விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.5
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பயனர்:ஹர்ஷியா பேகம்
2
579525
1939967
1939648
2026-06-04T16:48:25Z
Booradleyp1
1964
/* திட்டங்கள் */
1939967
wikitext
text/x-wiki
எனது பெயர் ஹர்ஷியா பேகம்.
*[[/test]]
==திட்டங்கள்==
# [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13
#[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1
#[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22
#[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]]
81jv171gbx2rp1wtfdgjv5amhcyuzq7
1939968
1939967
2026-06-04T16:50:03Z
Booradleyp1
1964
1939968
wikitext
text/x-wiki
எனது பெயர் ஹர்ஷியா பேகம்.
*[[/test]]
==திட்டங்கள்==
# [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13
#[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1
#[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22
#[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 27 முதல்
mn4l7ddziqrgzi7cy8xt8fr8awbc2rv
1939970
1939968
2026-06-04T16:58:43Z
Booradleyp1
1964
1939970
wikitext
text/x-wiki
எனது பெயர் ஹர்ஷியா பேகம்.
*[[/test]]
==திட்டங்கள்==
# [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]]
#[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]]
#[[அட்டவணை:கம்பரசம்.pdf]]
#[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]
#[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]
#[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7
#[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18
#[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31
#[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15
#[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13
#[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1
#[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22
#[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf]] பக்கம் 29 முதல்
hpqxqinns57muv7x2a9iuikm1wesdyz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/77
250
616569
1939978
1830679
2026-06-05T01:52:21Z
Sridevi Jayakumar
15329
1939978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறவியல் வரலாறு|53|அறிஞர் புறப்பெயர்ச்சி}}</noinclude>ஆணையிடப் பெற்றனவே என்ற நிலையில் பார்க்கும்போது சமயத்திலிருந்துதான் அறம் பிறந்திருக்க வேண்டும் எனலாம். சமயம் பழைமையைச் சார்ந்தே நிற்பது. சமயத்தில் ஈடுபாட்டுடன் விளங்கும் மனிதன் பொதுவில் அற ஈடுபாட்டுடன் விளங்குவதையும் காணலாம்.
அறம் கீழ்க்காணும் முறைகளில் சமயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 1. அறத்தின் அடிப்படைகளாக விளங்கும் செயல்களின் பொறுப்பு ஏற்கும் ஆன்மாக்களின் இருப்பு, காலத்தின் கட்டுப்பாட்டுத் தன்மை, தீமையின் இருப்பு ஆகியவை சமயம் அளித்த தத்துவங்களாகும். சமயத் தத்துவங்கள் அறவொழுக்கத்தை மேலும் சிறப்பானதாக்குகின்றன. இவை இல்லையெனில் அறச்செயல்கள் எப்பொருளையும் பயனையும் தர இயலா. 2. அறக்கருத்துக்களான நன்மை, தீமை, அறப்போராட்டம், பிரபஞ்ச-மனித உறவுக் கருத்துகள் முதலியன பொருளியல் கருத்துகள் போன்றே உண்மையான இயற்கை விதிகளே என்பதைச் சமயம் உறுதிப்படுத்துகிறது. 3. அறத்தில் காணப்படும் உந்தல் அல்லது உணர்வு, சமயப் பேருண்மை எனக் கருதுகிற இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஆற்றலே ஆகும். சமயமும் அறமும் சமயப் பேராற்றலை நாடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. 4. ஒருவன் தன்னிடத்திலே நம்பிக்கை கொள்வதை வலியுறுத்துவது அறம். அறவொழுக்கத்தின் இந்தக் கடப்பாட்டைச் சமயம், தனி ஒரு பரம்பொருளுக்கு மக்கள் கடமைப்பட்டுள்ளனர்; அதுவே மக்களை அறவொழுக்கத்திற்கு இட்டுச் செல்கிறது என்று பொருத்தமாக விளக்குகிறது. 5. அறத்தின் உன்னத நிலைகளான தெய்விகப் பண்பை அல்லது மாபெரும் மானிடப் பண்புக்குரிய உள்ளார்ந்த மதிப்பைச் சமயம் அளிக்கிறது. அறத்தின் நிறைவு நிலையான ஆன்மிக நிலையைச் சமயம் தெளிவாக்கி அதன் மதிப்பை உயர்த்துகிறது.
சமயமும் அறமும் பின்வரும் முறைகளில் வேறுபட்டு நிற்கின்றன. 1. இறைவனைத் துதித்தல், தவம் செய்தல், கடமைகளைத் தவறாது செய்தல் போன்ற அறத்தை விடக் கூடுதலான கடமைகளைச் சமயம் ஏற்கிறது. ஆனால் அறம், சமுதாயத்தில் வாழும் மனிதனின் நடத்தையைப் பற்றிய கடமையை மட்டுமே ஏற்கிறது. சமயக் கடமைகள், இறைவனுடைய ஆணைகளாகக் கருதப்படுகின்றன. அறக்கடமைகள் அப்படிக் கருதப்படுவதில்லை. 2. அற வழிப்பாட்டில் செல்லும் ஒருவன், தான் செய்யும் கடமைகளுக்குத் தானே பொறுப்பு ஏற்பதையும் அவற்றில் தன் முனைப்பு ஓங்கி நிற்பதையும் காணலாம். சமயக் கடமைகளைச் செய்யும் ஒருவன். தன்னை இறைவனின் கையில் உள்ள கருவியாகக் கருதிச் செயற்படுகிறான். இவ்வேறுபாடு அறம், சமயத்தைச் சார்ந்திருக்கத் தேவை இல்லை என்பதையும் சமயம் ஒரு வகையில் அறத்தைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாது என்பதையும் காட்டுகிறது. 3. சமயம் நடத்தையையும் அறிவையும் குறிக்கிறது. அவ்வறிவைப் பெறுவதற்கே சமயத்தில் கடமைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அறக்கடமைகள் புரிவதற்கு அறிவு ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகிறது. சமயத்தில் அறிவு (இறைவனை அறியும் அறிவு) ஒரு முடிவு ; அறவொழுக்கத்தில் நற்கடமைகளைத் தேர்தற்கு அறிவு ஒரு வழி. 4. இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம்; மனிதனை அடிப்படையாகக் கொண்டது அறம். இருப்பினும் இறைவனை அறவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்.{{Right|பி.ஆர்.ந.}}
<section end="அறவியல் வரலாறு"/>
<section begin="அறிஞர் புறப்பெயர்ச்சி"/>
{{dhr}}
<b>அறிஞர் புறப்பெயர்ச்சி</b>: தொழில் துறை வல்லுநர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து, மிகுந்த பொருளீட்டுவதற்காக வேறொரு நாட்டிற்கு இடம் பெயர்வார்களெனில் அது அறிஞர் புறப்பெயர்ச்சி (Brain-Drain) ஆகும்.
வளரும் நாடுகளிலிருந்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற மேனாடுகளுக்கு அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், பல்துறை விற்பன்னர்கள் ஆகியோர் சென்று குடியேறுவது அண்மைக்கால வழக்கமாகிவிட்டது. அந்நாடுகளில் கிடைக்கும் உயர்ந்த ஊதியம், உயர் வாழ்க்கைத் தரம், ஆராய்ச்சி வசதி போன்றவை எல்லோரையும் ஈர்க்கின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவர் பலரும் தொழிற் பயிற்சி பெற்றவர்களாகவும் அறிவியலாளர்களாகவும் இருப்பதனால், இது போன்ற குடிப்பெயர்ச்சி, அறிஞர் புறப்பெயர்ச்சி எனப்படுகிறது, வளரும் நாடுகள் இதனால் பெரும் இழப்பிற்கு ஆளாகின்றன. இப்பெயர்ச்சியைத் தடை செய்யப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை இதுவரை பலனளிக்கவில்லை.
அறிஞர் புறப்பெயர்ச்சியினால் வளரும் நாடுகளில் குறிப்பிட்ட சில துறைகளில் திறன் வாய்ந்தவர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் தொழில்துறைப் பயிற்சி பெற்றவர்களை இந்நாடுகளுக்கு மேற்கு நாடுகளிலிருந்து பெற வேண்டியிருந்தது. இப்போது இதற்கு நேர்மாறாக வளரும் நாடுகளிலிருந்து தொழில்துறை வல்லுநர்களும் மருத்துவர்களும் மேற்கு நாடுகளுக்குப் பணியாற்றச் செல்கின்றனர். எனவே, இதனைத் “தொழில்-<noinclude></noinclude>
bdsajqzoebzx4rdmrh9x1hlp4e9kojv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/78
250
616576
1939979
1830685
2026-06-05T01:54:12Z
Sridevi Jayakumar
15329
1939979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிஞர் புறப்பெயர்ச்சி|54|அறிதல் சமநிலைக் கோட்பாடு}}</noinclude>நுணுக்க நேர் எதிர் இடமாற்றம்” (Reverse Transfer of Technology) என்று பன்னாட்டு வாணிக வளர்ச்சிக் குழு கூறுகிறது. மக்கள் தொகை வல்லுநர்கள், அறிஞர் புறப்பெயர்ச்சியை உண்மையில் ‘பணப் பெயர்ச்சி’ (Money Drain) என்றே சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளுக்குள் அறிஞர் புறப்பெயர்ச்சியின் வழித்தடம் மாற்றமடைந்து வந்துள்ளது. முன்பு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்பட்டது. இப்போது வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இப்பெயர்ச்சி ஏற்பட்டு வருகிறது. சொந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், குறைந்த ஊதியம் வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பின்மை, வசதிகளற்ற ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவைதாம், அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுவதற்குச் சிற்ந்த காரணங்களாகும். இவற்றைத் தவிர வேலை பார்க்கும் இடங்களில் இருக்கும் சச்சரவுகள், இனவேறுபாட்டுக் காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவையும் இப்பெயர்ச்சிக்குக் காரணமாகின்றன. அறிஞர் புறப்பெயர்ச்சியினால் ஒரு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது என்றும் வெளிநாட்டுப் பணம் உள்நாட்டிற்கு வருகிறது என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் எந்த நாட்டிற்குள் அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படுகிறதோ அந்நாடுதான் மிகுதியான பலனை அடைகிறது. இவர்கள் குடியேறும் நாடுகளுக்குத் திறமையாக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்கின்றனர். உற்பத்தி பெருகுகிறது. வேண்டாம் என்னும்போது அந்நாடுகள் இவர்களை வெளியே அனுப்பித் தங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்து கொள்ளலாம்.
அறிஞர் புறப்பெயர்ச்சியினால் அதிர்ச்சியடைய வேண்டுவதில்லை என்ற கூற்றும் உள்ளது. “அறிவியலாளர் உலகக் குடிமக்கள்; அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள், எந்நாட்டுக் குடிமக்கள் என்பது ஆராய்ச்சிக்குரியதன்று. அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டிய தொன்று” என்று கூறப்படுவதுண்டு. அறிஞர் புறப்பெயர்ச்சிக்குத் துணையாகக் கூறப்படும் இந்த அனைத்துலகக் கோட்பாடு பொருந்தாது என்பதனைக் கீழ்க்காணும் காரணங்களினால் அறிந்து கொள்ளலாம்.
