விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf 252 453732 1931436 1931251 2026-05-08T13:24:48Z Booradleyp1 1964 1931436 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|8. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|9. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|10. அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| 11. பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|12. கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] kazcquuctum0k86uoe0a22nrksbmiqu 1931636 1931436 2026-05-09T04:09:49Z Booradleyp1 1964 1931636 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|8. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|9. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|10. அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| 11. பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|12. கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] omsznagw9989zo4cd48fpdik7c6uocv அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1931619 1930915 2026-05-09T03:38:22Z Booradleyp1 1964 1931619 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 234=பகுதி-28 239=பகுதி-29 245=பகுதி-30 253=பகுதி-31 259=பகுதி-32 266=பகுதி-33 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] foqyujavqkh182gf3dttsqie0np5gw5 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/249 250 573715 1931602 1930928 2026-05-09T03:09:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 229}}</noinclude>என் வாழ்க்கையில் எத்தனை நண்பர்கள் எனக்குத் துரோகியானார்கள் என்ற கசப்பு மிகுந்த கணக்கே என் கவனத்திற்கு வந்திருக்காது - என் நெஞ்சத்தையும் கலக்கியிருக்காது! பழமைவாதிகள் கூற்றுப்படி சொல்ல வேண்டுமேயானால் பட வேண்டிய வேதனைகள் பல இருக்கும்போது-சுடு சொல்லாளர் விடுகணைகளை ஆயிரம் ஆயிரமெனத் தாங்க வேண்டுமென்று தலையில் எழுதியிருக்கும்போது-தமிழன் என்ற உணர்ச்சியற்ற தக்கை மனிதர்களின் தன்மானமிழந்த செயல்களைக்கண்டு குமுறியழ வேண்டுமென்று விதியிருக்கும்போது - அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியுமா என்ன? அதற்கு மாறாக இப்படி நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்கிறேன். அன்று மரணத்தின் வாயிலிருந்து மீண்ட காரணத்தினால்தான் என் உடன் பிறப்புக்களின் ஒத்துழைப்புடன் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்னாலியன்ற தொண்டாற்ற முடிந்தது என்பதுதான் அந்த ஆறுதல். அந்த இதய உணர்வோடு நான் சென்னையில் எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டமொன்றில் கூறிய வாசகங்களை என்றைக்குமே மறக்க மாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் - அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்-அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்! தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்து தின்று மகிழலாம்! இந்த உணர்வின் வடிவமாக ஆகிவிட்ட நான் திருச்சி மாநாட்டில் நிறைவு உரை ஆற்ற எழுந்த போது என்றுமில்லாத அளவுக்கு என் நாடி நரம்புகள் எல்லாம் அதிர்ந்தன. மேடையில் கழக முன்னணியினர் அனைவரும் இருந்தனர். பொருளாளர் எம். ஜி. ஆர் மட்டும் முதல் நாள் மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, அன்று காலையிலேயே விடைபெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டார். {{nop}}<noinclude></noinclude> oc5x3icgdhqnwclxw35jw8wixfnkvvf பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/250 250 573716 1931603 1930934 2026-05-09T03:10:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|230 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணா இல்லாத முதல் மாநாடு என்று குறிப்பிட்டேனே; அந்த மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நினைவூட்டித்தான் ஆகவேண்டும். கழகக் கண்மணிகளே! அருமைத் தாய்மார்களே! பெரியோர்களே! “பேரறிஞர் அண்ணா அவர்களே”... என்று அழைத்துப் பேச்சைத் தொடங்கவேண்டிய நான்-இன்று அந்த அண்ணன் எங்கே? எங்கே? என்று தேடுகிற நிலைமையில் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். “தம்பி வா! தலைமையேற்க வா?” என்று அழைத்து ஆணையிட்டதும், கேட்டு ஓடிவந்த நாவலர் இங்கே அமர்ந்திருக்கிறார். அழைத்து ஆணையிட்ட நீ எங்கே போய்விட்டாய்? மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம்; ஆனாலும் தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவறமாட்டார் என்று அடிக்கடி புகழ்வீர்களே, அண்ணா! அந்தப் பிடிவாதக்கார மதியழகன் இங்கே அமர்ந்திருக்கிறார். அவரைப் பிரிந்து எங்கே அண்ணா சென்றுவிட்டீர்கள்? சிற்றரசு பேசினால் நான் குலுங்கச் குலுங்கச் சிரித்து விடுகிறேனடா தம்பி! என்று சிரிப்பீர்களே அண்ணா, அந்தச் சிற்றரசு இங்கே எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தபோது அதை ரசிக்காமல் எங்கே போய்விட்டீர்கள் அண்ணா? பக்கத்தில் என். வி. என். அமர்ந்து, வெற்றிலை மடித்துத்தர, அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக் கொள்வீர்களே, அண்ணா! அந்த வெற்றிலை மடித்துத்தர இங்கே என். வி. என். இருக்கிறார். வெற்றிகளைத் தந்த எங்கள் அண்ணனே, நீ எங்கே போய்விட்டாய்? ஆழமாகச் சிந்திப்பதும்-அமைதியாக இருப்பதும்-ஆணித்தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு எனப் பாராட்டுவீர்களே அண்ணா - அந்தப் பேராசிரியர் இங்குளார்; பெருமைமிகு அண்ணனே! நீ எங்கே போய்விட்டாய்? “என்ன முத்து? கோபமாக வருகிறாயா? உட்கார்!” என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்-<noinclude></noinclude> 68vslj8f1h0w27p9lno71ljjhbmwrq3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/251 250 573717 1931604 1930962 2026-05-09T03:15:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 231}}</noinclude>டுக் குளிர்ந்த முகத்தோடு எதிரே அமர்வாரே; அந்த மதுரை முத்து இந்த மாநாட்டிலே இருக்கிறார்; ஆனால் அவரைக் குளிரவைக்கும் அண்ணனே நீ எங்கே போய்விட்டாய்? “மன்னை, மன்னார்குடிக்கு வர வேண்டாமென்று கருணாநிதிதான் சொல்கிறான், என்மேல் குற்றமில்லையப்பா” என்று குறும்பு செய்வீர்களே, அந்தக் குறும்பைத் தாங்கிக் கொள்கிற மன்னை நாராயணசாமி இங்கே இருக்கிறார். அண்ணனே, எங்கே போய்விட்டாய்? “அன்பில்! எங்கே கொஞ்சம் கண்ணைக் காட்டு” என்று கண்ணைக் காட்டச் சொல்லி குமிழ்க் கண்களைப் பார்த்து ரசிப்பீர்களே. அந்தக் கண்ணைக் காட்ட நம்முடைய அன்பில் இங்கே இருக்கிறார். அண்ணனே, கண்மூடி நீ எங்கே போய்விட்டாய்? “சென்று வா தம்பி! வென்று வா தம்பி!” என்று கல்லக்குடி போராட்டத்திற்கு சிதம்பரத்திலே என்னை வழியனுப்பி வைத்தீர்களே, அண்ணா! வென்று வந்திருக்கிறேன்; வென்று வா என்று சொன்ன நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? எங்கே போய்விட்டீர்கள்? என்று கேட்டுத்தான் இந்த மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்களே என்று நான் அழைக்கிறேன். எனக்கு நம்பிக்கை உண்டு. இங்கேயிருக்கிற எங்களுக்கெல்லாம் நம்பிக்கை உண்டு. அண்ணா நீ இங்கேதானிருக்கிறாய். இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய். இந்த ஆரவாரத்தைக் காண்கிறாய். இங்கே இருக்கின்ற உன்னுடைய அருமைத் தங்கைகளையெல்லாம் பார்க்கிறாய். தம்பிகளின் பட்டாளங்களைக் காண்கிறாய். மலர் போன்ற மழலைக் குழந்தைகளின் இதழ் ஓரத்தில் முத்தமிடுகிற அண்ணனே, நீ எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறாய்! இங்கேதான் இருக்கிறாய்! எங்களுடைய நெஞ்சங்களில்தான் இருக்கிறாய் அண்ணனே! இங்கேதான் இருக்கிறாய்! ஒவ்வொரு மாநாட்டிலும் கழகத்தினுடைய பொருளாளர் என்கிற முறையில் நான் கணக்குகளை எல்லாம் ஒப்படைக்க மாநாட்டு மேடைக்கு வர; எவ்வளவு வசூல் என்று அண்ணா கேட்க - சொல்ல முடியாது, அது “சஸ்பென்ஸ்” - என்று அவரிடத்தில் நான் சொல்ல - ‘சும்மா சொல், நான் வெளியே சொல்லமாட்டேன்’ என்று அவர் வேடிக்கைபேச-பக்கத்தில் இருக்கிற ப. உ. சண்முகம் வசூலை அவரிடம் சொல்லிவிட - ‘பார்த்தாயா, பார்த்தாயா. உன்னுடைய நண்பனே சொல்லிவிட்டான்’ என்றெல்லாம் கேலி பேசுவாரே, அந்த அண்ணன் மேடையில்<noinclude></noinclude> 0lczi04oqu5zk4cnf06m8ehumz09sf9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/252 250 573718 1931605 1930978 2026-05-09T03:15:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|232 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நின்று பேசுகின்ற அந்த எழில் ஓவியத்தைக் கண்டு கண்டுகளித்து வந்த நான் இன்றைய தினம் அந்த இடத்திலே நின்று பேசுவது என்றால் என்னுடைய உடல் எல்லாம் நடுங்குகிறது! என்னுடைய உள்ளமெல்லாம் குமுறுகிறது என் கண்கள் குளமாகின்றன! தாயை இழந்த நேரத்திலே - தந்தையை இழந்த நேரத்திலே எனக்கு ஏற்படாத கவலையை நான் கல்லறைக்குச் செல்கிறவரையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்னுடைய அண்ணன்! அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை - என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே! உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை- எனக்குத் தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.” -இவ்வாறு கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறிட முன்னுரையை ஆரம்பித்து, தொடர்ந்து நான் ஆற்றிய நீண்ட உரையில் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களுக்கு விளக்கமுரைத்தேன். மாநில சுயாட்சிக் கொள்கைக்கான தீப ஒளி திருச்சி மாநாட்டில் சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. {{nop}}<noinclude></noinclude> reyufa1ge9m52pd0ugyv4wzwzgob7sk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/253 250 573719 1931606 1931296 2026-05-09T03:20:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>31</b>}} {{larger|<b>“தமிழ் உணர்வும் தமிழக உரிமையும்”</b>}} {{X-larger|<b>சி</b>}}றந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதையொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது “இனித் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும், “நீராருங் கடலுடுத்த” எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன். வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில் சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து” என்று குறித்துத் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் - அதுவும் தமிழ்த் தாய் வாழ்த்தில் - மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும்- “அழிந்து, ஒழிந்து” என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றிவிட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். {{block_center|<b><poem> “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”</poem></b> }}{{nop}}<noinclude></noinclude> g1yum6cnr4xkqj95gwh6jw8qo6wqyow பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/254 250 573720 1931607 1930981 2026-05-09T03:21:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|234 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குப்படுத்தப்பட்டது. மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க - பின்னணி இசைப் புகழ் மணிகளான சௌந்திரராசன், திருமதி சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழக அரசு விழாக்களில் பயன் படுத்தப்பட்டன. அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே - அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவறவில்லை! “ஆனந்த விகடன்” இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு. கி. வா. ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழி வாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக “அங்கிங் கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். மெயில் போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துக்கள் வெளிவந்தன. அப்போது பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்கள் தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில் எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித்திருந்தார். அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும். “தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணிய” வணக்கப் பாடலையே பாடவேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது. அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர். புரட்சித் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவிலிருந்து விலகுவதற்கு இதுவே வழி வகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தை பெரிதும் சார்ந்தது எனப் பிற மதத்தினர் எதிர்த்தனர். {{nop}}<noinclude></noinclude> 5t4zzhyk8do5m642hyiilbl9rxa48na பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/255 250 573721 1931608 1931003 2026-05-09T03:23:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 235}}</noinclude>திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது “தாள்” “அடி” என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது என்று கிறித்துவ, இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப்பட்டனர். மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையை விட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரை கண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும். அத்தகையவர் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் “நீராருங் கடலுடுத்த” என்ற பாடலாகும். அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்”. பன்மொழிப் புலவர் அப்பா துரையாரின் இந்தக் கருத்தினையொட்டி சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களும் அறிக்கையொன்றினை விடுத்தார். “நீராருங் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ்ப் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித்திடும்போது - ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது! அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார். மொழியைத் தெய்வமாக வழி படுவது பிழையெனில் இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியாளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப்பாடுவது பொருத்தமற்றது என்கிறார் கி. வா. ஜ! “ஓம்” என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக - இறை வடிவமாக - பிரணவ மந்திரமாக வழிபடப்படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!” திரு. ம. பொ. சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்” என்று அறிவித்தார். {{nop}}<noinclude></noinclude> h60ct0sa4lvmuu4w72f5v0ifjqlvawl பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/256 250 573722 1931609 1931321 2026-05-09T03:24:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|236 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தமிழ்த் தாய் வாழ்த்து - இன்றைக்குத் அரசு தமிழக நிகழ்ச்சிகளில் பாடப்படும்பொழுது, அந்தப் பாடல் எத்துணை எதிர்ப்புகளைச் சமாளித்து வெளிவந்துள்ளது என்ற கடந்த காலசரித்திரம் பலருக்குத் தெரியாமலே கூட இருக்கலாம்; அதனால் தான் நினைவூட்டினேன்! அடுத்து, 1970 மார்ச் 21-ஆம் நாள் டெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆற்றிய உரையும், இறுதியாக வெளியிட்ட அறிவிப்பும் - தி. மு. கழகம், எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைக்காகத் துணிவுடன் பாடுபடும் போர்க்குணம் கொண்டது என்பதை எடுத்துக்காட்டின! “கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் எதிர்பார்த்த அளவிற்குப் பலன் கிடைக்கவில்லை என்று அரசியல் தலைவர்களும், பொருளாதார வல்லுநர்களும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள். அதற்குக் காரணம், திட்டம் வகுப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் வேண்டிய எல்லா அதிகாரங்களையும் ஒரே இடத்திலே குவித்து வைத்திருப்பதுதான். ஆகவேதான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி (Regional Autonomy at the State level and a new Federal set up at the Centre) வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகின்றோம். இம்மாதிரி சொல்வதனால் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வலுவான மத்திய அரசு இருக்க வேண்டுமென்ற கொள்கைக்கும் முரண்பட்டவர்கள் அல்ல. மத்தியில் வலுவான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்த்து உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்க முடியும். ஆனால், இன்றையதினம் மத்திய அரசானது சிக்கல் இல்லாத துறைகளில் சிக்கலைத் உண்டாக்குவதும், சிக்கல் இருக்கக் கூடிய இடங்களில் சிக்கலைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிப்பதுமான சூழ்நிலையில் இருக்கிறது இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் அரசியல் சட்டமானது ஒரே கட்சி எல்லா மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி புரியும் என்ற ஒரு திடமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் காலம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால்<noinclude></noinclude> 1pzig20sxokptgkby9c59p6sd95t24i பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/257 250 573723 1931610 1931335 2026-05-09T03:25:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 237}}</noinclude>மத்தியில் வேறொரு கட்சி ஆட்சிப் பொறுப்பை வகிக்கிறது. இம்மாதிரி மாறுபட்ட சூழ்நிலையில் மத்திய அரசு உருவாக்கும் ஒவ்வொரு கொள்கையையும் அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல. ஆகவே விரைவில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லது என்று என்னுடைய திடமான அபிப்பிராயத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழ்நாடு மத்திய அரசுக்குக் கடன் தவணையாக சுமார் 160 கோடி ரூபாய் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையோ 140 கோடி ரூபாய்தான். உண்மையைச் சொல்லப் போனால் உங்கள் கடனைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதற்காகவே எங்களுக்கு உதவித் தொகை அளிப்பதுபோல் இருக்கிறது. ஆகவே, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 900 கோடி ரூபாயில் எங்களுக்குக் கணிசமான உதவி அளிக்கப்பட வேண்டும். உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும்போது, உறவு கொண்டதே தவறோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. வறட்சிக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்படுகிற நூறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டிற்கு எதுவுமில்லை என்பதை எங்களால் எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது. சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று கடந்த 15 ஆண்டுகளாக மக்களும், மாநில அரசும், மத்திய அரசை இடைவிடாது வேண்டிக் கொண்டிருக்கின்றன. சேலத்திற்காகப் பல ஆண்டு காலம் போர்க்குரல் எழுப்பிய நாங்கள், இன்று ஆளுங்கட்சியாக வந்திருக்கிறோம் சேலத்திற்கான ஆரம்ப வேலைகளைத் தீவிரமாகச் செய்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் திட்டக்குழுவிற்கு வந்திருக்கிறார். ஆனால் சேலம்தான் இன்னும் வரவில்லை. சேலத்தைப் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு மிகுந்த பரபரப்போடும், உணர்ச்சியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆசையில் கல்லைப் போடாமல் சேலம் திட்டத்திற்கான அடிக்கல்லைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். {{nop}}<noinclude></noinclude> foa8kx6am6m8fenyxsxjcsty4bmoef3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/258 250 573724 1931611 1931365 2026-05-09T03:26:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|238 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமருக்கு நான் இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றி தங்களது அறிவிப்புத் தேவை. இன்னமும் அறிவிக்காமல் இருப்பதன் நோக்கமென்ன? யார் வந்த பிறகு அறிவிக்கலாம் என்று இருக்கிறீர்கள்? கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள 175 கோடி ரூபாய் எல்லா மாநிலங்களுக்கும், எங்களுடைய தமிழ்நாட்டிற்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வறட்சிப் பகுதிகளில் வேலை வாய்ப்பிற்கு ஒதுக்கப்படும் நூறு கோடி ரூபாயில் தமிழ் நாட்டை வஞ்சிக்கக் கூடாது. இந்த மூன்றிற்கும் தங்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்காத வரையில் இந்தத் திட்டத்தை நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் திட்டத்திற்கான சம்மதம் தர முடியாது என்பதையும் திட்ட வட்டமாகக் கூறிக் கொள்கிறேன்.” இவ்வாறு நான் கூறியதின் விளைவாக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ந் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நான்காம் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடைபெற்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து உருக்காலைக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன. நில ஆர்ஜிதம் போன்றவைகள் விரைவு படுத்தப்பட்டன... ஆனால் கழக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்ட பிறகு, உருக்கு ஆலைத் தொழிற்சாலை, உருட்டு ஆலைத் தொழிற்சாலையாக மெலிந்து போயிற்று. {{nop}}<noinclude></noinclude> ophgmgfnm6ba3xyt1xjejqfe7ymtf0l பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/259 250 573725 1931612 1931400 2026-05-09T03:27:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>32</b>}} {{larger|<b>கொள்கை வளர்ந்த நிலை</b>}} {{X-larger|<b>பு</b>}}துடெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழுகூட்டத்தில் நான் மாநில சுயாட்சி குறித்துப் பேசியதும், சேலம் இரும்பு உருக்காலை இடம் பெறாத நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று கடுமையாகக் கூறியதும் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை; டெல்லியிலிருந்து திரும்பும் போது விமானத்தில் அவரும் நானும் சந்தித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரே அதைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேவைகளுக்காக உரிமையுடன் போராடுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன். மத்தியில் இருப்போர் எஜமானர் நிலையிலும் மாநில அரசுகள் எடுபிடிகள் நிலையிலும் இருப்பதை மாற்றியமைத்திடத்தான் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தி. மு. கழகம் தனது கோஷமாகவே ஆக்கிக் கொண்டது. அன்றைக்கு அந்தக் கோஷத்தைக் கேலி செய்தவர்கள் - கண்டித்தவர்கள் - பிரிவினை வாதத்தின் மறுபதிப்பு என்றெல்லாம் திசை திருப்பியவர்கள், இன்றைக்கு அந்தக் கோஷம் இந்திய அரசியல் அரங்கில் எத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில், மாநில அளவில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமருக்கு நேராக மாநில சுயாட்சி முழக்கத்தை நான் எழுப்பியதால்-அது குறித்து வடபுலத்திலே செல்வாக்குப் பெற்ற ஆங்கில ஏடுகள் விமர்சிக்கத் தொடங்கின. டெல்லியில் இருந்து வெளிவரும் “இந்துஸ்தான் டைம்ஸ்” 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பின்வருமாறு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. என். எஸ். ஜே. என்பவர் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருந்தார். {{nop}}<noinclude></noinclude> 0fbfcqnzet2dvy2ad3fr6ma7qnvpcj5 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/260 250 573726 1931405 1709795 2026-05-08T12:45:17Z ஹர்ஷியா பேகம் 15001 1931405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|240 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>“காலம் சுழல்கிறது! தனக்கே உரித்தான முறையில் அது பழைய விஷயங்களுக்காகச் சில இடங்களில் பழிவாங்கவும் செய்கிறது. 1950 வாக்கில் தென்னகத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜவஹர்லால்நேரு அவர்கள் தி. மு. கழகத்தைக் “கற்காலக் கட்சி” என்றும், விளைவுகள் எதையும் ஏற்படுத்த முடியாத கட்சி என்றும் அலட்சியப்படுத்திப் பேசினார். ஆனால் 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கட்சி, வளர்ந்து விட்ட நிலையிலும் தாராள மனப்பான்மையுடன் விளங்குகிறது. ஜின்னாவின் அரசியலைப்பற்றி நேரு கொண்டிருந்த வஞ்சினம் எத்தகையது என்று மெளலானா ஆசாத், தமது “இந்தியா விடுதலை அடைகிறது” என்ற நூலில் எத்தனை விளக்கமாக எழுதினாரோ, அதே வன்மத்துடன் தி. மு. க. வைப்பற்றி பேசியபோதிலும், காலம் மாறிய நிலையில் இன்று தி. மு. கழகம் காட்டுகிற அரசியல் பெருந்தன்மை - நேரு இருந்தால் அவரை மட்டுமல்ல; தி. மு. க.வின் நிறுவனரும் தன்னிகரில்லாத தலைவருமான திரு. அண்ணா அவர்களையே வியப்படையச் செய்திருக்கும். சுருங்கச் சொல்லின் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையில் தி. மு. கழகம் தன்னுடைய மாநில அரசியல் கட்சி என்ற தனித்தன்மையையும் இழந்து விடாமல், அகில இந்திய அரசியலிலும் தனது சிறப்பான பணியை ஆற்ற முற்படுகிறது. எடுத்த எடுப்பில் இது முன்னுக்குப் பின் முரணான முயற்சிபோல் தோன்றும்; அகில இந்திய அரசியலில் செயல்படும் முயற்சியில் எந்த மாநில அரசியல் கட்சியும் தன்னுடைய மாநில நலன் பற்றிய கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு உள்ள ஒரே பலமான மக்களாதரவையும் ஓரளவுக்கு அழித்துக் கொள்ள நேரிடும். திரு. கருணாநிதி அவர்கள் இந்த முரண்பாட்டை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறார். திரு. கருணாநிதி அவர்கள் கூட்டாட்சிக்கும் கூட்டணியாட்சிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். அவர் கொடுத்திருக்கும் அரசியல் விளக்கமானது முற்றிலும் புதுமையானது. அவரது திட்டத்தின் இரண்டொரு அம்சங்கள் புரட்சிகரமானவை. முதலாவதாக, இது அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து ஏற்படுத்திக் கொள்ளும் அரசியல் ஏற்பாடு அல்ல. அரசியல் சட்டத்திலேயே அமைக்கப்படும் மாற்றம் இது. {{nop}}<noinclude></noinclude> il6xvb226mmdf28co60argjw3zmkyj5 1931613 1931405 2026-05-09T03:30:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|240 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>“காலம் சுழல்கிறது! தனக்கே உரித்தான முறையில் அது பழைய விஷயங்களுக்காகச் சில இடங்களில் பழிவாங்கவும் செய்கிறது. 1950 வாக்கில் தென்னகத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜவஹர்லால்நேரு அவர்கள் தி. மு. கழகத்தைக் “கற்காலக் கட்சி” என்றும், விளைவுகள் எதையும் ஏற்படுத்த முடியாத கட்சி என்றும் அலட்சியப்படுத்திப் பேசினார். ஆனால் 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கட்சி, வளர்ந்து விட்ட நிலையிலும் தாராள மனப்பான்மையுடன் விளங்குகிறது. ஜின்னாவின் அரசியலைப்பற்றி நேரு கொண்டிருந்த வஞ்சினம் எத்தகையது என்று மெளலானா ஆசாத், தமது “இந்தியா விடுதலை அடைகிறது” என்ற நூலில் எத்தனை விளக்கமாக எழுதினாரோ, அதே வன்மத்துடன் தி. மு. க. வைப்பற்றி பேசியபோதிலும், காலம் மாறிய நிலையில் இன்று தி. மு. கழகம் காட்டுகிற அரசியல் பெருந்தன்மை - நேரு இருந்தால் அவரை மட்டுமல்ல; தி. மு. க.வின் நிறுவனரும் தன்னிகரில்லாத தலைவருமான திரு. அண்ணா அவர்களையே வியப்படையச் செய்திருக்கும். சுருங்கச் சொல்லின் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையில் தி. மு. கழகம் தன்னுடைய மாநில அரசியல் கட்சி என்ற தனித்தன்மையையும் இழந்து விடாமல், அகில இந்திய அரசியலிலும் தனது சிறப்பான பணியை ஆற்ற முற்படுகிறது. எடுத்த எடுப்பில் இது முன்னுக்குப் பின் முரணான முயற்சிபோல் தோன்றும்; அகில இந்திய அரசியலில் செயல்படும் முயற்சியில் எந்த மாநில அரசியல் கட்சியும் தன்னுடைய மாநில நலன் பற்றிய கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு உள்ள ஒரே பலமான மக்களாதரவையும் ஓரளவுக்கு அழித்துக் கொள்ள நேரிடும். திரு. கருணாநிதி அவர்கள் இந்த முரண்பாட்டை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறார். திரு. கருணாநிதி அவர்கள் கூட்டாட்சிக்கும் கூட்டணியாட்சிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். அவர் கொடுத்திருக்கும் அரசியல் விளக்கமானது முற்றிலும் புதுமையானது. அவரது திட்டத்தின் இரண்டொரு அம்சங்கள் புரட்சிகரமானவை. முதலாவதாக, இது அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து ஏற்படுத்திக் கொள்ளும் அரசியல் ஏற்பாடு அல்ல. அரசியல் சட்டத்திலேயே அமைக்கப்படும் மாற்றம் இது. {{nop}}<noinclude></noinclude> lqy2eofh0j6x4pjhj7krpruvzngu935 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/261 250 573727 1931411 1709796 2026-05-08T13:12:32Z ஹர்ஷியா பேகம் 15001 1931411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 241}}</noinclude>திரு. கருணாநிதி அவர்களின் புதிய கருத்துக்கள் பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையின் மறு உருவமே என்று வாதிப்பவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களாவார்கள். இந்தக் கருத்துக்களை விரும்பாதவர்கள் கூட இன்றைய அகில இந்திய அரசியல் சூழ்நிலையில் திரு. கருணாநிதி அவர்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வரும் ஒரு அரசியல் சக்தி என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு தலைவருக்குரிய ஆற்றலும் திறமையும் பெற்றவராக அண்ணா அவர்கள் இருந்தாரென்றாலும், அவரிடம் சில அமைதித் தன்மைகளும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைகளும் இருந்தன. இதற்கு மாறாக திரு. கருணாநிதி துடிப்புடன், புதுத்திட்டங்களுடன் பெரிய குறிக்கோள்களுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதற்கு முன்னர், தான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால் டெல்லி பக்கம் வந்திருப்பாரோ இல்லையோ என்று கருதப்படும் திரு. கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அவர் முதலமைச்சராகும் வரை தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ஆனால் இன்று அவர் அகாலிக் கட்சியுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அரசியல் உலகத்தின் கவனத்தைத் தன்பால் இழுக்கக்கூடிய தலைவராக திரு. கருணாநிதி இருப்பார்.” இவ்வாறு “இந்துஸ்தான் டைம்ஸ்” ஏடு எழுதியதையொட்டியே - உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடான “சங்கர்ஸ்-வீக்லி” ஒரு கட்டுரை தீட்டியிருந்தது. “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” என்ற கோஷத்தை நான் எழுப்பிய பிறகு, “இந்த வார மனிதர்” என்று தலைப்பிட்டு அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புவது; என்னைப் புகழ்ந்துரைத்துள்ளது என்பதற்காக அல்ல; கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் எவ்வளவு வலுவானது என்பதையும்-கழகத்தின் கொள்கை, எதிர்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதையும் அப்பொழுதே பிரபல பத்திரிகைகள் உணர்ந்து அறிவித்தன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்! {{nop}}<noinclude></noinclude> el2ej5usx27gnej3pwl8h2vimoe2bv0 1931421 1931411 2026-05-08T13:17:06Z ஹர்ஷியா பேகம் 15001 1931421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 241}}</noinclude>திரு. கருணாநிதி அவர்களின் புதிய கருத்துக்கள் பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையின் மறு உருவமே என்று வாதிப்பவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களாவார்கள். இந்தக் கருத்துக்களை விரும்பாதவர்கள் கூட இன்றைய அகில இந்திய அரசியல் சூழ்நிலையில் திரு. கருணாநிதி அவர்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வரும் ஒரு அரசியல் சக்தி என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு தலைவருக்குரிய ஆற்றலும் திறமையும் பெற்றவராக அண்ணா அவர்கள் இருந்தாரென்றாலும், அவரிடம் சில அமைதித் தன்மைகளும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைகளும் இருந்தன. இதற்கு மாறாக திரு. கருணாநிதி துடிப்புடன், புதுத்திட்டங்களுடன் பெரிய குறிக்கோள்களுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதற்கு முன்னர், தான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால் டெல்லி பக்கம் வந்திருப்பாரோ இல்லையோ என்று கருதப்படும் திரு. கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அவர் முதலமைச்சராகும் வரை தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ஆனால் இன்று அவர் அகாலிக் கட்சியுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அரசியல் உலகத்தின் கவனத்தைத் தன்பால் இழுக்கக்கூடிய தலைவராக திரு. கருணாநிதி இருப்பார்.” இவ்வாறு “இந்துஸ்தான் டைம்ஸ்” ஏடு எழுதியதையொட்டியே - உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடான “சங்கர்ஸ்-வீக்லி” ஒரு கட்டுரை தீட்டியிருந்தது. “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” என்ற கோஷத்தை நான் எழுப்பிய பிறகு, “இந்த வார மனிதர்” என்று தலைப்பிட்டு அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புவது; என்னைப் புகழ்ந்துரைத்துள்ளது என்பதற்காக அல்ல; கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் எவ்வளவு வலுவானது என்பதையும்-கழகத்தின் கொள்கை, எதிர்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதையும் அப்பொழுதே பிரபல பத்திரிகைகள் உணர்ந்து அறிவித்தன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்! {{nop}}<noinclude> நெ.—16</noinclude> sdjgvichlvtv6unld24vgcqne8f76zu 1931614 1931421 2026-05-09T03:33:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 241}}</noinclude>திரு. கருணாநிதி அவர்களின் புதிய கருத்துக்கள் பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையின் மறு உருவமே என்று வாதிப்பவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களாவார்கள். இந்தக் கருத்துக்களை விரும்பாதவர்கள் கூட இன்றைய அகில இந்திய அரசியல் சூழ்நிலையில் திரு. கருணாநிதி அவர்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வரும் ஒரு அரசியல் சக்தி என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு தலைவருக்குரிய ஆற்றலும் திறமையும் பெற்றவராக அண்ணா அவர்கள் இருந்தாரென்றாலும், அவரிடம் சில அமைதித் தன்மைகளும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைகளும் இருந்தன. இதற்கு மாறாக திரு. கருணாநிதி துடிப்புடன், புதுத்திட்டங்களுடன் பெரிய குறிக்கோள்களுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதற்கு முன்னர், தான் முதலமைச்சராக வருவதற்கு முன்னால் டெல்லி பக்கம் வந்திருப்பாரோ இல்லையோ என்று கருதப்படும் திரு. கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு அவர் முதலமைச்சராகும் வரை தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ஆனால் இன்று அவர் அகாலிக் கட்சியுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அரசியல் உலகத்தின் கவனத்தைத் தன்பால் இழுக்கக்கூடிய தலைவராக திரு. கருணாநிதி இருப்பார்.” இவ்வாறு “இந்துஸ்தான் டைம்ஸ்” ஏடு எழுதியதையொட்டியே - உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடான “சங்கர்ஸ்-வீக்லி” ஒரு கட்டுரை தீட்டியிருந்தது. “மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” என்ற கோஷத்தை நான் எழுப்பிய பிறகு, “இந்த வார மனிதர்” என்று தலைப்பிட்டு அந்த ஏட்டில் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புவது; என்னைப் புகழ்ந்துரைத்துள்ளது என்பதற்காக அல்ல; கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் எவ்வளவு வலுவானது என்பதையும்-கழகத்தின் கொள்கை, எதிர்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதையும் அப்பொழுதே பிரபல பத்திரிகைகள் உணர்ந்து அறிவித்தன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்! {{nop}}<noinclude> நெ.—16</noinclude> mm5o1o950x9m3m716mdcqkmau4f3x98 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/262 250 573728 1931454 1709797 2026-05-08T13:34:00Z ஹர்ஷியா பேகம் 15001 1931454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|242 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இதோ; “சங்கர்ஸ் வீக்லி” அன்று எழுதியதை அப்படியே தருகிறேன். “இன்று முதலமைச்சராகவும். திரு. அண்ணாதுரையின் வாரிசாகவும் திகழ்கின்ற கருணாநிதி நிதானத்தையும், உறுதியையும் பெற்றுள்ளதோடன்றி, அரசியல் நுட்பங்களில் நல்ல தேர்ச்சியும், ஒரு நிபுணத் தன்மையையும் பெற்றிருக்கிறார். இவை அவரை அரசியல் அரங்கத்தில் நடுநாயகமானவராக ஆக்கியிருக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலி தளத்துடன் ஏற்பட்ட கூட்டு திரு. கருணாநிதியுடைய ராஜ தந்திரத்தின் உச்ச கட்ட வெற்றிகளில் ஒன்றாகும். மாநிலங்களை அங்கங்களாகக் கொண்ட மத்திய ஆட்சி என்று அவர் அண்மையில் உருவாக்கியுள்ள புது சித்தாந்தம் அவருடைய பெரும் போர்த் தந்திரங்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதையும் நிர்வகிப்பதில் மாநிலக் கட்சிகளான தி. மு. க., அகாலி தளம் போன்ற கட்சிகளும் கூட இந்த சித்தாந்தத்தின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளாகி விடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இன்றைய நிலவரத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வதிலும், அதன் வாயிலாகத் தனக்கும், தன் கட்சிக்கும் உயர்ந்தபட்ச சாதகங்களைச் சேர்ப்பதிலும் திரு. கருணாநிதிக்குள்ள ஆற்றல் நன்கு வெளிப்படுகிறது. இந்தச் செயல் முறை சாத்தியமானதா இல்லையா என்பது வேறு. ஆனால் திரு. கருணாநிதி இதர பிராந்தியத் தலைவர்களுடன் சேர்ந்து; தாம் முதிர்ச்சி அடைந்து விட்டவர்தான் என்பதனை நிரூபித்து விட்டார். கருணாநிதியின் புதிய சித்தாந்தம் கண்டு யாரும் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒரு ஸ்தாபன உருவம் கொடுப்பதற்குத்தான் கருணாநிதியின் சித்தாந்தம் முயற்சி செய்கிறது. இதனை எதிர்க்கும் தீவிரவாதிகளின் மூளையற்ற முரட்டுத் தனத்தின் காரணமாகவேகூட இந்த நிலை என்றேனும் ஒருநாள் ஏற்படத்தான் போகிறது.” இவ்வாறு அந்த இதழ்களில் வெளியிடப்பட்ட எண்ணங்கள்; இன்றைக்குச் செயல்வடிவம் கொண்டுள்ளன என்பதற்கும்-பரவலாகத் துணைக்கண்டம் முழுவதும் மத்திய மாநில உறவுகள் பற்றிய புதிய சிந்தனை எழுந்துள்ளன என்பதற்கும்-பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாடும்,<noinclude></noinclude> lbdo0x4x4r8h6xcl37jwdr7digzunij 1931615 1931454 2026-05-09T03:34:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|242 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இதோ; “சங்கர்ஸ் வீக்லி” அன்று எழுதியதை அப்படியே தருகிறேன். “இன்று முதலமைச்சராகவும். திரு. அண்ணாதுரையின் வாரிசாகவும் திகழ்கின்ற கருணாநிதி நிதானத்தையும், உறுதியையும் பெற்றுள்ளதோடன்றி, அரசியல் நுட்பங்களில் நல்ல தேர்ச்சியும், ஒரு நிபுணத் தன்மையையும் பெற்றிருக்கிறார். இவை அவரை அரசியல் அரங்கத்தில் நடுநாயகமானவராக ஆக்கியிருக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலி தளத்துடன் ஏற்பட்ட கூட்டு திரு. கருணாநிதியுடைய ராஜ தந்திரத்தின் உச்ச கட்ட வெற்றிகளில் ஒன்றாகும். மாநிலங்களை அங்கங்களாகக் கொண்ட மத்திய ஆட்சி என்று அவர் அண்மையில் உருவாக்கியுள்ள புது சித்தாந்தம் அவருடைய பெரும் போர்த் தந்திரங்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதையும் நிர்வகிப்பதில் மாநிலக் கட்சிகளான தி. மு. க., அகாலி தளம் போன்ற கட்சிகளும் கூட இந்த சித்தாந்தத்தின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளாகி விடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இன்றைய நிலவரத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வதிலும், அதன் வாயிலாகத் தனக்கும், தன் கட்சிக்கும் உயர்ந்தபட்ச சாதகங்களைச் சேர்ப்பதிலும் திரு. கருணாநிதிக்குள்ள ஆற்றல் நன்கு வெளிப்படுகிறது. இந்தச் செயல் முறை சாத்தியமானதா இல்லையா என்பது வேறு. ஆனால் திரு. கருணாநிதி இதர பிராந்தியத் தலைவர்களுடன் சேர்ந்து; தாம் முதிர்ச்சி அடைந்து விட்டவர்தான் என்பதனை நிரூபித்து விட்டார். கருணாநிதியின் புதிய சித்தாந்தம் கண்டு யாரும் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒரு ஸ்தாபன உருவம் கொடுப்பதற்குத்தான் கருணாநிதியின் சித்தாந்தம் முயற்சி செய்கிறது. இதனை எதிர்க்கும் தீவிரவாதிகளின் மூளையற்ற முரட்டுத்தனத்தின் காரணமாகவேகூட இந்த நிலை என்றேனும் ஒருநாள் ஏற்படத்தான் போகிறது.” இவ்வாறு அந்த இதழ்களில் வெளியிடப்பட்ட எண்ணங்கள்; இன்றைக்குச் செயல்வடிவம் கொண்டுள்ளன என்பதற்கும்-பரவலாகத் துணைக்கண்டம் முழுவதும் மத்திய மாநில உறவுகள் பற்றிய புதிய சிந்தனை எழுந்துள்ளன என்பதற்கும்-பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாடும்,<noinclude></noinclude> kamcnacpelcvivl1qvlvtz1scjq5dcq பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/263 250 573729 1931470 1709798 2026-05-08T14:35:08Z ஹர்ஷியா பேகம் 15001 1931470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 243}}</noinclude>காஷ்மீரில் நடைபெற்ற மத்திய மாநில உறவுகள் குறித்த மாநாட்டில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, கர்னாடக முதல்வர் ஹெக்டே, மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ஆந்திர முதல்வர் என். டி. ராமராவ், மற்றும் பல கட்சித் தலைவர்கள், தி. மு. கழகத்தின் சார்பில் சாதிக், தண்டபாணி, எம். பி. ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்ததும்-பொருத்தமான எடுத்துக் காட்டுகளாகும். மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக இப்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர்க்காரியா அவர்களை மத்திய அரசு நியமித்திருப்பது என்பது கூட-அந்தக் கமிஷனின் அறிக்கை எப்படியிருந்தாலும்; மத்திய அரசு, மாநிலங்களின் உரிமைக் குரலைத் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது என்பதைத்தான் தெளிவாக்குகிறது. எனவே 1970 பிப்ரவரியில் நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும், மார்ச்சில் நடைபெற்ற டெல்லி தேசிய வளர்ச்சிக் குழுவின் (என்.டி.சி.) கூட்டத்திலும் முழங்கப்பட்ட மாநில சுயாட்சிக் கோஷம்; காற்றுடன் கலந்து போய்விடாமல் இந்திய நாட்டு அரசியல் அரங்கில், மெல்ல மெல்ல-ஆனால் உறுதியாகப் பரவ ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்! மாநில சுயாட்சி-மத்தியிலே கூட்டாட்சி என்ற கருத்துக்கு பலமூட்டும் வண்ணம் ஏற்கனவே பல அரசியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆதாரங்களை அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்றாலும்-அவற்றை ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி சிந்தித்துப் பார்த்தும், அனுபவ ரீதியாக உணர்ந்தும், படிப்படியாகப் பல்வேறு கட்டங்களில் அந்த முழக்கத்தை உறுதியாக ஒலித்திட முன்வந்தது என்றால் அது தி. மு. கழகமே ஆகும்! ஆளுங்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல்-1976-க்குப் பிறகு எதிர்க்கட்சியாக இருந்திடும் நிலையிலும் அந்த முழக்கத்தைக் கழகம் முனைப்புடன்தான் ஒலித்து வருகிறது. “மாநில சுயாட்சி” முக்கியத்துவம் பெற்ற 1970-ஆம் ஆண்டில் டெல்லி மாநிலங்களவைக்கான தேர்தலும், தமிழக சட்டமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திராகாந்திக்குச் சாதகமான முறையில் வி. வி. கிரி அவர்களைத் தி. மு. கழகம் ஆதரித்து வெற்றிபெறச் செய்தது என்ற போதிலுங்கூட<noinclude></noinclude> k8atpsz423a2s7rp575q92q4mdkw91b 1931616 1931470 2026-05-09T03:35:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 243}}</noinclude>காஷ்மீரில் நடைபெற்ற மத்திய மாநில உறவுகள் குறித்த மாநாட்டில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, கர்னாடக முதல்வர் ஹெக்டே, மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ஆந்திர முதல்வர் என். டி. ராமராவ், மற்றும் பல கட்சித் தலைவர்கள், தி. மு. கழகத்தின் சார்பில் சாதிக், தண்டபாணி, எம். பி. ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்ததும்-பொருத்தமான எடுத்துக் காட்டுகளாகும். மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக இப்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சர்க்காரியா அவர்களை மத்திய அரசு நியமித்திருப்பது என்பது கூட-அந்தக் கமிஷனின் அறிக்கை எப்படியிருந்தாலும்; மத்திய அரசு, மாநிலங்களின் உரிமைக் குரலைத் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது என்பதைத்தான் தெளிவாக்குகிறது. எனவே 1970 பிப்ரவரியில் நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும், மார்ச்சில் நடைபெற்ற டெல்லி தேசிய வளர்ச்சிக் குழுவின் (என்.டி.சி.) கூட்டத்திலும் முழங்கப்பட்ட மாநில சுயாட்சிக் கோஷம்; காற்றுடன் கலந்து போய்விடாமல் இந்திய நாட்டு அரசியல் அரங்கில், மெல்ல மெல்ல-ஆனால் உறுதியாகப் பரவ ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்! மாநில சுயாட்சி-மத்தியிலே கூட்டாட்சி என்ற கருத்துக்கு பலமூட்டும் வண்ணம் ஏற்கனவே பல அரசியல் அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆதாரங்களை அள்ளி வழங்கியிருக்கிறார்கள் என்றாலும்-அவற்றை ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி சிந்தித்துப் பார்த்தும், அனுபவ ரீதியாக உணர்ந்தும், படிப்படியாகப் பல்வேறு கட்டங்களில் அந்த முழக்கத்தை உறுதியாக ஒலித்திட முன்வந்தது என்றால் அது தி. மு. கழகமே ஆகும்! ஆளுங்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல்-1976-க்குப் பிறகு எதிர்க்கட்சியாக இருந்திடும் நிலையிலும் அந்த முழக்கத்தைக் கழகம் முனைப்புடன்தான் ஒலித்து வருகிறது. “மாநில சுயாட்சி” முக்கியத்துவம் பெற்ற 1970-ஆம் ஆண்டில் டெல்லி மாநிலங்களவைக்கான தேர்தலும், தமிழக சட்டமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதமர் இந்திராகாந்திக்குச் சாதகமான முறையில் வி. வி. கிரி அவர்களைத் தி. மு. கழகம் ஆதரித்து வெற்றிபெறச் செய்தது என்ற போதிலுங்கூட<noinclude></noinclude> a9appn5yz0w0gcqummzla0z1r7c9jol பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/264 250 573730 1931472 1709799 2026-05-08T14:48:33Z ஹர்ஷியா பேகம் 15001 1931472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|244 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்தக் கட்சிக்கும் கழகத்திற்கும் அதன் தொடர்பாக எந்தத் தேர்தல் உறவும் ஏற்படவில்லை. சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளர்களாகக் கழகச் சார்பில் என். வி. என்., சி. பி. சிற்றரசு, மன்னை நாராயணசாமி, நீலநாராயணன், எஸ். ஏ. ராசமாணிக்கம் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். சுதந்திரக்கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த திரு. சுந்தரேசன் அவர்களுக்குக் கழகம் விட்டுத்தர வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நண்பர் நீலநாராயணன் அவர்களின் வேட்பு மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனை நீலநாராயணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பி. சோ. கட்சிக்கு ஒரு இடம் கழகச் சார்பில் அளிக்கப்பட்டு நண்பர் ஆறுமுகசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் கழகச் சார்பில் காஞ்சி கல்யாணசுந்தரம், டி. கே. சீனுவாசன், எஸ். எஸ்.ஆர். ஆகியோரும் கழக ஆதரவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துஸ் சமத் அவர்களும், சுதந்திரா கட்சி சார்பில் மாரிசாமி அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திரா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்பொழுது ராஜாஜி அவர்கள் விடுத்த அறிக்கையொன்றில், “தமிழ்நாடு மேலவைக்கான தேர்தலில் தி. மு. கழகம் தன்னுடைய வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. சுந்தரேசன் போட்டியின்றி வெற்றி பெற உதவி செய்ததற்காகப் பாராட்டுகிறேன். இதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்கள் அவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எஸ். எஸ். மாரிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற திரு. சி. சுப்பிரமணியம் பகீரதப் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது எதற்கு என்று கடவுளுக்குத்தான் தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தார். திரு. சி. சுப்பிரமணியம் 1967 - ஆம் ஆண்டு தேர்தலில் கோபி பாராளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் பி. ஏ. சாமிநாதன் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட காரணத்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனது! {{nop}}<noinclude></noinclude> f06g4smmhcautb125c6oa4ifn53jc5k 1931617 1931472 2026-05-09T03:36:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|244 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்தக் கட்சிக்கும் கழகத்திற்கும் அதன் தொடர்பாக எந்தத் தேர்தல் உறவும் ஏற்படவில்லை. சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளர்களாகக் கழகச் சார்பில் என். வி. என்., சி. பி. சிற்றரசு, மன்னை நாராயணசாமி, நீலநாராயணன், எஸ். ஏ. ராசமாணிக்கம் ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். சுதந்திரக்கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த திரு. சுந்தரேசன் அவர்களுக்குக் கழகம் விட்டுத்தர வேண்டுமென்று ராஜாஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நண்பர் நீலநாராயணன் அவர்களின் வேட்பு மனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனை நீலநாராயணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பி. சோ. கட்சிக்கு ஒரு இடம் கழகச் சார்பில் அளிக்கப்பட்டு நண்பர் ஆறுமுகசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தலில் கழகச் சார்பில் காஞ்சி கல்யாணசுந்தரம், டி. கே. சீனுவாசன், எஸ். எஸ்.ஆர். ஆகியோரும் கழக ஆதரவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துஸ் சமத் அவர்களும், சுதந்திரா கட்சி சார்பில் மாரிசாமி அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்திரா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்பொழுது ராஜாஜி அவர்கள் விடுத்த அறிக்கையொன்றில், “தமிழ்நாடு மேலவைக்கான தேர்தலில் தி. மு. கழகம் தன்னுடைய வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. சுந்தரேசன் போட்டியின்றி வெற்றி பெற உதவி செய்ததற்காகப் பாராட்டுகிறேன். இதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்கள் அவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எஸ். எஸ். மாரிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற திரு. சி. சுப்பிரமணியம் பகீரதப் பிரயத்தனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது எதற்கு என்று கடவுளுக்குத்தான் தெரியும்” என்று குறிப்பிட்டிருந்தார். திரு. சி. சுப்பிரமணியம் 1967 - ஆம் ஆண்டு தேர்தலில் கோபி பாராளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் பி. ஏ. சாமிநாதன் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட காரணத்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனது! {{nop}}<noinclude></noinclude> n4dquznhte9phuqy728fursn33k218l பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/265 250 573731 1931480 1709800 2026-05-08T15:30:00Z ஹர்ஷியா பேகம் 15001 1931480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 245}}</noinclude>மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் மத்திய அமைச்சராகக்கூடும் என்று உறுதியான கருத்து பரப்பப்பட்டது. “சி. சுப்பிரமணியம் அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக வருவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? உங்கள் ஆதரவு உண்டா?” என்று டெல்லியில் என்னிடம் நிருபர்கள் கேட்டபோது “கோயிலுக்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்கமாட்டேன்—கோட்டைக்குக் கொண்டுசெல்ல குதிரையாகவும் இருக்கமாட்டேன்” என்று கூறினேன். சி. எஸ். தேர்தலைப் பொறுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பணம் பெற்றுக்கொண்டு கட்சிமாறி வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கழக உறுப்பினர்கள் மிகவும் கட்டுப்பாடாக இருந்து அந்தத் தேர்தலில் வாக்களித்து, கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட காஞ்சி கல்யாண சுந்தரம், டி. கே. சீனுவாசன், எஸ். எஸ். ஆர். ஆகியோர்களையும், கழக ஆதரவு பெற்ற தோழமைக் கட்சி வேட்பாளர்களான அப்துஸ் சமத், மாரிசாமி ஆகியோரையும் வெற்றி பெறச் செய்தனர். இந்திரா காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் அவர்கள் தோல்வி அடைந்தார். தி. மு. கழகத்தில் ஊடுருவல் நடக்காது என்பதை நிரூபிக்க அந்தத் தேர்தல் உதவியது. {{nop}}<noinclude></noinclude> 6x6b0nc0hfo208equwx1dea4pi36x5x 1931618 1931480 2026-05-09T03:37:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 245}}</noinclude>மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் மத்திய அமைச்சராகக்கூடும் என்று உறுதியான கருத்து பரப்பப்பட்டது. “சி. சுப்பிரமணியம் அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக வருவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? உங்கள் ஆதரவு உண்டா?” என்று டெல்லியில் என்னிடம் நிருபர்கள் கேட்டபோது “கோயிலுக்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்கமாட்டேன்—கோட்டைக்குக் கொண்டுசெல்ல குதிரையாகவும் இருக்கமாட்டேன்” என்று கூறினேன். சி. எஸ். தேர்தலைப் பொறுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பணம் பெற்றுக்கொண்டு கட்சிமாறி வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கழக உறுப்பினர்கள் மிகவும் கட்டுப்பாடாக இருந்து அந்தத் தேர்தலில் வாக்களித்து, கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட காஞ்சி கல்யாண சுந்தரம், டி. கே. சீனுவாசன், எஸ். எஸ். ஆர். ஆகியோர்களையும், கழக ஆதரவு பெற்ற தோழமைக் கட்சி வேட்பாளர்களான அப்துஸ் சமத், மாரிசாமி ஆகியோரையும் வெற்றி பெறச் செய்தனர். இந்திரா காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் அவர்கள் தோல்வி அடைந்தார். தி. மு. கழகத்தில் ஊடுருவல் நடக்காது என்பதை நிரூபிக்க அந்தத் தேர்தல் உதவியது. {{nop}}<noinclude></noinclude> 2gzq9p289nwdpag4lzviakfz88oxf7z பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/266 250 573732 1931487 1709801 2026-05-08T16:09:11Z ஹர்ஷியா பேகம் 15001 1931487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>33</b>}} {{c|{{larger|<b>மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி</b>}}}} {{X-larger|<b>“தி</b>}}ரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் மத்திய அமைச்சராவதற்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்க மாட்டேன்-அதே சமயம் அவரைக் கோட்டைக்குக் கொண்டு செல்லும் குதிரையாகவும் இருக்கமாட்டேன்” என்று 1970-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின்போது நான் கூறியிருந்தாலும் கூட, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கும், இந்திரா காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குமிடையே அமைந்த தேர்தல் உடன்பாட்டின் காரணமாக அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கின்ற வாய்ப்பு உருவாயிற்று! ஆம்; கோட்டைக்கு அவரைத் தூக்கிச் சுமந்திட வேண்டிய குதிரையாக இருந்திட வேண்டியதாயிற்று. 1971-ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “சி. சுப்பிரமணியம் அவர்களுக்காக கரூர் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கே. கோபால் அவர்களும், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தீர்த்த கிரி கவுண்டரும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியில் சுப்பிரமணியம் அவர்களைப் போட்டியிடச் செய்யலாம்?” என்று பிரதமர் இந்திரா அவர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார். நான் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப சி. எஸ். அவர்களுக்கு இடைத் தேர்தலுக்கான தொகுதியை அறிவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிறகு என் விருப்பப்படியே கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் திரு. சி. எஸ். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துக் காமராஜர் தலைமையிலே இருந்த பழைய காங்கிரஸ் கட்சி போட்டியிடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இரண்டொரு நாட்கள் சென்றிருந்தேன். அந்தப் பிரச்-<noinclude></noinclude> szdxp91kobinc4h9vdil012jh8nzv7h 1931620 1931487 2026-05-09T03:39:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>33</b>}} {{c|{{larger|<b>மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி</b>}}}} {{X-larger|<b>“தி</b>}}ரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் மத்திய அமைச்சராவதற்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்க மாட்டேன்-அதே சமயம் அவரைக் கோட்டைக்குக் கொண்டு செல்லும் குதிரையாகவும் இருக்கமாட்டேன்” என்று 1970-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின்போது நான் கூறியிருந்தாலும் கூட, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கும், இந்திரா காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குமிடையே அமைந்த தேர்தல் உடன்பாட்டின் காரணமாக அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கின்ற வாய்ப்பு உருவாயிற்று! ஆம்; கோட்டைக்கு அவரைத் தூக்கிச் சுமந்திட வேண்டிய குதிரையாக இருந்திட வேண்டியதாயிற்று. 1971-ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “சி. சுப்பிரமணியம் அவர்களுக்காக கரூர் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கே. கோபால் அவர்களும், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தீர்த்த கிரி கவுண்டரும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியில் சுப்பிரமணியம் அவர்களைப் போட்டியிடச் செய்யலாம்?” என்று பிரதமர் இந்திரா அவர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார். நான் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப சி. எஸ். அவர்களுக்கு இடைத் தேர்தலுக்கான தொகுதியை அறிவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிறகு என் விருப்பப்படியே கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் திரு. சி. எஸ். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துக் காமராஜர் தலைமையிலே இருந்த பழைய காங்கிரஸ் கட்சி போட்டியிடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இரண்டொரு நாட்கள் சென்றிருந்தேன். அந்தப் பிரச்-<noinclude></noinclude> mx4ek6oov09zdeva65u6jumb6tplpbv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/267 250 573733 1931494 1709802 2026-05-08T16:32:51Z ஹர்ஷியா பேகம் 15001 1931494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 247}}</noinclude>சாரக் கூட்டத்தில் பேசிய திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள்; “எப்போது இந்தத் தொகுதியில் என்னை நிற்கும்படிக் கலைஞர் முன் மொழிந்தாரோ அப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டது” என்று உணர்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டார். பிரச்சாரக் கூட்டங்கள் முடிந்து ஓய்வுக்காக நான் மைசூர் சென்றிருந்தேன். தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சி. எஸ். அவர்கள் எனக்கு மைசூருக்குத் தொலைபேசி மூலம் வெற்றி வாய்ப்புகளை எடுத்துச் சொன்னார். சில மணி நேரத்திற்குப் பிறகு வெற்றிச் செய்தியினையும் மகிழ்ச்சியுடன் கூறி, “வெற்றி விழாக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் சவான் வருகிறார்; நீங்களும் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். திரு. சவான் ஒப்புக்கொண்ட தேதியில் எனக்கு வசதிப்படாது என்று நான் கூறியபோது, எனக்கு வசதியான தேதியில் சவான் அவர்களும் கலந்து கொள்வார் என்று கூறி அதற்கேற்ப என்னுடைய ஒப்புதலையும் பெற்றார். வெற்றி விழா பாராட்டுக் கூட்டத்தில் என்னையும் தி. மு. கழகத்தையும், சவான் அவர்களும், சி. எஸ். அவர்களும் வெகுவாகப் புகழ்ந்தனர். தேர்தல் பணிகளைச் சிறப்புடன் ஆற்றிடத் துணைபுரிந்த நண்பர் க. ராசாராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். பிறகு சி. எஸ். மத்திய அமைச்சராகவும் ஆனார்! டெல்லிக்குச் சென்ற பிறகு தி. மு. கழக ஆட்சிக்கு விரோதமாக மாறியவர்களில் திரு. சி. எஸ். அவர்களும் முக்கியமானவர். 1972-ஆம் ஆண்டு கழகத்தைப் பிளக்க எப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற கதையை விரிவாக எழுத இருக்கிறேன். ஆனால் வறட்சி நிவாரணப்பணி குறித்து மத்திய அமைச்சர் சி. எஸ். அவர்கள் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது; “இதுவரை கொடுத்த பணத்துக்குக் கணக்கு காட்டி விட்டுத்தான் டெல்லியிடம் மாநில அரசு மீண்டும் நிதி கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டதையும் அது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் வந்தபோது “மத்திய அமைச்சர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைக் கூட்டி வறட்சிப் பணிகள் குறித்து விரிவாகப் பேசலாம்—விவாதிக்கலாம்—செலவழிக்கப்பட்ட தொகை, வகை பற்றி எங்களிடம் விபரம் அறியலாம். அதை விடுத்து தெருவிலே நின்று கொண்டு பொதுக்கூட்டத்தில்<noinclude></noinclude> i9pqa8av998rly2qutfajxadvs2dact 1931621 1931494 2026-05-09T03:40:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 247}}</noinclude>சாரக் கூட்டத்தில் பேசிய திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள்; “எப்போது இந்தத் தொகுதியில் என்னை நிற்கும்படிக் கலைஞர் முன் மொழிந்தாரோ அப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டது” என்று உணர்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டார். பிரச்சாரக் கூட்டங்கள் முடிந்து ஓய்வுக்காக நான் மைசூர் சென்றிருந்தேன். தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சி. எஸ். அவர்கள் எனக்கு மைசூருக்குத் தொலைபேசி மூலம் வெற்றி வாய்ப்புகளை எடுத்துச் சொன்னார். சில மணி நேரத்திற்குப் பிறகு வெற்றிச் செய்தியினையும் மகிழ்ச்சியுடன் கூறி, “வெற்றி விழாக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் சவான் வருகிறார்; நீங்களும் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். திரு. சவான் ஒப்புக்கொண்ட தேதியில் எனக்கு வசதிப்படாது என்று நான் கூறியபோது, எனக்கு வசதியான தேதியில் சவான் அவர்களும் கலந்து கொள்வார் என்று கூறி அதற்கேற்ப என்னுடைய ஒப்புதலையும் பெற்றார். வெற்றி விழா பாராட்டுக் கூட்டத்தில் என்னையும் தி. மு. கழகத்தையும், சவான் அவர்களும், சி. எஸ். அவர்களும் வெகுவாகப் புகழ்ந்தனர். தேர்தல் பணிகளைச் சிறப்புடன் ஆற்றிடத் துணைபுரிந்த நண்பர் க. ராசாராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். பிறகு சி. எஸ். மத்திய அமைச்சராகவும் ஆனார்! டெல்லிக்குச் சென்ற பிறகு தி. மு. கழக ஆட்சிக்கு விரோதமாக மாறியவர்களில் திரு. சி. எஸ். அவர்களும் முக்கியமானவர். 1972-ஆம் ஆண்டு கழகத்தைப் பிளக்க எப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற கதையை விரிவாக எழுத இருக்கிறேன். ஆனால் வறட்சி நிவாரணப்பணி குறித்து மத்திய அமைச்சர் சி. எஸ். அவர்கள் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது; “இதுவரை கொடுத்த பணத்துக்குக் கணக்கு காட்டி விட்டுத்தான் டெல்லியிடம் மாநில அரசு மீண்டும் நிதி கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டதையும் அது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் வந்தபோது “மத்திய அமைச்சர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைக் கூட்டி வறட்சிப் பணிகள் குறித்து விரிவாகப் பேசலாம்—விவாதிக்கலாம்—செலவழிக்கப்பட்ட தொகை, வகை பற்றி எங்களிடம் விபரம் அறியலாம். அதை விடுத்து தெருவிலே நின்று கொண்டு பொதுக்கூட்டத்தில்<noinclude></noinclude> 2771a1jmgrdl9v3raai4tox2e7jwcwc பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/268 250 573734 1931495 1709803 2026-05-08T16:39:37Z ஹர்ஷியா பேகம் 15001 1931495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|248 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கணக்கு கேட்பது முறையல்ல! நாகரீகமல்ல! அப்படிப்பட்ட பணம் எங்களுக்குத் தேவையில்லை!” என்று நான் அறிவித்ததையும் இப்போது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “குதிரை, கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்தது”-என்பார்கள்! ஆனால் இந்தப் பழமொழி தலை கீழாக மாறிவிட்டது ஏறிச் சென்ற குதிரையை எட்டி உதைத்ததுமல்லாமல் வெட்டியும் வீழ்த்த முற்பட்டனர்! மனச்சாட்சியின் சவுக்கடிகள் விழுந்தன! வலியின் வேதனை பொறுக்க முடியவில்லை! என்ன செய்வது; தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! நெஞ்சுக்கு நீதி வழங்கப்படும் போது வேதனையும் ஏற்படுகிறது. ஒருவிதமான இதமான ஆறுதலும் கூடவே இணைகிறது அல்லவா? கோயில் நந்தி கோட்டைக் குதிரை—இரண்டையும் பற்றிக் கூறிய காரணத்தால் சிறிது முன்னேறிப் போய் 1971-ஆம் ஆண்டினைத் தொட்டுக்காட்ட வேண்டியதாயிற்று! திரும்பவும் 1970-ஆம் ஆண்டிலிருந்து தொடருவோம். அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் அரசு கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது கழக ஆட்சியில் அமைச்சரவை எப்படி செயல்பட்டது என்பது குறித்து 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த “கேரவான்” (Caravan) ஏட்டில் வந்த ஒரு கட்டுரை கூறும் விவரம் வருமாறு: “46 ஆண்டு நிரம்பிய கருணாநிதி திறமைமிக்க நுட்பவாதி என்பதை நிரூபித்துவிட்டார். கட்சிக்குள் கசப்புணர்ச்சி ஏற்படுவதை அவர் தவிர்த்துவிட்டார். அனைவருடனும் நியாயமானதோர் சமரசத்துக்கு அவர் வழிவகுத்தார். அண்ணாவின் புகழும் பெருமையும் மங்காதிருக்குமாறு அவர் காத்து வருகிறார். தனது சொற்பொழிவு ஒவ்வொன்றையும் அண்ணாவை நினைவூட்டியே அவர் துவக்குகிறார். அண்ணா நமது எல்லா செயல்களையும் கண்காணித்து வருகிறார் என்ற உணர்வையே அவர் ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதி அமைச்சரவைக் கூட்டங்களை ஒழுங்காக அடிக்கடி கூட்டுகிறார். முடிவுகளுக்கு அமைச்சரவையின் முழு ஒப்புதலைப் பெறுகிறார். இதனால் ஒரு உள் அமைச்சரவை முடிவுகளை எடுக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கிறார். {{nop}}<noinclude></noinclude> 3txsm8om2sm4vsmlkw8yoqn4o0wrc86 1931622 1931495 2026-05-09T03:41:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|248 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கணக்கு கேட்பது முறையல்ல! நாகரீகமல்ல! அப்படிப்பட்ட பணம் எங்களுக்குத் தேவையில்லை!” என்று நான் அறிவித்ததையும் இப்போது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். “குதிரை, கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்தது”-என்பார்கள்! ஆனால் இந்தப் பழமொழி தலை கீழாக மாறிவிட்டது ஏறிச் சென்ற குதிரையை எட்டி உதைத்ததுமல்லாமல் வெட்டியும் வீழ்த்த முற்பட்டனர்! மனச்சாட்சியின் சவுக்கடிகள் விழுந்தன! வலியின் வேதனை பொறுக்க முடியவில்லை! என்ன செய்வது; தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! நெஞ்சுக்கு நீதி வழங்கப்படும் போது வேதனையும் ஏற்படுகிறது. ஒருவிதமான இதமான ஆறுதலும் கூடவே இணைகிறது அல்லவா? கோயில் நந்தி கோட்டைக்—குதிரை—இரண்டையும் பற்றிக் கூறிய காரணத்தால் சிறிது முன்னேறிப் போய் 1971-ஆம் ஆண்டினைத் தொட்டுக்காட்ட வேண்டியதாயிற்று! திரும்பவும் 1970-ஆம் ஆண்டிலிருந்து தொடருவோம். அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் அரசு கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும்போது கழக ஆட்சியில் அமைச்சரவை எப்படி செயல்பட்டது என்பது குறித்து 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த “கேரவான்” (Caravan) ஏட்டில் வந்த ஒரு கட்டுரை கூறும் விவரம் வருமாறு: “46 ஆண்டு நிரம்பிய கருணாநிதி திறமைமிக்க நுட்பவாதி என்பதை நிரூபித்துவிட்டார். கட்சிக்குள் கசப்புணர்ச்சி ஏற்படுவதை அவர் தவிர்த்துவிட்டார். அனைவருடனும் நியாயமானதோர் சமரசத்துக்கு அவர் வழிவகுத்தார். அண்ணாவின் புகழும் பெருமையும் மங்காதிருக்குமாறு அவர் காத்து வருகிறார். தனது சொற்பொழிவு ஒவ்வொன்றையும் அண்ணாவை நினைவூட்டியே அவர் துவக்குகிறார். அண்ணா நமது எல்லா செயல்களையும் கண்காணித்து வருகிறார் என்ற உணர்வையே அவர் ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதி அமைச்சரவைக் கூட்டங்களை ஒழுங்காக அடிக்கடி கூட்டுகிறார். முடிவுகளுக்கு அமைச்சரவையின் முழு ஒப்புதலைப் பெறுகிறார். இதனால் ஒரு உள் அமைச்சரவை முடிவுகளை எடுக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கிறார். {{nop}}<noinclude></noinclude> dcl12cu5f8gf2unc9g6tkbdmi7kgjqw பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/269 250 573735 1931496 1709804 2026-05-08T16:44:30Z ஹர்ஷியா பேகம் 15001 1931496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 249}}</noinclude>தமிழ்நாட்டு அமைச்சர்களின் சிறப்பியல்பு என்னவெனில் அவர்கள் ஒரு குரலில் பேசுகிறார்கள் என்பதுதான். ஒரு அமைச்சர் மற்றவரின் கருத்துக்களுக்கு மாறாகப் பேசினார் என்பதோ—மாறுபட்ட நிலையை மேற்கொண்டார் என்பதோ இங்கு கிடையாது.” 