சியில் முழு வெற்றி பெறுவதற்குள்அவர் மறைந்துவிட்டார்.
அந்த அறிவுலகப் புரட்சி மேதையின் நினைவுநாள் டிசம்பர் ஆறாம் நாள் என்றாலும்— ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழும் ஒவ்வொருநாளும் அவர் நினைவு நாளேயாகும்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு. க.<br>
7—12—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
6b1ecbbpiixfqlzkdbl3jpr6ugx948t
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/177
250
641305
1930822
1926293
2026-05-07T05:18:18Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/178
250
641306
1930824
1926294
2026-05-07T05:20:30Z
Mohanraj20
15516
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1930824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude>
k5wmswko953n72po8xlq757yhjmtrax
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59
250
641687
1930762
1930529
2026-05-07T00:30:45Z
Info-farmer
232
சரி
1930762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||35}}{{rule}}</noinclude>தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டு விடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறும்போது, தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டு விடுகிறது-என்ன தலைக்கனம் இவனுக்கு எல்லாம் தெரியுமாம் இவனுக்கு -ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன் போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ!! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!!-என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது.
அவன் வீரன்!-என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி.
அவன் அறிவாளி!-என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது.
அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப்பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்!-என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது.
‘எல்லாம் செய்திடுபவன்’ எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடுவதிலே, எதெது கேடு தருமோ, எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு, கேடு பல செய்து, ‘இது ஆகுமோ’ என்று கேட்டிடின், “யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!” என்று கொக்கரித்துக் கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறி விட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது?-என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும்.
அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா?
சர்வாதிகாரம்-என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது.
சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர்.
நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கி வைத்து<noinclude></noinclude>
73h6jky2j4ghpayz4cusn4828qyj9aj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/60
250
641688
1930763
1930530
2026-05-07T00:32:36Z
Info-farmer
232
சரி
1930763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|36||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விட்டு, ‘எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும். ஆபத்தைப் போக்க’ என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், ‘இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!’ ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம்.
ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரிகளாகிவிட்ட <b>பிரான்கோவும், சலாசடும்</b> என்றென்றும் சர்வாதிகார முறை தான் இருந்திட வேண்டும் என்று, அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திட வேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விட்டனர்.
சர்வாதிகாரம்-ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும்.
வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெறும்வெற்றி, புதிய சமுதாய அமைப்பு. தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி என்பன போன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும்.
ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது-மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி எது வேதனை? எது முற்போக்கு. எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக் காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக் கிடந்திட வேண்டியவராகின்றனர்.
இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது.
இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், ‘ஆம்’ என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, ‘கசப்பு’ தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர்.
அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன.
இருபத்துநான்கு மணிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் பேச்சாளர்- ரேடியோ-பத்திரிகை-கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன.
தொடர்ந்து திறமையுடன் இந்தமுறை கையாளப்பட்டு வந்ததால், மக்கள், எதைப்பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக் கூடப் பெற்றுவிட்டனர்.
தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும் தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!<noinclude></noinclude>
f298euzaszr1ldiurziv2eqrivgpzic
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/61
250
641689
1930764
1930531
2026-05-07T00:33:06Z
Info-farmer
232
சரி
1930764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||37}}{{rule}}</noinclude>
தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு.
ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழிஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன்போன்றோர் இருக்கவேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூறவேண்டும். இரு கருத்துக்களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும்-எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும்.
கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாதாகிறது.
சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்து விடுகிறது.
சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம், சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும்.
உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மையைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம். சர்வாதிகாரிகளுக்கு.
எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கவேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாதவனாக்கிடத் தக்கதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடுகின்றனர். கொடுமைபுரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டுவிடுகிறது.
தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.
சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை-எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு. எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் ‘முறை’யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு.
முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.
“என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்<noinclude></noinclude>
i4a0p3xpw6agfsopara2lysg4lq8ubw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62
250
641690
1930767
1930551
2026-05-07T01:05:05Z
Info-farmer
232
சரி
1930767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|38||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே,” என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.
‘இரண்டாமவர்’ என்றேனே, அப்படிப்பட்ட ‘சர்வாதிகாரி’யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.
வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.
பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!
சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார்.
அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.
மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர்.
நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார்.
{{dialogue indented
|நீதி :
|கைதியைக் கொண்டுவா..
(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)
|போலீ :
|அங்ஙனமே, பெருந்தகையே!
(போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்)
(நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)
(தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.
ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.
}}<noinclude></noinclude>
bf98kfm37ut5ac91866nh6kjtq84knx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63
250
641691
1930771
1930553
2026-05-07T01:18:05Z
Info-farmer
232
சரி
1930771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||39}}{{rule}}</noinclude>அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.
அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார்.
வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?
பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.
குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் ‘சக்தி’ டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)
{{dialogue indented
|நீதிபதி
|: (பணிவாக) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில்.}}
(டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)
(கவனித்தாயா. தம்பி! ‘வழக்கை விசாரிக்கிறேன்’. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.)
குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார்.
குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன்.
ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.
தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude>
7aswj9ocmszc5xf9x7iopyye5zr0fmp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64
250
641692
1930777
1930554
2026-05-07T01:30:57Z
Info-farmer
232
சரி
1930777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|40||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வரப்படுபவன் கொல்லப்பட வேண்டியவன்- என்பதை, டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார்.
(அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)
(பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.)
{{dialogue indented
|குறிப் :
|பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன்.
|நீதி :
|சரி. பேசலாம்.
|குறி :
|வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். }}
(பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)
(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.)
{{dialogue indented
|போலீ :
|பெருந்தகையே! இதோ, கைதி.
|நீதி :
|இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா?
|போலீ :
|ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
|நீதி :
|கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...?
|போலீ :
|ஆமாம்...ஆனால்...
|நீதி :
|ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!}}<noinclude></noinclude>
de4dvh9fi28cau6050an4ky378joova
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65
250
641693
1930779
1930555
2026-05-07T01:40:25Z
Info-farmer
232
சரி
1930779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||41}}{{rule}}</noinclude>{{dialogue indented
|போலீ :
|கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன.
|நீதி :
|கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!}}
(நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர்.
பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர்.
ஏதேது, இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார்.
ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன்.
குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான்.
நடுத்தர வயதினன் - எந்தக்கேடும் செய்திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.)
{{dialogue indented
|நீதி :
|குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா?
|போலீ :
|ஆமாம்....
|நீதி :
|எப்போது நடத்தினீர்கள், சோதனை?
|போலீ :
|தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்!
|நீதி :
|ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா?
|போலீ :
|தேடினோம்-கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!!}}
(போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude>
2vkb90xlsahhl87hrylsgqtpdahrrox
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/66
250
641694
1930749
1930556
2026-05-06T15:22:39Z
Info-farmer
232
{{c|}}
1930749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.)}}
{{dialogue indented
|குறி
|: (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.
|நீதிபதி
|: வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்....
|தொடுப் :
|பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
|நீதி :
|குற்றம் கொடியதே! அறியாதார் யார்?
|தொடுப்
|: சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ?
|நீதி
|: இவன் செய்த குற்றம்?
|தொடுப்
|: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!}}
(நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.)
{{dialogue indented
|நீதி :
|சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்.
|தொடுப் :
|எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு, வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது!
|நீதி :
|அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்!
|தொடுப்:
|அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.
|நீதி :
|கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்}}<noinclude></noinclude>
7l1jul4cxa6msgvjsoqdmsc652qopqb
1930780
1930749
2026-05-07T01:47:10Z
Info-farmer
232
சரி
1930780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|42||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
{{c|(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.)}}
{{dialogue indented
|குறி
|: (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.
|நீதிபதி
|: வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்....
|தொடுப் :
|பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
|நீதி :
|குற்றம் கொடியதே! அறியாதார் யார்?
|தொடுப்
|: சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், அறியாததும் உண்டோ?
|நீதி
|: இவன் செய்த குற்றம்?
|தொடுப்
|: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!}}
(நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி.)
{{dialogue indented
|நீதி :
|சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்.
|தொடுப் :
|எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு, வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது!
|நீதி :
|அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்!
|தொடுப்:
|அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.
|நீதி :
|கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்}}<noinclude></noinclude>
r3485eagwjwh3lx0pgng38a7mf74xa2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67
250
641695
1930782
1930557
2026-05-07T01:59:48Z
Info-farmer
232
சரி
1930782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||43}}{{rule}}</noinclude>{{dialogue indented
|
|அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா?
|கைதி :
|குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
|நீதி :
|நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?
|கைதி :
|சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.}}<noinclude></noinclude>
6eraiybxe5fmjfl7rqzj23ngxbg95e2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68
250
641696
1930784
1930558
2026-05-07T02:05:38Z
Info-farmer
232
சரி
1930784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|44||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented
|தொடுப்:
|நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, துரோகம் செய்கிறாய்?
|கைதி :
|மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப்பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.
|தொடுப் :
|சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு.
|கைதி :
|கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்?
|தொடுப் :
|எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.
|கைதி :
|நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...?
|நீதி :
|குழப்பமோ இவனுக்கு மனதில்...
|கைதி :
|ஆமாம்...குழப்பம்...
|நீதி :
|ஏன் ஏற்படுகிறது?
|கைதி :
|தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்...
|நீதி :
|யார் அவன்? தேவதையோ?
|கைதி :
|தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று.
|நீதி :
|குட்டிப் பிசாசா...?
|கைதி :
|ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.
|நீதி :
|உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?}}<noinclude></noinclude>
icuaktv9n9umptxkmcqtzqwatpztbp6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69
250
641697
1930786
1930559
2026-05-07T02:10:49Z
Info-farmer
232
சரி
1930786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||45}}{{rule}}</noinclude>{{dialogue indented
|கைதி :
|எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்?}}
(சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.)
(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.
நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.
நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.)
{{dialogue indented
|நீதிபதி :
|வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?
|தொடுப் :
|மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்!
|நீதி :
|சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்...
(நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.)
|நீதி :
|குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!}}<noinclude></noinclude>
46omo9zbg3i3tjxomtjbq892xwscc1p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70
250
641698
1930787
1930561
2026-05-07T02:17:11Z
Info-farmer
232
சரி
1930787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|46||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented
|
|குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள்.
(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.)
|தொடுப் :
|பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக...
|நீதி :
| செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே!
|தொடுப் :
|முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்...
|நீதி :
|அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது.
(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி.
ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.)
|தொடுப்:
|செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?
|மருத் :
|பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான்.
|நீதி :
|மூளை கெட்டுவிட்டிருந்ததோ?
|மருத் :
|ஆமாம்..
|நீதி :
|மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ?
|மருத் :
|ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது.
|நீதி :
|அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்}}<noinclude></noinclude>
pgs73i73uxxldrodoinn1ylsv4wahkv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/71
250
641699
1930789
1930563
2026-05-07T02:23:41Z
Info-farmer
232
சரி
1930789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||47}}{{rule}}</noinclude>{{dialogue indented
|மருத் :
|ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
|தொடுப்:
|அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால், நோய் என்றென்றும் போகாதோ?
|மருத் :
|ஒருக்காலும், நோய் போகாது.
|தொடுப்:
|நோயின் குறிகள் யாவை?
|மருத் :
|கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.
|தொடுத்:
|கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா?
|மருத் :
|அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு.
|நீதி :
|அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா?
|மருத் :
|ஐயமென்ன!! ஐயமென்ன!!
(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.)
|நீதி :
|(கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ?
|மரு :
|பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகளை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.}}<noinclude></noinclude>
my2vbgq8or980h45chd9mfnzwwrn42m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/72
250
641700
1930791
1930564
2026-05-07T02:51:17Z
Info-farmer
232
சரி
1930791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|48||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dialogue indented
|நீதி :
|கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ?
|மரு :
|இருக்கும்.
|நீதி :
|அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே!
|மரு :
|ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப்பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்.
|நீதி :
|நோயை நீக்க, வழியே இல்லையா ?
|மரு :
|இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது!
|நீதி:
|என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர்.
|மரு :
|உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது!}}
தம்பி மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது.
சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங்கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும்.
சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார்.
அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude>
t63moskaauj6x1guw6axbo5ghr4q68c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/73
250
641701
1930792
1930544
2026-05-07T02:54:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||49}}{{rule}}</noinclude>பறிகொடுக்க மறுத்த காரணத்தால்-அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான்-அவனன்றோ ஆண் மகன்-அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும்-இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர், என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.
பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!!
வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன்-போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன்-தாங்களோ, ஓர் கோமாளி!
பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை!- என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.
சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை!-என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன்.
பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப்புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான்-குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான்-கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்!
இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு!
நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது.
ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! 'மேலவர்' பேசுகிறார்- நீதிபதி பதறுகிறார்.
“நச்சுப்பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!” என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.<noinclude></noinclude>
jw56v0ul7yow1rq3tqesgd7f8ijzgc4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/74
250
641702
1930750
1930545
2026-05-06T15:25:42Z
Info-farmer
232
1930750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|50||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை"
நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள்.
குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப் பிசாசு!
நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு!
"இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும்பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.
"இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன்.
ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.
எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.
நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.
நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!!
தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்குவார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப்பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது.
கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.
{{***|3|1em|char=★}}<noinclude></noinclude>
0pgx2u5en95hecgs4kmuih0t77ors7j
1930793
1930750
2026-05-07T02:57:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|50||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை"
நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள்.
குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப் பிசாசு!
நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு!
"இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும்பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன்.
"இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன்.
ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன்.
எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன்.
நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன்.
நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!!
தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்குவார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப்பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது.
கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.
{{***|3|1em|char=★}}<noinclude></noinclude>
aim1m1e9na77ehzqgt4btt4a3avoftp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75
250
641703
1930794
1930546
2026-05-07T03:00:57Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||51}}{{rule}}</noinclude>
ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தாராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர், குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!" என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர். "நாங்கள் மட்டும் நினைத்திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம்" என்று கொக்கரிக்கிறார்கள்.
இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை. எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும்-பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா?
சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான்-நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசுகிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக!
சர்வாதிகாரி, பேச்சுரிமை பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான்-காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ. பேச்சுரிமை தந்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சி யினரும் நாசகாரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி.மு. கழகத்தவர், 'அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும்பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அயிசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சிபெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார்.
கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச்<noinclude></noinclude>
0qzgv13hsilhopddui8wqgt7vc7dzus
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76
250
641704
1930795
1930547
2026-05-07T03:04:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|52||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு. காங்கிரஸ் அரசியலில்! இவருடைய 'அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சர் ஆக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு!
திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றார் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத்தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை!
இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!!
நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறை தவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு.
"ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக்காகப் பெற்றதாக எண்ணுகிறார்களோ!!"- என்று எக்காளமிடுகின்றனர்.
தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் 'ஏனோ தானோ’ அல்ல!
பிறந்தது செல்வக்குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத் துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக் கூடம் போனதே இல்லை, என்று கூறிக்கொண்டு. பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு 'அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே, அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார்புகழும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர்.
உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, 'ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது: அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப்போர் நடாத்த முனைந்தார். கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப்படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.<noinclude></noinclude>
lehlytcbytj6oh68lzmxgyte9ska1g3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77
250
641705
1930798
1930548
2026-05-07T03:07:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||53}}{{rule}}</noinclude>
அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான்-1931-ல், கமால் பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார்.
பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்துவந்தார்.
1950-லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது.
மிகப் பெரிய தேக்கங்கள், அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளரவேண்டும், பொருளாதாரம் பலப்படவேண்டும் என்பதற்காக.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளுமன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது!
அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும், என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்துபேச வேண்டும் என்ற அக்கரை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தார்.
ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள்- வருவாய் குறைவு; மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை!-என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்துகிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார்.
அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன்-அவனை அடியோடு அழித்து விடுவேன்- என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும், நோயின் குறி!
அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!<noinclude></noinclude>
dcu2k68zf13xlmlbbfgenhmfy64ub2q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78
250
641706
1930797
1930550
2026-05-07T03:07:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1930797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|54||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்குமிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா?
தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா?
'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா!
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன.
பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது?
எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா?
ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!!
ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா?
வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா?
தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை.
{{rh|||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
jk31pybqsgucqpz0mwvsqw03ug6le8r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79
250
641707
1930685
1928982
2026-05-06T12:29:54Z
Fathima Shaila
6101
/* Problematic */
1930685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>
கடிதம்: 107
ஒலியும் ஒளியும்
ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்-
சட்டசபையில் உறுப்பினர் தண்டம்-
ஓட்டும் வேட்டும்
தம்பி!
"கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்".
{{c|★★★}}
இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude>
mocz6e9tpdbt62ylo3ncahek1v45zq2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80
250
641708
1930686
1928983
2026-05-06T12:32:21Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|56||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது, ஒரு காலணியாக இருப்பின் கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்து விட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச்சாக வேண்டும்- வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்!
இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழிநிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா!
{{c|★★★}}
சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக்கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு. தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப் பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன்.
கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக் கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வானன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று, காலணி கண்டது போலன்றோ இருந்திடும்.
{{c|★★★}}
சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது-இம்மென்றால் சிறைவாசம்- எதிர்த்தால் சாகடிக்கப்படுவர்-என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் ‘கட்டுக்காவல்’ முறையை மட்டும் புகுத்திக் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா-மகிழ்ச்சிதான் பிறக்குமா?<noinclude></noinclude>
nc9t903r95qy8be5zidmwignkbe2sxv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81
250
641709
1930688
1928984
2026-05-06T12:34:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude>
இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!" என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர்-மதிப்பர்!
"எங்கு?" என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட அதைக் கொண்டுவரச் செல்கிறேன்" என்று கூறிட வேண்டியதாக இருந்தால்- மதித்திடவா செய்வோம்?
{{c|★★★}}
ஆட்சி, சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா!
காமராஜர், செல்லுமிடமெல்லாம். இந்த ஆட்சிக்கு ஈடுவேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறுபோட வேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது-என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!' என்று பாராட்டுகின்றனர்- அவர் எதிரில், ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும் போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறை கூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வுபெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல இவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்பதில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள்- வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள். ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது.
{{c|★★★}}
துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும். இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்-<noinclude></noinclude>
mq6udcw07m424395tnmuadkx560o4c9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82
250
641710
1930691
1928985
2026-05-06T12:37:26Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|58||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை திட்டமிடப்பட்ட தொகை அளவுக்கே வேலை முடியவேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்கவேண்டும். நடுக்கொள்ளை, வீண்செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும் வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும்.
புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப்புணர்ச்சி உள்ள ஆட்சி போதும்.
மக்களுக்காக அரசாளுகிறோம், நம் மகாபெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல, என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும்.
நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூற வேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுடையது.
காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய்வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கையிலே, நிர்வாகத்திலே காணப்படும் ஒழுங்கீனம், விரயம், ஊழல், முறை கேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக் கொள்ளாத 'தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால். அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லா விட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள்.
நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.<noinclude></noinclude>
cu91o4pdf36r4omldvhlwc9rpnm4aek
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83
250
641711
1930695
1928986
2026-05-06T12:42:59Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude>
'வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர்.
சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங் கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்!
அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித்திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்ய வேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவு ஆகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு?
கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு.
1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே, 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக. அறிக்கை கூறுகிறது.
குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்!
அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காட வேண்டிய நிலை!
நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!!
கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, ‘டிராக்டர், புல்டோசர்’ போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம். நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்றவேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876<noinclude></noinclude>
fgqo1lp1o0v5288cbiyxpdxpg1enjfn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84
250
641712
1930696
1928987
2026-05-06T12:44:42Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|60||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே! பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலைசெய்கிறது, என்றா மக்கள் பாராட்டுவார்கள், இந்தத் தகவலைப் படித்துவிட்டு.
இராணுவத்திடமிருந்த ஒரு விமான தளத்தை, பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா, என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத் தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர்.
அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய்.
குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில், ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், 'சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது. இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப்பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது.
திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா?
விற்பனைவரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்டதாலும், காரணமின்றி வரியைத் திருப்பித்தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34,707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவு ஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகி விட்டதாக 1954-55-ம் ஆண்டு. கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சியின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.<noinclude></noinclude>
aviwx4fn3j8yjj25h4yfcy0bww34uo5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/85
250
641713
1930697
1928988
2026-05-06T12:46:29Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||61}}{{rule}}</noinclude>
1955-56-லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386; கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30,247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034: போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத்தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்து விட்டது, போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தான்யங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191; மற்றும் பல்வேறு வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர். எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று.
{{c|★★★}}
1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய்விடவில்லை; விரயம் தொடருகிறது!!
உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000.
ஒரு நீர்ப்பாசன திட்டத்துக்காகக் குன்றின் பக்கமாக, மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர்.
1,12,929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.<noinclude></noinclude>
fj56p79d5u4p90uefqvg5f093wu7q9h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86
250
641714
1930698
1928989
2026-05-06T12:47:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|62||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணை கட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!!
குப்பைக் காகிதங்களை மொத்தம் 91- ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம் 15,500 அதாவது, 15-ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், 'கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை.
புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2284-புத்தகங்களை 1952-ல், துரைத்தனத்தார் விலைகொடுத்து வாங்கினார்கள்.
மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2102-புத்தகங்கள் விற்பனையாகாமலிருந்தன.
விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம் பேர் முன் வரவில்லை.
எனவே, 1775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர்.
இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29,616 ரூபாய். ஏன் ஏற்படவேண்டும் இந்த நஷ்டம்?
வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50,672 என்று அறிக்கை அறிவிக்கிறது.
பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர், துரைத்தனத்தார்.
பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது.
எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது.
நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நீதித்துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில், 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத்<noinclude></noinclude>
pl94tay53875oywn1m8ffyjyust8nuw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87
250
641715
1930700
1928990
2026-05-06T12:50:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude>தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர்களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும், நீர்ப்பாசனத்துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558 ரூபாயும்; மின்சாரத் துறையில் செலித்த வேண்டிய தொகையை வாங்க இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம் ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆக மொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார் தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சிலசில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று, சமாதானம் கூறுவதனால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா, என்று கேட்க வேண்டாமா, தம்பி!
{{c|★★★}}
நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே. நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார்.
மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24,634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில் கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன்-பொருள் பாழ்படுவானேன்?
கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது.
கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மையுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா?
சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில்-குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்!-கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!<noinclude></noinclude>
sqvsxbjsi3dx6b0bs5h3r1kdry2kiy1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88
250
641716
1930701
1928991
2026-05-06T12:52:08Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|64||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய்.
கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிடமிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம்.
சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான்களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது.
விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய்.
மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய்.
தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு, அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60,789.
தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72,440-ரூபாய் பாழாயிற்று.
நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ்!
தனித்தனியாக விளக்கப்படாத, பல்வேறு வகையான நஷ்டங்கள் 11,81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது.
தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude>
fb5albhrl3i1oh868plkuslwwg4ua9h
1930752
1930701
2026-05-06T15:29:13Z
Info-farmer
232
{{c|★★★}}
1930752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|64||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய்.
கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிடமிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம்.
சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான்களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது.
விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய்.
மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய்.
தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு, அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60,789.
தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72,440-ரூபாய் பாழாயிற்று.
நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ்!
தனித்தனியாக விளக்கப்படாத, பல்வேறு வகையான நஷ்டங்கள் 11,81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது.
{{c|★★★}}
தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude>
livjbguv1wmxssipacmuazhh4zh6n1u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/89
250
641717
1930702
1928992
2026-05-06T12:54:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||65}}{{rule}}</noinclude>
"கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார், இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது, ஆட்சி நடத்துபவர்களுக்கு.
பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப்படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா, தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று.
எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை, பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள்.
{{c|★★★}}
இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக்காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள்.
எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கியமானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்<noinclude></noinclude>
kiz7m2qdeuczku5fn741ekjlbnp1cfq
1930704
1930702
2026-05-06T12:54:51Z
Fathima Shaila
6101
1930704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||65}}{{rule}}</noinclude>
"கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார், இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது, ஆட்சி நடத்துபவர்களுக்கு.
பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப்படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள்.
தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா, தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று.
எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை, பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள்.
{{c|★★★}}
இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக்காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள்.
எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கியமானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்-<noinclude></noinclude>
r8smgrxcmzk2hkw4e8ccxhuivmk9djz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/90
250
641718
1930706
1928993
2026-05-06T12:55:58Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|66||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள்.
"என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?" என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள்.
சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சணமுள்ளதாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக்காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம்.
இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக்காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, 'ரோஷம்' பிறந்திடக் காணோம்.
இவைகளை எல்லாம் கட்சிக் கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா, என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம்.
பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்' நம் பக்கம் தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள்.
ஏன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குற்றங்குறைகளை எடுத்துக் காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு 'ஓட்' அளித்த மக்கள். ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக்கிறார்கள்; இவர்களைக் காணும்போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள்.
எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டுகின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக்காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பி வைத்தோம்!-என்று கேட்கிறார்கள்.
அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன.
எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள்-தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட.
தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக் கொண்டு விடாதே! ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.<noinclude></noinclude>
1l2iciq256c8nqgj7t84514cq0sllb4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91
250
641719
1930707
1928994
2026-05-06T12:57:58Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude>
"நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங்களில் ஒருசிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு வோட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்கு போய்த் தண்டத்திற்கு உட்கார்ந்து விட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத்திற்குப்போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு"
தம்பி! அம்மையாரைப் பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதி விட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது. நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி.எ. பொன்னம்மாள் அவர்கள் 1.7.57-இல், சட்டசபையில் பேசியது இது.
ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா?
ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான்.
ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்!
ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள்.
பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம். அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப்பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்த வண்ணமிருக்கிறார், காமராஜர்.
வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள். ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம் திறமைக்குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு 'ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப்பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன, என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்ப எங்களையே ஆதரிக்கின்றனர், என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்,<noinclude></noinclude>
covek0xlfw5pm3rph231xct84uezhxi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92
250
641720
1930708
1928995
2026-05-06T13:00:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|68||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதிகுலம் ஆகியவற்றினைப் பயன்படுத்தியும், ஓட்டுப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை, மக்கள்கூடக் கூறுகிறார்கள்- தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி, ஏற்பட்டுப் போய் விடுகிறது.
இந்தப் 'பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது.
ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந்திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக்கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட ‘பீதி’யைப் போக்கத்தான்.
ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை, என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும்போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது, கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம், என்று கூறிடத்தக்க வீரம், பட்டுப்போய் விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும். கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை, என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல் கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் பீதியைப் போக்க முடியும்.
நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்!
ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை!
ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர்-அவன் கூழாகும் வரையில்!
அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி. அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப்படையால், தாக்கப்பட்டு, மடிந்தான்!
வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள்-என்ற 'செய்திகள்' உலகுக்குக் கிடைத்திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும்.<noinclude></noinclude>
q8legijjshijv6parr7r24he7q0a11x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93
250
641721
1930710
1928996
2026-05-06T13:02:15Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude>
இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான், என்றும் கூறுவதற்கில்லை,
மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர்.
விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும்.
எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று, இதோ, நாங்கள் ஆட்சி மன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும் போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது.
ஆனால், ஆள்பவர்கள் தடிதூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும்.
மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரியவேண்டும். மார்புக்கு நேரே துப்பாக்கிக்குண்டு பாயவருகிறது என்றால், அதையும் தாங்கிக் டு கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும்.
தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல.
மையல் மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக்கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால் மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டு களிப்புறுவான்!
அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்!
உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல், மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய்.
இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங் கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய்.
வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சிபல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு<noinclude></noinclude>
6445gygkre208aay7y492zbpnbyo5bj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94
250
641722
1930711
1928997
2026-05-06T13:03:33Z
Fathima Shaila
6101
/* Problematic */
1930711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{Rh|70||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய்.
ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய்.
அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன்.
அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது.
அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று, நமது முன்னோர், பெயரெடுத்தனர்.
அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர்.
இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும், என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகையுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!!
19.6.60
அண்ணன்,<noinclude></noinclude>
cwutzbrtgz76zftdjbfxznl1i3jho6b
1930712
1930711
2026-05-06T13:04:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1930712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|70||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய்.
ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய்.
அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன்.
அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது.
அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று, நமது முன்னோர், பெயரெடுத்தனர்.
அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர்.
இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும், என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகையுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!!
{{rh|<br>19.6.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
evp9mzxeuqeolxxmpp2g7zo2a2xglet
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121
250
641749
1930684
1929749
2026-05-06T12:27:16Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத் தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக-வாதாடு வதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம்- இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? - என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற ‘ஊரும்பேரும்’ எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும் தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன?-இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.
“இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாகவேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கின்றீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.
“வெட்டவெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம். இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற்கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப் பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல.
தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள்.<noinclude></noinclude>
i6ztjcsa2933u66mxvrdswwi2k09q21
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122
250
641750
1930690
1929750
2026-05-06T12:36:20Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|98||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலை யில்லை; 2.000 கிளைக் கழகங்களா?-வைத்துக் கொள்ளுங்கள்: 2 இலட்சம் உறுப்பினர்களா?- இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா?- கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா?-பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? -இருக்கட்டும்- இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.
“இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சி யடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மை யிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு; கோபக் கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான் தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.
இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன்- அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே -தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே.<noinclude></noinclude>
97flp2jxo2k0jmzdd62u0s2rcz4zl6a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123
250
641751
1930694
1929751
2026-05-06T12:41:59Z
Iswaryalenin
9500
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1930694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Iswaryalenin" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
“ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளியறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன்பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், “தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது” என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, “எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள்”- என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
“சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்கமுடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி: பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு. இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழவேண்டும்.
தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம்.
மொழிகாத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே!
களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்துவா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி, தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!<noinclude></noinclude>
jk0fk5psmla54os4exoof1ovqbrwaqy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148
250
641776
1930677
1930636
2026-05-06T12:01:17Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நீ மாளிகையில்!
அவன், சிறையில்!!
தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு, மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்!
வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர், பலர் இருக்கிறார்கள். தம்பி. அவர்கள், என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி!
சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல.
தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க,
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"
அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும்.
கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது.
பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான்.
தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude>
218c3il2omtkvegf94hkudd2jf8e0nn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150
250
641778
1930679
1930646
2026-05-06T12:05:52Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!!
சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு.
"செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை! 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்!
"ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான்.
கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாவம்!எதிர்த்தால், அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!!
ஆனால், தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று.
காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை. ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை!
'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும்.
இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும்
நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான்.
யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்?
யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?
என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான்.
இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude>
euxwwwn3i921o3e6riws0usnrxo13tj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151
250
641779
1930680
1930649
2026-05-06T12:09:13Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude>
வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று!சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம்.
இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது.
மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று, அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும்.
"எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?"
"இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்".
"உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?"
"இராஜத்துரோகம்".
"விளக்கம்".
"இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..."
"ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்".
"நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம், இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது".
"இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்".
"உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.."
"காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude>
squ6mt30ghnm4ccfucixwb6somuh7to
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156
250
641784
1930682
1929782
2026-05-06T12:16:13Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|132||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும்.
அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும்.
பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது, தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப்பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித், தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது.
ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர்.
இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்!
பாட்ரிக் மாடிம்பா என்பவர், தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்!
அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்!
முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர்.
அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும். குழந்தை கலப்பு இனம்- எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும், என்று சட்டம் ஆணையிடுகிறது.
"எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்.<noinclude></noinclude>
f7m40ysbzny673vk8y21ydn00cvkq09
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157
250
641785
1930693
1929783
2026-05-06T12:41:51Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude>
இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான், அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!!
அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!!
மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட
ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா?
மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார்களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது.
எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரைகளின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும், என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude>
8vqr21j1zd3vz7hciyta5icuaqpsez3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158
250
641786
1930699
1929784
2026-05-06T12:48:18Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!!
சட்டம், பிறப்பது இவ்விதத்தில்.
அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு. இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம்.
சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ!
இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்!
தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார்.
பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு, பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார், வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால்.
பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள்.
அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது!
வழக்கு என்றதும், எனக்கு என்னவோ உன்னிடம்
பொதுவாகவே, சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று: அதனால்தான் இது.<noinclude></noinclude>
kacwwqe4iruifr8z2g41148tf8xl77q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159
250
641787
1930705
1929785
2026-05-06T12:55:55Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude>
சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன!
சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப்பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்!
குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்டவர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர்.
விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு, வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன.
இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!!
அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது.
சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள்.
பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம்.
கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!!
என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து,
விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude>
7g9yjpcifcwz9xvuot9i4thzi2uurnr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160
250
641788
1930709
1929786
2026-05-06T13:01:05Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|136||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!!
காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான்.
தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்படுகிறது.
நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம்.
அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக்கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு!
வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி?
வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா?
குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? - என்றெல்லாம், சமுகம், கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும்.
அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது?
17.7.60
அண்ணன்,<noinclude></noinclude>
1dp43f64a1roqv05ow63v90spt5w6q4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161
250
641789
1930713
1929004
2026-05-06T13:05:46Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
கடிதம் : 112
ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!
தேர்தலும் அரசியல் கட்சியும்-
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.
தம்பி!
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
a8049uk6mgi2bfp9atvf6mq1wzfzvd6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162
250
641790
1930716
1929787
2026-05-06T13:12:40Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது.
பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறுகிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு.
வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார்.
அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு.
மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா!
பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு!
"வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்"-என்கிறார்.
பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை,
அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude>
rq32k9c3kyms32bwl4sd4wxmqowbf5d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163
250
641791
1930717
1929788
2026-05-06T13:18:52Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>
வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டுகிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ, வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை-இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு, அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு, நாலுபேர் வருகிற இடத்துக்கு, நல்லபடி உடுத்திக்கொண்டு, போகவேண்டுமே என்றுதான், வரதப்பர், இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!!
வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே!
எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர்களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி, இழிவாக நடத்தும் போது, என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம்.
வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை!
ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும், எப்போதும்<noinclude></noinclude>
3po2rqfnm0fj5pnetixv6yx061qrlhr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164
250
641792
1930721
1929789
2026-05-06T13:29:40Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|140||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்!
'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர்.
குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர்.
வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்!
வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது.
வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது?
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டையிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று
மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்!
தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஓட்டுவர்.
ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude>
a7zk157ykswgogkcbmpl17zd39dyusv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165
250
641793
1930730
1929790
2026-05-06T13:39:23Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude>
அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது. சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்?
வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும்.
சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம்.
ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.
இவ்வளவுக்குப் போவானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும் காட்சியினை.
இவைகள், ஒன்றுகூட இப்போது, நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே.
வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude>
cjp5zh4wsxv6138bgj1fycg2k182s93
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166
250
641794
1930869
1929791
2026-05-07T08:17:05Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி, ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம்.
வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ?
மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா, என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா?
செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா?
ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!!
வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேலி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல், உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு! சிலப்பதிகாரம், சுவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது!-என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள். அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள். மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும். கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை!<noinclude></noinclude>
7ooi2jur3ecc29w70plubbzsoje3vrr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167
250
641795
1930871
1929792
2026-05-07T08:22:40Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude>
காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்?
சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம், புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள்.
அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே?
அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது
முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்?
எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே?
என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம், அதனால் தத்தளிக்கிறோம்-ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று-அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து, கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்!! ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude>
73o9l3ltwd24g531smry1yx95hnegh0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168
250
641796
1930872
1929793
2026-05-07T08:29:56Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன்,-மீண்டும் செல்வேன்.
தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே! உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும்-இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்-வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே,-ஆகவே அந்தக் கவலை வேண்டாம்.
உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டியதெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா?
ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மையாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு, என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude>
cnscmdqh9pd4is9w5nvtdwvvyv6isn9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169
250
641797
1930873
1929794
2026-05-07T08:36:42Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>
நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் 'குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள், இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான்.
என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்!
அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காசும் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன்.
வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டுப் பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude>
ao2k60d5y1owom6yd0ge947yhirhj0w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170
250
641798
1930875
1929795
2026-05-07T08:41:42Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|146||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ.
வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லைகளால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்!
இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர்; ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதையிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா, தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான்.
தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude>
f4z0tmsdusav4jg25mq1pu6o2sljf29
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171
250
641799
1930885
1929796
2026-05-07T10:29:07Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>
நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான்.
விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!!
கனா, டோகோலாண்டு, மாலி, சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று, பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம்.
அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி, எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப்பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர்.
விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும், அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை.
ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது; புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது.
விடுதலை இயக்கம், பலிகேட்கும்-தன்னிடம் பற்றுக் கொண்டவர்களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு, கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.
அந்த அணிவகுப்புத்தான் உலகிலே, பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude>
7h1jtx2x22k36cystjmuuxtrkznsq28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172
250
641800
1930887
1929797
2026-05-07T10:34:44Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|148||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை.
முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்!
தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே, இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை!
காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே, தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று!
ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார்.
அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை.
விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை.
அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர், கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude>
hgghc0k4io8pzsjvrto8pj8e4ovgc6a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173
250
641801
1930889
1929798
2026-05-07T10:39:36Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||149}}{{rule}}</noinclude>
அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும்.
பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டிருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி, 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது.
பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர்.
இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா?
நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா, உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்!
ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து!
பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும்.
இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்!
கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது.
பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude>
ekf6b8s64ssb4ppb84ddjy4017x7121
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174
250
641802
1930890
1929799
2026-05-07T10:44:20Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|150||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது சரியல்ல.
புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு, ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள்.
பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு? பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு.
பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார்.
சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி!
இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார்- அமைச்சர்!
சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென்.
சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார்,
சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும்
அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும்.
எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழியிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude>
826fpy1a7p8r5csmaazs8yn83b2asca
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175
250
641803
1930895
1929800
2026-05-07T10:50:26Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude>
எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக், குழு விரைந்து வேலை செய்யவேண்டும்.
கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக! 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார்.
தமிழ்மொழி, இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே,-நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே, மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா?
ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-! என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது!
ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப்படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள்.
இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள்.
பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி, யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ, கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!!
தம்பி! இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே.
நரேஷ்சென் குப்தா
நரேந்திர தேவ்
திரிகுண சென்
சுபீந்திரநாத் தத்தா
ராதாராணி தேவி<noinclude></noinclude>
of5f7vzw7mryvjvzdfwj1r78r6ffu7s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176
250
641804
1930897
1929801
2026-05-07T10:58:00Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பேராசிரியர் குகா
புத்ததேவ போஸ்
பிரமாதநாத் பிசி
நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா
காஜிஅப்துல் வாதுத்
கஜேந்திரநாத் சென்
அபு சையத் அயூப்
டாக்டர் அதீந்திரநாத் போஸ்
விவேகானந்த முகர்ஜி
மைத்ரேயி தேவி
புரோதீவா போஸ்
சாகராமாய் கோஷ்
அமலன் தத்தா
கே. கே. சின்கா
ஹிரேன் குமார் சன்யால்
இவர்கள், தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள், புலவர்கள், பெரும்பேராசிரியர்கள், கல்வித்துறை நிபுணர்கள்.
இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று, பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரசுத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது.
ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம்.
ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை
இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்பட்டிருக்கிறது
இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம் அளிக்கப்படுகிறது.
இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு இது பெருத்த அநீதி இழைப்பதாகும்
இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude>
hb1kvudtva1hpq9m0rxeglyjuzsdx00
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177
250
641805
1930903
1929802
2026-05-07T11:34:58Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>
நேரு வெளியிட்ட கொள்கை, திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று, இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது.
குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள், இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது.
இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.
இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர்களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும்.
இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும்.
முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தம்பி! குமாரபாளையத்திலே, நாம் கூடி, குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ 'பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ வங்க நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும், அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? தித்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் சுகமே. அப்படிச் சொல்ல! இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டுமென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும்.
தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள்
மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகமான தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக இந்திய சர்க்கார் தரக் கூடாது என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude>
krf4su9u6x0opsqgr6m1el9tahq6tq1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178
250
641806
1930904
1929803
2026-05-07T11:38:45Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா!
அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும்.
நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்!
இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது.
மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன்.
வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன்.
நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்!
நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன.
வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது.
தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய்.
எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை
மனப்பாடம்.
ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா?
அண்ணன்.
24.7.60<noinclude></noinclude>
llolrmjt8b5wvzy3975298g8a26cu3r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179
250
641807
1930905
1929006
2026-05-07T11:43:42Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
கடிதம்: 113
பாபுவின் பவனி
இராஜேந்திரப் பிரசாத்தின் உலா-
இந்தி எதிர்ப்பு-
நிதி அமைச்சர் கருத்து
தம்பி!
கிருஹப்பிரவேச மஹோர்சவ
விஞ்ஞாபனம்
நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில் புதிதாக அமைத்திருக்கும் வீட்டிற்கு
கிருஹப்பிரவேசம்
செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன்.
அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின்
'ருக்மணி பரிணயம்'
எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
தங்கள் விதேயன்
ஏகம்பரதாசன்
"அனுக்கிரஹம்'
இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா, இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால், தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக்கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude>
j8mr27vhqr8hqoun4t98cc1guls6pyr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180
250
641808
1930906
1929804
2026-05-07T11:52:47Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1930906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு! இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?-என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே!
ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா, என்பதை எடுத்துக்காட்ட அல்ல!
இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன்! ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான்.
அப்படியா அண்ணா! முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது, வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே. பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான்,
வீடு, பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலனாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது, பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தாழ்த்திருப்பவர்களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்!
குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!!<noinclude></noinclude>
n40kivzytia90dp6e6evfye2yeh802n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210
250
641838
1930748
1929859
2026-05-06T15:22:28Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது.
காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை.
கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்?
கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்!
என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும்.
கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம்
அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!!
தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்,
கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள்.
குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக!
ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude>
oxrpf70tve2v3b2zs1cadkr19z0871d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211
250
641839
1930751
1929860
2026-05-06T15:26:50Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude>
குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள்.
மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன்.
என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன்.
தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!!
அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது.
எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது.
இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை
நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை,
நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை,
இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது.
அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது.
குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude>
eymvqbfmj2jsyjxqcxqlf00mgsw1w1w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212
250
641840
1930754
1929861
2026-05-06T15:32:57Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி!
7.8."60
அண்ணன்,
Jimmyma
+<noinclude></noinclude>
gp29r7lwxn6q5vj6ci7fdsgnto0u4vg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213
250
641841
1930829
1929008
2026-05-07T06:12:11Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>கடிதம் : 115
தம்பி1
வேலை இருக்கிறது, நிரம்ப!
மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல்.
நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி
இந்தி மொழி திணிப்பு.
தம்பி!
வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது.
குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைந்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் ததிடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude>
242mvm0gtp9cqyrref1q63nxju9wqs4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214
250
641842
1930830
1929864
2026-05-07T06:24:36Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|190||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும்.
விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை.
குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவதில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude>
1i7cjm9oafst6iwea557anfyu7c9gik
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215
250
641843
1930832
1929865
2026-05-07T06:30:51Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>
பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை.
கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய்.
குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது.
தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude>
6i4zq0gli3bei4tn5vn488s9znhswdu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216
250
641844
1930834
1929866
2026-05-07T06:36:30Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|192||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும்.
ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புவர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர்.
“வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று.
நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று.
முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும்.
பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர்.
வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude>
d0h0cn93ftrlnzw7xn0fxcm7501hfs4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217
250
641845
1930836
1929867
2026-05-07T06:44:22Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>
பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்!
"என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது.
"கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி
கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன!
ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!!
நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம்<noinclude></noinclude>
pzvwptr9uw1rcaz22ncijbhhd1vupof
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218
250
641846
1930841
1929868
2026-05-07T07:18:27Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!!
ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!!
கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்?
சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன்.
எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை!
அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட்டமா என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude>
r04k83xs4m40p744uvnbcbyndds2x78
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219
250
641847
1930843
1929869
2026-05-07T07:24:29Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார்.
இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார் உளர்
நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும்.
உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.
உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம்.
ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும்.
எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும்.
தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude>
2mmc8p1noh3yu7yzzd6o0ckte7f9nj1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220
250
641848
1930844
1929870
2026-05-07T07:28:58Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது.
பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது.
இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது.
"இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர்.
“கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர்.
“இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனைகளைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர்.
மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude>
n762hc9k5l954ei8b8184dgktkcdl3g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221
250
641849
1930845
1929871
2026-05-07T07:33:11Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>
சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.
விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது.
நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும்.
தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர்.
அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும்.
என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள்.
“இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்".
இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
REDETI SAD<noinclude></noinclude>
bek35uief9mrd6901xpjl0xelt6o9lx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222
250
641850
1930846
1929872
2026-05-07T07:36:42Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன்.
இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன்.
“சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்”.
இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால்,
“எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன்.
இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன்.
"இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்,
அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude>
f8m8zxk3y0406ify0tix0zmm2mtuclk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223
250
641851
1930847
1929873
2026-05-07T07:40:35Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>
ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
"மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது.
வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள்.
இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்!
கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை!
இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude>
pdem8ozwxhszxgcvzz0iore1bmrw93g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224
250
641852
1930848
1929874
2026-05-07T07:44:08Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'திராவிட நாடு' இதழில் "
இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை.
தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன.
ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி.
இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம்.
இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும்.
எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம்.
நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்புகளை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude>
6i7ah97jhqf6w4mx5pvs59gn3f0j6ni
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225
250
641853
1930849
1929876
2026-05-07T07:48:22Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude>
தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன்.
நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்',
என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்;
"அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்".
என்று பேசினார்.
கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு.
"இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude>
s4pdqexhiw1fegj904upwxoq4goc4np
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226
250
641854
1930850
1929877
2026-05-07T07:56:34Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|202||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்புகிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள்.
இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது.
இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்
ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம்.
நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன்.
இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude>
trsi4kukakz4nbj8e4xvt9hbq9ern90
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227
250
641855
1930852
1928645
2026-05-07T08:00:19Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
203
இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம். தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!!
தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார்.
இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்!
இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர்.
அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது.
இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது.
ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார்,
தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude>
3cvybld0aacpehbniodzp6aeumec9n0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228
250
641856
1930856
1929878
2026-05-07T08:03:53Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|204||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
(சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார்.
இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன.
சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.
இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது.
எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே.
நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு.
இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு.
வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!!
வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude>
oa8qzzrckjj3ejebm4ryfytiuzjgdjc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
641857
1930861
1929879
2026-05-07T08:08:58Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>
அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல்,
தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.
"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.
"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!
14.8.609
அண்ணன்,
Jimmys<noinclude></noinclude>
qa81v4njxiwsis4jdr5jvsqndrze4ys
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230
250
641858
1930867
1929014
2026-05-07T08:15:27Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>கடிதம்: 116
தம்பி!
காலம் இல்லை, அதிகம்!
கொள்கையில் உறுதி-
உ
தளராது பணிபுரிதல்.
வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன்.
ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம்.
நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம்.
இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude>
hyht1qq0nod11955jwql147a802cr5o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231
250
641859
1930911
1929880
2026-05-07T11:58:28Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1930911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம்.
ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன்.
சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு!
செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு.
முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும்.
அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்!
கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும்.
அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத்திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude>
cpb4istpliyui8arq7ftnr4955n4wck
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
641887
1930678
1929011
2026-05-06T12:02:55Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>கடிதம்: 119
'ஞோ ஞா’
மலேய மொழி உணர்வு-
இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி-
தமிழின் தனி இயல்பு.
தம்பி!
"ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது, உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது - ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!!
அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாமலிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி.
ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.
மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் - மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன?
தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர, வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!
துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude>
6wjwexvvbff7xx4wav0n7j6e3w6fnib
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260
250
641888
1930683
1930001
2026-05-06T12:20:11Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது.
பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார்.
ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும்.
குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழிவெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது.
இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude>
08r069r9igzb60xmdtaim6qfzy8idz2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261
250
641889
1930692
1930002
2026-05-06T12:37:48Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>
நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவியினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ, என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர்.
“இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன - ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக்கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து.
மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்- எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன்.
இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார்.
என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள். தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது - பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude>
pmhazin3ptxljtgbtv36nuc79w0s6uz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262
250
641890
1930715
1930003
2026-05-06T13:09:46Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிறதல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது.
மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத்தக்கது என்பது, உறுதிப்படுகிறது.
மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர்.
அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத்திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன - கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது.
மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude>
cf20j1v9kw0s7g2uzny8utnbwe2k0zb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263
250
641891
1930719
1930004
2026-05-06T13:23:16Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude>
நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது.
வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது.
இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!! ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!!
ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்!
ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது- நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude>
hdzu03f5srls081pd3l8ivgzndvjjix
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
641892
1930878
1930005
2026-05-07T09:11:46Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம், பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும்.
இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான். அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், “வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங்களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள்! இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude>
etx5erqgukomzfxvr18sxtviobhmds7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
641893
1930880
1930006
2026-05-07T09:47:45Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>
எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர். இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!!
இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே. இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை!
காமஞன்
டோகோ<noinclude></noinclude>
ohmvm2agp95iqj7kvxd72kcrlvb12jq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266
250
641894
1930884
1930007
2026-05-07T10:23:15Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
சோமாலியா
காங்கோ
தாஹோமி
நைஜர்
மேல்வோல்டா
ஐவரிகோஸ்ட்
சாட்
கேபன்
மத்திய ஆப்பிரிக்கா
சைப்ரஸ்
தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன!
"எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன - தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளைவிப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர். மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude>
ib5lm7ocsolt4fhzvxye8ccciubtdj5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267
250
641895
1930886
1930008
2026-05-07T10:32:25Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude>
அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம், வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர்.
தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்!
எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற, ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும், தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர்.
பல்கலைக்கழகங்களிலே உள்ளோர், இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான், நாங்கள் அவைகளைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் - இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude>
6rmy8xjh4b9mxalccnhzvzttrkf2kbh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268
250
641896
1930888
1930009
2026-05-07T10:37:24Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!!
அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி
வைக்கும்.
அல்லற்படும்போது, அழத்தோன்றும்.
அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும்.
கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்!
அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படைகிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்!
அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது, கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்!
கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது!
அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும்.
தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!!
எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude>
djs745lrcshnnwwviq05dpx44i3wkb6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269
250
641897
1930896
1930010
2026-05-07T10:56:46Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>
எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!!
எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்!
இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்!
தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா.....
விடவிகள் மொடுமொடு விசைபட
முறிபட ஏற்பட நெறிபடவே!
அடவிகள் பொடிபட, அருவிகள்
அனல்பட, அருவரை துகள்படவே.
ஓசை கேட்கும்போதே, பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா?
மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன.
இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்!
பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப்
பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
நதி ஆறு கடந்து நடந்து, உடனே
வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய்
மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும்
பெயலாறு, பரந்து நிறைந்து வரும்
பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே
கோதாவரி நதி, மேலாறொடு குளிர்
பம்பா நதியொடு சந்தப் பேர்
ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன்
ஒலி நீர் மலிதுறை பிற காக.<noinclude></noinclude>
ne3s9ed6mvnuzsh4fmpdb7nvgzd6h9r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270
250
641898
1930899
1930011
2026-05-07T11:09:28Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே,
குருதியின் நதிவெளி பரக்கவே
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணிபடும் உடல் அடுக்கியே
கரை என இருபுடை கிடக்கவே
இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!!
இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது.
அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு!
கொற்றம் இழந்தோம். எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது.
அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர்.
மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது.
மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude>
dow1hy6z46z4rsv9kv919tu1sokilw6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
641899
1930900
1930012
2026-05-07T11:17:10Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>
ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம்.
இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம்.
மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர்.
தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம்.
மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம்.
இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமையினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதியாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும்.
25.9.60
அண்ணன்,<noinclude></noinclude>
dbksx1p9sk4dsj9vmsjussg83y50uv9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
641900
1930902
1929010
2026-05-07T11:34:54Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>கடிதம் : 120
ஒன்றாகக் கூடி,
இன்பத் திராவிடம் தேடி!
தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு-
சாலமன் வெற்றி-
கழகத் தோழர்களுக்கு அறிவுரை.
தம்பி!
புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்றலிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா, இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்.....
மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!!
விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.
குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன்.
என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப்பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude>
8xkus9sia6sa2e54pesdh9ugmbp91ef
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
641901
1930907
1930013
2026-05-07T11:56:02Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1930907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>
என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர். வேறென்ன செய்ய இயலும் - பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது.
தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!!
எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி,
திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude>
f90stph4nwxddyv1pzq4up8eedyij1d
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1930809
1930570
2026-05-07T04:31:54Z
Booradleyp1
1964
1930809
wikitext
text/x-wiki
{{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
{{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}}
{{columns
|col1=
<b>அ-அக்</b>
அ
அஃதை
அஃறிணை
அக்கபோதி
அக்கமாதேவி
அக்கமா
அக்கராபாலிசு
அக்கள நிம்மடி1
அக்கள நிம்மடி 2
அக்காரக்கனி நச்சுமனார்
அக்கி திம்மய்யா நாயக்கர்
அக்கிபூசை
அக்கியாபு
அக்கிரகாரம்
அக்கிரிகோலா
அக்கிரிப்பினா
அக்கிரியாவாதம்
அக்கில்
அக்கிலீசு
அக்கினி
அக்கினிமித்திரர்
அக்கீசன், தீன் குட்டர்காம்
அக்குமீனிய மரபு
அக்குரன்
அக்குரூரர்1
அக்குரோணி
அக்குவினசு, தாமசு, தூய
அக்கேயா
அக்கோச பாரத்துவாசர்
அக்கோலா
அக்டோபர் புரட்சி
அக்பர்
அக்பர்
நாமா
அக்பர்பூர்
அக்மார்க்கு
அக்னதான்
அகக் கட்டுமானம்
அகச்சந்தி
அகச் சிக்கனங்கள்
அகச்சீராய்வு
அகசுடசு சீசர்
அகசுடின், தூய
அகண்ட காவேரி
அகண்டானந்த சுவாமி
அகத் தணிக்கை
அகத்திணை
அகத்திய பட்டர்
அகத்திய பண்டிதர்
அகத்தியம்
அகத்தியர்
அகத்தியர் தேவாரத் திரட்டு
அகத்தியர் மலை
அகத்தியாச்சிரமம்
அகத்தியான் பள்ளி
அகத்தீசர் சதகம்
அகதிகள்
அகநானூறு
அகநிலைக் கொள்கை
அகநிலைப்பாலை
அகநோக்கு முறை
அகப்பகை
அகப்பேய்ச் சித்தர்
அகப்பொருள் இலக்கண நூல்கள்
அகப்பொருள் விளக்கம்
அகம்பன் மாலாதனார்
அகமணம்
அகமதாபாத்து
அகமதாபாத்துச் சோதனைகள்
அகமதிய இனம்
அகமது சா துரானி
அகமது நகர்
அகமது வீபிக் பாட்சா
அகமீட்டுருவாக்கம்
அகமுகம்–புறமுகம்
அகமெம்னன்
அகர்தலா
அகர்வாலா
அகரம்1
அகரம்2
அகரவகைக் குறியீடுகள்
அகராதி
அகராதி நிகண்டு
அகல்யாபாய் ஓல்கார்
அகலிகை
அகலிகை வெண்பா
அகவர்
அகவற்பா
அகழாய்வு
அகழி
அகழிப் போர்
அகன்காகுவா
அகர்
அகாசுரன்
அகாசூரியசு
அகார்
அகாரசாதகம்
அகாலவருச சுபதுங்கர்
அகிச்சத்திரா
அகிம்சை
அகிரிமன்
அகிலேசபிள்ளை
அகுதை
அகூகன்
அகோ
அகோபிலம்
அகோர சிவாச்சாரியார்
அகோர முனிவர்
அகோரமூர்த்தி
அகோரா
அகோராத்திரமூர்த்தி
|col2=
<b>அங்-அங்</b>
அங்கத பூபதி
அங்கதம்
அங்கதர்
அங்கதன்
அங்கப்ப நாவலர்
அங்கப்பப் பிள்ளை, நா.
அங்கப்பப் பிள்ளை, பி.
அங்கம்1
அங்கம்2
அங்கம்3
அங்கமாலை
அங்கவை
அங்காடி அமைப்பு
அங்காரகன்
அங்காளம்மை
அங்கீகாரம் (ஏற்பு)
அங்கீரசன்
அங்குமுத்து புலவர்
அங்கேரி
அங்கோலா
<b>அச்-அசோ</b>
அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்
அச்சணந்தியடிகள்
அச்சம்
அச்சிராவதி
அச்சிறுபாக்கம்
அச்சுதராயர்
அச்சுதன்
அச்சுதாநந்தசாமி1
அச்சுதாநந்தசாமி2
அச்சுநாடுகள்
அச்சுறுத்திப் பறித்தல்
அச்சூல்
அச்சோதை
அசட்ராகான்
அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்
அசமுகி
அசயராசா
அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
அசரத்பால் மசூதி
அசரீரி
அசலாம்பிகை அம்மையார்
அசனாலெப்பைப் புலவர்
அசாசியோ
அசாதசத்துரு
அசாந்தி
அசாபுக்கடல்
அசாம்
அசாமிய மொழி
அசாய்கர்
அசிசி
அசிசியா
அசித கேச கம்பளி
அசிதர்1
அசிதன்1
அசிமுல்லாக்கான்
அசிர்கர்
அசிரிய நாகரிகம்
அசின்கோர்ட் போர்
அசுக்காபாத்து
அசுட்டோரியா
அசுணம்
அசுத்திவர்மன்
அசுத்திரியாசு
அசுதெக்கு
அசுநான்தாசு
அசுமாரா
அசுமீர்
அசுரர்
அசுவகோசர்
அசுவசாத்திரம்
அசுவசேனன் தட்சகன்
அசுவத்தாமன்
அசுவமேதம்
அசுவான்
அசென்சன் தீவு
அசே
அசை
அசோகர்
அசோகர் கல்வெட்டுகள்
அசோதை1
அசோதை2
<b>அஞ்-அஞ்</b>
அஞ்சல் வழித் தொடர் கல்வி
அஞ்சனை1
அஞ்சனை2
அஞ்சனை3
அஞ்சி
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சிலாந்தை மகனார்
அஞ்சில் ஆந்தையார்
அஞ்சுவண்ணம்
அஞ்செங்கோ
அஞ்சைக்களம்
அஞ்ஞவதைப்பரணி
|col3=
<b>அட்-</b>
அட்கின்சன் சேம்சு
அட்சய குமாரன்
அட்சர காலம்
அட்சன் ஆறு
அடசன் என்றி
அட்சன் நீர்ப்பிரிவு
அட்சன் விரிகுடா
அட்சன் விரிகுடா வாணிகக்குழு
அட்டகம்
அட்ட கிராமம்
அட்டகோண மகரிசி
அட்டதிக்கசங்கள்
அட்டப்பிரதான்
அட்டப்பிரபந்தம்
அட்டபுட்பம்
அட்டமங்கலம்1
அட்டமங்கலம்2
அட்டமாசித்திகள்
அட்ட மூர்த்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்
அட்டவணையிடுதல்
அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி
அட்டவால்பா
அட்ட வீரட்டத் தலங்கள்
அட்டன்சேம்சு
அட்டாக்கு
அட்டாதச இரகசியங்கள்
அட்டாவதானம்
அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்
அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
அட்டிகா
அட்டிலா
அட்மிரால்டி தீவுகள்
அட்மிரால்டி மலைகள்
அட்லாசு மலைகள்
அட்லாண்டா
அட்லாண்டிக் பட்டயம்
அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு
அட்லாண்டிக்குப் பெருங்கடல்
அட்லாண்டிக்கு மாநிலங்கள்
அட்லாண்டிசு
அடக்கக் கணக்கு
அடக்கம்
அடக்கல்
அடக்க விலை
அடகு வணிகர் சட்டம்
அடங்கன் முறை
அடர்சுபீல்டு
அடவு
அடால்பசு கசுடவசு
அடி
அடிக்கூறுகள்
அடிசு அபாபா
அடிநிலை உறுப்பு
அடிப்படை உரிமைகள்
அடிப்படைக் கல்வி
அடிப்படைத் திறன்கள்
அடிப்படைப் புள்ளிவிவரம்
அடிப்படைப் பொருளியல்
அடிப்படை மனவெழுச்சிகள்
அடிமை நிலை
அடிமைநிலைச் சட்டங்கள்
அடியன்
அடியார்க்கு நல்லார்
அடிலேய்டு
அடுக்குநிலை மொழியியல்
அடேனார் கொன்ராடு
அடை
அடைநெடுங்கல்வியார்
அடைமானம்
அடையாள மொழி
அடையாறு
அடையாறு நூலகம்
அடைவுச் சோதனைகள்
அடோனிசு
<b>அண்-</b>
அண்டர், இராபர்ட்டு
அண்டர், சர் வில்லியம் வில்சன்
அண்டர்மகன் குறுவழுதியார்
அண்டலூசியா
அண்டார்க்டிகா
அண்டார்க்டிக்காப் பெருங்கடல்
அண்டார்க்டிக்கா வட்டம்
அண்டிரன்
அண்டைப்பள்ளி
அண்டையம்
அண்டோரா
அண்ண ஒலிப்படக் கருவி
அண்ணன்மார் சுவாமி கதை
அண்ணாச்சாமி ஐயர்1
அண்ணாச்சாமி ஐயர்2
அண்ணாச்சாமி முதலியார்
அண்ணாதுரை கா.ந.
அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
அண்ணாமலை மன்றம்
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணா மாவட்டம்
அண்மை உறுப்பு
அண்மை உறுப்புப் பகுப்பாய்வு
அணி
அணியியலுடையார்
அணிலாடு முன்றிலார்
அணிவகுப்பு
அணு — ஆணவர்
அணுக்குண்டு
அணுக்கொள்கை
அணுவிரதம்
|col4=
<b>அத்</b>
அத்தார்
அத்தான் பாட்டு
அத்தி1
அத்தி2
அத்தி3
அத்தி4
அத்தி5
அத்திப்பட்டு
அத்தியட்சர்
அத்திரம் பாக்கம்
அத்திரி முனிவர்1
அத்திரி முனிவர்2
அத்திரி முனிவர்3
அத்தினாபுரம்
அத்து மீறுதல்
அத்துவாக்கள்
அத்துவிதம்
அத்புதானந்த சுவாமி
அத்யயனம்
அத்ரன்சிகேரா
அத்வைத சித்தாந்தி
அத்வைதானந்தர்
அதங்கோட்டாசான்
அதர்வ வேதம்
அதவர்யூ
அதாய்-தின்-கா-சோப்ரா
அதானா
அதிகச் சலுகையுறும் நாடுகள்
அதிகப் பற்று
அதிகமான்
அதிகார அளிப்பு
அதிகார ஆவணம்
பகராள், செயலுரிமைச் சட்டம், 1882
அதிகாரக் குவிப்பு
அதிகார சங்கிரகம்
அதிகாரப் பங்கீடு
அதிகாரப் பிரிவினை
அதிகாரப் பொருளாதாரம்
அதிகார வரம்பு
அதிகார வருக்கம்
அதிகை
அதிதாரத்தாயி
அதிபத்த நாயனார்
அதிமதுரகவி
அதியமான்கள்
அதியமான் கோட்டை
அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி
அதியமான் நெடுமானஞ்சி
அதியன் விண்ணத்தனார்
அதிர்ச்சி மருத்துவம்
அதிரதர்
அதிர வீசியாடுவார்
அதிராசேந்திரன்
அதிராம்பட்டினம்
அதிராவடிகள்
அதிலாபாத்து
அதிவீரராமபாண்டியன்
அதினா
அதீசர்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
அந்தமான்–நிக்கோபார் தீவுகள்
அந்தர காந்தாரம்
அந்தராத்து
அந்தரி1
அந்தரி2
அந்தாதி இலக்கியம்
அந்தாம் பிரயோன்சா
அந்தாளிக் குறிஞ்சி
அந்தி இளங்கீரனார்
அந்திமான்
அந்தியூர்
அந்திரோகிலிசு
அந்துவஞ்செள்ளை
அந்துவன்1
அந்துவன்2
அந்துவன் கீரன்
அந்துவன் சாத்தன்
அந்தோணிக்குட்டி அண்ணாவியார்
அந்தோணி கோபு
அந்தோணிப்பிள்ளை தாமசு
அந்தோனினசு பயசு
அந்தோனைன் சுவர்
அநந்த கவிராயர்1
அநந்த கவிராயர்2
அநந்த கிருட்டிண ஐயங்கார்
அநந்த நாத நயினார்
அநந்த பாரதி ஐயங்கார்
அநந்தராமையர், இ.வை.