பொருளாதார மேம்பாட்டிற்கு அறிவியலும் உதவுகிறது. ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் காண விழையும்போது தன்நாட்டு அறிவியல் அறிஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வளாவிருக்காது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் அலுவல் பார்ப்போர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலிருக்கும் என்று புள்ளிவிவரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களுள் தொழில்துறை வல்லுநர்கள் 30 விழுக்காடு இருப்பர். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையினர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று நிலையாகத் தங்கிவிட்டனர். ஏறத்தாழ 137 நாடுகளில் இந்தியர் வாழ்கின்றனர். உருமேனியா, மங்கோலியா, கொரியா, போன்ற நாடுகளில் இந்தியர்கள் காணப்படவில்லை. தொழில்துறைக் கல்வி பெற இந்திய அரசு ஒருவருக்கு இலட்சக்கணக்கான உரூபாய்களைச் செலவழிக்கிறது. அறிஞர் புறப்பெயர்ச்சிக்கு மிகுதியாக உட்பட்டவர்கள் மருத்துவர்களாவர். நம் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் உந்து ஆற்றலாக விளங்குகிறது. வெளிநாடுகளில் காணப்படும் ஊதிய முறையும் வாழ்க்கைத் தரமும் ‘ஈர்க்கும்’ ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து அறிஞர் புறப்பெயர்ச்சி ஏற்படாமலிருக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிந்துரைகளும் கூறப்படுகின்றன. தொழில் நுணுக்கத் துறையில் கற்போர் பத்து ஆண்டுக்காலம் வரையிலும் தாயகத்தில்தான் வேலைபார்க்க வேண்டும் என்னும் உறுதிமொழியில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்பவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைகள் கூறப்படுகின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புகிறவர்களின் கல்விக்கு அரசு செலவழித்த தொகையில் இருமடங்குத் தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்னும் விதி சில நாடுகளில் இருக்கிறது. நம் நாட்டு அரசின் உதவியால் பெற்ற கல்வியை இந்தியர்கள் வெளிநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். பணத்தை அளவுகோலாக வைத்து இதனைக் கணக்கிடும்போது தாயகம் பல கோடி உரூபாய்களை இழப்பதனை அறியலாம்.
வெளிநாடுகளில் தங்கி வாழும் இந்தியர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும் வகையில் இந்திய அரசு பல வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. வெளிப்படையாக நோக்கும்போது வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு வருவது போன்று தோன்றுகிறது. ஆனால், உண்மையில், இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிற வாய்ப்பு ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.{{Right|ஒ.சு.}}
<section end="அறிஞர் புறப்பெயர்ச்சி"/>
<section begin="அறிதல் சமநிலைக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>அறிதல் சமநிலைக் கோட்பாடு</b> என்பது உளவியலார் அறிதல் பற்றி வகுத்துள்ள கோட்பாடு-<noinclude></noinclude>
ai4pk5xsdnitcplp64fjoqhbeftqw2a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/79
250
616580
1939980
1830686
2026-06-05T01:55:01Z
Sridevi Jayakumar
15329
1939980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல் சமநிலைக் கோட்பாடு|55|அறிதல்சார் உளவியல்}}</noinclude>களுள் ஒன்றாகும். தனிமனிதர்களிடத்தும் பொருள்களிடத்தும் ஒருவர் கொள்ளும் மனப்பான்மைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன என்பதை உளவியல் அடிப்படையில் வரையறுப்பது, அறிதல் சமநிலைக் கோட்பாடு (Cognitive Balance Theory) ஆகும். இக்கோட்பாட்டினை எடுத்துரைத்தவர் பிரிட்சு (Fritz Heider) என்பவர் ஆவார். இருமனிதர்கள் தொடர்புடையவர்களாக இருந்தால் ஒருவர் அவ்விருவரிடமும் கொண்டிருக்கும் மனப்பான்மை ஒரே தன்மையதாக இருக்கும். இருபொருள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றனவாகவோ இரு மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பற்றவராகவோ இருப்பின் அங்கு ஒருவர் கொள்ளும் மனப்பான்மைகள் வெவ்வேறானவைகளாக இருக்கும். இக்கோட்பாட்டினைப் பின்வரும் படத்தினால் விளக்கலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 79
|bSize = 375
|cWidth = 320
|cHeight = 110
|oTop = 160
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|உ: உடன்பாட்டு உறவு எ: எதிர்மறை உறவு.}}
முதல்படத்தில் ‘அ’ என்பவன் ‘ஆ,’ ‘இ’ என்ற இருவரையும் விரும்புகிறான். ஆதலின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர் என எண்ணுகிறான்.
நான்காம் படத்தில் ‘அ’ என்பவன் ‘ஆ’ என்பவனை வெறுக்கிறான். ‘இ’ என்பவனை நேசிக்கிறான். அதனால் அவர்கள் இருவரும் எதிர்மறைத் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்புகிறான். இரட்டைப் படையான எதிர்மறை உறவுகள் இருப்பின் மூன்று அறிதல் நிலைகள் சமன்படுத்தப்படுகின்றன என்று ஈடர் கூறினார். இக்கருத்தையொட்டி இரண்டு கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன. 1) முக்கூறான தொடர்புகளில் ஒருவன். இரண்டை அறிந்தால், மூன்றாம் தொடர்பு மற்ற இரு தொடர்புகளையும் சமன்படுத்துவதாக இருக்கும் என்று ஊகித்துவிடுகிறான். 2) முக்கூறான அறிதல் சமநிலையை மாற்றும் வகையில் கருத்துகள் கிடைத்தால் தனிமனிதன், சமநிலை ஏற்படும் வகையில் இவற்றுள் ஒரு அறிதல் நிலையை மாற்றிவிடுவான்.
<b>துணை நூல்</b>:
<b>Lyle E. bourne, Jr. Bruce R. Ekstrand</b> Psychology. its Principles and Meanings, New York, 1982.
<section end="அறிதல் சமநிலைக் கோட்பாடு"/>
<section begin="அறிதல்சார் உளவியல்"/>
{{dhr}}
<b>அறிதல்சார் உளவியல்</b> மனிதர்களின் எண்ணங்களும் அவற்றின் அடிப்படையில் நிகழும் செயல்களும் அறிதல் இயங்குமுறைகள் (Cognitive Processes) என்று கூறப்படுகின்றன. இந்த இயங்கு முறைகளைப் பற்றி விரித்துரைக்கும் உளவியல்துறை, அறிதல்சார் உளவியல் (Cognitive Psychology) எனப்படும். அனுபவங்கள் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஒட்டி மனிதர்கள் அடையும் அறிவினை வாழ்க்கையில் பயன்படுத்துவதும் அறிதல் நிகழ்முறையைச் சார்ந்ததாகும். வாழ்க்கையில் ஒருவரை எதிர்நோக்கும் பல சிக்கல்களும் தொல்லைகளும் அறிதல் நிகழ் முறையில் அவர் அவற்றை எந்த அளவில் தீர்வு காண்கிறார் என்பதற்கு அறைகூவல்களாக அமைந்து விடுகின்றன.
குறிப்பிட்ட தூண்டல்களுக்கு மனிதர்களின் துலங்கும் முறைகளின் அடிப்படையில் அமைவதே அறிவு ஆகும் என்று நடத்தைக் கோட்பாட்டினர் கூறினர். ஆக்க நிலையிருத்தம் பெறுதலின் பயனாகவே ஒருவரின் நடத்தைகள் அமைந்துள்ளன என்று வாட்சன் (Watson) கூறினார். சிந்தனை இயங்குமுறையுடன் உடல் தசைகளின் இயக்கமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்று சிந்தனை இயக்கக் கோட்பாடு (Motor Theory of Thinking) குறிப்பிடுகிறது. ஒருவன் ஏதேனும் ஒரு கருத்து அல்லது செயல் பற்றி எண்ணத் தொடங்கியவுடன் அதனை அவன் எடுத்துரைக்கும் நடத்தையின் அறிகுறிகளாகத் தசை-<noinclude></noinclude>
kt6akhh5t1d40k9elnomli09y7ckna1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/80
250
616582
1939981
1830688
2026-06-05T01:55:54Z
Sridevi Jayakumar
15329
1939981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் உளவியல்|56|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்}}</noinclude>இயக்கங்கள் அவன் உடலில் தோன்றுகின்றன என்பதே இக்கோட்பாட்டின் உட்பொருள் ஆகும். ஆனால், சிந்தனை இயக்கக் கோட்பாடு பின்வரும் சில விளக்கங்களை அளிக்கவில்லை. சிந்தனை முறையில் பொருள்கள், மனிதர்கள், காட்சிகள் பற்றிய உருவங்களும் அடங்கியுள்ளன. மருந்துப் பொருள்களாலோ நோயினாலோ உடல் பாதிக்கப்பட்ட போதிலும், சிந்தனையும் அதன் பயனாக ஏற்படும் சுற்றல் நிகழ்முறையும் (Learning Process) தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆதலின் நடத்தைக் கோட்பாட்டினர் தியானக் கோட்பாடு (Meditation Theory) என்னும் கோட்பாட்டின் உதவியால் அறிதல் நிகழ்முறையை விளக்குகின்றனர். பொருள்கள் நிகழ்ச்சிகள் ஆகியவத்தைப் பற்றிய தியானம் அல்லது ஆழ்ந்த சிந்தனையே தூண்டலுக்கும் துலங்கல்சார் நடத்தைக்கும் இடைத்தொடர்பாக அமைந்துள்ளது என்பதே இக்கோட்பாடு ஆகும். முன் அனுபவங்களையொட்டி அமைந்திருக்கும் புதிய சூழ்நிலை எதிர்ப்படும்பொழுது ஆழ்ந்த சிந்தனையே முதல் துலங்கலாக அமைகிறது. ஓர் எண்ணத்தைக் காட்டிலும் மற்றொரு எண்ணம் வலுவானதாக இருப்பின் பிந்திய எண்ணம் முதல் எண்ணத்தை மறைத்து விடுகிறது. மனிதனின் நடத்தையும் வலுவான பிந்திய எண்ணத்தைச் சார்ந்தே அமைகிறது. முழுமைக் கோட்பாட்டின் (Gestalt Theory) ஒரு பொருளை அல்லது காட்சியை மனிதன் புலன் காணும் விதமே, அவன் நடத்தைக்குக் காரணமாக அமைகிறது என்று கூறுகின்றனர். ஒரு சிக்கலைப் பல்வேறு கோணங்களிலிருந்தும் அணுகி அதனைப் பற்றிய புலன் காட்சியை அடைந்து அதற்குத் தீர்வு காண்பதே அறிதல் இயங்குமுறை ஆகும். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதன் பொருட்டுக் கருதுகோள்களை உருவாக்கி அவற்றை ஆராய்ந்து விளைவுகளை அறிதலும் கற்றல் இயங்குமுறை ஆகும் என்பது கருதுகோள் கோட்பாடு (Hypothesis Theory) ஆகும். சூழ்நிலைக்குப் பொருத்தமான கருதுகோள் கிடைக்கும் வரையில் பல கருதுகோள்களை முறையாக ஆராயலாம். உலகில் உள்ள எல்லாச் சிக்கல்களுக்கும் மக்கள் பல கருதுகோள்களைக் கொண்டிருக்கின்றனர். ஆதலின் கருதுகோள்களைக் கேட்டறிதலும் எளிதே.
