விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.2
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf
252
452394
1933642
1929092
2026-05-14T18:08:01Z
TI Buhari
4634
1933642
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=அறிவியல் களஞ்சியம் 14
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]]
|School=அறிவியல்
|Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=969
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5 = "1"
5to22="roman"
23="1"
949 = பொருளடைவு
959 = தமிழ்–ஆங்கிலம்
964 = ஆங்கிலம்–தமிழ்
/>
|Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}}
{{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நூ|நூ]]|{{DJVU page link 2|121|99}}}}
{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நெ|நெ]]|{{DJVU page link 2|150|128}}}}
{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நூ|அருஞ்சொல் அட்டவணை நூ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நெ|அருஞ்சொல் அட்டவணை நெ]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN : 81-7090-336-X
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
nrg2ze64ae8dcjo6vuwagr3oggarksv
பயனர்:Ramya sugumar/சோதனை
2
600379
1933698
1763046
2026-05-15T07:27:50Z
Booradleyp1
1964
1933698
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-
comake7pf5dm1grn2xzyljuiunwjqby
1933699
1933698
2026-05-15T07:32:46Z
Booradleyp1
1964
1933699
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
eh14944ni9k8j5w45jqsubzomn2q8hf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/165
250
617233
1933597
1933468
2026-05-14T12:01:04Z
Booradleyp1
1964
1933597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசமுகி|129|அசரீரி}}</noinclude>கொண்டிருக்கின்றனர். இச்சிற்பம் அசந்தாச் சிற்பக் கலையின் பெருமைக்குச் சான்றாக விளங்குகிறது.{{float_right|என்.எஸ்.இரா.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Calambur Sivarama Murthy,</b> “The Art of India”, Indian Book House, Bombay.
<b>Calambur Sivarama Murthy,</b> “Indian Painting”, National Book Trust of India, New Delhi, 1970.
<b>Krishna Chaitanya,</b> “The Mural Tradition,” Abinay Publication, New Delhi, 1976.
<section end="அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்"/>
<section begin="அசமுகி"/>
{{dhr}}
{{larger|<b>அசமுகி</b>}} என்பவள் சூரபதுமன் தங்கை. இப்பெயர் ஆட்டுமுகம் உடையவள் எனப் பொருள்படும். மாயை என்னும் அசுரப் பெண் நான்காம் சாமத்தில் ஆட்டினுருக்கொண்டு காசிபரைக் கூடியதால் இவள் பிறந்தாள், இவள் துருவாசரை வலிதிற் கூடி வாதாவி வில்லவர்களைப் பெற்றாள், தனித்திருந்த இந்திராணியைத் தன் அண்ணன் சூரனுக்கு மனைவியாக்க விரும்பி வலிந்து இழுக்க முயன்றாள், அப்போது மகாகாளரால் கையறுக்கப்பட்டாள். பின் தனக்கு நேரிட்டதைத் தன் அண்ணனுக்கு உணர்த்தினாள். பிரமனால் கைவளரப் பெற்றாள். கச்சியப்பரின் கந்த புராணத்தில் இவளைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அவற்றுள் சில வருமாறு; அசமுகி மணம்புரிந்து கொள்ளாதவள்; ஒழுக்கக் கேடானவள்; தேவர்களின் மனைவிகளைத் தன் தமையன்மார்களுக்கு மனைவிகளாக ஆக்குபவள்; முனிவர் இயற்றும் வேள்விகளை அழிப்பவள்; தீமையே வடிவானவள்; அசுரர்களை அழிக்கும் தீவினை போல் எங்கும் உலாவி வருபவள்; தன் கிளைஞரை இகழ்பவர்களைக் கொன்று தின்பவள்; அழகிற்சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து கூடுபவள்.{{right|<b>எஸ்.சௌ.</b>}}
<section end="அசமுகி"/>
<section begin="அசயராசா"/>
{{dhr}}
{{larger|<b>அசயராசா</b>}} இராசபுதனத்தைச் சார்ந்த சாகம்பரியை ஆண்ட சாகமான அரசர்களுள் ஒருவர். இவர் முதலாம் பிரிதிவிராசனின் மகன். கி.பி. 12–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசயமேடு அல்லது ஆசுமீர் (Ajmer) என்னும் நகரை இவர் உண்டாக்கினார்.
<section end="அசயராசா"/>
<section begin="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி"/>
{{dhr}}
{{larger|<b>அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமிய அருள் தொண்டர். இந்திய நாட்டின் தலைநகர் புதுதில்லிக்கு அண்மையில் அவரது பெயரில் வழிபாட்டுத் தலம் ஒன்றுள்ளது. இவர் கி.பி. 1325-ஆம் ஆண்டில் காலமானார். இவரது உடல் புதைக்கப் பெற்ற இடம் புனிதமானதாக இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இவர் தில்லி சுல்தான்களின் சமயப் பெரியாராகத் திகழ்ந்தார். புதிய தலைநகரான துக்ளகாபாத்தைக் கட்டிக் கொண்டிருந்த இயாசுதீன் துக்ளக்கு அரசருக்கும் அசரத் நிசாமுதீன் ஒளலியா சிசுடிக்கும் (Hazrat Nizamuddin Aulia Chishti) மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து தில்லிக்குப் புறப்பட்டு வரும் வழியில் சிசுடி கொல்லப்பட்டார். புதிய தலைநகர் கட்டும் பணியை கியாசுதீனின் மகன் கைவிட்டு விட்டார். இன்றைய தில்லிமாநகர்ப் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இவர் நினைவாக அசரத்து நிசாமுதீன் என்ற புதிய புகைவண்டி நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
<section end="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி"/>
<section begin="அசரத்பால் மசூதி"/>
{{dhr}}
{{larger|<b>அசரத்பால் மசூதி</b>}} இந்தியாவின் சம்மு–காசுமீர மாநிலத்தின் தலைநகரான சிரிநகரில் உள்ள ஒரு சிறப்பான வழிபாட்டு இடம். இங்குள்ள மசூதியில் நபிகள் நாயகத்தின் புனித தலைமுடிகளில் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் போன்ற சிறப்பான சமயங்களில் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களுள் ஒருவரான சையது அப்துல்லா என்பாருக்கு இப்புனித நினைவுப் பொருள் கிட்டியது. அவர் மதீனாலில் உள்ள முத்தாவலி மசூதியில் புரவலர். கி.பி. 1634-ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். தக்காணத்தில் பீசப்பூரில் 23 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் மகன் சையது அமீது கி.பி. 1692-ஆம் ஆண்டில் தில்லி நகருக்கு வந்தார். அங்கு அவர் காசுமீர வணிகர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிகுந்த தலைமுடிச் சின்னத்தை அவ்வணிகர் தம்முடைய பொருளாகப் பெற்றுக் கொண்டார். அவர் காலப் போக்கில் இலாகூரில் இறந்து போனார். குவாசா மதனிசு (Khwaja Madanish) என்பார் அதைக் காசுமீரத்திற்குக் கொண்டு வந்தார் சில காலம் நவுசி பாந்த்சாகேப் மசூதியில் வைக்கப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னம் அசரத்பால் மசூதிக்கு மாற்றப்பட்டது. இந்த அசரத்பால் மசூதியைக் கட்டியவர் பேரரசர் சாசகான் (Shah Jahan) ஆவார். இம்மசூதியின் கட்டிடக்கலை மொகலாயப் பாணியையும் காசுமீரத்துக் கட்டிடக்கலைப் பாணியையும் இணைத்துக் கட்டப்பட்டதாகும். சேக்கு முகமது அப்துல்லாவும் அவர் துணைவர்களும் தீவிரமாக முயன்று மதீனாவில் நபிகள் நாயகத்தின் மசூதியைப் போல இதனையும் கட்டி முடித்தனர்.
<section end="அசரத்பால் மசூதி"/>
<section begin="அசரீரி"/>
{{dhr}}
{{larger|<b>அசரீரி</b>}} என்பது உடலற்றது என்று பொருள்படும். அசரீரி பேசுவதாகப் பல இடங்களில் வழங்கப்படுகிறது. இது ஆகாயவாணி (வானொலி) எனவும், அறக்கடவுள் எனவும், தரும தேவதை எனவும் வழங்கப்படும். திருக்குறள் அரங்கேறியபோது<noinclude>
<b>வா.க. 1 _ 9{{sup|1}}</b></noinclude>
rdj346j95tslzu20zn20s0u6f7jdz57
1933598
1933597
2026-05-14T12:01:41Z
Booradleyp1
1964
1933598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசமுகி|129|அசரீரி}}</noinclude>கொண்டிருக்கின்றனர். இச்சிற்பம் அசந்தாச் சிற்பக் கலையின் பெருமைக்குச் சான்றாக விளங்குகிறது.{{right|'''என்.எஸ்.இரா.'''}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Calambur Sivarama Murthy,</b> “The Art of India”, Indian Book House, Bombay.
<b>Calambur Sivarama Murthy,</b> “Indian Painting”, National Book Trust of India, New Delhi, 1970.
<b>Krishna Chaitanya,</b> “The Mural Tradition,” Abinay Publication, New Delhi, 1976.
<section end="அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்"/>
<section begin="அசமுகி"/>
{{dhr}}
{{larger|<b>அசமுகி</b>}} என்பவள் சூரபதுமன் தங்கை. இப்பெயர் ஆட்டுமுகம் உடையவள் எனப் பொருள்படும். மாயை என்னும் அசுரப் பெண் நான்காம் சாமத்தில் ஆட்டினுருக்கொண்டு காசிபரைக் கூடியதால் இவள் பிறந்தாள், இவள் துருவாசரை வலிதிற் கூடி வாதாவி வில்லவர்களைப் பெற்றாள், தனித்திருந்த இந்திராணியைத் தன் அண்ணன் சூரனுக்கு மனைவியாக்க விரும்பி வலிந்து இழுக்க முயன்றாள், அப்போது மகாகாளரால் கையறுக்கப்பட்டாள். பின் தனக்கு நேரிட்டதைத் தன் அண்ணனுக்கு உணர்த்தினாள். பிரமனால் கைவளரப் பெற்றாள். கச்சியப்பரின் கந்த புராணத்தில் இவளைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அவற்றுள் சில வருமாறு; அசமுகி மணம்புரிந்து கொள்ளாதவள்; ஒழுக்கக் கேடானவள்; தேவர்களின் மனைவிகளைத் தன் தமையன்மார்களுக்கு மனைவிகளாக ஆக்குபவள்; முனிவர் இயற்றும் வேள்விகளை அழிப்பவள்; தீமையே வடிவானவள்; அசுரர்களை அழிக்கும் தீவினை போல் எங்கும் உலாவி வருபவள்; தன் கிளைஞரை இகழ்பவர்களைக் கொன்று தின்பவள்; அழகிற்சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து கூடுபவள்.{{right|<b>எஸ்.சௌ.</b>}}
<section end="அசமுகி"/>
<section begin="அசயராசா"/>
{{dhr}}
{{larger|<b>அசயராசா</b>}} இராசபுதனத்தைச் சார்ந்த சாகம்பரியை ஆண்ட சாகமான அரசர்களுள் ஒருவர். இவர் முதலாம் பிரிதிவிராசனின் மகன். கி.பி. 12–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசயமேடு அல்லது ஆசுமீர் (Ajmer) என்னும் நகரை இவர் உண்டாக்கினார்.
<section end="அசயராசா"/>
<section begin="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி"/>
{{dhr}}
{{larger|<b>அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமிய அருள் தொண்டர். இந்திய நாட்டின் தலைநகர் புதுதில்லிக்கு அண்மையில் அவரது பெயரில் வழிபாட்டுத் தலம் ஒன்றுள்ளது. இவர் கி.பி. 1325-ஆம் ஆண்டில் காலமானார். இவரது உடல் புதைக்கப் பெற்ற இடம் புனிதமானதாக இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இவர் தில்லி சுல்தான்களின் சமயப் பெரியாராகத் திகழ்ந்தார். புதிய தலைநகரான துக்ளகாபாத்தைக் கட்டிக் கொண்டிருந்த இயாசுதீன் துக்ளக்கு அரசருக்கும் அசரத் நிசாமுதீன் ஒளலியா சிசுடிக்கும் (Hazrat Nizamuddin Aulia Chishti) மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து தில்லிக்குப் புறப்பட்டு வரும் வழியில் சிசுடி கொல்லப்பட்டார். புதிய தலைநகர் கட்டும் பணியை கியாசுதீனின் மகன் கைவிட்டு விட்டார். இன்றைய தில்லிமாநகர்ப் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இவர் நினைவாக அசரத்து நிசாமுதீன் என்ற புதிய புகைவண்டி நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
<section end="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி"/>
<section begin="அசரத்பால் மசூதி"/>
{{dhr}}
{{larger|<b>அசரத்பால் மசூதி</b>}} இந்தியாவின் சம்மு–காசுமீர மாநிலத்தின் தலைநகரான சிரிநகரில் உள்ள ஒரு சிறப்பான வழிபாட்டு இடம். இங்குள்ள மசூதியில் நபிகள் நாயகத்தின் புனித தலைமுடிகளில் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் போன்ற சிறப்பான சமயங்களில் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களுள் ஒருவரான சையது அப்துல்லா என்பாருக்கு இப்புனித நினைவுப் பொருள் கிட்டியது. அவர் மதீனாலில் உள்ள முத்தாவலி மசூதியில் புரவலர். கி.பி. 1634-ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். தக்காணத்தில் பீசப்பூரில் 23 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் மகன் சையது அமீது கி.பி. 1692-ஆம் ஆண்டில் தில்லி நகருக்கு வந்தார். அங்கு அவர் காசுமீர வணிகர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிகுந்த தலைமுடிச் சின்னத்தை அவ்வணிகர் தம்முடைய பொருளாகப் பெற்றுக் கொண்டார். அவர் காலப் போக்கில் இலாகூரில் இறந்து போனார். குவாசா மதனிசு (Khwaja Madanish) என்பார் அதைக் காசுமீரத்திற்குக் கொண்டு வந்தார் சில காலம் நவுசி பாந்த்சாகேப் மசூதியில் வைக்கப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னம் அசரத்பால் மசூதிக்கு மாற்றப்பட்டது. இந்த அசரத்பால் மசூதியைக் கட்டியவர் பேரரசர் சாசகான் (Shah Jahan) ஆவார். இம்மசூதியின் கட்டிடக்கலை மொகலாயப் பாணியையும் காசுமீரத்துக் கட்டிடக்கலைப் பாணியையும் இணைத்துக் கட்டப்பட்டதாகும். சேக்கு முகமது அப்துல்லாவும் அவர் துணைவர்களும் தீவிரமாக முயன்று மதீனாவில் நபிகள் நாயகத்தின் மசூதியைப் போல இதனையும் கட்டி முடித்தனர்.
<section end="அசரத்பால் மசூதி"/>
<section begin="அசரீரி"/>
{{dhr}}
{{larger|<b>அசரீரி</b>}} என்பது உடலற்றது என்று பொருள்படும். அசரீரி பேசுவதாகப் பல இடங்களில் வழங்கப்படுகிறது. இது ஆகாயவாணி (வானொலி) எனவும், அறக்கடவுள் எனவும், தரும தேவதை எனவும் வழங்கப்படும். திருக்குறள் அரங்கேறியபோது<noinclude>
<b>வா.க. 1 _ 9{{sup|1}}</b></noinclude>
7iwtq74fy3lz9khlgkjagp9zn5k6dw5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/168
250
617312
1933658
1933471
2026-05-15T03:38:12Z
Booradleyp1
1964
1933658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாபுக்கடல்|132|அசாம்}}</noinclude>மணம் முடிக்க விரும்பும் பெண் வீட்டிற்கு 20 அம்புகளைக் கொடுப்பதன் மூலம் திருமண ஒப்பந்தம் ஏற்படுகிறது. பெண்கள் மிகச் சிறு வயதிலேயே மணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவ்வினத்தவரிடம் தந்தைவழிக் குலங்கள் (Patriclans) பரவிக் காணப்பட்டதுடன் அவை ஒரே மாதிரியான சமூக வழக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எளிய மக்கள் தாங்கள் சார்ந்திருந்த குலத்திற்குள் திருமணம் புரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அரச பரம்பரையில் வந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அசாந்தி இனத்தவரின் அமைப்பியல் குறியீடுகளை (Structural Symbols) ஒட்டிய பல்வேறு குலங்களின் நம்பிக்கையின்படி, ஒரு மனிதனுக்கு இரண்டு ஆவிகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அசாந்தி மதமானது முன்னோர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். அசாந்தி இனத்தவரைப் பொறுத்தவரையில், இவர்களது கடவுள் நம்பிக்கை மிகவும் தெளிவற்றது. இவர்களிடம் நிலவும் மந்திரம், பில்லி சூனியம் பற்றிய நம்பிக்கை முதலியன குறிப்பிடத்தக்கவை. உடல் நலக் குறைவு, இறப்புப் பற்றிய கவலைகள் தங்களிடம் உள்ள பழி சூழ் போக்கினால் உண்டாகின்றன என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த மாய மந்திர சக்தியைப் பறவைகட்கு நஞ்சினைச் செலுத்தி அறியலாம் என நம்புகின்றனர். முற்காலத்தில், இக்காரணத்திற்காக மனிதர்கட்கே நஞ்சினைச் செலுத்துவது உண்டு. இத்தகைய கொடிய மந்திரக்காரனை அம்பு எய்து கொன்று விடுகின்றனர். அன்றி, உரிய இழப்பீட்டுத் தொகையும் கேட்பர்.
{{right|<b>ஆ.செ.</b>}}
<section end="அசாந்தி"/>
<section begin="அசாபுக்கடல்"/>
{{dhr}}
{{larger|<b>அசாபுக்கடல்</b>}} தென் உருசியாவில் உள்ள பெரியதும் ஆழம் குறைந்ததுமான உள்நாட்டுக்கடல், இதனைக் கருங்கடலுடன் கெர்ச்சு (Kerch) நீர்ப்பிரிவு இணைக்கிறது. இதன் பரப்பளவு 37,550 ச.கி.மீ. ஆழம் 15 மீ. இக்கடலின் மேற்கு முனையைச் சிவாசு (Sivash) அல்வது பூட்ரிட் (Putrid) கடல் என்பர். இம்முனையில் பல தீநாற்றமுள்ள சதுப்பு நிலங்களும், உப்பங்கழிகளும் உள்ளன. அசாபுக் கடலின் (Azov Sea) பகுதியான தாகான்ராக்கு (Taganrog) வளைகுடாவில் தான் ஆறு (Don) கலக்கிறது. இவ்வளைகுடா, கடலின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. குளிர் காலத்தில் இக்கடலில் கப்பற் பயணம் செய்வது தொல்லைகள் நிறைந்ததாகும். ஏனெனில், பனியும் புயலும் கப்பற் பயணத்திற்கு ஊறு செய்யவல்லவை.
<section end="அசாபுக்கடல்"/>
<section begin="அசாம்"/>
{{dhr}}
{{larger|<b>அசாம்</b>}} இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம். வடக்கே, பூடான், அருணாசலப் பிரதேசம், கிழக்கே, நாகாலாந்து, மணிபுரி, தெற்கே, மிசோரம், திரிபுரா, பங்களாதேசம், மேகாலயா, மேற்கே, மேற்கு வங்காள மாநிலம் இவற்றால் சூழப்பட்டதே அசாம் மாநிலமாகும்.
{{center|அசாம்}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 168
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 177
|oTop = 100
|oLeft = 269
|Location = center
|Description =
}}
{{center|அசாம் மாநிலம்}}
அசாம் மாநிலம் 78,523 ச.கி.மீ. பரப்பளவு உள்ளது. இதன் தலைநகர் திசுபூர் (Dispur) ஆகும். புதிய தலைநகர் பிராக்சோதிசுபூர் (Pagjyotishpur).
அசாம் மாநிலத்துக்கு இமய மலைத் தொடர்களான பாட்காய்புர், நாகர்மலை–பராய் தொடர், காசி, சயிந்திய மமைத்தொடர் போன்றவை எல்லைப்புறங்களாக அமைந்துள்ளன. மாநிலத்தின் நடுவே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்திராவும் அதன் கிளை ஆறுகளும் பாய்கின்றன.
அதிக அளவில் மழை பெய்யும் இந்திய மாநிலங்களுள் அசாம் சிறப்பானதாகும். அசாம் என்ற பெயர் வடமொழியில் ‘அசமம்’ - சமமானதன்று என்று பொருள்தரும். மலையும் சமவெளியும் பள்ளத்தாக்குகளும் கொண்ட இம்மாநிலத்திற்கு இப்பெயர் பொருத்தமே. மேலும், ‘அசம்’ என்றால் நிகரற்றது என்றும் பொருள் உண்டு. அசாம் என்ற பெயர் அகோம் மொழியில் உள்ள அசம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர். இதன் பொருள் ‘வெல்லுதற்கரியவர்’ என்பதாம். இச்சொல் ஆசாம் – ஆசம் – ஆகம் – அகோம் என்று மருவி வந்தது. பிறகு ஆங்கிலேயரால் அசாம் என்று உச்சரிக்கப்பட்டுள்ளது.
இராமாயண காலத்தில், அசாம் பரத கண்டத்தின் பகுதியான பிராக்சோதிச அரசாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு விசுவாமித்திரரின் பாட்டனாரான அமிருதராசர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. மகாபாரதத்தில் இப்பகுதியை நரகாசுரன்<noinclude></noinclude>
hp6zefvc1q7j4uqj3zij55aijq33258
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/170
250
617404
1933676
1933472
2026-05-15T04:36:22Z
TVA ARUN
3777
01
1933676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசாம்|134|அசாமிய மொழி}}</noinclude>போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப் பகுதிகளில் இந்து சமயத்தினரும், இசுலாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இசுலாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ்மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர்.
இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்குப் பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவத நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கர தேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தொன்றியதே.
அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பௌத்த ஆலயம் உள்ளது. பூடான் நாட்டிலிருந்தும் பௌத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா, இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கோமாதா-கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும், தியல் திருவிழா-கண்ணனைப் பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும்.
அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில், 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உருபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி. மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமானதுமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இங்குப் பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஓலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச் சாலை, காகிதம், பெட்ரோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன.
{{right|<b>இரா.சீ.</b>}}
<section end="அசாம்"/>
<section begin="அசாமிய மொழி"/>
{{dhr}}
{{larger|<b>அசாமிய மொழி:</b>}} இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும். இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் வாழும் 1,99,00,000 மக்களால் (1981 கணக்குப்படி) பேசப்படுவது இம்மொழி. இவர்களில் பெரும் பகுதியினர் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மட்டுமன்றி இம்மாநிலத்தில் வாழும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வேற்று மொழியினரும் இம்மொழி பேசுவோராக உள்ளனர்.
அசாம் என்ற சொல் அண்மைக் காலச் சொல்லாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் படையெடுத்துத் தங்கள் ஆட்சியை நிறுவிய அகோம் அல்லது சான் (Shans) மக்களைக் குறிக்கவே இச்சொல்லை இம்மக்கள் பயன்படுத்தினர். “அழிக்க முடியாதவர்கள்” அல்லது “ஒப்பு உயர்வு இல்லாதவர்கள் (அ+சமா)” எனப் பொருள்படும் இச்சொல், தங்களை வென்ற மக்களைக் குறிக்குஞ் சொல்லாகத்<noinclude></noinclude>
1t3y9gu0w3o2ettgbkquuw6feun6wk8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/175
250
617517
1933669
1933475
2026-05-15T04:10:54Z
Booradleyp1
1964
1933669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிமுல்லாக்கான்|139|அசிரிய நாகரிகம்}}</noinclude>5. அங்க நாட்டு மன்னனுக்கு வைதிக கருமம் ஆற்றுபவர்களுள் ஒருவர். சிவன் கோயிலிலிருந்து வாழையினைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தி அதன் விளைவாக நரகம் எய்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
<section end="அசிதன்1"/>
<section begin="அசிமுல்லாக்கான்"/>
{{dhr}}
{{larger|<b>அசிமுல்லாக்கான் (1834-1859)</b>}} இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுள் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாநகரில் 1834–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அரசாங்கப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தனிப் பெரும் திறமையின் காரணமாக இவர் நானா சாகேபின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று நானா சாகேபின் வழக்கில் வாதாடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முற்பட்டார். வெள்ளையர் ஆட்சியை வேரறுக்க நானா சாகேபு செய்த போராட்டத்தில் உறுதுணையாக நின்றார். 1857–ஆம் ஆண்டு மூண்ட பெரும் புரட்சி தோற்ற போது, ஆங்கில அரசுக்கு அகப்படாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, நானா சாகேபுடன் நேபாள நாட்டு எல்லைக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர், 1859-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் காலமானார்.
<section end="அசிமுல்லாக்கான்"/>
<section begin="அசிர்கர்"/>
{{dhr}}
{{larger|<b>அசிர்கர்</b>}} என்பது ஒரு கோட்டை; தக்காணத்திலுள்ள காந்தேசம் (Khandesh) என்னும் பகுதியில் உள்ளது. இதனை மாளவ அரசர் கட்டினார் என்பர். இக்கோட்டை கட்டப்பெற்றுள்ள இடம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, அசிர்கர் (Asirgarh) கோட்டையைக் கைப்பற்ற எண்ணிய அக்பர் தம் வாழ்நாளின் இறுதியில் அதன் மீது படையெடுத்தார். இக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அக்பரால் இதைப்பிடிக்க இயலவில்லை. இறுதியாகப் பெருந்தொகையைக் கையூட்டாகக் கொடுத்து கி பி. 1601–இல் அசிர்கர் கோட்டையை அக்பர் கைப்பற்றினார். அசிர்கர் கோட்டையின் வாயிலைப் பொன் திறவுகோலால் அக்பர் திறந்தார் என்று இந்நிகழ்ச்சியை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
<section end="அசிர்கர்"/>
<section begin="அசிரிய நாகரிகம்"/>
{{dhr}}
{{larger|<b>அசிரிய நாகரிகம்</b>}} பண்டைய நாகரிகங்களுள் ஒன்று. ஆற்றங்கரைகளில் தோன்றிய பழம்பெரும் நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகத்துக்கு அடுத்த படியாக வைத்து எண்ணப்படக் கூடியது மெசபடோமிய நாகரிகமாகும். நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம் தோன்றியது போலவே, தைகிரிசு (Tigris), யூப்ரடிசு (Euphrates) என்ற இரு ஆறுகளின் இடையில் செழிப்பான சமவெளியில் மெசபடோமிய நாகரிகம் தோன்றியது. அந்நாகரிகம் பல கிளைகளாகக் கவடுவிட்டுச் சுமேரிய, பாபிலோனிய, அசிரிய, சாலடிய நாகரிகங்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. இவை நான்கும் ஒன்றோடொன்று பெரிதும் தொடர்பு கொண்டவை. எனினும், இவற்றுள் பெரிதும் தனிப்பட்ட இயல்புடையது அசிரிய நாகரிகமாகும் (Assyrian Civilization).
அசிரிய நாகரிகம் படைவலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. போர் வெறி மக்களிடம் மிகுந்திருந்தது. சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்கள் போர்வீரர்கள். போரில் வெற்றி பெறுதல் ஒன்றே இவர்களின் உயர் குறிக்கோளாயிருந்தது. போரால் வெல்லப்பட்ட நாடுகள் அடக்கு முறையாலேயே ஆளப்பட்டன. எப்போதும் போரிலீடுபட்ட காரணத்தால் விரைவிலேயே இவர்களது வலிமை குன்றியது. அடக்குமுறைக்குட்பட்ட நாடுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இதனால், அசிரியப் பேரரசு அழிந்தொழிந்தது. அடக்கு முறையின் அடிப்படையில் அமைந்த படைவீரர் ஆட்சி நெடுநாள் நீடிக்காது என்ற வரலாற்று உண்மைக்கு அசிரிய நாகரிகம் ஒரு சான்றாகும்.
மெசபடோமியாவின் வடக்குப் பகுதியில் அசிரிய நாடு அமைந்துள்ளது. மெசபடோமியாவின் மேற்குப் பகுதி ஒரே சமவெளியாகக் காட்சியளித்த போதிலும், அதன் வடபகுதி மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டிருந்தது. அசிரிய நாட்டின் பெரும்பான்மையான பகுதி மலைப்பாங்கான இடமாகும். தைகிரிசு ஆற்றங்கரையில் அது அமைந்திருந்தாலும் அந்நீரைப் பயன்படுத்தக்கூடிய சமவெளிகள் அங்கு ஒரு சிலவே இருந்தன. எனவேதான், அசிரியர்கள் அண்டை நாடுகளைப் பிடிப்பதில் பெரிதும் அக்கறை காட்டலாயினர். வளமாக வாழ்வதற்கான வசதிகளில்லாமையாலும் சுற்றிலும் பகைவர்களின் தாக்குதலுக்கு உட்படக்கூடிய நிலையிலிருந்ததாலும் அசிரியர்கள் போர்க்குணத்தையும் வல்லாட்சி வெறியையும் இயல்பாகவே பெற்றிருந்தார்கள்.
ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டளவில், தைகிரீசு ஆற்றின் வடபாகத்தில் ஒருவகை செமிடிக் இனத்தவர் குடியேறினர். அசுர் என்னும் சூரியக் கடவுளை அவர்கள் வணங்கி வந்ததால் அவர்களுக்கு அசிரியர் என்ற பெயர் வழங்கலாயிற்று. பாபிலோனியா முதலிய இடங்களிலிருந்து வந்த செமிடிக் இனத்தவர்களோடு மலைகளில் வாழ்ந்த செமிடிக் அல்லாத இட்டைட்டு, குர்திசு இனத்தவர்களும் நாளடைவில் கலந்துவிட்டார்கள். இக்கலப்பு இனத்தவர் ஒரே தேசிய இனமாக மாறித் தமக்கென ஓர் அரசனை நினவா (Nineveh) என்ற தலைநகரில் ஏற்படுத்திக் கொண்டனர். தைகிரீசு ஆற்றின் கிழக்குக் கரையில்<noinclude></noinclude>
9xhjmge0vdlh4oqtavrsxfdnino3wi1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/179
250
617577
1933672
1929947
2026-05-15T04:20:06Z
Booradleyp1
1964
1933672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|143|அசின்கோர்ட் போர்}}</noinclude>தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 1.pdf
|Page = 179
|bSize = 468
|cWidth = 147
|cHeight = 183
|oTop = 130
|oLeft = 42
|Location = center
|Description =
}}
{{center|அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம்}}
கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை.
அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னர் தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர்.
இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது.
{{right|<b>கி.ர.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Durrant, W.,</b> “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954.
<b>Wallbank & Taylor,</b> “Civilization – Past and present, Vol.I”.
<b>Tull, G.k.,</b> “Early Civilizations”, Blandford Press, London, 1968.
<b>Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W.,</b> “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967.
<b>அனுமந்தன், கி.ர.,</b> “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976.
<section end="அசிரிய நாகரிகம்"/>
{{larger|<b>அசின்கோர்ட் போர்</b>}} இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட<noinclude></noinclude>
5qqncme8ckuizenryd8rizkwfau4m98
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/32
250
625145
1933684
1931988
2026-05-15T04:57:41Z
Booradleyp1
1964
1933684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசக் கோவலராயன், இரண்டாம்|4|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்}}</noinclude><section begin="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/>
{{dhr}}
{{larger|<b>இராசராசக் கோவலராயன், இரண்டாம்:</b>}} இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது (கி.பி. 1178–1218) காலத்தில் வாழ்ந்த மலையமான் மன்னன்; சோழருக்கு உட்பட்ட சிற்றரசன். இவன் தென்னார்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள குகையூரைத் தலைநகரமாகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியினை ஆண்டு வந்தான். மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை ஆண்டுவந்த இவன், பங்குனி மாதம் பிறந்தவன் என்பதனை, இவள் பங்குனித் திங்கள் விழாவின் பொருட்டுப் பல அறங்களைச் செய்துள்ளதால் அறியலாம்.
இவ்வேந்தன் தன் மகள் பண்ணியவாட்டி என்பாளை ஆறகளூர் இராசாராச வாணகோவரையனுக்கு மணம் செய்து கொடுத்துத் தனது வலிமையைப் பெருக்கினான். புண்ணியவாட்டி ஆறகளூர் கரிவரதராசப் பெருமாள் கோயிலைக் கற்றளியாக அமைத்து அதற்கு இராசராச விண்ணகர் எனப் பெயரிட்டாள். இவள் மலைநாட்டுத் திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையார்க்கு நிலக் கொடையும் அளித்தாள். இவளுக்கும் இராசராச வாணகோவரையனுக்கும் பிறந்தவனே ஆறகளூருடைய பொன் பரப்பினனான இராசராச தேவனான மகாதேசன் ஆவான்.
இரண்டாம் இராசராசக் கோவலராயனுக்கு ஆறகளூருடையான் இராமன் பொன்பரப்பினான் என்ற விருதுப் பெயரும் இருந்தது.
{{right|<b>ம.இரா.த.</b>}}
<section end="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/>
<section begin="இராசராசர் சேதிராயன், முதலாம்"/>
{{dhr}}
{{larger|<b>இராசராசர் சேதிராயன், முதலாம்</b>}} மலையமான் மன்னர்களுள் ஒருவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் சிற்றரசர்களுள் ஒருவனாகத் திகழ்ந்தான். தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ள அரியூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். இவன் கிளியூர்மலையமான் பெரிய உடையான் எனவும் குறிக்கப்பட்டான்.
இச்சேதிராயன் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1076) திருக்கோவலூர் வீரட்டானமுடையாருக்குத் திருக்கார்த்திகைத் திருநாளுக்கும், திருநாட் படிக்கும், சந்திக்கும், அரியூரின் நான்கெல்லைகளுக்குட்பட்ட நன்செய், புன்செய் நிலங்களின் கடமை, குடிமை உள்ளிட்ட அனைத்து ஆயங்களையும் தானமாக அளித்தான்.
இவ்வேந்தனது கால்வழியினர் பிற்காலத்தில் மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை இறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இரண்டாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலும் இராசராசச் சேதிராயன் என்பான் ஒருவன் மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். எனவே, இருவரையும் வேறுபடுத்தி அறிதற்பொருட்டு இவனை முதலாமவன் எனக் குறிக்கின்றனர்.
{{Right|<b>ம.இரா.த.</b>}}
<section end="இராசராசர் சேதிராயன், முதலாம்"/>
<section begin="இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்"/>
{{dhr}}
{{larger|<b>இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்</b>}} மலையமான் நாட்டு வேந்தர்களுள் பெருவலிமை படைத்தவன். பிற்பட்ட சோழர் காலத்து மலையமானான இவனது முழுப்பெயர் கிளியூர் மலையமான் பெரிய உடையான்இறையூரானான இராசராசச் சேதிராயன். இவனுக்கு வன்னியர் நாயன், சற்றுங் கொடாதான் முதலான விருதுப்பெயர்களும் உண்டு. இவ்வேந்தன் ஐப்பசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தவன்; இரண்டாம் இராசராசன் கால முதற்கொண்டு மூன்றாம் இராசராசன் கால முற்பகுதி வரையில் தொடர்ந்து 73 ஆண்டுகள் (கி.பி. 1148–1221) மலைய நாட்டினை ஆட்சிபுரிந்த பெருமைக்குரியவன்.
{{larger|<b>ஆட்சிப்பரப்பு:</b>}} பெருவலி படைத்த இச்சேதிராயன் வாணகப்பாடி, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டு நாடு முதலான பகுதிகளைக் கொண்ட பெரு நாட்டினை ஆண்டுவந்தான். இவனது தலைநகர் இறையூர் (இன்றைய எறையூர்) ஆகும். இது திருக்கோவலூர்க்குத் தெற்கே ஆசனூர்ப் பெருவழியில் ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
{{larger|<b>மண உறவும் பாதுகாப்பு உடன்பாடும்:</b>}} அரசியல் திறனில் கைதேர்ந்த இவன், தன்னைப் போன்று பெருவலி படைத்து விளங்கிய பல்லவர் குலத் தோன்றலான இராசராசக் காடவராயன் என்னும் சிற்றரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, தனது வலிமையைப் பெருக்கினான். இவன் இராசராசக் காடவராயனுடன் கி.பி. 1162–இல் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினையும் செய்து கொண்டான்.
இவ்வேந்தனுக்கு அம்மச்சிக்குடி உய்யவந்தாள், பூமாழ்வி என்னும் இரு அரசியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. முதலாமவள் காடவராயனின் மகளாக இருத்தல் கூடும். பூமாழ்வி என்னும் அழகி பொன்பரப்பின வாணகோவரையனின் மகள். இவ்வாணகோவரையனுடனும் இவ்வேந்தன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது மேலாண்மையை அண்டைப் பகுதிகளில் நிலைநாட்டினான். இவன் கி.பி. 1198 ஆம் ஆண்டில் எரியப்பன் மருந்தனான மூவேந்தரையனுடனும் கி.பி. 1206–இல் இராசகெம்பீரச் சேதிராயனுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டான், இவ்வாறு பல வேந்தர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட இவன், தனது பாதுகாப்பிற்காக வேளைக்காரப்<noinclude></noinclude>
tntcslg47q3jduvmdihneuqtkab9jxa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/39
250
625228
1933704
1932493
2026-05-15T07:51:14Z
Booradleyp1
1964
1933704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச மலையகுலராயன்|11|இராசராசேச்சுரம்}}</noinclude>நூல்களைக் குறிப்பிடுவது. இவ்வுலா தமிழ் இலக்கிய வரலாற்றுக்குச் செய்யும் பேருதவியாகும்.{{right|<b>இரா.செ.</b>}}
<section end="இராசராச சோழனுலா"/>
<section begin="இராசராச மலையகுலராயன்"/>
{{dhr}}
{{larger|<b>இராசராச மலையகுலராயன்</b>}} மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு (கி.பி. 1178–1218) உட்பட்டு மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மலையமான் சிற்றரசன். எலவானாசூர் என்று இக்காலத்தில் சொல்லப்பெறும் இறையானரையூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். எலவானாசூர் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வேந்தனைப் பற்றிய கல்வெட்டுகள் கி.பி. 1184 முதல் 1191 முடிய கிடைத்துள்ளதால், இவன் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது ஆண்டிருக்கலாம்.
இவனுக்குச் சோழங்க தேவன், சூரிய தேவன், எதிரிகள் நாயகன், சூரியன் நீரேற்றான், சூரியன் நீரேற்ற பெருமாள் முதலான சிறப்புப் பெயர்கள் இருந்தன என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம்.
இவ்வேந்தன் இராசராச தேவன் பொன் பரப்பினான் ஆன குலோத்துங்க சோழ வாண கோவரையனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினை, மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1191) செய்துகொண்டான். இதன் விளைவாக இராசராச மலையகுலராயன் தனது அரசியல் செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டான். இவன் தனக்கெனத் தனித்ததோர் வேளைக்காரப் படையினையும் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்தான். எலவானாசூர்க் கல்வெட்டு இவ்வேளைக்காரப் படையின் ஒருசில உறுப்பினரைக் குறிப்பிடுகிறது. இவர்களுள் தேவப்பெருமாள் என்ற பெண் ஒருத்தியும் இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
{{larger|<b>அறக் கொடைகள்:</b>}} இறையன்பில் மேம்பட்டு விளங்கிய இவ்வேந்தன் சைவ, வைணவக் கோயில்களுக்குப் பலவிதமான நிவந்தங்களை விட்டுள்ளான்; மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1184) இறையானரையூர் ஊர் பாகங் கொண்டருளிய நாயனார்க்கும், அவ்வூரிலுள்ள நடுவில் திருமுற்றத்தாழ்வார்க்கும், திருச்சக்கரத்தாழ்வார்க்கும், ஓகையார்க்கும் புத்தூர் முதலான ஊர்களை இறையிலி தேவதானமாக அளித்தான். சித்தலிங்க மடம் திருப்புலிப்பகவ நாயனார்க்கும், திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையாருக்கும், திருக்கோவலூர் வீரட்டானமுடையார்க்கும், திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்டருளிய தேவர்க்கும் நிலக்கொடையும் பசுக்கொடையும் செய்துள்ளமை இவனது சமயப் பொதுமைக் கொள்கையை எடுத்துக்காட்டுகிறது.
இறையானரையூர் ஊர்பாகங்கொண்டாரின் இராசகோபுரத்துக்கு முன்பு திருமாளிகை ஒன்றினை இவ்வேந்தன் எடுத்துள்ளான்.
<section end="இராசராச மலையகுலராயன்"/>
<section begin="இராசராச விசயம்"/>
{{dhr}}
{{larger|<b>இராசராச விசயம்:</b>}} முதலாம் இராசராச சோழனின் (கி.பி 985–1014) ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த நாடகங்களுள் இராசராச விசயம் தலைமை சான்றது. இச்சோழ வேந்தனின் அவைக் களப் புலவரான சுவர்ணன் நாராயண பட்டாதித்தன் என்பான் இந்நாடகத்தை வடமொழியில் இயற்றினான். வடமொழிப் புலவனான இவன் இராசராச சோழனின் இளமைக்காலம், வீரவரலாறு ஆகியவற்றை இந்நாடகத்தில் குறிப்பிட்டுள்ளான். இந்நாடகம் திருவிழாக்காலங்களில் நடிக்கப்பட்டது இந்நாடக நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.
<section end="இராசராச விசயம்"/>
<section begin="இராசராசேச்சுரம்"/>
{{dhr}}
{{larger|<b>இராசராசேச்சுரம்</b>}} என்பது தஞ்சையிலுள்ள பெரிய கோயிலைக் குறிக்கும் பெயராகும். சோழ மன்னர்கள் தமிழ்நாட்டில் பல கற்கோயில்களை எடுப்பித்தனர். அவற்றுள் தலைசிறந்து விளங்குவது முதல் இராசராசனால் கட்டப்பெற்ற ‘இராசராசேச்சுரம்’ எனப்படும் இப்பெரிய கோயிலே ஆகும். இக்கோயில் பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்றதென்பதையும்; இதற்கு அம்மன்னன் இட்ட பெயரே இராசராசேச்சுரம் என்பதையும் இதன் கண்ணுள்ள கல்வெட்டொன்று அறிவிக்கிறது.
இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையதாகும். கருவறையின் மேல் நான்கு முகப்புக் கூம்பகமாக 13 அடுக்குகளுடன் எழுப்பப்பட்டுள்ள விமானம் 216 அடி உயரம் உடையது. இவ்விமானம் ‘தட்சிணமேரு’ எனப்படும். விமானத்தில் உச்சித் தளக்கல் 80 கண்டி (Tonnes) நிறையுடையது என்பர்.
கருவறையுள் மிகப் பெரிய இலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள திருமேனியினை இராசராசேச்சுரமுடைய பரமசுவாமி, இராசராசேச்சுரமுடையார், தக்கணமேரு விடங்கர் என்றெலாம் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கருவூர்த் தேவர் என்னும் சைவ முனிவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப் புராணம் கூறுகிறது. இக்கருவூர்த் தேவர் இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
விமானத்தின் உச்சியில் நிறுத்தப்பட்டுள்ள கலசம் 3083 பலம் நிறையுடைய செம்பினால் ஆக்கப் பெற்று, 2926½ கழஞ்சு பொற்றகட்டினால் போர்த்தப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு மூன்று திருவாயில்கள்<noinclude></noinclude>
nn9f151tga05by7q1xdgro8pi9wnks5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/251
250
626199
1933617
1895639
2026-05-14T16:00:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1933617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரேணுகை|223|இரேவண சித்தர்}}</noinclude>என்னும் ஓவியம், பிரெஞ்சு ஓவியக் கலை விதிகளுக்கு உட்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வாசிங்டன் நகரத்திலுள்ள தேசியக் கலைக் கூடத்தில் (National Gallary of Arts) வைக்கப்பட்டுள்ளது. இரேனார் பிரெஞ்சு ஓவியக்கலை மரபினின்று மாறுபட்டுத் தனிப்பட்ட முறையில் ஓவியங்களைத் தீட்டிய காரணத்தால், பிரெஞ்சு அரசின் உதவி இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் தம்முடைய தேவைகளுக்காகத் தம் ஓவியங்களை விற்க வேண்டியதாயிற்று. இவர் கி.பி. 1883–ஆம் ஆண்டு வத்திகனுக்குச் சென்று அங்கு இராபேல் தீட்டிய ஓவியங்களைக் கண்டார். இதற்குப் பின்னர் இவர் தீட்டிய ஓவியங்களில் இத்தாலிய ஓவியங்களின் தாக்கம் காணப்பட்டது.
வாழ்க்கையில் இறுதி நாள்களில் இரேனார் பக்கவாத நோயால் துன்புற்றார். இந்நிலையிலும் இவர் தம் ஓவியக்கலையில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருடைய இறுதிக்கால ஓவியங்களுள் ஒன்று பிரெஞ்சு அரசுக் கலைக்கூடத்தில் இடம்பெற்றது. இம்மகிழ்ச்சியுடன் இரேனார் 1919–ஆம் ஆண்டு இறந்தார்.
