விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.10
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/9
250
180988
1952496
1952160
2026-07-09T15:45:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{border|maxwidth=45px|bthickness=2px|style=border-radius :25px|<center>{{x-larger|<b>1</b>}}</center>}}
{{largeinitial|டெ|2em}}லிபிரிண்டரில் கிடைத்த கடைசித் தந்தியையும்
சேர்த்த பின்பும் கூடப் பதினைந்து வரிகளுக்கு இடம்
மீதமிருந்தது. வெளியூர்களுக்கான ‘டாக் - எடிஷன்’ இறங்கி,
‘ஸிடி எடிஷ’னுக்கு மிஷின் தயாராயிருப்பதாக ஃபோர் மேன்
நாயுடுவும் எச்சரிக்கை கொடுத்தாயிற்று. நைட் ரிப்போர்ட்டர்
நாராயணசாமி கடைசித் தந்தியைச் செய்தியாக்கிக்
கொடுத்துவிட்டு, இரண்டு மேஜைகளை இணைத்துப்
படுக்கையாக்கிக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தார்.
ஹால் கடிகாரம் ஒரு மணி அடித்தது. அவ்வளவு பெரிய
ஹாலில் நிசப்தத்தை மிரட்டுவது போல் ஒற்றை
மணியோசையின் நாத அலைகள் சில விநாடிகளுக்குத்
துரத்துவது போன்று சுழன்று கொண்டிருந்தன. நாயுடுவின்
குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்.
“ஸிடி எடிஷன் பேஜ் க்ளோஸ் பண்ணி மிஷின்ல
ஏத்தலாமா? கடைசித் தந்திக்குக் கீழாலே இருக்கற
எடத்தைக் காலியாவே வுட்டுப்புடறேன் சார்.”
நான் நாயுடுவுக்கு மறுமொழி கூறுவதற்குள் எதிர்பாராத
விதமாக டெலிபிரிண்டர் சீறத் தொடங்கியது. ஃபோர்மேன்
முகத்தைச் சுளிப்பதைக் கவனித்துக் கொண்டே டெலிபிரிண்டரை நோக்கி விரைந்தேன். தூங்கத் தொடங்கிவிட்ட நைட் ரிப்போர்ட்டரின் உதவியை இனி நான் எதிர்பார்க்க முடியாது. ஸிடி எடிஷன் மிஷினில் ஏற வேண்டிய நேரத்தில் டெலிபிரிண்டரை நோக்கி ஓடவேண்டிய அவசியம்
நைட் எடிட்டருக்கு இல்லையென்றாலும், பத்திரிகைத்
தொழிலைப் பொறுத்தவரை பதவியின் கௌரவத்தை விடத்
தொழிலின் நாணயம் பெரிதென்று நினைக்கிறவன் நான்.
மூன்று நிமிஷம் சீறிவிட்டு டெலிபிரிண்டர் ஓய்ந்தது.
அலுமினியம் ஸ்கேலை எடுத்துத் தாளைக் கிழித்தபோது<noinclude></noinclude>
jkptiq04r0za6r64tshhfpo7a71wmwx
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/11
250
180992
1952474
535898
2026-07-09T15:05:33Z
Neyakkoo
7836
/* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம்
1952474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>நா. பார்த்தசாரதி 9
நாள்தோறும் பார்த்துப் பார்த்து வேதனையடைந்து கொண்டிருந்தவனுக்குக் காந்திராமனின் மரணச் செய்தி இன்னொரு பேரிடியாயிருந்தது.
பதவிகளையும் சுயநலங்களையும் துச்சமாக மதித்த கடைசிப் பெரிய மனிதனும் இன்று பாரத நாட்டிலிருந்து மறைந்து விட்டான்! ஒரு வாரத்திற்கு முன்புதான் தேச நலனில் அக்கறை கொண்டு காந்திராமன் சத்திய சேவா சிரமத்திலிருந்து அனுப்பியிருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தேன் அதில் ஓர் அறிக்கை படைபலத்துக்கு எதிரே சத்தியாக்கிரகத்தாலும், அகிம்சையாலும் வென்ற செக்கோஸ்லோவாக்கியாவைப் பற்றியது. 'செக் நாட்டில் காந்தியம் வெல்கிறது - என்ற தலைப்பில் காந்திராமன் அனுப்பியிருந்த அந்த அறிக்கையில், 'ஆக்கிரமித்த வர்களுக்குத் தோல்வி; ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் வெற்றி இது - என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு அறிக்கை நாடு முழுவதும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கும் மாணவர் அமைதியின்மையைப் பற்றியது. நாடு போகிற நிலை பற்றி இந்த இரண்டாவது அறிக்கையில் மிகவும் கவலை தெரிவித்திருந்தார் காந்திராமன்.
அந்த உருக்கமான அறிக்கைகளிலிருந்து பெற்ற ஆறுதலை இன்று நள்ளிரவு இந்த வேளையில் இழக்கிறேன் நான் நாயுடுவின் குரல் என்னை விரட்டுகிறது. . . . "
'என்னங்க... நியூஸ் எதினாச்சும் உண்டுங்களா?"
'உண்டு! அவசியம் பிடி எடிஷன்லியாவது வந்தாகணும், காந்திராமன் போயிட்டார். கடைசித் தந்தியிலே
மீதியிருக்கிற இடத்திலியாவது போட்டாகணும்...'
நாயுடுவின் முகத்திலும் ஒரு கலக்கம் நிழலிட்டது.
'இப்பவே மணி ண்ணரையாச்சு மானோ ஆபரேட்டரும் வீட்டுக்குப் போயிட்டானே?"<noinclude></noinclude>
nx9tm4ifqslc3hb9fdc4qagatjuriqe
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/297
250
220346
1952507
1331033
2026-07-10T02:09:02Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|{{x-larger|<b>நாற்பத்து மூன்றாவது அதிகாரம்
</b>}}}}
{{larger|<b>அறிவுடைமை
</b>}}
{{gap}}அ.தாவது அறிவின் உரிமையான உறுதிகிலே. மனிதனுடைய வா ழ் வு எவ்வழியும் செவ்வையாய் இனிது கடந்து வருவது மதிநலத்தாலே யாம். பொரு ளுடைமை முதலிய எல்லா உடைமைகளும் பொலி வடைந்துவர ஒளிபுரிந்து வருதலால் அறிவுடைமை அதிசய உடைமையாய்த் துதி மிகுந்துள்ளது. கல்வி கேள்விகளால் அறிவு தெளிந்து சிறந்து வருதலின் அவற்றின் பின் இ.து உரிமையாய் அமைந்து கின்றது.
421. உற்ற அறிவால் உயர்நம்பி அற்றமின்றிக்
கொற்றமுற்றேன் நின்ருன் குமரேசா-பெற்ற
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண். (க)
{{c|<b>இ-ள்.</b>}}
{{gap}}'''குமரேசா!''' பாண்டியன் அறிவுடை நம்பி யாண்டும் அற்றம் இன்றி வெற்றியுடையனாய் ஏன் விளங்கி கின்
முன் ? எனின், அறிவு அற்றம் காக்கும் கருவி: செறு: வார்க்கும் உள் அழிக்க லாகா அரண் என்க.
{{gap}}அறிவின் அரிய உதவிகள் அறிய வந்தன.
{{gap}}அரசர்க்கு அறிவு அவலம் நேராமல் காக்கும் அரிய துணை பகைவர்க்கும் கடக்க முடியாத வலிய அரணும்.
{{gap}}
{{gap}}அற்றம் = அழிவு: குறை: கேடு.
{{gap}}குற்றமே அற்றம் தரூஉம் பகை. (குறள் 434).
{{gap}}அற்றம் மறைக்கும் பெருமை. (குறள் 980)
{{gap}}அற்றம் மறைத்தல். (குறள் 846)
{{gap}}விளக்கு அற்றம் பார்க்கும் இருள். (குறள் 1186).
{{gap}}இவற்றுள் '''அற்றம்''' குறித்திருத்தலேக் கூர்ந்து அறிக.<noinclude></noinclude>
b8ixrn3lz9ppjg9rca13nqwc8h1h65k
1952509
1952507
2026-07-10T02:10:46Z
Meykandan
544
1952509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{center|{{x-larger|<b>நாற்பத்து மூன்றாவது அதிகாரம்
</b>}}}}
{{c|{{larger|<b>அறிவுடைமை
</b>}}}}
{{gap}}அ.தாவது அறிவின் உரிமையான உறுதிகிலே. மனிதனுடைய வா ழ் வு எவ்வழியும் செவ்வையாய் இனிது கடந்து வருவது மதிநலத்தாலே யாம். பொரு ளுடைமை முதலிய எல்லா உடைமைகளும் பொலி வடைந்துவர ஒளிபுரிந்து வருதலால் அறிவுடைமை அதிசய உடைமையாய்த் துதி மிகுந்துள்ளது. கல்வி கேள்விகளால் அறிவு தெளிந்து சிறந்து வருதலின் அவற்றின் பின் இ.து உரிமையாய் அமைந்து கின்றது.
421. உற்ற அறிவால் உயர்நம்பி அற்றமின்றிக்
கொற்றமுற்றேன் நின்ருன் குமரேசா-பெற்ற
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண். (க)
{{c|<b>இ-ள்.</b>}}
{{gap}}'''குமரேசா!''' பாண்டியன் அறிவுடை நம்பி யாண்டும் அற்றம் இன்றி வெற்றியுடையனாய் ஏன் விளங்கி கின்
முன் ? எனின், அறிவு அற்றம் காக்கும் கருவி: செறு: வார்க்கும் உள் அழிக்க லாகா அரண் என்க.
{{gap}}அறிவின் அரிய உதவிகள் அறிய வந்தன.
{{gap}}அரசர்க்கு அறிவு அவலம் நேராமல் காக்கும் அரிய துணை பகைவர்க்கும் கடக்க முடியாத வலிய அரணும்.
{{gap}}
{{gap}}அற்றம் = அழிவு: குறை: கேடு.
{{gap}}குற்றமே அற்றம் தரூஉம் பகை. (குறள் 434).
{{gap}}அற்றம் மறைக்கும் பெருமை. (குறள் 980)
{{gap}}அற்றம் மறைத்தல். (குறள் 846)
{{gap}}விளக்கு அற்றம் பார்க்கும் இருள். (குறள் 1186).
{{gap}}இவற்றுள் '''அற்றம்''' குறித்திருத்தலேக் கூர்ந்து அறிக.<noinclude></noinclude>
m2mjxuej60kbx18mz8pgdaq64ffweov
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/393
250
221137
1952510
1331165
2026-07-10T02:18:22Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>
{{center|{{x-larger|<b>நாற்பத்தைந்தாவது அதிகாரம்</b>}}}}
{{center|{{larger|<b>பெரியாரைத் துணைக் கோடல்
</b>}}}}
{{gap}}அஃதாவது அறிவு ஒழுக்கம் பருவம் பான்மை மேன்மை முதலியவற்ருல் சி ற ங் த மேலோர்களேத் தனக்கு உறுதித் துனே யாக அரசன் உரிமையோடு பேணிக் கொள்ளுதல். குணமுடையாரை நாடி அறித லும் கூடி மகிழ்தலும் குற்றம் கடிந்தார்க்கே கூடும் ஆத லால் அதன் பின் இஃது இனமா அமைந்து கின்றது.
{{left_margin|3em|<poem><b>441. மண்டுபுகழ் அத்திபதி மாண்பிரம தன் மரையேன்
கொண்டுவந்தான் கேண்மை குமரேச்ா-கண்ட
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (க)
</b></poem>}}
{{c|<b>இ-ள்.</b>}}
{{gap}}குமரேசா பிரம தருமரது கேண்மையை அத்திபதி ஏன் ஒர்ந்து உவந்து கொண்டான்? எனின், அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல் என்க.
{{gap}}அரிய பெரிய துணேவர் அறிய வந்தனர்.
{{gap}}அறநெறிகளே உணர்ந்து முதிர்ந்த அறிவுடைய பெரியோரது கட்பை நயமாக ஒர்ந்து நன்கு தெளிந்து துணேயாக் கொள்ளுக.
{{gap}}மாந்தரை மாண்போடு ஆளும் வேந்தன் தனக்கு ஆதரவாகத் தேர்ந்து சார்ந்து கொள்ள வுரிய சான்ருேர் களே இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். எல்லார்க் கும் பொதுவாகச் சொல்லியிருப்பினும் இயல் நோக்கி அரசனுக்குச் சிறப்பாக ஈண்டு இது கருத வந்தது.
{{gap}}கேண்மை = கேளாங் தன்மை. உற்ற கிலேகளே உரிமையோடு கேட்டு உறுதி நலன்களேத் தெளிவாக உணர்த்த வல்ல விழுமியோரது நட்பு கேண்மை என அமைந்தது. வியஞன பலன்களே அருளி வருகிற அதன் கயனும் பயனும் இங்கே கலமாய்த் தெரிய கின்றன.<noinclude></noinclude>
q9xs41freeeu42lp5h34eyjuruih29e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/631
250
622495
1952445
1856380
2026-07-09T13:37:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சியும்.....|591|ஆராய்ச்சியும்.....}}</noinclude>நிலையிலிருந்து அடுத்த உயர்ந்த வாழ்க்கைத்தர நிலைமைக்கு உயரத் தொடர்ந்து நடைபெறுவது பொருளாதார முன்னேற்றம். ஆராய்ச்சி முறைகள் (Research Methods) இரு வகையாகப் பிரிக்கப்படும். அவை: 1) அறிவின் அடிப்படைக் கூறுகளை ஆராயும் அடிப்படை ஆய்வு (Basic Research), 2) நடைமுறையில் அறிவைச் செயற்படுத்தும் முறைகளை ஆராயும் செயல் முறை ஆய்வு (Applied Research).
ஆராய்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஊக்குவித்து மேம்படுத்தப் பல நிறுவனங்கள் பற்பல நோக்கங்களுடன் செயற்படுகின்றன. அவற்றில் முதன்மை இடத்தைப் பெறுவது, அரசுகள் நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது. தனியார் துறைகளில் ஆக்கக் காரணிகளின் அளவுகளையும் தரத்தையும் பெருக்குவதற்கும் புதிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் ஆராய்ச்சி, திறவுகோலாக விளங்குகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், சமுதாய நிறுவனங்கள் ஆகியவை ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடுகின்றன. தனியார் ஆய்வு நிறுவனங்களுக்கும் தொழிலகங்களுக்கும் அரசு, கொடைகள் வழங்கியும் பிற ஊக்கிகள் அளித்தும் ஆதரவு அளிக்கிறது. பொதுவாக ஆராய்ச்சிக்கான ஊக்கமும் ஆதரவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் (Developed Countries) தான் வேரூன்றி முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. அமெரிக்காவில் தனியார் துறையில் சிறப்பான வகையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உருசியாவில் ஆராய்ச்சியும் முன்னேற்றமும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ்ச் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன.
பொது நலன்களுக்கான திட்ட ஆய்வுகள் தனி அரசுகளின் முனைவுகள் மட்டுமல்லாமல் பன்னாட்டு ஒத்துழைப்பு, கூட்டுறவு வாயிலாகவும் தனி நாடுகள் பிற நாடுகளுடன் நேரிடை, ஈரிடை (Direct & Bilateral) ஒப்பந்தங்கள் வாயிலாகவும் செயற்படுகின்றன. உணவு வேளாண்மை நிறுவனம் (FAO) போன்ற பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனம் (International Atomic Energy Agency), பன்னாட்டுத் தொலைத்தொடர்பு அமைப்பு (International Tele Communication) ஆகிய உலக நிறுவனங்கள், வேளாண்மை, சத்துணவு, சுகாதாரம், மருத்துவம், கல்வி, பண்பாடு போன்ற துறைகளில் ஆய்வுகள் நடத்தி, பொது நலப் பணிகளில் மிகப் பெரிய செயல்களைச் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டில் பரவலாகப் பயிர் செய்யப்படும் புதிய ஐ.ஆர். நெல் வகைகள், மணிலாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Rice Research Institute) புதிய கண்டுபிடிப்பாகும்.
ஆராய்ச்சிகள் பயனுள்ளவையாயிருப்பதற்கு ஆய்வு நிறுவனங்களிடையே ஒத்துழைப்புத் தேவை. அவ்வொத்துழைப்பு, அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளை நடைமுறையில் செயற்படுத்தவும், புதுக் கண்டுபிடிப்புகளுக்கும் புதுமை மயமாக்குதலுக்கும் கண்டுபிடிக்கப்பட்டவற்றை மீண்டும் ஆய்வுக்குட்படாமல் நீக்குதற்கும் தொடர்ந்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். அமெரிக்காவை விடச் சப்பான் (Japan) தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியில் முன்னேற்றமடைந்திருப்பதற்கு அங்குள்ள ஆய்வு நிறுவனங்களுக்கும் தொழிலகங்களுக்குமிடையேயுள்ள ஒத்துழைப்புத்தான் காரணம் எனக் கருதப்படுகிறது.
பொருளாதார முன்னேற்றம், ஆக்கப் பொருள் அறிவியலின் (Material Science) ஆய்வை மட்டும் சார்ந்ததன்று. சமுதாயத்தின் பண்பாட்டு அமைப்புகளிலும் மாற்றங்கள் (Social Change) ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படச் சமூக அறிவியலிலும் (Social Science) ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு வளர்ச்சி, சமூகம், பண்பாடு, அரசியல் காரணிகள் தவிர, பொருளாதாரக் காரணிகளான மக்கள்தொகை இயல், வருமான வளர்ச்சியும் பங்கீடும், செல்வக் குவிப்பு, நுகர்வோர் செயல், சமூகப் பாதுகாப்பு, விலைகள், நிதி, வரிவிதிப்பு, பொதுத் துறையின் கட்டுப்பாடும் ஒழுங்கீடுகளும், பொது நிறுவனங்கள், மேலாண்மை ஆகியவற்றின் ஆழ்ந்த ஆய்வு வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டவற்றைக் குறிப்பிட்ட காலத்திலும் அளவிலும் தகுந்த இடத்திலும் தெரிந்தெடுத்துச் செயற்படுத்துவதில் உள்ளடங்கியுள்ளது.
சமூக அறிவியலின் ‘ஆய்வும் முன்னேற்றமும்’ (R & D), ஆக்கப் பொருள் அறிவியலின் முன்னேற்றத்தைப்போல் இன்றியமையாத ஒன்றாகும். இது மிகவும் புறக்கணிக்கப்பட்ட துறையாகக் கருதப்பட்ட நிலைமாற, இப்போது உலகம் முழுவதிலும் இதன் சிறப்பை உணர்த்திருக்கிறார்கள். அறிவியல் ஆய்வைப் போல் சமூக ஆய்வினையும் கருதி அதன் முன்னேற்றத்திற்கு அரசுகள் முதன்மையான இடம் அளிக்கவேண்டும். உலக வங்கி, இத்துறையில் முன்னோடியாகப் பல சமூக ஆய்வுத் திட்டங்களைப் பன்னாட்டு முறையில் தன் பொறுப்பின் கீழ் நிதி உதவியும் அளித்து நிறைவேற்றுகிறது. எனினும் ஆக்கப்பொருள் அறிவியல், ஆய்வு அளவுக்கு முன்னேற்றமடையவில்லை. சமுதாய மாற்றங்களுக்கும் சமூக ஆய்வுத் திட்டங்களுக்கும் தேவையான நீண்ட காலக் கெடு, பெரும் முட்டுக்கட்டையாக, சிக்கலாக உள்ளது.{{nop}}<noinclude></noinclude>
1vzst6vxf5ti19q5sm4ax1wh3uc88nd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/632
250
622497
1952446
1856393
2026-07-09T13:42:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சியும்.....|592|ஆராய்ச்சியும்.....}}</noinclude>ஆய்வு முன்னேற்றத்தால் விளையும் பலன்கள் பயனுள்ளவையாகவும் பயனற்றவையாகவும் காணப்பட்டாலும், அவை ஒருகாலும் முடிவுற்றவையல்ல. ஆய்வுகளின் முடிவு, ஒருவருக்கோ பலருக்கோ உடனடியாகவோ குறுகிய நீண்ட கால இடைவெளிக்குப் பின்போ பலன் அளிக்கலாம். ஆய்வின் விளைவுகளைப் பலர் நுகர்வதின் காரணமாகவோ பிறர் அறிவதின் காரணமாகவோ அவற்றின் தன்மையும் தரமும் அளவும் குறைந்துவிடாமல், சுற்று வட்டாரத்தில் பரவப் பரவ அவை முடிவற்றதாய் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போகும்.
நாடுகளிடையே காணப்படும் சமநிலையற்ற ஆய்வு முன்னேற்றத்தைச் சமநிலைப்படுத்த நுட்ப இடமாற்றம் (Transfer of Technology), வருங்காலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. உலக ஆய்வு முன்னேற்றத்தில் 97 விழுக்காடு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் செறிந்து காணப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் (GNP) அமெரிக்கா 2. 2 விழுக்காடும், உருசியா 3.1 விழுக்காடும், மேற்குச் செர்மனி 2, 4 விழுக்காடும், சப்பான் 1. 9 விழுக்காடும் செலவு செய்கின்றன. ஆனால், வளர்ச்சியடையும் நாடுகளின் செலவு, நாட்டு வருமானத்தை நோக்கும்போது மிகக் குறைந்த அளவில் உள்ளது. பின்தங்கிய நாடுகளுக்கு (Least Developed Countries) வளர்ச்சியடைந்த நாடுகள், தங்கள் நுட்ப அறிவை இடப்பெயர்வு செய்தால் பல நாடுகள் வறுமை நிலையிலிருந்து பொருளாதார முன்னேற்றப்பாதையை அடைய இயலும். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களுக்குத் துணையான பயன்களை அடையவும், உதவிபெறும் நாடுகளின் மேல் தங்கள் அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றைச் செலுத்தவும் முடிந்தால் மட்டுமே நுட்ப ஆய்வு அறிவை இடப்பெயர்வு செய்ய முன் வருகின்றன. மேலும் மூலப் பொருள்களைப் பெறவும் அரசியல் உரிமை செலுத்தவும் உற்பத்திப் பொருள்களை விற்கவும் தங்கள் நலன்களை நிறைவேற்றவும் மட்டுமே மறைமுகமாக ஏழைகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்று, தொழில் நுட்ப இடமாற்றங்களுக்கு இசைவளிக்கின்றன.
பின்தங்கிய நாடுகளின் சமூகப் பண்பாடுகளும் பொருளாதார ஆக்கமுறைகளும், அடிப்படையில் திடீரென அயல்நாட்டு நுட்ப முறைகளை ஏற்றுக்கொள்ளும் தகுதியற்றதாகப் பல சிக்கல்களையும் முரண்பாடுகளையும் விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. எத்தகைய அயல்நாட்டு நுட்பமுறைகள் எந்த அளவுக்கான வேகத்தில் எந்தெந்த துறைகளில் புகுத்தப்பட வேண்டும் என்பதிலும் முடிவுகள் எடுக்கப்படுவதில் முன் கவனமும், திட்டமும் ஆய்வும் மிகத் தேவை பல நாடுகளின் அனுபவமும் விளைவுகளும் அதனைப் பற்றிய முடிவான கருத்துகளை வெளிப்படுத்த இயலாத நிலையிலேயே உள்ளன.
இந்தியா, விடுதலையடைந்த காலத்திலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களின் வாயிலாகப் பொருளாதார முன்னேற்றத்தை, அறிவியல் - வாழ்வியல் ஆய்வு வளர்ச்சியின் வாயிலாகப் பெறத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தானியங்கக் கூடியதாகவும் தன்னிறைவுள்ளதாகவும் செயற்பட வேண்டும் என்பதே திட்டங்களின் சிறப்பு வகையில் நோக்கமாகும். அதை நிறைவேற்றும் நாட்டின் வாணிகம், சமூக அரசிறைக் கொள்கைகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. அயல்நாட்டு உதவியைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு ஈடான மாற்றுப் பண்டங்களை நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காகப் பல ஆய்வுகள் செய்யப்படுகின்றன. தொழிலகங்களுக்கும் தனியார் துறைகளுக்கும் இறக்குமதிப் பதிலீட்டுப் பொருள் (Import Substitution Goods) கண்டுபிடிப்புகளுக்காக அரசு நிதி உதவி வழங்குகிறது.
ஆராய்ச்சி வசதிகளுடன் இந்தியாவில் 135 பல்கலைக் கழகங்களும் 5 மகத்தான தொழில்நுட்ப மண்டல நிறுவனங்களும் 150 தொழில்நுட்பக் கல்லூரிகளும் 100 மருத்துவக் கல்லூரிகளும் 200 ஆய்வுக் கூடங்களடங்கிய தனித்துறை ஆய்வு (Specialized Research) நிறுவனங்களும் அரசின் நிதிக்கொடைக் கட்டுப்பாட்டுத் துணையுடன் நிறுவப்பட்டுள்ளன. தனியார் துறையில் 700 தொழிலகங்களில் ஆய்வு முன்னேற்றத்திற்கான நுட்ப வசதிகள் உள்ளன. நாட்டு மொத்த வருமானத்தில் 6 விழுக்காடு அறிவியல் நுட்ப ஆய்வுக்காக மட்டில் செலவிடப்படுகிறது. இன்றைய உலக அறிவியல் அறிஞர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்றாலும், இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது வியப்பிற்குரியதன்று.
நாட்டின் வறுமை, ஏழைமை, வேலையில்லாத் திண்டாட்டம், சமனற்ற வருமானப் பகிர்வு (Inequality), சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள், பிரிவினைகள், மக்கள் பெருக்கம் போன்ற சிக்கல்களை ஆராய்ந்தால், இன்னும் மிகையான ஆய்வினை முன்னேற்றத்திற்காக இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழில்நுட்ப அறிவையும் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட்டால் உயர்ந்த மேலோட்ட ஆய்வுகள் மட்டுமல்லாமல், பொது மக்களின் நலனைப் பாதிக்கும் தண்ணீர், நாட்டு மருத்துவம் (Indigenous Medicine), மக்கள் திறன் வளம் (Manpower<noinclude></noinclude>
q25l18keqbcg6tx6imdka1m4bi8rnqc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/633
250
622499
1952447
1947069
2026-07-09T13:47:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|593|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்}}</noinclude>Resources) ஆகியவற்றைப் பெருக்குதல் போன்றவற்றிற்குச் சிறப்பிடம் அளித்து அவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புலனாகும். இதுவரை இந்தியா மேற்கொண்ட ஆய்வுத் துறைகளான வேளாண்மை, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வான்கோள் ஆராய்ச்சி, அண்டார்டிகா பயணம் (Antartic Research) முதலியவற்றின் பெருமைகளைப் பாராட்ட வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் உணவு இறக்குமதி செய்து கொண்டிருந்த நாடு, இன்று ஏற்றுமதி செய்யும் நாடாக மாறிக் கொண்டே போவதற்கு வேளாண்மைத் துறையில் நடந்த தெளிவான பசுமைப் புரட்சி ஆய்வுகளே காரணம். நாட்டின் பொருளாதார ஆய்வு முன்னேற்றத்தையும் அது சுட்டிக் காட்டுகிறது.{{Right|பா. ந.}}
<section end="ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்"/>
<section begin="ஆராய்ச்சியும் முன்னேற்றமும்"/>
{{dhr}}
<b>ஆராய்ச்சியும் முன்னேற்றமும்</b>: பணியாளர் மேலாண்மை என்பது, மனித வளத்தைச் செவ்வனே நிருவகிப்பதாகும். ஒரு தொழிலகத்தைத் தோற்றுவிக்கத் தேவையான பொறி, செல்வம் போன்றவைகளை ஏற்பாடு செய்து, அவைகளை பயன்படு முறையில் இயக்க உதவுவது மனித ஆற்றலே ஆகும். ஆதலின் நிறுவன அமைப்பில் மனித ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. பொறிகளின் திறனை உறுதியாக மதிப்பீடு செய்ய முடியும். ஆனால், மனிதனிடம் அளவிடற்கரிய ஆற்றல் இருப்பினும் இன்று மிகத் திறமையாக, ஆர்வத்துடன் வேலை செய்பவன், மற்றொரு நாள் அதே ஆர்வம் காட்டத் தவறலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவைகளை ஆராய்ந்து, பணியாளர்களை எப்படி ஊக்குவிப்பது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு பணியாளரிடமும் உள்ள முழுத்திறனையும் வெளிக் கொண்டு வருவது மேலாளரின் தலையாய கடமை ஆகும். பணியாளர் முன்னேற்றம் குறித்து ஆராய்ச்சி செய்வதைப் பற்றி எட்வின் பிலிப்போ (Edwin Flippo) என்பவர், தம்முடைய பணியாளர் மேலாண்மை விதி, (Principles of Personnel Management) என்னும் நூலில் கீழ்க் காணுமாறு குறிப்பிட்டுள்ளார்:
::1. வேலைக்கு ஆள் சேர்த்தல்,
::2. வளர்ச்சி,
::3. ஊதிய நிருவாகம் (Salary Administration)
::4. தொழிலாளிகளின் தேவைகளை நிறைவு செய்து, ஒருங்கிணைந்து செயற்படுதல்.
::5. வேலை/வேலை செய்யும் இடம், சூழ்நிலை ஆகிய இவைகள் உற்பத்தியையும் தொழிலாளிகளின் மனநிலையையும் எந்த அளவில் பாதிக்கின்றன என்பதை ஆய்தல் ஆகியவை.
இவ்வைந்து துறைகளிலும் எத்தகைய ஆராய்ச்சி தேவை என்பது இங்கு விளக்கப்படுகிறது.
<b>1. ஆள் சேர்த்தல்</b>: நிறுவன வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைவது, அதை உருவாக்கும் மனித ஆற்றலே ஆகும். ஆட்கள் சேர்ப்பதில் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களைப் பணியில் அமர்த்துதல், நேர்காணல் போன்ற பல வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இத்துறை நன்கு செயற்பட வேண்டுமாயின், ஆட்சேர்த்தலுக்குக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறைகள், நல்ல பயனைத் தருகின்றனவா, அதாவது இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் திறமையுடன் பணியாற்றுகின்றனரா என்றும், தம்முடைய பணியில் திறமைக் குறைவு காணப்படின் வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டுமா என்றும் ஆராய வேண்டும். அதே போல ஒவ்வொரு வேலைக்கும் தேவையான பணிவிளக்கம் (Job Description) செய்தல் வேண்டும். அந்தக் குறிப்பிட்ட வேலைக்கு எந்த அளவு ஊதியம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது, அந்த வேலைக்கு உண்டான பொறுப்பு அடிப்படையைக் கொண்டு அறுதியிடப்படுகிறது. பணி விளக்கங்கள், காலப் போக்கில் மாற்றங்களுக்கு உட்படுகின்றன. தேவைப்படும்பொழுது இம்மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் பணியாளர் மனநிறைவின்மை அடைவர். இதன் விளைவாகத் தொழிற்சிக்கல், பணியாட்கள் வேலையை விட்டு வேறு இடம் செல்லுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். ஆதலின் ஆட்சேர்ப்பதில் ஆராய்ச்சி இன்றியமையாதது.
<b>2. வளர்ச்சி</b>: ஒரு நிறுவனம் வளரும்போது அதன் வளர்ச்சிக்குக் காரணமான பணியாளர்களும் முன்னேற வேண்டும். வெற்றிடம் ஏற்படும்போது, பணியாளருள் ஒருவருக்குப் பதவி உயர்வு கொடுத்து, அப்பொறுப்பினைத் தரலாம். ஆனால், எல்லோரும் ஏற்கும் வகையில் பதவி உயர்வுத் திட்டம் தீட்டுவதும், அதே நேரத்தில் வேலை வெற்றிடம் வரும் வரை காத்திராமல், அவரவர் தேவைக்கு ஏற்ப எல்லோருக்கும் பயிற்சி அளிப்பதும், எப்பயிற்சி வாயிலாகத் தொழிலாளிக்கும் தொழிற்சாலைக்கும் நன்மை ஏற்படும் என்று அறிந்து செயற்படுவதும், ஆராய்ச்சியுடன் தொடர்புடையனவாகும். மிகப்பெரிவ நிறுவனங்கள், சிறந்த ‘பயிற்சியும் முன்னேற்றமும்’ (Training & Development) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டு முழுவதும் பயனுள்ள பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன.
<b>3.ஊதிய நிருவாகம்</b>: ஊதிய நிருவாகத்தில் ஆராயப்பட வேண்டிய கூறுகள் பல. ஒரு நிருவாகத்தில் கொடுக்கப்படும் ஊதியம், அக்கம் பக்கத்தில் இருக்கும் நிருவாகங்களுடன் ஒப்பிடப்படும்போது<noinclude></noinclude>
chd8ur52ivo7kaa8zg3louzdzb7bcnq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/634
250
622501
1952448
1856401
2026-07-09T13:51:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|594|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்}}</noinclude>எந்த நிலையில் இருக்கிறது, மேலும் அதே துறையில் இருக்கும் மற்ற நிருவாகங்களின் நிலை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். காலப் போக்கில் ஏறி வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு (Dearness Allownce) கிடைக்கப் பல இடங்களில் உடன்பாடு இருப்பதைப் பார்க்கலாம். திறமைக்கு ஏற்றபடி சம்பள உயர்வு, மேலும் உற்பத்தியைப் பெருக்க உதவி செய்யும் ஊக்கத்திட்டம் (Incentive Scheme) போன்றவை நல்லமுறையில் அமைக்கப்பட்டுச் செவ்வனே செயற்பட வேண்டும். நடைமுறையில் இருக்கும் ஊதிய நிருவாகத்தின்மேல் தொழிலாளர்களுக்கு உள்ள மனநிறைவின்மைதான், தொழிற் சிக்கல்களுக்குப் பெரும்பாலும் அடிப்படைக் காரணமாக இருக்கிறதென்பதைப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டு அறிந்திருக்கிறார்கள். இதனால், ஊதிய நிருவாகம் பற்றிச் சீரிய ஆராய்ச்சிகள் செய்வதன் வாயிலாகப் பல தொழில் தகராறுகளைத் தீர்க்க வாய்ப்பு இருக்கிறது.
<b>4. தொழிலாளிகளின் தேவைகளை நிறைவு செய்து, ஒருங்கிணைந்து செயற்படுதல்</b>: பெரிய தொழிற்சாலைகள் நகரங்களிலும் அதன் அருகிலும் அமைக்கப்பட்ட போதிலும், அவைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்துதான் வருகிறார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களே: பலருக்குத் தொழிற்சாலைச் சூழ்நிலையே புதியதாக இருக்கும். உடன்பணியாற்றும் தொழிலாளர்கள் வேறு மொழி பேசுகிறவர்களாகவும் இருக்கலாம். இத்தகைய பலதரப்பட்ட பணியாட்களைக் கொண்டு ஒரு தொழில் அணியை (Work Force) ஒருங்கிணைந்து செயற்படச் செய்து, ஒரு நிருவாகத்தின் குறிக்கோள்களை அடைவது வெறும் சட்ட திட்டங்களால் மட்டும் அடைய முடியாது. தொழிலாளிகளின் தேவைகளை அறிந்து அவைகளை நிறைவேற்றுதலும், தொழிலாளிகளின் சார்பாக நடத்தப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சிக்கல்களைத் தீர்ப்பதும், சில சிக்கல்கள் தோன்றுவதற்கு முன்பே தடுக்கத் தற்காப்பு நடவடிக்கை எடுப்பதும், மாற்றங்கள் செய்தால் அவற்றின் விளைவு எப்படி இருக்கும் என்பதைக் கருதியுணர்ந்து செயற்படுததும் ஆகிய இவைகள் பல ஆண்டும் பயிற்சி ஆராய்ச்சி ஆகியவற்றால் தான் முடியும்.
<b>5. வேலை/வேலை செய்யும் இடம், சூழ்நிலை-இவை உற்பத்தியையும், தொழிலாளிகளின் மன நிலையையும் பாதித்தல்</b>: தொழிற்சாலைகள், நல்ல சூழ்நிலையில் இயங்க வேண்டும். நல்ல காற்றோட்டம், நல்ல வெளிச்சம், போதுமான இடவசதி, பொருத்தமான பொறிகள் போன்றவை இருந்தால் உற்பத்தித் திறன் பெருகும். சூழ்நிலையில் என்ன மாற்றங்கள் உற்பத்திப் பெருக்கத்திற்கு உதவும் என்பதை ஆராய்ச்சியின் வாயிலாக அறியலாம்.
மேலும், பணியாளர் மேலாண்மைத் துறையில் உளவியல் ஒருபகுதியாகக் கருதப்படுகிறது. அண்மைக் காலத்தில் பெரிய நிருவாகங்கள் உளவியல் படித்தவர்களைச் ‘சமூகப் பணியாளர்’ என்ற பதவியில் அமர்த்தி, ‘சிக்கல் தொழிலாளிகள்’ என்பவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களுடைய இன்னல்களைக் கேட்டறிந்து, என்ன காரணத்தினால் அந்தத் தொழிலாளி அடிக்கடி விடுமுறை எடுக்கிறார் - குடிப்பழக்கமா? குடும்பத் தொல்லைகளா? இரண்டுமா? என்பன போன்றவைகளை ஆராய்ந்து, தகுந்த ஆலோசனைகளைத் தருகிறார்கள். தொழிலாளிகளின் தவறுகளை மேலெழுந்தபடி கவனித்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைவிட, அவர்களுடைய தவறுகளுக்கு என்ன காரணம் என்ற பின்னணியை நோக்கி, அதை எப்படிச் சீர்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து செயற்படுவது தொழில் உறவுக்கு உதவும். இவையெல்லாம் ஆராய்ச்சியின் வாயிலாகக் கற்றுக்கொள்ள வேண்டியவை.
தொழிலாளி என்பவன் பணி நேரத்தில் வேலை செய்துவிட்டுப் போய்விடும் ஏதோ ஒரு மனிதன் என்று எண்ணும் காலம் கடந்துவிட்டது. அவனுடைய ஓய்வு நேரத்திற்கும் வசதிகள் செய்து தந்து, அவனை ஒரு முழு மனிதனாக ஆக்கித் தொழிற்சாலைக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் அவனுடைய திறனைப் பயன்படுத்துவதில் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தனியார் துறையிலும் பொதுத்துறையிலும் உள்ள பல பெரிய நிருவாகங்கள் ஆவன செய்து வருகின்றன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, பணியாளர்கள் விடுமுறையில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற திட்டம். பணியாளுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் இரயில் கட்டணமான தொகை தவிரக் கைச்செலவிற்கும் பல நிருவாகங்கள் பணம் கொடுக்கின்றன. இதனால், சென்னையில் இருக்கும் ஒரு பணியாள், பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் காசுமீரம் வரை சென்று, அதன் அழகிய குழ்நிலையை அனுபவித்துவிட்டு வர வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது. பலதரப்பட்ட வசதிகள் செய்து கொடுத்தும், அவைகள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா, அவைகள் பணியாளின் வாழ்க்கைத் தரத்தை எவ்வளவு தூரம் முன்னேற்றமடையச் செய்திருக்கின்றன, மிகுந்த பண வசதி கிடைப்பதால், அதைப் பயனற்ற வழிகளில் செலவு<noinclude></noinclude>
c31ygowh5z95502h5g8vv0f0k621a6b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/635
250
622502
1952450
1947070
2026-07-09T13:59:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரால்டு|595|ஆரிகன்}}</noinclude>செய்து குடும்பத்தைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கிறார்களா என்பன போன்ற பல கூறுகளை ஆராய வேண்டும்.{{Right|எ.டி.சா}}
<section end="ஆராய்ச்சியும் முன்னேற்றமும்"/>
<section begin="ஆரால்டு"/>
{{dhr}}
<b>ஆரால்டு</b> என்பது நார்வேயை அதன் தொடக்கக் காலத்தில் ஆண்ட மூன்று அரசர்களின் பெயர் ஆகும், அவர்களுள் இருவர் சிறப்பானவர். முதலாம் ஆரால்டு (Harold I) நார்வே முழுவதையும் கி.பி. 900 ஆண்டளவில் அரசாண்டவர். இவர் நார்வே நாட்டினைப் பங்கிட்டுக் கொண்ட குறுநில மன்னர்கள் பலரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.
<b>மூன்றாம் ஆரால்டு</b> (கி.பி. 1015-1066) முதலாம் ஆரால்டுவின் வழித்தோன்றல்; துணிவுமிக்கவர்; பைசாண்டியப் பேரரசர்களின் படைக்காவலர் தலைவராக இருந்த இவர்தம் வீரச் செயல்களைக் குறித்து நார்வீசியக் குறிப்பேடுகளில் கதைகள் பல உண்டு. இவர் கி.பி. 1046-இல் அரசராக முடி சூட்டிக் கொண்டார். நார்வீசிய அரியணைக்குத் தேனியர்கள் உரிமை கொண்டாடியதால் இவர் தென்மார்க்குடன் (Denmark) போராடினார். இவர் கி.பி. 1066-ஆம் ஆண்டில், இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஆரால்டுவின் (Harold II) உடன்பிறப்பான தாசுடிக்கு (Tostig) என்பாருக்கு உதவி செய்யும் நோக்குடன் படையெடுத்தார். தாசுடிக்கு இரண்டாம் ஆரால்டு என்னும் ஆங்கில மன்னருடன் போரிட்டவர். மூன்றாம் ஆரால்டுவும், தாசுடிக்கும் இசுடாம்போர்டு பாலம் (Stamford Bridge) என்னுமிடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டனர்.
<section end="ஆரால்டு"/>
<section begin="ஆராவமுதாச்சாரியார்"/>
{{dhr}}
<b>ஆராவமுதாச்சாரியார்</b> 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். பாண்டி நாட்டிலுள்ள திருக்கானப்பேருக்கு அருகிலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவ்வூர் சுந்தரரால் பாடப்பெற்றதாகும். திருச்சுழியல் புராணம் என்னும் நூல் ஆராவமுதாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்தப் புராணம் அம்பலவாண நாவலர் என்பவரால் 1901-ஆம் ஆண்டில் சென்னையில் அச்சிடப்பட்டது.
<section end="ஆராவமுதாச்சாரியார்"/>
<section begin="ஆரிகன்"/>
{{dhr}}
<b>ஆரிகன்</b> அமெரிக்க ஐக்கிய நாட்டின் 33-ஆம் மாநிலம். இம்மாநிலம் பசிபிக்குப் பெருங்கடலையொட்டியுள்ளது. இதன் வடக்கில் வாசிங்டன் மாநிலம் அமைந்துள்ளது. கொலம்பியா ஆறு இம்மாநிலத்தின் வட எல்லையாகி வாசிங்டனையும் ஆரிகனையும் பிரிக்கிறது. கிழக்கில் இதாகோவும் இசுனேக்கு ஆறும் (Snake River), தெற்கில் நிவாடாவும் (Nevada) கலிபோர்னியாவும், மேற்கில் பசிபிக்குப் பெருங்கடலும்
இம்மாநிலத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 635
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 127
|oTop = 40
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|ஆரிகன்}}
ஆரிகன் (Oregon) மாநிலத்தின் பரப்பு 2,51,180 ச.கி.மீ. ஆகும். இதில் உள்நாட்டு நீர்நிலைகள் 2064 ச.கி.மீ. 124 ச.கி.மீ. பரப்புடைய பசிபிக்குக் கடற்கரை நீர்ப்பரப்பு இதில் அடங்காது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் இது பரப்பளவாய் பத்தாம் இடத்தைப் பெற்று விளங்குகிறது. மக்கள்தொகை 26,32,663 (1980).
இம்மாநிலத்தைப் பசிபிக்கு விந்தை நிலம் என்கிறார்கள். ஏனெனில் இயற்கைக் காட்சிகளின் எழில் மிக்கது இம்மாநிலம், கிரேட்டர் ஏரி, காசு கேடு மலைத்தொடர் (Cascade Range), கொலம்பியா ஆற்றுக்கெவிமலைப் பள்ளம், இசுனேக்கு ஆற்றின் குறுக்கேயுள்ள எல்சு கென்யான் என்னும் ஆற்றுக்குடைவு, ஆரிகன் குகைகள், தேசிய நினைவுச் சின்னம் போன்றவை கண்களையும் கருத்தையும் கவருவன.
காசுகேடு மலைத்தொடருக்குக் கிழக்கிலுள்ள வறண்ட நிலம் கால்நடைப் பண்ணைகளுக்குப் பெயர் பெற்றதாகும். உருளைக்கிழங்கு, பீட்டு, காய்கறிகள் முதலியன நீர்ப்பாசன வசதிபெற்ற கிழக்கு ஆர்கனின் விளைபொருள்கள், கோதுமை, ஆரிகன் மக்களின் சிறந்த உணவுப்பொருள். இது வட மத்திய பகுதிகளில் மிகுதியாக விளைகிறது. கூடு (Hood), உரோகு (Rogue) ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழத்தோட்டங்களுக்குப் பெயர் பெற்றவை.
கொலம்பியா ஆறு இம்மாநிலத்தின் வடவெல்லையாக அமைந்துள்ளதால், அவ்வாற்றின் குறுக்கே<noinclude></noinclude>
7qw373ntl6u9uevp4y9om2a093kns7p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/636
250
622636
1952451
1947071
2026-07-09T14:12:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிகன்|596|ஆரிங்டன் சேம்சு}}</noinclude>கட்டப்பட்டுள்ள பெரும் அணைக்கட்டுகளில் நீரைத் தேக்கிப் பெருமளவு நீர்மின்சக்தியை உற்பத்தி செய்கிறார்கள். அணைக் கட்டுகள் நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன. நீர்நாய்த் தோல்கள் பெருமளவு கிடைப்பதால் இம்மாநிலத்தை நீர்நாய் மாநிலம் (Beaver State) என்பர்.
தொடக்கக் காலக் குடியேற்றவாதிகள், வில்லா மெட்டுப் பள்ளத்தாக்கு (Willametta Valley) ஆரிகனின் வாணிகத்திற்கும் தொழிற்சாலைகளுக்குமான ஒரு மையம் என்பதனை உணர்ந்தார்கள். இப்பள்ளத்தாக்கில்தான் ஆரிகனின் பெருநகரங்கள் அமைந்துள்ளன. போர்ட்லாந்துப் பெருநகரங்களுள் ஒன்று. போர்ட்லாந்து வில்லாமெட்டு ஆற்றின் இருகரைகளிலும் பரவியுள்ளது. சேலம் இம்மாநிலத்தின் தலைநகர். வில்லாமெட்டு ஆறு கொலம்பியா ஆற்றுடன் கலக்கிறது.
வேளாண்மைத் துறையில் இறைச்சிக்கான கால்நடைகள், கோதுமை, பால், உருளைக்கிழங்கு முதலியன உற்பத்தியாகின்றன. இங்குச் செடி கொடிகள் வளர்க்கும் கண்ணாடி வீடுகள், தோட்டப்பயிர் நாற்றுப் பண்ணைகள் முதலியன மிகுதியாக உள்ளன. சால்மன், துனா, சிரிம்ப்பு போன்ற மீன்கள் சிறப்பாகக் கிடைக்கின்றன. மரமறுத்தல், மரத்தினால் பொருள்கள் செய்தல், உணவுப் பொருள் உண்டாக்கல், காகிதம், மின்சாரத் தொடர்பில்லாத இயந்திரப் பொருள்கள்; கருவிகள் செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. மூல உலோகங்கள், உலோகக் கட்டுமானப் பொருள்கள் போன்றவை இங்குள்ள சிறப்பான செய்தொழிற் பொருள்களாகும். கல், கூழாங்கற்கள், பியூமிசு என்னும் ஒருவகைக் கல் போன்றவை இங்குக் கிடைக்கும் சுரங்கப் பொருள்கள், தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவை சிறப்பான கனிப் பொருள்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 636
|bSize = 375
|cWidth = 115
|cHeight = 150
|oTop = 254
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|அசுடோரியா மென்மயிர் வணிக நினைவுச் சின்னம்}}
ஆரிகனில் முதன்முதலாக மக்கள் கி.பி. 1811-ஆம் ஆண்டில் குடியேறினார்கள். பசிபிக்கு மென்மயிர் (Fur) வணிகக் குழுவினர் அகடோரியாவில் தொடக்கக் காலத்தில் குடியேறினர், நிலப்பரப்பின் அடிப்படையில் கி.பி. 1834-சூலை 5-ஆம் நாள் அரசு அமைக்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலமாக ஆரிகன் கி.பி. 1859-ஆம் ஆண்டு பிப்பிரவரி 14-ஆம் நாள் இணைக்கப் பெற்றது.
<section end="ஆரிகன்"/>
<section begin="ஆரிங்டன், சேம்சு"/>
{{dhr}}
<b>ஆரிங்டன், சேம்சு (கி.பி. 1611-1677)</b> ஆங்கில அரசியல் கொள்கையாளர், இவர் எழுதிய ‘ஓசியானா’ (Oceana) என்னும் நூல், ‘குடியரசு’ இருக்க வேண்டிய நிலையை விளக்குகிறது. குடியரசு சொத்தின் அடிப்படையில், ஆழ்ந்த அறிவினால் வழி காட்டப்பட்டு நடைபெறுவதாக அமைய வேண்டுமென்பது இவர் கருத்தாகும்.
இங்கிலாந்து நாட்டில் நார்த்தாம்ப்டன்சயரிலுள்ள அப்டன் (Upton) என்னும் ஊரில் கி.பி. 1611 ஆம் ஆண்டு சனவரி 3-ஆம் நாள் இவர் பிறந்தார். முறையான கல்வியை ஓரளவே பெற்றவராயினும், நல்வாழ்வு வாழ்ந்து, நன்கு பயின்று, சிறப்பாகப் பயணம் செய்து, கல்விப்புலமை நிறைவுற்றவராக ஆரிங்டன் (Harrington, James) விளங்கினார்.
இவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தை இசுடூவர்ட்டு (Stuart) மரபைச் சார்ந்த முதலாம் சார்லசு மன்னர் ஆண்டு வந்தார். அவர் ஆட்சியின்போது இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசருக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. போருக்கு முன்னரே ஆரிங்டன் அரண்மனையில் அரசரின் அணுக்கத் தோழரானார். அரசரை, நாடாளுமன்றம் கி.பி. 1549 - இல் கழுவேற்றிய போது இவர் அரசருக்குப் பணிவிடைகள் செய்தார்.
நாடாளுமன்றத்திற்கும் அரசருக்கும் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இவர் தாம் எழுதிய ‘ஓசியானா பொது நலக் குடியரசு’ என்னும் நூலைக் கி.பி. 1656-இல் பதிப்பித்தார். குடியரசு ஆட்சிக்கு வழிவகை காணும் பின்னணியில் அமைந்திருந்தது இவருடைய நூலின் போக்கு. இவர் அந்நூலில், இங்கிலாந்தைக் குடியரசாகவும், தம்மை ஆங்கில மக்-<noinclude></noinclude>
cf4qiykiw13a2ap08pxngue7l7pu9we
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/637
250
622638
1952465
1947072
2026-07-09T14:43:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிசுடைடசு|597|ஆரிசோனா}}</noinclude>களின் சிக்கல்களுக்குத் தீர்ப்பு வழங்கும் அறிஞராகவும் உருவகப் படுத்தியிருக்கிறார். மக்களின் சொத்தாக நிலத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் எவர்களோ, அவர்களே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு வாய்ந்தவர்களாவர் என்பது இவர்தம் வாதம். அரசாங்கம் அதிகாரத்தின் பிடியிலுள்ளது. அனைத்து மக்களும் இவருடைய நூலை ஆர்வத்துடன் படித்தார்கள். மீண்டும், கி.பி. 1660-இல் இசுடூவர்ட்டுகளின் செல்வாக்கு ஏற்பட்டபோது, இவர்தம் ‘குடியரசுக்’ கருத்துகள் ஐயத்திற்காளாயின. இரண்டாம் சார்லசு மன்னரைக் கி.பி. 1661-இல் பதவியிலிருந்து அகற்ற முயன்ற சதியில் ஈடுபட்டதாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் தண்டிக்கப்படவில்லையாயினும் சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கி.பி. 1677- செப்டம்பர் 7-ஆம் நாள் வெசுட்டுமினிசுடரில் (West Minister) காலமானார்.
<section end="ஆரிங்டன், சேம்சு"/>
<section begin="ஆரிசுடைடசு"/>
{{dhr}}
<b>ஆரிசுடைடசு (கி.மு. 530-468)</b> என்பார் பண்டைய ஆதென்சு மக்களால் ‘நேர்மையாளர்’ என்று சிறப்பிக்கப் பெற்ற கிரேக்கர். ஆதென்சு நகரின் நற்குடியொன்றில் பிறந்தவர். உயர்ந்த கல்வியும், துணிச்சலும் கொண்டு, சுயநலமற்றவராய்த் திகழ்ந்த பெரியவர், கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்குமிடையே கி.மு. 490-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கலந்து கொண்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பதின்மருள் ஆரிசுடைடசு (Aristides) ஒருவர். படைவீரர்கள் ஒன்றுபட்டுப் போர் செய்வதே சாலச் சிறந்ததெனக் கருதி மில்ட்டியேடிசு (Miltiades) என்பாரின் தலைமையில் அனைவரையும் ஒருங்கிணைத்த வன்மையர். தெமிசுடாகிளிசு (Themistacles) என்னும் மற்றோர் ஆதென்சு நகரத் தளபதியுடன் கருத்து வேறுபாடு கொண்டு, எதிர்த்தமைக்காக இவர் நாடு கடத்தப்பட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் நாட்டிற்குள் வரவழைக்கப்பட்டார். சாலமிசு (Salamis) போரில் தெமிசுடாகினீசுக்கு உதவி புரிந்தார். கிரேக்க நாடுகளின் கூட்டமைப்பான தேலியக்குழு (Delian League) என்னும் அமைப்பை உருவாக்க இவர் உதவி புதிந்தார். உயரிய பொறுப்புகளை ஏற்றிருந்தபோதிலும், இவர் தன்னலத்திற்காக எதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கி.மு. 468-ஆம் ஆண்டு ஏழையாகவே இறந்தபோது, பொதுமக்கள் பணத்தால் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
<section end="ஆரிசுடைடசு"/>
<section begin="ஆரிசோனா"/>
{{dhr}}
<b>ஆரிசோனா</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்று. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 48-ஆம் மாநிலம். இது 1912-இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்தது.
ஆரிசோனாவின் (Arizona) மேற்கில் கொலொராடோ ஆறு பாய்கிறது. அந்த ஆறு ஆரிசோனாவைக் கலிபோர்னியாவிலிருந்து பிரிக்கிறது. ஆரிசோனாவின் தெற்கில் மெக்சிகோ நாடும் வடக்கில் யூட்டா மாநிலமும் கிழக்கில் நியூமெக்சிகோ மாநிலமும் மேற்கில் கலிபோர்னியா, நிவாடா என்னும் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 637
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 130
|oTop = 90
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆரிசோனா ஆறுகள்}}
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் ஆரிசோனாதான் பரப்பில் மிகப் பெரியது. இம்மாநிலம், கலிபோர்னியா வளைகுடாவிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் பசிபிக்குப் பெருங்கடலிலிருந்து 235 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் வடகிழக்கு மூலையில் உள்ள பகுதியை நான்கு மூலைகள் என்பர். ஆரிசோனா, நியூ மெக்சிகோ, கொலோராடோ, யூட்டா ஆகிய நான்கு மாநிலங்களின் மூலைப் பகுதிகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இதனை நான்கு மூலைகள் (Four Corners) என்று கூறுவது பொருத்தமானதே எனலாம்.
<b>இயற்கைப் பிரிவுகள்</b>: ஆமிசோனாவை மூன்று இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. வடக்கிலுள்ள கொலொராடோ மேட்டு நிலம், 2. ஆரிசோனா மேட்டு நிலம், 3. வடி நிலமும் மலைப் பகுதியும் என்பனவாம்.
கொலோராடோ மேட்டுநிலம், ஆரிசோனா மாநிலத்தின் நாற்பது விழுக்காட்டுப் பகுதியை உளளடக்கிக் கொண்டுள்ளது. இப்பகுதியில் பிளாக்கு இசுடாப்பு (Flag staff) என்னும் நகரம் அமைந்துள்ளது. அம்பிரி மலையுச்சி மிக உயர்ந்த இடம். இம்மேட்டு<noinclude></noinclude>
2top54ts9czaznv3q4unxwu8zlv6249
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/638
250
622640
1952468
1856962
2026-07-09T14:51:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிசோனா|598|ஆரிசோனா}}</noinclude>நிலத்தில்தான் கிராண்டு கன்யான் (Grand Canyon) பள்ளத்தாக்கு உள்ளது. அது உலகோர் போற்றும் இயற்கை எழில்மிக்க வியக்கத்தக்க பள்ளத்தாக்காகும். இம்மேட்டு நிலத்தின் கிழக்கு மூலையில்தான் நான்கு மூலைகள் என்னும் பகுதியும் இருக்கிறது. இம்மேட்டு நிலத்தின் தெற்கு ஓரத்தில் மொகொலோன் விளிம்பு (Mogollon Rim) என்னும் பகுதி உள்ளது.
ஆரிசோனா மேட்டுநிலம் மாநிலத்தின் மையப் பகுதியில் வட மேற்கிலிருந்து தென்கிழக்காகப் பரந்துள்ளது. இது மூன்று படிகளைக் கொண்ட தட்டினைப்போல் காணப்படுகிறது. அம்மூன்றில் ஒன்றை ஆரிசோனா பாலைநில ஆல்ப்சு என்பர். இங்கும் படாம்போர்த்தியது போன்ற புல்வெளிகளையும் பூஞ்சோலைகளையும் காடுகளையும் காணலாம்.
வடிநிலமும் மலைப்பகுதியும் என்பது மேற்குப் பகுதியில் உள்ள பாலைநிலப் பகுதி, இதனைச் சோனோராப் பாலை நிலம் என்பர். இது மிக வறண்டதும், மண்வளம் மிக்கதுமாம். இப்பகுதியில் உள்ள இயூமா என்னும் நகரத்தைச் சுற்றிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஏனைய பகுதிகளைச் சிலர் பாலைவனம் என்பர். இப்பகுதி ஆரிசோனாவின் சிறப்புமிக்க பகுதியாகும். இப்பகுதியில் பல ஆறுகளும் அவற்றின் துணை ஆறுகளும் பாய்கின்றன. இங்குள்ள சன் பள்ளத்தாக்கில்தான் ஆரிசோனா மாநிலத்தின் தலைநகரான பினிக்சு (Phoenix) என்னும் நகரம் அமைந்துள்ளது.
<b>ஆறுகள்</b>: ஆரிசோனாவின் சிறப்பான ஆறு கொலொராடோவாகும். அம்மாநிலத்தின் 90 விழுக்காடு நிலப்பரப்பு அவ்வாற்றின் பாசனத்தால் பயன் பெறுகிறது. கொலொராடோ ஆறு மாநிலத்தில் வடமேற்கில் வளைந்து பின்னர்த் தெற்காகத் திரும்பி, ஆரிசோனாவின் மேற்கு எல்லையாய் ஓடுகிறது. சிறு கொலோராடோ, பில் வில்லியம்சு, கீலா போன்றவை அதன் துணை ஆறுகள். அவை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வறண்டே இருக்கின்றன. பெருமழை பெய்தலாலும் பனி உருகிப் பெருகி வரும் வெள்ளத்தாலும் ஆரிசோனா ஆறுகளில் நீர் நிறைந்து காணப்படும்.
சான்பிரான்சிசுகோ மலையுச்சிகளிலும் அதன் அருகிலும், மோகெபலோன் விளிம்பினை அடுத்துள்ள பகுதிகளிலும் சிறுசிறு இயற்கைக் குளங்கள் உள்ளன. எனினும் ஆரிசோனாவின் பெரும்பாலான ஏரிகள் செயற்கையானவை.
<b>தட்பவெப்பநிலை</b>: பொதுவாகத் தென் ஆரிசோனா வெதுவெதுப்பும் கதிரொளி மிக்கதும் ஆன பகுதியாகும். மேட்டுநிலமும் பீடபூமியும் வழக்கமாகக் குளிர்ச்சியான வெப்பத்தைக் கொண்டவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 638
|bSize = 375
|cWidth = 168
|cHeight = 193
|oTop = 30
|oLeft = 192
|Location = center
|Description =
}}
{{center|ஆரிசோனா அரசியற் பிரிவுகள்}}
கோடைக்காலத்தின் பெருமழை பொழிகிறது. உயர்ந்த பகுதிகளில் 75 செ.மீ. மழை ஆண்டுதோறும் பெய்யும். தென்மேற்கு மூலையில் 12.5 செ.மீ. மழைதான் பொழிகிறது. குளிர்காலத்தில் வட ஆரிசோனாவிலும், ஏனைய பகுதிகளின் உயரம் மிகுந்த இடங்களிலும் தக்சான் (Tucson) மாநகருக்கருகிலுள்ள இலெம்மான் (Mt. Lemmon) மலையிலும் பனியின் வீழ்ச்சி ஏற்படுகிறது. பனியின் அளவு இலேசானது முதல் 150 செ.மீ. வரை இருக்கக்கூடும். உலகின் மிகப்பெரிய நீர் நிலையாக விளங்கும் கூவர் அணை (Hoover Dam) கொலொராடோ ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
பத்தில் எட்டு நாட்களுக்கு ஆரிசோனாவில் கதிரொனி காயும், ஈரக்கசிவு குறைவாக உள்ளபடியால் ஆரிசோனா நல்வாழ்விற்கு ஏற்ற மாநிலம் என்று கருதி, எண்ணற்ற மக்கள் இங்குச் சுற்றுலா வருகின்றனர்.
<b>இயற்கை வளங்கள்</b>: உடல் நலம் தரும் தட்பவெப்பமும் கருத்தைக் கவரும் அழகான இயற்கைக் காட்சிகளும் ஆரிசோனாவின் இயற்கை வளத்தின் இரு கண்களாகும். வண்டல் மண், கனிமங்கள், காடுகள் போன்றவை ஏனைய இயற்கை வளக் கூறுகள். சாகுவாரோ கற்றாழை மலரே ஆரிசோனா மாநிலத்தின் அரசு மலராகும்.{{nop}}<noinclude></noinclude>
8vp8pszdfpsq6v40ldyqka1k8h7k0yr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/639
250
622642
1952470
1856973
2026-07-09T14:53:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிசோனா|599|ஆரிசோனா}}</noinclude><b>மக்கள்</b>: ஆரிசோனாவின் மக்கள்தொகை 1960க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரும் அளவில் பெருகியுள்ளது. ஏனைய மாநிலங்களிலிருந்து வந்தும் இங்குக் குடியேறியுள்ளனர். புதிய தொழிற்சாலைகளில் பணிபுரியப் பலர் இங்கு வந்து குடியேறினர். ஆரிசோனா மாநிலத்தின் பழங்குடிகளான நவாசோ (Navajo), ஓப்பி (Hopi), அப்பாச்சி (Apache), பபாகோ (Papago), பிமா (Pima) போன்ற இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அமெரிக்க இந்தியர்களாவார்கள் (செவ்விந்தியர்கள்).
சுரங்கத்தொழிலும் கால்நடை வளர்த்தலும் நீர்ப்பாசனத்தால் பயிராகும் வேளாண்மையும் மக்களின் சிறப்புப் பணிகளாம். பினிக்சு, இடக்சான் ஆகிய இரு இடங்களைச் சுற்றிலுமுள்ள நீர்ப்பாசன வசதிபெற்ற பகுதிகளில் இக்காலத்தில் மக்கள் தொகை பெருகியுள்ளது.
<b>தொழில்கள்</b>: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியில் பெரும்பங்கு செம்பு, ஆரிசோனாவின் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. அது ஆரிசோனாவின் கனிம உற்பத்தியில் 85 விழுக்காடாகும். ஏனைய கனிமப் பொருள் சுரங்கங்களும் உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 639
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 230
|oTop = 202
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|வேளாண்மை, தொழில் வளங்கள்}}
<b>வேளாண்மை</b>: மரிகோப்பா கவுன்டியில் (Maticopa) வேளாண்மை உற்பத்தி மிகுதி. பிமா கவுண்டியில் பாசன வசதி பெற்ற பண்ணைத் தொழில் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சல் தரைகளைக் காணலாம்.
பென்டரோசா என்னும் பைன் மரங்கள் மிகச் சிறப்பான மரவகையாகும். மரமறுக்கும் தொழிலும் சிறப்பான தொழில்களில் ஒன்றாகும்.
<b>பிறதொழில்கள்</b>: மின் உற்பத்திப் பொருள்கள், இயந்திரங்கள், உணவுப் பொருள்கள், அடிப்படை உலோகங்கள், இராணுவத் தளவாடங்கள் ஆகியவை ஏனைய தொழில்கள். ஆண்டு முழுதும் சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஆரிசோனாவின் சுற்றுலாத் துறையும் சிறப்பாகப் பணியாற்றுகிறது.
<b>போக்குவரத்துச் சாதனங்கள்</b>: இருப்புப் பாதைகள் மாநிலம் முழுவதையும் இணைத்துள்ளன. கண்டங்கடக்கும் இருப்புப் பாதைகள் இரண்டு, ஆரிசோனாவில் வருகின்றன. நெடுஞ்சாலைகள் கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டுள்ளன. வானவெளி வழிகளும் உள்ளன. தக்சன், பினிக்சு போன்ற நகரங்களிலிருந்து வானவூர்திகள் இலாசு ஏஞ்சலீசுடன் இணைகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 639
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 98
|oTop = 255
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|ஆரிசோனாச் சட்ட மன்றம்}}
<b>கல்வி</b>: எண்ணற்ற பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ள ஆரிசோனாவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அவை:
::1. தச்சனில் அமைந்திருக்கும் ஆரிசோனாப் பல்கலைக்கழகம்.
::2. தெம்பேயில் உள்ள ஆரிசோனா அரசுப் பல்கலைக்கழகம்.<noinclude></noinclude>
jid190lq2etjixqyxzjmaypeo91oi24
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/640
250
622643
1952473
1947073
2026-07-09T15:02:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிடம்|600|ஆரிய அரசன் பிரகத்தன்}}</noinclude><b>மாநகரங்கள்</b>: ஆரிசோனாவின் இரு மாநகரங்கள் பினிக்சும் (Phoenix) தக்சனுமாம் (Tucson).
<b>பினிக்சு</b>: ஆரிசோனாவின் தலைநகரும் பெருநகரமுமாம். இந்நகரம் செவ்விந்தியர்களின் தொன்மையான அழிவுச் சின்னங்களின்மேல் அமைக்கப்பட்ட நகரம், மக்கள் தொகை 7,89,704. (1980).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 640
|bSize = 375
|cWidth = 143
|cHeight = 90
|oTop = 120
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|பினிக்சு நகரம்}}
<b>தக்சன்</b>: இரண்டாம் பெருநகரம். மக்கள் தொகை 3,30,537 (1980).
<b>வரலாறு</b>: கி.பி. 1752-இல் ஆரிசோனாவில் குடியேற்றம் தொடங்கியது. கி.பி. 1863-இல் அது ஓர் ஆட்சிப்பகுதியாக ஆக்கப்பட்டது. அது 1912 பிப்பிரவரி 14-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு மாநிலமாயிற்று.
<section end="ஆரிசோனா"/>
<section begin="ஆரிடம்1"/>
{{dhr}}
<b>ஆரிடம்</b>{{sup|<b>1</b>}} என்பது இருடிகள் தொடர்பானது எனப் பொருள்படும், அதனால், முனிவர்கள் அருளிய பாடலும் நூலும் ஆரிடம் என வழங்கப்பெறும். இவர்கள் ஆகவும் கெடவும் பாடும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இவர்களின் ஆருடப் பாடல்களும் அவ்வாற்றல் கொண்டனவாகக் கருதப்பெற்றன. யாப்பருங்கல விருத்தியுரையில் அதன் ஆசிரியர், பாட்டியல் மரபு என்னும் இலக்கண நூலில் ஆரிடச் செய்யுள் பற்றிய இலக்கணங் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அந்நூலிலிருந்து மூன்று நூற்பாக்களை எடுத்தாண்டுள்ளார். ‘உலகியற் செய்யுட்கு ஓதிய அளவையில், குறையவும் விதப்பவும் குறையா ஆற்றல், இருடிகள் மொழிதலின் ஆரிடம் என்ப’ என்பது ஆரிடம் பற்றிய இலக்கணம் கூறும் நூற்பாவாகும். கற்றோர் அறியா அறிவு பெற்று, முக்காலமும் முறையாக உணரும் ஆற்றல் சான்றவரே ஆரிடம் பாடுதற்குரிய வராவர். மேலும் அவர்கள் மனத்தது பாடும் மாண்புடையோரும், சினத்திற் கெடப்பாடும் செவ்வியுடையோருமாகிய முனிக்கணத்தினராவர்.
<section end="ஆரிடம்1"/>
<section begin="ஆரிடம்2"/>
{{dhr}}
<b>ஆரிடம்</b>{{sup|<b>2</b>}} வடமொழி வேதத்திற் கூறப் பெற்றுள்ள எட்டு வகையான மணங்களுள் ஒன்றாகும். தக்கான் ஒருவனுக்கு, ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து, அவற்றினிடையே இருத்திப் பொன் அணிந்து ‘நீரும் இவை போலப் பொலிந்து வாழ்வீராக’ என்று கூறி, நீர் வார்த்துப் பெண்ணைக் கொடுப்பது. இது தமிழில் ‘பொருள்கோள்’ என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வடவர் மணமுறை, தமிழ்ப் பொருளிலக்கண மரபின்படி பெருந்திணையுள் அடக்கப் பெறும் என்று இளம்பூரணர், நசரினார்க்கினியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.
<section end="ஆரிடம்2"/>
<section begin="ஆரிய அண்ணல்"/>
{{dhr}}
<b>ஆரிய அண்ணல்</b> சங்க காலத்தில், வாழ்ந்த ஓர் ஆரிய அரசன் ஆவான். வடநாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுள் தலைமையாக இருந்து போரிட்ட ஒரு மன்னனே ஆரிய அண்ணல் எனப்பட்டான். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற போது ஆரிய அண்ணல் என்னும் அரசன் எதிர்த்துப் போரிட்டதாகவும், அப்போரில் அம்மன்னனை அழித்துச் செங்குட்டுவன் கங்கை சென்று நீராடியதாகவும், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகம் குறிப்பிடுகிறது. இந்த ஆரிய மன்னன் வடநாட்டில் இமயமலைப் பகுதியிலிருந்து ஆண்டவன் என்று கூறுகின்றனர். ‘ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை, இன்பல் அருவிக் கங்கை மண்ணி’ என்பது அப்பதிகப் பகுதியாகும். செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கங்கைப் பேரியாற்றங்கரையில் ஆரிய அரசனொடு போரிட்டு வென்ற செய்தியினைச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அண்ணல்"/>
<section begin="ஆரிய அரசன் பிரகத்தன்"/>
{{dhr}}
<b>ஆரிய அரசன் பிரகத்தன்</b> சங்க காலக் கபிலர் காலத்தில் வாழ்ந்த அரசர்களுள் ஒருவன். வடநாட்டு வேந்தர்களைப் பொதுவாக ஆரிய அரசர் என்று கூறுவது மரபு. அவ்வாரிய அரசர்களுள் சிலருக்குத் தமிழ்மொழி அறிவு இருந்ததாகத் தெரிகிறது. தென்னாட்டவர் வடமொழியைக் கற்றுப் புலமை பெற்றிருந்தது போல, அக்காலத்தில் ஆரிய அரசரும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று வந்துள்ளனர்.
சங்க காலத்தில் திறன்மிக்க புலவர்கள் பலர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுள் கபிலரும் ஒருவர். அக்கபிலர் வாழ்ந்த காலத்தில் பிரகத்தன் என்னும் ஆரிய அரசன் இருந்தான். அவனுக்குத் தமிழின் சிறப்பைக் கேட்டறிய விருப்பம் ஏற்பட்டது. அதனால், அவர் காலத்தில் சிறப்புறது விளங்கிய<noinclude></noinclude>
4ooqdkjl1v4wqz9ywras9b1cgeuop0z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/641
250
622644
1952475
1947074
2026-07-09T15:07:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|601|ஆரிய சமாசம்}}</noinclude>கபிலரிடம் தமிழைப் பற்றிக் கூறுமாறு கேட்டான். தமிழின் சிறப்பை அறிவுறுத்த விரும்பிய கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் பாடலைப் பாடி, தமிழ்ப் பண்பாட்டையும் தமிழின் அருமைப் பாட்டையும் விளக்கிக் கூறினார்.