அனுபவ அறிவின் அடிப்படையில் செய்திகளைக் கணிப்பொறியில் (Computer) திட்டமிட்டு அமைத்து அறிதல் இயங்குமுறையில் கணிப்பொறியை இயக்கிச் சிக்கல்களுக்குத் தகுந்த தீர்வுகளை அடையலாம் என்பது செய்தி இயங்கமைப்புக் கோட்பாடு (Information Processing Theory) ஆகும். கணிப்பொறி அமைப்பின் அடிப்படையில் எந்திர மனிதர்கள் (Robots) பல செயல்களைச் செய்து வருவதும், சிந்தனைக் கருத்துகளைக் கூறுவதும், சமன்பாடுகளுக்கு விடை கூறுவதும் உளவியல் ஆய்வுத் துறையில் பெருமளவில் பயன்படுவனவாக உள்ளன.
ஆலன் நிவல் (Alan Newell), எர்பர்ட்டு சைமன் (Herbert Simen) ஆகியோர் “பொதுச் சிக்கல்களைத் தீர்ப்போன்” (GPS-General Problem Solver) என்னும் கணிப்பொறியைப் பற்றி விளக்கியுள்ளனர். இப்பொறியில் மனித மூளையைப் போன்ற இயங்கு முறை அமைக்கப்பட்டுள்ளது.{{Right|கி.ரா}}
<section end="அறிதல்சார் உளவியல்"/>
<section begin="அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்"/>
{{dhr}}
<b>அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்</b> என்பது எண்ணத் திரிபுகளும் செய்தித் தொடர்பில் ஏற்படும் குறியீட்டுச் சிக்கல்களுமே மனித நடத்தைப் பிறழ்வுகளுக்குக் காரணங்களாகின்றன என்னும் முற்கோளின் மீது அமைக்கப்பட்டுள்ள ஓர் உளமருத்துவ முறையேயாகும். இத்தகைய திரிபுகளை மனிதன் இயல்பாகவே அறியவும் கட்டுப்படுத்தவும் முடியும். இது ஓர் உளவழி மருத்துவ முறை ஆகும். எண்ணங்களில் ஏற்படும் கோளாறுகளைத் திருத்தவும், வாழ்க்கையின் பட்டறிவுகளை உண்மை நிலையிலிருந்து பார்க்கவும் இது வழி வகுக்கிறது. அறிதல்சார் மருத்துவத்தில் மனிதனின் தொல்லைகளுக்கு அடிப்படையாக அமையும் தவறான, முரண்பாடான கருத்துகளைக் களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நோய்க் குறியுடனும் தொடர்புடைய கருத்தினை மாற்றி அமைக்கும் வகையில் நனவு நிலையினை ஆராய்வது இவ்வுள மருத்துவ முறையின் சிறப்பான கூறாகும். ஒருவருடைய சிந்தனையே அவருடைய மனநிலையை முடிவு செய்கிறது என்ற நினைவே இதற்கு அடிப்படையாகும். அறிதல் மருத்துவ முறையில் முதன்மையானது, ஆல்பர்ட்டு எல்லிசு (Albert Ellis) எடுத்துரைத்த பகுத்தறிவு-மனவெழுச்சி மருத்துவம் (Rational - Emotive Therapy) ஆகும். பெக்கு (Beck, Aron, I.) என்பவர், அறிதல் மருத்துவம் பற்றி விரிவாக எழுதியிருப்பதோடு, உளச்சோர்வுக் கோளாறுக்கான (Depression) உளவழி மருத்துவ முறைகளுள் சிறந்தது அறிதல் மருத்துவமே எனக் கூறுகிறார்.
பிறழ்வு நடத்தை ஏற்பட மொழித் தொடர்புத் தடைகளும் சில நேரங்களில் காரணங்களாக இருக்கின்றன என்னும் அடிப்படையில் சொற்பொருள் மருத்துவமுறை அமைந்துள்ளது. ஒருவர்தம் செய்தித் தொடர்பில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றம், அவரை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதலில் முன்னேற்றமடையச் செய்கிறது. இம்முறையில் சொற்பொருள் ஆய்வியல் (Semantics), பயன் தரக்கூடிய செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக நல்ல அறிவியல் எண்ணங்களுக்கான வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
rpb64nw4eb9dxfu5gboamgnxjwhtryd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/81
250
616586
1939982
1830756
2026-06-05T01:57:45Z
Sridevi Jayakumar
15329
1939982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் நடத்தை மருத்துவம்|57|அறிதல்சார் நடத்தை மருத்துவம்}}</noinclude>சொற்பொருள் மருத்துவத்தில் மருந்துவரும் நோயாளியும் தாங்கள் பேசும் சொற்றொடர்கள் சரியான பொருளைத்தான் தருகின்றனவா என்று ஆராய்ந்து பார்க்கின்றனர். பிறகு நோயாளி தன் மொழித் திறமை பற்றியும் பேச்சுச் சிக்கல்கள் குறித்தும் அலசிப் பார்க்கிறார். கடைசியாக நோயாளி தகுந்த குறியீடுகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துவதற்கான பயிற்சியளிக்கப்படுகிறார்.
மருத்துவத்தின் போது நோயாளியுடன் ஒரு நல்ல தொடர்பினை மருத்துவர் ஏற்படுத்திக் கொண்டவுடன் பேச்சுப் பயிற்சியும் புதிய சொற் கோப்புகளுக்கான பயிற்சியும் தரப்படுகின்றன. பேச்சின் குறைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் நோயாளி, தன் சிக்கல்களைத் தெளிவாக அறிந்து கொள்வதோடு, சுதந்திரமாகவும், தெளிவாகவும் செய்தித் தொடர்பு கொள்ளத் தன்னம்பிக்கையும் பெறுகிறார். இதன் வாயிலாக அவர் தம் கருத்துகளைத் தெளிவாக உருவாக்குவதோடு, பிறருடன் அவர் கொள்ளும் தொடர்பையும் பொருளுடையதாக்குகிறார்.
மெய்சென்பாம் (Meichenbaum) என்பார், மேற் சொன்ன அறிதல்சார் மருத்துவம், சொற்பொருள் மருத்துவம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார். இந்த மருத்துவ முறையை அறிதல்சார் சொற் பொருள் மருத்துவம் (Cognitive Semantic Therapy) என்று கூறலாம். எண்ணங்களில் ஏற்படும் தவறு, அவற்றை மற்றவர்க்கு வெளிப்படுத்துவதில் ஏற்படும் தவறு ஆகிய இரண்டுமே உளநோய்களுக்குக் காரணமாகின்றன. மருத்துவர் நோயாளிக்குத் தக்க நடத்தைப் பயிற்சி அளிப்பதன் வாயிலாகவும், நோயாளி தன் இயற்கையான ஆற்றலைப் பயன்படுத்துவதன் வாயிலாகவும் உளக்கோளாறுகள் குணப்படுத்தப்படுகின்றன.{{Right|கே.வி.கா.}}
<section end="அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்"/>
<section begin="அறிதல்சார் நடத்தை மருத்துவம்"/>
{{dhr}}
<b>அறிதல்சார் நடத்தை மருத்துவம்</b> உள வழி மருந்துவ முறைகளுள் ஒன்று. இது, அறிதல் இயங்குமுறையும் நடத்தைக் கோட்பாடும் இணைந்த மருத்துவ முறை ஆகும். இந்த மருத்துவ முறையை அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆரன்பெக்கு (Aron T. Beck) என்பவர் 1970-இல் உருவாக்கினார். இந்த மருத்துவ முறை ஆல்பெர்ட்டு எல்லிசு என்பாரின் (Albert Ellis) பகுத்தறிவு மனவெழுச்சி மருத்துவ முறையை (Rational Emotive Therapy) ஒட்டியதாகும்.
மனிதன் புறஉலகின் புலன் காட்சியை எவ்விதம் பெறுகிறானோ அவ்விதமே அவனுடைய நடத்தை. சிந்தனைகள், மனக்கிளர்ச்சிகள் ஆகியன அமைகின்றன என்று பெக்கு கூறினார். அவருடைய கொள்கைப்படி மனிதனின் மனக்கோளாறுகளுக்கு அவனது மனப்பான்மை இன்றியமையாக் காரணியாகும். எடுத்துக்காட்டாக உளக்கோளாறுகளைக் கூறலாம். ஒருவன் தன்னைப் பற்றித் தவறான கருத்துக்கொள்வதால் உளச் சோர்வுக் கோளாறு உண்டாகிறது. இந்நோயாளிக்குத் தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதலும், உண்மை நிலையைத் தவறாகப் புரிந்து கொள்ளுதலும் இயல்பாகி விடுகிறது. இக்கோளாறு உள்ளவர்கள் தம் சுற்றுப்புறச் சூழ்நிலைக்குத் தவறான விளக்கம் தருகிறார்கள். மேலும், இக்கோளாறு உள்ளவரின் செயல்கள் காரணமற்ற-பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட-செயல்களாகத் தோன்றும். ஆனால், நோயாளிக்குச் சரியானவையாகத் தோன்றும். ஆதலின் மனப்பான்மை மாற்றமே இக்கோளாறுகளை நீக்குவதற்கு முதற்படியாகும்.
அறிதல்சார் நடத்தை மருத்துவத்தின் (Cognitive Behaviour Therapy) முதற்படி, நோயாளியின் சிந்தனைகளைத் தவறு என்று உணரவைத்தல் ஆகும். அதற்காக அவர் தொடர்ச்சியாக மருத்துவம் பெற வேண்டும் என்று பெக்கு குறிப்பிட்டுள்ளார். இம்மருத்துவத்தைக் கீழ்வருமாறு முறையாகப் பெறலாம்.
1. தவறான எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதனை நோயாளி முதலில் அறிய வேண்டும்.
2. நோயாளி தன்னுடைய அறிதல்சார் எண்ணங்கள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கின்றன என்பதனை உணர வேண்டும்.
3. தன் தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கு நோயாளி முயலுதல் வேண்டும்.
4. அம்முயற்சியில், தவறான எண்ணங்களையும், திரிபுக் கருத்துகளையும் மாறுபட்ட குணங்களையும் நீக்குவதில் ஈடுபட வேண்டும்.
5. நல்ல சிந்தனைகளை வளர்த்தல் வேண்டும்.
இந்த மருத்துவத்தில் தன்னைத்தானே கட்டுப்படுத்துதல், நடத்தை ஆயத்தம் செய்தல். உளநாடகப் பங்கு ஏற்றல், பயிற்சி, மறுமதிப்பீடு. தன்னைத்தானே கண்காணித்தல் ஆகிய செயல் வகைகள் அடங்கும். அறிதல்சார் நடத்தை மருத்துவர் நோயாளிக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும், சுற்றுப்புறச் சூழ்நிலையைக் காரண காரிய முறையில் அணுகப் பயிற்சி அளிக்கவும், விருப்பு வெறுப்பற்ற முறையினால் ஆராயவும் உதவுகிறார்.