அநாகத நாதம் - ஆகத நாதம்
அநார்யண்யன்
அநிருத்தன்1
அநிருத்தன்2
அநிருத்தன்3
அநுபூதி நெறிக் கொள்கை
அநுராதபுரம்
அநுருத்தர்1
அநுருத்தர்2
அநேகதா கால்வாய்
|col5=
<b>அப்</b>
அப்சரசுகள்
அப்சல்கான்
அப்துர் இரகிமான்
அப்துர் இரகிமான், முகமது
அப்துர் இரகீம்
அப்துர் இரசாக்கு
அப்துல் அசிசு
அப்துல் அமீது (இரண்டாம்)
அப்துல் அமீதுகான்
அப்துல் அமீது மரைக்காயர்1
அப்துல் அமீது மரைக்காயர்2
அப்துல் காதர்
அப்துல் இரகுமான் புலவர்
அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்
அப்துல்லா
அப்துல்லா, சேக் முகம்மது
அப்பர்
அப்பலேச்சியன் மலைகள்
அப்பனையங்கார்
அப்பாச்சாமிப்பிள்ளை
அப்பாச்சாமிப் பிள்ளை, ச.
அப்பாச்சாமிப் பிள்ளை, சி.
அப்பாச்சாமி முதலியார்
அப்பாச்சாமி முதலியார், அ.
அப்பாச்சாமி முதலியார், வீ.
அப்பாசி
அப்பாசித்து மரபு
அப்பாலும் அடிசார்ந்தார்
அப்பாலோ
அப்பாவுப்பிள்ளை1
அப்பாவுப்பிள்ளை2
அப்பாவுப் பிள்ளை, சி.
அப்பாவையர்1
அப்பாவையர்2
அப்பியாச கானம்
அப்பிள்ளையார்
அப்புக்கல்
அப்புக்குட்டி ஐயர்
அப்புவையங்கார், ரெ.
அப்பூதி அடிகள்
அப்பூலியா
அப்பையதீட்சிதர்
அப்போசுதலர் நடபடிகள்
அப்ரடைட்டி
அபசுட்டனாய்
அபட்தாமசு
அபட் பிரான்சிசு இலிங்வுட்டு
அபநேந்திரநாத தாகூர், டாக்டர்
அபப்தா
அபயநாகன்
அபாதான்
அபிக்ஞான சாகுந்தலம்
அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு
அபிசாரம்
அபிசான்
அபித் அலி
அபிதம்மம்
அபிதம்மாவதாரம்
அபிதாசு1
அபிதாசு2
அபிதான கோசம்
அபிதான சிந்தாமணி
அபிநந்தனர்
அபிநயம்
அபிநவகுப்தர்
அபிநவ பம்பா
அபிநவபாரத சங்கம்
அபிபுல்லா, சர், எம்
அபிமன்யு
அபிமன்யு சுந்தரி மாலை
அபிமான சோழ இராசாதிராசன்
அபிராமி அந்தாதி
அபிராமிபட்டர்
அபிவில்லி
அபினிப் போர்
அபினைன் மலைத்தொடர்
அபீயன்
அபுகீர் விரிகுடா
அபு சிம்பல்
அபு செயித்து
அபுதாபி
அபுல்–இ–ஆசன்
அபுல்பாசல்
அபுல் பெய்சி
அபெர்டீன்
அபேதானந்த சுவாமி
|col6=
<b>அம்-</b>
அம்காரா
அம்பபாலி
அம்பர்
அம்பர்கிழான் அருவந்தை
அம்பர் சர்க்கா
அம்பர் மாகாளம்
அம்பரீடன்1
அம்பரீடன்2
அம்பலத்தாடுமையர்
அம்பலவாசி
அம்பலவாண அடிகள்
அம்பலவாணக் கவிராயர்1
அம்பலவாணக் கவிராயர்2
அம்பலவாண தேசிகர்
அம்பலவாண தேசிகர் கலம்பகம்
அம்பலவாண நாவலர்
அம்பலவாண பண்டிதர்
அம்பலவாணர் திருக்கூத்து
அம்பாசமுத்திரம்
அம்பாய்னா
அம்பாலா
அம்பி
அம்பிகாபதி1
அம்பிகாபதி2
அம்பிகாபதி3
அம்பிகாபதி4
அம்பிகாபதிகோவை
அம்பிகை பாகர்
அம்பிரியா
அம்பேத்கர்
அம்போல்டு
அம்போல்டு ஆறு
அம்மள்ளனார்
அம்மானை
அம்மானை வரி
அம்மூவனார்
அம்மெய்ய நாகனார்
அம்மைச்சி
அம்மைய நாயக்கனூர்ப் போர்
அம்ரி
அம்லாட் விதி
அமர்தாசர்
அமர்நாத்
அமர்நீதி நாயனார்
அமரகண்டகம்
அமரர்1
அமரர்2
அமராவதி
அமராவதி ஆறு
அமனுல்லாகான்
அமாசெசு
அமாத்தியர்
அமாவாசை
அமிசசுரம்
அமித்திரகட்டா
அமிதசாகரர்
அமிர்தகவிராயர்
அமிர்தசரசு
அமிர்தபசார்
அமிர்தம் பிள்ளை
அமிர்தலிங்க சுவாமிகள்
அமிருத ரஞ்சனி
அமீது
அமீர் குசுரு
அமுத குண்டலி
அமுதசுரபி
அமுத பாணியார்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
அமெரிக்க – இந்திய மொழிகள்
அமெரிக்க இந்தியர்
அமெரிக்க இலக்கியம்
அமெரிக்க உளவியல் சங்கம்
அமெரிக்க ஐக்கிய நாடு
அமெரிக்கச் சமூகவியல் சங்கம்
அமெரிக்கசு வெசுபூசியசு
அமெரிக்கத் தத்துவம்
அமெரிக்க தாலர்
அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை
அமெரிக்க நூலகச் சங்கம்
அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்
அமெரிக்க மைய வங்கி முறை
அமெரிக்கா
அமேசான் ஆறு
அமைச்சரவை
அமைச்சரவைக் குழு
அமைப்பாவணம்
அமைப்பியல்சார் மானிடவியல்
அமைப்பு
அமைப்புக் கிளைமொழியியல்
அமைப்புக்கோட்பாடு
அமைப்பு முறைவழிக் கற்பித்தல்
அமைப்பு மொழியியல்
அமோகவருசர், முதலாம்
அமோகவருசர், இரண்டாம்
அமோகவருசர், மூன்றாம்
<b>அய்-</b>
அய்.எசு–எல்.எம் படிவம்
அய்கொளே
அய்கொளே கல்வெட்டுச் சாசனம்
அய்டான்
அய்பா
அய்யப்புழல்
அய்யனார்
அயக்கிரீவர்
அயர்லாந்து
அயல் இனமையக் கொள்கை
அயல்நாட்டு உதவி
அயல்நாட்டுக் கடன்
அயல்நாட்டுக் கொள்கை
அயல்நாட்டுச் செலுத்துநிலை
அயல்நாட்டு மூலதனம்
அயல்நாட்டு வாணிகம்
அயலார்
அயற் செலாவணி
அயன்மையும் கல்வியும்
அயிசா
அயினி அக்பரி
அயினி சதுருத்தீன்
அயினு
அயுக்தர்
அயூதியா
அயோத்தி
அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.
அயோவா
அயோனியக் கடல்
அயோனியத் தீவுகள்
அயோனியா
|col7=
<b>அர்-</b>
அர்க்கன்சா
அர்கேடியா
அர்ச்சுனர் குரு
அர்சர்
அர்சுமத் பானு பேகம்
அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
அர்த்தநாரீசுவரர்
அர்தயாள்
அர்துணா
அர்பன்
அர்மீனிய சோவியத்துக் குடியரசு
அர்மீனிய மொழி
அர்மீனியர்
அரக்கர்
அரக்கான்
அரக்கேனிய இந்தியர்
அரங்கநாத முதலியார்
அரங்கம்{{sup|1}}
அரங்கம்{{sup|2}}
அரங்கமைப்பு
அரங்கு
அரசகேசரி
அரசஞ் சண்முகனார்
அரசவில்லி
அரசாங்க அமைப்பு
அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
அரசாங்கக் கொடையும் உதவிகளும்
அரசாங்கச் செலவு
அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
அரசாங்கம்
அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்
அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
அரசாங்க வருவாய்
அரசிதழ்
அரசியல் அதிகாரத்துவம்
அரசியல் உணர்வற்ற கொள்கை
அரசியல் கட்சிகள்
அரசியல் கருத்துகள்
அரசியல் கலை
அரசியல் குழப்பம்
அரசியல்சார் சமூகவியல்
அரசியல்சார் மானிடவியல்
அரசியல் தத்துவம்
அரசியல் தந்திரம்
அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்
அரசியல் பொருளாதாரக் கொள்கை
அரசியல் முறைமைக்கு உட்படுகை
அரசியலமைப்புச் சட்டம்
அரசியலில் ஆன்மீகம்
அரசியலும் போர் நடப்பும்
அரசியலும் முறைமையும்
அரசியார் பேரறிக்கை
அரசிலி
அரசிறைக் கொள்கை
அரசின் அதிகார எல்லை
அரசின் தோற்றம்
அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்
அரசு கொள்முதல் கொள்கை
அரசுடைமையாக்கம்
அரசுப் பண்ணைகள்
அரசும் கல்வியும்
அரசு வாணிகக் கழகம்
அரண்மனைச் சிறுவயல்
அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
அரதத்தாச்சாரியார்
அரதைப் பெரும்பாழி
அரப்பா
அரபத்த நாவலர்
அரபாகோ
அரபிக் கடல்
அரபிச் சங்கம்
அரபு இலக்கியம்
அரபுக் கதைகள்
அரபு–சராய்
அரபு பணவாக்க நிதி
அரபு மொழி
அரவான்
அரவிந்தர்
அராபிய இசுரேலியப் போர்கள்
அராபிய எண்கள்
அராபியப் பாலை நிலம்
அராமிய எழுத்துகள்
அரிஅரரும் புக்கரும்
அரிஅரன்
அரிக்கமேடு
அரிகதை காலட்சேபம்
அரிகரசாத்திரி, சி.
அரிகரபுத்திர உபாத்தியாயர்
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
அரிகேசரி பராங்குச மாறவர்மன்
அரிகேசரி மாறவர்மன்
அரிகோரப் போர்
அரிச்சந்திர நாடகம்
அரிச்சந்திர மயான காண்டம்
அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் கதை
அரிச்சித்திரம்
அரிசமய தீபம்
அரிசிங் நால்வா
அரிசித்துப் போர்
அரிசில்கிழார்
அரிசிற்கரைப்புத்தூர்
அரிசுடாட்டில்
அரிசுடைடு பிரியாண்டு
அரிசேனர்
அரிஞ்சய சோழன்
அரிட்டைன் மட்கலன்
அரித்துவாரம்
அரிதாசர்
அரிதி
அரிமர்த்தன பாண்டியன்
அரிமளம்
அரிமா சங்கம்
அரிமிதைய மாவலி வாணராயர்
அரியக்குடி
அரியலூர்
அரியலூர் மழவராயர்கள்
அரியாட்னி
அரியானா
அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
அரிவாள் தாய நாயனார்
அரிவை
அருக்கொணாமலை
அருகத்து நிலை
அருங்கலச் செப்பு
அருங்காட்சியகம்
அருச்சுனன்
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், சு.சு.
அருணகிரிநாதர் சுவாமி
அருணகிரிநாதர் தத்துவம்
அருணகிரிப்புராணம்
}}
q217tpn0664tl4q9rhfq1ts6xb54wc9
பயனர்:Info-farmer/WikisourceSimpleInterface.js
2
642292
1930732
1930532
2026-05-06T13:41:04Z
Info-farmer
232
உரிய 800px படம் இனதே தெரிய நிரல் மாற்றம்
1930732
javascript
text/javascript
mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() {
$(function() {
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
var action = mw.config.get('wgAction');
if (namespace === 250) {
// 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல்
var pageName = mw.config.get('wgPageName');
var viewUrl = mw.util.getUrl(pageName);
var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true';
var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>';
if ($('#ca-view').length > 0) {
$('#ca-view').before(customTabHtml);
} else if ($('#ca-edit').length > 0) {
$('#ca-edit').before(customTabHtml);
} else {
$('#p-views ul').prepend(customTabHtml);
}
var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true';
if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) {
$('#editform').attr('action', function(i, val) {
return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true';
});
// இயல்பான இடைமுகத்தை மறைத்தல்
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide();
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
// மிதக்கும் சாளரத்திற்கான CSS
$('head').append('<style>' +
'body.ws-modal-open { overflow: hidden !important; }' +
'#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' +
'#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' +
'#ws-pro-controls { display: flex; align-items: center; }' +
'#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' +
'#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' +
'#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' +
'#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' +
'#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' +
'#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' +
'#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' +
'#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' +
'#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' +
'#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' +
'#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' +
'@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' +
'.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' +
'.ws-pulsing span { color: white !important; }' +
'.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' +
'.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' +
'.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' +
'.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' +
'.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' +
'.ws-zoom-btn:active { background:#ccc; }' +
'.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' +
'.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' +
'</style>');
$('body').addClass('ws-modal-open');
// 2. "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" 3 நொடி அறிவிப்பு
var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>';
$('body').append(fsToast);
setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000);
// 3. சாளரத்தின் HTML கட்டமைப்பு
var editorHtml = '<div id="ws-pro-editor">' +
'<div id="ws-pro-header">' +
'<div style="display: flex; align-items: center;">' +
'<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' +
'<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' +
'<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' +
'</div>' +
'<div id="ws-pro-controls">' +
'<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' +
'<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' +
'<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">×</span>' +
'</div>' +
'</div>' +
'<div id="ws-pro-toolbar"></div>' +
'<div id="ws-pro-workspace">' +
'<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' +
'<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' +
'<div id="ws-pro-right">' +
'<div id="ws-img-loader" style="margin-top: 40%; font-size: 18px; font-weight: bold; color: #6c757d;">படம் ஏற்றப்படுகிறது...</div>' +
'<img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு" style="display:none;" />' +
'</div>' +
'</div>' +
'</div>';
$('body').append(editorHtml);
var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>';
$('body').append(centerBtnHtml);
var $proEditor = $('#ws-pro-editor');
var $proTextarea = $('#ws-pro-textarea');
var $oldTextarea = $('#wpTextbox1');
var $reopenBtn = $('#ws-center-reopen-btn');
$proTextarea.val($oldTextarea.val());
$('#ws-pro-save').on('click', function() {
$proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, ''));
$oldTextarea.val($proTextarea.val());
$('#wpSave').click();
});
$('#ws-pro-normal-edit').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val());
$proEditor.remove();
$reopenBtn.remove();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); }
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn();
});
$('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; });
var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom');
var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100;
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
// =========================================================================
// 4. API மூலம் சரியான பக்கத்தின் படத்தைப் பெறுதல் (முழுமையான வழு நீக்கம்)
// =========================================================================
var titleStr = mw.config.get('wgTitle');
var slashIdx = titleStr.lastIndexOf('/');
var fileBaseName = titleStr;
var pageNumForApi = 1;
// தலைப்பிலிருந்து பக்க எண்ணைத் துல்லியமாகப் பிரித்தெடுத்தல்
if (slashIdx !== -1) {
fileBaseName = titleStr.substring(0, slashIdx);
pageNumForApi = parseInt(titleStr.substring(slashIdx + 1), 10);
}
var apiFileName = 'File:' + fileBaseName;
// API கட்டளை (iipage என்பதுதான் சரியான கட்டளை)
new mw.Api().get({
action: 'query',
prop: 'imageinfo',
titles: apiFileName,
iiprop: 'url',
iiurlwidth: 800, // எழுத்துகளைத் தெளிவாக வாசிக்க 800px அமைப்பு
iipage: pageNumForApi, // துல்லியமான பக்க எண்
format: 'json'
}).done(function(data) {
var pages = data.query.pages;
var imgFound = false;
for (var p in pages) {
if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) {
var imgUrl = pages[p].imageinfo[0].thumburl;
$('#ws-pro-image').attr('src', imgUrl).on('load', function() {
$('#ws-img-loader').hide();
$(this).show();
setTimeout(adjustImageScroll, 100);
});
imgFound = true;
}
}
if(!imgFound) {
$('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show();
$('#ws-img-loader').hide();
}
}).fail(function() {
$('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show();
$('#ws-img-loader').hide();
});
// =========================================================================
function toggleFullScreen() {
if (!document.fullscreenElement) {
document.documentElement.requestFullscreen().catch(function(err) {});
} else {
if (document.exitFullscreen) { document.exitFullscreen(); }
}
}
$('#ws-btn-full').on('click', toggleFullScreen);
var hasTriggeredFullscreen = false;
$proEditor.on('click', function() {
if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) {
document.documentElement.requestFullscreen().catch(function(e) {});
hasTriggeredFullscreen = true;
}
});
$('#ws-btn-min').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val());
$proEditor.hide();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); }
$reopenBtn.fadeIn(200);
});
$reopenBtn.on('click', function() {
$(this).hide();
$proEditor.show();
$('body').addClass('ws-modal-open');
});
var isDragging = false;
$('#ws-pro-resizer').on('mousedown', function(e) {
isDragging = true;
$('body').css('user-select', 'none');
});
$(document).on('mousemove', function(e) {
if (!isDragging) return;
var containerWidth = $('#ws-pro-workspace').width();
var leftWidth = (e.pageX / containerWidth) * 100;
if (leftWidth > 10 && leftWidth < 90) {
$('#ws-pro-left').css('width', leftWidth + '%');
$('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%');
}
}).on('mouseup', function() {
isDragging = false;
$('body').css('user-select', '');
});
var $toolbar = $('#ws-pro-toolbar');
function createBtn(num, iconHtml, bgColor, onClick) {
var dotHtml = '';
if (num === 3) {
dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>';
} else if (num === 4) {
dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">−</span></div>';
} else {
dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>';
}
var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' +
dotHtml +
'<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' +
'</div>';
$toolbar.append(btn);
$('#ws-pro-btn-' + num).on('click', onClick);
}
createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){});
createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){});
createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); });
createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); });
var isAutoJoinActive = false;
var floatingUndoTimer = null;
var lastUndoState = null;
createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">> <</span>', '#d0d0d0', function() {
isAutoJoinActive = !isAutoJoinActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-5');
function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); }
if (isAutoJoinActive) {
$innerBtn.addClass('ws-pulsing');
$proTextarea.on('click.wsAutoJoin', function(e) {
var text = $proTextarea.val();
var pos = $proTextarea[0].selectionStart;
if (pos === $proTextarea[0].selectionEnd) {
var startSpace = pos, endSpace = pos;
while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; }
while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; }
if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) {
lastUndoState = { text: text, pos: pos };
$proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace));
$proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace);
removeFloatingUndo();
var timeLeft = 4;
$('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>');
$('#ws-floating-undo').on('click', function() {
if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); }
});
floatingUndoTimer = setInterval(function() {
timeLeft--;
if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')');
else removeFloatingUndo();
}, 1000);
}
}
});
} else {
$innerBtn.removeClass('ws-pulsing');
$proTextarea.off('click.wsAutoJoin');
removeFloatingUndo();
}
});
$('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' });
// =========================================================================
// 5. 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe)
// =========================================================================
var isMagnifierActive = false;
createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() {
isMagnifierActive = !isMagnifierActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-6');
var $img = $('#ws-pro-image');
if (isMagnifierActive) {
$innerBtn.css('background-color', '#ffeb3b');
if ($('#ws-img-wrapper').length === 0) {
$img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>');
}
if ($('#ws-loupe').length === 0) {
var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>';
$('#ws-img-wrapper').append(loupeHtml);
}
var $loupe = $('#ws-loupe');
$loupe.show();
function updateLoupeBg() {
var zoom = 2.5;
var bgW = $img.width() * zoom;
var bgH = $img.height() * zoom;
$loupe.css({
'background-image': 'url(' + $img.attr('src') + ')',
'background-size': bgW + 'px ' + bgH + 'px'
});
var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0;
var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0;
$loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px');
}
updateLoupeBg();
window.updateMagnifier = updateLoupeBg;
var isDraggingLoupe = false;
var startY, startX, startTop, startLeft;
$loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) {
isDraggingLoupe = true;
startY = e.pageY;
startX = e.pageX;
startTop = parseInt($loupe.css('top'), 10) || 0;
startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0;
$loupe.css('cursor', 'grabbing');
e.preventDefault();
});
$(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) {
if (!isDraggingLoupe) return;
var dy = e.pageY - startY;
var dx = e.pageX - startX;
$loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' });
updateLoupeBg();
});
$(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() {
isDraggingLoupe = false;
if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move');
});
} else {
$innerBtn.css('background-color', '#f0f0f0');
$('#ws-loupe').hide();
$(document).off('mousemove.loupe mouseup.loupe');
window.updateMagnifier = null;
}
});
for (var i = 7; i <= 10; i++) {
createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {});
}
// =========================================================================
// 6. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள்
// =========================================================================
var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px;">' +
'<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">−</span>' +
'<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' +
'<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' +
'</div>' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' +
'<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">−</span>' +
'<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' +
'<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' +
'</div>' +
'</div>';
$toolbar.append(zoomControlsHtml);
var currentTxtSize = 15;
$('#ws-txt-plus').on('click', function() {
currentTxtSize += 2;
$('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px');
});
$('#ws-txt-minus').on('click', function() {
if (currentTxtSize > 10) {
currentTxtSize -= 2;
$('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px');
}
});
$('#ws-txt-reset').on('click', function() {
currentTxtSize = 15;
$('#ws-pro-textarea').css('font-size', '15px');
});
function adjustImageScroll() {
var $img = $('#ws-pro-image');
var $container = $('#ws-pro-right');
if (!$img.is(':visible')) return;
var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65;
if (scrollPos > 0) {
$container.scrollLeft(scrollPos);
} else {
$container.scrollLeft(0);
}
if (window.updateMagnifier) window.updateMagnifier();
}
$('#ws-img-plus').on('click', function() {
currentImgWidth += 20;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
setTimeout(adjustImageScroll, 50);
});
$('#ws-img-minus').on('click', function() {
if (currentImgWidth > 40) {
currentImgWidth -= 20;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
setTimeout(adjustImageScroll, 50);
}
});
$('#ws-img-reset').on('click', function() {
currentImgWidth = 100;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' });
$('#ws-pro-right').scrollLeft(0);
if (window.updateMagnifier) window.updateMagnifier();
});
}
}
});
});
g42n6rx0topcllfl4bvkw4bc4si0xb6
1930738
1930732
2026-05-06T13:50:24Z
Info-farmer
232
வழு நீக்கிய பட நிரல்
1930738
javascript
text/javascript
mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() {
$(function() {
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
var action = mw.config.get('wgAction');
if (namespace === 250) {
// 1. விக்கிமூலத்தின் மேல் பகுதியில் "தனித்தொகு" தத்தலை அமைத்தல்
var pageName = mw.config.get('wgPageName');
var viewUrl = mw.util.getUrl(pageName);
var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true';
var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>';
if ($('#ca-view').length > 0) {
$('#ca-view').before(customTabHtml);
} else if ($('#ca-edit').length > 0) {
$('#ca-edit').before(customTabHtml);
} else {
$('#p-views ul').prepend(customTabHtml);
}
var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true';
if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) {
$('#editform').attr('action', function(i, val) {
return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true';
});
// இயல்பான இடைமுகத்தை மறைத்தல்
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide();
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
// மிதக்கும் சாளரத்திற்கான CSS
$('head').append('<style>' +
'body.ws-modal-open { overflow: hidden !important; }' +
'#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; box-shadow: 0 5px 15px rgba(0,0,0,0.5); }' +
'#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' +
'#ws-pro-controls { display: flex; align-items: center; }' +
'#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' +
'#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' +
'#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; }' +
'#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; }' +
'#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' +
'#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: font-size 0.2s; }' +
'#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' +
'#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' +
'#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' +
'#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; }' +
'#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' +
'@keyframes wsPulseAnim { 0% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0.7); border-color:#1E90FF !important; } 50% { background-color: #1E90FF; box-shadow: 0 0 0 10px rgba(30,144,255,0); border-color:#fff !important; } 100% { background-color: #87CEFA; box-shadow: 0 0 0 0 rgba(30,144,255,0); border-color:#1E90FF !important; } }' +
'.ws-pulsing { animation: wsPulseAnim 1.5s infinite !important; }' +
'.ws-pulsing span { color: white !important; }' +
'.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; }' +
'.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' +
'.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; }' +
'.ws-zoom-btn { width:32px; height:32px; display:flex; justify-content:center; align-items:center; background:#fff; border:2px solid #aaa; border-radius:6px; font-size:26px; font-weight:bold; cursor:pointer; user-select:none; color:#333; box-shadow:0 1px 3px rgba(0,0,0,0.1); }' +
'.ws-zoom-btn:hover { background:#e2e6ea; border-color:#888; }' +
'.ws-zoom-btn:active { background:#ccc; }' +
'.ws-zoom-reset-btn { background: #d0d0d0; border: 1px solid #aaa; border-radius: 5px; padding: 4px 12px; font-size: 15px; font-weight: bold; color: #333; cursor: pointer; transition: all 0.2s; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.1); }' +
'.ws-zoom-reset-btn:hover { background: #b8b8b8; border-color: #888; }' +
'</style>');
$('body').addClass('ws-modal-open');
// 2. "முழுத்திரைத் தோன்ற சொடுக்கு" 3 நொடி அறிவிப்பு
var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>';
$('body').append(fsToast);
setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000);
// 3. சாளரத்தின் HTML கட்டமைப்பு
var editorHtml = '<div id="ws-pro-editor">' +
'<div id="ws-pro-header">' +
'<div style="display: flex; align-items: center;">' +
'<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' +
'<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' +
'<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' +
'</div>' +
'<div id="ws-pro-controls">' +
'<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' +
'<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' +
'<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">×</span>' +
'</div>' +
'</div>' +
'<div id="ws-pro-toolbar"></div>' +
'<div id="ws-pro-workspace">' +
'<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' +
'<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' +
'<div id="ws-pro-right">' +
'<div id="ws-img-loader" style="margin-top: 40%; font-size: 18px; font-weight: bold; color: #6c757d;">படம் ஏற்றப்படுகிறது...</div>' +
'<img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு" style="display:none;" />' +
'</div>' +
'</div>' +
'</div>';
$('body').append(editorHtml);
var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>';
$('body').append(centerBtnHtml);
var $proEditor = $('#ws-pro-editor');
var $proTextarea = $('#ws-pro-textarea');
var $oldTextarea = $('#wpTextbox1');
var $reopenBtn = $('#ws-center-reopen-btn');
$proTextarea.val($oldTextarea.val());
$('#ws-pro-save').on('click', function() {
$proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, ''));
$oldTextarea.val($proTextarea.val());
$('#wpSave').click();
});
$('#ws-pro-normal-edit').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val());
$proEditor.remove();
$reopenBtn.remove();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); }
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn();
});
$('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; });
var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom');
var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100;
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
// =========================================================================
// 4. API மூலம் சரியான பக்கத்தின் படத்தைப் பெறுதல் (பயனர் வழங்கிய தீர்வு)
// =========================================================================
var titleStr = mw.config.get('wgTitle');
var parts = titleStr.split('/');
var fileBaseName = parts[0];
var pageNumForApi = parts[1] || 1;
var apiFileName = 'File:' + fileBaseName;
new mw.Api().get({
action: 'query',
prop: 'imageinfo',
titles: apiFileName,
iiprop: 'url',
iiurlwidth: 800,
iiurlparam: 'page' + pageNumForApi + '-800px', // <-- வழு நீக்கிய மந்திரச் சொல்!
format: 'json'
}).done(function(data) {
var pages = data.query.pages;
var imgFound = false;
for (var p in pages) {
if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) {
var imgUrl = pages[p].imageinfo[0].thumburl;
$('#ws-pro-image').attr('src', imgUrl).on('load', function() {
$('#ws-img-loader').hide();
$(this).show();
setTimeout(adjustImageScroll, 100);
});
imgFound = true;
}
}
if(!imgFound) {
$('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show();
$('#ws-img-loader').hide();
}
}).fail(function() {
$('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show();
$('#ws-img-loader').hide();
});
// =========================================================================
function toggleFullScreen() {
if (!document.fullscreenElement) {
document.documentElement.requestFullscreen().catch(function(err) {});
} else {
if (document.exitFullscreen) { document.exitFullscreen(); }
}
}
$('#ws-btn-full').on('click', toggleFullScreen);
var hasTriggeredFullscreen = false;
$proEditor.on('click', function() {
if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) {
document.documentElement.requestFullscreen().catch(function(e) {});
hasTriggeredFullscreen = true;
}
});
$('#ws-btn-min').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val());
$proEditor.hide();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); }
$reopenBtn.fadeIn(200);
});
$reopenBtn.on('click', function() {
$(this).hide();
$proEditor.show();
$('body').addClass('ws-modal-open');
});
var isDragging = false;
$('#ws-pro-resizer').on('mousedown', function(e) {
isDragging = true;
$('body').css('user-select', 'none');
});
$(document).on('mousemove', function(e) {
if (!isDragging) return;
var containerWidth = $('#ws-pro-workspace').width();
var leftWidth = (e.pageX / containerWidth) * 100;
if (leftWidth > 10 && leftWidth < 90) {
$('#ws-pro-left').css('width', leftWidth + '%');
$('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%');
}
}).on('mouseup', function() {
isDragging = false;
$('body').css('user-select', '');
});
var $toolbar = $('#ws-pro-toolbar');
function createBtn(num, iconHtml, bgColor, onClick) {
var dotHtml = '';
if (num === 3) {
dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">+</span></div>';
} else if (num === 4) {
dotHtml = '<div class="ws-num-dot"><span style="font-size: 13px; color: #555; font-weight: bold;">' + num + '</span><span style="font-size: 30px; color: red; font-weight: bold; line-height: 0.6;">−</span></div>';
} else {
dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>';
}
var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn">' +
dotHtml +
'<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' +
'</div>';
$toolbar.append(btn);
$('#ws-pro-btn-' + num).on('click', onClick);
}
createBtn(1, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){});
createBtn(2, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function(){});
createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); });
createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">\\n</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); });
var isAutoJoinActive = false;
var floatingUndoTimer = null;
var lastUndoState = null;
createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">> <</span>', '#d0d0d0', function() {
isAutoJoinActive = !isAutoJoinActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-5');
function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); }
if (isAutoJoinActive) {
$innerBtn.addClass('ws-pulsing');
$proTextarea.on('click.wsAutoJoin', function(e) {
var text = $proTextarea.val();
var pos = $proTextarea[0].selectionStart;
if (pos === $proTextarea[0].selectionEnd) {
var startSpace = pos, endSpace = pos;
while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; }
while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; }
if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) {
lastUndoState = { text: text, pos: pos };
$proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace));
$proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace);
removeFloatingUndo();
var timeLeft = 4;
$('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999; box-shadow:0 2px 5px rgba(0,0,0,0.3); font-size:12px;">மீளமை ('+timeLeft+')</button>');
$('#ws-floating-undo').on('click', function() {
if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); }
});
floatingUndoTimer = setInterval(function() {
timeLeft--;
if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')');
else removeFloatingUndo();
}, 1000);
}
}
});
} else {
$innerBtn.removeClass('ws-pulsing');
$proTextarea.off('click.wsAutoJoin');
removeFloatingUndo();
}
});
$('#ws-pro-btn-inner-5').css({ 'border': '2px solid #444' });
// =========================================================================
// 5. 6வது பொத்தான் - மாய உருப்பெருக்கி (Magnifier Loupe)
// =========================================================================
var isMagnifierActive = false;
createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() {
isMagnifierActive = !isMagnifierActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-6');
var $img = $('#ws-pro-image');
if (isMagnifierActive) {
$innerBtn.css('background-color', '#ffeb3b');
if ($('#ws-img-wrapper').length === 0) {
$img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>');
}
if ($('#ws-loupe').length === 0) {
var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>';
$('#ws-img-wrapper').append(loupeHtml);
}
var $loupe = $('#ws-loupe');
$loupe.show();
function updateLoupeBg() {
var zoom = 2.5;
var bgW = $img.width() * zoom;
var bgH = $img.height() * zoom;
$loupe.css({
'background-image': 'url(' + $img.attr('src') + ')',
'background-size': bgW + 'px ' + bgH + 'px'
});
var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0;
var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0;
$loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px');
}
updateLoupeBg();
window.updateMagnifier = updateLoupeBg;
var isDraggingLoupe = false;
var startY, startX, startTop, startLeft;
$loupe.off('mousedown.loupe').on('mousedown.loupe', function(e) {
isDraggingLoupe = true;
startY = e.pageY;
startX = e.pageX;
startTop = parseInt($loupe.css('top'), 10) || 0;
startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0;
$loupe.css('cursor', 'grabbing');
e.preventDefault();
});
$(document).off('mousemove.loupe').on('mousemove.loupe', function(e) {
if (!isDraggingLoupe) return;
var dy = e.pageY - startY;
var dx = e.pageX - startX;
$loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' });
updateLoupeBg();
});
$(document).off('mouseup.loupe').on('mouseup.loupe', function() {
isDraggingLoupe = false;
if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move');
});
} else {
$innerBtn.css('background-color', '#f0f0f0');
$('#ws-loupe').hide();
$(document).off('mousemove.loupe mouseup.loupe');
window.updateMagnifier = null;
}
});
for (var i = 7; i <= 10; i++) {
createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {});
}
// =========================================================================
// 7. வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள்
// =========================================================================
var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; background: #e9ecef; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px;">' +
'<span id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">−</span>' +
'<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' +
'<span id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</span>' +
'</div>' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' +
'<span id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">−</span>' +
'<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' +
'<span id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</span>' +
'</div>' +
'</div>';
$toolbar.append(zoomControlsHtml);
var currentTxtSize = 15;
$('#ws-txt-plus').on('click', function() {
currentTxtSize += 2;
$('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px');
});
$('#ws-txt-minus').on('click', function() {
if (currentTxtSize > 10) {
currentTxtSize -= 2;
$('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px');
}
});
$('#ws-txt-reset').on('click', function() {
currentTxtSize = 15;
$('#ws-pro-textarea').css('font-size', '15px');
});
function adjustImageScroll() {
var $img = $('#ws-pro-image');
var $container = $('#ws-pro-right');
if (!$img.is(':visible')) return;
var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65;
if (scrollPos > 0) {
$container.scrollLeft(scrollPos);
} else {
$container.scrollLeft(0);
}
if (window.updateMagnifier) window.updateMagnifier();
}
$('#ws-img-plus').on('click', function() {
currentImgWidth += 20;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
setTimeout(adjustImageScroll, 50);
});
$('#ws-img-minus').on('click', function() {
if (currentImgWidth > 40) {
currentImgWidth -= 20;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
setTimeout(adjustImageScroll, 50);
}
});
$('#ws-img-reset').on('click', function() {
currentImgWidth = 100;
localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' });
$('#ws-pro-right').scrollLeft(0);
if (window.updateMagnifier) window.updateMagnifier();
});
}
}
});
});
9vjsswrpc0iiwg3i67lwfx2br6ti7ha
1930755
1930738
2026-05-06T15:54:05Z
Info-farmer
232
அலைப்பேசி + ஓசிஆர் சுத்தம் + கரும்பின்புலம்
1930755
javascript
text/javascript
// <nowiki>
/**
* விக்கிமூலம் - மிதக்கும் மெய்ப்புப் பார்ப்பான் (Advanced Floating Proofreader)
* உருவாக்கம்: பயனர் தேவையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
* வசதிகள்: அலைபேசி ஆதரவு, இரவுப் பயன்முறை, தனிப்பயன் பொத்தான்கள், மாய உருப்பெருக்கி, OCR தூய்மையாக்கி.