ஆரிய அரசர்களுள் ஒருவனான பிரகத்தன் சிந்துலம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்து செருக்குடன் வாழ்ந்தான் என்றும் கலை பல கற்றுப் பேரறிஞனாகத் திகழ்ந்தான் என்றும், ஆட்சிப் பெருக்கும் கலை அறிவும் அவனுக்குச் செருக்கைத் தந்தன என்றும், தனக்கு நிகரானவர் இல்லை; தன் மொழிக்கு நிகரான மொழி பிறிது இல்லை எனச் செருக்குடன் கூறினான் என்றும் அதனைக் கேள்வியுற்ற செழியன் படையெடுத்துச் சென்று, வென்று, அவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தான் என்றும், கபிலர் வாயிலாகத் தமிழின் பெருமையை உணர்ந்து செருக்கடங்கித் தன் தவற்றினுக்கு வருந்தினான் என்றும் ஒரு கதை கூறப்பெறுகிறது.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அரசன் பிரகத்தன்"/>
<section begin="ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்"/>
{{dhr}}
<b>ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்</b> ஒரு சங்கப் புலவர். பிரமதத்தன் என்னும் பெயரில் பலர் வாழ்ந்து வந்துள்ளமையால் அவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்ட, இவ்ரை யாழ்ப் பிரமதத்தன் என்றழைத்தனர். வடநாட்டு வேந்தரை ஆரிய அரசர் என்று சொல்லுதல் மரபு. வடநாட்டு வேந்தர்களுள் சிலர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புலமை பெற்றவராக வாழ்ந்திருக்கின்றனர். இவர் இயற்றமிழ் அறிவும் கவிபுனையும் ஆற்றலும், யாழிசைப் பயிற்சியில் வன்மையும் பெற்றுச் சிறப்பாக வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. எனவேதான், இவரை யாழ்ப்பிரமதத்தன் என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். குறுந்தொகை 184-ஆம் பாடல் இவர் பாடியதாக உள்ளது. அது தமிழுக்கேயுரிய அகத்திணைப் பொருள் மரபில் இயைந்த பாடலாகும். தலைமகன் ஒருவன் தலைமகள் ஒருத்தியைக் கடற்கரைச் சோலையில் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டு வந்து, அவளையே எண்ணி ஏங்குவதாக அமைந்த பாடல். தலைவியின்கண் வலைப்பட்ட நெஞ்சம், அவள் இருக்கும் இடத்திலேயே தங்கிவிட்டதாகவும், தான் மட்டுமல்லாது வழிச் செல்வோர் யாவரும் கண்டு திகைக்கக் கூடிய பேரழகு வாய்க்கப் பெற்றவள் அத்தலைமகள் என்பதாகவும் அப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாரிய மன்னர் காவலனாகவும் தமிழ்ப் பாவலனாகவும் திகழ்ந்தார். ‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ என்று, ஆன்றோர் இயல்பை அழகு தமிழில் எடுத்துக் கூறியுள்ளார். இம்மன்னர் அரசியலறிவும் ஆன்ற தமிழ்ப் புலமையும் இசையறிவும் வாய்க்கப் பெற்றவர்.{{Right|கே.நா.}}
<section end="ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்"/>
<section begin="ஆரியங்காவு"/>
{{dhr}}
<b>ஆரியங்காவு</b> கேரளாவில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஓரூர். இது விருதுநகர் கொல்லம் இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகைவண்டி நிலையமுமாகும். செங்கோட்டையிலிருந்து புகைவண்டி வழியாக 15 கி.மீ. பயணம் செய்து இவ்வூரை அடையலாம். தமிழில் சோலையைக் குறிக்கும் ‘கா’ என்னும் சொல், காவு என்றும் வழங்கும். ஆரியன் என்பது ஐயனார்க்குரிய பெயர்களுள் ஒன்றாகும். இன்றும் இவ்வூரில் ஐயப்பன் வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் அமைந்துள்ள எழில் மிக்க நெடிய சோலை ஒன்றில் ஐயப்பன் திருக்கோயில் அமைந்திருப்பதனால், இவ்வூர் ‘ஆரியங்காவு’ என்னும் பெயர் பெற்றது. சபரிமலை ஐயப்பன் வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்கள், இவ்வூர் வழியாகவும் செல்வர். இவ்வூரில் அமைந்துள்ள கோயிலில், ஐயப்பனுக்குப் பக்கத்தில் ‘பிரபை’ என்னும் பெயரில் ஒரு பெண் தெய்வம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில், கேரள நாட்டு முறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவ்வூருக்கு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு கணவாய் அமைக்கப்பட்டு, அதன் வழியாக இருப்புப்பாதைப் போக்குவரத்து நடைபெறுகிறது. தென்னிந்தியாவில், இருப்புப் பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்து இயற்றப்பட்ட கணவாய்களுள் இது மிகவும் நீளமானதாகும். இக்கணவாய் ‘ஆரியங்காவுக் கணவாய்’ என்று வழங்கப்படுகிறது. இங்குக் காப்பி, தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
<section end="ஆரியங்காவு"/>
<section begin="ஆரிய சமாசம்"/>
{{dhr}}
<b>ஆரிய சமாசம்</b> என்னும் சமய, சமூகக் கல்வி இயக்கம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முதல் அமைப்பாகும். இதனைச்சுவாமி தயானந்த சரசுவதி என்னும் பெரியார் (கி.பி. 1824-1883) பம்பாய் மாநகரில் கி.பி. 1875 ஆம் ஆண்டு ஏப்பிரல் 10-ஆம் நாள் நிலைநாட்டினார். இவர் ஈடிணையற்ற சமூகச் சீர்திருத்தக்காரர். தலை சிறந்த பேச்சாளர் இவர் குசராத்து மாநிலத்தில் பிறந்தவர்.
இவர் இலாகூரில் கி.பி. 1877-ஆம் ஆண்டில் இரண்டாம் சமாசத்தை நிறுவினார். பின்னால் தொடங்கப் பெற்ற இந்த ஆரிய சமாசமே பெரும் புகழ்பெற்று ஆரிய சமாசத்தின் தலைமைப் பீடமாயிற்று. ஆரிய சமாசம் தோற்றியதிலிருந்து இந்திய மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் பெரும் புரட்சி தோன்றலாயிற்று.
<b>ஆரிய சமாசத்தின் பத்துக் கொள்கைகள்</b>:
::1. இறைவனே எல்லா மெய்யறிவுக்கும் அவ்வறி-<noinclude>
<b>வா.க. 2-76</b></noinclude>
fke10aju513r5vn1171toyyjib89vxy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/642
250
622645
1952478
1857014
2026-07-09T15:13:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிய சமாசம்|602|ஆரிய சமாசம்}}</noinclude>வால் அறியப்படும் எல்லாவற்றுக்கும் மூல காரணம்.
::2. இறைவன் உண்மை-அறிவு இன்ப வடிவினர், உருவமற்றவர்; பேராற்றலுடையவர்; நியாய வள்ளல்; அருளாளர்; பிறவாதவர்; எல்லையற்றவர்; மாறாதவர்; ஆதியற்றவர்; இணையற்றவர்; அனைத்துக்கும் ஆதாரமானவர்; சர்வேசுவரர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் தூயவர்; அனைத்து உலருக்கும் மூலகாரணர்; அவருக்கே வணக்கம் உரியது.
::3. வேதங்கள் அறிவு நூல்கள். அவற்றைப் படிப்பதும் படிக்கக் கேட்பதும் கற்பதும் கற்பிப்பதும், பிறருக்கு விளக்குவதும் ஒவ்வோர் ஆரியனின் தலையாய கடமையாகும்.
::4. உண்மையை ஏற்கவும், பொய்யைப் புறத்தே ஒதுக்கவும், ஒருவர் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
::5. எச்செயலையும் அறத்துக்கு இசைந்ததாகவே செய்ய வேண்டும். அதாவது நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து, தீமைகளை விலக்கி, நன்மைகளைச் செய்ய வேண்டும்.
:;6. மனிதர்களின் உடல்நலம், ஆன்மநலம், சமுதாய நலம் ஆகியவற்றை மேம்படுத்தி உலகுக்கு நன்மை செய்வதே ஆரியசமாசத்தின் சீரிய
நோக்கம்.
::7. எல்லாரிடத்தும் அன்புடனும் நீதியுணர்வுடனும் தக்க மரியாதையுடனும் நடத்து கொள்ள வேண்டும்.
::8. அறியாமை அழிக்கப்பட வேண்டும். அறிவு பரப்பப்பட வேண்டும்.
::9. தனது மேன்மையில் யாரும் நிறைவடைந்து விடக்கூடாது. மற்றவர் மேன்மையிலே தன் மேன்மையும் கலந்திருப்பதை உணர வேண்டும்.
::10. சமுதாய நன்மைக்காகச் சட்டங்களை ஒப்புக் கொண்டு அவைகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால், பொது நலத்தைப் பாதிக்காத சொந்தச் செய்திகளில் மட்டில் சுதந்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.
<b>கொள்கைகளின் விளக்கம்</b>: முதல் இரண்டு கொள்கைகள், நியதியையும் கடவுள் எத்தகையவர் என்பதையும் விளக்குகின்றன. உண்மை அறிவின் களஞ்சியமாக உள்ளதே வேதம் என்பதை மூன்றாம் கொள்கை எடுத்தியம்புகிறது. திட்ட வட்டமாக அமைக்கப்பெற்றுள்ள சமயத்திற்கு மிக இன்றியமையாத கொள்கைகளாக விளங்குவனவே இம்மூன்று கொள்கைகள், மற்ற ஏழு கொள்கைகள் தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், சமுதாயத்தில் அவன் பங்கு என்னவென்றும் வரையறுத்துக் கூறுகின்றன. மனிதன் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நான்காம் கொள்கை அமைந்தது. பொய்யைப் புறக்கணித்துவிட்டு உண்மைப் பாதையில் செல்ல வேண்டுவதை இது அறியுறுத்துகிறது. உண்மையை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்துத் திறம்படச் செயலாற்ற வேண்டும் என்றும் அதனைப் போற்றுதற்குரிய கடமையாகவே கொள்ள வேண்டுமென்றும் ஐந்தாம் கொள்கை கூறுகிறது. ‘ஆரியசமாசம்’ எவ்வித இனப் பாகுபாடுமின்றி உலகிலுள்ள மனிதக் குலத்தின் நன்மையே முதன்மையாகக் கருதிப் பாடுபடும் அமைப்பென்பதை ஆறாம் கொள்கை அறிவிக்கிறது. தனி மனிதன் தன் சொந்த வாழ்வில் நீதி, நேர்மை, அன்பு, அருள் முதலியவற்றைக் கடைப்பிடித்துச் செம்மையாக வாழ்ந்தால் அவனால் சமுதாயம் முழுதும் மேன்மையுறுமென்பதை ஏழாம் கொள்கை எடுத்துரைக்கிறது. அறியாமை இருளகற்றி ஞானஒளி பெற்று விளங்க உறுதுணையாக இருக்க வேண்டுவது எட்டாம் கொள்கை. சமுதாய உறுப்பினன் தனிமனிதன். தனிமனிதன் தன் முன்னேற்றத்தில் மட்டில் நாட்டம் கொண்டால் தன்னலம் உடையவனாகிறான். மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்கும் பாடுபடும் பெருநோக்கு-பொதுநோக்குப் படைத்தவனாக வேண்டுமென்பதைச் சுட்டுகிறது, ஒன்பதாம் கொள்கை. நாட்டு நன்மையைத் தனி மனித நன்மை எப்போதும் குறுக்கிடாது என்பது பத்தாம் கொள்கை.
<b>ஆரிய சமாசத்தின் செயல்முறை</b>: ஆரிய சமாசத்தில் நடைபெறும் வேள்விகள், மந்திரம் கூறுதல் போன்றவை அறிவாற்றலை மனத்தில் பதிப்பதற்கே அன்றி, நம்பிக்கைகள் குறித்து அல்ல. ஆக்க வடிவமான செயல்களும் அச்செயல்களுக்கேற்ற விதிமுறைகளும் சமசுகாரங்கள் (Samakars) எனப்படும். மனித வாழ்வில் ஆரிய சமாசத்தினர் பதினாறு சமசுகாரங்களைப் பின்பற்றுகின்றனர். அவை, கருப்பதானம், சீமந்தம், குழந்தைக்குப் பாலூட்டும் விழா, பெயர் சூட்டல், முடியெடுத்தல், காதுகுத்தல், கல்வித் தொடக்கம், திருமணம், இறந்தோர்க்காற்றும் கடன் போன்றவை அவற்றுள் சிலவாம். இவை நடத்தப்படும் முறை, அதற்கான வேத மந்திரங்கள், வழி வகைகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் ‘சம்சுகார விதி’ என்னும் நூலில் காணலாம்.
<b>ஆரியசமாசமும் வேதமும்</b>: ஆரிய சமாசம் வேதத்தை ஏற்றுக் கொள்கிறது. புராணங்களை ஏற்றுக் கொள்வதில்லை. வேதத்தின் அடிப்படையில் கடவுள் கொள்கையை ஏற்கும் ஆரியசமாசத்தினரின்<noinclude></noinclude>
fvz6xqodmqa32jirjlh9lyoc00dx7wt
1952484
1952478
2026-07-09T15:32:05Z
Booradleyp1
1964
1952484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிய சமாசம்|602|ஆரிய சமாசம்}}</noinclude>வால் அறியப்படும் எல்லாவற்றுக்கும் மூல காரணம்.
::2. இறைவன் உண்மை-அறிவு இன்ப வடிவினர், உருவமற்றவர்; பேராற்றலுடையவர்; நியாய வள்ளல்; அருளாளர்; பிறவாதவர்; எல்லையற்றவர்; மாறாதவர்; ஆதியற்றவர்; இணையற்றவர்; அனைத்துக்கும் ஆதாரமானவர்; சர்வேசுவரர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் தூயவர்; அனைத்து உலருக்கும் மூலகாரணர்; அவருக்கே வணக்கம் உரியது.
::3. வேதங்கள் அறிவு நூல்கள். அவற்றைப் படிப்பதும் படிக்கக் கேட்பதும் கற்பதும் கற்பிப்பதும், பிறருக்கு விளக்குவதும் ஒவ்வோர் ஆரியனின் தலையாய கடமையாகும்.
::4. உண்மையை ஏற்கவும், பொய்யைப் புறத்தே ஒதுக்கவும், ஒருவர் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
::5. எச்செயலையும் அறத்துக்கு இசைந்ததாகவே செய்ய வேண்டும். அதாவது நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து, தீமைகளை விலக்கி, நன்மைகளைச் செய்ய வேண்டும்.
::6. மனிதர்களின் உடல்நலம், ஆன்மநலம், சமுதாய நலம் ஆகியவற்றை மேம்படுத்தி உலகுக்கு நன்மை செய்வதே ஆரியசமாசத்தின் சீரிய
நோக்கம்.
::7. எல்லாரிடத்தும் அன்புடனும் நீதியுணர்வுடனும் தக்க மரியாதையுடனும் நடத்து கொள்ள வேண்டும்.
::8. அறியாமை அழிக்கப்பட வேண்டும். அறிவு பரப்பப்பட வேண்டும்.
::9. தனது மேன்மையில் யாரும் நிறைவடைந்து விடக்கூடாது. மற்றவர் மேன்மையிலே தன் மேன்மையும் கலந்திருப்பதை உணர வேண்டும்.
::10. சமுதாய நன்மைக்காகச் சட்டங்களை ஒப்புக் கொண்டு அவைகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால், பொது நலத்தைப் பாதிக்காத சொந்தச் செய்திகளில் மட்டில் சுதந்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.
<b>கொள்கைகளின் விளக்கம்</b>: முதல் இரண்டு கொள்கைகள், நியதியையும் கடவுள் எத்தகையவர் என்பதையும் விளக்குகின்றன. உண்மை அறிவின் களஞ்சியமாக உள்ளதே வேதம் என்பதை மூன்றாம் கொள்கை எடுத்தியம்புகிறது. திட்ட வட்டமாக அமைக்கப்பெற்றுள்ள சமயத்திற்கு மிக இன்றியமையாத கொள்கைகளாக விளங்குவனவே இம்மூன்று கொள்கைகள், மற்ற ஏழு கொள்கைகள் தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், சமுதாயத்தில் அவன் பங்கு என்னவென்றும் வரையறுத்துக் கூறுகின்றன. மனிதன் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நான்காம் கொள்கை அமைந்தது. பொய்யைப் புறக்கணித்துவிட்டு உண்மைப் பாதையில் செல்ல வேண்டுவதை இது அறியுறுத்துகிறது. உண்மையை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்துத் திறம்படச் செயலாற்ற வேண்டும் என்றும் அதனைப் போற்றுதற்குரிய கடமையாகவே கொள்ள வேண்டுமென்றும் ஐந்தாம் கொள்கை கூறுகிறது. ‘ஆரியசமாசம்’ எவ்வித இனப் பாகுபாடுமின்றி உலகிலுள்ள மனிதக் குலத்தின் நன்மையே முதன்மையாகக் கருதிப் பாடுபடும் அமைப்பென்பதை ஆறாம் கொள்கை அறிவிக்கிறது. தனி மனிதன் தன் சொந்த வாழ்வில் நீதி, நேர்மை, அன்பு, அருள் முதலியவற்றைக் கடைப்பிடித்துச் செம்மையாக வாழ்ந்தால் அவனால் சமுதாயம் முழுதும் மேன்மையுறுமென்பதை ஏழாம் கொள்கை எடுத்துரைக்கிறது. அறியாமை இருளகற்றி ஞானஒளி பெற்று விளங்க உறுதுணையாக இருக்க வேண்டுவது எட்டாம் கொள்கை. சமுதாய உறுப்பினன் தனிமனிதன். தனிமனிதன் தன் முன்னேற்றத்தில் மட்டில் நாட்டம் கொண்டால் தன்னலம் உடையவனாகிறான். மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்கும் பாடுபடும் பெருநோக்கு-பொதுநோக்குப் படைத்தவனாக வேண்டுமென்பதைச் சுட்டுகிறது, ஒன்பதாம் கொள்கை. நாட்டு நன்மையைத் தனி மனித நன்மை எப்போதும் குறுக்கிடாது என்பது பத்தாம் கொள்கை.
<b>ஆரிய சமாசத்தின் செயல்முறை</b>: ஆரிய சமாசத்தில் நடைபெறும் வேள்விகள், மந்திரம் கூறுதல் போன்றவை அறிவாற்றலை மனத்தில் பதிப்பதற்கே அன்றி, நம்பிக்கைகள் குறித்து அல்ல. ஆக்க வடிவமான செயல்களும் அச்செயல்களுக்கேற்ற விதிமுறைகளும் சமசுகாரங்கள் (Samakars) எனப்படும். மனித வாழ்வில் ஆரிய சமாசத்தினர் பதினாறு சமசுகாரங்களைப் பின்பற்றுகின்றனர். அவை, கருப்பதானம், சீமந்தம், குழந்தைக்குப் பாலூட்டும் விழா, பெயர் சூட்டல், முடியெடுத்தல், காதுகுத்தல், கல்வித் தொடக்கம், திருமணம், இறந்தோர்க்காற்றும் கடன் போன்றவை அவற்றுள் சிலவாம். இவை நடத்தப்படும் முறை, அதற்கான வேத மந்திரங்கள், வழி வகைகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் ‘சம்சுகார விதி’ என்னும் நூலில் காணலாம்.
<b>ஆரியசமாசமும் வேதமும்</b>: ஆரிய சமாசம் வேதத்தை ஏற்றுக் கொள்கிறது. புராணங்களை ஏற்றுக் கொள்வதில்லை. வேதத்தின் அடிப்படையில் கடவுள் கொள்கையை ஏற்கும் ஆரியசமாசத்தினரின்<noinclude></noinclude>
iqs1rg5dvn3r9keurwpjjfwu1b8b0is
1952486
1952484
2026-07-09T15:32:45Z
Booradleyp1
1964
1952486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிய சமாசம்|602|ஆரிய சமாசம்}}</noinclude>வால் அறியப்படும் எல்லாவற்றுக்கும் மூல காரணம்.
::2. இறைவன் உண்மை-அறிவு இன்ப வடிவினர், உருவமற்றவர்; பேராற்றலுடையவர்; நியாய வள்ளல்; அருளாளர்; பிறவாதவர்; எல்லையற்றவர்; மாறாதவர்; ஆதியற்றவர்; இணையற்றவர்; அனைத்துக்கும் ஆதாரமானவர்; சர்வேசுவரர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் தூயவர்; அனைத்து உலருக்கும் மூலகாரணர்; அவருக்கே வணக்கம் உரியது.
::3. வேதங்கள் அறிவு நூல்கள். அவற்றைப் படிப்பதும் படிக்கக் கேட்பதும் கற்பதும் கற்பிப்பதும், பிறருக்கு விளக்குவதும் ஒவ்வோர் ஆரியனின் தலையாய கடமையாகும்.
::4. உண்மையை ஏற்கவும், பொய்யைப் புறத்தே ஒதுக்கவும், ஒருவர் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
::5. எச்செயலையும் அறத்துக்கு இசைந்ததாகவே செய்ய வேண்டும். அதாவது நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து, தீமைகளை விலக்கி, நன்மைகளைச் செய்ய வேண்டும்.
::6. மனிதர்களின் உடல்நலம், ஆன்மநலம், சமுதாய நலம் ஆகியவற்றை மேம்படுத்தி உலகுக்கு நன்மை செய்வதே ஆரியசமாசத்தின் சீரிய நோக்கம்.
::7. எல்லாரிடத்தும் அன்புடனும் நீதியுணர்வுடனும் தக்க மரியாதையுடனும் நடத்து கொள்ள வேண்டும்.
::8. அறியாமை அழிக்கப்பட வேண்டும். அறிவு பரப்பப்பட வேண்டும்.
::9. தனது மேன்மையில் யாரும் நிறைவடைந்து விடக்கூடாது. மற்றவர் மேன்மையிலே தன் மேன்மையும் கலந்திருப்பதை உணர வேண்டும்.
::10. சமுதாய நன்மைக்காகச் சட்டங்களை ஒப்புக் கொண்டு அவைகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால், பொது நலத்தைப் பாதிக்காத சொந்தச் செய்திகளில் மட்டில் சுதந்திரமாக நடந்துகொள்ள வேண்டும்.
<b>கொள்கைகளின் விளக்கம்</b>: முதல் இரண்டு கொள்கைகள், நியதியையும் கடவுள் எத்தகையவர் என்பதையும் விளக்குகின்றன. உண்மை அறிவின் களஞ்சியமாக உள்ளதே வேதம் என்பதை மூன்றாம் கொள்கை எடுத்தியம்புகிறது. திட்ட வட்டமாக அமைக்கப்பெற்றுள்ள சமயத்திற்கு மிக இன்றியமையாத கொள்கைகளாக விளங்குவனவே இம்மூன்று கொள்கைகள், மற்ற ஏழு கொள்கைகள் தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், சமுதாயத்தில் அவன் பங்கு என்னவென்றும் வரையறுத்துக் கூறுகின்றன. மனிதன் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நான்காம் கொள்கை அமைந்தது. பொய்யைப் புறக்கணித்துவிட்டு உண்மைப் பாதையில் செல்ல வேண்டுவதை இது அறியுறுத்துகிறது. உண்மையை ஏட்டளவில் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்துத் திறம்படச் செயலாற்ற வேண்டும் என்றும் அதனைப் போற்றுதற்குரிய கடமையாகவே கொள்ள வேண்டுமென்றும் ஐந்தாம் கொள்கை கூறுகிறது. ‘ஆரியசமாசம்’ எவ்வித இனப் பாகுபாடுமின்றி உலகிலுள்ள மனிதக் குலத்தின் நன்மையே முதன்மையாகக் கருதிப் பாடுபடும் அமைப்பென்பதை ஆறாம் கொள்கை அறிவிக்கிறது. தனி மனிதன் தன் சொந்த வாழ்வில் நீதி, நேர்மை, அன்பு, அருள் முதலியவற்றைக் கடைப்பிடித்துச் செம்மையாக வாழ்ந்தால் அவனால் சமுதாயம் முழுதும் மேன்மையுறுமென்பதை ஏழாம் கொள்கை எடுத்துரைக்கிறது. அறியாமை இருளகற்றி ஞானஒளி பெற்று விளங்க உறுதுணையாக இருக்க வேண்டுவது எட்டாம் கொள்கை. சமுதாய உறுப்பினன் தனிமனிதன். தனிமனிதன் தன் முன்னேற்றத்தில் மட்டில் நாட்டம் கொண்டால் தன்னலம் உடையவனாகிறான். மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்கும் பாடுபடும் பெருநோக்கு-பொதுநோக்குப் படைத்தவனாக வேண்டுமென்பதைச் சுட்டுகிறது, ஒன்பதாம் கொள்கை. நாட்டு நன்மையைத் தனி மனித நன்மை எப்போதும் குறுக்கிடாது என்பது பத்தாம் கொள்கை.
<b>ஆரிய சமாசத்தின் செயல்முறை</b>: ஆரிய சமாசத்தில் நடைபெறும் வேள்விகள், மந்திரம் கூறுதல் போன்றவை அறிவாற்றலை மனத்தில் பதிப்பதற்கே அன்றி, நம்பிக்கைகள் குறித்து அல்ல. ஆக்க வடிவமான செயல்களும் அச்செயல்களுக்கேற்ற விதிமுறைகளும் சமசுகாரங்கள் (Samakars) எனப்படும். மனித வாழ்வில் ஆரிய சமாசத்தினர் பதினாறு சமசுகாரங்களைப் பின்பற்றுகின்றனர். அவை, கருப்பதானம், சீமந்தம், குழந்தைக்குப் பாலூட்டும் விழா, பெயர் சூட்டல், முடியெடுத்தல், காதுகுத்தல், கல்வித் தொடக்கம், திருமணம், இறந்தோர்க்காற்றும் கடன் போன்றவை அவற்றுள் சிலவாம். இவை நடத்தப்படும் முறை, அதற்கான வேத மந்திரங்கள், வழி வகைகள், நடவடிக்கைகள் போன்றவற்றைச் ‘சம்சுகார விதி’ என்னும் நூலில் காணலாம்.
<b>ஆரியசமாசமும் வேதமும்</b>: ஆரிய சமாசம் வேதத்தை ஏற்றுக் கொள்கிறது. புராணங்களை ஏற்றுக் கொள்வதில்லை. வேதத்தின் அடிப்படையில் கடவுள் கொள்கையை ஏற்கும் ஆரியசமாசத்தினரின்<noinclude></noinclude>
jaq09f7rwy870zu91yvyevevzwb2r09
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/643
250
622647
1952479
1947076
2026-07-09T15:18:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரிய சமாசம்|603|ஆரியதேவர்}}</noinclude>தருமக்கோட்பாடுகள், நெறிமுறைகள், சமய நடவடிக்கைகள், விழாக்கள், வணங்கும் முறைகள் போன்றவற்றை இக்கொள்கை திட்டவட்டமாகக் கூறுகிறது. இவ்வியக்கம் வெறும் சீர்திருத்தத்தை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்காமல், மக்களாட்சி அடிப்படையில் வளர்ந்து வருவதுடன், சமுதாயத்தின் அடிமட்டத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய அமைப்பாகவும் விளங்கி இந்து சமுதாயத்தில் புரட்சிகரமான, வேறுபாடற்ற தன்மையை உருவாக்குவதால் இன்றும் நீடித்துச் செயலாற்றுகிறது.
<b>மறுமலர்ச்சி இயக்கம்</b>: மறுபிறப்பு உண்டு என்பதை ஆரிய சமாசம் ஏற்றுக் கொள்கிறது. ஆரிய சமாசத்திற்குச் சாதிமுறையில் நம்பிக்கையில்லை. இந்து சமயத்தைப் பற்றியிருக்கும் சாதிப்பித்தை ஆரிய சமாசம் ஒழிக்க முயற்சி செய்கிறது.
வேதம் மக்கள் அனைவருக்கும் உரியது. வேதம் கூறும் மெய்ப்பொருளை எல்லோரும் அறிந்து இன்புற வழிவகுத்தது ஆரிய சமாசமே. முன்னாளில் வேதத்திற்கு விளக்கம் அளித்தவர்கள் தத்தம் கருத்துவழி வரலாற்று நிகழ்ச்சிகளாகவும், புனைந்துரைக்கதைகளாகவும், அரசர்களின் போர்களாகவும், அவரவர்கள் கற்ற பிற்கால நூல்களைக் கொண்டு அதற்கேற்ப எழுதியதால் அவைகள் தருக்கவாதத்திற்கும் தத்துவத்திற்கும் ஒவ்வாத நிலையில் இருந்தமையால், மக்கள் பெரும்பாலோர் நல்வாழ்க்கையில் ஈடுபடாதவாறு மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்தன. தயானந்தர் தம் குருவின் ஆணைப்படி வேதத்திற்கு உண்மை உரை வளம் காணும்போது, தருக்கம், இலக்கணம், சந்தசு முதலிய துணைகளோடு கடவுள் தியானத்தில் ஆழ்ந்து, ஒவ்வொரு சொல்லுக்கும் உரை கூறியதோடு, விஞ்ஞானத்திற்கும் காரண காரியத்திற்கும் தத்துவத்திற்கும் ஏற்ற வகையில் ஒப்புக்கொள்ளும் வண்ணம் விளக்கம் அருளினார்.
இந்து சமயத்தில் மண்டிக்கிடக்கும் பலவிதமான தீமைகளைக் களைந்தெறிவதை ‘ஆரியசமாசம்’ தன்னுடைய முதன்மையான கடமையாகக் கருதிப் பணி ஆற்றிவருகிறது. ஆரிய சமாசம் கூட்டு வழிபாடுகளை நடத்துகிறது.
<b>‘ஆரிய சமாசம்’ ஆற்றிய-ஆற்றும் பணிகள்</b>: ‘ஆரிய சமாசம்’ பெண்கள் விடுதலைக்கு சிறப்பாகப்பாடுபட்டது. இந்துப் பெண்மணிகளிடையே நிலவியிருந்த பலவகைத் துன்பங்கள், கொடுமைகள், குழந்தைத் திருமணம், பருதா முறை முதலியவை ‘ஆரியசமாசம்’ எடுத்த நடவடிக்கைகளினால் மறைந்தன. இந்துக்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஆடவரும் மகளிரும் பூணூல் அணியலாம் என முதன் முதலில் முழங்கியது ஆரியசமாசமே. மந்திரத்தை அனைவரும் சொல்வதற்கு ‘ஆரியசமாசம்’ அடிகோலியது. ‘ஆரிய சமாசமே’ இத்தகு சமயப் புரட்சிகளைச் செய்து எல்லா மக்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது. பெண்களுக்கும் சமுதாயத்தில் உள்ள நசுக்கப்பட்ட கீழ்த்தளத்திலுள்ள சகோதரர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை அளிப்பதற்காக ஆரிய சமாசம் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி வழிகாட்டியது. இன்று இந்தியநாடெங்கும் ‘ஆரிய சமாசம்’ எண்ணற்ற பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி நடத்திவருகிறது.
மனித சமுதாயம் பொதுவாக நன்கு வாழ, சமுதாய நற்பணிக்கூடங்கள், இலவசமாக உள்ள திக்கற்றோர் இல்லங்கள், கைம்பெண் விடுதிகள், முதியோர் இல்லங்கள், நோய் நீக்கும் மருந்தகங்கள், தாழ்த்தப்பட்டோரை மேன்மையுறச் செய்யும் பணிமனைகள் முதலியன இன்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு வருவது ‘ஆரியசமாச’த்தின் ஆக்கப் பணிகளில் சிறந்த கூறாகும்.
உலகோர் எல்லாரும் நலம் பெறவேண்டும் என்று கருதி உலகவரை உயர்ந்தோராக்க உழைக்கும் இயக்கம் ‘ஆரிய சமாசம்’.{{Right|பி. சி. க.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Datta, K.K.,</b> Renaissance, Nationalism and Social Changes in Modern India, Bookland Private Ltd., Calcutta, 1965.<br>
<b>Ranade, M.G.,</b> Religious and Social Reform, Bombay, 1902,<br>
<b>Andrews, C.F.,</b> Indian Renaissance, 1912.
<section end="ஆரிய சமாசம்"/>
<section begin="ஆரிய தேவர்"/>
{{dhr}}
<b>ஆரிய தேவர்</b> நாகார்ச்சுனர் காலத்திற்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்த மகாயான தத்துவஞானி. யுவான் சுவாங்கு அவரைத் தேவபுருசர் (தேவ புருடர்) என்று குறிப்பிடுகிறார். நாகார்ச்சுனரால் தொடங்கப்பெற்ற மாத்யமிகக் கோட்பாடுகளின் தலை சிறந்த பேராளராக ஆரிய தேவர் விளங்கினார். சீனப்பயணி யுவான் சுவாங்கு அவரைக் குறிப்பிட்டுள்ளார். கிரண நிருபர், கணதேவர், நீல்நேத்திரர், பிங்கல நேத்திரர் என்னும் பெயர்களும் அவருக்குண்டு. ஆரிய தேவர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்பது யுவான் சுவாங்கின் கருத்தாகும். மகாகோசலம், பிரயாகை, வைசாலி போன்ற தலங்களுக்கு வருகை புரிந்து தம்மை எதிர்த்தோரைத் தம் வாதத்தால் வென்று வாகை சூடியவர் என்றும் சீனப் பயணி ஆரிய தேவரைப் பற்றிக் கூறியுள்ளார். நாகார்ச்சுனரை<noinclude></noinclude>
6bcxi70vvfv11p1wswcg5xvkrvrj5b2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/644
250
622649
1952480
1947077
2026-07-09T15:23:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|604|ஆரியபட்டர்}}</noinclude>இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரின் காலத்தவர் என்று கருதுவோரும் உண்டு. கோட்பாடுகளைக் கூறும் பல நூல்களின் ஆசிரியர் அவர் என்றும் கருதுகிறார்கள்.
<section end="ஆரிய தேவர்"/>
<section begin="ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்"/>
{{dhr}}
<b>ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்</b>: சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னருள் சிறப்புமிக்க ஒருவன். இவன், பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்றும் குறிக்கப்பட்டுள்ளான். இவனது பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளமையால் (183) இவன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இப்பெயருக்கு, ‘ஆரியப்படை தந்த நெடுஞ்செழியன்’ என்னுமொரு பாடமும் உள்ளது. ‘ஆரியப்படை கடந்த’ என்னும் அடைமொழி, ‘வடவாரியர் படைகளை எதிர்த்து நின்று, போர் செய்து வென்ற இவனுடைய பேராண்மையை’ விளக்கி நிற்கிறது. ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்’ எனத் தொடங்கும் இவனது புறநானூற்றுப் பாடல் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
தீர ஆராயாது கோவலனைக் குற்றவாளி என மயங்கிக் கொல்வித்துப் பின் உண்மை உணர்ந்து அரியணையிலிருந்து வீழ்ந்து உயிர் நீத்த பாண்டியன் இவனாவான் என்று சிலர் கூறுகின்றனர். இவன் இறந்தபோது மனைவி கோப்பெருந்தேவியும் உடனுயிர் நீத்தனள். இவனை இளங்கோவடிகள், ‘வட வாரியர் படை கடந்து, தென் தமிழ்நாடு ஒருங்குகாணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அங்ஙனமாயின் இம்மன்னன் சேரன் செங்குட்டுவன் காலத்தவனாவான்.
<section end="ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்"/>
<section begin="ஆரியப்பப் புலவர்"/>
{{dhr}}
<b>ஆரியப்பப் புலவர்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் என்னும் திருக்குடந்தையில் பிறந்தவர். வேளாண் மரபினர், இவர் தமிழில் பாகவதத்தினை 4970 விருத்தப் பாக்களால் இயற்றியுள்ளார். பாகவதத்தினைக் கி.பி. 1881-ஆம் ஆண்டில் தமிழில் அச்சிட்ட, கோமள வல்லிபுரம் இராசகோபால் பிள்ளை இந்நூல் ஆரியப்பப் புலவரால் இயற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நூல் இவர் இயற்றியதன்று, செவ்வைச் சூடுவாரால் இயற்றப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ‘கம்பனென்றும் கும்பனென்றும்’ எனவரும் தனிப்பாடல் வெண்பாவிலுள்ள ‘மன்னாவலர் பரவும் வாயல் அன தாரியப்பன்’ என்னும் அடியினை, ‘மன்னா வலர்புடைசூழ் வாழ் குடந்தை ஆரியப்பன்’ என மாற்றிக் கொண்டு, இவ்வடி ஆரியப்பப் புலவரைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர்.
<section end="ஆரியப்பப் புலவர்"/>
<section begin="ஆரியப்பொருநன்"/>
{{dhr}}
<b>ஆரியப்பொருநன்</b> ஆரியப் பொருநன் என்பவன் சங்க காலத்தே வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன்; பொருநன் என்னும் சொல் அவன் ஓர் அரசன் என்பதைக் குறிக்கிறது. இவன் சேர நாட்டுப் பகுதி ஒன்றை ஆண்டவன். சேர மன்னன் ஒருவனின் படைத்தலைவனாகக் கணையன் என்பவன் ஒரு காலத்தில் இருந்தான்; அக்கணையன் காலத்தில் வாழ்ந்தவன் இந்த ஆரியப் பொருநன்.
பாணன் என்னும் ஒரு குறுநில மன்னனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் ஒருமுறை மற்போர் நடைபெற்றது. பாணன் பொருநனைக் காட்டிலும் மிகச் சிறந்த வலிமையுடையவன். போர் கடுமையாக நடைபெற்றது. அப்போரில் பாணனுடைய கைப்பிடிக்குள் ஆரியப் பொருநன் மீள முடியாதபடி அகப்பட்டுத் தத்தளித்தான். பாணன் இறுக்க இறுக்க, பொருநன் வலிமையெல்லாம் போய் இறுதியில் இறந்துபோனான். அந்த மற்போரைக் கண்டு கொண்டிருந்தவர்களுள் சிலர் ஆரியப் பொருநனே வெற்றி பெறுவான் எனச் சூளுரைத்திருப்பர் போலும். அவர்களுள் ஒருவன் கணையன் என்பவன். அவன் சேரன் படைத்தலைவன், பொருநன் இறந்து பட்டதைக் கண்டவுடன், அவன், தான் சூள் உரைத்தமைக்கு நாணிச் சென்றான். நாணிச்சென்ற அக்காட்சியைப் பரணர் தம் அகநானூற்றுப் பாடலில் (386) குறிப்பிட்டுள்ளார்.{{Right|கே.நா. }}
<section end="ஆரியப்பொருநன்"/>
<section begin="ஆரியபட்டர்"/>
{{dhr}}
<b>ஆரியபட்டர்</b> என்பவர் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவைச் சார்ந்தவர். இவ்வூர் முன் காலத்தில் குசுமபுரம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. ஆரியபட்டர் (Aryabhta) கி.பி. 476-இல் பிறந்தார். இவர் கி.பி. 499-இல் ‘ஆரியபட்டியம்’ (Aryabhatium) என்னும் நூலை எழுதினார். இது வானியல் மற்றும் கணக்கியல் தொடர்பான முதல் நூலாகும். இந்நூலும், அதன்மீது எழுதப்பட்ட பிற்கால விளக்கக் குறிப்புகளும், அதிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களும் மட்டிலுமே ஆரியபட்டரைப் பற்றியும் இவர்தம் படைப்புகளைப் பற்றியும் தெரிவிக்கும் மூலப் பொருள்களாகும். இவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை பற்றிய விவரங்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை. “அறுபது ஆண்டுகள் கொண்ட அறுபது யுகங்கள் மற்றும் மூன்று யுக பாதங்கள்” முடிந்தபோது தமக்கு 23 ஆண்டுகள் என்று தம் நூலில் ஆரியபட்டர் குறிப்பிடுகிறார்.
<b>ஆரியபட்டியம்</b>: இந்நூல் ஆரிய சித்தாந்தம் என்னும் அழைக்கப்பெறும், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிமுடிக்கப்பட்ட நூல் இது. வானியல் கணக்கியல் ஆகியவை பற்றிப் பொதுவாக அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்திகள் கொண்ட நூலாக உள்ள இது நான்கு<noinclude></noinclude>
1ezndncsz0u3wxf4yw9djtnbx5pqy5j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/645
250
622650
1952482
1857082
2026-07-09T15:31:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியப்பட்டர்|605|ஆரியப்பட்டர்}}</noinclude>பகுதிகளாக அமைந்துள்ளது. தேசகீதிகம் எனப்படும் முதற்பகுதி 10 செய்யுள் பத்திகளைக் கொண்டு வடமொழி நெடுங்கணக்கில் எண்களைப்பற்றி விவரித்துக் கூறுகிறது. இரண்டாம் பகுதியான கணிதப் பாடம் அல்லது கணக்கியல் 33 செய்யுள் பத்திகளைக் கொண்டது. மூன்றாம் பகுதியான காலக்கிரிய பாடம் என்பது காலக்கணக்கீடு குறித்து 25 பத்திகள் கொண்டது. நான்காம் பகுதியான கோளப்பாடம் 50 செய்யுள் அமைந்த பகுதியாகும். இவற்றுள் 108 செய்யுள் பத்திகளடங்கிய இறுதி மூன்று பகுதிகள் கூட்டாக ‘ஆரிய சாத்திரம்’ என்று சொல்லப்பெறுகின்றன.
வானியல் பற்றிய ஆரியபட்டரின் கூற்றுகள் பழமைக் கருத்துக்களுக்கு முரண்பட்டவையாகும். அக்கால வைதீகக் கருத்துகளிலிருந்து மாறுபட்டு, பூமி உருண்டை வடிவானதென்றும், ஓர் அச்சில் அது சுழல்கிறதென்றும் இவர் கூறினார். சூரிய சந்திர ஒளி மறைப்புகளைப் பற்றிய உண்மைத் தத்துவத்தை விவரித்து, ஒளி மறைப்புகள் சூரியனால் ஏற்படுவன அல்ல என்றும் பூமி மற்றும் நிலவின் நிழல்களால் ஏற்படுவன என்றும் கூறினார். மேலும் நிலவு இருள் கொண்டதென்றும், கதிரவனால் ஒளிபெறுகிறது என்றும் கூறினார். ஞாயிற்றியக்கக்கோடி பற்றியும் பகலிரவு சமமான நிலை குறித்தும் கண்டறிந்தார். அவற்றை ஓர் ஒழுங்கான அசைவில் வரையறுத்து, அதற்கான எல்லையையும், காலத்தையும் ஒதுக்கினார். கோள் சுழற்சித் தத்துவத்தை விரிவாக்கி கோளியக்க நிலையைப் பற்றியும் கண்டறிந்தார்.
<b>கணக்கியல்</b>: குறிக்கணக்கியலுக்கு (Algobra) வித்திட்ட நிலக்கணக்கியலில் (Geometry) புதிய கண்டு பிடிப்புகள் செய்தார். முதற்பாகைக்குரிய உறுதி செய்ய இயலா சமநிலைக் கூற்றுக் கணக்கியலுக்கு (Indeterminate equation of the first degree) விடைகாண ஒரு முறையை அறிந்தார். நான்காம் தசம் நிலைக்குச் சரியாக ‘π’ மதிப்பை 3.1416 என்று பெற்றார். ஒளிப்பாதையில் வைக்கப்பட்ட ஒரு பொருளினால் ஏற்பட்ட நிழலின் பருமனைக் கணக்கிட ஒரு வழிமுறையையும் இவர் அளித்தார். இதுவே ஒளி மறைப்புகளைக் கணக்கிடுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தாமியற்றிய செய்யுள் ஒன்றில் பிதாகரசு தேற்றத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
<b>எழுத்து முறை இலக்கக் குறிகள்: (Alphabetical notation of numbers)</b>: இலக்கக் குறிகளைக் கொண்டு உயர்ந்த எண்களை வெளிப்படுத்தினார். 15 உயிரெழுத்துகள், 25 முற்றுப்பெற்ற மெய்யெழுத்துகள், மற்றும் 8 பிற எழுத்துகள் ஆகியவை அடங்கிய ஒலிமுறை எழுத்து வரிசை நெடுங்கணக்கைப் பண்டைக்காலத்திய ஒலிமுறை நூலாளர்கள் வகுத்திருந்ததால், இவரால் அவ்வாறு வெளியிட முடிந்தது. ஆரியப்பட்டரின் எழுத்துமுறை எண்குறிப்புக்கு மற்றுமொரு விளக்கம் அளிக்கவேண்டுமெனில், இவர் மகாயுகத்தில் நிலவின் சுழற்சி எண்ணிக்கையை Cayagiyinusuchlr என்னும் சொல்லால் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். வலமிருந்து இடமாக இச்சொல்லை அசை அசையாகப் பார்த்தால் 6, 30, 300, 3,000, 50,000, 7,00,000, 50,000,000 என்ற எண்கள் கிடைக்கின்றன. பெரிய அளவில் அடங்காத எண்களை மிகச் சுருக்கமான வடிவில் செய்யுளாக இயற்றும் முறையை இவர் உருவாக்கினார். இவ்வெழுத்து இலக்கக் குறியீட்டு முறை தசகீதிகாவில் மட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
<b>அறிவியல் புதுமையாளர்</b>: குறிக்கணக்கியலைச் செயற்படுத்திய முதல் இந்திய ஆசிரியர் ஆரியபட்டரே ஆவார். எனினும் இவர்தம் கருத்துகன் பிற்கால அறிஞர்களால் மிகக் கடுமையாகத் தாக்கக்பட்டன.. பிரம்மகுப்தர் என்பவர் இவர்தம் கருத்துகளைச் சாடினார். அராபியப் பேரரசில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து, கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்ட அப்பாசித்து காலிபுகளான அல்மன் சூர் மற்றும் அல்மானு ஆகியவர்களின் காலத்தில் ஆரியபட்டரின் வானியல் முறை சிறப்புப் பெற்று விளங்கியது. அராபிய மொழியில் ‘அச்சதார்’ என்று ஆரியபட்டர் வழங்கப்பட்டார். பேரரசர் சூலியனின் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மிகப்பெரிய கிரேக்கக் குறிக்கணக்கியல் வல்லுநர் தயோபாண்டசு குறிக்கணக்கியல் அறிவுடன், ஆரியபட்டரின் குறிக்கணக்கியல் அறிவை ஒப்பிடுங்கால், தயோபாண்டசுக்குச் சற்றும் பழக்கமில்லாத ‘அறிய இயலாத பல குறிகளடங்கிய சமன் தொடர்கணக்கியலைத் தீர்க்கும் முறைமை’ குறித்து ஆரியபட்டர் அறிந்திருந்தார் என்பது விளங்குகிறது. முதல் நிலையின் உறுதிசெய்ய இயலாச் சமன் தொடர் கணக்கைத் தீர்க்கும் பொது முறையை ஆரியபட்டர் அறிந்திருந்தார். இதிலும் இவர் அறிவு தயோபாண்டசை விடச் சிறப்பாக இருந்தது.
ஆரியபட்டர் நூலின் மூலப் பகுதி கிடைக்கப் பெறவில்லை. ஆரியபட்டரின் கணக்கியல் மற்றும் வானியல் கோட்பாடுகளைக் கொண்ட ஆரியபட்டியம் என்னும் நூலைக் கி.பி. 1874-இல் கெர்ன் (Kern) என்பவர் இலேடனில் வெளியிட்டார். இதுவே ஆரியபட்டரைப் பற்றி அறிய மிகவும் துணை செய்றது.
<b>ஆரியபட்டா</b>: ஆரியப்பட்டா 1 என்னும் முதல் இந்-<noinclude></noinclude>
5x0ccblwmc80d0h99vbf6l8ij4djtxw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/646
250
622709
1952511
1947079
2026-07-10T03:28:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியர்|606|ஆரியர்}}</noinclude>திய செயற்கைக்கோள் ஆரியபட்டரின் பெயரில் 1975-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 19-ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது. உருசியாவை உட்கொண்ட எட்டு நாடுகளின் உதவியோடு இச்செயல் ஆற்றப்பட்டது. ஐந்து கோடி உரூபாய் செலவில் 250 இந்தியப் பொறியியலாளர்கள் 26 மாதங்களில் ஆரியபட்டா (I-ஐ உருவாக்கினர். தேவையான சூரியக் கலங்களை உருசியா வழங்கியது. ஆனால், இந்தியக் கட்டுப்பாட்டில் பறக்கவிடப்பட்டது. இரண்டரை யாண்டுக்காலம் பூமியைச் சுற்றிவரும் என்று கணிக்கப்பட்ட ஆரியபட்டா I குறித்த காலத்தைத் தாண்டியும் சுழன்றது. ஏறத்தாழ 695 கி.மீ. உயரத்தில் பூமியை ஆரியட்டா I சுற்றியது. இது சுற்றிவரும் காலம் 96.6 நிமிடங்களாகும். ஒரு நாளைக்கு 15 சுற்றுகள் சுற்றும். இதன் வேகம் மணிக்கு 28,800 கி.மீ. அதாவது, பூமியின் வேகவீதத்தில் 71.6 விழுக்காடுகளாகும்.
செந்நீலத்துடன் நீல நிறமும் சேர்ந்து அமைந்தது ஆரியப்பட்டாவாகும். இது 26 முகத் தோற்றங்களைக் கொண்டது. ஏறத்தாழ 1.54.மீ. அகலமும் 1.16 மீ. உயரமும் கொண்டு இது விளங்கியது. இதன் எடை 330 கி.கி. ஆகும். ஆரியப்பட்டாவில் 40 துணை அமைப்புகள் உள்ளன. இச்செயற்கைக்கோள் செல்லும் பாதையில் உள்ள தட்பவெப்பநிலை 170 கெல்வின் (Kelvin) முதல் 370 கெல்வின் வரை மாறுதல் அடைந்தாலும் இதனுள் உள்ள தட்பவெப்ப நிலை ஒரே நிலையில் காத்துவரப்பட்டது. உயர் அழுத்தத்தில் காற்று மண்டலத்திலுள்ள செயலில்லாப் பெருவெளியை நுனியின் வழியாகப் பீறிடச் செய்வதன்வாயிலாகச் செயற்கைக்கோள் சுழல வைக்கப்பட்டது. இக்கோள் செல்லும் பாதையில் அதை நிலைத்திருக்கச் செய்யச் சுழற்சி இன்றியமையாததாகிறது. பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் பிற செயற்கைக் கோள்களுடனும் ஆரியபட்டா I தொடர்பு கொண்டது.{{Right|வெ.பா.}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Majumdar, R.C.,</b> The Classical Age, History and culture of the Indian people, Vol. III, Bharatiya Vidya Bhavan, Bombay, 1978.
<section end="ஆரியபட்டர்"/>
<section begin="ஆரியர்"/>
{{dhr}}
<b>ஆரியர்</b>: இந்திய வரலாற்றில் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. ஆரியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களா, வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்களா என்ற கேள்விகள் வரலாற்று அறிஞர்களாலும் மொழியியல் வல்லுநர்களாலும் ஆராயப்பட்டுள்ளன. பொதுவாக, ஆரியர்கள் என்ற சொல் ஆரிய இனத்தையும், ஆரியம் என்ற சொல் ஆரியர்களுடைய மொழியாகிய சமசுகிருதத்தையும் குறிப்பனவாகும். விந்தியமலைக்கு வடக்குப் பகுதியில் ஆரியர்கள் குடியேறியதால் அப்பகுதிக்கு ஆரியவர்த்தம் என்ற பெயரும் வழங்கியது. விந்திய மலைக்குத் தெற்குப் பகுதியிலும், ஆரியர்கள் பரவிக் குடியேறிய போதிலும் பெரும்பாலோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பெறுகிறார்கள். ஆரியர்களுடைய வரலாற்றை அறிந்து கொள்ளுவதற்கு வேதகால இலக்கியங்களே சிறந்த சான்றுகளாக உள்ளன.
<b>வேதகால இலக்கியங்கள்</b>: சமசுகிருத மொழியில் உள்ள இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் அவற்றின் பாகுபாடுகளாகிய சம்கிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிட தங்கள் என்ற பகுதிகளும் வேதகால இலக்கியங்கள் என்று சொல்லப்பெறுகின்றன. வேதம் என்ற சொல் ‘வித்’ என்ற பகுதியிலிருந்து தோன்றியது என்றும், அது உண்மையான ஞானத்தைப் போதிக்கும் நூல் என்றும் அறிஞர் கூறுவர். வேத இலக்கியங்களில் சம்கிதையும் பிராமணமும் கர்மகாண்டம் என்றும் ஆரண்யகமும் உபநிடதங்களும் ஞான காண்டம் என்றும் கருதப்பெறுகின்றன. நான்கு வேதங்களின் பகுதிகளாகிய சம்கிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களைப் போன்றவை சுருதிகள் அல்லது இறையருள் பெற்ற இலக்கியங்கள் எனக் கூறுவர். இவற்றிற்கு ‘அபுருசேயா’ (மனிதர்களால் இயற்றப்பெற்றவையல்ல) என்ற பெயர் இருந்தபோதிலும், வேத காலத்தில் வாழ்ந்த முனிவர்களால் இவை அருளப் பெற்றவை என்ற கருத்து நிலவுகிறது. இந்திய நாட்டில் குடியேறிய ஆசியர்களால் இந்த வேத இலக்கியங்கள் இயற்றப் பெற்றுச் செவிவழிச் செய்தியாக மனனம் செய்யப்பெற்றுப் பின்னர் பஞ்சநதி தீரத்தில் ஆரியர்கள் நிலைபெற்ற பிறகு நூல்வடிவில் எழுதப்பெற்றனவெனக் கூறலாம். இந்த வேத இலக்கியங்கள் ஒரே காலத்தில் முழுமையாகத் தொகுக்கப் பெற்றவையல்ல. பல்வேறு காலங்களில் பல இருடிகளால் இயற்றப்பெற்றுப் பின்னர் முழுமையான வடிவைப் பெற்றனவாகும்.
நான்கு வேதங்களில், இருக்கு, யசுர், சாமம் என்ற மூன்றும் திரியை என்ற சிறப்பான பெயரில் குறிக்கப் பெறுகின்றன. ஆரியருடைய வரலாற்றை அறிவதற்கு, இருக்கு, யசுர், அதர்வணம் என்ற மூன்று வேதங்கள் சிறப்பாகப் பயன்படுபவையாகும். அதர்வண வேதம் முதல் மூன்று வேதங்களுக்குப் பிறகு தோன்றியதாயினும், இருக்குவேத காலத்திற்கு முற்பட்ட ஆரியர்களுடைய வரலாற்றைக் கூறும் பல வரலாற்றுண்மைகளைக் கொண்டுள்ளது. பண்டைக் கால ஆரியர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இருக்குவேதத்தில் காணமுடிகிறது.<noinclude></noinclude>
r8lvy18bi2srxciu5dyikbdae972dja
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/647
250
622711
1952512
1857493
2026-07-10T03:35:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியர்|607|ஆரியர்}}</noinclude>ஆரண்யகத்திலும் உபநிடதங்களிலும் பிற்கால ஆரியர்களுடைய வரலாற்றை உய்த்துணரலாம்.
<b>ஆரியர்களின் ஆதி இருப்பிடம்</b>: வேதகால இலக்கியங்களைக் கொண்டு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தனரா அல்லது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றனரா என்று ஆராய்வது அமைவுடைத்தாகும். ஆரியர்களின் ஆதி இருப்பிடம் ஐரோப்பியக் கண்டம் என்றும் ஆசியப் பெருங்கண்டத்திலுள்ள நாடுகள் என்றும் இருவேறு கொள்கைகளை ஆராய்ச்சியாளர் பின்பற்றியுள்ளனர். வடதுருவத்திலிருந்து பஞ்சநதிதீரம் வரையில் உள்ள நாடுகளில் சில பகுதிகளில் ஆரியர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்கக்கூடும் என்று கருதியுள்ளனர். பேராசிரியர் கைல்சு (Giles) என்பார் அங்கேரி நாடு ஆரியர்களுடைய ஆதி இருப்பிடமாக இருக்கலாம் என்று கூறினார். மொழியியல் துணைக்கொண்டு ஆரிய மொழியான சமசுகிருதம், இந்தோ - ஐரோப்பிய மொழியினத்தைச் சேர்த்தது என்றும், உருசியாவிற்கு அருகில் உள்ள இலிதுவேனிய மொழிக்கும், சமசுகிருத மொழிக்கும் ஒற்றுமையுள்ளது என்றும், ஆகையால் வடக்கு ஐரோப்பாவில் ஆரியர்கள் ஆதிமுதல் இருந்திருக்கலாம் என்றும் கூறுவர், மற்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் பிரான்சு நாட்டின் வடபகுதியிலிருந்து யூரல் மலைகள் வரை பரவியுள்ள செருமன் சமவெளியிலும், கருங்கடலுக்கு வடக்கில் உள்ள உருசியப் பகுதியிலும் ஆரியர்கள் பரவி வாழ்ந்திருக்க வேண்டுமெனக் கூறுவர். உலோகமான்ய பாலகங்காதர திலகர் என்பார் தாம் எழுதிய ‘ஆரியர்களின் வடதுருவ ஆதி இருப்பிடம்’ என்னும் நூலில் வடதுருவத்தில் ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று கூறுவர். ஐரோப்பியக் கண்டத்தில்தான் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் வழங்கும் இடங்கள் மிகுதியாக உள்ளன: ஆகிய மொழியாகிய சமசுகிருதமும் இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தைச் சேர்ந்ததாகையால் ஆரியர்கள் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று இவர்கள் நம்பினர். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் வழக்கத்திலுள்ள பகுதிகள் ஐரோப்பாக் கண்டத்தில் மிகுதியாகவும் ஆசியாக் கண்டத்தில் குறைவாகவும் இருப்பதால், இவர்களுடைய கொள்கை வலிவுடையதாகத் தோன்றுகிறது.
ஆரியர்கள் ஆசியாக் கண்டத்தில் இருந்தவர்கள் என்ற கொள்கைப்படி, மத்திய ஆசியாவும் இந்தியத் துணைக்கண்டமும் ஆரியர்களின் ஆதி இருப்பிடம் ஆகும் எனக் கூறுவர். மத்திய ஆசியாவில் இருந்த தங்களுடைய ஆதி இருப்பிடத்திலிருந்து, உலக வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியர்கள் ஐரோப்பாவிற்குக் குடியேறினர் என்றும் கூறுவர். ‘இருக்குவேத காலத்து இந்தியா’ என்ற நூலை எழுதிய ஏ.சி. தாசு (A.C. Doss) என்ற வரலாற்று அறிஞர், சிந்து, சீலம், சீனாபு, ரவி, பியசு, சட்லசு, சரசுவதி என்னும் ஆறுகளால் வனம்பெற்ற சப்தசிந்து நாடே (Sapta Sindhu) ஆரியர்களுடைய ஆதி இருப்பிடம் எனக் கூறுவர். இருக்குவேதத்தில் கூறப் பெற்ற நிலவியல் அமைப்பும், மரம்செடி கொடிகளும் சப்த-சிந்துப் பகுதியில் அடங்கிய காசுமீரப் பள்ளத்தாக்கு காந்தாமரம், பஞ்சாபு கங்கை ஆற்றின் மேற்குப் பகுதியையும் அங்குள்ள உயிர் விலங்குகளையும் ஒத்துள்ளன. வேதங்களில் ஆரியர் என்ற சொல் தசுயு அல்லது தாசர்கள் என்ற திராவிடர் என்பவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு வழங்கியது. சப்தசித்துப் பகுதிக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும் நிலவழித் தொடர்பிருந்தமையால், ஆரியர்கள் இந்தியாவில் இருந்து ஈரான்-ஈராக்கு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர். ஆனால், இக்கொள்கையை வரலாற்று அறிஞர்கள் பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளவில்லை.
வேதகால ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் கூறப்பெற்ற பொருள்களும், உயிரின வகைகளும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆதி இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ள பைன் (Pine), ஓக்கு (Oak), வில்லோ, பர்ச்சு முதலிய மரங்கன் இந்தியாவில் இல்லை. சிங்கம், யானை, ஆலமரம், அரிசி முதலியவைகள் பற்றிய செய்திகள் காணப்பெறவில்லை. இந்தியாவில் இருந்த மற்ற இனத்தவர்களின் மொழி, பழக்கவழக்கங்கள் முதலியவை ஆரியர்களுடைய மொழி பழக்க வழக்கங்களிலிருந்து வேறுபட்டுள்ளன. ஆரியர்களின் வேதங்களும், ஈரானியமக்களின் வேதமாகிய செண்டு அவசுதம் (Zend Avesta) என்பதும் பலவிதங்கலிம் ஒற்றுமையாக உள்ளன. இவ்விரு இலக்கியங்களுக்கும் ஐரோப்பி மொழிகளாகிய கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள இலக்கியங்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்பெறுகின்றன. மேற்கூறப்பெற்ற மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்னும் பெரும் பிரிவில் அடங்கியவையாகும். மத்திய ஆசியாவில் வழக்கத்தில் உள்ள சக (Saka). தெக்காரியன் (Tokharian) மொழிகளுக்கும், கிரேக்கம், இலத்தீன் முதலிய மொழிகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்பெறுகின்றன. ஆகவே, முற்கூறப்பெற்ற மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும், வேதங்கள், அவசுதம் முதலிய இலக்கிய மொழிகளுக்கும் பிறப்பிடமாகிய ஓர் ஆதிமொழியெனக் கருதலாம். எனவே வேதகால சமசுகிருத மொழியைப் பேசிய ஆரியர்கள் பெரும்பாலும்<noinclude></noinclude>
s1vtfq0kc6nkuu6dslbei8boa13tmah
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/648
250
622712
1952531
1857554
2026-07-10T05:08:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியர்|608|ஆரியர்}}</noinclude>மத்திய ஆசியப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும்.
பலுசிசுத்தானத்தில் உள்ள ஒரு பகுதியில் பிராகுவி (Brahui) என்னும் திராவிட இனமொழி இன்றும் வழக்கில் உள்ளது. இதிலிருந்து ஆரியர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வருவதற்குமுன் பலுசிசுத்தானத்தில் திராவிட மொழி வழங்கியிருந்ததெனக் கொள்ளலாம். மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள கப்படோசியாவில் (Cappadocia) போகாசு-காய் (Bogoa z- Koi) என்னுமிடத்தில் செருமானிய நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் கி.மு. 1400-ஆம் ஆண்டிற்கு முன் பொறிக்கப்பெற்ற சில கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டுகள் அங்கு வாழ்ந்த மக்கள் கூட்டத்தினர்களுக்கு இடையே தோன்றிய சில உடன்படிக்கைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவ்வுடன்படிக்கைகளில் இந்திரன், வருணன், நசாத்தியர் போன்ற ஆரியக் கடவுளர்களின் பெயர்கள் சாட்சிகளாகக் கூறப்பட்முள்ளன. ஆகவே, கி.மு. 1400-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தோ-ஈரானிய ஆரியர்கள் மேற்கு ஆசியாவில் குடியேறி இருக்க வேண்டும் என்ற செய்தி உய்த்துணரப் பெறுகிறது. இதனால், ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு எப்பொழுது குடிபெயர்ந்தனர் என்பது புலனாகாமற்போனாலும் அவர்கள் இந்திய நாட்டின் பழங்குடிகள் அல்லர் என்பது தெளிவாகிறது.
இருக்குவேத காலத்திய ஆரியர்களுடைய புவியியல் அறிவு, அவர்கள் இந்தியாவில் முதன்முதல் எங்குக் குடியேறினர் என்பதைத் தெளிவாக்குகிறது. அவர்களின் இலக்கியங்களில் சிந்து ஆற்றின் கிளை ஆறுகளும் மற்றைய ஆறுகளும் சுமார் இருபத்தைந்திற்குமேல் கூறப்பெறுகின்றன. இந்த ஆறுகள் பாயப்பெற்ற இடங்கள், தென்கிழக்கு ஆப்கானிசுத்தானம், வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சநதிதீரம் முதலியவை. இவை இக்காலத்திய பாகிசுத்தான் பகுதிகளாகும். யமுனை ஆறும் கங்கையும் சிற்சில சமயங்களில்தாம் குறிப்பிடப்பெறுகின்றன. இந்த ஆற்றங்கரைகள் ஆரியர்கள் மேற்கிலிருந்து கிழக்கே பரவிய எல்லைகளைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இருக்கு வேதத்தில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நடந்த போராட்டங்கள் விவரிக்கப்பெற்றுள்ளன. வடமேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிமக்களை ஆரியர்கள் வென்று அடக்குவதற்கும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் தங்கள் தெய்வங்களை வணங்கியுள்ளனர். இறுதியாகக் காசுமீரம், பஞ்சாபு, இராசபுதனம் முதலிய பகுதிகளில் வாழும் மக்களின் உடலமைப்பும், நிறமும், திராவிட இனத்து மக்களுடைய உடலமைப்பிலிருந்தும், நிறத்தில் இருந்தும் வேறுபட்டுள்ளன. ஆகவே ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியாவில் குடியேறினர் என்பது பகுத்தறிவிற்கேற்ற கொள்கையாகும்.
<b>ஆரியரின் அரசியல்</b>: சப்தசிந்துப் பிரதேசத்தில் ஆரியர்கள் குடியேறிய பிறகு தங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு வீடுகளை அமைத்துக்கொண்டு நிலையான வாழ்க்கையைத் தொடங்கினர். அவ்வில்லங்களில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தினர். கணவன் மனைவி உறவு அன்புடைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மனைவி, இல்லத்து அரசியாகக் கருதப் பெற்றாள். பெண்களுக்குக் கல்வியறிவும் போதிக்கப்பட்டது. கோசா (Gosha), உலோபாமுத்திரை (Lopamuda), அபலா (Apala), முத்கலனி (Mudkalani) முதலிய பெண்கள் சிறந்த கல்வியறிவைப் பெற்றிருந்தனர். ஆரியர்களிடையே பலதார மணங்களும் நடைபெற்றன. திருமண வயது வந்தபிறகே பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளை வளர்ப்பதில் தாயும், அவர்களுக்குக் கல்வியையும் நன்னடத்தையையும் போதிப்பதில் தந்தையும் முதன்மைப் பங்கு கொண்டனர். இரத்தத் தொடர்புடைய பல குடும்பங்கள் சேர்ந்தது இனக்குழு (Clan) ஆகும். பல இனக்குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் கிராமம் என்றும் பல கிராமங்கள் சேர்ந்தது மக்கள் (Jana) அல்லது மக்கள் கூட்டம் (Tribe) என்றும் கருதப்பட்டது. இருக்கு வேதத்தில் பரதர்கள், மத்சயர், கிரிவிசு, திரித்சுசு முதலிய பல கூட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கூட்டங்களுள் துர்வாசர்கள், யதுக்கள், புரூக்கள், துருகூசு, அனுசு என்ற இனக்குழுக்கள் பெருமை பெற்றிருந்தன.
இனக் கூட்டங்களின் தலைவர்கள் போர்க்காலங்களில் தலைமை வகித்துப் போர் செய்தனர். இத்தலைவர்களே நாளடைவில் அரசர்கள் என்று குறிக்கப் பெற்றனர். அரச பதவி வகிப்பதில் தந்தைக்குப் பிறகு மகன் அரசுரிமை பெறுவது வழக்கமாயிற்று. சில இனக்குழுக்களில் பிரபுக்கள் சிலர் சேர்ந்து (Oligarchy) ஆட்சி நடத்தினர்; சில இனக்குழுக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவர்கள் மக்களின் விருப்பப்படி ஆட்சிபுரிந்தனர். அரசன், பிரபுக்கள், மக்கள் தலைவர்கள் ஆட்சிபுரிந்த நிலப்பகுதிகள் நாடு என்று பெயர் பெற்றது. அரசனால் ஆளப்பெற்ற நாடுகளை முடியாட்சி நாடுகள் எனக் கொள்ளலாம். மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவும் நடைபெற்றது. அரசன் பல அணிகலன்களையும், உயர்ந்த ஆடைகளையும் அணிந்து கொண்டு வீற்றிருந்தான். பல சிற்றரசர்களை அடக்கி ஆட்சிபுரிந்த பேரரசனுக்குச் சாம்ராடு (Samrat) என்ற பெயர் வழங்கியதாக இருக்கு வேதத்திலிருந்து அறியலாம்.{{nop}}<noinclude></noinclude>
cqkf48gdlrfjqfzwifncru61vz6wrf3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/649
250
622713
1952515
1857586
2026-07-10T03:44:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியர்|609|ஆரியர்}}</noinclude>ஓர் இனக்கூட்டத்தின் அரசன் இனக்குழுக்களிடையே நடந்த போர்களில் தலைமை வகித்துப் போர் செய்வது வழக்கம். மற்ற இனக்குழவினரின் தாக்குதலுக்கு ஆளாகாதபடி அவர்களுடைய உடைமைகளையும், உயிரையும் காப்பாற்றினான். அரசனின் புரோகிதன் மக்களுக்கு நீதி வழங்கினான். புரோகிதனும், படைத்தலைவனும், கிராமணியும் அரசனின் அதிகாரிகளாவர். அரசனுக்கு உதவி செய்வதற்குத் தூதர்களும் ஒற்றர்களும் நியமனம் செய்யப் பெற்றனர். மேற்கூறப்பெற்ற அலுவலாளர்கள் அன்றியும் சபை, சமிதி என்ற இரு அமைப்புகளும் இருந்தன என்று இருக்கு வேதத்திலிருந்து அறியலாம். சபைகளில் கல்வி கேள்விகளிலும் செல்வத்திலும் உயர்ந்த பெருமக்கள் அங்கம் வகித்தனர். சமிதியில் எளிய குடிமக்களும் இடம் பெற்றிருந்தனர். நாட்டில் நடைபெற்ற அன்றாட அரசியல் அலுவல்களில் சமிதி முதன்மைப் பங்கு கொண்டதெனக் கூறலாம்.
<b>சமூக-பொருளாதார வாழ்வு</b>: இருக்குவேத காலத்திய ஆரியர்களின் தலைமைத் தொழில் உழவாகும். உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக இருந்தவை பசுக்களும் மற்ற ஆடு மாடுகளும் ஆகும். பசுக்கள் முதன்மையான செல்வங்களாகக் கருதப்பெற்றன. நிலத்தை உழுது பயிரிடுவதற்கு ஏற்ற காளைமாடுகள் பயிர்த் தொழிலுக்கு இன்றியமையாதனவாக இருந்தன. பசுக்களிடமிருந்து பெற்ற பால், தயிர், வெண்ணெய் முதலியன சிறப்பான உணவுப் பொருள்களாயின. சிற்றூர்களிலும் நகரங்களிலும் பருத்தி, கம்பளம், பட்டு முதலியவற்றைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெற்றன. பருத்தி, கம்பளம் முதலியவற்றைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெற்று, சாயம் ஏற்றி, பூவேலைகள் புனைந்து பலவித ஆடைகள் தயார் செய்யப்பெற்றன. இல்லங்களை அமைப்பதற்குக் கொத்தர்களும் தச்சர்களும் கொல்லர்களும் இருந்தனர். மகளிர்க்கு வேண்டிய அணிகலன்களைச் செய்வதற்குப் பொற்கொல்லர்களும் இருந்தனர். தச்சர்களும் கொல்லர்களும், வண்டிகள், தேர்கள், போர்க்கருவிகள் முதலியவற்றைச் செய்தனர். மதுபானங்களைச் சேமித்து வைப்பதற்குத் தோற்பைகளையும், காலணிகளையும் செய்வதற்குத் தொழிலாளர்கள் இருந்தனர். பிணிநீக்கும் மருத்துவர்களும், மந்திரவாதிகளும் இருந்தனர் எனத் தெரிகிறது. பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகிய வாணிகம் பண்டமாற்று முறையிலும் நிசுகா (Nishka) என்ற தங்க நாணயங்களாலும் நடைபெற்றது.
தொழில் முறையால் தோன்றிய சாதிப் பிரிவினைகள் இருக்கு வேதகாலத்தில் தொடக்க நிலையில் இருந்ததெனக் கூறலாம். வேதங்களைப் பயின்று யாகங்கள் செய்வதும் கடவுள் வணக்கம் கூறும் மந்திரங்களை மனனம் செய்வதும் பார்ப்பனர்களுடைய தொழில்களாயின. போரில் ஈடுபடுவதும், அரசியல் நடத்துவதும் சத்திரியர்களுடைய தொழில்களாயின. இவ்விருவருடைய தொழில்களும் மற்ற மக்களுடைய தொழில்களைவிட உயர்ந்தவை என்ற கருத்துத் தோன்றியது. இத்தொழில்களைச் செய்யாத மக்கள் ‘விசு’ என்றழைக்கப் பெற்றனர். ‘விசு’ என்ற சொல்லிலிருந்து வைசியர் என்ற சொல் தோன்றியதெனக் கூறுவர். மேலே கூறப்பெற்ற தொழில்கள் குலத்தொழிலாகக் கருதப்பெறவில்லை. ஒரே குடும்பத்தில் பிறந்த பலர் பலவகைத் தொழில்களைப் பின்பற்றினர் என்று கூறலாம்.
ஆரிய இனத்தைச் சேராதவர்களும், மற்றப் பழங்குடி மக்களும் தாசர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பெற்றனர். இவர்களைச் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் அழைத்தார் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். சாதி வேற்றுமை இருக்குவேதத்தின் இறுதிப் பகுதியாகிய புருச சூக்தத்தில்தான் கூறப்பட்டுள்ளது என்றும், இருக்குவேதத்தில் பிறப்பிற்கும் சாதி வேற்றுமைக்கும் இடமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இருக்குவேத காலத்தின் இறுதிக் காலத்தில்தான் சாதிப் பிரிவுகளும் குலப்பிரிவுகளும் தோன்றியிருக்கக்கூடும் என்றும் கருதப்பெறுகிறது. புருச சூக்தம் என்ற பாசுரத்தின் இறுதியில்தான் சாதிகள் கூறப்பெற்றுள்ளமையால் பார்ப்பனர் சத்திரியர், வைசியர் என்ற பிரிவுகள் இருக்குவேத காலத்தின் முடிவில்தான் தோன்றி இருக்க வேண்டுமெனத் தெரிகிறது.