<section end="இரேனார்"/>
<section begin="இரேணுகை"/>
{{dhr}}
{{larger|<b>இரேணுகை</b>}} இரேணுவின் மகள். இவளை வருமராசன் பெண் எனவும் கூறுவர். இவள் சமதக்கினி முனிவரின் மனைவி. இவள் கங்கைக்கு நீராடச் செல்லும்போது, வான்வழிச் சென்ற சித்திரசேனன் என்ற கந்தருவன் வடிவினை நீரில் கண்டு மனம் குலைந்து நிற்ப, அதனை முனிவர் அறிந்து, தம் மகன் பரசுராமனை நோக்கி அவளைக் கொலை செய்யுமாறு பணித்தார். அவனும் தந்தை சொன்னவாறு தாயைக் கொன்று மனம் கவன்றிருந்தான். தந்தை மகன் கவலையைப் போக்க, அவன் வேண்டும் வரம் தர முன்வந்தார். அவ்வரத்தால், தாயைக் கொல்ல மறுத்தமையால், தந்தையின் சாபம் பெற்று ஒறுக்கப் பெற்றிருந்த தன் தமையன்மார்களை மீட்டுத் தாயை உயிரெழுப்பியதோடு, தன்னை மகன் கொன்றான் என்ற உணர்வு அவளுக்கு இல்லாதிருக்குமாறும் செய்தான்.
இரேணுகை மகன் பரசுராமன் கார்த்த வீரியார்ச்சுனனைக் கொன்றான். எனவே கார்த்த வீரியார்ச்சுனன் மக்கள் சமதக்கினியைக் கொன்றனர். இதைக்கண்டு இரேணுகை அங்கே வர, அவர்கள் அவளையும் இருபத்தோர் அடி அடித்து, குற்றுயிராக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அவள் தன் மகன் பரசுராமன் வருமளவும் உயிர்விடாதிருந்து, நடந்தது கூறி இறந்தனள், தாய் இருபத்தொரு முறை சத்திரிய அரசன் மக்களால் அடியுண்டதால் இருபத்தோர் அரசுவழி முறைகளைக் கொன்று, அவர்தம் குருதியைக் குளமாகத் தேக்கி, அதில் இருபத்தொரு முறை மூழ்கிப் பெற்றோர்க்கு நீத்தார்கடன் செய்தான். நீத்தார்கடன் செய்து கொண்டிருந்த ஐந்தாம் நாள் ஒரு புலியைக் கனவில் கண்டு அஞ்சி, ‘அம்மா அம்மா’ என்று அலறினான். எனவே அக்கடன் முற்றுப் பெறாததால் தாய் தலை மட்டுமுடையவளாக வெளிப்பட்டாள். அது கண்ட பரசுராமன் தத்தாத்திரேயர் என்ற முனிவரிடம் உடலின்றித் தலையளவில் தாய் வெளிப்பட்ட காரணம் கேட்டபோது, அவர் கருமம் முற்றுப்பெறாத நிலையில் அழைத்ததால் உனது தாய் தலையளவில் வெளிப்பட்டாள் என்று அவர் கூறினார். பரசுராமன் அம்முனிவர் வழிப்படுத்திய வண்ணம் கடன் முடித்தான். பின்னர் அம்முனிவர் இரேணுகையைக் கிராமங்கட்குச் சென்று, அங்குள்ளோர் துன்பங்களை நீக்கித் தலையளவிலேயே தெய்வமாயிருக்கும்படி பணித்தார். அவளும் அவ்வாறே தெய்வமானாள். கிராமங்களில் மாரி, முத்துமாரி என்னும் பெயர்களில் அமைந்து, அம்மை நோய் முதலியன தீர்த்து விளங்கும் சிறுதெய்வமாகக் கருதப்படுவது இத்தெய்வமேயாகும் என்று கூறப்படுகிறது.
{{right|<b>கு.தி.</b>}}
<section end="இரேணுகை"/>
<section begin="இரேவண சித்தர்"/>
{{dhr}}
{{larger|<b>இரேவண சித்தர்</b>}} கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். இவர் இரேவணாத்திரியர், இரேவணாத்தியர் எனவும் வழங்கப்பெற்றார். வேளாளர் மரபில் தோன்றிய இவரது ஊர் சிதம்பரம் என்றும், பேரளம் என்றும் கூறப்படுகிறது. இவர் பேரளத்தில் பிறந்து, பின்னாளில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். சிதம்பர இரேவணசித்தர் என்பதில் சிதம்பரம் என்பது இவர்தம் தந்தையாரைக் குறிக்கும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவர்தம் நூலில் தம்மைப் ‘புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தன்’ என்றும், ‘மேழித் துவசன் விளங்கிய புலியூர்வாழ் நற் சிதம்பர ரேவண சித்தன்’ என்றும் சுட்டியுன்ளார். இத்தொடர்களை ஆராய்ந்தால், இவற்றில் அமைந்துள்ள புலியூர் என்பது ஊரைக் குறிக்க, அடுத்துள்ள சிதம்பரம் என்பது தந்தை பெயரைக் குறிக்கலாம் என்னும் கருத்துப் பொருத்தமுடையதாகத் தெரிகிறது.
இவர் வடமொழி, தென்மொழிகளிற் புலமை நிரம்பியவர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர்; வீர சைவ சமயத்தவர் என்றும் கூறப்படுகிறார். இவர் அகராதி நிகண்டு, திருப்பட்டீச்சுரப் புராணம், திருவலஞ்சுழிப்புராணம், திருமேற்றளிப்புராணம், சிவஞானதீபம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார். சிவஞானதீபம், சைவ சித்தாந்த உண்மைகளைத் தெளிவுற விளக்கும் செய்யுள் நூலாகும். இவர் இயற்றிய புராணங்கள் கிடைக்கவில்லை. இவர் எழுதிய அகராதி, ‘அகராதி நிகண்டு’, ‘சூத்திர அக-<noinclude></noinclude>
l9646bum1rzebpc9kzqoqay25hwu07h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/252
250
626214
1933618
1895640
2026-05-14T16:01:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1933618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரேனியசு ஐயர்|224|இரைதாசர்}}</noinclude>ராதி’ ‘இரேவணாத்திரையர் சூத்திரம்’ என்னும் பெயர்களால் வழங்கப்பெறுகின்றது. இவர் கி.பி. 1594–ஆம் ஆண்டில் இதனை இயற்றினார் எனத் தெரிகிறது. தமிழில் அகராதி என்னும் பெயரை முதன்முதலில் உருவாக்கியவரும், அம்முறையில் அகராதி நூலினை இயற்றியவரும் இவரேயாவர். இக்கால அகராதிகளுக்கு இவரது நூல் முன்னோடியாக அமைந்துள்ளது. இந்நூலில் சொற்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதோடு, ஒரு பொருட்சொல், இரு பொருட்சொல் எனப் பொருள் பற்றியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பத்துத் தொகுதியாக அமைந்த இந்நூலில் 3368 நூற்பாக்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. எனினும் அச்சிட்ட நூலில் 3331 நூற்பாக்களே காணப்படுகின்றன. தமிழ் அகராதி வரலாற்றில் இவருடைய நூல் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.
<section end="இரேவண சித்தர்"/>
<section begin="இரேனியசு ஐயர்"/>
{{dhr}}
{{larger|<b>இரேனியசு ஐயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மேலைநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்து கிறித்தவச் சமய ஊழியம் புரிந்த கிறித்தவத் தொண்டர்களுள் ஒருவர். இவர் அன்றைய செருமனி நாட்டிலிருந்த பிரசியா பகுதியைச் சேர்ந்த கிராவுடென்சு கோட்டை என்னுமிடத்தில் 1790–ஆம் ஆண்டில் பிறந்தவர், இராணுவத்தில் பணிபுரிந்த இவர் தந்தையார், இவரது இளமைப் பருவத்திலேயே காலமானார்.
இரேனியசு ஐயர் இளமையில் தாய்மொழிக் கல்வி கற்றார். அதில் நல்ல தேர்ச்சி பெற்று, அரசுப் பணியில் ஈடுபட்டார். எனினும் இவரது உள்ளம் சமயப் பணி புரிவதிலேயே நாட்டம் மிகக் கொண்டிருந்தது. எனவே, அரசுப் பணியை விடுத்துப் பெர்லின் நகரில் கிறித்தவச் சமய ஊழியப் பயிற்சி பெற்றார். தம் 22–ஆம் அகவையில் அத்துறையில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து சென்று ஒன்றரை ஆண்டுக் காலம், சமய ஊழியத் தொண்டில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்வுற்றார். இவர்தம் 24–ஆம் அகவையில் (கி.பி. 1814) வெளிநாடுகளில் சமய ஊழியம் புரியப் பணிக்கப் பெற்றுச் சென்னை வந்தடைந்தார். வெளியீடுகள் பலவற்றை சென்று, தமிழ் நாட்டில் ஐயர் தரங்கம்பாடிக்குச் சமய ஊழியத்தை மேற்கொள்ள உதவும் தமிழ் மொழியினைப் பயின்றார். மீண்டும் சென்னை திரும்பிக் கிறித்தவச் சமய ஊழியச் சங்கச் சார்பில் அச்சமயத் தொண்டு புரியத் தொடங்கினார்.
இவர் கி.பி. 1820–இல் பாளையங்கோட்டையை அடைந்து, அங்கிருந்து நெல்லை மாவட்டத்திலுள்ள பல ஊர்களுக்கும் சென்று சமய ஊழியம் புரிந்தார். அப்போது பல இந்துக்களைக் கிறித்தவராக்கினார்.
இரேனியசு ஐயர் திருநெல்வேலித் திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடமும் சென்னையிலிருந்த முகவை இராமானுசக் கவிராயரிடமும் பல ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங் கற்றார். இவரது தமிழ்ப் புலமையை, மற்றொரு தமிழ் வல்ல கிறித்தவச் சமய ஊழியராகிய டாக்டர் போப்பையரவர்கள் சிறப்பாகப் பாராட்டியுள்ளார்.
இரேனியசு ஐயர் தம்மால் மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் வாழ்வதற்காகப் புதிய ஊர்கள் பலவற்றை உருவாக்கினார். பாளையங்கோட்டைக்குத் தெற்கே 25 கல் தொலைவில் விளங்கும் தோனாவூர் (Donavur) இவரால் உருவாக்கப்பட்டதே. தோனா என்னும் செருமானியச் செல்வர் அளித்த பெரும் பொருளுதவியால் இவ்வூரை உருவாக்கி, அப்புரவலரின் நினைவாகத் தோனாவூர் என்று பெயரிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் சாந்தபுரம், சந்தோடபுரம் போன்ற பன்னிரண்டு ஊர்களைப் புதிதாகத் தோற்றுவித்தார்.
பாளையங்கோட்டையில் மகளிர் பள்ளி ஒன்றினை நிறுவினார். விதவையர் நலங் காக்கச் சங்கம் ஒன்று அமைத்தார். தரும சங்கம் என ஒரு சங்கம் நிறுவி, அதன் வாயிலாகப் பள்ளிகள், வீடுகள், கோயில்கள் போல்வன கட்டுதற்கு நிலங்கள் வாங்கிக் கொடுத்தார். நூல் இயற்றும் சங்கம் ஒன்றை உருவாக்கினார். பல நூல்கள் அதன் வழி வெளியாயின. இவர் தம் 48–ஆம் அகவையில் காலமானார். இவரது நல்லுடல் முருகன் குறிச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் இயற்றிய நூல்கள் வருமாறு:– ஞான போசன விளக்கம் (1825), வேதப்பொருள் (1832), பூமி சாத்திரம் (1832), இலக்கண நூற் சுருக்கம் (1832), மோட்ச மார்க்கம் (1834), வேத உதாரணத் திரட்டு (1835), வேத சாத்திரச் சுருக்கம் (1825), பலவகைத் திருட்டாந்தம். பெப்பிரீசியசு என்பார் தமிழில் எழுதிய ‘புதிய ஏற்பாடு’ என்னும் கிறித்தவ வேதாகம நூலைச் செப்பம் செய்து அச்சிட்டு வெளியிட்டார். மேலும் சமயச் கிறித்தவ சார்பான வெளியீடுகள் பலவற்ரை வெளியிட்டார். இவர் புதுக்கி அமைத்த ‘புதிய ஏற்பாடு’ நூலின் மொழி பெயர்ப்பு உள்ளவாறமையாமல் கூட்டியும் குறைத்தும் இருப்பதாக உணர்ந்த சென்னை விவிலிய சங்கம், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
<section end="இரேனியசு ஐயர்"/>
<section begin="இரைதாசர்"/>
{{dhr}}
{{larger|<b>இரைதாசர்</b>}} கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயத்தலைவர்களுள் ஒருவர். இவர் சக்கிலியர் குடும்பம் ஒன்றில் பிறந்த மெய்யடியார். இவர் வாரணாசியில் தோல் தொழிலாளியாகப் பணி-<noinclude></noinclude>
pt3c4mk8v6pomonu78rtgr6o975iyvd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/253
250
626215
1933629
1895643
2026-05-14T17:44:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1933629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரையிசு சேகப்பு ஆகசுட்டு|225|இரைன் ஆறு}}</noinclude>யாற்றினார். இடிபாடுகளுடன் நொடிந்திருந்த குடிசையில் வாழ்ந்த இரைதாசர் (Raidas), செருப்புகளைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் எளிய வாழ்வு வாழ்ந்து, போதுமென்ற மனத்துடன் அறவாழ்வு வாழ்ந்தவர். இந்து சமயத்தையும் இசுலாம் சமயத்தையும் ஒன்றுபடுத்த விழைந்த இரைதாசர், இறைவனைப் பற்றிய தத்துவங்களிலோ அவரைக் குறித்துப் பாடும் அழகான கவிதைகளிலோ ஈடுபடவில்லை. இவருடைய கருத்துகள் மனிதத் தன்மையை வலியுறுத்துவன. மறுபிறப்பையோ நாம் வாழும் உலகம் இறைவனின் விளையாடுமிடம் என்னும் கருத்தையோ இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இறைவனிடத்தில் முழுமையான ஒப்படைப்பு ஒன்றையே இரைதாசர் வலியுறுத்தினார். ‘அரியே அனைத்தும், அனைத்தும் அரியே’ என்பது இரைதாசரின் சிறந்த கோட்பாடாகும். பக்தி இயக்கம் இந்தியாவில் சிறந்து விளங்கிய காலத்தில் அவ்வியக்கத்தின் ஞானியருள் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
<section end="இரைதாசர்"/>
<section begin="இரையிசு சேகப்பு ஆகசுட்டு"/>
{{dhr}}
{{larger|<b>இரையிசு சேகப்பு ஆகசுட்டு (கி.பி. 1848–1914)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆர்லெம் (Harlem) என்று குறிப்பிடப்படும் நீக்கிரோ மக்களின் குடியிருப்புப் பகுதியின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளைச் செய்தவர் ஆவார். சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட இவர், ‘நியூயார்க்கு நகரத்தின் பயனுள்ள குடிமகன்’ என்று அமெரிக்காவின் அதிபராக இருந்த தியோடர் உரூசுவெல்ட்டினால் பாராட்டப்பட்டவர். மக்கள் நெருக்கமுள்ள ஆர்லெம் மக்களின் வாழ்க்கை பற்றி இதழ்களில் எழுதிய குறிப்புகள், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இரையிசு சேகப்பு ஆகசுட்டுவின் (Riis, Jacob August) கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் அமெரிக்க நகரங்களில் வாழ்ந்த ஏழை மக்களின் பொருளாதார மறுவாழ்விற்கு வழி வகுத்தன.
இரையிசு தென்மார்க்கிலுள்ள இரிபி (Ribe) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தை ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். இவர் கி.பி. 1870–ஆம் ஆண்டு தென்மார்க்கிலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இரையிசு சேகப்பு, நியூயார்க்கு நகரக் காவல் துறையின் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்பொழுது இவருக்கு ஆர்லெம் மக்களின் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்னரே இவர் எழுத்தாற்றல் வளரப்பெற்று, ஆர்லெம் மக்களின் சிக்கல்களைப் பற்றி நூல்கள் எழுதத் தொடங்கினார். இவர் கி.பி. 1890–ஆம் ஆண்டு மறுபாதி மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர். (How the other Half lives) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் ஆர்லெம் மக்களின் நிலைமைகள் பற்றி விரிவாக விளக்குகிறது. இது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமெரிக்க நீக்கிரோக்கள் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்களைத் தீட்ட வழி வகுத்தது. வீடுகள் கட்டிக் கொடுத்தல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார இல்லம், கல்வி நிலையங்கள், மனமகிழ் மன்றங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் வேண்டினார். வறுமை காரணமாகக் குழந்தைகள் பொருளீட்டும் வேலைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்குப் பாடுபட்டார்.
இவர் மல்பெரி வளைவுப் பகுதியிலிருந்த நெருக்கக் குடியிருப்பை ஒழித்து, அங்கிருந்த மக்களுக்கு வசதியான வீடுகள், மனமகிழ் மன்றம், உடல் நலக் காப்பகம் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கப் பாடுபட்டார். மல்பெரி வளைவுப் பூங்காக் குடியிருப்புப் பகுதிக்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் நியூயார்க்கு நகரத்தின் காவல் துறை அதிகாரியாக கி.பி. 1895 முதல் 1897 வரை பணியாற்றினார். தாம் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொதுமக்களுக்குக் கடற்கரை மனமகிழ் திடல் அமைக்க வேண்டும் என்று நியூயார்க்கு நகர நிருவாகத்தினரிடம் இரையிசு வேண்டினார். தீவிலுள்ள (Long Island) பூங்காவிற்கு 1933–ஆம் ஆண்டில் இவர் பெயர் வைக்கப்பட்டது.
<section end="இரையிசு சேகப்பு ஆகசுட்டு"/>
<section begin="இரைன் ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>இரைன் ஆறு</b>}} ஐரோப்பாக் கண்டத்தில் பாயும் புகழ்பெற்ற ஆறுகளுள் ஒன்றாகும். இந்த ஆற்றின் நீளம் 1335 கி.மீ. இரைன் ஆறு (Rhine River) சுவிட்சர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளின் வழியாகப் பாய்ந்து வடகடலில் கலக்கிறது.
இரைன் ஆறு சுவிட்சர்லாந்து ஆல்பிசு மலையின் மையப்பகுதியில் தோன்றுகிறது. இந்த ஆறு வோர்டர் இரைன் (Vorder Rhine), இண்டர்ரைன் (Hinter Rhine) என்னும் இரு பெரும் நீரோடைகளாகப் பாய்ந்து. சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் ஒன்றாக இணைகிறது. பல்வேறு மூலங்களில் தோன்றும் ஆல்பிசு இரைன் எறத்தாழ 2300 மீட்டர் ஆழமான பள்ளத்தின் வழியாகப் பாய்ந்து. சுவிட்சர்லாந்தும் இலிச்சிடென் இசுடீனும் சந்திக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் ஓடுகிறது. இங்கிருந்து வடக்காகத் திரும்பிச் சுவிட்சர்லாந்துக்கும் ஆசுதிரியாவுக்கும் எல்லையாக அமைந்து. கான்சுடான்சு ஏரியில் (Constance Lake} நுழைகிறது. இந்த ஏரியின் மேற்கு முனையிலிருந்து விடுபட்டு இரைன் பாய்ந்து ஓடும்போது, பல நீர்வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இரைன் நீர் வீழ்ச்சி (Rhine Falls)<noinclude></noinclude>
kwj354lu66rrgic1v9aog168df15lqo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/255
250
626217
1933630
1895654
2026-05-14T17:45:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1933630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரைன் ஆறு|227|இரோசிமா}}</noinclude>இரைன், இரண்டு கிளையாறுகளாகப் பிரிகிறது. வடக்குக் கிளையாற்றை இலேக்கு (Lek) என்று கூறுவர். இக்கிளையாறு ஆன்கெம் (Arnhem) இராட்டர்டாம் (Rotterdam) நகரங்களின் வழியாகப் பாய்ந்து வடகடலில் கலக்கிறது. தென் பாகக் கிளையாற்றை வால் (Waal) என்பர். இது மிகப் பெரியது. இக்கிளையாறு நிசுமேகன் (Nijmegen) நகர் வழியாக ஓடி, மாசு (Maas) ஆற்றுடன் இணைந்துவிடுகிறது. இந்த ஆற்றையும் இராட்டர்டாம் நகரையும் இணைக்கும் கால்வாய்கள் உள்ளன.
இரைன் ஆறு ஆண்டு முழுதும் நீர் உடையது. கோடைக் காலத்தில் பனி உருகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதன் துணையாறுகளும் பெருமளவு நீரைக் கொண்டுவருவதால், ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும். பனிக்கட்டியால் சில நாள்கள் கப்பற்போக்குவரத்திற்குத் தொல்லைகள் ஏற்படுவதுமுண்டு. இந்த ஆறு கப்பற்போக்குவரத்திற்கு நன்கு பயன்படுகிறது. வெள்ளம், நீர்வீழ்ச்சி, கடினமான வழி போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் செப்பனிட்டுப் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் ஆறாக இதனை அண்மைக் காலத்தில் மாற்றிவிட்டார்கள்
நெக்கர் துணையாற்றில் பேசல் நகரிலிருந்து இசுடாரசுபர்க்கு வரையிலும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் போக்குவரத்துக்கு நன்கு பயன்படுகின்றன. இக்காலத்தில் ஈரோப்பா (Europa) என்னும் கால்வாய் மூலமும் மெயின் ஆறு மூலமும் இரைனையும் தான்யூப்பு ஆற்றையும் இணைத்துள்ளார்கள். இரைன் ஆற்றுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவை பாறைகளும் நீர்வீழ்ச்சிகளும் மட்டுமல்ல. உரோமானியரின் காலம் முதல் இவ்வாற்றைக் கடப்பவர்கள் சுங்கம் செலுத்த வேண்டியவராயினர். கி.பி. 14–ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி வரை 60க்கும் மேற்பட்ட வரிகளைத் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் வாங்கின. இன்று இவ்வாற்றின் கரையில் காணப்படும் கோட்டைகள் சுங்கச் சாவடிகளாக இருந்தவையே. வரிகள் காலப் போக்கில் குறையலாயின. வியன்னா மாநாடு (1815) இந்த ஆற்றில் அனைத்து நாடுகளுக்கும் வரியின்றிச் செல்லும் சுதந்திரத்தை வழங்கியது. படிப்படியாக இவ்வுரிமை இவ்வாற்றின் பல பாகங்களுக்கும் கொடுக்கப்பெற்று, இன்று சுதந்திர ஆறாக இது விளங்குகிறது.
இரைன் ஆற்றின் மூலம் போக்குவரத்து மிகுதியாக நடைபெறுகிறது. இரும்புத்தாதுக்கள், நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் போன்றவை இவ்வாற்றின் மூலம் ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்த ஆற்றின் கழிமுகத்தில் உள்ள இராட்டர் டாம்–ஈரோபுரூட்டுத் (Rotterdam–Europroot) துறைமுகம் சிறப்பானது. உள்நாட்டுத் துறைமுகங்களுள் துயிசுபர்கும் (Duisburg) உரூரும் (Ruhr) முதன்மையானவை.
இந்த ஆறு ஐரோப்பாவின் பண்பாடு, பொருளாதாரவளம் ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. இருப்பினும் இது பாயுமிடங்கள் ஒரு குடையின்கீழ் என்றும் இருந்தது இல்லை. இந்த ஆறு சுவிட்சர்லாந்தில் தொடங்கி ஆலந்தில் முடிவுறுகிறது. எனினும் இதைக் குறித்துப் பிரான்சும் செருமனியும் மோதிக் கொண்டுள்ளன. இப்பகுதியில் வரும் அல்சேசு–உலொராயின் பகுதிக்காகப் பிரான்சும் செருமனியும் போர் புரிந்தன.
இந்த ஆறு சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் கரையிலுள்ள பல நகரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
<section end="இரைன் ஆறு"/>
<section begin="இரோசிமா"/>
{{dhr}}
{{larger|<b>இரோசிமா</b>}} என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு நகரம். இரண்டாம் உலகப் போரின்போது 1945-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–ஆம் நாள் நேச நாடுகளைச் சார்ந்த அமெரிக்கா இந்நகரத்தின் மீது உலகிலேயே முதன்முதலாக அணுக்குண்டை வீசியது. இரோசிமா (Hiroshima) இந்தப் பெயர் கொண்ட மாநிலத்தின் தலைநகர். இது சப்பானின் தென்மேற்கிலுள்ள ஆன்சு (Honshu) தீவிலுள்ளது. இரோசிமா விரிகுடாவில் அமைந்துள்ள இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்றது. ஆடைகள், தோப்பி (Sake), கப்பல் கட்ட உதவும் துணைப் பொருள்கள், பேருந்துகள், இயந்திரங்கள், தட்டுமுட்டுப் பொருள்கள், தளவாடங்கள், தகர அடைப்புகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற பொருள்களின் தொழிற்சாலை மையமாக இந்நகர் விளங்குகிறது. வேளாண்மைப் பொருள்கள், கடலில் கிடைக்கும் பொருள்கள் போன்றவற்றின் சந்தையாகவும் இரோசிமா விளங்குகிறது. இந்நகரம் ஏறத்தாழ கி.பி. 1594–ஆம் ஆண்டில் ஓட்டா (Ota) ஆற்றுக் கழிமுகத்தில் அமைக்கப்பெற்ற கோட்டை நகரமாய் அமைக்கப்பட்டது. இங்குப் பாயும் ஆறு இரோசிமாவை ஏழு வாயில்களாகப் பிரிப்பதால் இது ஆறு தீவுகளாகப் பிரிந்துள்ளது. இவ்வேழு கிளைகள் 81 பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது இரோசீமாவின் மீதுதான் முதன்முதலாக அணுக்குண்டு வீசப்பட்டது. மக்கள் நிறைந்திருந்த ஒரு பகுதியின்மீது இத்தகைய அச்சமூட்டும் குண்டு வீசப்பட்டதால், நொடிப் பொழுதில் ஏறத்தாழ 1,30,000 மக்கள்<noinclude></noinclude>
5u0mwvfqy6bci2m92ve26tzsmaodq4w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/256
250
626220
1933631
1895799
2026-05-14T17:46:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1933631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்துத்மிசு|228|இல்துத்மிசு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 256
|bSize = 480
|cWidth = 131
|cHeight = 189
|oTop = 83
|oLeft = 67
|Location = center
|Description =
}}
{{center|அமைதி நினைவுப் பூங்கா-இரோசிமா}}
கொல்லப்பட்டோ காயமடைந்தோ காணாமற் போயோ மறைந்த வரலாற்றுக் கொடுமை, 1945–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–நாள் நடைபெற்றது. 90 விழுக்காடு நிலம் தரைமட்டமாகியது. மீண்டும் அணுக்குண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி (Nagasaki) என்னும் மற்றொரு சப்பானிய நகரம் மீது வீசப்பட்டபோது, ஏறத்தாழ 75,000 மக்கள் காயம்பட்டோ கொல்லப்பட்டோ போனார்கள். 1985 ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 6–ஆம் நாள் சப்பானிய மக்கள் அணுக்குண்டு போடப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவு நாளை நினைவுறுத்தி மறைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
<section end="இரோசிமா"/>
<section begin="இல்துத்மிசு"/>
{{dhr}}
{{larger|<b>இல்துத்மிசு (கி.பி. 1211–1236):</b>}} முகமது கோரியின் நம்பிக்கைக்கு உரியவரும், அவருடைய அடிமைகளுள் ஒருவருமாகிய குத்புத்தீன் ஐபக்கு (Quth-ud-din Aibak) அடிமைகள் வமிசம் என்று கூறப்பட்ட ஆளும் வமிசத்தை கி.பி. 1206–ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தியாவிற்கு வெளியே தலைநகரை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்சி செய்த நிலை மாற்றப்பட்டது. இந்தியாவைத் தம் தாயகமாகக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கிய அடிமைகள் தில்லிச் சுல்தானியத்தைத் தோற்றுவித்தார்கள்.
அடிமை வமிசத்தை உருவாக்கிய குத்புத்தீன் ஐபக்கு நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் கி.பி. 1210–ஆம் ஆண்டு இறந்தவுடன் அராம் சா (Aramshah) எட்டு மாதங்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தார். நாட்டை ஆளுவதற்குத் தகுதி எதுவும் இல்லாத அராம் சா எளிதாகத் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அராம் சாவிற்குப் பின்னர் அரசராகப் பதவியேற்றவர் இல்துத்மிசு.
இல்துத்மிசு மத்திய ஆசியாவில் காணப்பட்ட இல்பாரி (Ilbari) இனத்தைச் சார்ந்தவராவார். இவருடைய தந்தை இலாம்கான் (Ilam Khan) அவ்வினத்தின் தலைவர். இவர் இளமையிலிருந்தே புத்திக் கூர்மையும், செயல்திறனும் உடையவராகத் திகழ்ந்தார். இவர் சகோதரர்கள் பொறாமை உணர்வினால் தூண்டப்பட்டு இவரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடிமை வாணிகர் ஒருவருக்கு விற்று விட்டனர். சமாலுத்தீன் (Jamal-ud din) என்ற அவ்வணிகரால் இளைஞரான இல்துத்மிசு கசினிக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து இவர் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டு இரண்டாம் முறையாகக் குத்புத்தீனுக்கு விற்கப்பட்டார். இவர் தம்முடைய தகுதி, திறமையால் படிப்படியாக வாழ்வில் உயர்ந்தார். அரசரின் வேட்டைக்கூட்டத்திற்குத் (Amir-i-Shikari) தலைவரானார். குவாலியர் கைப்பற்றப்பட்டபின் அக்கோட்டையின் பொறுப்பையேற்றார், பின்னர்ப் புலந்த்சகரின் (Bulandshar) ஆளுநராக உயர்த்தப்பட்டார். குத்புத்தீனின் மகளை மணந்து கொண்ட இவர், பின்னர்ப் பதோனின் (Badaun) ஆளுநராக நியமிக்கப்பட்டார். சுக்கர்களை (Khokkors) கி.பி. 1205–06-இல் அடக்குவதற்குத் தம்முடைய திறமையை வெளிப்படுத்திய இவர், அதற்கு வெகுமதியாக அடிமை நிலையினின்றும் விடுவிக்கப்பட்டார். ஐபக்கு இறந்தவுடன் அராம் சா கி.பி. 1210–11 வரை அரசோச்சினார். அராமைவிட திறமையான ஒரு அரசரே அப்போதைய தில்லிக்குத் தேவை என்பது உயர்குடி மக்களின் விருப்பமாக இருந்தது, இல்துத்மிசு அராமைத் தோற்கடித்து கி.பி. 1211-இல் அரியணை யேறினார்.
இல்துத்மிசு அரசராகப் பதவியேற்றபோது தில்லிச் சுல்தானியம் என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. வங்காளம், அல்மர்தன் கில்சியின் கட்டுப்பாட்டிலிருந்தது. இல்துத்மிசு தில்லிக்கும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் அரசரானார், குபாச்சா (Qabacha) முல்தான் பகுதி மீது ஆதிக்கம் செலுத்தி வந்தார். இலாகூரைக் குபாச்சாவும் இல்திசும் (Yildiz) மாறிமாறிக் கைப்பற்றினர். இராசபுத்திரத் தலைவர்கள் சலோர் (Jalor), இராந்தம்பூர் (Ranthambhor), ஆசுமீர் (Ajmer), குவாலியர் (Gwalior) போன்ற இடங்களில் தம் உரிமையை நிலை நாட்டியிருந்தனர் இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையே இவர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அரசரானார். ஐபக்-<noinclude></noinclude>
31r7a5ev8trh1nfuomd68n53b3jqdg1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/259
250
626230
1933633
1895813
2026-05-14T17:48:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1933633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்பர்ட்டு|231|இல்பர்ட்டு}}</noinclude>(Sheik Jalaluddin Tabrizi) போன்ற சூபி (Sufi Saints) ஞானிகளிடம் மரியாதை உடையவராகத் திகழ்ந்தார். அரசவையில் அடிக்கடி சமய விவாதங்களை நடத்தி உலேமாக்களுக்கு (Ulemas) ஆதரவு அளித்தார். தம்முடைய சமயக் கருத்துகளைப் பிறர் பொருட்டு மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. இவருடைய கொள்கைகளின் விளைவாக இவருக்குப்பின் பதவியேற்ற அரசர்களின் நிலை பெருமளவு உறுதியாக அமைக்கப்பட்டது.
{{Right|<b>எஸ்.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Majumdar, R.C., Ray Chaudry & Dutta,</b> An Advanced History of India, Macmillan, Madras, 1982.
<section end="இல்துத்மிசு"/>
<section begin="இல்பர்ட்டு"/>
{{dhr}}
{{larger|<b>இல்பர்ட்டு (கி.பி. 1841–1924)</b>}} என்பார், இரிப்பன் பிரபு இந்தியாவின் அரசப்பேராளராக இருந்தபோது அவருக்கு உதவிய ஓர் ஆங்கிலேயர். இவருடைய முழுப்பெயர் சர் கோட்டினே பிரிக்ரைன் இல்பர்ட்டு என்பதாகும். இவர் பிரிக்ரைன் ஆர்தர் இல்பர்ட்டு என்ற சமயகுருவுக்கும் உரோசு அண்ணி என்ற அம்மையாருக்கும் தெவன்சயர் என்னும் மாவட்டத்திலுள்ள கிங்சு பிரிட்சு என்னுமிடத்தில் கி.பி. 1841–ஆம் ஆண்டு சூன் திங்கள் 12–ஆம் நாள் பிறந்தார். இவருக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர். தெவன் சயர் மாவட்டத்தின் மிகப் பழங்குடியே இல்பர்ட்டின் வமிசமாகும். இவருடைய மூதாதையர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலிரிங்கலெளி, ஆர்சுவெல் பகுதிகளில் மிகுதியான நிலச் சொத்துகளைப் பெற்றிருந்தனர்.
இல்பர்ட்டு கி.பி. 1852–ஆம் ஆண்டில் கல்வி பயிலப் பார்வ்பரோ நகருக்கு அனுப்பப்பட்டார். எட்டு ஆண்டுகள் அந்நகரில் தங்கி, சார்சு எட்வர்டு வின்சு காட்டன், சார்சு கிரன்வில்லி பிராட்லி ஆகிய தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பில் சிறக்கக் கல்வி பயின்று, கி.பி. 1861–ஆம் ஆண்டில் பொதுக் கல்விக்கான பட்டத்தையும், கி.பி. 1867–ஆம் ஆண்டில் சட்டக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார். பின்னர்ப் பாலியால் கல்லூரியில் பணிபுரிந்து, கி.பி. 1871–ஆம் ஆண்டு முதல் 1874–ஆம் ஆண்டு வரை அக்கல்லூரியின் தொடர்பைப் பெற்று இலக்கிய அறிவையும் பெற்றார். அதே ஆண்டில் வின் சார்லசு பிராட்லி என்ற சமய குருவின் மகளாகிய செசி என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து பெண் மக்கள் பிறந்தனர்.
இல்பர்ட்டுக்கு கி.பி. 1896–ஆம் ஆண்டிலேயே வழக்குரைஞர் பதவிக்கு அழைப்பு வந்தது, அந்நேரத்தில்தான் இங்கிலாந்து நாடாளுமன்றம் தன்னுடைய மசோதாக்கனை வரைவு செய்யத் தொடங்கியது. அதற்காகச் சர் என்றி, திரிங்கு ஆகியவர்களின் தலைமையிலே தனியாக ஒரு துறையே தொடங்கப்பட்டது. இச்சட்டத் துறையில் இல்பர்ட்டு ஓர் உதவியாளராகச் சேர்க்கப்பட்டுத், தம் விசாலமான சட்ட நுட்பத்தைப் பயன்படுத்தினார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டின் சட்ட நீதித் திருத்தத்திற்கும், கி.பி. 1883–ஆம் ஆண்டில் குற்ற இயல் சாராத சட்டத் தொகுப்பை உருவாக்குவதற்கும் பெரும் பணியாற்றினார்.
ஆர்டிங்டன் பிரபு கி.பி. 1882–ஆம் ஆண்டில் இந்தியச் செயலராகப் பதவியேற்றபோது, தலைமை ஆளுநர் சபையில், இல்பர்ட்டையும் சட்டத்துறையில் ஓர் உறுப்பினராக அமர்த்தினார். தொடக்கத்தில் இல்பர்ட்டு சற்றுத் தயங்கினார் என்றாலும் இந்தியரின் மனவளம் அவரைப் பெரிதும் கவர்ந்த காரணத்தால் இறுதியில் இப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
இரிப்பன் பிரபு இந்தியாவில் அரசப் பேராளராக கி.பி. 1880–ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்தியர்களுக்குப் பல்லாற்றானும் நன்மை பயக்க எண்ணினார். அவர் கி.பி. 1873–ஆம் ஆண்டில் குற்றவியல் சட்டப்படி தலைமை மாநிலம் தவிர, ஏனைய மாநிலங்களில் ஓர் ஆங்கிலேயக் குற்றவாளியை ஓர் இந்திய நீதிபதி விசாரிக்கக் கூடாது என்பதை அடியோடு வெறுத்தார். அச்சமயத்தில் உயர் பதவிகளிலிருந்த இந்தியர்களும், ‘இந்திய நீதிபதிகளுக்கும் ஆங்கிலேய குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமை வேண்டும்’ என்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனவே சட்டத்தை நிலைமைக்கு ஏற்றாற்போல் இந்தியர்களுக்குச் சாதகமாக உருவாக்கும் பொறுப்பு இல்பர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘இல்பர்ட்டு மசோதா’ 1883–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதும், ஆங்கிலேயர்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். எனவே, இம்மசோதாவை அமுலாக்குவது முற்றிலும் கைவிடப்பட்டது. நிலச்சுவான்தாரர்களுக்கும் நிலக் குத்தகைக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சீர்திருத்தி அமைப்பதற்காக ‘வங்காளக் குத்தகைச் சட்டம்’ கொண்டு வந்தவரும் இவரே.
இல்பர்ட்டு கி.பி. 1886–ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இங்கிலாந்து திரும்பினார். அங்கு கருவூலத்தில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் உதவியாளராகப் பணியில் அமர்ந்தார். இந்தியச் சட்டத் தொகுப்பில் பெரும் அக்கறை கொண்ட இவர் கி.பி. 1898–ஆம் ஆண்டில் வாரன் ஏசுடிங்சு காலத்திலிருந்து இந்தியச் சட்டங்களை விளக்கும் வகையில்<noinclude></noinclude>
o8cbh8ddqcfhirtxufvp2quzyd9pejn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/260
250
626231
1933634
1895837
2026-05-14T17:51:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1933634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்பரி துருக்கர்|232|இல்பொருளுணர்வு}}</noinclude>‘இந்திய அரசு’ என்ற நூலையும் வெளியிட்டார். பின்னர் கி.பி. 1899 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் தலைவரானார். அதன் பின்னர்க் கருவூலத்தின் கருத்துரையாளரானார். இல்பர்ட்டு 1902–இல் பொதுமக்கள் மன்றத்தின் கணக்கரானார். சட்டமன்ற நடவடிக்கைகளை நன்கு அறிந்தவராகையால், எளிதில் அனைத்து உறுப்பினர்களிடமும் நற்பெயரை ஈட்டினார். தம் பதவியை 1921–ஆம் ஆண்டில் துறந்து, காமன்சு அவையால் பாராட்டப்பெற்றார்.
இல்பர்ட்டு 1901–ஆம் ஆண்டில் ‘சட்ட மன்றச் செயல் முறைகள்’, 1911–ஆம் ஆண்டில் ‘நாடாளுமன்றம் - அதன் வரலாறும் அமைப்பும் நடைமுறைகளும்’, 1919–ஆம் ஆண்டில் ‘சட்டமியற்றுவதில் நுணுக்கங்கள்’ ஆகிய நூல்களைப் படைத்தார். இல்பர்ட்டு ஓர் அறிவாளி; எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்; தெளிய வைக்கும் பண்புடையவர்; புரட்சிகரமான கருத்துடையவர்; இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட இல்பர்ட்டு 1924–ஆம் ஆண்டில் மே திங்கள் 14–ஆம் நாளன்று தம் சொந்த ஊரில் பக்கிங்காம்சயரிலுள்ள திரவுட்ருவல்சு பென் என்ற இடத்தில் காலமானார்.
{{Right|<b>பொன்.சு.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Sathianathier, R.,</b> History of India, Vol. III, P. Viswanathan & Co, Madras, 1982.
<b>Majumdar, R.C.,</b> & others, An Advanced History of India, Macmilan & Co., Madras, 1982.
<section end="இல்பர்ட்டு"/>
<section begin="இல்பரி துருக்கர்"/>
{{dhr}}
{{larger|<b>இல்பரி துருக்கர்</b>}} துருக்கிசுத்தானில் (Turkestan) வாழும் புகழ்மிக்க மரபினருள் ஓரினத்தவர். தில்லி சுல்தானிய வமிசங்களுள் ஒன்றான அடிமை வமிசத்தைச் சார்ந்த பால்பன் இல்பரி துருக்கிய (Ilbari Turk) இனத்தைச் சார்ந்தவர். இல்வரி துருக்கர் இந்தியாவை ஏறத்தாழ எண்பதாண்டுகள் (கி.பி. 1206–1290) ஆண்டனர். எனினும் அவர்தம் ஆட்சியின்போது தில்லி அரசு ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் குழுவாகத் திகழவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை ஆண்ட இல்பரி துருக்கியச் சுல்தான்களின் ஆட்சி ஆக்ரா, அயோத்தி, பீகார், குவாலியர், சிந்து, மத்திய இந்தியாவில் சிலபகுதிகள், இராசபுதனம் போன்ற பகுதிகளில் மட்டுமே பரவியிருந்தது. வங்காளமும் இவர்களுடைய ஆட்சிக்குட்பட்டதாயினும். அதனை ஆண்ட ஆளுநர்கள் பெரும்பாலும் சுதந்திர அரசர்கள் போன்றே செயற்பட்டார்கள். பஞ்சாபிலும் இவர்களுடைய ஆட்சியை மங்கோலியர்கள் தாக்கும் அச்சநிலை நிலவியிருந்தது. தில்லியைச் சுற்றிக் கொடுக்கப்பட்டிருந்த மானிய நிலங்களில் இல்பரி துருக்கியரின் இசுலாமியச் செல்வாக்கு ஓங்கியிருந்தாலும், உள்ளூர்க் குறுநில மன்னர்கள் பலர் சுதந்திரமானவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சியால் ஒரு சிறிதும் பாதிக்காத குடிமக்கள் மத்திய அரசின் அதிகாரத்தை எப்போதும் எதிர்க்கத் தலைப்பட்டனர். இல்பரி துருக்கிய மன்னர்களும் வலுவான ஆட்சியை நிலைநாட்டக் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டார்கள்.
இல்பரி துருக்கர் மரபில் வந்த அரசர்களுள் பால்பன் போன்றவர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள். தம்மை எதிர்த்த குறுநில மன்னர்களை இவர்கள் ஒறுத்து அடக்க முயற்சி செய்தாலும், தமக்கு அடங்கிப் போனவர்களை இல்பரி துருக்கிய அரசர்கள் இராணுவப் பணியிலும் உள்நாட்டுப் பதவிகளிலும் அமர்த்தினார்கள். இவர்கள் ஆட்சி நேர்மையானதாகவும், மனிதத் தன்மையை மதிப்பதாகவும் இருந்தது என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து.
<section end="இல்பரி துருக்கர்"/>
<section begin="இல்பொருளுணர்வு"/>
{{dhr}}
{{larger|<b>இல்பொருளுணர்வு:</b>}} இல்லாத பொருள்களைப் புலனுணர்வினால் காண்பது, கேட்பது அல்லது நுகர்வது போல்வன இல்பொருளுணர்வு (Hallucination) எனப்படும். இது பெரும்பாலும், ஒரு வகையான புலன்காட்சிச் சீர்கேடு (Perceptual Disorder) என்னும் பொருள்பட வழங்கப்படுகிறது. ஒரு பொருள் இருப்பதற்கு அல்லது ஒரு நிகழ்வு நடைபெறுவதற்கு ஏற்ற தூண்டல் இன்றியே அதற்கான துலங்கல் ஏற்படுவதை இல்பொருளுணர்வு என்று கூறுகிறோம். இது திரிபுணர்வுடன் தொடர்புடையதாக அமையலாம் அல்லது இல்லாத பொருளை உணர்பவனிடம் தான் காண்பது, கேட்பது அல்லது நுகர்வது மெய்யானதே என்னும் உறுதிப்பாடு அமையப் பெறாமலும் இருக்கலாம். அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலோர் இல்பொருளுணர்வு நிலையை எய்துகின்றனர். ஆனால், இடைவிடாத தீவிரமான இல்பொருளுணர்வு அனுபவங்கள் உளக் கோளாறு, உளப்பிணி ஆகியவற்றின் அறிகுறியாகும்.