*/
mw.loader.using(['mediawiki.api', 'mediawiki.util'], function() {
$(function() {
var namespace = mw.config.get('wgNamespaceNumber');
var action = mw.config.get('wgAction');
if (namespace === 250) {
// --- விக்கிமூலத்தின் முகப்பில் "தனித்தொகு" தத்தலை உருவாக்குதல் ---
var pageName = mw.config.get('wgPageName');
var viewUrl = mw.util.getUrl(pageName);
var customEditUrl = viewUrl + '?action=edit&customedit=true';
var customTabHtml = '<li id="ca-customedit" class="vector-tab-noicon mw-list-item"><a href="' + customEditUrl + '" title="சிறப்பு வசதிகளுடன் மிதக்கும் சாளரத்தில் தொகுக்க"><span>தனித்தொகு</span></a></li>';
if ($('#ca-view').length > 0) {
$('#ca-view').before(customTabHtml);
} else if ($('#ca-edit').length > 0) {
$('#ca-edit').before(customTabHtml);
} else {
$('#p-views ul').prepend(customTabHtml);
}
var isCustomEdit = mw.util.getParamValue('customedit') === 'true';
// "தனித்தொகு" வழியாக வந்திருந்தால் மட்டும் இந்த நிரல் இயங்கும்
if ((action === 'edit' || action === 'submit') && isCustomEdit) {
$('#editform').attr('action', function(i, val) {
return val + (val.indexOf('?') > -1 ? '&' : '?') + 'customedit=true';
});
// இயல்பான இடைமுகத்தை மறைத்தல்
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').hide();
$('.mw-page-container-inner').css('grid-template-columns', '100%');
// --- சாளரத்திற்கான CSS அமைப்புகள் (அலைபேசி & இரவுப் பயன்முறை உட்பட) ---
$('head').append('<style>' +
'body.ws-modal-open { overflow: hidden !important; }' +
'#ws-pro-editor { position: fixed; top: 0; left: 0; width: 100vw; height: 100vh; background: #fff; z-index: 999998; display: flex; flex-direction: column; font-family: sans-serif; transition: background 0.3s; }' +
'#ws-pro-header { background: #343a40; color: #fff; padding: 10px 15px; display: flex; justify-content: space-between; align-items: center; }' +
'#ws-pro-controls { display: flex; align-items: center; }' +
'#ws-pro-controls span { cursor: pointer; margin-left: 25px; font-weight: bold; font-size: 32px; transition: color 0.2s; line-height: 1; display: inline-block; }' +
'#ws-pro-controls span:hover { color: #17a2b8; }' +
'#ws-pro-toolbar { background: #f8f9fa; padding: 10px 15px; border-bottom: 1px solid #ddd; display: flex; flex-wrap: wrap; align-items: center; transition: background 0.3s; }' +
'#ws-pro-workspace { display: flex; flex: 1; overflow: hidden; flex-direction: row; }' +
'#ws-pro-left { width: 50%; display: flex; flex-direction: column; }' +
'#ws-pro-textarea { flex: 1; width: 100%; resize: none; border: none; padding: 20px; font-size: 15px; line-height: 1.8; outline: none; background: #fafafa; color: #000; -ms-overflow-style: none; scrollbar-width: none; transition: all 0.3s; }' +
'#ws-pro-textarea::-webkit-scrollbar { display: none; }' +
'#ws-pro-resizer { width: 8px; background: #ced4da; cursor: ew-resize; display: flex; align-items: center; justify-content: center; border-left: 1px solid #adb5bd; border-right: 1px solid #adb5bd; flex-shrink: 0; }' +
'#ws-pro-resizer::after { content: "⋮"; color: #6c757d; font-size: 20px; }' +
'#ws-pro-right { width: 50%; overflow: auto; background: #e9ecef; text-align: center; padding: 10px; position: relative; transition: background 0.3s; }' +
'#ws-pro-image { display: block; margin: 0 auto; max-width: 100%; height: auto; box-shadow: 0 2px 8px rgba(0,0,0,0.2); transition: width 0.2s; }' +
/* பொத்தான்கள் CSS */
'.ws-custom-btn { display: inline-flex; align-items: center; margin-right: 15px; margin-bottom: 5px; cursor: pointer; flex-shrink: 0; }' +
'.ws-num-dot { display: flex; flex-direction: column; align-items: center; margin-right: 6px; line-height: 0.8; }' +
'.ws-btn-circle { width: 32px; height: 32px; border-radius: 50%; display: flex; justify-content: center; align-items: center; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,0.2); border: 1px solid #ccc; background: #f0f0f0; transition: all 0.3s; color:#000; }' +
'.ws-zoom-btn, .ws-zoom-reset-btn { background:#fff; border:1px solid #aaa; border-radius:5px; cursor:pointer; color:#333; font-weight:bold; }' +
/* தனிப்பயன் குறியீட்டுப் பொத்தான்கள் CSS */
'.ws-user-tag-btn { background: #e0f7fa; border: 1px solid #00acc1; padding: 4px 10px; border-radius: 4px; margin-right: 10px; margin-bottom: 5px; cursor: pointer; font-size: 13px; font-weight: bold; color: #00838f; }' +
/* இரவுப் பயன்முறை (Dark Mode) CSS */
'body.ws-dark-mode #ws-pro-editor { background: #121212; }' +
'body.ws-dark-mode #ws-pro-toolbar { background: #1e1e1e; border-bottom: 1px solid #333; }' +
'body.ws-dark-mode #ws-pro-right { background: #222; }' +
'body.ws-dark-mode #ws-pro-textarea { background: #1a1a1a; color: #e0e0e0; }' +
'body.ws-dark-mode .ws-btn-circle { background: #333 !important; border-color: #555; color: #fff !important; }' +
'body.ws-dark-mode .ws-num-dot span { color: #aaa !important; }' +
'body.ws-dark-mode .ws-zoom-btn, body.ws-dark-mode .ws-zoom-reset-btn { background: #333; color: #ddd; border-color: #555; }' +
'body.ws-dark-mode .ws-user-tag-btn { background: #006064; color: #e0f7fa; border-color: #00838f; }' +
/* அலைபேசி (Mobile Responsive) CSS */
'@media (max-width: 768px) {' +
'#ws-pro-workspace { flex-direction: column !important; }' + // திரையை மேல்கீழாக மாற்றுதல்
'#ws-pro-right { width: 100% !important; order: 1; flex: 0.6; border-bottom: 2px solid #aaa; }' + // படம் மேலே
'#ws-pro-left { width: 100% !important; order: 2; flex: 1; }' + // உரை கீழே
'#ws-pro-resizer { display: none !important; }' + // பிரிப்பான் மறைக்கப்படும்
'#ws-pro-toolbar { overflow-x: auto; flex-wrap: nowrap; padding-bottom: 15px; }' + // கருவிப்பட்டை ஸ்க்ரோல் ஆகும்
'}' +
'</style>');
$('body').addClass('ws-modal-open');
// 3 நொடி அறிவிப்பு
var fsToast = '<div id="ws-fs-toast" style="position:fixed; top:20px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; padding:10px 25px; border-radius:30px; z-index:9999999; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); font-weight:bold; font-size:14px; border: 2px solid #fff;">முழுத்திரைத் தோன்ற சொடுக்கு</div>';
$('body').append(fsToast);
setTimeout(function() { $('#ws-fs-toast').fadeOut(500, function() { $(this).remove(); }); }, 3000);
// --- சாளரத்தின் HTML கட்டமைப்பு ---
var editorHtml = '<div id="ws-pro-editor">' +
'<div id="ws-pro-header">' +
'<div style="display: flex; align-items: center;">' +
'<a id="ws-pro-normal-edit" title="சாதாரண தொகுப்புப் பக்கத்திற்குத் திரும்ப" style="background:#28a745; color:#fff; padding:6px 15px; text-decoration:none; border-radius:4px; margin-right:10px; font-size:16px; font-weight:bold; cursor:pointer;">இயல்புதொகுசெல்</a>' +
'<a id="ws-pro-save" title="சீரமைத்துச் சேமிக்க (Ctrl+S)" style="background:#fd7e14; color:#fff; padding:6px 15px; cursor:pointer; border-radius:4px; margin-right:20px; font-size:16px; font-weight:bold;">சேமி</a>' +
'<div style="font-size: 14px; font-weight: bold; color: #ccc;">தொகுப்புச் சாளரம்: <span style="color:#fff;">' + mw.config.get('wgTitle') + '</span></div>' +
'</div>' +
'<div id="ws-pro-controls">' +
'<span id="ws-btn-darkmode" title="இரவுப் பயன்முறை (Dark Mode)" style="font-size:24px; margin-top:-5px;">🌙</span>' +
'<span id="ws-btn-full" title="முழுத்திரை (Fullscreen)">⛶</span>' +
'<span id="ws-btn-min" title="சாளரத்தைச் சுருக்கி மேலே வைக்கவும்" style="margin-top:-10px;">_</span>' +
'<span id="ws-btn-close" title="தொகுப்பிலிருந்து முழுமையாக வெளியேற" style="color:#ff4d4d;">×</span>' +
'</div>' +
'</div>' +
'<div id="ws-pro-toolbar">' +
'<div id="ws-custom-tags-container" style="display:flex; align-items:center; border-right:2px solid #ccc; padding-right:15px; margin-right:15px; overflow-x:auto;"></div>' +
'</div>' +
'<div id="ws-pro-workspace">' +
'<div id="ws-pro-left"><textarea id="ws-pro-textarea" spellcheck="false"></textarea></div>' +
'<div id="ws-pro-resizer" title="அளவை மாற்ற இழுக்கவும்"></div>' +
'<div id="ws-pro-right">' +
'<div id="ws-img-loader" style="margin-top: 40%; font-size: 18px; font-weight: bold; color: #6c757d;">படம் ஏற்றப்படுகிறது...</div>' +
'<img id="ws-pro-image" src="" alt="மூலக்கோப்பு" style="display:none;" />' +
'</div>' +
'</div>' +
'</div>';
$('body').append(editorHtml);
var centerBtnHtml = '<button id="ws-center-reopen-btn" style="position:fixed; top:15px; left:50%; transform:translateX(-50%); background:#007bff; color:#fff; border:none; padding:10px 25px; border-radius:30px; font-size:14px; font-weight:bold; cursor:pointer; box-shadow:0 4px 12px rgba(0,0,0,0.4); z-index:999999; display:none; border:2px solid #fff;">மிதக்கும் சாளரத்தைத் திற</button>';
$('body').append(centerBtnHtml);
var $proEditor = $('#ws-pro-editor');
var $proTextarea = $('#ws-pro-textarea');
var $oldTextarea = $('#wpTextbox1');
var $reopenBtn = $('#ws-center-reopen-btn');
$proTextarea.val($oldTextarea.val());
// --- Ctrl+S விசைப்பலகை குறுக்குவழி (Keyboard Shortcut) ---
$(document).on('keydown', function(e) {
if ((e.ctrlKey || e.metaKey) && e.key.toLowerCase() === 's') {
e.preventDefault(); // Browser-இன் இயல்பான சேமிப்பைத் தடுக்கும்
$('#ws-pro-save').click();
}
});
$('#ws-pro-save').on('click', function() {
$proTextarea.val($proTextarea.val().replace(/^[ \t\u00A0]+/gm, ''));
$oldTextarea.val($proTextarea.val());
$('#wpSave').click();
});
// இரவுப் பயன்முறை (Dark Mode Toggle)
var isDarkMode = localStorage.getItem('wsProDarkMode') === 'true';
if(isDarkMode) $('body').addClass('ws-dark-mode');
$('#ws-btn-darkmode').on('click', function() {
$('body').toggleClass('ws-dark-mode');
var currentMode = $('body').hasClass('ws-dark-mode');
localStorage.setItem('wsProDarkMode', currentMode);
});
$('#ws-pro-normal-edit').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val());
$proEditor.remove(); $reopenBtn.remove();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); }
$('.vector-header-container, .vector-sidebar-container, .vector-sticky-header, #siteNotice, #footer, .vector-page-toolbar-container').fadeIn();
});
$('#ws-btn-close').on('click', function() { window.location.href = viewUrl; });
var savedImgZoom = localStorage.getItem('wsProImgZoom');
var currentImgWidth = savedImgZoom ? parseInt(savedImgZoom, 10) : 100;
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' });
// --- API மூலம் சரியான பக்கத்தின் படத்தைப் பெறுதல் ---
var titleStr = mw.config.get('wgTitle');
var parts = titleStr.split('/');
var fileBaseName = parts[0];
var pageNumForApi = parts[1] || 1;
var apiFileName = 'File:' + fileBaseName;
new mw.Api().get({
action: 'query', prop: 'imageinfo', titles: apiFileName, iiprop: 'url',
iiurlwidth: 800, iiurlparam: 'page' + pageNumForApi + '-800px', format: 'json'
}).done(function(data) {
var pages = data.query.pages;
var imgFound = false;
for (var p in pages) {
if (pages[p].imageinfo && pages[p].imageinfo[0] && pages[p].imageinfo[0].thumburl) {
var imgUrl = pages[p].imageinfo[0].thumburl;
$('#ws-pro-image').attr('src', imgUrl).on('load', function() {
$('#ws-img-loader').hide(); $(this).show(); setTimeout(adjustImageScroll, 100);
});
imgFound = true;
}
}
if(!imgFound) { $('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show(); $('#ws-img-loader').hide(); }
}).fail(function() {
$('#ws-pro-image').attr('src', $('.prp-page-image img').attr('src')).show(); $('#ws-img-loader').hide();
});
function toggleFullScreen() {
if (!document.fullscreenElement) { document.documentElement.requestFullscreen().catch(function(err) {}); }
else { if (document.exitFullscreen) { document.exitFullscreen(); } }
}
$('#ws-btn-full').on('click', toggleFullScreen);
var hasTriggeredFullscreen = false;
$proEditor.on('click', function() {
if (!hasTriggeredFullscreen && !document.fullscreenElement) {
document.documentElement.requestFullscreen().catch(function(e) {});
hasTriggeredFullscreen = true;
}
});
$('#ws-btn-min').on('click', function() {
$oldTextarea.val($proTextarea.val()); $proEditor.hide();
$('body').removeClass('ws-modal-open');
if (document.fullscreenElement) { document.exitFullscreen(); } $reopenBtn.fadeIn(200);
});
$reopenBtn.on('click', function() { $(this).hide(); $proEditor.show(); $('body').addClass('ws-modal-open'); });
// பிரிப்பான் (Resizer) சுட்டி நகர்வு
var isDragging = false;
$('#ws-pro-resizer').on('mousedown', function(e) { isDragging = true; $('body').css('user-select', 'none'); });
$(document).on('mousemove', function(e) {
if (!isDragging) return;
var containerWidth = $('#ws-pro-workspace').width();
var leftWidth = (e.pageX / containerWidth) * 100;
if (leftWidth > 10 && leftWidth < 90) {
$('#ws-pro-left').css('width', leftWidth + '%');
$('#ws-pro-right').css('width', (100 - leftWidth) + '%');
}
}).on('mouseup', function() { isDragging = false; $('body').css('user-select', ''); });
// =========================================================================
// புதிய பொத்தான்களை உருவாக்கும் பொதுவான சார்பு (Function)
// =========================================================================
var $toolbar = $('#ws-pro-toolbar');
function createBtn(num, iconHtml, bgColor, onClick, titleText) {
var dotHtml = '<div class="ws-num-dot" style="justify-content: center; margin-right: 8px;"><span style="font-size: 24px; color: #555; font-weight: bold;">' + num + '</span></div>';
var btn = '<div id="ws-pro-btn-' + num + '" class="ws-custom-btn" title="' + (titleText || '') + '">' +
dotHtml + '<div id="ws-pro-btn-inner-' + num + '" class="ws-btn-circle" style="background-color: ' + bgColor + ';">' + iconHtml + '</div>' +
'</div>';
$toolbar.append(btn);
$('#ws-pro-btn-' + num).on('click', onClick);
}
// =========================================================================
// --- இது பொத்தான் 1 என்பதற்கான நிரல் (OCR தூய்மையாக்கி) ---
// =========================================================================
createBtn(1, '<span style="font-size:18px;">✨</span>', '#e0f2f1', function() {
var text = $proTextarea.val();
// 1. கண்ணுக்குத் தெரியாத குறியீடுகளை நீக்குதல் (Zero-width)
text = text.replace(/[\u200B-\u200D\uFEFF]/g, '');
// 2. இரண்டுக்கும் மேற்பட்ட இடைவெளிகளை ஒன்றாக்குதல்
text = text.replace(/[ \t]{2,}/g, ' ');
// 3. வரியின் தொடக்கத்தில் உள்ள இடைவெளிகளை நீக்குதல்
text = text.replace(/^[ \t]+/gm, '');
$proTextarea.val(text);
// செய்தியைத் திரையில் காட்ட ஒரு சிறிய மிதக்கும் குறிப்பு
$('body').append('<div id="ws-ocr-msg" style="position:absolute; top:50px; left:50%; transform:translateX(-50%); background:#28a745; color:white; padding:5px 15px; border-radius:5px; z-index:9999999;">தூய்மையாக்கப்பட்டது!</div>');
setTimeout(function(){ $('#ws-ocr-msg').fadeOut(500, function(){$(this).remove();}); }, 1500);
}, 'OCR தூய்மையாக்கி (Spaces & Invisible chars cleaner)');
// =========================================================================
// --- இது பொத்தான் 2 என்பதற்கான நிரல் (பிரிப்பான் - Line Splitter) ---
// =========================================================================
createBtn(2, '<span style="font-weight:bold; font-size:18px;">↵</span>', '#fff3cd', function() {
var pos = $proTextarea[0].selectionStart;
var text = $proTextarea.val();
// கர்சர் இருக்கும் இடத்தில் வரியை உடைத்து \n சேர்க்கும்
$proTextarea.val(text.substring(0, pos) + '\n' + text.substring(pos));
// கர்சரை புதிய வரியின் தொடக்கத்தில் வைக்கும்
$proTextarea[0].setSelectionRange(pos + 1, pos + 1);
$proTextarea.focus();
}, 'வரியைப் பிரிக்க (Split Line)');
// பொத்தான் 3 & 4 (பழைய படி)
createBtn(3, '<span style="font-size:18px; font-weight:bold;">+</span>', '#90EE90', function() { $proTextarea.val('\n\n' + $proTextarea.val().replace(/^\s+/, '')); });
createBtn(4, '<span style="font-size:18px; font-weight:bold;">−</span>', '#FFB6C1', function() { $proTextarea.val($proTextarea.val().replace(/^\s+/, '')); });
// =========================================================================
// --- இது பொத்தான் 5 என்பதற்கான நிரல் (Auto Join) ---
// =========================================================================
var isAutoJoinActive = false; var floatingUndoTimer = null; var lastUndoState = null;
createBtn(5, '<span style="font-size:19px; font-weight:bold; color:#111;">> <</span>', '#d0d0d0', function() {
isAutoJoinActive = !isAutoJoinActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-5');
function removeFloatingUndo() { $('#ws-floating-undo').remove(); clearInterval(floatingUndoTimer); }
if (isAutoJoinActive) {
$innerBtn.addClass('ws-pulsing');
$proTextarea.on('click.wsAutoJoin', function(e) {
var text = $proTextarea.val(); var pos = $proTextarea[0].selectionStart;
if (pos === $proTextarea[0].selectionEnd) {
var startSpace = pos, endSpace = pos;
while (startSpace > 0 && /[\s\n]/.test(text.charAt(startSpace - 1))) { startSpace--; }
while (endSpace < text.length && /[\s\n]/.test(text.charAt(endSpace))) { endSpace++; }
if (startSpace < endSpace && startSpace > 0 && endSpace < text.length) {
lastUndoState = { text: text, pos: pos };
$proTextarea.val(text.substring(0, startSpace) + text.substring(endSpace));
$proTextarea[0].setSelectionRange(startSpace, startSpace);
removeFloatingUndo();
var timeLeft = 4;
$('body').append('<button id="ws-floating-undo" style="position:absolute; top:'+(e.pageY - 40)+'px; left:'+(e.pageX - 20)+'px; background:#ff4d4d; border:1px solid #cc0000; color:white; padding:4px 10px; border-radius:12px; font-weight:bold; cursor:pointer; z-index:9999999;">மீளமை ('+timeLeft+')</button>');
$('#ws-floating-undo').on('click', function() { if (lastUndoState) { $proTextarea.val(lastUndoState.text); $proTextarea[0].setSelectionRange(lastUndoState.pos, lastUndoState.pos); removeFloatingUndo(); } });
floatingUndoTimer = setInterval(function() { timeLeft--; if (timeLeft > 0) $('#ws-floating-undo').text('மீளமை (' + timeLeft + ')'); else removeFloatingUndo(); }, 1000);
}
}
});
} else {
$innerBtn.removeClass('ws-pulsing'); $proTextarea.off('click.wsAutoJoin'); removeFloatingUndo();
}
});
// =========================================================================
// --- இது பொத்தான் 6 என்பதற்கான நிரல் (மாய உருப்பெருக்கி 🔍) ---
// =========================================================================
var isMagnifierActive = false;
createBtn(6, '<span style="font-size:20px;">🔍</span>', '#f0f0f0', function() {
isMagnifierActive = !isMagnifierActive;
var $innerBtn = $('#ws-pro-btn-inner-6'); var $img = $('#ws-pro-image');
if (isMagnifierActive) {
$innerBtn.css('background-color', '#ffeb3b');
if ($('#ws-img-wrapper').length === 0) { $img.wrap('<div id="ws-img-wrapper" style="position:relative; display:inline-block; vertical-align:top; max-width:100%;"></div>'); }
if ($('#ws-loupe').length === 0) {
var loupeHtml = '<div id="ws-loupe" style="position:absolute; width:80%; height:120px; border:3px solid #ff4d4d; border-radius:10px; box-shadow: 0 8px 25px rgba(0,0,0,0.6); background-repeat: no-repeat; background-color:#fff; cursor: move; z-index: 9999; left: 10%; top: 20%;"></div>';
$('#ws-img-wrapper').append(loupeHtml);
}
var $loupe = $('#ws-loupe'); $loupe.show();
function updateLoupeBg() {
var zoom = 2.5;
var bgW = $img.width() * zoom; var bgH = $img.height() * zoom;
$loupe.css({ 'background-image': 'url(' + $img.attr('src') + ')', 'background-size': bgW + 'px ' + bgH + 'px' });
var lLeft = parseInt($loupe.css('left'), 10) || 0; var lTop = parseInt($loupe.css('top'), 10) || 0;
$loupe.css('background-position', (-lLeft * zoom) + 'px ' + (-lTop * zoom) + 'px');
}
updateLoupeBg(); window.updateMagnifier = updateLoupeBg;
var isDraggingLoupe = false; var startY, startX, startTop, startLeft;
// தொடுதிரை (Touch) மற்றும் சுட்டி (Mouse) இரண்டிற்கும் ஆதரவு
$loupe.on('mousedown.loupe touchstart.loupe', function(e) {
isDraggingLoupe = true;
var clientY = e.type.includes('touch') ? e.originalEvent.touches[0].pageY : e.pageY;
var clientX = e.type.includes('touch') ? e.originalEvent.touches[0].pageX : e.pageX;
startY = clientY; startX = clientX;
startTop = parseInt($loupe.css('top'), 10) || 0; startLeft = parseInt($loupe.css('left'), 10) || 0;
$loupe.css('cursor', 'grabbing');
e.preventDefault();
});
$(document).on('mousemove.loupe touchmove.loupe', function(e) {
if (!isDraggingLoupe) return;
var clientY = e.type.includes('touch') ? e.originalEvent.touches[0].pageY : e.pageY;
var clientX = e.type.includes('touch') ? e.originalEvent.touches[0].pageX : e.pageX;
var dy = clientY - startY; var dx = clientX - startX;
$loupe.css({ 'top': (startTop + dy) + 'px', 'left': (startLeft + dx) + 'px' });
updateLoupeBg();
});
$(document).on('mouseup.loupe touchend.loupe', function() {
isDraggingLoupe = false;
if ($('#ws-loupe').length) $('#ws-loupe').css('cursor', 'move');
});
} else {
$innerBtn.css('background-color', '#f0f0f0'); $('#ws-loupe').hide();
$(document).off('mousemove.loupe touchmove.loupe mouseup.loupe touchend.loupe');
window.updateMagnifier = null;
}
});
// பொத்தான்கள் 7, 8, 9 காலியாக உள்ளன (எதிர்காலப் பயன்பாட்டிற்கு)
for (var i = 7; i <= 9; i++) { createBtn(i, '<span style="font-weight:bold; color:#888;">?</span>', '#f0f0f0', function() {}); }
// =========================================================================
// --- இது பொத்தான் 10 என்பதற்கான நிரல் (தனிப்பயன் அமைப்பு ⚙️) ---
// =========================================================================
// தனிப்பயன் குறியீடுகளைச் செருகும் சார்பு
function insertCustomTag(pre, post) {
var ta = $proTextarea[0], start = ta.selectionStart, end = ta.selectionEnd, text = ta.value;
ta.value = text.substring(0, start) + pre + text.substring(start, end) + post + text.substring(end);
ta.focus();
ta.selectionStart = start + pre.length;
ta.selectionEnd = start + pre.length + (end - start);
}
// சேமிக்கப்பட்ட குறியீடுகளைத் திரையில் காட்டும் சார்பு
function renderCustomTags() {
var storedTags = JSON.parse(localStorage.getItem('wsProCustomTags')) || [];
var $container = $('#ws-custom-tags-container');
$container.empty();
storedTags.forEach(function(tag) {
if(tag.label) {
var btn = $('<button>').addClass('ws-user-tag-btn').text(tag.label).on('click', function() {
insertCustomTag(tag.pre, tag.post);
});
$container.append(btn);
}
});
}
renderCustomTags(); // சாளரம் திறந்தவுடன் ஏற்றவும்
createBtn(10, '<span style="font-size:20px;">⚙️</span>', '#e1bee7', function() {
if($('#ws-tag-modal').length > 0) return; // ஏற்கனவே திறந்திருந்தால் தடுக்க
var storedTags = JSON.parse(localStorage.getItem('wsProCustomTags')) || [{label:'', pre:'', post:''}];
var modalHtml = '<div id="ws-tag-modal" style="position:fixed; top:50%; left:50%; transform:translate(-50%, -50%); background:#fff; padding:20px; border-radius:8px; box-shadow:0 10px 30px rgba(0,0,0,0.5); z-index:9999999; width:500px; max-width:90vw;">' +
'<h3 style="margin-top:0; color:#333;">தனிப்பயன் குறியீடுகள் (Custom Tags)</h3>' +
'<div id="ws-tag-list" style="max-height:60vh; overflow-y:auto; margin-bottom:15px;"></div>' +
'<button id="ws-tag-add-row" style="background:#28a745; color:#fff; border:none; padding:5px 10px; cursor:pointer; border-radius:4px; margin-bottom:15px;">+ புதிய வரி சேர்</button><br>' +
'<button id="ws-tag-save" style="background:#007bff; color:#fff; border:none; padding:8px 20px; cursor:pointer; border-radius:4px; font-weight:bold; margin-right:10px;">சேமி</button>' +
'<button id="ws-tag-close" style="background:#dc3545; color:#fff; border:none; padding:8px 20px; cursor:pointer; border-radius:4px; font-weight:bold;">ரத்து</button>' +
'</div>';
$('body').append('<div id="ws-tag-overlay" style="position:fixed; top:0; left:0; width:100vw; height:100vh; background:rgba(0,0,0,0.6); z-index:9999998;"></div>');
$('body').append(modalHtml);
var $list = $('#ws-tag-list');
function addRow(label, pre, post) {
var row = '<div class="ws-tag-row" style="display:flex; gap:5px; margin-bottom:5px;">' +
'<input type="text" class="ws-tag-lbl" placeholder="பெயர்" value="'+(label||'')+'" style="flex:1; padding:5px;">' +
'<input type="text" class="ws-tag-pre" placeholder="Prefix" value="'+(pre||'')+'" style="flex:2; padding:5px; font-family:monospace;">' +
'<input type="text" class="ws-tag-post" placeholder="Suffix" value="'+(post||'')+'" style="flex:2; padding:5px; font-family:monospace;">' +
'<button class="ws-tag-del" style="background:#ff4d4d; color:#fff; border:none; cursor:pointer; border-radius:3px;">X</button>' +
'</div>';
$list.append(row);
}
storedTags.forEach(function(t) { addRow(t.label, t.pre, t.post); });
if(storedTags.length === 0) addRow('','',''); // குறைந்தபட்சம் ஒரு வரி
$('#ws-tag-add-row').on('click', function() { addRow('','',''); });
$list.on('click', '.ws-tag-del', function() { $(this).parent().remove(); });
$('#ws-tag-close, #ws-tag-overlay').on('click', function() {
$('#ws-tag-modal, #ws-tag-overlay').remove();
});
$('#ws-tag-save').on('click', function() {
var newTags = [];
$('.ws-tag-row').each(function() {
var lbl = $(this).find('.ws-tag-lbl').val().trim();
var pre = $(this).find('.ws-tag-pre').val();
var post = $(this).find('.ws-tag-post').val();
if(lbl !== '') newTags.push({label: lbl, pre: pre, post: post});
});
localStorage.setItem('wsProCustomTags', JSON.stringify(newTags));
renderCustomTags();
$('#ws-tag-modal, #ws-tag-overlay').remove();
});
}, 'தனிப்பயன் குறியீடுகள் அமைப்பு (Settings)');
// =========================================================================
// வலது மூலையில் எழுத்து & பட அளவு கட்டுப்பாடுகள்
// =========================================================================
var zoomControlsHtml = '<div style="margin-left: auto; display: flex; align-items: center; gap: 20px; padding: 6px 15px; border-radius: 8px; border: 1px solid #ced4da;">' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px;">' +
'<button id="ws-txt-minus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைச் சிறியதாக்க">−</button>' +
'<button id="ws-txt-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">எழுத்து</button>' +
'<button id="ws-txt-plus" class="ws-zoom-btn" title="எழுத்துகளைப் பெரிதாக்க">+</button>' +
'</div>' +
'<div style="display: flex; align-items: center; gap: 10px; border-left: 2px solid #adb5bd; padding-left: 20px;">' +
'<button id="ws-img-minus" class="ws-zoom-btn" title="படத்தைச் சிறியதாக்க">−</button>' +
'<button id="ws-img-reset" class="ws-zoom-reset-btn" title="இயல்பு நிலைக்கு மாற்ற">படம்</button>' +
'<button id="ws-img-plus" class="ws-zoom-btn" title="படத்தைப் பெரிதாக்க">+</button>' +
'</div>' +
'</div>';
$toolbar.append(zoomControlsHtml);
var currentTxtSize = 15;
$('#ws-txt-plus').on('click', function() { currentTxtSize += 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); });
$('#ws-txt-minus').on('click', function() { if (currentTxtSize > 10) { currentTxtSize -= 2; $('#ws-pro-textarea').css('font-size', currentTxtSize + 'px'); } });
$('#ws-txt-reset').on('click', function() { currentTxtSize = 15; $('#ws-pro-textarea').css('font-size', '15px'); });
function adjustImageScroll() {
var $img = $('#ws-pro-image'); var $container = $('#ws-pro-right');
if (!$img.is(':visible')) return;
var scrollPos = ($img.width() - $container.width()) * 0.65;
if (scrollPos > 0) { $container.scrollLeft(scrollPos); } else { $container.scrollLeft(0); }
if (window.updateMagnifier) window.updateMagnifier();
}
$('#ws-img-plus').on('click', function() {
currentImgWidth += 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50);
});
$('#ws-img-minus').on('click', function() {
if (currentImgWidth > 40) {
currentImgWidth -= 20; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': 'none', 'width': currentImgWidth + '%' }); setTimeout(adjustImageScroll, 50);
}
});
$('#ws-img-reset').on('click', function() {
currentImgWidth = 100; localStorage.setItem('wsProImgZoom', currentImgWidth);
$('#ws-pro-image').css({ 'max-width': '100%', 'width': '100%' }); $('#ws-pro-right').scrollLeft(0);
if (window.updateMagnifier) window.updateMagnifier();
});
}
}
});
});
// </nowiki>
4b6su4ut2mxbhv7x8p0j67vkllt2llg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/878
250
642405
1930703
2026-05-06T12:54:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்த மருள் நீக்கியார் அவரிடம் மன்றாடித் தம் பொருட்டு வாழுமாறு வேண்டினார். கலிப்பகையார் வரலாறு அவரது அளவற்ற வீரத்தினையும், அரசர் பணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிப்பா|850|கலிப்பா}}</noinclude>அறிந்த மருள் நீக்கியார் அவரிடம் மன்றாடித் தம் பொருட்டு வாழுமாறு வேண்டினார்.