<b>ஆரியர்களில் சமய வாழ்க்கை</b>: இருக்குவேத காலத்து ஆரியர்களின் சமயம் உலகத்தில் காணப்பெறும் இயற்கை சக்திகளைத் தெய்வங்களாகக் கொண்டு அவற்றைத் துதித்து அக்கினியின் வாயிலாக யாகங்களைச் செய்து பல நைவேத்தியங்களை வழங்குவதாகும். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களையும் வணங்கினர். ஆகாயத்தில் வசிப்பதாகக் கருதப்பெறும் இந்திரன், வருணன், அசுவினி தேவதைகள் சூரியன், சாவித்திரி, மித்திரன், வருணன் முதலிய தெய்வங்கள் ஒருவரே என்ற கொள்கையும் நிலவியது. இந்திரன், இடி, மின்னல், மழையாகிய இயற்கை மாறுபாடுகளுக்குத் தலைவனாக வணங்கப் பெற்றான். தேவர்களுக்குத் தலைவனாகக் கருதப்பெற்ற இந்திரன், ஆகாயத்தில் இருந்து மழைத்துளிகள் விழாத வண்ணம் செய்த விருத்திராசுரனைக்கொன்று மழை பெய்யும்படி செய்தான். அக்கினி, யாகங்களுக்குத் தலைவனாகக் கருதப் பெற்று, அவன் வாயிலாகத் தேவர்களுக்கு உரிய அவிர்ப் பாகங்கள் வழங்கப்பெற்றன. உசசு, ஆரண்யானி, மன்யூ முதலிய மானசீகத் தெய்வங்களும் வணங்-<noinclude></noinclude>
7ldvu4ak2st5e6pxqnvzc8pjl37s6b7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/650
250
622715
1952519
1947080
2026-07-10T03:57:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரியான்|610|ஆருணியரசன்}}</noinclude>கப்பெற்றன. இதிகாசகாலத்தில் பெருமை பெற்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் முதலிய கடவுளர்கள் இருக்குவேத காலத்தில் பெருங்கடவுளர்களாகக் கருதப் பெறவில்லை. யாகங்களைச் செய்து அவற்றின் வாயிலாகத் தெய்வங்களுக்கு நைவேத்தியம் அளித்துப் பலவகைப் பேறுகளைப் பெற முடியும் என்று ஆரியர்கள் நம்பினர். “மரணத்திற்குப்பின் ஆன்மாவின் நிலை யாது?” என்பது பற்றி ஆதிகால ஆரியர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. வேதகால ஆரியர்களால் வணங்கப் பெற்ற தெய்வங்கள் அவர்களைப்போலவே ஆண்மை, அதிகாரம், செயல் திறமை, வன்மை முதலிய குணங்களை உடையவர்களாகக் கருதப்பெற்றனர். பிற்காலத்தில் சிவனாகக் கருதப்பெற்ற உருத்திரன், திராவிடக் கடவுளாக இருக்கலாம் என்று கூறுவர். யாகங்களைச் செய்வதே முதன்மையான இறைவழிபாடு என்றும் பலர் கருதினர்.
இருக்குவேத காலத்தில் இறுதிக் கட்டத்தில் தோன்றிய உபநிடதங்களில் பல தெய்வ வணக்கம் குறைந்து ‘ஒருவனே தேவன்’ என்ற கருத்தும் மேலோங்கியது. ‘தத்துவம் அசி’ என்ற மகாவாக்கியத்தில் சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற மெய்ப்பொருள் கொள்கையும் வளர்ச்சியுற்றது. புண்ணியம், பாவம் ஆகிய கர்மங்களினால் பிறவி ஏற்படுகிறது. இவ்விரண்டிலிருந்து விடுபடுவதே மோட்சம் அல்லது வீடு என்பது உபநிடதங்களிலும் பிராமணங்களிலும் கூறப்பெற்றுள்ளது.{{Right|அ.கி.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Majumdar R.C., & Others,</b> The Vedic Age, History & Culture of the Indian People, Vol. 1, Bharatiya Vidya Bhavan, Bombay, 1978.<br>
<b>Majumdar, R.C.,</b> Ancient India, Motilal Banarasidas, Delhi, 1975.<br>
<b>Majumdar R.C., &. Others,</b> An Advanced History of India, 4th Ed., Macmillan, Delhi, 1982.
<section end="ஆரியர்"/>
<section begin="ஆரியான்"/>
{{dhr}}
<b>ஆரியான்</b> கிரேக்க வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இவர் பெயர் இலத்தீன் மொழியில் ‘பிளேலியசு ஆரியானசு’ (Flavias Arrianus) என்று கூறப்படும். இவர் கி.பி. 100-ஆம் ஆண்டளவில் கிரீக நாட்டில் நிகோமீடியா (Nicomedia) என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் ஓர் உரோமானிய உயர்குடிமகன் ஆவார். இவர் எபிரசுப் பகுதியில் நிகோபாலிசு என்னும் ஊரில் படித்தார். பின்னர் உரோமாபுரிக்குச் சென்று, எட்ரியன் என்பார் பேரரசராக இருந்த காலத்தில் அவரிடம் பணி புரிந்தார்.
ஆரியான் (Arrian) கி.பி. 130-ஆம் ஆண்டில் பாதுகாவலர் (Consul) பதவியையும், பின்னர்க் கபாடோசியாவின் (Cappadocia) ஆளுநர் பதவியையும் ஏற்று, இறுதியில் ஆதென்க நகரில் ஓய்வு பெற்றார். அங்கு இவருக்கு மதிப்புக் குடியுரிமை (Honorary Citizenship) வழங்கப்பட்டது. இவர் கி.பி. 172-ஆம் ஆண்டில் காலமானார்.
ஆதென்சு நகரில் வாழ்ந்தபோது இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவைப் பற்றி இவர் எழுதிய நூல் ‘இண்டிகா’ (Indica) என்பதாகும். அலெக்சாந்தரின் படையெடுப்புச் செய்திகள் அனைத்தையும் ஏழு தொகுதிகள் கொண்ட ஒரு நூலாக எழுதியுள்ளார். இண்டிகா எட்டாம் தொகுதியாகும். இதில் அலெக்சாந்தரின் படைத் தலைவர்களுள் ஒருவரான நியார்க்கசு (Nearchus) என்பார், பாரசீக வளைகுடாவில் நிகழ்த்திய கடற் பயணத்தைப் பற்றியும், இந்தியப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மெகசுதனிசு (Megasthenes, கி.பி. 4-ஆம் நூ.) என்பவர் இந்தியாவைப் பற்றி எழுதிய நூலுக்கும் ‘இண்டிகா’ என்பது பெயர். ஆரியான், ‘தாக்டிகா’ (Tactica) என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இந்நூல் தந்திரங்களைப் பற்றிக் கூறுகிறது.
<section end="ஆரியான்"/>
<section begin="ஆரினாக்கோ"/>
{{dhr}}
<b>ஆரினாக்கோ</b> தென் அமெரிக்காவிலுள்ள ஓர் ஆறு. இது 2,062 கி.மீ. நீளமுள்ளது. பிரேசில் எல்லைக்கு அருகில் வெனிசூலாவிலுள்ள பாரிமா பீட பூமியில் உற்பத்தியாகிறது; கொலம்பியாவிற்கு வட மேற்கே பாய்ந்து கொலம்பியாவிற்கும் வெனிசூலாவிற்கும் எல்லையாக அமைந்துள்ளது. கரிபியன் கடலில் கலப்பதற்கு முன் இந்த ஆறு பல சிறு கால்வாய்களாகப் பிரிகிறது. இந்த ஆற்றில் 800 கி.மீ. தொலைவிற்குக் கப்பல்கள் செல்லும். இதன் தரையிலமைந்துள்ள கியூடாட்பாலிவர், ஆற்றுவாணிகம் நடைபெறும் சிறந்த நகரமாகும். நீராவிக் கப்பல்கள் இந்நகருக்கும் திரினிடாட்டிற்கும் இடையில் செல்கின்றன. இவ்வாற்றின் துணை ஆறுகள் ஆபூர், கரோனி, மேடா என்பனவாம்.
<section end="ஆரினாக்கோ"/>
<section begin="ஆருணியரசன்"/>
{{dhr}}
<b>ஆருணியரசன்</b> பெருங்கதை என்னுங் காப்பியத்தால் அறியவாகும் ஓரரசன்; பாஞ்சால நாட்டை ஆண்டவன். இவன் பலமிக்க வீரர்களையும் வீரமுள்ள சேனைகளையும் பெற்றிருந்தான். கோசல நாட்டு மன்னனை வென்று, அவன் நாட்டை அழித்து அவன் மகள் வாசவதத்தையையும் மேலும் பல பெண்டிரையும் சிறைப்பிடித்து வந்து தன் அரண்மனையில் தாதியர்களாக அமர்த்தினான். ‘மந்திரம்’ என்பது இவன் பட்டத்து யானையின் பெயர். இவன் ஆயர் குலத்தார்க்குப் பகைவன். ஆயர்குல மன்னனான உதயணனைச் சிறைப்படுத்திக் கௌசாம்பி நகரைக் கைப்பற்றி அதனைத் தன் தலைநகராக்கி முரசு அறைவித்துப் பின் ஆட்சிபுரிந்தான்.<noinclude></noinclude>
7j00189zjmmm0dmp85d5c367vvr29ak
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/651
250
622716
1952521
1947133
2026-07-10T04:04:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆருத்திரா தரிசனம்|611|ஆருர்ப் பரவையுள் மண்டலி}}</noinclude>‘காளமயிடன்’ என்பவன் இவன்தன் ஒற்றன். ‘பூரண குண்டலன்’ என்பவன் இவனுக்கு முதன்மை அமைச்சன். உதயணன் சிறையினின்றும் தப்பி இவனோடு போரிட்டு இவனை வெட்டிக் கொன்றான். வெட்டுண்டபோதும் அச்சமின்றி இருந்ததாக இவனது வீரம் ‘பெருங்கதை’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இவன் ‘பாஞ்சாலராயன்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.{{Right|வி.பா.}}
<section end="ஆருணியரசன்"/>
<section begin="ஆருத்திரா தரிசனம்"/>
{{dhr}}
<b>ஆருத்திரா தரிசனம்</b> தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் கொண்டாடப்பெறும் சிறப்பான திருவிழாக்களுள் ஒன்று. இவ்விழா, மார்கழித் திங்களில், திருவாதிரை நாள் கூடிய பௌர்ணமி நாளில் (முழு நிலா நாளில்) கொண்டாடப்பெறும். இது சிதம்பரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுவதாகும். பிற சைவக் கோயில்களிலும் இது கொண்டாடப்படுகிறது. ஆருத்திரை எனப்படும். திருவாதிரை நட்சத்திரம் சிலபெருமானுக்குரியது. சிவ பரம்பொருள் படைத்தல் முதலான தொழில்களைச் செய்ய உருவத் திருமேனி கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்தோறும் பஞ்சகிருத்திய விழா நடைபெறும்.
சிதம்பரம் நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் அபிடேகங்களுள் மார்கழி மாதம் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி இரவு முழுதும் நடைபெறும் அபிடேகமே மிகவும் சிறப்புடையது. மறுநாள் காலை தரிசனம் நடைபெறும்.{{Right|வி.பா.}}
<section end="ஆருத்திரா தரிசனம்"/>
<section begin="ஆரூர்"/>
{{dhr}}
<b>ஆரூர்</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இவ்வூர் தஞ்சை மாவட்டத்திலுள்ளது; தஞ்சை, குடந்தை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் சென்றடையலாம். மாயூரம் அறந்தாங்கிப் புகைவண்டிப் பாதையில் அமைந்துள்ள இதனைத் தஞ்சையிலிருந்து நாகை செல்லும் புகைவண்டி வழியாகச் சென்றும் அடையலாம். இவ்வூர் மனுநீதி கண்ட சோழன், அபயகுல சேகர அரசன், அநபாய சோழன் ஆகியோர் அரசாண்ட இடம். பஞ்ச பூதத் தலங்களுள் மண் (பிருதிவி) தலம். சப்தவிடங்கத் தலங்களுள் வீதிவிடங்கத் தியாகரின் அசபா நடனத் தலம். திருவாரூர்த் தேர் அழகு மிக்கது; சிறப்பானது. ஆலயத்திற்குத் திருமூலட்டானம் என்றும், பூங்கோயில் என்றும் பெயர்கள் உள்ளன. இது மிகப் பெரிய கோயில். சுந்தர மூர்த்தி வலக்கண் பார்வை பெற்றதும், பரவை நாச்சியாரிடம் சுந்தரர் பொருட்டுத் தியாகேசர் தூது சென்றதும், விறன் மிண்ட நாயனார், நமிநந்தியடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள், கழற்சிங்கர் முதலிய அடியார்கள் முத்தி பெற்றதும் இத்தலத்தில்தான். விராட் புருடனின் மூலாதாரத் தலமாகிய ஆரூர், இசையுலக மும்மூர்த்திகளையும் தந்த பெருமை கொண்டது. சுவாமி வன்மீக நாதர்-அம்பிகை அல்லியங்கோதை. கமலாம்பிகை சந்நிதி தனியாக உள்ளது. இங்குள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் மிகப் பெரியது. அதனுள் சிறுகோயில் ஒன்று உள்ளது. மூவர் பாடிய இத்தலத்திற்குச் சம்பந்த முனிவர் இயற்றிய திருவாரூர்ப் புராணமும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய தியாகராச லீலையும், அந்தகக்கவி வீரராகவ முதலியார் செய்த திருவாரூர் உலாவும், அருணகிரியார் திருப்புகழும் உள்ளன. மேலும் பல சிற்றிலக்கியங்கள் இத்தலம் பற்றி எழுந்துள்ளன. இக்கோயிலில் மேற்குத் திருச்சுற்றில் உள்ள ஆரூர் அரநெறி என்னும் கோயில் அப்பர் பாடியது. வண்டார் குழலியுடன் அரநெறியப்பர் உறையும் இங்கு நமிநந்தியடிகள் தண்ணீரால் திருவிளக்கு ஏற்றினார். ஆரூர்க் கோயிற் பெரிய தேரின் அருகில் உள்ள தூலாய நாயனார் கோயில், சுந்தரர் பரவிய ஆரூர்ப் பரவையுண் மண்டலி என்னும் தலமாகும். பஞ்சின் மெல்லடியம்மையுடன் தூவாயநாதர் உறையும் இக்கோயிற் குளத்தில் மூழ்கித்தான் சுந்தரர் ஒரு கண்பார்வையினைப் பெற்றார்.{{Right|இரா.கி.}}
<section end="ஆரூர்"/>
<section begin="ஆரூர் அரநெறி"/>
{{dhr}}
<b>ஆரூர் அரநெறி</b> தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரைத் தஞ்சையிலிருந்து புகை வண்டி வழியாகவும் பேருந்து வழியாகவும் சென்றடையலாம். பஞ்ச பூதத் தலங்களுள் இது பிருதிவித்தலம் ஆகும். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. மூவர் தேவாரப் பதிகங்களும் இத்தலத்திற்கு உள்ளன. இத்திருக் கோயிலின் இரண்டாம் சுற்றில் தனிச் சந்நிதியாக விளங்குவது ஆரூர் அரநெறி. இது மேற்குப் பார்த்த சந்நிதியாகும். அர அரநெறியினைத் திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பதிகத்தால் பாடிப் பரவியுள்ளார். நமி நந்தியடிகள் இத்தலத் திருக்கோயிலில் நீரால் விளக்கிட்டு வழிபட்டமையினத் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் அர நெறியப்பர். இறைவி பெயர் வண்டார் குழலி.
<section end="ஆரூர் அரநெறி"/>
<section begin="ஆருர்ப் பரவையுள் மண்டலி"/>
{{dhr}}
<b>ஆருர்ப் பரவையுள் மண்டலி</b> தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. இத்திருக்கோயில் திருவாரூரில் உள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவாரூரைத் தஞ்சையிலிருந்து புகைவண்டி வழியாகவும் பேருந்து வழியாகவும் சென்றடையலாம். இது திருவாரூர்த் தியாகேசர் கோயிலுக்கு அருகில் உள்ளது. இந்த ஆரூர்ப் பரவையுள் மண்டலி என்னும் கோயில், துலா நாயனார் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. தூவாய என்பது துலா<noinclude>
<b>வா.க. 2-39அ</b></noinclude>
bh7sozecbdo4a53za0og1ql6s61c7jr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/652
250
622718
1952522
1947134
2026-07-10T04:09:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆருன்-அல்-ரசீது|612|ஆரோ }}</noinclude>என்று மருவி இவ்வாறாயிற்று. இது துருவாசர் வழிபட்ட திருக்கோயில். இறைவன் தூவாய நாதர்; மண்டேலேசுவரர் எனவும் வழங்கப்படுவார். இறைவி பஞ்சின்மெல்லடியம்மை. இத்தலத்தினைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.
<section end="ஆருர்ப் பரவையுள் மண்டலி"/>
<section begin="ஆரூன்-அல்-ரசீது"/>
{{dhr}}
<b>ஆரூன்-அல்-ரசீது (கி.பி.763-809)</b> என்பார் இசுலாமியப் பேரரசின் மன்னர்களுள் ஒருவர்; அப்பாசித்து மரபினரில் ஐந்தாம் காலிபு ஆவார். இவர் தந்தையார் அல்மாக்டி என்பவர். பாரசீகத்தின் தெக்ரான் நகரத்திற்கு அண்மையிலுள்ள இரய்யி (ரக்யோ) என்னும் ஊரில் ஆருன் (Harun-Al-Rashid) பிறந்தார். இவர் பெரும்பாலும் பாக்தாது நகரிலிருந்த அரண்மனையிலேயே தம் அன்னையாரால் வளர்க்கப்பட்டார். இவர் தமக்கு இருபது ஆண்டுகள் நிரம்புவதற்கு முன்னரே பைசாண்டியப் பேரரசுக்கெதிராக இரு படையெடுப்புகளைத் தலைமை தாங்கி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். பின்னர் ஆளுநர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய இவர், தம் அண்ணனுக்குப் பின் கி.பி. 786-ஆம் ஆண்டில் காலிபானார். ஆரூனுக்கு உறுதுணையாக நின்ற இயாகியாவும் அவர்தம் குடும்பத்தினரும் வரம்பிலா அதிகாரத்தையும் செல்வத்தையும் மதிப்பினையும் பெற்றனர். அடுத்துவந்த பதினேழாண்டுக் காலம் அவர்கள் நன்னிலையில் வாழ்ந்தனர். ஆனால் கி.பி.803ஆம் ஆண்டில் அவர்கள் வீழ்ச்சியுற்றனர். வீழ்ச்சிக்கான காரணம் தெரியவில்லை.
அப்பாசித்து மரபினராய்ப் பதவியேற்ற ஆரூன் பதவிக்குவந்த போது 40 ஆண்டுகள் கூட நிரம்பவில்லை. அவருக்குப் பலர் தொல்லைகள் கொடுத்தனர். அவரது மரபினை ஏற்றுக்கொள்ளாத பகைவர்களும் ஏமாற்றமுற்ற முந்தைய துணைவர்களும் அவருக்குத் தொல்லை கொடுத்தார்கள். அதனால் நாட்டில் குழப்பம் நீடித்தது. சிரியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஆரூனின் முதல் பத்தாண்டுகளில் தொல்லைகளும் வன்முறைகளும் தொடர்ந்து நீடித்தன. ஆனால் திறன்மிக்க படைத்தலைவர்கள் அமைதியைப் படிப்படியாக நிலைநாட்டினர். பாரசீகத்திலும் நடு ஆசியாவிலும் நிலைமை கட்டுக்கடங்காமலே இருந்தது. அந்நாடுகளில் வீறிட்டெழுந்த நாட்டுப் பற்றுணர்வும் சமய மறுமலர்ச்சியுமே இதற்குக் காரணங்கள். வடகிழக்குப் பாரசீகப் படையெடுப்பு ஒன்றின்போது ஆரூன் கி.பி.809-இல் தூசு (Tus) என்னுமிடத்தில் காலமானார்.
ஆரூன் அல்-இரசீதுக்கு வரலாற்றில் சிறப்பிடமுண்டு, ‘அராபிய இரவுகள்’ என்னும் நூலின் கதைத் தலைவராக உள்ளமையால், இவரை அளவுக்கு மீறிக் கீழை-மேலை நாட்டு இலக்கியங்கள் பெரிதுபடுத்திக் கூறியுள்ளன என்று இக்காலத்தவர் கருதுவர். இவர் ஆட்சிக் காலத்தில், காலிப்பின் ஆட்சிப் பகுதிகளில், இவருடைய பெயரும் புகழும் மிகவும் உயர்ந்து நின்றன. செல்வச் செழிப்பும் பண்பாட்டுப் பெருக்கமும் நன்னிலையில் உயர்ந்திருந்தன. ஒருவகையில் பேரரசின் வீழ்ச்சிக்கும் இவரே காரணமானார் என்பதும் பொருந்தும். பர்மிசைடு குலத்தவர்களின் வீழ்ச்சியால் நிருவாகம் சீர்குலைந்தது. இவர் செய்த பிறிதொரு தவறு, பேரரசைத் தம் மக்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுத்ததாகும். அதனால் உள்நாட்டுப் போர் மூண்டது; துருக்கிய கூலிப்பட்டாளத்தினரின் கையோங்கியது.
இசுலாமியர் ஆரூனை வைதிகராகவும், பைசாண்டியப் பேரரசுக்கெதிரான கொள்கையைக் கொண்டவராகவும், இசுலாமியர் அல்லாதார்க்கு எதிராகச் சட்டங்களை இயற்றியவராகவும் கருதி இவரைப் போற்றுவர். இது எவ்வாறாயினும் இவர் கலைகளைப் புரந்த புரவலர் என்பது உண்மை. இவருடைய செல்வ வளமும் அரண்மனையின் பகட்டான வாழ்வும் இவர்தம் புகழுக்குக் காரணங்களாயின.
<section end="ஆரூன்-அல்-ரசீது"/>
<section begin="ஆரோ"/>
{{dhr}}
<b>ஆரோ</b> இங்கிலாந்திலுள்ள ஒரு நகரம். இங்கு இங்கிலாந்திலுள்ள தலையாய பொதுப் பள்ளிக்கூடம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. சான் இலையான் (John Lyon) என்பார், இப்பள்ளியினைக் கி.பி. 1571-ஆம் ஆண்டில் நிறுவினார். இவர் செல்வச் செழிப்பு மிக்க நிலக்கிழார்களுள் ஒருவர், இலண்டன் மாநகருக்கு 19 கி.மீ. தொலைவிலுள்ள ஆரோ வட்டத்திலுள்ள ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கப்பட்டது இப்பள்ளியாகும். இன்றும் நடைபெற்று வரும் இப்பள்ளியில் இக்காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கட்டணம் செலுத்திப் பயில்கிறார்கள். இங்குக் கி.பி. 1800-ஆம் ஆண்டு வரை, பண்டைய இலக்கியப் பாடங்களையே கற்பித்து வந்தனர். இக்காலத்தில் புதிய பாடங்களையும் இணைத்துள்ளார்கள். ஆரோவின் மக்கள் தொகை 1,95,999 (1981). ஆரோ பொதுப் பள்ளியில், தொடக்கத்தில் மாணவர்கள் குறைவாகவே இருந்தனர். இங்கு கி. பி. 1612 ஆம் ஆண்டுவரை இப்பள்ளிக்குக் கட்டிடங்கள் கட்டப்பெறவில்லை. இப்பள்ளி 30 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பின்னர், அதன் தலைமையாசிரியரின் உதவியைப் பெற்ற 41 எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி கிடைத்தது. தொடக்கத்தில் வட்டார மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அயலார் கி.பி. 1660-ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கட்டணம் செலுத்திப் படிக்கச் சேர்ந்தனர். இப்பள்ளியை நடத்தக் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின்<noinclude></noinclude>
okq8yp2lxo54aqsrn6vw7es4c8pkoi2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/653
250
622720
1952535
1947135
2026-07-10T05:17:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆரோவில்|613|ஆல்ககாலிக்கு அனானிமசு}}</noinclude>தொடக்கத்தில் சாண்டோசு பிரபு உறுதுணையாகவிருந்தார். பின்னர் ஏனைய பள்ளியைப் போன்று இப்பள்ளியும் நலியத் தொடங்கியது.
இதன் தலைமையாசிரியராகக் கி.பி. 1844 முதல் 59 வரை இருந்த சார்லசு வாகன் (Charles Vaughan) இப்பள்ளியை முழுவதுமாகத் திருத்தியமைத்தார். பின்னர் இது விரைவாக வளர்ச்சியுறலாயிற்று. பொதுப் பள்ளிகள் சட்டப்படி, கி.பி. 1868-ஆம் ஆண்டு இதன் நிருவாகக் குழுவினரும் திருத்தி அமைக்கப் பெற்றனர்.
இப்பள்ளியில் படித்தவர்களுள் எழுவர் தலைமை அமைச்சர்களாகியுள்ளனர். இராபர்ட்டு பீல், பாமர்சுடன் பிரபு, வின்சுடன் சர்ச்சில் போன்றவர்கள் இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்களாக விளங்கினர். இங்குக் கல்விகற்ற சவகர்லால் அமைச்சரானார்; நேரு இந்தியாவின் தலைமை அமைச்சரானார்; பைரன் பிரபு இப்பள்ளியில் படித்த தலைசிறந்த ஆங்கிலக் கவிஞராவார்; செரிடன் (Sheridan) மாபெரும் நாடகக் கலைஞராவார். ‘வாட்டர்லூ போரை வென்றமைக்கு ஆரோ பள்ளி விளையாட்டுத் திடலில் பயிற்சி பெற்றமையே காரணம்’ என்னும் பழமொழி இதன் சிறப்பை விளக்கும்.
<section end="ஆரோ"/>
<section begin="ஆரோவில்"/>
{{dhr}}
<b>ஆரோவில்</b> பாண்டிச்சேரிக்கருகில் உள்ள அரவிந்தாசிரமத்திற்குச் சொந்தமான புத்துலக வளாகம். பன்னாட்டுக் குடிமக்களும் வாழ்வதற்காகப் புதுச்சேரியில் அரவிந்தரின் பெயரால் அமைக்கப்பெற்ற முதல் ஊர் என்று இதனைக் கருதுவர். 30 ச.கி.மீ. பரப்பளவில் கட்டுவதற்குத் திட்டமிடப் பெற்ற இவ்வூரை நான்கு வட்டாரங்களாகப் பிரிக்க எண்ணினர். அவை தொழிற்சாலை வட்டாரம், மக்கள் வாழும் குடியிருப்பு வட்டாரம், பண்பாட்டு வட்டாரம், பன்னாட்டு வட்டாரம் என்பனவாம். உலகப் பல்கலைக்கழகம் ஒன்றை நிலைநாட்டவும் திட்டமிட்டார்கள். சற்றேறக்குறைய 50,000 மக்கள் வாழ வசதிகளைப் பெற்ற ஆரோவில், ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் சமூக பண்பாட்டு நிறுவனத்தில் துணையுடன் நிறுவப்பெற்றது. இது 1968-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 28-ஆம் நாள் தொடங்கிவைக்கப் பெற்றது. வெளி நாட்டிலிருந்து வந்த அரவிந்தரின் பக்தர்களுக்கும் ஆசிரமவாசிகளுக்குமிடையே எழுந்த சிக்கலின் விளைவாக ஆரோவில் முழுதும் கட்டி முடிக்கப்பெறாத நிலையில் உள்ளது.
<section end="ஆரோவில்"/>
<section begin="ஆரோன்"/>
{{dhr}}
<b>ஆரோன்</b> பண்டைய இசுரேல் நாட்டின் யூத சமயக் குருமாரான மோசசு என்பாரின் மூத்த சகோதரர் ஆவார். எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்த இசுரேலிய மக்கள் விடுதலை பெற ஆரோன், மோசசுக்கு உறுதுணை நின்றார். மோசசு எகிப்தின்மீது பிளேக்கு என்னும் கொடிய நோயை ஏவி விட்டார் என்பர். ஆரோனையும் இவர்தம் ஆண்மக்களையும் இசுரேலின் முதன்மைக் குருமார்களாக மோசசு நியமித்தார், மக்களின் வழிபாட்டிற்கெனப் பொன்கன்றுக் குட்டியொன்றை உருவாக்கிய காரணத்திற்காக ஆரோனை மோசசு கடிந்து கொண்டார். ஆரோன் இறந்தபின் அவரது உடல் ஈடோம் பகுதியில் ஒரு மலைவில் நல்லடக்கம் செய்யப்பெற்றது.
<section end="ஆரோன்"/>
<section begin="ஆல்ககாலிக்கு அனானிமசு"/>
{{dhr}}
<b>ஆல்ககாலிக்கு அனானிமசு</b> என்பது மது தவிர்த்தோர் பெயரில் அமைந்த ஓர் அமைப்பாரும். இது மதுப்பழக்கத்திலிருந்து மீள விரும்புவோர் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு உதவி செய்வதாகும்.
பில் (Bill. W), டாக்டர் பாப்பு (Dr. Bob.S) என்ற இருவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பில் என்பவர் மீளாக் குடிகாரர் என்று இகழப்பட்டவராக இருந்தார். அவருக்கு ஏற்பட்ட ஓர் ஆன்மீக உணர்வு காரணமாக 1934-ஆம் ஆண்டில் மதுவை அறவே தவிர்த்தார். சில நாட்களில் அவர் பாப்பு என்னும் குடிகார மருத்துவரை மதுப் பழக்கத்திலிருந்து மீட்க உதவினார். அவ்விருவரும் தாங்கள் மதுவிலிருந்து மீண்ட அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, தங்களின் மது அருந்தும் அவா மறைந்ததை உணர்ந்தனர். இதுபோன்ற அனுபவம் இவ்வமைப்பில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதால், இது ஒரு தொடர் விளைவு முறையாகி, இவ்வமைப்பு தொடர்ந்து வளருவதற்குச் சாதகமாயிற்று, ‘மது தவிர்த்தோர் பெயரிலி அமைப்பு’ என்னும் புத்தகம், 1940-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. டாக்டர் பாப்பு 1950-ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் பில் 1971-ஆம் ஆண்டு வரை இவ்வமைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டு எழுத்தாளராகவும் அமைப்பின் அறிவுரையாளராகவும் இருந்து செயற்பட்டார். இவ்வமைப்பின் அனைத்துலகப் பணி அலுவலகம் ஒன்று, நியூயார்க்கில் அமைக்கப்பட்டு, உலகமெங்கிலும் இருந்து மதுப்பழக்கம் தொடர்பாக வரும் வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறது. புதிய கிளைகள் தொடங்குவதற்கும் இது உதவுகிறது.
ஆல்ககாலிக்கு அனானிமசு (Alcoholic Anonimas) இன்று இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு 50,000 கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, நூறு நாடுகளில் செயற்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் உனுப்பினர்களாக இருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மருத்துவத்திலிருந்தும் சமயங்களிலிருந்தும் பல கருத்துகளை இணைத்துத் தனக்கென ஒரு புதிய கோட்பாட்டினை வகுத்துக் கொண்-<noinclude></noinclude>
jm9tug1hyj1yccdobqkwrmifjuzgl0h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/654
250
622721
1952539
1947137
2026-07-10T05:30:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்ககாலிக்கு அனானிமசு|614|ஆல்சிராசு மாநாடு}}</noinclude>டுள்ளது. சென்னையில் 91, சாந்தோம் நெடுஞ்சாலையில் இச்சங்கம் செயற்பட்டு வருகிறது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மதுவிற்கு அடிமையாகக் கூடிய உடற்கூறும், மதுவைத் தொடர்ந்து அருந்த வேண்டும் என்ற மனப்பிடிப்பும் (Obsession) குடிப்பழக்க ஆளுமையும் கொண்டிருப்பதால், இப்பழக்கத்தை மன உறுதியால் மட்டில் மாற்ற முடியாது, அதாவது மதுவிற்கு அடிமையானவர்கள், என்றும் மதுவின் அளவைக் குறைக்க முடியாது. பலர் அளவோடு மது குடிக்கவும், மதுவினால் அவர்கள் செயல் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், மதுவருந்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்தவும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மதுவினால் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே இவ்வமைப்பு இவர்களுக்குத் தேவையில்லை.
இவ்வமைப்பின் கூட்டங்கள், உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களையும் சிக்கல்களையும் பகிர்ந்து கொண்டு தாங்கள் மதுவின்றி வாழவேண்டும் என்ற ஆர்வத்தினால் உருவாயின. இச்சங்கம் இரண்டு விதமான கூட்டங்களை நடத்துகிறது. முதலாவது திறந்த கூட்டங்கள் (Open Meetings) ஆகும். மதுச் சிக்கலில் அக்கறை கொண்ட எவரும் பங்கேற்கலாம். இவற்றில், உறுப்பினர்கள் தங்கள் குடிப்பழக்க அனுபவங்களையும் அவர்கள் இவ்வமைப்பில் படிப்படியான ஆலோசனைகளைக் கடைப்பிடித்து மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு மறு வாழ்வு பெற்றதைப் பற்றியும் கலந்துரையாடுவார்கள்.
இரண்டாவது - மறைவான கூட்டங்கள் (Closed Meetings) ஆகும். மதுவிற்கு அடிமையானவர் மட்டிலுமே இதில் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கே உரிய இரகசியமான சொந்தச் சிக்கல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, பிறர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு மன வலிமை அடைகின்றனர். மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக இவ்வமைப்பு, உறுப்பினர்களுக்குப் பன்னிரு ஆலோசனைகளை அளித்திருக்கிறது.
இவ்வமைப்பு, ஏற்கனவே மதுவிற்கு அடிமையானவர்களால் மட்டிலுமே, மதுவிற்கு அடிமையானவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று நம்புகிறது. இவ்வமைப்புகள் தன்னிறைவுடையனவாக இருக்க வேண்டும். அமைப்புக்கு வெளியிலிருந்து எவ்வித உதவியும் ஏற்கக் கூடாது. உறுப்பினர்கள் மதுவைப் பற்றிய செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கலாம். ஆனால், பிற அமைப்புகளுடன் இணையக்கூடாது. உறுப்பினர்கள் சொந்த விளம்பரத்தைத் தவிர்த்துப் பெயரிலிகளாகவே இருக்க வேண்டும். இவ்வமைப்பு உறுப்பினர்களிடமிருந்து எவ்வகைக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ‘மதுவருந்துவதை நிறுத்த வேண்டும்’ என்பதே இதன் நோக்கம். இவர்களின் ஒரே செயல் தாங்கள் மதுவைத் தவிர்த்து வாழ்வதும், மற்ற மதுவடிமைகளுக்கு மதுவைத் தவிர்க்க உதவி புரியதுமாகும்.{{Right|சா.அர.}}
<section end="ஆல்ககாலிக்கு அனானிமசு"/>
<section begin="ஆல்சிராசு மாநாடு"/>
{{dhr}}
<b>ஆல்சிராசு மாநாடு,</b> 1906-ஆம் ஆண்டு சனவரி மாதம் 16-ஆம் நாள் கூட்டப்பட்டது. சிப்ரால்டருக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில், ஆல்சிராசு வளைகுடாவுக்கு மேற்குப் பகுதியில், இசுபெயின் நாட்டிலுள்ள காடிசு மாநிலத்தில் உள்ள நகரம் ஆல்சிராக (Algeciras). இது ஆப்பிரிக்காக் கண்டத்துடன் கடல் வாணிகத் தொடர்புடைய ஒரு துறைமுகமாகும்; பல்வேறு இருப்புப் பாதை நிலையங்களின் சந்திப்பு நகரமாகவும், மிதமான தட்பவெப்ப நிலையையும் குளிப்பதற்கேற்ற அழகுமிகு இயற்கைச் கடற்கரையையும் கொண்ட நகரமாகவும், இன்பப் பயணம் மேற்கொள்ளத் தக்க மையமாகவும் இது விளங்குகிறது.
இந்நகரைக் கி.பி. 711-ஆம் ஆண்டில் அராபியர்கள் கைப்பற்றிக் கி.பி. 1344-ஆம் ஆண்டுவரை தம் வசமே வைத்திருந்தனர். பின்னர், பதினோராம் அல்பான்சோ இந்நகரை மீட்டார். இருப்பினும் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் இந்நகர் அழிந்து போய்விட்டது. மூன்றாம் சார்லசு கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்நகரை மீண்டும் நிறுவினார். அவர் கி.பி. 1780-1782-ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற சிப்ரால்டா முற்றுகையில் இந்நகரை ஈடுபடுத்தினார்.
சுல்தானின் வலிமைக் குறைவைப் பயன்படுத்தித் தத்தம் ஆதிக்கத்தை மொராக்கோவில் உண்டாக்கும் வகையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டன. செருமனி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, மொராக்கோவிற்குச் சொந்தமான ஐந்திலொரு பகுதியைக் கைப்பற்றிவிட்டது. பிரான்சும் ஒரு சில இடங்களைக் கைப்பற்ற எண்ணி மும்முரமாக முயன்றது. இந்த நிலைவில்தான் மொராக்கோவின் சுதந்தரத்தைக் காப்பாற்ற ஏனைய ஐரோப்பிய நாடுகள் முயன்று, 1906-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 16-ஆம் நாளில், ஆல்சிராசு நகரிலே மாநாட்டைக் கூட்டின. அம்மாநாட்டில் பிரிட்டன், பிரான்சு, உருசியா, செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, இத்தாலி, இசுபெயின், போர்ச்சுகல், ஆலந்து, சுவீடன், பெல்சியம், அமெரிக்க ஐக்கியநாடு, மொராக்கோ ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. மொராக்கோவை ஒரு காப்பு நாடாக மாற்றுவதற்காகப் பிரான்சு, பிரிட்டனின் அனுமதியையும் பெற்று, இசுபெயினுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டது. இதனால் அமெரிக்கா, பிரான்சு நாட்டை ஐயுற்றது. செருமன் பேரரசர் இரண்டாம் வில்லியம் என்பவர்,<noinclude></noinclude>
kosn0twa9yvejpz6clpi2a9astln31j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/655
250
622722
1952541
1947138
2026-07-10T05:41:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆல்டாமிரா|615|ஆல்டாய்}}</noinclude>மொராக்கோவின்மீது தமக்குள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குப் புத்தி புகட்டும் முறையிலும், 1905-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 31-ஆம் நாளன்று தாஞ்சியர் (Tangir) கரையிலே இறங்கி முகாமிட்டு, மொராக்கோவை ஒரு சுதந்திர நாடாகத் தாம் மதிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆல்சிராசு மாநாட்டிற்கே ஒரு நல்ல முடிவைத் தந்ததாக அமைந்துவிட்டது. மாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து உறுப்பினர்களும் மொராக்கோவின் சுதந்தரத் தன்மையையும், சுல்தானின் தலைமையையும் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர். அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அந்நாட்டில் சம உரிமையுடன் வாணிகத்தில் ஈடுபடலாம் எனவும், பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகள் காவல்துறை உதவியுடன் மொராக்கோவின் அமைதியைக் காக்க வேண்டுமெனவும், மொராக்கோவின் வளர்ச்சிக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனவும், அந்நாட்டின் நிதி வளர்ச்சிக்காகத் தாஞ்சியரில் ஒரு வங்கி ஏற்படுத்துவதெனவும், அவ்வங்கியில் மற்ற நாடுகளைவிடப் பிரான்சு மிகுதியான மூலதனம் போடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவினால் செருமனி, பிரான்சு ஆகிய இரண்டு நாடுகளுக்குமே ஓரளவுக்கு மனநிறைவு ஏற்பட்டது; மொராக்கோ நாடும் சுதந்தர நாடாக ஆயிற்று.
ஆல்சிராசு நகரின் மக்கள்தொகை 1940-ஆம் ஆண்டில் 20,226 எனவும், 1981-ஆம் ஆண்டில் 86,042 எனவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.{{Right|பொன்.சு.}}
<section end="ஆல்சிராசு மாநாடு"/>
<section begin="ஆல்ட்டாமிரா"/>
{{dhr}}
<b>ஆல்ட்டாமிரா</b> வட இசுபெயினிலுள்ள (Spain) சண்டாண்டர் (Santander) மாநிலத்திற்கு மேற்கே 30 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குகையில் வரலாற்றுக்கு முந்திய கடைக் கற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்குகை கி.பி.1868-ஆம் ஆண்டு ஒரு வேடரால் கண்டுபிடிக்கப்பட்டது. சண்டாண்டர் நகரைச் சார்ந்த மார்சிலினோ-டி-செனடோலா (Marcelino-de-Sautola) என்ற பிரபு கி.பி. 1875-ஆம் ஆண்டு இக்குகையைப் பார்வையிட்டு, இதன் அருகில் எலும்புகளையும் கற்கருவிகளையும் கண்டெடுத்தார். இவர் கி.பி.1879 ஆம் ஆண்டு மறுமுறை தம் மகளுடன் இக்குகையைப் பார்வையிட வந்தார். இவர் மகள் இக்குகையின் மேற்கூரையில் ஒளியங்கள் இருப்பதைக் கண்ணுற்றாள். ஆல்ட்டாமிரா (Altamira) ஓவியங்கள் பற்றிய நூலினைச் சௌடோலா, கி.பி. 1880-ஆம் ஆண்டு வெளியிட்டார். வல்லுநர் பலர் இவ்வோவியங்கள் போலியானவை எனக் கருத்துரைத்தனர். ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அறிஞர் பலர், இவ்வோவியங்கள் வரலாற்றுக்கு முந்திய கற்காலத்தைச் சார்த்தவையே என வலியுறுத்தினர். இக்குகை ஓவியங்களை 1902-ஆம் ஆண்டு பிரான்சுத் தொன்மை வரலாற்றறிஞர்களான கர்டையில் கக்கு என்பவரும். பிரூயில் என்பவரும் (Cartailhac and Brevil) ஆய்வு செய்தனர், ஆல்ட்டாமிரா குகை 270 மீட்டர் நீளம் உடையது. குகையின் முன்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய மனிதன் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் அரிக்னேசியன் (Aurignacian), பிந்திய சொலுட்ரன் (Solutrean), முந்திய அல்லது இடை மெக்டலெனியன் (Magdalenian) காலக் கருவிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் விலங்கின் எலும்பினால் செய்யப்பெற்று, நன்றாகச் செதுக்கப்பட்ட பட்டைக்கத்திகளும் (Blade) கண்டுக்கப்பட்டன. குகையின் பக்க அறையில் எண்ணற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீள அகலங்கள் 18×9 மீட்டர்களாகும். குகையில் மேற்கூரையிலும் வண்ண ஓவியங்கள் உள்ளன. ஓவியங்கள் சிவப்பிலும் கருப்பிலும் செங்கருநீலத்திலுமாகப் பலவண்ணம் பூசப்பட்டுக் காண்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன. விலங்குகள் பல்வேறு நிலைகளில் தீட்டப்பட்டுள்ள, விலங்குகளுள் காட்டெருமைகள் மிகுதியாக வரையப்பட்டுள்ளன. மற்றும் குதிரைகள், பன்றிகள், பெண்மான் ஆகியவையும் மனிதப்பண்பு ஏற்றப்பட்ட இறை உருவங்கள் எட்டும் தீட்டப்பட்டுள்ளன. இங்கு மற்றும் பல குகை அரங்குகள் உள்ளன. இவற்றிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
<section end="ஆல்ட்டாமிரா"/>
<section begin="ஆல்டாய்"/>
{{dhr}}
<b>ஆல்டாய்</b> மேற்கு ஆசியாவிலுள்ள பெருமலைத்தொடர். ஆல்டாய் மலைத்தொடருக்கும் இமய
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 655
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 129
|oTop = 288
|oLeft = 192
|Location = center
|Description =
}}
{{center|ஆல்டாய் மலையிலுள்ள ஏரி}}<noinclude></noinclude>
cgm8fg1kl169pl0lok8udhcrxfznstc
விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1
4
631695
1952449
1951618
2026-07-09T13:55:04Z
Gunathamizh
3151
/* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */
1952449
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
==திட்ட அறிக்கை==
*[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்]
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#:வண [[சிறப்பு:Contributions/~2026-34456-34|~2026-34456-34]] ([[பயனர் பேச்சு:~2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC)
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]*
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
# --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC)
#
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
drly984exnv1enk1k0ceh5ufufvnozg
1952471
1952449
2026-07-09T14:54:15Z
Neyakkoo
7836
/* 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்) */ --~~~~
1952471
wikitext
text/x-wiki
[[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]]
“'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன.
==திட்ட அறிக்கை==
*[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration)/Final_Report திட்ட அறிக்கைப் பக்கம்]
=='''பயிற்சிகள்'''==
=='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''==
==='''தொடக்கவிழா: 9.30-10.00'''===
*தமிழ்த்தாய் வாழ்த்து
*வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர்
*வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
*சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு
*நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா
*தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
==='''அமர்வு - 1 (10.00-11.15''')===
*10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
*10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம்
*11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 2 (11.15-2.00)'''===
*11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா
*11.30 - 11.45 - செயல்முறை
*11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர்
*12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR)
*12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா
*12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்)
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 3 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1
** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]]
** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf]
** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2
** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*3.00 - 3.20 - செயல்முறை
*3.20 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 4 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''==
* தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
* தொடக்கவிழா: 9.30-10.00
==='''அமர்வு - 5 (10.00-11.15)'''===
* 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும்
# முனைவர் பா.கவிதா,
# முனைவர் ம. மைதிலி
# முனைவர் ந. இராஜேந்திரன்,
# முனைவர் இரா. குணசீலன்
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் க. பாலாஜி
# முனைவர் இரா.நித்யா,
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
#பேரா. இரா. அரிகரசுதன்
* 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல்
* 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு
* 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 6 (11.20-2.00)'''===
*11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும்
*11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை.
*12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல்
*1.00 - 2.00 - உணவு இடைவேளை
==='''அமர்வு - 7 (2.00-4.00)'''===
*2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
*2.20 - 2.40 - செயல்முறை
*2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு)
*3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல்
#பேரா. இரா. அரிகரசுதன்
#திரு இரெ. லோகநாதன்
# முனைவர் மணிமேகலை
*3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல்
*4.00 - 4.00 - தேநீர் இடைவேளை
==='''அமர்வு - 8 (4.00-4.30)'''===
* நிறைவு விழா: 4.00-4.30
=='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் பா.கவிதா
# முனைவர் ம. மைதிலி,
# முனைவர் ந. இராஜேந்திரன்
# முனைவர் இரா. குணசீலன்,
# முனைவர் வா. காருண்யா,
# முனைவர் இரா.நித்யா
=='''திட்ட மேலாளர்'''==
# சிறீதர்
=='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''==
# முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
# பேரா. இரா. அரிகரசுதன்
=='''பயில்வோர்'''==
இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும்.
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC)
# --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC)
# --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC)
--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC)
==புதிய பயனர்==
[https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்]
=='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''==
* [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]]
* [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]]
* [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]]
== Edit Summary (Wikipedia 25 Celebration) ==
இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம்.
{| class="wikitable"
! Sl.No
! Wikimedia Project
! Total edits
! Pages created
! Pages improved
|-
| 1
| Wikipedia
| 1125
| 164
| 961
|-
| 2
| Wikisource
| 7493
| 1647
| 5846
|-
| 3
| Wiktionary
| 1073
| 11
| 1062
|-
| 4
| Wikidata
| 157
| 10
| 147
|-
| 5
| Wikimedia Commons
| 75
| 37
| 38
|-
! colspan="2" | Total
! 9923
! 1869
! 8054
|}
== Detailed Contribution – Wikipedia (12 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved)
|-
| Dharshika2026 || 3 || 1 || 2
|-
| Gunathamizh || 1 || 1 || 0
|-
| Info-farmer || 961 || 133 || 828
|-
| KarunyaRanjith || 1 || 1 || 0
|-
| Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45
|-
| Magizh Sundram || 1 || 1 || 0
|-
| Mythily Balakrishnan || 1 || 1 || 0
|-
| Neyakkoo || 71 || 11 || 60
|-
| NithyaSathiyaraj || 5 || 1 || 4
|-
| Saranya V R || 11 || 3 || 8
|-
| Sridharrv2000 || 15 || 6 || 9
|-
| Subisena || 7 || 2 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961
|}
== Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) ==
{| class="wikitable sortable"
! Sl.No
! User
! Date
! Article Title
|-
| 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்]
|-
| 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்]
|-
| 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்]
|-
| 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்]
|-
| 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்]
|-
| 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு]
|-
| 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்]
|-
| 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்]
|-
| 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு]
|-
| 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்]
|-
| 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்]
|-
| 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி]
|-
| 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு]
|-
| 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்]
|-
| 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்]
|-
| 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்]
|-
| 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)]
|-
| 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்]
|-
| 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்]
|-
| 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்]
|-
| 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்]
|-
| 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை]
|-
| 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா]
|-
| 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி]
|-
| 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா]
|-
| 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா]
|-
| 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை]
|-
| 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்]
|-
| 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்]
|-
| 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்]
|-
| 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா]
|-
| 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு]
|-
| 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்]
|-
| 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்]
|-
| 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி]
|-
| 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்]
|-
| 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்]
|-
| 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)]
|-
| 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா]
|-
| 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்]
|}
== Detailed Contribution – Wikisource (26 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query]
{| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Boopalan28012003 || 10 || 1 || 9
|-
| Dharshika2026 || 1234 || 28 || 1
|-
| Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2
|-
| Gunathamizh || 6 || 0 || 6
|-
| Info-farmer || 868 || 221 || 647
|-
| KarunyaRanjith || 35 || 0 || 35
|-
| Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1
|-
| LALITHAA K || 57 || 56 || 1
|-
| M.Deepika Muthukumar || 3 || 0 || 3
|-
| Magizh Sundram || 120 || 117 || 3
|-
| Mallika Vijayakumar || 63 || 62 || 1
|-
| Manimekalaiamuthan || 514 || 92 || 0
|-
| Mythily Balakrishnan || 114 || 92 || 22
|-
| Neyakkoo || 754 || 37 || 717
|-
| NithyaSathiyaraj || 2707 || 22 || 655
|-
| Pavanar Sathiyaraj || 29 || 26 || 3
|-
| R. Ariharasuthan || 349 || 2 || 5
|-
| Rajendran Nallathambi || 219 || 84 || 135
|-
| Rarunachinna || 43 || 38 || 5
|-
| Saranya V R || 92 || 1536 || 385
|-
| SavithaDuraisamy || 42 || 26 || 16
|-
| Sridharrv2000 || 93 || 70 || 937
|-
| Srijayanthi Devi || 11 || 10 || 1
|-
| Subisena || 178 || 30 || 148
|-
| Sujivenba04 || 41 || 40 || 1
|-
| Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846
|}
== Detailed Contribution – Wiktionary (5 Users) ==
* [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 18 || 2 || 16
|-
| Neyakkoo || 1011 || 5 || 1006
|-
| Pavanar Sathiyaraj || 5 || 1 || 4
|-
| Rajendran Nallathambi || 4 || 1 || 3
|-
| Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062
|}
== Detailed Contribution – Wikidata (10 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு)
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Dharshika2026 || 1 || 0 || 1
|-
| Info-farmer || 143 || 10 || 133
|-
| KarunyaRanjith || 1 || 0 || 1
|-
| Magizh Sundram || 1 || 0 || 1
|-
| Mythily Balakrishnan || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 5 || 0 || 5
|-
| NithyaSathiyaraj || 1 || 0 || 1
|-
| Saranya V R || 1 || 0 || 1
|-
| Sridharrv2000 || 2 || 0 || 2
|-
| Subisena || 1 || 0 || 1
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147
|}
== Detailed Contribution – Wikimedia Commons (2 Users) ==
*[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query]
{| class="wikitable sortable" style="text-align: center;"
|+ பயனர் பங்களிப்பு விவரங்கள்
|-
! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள்
|-
| Info-farmer || 1 || 0 || 1
|-
| Neyakkoo || 74 || 37 || 37
|- style="background:#f0f0f0; font-weight:bold;"
| மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38
|}
=='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''==
* '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
* திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
*இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.
* இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
* இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
* மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன.
* முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது.
==Project and impact==
* The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions.
* The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence.
* The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage.
* One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement.
* Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language.
* The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource.
* Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion.
* Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community.
* During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book.
* Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge.
* As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations.
* Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report]
=='''விளைவுகள்'''==
* செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது.
* Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions:
** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835
** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836
** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837
** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838
** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832
* These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity.
== '''நிழற்படங்கள்''' ==
==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''===
<gallery>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small>
File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small>
</gallery>
==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''===
<gallery>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small>
Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small>
File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small>
</gallery>
=='''நிகழ்படங்கள்'''==
=='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''==
* இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது.
* அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை].
=== 27 பிப்ரவரி 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]])
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
=== 13 மார்ச் 2026 ===
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]]
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]])
#
#
#
#
#
#
=== 17 ஏப்பிரல் 2026 ===
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC)
#:வண [[சிறப்பு:Contributions/~2026-34456-34|~2026-34456-34]] ([[பயனர் பேச்சு:~2026-34456-34|talk]]) 13:38, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC)
#
#
#
#
#
#
#
=== 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC)
#
#
#
#
#
#
=== 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfhbfrbfbbgfbfbbfrbfwbgfbfwbfsbflbfrbfbbfq-activity-7470825703102402560-ZwHP?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை]
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC)
#--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:35, 11 சூன் 2026 (UTC)
#--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:59, 11 சூன் 2026 (UTC)
#
#
=== 09 சூலை 2026 (ஆத்மாவின் ராகங்கள்)===
* ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன்
* [https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7479537543328243713/ பரப்புரை]*
* மேம்பாட்டு நூல்
**[[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]]
**[[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
# --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:55, 9 சூலை 2026 (UTC)
#--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:54, 9 சூலை 2026 (UTC)
#
#
#
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
ft09i8ydcl6absc8f1gtfwqadq6b1vy
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/9
250
638795
1952441
1919833
2026-07-09T13:16:51Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கொண்டவர். மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைச்
சட்டங்கள், ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம், ஈழ விடுதலைப் போராட்டம், ஒன்றிய ஆட்சிகளின் வஞ்சகங்கள், திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?, ஈழப் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் சதி என்று 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளில் கருத்து மாறுபாடு
ஏற்பட்ட நிலையில் 1995இல் திராவிடர் கழக தலைமை நிலைய
செயலாளராக இருந்த ஆனூர் ஜெகதீசன், சட்டத் துறை செயலாளராக இருந்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி உள்ளிட்டோருடன் அக்கழகத்திலிருந்து விலகி 'பெரியார் திராவிடர் கழகம்' அமைப்பை நிறுவியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அந்தக் காலத்தில் சென்னை அய்.அய்.டி. என்ற பார்ப்பன ஆதிக்கக் கோட்டைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்தப் போராட்டங்கள்; தலித் இயக்கங்களையும் ஒத்த கருத்துடைய முற்போக்கு
இயக்கங்களையும் ஒன்று திரட்டி, 'சமூக நீதி மீட்புக் கூட்டமைப்பை' உருவாக்கி தொடர்ந்து முன்னெடுத்தப் போராட்டங்கள், பெரியார் இயக்க செயற்பாட்டாளர்களுக்கு புதிய திசை வழியைக் காட்டியது. வடநாட்டில் திராவிட மக்களை இழிவுபடுத்தும் 'இராமலீலா'வுக்கு எதிராக 1974ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் தலைமையில் நடைபோட திராவிடர் கழகம் 'இராவண லீலா'வை நடத்தியது. பெரியார் திராவிடா கழகம் தொடர்ந்து அதை முன்னெடுத்து இரண்டு
ஆண்டுகள் நடத்திக் காட்டியது. துடிப்பு மிக்க இளைஞர்களுடன் பெரியார் திராவிடர் கழகத்தை எழுச்சியுடன் நடைபோட வைத்ததில் பெரும் பங்காற்றியவர் தோழர் விடுதலை இராசேந்திரன்.
அவரது எழுத்து நடையோ அலாதியானது. அரிய செய்திகளையும் எளிதில் புரியச் செய்யும் ஆற்றொழுக்கு நடை. தமிழ் சமூகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய சிந்தனைகளை, செய்திகளை தேடிச் சென்று திரட்டித் திரட்டித் தருவது அவரது பாங்கு. இணைய தள பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், முனைப்புடனும் ஆர்வத்துடனும் இந்தத் தலையங்கத் தொகுப்புகளைத் திரட்டித் தந்தார். அவருக்கு
கழக சார்பில் பாராட்டுகள்; கடந்தகால வரலாறுகளை மீண்டும் அசை போட இந்தத் தலையங்கத் தொகுப்புகளை கருத்தாயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
சென்னனை
18.12.2021
தோழமையுடன்,
{{larger|<b>கொளத்தூர் மணி</b>}}
தலைவர்
திராவிடர் விடுதலைக் கழகம்<noinclude>{{nop}}{{rv|7 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''7'''}}}}|{{left|{{larger|'''7'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r0ff31f0bmgvpeup1s5zb4tqjb4os3d
1952561
1952441
2026-07-10T07:11:15Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>கொண்டவர். மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைச்
சட்டங்கள், ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம், ஈழ விடுதலைப் போராட்டம், ஒன்றிய ஆட்சிகளின் வஞ்சகங்கள், திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?, ஈழப் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் சதி என்று 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுகளில் கருத்து மாறுபாடு
ஏற்பட்ட நிலையில் 1995இல் திராவிடர் கழக தலைமை நிலைய
செயலாளராக இருந்த ஆனூர் ஜெகதீசன், சட்டத் துறை செயலாளராக இருந்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி உள்ளிட்டோருடன் அக்கழகத்திலிருந்து விலகி 'பெரியார் திராவிடர் கழகம்' அமைப்பை நிறுவியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அந்தக் காலத்தில் சென்னை அய்.அய்.டி. என்ற பார்ப்பன ஆதிக்கக் கோட்டைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுத்தப் போராட்டங்கள்; தலித் இயக்கங்களையும் ஒத்த கருத்துடைய முற்போக்கு
இயக்கங்களையும் ஒன்று திரட்டி, 'சமூக நீதி மீட்புக் கூட்டமைப்பை' உருவாக்கி தொடர்ந்து முன்னெடுத்தப் போராட்டங்கள், பெரியார் இயக்க செயற்பாட்டாளர்களுக்கு புதிய திசை வழியைக் காட்டியது. வடநாட்டில் திராவிட மக்களை இழிவுபடுத்தும் 'இராமலீலா'வுக்கு எதிராக 1974ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் தலைமையில் நடைபோட திராவிடர் கழகம் 'இராவண லீலா'வை நடத்தியது. பெரியார் திராவிடா கழகம் தொடர்ந்து அதை முன்னெடுத்து இரண்டு
ஆண்டுகள் நடத்திக் காட்டியது. துடிப்பு மிக்க இளைஞர்களுடன் பெரியார் திராவிடர் கழகத்தை எழுச்சியுடன் நடைபோட வைத்ததில் பெரும் பங்காற்றியவர் தோழர் விடுதலை இராசேந்திரன்.
அவரது எழுத்து நடையோ அலாதியானது. அரிய செய்திகளையும் எளிதில் புரியச் செய்யும் ஆற்றொழுக்கு நடை. தமிழ் சமூகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய சிந்தனைகளை, செய்திகளை தேடிச் சென்று திரட்டித் திரட்டித் தருவது அவரது பாங்கு. இணைய தள பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், முனைப்புடனும் ஆர்வத்துடனும் இந்தத் தலையங்கத் தொகுப்புகளைத் திரட்டித் தந்தார். அவருக்கு
கழக சார்பில் பாராட்டுகள்; கடந்தகால வரலாறுகளை மீண்டும் அசை போட இந்தத் தலையங்கத் தொகுப்புகளை கருத்தாயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
{{rh|{{larger|சென்னை}}||{{larger|'''தோழமையுடன்,'''}}}}
{{rh|{{larger|18.12.2021}}||<b>{{larger|'''கொளத்தூர் மணி'''</b>}}}}
{{rh|||தலைவர்}}
{{rh|||திராவிடர் விடுதலைக் கழகம்}}<noinclude>{{nop}}{{rv|7 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''7'''}}}}|{{left|{{larger|'''7'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bo39iwajtfuqhsezzgvewhsw2hrqv98
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/10
250
638796
1952550
1950279
2026-07-10T06:37:03Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தோழர்களால் உருவான தொகுப்பு</b>}}}}
{{li|'பு|2em}}ரட்சிப் பெரியார் முழக்கம்' வார ஏடாக 2002, ஜன. 15இல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 'பெரியார் முரசு', 'பெரியார் முழக்கம்' என்ற பெயர்களில் மாத இதழ்களாக 1997 முதல் வெளி வந்து கொண்டிருந்தது. அது தொடர்ச்சியாக வெளி வர முடியால் இடையிடையே தடைபட்டு நின்று கொண்டிருந்தது.
வார ஏடாக தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில்
சென்னையில் நான்கு பக்கங்களைக் கொண்ட இதழாக
'டபுள் டெம்மி' வடிவில் கடந்த 20 ஆண்டுகளாக வெளி வந்து
கொண்டிருக்கிறது. 'கோவிட் 19' முதல் அலை பரவிய காலத்தில் 6 மாதமும் இரண்டாவது அலையின்போது 7
இதழ்களும் அச்சகங்கள் இயங்காத நிலையில் வெளி வராமல்
தடைபட்டது.
இதழ் ஆசிரியர் பொறுப்பை திராவிடர் விடுதலைக் கழகம்
எனக்கு வழங்கிய நிலையில் 2001 முதல் 2020 வரை நான்
எழுதிய தலையங்கங்கள் நான்கு தொகுதிகளாகவும்,
கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் நான் எழுதிய
'நய்யாண்டி நடை' எழுத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்டுரைகள் ஒரு தொகுதியாகவும் அய்ந்து தொகுதிகளாக
இப்போது வெளி வருகிறது.
இந்த 19 ஆண்டுகால ஓட்டத்தின் நிகழ்வுகள், அதற்கு
திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்த நிலைப்பாடுகளை
இளைய தலைமுறை அறியப் பயன் பெறக்கூடும் என்பதே
இந்தத் தொகுப்பை வெளியிடுவதன் நோக்கம்.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|8 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''8'''}}}}|{{left|{{larger|'''8'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1yesm3wae4t9nka9xw7pjeut5bdso7t
1952551
1952550
2026-07-10T06:37:43Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தோழர்களால் உருவான தொகுப்பு</b>}}}}
{{li|'பு|1em}}ரட்சிப் பெரியார் முழக்கம்' வார ஏடாக 2002, ஜன. 15இல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 'பெரியார் முரசு', 'பெரியார் முழக்கம்' என்ற பெயர்களில் மாத இதழ்களாக 1997 முதல் வெளி வந்து கொண்டிருந்தது. அது தொடர்ச்சியாக வெளி வர முடியால் இடையிடையே தடைபட்டு நின்று கொண்டிருந்தது.
வார ஏடாக தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில்
சென்னையில் நான்கு பக்கங்களைக் கொண்ட இதழாக
'டபுள் டெம்மி' வடிவில் கடந்த 20 ஆண்டுகளாக வெளி வந்து
கொண்டிருக்கிறது. 'கோவிட் 19' முதல் அலை பரவிய காலத்தில் 6 மாதமும் இரண்டாவது அலையின்போது 7
இதழ்களும் அச்சகங்கள் இயங்காத நிலையில் வெளி வராமல்
தடைபட்டது.
இதழ் ஆசிரியர் பொறுப்பை திராவிடர் விடுதலைக் கழகம்
எனக்கு வழங்கிய நிலையில் 2001 முதல் 2020 வரை நான்
எழுதிய தலையங்கங்கள் நான்கு தொகுதிகளாகவும்,
கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் நான் எழுதிய
'நய்யாண்டி நடை' எழுத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்டுரைகள் ஒரு தொகுதியாகவும் அய்ந்து தொகுதிகளாக
இப்போது வெளி வருகிறது.
இந்த 19 ஆண்டுகால ஓட்டத்தின் நிகழ்வுகள், அதற்கு
திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்த நிலைப்பாடுகளை
இளைய தலைமுறை அறியப் பயன் பெறக்கூடும் என்பதே
இந்தத் தொகுப்பை வெளியிடுவதன் நோக்கம்.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|8 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''8'''}}}}|{{left|{{larger|'''8'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
azlpz7f68n66ll9ym3r5gnfpfojjp2t
1952552
1952551
2026-07-10T06:38:04Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தோழர்களால் உருவான தொகுப்பு</b>}}}}
{{li|'பு|2em}}ரட்சிப் பெரியார் முழக்கம்' வார ஏடாக 2002, ஜன. 15இல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 'பெரியார் முரசு', 'பெரியார் முழக்கம்' என்ற பெயர்களில் மாத இதழ்களாக 1997 முதல் வெளி வந்து கொண்டிருந்தது. அது தொடர்ச்சியாக வெளி வர முடியால் இடையிடையே தடைபட்டு நின்று கொண்டிருந்தது.
வார ஏடாக தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில்
சென்னையில் நான்கு பக்கங்களைக் கொண்ட இதழாக
'டபுள் டெம்மி' வடிவில் கடந்த 20 ஆண்டுகளாக வெளி வந்து
கொண்டிருக்கிறது. 'கோவிட் 19' முதல் அலை பரவிய காலத்தில் 6 மாதமும் இரண்டாவது அலையின்போது 7
இதழ்களும் அச்சகங்கள் இயங்காத நிலையில் வெளி வராமல்
தடைபட்டது.
இதழ் ஆசிரியர் பொறுப்பை திராவிடர் விடுதலைக் கழகம்
எனக்கு வழங்கிய நிலையில் 2001 முதல் 2020 வரை நான்
எழுதிய தலையங்கங்கள் நான்கு தொகுதிகளாகவும்,
கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் நான் எழுதிய
'நய்யாண்டி நடை' எழுத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்டுரைகள் ஒரு தொகுதியாகவும் அய்ந்து தொகுதிகளாக
இப்போது வெளி வருகிறது.
இந்த 19 ஆண்டுகால ஓட்டத்தின் நிகழ்வுகள், அதற்கு
திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்த நிலைப்பாடுகளை
இளைய தலைமுறை அறியப் பயன் பெறக்கூடும் என்பதே
இந்தத் தொகுப்பை வெளியிடுவதன் நோக்கம்.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|8 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''8'''}}}}|{{left|{{larger|'''8'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1yesm3wae4t9nka9xw7pjeut5bdso7t
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/11
250
638797
1952553
1919835
2026-07-10T06:46:41Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
சுருக்கமாக சில கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று - பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த காலத்தின் சமூக நிலை இப்போது இல்லை. அது மாற்றங்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பெரியார் காலத்தில் அவர் எதிர் கொண்ட கொள்கை எதிரிகள் புதிய வடிவங்களில் உருமாற்றத்தோடு களத்துக்கு வந்திருக்கிறார்கள். மூன்றாவதாக பெரியாரைப் பார்த்திடாத அவரின் விளிம்பு நிலை மக்களுக்கான சுயமரியாதைப் போராட்டத்தின் தேவை முக்கியத்துவத்தை உணர்ந்திடாத புதிய தலைமுறையினரோடு
நாம் உறவாடவும் அவர்களை உணரச் செய்யவுமான சமூக நிலையில் வாழ்கின்றோம்.
உயர் ஜாதிப் பிறப்பு, இதன் வழியாகப் பெறக் கூடிய சமூகச்
செல்வாக்கு, சமூக அதிகாரம், அரசியல் அதிகாரம் என்ற 'சமூக மூலதனத்தை' வசமாக்கிக் கொண்ட சக்திகள் - உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகச் 'சமூக மூலத்தனத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் புதிய வழிமுறைகளை நுட்பமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
பெரியார் மூன்று களங்களை முன் வைத்துப் போராடினார்.
முதலாவதாக இந்தியா என்ற கட்டமைப்புக்குள் தமிழ்நாட்டை மூழ்கச் செய்து விட்டால் பெரும்பான்மை விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதை வாழ்வுரிமையை மீட்க முடியாது.
இரண்டாவது அவர் நடத்திய தனித்துவமான போராட்டக் களம், மக்களின் பொதுப் புத்தியில் திணிக்கப்பட்டு அதை வெகு மக்களும் ஏற்கச் செய்துவிட்ட ஜாதி, அதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கும் மதம், கடவுள், பாரம்பர்ய நம்பிக்கைகளை மக்களிடம் கட்டுடைத்து அவர்களிடம் சிந்திக்கும் திறனைத் தூண்டி விட வேண்டும். இந்த எதிர்நீச்சல் தொண்டுக்கு எதிர்ப்புகள் தான் கடுமையாக இருக்கும். பாராட்டுகள் ஒரு போதும் கிடைக்காது. அவமானங்களையே சந்திக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவெடுத்து ஒவ்வொரு நாளும் பேசினார்; எழுதினார்; போராடினார்; கருத்தாயுதங்களாக நூல்கள், ஏடுகளை
நடத்தினார்; எதிர்ப்புகளையும் அடக்குமுறைகளையும் தனது
கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளாக மாற்றிக் கொண்டார்.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|9 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''9'''}}}}|{{left|{{larger|'''9'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
egnfo9vgbe164xn29hpfbvtlm7aikeu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/12
250
639348
1952555
1920833
2026-07-10T06:56:51Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்ற பெருமை பேசும் தார்மீக உரிமையை நாம் பெற்றிருந்தாலும் இலக்கை அடைவதற்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் மத அடையாளத்துக்குள் மக்களை மூழ்கச் செய்வது; ஜாதி அடையாளத்தை வெறியாக மாற்றுவது; பழம் பெருமைகளுக்கு புனிதம் கற்பிப்பது; அறிவியல் வளர்ச்சிகளை வேதகால சிந்தனைகளுடன் பொறுத்திக் காட்டத் துடிப்பது; ஒற்றை அடையாளத்தைத் திணித்து, அதற்கு 'தேசபக்தி' என்ற கவசத்தைப் போர்த்தி வைப்பது; அரசுத் துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பது; அரசுக்குரிய கட்டமைப்புகளைக் குலைப்பது, 'சமூக மூலதனம்' என்ற பிறவி வழியாகக் கிடைக்கும் சுரண்டல் உரிமைகளைப் பன்னாட்டு பொருளாதார மூலதனத்துடன் பிணைத்து, விளிம்பு நிலை மக்களை மேலும் கீழ் நிலைக்குத் துரத்துவது என்று பல்வேறு தந்திரங்கள் ஆட்சி அதிகாரங்கள்
வழியாக தொழில்பட்டு வருகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பெரியார் முன்னிறுத்திய தமிழ்நாடு விடுதலை, சுயமரியாதை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு என்ற கருதுகோள்களுக்கான உள்ளடக்கங்களைக் காலத்தின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தும் தேவையை வரலாறு கோரி நிற்கிறது. பழமைவாதத்திலிருந்தும் ஜாதிப் பெருமையிலிருந்தும் பார்ப்பனிய நம்பிக்கையிலிருந்தும் தமிழ்நாட்டின் அடையாள அழிப்புகளிலிருந்தும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதை, வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் 'சமூக விடுதலை' நோக்கிய கருத்தியல் சொல்லாடல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பெரியாரியத்துக் குள்ளேயே உள்ளடக்கமாக உயிர்த் துடிப்புடன் அந்தக் கருத்துகள்
அடங்கியிருக்கின்றன. அவற்றை மேலும் செழுமைப்படுத்தி
வளர்த்தெடுக்க வேண்டிய சமூகச் சூழல் உருவாகியிருக்கிறது.