தனிமனிதனின் நிறைவேறாத ஆசைகள் ஆழ்மன ஒடுக்கல்களாக மாறி, அவற்றின் காரணமாகவும் இல்பொருளுணர்வு ஏற்படலாம். தனிமனிதனின் குறிப்பிட்ட சில நிறைவேறாத ஊக்கிகளும் அடைய முடியாத உந்துகளும் நனவிலியில் தள்ளப்பட்டு, எப்பொழுது நனவு நிலையை அடையலாம் என்று காத்திருக்கின்றன. இவ் உந்துகள் நனவு நிலையை அடையும் வழிகளுள் இல்பொருளுணர்வும் ஒன்றாகும். ஆதலின், இல்பொருளுணர்வு ஓர் உளப்படைப்பாகும். உடல்சார் தூண்டல்களினாலும் இல்பொரு-<noinclude></noinclude>
mbh0ks7xpmerf4f07dmetfkuhpi75jw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/262
250
626266
1933635
1895843
2026-05-14T17:53:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1933635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்லம்|234|இல்லம்}}</noinclude>மற்றவர்களால் பேசப்படுவதாக உணர்கிறார்கள். உளக்கோளாறுகளின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் குடிப்பழக்கம் காரணமாக உடல்உள நடுக்க நிலையை அடைந்தால் இத்தகைய இல்பொருளுணர்வுகளால் கடுமையான தொல்லைக்கு உள்ளாகின்றனர்.
காட்சி இல்பொருளுணர்வு மீத்தொளி வடிவத்தினின்றும் (Eidelic Image) வேறுபட்டது. முன் அனுபவத்தையொட்டித் துல்லியமாக ஏற்படும் காட்சி வடிவங்கள் மீத்தொளி வடிவங்கள் ஆகும். இத்திறன் குழந்தைகளிடம் மிகையாகவும் வயது ஏற ஏறக் குறைவாகவும் காணப்படும். குழந்தைகளிடம் அச்சத்தின் காரணமாக ஏற்படும் இல்பொருளுணர்வுகள் காரணமாகப் பொய் இல்பொருள் உணர்வுகள் ஏற்படும். இவை நிலையாக இருப்பதில்லை. இவை தோன்றி மறையும் தன்மையுடையன.
<section end="இல்பொருளுணர்வு"/>
<section begin="இல்லம்"/>
{{dhr}}
{{larger|<b>இல்லம்:</b>}} மனிதன் இயற்கை மாறுபாடுகளிலிருந்தும் சுற்றுச் குழல்களின் வேறுபாடுகளிலிருந்தும் காற்று, மழை, வெப்பம் முதலியவற்றிலிருந்தும் தப்பிப் பாதுகாப்பாக இருப்பதற்கு நிலையான கூரையின்கீழ் வாழ முற்பட்டான். அவன் வாழ்வதற்கு அமைத்த இடமே இல்லமாகும். இவ்வில்லத்தின் அமைப்புக் கற்கால மனிதன் குகைகளில் வாழத் தொடங்கியது முதல் பலதளக் குடியிருப்பு வீடுகள் வரை பல நிலைகளில் படிமலர்ச்சி அடைந்துள்ளது. பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) பல கூறுகளுள் ஒன்றான இல்லம் புவியமைப்பு, சுற்றப்புறம், சூழ்நிலை, காலநிலை, வாழ்க்கை முறை, தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிக் காட்டுகின்றது. மனிதன் தான் வாழ அமைக்கும் இல்லத்தில் மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் வெளிப்படக் காண்பதைக் கொண்டு, ஆதிக்குடிகள் முதல் நகரச் சமூகம் வரையிலான அனைத்து வகையான மக்களிடமும் இல்லத்தின் அமைப்பு முறைகளைக் கண்டறிய முடிகிறது.
உலகம் முழுவதிலும் வெவ்வேறான இயற்கையமைப்புக்களுடன் வாழும் மக்கள் குழுக்களிடையே அவரவர் வாழும் குடியிருப்புப் பகுதியின் அமைப்புப் பற்றி ஆராயும்போது பல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு மக்கள் குழுவும் தம் வாழ்க்கைத் தொழிலிற்கு ஏற்பத் தம் குடியிருப்புப் பகுதியை அமைத்துக் கொண்டிருக்கிறது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடி மக்கள் பெரும்பாலும் காடு சார்ந்த மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருவதால், இவர்களது குடியிருப்புப் பகுதி மலைசார்ந்த இடங்களில் காணப்படுகிறது. இதைப் போன்றே பாலை நில மக்கள் பாலை சார்ந்த பகுதிகளிலும், மீன்பிடி மக்கள் கடல் சார்ந்த பகுதிகளிலும், அடுக்கு நில வேளாண்மை (Terrace Cultivation) செய்வோர் மலைப்பகுதிகளிலும், நிலையாக வேளாண்மை (Settled Agriculture) செய்வோர் நீர்வளமிக்க சமநிலைப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதியைக் கொண்டிருக்கக் காணலாம். கால்நடைகளை வளர்த்தும் உணவு சேகரித்தும் வாழும் நாடோடிகள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் நிலையற்ற எளிய குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். புவியமைப்பு, இயற்கைச் சூழ்நிலை, ஒவ்வொரு சமூகத்தின் வாழ்க்கைப் பொருளாதாரம் (Subsistence Economy) ஆகியன அனைத்தும் மக்கள் வாழிடப் பகுதியைத் தேர்வு செய்வதில் தலையான பங்கினைப் பெற்றுள்ளன.
{{larger|<b>குடியிருப்புகளின் அமைப்பு:</b>}} குடியிருப்புப் பகுதிகளின் அமைப்பும் அளவும் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகின்றன. சதுரம், செல்வகம் வட்டம், முக்கோணம் முதலான வடிவங்களில் குடியிருப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. பல குடியிருப்புகள் குறிப்பிடத்தக்க வடிவமில்லாமலும் காணப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 262
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 225
|oTop = 325
|oLeft = 258
|Location = center
|Description =
}}
{{center|தோகன் குடியிருப்பு}}
{{nop}}<noinclude></noinclude>
i4tkg13tlm8pfqw32wug4htq9hi4m96
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/266
250
626284
1933636
1895849
2026-05-14T17:57:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1933636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்லரி எட்மண்டு|238|இல்லீரியா}}</noinclude>மொருங்கு (Morang) போன்றவையும் பல தொழில் நுட்பத்தைக் காட்டுவனவாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
போர்னியோத் (Borneo) தீவில் வாழும் பழங்குடிகள் கட்டும் வீடுகள் இருநூறு முதல் முந்நூறு பேர் தங்குவதற்கேற்ப ஐந்நூறு அடிநீளமும் இருபது முதல் முப்பதடி அகலமும் உடையனவாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரே கூரையினையுடைய இவ்வித நீண்ட வீடுகள் தடுப்புச் சுவர்களால் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் பல இரத்த உறவுடைய குடும்பங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். அந்தமான் தீவில் வாழும் சாரவாப் (Jarawa) பழங்குடிகளின் இல்லங்கள் அறுபதடி விட்டம் கொண்ட வட்ட வடிவிலானவை.
<section end="இல்லம்"/>
<section begin="இல்லரி எட்மண்டு"/>
{{dhr}}
{{larger|<b>இல்லரி எட்மண்டு</b>}} உலகின் மிக உயரமான எவரசுடு மலையின் சிகரத்தை முதன் முதல் அடைந்த இருவருள் ஒருவர் ஆவார். இவருடன் எவரசுட்டை அடைந்த மற்றவர் தென்சிங்கு நார்கே என்னும் நேபாள நாட்டினர் ஆவார். இல்லரி எட்மண்டு (Hillary Edmund) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1953-ஆம் ஆண்டு மே திங்கள் 29–ஆம் நாள் தென்சிங்கு நார்கேயுடன் எவரசுட்டுச் சிகரத்தில் அடியெடுத்து வைத்தார்.
இல்லரி நியுசிலாந்து அண்டார்டிகா பயணத்திற்கு இவர் 1958–ஆம் ஆண்டு தலைமை தாங்கினார். தம்முடன் பயணம் செய்த தென்சிங்கு என்னும் சேர்பா (Sherpa) மலைவாசியின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டு, சேர்பா மலைவாசிகளுக்கென மருத்துவ விடுதிகள் பயிற்சிப்பள்ளிகள், மலைச்சரிவுப்பாலங்கள் போன்றவற்றை உருவாக்கினார். மலைமீது ஏறுபவர்களுக்குப் பயிற்சி தரும் பள்ளிகளில் தம் அனுபவங்களை எடுத்துரைத்து, அந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
<section end="இல்லரி எட்மண்டு"/>
<section begin="இல்லீரிகம்"/>
{{dhr}}
{{larger|<b>இல்லீரிகம்</b>}} உரோமானியப் பேரரசுப் பகுதிகளுள் ஒன்று. இக்காலத்தில் இப்பகுதியை யூகோசுலேவியா என்பர். பேரரசர் தயோகிளீ சியன் (Diocletian) என்பார் கி.பி. 293–ஆம் ஆண்டில் உரோமானியப் பேரரசை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். அவற்றுள் ஒன்றை இல்லீரிகம் (Illyricum) என்பர். இப்பகுதியிலிருந்து பிற்காலத்தில் அரசாண்ட பேரரசர்கள் பலர், உரோமானியப் படைக்குப் படைவீரர்கள் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியும் இதுதான்.
<section end="இல்லீரிகம்"/>
<section begin="இல்லீரியா"/>
{{dhr}}
{{larger|<b>இல்லீரியா</b>}} பால்கன் முந்நீரகத்தின் மிகத் தொன்மையான பகுதி. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழியின் வட்டார மொழியைப் பேசிய இனமக்கள் ஏட்ரியாடிக்கு (Adriatic) என்னும் கடலின் வடக்கு, கிழக்குக் கடற்கரைகளின் மீது படையெடுத்தனர். தால்மாட்டியர் (Dalmatians), உன்னோனியன் (Pannonians) போன்ற பிற்கால இனமக்கள் இல்லீரிய மக்களைச் சார்ந்தவர்களே பன்னோனியர் வாழ்ந்த அனைத்து இடங்களையும் சில வேளைகளில் இல்லீரியா என்பர். அல்பேனியானின் (Albania) வடக்கில் ஏட்ரியாடிக்குக் கடற்கரைப் பகுதியையே இல்லீரியா (Illyria) என்று கூறுவது வழக்கம். இது தினாரிக்கு ஆல்ப்சு (Dinaric Alps) மலைத் தொடருக்கு மேற்கில் உள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 266
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 275
|oTop = 200
|oLeft = 259
|Location = center
|Description =
}}
{{center|இல்லீரியா}}
இக்கடற்கரையில் கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் கிரேக்க நகரங்கள் நிலைநாட்டப்பட்டன. எனினும் நீடித்திருக்கவில்லை. மாசிடோனியாவின் (Macedonia) மன்னரான இரண்டாம் பிலிப்பும் (Philip II) பின்னர் வந்த ஐந்தாம் பிலிப்பும் (Philip V) கிரேக்கர்களுக்கெதிராகப் போரிட்டனர். எனினும் அப்போர்களினால் நிலையான பலன்கள் எவையும்<noinclude></noinclude>
p995h19p30bbiofbn9slmizfxvaq609
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/267
250
626285
1933638
1895850
2026-05-14T18:03:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1933638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்லுறை தெய்வம்|239|இல்லுறை தெய்வம்}}</noinclude>ஏற்படவில்லை. இல்லீரியாவில் உரோமானியர் கி.மு. 168–167–ஆம் ஆண்டுகளில் தம்முடைய மிகத் தொன்மையான குடியேற்றத்தை நிலைநாட்டினர். பல போர்களின் மூலம் தால்மாட்டியா (Dalmatia) முழுவதையும் வென்று, இக்குடியேற்றப் பகுதி விரிவாக்கப்பட்டது, தெற்கு இல்லீரியர்கள் இறுதியாகக் கி.மு. 35–34 ஆம் ஆண்டுகளில் அகசுடசு (Augustus) என்பவரால் தோற்கடிக்கப்பட்டனர். பன்னோனியர் கி.மு. 12–11–ஆம் ஆண்டுகனில் பெற்ற வெற்றிகளால் இல்லீரியாவை மேலும் விரிவாக்கினர்.
விரிவாக்கப்பட்ட இல்லீரியா, கி.பி. 6–9 ஆம் ஆண்டுகளில் தால்மாடியா, பன்னோனியா என இரு மாநிலங்களாகப் பிரிந்தது. உரோமானியர் இதற்கு இல்லீரிகம் (Illyricum) எனப் பெயரிட்டனர். பின்னர் ஏட்ரியாடிக்குக் கடலின் வடபாகத்தையும் பால்கன் முந்நீரகத்தின் பெரும் பாகத்தையும் இல்லீரிகம் உள்ளடக்கியிருந்தது. முதலாம் நெப்போலியன் கி.பி. 1809–ஆம் ஆண்டில் ஏட்ரியாடிக்குக் கடலின் பாகத்தையும், இன்றைய கிழக்கு யூகோசுலாவியாவையும் தம் பேரரசுடன் இணைத்துக் கொண்ட போது, இல்லீரியா மாநிலங்கள் என்னும் பெயரே மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த பகுதி கி.பி. 1816–49 வரை இல்லீரிய அரசு என்னும் பெயரில் ஆசுதிரியாவின் நிருவாக மாவட்டமாக அமைந்திருந்தது.
<section end="இல்லீரியா"/>
<section begin="இல்லுறை தெய்வம்"/>
{{dhr}}
{{larger|<b>இல்லுறை தெய்வம்:</b>}} மாந்தர்தம் அகவாழ்வுச் சிறப்பிற்கு உரியவர் மகளிர்; புறவாழ்வுப் புகழுக்கு உரியவர் ஆடவர். புறவாழ்வில் வீரம் காட்டிப் புகழுடம்பு அடைந்தவர்க்கு நடுகல் நட்டனர். கணவரைத் தெய்வமாகக் கொண்ட மனைவியர் நடுகல்லில் தம் கணவன்மார் தெய்வமாக உறைவதாகக் கொண்டு வழிப்பட்டனர். அன்னார் கல்லுறை தெய்வமாயினர், அகவாழ்வில் இல்லற மாண்புகளிற் சிறந்து, கணவர் இறப்பதற்கு முன் இறந்த மங்கல மடந்தையர் வீடுகளில் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அன்னார் இல்லுறை தெய்வங்களாயினர்.
செல்வ வளமுள்ள இல்லத்தில் செல்வத்திற்குரிய திருமகளும், கல்வியும் கலையும் நிலவும் இல்லத்தில் கலைமகளும் உறைவர் என்பது மரபு. இத்தெய்வங்கள் கோவிலில் உறைவதோடு இல்லுறை தெய்வங்களுமாயின.
இல்லுறை தெய்வங்கள் பெரும்பாலும் பெண் பாலாக அமைந்தன. இவை இல்லத்தையும் இல்லத்தாரையும் தீங்கின்றிக் காக்கும்; துன்பக் காலத்தில் துணை நிற்கும்; தோன்றாத் துணயாகும்; நலமும் வளமும் அருளும் என நம்பினர். சீவகனைப் பிரிந்து துன்புற்ற கேமசரி என்பாளை, ‘இல்லுறை தெய்வம் நோக்கி இரங்கிநின் றுரைக்கும்’ (சீவக. 1527) இல்லுறை தெய்வம் ஆறுதல் கூறிப் பேசியதாகப் பாடப்பட்டுள்ளது. அவள் வண்டுகளைப் பார்த்து. ‘இறந்துபடுவேனது துயரந்தீரும்படி என் மனைதன்னுள் தெய்வ மாவீராக’ (சீவக. 1531 உரை) என்றாளாம். இவை காப்பியப் பாங்கில் கூறப்பட்டவை.
பொதுவாகத் துன்பம் தீரவும், வளமும் நலமும் பெருகவும், சிறப்பாக இரவுப் பொழுது இடரின்றி இன்பமாகவும் இல்லுறை தெய்வங்களைப் போற்றி வழிபட்டனர் என அறிகிறோம். இவ்வழிபாடு நாள் வழிபாடாகவும், அவ்வக் காலங்களில் சிறப்பு வழிபாடாகவும் நிகழ்ந்தப்பட்டது
இவ்வழிபாட்டை வீட்டின் அகத்தே அவ்வல்லில்லத்து மங்கல மகளிர் நிகழ்த்துவர். அந்திப் பொழுதில் ‘அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங்காட்டி’ (சிலம்பு. 9:3) என்று இளங்கோவடிகள் பாட, அடியார்க்கு நல்லார், ‘முல்லையினது ஒளிமலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி மாணிக்க விளக்கை மைவிளக்கோடே எடுத்து’ என்று விளக்கியபடி இல்லுறை தெய்வத்திற்காக முல்லை மலருடன் நெல்லைக் கலந்து தூவி, விளக்கேற்றி வழிபட்டதை அறிகிறோம். ‘மனைக்கு விளக்காயினள் மன்ற’ (ஜங். 405:2) என்றபடி மடவாரை மனைக்கு விளக்கமாகக் கொள்வர். எனவே, இல்லுறை தெய்வத்தின் சின்னமாக விளக்கு கொள்ளப்பட்டது. வளத்தின் அறிகுறியாக நெல்லும், கற்பின் அறிகுறியாக முல்லையும் போற்றிப் பொருள்களாகக் கொள்ளப்பட்டன.
குடும்ப இல்லங்களில் மட்டுமன்றி, வணிக இல்லங்களிலும் இல்லுறை தெய்வ வழிபாடு இவ்வாறு நிகழ்த்தப்பட்டதை நெடுநல்வாடை (40–44) அறிவிக்கிறது. செல்வவளங்கொண்ட வணிக இல்லங்களைத் திருமகள் இருக்கையாகக் கொண்டு இவ்வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு வழிபாடு பின்வருமாறு நடந்தது. இல்லத்தில் இல்லுறை தெய்வத்திற்கென அமைந்த அறையிடத்தே முன்னர் வழிபட்டுச் சிதறிக் கிடந்த பூந்துகள்களைத் துடைத்துப் போக்கினர். ‘மங்கல வெள்ளை’ எனப்படும் சந்தனத்தால் தரையை மெழுகினர். பூப்பலி செய்து வழிபட்டனர் (சீவக. 1477). இவ்வாறாக இல்லுறை தெய்வங் கொள்ளு-<noinclude></noinclude>
h7bketfixwai89ttw6i7kbvpi6besnz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/268
250
626286
1933639
1895851
2026-05-14T18:04:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1933639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இல்லுறை தெய்வம்|240|இலக்கணக்கூறுகள்}}</noinclude>வதும், இல்லுறை தெய்வ வழிபாடும் பண்டைக் காலத்தில் நடைமுறையில் இருந்தமையை இலக்கியங்கள் அறிவிக்கின்றன. காலப்போக்கில் இந்நடைமுறைகள் வேறுபட்டாலும் வழிபாடு மரபாக நிலைத்தது. இக்காலத்தில் அவை பண்டைப் பாங்கின் நிழலாட்டமாக நிகழ்கின்றன; அருகியே நிகழ்கின்றன.
ஒவ்வொரு இல்லத்திலும் சாமி அறை என்றோர் அறை உண்டு. அங்குக் கிழக்குப் பார்வையான சுவரின் அடிப்பக்கத்தை மஞ்சனால் பூசி மெழுகுவர். தரை ஆவின் சாணத்தால் மெழுகப்படும். அந்திப் போதில் அங்கு விளக்கேற்றி அதற்கு முல்லைப் பூச்சூட்டுவர்; வணங்குவர்; வீட்டு வாயிலின் இரு பக்கங்களிமுள்ள மாடப்புரைகளில் விளக்கேற்றுவர். வணிக இல்லங்களில் இப்பழக்கம் நிறைவாக இல்லையென்றாலும், எந்தவகையான விளக்கேற்றப்பட்டாலும் உடன் வணக்கம் செலுத்தும் பழக்கம் உள்ளது. இது இல்லுறை தெய்வ வழிபாட்டு மரபின் சின்னமாகும்.
சிறப்பு வழிபாடாக ஆண்டுதோறும் மாங்கலிய வழிபாடு (சுமங்கலிப் பிரார்த்தனை) நிகழ்த்தப்படுகிறது. இது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நிகழ்த்தப்படும். ஆடி வெள்ளி, தை வெள்ளி சிறப்பாகக் கொள்ளப்படும். இறந்த மங்கல மகளிரின் நினைவாகப் புத்தாடை எடுத்துப் படையலிட்டு வழிபடுவர். நினைவு நாளில் மட்டுமன்றி இல்லத்தில் போன்ற மங்கல திருமணம், பூப்பு நீராட்டல் நிகழ்ச்சி காரணமாகப் புத்தாடைகள் வாங்கப்படும் காலத்தும் அவற்றை வைத்து விளக்கேற்றி வழிபடுவர்.
ஆண்டு தோறும் புரட்டாசித் திங்களில் கொண்டாடப்படும் கலைமகள் விழாவும் ஒரு வகையில் இல்லுறை தெய்வ வழிபாடாகும்.
காலப்போக்கில் மற்றொரு பழக்கம் உண்டாயிற்று. மகளிர் கூடிக் கொழுக்கட்டை வழிபாடொன்று மேற்கொண்டனர். தலைக்கு ஒருபடி நெல்லும் ஒரு தேங்காயும் இரண்டு பணமும் கொடுப்பர். ஆடி அல்லது தைச் செவ்வாய்க் கிழமையில் நள்ளிரவில் ஒரு வீட்டில் கூடுவர். நெல்லைக் குற்றியிடித்து மாவாக்கித் தேங்காய்த் துருவலிட்டு மண் சட்டியில் புளி, புன்கு, அரச இலைகளையிட்டு நீர்விட்டு மாவால் பல உருவங்களில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை அவிப்பர், இதற்கு உப்பிடுவதில்லை. கொழுக்கட்டைகள் விளக்கு, தாலி, அம்மிக்குளவி, பாடை, சாப்பறை, சட்டி முதலிய உருவங்களில் செய்யப்படும். இவ்வுருவங்களை நோக்கினால், இவை மங்கல மகளிர்க்கு உரியவையும், அன்னார்க்குச் செய்யப்பட்ட இறுதிக் கடன்களின் சின்னங்களுமாக இருப்பதை உணரலாம். இவற்றைப் படைப்பதற்கு ஓர் உரு வேண்டுமென்று ஆவின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்துப் படையலிடுவர். எனவே, இக்கொழுக்கட்டையும் நிகழ்ச்சியும் ‘செவ்வாய்ப் பிள்ளையார் கொழுக்கட்டை’ எனப்பட்டது. மங்கல மகளிர் அல்லாத முதிய மகளிர் இவ்வழிபாட்டின்போது அமைந்து கதை சொல்லுவர். அறிவிற் சிறந்து விளங்கிய அவ்வையார் பற்றிய கதையாக அது அமையும். ஆண் குழந்தைகளைக் கூட இந்நிகழ்ச்சியின்போது இருக்கச் செய்யார். அக்கொழுக்கட்டையை ஆடவர் தின்னத் தர மாட்டார். ஆடி, தைச் செவ்வாய்களில் செய்யாது விட்டால் ‘மறந்தது மாசியில்’ என்று சொல்லி மாசிச் செவ்வாயில் நிகழ்த்துவர். இவ்வழிபாட்டுப் பழக்கம் இக்காலத்தில் சில மரபினரிடம் அருகியே காணப்படுகிறது.
செவ்வாய்க் கிழமை மங்கலக் கிழமை. செவ்வாய்க் கோளுக்கு ‘மங்கலன்’ என்பது ஒரு பெயர் (பிங். 230). ‘மங்கலக்கிழமை தன்னில் கைப்பலி கொடுத்து’ என்று யசோதர காவியமும் (2:58) அறிவிக்கிறது. எனவே மங்கல மகளிர்க்கு உரிய இவ்வழிபாட்டிற்குச் செவ்வாய்க் கிழமையைக் கொண்டனர்.
இல்லுறை தெய்வ வழிபாடுகள் இவ்வாறெல்லாம் நிகழ்ந்தாலும், இதன் அடித்தளம் மறைந்த மங்கல மகளிரது நினைவைப் போற்றி, அவர்தம் இல்லற மாண்புகளை நினைந்து வழிபடுதலேயாகும்.
{{Right|<b>கோ.இ.</b>}}
<section end="இல்லுறை தெய்வம்"/>
<section begin="இலக்கணக்கூறுகள்"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கணக்கூறுகள்:</b>}} ஒரு மொழியின் இலக்கண அமைப்பில் (Grammatical system) காணப் பெறும் நான்கு உட்பிரிவுகளுள் ஒன்று இலக்கணக்கூறு (Grammatical core) ஆகும். இலக்கணக்கூறுகள் ஒரு மொழியில் காணப்பெறும் பெயர் (Noun), வினை (Verb) போன்ற வடிவங்களின் இலக்கணப் பொருளைக் (Grammatical meaning) குறிக்கும் வகையில் அமையும். இவை சொற்களை வகைப்படுத்துவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன.
சான்றாக எண்வேறுபாட்டினைக் குறிப்பிடலாம். எண்வேறுபாடு காரணமாகப் பெயர், வினைகளை ஒருமை, பன்மை வடிவங்களாகப் பகுத்தல் இயலும். இதனைப் போன்றே இடவேறுபாடு காரணமாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை எனப் பெயர், வினைகளை வகைசெய்தலுமுண்டு. இலக்கணக்கூறுகள் எப்போதும் இலக்கணப் பொருளைச் சுட்டி அகரா-<noinclude></noinclude>
sjodjihh8utdd651juwse9olpv5ydzr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/273
250
626295
1933640
1896869
2026-05-14T18:06:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1933640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கணக்கூறுகள்|245|இலக்கணக் கொத்து}}</noinclude>முழுமை வினைமையும் (வந்துவிட்டான்), செயல் நிகழ்வின் வழக்கத்தினைக் குறிக்கும் வகையில் (நாங்கள் கேட்டு வருகிறோம்), வினை நிகழ்வின் வெறுப்பு நிலையினைக் குறிக்கும் வகையில் வெறுப்பு வினைமையும் (செய்து தொலைத்தான்), வினை நிகழ்வினைச் செய்துகாட்டுகின்ற வகையில் செய்துகாட்டுதல் வினைமையும் (நடித்துக் காட்டினார்) அமையப் பெறும்.
ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற இலக்கணக்கூறுகள் தவிர்த்த சில கூறுகள் பிற மொழிகளில் காணப்பட்ட போதிலும், இங்கே தமிழ்மொழியின் கண்ணுள்ள இலக்கணக்கூறுகள் மட்டுமே சுட்டப்பெற்றுள்ளன.
காலப்போக்கில் மொழியின் இலக்கணக்கூறுகளில் மாற்றங்கள் நடைபெறுதலுண்டு. இலக்கணக் கூறுகளில் நடைபெறும் அனைத்து மாற்றங்களும் இலக்கண மாற்றங்கள் (Grammatical changes) எனப்படும்.
இக்காலப் பேச்சுத் தமிழில் ஒப்புமையாக்கத்தின் காரணமாக ஆண்பால் பன்மை, பெண்பால் பன்மை என்னும் பால்களின் தோற்றம் காணப்படுகிறது. வேற்றுமையினைப் பொறுத்தமட்டில் பண்டைக் காலத்தில் ஒப்புப்பொருள் வேற்றுமையாகச் செயற்பட்ட ஐந்தாம் வேற்றுமை காலப்போக்கில் நீங்கற் பொருள் வேற்றுமையாக மாற்றம் பெற்றுள்ளது. ‘டகாரன்’ என்னும் சொல்லாக்க விகுதியினைக் (Derivative suffix) கடன் பெற்றமையால் தமிழில் ‘வீட்டுக்காரன்’, ‘தோட்டக்காரன்’ போன்ற சொல் வடிவங்கள் தோன்றியுள்ளன. ஆங்கில மொழியில் வினைப் புதிய ஆதிக்கம் காரணமாகத் தமிழில் பொருள், வினைமையினைச் சுட்டும் வினைவடிவங்கள் தோன்றியுள்ளன. இத்தகு மாற்றங்கள் அனைத்தும் இலக்கணக்கூற்றில் நடைபெறும் இலக்கண மாற்றத்திற்கு முறையான சான்றுகளாகும்.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Gleason, Hentry A.Jr.,</b> An Introduction to Descriptive Linguistics, New York, 1955.
<b>Hockett, C.F., A</b> Course in Modern Linguistics, Oxford and IBH Publishing Co., New Delhi, 1976.
<b>Harris, Z.S.,</b> Methods in Structural Linguistics, Chicago, 1951.
<b>Lyons, J.,</b> Introduction to Theoretical Linguistics, Cambridge, University Press, Cambridge, 1968.
<b>Malmberk Bertill,</b> New Trends in Linguistics, Stokholm, Sweden, 1967.
<section end="இலக்கணக்கூறுகள்"/>
<section begin="இலக்கணக் கொத்து"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கணக் கொத்து</b>}} தொல்காப்பியம் முதல் இலக்கண விளக்கம் வரையுள்ள நூல்களிற் காணப்படும் இலக்கண நுணுக்கங்கள் சிலவற்றைத் தொகுத்துணர்த்தும் நூலாகும். இலக்கண நுணுக்கங்களைத் தொகுத்துணர்த்துவதால் இலக்கணக் கொத்து எனப்பெயர் சூட்டியதாக இதன் ஆசிரியர் சாமிநாத தேசிகரே உரைத்துள்ளார். இந்நூல் எழுந்த காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இதுவரை இலக்கண ஆய்வு நூல் ஒன்று கூடத் தோன்றவில்லை. இக்குறையைப் போக்க எழுந்த முதல் ஆய்வுநூல் இது; வடமொழியும் தென்மொழியுமாகிய இருமொழியிலக்கண ஒப்பீட்டு நூலாகும்.
இதன் குறிக்கோல் தென்றமிழ் நாட்டில் வழங்கும் ஆரியமும் தமிழுமாகிய இரு மொழிகளுக்கும் இலக்கண வகையிற் சில வேறுபாடுகள் இருப்பினும் குறியீடுகள், சொல் இலக்கணம், பாகுபாடுகள், தொகையும் தொடருமாகிய மொழிநடை, பொருளமைதி முதலான பலவகையில் இம்மொழிகள் ஒரு நோக்குடையனவே என்பதையும், பெயரளவில் காணப்படும் வேறுபாடு மொழி வேறுபாட்டால் அமைந்தனவே என்பதையும் சுட்டிக்காட்டி, ‘இலக்கணம் ஒன்றே’ என்பதை நிறுவுகிறது. நூல் எழுந்த காலம், அதன் மொழியமைப்பு, கருதுகோள் ஆகிய இவற்றைக் கவனியாமலே உரையாசிரியர்கள் தத்தம் காலச்சூழலுக்கும் கருத்து வளர்ச்சிக்கும் ஏற்ப உரை எழுதினர். இலக்கிய ஆட்சிகளை எடுத்துக்காட்டினார். அதனால், கருத்து மாற்றங்களும் தவறுகளும் புகுந்தன. நூலாசிரியனே உரையும் உதாரணங்களும் பின்னணியான ஆதரவு இலக்கியங்களும் இவை இவைதாம் என்று காட்டிவிட்டால் அத்தகைய பெருந்தவறு நிகழாதே என்று கருதி, இந்நூலாசிரியரே உரையையும் எழுதினார். இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய முயற்சி.
வடமொழியில் தோன்றிய சத்த சாத்திரம் எனப்படும் வியாகரண நூல் சொல்லிலக்கணம் ஒன்றையே கூறுவதுபோல, இந்நூலும் சொல்லிலக்கணம் பற்றிய ஆய்வுக் குறிப்புகளையே தொகுத்த அளிக்கிறது என்பர் சிலர். சொல்லுக்கு முதல் எழுத்தாதலானும், சொற்கள் பொருட்பாகுபாடுகளைத் தாங்கியே இயங்குவதாலும், இப்பொருட்கோட்டை செய்யுளேயாதலானும், அவை அணிபெற அமைக்க வேண்டிய சூழலாலும் ஐந்திலக்கண ஆய்வு நுணுக்கங்களையும் ஆங்காங்குச் சொல்லிச் செல்வ-<noinclude></noinclude>
eo75ye40pccgbmo9tf8z5rydbxjuj7u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/276
250
626298
1933641
1896874
2026-05-14T18:07:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1933641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கணக் கொத்து|248|இலக்கண தீபம்}}</noinclude>வினை புடைபெயர்ச்சியை யுணர்த்தும் முதனிலைகளையன்றிப் பெயர், இடை, உரிச்சொற்களையும் அடியாகக் கொண்டு பிறக்கும். வினைகள் தனிவினை, தொடர்வினை என இருவகைப்படும். நட, வா, போ, இரு முதலியன தனிவினைகள். தனிவினை என்றால் விகுகி, இடைநிலை முதலியவற்றோடு புணராது வினைப்பகுதி மட்டும் தனித்திருப்பதாம். தொடர்வினையாவது வினைப்பகுதிகளும் பெயர், இடை, உரிச்சொற்கள், விகுதி முதலியவற்றோடு இணைந்தேயியங்குவதாம். திணை, பால், எண், இடங்களையும் உணர நிற்பதாம். மொழிகளைத் தனிமொழி, தொடர்மொழி என்பது போல வினைகளையும் சொல்லலாம் என ஒருமரபைப் புனைவர். அளி, எடு, கொடு, இடி முதலான தனிவினைகளே தொழிற்பெயர்விகுதி, முற்று, பெயரெச்ச வினை, எச்ச விகுதிகளோடு கூடித் தொழிற்பெயர், வினை முற்று, வினையெச்சம் பெயரெச்சம் முதலான வினை வேறுபாடுகள் அனைத்துமாதலுண்டு. இவை போன்ற வியத்தகு நுணுக்கங்கள் பல.
‘வேண்டும்’, ‘தகும்’, ‘படும்’ என்பன மூன்றையும் பற்றி உரையாசிரியர்கள் எச்சமாயும், முற்றாயும், இவற்றிற்குப் பொதுவாகிய செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினையாகவும் கருதி ஆங்காங்குத் தெளிவின்றி கூறிப்போயினராக, இந்நூலாசிரியர் மிக எளிமையில், ‘செய்வினை ஆஅதும் என்னும் அவர்’, ‘ஒளிமாழ்கும் செய்வினை ஓஒதல் வேண்டும்’ என்ற குறட்பாவில், அவர் ...... வேண்டும். அங்ஙனமே ‘யான் போகல் வேண்டும்’ ‘நீ உணர்தல் வேண்டும்’ என்ற வழக்காற்றைப் பாருங்கள்! வேண்டும் தகும் படும் என்பன பல்லோர்படர்க்கை. முன்னிலை தன்மையிற் செல்லாதாகும் செய்யும் என்முற்றே என்ற மரபுக்கு மாறி வந்திருக்கின்றனவே! ஆதலால், அவை செய்யுமென் முற்றாதல் யாங்ஙனம்? என்ற முடிபையும், இவை மூன்றுமே தேற்றப் பொருளவாய் ‘வேண்டுவது’, ‘தக்கது’, ‘படுவது’ எனத் தொழிற் பெயராய் நிற்கும் என்று ஐய முடிச்சை யவிழ்த்துத் இலக்கணக் கொள்கையை நீக்குகிறது. இங்ஙனமே ‘வேறு’ ‘இல்லை’, ‘உண்டு’ என்பவற்றின் விளக்கமும் ஆகும்.
தொல்காப்பியனார் ‘இன்மைசெப்பல்’, ‘வேறு’ என்பனவற்றைப் பொதுவினை என்றனர் (சொல். 224). அவர் காலத்தில் ‘உண்டு’ என்பது ஒன்றன்பால் வினையாக இருந்தது. பிற்காலத்தில் அது பொது வினையாயிற்று. அங்ஙனமே தொல்காப்பியனார் காலத்து உயர்திணைப் பொதுக்குறிப்பு வினையும் படர்க்கைக்கே வந்த வியங்கோளும் பிற்காலத்தில் பொதுவினையாயின. இவையனைத்தையும் நுனித்துக் கண்ட இந்நூலாசிரியர் ‘வேறு இல்லை’ முதலான பத்தினையும் பொதுவினை என்றார்.
இங்ஙனம் காலந்தோறும் இலக்கியப் பரப்பில் வழக்கால் மாறும் இலக்கண நுணுக்கங்களையும் மாற்றங்களையும் கண்டு காட்டியுள்ளார்.
வினைகள் மனம், மொழி, மெய், அறிவு ஆகிய நான்கன் அசைவாலும் அசைவின்மையாலும் பல்வகையால் நல்வினை, தீவினை, வேறுவினைகளாகி இத்தகைய மூவகை வினைகளும் அறிந்தும், அறியாமலும், அறிவற்ற நிலையிலும் செய்யப்படுவதாலும் மூவகைப்பட்டு, நல்வினையாவன சில தீவினை எனப்பட்டும், தீவினை எனப்படுவன சில நல்வினைப்பட்டும், பல இலக்கணங்களைப் பெற்றுவரும் என்பர். இவ்வேறுபாடுகள் அனைத்தும் மெய்ப்பொருளியலறிவும் புராண இலக்கியங்களும் தந்தவை. இவற்றாலும் இலக்கண வேறுபாடு என்பதைக் கண்டு காட்டிய பெருமை இந்நூலாசிரியரையே சேரும்.
{{Right|<b>த.ச.</b>}}
<section end="இலக்கணக் கொத்து"/>
<section begin="இலக்கண தீபம்"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கண தீபம்</b>}} கற்றாரிடையே வழக்கில் இல்லாத இலக்கண நூல்களுள் ஒன்று. தனி நூலாக இதுவரை இது அச்சேறவில்லை, ‘செந்தமிழ்’ இதழில் 1916–ஆம் ஆண்டில் இது வெளிவந்துள்ளது. இரா. இராகவையங்கார் வைத்திருந்த ஒரே பிரதியைப் பெற்றுப் பதிப்பித்ததாகப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. நூல் தோன்றிய காலமும் அறியமுடியவில்லை.
பன்னிரு சீர்கள் கொண்ட பதினான்கு விருத்தங்களால் ஆயது இச்சிறுநூல். சிதைந்த நிலையில் உள்ள இறுதிப் பாடல் உள்ளவாறே அச்சிடப்பெற்றுள்ளது. பிற இலக்கண நூல்கள் போல இலக்கணம் கூறாமல். எண்ணிக்கை விவரம் மட்டும் கூறுவது இந்நூல். காட்டாக, புறத்திணை பற்றிய எட்டாம் பாடல் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் திணை, துறைகளின் துறைகளின் எண்ணிக்கையை ‘ஏய்ந்தவிரி வெட்சியினிலிருபது கரந்தையினி லீரேழு வஞ்சிமூவேழிகற் காஞ்சியிருபத் திரண்டிருப தோடென்ப தெழிலுழிஞை நொச்சியொன்பான்’ எனப் பாடலாக்கித் தருகிறது. இவ்வாறே அனைத்துப் பாடல்களிலும் தொகை வகை எண்ணிக்கைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் ஆறு பாடல்களில் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பற்றிய செய்திகளும், ஏழாம் பாடலில் அகத்திணைச் செய்திகளும், எட்டாம் பாடலில் புறத்தினைச் செய்திகளும், ஒன்பதாம் பாடலில் அணிநூற் செய்திகளும், பத்தாம் பாடலில் பாட்டியற் செய்திகளும், பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்றாம் பாடல்களில் முச்சங்க வரலாற்றுச் செய்தி-<noinclude></noinclude>
1l0krbzc5p5whrycyztnoqyrtma6acy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/277
250
626299
1933643
1896876
2026-05-14T18:12:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1933643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கணப் போலி|249|இலக்கணம்}}</noinclude>களும் பேசப்படுகின்றன. பதினான்காம் பாடல் சிதைந்துள்ள போதிலும் உரை வரலாறு கூறுவதாக உள்ளது.
இறையனார் களவியல் உரை கூறும் தமிழ்ச்சங்க வரலாற்றுச் செய்திகளுக்கும், இவ்விலக்கண தீபம் கூறும் வரலாற்றுச் செய்திகளுக்கும் ஒரு சில வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. முதற்சங்கம் இருந்த புலவர் தொகை 549 என்று களவியல் உரை கூற 449 என்று இந்நூல் குறிக்கும். இடைச்சங்க, கடைச்சங்கப் புலவர் தொகையிலும் வேறுபாடு காணப்படுகிறது.
கவிதை இயற்ற விரும்புவர்கள் எல்லா இலக்கணங்களையும் நன்கு அறிந்து இலக்கணம் தவறாது கவிதை பாடுவராயின் அவர்கள் கவிதைகள் ‘இலக்கணக் கவிதைகள்’ ஆம் என்றும், அல்லாதார் செய்யும் கவிதைகள் ‘அவலக்கணக் கவிதைகள்’ ஆம் என்றும் இந்நூல் மொழிகிறது.
::‘அறிந்துசொல் வதிலக்க ணக்கவிதை யல்லாத
::தவலக்க ணக்கவிதையே’
என்று பெரும்பாலான பாடல்களின் இறுதியில் மகுடம் அமைந்துள்ளது குறிக்கத்தக்கது.
இலக்கணம் கூறாது வெறும் எண்ணிக்கை மட்டுமே கூறுதல் இந்நூலைப் பலரும் போற்றாமைக்குரிய காரணங்களில் ஒன்றாதல் கூடும்.
{{right|<b>அ.வி.</b>}}
<section end="இலக்கண தீபம்"/>
<section begin="இலக்கணப் போலி"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கணப் போலி:</b>}} போலி என்பது போல அமைந்தது; உண்மை அல்லாதது என்றும் பொருளினைப் பொதுவாகக் கொண்டது. இலக்கண நூலில் அது தனக்கெனச் சிறப்பானதொரு பொருள் கொண்டு விளங்குகிறது. மொழி அமைப்பிலிருந்து ஓர் உறுப்பு முன்பின்னாக மாறி அமைந்தாலும், ஒரு பகுதியோ முழுவதுமோ மருவி அமைந்தாலும் குழப்பமின்றி உரிய பொருளை மக்கள் மொழியை வழங்குகின்ற மரபின் ஆற்றலால் தருதலைப் போலி என்று இலக்கண நூலூர் வழங்குகின்றனர். காட்டாக, ஞாத்த, புறநகர் என்பனவற்றைச் சுட்டலாம். நகர, யகரங்கள் தமிழில் தனித்தனி ஒலியன்கள், யகரமுள்ள இடத்தில் ஞகரத்தையோ ஞகரமுள்ள இடத்தில் நகரத்தையோ இட்டு எழுதினால் பொருள் மாறிவிடும். ஆனால் மிக அருமையாக வழக்கின் ஆற்றலால் சிற்சில இடங்களில் சிற்சில எழுத்துகள் மாறிவரினும் பொருள் கெடுதல் இல்லை. ‘யாத்த’, ‘ஞாத்த’ என்ற சொற்களில் உள்ள யகர, ஞகர எழுத்துக்களின் மாற்றங்களால் பொருள் மாறவில்லை. இப்படியே, நகரினது புறம் என்ற பொருளில் நகர்ப்புறம் என்னும் தொடர் ‘புறநகர்’ என முன்பின்னாக மாறி அமைகிறது. எனினும் பொருளில் குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் நகரினது புறம் என்னும் ஆறன்தொகை புறத்தின் கண் நகரம் என ஏழன் தொகையாக மாறி அமைகிறது. இப்படி இலக்கண மாற்றம் ஏற்படினும் பொருளில் மாற்றம் ஏற்படவில்லை. இத்தகைய சொல் தொகை அமைப்புகளையே அதாவது ஓர் எழுத்துக்கு மற்றோர் எழுத்து அமைந்து பொருள் மாறா நிலையினையும் ஒரு தொகை முன்பின்னாக மாறி அமைந்தும் பொருள் மாறா நிலையினையும் போலி என்பதாகத் தமிழ் அறிஞர் குறித்தனர்.
இவ்விரு வகை மொழிப் போலிகளில் சொற்கள் முன்பின்னாக அமைந்து இலக்கணமரபில் மாறுபட்டாலும் வழக்காற்றலால் உரிய பொருளை வழங்குதலால் புறநகர் முதலியவற்றை இலக்கணப்போலி என்றனர். இதனை, ‘தகுதியும் வழக்கும்’ என்னும் நூற்பாவில் (தொல். சொல். 17) வழக்கின்கண் அடக்கித் தொல்காப்பியனார் கூறுவதாக இளம்பூரணரும் கல்லாடனாரும் குறிப்பர். அவர்கள் இதனை இக்கணத்தொடு பொருந்திய மருஉ வழக்கு என்பர்.