இந்த மருத்துவத்தின் விளைவுகள் மற்ற மருத்துவ முறைகளைவிட நீண்டகாலப் பயனளிப்பனவாக-<noinclude></noinclude>
4796h2qh01rlnrrozdtvhr8mdi8n5hk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/82
250
616589
1939983
1830761
2026-06-05T01:58:31Z
Sridevi Jayakumar
15329
1939983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் மானிடவியல்|58|அறிதல்சார் மானிடவியல்}}</noinclude>இருக்கின்றன எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவமுறை குறிப்பாக உளச் சோர்வுக் கோளாறு, பதற்றம், தலைவலி, மன அழுத்தம், கவலை, எதிர்பாரா நடத்தை ஆகியவற்றைக் குணப்படுத்த உதவி செய்கிறது.{{Right|க.ச}}
<section end="அறிதல்சார் நடத்தை மருத்துவம்"/>
<section begin="அறிதல்சார் மானிடவியல்"/>
{{dhr}}
<b>அறிதல்சார் மானிடவியல்</b>: பண்பாட்டைப் புதிய அணுகு முறையில் அறிய முகிழ்த்த அண்மைக்கால மானிடவியல் பிரிவே அறிதல்சார் மானிடவியல் (Congnitive Anthropology) ஆகும். இப்பிரிவின் ஆய்வுமுறைகள், ஆய்வுப் பரப்புகள், அணுகுமுறைகள் முதலானவை இன ஒப்பாய்வியல் (Ethnology), இனப்பரப்பியல் (Ethnography), இன உயிரியல் (Ethnobiology) முதலான துறைகளுடன் தொடர்புற்றிருப்பதால் இத்துறை இன அறிவியல் (Ethnoscience) என்றும், புலனுணர்வு மானிடவியல் என்றும் கூறப்படும்.
மக்கள் தாம் சார்ந்துள்ள உலகம், தம் சமூகம். பண்பாடு ஆகிய அமைப்புகள், தாம் செய்யும் செயலுக்கான காரண காரியங்கள் முதலானவற்றைப் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரும் அறிந்துகொள்ளும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொண்டுள்ளனவற்றைப் பற்றியும் அறிவதே அறிதல்சார் மானிடவியலாகும். ஒவ்வொருவரின் மனமும் தான் சார்ந்துள்ள உலகப் பொருள்களின்பாலும் அகிலத்தின் பாலும் தானாகப் பெறும் அகநிலை அறிதற் பண்பே ‘அறிவாகும்’, மனிதன் உலகில் காணும் நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் தான் ஈடுபடும்செயல் அடிப்படையிலும் அனுபவங்களைப் பெற்று, அந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே உலகத்தின் அமைப்பினைத் தன் மனத்திரையில் காண்கிறான். இது அவரவர் அகநிலை அறிவாக அமைந்து, இதன் வழியே அகத்தேயமைந்த உலகத் தோற்றத்தினையும் (Internalized Model of the World) காட்டும். இந்த அறிவைப் பெறுவதில் உணர்தல், கற்றல், நினைவாற்றல், மொழி முதலானவை துணை நிற்கின்றன.
மக்களின் சிந்தனையில் பிறக்கும் அக உணர்வுகளின் அடிப்படையில் புறச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகள் அனைத்தின் முழுவடிவமே ‘பண்பாடாகும்’. மனித மனம் மிகவும் சிக்கலான அமைப்புகளையுடையதாகும். சூழ்நிலைக்கும் காலத்திற்கும் ஏற்ப மனிதச் சிந்தனை பல்வேறு முறைகளில் செயற்பட, அதனின்று வெளிப்படும் புற நிகழ்வு சமூகத்தில் ஒருவடிவமாகவும் முறைமையாகவும் நிலைபெறுகிறது. இவையே பொதுமையாகக் காணப்படும்போது பண்பாட்டுக் கூறுகளாகவும் (Cultural Traits), பண்பாட்டு முழுமைகளாகவும் (Cultural wholes) உருப்பெறுகின்றன. இவை பண்பாட்டின் உட்பொருள், விதிகள், வகைபாடுகள் அனைத்தையும் காட்ட வல்லன.
ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்பது அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனால் அல்லது பலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், வழக்காறுகள், விதிமுறைகள் ஆகியவற்தை அறித்து அவற்றின்படி நடப்பதைக் குறிக்கும். இது ஓர் இயற்பொருள் அன்று; செயற்பாடுகள், பொருள்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் தொகுப்பேயாகும். இவை அச்சமுதாய மக்களின் மனத்தில் ஊன்றிக் காணப்பட்டு, அவர்கள் செயல்களில் ஒன்றோடொன்று தொடர்புடன் வெளிப்படக் கூடியவையாகும். இப்பண்பாட்டு விளக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே அறிதல்சார் மானிடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு மொழி தன்னைப் பேசுபவர்களைச் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தன்னைத் தொடர்பு படுத்திப் பார்க்கவும். இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை விளக்கிக் கூறவும். அவற்றைத் தம் சமுதாயச் செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி அறியவும் வழிவகை செய்கிறது. பண்பாட்டு அமைப்புகளுக்கும் அப்பண்பாட்டினரின் மொழிச் சொற்களின் பொருளுக்கும் ஒத்த பண்புகள் காணப்படுகின்றன. மொழி பண்பாட்டின் ஓர் உறுப்பாகையால் அதன் தன்மைகளை அறிதல்சார் மானிடவியலாளர்கள் பண்பாட்டோடு இணைத்து ஆராய்கிறார்கள்.
அறிதல்சார் மானிடவியலாளர்கள், மக்கள் பல காலமாகத் தம் பொருள்கள், நிகழ்ச்சிகள், செயற்பாடுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தும் சொற்களை ஆராய்ச்சி புசிலதில் நாட்டம் செலுத்தி வந்தனர். ஏனெனில், மொழியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகின்றன. மொழியின் வாயிலாகத்தான் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள இயலுகிறது. எனவேதான், தொடக்கக் கால அறிதல்சார் மானிடவியல் ஆய்வுகள் அனைத்தும் மொழியையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தன. சில எடுத்துக்காட்டுகளை இங்குக் காணலாம். முதலாவதாக, ஒருவன் குடி மயக்கத்தில் இருக்கும்போது வெளிப்படுத்தும் சொற்களிலிருந்து அவனது மயக்க மன நிலையில் உலக நோக்கு அறியப்படுகிறது. இரண்டாவதாக ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பது குறித்து ஆராய்தலைக் கூறலாம். எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழியில் உள்ள ‘அம்மா’ என்னும் சொல், ‘தாய்’, ‘சில பெண்பால் உறவினர்கள்’, ‘மாரியம்மன் கடவுள்’. ‘உதவி’ ஆகிய பொருள்-<noinclude></noinclude>
jj2nsq83m0r7bjy5zco7x6tp03a41w9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/84
250
616669
1939984
1830765
2026-06-05T01:59:30Z
Sridevi Jayakumar
15329
1939984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல்சார் முரண்பாடு|60|அறிதல்சார் முரண்பாடு}}</noinclude>களிடம் சேகரித்துக் கணிப்பொறியின் மூலம் பின்னாளில் பகுப்பாய்வு செய்யவும் இயலும். ஆக துல்லியம், நிரூபிப்பு, கணிப்பொறி ஆய்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கும் அறிதல்சார் மானிடவியலில் இந்தப் புதிய முறை பழைய முறையை விட அறிவியல் அடிப்படையில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.{{Right|ஆ.செ.}}
<b>துணை நூல்கள்</b><br>
<b>Stephen, A.T.,</b> Cognitive Cognitive Anthropology, Holt Rinehart and Winston, New York, 1969.<br>
<b>Hymes, D., (Ed).</b> Language in Culture and Society”, Harper and Row, New York. 1964.
<section end="அறிதல்சார் மானிடவியல்"/>
<section begin="அறிதல்சார் முரண்பாடு"/>
{{dhr}}
<b>அறிதல்சார் முரண்பாடு</b> என்பது தனி மனிதன் ஒரு பொருள் அல்லது செயல் அல்லது ஒரு மனிதர் மீது கொண்டுள்ள கருத்துக்கும் அவன் நடத்தைக்கும் இடையே அவன் காணக்கூடிய முரண்பாடு, அதன் காரணமாக அவன் உள்ளத்தில் தோன்றும் அமைதியின்மை போல்வனவற்றைக் குறிக்கும்.
ஒருவன் கருத்துக்கும் நடத்தைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதை அவன் விரும்புவதில்லை. அம்முரண்பாட்டினை அவன் சில நேரங்களில் ஏற்றுக்கொள்வதும் இல்லை. அது மட்டுமன்றி அதனை ஏதோ காரணம் காட்டி விளக்கவும் முற்படுகிறான். எடுத்துக்காட்டாகக் குடிப்பழக்கம் உள்ள ஒருவன். குடி உடலைக் கெடுக்கும் என்று தெரிந்திருப்பினும் தொடர்ந்து குடிக்கிறான். இந்த முரண்பாட்டினை (Dissonance) விளக்க அவன் பல்வேறு காரணங்களைக் கூறலாம். குடிப்பழக்கம் பலர் கூறுவதைப் போல் தீமையானது அன்று என்றோ, மதுவகைகள் பசியியைத் தூண்டிச் சீரண சக்தியைப் பெருக்கக் கூடியன என்றோ அவன் அமைதி கூறலாம். இந்த முயற்சி எப்பொழுதும் வெற்றி பெறும் என்று சொல்ல இயலாது. அதனால், முரண்பாட்டு நிலை தொடர்ந்து, அவனிடம் மன அமைதியின்மையினைத் தோற்றுவிக்கும். இத்தகைய முரண்பாட்டு நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி இலியான் பெசுடிங்கர் (Leon Festinger) என்னும் உளவியல் அறிஞர் ஆராய்ச்சி செய்துள்ளார். தம்முடைய ஆராய்ச்சிகளை “அறிதல்சார் முரண்பாட்டுக் கோட்பாடு” (Theory of Cognitive Dissonance) என்னும் நூலில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பெசுடிங்கர் இந்த அமைதியின்மையை அறிதல்சார் முரண்பாடு என்று கூறினார். இந்நிலைமை ஒருவனை இதனின்றும் விடுபடத் தூண்டுகிறது. முரண்பாட்டினை அதிகரிக்கக்கூடியவற்றைத் தவிர்க்கவும் இது தூண்டவல்லது. ஒருவனுடைய அறிவு பல்வேறு கருத்துகளின் தொகுப்பாகும். அறிவு எனப்படுவதில் தன்னைப்பற்றிய கருத்துகள் மட்டுமன்றித் தன்னுடைய சூழ்நிலை நடத்தை பற்றிய கருத்துகளும் அடங்கும். இவற்றினிடையே முரண்பாடு நிலைமை எழுவது இதனைக் குறைக்க (Dissonance Reduction) ஒருவனைத் தூண்டும் வலுவான ஊக்கியாகும் என்று பெசுடிங்கர் கருதுகிறார்.