இளம் தலைமுறையினரிடம் ஆண்களைவிட படித்தப் பெண்கள், அவர்கள் பெரியாரை அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, அவர் பேசிய பெண் விடுதலைக் கோட்பாடுகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு வருகிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கைத் தரும் மாற்றமாகும். அவர்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பும் குடும்ப அமைப்புகள் திணிக்கும் அதிகாரங்களும் இவர்களை பெரியாரியத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|10 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|''''10''''}}}}|{{left|{{larger|''''10''''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cd5p3n1pxjcipbzc6gxa1m3v9ou9ovs
1952556
1952555
2026-07-10T06:57:27Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்ற பெருமை பேசும் தார்மீக உரிமையை நாம் பெற்றிருந்தாலும் இலக்கை அடைவதற்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் மத அடையாளத்துக்குள் மக்களை மூழ்கச் செய்வது; ஜாதி அடையாளத்தை வெறியாக மாற்றுவது; பழம் பெருமைகளுக்கு புனிதம் கற்பிப்பது; அறிவியல் வளர்ச்சிகளை வேதகால சிந்தனைகளுடன் பொறுத்திக் காட்டத் துடிப்பது; ஒற்றை அடையாளத்தைத் திணித்து, அதற்கு 'தேசபக்தி' என்ற கவசத்தைப் போர்த்தி வைப்பது; அரசுத் துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பது; அரசுக்குரிய கட்டமைப்புகளைக் குலைப்பது, 'சமூக மூலதனம்' என்ற பிறவி வழியாகக் கிடைக்கும் சுரண்டல் உரிமைகளைப் பன்னாட்டு பொருளாதார மூலதனத்துடன் பிணைத்து, விளிம்பு நிலை மக்களை மேலும் கீழ் நிலைக்குத் துரத்துவது என்று பல்வேறு தந்திரங்கள் ஆட்சி அதிகாரங்கள்
வழியாக தொழில்பட்டு வருகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பெரியார் முன்னிறுத்திய தமிழ்நாடு விடுதலை, சுயமரியாதை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு என்ற கருதுகோள்களுக்கான உள்ளடக்கங்களைக் காலத்தின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தும் தேவையை வரலாறு கோரி நிற்கிறது. பழமைவாதத்திலிருந்தும் ஜாதிப் பெருமையிலிருந்தும் பார்ப்பனிய நம்பிக்கையிலிருந்தும் தமிழ்நாட்டின் அடையாள அழிப்புகளிலிருந்தும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதை, வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் 'சமூக விடுதலை' நோக்கிய கருத்தியல் சொல்லாடல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பெரியாரியத்துக் குள்ளேயே உள்ளடக்கமாக உயிர்த் துடிப்புடன் அந்தக் கருத்துகள்
அடங்கியிருக்கின்றன. அவற்றை மேலும் செழுமைப்படுத்தி
வளர்த்தெடுக்க வேண்டிய சமூகச் சூழல் உருவாகியிருக்கிறது.
இளம் தலைமுறையினரிடம் ஆண்களைவிட படித்தப் பெண்கள், அவர்கள் பெரியாரை அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, அவர் பேசிய பெண் விடுதலைக் கோட்பாடுகளை தங்கள் வசமாக்கிக் கொண்டு வருகிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கைத் தரும் மாற்றமாகும். அவர்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பும் குடும்ப அமைப்புகள் திணிக்கும் அதிகாரங்களும் இவர்களை பெரியாரியத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|10 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''10'''}}}}|{{left|{{larger|'''10'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pnryen7vdaf4r6cgs31c2itgom1mccc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/13
250
639529
1952559
1921210
2026-07-10T07:03:39Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
இந்தத் தலையங்கத் தொகுப்புகள் உருவாக்கும் தாக்கம் பற்றி
என்னால் மதிப்பிட முடியவில்லை என்றாலும் கடந்து வந்த வரலாற்றுத் தடங்களை ஓரளவு மாறி வரும் சூழலுக்கேற்ப பதிவு செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.
இப்படி ஒரு தொகுப்பு வெளி வரும் என்று நான் கனவிலும்
நினைக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கழகத்தின் இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், இவற்றைத் தொகுத்து தலைப்பிட்டு, தனித் தொகுதிகளாக்கி, இறுதியான கட்டத்தில் என்னுடைய பார்வைக்கும் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பிய பிறகு தான், இந்த முயற்சி பற்றியே எனக்குத் தெரிய வந்தது. வெளியீட்டு
நிகழ்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று சென்னை மாவட்டக் கழகத் தோழர்களிடம் பங்களாதேஷ் நாட்டில் பணியாற்றி வரும் அவரே தொடர்பு கொண்டு பேசினார்.
மேட்டூர் கழகத் தோழர் கிட்டு, பிழைகளை மூன்று நாட்களில்
திருத்தினார். திராவிடர் விடுதலக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அத்தனைப் பக்கங்களையும் படித்து பேரார்வம் காட்டி இறுதி வடிவம் தந்தார். மாணவர் நகலக உரிமையாளரும் எனது ஆழ்ந்த அன்புக்குரிய வருமான அ. சவுரிராசன், எனக்காக நூல்களை அச்சிட்டுத் தர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டி, எப்போதுமே வலியுறுத்திக்
கொண்டே இருப்பார். இந்தத் தொகுதிகளை அச்சேற்ற வேண்டும் என்று கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நூலாக்கித் தர பேரார்வத்துடன் முன் வந்தார். 'கோடங்குடி மாரிமுத்து' என்ற எள்ளல் நடை எழுத்துக்கு (Satire) தோழர் பாமரன் நல்ல அணிந்துரை வழங்கியிருக்கிறார். தொகுதிகளுக்கான அட்டைப்படத்தை பொள்ளாச்சி தினேஷ் குமார் வடிவமைத்தார்.
இவர்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது வெறும் சடங்கு என்று குறுகிப் போய்விடும். வணிகம் சாராத முழுமையாக பெரியாரியலை ஏற்றுக் கொண்ட தோழமை சக்திகளின் ஒருமித்த பங்களிப்பதோடு இத் தொகுப்பு வருகிறது என்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்வையும் உற்சாகத்தையும் தருகிறது.
{{rh|{{larger|சென்னை}}||<b>{{larger|'''தோழமையுடன்,'''}}}}</b>
{{rh|{{larger|20.12.2021}}||<b>{{larger|'''விடுதலை இராசேந்திரன்'''</b>}}}}<noinclude>{{nop}}{{rv|11 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''11'''}}}}|{{left|{{larger|'''11'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g8jhqeql5pl8cjlg0d2y3n670yosvk4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/28
250
643965
1952563
1936406
2026-07-10T07:30:22Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தவிர்த்து, சமூகப் பொறுப்புணர்வுடன் சிந்திக்கும்போது. ஒரு உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இலஞ்சம், ஊழல், முறைகேடுகளைத் தடுப்பதற்காக வந்துள்ள சட்டங்களையே ஜெயலலிதாவும், அவரது தொண்டரடிப் பொடிகளும் கேள்விக்குள்ளாக்க விரும்புகிறார்கள் என்பதே
அந்த உண்மை.
அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை அரசு ஊழியராகக்
கருதப்படக்கூடிய ஒரு முதலமைச்சர் வாங்கக் கூடாது என்பது பொது வாழ்க்கையில் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு சட்டம். ஆனால், ஜெயலலிதாவோ, ஒரு முதலமைச்சர். அரசாங்க நிலத்தை வாங்குவது குற்றமாகாது என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இதன்மூலம் தான் மட்டுமல்ல; இனி எதிர்காலத்தில் எந்த முதலமைச்சரும் அரசாங்க நிலத்தை
வாங்கிக் குவிப்பதற்கு சட்டரீதியான ஒரு பாதுகாப்பை உருவாக்கிட விரும்புகிறார்! அதேபோல, கிரிமினல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளாக வருவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, 2 ஆண்டுகளோ, அதற்கு மேலோ நீதிமன்றத்தால் கிரிமினல் குற்றத்தின்கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தாலும்கூட, அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் 1997இல் ஒரு
விதிமுறையை உருவாக்கியது. அரசியல் கிரிமினல் மயமாகி வருவதைத் தடுக்க விரும்பும் எவரும் இந்த விதிமுறையை ஆதரிக்கவே செய்வார்கள். இதன் நோக்கத்தையும், தகர்க்க வேண்டும் என்றே ஜெயலலிதாவும், அவரது ஆதரவாளர்களும் துடிக்கிறார்கள். அதுவும் இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் தேர்தலில் ஏன் நிற்கக்
கூடாது? என்று கேட்கிறார்கள். பொது வாழ்க்கையில் நேர்மையும், பொது ஒழுக்கமும் வளரவேண்டும் என்று உளமாற விரும்புகிறவர்கள் இந்தப் போக்குகளை அங்கீகரிக்கலாமா? நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.
{{Right|– ''''புரட்சிப் பெரியார் முழக்கம்' மார்ச் 2001 இதழ்'''}}<noinclude>{{nop}}{{rv|26 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''26'''}}}}|{{left|{{larger|'''26'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
374nawbx3ny7b59nikvek8wn0o8yk8g
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/29
250
643966
1952565
1936408
2026-07-10T07:35:35Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தேர்தல் முடிவுகள்</b>}}}}
{{li|த|2em}}மிழக வாக்காளர்கள் - வழக்கம்போல் இழுபறிகளுக்கு இடம் தராமல் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அய்ந்தாண்டுகால தி.மு.க. ஆட்சி, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டது என்பதை மறுத்துவிட முடியாது
அ.இ.அ.தி.மு.க. அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே
அதன் கூட்டாளி பலம்தான் தமாகா, காங்கிரஸ், பா.ம.க. மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகிய
அனைத்துக் கட்சிகளையும் தனது அணியில் இணைத்து
வலிமையான கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதா வெற்றி
பெற்றார்.
தி.மு.க வோ, ஒவ்வொரு அணியாக இழந்தது. இவ்வளவுக்குப்
பிறகும் அ.இ.அ.தி.மு.க. அணிக்கும் - தி.மு.க. அணிக்கும்
கிடைத்த வாக்குகளின் வித்தியாசம் சுமார் 10 சதவீதம்தான்.
அ.இ.அ.தி.மு.க. அணிக்கு 49.09 சதவீத வாக்குகளும், தி.மு.க. அணிக்கு 38.05 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த 10 சதவீத வாக்குகள் வித்தியாசத்தால், அ.இ.அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளில் 197 தொகுதிகளைப் பெற்றுவிட்டது. மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் தி.மு.க. அணியைவிட அ.இ.அ.தி.மு.க. அணி கூடுதலாக பெற்றுள்ளது 32 லட்சம் வாக்குகள்தான்.
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசியதாக இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்துச் சொல்ல முடியாது என்று<noinclude>{{nop}}{{rv|27 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''27'''}}}}|{{left|{{larger|'''27'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pvu6eqi8ai1scmnywn8008hccydckww
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/30
250
643967
1952567
1936409
2026-07-10T07:42:27Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>ஆய்வுகள் கூறுகின்றன. கூட்டணிக் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ளாமல் போனதுதான் தி.மு.க. செய்த தவறு. அதேநேரத்தில் - அ.இ.அ.தி.மு.க. கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கும். தி.மு.க. தனது ஆதரவுத் தளத்தை அடித்தளத்து மக்களிடையே இழந்ததற்கும் முக்கிய காரணம் அது பா.ஜ.க.வுடன் கொண்டிருந்த கூட்டணி தான்
சிறு விவசாயிகள், நெசவாளிகள், தேயிலைத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினரின் எதிர்ப்பை தி.மு.க. சுமக்க வேண்டியதற்குக் காரணம் பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தான், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது துவங்கிய அதே மோசமான பொருளாதாரக் கொள்கையைத்தான், பா.ஜ.க.வும் பின்பற்றி வருகிறது. அதோடு தி.மு.க.வின் பா.ஜ.க. கூட்டணியால், பல கூட்டணிக் கட்சிகளையும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் வாக்குகளையும் தி.மு.க. இழக்க வேண்டியிருந்தது.
பா.ஜ.க. கூட்டணிக்காகவும், மத்திய அமைச்சரவையில் இடம்
பெறுவதற்காகவும் தி.மு.க. இவ்வளவு கடுமையான விலையைக் கொடுத்து அதன் அடையாளங்களையும் இழந்து நிற்க வேண்டுமா என்பதை அக்கட்சி பரிசீலிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
முதலமைச்சராக - பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கிடையே பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது தொடர்பாக சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்னும் 6 மாதத்துக்குள் அவர் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பழிவாங்கும் அரசியல்
நடவடிக்கைகளைக் கைவிட்டு, மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தினால் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
ஆளுநர் உரையில் கச்சத்தீவு மீட்பு, கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்விகளில் கூடுதல் ஒதுக்கீடு, தலித் மாணவர்களுக்கு சைக்கிள் போன்ற நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், உழவர் சந்தைகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல. பல பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு அவமானப்படுத்தப் படுவதோடு, தலைமைச் செயலாளராக டெல்லியிலிருந்து சங்கர் என்ற பார்ப்பனரைக் கொண்டு வந்திருக்கிறார். பார்ப்பனர்களே தலைமைச்
செயலாளர்களாக இருந்து வந்த நிலை அண்மைக் காலங்களில்தான் மாறியது. இப்போது மீண்டும் பழைய நிலை திரும்புகிறது.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|28 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''28'''}}}}|{{left|{{larger|'''28'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
en6meip0zq7h1lqvs0iin1wmxftjk8r
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1952505
1952277
2026-07-09T18:26:52Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1952505
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
cal286il8qhm9vfpbv7w3pgzry56y5q
1952583
1952505
2026-07-10T11:27:01Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1952583
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
cguclzrfz764y0wdtvcbf5e4jytj5rb
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1952502
1952333
2026-07-09T17:52:18Z
ஹர்ஷியா பேகம்
15001
/* அட்டவணை 5 */
1952502
wikitext
text/x-wiki
==அட்டவணை 1==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 2 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
|-
! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 3 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 4 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்] 805-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
m6d62qylyyagrfainjhco44kfxhv3eg
1952503
1952502
2026-07-09T18:04:36Z
ஹர்ஷியா பேகம்
15001
/* அட்டவணை 5 */
1952503
wikitext
text/x-wiki
==அட்டவணை 1==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 2 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
|-
! colspan="5"|<b>உல்சி தாமசு - உவாச்சீ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 3 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உழத்திப்பாட்டு - ‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பறை|உறுப்பறை]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பி|உறுப்பி]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுப்பு வழிபாடு|உறுப்பு வழிபாடு]] 586-587
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுமி|உறுமி]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுவை|உறுவை]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைபனி தேசம்|உறைபனி தேசம்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையனார்|உறையனார்]] 587-587
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்|உறையூர்]] 587-589
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்|உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்]] 589-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் இளம்பொன் வாணிகனார்|உறையூர் இளம்பொன் வாணிகனார்]] 589-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்|உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்]] 590-590
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்|உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்]] 590-591
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சல்லியங் குமரனார்|உறையூர்ச் சல்லியங் குமரனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ச் சிறுகந்தனார்|உறையூர்ச் சிறுகந்தனார்]] 591-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் பல்காயனார்|உறையூர்ப் பல்காயனார்]] 591-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர்ப் புராணம்|உறையூர்ப் புராணம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனார்]] 592-593
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகூத்தனார்|உறையூர் முதுகூத்தனார்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறையூர் முதுகொற்றன்|உறையூர் முதுகொற்றன்]] 593-593
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறைவிட அமைப்புகள்|உறைவிட அமைப்புகள்]] 593-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்சூரி அபுல் காசிம் ஆசன்|உன்சூரி அபுல் காசிம் ஆசன்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னகுரவயபாளையச் செப்பேடு|உன்னகுரவயபாளையச் செப்பேடு]] 602-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உன்னநிலை|உன்னநிலை]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்]] 603-603
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 4 ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஊ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஊ - ஊனிடைட்சுப் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ|ஊ]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-2 தகராறு|ஊ-2 தகராறு]] 604-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கத்தொகை|ஊக்கத்தொகை]] 605-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்கரின் கோட்பாடு|ஊக்கரின் கோட்பாடு]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்குவித்தல்|ஊக்குவித்தல்]] 610-616
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக்ளி|ஊக்ளி]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊக வாணிகம்|ஊக வாணிகம்]] 616-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்]] 620-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகான்|ஊகான்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி|ஊகி]] 623-624
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகி இந்தியர்|ஊகி இந்தியர்]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகித்தல்|ஊகித்தல்]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊகோசுலேவியா|ஊகோசுலேவியா]] 626-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊச்சி இந்தியர்|ஊச்சி இந்தியர்]] 631-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசல்|ஊசல்]] 631-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசற் பருவம்|ஊசற் பருவம்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசிமுறி|ஊசிமுறி]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊசியென்|ஊசியென்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்|ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்ட உணவுச் சூழலமைப்பு|ஊட்ட உணவுச் சூழலமைப்பு]] 634-637
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்]] 637-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டச் சத்துணவுக் கல்வி|ஊட்டச் சத்துணவுக் கல்வி]] 640-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு]] 642-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டா|ஊட்டா]] 643-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊட்டியார்|ஊட்டியார்]] 645-645
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊடல்|ஊடல்]] 645-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊண்பித்தையார்|ஊண்பித்தையார்]] 646-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊணர்கள்|ஊணர்கள்]] 646-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊந்துக்குழி|ஊந்துக்குழி]] 648-649
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதாண்டு|ஊதாண்டு]] 649-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊதியம் வழங்கு சட்டம்|ஊதியம் வழங்கு சட்டம்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊ-தோணி|ஊ-தோணி]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊப்ளி|ஊப்ளி]] 651-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமா இந்தியர்|ஊமா இந்தியர்]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊமைத்துரை|ஊமைத்துரை]] 652-653
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊயித்து|ஊயித்து]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்|ஊர்]] 653-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் கொலை|ஊர் கொலை]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்ச்செரு|ஊர்ச்செரு]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவம்]] 657-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்துவ மாயை|ஊர்த்துவ மாயை]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்த்தெய்வம்|ஊர்த்தெய்வம்]] 659-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்தி ஓட்டுநர் கல்வி|ஊர்தி ஓட்டுநர் கல்வி]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்-நம்மு|ஊர்-நம்மு]]661-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்பி முகம்மது சமாலுத்தீன்|ஊர்பி முகம்மது சமாலுத்தீன்]] 661-661
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் மகமை|ஊர் மகமை]] 661-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்மிளை|ஊர்மிளை]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வசி|ஊர்வசி]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர் விருந்தம்|ஊர் விருந்தம்]] 662-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊர்வெண்பா|ஊர்வெண்பா]] 663-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக்காரே இந்தியர்|ஊரக்காரே இந்தியர்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கடன்|ஊரகக் கடன்]] 663-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகக் கல்வி|ஊரகக் கல்வி]] 667-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமுதாயம்|ஊரகச் சமுதாயம்]] 670-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகச் சமூகவியல்|ஊரகச் சமூகவியல்]] 672-676
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகத் திருவிழாக்கள்|ஊரகத் திருவிழாக்கள்]] 676-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரகம்|ஊரகம்]] 680-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரக வளர்ச்சித் திட்டம்|ஊரக வளர்ச்சித் திட்டம்]] 680-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரம்பலம்|ஊரம்பலம்]] 683-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரல் மலைத்தொடர்|ஊரல் மலைத்தொடர்]] 683-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]] 684-689
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊராளி|ஊராளி]] 689-690
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை|ஊரிப்பிடிசின் அரசியற் கொள்கைகள் வாழ்க்கை]] 690-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரின்னிசை|ஊரின்னிசை]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊரும் பேரும்|ஊரும் பேரும்]] 692-696
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊல்யா நாவசுகு|ஊல்யா நாவசுகு]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் ஊடே|ஊலான் ஊடே]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊலான் பாட்டர்|ஊலான் பாட்டர்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊவர் குழுக்கள்|ஊவர் குழுக்கள்]] 696-697
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழ்வலிக் கோட்பாடு|ஊழ்வலிக் கோட்பாடு]] 697-698
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் அரசியல்|ஊழல் அரசியல்]] 698-699
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழல் தடுப்புச் சட்டம்|ஊழல் தடுப்புச் சட்டம்]] 700-700
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழி|ஊழி]] 700-700
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊழித்தீ|ஊழித்தீ]] 700-701
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு|ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு]] 701-702
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊற்றுமலை மருதப்பன்|ஊற்றுமலை மருதப்பன்]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறல்|ஊறல்]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊறு செய்யாமை|ஊறு செய்யாமை]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊன்பொதி பசுங்குடையார்|ஊன்பொதி பசுங்குடையார்]] 704-705
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனக்கண்|ஊனக்கண்]] 705-706
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனமுற்றோர் கல்வி|ஊனமுற்றோர் கல்வி]] 706-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/ஊனிடைட்சுப் பண்பாடு|ஊனிடைட்சுப் பண்பாடு]] 709-709
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எ|எ]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்காலக்கண்ணி|எக்காலக்கண்ணி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்குவானா|எக்குவானா]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்கூய் இந்தியர்|எக்கூய் இந்தியர்]] 713-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எக்சீட்டர்|எக்சீட்டர்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகல்|எகல்]] 714-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எகிப்து|எகிப்து]] 719-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கல்சு|எங்கல்சு]] 743-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கலின் விதி|எங்கலின் விதி]] 746-748
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எங்கன் வான் போம் பாவெர்க்கு|எங்கன் வான் போம் பாவெர்க்கு]] 748-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சதாரர்கள்|எச்சதாரர்கள்]] 749-749
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எச்சவினை|எச்சவினை]] 749-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசன்|எசன்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசிடியசு கொலன்னா|எசிடியசு கொலன்னா]] 751-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுக்கிமோக்கள்|எசுக்கிமோக்கள்]] 753-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுகுவாலின்|எசுகுவாலின்]] 759-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுத்தோனிய மொழி|எசுத்தோனிய மொழி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசுபராண்டோ|எசுபராண்டோ]] 760-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எசெக்சு|எசெக்சு]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சிய அதிகாரங்கள்|எஞ்சிய அதிகாரங்கள்]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எஞ்சுநர் உரிமை|எஞ்சுநர் உரிமை]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்கர் ஆலன் போ|எட்கர் ஆலன் போ]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டக்கரம்|எட்டக்கரம்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டயபுரம்|எட்டயபுரம்]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டாம் திருமுறை|எட்டாம் திருமுறை]] 766-768
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டிகுடிப் பிரபந்தங்கள்|எட்டிகுடிப் பிரபந்தங்கள்]] 768-769
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுத் தொகை|எட்டுத் தொகை]] 769-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டுமூர்த்தி|எட்டுமூர்த்தி]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்டெட்டந்தாதி|எட்டெட்டந்தாதி]] 772-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ணா|எட்ணா]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டன்|எட்மண்டன்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு இசுபென்சர்|எட்மண்டு இசுபென்சர்]] 773-774
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு காசு|எட்மண்டு காசு]] 774-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பர்க்கு|எட்மண்டு பர்க்கு]] 775-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்மண்டு பிளண்டன்|எட்மண்டு பிளண்டன்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்ரசுக்கர்|எட்ரசுக்கர்]] 777-781
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்ட்சு சோனாதன்|எட்வர்ட்சு சோனாதன்]] 781-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலவத்து|எட்வர்டு இலவத்து]] 782-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு இலியர்|எட்வர்டு இலியர்]] 783-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு ஏரி|எட்வர்டு ஏரி]] 783-783
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு|எட்வர்டு சி்ப்பன் வேக்பீல்டு]] 783-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு கோக்கு, சர்|எட்வர்டு கோக்கு, சர்]] 785-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு சபீர்|எட்வர்டு சபீர்]] 789-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு பிட்செரால்டு|எட்வர்டு பிட்செரால்டு]] 790-790
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு|எட்வர்டு புல்வர் லிட்டன் பிரபு]] 790-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வர்டு மன்னர்கள்|எட்வர்டு மன்னர்கள்]] 791-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வீன் ஆர்னால்டு, சர்|எட்வீன் ஆர்னால்டு, சர்]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எட்வின் சாட்விக்கு|எட்வின் சாட்விக்கு]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோ|எடின்பரோ]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடின்பரோப் பல்கலைக்கழகம்|எடின்பரோப் பல்கலைக்கழகம்]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுகோள் அமைத்தல்|எடுகோள் அமைத்தல்]] 800-803
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடுத்துக்காட்டாய்வு முறை|எடுத்துக்காட்டாய்வு முறை]] 803-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எடைகள், அளவைசார் குற்றங்கள்|எடைகள், அளவைசார் குற்றங்கள்]] 804-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்குணங்கள்|எண்குணங்கள்]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டபீ|எண்டபீ]] 805-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்டிமியன்|எண்டிமியன்]] 805-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணறிவுச் சிந்தனை|எண்ணறிவுச் சிந்தனை]] 805-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணாயிரம்|எண்ணாயிரம்]] 807-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுப்பெயர்|எண்ணுப்பெயர்]] 807-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணுவண்ணம்|எண்ணுவண்ணம்]] 808-808
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெடுப்புத் தொகுப்பளவை|எண்ணெடுப்புத் தொகுப்பளவை]] 808-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்|எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நிறுவனம்]] 809-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்ணெய் வளங்கள்|எண்ணெய் வளங்கள்]] 812-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்பேராயம்|எண்பேராயம்]] 813-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மணம்|எண்வகை மணம்]] 814-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எண்வகை மாலை|எண்வகை மாலை]] 815-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எத்தியோப்பியா|எத்தியோப்பியா]] 815-824
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்க்கும் உரிமை|எதிர்க்கும் உரிமை]] 824-835
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்காலச் சொத்துகள்|எதிர்காலச் சொத்துகள்]] 835-836
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்கொள்பாடி|எதிர்கொள்பாடி]] 836-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்|எதிர்நிலை உடைமை (அ) எதிர் அனுபோகம்]] 837-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை உரை|எதிர்நிலை உரை]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நிலை வழக்கு|எதிர்நிலை வழக்கு]] 838-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்நோக்கு இறங்குரிமை|எதிர்நோக்கு இறங்குரிமை]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்படு குழு|எதிர்ப்படு குழு]] 839-840
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு|எதிர்ப்பின்றிக் கீழ்ப்படிதற் கோட்பாடு]] 840-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்ப்பு மனப்பான்மை|எதிர்ப்பு மனப்பான்மை]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் பண்பாடு|எதிர் பண்பாடு]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பார்ப்பு அட்டவணைகள்|எதிர்பார்ப்பு அட்டவணைகள்]] 848-850
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்பாரா விளைவு|எதிர்பாரா விளைவு]] 850-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைக் குறை உரை|எதிர்மறைக் குறை உரை]] 851-851
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறைச் சிக்கல்|எதிர்மறைச் சிக்கல்]] 851-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை நிறைவுரை|எதிர்மறை நிறைவுரை]] 852-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர்மறை வருமானவரி|எதிர்மறை வருமானவரி]] 852-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிர் வழக்குரை|எதிர் வழக்குரை]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிராச விம்சதி|எதிராச விம்சதி]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிடைப் பரிமாற்றம்|எதிரிடைப் பரிமாற்றம்]] 855-856
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரிலாப் பெருமாள்|எதிரிலாப் பெருமாள்]] 856-857
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதிரொலிச் சொற்கள்|எதிரொலிச் சொற்கள்]] 857-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதீந்திரப் பிரவணப் பிரபாவம்|எதீந்திரப் பிரவணப் பிரபாவம்]]858-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதுகை|எதுகை]] 859-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எதேச்சாதிகாரத் தலைமை|எதேச்சாதிகாரத் தலைமை]] 860-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திரமயமாக்கல்|எந்திரமயமாக்கல்]] 862-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்திர மூலதனம்|எந்திர மூலதனம்]] 865-865
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எந்நாட்கண்ணி|எந்நாட்கண்ணி]] 865-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பிக்கியூரசு|எப்பிக்கியூரசு]] 866-866
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எப்பைரசு|எப்பைரசு]] 866-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிக்டெட்டசு|எபிக்டெட்டசு]] 868-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிங்காசு, எர்மன்|எபிங்காசு, எர்மன்]] 868-868
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிடோரசு|எபிடோரசு]] 868-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபியால்டெசு|எபியால்டெசு]] 869-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபிரேயர்கள்|எபிரேயர்கள்]] 869-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எபீசசு|எபீசசு]] 874-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பார்|எம்பார்]] 874-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பிடாக்கிளிசு|எம்பிடாக்கிளிசு]] 875-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]] 875-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்மா|எம்மா]] 875-876
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமர்சன் ரால்பு வால்டோ|எமர்சன் ரால்பு வால்டோ]] 876-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனாப் பழங்குடி|எமனாப் பழங்குடி]] 878-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமனோ|எமனோ]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி|எமிலி]] 879-880
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமிலி சோலா|எமிலி சோலா]] 880-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எமீலியா|எமீலியா]] 881-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எய் லா செபேல் மாநாடு|எய் லா செபேல் மாநாடு]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்பட்டினம்|எயிற்பட்டினம்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயிற்றியனார்|எயிற்றியனார்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தை மகனரர் இளங்கீரனார்|எயினந்தை மகனரர் இளங்கீரனார்]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினந்தையார்|எயினந்தையார்]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எயினன்|எயினன்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்|எர்சுகோவிட்சு, மெல்வில்லி சீன்]] 883-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்சுபர்கு|எர்சுபர்கு]] 883-885
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்டர், சோகன் காட்பிரைடு வான்|எர்டர், சோகன் காட்பிரைடு வான்]] 885-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்ணாகுளம்|எர்ணாகுளம்]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்பர்ட்டு.பி.சோ.|எர்பர்ட்டு.பி.சோ.]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோந்திசு|எர்மோந்திசு]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்மோ போலிசு மக்னா|எர்மோ போலிசு மக்னா]] 888-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு எமிங்வே|எர்னசுட்டு எமிங்வே]] 888-890
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எர்னசுட்டு பெவின்|எர்னசுட்டு பெவின்]] 890-891
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரடோட்டசு|எரடோட்டசு]] 891-893
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளிட்டசு|எராக்கிளிட்டசு]] 894-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராக்கிளியசு|எராக்கிளியசு]] 895-896
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராகிளியோ போலிசு|எராகிளியோ போலிசு]] 896-896
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசிட்டியானியம்|எராசிட்டியானியம்]] 896-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராசுமசு தெசிதேரியசு|எராசுமசு தெசிதேரியசு]] 897-897
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எராடு-தோமார் படிவம்|எராடு-தோமார் படிவம்]] 897-900
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/எரிக்சன்|எரிக்சன்]] 900-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
cdeo4fbemj163iyotn6z7b6lff8z2bo
பயனர்:Bharathblesson/test
2
645148
1952576
1952392
2026-07-10T08:42:51Z
Bharathblesson
15164
/* அருஞ்சொல் அட்டவணை */
1952576
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|-
|}
</div></div></div>
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
r4gdeb55pfzlxmvg43s4nvvdmemj3b6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/27
250
647581
1952562
1949170
2026-07-10T07:21:56Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>என்றாலும், தமிழகம் வந்தபோது இந்திராவுக்குக் கருப்புக் கொடி காட்டிய கட்சிகள் தி.மு.க.வும், திராவிடர் கழகமும்தான் இந்திராவுக்குக் கருப்புக் கொடி காட்டும் கிளர்ச்சியை நடத்த முதலில் தி.மு.க. தயங்கியபோது, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்தான் முதலில் போராட்டத்தை அறிவித்தார். பிறகு தி.மு.க.வும் போராட்டத்தை அறிவித்தது. அ.தி.மு.க. ஆட்சியின் காவல் துறை, கருப்புக் கொடி காட்ட வந்த தி.க. வினரையும், தி.மு.க.வினரையும் கடுமையாகத் தாக்கியது. பல திராவிடர் கழகத் தோழர்கள் படுகாயமடைந்தனர். கிண்டி அருசே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீனன், பாபு என்ற இரண்டு தி.மு.க. தோழர்கள் உடயிரிழந்தனர். 'பார்ப்பன இந்திராவே திரும்பிப் போ' என்று 'விடுதலை' ஏடு எழுதியது. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இன்று - முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலஞ்ச ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தேர்தலில் நிற்க முடியாமல் சட்டத் தடைகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் திரு. வீரமணி போன்றவர்கள் தங்கள் குரலை மாற்றிக் கொண்டு, ஜெயலலிதா ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். பார்ப்பன ஜெயலலிதாவைக் காப்பாற்ற சட்டத்தின் சந்து பொந்துகளில், ஏதாவது ஓட்டை இருக்காதா என்று துருவித் துருவித் தேடி வருகிறார்கள். இத்தனைக்கும் இந்திரா காந்தி மீதான வழக்கின் முதன்மையான குற்றச்சாட்டு அதிகார முறைகேடு, ஜெயலலிதா மீதான குற்றச் சாட்டோ அதைவிட மோசமான ஊழல்
ஊழல் என்பது ஒரு சமூகப் பிரச்சினை என்றும், சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய ஊழலை ஒழித்துவிட முடியாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்த நோக்கத்தோடுதான் ஊழல் தடுப்புச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள், சமூகத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தங்களிடம் சட்டம் நெருங்கவே முடியாது என்ற இறுமாப்புடனிருந்த தலைவர்களை, உயர் அதிகாரிகளைத் தண்டிக்கவும் செய்திருக்கிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்மராவ்கூட, இந்தச் சட்டங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பல உயரதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டு, பொது வாழ்க்கையில் நேர்மையும், பொது ஒழுக்கமும் செழித்தோங்க வேண்டும் என்றே சமுதாய மாற்றத்தில் நம்பிக்கைக் கொண்ட எவருமே விரும்புவர்.
ஆனால், இப்போது ஜெயலலிதா பிரச்சினையில் என்ன நடக்கிறது? சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு வாதம் செய்வதைத்<noinclude>{{nop}}{{rv|25 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''25'''}}}}|{{left|{{larger|'''25'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
a9ndcy07pn7hctivypzayh2cf3pukdw
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/31
250
647676
1952569
1949483
2026-07-10T07:49:04Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சம், பா.ஜ.க. தனது கோட்டை என்று மார்தட்டி வந்த கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சந்தித்துள்ள படுதோல்வியாகும். 1998, 1999இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவையில் தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர்
வெற்றி பெற்று வந்தார். இப்போது, பா.ஜ.க. இம்மாவட்டத்தில் தோல்வி அடைந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. கோட்டையாகச் சொல்லப்பட்ட பத்மநாபபுரம் தொகுதியையும், அது பறிகொடுத்து விட்டது.
அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியையும் 'தலித்' எழில்மலையிடம் அக்கட்சி இழந்து நிற்கிறது.
ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கலாம்; அல்லது சட்டப் பிரச்சினைகளால் நீடிக்காமலும் போகலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள், சமூகநீதிச் சட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின்
முன்னேற்றங்களில் முனைப்புடன் செயல்பட்டால், மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆட்சி அதிகாரத்தைக் கட்சி அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தும் போக்குகளை தீவிரமான கட்சிக்காரர்கள் வேண்டுமானால் விரும்பலாமே தவிர, பொது நிலையில் இருப்பவர்கள் விரும்புவது இல்லை. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம்!
ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதே தேர்தலின் தீர்ப்பு என்பதால் தி.மு.க. அதை மதித்து செயல்பட வேண்டியது அவசியம்.
{{rh|– ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' மே 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|29 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''29'''}}}}|{{left|{{larger|'''29'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3fi51ckx03xmgd0krhppxfj66pp1a6p
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/32
250
647677
1952570
1949485
2026-07-10T07:53:36Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>பெரியார் தத்துவத்தை சிறைப்படுத்த முடியாது</b>}}}}
{{li|ஜு|2em}}ன் 14ஆம் தேதியன்றுதான் - கோவையில் - அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன உணர்வாளர்களும்,
பெரியாரியல்வாதிகளும் - நீண்டகாலமாக விரும்பி -
எதிர்பார்த்திருந்த அறிவிப்பு அது. தனித்தனி அமைப்புகளாக
இயங்கி வந்த மூன்று பெரியார் அமைப்புகள் ஒன்றாக
இணைகின்றன என்ற பிரகடனத்தைத் தான் குறிப்பிடுகிறோம்.
'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' உதயமானது. இலட்சியப் பிடிப்பும் - தெளிவும் கொண்ட, பெரியார் பரம்பரையின் அடுத்த தலைமுறை மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு. பயணத்தைத் துவக்கியது.
23ஆம் தேதி காலை கோவையிலும் - மாலை கோபியிலும்,
24ஆம் தேதி காலை மேட்டூரிலும், மாலை தர்மபுரியிலும்
மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கூட்டங்களில்
ஏராளமான இளைஞர்கள் திரண்டார்கள். அணை உடைத்த
வெள்ளம் போல், எங்கெங்கும் எழுச்சி.
டர்பனில் நடக்கவிருக்கும் அய்.நா.வின் இன ஒதுக்கல் மாநாட்டில் தீண்டாமை - ஜாதியையும் விவாதிக்க அனுமதிக்க
வேண்டும் என்று. ஜூலை 13ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் நடத்தத் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் பற்றியும், மாநில மாநாடு - "புரட்சிப் பெரியார் முழக்கம்" பத்திரிகை வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்பட்டன.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|30 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''30'''}}}}|{{left|{{larger|'''30'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s7x3yavjh81un59k1envyfa5xwdtkqy
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/33
250
647679
1952571
1949487
2026-07-10T08:01:21Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்; இடையில் ஒருநாள் இடை வெளியில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், தனது துணைவியாரின் உடல்நலத்தை விசாரித்துவிட்டு, அடுத்தக் கட்டப் பயணத்துக்கு சென்னைக்குப் பயணமாக இருந்தார். கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி. வந்துவிட்டது தமிழக அரசின் காவல் துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்ல முயன்றார்கள். பிறகு கைது செய்வதாக அறிவித்தார்கள். சேலம் மத்திய சிறையில் தோழர் கொளத்தூர் மணி அடைக்கப்பட்டு விட்டார்.
எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் எதையும் காவல் துறை வெளியிடவில்லை. ஆனால், அவர்மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்தார். அரசு அதிகாரிகளுக்குத் தகவல்களைத் தர மறுக்கிறார்; தேசத் துரோகம் செய்கிறார் (இ.பி.கோ. பிரிவுகள் 179, 212, 124(ஏ) என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இதன் மூலம் ஜூலை 3ஆம் தேதி வரைத் தொடர்ந்து நடக்கவிருந்த, மாவட்டக் கழக செயல்வீரர்களின் கூட்டங்களில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியை பங்கேற்க விடாமல் தடுத்துவிட்டனர். மீண்டும் தமிழகத்தில் தந்தை பெரியார் இயக்கம் வீறுகொண்டு செயல்படுவதை சகிக்க முடியாத சக்திகள், இந்த அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதாகவே நாம் கருதுகிறோம். ஆனாலும், ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம். தலைவரை சிறைப்படுத்தி விட்டாலும், இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை சிறைப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் ஏமாந்து போவார்கள்!
அடிக்க அடிக்க எழும் பந்துபோல், இந்த இயக்கம் மேலும் எழுச்சி பெற்று செயல்படும். திட்டமிட்டபடி - ஆர்ப்பாட்டங்களும், சுற்றுப்பயணங்களும், மாநில மாநாடும் நடக்கும். அச்சுறுத்த நினைக்கும் இன எதிரிகளுக்கும், கொள்கை துரோகிகளுக்கும், இதுவே நாம் தரும் சரியான பதிலாக அமையும்.
சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சிக் கொண்டு வந்த சட்டம்தான் 124(ஏ) என்ற தேசத் துரோகச் சட்டம். சுதந்திர இந்தியாவில் அந்தச் சட்டம் இந்த நாட்டுக்கு உரிய மக்கள் மீதே பாய்ந்து கொண்டிருக்கிறது.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|31 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''31'''}}}}|{{left|{{larger|'''31'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lg5anmmnmsugp4ftfxveyiillqmb4tw
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/34
250
647680
1952577
1949488
2026-07-10T09:32:35Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
கொளத்தூர் மணி என்ன "தேசத் துரோகம்" செய்துவிட்டார்? சந்தன வீரப்பனுக்கு ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கருநாடக - தமிழக அரசுகள் பல உறுதிமொழிகளை அளித்ததின் பேரில் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரும் அவரோடு பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அரசாங்கத்தின் அந்த வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டு, பழ. நெடுமாறன் தலைமையில் இரு மாநில அரசுகளின் தூதுவராகச் சென்றவர்தான் கொளத்தூர் மணி. இந்தப்பயணத்தை மேற்கொள்வதற்காக எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என்று அரசாங்கம் உறுதிமொழியைத் தந்த பிறகே அவர்கள் பயணத்தை மேற்கொண்டார்கள்.
ஆனால், கடந்தகால ஆட்சி வீரப்பனுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டது; இப்போது வந்துள்ள புதிய ஆட்சியோ, பயணம் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அரசாங்கம் தந்த உறுதிமொழியைக் குப்பைக் கூடையில் தூக்கி வீசிவிட்டது!
அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு ஒரு ஆட்சிக்குரிய சட்ட ரீதியானக் கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழியும், இரகசியக் காப்பு உறுதியும் ஏற்றுக் கொண்டு பதவிக்கு வந்துள்ள ஆட்சிகள், தங்களது உறுதிமொழிகளையே மீறி செயல்படுவது தேசத் துரோகமா? அல்லது இந்த உறுதிமொழிகளை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்பது தேசத் துரோகமா?" என்று கேட்கிறோம்.
வீரப்பனுக்குக் கொடுத்த உறுதிமொழியை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும் என்று கொளத்தூர் மணி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் என்ன தேசத் துரோகம் வந்துவிட்டது. பல ஆயிரம் மைல்களைக் கொண்ட காட்டுப் பகுதியில் நடமாடும் வீரப்பன், ஓராண்டுக் காலத்துக்கு முன்
தூதுக் குழுவினர் சந்தித்த இடத்தில் அப்படியே இருப்பாரா? அந்த இடத்தைத் தெரிந்து இருந்தும் தகவல் தெரிவிக்க மறுக்கிறார் என்று வழக்குப் போடுவது நல்ல நகைச்சுவையல்லவா? வீரப்பன் ஏதோ, கொளத்தூர் மணியின் கண்காணிப்பில் இருப்பதுபோல் தேடப்படும் குற்றவாளிக்கு
அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்வது மற்றொரு நகைச்சுவையல்லவா?
ராஜ்குமார் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கருநாடகத்தில் வாழும் 40 லட்சம் தமிழர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்துகள் வரலாம் என்ற கொந்தளிப்பான சூழ்நிலையில் தமிழக அரசும், இன்று கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ள இதே காவல் துறையும் மன்றாடி வேண்டி விரும்பிக்<noinclude>{{nop}}{{rv|32 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''32'''}}}}|{{left|{{larger|'''32'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
m76sbvlk179zipfu4fwcdg4qpmoju4a
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/35
250
647681
1952578
1949489
2026-07-10T09:39:48Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கேட்ட பிறகு தானே, கொளத்தூர் மணி காட்டுக்குள் சென்றார்? எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில், வீரப்பனுடன் பேச்சு நடத்தினார்?
கருநாடகத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படாமல், வெற்றியுடன்
ராஜ்குமாரை மீட்டு வந்தது தேசத் துரோகமா? இரு மாநில அரசுகளாலும் செய்ய முடியாத ஒன்றை செய்து முடித்தது தேசத் துரோகமா? அடக்குமுறைச் சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதில், இந்த ஆட்சிகள் வெட்கப்படுவதே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்! இந்தக் கைதுக்குப் பின்னால் ஆழமான சதித் திட்டங்கள் பதுங்கி இருப்பதாகவே நாம்
சந்தேகிக்கிறோம்!
பெரியார் கொள்கைகளுக்குக் குழி தோண்ட நினைக்கும் இந்தத் துரோகங்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும். இந்துத்துவா பார்ப்பன சக்திகளை எச்சரிக்கிறோம். அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி பெரியார் இலட்சியங்களை நசுக்கி விட முடியாது!
ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரியார் கொள்கைகளை நசுக்குவதற்கு எவ்வளவோ அடக்குமுறைகளை ஏவிவிட்டு கடைசியில் தோற்றுப் போய் ஓடினார் என்பதுதான் தமிழ் நாட்டின் வரலாறு தந்தை பெரியார் திராவிடர் கழகம் - தேர்தல் கூட்டணிக் கட்சிகளில்
இணைத்துக் கொண்டு - கண்மூடித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு அல்ல. பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு - எதிர்ப்பு என்பதே இதன் பார்வையாக இருக்கும். இத்தகைய நடவடிக்கைகளால் இந்த இயக்கத்தைத் தடம் புரளச் செய்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்களை சிறைப்படுத்தலாம், ஆனால் தத்துவங்களை சிறைப்படுத்தி விட முடியாது. சமூகத் தேவைகள் இருக்கும் வரை அதற்கான தத்துவமும் வாழ்ந்தே தீரும். அடக்கு முறையோடு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இலட்சியப் பயணம் துவங்குகிறது. பயணம் தொடரும்; தொய்வின்றி தொடரும். இது உறுதி
{{right|– ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' ஜூன்-ஜூலை 2001 இதழ்}}<noinclude>{{nop}}{{rv|33 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''33'''}}}}|{{left|{{larger|'''33'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eeeh520qkwg4oo7mnwskxlmnhenyqsn
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/36
250
647909
1952579
1949911
2026-07-10T09:45:01Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>எழுச்சி பெற்றோம் பயணம் துவங்குவோம்</b>}}}}
{{li|'வீ|2em}}றுகொண்டு எழுகிறது பெரியார் பெரும்படை!' என்ற முழக்கத்தை முன்வைத்து, 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' நடத்திய தொடக்கவிழா மாநாடு அந்த முழக்கத்தின்
உள்ளடக்கத்தை நாட்டுக்கு உணர்த்தியிருப்பதாகவே
நம்புகிறோம். மிகப்பெரும் அரசியல் கட்சிகள் மட்டுமே
நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய தேனாம்பேட்டை காமராசர்
அரங்கில், மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அரங்கம்
முழுவதும் நிரம்பி வழிந்ததையும், அரங்கத்திற்கு வெளியே
பெரும் கூட்டம் திரண்டிருந்ததையும், மாநாட்டை நேரில் பார்த்த அனைவருமே அறிவார்கள். பெரியாரிய சிந்தனையாளர்கள், மொழி, இன உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்ட இயக்கத்தினர், முற்போக்கு சிந்தனையாளர்களிடம் இந்த மாநாடு நல்ல தாக்கத்தினையும், நம்பிக்கையினையும் உருவாக்கியிருப்பதை உணருகிறோம். அவர்களே இந்த உணர்வை நேரிலும், தொலைபேசியிலும், கடிதங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகிறார்கள். பெரியார் இயக்கத்தில் நேரடியாகப் பங்குபெற்று செயலாற்றும் தோழர்களின் எண்ணிக்கையைவிடப் பன்மடங்கு
எண்ணிக்கையில், பெரியார் இயக்கத்துக்கு வெளியே இருந்து
ஆதரவு தரும் உணர்வாளர்கள் இருந்து வருகிறார்கள். உண்மையில் பெரியார் இயக்கத்தின் பலமே இந்த சக்திகள் தான். பல்வேறு அரசியல் கட்சிகளிலும், தனியார் பணிகளிலும், வர்த்தகத் துறைகளிலும், இலக்கியத் துறைகளிலும், தகவல் தொடர்புத்துறைகளிலும், உழைப்பாளிகள், விவசாயிகளிடையேயும் இந்த பெரியாரிய ஆதரவு சக்திகள் இருந்து வருகின்றன. இது பெரியாரியத்தின் உயிர்த்துடிப்பான இலட்சியங்களின் சமூகத் தேவைகளின் மீது கட்டமைக்கப்பட்ட உறுதியான ஆதரவுத் தளமாகும். இந்த வலிமையான, ஆதரவு சக்திகளின்<noinclude>{{nop}}{{rv|34 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''34'''}}}}|{{left|{{larger|'''34'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2u1m7op7dnpmvlxnszcsfq7l3m50lku
1952580
1952579
2026-07-10T09:46:45Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1952580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>எழுச்சி பெற்றோம் பயணம் துவங்குவோம்</b>}}}}
{{li|'வீ|2em}}றுகொண்டு எழுகிறது பெரியார் பெரும்படை!' என்ற முழக்கத்தை முன்வைத்து, 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' நடத்திய தொடக்கவிழா மாநாடு அந்த முழக்கத்தின் உள்ளடக்கத்தை நாட்டுக்கு உணர்த்தியிருப்பதாகவே நம்புகிறோம். மிகப்பெரும் அரசியல் கட்சிகள் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய தேனாம்பேட்டை காமராசர் அரங்கில், மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்ததையும், அரங்கத்திற்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டிருந்ததையும், மாநாட்டை நேரில் பார்த்த அனைவருமே அறிவார்கள். பெரியாரிய சிந்தனையாளர்கள், மொழி, இன உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்ட இயக்கத்தினர், முற்போக்கு சிந்தனையாளர்களிடம் இந்த மாநாடு நல்ல தாக்கத்தினையும், நம்பிக்கையினையும் உருவாக்கியிருப்பதை உணருகிறோம். அவர்களே இந்த உணர்வை நேரிலும், தொலைபேசியிலும், கடிதங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகிறார்கள். பெரியார் இயக்கத்தில் நேரடியாகப் பங்குபெற்று செயலாற்றும் தோழர்களின் எண்ணிக்கையைவிடப் பன்மடங்கு எண்ணிக்கையில், பெரியார் இயக்கத்துக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் உணர்வாளர்கள் இருந்து வருகிறார்கள். உண்மையில் பெரியார் இயக்கத்தின் பலமே இந்த சக்திகள் தான். பல்வேறு அரசியல் கட்சிகளிலும், தனியார் பணிகளிலும், வர்த்தகத் துறைகளிலும், இலக்கியத் துறைகளிலும், தகவல் தொடர்புத்துறைகளிலும், உழைப்பாளிகள், விவசாயிகளிடையேயும் இந்த பெரியாரிய ஆதரவு சக்திகள் இருந்து வருகின்றன. இது பெரியாரியத்தின் உயிர்த்துடிப்பான இலட்சியங்களின் சமூகத் தேவைகளின் மீது கட்டமைக்கப்பட்ட உறுதியான ஆதரவுத் தளமாகும். இந்த வலிமையான, ஆதரவு சக்திகளின்<noinclude>{{nop}}{{rv|34 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''34'''}}}}|{{left|{{larger|'''34'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bsfntefs2fc7mcz9rch3y0sluue6xlt
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/320
250
648440
1952536
1952114
2026-07-10T05:18:46Z
Subisena
16382
1952536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சட்டம் தனது கடமையைச் செய்தது!</b>}}}}
{{li|இ|2em}}ந்திய அரசியல் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று பிரகடனம் செய்து, 'மனு தர்ம'த்தையே தங்களது சட்ட விதிகளாக்கிக் கொண்ட நிறுவனம் காஞ்சிபுரம் சங்கர மடம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். காஞ்சி மடம் மட்டும் விதிவிலக்காக முடியாது என்று வரலாற்றில் முதன் முறையாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா! தமிழக முதல்வரின் கொள்கைகளில் - தாம் அடிப்படையிலே முரண்பட்டவர்கள் தான் இதிலே ஒளிவு மறைவே கிடையாது. ஆனால், சங்கராச்சாரியைக் கைது செய்துள்ள அவரது துணிவு மிக்க சாதனை என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்! தமிழக முதல்வரை நாம், இதற்காக உளம் திறந்து பாராட்டுகிறோம்! கைதுக்கான காரணங்கள் உள்நோக்கங்கள் என்ன என்று ஆராய்ச்சிகளைவிட நிகழ்ந்துள்ள துணிவான நடவடிக்கையைத்தான் நாம் பார்க்க விரும்புகிறோம். இந்த முக்கியப் பிரச்சினையில், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், தலித் அமைப்புகள், ஒரே குரலாக எழுந்து – கட்சி அரசியல்களை ஒதுக்கிவிட்டு, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, இந்தக் கைது நியாயமானதுதான் என்று, ஓங்கி முழங்கி வருவது, நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. 'சன்' தொலைக் காட்சியும் - 'ஜெயா' தொலைக்காட்சியும் தமிழக வரலாற்றில், முதன்முறையாக ஒரே குரலாக ஒலித்து வருவதும் இந்தப் பிரச்சினையில் தான்; இதுவே பெரியார் மண்ணின் 'தனித்தன்மை!'
போராட்டம் நடத்தும் இந்து முன்னணியினர்கூட உண்மையிலே அவர்கள் 'இந்து'க்களின் நலனுக்காக பாடுபடுவோராக இருந்தால், இந்தப் பிரச்சினையில் சங்கராச் சாரிக்கு ஆதரவாக வெளியே வந்திருக்கக் கூடாது. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள்ளே கொடூரமாக, கொலை<noinclude>{{nop}}{{rv|318 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''318'''}}}}|{{left|{{larger|'''318'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
41tdlc7et1fai8l7sl9ec80bf6x8i5d
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/298
250
648453
1952430
1951912
2026-07-09T13:04:55Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
ஜெயலலிதா அரசு தந்த பரிசு இந்த சிறை, கருநாடக அரசும் விட்டு வைக்கவில்லை. 2002 மார்ச் மாதம் 9ஆம் தேதி, வீட்டிலிருந்து புறப்பட்டு, மேட்டூரில் கழகப் படிப்பகத்துக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்த கழகத் தலைவரை, இடைமறித்துக் ‘கடத்திப் போய்' பல நாட்களுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுள்ளதை அறிவித்தார்கள். கடுமையான - மிரள வைக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ், அடுக்கடுக்கான பொய் வழக்குகளைச் சுமத்தி, கருநாடக மாநிலத்தில், பல்வேறு சிறைகளுக்கும் மாற்றி மாற்றிப் பந்தாடியது கருநாடக அரசு. ஓராண்டு 14 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 2004 மார்ச் 25ஆம் தேதி பிணையில் விடுதலையாகி, இன்று வரை மாதம்தோறும், வழக்கிற்காக மைசூர் நீதிமன்றத்துக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போது மீண்டும், கொளத்தூர் காவல்துறை, கழகத் தலைவர் மீதும், தோழர்கள் மீதும் அப்பட்டமான ஒரு பொய் வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபரிடமிருந்து, கழகத் தலைவருக்கு எதிரான பொய்யான வாக்கு மூலங்களைப் பெற்று, தோழர்களையும், கழகத் தலைவரையும் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். கழகத் தலைவரின் நாகரீகமான பண்பார்ந்த அணுகுமுறையை காவல்துறையினர் உட்பட அனைத்து அதிகாரிகளும் நன்றாகவே உணர்ந்தவர்கள். ஆனாலும், காவல்துறை ஏன் இப்படி ஒரு பொய் வழக்கை உருவாக்குகிறது? சில உண்மைகளை நாம் தமிழ்நாட்டு மக்கள் முன் வைக்கிறோம்.
மேட்டூரில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘மால்கோ' என்ற அலுமினியத் தொழிற்சாலை, உள்ளூர் மக்களுக்கு வேலைகளைத் தர மறுத்தது. இந்தத் தொழிற்சாலையின் சுற்றுச் சூழல் மாசுகளை சுவாசித்துக் கொண்டு வாழ்ந்து வரும் உள்ளூர் மக்களுக்கு வேலை தர மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த நிர்வாகத்தை எதிர்த்து, கடந்த ஜூலை 9 ஆம் தேதி, தொழிலாளர்களை ஒன்று திரட்டி, கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் கட்டளையை ஏற்று, காவல்துறையினர். நள்ளிரவில் கழகத் தோழர்களை வீடுகளில் கைது செய்தனர். எதிர்ப்பு கடுமையாகி வருவதை உணர்ந்த நிர்வாகம் கழகத் தலைவரோடு சமரசம் பேச முன் வந்தது. உரிமைப் போராட்டத்தைக் காவல்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கி விடலாம் என்று, நிர்வாகம் போட்டத் திட்டங்கள் வெற்றி பெறவில்லை.
இதே போல் மேட்டூரில், பார்ப்பன நிர்வாகத்தில் நடந்து வருகிற ‘கெம்ப்ளாஸ்ட்' எனும் ரசாயனத் தொழிற்சாலை இது. மேட்டூர் பகுதியை மாசுபடுத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறும் 'விஷ வாயு' தொடர்ந்து அப்பகுதி மக்களைப் பாதித்து வருவதும், நிர்வாகம் அவைகளை மூடி மறைப்பதும் நீண்ட காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த<noinclude>{{nop}}{{rv|296 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''296'''}}}}|{{left|{{larger|'''296'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hzo9su9xnvfmesh2xnr4ntj30hy7bhq
1952433
1952430
2026-07-09T13:05:46Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
ஜெயலலிதா அரசு தந்த பரிசு இந்த சிறை, கருநாடக அரசும் விட்டு வைக்கவில்லை. 2002 மார்ச் மாதம் 9ஆம் தேதி, வீட்டிலிருந்து புறப்பட்டு, மேட்டூரில் கழகப் படிப்பகத்துக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்த கழகத் தலைவரை, இடைமறித்துக் ‘கடத்திப் போய்' பல நாட்களுக்குப் பிறகு, கைது செய்யப்பட்டுள்ளதை அறிவித்தார்கள். கடுமையான - மிரள வைக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ், அடுக்கடுக்கான பொய் வழக்குகளைச் சுமத்தி, கருநாடக மாநிலத்தில், பல்வேறு சிறைகளுக்கும் மாற்றி மாற்றிப் பந்தாடியது கருநாடக அரசு. ஓராண்டு 14 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 2004 மார்ச் 25ஆம் தேதி பிணையில் விடுதலையாகி, இன்று வரை மாதம்தோறும், வழக்கிற்காக மைசூர் நீதிமன்றத்துக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போது மீண்டும், கொளத்தூர் காவல்துறை, கழகத் தலைவர் மீதும், தோழர்கள் மீதும் அப்பட்டமான ஒரு பொய் வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபரிடமிருந்து, கழகத் தலைவருக்கு எதிரான பொய்யான வாக்கு மூலங்களைப் பெற்று, தோழர்களையும், கழகத் தலைவரையும் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். கழகத் தலைவரின் நாகரீகமான பண்பார்ந்த அணுகுமுறையை காவல்துறையினர் உட்பட அனைத்து அதிகாரிகளும் நன்றாகவே உணர்ந்தவர்கள். ஆனாலும், காவல்துறை ஏன் இப்படி ஒரு பொய் வழக்கை உருவாக்குகிறது? சில உண்மைகளை நாம் தமிழ்நாட்டு மக்கள் முன் வைக்கிறோம்.
மேட்டூரில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘மால்கோ' என்ற அலுமினியத் தொழிற்சாலை, உள்ளூர் மக்களுக்கு வேலைகளைத் தர மறுத்தது. இந்தத் தொழிற்சாலையின் சுற்றுச் சூழல் மாசுகளை சுவாசித்துக் கொண்டு வாழ்ந்து வரும் உள்ளூர் மக்களுக்கு வேலை தர மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த நிர்வாகத்தை எதிர்த்து, கடந்த ஜூலை 9 ஆம் தேதி, தொழிலாளர்களை ஒன்று திரட்டி, கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் கட்டளையை ஏற்று, காவல்துறையினர். நள்ளிரவில் கழகத் தோழர்களை வீடுகளில் கைது செய்தனர். எதிர்ப்பு கடுமையாகி வருவதை உணர்ந்த நிர்வாகம் கழகத் தலைவரோடு சமரசம் பேச முன் வந்தது. உரிமைப் போராட்டத்தைக் காவல்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கி விடலாம் என்று, நிர்வாகம் போட்டத் திட்டங்கள் வெற்றி பெறவில்லை.
இதே போல் மேட்டூரில், பார்ப்பன நிர்வாகத்தில் நடந்து வருகிற ‘கெம்ப்ளாஸ்ட்' எனும் ரசாயனத் தொழிற்சாலை இது. மேட்டூர் பகுதியை மாசுபடுத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறும் 'விஷ வாயு' தொடர்ந்து அப்பகுதி மக்களைப் பாதித்து வருவதும், நிர்வாகம் அவைகளை மூடி மறைப்பதும் நீண்ட காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த<noinclude>{{nop}}{{rv|296 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''296'''}}}}|{{left|{{larger|'''296'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2fupul8i9zf21158hq2c4m0s6wush2t
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/299
250
648454
1952452
1951913
2026-07-09T14:15:44Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
ஜூலை 18ஆம் தேதி இந்த ஆலையின் மூன்றாவது பிரிவு தொழிற்சாலையில் விபத்தின் காரணமாக, குளோரின் வாயு கசிந்து, தொழிற்சாலையை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தில் 26 பேரைக் கடுமையாகப் பாதித்தது. அதில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையும் அடங்கும். ஆலை பார்ப்பன நிர்வாகம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியையும் செய்யாத தோடு, மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வசதி செய்வதற்குக்கூட மனிதாபிமானமின்றி மறுத்தது. விபத்து நடந்த உடனேயே மாவட்டக் காவல்துறை அதிகாரி, "இது வழக்கமானதுதான்; பெரிய பாதிப்பு எதுவுமில்லை” என்று கெம்பிளாஸ்ட் பார்ப்பன நிறுவனத்தின் ஊதுகுழலாக மாறி பேட்டி அளித்தார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு வலியுறுத்தியது, தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போய்க் கொண்டிருந்த காவல்துறை, இந்த மாதத்திலேயே நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தட்டி கேட்டவுடன், பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி, இந்தப் பொய் வழக்கை புனைந்திருப்பதாகவே நாம் கருதுகிறோம். உண்மையான கிரிமினல் குற்றவாளிகளைக் காப்பாற்றிக்கொண்டும் அவர்களைப் பயன்படுத்தியும் சமுதாயப் பணியாற்றும் தோழர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகளைப் போடும் காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கொளத்தூர் மணி - ஒரு தனி மனிதரல்ல; கொள்கைக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் பெரியார் இயக்கத்தின் வழி காட்டும் தலைவர்: ஆயிரமாயிரம் லட்சிய வீரர்களின் இதயங்களில் சிறைப்பட்டிருக்கும் ‘சமூகநீதிப்' போராளி! இந்தப் பொய் வழக்குகளால், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பது காவல்துறை தான். பெரியார் வலியுறுத்திய நன்றி பாராட்டாத தொண்டைத் தொடரும் உண்மைப் பெரியாரியல்வாதிகளை, இத்தகைய மிரட்டல்களால் திசை திருப்பிவிட முடியாது என்பதைக் காவல்துறை புரிந்து கொள்ளட்டும்! காவல் துறையின் இந்த அடக்குமுறைகளை கழகம் உறுதியோடு சந்திக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 12.08.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|297 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''297'''}}}}|{{left|{{larger|'''297'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gafby7mvaq9j33qu4roiq0tjhtc1vc3
1952481
1952452
2026-07-09T15:24:22Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
ஜூலை 18ஆம் தேதி இந்த ஆலையின் மூன்றாவது பிரிவு தொழிற்சாலையில் விபத்தின் காரணமாக, குளோரின் வாயு கசிந்து, தொழிற்சாலையை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தில் 26 பேரைக் கடுமையாகப் பாதித்தது. அதில் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையும் அடங்கும். ஆலை பார்ப்பன நிர்வாகம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியையும் செய்யாத தோடு, மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வசதி செய்வதற்குக்கூட மனிதாபிமானமின்றி மறுத்தது. விபத்து நடந்த உடனேயே மாவட்டக் காவல்துறை அதிகாரி, "இது வழக்கமானதுதான்; பெரிய பாதிப்பு எதுவுமில்லை” என்று கெம்பிளாஸ்ட் பார்ப்பன நிறுவனத்தின் ஊதுகுழலாக மாறி பேட்டி அளித்தார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு வலியுறுத்தியது, தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போய்க் கொண்டிருந்த காவல்துறை, இந்த மாதத்திலேயே நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தட்டி கேட்டவுடன், பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி, இந்தப் பொய் வழக்கை புனைந்திருப்பதாகவே நாம் கருதுகிறோம். உண்மையான கிரிமினல் குற்றவாளிகளைக் காப்பாற்றிக்கொண்டும் அவர்களைப் பயன்படுத்தியும் சமுதாயப் பணியாற்றும் தோழர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகளைப் போடும் காவல்துறையின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கொளத்தூர் மணி - ஒரு தனி மனிதரல்ல; கொள்கைக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் பெரியார் இயக்கத்தின் வழி காட்டும் தலைவர்: ஆயிரமாயிரம் லட்சிய வீரர்களின் இதயங்களில் சிறைப்பட்டிருக்கும் ‘சமூகநீதிப்' போராளி! இந்தப் பொய் வழக்குகளால், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பது காவல்துறை தான். பெரியார் வலியுறுத்திய நன்றி பாராட்டாத தொண்டைத் தொடரும் உண்மைப் பெரியாரியல்வாதிகளை, இத்தகைய மிரட்டல்களால் திசை திருப்பிவிட முடியாது என்பதைக் காவல்துறை புரிந்து கொள்ளட்டும்! காவல் துறையின் இந்த அடக்குமுறைகளை கழகம் உறுதியோடு சந்திக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 12.08.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|297 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''297'''}}}}|{{left|{{larger|'''297'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2vbeprmt4aoeffw0obq2j3lj34zzbp5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/300
250
648455
1952456
1951914
2026-07-09T14:24:31Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>வரவேற்கிறோம்! மகிழ்கிறோம்!</b>}}}}
{{li|“வி|2em}}டுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாகம், சென்னையில் ஒரே மேடையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தோன்றி பேசியிருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் ஜாதிய முரண்பாடுகள் தகர்க்கப்பட்டு தமிழர் ஒற்றுமை முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று விரும்பும், உணர்வுள்ள தமிழர் ஒவ்வொருவருக்கும், இந்த இணைப்புச் செய்தி, காதுகளில் தேன் பாய்ச்சியிருக்கிறது. 'தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில், பார்ப்பனரல்லாதார் உரிமைக்காக - 1916இல், வெள்ளை அறிக்கை பிரகடனம் வெளியிட்ட சர்.பிட்டி தியாகராயர் பெயரில் அமைந்துள்ள அரங்கில், மிகப் பொருத்தமாக, இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. தமிழர் பண்பாடுகளின் மீது தொடர்ந்து நடக்கும் படை எடுப்புகளைத் தடுத்து, தமிழர் ஒற்றுமையை மீட்டெடுக்கவும், தமிழைப் பாது காக்கவும், இணைந்து போராடுவோம் என்ற பிரகடனத்தை, இருவருமே வெளியிட்டிருக்கிறார்கள்.
"வெவ்வேறு தளங்களில் நின்று நாங்கள் போராடி வந்தாலும் ஓட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஏதோ சில சூழ்நிலைகள் எங்களைச் சேரவிடாமல் செய்தன. அதில் அரசியலும் ஒன்று. அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். இனி இரு இயக்கங்களும் சேர்ந்து தமிழைக் காப்பாற்ற களத்தில் நின்று<noinclude>{{nop}}{{rv|298 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''298'''}}}}|{{left|{{larger|'''298'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2esp81v7sxfdm15mpfkpi9n2mtj6chl
1952457
1952456
2026-07-09T14:25:36Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>வரவேற்கிறோம்! மகிழ்கிறோம்!</b>}}}}
{{li|“வி|2em}}டுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாகம், சென்னையில் ஒரே மேடையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தோன்றி பேசியிருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் ஜாதிய முரண்பாடுகள் தகர்க்கப்பட்டு தமிழர் ஒற்றுமை முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று விரும்பும், உணர்வுள்ள தமிழர் ஒவ்வொருவருக்கும், இந்த இணைப்புச் செய்தி, காதுகளில் தேன் பாய்ச்சியிருக்கிறது. 'தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில், பார்ப்பனரல்லாதார் உரிமைக்காக - 1916இல், வெள்ளை அறிக்கை பிரகடனம் வெளியிட்ட சர்.பிட்டி தியாகராயர் பெயரில் அமைந்துள்ள அரங்கில், மிகப் பொருத்தமாக, இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. தமிழர் பண்பாடுகளின் மீது தொடர்ந்து நடக்கும் படை எடுப்புகளைத் தடுத்து, தமிழர் ஒற்றுமையை மீட்டெடுக்கவும், தமிழைப் பாது காக்கவும், இணைந்து போராடுவோம் என்ற பிரகடனத்தை, இருவருமே வெளியிட்டிருக்கிறார்கள்.
"வெவ்வேறு தளங்களில் நின்று நாங்கள் போராடி வந்தாலும் ஓட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஏதோ சில சூழ்நிலைகள் எங்களைச் சேரவிடாமல் செய்தன. அதில் அரசியலும் ஒன்று. அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். இனி இரு இயக்கங்களும் சேர்ந்து தமிழைக் காப்பாற்ற களத்தில் நின்று<noinclude>{{nop}}{{rv|298 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''298'''}}}}|{{left|{{larger|'''298'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rqanxji9htc23zzdgxkkoush47soo79
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/301
250
648456
1952466
1951915
2026-07-09T14:46:49Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
போராடும். நாட்டில் எங்கே இருக்கிறது தமிழ்? விளம்பரப் பலகைகளில் தமிழ் இல்லை. கோயில் வழிபாட்டில் தமிழ் இல்லை; ஒரு கோயிலைத் தேர்ந்தெடுத்துப் போராடலாம். திருமணத்தில் தமிழ் இல்லை; அங்கே அமைதியாக நமது எதிர்ப்பைக் காட்டலாம் நானும் திருமாவளவனும் தமிழன்னையின் புதல்வர்கள், உணர்வால் ஒன்றுபட்ட பச்சைத் தமிழர்கள். இருவரும் சேர்வதன் மூலம் எதிர்காலத்தில் ஜாதிக்க விரும்புகிறோம்."
- இது டாக்டர் ராமதாசின் உளம் திறந்த பேச்சு. “நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்த்து பூரிப்படையும் தமிழின உணர்வாளர்கள் இந்த ஒற்றுமை நீடித்திருக்குமா என்று அய்யப்படுகின்றனர். முரண்பாடுகள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. கருத்து ஒருமிக்கும்போது களத்தில் ஒற்றுமை வந்தே தீரும். இந்த மண்ணுக்காக, மக்களுக்காக, தமிழுக்காக நானும் டாக்டர் ராமதாசும் போராடத் தயார். எங்களுக்குள் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு. பங்காளிச் சண்டையால் தான் நாம் வீழ்ந்தோம். தமிழர் ஒற்றுமைக்கு ஜாதிதான் சிக்கல். ஜாதிக்காக அரிவாள் ஏந்துகிற நிலை மாறி, இனத்துக்காகவும் நாட்டுக்காகவும் இளைஞர்கள் பாடுபடும் நிலை உருவாக வேண்டும். தமிழினத்தை மண்ணை, மொழியைப் பாதுகாக்க நாம் ஜாதியைத் தியாகம் செய்ய வேண்டும்."
- இது விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தோழர் திருமாவளவன் விடுத்துள்ள அறைகூவல்!
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமும், தாழ்த்தப்பட்ட சமுதாயமும் - சமூக நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கீழாக, 'தீண்டாமை' எனும் சுமையையும் சுமந்து கொண்டு நிற்கிறார்கள். இரண்டு சமூகத்தினரையும் பார்ப்பனப் பண்பாடு தீண்டப்படாதவர்களாகவே வைத்திருக்கிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களின் சமூக உரிமைகளை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வந்தாக வேண்டும். தங்களின் உண்மையான எதிரி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இல்லை. அவர்களிடம் புகுந்து நிற்கும் பார்ப்பனியத்தால்தான் ஜாதி உணர்வு அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது என்ற புரிதல் உணர்வு, தலித் மக்களுக்கு வரவேண்டும். காலம் காலமாக பகை முரண்பாடுகளை உள்ளத்தில் தாங்கி நிற்கும் சகோதரர்களிடம் இந்தப் புரிதல் தளத்தை விரிவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும், நமது மதிப்புக்குரிய ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் தோழர் திருமாவளவனுக்கும், தோழர் ராமதாசுக்கும் இருக்கிறது. இணைந்து களத்தில் நிற்கக் குரல் கொடுத்துள்ள
{{Right|<b>விடுதலை இராசேந்திரன் 299</b>}}<noinclude>{{nop}}{{rv|299 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''299'''}}}}|{{left|{{larger|'''299'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bpwk7h1put96ugc4qf526x84i9ov0p0
1952467
1952466
2026-07-09T14:47:50Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
போராடும். நாட்டில் எங்கே இருக்கிறது தமிழ்? விளம்பரப் பலகைகளில் தமிழ் இல்லை. கோயில் வழிபாட்டில் தமிழ் இல்லை; ஒரு கோயிலைத் தேர்ந்தெடுத்துப் போராடலாம். திருமணத்தில் தமிழ் இல்லை; அங்கே அமைதியாக நமது எதிர்ப்பைக் காட்டலாம் நானும் திருமாவளவனும் தமிழன்னையின் புதல்வர்கள், உணர்வால் ஒன்றுபட்ட பச்சைத் தமிழர்கள். இருவரும் சேர்வதன் மூலம் எதிர்காலத்தில் ஜாதிக்க விரும்புகிறோம்."
- இது டாக்டர் ராமதாசின் உளம் திறந்த பேச்சு. “நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்த்து பூரிப்படையும் தமிழின உணர்வாளர்கள் இந்த ஒற்றுமை நீடித்திருக்குமா என்று அய்யப்படுகின்றனர். முரண்பாடுகள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. கருத்து ஒருமிக்கும்போது களத்தில் ஒற்றுமை வந்தே தீரும். இந்த மண்ணுக்காக, மக்களுக்காக, தமிழுக்காக நானும் டாக்டர் ராமதாசும் போராடத் தயார். எங்களுக்குள் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு. பங்காளிச் சண்டையால் தான் நாம் வீழ்ந்தோம். தமிழர் ஒற்றுமைக்கு ஜாதிதான் சிக்கல். ஜாதிக்காக அரிவாள் ஏந்துகிற நிலை மாறி, இனத்துக்காகவும் நாட்டுக்காகவும் இளைஞர்கள் பாடுபடும் நிலை உருவாக வேண்டும். தமிழினத்தை மண்ணை, மொழியைப் பாதுகாக்க நாம் ஜாதியைத் தியாகம் செய்ய வேண்டும்."