கலிப்பகையார் வரலாறு அவரது அளவற்ற வீரத்தினையும், அரசர் பணி மேற்கொண்ட கடமையுள்ளத்தினையும், அவரை மணத்தால் கணவராகக் கொள்ளாவிடினும் மனத்தால் வரித்த நிலையில் அவர் இன்றி வாழ விரும்பாத திலகவதியாரின் தூய உள்ளத்தினையும் காட்டுகின்றது.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
{{larger|<b>கலிப்பா</b>}} தமிழில் வழங்கும் பாவகைகளுள் ஒன்று. பாக்களை ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி என நான்கு வகையாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். அவற்றுள் மூன்றாம் நிலையில் வைத்து எண்ணப்படும் கலிப்பா வெண்பா நடையை ஒத்து அமைவதாகும். கலிப்பா நான்கு வகையாக அமையும் என்பர் தொல்காப்பியர். அவை ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கவி என்பன. ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலும் காணப்படாத ஒரு தனித் தன்மை கலிப்பாவிற்கு உண்டு. கலிப்பா உறுப்புகளைப் பெற்று அமைவதே அதன் தனித்தன்மையாகும். தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறும் கலிப்பாவில் உறுப்புகளாக அமையும். கூறப் பெற்ற ஆறு உறுப்புகளும் பெற்று வருகிற கலிப்பாக்களும், ஒருசில குறைந்து வருகிற கலிப்பாக்களும் உள.
கலி உறுப்புகளுள் தரவு என்பது கலிப்பாவின் தலை உறுப்பாகக் கருதப்பெறுவது. பாவின் தன்மைக்கேற்ப அளவில் கூடியும் குறைந்தும் வரும். தாழிசை என்பது இரண்டாம் நிலையில் அமையும் உறுப்பாகும். தாழம்பட்ட ஓசையுடைமையால் இப்பெயர் பெற்றது. இது பெரும்பாலும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியே வரப்பெறும். அராகம் என்பது முடுகியல் ஓசையுடையது. துணை உறுப்பாகக் கொள்ளத்தக்கது. கலிப்பாவில் சில வகைகளே இவ்வுறுப்புடன் காணப்படும். அம்போதரங்கம் என்பது கடல் அலை போலப் பெரிதும் சிறிதுமாக அமையும் ஒரு துணை உறுப்பாகும். இதுவும் சில வகைகளில் மட்டிலும் காணப்படும். தனிச்சொல் என்பது கலிச்செய்யுளின் பல உறுப்புகளிலும் கூறப்படும் கருத்துகளை இணைப்பதற்கு வரும் ஓர் உறுப்பாகும். தனிச்சொல்லாக அமைவதனால் இப்பெயர் பெற்றது. சுரிதகம் கலிப்பாவின் இறுதியில் அமையும் சிறப்பான உறுப்பாகும். மற்றைய உறுப்புகளில் அமைந்துள்ள கருத்துகளைச் சுருக்கிக் கூறும் தன்மையுடையது. நத்தை போன்று சுரித்தலால் இப்பெயர் பெற்றது.
கலிப்பா இரண்டு பொருள்களில் சிறந்து வரும். ஒன்று காமம் நுதலிய பொருள். மற்றொன்று தேவர்களை வழிபடுகிற கடவுள் வாழ்த்துப் பொருள்.
ஒத்தாழிசைக்கலி, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புகள் பெற்று அமையும், இதன் மற்றொரு வகை தேவர்களை முன்னிலைப்படுத்தி வழிபடுவதாக அமையும். அது வண்ணகம், ஒருபோகு என இருவகைப்படும். வண்ணகம் என்பது ஒத்தாழிசைக்குக் கூறப்பெற்ற நான்கு உறுப்புகளுடன் எண் என்னும் ஓர் உறுப்புச் சேர்ந்து வரப்பெறும். மற்றொரு வகையாகிய ஒருபோகு கொச்சக ஒருபோகு எனவும், அம்போதரங்க ஒருபோகு எனவும் இருவகையாக அமையும். கொச்சக ஒருபோகு யாப்பினாலும் பொருளினாலும் வேற்றுமையுடையதாய் நான்கு பிரிவாக அமையும். அம்போதரங்க ஒருபோகு அறுபதடி மேல் எல்லையாகவும் முப்பதடி சிற்றெல்லையாகவும் கொண்டமையும், கலிவெண்பா என்பது பாடல் முழுமையும் ஒரே கருத்தமைய, வெண்பாவின் தன்மையாகிய வெண்சீர் பயின்று திரிபு இல்லாமல் வருவது என்று கூறுவர். இப்பாவில் சுட்டவில்லை. வேறு வகையைத் தொல்காப்பியர் கொச்சகக் கலி என்பது உறுப்புகள் கூறப்பெற்ற வரிசையில் அமையாமல் மாறுபட அமைந்தும். ஐஞ்சீர் அடுக்கியும், ஆறு உறுப்புகள் பெற்று வெண்சீர் பயின்றும் வருவதாகும். உறழ்கலி கூற்றும் அதற்குரிய மாற்றமும் இணைந்த நடைப்பாங்கில் அமைவதாகும்.
கலிப்பாவின் இந்நான்கு வகைகளையும் ஒத்தாழிசை, வெண்கலி, கொச்சகக்கலி என மூவகையாக அமிதசாகரர் குறித்துள்ளார். அவற்றுள் ஒத்தாழிசை நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை என மூன்று பிரிவாக அமையும். இவை மூன்றும் முறையே தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளையும், அம்போதரங்கம் என்னும் ஓர் உறுப்பைக் கூட்டி ஐந்து உறுப்புகளையும், அராசும் என்னும் உறுப்பை அவற்றுடன் கூட்டிஆறு உறுப்புகளையும் பெற்று அமையும்.
வெண்கலி என்பது இருவகையாக அமையும். ஒன்று வெண்கலிப்பா, மற்றொன்று கலிவெண்பா. கலித்தளை அமைத்து கலியோசை மிகுந்து வருவது வெண்கலிப்பா என்றும்; வெண்தளை அமைந்து வெள்ளோசை மிகுந்து வருவது கலிவெண்பா என்றும் கூறுவர்.
கொச்சகக் கலி என்பது ஐந்து பிரிவாக அமையும். அவை 1. தரவு கொச்சகம், 2. தரவினைக் கொச்சகம், 3. சிஃறாழிசைக் கொச்சகம், 4. பஃறா-<noinclude></noinclude>
6m7jqc1w3yrfphcfnxy2nduiqkm2n8b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/879
250
642406
1930728
2026-05-06T13:36:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ழிசைக் கொச்சகம், 5. மயங்கிசைக் கொச்சகம் என்பன. தரவு கொச்சகம் என்பது ஒரு தரவு வந்து கொச்சகக் கலிப்பாவாக அமைவது. தரவிணைக் கொச்சகம் என்பது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிபோர்னியா|851|கலிபோர்னியா}}</noinclude>ழிசைக் கொச்சகம், 5. மயங்கிசைக் கொச்சகம் என்பன. தரவு கொச்சகம் என்பது ஒரு தரவு வந்து கொச்சகக் கலிப்பாவாக அமைவது. தரவிணைக் கொச்சகம் என்பது இரு தரவு அமைந்து கலிப்பாவாக அமைவது. சிஃறாழிசைக் கொச்சகம் என்பது தாழிசைகள் சில அமைந்து வருவது. பஃறாழிசைக் கொச்சகம் என்பது தாழிசைகள் பல அமைந்து வருவது. மயங்கிசைக் கொச்சகம் என்பது கூறப்பெற்ற ஆறு உறுப்புகளும் முறையே வாராமல் மயங்கி வருவதும்; பிறதளை மயங்கியும், பிற அடி மயங்கியும், பிற பா மயங்கியும் வருவது ஆகும்.
கொச்சகம் என்பது சிறிதும் பெரிதுமாக மடிக்கப் பெறும் கொய்சகம் போன்று அடிகள் பெரிதும் சிறிதுமாக அமைவதால் பெற்ற பெயர் என்று கூறுவர். வழக்குச் சொற்களைக் கொச்சை என்று சொல்வது போல வழக்குச் சொற்கள் மிகுதியாக அமைவதால் கொச்சகம் எனப் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
{{Right|<b>சு.சா.</b>}}
{{larger|<b>கலிபோர்னியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் முப்பத்து ஒன்றாம் மாநிலமாக கி.பி. 1850-இல் இணைந்த பெருநிலப்பகுதி. இதன் பரப்பு 411,015 ச.கி.மீ. அமெரிக்காவின் மேற்கில் பசிபிக்கு மாக்கடலைச் சார்ந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 879
|bSize = 480
|cWidth = 188
|cHeight = 143
|oTop = 320
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|கலிபோர்னியா அமைவிடம்}}
சாக்கரமெண்டோ (Sacramento). இதற்கு வடக்கில் ஒரிகன் மாநிலமும், கிழக்கில் நெவாடாவும் அரிசோனாவும், தெற்கில் மெக்சிகோவும், மேற்கில் பசிபிக்கு மாக்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகையைப் பொறுத்தவரை அமெரிக்க மாநிலங்களில் முதலாவதாகவும், பரப்பைப் பொறுத்த வரை மூன்றாவதாகவும் உள்ள கலிபோர்னியா (California), பலதிறப்பட்ட தட்பவெப்பநிலைகளை உடையதாகும். மேற்குக் கடற்கரைப் பகுதி 1,930.8 கி.மீ. நீளமுள்ளது. இப்பகுதியில்பல சிறுமலைகள் கடற்கரை மலைத் தொடர்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. சான்பிரான்சிசுகோவின் (Sanfrancisco) வடக்கில் அரேனா முனையிலிருந்து மாநிலத்தின் தெற்குக் கோடிவரை உள்ள நிலப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. காடுகள் நிறைந்த வடபகுதியில் மழை மிகுதி. பொன்வாயில் (Golden Gate) என்னுடமித்திற்குத் தெற்கில் குறிப்பிடத்தக்க பெரிய ஆறு எதுவும் கடலில் கலக்கவில்லை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 879
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 227
|oTop = 178
|oLeft = 254
|Location = center
|Description =
}}
{{center|கலிபோர்னியா}}
கலிபோர்னியா 58 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தின் பெருமைக்கு வேளாண்மையை விடத் தொழிற்பெருக்கமே காரணம் என்று கருதப்பட்டபோதிலும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இதுவே அமெரிக்க மாநிலங்களுள் தலையாயது. தக்காளி, சிவப்புமுள்ளங்கி, கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கொடி, திண்ணிய பூக்கோசுவகை, பசலைக்கீரை, வைந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகைகள் (straw–berry) முதலிய பல தானியங்கள் மற்ற மாநிலங்களை விட மிகுதியாக இங்கு விளைகின்றன. உலர்புல், திராட்சை, பருத்தி முதலியனவும் மிகுதியாகப் பயிராகின்றன.<noinclude>
<b>வா.க. 6 – 54அ</b></noinclude>
dz9x33majwhm0vck82ptlli9tgqfnwo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/880
250
642407
1930757
2026-05-06T17:51:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீன் பிடிக்கும் தொழில் நன்கு வளர்ந்துள்ளது. பாறை எண்ணெய், எண்ணெய் உற்பத்தியில் 1960–களில் அமெரிக்கக் கண்டத்திலேயே மூன்றாம் இடத்தை இம்மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிபோர்னியா|852|கலிபோர்னியா}}</noinclude>மீன் பிடிக்கும் தொழில் நன்கு வளர்ந்துள்ளது. பாறை எண்ணெய், எண்ணெய் உற்பத்தியில் 1960–களில் அமெரிக்கக் கண்டத்திலேயே மூன்றாம் இடத்தை இம்மாநிலம் பெற்றது. நிலத்திலிருந்து வெளிப்படும் வளி (நிலவளி), சிமிண்டு, மணல், சரளைக்கற்கள் ஆகியவை உற்பத்தியிலும் இம்மாநிலம் சிறப்பிடம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, இங்குப் பெருந்தொழில்கள் பல பெருகியுள்ளன. குறிப்பாக, போக்குவரத்துச் சாதனப் பொருள்கள், மின்சாரப் பொருள்கள், இயந்திரப் பொருள்கள், உலோகப் பொருள்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். திரைப்படத் தொழிலிலும் தொலைக்காட்சித் தோடர்பான தொழில்கனிலும் கலிபோர்னியா உலகப்புகழ் பெற்றுள்ளது. சுற்றுலா வளர்ச்சித் தொழில் மூலம் இம்மாநிலம் மிகுந்த வருமானம் பெறுகிறது. திசுனிலாந்து (Disney Land), சான் பிராசிசுகோ, தங்கவாயிற்பரலம் (Golden Gate Bridge), மிகப்பெரும் உயரமான மரலகைகள், பல தேசிய பூங்காக்கள், காடுகள், அழகான கடற்கரைகள் முதலிய பலவும் யாவரும் கண்டுகளிக்கத்தக்கவை.
<b>வரலாறு:</b> ஆல்ட்டா கலிபோர்னியா எனப்படும் கலிபோர்னியாவின் வடபகுதிக்கு கி.பி. 1542–இல் முதன்முதலாகச் சென்ற இசுபானிய மாலுமியின் பெயர், சுவான் ரொட்ரீகசு காப்ரில்லோ (Juan Rodrigues Cabrillo). சர் பிரான்சிசு திரேக்கு (Sir Francis Drake) என்னும் ஆங்கிலேயன் கி.பி. 1579–இல் சான் பிரான்சிசுகோவுக்கு வடக்கே சென்று, அங்கு உள்ள இரேயசுப் (Rayes) பகுதியை மகாராணி முதலாம் எலிசபெத்துக்கு உரிமையாக்கினான். அதன்பிறகு அங்குக் குடியேற்றம் சிறிது சிறிதாகத் தொடர்ந்தது. கலிபோர்னியாப் பகுதிகளின் ஆளுநர் முயற்சிகளால், கி.பி. 1769–இல் அவர் நிகழ்த்திய படையெழுச்சியின் மூலம் சாண்டியாகோ வளைகுடாவைச் (San–Diego Bay) சுற்றிய பகுதி அமெரிக்கக் குடியேற்றமாகியது. அடுத்த ஆண்டில், மொண்டேரே (Monterey) வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் குடியேற்றங்களேற்பட்டன. ஆல்ட்டா கலிபோர்னியாவுக்கு மொண்டேரே தலைநகராகியது. பல கிறித்தவச் சமய தூதுக் குழுக்கள் அங்கே சென்றன. அங்கு வாழ்ந்து வந்த இந்தியர்களைக் கிறித்தவர்களாக்கும் முயற்சி தொடர்ந்தது. ஆடு மாடு மேய்க்கும் தொழில் வளர்ச்சியுற்றது. தோல்களும் தோற்பொருள்களும் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பெற்றன. சுவான் படி சுட்டா தே-ஆன்சே (Juan Bautista–De–Anza) கி.பி. 1776–இல் சான் பிராசிசுகோவைத் தோற்றுவித்து, அதை ஒரு புறக்காவல் அரணாக அமைத்தார்.
ஆதியில் அங்குக் குடியேறியவர்களுக்குக் கலிபோர்னியர் எனப் பெயர் வழங்கியது. இசுபெயின் நாடோ அதன்பின் ஆதிக்கம்பெற்ற மெக்சிகோவோ கலிபோர்னியர் செய்திகளில் அதிகம் தலையிடவில்லை. மெக்சிகோ மக்கள் குடியேற்றங்கள் கி.பி. 1840 களில் அங்கு ஏற்பட்டன. தெற்குப் பகுதியில் உருசியக் குடியேற்றங்கள் சிலவும் ஏற்பட்டன. கலிபோர்னியர் கி.பி. 1836–ஆம் ஆண்டிலேயே தமது சுதந்திரத்தை வலியுறுத்தத் தொடங்கினர். கலிபோர்னியாவில் அதிகாரம் செலுத்திய மெக்சிகோ ஆளுநரை கி.பி. 1845–இல் விரட்டிவிட்டனர். ஆளுநர் ஆட்சி முடிவுற்றது. அமெரிக்க ஆய்வுப் பணியாளர் சான் சி. பிரமாண்டு (John C. Fremont) என்பாரின் தூண்டுதலின் விளைவாக கி.பி. 1846-இல் சொனோமாப் (Sonoma) பகுதியில் அமெரிக்கக் குடியேற்ற மக்கள் ஒரு குடியரசை நிறுவிக் கொண்டனர். அந்த ஆண்டிலேயே அமெரிக்காவும் மெக்சிகோவும் போரில் இறங்கின. அப்போரை கி.பி. 1848–இல் முடிவுறச் செய்த குவாடலூப்-இதால்கோ (Quadelupe-Hidalgo) உடன்படிக்கையின்படி, கலிபோர்னிய நிலப்பகுதி முழுவதையும் அமெரிக்கா மெக்சிகோவிடமிருந்து பெற்றுக் கொண்டது. பிறகு அப்பகுதியில் தங்கச்சுரங்கங்கள் இருப்பது அறியப்பட்டபின், மேலும் மேலும் அமெரிக்கர்கள் கிழக்கிலிருந்து மேற்கே குடியேறலாயினர். முதன்முதலில் அங்குத் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவர் சேம்சு மார்செல் (James Marshall) என்பாராவர். கலிபோர்னிய மக்கள் தமக்கு மாநிலத் தகுதி வேண்டுமென கி.பி. 1849–ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தனர். கலிபோர்னியா கி.பி. 1850–ஆம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 880
|bSize = 480
|cWidth = 198
|cHeight = 210
|oTop = 330
|oLeft = 256
|Location = center
|Description =
}}
{{center|இலாசு ஏஞ்சல்சிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக்<br>கழகப் பகுதி}}<noinclude></noinclude>
k2mkl0qj2vr9odi8i55x7olxgnce54t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/881
250
642408
1930758
2026-05-06T18:08:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டுச்சமரச உடன்பாட்டின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அங்கு அடிமை முறை புகுத்தப்படவில்லை. தலைநகர் கி.பி. 1854-இல் சாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிபோர்னியா|853|கலியநாயனார்}}</noinclude>ஆண்டுச்சமரச உடன்பாட்டின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அங்கு அடிமை முறை புகுத்தப்படவில்லை. தலைநகர் கி.பி. 1854-இல் சாக்ரமெண்டோவுக்கு மாற்றப் பெற்றது. இலாசு ஏஞ்சல்சு (Los Angeles) முதலிய புதிய நகரங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. மக்கள்தொகை ஆண்டுதோறும் பெருகலாயிற்று.
அங்கு கி.பி. 1879-ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்ற மாநில அரசியல் அமைப்பு இன்றும் தொடர்ந்து வருது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்கெடுக்கப்படும் ஆளுநர் தலைமை நிருவாக அதிகாரியாக விளங்குகிறார். 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையும் சட்டமியற்றும் பணியைப் புரிகிறது. மேல்சபை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கீழ்ச்சபை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சட்டமன்றம் வழியாக அன்றி மக்கள் நேரடிச்சட்டம் ஆக்கும் உரிமையும் (Initiative), தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவுசெய்யும் குடியொப்ப முறையும் (Referendum), மீட்டழைப்பாணை உரிமையும் (Recall) இந்த அரசியலமைப்பில் இடம் பெறுகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கலிபோர்னியாப் பல்கலைக் கழகம்:</b> அரசின் பண உதவியால் நடைபெறுகிறது. கலிபோர்னிய பல்கலைக்கழகம் (University of California) கி.பி. 1868–ஆம் ஆண்டு தொடங்கப்படுவதற்கான அரசு அனுமதியினைப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் கி.பி. 1869–இல் ஓக்லாந்து (Oakland) நகரில் முதன்முதலாக வகுப்புகள் நடந்தன. பின்னர் கி.பி. 1873-இல் இப்பல்கலைக்கழகம் பெர்க்கிலி (Berkeley) நகருக்கு மாற்றப்பட்டது.
கலிபோர்னியப் பல்கலைக்கழகம் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் தன்மையுடையது. இதன் நிருவாக அலுவலகங்கள் பெர்க்கிலியிலேயே உள்ளன. இளங்கலை, முதுகலை, அறிஞர் பட்டங்கள் (Doctor's Degrees) ஆகியவற்றை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. இங்கு 150–க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு வேளாண்மை விரிவாக்க மையத்தின் சேவையும் பொது விரிவாக்கப் பிரிவுச் சேவையும் உள்ளன.
கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திற்கென்றும் தனித்தனியே பாடப்பிரிவுகள் உள்ளன. பெர்க்கிலி வளாகத்தில் வணிக நிருவாகம், வேதியியல், கல்வியியல், பொறியியல், சுற்றுப்புறச் சூழலமைப்பியல் (Environmental Design), இதழியல், சட்டம், நாலகவியல், பொதுமக்கள் உடல் நலம், சமூகநலம் போன்ற பாடத்துறைகள் உள்ளன.
தேவிசு வளாகத்தில் (The Davis Campus) வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச் சூழலியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற துறைகள் உள்ளன.
இர்வின் (Irvin) வளாகத்தில் நிருவாகம், உயிர் அறிவியல் துறைகள் (Biological Sciences), கவின் கலை, வாழ்வியல், மருத்துவம், இயல்பறிவியல் (Physical Sciences), சமூக அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.
இலாசு ஏஞ்செல்சு (Los Angeles) வளாகத்தில் கட்டடக்கலை மற்றும் நகர்த்திட்டமிடல், பல் மருத்துவம், கல்வியியல், பொறியியல் மற்றும் செயலறிவியல், மேலாண்மை, மருத்துவம், சமூக நலன் போன்ற துறைகள் உள்ளன.
‘ஆற்றுப்புற வளாகத்தில்’ (The Riverside Campus), வேளாண்மைக்கும் வளிமண்டலத் தூய்மைக் கேட்டிற்கும் (Air Pollution) ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு நிருவாகம், கல்வியியல், வாழ்வியல், சமூக அறிலியல் போன்ற துறைகள் உள்ளன.
சாண்டியாகோ (San Diego), சாந்தா குருசு (Santa Cruz) ஆகிய இரு வளாகங்களில் பல கலைக் கல்லூரிகள் உள்ளன. சான் பிரான்சிசுகோ வளாகம் நலமருத்துவத் துறையில் (Health Sciences) கவனம் செலுத்துகிறது. இங்குள்ள ஆராய்ச்சி மையங்கள் மூட்டு வீக்கம் (Arthiritis), புற்றுநோய், வெப்ப மண்டலப் பகுதி சார்த்த நோய்கள் (Tropical Diseases) ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்கின்றன.
சாந்தா பர்பாரா (Santa Barbara) வளாகம் கல்வியியல், பொறியியல், படைப்பாக்கக் கல்வி (Creative Studies) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இங்குள்ள ஒரே கல்லூரியில் மட்டும்தான் இளநிலை அளவில் அணுவாற்றல் பொறியியல் (Nuclear Engineering) கல்வித் திட்டம் வழங்கப்படுகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
{{larger|<b>கலியநாயனார்</b>}} பெரிய புராணம் போற்றும் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவர். தொண்டை நன்னாட்டில் சிறப்புடைய நகராகத் திகழ்வது திருவொற்றியூர். அது சிவபெருமான் நடம் பயிலும் திருப்பதியாகும். அந்நகரில் சச்கரப்பாடித் தெருவில் வாழ்ந்த தைல வணிகர் கலத்தில் கலிய<noinclude></noinclude>
morb5r8v6t4jr1wnlud9b6xavg8b6re
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/882
250
642409
1930759
2026-05-06T18:37:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாயனார் தோன்றினார். சில ஏட்டுப்பிரதிகளில் இவர் புராணங் கூறும் பகுதியின் தலைப்பு கலிநீதி நாயனார் புராணம் எனக் குறிப்பிட்டுள்ளது. கலிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியநாயனார்|854|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை}}</noinclude>நாயனார் தோன்றினார். சில ஏட்டுப்பிரதிகளில் இவர் புராணங் கூறும் பகுதியின் தலைப்பு கலிநீதி நாயனார் புராணம் எனக் குறிப்பிட்டுள்ளது. கலிக் கம்ப நாயனார் புராணத்தின் இறுதிப்பாடலில் ‘காதலன்பர் கலிந்தியார் தம் பெருமை கட்டுரைப்பாம்’ என வரும் தொடர் கொண்டு அவ்வாறு தலைப்பு அமைத்திருத்தல் கூடும்.
பெருஞ் செல்வராகிய இவர் முக்கண் இறைவனார்க்குத் திருத் தொண்டு செய்யும் இயல்பினர். பெற்ற செல்வப்பயன் தொண்டு செய்வதே என உணர்ந்து, ஒற்றியூர் இறைவன் கோயிலின் உள்ளும் புறமும் அல்லும் பகலும் திருவிளக்கு ஏற்றும் பணி பூண்டார். அத்திருத்தொண்டு நெடுநாள் நடைபெற்றது. உண்மைத் தொண்டரின் உள்ளப் பாங்கினை உலகிற்கு உணர்த்தும் இறையருளால் இவரது செல்வம் தேய்ந்து வறுமை சூழ்ந்தது. அப்போதும் திருப்பணியில் பின்வாங்கிடாத இப்பேராளர், எண்ணெய் விற்போரிடம் எண்ணெய் பெற்றுத் தம் தொண்டினைத் தொடர்ந்தார்.
வளமுடையார் சிலகாலம் இவர்க்கு எண்ணெய் வழங்கினர் பின்னை அவர்களும் நல்குதல் தவிர்க்கத் தளரும் மனமுடையவராய்க் கலியநாயனார் எண்ணெய் ஆட்டும் இயந்திரமுள்ள களத்தில் பணிபுரிந்து அதனால் வரும் கூலிகொண்டு திருத்தொண்டு செய்ய முனைந்தார். செக்கினில் எள் ஆட்டிப் பதமறிந்து எண்ணெய் எடுத்தும், செக்கினில் இழுக்கும் மாடுகளை ஒட்டியும் கூலி பெற்று, அதனால் விளக்கிடும் தம் விழுத்தொண்டினைச் செய்து வந்தார். இவர் செய்த பணிக்கு இளைஞர் பலர் முன்வந்தமையால் இவர்க்குத் தொண்டியற்றும் வாய்ப்புக் குறைந்தது. தம் இல்லத்தில் இனி விற்கக் கூடிய எப்பொருளும் இல்லை என்பதால், தம் மனையாளை விற்பதற்கும் துணிந்தார். ஆயினும் இவர்தம் மனைவியாரை வாங்கித் தனமளிக்கும் செல்வர் கிட்டாமையால் உள்ளம் நொந்தார். திருப்பணி தடைப்படுமே என வருந்தினார். ‘திருவிளக்கு அணையும் எனில் நானும் மாள்வன்’ என்று சூளுறவு பூண்டார். திருவிளக்குக்காகத் திரியிட்டு அகல்விளக்கினைக் கொண்டார். ‘எண்ணெய் இல்லை எனில் அதற்கு ஈடாக என் உதிரம் கொண்டு நிறைப்பேன்’ என்று எண்ணிக் கருவி கொண்டு தம்மிடற்றினை அறுக்க முனைந்த போது, கண்ணுதலார் கருணையுடன் நேர்வந்து இவரைத் தடுத்து ஆண்டார். மழவிடைமேல் இறைவன் திருக்காட்சியைக் கண்டு உச்சி மீது கூப்பிய கையராய் நின்றார் கலியர். இவர்தம் தொண்டினையும் துணிவினையும் பாராட்டி இறைவன் இவரைச் சிவபுரியில் இருக்கும்படி அருள்புரிந்தார்.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
{{larger|<b>கலியாண கதை</b>}} இக்காலத்து இறந்துபட்ட ஒரு தமிழ்நூல். அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் இரு இடங்களில் ‘கலியாண கதை’ என்ற தொடர் மட்டுமே காணப்படுகிறது. 1) யாப்பருங்கலம் உறுப்பியலில், ஒரு செய்யுட்களில் பல தொடையும் பல தளையும் வந்தால் அவற்றை வழங்கும் முறை உணர்த்தும் சூத்திர உரையில், ‘இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொகுத்த செய்யுளந்தாதி விகற்பம் உதயணன் கதையும், கலியாண கதையும், பன்மணி மாலையும், மும்மணிக்கோவையும் என்றிவற்றுட் கண்டு கொள்க’ என்றும், 2) செய்யுளியலில் நிலை மண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்தும் சூத்திர உரையில், ‘உதயணன் கதையும், ‘கலியாண கதையும்’ ‘என்’ என்னும் அசைச் சொல்லால் இற்ற நிலைமண்டிலம்’ என்றும் உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். யாப்பருங்கலத்தின் வாயிலாகக் ‘கலியாண கதை’ என்று நூலின் பெயர் மட்டுமே காணப்படுகிறதேயொழிய, நூற்செய்திகள் ஏதும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, இந்நூல் இன்ன பொருள் பற்றியது என்பது அறியக் கூடவில்லை.
{{Right|<b>டி.எம்.பொ.</b>}}
{{larger|<b>கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை (1930–1959):</b>}} இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்; நாட்டுப்புற இசை, திரைப்படங்களுக்குரிய மெல்லிசை வடிவங்களைத் திறம்படக் கையாண்டு பொதுவுடைமை, பகுத்தறிவுக் கருத்துக்கள் ஆகியவற்றைத் திரைப்படப் பாடல்களாக்கி வெற்றியும் புகழும் பெற்றார். இவர் திருக்குறளையும், காந்தியடிகளின் வாழ்க்கையையும் பெரிதும் போற்றித் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
கலியாண சுந்தரம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டைக்கருகிலுள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் சிற்றூவில் 1930–இல் பிறந்தார். இவர் தந்தையார் அருணாசலம்பிள்ளை; தாயார் விசாலாட்சி அம்மையார். இக்குடும்பம் ஓர் எளிய உழவுக் குடும்பமாகும்.
கலியாண சுந்தரம் தம் ஊரிலிருந்த சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு வரையில் பயின்றார்; பின்னர் எந்தக் கல்வி நிறுவனத்திலும் பயிலவில்லை.