தனிமனிதனின் கருத்துகள், மனப்பான்மைகள், மதிப்புகள், நம்பிக்கைகள், செயல்கள் ஆகிய அறிவுசார் பகுதிகளிடையே முரண்பாட்டு நிலை ஏன் எழுகிறது என்பதனையும் பெசுடிங்கர் விளக்கியுள்ளார். முன்னரே ஒருவன் பெற்றுள்ள அறிவுடன் பொருந்தாத சில புதிய செய்திகள் அல்லது நிகழ்ச்சிகள் முரண்பாட்டினைத் தோற்றுவிக்கலாம். அல்லது அன்றாட வாழ்க்கையின் ஒரு பண்பாகவும் இம்முரண்பாடு இருத்தல் கூடும். ஏனெனில், வாழ்க்கையில் எழும் நிலைமைகள் யாவுமே முரண்பாடின்றித் திட்டவட்டமாக அமைபவை எனக் கொள்ள வியலாது. பல்வேறு காரணிகள் அறிவின் பகுதிகளிடையே பொருத்தமின்மையைத் தோற்றுவிக்கக் கூடும். இந்நிலையைத் தோற்றுவித்தலில் சமுதாயப் பழக்கங்கள் பண்பாட்டுத் தொடர்புடைய நடத்தை முறைகள் ஆகியவற்றுக்கும் பங்குண்டு, முரண்பாட்டு நிலை இதனைப் போக்க உதவும் பதிய செய்திகளைத் தேடிப்பெற ஊக்குவிக்கும். ஒருவன் தன் அறிவின் அமைப்பில் இருக்கும் முரண்பாட்டிற்கும் ஓர் உயர் அளவு உண்டு. ஒவ்வாத பகுதிகளில் எப்பகுதிக்கு மாற்றத்தை எதிர்க்கும் வலிமை குறைவாகக் காணப்படுகிறதோ அப்பகுதியினைச் சார்ந்து இவ்வுயர் அளவு அமையும் என்கிறார் பெசுடிங்கர்.
முரண்பாட்டு நிலைமையினைச் சமாளித்தலில் தனியாள் வேற்றுமைகள் இருத்தலைப் பெசுடிங்கர் சுட்டிக்காட்டுகிறார். சிலருக்கு முரண்பாட்டு நிலைமையினைப் பொறுத்துக்கொள்ளும் திறன் மிகக் குறைந்து காணப்படும். இவர்கள் தீவிரக் கருத்துகளைக் கொண்டிருப்பர். முரண்பாட்டு நிலைமையினை உள்ளத்தில் உருவாக்குவதில் சமூகக் குழுவின் கருத்துகளுக்குச் சிறப்பான பங்கு உள்ளது. முரண்பாட்டு நிலைமைக்கும் நடத்தை பற்றிய முடிவுகளை மேற்கொள்ளலுக்கும் இடையேவுள்ள தொடர்பு பற்றியும் பெசுங்கர் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். பெசுடிங்கரின் கருத்துகள் நடத்தையியலுக்கு மிகப் பயனுள்ளவை ஆகும். அறிவு வளர்ச்சியின் பொருட்டு ஊக்குவித்தலில் முரண்பாட்டுக் குறைப்பு இன்றியமையாக் காரணியாகும் என்பதை இவர் வலியுறுத்துகிறார்.{{nop}}<noinclude></noinclude>
2pa7jm6wk27iokai1puzj6egvpqjh0o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/85
250
616676
1939985
1830771
2026-06-05T02:00:19Z
Sridevi Jayakumar
15329
1939985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|அறிதல் வளர்ச்சி|61|அறிதல் வளர்ச்சி}}</noinclude><b>துணை நூல்</b>:<br>
<b>Lyle E. Bourne, Jr. Bruce, R. Ekstrand,</b> Psychology, its Principles and Meanings, New York, 1982.
<section end="அறிதல்சார் முரண்பாடு"/>
<section begin="அறிதல் வளர்ச்சி"/>
{{dhr}}
<b>அறிதல் வளர்ச்சி</b>: மக்கள் குழந்தைப் பருவத்தில் சில அறிதல்சார் நிலைகளைக் கடந்து முழுமையான அறிதல் நிலையினை அடைகின்றனர். பியாசே என்னும் உளவியலறிஞர் (Piaget) குழந்தைகள் தம் சூழ்நிலைக்கேற்றவாறு எவ்வாறு ஒத்துப் போகிறார்கள் என்பதனை அறிவதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். வளரும் குழந்தைகள் சங்கிலித் தொடர் போன்ற சில வளர்ச்சி (Cognitive Development) நிலைகளைக் கடந்து செல்வதை அவரது ஆய்வுக் காட்டியது. அவர், ‘இக்குழந்தைகள் உலக அனுபவம் பெறும்பொழுது சூழ்நிலைகளின் தன்மையினைப் பற்றிப் பெரிதும் சிக்கலான எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர்; அவற்றைப் பெரும்பாலும் மனத்தளவிலேயும் அடையாளங்கள் வாயிலாகவுமே கையாளுகின்றனர்’ என்றும் கண்டார்.
புலனியக்கநிலையின் தொடக்கத்தில் குழந்தையிடம் உறிஞ்சுதல், பிடித்தல் என்னும் இருதிறன்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு மாதத்திற்குப் பிறகு 4 மாதம் வரையில் குழந்தை தான் காணும் பொருள்களைப் பிடித்துக்கொள்ள முயல்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் மட்டுமே இருப்பனவாகவும், கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள பொருள்கள் இல்லாதனவாகவும் உணர்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மை மறைக்கப்பட்டவுடன் அதனைப் பற்றிய உணர்வு அல்லது எண்ணம் மறைந்து விடுகிறது. அதாவது பொருள் நிலைத்தல் என்னும் உணர்வு குழந்தையிடம் காணப்படுவதில்லை.
இதற்கு அடுத்த நிலையில் தனக்கு விருப்பமான அனுபவம் அல்லது ஒலியை மீண்டும் பெற விரும்புகிறது. அதனால், அவ்வொலி கேட்கும் பொழுது குழந்தை என்ன செய்து கொண்டிருந்ததோ (சிரிப்பு, கைகளை ஆட்டுதல் போன்ற செயல்கள்) அதனையே மறுபடியும் செய்கிறது. இதனையடுத்துத் தனக்கு மகிழ்ச்சி ஊட்டிய அந்த ஒலி எழும் என்று எண்ணுகிறது. இந்த உணர்வைப் பியாசே இனிய காட்சிகளை நீடிக்க வைக்கும் மாயாசாலங்கள் என்று கூறுகிறார். இந்நிலையில் குழந்தை பொருள் நிலைத்தலை உணரத் தொடங்குகிறது. கீழே விழுந்து விட்ட பொம்மைக்காகச் சிறிது நேரம் இங்குமங்கும் பார்க்கிறது. திரைக்குப் பின் தாய் மறைந்து கொண்டால் திரைக்குப்பின் வந்து அவளைக். கண்டுபிடிக்கிறது.
ஓராண்டு முடிவுறும்போது குழந்தை புலனியக்க நிலையின் அடுத்த கட்டத்தை அடைகிறது. குழந்தை இப்பொழுது மீட்டறியும் (Recall) திறன் அடைகிறது. தன் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பொருளை அது எந்த இடத்தில் முதலில் இருந்ததோ அந்த இடத்தில் மட்டுமே இருக்கும் என்று பார்க்கிறது. குழந்தை 1½ வயது அடையும் பொழுது பொருள் மறைக்கப்பட்டாலும் அது எங்காவது இருக்கலாம் என்னும் உணர்வை அடைகிறது.
இரண்டு முதல் ஏழு வயதுவரையுள்ள குழந்தை தன் எண்ணங்களைப் பேசக் கற்றுக்கொள்கிறது. உலகின் அசையும் அசையாப் பொருள்களைக் காண்கிறது. அதன் அறிதல் எல்லை விரிவடைகிறது. ஆயினும் பிரித்தறிதல் என்னும் திறனைக் குழந்தை முழுமையாக அடைவதில்லை. இந்நிலையில் குழந்தைகள் அசையும் அசையாப் பொருள்களின் இயல்பு வேறுபாடுகளை அறிவதில்லை. தேவதைக் கதைகளை அவர்கள் உண்மை என எண்ணுகின்றனர். தம்மைச் சுற்றியுள்ள உலகினுக்கும் தமக்குமே முதன்மை கொடுக்கின்றனர். இதனைத் தன்முனைப்புச் சூழ்நிலை (Egocentrism) என்று பியாசே கூறுகிறார். இரண்டு வயதுக் குழந்தைக்கு அன்னை பாடும் ‘காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா’ என்னும் பாடல் குழந்தைப் பொருள் பொதிந்ததாக மட்டுமன்றி, குழந்தை தானே ஒரு இன்றியமையாதவன் (VIP) என்றும் தனக்காகவே இயற்கையும் உலகும் இயங்குகின்றன என்றும் உணர்த்துவதாகவும் உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் எதனைக் காண்கின்றனரோ அதனால் அவர்கள் முழுமையாக ஈர்க்கப்படுகின்றனர். பின்னியக்கம் வளர்ச்சி பெறாததே இதற்குக் காரணம்.
ஏழு முதல் பதினொரு வயது வரையில் உருவம் கொண்ட-காணக்கூடிய -செயல்களை மட்டுமே குழந்தைகள் அறிகின்றனர். உருவிலாப் பொருள் பற்றிய சிந்தனை அல்லது அறிவு அவர்களுக்கு இப்போது ஏற்படுவதில்லை. ஆனால், பின்னியக்கப் புலனுணர்வுத்திறன் ஏற்பட்டு விடுகிறது. இதனைப் பியாசே ஒரு சோதனை வாயிலாக விளக்கினார். பதினொரு வயதுக்குட்பட்ட சில குழந்தைகளிடம் மரத்தாலான இருபது மணிகளைக் கொண்ட பெட்டியைக் கொடுத்தார். அதனுள் இருமணிகள் வெண்மணிகளாகவும் மற்றவை நீலமணிகளாகவும் இருந்தன. குழந்தைகளிடம் மரமணிகளைக் கொண்டு நீண்ட மாலைசெய்ய முடியுமா நீலமணிகளைக் கொண்டு நீண்டமாலை செய்யமுடியுமா என்று கேட்டதற்கு 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ‘நீலமணிகளைக் கொண்டு’ என்று கூறினார்கள். இக்கேள்வியைக் கேட்டதும் 9, 10 அல்லது 11 வயதுக் குழந்தைகள் நகைத்தனர். அவர்கள் எல்லா மணி-<noinclude></noinclude>
pdchjmmoeoojy52ltkop0nw6s7jauhh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/86
250
616684
1939986
1839598
2026-06-05T02:01:10Z
Sridevi Jayakumar
15329
1939986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதிறன்|62|அறிதிறன்}}</noinclude>களும் மரத்தாலானவை என்ற புலன் காட்சியை மனத்தில் கொண்டிருந்தனர். இப்பருவத்தில் குழந்தைகள் மற்றவர்கள் எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகித்து அறியும் திறனும் அடைகிறார்கள்.