- இது விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தோழர் திருமாவளவன் விடுத்துள்ள அறைகூவல்!
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமும், தாழ்த்தப்பட்ட சமுதாயமும் - சமூக நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கீழாக, 'தீண்டாமை' எனும் சுமையையும் சுமந்து கொண்டு நிற்கிறார்கள். இரண்டு சமூகத்தினரையும் பார்ப்பனப் பண்பாடு தீண்டப்படாதவர்களாகவே வைத்திருக்கிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களின் சமூக உரிமைகளை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வந்தாக வேண்டும். தங்களின் உண்மையான எதிரி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இல்லை. அவர்களிடம் புகுந்து நிற்கும் பார்ப்பனியத்தால்தான் ஜாதி உணர்வு அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது என்ற புரிதல் உணர்வு, தலித் மக்களுக்கு வரவேண்டும். காலம் காலமாக பகை முரண்பாடுகளை உள்ளத்தில் தாங்கி நிற்கும் சகோதரர்களிடம் இந்தப் புரிதல் தளத்தை விரிவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும், நமது மதிப்புக்குரிய ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் தோழர் திருமாவளவனுக்கும், தோழர் ராமதாசுக்கும் இருக்கிறது. இணைந்து களத்தில் நிற்கக் குரல் கொடுத்துள்ள<noinclude>{{nop}}{{rv|299 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''299'''}}}}|{{left|{{larger|'''299'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qpajfw3mtvdarnhxzlhqzfjug7m1xz7
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/302
250
648457
1952469
1952239
2026-07-09T14:52:43Z
Subisena
16382
1952469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>
இரண்டு தலைவர்களும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, இணைந்து பேச வேண்டும்; பகை உறவுகளை நட்புறவாக மாற்ற வேண்டும்.
தமிழால் இணைந்தாலும், ஜாதியால் பிளவுபடும்போது, தமிழர் ஒற்றுமை என்பது வெற்று முழக்கமாகிவிடும். தமிழர்களாக இணைந்து தமிழுக்காகக் குரல் கொடுக்கும் போதுதான், மொழி உரிமைப் போராட்டம் கூட முழுமை பெறும்.
தமிழர் ஒற்றுமையை சிதைத்து, ஜாதிகளால் கூறுபோட்ட கல்வி, சமூக உரிமைகளைப் பறித்த பார்ப்பனிய இந்து மதம் தான் தமிழ் வளர்ச்சியையும் தடுத்தது. தமிழ் தமிழர்களின் பாடமொழியாக, நீதிமன்ற மொழியாக, கலை பண்பாடுகளின் மொழியாக, ஆட்சிகளின் மொழியாக, எல்லாவற்றையும்விட அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஜாதிகளற்ற பகுத்தறிவுப் பண்பாட்டை நாம் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அந்தப் பண்பாடுகளை வளர்க்கும் போதுதான், சீரழிவு சினிமா கலாச்சாரங்களையும்கூட நாம் தடுத்து நிறுத்த முடியும்.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 26.08.2004</b>}}<noinclude>{{nop}}{{rv|300 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''300'''}}}}|{{left|{{larger|'''300'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9xh9fanqgaxvp8e6vur1bw305o26pj6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/217
250
648601
1952427
1952401
2026-07-09T13:02:46Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இருக்கின்ற இடஒதுக்கீட்டையே, செயலற்றதாக்கி விட்டது வாஜ்பாய் ஆட்சி. எனவேதான், தனியார் துறையில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மத்திய சமூகநலத்துறை ஒரு மசோதாவை தயாரித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதே கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மா னங்களும் வந்தன. இதற்கான எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல், வாஜ்பாய் அரசு, ராஜஸ்தான் மாநிலத்திலே பார்ப்பனச் சங்கம் ஒரு தீர்மானம் போட்டவுடன், இல்லளவு அவசரமாக பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏமாளிகள் என்று, மத்திய அரசு கருதுகிறது போலும்!
ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் - எல்லா ஜாதி ஏழைகளுக்கும் ஒதுக்கீடு செய்யாமல் முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வது ஏன் – என்ற கேள்வி எழத்தானே செய்யும்?
மண்டல் பரிந்துரையும், வாஜ்பாய் ஆட்சி நியமித்த வெங்கடாசலய்யா குழுவும், தனியார்துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது. மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் முறையாகப் பூர்த்தி செய்யாததோடு. புதிய வேலை வாய்ப்புகளுக்கும் தடை போட்டுள்ளது வாஜ்பாய் ஆட்சி. இந்த நிலையில் பார்ப்பனர்களை திருப்திப்படுத்த, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி துடிப்பதும், இதற்கு காங்கிரஸ் கட்சி துணை போவதும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இதைக் கண்டிக்க முன் வரவேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் சார்பில் வற்புறுத்துகிறோம்.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.10.2003</b>}}
{{Right|<b>விடுதலை இராசேந்திரன் 215</b>
}}<noinclude></noinclude>
2xkw0qr1v0w1dyrcp81eeaidul5x3pv
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/218
250
648603
1952403
1952402
2026-07-09T12:00:32Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b></b>}}}}கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும்
{{liகி||2em}}ராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட
வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமையாகப் பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் பஞ்சாயத்துக்கள் ஜாதிவெறி பஞ்சாயத்துக்களாகவும், ஆண் ஆதிக்கப் பஞ்சாயத்துக் களாகவுமே செயல்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரியதை கிராமப் பஞ்சாயத்து ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாத நிலையில் பஞ்சாயத்தார் முன், நாள் முழுதும் அந்தப் பெண்ணை ‘தோப்புக் கரணம்' போடச் சொல்லி, அபராதத் தொகையை 19,000 ஆகக் குறைத்தார்களாம். முசிறி பெண்கள் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் தரவே, வழக்கு நீதிமன்றம் போனது. பஞ்சாயத்தாரும், கணவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதி மன்றம், இந்தப் பஞ்சாயத்துக்களை தடை செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
திருவண்ணாமலை அருகே ஒரு தலித் இளைஞர், வன்னியர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த “குற்றத்துக்காக”, பையனின் தந்தையை, கிராமப் பஞ்சாயத்து, மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறது. ஊரை விட்டு ஓடிப்போன காதலர்களை மீண்டும் ஊருக்கு திரும்பச் செய்யுமாறு மிரட்டியிருக்கிறது.
216 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|216 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''216'''}}}}|{{left|{{larger|'''216'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n3pp7db7bfjt8nel3sfnjp2mr5ss4c3
1952404
1952403
2026-07-09T12:01:55Z
Dharshika2026
16400
1952404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும்</b>}}}}
{{liகி||2em}}ராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட
வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமையாகப் பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் பஞ்சாயத்துக்கள் ஜாதிவெறி பஞ்சாயத்துக்களாகவும், ஆண் ஆதிக்கப் பஞ்சாயத்துக் களாகவுமே செயல்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரியதை கிராமப் பஞ்சாயத்து ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாத நிலையில் பஞ்சாயத்தார் முன், நாள் முழுதும் அந்தப் பெண்ணை ‘தோப்புக் கரணம்' போடச் சொல்லி, அபராதத் தொகையை 19,000 ஆகக் குறைத்தார்களாம். முசிறி பெண்கள் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் தரவே, வழக்கு நீதிமன்றம் போனது. பஞ்சாயத்தாரும், கணவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதி மன்றம், இந்தப் பஞ்சாயத்துக்களை தடை செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
திருவண்ணாமலை அருகே ஒரு தலித் இளைஞர், வன்னியர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த “குற்றத்துக்காக”, பையனின் தந்தையை, கிராமப் பஞ்சாயத்து, மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறது. ஊரை விட்டு ஓடிப்போன காதலர்களை மீண்டும் ஊருக்கு திரும்பச் செய்யுமாறு மிரட்டியிருக்கிறது.
216 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|216 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''216'''}}}}|{{left|{{larger|'''216'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hzni0kvemx8c7jqklrffwy67431b2t2
1952405
1952404
2026-07-09T12:04:45Z
Dharshika2026
16400
1952405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும்</b>}}}}
{{li|கி|2em}}ராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட
வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமையாகப் பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் பஞ்சாயத்துக்கள் ஜாதிவெறி பஞ்சாயத்துக்களாகவும், ஆண் ஆதிக்கப் பஞ்சாயத்துக் களாகவுமே செயல்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரியதை கிராமப் பஞ்சாயத்து ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாத நிலையில் பஞ்சாயத்தார் முன், நாள் முழுதும் அந்தப் பெண்ணை ‘தோப்புக் கரணம்' போடச் சொல்லி, அபராதத் தொகையை 19,000 ஆகக் குறைத்தார்களாம். முசிறி பெண்கள் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் தரவே, வழக்கு நீதிமன்றம் போனது. பஞ்சாயத்தாரும், கணவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதி மன்றம், இந்தப் பஞ்சாயத்துக்களை தடை செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
திருவண்ணாமலை அருகே ஒரு தலித் இளைஞர், வன்னியர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த “குற்றத்துக்காக”, பையனின் தந்தையை, கிராமப் பஞ்சாயத்து, மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறது. ஊரை விட்டு ஓடிப்போன காதலர்களை மீண்டும் ஊருக்கு திரும்பச் செய்யுமாறு மிரட்டியிருக்கிறது.
216 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|216 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''216'''}}}}|{{left|{{larger|'''216'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
njm2x8o9b9848tygvi8f3qnqvab4z3i
1952428
1952405
2026-07-09T13:03:17Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தடை வரட்டும்</b>}}}}
{{li|கி|2em}}ராமப் பஞ்சாயத்துக்கள் சட்ட ரீதியாக தடை செய்யப்பட
வேண்டும் என்ற கருத்தை நாம் முழுமையாகப் பாராட்டி வரவேற்கிறோம். இந்தப் பஞ்சாயத்துக்கள் ஜாதிவெறி பஞ்சாயத்துக்களாகவும், ஆண் ஆதிக்கப் பஞ்சாயத்துக் களாகவுமே செயல்பட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொலைபேசித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு பெண், தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரியதை கிராமப் பஞ்சாயத்து ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாத நிலையில் பஞ்சாயத்தார் முன், நாள் முழுதும் அந்தப் பெண்ணை ‘தோப்புக் கரணம்' போடச் சொல்லி, அபராதத் தொகையை 19,000 ஆகக் குறைத்தார்களாம். முசிறி பெண்கள் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் தரவே, வழக்கு நீதிமன்றம் போனது. பஞ்சாயத்தாரும், கணவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதி மன்றம், இந்தப் பஞ்சாயத்துக்களை தடை செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
திருவண்ணாமலை அருகே ஒரு தலித் இளைஞர், வன்னியர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த “குற்றத்துக்காக”, பையனின் தந்தையை, கிராமப் பஞ்சாயத்து, மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறது. ஊரை விட்டு ஓடிப்போன காதலர்களை மீண்டும் ஊருக்கு திரும்பச் செய்யுமாறு மிரட்டியிருக்கிறது.
216 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|216 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''216'''}}}}|{{left|{{larger|'''216'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
424ja4ahexr4ppg7fv0ewz1twfxrvha
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/219
250
648604
1952406
2026-07-09T12:08:46Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ காதலர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பிய போது, கிராம பஞ்சாயத்து, பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு, பையனின் தந்தைக்கு ரூ.2..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
காதலர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பிய போது, கிராம பஞ்சாயத்து, பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு, பையனின் தந்தைக்கு ரூ.20,000மும், பெண்ணின் விதவைத் தாய்க்கு ரூ.40,000மும் அபராதம் விதித்திருக்கிறது. பணம் கட்ட முடியாத நிலையில், பெண்ணின் குடும்பம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய கிராமங்கள்.
தலித் மக்களுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கும், ஜாதிக் கட்டமைப்பைக் கட்டிக்காப்பதற்குமே, இந்தப் பஞ்சாயத்துக்கள் ஆதிக்க ஜாதியினரால் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமக் கலாச்சாரம், கிராம வழிபாடு, காலம் காலமாகத் தொடரும் பழக்கம் - என்றெல்லாம் இந்த அவலங்களை நியாயப்படுத்த முடியாது. இந்தியாவின் சட்ட அமைப்புகளும், அரசு எந்திரமும் பார்ப்பனர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், கிராமப் பஞ்சாயத்துக்கள், ஜாதி ஆதிக்கவாசிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இதுபோல் - கிராமப் பஞ்சாயத்துக்களின் அடக்குமுறைச் சித்திரவதை களுக்கு உள்ளாகி, வெளியே தெரியாத வழக்குகள் ஏராளம் இருக்கின்றன.
எனவே, கிராமப் பஞ்சாயத்துக்களை சட்ட விரோதமாக்கப்பட வேண்டியது அவசரமும் அவசியமுமான நடவடிக்கையாகும். தேர்தலுக்கு ஜாதியைப் பயன் படுத்தத் துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் கிராமிய வழிபாட்டு முறைகளுக்கும், இந்த ஜாதியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. கிராமங்களில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 16.10.2003
விடுதலை இராசேந்திரன் 217<noinclude>{{nop}}{{rv|217 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''217'''}}}}|{{left|{{larger|'''217'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
j840dpan2nbtdqj2gif2g2ahszpbxzi
1952407
1952406
2026-07-09T12:12:16Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1952407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>காதலர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பிய போது, கிராம பஞ்சாயத்து, பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு, பையனின் தந்தைக்கு ரூ.20,000மும், பெண்ணின் விதவைத் தாய்க்கு ரூ.40,000மும் அபராதம் விதித்திருக்கிறது. பணம் கட்ட முடியாத நிலையில், பெண்ணின் குடும்பம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய கிராமங்கள்.
தலித் மக்களுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கும், ஜாதிக் கட்டமைப்பைக் கட்டிக்காப்பதற்குமே, இந்தப் பஞ்சாயத்துக்கள் ஆதிக்க ஜாதியினரால் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமக் கலாச்சாரம், கிராம வழிபாடு, காலம் காலமாகத் தொடரும் பழக்கம் - என்றெல்லாம் இந்த அவலங்களை நியாயப்படுத்த முடியாது. இந்தியாவின் சட்ட அமைப்புகளும், அரசு எந்திரமும் பார்ப்பனர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், கிராமப் பஞ்சாயத்துக்கள், ஜாதி ஆதிக்கவாசிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இதுபோல் - கிராமப் பஞ்சாயத்துக்களின் அடக்குமுறைச் சித்திரவதை களுக்கு உள்ளாகி, வெளியே தெரியாத வழக்குகள் ஏராளம் இருக்கின்றன.
எனவே, கிராமப் பஞ்சாயத்துக்களை சட்ட விரோதமாக்கப்பட வேண்டியது அவசரமும் அவசியமுமான நடவடிக்கையாகும். தேர்தலுக்கு ஜாதியைப் பயன் படுத்தத் துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் கிராமிய வழிபாட்டு முறைகளுக்கும், இந்த ஜாதியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. கிராமங்களில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
{{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' 16.10.2003</b>}}
விடுதலை இராசேந்திரன் 217<noinclude>{{nop}}{{rv|217 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''217'''}}}}|{{left|{{larger|'''217'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
err27dpwwzkimfpemvne89kawcalzp5
1952408
1952407
2026-07-09T12:13:09Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>காதலர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பிய போது, கிராம பஞ்சாயத்து, பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு, பையனின் தந்தைக்கு ரூ.20,000மும், பெண்ணின் விதவைத் தாய்க்கு ரூ.40,000மும் அபராதம் விதித்திருக்கிறது. பணம் கட்ட முடியாத நிலையில், பெண்ணின் குடும்பம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய கிராமங்கள்.
தலித் மக்களுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கும், ஜாதிக் கட்டமைப்பைக் கட்டிக்காப்பதற்குமே, இந்தப் பஞ்சாயத்துக்கள் ஆதிக்க ஜாதியினரால் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமக் கலாச்சாரம், கிராம வழிபாடு, காலம் காலமாகத் தொடரும் பழக்கம் - என்றெல்லாம் இந்த அவலங்களை நியாயப்படுத்த முடியாது. இந்தியாவின் சட்ட அமைப்புகளும், அரசு எந்திரமும் பார்ப்பனர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், கிராமப் பஞ்சாயத்துக்கள், ஜாதி ஆதிக்கவாசிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இதுபோல் - கிராமப் பஞ்சாயத்துக்களின் அடக்குமுறைச் சித்திரவதை களுக்கு உள்ளாகி, வெளியே தெரியாத வழக்குகள் ஏராளம் இருக்கின்றன.
எனவே, கிராமப் பஞ்சாயத்துக்களை சட்ட விரோதமாக்கப்பட வேண்டியது அவசரமும் அவசியமுமான நடவடிக்கையாகும். தேர்தலுக்கு ஜாதியைப் பயன் படுத்தத் துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் கிராமிய வழிபாட்டு முறைகளுக்கும், இந்த ஜாதியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. கிராமங்களில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
{{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' 16.10.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|217 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''217'''}}}}|{{left|{{larger|'''217'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
71hryys5zmt5jdcvot8uzjw7g4ww6m2
1952429
1952408
2026-07-09T13:04:06Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>காதலர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பிய போது, கிராம பஞ்சாயத்து, பெண்ணின் தாலியைப் பறித்துக் கொண்டு, பையனின் தந்தைக்கு ரூ.20,000மும், பெண்ணின் விதவைத் தாய்க்கு ரூ.40,000மும் அபராதம் விதித்திருக்கிறது. பணம் கட்ட முடியாத நிலையில், பெண்ணின் குடும்பம் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய கிராமங்கள்.
தலித் மக்களுக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கும், ஜாதிக் கட்டமைப்பைக் கட்டிக்காப்பதற்குமே, இந்தப் பஞ்சாயத்துக்கள் ஆதிக்க ஜாதியினரால் பயன்படுத்தப்படுகின்றன.
கிராமக் கலாச்சாரம், கிராம வழிபாடு, காலம் காலமாகத் தொடரும் பழக்கம் - என்றெல்லாம் இந்த அவலங்களை நியாயப்படுத்த முடியாது. இந்தியாவின் சட்ட அமைப்புகளும், அரசு எந்திரமும் பார்ப்பனர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், கிராமப் பஞ்சாயத்துக்கள், ஜாதி ஆதிக்கவாசிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இதுபோல் - கிராமப் பஞ்சாயத்துக்களின் அடக்குமுறைச் சித்திரவதை களுக்கு உள்ளாகி, வெளியே தெரியாத வழக்குகள் ஏராளம் இருக்கின்றன.
எனவே, கிராமப் பஞ்சாயத்துக்களை சட்ட விரோதமாக்கப்பட வேண்டியது அவசரமும் அவசியமுமான நடவடிக்கையாகும். தேர்தலுக்கு ஜாதியைப் பயன் படுத்தத் துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் கிராமிய வழிபாட்டு முறைகளுக்கும், இந்த ஜாதியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. கிராமங்களில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
{{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' 16.10.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|217 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''217'''}}}}|{{left|{{larger|'''217'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0vrv90wgdbxahsvshwlvdy0h6os5qfg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/220
250
648605
1952409
2026-07-09T12:13:54Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 5 தேர்தல் வரும் பின்னே; 'ராமன்' வருவான் முன்னே! மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் 'ராமன்' களத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
5
தேர்தல் வரும் பின்னே;
'ராமன்' வருவான் முன்னே!
மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் 'ராமன்' களத்துக்கு வந்து விட்டான். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் அயோத்தி பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'இந்து' வாக்கு வங்சிகளைக் குறிவைப்பது, சங்பரிவாரங் களின் வழக்கமாகி விட்டது. உ.பி.யில் முலாயம் சிங் முதல்வரானவுடனே. பலரும் இதை எதிர்பார்த்தார்கள். சங்பரிவார்களின் சட்டத்துக்கு எதிரான வன்முறை மிரட்டல்களை உறுதியோடு சந்தித்து, கலவரங்களை உருவாக்கும் சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ள முதல்வர் முலாயம் சிங்கைப் பாராட்ட வேண்டும்.
அயோத்தியில் அக்டோபர் 17ஆம் தேதி 'சங்கல்ப சம்மேளனம்' என்ற பெயரில் ராம பக்தர்கள், மீண்டும் வன்முறைக்குத் திட்டமிடும்போது, மத்திய அரசு, என்ன செய்திருக்க வேண்டும்? கலவரத்தை உருவாக்கும் முயற்சி களுக்குத் துணை போகாமல் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்.
ஆனால்,
-
ராமபக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார் உள்துறை அமைச்சர் அத்வானி. அமைதியாக வழிபாட்டை நடத்துவோம் என்று, விசுவ இந்து பரிஷத் கூறுவதை நம்ப வேண்டும் என்றார், பிரதமர் வாஜ்பாய். நீதிமன்றத்திலே தந்த உறுதிக்கு எதிராக, பாபர்
218 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|218 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''218'''}}}}|{{left|{{larger|'''218'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jlmwi1lf4ksbiqcila05jubkymddp49
1952410
1952409
2026-07-09T12:19:31Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>தேர்தல் வரும் பின்னே;
'ராமன்' வருவான் முன்னே!</b>}}}}
{{li|5|2em}}மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் 'ராமன்' களத்துக்கு வந்து விட்டான். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் அயோத்தி பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'இந்து' வாக்கு வங்சிகளைக் குறிவைப்பது, சங்பரிவாரங்களின் வழக்கமாகி விட்டது. உ.பி.யில் முலாயம் சிங் முதல்வரானவுடனே. பலரும் இதை எதிர்பார்த்தார்கள். சங்பரிவார்களின் சட்டத்துக்கு எதிரான வன்முறை மிரட்டல்களை உறுதியோடு சந்தித்து, கலவரங்களை உருவாக்கும் சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ள முதல்வர் முலாயம் சிங்கைப் பாராட்ட வேண்டும்.
அயோத்தியில் - அக்டோபர் 17ஆம் தேதி 'சங்கல்ப சம்மேளனம்' என்ற பெயரில் ராம பக்தர்கள், மீண்டும் வன்முறைக்குத் திட்டமிடும்போது, மத்திய அரசு, என்ன செய்திருக்க வேண்டும்? கலவரத்தை உருவாக்கும் முயற்சி களுக்குத் துணை போகாமல் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்.
ஆனால், ராமபக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார் உள்துறை அமைச்சர் அத்வானி. அமைதியாக வழிபாட்டை நடத்துவோம் என்று, விசுவ இந்து பரிஷத் கூறுவதை நம்ப வேண்டும் என்றார், பிரதமர் வாஜ்பாய். நீதிமன்றத்திலே தந்த உறுதிக்கு எதிராக, பாபர்
218 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|218 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''218'''}}}}|{{left|{{larger|'''218'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6lcz4h40g6zi9jrv3mmpkll23b8107y
1952411
1952410
2026-07-09T12:22:00Z
Dharshika2026
16400
1952411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>தேர்தல் வரும் பின்னே;
'ராமன்' வருவான் முன்னே!</b>}}}}
{{li|5|2em}}மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் 'ராமன்' களத்துக்கு வந்து விட்டான். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் அயோத்தி பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'இந்து' வாக்கு வங்சிகளைக் குறிவைப்பது, சங்பரிவாரங்களின் வழக்கமாகி விட்டது. உ.பி.யில் முலாயம் சிங் முதல்வரானவுடனே. பலரும் இதை எதிர்பார்த்தார்கள். சங்பரிவார்களின் சட்டத்துக்கு எதிரான வன்முறை மிரட்டல்களை உறுதியோடு சந்தித்து, கலவரங்களை உருவாக்கும் சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ள முதல்வர் முலாயம் சிங்கைப் பாராட்ட வேண்டும்.
அயோத்தியில் - அக்டோபர் 17ஆம் தேதி 'சங்கல்ப சம்மேளனம்' என்ற பெயரில் ராம பக்தர்கள், மீண்டும் வன்முறைக்குத் திட்டமிடும்போது, மத்திய அரசு, என்ன செய்திருக்க வேண்டும்? கலவரத்தை உருவாக்கும் முயற்சி களுக்குத் துணை போகாமல் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்.
ஆனால், ராமபக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார் உள்துறை அமைச்சர் அத்வானி. அமைதியாக வழிபாட்டை நடத்துவோம் என்று, விசுவ இந்து பரிஷத் கூறுவதை நம்ப வேண்டும் என்றார், பிரதமர் வாஜ்பாய். நீதிமன்றத்திலே தந்த உறுதிக்கு எதிராக, பாபர்<noinclude>{{nop}}{{rv|218 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''218'''}}}}|{{left|{{larger|'''218'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ryj04xlzsz7pyfrn6hffcv3xfc5yi1b
1952431
1952411
2026-07-09T13:05:10Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>தேர்தல் வரும் பின்னே;
'ராமன்' வருவான் முன்னே!</b>}}}}
{{li|5|2em}}மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் 'ராமன்' களத்துக்கு வந்து விட்டான். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் அயோத்தி பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'இந்து' வாக்கு வங்சிகளைக் குறிவைப்பது, சங்பரிவாரங்களின் வழக்கமாகி விட்டது. உ.பி.யில் முலாயம் சிங் முதல்வரானவுடனே. பலரும் இதை எதிர்பார்த்தார்கள். சங்பரிவார்களின் சட்டத்துக்கு எதிரான வன்முறை மிரட்டல்களை உறுதியோடு சந்தித்து, கலவரங்களை உருவாக்கும் சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ள முதல்வர் முலாயம் சிங்கைப் பாராட்ட வேண்டும்.
அயோத்தியில் - அக்டோபர் 17ஆம் தேதி 'சங்கல்ப சம்மேளனம்' என்ற பெயரில் ராம பக்தர்கள், மீண்டும் வன்முறைக்குத் திட்டமிடும்போது, மத்திய அரசு, என்ன செய்திருக்க வேண்டும்? கலவரத்தை உருவாக்கும் முயற்சி களுக்குத் துணை போகாமல் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்.
ஆனால், ராமபக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார் உள்துறை அமைச்சர் அத்வானி. அமைதியாக வழிபாட்டை நடத்துவோம் என்று, விசுவ இந்து பரிஷத் கூறுவதை நம்ப வேண்டும் என்றார், பிரதமர் வாஜ்பாய். நீதிமன்றத்திலே தந்த உறுதிக்கு எதிராக, பாபர்<noinclude>{{nop}}{{rv|218 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''218'''}}}}|{{left|{{larger|'''218'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jw3zxotnrmzcrvfugmm4irfmd12nfxk
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/221
250
648606
1952412
2026-07-09T12:24:18Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ மசூதியை இடித்தவர்களின் வாக்குறுதியை நம்ப வேண்டுமாம் விசுவ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் தொகாடியா, தொடர்ந்து வன்முறைகளைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
மசூதியை இடித்தவர்களின் வாக்குறுதியை நம்ப வேண்டுமாம் விசுவ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் தொகாடியா, தொடர்ந்து வன்முறைகளைப் பகிரங்கமாகத் தூண்டிவிட்டுப் பேசினார். அயோத்திக்குள், ராமபக்தர்களை அனுமதிக்கா விட்டால், மதக்கலவரம் வெடிக்கும் என்று பகிரங்கமாக மிரட்டினார். இதை விடப் பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா? பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் எங்கே போய்ப் பதுங்கிக் கொண்டன?
ஆளும் பாரதீய ஜனதா கட்சி சங்பரிவாரங்களின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம். உ.பி. மாநில அரசின் ஆ லோசனை னயை ஏற்று, பைசாபாத் வழியாகச் செல்லும் சில ரயில்களை ரத்து செய்வதாகவும், சில ரயில்கள், பைசாபாத் வழியாக போகாமல், பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்தது. 'ராமபக்தர்கள்' என்ற போர்வையில் கலவரக்காரர்கள், அயோத்தியில் குவியாமல் இருப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடனே, அக்டோபர் 14ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், தொலைபேசியில் பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார். இதனைத் தொடர்த்து, எந்த ஒரு ரயிலும் ரத்து செய்யப்படவோ, வழிமாற்றி விடப்படவோ மாட்டாது என்று மத்திய அரச அறிவித்து விட்டது. (தகவல் 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு அக். 15) ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் தான், வாஜ்பாய் ஆட்சி செயல்படுகிறது என்பதையே, இது மீண்டும் உறுதிப் படுத்துகிறது. விசுவ இந்து பரிஷத்துக்கு இந்த வழிபாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, முன்னின்று செயல்படுத்தியவரே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உள்துறை இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்தா என்பவர் தான். அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்து, பதவி ஏற்றுள்ள ஒரு அமைச்சர், அதற்கு மாறாக, அரசியல் சட்டத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் செயல் படலாமா என்ற நியாயமான கேள்வியை முலாயம் சிங் எழுப்பியிருக்கிறார்.
-
இப்போது இந்தப் பிரச்சனையை இவர்கள் ஏன் கையில் எடுத்துள்ளார்கள்?
தேர்தல் நடக்கவிருக்கும் ம.பி. மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கும் ஒரு முயற்சியாகவே. இந்த ‘சங்கல்ப' நாடகம் அரங்கேற்றப்பட் டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எழுதுகிறது. விசுவ இந்து பரிஷத் தலைவர்களான தொகாடியாவும், ஆச்சாரியா தர்மேந்திராவும்,
விடுதலை இராசேந்திரன் 219<noinclude>{{nop}}{{rv|219 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''219'''}}}}|{{left|{{larger|'''219'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qizvuqtkvprsma5izxdzr8834l2tnbb
1952413
1952412
2026-07-09T12:28:33Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>மசூதியை இடித்தவர்களின் வாக்குறுதியை நம்ப வேண்டுமாம் விசுவ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் தொகாடியா, தொடர்ந்து வன்முறைகளைப் பகிரங்கமாகத் தூண்டிவிட்டுப் பேசினார். அயோத்திக்குள், ராமபக்தர்களை அனுமதிக்கா விட்டால், மதக்கலவரம் வெடிக்கும் என்று பகிரங்கமாக மிரட்டினார். இதை விடப் பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா? பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் எங்கே போய்ப் பதுங்கிக் கொண்டன?
ஆளும் பாரதீய ஜனதா கட்சி சங்பரிவாரங்களின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம். உ.பி. மாநில அரசின் ஆ லோசனை னயை ஏற்று, பைசாபாத் வழியாகச் செல்லும் சில ரயில்களை ரத்து செய்வதாகவும், சில ரயில்கள், பைசாபாத் வழியாக போகாமல், பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்தது. 'ராமபக்தர்கள்' என்ற போர்வையில் கலவரக்காரர்கள், அயோத்தியில் குவியாமல் இருப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடனே, அக்டோபர் 14ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், தொலைபேசியில் பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார். இதனைத் தொடர்த்து, எந்த ஒரு ரயிலும் ரத்து செய்யப்படவோ, வழிமாற்றி விடப்படவோ மாட்டாது என்று மத்திய அரச அறிவித்து விட்டது. (தகவல் 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு அக். 15) ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் தான், வாஜ்பாய் ஆட்சி செயல்படுகிறது என்பதையே, இது மீண்டும் உறுதிப் படுத்துகிறது. விசுவ இந்து பரிஷத்துக்கு - இந்த வழிபாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, முன்னின்று செயல்படுத்தியவரே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உள்துறை இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்தா என்பவர் தான். அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்து, பதவி ஏற்றுள்ள ஒரு அமைச்சர், அதற்கு மாறாக, அரசியல் சட்டத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் செயல் படலாமா என்ற நியாயமான கேள்வியை முலாயம் சிங் எழுப்பியிருக்கிறார்.
இப்போது இந்தப் பிரச்சனையை இவர்கள் ஏன் கையில் எடுத்துள்ளார்கள்?
தேர்தல் நடக்கவிருக்கும் ம.பி. மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கும் ஒரு முயற்சியாகவே. இந்த ‘சங்கல்ப' நாடகம் அரங்கேற்றப்பட் டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எழுதுகிறது. விசுவ இந்து பரிஷத் தலைவர்களான தொகாடியாவும், ஆச்சாரியா தர்மேந்திராவும்,<noinclude>{{nop}}{{rv|219 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''219'''}}}}|{{left|{{larger|'''219'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
37ozcuzf8rikxou0y1rqqveffrnj1e9
1952432
1952413
2026-07-09T13:05:43Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>மசூதியை இடித்தவர்களின் வாக்குறுதியை நம்ப வேண்டுமாம் விசுவ இந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் தொகாடியா, தொடர்ந்து வன்முறைகளைப் பகிரங்கமாகத் தூண்டிவிட்டுப் பேசினார். அயோத்திக்குள், ராமபக்தர்களை அனுமதிக்கா விட்டால், மதக்கலவரம் வெடிக்கும் என்று பகிரங்கமாக மிரட்டினார். இதை விடப் பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா? பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் எங்கே போய்ப் பதுங்கிக் கொண்டன?
ஆளும் பாரதீய ஜனதா கட்சி சங்பரிவாரங்களின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம். உ.பி. மாநில அரசின் ஆ லோசனை னயை ஏற்று, பைசாபாத் வழியாகச் செல்லும் சில ரயில்களை ரத்து செய்வதாகவும், சில ரயில்கள், பைசாபாத் வழியாக போகாமல், பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்தது. 'ராமபக்தர்கள்' என்ற போர்வையில் கலவரக்காரர்கள், அயோத்தியில் குவியாமல் இருப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடனே, அக்டோபர் 14ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், தொலைபேசியில் பிரதமர் வாஜ்பாயுடன் பேசினார். இதனைத் தொடர்த்து, எந்த ஒரு ரயிலும் ரத்து செய்யப்படவோ, வழிமாற்றி விடப்படவோ மாட்டாது என்று மத்திய அரச அறிவித்து விட்டது. (தகவல் 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு அக். 15) ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் தான், வாஜ்பாய் ஆட்சி செயல்படுகிறது என்பதையே, இது மீண்டும் உறுதிப் படுத்துகிறது. விசுவ இந்து பரிஷத்துக்கு - இந்த வழிபாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, முன்னின்று செயல்படுத்தியவரே வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உள்துறை இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்தா என்பவர் தான். அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்து, பதவி ஏற்றுள்ள ஒரு அமைச்சர், அதற்கு மாறாக, அரசியல் சட்டத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் செயல் படலாமா என்ற நியாயமான கேள்வியை முலாயம் சிங் எழுப்பியிருக்கிறார்.
இப்போது இந்தப் பிரச்சனையை இவர்கள் ஏன் கையில் எடுத்துள்ளார்கள்?
தேர்தல் நடக்கவிருக்கும் ம.பி. மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கும் ஒரு முயற்சியாகவே. இந்த ‘சங்கல்ப' நாடகம் அரங்கேற்றப்பட் டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எழுதுகிறது. விசுவ இந்து பரிஷத் தலைவர்களான தொகாடியாவும், ஆச்சாரியா தர்மேந்திராவும்,<noinclude>{{nop}}{{rv|219 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''219'''}}}}|{{left|{{larger|'''219'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
c4dsrcj9rck4vee3dzwf3zfpak4jko7
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/222
250
648607
1952414
2026-07-09T12:29:32Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ம.பி.யில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே பேசி வருகிறார்கள். குஜராத்துகள் நடந்து முடித்த பிறகும் கூட பார்ப்பன - மதவெறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
ம.பி.யில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே பேசி வருகிறார்கள். குஜராத்துகள் நடந்து முடித்த பிறகும் கூட பார்ப்பன - மதவெறி சக்திகளின் கலவரங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் துணிவு - அவர்களை இப்படி எல்லாம் செயல்பட வைக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தமிழகக் கட்சிகள், இன்னும் இந்த அவலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கப் போகின்றனவா?
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.10.2003<noinclude>{{nop}}{{rv|220 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''220'''}}}}|{{left|{{larger|'''220'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
poea8fuqd3jjntuxfzu0sqk70ji13tk
1952415
1952414
2026-07-09T12:33:45Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>ம.பி.யில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே பேசி வருகிறார்கள். குஜராத்துகள் நடந்து முடித்த பிறகும் கூட பார்ப்பன - மதவெறி சக்திகளின் கலவரங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் துணிவு - அவர்களை இப்படி எல்லாம் செயல்பட வைக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தமிழகக் கட்சிகள், இன்னும் இந்த அவலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கப் போகின்றனவா?
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.10.2003
</b>}}<noinclude>{{nop}}{{rv|220 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''220'''}}}}|{{left|{{larger|'''220'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bymfyh61jqamjanasby6jpcpgt2lttq
1952434
1952415
2026-07-09T13:06:20Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>ம.பி.யில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே பேசி வருகிறார்கள். குஜராத்துகள் நடந்து முடித்த பிறகும் கூட பார்ப்பன - மதவெறி சக்திகளின் கலவரங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் துணிவு - அவர்களை இப்படி எல்லாம் செயல்பட வைக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தமிழகக் கட்சிகள், இன்னும் இந்த அவலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கப் போகின்றனவா?
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.10.2003
</b>}}<noinclude>{{nop}}{{rv|220 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''220'''}}}}|{{left|{{larger|'''220'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nnljzg0cp2vqexh7idgktoex5v4xmfq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/223
250
648608
1952416
2026-07-09T12:38:59Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>அவமானம் - தலைகுனிவு
</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த அவமானம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜனநாயகம் ஜாதி நாயகமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இந்த வெறியாட்டம் ஒரு பிரச்சனையாகக் கூட தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது இன்னும் வெட்கக் கேடானது.
தமிழ்நாட்டில் புதிய ஊராட்சி நிர்வாக அமைப்புகள் அறிமுகமான 1996லிருந்து - இதுவரை ஏழு ஆண்டுகளாக மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமப் பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தப் பஞ்சாயத்தில் - ஒரு தலித்தைத் தலைவராக ஏற்றுக் கொள்ள, அக்கிராமத்து ஆதிக்க ஜாதியினர் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் - மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு கே. அழகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்ற அடுத்த நிமிடமே பதவி விலகி விட்டார். இவர் அங்கே உள்ள ஜாதி ஆதிக்கவாதிகளால் பொம்மையாக நிறுத்தி வைக்கப்பட்டவர். தலித் அமைப்புகளால் நிறுத்தப்பட்ட கே. முத்தன் என்பவரைத் தோற்கடிப்பதற்காகவே இவர் நிறுத்தப்பட்டார். மற்றொரு பஞ்சாயத்தான - கீரிப்பட்டியில் இம்முறை எந்தத் ‘தலித்'தும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவே முன்வரவில்லை. நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் (விருதுநகர் மாவட்டம்) என்ற ‘ரிசர்வ்' பஞ்சாயத்துக்களிலும் இதே நிலைதான் தொடருகிறது. பார்ப்பனியத்துக்கு பலியாகிக் கொண்டிருக்கும் – இந்த ஜாதி ஆதிக்கவாதிகள் உள்ளாட்சி ஜனநாயகத்துக்கே சவால் விட்டுக் கொண்டிருப்பதை, இன்னும்<noinclude>{{nop}}{{rv|221 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''221'''}}}}|{{left|{{larger|'''221'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gdgvgd0fqqy0vet4dshjv4f9f9fnaqy
1952435
1952416
2026-07-09T13:07:07Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>அவமானம் - தலைகுனிவு
</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த அவமானம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜனநாயகம் ஜாதி நாயகமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இந்த வெறியாட்டம் ஒரு பிரச்சனையாகக் கூட தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது இன்னும் வெட்கக் கேடானது.
தமிழ்நாட்டில் புதிய ஊராட்சி நிர்வாக அமைப்புகள் அறிமுகமான 1996லிருந்து - இதுவரை ஏழு ஆண்டுகளாக மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமப் பஞ்சாயத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தப் பஞ்சாயத்தில் - ஒரு தலித்தைத் தலைவராக ஏற்றுக் கொள்ள, அக்கிராமத்து ஆதிக்க ஜாதியினர் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் - மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு கே. அழகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்ற அடுத்த நிமிடமே பதவி விலகி விட்டார். இவர் அங்கே உள்ள ஜாதி ஆதிக்கவாதிகளால் பொம்மையாக நிறுத்தி வைக்கப்பட்டவர். தலித் அமைப்புகளால் நிறுத்தப்பட்ட கே. முத்தன் என்பவரைத் தோற்கடிப்பதற்காகவே இவர் நிறுத்தப்பட்டார். மற்றொரு பஞ்சாயத்தான - கீரிப்பட்டியில் இம்முறை எந்தத் ‘தலித்'தும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவே முன்வரவில்லை. நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் (விருதுநகர் மாவட்டம்) என்ற ‘ரிசர்வ்' பஞ்சாயத்துக்களிலும் இதே நிலைதான் தொடருகிறது. பார்ப்பனியத்துக்கு பலியாகிக் கொண்டிருக்கும் – இந்த ஜாதி ஆதிக்கவாதிகள் உள்ளாட்சி ஜனநாயகத்துக்கே சவால் விட்டுக் கொண்டிருப்பதை, இன்னும்<noinclude>{{nop}}{{rv|221 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''221'''}}}}|{{left|{{larger|'''221'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3cbskagpqoqhfedwvptimwq713ccvet
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/224
250
648609
1952417
2026-07-09T12:39:59Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ எவ்வளவு காலம் தான் தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது? சட்டமன்ற தொகுதிக்கோ, நாடாளுமன்றத் தொகுதிக்கோ, இப்படி ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
எவ்வளவு காலம் தான் தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?
சட்டமன்ற தொகுதிக்கோ, நாடாளுமன்றத் தொகுதிக்கோ, இப்படி ஒரு நிலை வந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு - இதில் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?
மேற்குறிப்பிட்ட பஞ்சாயத்துக்களில் - அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகள் - தங்கள் கட்சிகளின் சார்பில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏன் முன் வரவில்லை? இந்தக் கட்சிகளில் உள்ள தலித் அல்லாத ஆதிக்க ஜாதியினரும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு இக்கட்சிகளின் தலைமை ஏன் தயங்க வேண்டும்?
இப்படி - தலித் தலைவர்களை ஏற்க மறுக்கும் பஞ்சாயத்துக்களில் வாழும் மக்களுக்கு அபராத வரி விதிக்கலாம் என்ற யோசனையை மனித உரிமை ஆணையம் முன்வைத்திருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த முக்கிய மானப் பிரச்சனைகளில் கருத்தைக் கூடத் தெரிவிக்க முன்வராமல் ஒதுங்கி நிற்பது, வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும்.
ரிசர்வ் தொகுதிகளின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து, மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளது தமிழக அரசு. ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வரை, இந்த ரிசர்வ் பஞ்சாயத்துக்களை பொதுப் பஞ்சாயத்துக்களாக மாற்றக்கூடாது என்று உறுதியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 30.10.2003
222 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|222 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''222'''}}}}|{{left|{{larger|'''222'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
njqayqw2qbp96p3bais2a5oixqj8net
1952418
1952417
2026-07-09T12:42:25Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>எவ்வளவு காலம் தான் தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?
சட்டமன்ற தொகுதிக்கோ, நாடாளுமன்றத் தொகுதிக்கோ, இப்படி ஒரு நிலை வந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு - இதில் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?
மேற்குறிப்பிட்ட பஞ்சாயத்துக்களில் - அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகள் - தங்கள் கட்சிகளின் சார்பில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏன் முன் வரவில்லை? இந்தக் கட்சிகளில் உள்ள தலித் அல்லாத ஆதிக்க ஜாதியினரும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு இக்கட்சிகளின் தலைமை ஏன் தயங்க வேண்டும்?
இப்படி - தலித் தலைவர்களை ஏற்க மறுக்கும் பஞ்சாயத்துக்களில் வாழும் மக்களுக்கு அபராத வரி விதிக்கலாம் என்ற யோசனையை மனித உரிமை ஆணையம் முன்வைத்திருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த முக்கிய மானப் பிரச்சனைகளில் கருத்தைக் கூடத் தெரிவிக்க முன்வராமல் ஒதுங்கி நிற்பது, வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும்.
ரிசர்வ் தொகுதிகளின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து, மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளது தமிழக அரசு. ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வரை, இந்த ரிசர்வ் பஞ்சாயத்துக்களை பொதுப் பஞ்சாயத்துக்களாக மாற்றக்கூடாது என்று உறுதியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
{{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' 30.10.2003
</b>}}<noinclude>{{nop}}{{rv|222 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''222'''}}}}|{{left|{{larger|'''222'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g8m80ftgksmncclwrsqivkzocsjqwlt
1952436
1952418
2026-07-09T13:07:36Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>எவ்வளவு காலம் தான் தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது?
சட்டமன்ற தொகுதிக்கோ, நாடாளுமன்றத் தொகுதிக்கோ, இப்படி ஒரு நிலை வந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு - இதில் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?
மேற்குறிப்பிட்ட பஞ்சாயத்துக்களில் - அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகள் - தங்கள் கட்சிகளின் சார்பில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏன் முன் வரவில்லை? இந்தக் கட்சிகளில் உள்ள தலித் அல்லாத ஆதிக்க ஜாதியினரும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு இக்கட்சிகளின் தலைமை ஏன் தயங்க வேண்டும்?
இப்படி - தலித் தலைவர்களை ஏற்க மறுக்கும் பஞ்சாயத்துக்களில் வாழும் மக்களுக்கு அபராத வரி விதிக்கலாம் என்ற யோசனையை மனித உரிமை ஆணையம் முன்வைத்திருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த முக்கிய மானப் பிரச்சனைகளில் கருத்தைக் கூடத் தெரிவிக்க முன்வராமல் ஒதுங்கி நிற்பது, வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும்.
ரிசர்வ் தொகுதிகளின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து, மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துள்ளது தமிழக அரசு. ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வரை, இந்த ரிசர்வ் பஞ்சாயத்துக்களை பொதுப் பஞ்சாயத்துக்களாக மாற்றக்கூடாது என்று உறுதியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
{{Right|<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்' 30.10.2003
</b>}}<noinclude>{{nop}}{{rv|222 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''222'''}}}}|{{left|{{larger|'''222'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mj0swog00d2qch7a442qgp4m02p69t9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/225
250
648610
1952419
2026-07-09T12:43:21Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ‘பொடா’வுக்கு விடை தருக! ‘பொடா’ சட்டத்தைத் திரும்ப பெற வேண்டுமே தவிர, திருத்தங்கள் பயன் தராது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
‘பொடா’வுக்கு விடை தருக!
‘பொடா’ சட்டத்தைத் திரும்ப பெற வேண்டுமே தவிர, திருத்தங்கள் பயன் தராது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசிடம், தி.மு.க. தலைவர் கலைஞர், இந்தக் கருத்தைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். தி.மு.க.வின் இப்போதைய இந்த நிலை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
"பொடா' சட்டம், முறைகேடாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு சான்றாக, அண்மையில் மற்றொரு தீர்ப்பு வந்துள்ளது. நாடாளுமன்றத்தைத் தகர்த்த வழக்கில் ‘பொடா'வின் கீழ் கைது செய்யப் பட்டவர்களில் இருவரை டெல்லி உயர்நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. இதிலே கிலானி என்ற பல்கலைக் கழக பேராசிரியருக்கு 'பொடா' நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. இப்போது அவர் விடுதலையாகியிருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட மற்றொருவர் அஃபசன் குரு என்ற பெண், இவருக்கு 'பொடா' நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. இவரது கணவர் சவுக்கத் உசேனுக்கு இந்த வழக்கில், தூக்குத் தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது. கணவனின் சதித்திட்டம் மனைவிக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் கணவனை, காவல் துறையிடம் காட்டிக் கொடுக்கவில்லை என்று, காவல் துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. 'பொடா' சட்டத்தின் கீழ் - இப்படிக் கூட வழக்குத் தொடர முடியும். அவ்வளவு கொடூரமானது இந்த சட்டம்.
விடுதலை இராசேந்திரன் 223<noinclude>{{nop}}{{rv|223 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''223'''}}}}|{{left|{{larger|'''223'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k42ytu5uf2t58usn008gjuifivo840q
1952420
1952419
2026-07-09T12:47:36Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>‘பொடா’வுக்கு விடை தருக!</b>}}}}
{{li|‘பொ|2em}}டா’ சட்டத்தைத் திரும்ப பெற வேண்டுமே தவிர, திருத்தங்கள் பயன் தராது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசிடம், தி.மு.க. தலைவர் கலைஞர், இந்தக் கருத்தைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். தி.மு.க.வின் இப்போதைய இந்த நிலை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
"பொடா' சட்டம், முறைகேடாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு சான்றாக, அண்மையில் மற்றொரு தீர்ப்பு வந்துள்ளது. நாடாளுமன்றத்தைத் தகர்த்த வழக்கில் ‘பொடா'வின் கீழ் கைது செய்யப் பட்டவர்களில் இருவரை டெல்லி உயர்நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. இதிலே கிலானி என்ற பல்கலைக் கழக பேராசிரியருக்கு 'பொடா' நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. இப்போது அவர் விடுதலையாகியிருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட மற்றொருவர் அஃபசன் குரு என்ற பெண், இவருக்கு 'பொடா' நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. இவரது கணவர் சவுக்கத் உசேனுக்கு இந்த வழக்கில், தூக்குத் தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது. கணவனின் சதித்திட்டம் மனைவிக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் கணவனை, காவல் துறையிடம் காட்டிக் கொடுக்கவில்லை என்று, காவல் துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. 'பொடா' சட்டத்தின் கீழ் - இப்படிக் கூட வழக்குத் தொடர முடியும். அவ்வளவு கொடூரமானது இந்த சட்டம்.<noinclude>{{nop}}{{rv|223 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''223'''}}}}|{{left|{{larger|'''223'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hjq53lcsunn0kw88y82y7m0hlrvi6br
1952437
1952420
2026-07-09T13:08:05Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>‘பொடா’வுக்கு விடை தருக!</b>}}}}
{{li|‘பொ|2em}}டா’ சட்டத்தைத் திரும்ப பெற வேண்டுமே தவிர, திருத்தங்கள் பயன் தராது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசிடம், தி.மு.க. தலைவர் கலைஞர், இந்தக் கருத்தைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். தி.மு.க.வின் இப்போதைய இந்த நிலை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
"பொடா' சட்டம், முறைகேடாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு சான்றாக, அண்மையில் மற்றொரு தீர்ப்பு வந்துள்ளது. நாடாளுமன்றத்தைத் தகர்த்த வழக்கில் ‘பொடா'வின் கீழ் கைது செய்யப் பட்டவர்களில் இருவரை டெல்லி உயர்நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. இதிலே கிலானி என்ற பல்கலைக் கழக பேராசிரியருக்கு 'பொடா' நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. இப்போது அவர் விடுதலையாகியிருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட மற்றொருவர் அஃபசன் குரு என்ற பெண், இவருக்கு 'பொடா' நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. இவரது கணவர் சவுக்கத் உசேனுக்கு இந்த வழக்கில், தூக்குத் தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது. கணவனின் சதித்திட்டம் மனைவிக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் கணவனை, காவல் துறையிடம் காட்டிக் கொடுக்கவில்லை என்று, காவல் துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. 'பொடா' சட்டத்தின் கீழ் - இப்படிக் கூட வழக்குத் தொடர முடியும். அவ்வளவு கொடூரமானது இந்த சட்டம்.<noinclude>{{nop}}{{rv|223 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''223'''}}}}|{{left|{{larger|'''223'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5mdu45cmhpctq9rskup2dz8ethecu56
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/226
250
648611
1952421
2026-07-09T12:49:19Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பேராசிரியர் கிலானி மீதான குற்றச்சாட்டுக்கு ஒரே ஆதாரம் - நாடாளுமன்றத்தைத் தகர்க்க சதி செய்தவர்கள், அவருடன் தொலைபேசியில் பேசினா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
பேராசிரியர் கிலானி மீதான குற்றச்சாட்டுக்கு ஒரே ஆதாரம் - நாடாளுமன்றத்தைத் தகர்க்க சதி செய்தவர்கள், அவருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்பது தான்! இதுவும்கூட சரியாக நிருபிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி, கிலானியை விடுதலை செய்துள்ளது. சதி செய்தவர்கள் - தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை விதிக்கும் ஒரு விசித்திர சட்டம் இப்போது அமுலில் இருக்கிறது.
சிவில் உரிமை இயக்கம்தான் - உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து, இந்த விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது. இல்லாவிட்டால் 'பொடா' சட்டம் தூக்கில் ஏற்றியிருக்கும்.
இப்போது மறு விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் தரும், அவசரச் சட்டம் வந்திருக்கிறது. இதனால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? பொடா சட்டம் அடிப்படையில் அப்படியே நீடிக்கத் தான் போகிறது. இத்தகைய அவசரச் சட்டங்கள் மூலம் - ‘பொடா சட்டம் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 'பொடா' சட்டத்தால் - தீவிரவாதம் தடுக்கப்பட்டு விட்டதா? இந்தக்கேள்விக்கு சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்? நாடாளு மன்றத்தின் முன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், குஜராத் கோயிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குப் போகும் போது கண்ணிவெடி தாக்குதலுக்குள்ளானதும் 'பொடா' சட்டம் அமுலில் இருக்கும் போது தானே? 'பொடா' சட்டங்கள், இவைகளைத் தடுக்கவில்லையே!
அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்பட்டு வரும் 'பொடா'வை முழுமையாக சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்! தி.மு.க. - ம.தி.மு.க. போன்ற கட்சிகள், இப்போது தங்கள் குரலை மாற்றிக் கொண்டு 'பொடா'வை எதிர்க்க முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல திருப்பமாகும்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.11.2003
224 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|224 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''224'''}}}}|{{left|{{larger|'''224'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mjb646a17vvi49b4or75e9h1mvitp94
1952422
1952421
2026-07-09T12:51:21Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>பேராசிரியர் கிலானி மீதான குற்றச்சாட்டுக்கு ஒரே ஆதாரம் - நாடாளுமன்றத்தைத் தகர்க்க சதி செய்தவர்கள், அவருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்பது தான்! இதுவும்கூட சரியாக நிருபிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி, கிலானியை விடுதலை செய்துள்ளது. சதி செய்தவர்கள் - தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை விதிக்கும் ஒரு விசித்திர சட்டம் இப்போது அமுலில் இருக்கிறது.
சிவில் உரிமை இயக்கம்தான் - உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து, இந்த விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது. இல்லாவிட்டால் 'பொடா' சட்டம் தூக்கில் ஏற்றியிருக்கும்.
இப்போது மறு விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் தரும், அவசரச் சட்டம் வந்திருக்கிறது. இதனால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? பொடா சட்டம் அடிப்படையில் அப்படியே நீடிக்கத் தான் போகிறது. இத்தகைய அவசரச் சட்டங்கள் மூலம் - ‘பொடா சட்டம் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 'பொடா' சட்டத்தால் - தீவிரவாதம் தடுக்கப்பட்டு விட்டதா? இந்தக்கேள்விக்கு சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்? நாடாளு மன்றத்தின் முன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், குஜராத் கோயிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குப் போகும் போது கண்ணிவெடி தாக்குதலுக்குள்ளானதும் 'பொடா' சட்டம் அமுலில் இருக்கும் போது தானே? 'பொடா' சட்டங்கள், இவைகளைத் தடுக்கவில்லையே!
அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்பட்டு வரும் 'பொடா'வை முழுமையாக சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்! தி.மு.க. - ம.தி.மு.க. போன்ற கட்சிகள், இப்போது தங்கள் குரலை மாற்றிக் கொண்டு 'பொடா'வை எதிர்க்க முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல திருப்பமாகும்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.11.2003</b>
}}224 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|224 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''224'''}}}}|{{left|{{larger|'''224'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k8c6kqbbbqfqcvu7hlpa8t0t8vbw6js
1952423
1952422
2026-07-09T12:52:07Z
Dharshika2026
16400
1952423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>பேராசிரியர் கிலானி மீதான குற்றச்சாட்டுக்கு ஒரே ஆதாரம் - நாடாளுமன்றத்தைத் தகர்க்க சதி செய்தவர்கள், அவருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்பது தான்! இதுவும்கூட சரியாக நிருபிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி, கிலானியை விடுதலை செய்துள்ளது. சதி செய்தவர்கள் - தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை விதிக்கும் ஒரு விசித்திர சட்டம் இப்போது அமுலில் இருக்கிறது.
சிவில் உரிமை இயக்கம்தான் - உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து, இந்த விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது. இல்லாவிட்டால் 'பொடா' சட்டம் தூக்கில் ஏற்றியிருக்கும்.
இப்போது மறு விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் தரும், அவசரச் சட்டம் வந்திருக்கிறது. இதனால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? பொடா சட்டம் அடிப்படையில் அப்படியே நீடிக்கத் தான் போகிறது. இத்தகைய அவசரச் சட்டங்கள் மூலம் - ‘பொடா சட்டம் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 'பொடா' சட்டத்தால் - தீவிரவாதம் தடுக்கப்பட்டு விட்டதா? இந்தக்கேள்விக்கு சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்? நாடாளு மன்றத்தின் முன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், குஜராத் கோயிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குப் போகும் போது கண்ணிவெடி தாக்குதலுக்குள்ளானதும் 'பொடா' சட்டம் அமுலில் இருக்கும் போது தானே? 'பொடா' சட்டங்கள், இவைகளைத் தடுக்கவில்லையே!
அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்பட்டு வரும் 'பொடா'வை முழுமையாக சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்! தி.மு.க. - ம.தி.மு.க. போன்ற கட்சிகள், இப்போது தங்கள் குரலை மாற்றிக் கொண்டு 'பொடா'வை எதிர்க்க முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல திருப்பமாகும்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.11.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|224 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''224'''}}}}|{{left|{{larger|'''224'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nodooe7vosyo7vdl2vq2igp4q3zygcu
1952438
1952423
2026-07-09T13:09:09Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>பேராசிரியர் கிலானி மீதான குற்றச்சாட்டுக்கு ஒரே ஆதாரம் - நாடாளுமன்றத்தைத் தகர்க்க சதி செய்தவர்கள், அவருடன் தொலைபேசியில் பேசினார்கள் என்பது தான்! இதுவும்கூட சரியாக நிருபிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி, கிலானியை விடுதலை செய்துள்ளது. சதி செய்தவர்கள் - தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர்களுக்கு எல்லாம் தூக்குத் தண்டனை விதிக்கும் ஒரு விசித்திர சட்டம் இப்போது அமுலில் இருக்கிறது.
சிவில் உரிமை இயக்கம்தான் - உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து, இந்த விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது. இல்லாவிட்டால் 'பொடா' சட்டம் தூக்கில் ஏற்றியிருக்கும்.
இப்போது மறு விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் தரும், அவசரச் சட்டம் வந்திருக்கிறது. இதனால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? பொடா சட்டம் அடிப்படையில் அப்படியே நீடிக்கத் தான் போகிறது. இத்தகைய அவசரச் சட்டங்கள் மூலம் - ‘பொடா சட்டம் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 'பொடா' சட்டத்தால் - தீவிரவாதம் தடுக்கப்பட்டு விட்டதா? இந்தக்கேள்விக்கு சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்? நாடாளு மன்றத்தின் முன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், குஜராத் கோயிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குப் போகும் போது கண்ணிவெடி தாக்குதலுக்குள்ளானதும் 'பொடா' சட்டம் அமுலில் இருக்கும் போது தானே? 'பொடா' சட்டங்கள், இவைகளைத் தடுக்கவில்லையே!
அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்பட்டு வரும் 'பொடா'வை முழுமையாக சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்! தி.மு.க. - ம.தி.மு.க. போன்ற கட்சிகள், இப்போது தங்கள் குரலை மாற்றிக் கொண்டு 'பொடா'வை எதிர்க்க முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல திருப்பமாகும்!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 06.11.2003</b>}}<noinclude>{{nop}}{{rv|224 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''224'''}}}}|{{left|{{larger|'''224'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ddh4nbm10z49plfzgmcwq1gc5uws2nx
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/227
250
648612
1952424
2026-07-09T12:54:40Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>உரிமைகளும், உரிமை மீறல்களும்</b>}}}}
{{li|த|2em}}மிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, திடீர் திடீரென்று அடக்கு முறைகள், கைதுகள், தடாலடி ஆணைகளைப் பிறப்பிப்பதும், அதை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் வழக்கமாகி விட்டது. இதன் மூலம் பல அடிப்படையான மக்கள் பிரச்சனைகள், திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு விடுகின்றன. இதற்கு அண்மையில் நடந்த உதாரணம் - முரசொலி', 'இந்து' பத்திரிகைகள் மீதும், சட்ட மன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீதும், சட்டமன்ற உரிமைக் குழு எடுத்த நடவடிக்கைகள் ஆகும்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதிக்கு – சட்டமன்ற உரிமைக்குழு 30 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. டாக்டர் குமாரதாஸ் என்ற அ.தி.மு.க. உறுப்பினரை, அவைக்குள்ளேயே பரிதி இளம்வழுதி, தாக்கிக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டி பட்ஜெட் தொடர் முழுதும் அவரை ‘சஸ்பெண்ட்' செய்தார்கள். பின்னர் சட்டமன்றமே, பரிதி இளம்வழுதி மீது. கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. பரிதி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, 15 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு, பிணையில் விடுதலையானார். அந்த வழக்கு இப்போது விசாரணையில் இருக்கிறது. இதே குற்றச்சாட்டுக்காக - இப்போது, சட்டமன்ற உரிமைக் குழு, பரிதி இளம் வழுதிக்கு 30 நாள் சிறைத் தண்டனையும் விதித்திருக்கிறது. ஒரே குற்றத்துக்காக இரண்டு தண்டனைகள் வழங்கப்படும் சட்ட விரோதமான<noinclude>{{nop}}{{rv|225 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''225'''}}}}|{{left|{{larger|'''225'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7ew8a3asvd180j8a7uj33myh8wrmjrr
1952464
1952424
2026-07-09T14:43:01Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>உரிமைகளும், உரிமை மீறல்களும்</b>}}}}
{{li|த|2em}}மிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, திடீர் திடீரென்று அடக்கு முறைகள், கைதுகள், தடாலடி ஆணைகளைப் பிறப்பிப்பதும், அதை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் வழக்கமாகி விட்டது. இதன் மூலம் பல அடிப்படையான மக்கள் பிரச்சனைகள், திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு விடுகின்றன. இதற்கு அண்மையில் நடந்த உதாரணம் - முரசொலி', 'இந்து' பத்திரிகைகள் மீதும், சட்ட மன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீதும், சட்டமன்ற உரிமைக் குழு எடுத்த நடவடிக்கைகள் ஆகும்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதிக்கு – சட்டமன்ற உரிமைக்குழு 30 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. டாக்டர் குமாரதாஸ் என்ற அ.தி.மு.க. உறுப்பினரை, அவைக்குள்ளேயே பரிதி இளம்வழுதி, தாக்கிக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டி பட்ஜெட் தொடர் முழுதும் அவரை ‘சஸ்பெண்ட்' செய்தார்கள். பின்னர் சட்டமன்றமே, பரிதி இளம்வழுதி மீது. கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. பரிதி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, 15 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு, பிணையில் விடுதலையானார். அந்த வழக்கு இப்போது விசாரணையில் இருக்கிறது. இதே குற்றச்சாட்டுக்காக - இப்போது, சட்டமன்ற உரிமைக் குழு, பரிதி இளம் வழுதிக்கு 30 நாள் சிறைத் தண்டனையும் விதித்திருக்கிறது. ஒரே குற்றத்துக்காக இரண்டு தண்டனைகள் வழங்கப்படும் சட்ட விரோதமான<noinclude>{{nop}}{{rv|225 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''225'''}}}}|{{left|{{larger|'''225'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
oipey05och0bqrcxbirqy68p8574n7i
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/228
250
648613
1952425
2026-07-09T12:55:29Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன. மிக மோசமாக பழிவாங்கப் படுகின்றன என்பதற்கு. இது மற்றொரு சான்று! எதிர்க்கட்சிகள் ஆனால் சட்டமன்ற உற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன. மிக மோசமாக பழிவாங்கப் படுகின்றன என்பதற்கு. இது மற்றொரு சான்று!
எதிர்க்கட்சிகள்
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைதைவிட - இப்போது இந்தியா முழுதும் பேசப்படுவது - 'இந்து' பத்திரிகையின் 5 செய்தியாளர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள 15 நாள் தண்டனை பற்றித்தான்! 'இந்து' பத்திரிகையாளர்களோடு 'முரசொலி' ஆசிரியர் செல்வத்துக்கும் தண்டனை தரப்பட்டுள்ளதால், 'முரசொலி'ப் பற்றியும் பேசுகிறார்கள்.
சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி
'இந்து' தனது தலையங்கத்தில் விமர்சனம் செய்தது. இது எப்படி உரிமை மீறலாகும்? அப்படியே குற்றம் என்றாலும் பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் தான்; அதற்காக செய்தியாளர்களையும், நிர்வாக ஆசிரியர் களையும் ஏன் தண்டிக்க வேண்டும்? 'இந்து'வின் தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட 'முரசொலி' ஆசிரியர் செல்வத்தைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இப்படியெல்லாம் பத்திரிகை சுதந்திரத்தை - எழுத்துரிமையை நசுக்குவது, வன்மையான கண்டனத்துக்கு உரியது தான். நாடு முழுதும் வெடித்துக் கிளம்பும் கண்டனக் குரலில் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
ஆனாலும், 'நக்கீரன்' பத்திரிகையின் செய்தியாளராக இருந்த சிவசுப்ரமணியன் மீது, கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, பல மாதங்கள் சிறையில் அடைத்து, காவல் நிலையத்தில் சித்திரவதை செய்தார்களே; அப்போது, இப்படி எல்லாம் கடுமையான எதிர்ப்புணர்வுகள் எழவில்லையே ஏன்? 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலைப் பயங்கரவாதியாக்கி, அவர் மீது பொடா சட்டம் பாய்ந்தபோது, இப்போது பத்திரிகை உரிமைக் காவலராகத் தன்னைக் கூறிக் கொள்ளும் அத்வானிகள் கண்டனம் தெரிவிக்க வரவில்லையே ஏன்? ‘சூத்திர'ப் பத்திரிகையாளராக இருந்தால் அவர்கள் மீது, தமிழக அரசு - ‘பொடா' சட்டத்தையும், கிரிமினல் சட்டத்தையும் ஏவி விட முடியும். ஆனால் பார்ப்பனர்களாகப் பிறந்து விட்டால், அவர்களுக்கு அந்த ஆபத்துகள் இல்லை.
பார்ப்பன ஏடுகள் மீது நடவடிக்கை என்றால் - கருத்து வேறுபாடுகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, வாஜ்பாய்களும், அத்வானிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்பதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது கருத்துரிமைக்காகப் போராடும் 'இந்து' ஏட்டைப் பாராட்டலாம். ஆனால், பழ. நெடுமாறனும், சுப. வீரபாண்டியனும், 226 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|226 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''226'''}}}}|{{left|{{larger|'''226'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
asxj5jazk6xxasselw0ckedjnun1rql
1952426
1952425
2026-07-09T12:59:01Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன. மிக மோசமாக - எதிர்க்கட்சிகள் பழிவாங்கப் படுகின்றன என்பதற்கு. இது மற்றொரு சான்று!
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைதைவிட - இப்போது இந்தியா முழுதும் பேசப்படுவது - 'இந்து' பத்திரிகையின் 5 செய்தியாளர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள 15 நாள் தண்டனை பற்றித்தான்! 'இந்து' பத்திரிகையாளர்களோடு 'முரசொலி' ஆசிரியர் செல்வத்துக்கும் தண்டனை தரப்பட்டுள்ளதால், 'முரசொலி'ப் பற்றியும் பேசுகிறார்கள்.
'இந்து' தனது தலையங்கத்தில் - சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்தது. இது எப்படி உரிமை மீறலாகும்? அப்படியே குற்றம் என்றாலும் பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் தான்; அதற்காக செய்தியாளர்களையும், நிர்வாக ஆசிரியர் களையும் ஏன் தண்டிக்க வேண்டும்? 'இந்து'வின் தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட 'முரசொலி' ஆசிரியர் செல்வத்தைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இப்படியெல்லாம் பத்திரிகை சுதந்திரத்தை - எழுத்துரிமையை நசுக்குவது, வன்மையான கண்டனத்துக்கு உரியது தான். நாடு முழுதும் வெடித்துக் கிளம்பும் கண்டனக் குரலில் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
ஆனாலும், 'நக்கீரன்' பத்திரிகையின் செய்தியாளராக இருந்த சிவசுப்ரமணியன் மீது, கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, பல மாதங்கள் சிறையில் அடைத்து, காவல் நிலையத்தில் சித்திரவதை செய்தார்களே; அப்போது, இப்படி எல்லாம் கடுமையான எதிர்ப்புணர்வுகள் எழவில்லையே ஏன்? 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலைப் பயங்கரவாதியாக்கி, அவர் மீது பொடா சட்டம் பாய்ந்தபோது, இப்போது பத்திரிகை உரிமைக் காவலராகத் தன்னைக் கூறிக் கொள்ளும் அத்வானிகள் கண்டனம் தெரிவிக்க வரவில்லையே ஏன்? ‘சூத்திர'ப் பத்திரிகையாளராக இருந்தால் அவர்கள் மீது, தமிழக அரசு - ‘பொடா' சட்டத்தையும், கிரிமினல் சட்டத்தையும் ஏவி விட முடியும். ஆனால் பார்ப்பனர்களாகப் பிறந்து விட்டால், அவர்களுக்கு அந்த ஆபத்துகள் இல்லை.
பார்ப்பன ஏடுகள் மீது நடவடிக்கை என்றால் - கருத்து வேறுபாடுகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, வாஜ்பாய்களும், அத்வானிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்பதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது கருத்துரிமைக்காகப் போராடும் 'இந்து' ஏட்டைப் பாராட்டலாம். ஆனால், பழ. நெடுமாறனும், சுப. வீரபாண்டியனும்,<noinclude>{{nop}}{{rv|226 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''226'''}}}}|{{left|{{larger|'''226'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3oabp69ta4t1gasi1p57by951bf4un7
1952439
1952426
2026-07-09T13:12:08Z
Dharshika2026
16400
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன. மிக மோசமாக - எதிர்க்கட்சிகள் பழிவாங்கப் படுகின்றன என்பதற்கு. இது மற்றொரு சான்று!
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைதைவிட - இப்போது இந்தியா முழுதும் பேசப்படுவது - 'இந்து' பத்திரிகையின் 5 செய்தியாளர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள 15 நாள் தண்டனை பற்றித்தான்! 'இந்து' பத்திரிகையாளர்களோடு 'முரசொலி' ஆசிரியர் செல்வத்துக்கும் தண்டனை தரப்பட்டுள்ளதால், 'முரசொலி'ப் பற்றியும் பேசுகிறார்கள்.
'இந்து' தனது தலையங்கத்தில் - சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்தது. இது எப்படி உரிமை மீறலாகும்? அப்படியே குற்றம் என்றாலும் பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் தான்; அதற்காக செய்தியாளர்களையும், நிர்வாக ஆசிரியர் களையும் ஏன் தண்டிக்க வேண்டும்? 'இந்து'வின் தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட 'முரசொலி' ஆசிரியர் செல்வத்தைக் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இப்படியெல்லாம் பத்திரிகை சுதந்திரத்தை - எழுத்துரிமையை நசுக்குவது, வன்மையான கண்டனத்துக்கு உரியது தான். நாடு முழுதும் வெடித்துக் கிளம்பும் கண்டனக் குரலில் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
ஆனாலும், 'நக்கீரன்' பத்திரிகையின் செய்தியாளராக இருந்த சிவசுப்ரமணியன் மீது, கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, பல மாதங்கள் சிறையில் அடைத்து, காவல் நிலையத்தில் சித்திரவதை செய்தார்களே; அப்போது, இப்படி எல்லாம் கடுமையான எதிர்ப்புணர்வுகள் எழவில்லையே ஏன்? 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலைப் பயங்கரவாதியாக்கி, அவர் மீது பொடா சட்டம் பாய்ந்தபோது, இப்போது பத்திரிகை உரிமைக் காவலராகத் தன்னைக் கூறிக் கொள்ளும் அத்வானிகள் கண்டனம் தெரிவிக்க வரவில்லையே ஏன்? ‘சூத்திர'ப் பத்திரிகையாளராக இருந்தால் அவர்கள் மீது, தமிழக அரசு - ‘பொடா' சட்டத்தையும், கிரிமினல் சட்டத்தையும் ஏவி விட முடியும். ஆனால் பார்ப்பனர்களாகப் பிறந்து விட்டால், அவர்களுக்கு அந்த ஆபத்துகள் இல்லை.