தம் இல்லத்திலேயே தமையன் கணபதியிடம் நைடதம், பாரதம், இராமாயணம் முதலிய தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். கலியாண சுந்தரத்தின் தந்தையும், தமையனும் பாடல் புனையும் திறன்<noinclude></noinclude>
gnqg1grkscbvfofbv7p1ea2i2ptso7f
பயனர்:Info-farmer/pagequalityChecker.js
2
642410
1930761
2026-05-07T00:27:39Z
Info-farmer
232
+ தொடக்கம்
1930761
javascript
text/javascript
(function() {
'use strict';
// விக்கிமூலத்தின் 'Page:' பெயரிடத்தில் மட்டும் செயல்பட வேண்டும்
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// பொத்தான் உருவாக்கம்
const btn = document.createElement('button');
btn.id = 'pq-checker-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்று (சரிபார்ப்பு)';
// CSS வடிவமைப்பு (மஞ்சள் வட்டத்தில் பச்சை வட்டம்)
Object.assign(btn.style, {
width: '24px',
height: '24px',
borderRadius: '50%',
backgroundColor: '#f6c342', // மஞ்சள்
border: '4px solid #339966', // பச்சை நிற விளிம்பு (வட்டம் போலத் தோன்றும்)
cursor: 'pointer',
marginLeft: '15px',
verticalAlign: 'middle',
boxShadow: '0 2px 4px rgba(0,0,0,0.2)'
});
// வெக்டர் 2022 தலைப்புப் பகுதியில் பொத்தானை இணைத்தல்
const header = document.querySelector('.mw-indicators');
if (header) {
header.appendChild(btn);
}
btn.onclick = function() {
// பொத்தானை 5 நிமிடங்களுக்கு முடக்குதல்
btn.disabled = true;
btn.style.opacity = '0.5';
btn.style.cursor = 'not-allowed';
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
// பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பெற்று மாற்றுதல்
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let content = data.query.pages[0].revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace('level="3"', 'level="4"');
// மாற்றத்தைச் சேமித்தல்
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('பக்கம் சரிபார்க்கப்பட்ட நிலைக்கு (பச்சை) மாற்றப்பட்டது.');
location.reload(); // மாற்றத்தைக் காண பக்கத்தை புதுப்பித்தல்
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிறத்தில் இருக்கலாம் அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
btn.disabled = false;
btn.style.opacity = '1';
}
});
// 5 நிமிடங்கள் (300,000 ms) கழித்து பொத்தானை மீண்டும் இயக்குதல்
setTimeout(function() {
btn.disabled = false;
btn.style.opacity = '1';
btn.style.cursor = 'pointer';
}, 300000);
};
})();
j1p9xvrt5xua7jihmshbf3r81oz1ask
1930765
1930761
2026-05-07T00:43:37Z
Info-farmer
232
பொத்தான் இடமாற்றம்
1930765
javascript
text/javascript
(function() {
'use strict';
// விக்கிமூலத்தின் 'Page:' பெயரிடத்தில் மட்டும் செயல்பட வேண்டும்
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// பொத்தான் உருவாக்கம்
const btn = document.createElement('button');
btn.id = 'pq-checker-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி சேமி (சரி)';
// CSS வடிவமைப்பு (மஞ்சள் வட்டத்தில் பச்சை வட்டம்)
Object.assign(btn.style, {
width: '22px',
height: '22px',
borderRadius: '50%',
backgroundColor: '#f6c342', // மஞ்சள்
border: '5px solid #339966', // பச்சை உள்வட்டம் போலத் தெரிய தடிமனான விளிம்பு
cursor: 'pointer',
margin: '5px 10px',
display: 'inline-block',
verticalAlign: 'middle',
padding: '0'
});
// பொத்தானைச் சரியான இடத்தில் (தத்தல்களுக்கு இடதுபுறம்) இணைத்தல்
const targetArea = document.getElementById('p-views') || document.querySelector('.vector-menu-content-list');
if (targetArea) {
const container = document.createElement('li');
container.style.display = 'inline-flex';
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
// "வாசி" (Read) தத்தலுக்கு முன்னதாக பொத்தானைச் சேர்க்கிறது
targetArea.insertBefore(container, targetArea.firstChild);
}
btn.onclick = function() {
// பொத்தானை 5 நிமிடங்களுக்கு (300000ms) முடக்குதல்
btn.disabled = true;
btn.style.opacity = '0.4';
btn.style.filter = 'grayscale(100%)';
btn.style.cursor = 'not-allowed';
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) {
mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
return;
}
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு (சரிபார்க்கப்பட்டது) மாற்றப்பட்டது.');
// 2 விநாடிகளுக்குப் பிறகு பக்கத்தைப் புதுப்பிக்கிறது
setTimeout(() => { location.reload(); }, 2000);
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
btn.disabled = false;
btn.style.opacity = '1';
btn.style.filter = 'none';
}
});
// 5 நிமிட Cooldown காலம்
setTimeout(function() {
btn.disabled = false;
btn.style.opacity = '1';
btn.style.filter = 'none';
btn.style.cursor = 'pointer';
}, 300000);
};
})();
mjc8s2f4c5gijcpim0rt6pgz4iojuqb
1930766
1930765
2026-05-07T01:04:12Z
Info-farmer
232
அடுத்தப் பக்கத்திற்கு தானாகவே செல்லும் நுட்பம்
1930766
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் (Animation) மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px; /* 20% பெரிதாக்கப்பட்டுள்ளது (முன்பு 22px) */
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342; /* மஞ்சள் பின்புலம் */
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966; /* பச்சை உள்வட்டம் */
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff; /* எண் தெளிவாகத் தெரிய */
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் மற்றும் உள் உறுப்புகளை உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// 'தத்தலுக்குபுறம்' என்ற சொல்லைக் கொண்ட மறைக்கப்பட்ட வெற்றிடத்தை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.padding = '0';
spacer.style.fontSize = 'inherit';
const container = document.createElement('li');
container.style.display = 'inline-flex';
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி" தத்தலுக்கு இடப்புறம் அமைத்தல்
const targetArea = document.getElementById('p-views') || document.querySelector('.vector-menu-content-list');
if (targetArea) {
targetArea.insertBefore(container, targetArea.firstChild);
}
// அறிவிப்பு பலகையை H1 மட்டத்தில் அமைத்தல்
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif); // H1 தலைப்புக்கு அருகிலேயே வலப்புறம் தோன்றும்
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரம் குறைப்பைக் கையாளும் செயல்பாடு (Timer Logic)
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
// நேரம் முடிந்துவிட்டால்
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
// பக்கம் ஏற்றப்படும்போதே முந்தைய நேரம் உள்ளதா எனச் சரிபார்த்தல்
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வுகள்
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
// 5 நிமிடங்களுக்கான (300,000 மில்லி நொடிகள்) நேரத்தை நினைவகத்தில் பதிவு செய்தல்
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
// அடுத்தப் பக்க எண்ணைக் கண்டறிந்து நகர்தல்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000); // 1 நொடி தாமதத்திற்குப் பிறகு அடுத்த பக்கம் செல்லும்
} else {
// இது பக்க எண்கள் இல்லாத பக்கமாக இருந்தால், அதே பக்கத்தைப் புதுப்பிக்கும்
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
jxqstdn1t50bdu4uzuzj82k960h775x
1930768
1930766
2026-05-07T01:09:10Z
Info-farmer
232
பொத்தானின் இடத்தை இன்னும் 2 செ.மீ. இடப்புறம் நகர்த்துகிறேன்
1930768
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் (Animation) மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் மற்றும் உள் உறுப்புகளை உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// 'தத்தலுக்குபுறம்' என்ற சொல்லைக் கொண்ட மறைக்கப்பட்ட வெற்றிடத்தை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.padding = '0';
spacer.style.fontSize = 'inherit';
const container = document.createElement('li');
container.style.display = 'inline-flex';
container.style.alignItems = 'center';
// பொத்தானை 2 செ.மீ இடப்புறம் நகர்த்த, வலப்புற இடைவெளியை (margin-right) கூட்டுகிறோம்
container.style.marginRight = '2cm';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி" தத்தலுக்கு இடப்புறம் அமைத்தல்
const targetArea = document.getElementById('p-views') || document.querySelector('.vector-menu-content-list');
if (targetArea) {
targetArea.insertBefore(container, targetArea.firstChild);
}
// அறிவிப்பு பலகையை H1 மட்டத்தில் அமைத்தல்
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரம் குறைப்பைக் கையாளும் செயல்பாடு (Timer Logic)
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
// நேரம் முடிந்துவிட்டால்
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
// பக்கம் ஏற்றப்படும்போதே முந்தைய நேரம் உள்ளதா எனச் சரிபார்த்தல்
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வுகள்
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
// 5 நிமிடங்களுக்கான (300,000 மில்லி நொடிகள்) நேரத்தை நினைவகத்தில் பதிவு செய்தல்
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
// அடுத்தப் பக்க எண்ணைக் கண்டறிந்து நகர்தல்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
818gl6fdbp53g8hec9dbydtffjw65zp
1930769
1930768
2026-05-07T01:11:51Z
Info-farmer
232
container.style.marginRight
1930769
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் (Animation) மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் மற்றும் உள் உறுப்புகளை உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// 'தத்தலுக்குபுறம்' என்ற சொல்லைக் கொண்ட மறைக்கப்பட்ட வெற்றிடத்தை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.padding = '0';
spacer.style.fontSize = 'inherit';
const container = document.createElement('li');
container.style.display = 'inline-flex';
container.style.alignItems = 'center';
// பொத்தானை 4 செ.மீ இடப்புறம் நகர்த்த, வலப்புற இடைவெளியை (margin-right) கூட்டுகிறோம்
container.style.marginRight = '4cm';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி" தத்தலுக்கு இடப்புறம் அமைத்தல்
const targetArea = document.getElementById('p-views') || document.querySelector('.vector-menu-content-list');
if (targetArea) {
targetArea.insertBefore(container, targetArea.firstChild);
}
// அறிவிப்பு பலகையை H1 மட்டத்தில் அமைத்தல்
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரம் குறைப்பைக் கையாளும் செயல்பாடு (Timer Logic)
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
// நேரம் முடிந்துவிட்டால்
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
// பக்கம் ஏற்றப்படும்போதே முந்தைய நேரம் உள்ளதா எனச் சரிபார்த்தல்
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வுகள்
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
// 5 நிமிடங்களுக்கான (300,000 மில்லி நொடிகள்) நேரத்தை நினைவகத்தில் பதிவு செய்தல்
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
// அடுத்தப் பக்க எண்ணைக் கண்டறிந்து நகர்தல்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
hwmft3scdknifmt2wk0wz2frpm3uvj9
1930770
1930769
2026-05-07T01:13:34Z
Info-farmer
232
container.style.marginRight = '10cm';
1930770
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் (Animation) மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் மற்றும் உள் உறுப்புகளை உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// 'தத்தலுக்குபுறம்' என்ற சொல்லைக் கொண்ட மறைக்கப்பட்ட வெற்றிடத்தை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.padding = '0';
spacer.style.fontSize = 'inherit';
const container = document.createElement('li');
container.style.display = 'inline-flex';
container.style.alignItems = 'center';
// பொத்தானை 10 செ.மீ இடப்புறம் நகர்த்த, வலப்புற இடைவெளியை (margin-right) கூட்டுகிறோம்
container.style.marginRight = '10cm';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி" தத்தலுக்கு இடப்புறம் அமைத்தல்
const targetArea = document.getElementById('p-views') || document.querySelector('.vector-menu-content-list');
if (targetArea) {
targetArea.insertBefore(container, targetArea.firstChild);
}
// அறிவிப்பு பலகையை H1 மட்டத்தில் அமைத்தல்
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரம் குறைப்பைக் கையாளும் செயல்பாடு (Timer Logic)
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
// நேரம் முடிந்துவிட்டால்
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
// பக்கம் ஏற்றப்படும்போதே முந்தைய நேரம் உள்ளதா எனச் சரிபார்த்தல்
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வுகள்
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
// 5 நிமிடங்களுக்கான (300,000 மில்லி நொடிகள்) நேரத்தை நினைவகத்தில் பதிவு செய்தல்
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
// அடுத்தப் பக்க எண்ணைக் கண்டறிந்து நகர்தல்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
pkdr67xp6alnv7hkce7y9ixj6mp293j
1930772
1930770
2026-05-07T01:20:13Z
Info-farmer
232
பொத்தானின் இடப்பறும் நகர்த்து
1930772
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
/* பொத்தானைச் சற்று செங்குத்தாக நடுவில் நிறுத்த */
margin-top: 5px;
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// மறைக்கப்பட்ட சொல் மூலம் 2 செ.மீ இடைவெளியை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.paddingLeft = '5px'; // லேசான கூடுதல் இடைவெளிக்கு
// தத்தல்களின் வரிசையில் சரியாக உட்காரவைக்க `li` உறுப்பு
const container = document.createElement('li');
container.style.display = 'flex'; // வெக்டர் 2022 ன் அதே அமைப்பு
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி", "தொகு" உள்ள `ul` (Unordered List) அமைப்பைக் குறிவைத்து இணைத்தல்
const targetList = document.querySelector('#p-views ul.vector-menu-content-list') || document.querySelector('#p-views ul');
if (targetList) {
targetList.insertBefore(container, targetList.firstChild);
}
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
2tb7oq4zjdnfzae6h72pn248k3ouy9v
1930773
1930772
2026-05-07T01:22:58Z
Info-farmer
232
pacer.style.paddingLeft = '15px'
1930773
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
/* பொத்தானைச் சற்று செங்குத்தாக நடுவில் நிறுத்த */
margin-top: 5px;
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// மறைக்கப்பட்ட சொல் மூலம் 2 செ.மீ இடைவெளியை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.paddingLeft = '15px'; // லேசான கூடுதல் இடைவெளிக்கு
// தத்தல்களின் வரிசையில் சரியாக உட்காரவைக்க `li` உறுப்பு
const container = document.createElement('li');
container.style.display = 'flex'; // வெக்டர் 2022 ன் அதே அமைப்பு
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி", "தொகு" உள்ள `ul` (Unordered List) அமைப்பைக் குறிவைத்து இணைத்தல்
const targetList = document.querySelector('#p-views ul.vector-menu-content-list') || document.querySelector('#p-views ul');
if (targetList) {
targetList.insertBefore(container, targetList.firstChild);
}
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
n9x3glxieih1opbijuixw5llulhue6f
1930774
1930773
2026-05-07T01:24:19Z
Info-farmer
232
25
1930774
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
/* பொத்தானைச் சற்று செங்குத்தாக நடுவில் நிறுத்த */
margin-top: 5px;
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// மறைக்கப்பட்ட சொல் மூலம் 2 செ.மீ இடைவெளியை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.paddingLeft = '25px'; // லேசான கூடுதல் இடைவெளிக்கு
// தத்தல்களின் வரிசையில் சரியாக உட்காரவைக்க `li` உறுப்பு
const container = document.createElement('li');
container.style.display = 'flex'; // வெக்டர் 2022 ன் அதே அமைப்பு
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி", "தொகு" உள்ள `ul` (Unordered List) அமைப்பைக் குறிவைத்து இணைத்தல்
const targetList = document.querySelector('#p-views ul.vector-menu-content-list') || document.querySelector('#p-views ul');
if (targetList) {
targetList.insertBefore(container, targetList.firstChild);
}
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
cpp8glm96mda5h4gfef9bliqno1c1x7
1930775
1930774
2026-05-07T01:25:20Z
Info-farmer
232
50
1930775
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகளை இணைத்தல்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: inline-flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.2);
/* பொத்தானைச் சற்று செங்குத்தாக நடுவில் நிறுத்த */
margin-top: 5px;
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// மறைக்கப்பட்ட சொல் மூலம் 2 செ.மீ இடைவெளியை உருவாக்குதல்
const spacer = document.createElement('span');
spacer.textContent = 'தத்தலுக்குபுறம்';
spacer.style.visibility = 'hidden';
spacer.style.paddingLeft = '50px'; // லேசான கூடுதல் இடைவெளிக்கு
// தத்தல்களின் வரிசையில் சரியாக உட்காரவைக்க `li` உறுப்பு
const container = document.createElement('li');
container.style.display = 'flex'; // வெக்டர் 2022 ன் அதே அமைப்பு
container.style.alignItems = 'center';
container.appendChild(btn);
container.appendChild(spacer);
// "வாசி", "தொகு" உள்ள `ul` (Unordered List) அமைப்பைக் குறிவைத்து இணைத்தல்
const targetList = document.querySelector('#p-views ul.vector-menu-content-list') || document.querySelector('#p-views ul');
if (targetList) {
targetList.insertBefore(container, targetList.firstChild);
}
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
md1jeiy1oca0z71ke0ei2j4mf66x18b
1930776
1930775
2026-05-07T01:30:01Z
Info-farmer
232
பொத்தானின் இடம் மாற்றப்படுகிறது
1930776
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
/* பொத்தானின் மையம் சரியாக அளக்கப்பட்ட புள்ளியில் இருக்க */
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// பொத்தானை ஒரு Wrapper-க்குள் வைத்து அதை Body-ல் இணைக்கிறோம் (அப்போதுதான் திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்த முடியும்)
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
// வெற்றிடத்தைக் கணக்கிட்டு மையத்தில் வைக்கும் சார்பு (Function)
const placeButtonInCenter = () => {
// இடதுபுற தத்தல்கள் (பக்கம், உரையாடல்)
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
// வலதுபுற தத்தல்கள் (வாசி, தொகு)
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
// வெற்றிடத்தின் தொடக்கம் மற்றும் முடிவு
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
// வெற்றிடத்தின் மையம் (பாதி இடம்) கணக்கீடு
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
// "வாசி" தத்தலின் செங்குத்து மட்டம் (Y Axis Center)
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
// கணக்கிடப்பட்ட புள்ளியில் பொத்தானை நிறுத்துதல்
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
// பக்கம் முழுமையாக ஏற்றப்பட்ட பின் அளவிட
setTimeout(placeButtonInCenter, 500);
// திரையின் அளவு மாறும்போது மீண்டும் கணக்கிட (Responsive)
window.addEventListener('resize', placeButtonInCenter);
// அறிவிப்பு பலகைக்கான அமைப்பு
const showNotification = () => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.textContent = 'மெய்ப்பைச் சரிபாக்க, 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளது';
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரக் கட்டுப்பாட்டு அமைப்பு
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification();
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தான் செயல்பாடு
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000); // 5 நிமிடம்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
54v8vhh0n2hnafctehribgl0d75gbi2
1930778
1930776
2026-05-07T01:39:35Z
Info-farmer
232
அறிவிப்பில் குறையும் எண் கடிகாரம் அமைக்கப் படுகிறது.
1930778
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 5px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-block;
animation: pulseAlert 2s infinite;
}
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white; /* நீல நிறத்தில் சிவப்பு எண்ணை தெளிவாகக் காட்ட */
padding: 2px 6px;
border-radius: 3px;
font-size: 16px;
margin: 0 4px;
display: inline-block;
min-width: 30px;
text-align: center;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
// பொத்தான் உருவாக்குதல்
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// பொத்தானை Wrapper-க்குள் வைத்தல்
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
// வெற்றிடத்தைக் கணக்கிட்டு மையத்தில் வைக்கும் சார்பு
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
// அறிவிப்பு பலகை அமைப்பு (நேரத்தைக் குறிக்கும் மாறியுடன்)
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
// அறிவிப்பில் இயங்கும் நேரத்திற்கான HTML
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள் தரப்பட்டுள்ளது`;
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
} else {
// அறிவிப்பு ஏற்கனவே இருந்தால் எண்ணை மட்டும் மாற்றுதல்
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) {
secSpan.textContent = timeLeft;
}
}
notif.style.display = 'inline-block';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// நேரக் கட்டுப்பாட்டு அமைப்பு
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft; // பொத்தானின் நடுவில் குறையும் எண்
showNotification(timeLeft); // அறிவிப்புப் பலகையில் குறையும் எண்
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// பொத்தான் செயல்பாடு
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000); // 300 நொடிகள்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
hx3gzfq5r4nupd0jqc7c8x9cewp2z6n
1930781
1930778
2026-05-07T01:49:00Z
Info-farmer
232
அறிவிப்பு பலகை வடிவ மாற்றம்
1930781
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// CSS அசைவூட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
.pq-inner-circle {
width: 14px;
height: 14px;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: 11px;
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px; /* மேலேயும் கீழேயும் சீரான இடைவெளி */
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-flex; /* உரையை ஒரே நேர்கோட்டில் வைக்க */
align-items: center;
animation: pulseAlert 2s infinite;
}
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white;
/* மேற்புற வெள்ளை நிறம் குறைக்கப்பட்டுள்ளது (top: 0px, bottom: 4px) */
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 24px; /* 50% பெரிதாக்கப்பட்டுள்ளது (16px லிருந்து 24px) */
line-height: 1; /* எழுத்தின் உயரத்தைக் கட்டுப்படுத்த */
margin: 0 6px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = 'pq-timer-btn';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = 'pq-notification';
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள் தரப்பட்டுள்ளது`;
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) {
h1.appendChild(notif);
}
} else {
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) {
secSpan.textContent = timeLeft;
}
}
notif.style.display = 'inline-flex';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => {
window.location.href = mw.util.getUrl(nextPageTitle);
}, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
62xhigx567dkeysk60w6j2022vzjp6x
1930783
1930781
2026-05-07T02:01:06Z
Info-farmer
232
அலைபேசி நுட்பம்
1930783
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
// இடைமுகத்தைக் கண்டறிதல் (மினெர்வா என்பது அலைப்பேசி இடைமுகம்)
const isMobile = mw.config.get('skin') === 'minerva';
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
/* கணினிக்கான பொத்தான் வடிவமைப்பு */
.pq-timer-btn-desktop {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
/* அலைப்பேசிக்கான மிதக்கும் பொத்தான் (FAB) வடிவமைப்பு */
.pq-timer-btn-mobile {
width: 44px; /* தொடுதிரைக்குப் பெரிய அளவு */
height: 44px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: fixed;
bottom: 30px;
right: 30px;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.4); /* மிதக்கும் தோற்றம் */
z-index: 1000;
touch-action: manipulation; /* இரட்டைத் தட்டல் தடுப்பு */
}
.pq-inner-circle {
width: 50%;
height: 50%;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: ${isMobile ? '16px' : '11px'};
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
/* கணினி அறிவிப்புப் பலகை */
.pq-notification-desktop {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-flex;
align-items: center;
animation: pulseAlert 2s infinite;
}
/* அலைப்பேசி அறிவிப்புப் பலகை (Toast) */
.pq-notification-mobile {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 20px;
font-weight: bold;
font-size: 13px;
position: fixed;
bottom: 85px; /* பொத்தானுக்கு மேலே மிதக்கும் */
left: 50%;
transform: translateX(-50%);
white-space: nowrap;
z-index: 1000;
display: flex;
align-items: center;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.3);
}
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 24px;
line-height: 1;
margin: 0 6px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
// அலைப்பேசியா கணினியா என்பதைப் பொறுத்து Class மாறும்
btn.className = isMobile ? 'pq-timer-btn-mobile' : 'pq-timer-btn-desktop';
btn.title = 'தரத்தை பச்சை நிறத்திற்கு மாற்றி அடுத்தப் பக்கத்திற்குச் செல்';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
// பொத்தானை நிறுத்துதல்
if (isMobile) {
// அலைப்பேசியில் Body-ல் நேரடியாக இணைக்கப்படும் (மிதக்கும் பொத்தான்)
document.body.appendChild(btn);
} else {
// கணினியில் வெற்றிடத்தைக் கணக்கிட்டு வைக்கும் முறை
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
}
// அறிவிப்பு பலகை
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = isMobile ? 'pq-notification-mobile' : 'pq-notification-desktop';
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள் தரப்பட்டுள்ளது`;
if (isMobile) {
document.body.appendChild(notif); // அலைப்பேசியில் நடுவில் கீழே மிதக்கும்
} else {
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) h1.appendChild(notif); // கணினியில் H1 அருகில்
}
} else {
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) secSpan.textContent = timeLeft;
}
notif.style.display = isMobile ? 'flex' : 'inline-flex';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000); // 300 நொடிகள்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => { window.location.href = mw.util.getUrl(nextPageTitle); }, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
491dvvosgqqmypb7it6i7ryug7mcxep
1930785
1930783
2026-05-07T02:10:02Z
Info-farmer
232
குறுக்குவிசைப்பலகை நுட்பம்
1930785
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
const isMobile = mw.config.get('skin') === 'minerva';
// ---- இன்றைய சாதனைக் கணக்கீடு (Session Tracker) அமைப்பு ----
let todayDate = new Date().toDateString();
let sessionDate = localStorage.getItem('pqSessionDate');
let sessionCount = parseInt(localStorage.getItem('pqSessionCount')) || 0;
// நாள் மாறியிருந்தால் கணக்கீட்டை '0' ஆக்குதல்
if (sessionDate !== todayDate) {
sessionCount = 0;
localStorage.setItem('pqSessionDate', todayDate);
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn-desktop {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
.pq-timer-btn-mobile {
width: 44px;
height: 44px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: fixed;
bottom: 30px;
right: 30px;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.4);
z-index: 1000;
touch-action: manipulation;
}
.pq-inner-circle {
width: 50%;
height: 50%;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: ${isMobile ? '16px' : '11px'};
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification-desktop {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-flex;
align-items: center;
animation: pulseAlert 2s infinite;
}
.pq-notification-mobile {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 20px;
font-weight: bold;
font-size: 13px;
position: fixed;
bottom: 85px;
left: 50%;
transform: translateX(-50%);
white-space: nowrap;
z-index: 1000;
display: flex;
align-items: center;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.3);
}
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 24px;
line-height: 1;
margin: 0 6px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
/* சாதனைக் கணக்கீட்டிற்கான சிறப்புப் பட்டை (Badge) */
.pq-session-badge {
background-color: #28a745; /* பச்சை நிறம் */
color: white;
padding: 3px 10px;
border-radius: 12px;
margin-left: 10px;
font-size: 12px;
box-shadow: inset 0 1px 2px rgba(0,0,0,0.2);
border: 1px solid #1e7e34;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = isMobile ? 'pq-timer-btn-mobile' : 'pq-timer-btn-desktop';
// கணினியில் சுட்டியைக் கொண்டு செல்லும்போது குறுக்குவழித் தகவல் தோன்றும்
btn.title = isMobile ? 'பச்சை நிறத்திற்கு மாற்று' : 'பச்சை நிறத்திற்கு மாற்று (குறுக்குவழி: Alt + Shift + V)';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
if (isMobile) {
document.body.appendChild(btn);
} else {
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
}
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = isMobile ? 'pq-notification-mobile' : 'pq-notification-desktop';
// சாதனைக் கணக்கீட்டையும் (Session count) அறிவிப்பில் இணைத்தல்
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள்
<span class="pq-session-badge">🏆 இன்று: ${sessionCount}</span>`;
if (isMobile) {
document.body.appendChild(notif);
} else {
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) h1.appendChild(notif);
}
} else {
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) secSpan.textContent = timeLeft;
}
notif.style.display = isMobile ? 'flex' : 'inline-flex';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// ---- விசைப்பலகை குறுக்குவழி (Keyboard Shortcut) ----
document.addEventListener('keydown', function(e) {
// Alt + Shift + V அழுத்தப்படும்போது
if (e.altKey && e.shiftKey && (e.key === 'v' || e.key === 'V')) {
e.preventDefault(); // உலாவியின் இயல்பான செயலைத் தடுத்தல்
if (!btn.disabled) {
btn.click(); // பொத்தானை அழுத்துவது போலச் செயல்படும்
} else {
mw.notify('நேரக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. குறையும் நொடிகளைக் கவனிக்கவும்!', { type: 'warn' });
}
}
});
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
// கணக்கீட்டை அதிகரித்துப் பதிதல்
sessionCount++;
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000); // 300 நொடிகள்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => { window.location.href = mw.util.getUrl(nextPageTitle); }, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
hsgvjspealt2oi9ycaclw7kgwj6njwz
1930788
1930785
2026-05-07T02:23:33Z
Info-farmer
232
அறிவிப்பில் வடிவமைப்பு மாற்றம்
1930788
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
const isMobile = mw.config.get('skin') === 'minerva';
// ---- இன்றைய சாதனைக் கணக்கீடு (Session Tracker) ----
let todayDate = new Date().toDateString();
let sessionDate = localStorage.getItem('pqSessionDate');
let sessionCount = parseInt(localStorage.getItem('pqSessionCount')) || 0;
if (sessionDate !== todayDate) {
sessionCount = 0;
localStorage.setItem('pqSessionDate', todayDate);
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
}
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn-desktop {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
}
.pq-timer-btn-mobile {
width: 44px;
height: 44px;
border-radius: 50%;
background-color: #f6c342;
cursor: pointer;
position: fixed;
bottom: 30px;
right: 30px;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.4);
z-index: 1000;
touch-action: manipulation;
}
.pq-inner-circle {
width: 50%;