பவணந்தியார், நன்னூல் 267–ஆம் நூற்பாவில் வழக்கு இன்னது என்று விளக்கும்போது இலக்கணப் போலியினைக் குறிப்பிடுகின்றனர். நன்னூல் விருத்தியுரை ஆசிரியர் சிவஞானமுனிவர் இதனைத் தெளிவுபடுத்தும் வகையில், ‘இலக்கண நெறியால் வருவதனை இலக்கணமுடையது என்றும் இலக்கணமுடையதன்றிப் படைப்புக்காலத்து இலக்கணமுடையதோடு ஒருங்கு படைக்கப்பட்டது போலத் தொன்று தொட்டன்றி இடையே வருவதனை இலக்கணப் போலி என்றும், தொன்றுதொட்டன்றி இடையே இலக்கணஞ் சிதைந்து மரீஇயதனை மரூஉ என்றும்...’ என்று குறிப்பிடுவர்.
‘நகர்ப்புறம்’ என்பதனைப் ‘புறநகர்’ என்றும், ‘புறவுலா’ என்பதனை ‘உலாப்புறம்’ என்றும், ‘கண்மீ’ என்பதனை ‘மீகண்’ என்றும், ‘கோவில்’ என்பதனைக் ‘கோயில்’ என்றும், ‘பொதுவில்’ என்பதனை ‘பொதியில்’ என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன ‘இலக்கணப் போலி’ என்று எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குவர். எனவே, இலக்கணம் இல்லாததாயினும், இலக்கணமுடையது போலச் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப்போலி என்று கூறலாம்.
{{Right|<b>தே.ச.</b>}}
<section end="இலக்கணப் போலி"/>
<section begin="இலக்கணம்"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கணம்:</b>}} இக்கால மொழியியலார், ‘இப்படியிருக்கவேண்டுமென்று சிலர் விதித்துக் கூறுவதை விட, இவ்வாறு மொழி உள்ளது என்று விளக்குவதே<noinclude></noinclude>
pyiz1ifzx3j268arzrpa4fn0sv729i6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/280
250
626302
1933644
1896879
2026-05-14T18:14:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1933644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கணம்|252|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்}}</noinclude>வெண்பா யாப்பால் ஆன இந்நூலில் 103 வெண்பாக்கள் உள்ளன.
நவநீதப்பாட்டியல் நவநீதநடன் என்னும் வைணவரால் இயற்றப்பட்டது. கலித்துறை யாப்பால் ஆன இந்நூல் ‘கலித்துறைப் பாட்டியல்’ எனவும் பெயர் பெறுகிறது.
வரையறுத்த பாட்டியல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, ‘சம்பந்தப் பாட்டியல்’ என்றும் இது சொல்லப்படும். மங்கலப் பொருத்தத்தினை மட்டுமே இது வரையறுப்பதால் இப்பெயர் பெற்றது.
பிரபந்த மரபியல் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பர். இதன் ஆசிரியர் இன்னார் என்பது தெரியவில்லை. பிரபந்த தீபிகை, பாப்புவையர் எனப்படும் முத்துவேங்டசுப்பையரால் பாடப்பட்டது. இந்நூல் கி.பி. 19–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சிதம்பரப்பாட்டியல் பிற பாட்டியலிலிருந்து வேறுபட்டது. இது பரஞ்சோதியாரால் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
தமிழில் அணியிலக்கணம் பற்றிய நூல்கள் தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திராலோகம், குவலயானந்தம் முதலியன ஆகும். தண்டியலங்காரம் வடமொழி அலங்கார நூலை மொழிபெயர்த்து தண்டி என்பவரால் எழுதப்பட்டதாகும். இது கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. மாறன் அலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டது. இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. குவலயானந்தம் என்பதன் நூலாசிரியர் மாணிக்கவாசகர் ஆவார். இந்நூல் 299 நூற்பாக்களைக் கொண்டது; வடமொழி நூலை முதல்நூலாக உடையது. இந்த அணியிலக்கண நூல் வடமொழி நூலான குவலயானந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இதனைச் சங்கரநாராயண சாத்திரிகள் என்னும் வடமொழி அறிஞர் மொழிபெயர்த்துள்ளார். சந்திராலோகம் என்பது வடமொழித் தனிநூலாகிய சந்திராலோகத்தின் மொழிபெயர்ப்பாகும். இது முத்துசாமி ஐயங்காரால் இயற்றப்பட்டது. இது 1909–ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டது.
ஐந்திலக்கணத்தோடு புலமை இலக்கணத்தையும் சேர்த்து அறுவகை இலக்கணம் என்னும் பெயரில் தண்டபாணி சுவாமிகள் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். ஏழாம் இலக்கணமும் அவரால் எழுதப்பட்டதென்பர். தண்டபாணி சுவாமிகளின் வண்ணத்தியல்பு, குலாம்காதிறு நாவலரின் பொருத்த விளக்கம். சீனிவாசராகவாசாரியாரின் யாப்பொளி ஆகியவை இக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்கள்.
இலக்கண நூல்கள் மட்டுமன்றி இலக்கண உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், ஆறுமுகநாவலர், இராமானுசக் கவிராயர், சடகோப இராமானுசாச்சாரியார், களவியலுரைகாரர் ஆகியோரும் மூல இலக்கண நூல்கள் பல தோன்ற முன்னோடிகளாய் அமைந்துள்ளனர். யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற்காரிகை, வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய சான்றோர்களும் உரையாசிரியர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழில் காலந்தோறும் மொழியின் வளர்ச்சிக்கேற்ப இலக்கண நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன. வழாநிலைகளும் வழுவமைதிகளும் சமுதாய வளர்ச்சிக்கேற்ப மொழியினையும் இலக்கியத்தையும் ஓரளவு நெகிழ்ந்து கொடுக்கச் செய்யும் வகையில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன.
தமிழிலக்கண வளர்ச்சியில் சமணசமயத்தாருக்கும் பிற சமயத்தாருக்கும் பெரும் பங்குண்டு. கிறித்தவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பும் சமய அறிஞர்களுக்கென்று பற்பல இலக்கணங்களை எழுதினர். வீரமாமுனியர் கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழிலக்கணம், கிளாவிசு என்னும் இலக்கண நூல் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
தொல்காப்பியரது உரியியலைப் பின்பற்றித் தமிழில் எழுந்த நிகண்டுகளும் அகராதிகளும் குறிக்கத்தக்கவையாகும்.
தமிழ் இலக்கணம் மொழி, இலக்கிய மரபுகளைக் காக்கும் வேலிகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஒருசில வெறும் பழமைச் சின்னங்களாக மட்டுமே கருதப்படும் நிலையும் காணப்படுகிறது.
{{Right|<b>நா.செ.</b>}}
<section end="இலக்கணம்"/>
<section begin="இலக்கணம் சிதம்பரநாத முனிவர்"/>
{{dhr}}
{{larger|<b>இலக்கணம் சிதம்பரநாத முனிவர்</b>}} சிவஞான முனிவரின் மாணவர்; திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் பாடியவர்; சீர்காழி ஆலயப் பொறுப்பில் இருந்தவர். இவரோடு கல்வி கற்ற பெரியவர் தில்லையாடி அருணாசலக் கவிராயர். அவர்பால் முனிவர் மிகுந்த மதிப்பும் நட்பும் கொண்டிருந்தார். ஒரு முறை வணிகத்தின் பொருட்டுக் கவிஞர் சீர்காழிக்கு வந்தபோது, கட்டளை விசாரணையில் சுவாமிகள்<noinclude></noinclude>
3rrctz14h351i78ovnjmftlcu1cmqad
விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1
4
631695
1933609
1929559
2026-05-14T13:29:51Z
Gunathamizh
3151
1933609
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
31t2ty7esn78v181bdavn5wiz30rlmd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/2
250
642427
1933651
1930984
2026-05-15T01:06:43Z
Rabiyathul
5890
8</b>
1933651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 8</b> |}}
{{tlr|ஆசிரியர்|<b>அறிஞர் அண்ணா</b>|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}{{rule}}
{| style="margin:auto;"
{{tlr|நூல் தலைப்பு | <b>{{larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}</b>| :}}
{{tlr| |{{gap+|1}}<b>தொகுதி – 8</b>|}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர். அண்ணா|:}}
|}
வெளியீட்டாளர்
-
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
எழும்பூர், சென்னை - 600 008.
தமிழ்நாடு அரசு
தமிழ்
2021
பதிப்புரிமை
:
மொழி
பதிப்பு ஆண்டு
விலை
120
பக்கம்
176+X
படிகள்
-தாள்
:
நூலின் அளவு
அச்சிட்டோர்
:
1500
70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்'
J&டெமி
லகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
சி.ஐ.டி. வளாகம், தரமணி,
சென்னை - 600 13.
நூல் கிடைக்குமிடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளாகம், ஆல்சு சாலை,
எழும்பூர், சென்னை -600 008.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை
சி.ஜ.டி., வளரகம், தரமணி,
சென்னை 600 113.<noinclude></noinclude>
ib4cgh8keun3gz3s5unqyxlgeicbyqs
1933652
1933651
2026-05-15T01:13:15Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 8</b> |}}
{{tlr|ஆசிரியர்|<b>அறிஞர் அண்ணா</b>|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 176 + X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் |உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்|தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
qr89ffgxlzc8xfpzu35ib59xp8ahids
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/30
250
642460
1933688
1931313
2026-05-15T06:22:52Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>கட்கு இன் புதுமலர்
முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல்
நோம் என் நெஞ்சே!</poem>}}
தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு
மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்!
நமதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்குவதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக
இல்லை! தெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும். நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும் நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும். காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில்
தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது.
{{left_margin|3em|<poem>நோம் என் நெஞ்சே
நோம் என் நெஞ்சே!
</poem>}}
என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது - ஆனால் முன்பு. அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் - கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்... ...!!
பிரிவு குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன.
நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே - அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார்.<noinclude></noinclude>
ow546j4zucdcepz4161x1r7pctadwfo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/31
250
642461
1933689
1931315
2026-05-15T06:27:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||21</b>}}{{rule}}</noinclude>
தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தூற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை, இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!" என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் 'யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள்; பதில்
அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை: சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத்
‘தோட்டத்துக்கு வா’! என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை
காட்டுவதுபோல இருந்தது" என்றேன்.
அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், “அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப்
பேசுகிறார்கள்!” என்று பேசினார். கண்டனம்! அகம், புறம் என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் அமைச்சருக்குப்
பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள்
எண்ணி அமுல் நடத்தும் நாள்!!
தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டுதான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி,<noinclude></noinclude>
35hae35nla0apgt5c6tndb6bq91tfz5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/32
250
642462
1933690
1931316
2026-05-15T06:33:41Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக்
கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா
எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல்
வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று
எண்ணிப் பாரேன்!
தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும்
பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி,
காணக் களிப்பாகத்தான் இருக்கிறது.
உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி,
மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே
எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச்
செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு
வீற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு;
அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத்
தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக்
கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது;
தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர்.
எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன
அரண் இருந்திட முடியும்!
இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி
விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத்
தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது;
அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள
வாய்ப்பும் மிகக் குறைவு!
வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல்
புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம்
ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல்,
தலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும்
மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்;
அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்கரகப் பாடுபட, கஷ்ட
நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல
மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை
முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude>
m0m5z218do092d7l8a4ca5h5qzm5zpx
1933691
1933690
2026-05-15T06:34:36Z
Fathima Shaila
6101
/* Not proofread */
1933691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Fathima Shaila" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா
எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல்
வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று
எண்ணிப் பாரேன்!
தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும்
பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி,
காணக் களிப்பாகத்தான் இருக்கிறது.
உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி,
மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே
எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச்
செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு
வீற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு;
அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத்
தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக்
கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது;
தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர்.
எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன
அரண் இருந்திட முடியும்!
இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி
விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத்
தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது;
அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள
வாய்ப்பும் மிகக் குறைவு!
வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல்
புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம்
ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல்,
தலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும்
மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்;
அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்கரகப் பாடுபட, கஷ்ட
நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல
மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை
முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude>
80apf29jwdhn06p43osvi8arsxdbgyg
1933692
1933691
2026-05-15T06:37:05Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று
எண்ணிப் பாரேன்!
தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது.
உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச்
செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக்
கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர்.
எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்!
இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு!
வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல்,
நலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude>
i3xz6xu8oe70s4iz8z5ngcrf3m2l56u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/33
250
642463
1933693
1931317
2026-05-15T06:44:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||23</b>}}{{rule}}</noinclude>கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப்பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும், அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில்
இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே!
.
இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்" வீரக் குரலெழுப்புவது
கேட்க, வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்ட ல் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.
நீ அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்புகளைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்னவென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற
எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந்தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் 'கூடிக் கொண்டதாலேயே' மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும். 'கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா' என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான்,
உள்ளபடி. சிரிப்பு வருகிறது!!
மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம்
ஆடுவது போலிருக்கிறதல்லவா!!<noinclude></noinclude>
mq6p1blhrottsflom23sqmzi5jxql2b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/34
250
642464
1933694
1931318
2026-05-15T06:45:51Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு,
"பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் 'பாயைச் சுருட்டிக் கொண்டேன்" என்று கூறிப் பார்க்கிறார்.
அமிர்த பஜார் பத்திரிகை
பிரீபிரஸ்
இந்துஸ்தான் டைம்ஸ்
போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும்
தாக்குகின்றன.
எனக்கு உள்ளபடி வருத்தம் அமைச்சர் தமது உள்ளத்திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா
முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளா என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட்டி விட்டது!
வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன.
காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார் சொல்வது உண்மையாசுத்தானே இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!<noinclude></noinclude>
68ncrlu29b6567cg9mah6gtj2tbx5hv
1933695
1933694
2026-05-15T06:46:38Z
Fathima Shaila
6101
1933695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு,
"பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் 'பாயைச் சுருட்டிக் கொண்டேன்" என்று கூறிப் பார்க்கிறார்.
{{left_margin|3em|<poem>அமிர்த பஜார் பத்திரிகை
பிரீபிரஸ்
இந்துஸ்தான் டைம்ஸ்</poem>}}
போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும்
தாக்குகின்றன.
எனக்கு உள்ளபடி வருத்தம் அமைச்சர் தமது உள்ளத்திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா
முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளா என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட்டி விட்டது!
வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன.
காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார் சொல்வது உண்மையாசுத்தானே இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!<noinclude></noinclude>
22n9pl04oyrwlhiptc57nozcc7ps5dx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/35
250
642465
1933696
1931319
2026-05-15T06:49:02Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||25</b>}}{{rule}}</noinclude>
நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும்.
அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் - தீர்ப்பு அளிப்பாய்!
ஆங்கில் இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும், மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன்
உறவாட் அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்.
'திராவிட நாடு' மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப்பட வேண்டும்.
இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!!
தித்திப்பான செய்தி - 'அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை இவன் எம்.ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள்
நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ - அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா?
எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, 'திராவிட நாடு' பதினாறாம் ஆண்டு பெறுகிறது.
இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க<noinclude></noinclude>
ie4y26cyowojlxhikaqzmzrwm9xl9y9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/36
250
642466
1933697
1931320
2026-05-15T06:55:35Z
Fathima Shaila
6101
1933697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக
'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம்
புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள்
தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட
இயலும்,
உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன்
தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர
இருக்கிறது.
தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக
அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று
ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே!
உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக்
கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன்
உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும்
முறையில் புதியன, இனியன, பல; இனி
அண்ணன்,
27-7-'57<noinclude></noinclude>
k1r89v0jaf5z492r1of9rlqlu5b6exe
1933716
1933697
2026-05-15T09:55:06Z
Fathima Shaila
6101
/* Problematic */
1933716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள்
தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும்,
உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது.
தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன்
உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி.
அண்ணன்,
27-7-'57<noinclude></noinclude>
nm91g3mw6yi0rlk1x8p6v82sbgd85ms
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/37
250
642467
1933718
1931503
2026-05-15T09:57:05Z
Fathima Shaila
6101
1933718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 89
இன்றையப் பகைவர்
நாளைய நண்பர்!
'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து -
நமது இலட்சியம்
தம்பி!
இனியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என்
கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது.
உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்
பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும்
எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி
எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும்
எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து
அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன
என்பதனையா அறிந்துகொள்ள முடியாது?
வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான்
ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின்
மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ
ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி,
தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude>
t10nbz5d1d7unkk9r8uf5jzvj8snqga
1933719
1933718
2026-05-15T09:58:33Z
Fathima Shaila
6101
/* Problematic */
1933719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம்: 89
இன்றையப் பகைவர்
நாளைய நண்பர்!
'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து -
நமது இலட்சியம்
தம்பி!
இனியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என்
கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும்
எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து
அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது?
வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude>
rxf79wwdxjxogco9esipnlu8dmjr3hq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/38
250
642468
1933720
1931323
2026-05-15T10:01:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்கமாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரிட..., நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது" என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்!
"காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி" என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப உழைத்துப் பிழைத்துப் போ! என்று உறுமிடும் முதலாளியின்
குரல்போல் ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன் உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்டமளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் - அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக
உழைக்கிறேன். கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும்<noinclude></noinclude>
mwdk3ba2o5jn9kca9771r1617ebpwrf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/39
250
642469
1933721
1931325
2026-05-15T10:03:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||29</b>}}{{rule}}</noinclude>பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தினனாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை -
காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச்சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை.
தம்பி இனியன் என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர்.
"அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!" என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு
அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் சுலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது!
{{c|<poem>இனியன கேட்கின்
இயம்புதல் கேளீர்,</poem>}}<noinclude></noinclude>
soagh8shgdxp0qvgh33spbeg6flgr9i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/40
250
642470
1933722
1931326
2026-05-15T10:06:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
<poem>{{c|இனிது இனிது
எகிப்தின் எழுச்சி!
அதனினும் இனிது
ஆணவம் தவிர்த்து
ஆங்கில அரசு
அடி பணிந்ததுவே!}}</poem>
என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்!
அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் - நழுவ விடாது அவைதமைப்
பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால்,
அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு தெற்கு என்பதாகவே. இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார்.
எந்தப் பிரச்சினையின் மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப்பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிலித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் படவில்லை தம்பி!-
வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!.<noinclude></noinclude>
p26mk0ik86o9gu0hvw1xlfkze70ixh8
1933723
1933722
2026-05-15T10:07:20Z
Fathima Shaila
6101
1933723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|15em|<poem>இனிது இனிது
எகிப்தின் எழுச்சி!
அதனினும் இனிது
ஆணவம் தவிர்த்து
ஆங்கில அரசு
அடி பணிந்ததுவே!</poem>}}
என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்!
அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் - நழுவ விடாது அவைதமைப்
பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால்,
அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு தெற்கு என்பதாகவே. இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார்.
எந்தப் பிரச்சினையின் மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப்பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிலித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் படவில்லை தம்பி!-
வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!.<noinclude></noinclude>
586odc1uhml5qae2mm4glof7azefpdc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/41
250
642471
1933724
1931327
2026-05-15T10:11:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||31</b>}}{{rule}}</noinclude>
சென்னைச் சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும்
திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் காலம் - கடந்துவிடுமுன்
காரிய மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன்.
வரி அதிகம்: தொழில் குறைவு அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்கவில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள். குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை
அலங்கோலமானதாக்கி வருகிறார்கள். இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம். அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் 'புதியவர்களோ' நம்மை நிந்திக்கின்றார்கள். இல்லை, நமது
அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள்.
எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே 'பாணி' தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள்.
சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள<noinclude></noinclude>
jkppfdrlqdrltvqb3e97i3fquobdvoj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/42
250
642472
1933725
1931329
2026-05-15T10:14:51Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன் - கோபங்கொள்ளவில்லை.
நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும்
கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட
இடமில்லை.
நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!!
ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும்
கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது!
இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும்.
அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள்.
பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப்படவில்லை.
மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!!
தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன்ரசாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன்
காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் ‘இலட்சியம்’ தீதானது,<noinclude></noinclude>
csb9kjuvykokrezed326elceial2cnp
1933726
1933725
2026-05-15T10:16:18Z
Fathima Shaila
6101
1933726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன் - கோபங்கொள்ளவில்லை.
நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும்
கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிடக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட
இடமில்லை.
நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!!
ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும்
கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது!
இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும்.
அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள்.
பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப்படவில்லை.
மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!!
தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன்ரசாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன்
காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் ‘இலட்சியம்’ தீதானது,<noinclude></noinclude>
q5kb6n26xexc6rlqce1jsrlgb816jdh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/43
250
642473
1933727
1931331
2026-05-15T10:21:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||33</b>}}{{rule}}</noinclude>கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக்
கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்!
அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! - இலாபம்! - வேறு இருப்பதற்கில்லை.
தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று
நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும், நமது கொள்கையின் நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது
இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே. இவர்கள் கொள்ளுவார்கள்!.
பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணியாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு
அளித்திடுவார்கள்.
நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம்
சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது நாம் நமது கொள்கையை எடுத்துரைப்பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை
காரணம் கதிரொளி கிளம்பவில்லை என்றுதான் எண்ணிக் கொள்கிறேன்.
தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன்.
{{left_margin|3em|<poem>இனியன கேட்பின்
என்னரும், தம்பி!
இனிது இனிது</poem>}}<noinclude></noinclude>
fukk491xarxtcibzvzbus2qiv5vemfs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/44
250
642474
1933728
1931332
2026-05-15T10:29:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1933728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்.
அடுத்ததன் நண்பராய்
ஆகுதல் அன்றோ!</poem>}}
என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன், தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம்
காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவே ண்டிய உரிய மரியாதையைத் தந்தே
உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.
அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும்
இருக்கின்றீர்கள் ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை, வடக்கே குவிந்து விட்டிருக்கிறது" என்று பேசினேன் பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி.மு.க.காரர்கள் அரசியலுக்கு இலாயக்கில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்என்ற செய்தியைக் காண்கிறேன்!
நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ,
"நாங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்!
பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதல் முடியும்?
நம்மை அரசியலுக்கு லாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே என்று
வருத்தப்பட்டுப் பயன் என்ன?<noinclude></noinclude>
snvxi4xdmfpoig8wqzlyxfjgkbswk99
1933729
1933728
2026-05-15T10:30:19Z
Fathima Shaila
6101
1933729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்.
அடுத்ததன் நண்பராய்
ஆகுதல் அன்றோ!</poem>}}
என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்.
தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவே ண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.
அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும்
இருக்கின்றீர்கள் ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை, வடக்கே குவிந்து விட்டிருக்கிறது" என்று பேசினேன் பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி.மு.க.காரர்கள் அரசியலுக்கு இலாயக்கில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்என்ற செய்தியைக் காண்கிறேன்!
நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ,
"நாங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்!
பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதல் முடியும்?
நம்மை அரசியலுக்கு லாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே என்று
வருத்தப்பட்டுப் பயன் என்ன?<noinclude></noinclude>
c4riymzw6rqh4w6emwci2uolwkh527y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/21
250
642703
1933740
1933438
2026-05-15T10:55:57Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>11}}{{rule}}</noinclude>ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும்.
முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பாரத
தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ, நீ வதைபடுவதானாலும்,
நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்
உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும்போது வேதனையாகத்
தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக்
கொள்ளத்தான் வேண்டும் - பாரதமாதாவுக்காக."
"இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய்.
பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி
கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே. பாஞ்சாலம்!"
என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்
போகவில்லை. பாரதமாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது,
பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார்.
"செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை
எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு?
இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு - உங்கள் நாடு - நம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?” என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவு முறை இவைபற்றிப் பேசும்போதெல்லாம்.
அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு
என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை
நிலைமைகளை அவர் காண மறுக்கிறார் - எவரேனும் சுட்டிக்
காட்டினாலோ, சீறுகிறார்.
எனக்குத் தம்பி! அவருடைய போக்குப் பற்றி நினைக்கும்
போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக
கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி.
'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து,
பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து,
இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத்தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.<noinclude></noinclude>
b3ekpnkkzr0sjerf70uyknmfvucjrbk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/22
250
642704
1933739
1933440
2026-05-15T10:55:45Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி
எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர்
‘சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுகூட அஞ்சுகிறேன்.
{{rh|<br>23-12-1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
j50bfmjbtzoz1f0p1rmcnt241nr1rcy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/23
250
642706
1933738
1933442
2026-05-15T10:55:14Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>13}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 124</b>}}
{{center|{{x-larger|<b>கண்ணொளி போதும்...</b>}}}}
{{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள் - தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் -
கழகத்தவர் பணி.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|<b>த</b>}}மிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம்
தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.
அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார் - அரசோச்ச.
அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத்
திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும்
சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா
என்பது பற்றிய கவலை ஒரு புறம்.
மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர்
கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச்
சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து,<noinclude></noinclude>
b34kjsoczbd95l01vfebpqupv4q839j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/24
250
642707
1933737
1933444
2026-05-15T10:55:05Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார்
எனும் கேள்வி.
உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ
அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை.
இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும்,
காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம்.
இவையும், இளை போன்ற வேறுபல பிரச்சினைகளும்,
மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.
க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே
மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கப் புரட்சிப்படை தயாராகி வரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி! - இவ்வண்ணம் பல பிரச்சினைகள் - பயமூட்டத்தக்க விதத்தில்.
எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும்
கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை.
பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய
நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போக்கு.
தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய
நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல,
அக்கரையோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைபட்டது.
பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நில
வொளியில், காதல் வண்ணத்தையும், மொகலாய சாம்ராஜ்யச்
சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எரிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசியின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார் - புலியினைக் கொன்றார், ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார்.
சிற்றரசர்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.<noinclude></noinclude>
4by0kzo7nm1te0a12d4k8ftoc7sxup0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/25
250
642708
1933645
1933001
2026-05-14T19:42:54Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>15}}{{rule}}</noinclude>
இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில்
பேசிக்கொண்டிருந்தது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம்
வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது.
கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத
காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர்
என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று.
புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர்
வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ - பிப்ரவரித்
திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை.
விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை
என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள்
திகைப்படைந்துள்ளனர்.
எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம்
இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது.
வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக்
கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள்
இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை!
உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல்
பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை.
பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது, அப்படியா?
என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று
அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.
தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு
உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச்
சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த
இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா?
நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செய்வார்?
என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம்.
நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு
அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது
மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது.<noinclude></noinclude>
huw2qt8549nhclv1n7bdylwhzpq4vn2
1933736
1933645
2026-05-15T10:54:56Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>15}}{{rule}}</noinclude>
இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில்
பேசிக்கொண்டிருந்தது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம்
வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது.
கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத
காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர்
என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று.
புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர்
வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ - பிப்ரவரித்
திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை.
விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை
என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள்
திகைப்படைந்துள்ளனர்.
எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம்
இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது.
வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக்
கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள்
இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை!
உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல்
பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை.
பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது, அப்படியா?
என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று
அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.
தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு
உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச்
சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த
இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா?
நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செய்வார்?
என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம்.
நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு
அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது
மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது.<noinclude></noinclude>
62v0qnh649k3ou8dcdabo28icvkmi8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/26
250
642709
1933646
1933002
2026-05-14T19:55:29Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக்
காணோம்.
தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்!
கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர்
போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.
எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர்
போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர்.
என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி
இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர்.
ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த
நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும்
உறுதியுடனும் பேசினர் சிலர்.
உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில்
ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத்
தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர்.
ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத்
தமிழகத்துக்குத் தோன்றிற்று ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான்
கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது.
தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை - பலருடைய
உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு<noinclude></noinclude>
7m1hocg89cvl27fo8c0b3mk9zi7cbux
1933735
1933646
2026-05-15T10:54:30Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக்
காணோம்.
தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்!
கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர்
போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.
எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர்
போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர்.
என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி
இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர்.
ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த
நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும்
உறுதியுடனும் பேசினர் சிலர்.
உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில்
ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத்
தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர்.
ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத்
தமிழகத்துக்குத் தோன்றிற்று ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான்
கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது.
தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை - பலருடைய
உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு<noinclude></noinclude>
1kkh9s6oqp1l4re3se201anfu7clomo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/27
250
642710
1933714
1933003
2026-05-15T09:20:56Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>17}}{{rule}}</noinclude>கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு,
முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!!
தி.மு. கழகத்திலே நெருக்கடி - நேசத் தொடர்புகளிலே
முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் - தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு.
நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக்
கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட
கிராக்கி!
ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க
நிலைமை.
மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம்.
உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச்
செய்யும் விதமான பிளவுகள்.
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ்
கட்சியினர்.
கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு
வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே
நடவடிக்கைகள்.
வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று
காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான
கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில்
இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம்
செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ
என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு - நெருக்கடி - குழப்பம் - என்று
தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன்
அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர்.
தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க
இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே.
நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த<noinclude></noinclude>
ff4nhj054ymfqusvi86m5k0auvpz0pf
1933734
1933714
2026-05-15T10:54:20Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>17}}{{rule}}</noinclude>கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு,
முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!!
தி.மு. கழகத்திலே நெருக்கடி - நேசத் தொடர்புகளிலே
முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் - தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு.
நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக்
கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட
கிராக்கி!
ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க
நிலைமை.
மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம்.
உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச்
செய்யும் விதமான பிளவுகள்.
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ்
கட்சியினர்.
கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு
வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே
நடவடிக்கைகள்.
வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று
காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான
கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில்
இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம்
செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ
என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு - நெருக்கடி - குழப்பம் - என்று
தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன்
அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர்.
தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க
இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே.
நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த<noinclude></noinclude>
9pqqoindzkrb9vvhbj6m5yurqwsphgu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/28
250
642711
1933715
1933004
2026-05-15T09:26:20Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்
கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை
எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும்.
நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை
ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின்
ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக
உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது?
பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது
மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண
விழைகின்றனர்.
கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள்,
திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது.
கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே
பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம்.
கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும்,
கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.
கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்
பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே
நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம்.
கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற
உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை,
வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்
குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.<noinclude></noinclude>
9ngzqk2s753vo4qla8n5d111kfnqoqx
1933733
1933715
2026-05-15T10:54:11Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்
கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை
எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும்.
நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை
ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின்
ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக
உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது?
பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது
மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண
விழைகின்றனர்.
கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள்,
திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது.
கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே
பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம்.
கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும்,
கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.
கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்
பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே
நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம்.
கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற
உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை,
வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்
குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.<noinclude></noinclude>
r300wdszigc5b3qx0g58rl4paaoatqj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/29
250
642712
1933717
1933005
2026-05-15T09:57:02Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>19}}{{rule}}</noinclude>
கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி
எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை
இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு
மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது.
எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற
நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம்
கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர்,
பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர்
குமுறுகின்றனர்.
நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக,
நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர்,
இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்;
எண்ணிப் பார்த்தனையா?
விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும்
பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன?
என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ?
வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால்
வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர் ஆமல்லவா?
பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச்
செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம்
அறுபட்டால், பதறுவரோ?
அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது,
பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின்
ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும்
பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான்,
அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.
நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன்
என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும்
எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது.
அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது
காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட<noinclude></noinclude>
akljfp0qyg6srvw7wk80imz7agmrb2g
1933732
1933717
2026-05-15T10:53:59Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>19}}{{rule}}</noinclude>
கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி
எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை
இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு
மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது.
எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற
நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம்
கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர்,
பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர்
குமுறுகின்றனர்.
நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக,
நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர்,
இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்;
எண்ணிப் பார்த்தனையா?
விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும்
பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன?
என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ?
வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால்
வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர் ஆமல்லவா?
பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச்
செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம்
அறுபட்டால், பதறுவரோ?
அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது,
பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின்
ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும்
பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான்,
அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.
நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன்
என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும்
எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது.
அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது
காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட<noinclude></noinclude>
71vwdlk9rfcbmw4cg2qgft1a8gzyvlw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/30
250
642713
1933730
1933006
2026-05-15T10:53:07Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர்.
கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும்
பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள்
போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர்.
உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ்
கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத்
தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை.
கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப.
அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை
உள்ளத்தினரை மயக்கியும்; மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும், புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில் 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது.
அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க
வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை, கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய<noinclude></noinclude>
hedii43fn9s159s1s9s2xrrvlokbblr
1933731
1933730
2026-05-15T10:53:49Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர்.
கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும்
பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள்
போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர்.
உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ்
கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத்
தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை.
கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப.
அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை
உள்ளத்தினரை மயக்கியும்; மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும், புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில் 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது.
அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க
வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை, கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய<noinclude></noinclude>
tnjbz7xieyd1bwnxqjs8l5p9f4zlay2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/31
250
642714
1933741
1933007
2026-05-15T11:08:20Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>21}}{{rule}}</noinclude>கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று காங்கிரசிடம் உள்ள, சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்தித் தீரவேண்டிய நிலைமை!!
இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம் - என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள்
ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது,
ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்
காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்து கொண்டிருந்தார்!
வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்!
மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல்
தந்திரமறிந்தோர், கூடுவிட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப்
பெற்று மகிழ்ந்தனர். இசைவாணர்கள், காங்கிரஸ் நாமாவளி
பாடி, புகழ் தேடினர், நாடகமேடைகள், நம்மை நள்ளிரவில்
நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள் பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன.
புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம்
செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத் திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமே, கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.
பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப் பொருளாகக்
கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து
விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல நாட்டிலே, பெரிய இதழ்கள், பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்பு கொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக்<noinclude></noinclude>
8xo4q2axjqncepag7xsoxtd377avlae
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/32
250
642716
1933742
1933008
2026-05-15T11:19:56Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும்
பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்;
கண்டித்தனர். தம்பி! தெரியுமா உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர், நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள்,
கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர்.
நமக்கு? இயக்கத் தொண்டர்கள் - கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசை வாணர்கள்,
நமது இயக்கப்பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்து
வைத்துக்கொண்டால்தான், 'கச்சேரி களைகட்டும்' என்ற
நிலைமை!!
நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள். வேடமணியும் போது
'வெல்வெட்' - மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள். நாடகமேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று
நாடாள்வோரே கவலைப்படுகின்றனர்.
இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இது போதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம்கொண்ட தாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட
அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா,<noinclude></noinclude>
bsoi9xxb3gu60h8e1a2rxm11tasq05l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/33
250
642717
1933743
1933009
2026-05-15T11:35:48Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1933743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>23}}{{rule}}</noinclude>என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது.
அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது
மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே,
கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு. கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்! - என்று அது தன்னாலே அழிகிறது, ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறார்கள்
என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். அந்தவிதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும், இப்படியொரு வாதம் புரிய!
நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதத் தலைதூக்கி நிற்கவேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள்பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல.
ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர்,
இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர்,
காங்கிரசார், பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்ப வில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாத குழந்தை படுத்துறங்கு கையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா? அஃதே போல நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைபற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? முண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.<noinclude></noinclude>
8wlkw9fo78l2ofc0myt7v1aohhfxfm4
பயனர்:Mohanraj20/சோதனை
2
642945
1933712
1933518
2026-05-15T08:17:16Z
Booradleyp1
1964
1933712
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்|இராதா கிருட்டிணன்]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே|இராப்சன், ஈ.ஜே]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
{{Multicol-break}}
{{Multicol-end}}
c12d4ws0ucy92n8mo08mgqkz67tbdt6
1933713
1933712
2026-05-15T08:17:53Z
Booradleyp1
1964
1933713
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்|இராதா கிருட்டிணன்]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே|இராப்சன், ஈ.ஜே]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
{{Multicol-break}}
{{Multicol-end}}
6laeqv8dxeuvv596xdmd8b96vdnakiy
வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்
0
642956
1933674
1932537
2026-05-15T04:26:19Z
Booradleyp1
1964
1933674
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = சுருக்கக் குறியீட்டு விளக்கம்
| previous = [[../கட்டுரையாளர்கள்/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="27" to="28" fromsection="" tosection="" />
lnwtv901y8kjqea4imellf46xjd0ejk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/2
250
643038
1933647
1933437
2026-05-15T00:53:29Z
Rabiyathul
5890
1933647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி-11</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல் |:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி, |:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், |}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
oss7nkt8ua11oe7kdltzj34t9fu8mqi
1933648
1933647
2026-05-15T00:56:30Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி-11</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல் |:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி, |:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், |}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
pm42vymqp844t02s3gbagndl77snakg
1933649
1933648
2026-05-15T00:57:29Z
Rabiyathul
5890
1933649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி-11</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல் |:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி, |:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
ob9x9kff4q8izd3eiuoegtx32mawfj0
1933650
1933649
2026-05-15T01:00:23Z
Rabiyathul
5890
நிறுவனம்
1933650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி-11</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
fkzsj0r6vwes12vdm8zxky7i4pxrw68
1933653
1933650
2026-05-15T01:14:14Z
Rabiyathul
5890
1933653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 11</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
0wqisfwwa49x7b5747dplxjnf2v673n
வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா
0
643130
1933596
2026-05-14T12:00:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசயராசா | previous = [[../அசமுகி/]] | next = [[../அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933596
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசயராசா
| previous = [[../அசமுகி/]]
| next = [[../அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="165" to="165" fromsection="அசயராசா" tosection="அசயராசா" />
5q8icg4c7yw0qne11jmjw9r3evrejog
வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
0
643131
1933599
2026-05-14T12:06:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி | previous = [[../அசயராசா/]] | next = ../அசரத்பால் மசூதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933599
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி
| previous = [[../அசயராசா/]]
| next = [[../அசரத்பால் மசூதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="165" to="165" fromsection="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி" tosection="அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி" />
80s91uusy9cfoxz8p2b2rpyhmlrpogh
வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி
0
643132
1933600
2026-05-14T12:11:37Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section =அசரத்பால் மசூதி | previous = [[../அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி/]] | next = [[../அசரீரி/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933600
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section =அசரத்பால் மசூதி
| previous = [[../அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி/]]
| next = [[../அசரீரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="165" to="165" fromsection="அசரத்பால் மசூதி" tosection="அசரத்பால் மசூதி" />
jozlqcmwpfh5un1fgoszzibsbkcys0y
வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி
0
643133
1933601
2026-05-14T12:14:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசரீரி | previous = [[../அசரத்பால் மசூதி/]] | next = [[../அசலாம்பிகை அம்மையார்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933601
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசரீரி
| previous = [[../அசரத்பால் மசூதி/]]
| next = [[../அசலாம்பிகை அம்மையார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="165" to="165" fromsection="அசரீரி" tosection="அசரீரி" />
96yo0hyqp2yc7r7q1bjrpawbv3y4m8h
1933602
1933601
2026-05-14T12:14:39Z
Booradleyp1
1964
1933602
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசரீரி
| previous = [[../அசரத்பால் மசூதி/]]
| next = [[../அசலாம்பிகை அம்மையார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="165" to="166" fromsection="அசரீரி" tosection="அசரீரி" />
hgbzgpx6yj91lxjaputdkpmjk0y46bx
வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்
0
643134
1933603
2026-05-14T12:19:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசலாம்பிகை அம்மையார் | previous = [[../அசரீரி/]] | next = [[../அசனாலெப்பைப் புலவர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933603
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசலாம்பிகை அம்மையார்
| previous = [[../அசரீரி/]]
| next = [[../அசனாலெப்பைப் புலவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="166" to="166" fromsection="அசலாம்பிகை அம்மையார்" tosection="அசலாம்பிகை அம்மையார்" />
frn2smozl6zwzesmqtecyk6sgn76scp
வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்
0
643135
1933604
2026-05-14T12:20:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசனாலெப்பைப் புலவர் | previous = [[../அசலாம்பிகை அம்மையார்/]] | next = [[../அசாசியோ/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933604
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசனாலெப்பைப் புலவர்
| previous = [[../அசலாம்பிகை அம்மையார்/]]
| next = [[../அசாசியோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="166" to="166" fromsection="அசனாலெப்பைப் புலவர்" tosection="அசனாலெப்பைப் புலவர்" />
kvmmcu9z2wkg00iteipnf244wal31zk
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/179
250
643136
1933605
2026-05-14T12:23:18Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெமர்டீனியா 157}}</noinclude>குழியில் அமைந்துள்ள இது தொடு உணர்ச்சி உறுப்பாகவும், இரையைப் பிடிக்கவும், தற்காப்பிற்கும் பயன் படுகிறது. இதன் முன் முனை திறந்தும், பின் முனை மூடியும் உள்ளன.
நெமர்டீனியாப் புழுவிற்கு உண்மையான உடற் குழியும், சுவாச உறுப்புகளும் இல்லை. உடல் வெற்றிடங்கள் ஜெல்லி போன்ற மீசன்கைமாவினால் (mesenchyma) நிரப்பப் பட்டுள்ளன. குடல் நேராகவும், முழுமையாகவும், பக்க வாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றும், உள்ளது. இதன் பின் முனையில் மல வாய் உள்ளது. மூடிய குருதி ஓட்ட மண்டலம் ஒரு நடு முதுகுப் பக்கக் குழாயையும், இரண்டு பக்க நீள் வாட்டுக் குழாயையும் பெற்றுள்ளது. ஆங்காங்கு, குறிப்பிட்ட இடங்களில் உள்ள குழாய்களைப் பெற்ற கழிவு நீக்க மண்டலம் உள்ளது. இக்குழாய் ஒவ்வொன்றும் சுடர்ச் செல்களில் (flame cells) முடிவடையும். நரம்பு மண்டலம் 4 கதுப்புகளை உடைய முனையையும், துதிக்கையைச் சுற்றியுள்ள நரம்பு வளையத்தையும், இரண்டு நீள் வாட்டு நரம்புகளையும் பெற்றுள்ளது. மூளையுடன் இணைந்து, ஓர் இரட்டைக் குறு இழைப் பள்ளங்கள் உள்ளன. இவை தொடு உணர்ச்சி உறுப்பாகவும், வேதி உணர்வு உறுப்பாகவும் செயல் படுகின்றன.
நெமர்டீனியா வகைப் புழுவில் ஆண், பெண் உயிரிகள் தனித் தனியாக உள்ளன. சில உயிரிகளில் இரு பாலிகளாக (hermaphrodite) உள்ளன. இன உறுப்புகள் மீசன்கைமாவிலிருந்து உண்டாகி, குடல் பிதுக்கங்களுக்கிடையில் வட்டமான பைகளாக உள்ளன். இவ்வுறுப்புகள் நாளங்களற்றுக் காணப் படுகின்றன. இப்புழுவிற்கு நேர்முக வளர்ச்சி உண்டு. சில சமயங்களில் இதன் வாழ்க்கையில், நீர் மேற்பரப்பில் நீந்தி வாழும் வேற்றிளவுயிரி இடம் பெறுகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 179
|bSize = 780
|cWidth = 365
|cHeight = 280
|oTop = 635
|oLeft = 195
|Location = center
|Description = {{c|{{fs|100%|<b>மைக்ரூரா</b>}}}}}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.---->
துண்டாக்கப்பட்டு (fragmentation), அவற்றிலிருந்து முழு உயிரி வளரும் முறை (asexual reproduction) பொதுவாக நடை பெறுகிறது. 700 இனங்களாகப் பரவி இருந்தாலும், அவை அனைத்தையும் உள்ளடக்கி 2 வகுப்புகளாகவும், 4 வரிசைகளாகவும் இப்புழு பிரிக்கப் பட்டுள்ளது.
அனோப்லா (Anopla) என்னும் முதல் வகுப்பில் அடங்கும் உயிரிகளில் துதிக்கை, குத்தூசி போன்ற துணை அமைப்புகள் இல்லை. வாய், மூளைக்குப் பின்னால், குடல் பிதுக்கங்களற்றுக் காணப் படுகிறது. உள், வெளித் தசை அடுக்கு நீளமாகவும், நடு அடுக்கு வட்ட இழைகளை உடையதாகவும் இருக்கின்றன.