பார்ப்பன ஏடுகள் மீது நடவடிக்கை என்றால் - கருத்து வேறுபாடுகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, வாஜ்பாய்களும், அத்வானிகளும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்பதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது கருத்துரிமைக்காகப் போராடும் 'இந்து' ஏட்டைப் பாராட்டலாம். ஆனால், பழ. நெடுமாறனும், சுப. வீரபாண்டியனும்,<noinclude>{{nop}}{{rv|226 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''226'''}}}}|{{left|{{larger|'''226'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ek9ry7k3psyo9sm9zjagbsxdrqm7a1s
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/229
250
648614
1952440
2026-07-09T13:15:39Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>பாவாணனும், கருத்துகளை வெளியிட்டதற்காகத்தானே 'பொடா'வில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பொடாவைக் கண்டிக்கும் 'இந்து' ஏடு பொடாவின் கீழ், கைது செய்யப்பட்ட இவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு தலையங்கமோ, ஒரு கட்டுரையோகூட வெளியிட முன் வராதது ஏன்? இந்தக் கேள்வியையும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது. அப்படியானால், 'இந்து' ஏட்டுக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்களைக் கூறுவோர் மீது, தாராளமாகக் கருத்துரிமைப் பறிப்பு செய்யலாம் என்று அந்த ஏடு கருதுகிறதா? ஆக, கருத்துரிமை - பேச்சுரிமையிலும் - 'இந்து' ஏடுகளுக்கு ஒரு வர்ணாஸ்ரமப் பார்வை இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்? உண்மைகள் சில நேரங்களில் கசக்கலாம்; ஆனாலும், அதைச் சுட்டிக் காட்டித்தானே ஆக வேண்டும். 'இந்து'வின் கருத்துரிமைக்காக தமிழர்கள் குரல் கொடுக்கும் போது, தமிழர்களின் கருத்து உரிமைக்காக, 'இந்து' குரல் கொடுக்கக் கூடாதா? இதுவே நாம் எழுப்பும் கேள்வி,
– புரட்சிப் “புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.11.2003<noinclude>{{nop}}{{rv|227 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''227'''}}}}|{{left|{{larger|'''227'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dlctnaa4ttjtkpvw7bu7tqr4kkcyw3q
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/230
250
648615
1952442
2026-07-09T13:18:18Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>சேலம் அழைக்கிறது!
நவம்பர் 29 - சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் போராட்ட ஆயத்த மாநாடு! புதுவை மாநில மாநாட்டில் கழகம் அறிவித்த செயல்திட்டங்களை நோக்கியப் பயணத்தில், கழகம் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறது. கோயில் கருவறைக்குள் - இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமைக்கும் இழிவுக்கும் எதிராக, தன்மானத்தோடு, ஆத்திகத் தமிழர்கள் கருத்துகளை முன்வைக்க இருக்கிறார்கள். பெரியாரியம் மனித சமத்துவத்துக்காகவும் - மானத்துக்காகவும் போராடும் இயக்கம் என்பதை, இந்நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
டிசம்பர் 19ஆம் தேதி - ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். 1972ஆம் ஆண்டு இதே தேதியில்தான் சென்னை - தியாகராயர் நகரில் - பெரியார் தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த நாள். கருவறைக்குள் நிலவும் சூத்திர இழிவை ஒழிக்க, அந்த இறுதிக் கூட்டத்தில் போர் முரசு கொட்டினார்.
'தமிழர்களே. உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டுப் போகிறேனே' என்று ஒரு இனத்தின் சமுதாய மானத்துக்காகக் கவலைப்பட்டார். அந்த இனமான இழிவை ஒழிக்கும் அறப்போரில் அதே டிசம்பர் 19இல் தான் தந்தை பெரியார் திராவிடர் கழகம் களம் இறங்கப் போகிறது.
கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவும் - கழகத்துக்கு நிதி அளிப்பு விழாக்களும், கழகத்தின் வளர்ச்சிக்கு உரமிடக்கூடிய ஆக்கபூர்வப் பணிகளாகும். கொள்கை
228 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|228 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''228'''}}}}|{{left|{{larger|'''228'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8l8rueyqfz0ggnwak6r4jcilgarb001
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/231
250
648616
1952443
2026-07-09T13:19:58Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>உணர்வாளர்கள், தமிழினச் சிந்தனையாளர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இந்த இயக்கம் வளர வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்கம் தெளிவான கொள்கைப் பார்வையோடு, ஆரவாரம் ஆர்ப்பாட்டமின்றி, வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக அமைந்துள்ளன சேலம் மாநாட்டு நிகழ்ச்சிகள்.
மாநாட்டின் மற்றொரு சிறப்பு, 1925ஆம் ஆண்டு 'குடி அரசு' நூல் தொகுப்பு வெளியீடு; 15 ஆண்டுகளுக்கும் மேலான பெரியாரியல் வாதிகளின் கனவு இது. டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ், காந்தியார் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, ஆண்டு வரிசைப்படி, தொகுதிகளாக வந்துள்ளது போல், இந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளரான பெரியார் கருத்துகளும் முழுமையாக, இளம் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது மிக அடிப்படையான பணியல்லவா? அந்த வரலாற்றுக் கடமையை ஆற்றும் பொறுப்பை, வளர்ந்து வரும் நமது இயக்கம் பெருமையுடன் ஏற்று, நிறைவேற்ற இருக்கிறது.
மாநாடுகள் கூடிக் கலைவதற்கு அல்ல; செயல் திட்டங்களை உருவாக்குவதற்குத் தான் என்பதை புதுவையில் காட்டினோம். இப்போது சேலத்தில் கூடுகிறோம். ஆரவாரத்துக்காக அல்ல; ஆக்கபூர்வ செயல் திட்டங்களுக்காக: பெரியாரியலை முன்னெடுப்பதற்காக, வாருங்கள், தோழர்களே சேலத்தில் சந்திப்போம்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 20.11.2003<noinclude>{{nop}}{{rv|229 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''229'''}}}}|{{left|{{larger|'''229'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
apdpoustw9h4840m4nk7subals8dbbn
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/232
250
648617
1952444
2026-07-09T13:21:08Z
Dharshika2026
16400
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ மத்திய ரயில்வே அமைச்சரின் வரவேற்கத்தக்க முடிவு இந்தியா என்பது பல்வேறு மொழி - இனம் - கலாச்சார மக்களைக் கொண்ட ஒரு உபகண்டம். இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Dharshika2026" /></noinclude>________________
மத்திய ரயில்வே அமைச்சரின் வரவேற்கத்தக்க முடிவு
இந்தியா என்பது பல்வேறு மொழி - இனம் - கலாச்சார
மக்களைக் கொண்ட ஒரு உபகண்டம். இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி உண்மையான கவலை உள்ளவர்கள், இந்த உண்மையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளையும், உரிமைகளையும் அங்கீகரித்தால்தான் - ஒருமைப்பாடு நீடிக்கும்.
இரயில்வே துறைகளில் பணி நியமனங்களில் அந்தந்த மாநில மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்து, அவை கலவரத்தில் முடிந்துள்ளன. வடகிழக்கு மாநிலமான அசாமில் - ரயில்வே துறையில் நடக்கும் நியமனங்களில் பீகார் மாநிலத்தவர் அதிக இடம் பிடித்து விடுவதாக அசாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் கலவரம் வெடித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் - ரயில்வேயில் மராட்டியர்கள், வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதாக, சிவசேனையினர், மும்பையில் உள்ள ரயில்வே ஊழியர் தேர்வு வாரிய அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர்.
ரயில்வேத் துறை நாடு முழுதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் பணி வாய்ப்புகள் அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கப்படுவதே நியாயம். இதைப் புரிந்து, மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் செயல்பட முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
230 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|230 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''230'''}}}}|{{left|{{larger|'''230'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k5ix00cdtj2z3irexbi3va1c9ihj8b4
1952453
1952444
2026-07-09T14:19:35Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>மத்திய ரயில்வே அமைச்சரின் வரவேற்கத்தக்க முடிவு
இந்தியா என்பது பல்வேறு மொழி - இனம் - கலாச்சார
மக்களைக் கொண்ட ஒரு உபகண்டம். இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி உண்மையான கவலை உள்ளவர்கள், இந்த உண்மையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளையும், உரிமைகளையும் அங்கீகரித்தால்தான் - ஒருமைப்பாடு நீடிக்கும்.
இரயில்வே துறைகளில் பணி நியமனங்களில் அந்தந்த மாநில மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்து, அவை கலவரத்தில் முடிந்துள்ளன. வடகிழக்கு மாநிலமான அசாமில் - ரயில்வே துறையில் நடக்கும் நியமனங்களில் பீகார் மாநிலத்தவர் அதிக இடம் பிடித்து விடுவதாக அசாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் கலவரம் வெடித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் - ரயில்வேயில் மராட்டியர்கள், வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதாக, சிவசேனையினர், மும்பையில் உள்ள ரயில்வே ஊழியர் தேர்வு வாரிய அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர்.
ரயில்வேத் துறை நாடு முழுதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும், அந்தந்த மாநிலங்களில் பணி வாய்ப்புகள் அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கப்படுவதே நியாயம். இதைப் புரிந்து, மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் செயல்பட முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.<noinclude>{{nop}}{{rv|230 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''230'''}}}}|{{left|{{larger|'''230'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
c1l8da3l3gm00mpquxylp51omf1da9y
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/233
250
648618
1952454
2026-07-09T14:22:27Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>நாடு முழுதும் 19 ரயில்வே ஊழியர் தேர்வு வாரியங்கள் செயல்படுகின்றன. இந்த வாரியங்கள் - 67 ரயில்வே நிர்வாகப் பிரிவுகளுடன் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். வேலை நியமனங்களின்போது, ஒவ்வொரு பிரிவிலும் காலி இடங்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு - அந்தப் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ள தேர்வு வாரியம் மூலம் நியமனங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார். இதன் மூலம் அந்தந்த மாநிலத்தினர் – அந்தப் பகுதியில் தேர்வு எழுதி, அதே பகுதியில் பணி நியமனம் பெறும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதே போல் தேர்வுகளை, இந்தி, ஆங்கில மொழிகளோடு, அந்தந்த மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். சமூகநீதிக் கொள்கையில் – தனக்குள்ள ஈடுபாட்டை, தனது துறையில் அமைச்சர் நிதிஷ்குமார் செயல்படுத்தி வருவதை நாம் குறிப்பிட வேண்டும். மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய பெருமை, அமைச்சருக்கு உண்டு! இது தொடர்பாக, மற்றொரு பிரச்சனையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற முக்கிய நகரங்களில் ரயில்வே நிர்வாகம் - கேரளாவில் உள்ள பாலக்கோடு ரயில்வே நிர்வாகப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதால் - இங்கு மலையாளிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே, இந்த ரயில்வே பிரிவுகளின் நிர்வாகத் தலைமையகத்தை, தமிழகத்திலேயே உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்படப் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் - மிகச் சிறப்பாகத் துடிப்புடன் செயல்பட்டு வரும் ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி அவர்கள், மத்திய அமைச்சர் நிதிஷ் குமார் அவர்களின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய இனங்களின் உரிமைகள் காப்பாற்றப்படுவதால் மட்டுமே, ஒருமைப்பாட்டைக் கொண்டு வர முடியும்! இல்லையேல் நாடு சிதறும்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 27.11.2003<noinclude>{{nop}}{{rv|231 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''231'''}}}}|{{left|{{larger|'''231'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
iobfkygjcionycqnt0lwv1wq9da7mnf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/234
250
648619
1952455
2026-07-09T14:24:27Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>சேலம் தந்த எழுச்சி!
சேலம் மாவட்டக் கழகச் செயல் வீரர்களின் - கடும் உழைப்பால், மாவட்ட மாநாடு, ஒரு மாநில மாநாடு போலவே எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. கழகத் தலைவருக்கு பிரச்சார வேன் வழங்கியதோடு, கழக வளர்ச்சி நிதியாக ரூ.2லட்சத்தையும் தோழர்கள் வழங்கியிருக்கிறார்கள். இதற்காக தோழர்கள் எவ்வளவு கடும் உழைப்பைச் செலுத்தியிருக்க வேண்டும் என்பதை எண்ணி, பூரிப்பும் பெருமிதமும் அடைகிறோம். தந்தை பெரியார் கொள்கைகளுக்கு, மக்களிடத்திலே இருக்கும் ஆதரவையும் இந்தச் சாதனை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
கழகத் தலைவருக்கு பிரச்சார வேன் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில், இது கழகத்துக்கான பிரச்சார வேன்தான்! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் முழு நேரப் பணியே, இயக்கப் பணிதானே!
கடவுள் மறுப்பாளர்களைக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மேடையில் - ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்ட ஆன்மீகத் தமிழர்கள், உரிமையோடு பங்கெடுத்து, இன இழிவுக்கும், தீண்டாமைக்கும் எதிராக இந்த மாநாட்டில் குரல் கொடுத்திருப்பது, குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். அறிவு ஆசான் பெரியார், இத்தகைய அணுகுமுறைகளை ஏற்கனவே நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அந்த அணுகு முறையை மேலும் நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.
232 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|232 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''232'''}}}}|{{left|{{larger|'''232'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bpxvvjh09c1h59jnon2y5shvaqvugwh
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/235
250
648620
1952458
2026-07-09T14:27:22Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>கடந்த 20 ஆண்டுகளாக திராவிடர் கழகத் தலைமையால் கிடப்பில் போடப்பட்ட - பெரியாரின் 'குடிஅரசு' கட்டுரைகளையும் - உரை களையும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்முயற்சி எடுத்து - முதல் தொகுதியை இம்மாநாட்டில் வெளியிட்டிருக்கிறது. மாநாட்டுச் சிறப்புகளிலே இதுவே முதன்மையானது என்று நாம் கருதுகிறோம். இந்தத் தொகுப்புப் பணிகளில் ஈடுபட்ட தோழர்களின் உழைப்பு, வீணாகிடவில்லை.
தேர்தல் அரசியல் - ஆரவாரம் - பகட்டுகள் - தனி மனிதத் துதிபாடுகளில் மூழ்கிப் போய்க் கொள்கைகளை விட்டு வெகுதூரம் விலகிப் போய்க் கொண்டிருக்கும், தமிழக அரசியல் சமூகச் சூழலில் - லட்சியப் பிடிப்பு - தன்னல மறுப்புள்ள கொள்கையாளர்களைக் கொண்ட, ஒரு இயக்கத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கான பயிற்சிக் களத்தில், நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
தேவையான முன்னுரிமை தரவேண்டிய செயல் திட்டங்களைத் தேர்வு செய்து அவைகளைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நாம், அடுத்து ஜன. 30ஆம் தேதி, கருவறை நுழைவுப் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம். ஒத்தக் கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்த இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியை, தமிழர் சமுதாயத்தின் ஒருமித்தப் போராட்டமாக வடித்தெடுக்கும் முயற்சிகளில் நாம் இறங்கியுள்ளோம். அதற்காக, பெரியார் அறிவித்த இந்த இறுதிப் போராட்டத்துக்கு, மக்கள் ஆதரவைத் திரட்டவும், உடன்பாடுள்ள அமைப்பு களுடன் கலந்து பேசவும் -கிளர்ச்சியை டிசம்பர் 19லிருந்து காந்தியார் நினைவு நாளான ஜனவரி 30-க்குத் தள்ளி வைத்துள்ளோம்.
கழகத்தின் புதுவை மாநில மாநாட்டைத் தொடர்ந்து - தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கான இயக்கத்தையும், கிளர்ச்சியையும் நடத்தி - அடுத்து கருவறை நுழைவுக் கிளர்ச்சிக்கான களப்பணிகளில் இறங்கியுள்ளோம்.
களப்பணிக்கு உரமூட்டி, உந்துதலைத் தந்துள்ளது சேலம் மாநாடு. மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த கழகச் செயல் மறவர்களை மீண்டும் பாராட்டி, களப்பணிக்குத் தயாராக தோழர்களை அறைகூவி அழைக்கிறோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 04.12.2003<noinclude>{{nop}}{{rv|233 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''233'''}}}}|{{left|{{larger|'''233'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
19azx7te6cm9jrqqg34qzjw6d4d5s97
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/236
250
648621
1952459
2026-07-09T14:29:48Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் சீரிய அறிவிப்பு
தங்கள் கோயில்
றை நம்பிக்கைக் கொண்ட தமிழர்கள் இல்லங்களில் நடத்தும் சடங்குகளிலும் வழிபாட்டிலும் சமஸ்கிருதத்தையும் - பார்ப்பனர்களையும் புறக்கணிக்குமாறு சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்துக்கு வலிமை சேர்ப்பது போல்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றில் நம்பிக்கையாளர்கள் நடத்தும் சடங்குகளைத் தமிழில் நடத்துவதற்கான பயிற்சி மய்யம் ஒன்றைத் தமது மடம் துவக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இந்த முயற்சி பாராட்டி வரவேற்கத் தக்கதாகும்.
பெரியார் இயக்கம் - கடவுள் மத நம்பிக்கைகளை முற்றாக மறுக்கும் அறிவியல் பூர்வமான பகுத்தறிவு இயக்கமாகும். மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான எந்தச் சடங்கையும் பெரியார் தொண்டர்கள் பின்பற்ற மாட்டார்கள். ஆனாலும் இவைகளில் நம்பிக்கையுள்ள பழக்கத்தின் காரணமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி, தங்களின் பண்பாட்டு மேலாதிக்கத்தை உறுதியாக்கிக் கொண்ட தோடு. வடமொழி சுலோகங்கள் வழியாகத் தமிழர்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். கடவுளை நேரடியாக<noinclude>{{nop}}{{rv|234 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''234'''}}}}|{{left|{{larger|'''234'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
60xt3yqd23rj5tptzmozd0p5538vrrf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/237
250
648622
1952460
2026-07-09T14:33:17Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>வணங்கக்கூடிய உரிமை தங்களுக்கும், தங்களது சமஸ்கிருதத்துக்கும் தான் உண்டு என்று நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார்கள்! எனவே தான் தமிழர்களின் இழிவைத் துடைக்கும். இந்த முயற்சிகளில், தன்மான இயக்கமான பெரியார் இயக்கம் முனைப்புக் காட்டி செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி, கடவுள் மத மறுப்பாளர்களும், சட்டப்படி "இந்து”க்களாகவே இருக்க வேண்டிய கட்டாயத்தை அரசியல் சட்டம் ஏற்படுத்தி விட்டது. “இந்து”வாக தமிழர்கள் மாற்றப்படும் போது 'சூத்திரர்' என்ற இழிவையும் சுமக்க வேண்டியிருக்கிறது.
எனவே தான் இன்னமும் 'சூத்திரர்' என்ற இழிவை நிலைநாட்டிக் கொண்டு, தீண்டாமையை சாஸ்திர ஆகமங்களின் வழியாகக் காப்பாற்றி வரும் கோயில் கர்ப்பக் கிரகத்தில் - அனைத்து ஜாதியினருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறோம். இந்த உணர்வைச் சரியாகப் புரிந்து கொண்ட இறை நம்பிக்கையாளர்களும் - நமது மேடைகளில் வந்து பேசி, தமிழின ஒற்றுமைக்குக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
-
ஆனாலும் கூட - இன்னமும் பார்ப்பன சங்கராச்சாரிகளின் சீடர்களாகவே -பல தமிழர் மடாதிபதிகள் தங்களைக் காட்டிக் கொள்வது, நமக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது. தமிழையும் தமிழர் வழிபாட்டு முறைகளையும் அங்கீகரிக்க மறுக்கும் சங்கராச்சாரிகளுக்கு, ஏன், இந்த சைவச் சாமியார்கள் துணை போக வேண்டும் ஆட்சி அதிகாரம் 'அவாள்களிடம்’ இருக்கிறதே என்ற அச்சமா? எல்லாவற்றையும் துறக்கத் தயாரான துறவிகள் அச்சத்தை மட்டும் துறக்க மறுக்கலாமா?
இந்தப் பின்னணியில் - தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சரியான வாரிசாக அடையாளம் காட்டி செயல்பட்டு வரும் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் இந்த அறிவிப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்தி வரவேற்கிறோம்! சைவ மடாதிபதிகளுள் சங்கராச்சாரிக்குப் பின்னால் போகும் இழிவைக் கைவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.12.2003<noinclude>{{nop}}{{rv|235 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''235'''}}}}|{{left|{{larger|'''235'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5iyrz2iiah05cej9dxr5qgqczc80lbd
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/238
250
648623
1952461
2026-07-09T14:37:53Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>
‘பொடா' சட்டத் திருத்தம்
ஒரு கண்துடைப்பு தான்! தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவது - ‘பொடா' சட்டத்தின்கீழ் குற்றமாகாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே குற்றச்சாட்டின் கீழ்தான் - தமிழ்நாட்டில், பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், வைகோ போன்ற பலரும் - ஓராண்டுக்கு மேலாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே போல் ‘பொடா'வின் கீழ் கைதானவர்கள் - ஓராண்டுக்குள், பிணையில் வெளி வரலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்த 'பொடா' சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதை, இந்தத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
ஆனாலும் - இந்தத் தீர்ப்புகளும் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தமும், 'பொடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து விடப் போவதில்லை என்பதே நமது உறுதியான கருத்து. மிகக் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய, ஒரு சட்டம் - திட்டவட்டமான வரையறைகள் இல்லாமல் -குழப்பங்களுக்கு உள்ளாகி இருப்பதே, மக்கள் உரிமைக்கு எதிரான ஆபத்தாகும்.
ஏற்கனவே 'வைகோ' நாடாளுமன்றத்தில் ஓட்டுப் போட நீதிமன்றம் அனுமதித்தது. இப்போது நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க - முதலில் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அன்று இரவே, இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அனுமதி மறுத்து விட்டது.
236 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|236 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''236'''}}}}|{{left|{{larger|'''236'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s6g3ay864p1icdcg3vauikd39fvk9gu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/239
250
648624
1952462
2026-07-09T14:40:18Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>இந்தச் சட்டத்தை ஆதரித்து கடந்த முறை வாக்களித்த தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், இம்முறை, திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்காததோடு 'பொடா' சட்டத்துக்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கம்போல - ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. தான், தனது முழுமையான பார்ப்பனியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது; இப்போது கொண்டு வரப்பட்டுள்ள கண்துடைப்புத் திருத்தத்தைக்கூட செய்யக் கூடாது என்று, அக்கட்சி கூறுகிறது. தி.மு.க., ம.தி.மு.க. 'பொடா' வைத் திரும்பப் பெற வலியுறுத்துகின்றன.
ஓராண்டுக்கு முன் பிணையில் வர முடியும் என்று சட்டத்தைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் கூறிய பிறகும், தமிழ்நாடு அரசோ, 'தடா' சிறப்பு நீதிமன்றமோ அதை ஏற்கவில்லை. சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதால் - சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கு – இந்த ஓராண்டு காலமாக உடல் ரீதியாகவும் - உள்ள ரீதியாகவும் நேர்ந்து விட்ட இழப்புகளுக்கு யார் பொறுப்பு? இந்த முறைகேடுகள் மேலும் மேலும் தொடராதிருக்க, சட்டத்தைத் திரும்பப் பெறுவது தான் ஒரே வழி, பாரம் சுமக்கும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து, அதை ஏமாற்ற, ஒரு சிறு துரும்பை அகற்றுவது போல், மக்களை ஏமாற்றவே இந்தச் சட்டத்திருத்தம் வந்திருக்கிறது என்பதே உண்மை
‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.12.2003<noinclude>{{nop}}{{rv|237 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''237'''}}}}|{{left|{{larger|'''237'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7qk8lz4fnnpg2oqxwyaf9j69tz5qk8j
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/240
250
648625
1952463
2026-07-09T14:41:55Z
Dharshika2026
16400
/* மேம்படுத்த வேண்டியவை */
1952463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>நூறாவது இதழ்
புரட்சிப் பெரியார் முழக்கம்' 100ஆவது இதழ், உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும், ஒரு வார ஏட்டை நடத்துவது, நம்மைப் போன்ற பொருளியல் அடித்தளமில்லாத இயக்கங்களுக்கு, அவ்வளவு எளிமையான பணி அல்ல; ஆனாலும், தடைகளைக் கடந்து, தொடர்ந்து 'புரட்சிப் பெரியார் முழக்கம்' வெளிவந்து கொண்டிருக்கிறது.(இடையில் இரண்டு இதழ்கள் மட்டும்
வரவில்லை)
‘புரட்சிப் பெரியார் முழக்கம்' துவங்கிய, சில வாரங்களிலே, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கருநாடக காவல் துறையால் அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு விட்டார். அவரது ஓராண்டு கால சிறைவாசத்தில், கழகப் பணிகளைத் தொய்வின்றி நடத்துவதற்கும் அணிகளுக் கிடையே கருத்துகளைக் கொண்டு செல்வதற்கும், 'புரட்சிப் பெரியார் முழக்கம்' பெரிதும் பயன்பட்டது. தொடர்ந்து, கழகத்தின் செயல் திட்டங்களையும் - பல்வேறு பிரச்சனைகளில் கழகத்தின் நிலைப்பாடுகளையும் உடனுக்குடன் தோழர்களிடம் விளக்குவதற்கும், இந்த ஏடுதான் இணைப்புப் பாலமாக செயல்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனாலும், 'பெரியார் முழக்க'த்துக்கு வலிமையான பொருளாதார அடித்தளமில்லை; ஒரு வாரப் பத்திரிகைக்கு உரியக் கட்டமைப்பு வசதிகள் இல்லை; இந்த நிலையில் பக்கங்களைக் கூட்டி, பத்திரிகையை மேலும் செழுமையாக்க வேண்டும் என்றும், ஒரு செய்தி மடல் என்ற நிலையிலிருந்து
238 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|238 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''238'''}}}}|{{left|{{larger|'''238'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p1xqt293s8v7m5ossbpcsy2qj3y3xli
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/127
250
648626
1952472
2026-07-09T15:00:00Z
Subisena
16382
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ஓஸ்லோ மாநாடு யுத்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Subisena" /></noinclude>________________
ஓஸ்லோ மாநாடு
யுத்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இதற்கான மாநாடு ஒன்று கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். முதலில் இதில் பங்கேற்பதில் தயக்கம் காட்டிய இந்தியா பிறகு தனது பிரதிநிதியாக அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவரும் ஆண்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் இம்மாநாட்டில் முதன் முதலாக நேரிடையாக பேச இருப்பதும் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இயக்கமும், இலங்கை அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதால் விடுதலைப் புலிகளின் மீதான தங்களது விமர்சனத்தோடு மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளன. ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் கடும் சீரழிவுக்கு உள்ளான தமிழர் பகுதிகளை புனரமைப்பதற்கு சர்வதேச நிதி திரட்டும் இம்முயற்சி ஈழத்தமிழ்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியேயாகும். தூதர் மட்டத்தில் இல்லாமல் அதிகார மட்டத்தில் ஒரு பிரதிநிதி இந்த
விடுதலை இராசேந்திரன் 125<noinclude>{{nop}}{{rv|125 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''125'''}}}}|{{left|{{larger|'''125'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7mcez4i9wy1l53bmoyl57sy3lsln1yz
1952476
1952472
2026-07-09T15:11:04Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{center|{{x-larger|<b>ஓஸ்லோ மாநாடு</b>}}}}
{{li|“யு|2em}}த்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இதற்கான மாநாடு ஒன்று கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். முதலில் இதில் பங்கேற்பதில் தயக்கம் காட்டிய இந்தியா பிறகு தனது பிரதிநிதியாக அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவரும் ஆண்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் இம்மாநாட்டில் முதன் முதலாக நேரிடையாக பேச இருப்பதும் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இயக்கமும், இலங்கை அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதால் விடுதலைப் புலிகளின் மீதான தங்களது விமர்சனத்தோடு மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளன. ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் கடும் சீரழிவுக்கு உள்ளான தமிழர் பகுதிகளை புனரமைப்பதற்கு சர்வதேச நிதி திரட்டும் இம்முயற்சி ஈழத்தமிழ்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியேயாகும். தூதர் மட்டத்தில் இல்லாமல் அதிகார மட்டத்தில் ஒரு பிரதிநிதி இந்த<noinclude>{{nop}}{{rv|125 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''125'''}}}}|{{left|{{larger|'''125'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ed7oz0hle1rs3d2m8z2jaruxpw48xvt
1952477
1952476
2026-07-09T15:11:43Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஓஸ்லோ மாநாடு</b>}}}}
{{li|“யு|2em}}த்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இதற்கான மாநாடு ஒன்று கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். முதலில் இதில் பங்கேற்பதில் தயக்கம் காட்டிய இந்தியா பிறகு தனது பிரதிநிதியாக அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவரும் ஆண்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் இம்மாநாட்டில் முதன் முதலாக நேரிடையாக பேச இருப்பதும் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இயக்கமும், இலங்கை அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதால் விடுதலைப் புலிகளின் மீதான தங்களது விமர்சனத்தோடு மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளன. ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் கடும் சீரழிவுக்கு உள்ளான தமிழர் பகுதிகளை புனரமைப்பதற்கு சர்வதேச நிதி திரட்டும் இம்முயற்சி ஈழத்தமிழ்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியேயாகும். தூதர் மட்டத்தில் இல்லாமல் அதிகார மட்டத்தில் ஒரு பிரதிநிதி இந்த<noinclude>{{nop}}{{rv|125 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''125'''}}}}|{{left|{{larger|'''125'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
34rzpy6idkhevden2ixrmqr1v9qx6w3
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/272
250
648627
1952483
2026-07-09T15:31:59Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில் 1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும், வாஜ்பாய் ஆட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்
டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான
ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது. எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்
டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர்
என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி
விதை நெல்களை அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம்
காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர்
பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7492tfjr63845uw7rtuiacywb7ayqkq
1952494
1952483
2026-07-09T15:43:54Z
Femeena Sufrin S
16628
1952494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர்
என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி
விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம்
காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர்
பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2hh68ernb11nnd9osi1twqjbeph9tc7
1952495
1952494
2026-07-09T15:44:30Z
Femeena Sufrin S
16628
1952495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர்
என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி
விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம்
காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர்
பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
sduvuec4ohsxgnmzwpy99nmezd0fkia
1952497
1952495
2026-07-09T15:45:15Z
Femeena Sufrin S
16628
1952497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர் என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி
விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம்
காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர்
பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nn7luueps68b6juo7tk3i7v13y4rudv
1952498
1952497
2026-07-09T15:45:56Z
Femeena Sufrin S
16628
1952498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர் என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம் காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
q4qgvhmwbhfkoo188cgneyyxxtwdaq0
1952499
1952498
2026-07-09T15:46:44Z
Femeena Sufrin S
16628
1952499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர் என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம் காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nvazx26uteb9n70vurauge9iempwckz
1952500
1952499
2026-07-09T15:47:37Z
Femeena Sufrin S
16628
1952500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர் என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம் காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2hc753bi4at9ezcxmgwcb09f1nugi0i
1952513
1952500
2026-07-10T03:41:52Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>கூறியிருக்கிறார். இரயில்வேத் துறையில் கடந்த ஆண்டு குருப் 'சி' பிரிவில்
1.18.052 பணியிடங்களையும், 'டி' பிரிவில் 39,759 பணியிடங்களையும்,
வாஜ்பாய் ஆட்சி நிரப்பாததால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு,
குறைந்தது 100 நாட்களுக்காவது, மிகக் குறைந்த ஊதியத்திலாவது, ஏழை,
நடுத்தரக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தருவதைக்
கட்டாயப்படுத்தி, சட்டம் கொண்டு வரப் போவதாகச் செயல் திட்டம் உறுதி
அளித்திருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்படுமானால், கிராமங்களில் நல்ல முன்னேற்றத்தைக்
கொண்டுவர முடியும் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தனியார் துறைகளில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து
இயக்கங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. - தங்கள் தேர்தல்
அறிக்கைகளிலும் இதை வலியுறுத்தியிருந்தன. இடதுசாரிக் கட்சிகளும்
கொள்கை அளவில் இதை ஆதரித்துள்ளன. ஆனால், செயல் திட்டத்தில்
இதுபற்றி திட்டவட்டமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய
தாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, தனியார் நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த வகையில் சாத்தியமாகும் என்பது குறித்து,
அரசியல் கட்சிகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் - பேச்சு வார்த்தை
நடத்தப்படும் என்று, மேலோட்டமாகவே செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும்
இல்லை. இதே போல் - முஸ்லீம்களுக்கு, தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்
என்று, தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் உறுதி கூறியிருந்தன.
அது பற்றியும் செயல் திட்டத்தில் திட்டவட்டமான அறிவிப்பு எதுவும்
இல்லை. சமூகநீதி தொடர்பான இந்த மிக முக்கியப் பிரச்சினைகளை
அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று. சுட்டிக்காட்டி வலியுறுத்த
விரும்புகிறோம்.
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைக் குலைப்பதில் தீவிரம் காட்டியவர் என்ற புகாருக்கு உள்ளான ஜே.என். தீட்சித்தும் - இந்தியாவின் மரபுவழி விதை நெல்களை - அமெரிக்க பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களிடம் காட்டிக் கொடுத்த புகாருக்கு உள்ளான விஞ்ஞானி சாமிநாதனும் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.06.2004
270 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|270 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''270'''}}}}|{{left|{{larger|'''270'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rvtw4u4q85gkujl1sp1d8u97uymigov
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/273
250
648628
1952485
2026-07-09T15:32:30Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியரசுத் தலைவர் உரை மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முன் வைத்த பல செயல் திட்டங்களை - நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>குடியரசுத் தலைவர் உரை
மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முன்
வைத்த பல செயல் திட்டங்களை - நாடாளுமன்றக் கூட்டுக்
கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், தனது உரையின் மூலம்
அங்கீகரித்துள்ளார். பல செயல் திட்டத்தின் நல்ல அம்சங்களை
வரவேற்று, இதே பகுதியில் நாம் எழுதியிருக்கிறோம். பொடா
சட்டம் திரும்பப் பெறப்படும் என்று, குடியரசுத் தலைவர்
அறிவித்துள்ளார். இந்த நிலையில், மாநில அரசுகள், இனி
'பொடா'வைப் பயன்படுத்தவே கூடாது என்று வற்புறுத்த
விரும்புகிறோம். சட்டரீதியாக 'பொடா' திரும்பப் பெறுவதற்கு,
இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், அது வரை
சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கருதி மாநில அரசுகள்
செயல்படக் கூடாது. மத்தியில் புதிய ஆட்சி பொடாவை ரத்து
செய் வோம் என்று அறிவித்த பிறகும், தமிழக அரசு 'பொடா'
சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது (சுப.இளவரசன் வழக்கு).
குஜராத் மாநில ஆட்சி, 'பொடா'வைவிட மோசமான ஒரு
சட்டத்தை மாநில அளவில் அவசர அவசரமாக நிறைவேற்றி
யிருக்கிறது. தமிழகத்திலும், குஜராத்திலும் நடக்கும் மக்கள்
விரோத ஆட்சிகள் அடக்குமுறைச் சட்டங்களை நம்பித்தான்
ஆட்சி செலுத்த வேண்டியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
தனியார் துறை இடஒதுக்கீடு பற்றி, தொழில் நிறுவனங்க
ளிடமும், அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்
போவதாக குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருப்பது,
பிரச்சினையைக் கிடப்பில் போடும் முயற்சியோ என்ற
சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு,
விடுதலை இராசேந்திரன் 271<noinclude>{{nop}}{{rv|271 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''271'''}}}}|{{left|{{larger|'''271'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fqnj7ly64b7x610919dgdf1dkx6mqw2
1952514
1952485
2026-07-10T03:43:28Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>குடியரசுத் தலைவர் உரை
மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முன்
வைத்த பல செயல் திட்டங்களை - நாடாளுமன்றக் கூட்டுக்
கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், தனது உரையின் மூலம்
அங்கீகரித்துள்ளார். பல செயல் திட்டத்தின் நல்ல அம்சங்களை
வரவேற்று, இதே பகுதியில் நாம் எழுதியிருக்கிறோம். பொடா
சட்டம் திரும்பப் பெறப்படும் என்று, குடியரசுத் தலைவர்
அறிவித்துள்ளார். இந்த நிலையில், மாநில அரசுகள், இனி
'பொடா'வைப் பயன்படுத்தவே கூடாது என்று வற்புறுத்த
விரும்புகிறோம். சட்டரீதியாக 'பொடா' திரும்பப் பெறுவதற்கு,
இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால், அது வரை
சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கருதி மாநில அரசுகள்
செயல்படக் கூடாது. மத்தியில் புதிய ஆட்சி பொடாவை ரத்து
செய் வோம் என்று அறிவித்த பிறகும், தமிழக அரசு 'பொடா'
சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது (சுப.இளவரசன் வழக்கு).
குஜராத் மாநில ஆட்சி, 'பொடா'வைவிட மோசமான ஒரு
சட்டத்தை மாநில அளவில் அவசர அவசரமாக நிறைவேற்றி
யிருக்கிறது. தமிழகத்திலும், குஜராத்திலும் நடக்கும் மக்கள்
விரோத ஆட்சிகள் அடக்குமுறைச் சட்டங்களை நம்பித்தான்
ஆட்சி செலுத்த வேண்டியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
தனியார் துறை இடஒதுக்கீடு பற்றி, தொழில் நிறுவனங்களிடமும், அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருப்பது,
பிரச்சினையைக் கிடப்பில் போடும் முயற்சியோ என்ற
சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு,
விடுதலை இராசேந்திரன் 271<noinclude>{{nop}}{{rv|271 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''271'''}}}}|{{left|{{larger|'''271'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ljmua3zz4c9u2hy8tzy8am0rjxdll4z
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/274
250
648629
1952487
2026-07-09T15:32:55Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 51 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்ட விர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 51 சதவீத இட ஒதுக்கீட்டை
உறுதி செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறோம். இது பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால்
இந்தச் சட்டத்தை அமுல்படுத்த விடாமல், பன்னாட்டு நிறுவனங்கள் மிரட்டத்
துவங்கியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள பார்ப்பன - பன்னாட்டு
நிறுவனங்களிடம் சமரசம் பேசி அவர்கள் ஒப்புதலோடு, இட ஒதுக்கீட்டைக்
கொண்டு வர முயற்சிப்பது, 'மயிலே மயிலே இறகு போடு' என்று கேட்பது
போலத்தான். ஒரு போதும் ஆதிக்க சக்திகள் இதற்கு ஒப்புதல் தராது.
அமெரிக்காவில் அனைத்து தொழில்களும், தனியாரிடம் தான்
இருக்கின்றன. அங்கெல்லாம், மைனாரிட்டி மக்களான கருப்பர்களுக்கும்,
ஸ்பானியர்களுக்கும் இட ஒதுக்கீடுகள் செய்யப்படும்போது, அதே
அமெரிக்க நிறுவனங்கள். இந்தியாவில் மட்டும் அதை எதிர்ப்பதில் என்ன
நியாயம் இருக்கிறது?
தொழில் நிறுவனங்களுக்கு - உலகில் மிகப் பெரும் சந்தையாக
விளங்கும் நாடு இந்தியா. எனவே தான் பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவைக் குறி வைக்கின்றன. இந்த நிலையில், எல்லா மாநிலங்களுக்கும்
பொருந்தக்கூடிய இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்துவிட்டால், இந்த நிறுவனங்கள், மாநில அரசுகளை மிரட்ட முடியாது.
தனியார் துறை இடஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முதலீட்டைத் திருப்பி
விடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு இடமில்லாமல் தடுக்கலாம். மத்திய அரசு
இதைத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
பல்வேறு சிறந்த பொதுச்செயல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 100
நாள் வேலை வாய்ப்புக்கான சட்ட உரிமை, தமிழைச் செம்மொழியாக்குதல்;
பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் குடியரசுத் தலைவர்
உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
பொது வேலைத் திட்டத்தில் இடம் பெறாத சில அம்சங்களும், குடியரசுத்
தலைவர் உரையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இடதுசாரிக் கட்சிகள்
விமர்சனம் செய்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் நாட்டுடன் நட்புறவு தொடரும்
என்று வலிந்து கூறப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது
தொடர்பாக மற்றொரு செய்தியையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
அண்மையில் வெளிநாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய இலங்கை
அதிபரின் பிரதிநிதி கதிர்காமர், இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து
கொள்ளும் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார். தமிழர் பிரதிநிதிகளான
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் சர்வதேச நாடுகளின் தலையீட்டில்,
272 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|272 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''272'''}}}}|{{left|{{larger|'''272'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
du4mywj3vq3276snrepeb9j455dr5wy
1952516
1952487
2026-07-10T03:48:18Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 51 சதவீத இட ஒதுக்கீட்டை
உறுதி செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறோம். இது பாராட்டி வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால்
இந்தச் சட்டத்தை அமுல்படுத்த விடாமல், பன்னாட்டு நிறுவனங்கள் மிரட்டத்
துவங்கியிருக்கின்றன. பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள பார்ப்பன - பன்னாட்டு
நிறுவனங்களிடம் சமரசம் பேசி அவர்கள் ஒப்புதலோடு, இட ஒதுக்கீட்டைக்
கொண்டு வர முயற்சிப்பது, 'மயிலே மயிலே இறகு போடு' என்று கேட்பது
போலத்தான். ஒரு போதும் ஆதிக்க சக்திகள் இதற்கு ஒப்புதல் தராது.
அமெரிக்காவில் அனைத்து தொழில்களும், தனியாரிடம் தான்
இருக்கின்றன. அங்கெல்லாம், மைனாரிட்டி மக்களான கருப்பர்களுக்கும்,
ஸ்பானியர்களுக்கும் இட ஒதுக்கீடுகள் செய்யப்படும்போது, அதே
அமெரிக்க நிறுவனங்கள். இந்தியாவில் மட்டும் அதை எதிர்ப்பதில் என்ன
நியாயம் இருக்கிறது?
தொழில் நிறுவனங்களுக்கு - உலகில் மிகப் பெரும் சந்தையாக
விளங்கும் நாடு இந்தியா. எனவே தான் பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியாவைக் குறி வைக்கின்றன. இந்த நிலையில், எல்லா மாநிலங்களுக்கும்
பொருந்தக்கூடிய இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்துவிட்டால், இந்த நிறுவனங்கள், மாநில அரசுகளை மிரட்ட முடியாது.
தனியார் துறை இடஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முதலீட்டைத் திருப்பி
விடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு இடமில்லாமல் தடுக்கலாம். மத்திய அரசு
இதைத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
பல்வேறு சிறந்த பொதுச்செயல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 100
நாள் வேலை வாய்ப்புக்கான சட்ட உரிமை, தமிழைச் செம்மொழியாக்குதல்;
பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் குடியரசுத் தலைவர்
உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
பொது வேலைத் திட்டத்தில் இடம் பெறாத சில அம்சங்களும், குடியரசுத்
தலைவர் உரையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இடதுசாரிக் கட்சிகள்
விமர்சனம் செய்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் நாட்டுடன் நட்புறவு தொடரும்
என்று வலிந்து கூறப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது
தொடர்பாக மற்றொரு செய்தியையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
அண்மையில் வெளிநாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய இலங்கை
அதிபரின் பிரதிநிதி கதிர்காமர், இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து
கொள்ளும் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார். தமிழர் பிரதிநிதிகளான
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் சர்வதேச நாடுகளின் தலையீட்டில்,
272 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|272 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''272'''}}}}|{{left|{{larger|'''272'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
e52anl4nf1fz0yjaqvw5l46zbsz7ax1
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/275
250
648630
1952488
2026-07-09T15:33:26Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமரசப் பேச்சுக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் போட விரும்புவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கூட்டண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>சமரசப் பேச்சுக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, இந்தியாவுடன் ராணுவ
ஒப்பந்தம் போட விரும்புவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இது
பற்றிய முழு விவரங்களையும் அறிந்து, ஈழத் தமிழர் நலக்
கண்ணோட்டத்தில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை
சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்
தாலும் தவறுகளை சுட்டிக் காட்டிக் களைய வேண்டியது சமுதாயக் கடமை
யாகும்.
-
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.06.2004
விடுதலை இராசேந்திரன் 273<noinclude>{{nop}}{{rv|273 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''273'''}}}}|{{left|{{larger|'''273'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
577iis6w7s4tp4umbdx4ecepv7v0csi
1952517
1952488
2026-07-10T03:49:48Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>சமரசப் பேச்சுக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, இந்தியாவுடன் ராணுவ
ஒப்பந்தம் போட விரும்புவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகள், இது
பற்றிய முழு விவரங்களையும் அறிந்து, ஈழத் தமிழர் நலக்
கண்ணோட்டத்தில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை
சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்
தாலும் தவறுகளை சுட்டிக் காட்டிக் களைய வேண்டியது சமுதாயக் கடமையாகும்.
-
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.06.2004
விடுதலை இராசேந்திரன் 273<noinclude>{{nop}}{{rv|273 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''273'''}}}}|{{left|{{larger|'''273'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
sviz4v1g5fuqahzegucws7p97ja2pl9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/276
250
648631
1952489
2026-07-09T15:34:09Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் அவசியமும் - தேவையும் - தமிழ்நாட்டில் 'சாமியார்கள்' கும்பல், பல்வேறு நூதன வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>பகுத்தறிவுப் பிரச்சாரத்தின்
அவசியமும் - தேவையும்
-
தமிழ்நாட்டில் 'சாமியார்கள்' கும்பல், பல்வேறு நூதன
வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அப்பாவி
மக்களின் மூடநம்பிக்கைகளே - இந்த சாமியார்களின் மூலதனம்!
பல சாமியார்கள் - கிரிமினல் வழக்குகளை சந்தித்து
வருகின்றனர். ஆனாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும்
மூடநம்பிக்கைகள் புதிய சாமியார்களை உற்பத்தியாக்கிக்
கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகில் உள்ள
ஜெகநாதபுரத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர் தனது பெயரை
ஆனந்தசாமி என்று மாற்றிக் கொண்டு, “அருள் கூறி” - பணம்
சம்பாதித்து வந்திருக்கிறார். தனது சக்தியின் மகிமையைக்
காட்டுவதற்காக - பூமிக்குள் நுழைந்து மூடிக் கொண்டு 'தவம்'
செய்து பிறகு மீண்டும் வெளியே வருவாராம். கடைசியாக
குட்லாம்பட்டி எனும் கிராமத்து அருகே - மூன்று நாட்கள்
பூமிக்குள்ளே இருக்கப் போவதாகக் கூறி பூமிக்குள் சென்றவரை
அவரது 'சீடகோடிகள்' பழிவாங்கிவிட்டனர். மேலே
பலகையைப் போட்டு மூடி, மூச்சுவிடுவதற்கு ரகசியமான
ஏற்பாடுகளை செய்து வந்த சீடர்கள், இம்முறை பூமிக்கு மேலே
சிமெண்டால் மூடி, அதில் தீயைப் போட்டுக் கொளுத்தி
யுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து போலீசார் தோண்டிப்
பார்த்தபோது சாமியார் மூச்சுத் திணறி உள்ளே இறந்து கிடந்தது
தெரிய வந்தது. ஆனாலும், அவரது பெயரைக் கூறி, அவரது
சமாதியைக் காட்சிப் பொருளாக்கி, வியாபாரம் நடந்து
274 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|274 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''274'''}}}}|{{left|{{larger|'''274'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8twbb4eypruhnj5creiddq0rdzt8sd3
1952518
1952489
2026-07-10T03:53:32Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>பகுத்தறிவுப் பிரச்சாரத்தின்
அவசியமும் - தேவையும்
தமிழ்நாட்டில் 'சாமியார்கள்' கும்பல், பல்வேறு நூதன
வடிவங்களில் மக்களை ஏமாற்றி வருகின்றன. அப்பாவி
மக்களின் மூடநம்பிக்கைகளே - இந்த சாமியார்களின் மூலதனம்!
பல சாமியார்கள் - கிரிமினல் வழக்குகளை சந்தித்து
வருகின்றனர். ஆனாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும்
மூடநம்பிக்கைகள் புதிய சாமியார்களை உற்பத்தியாக்கிக்
கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகில் உள்ள
ஜெகநாதபுரத்தைச் சார்ந்த கண்ணன் என்பவர் தனது பெயரை
ஆனந்தசாமி என்று மாற்றிக் கொண்டு, “அருள் கூறி” - பணம்
சம்பாதித்து வந்திருக்கிறார். தனது சக்தியின் மகிமையைக்
காட்டுவதற்காக - பூமிக்குள் நுழைந்து மூடிக் கொண்டு 'தவம்'
செய்து பிறகு மீண்டும் வெளியே வருவாராம். கடைசியாக -
குட்லாம்பட்டி எனும் கிராமத்து அருகே - மூன்று நாட்கள்
பூமிக்குள்ளே இருக்கப் போவதாகக் கூறி பூமிக்குள் சென்றவரை
அவரது 'சீடகோடிகள்' பழிவாங்கிவிட்டனர். மேலே
பலகையைப் போட்டு மூடி, மூச்சுவிடுவதற்கு ரகசியமான
ஏற்பாடுகளை செய்து வந்த சீடர்கள், இம்முறை பூமிக்கு மேலே
சிமெண்டால் மூடி, அதில் தீயைப் போட்டுக் கொளுத்தியுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து போலீசார் தோண்டிப்
பார்த்தபோது சாமியார் மூச்சுத் திணறி உள்ளே இறந்து கிடந்தது
தெரிய வந்தது. ஆனாலும், அவரது பெயரைக் கூறி, அவரது
சமாதியைக் காட்சிப் பொருளாக்கி, வியாபாரம் நடந்து
274 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|274 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''274'''}}}}|{{left|{{larger|'''274'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rappw1voyzawwz7xfbinl7qr5vmkeux
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/277
250
648632
1952490
2026-07-09T15:34:45Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருகிறதாம். இப்படி பூமிக்குள் சமாதியாகப் போவதாகக் கூறும் சாமியார் களை தற்கொலை முயற்சியின் கீழ், போலீசார் வழக்குத் தொடர்ந்து, அதைத் தடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>வருகிறதாம். இப்படி பூமிக்குள் சமாதியாகப் போவதாகக் கூறும் சாமியார்
களை தற்கொலை முயற்சியின் கீழ், போலீசார் வழக்குத் தொடர்ந்து, அதைத்
தடுத்திருக்க வேண்டும். அப்படித் தடுத்திருந்தால், இப்படி ஒரு "கொலை"
நடந்திருக்காது அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் இந்த
'அற்புதங்களை' நம்பி, இவைகளினால், தங்கள் வாழ்க்கைப்
பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். இந்த
நிலையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுப் பிரச்சாரத்தின்
அவசியத்தையும், முக்கியத்துவத்தையும். முற்போக்கு இயக்கத்தினரும்.
அறிவியலாளர்களும் உணர வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது. பெரியார் இயக்கத்துக்கு
மட்டுமே உரிய பிரச்சினை என்று கருதிவிடக் கூடாது. சமுதாய
முன்னேற்றத்தில் கவலை உள்ள ஒவ்வொரு கட்சிக்கும், அமைப்புக்கும்.
தோழர்களுக்கும், இந்தக் கடமை உண்டு. இது பற்றி 'இந்து' நாளேட்டில்,
அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக்கிக் குழப்பக் கூடாது என்று
வெளிவந்த ஒரு சிந்தனையாளரின் கட்டுரையை இதே இதழில் நாம்
வெளியிட்டிருக்கிறோம்.
இதே போல் பரணீதரன் என்ற 13வயது சிறுவன், தான் சன்னியாசம்
பெற்றுவிட்டதாகக் கூறி, தனது பெற்றோர்களுடன் வர மறுத்து விட்டார்;
சேலம் அம்மாப்பேட்டையைச் சார்ந்த அவரது பெற்றோர்கள் - அறியாப்
பருவத்தில் உள்ள தனது மகனைப் பயன்படுத்தி ராகவேந்திரா நிறுவனம்
ஒன்று பணம் சம்பாதிக்கப் பார்க்கிறது என்று புகார் கூறியுள்ளனர்.
காவல்துறை சமரசம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
சிறுவனை இளம் வயதில் ‘ஆன்மீகத்தில்' ஈடுபடுத்தியது அவர்களது
பெற்றோர்கள் தான்; இப்போது அவர்களுக்கு எதிராகவே அது திரும்பி
விட்டது. சிறுவனுக்கு 'சாமியார்' வேடம் தரித்த கூட்டத்தினர், சிறுவர்கள்
உரிமைகளுக்கான சட்டத்தை மீறியிருக்கிறார்கள். ஆனாலும் பக்தி, தியானம்,
ஆன்மீகம் என்று சொல்லிவிட்டால், சட்டம் தனது கடமைகளைச் செய்ய
மறுத்துவிடுகிறது. இதை நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டிக்
காட்டினால், பக்தர்கள் மனதைப் புண்படுத்துவதாக பார்ப்பனர்களும்,
அவர்களால் தூண்டிவிடப்படுகிறவர்களும் கூப்பாடு போடுகிறார்கள்.
தொலைக்காட்சிகள்
ஒள
ஒளிபரப்பும் மெகா தொடர்கள் இந்த மூட
நம்பிக்கையை உரம் போட்டு வளர்க்கின்றன. இதில் 'சன்' தொலைக்காட்சி
முதலிடம் வகிக்கிறது என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும்.
பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை
மட்டும். அதிலிருந்து துண்டித்துக் கொள்ளும் சில குழுக்களும்
விடுதலை இராசேந்திரன் 275<noinclude>{{nop}}{{rv|275 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''275'''}}}}|{{left|{{larger|'''275'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5vjaub6jrofggm3oq0afmcl8dl3jqgd
1952520
1952490
2026-07-10T03:58:14Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1952520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>வருகிறதாம். இப்படி பூமிக்குள் சமாதியாகப் போவதாகக் கூறும் சாமியார்
களை தற்கொலை முயற்சியின் கீழ், போலீசார் வழக்குத் தொடர்ந்து, அதைத்
தடுத்திருக்க வேண்டும். அப்படித் தடுத்திருந்தால், இப்படி ஒரு "கொலை"
நடந்திருக்காது அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் இந்த
'அற்புதங்களை' நம்பி, இவைகளினால், தங்கள் வாழ்க்கைப்
பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். இந்த
நிலையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுப் பிரச்சாரத்தின்
அவசியத்தையும், முக்கியத்துவத்தையும். முற்போக்கு இயக்கத்தினரும்.
அறிவியலாளர்களும் உணர வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது. பெரியார் இயக்கத்துக்கு
மட்டுமே உரிய பிரச்சினை என்று கருதிவிடக் கூடாது. சமுதாய
முன்னேற்றத்தில் கவலை உள்ள ஒவ்வொரு கட்சிக்கும், அமைப்புக்கும்.
தோழர்களுக்கும், இந்தக் கடமை உண்டு. இது பற்றி 'இந்து' நாளேட்டில்,
அறிவியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக்கிக் குழப்பக் கூடாது என்று
வெளிவந்த ஒரு சிந்தனையாளரின் கட்டுரையை இதே இதழில் நாம்
வெளியிட்டிருக்கிறோம்.
இதே போல் - பரணீதரன் என்ற 13வயது சிறுவன், தான் சன்னியாசம்
பெற்றுவிட்டதாகக் கூறி, தனது பெற்றோர்களுடன் வர மறுத்து விட்டார்;
சேலம் அம்மாப்பேட்டையைச் சார்ந்த அவரது பெற்றோர்கள் - அறியாப்
பருவத்தில் உள்ள தனது மகனைப் பயன்படுத்தி ராகவேந்திரா நிறுவனம்
ஒன்று பணம் சம்பாதிக்கப் பார்க்கிறது என்று புகார் கூறியுள்ளனர்.
காவல்துறை சமரசம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
சிறுவனை இளம் வயதில் ‘ஆன்மீகத்தில்' ஈடுபடுத்தியது அவர்களது
பெற்றோர்கள் தான்; இப்போது அவர்களுக்கு எதிராகவே அது திரும்பி
விட்டது. சிறுவனுக்கு 'சாமியார்' வேடம் தரித்த கூட்டத்தினர், சிறுவர்கள்
உரிமைகளுக்கான சட்டத்தை மீறியிருக்கிறார்கள். ஆனாலும் பக்தி, தியானம்,
ஆன்மீகம் என்று சொல்லிவிட்டால், சட்டம் தனது கடமைகளைச் செய்ய
மறுத்துவிடுகிறது. இதை நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டிக்
காட்டினால், பக்தர்கள் மனதைப் புண்படுத்துவதாக பார்ப்பனர்களும்,
அவர்களால் தூண்டிவிடப்படுகிறவர்களும் கூப்பாடு போடுகிறார்கள்.
தொலைக்காட்சிகள் - ஒளிபரப்பும் மெகா தொடர்கள் இந்த மூட
நம்பிக்கையை உரம் போட்டு வளர்க்கின்றன. இதில் 'சன்' தொலைக்காட்சி
முதலிடம் வகிக்கிறது என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும்.
பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை
மட்டும். அதிலிருந்து துண்டித்துக் கொள்ளும் சில குழுக்களும்
விடுதலை இராசேந்திரன் 275<noinclude>{{nop}}{{rv|275 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''275'''}}}}|{{left|{{larger|'''275'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
88xxwyxykdyl913d4mav7b1w7q18anq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/278
250
648633
1952491
2026-07-09T15:35:03Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கின்றன. பெரியார் தொண்டர்கள் வறட்டு நாத்திகம் பேசுகிறார்கள் என்போரும் உண்டு. பல மூடநம்பிக்கைகளுக்கு, கலாச்சாரம் பூசி - இது தமிழர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>இருக்கின்றன. பெரியார் தொண்டர்கள் வறட்டு நாத்திகம் பேசுகிறார்கள்
என்போரும் உண்டு. பல மூடநம்பிக்கைகளுக்கு, கலாச்சாரம் பூசி - இது
தமிழர் கலாச்சாரம் என்று 'புனிதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்
அத்தனை அமைப்புகளையும் கேட்கிறோம்.
பூமிக்கடியில் சாகடிக்கப்பட்டும், சாமியார்களையும் இளம் வயதில்
'காயடிக்கப்படும்' சன்னியாசிகளையும் தடுத்து நிறுத்துவது எப்படி? இந்தக்
கேள்வியை சமூக முற்போக்கு சிந்தனையாளர்களின் முன் வைக்கிறோம்.
இத்தகைய மூடநம்பிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தனியான ஒரு
சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது
என்றே நாம் கருதுகிறோம்.
அதற்காக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த, பகுத்தறிவுப்
பிரச்சாரத்தை செய்ய சமூகக் கவலை உள்ள எல்லா இயக்கங்களும் முன்வர
வேண்டியது அவசியமாகும்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 17.06.2004
276 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|276 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''276'''}}}}|{{left|{{larger|'''276'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hj0wp6rtdgv609z2ztc7mqdvopmc8jh
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/279
250
648634
1952492
2026-07-09T15:35:40Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்! ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>‘இந்து முன்னணி’களின் பொய் முகங்கள்!
ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை
தேர்தல் முடிவுக்குப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டார். இதை
எதிர்த்து இந்து முன்னணியினர், பல இடங்களில்
ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மதமாற்றத் தடைச்
சட்டத்தைக் கொண்டு வந்தபோது - முதல்வர் ஜெயலலிதாவுக்கு
புகழ் மாலையைச் சூட்டி மகிழ்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
காரர்களும், சங்கராச்சாரிகளும் தான்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து,
குஜராத்திலே அம்மாநில முதல்வரும் மதமாற்றத் தடைச்
சட்டத்தைக் கொண்டு வந்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்வர், வரிசையாக
திரும்பப் பெற்றுவரும் அறிவிப்புகளில் மதமாற்றத் தடைச்
சட்டமும் ஒன்று. இதன் நோக்கம் எதுவாக இருந்தாலும், சட்டம்
திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்.
-
இந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அம்மதத்தை
விட்டு ஏன் வெளியேறுகிறார்கள்? இந்து சமூகத்தில்
திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து, தங்களை
விடுவித்துக் கொள்ளும் ஒரு போராட்டமாகவே இங்கு
மதமாற்றம் நடக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மதம்
மாறுவதாக - 'சங்பரிவாரங்கள்' முன்வைக்கும் வாதத்தில்,
உண்மை இல்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக மதம்
மாறினால், எல்லா ஜாதிகளிலும், ஏழ்மையில் உழலுபவர்கள்
மதம் மாற முன்வந்திருப்பார்கள்; ஆனால், மதமாற்றத்துக்கு
'தலித்' மக்கள் மட்டுமே முன்வருவதற்குக் காரணம் என்ன?
தீண்டாமைப் பிரச்சினை தானே?
விடுதலை இராசேந்திரன் 277<noinclude>{{nop}}{{rv|277 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''277'''}}}}|{{left|{{larger|'''277'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
aa4o1zz5emr7buejq4m278bc3w90ivc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/280
250
648635
1952493
2026-07-09T15:36:01Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே உள்ள கோயில்களுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கோவை புறநகர்ப் பகுதியான காளப்பட்டியில் - அருந்ததி சமூகத்தினர்,
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். ஆனால், அங்கே
உள்ள கோயில்களுக்குள் சென்று வழிபடும் உரிமை, அவர்களுக்குத்
தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று
முழக்கமிடும் சங்பரிவாரங்களோ, இந்து முன்னணிகளோ, இந்தத்
தீண்டாமையை எதிர்த்து, இதுவரை குரல் கொடுத்தது உண்டா? ஆக,
தீண்டாமையையும் ஜாதி அமைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு, தலித்
மக்கள் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று இவர்கள் அடம்
பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தலித்
துக்கும் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடையாதா என்று கேட்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலமாந்தை எனும் கிராமத்தைச் சார்ந்த
'தலித்' மக்கள் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முஸ்லீம்
மதத்துக்கு மாறப் போவதாக இப்போது அறிவித்துள்ளனர். தலித் மக்கள்
அதிகமாக வாழும் இப்பகுதியில், ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது.
"எல்லாவற்றையும்விட, ஜாதி ஆதிக்கவாதிகள் எங்களைக் கீழ்த்தரமாக
பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த
அவமானங்களைச் சுமந்து, என் வாழ்நாள் கழிந்து விட்டது. எனது
குழந்தைகளும், பேரக் குழந்தைகளுமாவது தன்மானத்தோடு வாழட்டும்;
நாங்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறியதால் எந்தப் பொருள் வசதியும்
கிடைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது”
என்று அக்கிராமத்தைச் சார்ந்த 65 வயது முனியாண்டி கூறியிருக்கிறார்
(‘பிரண்ட்லைன்’ ஜூன் 2). இதே கிராமத்தில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி
வரும் பெரியார் தொண்டரான பி.காளாடி தனது பேட்டியில் - “நான், கடவுள்,
மதங்களில் நம்பிக்கை இல்லாத பெரியார் தொண்டன். எங்களுடைய
இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ, இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு,
இஸ்லாம் மார்க்கத்தில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு உதவுவது, எனது
கடமை. உண்மையான ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில், நான்
அவர்களுக்கு இதில் உதவி வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். (பேட்டி -
பிரண்ட்லைன்) மதமாற்றத்துக்கான உண்மையான பின்னணி இது தான்!
மதமாற்றத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதை எதிர்த்து
ஆர்ப்பாட்டம் நடத்தும் 'சங் பரிவார்கள்' தீண்டாமைக்கு எதிராக போராட
வரட்டும். கோயில்களில் வீதிகளில், தேநீர்க் கடைகளில், ஜாதி வெறியர்களின்
சிந்தனைகளில் படமெடுத்தாடிக் கொண்டிருக்கும் தீண்டாமை எனும் விஷப்
பாம்பைச் சாகடிக்க முன் வரட்டும்! வருவார்களா?
-
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.06.2004
278 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|278 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''278'''}}}}|{{left|{{larger|'''278'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ouzb0snfdsn6amw0fc35st2rpqtrxwh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/431
250
648636
1952501
2026-07-09T17:30:51Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெட்டு காணப்படுகிறது. சமுத்திரகுப்தனுடைய காலத்தில் அரிசேனனால் இயற்றப்பட்ட பிரசசுதி ஒன்று சம்புகாவிய நடையில் கல்வெட்டில் காணப்படுகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்புகாவியம்|405|சம்புவராயர்}}</noinclude>வெட்டு காணப்படுகிறது. சமுத்திரகுப்தனுடைய காலத்தில் அரிசேனனால் இயற்றப்பட்ட பிரசசுதி ஒன்று சம்புகாவிய நடையில் கல்வெட்டில் காணப்படுகிறது. இவ்விரண்டு கல்வெட்டுகளுமே பிற்காலத்திய சம்பு காவியத்தின் இலக்கணங்களையுடையனவாகக் காணப்படுகின்றன. ‘பஞ்சதந்திரம்’ என்ற சிறந்த கதை நூலும் சம்புகாவிய நடையிலேயே அமைந்துள்ளது. மகாகவி தண்டி கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் செய்த ‘காவியாதரிசம்’ என்னும் காவிய இலக்கண நூலில் சம்புகாவியத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. அதனால், இக்காலத்திற்கு முன்பே சம்புகாவியம் புகழுடன் விளங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. இராட்டிரகூடர் மரபில் வந்த மூன்றாம் இந்திரன் ஆட்சிபுரிந்த கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரிவிக்கிரமபட்டர் இயற்றிய தமயந்தி கதை எனப்படும் ‘நளசம்பு’ என்னும் காவியமே நமக்கு இன்று கிடைத்துள்ள முதல் சம்புகாவியமாகும். இக்கவிஞர் ‘மதாலசா சம்பு’ என்று மற்றுமோர் நூலும் இயற்றியுள்ளார். சைன சமயத்தவரான சோமதேவசூரி என்பவர் இயற்றிய ‘யசசுதிலக சம்பு’ (கி.பி. 951) அவந்தி தேசத்தரசனாகிய யசோதரனுடைய வரலாற்றையும் சைனமதக் கோட்பாட்டையும் கூறுகிறது. இதைப்போலவே ‘அரிச்சந்திர சூரி’ வானியற்றப்பட்ட ‘சீவந்தர சம்பு’ தமிழ்க் காப்பியமான ‘சீவக சிந்தாமணி’யின் கதை போன்றதாகும். இதனைத் தொடர்ந்து சோட்டலனின் (கி.பி. 1026–1050) உதய சுந்தரி கதை, போசனுடைய (கி.பி. 1018–1013) இராமாயண சம்பு, அபினவ காளிதாசனுடைய மாணாக்கன் கவிகுஞ்சரனுடைய இராசசேகர சரிதம், கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அனந்தபட்டர் இயற்றிய ‘பாரத சம்பு’ ஆகியவை எழுந்தன. சேடகிருட்டிணன், நீலகண்ட தீட்சிதர், வேங்கடாத்திரி, திருமலாம்பா, சிரீநிவாசகவி, பகவந்தராயமகி, நல்லா கவியென்னும் பூமிநாதகவி, வேங்கடேசகவி போன்ற பல புலவர்கள் பலவகைத் தலைப்புகளில் சம்பு காவியங்கள் இயற்றிப் புகழ்பெற்றனர்.
வரலாற்றுத் தொடர்புடைய சம்பு காவியங்கள் பிற்காலத்தில் இயற்றப்பெற்றன. இவற்றுள் விசயநகர மன்னன் அச்சுதப்ப நாயக்கனின் (கி.பி. 1529–1542) மனைவியான திருமலாம்பா இயற்றிய ‘வரதாம்பிகா பரிணய சம்பு’; தஞ்சை மராட்டிய மன்னர்களான இரண்டாம் சகசி மன்னர் (கி.பி. 1684–1711) மீது இயற்றிய ‘தர்ம விசய சம்பு’; முதலாம் சரபோசி (கி.பி. 1711–1729) மன்னரின் முடிசூட்டு விழாப்பற்றிய செய்திகளைக் கூறும் ‘போசலவம்சாவளி சம்பு’ சீனிவாசராலியற்றப்பட்ட ‘ஆனந்தரங்க விசய’ சம்பு (கி.பி. 1752) முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. பிற்கால வடமொழி இலக்கிய உலகில் பல சம்பு நூல்கள் உருவாயின.
{{Right|<b>ந.சீ.</b>}}
<section end="சம்புகாவியம்"/>
<section begin="சம்புத்தீவு"/>
{{dhr}}
{{larger|<b>சம்புத்தீவு:</b>}} சம்பு என்பதற்கு அருகன், ஆதித்தன், எலுமிச்சை, ஒரு தீவு, ஒரு நதி, ஒரு புல், கடவுள், சிவன், சீர்பந்த பாசாணம், தட்டை, துருவன் மனைவி, நரி, நாவல் மரம், பிதா, பிரமன், புத்தன், விட்டுணு எனப் பல பொருள்கள் உண்டு.
சம்புத்தீவு, ‘சத்தத் தீவுகளில்’ ஒன்று என்றும், ‘நான்கு பெருந் தீவினுள்’ ஒன்று என்றும் கூறப்படுகிறது. இது ‘நாவலந் தீவு’ எனவும் வழங்கப்படும். நாவல் மரம் சிறந்துள்ளமையால் இத்தீவு நாவலந் தீவு எனப்பட்டது. ‘நாவலோங்கிய மாபெருந் தீவு’ (மணி. காதை. 2, வரி-1). இந்நாவலந்தீவு மேருமலையின் பக்கத்தே இருந்தது என்றும், இம்மேருமலை எண்பதாயிரம் யோசனை உயரமும் அதற்குத் தக்க பருமனும் உடையது என்றும், இம்மலையைச் சுற்றி ஏழு மலைகளும், இம்மலைகள் ஒவ்வொன்றினையும் சூழ்ந்து, இம்மலைகளின் உயரமளவுள்ள ஆழமும் அகலமும் உடைய ஏழு கடல்கள் இருந்தன என்றும், இவை எல்லாவற்றையும் புறம் சூழ்ந்து கிடக்கும் பெரும்புறக்கடல் ஒன்று இருந்தது என்றும் அப்பெரும்புறக்கடலில் உள்ள நான்கு பெரிய தீவுகளுள் இச்சம்புத் தீவு ஒன்று என்றும், மேலும் இத்தீவு ஒவ்வொன்றையும் கற்றி ஐந்நூறு, ஐந்நூறு சிறுசிறு தீவுகளாக இரண்டாயிரம் சிறுதீவுகள் இருந்தன என்றும் கூறுவர் (மணி. காதை–6, உ.வே.சா. அரும்.) இச்சம்புத் தீவின் அதி தேவதை சம்பாபதி தெய்வம். பாரத நாடு முற்காலத்தில் சம்புத்தீவு என வழங்கப்பெற்றது.
{{Right|<b>செ.க.</b>}}
<section end="சம்புத்தீவு"/>
<section begin="சம்புவராயர்"/>
{{dhr}}
{{larger|<b>சம்புவராயர்:</b>}} சோழர்களின் சிற்றரசர்களாகவும், சாமந்தர்களாகவும், படைத் தலைவர்களாகவும் கி.பி. 11, 12–ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தலைவர்கள் சம்புவராயர் எனப் பெறுவர். இவர்கள் பல்லவ மரபைச் சேர்ந்தவர்கள். தென்னார்க்காடு, வடஆர்க்காடு மாவட்டப் பகுதிகளில் இவர்கள் அதிகாரம் செலுத்தினர். ஒரு சில சம்புவராயர்களின் பெயர்கள் வருமாறு:
::{{overfloat left|align=right|padding=1em|1)}} இராசேந்திர சோழ சம்புவராயன்: இவனுடைய மற்றொரு பெயர் நாலாயிரவன் அம்மையப்பன். முதலாம் குலோத்துங்கனுக்கும் விக்கிரம சோழனுக்கும் அடங்கியிருந்த சிற்றரசன்.
::{{overfloat left|align=right|padding=1em|2)}} இராச நாராயண சம்புவராயன்: கலவை என்ற ஊர் இவன் பெயரால் இராசநாரா-<noinclude></noinclude>
rjej79zshifl8kpee9w5yj4fzcwi991
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/432
250
648637
1952504
2026-07-09T18:26:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யண் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. ::{{overfloat left|align=right|padding=1em|3)}} விக்கிரமசோழ சம்புவராயன்: இவனுடைய மற்றொருபெயர் கண்ணுடையான். இவனுக்குத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்பை|406|சம்பை}}</noinclude>யண் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|3)}} விக்கிரமசோழ சம்புவராயன்: இவனுடைய மற்றொருபெயர் கண்ணுடையான். இவனுக்குத் தலைவன் இரண்டாம் குலோத்துங்கன்.
::{{overfloat left|align=right|padding=1em|4)}} வீரசோழன் அத்திமல்லன், அம்மையப்பன் கண்ணுடையபெருமாள், சோழப்பிள்ளை அழகியசியன் முதலியோர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கியிருந்த சிற்றரசர்கள் ஆவர்.
சம்புவராயரின் அதிகார வளர்ச்சி சோழப் பேரரசின் மத்திய ஆட்சி வலிமை குன்றி வந்ததைக் காட்டுகிறது. சோழப் பேரரசின் சிதைவுக்கும் வீழ்ச்சிக்கும் பின் சம்புவராயரும் மறைந்துவிட்டனர். தமிழ்ப் பற்றுக் கொண்ட சம்புவராயர்கள் பலரைப் பற்றிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சம்புவராயர்"/>
<section begin="சம்பை"/>
{{dhr}}
{{larger|<b>சம்பை:</b>}} தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூரிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையில் பெண்ணையாற்றின் வடகரையினை யொட்டி இவ்வூர் அமைந்துள்ளது. ‘வாணகோபாடி’ என்ற நாட்டுப்பிரிவில் இவ்வூர் இருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வூரின் பண்டைய பெயர் வாளையூர் என்பதாகும். சோழர் காலத்தில் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் இவ்வூருக்கு நித்த விநோதபுரம், இராசேந்திரபுரம், வீரராசேந்திரபுரம் என்ற பெயர்கள் சூட்டப்பெற்றிருந்தன. முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து இவ்வூருக்குச் சண்பை என்ற பெயர் வழங்கி வந்துள்ளது. இப்பெயரே இப்போது இவ்வூருக்கு நிலைத்த பெயராகச் ‘சம்பை’ என மருவி வழங்குகிறது.