1953-ஆம் ஆண்டில் திருப்பத்தூருக்கு அருகில் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக என்னுடைய இடது கண்ணில் பலத்த அடிபட்டு அதனையொட்டி இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது 1967-ஆம் ஆண்டு தஞ்சைக்குச் செல்லும் வழியில் மறுபடியும் கார் விபத்திற்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதே இடது கண்ணில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அந்தக் கண்ணில் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே வந்தது. அந்தக் கண்ணில் 1970-ஆம் ஆண்டு மறுபடியும் வலியும் வீக்கமும் ஏற்பட்டது. அதனுடன் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அன்று சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடந்தபோது, அதன் தலைவராக சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்களை அமரச் செய்து, அவரைப் பாராட்டி உரையாற்றிய பிறகு இடது கண்ணில் தொந்தரவு அதிகமாகவே, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கண் மருத்துவர் டாக்டர் ஆப்ரகாம் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தார். ஏப்ரல் 28-ந்தேதி மாலை 6 மணி அளவில் கண்ணில் சிறியதொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு மே மாதம் 2-ந் தேதி அன்று குடியரசுத் தலைவர் கிரி அவர்கள் கண் மருத்துவமனைக்கு வந்திருந்து விரைவில் நான் நலம் பெற வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தார். கண் மருத்துவமனையில் நான் இவ்வாறு அவதிக்கு உட்பட்ட நிலையில் இருந்தபோது நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த 16,000 தொழிலாளர்கள் மே 3—ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினர். தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கு மிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் வரை நடந்தது. {{nop}}<noinclude></noinclude> et2fuj3p3xj5wq7cnkaey0txge0rbb3 1931623 1931496 2026-05-09T03:43:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 249}}</noinclude>தமிழ்நாட்டு அமைச்சர்களின் சிறப்பியல்பு என்னவெனில் அவர்கள் ஒரு குரலில் பேசுகிறார்கள் என்பதுதான். ஒரு அமைச்சர் மற்றவரின் கருத்துக்களுக்கு மாறாகப் பேசினார் என்பதோ—மாறுபட்ட நிலையை மேற்கொண்டார் என்பதோ இங்கு கிடையாது.” 1953-ஆம் ஆண்டில் திருப்பத்தூருக்கு அருகில் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக என்னுடைய இடது கண்ணில் பலத்த அடிபட்டு அதனையொட்டி இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது 1967-ஆம் ஆண்டு தஞ்சைக்குச் செல்லும் வழியில் மறுபடியும் கார் விபத்திற்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதே இடது கண்ணில் மீண்டும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து அந்தக் கண்ணில் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே வந்தது. அந்தக் கண்ணில் 1970-ஆம் ஆண்டு மறுபடியும் வலியும் வீக்கமும் ஏற்பட்டது. அதனுடன் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அன்று சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடந்தபோது, அதன் தலைவராக சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்களை அமரச் செய்து, அவரைப் பாராட்டி உரையாற்றிய பிறகு இடது கண்ணில் தொந்தரவு அதிகமாகவே, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கண் மருத்துவர் டாக்டர் ஆப்ரகாம் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்தார். ஏப்ரல் 28-ந்தேதி மாலை 6 மணி அளவில் கண்ணில் சிறியதொரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு மே மாதம் 2-ந் தேதி அன்று குடியரசுத் தலைவர் கிரி அவர்கள் கண் மருத்துவமனைக்கு வந்திருந்து விரைவில் நான் நலம் பெற வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தார். கண் மருத்துவமனையில் நான் இவ்வாறு அவதிக்கு உட்பட்ட நிலையில் இருந்தபோது நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த 16,000 தொழிலாளர்கள் மே 3—ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினர். தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கு மிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் வரை நடந்தது. {{nop}}<noinclude></noinclude> m2vk1sdvwxehmbau7qb8ghhb9e3fv8x பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/270 250 573736 1931498 1709805 2026-05-08T17:01:25Z ஹர்ஷியா பேகம் 15001 1931498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|250 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மருத்துவமனையில் இருந்தவாறே உடனடியாக நெய்வேலிக்கு போலீஸ் ஐ. ஜி. யாக இருந்த ஆர். எம். மகாதேவன் அவர்களையும், தமிழக அரசின் தொழிலாளர் கமிஷனராக இருந்த எம். எம். ராசேந்திரன், ஐ. ஏ.எஸ். அவர்களையும் அனுப்பிவைத்தேன். நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தேவன் என்பவர் இறந்துவிட்டார். கண் மருத்துவமனையில் இருந்தவாறே கண்களில் கட்டு போடப்பட்ட நிலையில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித் தலைவருடன் பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நெய்வேலி நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து தேவையான நடவடிக்கைகளை எப்படியெப்படி எடுக்க வேண்டுமென்று யோசனை கூறினேன். தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்ட ஒப்பந்தத்தையொட்டி வேறு ஏதாவது புதிய பிரச்சினைகள் இருக்குமானால் அவைகளைப் பற்றி நேரடியாகப் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வர நான் தயாராக இருப்பதாகவும், தொழிற்சங்கத் தலைவர்களும் இதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து நெய்வேலியில் அமைதியான சூழ்நிலை உருவாக உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். மறுநாள் 4-5-70 அன்று கண் மருத்துவமனையிலேயே அமைச்சர்கள் நாவலர், என்.வி.என்., ப.உ. சண்முகம், மாதவன், ஓ.பி. ராமன் ஆகியோருடன் நெய்வேலி சம்பந்தமாக ஆலோசனை நடத்தினேன். போலீஸ் அதிகாரிகள் மகாதேவன் அவர்களும், டயஸ் அவர்களும் சந்தித்து நிலைமைகளை நேரில் விளக்கினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பார்களேயானால் மருத்துவமனையில் இருக்கும் எனக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தேன். என்னுடைய வேண்டுகோளின் விளைவாகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் காட்டூர் கோபால், அனந்தன் நம்பியார், கோவிந்தராசன், விருத்தாசலம் செல்வராஜ் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும், தொழிலாளர்கள் மே மாதம் 6-ந் தேதி முதல் வேலைக்குத் திரும்பினர். நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை ஒருபுறம் இருக்க மின்சார வாரிய ஊழியர்கள் கிளர்ச்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்தனர். அதுபற்றியும் மருத்துவமனையிலிருந்தவாறே ஒரு வேண்டுகோள் அறிக்கை விடுத்தேன். {{nop}}<noinclude></noinclude> 6yi5ldz9dwkz1oxituu9jq5cco3uazu 1931624 1931498 2026-05-09T03:44:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|250 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மருத்துவமனையில் இருந்தவாறே உடனடியாக நெய்வேலிக்கு போலீஸ் ஐ. ஜி.யாக இருந்த ஆர். எம். மகாதேவன் அவர்களையும், தமிழக அரசின் தொழிலாளர் கமிஷனராக இருந்த எம். எம். ராசேந்திரன், ஐ. ஏ.எஸ். அவர்களையும் அனுப்பிவைத்தேன். நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தேவன் என்பவர் இறந்துவிட்டார். கண் மருத்துவமனையில் இருந்தவாறே கண்களில் கட்டு போடப்பட்ட நிலையில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித் தலைவருடன் பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நெய்வேலி நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து தேவையான நடவடிக்கைகளை எப்படியெப்படி எடுக்க வேண்டுமென்று யோசனை கூறினேன். தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்ட ஒப்பந்தத்தையொட்டி வேறு ஏதாவது புதிய பிரச்சினைகள் இருக்குமானால் அவைகளைப் பற்றி நேரடியாகப் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வர நான் தயாராக இருப்பதாகவும், தொழிற்சங்கத் தலைவர்களும் இதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து நெய்வேலியில் அமைதியான சூழ்நிலை உருவாக உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். மறுநாள் 4-5-70 அன்று கண் மருத்துவமனையிலேயே அமைச்சர்கள் நாவலர், என்.வி.என்., ப.உ. சண்முகம், மாதவன், ஓ.பி. ராமன் ஆகியோருடன் நெய்வேலி சம்பந்தமாக ஆலோசனை நடத்தினேன். போலீஸ் அதிகாரிகள் மகாதேவன் அவர்களும், டயஸ் அவர்களும் சந்தித்து நிலைமைகளை நேரில் விளக்கினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பார்களேயானால் மருத்துவமனையில் இருக்கும் எனக்கு அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தேன். என்னுடைய வேண்டுகோளின் விளைவாகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் காட்டூர் கோபால், அனந்தன் நம்பியார், கோவிந்தராசன், விருத்தாசலம் செல்வராஜ் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும், தொழிலாளர்கள் மே மாதம் 6-ந் தேதி முதல் வேலைக்குத் திரும்பினர். நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை ஒருபுறம் இருக்க மின்சார வாரிய ஊழியர்கள் கிளர்ச்சி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்தனர். அதுபற்றியும் மருத்துவமனையிலிருந்தவாறே ஒரு வேண்டுகோள் அறிக்கை விடுத்தேன். {{nop}}<noinclude></noinclude> 0feg55x1ndmya0g44rt5p1k6ejxxxn1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/271 250 573737 1931515 1709806 2026-05-08T18:11:49Z ஹர்ஷியா பேகம் 15001 1931515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 251}}</noinclude>கண் சிகிச்சை செய்து கொண்டது பற்றி பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள திரு கருணாநிதி அவர்களுக்கு, தாங்கள் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு நான் கவலை கொண்டேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது என்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் விரைவிலேயே பூரண நலம் பெறுவீர்கள் என்றும், வழக்கமான பணிகளை தாங்கள் விரைவில் ஆற்றுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்று எழுதியிருந்தார்கள். கண்ணில் தொந்தரவு நீங்கி மே மாதம் 8-ந்தேதியன்று காலையில் வீடு திரும்பினேன். மருத்துவமனையில் இருந்த போது மின்சார வாரிய ஊழியர்களுக்கு உறுதி தந்ததற்கிணங்க மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வுகளை அரசின் சார்பில் அறிவித்தேன். இதற்கிடையே தென் ரயில்வே டிரைவர்கள், பயர்மென்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்திருந்த தகவலை அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் நந்தா அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு, ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருமுறை பேச்சு வார்த்தை நடத்தியதற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவது என்று அவர்கள் முடிவெடுத்ததோடு, என்னை நேரிலும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். {{nop}}<noinclude></noinclude> ihn32lwiwj2784x1rdi7k4xn4d627zj 1931625 1931515 2026-05-09T03:45:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 251}}</noinclude>கண் சிகிச்சை செய்து கொண்டது பற்றி பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள திரு கருணாநிதி அவர்களுக்கு, தாங்கள் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு நான் கவலை கொண்டேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது என்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் விரைவிலேயே பூரண நலம் பெறுவீர்கள் என்றும், வழக்கமான பணிகளை தாங்கள் விரைவில் ஆற்றுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்று எழுதியிருந்தார்கள். கண்ணில் தொந்தரவு நீங்கி மே மாதம் 8-ந்தேதியன்று காலையில் வீடு திரும்பினேன். மருத்துவமனையில் இருந்த போது மின்சார வாரிய ஊழியர்களுக்கு உறுதி தந்ததற்கிணங்க மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வுகளை அரசின் சார்பில் அறிவித்தேன். இதற்கிடையே தென் ரயில்வே டிரைவர்கள், பயர்மென்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்திருந்த தகவலை அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் நந்தா அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு, ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருமுறை பேச்சு வார்த்தை நடத்தியதற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவது என்று அவர்கள் முடிவெடுத்ததோடு, என்னை நேரிலும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். {{nop}}<noinclude></noinclude> nwewl8vetgzf7oln9dsag2oot927yzb பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/272 250 573738 1931786 1709807 2026-05-09T08:01:55Z ஹர்ஷியா பேகம் 15001 1931786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>34</b>}} {{larger|<b>முதல் வெளிநாட்டுப் பயணம்</b>}} {{X-larger|<b>ஒ</b>}}ரு தவறு இன்னொரு தவறுக்குச் சமாதானமாகி விடாது என்று ஆன்றோர் கூறுவர்! 1971-ஆம் ஆண்டு வரையில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கருத்திருமன் அவர்கள் விவாதங்களில் பேசும் போது மிகுந்த கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்றாலும் பழகுவதற்கு இனியவராய்த் திகழ்ந்தார் நல்ல காங்கிரஸ்காரர். அண்ணா அவர்களிடத்தில் நிறைந்த அன்பு கொண்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஆளுங் கட்சி சார்பில் யாராவது எடுத்துச் சொன்னால், உடனே ஆவேசமாக எழுந்து “அட, ஏனய்யா நாங்க செய்த தவறையே சொல்லிகிட்டு இருக்கீங்க? அதுக்குத் தான் நாங்க எதிர்வரிசையிலே உட்கார்ந்திருக்கோமே! எங்க தவறைச் சொன்னா உங்க தவறு மறைஞ்சிடுமா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்பார். ஒரு நாள் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை அவையில் எழுப்பினார். கோவையில் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் குறைப்பட்டுக் கொண்ட அவர்; அந்த அதிகாரி அவரைப் பார்த்து, “நீங்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டதாகக் குறிப்பிட்டுவிட்டு, “அப்படியானால் முதலமைச்சர் யார் என்றுகூட எனக்கும் கேட்கத் தெரியும்!” என்று ஆத்திரத்துடன் கூறினார். உடனே அமைச்சர் ப. உ. சண்முகம் அவர்கள் எழுந்து, “உங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அண்ணாவையும், கலைஞரையும், நாவலரையும் நிறுத்தி வைத்து நீங்கள் யார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டதை நினைவூட்டுகிறேன்” என்றார்! உடனே கருத்திருமன் அவர்கள் சினங் கொண்டு, “அப்படியானால் அதே பண்பாட்டில் நீங்களும் இறங்கியிருக்கிறீர்களா?” எனக் கேட்டார். அப்போது நான் குறுக்கிட்டேன். “மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் கூறிய புகார் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டு அந்தப் போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கச்<noinclude></noinclude> sumzluyjzt0i30epagtxhc64pwe1zrw பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/273 250 573739 1931793 1709808 2026-05-09T08:15:33Z ஹர்ஷியா பேகம் 15001 1931793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 253}}</noinclude>சொன்னேன். அவர் அப்படி நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இது போல நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களை ஒரு காலத்தில் அப்படி நடத்தினார்கள் என்பதற்காக எங்கள் காலத்திலும் உங்களுக்கு அப்படி நடக்கிறது என்பது போல பதில் சொல்வது நல்ல மரபுமல்ல-முறையுமல்ல!” என்று நான் பதில் அளித்ததும், முகம் மலர்ந்திட கருத்திருமன் அவர்கள் எழுந்து “முதலமைச்சர் விளக்கத்திற்கு நன்றி! இது தான் தமிழர் பண்பாடு!” என்று கூறினார். இன்று அந்தப் பண்பாடெல்லாம் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது! 1970 ஜூன் திங்கள் என்னுடைய பிறந்த நாள் விழா சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்ட போது ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிர ரூபாய் என்னிடம் நிதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு லட்சம் ரூபாய் அண்ணா அறக்கட்டளை நிதியென்றும் மீதி இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என் விருப்பம்போல் செலவழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போலவே ஒரு லட்சம் ரூபாயை அண்ணா அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிட்டு, என் விருப்பம் போல் செலவிட்டுக் கொள்ளலாம் என்று தந்த 25 ஆயிரம் ரூபாயைப் பற்றிக் குறிப்பிடும் போது “என் இஷ்டப்படி செலவு செய்ய 25 ஆயிரம் ரூபாயைத் தந்துள்ளனர். நான் கடமைப்பட்டுள்ள குடும்பத்திற்கு-என்னை, கழகத்தை, லட்சேப லட்சம் தம்பிமார்களை உருவாக்கிய அண்ணாவின் குடும்பத்திற்கு-அண்ணியார் அவர்களுக்கு இந்த இருபத்தி ஐயாயிரம் ரூபாயை ஒப்படைக்கிறேன்” என்று அறிவித்தேன். அண்ணா கவிதாஞ்சலி எனும் பெயரில் நான் அண்ணா அவர்களைப் பற்றி வானொலியில் பாடிய கவிதை வரிகள் கிராமபோன் ரிக்கார்டுகளாக ஏ.வி.எம். நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகள் விற்பனையான ‘ராயல்டி தொகை பத்தாயிர ரூபாயை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்கள் எனக்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அந்த ராயல்டி தொகையும் அண்ணியார் அவர்களுக்கே சேரட்டுமென்று கூறி அதனையும் அந்த விழாவிலேயே அறிவித்து அவ்வாறே அவர்களுக்கு வழங்குமாறு அறிவித்துவிட்டேன். {{nop}}<noinclude></noinclude> qv23rt7hqc8zov3s0r4gukezq2axixt பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/274 250 573740 1931798 1709809 2026-05-09T08:29:49Z ஹர்ஷியா பேகம் 15001 1931798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|254 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணா அவர்களின் குடும்பத்தாருக்காக அப்போது வழங்கப் பட்ட முப்பத்தி ஐயாயிர ரூபாய் மட்டுமின்றி 1973-74-ஆம் ஆண்டில் தலைமைக் கழகச் சார்பில் பத்தாயிர ரூபாய் நிதியும், அம்பாசிடர் கார் ஒன்றும் வழங்கப்பட்டது. எங்களையெல்லாம் ஆளாக்கி மகிழ்ந்த அந்தக் குடும்பம் மகிழ்வுடன் வாழ வேண்டுமென்பதற்காக மாநில முழுவதும் கழகத்தின் சார்பில் நிதி வசூலித்து 1975 நவம்பர் ஆறாம் நாள் சென்னையில் ஒரு நிதியளிப்பு விழா நடத்தி அருமை அண்ணியார் அவர்களின் கையில் மூன்று லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாயை வழங்கினோம். கழக வரலாற்றுக் குறிப்பிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்பிலும் கடமைப்பட்ட ஒரு நற்காரியத்தை எங்களால் இயன்ற அளவு செய்து முடித்தோம் என்ற நிகழ்ச்சி இடம் பெறுவது எங்களுக்குக் கிடைத்த அரும்பேறு என்பதால் இதனை இங்கே குறிப்பிட வேண்டியதாயிற்று. 1970 ஜூலைத் திங்கள் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடலானேன். இங்கிலாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்த அழைப்புகளை ஏற்று அந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கென்னவோ வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில் ஒரு தீவிரமான ஆசை என்றைக்கும் இருந்ததில்லை. வெளிநாட்டுப் பயணங்கள் அனுபவ அறிவுக்குப் பெரிதும் பயன்படுகின்றன என்பது உண்மையென்றாலுங்கூட என்னை பொறுத்தவரையில் அந்தப் பயணங்களில் ஒரு வெறித்தனமான ஆர்வம் என்றைக்கும் இருந்ததில்லை. 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தினால் என் கண்களில் ஒன்றில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். 1967-ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற பயங்கரமான கார் விபத்தில் அதே கண்ணில் அடிபட்டு வலித் தொல்லை அதிகமாயிற்று. அந்த வேதனையையும் பொறுத்துக் கொண்டு மூன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினேன் என்றாலும் வெளிநாட்டுப் பயணத்தின்போது இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை பெறலாம் என்ற எண்ணமும் இருந்ததால் ஜூலை முதல் நாள் பயணம் புறப்படத் தயாரானேன். அந்தப் பயணம் பற்றி “இனியவை இருபது” என்ற தலைப்பில் நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வந்திருப்பதாலும் அந்த நூல் ஏராளமாக விற்றிருப்பதாலும்-இப்போது விரிவாக எழுத வேண்டிய அவசியம்<noinclude></noinclude> 3wolwugn0yslsv2y568fwrv5b56zrtu பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/275 250 573741 1931800 1709810 2026-05-09T08:43:05Z ஹர்ஷியா பேகம் 15001 1931800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 255}}</noinclude>இல்லை என்று கருதுகிறேன். ஆனால் அந்தப் பயணத்திற்கு என்னை வழியனுப்பி வைத்தபோது தமிழகத்தின் அறிவு மேதைகள் சிலர் வழங்கிய கருத்துக்கள் ஒரு எளியவனின் வரலாற்று ஏட்டில் இடம் பெறாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். சீரணியினர் சார்பில் நேரு கலையரங்கில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்னைக் கட்டித் தழுவி அன்பு வாழ்த்துக்களை வழங்கினார்கள். அந்த விழாவில் அரசின் சார்பில் “தமிழரசு” என்ற இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த வழியனுப்பு விழாவில் பேசும் போது டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், “நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளி நாடு செல்வதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார்கள். பிரச்சினைகள் வரும்போது அவைகளைச் சாமர்த்தியத்துடனும், விடாமுயற்சியுடனும் தீர்க்கக் கூடியவர் நம்முடைய முதலமைச்சர். முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து சிலரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை என்பதை அறிந்தேன். இன்றைய தினம் தமிழ்நாடு ஒரு சிறந்த நிர்வாகத்தைப் பெற்றிருக்கிறது. சட்டம், ஒழுங்கு மிகத்திறமையுடன் பாதுகாக்கப்படுகிறது தமிழ்நாட்டில். ஆகவே இந்தத் தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், தொடர்ந்து நல்ல வகையில் பணியாற்றுவதற்கான நிலைமையை உருவாக்கக் கூடிய வகையிலும், முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அதே விழாவில் பேசிய மேலவை உறுப்பினர் பெரியவர் கே. பாலசுப்ரமணிய அய்யர் அவர்கள் “முதலமைச்சர் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இப்போது பேசுவதற்கு முன் வந்திருக்கிறேன். வயதில் பெரியவன் என்ற முறையில் அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் ஒரு நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கிறோம். பாக்கி மாநிலங்கள் எல்லாம் இன்றிருப்பார் நாளை இருப்பது திடமில்லை என்கிற அளவில்தான் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும்<noinclude></noinclude> 09ptd5ijnufdpwt38i8l74t9ledzhsi பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/276 250 573742 1931801 1709811 2026-05-09T08:57:03Z ஹர்ஷியா பேகம் 15001 1931801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|256 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாற்காலி நிலைக்குமா என்பது மற்ற மாநிலங்களில் கேள்விக்குறியாக இருக்கும்போது, இங்கே அப்படியில்லை. அசைக்க முடியாத அமைச்சரவைக் குழு சிலர் வேற்றுமை தோன்றக் கூடுமோ என்று எதிர்பார்த்தார்கள். ஏமாந்தார்கள். இவர்களுக்குள் எதிர்பார்த்தபடி வேற்றுமை தோன்றிடவில்லையே என்பதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம். அது இவர்கள் செய்த தப்புத்தான். தமிழகத்தைப் போல் அமைதி இருக்கிற நாடு வேறில்லை. முதலமைச்சர் அவர்கள் பயணம் வெற்றிகரமாக முடிந்து நலமுடன் திரும்பி வரவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார். நலம் நாடுவோர் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டு என்னை வழியனுப்பி வைத்தார்கள். அவர் வழியனுப்பி வைத்தார் என்று சொல்வதைவிட அந்த விழாவில் நான் பெரியார் அவர்களைத் தாள் பணிந்து வணங்கி விடை பெற்றேன் என்பதுதான் பொருந்தும். ஆஸ்திரேலியத் தூதுவராக சென்னையில் இருந்த திரு. பட்டிரீக்‌ஷா அவர்களும், திரு. கருத்திருமன் அவர்களும் என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்திட வாழ்த்து தெரிவித்தார்கள். பெரியார், ராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோரிடமும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று விடை பெற்றேன். நான் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பே என்னுடைய இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கிடையே பகிர்ந்தளித்தேன். செய்தியாளர், நீங்கள் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு யார் தலைமை வகிப்பார்கள் என்று கேட்டதற்கு, நான் இல்லாத நேரத்தில் கட்சிப் பொறுப்புக்களையும், அரசுப் பொறுப்புக்களையும் நாவலர் அவர்கள் கவனிப்பார் என்றும், அமைச்சரவை நண்பர்களும் அவரோடு இருந்து ஒத்துழைத்து காரியங்களை ஆற்றுவார்கள் என்றும் கூறினேன். பயணம் புறப்பட்ட 1-7-70 அன்று காலை அண்ணா அவர்களின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி விடை பெற்றேன். சென்னையிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்குத்தான் என்றாலும் காலை முதல் ஆயிரக்கணக்கானவர்-<noinclude></noinclude> tbjdiobuehn6okuo3z066g8j405vj84 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/277 250 573743 1931802 1709812 2026-05-09T09:11:08Z ஹர்ஷியா பேகம் 15001 1931802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 257}}</noinclude>கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நண்பர்களும், கழகத் தோழர்களும் என்னைச் சந்தித்து மாலை அணிவித்து பயணம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமே இருந்தனர். சரியாக பிற்பகல் 4 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் என் தாய், தந்தை, அண்ணா ஆகியோரின் படங்களுக்கு மாலையணிவித்து வணங்கிவிட்டுப் புறப்பட்டேன். என்னுடன் தயாளு, நிதித்துறை செயலாலர் வெங்கட் ரமணன். தனிச்செயலாளர் வைத்தியலிங்கம், டாக்டர் ஆப்ரகாம் ஆகியோர் வந்தனர். நான் புறப்பட்ட விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது அங்கு பம்பாய் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து எனக்கு உற்சாகமாக வரவேற்பளித்தார்கள். விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கூடி நின்று என்னை வரவேற்றனர். பம்பாய் நகரில் அன்று நடந்த கழகப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு இரவு 1 மணிக்கு பம்பாயிலிருந்து புறப்படும் விமானத்தில் ரோம் நகருக்குப் பயணமானோம். 2-7-70 காலை 8-15 மணியவிளல் ரோம் நகரை சென்றடைந்தோம். அன்று பிற்பகல் ஐ.நா. உணவு - வேளாண்மை நிறுவனத்திற்குச் சென்று அதனைப் பார்வையிட்டோம். 3-7-70 அன்று காலை வாட்டிகன் நகர் சென்று அங்கு தொழில் அதிபர்களுடனும், தொழில் வல்லுநர்களுடனும் கலந்துரையாடினோம், பின்னர் கிறித்தவ மதத் தலைவரான போப்பாண்டவரைச் சந்தித்து உரையாடினோம். போப் அவர்கள் அண்ணா அவரைச் சந்தித்தது பற்றிக் கூறினார். அரைமணி நேரத்திற்குமேல் போப் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். போப் அவர்கள் எனக்கு ஒரு பதக்கத்தையும், அவரே கையெழுத்திட்ட சமாதானச் செய்தி ஒன்றையும் தந்தார். நான் அவருக்கு தமிழகத்தின் கலை நுட்பப் பொருட்கள் சிலவற்றையும், நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்களையும் (ஆங்கில மொழி பெயர்ப்பு) அளித்தேன். ரோம் நகர் மன்றத்தின் சார்பில் எனக்கு வரவேற்பு ஒன்றும் அளிக்கப்பட்டது. {{nop}}<noinclude> நெ.—17</noinclude> hz2a3emhxfchm8gf37vkrjazw7x8h21 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/278 250 573744 1931803 1709813 2026-05-09T09:20:34Z ஹர்ஷியா பேகம் 15001 1931803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|258 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>4-7-70 அன்று ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜூரிச் நகருக்குச் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7-7-70 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரை அடைந்தேன். அங்கு பிரெஞ்சு நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும், பாரீசில் வாழும் தமிழர்களும், இந்தியர்களும் ஏராளமாகக் கூடி வரவேற்றனர். பாரீசில் என்னை மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டு அமைப்பாளரும், பிரெஞ்சுப் பேராசிரியருமான பிலியோசா, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகச் செயலாளர் தனிநாயகம் அடிகள், மற்றும் தமிழ் அறிஞர்கள் சந்தித்து, ஜூலை 15-ந் தேதியன்று பாரீசில் துவங்கும் மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கிவைக்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் அதற்குத் தகுந்தாற்போல் என்னுடைய பயணத் திட்டம் மாறுதல் செய்யப்பட வேண்டியதாயிற்று பிரெஞ்சு நாட்டின் கலாச்சார உறவு அமைச்சர் எட்மண்ட் மைக்கேல் அவர்கள் என்னை அழைத்து விருந்தளித்தார். ஐக்கிய நாடுகள் சங்கத்தின் கல்வி கலாச்சார நிலையத்தின் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள் யுனெஸ்கோ தலைமையகத்தில் வரவேற்பு விருந்தொன்றை எனக்களித்தார். 10-7-70 அன்று மூனிச் நகருக்குச் சென்றேன். அங்கே மேயர் ஹான்ஸ் ஜோசேன் அவர்களும், பவேரிய விவசாய அமைச்சர் ஹான்ஸ் ஐசென்மானும் என்னை வரவேற்று உபசரித்தனர். பவேரிய அமைச்சர் மதிய விருந்தளித்தார். மேற்கு ஜெர்மனியில் அந்த நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சருடன் தமிழகத்தவருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவி புரிவது குறித்துப் பேசினேன். அங்கிருந்து அன்று நாவலர் அவர்களுக்குப் பிறந்த தின வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். ஜூலை 15-ஆம் தேதியன்று பாரீஸ்நகரில் அங்குபுகழ்பெற்ற பல்கலைக் கழக மாமண்டபத்தில் 39 உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், 60 உலகப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த<noinclude></noinclude> 7gkq0ksnsfue8r5cftfnn4cs0gv9qb8 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/279 250 573745 1931805 1709814 2026-05-09T09:30:22Z ஹர்ஷியா பேகம் 15001 1931805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 259}}</noinclude>ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லாம் கொலு வீற்றிருந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினை நான் துவக்கிவைத்தேன். அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் மதியழகன் அவர்கள் தலைமையில் தமிழகக் குழுவினரும் கலந்து கொண்டனர். அன்று மாலையே லண்டன் வந்து சேர்ந்து புகழ்பெற்ற கண் டாக்டர் சர் ஸ்டீவர்ட் டியூக் எல்டர் அவர்களிடம் கண்ணைப் பரிசோதனை செய்து கொண்டேன். இந்தப் பரிசோதனையின்போது என்னுடன் தமிழகத்திலிருந்து வந்திருந்த டாக்டர் ஆப்ரகாம் அவர்களும் உடனிருந்தார். பரிசோதனைக்குப் பிறகு சர் டியூக் எல்டர் சென்னையில் எனக்குத் தரப்பட்ட சிகிச்சையே போதுமானது என்றும், சென்னையில் நடந்த சிகிச்சைக்குப்பின் சிகிச்சைக்குப்பின் தரப்பட்ட மருந்துகளையே இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் என்றும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறினார். அங்கிருந்து தமிழகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ப. உ. சண்முகம் அவர்களிடமும், முரசொலி மாறனிடமும் டாக்டர் தெரிவித்ததைக் கூறினேன். ப. உ. சண்முகம் மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர்களும், நாகர்கோவில் பஸ் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்வதாகத் தெரிவித்தார். அந்தத் தொழிலாளர்களை எல்லாம் வேலைக்குத் திரும்ப வேண்டுமென்று அங்கிருந்தவாறே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் ஏடுகள் மூலம் விடுத்தேன். ஜூலை 16-ந் தேதி மறுபடியும் டாக்டர் பெட்போர்டைச் சந்தித்து, அவரிடமும் கண்ணைக் காட்டினேன். அவரும் அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்ற கருத்தையே தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் லண்டனில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் தகுந்த விடைகளை அளித்தேன். சென்னையில் உள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சாலையைத் திறப்பது குறித்தும், டிராக்டர் தொழிற்சாலையை விரிவுபடுத்துவது பற்றியும், பெட்ரோகெமிக்கல் தொழில்கள் நிறுவுவது பற்றியும் அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். {{nop}}<noinclude></noinclude> mhet2if9c0m01hllzcdbin29plceees பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/280 250 573746 1931806 1709815 2026-05-09T09:33:52Z ஹர்ஷியா பேகம் 15001 1931806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|280 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கவென்டரியில் உள்ள பெர்கூசன் டிராக்டர் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். அந்தப் பெர்கூசன் கம்பெனியார் நான் அந்தக் கம்பெனிக்கு வந்ததையொட்டி டிராக்டர் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தனர். அதனை நான் அப்போதே கோவை விவசாயக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அறிவித்து, அவர்களிடமே அதை கோவை விவசாயக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டேன். {{nop}}<noinclude></noinclude> 2om3idtqcswo6lk11o32798y16bk2y1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/281 250 573747 1931811 1709816 2026-05-09T10:56:14Z ஹர்ஷியா பேகம் 15001 1931811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>35</b>}} {{larger|<b>கொள்கையும் கட்டுப்பாடும்</b>}} {{X-larger|<b>வெ</b>}}ளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1970 ஜூலை 21-ஆம் நாள் சென்னை திரும்பினோம். அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சியொன்று ஏற்பாடாகியிருந்தது. அப்போது அந்த அரங்கிற்கு “பாலர் அரங்கம்” என்றுதான் பெயர் இருந்தது. ஒரு காலத்தில் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் இடமாக அந்த இடம் விளங்கி, அதன் பின்னர் பாலர் அரங்கம் என்ற பெயரில் திரையரங்காக மாற்றப்பட்டிருந்தது. அந்த அரங்கின் அடித்தளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பெரும் பகுதி மாற்றம் செய்து புதியதோர் தோற்றப் பொலிவுடனும், குளிர் சாதன வசதியுடனும் அந்த இடத்தை உருவாக்கி அதற்கு நகைச்சுவை மன்னரும் சிறந்த சிந்தனையாளருமான என். எஸ். கே. அவர்கள் நினைவாக “கலைவாணர் அரங்கம்” என்ற பெயரையும் சூட்டுகின்ற முயற்சியில் நான் ஈடுபட்டு வெற்றி கண்டது இன்றைக்கும் என் நெஞ்சுக்கு இதமான ஒரு நிகழ்ச்சியாகும். அந்த அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் பேசியது-அடுத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் மாற்றங்களை எண்ணும்போது நினைவில் நிறுத்திட வேண்டிய ஒன்றாகும். அவரது அன்றைய பேச்சையும் அதன் பின்னர் சில நிகழ்ச்சிகளில் பேசிய பேச்சுக்களையும் நினைவிற் கொண்டால்தான் 1972-ல் ஏற்பட்ட சில நிலைமைகளின் உண்மைப் பின்னணி என்ன என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும். “கலைஞர் அவர்கள் அண்ணாவின் கொள்கை வழியில் செயல்படுகிறார். கலைஞர் அவர்கள் மேலை நாடுகளில் இருந்து அமைச்சர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் கடிதமெழுதியிருந்தார்கள். எனக்கும் அவர் கைப்படவே கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதமே நம்மைத் தூற்றுகின்ற எதிரிகளுக்குப் பதிலாகும். தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் பாசத்தையும் எந்தச் சூழ்நிலையில் இருந்தபோதிலும் அவர் மறக்கவில்லை. அப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த<noinclude></noinclude> hz1aiudotzlj9p6z570tce3222gg9wv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/282 250 573748 1931812 1709817 2026-05-09T11:03:42Z ஹர்ஷியா பேகம் 15001 1931812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|262 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஒருவரைத் தலைவராகக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பல்லாண்டு சேவை செய்ய வேண்டும் என்கிறபோது தமிழகத்தில் உள்ள நிலைமைகளையும் கூற விரும்புகிறேன். எங்கு பார்த்தாலும் பொறாமை. எங்கு பார்த்தாலும் எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன. மக்களைக் காக்க முதலமைச்சர் கலைஞர் செயல்படுகிறபோது அவரை மக்கள் விரோதியாக்க பத்திரிகை பலத்தைப் பயன்படுத்துகிறார்கள். கழகத்தின் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக, தொண்டனாகப் பணி புரியும் கலைஞரிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போட்டி, பொறாமை. சுயநலத்தின் காரணமாக கழகத்திற்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் பொடிப் பொடியாக்குவோம். நேற்று வந்தவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கொண்டு இன்று கழகத்தை ஒழிப்பேன் என்று கூறுகிறார்கள்.” 1970-ஆம் ஆண்டு நண்பர் எம். ஜி. ஆரின் உரையில் காணப்படும் “நேற்று வந்தவர்கள்” என்ற சொற்றொடரும், “அரசியலில் புகுந்து கொண்டு கழகத்தை ஒழிப்பேன் என்கிறார்கள்” என்ற சொற்றொடரும் இப்போது நான் இந்த இரண்டாம் பாகத்தை எழுதும் போது எத்தனை எத்தனை எண்ண அலைகளை எழுப்புகின்றன தெரியுமா? நான் தாயகம் திரும்பிய மறுநாளே மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “அன்புக்குரிய கருணாநிதி அவர்களுக்கு ஆசீர்வாதம். செளக்கியமாகத் திரும்பி வந்து ஊர் சேர்ந்ததற்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார். பாரிசில் நடைபெற்ற மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கி வைத்து நான் ஆற்றிய உரை பற்றி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத் தமிழகம் திரும்பிய மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், “மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு வணக்கம். “என் கண்ணிலும் சிறந்தது தமிழ்” எனக் கூறி, பாரிஸ் மாநாட்டு வந்திருந்தோர் மனத்தையெல்லாம் கவர்ந்து, தமிழின் பெருமையை விளக்கி விட்டீர்கள். உலகினை வெல்லும் தங்கள் திறன் கண்டு மகிழ்ந்தேன். இந்தத் தமிழன்பு தங்களைக் காக்க வேண்டுமென என் மனம் வணங்கத் தொடங்கியது. தங்கள் கண்ணுக்கு ஒன்றுமில்லை என்று இலண்டன் மருத்துவர்கள் கூறினார்கள் என மாநாடு முடிவதற்கு முன்னரே அறிந்து எல்லோரும் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம். தங்களுடைய தமிழன்பும் திறனும் தமிழ்<noinclude></noinclude> n5mbmic5o5953n13b3noxlvd11ntr3i பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/283 250 573749 1931813 1709818 2026-05-09T11:13:29Z ஹர்ஷியா பேகம் 15001 1931813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 283}}</noinclude>நாட்டுக்கும் உலகினுக்கும் நீண்ட காலம் பயன்பட வேண்டுமென்று எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார். என்னை வரவேற்றுப் பாராட்டும் விழாவொன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தெய்வீகப் பேரவையின் சார்பில் நடைபெற்றது. தர்மபுரம் ஆதினகர்த்தர், காஞ்சி ஞானப்பிரகாச ஆதினத் தலைவர், குன்றக்குடி அடிகளார், சுந்தரலிங்க அடிகளார், திருவண்ணாமலை ராமனாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். அந்த விழாவில் நான் நன்றி தெரிவித்து உரையாற்றியபோது, “கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதைவிட, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம். எனவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளும் வழியில் நாம் நடைபோட வேண்டும். கடவுள் ஏழைகளின் புன்னகையில் இருக்கிறார். அந்தப் புன்னகையில் கடவுளைக் காணத்துடிப்பவன் நான்” என்று குறிப்பிட்டேன். 1970-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க, அந்த ஆண்டே, அந்தச் சட்டமன்றத் தொடரிலேயே மார்ச் 31-ந் தேதி நில உச்சவரம்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தாவது: 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் ஒன்று முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் அடங்கிய ஓர் குடும்பத்திற்கு முப்பது ஏக்கர் என்று அதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் நில உறவு முறையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மேற்படி சட்டம் அமலாக்கப்பட்ட பிறகும் பொது நலனுக்கு விரோதமாக சில மனிதர்களிடமே அதிக நிலம் சேர்ந்திருக்கிறது. நிலச் சீர்திருத்தத்தையொட்டிய மற்றொரு நடவடிக்கையாக இப்பொழுது இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது நில உறவு முறைகளில் பல ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டுமென்ற குறிக்கோளை எய்தும் பொருட்டு உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராவாகக் குறைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 68ksiqtzrayhv62q07c92hrvnv2x1y0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/284 250 573750 1931826 1709819 2026-05-09T11:43:40Z ஹர்ஷியா பேகம் 15001 1931826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|264 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்த மசோதா அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் பயன்படும். 1970 பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். இந்த மசோதா அவையிலே விவாதத்திற்காக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. சுதந்திரா கட்சியில் அப்போதிருந்த ஹண்டே அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களும், குடியரசுத் தலைவரின் அனுமதி பெறாமல் மசோதாவைக் கொண்டு வருவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மதியழகன், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக முன்பே அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், முன்கூட்டியே அனுமதி என்பது தேவையில்லை என்றும், இந்தப் பொருள் மாநில அரசுக்குரியதாக வரும் பட்டியலில் இடம் பெற்றதால் இதைத் தன்னிச்சையாகச் செய்யலாம் என்றும், மேலும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர முன்கூட்டியே பெற வேண்டும் என்பதல்ல என்றும், மேலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த நிலச் சீர்திருத்த மசோதாவைப் பிரேரேபிக்க அனுமதி தருகிறோம் என்று தந்தி வந்திருப்பதாகவும், எனவே அரசியல் சட்டத்திற்கு முரணானது எதுவுமில்லை என்றும் கூறினார். அதுபற்றி பேரவைத் தலைவர் தன் முடிவைத் தெரிவிக்கும்போது, இந்த மசோதாவைப் பிரேரேபிக்கலாம் என்று தந்தி வந்திருக்கிறது. ஆளுநரின் அனுமதி பெற்றது பற்றித்தான் அறிவிக்கப்படுவதுண்டே தவிர குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றது பற்றி அவைக்கு அறிவிப்பதில்லை என்றும், இந்த மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி தந்திருக்கிறார் என்றும், சில சட்டங்களை விரைவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியவுடன் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்து அனுமதி பெற விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இந்தச் சட்டம் கொண்டு வருவதில் எந்தவித முறைகேடும் நடைபெற்றுவிடவில்லை என்றும் கூறிய பிறகு மசோதா விவாதத்திற்கு வந்தது. விவாதம் முடிவுற்றதும் சுதந்திரா உறுப்பினர் ஹண்டே அவர்கள் எழுந்து இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தை<noinclude></noinclude> btmwbv49of4ub960vg8y52hc7c0x619 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/37 250 615367 1931409 1890791 2026-05-08T13:10:17Z Booradleyp1 1964 1931409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><section begin="அ"/> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழ்வியற்‌ களஞ்சியம்‌</b>}}}} {{dropinitial|அ:}} {{larger|<b>அ</b>}} என்பது தமிழ்‌ நெடுங்கணக்கிலுள்ள முதல்‌ எழுத்தாகும்‌. உயிரும்‌ மெய்யுமாக அமைந்த எழுத்துகளின்‌ வரிசையை நெடுங்‌கணக்கு என்பர்‌, ஆங்கிலம்‌ போன்ற மொழிகளில்‌ உயிர்‌ எழுத்துகளும்‌ மெய்யெழுத்துகளும்‌ கலந்த நிலையில்‌ நெடுங்கணக்கு அமைந்துள்ளது. தமிழ்‌, வடமொழி ஆகிய இந்திய மொழிகளில்‌ உயிரெழுத்துகள்‌ முதலிலும்‌ மெய்யெழுத்துகள்‌ பின்‌னரும்‌ அமைந்துள்ளன. பிற இந்திய மொழிகளிலும்‌ நெடுங்கணக்கு இவ்வாறே அமைந்துள்ளது. இன்று தமிழில் வழங்கும் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அகரம் எழுத்துகட்கு முதலாக அமைவதைக் குறிப்பிடுகிறது. திருக்குறளும்‌ அகரமே எழுத்துகளுக்கெல்லாம்‌ முதலாவது என்று சுட்டுகிறது. {{larger|<b>வடிவம்‌</b>}}: தமிழெழுத்துகளின்‌ முதலெழுத்தாகிய ‘அ’ என்பதன்‌ வரிவடிவம்‌ காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளது. அதன் வளர்ச்சி நிலைகள் பின்வருமாறு: {| |- |மீனாட்சிபுரம் (கி.மு. 3–ஆம் நூற்றாண்டு)||......||rowspan=5 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 37 |bSize = 480 |cWidth = 39 |cHeight = 147 |oTop = 411 |oLeft = 201 |Location = center |Description = }} |- |கொங்கர் புளியங்குளம் (கி.மு. 3–ஆம் நூற்றாண்டு) || ...... || |- |திருப்பரங்குன்றம் (கி.பி. முதல் நூற்றாண்டு)|| ...... || |- |ஆனைமலை (கி.பி. முதல் நூற்றாண்டு)|| ...... || |- |புகளூர் (கி.பி. 2–ஆம் நூற்றாண்டு) || ...... || |- |ஆண்டிப்பட்டி காசு (கி.பி. 2–ஆம் நூற்றாண்டு)||......||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 37 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 57 |oTop = 204 |oLeft = 416 |Location = center |Description = }} |- |பூலாங்குறிச்சி (கி.பி. 4–ஆம் நூற்றாண்டு) || ...... || |} ‘ஆ’ என்னும்‌ நெட்டெழுத்தின்‌ வடிவம்‌ கி.பி. 5–ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த திருநாதர்‌ குன்றுக்‌ கல்வெட்டில்‌ {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 37 |bSize = 480 |cWidth = 27 |cHeight = 13 |oTop = 280 |oLeft = 300 |Location = center |Description = }} என அமைந்துள்ளது. இதில்‌ நெடிலைக்‌ குறிக்க வரும்‌ குறியீட்டினை நீக்கிய நிலையில்‌ {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 37 |bSize = 480 |cWidth = 21 |cHeight = 10 |oTop = 302 |oLeft = 290 |Location = center |Description = }} என்ற வடிவம்‌ கிடைக்கும்‌. எனவே, கி.பி. 5–ஆம்‌ நூற்றாண்டளவில்‌ இதன்‌ வடிவம்‌ எவ்வாறிருந்திருக்கும்‌ என ஒருவாறு ஊகிக்கலாம். தமிழெழுத்துகளின்‌ வளர்ச்சி நிலைகளில் மூவகைப் பாகுபாட்டினைக் குறிப்பர். அவை முறையே கோலெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து எனப் பெறும். எழுத்துக்களின் வரிவடிவம் திரிகின்றமைக்குக் கல், உலோகம், ஓலை முதலான எழுதப்படு பொருள்களின் தன்மை, உளி, எழுத்தாணி போன்று எழுதப் பயன்படுத்திய பொருள்களின் தன்மை, வைத்த கை வாங்காமல் தொடர்ந்தும் விரைந்தும் எழுதும் தன்மை முதலானவை காரணம் என்பர். மேலே குறிப்பிட்ட காலம்வரை கோலெழுத்துக் காலம் எனலாம். இதன் பின்னர் வரும் வடிங்களை வட்டெழுத்து அல்லது வட்டம் என்பர். இதனைத் தெக்கன் மையாளம் என்றும், நானா மோனா என்றும் குறிப்பர். இவை பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பெரும்பான்மையாகவும், கொங்கு நாட்டில் சிறுபான்மையாகவும் வழக்கிலிருந்தவை. உள்ளீடிட்டு வட்டமாய் எழுதப் பெற்றமையான் இப்பெயர் பெற்றன எனலாம். இவ்வட்டெழுத்துகளில் ‘அ’ என்பதன் வளர்ச்சி நிலைகள் பின்வருமாறு:<noinclude></noinclude> eb1gsm2gnavzcs0gvt8p496ouu1w33y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/40 250 615387 1931410 1929690 2026-05-08T13:11:19Z Booradleyp1 1964 1931410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஃதை|4|அஃறிணை}}</noinclude>இறைவனையும் காட்டும். சிறப்பு வகையால் இவ்வகரம் பிரமன், திருமால், சிவன் ஆகிய முத்தொழிற் கடவுளரையும் குறிக்கும். {{right|<b>கோ.வி.</b>}} <section end="அ"/> <section begin="அஃதை"/> {{larger|<b>அஃதை</b>}} என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: [[அகுதை]]. <section end="அஃதை"/> <section begin="அஃறிணை"/> {{larger|<b>அஃறிணை</b>}} என்பது அல், திணை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். உலகத்தில் உள்ள பொருள்களை மக்கள், மக்கள் அல்லாத பிற என்று பாகுபாடு செய்வது பெரும்பாலான மொழிகளில் காணப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் மக்கள், மக்கள் அல்லாத பிற என்னும் வேறுபாடு, திணை வேறுபாடு எனப்படும். மக்களைக் குறிப்பிடும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் என்றும், பிறவற்றைக் குறிப்பிடும். பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் என்றும் கூறப் பெறும். அஃறிணை என்பது உயர்வு அல்லாத திணை என்று பொருள்படும். சங்க காலத்தில் அஃறிணைப் பெயர்கள் யாது, எவன் என்ற சொற்களையும், இக்காலத்தில் எது, என்ன என்ற சொற்களையும் வினாவாக ஏற்றுவரும். எல்லா மொழிகளிலும் திணைப் பாகுபாடு இருந்தாலும், தமிழில் அது சிறப்பான இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. இதற்கு இரண்டு சிறந்த காரணங்கள் உள்ளன. ஒன்று, பெயர்ச்சொற்களில் குறிப்பாகச் சுட்டுப் பெயர்களில் வேறுபாடு இருப்பது; மற்றொன்று, வினைமுற்றிலும் அந்த வேறுபாடு அமைந்து, எழுவாயாக வரும் பெயருக்கும், வினைமுற்றில் இறுதியாக அமையும் விகுதிக்கும் இயைபு (Concordance) இருப்பது. அதாவது, எழுவாய் உயர்திணை ஆண்பால் என்றால், லினைமுற்றில் ஆன் விகுதி பெற்று ‘வந்தான்’ என்பது போன்றே பயனிலை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான். தமிழில் திணை என்பது, பால் என்னும் மற்றோர் இவக்கணக் கூறோடு சேர்த்து சுட்டுப் பெயரிலும் வினைமுற்றிலும் காணப்படுகிறது. எனவே உயர்திணையை அதன் ஒருமை நோக்கியும், பால் வேறுபாடு நோக்கியும், ஆண்பால், பெண்பால் என்றும், அவற்றின் பன்மை நோக்கிப் பலர்பால் என்றும் பிரிக்கின்றனர். அஃறிணையை அதன் எண்ணிக்கை நோக்கி ஒன்றன்பால் பலவின்பால் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்டவாறு சுட்டுப் பெயர்களில் அவன், அவள், அவர், அது, அவை என்று ஐந்து வகையும், வினைமுற்றில் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று ஐந்து வகையும் காணப்படுவதுதான். இவ்வாறு மொழி அமைப்பில் வேறுபாடு இருப்பதால்தான் இலக்கணத்தில் திணைப்பாகுபாடும், பால் பாகுபாடும் சேர்ந்து ‘திணை – பால் பாகுபாடு’ என்று வழங்கப்படுகிறது. அஃறிணையைப் பொறுத்தவரை தமிழ் மொழியில் இரண்டு செய்திகள் சுட்டிக் காட்டத் தக்கன. ஒன்று, உயர்திணையில் ஆண், பெண் என்று வேறுபாடு செய்யப்பட்டதுபோல, அஃறிணையில் செய்யப்படாமை; இரண்டு, அஃறிணையில் எண் அடிப்படையில் ஒன்றன்பால், பலலின்பால் என்னும் வேறுபாடு மட்டும் செய்யப்பட்டுள்ளமை. உலகப் பொருள்களைப் பொறுத்தவரை, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகிய உயிருள்ள பொருள்களில் ஆண், பெண் என்னும் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வேறுபாடு, தமிழ்மொழி அமைப்பில், மேலே குறிப்பிட்டதுபோலச் சுட்டுப் பெயர்களில் உயிருள்ள அஃறிணைப் பொருள்களைக் குறிப்பதற்கென்று ஒரு சொல்வோ, அஃறிணைப் பொருளைக் குறிப்பதற்கென்று மற்றொரு சொல்லோ இல்லாமல் ‘அது’ என்னும் ஒரு சுட்டுப்பெயரே இருப்பதாகும், அதனால்தான், விலங்கு பறவை போன்ற உயிருள்ள பொருளையும் வீடு, கல் போன்ற உயிரற்ற பொருளையும் குறிப்பதற்கு, ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: பறவை அழகானது; அது வானத்தில் பறக்கிறது. வீடு பெரியது; அது அழகாக இருக்கிறது. இங்கு உயிருள்ள பொருளும் உயிரற்ற பொருளும் ஓரே சுட்டுச் சொல்லினையே கொண்டுள்ளதனைப் பார்க்கலாம். இதைப் போலவே, வினைமுற்றிலும் உயிருள்ள பொருனைக் குறிக்கும் சொற்களும் உயிரில்லாத பொருளைக் குறிக்கும் சொற்களும் ஒரே வினைமுற்று விகுதி கொண்டு முடிவதை மேலே காட்டிய எடுத்துக் காட்டால் அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி இலக்கணம் பற்றிய ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியின், இலக்கணம் என்பது, அந்த மொழியில் அமைந்துள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படுமே தவிர, உலகப்பொருள்களில் உள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படாது என்பதே. அஃறிணையில் பொதுவாக ஒருமை பன்மை வேறுபாடு இருந்தாலும், சுட்டுப் பெயர்கள் ஒழிந்த<noinclude></noinclude> n01yjsfig69pi64r2sdfocpc6ffzt8k 1931460 1931410 2026-05-08T13:46:33Z Booradleyp1 1964 1931460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஃதை|4|அஃறிணை}}</noinclude>இறைவனையும் காட்டும். சிறப்பு வகையால் இவ்வகரம் பிரமன், திருமால், சிவன் ஆகிய முத்தொழிற் கடவுளரையும் குறிக்கும். {{right|<b>கோ.வி.</b>}} <section end="அ"/> <section begin="அஃதை"/> {{larger|<b>அஃதை</b>}} என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]. <section end="அஃதை"/> <section begin="அஃறிணை"/> {{larger|<b>அஃறிணை</b>}} என்பது அல், திணை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். உலகத்தில் உள்ள பொருள்களை மக்கள், மக்கள் அல்லாத பிற என்று பாகுபாடு செய்வது பெரும்பாலான மொழிகளில் காணப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் மக்கள், மக்கள் அல்லாத பிற என்னும் வேறுபாடு, திணை வேறுபாடு எனப்படும். மக்களைக் குறிப்பிடும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் என்றும், பிறவற்றைக் குறிப்பிடும். பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் என்றும் கூறப் பெறும். அஃறிணை என்பது உயர்வு அல்லாத திணை என்று பொருள்படும். சங்க காலத்தில் அஃறிணைப் பெயர்கள் யாது, எவன் என்ற சொற்களையும், இக்காலத்தில் எது, என்ன என்ற சொற்களையும் வினாவாக ஏற்றுவரும். எல்லா மொழிகளிலும் திணைப் பாகுபாடு இருந்தாலும், தமிழில் அது சிறப்பான இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. இதற்கு இரண்டு சிறந்த காரணங்கள் உள்ளன. ஒன்று, பெயர்ச்சொற்களில் குறிப்பாகச் சுட்டுப் பெயர்களில் வேறுபாடு இருப்பது; மற்றொன்று, வினைமுற்றிலும் அந்த வேறுபாடு அமைந்து, எழுவாயாக வரும் பெயருக்கும், வினைமுற்றில் இறுதியாக அமையும் விகுதிக்கும் இயைபு (Concordance) இருப்பது. அதாவது, எழுவாய் உயர்திணை ஆண்பால் என்றால், லினைமுற்றில் ஆன் விகுதி பெற்று ‘வந்தான்’ என்பது போன்றே பயனிலை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான். தமிழில் திணை என்பது, பால் என்னும் மற்றோர் இவக்கணக் கூறோடு சேர்த்து சுட்டுப் பெயரிலும் வினைமுற்றிலும் காணப்படுகிறது. எனவே உயர்திணையை அதன் ஒருமை நோக்கியும், பால் வேறுபாடு நோக்கியும், ஆண்பால், பெண்பால் என்றும், அவற்றின் பன்மை நோக்கிப் பலர்பால் என்றும் பிரிக்கின்றனர். அஃறிணையை அதன் எண்ணிக்கை நோக்கி ஒன்றன்பால் பலவின்பால் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்டவாறு சுட்டுப் பெயர்களில் அவன், அவள், அவர், அது, அவை என்று ஐந்து வகையும், வினைமுற்றில் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று ஐந்து வகையும் காணப்படுவதுதான். இவ்வாறு மொழி அமைப்பில் வேறுபாடு இருப்பதால்தான் இலக்கணத்தில் திணைப்பாகுபாடும், பால் பாகுபாடும் சேர்ந்து ‘திணை – பால் பாகுபாடு’ என்று வழங்கப்படுகிறது. அஃறிணையைப் பொறுத்தவரை தமிழ் மொழியில் இரண்டு செய்திகள் சுட்டிக் காட்டத் தக்கன. ஒன்று, உயர்திணையில் ஆண், பெண் என்று வேறுபாடு செய்யப்பட்டதுபோல, அஃறிணையில் செய்யப்படாமை; இரண்டு, அஃறிணையில் எண் அடிப்படையில் ஒன்றன்பால், பலலின்பால் என்னும் வேறுபாடு மட்டும் செய்யப்பட்டுள்ளமை. உலகப் பொருள்களைப் பொறுத்தவரை, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகிய உயிருள்ள பொருள்களில் ஆண், பெண் என்னும் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வேறுபாடு, தமிழ்மொழி அமைப்பில், மேலே குறிப்பிட்டதுபோலச் சுட்டுப் பெயர்களில் உயிருள்ள அஃறிணைப் பொருள்களைக் குறிப்பதற்கென்று ஒரு சொல்வோ, அஃறிணைப் பொருளைக் குறிப்பதற்கென்று மற்றொரு சொல்லோ இல்லாமல் ‘அது’ என்னும் ஒரு சுட்டுப்பெயரே இருப்பதாகும், அதனால்தான், விலங்கு பறவை போன்ற உயிருள்ள பொருளையும் வீடு, கல் போன்ற உயிரற்ற பொருளையும் குறிப்பதற்கு, ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: பறவை அழகானது; அது வானத்தில் பறக்கிறது. வீடு பெரியது; அது அழகாக இருக்கிறது. இங்கு உயிருள்ள பொருளும் உயிரற்ற பொருளும் ஓரே சுட்டுச் சொல்லினையே கொண்டுள்ளதனைப் பார்க்கலாம். இதைப் போலவே, வினைமுற்றிலும் உயிருள்ள பொருனைக் குறிக்கும் சொற்களும் உயிரில்லாத பொருளைக் குறிக்கும் சொற்களும் ஒரே வினைமுற்று விகுதி கொண்டு முடிவதை மேலே காட்டிய எடுத்துக் காட்டால் அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி இலக்கணம் பற்றிய ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியின், இலக்கணம் என்பது, அந்த மொழியில் அமைந்துள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படுமே தவிர, உலகப்பொருள்களில் உள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படாது என்பதே. அஃறிணையில் பொதுவாக ஒருமை பன்மை வேறுபாடு இருந்தாலும், சுட்டுப் பெயர்கள் ஒழிந்த<noinclude></noinclude> f5qz98wucgq28ofil5ukjk7kdf5k9ww பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/41 250 615393 1931415 1891011 2026-05-08T13:14:41Z Booradleyp1 1964 1931415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கபோதி|5|அக்கமாதேவி}}</noinclude>பிற பெயர்ச் சொற்களில் (இதைத் தொல்காப்பியர் ‘அஃறிணை இயற்பெயர்’ என்று குறிப்பிடுவார்) வடிவத்தில் ஒருமை பன்மை வேறுபாடு கொள்ளாது வினைமுற்றில் மட்டும் வேறுபாடு கொள்வது உண்டு. மரம் என்பது அஃறிணை ஒருமைச்சொல்; மரங்கள் என்பது அஃறிணைப் பன்மைச் சொல்; ஆனால், மரம் என்பதனையே ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படுத்தலாம். பன்மையைக் குறிக்கவேண்டுமாயின், பன்மை வினை முற்றைத் தவறாது பயன்படுத்த வேண்டும். ஆகவே, ‘மரம் விழுந்தது’ என்பது அஃறிணை ஒருமை வினைமுற்று வாக்கியமாகவும். ‘மரம் விழுந்தன’ என்பது அஃறிணைப் பன்மை வினைமுற்று வாக்கியமாகவும் அமையும். அஃறிணைப் பன்மை வினைமுற்று வாக்கியத்தில் எழுவாயாக வந்துள்ள பெயர் ஒருமை வடிவமாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகவே, ‘பால்பகா அஃறிணைப்பெயர்கள்’ என்று சுட்டுப் பெயர் அல்லாத பிற பெயர்கள் இலக்கணத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஒருமை, பன்மை பகுத்து அறிய முடியாத அஃறிணைப் பெயர்கள் என்பது இதற்குப் பொருள், ஆனால், இன்றைய தமிழில் பன்மைப் பெயர்கள் பெரும்பாலும் ‘கள்’ விகுதி சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றன. {{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அஃறிணை"/> <section begin="அக்கபோதி"/> {{larger|<b>அக்கபோதி</b>}} என்பவன் சிரீலங்கா மன்னனான மானவன்மனின் மகன். இவன் கி.பி. 718-இல் மன்னனாக முடிசூட்டிக்கொண்டவன்; பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மரின் அரண்மனையில் சிறிது காலம் வாழ்ந்தவன். எனவே, சிரீலங்காமீது பல்லவரின் செல்வாக்கு வளர்ந்திருந்தது. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்ட போது, அக்கபோதி பல்லவ மன்னருக்கு உறுதுணையாக இருந்தான். இவன் கி.பி. 724-இல் காலமானான். <section end="அக்கபோதி"/> <section begin="அக்கமாதேவி"/> {{larger|<b>அக்கமாதேவி</b>}} கன்னட நாட்டுப் பெண்பாற் புலவர் ஆவர். வடகர்நாடகத்தில் வசவண்ணர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றி வீரசைவ மதத்தைப் பரப்பினார். இந்நெறியைப் பின்பற்றிய அடியார் சிவசரணர் எனப்படுவர். இவர்கள் தமது கருத்துகளையும் இறை அனுபவங்களையும் பாடல் வடிவில் எழுதி வைத்தார்கள். இவை ‘வசனங்கள்’ எனப்படும். இவர்களுள் பெண்கள் பலர் இருந்தார்கள். இவர்களுள் ஒருவரே அக்கமாதேவி. இவர், அக்கமாதேவி என்றும் மகாதேவியக்கா என்றும் அழைக்கப்பட்டார். ‘அக்கா’ என்ற சொல் வீரசைவ சமயத்தில் இவரை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அக்கமாதேவியின் வசனங்கள் பட்டறிவின் களஞ்சியம்; உணர்ச்சி வெள்ளம்; கவிதைப் பெட்டகம். பெண்களுக்கே உரிய வகையில் எளிய சொற்களையும், அழகிய உவமைகளையும் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 41 |bSize = 480 |cWidth = 101 |cHeight = 140 |oTop = 52 |oLeft = 296 |Location = center |Description = }} {{center|அக்கமாதேவி}} பயன்படுத்தித் தம் கருத்துகளை இவர் வெளிப்படுத்தினார். எளிமையும் தெளிவும் இவர் தம் கருத்துகளில் மிளிர்கின்றன. அக்கமாதேவி வடகர்நாடகத்திலுள்ள உடுதடி என்னும் ஊரில் விமலர் என்பவருக்கும் சுமதி என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கை நெறி ஆகியது. சிரீசைலம் என்னும் ஊரைப்பற்றியும், அங்கு உறையும் இறைவன் மல்லிகார்ச்சுனனைப் பற்றியும் கேள்விப்பட்டார். அந்த இறைவனையே தம் கணவனாக வரித்துக்கொண்டார். அந்நாளில், அவ்வூரையாண்ட கௌசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கமாதேவியைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, மணம் செய்துகொள்ள விரும்பினான். அவள் மணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்பதற்காக அக்கமாதேவி அரசனை மணக்க ஒப்புக்கொண்டார். தம் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கக் கூடாதென்றும், தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வதாகவும் கூறினார். மணம் நிறைவேறியது. ஆனால், அக்கட்டுப்பாட்டின்படி அவனால் நடக்க முடியவில்லை. எனவே, அக்கமாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கௌசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்து விட்டு, கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் அங்கே அனுபவ மண்டபத்தில் கூடியிருந்து, தம் இறையனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அக்கமாதேவியும் அவர்களுள் ஒருவர் ஆனார். “அடியார், மனைவியரே; ஆண்டவனே கணவன்” என்ற சீரிய கருத்தை அங்கே நிலைநாட்டினார். {{nop}}<noinclude></noinclude> 1awn4jhgm4u9s9a84ipr8ahp62ikb6f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/42 250 615407 1931431 1891013 2026-05-08T13:22:33Z Booradleyp1 1964 1931431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கரா||அக்கராபாலிசு}}</noinclude>சிவசரணர் (சிவனடியார்) என்ற நிலையை எய்திய அக்கமாதேவி, தம் வசனங்களால் இறைவனுக்குப் புகழாரம் சூட்டினார். உலக வாழ்க்கையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார். உடல்மீதுள்ள பற்றுக் குறைவதற்கும், ஆன்மாவை அறிவதற்கும், ஆன்ம நாயகனாகிய இறைவனை அடைவதற்கும் வழிகூறினார். “அகந்தை கூடாது; பசிக்கும்போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும்; ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும்; மாயை, உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது; இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும்; குருவே உய்யும் நெறி காட்டுவார்.” இவ்வாறெல்லாம் தம் வசனங்களில் பாடியிருக்கிறார் அக்கமாதேவி. ‘சென்ன மல்லிகார்ச்சு’ என்பது இவர் தம் வசனங்களில் பதித்துக்கொண்ட முத்திரையாகும். வாழ்க்கையின் மறைபொருளை மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார். வீரசைவ வசன இலக்கியத்தில் ‘அக்கா’வின் இடம் இணையற்றதாகும்.{{right|<b>டி.பி.சி.</b>}} <section end="அக்கமாதேவி"/> <section begin="அக்கரா"/> {{larger|<b>அக்கரா,</b>}} கானா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர்; அந்நாட்டின் மிகப்பெரிய நகரம். கினி வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் சிறப்பான வாணிக மையமாகும். கானா நாட்டின் கோகோ விளையும் உள்நாட்டுப் பகுதிகளுடன் அக்கரா (Accra) மாநகர் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகருக்குக் கிழக்கில் 26 கி.மீ. தொலைவில் உள்ள தெமா (Tema) என்ற புதிய தொழிற்சாலை நகருக்கும் இந்நகருக்கும் இடையே இருப்புப்பாதைத் தொடர்புண்டு. அக்கராவில் ஆழ்நீர் செயற்கைத் துறைமுகம் ஒன்றும் உள்ளது. ஓல்டா ஆற்று (Volta river) நீர்மின் திட்டம் அக்கரா, தெமா ஊர்களுக்கு மின்சக்தி அளிக்கிறது. இங்குள்ள விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவுகிறது. அகன்ற சாலைகளையும் அழகிய தோட்டங்களையும் மணற்பாங்கான கடற்கரைகளையும் கொண்டது இக்கால மாநகரம் அக்கரா. இங்குள்ள அரசு கட்டிடங்கள் மிக உயரமானவை. கானா 1957–இல் விடுதலையான பின்னர்ப் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பெற்றன. நாடாளுமன்றப் பெருமன்றம் வெள்ளையர் ஆட்சியின்போது கட்டப்பட்டது. வெப்பம் மிகுந்த மண்டலத்தில் அமைந்துள்ளதால், அக்கராவின் பல பகுதிகளில் பழந்தரும் மரங்கள் பெருகி வளர்ந்துள்ளன. அக்கரா கானா நாட்டின் கல்வி மையமாகவும் திகழ்கிறது. கானாவின் அறிவியல் கழகத்தின் தலைமையிடமும் இதுதான். இங்குக் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 42 |bSize = 480 |cWidth = 207 |cHeight = 175 |oTop = 52 |oLeft = 248 |Location = center |Description = }} {{center|அக்கரா நகரம்}} கானா நாட்டின் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நகருக்கு அண்மையில் 1948–இல் இலெகான் (Legon) என்னுமிடத்தில் கானாப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. அக்கரா நகரம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் உருவானபோது, போர்ச்சுகீசியர், தச்சியர் (The Dutch), தேனியர் (The Danes) போன்ற அயலவர் கட்டிய மூன்று கோட்டைகள் இதன் அடித்தளமாக அமைந்தன. இக்கோட்டைகள் அடிமை வாணிகத்திற்காக அமைக்கப்பெற்றவை. இவை கி.பி. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசமாயின. அக்கரா கி.பி. 1876-இல் கோல்டு கோசுட்டு (Gold Coast) என்னும் பெயர் கொண்ட ஆங்கிலக் குடியேற்றப் பகுதியின் தலைநகராயிற்று. கோல்டு கோசுட்டே பின்னர்க் கானா (Ghana) வாயிற்று. இதன் மக்கள் தொகை 6,37,000 (1980). <section end="அக்கரா"/> <section begin="அக்கராபாலிசு"/> {{larger|<b>அக்கராபாலிசு</b>}} என்பது பண்டைய கிரீசு நாட்டில் இருந்த நகர அரசுகளின் (City States) மையப் பகுதியாகும். தொடக்ககாலக் கிரேக்கர்கள், தம் நகரங்களைக் குன்றுகளைச் சுற்றி அமைத்துக் கொண்டார்கள். இவ்வாறு அமைத்துக் கொள்வது நகரின் பாதுகாப்பிற்கு உகந்ததெனக் கருதப்பட்டது. குன்றுகளின் உச்சியில் பின்னர்க்கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டு, நகர ஆட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அவை, சமய மையங்களாகவும் விளங்கின. {{nop}}<noinclude></noinclude> hg89ebavmxlascfa8uz93qotc4tcsg7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/43 250 615424 1931476 1891100 2026-05-08T15:21:31Z Booradleyp1 1964 1931476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கரா பாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கரா பாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி{{sup|1}}"/> {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|1}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி{{sup|1}}"/> {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{float_right|ச.செ.}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்-<noinclude></noinclude> 3vn6wb6yf7kcpylquacd8d4vj8ia6jf 1931477 1931476 2026-05-08T15:23:10Z Booradleyp1 1964 1931477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி{{sup|1}}"/>{{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|1}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி{{sup|1}}"/> {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{float_right|ச.செ.}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்-<noinclude></noinclude> qe57xln53epjrmgriucylvojfs7qjhr 1931479 1931477 2026-05-08T15:28:25Z Booradleyp1 1964 1931479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|1}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{float_right|ச.செ.}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கள நிம்மடி1"/><noinclude></noinclude> 6kjn1b3dx9smcyc5eo21uo4o0weraoe 1931482 1931479 2026-05-08T15:36:24Z Booradleyp1 1964 1931482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{float_right|ச.செ.}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கள நிம்மடி1"/><noinclude></noinclude> r7g0p3c08xcpymldj3ncvk8olvdcc24 1931483 1931482 2026-05-08T15:38:05Z Booradleyp1 1964 1931483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{float_right|ச.செ.}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கள நிம்மடி1"/><noinclude></noinclude> 4vp4oqpziujhkchwqb6ediy8fopor4h 1931637 1931483 2026-05-09T04:11:44Z Booradleyp1 1964 1931637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கள நிம்மடி1"/><noinclude></noinclude> tqed1376du975ep8ktuq82jbru7wdzq 1931638 1931637 2026-05-09T04:14:10Z Booradleyp1 1964 1931638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கள நிம்மடி1"/><noinclude></noinclude> th66reocqjuvv427zbjlgwkd0t73z9h 1931640 1931638 2026-05-09T04:19:38Z Booradleyp1 1964 1931640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> <section begin="அக்கி திம்மய்யா நாயக்கர்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். <section end="அக்கி திம்மய்யா நாயக்கர்"/> <section begin="அக்கிபூசை"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கிபூசை"/><noinclude></noinclude> j6rvv6k4nzap88xfwmhsrqe21w5kp9b 1931643 1931640 2026-05-09T04:29:08Z Booradleyp1 1964 1931643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> <section begin="அக்கி திம்மய்யா நாயக்கர்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். <section end="அக்கி திம்மய்யா நாயக்கர்"/> <section begin="அக்கிபூசை"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்- <section end="அக்கிபூசை"/><noinclude></noinclude> pxpfdadiotejq1uoe16yvoee7jbgxit 1931649 1931643 2026-05-09T04:31:22Z Booradleyp1 1964 1931649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> <section begin="அக்கி திம்மய்யா நாயக்கர்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். <section end="அக்கி திம்மய்யா நாயக்கர்"/> <section begin="அக்கிபூசை"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்தவரான <section end="அக்கிபூசை"/><noinclude></noinclude> hxo3u108tx1tg2wjwauj9ntgw77s6sj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/44 250 615432 1931641 1824806 2026-05-09T04:20:20Z Booradleyp1 1964 1931641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கியாபு|8|அக்கிரிகோலா}}</noinclude>தவரான மகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். <section end="அக்கிபூசை"/> {{larger|<b>அக்கியாபு</b>}} என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும். அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973). ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது. {{larger|<b>அக்கிரகாரம்</b>}} என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|<b>அக்கிரிகோலா (கி.பி. 