இவ்வகுப்பில் கீழ் வரும் பாலியோ நெமர்ட்டினி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளில், உடல் சுவர்த் தசைகள் 2 அல்லது 3 அடுக்குகளைப் பெற்றுள்ளன. உள் அடுக்கு வட்ட இழைகளை உடையது. பொதுவாகக் கண்கள் இருப்-<noinclude></noinclude>
m2c93ufwjfmprgrcgok52ykgexp36vf
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ
0
643137
1933606
2026-05-14T12:24:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாசியோ | previous = [[../அசனாலெப்பைப் புலவர்/]] | next = [[../அசாதசத்துரு/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933606
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாசியோ
| previous = [[../அசனாலெப்பைப் புலவர்/]]
| next = [[../அசாதசத்துரு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="166" to="167" fromsection="அசாசியோ
" tosection="அசாசியோ" />
dr58jqcpe0w75q5v91vtn1p1p5aaguc
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு
0
643138
1933607
2026-05-14T12:26:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாதசத்துரு | previous = [[../அசாசியோ/]] | next = [[../அசாந்தி/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933607
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாதசத்துரு
| previous = [[../அசாசியோ/]]
| next = [[../அசாந்தி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="167" to="167" fromsection="அசாதசத்துரு
" tosection="அசாதசத்துரு" />
8w93u6w9qc6sp8dtk43n88pzugp9mic
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/180
250
643139
1933608
2026-05-14T13:19:00Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|158 நெய்க் கவசம்}}</noinclude>பதில்லை. எ–டு: டியுபுலானஸ் (Tubulanus), செபலோதிரிக்ஸ் (Cephalothrix), காரினோமா (Carinoma).
ஹெட்டிரோ நெமர்ட்டீனி எனும் இரண்டாம் வரிசையில் அடங்கும் உயிரிகளில், கீழ்த் திசை அடுக்கு நீள் இழைகளைப் பெற்றது. இவ்வுயிரிகளில் கண்கள் இருக்கும். எ.கா. லினியஸ் (Leneus), மைக்ரூரா (Micrura), செரிப்ராடுலஸ் (Cerebratulus).
இரண்டாம் வகுப்பான இநோப்லாவில், துதிக்கையுடன் குத்தூசிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். வெளியே வட்ட இழைகளையும், உள்ளே நீள் இழைகளையும் உடைய தசை அடுக்கு காணப் படும். இவற்றின் குடலில் பிதுக்கங்கள் இல்லை. இவ்வகுப்பில் ஹாப்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும், டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையும் அடங்கும்.
ஹாப்லோ நெமர்ட்டீனி வரிசையில் உள்ள உயிரிகளுக்குக் குத்தூசி அமைப்புடன், துதிக்கை உள்ளது. குடல் நேராகவும், இணையான பக்கவாட்டுப் பிதுக்கங்களைப் பெற்றுமுள்ளது. வாய், மூளைக்கு முன் புறம் அமைந்துள்ளது. எ–டு: புரோஸ்டோமா (prostoma), பாராநெமர்ட்டீஸ் (Paranemertes) டெல்லோ நெமர்ட்டீனி என்னும் வரிசையில் அடங்கும் உயிரிகளுக்குத் துதிக்கையில் குத்தூசி போன்ற அமைப்பு இல்லை. குடல் பிதுக்கங்களற்றுக் காணப்படும். இவை அனைத்தும் ஒட்டுறுப்புகளைக் கொண்ட ஒட்டுண்ணிகளாக உள்ளன. ௭–டு: மாலக்கோ டெல்லா (Malacodella).
நெமர்ட்டீன் பொது அமைப்பில் தட்டைப் புழுவை ஒத்திருக்கிறது. ஆனால், மல வாய், துதிக்கை, குருதிக் குழாய் மண்டலம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் தன்மையில் இது தட்டைப் புழுவை விட உயர் நிலையில் காணப் படுகிறது.
லினியஸ் (leneus) என்னும் உயிரி அனைத்து நாடுகளிலும் வாழும். இதன் உடல் மிக மிக நீளமாக நாடா போன்று சுருங்கும் தன்மையுடையது. இதன் தலை சற்று அகலமாகவும், கண்களைப் பெற்றும், ஓர் இரட்டைப் பக்கவாட்டு உயர் பள்ளங்களைப் பெற்றும் இருக்கும். இவ்வுயிரியினால் நீந்தி வாழ முடியாது. ஆனால், இதன் உடல் ஒழுங்கற்ற முறையில் முறுக்கிக் கொண்டிருக்கும். இதற்கு வியத்தகு முறையில் இழப்பு மீட்டல் தகுதி அமைந்துள்ளது. மேலும், மிதமான தட்ப வெப்ப நிலையில் துண்டாக்கப் படுதல் மூலம் இனப் பெருக்கம் நடை பெறுகிறது.
செரிப்ராடுலஸ் (cerebratulus) என்பது அனைத்துக் கடலிலும் வாழும் புழுவாகும். இது நீளமான, தட்டையான பக்க விளிம்புகளையுடைய உடலமைப்பைப் பெற்றது. இதனால், நீந்துவது எளிதாகிறது. பொதுவாகக் கண் இருப்பதில்லை. வெற்றிடமாக, மெல்லுடலிகளின் ஓட்டில் அடிக்கடி இது தங்கும். இதன் தலைப் பகுதி 3 முன் பக்க உறுப்புகளையும், தலைப் பக்கப் பள்ளங்களையும் பெற்றுள்ளது. துதிக்கை மிக நீளமாக இருக்கும். மூளை நரம்புச் செல் திரள் பெரியதாக இருக்கும்
{{right|—<b>வெ. கிரிஜாபாய்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="102"/>
<section begin="103"/>{{fs|110|<b>நெய்க் கவசம்</b>}}
மூட்டுப் பகுதியைச் சுற்றிக் கவசம் போல் காணப் படும் நெய்க் கவசம் (Synovial Membrane) ஒரு வழுவழுப்பான நெய் போன்ற நீர்மத்தைச் சுரந்து, அசைவை எளிதாக்குவதால், இதனை மூட்டுப் பையுறைச் சவ்வு என்றும் குறிக்கலாம். இது மூட்டை அடுத்துள்ள தசை நாண்களைச் சுற்றியிருக்கும் முண்டுப்பைக்கு அருகிலுள்ள பகுதியின் மேல் உராய்வைக் குறைப்பதற்காகவும் பயன் படுகிறது. முட்டையின் வெண் கருவை ஒத்த மூட்டு நீர்மம் இக்கவசத்தால் சுரக்கவும், உட்கவரவும் படுகிறது. இது கருப் பருவத்தில் காணப் படும் நடுமென் தோல் (mesoderm) பகுதியிலிருந்து உருவாகிறது.
வெளிர் நிறத்தில், வழுவழுப்பாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் உள்ள இச்சவ்வின் உட்புறம் விரல்கள் போன்ற வில்லை (villi) காணப் படும். மூட்டை அடுத்து, மடிப்புகளுள் கொழுப்புத் திசு நிறைந்து காணப் படும். இதனால், மூட்டின் அசைவின் போது ஏற்படும் வெற்றிடங்களை இக்கொழுப்பு நிறைந்த பகுதி நிரப்புகிறது. பொதுவாக, விரல் போன்ற பகுதி குறைவாகக் காணப் படும். நெய்க் கவசத்தின் உட்புறம் உட்சுவர் (intima) ஆகும். புறச் சுவர் நார், கொழுப்பு மற்றும் மீட்சித் (elastic) திசுக்களினால் ஆனது. இதில் காணப் படும் நெய்க் கவசச் செல்கள் A, B என இரு வகைப் படும். நெய்க் கவச நீர்மம், அசையும் மூட்டுப் பகுதிக்கு நெய் போன்று உதவுவதுடன், மூட்டுக் குறுக்கென்பிற்கு உணவுமளிக்கிறது. கூடுதலாக, நீர்மம் சுரந்த மூட்டைப் பாதுகாப்பதுடன், நோய் நுண்ணுயிர்களை அழிக்க உதவும் பெருவிழுங்கிச் (Macrophage) செல்களாகவும், நெய்க் கவசம் மாறுமெனக் கருதப் படுகிறது.
{{right|—<b>மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="103"/>
{{nop}}
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----><noinclude></noinclude>
oi5g050pgd2ucpyhouhg0k0abbxms6a
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/181
250
643140
1933610
2026-05-14T13:44:58Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்ச் சட்டி 159}}</noinclude><section begin="104"/>{{fs|110|<b>நெய்க் கொட்டை</b>}}
இதன் தாவரவியல் பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா (<i>Harpullia arborea</i>) என்பதாகும். ஹா. இம்பிரிக்கேட்டா (<i>H. imbricata</i>), ஹா. குபனியாய்டெஸ் (<i>H. cupaniodes</i>) என்பன இதன் இணை தாவரப் பெயர்களாகும். இது இந்தியாவில் அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1 கி.மீ. உயரம் வரை உள்ள இடங்களில் வளர்கிறது.
<b>அமைப்பு</b>. இது அழகு தரும் மரம். இதன் அடி மரம் சீராக இருக்கும். பட்டை இளம் பழுப்பு நிறமானது. இலைகள் மாற்றடுக்கில் 3–4 இரட்டைச் சிறகு கூட்டிலைகளாக இருக்கும். சிற்றிலைகள் முட்டை நீள் வட்டமானவை. இவற்றின் அடிப் பகுதி சாய்வாயிருக்கும். தோல் போன்ற கீழ்ப் பகுதி இளம் பச்சையானது. ஒழுங்கான பூக்கள் இளமஞ்சள் நிறமாயும், ஒளி வீசும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இவை பல பால் ஈரகம் கொண்டவை. புல்லி இதழ்கள் 4–5 நேரானவை. சமமாயும், திருகு இதழ் அமைவிலும் இருக்கும். அல்லி இதழ்கள் 4–5, வழக்கமாகக் கால்களுடனும், குறுகி நீள் வட்டமாகவும், செதில்களற்றும் இருக்கும். வட்டத் தட்டு தெளிவற்றது.
மகரந்தத் தாள்கள் 5–8, வட்டத் தட்டின் உட்புறத்தில் செருகியிருக்கும். மகரந்தக் கம்பி மென்மையாயிருக்கும். மகரந்தப் பை நீள் சதுரமாயிருக்கும். இரண்டு அறைகள் கொண்ட சூல் பை முட்டை வடிவானது. சூலகத் தண்டு, நீட்சியடைந்திருக்கும். சூலக முடி மெலிந்து, ஏறக் குறையத் திருகியிருக்கும். ஒவ்வொரு சூலக அறையும், இரண்டு சூல்களைக் கொண்டிருக்கும். கனி, தோல் போன்ற இரண்டு விதைகள் கொண்ட அறை வழி வெடிக்கும் (loculicidal) வகையாகும். கனி, இரண்டு தடுக்கிதழ்களுடன் பழுப்பு ஆரஞ்சு நிறம் கொண்டது. அறைகளில் 1–2 விதைகளிருக்கும். இவை சற்று உருண்டையாகவும், கறுப்பாகவுமிருக்கும். வழக்கமாகப் பத்திரியுடன் (aril) காணப் படும். கரு தடித்த அரைக் கோண வித்திலைகளுடன் காணப் படும்.
</b>பயன்</b>. காய்கள் சோப்பைப் போன்று, நுரையைத் தரும். பட்டை, யானைக் கொளுஞ்சி (Entada scandens) என்னும் கொடியைப் போன்று, மயிரிலுள்ள அழுக்கைப் போக்கும். மீன்களைக் கொல்லும். விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை வாத வலிக்குத் தடவலாம்.
{{right|—<b>கோ. அர்ச்சுனன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="104"/><section begin="105"/>
{{fs|110|<b>நெய்ச் சட்டி</b>}}
இதற்கு நெய்ச் சட்டிக் கீரை, சகதேவி, சிற்றிலை, சீதா செங்கழுநீர், சீதேவி செங்கழுநீர், தேவகந்தம் என்றும் பெயர்களுண்டு. இதன் தாவரப் பெயர் வெர்னோனியா சினேரியா (<i>Vernonia cinerea</i>) என்பதாகும். கோனிசா சினேரியா (<i>Conyza cinerea</i>) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். ஆஸ்டரேசிக் குடும்பத்தைச் சேர்ந்த, இதனைச் சிற்றூர் மக்கள் உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இச்செடியை வெப்ப மண்டல ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் காணலாம். இது கடற்கரை, சமவெளி, மலைப் பகுதி ஆகிய இடங்களில் காணப் படும். இதனைத் தரிசு நிலங்களிலும், கூட்டங் கூட்டமாகக் காணலாம்.
<b>அமைப்பு</b>. இச்செடி 75 செ.மீ. உயரம் வளரும். தனியிலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை. முழு இலைகள் முட்டை–நீள் முட்டை முதல் தலை கீழ் ஈட்டி வடிவானவை. இலை மேற்பகுதி வழவழப்பாகவும், கீழ்ப் பகுதி சிறு மயிர் அடர்ந்தும் காணப் படும். இலை நுனி கூரானது. இலைக் காம்பு 1 செ.மீ. நீளமானது. கூட்டுப் பூத்திரள்கள் (panicles) தளர்வானவை. தலை மஞ்சரி மலர்கள் அனைத்தும் ஒரேயினத்தவை. மஞ்சரியடிச் சிதல்கள் (involucre) மணி வடிவானவை. இவை இலையையொத்து மென்மையாயிருக்கும். பூத்தளம் குழிவுடன் காணப் படும். அல்லிகள் சமமானவை; 0.7 மி.மீ. அளவானவை. குழலின் நீளம் 3.5 மி.மீ. அல்லி மடல்கள் 5, குறுகலாக இருக்கும். 5 மகரந்தப் பைகள் நீள் சதுரமாக 1 மி.மீ. அளவானவை. சூல் பை 0.8 மி.மீ. அளவானது. சூலகத் தண்டு 3.5 மி.மீ. நீளமானது. சூலக முடி கூரிய நுனியுடையது. மலர்கள் இளஞ் சிவப்பு–ஊதா நிறத்திலிருக்கும். இலைகள் நவம்பர்–ஏப்ரலில் மிகுதியாகக் காணப் படுகின்றன.
<b>பயன்</b>. இதன் இலை, பூ, வேர் முதலியவை மருத்துவப் பயன்களைத் தரக் கூடியவை. உடலுக்கு வலிமையைத் தரும். நஞ்சை முறிக்கும் வியர்வையை உண்டாக்கும். இச்செடியை உலர்த்திப் பொடித்துச் சாறெடுத்துக் காய்ச்சலுக்குக் கொடுக்க, வியர்வையை மிகுதிப் படுத்தும். உட்சூடு, வெள்ளை, வாய்ப் புண், வாந்தி, வாய்க் கசப்பு போகும். சிறுநீர்ப் பை நோய், நீர்க் கடுப்பிற்கும் தரலாம். பசி உண்டாகும். நா வறட்சி நீங்கும்.
புதிய வேரை ஒரு பிடி எடுத்துச் சிதைத்து, மண் சட்டி யிலிட்டு நீர் சேர்த்துக் குடிநீராக்கி, நாளும் இரு வேளை குடித்து வர வீக்கங்கள் கரையும். இவ்வேர் சர்வ மேக<noinclude></noinclude>
mcrcxuuevvu1c7rqg7ctnu65yweufd1
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/182
250
643141
1933611
2026-05-14T14:02:09Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|160 நெய்ம்மீன் (சித்திரை)}}</noinclude>ராஜாங்க எண்ணெயில் பயனாகிறது. உடல் சூடு தணித்து, உடல் அழகுற நெய்ச் சட்டி வேர், இலை, பூ ஆகியவற்றை இடித்துப் பிழிந்த சாறு 1 லிட்டருடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சுண்டக் காய்ச்சி வடித்து, வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். விதையைப் பொடித்து, வெல்லத்தில் தர, புழுக்கள் சாகும். விதையைக் குடி நீரிட்டு, உள்ளுக்குத் தரத் தோல் நோய்கள் குணமாகும். இதன் கீரையைப் பருப்புச் சேர்த்து, வேக வைத்துக் கடைந்து, நெய் சேர்த்து, உணவுடன் கலந்துண்ணக் கண்ணுக்கு ஒளி கிடைக்கும்.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 182
|bSize = 490
|cWidth = 365
|cHeight = 362
|oTop = 74
|oLeft = 62
|Location = center
|Description = {{c|{{fs|100%|<b>நெய்ச் சட்டி (<i>Vernonia cinerea</i>)</b>}}}}}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.---->
{{right|—<b>கோ. அர்ச்சுனன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="105"/><section begin="106"/>
{{fs|110|<b>நெய்ம்மீன் (சித்திரை)</b>}}
கோடைக் கால விண் மீன் குழுவான கன்னி (Virgo) ராசியில் அமைந்துள்ள α–வர்ஜினிஸ் (α–Virginis) என்னும் விண் மீன், நெய்ம்மீன் அல்லது சித்திரை (spica) எனப் படுகிறது. இது வானத்தில் தோன்றும் ஒளி மிக்க விண் மீன்களில், பதினைந்தாம் விண் மீனாகும். இது கன்னி ராசியில் உள்ள விண் மீன்களில், மிகவும் அதிக ஒளியுடைய விண் மீன். இவ்விண் மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இவ்விண் மீனின் பொலிவு பரிமாணம் (magnitude) தோராயமாக 0.98 ஆகும். வெண்மை கலந்த நீல நிறமுடைய இது B₁ நிற மாலை வகையைச் (Spectral type) சார்ந்ததாகும்.<noinclude></noinclude>
11qtegh3rgs9egyz4ag9ds941vileew
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/934
250
643142
1933612
2026-05-14T14:23:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செய்வதுண்டு. இவர்கள் மாற்று உண்டியல்களைக் கழிவு செய்வார்கள். இருப்பதால்தான் மாற்று உண்டியல்களைச் சில நாடுகள் பெருமளவில் வணிகத்தில் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழுகுமலை|906|கழுகுமலை}}</noinclude>செய்வதுண்டு. இவர்கள் மாற்று உண்டியல்களைக் கழிவு செய்வார்கள். இருப்பதால்தான் மாற்று உண்டியல்களைச் சில நாடுகள் பெருமளவில் வணிகத்தில் பயன்படுத்துகின்றன. இத்தீர்வகங்கள் நல்ல வலிவுள்ள பண அங்காடியில் மிக்க திறமையுடன் பணியாற்றுகின்றன. இந்தியப் பண அங்காடி வலிவற்றதாக இருப்பதால் இவற்றின் பணி இந்தியாவில் மிகக் குறைந்த அளவேயுள்ளது. இவை, இலண்டன் பண அங்காடியில் (London Money Market) தலையாய பணியாற்றுகின்றன.
{{Right|<b>ரெ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Panandikar, S.G.,</b> Banking in India, Orient Long-mans, Madras, 1974.
<b>Panikkar, K.K.,</b> Banking Theory and Systems, S. Chand and Company Limited, Delhi, 1982.
<b>Vaish M.C.,</b> Monetary Theory, Vikas Publishing House Private Limited, Delhi, 1980.
{{larger|<b>கழுகுமலை:</b>}} திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி வட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து 40 கி.மீ. தொலைவில், சங்கரநயினார் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர். முற்காலப் பாண்டியர் காலம் முதல் இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய்த் திகழ்கிறது.
இங்குள்ள மலைப்பாறையில் அமைந்துள்ள ‘வெட்டுவான் கோயில்’ என்னும் ஒற்றைக் கற்கோயில் ‘தென்னக எல்லோரா’ என்று புகழத்தக்க கலையழகு கொண்டது. மாமல்லையில் பல்லவர்கள் ஒற்றைக் கல் இரதங்களைச் செய்த காலத்தில் பாண்டியர்களும் அத்தகைய பணியில் கவனம் செலுத்தியிருந்தமைக்கு இவ்வெட்டுவான் கோயிலே சான்று. பெரும் பாறையில் திருச்சுற்று போன்று வெட்டி எடுத்து இடைப்பட்ட குன்றில் மேலிருந்து கீழாகச் செதுக்கிச் சிவன் கோயில் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இக்கோயிலின் கலைப்பணி முற்றுப் பெறவில்லை.
விமானத்தின் அடிப்பகுதி முற்றுப்பெறாமல் உள்ளது. கபோதத்தின் மேற்பகுதியான பிரத்தரம் இரண்டு அடுக்குகளை உடையது. கீழ் அடுக்கு மூலைகளில் கர்ணகூடும் நடுவில் சாலபஞ்சரமும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையில் சைத்திய பஞ்சரம் காணப்படுகிறது. சிகரங்களிலும் பஞ்சரங்களிலும் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 934
|bSize = 480
|cWidth = 370
|cHeight = 264
|oTop = 289
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|கழுகுமலை வெட்டுவான் கோயில்}}<noinclude></noinclude>
3m031r8x3owq1gkcv3t3uz691tvlwub
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/183
250
643143
1933613
2026-05-14T14:25:20Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்யாத் துணி 161}}</noinclude>புவியிலிருந்து ஏறத் தாழ 270 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது; சூரியனைப் போல் ஏறத் தாழ 2440 மடங்கு ஒளியுடையது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 20,000K ஆகும்.
{{right|—<b>பெ. வடிவேல்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="106"/><section begin="107"/>
{{fs|110|<b>நெய்யாத் துணி</b>}}
நூற்பும், நெசவும் இன்றி இழையை, நேரடியாகத் துணியாக மாற்றித் தயாரிக்கப் படும் நெய்யாத் துணி (Non-woven fabric) என்றும், உருவாக்கப் பட்ட துணி (formed fabric) என்றும் குறிப்பிடப்படும். பொருள்களின் ஆய்வுக்கான அமெரிக்க நிறுவனம் (American Society for Testing Materials–ASTM) நெய்யாத் துணிக்குரிய வரையறையை எந்திர வழியிலோ, வேதி மாற்றம் வாயிலாகவோ, சூடேற்றியோ, தக்க கரைப்பானைப் பயன்படுத்தியோ, இவ்வழி முறைகளை இணைத்துப் பயன்படுத்தியோ, இழைகளை ஒன்றோடொன்று ஒட்டி அல்லது பின்னிப் பிணைத்து உருவாக்கப் படும் துணி நெய்யாத் துணி ஆகும் என வரையறுத்துள்ளது.
1930 இல் சில நெசவாலைகள் கழிவுப் பருத்தி இழைகளை நேரடியாகத் துணியாக்க முயன்ற போது, நெய்யாத் துணியின் வரலாறு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, பெருமளவில் தயாரிப்பு தோற்றுவிக்கப் பட்டது.
நெய்யாத் துணிகளின் தயாரிப்பு முறைகளும், சீர் செய்தலும் இழைகளின் தன்மை, இழைகளை அடுக்கும் முறை, பாலி எஸ்ட்டர், அக்ரிலிக், பாலி புரோப்பிலீன், பாலி எத்திலீன் எனப் பல வகை இழைகளும், இவற்றின் கலப்பினங்களும், கலவைகளும் இதற்குப் பயன் படுத்தப் படும். வெட்டிழை நீளம் 2–150 மி.மீ. இருக்கலாம். இத்துறையில் பயனாகும் இழைகளின் நுண்மை, பொதுவாக 1.5–6 டெனியர் இருக்கும். அறுவை மருத்துவம், தொழிலகப் பயன்களுக்கான துணிகளை உருவாக்க 5 மைக்ரோ டெனியர் வரை சன்னமான இழைகள் கூடப் பயன் படுகின்றன.
நெய்யாத் துணி உருவாக்கத்தில் முதற் கட்டமாக வலையமைப்பு (web formation) நிகழ்த்தப் படுகிறது. இதில் இணையாக வைக்கப் பட்ட வலை (parallel laid web), குறுக்காக வைக்கப் பட்ட வலை (cross laid web), சீரின்றி வைக்கப் பட்ட வலை (random laid web), விரைவாகத் தெளிக்கப் படும் முறை (high velocity spray), காற்றினால் அமைக்கப் படும் வலை (air laid web), ஈர அமைப்பு வலை (wet-lay web) ஆகியவை அடங்கும்.
<b>இணை வலை</b>. நீட்டும் எந்திரத்தின் (carding machine) வழியே செலுத்தப் படும் இழை இணைப் பொருமையில் (parallel alignment) அமர்த்தப் படுகின்றது. மேன்மேலும், இவ்வாறு அடுக்கப் படுவதால், வேண்டிய அளவுக்குக் கடிமனாக வலை உருவாகிறது. இத்துணியின் நீள வாட்ட வலிவு கூடுதலாகவும், குறுக்கு வாட்ட வலிவு குறைவாகவும் இருக்கும்.
<b>குறுக்கு வலை</b>. நீட்டும் எந்திரத்திலிருந்து வெளி வரும் நேரிழை அடுத்தடுத்த அடுக்குகளில் குறுக்காக அமைந்திருக்குமாறு நெறிப் படுத்தப் படுகின்றது. இத்துணியின் இழு வலிமை அனைத்துத் திசைகளிலும் சமமாக இருக்கும்.
<b>சீரற்ற வலை</b>. உதிரி இழையைக் காற்றினால் ஊதி ஒரு சுழலும், துளை மிகுந்த உருளையின் மீது செலுத்தினால், உருளையினுள் நிலவும் வெற்றிடம் இழையை, உருளையின் மீது ஒட்டுமாறு செய்கிறது. இதன் விளைவாக, ஒரு கனமான வலைப் பின்னல் (matte) உருவாகிறது. இதனை, ஓர் உள் வாங்கி (licker-in) அல்லது பற்கள் பொருத்தப் பட்ட சுழலும் உருளை மீது செலுத்தி வலையைப் பிரித்து, இங்கு தோன்றும் துகள்களை, மற்றொரு வெற்றிட உருளை மீது செலுத்தினால், திசைச் சீரற்ற, ஆனால், பொதுச் சீரான வலை கிட்டும். இவ்வலைகளின் எடையும் சீராக இருக்கும்.
<b>தெளித்தல் வழி வலை</b>. இலையை ஒரு வாரின் (belt) மீது தெளித்துச் சீரற்ற வலையைத் தோற்றுவிக்க வேண்டும். பின்பு, வெப்பமும், அழுத்தமும் உயர்த்தப் பட்டு இழை உருக்கப் படுகின்றது. இதனால், இழைகள் நன்கு இணைகின்றன. இவ்வுத்தி வெப்பத்தால், இளக வல்ல இழை வகைகளுக்கு நன்கு பொருந்தும்.
<b>காற்றூது வழி வலை</b>. நீட்டும் (நேராக்கும்) எந்திரம் அல்லது இழை புரியிலிருந்து உயர் விரைவு காற்றோட்டத்தினால் இழை இழுக்கப்பட்டு, ஒரு நகரும் திரையின் மீது பாய்ச்சப் படுகிறது. இழை அமைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவதற்கு வெற்றிட அமைப்புகளும், அழி சட்டங்களும் (grids) உள்ளன. இவற்றின் பயனாகக் கோடு, பனிக் கட்டி வடிவம் ஆகியவற்றைக் கொண்ட துணியை உருவாக்கலாம்.
<b>ஈர (வழி முறை) வலை</b>. இழையை வேதிப் பொருள்களுடன் கலந்து, கலவையை அடிப்பானின் மூலமும், கலக்கி மூலமும் செலுத்திக் காகிதக் கூழ் (pulp) போன்று செய்து, ஒரு<noinclude><br>{{rh|அ. க. 14–11}}</noinclude>
m1tuneurbuopblsb2yp3pkketh2wq5b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/935
250
643144
1933614
2026-05-14T14:42:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வியாழ வரிகள் முதலடுக்கின் அடியில் காணப்படுகின்றன. இரண்டாம் அடுக்கில் ஒவ்வொரு பக்கத்திலும் சைத்திய பஞ்சரங்கள் உள்ளன. தேவகணங்களும் பெண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழுகுமலை|907|கழுகுமலை}}</noinclude>வியாழ வரிகள் முதலடுக்கின் அடியில் காணப்படுகின்றன. இரண்டாம் அடுக்கில் ஒவ்வொரு பக்கத்திலும் சைத்திய பஞ்சரங்கள் உள்ளன. தேவகணங்களும் பெண்வடிவச் சிற்பங்களும் இங்குக் காணப்படுகின்றன. கிரீவம் எண்கோண அமைப்புடையது. கிரீவத்தின் அடியில் நான்கு மூலைகளிலும் நந்திகள் உள்ளன. உமாமகேசுவரர் கிழக்கிலும் தட்சிணாமூர்த்தி தெற்கிலும் திருமால் மேற்கிலும் பிரமன் வடக்கிலும் கிரீவத்தில் உள்ளனர். சிகரத்தில் தூபி இல்லை. இங்குள்ள தென்முகக் கடவுள், சிவன், பூதகணங்கள் போன்ற சிற்பங்கள் காண்போரைக் கவரும் தன்மையன. அவை கல்லும் உயிர்பெற்று எழுந்தது போன்ற வனப்பு வாய்ந்தன. இக்கோயில் சிவனுக்குரியது. எனினும் கருவறையில் கணேசரின் சிலையே உள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 935
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 190
|oTop = 211
|oLeft = 21
|Location = center
|Description =
}}
{{center|சமணச் சிற்பங்கள்}}
வெட்டுவான் கோயிலுக்குத் தெற்கில் சற்று மேலான பாறையில் சமண தீர்த்தங்கரர்களின் உருவுகள் இரண்டு அடுக்குகளில் செதுக்கப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்கள் யோக நிலையில் அமர்ந்திருக்க அவற்றிற்குக் கீழே வட்டெழுத்தில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் வந்திருந்து இத்தகைய திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. கோமதீசுவரர், இயக்கியர் போன்றோர் சிற்பங்களும் இங்குச் செதுக்கப்பட்டுள்ளன. குறவடிகள், குறத்தியர் என்று சமணத் துறவிகள் அழைக்கப்பட்டுள்ளமை இக்கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன. இதற்கு அண்மையில் ஒரு குகைத் தளம் அமைந்துள்ளது. சமண முனிவர்கள் இங்குத் தங்கித் துறவு வாழ்க்கை மேற்கொண்டிருக்கலாம். முற்காலப் பாண்டியர் காலத்தில் இக்கழுகுமலை சிறந்த சமணசமயத் தலமாகத் திகழ்ந்துள்ளது.
இவ்வூரிலேயே முருகன் கோயில் ஒன்று மக்களின் சிறப்பான வழிபாட்டைப் பெற்று விளங்குகிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவை குடைவரைக் கோயிலாகவும் அடுத்த முன், முகமண்டபங்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டும் விளங்குகின்றன. எட்டையபுரம் சமீன்தாரின் பாதுகாப்பில் இக்கோயில் நெடுங்காலம் இருந்தது. பல சிற்றிலக்கியங்கள் கழுகுமலை முருகன் புகழ்பாடுகின்றன. இக்கோயில் இறைவன் கழுகாசலமூர்த்தி எனவும் கூறப்படுகிறார். கோயில் முதலில் சமணக் கோயிலாகத் திகழ்ந்திருக்க வேண்டும் எனப் பர்கூசன் என்பவர் கருத்துத் தெரிவித்தார். இக்கோயிலின் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 935
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 203
|oTop = 248
|oLeft = 245
|Location = center
|Description =
}}
{{center|கழுகுமலை கோயில்}}
இவ்வூரிலுள்ள கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளை நமக்குத் தருகின்றன. கோமாறன் சடையன் என்னும் பாண்டிய மன்னனின் 23–ஆம் ஆட்சியாண்டில் அவன் சடையன் கருநந்தன் என்னும் ஆய்நாட்டுத் தலைவனுடன் நிகழ்த்திய போர் ஒன்றைக் கூறுகின்ற கல்வெட்டு ஒன்று இங்குள்ளது.
கோமாறன் சடையனின் (வரகுணன்) 42–ஆம் ஆட்சியாண்டில், பாண்டிய நாட்டுத் திருப்பதிகளுள்<noinclude></noinclude>
o0m8x0t56d5sh1iiemb5kqsoncqqx9l
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/184
250
643145
1933615
2026-05-14T14:49:56Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|162 நெய்யாத் துணி}}</noinclude>வலைத் திரையின் மீது இட வேண்டும். மிகையான ஈரம் அகற்றப் பட்டு, உருவாகும் வலை அமுக்கப் படுகிறது. நெய்யாத் துணி உருவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, வலையிலுள்ள இழைகள் வேதி முறையில் பிணைக்கப் படுகின்றன.
<b>ரெசின் பிணைப்பு</b> (resin bonding). நீர்ம உறிஞ்சு தன்மை கொண்ட இழைகளாலான வலையாக இருப்பின், இவ்வலையைத் தக்க ஒட்டுவிப்பியைக் கொண்டு, நிறையுற்றதாக்க வேண்டும். தெளித்தல், அச்சிடல், ஒற்றுதல், அமிழ்த்துதல் எனப் பல வழி முறைகள் இதற்குப் பயனாகின்றன. பின்பு, இரண்டு உருளைகளுக்கு இடையே செலுத்தி, அழுத்தி, மிகையான நீர்மத்தைப் பிழிந்தெடுக்க வேண்டும். இறுதியாக, உலர்த்தப் பட்ட வலையை ஏறத் தாழ 200°Cக்குச் சூடேற்றிப் பதப்படுத்த வேண்டும்.
<b>ரப்பர் பால் நுரை வழிப் பிணைப்பு</b> (latex foam bonding). ரப்பர் பாலை வலை மீது தெளிக்கலாம் அல்லது சுழலும் சல்லடைகளினூடே செலுத்தலாம். எளிதில் வெடித்து விடும் நுரை தோன்றினால், விளையும் துணி விறைப்பாகவும், நிலையான நுரை தோன்றினால், உருவாகும் துணி நெகிழ்வுற்றதாகவும் இருக்கும்.
<b>ஊன் பசைப் பிணைப்பு</b> (Gelatin bonding). செல்லுலோஸ் வழிப் பொருளான BAR இழையை வெட்டிழை வடிவில் வலையின் கூறான இழையுடன் கலந்து, நீரிலிட்டால், BAR இழைகள் படிக உருவற்ற திண்மக் கூழாக மாறி, வலையின் முதன்மை இழைகளின் குறுக்கீட்டுப் பகுதிகளில் வீழ் படிகின்றன. இதன் பின்பு, இவ்வலை அழுக்கப் பட்டு உலர்த்தப் படுகிறது.
<b>வெப்பத்தால் இளக்கிப் பிணைத்தல்</b> (Thermoplastic bonding) . வெப்பத்தால் இளகாத அல்லது உயர் உருகு நிலை கொண்ட, வெப்பத்தால் இளக வல்ல இழையாலான வலையுடன் எளிதில் உருக வல்ல இழையைக் கலக்கலாம். பின்பு, இவ்வலையை உருளை அழுத்தத்திற்குட் படுத்தியோ, புடைப்புருவேற்றியோ துணியாக்கலாம். உருளைகளுக்கிடையே அழுத்தும் போது, வலையுடன் கலக்கப் படும் இளக வல்ல நெகிழியின் உருகு நிலைக்குச் சூடேற்ற வேண்டும். அப்போது, இளக வல்ல இழை உருகிப் பிணைப்பை உருவாக்குகிறது.
<b>நூற்புப் பிணைப்பு</b> (spun bonding). இழை வலை, ஒரு நகரும் திரை அல்லது வாரின் மீது படிவிக்கப் பட்டு, பின்பு இயல்பிய, இயைபிய முறைகளில் பிணைக்கப் படுகிறது. இது நீர்மப் பல படியிலிருந்து துணி வரை செல்லும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இதனைச் செயல் படுத்துவதற்கு, நான்கு உத்திகள் உள்ளன. ஒரு வழி முறையில் துணை முகப்பிலிருந்து நீளிழை இழுக்கப் பட்டு, ஒரு நகரும் திரையின் மீது படிவிக்கப் படுகிறது. இதனால், பெறப் படும் வலையை முன் முனை ஊசிகளால் குத்தி, ஒரு படித்தான துணியை உருவாக்கலாம். ஊசியின் தன்மை, ஊசி எய்தும் ஆழம், இழை வகை, இழையின் குறுக்களவு ஆகியவற்றைச் சரி வர அமைத்து, துணியின் தடிமன், வலிமை மற்றும் அடர்த்தியைத் தக்க நிலையில் நிறுவலாம். இரண்டாம் வழி முறையில் துளை முகப்பிலிருந்து நீளிழைகளைக் காற்றோட்டத்தினால் இழுத்து, ஒரு திரை மீது சீரின்றித் தெளிக்க வேண்டும். வெப்பமும், அழுத்தமும் மேலிட்ட நிலையில், இவ்வலையை இரண்டு உருளைகளுக்கிடையே அமுக்கினால், பிணைப்புத் தோன்றும். மூன்றாம் உத்தியில், சுழலும் துளை முகப்பு வழியே நகரும் வாரின் மீது பரப்பப் படுகிறது. இவ்விழைகளின் மீது ஒரு வேதிப் பிணைப்புப் பொருளைத் தெளித்துப் பதனிடுவர். வலையமைவுக்காக விழும் இழைகளில் மின்னேற்றத்தைத் தோற்றுவித்து, அவற்றின் பரவலையும் ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்தலாம். ஒரே வலையில் இரு வேறு பல படிகளைப் பிழிந்து வார்க்கலாம் (extruded) அல்லது இழைகளை அலைவுறுத்தலாம் (Crimping) அல்லது விஸ்கோஸ் ரேயான் இழையைப் பயன் படுத்தலாம். இவை போன்று பல நுண் திருத்தங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. நூற்பிணைப்பு முறையில் தயாரிக்கப் பட்ட துணிகளுக்கு ரீமே, டைவக், டைபார் , செரெக்ஸ் போன்ற வணிகச் சின்னங்கள் உள்ளன. இவை முறையே பாலி எஸ்ட்டர், பாலி எத்திலீன், பாலி புரோப்பிலீன், நைலான் ஆகிய இழைகளினாலான நெய்யாத் துணிகள். நூற்புச் சரிகை வகைப் பிணைப்பு (spun laced bonding) என்னும் முறையில், காற்றால் ஊதித் தெளிக்கப் படும் இழைகள் ஒரு குறிப்பிட்ட கோள வடிவில் திரையின் மீது அமர்கின்றன. இதனால், சித்திர வேலைப்பாடுகள் மிகுந்த துணி உருவாகும். பாலி எஸ்டர் , நைலான் ஆகியன இம்முறைக்கு ஏற்றவை.
<b>உருக்கிப் பிணைத்தல்</b> (Melting). ஈரிழைக் கோவைகளை (bicomponent composite fabrics) ஒன்றுக்குள் ஒன்றாகவோ, அடுத்தடுத்தோ அமையுமாறு பிழிந்து வார்க்கலாம். கவனமாகச் சூடேற்றினால், எளிதில் உருகும் கூறு இழை உருகி, ஏனைய இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கிறது. இக்கட்டத்திற்கு முன்பாகச் சுரண்டிக் கிளறும் (Napping) முறையைச் செயல் படுத்தினால், போர்வை, ஜமக்காளம் போன்ற துணிகளைக் கூடத் தயாரிக்கலாம்.{{nop}}<noinclude></noinclude>
a0lbggtmm5yqbnssxlyp1pmag4h8svy
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/185
250
643146
1933616
2026-05-14T15:23:04Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்யாத் துணி 163}}</noinclude><b>உடலுள் பிணைப்பு</b> (autogenic bonding). செயற்கை இழையாலான ஒரு வலை மீது தகுந்த கரைப்பானைத் தெளித்தால், இழை கரைந்து மென்மையாகும். கரைந்த பகுதி, கரையாத இழைப் பகுதிகளை ஒட்டுவிக்கும். தக்க தருணத்தில், கரைப்பானை ஆவியாக்கி வெளியேற்றினால், பிணைப்புற்ற வலை கிடைக்கும்.
<b>கதிர் வீச்சு வகைப் பிணைப்பு</b> (radiation bonding). நிறைவுறாத பாலி எஸ்ட்டரையும், ஓரளவு ஒருங்கமைந்த பாலி எஸ்ட்டரையும் கொண்ட வலையை ஒரு குறுக்குப் பிணைப்பூட்டும் வேதிப் பொருளுடன் கலந்து, எலெக்ட்ரான் கற்றைக் கதிர் வீச்சுக்குட் படுத்தினால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, நீளிழைகள் பிணைகின்றன.
<b>கோவைப் பிணைப்பு</b> (Composite bonding). இதில் இரு வகை உள்ளன. ஸ்கிரிம் வலிவூட்டப்பட்ட பொருள் (SRM) எனும் அமைப்பில், இழை வலைகள் உடுக்கை அமைப்புற்ற (Sandwich) நைலானாலான ஸ்கிரிம் உள்ளுறையின் மீது சுற்றப் பட்டுள்ளன. திசு–இழைத் தகடு (Tissue fibre laminate–TFL) எனும் தயாரிப்பில், திசுக்களாலான வலையைக் குறைந்த முறுக்கேற்றப்பட்ட நீள் ரேயான் நூல்களின் மீது அச்சிடல் பிணைப்புத் தோற்றுவிக்கப் படுகிறது. இரு வகைத் துணிகளும், ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வல்ல அறுவை மருத்துவ வகைத் துணிகளாகப் பயனாகின்றன.
<b>தைத்துப் பிணைத்தல்</b> (Stitch through bonding). ஏடு நிலைக்குட்படுத்தப் பட்ட வலைகளை, வெப்பத்தால் இளகும் நெகிழி நூல்களைக் கொண்டு தைத்துச் சூடேற்றினால், நூல் இளகி, சுருங்கி வலையமைப்பை ஒட்டுவித்துப் பிணைக்கிறது.
<b>அச்சு வகை ஓட்டுவிப்பு</b> (printed adhesive bonding). இளக வல்ல ஒட்டுவிப்பியாலான கோலத்தை, ஒரு வாரின் மீது அச்சிட்டு, அதன் மீது நீளிழை வலையை அல்லது நேராக்கப் பட்ட (carded) வெட்டிழையைப் பரப்ப வேண்டும். ஒட்டுவிப்பி ஓரளவு பதனிடப் பட்ட நிலையில் வாரிலிருந்து விடுபட்டு, வலையின் மீது ஒட்டும். இவ்வலையைச் சூடாக்கினால், ஒட்டுவிப்பி இளகிச் சுருங்குகிறது. இவ்வாறு, ஒன்றிணைந்த ஒட்டுவிப்பி அடுக்கு ஒரு தாங்கு திரையாகி, இழைகள் யாவற்றையும் மேல் நோக்கி நிற்குமாறு செய்கிறது. அடுக்கின் கோல அமைப்பும், யாப்பும் பதிக்கப் பட்ட ஒட்டுவிப்பியின் கோல அமைப்பைப் பொறுத்திருக்கும். இறுதியாக, துணியைச் சூடேற்றி வடிவமைக்கலாம். இவ்வழி முறையில் சிறு திருத்தங்களைப் புகுத்துவற்கு இழையின் தன்மை, வலையின் ஒருங்கமைப்பு, ஒட்டுவிப்புப் பாணி, ஒட்டும் இழையின் எண்ணிக்கை ஒன்றிணைதல் விகிதம் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
<b>ஊசிப் பொத்தல் முறை</b> (needle punching). இழை வலைகளை முன் முனை கொண்ட ஊசிகளால் குத்துகையில், இழைகள் சிடுக்குறுகின்றன (entangled). ஊசிகளை மீண்டும் வெளியே எடுக்கும் போது, இச்சிடுக்குகள் கூடுதலாகின்றன. ஊசிகளின் எண்ணிக்கை, அவற்றின் முனையிலுள்ள முள்களின் வடிவமைப்பு, ஊசிகளைப் புகுத்தும் கோணம், ஊசி உட்புகும் ஆழம், இழை வகை ஆகியவற்றைப் பொறுத்து நெய்யாத் துணியின் இயல்பு உருவாகும்.
<b>நெய்யாத் துணியைச் சீர் செய்தல்</b>. சாயந் தோய்த்தல், அச்சிடுதல், மேன்மையேற்றம், உருளை அழுத்தம் எனப் பல சீர் செய்தல் முறைகள் இவ்வகைத் துணிகளுக்கு ஏற்றவையாகும்.