இவ்வூரில் இராட்டிரகூட மன்னனான கன்னர தேவன் கல்வெட்டுள்ளது. முதற்பராந்தக சோழன் காலந்தொட்டு எழுபத்தெட்டு கல்வெட்டுகள் பொறிக்கப் பெற்ற சோழர் காலத்தில் எடுப்பிக்கப் பெற்ற சிவன்கோயில் ஒன்றும் உள்ளது. கல்வெட்டில் இக்கோயில் ‘திருத்தான்தோன்றி மகாதேவர் கோயில்’ என்று குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலைத் தவிர வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வேறு கோயில்களும் பழமையான பல உதிரிச் சிற்பங்களும் நிறைந்த ஊராக இவ்வூர் விளங்குகிறது. சோழர்கள் காலத்தில் இவ்வூர் வணிகர்கள் வாழ்ந்த நகரமாக விளங்கியது என்பதை இவ்வூர்க் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வூர்ப் பகுதியில் அமைந்துள்ள சிறிய குன்று ஒன்றில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுப் பயிற்சி நிறுவன மாணவர் ஒருவர் 1981–இல் சங்க காலத் தமிழ்ப்பிராமி கல்வெட்டு ஒன்றினைக் கண்டறிந்தமையால் சம்பை சங்ககால வரலாற்றோடு சேரும் பெருமையை எய்தியது. இக்குன்றில் ‘தாசிமடம்’ எனப்படும் இயற்கையான குகைத்தளம் ஒன்றின் உட்புறம் இக்கல்வெட்டு, பாறையில் பொறிக்கப் பெற்றிருந்தது. தமிழகத்தினை ஆண்ட மன்னர் குலங்களாக அசோகன் கல்வெட்டுக் குறிக்கும் வரிசையில் சேர, சோழ, பாண்டியரையடுத்து சூறிப்பிடப் பெறும் ‘சத்யபுத்ரா’ என்ற மன்னர் குலம் பற்றி இக்கல்வெட்டே தெளிவுறக் கூறுகிறது.
இயற்கையான குகைத்தளம் ஒன்றினை முனிவர்கள் (சமண முனிவர்கள்) உறைவதற்கு ஏற்ற வகையில் அமைந்த பாழியாக (பள்ளிவாகர் சத்தியபுரத்தின் அதியன் நெடுமான் அஞ்சி இக்குன்றில் உருவாக்கிக் கொடுத்தான் என்ற செய்தியினை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. இச்செய்தி கல்வெட்டின் பின்வரும் வரியால் விளங்குகிறது.
‘சதியபுதோ அதியந் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி’. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலத்தினை கி.பி. முதல் நூற்றாண்டு என்று கணித்துள்ளனர். தமிழ் மொழிக்கேற்ற வகையில் அமைந்த தமிழ்ப் பிராமி எழுத்துகளில் இக்கல் வெட்டு உள்ளது. ‘சதியபுதோ’, ‘பாளி’ என்ற பிராகிருதச் சொற்கள் இக்கல்வெட்டில் விரவி எழுதப் பெற்றுள்ளன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் அதியன் நெடுமானஞ்சி ஒளவையார் பாடிய அதியனா-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 432
|bSize = 480
|cWidth = 306
|cHeight = 63
|oTop = 499
|oLeft = 89
|Location = center
|Description =
}}
{{center|சம்பைக் கல்வெட்டு}}<noinclude></noinclude>
g3d9w2q1rgphfzxl34vxt2umhsgnt7l
பயனர் பேச்சு:Leelasuresh37
3
648638
1952506
2026-07-10T02:09:02Z
Info-farmer
232
/* வரவேற்புரை */ புதிய பகுதி
1952506
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:09, 10 சூலை 2026 (UTC)
7inyf0v0u33nxblaa0n0ntv8496dbd1
பயனர் பேச்சு:04jayapriya
3
648639
1952508
2026-07-10T02:09:52Z
Info-farmer
232
/* வரவேற்புரை */ புதிய பகுதி
1952508
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:09, 10 சூலை 2026 (UTC)
7inyf0v0u33nxblaa0n0ntv8496dbd1
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/113
250
648640
1952523
2026-07-10T04:26:13Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>மெக்சிக்கோவுக்கும் இடையே உருவான பிரச்சனை. நைல் நதி நீரைப் பங்கிடுவதில் சூடான், எகிப்து நாடுகளுக்கிடையே எழுந்துள்ள பிரச்சனை: இப்படி உலக நாடுகளுக்கிடையே எழுந்துள்ள நதி நீர்ப் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்படும் போது, ஒரே நாட்டுக்குள்ளே இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதி நீர்ப் பிரச்சனை னகளை ஏன் தீர்க்க முடியவில்லை? ‘தேசபக்தி' பேசுகிறவர்கள் இந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்!
உலக நாடுகளில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நான்கு அம்சங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. நதிநீர் உற்பத்தியாகும் மேல் பகுதிக்கு முன்னுரிமை தராமல், அதனால் பயன்படும் கீழ்நிலைப்பகுதிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்பது ஒரு அம்சம்: உற்பத்தியாகும் நதி - இயற்கையாக எந்தெந்தப் பகுதி வழியாக ஓடுகிறதோ, அந்தப் பாதையைத் தடுக்கக் கூடாது என்பது இரண்டாவது அம்சம்; அந்த நதியால் எந்தப் பகுதி மக்கள் அதிகமாகப் பயனடைகிறார்களோ. அவர்களின் தேவைக்கு முன்னுரிமை தருவது என்பது மூன்றாவது அம்சம்; ஒரு நதி - பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஓடினாலும் - நதி நீர் ஓடக்கூடிய பகுதிகள் முழுவதையும் மாநிலங்களைக் கடந்த ஒரே பொருளாதாரப் பிரதேசமாகக் கருதவேண்டும் என்பது நான்காவது அம்சம். இவை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையான நான்கு அம்சங்களையும் கருநாடகம் தொடர்ந்து புறக்கணித்து சண்டித்தனம் செய்து வருகிறது! இப்போது கருநாடகத்தில் வழக்கமாக பெய்யும் மழையில் 69 சதவீதம் மழை பெய்துள்ளது. எனவே, வழக்கமாக அணைகளில் உள்ள நீரில் 69 சதவீத நீர் இருக்கிறது; இருந்தும், தமிழகத்துக்குத் தண்ணீர் விட மறுக்கிறது.
இனி, கருநாடகத்துக்கு தமிழ்நாட்டின் நிலக்கரியும், பெட்ரோலும், மின்சாரமும் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை! தமிழக அரசு அதைச் செய்யுமா?
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.09.2002}}<noinclude>{{nop}}{{rv|111 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''111'''}}}}|{{left|{{larger|'''111'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qxbz0mitqiy5gqa1uvpep92nkl3lrq6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/114
250
648641
1952524
2026-07-10T04:29:29Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>'தலித்' பஞ்சாயத்துகளில்மீண்டும் ஒரு நாடகம்</b>}}}}
{{li|பா|2em}}ப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களம் ஆகிய மதுரை
மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள
கொட்டகாட்சியேந்தல் பஞ்சாயத்திலும் தேர்தலை நடத்த
முடியவில்லை. இந்தப் பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக
ஒதுக்கப்பட்ட ரிசர்வ் பஞ்சாயத்துகள். இந்தப் பகுதியில் வாழும்
உயர்ஜாதி என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் - தங்கள்
பஞ்சாயத்துக்கு தலைவராக ஒரு 'தலித்' வரக்கூடாது என்று
மிரட்டுகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை - ஒரு தேர்தல் நாடகம்
நடந்தது. ஜாதி ஆதிக்கவாதிகளே ஒரு 'தலித்' வேட்பாளரை
நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பிறகு அவர்களை பதவி
விலகுமாறு ஆணையிடவே, வெற்றி பெற்றவர்களும் பதவி
விலகினர். இப்போது மீண்டும் தேர்தல் ஆணையத்தால் தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது; இப்போது மட்டும் என்ன நடந்து விடப்
போகிறது?
அரசியல் அதிகாரத்தில் தலித் மக்களுக்கு உரிய பங்கினை
வழங்க வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு ஜாதி
ஆதிக்கவாதிகள் - பகிரங்கமாக சவால் விடும்போது, மாநில
அரசு, அதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
தலித் மக்களை, தனிமைப்படுத்தி, அவர்களைப் பிரித்து
வைக்கும் கூட்டம் தானே உண்மையானா 'பிரிவினை'
வாதிகள்?
கடந்த முறை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இந்த
பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்த முன்வந்தது. அந்த<noinclude>{{nop}}{{rv|112 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''112'''}}}}|{{left|{{larger|'''112'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
oxvvvktd8gqvp04pc8dlhbmrbzyyr5c
1952525
1952524
2026-07-10T04:29:49Z
Balajijagadesh
1137
1952525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>'தலித்' பஞ்சாயத்துகளில்மீண்டும் ஒரு நாடகம்</b>}}}}
{{li|பா|2em}}ப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களம் ஆகிய மதுரை
மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள
கொட்டகாட்சியேந்தல் பஞ்சாயத்திலும் தேர்தலை நடத்த
முடியவில்லை. இந்தப் பஞ்சாயத்துகள் தலித் மக்களுக்காக
ஒதுக்கப்பட்ட ரிசர்வ் பஞ்சாயத்துகள். இந்தப் பகுதியில் வாழும்
உயர்ஜாதி என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் - தங்கள்
பஞ்சாயத்துக்கு தலைவராக ஒரு 'தலித்' வரக்கூடாது என்று
மிரட்டுகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை - ஒரு தேர்தல் நாடகம்
நடந்தது. ஜாதி ஆதிக்கவாதிகளே ஒரு 'தலித்' வேட்பாளரை
நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பிறகு அவர்களை பதவி
விலகுமாறு ஆணையிடவே, வெற்றி பெற்றவர்களும் பதவி
விலகினர். இப்போது மீண்டும் தேர்தல் ஆணையத்தால் தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது; இப்போது மட்டும் என்ன நடந்து விடப்
போகிறது?
அரசியல் அதிகாரத்தில் தலித் மக்களுக்கு உரிய பங்கினை
வழங்க வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு ஜாதி
ஆதிக்கவாதிகள் - பகிரங்கமாக சவால் விடும்போது, மாநில
அரசு, அதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
தலித் மக்களை, தனிமைப்படுத்தி, அவர்களைப் பிரித்து
வைக்கும் கூட்டம் தானே உண்மையானா 'பிரிவினை'
வாதிகள்?
கடந்த முறை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இந்த பஞ்சாயத்துகளில் வேட்பாளர்களை நிறுத்த முன்வந்தது. அந்த<noinclude>{{nop}}{{rv|112 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''112'''}}}}|{{left|{{larger|'''112'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
b8pc5xm8l6rq29gbyx6c6layb7g2oh3
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/115
250
648642
1952526
2026-07-10T04:33:16Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>அமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்று அஞ்சிய
ஜாதி ஆதிக்கவாதிகள், தங்களது உத்தரவுக்கு கீழ்ப்படியக்கூடிய
தலித்துகளைத் தேடிப்பிடித்து வேட்பாளராக்கினார்கள். தேர்தல் நேர்மையாக
நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு கருதியிருக்குமானால், எதிர்ப்பு
தெரிவிக்கும் ஜாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க
வேண்டும்; விடுதலைப்புலிகளை ஆதரித்து - மேடையில் பேசினார்கள்
என்று குற்றம் சாட்டி, 'பொடோ' சட்டத்தைப் பயன்படுத்தும் அ.தி.மு.க.
ஆட்சி, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகளின் கீழ், வாழமாட்டோம் என்று மிரட்டும்
ஜாதி வெறியர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்க வேண்டாமா? தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக
இத்தகைய கிராமங்கள் மீது தண்டனையாக வரிவிதிக்கவும் சட்டத்தில் இடம்
இருக்கிறதே!
இதில் முக்கிய அரசியல் கட்சிகளின் - போக்கையும் சுட்டிக் காட்டியாக
வேண்டும். அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற
அரசியல் கட்சிகளே, தங்கள் கட்சியின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்த முன்
வந்திருக்குமானால், ஜாதி வெறியர்களின் மிரட்டலை தடுத்து நிறுத்தியிருக்க
முடியும். இந்தப் பஞ்சாயத்துகளில் அக்கட்சிகளுக்கு வேட்பாளர்களே
கிடைக்காமல் போய் விட்டார்களா, என்ன? ஜாதி வெறியர்களின் எதிர்ப்பை
சந்திக்க இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. அதுதான் உண்மை.
கிராம மட்டத்தில் - இப்படி - ஜாதி வெறியை நிலைநாட்டிக் கொண்டு
ஜாதி எதிர்ப்பு பற்றி, அரசியல் கட்சிகள் பேசுவதும், இந்தியாவிலே முதல்
மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கப் போவதாக, தமிழக முதல்வர்
பேசுவதும், மக்களை ஏமாற்றும் மோசடி நாடகங்கள் அல்லாமல் வேறு
எனன?
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 03.10.2002}}<noinclude>{{nop}}{{rv|113 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''113'''}}}}|{{left|{{larger|'''113'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fkt57rebqlpnxlamdvsitxalbrkcdvu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/116
250
648643
1952527
2026-07-10T04:34:58Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>சூத்திர இழிவை உறுதிப்படுத்தும் பார்ப்பனச் சட்டம்</b>}}}}
{{li|க|2em}}ல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் ஒரு பக்கம்: காவிரி நீருக்காக - தமிழ்நாடே கொந்தளித்து நிற்கும் சூழல் மற்றொரு பக்கம்; இந்த நிலையில் “சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது” என்று கூறுவது போல், ஜெயலலிதா, அவசர அவசரமாக, ஆளுநர் மூலம் மதமாற்றத்தைத் தடை செய்யும் ஒரு ஆணையை, ஆளுநர் மூலம் பிறப்பித்திருக்கிறார். ‘சங்பரிவாரங்கள்’ முன்வைத்த கோரிக்கையை, ஜெயலலிதா ஆட்சி, உடனே அவசரச் சட்டத்தின் மூலம் அமுல்படுத்தியிருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலே கூட இப்படி ஒரு சட்டம் வரவில்லை. ஆனால், பெரியார் மண்ணில் பார்ப்பன இந்து மதத்தைக் காப்பாற்றும் ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்து விட்டார்!
தமிழ்நாட்டில் நடப்பது காஞ்சி சங்கராச்சாரியின் பார்ப்பன ஆட்சிதான் என்று நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். அதை உறுதிப்படுத்துவது போல் இந்தச் சட்டத்தை ஆதரித்து, முதல் குரல் கொடுத்திருப்பவர் சங்கராச்சாரி பார்ப்பனர்தான். இந்த அவசரச் சட்டம் என்ன கூறுகிறது ?
ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு நேரடியாகவோ, வற்புறுத்தியோ, முறைகேடாகவோ அல்லது கவர்ச்சியூட்டக் கூடிய முறைகளைப் பின்பற்றியோ, ஒருவரை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம் என்றும், இதற்கு மூன்று ஆண்டு சிறையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கலாம் என்றும் இந்த அவசரச் சட்டம்<noinclude>{{nop}}{{rv|114 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''114'''}}}}|{{left|{{larger|'''114'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
32b1caq8hyh47g9x4nmzp7ibxzjr1mw
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/117
250
648644
1952528
2026-07-10T04:40:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>கூறுகிறது. 'வற்புறுத்தல்' - 'முறைகேடு' -'கவர்ச்சி யூட்டுதல்' என்ற
சொற்றொடர்களுக்கான விளக்கங்களை யார் நிர்ணயிப்பது? எப்படி முடிவு
செய்வது? இதற்கெல்லாம் விளக்கம் இல்லை. ஒவ்வொரு குடிமகனும்,
அவனது மனசாட்சிப்படி எந்த மதத்தையும் பின்பற்றவும், அதைப் பிரச்சாரம்
செய்யவும் அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அடிப்படை உரிமை
வழங்கியிருக்கும்போது, இந்தச் சட்டம் அரசியல் சட்டத்தின்
உரிமைகளுக்குக் கூட எதிரானது. இப்படி சட்டரீதியான வினாக்கள் ஒரு
பக்கம் இருந்தாலும் - நாம் அதைவிட முக்கியமாக அறிவு ஆசான் தந்தை
பெரியார் தந்த கொள்கை வெளிச்சத்தில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்ப
விரும்புகிறோம்.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் தவிர, ஏனையோர் அனவைருமே
இந்துக்கள் என்கிறது. அரசியல் சட்டம்! இந்து மதத்துக்குத் திட்டவட்டமான
விளக்கம் தர முடியவில்லை. காரணம், அப்படி ஒரு மதமே இல்லை.
வேதமதம் என்ற பார்ப்பன மதம் தான் இந்து மதம் என்று பார்ப்பன
சங்கராச்சாரிகள் கூறுகிறார்கள். இந்த மதம் ‘தீண்டாமை'யை நியாயப்
படுத்துகிறது. 'சூத்திரன்' என்று பார்ப்பனரல்லாதவர்களை இழிவு செய்கிறது;
சூத்திரன் என்றால் 'பிராமணனின்' வைப்பாட்டி மகன் என்று கூறுகிற,
‘மனுதர்மம்’ இன்னமும் தடை செய்யப்படவில்லை! இந்த இழிவுகள்
ராமாயணத்திலும், கீதையிலும், வேதங்களிலும், நிலை நாட்டப்பட்டுள்ளன.
அவைகள் பார்ப்பனர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. எனவேதான்
தலித் மக்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்த டாக்டர் அம்பேத்கர், பல
லட்சம் மக்களோடு -புத்த மார்க்கத்துக்குத் தழுவினார். தமிழர்கள் இந்துக்கள்
அல்ல என்று அறிவித்த பெரியார் 'சூத்திர' இழிவுக்கு எதிராக உயிர் மூச்சு
அடங்கும் வரை போராடினார். இந்தச் சட்டத்தின்படி பெரியாரும்,
அம்பேத்கரும் இப்போது உயிருடனிருந்தால், சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள்!
தமிழில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று சங்கராச்சாரிகள் கூறும்
போது வாய் திறக்காத முதல்வர் ஜெயலலிதா தமிழில் வழிபாடு நடத்தக்
கூடாது என்ற விவாதங்கள் நடந்த போது, மவுனம் ஜாதித்த ஜெயலலிதா,
இந்து மதத்துக்குள் அடைக்கப்பட்டவர்கள். இறுதிவரை, ' இந்துக்களாகவே'
வாழ்ந்துதான் தீரவேண்டும் என்று சட்டம் போட்டு மிரட்டுகிறார்! மானமுள்ள
- சுயமரியாதை உள்ள எந்த மனிதனும் - இந்த ஆரிய அடக்குமுறைச்
சட்டத்தை ஏற்க முடியுமா? இப்போது தடை போட வேண்டிய சமூகப்
பிரச்சனைகள் ஏராளம் உண்டு! சூத்திர - தீண்டாமை இழிவுகளை
வலியுறுத்தும் இதிகாசம் - வேதங்களுக்குத் தடை வரட்டும்!
{{nop}}<noinclude>{{nop}}{{rv|115 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''115'''}}}}|{{left|{{larger|'''115'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nev5e0d0krkm0a2r5e9oab1c8ovj4uf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/118
250
648645
1952529
2026-07-10T04:42:43Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>அவைகளை நிலைநாட்டும் காஞ்சி பார்ப்பன சங்கர மடங்களின்
சடங்குகளுக்குத் தடை வரட்டும்!
கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமையைத் திணிக்கும்
ஜாதிவெறியர்களின் நடவடிக்கைக்குத் தடை வரட்டும்! ரிசர்வ்
பஞ்சாயத்துகளையே அங்கீகரிக்க மறுக்கும் ஜாதி வெறியர்களின்
செயலுக்குத் தடை வரட்டும். இவைகளுக்கு வராத தடை, மதமாற்றத்துக்கு
மட்டும் ஏன் வரவேண்டும் ?
தமிழன், இன - மொழி உரிமைக்குக் குரல் கொடுத்தால் பொடோ சட்டம்
பாய்கிறது! இந்து மதத்தின் கீழ் - கீழ் ஜாதிக்காரனாக - இழிமகனாக இருக்க
மாட்டேன் என்று சொன்னால் - மதமாற்றத் தடைச் சட்டம் பாய்கிறது! இது
தமிழ் நாடா? ஆரியர் நாடா?
{{r|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.10.2002}}<noinclude>{{nop}}{{rv|116 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''116'''}}}}|{{left|{{larger|'''116'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p4bq2xvvz29dtf3fic5kuajseljsgr0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/386
250
648646
1952530
2026-07-10T04:49:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 386 |bSize = 375 |cWidth = 126 |cHeight = 155 |oTop = 42 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|செஞ்சிலுவைச் சங்கம்}} சுவிட்சர்லாந்தின் வங்கி உடைமையாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சிலுவைச் சங்கம்|358|செஞ்சிலுவைச் சங்கம்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 386
|bSize = 375
|cWidth = 126
|cHeight = 155
|oTop = 42
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|செஞ்சிலுவைச் சங்கம்}}
சுவிட்சர்லாந்தின் வங்கி உடைமையாளர் ஒருவரின் மகனாக கி.பி. 1828-இல் பிறத்த அவர் கி.பி. 1862-இல் ‘சால்பரினோ நினைவுகள்’ என்ற நூலினை எழுதினார். அந்நூலில் போர்களில் காயம் பட்டோருக்கும், அமைதிக் காலங்களில் இயற்கையின் சீற்றங்களால் துயருறுவோர்க்கும் துணை புரியக்கூடிய ஓர் அமைப்புத் தேவை என்பதை வலியுறுத்தினார். தொண்டு செய்யும் தூய்மைமிக்க வாழ்க்கை வாழ வேண்டுமென்ற நோக்குடன் கசுடாவ் மாய்னீர், டாக்டர் ஆப்பிரியா, டாக்டர் மானுவா ஆகிய உறுப்பினர்களுடன் தூனான்ட்டைச் செயலராகக் கொண்ட குழு செனீவாவில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர்த் தூனான்ட்டு பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசுத் தலைவர்கள் பலரையும் கண்டு பேசித் தம் முடிவுக்கு ஆதரவு தேடினார். அதன் பயனாய் கி.பி. 1863 அக்டோபர் 26-இல் பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 பேராளர்கள் மாநாடு கூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 நாடுகளிலும் தேசிய உதவிச் சங்கங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் கி.பி. 1864 ஆகசுட்டு 22-இல் செனீவாவில் அமெரிக்க ஐக்கிய நாடும் 13 ஐரோப்பிய நாடுகளும் கூடிச் செனீவா உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி போர்க் கைதிகளை மனிதாபி மானத்துடன் நடத்துதல், போர்களில் காயம்பட்டவர்களுக்கு எவ்விதமான வேறுபாடுகளும் காட்டாது முதலுதவி அளித்தல், மருத்துவர்கள், தாதிகள் ஆகியோரின் உதவியுடன் கூடிய மருத்துவக் கூடங்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்குதல் ஆகியன முக்கிய பொறுப்புகளாகக் கொள்ளப்பட்டன. இத்தகைய உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை இனங் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஓர் அடையாளச் சின்னம் தேவைப்பட்டது. எனவே, சுலிட்சர்லாந்தின் அரும் பங்கித்துப் பெருமை சேர்க்கும் வகையில் அந்நாட்டுக் கொடியில் சில நிற மாற்றங்களைச் செய்து, வெண்ணிறத் துணியில் சிவப்பு நிறச் சிலுவை பதித்து, அதுவே அடையாளச் சின்னமாகக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தை ஏற்றுக் கொண்டபோது இந்த அடையாளச் சின்னமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், சில முகம்மதிய நாடுகள் சிலுவைக்குப் பதில் செவ்விளம் பிறையையும், வேறுசில நாடுகள் குறிப்பாக ஈரான், செஞ்சிங்கத்தோடு சூரியனையும் தமது சின்னங்களாகக் கொண்டுள்ளன.
செஞ்சிலுவைச் சங்கத்திற்கேனத் தனிப்பட்ட விதிமுறைகள் உண்டு. இச்சங்கமும் கிளைச் சங்கங்களும் நாடு, இனம், மத்தும் மத வேறுபாடுகளின்றித் தொண்டாற்ற வேண்டும். போர்கள் நடக்கும் பகுதிகளில் இந்த அமைப்புச் செயற்படும்போது அதன் இருப்பிடம் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். போரில் ஈடுபட்ட இருசாரகும் இச்சங்கத்தினைச் சேர்ந்தவர்களுக்கும் இச்சங்கத்தின் பணிகளுக்கும் எவ்விதமான இடர்ப்பாடுகளும், இடையூறுகளும் தாராவண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டும். கிளைச் சங்கங்கள் செனீவாவிலுள்ள தலைமைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவேண்டும்.
தூனான்ட்டு, அரும்பணி ஆற்றியதன் காரணமாக 1901-ஆம் ஆண்டில் தோபல் பரிசு பெற்றார். இவர் 1910-இல் காலமானார். ஆயினும் இறப்பதற்கு முன்னர் 1906-இல் திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டுப் பலவகைப் போர்களில் ஈடுபட்டோருக்கும் இச்சங்கம் உதவுவது ஏற்கப்பட்டது. போர்க்களங்களில் காயமுற்றவர்களுடன் போரில் சிறைப்பட்ட போர்க் கைதிகளுக்கும் உதவ 1929-ஆம் ஆண்டில் இச்சங்கம் அனுமதிக்கப்பட்டது. போரில் ஈடுபடாத பிறருக்கும் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பளிப்பது 1949-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று அம்மை, காலரா, கருங்கொள்ளை நோய், தொற்று தோய் ஆகியவற்றின் தடுப்புப் பணிகளிலும் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பின் தங்கிய நாடுகளில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அமைப்புத் தூண்டுகோலாக விளங்குகிறது. இயற்கைச் சீற்றங்களான புயல்,-<noinclude></noinclude>
j8cewg3s752lidxsmqsdvfo90sk2cts
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/128
250
648647
1952532
2026-07-10T05:14:04Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
மாநாட்டில் பங்கேற்பார் என்று இந்திய அரசு அறிவித்திருந்தாலும் இதுவரை, இந்தியா பின்பற்றி வந்த பாராமுகம் என்ற நிலையிலிருந்து இது ஒரு திருப்பம் என்றே கூறவேண்டும். ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் திரும்ப வேண்டும் என்றே இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. நார்வே நாட்டின் சீரிய முயற்சியால் முட்டுக்கட்டைகளைக் கடந்து பேச்சு வார்த்தைகள் முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது இந்தியா உட்பட உலக நாடுகளின் தார்மீகக் கடமையாகும். ஆனாலும் இந்தியாவில் பார்ப்பன அதிகார வர்க்கமும், பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன சக்திகளும் இந்த பேச்சுவார்த்தையை குலைக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்; அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பார்ப்பனர்களின் வன்மத்தையும், தமிழர் விரோத போக்கையையுமே இது காட்டுகிறது. போரும் கூடாது, சமாதானமும் ஏற்படக் கூடாது. எப்போதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ‘கிலி'யை பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே பார்ப்பனர்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் தமிழர் எழுச்சி வராமல் தடுப்பதற்கு இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டலாம் என்பதே பார்ப்பனர்களின் உள்நோக்கம்.
ஆனாலும் தடைகளைத் தகர்த்து பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் நடைபோடுகின்றன. ஓஸ்லோ மாநாடு வெற்றிப்பாதையில் இன்னும் ஒரு மைல்கல்லைக் கடந்துள்ளது என்றே கூறவேண்டும். பார்ப்பனர்கள், எதிர்பார்ப்புகள் இதில் தோல்வி அடையவே செய்யும்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.11.2002</b>}}<noinclude>{{nop}}{{rv|126 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''126'''}}}}|{{left|{{larger|'''126'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bfsgf490d43yddxu191cohp1dz8yvqj
1952533
1952532
2026-07-10T05:14:26Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
மாநாட்டில் பங்கேற்பார் என்று இந்திய அரசு அறிவித்திருந்தாலும் இதுவரை, இந்தியா பின்பற்றி வந்த பாராமுகம் என்ற நிலையிலிருந்து இது ஒரு திருப்பம் என்றே கூறவேண்டும். ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் திரும்ப வேண்டும் என்றே இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. நார்வே நாட்டின் சீரிய முயற்சியால் முட்டுக்கட்டைகளைக் கடந்து பேச்சு வார்த்தைகள் முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது இந்தியா உட்பட உலக நாடுகளின் தார்மீகக் கடமையாகும். ஆனாலும் இந்தியாவில் பார்ப்பன அதிகார வர்க்கமும், பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன சக்திகளும் இந்த பேச்சுவார்த்தையை குலைக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்; அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பார்ப்பனர்களின் வன்மத்தையும், தமிழர் விரோத போக்கையையுமே இது காட்டுகிறது. போரும் கூடாது, சமாதானமும் ஏற்படக் கூடாது. எப்போதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ‘கிலி'யை பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே பார்ப்பனர்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் தமிழர் எழுச்சி வராமல் தடுப்பதற்கு இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டலாம் என்பதே பார்ப்பனர்களின் உள்நோக்கம்.
ஆனாலும் தடைகளைத் தகர்த்து பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் நடைபோடுகின்றன. ஓஸ்லோ மாநாடு வெற்றிப்பாதையில் இன்னும் ஒரு மைல்கல்லைக் கடந்துள்ளது என்றே கூறவேண்டும். பார்ப்பனர்கள், எதிர்பார்ப்புகள் இதில் தோல்வி அடையவே செய்யும்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.11.2002</b>}}<noinclude>{{nop}}{{rv|126 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''126'''}}}}|{{left|{{larger|'''126'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
52rqm6hkug88f5e9iy8bs3trfplgt29
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/129
250
648648
1952534
2026-07-10T05:16:51Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமை மீறல்கள்</b>}}}}
காவல் துறையுடன் நேரடியாக மோதினார்கள்; எனவே, காவல் துறை அதிகாரிகள் தற்காப்புக்காக சுட்டுக் கொல்ல வேண்டி நேரிட்டது” என்று. காவல் துறையினரால் வழக்கமாகக் கூறப்படும் கதைகள் - கட்டமைக்கப்பட்டவை என்றே, கடந்த கால நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, விசாரணை தீர்ப்பு என்று சட்ட ரீதியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது; காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளை, நீதிமன்றங்களும் கண்டித்தே வந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் – கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களை, காவல்துறையினர் சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இது பல்வேறு நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. காவல் துறையினரால் - சுட்டுக் கொல்லப்பட்ட வியாசர்பாடியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் தாயார் தயாநிதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அதே போல், மயிலாப்பூர் போலீசாரால் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காக்கா ரமேஷ். போலீசாருடன் மோதியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியிருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தக் கோரி, நொச்சிக்குப்பம் பகுதியைச் சார்ந்த ரமேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திடம் புகார்<noinclude>{{nop}}{{rv|127 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''127'''}}}}|{{left|{{larger|'''127'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hmovqldsicjzabomjz7rgfefk0y5d8s
1952537
1952534
2026-07-10T05:25:02Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமை மீறல்கள்</b>}}}}
{{li|“கா|2em}}காவல் துறையுடன் நேரடியாக மோதினார்கள்; எனவே, காவல் துறை அதிகாரிகள் தற்காப்புக்காக சுட்டுக் கொல்ல வேண்டி நேரிட்டது” என்று. காவல் துறையினரால் வழக்கமாகக் கூறப்படும் கதைகள் - கட்டமைக்கப்பட்டவை என்றே, கடந்த கால நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, விசாரணை - தீர்ப்பு என்று சட்ட ரீதியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது; காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளை, நீதிமன்றங்களும் கண்டித்தே வந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் – கடந்த சில நாட்களாக - குற்றம் சாட்டப்பட்டவர்களை, காவல்துறையினர் சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இது பல்வேறு நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. காவல் துறையினரால் - சுட்டுக் கொல்லப்பட்ட வியாசர்பாடியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் தாயார் தயாநிதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அதே போல், மயிலாப்பூர் போலீசாரால் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காக்கா ரமேஷ். போலீசாருடன் மோதியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியிருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தக் கோரி, நொச்சிக்குப்பம் பகுதியைச் சார்ந்த ரமேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திடம் புகார்<noinclude>{{nop}}{{rv|127 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''127'''}}}}|{{left|{{larger|'''127'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
l5xy7fdgzz98ly3gq7f03p4x6eiiegk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/387
250
648649
1952538
2026-07-10T05:25:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெள்ளம், நில நடுக்கம், பஞ்சம் போன்றவற்றால் இழப்புக்குள்ளான மக்களுக்கு உதவவும் செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சிலுவைச் சங்கம்|359|செஞ்க்கள்}}</noinclude>வெள்ளம், நில நடுக்கம், பஞ்சம் போன்றவற்றால் இழப்புக்குள்ளான மக்களுக்கு உதவவும் செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு (The International Committee of Red Cross) என்பது உயர்மட்டத்திலுள்ள ஒரு நடுநிலை குழுவாகும். கிளைச் சங்கங்களைத் தோற்றுவிக்க உதவுதல், அவற்றின் நடைமுறைப் பணிகள், செஞ்சிலுவைக் கோட்பாடுகள் ஆகியன செயற்படுத்தப்படும் முறையைக் கண்காணித்தல், செனீவா உடன்பாட்டினைக் காத்தல் ஆகியன இதன் முக்கிய பணிகளாகும். இக்குழு செனீவாவைத் தம் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டுக்கழகம் (The League of Red Cross Societies) அமைப்பு 1919-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அந்தந்த நாடுகளின் தேசிய சங்கங்களின் இணைப்பாக இது செயற்படுகின்றது. அமைதிக்காலப் பணிகளில் நட்புறவு நோக்குடன் செயற்பட்டுச் சுகாதார முன்னேற்றம், பிணி நீக்கம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இந்த அமைப்புத் துணை நிற்கிறது.
இவைபோன்று பலதரப்பட்ட துணை அமைப்புகள் பல நாடுகளில் உள்ளன. கனடாவின் கியூபெக்கு மாநிலத்தில் 1914-ஆம் ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அமைப்பாகச் ‘சிறு செஞ்சிலுவைச் சங்கம்’ செயற்பட்டது. குழந்தைகள் நலப் பணிகள் இதன்மூலம் நிறைவு செய்யப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த தேவிட்சன் (Davidson) என்பவரின் தூண்டுதலால் 1919-ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, சப்பான் போன்ற நாடுகளின் இணைப்பு அமைப்பாக ‘ஐக்கிய செஞ்சிலுவைப் படை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பாரீசில் இதன் தலைமையகம் உள்ளது. ஆசுத்திரேலியாவில் 1917-இலும் இங்கிலாத்தில் 1924-இலும் சிறுவர் செஞ்சிலுவைச் சங்க அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் 1920-இல் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 26 மாநிலக் கிளைகளும், 222 மாவட்டக் கிளைகளும உள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவரே இச்சங்கற்தின் தலைலராவார். இங்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும் இயங்கு வருகிறது. இந்திய செஞ்சிலுவைச் சட்டப்படி இது உருவாக்கப்பட்டது. இச்சங்கம் பன்னாட்டுக் குழுவுடன் இணைக்கப்பட்டது.
அமைதிக் காலங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மூன்று விதமான பணிகளை மேற்கொள்ளுகிறது. சாலைகள், போக்குவரத்துப் பகுதிகள், பொது இடங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களின் முதலுதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தாதிப் பணிகள் மருத்துவ நிலையங்களிலும், பொதுச் சுகாதார நிலையங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுநலப் பணிகள் பல இடங்களிலும் செஞ்சிலுவைச் சங்கங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. செஞ்சிலுவைக் குழு உறுப்பினர்கள் அவசரக் காலங்ளில் பணி புரிவதற்கெனத் தனியாகப் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.
உலகம் தழுவியதோர் அமைப்பாக உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தன்னலங் கருதாத் தன்மையுடன் பிறர் நலம் பேணித் தொண்டு மனப்பான்மையுடன் மக்களினம் மகிழ்வோடு வாழப் பலவழிகளில் பணிபுரிகிறது.{{Right|<b>மா.கா.</b>}}
<section end="செஞ்சிலுவைச் சங்கம்"/>
<section begin="செஞ்சுக்கள்"/>
{{dhr}}
<b>செஞ்சுக்கள்</b> ஆந்திரப் பிரதேசத்தின் சமவெளிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினர், தமிழ் நாட்டிலும் இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் செஞ்சுக்களின் (Chenchus) எண்ணிக்கை 1981-ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி 28,297 28,297 ஆகும். இங்கு இவர்கள் அட்டவணைப் படுத்தப்பட்ட பழங்குடிகளாக உள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் இவர்கள் மெகபூபு நகர்கர் நூல், குண்டூர் ஆகிய மாவட்டங்களில் நீண்டுள்ள நல்ல மலைப் பகுதிகளில் மிகுதியாக வாழ்கின்றனர்.
‘செஞ்சு’ என்னும் சொல் மரத்தடியில் வாழ்பவன் என்பதைக் குறிக்கும். செஞ்சுக்கள் தம்மை இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக்கொள்வர். சிரீசைலம் கோயிலிலுள்ள மல்லிகார்ச்சுன கடவுளோடு தங்கள் இனத்தவரைத் தொடர்புபடுத்திச் செஞ்சுக்கள் பெருமைப்படுத்திக் கொள்வர். இவர்கள் இனத்தவரின் தோற்றம் பற்றிப் பல புராணக்கதைகள் வழக்கிலுள்ளன. சிரீசைலப் பகுதியை ஆண்ட சந்திரகுப்த அரசரின் கால்நடைகளை வளர்த்தவர்கள் இவர்கள் என்பது அவ்வழக்குகளுள் ஒன்று. மல்லிகார்ச்சுன கடவுளைத் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கும் இவர்களிடையே சிறப்புப்பெற்றது. இவ்வழக்கின்படி, இவர்களின் மந்தையில் ஒரு கருப்புப்பசு காட்டுப்பகுதிகளில் அடிக்கடி மறைந்துவிடுவதும் வீட்டிற்கு வந்தபிறகு பால் கொடுக்காததுமாக இருந்தது இதனைக் காணச் செஞ்சு இளைஞன் முற்பட்டபோது, மல்லிக்கார்ச்சுன கடவுள் இந்தப் பசுவைச்<noinclude></noinclude>
m9dp0o0mi1kwpjf5f3wtt0iu26p9j1t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/388
250
648650
1952540
2026-07-10T05:37:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 154 |cHeight = 217 |oTop = 37 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|செஞ்சு ஆண்}} காட்டில் பால் கறந்துவிடுவது தெரிந்துகொண்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சுக்கள்|360|செஞ்சுக்கள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 388
|bSize = 375
|cWidth = 154
|cHeight = 217
|oTop = 37
|oLeft = 18
|Location = center
|Description =
}}
{{center|செஞ்சு ஆண்}}
காட்டில் பால் கறந்துவிடுவது தெரிந்துகொண்டான் பலமுறை அவரைப் (கடவுள்) பிடிக்க முயன்று தோல்வியுற்றான். செஞ்சுப் பெண் ஒருத்தி மல்லிகார்ச்சுன கடவுளைப் பிடிப்பதாகச் சபதம் செய்து இறுதியில் பிடித்தும் விட்டாள். கடவுள் அவள்மீது காதல் கொண்டு அவளை இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டார். இவர்களுக்குப் பிறந்து வழிவழி வருபவர்களே செஞ்சுக்கள் என்பர். இவர்களுக்குத் திருமணம் நடந்த அந்த இடமே இப்போதைய சிறப்புமிக்க கிரீசைலம் கோயிலாகும். இதனாலேயே செஞ்சுக்களுள் சிலரை அக்கோயிலின் பூசாரிகளாகவும் உதவியாளர்களாகவும் பணியமர்த்தியுள்ளனர்.
உடல்சார் மானிடவியலாரின் கூற்றுப்படி செஞ்சுக்கள் மெலிந்த உடலையும் நடுத்தர உயரத்தையும் கொண்டவராவர். தோலின் நிறம் கரும்பழுப்பு முதல் செம்பு நிறம்வரை உள்ளது. தலைமயிர் அலை அலையானது முதல் சுருண்ட அமைப்பு வரையிலானது. இவர்கள் உயர்ந்த முன்நெற்றியையும், தாழ்ந்த முகத்தையும், தாழ்வான மூக்கடியையும், பழுப்பு முதல் கருமை நிறம் வரையிலான கண்ணையும் கொண்டவர்கள். மூக்குத் துளைகளும் விழிப்பள்ளங்களும் பெரியன.
செஞ்சுக்களின் ஆடைகள் எளியவை. ஆண்கள் பெரும்பாலாகக் கோவணமும் தலைப்பாகையும் கட்டிக் கொண்டுள்ளனர். சிலர் துண்டு போட்டுக் கொண்டும், சிலர் வேட்டி சட்டை போட்டுக்கொண்டும் உள்ளனர். பெண்கள் சமவெளி மக்களைப் போன்றே புடவையையும் மேற்சட்டையையும் அணிகின்றனர். வயதான பெண்டிர் மேற்சட்டை போடுவதில்லை பெண்கள் தலைமயிரைப் பின்னால் வாரிக் கட்டிக்கொள்வார். ஆண்களுள் சிலரும் நீண்ட மயிரைச் கட்டிச் சுருட்டிக் கொள்வர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 388
|bSize = 375
|cWidth = 156
|cHeight = 248
|oTop = 143
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|செஞ்சு ஆண் வில் செய்தல்}}
இவர்களுள் 96 விழுக்காட்டினர் பேசுவது தெலுங்காகும். பிறர் ஓரிய மொழியையும் தமிழையும் பேசுகின்றனர். இவர்களிடையே கல்வியறிவு மிகக் குறைவு. சவ்வியறிவுடையவர்கள் 1971-ஆம் ஆண்டு குடித்தொகையின்படி 6.5 விழுக்காட்டினர் மட்டுமே.<noinclude></noinclude>
lh1l6uxe00m251mtz2j4e0yl6gtzwjs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/389
250
648651
1952542
2026-07-10T05:46:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செஞ்சுக்கனின் வீடுகள் நீண்டுருண்டதும் கூம்பு வடிவமானதுமாகும். அம்பும் வில்லுங்கொண்டு பல்வேறு விலங்கினங்களை இவர்கள் வேட்டையாடுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சுக்கள்|361|செஞ்சுக்கள்}}</noinclude>செஞ்சுக்கனின் வீடுகள் நீண்டுருண்டதும் கூம்பு வடிவமானதுமாகும். அம்பும் வில்லுங்கொண்டு பல்வேறு விலங்கினங்களை இவர்கள் வேட்டையாடுகின்றனர். தோண்டு கழி கொண்டு கிழங்கு வகைகளைக் காடுகளிலிருந்து தோண்டியெடுத்து உண்கின்றனர். தேன் சேகரித்தல் இவர்களின் தொழிலில் முதன்மையான இடம் பெறுகின்றது. கயிறு, தேன் சேகரிக்கும் கூடை, கத்தி போன்ற கருவிகள் முதலானவற்றைக் கொண்டு தேன் சேகரிக்கின்றனர். இவர்களின் உணவில் அரிசி, கேழ்வரகு, தினை வகைகள் முதலானவை முதலிடம் பெறுகின்றன. காட்டுப் பொருள்களைச் சேகரித்து வெளியாரிடம் கொடுத்து இவற்றைப் பெறுகின்றனர். சிலவேளையில் காட்டும் பொருள்களை விற்பதின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டும் வாங்குவர். இவர்கள் மதுவை விரும்பிக் குடிக்கின்றனர். ஒருவகைப் பூவினைக் கொண்டு இவர்களாகவே காய்ச்சி வடிக்கும் இம்மதுவை விழாக் காலங்களிலும் பல்வேறு சடங்குகளின் போதும் மிகுதியாகக் குடித்துக் களிக்கின்றனர்.
செஞ்சுக்கள் நான்கு பெரிய அகமணக் குழுக்களாகக் (Endogamous Groups) காணப்படுகின்றனர். அவை கோயா செஞ்சு (Koya Chenchu), கொண்டா செஞ்சு (Konda Chenchu), செஞ்சு தாசரி (Chenchu Dasari), ஊரு செஞ்சு (Uru Chenchu) ஆகியன. இவர்கள் குல (Clan) அடிப்படையில் பால்மூரி (Balmuri), புமானி (Bhumani), குல்லா (Gulla), நிம்மல் (Nimmal), மண்டுலா (Mandla), புலிசெரலா (Pulicherain), தாசரி (Dasari), கட்ராசு (Katraju), மாரிபள்ளி (Maripalli) ஆகிய ஒன்பது குலங்களாகப் பாகுபடுவர். இவர்கள் தந்தைவழிச் சமூகத்தினராவர்.
இவர்களிடையே பொதுவாக ஒருதுணை மண (Monogamy) முறையில் திருமணம் நடைபெறுகிறது. இதில் இருவகையுண்டு, பெற்றோர்கள் நடத்திவைக்கும் திருமணம் (பெல்லி) ஒருவகை. பெற்றோர்களின் இசைவைப் பெற இயலாத காதலர்கள் வேறு இடம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 389
|bSize = 375
|cWidth = 330
|cHeight = 230
|oTop = 197
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|காட்டுப் பொருள்களைச் சேகரித்தல்}}<noinclude></noinclude>
2sozw5ui0op5malw99u7dqaqjvak4kp
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/130
250
648652
1952543
2026-07-10T05:47:02Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" /></noinclude>
செய்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான சம்பந்தம் இதுபற்றி விளக்கம் கேட்டு, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி பகுதியில் நக்சலைட்டுகள் ரகசியமாக பயிற்சி நடத்துகிறார்கள் என்று கூறி, காவல்துறை நடத்திய தேடுதலின் போது, சிவா என்ற இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏற்கனவே - சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் காவல் துறையினரால் ரவீந்திரன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு சாட்சியாக இருந்தவர் தற்போது சுடப்பட்டு இறந்த 'சிவா' தான் என்று செய்திகள் வருகின்றன.
அதேபோல் சென்னையை அடுத்த நீலாங்கரையில் - "3 கொள்ளையர்கள்'' சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து, போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் பற்றி, மனித உரிமை அமைப்புகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. மனித உரிமை அமைப்புகள் - இதுபற்றி நேரடி விசாரணை நடத்தி உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்!
எந்த வன்முறைகளுக்கும் இடமில்லாத - தமிழ்நாட்டை, தமிழக அரசே, தீவிரவாதிகளின் மாநிலம் போல் சித்தரிக்க முயலுகிறது; காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தங்கு தடையற்ற அதிகாரங்களால் தமிழ்நாட்டில் - மக்களாட்சி முடிந்து போய் - காவல்துறை ஆட்சி வந்துவிட்டதாகவே தெரிகிறது!
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 05.12.2002</b>}}<noinclude>{{nop}}{{rv|128 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''128'''}}}}|{{left|{{larger|'''128'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0ueou7svj3rvqeislia6reaba0j1e6x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/390
250
648653
1952544
2026-07-10T05:58:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்று நடத்திக்கொள்ளுந் திருமணம் (ராசி-Raji) மற்றொரு வகை. முதியோர்களைக் கொண்ட ஆட்சிக் குழுவே சமுதாயத்தில் எழும் சிக்கல்களைத் தீர்த்து வை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செஞ்சேரிமலை|362|செட்டிநாடு}}</noinclude>சென்று நடத்திக்கொள்ளுந் திருமணம் (ராசி-Raji) மற்றொரு வகை.
முதியோர்களைக் கொண்ட ஆட்சிக் குழுவே சமுதாயத்தில் எழும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது. செஞ்சுக்கள் கொண்டுள்ள மரபு சார்ந்த சட்டங்கள் அனைவராலும் மதிக்கப்படுவதால் நல்விணக்கமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன.
செஞ்சுக்களின் நலனை மேம்படுத்த ஆந்திர அரசும் தமிழக அரசும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து உதவி வருகின்றன.{{Right|<b>ஜே.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
Census of India, Ethnographic Notes on Scheduled Tribes, Vol. IX, Part V-B(I), Madras, 1961.<br>
<b>Haimendorf, V.C.</b> The Chenchus, Macmillan Company, London, 1943.
<section end="செஞ்சுக்கள்"/>
<section begin="செஞ்சேரிமலை"/>
{{dhr}}
<b>செஞ்சேரிமலை</b> கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள முருகன் தலம். இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். செஞ்சேரி மலை முன்பு தென் சேரிகிரி எனக் கூறப்பட்டது. இங்குள்ள குன்றின் மீது முருகன் கோயில் உள்ளது. இக்குன்றின் உயரம் 150 அடி. இக்குன்றுக்கு மேற்கில் பெருமாள் மலை என்னும் வைணவ மலைக்கோயில் ஒன்று உள்ளது. இவ்விரு குன்றுகளுக்கும் இடையில் பரம்பிக்குளம் திட்டக் கால்வாய் உள்ளது. இங்குள்ள முருகன் மந்திராசலப் பெருமான் எனக் கூறப்படுகிறார். முருகன் எழுந்தருளியிருக்கும் குன்றில் தீர்த்தசுனை, தர்ப்பை சுனை என்னும் இரு சுனைகள் உள்ளன. தீர்த்த சுனைக்கு அருகில் இடும்பன்கோயில் ஒன்று உள்ளது. கோயிலுக்குத் தெற்கில் சாய்வுப்பாறை ஒன்று உள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="செஞ்சேரிமலை"/>
<section begin="செட்டிநாடு"/>
{{dhr}}
<b>செட்டிநாடு</b>: இன்று நாட்டுக்கோட்டை, நகரத்தார்கள் வாழும் எழுபத்து நான்கு ஊர்களும் மற்றையோர் வாழும் ஊர்களும் அடங்கிய பகுதியைச் ‘செட்டிநாடு’ என்பர். இதன் நிலப்பரப்பு 1700 கிலோ மீட்டராகும். செட்டி நாட்டின் ஊர்கள் பசும்பொன் முத்து ராமலிங்கம் மாவட்டத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அடங்கியுள்ளன. செட்டிநாட்டுப் பகுதினர்களைக் கொண்டது என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் இப்பொழுது 74 ஊர்கள் உள்ளனவென்று கூறப்படுகிறது. இப்பகுதியில் செட்டியார்களோடு மறவர், கன்னர், அகம்படியர் ஆகியோரும் பிறரும் இப்பகுதியில் வாழ்கின்றனர். இங்கு வாழும் முக்குலத்தோர் நாட்டார் என்னும் பெயரால் குறிக்கப்படுவர், செட்டிநாட்டில் செட்டியார்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் கல்வி, செல்வம், கோயில் திருப்பணி ஆகியவற்றால் சிறந்து, பிறர் அறியுமாறு விளங்கினர். எனவே, இவர்களை வைத்து இப்பகுதியைச் செட்டி டு என்று மக்கள் சுட்டினர். இப்பெயர் சிறப்பால் ஏற்பட்ட பெயர் எனக் கருதலாம். சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வந்தமையால், இவர்கள் நகரத்தார் என்னும் பெயரால் குறிப்பிடப்பெற்றனர் என்று கூறுகின்றனர்.
செட்டி நாடு எனத் தனி நாடோ செட்டிநாட்டுக்கு எனத் தனி அரசோ இருந்ததில்லை. ஆயினும் செட்டிநாடு என்ற பெயர் வழங்கி வருகிறது. செட்டிநாட்டுப் பகுதியில் கி.பி.1800-இல் வாழ்ந்தபாடுவார் முத்தப்பச் செட்டியார் தம்பாடலில் ‘செட்டிநாடு’ என்னும் பெயர் வழக்கைச் சுட்டியுள்ளார். இவர், செட்டிநாட்டின் வடக்கு எல்லை வெள்ளாறு, மேற்கு எல்லை பிரான்மலை; தெற்கெல்லை வையையாறு; கிழக்கு எல்லை வங்கக்கடல் என்று பாடியிருக்கிறார்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இளையாற்றங் குடி முதலிய ஏழு திருக்கோயில்களைச் சார்ந்தவர்களாக விளங்குகின்றனர். இதனை ‘இருநிதியம் சேருகின்ற எழுநகரத்தாரி’ என்று பாடுவார் முத்தப்பச் செட்டியார் சிறப்பித்துள்ளார்.
செட்டி நாட்டில் பெரிய நகரங்கள் காரைக்குடி, தேவ கோட்டை, பொன்னமராபதி முதலியனவாம். இங்குத் திருப்புத்தூர், திருக்கொடுங்குன்றம், திருவாடானை ஆகிய தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் உள்ளன. திருமெய்யமும் திருக்கோட்டியூரூம் ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த திவ்விய தேசங்கள் ஆகும். பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் குகைக்கோயில்கள்; அவற்றில் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. குன்றக்குடிக் குன்றில் முருகன் கோயில் உள்ளது. இவை அருணகிரிநாதர் பாடிய தலங்கள். நாட்டரசன் கோட்டையில் கம்பன் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.
சேதுபுராண ஆசிரியராகிய நிரம்பவழகியதேசிகரின் துழாவூர் மடம், திருவண்ணாமலை ஆதீனமுள்ள குன்றக்குடிமடம் ஆகிய இரண்டும் இப்பகுதியில் சிறப்பானவை. வேதாந்த இலக்கியங்களை இயற்றி வெளியிட்ட கோயிலூர் மடம் குறிக்கத்தக்கது. இவை<noinclude></noinclude>
sbpookdu10igri4vte02nx4mvlw3e3y
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/271
250
648654
1952545
2026-07-10T06:00:43Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1952545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
குறைந்தபட்ச செயல் திட்டம்!
15 கட்சிகளை உள்ளடக்கிய, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப் பட்டுள்ளது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் மோசமான செயல் திட்டங்களுக்கு மாறாக, பல முற்போக்கான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுதல்; தமிழைச் செம் மொழியாக்குதல்; சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்துதல்; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காதிருத்தல்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி காவிமயமாக்கப் பட்டதை மாற்றி அமைத்தல்: மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றுதல், நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் - கல்விக்கு ஒதுக்குதல்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு சமரச முயற்சிகளை ஆதரித்தல்; கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவுக் கொள்கையை கைவிடல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அனைத்து இட ஒதுக்கீடுகளும், நிரப்பப்படும் என்றும், இதற்கு காலவரையறை நிர்ணயித்து, சட்டம் இயற்றப்படும் என்றும், செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கேற்ப இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்
விடுதலை இராசேந்திரன் 269<noinclude>{{nop}}{{rv|269 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''269'''}}}}|{{left|{{larger|'''269'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p8fqd5rmz24mhpflnbalrjxsxnkgykj
1952546
1952545
2026-07-10T06:01:14Z
Subisena
16382
/* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */
1952546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Subisena" /></noinclude>
குறைந்தபட்ச செயல் திட்டம்!
15 கட்சிகளை உள்ளடக்கிய, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப் பட்டுள்ளது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் மோசமான செயல் திட்டங்களுக்கு மாறாக, பல முற்போக்கான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுதல்; தமிழைச் செம் மொழியாக்குதல்; சேது சமுத்திரத் திட்டத்தை விரைவு படுத்துதல்; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காதிருத்தல்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி காவிமயமாக்கப் பட்டதை மாற்றி அமைத்தல்: மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றுதல், நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம் - கல்விக்கு ஒதுக்குதல்; இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு சமரச முயற்சிகளை ஆதரித்தல்; கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவுக் கொள்கையை கைவிடல் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அனைத்து இட ஒதுக்கீடுகளும், நிரப்பப்படும் என்றும், இதற்கு காலவரையறை நிர்ணயித்து, சட்டம் இயற்றப்படும் என்றும், செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கேற்ப இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்
விடுதலை இராசேந்திரன் 269<noinclude>{{nop}}{{rv|269 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''269'''}}}}|{{left|{{larger|'''269'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9urmwgh29kaqpu8a5t098ij6u0yqfpu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/391
250
648655
1952547
2026-07-10T06:08:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழை வளர்ப்பன. கி.பி. 1909-இல் தோன்றிய மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, செட்டிநாட்டில் தமிழ் வளர்க்கும் தகையது. செட்டிநாட்டுப் புலவர்களுள் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செட்டிநாடு|363|செண்பகராமன்}}</noinclude>தமிழை வளர்ப்பன. கி.பி. 1909-இல் தோன்றிய மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, செட்டிநாட்டில் தமிழ் வளர்க்கும் தகையது. செட்டிநாட்டுப் புலவர்களுள் முற்காலத்தில் கணியன் பூங்குன்றனார், பிற்காலத்தில் பாடுவார் மூத்தப்பச் செட்டியார், முத்துக்குட்டிப் புலவர், வன்தொண்டர், சொக்கலிங்க ஐயா ஆகியோர் குறிக்கத்தக்கோர். பார் வாழ்நத பறம்பு மலை இன்று பிரான் மலையாய் உள்ளது. வள்ளல் அழகப்ப செட்டியார், இராசாசர் அண்ணாமலை செட்டியார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற கல்விக் கொடைஞர்கள் பிறப்பிடம் செட்டிநாடே. ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் இந்நாட்டார் இந்திய நாடெங்கிலும் அமைத்திருக்கின்றனர், இவர்கள் பர்மா, தென் வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளொடு வணிகத் தொடர்புடையவர்கள்.
செட்டி நாட்டில், அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்து அங்குக் கல்விப்பணியாற்றுகின்றது, இந்திய விடுதலைப்போரில் சத்திய மூர்த்தி, சா. கணேசன், சின்ன அண்ணாமலை, சொ. முருகப்பா போன்றவர்கள் பங்குபெற்றனர். சா. கணேசன், காரைக் குடியில் அமைத்த கம்பன் கழகம், தமிழ்நாட்டுக் கம்பன் கழகங்களின் தாய்க்கழகம். கம்பன் மணிமண்டபத்தையொட்டி அமைந்த தமிழ்த்தாய் கோயில், சா. கணேசன் முயற்சியில் உருவானது. இன்னும் திருப்பணி முற்றுப்பெறவில்லை.
உ.வே. சாமிநாதையருக்குப் பல தொன்மை ஏட்டுக் சுவடிகளை வழங்கிய மிதிலைப்பட்டி, செட்டிநாட்டிலுள்ளது. நாட்டரசன் கோட்டையில் கம்பர் சமாதியும் அறிமளத்தில் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் சமாதியும் இருக்கின்றன. செட்டிநாட்டில், காட்டுபாவா பள்ளி வாசலில், பகுருதீன் ஆண்டவர் தர்கா உளது.
<b>செட்டிநாடு 2</b>: இது செட்டி நாடு எனவழங்கும் பகுதியிலுள்ள ஓர். இந்த ஊரை இராசாசர் அண்ணாமலை செட்டியார் 1929-இல் அமைத்தார். கானாடு காத்தான் மு.அ. அண்ணாமலை செட்டியாருக்கு ஆங்கிலப் பேரரசு ‘அரசர்’ என்ற பட்டம் அளித்தது. அச்சமயம் அண்ணாமலை அரசர், தமக்காக ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற கருத்தில் இவ்வூரை அமைத்தார். மன்னராயின் நாடொன்று இருக்கவேண்டும் என்ற நோக்கில், ஓர் ஊர் ஒரு நாடாகப் பெயர் எய்திற்று. ஊர் அமைந்த ஆண்டில் தான் இவ்வூரில் புகைவண்டி நிலையம் கட்டப்பெற்றது. செட்டி நாட்டரசர் தம் செலவில் அந்த நிலையத்தை மிக்க வசதியுடையதாகச் செய்துள்ளார் அண்ணாமலை அரசர் திருப்பணி செய்த சிவன் கோயில் இங்கு உள்ளது. இங்கு அமைக்சுப்பட்ட விமான சிறிய ஆகாய நிலையம் சில ஆண்டுகள் பயன்பட்டது.{{Right|<b>தெ.சொ</b>}}
<section end="செட்டிநாடு"/>
<section begin="செண்பகராமன்"/>
{{nop}}
<b>செண்பகராமன்</b>: இவர் நாஞ்சில் நாட்டில் திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் சந்தையில் பிறந்தவர். திருவனந்தபுரம் அரசர் கலாசாலையில் 1906- ஆம் ஆண்டில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போதே இவர் உள்ளத்தில் விடுதலை வேட்கை தோன்றியது. அவ்வாண்டில்தான் வ.உ. சிதம்பரனார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகச் சுதேசி கப்பலை ஓட்டினார். செண்பகராமன் பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டிச் சங்கம் அமைத்து அவர்களிடையே இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற பெரு விருப்பத்தைத் தமது சொற்பொழிவுகளின் மூலம் ஏற்படுத்தினார். இவரது சொற்பொழிவுகள் இளைஞர்களின் உள்ளத்தை ஈர்த்து நாட்டுப் பற்றை வளர்த்தன. இரகசியக் காவலர்கள் இவரைப் பின் தொடர்ந்தனர். ஆதலின், 1908 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று செருமானியக் கப்பலில் ஐரோப்பா சென்றார்.
செண்பகராமன் இத்தாலி சென்று இலக்கியமும் அறிவியலும் பயின்றார். பிறகு சுவிட்சர்லாந்து சென்று கல்வி பயின்றார்; பட்டங்கள் பெற்றார். பிறகு பெர்லின் சென்றார். பெர்லின் பல்கலைக் பொருளாதாரம், கழகத்தில் சேர்த்து அசயெல், பொறியியல் ஆகிய துறைகளில் படித்து டாக்டர், பட்டம் பெற்றார். ‘இந்தியாவுக்காக’ (Pro-India) என்ற ஆங்கில இதழையும் நடத்தினார்.
வீரர் செண்பகராமனின் புகழ் எங்கும் பரவியது. பெர்லினில் ஒடுக்கப்பட்ட மக்களின் மன்றம் ஒன்றை அமைத்தார். இவர் பல்விரண்டு மொழிகள் பயின்றவர். தமது இருபத்து மூன்றாம் வயதில் ஆங்கிலேயரைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர். பர்க்கதுல்லா அமைச்சரவையில் செண்பகராமன் உறுப்பினராக இருந்தார். அந்த அமைச்சரவையில் இருந்த அனைவரும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று விடுதலை இயக்கம் நடத்தியவர்கள். பெர்லின் நகரில் செண்பகராமன் இல்லத்திற்கு மோதிலால் நேரு, சுபாசு சந்திரபோசு, சவகர்லால் நேரு, இலால்சந்த்து, கீரா சந்த்து ஆகியோர் சென்றிருக்கிறார்கள். வித்தல்பாய்படேல் பெர்லின் சென்ற போது 1931-ஆம் ஆண்டு, செண்பகராமன் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்.
{{nop}}<noinclude></noinclude>
delykg6w517e5fr174b0kl71oul3zd8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/392
250
648656
1952548
2026-07-10T06:23:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் இந்திய நாட்டின் வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். இந்திய வணிக மன்றக் கூட்டமைப்பின் சார்பாளராக 1930-இல் இவர் இருந்தார். இவர் 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செத்தவரை|364|செதுக்குச் சித்திரம்}}</noinclude>இவர் இந்திய நாட்டின் வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். இந்திய வணிக மன்றக் கூட்டமைப்பின் சார்பாளராக 1930-இல் இவர் இருந்தார். இவர் 1934-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி அமரரானார். பம்பாயில் 1948-ஆம் ஆண்டு இவரது திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. இவர் புரட்சி வீரர்களுள் சிறந்தவர்; விடுதலை ஒளியைப்பிற நாடுகளில் ஏற்றியவர்; ‘செய்கிந்த்’ என்ற முழக்கத்தை முதன் முதலில் உருவாக்கி எழுப்பியவர் இவரேயாவர்.{{Right|<b>கே.சே.</b>}}
<section end="செண்பகராமன்"/>
<section begin="செத்தவரை"/>
{{dhr}}
<b>செத்தவரை</b> தென்னார்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இது வரலாற்றுச் சிறப்புடையது. இவ்வூருக்கு அருகே அய்யனார் மலையில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டபாறை ஓவியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வோவியங்களுள் மாடு, ஆடு, பசு, குதிரை, மான், பாம்பு, மீன், அன்னம், மனிதனின் கைவடிவம், தீ, முத்திரை, வீட்டின் வடிவமைப்புப் போன்றவை இடம் பெற்றுள்ளன. குறியீட்டு வடிவங்களும் விலங்கின வடிவங்களும் மனித வடிவங்களும் இங்கு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
இவ்வோனியங்களை வரைவதற்கு இயற்கையாய்க் கிடைக்கின்ற வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இங்குச் செந்திறம், வெள்ளை நிறம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து ஓவியங்களில் செத்திறம் சிறப்பிடம் பெறுகின்றது.
இல்வோவியங்களில் பசுவின் ஓவியம் சிறப்புடையது. பசுவின் முகம், கழுத்துப் பகுதிகள் ஆகியவை அடர்த்தியான செந்நிறப்பூச்சுடனும் பிற்பகுதி செவ்வண்ணக் கோடுகளுடனும் வரையப்பட்டுள்ளன. மிகத் தொன்மையான மீன் ஓவியங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. மீனின் உடற்பகுதி அனைத்தும் வெள்ளை நிறத்திலும், வெளிப்பகுதி சிவப்பு நிறவரை கோட்டு உருவ அமைப்பிலும் அமைந்துள்ளன. பசு, மீன் ஆகிய இரண்டு வடிவங்களும் இரு வண்ணப்பூச்சு முறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய வடிவங்களை மத்திய இந்தியாவிலுள்ள பாறை ஓவியங்களில் காணமுடிகிறது.
செத்தவரையில் காணப்படும் மற்றொரு சிறப்பு ‘கை’ ஓவியமாகும். செத்தவரை ஓவியங்களில் மான் ஒன்று மிகுந்த அழகுடன் நின்று திரும்பிக் காணும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. செந்நிறத்தில் அமைந்துள்ள இம்மானின் உருவத்திற்கு முன் வேல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த வேல் ஒரு பொருளைத் துளைத்துச் சென்றுள்ளவாறுள்ளது. இதன் அருகே தீயின் சுவாலை போன்ற வடிவமைப்புடன் கூடிய வரைவுகள் உள்ளன.
குறியீடுகள் போன்று சில வடிவங்களும் இங்கு உள்ளன. இங்கு வீட்டின் அமைப்புப் போன்ற ஓவியம் ஒன்றுள்ளது. இதனைப் பள்ளி அல்லது வீடு என்று கருதுகின்றனர். இவ்வகைக் குறியீடு சிந்துவெளி நாகரிகத்திலும், சுமேரிய நாகரிகத்திலும் கிடைத்துள்ளது.{{Right|<b>இரா.பா.</b>}}
<section end="செத்தவரை"/>
<section begin="செதுக்குச் சித்திரம்"/>
{{dhr}}
<b>செதுக்குச் சித்திரம்,</b> உலோகத் தகடு அல்லது மரக்கட்டையில் ஏதேனுமொரு உருவத்தைச் செதுக்குவதாகும். இச்செதுக்கப்பட்ட பொருளானது மையினால் உருவத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செதுக்கப்பட்ட பொருளிலிருந்து எடுக்கப்படும் படியும் செதுக்குச் சித்திரம் (Engraving) என்றே சொல்லப்படுகிறது. உலோகத் தகடுகளிலிருந்து செதுக்கி எடுக்கப்படும் படிகள் செதுக்குச் சித்திரங்கள் என்றும் மரக்கட்டையிலிருந்து செதுக்கி எடுக்கப்படும்படிகள் மரச்செதுக்குச் சித்திரங்கள் என்னும் சொல்லப்படுகின்றன.
<b>சித்திரம் தீட்டும் முறை</b>: பெரும்பாலும் செம்பு (Copper), துத்தநாகம் (Zinc) போன்ற உலோகத் தகடுகளில் செதுக்குச் சித்திரம் தீட்டப்படுகிறது. நாட்டில் உருவத்தைச் செதுக்குவதற்குப் பரின் (Burin) எனச் சொல்லப்படும் கூர்மையான கருவி பயன்படுத்தப்படுகிறது. இது கைப்பிடியுடன் கூடிய குத்தூசி போன்ற அமைப்பினைக் கொண்டிருக்கும்.
ஒரு தகட்டினைச் செதுக்குவதற்கு மிகுதியான திறமை தேவைப்படுகிறது. ஓவியர் ஒரு கையினால் பரினின் முனைக்கு எதிர்ப்புறம் தகட்டிவை நகர்த்த வேண்டும். அதே நேரத்தில் மறு கையினை விரும்பும் உருவத்திற்கு ஏற்ற திசையில் பரினைச் செலுத்த வேண்டும். வெட்டுப் பள்ளங்களின் ஆழம், அகலம் ஆகியவை கோட்டின் தோற்றத்தையும், படத்தின் வரிவடிவத்தையும் வரையறை செய்கின்றன. பின்னர் வெட்டுப் பள்ளங்களிலுள்ள உலோகச் சீவல்களைச் (தூள்) சுரண்டு கருவியின் மூலம் நீக்கிவிட வேண்டும். ஓவியரால் வரிவடிவங்களை மாற்றவோ நீக்கிவிடவோ முடியும்; செதுக்கப்பட்ட உருவம் முழுவதையும்கூட நீக்கிவிட்டுப் புதிய செதுக்குச் சித்திரத்தை அத்தகட்டிலேயே செதுக்க முடியும்.<noinclude></noinclude>
p0q4z688yxarsmp42opxihbmdia3kuv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/393
250
648657
1952549
2026-07-10T06:33:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 393 |bSize = 375 |cWidth = 345 |cHeight = 90 |oTop = 62 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|சித்திரம் திட்டும்முறை}} செதுக்குச் சித்திரத்தை அச்சிடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செதுக்குச் சித்திரம்|365|செதுக்குச் சித்திரம்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 393
|bSize = 375
|cWidth = 345
|cHeight = 90
|oTop = 62
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|சித்திரம் திட்டும்முறை}}
செதுக்குச் சித்திரத்தை அச்சிடுவதற்கும் திறமை வேண்டும். ஒரு தனித் தகட்டிலிருந்து எடுக்கின்ற ஒவ்வொரு படமும் ஓர் அச்சுப் பதிவாகும். (Impression). அச்சுப் பதிப்பதற்கு மை (Ink), காகிதம், உருவ அச்சுப்பொறி ஆகியவை தேவைப்படுகின்றன.
ஓவியர்கள் பொதுவாகக் கையால் செய்யப்பட்ட காடுதத்தையே செதுக்குச் சித்திரங்களை அச்சுப்பதிக்கப் பயன்படுத்துவர், செதுக்குச் சித்திரத் தகட்டின் மீது ஈரமாக்கப்பட்ட காகிதத்தை வைத்து அழுத்த வேண்டும். நன்றாகப் பதிக்கப்பட்ட பின்னரிக் காகிதம் கிழிந்து விடாதவாறு மெதுவாக எடுக்க வேண்டும்.
இந்த அச்சுப் பதிவினை உடனே மை உறிஞ்சும் காகிதத்தில் வைத்து உலரவிட வேண்டும்.
அச்சுப்பதிவு முடிந்த பின்னர்ச் செதுக்குந் நாட்டினைக் கர்ப்பூரத் தைலத்தால் (Turpentine) துடைத்து மையினை நீக்கிப் பாதுகாப்பாகத் தகட்டை வைக்க வேண்டும்.
உலோகத் தகடுகளில் சித்திரத்தைக் குடைவாகச் செதுக்கி, அதைச் சுற்றியுள்ள பகுதியைப் புடைப்பாகச் செய்து செதுக்குச் சித்திரம் தீட்டப்படுகிறது. ஆனால் மரச்செதுக்குச் சித்திரத்தில் சித்திரம் புடைப்பாக இருக்கும்படி செதுக்குவார்கள். அதைச் சுற்றியுள்ள பகுதி குடைவாகச் செதுக்கப்படும். எனவே, உலோகத் தகடுகளில் படிகள் எடுப்பதைவிட மரத்தில் படிகள் எடுப்பது எளிது, மரச்செதுக்குச் சித்திரத்தில் ஒரு தடவை மை பூசினால் பல படிகள் எடுத்துவிடலாம்.