பதினொன்று முதல் பதினைந்து வயது வரையிலான பருவத்தில் குழந்தைகள் புலன்கடந்த சிந்தனைத் திறன் பெறுகின்றனர். இப்பருவத்துக் குழந்தைகள் சிலரிடம் பல்வேறு விதப் பொருள்களைக் கொடுத்து அவற்றை மிதக்கக்கூடிய பொருள்கள், மிதக்காத பொருள்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுமாறு கூறப்பட்டது. பல்வேறு எடைகள் உள்ள கனசதுரங்கள், காகிதங்கள், மூடி, கூழாங்கற்கள் போன்ற பொருள்கள் இருந்தன. பியாசே குழந்தைகளிடம் ஒரு பாத்திரத்தில் நீரைப் பாதியளவு நிரப்பி அதில் இப்பொருள்களைச் சோதனை செய்யுமாறு கூறினார். சில பொருள்கள் ஏன் மிதக்கின்றன மற்றவை ஏன் மூழ்கி விடுகின்றன என்று காரணம் கேட்டார். எட்டு ஒன்பது வயதுக் குழந்தைகள் அவற்றுள் வெவ்வேறு பொருள்களுக்குத் தனிப்பட்ட காரணங்களைக் கூறினார்கள். ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆர்க்கிமிடிசின் மிதக்கும் விதியையும் தாம் சோதித்த பொருள்களையும் இணைத்து விடை கூறினார்கள். பொருள்களைப் பற்றிய புலன் கடந்த சிந்தனைத்திறன் 11 வயதுக்குப் பிறகு குழந்தைகளிடம் காணப்படுகிறது.
பியாசேயின் மேற்குறிப்பிட்ட சோதனைகளையொட்டி புரூனர் (Bruner) என்பாரும் பல சோதனைகளை நிகழ்த்தியுள்ளார். பியாசேயின் சோதனைகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் திட்டவட்டமான அறிதல்சார் வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன என்னும் உண்மையை உளவியல் ஆய்வாளர்களுக்குத் தெளிவாக்கின. ஆயினும், பியாசேயின் அறிதல்சார் வளர்ச்சி நிலைகள் எல்லாக் குழந்தைகளிடமும் ஒன்று போலக் காணப்படுவதில்லை. மேலும் வளர்ச்சி நிலைகள் பண்பாட்டுப் பொருளாதாரப் பின்னணிகளால் மாற்றம் அடையக்கூடும். பியாசேயின் வளர்ச்சி நிலைக்கருத்துகள் சீர்மைச் சூழ்நிலைக்குப் பொருந்துவனவாகும்.{{Right|கு.இரா.}}
<section end="அறிதல் வளர்ச்சி"/>
<section begin="அறிதிறன்"/>
{{dhr}}
<b>அறிதிறன்</b> என்பது ஒருவர் பேசுவதைப் பிறிதொருவர் விளங்கிக் கொள்ளும் பான்மையாகும். இது கேட்பவரை மட்டுமன்றிப் பேசுகிறவரையும் பொறுத்து அமைகிறது.
அறிதிறன் அளவு பேசுபவர் கேட்பவர் தொடர்பு, சூழல், செய்தி, அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக ஆங்கிலம் அல்லது இந்தியினை இரண்டாம் மொழியாக நன்கு பயின்ற ஒருவர் வானொலியில் ஒலிபரப்பப்படும் ஆங்கில அல்லது இந்திச் செய்தியினைப் புரிந்து கொள்ளுதல் தொடக்க நிலையில் அரிதாக உள்ளது. ஆனால் பயிற்சி, பழக்கம், ஈடுபாடு ஆகியவற்றால் அவர் அதைக் காலப்போக்கில், எளிதில் விளங்கிக்கொள்ள முடிகிறது. இது போன்று ஆங்கிலத் தாய்மொழியாளர் ஒருவர் நேருக்கு நேர் நின்று பேசினாலும் ஆங்கிலம் பயின்ற ஒருவன் தொடக்க நிலையில் அதனை நன்கு விளங்கிக் கொள்ளுவது அரிதாக உள்ளது.
அறிதிறன் பிறமொழிக் கல்வியிலும், பிறமொழி அறிவிலும் அளவிட்டு அறியக்கூடிய ஓர் ஆற்றல் ஆகும். பிறமொழியைப் பயிலும் ஒருவன் கல்வி நிலையத்தில் அல்லது தனியார் ஒருவரிடம் அதனைக் கற்று அறிந்து கொள்ளும் திறனில் பயிற்சி பெறுகிறான். பிறமொழியாளரோடு நாடோறும் உறவாடி உரையாடும் வாய்ப்பும் தேவையும் உடைய ஒருவன், தன் எண்ணங்களை அவர்களுக்கு வெளியிட்டு அவர்களின் எண்ணங்களைப் பெற்றுக்கொள்ளுகிறான். இங்குப் பிறமொழி அறிவு இன்றியமையாததாகிறது. ஏற்புத்திறன் (Receptive Control) வெளியிடுதிறன் (Productive Control) ஆகிய இருநிலைகளிலும் அல்லது ஏற்புத்திறனில் மட்டுமேனும் இருவருக்கும் பயிற்சி ஏற்பட்டால்தான் இது நிகழக்கூடியது. பிறமொழியைப் புதிதாகப் பயிலும் ஒருவனுக்கும். பிற மொழியாளனோடு தொடர்பு கொள்ளும் ஒருவனுக்கும் செய்தித் தொடர்பில் துணை நிற்பது அறிதிறனேயாகும். பிறமொழியைப் புதிதாகப் பயிலும் ஒருவனது அறிவின் அளவுக்கு அறிதிறனும், இருவேறுபட்ட மொழியாளர் தொடர்பு கொள்ளும் அளவுக்குத் தத்தம் அறிதிறனும் (Mutual Intelligibility) அடிப்படைகளாகின்றன.
ஒருவன் தன் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஏதேனும் பிறிதொரு மொழியைக் கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அப்பிறமொழியில் அவனுக்குத் தொடர்பும் கேட்டல் பயிற்சியும். ஒலித்தல் - பேசுதல் பயிற்சியும் ஏற்படும் போது, படிப்படியே அவன்பால் அதனை அறியும் திறன் வளருகிறது. இதற்கடுத்த நிலையில் அவனுக்கு அம்மொழியின் ஒலியமைப்பு, ஒலி வேறுபாடு, இலக்கண அமைப்பு, சொற்கள் தொடர்கள், வாக்கியம், அம்மொழி பொருள் உணர்த்தும் நெறி ஆகியவற்றில் ஏற்படும் இடையறா ஈடுபாடும், தக்க பயிற்சியும் அறிதிறன் வளர்ச்சிக்குத் துணை செய்கின்றன.
பிறமொழியைப் பயிலுகிறவர்களின் அறிதிறனைக் கண்டறியத்தக்க பல அறிதிறன் தேர்வு ஆய்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே கல்வி வல்லுநர்களா-<noinclude></noinclude>
81y0v0f9wtpqem3qyywvno4ndg47sym
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/88
250
616699
1939987
1839603
2026-06-05T02:02:05Z
Sridevi Jayakumar
15329
1939987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதிறன்|64|அறிதுயில்}}</noinclude>ஆகியவற்றால் ஏற்படுவது. இது பெரும்பாலும் அண்மையில் வழங்கக்கூடிய இருமொழியினருக்குள் அமைவதாகும். இங்கு நிகழ்கிற கருத்துப் பரிமாற்றத் தொடர்பும் தத்தம் அறிதிறன் அடிப்படையில் நிகழ்வதாகும். பொதுவாக இருவேறுபட்ட மொழியினருக்குள் தத்தம் அறிதிறன் எளிதாக அமைவதில்னல.
சில சூழல்களில் ஒருமொழியைப் பேசுகிறவர்கள் பிறிதொரு மொழியின் ஏற்புத்திறனைப் பெற்றிருப்பர். அவர்கள் அம்மொழியில் முழு அளவில் வெளியிடுதிறன் பெறாதிருப்பினும் பிறமொழியாளர் ஒருவரோடு எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. அத்தகைய குறைநிலை இருமொழி வழக்கும் (Semi-bilingualism) தத்தம் அறிதிறன் அடிப்படையில் நிகழ்வதாகும்.
தத்தம் அறிதிறனை அளந்தறியப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இருவேறுபட்ட கிளைமொழியாளர் அல்லது மொழியாளர் ஒருவரையொருவர் எந்த அளவுக்குப் புரிந்து கொள்ளுகின்றனர் என்பதையும், அவர்கள் அத்திறனில் எந்த நிலையில் வேறுபடுகின்றனர் என்பதையும் அறியத்தக்கதாகச் சொல், வாக்கியம் ஆகியவற்றில் தேர்வு ஆய்வுகள் நிகழ்த்தலாம். ஆய்வாளர் தாம் அளவிட விரும்பும் கிளைமொழியின் அல்லது மொழியின் சிறு பகுதியைப் பதிவு செய்துகொண்டு, அதில் சில குறிப்பிட்ட கருத்துக் குறிப்புகளை (Points of contents) எண்ணிடங்களாகக் (Counts) குறித்துக் கொள்ளுகிறார்; பின்னர் ஒவ்வொரு கிளைமொழி அல்லது மொழி பேசுகிறவர்களைக் கேட்கச் செய்து அதில் அவர்களின் அறிதிறன் அளவினை எண்ணிடங்களின் அடிப்படையில் விழுக்காடு கணக்கிட்டுக் கொள்ளுகிறார். ஒருவர் பிறிதொரு கிளைமொழியின் எல்லாக் கருத்துக் குறிப்புகளையும் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளுதல் இயலாது என்பதை இவ்வகை ஆய்வு வெளிப்படுத்தும்.
நெருங்கிய ஒற்றுமை தத்தம் அறிதிறனுக்கு அடிப்படையாக அமைகிறது. எனினும் ஒருசில வேறுபாடு தத்தம் அறிதிறனை அறவே அகற்றி விடுவதில்லை. சில வேறுபாடுகன் இருப்பினும், சில பங்கு பெறுவியல்புகள் அடிப்படையில் ஒருவரையொருவர் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரேமொழி பேசுகிறவர்களிடத்தில் காணப்படும் வேறுபாட்டிற்குக் காரணம், அவர்கள் மொழியைப் பேசும்போது ஏற்படும் வழிநிலை ஓசையும் (Channel Noice), தனிப்பட்ட ஒருவருடைய பேச்சில் ஏற்படும் ஒழுங்குமுறை ஓசையும் (Code Noise) ஆகும். இவ்வகை ஓசைகள் ஓர் எல்லை வரை கருத்துத் தொடர்பை இல்லாமல் செய்து விடுவதில்லை. எனினும் சில வேளைகளில் இவை கருத்துத் தொடர்பிற்கு இடையூறு விளைவிக்கும் தடைகளாக உள்ளன; அறிதிறனைக் குறைத்தும் விடுகின்றன.