<b>சிறப்பியல்பு</b>. ஒரு நெய்யாத் துணியின் தன்மை அதன் தயாரிப்புக் கட்டத்தில் நிலவிய துணையலகுகளைப் பொறுத்ததாகும். எனவே, இத்தன்மை அகன்ற வரம்புக்குட் பட்டது. தோற்றத்தில், இத்துணி காகிதத்தைப் போன்றோ, பின்னல் கம்பளியைப் போன்றோ, மிக அரிதாக நெசவுத் துணி போன்றோ இருக்கும். திசுக் காகிதத்தைப் போன்று மெலிதாகவோ, அட்டையைப் போன்று தடித்தோ, தயாரிக்கப் படலாம். குறை ஆடிமை (translucence) அல்லது முழு ஆடிமை (transparancy) பெறப் படலாம். நுண் துளைமையிலும் (porosity) பரந்த வரம்பு உள்ளது. துவளுமை (drapability) ,நீள் வலிமை ஆகியன நெய்யாத் துணியில் குறைந்த அளவிலேயே இடம் பெறுகின்றன. இவை பெரும்பாலும் உலர் சலவைக்கே ஏற்றவை. நெய்யாத் துணிகளுக்குக் குறிப்பிட்ட பயனுக்கான தன்மைகளைப் புகுத்தலாம். எடுத்துக் காட்டாக, சில வகைச் சிறு துவாலை (diaper) நெய்யாத் துணியாலான இரு வேறு அடுக்கைக் கொண்டது. மேலடுக்கில், நனைப்பூட்டியால் நிரப்பப் பட்ட பாலிஎஸ்ட்டர் துணி இடம் பெறுகின்றது. இது விரைவாக நீர்மம் புகுந்து வடிவதற்கு உதவுகிறது. பக்க வாட்டில் உறிஞ்சப்படுதல் மிகச் சிறிதளவே நிகழ்கிறது. உள்ளடுக்கில் நீர்மத்தை உறிஞ்ச வல்ல ரேயான் உள்ளது. அறுவை மருத்துவர் அணியும் முகமூடி தயாரிப்பதற்கு மெல்லிய, எளிதில் வடி கட்ட வல்ல நெய்யாத் துணி பயனாகிறது. இதன் இழைகளின் நுண்மை மைக்ரோ டெனியர் அளவில் இருக்கும். பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் அணியும்<noinclude><br>{{rh|அ. க. 14–11அ}}</noinclude>
i19gfng2e9lys6ntsqkzp3utxrgg54m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/936
250
643147
1933619
2026-05-14T16:11:46Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒன்றான திருச்சுழியிலில் இருந்து வந்த பார்ப்பன வணிகன் மாணி சங்கர நாராயணன் என்பான் கோயிலில் விளக்கு எரிக்கத் தானமளித்துள்ளான். இக்கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழுமலம்|908|கள்ளக் கடத்தல்}}</noinclude>ஒன்றான திருச்சுழியிலில் இருந்து வந்த பார்ப்பன வணிகன் மாணி சங்கர நாராயணன் என்பான் கோயிலில் விளக்கு எரிக்கத் தானமளித்துள்ளான். இக்கல்வெட்டு இவ்வூரைத் திருநேச்சுரம் என்று குறிப்பிடுகிறது.
முதலாம் இராசேந்திர சோழன், தன் காலத்தில் அவனது இளவரசர்களைச் சோழபாண்டியர்கள் என்ற பெயரில் பாண்டி நாட்டுப் பகுதிகளில் ஆளுநர்களாக நியமித்தான். சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற ஆளுநரின் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரில் உள்ளது.
வரலாற்றுக் காலந் தொடங்கிச் சைவமும் சமணமும் பிறந்தோங்கிய இவ்வூர் இக்காலத்தில் கால்நடைச் சந்தைக்குப் பெயர் பெற்ற இடமாகத் திகழ்கிறது. கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது. மக்கள்தொகை 11,616 (1981).
{{Right|<b>சொ.சா.</b>}}
{{larger|<b>கழுமலம்:</b>}} இப்பெயரில் சங்க காலத்தில் ஓரூர் இருந்துள்ளது. இவ்வூர் சேர அரசனுக்கு உரியதாகவும் பின்னர்ச் சோழமன்னன் இதனை வென்றகப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. பழையன் என்பவன் சோழமன்னனின் படைத்தலைவன். அவன், நன்னன் முதலான ஆறு படைத்தலைவர் கூடிப் பாசறை கொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கிப் பலரைக் கொன்று இறுதியில் இறந்துபட்டான். அதனை அறிந்த சோழன் பெரும்பூட் சென்னி சினந்தெழுந்து சேரனுக்குரிய கழுமலம் என்னும் ஊரைத் தாக்கி அங்கிருந்த கணையன் என்னும் சேரர் படைத் தலைவனையும் கழுமல ஊரையும் கைப்பற்றினான். இதனைக் குடவாயிற் கீரத்தனார் தம் அகப்பாடலில் (அகம். 44) குறிப்பிட்டுள்ளார். கழுமலம் குட்டுவனுக்கு உரியதென்பதனை ‘நற்றேர்க் குட்டுவன் கழுமலம்’ என்று சாகலாசனார் தம் அகப்பாட்டில் (அகம். 278) சுட்டியுள்ளார். சோழமன்னன் சேரனுக்குரிய கழுமல நகரைப் போரிற் கைப்பற்றிய செய்திக் குறிப்பு களவழி நாற்பது என்னும் நூலில் ‘காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்’ (36) என்று காணப்படுகிறது. பழமொழியிலும் கழுமலம் பற்றிய குறிப்புள்ளது.
<b>கழுமலம்{{sup|2}}:</b> தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்னும் தலத்திற்கு அமைந்துள்ள 12 பெயர்களுள் கழுமலம் என்பதொன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். திருக்கழுமலம் என்னும் பெயரில் தேவாரத்தில் பதிகங்கள் பாடப்பெற்றுள்ளன. கழுமலம் சிதம்பரம் மயிலாடுதுறைச் சாலையில் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காண்க: சீகாழி
{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{larger|<b>கழைதின் யானையார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாகப் புறநானூற்றில் வல்வில்ஓரி பற்றிய 204–ஆம் பாடல் மட்டுமே உள்ளது. பாடல்களில் வரும் தொடர்களால் பெயர் பெற்ற தேய்புரிப் பழங்கயிற்றினார் பழங்கயிற்றினார் (நற். 284) தொடித்தலை விழுத்தண்டினார் (புறம். 243) ஆகியோரை நோக்கும்போது இவரும் ‘கழைதின் யானை’ என்ற தொடருடைய ஒரு பாடலைப் பாடியிருக்கலாம் என்றும், அப்பாடல், தொகை நூல்களைத் தொகுப்போர்க்குக் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் ஊகிக்கலாம்.
‘ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று’ என வரும் இவரது புறநானூற்றுப் பாடற்பகுதி, திருக்குறளில் வரும் இரவு, இரவச்சமென்ற அதிகாரங்கட்டு முன்னோடி எனக் கருதுமாறு உள்ளது.
{{Right|<b>க.இரா.</b>}}
{{larger|<b>கள்ளக் கடத்தல்:</b>}} சட்ட நெறிகளுக்குட்படாமல் நாடுகளிலிருந்து பொருள்களை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லுதலும், வேறு நாடுகளிலிருந்து பொருள்களைக் கொண்டு வருதலும் கள்ளக் கடத்தல் எனப்படும். வாணிக அடிப்படையில் செயற்படும் வணிகர் சுங்க வரி செலுத்தாமல் அதனைத் தவிர்க்க மறைமுகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இவ்வாணிகம் கள்ளக்கடத்தல் (Smuggling) எனப்படுகிறது. பண்டைக் காலத்திலிருந்து கடல் வழி வாணிகம் தனிச் சிறப்பிடம் பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. கடல் வழி வாணிகம் நடைபெற்ற காலத்திலிருந்து கள்ளக் கடத்தல் தொழில் இருந்து வருகிறது. விமானப் போக்குவரத்து மூலம் 20-ஆம் நூற்றாண்டில் பொருள்களை ஏற்றிச் செல்லத் தொடங்கிய பின்பு கள்ளக் கடத்தல் இல்வழியிலும் நடைபெறத் தொடங்கியது.
கள்ளக் கடத்தல், தனிப்பட்டோர் தாம் எடுத்து வரும் பொருள்களை வாணிக அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வாணிகக் கட்டுப்பாடுகள், நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் ஆகியவற்றை மீறி எடுத்து வருவதனாலும் ஏற்படுகிறது. கள்ளக்கடத்தல் அந்நாட்டினுடைய அயற்செலாவணிச் சட்டங்களையும் மீறி நடைபெறுகிறது. பொதுவாக, சில கவர்ச்சியான பொருள்களாலும், விலையுயர்ந்த தங்கம், வைரம், வெள்ளி போன்ற பொருள்களாலும் கள்ளக் கடத்தல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பொருள்களுக்கு எல்லா நாடுகளிலும் தேவை மிகுதிவாசு இருப்பதால், இத்-<noinclude></noinclude>
3rcosoy0knr4ptm3oo6vheh0rmwn18q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/937
250
643148
1933620
2026-05-14T16:27:05Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிலில் ஈடுபடுவோர் மிகை ஆதாயம் பெறுவதே இதற்கு முக்கிய காரணமாகும். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய பல புதிய பொருள்கள் கள்ளக் கடத்தலில் வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள்ளக் கடத்தல்|909|கள்ளக் கடத்தல்}}</noinclude>தொழிலில் ஈடுபடுவோர் மிகை ஆதாயம் பெறுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய பல புதிய பொருள்கள் கள்ளக் கடத்தலில் விற்பனையாகின்றன. தொழில்நுட்பத் திறனுடன் உயர்தரப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்மயமான நாடுகள், தொழில்மயமாகாத நாடுகளில் தங்க முழு அளவில் விற்பனை பொருள்களை முழு அளவில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அவற்றை விற்பனை செய்ய அவை கள்ளக் கடத்தலில் ஈடுபடுகின்றன. கட்டுப்பாடற்ற வாணிகம் உலகளவில் ஏற்றுக் கொள்ளாத அமைப்பாக இருப்பதனால், உற்பத்தியாகும் பொருள்களை விற்பது சில நாடுகளின் தேவைகளுக்கேற்பவும், அந்நாடுகளின் பன்னாட்டு வாணிக நிலையைப் பொறுத்தும் அமைந்து விடுவதால், கள்ளக் சுடத்தல் தொழில் வளர்ச்சியடைகிறது. இன்றியமையாப் பொருள்களை மட்டுமே இறக்குமதி செய்யப் பெரும்பாலான நாடுகள் முயற்சி செய்கின்றன. மூலப் பொருள்கள், உணவுத் தானியங்கள், எரிசக்திப் பொருள்கள், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எந்திரங்கள் ஆகியன தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இப்பொருள்களை எல்லாத் தனியார் நிறுவனங்களும் அரசுத்துறை நிறுவனங்களும் சுங்கத் துறைக்குச் செலுத்த வேண்டிய வரியினைச் செலுத்திய பின்னர்க் கொண்டு வருகின்றன.
பொதுவாக எல்லா நாடுகளுமே ஆடம்பரப் பொருள்களையும், நுகர் பொருள்களையும் இறக்குமதி செய்வதற்குச் சட்டங்களின் மூலமும், மிக உயர்வான சுங்கவரி விதிப்பதன் மூலமும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இக்காரணங்களால் கள்ளக்கடத்தலில் ஈடுபடுவோர் இப்பொருள்களைத் தேவைப்படும் நாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்ட முறையற்ற வாணிகத்தில் ஈடுபடுகின்றனர். எந்தவித வரியையும் கட்டாமல் பொருள்களைக் கடத்துவதால் அவர்களுக்கு மிகை ஆதாயம் கிடைக்கிறது. அண்மைக் காலத்தில் போதைப் பொருள்களைக் கடத்துவது கள்ளக் கடத்தலில் முதன்மைப் பங்கினை வகிக்கிறது. கட்டுப்பாடுகளை மீறிக் கஞ்சா, அபினி, போதை மாத்திரைகள் போன்றவை பேரளவில் கள்ளக் கடத்தல் மூலம், பன்னாட்டு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைக் கடத்துவோருக்குக் கடுமையான தண்டனை முறைகள் இருப்பினும் இத்தொழிலிலிருந்து மிகை ஆதாயம் வருவதால் அதனையே கருத்தில் கொண்டு உயிரைத் துச்சமாகக் கருதிக் கள்ளக்கடத்தலில் ஈடுபடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், ஆங்காங்கு (Hongkong) போன்ற நாடுகளில் இத்தொழிலில் ஈடுபடுபவருக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
மக்கள் நுகரும் தன்மையையும் விருப்பத்தையும் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அயல்நாட்டுப் பொருள்களின் மீதுள்ள மோகம் கள்ளக் கடத்தலுக்குப் பெரும் ஊக்கச் சக்தியாக இருந்து வருகிறது. பரந்த கடற்கரையுள்ள இந்தியா போன்ற நாடுகளில் கடலின் மூலம் நடக்கும் கள்ளக் கடத்தலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பாகிசுத்தான், பர்மா, நேபாளம், பங்களாதேசம் போன்ற நாடுகளின் எல்லையோரப் பகுதிகளை ஒட்டி இந்தியா இருப்பதால், இப்பகுதிகளில் தரை வழியாக நடக்கும் கள்ளக் கடத்தலையும் தடுக்க முடிவதில்லை.
கள்ளக் கடத்தல் ஒரு நாட்டின் பொருளாதார உறுதித் தன்மையை அசைக்கிறது. இதன் மூலம் நாட்டிற்குள் வரும் பொருள்களும் அதற்குப் பதிலாக நாட்டைவிட்டு வெளியே செல்லும் பொருள்களும் அரசின் அயல்நாட்டு ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையைப் பேரளவில் பாதிக்கின்றன. இக்கள்ளக் கடத்தல் தொழில் மூலம் வரும் வருமானம் கறுப்புப் பணமாக மாறுவது. கறுப்புப் பணப் பொருளாதாரம் நாட்டின் உண்மையான பொருளாதார அமைப்பைப் பல்வேறு வழிகளிலும் தாக்குகிறது. உலக நாடுகள் பல, பல்வேறு சட்டங்களின் வாயிலாகக் கள்ளக்கடத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளன.
சுற்றுலாத் துறை வளர்ச்சி இந்நூற்றாண்டில், பெருமளவில் ஏற்பட்டதாலும் விமானப் போக்குவரத்து வளர்ச்சியடைந்துள்ளதாலும், பேரளவில் பயணிகள் நாள்தோறும் உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்கின்றனர். அவர்கள் கொண்டு வரும் பொருள்களும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.
கள்ளச் சந்தையில் விற்கப்படும் பொருள்களுள் குறிப்பிடத்தக்கவை: (1) போதைப் பொருள்கள், (2) அழகுப் பொருள்கள், (3) மின்துறைப் பொருள்கள் (சிறிய வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைக் காட்சித் தொடர்பான பிற கருவிகள், புகைப்படக் கருவிகள், கடிகாரங்கள்), (4) ஆடை அணிகள்.
இந்திய அரசு கடத்தல் பொருள்களைத் தடுப்பதற்குப் பல சட்டங்களை இயற்றியுள்ளது. குறிப்பாகச் சுங்கவரிச் சட்டங்கள், கடத்தலுக்குட்படும்
பொருள்களைக் கடல் வழியாகவோ, விமானங்கள் மூலமாகவோ கொண்டு வந்தால் 300-இலிருந்து 350 விழுக்காடு வரை இறக்குமதி வரியை விதிக்கின்றன. இவ்வரியின் மூலம் அயல்நாட்டிலிருந்து வரும் பயணி-<noinclude></noinclude>
juifkp9ubc27pc2n559yzc01wd5xi7n
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/186
250
643149
1933621
2026-05-14T16:34:03Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|164 நெய் வனம்}}</noinclude>உடையை மைக்ரோ டெனியர் இழைகளாலான தடித்த, மென் தோலையொத்த (fluffy) வெப்பம் காக்கும் நெய்யாத் துணி கொண்டு தயாரிக்கலாம்.
நெய்யாத் துணியைப் பயன் முறை அடிப்படையில் நீடித்து உழைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தக்கது என இரு பிரிவாக வகைப் படுத்தலாம். முதல் வகையைக் குல்லாய் இடைச் செருகல் ஏடு, அறை கலன் உறை, கம்பள விரிப்பு அடித் தளம், வடி கட்டி, வெப்பக் காப்பீட்டு அமைப்பு ஆகியவற்றுக்கும், இரண்டாம் வகையை மகளிர் சுகாதாரத் துண்டு, அறுவை மருத்துவ, தொழிலக வகை முகமூடி, வைப்புக் கட்டு, தூசிச் சேகரிப்பான் ஆகியவற்றுக்கும் பயன் படுத்தலாம்.
{{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. B.P Corbman, <i>Textiles-Fibre to Fabric</i>, Sixth Edition, McGraw–Hill Kogakusha Ltd., Singapore, 1985.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="107"/><section begin="108"/>
{{fs|110|<b>நெய் வனம்</b>}}
பரப்புப் பூச்சு, நெய் வனம், புறப் பரப்புச் செம்மை எனப் பல சொற்றொடர்களினால், ஒரு பரப்புக்கு அரிமானப் பாதுகாப்பு அளிக்கும் செயல் முறை குறிப்பிடப் படுகிறது.
பூச்சுகள் புறப பரப்புக்கு விரும்பத் தக்க பளபளப்பையும், நிறத்தையும், குறைகளற்ற தோற்றத்தையும் அளிப்பதுடன், உலோகப் பரப்புகளை அரிமானமுறாது, தடுக்கின்றன. நெகிழிப் (plastic) பரப்புகள் ஒளி படுவதால், நிலையிறக்கமாவதைத் தவிர்கின்றன. மரப் பலகைகளுக்கு நீர் புகாத படலங்களையும், கீறல் படாத பரப்புகளையும் அளிக்கின்றன. சில சிறப்பு ஒளிப் பண்புகளை வெளிப்படுத்தவும் பூச்சுகள் பயன் படுகின்றன. நீச்சல் குளங்களின் அடித் தளங்களில் ஒளியை உறிஞ்சி, நீரைச் சூடு படுத்துவதற்கும், (ராணுவ அமைப்புகளின்) ரேடார் கதிர்களை உறிஞ்சுவதற்கும், மின்னமைப்புகளுக்குக் காப்பீடு அளிப்பதற்கும் பூச்சுகள் பயன் படுவதுண்டு. மேலும் அடையாளக் குறியிடுதல், பாதுகாப்பு, சறுக்காத பரப்பு அளித்தல், வெப்ப நிலைக் கட்டுப்பாடு, ஒளிக் கட்டுப்பாடு, தூசுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் பூச்சுகள் உதவுகின்றன.
<b>பூச்சுகள்</b>. இவை புறப் பரப்பு–காற்று இடைவெளியைப் புறப் பரப்பு–பூச்சு இடையீடாக மாற்றுகின்றன. பூச்சுகள் உலர்தல் வாயிலாகவோ, பதப்படுத்தல் வாயிலாகவோ கடினமாகின்றன. உலர்தல் ஓர் இயற்பியல் இயக்கமாதலால், கரைப்பான் ஆவியாக வெளியேறுகிறது. பதப்படுத்தல் ஒரு வேதி இயக்கமாதலால், இங்கு ஆக்சிஜனேற்றமும் பல்லுறுப்பாக்கமும் நிகழ்ந்து, நீர்மப் பூச்சு திண்மமாகிறது.
நீர்மப் பூச்சு என்பது ரெசின் அல்லது உலரும் எண்ணெய் மற்றும் கரைப்பானாலான நீர்மத்தில் நுண் சிதறல்களாக்கப் பட்ட நிறப்பொருள்கள். விரும்பத் தக்க சில சிறப்புப் பண்புகளை ஏற்றும் பொருட்டு, சில கூட்டுப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன.
நீரை அடிப்படையாகக் கொண்ட பூச்சுக்கள் மொத்தத்தில் 70%க்கும் மேலான பங்கு பெறுபவை. நீரை அடிப்படையாகக் கொண்ட, கட்டிடச் சிறப்புக் கலைப் பூச்சுகள் ரப்பர் பாலினாலானவை. நீரில் தொங்கல் நிலையிலுள்ள தொகுப்பு ரெசின்களே ரப்பர் பால் பூச்சு என வழங்கப் படுகின்றன. உலரும் பூச்சுப் படலத்திலிருந்து நீர்ஆவியாகி, துகள்கள் ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான படலமாக உருவாகி, நிறப் பொருளை இணைத்தும், புறப் பரப்புடன் ஒட்டியும் செயல் புரிகின்றன.
<b>நீர்மப் பூச்சின் இயைபு</b>. வண்ணப் பூச்சுகளில் பொதுவாகக் கீழ்க் காணும் உட்கூறுகள் உள்ளன. அவை இணைப்பி அல்லது ஊடகம் (binder or vehicle), நிறப் பொருள் (pigment), உலர்தல் ஊக்கி (drier), கரைப்பான் அல்லது விளாவல் நீர்மம் (solvent or thinner) நிறப்பி (filler) அல்லது நீட்சிப் பொருள் (extender) என்பன.
இணைப்பிகள், கரிமச் சேர்மங்கள் ஆகும். இவை சிறுமப் பல்லுறுப்பிகளாவோ, பெருமப் பல்லுறுப்பிகளாகவோ விளங்குகின்றன. இறுதிப் படலத்தில் இவை தொடர்ச்சியான தளத்தை உருவாக்குகின்றன. பூச்சில் தாக்கு வலிமை, நெகிழ்ச்சி, பளபளப்பு, வேதி எதிர்ப்பு, பதப்படும் இயல்பு ஆகியன இணைப்பியின் தன்மையைப் பொறுத்தனவாகும்.
<b>இணைப்பிகளின் பொது வகைப்பாடு</b>. இவை ரப்பர் பால், நீர் கலந்த படலப் பொருள், நீரற்ற சிதறல், கரைப்பான் கலந்தவை என வகைப் படுத்தப் படும். ரப்பர் பால் வகையில் உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பித் துகள்கள் நீரிய ஊடகத்தில் சிதறியுள்ளன. பல்லுறுப்பிச் சிதறல் நிலையிலுள்ளதால், கலவையின் பாகு தன்மை நீரின் பாகு தன்மையைப் பொறுத்தது. இதனால், மிக உயர் மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பி பயன் படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. நீர் ஆவியாவதால், படலம் உருவாகிறது. பல்லுறுப்பித் துகள்கள் அயனி விலக்கு விசையை மீறி<noinclude></noinclude>
3iog7j6c4rd9jkl8fy40p31rm4y1n7j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/938
250
643150
1933622
2026-05-14T16:45:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் கொண்டுவரும் பொருள்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது. போதைப் பொருள்களைக் கடத்துவோரைக் கண்டுபிடிப்பதற்குச் சிறப்புப் பயிற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள்ளக் கடத்தல்|910|கள்ளத் தயாரிப்பு}}</noinclude>கள் கொண்டுவரும் பொருள்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது. போதைப் பொருள்களைக் கடத்துவோரைக் கண்டுபிடிப்பதற்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடல் வழியாக நடக்கும் கள்ளக் கடத்தலைத் தடுக்கக் கடல் காவற்படை (Coastal Guard) அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக் கடத்தல்காரர்கள், வெகு விரைவாகச் செல்லும் எந்திர விசைப் படகுகளைப் பயன்படுத்துவதால் மையஅரசு கடற்படையின் உதவியோடு கள்ளக் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை வகுத்துள்ளது.
கடல் காவல் துறையினருக்குத் தேவையான அளவு மிகுவிரைவு எந்திர விசைப் படகுகள் 1980–ஆம் ஆண்டிற்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளன. சுங்கத்துறை அதிகாரிகளிடையே நடக்கும் ஊழலைத் தடுப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளக் கடத்தலைத் தீவிரமான முறையில் தடுக்கும் அதிகாரிகளுக்கு அத்தொழில் தொடர்பானவர்களைப் பிடித்துக் கொடுப்பதன் மூலம் கள்ளக் கடத்தல் பொருள்களின் மதிப்பிலிருந்து ஒரு விழுக்காடு அல்லது இரண்டு விழுக்காடு பணத்தொகை விருது அளிக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை போகப் பல அரசு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ‘அயற் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்’ (Foreign Exchange Regulation Act, FERA) மூலம் அயல்நாட்டுச் செலாவணியில் நடக்கும் மறைமுக வாணிகத்தை அரசு கட்டுப்படுத்துகிறது. அண்மைக் காலத்தில் இச்சட்டத்தை மீறிய பல தொழில் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்றே கள்ளக் கடத்தல்காரர்களை விசாரணையின்றிச் சிறையில் பிடித்து வைப்பதற்கும் 1974–ஆம் ஆண்டு இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (MISA) பயன்படுத்தப்பட்டது. இப்பிரிவைப் பயன்படுத்தி இந்தியாவில் இயங்கி வந்த பெரும் கடத்தல் வல்லுநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் 500 கோடியிலிருந்து 600 கோடி உரூபாய் வரை கள்ளக் கடத்தல் நடைபெறுவதாகவும், தங்கம் கடத்துவதில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
‘அயற் செலாவணிப் பாதுகாப்பு, கள்ளக் கடத்தல் தடுப்புச் சட்டம்’ (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Act-COEF–POSA) என்ற சட்டத்தின் செயற்பாட்டை ஆராய்ந்த சில பொருளியல் அறிஞர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். அதில், இந்தியாவில் கள்ளக் கடத்தல் மூலம் ‘இணையான மற்றொரு அயல் வாணிகம்’ (Parallel Foreign Trade) நடைபெறுகிறது என்ற கருத்தும், இக்கள்ளக் கடத்தல் மூலம் நடைபெறும் அயல் வாணிகம் சட்ட அடிப்படையில் நடைபெறும் அயல் வாணிகத்தை விட மிகுதியானது என்ற கருத்தும் அடங்கியுள்ளன.
{{Right|<b>மு.நா.</b>}}
<b>துணை நூல்:</b>
Aspects of the Black Economy in India, Report of a study by National Insitute of Public Finance and Policy, Ministry of Finance, Government of India, 1985.
{{larger|<b>கள்ளக்குறிச்சி</b>}} தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஊர். கள்ளக்குறிச்சி வட்டம் மாவட்டத்தின் மேற்கில், சேலம் கூடலூர் பாதையில் உள்ளது. குறிஞ்சி நில ஊர்கள், குறிச்சி என்ற பெயருடன் பல இடங்களில் உள்ளன. பஞ்சாயத்து ஒன்றிய ஆட்சி இங்கு நிலவுகிறது. இதன் மக்கள்தொகை 26,905 (1981).
{{Right|<b>தெ.பா.</b>}}
{{larger|<b>கள்ளத் தயாரிப்பு:</b>}} ஒருவரை ஏமாற்றும் எண்ணத்தில் ஒரு பொருளைப் போல் மற்றொரு பொருளைத் தயாரிப்பது கள்ளத் தயாரிப்பு (Counterfeit) எனப்படும். ஒரு கள்ளத் தயாரிப்பு மூலப் பொருளைப் போல் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மூலத்தைப்போல் ஓரளவு இருந்தாலே போதுமானது.
இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 231 இன் படி கள்ள நாணயம் தயாரித்தலுக்கு ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும்; பிரிவு 232 இன் படி இந்திய நாயணத்தைப் போன்று கள்ளத் தயாரிப்புச் செய்தலுக்கு ஆயுட்காலச் சிறை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய சிறையுடன் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். ஈண்டு, இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 231–இல் நாணயம் என்பது பணமாகப் பயன்படுத்தப்படும் பொருட்டு ஓர் அரசு வெளியிடும் அதிகார முத்திரையிட்ட உலோகத்தைக் குறிக்கும்; பிரிவு 232 இல் இந்திய நாணயம் என்பது, இந்திய அரசு அதிகார முத்திரையிட்டு வெளியிட்ட உலோகத்தைக் குறிக்கும். உலோகம் பணமாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டிருந்தாலும், அது இந்திய நாணயமாகவே கருதப்படும்.
இந்திய நாணயத்தில் பண்டமாற்று நாணயங்களான சிப்பிகள் (Cowries), முத்திரையிடப்படாத செப்புக் கட்டிகள், பதக்கங்கள் (இவைகள் இரண்டும்<noinclude></noinclude>
ce4vt2cwmldr1f1y3juxg2wk1v2qlqz
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/187
250
643151
1933623
2026-05-14T16:52:03Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்வனம் 165}}</noinclude>ஒன்றிணைகின்றன. துகள்கள் ஒன்றையொன்று தொடுகையில், அவற்றின் புறப் பரப்பு விசைப் படலம் இறுகித் தொடர்ச்சியாவதற்கு உதவுகிறது. அக்ரிலிக் அமைப்புகளும், வினைல்–அக்ரிலிக் சக பல்லுறுப்பி அமைப்புகளும், ரப்பர் பால் (பல்லுறுப்பிப் பால்) வகையின் உட்பிரிவுகளாகும். பால்மப் பல்லுறுப்பாக்கல் முறையில் ரப்பர் பால் வகைப் பூச்சு நீர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. நீர் கலந்த பூச்சுகளில் அக்ரிலிக், பாலி எஸ்டர், யூரிதேன், ஃபினாலிக், எப்பாக்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை.
<b>நீரற்ற நீர்மச் சிதறல்கள்</b> (non–aqueous dispersions). 1970ல் தானுந்திகளுக்கு இவ்வகைப் பூச்சு பயன் பட்டது. தற்போது, இது துணை நிலை இணைப்பியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. மிகச் சிறிதளவே கலக்கப் படினும், பூச்சு உலரும் தன்மையைப் பெரிதும் உயர்த்துகிறது.
{{block_center/s}}<div style="line-height : 95%; width:500px; font-size: 80%;">
{{gap|14em}}வண்ணப் பூச்சு<br>
{{gap|18.5em}}│<br>
{{gap|6.4em}}┌────────────────┴────────────────┐<br>
{{gap|5.1em}}நிறமி{{gap|19.3em}}குழை வனம்<br>
{{gap|.75em}}┌───────┴───────┐{{gap|10em}}┌──────────┼──────────┐<br>
நிறப் பொருள்{{gap|3em}}நிரப்பி{{gap|8em}}படல {{gap|4em}}நீர்மம்{{gap|3em}}சேர்க்கைப்<br>
{{gap|22em}}ஆக்கி{{gap|2em}}(கரைப்பான்){{gap|2.3em}}பொருள்<br>
{{gap|28.5em}}(நிரப்பி)
</div>{{block_center/e}}
<b>கரைப்பான் சுமக்கும் பூச்சுகள்</b>. இவ்வகையில் முதன்மையானவை ஆல்கைடுகள், வேதி நோக்கில் பாலி எஸ்டர்களான இவை சோயா அவரை, ஆளி விதை, நீரகற்றப் பட்ட ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தானுந்திகள், தொழிலகங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பூச்சு உட்கூறுகளாக இவை பயன் படுகின்றன. தூனுந்திப் பூச்சுகளுக்கு அக்ரிலிக்குகளும், தொழிலகப் பராமரிப்பு, உலோகக் கலங்கள், மின் கம்பிச் சுருள் ஆகியவற்றுக்கு எப்பாக்சிகளும், காந்தப் புல அமைப்புகளுக்குப் பாலியூரித்தேன்களும், உலோக அறை கலன்களுக்குப் பாலி எஸ்டர்கள் மற்றும் திருத்தப் பட்ட மெலமின்களும் பயனாகின்றன. இணை இணைப்பியாகச் (co–binder) சைலேன் பயன் படுகிறது. வேதித் தடுப்பையும், ஈரத் தடுப்பையும் இதனால் உயர்த்த இயலும். சூடான, உருகிய நிலையிலும் கரைப்பானற்ற பூச்சுகள் பயன் படுகின்றன. குளிர்விக்கும் போது, உறைந்து, பூச்சுப் படலம் உருவாகிறது.
<b>வண்ணப் பூச்சு உலர்தல் இயக்கம்</b>. நைட்ரோ செல்லுலோஸ் மெழுகு பூச்சுகளும் வனப்பூட்டும் பால்மப் பூச்சுகளும் கரைப்பான் ஆவியாதலால் உலர்கின்றன. இவ்வகையில் இடம் பெறும் படல ஆக்கிகள் பெரும்பாலும், நேர் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பிகள்.
குறுக்குப் பிணைப்பை உருவாக்க வல்ல பல்லுறுப்பிப் பூச்சுகளில் உலர்தல் ஒரு வேதி வினையாகும். இவ்வகைப் பல்லுறுப்பிகள் எக்கரைப்பானிலும் எளிதில் கரைவதில்லை. எனவே, புட்டிகளில் நீர்ம நிலையிலும், பரப்பின் மீது பூசப்பட்ட பின்பு குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த திண்ம நிலையிலும் காணப் படுகின்றன.
பூச்சு காற்றுடன் வினையுறுதல், பூச்சின் உட்கூறுகளுக்கிடையே வினை நிகழ்த்தல் ஆகிய இரு நிலைகள் குறிப்பிடத் தக்கவை. காற்றில் ஆச்சிஜனும், நீராவியும் வினைத் திறன் மிக்க உட்கூறுகளாகும். உலரும் எண்ணெய் மற்றும் பிற நிறையுறாத சேர்மங்களின் இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் வினையுறுகிறது. பாலி யூரித்தேனினுள்ள ஐசோ சயனேட்டுகள் காற்றிலுள்ள நீருடன் வினையுற்றுக் குறுக்குப் பல்லுறுப்பாக்கம் நிகழ்கிறது. இவ்விரு வினைகளுக்குமே காற்றுத் தேவைப்படுவதால், பூச்சின் வினையுறு பொருள்களின் மீது காற்றுப் படாதவாறு, காற்று நீக்கப்பட்ட புட்டிகளில் இவை அடைக்கப் படுகின்றன. இப்புட்டிகளில் காற்றுப் புக நேரிடின், நீர்மப் பூச்சின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் தோன்றுகிறது. இப்படலம் காற்றுப் புக விடும் படலமாக இருப்பின், வினை பூச்சின் முழுவதும் புகுந்து, முப்பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பாகி விடும். திருத்த முடியாத களி (irreversible gel) எனப் படும் இந்நிலையில் இப்பூச்சு பயனற்றதாகி விடும். மாறாக, பரப்பின் மீது பூசப் படும் வரை பூச்சு காற்றுப் படாமல் பாதுகாக்கப் பட்டிருப்பின், பூசப் பட்டவுடன் மென்மையான நீள் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பி கடினமான முப்பரிமாண குறுக்குப் பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பியாக மாறி விடுகிறது. அறை வெப்ப நிலையில் இச்செயல் முறை மெல்ல நிகழ்கிறது. ஏனெனில், காற்றிலுள்ள ஆக்சிஜன் பூச்சுப் படலத்தினுள் ஊடுருவிய பின்பே, படலம் கெட்டிப் படுதல் முழுமையடைகிறது. பூச்சிலுள்ள வினையுறு மூலக் கூறுகள் மிகுந்திருப்பின், கெட்டிப் படுதல் விரைவு பெறும். குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றினால், கெட்டிப் படுதல் எளிதாகும். எனவே, பல்முனை வினையுறு திறன் கொண்ட (multi functional) மூலக் கூறுகள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இவ்வகையில் மிகுந்த பயன் தரும். உலரும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் வெளிச் சுவர்களுக்கான பூச்சுகள் காற்றுடன் வினையுற்று உலர்வனவாகும்.{{nop}}<noinclude></noinclude>
icj93n76som3aej5nyyfs0qdt00x94v
1933625
1933623
2026-05-14T17:09:18Z
TI Buhari
4634
1933625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்வனம் 165}}</noinclude>ஒன்றிணைகின்றன. துகள்கள் ஒன்றையொன்று தொடுகையில், அவற்றின் புறப் பரப்பு விசைப் படலம் இறுகித் தொடர்ச்சியாவதற்கு உதவுகிறது. அக்ரிலிக் அமைப்புகளும், வினைல்–அக்ரிலிக் சக பல்லுறுப்பி அமைப்புகளும், ரப்பர் பால் (பல்லுறுப்பிப் பால்) வகையின் உட்பிரிவுகளாகும். பால்மப் பல்லுறுப்பாக்கல் முறையில் ரப்பர் பால் வகைப் பூச்சு நீர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. நீர் கலந்த பூச்சுகளில் அக்ரிலிக், பாலி எஸ்டர், யூரிதேன், ஃபினாலிக், எப்பாக்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை.
<b>நீரற்ற நீர்மச் சிதறல்கள்</b> (non–aqueous dispersions). 1970ல் தானுந்திகளுக்கு இவ்வகைப் பூச்சு பயன் பட்டது. தற்போது, இது துணை நிலை இணைப்பியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. மிகச் சிறிதளவே கலக்கப் படினும், பூச்சு உலரும் தன்மையைப் பெரிதும் உயர்த்துகிறது.
{{block_center/s}}<div style="line-height : 95%; width:500px; font-size: 80%;">
{{gap|14em}}வண்ணப் பூச்சு<br>
{{gap|18.5em}}│<br>
{{gap|6.4em}}┌────────────────┴────────────────┐<br>
{{gap|6.5em}}│{{gap|23.5em}}│<br>
{{gap|5.1em}}நிறமி{{gap|19.3em}}குழை வனம்<br>
{{gap|6.5em}}│{{gap|23.6em}}│<br>
{{gap|.75em}}┌───────┴───────┐{{gap|10.06em}}┌──────────┼──────────┐<br>
{{gap|.83em}}│{{gap|10.7em}}│{{gap|10.2em}}│{{gap|7.13em}}│{{gap|7.13em}}│<br>
நிறப் பொருள்{{gap|3em}}நிரப்பி{{gap|8em}}படல {{gap|4em}}நீர்மம்{{gap|3em}}சேர்க்கைப்<br>
{{gap|22em}}ஆக்கி{{gap|2em}}(கரைப்பான்){{gap|2.3em}}பொருள்<br>
{{gap|28.5em}}(நிரப்பி)
</div>{{block_center/e}}
<b>கரைப்பான் சுமக்கும் பூச்சுகள்</b>. இவ்வகையில் முதன்மையானவை ஆல்கைடுகள், வேதி நோக்கில் பாலி எஸ்டர்களான இவை சோயா அவரை, ஆளி விதை, நீரகற்றப் பட்ட ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தானுந்திகள், தொழிலகங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பூச்சு உட்கூறுகளாக இவை பயன் படுகின்றன. தூனுந்திப் பூச்சுகளுக்கு அக்ரிலிக்குகளும், தொழிலகப் பராமரிப்பு, உலோகக் கலங்கள், மின் கம்பிச் சுருள் ஆகியவற்றுக்கு எப்பாக்சிகளும், காந்தப் புல அமைப்புகளுக்குப் பாலியூரித்தேன்களும், உலோக அறை கலன்களுக்குப் பாலி எஸ்டர்கள் மற்றும் திருத்தப் பட்ட மெலமின்களும் பயனாகின்றன. இணை இணைப்பியாகச் (co–binder) சைலேன் பயன் படுகிறது. வேதித் தடுப்பையும், ஈரத் தடுப்பையும் இதனால் உயர்த்த இயலும். சூடான, உருகிய நிலையிலும் கரைப்பானற்ற பூச்சுகள் பயன் படுகின்றன. குளிர்விக்கும் போது, உறைந்து, பூச்சுப் படலம் உருவாகிறது.
<b>வண்ணப் பூச்சு உலர்தல் இயக்கம்</b>. நைட்ரோ செல்லுலோஸ் மெழுகு பூச்சுகளும் வனப்பூட்டும் பால்மப் பூச்சுகளும் கரைப்பான் ஆவியாதலால் உலர்கின்றன. இவ்வகையில் இடம் பெறும் படல ஆக்கிகள் பெரும்பாலும், நேர் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பிகள்.
குறுக்குப் பிணைப்பை உருவாக்க வல்ல பல்லுறுப்பிப் பூச்சுகளில் உலர்தல் ஒரு வேதி வினையாகும். இவ்வகைப் பல்லுறுப்பிகள் எக்கரைப்பானிலும் எளிதில் கரைவதில்லை. எனவே, புட்டிகளில் நீர்ம நிலையிலும், பரப்பின் மீது பூசப்பட்ட பின்பு குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த திண்ம நிலையிலும் காணப் படுகின்றன.
பூச்சு காற்றுடன் வினையுறுதல், பூச்சின் உட்கூறுகளுக்கிடையே வினை நிகழ்த்தல் ஆகிய இரு நிலைகள் குறிப்பிடத் தக்கவை. காற்றில் ஆச்சிஜனும், நீராவியும் வினைத் திறன் மிக்க உட்கூறுகளாகும். உலரும் எண்ணெய் மற்றும் பிற நிறையுறாத சேர்மங்களின் இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் வினையுறுகிறது. பாலி யூரித்தேனினுள்ள ஐசோ சயனேட்டுகள் காற்றிலுள்ள நீருடன் வினையுற்றுக் குறுக்குப் பல்லுறுப்பாக்கம் நிகழ்கிறது. இவ்விரு வினைகளுக்குமே காற்றுத் தேவைப்படுவதால், பூச்சின் வினையுறு பொருள்களின் மீது காற்றுப் படாதவாறு, காற்று நீக்கப்பட்ட புட்டிகளில் இவை அடைக்கப் படுகின்றன. இப்புட்டிகளில் காற்றுப் புக நேரிடின், நீர்மப் பூச்சின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் தோன்றுகிறது. இப்படலம் காற்றுப் புக விடும் படலமாக இருப்பின், வினை பூச்சின் முழுவதும் புகுந்து, முப்பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பாகி விடும். திருத்த முடியாத களி (irreversible gel) எனப் படும் இந்நிலையில் இப்பூச்சு பயனற்றதாகி விடும். மாறாக, பரப்பின் மீது பூசப் படும் வரை பூச்சு காற்றுப் படாமல் பாதுகாக்கப் பட்டிருப்பின், பூசப் பட்டவுடன் மென்மையான நீள் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பி கடினமான முப்பரிமாண குறுக்குப் பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பியாக மாறி விடுகிறது. அறை வெப்ப நிலையில் இச்செயல் முறை மெல்ல நிகழ்கிறது. ஏனெனில், காற்றிலுள்ள ஆக்சிஜன் பூச்சுப் படலத்தினுள் ஊடுருவிய பின்பே, படலம் கெட்டிப் படுதல் முழுமையடைகிறது. பூச்சிலுள்ள வினையுறு மூலக் கூறுகள் மிகுந்திருப்பின், கெட்டிப் படுதல் விரைவு பெறும். குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றினால், கெட்டிப் படுதல் எளிதாகும். எனவே, பல்முனை வினையுறு திறன் கொண்ட (multi functional) மூலக் கூறுகள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இவ்வகையில் மிகுந்த பயன் தரும். உலரும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் வெளிச் சுவர்களுக்கான பூச்சுகள் காற்றுடன் வினையுற்று உலர்வனவாகும்.{{nop}}<noinclude></noinclude>
mxg9yp92gwss8gw7crb627k0akim5lq
1933626
1933625
2026-05-14T17:12:06Z
TI Buhari
4634
1933626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்வனம் 165}}</noinclude>ஒன்றிணைகின்றன. துகள்கள் ஒன்றையொன்று தொடுகையில், அவற்றின் புறப் பரப்பு விசைப் படலம் இறுகித் தொடர்ச்சியாவதற்கு உதவுகிறது. அக்ரிலிக் அமைப்புகளும், வினைல்–அக்ரிலிக் சக பல்லுறுப்பி அமைப்புகளும், ரப்பர் பால் (பல்லுறுப்பிப் பால்) வகையின் உட்பிரிவுகளாகும். பால்மப் பல்லுறுப்பாக்கல் முறையில் ரப்பர் பால் வகைப் பூச்சு நீர்மங்கள் தயாரிக்கப் படுகின்றன. நீர் கலந்த பூச்சுகளில் அக்ரிலிக், பாலி எஸ்டர், யூரிதேன், ஃபினாலிக், எப்பாக்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை.
<b>நீரற்ற நீர்மச் சிதறல்கள்</b> (non–aqueous dispersions). 1970ல் தானுந்திகளுக்கு இவ்வகைப் பூச்சு பயன் பட்டது. தற்போது, இது துணை நிலை இணைப்பியாக மட்டுமே கொள்ளப் படுகிறது. மிகச் சிறிதளவே கலக்கப் படினும், பூச்சு உலரும் தன்மையைப் பெரிதும் உயர்த்துகிறது.