<b>மரச்செதுக்குச் சித்திரம்</b>: பழங்காலத்திலிருந்து மரமே செதுக்குச் சித்திரத்திற்குப் பயன்பட்டு வந்துள்ளது. முதன்முதலாக கி.பி. 500-இல் சீனாவில் இவ்வகைச் சித்திரம் தீட்டப்பட்டது. ஐரோப்பாவில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் காகிதம் உற்பத்தி செய்வதற்கு அறிந்த பின்னரே இத்தகைய செதுக்குச் சித்திரம் தோன்றியது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 393
|bSize = 375
|cWidth = 122
|cHeight = 160
|oTop = 233
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|மரச்செதுக்குச் சித்திரம்}}
<b>வரிச் செதுக்குச் சித்திரம்</b>: இது கோடுகளால் மட்டும் செய்யப்படுவது; பெரும்பாலும் உலோகத் தகடுகளிலேயே செய்யப்படுகிறது. இந்த வரிச் செதுக்குச் சீந்திரத்தில் (Line Engraving) மிகப் புகழ் பெற்றது ஒரு பெண்ணின் சித்திரமாகும். இது<noinclude></noinclude>
imfth4nacil04iv8p7lsoawtyr8btsq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/394
250
648658
1952554
2026-07-10T06:47:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செருமனியில் பெர்லின் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. <b>உலர் முனைச் சித்திரங்கள்</b>: இவை பிற செதுக்குச் சித்திர முறைகளிலிருந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செதுக்குச் சித்திரம்|366|செதுக்குச் சித்திரம்}}</noinclude>செருமனியில் பெர்லின் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.
<b>உலர் முனைச் சித்திரங்கள்</b>: இவை பிற செதுக்குச் சித்திர முறைகளிலிருந்து வேறுபடுகின்றன. பிற செதுக்குச் சித்திரங்களைப் போல இவற்றிற்கும் உலோகத் தகடுகளே பயன்படுகின்றன. ஆனால் ஒவியர்கள் செதுக்குவதற்குப் பரின் என்ற செதுக்குக் கருவிக்குப் பதிலாக வைரம் அல்லது கடினமான எஃகினால் ஆன ஓர் ஊசியைப் பயன்படுத்துகின்றனர். அச்சுப்பதிப்பிற்குப் பிற செதுக்குச் சித்திரத்திற்கான முறைகளே பயன்படுகின்றன. ஆல்பிரசுட்டு தியூரரின் உலர் முனைச் சித்திரங்கள் (Dry Point) மிகப் புகழ்பெற்றவை. இவைதவிர இலைனோ செதுக்குச் சித்திரம் (Lino Cut), நடுவண்ணச் செதுக்குச் சித்திரம் (Mezzotint), அர்ச்சித்திரம் (Etching), மென்தள அரிச்சித்திரம் (Soft Ground Etching), நீர்வண்ணச் செதுக்குச் சித்திரம் (Agna Tint) முதலிய செதுக்குச் சித்திர முறைகளும் வழக்கிலுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 394
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 155
|oTop = 205
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|உலர் முனைச்சித்திரம்}}
செதுக்குச் சித்திரம் மிகப் பழைமையான கலை வெளிப்பாடு. முதன்முதலாகச் செதுக்குச் சித்திரத்தை கி.மு. 5000-இல் எலும்புகளில் செதுக்கியுள்ளனரென அறிஞர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள பழைமையான உலோகச் செதுக்குச் சித்திரம் கி.பி. 1,400 க்கும் பிற்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே மரச் செதுக்குச் சித்திரம் கீழை நாடுகளில் சிறப்புற்று விளங்கியது. சீனாவில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மரச் செதுக்குச் சித்திரம் செய்து படிகள் எடுத்துவந்தனர்.
இந்தியாவிலும் கோட்டுச் செதுக்குச் சித்திரங்கள் பெருமளவில் உள்ளன. ஆனால் பெரும்பாலும் அவை அணிகலன்கள் செய்வதற்கும் மாதிரி காட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. அசோகர் காலத்துத் தூண்களிலும், தாசுமகாலிலும், முகலாயர், இராசபுத்திரர் காலத்து ஆயுதங்களிலும், உண்கலங்களிலும் உள்ளவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
தொடக்க காலத்தில் சீட்டுக் கட்டுகளில் அச்சுப் பதிப்பதில் வடக்கு ஐரோப்பியச் செதுக்குச் சித்திரம் வல்லோர் புகழ்பெற்றிருந்தனர். மேலும் இவர்கள் சமயத் தொடர்பான படங்களும் அணிகலன்களில் சித்திரங்களும் தீட்டினர், அவற்றில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டதைக் காட்டும் மிகப் பழைமையான சித்திரம் ஒன்று பெர்லின் (Berlin) நகரத்தில் உள்ளது. இது கி.பி. 1446-இல் செதுக்கப்பட்டதாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 394
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 195
|oTop = 205
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|ஆல்பிரசட்டு தியூரர் வரைந்த ஓவியம் ‘துக்கம்’}}
செருமனியில் வாழ்ந்த ஆல்பிரசுட்டு தியூரர் (Albrecht Durer), செருமனியைச் சேர்த்த மார்ட்டின் சோன் காசர் (Martin Schongaucer), நெதர்லாந்தைச்<noinclude></noinclude>
qdu2cmw3402lke322clhdnq57i3j5nr
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/119
250
648659
1952557
2026-07-10T06:59:55Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1952557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரி பதில் கூறுவாரா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாடு அரசின் மதமாற்றத்தடைச் சட்டத்தை ஆதரித்து,
காஞ்சி சங்கராச்சாரி வெளிப்படையாக களத்தில் இறங்கி
யிருக்கிறார்; கடற்கரையில் சட்டத்தை ஆதரித்து, அவர்
பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசின்
இந்தச் சட்டத்துக்குப் பின்னணியில் இருப்பது
சங்கராச்சாரிகளும், சங்பரிவாரங்களும்தான் என்பது இப்போது
வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 'இந்துக்கள்’ என்று
அழைக்கப்படுகிற மக்கள் இறக்கும் வரை ‘இந்து'வாகவே வாழ
வேண்டும் என்று வலியுறுத்தும், சங்கராச்சாரிக்கும்,
சங்பரிவாரங்களுக்கும், சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
பார்ப்பனரல்லாதவர்களை ‘சூத்திரர்கள்' என்று கூறி
அவர்கள் ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் ஆக முடியாது
என்று தடுப்பது ஏன்? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
ஆகலாம் என்று, திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு,
சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் ?
பிற்படுத்தப்பட்டோருக்கு - மத்திய அரசு பதவிகளில் இ
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மண்டல் பரிந்துரையை
அமுலாக்கியபோது, அதை சங்கராச்சாரிகளும்,
சங்பரிவாரங்களும் எதிர்த்தது ஏன்? பிற்படுத்தப்பட்டோரும்
இவர்களின் வாதப்படி 'இந்து'க்கள்தானே?
கடற்கரை கூட்டத்துக்கு ‘தலித்' மக்களை அழைக்கும்
சங்கராச்சாரி, அந்த மக்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமைக்<noinclude>{{nop}}{{rv|117 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''117'''}}}}|{{left|{{larger|'''117'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
b3afmkh6y52erpco4wielpnx4f26l9f
1952558
1952557
2026-07-10T07:00:15Z
Balajijagadesh
1137
1952558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரி பதில் கூறுவாரா ?</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாடு அரசின் மதமாற்றத்தடைச் சட்டத்தை ஆதரித்து,
காஞ்சி சங்கராச்சாரி வெளிப்படையாக களத்தில் இறங்கி
யிருக்கிறார்; கடற்கரையில் சட்டத்தை ஆதரித்து, அவர்
பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசின்
இந்தச் சட்டத்துக்குப் பின்னணியில் இருப்பது
சங்கராச்சாரிகளும், சங்பரிவாரங்களும்தான் என்பது இப்போது
வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 'இந்துக்கள்’ என்று
அழைக்கப்படுகிற மக்கள் இறக்கும் வரை ‘இந்து'வாகவே வாழ
வேண்டும் என்று வலியுறுத்தும், சங்கராச்சாரிக்கும்,
சங்பரிவாரங்களுக்கும், சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
பார்ப்பனரல்லாதவர்களை ‘சூத்திரர்கள்' என்று கூறி
அவர்கள் ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் ஆக முடியாது
என்று தடுப்பது ஏன்? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
ஆகலாம் என்று, திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு,
சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் ?
பிற்படுத்தப்பட்டோருக்கு - மத்திய அரசு பதவிகளில் இ
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மண்டல் பரிந்துரையை
அமுலாக்கியபோது, அதை சங்கராச்சாரிகளும்,
சங்பரிவாரங்களும் எதிர்த்தது ஏன்? பிற்படுத்தப்பட்டோரும்
இவர்களின் வாதப்படி 'இந்து'க்கள்தானே?
கடற்கரை கூட்டத்துக்கு ‘தலித்' மக்களை அழைக்கும் சங்கராச்சாரி, அந்த மக்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமைக்<noinclude>{{nop}}{{rv|117 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''117'''}}}}|{{left|{{larger|'''117'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
58afyk950ny36925eq6wfeunglrpdac
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/395
250
648660
1952560
2026-07-10T07:06:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 395 |bSize = 375 |cWidth = 145 |cHeight = 158 |oTop = 35 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|ஆண்ட்ரூ மான்டெக்னா வரைந்த ‘மேரிமாதா-குழந்தை’ ஓவியம்}} சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செந்தமிழ் நாடு|367|செந்தில் நாயக அடிகள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 395
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 158
|oTop = 35
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|ஆண்ட்ரூ மான்டெக்னா வரைந்த ‘மேரிமாதா-குழந்தை’ ஓவியம்}}
சேர்ந்த இலூகாசு வான் லேடன் (Lucas Van Leyden), இத்தாலியைச் சேர்ந்த ஆண்ட்ரூ மான்டெக்னா (Andrea Mantegna), அந்தோணி பொல்லைலோ (Antonio Pollaiuolo) முதலியோர் புகழ் பெற்ற செதுக்குச் சித்திர ஓவியர்கள் ஆவர்.
செதுக்குச் சித்திரத்தில் கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல ஏற்பட்டன. ஆனால், இத்தாலியைச் சேர்ந்த மார்க்சன்டோனியா ரேமண்டி (Marcantonio Raimondi) என்ற ஓவியரைப் பின்பற்றிப் பலர் வணிகத்திற்காகச் செதுக்குச் சித்திரங்களை உருவாக்கத் தொடங்கினர். வில்லியம் கோகார்த்து (William Hogarth) என்பவர் கி.பி. 1700-ஆம் ஆண்டுகளில் சிறந்துவிளங்கிய ஆங்கில நாட்டுச் செதுக்குச் சித்திரக்காரர் ஆவார். இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பிளேக்கு (William Blake) கி.பி. 1800-ஆம் ஆண்டுகளின் ஒரு சிறந்த செதுக்குச் சித்திரக்காரராக விளங்கினார். இதே போன்று பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) செதுக்குச் சித்திரங்கள் 1900-இல் மிகப் புகழ் வாய்ந தலையாக விளங்கின. 20-ஆம் நூற்றாண்டில் சோசப் கெல்ட்டு (Joseph Heckt) முதலியோர் இச்செதுக்குச் சித்திரக் கலைக்குச் சிறந்த சேவை செய்து வருகின்றனர்.{{Right|<b>பூ.த.</b>}}
<section end="செதுக்குச் சித்திரம்"/>
<section begin="செந்தமிழ்நாடு"/>
{{dhr}}
<b>செந்தமிழ்நாடு</b>: சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் பாண்டியராதலின் பண்டிய நாடே செந்தமிழ் நாடு எனச் சிலர் கருதுவர். ஆனால் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரும் பிறரும் செந்தமிழ் நிலம், வையையாற்றின் வடக்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் மருதையாற்றின் தெற்கும் ஆகும் என்பர். இங்ஙனம் குறிப்பிடும் நிலம் சோழநாட்டைக் குறிப்பதாலும், கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டில் புனல்நாடு என்பது சோழநாட்டைக் குறிப்பதாலும் அது பொருந்தாது என்று சிவஞான முனிவர் முதலியோர் உரைப்பர். தமிழ்நாடு என்பது தமிழகம் என வழங்கப்பெற்றுள்ளது. ‘வையக வரைப்பின் தமிழகம் கேட்ப’ (புறம். 168:18), ‘இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறிய’ (சிலம்பு 3:37) என்னும் ஆட்சியைக் காணலாம்.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு ‘நல்லுலகம்’ எனத் தமிழ்நாட்டிற்குப் பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தில் எல்லை கூறியுள்ளார். நெடியோன்குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு (8:1,2) எனச் சிலப்பதிகாரம் எல்லை சுட்டும். நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தந்தவஞ் செய் குமரி எல்லை -வடமாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக்கிடக்குந் தமிழ்நாடு எனப் பாரதியார் தமிழ் நாட்டு எல்லை குறித்துப் பாடியுள்ளார். இப்பொழுது மலையாளம் தனிநாடாவித்து, ங்கடமும் தெலுங்கு நாட்டுக்குரியதாயிற்று. தமிழகம் என்னும் ஆட்சியேயன்றித் தமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்றும் ஆட்சியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது. ‘இமிழ்கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய’ (சிலம்பு 25;105 ‘தென்றமிழ்நாடு ஒருங்கு காண’ (சிலம்பு 23:கட்டுரை 15) என்பன நோக்குக.
செந்தமிழ் சேர்ந்த நிலம் பன்னிரண்டாகும். அவற்றைத் ‘தென்பாண்டி குட்டங் குடங்கத்கா வேண்பூழிபன்றி அருவா அதன் வடக்கு-நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிரு நாட்டெண்’ என்னும் வெண்பாவால் அறியலாம். பாரதியார் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்றும், காவிரி தென் பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி, என மேவிய ஆறு பலவோடத், திருமேனி செழித்த தமிழ்நாடு என்றும், தமிழ்நாடு கல்வியிற் சிறந்தது, கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றபுலவர் தோன்றிப் புகழ்கொண்டது என்றும் பலவாறாகப் புகழ்ந்து செந்தமிழ்நாடு என்னும் தலைப்பில்பாடியுள்ளார்.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="செந்தமிழ்நாடு"/>
<section begin="செந்தில் நாயக அடிகள்"/>
{{dhr}}
<b>செந்தில் நாயக அடிகள்</b>: 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள்<noinclude></noinclude>
nb46d82idnot4rj3s5p3emsmaaa70z7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/396
250
648661
1952564
2026-07-10T07:30:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவர். இவர் திருவாமாத்தூர் என்னும் ஊரில் வண்ணச் சரபம் தண்டபாணி என்பவருக்கும் சுந்தரத்தம்மையார் என்பவருக்கும் கி.பி. 1884-இல் மகனாகத் தோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செந்தூக்கு|368|செப்புக்காலம்}}</noinclude>ஒருவர். இவர் திருவாமாத்தூர் என்னும் ஊரில் வண்ணச் சரபம் தண்டபாணி என்பவருக்கும் சுந்தரத்தம்மையார் என்பவருக்கும் கி.பி. 1884-இல் மகனாகத் தோன்றினார். இவர் தம் தந்தைமிடத்திலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். அதனால் பாடல் இயற்றும் புலமையும் பெற்றார். இவர் தந்தையார் எழுதிய ஏட்டுச் சுவடிகளைப் படித்தறியும் ஆற்றலை இளமையிலே வளர்த்துக்கொண்டார் இவர் தந்தையார் நிறுவிய மடத்தில் தங்கிப் பல நூல்கள் எழுதினார். இவர் கெளமார புராணம், கௌமாரத் திருவந்தாதி, முருகன் கட்டளைக் கலித்துறையந்தாதி, திருப்புகழ்ப் பதிகம், சித்தி விநாயகர்பதிகம், மயிலம் முருகக் கடவுள் நவரத்தினத் திருப்புகழ், ஆமாத்தூர் முருகன் வண்ண மஞ்சரி, இராமாநந்தப் பிரதாபசிந்து, இராமாநந்த சுவாமிகள் வரலாறு, தண்டபாணியடிகள் புராணம், தண்டபாணியடிகள் புராண உரைநடை, அழகியமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் 1942-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="செந்தில் நாயக அடிகள்"/>
<section begin="செந்தூக்கு"/>
{{dhr}}
<b>செந்தூக்கு</b>: தூக்கு என்பது செய்யுள் உறுப்புகளுள் ஒன்று. அது செய்யுள்களை அடிதோறும் துணித்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பத்தினைக் குறிக்கும், துணித்தல், நிறுத்தல், பாடுதல் என்னும் பொருள்களுடைய சொல்லாதலால், தூக்கு என்னும் சொல் செய்யுளடிகளைத் துணித்து, நிறுத்தி, இசைத்தல் ஆகிய ஓசை வேறுபாட்டிற்குப் பெயராக வழங்கப்பட்டது. அவ்வகையில் செந்தூக்கு என்பது அகவலோசை கொண்டு விளங்கும் ஆசிரியப்பாவினைக் குறிக்கும். பதிற்றுப்பத்தின் பாடல் ஒவ்வொன்றின் கீழேயும் கொடுக்கப்பட்டுள்ள துறை முதலிய விவரங்கள் நான்கனுள் தூக்கு ஒன்றாக அமைகிறது. பதிற்றுப்பத்தின் பல பாடல்கள் செந்தூக்கு (ஆசிரியப்பா) வகையிலமைந்துள்ளன. வஞ்சியடி இடையிடையே விரவி வரும் பாடல்கள், ‘செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்’ என்று பெயர் சுட்டப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதையர் தம் பதிற்றுப்பத்து உரைப்பதிப்பில் செந்தூக்கு என்பதற்கு ஆசிரியப்பா என்று குறிப்புரை வரைந்துள்ளார் (பதிற். 11. குறிப்புரை) அகவலோசையால் அமைந்த அடியினைக் கொண்ட ஆசிரியப்பா செந்தூக்கு எனப்பட்டது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="செந்தூக்கு"/>
<section begin="செப்புக்காலம்"/>
{{dhr}}
<b>செப்புக்காலம்</b> உலக வரலாற்றில் பண்டைக் காலத்தில் மனிதர்கள் செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களை மிகுதியாகப் பயன்படுத்திய காலமாகும்.
மனித இனப் பண்பாட்டு வளர்ச்சியில் கற்காலத்தினையடுத்துத் தோன்றிய காலம் உலோகக் காலமாகும். இக்காலத்திய மனிதன் பயன்படுத்தும் வகையில் உலகின் பல பகுதிகளில் கிடைக்கப் பெற்ற மிகப் பழமையான உலோகம் செம்பு ஆகும். சுவிட்சர்லாந்தில் கி.மு. 6000-இல் உரோபன்கேசனில் (Rohenhauzen) உன்ன ஏரிக் குடியிருப்பிலும், கி.மு. 4500-இல் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய (Pre-Historic) மெசபடோமியாவிலும், கி.மு. 4000-இல் எகிப்திய பமேனியன் இடுகாடுகளிலும், வட அமெரிக்கக் குன்றுகளிலும் செம்பு கிடைத்ததற்கான சான்றுகள் உள்ளன.
மனிதன் எப்பொழுது தன் பயன்பாட்டிற்கு உகந்தவாறு செம்பினை மாற்றியமைச்சு முற்பட்டசனோ அப்போதிருந்தே செப்புக்காலம் தொடங்கிற்று எனலாம். கிழக்கு மத்தியதரைப் பகுதி நிலங்களில் செம்பு மிகுதியாகக் கிடைத்ததால் ஏறக்குறைய கி.மு. 4000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏலம் (Elam), மெசபடோமியா (Mesopotamia) எகிப்து ஆகிய பகுதிகளில் செப்புக்காலப் பண்பாடு தோன்றியது. பிறகு அது உலகின் மற்றப் பகுதிகளுக்குப் பரவி மனித பண்பாட்டு வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது இயற்கையாகவே செம்புகலந்த வெண்கலம் (Broaze) என்ற உலோகக் கலவை (Metal Alloy) மிகுதியாகக் கிடைத்து வந்ததால் செயற்கையாக உலோகக்கலவையை உருவாக்க மனிதன் கற்றுக்கொள்ளச் சிறிது காலமாயிற்று. கி.மு.3000-இல் ரெட்டு நாகரிக எச்சங்களிலும், கி.மு. 2800-இல் எகிப்திய நாகரிக காலத்திலும், கி.மு.2000-இல் திராய் (Troy) நகரிலும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ‘வெண்கலக் காலம்’ (Bronze Age) என்ற ஒன்றை அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு வெவ்வேறு கால அளவில் வெவ்வேறு பகுதி மக்களுக்கு இவ்வுலோகக் கலவையின் பயன் புரிந்தது. மேலும் பின்லாந்து (Finland), வடக்கு உருசியா, பாலிநேசியா (Polynesia), மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, வட அமெரிக்கா, ஆசுத்திரேலியா சப்பான் (Japan) ஆகிய பகுதிகள் கற்காலத்தினையடுத்து இரும்புக் காலப் பண்பாட்டிற்குட்பட்ட (Iron age culture) பகுதிகளாக மாறின. இப்பகுதிகளுள், சிலவற்றில் வெண்கலம் பயனில் இருந்தாலும் இரண்டாந்தரச் சிறப்பு வாய்ந்த உலோகமாகவே அது காணப்பட்டது.
இந்தியாவில் ஏறக்குறைய கி.மு.3000 அல்லது 2500 ஆண்டுகளிலேயே செம்பின் பயனை மக்கள் அறிந்திருந்தனர். வட இந்தியப் பகுதிகளில் செம்பின் பயன்பாடு மிகுதி, அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள செம்பாலான ஆயுதங்களும், பிற கருவிகளும் இதற்குச் சான்றுகளாகும். தென்னிந்தியாவில் வட இந்தியாவைப் போன்று செப்புக் காலம் என்ற ஒன்-<noinclude></noinclude>
q6x2y649w67no61t0zzbsi93dlmtb27
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/397
250
648662
1952566
2026-07-10T07:37:10Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 397 |bSize = 375 |cWidth = 287 |cHeight = 395 |oTop = 43 |oLeft = 25 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செப்புக்காலம்|369|செப்புக்காலம்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 397
|bSize = 375
|cWidth = 287
|cHeight = 395
|oTop = 43
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude>
<b>வா.க. 9 - 24</b></noinclude>
pxfpevd25e3w6e9rk3dcix1t6h73jbi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/398
250
648663
1952568
2026-07-10T07:49:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றில்லை, இந்தியச் செப்புக்காலப் பண்பாட்டுக் கூறுகளில் வெண்கலத்தின் பயன்பாடும் உண்டு செம்பைக் காட்டிலும் உறுதியான வெண்கலம் பலவகையான ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செப்புக்காலம்|370|செப்புக்காலம்}}</noinclude>றில்லை, இந்தியச் செப்புக்காலப் பண்பாட்டுக் கூறுகளில் வெண்கலத்தின் பயன்பாடும் உண்டு செம்பைக் காட்டிலும் உறுதியான வெண்கலம் பலவகையான ஆயுதங்களைத் தயாரிப்பதற்குப் பயனுள்ள தாயிற்று. இருப்பினும், இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஒரு ‘வெண்கலக்காலம்’ இல்லை எனக் கூறலாம். செம்பின் பயன்பாடு மிகுதியாகச் சிந்து சமவெளியில் உருவாகிய ‘அரப்பா’ (Harappa) அல்லது ‘சிந்துவெளி’ நாகரிகத்தில் காணப்பட்டது.
இந்தியாவில் சிந்து சமவெளிப் பண்பாட்டினைத் தொடர்ந்து தோன்றிய செப்புக்காலப் பண்பாடு கல் செப்புக்காலப் (Chalcolithic) பண்பாடு எனப்படும். இப்பண்பாட்டு மையங்களில் (Chalcolithic Sites) மட்கலங்களுடன் (Potteries) செம்பினாலான பொருள்களும் கிடைத்துள்ளன. செம்பின் பயன்பாடு இப்பண்பாட்டின் முக்கிய கூறாகும். இப்பண்பாட்டுக் காலத்தில் (கி.மு.1750-1000) இந்து நாகரிகக் (Indus Civilization) காலத்து நகர மரபுகள் மறைந்து, கிராமப்புறப் பொருளாதாரச் சூழ்நிலை காணப்பட்டது. இக்காலத்தில் செம்பின் பயனுடன் கற்கருவிகளும் பயன்படுத்தப்பட்டன என்பதால் இக்காலத்தைக் கல்-செப்புக் காலம் என்பர். ஒரேநிலையான உணவுப் பொருளாதாரமும் (Food Economy), தொழில் முறையும் (Technology) இப்பண்பாட்டுக் காலத்தில், காணப்பெறினும், வெவ்வேறு பகுதிகளில் வட்டாரக் கூறுகளையும், சூழ்நிலைக்கேற்ப மட்கல மரபுகளையும் (Ceramic Traditions) இப்பண்பாடு கொண்டிருந்தது. இந்தியாவின் கல்-செப்புக் காலப்பண்பாட்டினை ஆறு வட்டார வகைகளாகப் (Regional Groups) பிரித்துள்ளனர். அவை 1) அகார்-பானாசுப் பண்பாடு (Ahar Banas Culture), 2) மத்திய பிரதேசக்கல் செப்புக்காலப் பண்பாடு, 3) வட-தக்காணக்கல்-செப்புக் காலப் பண்பாடு. 4) தக்காணத்துப் புதிய கற்காலக் கல்செப்புக்காலப் பண்பாடு, 5) கங்கைச் சமவெளிக் கல்செப்புக்கால பண்பாடு, 6) கிழக்கிந்தியக் கல் செப்புக்காலப் பண்பாடு எனப்படும்.
இந்தியாவில்-செப்புக்காலப் பண்பாடு கொண்டு விளங்கிய முக்கிய ஊர்கள் பல அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பானாசுப் பண்பாட்டு மையங்களான அகார், பகோர் (Bagor), கிலுண்டு (Gilund) ஆகியவையும் மத்தியபிரதேசப் பண்பாட்டு மையங்களான, கயாதா (Kayatha), மகேசுவர் (Maheswar), நவத்தாலி (Navadatali), நாக்தா (Nagda), அவரா (Avara) மனோட்டி (Manoti), ஈரான் (Eran) ஆகியவையும், வடக்குத்தக்காணப் பண்பாட்டு மையங்களான பிரகாசு (Prakash), பகல் (Bahal), சந்தோலி (Chandoli), சோர்வே (Jorwe), நெவாசா (Nevasa), இனாம்கான் (Iramagaon), நாடுக்கு (Nasik) ஆகியவையும், தக்காணப் பண்பாட்டு மையங்களான பிக்லிகால் (Piklihal), பிரமகிரி (Bahmagiri), மாசுகி (Maski) ஆகியவையும், கங்கைச் சமவெளிப் பண்பாட்டு மையங்களான பகத்ராபாது (Bahadrabad), அம்பகேரி (Ambakheri), அத்தினாப் பூர் (Hastinapur), அத்தன்சிக்கேரா (Atanjikhera) ஆகியயையும், சௌராட்டிராவில் உலோதல் (Lothal), அரல்பூர் (Rangpar), உரோசுடி (Rojdi) ஆகியவையும், கிழக்கித்தியப் பண்பாட்டு மையங்களான சிராந்து (Chirand), பந்து ராசர் தீபி ஆகியவையும் ஆம்.
மேற்கூறிய மையங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் கல் செப்புக்கால இந்தியாவின் வரலாற்றினை நன்குணர்த்துகின்றன. அகழாய்வுகளில் அறியப்பெற்றுள்ள அக்காலத்துப் பழம்பொருள்களும், சிறப்புக் கூறுகளும்-செப்புக்கருவிகள், செப்புப் பொருள்கள், மட்சுல மரபுகளான சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Grey Ware), கறுப்பு வண்ணம் பூசிய சிவப்பு மட்கலன்கள் (Black on Red Ware), கறுப்பும் சிவப்பு முடைய மட்கலன்கள் (Black and Red Ware) போன்றவையும், மட்கலன்களில் கீறல்குறிகள் (Graffiti Marks). பல்வகைத் தானியங்களின் பயன்பாடுகள் உழுதொழில்-கால்நடை அடிப்படையிலான கலையான வாழ்க்கைமுறை போன்றவையும் கல் செப்புகால இந்தியாவினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்தியாவில் கல் செப்புக்காலப் பண்பாட்டின் தோற்றம் பற்றியும் அதனைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் சுருத்து வேறுபாடுகள் தொல்லியல் வல்லுநர்களிடையே உண்டு. அக்காலத்து மட்பாண்ட அமைப்புகள், தன்மைகள், அலகுக் கருவிகள் (Blades), செப்புப் பொருள்கள், மணிகள், தானியங்கள் ஆகியவற்றினை ஆய்த்து, இப்பண்பாட்டின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் மேற்கு ஆசியாவின் தாக்கத்தைக் காணலாம் எனச் சிலர் கருதுகின்றனர். மேற்கூறிய பழம்பொருள்களின் தோற்றத்திலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் வெளி உலகின் தாக்கத்தைக் காணமுடியாது; தாமாகவே உள்நாட்டுக் கூறுகளுடன் அவ்வப்பொழுது மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி பெற்றது கல் செப்புக்காலப் பண்பாடு எனத் தொல்லியல் வல்லுநர்களான எச்.டி. சங்காலியா, எசு.பி.குப்தா (S.P. Gupta), எசு. ஆர்.ராவ் (C.R.Rao), பி.கே.தாபர் ஆகியோர் கருதுவர். இப்பண்பாடு இந்து நாகரிகத்திலிருந்து தோன்றிய ஒன்று என்று கருதுவோரும் உண்டு. சில கூறுகளில் இரு பண்பாடுகளுக்குமிடையே பொதுத்தன்மை இருட<noinclude></noinclude>
lblr8b5he17ulc93t63q7hscvw50zhs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/399
250
648664
1952572
2026-07-10T08:02:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பினும் இரண்டுக்குமிடையே ஒரு சீரான தொடர்பு கிடையாது. அகழாய்வுகளில், மண்ணடுக்காய்வு முறையில் (Stratigraphically) சான்றுகள் இல்லை எனக் கே.சி.செயின் (K.C...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செபசுடப்போல்|371|செபர்சன் தாமசு}}</noinclude>பினும் இரண்டுக்குமிடையே ஒரு சீரான தொடர்பு கிடையாது. அகழாய்வுகளில், மண்ணடுக்காய்வு முறையில் (Stratigraphically) சான்றுகள் இல்லை எனக் கே.சி.செயின் (K.C.Jain) போன்றோர் கருதுவர். சிந்து நாகரிகம் நகரத் தன்மையையும், கல் செப்புக்கால நாகரிகம் கிராமத்தன்மையும் கொண்டவையாம். கல் செப்புக்காலப் பண்பாடு ஆரியர்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஒன்று என்ற பிறிதொரு கருத்தும் உண்டு.
இந்தியாவிலுள்ள மத்தியபிரதேசம், ஒரிசா, பீகார், ஆந்திரா ஆகிய பகுதிகளில் இப்பொழுது வாழும் பழங்குடிகளான கோண்டுகள் (Gonds), பசுதர்ப் பைகர்கள் (Baigars of Bastar), சோட்டா நாக்பூர் சபரர்கள் (Sabaras of Chota Nagpur), கர் நூல் செஞ்சுக்கள் (Chenchus of Kurnool) ஆகியோரின் முன்னோடிகளே கல் செப்புக்காலப் பண்பாட்டினைத் தோற்றுவித்தவர்கள் என அய்மெண்டார்பு (Haimen-dorf) என்னும் அறிஞர் கூறுகிறார்.{{Right|<b>சி.கே.சி.</b>}}
<section end="செப்புக்காலம்"/>
<section begin="செபசுடப்போல்"/>
{{dhr}}
<b>செபசுடப்போல்</b>: இது உருசியா நாட்டிலுள்ள கிருமியா தீபகற்பத்தில் ஒரு துறைமுகப்பட்டினம். செபசுடப்போல் (Sebastopol) கருங்கடலின் உட்குடாவில் இருப்பதால் வாணிகச் சிறப்புப் பெற்றது. கடற்படைத் தளமான இங்குக் கப்பற்கட்டுந்தொழில் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு மிகுதியாகச் செல்வது வழக்கம். ஒரு சிறந்த பொருட்காட்சிச் சாலையும் கடல்வாழ் உயிரியல் நிலையமும் இங்கு உள்ளன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="செபசுடப்போல்"/>
<section begin="செபர்சன், தாமசு"/>
{{dhr}}
<b>செபர்சன், தாமசு</b>: ஐக்கிய அமெரிக்க நாடு புதிய சுதந்திரக் கூட்டாட்சியாக உருவானதும், அதனுடைய மூன்றாம் குடியரசுத் தலைவராக இருந்த செபர்சன் தாமசு (Jefferson, Thomas) அமெரிக்கச் சுதந்திரப் பட்டயத்தை வரைந்தோருள் ஒருவர்; வெர்சினியாவுக்குச சமய சுதந்திரச் சட்டத்தை இயற்றியவர்; ஒரு தாராள அரசியற் சிந்தனையாளர், செபர்சன் தம் மாநிலமாகிய வெர்சினியாவில் ஆல்பெமாரல் சிற்றூரில் கி.பி. 1743-இல் பீட்டர் செபர்சன் என்ற தோட்ட முதலாளிக்கும், சேன் உரொண்டால்பு (Jane Rondolph) என்ற அம்மையாருக்கும் கேனாகப் பிறந்தார். கணிதம், அறிவியல், சட்டம் முதலியன கற்றுப் பட்டங்கள் பெற்ற செபர்சன் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். இவர் மனைவி மார்த்தாவேலசு இசுகெல்டன் என்ற பெண் மணி, இவர் உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்ட வரைவுகளை வரைவதில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் பிரிட்டனுக்கெதிராகச் சுதந்திரப் போரைத் தொடங்கு முன்னரே, அமெரிக்கச் சுதந்திர உரிமைகளைத் தொகுத்து ஒரு நூலை கி.பி. 1774-இல் வெளியிட்டார். இவர் ஆங்கில அரசியல் கருத்துகளுக்கு அமெரிக்கரும் உரியரெனக் கூறிச் சுதந்திரக் கிளர்ச்சியை ஆதரித்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 399
|bSize = 375
|cWidth = 116
|cHeight = 162
|oTop = 33
|oLeft = 213
|Location = center
|Description =
}}
{{center|செபர்சன் தாமசு}}
இவர் வெர்சினியாச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மனித உரிமைக் கருத்துகளைச் சட்டங்களாக ஆக்கினார். வெர்சினியாவின் ஆளுநராக இவர் பணிபுரிந்தபோது (கி.பி. 1779-1781) அங்கிருந்த நிலமானிய முறைகளை ஒழித்தார். முழுச் சமய சுதந்திர உரிமையை நிலைநாட்டிச் சலுகைகளை ஒழித்துத் தொண்டு செய்தார். வெர்சினியா நாட்டின் இயற்கை, வளம், அரசாங்கம், சமூகம், பொருளாதாரம் முதலியவை பற்றி ஒரு நூலை எழுதினார். இவர் தசம் நாணய முறையைக் (Decimal System of Coinage) கொண்டுவந்தார்; அடிமை ஒழிப்பு முறையை ஆதரித்தார். பின்னர் கி.பி. 1784 முதல் கி.பி. 1789 வரை பிரான்சு நாட்டில் அமெரிக்க அமைச்சராகப் பணி செய்தார், புதிதாக அமைக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தில் அரசாங்கச் செயலாளராகப் பதவி ஏற்குமாறு முதல் குடியரசுத் தலைவர் சார்சு வாசிங்டன் விடுத்த அழைப்பை ஏற்றுப் பணி செய்தார் (கி.பி. 1790 முதல் 1793 வரை). அரசாங்கத்தில் தம் அரசியல் எதிரியாகிய ஆமில்டனின் (Hamilton) செல்வாக்கு வளரவே செபர்சன் பதவி நீங்கினார். பின்னர், இவர் கி.பி. 1793 முதல் கி.பி. 1795 வரை அரசியலிலிருந்து<noinclude>
<b>வா.க. 9-24அ</b></noinclude>
1pabcnjjzjetebghtf2lvuyvd92eogc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/400
250
648665
1952573
2026-07-10T08:20:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒதுங்கி வேளாண்மையிலீடுபட்டார். அமெரிக்கக் குடியரசுக் கட்சியார் இவருக்குப் பெருமளவில் ஆதரவளித்தனர். எனவே, இவர் அமெரிக்கக் குடியரசின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செபர்சன், தாமசு|372|செபர்சன், தாமசு}}</noinclude>ஒதுங்கி வேளாண்மையிலீடுபட்டார். அமெரிக்கக் குடியரசுக் கட்சியார் இவருக்குப் பெருமளவில் ஆதரவளித்தனர். எனவே, இவர் அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவராக (Vice-President) கி.பி. 1796 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்க் குடியரசுக் கட்சியார் (Republicans) இவருக்காகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் முயற்சி செய்து, கி.பி. 1800-இல் நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றிபெறச் செய்தனர். செபர்சன் கி.பி. 1800 முதல் கி.பி. 1804 வரை முதல் முறையாகவும், கி.பி. 1804 முதல் கி.பி. 1808 வரை இரண்டாம் முறையாகவும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவியைப் ஏற்றுப் புகழுடன் பணிகள் செய்தார். பதவியிலிருந்து விலகிய பின்னர், இவர் மாண்டிசெல்லோவில் தம் இல்லத்தில் தம் வாழ்நாளின் கடைசிப் பகுதியைக் கழித்து கி.பி. 1826-இல் மறைந்தார்.
<b>அரசியற் கருத்துகள்</b>: செபர்சன் தாராள அரசியற் கருத்துகளை ஆதரித்தவர். இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க தாராள அரசியற் சிந்தனையாளரான ஆல்செர்னான் சிட்னியின் கொள்கைகளைப் பின்பற்றினார். ஒவ்வொரு சமூகத்தவரும் தம்மைத் தாமே ஆளுதற்கு உரிமை பெற்றுள்ளனர்; அரசாங்கமும் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்தே பெறுகிறது; அது அவர்களுடைய பாதுகாப்புக்காகவும் நன்மைக்காகவுமே இருக்கிறதாகையால், அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுதற்கான பொறுப்பு அதற்கு இருக்கிறது. இவர் அமெரிக்க மாநிலங்களின் உரிமைகளும் (States Rights) தனியார் உரிமைகளும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகப் போதிய அளவு பாதுகாப்புப் பெறுதல் வேண்டுமென்ற கருத்தை உறுதியாக எடுத்து உரைத்தார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் மசோதா (Bill of Rights) ஒரு திருத்தத்தின் வாயிலாகச் சேர்க்கப்படுவதை இவர் ஆதரித்தார்.
புதிய விடுதலை நாடாக உருவாகிய ஐக்கிய அமெரிக்க நாட்டின் அயல்நாட்டுக் கொள்கையை அறிவியல் நோக்கில் வகுத்தலில் செபர்சன் தீவிரப் போக்கை விடுத்து, அமெரிக்கரின் விடுதலை உரிமை பாதுகாப்பாக இருத்தல் வேண்டுமென்ற நோக்கத்தை உறுதியாக நிறைவேற்றினார். தாய் நாடாகிய பிரிட்டனுக்கெதிராக அமெரிக்க நாடுகள் புரட்சி செய்து, விடுதலை பெற்றதனாலும், பிரான்சு அப்பொழுது அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலை உணர்வை மதித்ததனாலும், புதிய அமெரிக்க அரசாங்கம் பிரான்சுடன் நட்புறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. செபர்சன் அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சராகப் பிரான்சிலிருந்தபோது, பிரெஞ்சுப் புரட்சி கி.பி. 1789-இல் தொடங்கிற்று. பிரெஞ்சுப் புரட்சியாளர்களுடைய விடுதலைக் கருத்துகளையும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சிக் கொள்கைகளையும் இவர் ஆதரித்தார். பின்னர், பிரெஞ்சுப் புரட்சியாளர்களுடைய குறிக்கோள்களும், செயல்களும். வரம்பு மீறிச் சென்றபோது பிரெஞ்சியரின் புரட்சிச் செயல்களைத் தம் நாட்டவர் ஒத்துக்கொள்ளமாட்டார்களென்று செபர்சன் நன்கு கண்டு கொண்டார். எனினும், அமெரிக்காவோடு பிரான்சுக்கு உள்ள நட்புறவு பாதிக்கப்படும்படியாக அமெரிக்கர்கள் பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி யாதொரு கருத்தும் தெரிவிக்காமலிருத்தல் வேண்டுமென்று இவர் கூறினார். எனினும், இவர் இரண்டாம் முறையாகக் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றிருந்தபோது, நெப்போலியனின் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் போர் ஏற்பட்டது. இருநாடுகளுமே அமெரிக்க நடுவு நடுநிலையைப் பாதிக்கும் வண்ணம், அதன் கப்பல்களை முடக்கின. அதனால், அவ்விரு நாடுகளும் அமெரிக்காவின் நடுவு நிலைமையை மதித்து நடக்கும்படி செய்தற்காக, அவற்றோடு அமெரிக்கா செய்துவந்த வாணிகத்தை நிறுத்தி, வாணிகத்தடையை (Embargo) கி.பி. 1807- இல் விதித்தார். இது அயல்நாட்டு வாணிகத்தைச் சார்ந்திருந்த தொழில் வளமிக்க நியூஇங்கிலாந்து மாநிலங்களையும், தனியார் உரிமைகளையும் பாதித்ததால் எதிர்ப்புத் தோன்றிற்று. பின்னர், கி.பி. 1309-இல் இவர் வாணிகத் தடையை நீக்கினார்.
செபர்சன், அமெரிக்க நாட்டின் ஒற்றுமையையும் வளத்தையும் வலிமையையும் காத்தற்காகவும், மிசிசிப்பி ஆற்றில் தடையற்ற கப்பல் போக்குவரத்தைப் பெறுதற்காகவும் தமது முதல் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் இசுபெயினிடமிருந்து உலூயிசியானா மாநிலத்தை விலைக்கு வாங்கித் தம் நாட்டோடு சேர்த்தார். தம் இரண்டாம் முறைத் தலைவர் பதவிக் காலத்தில் துணைத் தலைவராக இருந்த ஆரன்பர் (Aaron Barr) என்பவர் மிசிசிப்பி ஆற்றின் வழியாகப் படையெடுத்ததைச் செபர்சன் உடனே தடுத்து ஒற்றுமையைக் காத்தார்.
<b>பிற பணிகள்</b>: அரசியற் காரணங்களுக்காகத் தம் எதிரியாகிய ஆமில்டனோடு மாறுபாடு கொண்டிருந்தாலும், அவர் செய்த நல்ல நிதிச் சீர்திருத்தங்களை அப்படியே செயற்படுத்தினார். போரில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட கடன்களைக் கூட்டாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுதற்கும், தேசிய கடன் சுமையைக் குறைத்தற்கும் இவர் ஏற்பாடு செய்தார். அரசியலில் பெரும்பான்மையோர் தீர்மானத்தை யாவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டுமென்றும், சிறுபான்மையோர் உரிமைகளைப் பாதுகாத்தல் வேண்டுமென்றும் கூறினார். மனிதப்பற்றுக் கொண்ட அரசாங்கத்தை<noinclude></noinclude>
tr68g28os3az804u4nlvdw9rlpo2koz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/401
250
648666
1952574
2026-07-10T08:31:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறுவியதனால், எதிர்ப்புரட்சி தோன்றக்கூடிய வாய்ப்பை இவர் தவிர்த்தார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதார விதியாகிய அதிகாரப் பங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செபர்சன் தாமசு|373|செம்பியன்}}</noinclude>நிறுவியதனால், எதிர்ப்புரட்சி தோன்றக்கூடிய வாய்ப்பை இவர் தவிர்த்தார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதார விதியாகிய அதிகாரப் பங்கீட்டுக் கொள்கையை இவர் மதித்தார்; அதன்படி நிருவாகத்தைக் கட்டுப்படுத்தாமல் தனித்து இயங்குகிற சட்டமன்றத்தையும் (Congress), அதன் உறுப்பினர்களையும் மதித்தார். இவர் உலகச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கச் செலவில் சிக்கனமும் வரிக்குறைப்பும் கொண்டுவந்ததால் இவருடைய புகழ் பரவிற்று.
சமயத் துறையில் சுதந்திரக் கொள்கையை இவர் ஆதரித்துக் குருமாரின் ஆதிக்கப்போக்கை வெறுத்தார். இயேசுவின் உரைகளைப் பின்பற்றுதலில் ஆர்வம் காட்டினார் கல்வியறிவு வளர்வதற்குப் பல தொண்டுகள் செய்தார். இவருடைய முயற்சியால் அமெரிக்கச் சட்டமன்த நூல் நிலையமும் (Congress Library) வெர்சினியாப் பல்கலைக் கழகமும் உருவாயின.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Adrienne, Koche,</b> Philosophy of Thomas Jefferson. Columbia University Press, 1943.<br>
<b>Gooch, G.P.,</b> Political Thought in England: From Bacon to Halifax, London, 1946.
<section end="செபர்சன், தாமசு"/>
<section begin="செபீல்டு"/>
{{dhr}}
<b>செபீல்டு</b>: இங்கிலாந்தின் வடபகுதியில், தெற்கு யார்க்சயரில் உள்ள ஒருமாவட்டம், செபீல்டு (Sheffield), தான் (Don) ஆற்றங்கரையில் உள்ளது. இங்கிலாந்தில மிக முக்கியமான, தொழில் வளமிக்க பருதிகளுள் இதுவும் ஒன்று, செபீல்டு நகரத்தில், கி.பி.1359-ஆம் ஆண்டு முதல் எஃகுத் தொழில் சிறப்பாக வளர்ந்துள்ளது. முதல் பெசிமேர் (Bessemer) எஃகு ஆலை இங்குந்தான் தொடங்கியது. பல வகை இரும்புக் கருவிகள், வெள்ளி, மின்சார சாதனப் பொருள்கள் முதலியன இங்குச் செய்யப்படுகின்றன. மக்கள்தொகை 542,700 (1983).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 401
|bSize = 375
|cWidth = 166
|cHeight = 180
|oTop = 128
|oLeft = 98
|Location = center
|Description =
}}
{{center|செபர்சன் நினைவாலயம்-வாசிங்டன்}}
<b>செபீல்டு</b>{{sup|<b>2</b>}} செபீல்டு என்னும் பெயர் கொண்ட ஒரு தொழில் நகரம் அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="செபீல்டு"/>
<section begin="செம்பியன்"/>
{{dhr}}
<b>செம்பியன்</b>: இது சோழ மன்னர்னைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. இப்பெயர் தனி ஒரு சோழ மன்னனைக் குறிக்கும் பெயராகவும் வந்துள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச்<noinclude></noinclude>
202p96bz6yk32pd993j5px4u8qi7fkv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/402
250
648667
1952575
2026-07-10T08:42:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘செம்பியன் மருக’ என்று (புறம்.37-6) ஆயத்தூர் கிழாரும், ‘செம்பியர் மருக’ என்று (புறம்.228-9) மாறோக்கத்து தப்பசலையாரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செம்பியன் மாதேவியார்|374|செம்பியன் மாதேவியார்}}</noinclude>‘செம்பியன் மருக’ என்று (புறம்.37-6) ஆயத்தூர் கிழாரும், ‘செம்பியர் மருக’ என்று (புறம்.228-9) மாறோக்கத்து தப்பசலையாரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் செம்பியன் என்பது ஒருமைப் பெயராய் ஒரு சோழனைக் குறிப்பதாக உள்ளது. அது அவனது இயற்பெயரா என்பதனை அறியக் கூடவில்லை. செம்பியர் என்பது பன்மைப் பெயராய்ச் சோழ மன்னர் பலரைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஆலங்கானத்தில் தம் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டபோது, அவனை எதிர்த்த எழுவரின் பெயர்களையும் நக்கீரர்தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம்.36) குறிப்பிட்டுள்ளார். அவ்வெழுவரும், ‘சேரல் செம்பியன், சினம் கெழுதிதியன், போர்வல் யானைப் பொலம் பூண் எழினி, நாரரி நரவின் எருமை யூரன், தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவனாகச் குறிப்பிடப்படுகின்றான். சேரல், செம்பியன் என்ற பெயர்களை நோக்குங்கால் அவ்விரண்டும் அவ்வேந்தர்களின் இயற்பெயர்களாக இருத்தல் இவ்வாதென்பதும் முறையே சேர, சோழர்களைக் குறிக்கும் குடிப்பெயராக அமைத்திருத்தல் வேண்டும் என்பதும் புலனாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="செம்பியன்"/>
<section begin="செம்பியன் மாதேவியார்"/>
{{dhr}}
<b>செம்பியன் மாதேவியார்</b> சிறந்த சிவபக்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற கண்டராதித்த சோழனின் (கி.பி. 950-936) பட்டத்தரசியராவர், பிற்காலச் சோழர் காலத்திய அரசியருள் முன்னணியில் வைத்துப் போற்றுப் பெறும் இவர் இறைபணியே தமது தொண்டாகக் கொண்டு, நீண்டகாலம் வாழ்ந்து பல கற்றளிகளை அமைத்துப் பல திருக்கோயில்களுக்கு அறக்கொடைகள் அளித்துச் சைவ சமய வரலாற்றில் தமக்கெனத் தனித்ததோர் இடத்தினைப் பெற்றுள்ளார். சோழர் கலை வரலாற்றில் ‘செம்பியன் மாதேவிக்கலைப்பாணி’ என்னும் தனிப் பாணியை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு.
மழநாட்டை ஆண்ட மழவரையரின் மகளான இவர், அரிஞ்சய சோழனின் கல்வெட்டில், ‘மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார்’ என்று குறிப்பிடம் பெற்றுள்ளார். இவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தனர். கண்டராதித்த சோழனின் முதல் மனைவியாகிய வீரநாராயணி இறந்த பின், அவருக்கு இரண்டாம் மனைவியாகிப் பட்டத்தரசியானார். இவரது இயற்பெயர் பராந்தக மாதேவடிகள் என்பது கல்வெட்டுச் செய்தி. கண்டராதித்தனை மணந்த பின்னர், இவர் செம்பியன் மாதேவி என்னும் பட்டப் பெயரால் குறிக்கப்பட்டார். பிற்காலக் கல்வெட்டுகளில் இவர், ‘மதுராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார்’ என்று பெருமையுடன் குறிக்கப்பட்டுள்ளார். சோழ வேந்தனான உத்தம சோழனை (கி.பி. 970-985) இவர் ஈன்றெடுத்துப் பெருமை பெற்றார் என்பதனைத் ‘திருஉத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளதால் அறியலாம்.
தம் மகன் உத்தம சோழன் இளைஞனாக கண்டராதித்த சோழர் இயற்கை இருந்தபோதே எய்தினார். கணவன் மறைந்ததும் வானவன் மாதேவி போன்று உடன்கட்டை ஏறாமல், தம் இளம்புதல் வனைப் பாதுகாத்து, நன்னிலைக்குக் கொண்டு வருவதையே தலையாய கடமையாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருந்தார். ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இவர், முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியிலும் (கி.பி. 941 -955), கண்டராதிக்கர் (கி.பி. 949-957), அரிஞ்சயன் (கி.பி. 956-977), சுந்தர சோழன் (கி.பி. 970-985) முதலான சோழ வேந்தர்களின் ஆட்சிக் காலத்திலும், முதலாம் இராசராச சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1001 வரையிலும் இறைபணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர், பல செங்கற்கோயில்களைக் கற்றனிகளாக மாற்றியும், பல கோயில்களில் திருப்பணிகள் செய்தும், அவற்றிற்குப் பல அறக்கொடையளித்தும், சைவ சமயக் காவலராக விளங்கினார்.
<b>கலைப் பணிகள்</b>: இவர் உத்தம சோழனின் ஆட்சிக்காலத்தில் கோனேரி ராசபுரம் (திருநல்லம்), குத்தாலம், திருக்கோடிக்கா, விருத்தாசலம், செம்பியன் மாதேவி, தென் குரங்காடுதுறை, ஆனாங்கூர், திருவெண்ணெய் நல்லூர்த் திருவருட்டுறை மகாதேவர் கோயில், திருநாரையூர் சித்தநாத சுவாமி கோயில், கண்டராதித்தம் சிவலோகத்து மகாதேவர் (சொக்கநாதர் கோவில்) கோயில் முதலான கோயில்களைப் புதிதாகக் கட்டியும், கற்றளிகளாக மாற்றியும் உள்ளார். இவற்றுள் கோனேரிராசபுரத்துக் கோயிலும், செம்பியன் மாதேவிக் கோவிலும் போற்றத்தக்க கலைப்பணிகள் ஆகும். திருநல்லம் என்று அப்பரடிகனால் தேவாரத்தில் குறிக்கப்பெறும்<noinclude></noinclude>
gb3sql9zz3c6cxas9msjmcle41jy77w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/433
250
648668
1952581
2026-07-10T11:07:44Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கவே இருக்க வேண்டும் என்று இதன் காலத்தினைக் கொண்டு கூறலாம். அதியமான் நெடுமானஞ்சியின் இக்கல்வெட்டு, திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்போலியன் சீன் பிராங்காய்சு|407|சம்மு பல்கலைக் கழகம்}}</noinclude>கவே இருக்க வேண்டும் என்று இதன் காலத்தினைக் கொண்டு கூறலாம்.
அதியமான் நெடுமானஞ்சியின் இக்கல்வெட்டு, திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் ஆட்சிப்பகுதியில் அமைந்த கோவலூருக்கு அண்மையில் அமைந்த சம்பையிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இவ்வூரை அதியமான் கடந்து வந்தே திருக்கோவலூரை முற்றுகையிட்டு மலையமான் திருமுடிக்காரியை வென்றிருக்க வேண்டும். அம்மதச் செயலுக்குப் பிறகு அறச்செயல் ஒன்தினையும் முனிவர்களுக்காக அக்காலத்தில் செய்துள்ளான் அதியமான் என்று சங்கவிலக்கியம் கூறாத செய்தியை இச்சம்பைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
சம்பையில் இக்கல்வெட்டு அமைந்துள்ள குன்றுப் பகுதி முழுமையும் சங்ககால மக்கள் வாழ்விடமாக விளங்கியமைக்குச் சான்றாக அப்பகுதியில் சங்க காலத்தினைச் சார்ந்த மிகப்பல கறுப்பு சிவப்பு வண்ண மட்கலன்களின் உடைந்த துண்டுப் பகுதிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுன் சிலவோடுகள் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பெற்ற நிலையில் கிடைத்துள்ளன. {{Right|<b>வெ.வே.</b>}}
<section end="சம்பை"/>
<section begin="சம்போலியன் சீன் பிராங்காய்சு"/>
{{dhr}}
{{larger|<b>சம்போலியன் சீன் பிராங்காய்சு:</b>}} எகிப்தின் பண்டைய எழுத்து முறையைப் படித்தறிந்த அறிஞர். இவர் பிரான்சில் கி.பி. 1790–ஆம் ஆண்டு திசம்பர் 23–ஆம் நாள் பிறந்தார். சம்போலியன் (Champollion Jean Francois) கிரனோபிள் (Grenoble) என்ற இடத்திலும் பின்னர்ப் பாரிசிலும் தம் கல்வியை முடித்தார். பல்வேறு அறிஞர்களின் மூலமும், தனிப்பட்ட முறையிலும் தம் அறிவை வளர்த்துக் கொண்ட இவர், தம் 18–ஆம் வயதில் கிரனோபிளில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர்ப் பசரிடுற்குத் திரும்பிய இவர் எகிப்திய தொல் வெழுத்துகளைப் படித்தறியும் முயற்சியில் ஈடுபட்டார். உரெசெட்டா கல்வெட்டைப் படித்தறிவதில் இவர் வெற்றி பெற்றார். இத்தாலி நாட்டிற்கு கி.பி. 1824–இல் சென்று தரினில் (Turin) கண்டுபிடிக்கப்பட்ட எகிப்தியப் பொருள்களை இவர் ஆய்ந்தார். பாரிசிலுள்ள உலூவர் அருங்காட்சியகத்திற்காகச் சில அரும்பொருள்களை அங்குச் சேகரித்தார். எகிப்தியத் தொன்மைப் பொருள் பாதுகாப்புப் புனரமைப்பு அலுவலராக, துரினில் சம்போலியன் நியமிக்கப்பட்டார். எகிப்தில் கி.பி. 1828 முதல் 1829 முடிய பணியாற்றிய இவர் பிரான்சில் எடுப்தியத் தொல்லெழுத்தியல் கட்டிலின் முதல் தலைவராக ஆனார்.
சம்போலியன் எழுதிய பல எழுத்தாவணங்களைப் பிரெஞ்சு அரசு விலைக்கு வாங்கிப் பாதுகாத்து வருகிறது. எகிப்து பற்றிய ஆய்வை இவர் 4 தொகுதிகளில் வெளியிட்டார். இவர் பாரிசு நகரத்தில் கி.பி. 1832–ஆம் ஆண்டு மார்ச்சு 4–ஆம் நாள் காலமானார்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சம்போலியன் சீன் பிராங்காய்சு"/>
<section begin="சம்மு பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சம்மு பல்கலைக் கழகம்:</b>}} இந்தியாவின் வட பகுதி எல்லைப்புற மாநிவத்தில் சம்மு நகரின் 1969–ஆம் ஆண்டு இப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதற்குமுன் இப்பல்கலைக் கழகம் சம்மு, காசுமீர்ப் பல்கலைக் கழகம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இது 1948–இல் தொடங்கப்பெற்றது. திருவாக வாதிக்காகவும் கல்வியை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும். எண்ணி 1969–இல் சம்மு பல்கலைக் கழகம் என்றும், காசுமீர்ப் பல்கலைக் கழகம் என்றும் தனித்தனிப்பல்கலைக் கழகங்களாகக் பிரிக்கப்பட்டன. இப்போது சம்மு பல்கலைக் கழகத்தின் ஆளுகை (Jurisdiction) சம்மு, காசுமீர் மாநிலத்தில் சம்முப் பிரிவை மட்டும் கொண்டுள்ளது.
சம்முப் பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, இணைப்புரிமை (Affiliation) முதலான பணிகளைக் கொண்டுள்ளது. இங்குக் கலை, ஆயுர்வேதம், மருத்துவம், வணிகவியல், கல்வியியல், சட்டம், இசை, கவின் கலைகள், அறிவியல், சமுதாய அறிவியல், கிழக்கத்திய மொழிகள் முதலான புலங்கள் உள்ளன. இவற்றின் கீழ்ப் பல துறைகள் செயற்படுகின்றன.
இப்பல்கலைக் கழகத்தில் 5 உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) உள்ளன. அவற்றுள் சம்மு அரசினர் ஆயுர்வேதக் கல்லூரி, சம்மு அரசினர் கல்வியியல் கல்லூரி, சம்முவின் கல்வி மற்றும் ஆய்வுக்கான மாதிரி நிறுவனம் (Jammu Model Institute of Education and Research) முதலியன குறிப்பிடத்தக்கவை. இணைப்புரிமை பெற்ற 10 கல்லூரிகளும் இப்பல்கலைக் கழகத்தின் ஆளுகைக்குள் உள்ளன.
மாணவர்கள் பட்டப்படிப்பையும், மேற்பட்டப் படிப்பையும், ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொள்ள வசதியுண்டு. முதுமுனைவர் பட்டங்கள் பெற முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் ஆராய்ச்சி செய்வதற்குச் சம்மு பல்கலைக் கழகம் வசதி செய்துள்ளது. இளம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய இரண்டையும் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தோ, வெளியிலிருந்து தனிப்பட்ட முறையிலோ (Private study) படித்துப் பட்டம் பெறவாம். இவைதவிர இப்பல்கலைக் கழகம் அஞ்சல்வழிக் கல்வி மையம் ஒன்றையும் நிறுவியுள்ளது. இதன்மூலம் இனநிலைப் பட்டங்களைப் பெறலாம். இந்தியை உருது மொழி<noinclude></noinclude>
1dq1aoj3kqfxctqmefhv0g3bayvt8rd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/434
250
648669
1952582
2026-07-10T11:23:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூலமும், உருது மொழியை இந்தி மூலமும் கற்பிக்கும் சான்றிதழ்ப் படிப்பும் இங்கு உள்ளது. மருத்துவத்தில் பல உட்பிரிவுகளில் பட்டயப் (Diploma) படிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சம்யுக்தை|408|சம்னர், வில்லியம் கிரகாம்}}</noinclude>மூலமும், உருது மொழியை இந்தி மூலமும் கற்பிக்கும் சான்றிதழ்ப் படிப்பும் இங்கு உள்ளது.
மருத்துவத்தில் பல உட்பிரிவுகளில் பட்டயப் (Diploma) படிப்பினைச் சம்மு பல்கலைக் கழகம் வழங்குகிறது. இசை, கவின்கலைகள் முதலானவற்றை அறிமுக நிலையில் கற்பிக்கின்றனர். கீழ்த்திசை மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் இங்குக் கற்பிக்கப்படுகின்றன. தோக்ரி (Dogri) மொழி ஆய்வு மையம், வயதுவந்தோர் கல்வி மையம், கணிப்பொறி மையம் முதலானவை அண்மையில் தொடங்கப்பட்டவையாகும்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சம்மு பல்கலைக் கழகம்"/>
<section begin="சம்யுக்தை"/>
{{dhr}}
{{larger|<b>சம்யுக்தை:</b>}} இராசபுத்திர குலத்தைச் சேர்ந்த இவள் கன்னோசி நாட்டை ஆண்ட செயச்சந்திரனின் மகள். தந்தையின் பகைவனான பிருதிவிராசன் (அசுமீர் நாட்டு இளவரசன்) என்பவனை இவள் காதலித்தாள். இக்காதலைப் புறக்கணித்து, செயச்சந்திரன் சம்யுக்தையை வேறு யாருக்காவது திருமணம் செய்விக்க விரும்பி, அக்காலத்தில் அவர்கள் வழக்கப்படி ‘சுயம்வரம்’ நடத்தினான். அழைப்பு அனுப்பப்படாத பிருதிவிராசன், தான் விரும்பிய சம்யுக்தையைக் கடத்திச் சென்று மணம் புரிந்து கொண்டான். இந்நிகழ்ச்சி கி.பி. 1175–ஆம் ஆண்டில் நடந்தது. பிருதிவிராசன் மூன்றாம் பிருதிவிராசன் என்ற பட்டத்துடன் கி.பி. 1177 முதல் 1192 வரை ஆட்சி புரிந்தான். இராணி சம்யுக்தையின் வரலாற்றைச் சந்தவரதாயி (கி.பி. 1148–1192) என்னும் பிரதிவிராசனின் அவைக்களப் புலவர் இந்தி மொழியில் சுவைபட எழுதியுள்ளார்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சம்யுக்தை"/>
<section begin="சம்னர், வில்லியம் கிரகாம்"/>
{{dhr}}
{{larger|<b>சம்னர், வில்லியம் கிரகாம் (1840–1910)</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமூகவியல் என்ற அறிவியலைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராவார். இவர் ஏல் (Yale) பல்கலைக் கழகத்தில் கி.பி. 1863–ஆம் ஆண்டு அரசியற் பொருளாதாரப் பட்டம் பெற்றதோடு மட்டுமன்றிப் பிரெஞ்சு (French), எபிரேயம் (Hebrew) ஆகிய மொழிகளையும், பழங்கால மொழிகள், அவற்றின் வரலாறுகள், ஆங்கில இறையியல் போன்றவற்றையும் பயின்றார். ஏல் பல்கலைக் கழகத்தில் கி.பி. 1866–ஆம் ஆண்டு ஆசிரியராகப் (Tutor) பணியாற்றிய இவர், பின்பு கிறித்தவமத குருமாராக நியமிக்கப்பட்டு நியூயார்க்கிலும் (New York), நியூசெர்சியில் (New Jersy) உள்ள மோரிசுடவுனிலும் (Morristown) பணியாற்றினார். இவர் மீண்டும் ஏல் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சமூக அறிவியல் பேராசிரியராக கி.பி. 1872–ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அங்கு 38 ஆண்டுகள் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றி நற்புகழை அடைந்தார். பொருளாதார அறிஞராக இருந்த வில்லியம்கிரகாம் சம்னர் (William Graham Sumner) கி.பி. 1850–ஆம் ஆண்டில் சமூகவியலைக் கற்று அமெரிக்கச் சமூக வரலாற்றில் முழு இடத்தைப் பெற்றுப் புகழடைந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 434
|bSize = 480
|cWidth = 141
|cHeight = 156
|oTop = 154
|oLeft = 283
|Location = center
|Description =
}}
{{center|வில்லியம் கிரகாம் சம்னர்}}
இவர் சமூக நடத்தையில் வழக்கங்களின் (Customs) செல்வாக்கினைப் பற்றிய ஆய்வில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மரபு (Tradition) சமூக அமைப்பில் மிக முக்கியமான இயல்புகளைத் தீர்மானிக்கும் தன்மை வாய்ந்தது என இவர் நம்பினார். எர்பெர்ட்டு இசுபென்சரின் (Herbert Spencer) சமூகவியல் பற்றிய ஆய்வு நூல் இவர் அரசியற் பொருளாதாரத்திலிருந்து சமூகவியலுக்கு வருவதற்கு மூல காரணமாக அமைந்தது. நெறிகள் ஓர் இயற்கையான உந்து விசையாகும். அரசுகள் எந்த வழியிலும் தலையிடுதலோ ஒழுங்குபடுத்துதலோ கூடாது என இவர் கூறினார். ‘நாட்டுப்புற நெறிகள்’ (Folkways) படைப்பாகும் என்ற நூல் இவரது முக்கியமான இந்நூலில் வழக்காறுகள், நடத்தை முறைகள், ஒழு கலானுகள், வாழ்க்கை நியதிகள் முதலியன நன்கு ஆராயப்பட்டுள்ளன.
மேலும், இவர் எழுதிய ‘சமூக அறிவியல்’ (The Science of Society) என்ற நூல் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். நான்கு தொகுதிகளைக் கொண்ட நூல் கி.பி. 1899–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1927–ஆம் ஆண்டு கெல்லர் (Albert G. Keller) என்ற<noinclude></noinclude>
glbtfek5bmuqplfk16jv3z1ywa25shq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/435
250
648670
1952584
2026-07-10T11:42:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிஞரின் உதவியுடன் வெளிவந்தது. இப்புகழ்மிக்க சமூகவியல் அறிஞர் 1910–இல் மறைந்தார். {{Right|<b>பூ.த.</b>}} <section end="சம்னர், வில்லியம் கிரகாம்"/> <section begin="சமசுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1952584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமசுகிருதம்|409|சமசுகிருதம்}}</noinclude>அறிஞரின் உதவியுடன் வெளிவந்தது. இப்புகழ்மிக்க சமூகவியல் அறிஞர் 1910–இல் மறைந்தார்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="சம்னர், வில்லியம் கிரகாம்"/>
<section begin="சமசுகிருதம்"/>
{{dhr}}
{{larger|<b>சமசுகிருதம்,</b>}} இந்தியாவின் மூதுமொழிகளுள் ஒன்று. சமசுகாரம் என்ற வடமொழி சொல்லிற்குப் ‘பண்படுத்துதல்’ என்பது பொருள். அதனால், பாணினி போன்ற சிறந்த இலக்கண ஆசிரியர்களால் நன்கு பன்படுத்தப்பட்ட மொழி சமசுகிருதம் என்று சொல்லப்படுகிறது. இது, இந்திய நாட்டின் பண்பாடு சமயம் ஆகிய இரண்டுடனும் தொடர்புடைய மொழியாகும். மக்களிடையே இம்மொழி பேச்சு வழக்கில் இல்லாமல் இருப்பினும், இதன் பல்வேறு நூல்களை ஆராய்ந்து வரும் புலவர் கூட்டங்களிடையே இது பேசப்பட்டு வருகின்றது. மேலும், இம்மொழியில் இன்றும் பலர் புதிய செய்யுள்களையும் நாடகங்களையும் வேறு நூல்களையும் ஆக்கி வருகின்றனர்.
மொழியியல் வல்லுநர்களும், இலக்கண ஆசிரியர்களும் இந்தியாவில் வழங்கும் மொழிகளை நான்கு பெரிய மொழிக் குடும்பங்களாக வகுத்துள்ளனர். அவை இந்திய–ஐரோப்பியம் (Indo–European), திராவிடம் (Dravidian), ஆசுதிரியம் (Austric), திபேத்திய–சீனம் (Tibetian) என்பனவாம். சமசுகிருத மொழி இந்திய–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இலக்கிய வளர்ச்சிக்கு நிலைக்களன், பண்பாட்டு மலர்ச்சிக்கு வாயில் என்ற இரண்டு சிறப்புகளைப் பெற்றிருக்கும் இந்திய மொழிகளுள் பெரும்பாலானவை சமசுகிருதத்திலிருந்து பிரிந்து வளர்ந்தன. இந்திய மொழிகள் அனைத்திலுமே சமசுகிருதப் பதங்களின் கலப்பு காணப்படுகின்றது. தென்னாட்டில் வழங்கிவரும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைத் தவிர, வட இந்தியாவில் நன்கு வளர்ச்சிபெற்ற மொழிகளுக்கெல்லாம் சமசுகிருதம்தான் வேர்மொழி என்று சொல்லப்படுகின்றது. தென் மொழிகளும், சமககிருதத்துடனும், அதிலிருந்து வந்த பாலி, பிராகிருந் மொழிகளுடனும் பண்டைக்காலந் தொட்டுக் கூடவே வளர்ந்து வந்துள்ளதாலும், இலக்கண இலக்கியங்களில் இம்மொழிகளுக்கிடையே கொடுக்கல் வாங்கல்கள் இருந்து வந்துள்ளதாலும், எல்லா இந்திய மொழிகளின் இலக்கணத்தையும், வரலாற்றையும் ஆராய்வதற்குச் சமசுகிருத மொழி ஆராய்ச்சி இன்றியமையாததாகும்.
<b>ஒப்புமொழியியல் (Comparative philology) தோற்றம்:</b> சர் வில்லியம் சோன்சு என்ற செருமானிய அறிஞர் கி.பி. 1786–இல் கல்கத்தாவில் உள்ள அரசு ஆசியக் கழகத்துக்கு (Royal Asiatic Society) வருகை தந்து சமசுகிருத மொழியை நன்கு படித்து அம்மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமுள்ள தொடர்பைக் கண்டு பிடித்ததனாலேயே மொழிகளின் ஆராய்ச்சியில் ஒப்பு மொழியியல் (Comparative Philology} என்ற புதுத் துறை தோன்றியது. அதுமுதல் இந்தியநாட்டிலேயே வழங்கி வந்த இம்மொழியினை மேல்நாட்டு அறிஞர்கள் கற்று, மொழியியல் துறையின் வளர்ச்சிக்குத் துணை செய்துள்ளனர். வில்லியம் சோன்சிற்குப் பிறகு அவரைப் பின்தொடர்ந்து கோவ்புரூக்பாபு, கிரிம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி முதலிய மொழிப்புலவர்கள் இம்மொழியாராய்ச்சித் துறையில் மேலும் ஈடுபட்டு இந்திய ஐரோப்பிய மொழிகளுக்குள்ள (மரபு இலக்கணங்களையும் வகுத்து) பொது இயல்புகளையும் ஆய்ந்து இம்மொழிக் குடும்பத்தில் உலக மொழிகள் இன்னின்னவென்றும் எடுத்துரைத்தனர்.
மக்கள் பரவப்பரவ மொழிகளில் சிறு சிறு வேற்றுமைகள் வளர்ந்து மொழிபேதங்கள் உண்டாகின்றன. அவை நாளடைவில் கிளைமொழிகளாகிப் (Dialects) பின்னர்த் தனித்தனி மொழிகளாக இலக்கிய இலக்கணங்களுடன் வளர்ந்துவிடுகின்றன. இப்படியே மூல இந்திய ஐரோப்பியம் பல கிளைகளாகப் பிரிந்தது. இப்படிப் பிரிந்த கிளை மொழிகளுள் ஒன்றே சமசுகிருதம். இது இந்திய ஐரோப்பியத்தின் கிழக்கு எல்லையில் உள்ள முக்கியப் பிரிவென்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
<b>சமசுகிருதத்தின் தனிப்பட்ட குடும்பமும் வரலாறும்:</b>
<b>வேதமொழி:</b> சமசுகிருதத்தின் ஒரு பகுதியான இம்மொழி ஆங்காங்கு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் மக்களுடைய பேச்சு வழக்கில் பல வேற்றுமைகளைக் (Dialectical Differences) கொண்டிருந்தது. பல்வேறுபட்ட மக்கள் பேசிய இந்த மொழியை அறிஞர் இலக்கணத்தால் சீர்திருத்தி, இலக்கியத்தில் ஒரே மாதிரியாகக் கையாண்டனர். இது காப்பியச் சமசுகிருதம் (Classical Sanskrit) ஆகும். இப்பேச்சு வழக்குகளோடு நாற்றிசைப் பேச்சு மொழிகளிலிருந்தும் வளர்ந்து பாலி, அர்த்தமாகதி, சௌரசேனி, மகாராட்டிரீ, கொடும் சமசுகிருதமான பைசாசி முதலியன பிராகிருதங்களாக (பிராகிருத மொழிகளாக) மாறின. வெற்றுள் பாலி மொழியைப் பௌத்தர்கள் கையாண்டனர். அர்த்தமாகதியைச் சைனர்களும், சௌரசேனியைச் சமசுகிருத நாடகங்களிலுள்ள கீழ் நிலை நாடகமாந்தரும் கையாண்டனர். மகாராட்டிரம் காப்பியங்களில் கையாளப்பட்டது. மக்களுக்-<noinclude></noinclude>
86nwqtgbn46cnmizbmsuzvv2dw5iwbi