40–93)</b>}} என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> biqyvjii9eri4zg8obufy6ryvtmvs71 1931648 1931641 2026-05-09T04:31:15Z Booradleyp1 1964 1931648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கியாபு|8|அக்கிரிகோலா}}</noinclude>மகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். <section end="அக்கிபூசை"/> {{larger|<b>அக்கியாபு</b>}} என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும். அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973). ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது. {{larger|<b>அக்கிரகாரம்</b>}} என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|<b>அக்கிரிகோலா (கி.பி. 40–93)</b>}} என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> bxqlw0g4plo2ac8bp89q6kec9gylxtw 1931652 1931648 2026-05-09T04:33:46Z Booradleyp1 1964 1931652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கியாபு|8|அக்கிரிகோலா}}</noinclude>மகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். <section end="அக்கிபூசை"/> <section begin="அக்கியாபு"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கியாபு</b>}} என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும். அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973). ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது. <section end="அக்கியாபு"/> {{larger|<b>அக்கிரகாரம்</b>}} என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. {{larger|<b>அக்கிரிகோலா (கி.பி. 40–93)</b>}} என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> l51n254je8iplvoqvx4tozmvg0pfrkj 1931656 1931652 2026-05-09T04:38:09Z Booradleyp1 1964 1931656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கியாபு|8|அக்கிரிகோலா}}</noinclude>மகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். <section end="அக்கிபூசை"/> <section begin="அக்கியாபு"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கியாபு</b>}} என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும். அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973). ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது. <section end="அக்கியாபு"/> <section begin="அக்கிரகாரம்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிரகாரம்</b>}} என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. <section end="அக்கிரகாரம்"/> {{larger|<b>அக்கிரிகோலா (கி.பி. 40–93)</b>}} என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> nvmsmyng52jkborsbztcy31o6s944vb 1931770 1931656 2026-05-09T07:29:10Z Booradleyp1 1964 1931770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கியாபு|8|அக்கிரிகோலா}}</noinclude>மகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். <section end="அக்கிபூசை"/> <section begin="அக்கியாபு"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கியாபு</b>}} என்னும் நகரம் பர்மா நாட்டு வடமேற்குக் கடற்கரையிலுள்ள அரக்கான் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கொண்ட மாவட்டமும் அக்கியாபு. (Akyab) எனப்படும். அக்கியாபு ஒரு துறைமுகத் தீவு. பர்மாவின் நான்கு பெரும் துறைமுகங்களுள் இது மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. அக்கியாபுத் தீவு, கலடன் ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்தில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது, இத்தீவு பெரும்பாலும் தட்டையானது. இந்நகருக்குக் கிழக்கில் உள்ள பகுதி பசுமை நிறக் காடுகளைக் கொண்ட வெப்ப மண்டலத்தில் உள்ளது. கடற்கரையில் பெரும்பகுதி சதுப்புநிலமாகவும், தாழைக் காடுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சமவெளியின் ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. இங்குச் சணலும் நெல்லும் பயிரிடப்படுகின்றன. பர்மாவின் கடற்கரையை அடுத்துள்ள தீவாயினும், அரக்கான் யோமாவின் அடர்ந்த காடுகளும், மலைப்பாங்கான நிலப்பகுதியும் அக்கியாபைப் பர்மாவிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளன. இதனை இரங்கூனுடனும் அரக்கானின் ஏனைய பகுதிகளுடனும் இணைக்கும் வானவூர்தி, கப்பல் தடங்கள் ஆகியவை உள்ளன. இத்தீவு ஆண்டொன்றுக்கு 510 செ.மீ. மழையைப் பெறுகிறது. கோடையில் பருவக்காற்றுகளால் இம்மழை பொழிகிறது. அக்கியாபில் பொன்னிறப் பகோடாக்கள் என்னும் புத்த சமயக் கோயில்கள் நிறைந்துள்ளன. அவற்றுள் மிகப்பெரியது மகாமுனி பகோடாவாகும். அரக்கான் பகுதி கி.பி. 1826–ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அக்கியாபு மீனவர் சிற்றூராக விளங்கியது. இந்நகரே அரக்கானின் தலைநகராகவும் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்கலாயிற்று. இரண்டாம் உலகப்போரின்போது, அக்கியாபு அமைந்திருக்கும் சிறப்பான இடத்தைக் கண்ட சப்பானியர் அதனைக் கைப்பற்றி 1942 முதல் 1945 வரை தம் ஆளுகையில் வைத்துக்கொண்டனர். அவர்கள் அங்குச் சாலைகளை அமைத்தார்கள். அக்கியாபு நகரை இன்று சிட்வே (Sittwe) என்று கூறுகின்றனர். இந்நகரின் மக்கள் தொகை 1,43,125 ஆகும் (1973). ஆங்கிலப் படை 1945–ஆம் ஆண்டு பெருந்தாக்குதல் நடத்திச் சப்பானியரை இப்பகுதியை விட்டு வெளியேற்றியது. <section end="அக்கியாபு"/> <section begin="அக்கிரகாரம்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிரகாரம்</b>}} என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. <section end="அக்கிரகாரம்"/> <section begin="அக்கிரிகோலா"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிரிகோலா (கி.பி. 40–93)</b>}} என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார். இங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார். <section end="அக்கிரிகோலா"/> {{nop}}<noinclude></noinclude> 53oqa6gxkpvzg33icnbcmqn2xlelmcv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/45 250 615433 1931774 1816294 2026-05-09T07:43:50Z Booradleyp1 1964 1931774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிரிப்பினா|9|அக்கிலீசு}}</noinclude><section begin="அக்கிரிப்பினா"/>{{dhr}} {{larger|<b>அக்கிரிப்பினா (கி.பி. 21-59)</b>}} என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார். அரசுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டதால், அக்கிரிப்பினா (Agripinna) பேரரசர் கலிக்குலாவினால் நாடு கடத்தப்பட்டாள். இவள் மாமன் பேரரசனான போது, இவள் மீண்டும் உரோமாபுரிக்குத் திரும்பினாள், செல்வனும், ஆட்சிப் பேரவையின் உறுப்பினனுமான {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 480 |cWidth = 128 |cHeight = 151 |oTop = 132 |oLeft = 49 |Location = center |Description = }} {{center|அக்கிரிப்பினா}} ஒருவனை இவள் கணவனாகப் பெற்றாள். செல்வத்திலும் அழகிலும் அன்றைய உரோமாபுரியில் இவளை ஒப்பாரும் மிக்காரும் இலர் என்பர். தன் மாமனும் பேரரசனுமான கிளாடியசின் மனைவி கொலையுண்ட பின்னர், இவள் அவனையே இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டாள். கினாடியசை இவள் தன் விருப்பம்போல் ஆட்டிவைத்தாள். முதல் கணவனுக்கும் தனக்கும் பிறந்த மகன் உலூசியசு (Ulysses) என்பவனை அரசப் பதவிக்கு உரிமையாக்கினாள். கிளாடியசு இறந்த பின்னர், அவனே நீரோ என்ற பேரரசன் ஆனான். <section end="அக்கிரிப்பினா"/> {{larger|<b>அக்கிரியாவாதம்:</b>}} சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு. 559–527) புத்தரும் (கி.மு. 570–490) வாழ்ந்த காலத்தில் 363 வகையான தத்துவக் கருத்துகள் பல்வேறு கூட்டத்தாரிடையே நிலவி வந்தன எனப் பிற்காலச் சமண பௌத்த சமய–தத்துவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 363 வகையான தத்துவக் கருத்துகளை அக்காலத்திய சிந்தனையாளர், கிரியாவாதம், அக்கிரியாவாதம், அஞ்ஞானவாதம், விநயவாதம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கினர். அக்கிரியாவாதத்தில் 84 வகைகள் இருந்தன. ஆன்மா உண்டு; அது செயல்களில் ஈடுபடுகிறது; செயல்களின் விளைவுகளை அது நுகர்கிறது என்ற கொள்கையைக் கொண்டதே கிரியாவாதம். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டதே அக்கிரியாவாதம். அது வினையின் தேவையையோ அதன் பயனையோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பது நடந்தே தீரும் என்றும் மனித முயற்சிகளும் செயல்களும் பயனற்றவை என்றும் அது எடுத்துரைத்தது. அக்கிரியாவாதிகளுள் எக்கவாதிகள், அநிக்கவாதிகள், மிதவாதிகள், நிமித்தவாதிகள், சாயவாதிகள், சமுச்சேதவாதிகள், நியதிவாதிகள், நசாந்திவாதிகள் என்று சொல்லப்பட்ட எட்டுப் பிரிவினர் தம் காலத்தில் வாழ்ந்ததை மகாவீரர் குறிப்பிட்டுள்ளதாகத் தாணாங்க சூத்திரம் என்னும் சமய நூல் அறிவிக்கிறது. அவர்களுள் பலர், காலம், ஈசுவரன், ஆன்மா, நியதி, சுபாவம், யதிருச்சா (ஊழ்) எனப்படும் ஆறும் உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் எனக் கூறினர். சமணரும் பௌத்தரும் அக்கிரியாவாதத்தை வன்மையாகக் கண்டித்த போதிலும், அதன் கொள்கைகளில் சிலவற்றை ஏற்கத் தயங்கவில்லை எனத் தெரிகிறது.{{float_right|கூ.ரா.ந.}} {{larger|<b>அக்கில்</b>}} வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது. எனவே இதனை ஒரு பாலத்தால் இணைத்துள்ளனர். இது மேயோ என்னும் மாவட்டத்திற்குட்பட்டது. அங்குள்ள தூகா (Doogah), கீல் (Keel) என்னும் ஊர்களில் வாழ்வோர் மீன் பிடிக்கின்றனர். உருளைக்கிழங்கும் ஓட்சும் அங்கு வாழும் மக்களுக்கு முக்கிய உணவுப் பொருள்களாகும். முக்கோண வடிவில் அமைந்த இத்தீவு கீழ் மேலாக 24 கி.மீ. நீளமும், தென் வடலாக 20 கி.மீ அகலமும் உள்ளது. இதன் மொத்தப் பரப்பு 146 ச.கி.மீ. தீவின் மேற்கு ஓரத்தில் அக்கில் எட்டு (Achill-Head) என்னும் முனையுள்ளது. மலைப் பாங்கான இத்தீவின் மிக உயர்ந்த மலை முகட்டைச் சிலீன் மோர் என்பர். இதன் உயரம் 735 மீ. இதன் மக்கள் தொகை 3129 (1971). {{larger|<b>அக்கிலீசு</b>}} ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன். தேட்டியசு (Tatius) என்னும் கடல் தெய்வத்தைத் தாயாகவும், பிலியசு (Peleus) என்றும் சிற்றரசனைத் தந்தையாகவும் கொண்டவன் அக்கிலீசு<noinclude></noinclude> nwfpm6g5inbvdp4fkbjwq8ojnvoh1nk 1931776 1931774 2026-05-09T07:49:28Z Booradleyp1 1964 1931776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிரிப்பினா|9|அக்கிலீசு}}</noinclude><section begin="அக்கிரிப்பினா"/>{{dhr}} {{larger|<b>அக்கிரிப்பினா (கி.பி. 21-59)</b>}} என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார். அரசுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டதால், அக்கிரிப்பினா (Agripinna) பேரரசர் கலிக்குலாவினால் நாடு கடத்தப்பட்டாள். இவள் மாமன் பேரரசனான போது, இவள் மீண்டும் உரோமாபுரிக்குத் திரும்பினாள், செல்வனும், ஆட்சிப் பேரவையின் உறுப்பினனுமான {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 480 |cWidth = 128 |cHeight = 151 |oTop = 132 |oLeft = 49 |Location = center |Description = }} {{center|அக்கிரிப்பினா}} ஒருவனை இவள் கணவனாகப் பெற்றாள். செல்வத்திலும் அழகிலும் அன்றைய உரோமாபுரியில் இவளை ஒப்பாரும் மிக்காரும் இலர் என்பர். தன் மாமனும் பேரரசனுமான கிளாடியசின் மனைவி கொலையுண்ட பின்னர், இவள் அவனையே இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டாள். கினாடியசை இவள் தன் விருப்பம்போல் ஆட்டிவைத்தாள். முதல் கணவனுக்கும் தனக்கும் பிறந்த மகன் உலூசியசு (Ulysses) என்பவனை அரசப் பதவிக்கு உரிமையாக்கினாள். கிளாடியசு இறந்த பின்னர், அவனே நீரோ என்ற பேரரசன் ஆனான். <section end="அக்கிரிப்பினா"/> <section begin="அக்கிரியாவாதம்"/>{{dhr}} {{larger|<b>அக்கிரியாவாதம்:</b>}} சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு. 559–527) புத்தரும் (கி.மு. 570–490) வாழ்ந்த காலத்தில் 363 வகையான தத்துவக் கருத்துகள் பல்வேறு கூட்டத்தாரிடையே நிலவி வந்தன எனப் பிற்காலச் சமண பௌத்த சமய–தத்துவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 363 வகையான தத்துவக் கருத்துகளை அக்காலத்திய சிந்தனையாளர், கிரியாவாதம், அக்கிரியாவாதம், அஞ்ஞானவாதம், விநயவாதம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கினர். அக்கிரியாவாதத்தில் 84 வகைகள் இருந்தன. ஆன்மா உண்டு; அது செயல்களில் ஈடுபடுகிறது; செயல்களின் விளைவுகளை அது நுகர்கிறது என்ற கொள்கையைக் கொண்டதே கிரியாவாதம். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டதே அக்கிரியாவாதம். அது வினையின் தேவையையோ அதன் பயனையோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பது நடந்தே தீரும் என்றும் மனித முயற்சிகளும் செயல்களும் பயனற்றவை என்றும் அது எடுத்துரைத்தது. அக்கிரியாவாதிகளுள் எக்கவாதிகள், அநிக்கவாதிகள், மிதவாதிகள், நிமித்தவாதிகள், சாயவாதிகள், சமுச்சேதவாதிகள், நியதிவாதிகள், நசாந்திவாதிகள் என்று சொல்லப்பட்ட எட்டுப் பிரிவினர் தம் காலத்தில் வாழ்ந்ததை மகாவீரர் குறிப்பிட்டுள்ளதாகத் தாணாங்க சூத்திரம் என்னும் சமய நூல் அறிவிக்கிறது. அவர்களுள் பலர், காலம், ஈசுவரன், ஆன்மா, நியதி, சுபாவம், யதிருச்சா (ஊழ்) எனப்படும் ஆறும் உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் எனக் கூறினர். சமணரும் பௌத்தரும் அக்கிரியாவாதத்தை வன்மையாகக் கண்டித்த போதிலும், அதன் கொள்கைகளில் சிலவற்றை ஏற்கத் தயங்கவில்லை எனத் தெரிகிறது. {{right|<b>கூ.ரா.ந.</b>}} {{larger|<b>அக்கில்</b>}} வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது. எனவே இதனை ஒரு பாலத்தால் இணைத்துள்ளனர். இது மேயோ என்னும் மாவட்டத்திற்குட்பட்டது. அங்குள்ள தூகா (Doogah), கீல் (Keel) என்னும் ஊர்களில் வாழ்வோர் மீன் பிடிக்கின்றனர். உருளைக்கிழங்கும் ஓட்சும் அங்கு வாழும் மக்களுக்கு முக்கிய உணவுப் பொருள்களாகும். முக்கோண வடிவில் அமைந்த இத்தீவு கீழ் மேலாக 24 கி.மீ. நீளமும், தென் வடலாக 20 கி.மீ அகலமும் உள்ளது. இதன் மொத்தப் பரப்பு 146 ச.கி.மீ. தீவின் மேற்கு ஓரத்தில் அக்கில் எட்டு (Achill-Head) என்னும் முனையுள்ளது. மலைப் பாங்கான இத்தீவின் மிக உயர்ந்த மலை முகட்டைச் சிலீன் மோர் என்பர். இதன் உயரம் 735 மீ. இதன் மக்கள் தொகை 3129 (1971). {{larger|<b>அக்கிலீசு</b>}} ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன். தேட்டியசு (Tatius) என்னும் கடல் தெய்வத்தைத் தாயாகவும், பிலியசு (Peleus) என்றும் சிற்றரசனைத் தந்தையாகவும் கொண்டவன் அக்கிலீசு <section end="அக்கிரியாவாதம்"/><noinclude></noinclude> erw9pm142f7qbhw5x7xs6seizaklvao 1931777 1931776 2026-05-09T07:50:54Z Booradleyp1 1964 1931777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிரிப்பினா|9|அக்கிலீசு}}</noinclude><section begin="அக்கிரிப்பினா"/>{{dhr}} {{larger|<b>அக்கிரிப்பினா (கி.பி. 21-59)</b>}} என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார். அரசுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டதால், அக்கிரிப்பினா (Agripinna) பேரரசர் கலிக்குலாவினால் நாடு கடத்தப்பட்டாள். இவள் மாமன் பேரரசனான போது, இவள் மீண்டும் உரோமாபுரிக்குத் திரும்பினாள், செல்வனும், ஆட்சிப் பேரவையின் உறுப்பினனுமான {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 480 |cWidth = 128 |cHeight = 151 |oTop = 132 |oLeft = 49 |Location = center |Description = }} {{center|அக்கிரிப்பினா}} ஒருவனை இவள் கணவனாகப் பெற்றாள். செல்வத்திலும் அழகிலும் அன்றைய உரோமாபுரியில் இவளை ஒப்பாரும் மிக்காரும் இலர் என்பர். தன் மாமனும் பேரரசனுமான கிளாடியசின் மனைவி கொலையுண்ட பின்னர், இவள் அவனையே இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டாள். கினாடியசை இவள் தன் விருப்பம்போல் ஆட்டிவைத்தாள். முதல் கணவனுக்கும் தனக்கும் பிறந்த மகன் உலூசியசு (Ulysses) என்பவனை அரசப் பதவிக்கு உரிமையாக்கினாள். கிளாடியசு இறந்த பின்னர், அவனே நீரோ என்ற பேரரசன் ஆனான். <section end="அக்கிரிப்பினா"/> <section begin="அக்கிரியாவாதம்"/>{{dhr}} {{larger|<b>அக்கிரியாவாதம்:</b>}} சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு. 559–527) புத்தரும் (கி.மு. 570–490) வாழ்ந்த காலத்தில் 363 வகையான தத்துவக் கருத்துகள் பல்வேறு கூட்டத்தாரிடையே நிலவி வந்தன எனப் பிற்காலச் சமண பௌத்த சமய–தத்துவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 363 வகையான தத்துவக் கருத்துகளை அக்காலத்திய சிந்தனையாளர், கிரியாவாதம், அக்கிரியாவாதம், அஞ்ஞானவாதம், விநயவாதம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கினர். அக்கிரியாவாதத்தில் 84 வகைகள் இருந்தன. ஆன்மா உண்டு; அது செயல்களில் ஈடுபடுகிறது; செயல்களின் விளைவுகளை அது நுகர்கிறது என்ற கொள்கையைக் கொண்டதே கிரியாவாதம். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டதே அக்கிரியாவாதம். அது வினையின் தேவையையோ அதன் பயனையோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பது நடந்தே தீரும் என்றும் மனித முயற்சிகளும் செயல்களும் பயனற்றவை என்றும் அது எடுத்துரைத்தது. அக்கிரியாவாதிகளுள் எக்கவாதிகள், அநிக்கவாதிகள், மிதவாதிகள், நிமித்தவாதிகள், சாயவாதிகள், சமுச்சேதவாதிகள், நியதிவாதிகள், நசாந்திவாதிகள் என்று சொல்லப்பட்ட எட்டுப் பிரிவினர் தம் காலத்தில் வாழ்ந்ததை மகாவீரர் குறிப்பிட்டுள்ளதாகத் தாணாங்க சூத்திரம் என்னும் சமய நூல் அறிவிக்கிறது. அவர்களுள் பலர், காலம், ஈசுவரன், ஆன்மா, நியதி, சுபாவம், யதிருச்சா (ஊழ்) எனப்படும் ஆறும் உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் எனக் கூறினர். சமணரும் பௌத்தரும் அக்கிரியாவாதத்தை வன்மையாகக் கண்டித்த போதிலும், அதன் கொள்கைகளில் சிலவற்றை ஏற்கத் தயங்கவில்லை எனத் தெரிகிறது. {{right|<b>கூ.ரா.ந.</b>}} <section end="அக்கிரியாவாதம்"/> {{larger|<b>அக்கில்</b>}} வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது. எனவே இதனை ஒரு பாலத்தால் இணைத்துள்ளனர். இது மேயோ என்னும் மாவட்டத்திற்குட்பட்டது. அங்குள்ள தூகா (Doogah), கீல் (Keel) என்னும் ஊர்களில் வாழ்வோர் மீன் பிடிக்கின்றனர். உருளைக்கிழங்கும் ஓட்சும் அங்கு வாழும் மக்களுக்கு முக்கிய உணவுப் பொருள்களாகும். முக்கோண வடிவில் அமைந்த இத்தீவு கீழ் மேலாக 24 கி.மீ. நீளமும், தென் வடலாக 20 கி.மீ அகலமும் உள்ளது. இதன் மொத்தப் பரப்பு 146 ச.கி.மீ. தீவின் மேற்கு ஓரத்தில் அக்கில் எட்டு (Achill-Head) என்னும் முனையுள்ளது. மலைப் பாங்கான இத்தீவின் மிக உயர்ந்த மலை முகட்டைச் சிலீன் மோர் என்பர். இதன் உயரம் 735 மீ. இதன் மக்கள் தொகை 3129 (1971). {{larger|<b>அக்கிலீசு</b>}} ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன். தேட்டியசு (Tatius) என்னும் கடல் தெய்வத்தைத் தாயாகவும், பிலியசு (Peleus) என்றும் சிற்றரசனைத் தந்தையாகவும் கொண்டவன் அக்கிலீசு<noinclude></noinclude> 4c70mll70pmh5i8wf70qiut5x70lkcd 1931779 1931777 2026-05-09T07:59:29Z Booradleyp1 1964 1931779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிரிப்பினா|9|அக்கிலீசு}}</noinclude><section begin="அக்கிரிப்பினா"/>{{dhr}} {{larger|<b>அக்கிரிப்பினா (கி.பி. 21-59)</b>}} என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார். அரசுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டதால், அக்கிரிப்பினா (Agripinna) பேரரசர் கலிக்குலாவினால் நாடு கடத்தப்பட்டாள். இவள் மாமன் பேரரசனான போது, இவள் மீண்டும் உரோமாபுரிக்குத் திரும்பினாள், செல்வனும், ஆட்சிப் பேரவையின் உறுப்பினனுமான {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 45 |bSize = 480 |cWidth = 128 |cHeight = 151 |oTop = 132 |oLeft = 49 |Location = center |Description = }} {{center|அக்கிரிப்பினா}} ஒருவனை இவள் கணவனாகப் பெற்றாள். செல்வத்திலும் அழகிலும் அன்றைய உரோமாபுரியில் இவளை ஒப்பாரும் மிக்காரும் இலர் என்பர். தன் மாமனும் பேரரசனுமான கிளாடியசின் மனைவி கொலையுண்ட பின்னர், இவள் அவனையே இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டாள். கினாடியசை இவள் தன் விருப்பம்போல் ஆட்டிவைத்தாள். முதல் கணவனுக்கும் தனக்கும் பிறந்த மகன் உலூசியசு (Ulysses) என்பவனை அரசப் பதவிக்கு உரிமையாக்கினாள். கிளாடியசு இறந்த பின்னர், அவனே நீரோ என்ற பேரரசன் ஆனான். <section end="அக்கிரிப்பினா"/> <section begin="அக்கிரியாவாதம்"/>{{dhr}} {{larger|<b>அக்கிரியாவாதம்:</b>}} சமணத்தையும் பௌத்தத்தையும் தோற்றுவித்த மகாவீரரும் (கி.மு. 559–527) புத்தரும் (கி.மு. 570–490) வாழ்ந்த காலத்தில் 363 வகையான தத்துவக் கருத்துகள் பல்வேறு கூட்டத்தாரிடையே நிலவி வந்தன எனப் பிற்காலச் சமண பௌத்த சமய–தத்துவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த 363 வகையான தத்துவக் கருத்துகளை அக்காலத்திய சிந்தனையாளர், கிரியாவாதம், அக்கிரியாவாதம், அஞ்ஞானவாதம், விநயவாதம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் அடக்கினர். அக்கிரியாவாதத்தில் 84 வகைகள் இருந்தன. ஆன்மா உண்டு; அது செயல்களில் ஈடுபடுகிறது; செயல்களின் விளைவுகளை அது நுகர்கிறது என்ற கொள்கையைக் கொண்டதே கிரியாவாதம். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டதே அக்கிரியாவாதம். அது வினையின் தேவையையோ அதன் பயனையோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பது நடந்தே தீரும் என்றும் மனித முயற்சிகளும் செயல்களும் பயனற்றவை என்றும் அது எடுத்துரைத்தது. அக்கிரியாவாதிகளுள் எக்கவாதிகள், அநிக்கவாதிகள், மிதவாதிகள், நிமித்தவாதிகள், சாயவாதிகள், சமுச்சேதவாதிகள், நியதிவாதிகள், நசாந்திவாதிகள் என்று சொல்லப்பட்ட எட்டுப் பிரிவினர் தம் காலத்தில் வாழ்ந்ததை மகாவீரர் குறிப்பிட்டுள்ளதாகத் தாணாங்க சூத்திரம் என்னும் சமய நூல் அறிவிக்கிறது. அவர்களுள் பலர், காலம், ஈசுவரன், ஆன்மா, நியதி, சுபாவம், யதிருச்சா (ஊழ்) எனப்படும் ஆறும் உலகப் படைப்பிற்கு மூலகாரணங்கள் எனக் கூறினர். சமணரும் பௌத்தரும் அக்கிரியாவாதத்தை வன்மையாகக் கண்டித்த போதிலும், அதன் கொள்கைகளில் சிலவற்றை ஏற்கத் தயங்கவில்லை எனத் தெரிகிறது. {{right|<b>கூ.ரா.ந.</b>}} <section end="அக்கிரியாவாதம்"/> <section begin="அக்கில்"/>{{dhr}} {{larger|<b>அக்கில்</b>}} வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது. எனவே இதனை ஒரு பாலத்தால் இணைத்துள்ளனர். இது மேயோ என்னும் மாவட்டத்திற்குட்பட்டது. அங்குள்ள தூகா (Doogah), கீல் (Keel) என்னும் ஊர்களில் வாழ்வோர் மீன் பிடிக்கின்றனர். உருளைக்கிழங்கும் ஓட்சும் அங்கு வாழும் மக்களுக்கு முக்கிய உணவுப் பொருள்களாகும். முக்கோண வடிவில் அமைந்த இத்தீவு கீழ் மேலாக 24 கி.மீ. நீளமும், தென் வடலாக 20 கி.மீ அகலமும் உள்ளது. இதன் மொத்தப் பரப்பு 146 ச.கி.மீ. தீவின் மேற்கு ஓரத்தில் அக்கில் எட்டு (Achill-Head) என்னும் முனையுள்ளது. மலைப் பாங்கான இத்தீவின் மிக உயர்ந்த மலை முகட்டைச் சிலீன் மோர் என்பர். இதன் உயரம் 735 மீ. இதன் மக்கள் தொகை 3129 (1971). <section end="அக்கில்"/> <section begin="அக்கிலீசு"/>{{dhr}} {{larger|<b>அக்கிலீசு</b>}} ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன். தேட்டியசு (Tatius) என்னும் கடல் தெய்வத்தைத் தாயாகவும், பிலியசு (Peleus) என்றும் சிற்றரசனைத் தந்தையாகவும் கொண்டவன் அக்கிலீசு <section end="அக்கிலீசு"/><noinclude></noinclude> muio70q18e8z7x429090ag8p4l9f09u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/46 250 615434 1931780 1824807 2026-05-09T08:00:19Z Booradleyp1 1964 1931780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிலீசு|10|அக்கினி}}</noinclude>(Achilles). தன் மகன் சாகா வரம் பெறவேண்டுமென்ற ஆவலோடு பாதாள உலகில் ஓடிய ஓர் அதிசய ஆற்றில் அவனை அழுத்தி எடுத்தாள் தேட்டியசு. மகனின் குதிகால்களைத் தன் இரு கைகளால் பற்றிக்கொண்டு தலைகீழாக அவனை ஆற்றிலிட்ட போது, அவன் சாகாத் தன்மையைப் பெற்றான். எனினும், அவன் கைகள் பற்றிய குதிகாற்பகுதிகள் அதிசய நீரில் நனையவில்லை. அக்கிலீசின் இறப்பு, அந்தப் பகுதியில் எதிரியின் அம்பு பாய்வதால் ஏற்படும் அபாயம் உருவாகியது. இதனை அறியாத தாய் தன் மகன் பாதுகாப்புப் பெற்றமை குறித்து மகிழ்ச்சியடைந்தாள். போர்க் கலைகளில் தேர்ச்சி பெற்ற அக்கிலீசு, வலிமை, விரைந்து செயல்படல், துணிவு முதலியவற்றிற்காகப் பாராட்டப்பெற்றான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 46 |bSize = 480 |cWidth = 116 |cHeight = 139 |oTop = 230 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அக்கிலீசு}} எலன் (Hellen) என்னும் அழகிய பெண்ணைக் கவர்ந்து சென்ற பாரிசு (Paris) என்ற இளவரசனைத் தண்டித்து, எலனை மீட்டுவரக் கிரேக்கப் பெரும் படை திராய் (Troy) என்ற நகரை நோக்கிப் புறப்பட்டது. கிரேக்கர் தம் பக்கம் அக்கிலீசு சேர்ந்தால் போரில் வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்றெண்ணித் தம் படையோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி அக்கிலீசை வேண்டினர். அக்கிலீசும் கிரேக்கர் பக்கம் சேர்ந்தான். பல சிக்கல்கள், போர்கள் ஆகியவற்றை அக்கிலீசு சந்தித்துத் தன் வீரத்தை நிலைநாட்டினான். இறுதியில் நடந்த போரில் அப்பல்லோ(Apollo) என்ற தெய்வத்தின் துணையோடு பாரிசு, அக்கிலீசின் உடல்வலிமையற்ற பகுதியான குதிகாலில் அம்பைப் பாய்ச்சியதால் அவன் இறந்துபட்டான். அக்கிலீசின் இணையற்ற வீரத்திற்குப் பாராட்டுக் கிடைத்தது, மேலும், மனிதனின் வலிமையற்ற உடற்பகுதியை ‘அக்கிலீசின் குதிகால்’ (Achille's heel) என்று கூறும் வழக்கமும் உண்டாயிற்று. {{larger|<b>அக்கினி</b>}} நெருப்புக் கடவுள். இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்கினியைத்தான் வேதங்கள் மிகுதியாகக் குறித்துள்ளன. அக்கினியின் பெற்றோர் குறித்துப் பலவகைக் கருத்துகள் உள்ளன. அக்கினியைத் தியாயசுக்கும் பிருத்துவிக்கும் (பூமி) பிறந்தவன் என்பர். கசியபர், அதிதி ஆகியோரின் மக்களுள் ஒருவனாக இவனை இணைத்துக் கூறும் மரபும் உண்டு. அக்கினி ஆதித்தியர்களுள் ஒருவன், அபிமானி என்றும் இவனைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அக்கினி பிரமாவின் மூத்த மகன் என்றும், அவன் மனைவி சுவாகா என்றும் புராணங்கள் கூறும். சுவாகாவுக்கும் அக்கினிக்கும் பாவகர், பாவமானர், சூசி ஆகிய மூன்று பிள்ளைகள் பிறந்தார்களென்றும், அம்மூவருக்கும் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கினியின் தன்மை பலவகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கும் தெய்வங்களுக்கும் இடைப்பட்டவனாகவும் அவர்தம் பொருள்களைக் காக்கும் காவலனாகவும் செயல்களுக்குச் சான்று பகர்பவனாகவும் அவர்களைச் சாகாவரம் பெற்றவர்கள் ஆக்குபவனாகவும் அக்கினி குறிப்பிடப்படுகிறான். முனிவர்களுள் இவன் தூய்மையானவன்; தனக்குப் படைக்கும் பொருள்களை நறுமணம் ஆக்குபவன்; மன்பதையைக் காப்பவன்; ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வரவேற்கப்படும் இனிய விருந்தினன். இவனுக்கு நெய் சொரிந்து படைப்பார்கள்; இவனைத் தீயாக வளர்ப்பார்கள். இவனே ஞாயிற்றுக்கும் விண்மீன்களுக்கும் முன்னோடி. இவன் கட்டளைகளுக்கு மண்ணும் விண்ணும் கீழ்ப்படிந்தன. இவனை அனைவரும் வழிபட்டனர். இராமனுக்கு உதவுவதற்காக நீலன் என்பானுக்கும் குரங்குத் தாய் ஒருத்திக்கும் மகனாக அக்கினி பிறந்தான் என்பது இராமாயணத்தில் குறிப்பிடப் பெற்ற செய்தியாகும். இவன் மிகுதியான யாகங்களைச் செய்து தன் ஆற்றலைச் செலவிட்டு விட்டான் என்று மகாபாரதம் கூறுகிறது. தன் வலிமையை மீண்டும் பெறுவதற்காகக் காண்டவ வனம் முழுவதையும் எரிக்க விரும்பியதாகவும், அதை இந்திரன் தடுக்க முயன்றதாகவும் மகாபாரதம் கூறுகிறது. ‘அரிவமிசம்’ என்னும் நூல் அக்கினி கறுப்புடை தரித்தவன் என்னும், புகை இவனது கொடி என்றும் தலையணி என்றும் சித்திரிக்கிறது. இவனிடம் எரி-<noinclude></noinclude> lktnling95hvo4mpo0t3cwtlwah87dg 1931788 1931780 2026-05-09T08:04:53Z Booradleyp1 1964 1931788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கிலீசு|10|அக்கினி}}</noinclude>(Achilles). தன் மகன் சாகா வரம் பெறவேண்டுமென்ற ஆவலோடு பாதாள உலகில் ஓடிய ஓர் அதிசய ஆற்றில் அவனை அழுத்தி எடுத்தாள் தேட்டியசு. மகனின் குதிகால்களைத் தன் இரு கைகளால் பற்றிக்கொண்டு தலைகீழாக அவனை ஆற்றிலிட்ட போது, அவன் சாகாத் தன்மையைப் பெற்றான். எனினும், அவன் கைகள் பற்றிய குதிகாற்பகுதிகள் அதிசய நீரில் நனையவில்லை. அக்கிலீசின் இறப்பு, அந்தப் பகுதியில் எதிரியின் அம்பு பாய்வதால் ஏற்படும் அபாயம் உருவாகியது. இதனை அறியாத தாய் தன் மகன் பாதுகாப்புப் பெற்றமை குறித்து மகிழ்ச்சியடைந்தாள். போர்க் கலைகளில் தேர்ச்சி பெற்ற அக்கிலீசு, வலிமை, விரைந்து செயல்படல், துணிவு முதலியவற்றிற்காகப் பாராட்டப்பெற்றான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 46 |bSize = 480 |cWidth = 116 |cHeight = 139 |oTop = 230 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அக்கிலீசு}} எலன் (Hellen) என்னும் அழகிய பெண்ணைக் கவர்ந்து சென்ற பாரிசு (Paris) என்ற இளவரசனைத் தண்டித்து, எலனை மீட்டுவரக் கிரேக்கப் பெரும் படை திராய் (Troy) என்ற நகரை நோக்கிப் புறப்பட்டது. கிரேக்கர் தம் பக்கம் அக்கிலீசு சேர்ந்தால் போரில் வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்றெண்ணித் தம் படையோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி அக்கிலீசை வேண்டினர். அக்கிலீசும் கிரேக்கர் பக்கம் சேர்ந்தான். பல சிக்கல்கள், போர்கள் ஆகியவற்றை அக்கிலீசு சந்தித்துத் தன் வீரத்தை நிலைநாட்டினான். இறுதியில் நடந்த போரில் அப்பல்லோ(Apollo) என்ற தெய்வத்தின் துணையோடு பாரிசு, அக்கிலீசின் உடல்வலிமையற்ற பகுதியான குதிகாலில் அம்பைப் பாய்ச்சியதால் அவன் இறந்துபட்டான். அக்கிலீசின் இணையற்ற வீரத்திற்குப் பாராட்டுக் கிடைத்தது, மேலும், மனிதனின் வலிமையற்ற உடற்பகுதியை ‘அக்கிலீசின் குதிகால்’ (Achille's heel) என்று கூறும் வழக்கமும் உண்டாயிற்று. <section end="அக்கிலீசு"/> <section begin="அக்கினி"/> {{dhr}} {{larger|<b>அக்கினி</b>}} நெருப்புக் கடவுள். இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்கினியைத்தான் வேதங்கள் மிகுதியாகக் குறித்துள்ளன. அக்கினியின் பெற்றோர் குறித்துப் பலவகைக் கருத்துகள் உள்ளன. அக்கினியைத் தியாயசுக்கும் பிருத்துவிக்கும் (பூமி) பிறந்தவன் என்பர். கசியபர், அதிதி ஆகியோரின் மக்களுள் ஒருவனாக இவனை இணைத்துக் கூறும் மரபும் உண்டு. அக்கினி ஆதித்தியர்களுள் ஒருவன், அபிமானி என்றும் இவனைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அக்கினி பிரமாவின் மூத்த மகன் என்றும், அவன் மனைவி சுவாகா என்றும் புராணங்கள் கூறும். சுவாகாவுக்கும் அக்கினிக்கும் பாவகர், பாவமானர், சூசி ஆகிய மூன்று பிள்ளைகள் பிறந்தார்களென்றும், அம்மூவருக்கும் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கினியின் தன்மை பலவகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கும் தெய்வங்களுக்கும் இடைப்பட்டவனாகவும் அவர்தம் பொருள்களைக் காக்கும் காவலனாகவும் செயல்களுக்குச் சான்று பகர்பவனாகவும் அவர்களைச் சாகாவரம் பெற்றவர்கள் ஆக்குபவனாகவும் அக்கினி குறிப்பிடப்படுகிறான். முனிவர்களுள் இவன் தூய்மையானவன்; தனக்குப் படைக்கும் பொருள்களை நறுமணம் ஆக்குபவன்; மன்பதையைக் காப்பவன்; ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வரவேற்கப்படும் இனிய விருந்தினன். இவனுக்கு நெய் சொரிந்து படைப்பார்கள்; இவனைத் தீயாக வளர்ப்பார்கள். இவனே ஞாயிற்றுக்கும் விண்மீன்களுக்கும் முன்னோடி. இவன் கட்டளைகளுக்கு மண்ணும் விண்ணும் கீழ்ப்படிந்தன. இவனை அனைவரும் வழிபட்டனர். இராமனுக்கு உதவுவதற்காக நீலன் என்பானுக்கும் குரங்குத் தாய் ஒருத்திக்கும் மகனாக அக்கினி பிறந்தான் என்பது இராமாயணத்தில் குறிப்பிடப் பெற்ற செய்தியாகும். இவன் மிகுதியான யாகங்களைச் செய்து தன் ஆற்றலைச் செலவிட்டு விட்டான் என்று மகாபாரதம் கூறுகிறது. தன் வலிமையை மீண்டும் பெறுவதற்காகக் காண்டவ வனம் முழுவதையும் எரிக்க விரும்பியதாகவும், அதை இந்திரன் தடுக்க முயன்றதாகவும் மகாபாரதம் கூறுகிறது. ‘அரிவமிசம்’ என்னும் நூல் அக்கினி கறுப்புடை தரித்தவன் என்னும், புகை இவனது கொடி என்றும் தலையணி என்றும் சித்திரிக்கிறது. இவனிடம் எரி-<noinclude></noinclude> bw6cij0ditmrfrz2rh9te9ejlr8vgnv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/47 250 615435 1931790 1824832 2026-05-09T08:09:31Z Booradleyp1 1964 1931790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கினிமித்திரர்|11|அக்கீசன் தீன் குட்டர்காம்}}</noinclude>யும் வேல் இருந்ததாகவும், இவன் நான்கு கைகளைக் கொண்டவனாகவும், பொன்னாலான குதிரைகள் இவனது தேரை இழுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவனது வாகனம் செம்மறியாடு. அக்கினிக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒரு சில: வாகின் (ஓமவேள்வியைப் பெறுபவன்), தனஞ்சயன் (செல்வத்தை வெல்பவன் அல்லது அழிப்பவன்), விதகோத்திரன் (யாகத்தைப் புனிதமாக்குகிறவன்), சுவாலன் (எரிப்பவன்), தூமகேது (மேகத்தைக் கொடியாகக் கொண்டவன்), உதாசா (படைப்புகளை உண்பவன்), சகரதன் (செம்மறியாட்டு வாகனன்), சூசி அல்லது சுப்ரா (ஒளி மிக்கவன்), உரோகிதாசுவர் (செந்நிறக் குதிரைகளை உடையவன்), சப்தசிகுவாகன் (ஏழு நாக்குக் கொண்டவன்), தோமராதாரன் (உலக்கையைக் கொண்டவன்). இவன் தென்கிழக்கு மூலையின் காவலனாகக் குறிப்பிடப்படுகிறான். சிற்பங்களில் அக்கினியைக் கிழவனாகச் சித்திரித்துள்ளனர். இவனைச் சூரியனின் சரி பாதியாகக் கருதுவர். இவன் உடலுறுப்புகள் செந்நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவனுக்கு இரண்டு முகங்களும், ஆறு கண்களும், ஏழு கைகளும், ஏழு நாக்குகளும், நான்கு கொம்புகளும், மூன்று கால்களும் உண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவனைச் சுற்றிலும் வட்டவடிவ ஒளிப் பிழம்பு இருக்கும். அக்கினி, புத்த சமயத் தேவதைகளாகவுள்ள எட்டுத் திக்குப் பாலர்களுள் ஒருவனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான். இந்திரன், இயமன், வருணன், குபேரன், ஈசானன், நிருதி, வாயு என்போர் ஏனைய திக்குப் பாலர்கள். அக்கினியின் சிற்பங்கள் திருவாங்கூரைச் சார்ந்த கண்டியூர்ச் சிவன் கோயிலிலும், தில்லை நடராசர் கோயிலிலும் காணப்படுகின்றன. <section end="அக்கினி"/> {{dhr}} {{larger|<b>அக்கினிமித்திரர்</b>}} மோரியர்களைத் தொடர்ந்து வட இந்தியாவை ஆண்ட சுங்க மரபின் இரண்டாம் அரசர். அவர் தந்தை புசியமித்திர (Pushyamitra) சுங்கன்; சுங்க மரபினைத் தோற்றுவித்தவர். பாரூத் தூபி (Barhut Stupa) அக்கினிமித்திரரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. முடி சூட்டிக்கொண்ட போது, முதிர்ந்த வயதினராய் இருந்தமையால், அவர் எட்டாண்டுகளே ஆட்சி நடத்தினார். காளிதாசரால் எழுதப்பெற்ற ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்னும் வடமொழி நாடக உறுப்பினர்களுள் அக்கினிமித்திரர் தலைமையானவர். {{larger|<b>அக்கீசன், தீன் குட்டர்காம் (கி.பி. 1893-1971)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த அரசியல் வித்தகர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் துரூமன் (Truman) என்பாரின் ஆட்சியின்போது (1949-1953) இவர் (Acheson, Dean Gooderham) அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்தவர். இவர் 11-4-1893-இல் கனக்டிகட்டு மாநிலத்தில் உள்ள மிடில்டவுன் என்னும் ஊரில் பிறந்தார். ஏல் (Yale) பல்கலைக்கழகத்திலும், ஆர்வர்டு (Harward) சட்டக்கல்லூரியிலும் மூன்றாண்டுகள் பயின்று (1915-1918) பட்டங்கள் பெற்றார். பின்னர், வாசிங்டனில் உலூயி தி. பிராண்டிசு (Louis D. Brandeis) என்பாரின் தனிச் செயலராகப் பதவியேற்றார். இவர் பண்பாட்டுச் சட்டத்துறையில் வல்லுநர். பிராங்லின் தி. உரூசுவெல்ட்டு (Franklin D. Roosevelt) குடியரசுத் தலைவராக இருந்தபோது (1933) அவருடைய சார்புச் செயலராகப் (Under Secretary) பணியாற்றினார். ஆனால் சிறிது காலத்துக்குப் பின் அப்பதவியைத் துறந்துவிட்டு வழக்குரைஞரானார். மீண்டும் இவர் அரசு ஊழியராகி (1941-45) இணைச் செயலரானார். ஐ.நா. அவையின் உதவி மற்றும் மறுவாழ்வு நிருவாகக் குழுவில் 1943-இல் உறுப்பினரானார். வெளியுறவுக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதில் மார்சலுக்கு (Marshall) உறுதுணையாக நின்றார் அக்கீசன். உருசியாவின் செல்வாக்கு வளர்வதைத் தடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கைப் பெருக்குவது ஒன்றே வழி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். கிரீசு நாட்டிலும், துருக்கியிலும் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடியின் போது (1947) மாபெரும் பொருளாதார உதவியின்மூலம் அமெரிக்கா தலையிடவேண்டுமென இருவரும் கருதினர். அதன் விளைவுதான் ‘துருமன் கோட்பாடு’ (Truman Doctrine) ஆகும். மார்சல் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் கருத்தினை உருவாக்கியதிலும் அக்கீசனுக்குப் பங்குண்டு, மீண்டும் சிறிது காலம் வழக்குரைஞராகப் பணி செய்த பின்னர் அக்கீசன் 1949-இல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப் பெற்றார். உருசியாவின் முன்னேற்ற வேகத்தைச் சமாளிக்க வடஅட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனத்தை (NATO) அமைக்க வேண்டுமென அக்கீசன் பெரிதும் வலியுறுத்தினார். தேசிய சீனாவில் சியாங்கேசேக் என்பாரின் ஆட்சி 1949–இல் வீழ்ச்சியுற்றபோது, குடியரசுக் கட்சியினர் அவரைக் கடுமையாகக் குறை கூறினர். கொரியாப் போரில் ஏற்பட்ட இழுபழியே இக்குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாகும். அக்கீசன் பதவியைத் துறந்த பின்னரும் குடியரசுத் தலைவர்கள் பலருக்குக் கருத்துரை வழங்-<noinclude></noinclude> i6500v3ztk5jpt5si3mbyx1xf2ynjbu 1931792 1931790 2026-05-09T08:15:07Z Booradleyp1 1964 1931792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கினிமித்திரர்|11|அக்கீசன் தீன் குட்டர்காம்}}</noinclude>யும் வேல் இருந்ததாகவும், இவன் நான்கு கைகளைக் கொண்டவனாகவும், பொன்னாலான குதிரைகள் இவனது தேரை இழுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவனது வாகனம் செம்மறியாடு. அக்கினிக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒரு சில: வாகின் (ஓமவேள்வியைப் பெறுபவன்), தனஞ்சயன் (செல்வத்தை வெல்பவன் அல்லது அழிப்பவன்), விதகோத்திரன் (யாகத்தைப் புனிதமாக்குகிறவன்), சுவாலன் (எரிப்பவன்), தூமகேது (மேகத்தைக் கொடியாகக் கொண்டவன்), உதாசா (படைப்புகளை உண்பவன்), சகரதன் (செம்மறியாட்டு வாகனன்), சூசி அல்லது சுப்ரா (ஒளி மிக்கவன்), உரோகிதாசுவர் (செந்நிறக் குதிரைகளை உடையவன்), சப்தசிகுவாகன் (ஏழு நாக்குக் கொண்டவன்), தோமராதாரன் (உலக்கையைக் கொண்டவன்). இவன் தென்கிழக்கு மூலையின் காவலனாகக் குறிப்பிடப்படுகிறான். சிற்பங்களில் அக்கினியைக் கிழவனாகச் சித்திரித்துள்ளனர். இவனைச் சூரியனின் சரி பாதியாகக் கருதுவர். இவன் உடலுறுப்புகள் செந்நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவனுக்கு இரண்டு முகங்களும், ஆறு கண்களும், ஏழு கைகளும், ஏழு நாக்குகளும், நான்கு கொம்புகளும், மூன்று கால்களும் உண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவனைச் சுற்றிலும் வட்டவடிவ ஒளிப் பிழம்பு இருக்கும். அக்கினி, புத்த சமயத் தேவதைகளாகவுள்ள எட்டுத் திக்குப் பாலர்களுள் ஒருவனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான். இந்திரன், இயமன், வருணன், குபேரன், ஈசானன், நிருதி, வாயு என்போர் ஏனைய திக்குப் பாலர்கள். அக்கினியின் சிற்பங்கள் திருவாங்கூரைச் சார்ந்த கண்டியூர்ச் சிவன் கோயிலிலும், தில்லை நடராசர் கோயிலிலும் காணப்படுகின்றன. <section end="அக்கினி"/> <section begin="அக்கினிமித்திரர்"/>{{dhr}} {{larger|<b>அக்கினிமித்திரர்</b>}} மோரியர்களைத் தொடர்ந்து வட இந்தியாவை ஆண்ட சுங்க மரபின் இரண்டாம் அரசர். அவர் தந்தை புசியமித்திர (Pushyamitra) சுங்கன்; சுங்க மரபினைத் தோற்றுவித்தவர். பாரூத் தூபி (Barhut Stupa) அக்கினிமித்திரரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. முடி சூட்டிக்கொண்ட போது, முதிர்ந்த வயதினராய் இருந்தமையால், அவர் எட்டாண்டுகளே ஆட்சி நடத்தினார். காளிதாசரால் எழுதப்பெற்ற ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்னும் வடமொழி நாடக உறுப்பினர்களுள் அக்கினிமித்திரர் தலைமையானவர். <section end="அக்கினிமித்திரர்"/> <section begin="அக்கீசன், தீன் குட்டர்காம்"/> {{dhr}} {{larger|<b>அக்கீசன், தீன் குட்டர்காம் (கி.பி. 1893-1971)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த அரசியல் வித்தகர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் துரூமன் (Truman) என்பாரின் ஆட்சியின்போது (1949-1953) இவர் (Acheson, Dean Gooderham) அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்தவர். இவர் 11-4-1893-இல் கனக்டிகட்டு மாநிலத்தில் உள்ள மிடில்டவுன் என்னும் ஊரில் பிறந்தார். ஏல் (Yale) பல்கலைக்கழகத்திலும், ஆர்வர்டு (Harward) சட்டக்கல்லூரியிலும் மூன்றாண்டுகள் பயின்று (1915-1918) பட்டங்கள் பெற்றார். பின்னர், வாசிங்டனில் உலூயி தி. பிராண்டிசு (Louis D. Brandeis) என்பாரின் தனிச் செயலராகப் பதவியேற்றார். இவர் பண்பாட்டுச் சட்டத்துறையில் வல்லுநர். பிராங்லின் தி. உரூசுவெல்ட்டு (Franklin D. Roosevelt) குடியரசுத் தலைவராக இருந்தபோது (1933) அவருடைய சார்புச் செயலராகப் (Under Secretary) பணியாற்றினார். ஆனால் சிறிது காலத்துக்குப் பின் அப்பதவியைத் துறந்துவிட்டு வழக்குரைஞரானார். மீண்டும் இவர் அரசு ஊழியராகி (1941-45) இணைச் செயலரானார். ஐ.நா. அவையின் உதவி மற்றும் மறுவாழ்வு நிருவாகக் குழுவில் 1943-இல் உறுப்பினரானார். வெளியுறவுக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதில் மார்சலுக்கு (Marshall) உறுதுணையாக நின்றார் அக்கீசன். உருசியாவின் செல்வாக்கு வளர்வதைத் தடுக்க, அமெரிக்காவின் செல்வாக்கைப் பெருக்குவது ஒன்றே வழி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். கிரீசு நாட்டிலும், துருக்கியிலும் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடியின் போது (1947) மாபெரும் பொருளாதார உதவியின்மூலம் அமெரிக்கா தலையிடவேண்டுமென இருவரும் கருதினர். அதன் விளைவுதான் ‘துருமன் கோட்பாடு’ (Truman Doctrine) ஆகும். மார்சல் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் கருத்தினை உருவாக்கியதிலும் அக்கீசனுக்குப் பங்குண்டு, மீண்டும் சிறிது காலம் வழக்குரைஞராகப் பணி செய்த பின்னர் அக்கீசன் 1949-இல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப் பெற்றார். உருசியாவின் முன்னேற்ற வேகத்தைச் சமாளிக்க வடஅட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனத்தை (NATO) அமைக்க வேண்டுமென அக்கீசன் பெரிதும் வலியுறுத்தினார். தேசிய சீனாவில் சியாங்கேசேக் என்பாரின் ஆட்சி 1949–இல் வீழ்ச்சியுற்றபோது, குடியரசுக் கட்சியினர் அவரைக் கடுமையாகக் குறை கூறினர். கொரியாப் போரில் ஏற்பட்ட இழுபழியே இக்குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாகும். அக்கீசன் பதவியைத் துறந்த பின்னரும் குடியரசுத் தலைவர்கள் பலருக்குக் கருத்துரை வழங்-<noinclude></noinclude> 0ijqa16jy1ytfib53m5pe7butp2mppm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/48 250 615436 1931794 1824839 2026-05-09T08:15:59Z Booradleyp1 1964 1931794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்குமீனிய மரபு|12|அக்குவினசு, தாமசு, தூய}}</noinclude>கித் துணைபுரிந்தார். பல நூல்களை எழுதியுள்ள இவர் 12–10–1971 இல் காலமானார். <section end="அக்கீசன், தீன் குட்டர்காம்"/> {{dhr}} {{larger|<b>அக்குமீனிய மரபு</b>}} கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசை ஆண்ட முதல் மரபாகும். அதனால் அப்பாரசீகப் பேரரசை அக்குமீனியப் பேரரசு (Achaemean Dynasty) என்றும் கூறுவர். அவர்தம் ஆட்சிக் காலத்தில் பாரசீகப் பேரரசு நைல் ஆற்றிலிருந்து தான்யூப் ஆறு வரை பரவியிருந்தது. அக்குமினியப் பேரரசை நிலை நாட்டியவர் மாமன்னர் சைரசு (Cyrus, the Great) என்பவர். இவர் கி.மு. 559-529 வரை ஆட்சி செய்தார். அக்குமெனசு என்பவர் சைரசின் மூதாதையருள் ஒருவர். சைரசின் மகன் இரண்டாம் காம்பைசசு (Campyses II) கி.மு. 529 முதல் 522 வரை ஆண்டவர். இவர் எகிப்து நாட்டைத் தம் பேரரசுடன் இணைத்தார். இவருக்குப் பின் முதலாம் தேரியசு (Darius I) என்பவர் பேரரசரானார். பெர்சிபாலிசு (Persepolis) என்னும் நகரத்தை உருவாக்கியவர் தேரியசேயாவார். இவரது காலத்தில்தான் பாரசீகப் பேரரசுக்கும் கிரீசு நாட்டிற்கும் இடையே நீண்டதொரு போர் மூண்டது. தேரியசின் மகன் செருசசு (Xerxes) கி.மு. 486 முதல் 465 வரை அரசாண்டவர். இவர்தாம் தருமபைலே (Thermopylae) போரில் வெற்றி பெற்று ஆதென்சு நகரைத் தீக்கிரையாக்கியவர். மூன்றாம் தேரியசு கி.மு. 336 முதல் 330 வரை அரசாண்டவர். இவரே அக்குமீனிய மரபின் இறுதி அரசர். இவரை மகா அலெக்சாந்தர் தோற்கடித்தார், {{larger|<b>அக்குரன்</b>}} சங்க இலக்கியத்தில் வள்ளன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டுள்ள ஆண்மை மிக்க ஒரு வள்ளல். பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்தினைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், அப்பத்தின் தலைவனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய கொடைத் தன்மையைச் சிறப்பிக்கும்போது இவன் அக்குரனைப்போன்ற வள்ளன்மை உடையவன் என்று பாராட்டியுள்ளார். போர் செய்வதில் மேம்பாடுற்ற துயோதனன் முதலிய நூற்றுவரொடு படைத்துணையாகச் சென்ற வீரன் அக்குரன் என்பதனை, “போர் தலை மிகுத்த ஈரைம் பதின்மரொடு, துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன்” என்று குறிப்பிட்டுள்ளார் (பதிற். 14). இவனைக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. ஆனால், உ.வே. சாமிநாத ஐயரவர்கள் இவனைப் பற்றி, “பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்; கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” என்று தம் குறிப்புரையில் கூறியுள்ளார், {{larger|<b>அக்குரூரர்</b>}}{{sup|[[#footnote1|<b>1</b>]]}} என்பவர் இயதுவின் வழியில் தோன்றியவர். மகாபாரதத்தில் இடம் பெறும் கதை மாந்தர்களுள் ஒருவர். இவர் தந்தை சுவபல்கள்; தாய் காந்தினி. இவர் கம்சனின் அமைச்சராக இருந்தார்; கம்சனுடைய வேண்டுகோளின்படி நந்தகோபரிடஞ் சென்று தனுர்வேள்விச் செய்தி குறித்துக் கூறிப் பலராமகிருட்டிணர்களை இயமுனைக்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர்களைக் கரையில் நிறுத்தித் தாம்மட்டும் நீரில் மூழ்கினார். அப்பொழுது பலராம கிருட்டிணர் இருவரும் நீரினுள் தேரோடு காட்சி தருவதைக் கண்டு வியந்து வெளியில் வந்தார். அவர்களைக் கண்டுகளித்து மீண்டும் நீரில் மூழ்கினார். அவ்வமயம், திருமால் பாம்பணையில் துயிலும் காட்சியைக் கண்டு வணங்கினார். பின், பலராம கிருட்டிணர்களைக் கம்சனிடமே அழைத்துச் சென்று நடந்த செய்திகளைக் கூறினார். சததன்வா என்பவனிடமிருந்த சியமந்தக மணியைக் கவரச் செய்து, அதனைக் கண்ணன் அறியாதிருத்தற் பொருட்டுக் கங்கைக்குச்சென்றார். கண்ணன் அச்செயலை வெளிப்படுத்தினான். 2. இவர் சுவர்கன் என்பவரின் மகன். 3. இவர் திருக்கச்சி வரதராசப் பெருமாஸின் அருள் பெற்ற முனிவர். 4. இவர் இடையெழு வள்ளல்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். {{larger|<b>அக்குரோணி</b>}} என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர்களும் கொண்ட படைப்பிரிவு ஓர் அக்குரோணி எனப்படும். இவ்வெண்ணிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது.{{float_right|த.கோ.}} {{larger|<b>அக்குவினசு, தாமசு, தூய (கி.பி.1225—1274)</b>}} ஒரு சிறந்த இடைக்காலத் தத்துவ அறிஞர். இவர் இத்தாலி நாட்டிலுள்ள ‘இராகாசிகா’ (Rocca-secca) எனும் இடத்தில் பிறந்தார். இவர் நேப்பில்சுப் பல்கலைக்கழகத்தில் தமது படிப்பை முடித்ததும், கி.பி. 1250-இல் தோமினி மடஒழுங்குப் (Dominican Order) போதகராகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இப்பணிப்பொறுப்பு முடிந்தவுடன் கி.பி. 1256-இல் பாரிசுப் (Paris) பல்கலைக்கழகத்தில் இறையியல் (Theology) பேராசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். {{nop}}<noinclude></noinclude> 2szhjdk5sqrmhgjul77k4kua6i2k9qv 1931797 1931794 2026-05-09T08:27:53Z Booradleyp1 1964 1931797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்குமீனிய மரபு|12|அக்குவினசு, தாமசு, தூய}}</noinclude>கித் துணைபுரிந்தார். பல நூல்களை எழுதியுள்ள இவர் 12–10–1971 இல் காலமானார். <section end="அக்கீசன், தீன் குட்டர்காம்"/> <section begin="அக்குமீனிய மரபு"/>{{dhr}} {{larger|<b>அக்குமீனிய மரபு</b>}} கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசை ஆண்ட முதல் மரபாகும். அதனால் அப்பாரசீகப் பேரரசை அக்குமீனியப் பேரரசு (Achaemean Dynasty) என்றும் கூறுவர். அவர்தம் ஆட்சிக் காலத்தில் பாரசீகப் பேரரசு நைல் ஆற்றிலிருந்து தான்யூப் ஆறு வரை பரவியிருந்தது. அக்குமினியப் பேரரசை நிலை நாட்டியவர் மாமன்னர் சைரசு (Cyrus, the Great) என்பவர். இவர் கி.மு. 559-529 வரை ஆட்சி செய்தார். அக்குமெனசு என்பவர் சைரசின் மூதாதையருள் ஒருவர். சைரசின் மகன் இரண்டாம் காம்பைசசு (Campyses II) கி.மு. 529 முதல் 522 வரை ஆண்டவர். இவர் எகிப்து நாட்டைத் தம் பேரரசுடன் இணைத்தார். இவருக்குப் பின் முதலாம் தேரியசு (Darius I) என்பவர் பேரரசரானார். பெர்சிபாலிசு (Persepolis) என்னும் நகரத்தை உருவாக்கியவர் தேரியசேயாவார். இவரது காலத்தில்தான் பாரசீகப் பேரரசுக்கும் கிரீசு நாட்டிற்கும் இடையே நீண்டதொரு போர் மூண்டது. தேரியசின் மகன் செருசசு (Xerxes) கி.மு. 486 முதல் 465 வரை அரசாண்டவர். இவர்தாம் தருமபைலே (Thermopylae) போரில் வெற்றி பெற்று ஆதென்சு நகரைத் தீக்கிரையாக்கியவர். மூன்றாம் தேரியசு கி.மு. 336 முதல் 330 வரை அரசாண்டவர். இவரே அக்குமீனிய மரபின் இறுதி அரசர். இவரை மகா அலெக்சாந்தர் தோற்கடித்தார். <section end="அக்குமீனிய மரபு"/> <section begin="அக்குரன்"/>{{dhr}} {{larger|<b>அக்குரன்</b>}} சங்க இலக்கியத்தில் வள்ளன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டுள்ள ஆண்மை மிக்க ஒரு வள்ளல். பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்தினைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், அப்பத்தின் தலைவனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய கொடைத் தன்மையைச் சிறப்பிக்கும்போது இவன் அக்குரனைப்போன்ற வள்ளன்மை உடையவன் என்று பாராட்டியுள்ளார். போர் செய்வதில் மேம்பாடுற்ற துயோதனன் முதலிய நூற்றுவரொடு படைத்துணையாகச் சென்ற வீரன் அக்குரன் என்பதனை, “போர் தலை மிகுத்த ஈரைம் பதின்மரொடு, துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன்” என்று குறிப்பிட்டுள்ளார் (பதிற். 14). இவனைக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. ஆனால், உ.வே. சாமிநாத ஐயரவர்கள் இவனைப் பற்றி, “பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்; கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” என்று தம் குறிப்புரையில் கூறியுள்ளார். <section end="அக்குரன்"/> <section begin="அக்குரூரர்1"/>{{dhr}} {{larger|<b>அக்குரூரர்</b>}}{{sup|1}} என்பவர் இயதுவின் வழியில் தோன்றியவர். மகாபாரதத்தில் இடம் பெறும் கதை மாந்தர்களுள் ஒருவர். இவர் தந்தை சுவபல்கன்; தாய் காந்தினி. இவர் கம்சனின் அமைச்சராக இருந்தார்; கம்சனுடைய வேண்டுகோளின்படி நந்தகோபரிடஞ் சென்று தனுர்வேள்விச் செய்தி குறித்துக் கூறிப் பலராமகிருட்டிணர்களை இயமுனைக்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர்களைக் கரையில் நிறுத்தித் தாம்மட்டும் நீரில் மூழ்கினார். அப்பொழுது பலராம கிருட்டிணர் இருவரும் நீரினுள் தேரோடு காட்சி தருவதைக் கண்டு வியந்து வெளியில் வந்தார். அவர்களைக் கண்டுகளித்து மீண்டும் நீரில் மூழ்கினார். அவ்வமயம், திருமால் பாம்பணையில் துயிலும் காட்சியைக் கண்டு வணங்கினார். பின், பலராம கிருட்டிணர்களைக் கம்சனிடமே அழைத்துச் சென்று நடந்த செய்திகளைக் கூறினார். சததன்வா என்பவனிடமிருந்த சியமந்தக மணியைக் கவரச் செய்து, அதனைக் கண்ணன் அறியாதிருத்தற் பொருட்டுக் கங்கைக்குச்சென்றார். கண்ணன் அச்செயலை வெளிப்படுத்தினான். 2. இவர் சுவர்கன் என்பவரின் மகன். 3. இவர் திருக்கச்சி வரதராசப் பெருமாஸின் அருள் பெற்ற முனிவர். 4. இவர் இடையெழு வள்ளல்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். <section end="அக்குரூரர்1"/> <section begin="அக்குரோணி"/>{{dhr}} {{larger|<b>அக்குரோணி</b>}} என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர்களும் கொண்ட படைப்பிரிவு ஓர் அக்குரோணி எனப்படும். இவ்வெண்ணிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது. {{right|<b>த.கோ.</b>}} <section end="அக்குரோணி"/> <section begin="அக்குவினசு, தாமசு, தூய"/> {{dhr}} {{larger|<b>அக்குவினசு, தாமசு, தூய (கி.பி.1225—1274)</b>}} ஒரு சிறந்த இடைக்காலத் தத்துவ அறிஞர். இவர் இத்தாலி நாட்டிலுள்ள ‘இராகாசிகா’ (Rocca-secca) எனும் இடத்தில் பிறந்தார். இவர் நேப்பில்சுப் பல்கலைக்கழகத்தில் தமது படிப்பை முடித்ததும், கி.பி. 1250-இல் தோமினி மடஒழுங்குப் (Dominican Order) போதகராகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இப்பணிப்பொறுப்பு முடிந்தவுடன் கி.பி. 1256-இல் பாரிசுப் (Paris) பல்கலைக்கழகத்தில் இறையியல் (Theology) பேராசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். {{nop}}<noinclude></noinclude> 75xv2wt8srv6r4687rhvs6mqc1rdepb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/49 250 615440 1931799 1824842 2026-05-09T08:29:59Z Booradleyp1 1964 1931799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்குவினசு, தாமசு, தூய|13|அக்கேயா}}</noinclude>இப்பணியிலிருந்தபோது இவர் பல நூல்கள் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ‘சும்மா காண்டிரா சென்டீல்சு’ (Summa Contra Gentiles). {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 49 |bSize = 480 |cWidth = 116 |cHeight = 139 |oTop = 95 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அக்குவினசு, தாமசு, தூய}} ‘சும்மா தியாலசிக்கா’ (Summa Theologiae) ‘அரசியல் தத்துவம்’ (Political Philosophy) ‘அரிசுடாட்டிலின் அரசியற் கொள்கை’ போன்றவையாகும். இந்நூல்களில் சமயம், சட்டம், தத்துவம், அரசியல், கடவுள் ஆகியவற்றைப்பற்றி அக்கிவினசு குறிப்பிட்டுள்ளார். பிற மதத்தவரும் கிறித்தவ சமயத்தில் சேருமாறு இவர் தம் அறிவுரைகளும் கருத்துகளும் அமைந்திருந்தன. புனித தாமசு நம்பிக்கையையும் சிந்தனையையும் ஒருங்கிணைத்தார். அரிசுடாட்டிலின் கருத்துகள் அனைத்தும் நேரடியாகப் புனித தாமசுக்குக் கிடைக்கப் பெறாமையால் அவர் முகமதிய அறிஞர் அவரோசு எழுதிய நூல்களின் இலத்தீன் வடிவங்களிலிருந்து அரிசுடாட்டிலின் கருத்துகளைப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட அரிசுடாட்டிலின் கருத்தை ஒழுங்குபடுத்தித் திருத்தியமைத்து. கிறித்தவச் சமயப்பிரிவில் ஒன்றாகக் கத்தோலிக்கச் சமயத்தை வளர்க்கப் பயன்படுத்தினார். இவர் மெய்ப்பொருளியல் உண்மைக் கொள்கையைப் (Realism) பின்பற்றியவர். தத்துவ முறையில் அறிவு எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதை இங்குக் கூறியுள்ளார். புலன் அனுபவ அறிவே அறிவின் சிறந்த தொடக்கமாகும் என்பது இவரது கொள்கை. மெய்ப்பொருளியலில் புலன் கடந்த மெய்ப்பொருளை விளக்குமிடத்துத் தூய தாமசு ஓர் உண்மைக் கொள்கையினராகத் (Realist) திகழ்கிறார். அதே சமயம் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் காணப்படுகிறார். “உண்மை என்பதை எவ்வாறு முறைப்படுத்திக் கூறினும், யார் யாரால் அது பேசப்படினும், அது கடவுளின் தூய ஆவியால் பேசப்படுகிறது” என்று தூய தாமசு அக்குவினசு மெய்ப்பொருளியல் உண்மையினைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவே அக்குவினசின் கத்தோலிக்கச் சமயக் கொள்கையாகும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள். அம்மகிழ்ச்சி இறைவனுடன் ஒன்று பட்டுணர்தல் வாயிலாகவே கிடைக்கும். அதனைத் தான் கிறித்தவர்கள் விரும்புகிறார்கள் என்று அக்குவினசு (Aquinas, St. Thomas) குறிப்பிட்டுள்ளார். கடவுள் முழுமுதற்பொருள். அவர் மக்களுக்கு அருள்புரிகிறார். அவ்வருளின் மூலமாக மக்களின் நோக்கங்கள் நிறைவேறுகின்றன. மேலும், கடவுள் மறைமுகமாக மக்களுக்கு உதவிபுரிகிறார். அவரே இப்பூவுலகைப் படைத்தவரும், மக்களைக் காப்பாற்றுபவரும், உலகச் செயல்களைக் கவனிப்பவரும் ஆவர். இதுவே தூய தாமசின் இறையியற் கொள்கை. இவர் அரசு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அரசு, மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்; மக்களின் உரிமை, வாழ்க்கை, சமயம், கல்வி ஆகியவற்றில் அது கவனம் செலுத்திப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும். அத்தகைய அரசே சிறந்த அரசாகக் கருதப்படும். அரசு மக்களைத் தவறான செயலில் ஈடுபடுத்தல் கூடாது என்றும், மக்களின் நலன்களே அரசின் கடமை என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்கையோடு ஒட்டியவை; அழிவில்லாதவை. உலகியல் சட்டத்தை நிறுவுவதற்கு அரசுச் சட்டங்கள் உதவ வேண்டும். இவ்வரசின் சட்டம் இறைவனின் சட்ட விதிகளுக்கு (Divine law) முரண்படாத வண்ணம் இயற்றப்பட வேண்டும் என இவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் தாந்தே (Dante) என்னும் அறிஞர், தமது “தெய்விக இன்பியல்” (Divina commedia) என்ற நாடகத்தில், தாமசு அக்குலினசை “தெய்வ ஞானக் கனற்பிழம்பு” (The flame of Heavenly wisdom) என்று குறிப்பிட்டுள்ளார். அக்குவினசு கி.பி. 1323-ஆம் ஆண்டு தூய அடிகளாக (Saint) அறிவிக்கப்பட்டார். ஒவ்வோர் ஆண்டிலும் மார்ச்சு 7-ஆம் நாள் இவரது நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. {{right|<b>மு.மு.</b>}} <section end="அக்குவினசு, தாமசு, தூய"/> {{dhr}} {{larger|<b>அக்கேயா</b>}} பண்டைய கிரீசு நாட்டின் பெலபோனீசசு (Peloponnesus) நகரின் வடகரைப்பகுதி-<noinclude></noinclude> g3vocelo1wth1tvnqco4mkbn4vbv69l விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1931807 1930796 2026-05-09T09:34:15Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ + # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] 1931807 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === tswf1jotx3avtmanb35q7981i5p45fw 1931809 1931807 2026-05-09T09:36:31Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ தேவை 1931809 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === cocynpyhjjhsyuwtqpwez4ityj4vm1e பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/188 250 641211 1931635 1930524 2026-05-09T04:00:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||179}}</noinclude>பிள்ளை பேரன், பேத்தி, வரப்போகிற சந்ததி அனைத்துக்கும் சேர்த்து வைத்து விட்டுப் போக வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது! அதனால் அவனை எந்தத் தொல்லையிலும் இழுத்து விடாதே! இதயம்:- அவன் சந்ததியை எல்லோரும் வாழ்த்த வேண்டாமா? புகழ வேண்டாமா? வயிறு:- அதை, அவனிருந்து பார்த்துக்கொண்டாயிருக்கப் போகிறான்? இதயம்:- இப்படி எண்ணியிருந்தால் திலகர், காந்தி, நேரு முதல் திருப்பூர் குமரன் வரையில் நிலைத்துவிட்ட பெயர்கள் நாட்டில் இருக்க முடியாதே! வயிறு:- பைத்தியக்கார இதயமே! பெயரும் புகழும் சாப்பாடு போடுமா? சந்தோஷம் கொடுக்குமா? தேனாபிஷேகத்தை விட்டு விட்டு எவனாவது தீ மிதிக்கப் போவானா? இதயம்:- அப்படியானால், மனிதனை ஒரு யந்திரம்போல் இயங்கச் சொல்கிறாய்; யாருக்காகவும் உருக வேண்டாம் என்கிறாய் என்கிறாய் எதற்காகவும் கவலைப் படவேண்டாம இல்லையா? வயிறு:- இருக்கும் வரையில் இன்பமாக வாழச்சொல்கிறேன். மனிதன் நனக்காகவே கவலைப்பட வேண்டுமென்கிறேன். உடன்பிறப்பே, இந்த விவாதத்தில் வயிறுகள் ஜெயிப்பதும் உண்டு இதயங்கள் ஜெயிப்பதும் உண்டு! அதிகமாக வயிறுகள் தான் ஜெயிக்கின்றன என்பது கவிஞரின் கவலை. நான்கூட<noinclude></noinclude> hjhpot6s3itxdqluk377yx8jperrokl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/1 250 641631 1931644 1929577 2026-05-09T04:29:31Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{center| {{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 4 </b>}} {{dhr|10em}} <b>பதிப்பாசிரியர்</b> {{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{dhr|10em}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 1 |bSize = 327 |cWidth = 66 |cHeight = 80 |oTop = 444 |oLeft = 96 |Location = center |Description = }} {{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}} 189, டி.டி..கே. சாலை ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b> }} {{dhr}}<noinclude></noinclude> orszahfut52isei598msoyyc94gf3lh 1931728 1931644 2026-05-09T06:32:48Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */சரி 1931728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center| {{x-larger|<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் <br>தொகுதி - 4 </b>}} {{dhr|10em}} <b>பதிப்பாசிரியர்</b> {{larger|<b>டாக்டர் ம.நடராசன்,</b>}} எம்.ஏ., பிஎச்.டி. {{dhr|10em}} {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 1 |bSize = 327 |cWidth = 66 |cHeight = 80 |oTop = 444 |oLeft = 96 |Location = center |Description = }} {{larger|<b>தமிழ் அரசிப் பதிப்பகம்}} 189, டி.டி..கே. சாலை ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.</b> }} {{dhr}}<noinclude></noinclude> niikjkosty9n1hnv5uyhejoijwhx1en பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/2 250 641632 1931645 1929582 2026-05-09T04:30:14Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{gap+|10}}{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}} {| |- |நூல் : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |- |ஆண்டு : || 2003 |- |உரிமை : || தமிழ் அரசிப் பதிப்பகம், |- | || 189, டி.டி.கே. சாலை, |- | || ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. |- |பக்கம் : || xxiv + 408 = 432 |- |{{larger|<b>விலை : </b>}} || {{larger|<b>ரூ.135.00</b>}} |} {{dhr|20em}} அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் {{left_margin|4em|101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004 {{larger|✆}}: 24984693, 24661807}}<noinclude></noinclude> 0mzmfytrizah4zndat0jn52l6b69oij 1931729 1931645 2026-05-09T06:33:28Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{gap+|10}}{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}} {| |- |நூல் : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |- |ஆண்டு : || 2003 |- |உரிமை : || தமிழ் அரசிப் பதிப்பகம், |- | || 189, டி.டி.கே. சாலை, |- | || ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. |- |பக்கம் : || xxiv + 408 = 432 |- |{{larger|<b>விலை : </b>}} || {{larger|<b>ரூ.135.00</b>}} |} {{dhr|20em}} அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் {{left_margin|4em|101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004 {{larger|✆}}: 24984693, 24661807}}<noinclude></noinclude> c64uywykpocci2mzsveeyo7sas8zhnb 1931730 1931729 2026-05-09T06:34:21Z Info-farmer 232 சரி 1931730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{gap+|10}}{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}} {| |- |நூல் : || தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 10 |- |ஆண்டு : || 2003 |- |உரிமை : || தமிழ் அரசிப் பதிப்பகம், |- | || 189, டி.டி.கே. சாலை, |- | || ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. |- |பக்கம் : || xxiv + 408 = 432 |- |{{larger|<b>விலை : </b>}} || {{larger|<b>ரூ.135.00</b>}} |} {{dhr|20em}} அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் {{left_margin|4em|101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004 {{larger|✆}}: 24984693, 24661807}}<noinclude></noinclude> a75uxp0tk8f35aeum3l7h260j7nepo4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/3 250 641633 1931646 1929584 2026-05-09T04:30:43Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின்</b>}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} {{center|{{larger|<b>திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன்,</b>}}}} 'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று. என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்: பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் - எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.<noinclude></noinclude> dgvhk10s5dqnfjd80q9q4rqfjx3cjk7 1931731 1931646 2026-05-09T06:34:51Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b>முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின்</b>}} {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} {{center|{{larger|<b>திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன்,</b>}}}} 'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று. என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்: பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன். அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட வசனங்கள் - எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.<noinclude></noinclude> skq2ifolqoryaqwu64ib9xicw29xflz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/4 250 641634 1931647 1929585 2026-05-09T04:31:09Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 'தம்பிக்குக் கடிதம்' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக! அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்து படைக்க முன்வந்த 'பாரி நிலைய'த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற வாழ்வார்களாக! {{Right|<b>இரா. நெடுஞ்செழியன்</b>}} 4.1.63 {{dhr}}<noinclude></noinclude> houquu05ngl0ip41vjg23dx47hxi4nw 1931732 1931647 2026-05-09T06:37:16Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 'தம்பிக்குக் கடிதம்' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக! அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்து படைக்க முன்வந்த 'பாரி நிலைய'த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற வாழ்வார்களாக! 4. 1. 63{{float right|<b>இரா. நெடுஞ்செழியன்</b>}} {{dhr|3em}}<noinclude></noinclude> a1tr6icqg4but159ezwn0a7uhsqq6bq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/5 250 641635 1931651 1929587 2026-05-09T04:31:51Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க - ஒளிவீச எழுந்த ஞாயிறு. {{left_margin|3em|<poem><b>எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்</b></poem>}} {{Right|(குறள் - 666)}} என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர். <b>‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர்</b> தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை, {{left_margin|3em|<poem><b>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்</b></poem>}} {{Right|(குறள் - 643)}} என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார். <b>பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude> hq6gozkzt9gf722m30kzu128qilskv4 1931733 1931651 2026-05-09T06:42:57Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{float_right|(குறள் - 666)}} 1931733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|vi}}</noinclude> {{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க - ஒளிவீச எழுந்த ஞாயிறு. {{left_margin|3em|<poem><b> எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்</b>{{float_right|(குறள் - 666)}}</poem> }} என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர். <b>‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர்</b> தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை, {{left_margin|3em|<poem><b>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்</b>{{float_right|(குறள் - 643)}}</poem>}} என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார். <b>பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude> d2qpgho6xqx0a1xuxtpocjwtnolwy35 1931734 1931733 2026-05-09T06:44:22Z Info-farmer 232 - 1931734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>பதிப்புரை</b>}}}} பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க - ஒளிவீச எழுந்த ஞாயிறு. {{left_margin|3em|<poem><b> எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்</b>{{float_right|(குறள் - 666)}}</poem> }} என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர். <b>‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர்</b> தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை, {{left_margin|3em|<poem><b>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்</b>{{float_right|(குறள் - 643)}}</poem>}} என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார். <b>பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை, கடித இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude> jf4m0b023hndr6xk5k6lx7b5akt5txe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/6 250 641636 1931653 1929588 2026-05-09T04:33:57Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது. <b>பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்</b> பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, பேரறிஞர் அண்ணா பேசுகிறார் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்</b> இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களில் 'தம்பிக்கு' என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது. <b>மடல்களின் தொகுப்பு முறை</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் எழுதிய 171 கடிதங்களும், 'காஞ்சி' இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய 'காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...' என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude> 4n0odl1mhmrq7jrrnbl21dd1jcduyu2 1931727 1931653 2026-05-09T06:31:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|vi}} 1931727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|vi}}</noinclude>பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது. <b>பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்</b> பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங்களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறையாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, பேரறிஞர் அண்ணா பேசுகிறார் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல்கள்</b> இம்முயல்வைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களில் 'தம்பிக்கு' என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது. <b>மடல்களின் தொகுப்பு முறை</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் எழுதிய 171 கடிதங்களும், 'காஞ்சி' இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரையுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய 'காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...' என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude> nd6g1o9b0eysklj0z69u40tudb0r2hm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/7 250 641637 1931657 1929589 2026-05-09T04:38:39Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>எழுதிய 'இராச்சிய சபை' ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன. <b>மடல்களில் காணப்படும் பொருண்மைகள்</b> அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் - காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி, நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்</b> அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு', 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.