தெளிவான தொடர்பை வழிநிலை ஓசை ஓரளவு குறைப்பினும் பேச்சில் பெரும்பான்மையான இயல்புகளில் திரிபு ஏற்படாமல் இருக்கும் வரை கருத்துப் பரிமாற்றத்தில் தடை ஏற்படுவது இல்லை. இருவரின் மொழியில் ஏற்படும் வரையறைக்குட்பட்ட புறஓசை (External Noise) ஒழுங்கு முறை எனப்படும். இரண்டு தனியார் மொழிகளில் இந்தப் புறவோசை இல்லாமல் அமைந்து வழிநிலை ஓசை மிகுதியாக இருப்பினும் தொடர்பு தடைப்படுவதில்லை. இரண்டு தனியார் மொழிகளுக்குள் ஒழுங்கு முறை ஓசை மிகுதியாக அமைந்தால் வழிநிலை ஓசை குறைவாக இருந்தால் மட்டுமே அவற்றிடைவே தொடர்பு ஏற்படும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக நம் நாட்டுத் தொலைபேசியில் மிகுந்த வழிநிலை ஓசைக்கிடையே தன் தாய்மொழியைப் பேசுகிற ஒருவரை விளங்கிக்கொள்ள முடிவதனைக் கூறலாம். ஆனால், நாம் அறிந்த பிறமொழியைப் பேசுகிற ஒருவர் நம் முன்னிலையில் நின்று நேருக்கு நேராகப் பேசினாலும் அதை விளங்கிக் கொள்ளுவதில் சிக்கல் உள்ளது. இதற்குக் காரணம் அவர் பேச்சில் இடம் பெறும் ஒழுங்கு முறை ஓசையே ஆகும். இத்தகைய பிறமொழி பேசுகிறவர் பேச்சைத் தொலைபேசியில் கேட்டு அறிந்துகொள்ளுதல் அதனினும் அரிது, இவ்வாறாக, அறிதிறன் சில தடை ஓசைகளால் குறைபடுதலும் உண்டு.{{Right|மோ.இ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Davies, Alen, E.D.</b> Language Teaching Symposium, Oxford University Press, Oxford, 1970.<br>
<b>Hockett, CF.,</b> A Course in Modern Linguistics, The Macmillan Company, New York. 1958.<br>
<b>Malmberg, Bertel, Ed.,</b>Manual of Phonetics, North Holland Publishing Company, Amsterdam, London, 1970.
<section end="அறிதிறன்"/>
<section begin="அறிதுயில்"/>
{{dhr}}
<b>அறிதுயில்</b> : ‘இப்னோ’ என்னும் இரேக்கச் சொல்லுக்குத் ‘துயில்’ என்பது பொருள். அறிதுயில் என்பது, கருத்தேற்றல் முறையில் ஒருவரைத் துயிலச் செய்வதாகும். அறிதுயிலில் செலுத்தப்பட்டோரைத் (செல்வோரைத்) துயில்வோர் என்றும், துயில்நிலைக்குச் செலுத்துவோரைத் துயிற்றுவோர் என்றும் கூறுவர். ஆண்டன் மெசுமர் (Anton Mesmer) கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உரு-<noinclude></noinclude>
gitkh3m5rhvfuft20bylowqrxg385xg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/91
250
616859
1939988
1842480
2026-06-05T02:03:32Z
Sridevi Jayakumar
15329
1939988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிதுயில் மருத்துவம்|67|அறிதுயில் மருத்துவம்}}</noinclude>துயில்வோரைக் குறிப்பிட்ட நேரம் தூங்கவிட்டுப் பின்னரும் முறையில் துயிலெழுப்ப வேண்டும். பின்பு இரண்டு கைகளையும் நீட்டி, உள்ளங்கைகளையும் விரல்களையும் மேல் நோக்கித் திருப்பி அவரது காலிலிருந்தோ முழங்காலிலிருந்தோ மேல் நோக்கி முடிவரை தொட்டு அல்லது தொடாமல் பலமுறை தடவவேண்டும். பின்னர் அவர்தம் நெற்றி மீதும், கண் இரப்பைகள் மீதும் வாயினால் மெல்லிய காற்று உண்டாக ஊதி “விழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினால் விழித்துக் கொள்வர். விழிக்கவில்லை என்றால் ஒரு நிமிடம் அந்நிலையிலேயே இருக்கவிட்டுப் பின் “கண்களைத் திறந்துபாருங்கள்” என்று கட்டளையிட்டால் அவர் விழிப்பார். அதுவும் இல்லை என்றால் “நான் இருபது எண்ணிய உடன் விழித்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறி “ஒன்று-இரண்டு-மூன்று ...” என ஆழ்ந்த குரலில் இருபது எண்ணியவுடன் கையைத் தட்டினால் விழித்துக் கொள்வர்.{{Right|பி.எஸ்.வி.}}
<section end="அறிதுயில்"/>
<section begin="அறிதுயில் மருத்துவம்"/>
{{dhr}}
<b>அறிதுயில் மருத்துவம்</b> நெடுங்காலமாக உளநோய் மருத்துவர்களாலும் (Psychiatrists) உளவியலாளர்களாலும் உளநோயின் காரணங்களைப் பகுத்தறியவும் அதனைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட முறைகளுள் ஒன்றாகும். சில ஆண்டுகட்கு முன்பு அமெரிக்க மருத்துவக் கழகத்தின் சிறப்புக் குழு இம்முறையினைச் சிறந்ததெனப் பரிந்துரைத்துள்ளது.
அறிவியல் உலகிற்கு இம்முறை புதியதன்று. நம் நாட்டுப் பழம்பெரும் நூல்களிலும் இலக்கியங்களிலும் முனிவர் பலர் தாமாகவே அறிதுயில் நிலைக்குச் சென்றதாகவும், பிறரை இந்நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அறிதுயில் முறையினை முதல் முதலில் உளப்பிணிகளைத் தீர்ப்பதற்கு மருத்துவமுறையில் பயன்படுத்தியவர் மெசுமர் (Mesmer) என்ற பிரான்சு நாட்டு மருத்துவராவார். சேனே (Janct). சார்கோ (Charcot) போன்றவர்கள் இதனை உளநோயின் ஒரு கூறாகக் கருதினர். எனினும் இம்முறையின் மருத்துவப் பயன்களை உலகோர்க்கு உணர்த்திய பெருமை எரிக்சன் (Erikson) என்பவரையே சாரும்.
அறிதுயில் மருத்துவம் என்பது, ஒரு குறிப்பிட்ட உள மருத்துவ முறையைக் குறிப்பது எனினும் வழக்கில் இதனைப் பல நோக்கங்கள் கருதிப் பயன்படுத்துவாரும் உளர். சிலர் நீண்ட அறிதுயில் நிலையை ஏற்படுத்தி அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்களால் உண்டாகும் உளக்கோளாறுகளைக் குணப்படுத்தலாம். வேறு சிலர், மறக்கப்பட்ட கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்து, அதனால் உள, உடல் நோய்களைக் குணப்படுத்தும் முறையை அறிதுயில் மருத்துவம் என்று கூறுவர். ஒடுக்கப்பட்ட மனவெழுச்சிகளை (Repressed Emotions) வெளிக் கொணர்ந்து அதனால் மனநோய்களைக் குணப்படுத்துவதையும் அறிதுயில் மருத்துவம் என்று கூறுவர்.
நேரடியாக நோயின் அறிகுறிகளை (Symptoms) நீக்குவதும் அறிதுயில் மருத்துவத்தின்பாற்படும்.
ஒருவரை அறிதுயில் நிலைக்குக் கொண்டுவரப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. இவைகளுள் எரிக்சன் (Erikson) என்பவரின் கைதூக்கல் முறை (Hand Levitation), கண்களைக் குவித்தல் முறை (Ocular Fixation). கற்பனைக் காட்சி முறை (Visua} Imagery), தசைகளை இறுக்கித் தளர்த்தல் (Tension-Relaxation) போன்ற பலமுறைகள் உண்டு. கிரோகர் (Kroger. 1963) என்பவர் இம்முறைகளை விளக்கமாகக் தம் நூலில் விவரித்துள்ளார். நடைமுறையில் இம்முறைகள் தேவைக்கு உகந்தாற்போல் மாற்றியமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையிலும் நோயாளி அமைதியான சூழ்நிலையில் மருத்துவர் திரும்பத் திரும்பக் கூறும் சொற்களில் கவனம் செலுத்தத் தூண்டப்படுகிறார். இந்நிலையில் மருத்துவர் கூறுவதை நோயாளி மனத்தாலும் உடலாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை பெறுகிறார். வெளி உலகத் தூண்டல் அனைத்தும் முழுமையாகச் செயல் இழந்து விடுகின்றன. இந்நிலையில் இருப்பவர் மனம் ஒரே நோக்குடன் இருப்பதால் மருத்துவர் கூறும் செய்திகளை உற்றுக்கேட்கவும், அவற்றை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. இந்நிலையே அறிதுயில் நிலை (Hypnosis) எனப்படுகிறது. இந்நாளில் மனநோய் மருத்துவர்கள் பயன்படுத்தும் மயக்கப் பகுப்பாய்வையும் (Narcoanalysis) ஒருவகையான அறிதுயில் மருத்துவ முறை எனலாம். சோடியம் பென்டதால் (Sodium Pentathol) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி, நோயாளிகளை அறிதுயில் நிலைக்குக் கொண்டு வருதல் மயக்கப் பகுப்பாய்வு எனப்படும்.
எல்லாவகையான மனநோய்கட்கும் இம்முறை பயனளிக்கும் என்ற கருத்து நிலவுகிறது என்றாலும், ஒரு சில வகையான நோய்களுக்கே இம்முறை முழுமையாக உதவுவதாகக் கண்டுள்ளனர். அவற்றுள் உளக்கோளாறுகள் (Neuroses), உடல்சார் உள நோய்கள் (Psychosomatic Disorders), தீராத வலிகள் (Intractable pains), வேண்டாத பழக்கங்கள் (Addiction) ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். உளப்பிணி (Psychosis), மனவளர்ச்சி குன்றியமை (Mental Retardation ) போன்ற நிலைகட்கு இதன் பயன்கள் தெளிவாக்கப்படவில்லை. எக்குறைபாடா-<noinclude></noinclude>
khigtwviqxqt232a54rle25siqimxc0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/93
250
616878
1939989
1842477
2026-06-05T02:06:43Z
Sridevi Jayakumar
15329
1939989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறியொணாமைக் கொள்கை|69|அறியொணாமைக் கொள்கை}}</noinclude>கோளாறு (Depression) உள்ளவர்களுக்கும் இம்முறையினைப் பயன்படுத்தலும் உகந்ததன்று. மேலும், மருத்துவருடன் ஒத்துழைக்க மனமில்லாதவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கவனக் குறைபாடுள்ளவர்கள், செவிடர்கள் ஆகியோருக்கும் இம்முறை ஏற்றதன்று.{{Right|ந.ந.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Page, D. Jamse,</b> Abnormal Psychology Tata Mc Craw Hill Publishing Co., New Delhi, 1976.<br>
<b>Kroger, W.S.,</b> Clinical and Experimental Hypnosis, Lippincot Philadelphia, 1963.<br>
<b>Welberg, W.S.,</b> Medical Hyponosis, Curune & Stratton, New York 1958.