{{block_center/s}}<div style="line-height : 95%; width:500px; font-size: 80%;">
{{gap|14em}}வண்ணப் பூச்சு<br>
{{gap|18.5em}}│<br>
{{gap|6.4em}}┌────────────────┴────────────────┐<br>
{{gap|6.5em}}│{{gap|23.47em}}│<br>
{{gap|5.1em}}நிறமி{{gap|19.3em}}குழை வனம்<br>
{{gap|6.5em}}│{{gap|23.6em}}│<br>
{{gap|.75em}}┌───────┴───────┐{{gap|10.06em}}┌──────────┼──────────┐<br>
{{gap|.83em}}│{{gap|10.7em}}│{{gap|10.2em}}│{{gap|7.13em}}│{{gap|7.15em}}│<br>
நிறப் பொருள்{{gap|3em}}நிரப்பி{{gap|8em}}படல {{gap|4em}}நீர்மம்{{gap|3em}}சேர்க்கைப்<br>
{{gap|22em}}ஆக்கி{{gap|2em}}(கரைப்பான்){{gap|2.3em}}பொருள்<br>
{{gap|28.5em}}(நிரப்பி)
</div>{{block_center/e}}
<b>கரைப்பான் சுமக்கும் பூச்சுகள்</b>. இவ்வகையில் முதன்மையானவை ஆல்கைடுகள், வேதி நோக்கில் பாலி எஸ்டர்களான இவை சோயா அவரை, ஆளி விதை, நீரகற்றப் பட்ட ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகின்றன. கட்டிடங்கள், தானுந்திகள், தொழிலகங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பூச்சு உட்கூறுகளாக இவை பயன் படுகின்றன. தூனுந்திப் பூச்சுகளுக்கு அக்ரிலிக்குகளும், தொழிலகப் பராமரிப்பு, உலோகக் கலங்கள், மின் கம்பிச் சுருள் ஆகியவற்றுக்கு எப்பாக்சிகளும், காந்தப் புல அமைப்புகளுக்குப் பாலியூரித்தேன்களும், உலோக அறை கலன்களுக்குப் பாலி எஸ்டர்கள் மற்றும் திருத்தப் பட்ட மெலமின்களும் பயனாகின்றன. இணை இணைப்பியாகச் (co–binder) சைலேன் பயன் படுகிறது. வேதித் தடுப்பையும், ஈரத் தடுப்பையும் இதனால் உயர்த்த இயலும். சூடான, உருகிய நிலையிலும் கரைப்பானற்ற பூச்சுகள் பயன் படுகின்றன. குளிர்விக்கும் போது, உறைந்து, பூச்சுப் படலம் உருவாகிறது.
<b>வண்ணப் பூச்சு உலர்தல் இயக்கம்</b>. நைட்ரோ செல்லுலோஸ் மெழுகு பூச்சுகளும் வனப்பூட்டும் பால்மப் பூச்சுகளும் கரைப்பான் ஆவியாதலால் உலர்கின்றன. இவ்வகையில் இடம் பெறும் படல ஆக்கிகள் பெரும்பாலும், நேர் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பிகள்.
குறுக்குப் பிணைப்பை உருவாக்க வல்ல பல்லுறுப்பிப் பூச்சுகளில் உலர்தல் ஒரு வேதி வினையாகும். இவ்வகைப் பல்லுறுப்பிகள் எக்கரைப்பானிலும் எளிதில் கரைவதில்லை. எனவே, புட்டிகளில் நீர்ம நிலையிலும், பரப்பின் மீது பூசப்பட்ட பின்பு குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த திண்ம நிலையிலும் காணப் படுகின்றன.
பூச்சு காற்றுடன் வினையுறுதல், பூச்சின் உட்கூறுகளுக்கிடையே வினை நிகழ்த்தல் ஆகிய இரு நிலைகள் குறிப்பிடத் தக்கவை. காற்றில் ஆச்சிஜனும், நீராவியும் வினைத் திறன் மிக்க உட்கூறுகளாகும். உலரும் எண்ணெய் மற்றும் பிற நிறையுறாத சேர்மங்களின் இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் வினையுறுகிறது. பாலி யூரித்தேனினுள்ள ஐசோ சயனேட்டுகள் காற்றிலுள்ள நீருடன் வினையுற்றுக் குறுக்குப் பல்லுறுப்பாக்கம் நிகழ்கிறது. இவ்விரு வினைகளுக்குமே காற்றுத் தேவைப்படுவதால், பூச்சின் வினையுறு பொருள்களின் மீது காற்றுப் படாதவாறு, காற்று நீக்கப்பட்ட புட்டிகளில் இவை அடைக்கப் படுகின்றன. இப்புட்டிகளில் காற்றுப் புக நேரிடின், நீர்மப் பூச்சின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய படலம் தோன்றுகிறது. இப்படலம் காற்றுப் புக விடும் படலமாக இருப்பின், வினை பூச்சின் முழுவதும் புகுந்து, முப்பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பாகி விடும். திருத்த முடியாத களி (irreversible gel) எனப் படும் இந்நிலையில் இப்பூச்சு பயனற்றதாகி விடும். மாறாக, பரப்பின் மீது பூசப் படும் வரை பூச்சு காற்றுப் படாமல் பாதுகாக்கப் பட்டிருப்பின், பூசப் பட்டவுடன் மென்மையான நீள் சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பி கடினமான முப்பரிமாண குறுக்குப் பிணைப்புக் கொண்ட பல்லுறுப்பியாக மாறி விடுகிறது. அறை வெப்ப நிலையில் இச்செயல் முறை மெல்ல நிகழ்கிறது. ஏனெனில், காற்றிலுள்ள ஆக்சிஜன் பூச்சுப் படலத்தினுள் ஊடுருவிய பின்பே, படலம் கெட்டிப் படுதல் முழுமையடைகிறது. பூச்சிலுள்ள வினையுறு மூலக் கூறுகள் மிகுந்திருப்பின், கெட்டிப் படுதல் விரைவு பெறும். குறுக்குப் பிணைப்புகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றினால், கெட்டிப் படுதல் எளிதாகும். எனவே, பல்முனை வினையுறு திறன் கொண்ட (multi functional) மூலக் கூறுகள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இவ்வகையில் மிகுந்த பயன் தரும். உலரும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப் படும் வெளிச் சுவர்களுக்கான பூச்சுகள் காற்றுடன் வினையுற்று உலர்வனவாகும்.{{nop}}<noinclude></noinclude>
gfndcs12qmbcuks7fm38gznbjg3j908
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/939
250
643152
1933624
2026-05-14T17:02:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பணமாகப் பயன்படுத்தப்படினும்) போன்றவை நாணயங்களாகக் கருதப்பட மாட்டா. ஆனால், நிறுவனத்தின் (Company) உரூபாயாக வெளியிடப்பட்ட நாணயம், இந்திய அரசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள்ளமனம்|911|கள்ளிலாத்திரையனார்}}</noinclude>பணமாகப் பயன்படுத்தப்படினும்) போன்றவை நாணயங்களாகக் கருதப்பட மாட்டா. ஆனால், நிறுவனத்தின் (Company) உரூபாயாக வெளியிடப்பட்ட நாணயம், இந்திய அரசின் அதிகாரத்தின்படி முன்பு பணமாகப் பயன்படுத்தப்பட்ட ‘பரூக்காபாத்’ (Farrukhabad) உரூபாய் போன்றவை இந்திய நாணயங்களாகக் கருதப்படும்.
<b>அரசு முத்திரை:</b> வருவாய்க்காக அரசு முத்திரையைக் கள்ளத்தனமாகத் தயாரிப்பவர்கள், இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 255 இன் கீழ் ஆயுட்காலச் சிறை அல்லது பத்தாண்டுகள் வரை சிறை மற்றும் தண்டத் தொகைபோன்ற தண்டனைகள் விதித்துத் தண்டிக்கப்படுவர்.
{{Right|<b>பு.வே.</b>}}
{{larger|<b>கள்ளமனம்:</b>}} ஒருவருக்குச் சட்டவிரோதமான ஆதாயத்தையோ மற்றொருவருக்குச் சட்டவிரோதமான இழப்பையோ விளைவிக்கும் உட்கருத்துடன் எதையேனும் செய்கிற எவரும் அதைக் கள்ளமனத்துடன் (Dishonestly) செய்வதாகக் கருதப்படுவர்.
செயலொன்று கள்ளமனத்துடன் கூடியது என்பதற்குப் பின்வரும் இரண்டு கூறுகள் மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். 1) ஒருவருக்குச் சட்ட விரோதமான ஆதாயத்தை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். 2) மற்றொருவருக்குச் சட்டவிரோதமான இழப்பை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.
சட்ட முரணான பயன், சட்டமுரணான இழப்பு என்பது பொருள் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
இச்சொல், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 378 (திருட்டு), 383 (அச்சுறுத்திப் பறித்தல்), 390 (கொள்ளையடித்தல்), 403 (சொத்தை நேர்மையற்ற முறையில் கையாடல்), 411 (திருட்டுச் சொத்தை நேர்மையற்ற முறையில் பெறுதல்) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>V.V. Raghavan,</b> Law of Crimes (A hand book), Orient Law House, Allahabad, 1980.
{{larger|<b>கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்:</b>}} ஊரால் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் இவரும் ஒருவர். கள்ளிக்குடி மதுரைக்கும் விருதுநகர்க்கும் இடையில் உள்ளது. இப்பெயர் தாங்கிய ஊர் நெல்லை மாவட்டத்திலும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ‘பூதம் புல்லர்’ என்பதற்கான பெயர்க் காரணம் தெரியவில்லை. இவர் பூதங்களை வழிபட்டவராக இருக்கலாம். ‘புல்லினத்து ஆயர்’ என்னும் வழக்கு மருவிப் புல்லர் என்றும் ஆகியிருக்கலாம். குறுந்தொகையின் 190–ஆம் பாடல் இவரால் பாடப்பெற்றது. முல்லைத் திணையில் அமைந்த இப்பாடல், ‘பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ என்னும் துறையில் அமைந்தது.
‘என் செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றார் தலைவர்; பாம்பின் பசிய தலை அறுந்து விழும் படியாக எழும் இடி முழக்கம் கேட்கும் இரவுப் பொழுல், ஆக்களைத் தேடிச்செல்லும் பொலி காளையின் கழுத்திலுள்ள ஒற்றை மணியின் குரல் தலைவனின் காதில் விழுமா?’ என்று ஏக்கத்தோடு குறிப்பிடுகிறாள் தலைவி.
நற்றிணை 333-ஆம் பாடலும் இவராற் பாடப் பெற்றதாகும். பாலைத் திணையில் அமைந்த இப்பாடல் ‘பொருள் வயிற் பிரிவின்கண், ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்துவது’ என்னும் துறையில் அமைந்தது.
இதிலும், ‘அரும்பொருட்கு அகன்ற காதலர்’ என்னும் தொடர் வருகின்றது. ‘பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன்’ கடந்து சென்ற நம் காதலரை நாம் கருதும்போதெல்லாம் சுவரின் கண்ணே பல்லி சொல்லா நின்றதாதலின் அகன்று போகிய காதலர் விரைவில் வருவர் எனத் தோழி தேற்றுகிறாள்.
{{Right|<b>மு.த.</b>}}
{{larger|<b>கள்ளிலாத்திரையனார்:</b>}} இவர் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல்களாகப் புறநானூற்றில் இரு பாடல்களும் (175, 389) குறுந்தொகையில் ஒரு பாடலும் (293) கிடைத்துள்ளன. டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் புறநானூற்றுப் பதிப்பில் இவர் தொண்டை நாட்டிலுள்ள திருக்கள்ளில் என்னும் ஊரினர் என்றும் அத்திரிகுலத்தில் தோன்றியதால் ஆத்திரையனார் என்ற பெயர் பெற்றாரென்றும், அந்தணர் குலத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில் கள்ளில் என்னும் ஊர் திருக்கள்ளம் என்று வழங்கப்பெறுகிறது. குறுந்தொகைப் பாடலின் முதல்வரி ‘கள்ளில் கேளிர் கொண்டு, ஆத்திரை உள்ளூர்’ என்று இருப்பது அந்த அரிய தொடர் அடிப்படையில் கள்ளில் ஆத்திரையனார் என்று பெயர் பெற்றார் என்று கூறுவாருமுளர். இப்புலவர் குறுந்தொகைச் செய்யுளில் ஆதி அருமன் என்னும் வள்ளலையும், புறநானூற்றின் இரு செய்யுள்களிலும் வேங்கடத்தை ஆண்ட ஆதனுங்கன் என்ற கொடைவள்ளலையும் சிறப்பித்துப்<noinclude></noinclude>
ld02f5cgorghvkcv3fy2k8zpsrvfmoj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/188
250
643153
1933627
2026-05-14T17:29:01Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|166 நெய்வனம்}}</noinclude>பூச்சுகளின் உட்கூறுகளுக்கிடையே நிகழும் வினையினால், உலரும் நிலையில் பரப்பின் மீது பூசப்படும் வரை பூச்சின் உட்கூறுகள் ஒன்றோடொன்று பிணையுறுதல் தவிர்க்கப் பட வேண்டும். இந்நிபந்தனையை உறுதிப் படுத்துவதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை வினையுறு பொருள்களைத் தனித் தனிக் கலங்களில் அடைத்து வைத்துப் பயன் படுத்தும் தருணத்தில் கலத்தல், உயர் வெப்ப நிலைகளிலோ, கதிர் வீச்சின் தாக்கத்தினாலோ மட்டுமே வினையுறக் கூடிய உட்கூறுகளை அமைத்தல் என்பன. முதலாம் முறையில், கலத்தல் சரியான விகிதத்தில் இருத்தல் கட்டாயத் தேவை. மேலும், கலவை எஞ்சியிருப்பின், பயனற்றதாகி விடக் கூடும். இரண்டாம் முறையில், பூச்சை ஒரு கரைப்பானில் நீர்த்த கரைசலாக்கி, பாதுகாத்தலும் ஏற்றதே. இக்கரைசலைப் பரப்பின் மீது பூசும் போது, கரைப்பான் ஆவியாவதால் செறிவேற்றம் நிகழ்ந்து, குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, பூச்சு கெட்டிப் படும். தொழிலக அடுப்புகளுக்கான மேற்பூச்சுகளும், மரப் பரப்புக்கான பாலிஎஸ்ட்டர் பூச்சுகளும் இவ்வகையில் உலர்வன.
ஆளி விதை எண்ணெய் போன்ற நிறையுறாத கிளிசரால் எஸ்ட்டர்களின் உலர்தல் பின் வருமாறு அமைந்துள்ளது. இதில் உலரும் போது, கணிசமான அளவு ஆக்சிஜன் ஏற்கப் படுகிறது. தகுந்த உலர்தல் ஊக்கி கலக்கப் பட்ட ஆளி விதை எண்ணெய், அதன் எடையில் 12% வரை ஆக்சிஜனை உறிஞ்ச வல்லது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக்கான (Conjugated double bond) உள்ளடக்கிய கொழுப்பு அமிலங்களின் எஸ்ட்டர்களான எண்ணெய் இவ்வகையிலடங்காது. இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெயை விட விரைவாக உலரும். காட்டாக, 25°C இல் உலர்தல் ஊக்கிகளல்லாத நிலையில், ஆளி விதை எண்ணெய் (ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) உலர்வதற்கு 120 மணி நேரம் தேவைப் படுகிறது. மாறாக, ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்பு களைக் கொண்ட (tung) எண்ணெய் உலர்வதற்கு 48 முதல் 72 மணி நேரமே போதுமானது. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் இடம் பெறாத எண்ணெயில், மூன்று இரட்டைப் பிணைப்புகளேனும் கொண்ட அமிலங்கள் இருத்தல் தேவை. அப்போதுதான், அவை அறை வெப்ப நிலையில் உலரும். இரண்டு இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட அமிலங்கள், கனல் வெப்ப நிலைகளில் மட்டுமே உலர வல்லன.
உலர்த்தி எனப் படும் உலோக சோப்புகளைக் கலந்தால், உலர்தல் விரைவாகும். இச்சூழ்நிலையில், ஆளி விதை எண்ணெய் 2¾ மணி நேரத்திலும், டங் 1¼ மணி நேரத்திலும் உலர்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளற்ற, எண்ணெயில் ஆக்சிஜன் உறிஞ்சப் படுகையில், ஹைட்ரோ பெராக்சைடு மிகுதியாக உருவாகிறது. இந்த ஹைட்ரோ பெராக்சைடு சிதைவுறுதலும், குறுக்குப் பிணைப்பு உருவாதலும், ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புக் கொண்ட எண்ணெயில் பூச்சு நாட்படும் போது, தோன்றும் வேதி மாற்றங்களும், புற ஊதாக் கதிர்களின் பாதிப்புக்குட்பட வல்லன.
மேற்கூறிய ஆய்வு வழி முடிவுகளின் அடிப்படையில், பின் வரும் வழி முறைகள் ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட எண்ணெய்க்கும், ஏனைய எண்ணெய்க்கும் தனித் தனியே வருவிக்கப் பட்டுள்ளன.
<b>ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புடை எண்ணெய்</b>. ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகளுடன் ஆக்சிஜன் நேரடியாகச் சேர்ந்து, இரண்டு முற்றுப் பெறாத இணை திறன்களைக் கொண்ட இயங்கு உறுப்புகளை (free radicals ) உண்டாக்குகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 188
|bSize = 1175
|cWidth = 365
|cHeight = 190
|oTop = 810
|oLeft = 665
|Location = center}}
இரட்டைப் பிணைப்புகளில் இட மாற்றம் நிகழ்ந்து, அதன் விளைவாக 1,4 மற்றும் 1,6 இருக்கைகளிலும் இயங்கு உறுப்பு மையங்கள் உருவாகின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 188
|bSize = 925
|cWidth = 365
|cHeight = 238
|oTop = 862
|oLeft = 497
|Location = center}}
இம்மாற்றங்களில் பல்வேறு அணுக்களுக்கிடையே, எலெக்ட்ரான் பங்கீடு மட்டுமே மாறுபடுகின்றது. நிறைவுறாத இயங்கு உறுப்புகளில் இது வழக்கமானதொரு<noinclude></noinclude>
44nqb6ox80eaf94pz69eibfjb7yyur2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/940
250
643154
1933628
2026-05-14T17:41:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாடியுள்ளார். கள்ளுண்ண விரும்பி ஆயத்தத்தோடு சென்றவன் அது கிடைக்காது நுங்குக் காயைத்தின்று வந்தது போலப் பரத்தையை விரும்பிச் சென்ற தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள ஆய்வு முறை|912|கள ஆய்வு முறை}}</noinclude>பாடியுள்ளார். கள்ளுண்ண விரும்பி ஆயத்தத்தோடு சென்றவன் அது கிடைக்காது நுங்குக் காயைத்தின்று வந்தது போலப் பரத்தையை விரும்பிச் சென்ற தலைவன் அவளைப் பிரிந்து தலைவியை நோக்கி வந்தமை குறித்துத் தோழிக்கு வாயில் மறுத்தல் என்னும் துறையில் குறுந்தொகைப் பாடல் அமைந்துள்ளது. ‘ஊழ் மாறு அலைப்ப வருமேசேயிழை’ என்று தலைவன் வரவையும், ‘அளியேன் யானே’ என்று தன் நிலையையும் தலைவி கூறும் திறம் மிகவும் இன்பம் தரத்தக்கது.
இவர்தம் புறப்பாடல் களிலிருந்து இப்புலவர் ஆதனுங்கள் என்ற வள்ளலிடம் காட்டிய நன்றி மறவாமைச் சிறப்புத் தேற்றெனப் புலப்படுகிறது. ‘ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று கூறுவதனால் அவ்வள்ளல் புலவர் நெஞ்சத்தில் முழுமையாக இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. இருபாடல்களும் பாடாண் திணையின் இயன்மொழித் துறையில் அமைந்துள்ளன.
{{Right|<b>இரா.ச.</b>}}
{{larger|<b>கள ஆய்வு முறை:</b>}} கள ஆய்வு என்பது, ஆய்வாளர் தாம் திட்டமிட்டுள்ள ஆய்விற்காகக் களத்திற்கு நேரிற்சென்று, தகவலாளியைச் சந்தித்து, உரையாடித் தரவினைச் சேகரிப்பதாகும். இதனை நேர்முகக் களஆய்வு முறை (Direct Field Method) எனலாம். பிறிதொரு முறை மறைமுக ஆய்வாகும் (Indirect Method), இதில் அஞ்சல் வழியாகத் தரவு திரட்டும் முறைமேற்கொள்ளப்படும். ஆய்வாளர் களத்திற்கு நேரிற்செல்லாமல், வினா ஏட்டினை அச்சடித்து அஞ்சல் வழியாகத் தகவலாளிகட்கு அனுப்பி, அவர் தரவினை எழுதி அனுப்பும்படி செய்து பெற்றுக்கொள்ளுதலாகும். கள ஆய்வின்மூலம், பலதுறையினரும் தத்தம் ஆய்விற்குத் தரவு திரட்டலாம். மொழியியலாரும், தம் ஆய்விற்கு இம்முறையில் கள ஆய்வு நடத்துகின்றனர். அதனை ‘மொழியியல் கள ஆய்வுமுறை’ (Linguistic Field Method) என்பர். நாட்டுப்புறவியலும், மானிடவியலும்கூட கள ஆய்வு சார்ந்த துறைகளாகும்.
கள ஆய்வு நடத்தத் திட்டமிடும் ஆய்வாளர், ஒரு முன்னோடிக் கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். முன்னோடி ஆய்விலிருந்து கிடைக்கும் அடிப்படைச் செய்திகளின் மூலமே முறையான கள ஆய்வினைத் திட்டமிட்டுச் செயலாற்றமுடியும்.
மொழியியல் கள ஆய்விற்குத் திட்டமிடுகின்றவர்கள், தங்கள் குறிக்கோள் என்ன என்பதையும் தங்களுக்குள்ள கால அளவினையும் உறுதி செய்து கொண்டு அதனைத் தொடங்கவேண்டும். ஓர் ஆய்வாளர் ஒரு மொழியையோ அதன் கிளைமொழி ஒன்றினையோ ஆராய விரும்பினால் அப்பேச்சு மொழி வழங்கும் இடம், பரப்பளவு, மக்கள் தொகை, செய்யும் தொழில், தட்பவெப்பநிலை, அவர்கள் அறிந்துள்ள மொழிகள் (தாய்மொழி மற்றும் பிற மொழிகள்), இனம், சமயம், சாதி, பண்பாடு, சமூக அமைப்பு, உணவு முறைகள், தங்கும் இடம், போக்குவரத்து வசதி என அம்மொழி பேசுகிற மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி அறிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆய்வாளர் தமக்கு முன், அத்துறையில் அம்மக்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் வெளிவந்துள்ள தகவல்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஆய்வாளர், தம் தரவு அமையவேண்டிய அடிப்படையில், அவை தகவலாளிகளிடமிருந்து வினாவிற்கு ஏற்ற விடையாக வரும் முறையில் வினாப்பட்டியலை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நல்ல வினா ஏடு அமைக்கப்பட்டுவிட்டால், களப்பணி நன்றாக அமையும். ஆதலின், வினாஏடு (Questionnaire) அல்லது பட்டியல் (Schedule) கள ஆய்விற்கு இன்றியமையாத கருவியாகும். அடுத்த முக்கியமான பணி கள ஆய்விளை எம்மொழி வழங்கும் பகுதியில் அல்லது நாட்டில் எந்தெந்த ஊர்களில் நடத்தவேண்டும் என்று தீர்மானிப்பதாகும். கள ஆய்விற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை, ஓர் இடத்திற்கும் மற்றோர் இடத்திற்கும் இடையில் உள்ள தூரம், அந்தந்த ஊரின் மக்கள்தொகையின் அளவு போன்றவற்றைக் கருத்திற் கொண்டு அமைதல் நல்லது.
இடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவு கவனம், தகவலாளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தவர் அல்லது சாதியினர், வெவ்வேறு தொழில் செய்வோர், அவர்களுள் ஆண்–பெண் விகிதம், படித்தோர்–படிக்காதோர், சிறியவர்–பெரியவர்–நடுத்தர வயதினர் போன்ற விவரங்களை அறிந்து, கள ஆய்வின் நோக்கத்திற்கு ஏற்பத் தகவலாளிகளைத் தேர்ந்தெடுக்கவும், எண்ணிக்கையை வகுத்துக்கொள்ளவும் வேண்டும்.
கொள்கையளவில், அம்மொழியைப் பேசுகிற அனைவருமே தகவலாளிகளாய்ச் செயற்படத் தகுதி படைத்தவர்களே. ஆனால், அவர்களுள் ஒரு சிலரே நல்ல தகவலாளிகளாக இருந்து, ஆய்வாளர் கேட்கும் வினாக்களுக்குச் சரியான விடையளிக்க முடியும். ஆய்வாளர் தம்முடைய முன்னோடி ஆய்வில் பலரைப் பேட்டி கண்டு, அவர்களுள் ஒருவரையோ ஒன்றுக்கு<noinclude></noinclude>
hyc5bqvobvssa094geju1le9mx2zmzm
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/189
250
643155
1933632
2026-05-14T17:47:07Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய் வனம் 167}}</noinclude>நிகழ்வாகும். இவ்வியங்கு உறுப்பு மையங்களுடன், ஆக்சிஜன் மூலக் கூறு இணைந்து, பெராக்சி இயங்கு உறுப்புகளை உண்டாக்குகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 189
|bSize = 830
|cWidth = 365
|cHeight = 95
|oTop = 170
|oLeft = 25
|Location = center}}
பிற எண்ணெய் மூலக் கூறுகளிலுள்ள இரட்டைப் பிணைப்புகளை, இவ்வியங்கு உறுப்புகள் தாக்குவதால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றுகின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 189
|bSize = 900
|cWidth = 365
|cHeight = 415
|oTop = 365
|oLeft = 55
|Location = center}}
வளர்ந்து வரும் ஈருறுப்பின் இரு முனைகளும் ஒன்றோடொன்று இணையும் போது, பல படியாக்கம் முற்றுப் பெறுகிறது. பாலி பெராக்சைடுகள் நிலைத் தன்மை மிக்கவையாயினும், ஒளியும், வெப்பமும் இடையறாது தாக்கும் போது, சிதைவுற்ற அல்காக்சி உறுப்புகளைத் தருகின்றன. இவ்வுறுப்புகளின் இணைப்பால், ஈதர்கள் உண்டாகின்றன.
<b>உலர்தல் ஊக்கி அல்லது உலர்த்தி</b>. எண்ணெய் வகை ஊடகத்தில் கரைய வல்ல அமிலப் பகுதியைக் கொண்ட உலோக சோப்பு, உலர்த்தி எனப் படுகிறது. தொகுப்பு முறையில் தயாரிக்கப் படும் ஆக்டாயிக் அமிலம் பெரும்பாலும் இதற்குப் பயனாகிறது; அடக்க விலை காரணமாக, நாப்தீனிக் அமிலங்களும் பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன.
உலர்த்தி, பூச்சுகளுக்குக் கூட்டுப் பொருளாகையால், ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே சேர்க்கப் படுகின்றது. முதனிலை உலர்த்திகள் நல்ல வினையூக்கியாகும்; மாறுபட்ட இணை திறன்களைக் கொண்டஉலோகங்கள் இதில் உள்ளன. எ–டு: கோபால்ட், மாங்கனீஸ். இவ்வுலோகங்கள் ஆக்சிஜன் உறிஞ்சப் படுதலையும், 2 பெராக்சைடு இயங்கு உறுப்புகளாகச் சிதைவுறுதலையும் ஊக்குவிக்கின்றன.
காரீயம் ஒரு துணை நிலை உலர்த்தியாகும். அது ஆக்சிஜன் ஏற்பதை மட்டும் ஊக்குவிக்கிறது. சிர்கோனியம், கால்சியம், சீரியம் ஆகியன மேலும் சில துணை நிலை உயர்த்திகளாகும். காரீயம் ஒரு திரள் வகை (cumulative) நச்சாகையால், வீட்டுக்கான பூச்சுகளில் காரீய அடக்கத்திற்கு அனுமதிக்கப் பட்ட உச்ச வரம்பு, ஐரோப்பாவில் 0.25% ஆகவும், அமெரிக்காவில் 0.06% ஆகவும் உள்ளது.
இதனால், பல பூச்சுத் தயாரிப்பாளர்கள் காரீயமற்ற பூச்சைத் தயாரிக்க முனைந்ததுண்டு. படலத்தின் மேல் அடுக்குகளை விரைவாகவும், உள் மற்றும் அடி மட்ட அடுக்குகளை மெல்லவும் குளிர்விக்கவும், வினையூக்கியாகக் கோபால்ட் செயல் படுவதால், கீழ் அடுக்குகள் இறுகும் போது, முன்பே உருவாக்கப் பட்ட மேலடுக்கு வெடிப்புறுகிறது.
எனவே, கோபால்ட்டுடன் சிறிதளவு சிர்கோனியம் அல்லது கால்சியம் சேர்க்கப் பட்டு, இக்குறைபாடு நீக்கப் படுகிறது.
அடுப்புகளுக்கும், உலைகளுக்குமான பூச்சுகளில் கோபால்ட், மாங்கனீஸ், சீசியம், இரும்பு ஆகியன பயனாகின்றன. 1970இல் அலுமினியம் அல்காக்சைடு சார்பு பொருள்கள் புதிய வகை உலர்த்திகளாகப் புகுத்தப் பட்டன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 189
|bSize = 900
|cWidth = 83
|cHeight = 67
|oTop = 803
|oLeft = 462
|Location = left}}
என்னும் பொது வாய்ப்பாட்டைக் கொண்ட இச்சேர்மங்களின் பதிவீட்டுத் தொகுதிகளான X, Y, –OR ஆகியன ஆல்க்கைடுகளிலுள்ள ஹைட்ராக்சில், கார்பாக்சில் தொகுதிகளில், ஹைட்ரஜன் அணுக்களுடன் வினையுற்று Hx,Hy,ROH போன்ற ஆவியாகும் பொருள்களை வெளி விடுகின்றன.
இதன் விளைவாக, பல அல்க்கைடு மூலக் கூறுகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இவ்வுலர்த்திகளைப் பயன் படுத்தி உருவாக்கப் படும் ஆக்சைடுகள் நீர் எதிர்ப்பு, பழுப்புறாமை, பளபளப்புக் குன்றாமை ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude>
d9k5cblshookcywvl0unzf3ag9cdufp
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190
250
643156
1933637
2026-05-14T18:03:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|168 நெய் வனம்}}</noinclude>உலர்தல் இயக்கங்களுடன் இணைந்துள்ள பல்வேறு பண்புகள் அட்டவணை 1இல் தொகுக்கப் பட்டுள்ளன.
<b>நிறமி</b>. வனப்புறு வண்ணம் அளிப்பதற்காகவும், முந்தைய பூச்சின் வண்ணத்தை மறைப்பதற்காகவும், பூச்சுப் படலத்தின் வலிவைக் கூடுதலாக்குவதற்காகவும், பூச்சுப் படலத்தின் ஒட்டும் திறனை உயர்த்துவதற்காகவும், பூச்சின் உறுதியையும், உழைப்பையும், பரிமாணமுறுதலைத் தடுப்பதற்காகவும், மெருகூட்டுவதற்காகவும் வண்ணப் பூச்சுகளில் நிறப் பொருள் சேர்க்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறமியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின் வரும் நிறமிப் பண்புகளை ஆய்ந்தறிதல் தேவை. அவை நிறமூட்டும் திறன் (tinting strength), ஒளியில் நிற நிலைப்பு (light fastness), கசியும் தன்மை (bleeding), மறைக்கும் திறன் (hiding power), ஒளி விலகல் எண் (refractive index), துகள் அளவு, துகள் வடிவம், அடர்த்தி, வேதி வினைத் திறன், வெப்பச் சிதைவு எதிர்ப்பு என்பன.
ஒரு வெண்ணிறப் பொருளுடன் மாற்று நிறப் பொருளைக் கலந்து, வெளிறிய சன்னமான நிறத்தை உருவாக்கலாம். இதற்குத் தேவைப்படும் நிறமியின் அளவு, எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்நிறமியின் நிறமூட்டும் திறன் கூடுதலாகும்.
{{block_center/s}}<div style="width:425px; font-size:70%">
{|
|-
|width=30%|ஒரு குறிப்பிட்ட நிறச் சாயலை உருவாக்கத் தேவைப் படும் நிறப் பொருளின் அளவு
|width=5% {{ts|ac}}|=
|width=30%|அதே சாயலை உருவாக்கத் தேவைப் படும் நியம நிறமியின்அளவு
|width=5% {{ts|ac}}|X
|width=30%|{{sfrac|நியம நிறமியின் நிறமூட்டும் திறன்|ஆய்வு நிறப் பொருளின் நிறமூட்டும் திறன்}}
|}</div>{{block_center/e}}
ஒரு நிறமியின் நிறமூட்டும் திறனுக்கும், புறப் பரப்பை மறைக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லை. எனினும், பொதுவாக ஒளி புக விடும் திறன் கொண்ட நிறமிகளின் மறைக்கும் திறன் கூடுதலாகும்.
ஒரு குறிப்பிட்ட நிறப் பொருளின் நிறத்தை வெளிறிய சாயலுக்கு மாற்றுவதற்குத் தேவைப் படும் ஒரு வெண்ணிறமியின் (white pigment) அளவு அதன் நிறமூட்டும் திறனாகும்.
<b>நிறம் குன்றாமை</b>. சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் பூச்சின் மீது விழும் போது, நிறமி மூலக் கூறுகளில் வேதி மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன வேதிக் கூட்டமைப்பு மாறுவதால், ஒளி உறிஞ்சும் பண்பும் மாறி விடுகிறது. இதன் இறுதி விளைவாக நிறச் சாயல் மாற்றம் நிகழ்கிறது.
<b>கசிவு</b>. அனைத்து நிறமிகளும், அனைத்துக் கரைப்பான்களிலும் கரைவதில்லை. சிவப்புப் பூச்சின் மீது, வெள்ளைப் பூச்சினால் பெயர் எழுதும் போது, சிவப்பு நிறமிகளே இக்குறைக்கு உள்ளாவதால், இதனைக் குருதிக் கசிவு (bleeding) என்பர்.
<b>பரப்பை மறைக்கும் திறன்</b>. பொதுவாக, பூச்சுப் படலங்களின் தடிமன் 25–100 மைக்ரோ மீட்டர் பரப்பில் இருக்கும். புறப் பரப்பை நன்கு மறைக்க வல்ல நிறமிகள் ஒளியை ஊடுருவாமல் தடுக்கும் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். ஒளியை உறிஞ்சுவதாலும், சிதறச் செய்வதாலும், இத்தன்மை பெறப் படுகிறது. ஒரு பூச்சின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 லி. பூச்சினால் முழுமையாக மூடப் பட்ட பரப்பின் அளவு ச.மீ. ஆகும். ஒரு நிறப் பொருளின் மறைக்கும் திறன் எனப் படுவது 1 கி.கி. நிறப் பொருளை உள்ளடக்கிய பூச்சினால் மூடப்படும் பரப்பளவு ஆகும். பூச்சின் மறைக்கும் திறனைப் படும் ஒளியின் அலை நீளம், அடர்வு நிறமியின் ஒளி விலகல் எண், நிறமித் துகளளவு, நிறமித் துகள் வடிவம் ஆகியவை பாதிக்கின்றன.
<b>ஒளி விலகல் எண்</b>. வெண்ணிற நிறமிகள் சிறு கட்டி வடிவில், ஒளி புக விட வல்லனவாகவும், துகள் வடிவில் வெண்ணிறத்தில் ஒளி புகா விடா இயல்புடையனவாகவும் உள்ளன. இவற்றின் ஒளி விலகல் எண் வரம்பு 2.27 என இருப்பதே இதற்குக் காரணமாகும். துத்தநாக ஆக்சைடு : 2.01; துத்தநாக சல்பைடு : 2.37. இவ்வரம்பு, பூச்சின் படல ஆக்கிகளின் ஒளி விலகல் வரம்பை விடக் (1.4–1.6) கூடுதலாகும். இதன் விளைவாகவே, TiO₂ பளிச்சென்ற வெண்மையுடனும், மறைக்கும் திறன் மிக்கனவாகவும் உள்ளன. நிரப்பும் வகை (extender) நிறமிகளின் ஒளி விலகல் எண்கள் படல ஆக்கிகளின் ஒளி விலகல் எண்களினின்றும் பெரிதும் மாறுபட்டனவாக உள்ளமையால், அவை மறைக்கும் திறனைப் பெற்றிருப்பதில்லை. கால்சியம் கார்போனேட்டும், கயோலினும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை.
<b>துகள் அளவு</b>. புறப் பரப்பு இடைவெளிகளில் பெரும அளவு ஒளிச் சிதறல் நிகழ்வதற்குரிய நிறமித் துகள்அளவும், துகள்களுள் ஒளியின் அலை நீளமும் சற்றேறக் குறையச் சமமாக இருக்கும். துகளின் ஏற்ற குறுக்களவு, காற்றில் ஒளியின் அலை நீளத்தில் பாதியளவு இருக்கும்; அதாவது,0.2–0.4μm. இவ்வரம்புக்கு மேற்பட்ட நிலையில், குறிப்பிட்ட எடை நிறமியில் அமையக் கூடிய துகள் இடைவெளிகளின் எண்ணிக்கை குறைகிறது. நிறமியின் துகள் அளவு கறுப்புக் கார்பனில் 0.01 μm<noinclude></noinclude>
aqoz7s1mfn5oyqtbya77h9hdpnw3rgp
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/191
250
643157
1933654
2026-05-15T02:45:07Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய் வனம் 169}}</noinclude>தொடங்கி நிரப்பி வகை நிறமி 50 μm வரை பரந்துள்ளது. எந்தவொரு நிறமிப் பொருளிலும், துகள்கள் யாவும் ஒரே அளவில் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட எடை நிறமிப் பொருள்களை நுண் துகளாக மாற்றத் துகளில். புறப் பரப்பு அளவு (surface area) கூடுதலாகிறது. 1.கி. ரூட்டைல் வகை TiO₂ (துகள் குறுக்களவு 0.2–0.3 μm) இன் புறப் பரப்பு 12 மீ²; ஆனால், அதே 1 கி. நுண் துகள் சிலிக்கா (குறுக்களவு 0.015–0.2 μmஇன் புறப் பரப்பு 190 மீ² ஆகும். நிறமியின் புறப் பரப்பு அளவை அதன் எண்ணெய் உறிஞ்சும் திறனிலிருந்து அறிந்து கொள்ளலாம். 100 கி. நிறப் பொருளை ஒரு பசையாக மாற்றுவதற்குத் தேவைப் படும் பதப் படுத்தப் படாத ஆளி விதை எண்ணெயின் அளவே அந்நிறமியின் எண்ணெய் உறிஞ்சு திறனாகும்.
<b>துகள் வடிவம்</b>. நிறமித் துகள்கள் உருண்டையாகவோ, கன சதுர வடிவிலோ, முண்டு முடிச்சாகவோ (Nodular), ஊசி அல்லது குச்சி வடிவிலோ (acicular), தட்டையாகவோ (lammellar) இருக்கக் கூடும். துகளின் வடிவம் துகள்களின் ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கற்காரைக்கு இரும்பு வலிவூட்டுவது போன்ற பூச்சுப் படலங்களுக்குக் குச்சி வடிவிலான நிறமிகள் வலுவூட்டுகின்றன. தட்டை வடிவிலான துகள், ஒன்றின் மீது ஒன்று படிந்து, நீர் உட்புகாதவாறு தடுக்கும். அலுமினியம், மைகா நிறமிகள் இவ்வகையானவை.
<b>அடர்த்தி</b>. சம எடையில் ஒப்பிடப் படும் இரு பூச்சுகளில் அடர்த்தி குறைவாக உள்ள பூச்சு பெரிதும் விரும்பப் படும். இதன் காரணமாகவே, நிறப் பொருளின் பருமனைக் கூட்டுவதற்கு அடர்த்தி குறைவான, நிரப்பி வகைப் பொருள்கள் பயன் படுகின்றன.
<b>வினையுறும் தன்மை</b>. வினையுறும் தன்மை கொண்ட சில நிறமிகளைக் குறிப்பிட்ட சில பூச்சுகளில் புகுத்த இயலாது. எடுத்துக் காட்டாக, துத்தநாக ஆக்சைடு அமில–கார ஈரியல்பு கொண்டது. எனவே, அமிலத் தொகுதிகள் மிகுந்த ரெசின்களுடன் வினையுறும் சோப்புகள் உருவாகி, குறுக்குப் பிணைப்புகள் தோன்றும். இதனால், சேமித்து வைக்கையில் பாகு தன்மை உயரும். மாறாக, சில நிறமிகள் அவற்றின் வினையுறு தன்மைக்காகவே விரும்பப் படுகின்றன. துத்தநாக, காரீய மற்றும் ஸ்ட்ரான்சியம் குரோமேட்டுகள் அவற்றின் அரிமான எதிர்ப்புத் திறனுக்காகவே சேர்க்கப் படுகின்றன.
<b>நிறமி வகை</b>. நிறமிகள் இரு வேறு அடிப்படைகளில் இயற்கை அல்லது தொகுப்பு வகை, கரிம அல்லது கனிம வகை எனப் பிரிக்கப் படுகின்றன.
இயற்கையில் கிடைக்கும் நிறமிகளுள், பெரும்பாலானவை கனிம வகையைச் சார்ந்தவையாகும். ஆக்கர் (ochre), சியன்னா (sienna) சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு இரும்பு ஆக்சைடு, பெரும்பாலான தொகுப்பு நிறமிகள் ஆகியன கரிம வகையின. இவை கனிம உள்ளீட்டின் மீது கரிமப் பொருள்கள் படிவிக்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றன. காட்டாக, அலுமினியம் ஹைட்ரோக்சைடு மீது அலிசரின் படிவிக்கப் பட்டுப் படலங்கள் (lakes) உருவாக்கப் படுகின்றன.
TiO₂ஐப் போன்ற தூய வெண்ணிறப் பொருளோ, கார்பனைப் போன்ற கரிய நிறப் பொருளோ கரிம வகைகளில் கிடைக்காது.
கரிம வகைகளை விடக் கனிம வகைகள் புற ஊதாக் கதிர்த் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவை.
கரிம நிறப் பொருள்கள் 300°Cக்குள்ளாகவே சிதைவுறுகின்றன.
கரிம நிறமிகள் அரிமான எதிர்ப்பு இயல்புடையவை. எனினும், அழகுக்கும், குளிர்ச்சிக்கும் கரிம வகையே சிறந்தவை. சாலோசயனின், குவினக்ரிடோன், பெரிலின், பெரினோன், டயாக்சசீன் ஆகியன கரிம வகையில் குறிப்பிடத் தக்கவையாகும்.
<b>நீர்ப்பி</b> (thinner) அல்லது <b>கரைப்பான்</b>. நிறமியையும், இணைப்பியையும் நன்கு கலப்பதற்குப் பின் வரும் நீர்ப்பிகளுள் ஒன்றைப் பயன் படுத்தலாம். அவை நீர், பாரபின், டெர்ப்பீன், அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், ஆல்கஹால், எஸ்ட்டர், கீட்டோன், ஈதர் நைட்ரோ பாரபின், குளோரோ பாரபின் என்பன.
பால்ம வகைப் பூச்சுக்கள் யாவற்றிலும் தொடர் ஊடகமாக அமைவது நீராகும். நீரைத் தனியாகவோ, ஆல்கஹாலுடன் கலவையாகவோ பயன் படுத்தலாம். எவ்வகை ரெசினையும் நீரில் கரையச் செய்யலாம். பொதுவாக, ஒரு பல்லுறுப்பியில் கார்பாக்கில் தொகுதிகளைத் தக்க அளவில் புகுத்தி, அதன் அமில மதிப்பை 50 அல்லது அதற்கு மேற்படுமாறு செய்யலாம். பின்பு இத்தொகுதிகளை அம்மோனியா அல்லது ஏதேனும் ஓர் அமீனைக் கொண்டு நடு நிலையாக்கி, நீரில் கரைய வல்ல உப்பாக மாற்றலாம். சான்றாக, உலர் எண்ணெயை மலியிக் நீரிலியுடன் வினையுறுத்தி, அமிலத் தன்மையை ஏற்றலாம். கார்பாக்சில் தொகுதிகள் முழுமையாக நடு நிலையாக்கப் படவில்லை யெனில், ஒரு பால்மம்<noinclude></noinclude>
o7pw7nd246jq36copexhept3aloy3y0
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/192
250
643158
1933655
2026-05-15T03:00:53Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|170 நெய்வனம்}}</noinclude>தோற்றுவிக்கப் படும். இவ்வுப்பின் பல்லுறுப்புப் பகுதி எதிர் மின்னேற்றம் கொண்டது; எனவே, ஒரு மின் கல அமைப்பில் நேர் மின் முனையை நோக்கி நகர்ந்து, அம்மின் முனையில் மின்னிறக்கம் அடைகிறது. இம்மின் முனை ஓர் உலோகப் பொருளாக இருப்பின், அதன் மீது பூச்சுப் படலம் தோன்றும். படியும் பூச்சின் நுண் துளைமை குறைவாக இருப்பின், பூச்சின் தடிமன் கூடுதலாகும் போதே, அதன் மின் தடையும் கூடுதலாகிறது. இதன் விளைவாக, மின்னாற் படிதல் விரைவு குன்றி, இறுதியில் நின்று விடுகிறது. இவ்வுத்தியில், பூச்சின் தடிமன் தானாகவே கட்டுப் படும் என்பதும், எவ்வடிவினாலான உலோகப் பொருளாயினும், சமச் சீர்மையான பூச்சைப் பெறச் செய்யலாம் என்பதும் கூடுதல் நன்மைகளாகும். அமிலக் கார்பாக்சில் தொகுதிகளுக்குப் பதிலாக, அமினோ தொகுதிகளைப் புகுத்திப் பின்பு, அவற்றை அசெட்டிக் அல்லது லாக்டிக் அமிலத்தால் நடுநிலையாக்கலாம். இவ்வமைப்புகளில் ரெசின், நேர் மின்னேற்றம் கொண்டிருக்கும் எதிர் மின் முனையில் படியும். உப்போ, அயனியோ உருவாக்காமல், நீரில் கரையும் தன்மையைப் பூச்சுக்கு ஏற்றுவதற்கு, நீரில் கரைய வல்ல குட்டையான சங்கிலியமைப்புக் கொண்ட பல படியை ரெசினில் புகுத்தலாம். இவ்வகையில் பாலி எத்திலீன் கிளைக்கால் நன்கு பயனாகிறது.