<noinclude></noinclude> 7l97nv8xpfsf4aj81j2xnp5n3vd5nab 1931735 1931657 2026-05-09T06:45:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|vi}} 1931735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|vii}}</noinclude>எழுதிய 'இராச்சிய சபை' ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன. <b>மடல்களில் காணப்படும் பொருண்மைகள்</b> அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு, தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் - காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி, நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின. <b>பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம்</b> அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு', 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.<noinclude></noinclude> 6w9z2hgumfnzfk46h4ncuo75v92l1sz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/8 250 641638 1931658 1929590 2026-05-09T04:39:03Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> <b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<poem><b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b></poem>}} {{Right|(நச்.தொல்.948)}} அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> 'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். {{left_margin|3em|<poem><b>'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே'</b></poem>}} என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude> 1dlldotzhay8yhkap88th97xxwx850w 1931736 1931658 2026-05-09T06:45:50Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|vi}} 1931736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|viii}}</noinclude> <b>எளிமையான விளக்கங்கள்</b> தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், {{left_margin|3em|<poem><b>“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”</b></poem>}} {{Right|(நச்.தொல்.948)}} அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். <b>கடிதத் தலைப்புகள்</b> 'சென்றேன், கண்டேன், வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது', 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். {{left_margin|3em|<poem><b>'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே'</b></poem>}} என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம்' என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. <b>வினா அமைப்பு மடல்கள்</b> 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', ‘அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude> 1xa4yfc7v85xnirt067at2ysa1ei2bx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/9 250 641639 1931659 1929592 2026-05-09T04:39:35Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். <b>மொழியாய்வு</b> 'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், {{left_margin|3em|<poem><b>"சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா"</b></poem>}} என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். <b>புராணத் தலைப்புகள்</b> 'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும், 'குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். <b>புராண உவமை</b> புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude> dhu7ww63jzaieonn5dsuuans78b2haz 1931737 1931659 2026-05-09T06:46:31Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|ix}} 1931737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|ix}}</noinclude>மயிலாகும்மா?', 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை', 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். <b>மொழியாய்வு</b> 'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு - பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், {{left_margin|3em|<poem><b>"சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா"</b></poem>}} என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் ‘ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். <b>புராணத் தலைப்புகள்</b> 'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும், 'குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். <b>புராண உவமை</b> புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude> 1itvxz25dillkqi9921hz2iegx46a9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/10 250 641640 1931660 1929593 2026-05-09T04:39:59Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். <b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b> 'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்', 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்', 'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். <b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b> பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா' என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude> lia440aqaflr43zgwvgutuizkxjb6mw 1931738 1931660 2026-05-09T06:47:13Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ pms 1931738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|x}}</noinclude>கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். <b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b> 'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்', 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்', 'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். <b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b> பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா' என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude> 0z5fmhg0mg53ojd2yetgx5zkh6a0deh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/11 250 641641 1931662 1929595 2026-05-09T04:40:37Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். {{left_margin|3em|"தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன."}} <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude> 3rqlktx8jw9p4wuc5eab2pe8m8igywn 1931739 1931662 2026-05-09T06:58:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */[ms 1931739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xi}}</noinclude>கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். {{left_margin|3em|"தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன."}} <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude> e4cac3wgyyjpioxjm5svhhivdudtwdo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/12 250 641642 1931663 1929596 2026-05-09T04:41:16Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர். இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}} பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது. <b>பட்டினப் பாலை</b> கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார். "மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன. நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன! தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்! {{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள் நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude></noinclude> cenzm6bt6nsjfmlwszgbn82g2mm51u1 1931740 1931663 2026-05-09T06:59:21Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xii}} 1931740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xii}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர். இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}} பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது. <b>பட்டினப் பாலை</b> கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார். "மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன. நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன! தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்! {{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள் நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude></noinclude> cta3a6jphr3q6eo2gfdymw5bs08oinb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/13 250 641643 1931664 1929599 2026-05-09T04:41:59Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{left_margin|3em|<poem><b>இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள்</b></poem>}} இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம். <b>மலைபடுகடாம்</b> பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார். மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம். தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார். மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!<noinclude></noinclude> tddyhi5owmbqdohdcr7lbq16vsbah6f 1931742 1931664 2026-05-09T07:00:16Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xiii}} 1931742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xiii}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள்</b></poem>}} இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று-நிற்கிறோம். <b>மலைபடுகடாம்</b> பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார். மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம். தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார். மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!<noinclude></noinclude> syvgmtopk4ptvxksvq0669a7sn5sb44 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/14 250 641644 1931665 1929601 2026-05-09T04:42:42Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> <b>ஐங்குறுநூறு</b> ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார். கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது. நின்னே போலும் மஞ்ஞை! என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது. <b>சங்க இலக்கியக் காதல்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது! இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது. அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார். <b>புறநானூறு</b> புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 'நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.' "புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude></noinclude> tneo9e7h1l4n2pm7i0pl4lvz409fqex 1931743 1931665 2026-05-09T07:01:09Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xiv}} 1931743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xiv}}</noinclude> <b>ஐங்குறுநூறு</b> ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார். கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது. நின்னே போலும் மஞ்ஞை! என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது. <b>சங்க இலக்கியக் காதல்</b> பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது! இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது. அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார். <b>புறநானூறு</b> புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 'நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் பெரிய இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் என்ற எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார்.' "புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு; புறநானூறு பாடிய பெருமக்கள் - பெண்பாற் புலவரும் உண்டு - பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude></noinclude> 6miwngnwrc3jzsahhz9zs1ksu0adg00 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/15 250 641645 1931666 1929602 2026-05-09T04:43:26Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை." <b>இரு காட்சிகள்</b> சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு, {{left_margin|3em|<poem><b>“மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும்"</b></poem>}} ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல. {{left_margin|3em|<poem><b>'கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும்'.</b></poem>}} நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது. <b>நடைநலம்</b> நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude></noinclude> 8hr36movtka095n7m6qrv98cip94ksl 1931744 1931666 2026-05-09T07:01:52Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xv}} 1931744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xv}}</noinclude>கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை, மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி, தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை." <b>இரு காட்சிகள்</b> சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு, {{left_margin|3em|<poem><b>“மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும்"</b></poem>}} ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல. {{left_margin|3em|<poem><b>'கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும்'.</b></poem>}} நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது. <b>நடைநலம்</b> நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude></noinclude> jewp11wl6on1yjwhgn4apw2gqqofljc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/16 250 641646 1931667 1929603 2026-05-09T04:43:59Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக' - 103). அவர் எழுதுகிறார் : "வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும் நமக்கு. முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய். அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மையாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்." <b>தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று</b> 'தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து 'நெடுஞ்செழியன் - அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான 'வாகையூர்' என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும். 'திரு.வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, 'உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.<noinclude></noinclude> 4p7ezf683jd06qvvz5fj7fa5xph1x9a 1931745 1931667 2026-05-09T07:02:26Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xvi}} 1931745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xvi}}</noinclude>அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக' - 103). அவர் எழுதுகிறார் : "வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும் நமக்கு. முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு காண்பாய். அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மையாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்." <b>தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று</b> 'தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து 'நெடுஞ்செழியன் - அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான 'வாகையூர்' என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும். 'திரு.வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, 'உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.<noinclude></noinclude> j9ijwxxpif8zozpufxk2qnemaugwcx9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/17 250 641647 1931668 1929604 2026-05-09T04:44:26Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> <b>தொடர் மடல்கள்</b> 'போலீஸ் போலீஸ்', 'தண்டோரா சர்க்கார்', 'வெகுண்டெழுந்தான் பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்', 'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்', 'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்', 'பற்று', 'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். <b>மொழிபெயர்ப்புகள்</b> கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்' என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, {{left_margin|3em|<poem>1. மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு</poem>}} என்பன.<noinclude></noinclude> mjoo45kddh3ww52mhgsxc6nnvddrlyj 1931746 1931668 2026-05-09T07:03:04Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xvi}} 1931746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xvii}}</noinclude> <b>தொடர் மடல்கள்</b> 'போலீஸ் போலீஸ்', 'தண்டோரா சர்க்கார்', 'வெகுண்டெழுந்தான் பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்', 'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்', 'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்', 'பற்று', 'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு, நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். <b>மொழிபெயர்ப்புகள்</b> கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்' என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, {{left_margin|3em|<poem>1. மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு</poem>}} என்பன.<noinclude></noinclude> eqsxy4sdc73izy5qyb8wbubm13uqhw2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/18 250 641648 1931669 1929605 2026-05-09T04:44:51Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன. <b>எலினார் அந்தனி கதை</b> அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 - 3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும். <b>நாடகத்துறை வித்தகர்</b> பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude></noinclude> divum2gpnbzxfjsap4ts3gi9eqowsb6 1931747 1931669 2026-05-09T07:03:41Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xvi}} 1931747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xviii}}</noinclude> மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன. <b>எலினார் அந்தனி கதை</b> அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கிறான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை ‘எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 - 3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும். <b>நாடகத்துறை வித்தகர்</b> பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude></noinclude> jr7nmhx4k74sminjscd5u0c89rub57y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/19 250 641649 1931670 1929606 2026-05-09T04:45:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', 'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. <b>'செல்வ சீமானின் மகன்'</b> பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். <b>கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்</b> உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude> gi9ofrqb6j0avl6yu6izmjztcin7vdf 1931748 1931670 2026-05-09T07:04:40Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xix}} 1931748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xix}}</noinclude>தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்'. 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', 'ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. <b>'செல்வ சீமானின் மகன்'</b> பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர், கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். <b>கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும்</b> உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன.<noinclude></noinclude> d0bqwh3v6hz2hm0bhglakjnokrvcacf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/20 250 641650 1931671 1929607 2026-05-09T04:45:43Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>'முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்'?, 'வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம். <b>கொள்கை உறுதி</b> தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி வரை கொண்டார். "நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட தலைவரும் ஒருவரே - அவர்தான் பெரியார்" எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா. பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய ‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம். இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த 'யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி. {{block_center|width=700px|}}{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf |Page = 20 |bSize = 378 |cWidth = 155 |cHeight = 66 |oTop = 560 |oLeft = 207 |Location = right |Description = }} {{dhr|3em}}<noinclude></noinclude> 48myfb9jmqck6d2ltegfkpm2b85gu3q 1931749 1931671 2026-05-09T07:05:41Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{c|xx}} 1931749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{c|xx}}</noinclude>'முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்'?, 'வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக்காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம். <b>கொள்கை உறுதி</b> தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார். தந்தைப் பெரியாரிடத்திலிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி வரை கொண்டார். "நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட தலைவரும் ஒருவரே - அவர்தான் பெரியார்" எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா. பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய ‘தம்பிக்கு’ கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம். இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த 'யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி. {{block_center|width=700px|}}{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf |Page = 20 |bSize = 378 |cWidth = 155 |cHeight = 66 |oTop = 560 |oLeft = 207 |Location = right |Description = }} {{dhr|3em}}<noinclude></noinclude> ep59zqphduzuj9gu5gmk9nhxeybglh5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 641774 1931673 1930630 2026-05-09T04:50:48Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 111}} {{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}} தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> cuodwiktyflwc17vyuycpsu1nc66161 1931674 1931673 2026-05-09T04:51:30Z Saranya V R 14232 1931674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 111}} {{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}} தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> egea18lyx0hk6m3xf4y96srn4c1fqr1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 641775 1931675 1930631 2026-05-09T04:52:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude> கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், <poem>"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!!</poem> <poem>நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்!</poem> <poem>உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று!</poem> <poem>நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!</poem><noinclude></noinclude> 3ck99jnzve5r8ikkyk1kdjzzte9uqdd 1931677 1931675 2026-05-09T04:58:28Z Saranya V R 14232 1931677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude> கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், {{left_margin|3em|<poem>"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!! நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்! உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று! நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!</poem>}}<noinclude></noinclude> r5n7m2nx3lq7djc4hrc6mg8kgjwqdlg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 641776 1931676 1930677 2026-05-09T04:57:07Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>நீ மாளிகையில்! அவன், சிறையில்!!</poem>}} தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு, மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்! வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர், பலர் இருக்கிறார்கள். தம்பி. அவர்கள், என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி! சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல. தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, {{left_margin|3em|<poem><b>"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"</b></poem>}} அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும். கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது. பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான். தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude> 0qe2jhyu459axlleuz08glfiexh9kva பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 641777 1931678 1930414 2026-05-09T04:59:36Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude> களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்! மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது - சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!! ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு' அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!! ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்- சட்டம்! “குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?" "என் வீட்டுக்கு வந்தவள்-என்..." "மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?" "இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்". "அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?" "திருமணம்..." "செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!" தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude> 58877pkdwwny90g5koxnw4f8900qbnr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 641778 1931679 1930679 2026-05-09T05:01:18Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!! சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு. "செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை! 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்! "ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான். கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாவம்!எதிர்த்தால், அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!! ஆனால், தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று. காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை. ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை! 'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும். இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும் நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான். {{left_margin|3em|<poem><b>யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்? யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?</b></poem>}} என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான். இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude> 2y3pon28lk6z5knpwzywqaqfm9icgwf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151 250 641779 1931680 1930680 2026-05-09T05:03:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude> வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று!சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம். இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது. {{center|{{x-larger|<b>★ ★ ★</b>}}}} மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று, அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும். "எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?" "இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்". "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்". "விளக்கம்". "இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..." "ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்". "நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம், இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது". "இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்". "உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.." "காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude> 1epnv1zq00lpy1mphd44n5rzl9b3jww 1931681 1931680 2026-05-09T05:06:33Z Saranya V R 14232 1931681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude> வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று!சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம். இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது. {{c|★ ★ ★}} மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று, அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும். "எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?" "இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்". "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்". "விளக்கம்". "இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..." "ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்". "நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம், இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது". "இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்". "உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.." "காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude> gbpr24hdgdi086rfoerfncmpfzplmkn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152 250 641780 1931682 1930655 2026-05-09T05:07:04Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|128||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..." "இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..." "ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது". "செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?" "முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!" "அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்!" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" "மறுக்கிறானா?" "மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!" "கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி". "சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்-கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..." "நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..." "துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப்பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்". "மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்". "அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude> tt9k1sb4hj9ghwodze7fc5lq3hzhstj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153 250 641781 1931683 1930657 2026-05-09T05:09:20Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude> "செல்லரித்த படத்தைக் காட்டி!" "மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.." "இழிவு படுத்தினான்". "படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.." "இந்த மூன்றாவது ஆசாமி?" "இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகிகளை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..." "என்ன செய்துகொண்டிருந்தான்?'' "காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!'' "பதறாமல்". "அமைதியாக!' "அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!" தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன். மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா? அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர. {{c|★ ★ ★}} இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude> ikvfunrl4eta6zmd9k38os8txbyp624 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154 250 641782 1931684 1930661 2026-05-09T05:11:16Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|130||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அக்ரமத்தை?-என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம். இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன. தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!! டாக்டர் வெர்வுட்! தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர். கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ, அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட். அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும் அல்ல. அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது. நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும். மருத்துவராக இருக்கலாம், மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி, கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல. கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude> kptyqasapdkegxhsd5m5n18517iiau5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155 250 641783 1931685 1930662 2026-05-09T05:11:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude> வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும்-வேறு வேறுதான்! பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி. வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!! இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு! தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!! உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார். இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் இது சட்டமல்ல! - என்று கூறப்படுகிறதே. தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது; வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!! சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும். சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- இவைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude> bt63xuksxcdc4525lpduoytlrwxjdp5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156 250 641784 1931686 1930682 2026-05-09T05:13:11Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|132||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும். அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும். {{c|★ ★ ★}} பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது, தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப்பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித், தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது. ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர். இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்! பாட்ரிக் மாடிம்பா என்பவர், தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்! அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்! முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர். அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும். குழந்தை கலப்பு இனம்- எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும், என்று சட்டம் ஆணையிடுகிறது. "எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்.<noinclude></noinclude> 3b4f1jryatea6t918o13mntq0r2wlj6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157 250 641785 1931687 1930693 2026-05-09T05:14:13Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude> இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான், அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!! அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!! மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா? மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார்களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது. எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரைகளின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும், என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude> auf5phtuwwa7cg89ezpvtgiehpidbtb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158 250 641786 1931688 1930699 2026-05-09T05:15:20Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!! சட்டம், பிறப்பது இவ்விதத்தில். அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு. இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம். சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ! இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்! தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார். பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு, பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார், வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள். அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது! வழக்கு என்றதும், எனக்கு என்னவோ உன்னிடம் பொதுவாகவே, சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று: அதனால்தான் இது.<noinclude></noinclude> lzzzcfa0h9ieztw1ex32iuqs6gk1145 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159 250 641787 1931689 1930705 2026-05-09T05:16:29Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude> சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன! சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப்பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்! குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்டவர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர். விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு, வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன. இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!! அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது. சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள். பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம். கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!! என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து, விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude> 2yhrkhlsebyts18b6weblxiyxh9iz4d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160 250 641788 1931690 1930709 2026-05-09T05:18:25Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|136||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!! காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான். தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்படுகிறது. நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம். அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக்கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு! வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி? வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா? குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? - என்றெல்லாம், சமுகம், கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும். அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது? {{rh|<br>17.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 1blqhveqdlqif37fparuifl2507njjr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161 250 641789 1931691 1930713 2026-05-09T05:21:04Z Saranya V R 14232 1931691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>கடிதம் : 112 ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! {{left_margin|3em|<poem><b>தேர்தலும் அரசியல் கட்சியும்- பிராங்கோவும் சட்டமும்- க்யூபாவின் காஸ்டரோ - இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.</b></poem>}} தம்பி! வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான். திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை. 'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude> 0blhk5cjibj9ruvzfl4tm33p2e0cbw2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162 250 641790 1931692 1930716 2026-05-09T05:22:11Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது. பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறுகிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு. வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார். அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா! பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு! "வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்"-என்கிறார். பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை, அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude> 0rcni8r2hmv01pc8801oxusbgxbvzez பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164 250 641792 1931693 1930721 2026-05-09T05:23:34Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|140||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்! 'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர். குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர். வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்! வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது. வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது? பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டையிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்! தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஓட்டுவர். ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude> 747y2r8a0x6nwxfwwe5p8es3gkil5f2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165 250 641793 1931694 1930730 2026-05-09T05:24:13Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude> அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது. சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்? வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும். சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம். ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இவ்வளவுக்குப் போவானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும் காட்சியினை. இவைகள், ஒன்றுகூட இப்போது, நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே. வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude> 8w17rmmf2ndg0harnlf67wm0xg65yld பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166 250 641794 1931695 1930869 2026-05-09T05:24:41Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி, ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம். வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ? மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா, என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா? செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா? ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!! வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேலி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல், உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு! சிலப்பதிகாரம், சுவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது!-என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள். அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள். மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும். கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை!<noinclude></noinclude> l1uxwydsjbfgg92phywkfijiimpawiu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167 250 641795 1931696 1930871 2026-05-09T05:25:09Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude> காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்? சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம், புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள். அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே? அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்? எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே? என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம், அதனால் தத்தளிக்கிறோம்-ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று-அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து, கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்!! ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude> 7l54u3cenuk0qtmcg2cohgt9ipdnszp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168 250 641796 1931698 1930872 2026-05-09T05:25:39Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன்,-மீண்டும் செல்வேன். தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே! உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும்-இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்-வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே,-ஆகவே அந்தக் கவலை வேண்டாம். உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டியதெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா? ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மையாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு, என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude> pwszeovv73oa8o5xghcwiu18486eq7x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169 250 641797 1931699 1930873 2026-05-09T05:26:00Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude> நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் 'குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள், இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான். என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்! அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காசும் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன். வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டுப் பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude> dwk8qeuvqzwjn17gooa9idgbk173nsl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170 250 641798 1931700 1930875 2026-05-09T05:26:23Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|146||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ. வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லைகளால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்! இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர்; ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதையிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா, தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான். தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude> n8o4muy52355357p16d11r2v4fhar1n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171 250 641799 1931701 1930885 2026-05-09T05:27:04Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude> நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான். விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!! கனா, டோகோலாண்டு, மாலி, சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று, பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம். அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி, எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப்பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர். விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும், அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை. ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது; புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது. விடுதலை இயக்கம், பலிகேட்கும்-தன்னிடம் பற்றுக் கொண்டவர்களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு, கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும். அந்த அணிவகுப்புத்தான் உலகிலே, பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude> 19ez0g4nrjpop7f3x1g5c9858p4n6mh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172 250 641800 1931702 1930887 2026-05-09T05:27:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|148||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை. முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்! தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே, இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை! காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே, தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று! ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார். அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை. விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை. அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர், கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude> 6fpgnx5o0xebeqwk0htg7xz14gubnlk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173 250 641801 1931703 1930889 2026-05-09T05:27:57Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||149}}{{rule}}</noinclude> அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும். பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டிருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி, 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது. பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர். இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா? நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா, உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்! ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து! பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும். இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்! கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது. பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude> 5nh1j7i5qzgj4x8bahxm2ez7o8bbldg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174 250 641802 1931704 1930890 2026-05-09T05:28:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|150||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது சரியல்ல. புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு, ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள். பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு? பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு. பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார். சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி! இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார்- அமைச்சர்! சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென். சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார், சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும் அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும். எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழியிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> obko217twszn648uzlxq230ejdn8jt5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175 250 641803 1931705 1930895 2026-05-09T05:29:45Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude> எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக், குழு விரைந்து வேலை செய்யவேண்டும். கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக! 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார். தமிழ்மொழி, இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே,-நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே, மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா? ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-! என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது! ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப்படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள். இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள். பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி, யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ, கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!! தம்பி! இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே. {{left_margin|3em|<poem><b>நரேஷ்சென் குப்தா நரேந்திர தேவ் திரிகுண சென் சுபீந்திரநாத் தத்தா ராதாராணி தேவி</b></poem>}}<noinclude></noinclude> tqp9gxg8ns6getawubrs0m3333khugz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176 250 641804 1931706 1930897 2026-05-09T05:30:38Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b>பேராசிரியர் குகா புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத் கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப் டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி மைத்ரேயி தேவி புரோதீவா போஸ் சாகராமாய் கோஷ் அமலன் தத்தா கே. கே. சின்கா ஹிரேன் குமார் சன்யால்</b></poem>}} இவர்கள், தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள், புலவர்கள், பெரும்பேராசிரியர்கள், கல்வித்துறை நிபுணர்கள். இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று, பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரசுத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம். ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்பட்டிருக்கிறது இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம் அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு இது பெருத்த அநீதி இழைப்பதாகும் இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude> qu2zn1vyxa32c5tnb9vbp0xahl0j9u1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177 250 641805 1931707 1930903 2026-05-09T05:31:12Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude> நேரு வெளியிட்ட கொள்கை, திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று, இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது. குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள், இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது. இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர்களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும். இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும். முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது. தம்பி! குமாரபாளையத்திலே, நாம் கூடி, குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ 'பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ வங்க நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும், அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? தித்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் சுகமே. அப்படிச் சொல்ல! இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டுமென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும். தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகமான தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக இந்திய சர்க்கார் தரக் கூடாது என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude> pbefekydxmom1h9fpmreko0jtn9vwv5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179 250 641807 1931709 1930905 2026-05-09T05:33:13Z Saranya V R 14232 1931709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 113}} {{Right|{{x-larger|<b>பாபுவின் பவனி</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>இராஜேந்திரப் பிரசாத்தின் உலா- இந்தி எதிர்ப்பு- நிதி அமைச்சர் கருத்து</b></poem>}} தம்பி! கிருஹப்பிரவேச மஹோர்சவ விஞ்ஞாபனம் நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில் புதிதாக அமைத்திருக்கும் வீட்டிற்கு கிருஹப்பிரவேசம் செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன். அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின் 'ருக்மணி பரிணயம்' எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்ஙனம், தங்கள் விதேயன் ஏகம்பரதாசன் "அனுக்கிரஹம்' இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா, இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால், தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக்கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude> ch3onn5teell097sxqg4k2odhd66pf6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180 250 641808 1931710 1930906 2026-05-09T05:34:23Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு! இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?-என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே! ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா, என்பதை எடுத்துக்காட்ட அல்ல! இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன்! ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான். அப்படியா அண்ணா! முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது, வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே. பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான், வீடு, பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலனாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது, பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தாழ்த்திருப்பவர்களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்! குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!! {{c|★ ★ ★}}<noinclude></noinclude> hxj8bkzxp901wvkprcqfena66qi82ew பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181 250 641809 1931711 1931207 2026-05-09T05:35:11Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude> குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா! வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை. களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!! தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும், கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை? குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்! 1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude> 3m3r2fjaxvqp0i27m36ph37zryvs9eq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182 250 641810 1931712 1931215 2026-05-09T05:36:02Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|158||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி! இந்தச் சிறப்புகளை, நான் மறந்திடவில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய். ஆனால், குடிஅரசுத் தலைவர், இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர்; இந்தி வெறியர்களே, அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில்-நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர், எப்போதும், இந்தி விஷயத்திலே, திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள். எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்! {{c|★ ★ ★}} “ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தனர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வரும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள், இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே. உமது தமிழ், எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude> gg65do3724muuowj76hcx87miqbc2cc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183 250 641811 1931713 1931218 2026-05-09T05:37:37Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude> எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள். {{c|★ ★ ★}} "அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது! "அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ, இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்'- என்றா பதிலளிக்க முடியும்? "ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான். "அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை. {{c|★ ★ ★}} தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude> 7do5m81w2y27mgp4veejk7jph7gbeuc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184 250 641812 1931714 1931221 2026-05-09T05:38:12Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|160||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு! நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை. அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார்-தேவையில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம் ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும். இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது? அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம். தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது. இது,குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude> 8vwchgw35ew7zyc9sc89cihahpdr53e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185 250 641813 1931715 1931226 2026-05-09T05:40:49Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||161}}{{rule}}</noinclude> அதனைக் கண்ணுற்றவர், அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள். {{c|★ ★ ★}} குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்! தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ, நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே, மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது. ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை-முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ, அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி, குத்திக் குடைவதாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது, துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது. துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும், இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன? பிடிக்காதவர்கள்மீது, வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை, மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude> h48krvgtq36qammeahhhsxjz25t4hqt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186 250 641814 1931716 1931234 2026-05-09T05:41:11Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|162||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும். ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே, தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா? நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும், இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள், அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும். அறப்போர் பலவற்றில், நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும், நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude> qmkgo78cs0m50jc3hartbw78awx4a1s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187 250 641815 1931717 1931240 2026-05-09T05:41:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude> அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ, வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப்படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட!!நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன. ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர், சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு, உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும். வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கையிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள்; எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, 'பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால்களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர். பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்! "அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்; காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude> lncygh6vrda34023lhbsce1mcbb7obs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188 250 641816 1931718 1931244 2026-05-09T05:41:56Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல், கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்." "கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்" "அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!" "அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி". "இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங்களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு. அமெரிக்கா போய் வந்தார், சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!" தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும். நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை, ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம், என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது, காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான், வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டியாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!" "எழும்பி எழும்பிப் பேசுவான, என் மொழி! என் நாடு என்றெல்லாம், ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'". "அதோ, கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude> 5kiebqpvfie9s2eimi02g4oyf0x6vay பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189 250 641817 1931719 1931246 2026-05-09T05:42:19Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||165}}{{rule}}</noinclude> தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத்தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும். காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி! அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன். அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன். இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன். அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன். நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்-ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது. அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude> dxpg8ebgxxd6elqguiz3ti5ylq9wt9c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190 250 641818 1931720 1931248 2026-05-09T05:42:41Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|166||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம், அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடுகிறார்கள்-இங்குள்ளோர். குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள். அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று, கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர். ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்: "யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற. இந்தப் பகுதியில்தான், தனி நாடு, தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால், என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம். இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு, என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!" என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர். ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக்கூறி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude> ss7k2edftntw7i549g3bhnwduvm4eud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191 250 641819 1931721 1931250 2026-05-09T05:43:17Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude> பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர். {{c|★ ★ ★}} குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும். ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்? எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர். சென்னை தூத்துக்குடி நாகர்கோயில் கன்னியாகுமரி கோவை சேலம் மேட்டூர் வேலூர் ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள், வெளிவந்த வண்ணமிருக்கின்றன. என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது? உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர், உண்மை நிலையைக் கூறப்போவதில்லை. அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம், காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude> 6nwgasw1ngcxj46e0w3ytgvmzcgarcz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193 250 641821 1931722 1931256 2026-05-09T05:44:14Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude> அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்! நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது. நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்! "தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில். தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி, இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டுகோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம், தம்பி! குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும், என்று கழகம், கூறிடட்டும். காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும். ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம். இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும். அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா, அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude> 85abh1mcrg0ac6xyb2sbwuyvdqbudrg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194 250 641822 1931723 1931257 2026-05-09T05:44:38Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|170||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா? அந்த இலட்சணத்தைத்தான், நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே! தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர். அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை. நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது. மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு-அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது. மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது. "புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால், மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ, இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுக!!"<noinclude></noinclude> reiu2r1m8liwmbseovdhd2exc3ek4pa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195 250 641823 1931724 1931292 2026-05-09T05:45:14Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude> என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று, எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. {{c|<b>★★★</b>}} நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. {{left_margin|3em|<poem><b> ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது.</b></poem>}} என்றெல்லாம் பேசி வருகிறார். {{left_margin|3em|<poem> ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை,</poem>}} என்றெல்லாம் பேசவில்லை-பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> po2nkg8rmri1lnh621sj4hu1bjg7jy4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 641874 1931461 1931382 2026-05-08T13:47:16Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) (நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> mhkljsttqn25rphw35yfwcfoicbjsrq 1931467 1931461 2026-05-08T14:06:17Z Subisena 16382 1931467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. {{c|★★★}} தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) (நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> kn8b9rt1d2tzdho70p1otgde6vfxy97 1931814 1931467 2026-05-09T11:16:27Z Subisena 16382 1931814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. {{c|★★★}} தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) {{c|★★★}} (நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> 9grkpioirl409vimn8uzwbsm3qkakhs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 641875 1931815 1930621 2026-05-09T11:17:56Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று. 'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம். இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல. {{c|★★★}} நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே! நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும், இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்ற கேள்வியை. 28.8.'60 அண்ணன்.<noinclude></noinclude> p8hp1025iqn88ty1by52bfqtbfdzhoz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 641876 1931817 1930624 2026-05-09T11:21:30Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude> கடிதம்: 118 மற்றொரு கூவம்! அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் - தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை தம்பி! 'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம். "என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார். ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude> bz9gv3uva0jl7ei0qi47c1djd53y91a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 641877 1931816 1931378 2026-05-09T11:20:27Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடுகின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு, ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது. அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் - அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம். யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்! அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude> t9ctsf34iylxmwjg5cdhytfm3b8mdby பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 641878 1931818 1931376 2026-05-09T11:22:22Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால். இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால், யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி. கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியோ, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம், வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!! தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டுமே பார்ப்போம். பார்த்தோமே பொறுத்திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும். கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை. ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்! கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude> te14s0ufolpb7maq10zaefb5kf26wlh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251 250 641879 1931819 1930645 2026-05-09T11:24:10Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude> தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன! கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு, முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!! அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார்களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!! ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர். தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை - சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா, எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude> c1k6tdfea858sgjtnhofzvb27fv7m3a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252 250 641880 1931820 1931373 2026-05-09T11:26:31Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு. காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள். ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான், பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள். ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் - என்று பொதுமக்களே, மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு, இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து, குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற்கில்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது, இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட? என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude> n76nis2hj7xqbzlxg21hieijbevv9af பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253 250 641881 1931821 1930660 2026-05-09T11:31:25Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude> 'எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார். தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு, சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவறவில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய மாட்டார்கள். அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள்.<noinclude></noinclude> jiwsmyfluwzg40oxhuv27iprl5anqsb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254 250 641882 1931822 1930663 2026-05-09T11:34:21Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|230||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார். சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு; இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள். 'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள். அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது. மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude> j7gvx31sjxr3u9ckdkcsddzxjtxii76 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255 250 641883 1931825 1931370 2026-05-09T11:42:24Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>போய்விடும்! என்று பேசி, நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம், டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று. இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி! தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி! எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத்திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது! பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்,<noinclude></noinclude> 5wbtk9xgwyxyhg9rgh3zeboehndb9r1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305 250 641933 1931404 1929017 2026-05-08T12:29:13Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி! கடிதம் : 122 கொல்லிமலைச் சாரலிலே கொல்லிமலை மக்கள் இயல்பு - குமாரசாமி ராஜா கருத்துரை - தமிழக மலை வளம். கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் - ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் - பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன். தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே, இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்,ஜி.பி.சோமசுந்தரம்! கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude> p76cat11ki8xy0gmoy1zb05ersh3ai7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397 250 642025 1931534 1930997 2026-05-08T20:17:27Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-smaller|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> 6v86bmchpdlua80hloyyfkn4pcekgvg 1931535 1931534 2026-05-08T20:18:00Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> f637oyk1ie507vhqnz67fx8mhfgw8ig 1931536 1931535 2026-05-08T20:18:49Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-medium|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> j4598llkfzhwlhz21jjoz3h1wleuqob 1931537 1931536 2026-05-08T20:19:15Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> f637oyk1ie507vhqnz67fx8mhfgw8ig 1931752 1931537 2026-05-09T07:08:54Z Info-farmer 232 1931752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|9}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> pl5v89stnzyzctt17u7kca85lns6cdm 1931765 1931752 2026-05-09T07:20:52Z Info-farmer 232 வடிவத் திருத்தம் 1931765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|9}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> 1vn26c9wntenixzer2pcddo03x9ek5x 1931785 1931765 2026-05-09T08:01:22Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|9}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> k7oesdcllmpwqaa5nkdbzxg6chqgme1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/398 250 642026 1931753 1931031 2026-05-09T07:09:52Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|374||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும். அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!! இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண்! வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும், எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார். இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude> kh6yht3nl4lrbgsn1krppcqd744x5ee பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399 250 642027 1931754 1931032 2026-05-09T07:10:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> 1v0mfvnxwys8u5o4cop9rog8g561q68 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400 250 642028 1931750 1931033 2026-05-09T07:07:42Z Info-farmer 232 top space added 1931750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லையாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> 7flcwqgjli7wwm1sm3uks3l0britzru 1931751 1931750 2026-05-09T07:07:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லையாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> szoe7yz4354n8lh9g1lpu6ybfn8oret பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401 250 642029 1931756 1931034 2026-05-09T07:11:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude>முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டிருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத்தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!" என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!! "இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்! {{rh||★★★|}} “ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை. நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல், ஆன்றோரெல்லாம், அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன். {{left_margin|3em|<poem><b>காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!</b></poem>}}<noinclude></noinclude> avn71hn5z2n8dlb1u8eyu62q4jkv5tu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402 250 642030 1931757 1931229 2026-05-09T07:11:46Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|378||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம் காதலர் கடிதம், காதலர் பேச்சு! காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்; காதலே தேவர் சோதிக் கனவாம்; கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப் புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி, இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு; காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்; நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;</b></poem>}}<noinclude></noinclude> a14qb61eq4y4v4p6idyjix9il5s8j85 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403 250 642031 1931758 1931273 2026-05-09T07:12:09Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!</b></poem>}} எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி, என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே. {{rh||★★★|}}<noinclude></noinclude> jst4kn1kvx57ppw1c973x01nrm5yyjc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404 250 642032 1931759 1931277 2026-05-09T07:12:23Z Info-farmer 232 top space added 1931759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல். வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். {{left_margin|3em|<poem><b> நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று,</b></poem>}}<noinclude></noinclude> 20yoey2buy5xthv8ye7ocnwts5qey3g 1931760 1931759 2026-05-09T07:13:11Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல். வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். {{left_margin|3em|<poem><b> நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று,</b></poem>}}<noinclude></noinclude> is43vsc37ms8ajevlkby6ac5i026pi6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405 250 642033 1931761 1931278 2026-05-09T07:15:07Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,</b></poem>}} இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். {{left_margin|3em|<poem><b>அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,</b></poem>}} பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் - அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது. கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> hwlxndporl5h8yltaksvmkj8pxnaydc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406 250 642034 1931762 1931280 2026-05-09T07:15:27Z Info-farmer 232 top space added 1931762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா! செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> s6gmoxt1klmh8y1gfu64kah0x2rj61v 1931763 1931762 2026-05-09T07:15:42Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா! செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> bxoo0asw5ic8nqk9d0izolhdtfyjyek பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 642035 1931406 1931272 2026-05-08T12:50:56Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 7eq85amaq5ry1wer7ti4vrr16e58ofh 1931764 1931406 2026-05-09T07:17:07Z Info-farmer 232 திருத்தம் 1931764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{gap}}{{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{gap}}{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> hqger0d8ayjrittkoaqea7o7oxw6slm 1931783 1931764 2026-05-09T08:01:02Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{gap}}{{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{gap}}{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 5prr2xldcg1q0cprb6v5dw8s0ycle5o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 642036 1931767 1931283 2026-05-09T07:23:14Z Info-farmer 232 <b></b> 1931767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர். எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem>பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(<b>சிலப்: கடலாடு காதை</b>:76-81)}} </poem>}}<noinclude></noinclude> e6amhw60wy1c876rd9sku7ukzax9k1v 1931768 1931767 2026-05-09T07:23:29Z Info-farmer 232 top space added 1931768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர். எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem>பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(<b>சிலப்: கடலாடு காதை</b>:76-81)}} </poem>}}<noinclude></noinclude> cypd40ka46fie19dmkom6uf8ky8fkt7 1931782 1931768 2026-05-09T08:00:52Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர். எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem>பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(<b>சிலப்: கடலாடு காதை</b>:76-81)}} </poem>}}<noinclude></noinclude> 54dktcvdwo461dpzb2tzc7slnjtk8ob பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409 250 642037 1931781 1931398 2026-05-09T08:00:35Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude>(துவர் - பூசுவன, விரை - கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு.) {{left_margin|3em|<poem>அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே.</poem>}} {{Right|<b>(இலக்கணையாரிலம்பகம்: 69)</b>}} (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் - எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. {{rh||★★★|}} எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் - ஓரளவுக்கு - நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> kmjrrm4xzqjvbfsruyojcuss0k1yv8k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/410 250 642038 1931401 1930320 2026-05-08T12:05:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் - அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? {{rh||★★★|}} முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன். {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}}<noinclude></noinclude> kw78cn1qgfoxck8qd31ymzfzbmwilkj 1931402 1931401 2026-05-08T12:07:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் - அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? {{rh||★★★|}} முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன். {{rh||★★★|}}<noinclude></noinclude> 5e37qyb11rz1cas7d3jvlj1phfbvtjl 1931407 1931402 2026-05-08T12:53:14Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் - அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? {{rh||★★★|}} முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன். {{rh||★★★|}}<noinclude></noinclude> hzmc832s1qrz74pkvoxeomz8l6awf6t 1931566 1931407 2026-05-09T01:11:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|386||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் - அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? {{rh||★★★|}} முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன். {{rh||★★★|}}<noinclude></noinclude> 7uq9zd5xbjf5gqce7kkfvtq04pn12k3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/411 250 642039 1931403 1930178 2026-05-08T12:13:30Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude>உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது, என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> 7c2iwbuu52ribisf47lnnz5upln70gt 1931408 1931403 2026-05-08T12:53:38Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude>உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது, என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> 10v5g3nnb7jd4onn27tt3qstjjrci30 1931567 1931408 2026-05-09T01:14:11Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude>உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது, என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> 65tzqe8ajut5d9kvp3y7ruz6yx99mjn 1931589 1931567 2026-05-09T02:24:57Z Info-farmer 232 top space added 1931589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||387}}{{rule}}</noinclude> உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது, என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> t3pd3q963u44ndcorwcs4c0ajr7ebgb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/412 250 642040 1931517 1930321 2026-05-08T19:10:06Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். {{rh||★★★|}} உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடுகளாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem><b>இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்</b></poem>}}<noinclude></noinclude> 1tiwxsk7xkcx7hwogemvt19j17hmop7 1931525 1931517 2026-05-08T20:04:54Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். {{rh||★★★|}} உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடுகளாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem><b>இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்</b></poem>}}<noinclude></noinclude> f5fw5vgmhpw98szxvgv03kjehqgtwib 1931568 1931525 2026-05-09T01:17:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|388||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். {{rh||★★★|}} உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடுகளாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem><b>இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்</b></poem>}}<noinclude></noinclude> 52ki2ou1abrr6oohmiw4vofb8u0m0ni பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/413 250 642041 1931518 1930322 2026-05-08T19:15:05Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ்</b></poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> k10a60euiv3te0gjjpu1b6rp1jxm4pu 1931526 1931518 2026-05-08T20:05:13Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ்</b></poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> 3ycvl2iynkgkvahop24lvb33tapglyl 1931569 1931526 2026-05-09T01:20:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||389}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ்</b></poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> o8x5dylxnw30cn8ykwp20yk27sf06pn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/414 250 642042 1931519 1930323 2026-05-08T19:27:31Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர், என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{rh||★★★|}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> 5zdhtm0vcv30r5wgzm91iw3fusd4phs 1931527 1931519 2026-05-08T20:05:30Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர், என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{rh||★★★|}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> pfehwcl4cx694o5a4u9mja0ozoybmws 1931570 1931527 2026-05-09T01:23:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர், என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{rh||★★★|}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> se0iqvt8kn3mjxql1kns5dvck6z09gw 1931590 1931570 2026-05-09T02:26:06Z Info-farmer 232 top space added 1931590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|390||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர், என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{rh||★★★|}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> an2m6ecn9zdwrcb52f803zbqaomp9xs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/415 250 642043 1931520 1930183 2026-05-08T19:44:52Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude>இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> lkzirr99b7s79w4spiq1b6296ja9zzj 1931528 1931520 2026-05-08T20:05:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude>இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> ru1sva07abec5vabeshfae92wcn1q33 1931571 1931528 2026-05-09T01:26:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude>இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> tspzcb12ogjgmqeb9hk1a0i1d8yyl3b 1931591 1931571 2026-05-09T02:26:23Z Info-farmer 232 top space added 1931591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||391}}{{rule}}</noinclude> இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> 1r2i2em5uu12x7e5yh76sxbvb9r0tgp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/416 250 642044 1931521 1930184 2026-05-08T19:50:45Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு' போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> 3es7swu3ks8kiux3yrp9m6pevvwcdkz 1931529 1931521 2026-05-08T20:06:00Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு' போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> qaeub1fcejgcze7l9mwbhfos7qg6v1u 1931572 1931529 2026-05-09T01:29:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு' போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> 24jblr0ups2jucd1docgxhy79ex3wa6 1931592 1931572 2026-05-09T02:26:43Z Info-farmer 232 top space added 1931592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|392||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு' போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> 712u7t7fqxa8n00ob9umm4g5z5mw254 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/417 250 642045 1931522 1930324 2026-05-08T20:00:13Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude>அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு, இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? :மழை :நெஞ்சில் நெருப்பு :கன்னி விதவையானாள் :நீதிபதி, வக்கீலானார் :செந்தாமரையாள் :பூச்சு வேலை என்பன ★★★ இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!<noinclude></noinclude> odi4h3fhraeekcf0hzfgooqtnuqvnnd 1931530 1931522 2026-05-08T20:06:19Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude>அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு, இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? :மழை :நெஞ்சில் நெருப்பு :கன்னி விதவையானாள் :நீதிபதி, வக்கீலானார் :செந்தாமரையாள் :பூச்சு வேலை என்பன ★★★ இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!<noinclude></noinclude> 47zb9g64gde4ugbww6ju4x8yq7ki1z3 1931573 1931530 2026-05-09T01:32:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude>அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு, இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? :மழை :நெஞ்சில் நெருப்பு :கன்னி விதவையானாள் :நீதிபதி, வக்கீலானார் :செந்தாமரையாள் :பூச்சு வேலை என்பன ★★★ இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!<noinclude></noinclude> jb5vkjxl51e2ogw9itro9vwfm2e1b7o 1931593 1931573 2026-05-09T02:27:02Z Info-farmer 232 top space added 1931593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||393}}{{rule}}</noinclude> அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு, இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? :மழை :நெஞ்சில் நெருப்பு :கன்னி விதவையானாள் :நீதிபதி, வக்கீலானார் :செந்தாமரையாள் :பூச்சு வேலை என்பன ★★★ இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!<noinclude></noinclude> jz6ztonprglxeihp6u0ky41ffgy99cc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/418 250 642046 1931523 1930326 2026-05-08T20:02:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{float_right|அண்ணன்,}} {{rh|14.1.61||அண்ணாதுரை}}<noinclude></noinclude> ibthdbiby8avyg6nsl838opjc6crjbg 1931524 1931523 2026-05-08T20:04:12Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{rh|<br>14.1.61||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> tmik365uwpo5hr9imjiotaxgff6q1ti 1931531 1931524 2026-05-08T20:06:32Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{rh|<br>14.1.61||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> d9kfc5grrhwu33gibhidvuy9saw73d0 1931574 1931531 2026-05-09T01:35:57Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{rh|<br>14.1.61||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> si4kfnxu3bal4fepnv4rupoq80chctp 1931594 1931574 2026-05-09T02:27:32Z Info-farmer 232 top space added 1931594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|394||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன! மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! {{rh|<br>14.1.61||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> b3ujyprrquu5rg2bcubkt81gc6r7lo6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/419 250 642047 1931532 1929031 2026-05-08T20:12:09Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 131}} {{Right|{{x-larger|<b>கண்ணொளி போதும்....</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் - கழகத்தவர் பணி</b></poem>}} தம்பி! தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> 2swse5q2lp1b4hd4ccdfin1c19npqy5 1931533 1931532 2026-05-08T20:14:12Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 131}} {{Right|{{x-larger|<b>கண்ணொளி போதும்....</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் - கழகத்தவர் பணி</b></poem>}} தம்பி! தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> etrkjhpfxjuz05gg072rcpwtcfr0jg8 1931552 1931533 2026-05-08T22:38:21Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 131}} {{Right|{{x-larger|<b>கண்ணொளி போதும்....</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் - கழகத்தவர் பணி</b></poem>}} தம்பி! தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> r6kk1tsereqdo2ucdpbsz7yfrmcdb62 1931575 1931552 2026-05-09T01:39:05Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 131}} {{Right|{{x-larger|<b>கண்ணொளி போதும்....</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் - கழகத்தவர் பணி</b></poem>}} தம்பி! தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> rrc7lstje29fyewonzmvppm138vefgm 1931595 1931575 2026-05-09T02:28:56Z Info-farmer 232 {{gap2}} 1931595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 131}} {{Right|{{x-larger|<b>கண்ணொளி போதும்....</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் - கழகத்தவர் பணி</b></poem>}} தம்பி! தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> tslr5tlqs95ks4xdwn1sq508d4rkzhm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/420 250 642048 1931538 1930188 2026-05-08T20:32:59Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே-என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> lj515v0j4xtfk33kjry4ig3yu706jig 1931553 1931538 2026-05-08T22:38:37Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே-என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> rctiaje0d3zjlmhzg7z2n4fj20ln026 1931576 1931553 2026-05-09T01:42:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே-என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> pog8rtucj2stmgc3n40zi9o9cqvawhk 1931596 1931576 2026-05-09T02:29:20Z Info-farmer 232 top space added 1931596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|396||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே-என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> r699owt3ssc4agypz8o5qqwgs8nji1y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/421 250 642049 1931539 1930189 2026-05-08T21:02:58Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude>எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்-ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> hsaxl8jjwxonrjfszgtt420cxmzn559 1931554 1931539 2026-05-08T22:38:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude>எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்-ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> j6idepp477s5aimm968f021bz3xhq8q 1931577 1931554 2026-05-09T01:45:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude>எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்-ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> ota5wzc5q85eurzlnt0ggvwqm82oryr 1931597 1931577 2026-05-09T02:29:38Z Info-farmer 232 top space added 1931597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||397}}{{rule}}</noinclude> எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்-ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> 8sq77g03tnasg0scvhszwha5cuttf11 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/422 250 642050 1931540 1930190 2026-05-08T21:09:22Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|398||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர். என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர். உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப்பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! தி.மு.கழகத்திலே நெருக்கடி-நேசத் தொடர்புகளிலே முறிவுகள்-பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள்-குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு. நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை. மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டுவைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்.<noinclude></noinclude> 2o7auhmhahe0ie1y56mlsqa8mzt3lv6 1931555 1931540 2026-05-08T22:38:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|398||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர். என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர். உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப்பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! தி.மு.கழகத்திலே நெருக்கடி-நேசத் தொடர்புகளிலே முறிவுகள்-பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள்-குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு. நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை. மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டுவைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்.<noinclude></noinclude> 0xhfhv4r267vwp4g4wthh25qrib8xzz 1931578 1931555 2026-05-09T01:48:29Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|398||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர். என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர். உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப்பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! தி.மு.கழகத்திலே நெருக்கடி-நேசத் தொடர்புகளிலே முறிவுகள்-பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள்-குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு. நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை. மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டுவைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்.<noinclude></noinclude> noup9pptv4ernh58lb6f46pq2y9i7n5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/423 250 642051 1931541 1930191 2026-05-08T21:16:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude>வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே, நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர், தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> r2lfe2hg8kg3rwximujpy8b0stzu9i1 1931556 1931541 2026-05-08T22:39:11Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude>வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே, நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர், தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> 0td5atcz8uo616mptgvtaq7vzreggsj 1931579 1931556 2026-05-09T01:52:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude>வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே, நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர், தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> dnfd4amf9v7d9qrw8cngen5ifwem62j 1931598 1931579 2026-05-09T02:30:09Z Info-farmer 232 top space added 1931598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||399}}{{rule}}</noinclude> வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே, நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர், தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> pmx46hhi89f52n8iwibx1wfelou77ny பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/424 250 642052 1931542 1928925 2026-05-08T21:24:27Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|400||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது. கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர், ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude> 4azuueh88iqf5v0vrqd5c8o37wkoofs 1931557 1931542 2026-05-08T22:39:22Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|400||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது. கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர், ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude> 0gpxkhqsa7gn08mpq3ruu6ua682czkt 1931580 1931557 2026-05-09T01:56:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|400||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது. கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர், ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude> t64rn8hf0dvu4aveqnkpvv6rkxfzrh5 1931599 1931580 2026-05-09T02:30:30Z Info-farmer 232 top space added 1931599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|400||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது. கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர், ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude> hbpo6ykjbp8h120pfpmj0y0tp6mti2c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/425 250 642053 1931543 1930193 2026-05-08T21:32:55Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude>நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> 33hi23u6xraqdqqhj08vgdll6n8rxb3 1931558 1931543 2026-05-08T22:39:34Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude>நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> hdq49ybqtzx5784z19uvic9n99t2pe7 1931581 1931558 2026-05-09T02:00:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude>நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> kd00h77evvbd6akqehatwbwh9sqz51c 1931600 1931581 2026-05-09T02:30:53Z Info-farmer 232 top space added 1931600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||401}}{{rule}}</noinclude> நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> 7z5pzmivr2wvlbflanqnyf1trbt384x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/426 250 642054 1931544 1930194 2026-05-08T21:41:23Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|402||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று, காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!! இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே, பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude> s4zpaimhg1r0kn7bu0hptp14a2lkstl 1931559 1931544 2026-05-08T22:39:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|402||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று, காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!! இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே, பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude> nvcms2p6fs60yt2d2j547zwsryb9tpo 1931582 1931559 2026-05-09T02:03:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|402||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று, காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!! இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே, பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude> l19e3hxgxliqu8mq617wplf98xzxuqi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/427 250 642055 1931545 1930196 2026-05-08T21:49:40Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||403}}{{rule}}</noinclude>கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டுபாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude> 8ud9vg04u690qz6nm089vj6curf05ej 1931560 1931545 2026-05-08T22:40:19Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||403}}{{rule}}</noinclude>கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டுபாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude> 2wlu3bq30n0ip3zlnf2badjgt8qami2 1931583 1931560 2026-05-09T02:07:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||403}}{{rule}}</noinclude>கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டுபாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude> kzauyvyux7u71e4mfa286nled73uuen பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/428 250 642056 1931546 1930197 2026-05-08T21:59:01Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|404||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக்கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொருவாதம் புரிய நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது. மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது, மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude> p1sztz0j1a7kyilvt73zl11anv3d2c0 1931561 1931546 2026-05-08T22:40:44Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|404||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக்கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொருவாதம் புரிய நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது. மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது, மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude> lssbj1uk3ehtjhkn782w9dlj15m1big 1931584 1931561 2026-05-09T02:15:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|404||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக்கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொருவாதம் புரிய நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது. மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது, மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude> 5wp3bku8slz266t99krxr0zyf7mfg3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/429 250 642057 1931547 1930198 2026-05-08T22:06:28Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude>இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர். முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்-எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> 93nfya28uxtq0ekrw8lg0jfhrmx3r53 1931562 1931547 2026-05-08T22:40:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude>இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர். முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்-எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> 1orwxho42orbcljxw16nwg3amsqxt3j 1931585 1931562 2026-05-09T02:18:39Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude>இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர். முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்-எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> 9ys2bjeowpv7qxw13rqn5srtkeyiqcf 1931601 1931585 2026-05-09T02:31:52Z Info-farmer 232 top space added 1931601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||405}}{{rule}}</noinclude> இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர். முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்-எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> ppfbtj3jw0a232oko8ztdx8f41fg8h3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/430 250 642058 1931548 1930199 2026-05-08T22:15:40Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|406||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று, அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude> jt9920hoo8ebrtgaefet97nwssowjws 1931563 1931548 2026-05-08T22:41:08Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|406||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று, அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude> 293mc8zvjyih6a8bw5xhnw3uek0ljm9 1931586 1931563 2026-05-09T02:22:34Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|406||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று, அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude> 3ht6e8j2p0ljqsn72ghwipratuc073j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/431 250 642059 1931549 1930200 2026-05-08T22:29:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||407}}{{rule}}</noinclude>ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும்-இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாளமாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு- தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு-தி.மு.கழகம். இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி, கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude> junfynzmhkf7jrukkkac6yqej7j4w6k 1931564 1931549 2026-05-08T22:41:28Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||407}}{{rule}}</noinclude>ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும்-இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாளமாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு- தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு-தி.மு.கழகம். இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி, கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude> 8yzqeni6iv7460301e8kq4q9rwcxz4d 1931587 1931564 2026-05-09T02:23:16Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||407}}{{rule}}</noinclude>ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும்-இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாளமாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு- தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு-தி.மு.கழகம். இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி, கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude> 1pvffkyg88lweukogumwebwwz6bjnbf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/432 250 642060 1931550 1930201 2026-05-08T22:37:10Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம், அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் போக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து, அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. {{rh|<br>16.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 487crx85goffm716iaa4ii2hc8nrg8a 1931551 1931550 2026-05-08T22:37:42Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம், அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் போக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து, அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. {{rh|<br>||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ltyvgtwne1nx32qxs1g8y2egw072zz8 1931565 1931551 2026-05-08T22:41:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம், அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் போக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து, அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. {{rh|<br>||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> pvdq0r9uliwgfpfiz2n3xm8xla2p26r 1931588 1931565 2026-05-09T02:23:52Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1931588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|408||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம், அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் போக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து, அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. {{rh|<br>||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ocq8cxejqbh3mb16y49hlpol9ha5g41 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1931456 1931062 2026-05-08T13:37:41Z Booradleyp1 1964 1931456 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமா|அக்கமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} los5gfbcn1qnptz374k1tc571oiv5sg 1931464 1931456 2026-05-08T13:54:36Z Booradleyp1 1964 1931464 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 2wow5f9izei31qrjhqgxn6p3rqpamtr பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/179 250 642295 1931626 1929931 2026-05-09T03:48:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|170||கலைஞர்}}</noinclude>இன்னொரு வகையினர், எம்.ஜி.ஆர். அவர்களைக் கழகத்தைவிட்டு வெளியேற்ற ஒற்றைக்காலில் நின்று தீர்மானத்தை முன்மொழிந்து, வழிமொழிந்து காரசாரமாகப்பேசி, தங்கள் சொற்பொழிவு மேடைகளையே கடுஞ்சொல் மழை கொட்டும் மேடைகளாக மாற்றிக்கொண்டு இப்போது சத்யா ஸ்டுடியோவில் சரண் அடைந்திருப்பவர்கள். இவர்கள், முண்டா தட்டும் பயில்வான்களைப் போன்றவர்கள்! கிராமங்களில் முன்பெல்லாம் சண்டைக்கு ஆள் போவதற்கென்றே சில பயில்வான்கள் இருப்பார்கள். அவர்கள் மாறி மாறி எந்தத் தரப்புக்கு வேண்டுமானாலும் போகக் கூடியவர்கள். அடுத்த வகையினர், எம். ஜி. ஆர். அவர்களைப் பற்றி அவதூறுச் செய்திகளை எழுதி ஒரு சென்னைப் பத்திரிகைக்கு அனுப்பி, அந்தக் கடிதம் செயற்குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டு. தன்னைப் பற்றி எதிர்க்கட்சி ஏட்டுக்குச் செய்தி கொடுத்த “இவர் கட்சியில் இருப்பதா? அல்லது நான் இருப்பதா?” என்பதை முடிவுகட்டுங்கள் என்று எம். ஜி. ஆர். கேட்டு, அதன் காரணமாக கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு பிரபலக் குடும்பத்துப் பிரமுகர். அவரைச் சார்ந்தோர் — அவர்களும், இன்று எம். ஜி. ஆர். கட்சியிலே இருக்கிறார்கள்! <b>“வேலூர் பொதுக்குழுவிலே, எம்.ஜி. ஆரும், மற்றவர்களும் சம்பத்தைத் தாக்கி, சட்டையைக் கிழித்துவிட்டார்கள்! இதோ பாருங்கள் கிழிந்த சட்டையை!”</b> என்று ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு போய் மேடை போட்டு பேசிய கூட்டத்தினர் — அவர்கள் அண்ணாவுக்கு என்ன தெரியும்? என்று “அடாணா” விலே பேசி, தமிழ் தேசீயக் கட்சிக்கு ஓடி, பிறகு காங்கிரசிலே சேர்ந்து பிறகு கழகத்துக்கு வந்து, இப்போது எம். ஜி. ஆர். கட்சிக்குப் போய் எழுத்துப்பணி புரிந்து கொண்டிருப்பவர்கள். கடைசியாக நான் குறிப்பிட்டுள்ள இந்த வகையினர், அண்ணாவிட மிருந்து பிரிந்தபோது அவர்கள் எழுதிய<noinclude></noinclude> riwgbcoypu0556rg0mvw6pl4qco9zj8 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/180 250 642296 1931627 1930277 2026-05-09T03:50:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||171}}</noinclude>இழிதகை எழுத்துக்களும், பேசிய தரங்கெட்ட பேச்சுக்களும் — அப்பப்பா! நாடு தாங்கவில்லை! அதுபற்றி, அன்று அண்ணா எழுதிய வாசகங்களை உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன்: “தம்பீ! அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால்; ஒழித்துவிட்டுத் தான் உறங்கச் செல்வேன் என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை. இழிமொழி பேசுவோருக்குப் பதில்மொழி, அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாததுமல்ல; எவரிடமும் பாடம் கேட்கவும் தேவையில்லை — அறிவின் தரம் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாச நடை மிகுதியாகக் காணப்படும்; யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத்துடன், ‘ஐயயோ!’ என்று அலறுவர். பன்றி பாய்ந்தோடிவரின் அருவருப்புடன், ‘ஐயயோ!’ என்று கூறியபடி ஒதுங்கிக்கொள்வர். பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப்புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ, விரும்பும் போக்கினரல்ல. நம்மையும் நமது கொள்கையையும், கழகத்தையும் அழித்திடப் போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்ட போது, இன்று அதே செயலில் தம்மை சிக்க வைத்துக் கொண்டவர்கள். கழக எதிர்ப்பளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மறந்து விடவில்லை. மறந்து விடக்கூடியதாகவும் அமைந்ததல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது — நமது நாக்குக்கு பழக்கமற்ற சரக்கு. ஆதலால்! கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும்போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு. அவர்கள்<noinclude></noinclude> 1auc6hgzufsg2023cckl83z3vpkutqk பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/181 250 642310 1931628 1930280 2026-05-09T03:52:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|172||கலைஞர்}}</noinclude>அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப்பிடிததம் அவ்வளவு அழுத்தமானது என்பதனால் அல்ல, அவர்களின் ‘பாணி’ அது! பணியும் அஃதே! பிணி என்றும் கூறலாம்!! ‘பாணி’ கிடக்கட்டும் தம்பீ! இன்று அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகூடக் கிடக்கட்டும். கொள்கைப் பற்றுக் கொண்டிருந்த நாட்களில் அவர்கள் எத்துணை அழுத்தந்திருத்தமாக வாதாடினார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்வோம் — நன்றி கூடச் செலுத்திக்கொள்வேன்; என்னைப் பொறுத்தவரையில். உன்னைத்தானே அண்ணா இழிவாக ஏசுகிறார்கள் என்று ஆயாசத்துடன் கேட்கிறாய்! தம்பீ! எனக்கு முன்னொரு முறை நான் கூறியபடி, பட்ட கடனை தீர்ப்பது போன்று, மனதுக்கு ஒரு நிம்மதியே ஏற்படுகிறது, போகட்டும்; பகை உள்ளம் உலைக்கூடம் போன்றிருக்கும் — தீப்பொறி தான் வெளிவரும். நான் வியப்படையவில்லை; வெகுண்டிடவும் மாட்டேன்! இந்த இயல்பு இறந்துபட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன எனக்கிருக்கும் மகிழ்ச்சியெல்லாம், ஏற்புடைய—கொள்கைக்கு எண்ணலடங்காதார்; எதற்கும் அஞ்சாதார் அணிவகுத்து நிற்கின்றார் என்பதுதான்!” 1961-ஆம் ஆண்டு நமது அண்ணனை வசைபொழிந்து திரிந்தவர்களைப் பற்றி அண்ணன், தம்பிக்கு எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்புக்கள் தான் இவைகள்! அண்ணா, யாரை மனத்தில் நினைத்துக்கொண்டு இந்த வாசகங்களைத் தீட்டினாரோ அவர்கள், அண்ணாவைத் திட்டும் கடசியில் புகுந்து, பிறகு காங்கிரஸ். பிறகு கழகம், என்று மாறி, இப்போது தற்காலிகமாக அண்ணா பெயரில்<noinclude></noinclude> lp7do5m6sg3h5tvkzc2356a7vfp7aw4 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/182 250 642311 1931629 1930284 2026-05-09T03:53:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||173}}</noinclude>உள்ள கட்சிக்குச் சென்று நமது கழகத்தின் மீது மண்ணைவாரி வீசிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சொல்கிறேன் உனக்கு! இப்படிப்பட்டவர்களுக்கு எந்தக்கட்சியிலும் மதிப்பு இருக்கப் போவதில்லை. இப்போது இவர்களிருக்கிற சொந்தக் கட்சியிலும் மதிப்பு கிடையாது! {{Right|அன்புள்ள,<br> <b>மு. க.</b><br> 17 – 5 – 76}} {{nop}}<noinclude></noinclude> gebdpget2t6s16zwgjimrea15poiqik பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/183 250 642312 1931630 1930515 2026-05-09T03:54:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>இதயமேன் தோற்கிறது?</b>}} உடன்பிறப்பே, வயிறு தனக்காக அழுகிறது; இதயம் மற்றவர்களுக்காக உருகுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். :“வயிற்றுக்கு மேலே வைத்தேன் இதயத்தை? :வயிற்றைவிட இதயம் மேலான தென்பதனால்! :வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடக்கின்ற போரில் :வயிறேன் வெல்கிறது? இதயமேன் தோற்கிறது? :படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் பாராமல் :வயிறே பெரிதென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” இந்தக் கவிதை எழுதியவர் ஒரு இளைஞர்தான்! வாரிச் சீவிய முடியும், வசீகர விழியும், வரைந்த நேர் கோடுபோல் புது மீசையும் கொண்டவர்! குருவிக் கரம்பை சண்முகம் என்பது இந்தக் கவிஞரின் பெயர். பாரதியார், பாரதிதாசனுக்குப் பிறகு வளர்ந்துவரும் கவிஞர் பரம்பரையில் இவருக்கோர் சிறப்பான இடமுண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவர். இவரை அதிகம் பாராட்டப் பயமாக இருக்கிறது! எனக்காக அல்ல! அவருக்காகத்தான்! அவரை விட்டுவிட்டு அவரது கவிதை வரிகளைப் பார்ப்போம். {{nop}}<noinclude></noinclude> cq2dlivsmfve9ogmnutx4ysg2wn95i1 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/184 250 642353 1931631 1930516 2026-05-09T03:56:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||175}}</noinclude>:“வயிறேன் வெல்கிறது? :இதயமேன் தோற்கிறது?” இப்படிக் கேள்வி எழுப்புகிற நண்பர், “வயிறே பெரிதென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” என்று விடையையும் அளித்துக் கவிதையை முடிக்கிறார். வயிறே பெரிதென்று வாழ்கின்றவர்கள், படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் பார்க்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு! படைப்பின் மகத்துவம் என்ன? வயிறு கீழே இருக்கிறது! வயிற்றைவிட இதயம் மேலானது என்பதை இந்தப் படைப்பின் மகத்துவம் விளக்குகிறது என்பது கவிதையின் தொடக்கம். பசித் தீயினால் பற்றியெறிந்த வயிறுகளுக்கும்; பளிங்கு மாளிகையில் பாவையர் அணைப்பில் சுகங்கண்ட மன்னர்களின் இதயங்களுக்கும் நடைபெற்ற போராட்டங்களில், இறுதியில் வயிற்றுப்பட்டாளங்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன. பிரஞ்சு நாட்டு லூயிமன்னனின் பாஸ்டிலி சிறைக் கொடுமைகளையும், ரஷ்ய நாட்டு ஜார் மன்னனின் “உம்” என்றால் சிறைவாசம்—“ஏன்?” என்றால் வனவாசம்! என்ற வெறியாட்டங்களையும் புறங்கண்டு புதிய வரலாறுகளைப் படைத்த தொழிலாளர்களை உசுப்பிவிட்டது; வறுமை! வறுமை! வேதனை! வேதனை! பசி! பசி! அதாவது ஆணவங்கொண்ட இதயத்துக்கும், அல்லற்பட்டு ஆற்றாத அளவுக்கு மூண்ட, பசிக்கொடுமைக்கும் இடையில் எழுந்த போராட்டத்தில் வயிறுவென்றது! அதுதான் நியாயமும்கூட! கவிஞர் குறிப்பிடுவது அந்தப் போராட்டத்தையல்ல! பல மனிதர்களுடைய வயிற்றுக்கும் சில மனிதர்களுடைய இதயத்துக்கும் நடக்கிற போராட்டத்தில் நல்லோர் அனுதாபம் வயிற்றின் பக்கம்தான்!{{nop}}<noinclude></noinclude> ni8jzby8pu1hgawv85wmligmiwye20j பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/185 250 642354 1931632 1930517 2026-05-09T03:57:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|176||கலைஞர்}}</noinclude>ஆனால், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் இதயம் வெல்வது சரியா? அல்லது வயிறு வெல்வது சரியா? என்பதுதான் பிரச்சினை! வயிறா? இதயமா? என்ற கேள்வியைக் கேட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டும்போது, சோவியத் ரஷ்யா, பிரான்சு, போன்ற நாடுகள் வயிற்றின் வெற்றியை வளிப்படுத்துகின்றன! ஆனால்! அந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அடங்கிய இந்த உலகில், ஒவ்வொரு தனி மனிதனும் தனது இதயத்துக்கு முக்கியம் கொடுக்கிறானா? அல்லது வயிற்றுக்கா? இரண்டில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? வயிறா? இதயமா? என்ற கேள்வி, தனி மனிதனின் வாழ்வில் எழும்போது இரண்டில் எந்த ஒன்றை அவன் தேர்ந்தெடுக்கவேண்டும்? “நீ யாரை இதுவரை நேசித்து வந்தாயோ, அவனைக் காட்டிக்கொடு! அதற்குப் பரிசு இதோ பார்!” இப்படி ஒரு கவர்ச்சியான ஆசை காட்டப்படும்போது தனி மனிதனுடைய வாழ்வில் பிரச்சினை உருவாகிறது! :“வயிறா? இதயமா?” இந்தக் கேள்விக்கு அவன் விடை காண வேண்டியவனாகிறான். “நீ, அவனை இனியும் நேசித்தால், அவனுடைய அன்புக்குரிய தோழனாக இருந்தால் ஏன்; அவனைப்பற்றிப் பேசினால் கூட! இல்லை! இல்லை! நினைத்தால்கூட! உனக்குக் கேடு வரும்! வாழ்வு கெடும்! வளம் இழப்பாய்!” இப்படி ஒரு அச்சுறுத்தல் கிளம்புகிறதோ இல்லையோ — அவனே இதுபோல ஒரு கனவு காணுகிறான் என்றுவைத்துக் கொள்வோம்! அப்போதும் இதோ பிரச்சினைதான்!