height: 50%;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: ${isMobile ? '16px' : '11px'};
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
/* பிரதான அறிவிப்புப் பலகை (Relative position சேர்க்கப்பட்டுள்ளது) */
.pq-notification-desktop {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-flex;
align-items: center;
animation: pulseAlert 2s infinite;
position: relative;
}
.pq-notification-mobile {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 20px;
font-weight: bold;
font-size: 13px;
position: fixed;
bottom: 85px;
left: 50%;
transform: translateX(-50%);
white-space: nowrap;
z-index: 1000;
display: flex;
align-items: center;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.3);
}
/* குறையும் நொடிகள் பெட்டி (வெள்ளை) */
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 24px;
line-height: 1;
margin: 0 6px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
/* சாதனைக் கணக்கீடு பெட்டி (வெளிர் பச்சை) - வெள்ளை பெட்டியின் அதே அளவு/வடிவம் */
.pq-session-badge {
color: #0f5132; /* அடர் பச்சை நிற எழுத்து */
background-color: #d1e7dd; /* வெளிர் பச்சை பின்புலம் */
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 22px; /* அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது */
line-height: 1;
margin-left: 10px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
/* குறுக்குவழி எச்சரிக்கை பெட்டி (நூல் இடைவெளியில் கீழே) */
.pq-warning-toast {
display: none;
position: absolute;
top: 100%;
left: 50%;
transform: translateX(-50%);
margin-top: 3px; /* ஒரு நூல் இடைவெளி */
background-color: #dc3545;
color: white;
padding: 5px 12px;
border-radius: 4px;
font-size: 13px;
white-space: nowrap;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
z-index: 1001;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = isMobile ? 'pq-timer-btn-mobile' : 'pq-timer-btn-desktop';
btn.title = isMobile ? 'பச்சை நிறத்திற்கு மாற்று' : 'பச்சை நிறத்திற்கு மாற்று (குறுக்குவழி: Alt + Shift + V)';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
if (isMobile) {
document.body.appendChild(btn);
} else {
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
const gapStart = leftRect.right;
const gapEnd = rightRect.left;
const centerPointX = gapStart + ((gapEnd - gapStart) / 2);
const centerPointY = rightRect.top + (rightRect.height / 2);
wrapper.style.left = centerPointX + window.scrollX + 'px';
wrapper.style.top = centerPointY + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
}
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = isMobile ? 'pq-notification-mobile' : 'pq-notification-desktop';
// பிரதான அறிவிப்பு, சாதனைப் பெட்டி மற்றும் எச்சரிக்கைப் பெட்டி
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள்
<span id="pq-session-span" class="pq-session-badge">🏆 ${sessionCount}</span>
<div id="pq-warning-msg" class="pq-warning-toast">நேரக்கட்டுபாடு முடியவில்லை</div>`;
if (isMobile) {
// அலைப்பேசியில் relative positioning சரியாக வேலை செய்ய warning-ஐ கொஞ்சம் மாற்றி அமைக்கிறோம்
notif.style.position = 'fixed';
document.body.appendChild(notif);
} else {
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) h1.appendChild(notif);
}
} else {
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) secSpan.textContent = timeLeft;
const sessionSpan = document.getElementById('pq-session-span');
if (sessionSpan) sessionSpan.innerHTML = `🏆 ${sessionCount}`;
}
notif.style.display = isMobile ? 'flex' : 'inline-flex';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
let timerInterval;
const updateTimerDisplay = () => {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
};
if (localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// ---- விசைப்பலகை குறுக்குவழி மற்றும் எச்சரிக்கை அமைப்பு ----
let warningTimeout;
document.addEventListener('keydown', function(e) {
if (e.altKey && e.shiftKey && (e.key === 'v' || e.key === 'V')) {
e.preventDefault();
if (!btn.disabled) {
btn.click();
} else {
// நேரக் கட்டுப்பாடு முடியவில்லை என்றால் எச்சரிக்கையைக் காட்டுதல்
const warningMsg = document.getElementById('pq-warning-msg');
if (warningMsg) {
warningMsg.style.display = 'block';
// ஏற்கனவே உள்ள 5 நொடி டைமரை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தொடங்குதல் (தொடர்ந்து அழுத்தினால்)
if (warningTimeout) clearTimeout(warningTimeout);
warningTimeout = setTimeout(() => {
warningMsg.style.display = 'none';
}, 5000); // 5 நொடிகள்
}
}
}
});
btn.onclick = function() {
if (btn.disabled) return;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) return mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி',
format: 'json'
}).done(function() {
mw.notify('வாழ்த்துகள்! பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
sessionCount++;
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
const nextPageTitle = baseName + nextPageNum;
setTimeout(() => { window.location.href = mw.util.getUrl(nextPageTitle); }, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
}
});
};
})();
masvz2qc41qibbmb14x1ac7uci8baya
1930790
1930788
2026-05-07T02:50:55Z
Info-farmer
232
வழு 20 பக்க எல்லையுடன் மேற்பார்வை தானிபொத்தான் வசதி
1930790
javascript
text/javascript
(function() {
'use strict';
if (mw.config.get('wgCanonicalNamespace') !== 'Page') {
return;
}
const isMobile = mw.config.get('skin') === 'minerva';
// ---- அன்றாட சாதனைக் கணக்கீடு ----
let todayDate = new Date().toDateString();
let sessionDate = localStorage.getItem('pqSessionDate');
let sessionCount = parseInt(localStorage.getItem('pqSessionCount')) || 0;
if (sessionDate !== todayDate) {
sessionCount = 0;
localStorage.setItem('pqSessionDate', todayDate);
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
}
// ---- தானியங்கி நிலைகள் (Auto Mode State) ----
let isAutoMode = localStorage.getItem('pqAutoMode') === 'true';
let autoRemaining = parseInt(localStorage.getItem('pqAutoRemaining')) || 0;
// CSS அசைவூட்டம் மற்றும் வடிவமைப்புகள்
const style = document.createElement('style');
style.innerHTML = `
@keyframes pulseAlert {
0% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
50% { box-shadow: 0 0 15px #0056b3; opacity: 0.8; }
100% { box-shadow: 0 0 5px #007bff; opacity: 1; }
}
.pq-timer-btn-desktop {
width: 28px;
height: 28px;
border-radius: 50%;
background-color: ${isAutoMode ? '#d39edb' : '#f6c342'}; /* தானியங்கிக்கு ஊதா நிறம் */
cursor: pointer;
position: relative;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
transition: background-color 0.3s;
}
.pq-timer-btn-mobile {
width: 44px;
height: 44px;
border-radius: 50%;
background-color: ${isAutoMode ? '#d39edb' : '#f6c342'};
cursor: pointer;
position: fixed;
bottom: 30px;
right: 30px;
display: flex;
justify-content: center;
align-items: center;
border: none;
padding: 0;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.4);
z-index: 1000;
touch-action: manipulation;
transition: background-color 0.3s;
}
.pq-inner-circle {
width: 50%;
height: 50%;
background-color: #339966;
border-radius: 50%;
position: absolute;
}
.pq-timer-text {
color: red;
font-size: ${isMobile ? '16px' : '11px'};
font-weight: bold;
z-index: 2;
text-shadow: 1px 1px 0 #fff, -1px -1px 0 #fff, 1px -1px 0 #fff, -1px 1px 0 #fff;
}
.pq-notification-desktop {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 5px;
font-weight: bold;
font-size: 14px;
margin-left: 20px;
display: inline-flex;
align-items: center;
animation: pulseAlert 2s infinite;
position: relative;
}
.pq-notification-mobile {
background-color: #007bff;
color: white;
padding: 8px 15px;
border-radius: 20px;
font-weight: bold;
font-size: 13px;
position: fixed;
bottom: 85px;
left: 50%;
transform: translateX(-50%);
white-space: nowrap;
z-index: 1000;
display: flex;
align-items: center;
box-shadow: 0 4px 8px rgba(0,0,0,0.3);
}
.pq-dynamic-seconds {
color: red;
background-color: white;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 24px;
line-height: 1;
margin: 0 6px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
.pq-session-badge {
color: #0f5132;
background-color: #d1e7dd;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 22px;
line-height: 1;
margin-left: 10px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
.pq-auto-badge {
color: #4a0072;
background-color: #f3e5f5;
padding: 0px 8px 4px 8px;
border-radius: 4px;
font-size: 22px;
line-height: 1;
margin-left: 10px;
display: inline-block;
min-width: 45px;
text-align: center;
}
.pq-warning-toast {
display: none;
position: absolute;
top: 100%;
left: 50%;
transform: translateX(-50%);
margin-top: 3px;
background-color: #dc3545;
color: white;
padding: 5px 12px;
border-radius: 4px;
font-size: 13px;
white-space: nowrap;
box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.3);
z-index: 1001;
}
#pq-button-wrapper {
position: absolute;
z-index: 999;
transform: translate(-50%, -50%);
}
`;
document.head.appendChild(style);
const btn = document.createElement('button');
btn.className = isMobile ? 'pq-timer-btn-mobile' : 'pq-timer-btn-desktop';
btn.title = isMobile ? 'பச்சை நிறத்திற்கு மாற்று (நீண்ட அழுத்தம்: தானியங்கி)' : 'பச்சை நிறத்திற்கு மாற்று (குறுக்குவழி: Alt + Shift + V) | தானியங்கி: Alt + 8';
const innerCircle = document.createElement('div');
innerCircle.className = 'pq-inner-circle';
const timerText = document.createElement('span');
timerText.className = 'pq-timer-text';
btn.appendChild(innerCircle);
btn.appendChild(timerText);
if (isMobile) {
document.body.appendChild(btn);
} else {
const wrapper = document.createElement('div');
wrapper.id = 'pq-button-wrapper';
wrapper.appendChild(btn);
document.body.appendChild(wrapper);
const placeButtonInCenter = () => {
const leftNav = document.querySelector('#p-associated-pages') || document.querySelector('#p-namespaces') || document.querySelector('#left-navigation');
const rightNav = document.querySelector('#p-views') || document.querySelector('#right-navigation');
if (leftNav && rightNav) {
const leftRect = leftNav.getBoundingClientRect();
const rightRect = rightNav.getBoundingClientRect();
wrapper.style.left = (leftRect.right + ((rightRect.left - leftRect.right) / 2)) + window.scrollX + 'px';
wrapper.style.top = (rightRect.top + (rightRect.height / 2)) + window.scrollY + 'px';
}
};
setTimeout(placeButtonInCenter, 500);
window.addEventListener('resize', placeButtonInCenter);
}
// ---- அறிவிப்பு பலகை ----
const showNotification = (timeLeft) => {
let notif = document.getElementById('pq-cooldown-notif');
if (!notif) {
notif = document.createElement('div');
notif.id = 'pq-cooldown-notif';
notif.className = isMobile ? 'pq-notification-mobile' : 'pq-notification-desktop';
// தானியங்கி இயங்கினால் "🤖 20" என்ற சிறப்புப் பெட்டி தோன்றும்
let autoBadgeHTML = isAutoMode ? `<span class="pq-auto-badge">🤖 ${autoRemaining}</span>` : '';
notif.innerHTML = `மெய்ப்பைச் சரிபாக்க, <span id="pq-sec-span" class="pq-dynamic-seconds">${timeLeft}</span> நொடிகள்
<span id="pq-session-span" class="pq-session-badge">🏆 ${sessionCount}</span>
${autoBadgeHTML}
<div id="pq-warning-msg" class="pq-warning-toast">நேரக்கட்டுபாடு முடியவில்லை</div>`;
if (isMobile) {
notif.style.position = 'fixed';
document.body.appendChild(notif);
} else {
const h1 = document.getElementById('firstHeading');
if (h1) h1.appendChild(notif);
}
} else {
const secSpan = document.getElementById('pq-sec-span');
if (secSpan) secSpan.textContent = timeLeft;
}
notif.style.display = isMobile ? 'flex' : 'inline-flex';
};
const hideNotification = () => {
const notif = document.getElementById('pq-cooldown-notif');
if (notif) notif.style.display = 'none';
};
// ---- சேமிக்கும் முதன்மைச் செயல்பாடு (Manual & Auto) ----
const executeSave = (isFromAuto = false) => {
btn.disabled = true;
const api = new mw.Api();
const pageTitle = mw.config.get('wgPageName');
api.get({
action: 'query',
prop: 'revisions',
titles: pageTitle,
rvprop: 'content',
formatversion: 2
}).done(function(data) {
let page = data.query.pages[0];
if (page.missing) {
mw.notify('பக்கம் காணப்படவில்லை!', { type: 'error' });
return;
}
let content = page.revisions[0].content;
if (content.includes('level="3"')) {
let newContent = content.replace(/level="3"/g, 'level="4"');
api.postWithToken('csrf', {
action: 'edit',
title: pageTitle,
text: newContent,
summary: 'சரி (மேற்பார்வை)',
format: 'json'
}).done(function() {
mw.notify('பக்கம் பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டது.');
sessionCount++;
localStorage.setItem('pqSessionCount', sessionCount);
if (isFromAuto) {
// தானியங்கி முறையில் எண்ணிக்கை குறைத்தல்
autoRemaining--;
localStorage.setItem('pqAutoRemaining', autoRemaining);
localStorage.removeItem('pqAutoEndTime'); // அடுத்த பக்கத்திற்கு புதிய நேரம் தொடங்கும்
} else {
// மனித முறையில் 5 நிமிட இடைவெளி அமைத்தல்
localStorage.setItem('pqCooldownEnd', Date.now() + 300000);
}
// அடுத்தப் பக்கத்திற்குச் செல்லுதல்
const match = pageTitle.match(/(.*\/)(\d+)$/);
if (match) {
const baseName = match[1];
const nextPageNum = parseInt(match[2], 10) + 1;
setTimeout(() => { window.location.href = mw.util.getUrl(baseName + nextPageNum); }, 1000);
} else {
setTimeout(() => { location.reload(); }, 1000);
}
});
} else {
// பக்கம் மஞ்சள் நிறத்தில் இல்லை என்றால்
if (isFromAuto) {
mw.notify('பக்கம் மஞ்சள் நிலையில் இல்லை! தானியங்கி நிறுத்தப்பட்டது.', { type: 'error' });
toggleAutoMode(true); // தானியங்கியை அணைத்தல்
} else {
mw.notify('இப்பக்கம் ஏற்கனவே பச்சை நிலையில் உள்ளது அல்லது மஞ்சள் நிலையில் இல்லை.', { type: 'warn' });
btn.disabled = false;
}
}
});
};
// ---- நேரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Timer) ----
let timerInterval;
const updateTimerDisplay = () => {
// தானியங்கி முறை (3 நிமிடம் - 180 நொடிகள்)
if (isAutoMode && autoRemaining > 0) {
let endTime = localStorage.getItem('pqAutoEndTime');
if (!endTime) {
endTime = Date.now() + 180000; // 3 நிமிடம் = 180000 ms
localStorage.setItem('pqAutoEndTime', endTime);
}
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
// நேரம் முடிந்தது, தானாகவே சேமிக்க வேண்டும்
clearInterval(timerInterval);
timerText.textContent = '...';
executeSave(true);
}
}
// சாதாரண முறை (5 நிமிடம்)
else {
const endTime = localStorage.getItem('pqCooldownEnd');
if (endTime) {
const timeLeft = Math.floor((endTime - Date.now()) / 1000);
if (timeLeft > 0) {
btn.disabled = true;
btn.style.cursor = 'not-allowed';
timerText.textContent = timeLeft;
showNotification(timeLeft);
} else {
btn.disabled = false;
btn.style.cursor = 'pointer';
timerText.textContent = '';
localStorage.removeItem('pqCooldownEnd');
hideNotification();
clearInterval(timerInterval);
}
}
}
};
// பக்கம் ஏற்றப்படும் போது 20 முடிந்துவிட்டதா எனச் சரிபார்த்தல்
if (isAutoMode && autoRemaining <= 0) {
localStorage.removeItem('pqAutoMode');
localStorage.removeItem('pqAutoRemaining');
localStorage.removeItem('pqAutoEndTime');
isAutoMode = false;
mw.notify('20 தொகுப்புகள் முடிவடைந்தன. தானியங்கி அணைக்கப்பட்டது.', { type: 'success' });
}
if (isAutoMode || localStorage.getItem('pqCooldownEnd')) {
updateTimerDisplay();
timerInterval = setInterval(updateTimerDisplay, 1000);
}
// ---- தானியங்கியை இயக்குதல் / அணைத்தல் (Toggle Function) ----
const toggleAutoMode = (forceOff = false) => {
if (isAutoMode || forceOff) {
localStorage.removeItem('pqAutoMode');
localStorage.removeItem('pqAutoRemaining');
localStorage.removeItem('pqAutoEndTime');
mw.notify('தானியங்கி முறை அணைக்கப்பட்டது.', { type: 'warn' });
} else {
localStorage.setItem('pqAutoMode', 'true');
localStorage.setItem('pqAutoRemaining', '20');
localStorage.removeItem('pqAutoEndTime');
mw.notify('தானியங்கி முறை இயக்கப்பட்டது! (20 பக்கங்கள் - தலா 3 நிமிடம்)', { type: 'success' });
}
setTimeout(() => location.reload(), 1000);
};
// ---- விசைப்பலகை மற்றும் தொடுதிரை அமைப்பு ----
let warningTimeout;
document.addEventListener('keydown', function(e) {
// Alt + 8 (தானியங்கியை இயக்க/அணைக்க)
if (e.altKey && e.key === '8') {
e.preventDefault();
toggleAutoMode();
}
// Alt + Shift + V (சாதாரண சேமிப்பு)
else if (e.altKey && e.shiftKey && (e.key === 'v' || e.key === 'V')) {
e.preventDefault();
if (!btn.disabled && !isAutoMode) {
executeSave(false);
} else {
const warningMsg = document.getElementById('pq-warning-msg');
if (warningMsg) {
warningMsg.style.display = 'block';
if (warningTimeout) clearTimeout(warningTimeout);
warningTimeout = setTimeout(() => { warningMsg.style.display = 'none'; }, 5000);
}
}
}
});
// அலைப்பேசிக்கான நீண்ட அழுத்தம் (Long press)
let pressTimer;
btn.addEventListener('touchstart', (e) => {
pressTimer = setTimeout(() => {
toggleAutoMode();
}, 1500); // 1.5 நொடிகள்
});
btn.addEventListener('touchend', (e) => {
clearTimeout(pressTimer);
});
btn.onclick = function() {
if (btn.disabled || isAutoMode) return;
executeSave(false);
};
})();
r5bcznhuh846pr5xntlb79gntdtr6jk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/701
250
642411
1930831
2026-05-07T06:26:56Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீக்கி, நல்வழி காட்டுபவளே உண்மையான குரு என்பதும், அறிவற்ற, போலியான குருவேடம் தரித்தவர்களை நம்பலாகாது என்பதும், மயக்கத்தையுண்டு பண்ணும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருகோவிந்த சிங்கு|673|குருசேவு}}</noinclude>நீக்கி, நல்வழி காட்டுபவளே உண்மையான குரு என்பதும், அறிவற்ற, போலியான குருவேடம் தரித்தவர்களை நம்பலாகாது என்பதும், மயக்கத்தையுண்டு பண்ணும் தீய குருமாரைவிட்டு விலகி நல்லாசிரியர் களை நாட வேண்டும் என்பதும் தெளிவாக இந்நூலில் வற்புறுத்தப்பட்டுள்ளன.
உயர்த்த ஒழுக்கமும், ஆன்ம நேயமும் உடைய குருவினைச் சரணடைந்து உய்யவேண்டும் என்றும், ஏழு கோடி மகா மந்திரங்களை விடக் ‘குரு’ என்னும் இரண்டெழுத்து மந்திரமே உயர்ந்தது என்றும் இதன் கண் குறிப்பிட்டுள்ளது. குரு கீதை ஆசிரியனின் பெருமையையும் அருமையையும் உணர்த்தி, ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள ஆன்மிகத் தொடர்பின் சிறப்பினைவிளக்கும் நன்னூல் ஆகும்.{{Right|<b>மு.கு.ஜெ.</b>}}
<b>குருகோவிந்த சிங்கு (கி.பி.1666-1708)</b>: புகழ் பெற்ற சீக்கிய மதகுரு ஆவார். சீக்கிய சமயத்தின் பத்தாம் குருவாகவும், கடைசி குருவர்கவும் விளங்கிய குருகோவிந்த சிங்கு, ஒன்பதாம் குருவான தேக பகதூரின் (Tej Bahadur) மகனாவார். சீக்கியர் வரலாற்றில், இவர் சிறப்பிடம் பெறுகிறார். சீக்கியர்களை, ஒரு படைதரித்த சமூகமாக மாற்றியதில் கோவிந்தர் பெரும்பங்கு வகிக்கிறார்.
தம் தந்தையார் அதியாயமாகக் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க கோவித்தர் உறுதி பூண்டார். சீக்கியர்களுக்குப் போர்ப்பயிற்சியளித்து, போரிடும் சமூகமாக மாற்றிக் ‘கால்சா’ எனப் பெயரிட்டவர் இவர். கால்சாவின் உறுப்பினர்கள் தனி உடை தரித்தனர், மேலும் அவர்கள் எப்போதும் ‘க’ எழுத்தில் தொடங்கும் ‘பஞ்சகாரங்கள்’ எனும் ஐந்து பொருள்களை உடைமைகளாகக் கொண்டிருப்பர். அவை முறையே கேசம், கிர்ப்பான் (வாள்), கச்சம் (கீழணி), கங்கம் (சீப்பு), கரம் (இரும்பு வளை) என்பனவாரும். கால்சாலில் சேரும்போது, புதிய தொடக்கச் சடங்கு ஒன்று நடத்தப் பெறும். அதனால் இதன் உறுப்பினர்கள் திருக்குடி மக்களாகக் கருதப்பட்டனர்.
குருகோவிந்தரின் காலத்திய சீக்கிய சமயம், ஒளரங்கசீபின் இசுலாமியத்திற்கு நல்லதோர் எதிர்ப்பினை நல்கியது. சீக்கியர் பல வெற்றிகளையும் குவித்தனர். வட பஞ்சாபில் கிளர்ச்சி செய்த சீக்கியர்களை ஒடுக்க முனைந்த முகலிம் அதிகாரிகளையும், இந்து அரசர்களையும் குருகோவித்தர் கடுமையாக எதிர்த்துப் போரிட்டார்; சீக்கியரின் செல்வாக்கை திலை நாட்டினார். அதன் விளைவாக சீக்கியரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
முகலாய வேந்தன கோவிந்தரைப் பழிவாங்க முனைந்தான் அனந்தப்பூரிலுள்ள கோவிந்தரின் இருப்பிடம் ஐந்து தடவை தாக்கப்பட்டது. இவர் பல இடங்களுக்கு ஓடியும். முகலாயர் இவரை விட்ட பாடில்லை. கோவிந்தரோ தக்காணத்திற்கு ஓடினார். இவரது இரு குமாரர் கொல்லப்பட்டனர் எஞ்சியிருந்த இரு குமாரர்களும் கி.பி. 1705-ஆம் ஆண்டு சர்கீத்து (Sirhind) பௌச்தாரால் (Faujdar) கொலை செய்யப்பட்டனர். ஔரங்கபுே இறந்த பின்னர் கோவிந்தர் வடநாடு திரும்பினார். பின்னர் பகதூர்சா தனது சகோதரர்களுடன் நடத்திய வாரிசுரிமைப் போரில் கலந்து கொண்டு, கோவிந்தர் தக்காணத்திற்குப் புறப்பட்டார். கி.பி. 1708-இல் கோதாவரி நதிக்கரையில் நாதிர் முகாமில் தங்கியிருந்த போது, ஆப்கானிய சீடர் ஒருவரால் கொல்லப்பட்டார். தமது இறப்பிற்குமுன், குருபீடத்தைக் கலைத்த இவர், தம் சீடர்களைப் படைதரித்த சனநாயக அமைப்பாக மாறும்படி கேட்டுக் கொண்டார்.
‘கிரந்த’ என்னும் பாடல் தொகுதி இவரால் இயற்றப்பட்டது. ஐந்தாம் குரு இயற்றிய (தொகுத்த) ஆசிரேத்தம்சமய நூலாகவும், இவர் தொகுத்த கிரந்தம் பாராயண நூலாகவும் சீக்கியர்களால் கருதப்பட்டு வருகின்றன.{{Right|<b>ம.இ.</b>}}
குருசேவு சோவியத்துப் பொது உடைமைக் கூட்டாட்சிக் குடியரசு நாட்டின் ஆட்சித் தலைவர்களுள் ஒருவர். இவர் 1958 முதல் 1964 வரை சோவியத்து நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபட்டார். ஆனால் இவர் நினைத்தபடி அது முழுவதும் வெற்றியடையவில்லை. இவர் அமெரிக்காவுடன் அமைதியை விரும்பினார். இவரது காலத்தில்தான் சோவியத்து நாட்டு விண்வெளி அறிஞர் பூரி சுகாசின் (Yuri Gagarin) புவியை விண்வெளிக் கலத்தின் மூலம் சுற்றினார்.
குருசேவு (Khrushchev Nikita Sergeyevich) கி.பி. 1894-ஆம் ஆண்டு உருசியாவின் தென்மேற்குப்பகுதி அருகில் உள்ள குர்சுக்கு (Kursk) நகருக்கு அருகில் கலினோவ்கா (Kolicovka) என்னும் சிற்றூரில் பிறந்தார் இவர் தந்தையார் செர்சி குருசேவு (Sergei Khruschev) ஓர் ஏழை உழவர் இவர் வேளாண்மை செய்ததேயன்றி நிலக்கரிச் சுரங்கங்களிலும் பணியாற்றினார். நிகிதா குருசேவு 15 வயது ஆளவுடன் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைக்குச் சென்றார். அங்கு இயந்திரங்களைப் பழுது பார்க்கும் தொழிலில்<noinclude>
<b>வா.க. 7-43</b></noinclude>
fyuj9xnqzxj61wvonh4bxv45qq8g4nq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/702
250
642412
1930833
2026-05-07T06:35:10Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 702 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 150 |oTop = 48 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|குருசேவு}} ஈடுபட்டார். குருசேவிற்கு முதல் திருமணம் 1915-ஆம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருசேவு|674|குருசேவு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 702
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 150
|oTop = 48
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|குருசேவு}}
ஈடுபட்டார். குருசேவிற்கு முதல் திருமணம் 1915-ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர் முதல் மனைவி குறித்து எதுவும் தெரியவில்லை. இவர் முதல் மனைவி 1920-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தால் கொள்ளை தோய்த் தாக்குண்டு இறந்தார். இவர்களுக்கு இளியோனிடு (Leonid), என்ற மானும், சூனியா (Julia) என்ற மகளும் பிறந்தனர்.
குருசேவு 1918-ம் ஆண்டு போல்கவிக்குக்கட்சியில் (Bolsheviks) சேர்ந்து, 1918 முதல் 1920 வரை நடந்த உள்நாட்டுப் போரில் கலந்து கொண்டார். இவரை 1920-ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சி, வயது வந்தோர் பணியாளர் பள்ளிக்கு மேல்நிலைக் கல்விக்கு அனுப்பி வைத்தது. அங்குத் தான் இவர் தம் இரண்டாம் மனைவியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கு ஆசிரியையாகப் பணியாற்றினார். இவர்களுக்கு 1924-ஆம் ஆண்டு திருமணம் திகழ்ந்தது. இவ்விருவருக்கும் செச்சீ (Sergei) என்ற மகனும் இராதா, எலினா (Rada Yelena) என்ற இருபெண் மக்களும் பிறந்தனர்.
பணியாளர் பள்ளியில் 1925-இல் படிப்பை முடித்த குருசேவு 1929-இல் மாசுக்கோ (Moscow) நகருக்குச் சென்றார். அங்குப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து வளர்ச்சியும் புகழும் பெறத் தொடங்கினார். மாசுக்கோ நகரக் கட்சி அமைப்பின் முதற் செயலராக 1935-ஆம் ஆண்டு குருசேவு பதவி பெற்றார். சோவியத்து நாட்டுத் தலைவரான சோசப்பு இசுடாலின் (Joseph Stalin) குரு சேவை 1938-இல் தீவுத் (Kitv) தீவிற்கு, உக்ரேனியப் பொதுவுடைமைக் கட்சி முதற் செயலராக அனுப்பி வைத்தார். அதற்கடுத்த ஆண்டு இசுடாலின் உயர்நிலை நிருவாகக் குழுவின் உறுப்பினராகக் குருசேவு இடம் பெற்றார்.
இரண்டாம் உலகப் போரின்பொழுது, முதலிரண்டு ஆண்டுகள் உருசியா எவ்வித நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது, செருமனி 1941 ஆம் ஆண்டு சோவியத்தின் மீது போர் தொடுத்தது. செருமனி உக்ரைன் பகுதியைக் கைப்பற்றுவதற்கு முன்னர்க் குருசேவு அப்பகுதியிலிருந்த தொழிற்சாலைத் தளவாடங்களை அழிவினின்று காத்தார், போர்க் காலத்தில் உக்ரைனில் மறைந்திருந்து தாக்கும் போர் அமைப்பை இவர் உருவாக்கினார். இசுட்டானின் கிராடு (Stalingrad-இன்றைய வோல்காகிராடு நகரை அழிவினின்தும் பாதுகாத்த பெருமை குருசேவைச் சாரும். இறுதியாகச் சோவியத்துப் படைகள் செருமனிப் படைகளை உக்ரைன் பகுதியிலிருந்து 1944-இல் வெளியேற்றின.
<b>ஆட்சியாளர்</b>: குருசேவு உக்ரைனிலிருந்து 1949 ஆம் ஆண்டு மாகக்கோவிற்குத் திரும்பினார், அங்குப் பொதுவுடைமைக் கட்சியின் மைய அமைப்புச் செயலராக தியமிக்கப்பட்டார். இசுட்டாலின் 1953-ஆம் ஆண்டு இறந்துவிடவே. சியோர்சி மாலன்காவு (Georgi Maleakov) முதன்மை அமைச்சரானார், அவ்வாண்டே செப்டம்பர் மாதம் குருசேவு சோவியத்து நாடு முழுமைக்கும் பொதுவுடைமைக் கட்சியின் செயலராக ஆனார். மாலன்காவு 1955-இல் தன் பதவியிலிருந்து விலகவே, நிலோவாய் புல்கானின் (Nikolai Bulganin) என்பவர் பதவியேற்றார்.
குருசேவு 1956-ஆம் ஆண்டு, மாசுக்கோவில் நடந்த 20-ஆம் பொதுவுடைமைக் கட்சி இரகசிய மாநாட்டில் இசுட்டாலினைக் குறை கூறினார். சோவியத்து மக்கள் இசுடடாலினின் குற்றங்களை அறிய இவர் வகை செய்தார். அதன் விளைவாக இவரது கொள்கை இசுட்டாலின் கொள்கை அழிப்பு (Destalinization) எனக் கூறப்பட்டது. இசுட்டாலின் படங்களும் நினைவுச் சின்னங்களும் அதனால் அழிக்கப்பட்டன. இகட்டாலினின் பெயரில் இருந்த பல்வேறு நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் வேறு பெயர்கள் சூட்டப்பட்டன.
பொதுவுடைமைக் கட்சியில், இசுட்டாலினை எதிர்த்ததால் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பாக அமைந்தது. பொதுவுடைமை ஆட்சிக்கு எதிராக 1950-இல் போவத்து அங்கேரி நாட்டு மக்கன் கலகம் செய்தனர். குருசேவு படைகளை அங்கேரி அரசுக்கு எதிராக அனுப்பி வைத்தார்.{{nop}}<noinclude></noinclude>
q6og08qmrzg6hkeuw3piwo44d53v2o6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/883
250
642413
1930835
2026-05-07T06:41:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 883 |bSize = 480 |cWidth = 124 |cHeight = 139 |oTop = 66 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை}} பெற்றிருந்தனர். தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை|855|கலியாண சுந்தர முதலியார், பூவை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 883
|bSize = 480
|cWidth = 124
|cHeight = 139
|oTop = 66
|oLeft = 68
|Location = center
|Description =
}}
{{center|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை}}
பெற்றிருந்தனர். தந்தையின் ‘முசுகுந்த நாட்டு வழி நடைக் கும்மி’ அச்சேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு குடும்ப மரபுச் சூழ்நிலை காரணமாகக் கலியாண சுந்தரத்திடம் இளமை முதலே பாடல் புனையும் பழக்கம் இருந்தது.
கலியாண சுந்தரம் சிறுவராயிருந்தபோதே சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் தமையனும் பிறரும் புனைந்த பாடல்களைப் பாடுவதுண்டு. பின்னர், தாமாகவே பகுத்தறிவுக் கருத்தமைந்த பாடல்களைப் புனைந்துள்ளார்.
தமையன் கணபதியுடன் பொருளீட்டும் பொருட்டு 1948–இல் சென்னை சென்றார். சரியான தொழில் கிட்டாமையால் தம் ஊருக்குத் திரும்பினார். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எசு. துரைராசு என்பவர் சேலத்திலிருந்த ஒரு திரைப்பட நிறுவனத்தில் நடிகராயிருந்தார். அவரிடம் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டார் கலியாணசுந்தரம். அவர் பரிந்துரைப்படி 1949-ஆம் ஆண்டு மதுரையிலிருந்த ‘சக்தி நாடக சபா’வில் நடிகராகச் சேர்ந்தார்.
‘சக்தி நாடக சபா’ புதுச்சேரியில் நாடகம் நடத்தச் சென்றபோது, பாரதிதாசனைச் சந்தித்தார்; எதை எழுதினாலும் மேலே ‘வாழ்க பாரதிதாசன்’ என்று எழுதுமளவிற்குப் பாரதிதாசனிடம் பற்றுக் கொண்டிருந்தார்.
பாரதிதாசன் பரிந்துரையால் 1951–ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ என்னும் திரைப்படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால், வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. இப்படமும் 1956-இல்தான் வெளியானது.
பாரதிதாசனின் ‘குயில்’ இதழில் ‘அகல்யா’ என்னும் புனை பெயரில் (அ. கல்யாண சுந்தரம் என்பதன் சுருக்கம்) இவர் வெளியிட்ட பாடல் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றதாம். சில காலம் புதுச்சேரியில் பணியாற்றி மீண்டும் சென்னை சென்றார்.
சென்னையில் ப. சீவானந்தம் முதலிய பொதுவுடைமைக் கட்சியாளருடன் தொடர்பு ஏற்பட்டு நெருக்கமுண்டாயிற்று. கலியாண சுந்தரத்தின் தூண்டுதலால் பொதுவுடைமை இயக்கச் சார்பில் ‘மக்கள் நாடக மன்றம்’ உருவாக்கப்பெற்றது. இம்மன்றத்தின் முதல் நாடகமான ‘கண்ணின் மணிகள்’ 1954-ஆம் ஆண்டு தமிழக உழவர் சங்க மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்திற்குப் பாடல்கள் எழுதித் தந்து, நடித்தார் கலியாணசுந்தரம், இவர் பாடல்கள் பொதுவுடைமைக் கட்சி ஏடான ‘ஜன சக்தி’, அக்கட்சி சார்ந்த ‘தாமரை’ ஆகிய இதழ்களில் வெளியிடப்பெற்று வந்தன.
கலியாணசுந்தரத்திற்கு 1955-ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் பெருகின. அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருநூறுக்கு மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றினார். இவர் 1957-இல் கவுரவாம்பாள் என்பாரை மணந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.
‘நாடோடி மன்னன்’ (1958), ‘கல்யாண பரிசு’ (1957) ஆகிய படங்களுக்கு இவர் இயற்றித் தந்த பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. பாடலொன்றுக்கு 25 முதல் 5000 உரூபா வரை கலியாண சுந்தரத்திற்குக் கிடைத்தது.
இவர் மக்கள் கவிஞர், பாட்டாளிக் கவிஞர், இயற்கைக் கவிஞர், பாடல் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டார். இவர் 1959-இல் காலமானார்.
{{Right|<b>பா.ம.</b>}}
{{larger|<b>கலியாண சுந்தர முதலியார், பூவை. (கி.பி. 1854–1918)</b>}} தொண்டை நாட்டினர். இவர் சென்னையை ஒட்டிய பறங்கி மலையில் கி.பி. 1854–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தையார் அண்ணாச்சாமி முதலியார்; தாயார் உண்ணாமுலையம்மை; குடியேறிய இடம் பூவிருந்தவல்லி, இவ்விடம் ‘பூவை’ என மருவியது.
இளமையில் நிகண்டு, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற நூல்வகைகளைத் தாமே கற்றார். செய்யுள் பாடுந்திறம் பெற்றார். திருமுருகாற்றுப்படையை நாளும் ஓதி முருகன் திரு-<noinclude></noinclude>
4hg0lhu7362rep3kaey2b8a8j4z6ewh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/703
250
642414
1930837
2026-05-07T06:44:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குருசேவின் வளர்ச்சியைத் தடுக்கக் காகனோ விச்சு (Kaganovich) மாலன்காவு, மால்டாவு (Molotov) ஆகியோர் ஒருங்கிணைத்து சதியாலோசனை செய்தனர். அதை அறிந்த குரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருசேவு|675|குருஞான சம்பந்தர்}}</noinclude>குருசேவின் வளர்ச்சியைத் தடுக்கக் காகனோ விச்சு (Kaganovich) மாலன்காவு, மால்டாவு (Molotov) ஆகியோர் ஒருங்கிணைத்து சதியாலோசனை செய்தனர். அதை அறிந்த குருசேவு தமக்கு எதிராகச் செயற்பட்டவர்களைக் கட்சியிலிருந்து விலக்கினார். குருசேவு 1958-ஆம் ஆண்டு மார்ச்சு 27-ஆம் நாள் சோவியத்து அரசின் தலைமையாளராகத் தம்மை அறிவித்துக் கொண்டார். அதுமுதல் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும் சோவியத்து நாட்டின் தலைவராகவும் இவர் விளங்கினார்.
குருசேவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபட்டதுடன் இரகசியப்படையின் அதிகாரங்களையும் குறைத்தார். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் இவர் காலத்தில் சிறிது உயர்வு அடைந்தது. சைபீரியாவில் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார். நெசவுத்தொழில், வீட்டுவசதி போன்றவை இவர் காலத்தில் பெரிதும் வளர்ச்சியடைந்தன.
இவரது அயல்நாட்டுக் கொள்கை முற்றிலும் மாறுபட்டதாக விளங்கியது. குடியாட்சி நாடுகளுக்கும் பொதுவுடைமை நாடுகளுக்கும் இடையில் ஏற்படும் போர்களைத் தடுத்தல் இயலாது என்றும் இசுட்டாலின் கொள்கையை இவர் மறுத்தார். இருப்பினும் இசுட்டாலின் பிற நாடுகளுடன் கொண்டிருந்த பகைமை உறவை இவர் மறைமுகமாகப் பின்பற்றினார். இவர் மேற்கு நாடுகளுடன் சோவியத்து நாடு போர் தொடுப்பதைத் தவிர்த்தார், அதன் மூலம் பொதுவுடைமை நாடுகளிலும், பொதுவுடைமை அல்லாத நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட இவர் வழிவகுத்தார். அதனால் சீனாவின் பகைமை இவருக்கு ஏற்பட்டது. கென்னடியின் வேண்டுகோளை ஏற்றுக் கியூபா மீது தொடுக்க இருந்த ஏவுகணைத் தாக்குதல்களை இவர் கைவிட்டார். குருசேவு விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டினார். சோவியத்து நாடு 1957 அக்டோபர் 4 ஆம் நாள் முதல் இசுபுட்னிக்கு (Sputnik I) என்னும் முதற் செயற்கைக்கோளை அனுப்பியது.
இவருடைய பெரும்பாலான கொள்கைகள் 1960-ஆம் ஆண்டுகளில் தோல்வியைத் தழுவின. இவரது வேளாண்மை உற்பத்திப் பெருக்கக் கொள்கை பெரிதும் தோல்வியடைந்ததுடன் தொழிற் பெருக்கமும் தலிவடையத் தொடங்கியது. பல சோவியத்துத் தலைவர்கள் இவரைக் குறை கூற முற்பட்டனர். சோவியத்துப் படைகள் கியூபாவிலிருந்து பின்வாங்கியதால் சீனாவுடன் பகைமை உண்டானதைப் பலர் குறை கூறினர். குருசேவு 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஆட்சியிலிருந்தும் பொதுவுடைமைக் கட்சியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இவர் 1971-இல் இறந்தார்.{{Right|<b>சு.இரா.</b>}}
<b>குருஞான சம்பந்தர்</b>: தமிழக வரலாற்றில் ஞானசம்பந்தர் எனச் சிறப்பித்துப் பாராட்டம் பெறுபவர் மூவராலா, இம்மூவரையும் வேற்றுரை கண்டுணர அவ்வப்பெயர்களுக்கு முன் அடைமொழி புணர்க்கப் பெற்றுள்ளது. அவர் திருஞான சம்பத்தர் மறைஞானசம்பத்தர், குருஞானசம்பந்தர் என்போராவர். இவர்களுள் மூன்றாமவராகக் குறிக்கப்பெற்ற குருஞானசம்பந்தர் திருக்கயிலாய பரம்பரை, தருமபுர ஆதீனத்து முதற்குரவராவர்.
இவர் பாண்டிநாட்டு பிரீவில்லிபுத்தூரினர்; வேளாண்மரபினர், சுப்பிரமணியபிள்னை, மீனாட்சியம்மை ஆகிய இருவரும் பெற்றோராவர். இவகுக்கு வழிவழியாக வரைப்பெற்று வந்த பேரறிவும், திருவருள் உந்துதலும் முன்னிற்கலாயின. அதனால், இவர் இளமையிலேயே தமிழ், வடமொழி எனும் இருமொழியிலும் வல்லுநரானார். ஒருமுறை தம் பெற்றோருடன் மதுரை செல்ல தேர்ந்தது. அங்கயற் கண்ணி உடனாய சொக்கநாதப் பெருமானை நாளும் வழிபடும் பேறும் கிடைத்தது. பண்டைய தற்றவமும், இப்பிறவித் தவமும் ஒருங்குகூட இவரிடத்து மெய்யுணர்வு தோன்றலாயிற்று, பெற்றோர் தம் ஊர் ஏகவும், இவர் அவருடன் செல்லாது திருக்கோயில் வழிபாடு ஆற்றுதலையே கடனாகக் கொண்டிருந்தார். பொற்றாமரைக் கரையில் நாளும் சிவ வழிபாடு செய்து வரும் பேரருளாளர்களைக்கண்டு மகிழ்ந்ததன் வாயிலாகத் தாமும் அப்பேறு பெற எண்ணினார். ஆலவாய்ச் சொக்கனும் அவர் கருத்து ஈடேறச்சிவலிங்கத்துடன் இருக்கும் பூசைப்பெட்டகம் ஒன்றை அவருக்கு அருளினல். ‘கண்ணுக்கினிய பொருளாகியே என் ஈரத்தில் வந்தாய், விண்ணும் பரவிடும் அற்புதமே என்ன விஞ்சை இதுதான்’ எனப் பெருமிதம் எய்தி நாளும் அதனை வைத்துச் சிவவழி பாடாற்றும் கடப்பாடுடையரானார்.
சொக்கநாதப் பெருமானின் அருளாணையின் வண்ணம் திருவாரூர் சென்றார். திருக்கயிலாயத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் வழங்கியருளிய ஞானத்தை வழிவழியாகப் பெற்றுவரும் மரபினருள் ஒருவராய கமலை ஞானப்பிரகாசர் எனும் அருள் முதல்வர் அங்கு வாழ்ந்துவர அவரிடம் மெய்யுணர்வு பெற்று அவர்தம் மாணாக்கராய் வாழ்ந்து வரலாளார். இவர்தம் குருநாதராகிய கமலை ஞானப்பிரகாசர் நாளும் திருக்கோயில் வழிபாடு ஆற்றிவரும் கடப்பாடுடையவர். அவ்வழிபாட்டிற்குச் சென்று மீண்டு வரும் குருநாதருக்கு ஒருநாள் கைவிளக்கு<noinclude>
<b>வா.க. 7-43அ</b></noinclude>
gx5vmaibojy3pm15c6hzpsshivgs2z8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/704
250
642415
1930838
2026-05-07T06:56:09Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏந்திவரும் புண்ணியமும் பெற்றார். குருநாதர் தம் இல்லத்தில் புகுங்கால் எப்பொழுதும் கைவிளக்கு ஏந்தி வரும் பணியாளனை ‘நிற்க’ என்று அருளுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருட்சேத்திரம்|676|குருட்சேத்திரம்}}</noinclude>ஏந்திவரும் புண்ணியமும் பெற்றார். குருநாதர் தம் இல்லத்தில் புகுங்கால் எப்பொழுதும் கைவிளக்கு ஏந்தி வரும் பணியாளனை ‘நிற்க’ என்று அருளுவது. போல அன்றும் அருள், குருஞான சம்பந்தரும் அப்பணிதலை நின்றார். மறுநாட்காலை குருநாதர் இவர் தம் பேரருள் விளக்கத்தைக் கண்டு வியந்து மயிலாடுதுறைக்கு அண்மையில் இருக்கும் தருமபுரத்திற்குச் சென்று அங்கோர் திருமடம் அமைத்து ‘நின்பால் ததும்பியிருக்கும் ஞானத்தை வழங்கி அருளுவாயாக’ என அருளாணை தந்து வாழ்த்தியருளினர்.
குருவருள் வழிநின்ற சம்பந்தரும் தருமபுரம் சென்று தம் பெட்டகத்திருந்த சொக்கலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்துத் திருக்கோவில் அமைத்து நாள் வழிபாடாற்றி வந்ததுடன் தம்பால் வந்தோர்க்கு ஞானத்தையும் வழங்கி வருவாராயினர். இவரை முதற்குரவராகக் கொண்டு வளர்ந்து வகும் ஆனேமே திருக்கயிலாய பரம்பரைத்திருந்தரும புர ஆகீனமாகும்.
இவர், எட்டு அருள் நூல்களையும் அருளியுள்னார். அவை அவ்வாதீன வெளியீடாகப் பண்டார சாத்திரம் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன, அவை, 1. சொக்கநாத வெண்பா, 2. சொக்கதாதக் கலித்துறை, 3. ஞானப்பிரகாச மாலை, 4. நவரத்தின மாலை, 5. சிவபோக சாரம், 6. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், 7. சோடச சுலாப்பிரசாத சட்கம், 8. முத்தி நிச்சயம் என்பன. இவை திருவருளையும் குருவருளையும் வியந்து போற்றுவதுடன் மெய்ப் பொருளை விளக்கும் ஞானநூல்களாகவும் திகழ்கின்றன.{{Right|<b>கு.சு.</b>}}
<b>
குருட்சேத்திரம்</b> குரு-பாஞ்சால நாட்டின் ஒரு பகுதி. தொடக்ககால ஆரியர்கள் இங்கு நாகரிகத்துடன் வாழ்ந்தனர். இது பாரதப்போர் நிகழ்ந்த போர்க்களம். குரு என்றும் மன்னன் பெயரால் ஏற்பட்டதே குருட்சேத்திரம், குருகுலத்தவராகக் கருதப் பெறும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இங்கே போர் நடைபெற்றது. அப்போது இதை பிறந்தது. எனவே, குருட்சேத்திரம் இந்துக்களின் புனிதந்தனமாகக் கருதப்படுகிறது. தில்லிக்கு அருகில் அரியானா மாநிலத்தில், காரிருள் மாவட்டத்தில் சரசுவதி ஆற்றுக்கும் இராக்கி நதிக்கும் இடையில் அமைந்துள்ள சமவெளி, இது நித்துக் எனவும் சொல்லப்படுகிறது. நீர்துக் என்பது துன்ப மற்றது எனப் பொருள்படும். இச்சமவெளியின் நீளம் ஏறத்தாழ 115 கி.மீ. அகலம் 49 கி.மீ. சீனப்பயணியான யுவான்சுவாங்கு இதனை இன்பபூமி (Field of Happiness) எனக் குறிப்பிட்டுள்ளார்.
குருட்சேத்திரத்தில் 5/32 கி.மீ. நீளமுள்ள புனிதக் குளம் ஒன்றுள்ளது. இங்குக் குளிப்பதற்கான துறை (நீராடுதுறை bathingghat) ஒன்றும் பறவைகளின் சரணாலயம் ஒன்றும் உள்ளன. இந்துக்களைத் தவிரப் பிற பயணியர்களும் கண்டுகளிக்கத்தக்கவை. குருட்சேத்திரம் என்னும் பெயரில் இருப்புப்பாதை நிலையம் ஒன்றுள்ளது.{{Right|<b>ம.இ.</b>}}
<b>குருட்சேத்திரப் பல்கலைக் கழகம்</b>: இது தில்லியின் வடக்கே 156 கீ.மீ. தொலைவில், அரியானா (Haryana) மாநிலத்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்கதும் புனிதப் பயணிகள் பலரும் வரும் நகருமான குருட்சேத்திரம் (Kurukshetra) என்னுமிடத்தில், 1956-இல் தொடங்கப்பெற்றது. தொடங்கப்பட்ட போது பிறகல்லூரிகளை இணைத்துக் கொள்ளாததாகவும் மாணவர்கள் தங்கிப் பயிலக் கூடியதொன்றாகவும், கற்பித்தலை மட்டும் செய்யக் கூடியதாகவும் குருட்சேத்திரப் பல்கலைக்கழகம் விளங்கியது. முதன் முதலில் சமசுகிருதத் துறையுடன் மட்டுமே தொடங்கப்பட்ட குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு புலங்கள் உள்ளன.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகம் 1974-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசின் சட்டத்தின்படி, மாநிலத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை இணைத்துக் கொண்டது. பழைய வேந்தர் (Chancellor) பெயரின் நினைவாக ஓராண்டுக்குப் பின் (1976-1977), பைரேந்திரா நாராயணன் சக்கரவர்த் இப்பல்கலைக்கழகம் (Birendra Narayan Chakravarty University) எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஆயினும் ஓராண்டுக்குள் பழைய பெயரே மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைப்புரிமை பெற்றிருந்த 12 கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, மகரீதி தயானந்தர் பல்கலைக்கழகம் (Maharishi Dayanand University) என்னும் புதிய பல்கலைக்கழகம் ஒன்று 1977-இல் தோற்றுவிக்கப்பட்டது.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் வசதியுண்டு. அறிவியல், சட்டம், பொறியியல், தொழில் நுட்பம், மேலாண்மை (Management) போன்ற பாடத்துறைகளுக்குத் தேர்வு மொழியும் பயிற்று மொழியும் ஆங்கிலமாக இருந்த போதிலும், பிற பாடத்துறைகளுக்கு இந்தியே பயிற்று மொழியாக உள்ளது.
குருட்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல், வேதியியல், கணிதவியல், இயற்பியல், விலங்கியல், நிலவியல் ஆகிய அறிவியல் துறைகளும்,<noinclude></noinclude>
lldeiy05y0i7ufguzqgcniguxzx4e0o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/705
250
642416
1930839
2026-05-07T07:04:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உளவியல், அரசியலறிவியல் (Political Science), மொழியியல், மேலாண்மை, சட்டவியல், வரலாறு, தத்துவம், வணிகவியல், பொருளியல், பண்டைய இந்திய வரலாறு, பண்பாடு, தொல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருத்தோலை ஞாயிறு|677|குருத்தோலை ஞாயிறு}}</noinclude>உளவியல், அரசியலறிவியல் (Political Science), மொழியியல், மேலாண்மை, சட்டவியல், வரலாறு, தத்துவம், வணிகவியல், பொருளியல், பண்டைய இந்திய வரலாறு, பண்பாடு, தொல்லியல் ஆகிய கலைத் துறைகளும் உள்ளன. கல்வியியல், உடற்பயிற்சியியல் நூலகவியல், இசை, நாட்டியம் போன்ற துறைகளும் உள்ளன. இங்கு ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, சமசு கிருதம், பாலி (Pali), பிராகிருதம் (Prakrit) ஆகிய இந்திய மொழிகளுக்கும், உருது பாரசீகம் ஆகிய அரசியல் மொழிகளுக்கும் துறைகள் உண்டு. உருசிய மொழி பிரெஞ்சு மொழி ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன.
பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று பல்கலைக்கழகக் கல்வியியல் கல்லூரி (University College of Education) ஆகும், மற்றொன்றில் மொழி, அறிவியல், கலைத் துறைப் பாடல்கள் உள்ளன.{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>குருத்தோலை ஞாயிறு</b>: இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாளைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமைக்கு (Easter Sunday) முந்திய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) எனப்படுகிறது. அந்நாளில் இயேசு தம் இறுதிப் பயணமாக எருசலேம் நகருக்குச் சென்றதை உலகெங்குமுள்ள கிறித்தவர்கள் திருநாளாகக் (Holy Day) கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறித்து (Jesus Christ) தம் பகைவரால் சிலுவையில் அறையப்பட்டு எருசலேமில் (Jerusalam) உவிகிழக்கப் போவதை முன்னறித்து, அதனைத் தம்முடனிருந்த சீடர்களுக்கு அறிவித்தார். எனினும், அதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவரிடம் தோன்றவில்லை. அதனை அவர் விரும்பாமலும் தம்மைப் பிறரிடமிருந்து ஒளித்துக்கொள்ளாமலும், தம்மை மக்களுக்காகப் பலியாகத் (Sacrifice) தந்து, தாம் நிறைவேற்ற வேண்டிய இறை பணியை முடிவுறச் செய்யக் கோவேறு கழுதைக்குட்டியின் மேலேறி, எருசலேம் நகருக்கு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்றார். அந்நாள் ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது. சீடர்கள் கழுதைக் குட்டியில் மேல் தங்கள் ஆடைகளை விரித்து இயேசு கிறித்துவை அதன்மேல் உட்கார வைத்தார்கள். திரளான மக்கள் தங்கள் ஆடைகனை இயேசு கிறித்து செல்லும் வழியில் விரித்தார்கள், சிலர் மரக்கிளை களைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். இயேசு கிறித்துவுக்கு முன் சென்றவர்களும் பின் நடத்தவர்களுமாகிய திரளான மக்கள் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா; கருத்தரின் நாமத்தில் வருகிற இவர் அரசன், துதிக்கப்படத்தக்க மகத்துவமானவர், உன்னதத்திலே சமாதானம் ஓசன்னா எனப் பாட்டுப் பாடி, ஓர் அரசனுக்கு அனிக்கும் வரவேற்பு அளித்தனர்.
எருசலேம் நகருக்குள் இயேசு, ஊர்வலமாக ஆரவாரத்துடன் பெரும் அளவில் மக்கள் புடைகுழச் சென்றவுடன் அந்நகர மக்கள் வியப்படைந்து, அரச கோலத்துடன் காணப்படும் இவர் யார் என்று வினவினர். பலரும் பலவகையில் இயேசுவை அறிந்து ஏற்றுக்கொண்டிருந்தனர், சிலர் இயேசுவை யூதரை (Jews) மீட்கும் அரசன் என்றும் சினர் எலியா (Eliah) என்றும், சிலர் மேசியா (Massiah) என்றும், சிலர் தீர்க்க தரிசி என்றும் கருதினர். அந்நாளில் இயேசுவுடன் கூட இருந்த மக்கள் இவர் இலாசரசைக் (Lazarus) கல்லறையிலிருந்து உயிரோடே எழுப்பினாரென்று கூறினார்கள். இச்செய்தி திருமறையில் (Bible) புனித யோவான் (Saint Joha) எழுதிய நற்செய்தி (Gospel) நூலில் 12-ஆம் பகுதி 17-ஆம் வானத்தில் கூறப்பட்டுள்ளது.
இயேசுவை முழுமையாய் அறியாத நிலை கண்டும். அமைதிக் காலத்தில் சமாதானததிற்கு ஏற்றவற்றை அறியாததனால் எருசலேம் நகருக்கு நிகழவிருக்கும் அதன் பிற்கால நிலையை முன்னறித்தும் இயேசு எருசலேம் நகருக்காகக் கண்ணீர் விட்டு அழுதார். எருசலேமுழுக்கு எதிரிகளினால் மக்களுக்கு வரவிருக்கும் இன்னல்களை, இயேசு மக்களுக்கு வேதனையுடன் வலியுறுத்தில் கூறினார்.
இயேசு கிறித்துவின் பிறப்புக்கு முன் சகரியா என்னும் தீர்க்கதரிசி (Prophet Zechariah) இயேசு சிறிந்து அரசனாகவும் மீட்பராகவும் நீதியும் தாழ்மையும் உடையராய்க் கழுதையின் மேலும், கழுதைக் குட்டியின் மேலும் ஏறி வருவாரென்பதை எருசலேம் மக்களுக்கு முன்பே அறிவித்தார். அதனை விளக்கமாகத் திருமறையின் பழைய ஏற்பாட்டில் சகரியா நூலின் 9-ஆம் பகுதி 9-ஆம் வசனத்தில் (Zachariah 9-9) காணலாம். இம்முன்னறிவிப்பை எருசலேம் மக்கள் நினைவு கூர்ந்து இயேசுவின் எருசலேம் நகர் வருகையைத் திருவிழாவாகக் கொண்டாடினர். இயேசு தம்மைக் குறித்தும் எருசலேம் நகரைக்குறித்தும் முன்னறிவித்த யாவும் நிகழ்ந்தன. தீர்க்கதரிசிகளின் மூலம் கூறப்பட்டவையும், திருமறையின் புழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பவையும் நிறைவேறின. இவற்றை உலக வழக்கில் நினைவுகூரும் பல விழாக்களும் வழிபாடுகளும் (Worships) சடங்குகளும் உள. அவற்றுள் இந்நாள்வரை நிலைநிற்கும் சிறப்புடைய விழா குருத்தோலை ஞாயிறு ஆகும்.{{nop}}<noinclude></noinclude>
anrf3ocaki28vyiw8tzfk6ffoo3k9o8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/884
250
642417
1930840
2026-05-07T07:06:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருள் பெற்றார். இவர் பூங்காவனக் கவிராயரிடம் கற்றார். இவர் ஒருநாள் பள்ளி முடிந்து ஒரு தோட்டத்தின் வழியாகச் சென்றார். தோட்டக் காவலன் சூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியாண சுந்தர முதலியார், பூவை.|856|கலியாணசுந்தரனார், திரு.வி.}}</noinclude>வருள் பெற்றார். இவர் பூங்காவனக் கவிராயரிடம் கற்றார். இவர் ஒருநாள் பள்ளி முடிந்து ஒரு தோட்டத்தின் வழியாகச் சென்றார். தோட்டக் காவலன் சூரன் கோலால் அடிக்க, அவனைத் தண்டிக்க எண்ணி வசைப்பாடல் ஒன்றைப் பாடிக் காளிதேவியிடம் முறையிட்டார். காவலன் நொண்டியானான்.
இவர் சைவ நூல்களைப் புலவர் இராமலிங்கத் தம்பிரானிடம் கற்றார்; காஞ்சியில் சிவதீக்கை பெற்றார்; வடலூர் இராமலிங்க அடிகளின் திருவருள் நோக்கினை அடைந்தார். மேலும், கலியாண சுந்தரவென் கண்மணியே நின்பால், மலிவாகக் கல்வி வளரும் எனத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வாழ்த்தினையும் பெற்றார். செங்கற்பட்டுச் சொக்கநாதப்பிள்ளையிடம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், நன்னூல் விருத்தி பாடங்கேட்டார், அவதானம் செய்யவும் அவரிடம் பழகிக் கொண்டார். ‘அட்டாவதானி’ யாக விரும்பினார். திருக்கழுக்குன்றத்தில் கி.பி. 1878–ஆம் ஆண்டில் செகந்நாதப் பிள்ளை தலைமையில் பேரவை கூடியது. கைக்கும் புத்தகத்திற்கும் ஒரு சிலேடை வெண்பா பாடவேண்டுமென்று பணித்தனர். இவர் உடனே பாடினார். ‘பால்’ என்னுஞ் சொல் பத்து இடங்களில் வருமாறு ஒரு வெண்பாப் பாடுக என ஒருவர் சொல்ல உடன் பாடினார். இவர்தம் அவதானத் திறம் உணர்ந்து பேரவை ‘அட்டாவதானம்’ என்னும் பட்டம் வழங்கியது.
இவருக்கு கி.பி. 1879–இல் திருமணம் நிகழ்ந்தது. இரண்டு பெண்மக்களும் ஓர் ஆண்மகனும் தோன்றினர். தமக்குக் கற்பித்த செகந்நாதப் பிள்ளையிடம் பேரன்புற்றார். அன்பளிப்பாக வந்த பொருள்களையெல்லாம் ஆசிரியர்க்கே வழங்கினார். சைவசித்தாந்தத்தில் நாட்டம் கொண்டு, சொற்பொழிவுகள் பலவும் செய்தார். ‘நடராசசபை’ ஒன்றை நிறுவிப் புராணச் சொற்பொழிவு நிகழ்த்தினார். சிவனடியார் திருக்கூட்டம் ஏற்படுத்தினார். சித்தாந்தம் முதலிய இதழ்களில் கட்டுரை வரைந்தார்.
சென்னைக் கந்தக் கோட்டத்தில் தொலைந்து போன திருநீற்றுச் சம்புடம் பற்றிய கவலையை முருகனிடம் தெரிவித்தார். மீண்டும் அங்குச் சென்றபோது ஒருவனிடம் விலைபேசி, அதனைத் திரும்பப் பெற்றார்.
திருவிற்கோலம் கோயிலில் இறைவழிபாடு செய்தார். வெள்ளிப்பூண் பிடித்த தமது கைத்தடியை வைத்து மறந்துவந்து பின் சென்று தேடினார். தடி அகப்படவில்லை. ‘சுந்தரர்க்குக் கோல் கொடுத்த சோதியே! கல்யாண சுந்தரன் கோல் கொண்ட தென்ன சூழ்ச்சியோ’ - எனப் பாடினார். பின்னர் ஒரு நாள் சென்னை வரும் வேளை வழியில் வந்த கூட்டத்தில் ஒருவன் கையிலிருந்த தனது தடியை அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இவர் கி.பி. 1879–ஆம் ஆண்டு திருப்போரூர் சென்றபோது பாம்பொன்று காலிற் கடித்தது. முருகன் அங்குத் தோன்றி அவரைக் காத்தார். மயிலம் கோவிலுக்குச் செல்லும்போது கள்வனிடம் பறிகொடுத்த தமது பொருளும் கிடைக்கப் பெற்றார்.
மக்களும் மனைவியும் இறக்க உலகப் பற்றை வெறுத்தார். காஞ்சி ஞானப்பிரகாசரிடம் துறவு பூண்டார். இவர் 1918–இல் இறந்தார். உடல் திருவொற்றியூரில் அடக்கஞ் செய்யப்பட்டது.
திருப்பாசூர்ப் புராண வசனம், திருவலிதாய புராண வசனம், திருவேற்காட்டுப் புராண வசனம், சேக்கிழார் வரலாறு, திருவொற்றியூர் புராண வசனம், காளத்திப் புராண வசனம், சித்தாந்த சாதனக் கட்டளை, சித்தாந்த தசகாரியக் கட்டளை, திருவான்மியூர்ப் புராணம், மாசிலாமணியீசர் பதிகம், கற்பக விநாயகர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் என்னும் பன்னிரு நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.
{{Right|<b>து.ப.</b>}}
{{larger|<b>கலியாணசுந்தரனார், திரு.வி. (கி.பி. 1883-1953)</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் துள்ளம் என்னும் ஊரில் கி.பி. 1883-இல் பிறந்தார். இவர் தந்தையார் விருத்தாசல முதலியார்; தாயார் சின்னம்மாள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 884
|bSize = 480
|cWidth = 123
|cHeight = 170
|oTop = 372
|oLeft = 273
|Location = center
|Description =
}}
{{center|கலியாணசுந்தரனார் திரு.வி.}}
{{nop}}<noinclude></noinclude>
ezobn9t09v288u656anq5hi4cdflz7s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/885
250
642418
1930842
2026-05-07T07:21:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் சென்னை இராயப்பேட்டை ஆரியன் தொடக்கப்பள்ளியிலும் வெசுலி கல்லூரியிலும் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். ஆனால், பள்ளி இறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியாண சுந்தரனார், திரு.வி.|857|கலியாண சுந்தரனார், திரு.வி.}}</noinclude>இவர் சென்னை இராயப்பேட்டை ஆரியன் தொடக்கப்பள்ளியிலும் வெசுலி கல்லூரியிலும் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். ஆனால், பள்ளி இறுதித் தேர்வை எழுதவில்லை. பின்னர் நா. கதிரைவேற் பிள்ளை, மறைமலையடிகள், மகாவித்துவான் தணிகாசல முதலியார், ஞானியார் அடிகள் ஆகியோரிடம் பயின்று, தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் சிறந்த புலமை பெற்றார்.
இவர் இசுபென்சர் (Spencer) நிறுவனத்தில் சில காலம் (1907-8) பணியாற்றினார். பின்னர், சென்னை ஆயிரம் விளக்குப் பள்ளியில் 1910 முதல் 1916 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் 1912-இல் கமலாம்பிகை அம்மையாரை மணந்தார். வெசுலி கல்லூரியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தபின், பொதுத் தொண்டில் ஈடுபடும் பொருட்டு அப்பணியைத் துறந்தார். இவர் நாட்டு விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம், சமரச சன்மார்க்கம் ஆகியவற்றிற்காகப் பத்திரிகை வாயிலாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகவும் அருந்தொண்டாற்றினார்.
தமிழ் மொழியில் செய்தித்தாளை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கி, பத்திரிகைத் தமிழை வளர்த்த பெருமை திரு.வி.க.வையே சாரும். இவர் 1917–இல் தேசபக்தன் என்னும் செய்தித் தாளைத் தொடங்கி, அதன்மூலம் தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் வளர்த்தார், அவ்விதழ் 1920-இல் ஆங்கில அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. எனவே, நவசக்தி என்னும் வார் இதழைத் தொடங்கினார். இத்த இதழ் வாயிலாக இவர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தார். கல்கி போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை நவசச்தி இதழுக்கு உண்டு.
திரு.வி.க. சென்னை தொழிலாளர் சங்கத்தை வாடியா என்பவர் துணையுடன் 27.4.1918–இல் தொடங்கினார். இதுவே இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தொழிற் சங்கமாகும். இவர் இச்சங்கத்தின் வழிச் சென்னை மாகாணத் தொழிலாளர் நலத்திற்காகப் பாடுபட்டார். சென்னைப் பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில் பங்குகொண்டு (1920–21), அவர்களின் வேண்டுதல் நிறைவேறத் துணை புரிந்தார். மேலும், மாமண்டூர் உழவர் வேலை நிறுத்தம் (1933), ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் (1939), பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்கு உறுதுணையாக விளங்கினார். இவர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காக 1947 சூன் 9-முதல் திசம்பர் 7 வரை தம் இல்லத்திலேயே சிறை வைக்கப்பட்டார். இவர் மத்திய தொழிலாளர் சங்கம், சென்னை ஆலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பலகாலம் பணிபுரிந்தார்.
இவர் இராயப்பேட்டைப் பாலசுப்பிரமணிய பக்தசன சபை, திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டம், சென்னை சைவ சித்தாந்த மகா சமாசம் போன்ற பல சமய அமைப்புகளில் உறுப்பினராய் இருந்தும், சமயச் சொற்பொழிவுகளாற்றியும் பெருந்தொண்டு புரிந்தார். சமயங்களின் பெயரால் ஒற்றுமையின்றி இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பிளவுபட்டு நிற்பதைக் கண்டு இவர் வருந்தினார். எல்லாச் சமயங்களின் உட்பொருளும் நோக்கமும் ஓரே தன்மையுடையவை என்னும் கருத்தைத் தம் பேச்சாலும் எழுத்தாலும் மேடை, நூல், பத்திரிகை ஆகியவற்றின் வாயிலாக வலியுறுத்தி வந்தார். ‘சமரச சன்மார்க்க போதம்’, ‘சமரச தீபம்’, ‘சன்மார்க்கத் திறவு’, ‘இயற்கை வாழ்வு’ போன்ற இவர்தம் நூல்கள் இக்கருத்தை விளக்க எழுந்தன. ‘முருகன் அருள் வேட்டல்’, ‘திருமால் அருள் வேட்டல்’, ‘கிறித்துவின் அருள் வேட்டல்’, ‘சிவனருள் வேட்டல்’, ‘கிறித்து மொழிக் குறள்’ ஆகிய நூல்கள் இவருடைய சமரச மனப்பான்மையை நன்கு வெளிப்படுத்துகின்றன. திருப்பத்தூர்க் கிறித்துவ குலஆசிரமம், இராயப்பேட்டைச் சகோதர சங்கம், பெங்களூர் ஒடுக்கத்தூர் மடம், சென்னைப் பிரமஞான சங்கம் (Theosophical Society), சென்னை ஐசு அவுசு (Ice House) மகாபோதி சங்கம் ஆகிய பல்வேறு சமய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார் என்பதை நோக்கும் போது, இவருடைய சமரச மனப்பான்மை நன்கு புலனாகிறது.
‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘நாயன்மார்’, ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும்’, ‘இன்பவாழ்வு’, ‘தமிழ்த் தென்றல்’, ‘தமிழ்ச் சோலை’, ‘முடியா? காதலா? சீர்திருத்தமா?’, ‘திருமால் அருள் வேட்டல்’, ‘பொதுமை வேட்டல்’, ‘சமரச சன்மார்க்க போதம்’ போன்றவை இவருடைய புகழ்வாய்ந்த தமிழ்நூல்கள். இவை முதலில் தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களில் வெளிவந்து, பின்னர் நூல் வடிவம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சுமார் 50-க்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைத் தேனென இனிக்கும் தெள்ளுதமிழில்<noinclude></noinclude>
qzprlg2fgh9b6tvat3se63c89tpv1t8
அட்டவணை பேச்சு:கலைஞர் கடிதம் 9.pdf
253
642419
1930874
2026-05-07T08:37:23Z
Booradleyp1
1964
"இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1930874
wikitext
text/x-wiki
இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC)
jy3oy4p5lcgv7565xj3d1pxl0bqbkke