கரைப்பான்களின் கரை திறன், பல்லுறுப்பிகளின் தன்மைகளைப் பொறுத்ததாகும். கரைப்பானின் பாகுத் தன்மை, கொதி நிலை, ஆவியாகும் விரைவு ஆகியனவும் முதன்மைக் காரணிகளாகும்.
<b>பூச்சு</b> (additive). ஓர் உண்மையான நீர்மத்தின் மீது செலுத்தப் படும் தகைவுக்கு நேர் விகித்தில் திரிபு வீதம் அமைந்திருக்கும். மாறாக, தேங்கி நிற்கையிலும், கலக்கப் படுகையிலும் மாறு பட்ட பாகு தன்மைகளைக் கொண்டிருக்கும் நிலையை, நியூட்டன் விதிக்கு ஒவ்வாத நீர்மம் (non–Newtonian liquid) என்பர். கூழ் போன்ற நிலையிலுள்ள பூச்சில் தூரிகையை நனைத்துக் கலக்கும் போது, நீர்த்த நிலையை அடைந்தால், அதற்குப் போலி நெகிழி (pseudo plastic) எனப் பெயர். இத்தன்மையைப் பூச்சுக்கு ஏற்றும் நோக்கத்துடன் சிலிக்கா, பென்டொனைட் எனும் அலுமினோ சிலிக்கேட், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட ஆமணக்கு எண்ணெய், பாலி அமைடு ஆகியன சேர்க்கப் படுகின்றன. டைட்டேனியம், சிர்கோனியம் கொடுக்கிணைப்புச் சேர்மங்கள் (chelates) இவ்வகையில் பெரும் பயன் தருகின்றன.
பூச்சுப் படலம் தொய்வின்றிச் சம தளமாக இருப்பதற்குச் சோப்புப் போன்ற புறப் பரப்புச் செயலி (surfactant) சேர்க்கப் படுகின்றது. பூச்சின் பளபளப்பைச் கட்டுப் படுத்துவதற்கு நுண் தூள் வடிவிலான சிலிக்கா அல்லது பாரபின் மெழுகு சேர்க்கப் படுகிறது. பூச்சு உலர்தலைத் தொடங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் பல சேர்மங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
<b>மெருகுப் பூச்சு</b> (lacquer), அனைத்து வெப்ப நிலை களிலும் எளிதில் உலர வல்லதாக இருப்பதால், மெழுகு பூச்சு பெரிய அளவில் பயனாகிறது. நீண்ட சங்கிலி அமைப்புக் கொண்ட பல்லுறுப்பியொன்றின் கரைசலே, இவ்வகைப் பூச்சாகும். கரைப்பான் ஆவியாதலால், இப்பூச்சு உலர்கிறது. இவ்வகைப் பூச்சுகளில் நைட்ரோ செல்லுலோஸ், அக்ரிலிக் ஆகிய இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.
செல்லுலோஸ் ஒரு பெரும் பல்லுறுப்பி (மூலக் கூறு எடை 3,00,000–5,00,000) மூலக் கூறு ஆகும். அமிலங்களால் எஸ்ட்டராக்கல் வினைக்குட்படுத்தியோ, ஆல்ஹைல்களைக் கொண்டு ஈதராக்கியோ, கரிமக் கரைப்பான்களில் இதைக் கரைய வல்லதாகச் செய்யலாம். சான்றாகச் செல்லுலோஸ் அசெட்டேட், எத்தில் செல்லுலோஸ் ஆகியன பயன் படுகின்றன. செல்லுலோஸ் நைட்ரோ ஏற்றம் செய்து, பெறப் படும் நைட்ரோ செல்லுலோஸ் மெருகு பூச்சில் பயன் படுத்தப் பட்ட முதல் படலமாகும். நைட்ரோ செல்லுலோசின் கரை திறன் அதன் ஹைட்ரஜன் அடக்கத்தை பொறுத்ததாகும்.
{{block_center/s}}<div style="width:425px; font-size:80%">
{|
|-{{ts|vtt}}
|width=18%|11.8–12.2% N
|width=82%|எஸ்ட்டர், கீட்டோன், ஈதர்–ஆல்கஹால் கலவை ஆகியவற்றில் கரையும் .
|-{{ts|vtt}}
|11.2–11.8% N
|எத்தனால்–எஸ்ட்டர் கலவையில் கரையும்.
|-{{ts|vtt}}
|10.5–11.2% N
|எத்தனாலில் கரையும் .
|}</div>{{block_center/e}}
நைட்ரோ செல்லுலோஸ் எரியக் கூடியது எனும் கருத்து அதன் பயன் வரம்பைக் கட்டுப் படுத்துகிறது.
அக்ரிலிக் பல்லுறுப்பிகளின் அடிப்படைச் சேர்மங்கள் அக்ரிலிக் அமிலம் அல்லது மெத்தக்ரிலிக் அமிலமாகும். பாலி மெத்தில் மெத்தக்ரிலேட், பாலி எத்தில் எத்தகிரிலேட், பாலி அக்கிரிலமைடு ஆகியன சிறப்பானவை. அக்ரிலிக் பல்லுறுப்பியாயினும், செல்லுலோஸ் எஸ்ட்டர் பல்லுறுப்பியாயினும், தனித்த நிலையில் நொறுங்கும் தன்மை படைத்தவை. எனவே, மெழுகு பூச்சுத் தொழிலில் படல<noinclude></noinclude>
mhulgrm28qdp308twade0rhduhxxeeu
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி
0
643159
1933656
2026-05-15T03:36:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாந்தி | previous = [[../அசாதசத்துரு/]] | next = [[../அசாபுக்கடல்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933656
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாந்தி
| previous = [[../அசாதசத்துரு/]]
| next = [[../அசாபுக்கடல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="167" to="168" fromsection="அசாந்தி" tosection="அசாந்தி" />
c7napubvpavneljduudhn5fhn8sc1hs
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/193
250
643160
1933657
2026-05-15T03:37:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெர்ன்ஸ்ட், வால்தர் ஹெர்மான் 171}}</noinclude>ஆக்கிகளுக்கு அடுத்த படியாக முதன்மை பெறுவது, மென்மையூட்டி (softener) ஆகும். சிறப்பான மென்மையூட்டிகளாக டைபியூட்டைல் தாலேட்டும், பியூட்டைல் பென்சைல் தாலேட்டும் விளங்குகின்றன. மெருகுப் பூச்சு நீள் சங்கிலி வடிவம் கொண்ட பல்லுறுப்பியாகவும், நெகிழ்வூட்டியாகவும், கரைப்பானாகவும், சேர்ப்பியாகவும் பயனாகிறது.
<b>சிறப்பு வகை வண்ணப் பூச்சு</b>. வண்ணப் பூச்சை அரிமானத் தடுப்புக்கும், அலங்காரத் தோற்றத்திற்கும், பிற பயன்பாடுகளுக்கும் ஈடு படுத்தும் போது, சில சிறப்பு வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன.
<b>ஒளிரும் பூச்சு</b>. இருளிலும் பளிச்செனத் தெரியும் பூச்சுகளைத் தயாரிப்பதற்குச் சாதாரணப் பூச்சு உட்கூறுகளுடன் கிளர் ஒளி தரும் பொருள்களைச் (flurescent materials) சேர்த்தல் வேண்டும். துத்தநாக சல்ஃபைடு, கால்சியம் பாஃஸ்பேட் ஆகியன கிளர் ஒளி தரும் பொருள்களில் சிறந்தவை. இவ்வகைப் பொருள்கள் கட்புலனாகாப் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியவுடன், ஒளி உமிழப் பட்டால் உடன் ஒளிர் பொருள் என்றும், இரண்டுக்கும் இடையே காலத் தாழ்வு ஏற்படின், நின்றொளிர் பொருள் (Phosphor) என்றும் குறிப்பிடப் படும். இவ்வகைப் பூச்சு நெடுஞ் சாலைகளில் தொலைவு அறிவிப்புக் கற்களில் எழுதுவதற்கும், அறிவியல் தொழில் நுட்பக் கருவிகளில் முகப்பைத் தயாரிப்பதற்கும், கணிப்பான்களிலும், அலங்கார விளம்பரங்களிலும் பயனாகிறது.
வெப்பம் தாங்க வல்ல பூச்சுகளில் சிலிக்கோன்களும், அலுமினியத் துகளும், வெப்ப எதிர்ப்புத் தன்மையை ஏற்றுகின்றன. இப்பூச்சு அடுப்புக்கும், உலைக்கும், சூளைக்கும், காளவாய்க்கும் பூசுவதற்குப் பயனாகிறது.
சுடர்த் தடுப்புப் பூச்சுகளில் முதன்மை உட்கூறுகளாக விளங்குபவை சோடியம் அம்மோனியம் பாஸ்ஃபேட், போரேட் ஆகிய உப்புகளாகும். இவ்வாறு சேர்க்கப் படும் பொருள்கள் உருகிப் பரவி, எரிதலைத் தணிக்கின்றன; இவை வெப்பத்தினால் உயர் வெப்ப நிலை அமைப்புகளுக்கு ஏற்றவை.
பாசித் தடுப்புப் பூச்சுகளில் பாசி மற்றும் கடல் வாழ் நுண்ணுயிரிகளுக்கு நச்சுகளாக விளங்கும் வேதிப் பொருள்கள் இடம் பெறுகின்றன. தாமிரம், பாதரசம் போன்ற உலோக நச்சுகள் இந்நோக்கத்துடன் சேர்க்கப் படுகின்றன. இப்பூச்சு படகுக்கும், கப்பலுக்கும், அடிப் பகுதிகளில் இடப் படுகிறது.
நீர் விலக்கும் பூச்சுகளில், நீருடன் ஒட்டாத பாரபின் மெழுகு, சிலிகோன் ஆகியன இடம் பெறுகின்றன. நீர்த் தேக்கத் தொட்டி, ஆய்வக மேசை ஆகியவற்றுக்கு இப்பூச்சு முதன்மையானது.
{{right|—<b>மே. ரா. பாலசுப்பிரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. G.P.A. Turner, <i>Intorduction to Paint Chemistry</i>, Third Edition, Chapman Hall, London, 1988; Kirk-othmer, <i>Encyclopedia and chemical Technology</i>, Third Edition, Vol–16, John Wiley& Sons, Newyork, 1978.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="108"/><section begin="109"/>
{{fs|110|<b>நெய்வேலி அனல் மின் நிலையம்</b>}}
காண்க: அனல் மின் நிலையம்
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="109"/><section begin="110"/>
{{fs|110|<b>நெர்ன்ஸ்ட், வால்தர் ஹெர்மான்</b>}}
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் சிறந்த அறிவியலாராவார்; நவீன இயற்பிய–வேதியியல் பிரிவிற்கு அடி கோலியவர்களில் இவரும் ஒருவர். வால்தர் ஹெர்மான் நெர்ன்ஸ்ட் (Walther Hermann Nernst) 1864ஆம் ஆண்டு பிரிசென் என்னும் இடத்தில் ஜுன் திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். நெர்ன்ஸ்ட் உருவாக்கிய வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி 1920 ஆம் ஆண்டின் வேதியியலுக்குரிய நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக அமைந்தது. தனிச் சுழி வெப்ப நிலைக்கு மேல் அனைத்துப் பருப்பொருளும் (matter) ஒழுங்கற்ற இயக்கத்தைக் கொண்டவையாக, அனைத்து ஆற்றலையும் இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
ஜூரிச், கிராஸ் (ஆஸ்திரியா), ஊர்ஸ்பெர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்ற பின்னர், 1887ஆம் ஆண்டு வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட் என்னும் வேதியலாரின் கீழ் ஆய்வு உதவியாளராகச்சேர்ந்தார். ஆஸ்ட்வால்ட் ஜேக்கோபஸ் வாண்ட் ஹாஃப் மற்றும் சுவாண்ட்டே அர்ரேனியஸ் ஆகியோருடன் இணைந்து, இயற்பிய வேதியியல் பிரிவில் சிறப்பான பங்காற்றிக் கொண்டிருந்தார். 1890இல் காட்டின்ஜன் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. 1905ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1924–1933இல் அங்கிருந்த ஆய்வு இயற்பியல் கழகத்தின் (experimental physics) இயக்குநராகப் பணியாற்றினார்.{{nop}}<noinclude></noinclude>
o3c5lzrbda44a5x34pfxc3e0jrl4aeg
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்
0
643161
1933659
2026-05-15T03:44:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாபுக்கடல் | previous = [[../அசாந்தி/]] | next = [[../அசாம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933659
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாபுக்கடல்
| previous = [[../அசாந்தி/]]
| next = [[../அசாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="168" to="168" fromsection="அசாபுக்கடல்" tosection="அசாபுக்கடல்" />
3nj5eg9mjgv22jb8kxda4ntg4jc0239
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்
0
643162
1933660
2026-05-15T03:47:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாம் | previous = [[../அசாபுக்கடல்/]] | next = [[../அசாமிய மொழி/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933660
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாம்
| previous = [[../அசாபுக்கடல்/]]
| next = [[../அசாமிய மொழி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="168" to="170" fromsection="அசாம்" tosection="அசாம்" />
hug76ipwnoi1x8ap0vp2lyke0vg598q
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி
0
643163
1933661
2026-05-15T03:50:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாமிய மொழி | previous = [[../அசாம்/]] | next = [[../அசாய்கர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933661
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாமிய மொழி
| previous = [[../அசாம்/]]
| next = [[../அசாய்கர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="170" to="173" fromsection="அசாமிய மொழி" tosection="அசாமிய மொழி" />
6zaa0ete29o98d62t1e893d8ibrulzk
வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்
0
643164
1933662
2026-05-15T03:53:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசாய்கர் | previous = [[../அசாமிய மொழி/]] | next = [[../அசிசி/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933662
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசாய்கர்
| previous = [[../அசாமிய மொழி/]]
| next = [[../அசிசி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="173" to="173" fromsection="அசாய்கர்" tosection="அசாய்கர்" />
dsc1b1dkn7s2e3geye4szrmf15nj7rv
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி
0
643165
1933663
2026-05-15T03:56:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிசி | previous = [[../அசாய்கர்/]] | next = [[../அசிசியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933663
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிசி
| previous = [[../அசாய்கர்/]]
| next = [[../அசிசியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="173" to="173" fromsection="அசிசி" tosection="அசிசி" />
rgcb9vz799pd1y66uxhcplploa8o6du
1933664
1933663
2026-05-15T03:56:55Z
Booradleyp1
1964
1933664
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிசி
| previous = [[../அசாய்கர்/]]
| next = [[../அசிசியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="173" to="174" fromsection="அசிசி" tosection="அசிசி" />
5lng7hhm730y1ajrhbplbqpdl9s5trf
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா
0
643166
1933665
2026-05-15T03:59:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிசியா | previous = [[../அசிசி/]] | next = [[../அசித கேச கம்பளி/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933665
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிசியா
| previous = [[../அசிசி/]]
| next = [[../அசித கேச கம்பளி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="174" to="174" fromsection="அசிசியா" tosection="அசிசியா" />
r8g7acm6v54w3imb1p7n7d7uye8keuj
வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி
0
643167
1933666
2026-05-15T04:01:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசித கேச கம்பளி | previous = [[../அசிசியா/]] | next = [[../அசிதர்1/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933666
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசித கேச கம்பளி
| previous = [[../அசிசியா/]]
| next = [[../அசிதர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="174" to="174" fromsection="அசித கேச கம்பளி" tosection="அசித கேச கம்பளி" />
3jh2mv3a9fx4p3qwhs7a0lg5yklr067
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1
0
643168
1933667
2026-05-15T04:06:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிதர்1 | previous = [[../அசித கேச கம்பளி/]] | next = [[../அசிதன்1/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933667
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிதர்1
| previous = [[../அசித கேச கம்பளி/]]
| next = [[../அசிதன்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="174" to="174" fromsection="அசிதர்1" tosection="அசிதர்1" />
61tp1d87b0k433esp0eo43atnm79mlq
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1
0
643169
1933668
2026-05-15T04:09:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிதன்1 | previous = [[../அசிதர்1/]] | next = [[../அசிமுல்லாக்கான்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933668
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிதன்1
| previous = [[../அசிதர்1/]]
| next = [[../அசிமுல்லாக்கான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="174" to="175" fromsection="அசிதன்1" tosection="அசிதன்1" />
63f10cmte33tno9h61g8qxt4iix0qnp
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்
0
643170
1933670
2026-05-15T04:13:04Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிமுல்லாக்கான் | previous = [[../அசிதன்1/]] | next = [[../அசிர்கர்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933670
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிமுல்லாக்கான்
| previous = [[../அசிதன்1/]]
| next = [[../அசிர்கர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="175" to="175" fromsection="அசிமுல்லாக்கான்" tosection="அசிமுல்லாக்கான்" />
onh9jylnv8otse67vq7uyuie4l86ovd
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்
0
643171
1933671
2026-05-15T04:16:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிர்கர் | previous = [[../அசிமுல்லாக்கான்/]] | next = [[../அசிரிய நாகரிகம்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933671
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிர்கர்
| previous = [[../அசிமுல்லாக்கான்/]]
| next = [[../அசிரிய நாகரிகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="175" to="175" fromsection="அசிர்கர்" tosection="அசிர்கர்" />
t7hp7dy17xlqm2w2cqn5wngtgd55i8b
வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்
0
643172
1933673
2026-05-15T04:20:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசிரிய நாகரிகம் | previous = [[../அசிர்கர்/]] | next = [[../அசின்கோர்ட் போர் /]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933673
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அசிரிய நாகரிகம்
| previous = [[../அசிர்கர்/]]
| next = [[../அசின்கோர்ட் போர் /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="175" to="179" fromsection="அசிரிய நாகரிகம்" tosection="அசிரிய நாகரிகம்" />
aizvaqwo51mibv9wv92azl1l4nekcij
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்
0
643173
1933675
2026-05-15T04:30:56Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசர்சு, காரல் | previous = | next = [[../இராசரத்தினம் பிள்ளை, டி.என்./]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933675
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசர்சு, காரல்
| previous =
| next = [[../இராசரத்தினம் பிள்ளை, டி.என்./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="29" to="30" fromsection="இராசர்சு, காரல்" tosection="இராசர்சு, காரல்" />
f8na0rozu2aex15c98az44p8hu6tyl7
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.
0
643174
1933677
2026-05-15T04:37:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசரத்தினம் பிள்ளை, டி.என். | previous = [[../இராசர்சு, காரல்/]] | next = ../இராசராசக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933677
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசரத்தினம் பிள்ளை, டி.என்.
| previous = [[../இராசர்சு, காரல்/]]
| next = [[../இராசராசக் காடவராயன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="30" to="31" fromsection="இராசரத்தினம் பிள்ளை, டி.என்." tosection="இராசரத்தினம் பிள்ளை, டி.என்." />
9s9d3i6pubg1nade66b0h34nxtbyrbe
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்
0
643175
1933678
2026-05-15T04:40:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசக் காடவராயன் | previous = [[../இராசரத்தினம் பிள்ளை, டி.என்./]] | next = ../இராசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933678
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசக் காடவராயன்
| previous = [[../இராசரத்தினம் பிள்ளை, டி.என்./]]
| next = [[../இராசராசக் கோவலராயன், முதலாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="31" to="31" fromsection="இராசராசக் காடவராயன்" tosection="இராசராசக் காடவராயன்" />
907yq3ora8ot749478vz31zyzrpspd6
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்
0
643176
1933679
2026-05-15T04:43:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசக் கோவலராயன், முதலாம் | previous = [[../இராசராசக் காடவராயன்/]] | next = [[..//]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933679
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசக் கோவலராயன், முதலாம்
| previous = [[../இராசராசக் காடவராயன்/]]
| next = [[..//]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="31" to="31" fromsection="இராசராசக் கோவலராயன், முதலாம்" tosection="இராசராசக் கோவலராயன், முதலாம்" />
bhtgwi85060k2c0b4d2zjpd1c4zdwkh
1933680
1933679
2026-05-15T04:44:48Z
Booradleyp1
1964
1933680
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசக் கோவலராயன், முதலாம்
| previous = [[../இராசராசக் காடவராயன்/]]
| next = [[../இராசராசக் கோவலராயன், இரண்டாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="31" to="31" fromsection="இராசராசக் கோவலராயன், முதலாம்" tosection="இராசராசக் கோவலராயன், முதலாம்" />
ov28my5k4sk5e67sdwx2tvcpoarbixp
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194
250
643177
1933681
2026-05-15T04:49:21Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|172 நெருங்க விடா மருந்து}}</noinclude>இவர்தம் ஆய்வுகளுள் கால்வனோ மின் கலங்கள் பற்றிய கோட்பாடு, வேதிச் சம நிலையின் வெப்ப இயக்கம், உயர் வெப்ப நிலையில் ஆவிகளின் பண்புகள், குறைந்த வெப்ப நிலையில் திண்மங்களின் பண்புகள், ஒளி வேதியியலின் வினை வழி முறை ஆகியன அடங்கும். இவை தொழிலகப் பயன் மிக்கவை.
நெர்ன்ஸ்ட் பயனுறு அறிவியலிலும், சிறப்பான ஈடுபாடு கொண்டிருந்தார். மேம்படுத்தப் பட்ட மின் விளக்கையும், மின்னணுத் தத்துவத்தில் செயற் படும் பியானோவையும் இவர் கண்டு பிடித்தார். கோட்பாட்டு வேதியியலில் (theoretical chemistry) இவர் எழுதிய நூல் 1893ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. இவர் தம் வாழ்நாளின் இறுதி நாள்களில், வான் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகளையே மேற்கொண்டார். நெர்ன்ஸ்ட் ஜெர்மெனியில் முஸ்கவ் என்னும் இடத்தில் 1941ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18ஆம் நாள் காலமானார்.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="110"/><section begin="111"/>
{{fs|110|<b>நெருங்க விடா மருந்து</b>}}
பூச்சிகள் பல்வேறு பயிர்களைத் தாக்கிப் பேரிழப்பைத் தருகின்றன. சில வேதி மருந்துகளைப் பயிர்களில் தெளித்தால், பூச்சிகள் அப்பயிரைத் தாக்குவதில்லை. இவ்வாறு தாக்க முனையும் காரணிகளை நெருங்க விடாமல் தடுக்கும் மருந்து, நெருங்க விடா மருந்து (repellant) எனப் படுகிறது.
பிரெஸ்டான் எனப் படும் டிரைஃபினைல் டின் அசிடேட் மற்றும் டியடர் எனப் படும் டிரைஃபினைல் டின் ஹைட்ராக்சைடு போன்ற பூசணக் கொல்லிகள், பூசண நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. இவற்றைப் பயன் படுத்துவதால், புகையிலை வெட்டுப் புழுவாகிய ஸ்போடாப்டிரா லிட்டுரா (Spodoptera litura), நிலக் கடலைச் சுருள் பூச்சி, சிவப்புக் கம்பளப் பூச்சி முதலியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
போர்டோ கலவை, பூசணக் கொல்லியாகப் பயன் படுத்தப் பட்டாலும், இலைத் தத்துப் பூச்சி, வண்டு ஆகியவற்றை நெருங்கி விடா மருந்தாகப் பயன் படுகிறது. நிலக்கரித் தார், இம்முறையில் கரையான், வண்டு, ஈ போன்றவற்றைத் தவிர்க்கும் திறன் கொண்டுள்ளது. துணிகளைப் பாதிக்கும் பூச்சியினங்களைச் சூடம் நெருங்க விடாமல் தடுக்கிறது. விலங்கினங்களைத் தாக்கும் பூச்சிகளை நெருங்க விடாமல் தடுப்பதற்காக, மண்ணெண்ணெய், மீன் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவை பயன் படுகின்றன. நாஃப்தலின் உருண்டைகள் துணிகளைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தத் துணையாகின்றன. பென்சைல் பென்சயோட், சிலந்திப் பேன்களை நெருங்க விடாமல் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
{{right|—<b>கா. சிவப்பிரகாசம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="111"/><section begin="112"/>
{{fs|110|<b>நெருஞ்சி</b>}}
இதன் தாவரவியல் பெயர் டிரிபுலஸ் டெரஸ்டிரிஸ் (<i>Tribulus terrestris</i>) ஆகும். இது இரு வித்திலைத் தாவரங்களுள், அல்லி இணையாத தொகுதியினுள், வட்டுடைப் பூத்தாவரங்கள் வரிசையில், ஜிரேனி யேல்ஸ் துறையில், சைகோஃபில்லேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடி ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும், இலங்கையிலும் வளர்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாட்டில் வளர்கிறது. பொதுவாக, இது ஒரு வெப்ப, மித வெப்ப மண்டல இடை நிலைத் தாவரம் (Mesophyte) ஆகும். இது நலிந்த தண்டுடைய நிலம் படர் செடியாகும். இதன் வேர்த் தொகுப்பு 10–20 செ.மீ. நீளமுடையது. மஞ்சள் அல்லது வெள்ளை நிற ஆணி வேரும், பிற கிளை வேர்களும் உண்டு. வேர்த் தொகுதியின் தரை மேல் பகுதி, சிறியதொரு மைய அச்சுப் பகுதியாக உள்ளது. இந்தக் குறுகிய மைய அச்சிலிருந்து 6–25 கிளைகள் தரை மட்டத்திலேயே உண்டாகி 40–125 செ.மீ. நீளத்திற்குத் தரையில் படர்ந்து வளரும்.
<b>அமைப்பு</b>. கிளைகளிலிருந்து சிறகு வடிவக் கூட்டிலை மாற்று இலையடுக்கமாகத் தண்டில் இணைந்திருக்கும். ஒவ்வொரு கணுவிலும், இரு சிறிய இலையடிச் செதில்கள் உள்ளன. ஒவ்வொரு கூட்டிலையிலும் 4–6 இரட்டைச் சிற்றிலைகள், எதிர் அடுக்கத்தில் இணைந்திருக்கும். தொடக்கச் சிற்றிலைகள் சிறியவை; ஒவ்வொரு சிற்றிலையும் நீள் சதுரம் அல்லது முட்டை வடிவானது; ஒழுங்கான இலை விளிம்பு காணப் படுகிறது. மைய நரம்பு சிற்றிலை நுனியில் சிறு நீட்சி. பெற்று இருக்கும். இலைக் கோண மொட்டிலிருந்து கோணக் கிளையோ, மலரோ உண்டாகும். மலர்க் காம்பு 15–22 மி.மீ. இரு பால், ஒழுங்கான,<noinclude></noinclude>
11bckayf5p1ot57na28rax2n8mu7lc6
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்
0
643178
1933682
2026-05-15T04:53:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசக் கோவலராயன், இரண்டாம் | previous = [[../இராசராசக் கோவலராயன், முதலாம்/]] | nex..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933682
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசக் கோவலராயன், இரண்டாம்
| previous = [[../இராசராசக் கோவலராயன், முதலாம்/]]
| next = [[../இராசராசர் சேதிராயன், முதலாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="32" to="32" fromsection="இராசராசக் கோவலராயன், இரண்டாம்" tosection="இராசராசக் கோவலராயன், இரண்டாம்" />
sd73pugcfjdl3zusikgby9c56e7re9k
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்
0
643179
1933683
2026-05-15T04:56:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசர் சேதிராயன், முதலாம் |previous = [[../இராசராசக் கோவலராயன், இரண்டாம்/]] | nex..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933683
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசர் சேதிராயன், முதலாம்
|previous = [[../இராசராசக் கோவலராயன், இரண்டாம்/]]
| next = [[../இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="32" to="32" fromsection="இராசராசர் சேதிராயன், முதலாம்" tosection="இராசராசர் சேதிராயன், முதலாம்" />
kelgvbx4xcc00lr2u9cm0tct2gzimmn
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/195
250
643180
1933685
2026-05-15T04:58:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெருஞ்சி 173}}</noinclude>ஆரச் சமச் சீருடைய, நீளமான, ஆழ்ந்த மஞ்சள் நிற, ஐந்தங்கச் சூலகக் கீழ்ப் பூக்கள் மிக அழகாகத் தோன்றுகின்றன.
5 புல்லி இதழ்கள் இணையாமலும், ஈட்டி வடிவாகவும், தழுவு இதழ் ஒழுங்குடனும், பசுமையாகவும் விளங்குகின்றன. 5 அல்லி இதழ்கள், இணையாமல் தழுவு இதழ் ஒழுங்குடன், நரம்புகள் கொண்டுள்ளன, இவற்றின் அடிப் பகுதி சிறுத்தும், நுனிப் பகுதி அகன்றும், புல்லி இதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன. தனித்த 10 மகரந்தத் தாள்கள் உள்ளன. ஒவ்வொரு மகரந்தக் கம்பியின் அடிப் பகுதியிலும் சுரப்பிச் செதில் ஒன்று உள்ளது. நீண்ட மகரந்தப் பைகள் இரண்டு அறைகள் கொண்டவை; நீள் போக்கில் வெடிக்கும் இவை, அடியில் இணைந்தவை.
{{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;">
{|
|-
|rowspan=2|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 195
|bSize = 900
|cWidth = 240
|cHeight = 335
|oTop = 595
|oLeft = 77
|Location = center
|Description = {{c|{{fs|100%|செடி}}}}}}
|colspan=2|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 195
|bSize = 700
|cWidth = 150
|cHeight = 175
|oTop = 383
|oLeft = 385
|Location = center}}
|-
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 195
|bSize = 700
|cWidth = 80
|cHeight = 110
|oTop = 600
|oLeft = 330
|Location = center}}
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 195
|bSize = 700
|cWidth = 80
|cHeight = 110
|oTop = 600
|oLeft = 480
|Location = center}}
|-
|colspan=3|{{fs|100%|<center><b>பூவின் முக்கிய உறுப்புக்கள்</b></center>}}{{fs|70%|1. கேசரங்கள் 2. சூலகம் 3. சூல் முடி 4. பூந்தேன் சுரப்பி 5. கேசரங்கள் மகரந்தப் பை வெடிக்காததும், மகரந்தப் பை கீழ் முனையில் வெடித்து, மகரந்தத் தூள்கள் வெளி வருவதும்.}}
|}</div>{{block_center/e}}
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகின்றன.---->
மேல் மட்டச் சூல் பையில் 5 சூலக இலைகள் இணைந்த சூலகம் உண்டு. 5 சூல் அறைகளில், ஒவ்வொரு சூல் அறையிலும் 1–5 சூல்கள் அச்சுச் சூல் அமைவில் தொங்கு சூல்களாகக் காணப் படும். சூல் பையின் வெளிப் புறத்தில் பல கூர்வளரிகள் உள்ளன; முனையில் நேரான சூலகத் தண்டும், 5 தடிப்புகள் பெற்ற சூலக முடியும் உண்டு. கனி, 5 கோணமுடையது; கனியுறை கூரிய முள்ளாக மாறியுள்ளது. இந்த வெடி கனி, 5 பகுதிகளாக வெடிக்கும்; ஒவ்வொரு பகுதியும் தொடக்கத்தில் குறுகியும், பிறகு அகன்றும் இருக்கும். இதன் பக்க வாட்டில் மேற்புறம் இரு கூரிய விரிந்த நீளமான முள்களும், கீழே இரு கூரிய குட்டையான முள்களும் காணப் படும். இதில் பிற வளரிகளும் உள்ளன. விதை முளை சூழ் தசை (endosperm) இல்லை. கனியின் கூரிய முள்கள் விலங்குகளின் உடலுறுப்புகளில் ஒட்டிக் கொள்வதால், கனி<noinclude></noinclude>
0ydoabtfuhswlrlw3z4gloh3t05b0wz
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்
0
643181
1933686
2026-05-15T05:00:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம் |previous = ../இராசராசர் சேதிராயன், முதலாம்/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933686
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்
|previous = [[../இராசராசர் சேதிராயன், முதலாம்/]]
| next = [[../இராசராச சோழன், முதலாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="32" to="33" fromsection="இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்" tosection="இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்" />
snjghf3jv27wyoiroxknekxwrz6gwaz
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/196
250
643182
1933687
2026-05-15T05:14:27Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1933687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|174 நெருஞ்சி}}</noinclude>பரவுகிறது. மகரந்தச் சேர்க்கை வண்டினங்களால் நடை பெறுகிறது.
<b>பயன்</b>. மேக நோய், மேக வெட்டை, புற மேகம், வெட்டைநீர், கடும் சிறுநீர்ப்பை அழற்சி, உள்ளுறுப்புத் தடிப்பு நோய், சிறுநீர்த் தடை, கீல் வாதம், மலடு, கருப்பைக் கோளாறு, பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு இனப் பெருக்க வளம் உண்டாதல், இதய நோய் முதலியவற்றைப் போக்க, வறண்ட செடியும், கனியும் பயன் படுகின்றன. செடியை ஊற வைத்து, உண்டாக்கிய வழவழப்பான நீர் மலடு நீக்கவும், பெண் நோய் நீக்கவும் பயன் படும். நெருஞ்சியை சிறுநீர்ப் பாதை வீக்கத்திற்குக் கொடுக்கலாம். கனிச் சாறுடன் பொட்டாசியம் கார்பனேட் கலந்து, வலியுடன் கூடிய அடிக்கடிச் சிறுநீர்க் கழிக்கும் கோளாறுக்குக் கொடுக்கலாம்.
<b>நெருஞ்சிக் குடும்பம்</b>. நெருஞ்சிக் குடும்பத்தில் 27 பேரினங்களும், 200 இனங்களும் உள்ளன. இவை வெப்ப, குளிர் மண்டலங்களில் காணப் படுகின்றன. மத்திய தரைக் கடல் பகுதியில் மிகுந்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் ஃபுளோரிடா மாநிலத்தில், குயாய்கம் என்னும் பேரினம் உள்ளது. தென் பகுதியில் கல்ஸ்ட்ரோமியா என்னும் பேரினமும், தென் மேற்குப் பகுதியில் லார்ரியா, போர்லீரியா, பிகானம் என்னும் பேரினங்களும் காணப் படுகின்றன. 100 இனங்களைக் கொண்ட பெரிய பேரினமான சைகோஃபில்லம் ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ளது. 40 இனங்களைக் கொண்ட ஃபாகோனியாப் பேரினம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது. இந்தியாவில் நெருஞ்சியும், ஃபாகோனியா அராபிகா (Fagonia arabica) என்னும் இனங்களும் மிகுந்து காணப் படுகின்றன.
<b>வளரியல்பு</b>. பெரும்பாலானவை சிறு செடிகள் அல்லது புதர்ச் செடிகள். குயாய்கம் போன்ற பேரினம் அரிதாக மரமாகக் காணப் படும். இதன் கிளைகள் கணுக்களில் இணைந்திருக்கும்.
<b>இலைகள்</b>. எதிர் இலையடுக்கம்; அரிதாக மாற்று இலையடுக்கம்; பெரும்பாலும், சிறகு வடிவக் கூட்டிலை (pinnately compound) வகையாகும். அரிதாக, இரண்டு இரட்டை இலைகளும், தனியிலைகளும் உள்ளன. இலைகள் சதைப் பற்றுள்ளவை அல்லது தோல் போன்று தடித்தவை; இரண்டு இலையடிச் செதில்கள் உள்ளன. அவை தோல் போன்றோ, சதைப் பற்றுள்ளவையாகவோ, தூவிகள் அல்லது முள்கள் பெற்றிருக்கும். இதில் வலைப் பின்னல் நரம்பமைப்பு காணப் படும்.
<b>மஞ்சரி</b>. நுனியில் உள்ளது; தனிப் பூ அல்லது நுனி வளரா மஞ்சரி (cymose inflorescence) காணப் படும்.
<b>பூக்கள்</b> . இரு பால் பூக்கள்; அரிதாக ஒரு பால் பூக்கள்; ஆரச் சமச் சீர் உடையவை; அரிதாக இரு பக்கச் சமச் சீர் உண்டு. ஐந்து அல்லது நான்கு அங்கப் பூக்கள்; சூலகக் கீழ்ப் பூ காணப் படும். பூத்தளம் பெரிதாக வட்டு (disc) ஆக இருக்கும். இது குவிந்தும், குழிந்தும் சுரப்பிகளின்றி இருக்கும்.
<b>புல்லி வட்டம்</b>. புல்லி இதழ்கள் 5 அரிதாக 4, தனியாகவும், அடுக்கிதழ் அமைவிலும், கனியிலும் தோன்றும்.
<b>அல்லி வட்டம்</b>. அல்லி இதழ்கள் 5, அரிதாக 4, தனியாகவும், அழகாகவும் அடுக்கிதழ் அமைவிலும், திருகு இதழ் அமைவிலும், அரிதாகத் தொடு இதழ் அமைவிலும் விளங்கும்.
<b>மகரந்தத் தூள் வட்டம்</b>. இது 1,2,3 அடுக்கங்களில் காணப் படும். ஒவ்வோர் அடுக்கத்திலும், 5 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லி இதழ் எண்ணிக்கையில் 5 ஆகவோ, அதன் இரட்டிப்பு எண்ணிக்கையில் 10 ஆகவோ, வட்டில் இணைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் சமமற்ற உயரமுடையவை; வெளி வட்ட மகரந்தத் தாள்கள் அல்லி எதிரானவை; மகரந்தக் கம்பிகளின் அடிப் பகுதியில் செதில்கள் (scales) உள்ளன. சுழல் மகரந்தப் பை இரண்டு அறைகள் கொண்டது; இது உள் நோக்கி, நீள் வாக்கில் வெடித்து, மகரந்தத்தைச் சிந்தும்.
<b>சூலக வட்டம்</b>. மேல் மட்டச் சூல்பை காணப் படும். சூல்கள் பள்ளங்கள், கோணங்கள், இறகுகள் கொண்டவை; சூலகம் காம்பில்லாதது; 4 அல்லது 5 சூலக இலைகள் இணைந்தது. 4 அல்லது 5 சூல் அறைகள் உண்டு. ஒவ்வொரு சூல் அறையிலும் 1, 2 அல்லது பல தொங்கு சூல்கள் (pendulous) அச்சுச் சூழ் அமைவில் அமைந்துள்ளன. சூலக முடி சூலகத் தண்டு நுனியில் உள்ளது; பெரும்பாலானவற்றில் கிளைகளற்றது.
<b>விதை</b>. விதை நேரான அல்லது வளைந்த கருவினை உடையது; கெட்டியான, மிகுதியான, முளை சூழ் தசை (endosperm) இருக்கும்; சிலவற்றில் இராது. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடை பெறும்.
<b>கனி</b>. நீள் வெடி கனி அல்லது குறுக்குச் சுவர் வெடி கனியாக இருக்கும். அரிதாகச் சதைக் கனி காணப் படும்.
{{right|—<b>கே.ஆர். பாலச்சந்திர கணேசன்</b>}}
<b>துணை நூல்</b>. G.H.M. Lawrence, <i>Taxonomy of Vascular Plants</i>, Oxford and IBH Publishing Co., New Delhi, 1974.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="112"/>{{nop}}<noinclude></noinclude>
jbhybpod5ciqo18epy8966sflaiv4c2
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்
0
643183
1933700
2026-05-15T07:39:21Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராச சோழன், முதலாம் |previous = [[../இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933700
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராச சோழன், முதலாம்
|previous = [[../இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்/]]
| next = [[../இராசராசசோழன், இரண்டாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="33" to="36" fromsection="இராசராச சோழன், முதலாம்" tosection="இராசராச சோழன், முதலாம்" />
qp31ccekcxbw94w5gx3t1r66jk89omw
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்
0
643184
1933701
2026-05-15T07:44:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசசோழன், இரண்டாம் |previous = [[../இராசராச சோழன், முதலாம்/]] | next = ../இராசராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933701
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசசோழன், இரண்டாம்
|previous = [[../இராசராச சோழன், முதலாம்/]]
| next = [[../இராசராச சோழன், மூன்றாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="36" to="37" fromsection="இராசராசசோழன், இரண்டாம்" tosection="இராசராசசோழன், இரண்டாம்" />
csd8dhvausamrwf96i6jtne6b73a0d7
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்
0
643185
1933702
2026-05-15T07:47:11Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராச சோழன், மூன்றாம் |previous = [[../இராசராசசோழன், இரண்டாம்/]] | next = ../இராசரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933702
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராச சோழன், மூன்றாம்
|previous = [[../இராசராசசோழன், இரண்டாம்/]]
| next = [[../இராசராச சோழனுலா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="37" to="38" fromsection="இராசராச சோழன், மூன்றாம்" tosection="இராசராச சோழன், மூன்றாம்" />
3xx2qivohlduth73yt4yjw6og3azf7s
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா
0
643186
1933703
2026-05-15T07:49:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராச சோழனுலா |previous = [[../இராசராச சோழன், மூன்றாம்/]] | next = ../இராசராச மலையக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933703
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராச சோழனுலா
|previous = [[../இராசராச சோழன், மூன்றாம்/]]
| next = [[../இராசராச மலையகுலராயன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="38" to="39" fromsection="இராசராச சோழனுலா" tosection="இராசராச சோழனுலா" />
lptii1wyr54ciw17h5jycopcj59rzva
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்
0
643187
1933705
2026-05-15T07:53:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராச மலையகுலராயன் |previous = [[../இராசராச சோழனுலா/]] | next = [[../இராசராச விசயம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933705
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராச மலையகுலராயன்
|previous = [[../இராசராச சோழனுலா/]]
| next = [[../இராசராச விசயம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="39" to="39" fromsection="இராசராச மலையகுலராயன்" tosection="இராசராச மலையகுலராயன்" />
mt4p3xyd2x2amy9lawf7vy8ubtnwc2a
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்
0
643188
1933706
2026-05-15T07:55:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராச விசயம் |previous = [[../இராசராச மலையகுலராயன்/]] | next = ../இராசராசேச்சுரம்/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933706
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராச விசயம்
|previous = [[../இராசராச மலையகுலராயன்/]]
| next = [[../இராசராசேச்சுரம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="39" to="39" fromsection="இராசராச விசயம்" tosection="இராசராச விசயம்" />
i09qdwpr757neldwsudsrhgtgr1efbm
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்
0
643189
1933707
2026-05-15T07:58:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசேச்சுரம் |previous = [[../இராசராச விசயம்/]] | next = [[../இராசராசேசுவர நாடகம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933707
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசேச்சுரம்
|previous = [[../இராசராச விசயம்/]]
| next = [[../இராசராசேசுவர நாடகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="39" to="41" fromsection="இராசராசேச்சுரம்" tosection="இராசராசேச்சுரம்" />
b3mkzfz94dxanivdu9sx0i5owkc1ute
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்
0
643190
1933708
2026-05-15T08:04:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசராசேசுவர நாடகம் |previous = [[../இராசராசேச்சுரம்/]] | next = ../இராசன், சர்.பி.டி/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933708
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசேசுவர நாடகம்
|previous = [[../இராசராசேச்சுரம்/]]
| next = [[../இராசன், சர்.பி.டி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="41" to="41" fromsection="இராசராசேசுவர நாடகம்" tosection="இராசராசேசுவர நாடகம்" />
sf49wv60dk8825hphohw6zvjudpu4er
1933709
1933708
2026-05-15T08:10:40Z
Booradleyp1
1964
1933709
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசராசேசுவர நாடகம்
|previous = [[../இராசராசேச்சுரம்/]]
| next = [[../இராசன், சர்.பி.டி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="41" to="41" fromsection="இராசராசேசுவர நாடகம்" tosection="இராசராசேசுவர நாடகம்" />
cejqiq5h2nzdsj1ofap2cbc1s6swruk
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.
0
643191
1933710
2026-05-15T08:13:03Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசன், சர்.பி.டி. |previous = [[../இராசராசேசுவர நாடகம்/]] | next = [[../இராசாதித்தன்/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933710
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசன், சர்.பி.டி.
|previous = [[../இராசராசேசுவர நாடகம்/]]
| next = [[../இராசாதித்தன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="41" to="42" fromsection="இராசன், சர்.பி.டி." tosection="இராசன், சர்.பி.டி." />
k7u06gmjpylyqp4750cz1mw8iea13sr
வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்
0
643192
1933711
2026-05-15T08:16:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதித்தன் |previous = [[../இராசன், சர்.பி.டி./]] | next = [[../இராசாதிராசன், முதலாம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1933711
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராசாதித்தன்
|previous = [[../இராசன், சர்.பி.டி./]]
| next = [[../இராசாதிராசன், முதலாம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="42" to="43" fromsection="இராசாதித்தன்" tosection="இராசாதித்தன்" />
2ycu026ym7xfgjg0kg6a8pfjszpbso6