{{nop}}<noinclude></noinclude> sag1d1pl76rqtw1mbibf4j2i29zw9f6 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/186 250 642355 1931633 1930518 2026-05-09T03:58:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||177}}</noinclude>“வயிறா? இதயமா?” “இங்கிலாந்து மன்னரைப் பற்றிப் புகழ்ந்து பேசு! இங்கிருக்கும் காந்தியடிகளைப் பற்றி வாய் திறக்காதே! திறந்தால், சிறைக்கதவு திறக்கும்!” வெள்ளையர் விடுத்த ஆணைகள் இடியென முழங்கியபோது; இந்திய விடுதலை வீரர்களின், இதயங்களும் வயிறுகளும் வாதிட்டுக் கொண்டன! வயிறுகள் பின்வாங்கின! இதயங்கள் வென்றன! உலகம் தோன்றி, மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வயிற்றுக்கும் இதயத்துக்கும் போராட்டம் நடந்து கொண்டுதானிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன்; வயிறுகள் பல, ஒரு அணியிலும்; இதயங்கள் சில, ஒரு அணியிலும் நின்று நடைபெறுகிற வர்க்கப் போராட்டங்களை நான் விவரிக்க இந்தக் கடிதம் எழுதவில்லை. இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் அந்த வர்க்கப் போராட்டத்தை, முற்போக்கான திட்டங்களின் மூலம் தவிர்த்து — நிலத் திமிங்கலங்கள், பூர்ஷுவாக்கள், ஆலை அரசர்கள் — முதலியவர்களிடமிருந்து பாட்டாளிச் சமுதாயத்தைக் காப்பாற்றி விடுவிக்கவும், அவர்தம் வாழ்வில் ஒளியேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை நிறுவிடவும் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளைக் கழகம் ஆதரித்து வந்திருக்கிறது. தொடர்ந்து ஆதரிக்கும்! எனவே, வர்க்கப் போராட்டத்தில் வயிற்றின் போர்க் கொடியை அலட்சியப்படுத்துகிற இதயங்களுக்கு நமது ஆதரவு இல்லை. இங்கே, கவிஞரும் நானும் வாதாடுவது அந்த இதயத்தைப்பற்றியல்ல!{{nop}}<noinclude></noinclude> rbnsyvdetjnr3lbag4o0j38idgicfdm பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/187 250 642357 1931634 1930521 2026-05-09T03:59:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|178||கலைஞர்}}</noinclude>தனி மனிதனின் வாழ்வில் பிரச்சினை உருவாகிறது! வயிறும் இதயமும் விவாதிக்கின்றன! வயிறு:- ஏ, இதயமே; ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்? நீ எடுக்கும் அவசர முடிவுகளால் நம்மைச் சுமக்கும் இந்த மனிதனின் கதி என்ன ஆகும் என்று யோசித்துப்பார்! இதயம்:- வயிறே! எந்த முடிவையும் நான் அவசரமாக எடுக்க மாட்டேன்! நம்மைத் தூக்கிச் சுமக்கிற மனிதனின் வாழ்க்கையில் எனக்கு மிகுந்த அக்கறையுண்டு. ஒன்றை மறந்துவிடாதே! என்றைக்கோ ஒருநாள் இந்த மனிதன் சாகப்போகிறான்; அவனோடு சேர்ந்து நாமும் மண்ணாகவோ, சாம்பலாகவோ ஆகப்போகிறோம்! அப்படிச் சாகிறவனை அவன் செத்த பிறகும் சரித்திரத்தில் வாழவைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆனால் நீயோ, அவன் சாகிறவரையில் சந்தோஷமாக வாழ்ந்தால் போதுமென்கிறாய்! வயிறு:- இதயமே! மனித வாழ்க்கை என்பது ஒரு முறை முடிந்துவிட்டால் மறுபடியும் கிடைக்கக் கூடியதா? ‘கார் டயரில்’ காற்றுப் போய் விட்டால். மறுபடியும் அடித்துக்கொள்வது போல; செத்துவிட்ட மனிதனுக்கு மூச்சைத் திணித்து எழுப்ப உலவவிட முடியாது! எனவே கிடைத்த வாழ்வை சுகமாக அனுபவிக்க வேண்டும். அவன் மட்டுமல்ல, அவன் பெண்டு<noinclude></noinclude> hs2arqr5ovztiym1b3cxqsxlyily44f அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 252 642359 1931499 1930993 2026-05-08T17:17:03Z Info-farmer 232 உள்ளீடு 1931499 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 40=கடிதம்88 58=கடிதம்89 79=கடிதம்90 95=கடிதம்91 113=கடிதம்92 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] rfk8rpdsqz1bwncyh8nfsiuvrnylya3 1931500 1931499 2026-05-08T17:18:36Z Info-farmer 232 1931500 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 40=கடிதம்88 58=கடிதம்89 79=கடிதம்90 95=கடிதம்91 113=கடிதம்92 =கடிதம்93 =கடிதம்94 =கடிதம்95 =கடிதம்96 =கடிதம்97 =கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 4waib8psquhnuoqhgliysson4efkpw7 1931504 1931500 2026-05-08T17:25:18Z Info-farmer 232 51 1931504 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 =கடிதம்91 =கடிதம்92 =கடிதம்93 =கடிதம்94 =கடிதம்95 =கடிதம்96 =கடிதம்97 =கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 2z9p9fsjnzwhhpihb4yh10smoob3d0f 1931505 1931504 2026-05-08T17:27:38Z Info-farmer 232 111 1931505 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 =கடிதம்95 =கடிதம்96 =கடிதம்97 =கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] ocn7sph2aawheh73hkdwlcy2gop9ia8 1931506 1931505 2026-05-08T17:30:24Z Info-farmer 232 கடிதம் பக்க எண் இணைப்பு முடிந்த து 1931506 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 129=கடிதம்95 144=கடிதம்96 157=கடிதம்97 169=கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 63wk9gpcozy2l0rerrsovuo5mloyu5z 1931828 1931506 2026-05-09T11:51:40Z Info-farmer 232 தொகுதி இணைப்புகள் 1931828 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 129=கடிதம்95 144=கடிதம்96 157=கடிதம்97 169=கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 7489ljljs57wraa8rmggdyhoy1yuscl அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 253 642360 1931510 1930569 2026-05-08T17:40:20Z Info-farmer 232 /* வடிவங்கள் */ புதிய பகுதி 1931510 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். == வடிவங்கள் == * கடிதத் தொடக்கம் : [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/111]] * கடித முடிவு : [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/186]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:40, 8 மே 2026 (UTC) lcmqld30cz28neqn70v17auwyvfvzvm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/8 250 642433 1931488 1930992 2026-05-08T16:11:55Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை 1931488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> pbbgo0ibfv513a2v2n7jiesgdfdc83q 1931489 1931488 2026-05-08T16:12:36Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ வடிவமும் சரியாக கொடுக்கப்பட்டது 1931489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> olbbl67dxuf8icpjcsh01zc9orrhrc4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642457 1931502 1931308 2026-05-08T17:23:07Z Info-farmer 232 கடிதம் : 88 1931502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 88 தம்பி! இனியன பல இனி! பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம். முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாம லிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன. என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிடம் இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> 2ax8h4muijv9rmt3k2uk2bbk656zl8v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642467 1931503 1931322 2026-05-08T17:24:37Z Info-farmer 232 துப்புரவு 1931503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி! இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! 'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து நமது இலட்சியம் 'கடிதம்: 89 னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப் பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> 4009anxnszxwrw9c2yjadvi910fa6es பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/84 250 642514 1931412 1931156 2026-05-08T13:13:04Z Rabiyathul 5890 + மேலடி 1931412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள். . வெளியிடுகின்றன. அவரும் மறுத்திடவில்லை. அதனை என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை. இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம். அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள். அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள். இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட் டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது. தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைத்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட. முடியாது! பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும் எடுத்தேன் தமிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன?<noinclude></noinclude> n245lgaolhshof3iilltncdhiyvprz9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/85 250 642515 1931413 1931157 2026-05-08T13:13:34Z Rabiyathul 5890 + மேலடி 1931413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|75}}</b>{{rule}}</noinclude> அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க 'அறிக்கைகளை' எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் இருக்கிறோம். பதினைந்து பேர்களாவது கோவிந்த வல்லப் பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி.மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் இளைஞர்கள் -இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல பயந்துகொண்டு அல்ல இந்தியா ஒரு நாடு அல்ல பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, ‘அசகாய சூரர்கள்' என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, 'சஷ்டியப்த பூர்த்திகளல்ல. ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்! 15, த.அ.க.2<noinclude></noinclude> 0mycnuq9fes50n2v7xo20tu5l3jr2lw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/86 250 642516 1931414 1931158 2026-05-08T13:14:21Z Rabiyathul 5890 + மேலடி 1931414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தங்களை 'மேதாவிகள்' என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப் பட்டவர்கள். ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும். சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டி களில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினை களைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் 'பிடித்தாட்டும், பிறகு 'ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்' என்று. நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை! அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை, ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே இதயத்தை. திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இ டம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன்.. ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை. அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ!. பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர் களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை<noinclude></noinclude> bjpyglvope6hifhsv38sdm7qagxvdla பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/87 250 642517 1931416 1931159 2026-05-08T13:14:54Z Rabiyathul 5890 + மேலடி 1931416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|77}}</b>{{rule}}</noinclude> அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் பாராட்டு கிறேன். தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் மத்திய சர்க்கரர் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள். இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே. இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை. "டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற் சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்த வில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர் கள். எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம். இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்... பிற மாநில துரைத் தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாநில அமைச்சர்களோ, ஐந்து வருஷத்துக்குக் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, மத்திய சர்க்காரி லிருந்து மாநில சர்க்காருக்கு அனுப்பப்பட்டவர்கள்போல,<noinclude></noinclude> 02j6gtd1la6caxn52z7fioyyhxv7s71 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/88 250 642518 1931417 1931160 2026-05-08T13:15:26Z Rabiyathul 5890 + மேலடி 1931417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள். எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்! "மந்திரிகளா வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்பு கிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!". இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல. நாக்கில் நரம்பின்றி. பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல. இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் 'கனம்' பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம்; அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு<noinclude></noinclude> 3akrqhyfsvdu0v2ke8ryv45ubhxtec0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/89 250 642519 1931418 1931161 2026-05-08T13:15:59Z Rabiyathul 5890 + மேலடி 1931418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|79}}</b>{{rule}}</noinclude> எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும். வனை. துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்ட இதோ இன்னொருவர். சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு. திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு. இந்தியா முழுமைக்கும் திட்டம் லோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு! போடப்படும் நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும். மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார். இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி! எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும். பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை!<noinclude></noinclude> 3aopagxe8h6q6znujixxibbtf0m6svp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642520 1931419 1931162 2026-05-08T13:16:31Z Rabiyathul 5890 + மேலடி 1931419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. "மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல! என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவலட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை. தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை; பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம்: அண்ணன், 17-4-60<noinclude></noinclude> rlnxckfaks7gy63f4asvqyjziu8lirg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642521 1931420 1931163 2026-05-08T13:17:05Z Rabiyathul 5890 + மேலடி 1931420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|81}}</b>{{rule}}</noinclude>கடிதம்: 93 தம்பி! “ஆட்டம்பாம்" ஆண்டியப்பன் அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில் ''மகாராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும்; ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்." "பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?" "என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக். கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக் காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன்.ஆனால், என் எதிரே; என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்.." "ஏசினானா? யார் அந்த அற்பன்?" . "அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> 0g677dwnvfv8atrmzs6e77w1v8lhlf5 1931459 1931420 2026-05-08T13:44:52Z Info-farmer 232 - துப்புஉரவு 1931459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 93 தம்பி! “ஆட்டம்பாம்" ஆண்டியப்பன் அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில் ''மகாராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும்; ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்." "பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?" "என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக். கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக் காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன்.ஆனால், என் எதிரே; என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்.." "ஏசினானா? யார் அந்த அற்பன்?" . "அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> j18j5qgp061bfwvj82fsbcw6x8pw7qg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642522 1931422 1931164 2026-05-08T13:17:38Z Rabiyathul 5890 + மேலடி 1931422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்." "ஏசினவன்..?” "எல்லையப்பன்," - - "தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி *சரி - என்ன கூறினான் குறை யாது என்கிறான்." "ஆட்சி சரியாக இல்லையாம்.." - "கோணலாட்சி கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல். "வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என். கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள். நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம். எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே,<noinclude></noinclude> 7phh9u0z3kn84e1zf89w0mjvu3kvman பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642523 1931423 1931165 2026-05-08T13:18:12Z Rabiyathul 5890 + மேலடி 1931423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|83}}</b>{{rule}}</noinclude> அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்" 'ஆமாம். "எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான். கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான். "ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்." "ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதை பதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, சுக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும். உண்மை நிலைமையை மறைத்திடலாகாது. ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான். 'மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு -<noinclude></noinclude> nbn5d60txynd2kdrfpf4mp6vquplw7a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642524 1931424 1931166 2026-05-08T13:18:58Z Rabiyathul 5890 + மேலடி 1931424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி : அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!' என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்... தீப்பொறி உமிழும் கண்களுடன்." "அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! : குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?!. போகுமா, முன்பு குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர். எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே!' குனிந்த தலை நிமிராமல் புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்." கிறது." "உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக் “அத்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான். பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை போட்டு மிதித்துக் கூழாக்கின. கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!" என்று அவன் பேசுகிறான். மக்கள்; வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்" "எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியை ரியைக்க யைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப் பட்டேன்.<noinclude></noinclude> 30kcolu7qwc1c7aq5bnio3flgaj1zt3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642525 1931425 1931167 2026-05-08T13:19:32Z Rabiyathul 5890 + மேலடி 1931425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|85}}</b>{{rule}}</noinclude> "நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன்; எப்படிச் சொல்லுகிறான். என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள் நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!" 34 "அப்படியா சொன்னான் அயோக்கியன். யார் அங்கே... வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே." "மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்." "சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன். இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!"<noinclude></noinclude> 2d13bp02qzsubon087ikabqtgjtx341 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642526 1931426 1931168 2026-05-08T13:20:06Z Rabiyathul 5890 + மேலடி 1931426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உடனே போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்... "பத்து நாட்களா... "பத்து நாட்கள்; குதிரைப்படை கொடுமை செய்தது என்று பேசிய குற்றத்துக்காக பிறகு, எட்டு நாட்கள் எரிகிற நெருப்புக் குழிக்கு மேலே, சுட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும் - வரி எதிர்ப்புப் பேச்சுக்காக.. "இதோ தளபதியார்! குறித்துக்கொண்டார், தாங்கள் கூறியவற்றை, எல்லையப்பன் இப்போது சந்தைச் சதுக்கத்தில் தான் இருப்பான், ஏதாவது சத்தமிட்டுக்கொண்டு - இழுத்து வரச் சொல்லுங்கள்"'' “இழுத்துச் செல்லும் தளபதியாரே! பிடரியில் அறைந்து. இழுத்துச்சென்று, இருட்டறையில் போட்டுப் பூட்டும். உம்! எல்லையப்பனை அல்ல, இந்த இச்சகம் பேசித் திரியும் பிச்சு மணியை" "மகாராஜா! மகாராஜா! என்னையா... என்னையா "வேறு யாரை? அடே, அறிவிலி! இதைக் கேள் எல்லையப்பன், என் ஆட்சி முறைக்கு மாறாக வேறோர் ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறிக்... கொண்டு, அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு வருபவன். குற்றம் குறைகளைக் கண்டிப்பதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டான். இளித்துக்கிடந்தால் இன்ப வாழ்வு கிடைக்குமே, அடங்கிக்கிடந்தால் பட்டம் பதவி பெறலாமே என்ற பிச்சைப்புத்தி இல்லாதவன், என்னை அண்டிப் பிழைப்பவன், நீ! உன்னை ஆளாக்கிவிட்டவன், நான்! என் ஏவலைச் செய்வதற்காகக் கூலிகேட்டுப் பெறுபவன் நீ! கொடுத்த கூலிக்குத் தக்கபடி, வேவை செய்கிறாயா என்று கணக்குப் பார்க்கவேண்டியவன் நான்! தலையாட்டிக் கிடக்கிறாய், தர்பாரில்; மாளிகை கிடைத்தது அதனாலே!! அப்படிப்பட்ட நீ, எல்லையப்பன் என் ஆட்சியில் உள்ள குறைகளைக் காட்டிப்பேசினான் என்று எடுத்துக்காட்டும் பாவனையில், ஆட்சியைக் கண்டித்துப் பேசினாய்! ஆற்றுவெள்ளத்தால்<noinclude></noinclude> 8th8aw8y1f4i2srvdgkvkxn4066ghv1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642527 1931427 1931169 2026-05-08T13:20:38Z Rabiyathul 5890 + மேலடி 1931427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|87}}</b>{{rule}}</noinclude> ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்று குவித்தேன் என்று எல்லையப்பன் பேசினான் என்று அவனைக் கண்டித்தாய் ஆனால் அதே பேச்சோடு பேச்சாக குதிரைப்படையினர் நடத்திய கொடுமைக்கு நானே காரணம் என்று இடித்துரைத்தாய்! வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று என் எதிரிலேயே பேசுகிறாய் எல்லையப்பனைக் காட்டிக் கொண்டே! நானென்ன அறிவற்றவனோ! எல்லையப்பன் கூறிய, குற்றங்கள் அத்தனையையும், நீயும் கூறுகிறாய். அவன் எங்கோ பேசினான்! உனக்கு உள்ள நெஞ்சழுத்தம், என் எதிரிலேயே பேசுகிறாய்!! ஏடா! மூடா! எல்லையப்பனை நீ ஏசிப்பேசி விட்டதாலேயே, உன்னை நான், ஓா் யோக்யன் என்று கணக்கிட்டுக் கொண்டேன் என்றா கணக்கிட்டுக் கொண்டாய். என் ஆட்சி முறையிலே இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் எடுத்துக்காட்டிப் பேசுகிறான் அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல்!! நீ! அரசே! உமது ஆட்சியிலே குறை ஏது! என்றா பேசினாய்? இல்லையே. நீயும் அவன் என்னென்ன குற்றம் குறைகளைக் கூறினானோ, அவைகளை என் எதிரிலேயே எடுத்துக்காட் டினாய். உன்போக்குக்கு, எனக்குப் புரியாது என்றா எண்ணிக் கொண்டாய் தளபதியாரே! நமது கொலுமண்டபத்தில், நமது பரிவாரத்தில் ஒருவனாக இடம் பெற்று அமர்ந்துகொண்டு நமது ஆட்சியைக் குறைகூறிய இந்தக் கெடுமதியாளனை, இழுத்துக்கொண்டுபோய், அடைத்திடுங்கள். சிறையில், இருட்டறையில்." "ஐயையோ.. வேண்டாம், வேண்டாம்... தப்பு தப்பு!" கூச்சல் கேட்டு, அலறி எழுந்து உட்கார்ந்தேன். அருகே. படுத்து உறங்கிக்கொண்டிருந்த, ஆண்டியப்பன், ஏதோ கனவு கண்டு உளறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தட்டி எழுப்பி, "ஆண்டி! என்ன இது? ஏன், இப்படிக் குளறிக்கொண் டிருந்தாயே..." என்று கேட்டேன் ஒரு விநாடி மிரண்ட்படி பார்த்தான் மறுவிநாடி அடக்கமுடியாத - ஒரு . நிலையில், ஓவெனச் சிரித்தான். 'என்ன? என்ன? என்று நான் கேட்டதற்கு, ஆண்டியப்பன் 'ஒன்றுமில்லை வேடிக்கையான கனவு கண்டேன்" என்றான். “கனவில்..?" என்று தான் கேட்டேன்.<noinclude></noinclude> e8udsp6k8rr5k1msrx3wp6l0ohyt7mq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/98 250 642528 1931428 1931170 2026-05-08T13:21:12Z Rabiyathul 5890 + மேலடி 1931428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்” என்றான் ஆண்டியப்பன். முழுவதும் கூறும்படி கேட்டேன். எளிதில் இசைவு தரவில்லை. மெத்த வற்புறுத்திய பிறகு, கனவிற் கண்டதை விவரமாகக் கூறினான். அதைத்தான் தம்பி! நான், முறைப்படுத்தி, துவக்கத்திலே தந்திருக்கிறேன். “அரசன், எப்படி இருந்தான்?" என்று நான் விளக்கம் கேட்டேன். "போடா, போ ! இதை வைத்துக்கொண்டு, கேலி செய்யப் போகிறாய்; தெரியுமே; எனக்கு என்றான்." நெடுநேரத்துக்குப் பிறகுதான், அரசன் காமராஜர்போல இருந்ததாகக் கூறினான். என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டியப்பன், அப்படி ஒரு வேடிக்கையான கனவு ஏன் கண்டான் என்பதற்கான காரணமும் எனக்கு விளங்கலாயிற்று. 'தம்பி! ஆண்டியப்பன், என் நண்பன், இருந்தும் காங்கிரசில் இருப்பவன், அங்கு இருப்பவர்களெல்லாம் நமக்குப் பகைவர்களா,” என்ன; நம்மோடு இருக்கவேண்டியவர்கள், நம்முடன் இருந்தவர்கள், நமது அழைப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வகையினரன்றோ, இன்றையக் காங்கிரசில், ஒலிக்கும் மணிகளாகி உள்ளனர். அந்த வகையினரில், ஆண்டியப்பன்! பேச்சாளனுங்கூட! பேச்சிலென்ன இருக்கிறது, செயல்வேண்டும், அனைவரும் செயல் வீரராகவேண்டும் என்று பேசும் பேச்சாளன். "அட.., பார்க்கலாம் பேசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தால், நீ, கிடைத்தால்தானே. நாள் தவறாமலா, கூட்டம்! செச்செச்சே! உனக்கும்தான். கலிப்பாக இல்லையா!! என்ன இருக்கிறது, அப்படிப் பேச, ஓவ்வொருநாளும்!" என்று என்னிடம், கனிவுடனும் உரிமையுடனும் பேசும் போக்கினன் ஆண்டியப்பன். காங்கிரஸ் வட்டாரத்தில், ஆட்டம் பாம் ஆண்டியப்பன் என்று, சிலநாள், விளம்பரம் செய்துகூட வந்தார்கள்! இரண்டோர் மாதம். நள்ளிரவு, நான் மழையூர் சென்றபோது, சிறு தூறல் விழத் தொடங்கிற்று. ஆனால் பத்தாயிரம் இருக்கும் கூட்டத்<noinclude></noinclude> 2gfs6q7qx5eytiq4gq1o84qw27ndx7p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/99 250 642529 1931429 1931171 2026-05-08T13:21:45Z Rabiyathul 5890 + மேலடி 1931429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|89}}</b>{{rule}}</noinclude> திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில் மோட்டார் கொண்டு. வந்தவர், முடியாது என்று கூறிவிட்டதால், வந்தவாசி திரும்பினேன்; தவனி கூட்டம் நடைபெறவில்லை. மறுநாள், ஆண்டியப்பன் வந்திருந்தான். "ஆமாம். இந்த இடங்களெல்லாம் போகிறாயே உழுந்தை, மழையூர், காட்டுகாநல்லூர், பொன்னூர், ஊத்துக்காடு என்றெல்லாம். இங்கே உள்ளவர்களிடம், என்ன பேசுகிறாய்?" என்று வியப்புடன் கேட்டான். இரண்டு ஆண்டுகட்கு முன்பு, இதே ஆண்டியப்பன் கேட்டிருக்கிறான். "என்ன உங்கள் கழகம், திருப்பித் திருப்பி திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், சென்னை, இவ்வளவுதானே. கிராமப்பக்கம், யார் உங்களை அழைக்கிறார்கள்!! என்று கேலி பேசி இருக்கிறான். இப்போது தம்பி! நமது கழகக் கூட்டங்கள், பெரும் அளவு கிராமங்களிலே நடைபெறுவது கண்டு, அதே ஆண்டியப்பன், "அந்தக் கிராமங்களில் என்ன வேலை?” என்று கேட்கிறான். கேலிக்காக அல்ல! சிறிதளவு கிலியுடன்!! சிற்றூர்களிலே நமது கழகம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வருவதைக் கள்ளங்கபடமற்ற கட்டிளங்காளைகள், கல்லூரி சென்றும் பெறமுடியாத நல்லறிவைக் காலமெனும் ஆசானிடம் கற்றுத் தெளிந்த பெரியவர்கள் ஊரைப் பார்த்து, அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ள தாய்மார்கள், நமது கழகக் கருத்துக்களை, சுவை தருவன என்று முதலில் கவனிக்கத் தொடங்கி,பிறகு, பயனுள்ளவை என்பதை அறிந்து சுவைப்பதை, ஆண்டியப்பன் மட்டுமா, பொதுவாகவே காங்கிரசில் பலரும், உணரவில்லை, அது நமக்கு நல்லதுதானே!" ஆண்டியப்பனிடம், பிறகு, அரசியல் உரையாடல், சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுப்போயுள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்கள் மறுப்புரைகள் - அவற்றினுக்கு எதிர்ப்புரைகள் இப்படி அதைத் தொடர்ந்து நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கிலே, காங்கிரசாரே கசப்படைந்து, சில வேளைகளிலே வெளிப்படையாகவும், மற்ற வேளைகளிலே, இலைமறை காயாகவும் பேசிக்கொண்டு வருவதுபற்றிச் சட்டசபைப் பேச்சுகளையே எடுத்துக்காட்டிக் கூறினேன். - "நாங்கள். எதிர்க்கட்சி, ஆண்டி! ஆட்சியிலே உள்ள முறையே மாறவேண்டும் மாற்றப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள். உங்கள் தலைவர்களின் ஆட்சியிலே<noinclude></noinclude> 67mx1te3m2p7js75kl7hysadchko01z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/100 250 642530 1931430 1931172 2026-05-08T13:22:18Z Rabiyathul 5890 + மேலடி 1931430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதே வாயால், ஆட்சியிலே உள்ள குறைபாடுகளையும், எடுத்துப் பேசுகிறார்கள். அப்போது அந்தத் தலைவர்களுக்கு எப்படி இருக்கும், எரிச்சல்! ஏமாற்றம்! இவர்களும் குறை கூறுகிறார்கள், அவர்களும் குறை காணுகிறார்கள்! அவர்களாவது, எதிர்க்கட்சி! இவர்கள் நமது கட்சி என்று முத்திரை பொறித்துக்கொண்டு சலுகைகள், உரிமைகள் பெற்றுக் கொண்டு, நமது ஆட்சியில் குறைகள் உள்ளன என்று அவர்கள் எதிரிலேயே பேசுகிறார் களே, இது எவ்வளவு கேவலம்! இதையுமா நாம் தாங்கிக் கொள்ளவேண்டும்! - என்று எண்ணாமலிருக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை நம்மவர் என்று நம்பிக் கிடப்பதே ஆபத்து எந்த நேரத்தில் காலைவாரி விட்டு விடுவார்களோ என்றல்லவா அச்சப்பட வேண்டி இருக்கிறது என்றுகூடத் தோன்றாதா என்றெல்லாம் கேட்டேன். ஆண்டி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான் - நல்ல உறக்கம் எனக்கு அவன் தூங்கத் தொடங்கியதும்; பாவம் கனவு கண்டிருக்கிறான். நான் சொன்னவற்றைத் தூக்கத்திலே துணைக்குக் கொண்டதால், கனவுதான் என்றாலும், இப்போது நடைபெறும் இதே மக்களாட்சி மன்னனாட்சியாக இருந்து விடுமானால், காங்கிரஸ் கட்சிக்காரர்களில் பலருக்கு, ஆண்டி கனவில் தோன்றிய பிச்சுமணி கதிதான்!! . தம்பி! கழகத்தின் C குறிக்கோள் திராவிட நாடு பெறுவது. ஆயினும் லே காங்கிரஸ், துரைத்தனம், . நடத்திவரும் ஆட்சிமுறையின் விளைவுகளை எங்ஙனம். கவனிக்காதிருக்க முடியும்! குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறோம். திருத்த முற்படுகிறோம். திடலில் மட்டுமல்ல. சட்டமன்றங்களிலும்! அங்கு நமது கழகத்தவர், காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள கேடுபாடுகளை எடுத்துக் கூறும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது. சுடுசொல்லால் தாக்கித் தகர்த்திடலாம் என்று தோன்றுகிறது. பலர் பலவிதமாகக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களே, அந்த வேலை முடிந்ததும். காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுவிட்ட, கேடுபாடுகளை எடுத்துக்காட்டிப் பேசவேண்டி வந்து விடுகிறது. நிலைமை அப்படி. தம்பி! அவர்கள், நமது கழகத்தைக் கண்டித்துப் பேசுவது மட்டுமே, உன் காதுக்கு எட்டியிருக்கும் ஏனெனில்<noinclude></noinclude> d65leauw9t5zyye136eko7al2743rb7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/101 250 642531 1931432 1931173 2026-05-08T13:22:52Z Rabiyathul 5890 + மேலடி 1931432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|91}}</b>{{rule}}</noinclude> 9.1. அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும். அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி. போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். "நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதி யுடையான், பாதித் தூக்கத்தில், மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. "சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!" என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாள னல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே, "உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ" என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் என்றோர் கதை கூறுவர். அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும்; அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை யின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர்; உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன;<noinclude></noinclude> 4vbyoyy4c487pwb7hv8viz7csdcpmgh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/102 250 642532 1931433 1931174 2026-05-08T13:23:24Z Rabiyathul 5890 + மேலடி 1931433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகிறது; ஆனால் அதேபோது, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்குக் கசையடி கொடுக்கிறார்கள் - உறைக்கிறதோ இல்லையோ, நானறியேன். ஆனால் ஆண்டியப்பன் அதையெல்லாம் நான் சொல்லக்கேட்டதால் தான், கனவு கண்டு கலக்கமுற்றான். இந்த ராஜ்யத்தினுடைய ஜனத்தொகையில் 80 சதவிகிதம் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்றைய தினம், மருத்துவ சுகாதார வசதி, பெரும் பகுதி நகரங்களில்தான் செய்யப்படுகிறது. இன்று கிராமங்களில் உள்ள மருத்துவ, சுகாதார முறைகளைப் பார்த்தால், எந்தவித மருத்துவ உதவிகளும் அவசர உதவிகளும் அற்ற நிலையில் இருக்கிறதென்பதை அமைச்சர் அவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு வைத்திய.. வசதி அளிக்க ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு எவ்வித வசதியும் கிடையாது. வைத்தியத் துறையில் இலஞ்சம் என்ற நிலைமை இருக்குமானால், அது மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும். என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும். இன்னும் பல கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் இல்லை என்று, அந்தப் பகுதிகளைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. தம்பி! நல்லாட்சிக்கு அடையாளமா இவை? கிராமத்தைக் கவனிக்காத ஆட்சி! மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள்! டாக்டர்கள் இல்லாத மருத்துவமனைகள்! மருந்து களவுபோகும் இடங்கள்! வைத்தியத்துறையில் இலஞ்சம்! இவை இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே காணக்கிடப்பவை. -<noinclude></noinclude> 2z0f8xoa2maww7infm3l4ezk5e7la3c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/103 250 642533 1931434 1931175 2026-05-08T13:23:59Z Rabiyathul 5890 + மேலடி 1931434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|93}}</b>{{rule}}</noinclude> சட்டமன்றத்திலே; இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே!' அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதர்வு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு -1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர் களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டிய வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் பல இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன.<noinclude></noinclude> p10lnsshvwaupmmv7q3j6ybs2au2kxa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/104 250 642534 1931435 1931176 2026-05-08T13:24:32Z Rabiyathul 5890 + மேலடி 1931435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல பெருமைப்படுவதற்கான நிலைமையா?' தம்பி! இவ்விதம் பேசியவர், நமது கழகத்தவர் என்றால், இவர்கள் யார் தெரியுமா? பூர்வோத்திரம் என்ன தெரியுமா? இவர்கள் வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள்! - என்றெல்லாம். நிதி அமைச்சர் வெளுத்து வாங்குளார்! சமர்த்தர்! ஆனால் இவ்விதம் பேசியவர் காங்கிரஸ்காரர்! காங்கிரஸ்காரர் என்பதோடு கழகத்தைக் கண்டித்துப்பேசுவது தேசத்தொண்டு னிடும் போக்கினரில் சேலம் கந்தசாமி எனும் பெயருடையார் நான் இத்தனை கூறியபோது, ஆண்டியப்பன் எப்படி திகைத்துப்போய் வாய் அடைத்துக் கிடந்தானோ, அதேதானே, அமைச்சர்கள் நிலையும். இவர்களுமா இப்படி இடித்துப் பேசுவது? என்று எண்ணி வாட்டமடைந்திருப்பார்கள். இருக்கும் நிலையை மறக்கவோ, மறைக்கவோ முடிய வில்லை. எனவே, அவர்கள், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இருந்தாலும் உண்மையை எப்படி எடுத்துரைக்காமல் இருப்பது:.. ஏதும் பேசாதிருந்தால், வாக்குக்கொடுத்த மக்கள், வாட்டி எடுக்க மாட்டார்களா - என்று எண்ணித்தான் பேசிவிட்டார்கள்! என்னுடைய தொகுதியில் வீடுகட்டும் திட்டத்திற்குப் போடப்பட்ட மனைக்கட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் இருக்கின்றன்; ஒரு மனைக்கட்டுக்கூடப் பரிசீலனைக்கு வந்த தில்லை. அந்த மனைக்கட்டு விஷயத்தில் ரொம்ப்ச் சங்கடங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு அரிஜனங்களுக்கும் மனை ஒதுக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டும் அது கூடிவரவில்லை. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. அரிஜனங்களுக்காகத் தனி இலாகா, அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு கிராம சேவகர் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. தம்பி! பரிதாபமாக இருக்கிறதல்லவா! அரிஜனங்களின் நலன்களைக் கவனிக்கவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எமது ஆட்சியின் பெருமையே இதிலேதான் இருக்கிறது,' என்று பேசாத மந்திரியில்லை, பேசாத நாளில்லை. அந்த அதிகாரிகளைக் காணவேண்டும், கண்டு அவர்களிடம்<noinclude></noinclude> mwp5vj945t4fika8y4c8g2ha8fawvw2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/105 250 642535 1931437 1931177 2026-05-08T13:25:05Z Rabiyathul 5890 + மேலடி 1931437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|95}}</b>{{rule}}</noinclude> கூறினால் அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும். என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், கரங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப் பாக்கிறார். அவர் கண்களுக்கு ஒருவரும் தட்டுப்படவில்லை. உள்ளம் கொதித்துச் சட்டசபையில் எழுந்து நின்று பேக்கிறார். "அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை”. இது ஒன்று போதுமல்லவா, பெருமைப்பட்டுக் கொள்ள! புத்ரர்களே! கேளுங்கள், பெருமையை அரிஜன மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டு மென்றே தனியாக அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது மட்டும், ஒருவருக்கும் தெரியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேடினாலும், கண்டுபிடிக்க முடியாது. அவர்களை நீவிர், கட்டாயம் பார்க்கவேண்டுமானால், நாங்கள் எங்காவது விழா நடத்த 'விஜயம்' செய்கிறோமே, அப்போது வாருங்கள்; ஜீப்புகள் வந்து நிற்கும், அதிலிருந்து அதிகாரிகள் இறங்குவார்கள்!! - என்றா, அமைச்சர்கள் பேசிக்கொள்ள முடியும்? ஆண்டியப்பன், தலை குனிந்து கொண்டான். வெட்கம்; துக்கம் அவனுக்கு. அமைச்சர்களும் வெட்கப்படத்தானே வேண்டும். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யே, இவ்விதம் பேசக்கேட்டு. இந்த வேதை உண்டாக்கவேண்டுமென்று பேசியவர் ஒரு சமயம், எண்ணாம் லிருந்திருக்கலாம். எதிர்க்கட்சி என்ன, நாமேதான் இவைகளைச் செய்வோமே தெரியாதா? முடியாதா என்ற போக்கில் பேசியிருக்கலாம். பேசிய நோக்கம். அறிய, பேசியவர் தெரியவேண்டும் என்கிறாய், சரி கேட்டுக்கொள், இவ்விதமாகக் காங்கிரஸ் ஆட்சியின் (அவ) லட்சணத்தை எடுத்துக் கூறியவர் சடையப்ப முதலியார் என்பவர் - சாட்சாத் காங்கிரஸ்காரர். னையை குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லத்தானே வேண்டும் இதிலே தவறு என்ன? என்று வாதாட முற்படுவர் சிலர் இப்போதே வாதாடுகின்றனர். மூன்று உண்மைகள். இவர்களை அறைகூவி அழைக்கின்றன. குற்றம் குறைகளைப் பேசுவது தவறல்ல - பேசிக். களைந்து கொள்ளுவதுதான், ஜனநாயக முறை, எவரும் ஒப்புக் கொள்வர். ஆனால், தம்பி!<noinclude></noinclude> 7jov6aaudouyjdyhye5yzx67n5tmuyf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/106 250 642536 1931438 1931178 2026-05-08T13:25:40Z Rabiyathul 5890 + மேலடி 1931438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே! 3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிச்சு மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. கனவு கண்டான், குளறிக் கூவினான்.' நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடையசொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் லாகா இயங்கவில்லை. பிளாக் டெவலெப்மென்ம் அதிகாரிகளுடைய நிலை. எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரி களாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்ப தாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்த தில்லை.<noinclude></noinclude> 8tsoyswih32zcgqhhqzdv89coxhlvtl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/107 250 642537 1931439 1931179 2026-05-08T13:26:19Z Rabiyathul 5890 + மேலடி 1931439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|97}}</b>{{rule}}</noinclude> மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண் டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இல்லை என்று சொல்லப்படுகின்றன. இவ்விதம் இருந்தால், நிச்சயமாகப் பொதுமக்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். ல இடங்களில் கணக்குகள் எல்லாம். குழப்பமாக இருக்கிறது. கடைசியில் அதைப்பற்றி நல்ல முறையில் விசாரணை ஒன்றும் நடப்பது இல்லை. தம்பி! இந்தத் திருவாய்மொழி, காங்கிரஸ் கட்சியின் கண்ணின் மணி என்று கொண்டாடப்பட்டு வரும், சமுதாய் நலத்திட்டம் பற்றியது. பேசிய பெருமகனோ, கழகத்தை ஏசினால், பாரதமாதா, கட்டித் தழுவி, உச்சி மோந்து முத்தமிட்டு, "பால்கா! உன் அரும் புத்திக் கூர்மை வேறு யாருக்கடா வரும்! வா, மகனே! வா! உன்னை வையகமெங்கும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்" என்று பூரித்துக் கூறுவார்கள் என்று எண்ணி இரும்பூதெய்துபவரோ என்று எண்ணத்தக்க வகையில், சமயம் கிடைக்கும்போதெல்லாம், கழகத்தைச் சாடிடும், நாகராஜ மணியக்காரர் எனும் நற்றொண்டர்! சேலம் மாவட்டம் அவர், பொறாமை பொய்க் கணக்கு பூசல் திறமைக் குறைவு அனுபவமின்மை எனும் அரிய குணங்களை ஆபரணங்களாகப் பூட்டிக்கொண்டு, எமது கட்சி நடாத்தும் ஆட்சியின் செல்லப் பிள்ளையாம், சமுதாய நலத்திட்ட இலாகா இருக்கிறது; கண்டேன், காணீர்; என்கிறார். அமைச்சர்கள் என்ன சொல்வார்கள்? ஆண்டியப்பன், என்ன செய்தான்? படுத்தான் வெட்கம்! துக்கம்! - புரண்டான் - குளறினான்!<noinclude></noinclude> 7dntqadn2oph5eyvk8vmeefn2u63yeb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/108 250 642538 1931440 1931180 2026-05-08T13:26:52Z Rabiyathul 5890 + மேலடி 1931440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்தப் பால் பவுடர் யார் யாருக்கோ தின்பண்டங்கள் முதலியவை செய்வதற்காகப் போய்விடுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு அந்தப் பால் பவுடர் கிடைப்பதில்லை. இதுபற்றிக் கலெக்டர் போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்டிஷன் மூலமாக அமைச்சர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அமெரிக்காவிலிருந்து வரும் பால் பவுடர், ஜனங்களுக்கு, ஏழை மக்களுக்குக் கிடைக்கவேண்டும். அது ப்ளாக் மார்க்கெட்டில் இப்போது போவதைத் தடுக்க வேண்டும். எப்படி இருக்கிறது தம்பி! பச்சைத் தமிழரின் ஆட்சி! பால் பவுடர், பிளாக் மார்க்கெட்டாகிறதாம்! பேசியவர் நமது கழகமல்ல! ஏ! அப்பா! அப்படிப் பேசிவிட்டிருந்தால், எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்!!. "ஆண்டியப்பா! பெரிய விஷயங்கள்கூடக் கிடக்கட்டும். உங்கள் ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு காரியம் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், கோபம்கூட அல்ல, வருத்தமாக இருக்கிறது. ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாசுத்-தரச் சொல்லி, தானமாகத் தருகிறானே அமெரிக்க நாட்டான், பால் பவுடர், அதைக் கூடவா கள்ளமார்க்கெட்டில் கொண்டுபோய் விற்பது! இது ஈனத்தனமான செயல் அல்லவா?" என்று நான் கேட்டபோது, ஆண்டியப்பன், என்னை அறைந்தே விடுவான் போலிருந்தது அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால், சட்ட சபையில் காங்கிரஸ் கட்சியினர், பெரியசாமி என்பவர் பேசினார் பால்பவுடர் விஷயம்.. இதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகும், அமைச்சர்கள் வெட்கமின்றி எதிர்க்கட்சியைத் தாக்க, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்களே, வேடிக்கையாக இல்லையா!! அங்கே ஏனோ, சொரணையற்ற தன்மை!!". ஆண்டியப்பன் வருத்தத்துடன் சொன்னான் "இவர்கள் எங்கள் கட்சிக்காரர்கள் - ஏன்தான் இப்படி எல்லாம் பேசி மானத்தை வாங்குகிறார்களோ, தெரியவில்லை. இதையெல்லாம் சட்டசபையில்தானா பேச வேண்டும் அமைச்சர்களிடம் தனியாகச் சொல்லக் கூடாதா?" என்றான். "ஆண்டி! அப்படி அவர்கள் சொல்லாமலிருந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்க<noinclude></noinclude> gwcrkhcpb5gh7ly3q6kwhzbov3pdzbx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/109 250 642539 1931441 1931181 2026-05-08T13:27:24Z Rabiyathul 5890 + மேலடி 1931441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|99}}</b>{{rule}}</noinclude> மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது" என்றேன். என்ன காரணம்? என்று கேட்டான். இருக்கும் குறைபாடுகளை சட்டசபையில் எடுத்துக் காட்டத்தானே அனுப்பினோம் என்று ஓட்டர்கள் கேட்டுவிடுவார்களே என்ற பயம்தான் காரணம் என்றேன். ஆண்டி அதை ஏற்றுக்கொள்ள வில்லை. சரி, என்று ஆண்டியப்பன் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய ஆதாரத்தைத் தந்தேன்; அது இது: "எங்களுடைய சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையில் ஒரு ரோடும் புத்தர் கௌண்டன்பாளையத்தில் ஒரு பாலமும்... கட்டப்பட்டிருக்கிறது. இவை தவிர எங்கள் சேலம் ஜில்லாவில் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் வேறு எந்த வேலையும் நடந்ததாகத் தெரியவில்லை." "என்னுடைய தொகுதியாகிய அரூர் தாலுகாவில் அறவே இதுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது. எந்தவிதமான நீர்ப்பாசன வசதியோ கிடையாது. சென்ற ஆண்டிலும் இந்த மன்றத்தில் நான் குறிப்பிட்டேன். எங்களுடைய தாலுகாவில், சேர்வராயன் மலை வடபகுதியில் வாளியாறு உற்பத்தியாகிறது. அது ஜீவநதியாகும். அதனுடைய தண்ணீரை நல்ல முறையில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக அதன் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு வெள்ளைக்காரன் காலத்திலே திட்டத்தைப் போட்டு, அது கைவிடப்பட்டது. "மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சுட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தி லாகிலும் எடுத்துக் கட்டினால் அரூர் தாலுகாவிலுள்ள விவசாயிகளுடைய மனம் நிம்மதி அடையும்." நான் கிராம மக்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டவன். அதனால் இவைகளைப்பற்றி என்னை அடிக்கடி கேட்க வசதி இருக்கிறது. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்கிறார்கள்.<noinclude></noinclude> dnwt6hbypt0hkl3xz7iyvl1zzva4rcd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/110 250 642540 1931442 1931182 2026-05-08T13:27:57Z Rabiyathul 5890 + மேலடி 1931442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று. பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தான, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு. நான் வேடிக்கையாகக் கேட்டேன், "அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ காமராஜர்" என்றேன். முறைத்துப் பார்த்தான் = தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க. பேசியவை யாவும் குடையவே கனவு கண்டான். தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும். ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் தெரிகிறது. உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு. அண்ணன், - 24-4-60<noinclude></noinclude> 2n2omxadngyru86fxrzjbcdvklih4v6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/111 250 642541 1931443 1931183 2026-05-08T13:28:38Z Rabiyathul 5890 + மேலடி 1931443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|101}}</b>{{rule}}</noinclude>தம்பி! ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! மின்சார இரயில் செங்கற்பட்டு வரை சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை ஒரு உறுப்பினர்:' கடிதம் : 94 தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? இரயில்வே அமைச்சர்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. மற்றோர் உறுப்பினர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? அமைச்சர்: ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக் கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம். -<noinclude></noinclude> 5v145ol1gdv9dc7etie1nvxf8u08d1a 1931462 1931443 2026-05-08T13:47:59Z Info-farmer 232 1931462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி! ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! மின்சார இரயில் செங்கற்பட்டு வரை சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை ஒரு உறுப்பினர்:' கடிதம் : 94 தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? இரயில்வே அமைச்சர்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. மற்றோர் உறுப்பினர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? அமைச்சர்: ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக் கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம். -<noinclude></noinclude> ec858fl01e955cznl5x6y85v4ghc87x 1931508 1931462 2026-05-08T17:35:38Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழையில்லை விக்கிவடிவம் முடிந்தது. 1931508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 94}} {{center|{{x-larger|<b>ஏழை சொல்<br>அம்பலம் ஏறிவிட்டது!</b>}}}} தம்பி! <b>ஒரு உறுப்பினர்:</b> தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? <b>இரயில்வே அமைச்சர்;</b> தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. <b>மற்றோர் உறுப்பினர்:</b> தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? <b>அமைச்சர்:</b> ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக்கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம்.<noinclude></noinclude> fkxgir8aax7u9gtw1rz65nsul2yfukn 1931509 1931508 2026-05-08T17:37:10Z Info-farmer 232 பிழை நீக்கம் 1931509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 94}} {{center|{{x-larger|<b>ஏழை சொல்<br>அம்பலம் ஏறிவிட்டது!</b>}}}} {{left_margin|3em|<poem>மின்சார இரயில் செங்கற்பட்டு வரை - சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை</poem>}} தம்பி! <b>ஒரு உறுப்பினர்:</b> தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? <b>இரயில்வே அமைச்சர்;</b> தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. <b>மற்றோர் உறுப்பினர்:</b> தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? <b>அமைச்சர்:</b> ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக்கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம்.<noinclude></noinclude> r71uur92lr88q3zp5nv8h7sqdu9t5av பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/112 250 642542 1931444 1931184 2026-05-08T13:29:11Z Rabiyathul 5890 + மேலடி 1931444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மற்றோர் உறுப்பினர்: திட்டம் எப்போது முடிவான வடிவம் பெறும்? எப்போது வேலை துவக்கப்படும் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? அமைச்சர்: இரயில்வே பெட் என்று இப்போது என்ஜினியருடன் கலந்து பேசி வருகிறார். நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பதில் கிடைத்துவிடும். பிறகு. திட்டத்தை அமுலாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போம். ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுத்திட வேண்டாமா? அமைச்சர்தான் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாரே, தாம்பரத்துக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில், மின்சார இரயில் அமைப்பதிலே தடை ஏதும் இல்லை என்று திட்டம் கூடத்தான், உருவாகிவிட்டதாமே, முறைப்படி நடைபெற்றாக வேண்டிய கலந்தாலோசித்தல் எனும் கட்டத்தில்ல்லவா, இப்போது... நிலைமை இருக்கிறது. இந்த நிலையில் வீணாக ஆரவாரம் செய்வதும், தெற்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் பேசுவதும் எற்றுக்கு!: உறுப்பினர் கேட்டதற்கு இரயில்வே அமைச்சர், அன்பும் அக்கறையும் ஆர்வமும் ததும்பும் வகையில் பதில் அளித்திருக்கிறார். தெற்குச் சீமையின் குரலுக்கு அவ்வளவு மதிப்பு! மறுப்பு எழுவதில்லை! எது கேட்ட எலும் கிடைக்கிறது. இதனை அறியாமல் இந்தத் தீனாமூனாக்காரர்கள், வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறார்களே! அமைச்சர் அளித்த பதில், இதுகளின் கன்னத்தில் அறை கொடுத்தது போலன்றோ இரயில் போட முடியாது. என்ங்கற்பட்டு வரையில் மின்சார அமைச்சர் கூறினார்? அங்ஙனம் கூறியிருந்தால், ஆர்த்தெழலாம், அதட்டிக் கேட்கலாம், ஆகுமா ஓரவஞ்சனை என்று சாடலாம். ஆனால் நடந்தது என்ன? உறுப்பினர் கேட்டார்; அமைச்சர் உள்ளன் புடன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நமது அகம் மகிழத்தக்க விதத்தில், பதில் அளித்திருக்கிறார். உறுதி அளித்துவிட்டார். இப்போது இதுகள் என்ன செய்யும்! கைகால் வெர் வெடக்கத் தலை கவிழ்ந்துகொண்டு, வாயடைத்துக் கிடக்கவேண்டியது தானே! வடக்கே உள்ளவர்கள் என்னமோ,<noinclude></noinclude> racamzrfageyq7cr9vf4ogog3oy6zo0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/113 250 642543 1931445 1931185 2026-05-08T13:29:45Z Rabiyathul 5890 + மேலடி 1931445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|103}}</b>{{rule}}</noinclude> தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பான்மையினரைக் கண்டால், கேளுங்கள், "ஏடா, மூடா! கேட்டனையோ, இரயில்வே மந்திரியின் பேச்சை, வெட்டவெளிப் பேச்சல்ல; பாராளுமன்றத் தில் பேசியுள்ளார். பேச்சா அது! வாக்குறுதி!! நமது பகுதிக்கு, வரப்போகிறது வளம்; தாம்பரத்திலிருந்து செங்சுற்பட்டுவரை மின்சார இரயில் அமையப்போகிறது. விரைவில் அது அமையாததைக் காட்டிக்காட்டி அங்கலாய்த்துக் கொண் டிருந்தாயே! இனி என்ன பேசுவாய்! மின்சார இரயில் கிளம்பியதும் எதிரே வீழ்ந்து இறந்துபடுவாயோ!!" கேட்கவேண்டும். அப்போது புத்தியில் தெளிவு ஏற்படும்; பேச்சரும் நாட்கள்! மின்சார இரயில் அமைந்துவிடப் போகிறது. அமைச்சர் உறுதி தந்தாகிவிட்டது" என்று காங்கிரஸ் கட்சியில் முழக்கம் எழுப்புளோர் எக்காளமிடுவர்; மூலைக்கு மூலை நின்று கொண்டு நமது கழகத் தோழர்களே கூட, "உண்மைதானே, இரயில்வே அமைச்சர்தான் கட்டாயமாக இரண்டு மூன்று மாதங்களில், தாம்பரம் - செங்கற்பட்டு இரயில் பாதை மின்சார மயமாகிவிடும் என்று உறுதி கூறிவிட்டாரே! வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று பேசினால், மக்கள் இனி நம்புவார்களா?" என்று எண்ணிக்கொள்ளக் கூடும். அவ்விதம் எண்ணத்தக்க விதமாகத்தான் அமைந்திருக்கிறது, இரயில்வே அமைச்சர் பேச்சு!.. ஆனால், காங்கிரஸ்காரர் எக்காளமிடவும், கழகத்தவர் எண்ணமிடவும் தக்கதானவிதத்தில் இரண்டு மூன்று மாதங்களில் தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் திட்டம் நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்திலே வாக்களித்துப் பேசிய, இரயில்வே அமைச்சர், தம்பி! திடுக்கிடாதே! மனதைத் திடம்செய்து கொள்! கேட்கும்போதே இனிக்கும் வாக்குறுதி தந்த அந்த அமைச்சர் இறந்துவிட்டார்!! என்ன அண்ணா இப்படி ஒரு போடுபோடுகிறாயே என்று என்னைக் கேட்டுப் பயனில்லை, தம்பி! நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். அந்த இரயில்வே அமைச்சர் இறந்துவிட்டார்!. அப்படியானால்? என்று, ஏதோ கேட்க எண்ணுகிறாய் - தெரிகிறது. கேள் விஷயத்தை; தாம்பரம் - செங்கற்பட்டு மின்சார இரயில் அமையும் - மூன்று மாதத்திற்குள் - என்று உறுதிமொழி<noinclude></noinclude> lc5y76as716nmqkdkie6rws3cezwg3t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/114 250 642544 1931447 1931186 2026-05-08T13:30:20Z Rabiyathul 5890 + மேலடி 1931447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடிக்கை அல்ல படிக்கும் போது, இப்போதுதான், பாராளுமன்றத்திலே, கேட்கப்பட்டது போலத் தோன்றும் - ஆனால் நான் துவக்கத்திலே குறிப்பிட் டிருக்கும், கேள்வி பதில் டில்லி பாராளுமன்றத்தில், 1950 மார்ச்சுத் திங்கள் 17-ம் நாள் கிடைத்ததாகும். பத்து ஆண்டு களுக்கு முன்பு!! மூன்று மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். முடிவடையும் தருவாயில் இருக்கிறது திட்டம் நிறைவேற்றத் தடை ஏதும் இல்லை என்று, இரயில்வே அமைச்சர் பேசினார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அவர் இறந்துபோய்விட்டார் மின்சார இரயில் திட்டம் இப்போதும், 'விவாதக் கட்டத்திலேதான் இருக்கிறது மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், நூற்று இருபது மாதங்களாகிவிட்டன அந்த வாக்குறுதி கூறி. மின்சார இரயிலும் ஓடவில்லை சுவைதரும் உறுதிமொழி கூறிய இரயில்வே அமைச்சர் கோபாலசாமி. ஐயங்காரும் மறைந்து போனார். கேள்வி கேட்ட உறுப்பினரில், ஒருவர், கனகசபை என்பார்; மற்றொருவர் டி.டி கிருஷ்ணமாச்சாரியார்.. ஆண்டு பத்துக்கு முன்பே, அளிக்கப்பட்ட வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படவில்லை!! வடக்கு தெற்குக் குறித்து, கழகம் பேசிவருவது. நியாயமற்றதா, தேவையற்றதா என்று காங்கிரஸ் நண்பர்கள், எண்ணிப்பார்த்திடவேண்டும்!! வடக்கு, தெற்கை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு என்ன செய்ததோ அதையேதான், இன்றும் செய்யவேண்டி இருக்கிறது! மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், கோபாலசாமி ஐயங்கார். இப்போது உள்ள அமைச்சர்களும், அதேபோன்ற பதிலைத் தருகிறார்கள் - வரும் - நிச்சயம் வரும் என்கிறார்கள்! இந்தப் பத்து ஆண்டுகளில் வடக்கே எத்தனை எத்தனை புதுமைகள் ஏற்பட்டுள்ளன, அவைகுறித்து எத்துணை பெருமிதத்துடன், காங்கிரஸ் தலைவர்களே பேசி மகிழ்கிறார்கள். நாமும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள். .<noinclude></noinclude> fw5qepmbxi73dtacon5kro0icf0eijz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/115 250 642545 1931448 1931187 2026-05-08T13:30:53Z Rabiyathul 5890 + மேலடி 1931448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|105}}</b>{{rule}}</noinclude> பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர். புதிய துறைமுகங்களையும் புத்தம் புதிய தொழிற்சாலைகளையும் கண்டுள்ளனர்; நாடு விடுதலை பெற்றுவிட்டது. நம்மவர் ஆட்சி நடைபெறுகிறது என்று பாமர மக்களும் உணர்ந்து உவகை கொள்ளத்தக்க விதத்திலே வடிவம், வண்ணம், வளம், வாய்ப்பு எனும் எந்தத் துறையிலும் ஓர் ஏற்றம் தெரியத்தக்க விதத்திலே, வடக்கே காரியங்களை நடத்திக் காட்டுகின்றனர்; இங்கோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மின்சார இரயில் பாதைக்காகப், பாராளுமன்றத்திலே, கேள்விகள் கேட்கப்பட்டு, அமைச்சர் பதிலும் வாக்குறுதியும் அளித்தாரோ, அதே நிலைதான் நீடிக்கிறது; ஏன் இந்த நிலை என்று கேட்டால், ஜெய் ஹிந்த்' என்று கூச்சவிட்டுக் குமுறலை அடக்கப் பார்க்கிறார்கள். . நாம், தம்பி! இந்த ஓரவஞ்சனையை ஓயாமல், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், உள்ளதை உள்ளபடி. எடுத்துக்கூறி வருவதால், நமது கழகத்தில் இல்லாதவர்கூட, நமது கழகத்தின், தனி அரசுக் கோரிக்கையை வெறுப்பவர் எதிர்ப்பவர். கூட, இப்போது, வெளிப்படையாகவும் சிறிதளவு வீராவேச உணர்ச்சியுடனும், தெற்குச் சீமையை பட்டினிபோட்டுப், பஞ்சத்தில் ஆழ்த்திப் பராரிக் கோலத்தில் வைத்திருக்கும் போக்கினைக் கண்டிக்கக் கிளம்புகின்றனர். தான் தீட்டிய ஓவியம், ஓர் மாளிகைக் கூடத்தில் இடம்பெறக் கண்டால், மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் ஓவியன்போல, இன்று, நாம் கூறிவரும் மருந்து பிறருடைய இதயங்களிலே இடம் பெற்று, பேச்சிலே வெளிப்படுவது காணும்போது கழகம், மகிழ்ச்சி பெறாமலிருக்க முடியுமா! எத்துணை இன்பம்! எத்துணை இன்பம்!! பொருளற்ற பேச்சு என்றனர், நாம், முதலில் பேசும்போது. இன்றோ, பல்வேறு அரசியல் முகாம்களிலுமிருந்து அதே பேச்சு எழுகிறது. வசை பேசும் வன்கணாளர்கள் என்று நம்மைத் தாக்கினர், தம்மைத் தலைசிறந்த தேசியக் குணாளர்கள் என்று கருதிக்கொண்டு கதைப்போர்; இன்றோ, இங்கு ஏன் புதிய இரயில் ஏற்படுத்தவில்லை? எல்லாம் வடக்கேதானா? ஏன் இந்த மாற்றாந்தாய்ப் போக்கு? என்று பலரும் துணிந்து கேட்கின்றனர். இல்லையே, உங்கட்கு நிரம்பச் செய்கிறோமே. இன்னும் பல செய்யப் போகிறோமே என்று கோவிந்தவல்லப பந்து,<noinclude></noinclude> 5mo0fo30apv057l8pcyfhvtjxs1ww6j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/116 250 642546 1931449 1931190 2026-05-08T13:31:26Z Rabiyathul 5890 + மேலடி 1931449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> குழைகிறார். எனினும், தெற்குப் பகுதியைப் புறக்கணிக்கிறீர்கள், இது தீதே பயக்கும். இதை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்று பலரும் குமுறிக் கேட்கின்றனர்; இந்தப் புதிய பேச்ச. சுவைமிகு இசையாக நமது செவியில் வீழ்கிறது; பட்டபாடு வீண் போகவில்லை, எடுத்துச் சொன்னோம், தடுத்துப் பார்த்தனர், முடியவில்லை; இன்று அவர்களே, நாம் சொல்வதைச் சொல்கிறார்கள் என்று அறிந்து அகமகிழ்கிறோம்.. "பார்த்து நடக்கவேண்டாமா! மேலே வந்து மோதிக் கொள்கிறீரே?" "பார்த்து நடக்கத் தெரியாதா... எதிரே வருபவர்மீது இடித்துக்கொள்வதுதான் உமது பொழுதுபோக்கா?" "யாரய்யா இது, போக்கிரித்தனம் செய்கிறீர். எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? முரட்டுத்தனமா?" . "கண் குருடா, உ உனக்கு!" "குருடா! என்ன? உதை கேட்கிறதா? "திமிர் பிடித்து அலைகிறான். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியானபடி பூஜை கொடுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்". "தடிக்கழுதை! ஏ எருமை மாடு! யாரிடம் காட்டுகிறாய் உன் மண்டைக் கனத்தை" தம்பி! பஈர்வை பழுதானவன், பாதையில் நடந்து செல்கையிலே யார்மீதாவது மோதிக்கொள்ள நேரிட்டுவிடும். முதல்முறை சிறிது மரியாதையாகவும், பிறகு படிப்படியாகக் கோபம் வளர்ந்த நிலையிலும் கேள்விகள் கிளம்பி, இறுதியில், 'அடி தடி' அளவுக்குச் சென்றுவிடும். இது இயல்பு அஃதே போலத்தான், திட்டங்கள் தீட்டப்பட்டபோது தென்னகத்துத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டு, ஏனய்யா இந்தப் போக்கு என்று ஆரம்பமான பேச்சு, இப்போது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்படும் கட்டம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தட்டிக் கேட்கும் பேச்சாக. அதட்டிக் கேட்கும் போக்காக, உண்டா இல்லையா? முடியுமா முடியாதா? உன் யோக்யதையே இதுதானா? என்று கேட்கும் விதமாக, வீரம்,உரிமை உணர்ச்சி, ஆத்திரம் எல்லாம் கலந்த<noinclude></noinclude> 5iu6srrr51ier3x12cdwlm7qeckph6x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/117 250 642547 1931450 1931191 2026-05-08T13:32:00Z Rabiyathul 5890 + மேலடி 1931450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|107}}</b>{{rule}}</noinclude> வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்; இன்றோ கற்றறிந்தோர் என்று நாடு கொண்டாடத்தக்க நிலைபெற்றவர்களுங்கூட, இதே பேச்சினைப் பேசக் கேட்கிறார்கள். கேட்டிடவே, செச்சே! நாம்தான் தவறு செய்துவிட்டோம் - தீனாமூனாக்காரர்கள் பேசியபோது, ஏனோதானோ என்று இருந்துவிட்டோம், அவர் களை ஏதுமறியாதார் என்றுகூட ஏசிவந்தோம், இப்போதல்லவா தெரிகிறது உண்மை அவர்கள் இத்தனை நாட்களாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்ததத்தனையும் உண்மை. முழு உண்மை, என்று கூறிவருகிறார்கள். நாம் பெற்ற மகத்தான வெற்றி, தம்பி! இதிலேதான் இருக்கிறது!! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியம் நமது உள்ளத்தில் இடம்பெற்று, தம்மைப் புதுமனிதர் களாக மாற்றிவிட்ட அந்த இலட்சியம், இன்று மற்றையோரால் அலட்சியப்படுத்தப்படும் நிலைமாறி, அந்த இலட்சியம் உருவானதற்கான், உணர்ச்சி, இன்று தூற்றியோர், தொலைவிலிருந்தோர் ஆகியோருக்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அவர்கள், அந்த இலட்சியத்தை இன்னும், ஏற்றுக்கொள்ள வில்லை; கூச்சம் காரணமாக இருக்கலாம்; அச்சம்கூட எழக்கூடும்; ஆயினும், எப்போது அவர்களுக்கு நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ, இனி அவர்கள், விலைக்கு வாங்கப்பட்டாலொழிய, வழுக்கி வீழ்ந்தாலொழிய, நிச்சயமாக, இலட்சியப் பாதையில் நடந்து நடந்து, நாம் இருக்கும் இடம் வந்து நிற்பர்; இது உறுதி. சிலருக்கு அந்த நெடுவழி நடந்திடும் அளவுக்கு வலிவு இலாது போகக்கூடும்; சிலர், வழியில் இருக்கும். சத்திரம் சாவடி தங்கி இளைப்பாறிவிட்டு பிறகு மேலால் நடக்கலாம் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திப், பிறகு, சத்திரச் சாப்பாடே போதும் என்று அங்கேயே தங்கிவிடவும் கூடும்; ஆனால், தன்னலமற்றவர்கள், தளராது பாடுபடும் போக்கினார், நாடு பெரிது வீடல்ல என்ற குறிக்கோள் கொண்டோர், நிச்சயமாகப் பயணத்தைத் துவக்கிடின், இறுதிவரை நடந்து, நாம் இருக்கும் இடம் வந்தே சேருவர். எண்ணும்போதே, செந்தேன் பருகிடும் நிலை; தம்பி! அதற்கான அறிகுறிகளைக் காண்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். து இத்தனை பெரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், மேல் நிலை உள்ளவர்கள், பலநாடு சென்று பக்குவமடைந்தவர்கள் என்போரெல்லாம், நமக்கென்ன என்று இருக்கிறார்களே, யாதும் 16, த.அ.க.2<noinclude></noinclude> axl5aw1hyisv6i8s004o67q2qg4qby8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/118 250 642548 1931451 1931192 2026-05-08T13:32:33Z Rabiyathul 5890 + மேலடி 1931451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும் குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி, கேலியும் கண்டனமும் வீசி நிற்கின்றனரே! நமது இதயமோ நாம் கொண்டுள்ள கொள்கை நியாயமானது என்று கூறுகிறது; நாட்டின் நாயகர்கள் என்று. கூறத்தக்க விருதுபெற்றோரோ, இதை வெட்டிப்பேச்சு என்கிறார்கள். நாம் என்ன செய்வது? இதயம் இடும் கட்டளையையோ மீற முடியவில்லை! முடியாது! கூடாது! இந்தப் பெரியவர்களோ. நமது உள்ளுணர்ச்சியையே ஒழித்திடத்தக்க விதத்தில் பேசுகிறார்கள்!! என்செய்வது! என்று தம்பி! என்னைப் பொறுத்தவரையில் பல நாட்கள் எண்ணியதுண்டு; பெரியாருக்கு இதுபோன்ற நிலை பலமுறை ஏற்பட்டதுண்டு; ஒரு நிகழ்ச்சி தினைவிற்கு வருகிறது. ஈரோடு, என் இருப்பிடமாக இருந்த நாட்கள். சித்தப்பா சீற்றமாக இருந்தாலும், அப்பா ஆர்ப்பரித்து வந்தாலும், ஓடோடி வந்து, நான் படுத்திருக்கும் இருக்கைக்குக் கீழே பதுங்கி, எ அப்படியே, தம்பி தம்பத்து உறங்கும் நாட்கள். யாராவது சிறிதளவு கடுமையாக நமது இயக்கத்தைப்பற்றிப் பேசினாலும், துடிதுடித்து எழுந்து, படபடவென்று பேசிடும் பருவத்தில் நான் இருந்த காலம். ஒரு மாநாடு ஏற்பாடாகி இருந்தது, ஈரோட்டில், எந்தத் திடலில் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாய் அல்லவா? திடலில் அல்ல!! பள்ளிக் கட்டிடத்தில் கூடடத்தில். நாங்கள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது; திடீரென்று, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், தாம் மாநாட்டுக்கு வருவதாக, தாமாகவே பெரியாருக்குத் தெரிவித்தார். 'ஏன் வருகிறார்? இவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவலுக்கு இடையிலே, இந்த மாநாட்டுக்கு வர எண்ணி!- காரணம் என்ன? என்று யோசிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. எதிர்பாராத இந்த அறிவிப்பு, ஏதேதோ எண்ணங்களை மூட்டிவிடலாயிற்று. பெரியாருக்கு, சர், சண்முகத்திடம் பெருமதிப்பு, பாசம்! எனவே பயந்து போனார். பாசம் இருந்தால், பயம் ஏற்படுமா என்று கேட்பாய், தம்பி! பாசம் எப்படிப்பட்டது; அதன் வயமாகி விட்டால், அது<noinclude></noinclude> 9xkutufyr5kjfpg6xdaix401mfi551c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/119 250 642549 1931452 1931193 2026-05-08T13:33:07Z Rabiyathul 5890 + மேலடி 1931452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|109}}</b>{{rule}}</noinclude> என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி: இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், என்னை என்ன பாடுபடுத்துகிறது என்பதை, நானன்றோ அறிவேன். பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் இருந்த பாசத்தால்தான் பயமும் ஏற்பட்டது; காரணம் என்ன தெரியுமா? சிலர், சர். சண்முகம் மாநாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாரே, அதற்கு ஒரு காரணம் காட்டினார்கள் - கற்பித்தார்கள் - 'என்றே கூறலாம். விளைவு எப்படி எப்படி ஏற்பட்டுவிடக்கூடும் என்பதுபற்றி எண்ணிப் பார்க்காமல், நிகழ்ச்சிகளுக்கு, அவரவர் தத்தமக்குத் தோன்றிய வகையில், பொருள்கூற முற்படுவது, எளிதிலே நீக்கிட முடியாத இயல்பல்லவா? அதனால்தான், அன்று சண்முகம் அவர்கள் ஈரோட்டு மாநாடு வருவது எதற்காக என்பதுபற்றி அவரவர் அவரவருக்குத் தோன்றிய காரணங்களைக் காட்டினர். அதிலே, பெரியாருக்கு மன அதிர்ச்சியே தரத்தக்க விதத்தில் சிலர், ஒரு காரணம் காட்டினர். நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை நாம் கைவிட்டு விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பெரியாரின் போக்கை அன்பினால் கட்டுப்படுத்தி மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர், சர். சண்முகம் ஒருவர்தாம் உளர் என்பதறிந்து அவரை அனுப்புகிறார்கள். அவர் மாநாடு வந்து நாட்டுப் பிரிவினைத் திட்டம் நாசம் தரும், மோசம் போகாதீர் என்று பேசப் போகிறார்; அவ்விதம் வேறு எவரேனும் பேசினால், பெரியார் தமது கோபப் பார்வையாலேயே அவர்களை அடக்கிவிட முடியும்! எவருடைய வாதத்தையும் பொடிப் பொடியாக்கிடமுடியும்!! ஆனால் சர். சண்முகம் நாட்டுப் பிரிவினையை எதிர்த்தால், அவரிடம் பாசம் கொண்டுள்ளதால், பெரியாரால் மறுத்திட எதிர்த்திட மட்டுமல்ல, வாதிடக்கூட முடியாது; மனம் நெகிழும், குழ்ம்பும்; நம்ம சண்முகமா இப்படி ஆகிவிட்டார் என்று எண்ணுவார், வருத்தம் மேலிடும்; நம்ம சண்முகமே இப்படி ஆகிவிட்ட பிறகு நாம் யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றும், திகைப்பு மேலிடும் என்பது பலருடைய கருத்து. அதிலே பெருமளவு உண்மையும் உண்டு. பெரியார் உள்ளபடி பயந்தார். அன்புக்குரிய சண்முகத்தை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையும் ஏற்படும் போலிருக்கிறதே என்று.<noinclude></noinclude> sl6fod9mhwtdbfb52yw9ursxey0nqvw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/120 250 642550 1931453 1931194 2026-05-08T13:33:40Z Rabiyathul 5890 + மேலடி 1931453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு. ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். 'மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை! சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை' தாகுப்தன் ஹர்ஷன் அசோகன் என்ற திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதினே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் கண்ட இனம், தனி நாடு' வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார். இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி பெரியார் பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல் வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம்” தனி அரசு கேட்பது. சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே,<noinclude></noinclude> c2qhagzbfdrapbu579eacqg0duej2j6 வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1931446 2026-05-08T13:29:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = ../பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931446 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமா|அக்கமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} lpprwhah6lfc4upxbei28mrdiymcc65 1931466 1931446 2026-05-08T13:56:47Z Booradleyp1 1964 1931466 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} evydlvcdrz5eqitq8w7ac70jley16tj 1931697 1931466 2026-05-09T05:25:15Z Booradleyp1 1964 1931697 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர் நாமா|அக்பர் நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 01dqslolfyfl36rvk0973yz2840703c வாழ்வியற் களஞ்சியம் 1/அ 0 642574 1931455 2026-05-08T13:34:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அ | previous = | next = [[../அஃதை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="37" to="40" fromsection="அ"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931455 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அ | previous = | next = [[../அஃதை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="37" to="40" fromsection="அ" tosection="அ" /> 7zq0r1spo561xwz2rhrabzzlrlxibnv வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை 0 642575 1931457 2026-05-08T13:40:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அஃதை | previous = [[../அ/]] | next = [[../அஃறிணை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="40"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931457 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அஃதை | previous = [[../அ/]] | next = [[../அஃறிணை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="40" to="40" fromsection="அஃதை" tosection="அஃதை" /> qnu9le6fm8achamsr4b78e8cfsenbdx வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை 0 642576 1931458 2026-05-08T13:44:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அஃறிணை | previous = [[../அஃதை/]] | next = [[../அக்கபோதி /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931458 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அஃறிணை | previous = [[../அஃதை/]] | next = [[../அக்கபோதி /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="40" to="41" fromsection="அஃறிணை" tosection="அஃறிணை" /> nfvtpl73f05ftc5b8g42txhc2y7e80z வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி 0 642577 1931463 2026-05-08T13:51:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கபோதி | previous = [[../அஃறிணை/]] | next = [[../அக்கமாதேவி/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931463 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கபோதி | previous = [[../அஃறிணை/]] | next = [[../அக்கமாதேவி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="41" to="41" fromsection="அக்கபோதி" tosection="அக்கபோதி" /> 6agpbukrf5qijdt24cbjpfzk1x26d1u வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி 0 642578 1931465 2026-05-08T13:55:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கமாதேவி | previous = [[../அக்கபோதி/]] | next = [[../அக்கரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931465 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கமாதேவி | previous = [[../அக்கபோதி/]] | next = [[../அக்கரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="41" to="42" fromsection="அக்கமாதேவி" tosection="அக்கமாதேவி" /> 5o67v7h0go4i2zuaocc89f478leayiq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/899 250 642579 1931468 2026-05-08T14:14:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளது. இவ்விருகூற்றுத் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டுப் பல்வேறு சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்களஞ்சியம்‌|871|கலைக்களஞ்சியம்‌}}</noinclude>யும் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளது. இவ்விருகூற்றுத் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டுப் பல்வேறு சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் தோன்றியுள்ளன. அறிவியல், புவியியல், வானியல், உளவியல், மருத்துவம், மெய்ப்பொருளியல், மானுடவியல், நாடுகள், மக்கள் போன்ற பல்வேறு தனித்துறைகளைப் பற்றித் தனித் தனிக் கலைக் களஞ்சியங்கள் தோன்றியுள்ளன. இவை தவிரப் புகழ் பெற்ற தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் கலைக் களஞ்சியங்களாக வெளிவந்துள்ளன. கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘இசுபெகுலம் யுனிவர்சலே’ (Speculum Universale) என்னும் பிரஞ்சுக் கலைக் களஞ்சியத்தை முதன் முதல் தோன்றிய சிறப்புக் கலைக்களஞ்சியமாகக் கூறலாம். அறிவியல் துறையில் தோன்றிய முதல் சிறப்புக் கலைக்களஞ்சியமாக வில்லியம் நிக்கல்சன் (William Nicholson) என்னும் ஆங்கிலேயரால் கி.பி. 1795-இல் தொகுக்கப் பெற்ற வேதியியல் அகராதியினைக் (Dictionary of Chemistry) கூறலாம். இதனைப் பின்பற்றி இன்றுவரையில் மேற்கூறிய பொருள்களைப் பற்றி நூற்றுக்கணக்கான சிறப்புக் கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. <b>குழந்தைகள் கலைக்களஞ்சியம்:</b> படிப்போரின் பொறுத்துச் செய்யப்பெற்ற சிறப்புக் கலைக்களஞ்சியமாகக் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைக் கூறலாம். குழந்தைகளின் வயது, ஆர்வம், மொழித்திறன், தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொதுக்கலைக் களஞ்சியத்தின் செய்திகளைத் தருவதை இதனுடைய நோக்கமாகக் கூறலாம். பொதுமை, எளிமை, கொண்ட செய்திகளைப் படங்களுடன் விளக்குதல், சுருக்கம் ஆகிய பண்புகள் குழந்தைக் கலைக்களஞ்சியத்தின் சிறப்புக் கூறுகளாகும். இவ்வகையில் தோன்றியன 20-ஆம் நூற்றாண்டிற்குரிய சிறப்புக் கூறுகளில் ஒன்று எனலாம். எனினும்‌, கி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு முதலே இத்தகைய முயற்சிகள்‌ நடைபெற்று வந்துள்‌ளன. இக்கால மூயற்சிகளுள்‌ தலை சிறந்ததாக ஆர்தர்‌ மீ என்னும்‌ ஆங்கிலேயர்‌ 1910–இல்‌ தொகுத்த குழந்தைகள்‌ கலைக்களஞ்சியத்தைக்‌ கூறலாம்‌. இதுவே, அமெரிக்காவில்‌ 1912–இல்‌ வெளியிடப்பெற்றுப்‌ பெரும்புகழ்‌ பெற்றது. பிரித்தானியச்‌ சிறுவர்‌ கலைக்களஞ்சியம்‌ கி.பி. 1963–இல்‌ 12 தொகுதிகளை உடையதாய்ப்‌ பலப்பல படங்களுடன்‌ வெளிவந்தது. இதனையடுத்து ஆக்சு போர்டு பதிப்‌பகத்தாரால்‌ வெளியிடப்பெற்ற ஆக்சுபோர்டு சிறுவர்‌ கலைக்‌ களஞ்சியம்‌ 13 தொகுதிகளில்‌ வெளி வந்தது. பொருள்‌ அமைப்பு, படங்கள்‌, செய்திப்‌ பெருக்கம்‌ ஆகிய பல கோணங்களில்‌ பார்க்குமிடத்துக் குழந்தைக் கலைக்களஞ்சியங்களுள்‌ மிகச்‌ சிறந்ததாக இதனைக்‌ கூறலாம்‌. <b>கீழைநாடுகளில்‌ கலைக்களஞ்சியங்கள்‌:</b> பழமைத்‌ தோற்றம்‌, அறிவியல்‌ பார்வை, வேண்டும்போது வேண்டிய செய்திகளை அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ அமைக்கும்‌ குறிப்புநோக்கீட்டுப்‌ பண்பு (Cross–reference Indexes), பொது மக்களுக்கும்‌ பயன்படவேண்டும்‌ என்னும்‌ குடியாட்சி நோக்குப்‌ போன்ற பல கோணங்‌களில்‌ பார்க்குமிடத்துக்‌ கலைக்‌ களஞ்சியங்கள்‌ மேலை நாடுகளில்‌ பெருஞ்‌ செல்வாக்கடைந்தன என்றாலும்‌, கீழை நாடுகளிலும்‌ அவை தோன்றிப்‌ பெருகியிருப்பதைக்‌ காணலாம்‌. இன்றுவரை கிடைத்‌துள்ள சான்றுகளை வைத்துப்‌ பார்க்குமிடத்துக்‌ கி.பி. 220–இல்‌ சீனாவில்‌ முதல்‌ கலைக்களஞ்சியம்‌ தோன்றியிருப்பதாகத்‌ தெரிகிறது. இது முழுவதும்‌ கிடைக்கவில்லை. சீன நாட்டில்‌ தோன்றியவற்றுள்‌ மிகச் சிறந்த கலைக்‌ களஞ்சியமாக வாங்‌–யிங்‌–லின்‌ என்பவரால்‌. இற்றப்பெற்ற யூ–ஐ (Yu–hai) என்ற நூலைக்‌ குறிப்பிடலாம்‌. முதலில்‌ கி.பி. 1267–இல்‌ தோன்றிய இப்பெருநூல்‌ கி.பி. 1738–இல்‌ 240 தொகுதிகளாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. சீனாவின்‌ மிகப்பெரிய கலைக்களஞ்சியம்‌ 22,937 இயல்களுடன்‌ கி.பி. 15–ஆம்‌ நூற்றாண்டில்‌ வெளி வந்தது. உலகிலேயே மிகப்‌ பெரிய கலைக்களஞ்சியமாகக்‌ கருதப்படும்‌ இப்பெருநூலில் கிடைத்த ஒரு சில பகுதிகள்‌ 1963–இல்‌ வெளியிடப்பட்டுள்ளன. இக்‌காலப்‌ புதிய கலைக்களஞ்சியம்‌ சூ–யுவான்‌ (Tzu–Yuan) என்ற பெயரில்‌ 1915-ஆம்‌ ஆண்டு வெளிவந்தது; இதனுடைய பின்னிணைப்பு 1931–இல்‌ வெளியிடப்பெற்‌றது. சீனமொழியில்‌ இன்று பெரு வழக்காக உள்ள கலைக்களஞ்சியம்‌ இதுவே. அரேபிய மொழியில்‌ முதல்‌ கலைக்களஞ்சியம்‌ கி.பி. 9-ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த மொழியியல்‌ அறிஞரான இபின்‌ குதாயபா என்பவரால்‌ இயற்றப்பெற்றது. ‘கிதாப் உயூன்‌ அல்‌ அக்பார்‌’ என்றழைக்கப்படும்‌ இது, பின்னர்‌ வந்த பல கலைக்களஞ்சியங்களுக்கு வழிகாட்டியாய்‌ விளங்‌கியது. இதன்‌ பின்னர்‌, கி.பி. 10–ஆம்‌ நூற்றாண்டில்‌, தோன்றிய ‘மபாதீகு அல்‌ உலூம்‌’ என்னும்‌ நூலும்‌, இதே நூற்றாண்டில்‌ ‘இக்வான்‌ அசாபா’ என்னும்‌ கழகத்தால்‌ தயாரிக்கப்பெற்று கி.பி. 1881-89-இல்‌ வெளியிடப்பெற்ற நூலும்‌ அரேபியக்‌ கலைக்‌ களஞ்சியங்களுள்‌ மிகச்‌ சிறந்தனவாகக்‌ கருதப்படுகின்றன. எகிப்திய மொழியிலும்‌ நல்ல கலைக்களஞ்சியங்கள்‌ பல தோன்றியுள்ளன. வரலாற்றாசிரியசான அன்னூவைரி என்பவர்‌ 9,000 பக்கங்களைக்‌ கொண்ட கலைக்‌<noinclude></noinclude> 2q5t38c7vrbnp86q19nyn4asfnpfy4c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/900 250 642580 1931469 2026-05-08T14:29:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களஞ்சியம் ஒன்றைக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தயாரித்தார். மிகச் சிறந்ததாகக் கருதப்பெறும் இந்நூல் முழுவதுமாக 1923–இல் வெளியிடப்பெற்றது. பார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்களஞ்சியம்‌|872|கலைக்களஞ்சியம்‌}}</noinclude>களஞ்சியம் ஒன்றைக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தயாரித்தார். மிகச் சிறந்ததாகக் கருதப்பெறும் இந்நூல் முழுவதுமாக 1923–இல் வெளியிடப்பெற்றது. பாரசீகத்தில் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளிலேயே அத்தகைய முயற்சிகள் நடைபெற்றிருப்பினும், சென்ற நூற்றாண்டிறுதியில் இலெபனான் நாட்டு புத்ரூசு அல் புசுதானீ என்பவரால் இயற்றப்பெற்ற கலைக் களஞ்சியம்தான் பல பதிப்புகளைப் பெற்று இன்றும் புகழுடன் விளங்குகிறது. இனி, பர்மா, இந்தோனேசியா, சிங்களம் ஆகிய கீழை நாடுகளில் 1950–க்குப் பின்னரே கலைக்களஞ்சியங்கள் தோன்றின. <b>இந்திய மொழிகளில் கலைக்களஞ்சியங்கள்:</b> இந்திய நாட்டில் வேதகாலத்தையடுத்த காலகட்டத்தில் தோன்றிய நிகண்டுகளை ஒருவகைக் கலைக் களஞ்சியங்களாகக் கூறலாம். இயாசுகரின் நிருத்தம் முதலான பல நிகண்டுகள் வடமொழியில் வந்த வண்ணமிருந்தன. தமிழ் மொழியிலும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதலே நிகண்டுகள் தோன்றியுள்ளன. இந்த நிகண்டு நூல்கள் அகரவரிசையில் அமைய வில்லையேனும், பொருளமைப்புகள் பவற்றைக் கொண்டிருந்தன. செய்யுள் நடையில் அமைந்திருப்பது இந்நிகண்டுகளின் தனித் தன்மைகளுள் ஒன்று. மராட்டிய மாநிலத்தில் ஒரு பகுதியை அரசாண்ட பூலோக மல்ல சோமேசுவரன் என்னும் சாளுக்கிய மன்னர் கி.பி. 1131–இல் அபில சிதார்த்த சிந்தாமணி என்னும் ஒருவகைக் களஞ்சியத்தை வடமொழியில் இயற்றினார். இதனுடன் வேறுபல செய்திகளடங்கிய தொகுப்பைப் பிற்காலத்தே சிவ தத்துவ ரத்னாகரம் என்னும் பெயரில் பசவப்ப நாயக்க மன்னர் வெளியிட்டதாகத் தெரிகிறது. கல்கத்தாவில் இருந்த இராசா இராகவா நந்த தேவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த முறையில் அகராதி, கலைக்களஞ்சியம் ஆகிய இரு கூறுகளும் அடங்கிய பெருநூல் ஒன்றைச் ‘சப்த கல்பதருமம்’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் கி.பி. 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே கலைக் களஞ்சியங்கள் உருவாகி வருகின்றன. எசு.வீ. கெட்கெர் என்றும் அறிஞர் 1920-இல் மராத்திமொழியில் ‘மகாராசுட்ரீய ஞான கோசு’ என்னும் கலைக்களஞ்சியத்தை 28 தொகுதிகளில் வெளியிட்டுள்ளார். இவரே குசராத்தி மொழியிலும் ஒரு கலைக்களஞ்சியத்தை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. வங்காள மொழியைப் பொறுத்தவரையில் ஆமுல்லசரன் வித்யாபூசன் என்பவர் ‘பங்கீய மகா கோசு’ என்னும் பெயரில் மூன்று தொகுதிகள் அடங்கிய கலைக் களஞ்சியம் ஒன்றை 1934-இல் வெளியிட்டுள்ளார். ஆந்திர நாட்டில் கே.வீ. இலட்சுமணராவ் என்பவர் ‘ஆந்திர விஞ்ஞான சருவசுவமு’ என்னும் பெயரில் கலைக் களஞ்சியம் ஒன்றை வெளியிடும் பணியை 1913–இல் மேற்கொண்டார். இம்முயற்சி 3 தொகுதிகளுடன் நின்றுவிட்டதாகத் தெரிகிறது. பிரசாத் பூபாலுடு என்னும் பெயர் கொண்ட பெருநிலக்கிழார் ஒருவர் ‘ஆந்திர விஞ்ஞானம்’ என்ற பெயரில் 7 தொகுதிகள் கொண்ட நூலை 1938–இல் வெளியிட்டுள்ளார். இந்தத் தனிமனித முயற்சிகளைத் தவிர, ஆந்திர இலக்கியக் கழகம் பி. கோபால் ரெட்டி என்பவரைத் தலைவராகக் கொண்டு ‘ஆந்திர விஞ்ஞான சருவசுவமு’ என்ற தெலுங்குக் கலைக்களஞ்சியத்தைப் பல தொகுதிகளில் வெளியிட்டுள்ளது. ஒரியா மொழியில் பினோத்து கனுங்கோ என்பவர் ‘ஞானமண்டல்’ என்னும் தலைப்பில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவ்வாறே கன்னட, மலையாள மொழிகளிலும் தனியாராலும், இயக்கங்களாலும், இலக்கியக் கழகங்களாலும் கலைக்களஞ்சியங்கள் தோன்றியவாறுள்ளன. <b>தமிழில் கலைக்களஞ்சியம்:</b> தமிழில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே நிகண்டுகள் தோன்றியுள்ள போதிலும் கலைக்களஞ்சிய முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் அபிதான கோசத்தைத் (1902) தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் தொடக்க நிலையாகக் கருதலாம். சென்னை ஆ. சிங்காரவேலு முதலியார் அரும்பாடுபட்டு இயற்றிய அபிதான சிந்தாமணி (1910) ஏறக்குறைய தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்று பாராட்டப் பெறுகிறது. இந்திய நாடு விடுதலை பெற்றபிறகு இத்துறையில் தமிழறிஞர்களின் நாட்டம் மிகலாயிற்று. சென்னை மாநிலத்தில் முன்னாள் கல்வியமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களது முயற்சியால் உருவாக்கப்பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம் கலைக்களஞ்சிய முயற்சியில் இறங்கியது. ம.ப. பெரியசாமித் தூரன் என்பவரைத் தலைமைப் பதிப்பாளராகக் கொண்டு ஓர் அறிஞர் குழு தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதியை 1954–இல் வெளியிட்டது. இறுதியாகப் பத்தாம் தொகுதியினை 1968–இல் வெளியிட்டு இப்பெரும்பணியை நிறைவேற்றியது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இதே கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தையும் 10 தொகுதிகளாக வெளியிட்டது. தமிழில் தோன்றிய இக்கலைக்களஞ்சியம் பொருளமைப்பு, படங்கள், செய்தித் தொகுப்பு ஆகிய பல சிறப்புக் கூறுகளில் பிற இந்திய மொழிக் கலைக்களஞ்சியங்களை விடச்<noinclude></noinclude> brxrznpb7ef6wjnzv6d6xskzq0tpxsr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/901 250 642581 1931471 2026-05-08T14:47:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறந்து விளங்குவதைக் காணலாம். அறிவு வேட்கையால் இடைவிடாது பெருகிவரும் பல்துறைச் செய்திகளைத் தொகுத்துத் தரும் இப்பணியை இன்று பல நிறுவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்காட்சிக்‌ கூடம்‌|873|கலைக்காட்சிக்‌ கூடம்‌}}</noinclude>சிறந்து விளங்குவதைக் காணலாம். அறிவு வேட்கையால் இடைவிடாது பெருகிவரும் பல்துறைச் செய்திகளைத் தொகுத்துத் தரும் இப்பணியை இன்று பல நிறுவனங்கள் தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் செய்து வருகின்றன. தமிழ் மொழியில் இப்பெரும்பணியைச் செய்து நிறைவேற்றும் பொறுப்பைத் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் 1983-இல் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் மேற்பார்வையில் திரு. பி.எல். சாமி, டாக்டர் நா. பாலுசாமி ஆகியோரை முதன்மைப் பதிப்பாசிரியர்களாகவும் பல்துறை அறிஞர்களைப் பதிப்புக் குழுவினராகவும் கொண்டு சீரியமுறையில் 14 தொகுதிகள் வாழ்வியலிலும் (Humanities), 20 தொகுதிகள் அறிவியலிலும் (Science) வெளியிடும் திட்டத்தை மேற்கொண்டது. இதுவரை வாழ்வியலில் 6 தொகுதிகளும் அறிவியலில் 3 தொகுதிகளும் நிறைவு பெற்றுள்ளன. இந்நாள் துணைவேந்தர் டாக்டர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறார். <b>கலைக்களஞ்சியப் பயன்:</b> இத்துணை அளவு விரிந்த நிலையில் பல்வேறு நாட்டு மொழி அறிஞர்கள் பல்லாண்டுக் காலம் வருந்தி உழைத்துப் பெரும் பொருட்செலவில் படைத்தளிக்கும் இந்தக் கலைக் களஞ்சியங்களினால் பெறும் பயன் என்ன என்ற சிந்தனை மக்களுக்கு எழுவது இயல்பு, தனிப்பட்ட இன, மொழிகளின் பண்பாட்டு வரலாற்றினை அறியவும், உலகளாவிய நிலையில் மானுடப்பண்பாட்டினை அறியவும் இவை பயன்படுகின்றன என்பது ஒருவகை உடனடிப் பயன். மானுட அறிவு, அனுபவம், முயற்சி ஆகியவற்றால் விளைந்துள்ள கலைக்களஞ்சிய நூல்களை முழுமையாகப் பார்க்கும் அல்லது படிக்கும் ஒரு வாசகருடைய ஆன்ம அனுபவம் எவ்வாறு இருக்கும்? மானுட அறிவுப் பெருக்கத்தின் முழுமையை அச்சு வடிவில் காணும் ஒருவர் தம்முடைய அறிவின், அனுபவத்தின், முயற்சியின் சுருக்கத்தையும் முழுமையின்மையையும் எளிதில் உணருவார். அவ் உணர்ச்சி அவருக்கு மேலும் மேலும் கற்கவேண்டும் என்னும் அவாவையும் உந்துதலையும் ஊக்கத்தையும் தரும். {{Right|<b>அ.அ.ம.</b>}} {{larger|<b>கலைக்காட்சிக் கூடம்,</b>}} அரும் பொருள்கள், சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலைப் பொருள்களைக் கண்டுகளிக்க வைக்கப்பட்டிருக்கும் இடம். அருங்காட்சியகங்கள், கலைப்பொருள்களை இடங்கள், தனியார் விற்க அழகுபடுத்தப்பட்ட கலைக்கூடங்கள், யாவும் இவற்றுள் அடங்கும். கலைக்காட்சிக் கூடம் என்ற பொருளுடைய சொல்லை 17–ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பயன்படுத்தினர். எனினும் இதன் பயனை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதன் அறிந்திருந்தான். தொடக்க கால மனிதன் தான் வசித்த குகைகளையே அழகுபடுத்தி ஓவியங்கள் பல தீட்டினான். அப்பொழுதே கலைக்காட்சிக் கூடம் பற்றிய கருத்து தோன்றிவிட்டது. தொன்மைக் காலத்தில் கோயில்கள் ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அழகு செய்யப்பட்டன. கலைக்காட்சி பற்றிய கருத்தைத் தொன்மையான நாகரிக மக்கள் அறிந்திருந்தனர். இந்தியாவில் பல்வேறு கோயில்களில் கலைக் காட்சிக் கூடங்கள் பல இருந்தன. இந்திய இலக்கியங்கள் சித்திரசாலை பற்றிக் குறிப்பிடுகின்றன. பெரோசா துக்ளக்கு அரும் பொருள் சேகரிப்பவரை நியமித்துப் பழம்பொருள்களைச் சேகரித்தார். எகிப்தில் கார்னாக்கிலுள்ள மாபெரும் கோயில்களும் இந்தியாவில் அசந்தா, எல்லோரா, தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில், சித்தன்ன வாசல் ஆகியவற்றிலுள்ள ஓவியக்கூடங்களும் சீனாவில் துங்உவாங்குக் (TungHuang) குகைகளும், மெசப்பொடோமியாவிலும் பாரசீகத்திலும் புதையுண்ட சின்னங்களும் பண்டைக்கால ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் பொருள்களின் சிகரங்களாகத் திகழ்கின்றன. ஏதென்சு நகரின் அகக்கோட்டை வாயிலின் வடக்குப் பகுதியில் சலவைக்கல் மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில் வரலாறு, புராணக் கதைகள் ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் பல இருந்தன. கலைப்பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் உரோமில் குடியாட்சிக் காலத்திலேயே தோன்றியது. கிரேக்க நகர அரசுக் கோயில்களில் போரில் கைப்பற்றப்பட்ட பல்வகைப் பொருள்களையும் கிரேக்கர்கள் வைத்தனர். உரோமானியச் செல்வர்கள் தனிப்பட்ட முறையில் பல அரும்பொருள்களைச் சேகரித்துத் தங்கள் வீடுகளில் வைத்தனர். விலைக்கு வாங்கிச் சேகரிக்கும் வழக்கமும் பின்னர்த் தோன்றியது. இதனால் நகரின் ஒரு பகுதி இப்பொருள்களை விற்கும் ஒரு பகுதியாகவே மாறியது. இலண்டனில் உள்ள பாண்டு (Bond) வீதியும் நியூயார்க்கு நகரின் 57–ஆம் கிழக்குச் சாலையும் இன்று அரும் பொருள்கள் விற்கும் வீதிகளாக உள்ளமைபோல் உரோமும் அக்காலத்தில் இதுபோன்ற பகுதிகளைப் பெற்றிருந்தது. ஐரோப்பாவில் இடைக்காலத்தில் பொதுவாகக் கலைக்காட்சி மண்டபங்கள் இல்லை. கிறித்தவ மடாலயங்களே பொருள்களைச் சேகரிப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டன. நூலகங்கள் பலவும் கிறித்தவ மடாலயங்களால் தோற்றுவிக்கப்பட்டன. இருப்பினும் பொதுமக்களின் பார்வைக்கு அவை அனுமதிக்கப்பட<noinclude></noinclude> d09b7y8wxsqu8sbf5x1mg2dmqg708k8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/902 250 642582 1931473 2026-05-08T14:53:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 902 |bSize = 480 |cWidth = 253 |cHeight = 380 |oTop = 36 |oLeft = 117 |Location = center |Description = }} {{center|கலைக் காட்சிக்கூடம்–சென்னை}} வில்லை. நூலகங்களில் கைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்காட்சிக்‌ கூடம்‌|874|கலைக்காட்சிக்‌ கூடம்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 902 |bSize = 480 |cWidth = 253 |cHeight = 380 |oTop = 36 |oLeft = 117 |Location = center |Description = }} {{center|கலைக் காட்சிக்கூடம்–சென்னை}} வில்லை. நூலகங்களில் கையெழுத்துப் படிகளும் சிற்றோவியங்களும் இருந்தன. நூல்களும் சிற்றோவியங்களும் இடைக்காலச் சமய நிகழ்ச்சிகளைக் கூறுவனவாக இருந்தன. திருச்சபைகளே பல ஓவியங்களையும் சிற்பங்களையும் உயர் அணிமணி வகைகளையும் சேகரித்து வைத்தன. பின்னர் அவை யாவும் மக்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டன. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தில்தான் முறையான கலைக்காட்சிக் கூடங்கள் தோன்றலாயின. ஓவியம் மற்றும் பல்வேறு கலைகளுக்கான மரபுகளும் அமைப்புகளும் போற்றப்பட்டு, அவற்றிற்கேற்பக் கலைவளர்ச்சிக் கழகங்கள் பல தோன்றின. அக்காலத்தில் தனியார் அரும்பொருள்களைச் சேகரிப்பதில் மிக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் சேகரித்த பொருள்களைக் கொண்டு கலைக்கூடங்கள் பல நிறுவினர். பிளாரன்சில் வாழ்ந்த மெடிசி குடும்பத்தினர் சேகரித்த அரும்பொருளால் உப்பிசி (Uffizi), பிட்டி (Pitti) ஆகிய கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டன. போப்பாண்டவர்கள் சேகரித்த கலைப் பொருள்களைக் கொண்டு, வத்திகன் கலைக்கூடமும், பார்னிசு (Farnese) சேகரித்த அரும்பொருள்கள் கொண்டு நேப்பிள்சு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டன. அரசர்களும் கலைக்கூடங்கள் அமைப்பதில்<noinclude></noinclude> 9h4eanraldr4nxhopwtciyciswgh5mw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/903 250 642583 1931474 2026-05-08T15:11:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆர்வம் காட்டினர். பாரிசிலுள்ள உலூவார் (Louvre) அரண்மனை பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. பிரான்சு நாட்டின் அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்காட்சிக் கூடம்|875|கலைக்காட்சிக் கூடம்}}</noinclude>ஆர்வம் காட்டினர். பாரிசிலுள்ள உலூவார் (Louvre) அரண்மனை பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. பிரான்சு நாட்டின் அரசர்கள் சேகரித்த பொருள்களும் இவ்வருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. உரோமிலும் கிரேக்கத்திலும் பல அருங்காட்சியகங்கள் அக்காலத்தில் தோன்றின. தொன்மை மிக்க உரோமின் கலைப்பொருள்களைச் சேகரிப்பதில் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், செருமானியர் போன்றோர் மிகுந்த ஆர்வம் செலுத்தினர். அதனால் அந்நாட்டின் கலைச் செல்லங்கள் யாவும் பிற நாடுகளுக்குச் சென்றன. எனவே போப்பாண்டவர்கள் இத்தாலியிலிருந்து அப்பொருள்களைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்கச் சட்டம் இயற்றினர். அரும்பொருள்களை வத்திகன் அருங்காட்சியகத்திற்குப் பிறரிடமிருந்து வாங்கி அழகு செய்தனர். கிரேக்கர்களும் அந்நாட்டின் தொன்மைக் கலைச் செல்வங்களையும் பல்வேறு அகழாய்வுகளில் கிடைத்த பொருள்களையும் மக்களின் காட்சிக்கு வைக்கப் புதிதாகப் பல அருங்காட்சியகங்களை நிறுவினர். இதேபோன்று அண்மைக் கிழக்கு நாடுகளும் தூரக் கிழக்கு நாடுகளும் தங்கள் நாடுகளில் கலைக்கூடங்கள் பல நிறுவின. <b>தேசிய கலைக்காட்சிக் கூடங்கள்:</b> கலைகளைப் போற்றவும் பாதுகாக்கவும், நவீனகாலக் கலைகளை வளர்க்கவும், கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் இக்கால அரசாங்கங்கள், தேசிய கலைக்காட்சி மண்டபங்கள் நிறுவுவதில் ஆர்வமுடையவனவாக உள்ளன. பாரிசிலுள்ள உலூவார் அருங்காட்சியகமே தேசிய அருங்காட்சியகங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. பதினான்காம் உலூயி கி.பி. 1681-ஆம் ஆண்டிற்கு முன்பே தம் உலூவார் அரண்மனையின் ஒருபகுதியைக் கலைக் காட்சிக் கூடமாக மாற்றினார். இம்மண்டபத்தில் அப்பொழுது பிரெஞ்சு நீதிமன்றம் செயற்பட்டது. பிரெஞ்சு நாட்டுக் கவின் கலை உறுப்பினர்கள் அரசரின் அனுமதி பெற்றும் நீதிமன்ற அனுமதி பெற்றும் இம்மண்டபத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவ்வருங்காட்சியகத்தில் தனியார் சேகரித்த பொருள்களும் இடம்பெற்றன. இது கி.பி. 1793–நவம்பர் மாதம் 8–ந்தேதி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டது. இதன் செயற்பாட்டையும் வளர்ச்சியையும் கவனிக்கச் சேக்குசு உலூயி (Jacques Louis David) என்ற ஓவியரின் தாவீது தலைமையில் ஓர் அமைப்பு நிறுவப்பட்டது. கலைஞர்களுக்கு இவ்வருங்காட்சியகம் பெரிதும் பயன்பட்டது. இலண்டனில் பிரித்தானிய அருங்காட்சியகம் (British Museum) கி.பி. 1753–இல் நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. இது கி.பி. 1759–இல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. மாட்ரீடு (Madrid), பராடோ (The Prado) கலைக்காட்சிக் கூடமும் இலண்டன் தேசிய கலைக் கூடமும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட கலைக்கூடங்களாகும். மாட்ரீடு, பராடோ கலைக்காட்சிக்கூடம் இசுபானிய அரசர்களின் கலைப் பொருள்களையும், இலண்டன் தேசிய கலைக் கூடம் கலைகளைக் கற்பவர்கள் செய்த கலைப் பொருள்களையும் கொண்டு விளங்குகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள கலைக் கூடங்கள் யாவும் குடியாட்சி அமைப்பை விளக்கும் கலைப்பொருள்களைக் கொண்டே விளங்குகின்றன. ஐரோப்பியக் கலைக் கூடங்கள் போன்று அரசர்களின் பொருள்களை இங்குக் காண இயலாது. இப்பொருள்கள் யாவும் தனிப்பட்ட மக்களின் சேகரிப்புகளால் ஆனவை. தனிப்பட்ட மனிதர்களின் கலைக்கூடங்கள் பலவும் இந்நாட்டில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த நகரங்களில் இக்காலத்தில் பல கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பண்டைக்காலக் கலைப் பொருள்களும் இக்காலக் கலைப்பொருள்களும் கலைக்காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கலைக்காட்சிக் கூடங்களும் அருங்காட்சியகங்களும் உள்ளன. கலைக்காட்சிக் கூடங்கள் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. தொன்மையான கலைகளை அறியவும் கற்கவும் நவீன கலைகளை வளர்க்கவும் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இக்கலைக் கூடங்கள் உதவுகின்றன. பண்பாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய உதவும் கலைச் செல்வங்களைப் பேணிக் காக்கும் பெட்டகங்களாகக் கலைக் கூடங்கள் விளங்குகின்றன. இக்காலத்தில் வரலாறு, பண்பாடு, மானிடவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் ஆகிய பல்வேறு துறைகளுக்கும் சிறப்புக் கலைக்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இக்காலக் கலைக்கூடங்கள் பல கல்வி அறிவை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களும் கலைக்கல்விக் கூடங்கள் அமைத்துக் கலை அறிவைக் கற்பிக்கின்றன. இலண்டனிலுள்ள ஆல்பர்ட்டு அருங்காட்சியகமும் விக்டோரியா அருங்காட்சியகமும் அமெரிக்காவில்<noinclude></noinclude> 5y5o82q62ubugrorx5xnwtodk6xvfps வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா 0 642584 1931475 2026-05-08T15:12:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கரா | previous = [[../அக்கமாதேவி/]] | next = [[../அக்கராபாலிசு/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931475 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கரா | previous = [[../அக்கமாதேவி/]] | next = [[../அக்கராபாலிசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="42" to="42" fromsection="அக்கரா" tosection="அக்கரா" /> k4bnjspcqahzgaojiwlmlor8kgo0xv2 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு 0 642585 1931478 2026-05-08T15:23:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கராபாலிசு | previous = [[../அக்கரா/]] | next = [[../அக்கள நிம்மடி1/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931478 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கராபாலிசு | previous = [[../அக்கரா/]] | next = [[../அக்கள நிம்மடி1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="42" to="43" fromsection="அக்கராபாலிசு" tosection="அக்கராபாலிசு" /> ckcfj4kogy2z1idxnpv3vo4bacowz8g வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1 0 642586 1931481 2026-05-08T15:30:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கள நிம்மடி1 | previous = [[../அக்கராபாலிசு/]] | next = [[../அக்கள நிம்மடி2/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931481 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கள நிம்மடி1 | previous = [[../அக்கராபாலிசு/]] | next = [[../அக்கள நிம்மடி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="43" fromsection="அக்கள நிம்மடி1" tosection="அக்கள நிம்மடி1" /> m4qirjieoalkl0kpjrx8lkyyoju3hpq வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2 0 642587 1931484 2026-05-08T15:41:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கள நிம்மடி2 | previous = [[../அக்கள நிம்மடி1/]] | next = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931484 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கள நிம்மடி2 | previous = [[../அக்கள நிம்மடி1/]] | next = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="43" fromsection="அக்கள நிம்மடி2" tosection="அக்கள நிம்மடி2" /> tvqv9jrltjg6iqh9thdyyuoy4vd2d7r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/904 250 642588 1931485 2026-05-08T15:46:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உரோடுத் தீவு அருங்காட்சியகமும் இதன் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டன. இந்தியாவில் இருநூற்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்கோட்டுத்‌ தண்டு|876|கலைஞான தீபம்‌}}</noinclude>உரோடுத் தீவு அருங்காட்சியகமும் இதன் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டன. இந்தியாவில் இருநூற்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றுள் கல்கத்தா, தில்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலுள்ள தேசிய அருங்காட்சியகங்களும், ஐதராபாதிலுள்ள சாலர்சங்கு அருங்காட்சியகமும், சென்னை அருங்காட்சியகமும் குறிப்பிடத்தக்கவை. காண்க: அருங்காட்சியகங்கள், இசுமித் சோனியன் அருங்காட்சியகம், இந்திய அருங்காட்சியகம். {{Right|<b>சு.இரா.</b>}} {{larger|<b>கலைக்கோட்டுத் தண்டு</b>}} என்பது ‘களவியல்’ என்னும் இறையனார் அகப்பொருளுரையால் அறியலாகும் ஒரு தமிழ் நூல்; இக்காலத்தில் இறந்து பட்டது. ஒரு நூல் எவ்வெவ் வகையாற் பெயர் பெறும் என்பதனை விளக்குமிடத்து இறையனார் களவியலுரையாசிரியராகிய நக்கீரர், இடுகுறியால் ஒரு நூலுக்குப் பெயர் அமையும் என்பதனை விளக்கும் எடுத்துக்காட்டாகக் ‘கலைக்கோட்டுத் தண்டு’ என்னும் இப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் நக்கீரர் காலத்திலேயே இறந்துபட்டிருப்பின், அதனை அவர் இடுகுறியாற் பெயர் பெற்றமைக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டிருக்க மாட்டார். அதனால், அவர் காலத்தில் இந்நூல் வழக்கில் இருந்திருக்கவேண்டும். நன்னூல் உரையாசிரியராக விளங்கும் சங்கர நமச்சிவாயப் புலவர் முதலியோர் இடுருதியால் நூல் பெயர் பெற்றமைக்கு இந்த நூலினை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளனர். களவியல் உரையாசிரியர் காலத்திற்குப் பின் வழக்கிறந்ததாகக் கருதப்படும் இந்நூலினைப் பின்னர்வந்த இலக்கண உரையாசிரியர்கள், முன்னோர் மொழி பொருளைப் போற்றும் வகையில் எடுத்துக் காட்டியிருத்தல்கூடும். ‘கலைக்கோட்டுத் தண்டு’ என்னும் இந்நூல் இக்காலத்தில் இல்லாமையாலும், இப்பெயர் இடுகுறியாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளமையாலும், இப்பெயர் கொண்டு இந்நூல் கூறும் பொருள் இதுவாகுமென்று ஊகித்துணரவும் வாய்ப்பில்லை. {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலைக்கோட்டு முனிவர்:</b>}} கம்பராமாயணத்தில் பாலகாண்டத் திருஅவதாரப் படலத்தில் கலைக்கோட்டு முனிவர் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இவர் விபாண்டக முனிவருக்கு மகன்; மான் வயிற்றில் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறார். பிறக்கும் போதே மான் கொம்பு ஒன்று தலையில் உடையவராகப் பிறந்ததால் கலைக்கோட்டுமுனிவர் என்று அழைக்கப்பட்டார். இவரை இருசிய சிருங்கர் என்றும் கூறுவர். மகப்பேறு உண்டாகக் கலைக்கோட்டு முனிவரை அழைத்து வேள்வி செய்யவேண்டும் என்று தசரதனுக்கு வசிட்டர் அறிவுரை கூறுகின்றார். இவர் வரலாறு அப்பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உரோம பாதனின் அங்க நாட்டில் நெடுங்காலம் மழையின்றிப் பஞ்சம் பெருகியது. கலைக்கோட்டு முனிவர் இங்கு வரின், மழை பெய்யும் என்று பெரியோர்கள் கூற, அரசனும் அம்முனிவரை மயக்கி அழைத்துவரக் கணிகை மகளிரை அனுப்புகிறான். தவநெறியில் ஈடுபட்ட முனிவரது குடிலின்கண் அவர்கள் தவசியர் போல வேடங்கொண்டு சென்றனர். அம்முனிவரும் அவர்களை வரவேற்று உபசரித்தார். இனிய கனிகளை அவர்கள் நல்க முனிவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் விரும்பிய வண்ணம் முனிவர் அங்க நாட்டெல்லையை அடையப் பெருமழை பொழிந்தது. அரசனும் முனிவரை வரவேற்று வீழ்ந்து வணங்கினான். மகளிர் செய்த வஞ்சமிது என முனிவர் உணர்ந்த போது, மன்னவன் பணிந்து வேண்ட முனிவர் சினம் நீங்கியது. தன் அரண்மனைக்கு அவரை அழைத்துச் சிங்காதனத்தில் இருத்தித் தன் மகள் சாந்தையை மணங்கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் அவளை மணந்து உரோமபாதன் அரண்மனையிலேயே தங்கி இருந்தார். வசிட்ட முனிவரின் அறிவுரைப்படி, தசரத மன்னன் அங்க நாட்டிலிருந்து கலைக்கோட்டு முனிவரை வரவழைத்துப் பெருமைப்படுத்தினான். பின்னர், இம்முனிவர் உதவியுடன் புத்திர காமேட்டி வேள்வி செய்தான். அதன் பயனால் மன்னன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் முறையே இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன் ஆகியோரை ஈன்றனர். {{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}} {{larger|<b>கலைஞான தீபம்</b>}} வீரை கவிராச பண்டிதரால் இயற்றப்பெற்ற ஒருநூல், அவர் பழைய சேது சமத்தானத்தைச் சேர்ந்த ‘வீரசோழன்’ எனப்படும் வீரை நகரில் தோன்றியவர். அந்தணர் மரபினைச் சேர்ந்தவர். அவர் முன்னோர் வேம்பத்தூரிலிருந்து சென்றவராவர். ‘கவிராச பண்டிதர்’ என்பது அவரது சிறப்புப் பெயராகும். கலைஞான தீப நூலின் 96–ஆம் பாடலில் அமைந்துள்ள ‘தாரணி தன்னில் கவிராச சுந்தரன் தந்தனனால்’ என்னும் தொடரால் கவிராச பண்டிதர் என்பது சிறப்புப் பெயராகும் என்பதும், சுந்தரன் என்பது புலவர்தம் இயற்பெயராக இருத்தல்கூடும் என்பதும் புலாகின்றன. இந்நூல் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் ஆகியது. இந்நூலில் 101 செய்யுட்களில் முன் 50 செய்யுட்கள் தோத்திரமாகவும், பின் 50 செய்யுட்கள் சாத்திரமாகவும் அமைந்துள்ளன. இதன் 101–ஆம் பாடல் நூற்-<noinclude></noinclude> au02iwx8yi3bdv8ndn3j5t6nlbsx4fk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/905 250 642589 1931486 2026-05-08T15:57:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பயன் கூறுவதாக உள்ளது. நூல் முழுதிலும் சிவம், சத்தி ஆகிய இரண்டன் வேறுபாடற்ற நிலையினை ஆசிரியர் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இந்த நூலின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைப்பு அதிகாரி|877|கலைப்பு அதிகாரி}}</noinclude>பயன் கூறுவதாக உள்ளது. நூல் முழுதிலும் சிவம், சத்தி ஆகிய இரண்டன் வேறுபாடற்ற நிலையினை ஆசிரியர் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இந்த நூலின் முழுப்பெயர் ‘புவனாம்பிகை கலைஞான தீபம்’ என்பதாகும். இதனை ஆசிரியர் முதற்செய்யுளில், ‘புவனை கலை ஞான தீபப் பனுவல்’ என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகையைப் பூரணி, புராதனி, திரிபுரை, அபிராமி, ஞானப்பசுங்கொடி முதலிய பெயர்களால் சுட்டி வழுத்தியுள்ளார். ‘எனக்குத் தொழில் கொடுந் தீதான பாவம் இயற்றிடுவது உனக்குத் தொழில் அது தீர்த்து என்னை ஆள்வது’ என்று இவர் தம் சிறுமையினையும், அதனை நீக்கி ஆளும் அம்பிகையின் அருள் திறத்தினையும் அழகுறக் காட்டியுள்ளார். நூலின் பிற்பகுதியில், அக்கினி சக்கரம், இந்திர சக்கரம், உலக வசியம், மோகச்சக்கரம், புவனை யந்திரம், மந்திரப் பயன், ஓமம், திருவடிப் பேறு போன்ற பல யந்திர தந்திரச் செய்திகளையும், சாத்திரச் செய்திகளையும் கூறியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலைப்பு அதிகாரி:</b>}} நிறுவனக் கலைப்பு நடவடிக்கைத் தொடர்பாக உயர்நீதி மன்றங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்படுபவர் கலைப்பு அதிகாரி (Official Liquidator) எனப்படுவார். மாவட்ட நீதிமன்றங்களில் நொடிப்பு நிலையர் சொத்தாட்சி அலுவலர் (Official Receiver in Insolvency) அவற்றின் கலைப்பு அதிகாரியாக இருப்பார். மாவட்ட நீதிமன்றங்களில் நொடிப்பு நிலையர் சொத்தாட்சி அலுவலர் இல்லாத போது, மத்திய அரசு அரசுப் பதிவிதழ் (Official Gazette) மூலம் அறிவிப்புச் செய்து, கலைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும். மத்திய அரசு கலைப்பு அதிகாரிக்குத் துணைபுரிகின்ற வகையில் பல துணைக் கலைப்பு அதிகாரிகளையும் நியமிக்கும். கலைப்பு அதிகாரியின் பணி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அவர் சட்டப்படி செய்தவை அனைத்தும் சட்டப்படி செல்லுறத்தக்கவையாகும். கலைப்பு அதிகாரியின் பணியமர்வு அல்லது தகுதி நிலைக் குறைபாடுகள் அவற்றைப் பாதிப்புறச் செய்வதில்லை. கலைப்பு அதிகாரியின் பணிக்கான ஊதியம், நிறுவனச் சொத்தினின்று சுட்டணமாகக் குறித்துரைக்கப்பட்ட ஒரு தொகை மத்திய அரசாங்கத்திடம் செலுத்தப்படும். மத்திய அரசு கலைப்பு அதிகாரியின் நடத்தையைக் கண்காணிக்கவும் கவனிக்கவும் மற்றும் அவர் நேர்மையாக நடந்திருக்கும்போது அல்லது கடனாளர் பங்குச் கடப்பாட்டாளரால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்போது அதனை விசாரிக்கவும் அதிகாரமுடையதாகும். <b>விவர அறிக்கை அனுப்புதல்:</b> கலைப்பு அதிகாரியின் பணியை இலகுவாக்கும் பொருட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை ஓர் அறிக்கையில் நிறுவன அல்லது இயக்குநர் செயலர் (Secretary) அல்லது மேலாளர் அல்லது நிறுவனத் தலைமை அலுவலர் (Chief Officer of the Company) கலைப்பு அதிகாரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். கலைப்பு அதிகாரி இடைக்காலக் கலைப்பு அதிகாரியாக (Provisional Liquidator) இருக்குமிடத்து, விவர அறிக்கை பின்வரும் நிலையில் அமைந்திருத்தல் வேண்டும். அ) நிறுவனச் சொத்துகள் (கையில் பணமாக உள்ளது எவ்வளவு, வங்கியில் உள்ளது எவ்வளவு என்று தனித்தனியே குறிப்பிடுதல் வேண்டும்). மாற்று முறை ஆவணங்கள் எவையேனும் இருப்பின் அவை; ஆ) நிறுவனத்தின் கடன்கள், பொறுப்படைவுகள் (Liabilities); இ) கடன் கொடுத்தவர் பெயர். முகவரி, தொழில் முதலான விவரங்கள், பிணைக் கடன்கள் (Secured Debts), பிணையிலாக் கடன்கள் (Unsecured Debts) குறித்த விவரங்கள் (இவற்றைத் தனித்தனியே குறிப்பிடுதல் வேண்டும்); ஈ) நிறுவனத்திற்கு வந்துசேர வேண்டிய கடன்தொகை, அது எவரிடமிருந்து வரப்பெறுதல் வேண்டுமோ அவர்தம் பெயர், முகவரி, தொழில்; உ) குறித்துரைக்கப்பட்ட மற்றைய விவரங்கள் அல்லது கலைப்பதிகாரியால் வேண்டப்படும் விவரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். இவ்விவர அறிக்கை பின்னர் நிறுவன இயக்குநர், செயவர், மேலாளர் அல்லது நிறுவனத் தலைமை அலுவலர் அளிக்கும் ஆணை உறுதிமொழியின் மீது (Affidavit) கலைப்பு அதிகாரியால் சரிபார்க்கப்படும். <b>கலைப்பு அதிகாரியின் அறிக்கை:</b> மேற்குறிப்பிடப்பட்ட வகையில் கலைப்பு அதிகாரி விவர அறிக்கையைப் பெற்றதும், பிரிவு 455–இன்படி நிறுவனக் கலைப்பிற்குக் கட்டளையிட்ட நாளிலிருந்து கூடிய விரைவில், அதாவது 6 திங்களுக்கு மேற்படாத நிலையில் அல்லது நீதிமன்றம் நீடித்த கால அளவிற்குள் நீதிமன்றத்திற்குத் தொடக்கநிலை அறிக்கை (Preliminary Report) ஒன்றைக் கொடுத்தல் வேண்டும். அவ்வறிக்கையானது, 1) நிறுவனம் வழங்கிய பங்குத்தொகை, சந்தாத்தொகை, அதில் செலுத்திய தொகை, சொத்து மதிப்பு, பொறுப்படைவுகள், மாற்றுமுறைப் பிணையம், பங்குக் கடப்பாட்டாளரிடமிருந்து வரவேண்டிய கடன் நிலுவை, பிணையாளரிடமிருந்து வரவேண்டிய கடன் நிலுவை, நிறு-<noinclude></noinclude> 4yr3u4rt3dccpafq328ty3nnd4ymbjb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/186 250 642590 1931490 2026-05-08T16:15:35Z Info-farmer 232 {{dhr|10em}} 1931490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. 29-5-1960 அண்ணன், Jimmy {{dhr|10em}}<noinclude></noinclude> 57mmh1e3z4z1vnlqiffdcde484jlt7a 1931492 1931490 2026-05-08T16:17:49Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. {{Right|அண்ணன்,|3em}} 29-5-1960 {{dhr|10em}}<noinclude></noinclude> qpb24qkhiptc1wa13x028vbp2uvuzgk 1931493 1931492 2026-05-08T16:19:10Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ மேலடி 1931493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|1<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. {{Right|அண்ணன்,|3em}} 29-5-1960 {{dhr|10em}}<noinclude></noinclude> 8rf8did7dxh9kysuzb5enp394gpcnhl 1931497 1931493 2026-05-08T16:47:04Z Info-farmer 232 கையொப்பம் 1931497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|1<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 29-5-1960 {{dhr|10em}}<noinclude></noinclude> jak4dpbr2pald4dv9t5r5xnpkcksvcu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/906 250 642591 1931491 2026-05-08T16:15:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வனத்தின் அசையாநிலை மற்றும் அசைவியல் சொத்துகள் குறித்த விவரங்கள்; 2. நிறுவனம் நிகழ்வுறாது போனமைக்குக் காரணம்; 3. நிறுவனம் நிகழ்வுறாமைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைப்பு அதிகாரி|878|கலைமகள்}}</noinclude>வனத்தின் அசையாநிலை மற்றும் அசைவியல் சொத்துகள் குறித்த விவரங்கள்; 2. நிறுவனம் நிகழ்வுறாது போனமைக்குக் காரணம்; 3. நிறுவனம் நிகழ்வுறாமைக்கு நிறுவனம் தொடங்கப்பட்டமை அல்லது நிறுவப்பட்டமை குறித்த விசாரணை அவசியமாக இருப்பின், அவை பற்றிய விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். <b>நிறுவனச் சொத்துக் காப்பாளர்:</b> நிறுவனம் ஒன்று கலைக்கப்படுவதற்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது அந்நிறுவனத்தின் அனைத்துச் சொத்துக்களுக்கும் கலைப்பு அதிகாரியே காப்பாளராக இருப்பார். நிறுவனத் தொடர்புடைய சொத்துக்கள் தம் பாதுகாப்பில் வரப்பெறுவதற்காகக் கலைப்பு அதிகாரி அந்நிறுவனச் சொத்தின் ஆளுகைக்கு உட்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நாடலாம். அவர்களும் அச்சொத்தை அவரிடம் மீட்டுத் தரச் சட்டத்திற்கு உகந்த முறையில் நடவடிக்கைகளை எடுப்பர். <b>அதிகாரங்கள்:</b> கலைப்பு அதிகாரிக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன. 1. நிறுவனத்தின் பெயரில் அல்லது நிறுவனத்திற்காக உரிமையியல், குற்றவியல் வழக்குத் தொடுத்தல், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல், எதிர்வாதம் புரிதல்; 2. நிறுவனம் கலைக்கப்படுவதைச் செம்மையாகச் செய்து முடிக்கத் தேவையான முறையில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துதல்; 3. நிறுவனச் சொத்தைப் பொது ஏலம் அல்லது தனிப்பட்ட ஒப்பந்தம் மூலம் விற்றல், உரிமை மாற்றம் செய்தல்; 4. நிறுவனத்தின் பேரில் தேவைப்படும் கடனைப் பெறுதல்; 5. நிறுவனத்தின் அனைத்துக் காரியங்களையும் முடிப்பதற்கும் அதன் பங்கைப் பிரித்தளிப்பதற்கும் தேவைப்படும் வகையில் செயற்படுதல் ஆகியன. நீதிமன்ற அனுமதி இல்லாமல் கலைப்பு அதிகாரிக்குக் கூடுதலாக உள்ள அதிகாரங்கள் வருமாறு: 1. நிறுவனத்திற்காக ஆவணங்களும் (Documents) ஒப்பாவணங்களும் (Deeds) எழுதிக் கொடுப்பது, முத்திரையிடுவது; 2. நொடிப்பு நிலையற்ற பங்குக் கடப்பாட்டாளருக்குச் சேர வேண்டியதைப் பெறுவது; 3. நிறுவனத்தின் பெயரால் மாற்றுச் சீட்டுகள் (Bills of Exchange), உண்டியல் அல்லது கடனுறுதிச் சீட்டு (Promissory Note) வரைவது, ஏற்பது, ஏற்படுத்துவது, மேலெழுத்துச் செய்வது; 4. இறந்துவிட்ட பங்குக் கடப்பாட்டாளர் தம் சொத்துக்குத் தம் பெயரால் நிருவாக உரிமைப் பத்திரம் (Letters of Administration) பெறுவது; 5. அலுவல் நிமித்தம் தம் பணியைச் செய்வதற்கு முகவர் ஒருவரை நியமித்துக் கொள்வது; 6. பதிவாளர் தம் அலுவலகப் பதினாவணங்கள் (Records) விவரக் குறிப்புகளைக் கட்டணமின்றிப் பார்வையிடுவது போன்றவை. <b>கடமைகள்:</b> 1. நிறுவனச் சொத்துகளைப் பெறுவது, அவற்றைத் தம் பொறுப்பில் வைத்துக் கொள்வது 2. கடனாளர், பங்குக் கடப்பாட்டாளர் பட்டியலைத் தயார் செய்வது; 3. கடனாளர், பங்குக் கடப்பாட்டாளர் தீர்மானத்திற்கேற்பக் கூட்டங்களை நடத்துவது, அவர்களது கருத்துரைப்படி செயலாற்றுவது; 4. நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆண்டிற்கு இரண்டுமுறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பது போன்றவை. {{Right|<b>பு.வே.</b>}} {{larger|<b>கலைமகள்</b>}} கலைக்கும் கல்விக்கும் கடவுள். தொன்மைக்காலத்திலிருந்தே கலைகளை வழிபடும் வழக்கம் இந்தியாவில் இருந்துவருகிறது. கலைமகள் சரசுவதி, வாக்கு, வாக்குதேவி, வாகீசுவரி, பாரதி, வாணி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுகிறாள். இந்துக்கள் மட்டுமன்றிப் பௌத்தர்களும் சமணர்களும் இத்தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த நூலான மணிமேகலையில் நாமிசைப்பாவை, சிந்தாதேவி, நந்தாவிளக்கு, வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி எனக் கலைமகள் குறிப்பிடப்பட்டுள்ளாள். இந்நூலில் கலைமகளின் கோயில் கலை நியமம் எனக் கூறப்பட்டுள்ளது. மச்சபுராணத்தில் கலைமகளின் தோற்றம்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குமர குருபரர் தில்லிக்குச் சென்று அங்கு அரசராக விளங்கிய பாதுசாவிடம் சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடினார். சரசுவதி அந்தாதி என்னும் நூலைக் கம்பர் இயற்றினார். கலைகள் அறுபத்து நான்கு எனப்படுவதால் கலைமகள் ‘கலைக்கூட்டப் பிணை’ என உருவகம் செய்யப்படுகிறாள். பிற்காலத்தில் புலவர்கள் நூல்களை எழுதும்பொழுது முதலில் கலைமகளை வணங்கியே எழுதினர். கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்; வெள்ளை அணி உடை உடுத்தி, வெள்ளை பூண்டிருப்பாள்; வெண்ணிறமுடையவளாகத் திகழ்வாள். கலைமகள் பிரமனின் மனைவியென்று புராணங்கள் கூறுகின்றன. இவள் பிரமன் நாவில் வீற்றிருப்பாள். பிரமவித்தையை முகமாகவும், நான்கு வேதங்களைக் கைகளாகவும், எண்ணையும் எழுத்தையும் கண்களாகவும், இசையினையும் இலக்கணத்தையும் இரு தனங்களாகவும், இதிகாச புராணங்களைத் திருவடிகளாகவும், ஓங்காரத்தை யாழாகவும் கொண்டு கலைமகள் விளங்குகிறாள். {{nop}}<noinclude></noinclude> 78s99sdd1ko9t10twenn38vh2of396u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/907 250 642592 1931501 2026-05-08T17:21:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நவராத்திரி விழாவில் கடைசி நாளன்று சரசுவதி (கலைமகள்) பூசையைக் கொண்டாடுகிறார்கள். கல்வியும் ஞானமும் வேண்டுவதற்காக இந்நாளில் கலைமகளுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைமகள்‌|879|கலைமகள்‌ விழா}}</noinclude>நவராத்திரி விழாவில் கடைசி நாளன்று சரசுவதி (கலைமகள்) பூசையைக் கொண்டாடுகிறார்கள். கல்வியும் ஞானமும் வேண்டுவதற்காக இந்நாளில் கலைமகளுக்கு வழிபாடு செய்கிறார்கள். கலைமகள் கோயில்களிலே பல்வேறு வடிவங்களில் வைத்து வணங்கப் பெறுகிறாள். கலைமகளின் உருவ நலன்களைப் பற்றி விட்டுணு தருமோத்திம், பூரணகாரணாகமம், சுத்தசம்கிதை, தேவிமகாத்மியம் போன்ற ஆகம நூல்கள் எடுத்துரைக்கின்றன. பல்லவர் காலத்தில் இராசசிம்மனால் எடுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலில் மூன்று இடங்களில் கலைமகளின் சிற்பங்களைக் காணலாம். கலைமகள் நான்கு கைகள் உடையவள்; வலக் கைகளில் அட்ச மாலையும் தியான முத்திரையும் இடக் கைகளில் குண்டிகையும், ஒலைச் சுவடிகளையும், தாங்கியிருப்பாள். இக்கோயிலில் மற்றோர் இடத்தில் உள்ள கலை {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 907 |bSize = 480 |cWidth = 178 |cHeight = 260 |oTop = 237 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|கலைமகள் – 10–ஆம் நூற்றாண்டுச் சிற்பம் –<br>கங்கைகொண்ட சோழபுரம்.<br>நன்றி – தமிழ்நாடு அரசுத்<br>தொல்பொருள் ஆய்வுத்துறை.}} மகள் வலது கைகளில் அட்சமாலையும் அபயமுத்திரையும், இடக் கைகளில் கமண்டலமும் மலரும் வைத்திருக்கிறாள். உத்தரமேரூர்ச் சுந்தரவரதப் பெருமாள் கோயிலில் கலைமகள் தாமரை மலர்மீது நான்கு கைகளுடன் வீற்றிருக்கும் நிலையில் சிற்பம் உள்ளது. தேலியில் காலடிக்குக்கீழே இருபுறமும் இரு அடியார் தேவியை வழிபடும் நிலையிலும், தலைக்கு மேலே உள்ள இரு யானைகளுள் ஒன்று குடத்திலிருந்து நீரைத் தேவியின் முடிமீது கொட்டும் நிலையிலும் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு அடுத்துள்ள தடையூர்ச் சிவன் கோயிலிலும் தஞ்சைப் பெரிய கோயிலின் இடப்புற நுழைவு வாயிலின் அருகிலும் கலைமகள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கலைமகள் ஞான சரசுவதி எனக் கூறப் பெறுகிறாள். கைகளில் அட்சமாலை, கமண்டலம், ஞானமுத்திரை கொண்டு ஓலைச்சுவடியைத் தாங்கி, அமர்ந்த கோலத்தில் இவள் உள்ளாள். சிதம்பரத்தின் கோபுரங்களில் உள்ள தேவகோட்டங்களில் இவள் சிற்பங்கள் உள்ளன; தேவியின் பாதத்திற்குக் கீழே முன்னவர்கள் போற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் வீணை ஏந்திய நிலையில் இருக்கும் சரசுவதியின் திருவுருவங்களைக் காணலாம். நன்னிலம் வட்டத்தில் கூத்தனூர் என்ற ஊரில் சரசுவதிக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இவள் பிரமன் மனைவியாதலால் பிராமி எனவும், எல்லாவற்றையும் தாங்குவதால் பாரதி எனவும், வாக்குத் தெய்வமாதலால் வாணியெனவும், சரசு ஏரி போல் சுவைகளின் பிறப்பிடமாக விளங்குவதால் சரசுவதி எனவும் கூறப்படுகிறாள். வேத காலத்தில் சரசு ஆற்றையும் ‘வாக்’ தேவதையையும் மக்கள் வழிபட்டனர். அதுவே, பிற்காலத்தில் சரசுவதி என்று பெயர் ஏற்படக் காரணமானது. பிரமனுடன் இருக்கும் பொழுது இவள் அன்னப்பறவை (அம்சம்) மீதோ, மயிலின் மீதோ அமர்ந்திருப்பாள். கலைமகள் வாகீசுவரி தேன் வாகீசுவரி, சௌபாக்ய வாகீசுவரி எனவும் குறிக்கப்படுகிறாள். பௌத்த சமயத்தவர் கலை மகளை அறிவுக் கடவுளான மஞ்சுசிரீ (Manjusri) என்ற போதிசத்துவரின் மனைவியாகக் கருதுகின்றனர். கலைகளின் கடவுளாக விளங்கும் இவளைக் கிரேக்கர்கள் அதீனே எனக் கூறுகின்றனர். உரோமானியர் மினர்வா எனக் கூறுகின்றனர். காண்க: நவராத்திரி. {{Right|<b>கி.ஸ்ரீ.</b>}} {{larger|<b>கலைமகள் விழா</b>}} இந்து சமயத்தவர் கொண்டாடும் விழாக்களுள் ஒன்று. புரட்டாசி மாத<noinclude></noinclude> qizrlshnunlhq6e1bi3hoji77gfzqjn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/908 250 642593 1931507 2026-05-08T17:34:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமாவாசைக்கு அடுத்தநாள் ‘நவராத்திரி’ விழா தொடங்கும். ஒன்பது நாட்களில் கொண்டாடப் பெறும் இவ்விழா மூன்று கூறாக அமையும். முதல் மூன்று நாள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலோவே|880|கவர்ந்து கடத்தல்‌}}</noinclude>அமாவாசைக்கு அடுத்தநாள் ‘நவராத்திரி’ விழா தொடங்கும். ஒன்பது நாட்களில் கொண்டாடப் பெறும் இவ்விழா மூன்று கூறாக அமையும். முதல் மூன்று நாள் துர்க்கை பூசையும், அடுத்த மூன்று நாள் இலட்சுமி பூசையும், மூன்று நாள் சரசுவதி பூசையும் நிகழ்த்தப்படும். கடைசியாக ஒன்பதாம் நாளன்று கலைமகள் விழா கொண்டாடப்பெறும். கோவில்களிலும் வீடுகளிலும் இவ்விழா கொண்டாடப்பெறும். வீரமும் செல்வமும் கலையும் மனித வாழ்விற்குத் தேவை என்பதை வலியுறுத்தவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது. தாம் பெற்ற கலைஞானத்தை, கல்வி அறிவைப் பயன்படுத்தி வாழ்வு நடத்தும் மக்கள் கலைமகள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவர். கலைமகள் விழாவினை வீடுகளில் கொண்டாடுவோர் தத்தம் வீட்டைச் சுத்தம் செய்து மாக்கோலமிடுவர். புதிய மாவிலைத் தோரணங்களை இளம் வாழைக்கன்றோடு நிலைப்படியில் கட்டுவர். மகள் படத்தின்முன் புத்தகம், எழுதுகோல் போன்றவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றிற்குப் பொட்டிட்டும் பூவிட்டும் வழிபடுவர். பழவகைகளையும் பொரி கடலை, பருப்புச்சுண்டல் போல்வனவும் படைப்புப் பொருளாக வைக்கப்பெறும். கருவியைக் கொண்டு தொழில் நடத்துபவர்கள் இந்நாளில் அக்கருவிகளைச் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமமிட்டுப் பூச்சூட்டி, தேங்காய் உடைத்து, மணப்புகை காட்டி, கற்பூரம் காட்டிப் பூசை செய்வர். பழவகைகளையும் பொரி கடலையையும் சுண்டலையும் பூசைப் பொருள்களாகப் படைத்து அனைவர்க்கும் வழங்குவர். ஊர்தி உடையவர்கள் இளம் வாழைக்கன்றினை அதற்குச் சூட்டி, வீதி வலம் வருவர். கருவியை வைத்துப் பூசை செய்பவர்கள் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பர். இப்பூசையைச் சரசுவதி பூசை, ஆயுதபூசை என்று கூறுவர். அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து, தாம் பணியாற்றும் இடத்தில் மாலை வேளையில் கலைமகள் விழாவைக் கொண்டாடுவர். வசதி வாய்ப்புக்கேற்ப இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போல்வனவற்றையும் நடத்துவர். வீணையைக் கையிலேந்திய கலைமகளின் படமும் சிலையும் இவ்விழாவில் பெரிதும் இடம்பெறுவதுண்டு. {{Right|<b>இரா.குரு.</b>}} {{larger|<b>கலோவே</b>}} தென்மேற்கு இசுகாட்லாந்தில் (Scotland) உள்ள நிலப்பகுதி. இங்கு உள்ள இரின்சு (The Rhinns) ஒரு மலைப்பாங்கான முந்நீரகம். கலோவேப் (Galloway) பகுதி ஆடுமாடு வளர்ப்புக்குப் பெயர் பெற்றது. இங்கு உள்ள ஆடுமாடுகள் கொம்புகளற்றனவாகவும், கருநிறமுள்ளனவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்துள்ள தம்பிரீசும் (Dumfries) கலோவேயும் இணைந்து ஓர் உள்நாட்டு நிலப்பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தம்பிரீசு–கலோவே பகுதியின் பரப்பு 6,475 ச.கி.மீ.; மக்கள் தொகை 145,078 (1981). இப்பகுதி நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <b>கவர்ந்து கடத்தல்: கடத்தல்:</b> கவர்ந்து கடத்தல் இந்தியாவிலிருந்து கடத்தல், சட்டப்படியான காப்பாளரிடமிருந்து கடத்தல் என இருவகைப்படும். இவற்றுள் இந்தியாவிலிருந்து கடத்தல் என்பது, ஒருவரை அவரது இசைவின்றி அல்லது அவருக்கு இசைவளிக்கும் சட்டப்படியான காப்பாளரது இசைவின்றி இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் கடத்திச் செல்வது. சட்டப்படியான காப்பாளரினின்று கடத்தல் என்பது, பதினாறு வயதிற்கு உட்பட்ட ஓர் ஆணை அல்லது பதினெட்டு வயதிற்கு உட்பட்ட ஒரு பெண்ணை அல்லது புத்தி சுவாதீன மற்ற ஒருவரை அவர் தம் சட்டமுறையிலமைந்த காப்பாளரது அனுமதியின்றி அழைத்துச் செல்வது. ஒருவரை இந்தியாவினின்று கடத்திச் செல்லுவதற்கும், சட்டப்படியான காப்பாளரிடமிருந்து கடத்திச் செல்லுவதற்கும் ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். கவர்ந்து கடத்தலில் மேற்சுட்டியவற்றைத் தவிர மேலும் சில வகைகள் உண்டு. அவை: 1. வயது வாராத ஒருவரைப் பிச்சை எடுக்கச் செய்யும் பொருட்டு அல்லது வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் பொருட்டுக் கவர்ந்து கடத்தல். இதற்குப் பத்தாண்டுகள்வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். 2. ஒருவரைக் கொலை செய்யும்பொருட்டு அல்லது அது போன்ற அபாயத்திற்கு உள்ளாக்கும் பொருட்டுக் கவர்ந்து கடத்தல். இதற்கு ஆயுள் சிறை அல்லது பத்து ஆண்டுக் கடுங்காவலும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். 3. ஒருவரை மறைவாக அல்லது சட்ட விரோதமான வகையில் அடைத்து வைக்கும் உட்கருத்துடன் கவர்ந்து கடத்தல். இதற்கு ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். 4. பெண்ணொருத்தியை அவளது விருப்பத்திற்கு மாறாக மணமுடிக்கும் வகையில் கவர்ந்து கடத்தல். இதற்குப் பத்தாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.<noinclude></noinclude> aznwr1y6q9fjo0qr2z8vha6rnrbkqma பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/169 250 642594 1931511 2026-05-08T17:43:41Z Info-farmer 232 + எழுத்துணரித் தரவு 1931511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>தம்பி! தீவில் தங்கியவன் கதை உளவு வேலை பாரிஸ் மாநாடு அமெரிக்காவும் ரஷ்யாவும். கடிதம் : 98 கடும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன். மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!: எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள் சுவைமிகு கனிகள் ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால் இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி; கேலி செய்கிறதோ, தன்னை!! என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட அல்ல! கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச முடியும்: சிறிது நேரம் இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்!!<noinclude></noinclude> 74yzieppzx2496d47bvut8b83gifkpp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/129 250 642595 1931512 2026-05-08T17:44:46Z Info-farmer 232 + எழுத்துணரித் தரவு 1931512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கடிதம் : 95 தம்பி! தல யாத்திரை இலக்கிய இன்பம் - ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா - மடகாஸ்கர் விடுதலை. என்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படு கிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப் போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ!. இடுக்கண் வருங்கால் நகுக! என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட, 'நகுக' என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!! மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏகவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும் விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா?! வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம் பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி<noinclude></noinclude> 5gzzm048w3ari0g84zn4oxfz1g91pnx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/144 250 642596 1931513 2026-05-08T17:45:28Z Info-farmer 232 + எழுத்துணரித் தரவு 1931513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கடிதம்: 96 தம்பி! தென்னகம் பொன்னகம் தாயும் மகனும், கருத்துக் கதை - தமிழ் மரபு மறக்கப்பட்ட சோகம் - டில்லியின் அதிகாரம் - வழக்கப்படி, இயலாதார், நான் அடுக்குமொழி கூறுகிறேன் என்று அங்கலாய்த்துக் கொள்ளட்டும் எனக்கென்னவோ, நாளெல்லாம் நாம் அனைவருமே, 'தென்னகம் பொன்னகம் என்று கூறிக், கூறும்போதே கிடைத்திடும் தேனினுமினிய சுவையினைப் பெற்றிட வேண்டுமெனத் தோன்றுகிறது. உண்மையினை உணராதாரும், உரிமை உணர்ச்சியினைப் பெற்றிடாதவரும். நாம் கூறுவதை வெற்றுரை என்று பரிக்கின்றனர்; உணர்ந்த பின்னும் பழித்துப் பேசிடின், உள்ளபடி. . கவலையும் ஓரளவு கலக்கமும் நமக்கு ஏற்படவேண்டும்; ஆனால், நமது இலட்சியத்தை வெற்றுரை என்று கூறுவோரில் மிகப் பெரும்பாலோர், உண்மையினை உணராதார்; எனவேதான், அவர்தம் கூற்று, கூச்சலளவிலே வளரும் போதுகூட எனக்குச் சீற்றம் பிறப்பதில்லை. நாம் எதை அறிந்து, அகமிக மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வயப்பட்டிருக்கிறோமோ, அதனை அவர்கள் இன்னமும் அறிந்துகொண்டாரில்லை; அதனால்தான் அவர்கட்கு, எழுச்சி ஏற்படவில்லை உண்மையை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்பதுமட்டுமல்ல, உண்மை அல்லாத ஒன்றினை அவர்கள் மிகப் பெரிய உண்மை, மறுத்திட வொண்ணா உண்மை என்று நம்பிக்கொண்டும் உள்ளனர்; எனவேதான், அவர்களிடம் எழுச்சி "<noinclude></noinclude> e98mf6m91xw10dtlywtm1olmxuhw5m2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/157 250 642597 1931514 2026-05-08T17:45:58Z Info-farmer 232 + எழுத்துணரித் தரவு 1931514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கடிதம் : 97 தம்பி! எழுச்சி வெள்ளம் தமிழ் மொழியின் தாழ்ந்த நிலை - பண்டைய மேனாட்டு இலக்கியங்கள் இந்தித் திணிப்பு " ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரக் கிளம்பினார், ஹுவான் சுவாங் எனும் சீனப் பேரறிஞர் அவருடைய குறிப்புகள் இன்றும் வரலாற்றுக்கு அணியாக உள்ளன. அவர் பல நாடுகளிலே இருந்துவந்த வளம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கிக் கண்டறிந்து, கூடுமான வரையில் மிகைப்படுத்தாமலும், குறைத்திடாமலும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நிகழ்ச்சிகளை, நிலைமைகளை மாற்றாமலும், தெளிவாக எடுத்துக் கூறினார். அவருடைய ஏடு இன்றும் பல பொருள்களை அறிந்து கொள்ளச் செய்திடும், அறியதோர் களஞ்சியமாக இருந்து வருகிறது. "உலகிலே பல்வேறு நாடுகளையும் காணவிழைகிறேன். மக்கள், எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள், நாட்டுவளம் என்னென்ன வகையின உள்ளன? அரசு முறைகள் யாவை? நெறிகள் எவையெவை உள்ளன என்பனவற்றைக் கண்டறிய விரும்புகிறேன். சென்று வர ஒப்பம் அளியுங்கள், இறையே" என்று அவர் மன்னரைக் கண்டு கேட்டார். மாமன்னர்; 'டாங்' என்பவர்; மகிழ்ச்சியுடன் ஒப்பம் அளித்தார்; பருகிடப் பானம் கொடுத்தார்! அற்புதமான பானம்!!<noinclude></noinclude> 64dseysel8ua7h4rwltomc2wi9nk23h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/909 250 642598 1931516 2026-05-08T18:21:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "5. ஒருவரைக் கொடுங் காயத்திற்கு அல்லது அடிமை நிலைக்கு உள்ளாக்குதல்; அல்லது இயற்கைக்கு மாறான காமத்திற்கு அல்லது அத்தகைய அபாயத்திற்கு உள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்‌|881|கவனம்‌}}</noinclude>5. ஒருவரைக் கொடுங் காயத்திற்கு அல்லது அடிமை நிலைக்கு உள்ளாக்குதல்; அல்லது இயற்கைக்கு மாறான காமத்திற்கு அல்லது அத்தகைய அபாயத்திற்கு உள்ளாக்குதல் பொருட்டுக் கவர்ந்து கடத்துதல்; இதற்குப் பத்தாண்டுச் சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். 6. பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தையொன்றின் வசமுள்ள அசைவியற் பொருளை நேர்மையற்ற முறையில் கைக்கொள்ளும் நோக்கில் அதனைக் கவர்ந்து கடத்தல்; இதற்கு ஏழாண்டுகள் சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். {{Right|<b>பு.வே.</b>}} {{larger|<b>கவனம்:</b>}} அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல நூற்றுக்கணக்கான தூண்டல்கள் ஒவ்வொரு மனிதரையும் தாக்குகின்றன. அத்தூண்டல்கள் அவரதம் பல்வேறு புலனுறுப்புகளைத் தூண்டுகின்றன. இருப்பினும், இயற்கையில் ஒருவர் அத்தூண்டல்களுக்கெல்லாம் துலங்கல்கள் (Response) செய்வது இயலாததாகும். எனவே, தூண்டல்கள் பலவற்றுள் அவருக்கு வேண்டிய தூண்டல் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் துலங்க வேண்டியுள்ளது. அவ்வாறு பல தூண்டல்களுக்கிடையே, குறித்த ஒன்றைத் தம் நனவு நிலையில் (Conscious State) தேர்ந்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட துலங்கலை உண்டாக்க வழி செய்யும் செயற்போக்குக் கவனம் (Attention) எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர் ஒருவர் பின் வரும் சூழ்நிலைத் தூண்டல்களான வீதிகளில் எழும் இரைச்சல், சந்தனத்தின் மணம், நண்பர்களின் உரையாடல், வானிலை மாற்றங்கள், கிரிக்கெட்டு விளையாட்டுப் பற்றிய தொலைக்காட்சி ஆகியவற்றுள் கிரிக்கெட்டுப் பற்றிய தொலைக்காட்சியைத் தேர்ந்தெடுத்துக் கவனிக்கிறார். ஏனைய தூண்டல்கள் அவரது கவனத்தின் விளிம்பிலேயே தங்கிவிடுகின்றன. கவனத்தைப் பற்றி ஆராயும்போது பின்வரும் பல கேள்விகள் எழுகின்றன. அவையாவன: கவனத்திற்கு அடிப்படைக் காரணமாக நரம்பு மண்டலத்தில் அமைந்துள்ள மூளையுறுப்பு யாது? கவனத்தினின்று விளையும் புலனுறுப்பு, உடலுறுப்பு, தசை மாற்றங்கள் ஆகியவை யாவை? தூண்டல்களைக் கவனிக்கும் தொடர்புள்ள புலனுறுப்புகள் எப்பொழுதும் முழுத் திறனோடு செயற்படுகின்றனவா? ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் எத்துணை எண்கள், எழுத்துகள், புள்ளிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கவனிக்க இயலும்? ஒன்றுக்கும் மேற்பட்ட தூண்டல்களை ஒருவர் கவனிக்க இயலுமா? ஒரு வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஏனைய சூழ்நிலைத் தூண்டல்கள் எவ்வாறு பாதிக்கின்றன? கவனத்தைத் தீர்மானிக்கும் நிருமாணிகள் வகைகள் யாவை? கவனத்தின் யாவை? <b>கவனத்திற்கு அடிப்படையான மூளையுறுப்பு:</b> கவனத்தைத் தீர்மானிக்கும் ஆதார நரம்பு மண்டலப் பகுதியாக நடுமூளையிலுள்ள (Mid-Brain) ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்பு (Ascending Reticular Activation System) அமைந்துள்ளது. இவ்வமைப்பு அடிமுளை (Brain Stem), மூளை நரம்பு உள்ள முடிச்சு (Thalamus) ஆகியவற்றிற்கிடையே நரம்புப்பின்னலைக் குறிக்கிறது. இதுவே, புலனுணர்வு மற்றும் உடற்பாகங்களின் தோரணைகளைப் (Posture) பற்றிய செய்திகளை வடிகட்டிப் பெரு மூளைக்கு அனுப்புகிறது. ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்புப் பற்றிய பரிசோதனை ஒன்றில் அது உணர்வுகளை வடிகட்டி அனுப்பும் பாங்கு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையில் ஒரு பூனையின் செவியுணர்வு நரம்பின் செயல்களை மின்னணு முறையில் ஆராய்ந்தனர். முதலாவதாக, அப்பூனைக்கு அருகில் ‘க்ளிக் - க்ளிக்’ என்னும் ஒலிகளைத் தொடர்ச்சியாக எழுப்பி, அதன் செவிப்புலனைத் தூண்டினர். அப்போது பூனை அவ்வொலியை முழுமையாகக் கேட்டதற்கு அறிகுறியாக ‘மின்னணு நாடாவில்’ ஒரு குத்தூசி வடிவம் பதிவாகியது. பரிசோதனையின் இரண்டாம் கட்டமாக, அப்பூனையின் முன் ‘கிளிக் - கிளிக்’ ஒலிகளுடன் இரண்டு எலிகளைக் காட்டினர். அப்போது ஒலிகளைக் குறைவாகக் கேட்டதற்கான அறிகுறியை மின்னணு நாடாப் பதிவு காட்டியது. மூன்றாம் கட்டமாக, எலிகளை அச்சோதனையிலிருந்து அகற்றினர், ‘கிளிக்’ ஒலிகள் மட்டும் எழுப்பப்பட்டன. அப்போது பூனை முன்போலவே அவ்வொலிகளுக்கு மறுவினை புரிந்ததை மின்னணு நாடாப் பதிவு காட்டியது. இப்பரிசோதனை ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்பு எவ்வாறு புலனுணர்வுகளை வடிகட்டித் தேவையானவற்றை மட்டும் மூளைக்கு அனுப்பும் நரம்பு மண்டலப் பகுதியாக அமைந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. <b>கவனத்தினின்று விளையும் உறுப்பு மாற்றங்கள்:</b> ஒருவர் கூர்ந்து கவனிக்கும்போது, பொதுவாக மூவகையான உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக, தொடர்பான புலனுறுப்பில் இணக்கம் (Adjustment) ஏற்படுகிறது. பிறகு, கவனத்தில் ஈடுபடுபவரின் உடற் பாகங்களின் தோரணைகளில் இணக்கம் ஏற்படுகிறது. இறுதியாக, அவரது தசைகள் முருக்கேறுகின்றன. சான்றாக, துணிச்சலுள்ள<noinclude> <b>வா.க. 6 – 56</b></noinclude> pthd57rqy5sajvbnnkegld35s9aom6x வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார் 0 642599 1931639 2026-05-09T04:14:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்காரக்கனி நச்சுமனார் | previous = [[../அக்கள நிம்மடி2/]] | next = ../அக்கி திம்மய்யா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931639 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்காரக்கனி நச்சுமனார் | previous = [[../அக்கள நிம்மடி2/]] | next = [[../அக்கி திம்மய்யா நாயக்கர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="43" fromsection="அக்காரக்கனி நச்சுமனார்" tosection="அக்காரக்கனி நச்சுமனார்" /> 0mautf0riatia9ym4w09baxg7cd4sfn வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர் 0 642600 1931642 2026-05-09T04:20:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கி திம்மய்யா நாயக்கர் | previous = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | next = ../அக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931642 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கி திம்மய்யா நாயக்கர் | previous = [[../அக்காரக்கனி நச்சுமனார்/]] | next = [[../அக்கிபூசை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="43" fromsection="அக்கி திம்மய்யா நாயக்கர்" tosection="அக்கி திம்மய்யா நாயக்கர்" /> dygyhq6g45rwyles6o2ifhj9td3mc1l வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை 0 642601 1931650 2026-05-09T04:31:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிபூசை | previous = [[../அக்கி திம்மய்யா நாயக்கர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931650 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிபூசை | previous = [[../அக்கி திம்மய்யா நாயக்கர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="44" fromsection="அக்கிபூசை" tosection="அக்கிபூசை" /> l1rwp2uhxuc3z23kpu0g18l882fbhca 1931654 1931650 2026-05-09T04:36:11Z Booradleyp1 1964 1931654 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிபூசை | previous = [[../அக்கி திம்மய்யா நாயக்கர்/]] | next = [[../அக்கியாபு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="43" to="44" fromsection="அக்கிபூசை" tosection="அக்கிபூசை" /> 5hcn2wknsxvoe799wvaqv94vjerahnm வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு 0 642602 1931655 2026-05-09T04:36:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கியாபு | previous = [[../அக்கிபூசை/]] | next = [[../அக்கிரகாரம்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931655 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கியாபு | previous = [[../அக்கிபூசை/]] | next = [[../அக்கிரகாரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="44" to="44" fromsection="அக்கியாபு" tosection="அக்கியாபு" /> q1f2zv6d6wzlqzomtec0gy6e3zojhwx வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம் 0 642603 1931661 2026-05-09T04:40:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரகாரம் | previous = [[../அக்கியாபு/]] | next = [[../அக்கிரிகோலா/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931661 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரகாரம் | previous = [[../அக்கியாபு/]] | next = [[../அக்கிரிகோலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="44" to="44" fromsection="அக்கிரகாரம்" tosection="அக்கிரகாரம்" /> 9dgnyo7nw99mo4gjq892u92va4a914q வாழ்வியற் களஞ்சியம் 1 0 642604 1931672 2026-05-09T04:49:18Z Booradleyp1 1964 "{{header | title = வாழ்வியற் களஞ்சியம் 1 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/முன்னுரை/]] | year = 1986 | notes = }}{{featured download}}<br><br><br> <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931672 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 1 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/முன்னுரை/]] | year = 1986 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="7" to="8" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|8. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|9. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|10. அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| 11. பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|12. கலைச்சொற் பட்டியல்]] 7m8odtn9hgfn3ld1x0uxl89q1jb78d6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/910 250 642605 1931708 2026-05-09T05:33:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவர் பாம்பைப் பார்க்கும்போது அவரை உற்று நோக்கினால், அவர்தம் உடலுறுப்புகளில் ஏற்படும் இணக்கம் புலனாகும். அவரது பார்வை பாம்பு உள்ள தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்|882|கவனம்}}</noinclude>ஒருவர் பாம்பைப் பார்க்கும்போது அவரை உற்று நோக்கினால், அவர்தம் உடலுறுப்புகளில் ஏற்படும் இணக்கம் புலனாகும். அவரது பார்வை பாம்பு உள்ள திசையிலேயே செல்கிறது. அவரது கை, கால் தசைகள் முருக்கேறப் பக்கத்திலிருக்கும் ஏதாவதொரு கனமான பொருளை எடுத்து, அவர் அப்பாம்பைத் தாக்குவதில் ஈடுபடுகின்றார். <b>கவனநிலை மாற்றம்:</b> ஒரு பொருளைப் பார்க்கும்போது கண் சிறிது நேரமே முழுவன்மையோடு இயங்குகிறது. சிறிது நேரத்தில் அதன் வன்மை குறைகிறது. அதாவது, ஏனைய பொருள்கள்மீது நாட்டம் செலுத்துகிறது. இந்தப்போக்கு மாறி மாறி ஏற்படுகிறது. இது போன்ற மாறுதல்கள் மற்றப் புலன்களுக்கும் பொருந்தும். இவ்வாறான மாறுதல்களைக் கவனநிலை மாற்றம் (Fluctuation of Attention) என்பர். <b>குறிப்பிட்ட காலத்தில் கவனத்திறன்:</b> கவன வீச்சு (Span of Attention) என்பது ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் எத்துணை எண்கள், எழுத்துகள் புள்ளிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கவனிக்க இயலும் என்பதாகும். ஒருவரது கவனவீச்சை அளவிடப் பல உளவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சான்றாக, ஒரு பரிசோதனையில் நொடியில் இருபதில் ஒரு பங்கிலிருந்து நூற்றில்‌ ஒரு பங்கு இடைவெளிகளில்‌ வெவ்வேறு எண்ணிக்கையில்‌ பொருள்‌கள்‌ பற்றிய படங்கள்‌ திரையிடப்பட்டன. எத்‌துணைப்‌ பொருள்களைச்‌ சாதாரணமாக ஒருவர்‌ சரியாகக்‌ கவனிக்க முடிந்தது என்று ஆராய்ந்ததில்‌, ஐந்து அல்லது ஆறு பொருள்களையே கவனிக்க முடிந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆமில்டன்‌ (Hamilton, 1859) என்பார்‌ தாம் நடத்திய பரிசோதனையின்போது, கை நிறையக்‌ கோலிகளை எடுத்து உயர எறிந்து, தம்‌ மாணவரை எத்துணைக்‌ கோலிகள்‌ உயர எறியப்பட்டன என்பதைக்‌ கூறுமாறு கேட்டார்‌. ஐந்து கோலிகளுக்குமேல்‌ சரியாக அம்‌மாணவர்களால்‌ கூற இயலவில்லை. எண்கள்‌, எழுத்துகள்‌, புள்ளிகள்‌ ஆகியவற்றைத்‌ தூண்டல்‌களாகப் பயன்படுத்திக்‌ கவன வீச்செறி கருவி (Tachisloscope) மூலம்‌ பரிசோதனை நடத்தியதிலும்‌ மேற்‌கண்ட முடிவே வலியுறுத்தப்பட்டுள்ளது. <b>தூண்டல்‌ கவனிப்புத்‌ திறன்‌:</b> பொதுவாக, ஒன்றுக்கு மேற்பட்ட தூண்டல்களை ஒருவர்‌ கவனிக்க இயலும்‌ என்று பலர்‌ கருதுகின்றனர்‌. சான்றாக, ஒரே சமயத்தில்‌ வெவ்வேறான எட்டுச்‌ செயல்களைக்‌ கவனிப்பவரை ‘அட்டாவதானி’ எனவும்‌, வெவ்‌வேறான பத்துச்‌ செயல்களைக்‌ கவனிப்பவரைத்‌ ‘தசாவதானி’ எனவும்‌ கூறுவர்‌. இது பற்றி ஆராய்ந்த உளவியலறிஞர்கள்‌ பின்வருவனவற்றை மெய்ப்பித்து உள்ளனர்‌. அவையாவன: ஒரு சமயத்தில்‌ ஒருவர்‌ ஒரு புதுப்‌ பொருளிலோ ஒரு புதுச்‌ செயலிலோதான்‌ தம் கவனத்தைச்‌ செலுத்த முடியும்‌. எனவே, கவனப்‌ பிரிவு (Division of Attention) சாத்தியமன்று. ஒரே சமயத்தில்‌ இரண்டோ அதற்கும்‌ மிகையான புதுப்‌ பொருள்களிலோ புதுச்‌ செயல்களிலோ ஒருவர்‌ தம்‌ கவனத்தைப்‌ பிரித்துச்‌ செலுத்த இயலாது. ஆயினும்‌, மிகவும்‌ பழகிய செயல்கள்‌ சிலவற்றில்‌ ஒரே சமயத்தில்‌ ஈடுபட இயலும்‌. ஆனால்‌, இச்‌செயல்கள்‌ பயிற்சியின்‌ காரணமாக இயங்கு செயல்‌களாகின்றன. அதனால்‌, அவற்றில்‌ ஈடுபடும்போது ஒருவரது கவனம்‌ அவற்றில்‌ பதிவதில்லை; ஏதாவது ஒன்றில்‌ மட்டுமே பதிகிறது. <b>ஏனைய தூண்டல்களின்‌ பாதிப்பு:</b> கவனத்தின்‌ மற்றொரு முக்கிய கூறு கவனித்துக்‌ கொண்டிருக்கும்‌ போது எழும்‌ தடையாகும்‌. எடுத்துக்காட்டாக, காலை வேளையில்‌ அமைதியான அறையில்‌ ஒருவர்‌ தியானம் செய்கிறார்‌. காலையில்‌ சென்றால்தான்‌ அவரைச்‌ சந்திக்க முடியும்‌ என்று கருதி அவரது நண்பர்‌ கதவைத்‌ திறந்து கொண்டு உள்ளே நுழைகிறார்‌. இச்செயலால்‌ தியானத்தில்‌ கவனம்‌ தடைப்‌படுறது. பள்ளிப்‌ பாடத்தைக்‌ கவனித்துக்‌ கொண்டிருக்கும்‌ ஒரு மாணவருக்குத்‌ திடீரென தலைவலிக்‌கிறது. இதனால்‌ அவர்‌ தம்‌ பாடத்தை அரைகுறையாகக்‌ கவனிக்கிறார்‌. ஆனால்‌, அதே சூழ்நிலையில்‌ படிப்பில்‌ ஆர்வம்‌ கொண்ட மற்றொரு மாணவர்‌ அச்சிரமத்தையும்‌ பாராமல்‌ பாடத்தினை முழுமையாகக்‌ கவனிக்கிறார்‌. மேற்கூறிய சான்றுகள்‌ ஒருவரது கவனம்‌ தடைப்படும்போது அவர்‌ தாம்‌ முன்னர்க்‌ கவனத்துடன்‌ செய்த வேலையை முழுமையாக நிறுத்த வேண்டியுள்ளது அல்லது அவ்வேலையை அரைகுறையாகச்‌ செய்ய வேண்டியுள்ளது அல்லது அத்தடையினை எதிர்த்து மிகுதியான சக்தியைச்‌ செலவழித்துக்‌ கவனித்துச்‌ செயலாற்ற வேண்டியுள்‌ளது. கவனத்தடை (Distraction of Attention) ஒருவரை எளிதாகப்‌ பாதிக்கக்‌ கூடியதாக இருந்தாலும்‌, நாளடைவில்‌ அத்தடைக்கு எதிர்மறையாகத்‌ தம்மை ஒத்தமைக்கும்‌ திறனை அவர்‌ வளர்த்துக்‌ கொள்கிறார்‌. சான்றாக, இரயில்‌ நிலையங்களுக்கு அருகில்‌ வசிப்பவர்கள்‌ முதலில்‌ அங்கே குடிபோகும்போது, முதல்‌ சில இரவுகளில்‌ இரயில்‌ வண்டிகளின்‌ போக்குவரத்தினால்‌ ஏற்படும்‌ இரைச்சல்‌ காரணமாக நன்கு தூங்க முடிவதில்லை. நாளடைவில்‌ இரைச்சல்‌ அவர்‌களைப்‌ பாதிப்பதில்லை. அதற்குக்‌ காரணம்‌ அவர்கள்‌ அவ்விரைச்சலைப்‌ பொருட்படுத்தாமல்‌ இருப்பதே<noinclude></noinclude> o3rvwj42w789vg3xvg6k9103zeyohx4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/911 250 642606 1931725 2026-05-09T05:54:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆகும். ஒருவரது இத்தகைய ஒத்தமைப்பை எதிர்மறை ஒத்துழைப்பு (Negative Adaptation) என்பர். கவனத்தடை குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் எளிதாக ஏற்படுவதாகவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்‌|883|கவனம்‌}}</noinclude>ஆகும். ஒருவரது இத்தகைய ஒத்தமைப்பை எதிர்மறை ஒத்துழைப்பு (Negative Adaptation) என்பர். கவனத்தடை குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் எளிதாக ஏற்படுவதாகவும், எதிர்மறை ஒத்துழைப்பு குமரப் பருவத்தினரிடமும் வயது வந்தோரிடமும் எளிதாக உருவாகிறதாகவும் உளவியலறிஞர்கள் கண்டுள்ளார்கள். <b>கவனத்தை நிருணயிப்பவை:</b> கவனம்‌ அடிக்கடி மாறும்‌ தன்மையதும்‌ சிறிய கால அளவே உள்ளதும்‌ ஆகும்‌. சான்றாக, வேண்டா வெறுப்புடன்‌ நீண்ட சொற்பொழிவைக்‌ கேட்கும்‌ ஒருவரது கவனம்‌ அதில்‌ ஈர்க்கப்படுவதில்லை. எனவே, அச்சமயத்தில்‌ அவர்‌ தம் கவனத்தைச்‌ சொற்பொழிவு தவிர ஏனையவற்றில்‌ செலுத்துகிறார்‌. எடுத்துக்காட்டாக, சொற்‌பொழிவு மண்டபத்தில்‌ அமர்ந்திருக்கும்‌ ஏனையோர்‌ உரை நிகழ்‌த்தப்படும்‌ மண்டபத்தின்‌ அழகிய வேலைப்‌பாடுகள்‌, அங்கு வருவோர்‌ போவோர்‌ ஆகியவற்றில்‌ தம்‌ கவனத்தைச்‌ செலுத்துகிறார்கள்‌. ஒருவரது கவனத்தை நிருணயிப்பவை (Determiners) அவரது மனோநிலைகளும்‌ சூழ்நிலைகளின்‌ தன்மையுமே என்‌பதை இச்சான்று சுட்டிக்காட்டுகிறது. மேலும்‌, கவனத்தை நிருணயிப்பவை பற்றி ஆராய்ந்த உளவியலறிஞர்கள்‌ அதை இரண்டு வகைகளாகப்‌ பிரித்துள்‌ளனர்‌. அவை புற நிருமாணிகள்‌ (External-Determiners), அக நிருமாணிகள்‌ (Internal Determiners) ஆகியன. புறநிருமாணிகள்‌ தூண்டல்‌ சார்புற்றவை ஆகும்‌. அவற்றைப்‌ பின்வருமாறு பிரித்துள்ளனர்‌: 1) செறிவும்‌ (Intensity) வேறுபாடும்‌ (Contrast), 2) மாறுதலும்‌ (Change) அசைவும்‌ (Movement), 3) எண்ணும்‌ (Number) வகைத்‌தன்மையும்‌ (Arrangement) என்பன. அகநிருமாணிகள்‌ ஒருவரது மனோநிலைகளைக்‌ குறிப்பன. அவையாவன: 1) மனப்‌போக்கும்‌ (Set) எதிர்பார்ப்பும்‌ (Expectation), 2) ஆர்‌வங்களும்‌ (Interests) மனப்பாங்குகளும்‌ (Attitudes), 3) விடாய்களும்‌ (Needs) பயன்‌மதிப்புகளும்‌ (Values). <b>புறநிருமாணிகள்:</b> <b>செறிவும்‌ வேறுபாடும்‌:</b> ஒருவரது கவனத்தைக்‌ கவருவதற்குத்‌ தூண்டும்‌ பொருளின்‌ செறிவுத்தன்மையும்‌ வேறுபாட்டுத்‌ தன்மையும்‌ முக்கியமாகும்‌. ஒளி வெள்ளம்‌, பேரொலி, அழுத்தமான நிறம்‌, கொடுமையான வெயில்‌, கடுங்குளிர்‌ ஆய தூண்டல்‌கள்‌ அவற்றின்‌ செறிவுத்தன்மையால்‌ ஒருவரது கவனத்தை தூண்டுகின்றன. அவை தவிர, தூண்டல்‌கள்‌ அவற்றின்‌ வேறுபாட்டுத்‌ தன்மையாலும்‌ கவனத்தை ஈர்க்க வல்லனவாகும்‌. சான்றாக, கும்மிருட்‌டில்‌ காணப்படும்‌ ஒளி வெள்ளம்‌, கறுப்புக்‌ கூந்தலுடன்‌ சிகப்பு உடை அணிந்த பெண்‌, குள்ளமான ஆணுடன்‌ ஆடிக் கொண்டிருக்கும்‌ உயரமான பெண்‌ ஆகியவற்றைக்‌ கூறலாம்‌. <b>மாறுதலும்‌ அசைவும்‌:</b> அசைந்து அல்லது மாறிக்‌ கொண்டிருக்கும்‌ பொருள்கள்‌ ஒருவரது கவனத்தை வசப்படுத்தும்‌ தன்மையன. மாட்டு வண்டி வீதியில்‌ அசைந்து நகர்ந்து செல்வது, ‘காவலர்’ வண்டியின்‌ மேல்‌ தளத்தில்‌ உள்ள மின்சார விளக்கின்‌ ஒளி மறைவதும்‌ தோன்றுவதும்‌, மீண்டும்‌ மீண்டும்‌ ஒருவரைப்‌ பெயர்‌ சொல்லி அழைப்பது ஆலயெவற்றைச்‌ சான்றுகளாகக்‌ கூறலாம்‌. ஆயினும்‌, தூண்டல்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நீண்ட நேரம்‌ வேறுபாடு இன்றித்‌ தொடருமானால்‌, அதனை ஒருவரும்‌ கவனிப்பது இல்லை. <b>எண்ணும்‌ வகைத்தன்மையும்‌:</b> ஒரு குழுவிலிருந்து தனித்து நிற்கும்‌ பொருள்‌, பல குழுக்களாக வகை செய்யப்பட்ட பொருள்கள்‌ ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. எடுத்துக்காட்டாக, இசையரங்கில்‌ திடீரென எழும்‌ இரைச்சல்‌ ஒருவரது கவனத்தை ஈர்த்தாலும்‌ அதில்‌ கவனம்‌ நிலைப்படுவதில்லை. ஆனால்‌, முறையான பாடலொலிகள்‌ அவரது கவனத்தை ஈர்த்து நிலைப்படுத்துகின்‌றன. <b>அகநிருமாணிகள்‌:</b> <b>மனப்போக்கும்‌ எதிர்பார்ப்பும்‌:</b> ஒருவரது உள்ளம்‌ எதில்‌ பதிகிறதோ அதையே அவர்‌ கவனிக்கிறார்‌. சான்றாக, வண்டி ஓட்டுநர்‌ போக்குவரத்துப்‌ பாதையில்‌ உள்ள வழிகாட்டி விளக்குகளுக்கேற்ப வண்டியினை ஒட்டிச்‌ செல்லுவார்‌. ஆனால்‌, அவ்வண்டியில்‌ அமர்ந்திருப்போரோ அவ்விளக்குகளை ஒரு பொருட்‌டாகக்‌ கவனிப்பதில்லை. மேலும்‌, ஒருவரின்‌ மனப்‌போக்கும்‌ எதிர்பார்ப்பும்‌ தொடர்பான தூண்டல்‌ முழுமையாக இல்லாமல்‌ சிறுதுளியாக இருப்பினும்‌ கூட, அதில்‌ அவரது கவனம்‌ ஈடுபடுகின்றது. சான்றாக, வெளியூர்‌ சென்றுள்ள கணவரை எதிர்‌பார்த்திருக்கும்‌ இல்லத்தரசி காலடி ஓசையைக்‌ கவனித்தே தம்‌ கணவர்‌ வந்துவிட்டாரா, இல்லையா எனக்‌ கூறுவார்‌. <b>ஆர்வங்களும்‌ மனப்பாங்குகளும்‌:</b> படிப்பதில்‌ ஆர்‌வமும்‌ சாதகமான மனப்பாங்கும்‌ உடையவர்‌ படிக்கிறார்‌. ஆனால்‌ அவ்வார்வம்‌ இல்லாதவர்‌ புத்தகத்தைப்‌ புறக்கணித்து விடுகிறார். மாறாக, அவர்‌ விளையாட்டு விரும்பியாக இருப்பின்‌ அதில்‌ ஈடுபடுகிறார். எனவே, கவனம்‌ ஒருவரது ஆர்வங்களாலும்‌ தொடர்பான மனப்பாங்குகளாலும்‌ ஈர்க்கப்படுகின்‌றது. {{nop}}<noinclude></noinclude> ertge4dsnw663w1toy8gnl5vjzrlvuu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/912 250 642607 1931726 2026-05-09T06:07:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>விடாய்களும் பயன்மதிப்புகளும்:</b> ஒருவரின் தேவைகளும், அத்தேவைகளை நிறைவு செய்வதில் தொடர்பான தூண்டல்கள் எத்துணை அளவு பயனுள்ளவை என்பது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்‌|884|கவனமின்மை}}</noinclude><b>விடாய்களும் பயன்மதிப்புகளும்:</b> ஒருவரின் தேவைகளும், அத்தேவைகளை நிறைவு செய்வதில் தொடர்பான தூண்டல்கள் எத்துணை அளவு பயனுள்ளவை என்பது பற்றிய எண்ணங்களும் பொருள்களின்பால் அவரது கவனத்தைத் தீர்மானிக்கின்றன. சான்றாக, பசியுடனிருக்கும். ஒருவர் வழியிலுள்ள ஏனைய கடைகளுள் சிற்றுண்டிக் கடைகளையே கவனிக்கிறார். மேலும், பழக்கத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கடையின் உணவு வகைகளே தமக்குப் பயன் அளிப்பதாக அவர் எண்ணுவதால் அக்கடையையே கவனித்துச் செல்கிறார். <b>கவனத்தின் வகைகள்:</b> கவனத்தைத் தானியங்கு கவனம் (Involuntary Attention), இயக்குக் கவனம் (Voluntary Attention), பழக்கக் கவனம் (Habitual Attention) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். கவனச் செயலில் ஈடுபட்டிருப்பவர் கட்டுக்கோப்பில் இல்லாமல் அதில் ஈடுபடுவதைத் தானியங்கு கவனம் என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பெண்ணை ஆண் பார்ப்பது, பட்டாசு ஒலியைக் கேட்பது, தலையின் மேல் விழுந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் கவனிப்பது போன்றவற்றைக் கூறலாம். இதற்கு மாறாக, ஓர் எண்ணத்தோடோ நம்பிக்கையோடோ பயன் கருதியோ சூழ்நிலைத் தூண்டல்களைக் கவனித்தலை இயங்கு கவனம் எனக் கூறுவர். சான்றாக, துணிமணிகள் வாங்கச் சிறந்த கடை ‘மல்லிகை’ என்னும் பெயர் கொண்ட துணிக்கடையே என எண்ணி அங்குச் செல்வது, பழனிக்குச் செல்ல வேண்டுபவர் பழனிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது ஆகியவற்றைக் கூறலாம். பழக்கக் கவனம் ஒருவரிடம் பொதுவாகக் காணப்படும் நடத்தைத் தொடர்பானதாகும். சான்றாக, ஆசிரியர் தமக்கு வணக்கம் செலுத்தும் மாணவரைக் கவனித்து அறிவது, ஒருகுறிப்பிட்ட வீதி வழியாகப் பேருந்து நிற்குமிடத்திற்குச் செல்வது ஆகியவற்றைக் கூறலாம். {{Right|<b>இரா.பா.கி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>சண்முகம், தா.ஏ.,</b> உளவியல், இரண்டாம் பாகம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., சென்னை, 1966. <b>Garrett, H.E.,</b> General Psychology, Eurasia Pub., New Delhi, 1964. <b>Marx, M.H.,</b> Introduction to Psychology: Problems, Frocedures and Principles, Macmillan, New York, 1976. {{larger|<b>கவனமின்மை</b>}} தகுந்த கவனத்துடன் நடக்க வேண்டிய கடமை ஒருவருக்குச் சட்டப்படி இருந்து அவர் அக்கடமையினின்று தவறுவதன் மூலமாய் மற்றொருவருக்குத் தீங்கு விளைவது கவனமின்மை (Negligence) யாகும். கவனமின்மை தற்கவனமின்மை (Contributory Negligence), தண்டனைக்குரிய கவனமின்மை (Culpable Negligence) என இரண்டு வகைப்படும். <b>தற்கவனமின்மை:</b> தாம் செய்யும் செயலினால் ஒருவர் தமக்கு நேரும் தீங்கைத் தவிர்த்துக் கொள்ளாமல் இருப்பது தற்கவனமின்மையாகும். <b>தண்டனைக்குரிய கவனமின்மை:</b> குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவருக்கு அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்கை முன்னெச்சரிக்கையுடனும் தக்க கவனத்துடனும் இருந்து தவிர்க்கும் கடமையினின்று ஒருவர் தவறுவது தண்டனைக்குரிய கவனமின்மையாகும். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கவனமின்மை ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆயினும், ஒருவர் மற்றொருவரைக் கவனமின்மையால் கொன்றுவிடும்போது, அவர் மனிதக் கொலை அல்லது கவனமின்றி மரணம் விளைத்தல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார். எனினும், அவர் கொலைக் குற்றத் தண்டனையைவிடக் குறைந்த அளவு தண்டனையையே பெறுகிறார். கவனமின்மை தொடர்பான வழக்குகளில் கீழ்க்காணும் செயல்கள் கவனமின்மையால் ஏற்பட்டதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. <b>கவனமின்மைச் செயல்கள்:</b> நோயை ஏற்படுத்தும் வகையில் நத்தை போன்ற அழுகிய பொருள்களை இஞ்சிநீர்ப் புட்டியில் அடைத்து விற்பனைக்கு விடுவது சாலையோரங்களில் வண்டிகளை ஓட்டுவோர் கவனமற்ற முறையில் கடைகளில் செலுத்துவது; சாலையின் குறுக்கே நகராட்சியர் அல்லது மாநகராட்சியர் குழி தோண்டிய பகுதிகளைச் சிவப்பு விளக்குகள் அல்லது செங்கொடிகள் நட்டு உரிய முறையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யாதிருப்பது; அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் அறுவை செய்த இடத்திலிருந்து துணியை அகற்றாதிருப்பது; நல்ல மனநிலையில் உள்ள ஒருவருக்குப் பைத்தியம் பிடித்தவர் என்று சான்றிதழ் வழங்குவது; நோயாளிக்கு அளவுக்கதிகமாக மருந்து கொடுத்துத் தீங்கை ஏற்படுத்துவது; தொற்றுநோய் உள்ள ஒருவர் அந்நோயை எல்லோருக்கும் பரவும் வகையில் நடந்துகொள்வது போன்றவை கவனமின்மைச் செயல்களாகும். {{nop}}<noinclude></noinclude> ri1mz6q1yc4loxh9h6c5ex88grbbjve பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/716 250 642608 1931741 2026-05-09T06:59:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தோன்றிற்று. இசுபெனியிலும் போர்ச்சுகல்லிலும் சுதந்திர தென் அமெரிக்கக் குடியரசுகளிலும் பல அரசாங்கங்கள் அடுத்தடுத்துக் குருமார் உரிமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|688|குருவட்டி}}</noinclude>தோன்றிற்று. இசுபெனியிலும் போர்ச்சுகல்லிலும் சுதந்திர தென் அமெரிக்கக் குடியரசுகளிலும் பல அரசாங்கங்கள் அடுத்தடுத்துக் குருமார் உரிமைகளை ஓடுக்கும் பல சட்டங்களைச் செய்துள்ளன. செருமனியில் பரப்பப்பட்ட வலுவான தேசிய உணர்வின் காரணமாகப் (Kulturkampf) போப்புக்கெதிராகவும் குருமாருக்கெதிராகவும் கருத்துகள் வளர்ந்தன. குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, 20-ஆம் நூற்றாண்டில் பொதுவுடைமை, தேசிய சமநிலை முதலிய எதேச்சாதிகார முறைகள் பரப்பிய சமய மறுப்பு என்ற கருத்தோடே இணைந்தது, பொதுவுடைமைப் புரட்சியாளராகிய இலெனின், குறிக்கோட் கோட்பாட்டையும் (Idealism) குருமார் ஆதிக்கக் கோட்பாட்டையும் (Clericalism) ஒன்றாகக் கருதி, அவை இரண்டுமே ஆளுவோர் மற்றோரைச் சுரண்டுதற்காக அவருக்கு உதவியாக இருப்பவை என்று கூறினார். குருமார் ஆதிக்கக் கோட்பாட்டில் அதிகார நோக்கம் இருப்பது வெளிப்படையாக இருத்தலால் அது ஓர் உண்மையான பகைவாகுமென்று கருதி, அதை வெறுத்தாரே தவிர, அதைக் கண்டு அஞ்சலில்லை. இத்தாலியில் பாசிசச் சருவாதிகாரி முசோலினி 1929-இல் போப்போடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதுபோலலே, இசுபெயினின் சருவாதிகாதி பிராங்கோவும் குருமாருக்கு அவர்கள் முன்பு இழந்துவிட்ட சலுகைகளைத் திரும்ப அளித்தார், சீர்திருத்தக் கிறித்தவ நெறியைச் சேர்த்த நாடுகளில் தேசிய திருச்சபைகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றில் இப்போது குருமார் எதிர்ப்புக் கோட்பாடு எதுவும் இல்லை, பல்வேறு சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோர் வாழும் நாடுகளில் குருமாருக்கு ஆதரவான கோட்பாடும் இல்லை; எதிர்ப்பான கோட்பாடும் இல்லை. ஐக்கிய அமெரிக்க நாட்டிலே குருமாருக்கும் உலகியல் மக்களுக்குமிடையே ஒற்றுமை இருப்பதால், அங்கும் குருமார் எதிர்ப்புக் கோட்பாடு இல்லை. அந்நாட்டில் குடியேறும் உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் குருமார் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். சமய நிறுவனச் செயல்களில் உலகியல் மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்து அந்நாட்டில் அண்மையில் பரவி வருகிறது. ஆனால், பண்டைக் காலத்திலிருந்ததுபோல் சமய குருமார்களுக்கு இப்போது அரசியலிற் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hughes, Philip,</b> History of the Church, London, 1948.<br> <b>Moody, Joseph, N.,</b> Anticlericalism, Washington, 1966. <b>குருவட்டி</b>: கருநாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைத்துள்ள சிற்றூர். கோயிற் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்று விளங்கும் இவ்வூரில் சாஞ்சிகியர் காலக்கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள மல்லிகார்ச்சுனர் கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மாடக்குழிகளிலும் அழகு மிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. மாடக்குழிகளின் மேல் மகர தோரணங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள் சிங்கச் சிற்பத்தின் மேலே வால் போன்ற அமைப்பில் கருள் கருளாக வளைவுகட்செதுக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மிக நுட்பமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்களின் சிறு உருவங்களும் பூ வேலைப்பாடுகளும் தூண்களில் காணப்படுகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 716 |bSize = 375 |cWidth = 133 |cHeight = 246 |oTop = 147 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|குருவட்டித் தூண் அமைப்பு}} {{nop}}<noinclude></noinclude> 23rhsvdx9yvon21xm0scmvp6wv3804q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/717 250 642609 1931755 2026-05-09T07:10:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குருவாயூர்</b> சேரன நாட்டில் பொன்னானி வட்டத்தில் உள்ள இச்சிற்றூரில் கண்ணன் ஆயைம் மிகவும் புகழ்வாய்ந்தது. இப்பழைய கோயிலில் உள்ள கிருட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருவாயூர்|689|குருகர்}}</noinclude><b>குருவாயூர்</b> சேரன நாட்டில் பொன்னானி வட்டத்தில் உள்ள இச்சிற்றூரில் கண்ணன் ஆயைம் மிகவும் புகழ்வாய்ந்தது. இப்பழைய கோயிலில் உள்ள கிருட்டிணன் பல்வேறு காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தியதாகக் கதைகள் குறிப்பிடுகின்றன. இந்துக்கள் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து இங்கு வந்து போகி்ன்றனர். கி.பி. 17-18-ஆம் நூற்தாண்டில் வாழ்ந்த நாராயணபட்டாத்திரி என்னும் அறிஞர் குருவாயூர்க் கண்ணனின் மீது ‘தாராயணீயம்’ என்னும் அழகிய வடமொழி நூலை இயற்றினார். அதனால், இக்கோயிலின் புகழ் மேலும் பெருகியது. கோயிற் சுவர்களில் வண்ண ஓவியங்கள் காட்சி அளிக்கின்றன. குட்டிபுரம் என்ற இருப்புப்பாதை நிலையம் குருவாயூருக்கு அருகில் உள்ளது. பேருந்துகளில் மிகுதியான மக்கள் இங்கு வருகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குருகர், பாலசு</b> தென்னாப்பிரிக்காவின் போர் வீரர்; அரசியல்வாதி, பாக்குருகர் (Paul Kruger) அல்லது பாவக குரூகர் (Poulus Kruger) என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க உழவர் கி.பி. 1825 முதல் 1904 வரை வாழ்ந்தவர். குடியானவர் வகுப்பில் பிறந்த குரூகர் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் பேரரசு வளர்வதைத் தடுக்கப் பாடுபட்டார். முதலில் வெற்றியும் பிறகு தோல்வியும் கண்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 717 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 125 |oTop = 265 |oLeft = 46 |Location = center |Description = }} {{center|குருகர், பாலசு}} ஐரோப்பிய வல்லரசுகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக்கொண்டன. தச்சுக் கிழக்கிந்தியக் குழு (Dutch East India Company) கி.பி. 1652-இல் தனக்கெனச் சில இடங்களைத் தென்னாப்பிரிக்காவில் அமைத்துக் கொண்டது. பிறகு சிறிதுசிறிதாகத் நச்சுக்காரரி அங்கே பரவலாயினர். தச்சுக் குடியானவர்களுக்கு ‘போயர்’ என்ற பெயர் அமைந்தது. பிறகு ஆங்கிலேயரின் ஆதிக்கம் அங்கு வளரத் தொடங்கியவுடன் போவர்கள் வடக்கே சென்று ஆரஞ்சு ஆற்றுப்பகுதியில் கி.பி. 1850-ஆம் ஆண்டுகளில், ஆரஞ்சுச்சுதந்திர அரசு, திரான்சுவால் (Pransvaal) என்ற இரண்டு போயர் குடியரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பகுதிகளில் கி.பி. 1867 முதல் வைரச்சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால், மற்ற ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் அங்குச் செல்ல ஆர்வம் தொண்டனர். மேலும், கி.பி. 1886-இல் தங்கச் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆங்கிலேயரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. கி.பி. 1870-இல் அவர்கள் எண்ணிக்கை 300,000, ஆனால் 1900-ஆம் ஆண்டில் அது 1000,000 ஆக உயர்ந்தது. கி.பி. 1871-இல் வைரச் சுரங்கங்கள் உள்ள இடங்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டனர். ஆரஞ்சுச் சுதந்திர நாடு அதை எதிர்த்தது. ஆனால், பயனில்லை. திரான்சுவாலும் கி.பி. 1877-இல் ஆங்கிலேயர் வசமாகியது. அங்கு இருந்த போயர்களை மகிழ்விக்க, ஆங்கில அரசு அவர்களுக்கு விருப்பமான முறையிலேயே அவர்களுடைய மொழியிலேயே ஆட்சி செய்துகொள்ள அனுமதிப்பதாக உறுதிமொழி கொடுத்தது. ஆனால், ஓராண்டுக் கழிந்த பிறகுகூட அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, போயர்கள் கிளர்ச்சி செய்யலாயினர், திரான்சுவால் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலக குருகர், போர்ப் பயிற்சியும் அரசியல் அறிவும் கொண்டவர். ஆங்கிலேயர் அவரை முறியடிக்கப் பல தந்திரங்கள் செய்தனர். உள்நாட்டு வெள்ளையரை அவருக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டினர். குருகர் ஏற்படுத்திய குடியரசைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர், தொடர்ச்சியாக கி.பி.1883 முதல் 1902 வரை திரான்சுவால் குடியரசுத் தலைவராக விளங்கிய குரூகர் தொடக்க காலத்தில் பொறுமையாக இருந்து, ஆங்கிலேயரைம் பகைத்துக் கொள்ளாமல் சிக்கல்களைத் தீர்க்க விரும்பியிருந்தார். ஆனால், சூழ்நிலை மாறியதால் அப்பகுதியில் இனவெறி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டியது அவருக்கு இன்றியமையாததாகிவிட்டது. அப்பகுதியின் மக்களின் வீரத்திற்கும், நீண்ட காலமாகலே அவர்கள் தனித்த மக்கள் என்ற கருத்துக்கும், அவர்தம் வீடுதலை ஆர்வத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் குரூகர் ஒரு வலிமை பொருந்திய பேராளராகக் கருதப்பட்டார். ஆங்கிலேயரிடமிருந்து வில ஒரு சுதந்திரமான குடியரசை நிறுவ வேண்டுமென்பதே அவருடைய<noinclude> <b>வா.க. 7-44</b></noinclude> 6jllj530mclbwbtov5ixcil63tvk1x0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/718 250 642610 1931766 2026-05-09T07:21:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேரவா, மேலும், தம் நாடு வளர்ச்சி அடைய ஏதாவது ஒரு துறைமுகம் அதற்குத் தேவை என்று அதைப் பெற முயன்றார். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் ஆங்கிலேய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருகர் பாலிசு|690|குரோ இந்தியர்}}</noinclude>பேரவா, மேலும், தம் நாடு வளர்ச்சி அடைய ஏதாவது ஒரு துறைமுகம் அதற்குத் தேவை என்று அதைப் பெற முயன்றார். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் ஆங்கிலேயர் அவருடைய ஆசைக்குத் தடையாக இருப்பதை உணர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் வைரச் சுரங்க அதிபதியாகவும் சிறந்த போர் வீரவாகவுமிருந்த செசில் உரோட்சு (Cecil Rhodes), தாய்நாடான இங்கிலாந்தின் அனுமதியின்றியே குருகருக்குப் பகையாகப் பல செயல்களை நிகழ்த்தி வந்தான். மேலும், சேம்சன் (Jameson) என்ற ஆங்கிலேய வீரன், கி.பி, 1895 இல் போயம் குடியரசில் படையெடுத்துச் சென்றான். ஆனால் அவனும் அவனைச் சேர்ந்த 500 பேர்களும் தோல்வியுற்றுக் கைதிகளாயினர். இந்நிகழ்ச்சியைப் பாராட்டிச் செருமானியக் கெய்சர் இரண்டாம் வில்லியம் குரூகருக்கு ஒரு தந்தியின் மூலம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் பிற நாட்டவரின் உதவியை நாடாமல் தாமே ஆங்கிலப் படையைத் தோற்கடித்தமைக்காகக் குருகருக்கு அந்தப் பாராட்டுக் கிடைத்தது. குருகர் தம் நன்றியைத் தெரிவித்துக் கெய்சருக்குப் பதில் அனுப்பினார். இங்கிலாந்தின் அரசு குருகருக்கு அளித்த விளக்கத்தில் சேம்சனின் வலுத்தாக்குதலுக்குத் தான் காரணமில்லை என்று கூறியதுடன், மேற்கொண்டு அமைதியைக் காக்கப் பேச்சு வார்த்தைகளுக்காக இங்கிலாந்துக்கு குருநர் அழைக்கப்பட்டார். இது பிரிட்டனின் தோல்வியின் அறிகுறி என்று குரூகர் மகிழ்ச்சி அடைந்தார். அவர் மறுபடியும் ஓரான்கவால் குடியரசுத் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். உடனே நம்முடைய அரசை வலிமைப்படுத்தில் கொள்ளப் பல திட்டங்கள் தீட்டினார்; தம் படையையும் பெருக்கிக் கொண்டார். தம் ஆட்சிப் பகுதியைச் சுற்றியிருந்த ஆங்கிலேயப் படைகளைத் திரும்பப் பெறவேண்டுமென்று இங்கிலாந்தை வற்புறுத்தினார். ஆனால் பயன் எதுவும் இல்லை. போயர்கள், சிறிது சிறிதாக ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கினர். இங்கிலாந்துக்கும் போயர் குடியரசுக்கும் கி.பி. 1899-இல் போர் மூண்டது. இது போயர் போர் என்று கூறப்படும். போர் தொடங்கி 4 மாதங்கள் வரை, குருகருக்கு வெற்றிகள் கிடைத்தன. ஆனால், விரைவில் ஆங்கிலேயப் படையின் தலைவர்கள் மாற்றப்பெற்றனர். கிட்சனர் என்னும் புதிய இராணுவ அதிகாரியின் தலைமையின்கீழ் ஆங்கிலப் படை கடுமையாகப் போர்ட்டு, 1900ஆம் ஆண்டு சனவரி முதல் வெற்றியடையத் தொடங்கியது. இங்கிலாந்தின் வெற்றியுடன் 1902-இல் போர் முடித்தது. குரூகர் நாட்டைவிட்டு ஓடினார். முன்பு பாராட்டுதல் தந்தி அனுப்பிய கெய்சர் வில்லியம் தமக்குப் புகலிடம் தருவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் கெய்சர், இங்கிலாந்துடன் பகைமையை வளர்த்துக் கொள்ள விரும்பாததால், குருகருக்கு ஆதரவு அளிக்கவில்லை. பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசு (Paris) குருகரை வாழ்த்துகளுடன் வரவேற்றது. குரூகரை இழந்த நிரான்சுவாலும், ஆரஞ்சுச் சுதந்திர நாடும் ஆங்கிலேயர் வசமாவின அப்பகுதிகளுக்கு உள்நாட்டுச் சுதத்திரம் வழங்க இங்கிலாந்து சம்மதித்தது. குருகர் இறுதியில் தோல்வியுற்ற போதிலும் அவருடைய கொள்கைகள் பாராட்டப்பெற்றன. இயன்றவரை நாட்டுக்காக உழைத்த வீரர்களின் எண்ணிக்கையில் இவர் சேர்க்கப்படுவர். இவரை நினைவுபடுத்தும் வகையில் திரான்சுவாளில் உள்ள குருகர் தேசியப் பூங்காவையும் (பரப்பு, 20.720 ச. கி.மீ.) குரூகர்சுடார்ப்பு (Krngers dorp) என்ற நகரத்தையும் இன்றும் காணலாம்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குரோ இந்தியர்</b> வட அமெரிக்கப் பழங்குடிகளுள் ஓரினத்தவர், சியோவன் (Siouan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைமொழியைப் பேசும் இவர்கள், வட அமெரிக்காவின் பெரும் சமவெளிகளில் வாழ்கின்றனர். அண்டைய பழங்குடியினரால் இவர்கள் அப்சாதூக்கு (Apsaalooke) என அழைக்கப்படுகின்றனர். இதன் பொருள் ‘நீண்ட அலகுடைய பறவையின் மைந்தர்கள்’ என்பதாகும். குரோ இந்தியருள் மூன்றில் இரண்டு பங்கினர் தென் மாண்டனாப் (Montana) பகுதியில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் வாழ்கின்றனர். இப்பகுதியிலுள்ளவர்களின் எண்ணிக்கை 6,000-க்கும் மேற்பட்டதாகும். குரோ (Crow) இந்தியர்கள் மேல் மிசுசவுரி ஆற்றுப் பகுதியைச் சேர்ந்த இடாட்சாப் (Hidatsa) பழங்குடியினரோடு பல நூற்றாண்டுகள் நல்லுறவு கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கி.பி. 18 -ஆம் நூற்றாண்டின் இடாட்சாலினரோடு பகைமை கொண்டு போரிட்டுத் தோற்றதால் மேற்கு நோக்கி நகர்ந்தனர். குரோ இந்தியர் சமுதாயம் மூன்று குழுக்களாகப் பாகுபடுகின்றது. இம் மூன்று குழுவினரும் முறையே மலை, ஆறு, வயிற்றில் உதைக்கப்பட்டவர்கள் என்னும் பொருள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் குழுவினர் மலைக் குழுவினமிடமிருந்து பிற்காலத்தில் தோன்றியவர்களாவர். இவர்கள் தனித்தியங்க இயலாதவர்கள். முற்காலத்தில் குரோ இந்தியர் வேளாண் தொழிலை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இடாட்சாவினரிடம் பகை கொண்டு பிரிந்து காட்டெருமையை வேட்டையாடி<noinclude></noinclude> e5gkgncbskvjzuiso44a02oak7plyva பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/21 250 642611 1931769 2026-05-09T07:28:19Z TVA ARUN 3777 1 txt \ n 1931769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> 4 குழந்தையின் கலக்கம் பிறந்தவுடனே குழந்தை அழுகிறது. "குழந்தை நன்றாக அழுகிறது; அதனால் ஆரோக்கியத்தோடு பிறந்தி ருக்கிறது" என்று எண்ணி எல்லோரும் மகிழ்ச்சி யடைகிறார்கள். குழந்தை பிறந்தவுடனே அழுவதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறுவார்கள். தாயின் கருப்பையிலே இருக் கும் வரை குழந்தை சுவாசிப்பதில்லை; உலகத்தில் வந்ததும் அது சுவாசிக்கத் தொடங்குகிறது. அதனுடைய சுவாசப் பை அது முதல்தான் வேலை செய்யத்தொடங்குகிறது. சுவாசப் பைக்குள் முதன் முதலாக மூச்சுச் சென்று வெளியில் வருவதால் ஏற்படும் சப்தமே குழந்தையின் முதல் அழுகை என்று வைத்திய நிபுணர்கள் கூறுவார்கள். கருப்பையில் இருக்கும் வரை குழந்தை தேவர் களோடு உறவாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று உலகத்திற்கு வந்ததும் அந்த உயர்ந்த இன்பம் போய் விட்டதே என்று குழந்தை அலறுவதாகப் பாட்டி சொல் லுவாள்; நவீனப் படிப்புள்ளவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கிராம மக்கள் பெரும்பாலும் அதை நம்பு வார்கள். அதை மூட நம்பிக்கை என்று நாம் நினைக்கிறோ மல்லவா? இருந்தாலும் அதில் ஏதோ கொஞ்சம் உண்மை யிருக்கிறதாக இன்று உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்<noinclude></noinclude> b99fe3nsw4hl3924n6m2dxm9zf241q8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/719 250 642612 1931771 2026-05-09T07:30:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாழ்ந்தார்கள். பின்னர் இவர்கள் தரகுந் தொழிலை மேற்கொண்டார்கள், கிராமங்களில் வாழும் இந்தியர்களுக்குக் குதிரைகள், அம்பு, வில், துணிவகைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோ இந்தியர்|691|குரோச்சே பெனதெத்தோ}}</noinclude>வாழ்ந்தார்கள். பின்னர் இவர்கள் தரகுந் தொழிலை மேற்கொண்டார்கள், கிராமங்களில் வாழும் இந்தியர்களுக்குக் குதிரைகள், அம்பு, வில், துணிவகைகள், கைவினைப் பொருள்கள் முதலானவற்றைக் கொடுத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், இரும்புப் பொருள்கள் முதலானவற்றைப் பெற்று இடாட்சாலினர், சொசோனி (Shoshoni) இந்தியர் ஆகியோருக்குக் கொடுப்பர். இப்போது இவர்கள் எருமை, குதிரை முதலானவற்றை வளர்த்து விற்கும் ஆயர் வாழ்க்கையை நம்பியுள்ளனர். இவ்விரண்டு விலங்குகளியிருந்தே தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, வீட்டுப் பொருள்கள், அலங்காரக் கைவினைப் பொருள்கள் முதலானவற்றைச் செய்கின்றனர். குரோ இந்தியர் முரட்டுக் குணமுடையவர்கள். இவர்கள் அண்டைய இந்தியர்களுடன் தொடர்ந்து நல்லுறவு கொண்டு வாழ்வதில்லை. அவ்வப்போது அண்டையர்களிடமிருந்து குடுரைகளைத் திருடுவதே இவர்களின் போருக்கான காரணம், இவர்கள் போர்ச் செயலில் 4 முதன்மையான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். அவை தம் இனத்தவர் உயிரிழக் காமல் போரிடுவது, எதிரியின் குழுவிலிருந்து போர்க் குதிரைகளைக் கைப்பற்றுவது, எதிரிகளை உயிரிழக்கச் செய்வது, எதிரிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றுவது முதலியனவாகும். அவ்வப்போது கி.பி. 1860 முதல் 1870 வரை தடந்த போரில் தகோட்டா (Dakota) பிளால்புட்டு (Blackfoot) ஆகிய இந்தியர்களிடம் தோற்று நலிவடைந்ததால், அரசு இவர்களுக்கென்று ஒதுக்கிய தெற்கு மாண்டனாப் பகுதியிலுள்ள நிலங்களிற் குடியேறினர். இவர்களின் சமய நம்பிக்கை இயற்கைக்கப்பாற்பட்ட சக்தியினைப் பெற்று மக்களுக்கு உதவி செய்வதாகும். இச்சக்தியைப் பெறுவதற்குத் தனிமையில் பல நான்கள் உணவருந்தாமல் அகப்பைக் கோலால் (Skewer) உடலை வருத்திக் காத்திருந்தால், இச்சத்தியைப் பெறலாம் என நம்புகின்றனர். இவர்களின் சமூகத்தில் ஒருசிலரே இவ்வாறான செய்கையைச் செய்ய முனைகின்றனர். இயற்கைக்கப்பாற்பட்ட சக்தியைப் பெற்றவர்கள் மட்டுமே பல தாவரங்களைச் சேகரித்து மக்களுக்கு மருத்துவம் செய்கிறார்கள்; சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள். இச்சக்தியைப் பெற்றோரிடமிருந்து மருந்து வகைகளைப் பெற்றுயனிய நோய்களுக்கு மருத்துவம் செய்யலாம். இவர்கள் புகையிலையைப் பயிரிடும்போது சில சமயச் சடங்குகளைச் செய்கின்றனர். இச்சடங்குகளைச் செய்வது எதிரிகளை வெல்வதற்கும் உதவுகிறது என இவர்கள் நம்புகின்றார்கள்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குரோச்சே, பெனெதெத்தோ</b>: சிறந்த இத்தாலியச் சித்தளையானராக 20-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பாராட்டப்பட்ட இவர் வரலாற்றாசிரியராகவும், மனிதப் பற்றாளராகவும், தத்துவ ஆசிரியராகவும், ஆய்வாளராகவும், அரசியலறிஞராகவும், எல்லாவற்றுக்கும் மேலாகப்போலித் தனமான அடக்குமுறை ஆட்சியைத் துணிவுடன் எதிர்க்கக் கூடிய ஒழுக்க உறுதி படைத்துவராகவும் விளங்கினார். <b>வாழ்க்கை</b>: (1866-1952) இவர் இத்தாலியில் அப்ரூசியிலுள்ள (Abruzci) நகரமாகியரோலியில் கி.பி. 1866-இல் பிறந்தார், குரோச்சே பெனெதெத்தோ (Benedetha Croce) தம் வாழ்நாள் முழுவதையும் நேப்பிள்சு நகரத்தில் (Naples) கழித்தார். இவர் இளமைக் காலத்து கி.பி. 1883-இல் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பெற்றோரையும், ஏனைய ஆதரவாளர்களையும் இழந்து தனித்து வாழ வேண்டியவரானார். இவர் மனந்தளராமல் உண்மையாக உழைத்தலே தமக்கு உய்தியைத்தருமென்று தெளிவாக உணர்ந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் சேராமல், தாமே வரலாறு, இலக்கியம் முதலிய நூல்களைக் கற்று ஆராயும் திறம் பெற்றார். இவர் தம் வாழ்நாளில் இத்தாலியை ஒரே சுதந்திர நாடாக இணைக்க எழுந்த இயக்கத்தையும் இரு உலகப் போர்களுக்குமிடைப்பட்ட காலத்தில் இத்தாலியில் தோன்றி வீழ்ந்த பாசிச வல்லந்த ஆட்சியையும் நேரில் கண்டு, ஒழுக்க இயல்பும் குடியாட்சி இயல்பும் தாராள இயல்புமுடைய அரசாங்கம் நிறுவப்படுதற்குரிய சிலகொள்கைகளை வகுத்தார். இவர் சில காலம் சமநிலைக் கோட்பாட்டையும் (Socialism), மார்க்சியப் பொதுவுடைமைக் கோட்பாட்டையும் பற்றி ஆராய்ந்து, பின் அவற்றை விடுத்தார். இவர் தனிமையில் வரவேண்டிய சூழ்நிலையே இவரிடம் தனியார் சுதந்திரப்பற்றை உருவாக்கி உறுதியாக வளர்த்தது. இவர் தாம் இருந்த நேப்பிள்சு நகரத்தில், பண்டைக் காலத்தில் வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி, அவர்களுடைய பண்புகளை ஆராய்ந்தார். இத்தாலி நாட்டின் உய்தியைப் பற்றியும் ஒழுக்கப்பண்பு பற்றியும் இவர் இடைவிடாமல் எண்ணிப் போலித்தனமான நாட்டுணர்வையும் அதிகாரப் பற்றையும் வெறுத்தார். இவர் 1903-இல் ‘லா கிரிட்டிக்கா’ (‘La Critica’) என்ற ஓர் ஏட்டை நிறுவி, அவ்வேட்டின் வாயிலாக அடுத்த 41 ஆண்டுகளுக்குத் தம் நூல்கள் பலவற்றை வெளியிட்டார். தம் காலத்தில் ஐரோப்பாவில் வெளி வந்த முக்கிய வரலாறு.<noinclude> <b>வா.க. 7-44அ</b></noinclude> pha9iann2u5quiojt9e2d80fxn7jzux பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/22 250 642613 1931772 2026-05-09T07:33:11Z TVA ARUN 3777 1 txt \ n 1931772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh||குழந்தையின் கலக்கம்|19}}</noinclude>தாயின் கருப்பையில் இருந்தபோது குழந்தைக்கு ஒரு துன் பமுமில்லை; துன்பங்களுக்குக் காரணமான ஆசைகளுமில்லை; பூரண இன்பந்தான் அங்கே நிலவியிருந்தது. அது குழந்தைக்குச் சொர்க்கம் போலிருந்தது. அந்தக் கருப் பையிலேயே மறுபடியும் தங்கவேண்டுமென்று குழந்தை விரும்புகிறதாம். துன்பங் கலவாத இன்ப உலகமாக அது குழந்தைக்கு இருந்ததல்லவா? அதற்கே செல்ல வேண்டு மென்ற ஆசையால் குழந்தையின் மனத்திலே ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்று கூறுவதோடு அதற்கு 'நிர்வாண மனக் கோட்டம்' என்ற பெயரையும் சில உளவியல் அறிஞர்கள் சூட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்ளாதவர்கள். கூட ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதாவது குழந்தை உலகத்திற்கு வருகிறபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு ஒரு விதமான சக்தியும் பெற்றிருப்பதில்லை. கருப்பையிலிருந்த நிலையைவிட மிகவும் தாழ்வான நிலைதான். குழந்தையை இப்பொழுது குளிரும் வெப்பமும் தாக்குகின்றன; பசி முக்கியமாகத் தாக்குகிறது. து குழந்தைக்கு இப்பொழுது எத்தனையோ துன்ப உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. மூன்று மாதமான குழந் தையையே எடுத்துக் கொள்வோம். தொட்டிலிலே சௌகரியமாக அது படுத்துத்தான் இருக்கிறது. இருந்தா லும் அதற்கு அதைச் சுற்றியுள்ளதெல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது; அதற்கு ஒன்றுமே விளங்குவதில்லை. திடீ ரென்று மேலே போர்த்திருந்த வெள்ளைத் துணி சற்று அதிகமாகக் கால்களிலே சுற்றிக் கொள்ளுகிறது. கால் களின் மென்மையான பாகங்களிலே அது உறுத்தி அதிக<noinclude></noinclude> 58ij1v6g3wdmufmmu88y51vdkvbvi2p வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா 0 642614 1931773 2026-05-09T07:35:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரிகோலா | previous = [[../அக்கிரகாரம்/]] | next = [[../அக்கிரிப்பினா/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931773 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரிகோலா | previous = [[../அக்கிரகாரம்/]] | next = [[../அக்கிரிப்பினா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="44" to="44" fromsection="அக்கிரிகோலா" tosection="அக்கிரிகோலா" /> mhawk8rhbd4rb5euk8ndf8d4xlub96i வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா 0 642615 1931775 2026-05-09T07:44:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரிப்பினா | previous = [[../அக்கிரிகோலா/]] | next = [[../அக்கிரியாவாதம்/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931775 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரிப்பினா | previous = [[../அக்கிரிகோலா/]] | next = [[../அக்கிரியாவாதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="45" to="45" fromsection="அக்கிரிப்பினா" tosection="அக்கிரிப்பினா" /> 043b78d2cj97it3vubwwft85gli08ms வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம் 0 642616 1931778 2026-05-09T07:51:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரியாவாதம் | previous = [[../அக்கிரிப்பினா/]] | next = [[../அக்கில்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931778 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிரியாவாதம் | previous = [[../அக்கிரிப்பினா/]] | next = [[../அக்கில்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="45" to="45" fromsection="அக்கிரியாவாதம்" tosection="அக்கிரியாவாதம்" /> aeshdbtm44ivqfct2829n3jdzjipo6v வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில் 0 642617 1931784 2026-05-09T08:01:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கில் | previous = [[../அக்கிரியாவாதம்/]] | next = [[../அக்கிலீசு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931784 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கில் | previous = [[../அக்கிரியாவாதம்/]] | next = [[../அக்கிலீசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="45" to="45" fromsection="அக்கில்" tosection="அக்கில்" /> ffv8niq98g4dic49mozx2d4ygr8p0xf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/720 250 642618 1931787 2026-05-09T08:03:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தத்துவ, இலக்கிய நூல்களையெல்வாம் ஆராய்ந்து மதிப்புரைகளும் எழுதினார். இவர் குறிக்கோளுக்கியைத்த நற்பண்புகள் ஒவ்வொரு இத்தாலியரிடமும் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோச்சே, பெனெதெத்தோ|692|குரோச்சே, பெனெதெத்தோ}}</noinclude>தத்துவ, இலக்கிய நூல்களையெல்வாம் ஆராய்ந்து மதிப்புரைகளும் எழுதினார். இவர் குறிக்கோளுக்கியைத்த நற்பண்புகள் ஒவ்வொரு இத்தாலியரிடமும் இருந்தல் வேண்டுமென்ற ஒரு கோட்பாட்டைத் தம் நூல்களின் வாயிலாக வெளியிட்டார். இத்தாலியில் பாசிசச் சருவாதிகாரம் தோன்றிய போது குரோச்சே அதை வன்மையாக எதிர்த்தார். முதலில் தனியான் சுதந்திரத்திற்கு உதவியாகப் பாசிசக் கோட்பாடு அமையுமென்று எதிர்பார்த்திருந்த குரோச்சே, அக்கோட்பாடு தனியார் சுதந்திரத்தையும் உரிமைகனையும் தனி ஆளையும் புறக்கணிக்கக் கூடிய எதேச்சாதிகார, வல்லந்த ஆட்சிக் கோட்பாடாக மாறியதைக் கண்டு, அதிர்ச்சியடைந்து, அதை எந்த அளவிலும் ஒப்புக்கொள்ளாத முழு எதிர்ப்பாளராக மாறினார். தனியார் சுதந்திரத்தை விரும்பியோரெல்லாம் குரோச்சேயின் பாசிச எதிர்ப்புக்கு ஆதரவனிக்கவே, இவருடைய ஒழுக்க இயலான பாசிச எதிர்ப்பை ஒழித்தல் இயலாதென்று பாசிசத் தலைவர்கள் நன்குணர்ந்து கொண்டனர். இவர் தம் வரலாற்று நூல்களின் உட்பொருளை விளக்கி அவற்றை நீதி இலக்கியம்களாக அளித்தார். இவர் அவற்றில் வாயிலாகப் பாசிச இத்தாலி எவ்வாறு இசைதவறிச் தென்றும் சுட்டிக்காட்டி, நல்லொழுக்கப் பண்பும், குறிக்கோளும் இயைந்த வாழ்வே உண்மையான, விரும்பத்தக்க ஒன்று என்று எடுத்துரைத்தார், இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்றுப் பாசிசம் ஒழிக்கப்பட்ட நிலையில், குரோச்சே தமது உள்ளார்ந்த ஆன்மிகக் கருத்துச் செல்வங்களின் வாயிலாக இத்தாலி மீண்டும் புத்துயிர் பெறுதல் வேண்டுமென்று தெளிவாகவும் உறுதியாக யாகவும் கூறினார். ஐரோப்பாவில் பல தனியார்களால் நிறுவப்பட்டுள்ள சிறந்த நூலகங்களுள் தேய்பின்சிங் குரோச்சே தம் இல்லத்தில் வைத்திருந்த நூலகமும் ஒன்று. அதில் இவர் பல நூல்களைன் சுற்றும் ஆராய்ந்தும் காலம் கழித்து, 1952, நவம்பரில் மறைந்தார். இவருடைய வாழ்க்கை அமைதியும் உழைப்பும் நிறைந்த ஒன்று ஆகும். <b>குரோச்சேயின் தத்துவக் கருத்துகள்</b>: இவர் ‘ஆன்ம தத்துவம்’ (Philosophy of the Spirit), ‘தருக்க இயல்’ (Logic), பொது மொழியாகவும் அறிவியமாகவும் வெளிப்படும் அழகியல் (Aesthetics as an Expression of Common language and Science) ‘செயல்முறைத் தத்துவமாகிய பொருளியலும் ஒழுக்க இயலும்’. (‘Philosophy of the Practical; Economic and Ethic’), ‘வரலாற்றின் கொள்கையும் செயல் முறையும்’ (History: Its Theory and Practics), ‘வரலாறு சுதந்திரத்தின் ஒரு கதை’, (‘History as the Story of Liberty’, 1941) ‘19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு’, ‘இத்தாலிய வரலாறு-1871 முதல் 1915 வரை’, ‘நேப்பிள்சு அரசின் வரலாறு’ முதலிய நல்ல பல நூல்களை எழுதி, இத்தாலிக்கு நல்ல வழி காட்டக்கூடிய நல்லாசிரியராகப் பணிசெய்தார். இவர் ஆன்மா (Spirit) என்பதற்கு ‘மனித நல்லுணர்வு’ (Human-Consciousness) என்று பொருள் கொண்டு சில தத்துவக் கருத்துகளை அளித்தார். ஆன்மா என்பது, அழகியல், தருக்கஇயல், பொருளியல், ஒழுக்க இயல் முதலிய துறைகளில் சுற்றிச் சுழன்று வருகிறது. பின்னர் ஆன்மாவில் நிலைகல் மறைந்துவிடாமல், அவையெல்லாம் வரலாற்றின் செயல்களாகவும் கருத்துகளாகவும் படிந்து விடுகின்றன. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் உகந்த ஒரு விதியாக வரலாறு அமைந்துள்ளது. <b>இத்தாலியப் பண்புகள் என்ற கருத்து</b>: குறிக்கோளுக்கு இயைந்த இத்தாலியரிடம் சுதந்திர வேட்கையும் (A Pussion for freedom), ஆழ்ந்த சமூகக் கடமை உணர்வும் (A profound sense of civie duty) முரண்பாடின்றி இணைத்து காணப்படும். அவரிடத்துக் சுவர்ச்சியான பேச்சோ உணர்வுமிக்க கற்பனையோ காணப்படமாட்டா, புற, அக வாழ்க்கைக் சூரிய உண்மைகளே முரண்பாடின்றி இணைந்த குறிக்கோள்களாகக் காணப்படும். ஆக்க இயல்புடைய முயற்சி உடையவராக அவர் இருப்பார். எதிர் காலத்துக்குத் தாம் அளிக்க வேண்டிய கடமை உணர்வு அவரிடம் காணப்படும். அவர் இடைவிடாத, ஆக்க இயல்புடைய முயற்சியோடும், தன் குற்றம் காணும் பண்போடும் இருப்பார். இத்தகைய நல்ல குறிக்கோள்களையும் பண்புகளையுமுடைய இத்தாலியரால்தான் நாட்டிற்கு நல்லபணி செய்தல் இயலுமென்று வலியுறுத்திக் கட்டுரைகளை வெளியிட்டார் நல்லாசிரியர் குரோச்சே. அதுவே இவருடைய பொதுவாழ்வுப்பணி ஆகும். ஓரே நாடாக இத்தாலியை இணைத்தவர்களுள் ஓரி அரசியலறிஞரான கவூரைப் போலவே (Cavour) குரோச்சேயும் திறமான இத்தாலிய மக்கனை உரு வாக்குதற்கு வேண்டிய நற்கருத்துகனை அளித்தார். <b>தாராள அரசியற் கருத்து</b>: இத்தாலியில் பாசெக் கட்சியை நிறுவி, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்திய சருவாதிகாரியாகிய முசோலிலி, பாசிசக் கட்சிக்கு ஓர் அரசியற் கொள்கையை உருவாக்கித் தருமாறு<noinclude></noinclude> czhcql51k8c6v1jqoz3rdnyu9vkocof வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு 0 642619 1931789 2026-05-09T08:06:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிலீசு | previous = [[../அக்கில்/]] | next = [[../அக்கினி/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931789 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கிலீசு | previous = [[../அக்கில்/]] | next = [[../அக்கினி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="45" to="46" fromsection="அக்கிலீசு" tosection="அக்கிலீசு" /> db0tr8bm0rikddtmcaeew8r0w3lhuo7 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி 0 642620 1931791 2026-05-09T08:11:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கினி | previous = [[../அக்கிலீசு/]] | next = [[../அக்கினிமித்திரர்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931791 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கினி | previous = [[../அக்கிலீசு/]] | next = [[../அக்கினிமித்திரர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="46" to="47" fromsection="அக்கினி" tosection="அக்கினி" /> 6xmki0f68c8y3a99vw8fqmkah2mc2u8 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர் 0 642621 1931795 2026-05-09T08:16:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கினிமித்திரர் | previous = [[../அக்கினி/]] | next = [[../அக்கீசன், தீன் குட்டர்காம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931795 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கினிமித்திரர் | previous = [[../அக்கினி/]] | next = [[../அக்கீசன், தீன் குட்டர்காம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="47" to="47" fromsection="அக்கினிமித்திரர்" tosection="அக்கினிமித்திரர்" /> 40ybfp2t3w4g1xyqr4r17cxh7t3ubu7 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம் 0 642622 1931796 2026-05-09T08:20:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கீசன், தீன் குட்டர்காம் | previous = [[../அக்கினிமித்திரர்/]] | next = ../அக்குமீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931796 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கீசன், தீன் குட்டர்காம் | previous = [[../அக்கினிமித்திரர்/]] | next = [[../அக்குமீனிய மரபு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="47" to="48" fromsection="அக்கீசன், தீன் குட்டர்காம்" tosection="அக்கீசன், தீன் குட்டர்காம்" /> 91iw4jl91kxej5yzbmwjzhfh640cw8q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/721 250 642623 1931804 2026-05-09T09:23:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சியோவெள்ளி செண்டைன் என்பவரிடம் (Giovanni gentile) கேட்டார். அவர் நமக்குத் தெரித்த ஒரே அரசியற் கோட்பாடாகிய ‘அனைத்து வல்லமையுமுடைய அரசு’ என்ற ஏகலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோச்சே, பெனெதெத்தோ|693|குரோசியசு, கியூகோ}}</noinclude>சியோவெள்ளி செண்டைன் என்பவரிடம் (Giovanni gentile) கேட்டார். அவர் நமக்குத் தெரித்த ஒரே அரசியற் கோட்பாடாகிய ‘அனைத்து வல்லமையுமுடைய அரசு’ என்ற ஏகலின் கோட்பாட்டை (Hegel's Theory of an all-powerful State) முசோலினியிடம் அளித்தார். எகமின் முழுக்கோட்பாட்டையும் சிறிதும் மாற்றமின்றி முசோலினி ஏற்றார். அது வாழ்க்கையின் எல்லாத் துறைகளின் செயல்களும் அரசுக்காகவே இருத்தல் வேண்டும்; எதுவும் அரசுக்கு மாறாக இருத்தலாகாது; எதுவும் அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டிருத்தலாகாது என்னும் சருவாதிகாரக் கோட்பாடாகும். அதைக் குரோச்சே மறுத்தார். சியோவென்னியும் குரோச்சேயும் உயர்தர எகலியக் கோட்பாட்டாளர்கள்; அதாவது, அரசின் இன்றியமையாமையையும், அரசின் வாயிலாகத் தனியார் முழுச்சுதந்திர ஆளாக நல்வளர்ச்சி பெறுதல் இயலுமென்பதையும் உணர்ந்து கூறிய தாராள இயல்புள்ள குறிக்கோள் அரசுக் கோட்பாட்டை (Idealistic Theory of the State) ஆதரித்தோர் ஆவர். ஆனால், இவர்கள் அரசே உயரிய குறிக்கோளென்றோ, மனிதர் அரசின் நோக்கத்துக்காகச் செயற்பட வேண்டிய ஒரு கருனி என்றோ கூறவில்லை. இவர்களுடைய கருத்து மனிதனுடைய வாழ்வே-குறிக்கோள், அதற்கேற்ற ஒரு கருவியாக இருப்பதுதான் அரசு என்பதாகும். பாசிசமானது. சமூகப் பண்பை அழிக்கும் ஆணவப்போக்கையும், உண்மையை மறைக்கும் ஆரவாரமான பேச்சுக் கலையையும் வளர்க்கிறது; மேலும், அது நேர்மையான முயற்சியை நீக்கிப் போலிமனப்பான்மையையும் கொடுங்கோள்மையையும் வளர்க்கிறது. <b>குரோச்சேயைப் பற்றிய மதிப்பீடு</b>: குரோச்சே வாழ்வு சீர்பெறுவதற்கு உகந்த நல்ல கருத்துகளை விளக்கி இக்கால இத்தாலிய மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்த நல்லாசிரியராவார். சில முக்கிய மாறுதல்களுடன் முடியாட்சி மீட்கப்படுதல் வேண்டுமென்றும், தாராளக் கட்சியின் கொள்கைகள் மீண்டும் இத்தாலிய அரசாங்கத்தில் கையாளப்படுதல் வேண்டுமென்றும் இவர் கூறினார். புதிய இந்தாலியை உருவாக்க எண்ணிய எண்ணம் நிறைவேறா விடினும், புதிதாகக் குடியாட்சி இயல்புகளோடு அமைக்கப்பட்ட இக்கால இத்தாலி, குரோச்சேயின் நல்லுணர்வினால் தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. தனித்த வாழ்விலிருந்து கொண்டே இவர், மனித வாழ்வின் இன்ப துன்பங்களையும், அவர்களுடைய முயற்சிகளையும் பரிவோடு ஆராய்ந்தார். இவருடைய இரக்க உணர்வு, மனிதருக்கு நல்வழி காட்டக்கூடிய ஆசிரியராக இவரை ஆக்கிற்று. இவர் சுதந்திரத்தைப் புனிதமானதாகவும், மனிதரின் உயர்ந்த குறிக்கோளாகவும் சருதினார். இரண்டாம் உலகப்போரினால் வலியிழந்து கிடந்த இத்தாலி நாட்டிற்கு மறுவாழ்வளிக்க உழைத்தவராகையால், இவர் இக்கால இத்தாலி நாட்டின் உயிர்ப்பைக் காட்டும் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறார்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Edward Heiman,</b> Freedom and Orders: Lessons from the War, New York, 1947.<br> <b>William Ebenstein,</b> Fascist Italy, New York, 1939. <b>குரோசியசு, கியூகோ (கி.பி. 1583-1645)</b>: பன்னாட்டுச் சட்டத்தை உருவாக்கி வளர்ச்சியடையச் செய்ததில் பெரும்பங்கு வகித்த குரோசியசு கியூகோ (Grotius, Hugo) கி.பி. 1583-ஆம் ஆண்டு ஆலந்திலுள்ள தெல்ப்ட்டு (Dalft) என்னுமிடத்தில் பிறந்தார், இலைடன் (Leidea) பல்கலைக்கழகத்தில் உயர்பதவியிலிருந்த இவர் தந்தை, மகளின் கல்வியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். வயதிற்கு {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 721 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 130 |oTop = 210 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|குரோசியக, கியூகோ}} மீறிய அறிவாற்றலைக் கொண்ட குரோசியசு தம் பதினோராம் வயதில் இலைடன் பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேர்ந்தார். இவர் தம் பதினைந்தாம் வயதில் கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைத் தொகுத்துப் பதிப்பித்தார். அந்த ஆண்டிலேயே ஆனந்து நாட்டிலிருந்து பிரெஞ்சு அரசவைக்கு அனுப்பப்பட்ட உயர் தூதுக்குமுலில் உறுப்பினராகச் சென்றார். ‘ஆலந்து நாட்டின் அற்புதம்’ (Miracle of Holland) என்று பிரெஞ்சு அரசர் நான்காம் என்றியினால் வருணிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட குரோரியசு<noinclude></noinclude> ore2dn833jrh0yy2ontki6tlddcqsr5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/722 250 642624 1931808 2026-05-09T09:35:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரான்சிலுள்ள ஆர்லியன்சு (Orleans) பல்கலைக்கழகத்தில் ‘டாக்டர்’ பட்டத்தைப் பெற்றார். இவர் ஆலந்தின் வரலாற்றெழுத்தாளராக (Historiographer) கி.பி. 1601-இல் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோசியசு கியூகோ|694|குரோசியசு கியூகோ}}</noinclude>பிரான்சிலுள்ள ஆர்லியன்சு (Orleans) பல்கலைக்கழகத்தில் ‘டாக்டர்’ பட்டத்தைப் பெற்றார். இவர் ஆலந்தின் வரலாற்றெழுத்தாளராக (Historiographer) கி.பி. 1601-இல் தியமிக்கப்பட்டார். குரோசியசு சட்ட வல்லுதர் (Jurist) ஆக மட்டும் விளங்கவில்லை; அரசியல் குழ்வலி, மொழி, கவிதை சமயம், வரலாறு ஆகிய பலதிறப்பட்ட துறைகளிலும் சிறந்த அறிஞராக விளங்கினார். ஆலத்து நாட்டின் கிழக்கிந்தியக் கம்பெனி (Dutch East India Company) கி.பி. 1604-இல் போர்ச்சுகல் நாட்டின் அணிகக் கப்பலைக்யைப் பற்றிய சொல் சட்டப்படி சரியான சொல் என நிறுவும் பொருட்டுக் குரோசியசு ‘பரிசு, கொள்ளை பற்றிய சட்டங்கள்’ (On the Law of Prize and Booty) என்ற நூலை எழுதினார். அத்நூலின் பன்னிரண்டாம் இயல் 1609-இல் வெளிவந்தது, மற்றப் பகுதிகள் 1868-இல் தான் வெளிவந்தன. அந்நூலில் குரோசியசு மனித குலத்தின் இயற்கைச் சட்டத்தின் (Nataral Law) தன்மையை ஆராய்ந்தார், இறைவனின் விருப்பத்திலிருந்து உருவான இயற்கைச் சட்டம் நான்கு தெய்விக ஆணைகளைக் கொண்டது அவையாவன 1. ஓர் அரசு மற்றோர் அரசைத் தாக்கக் கூடாது. 2. ஓர் அரசு மற்றோர் அரசின் உடைமைகளைக் கைப்பற்றக் கூடாது. 3. ஓர் அரசு மற்றோர் அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் புறக்கணிக்கக்கூடாது. 4. ஓர் அரசு மற்றோர் அரசுக்கு எதிராகக் குற்றம் புரியக் கூடாது. மேற்கூறிய நான்கு ஆணைகள் தனிமனிதனுக்கும் பொருந்தும். இந்நான்கு ஆணைகளை நீதிபதிகள் உறுதியாகக் கடைப்பிடித்துக் காப்பாத்த வேண்டும்; செயற்படுத்த வேண்டும். அவற்றைக் காப்பாற்றிச் செயற்படுத்த நீதிபதிகள் இல்லையெனில் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு அரசு போர் செய்யலாம். நாட்டின் கடல் வாணிகத்திற்கு இடையூறு செய்த போர்ச்சுகல் நாட்டின் கப்பலை ஆலந்து போர் முறையில் கைப்பற்றியது சட்டப்படி நியாயமான செயலேயாகும் எனக் குரோசியசு கூறினார். இக்கருத்தின் வழியே கடல்களில் உலக நாடுகள் அனைத்திற்கும் சம உரிமை உண்டு என்ற கோட்பாட்டைக் குரோசியசு வளியுறுத்தினார். இவர் கி.பி. 1610-ஆம் ஆண்டிற்குப் பிறகு உள்நாட்டில் ஏற்பட்ட சமயச் சச்சரலில் அர்மிலியன் (Armininu) சமயப் பிரிவினரை ஆதரித்தார். அப்பிரிவினர் தோற்கடிக்கப்பட்டபொழுது குரோசியசும் கைது செய்யப்பட்டுப் பத்து ஆண்டுச் சிறைத்தண்டனையும் பெற்றார். ஆனால், அவர் மனைவியின் திறமையின் காரணமாக கி.பி. 1621-ஆம் ஆண்டு குரோசியசு சிறையிலிருந்து தப்பிப் பிரான்சுக்குச் சென்றார். பிரெஞ்சு அரசர் பதின்மூன்றாம் லூயி இவரை வரவேற்று இவருக்கு ஓர் ஓய்வு ஊதியத்தையும் வழங்கினார். வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த குரோசியசு ஆலந்திற்குத் திரும்பிச் செல்ல 1631-இல் செய்த முயற்சி வெற்றி பெறாமையினால், பாரிசை வீட்டு வெளியேறிச் செருமனியிலுள்ள ஆம்பர்க்கு (Hambarg) நகரில் குடியேறினார். சுவீடன் நாட்டு அரசி சிறிகடியானா (Christiana), கி.பி. 1634-இல் குரோசியசுக்குப் பிரான்சு நாட்டில் சுவீடன் நாட்டுத் தாதுவர் பதவியை வழங்கினார். அப்பதவியை ஏற்றுக் கொண்ட குரோசியசு அதில் பத்து ஆண்டுக் காலம் பணியாற்றினார். இவர் தம் பதவித் துறப்புக் கடிதத்தை அரசிற்குக் கொடுக்க ஆலந்து நாட்டு வழியாகச் சுவீடனுக்கு, கி.பி. 1645-இல் புறப்பட்டார். இவர் ஆலந்து வந்தபொழுது அன்பாக வரவேற்கப்பட்டார். சுவீடனிலிருந்து திரும்பிய பொழுது கி.பி. 1645-இல், இவர் மரணமடைந்தார். குரோசியசு கி.பி. 1618-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுக்காலம் சிறையிலிருந்த பொழுது ‘கிறித்தவ நெறியின் உண்மை’ (The Truth of Christian Religion) என்ற நூலை எழுதினார். அந்நூல் சமயங்களி 1622-இல் வெளிவந்தது. பிறநாட்டுச் ஈர்க்கப்படாமலிருக்கும் பொருட்டுக் கிறித்தவச் சமயத்தின் சிறப்புக் கூறுகளை மாலுமிகளுக்கு எடுத்துக் காட்டுவதற்காக எழுதப்பட்ட அந்நூல் மிக விரைவில் பெரும் செல்வாக்கைப் பெற்றது; எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் அது மொழி பெயர்க்கப்பட்டது. குரோசியசு எழுதிய நூல்களுள் மிகப் பாராட்டப்பட்டது ‘போரும் அமைதியும் பற்றிய சட்டம்’ (Law Concerning War and Peace) என்ற நூலாகும். அந்நூல் கி.பி.1625-இல் வெளிவந்தது அந்நூல் இதுவரை 74 பதிப்புகளையும், அளவற்ற மொழி பெயர்ப்புகளையும் கண்டுள்ளது. அந்நூலில்தான் குரோசியசு தமது ‘நேரிய போர்’ (Just War) என்ற அவருடைய போர் பற்றிய கோட்பாட்டை விளக்கியுள்ளார். நாடுகளுக்கிடையேயுள்ள சச்சரவுகளில் நீதிமன்றத்தின் வழியாக நீதி பெற வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுமாயின் பாதிக்கப்பட்ட நாடு நீதி பெறப போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்பது இவர் கருத்தாகும். ஒரு நாடு அதன் உடைமையையும் உரிமையையும் அதற்குச் சேர வேண்டியதையும் பெறப் போர் புரியலாம்; எனவே போர் என்பது, நாடுகளுக்கிடையேயுள்ள சச்சரவுகளைத் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமன்றம் ஒன்று இல்லாமையினால், இராணுவத்தின் வாயிலாக நடத்-<noinclude></noinclude> k90t1t9kku5nzu87qfroj34x477icad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/723 250 642625 1931810 2026-05-09T09:56:13Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தக்கூடிய ஓர் உரிமைக் கோரிக்கை வழக்கேயாகும் என இவர் கருதுகிறார். மேலும், போர் புரிவதற்கு முன்பும், போர் புரியும் போதும் அதில் ஈடுபட்டுள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோசியா|695|குரோசியா}}</noinclude>தக்கூடிய ஓர் உரிமைக் கோரிக்கை வழக்கேயாகும் என இவர் கருதுகிறார். மேலும், போர் புரிவதற்கு முன்பும், போர் புரியும் போதும் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் நியாயமானவையா நியாயமற்றவையா என்பதை நிருணயிக்கும் பொருட்டுக் குரோசியசு சில கோட்பாடுகளையும் அந்நூலில் வகுத்துள்ளார். ஆனால், அவருடைய அக்கோட்பாடுகளனப் போகில் ஈடுபட்டுள்னோர் எவ்வளவு தூரம் கடைப்பிடித்து மதித்துப் போர் செய்தார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற இயலாத போதிலும், அவருடைய அந்நூல் பன்னாட்டுச் சட்டம் வளர்ச்சியடைவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட வழக்கறிஞர்களும் இராச தந்திரிகளும் அந்நூலை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இவர் காலத்தில் நிலவிய பன்னாட்டுக் குழப்ப நிலைகளுக்கிடையே பன்னாட்டு ஒழுக்க முறை என்ற இலட்சியத்தைத் தன்னம்பிக்கையோடு கடைப்பிடித்தவர் குரோசியசு ஆவார்.{{Right|<b>சு.மு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Oppenheim, L.,</b> International Law: A Treatise, Vol.I, Longmans, London, 1970.<br> <b>Wiliam Knight, S.M,,</b> The Life and Works of Hugo Grotius, Sweet & Maxwell, London, 1925. <b>குரோசியா</b>: ஐரோப்பாவில் அங்கேரி நாட்டின் ஒரு பகுதியாக இருந்த குரோசியா (Croatia) முதலாம் உலகப்போருக்குப் பிறகு யூகோசுலாலியாவும்குக் கொடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது இட்லர் (Hitler) குரோசியாவைக் கைப்பற்றி இங்குத் தனி ஆட்சி ஏற்படுத்தினான். அப்போருக்குப் பிறகு யூகோசுலாவியாவைச் சேர்ந்த குடியரசுகளும் ஒன்றாகக் குரோசியா விளங்கலாயிற்று. இங்குள்ள குரோட்டு மக்கள் லொவிய (Shav) இனத்தைச் சேர்ந்தவர்கள், குரோட்டு மொழியும் செருபிய மொழியும் தொடர்புடையன. யூகோசுலாவியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இக்குடியரசின் பரப்பு 56,524 ச.கி.மீ. இதன் தலைநகர் சாக்ரெபு (Zagreb). குரோசியாக் குடியரசில், குரோசியாவுடன்கூட, இக்லேவோனியா (Slavonia), தால்மேசியா (Dalmatia), இசுத்திரியாவின் (Istria) பெரும்பகுதி ஆகியன அடங்கும். மேலைக் குரோசியா ஆல்ப்சு மலைத்தொடரைச் சார்ந்தும், கிழக்குக் குரோசியா சாவா, நிராலா ஆறுகளை அடுத்தும் உள்ளன. கிழக்குக் குரோசியா {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 723 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 160 |oTop = 60 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|குரோசியா}} மக்கள் பெரும்பாலும் வேளாண்ளமயையே மேற்கொண்டுள்ளனர். இந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடுகள், இங்கிருந்து மரங்கள் ஏற்றுமதியாகின்றன. நிலக்கரிச் சுரங்கங்கள் இந்நாட்டில் மிகுதி. மேலும் செம்பு, அதுமினியம், பரதை எண்ணெய், இரும்பு ஆகியவை கிடைக்கின்றன. யூகோசுலாவியா முழுவதிலும் மிகுதியான அளவுக்குத் தொழில் வளமுள்ள பகுதி குரோசியாவே, சுற்றுலாப் பயணிகள் மூலம் இக்குடியரசுக்கு மிருந்த வருமானம் கிடைக்கிறது. <b>வரலாறு</b>: குரோசியாவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் குரோட்டுமக்கள் குடியேறினர். அவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர். குரோட்டுமக்கள் (Croats) அங்குச் செல்வதற்கு முன்னர் அப்பகுதி உரோமானியப் பேரரசின் ஒரு தனி இராச்சியமாக அமைத்திருந்தது. குரோசியாவில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டுக் கலகங்கள் முற்பட்டதால் சீர்கேடுகள் பெருகின. அந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேசி (Hungary) 1901-ஆம் ஆண்டில், அந்நாட்டைத் தன்னடிப்படுத்தியது. அதன்பிறகு எட்டு நூற்றாண்டுகள் அங்கே ஆட்சி அங்கே நிலவிய போதிலும், குரோட்டுமக்கள் தங்களுக்குத் தனிச் சட்டசபையைப் பெற்றிருந்தனர்.{{nop}}<noinclude></noinclude> jlsk0e11oswajv0vdfgn0pr4bf7re5d அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf 252 642626 1931823 2026-05-09T11:37:53Z Info-farmer 232 + தொடக்கம் 1931823 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 94g45iwv5zsn3wtdwnmomz7cmt01cf7 1931824 1931823 2026-05-09T11:39:02Z Info-farmer 232 1931824 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 5vjltpnivxhncimlq51onqpmk9amhzw 1931827 1931824 2026-05-09T11:45:26Z Info-farmer 232 77.89 1931827 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்123 /> |Remarks={{}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 90h8e7qvu3x7rprv0tvk7sb18mcqt1i