<section end="அறிதுயில் மருத்துவம்"/>
<section begin="அறியொணாமைக் கொள்கை"/>
{{dhr}}
<b>அறியொணாமைக் கொள்கை</b>: உலகில் தோன்றிய காலந்தொட்டு, தன்னைச் சூழ்ந்து எழும் இயற்கை நிகழ்ச்சிகள் பற்றியும் பின்னர்த் தன் வாழ்க்கையின் அடிப்படை உண்மை இயல்புகள் பற்றியும் மனிதன் ஆராய்ந்துணர முயற்சி மேற்கொண்டு வந்துள்ளான். இம்முயற்சியின் விளைவாக எழுந்தவை தத்துவமும் வேறு பல அறிவியற் பிரிவுகளுமாம். சமயக் கோட்பாடுகளும் இதன் விளைவுகளாம். புற உலகின் இயல்புகளையும் இவற்றின் பின்னுள்ள இயற்கை விதிகளையும் கண்டறிதலில் பெருமளவு விரைவான முன்னேற்றம் எழுந்து அறிஞர்களிடையே அறிவியல் துறைகளில் கருத்தொற்றுமை காணப்படுகிறது. ஆனால், மனித வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்களை ஆராய்ந்துணர்வதில் தத்துவ அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை தொன்மைக் காலந் தொடங்கி இன்று வரை இருந்து வந்துள்ளதனைத் தத்துவ வரலாறு தெளிவுபடுத்துகிறது. இது மேலை நாடுகளுக்கு மட்டுமன்றிப் பாரத நாட்டுச் சிந்தனை வளர்ச்சிக்கும் பொருந்துவதாகும். மனித இயல்பினை ஆன்மிக அல்லது சடப்பொருள் நோக்கினின்று விளக்க முற்படும் எதிரான இரு கோட்பாடுகள், தொடர்ந்து தத்துவ உலகில் மாறி மாறிச் செல்வாக்குப் பெற்று வந்துள்ளன. மேலும் மனிதனை உள்ளடக்கிய உலக இயல்பினை ஒருமை, இருமை அல்லது பன்மை நோக்கினடிப்படையில் அத்தத்துவ அறிஞர்கள் தம் கொள்கைகளுக்கொப்ப விளக்கியுள்ளார்கள். தத்துவ அணுகு முறைகளில் காணப்படும் இம்முரண்பாடு மனித வாழ்க்கையின் தலையாய சிக்கல்களை எதிர் நோக்குவதிலும், இறைக்கருத்து, மனித நடத்தையின் கட்டுப்பாடற்ற நிலை, ஆன்மாவின் அழிவற்ற தன்மை போன்றவற்றிலும் தெளிவாகவும் ஆழ்ந்தும் வெளிப்பட்டது. இவ்வடிப்படைச் சிக்கல்கள் சமயக் கொள்கைகளுடன் தொடர்புடையனவாதலின், பல்வேறு சமயக் கருத்துகளின் செல்வாக்கு இச்சிக்கல்களை ஆராய்தலில் மிகுந்து காணப்பட்டது. சிறப்பாக, மேலை நாடுகளில் கிறித்தவ சமயக் கருத்துகளின் அடிப்படையிலேயே இத்தகைய சிக்கல்களுக்கு விடைகாணத் தத்துவ அறிஞர் பலர் முற்பட்டனர். இவ்விடைகளை அறிவின் அடிப்படையில் எப்பாடு பட்டேனும் உறுதிப்படுத்தும் முயற்சியாகத் தத்துவ ஆராய்ச்சி பெருமளவு திசை மாறிச் செயற்பட்டது. இத்தகைய தெளிவற்ற நிலைக்கு ஒரு மாற்றாக ‘அறியொணாமைக் கொள்கை’ (Agnosticism) எழுந்ததெனலாம். தத்துவ அறிஞர்களிடையே காணப்பட்ட முடிவற்ற, தேவையற்ற கருத்து வேறுபாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவும் அறியொணாமைக் கொள்கை விளங்கியது.
தன் உடனடிப் புலனனுபவங்களுக்கப்பாற்பட்ட எவற்றையும் மனிதனால் அறிதல் இயலாது என்பது அறியொணாமைக் கொள்கையின்மையக் கருத்து. இக்கொள்கையினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘Agnosticism’ என்பதனை, கி.பி. 1869-ஆம் ஆண்டு தாமசு அக்சுலி (T.H. Huxley) என்ற ஆங்கில அறிஞர் உருவாக்கிப் பயன்படுத்தினார். ஆன்மிகப் பண்புகளெனப் படுவனவற்றைச் சார்ந்து எழும் இறைவன், ஆன்மா, இறத்தலுக்குப் பின்னர் மனிதன் நிலை போன்றனவற்றை ஆராய்ச்சி வழியே அறிந்ததும் இல்வை; இனி அறிவதும் இயலாது என்பது இவர் கருத்து. இதனைச் சுட்டிக்காட்ட இச்சொல்லினை இவர் உருவாக்கினார். இப்பெயர் புதிதெனினும் இத்தகைய கருத்து, பண்டைக் காலந்தொட்டே ஒரு சில அறிஞரிடையே இருந்து வந்துள்ளது. கிரேக்கத் தத்துவ அறிஞர்களுன் ஒரு சிலர் இவ்வாறு கருத்துக் கொண்டிருந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள. தத்துவ மேதை சாக்ரட்டீசு என்பாரது ஆராய்ச்சி நோக்கினை இத்தகையது என்று கூறுவோரும் உள்ளனர். இந்திய நாட்டில், பௌத்த சமயத்தின் தொடத்த நிலை அறியொணாமை நோக்கினைச் சார்ந்திருந்தது எனலாம். கிரேக்க நாட்டின் அதீனிய நகர ஆலயம் ஒன்றில் காணப்பட்ட ‘அறியவொண்ணா இறைவன்’ (AgnostaTheo) என்ற கிரேக்க மொழிச் சொற்களின் அடிப்படையில் அக்சுலி, தம் கொள்கைக்கு ஆங்கிலத்தில் இப்பெயரிட்டார். மற்றும், இடைக்காலத்தில் (Middle Ages) ஐரோப்பிய நாடுகளில் உலவிய ‘நாசுடிக்க’ (Gnostics) எனப்பட்ட தீவிர கிறித்தவ சமயப் பிரிவின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அறியொணாமைக் கொள்கை ஆங்கிலத்திலே (Agnosticism) எனப்பட்டதும் பொருத்தம். இத்-<noinclude></noinclude>
m4s3gg88k8x5xqz762jxa9gk6pg3d5t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/94
250
616885
1939990
1842478
2026-06-05T02:07:44Z
Sridevi Jayakumar
15329
1939990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறியொணாமைக் கொள்கை|70|அறிவனார்}}</noinclude>தீவிரப் பிரிவினர் இறைத் தத்துவம் பற்றித் தமக்குத் தனிப்பட்ட தெளிவுணர்ச்சி உள்ளது என்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், மனிதனது அறிவு அவனைச் சூழ்ந்துள்ள, அவன் புலன்களைப் பாதிக்கும் உலகினைப் (Phenomenal World) பற்றி மட்டுமே எழக்கூடியதென்று குறிப்பிட்டனர். இவ்வாறு கூறுவது, புலன்களுக்கப்பாற்பட்டதும் அவற்றின் மூல காரணமாக அமைவதுமான ஓர் உண்மையுலகினையோ ‘ஆன்மா’ போன்ற அருவக் கருத்துகளையோ மறுப்பதன்று என்றும் இவ்வெதிர்ப்பாளர் குறிப்பிட்டனர். செருமன் நாட்டுத் தத்துவ அறிஞர் இம்மானுவெல் காண்ட்டு (Immanuel Kant) என்பாரின் கருத்துகள் அறியொணாமைக் கொள்கையின் நிலையைத் தெளிவுபடுத்துவனவாம்.
அறியொணாமைக் கொள்கை சடப்பொருட் கோட்பாட்டினையோ (Materialism) இறையின்மைக் கோட்பாட்டினையோ (Atheism) ஆதரிப்பதாக அமையாது என காண்ட்டு திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இறைவன், ஆன்மா போன்றன பற்றி நமக்கு இதுவரை அறிவின் அடிப்படையில் ஏதும் தெரியாதென்றும் இனியும் இவை போன்றன பற்றி ஆராய்ந்துணர்தல் இயலும் என நம்புவதற்கிடமில்லை என்றும், குறிப்பிட்ட சில வரையறைகளுக்குட்பட்டுச் செயற்படும் மனித சிந்தனை, எல்லைகளற்றவை பற்றிப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவாதென்றும் காண்ட்டு கருத்துத் தெரிவித்துள்ளார். அறியொணாமைக் கொள்கையானது இறைக்கருத்துப் போன்றவற்றை மறுப்பதும் இல்லை; ஏற்பதும் இல்லை. அவற்றை ஆராய்ச்சியினின்றும் ஒதுக்கி வைக்கிறது.
அறியொணாமைக் கொள்கை. சிறப்பாக 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் முன்னிலையிற் காணப்பட்டது. அக்சுலி, திண்டல் (Tyndall). இசுபென்சர் போன்ற அறிஞர்தம் முயற்சியின் விளைவாக ஐரோப்பிய நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. இசுபென்சரின் ‘ஆதாரக் கோட்பாடுகள்’ (First Principles) என்னும் நூலும், திண்டலின் பெல்பாசுடு நகரச் சொற்பொழிவுகளும் (Belfast Lectures) அறியொணாமைக் கொள்கைக்கு ஓர் உறுதிப்பாட்டினை அளிப்பனவாக அமைந்தன. மரபு வழி வந்த யூத கிறித்தவ இறைக்கோட்பாடுகளையும் இதேபோன்ற இறையிலிக் கோட்பாட்டினையும் ஏற்கவியலாது என்பதனை ‘அறிவியலும் கிறித்தவ மரபும்’ என்னும் தம் நூலில் அக்சுலி குறிப்பிட்டுள்ளார். அறியொணாமைக் கொள்கைக்கு இவர் தரும் விளக்கம் வருமாறு:
“தான் ஏற்கும் எக்கருத்திற்கும் தருக்கத்தின் அடிப்படையிலமையும் சான்றுகளை எடுத்துக்கூற இயலாவிடின் அதனை ஒருவன் உண்மையெனக் கொள்வது தவறு”. ஏற்கத் தக்க சான்றுகள் இல்லாவிடினும் சமயக் கருத்துகளை ஒருவன் ஏற்க மறுப்பது பாவச் செயலெனக் கூறுகிறார். வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் பற்றி இறுதி முடிவுகளெடுத்தலைத் தள்ளிப் போடவேண்டும்; ஏனெனில் இத்தகைய முடிவுகளை எடுத்தலுக்குத் தேவைப்படும். சான்றுகளனைத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்தலும் அரிது என்கிறார் இவர். அறியொணாமைக் கொள்கை, மரபு வழி ஏற்கப்பட்ட கிறித்தவ சமயக் கருத்துக்களை எதிர்க்கவும், பின்னர்ச் சார்லசு தார்வின் என்பாரது மனிதத் தோற்றம் பற்றிய படிவளர்ச்சிக் (Evolution) கருத்திற்குத் துணை செய்யவும் பயன்படுத்தப்பட்டது. இக்கொள்கையின் சமய எதிர்ப்பு காலப்போக்கில் இதனை ஆதரிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோட்பாட்டினை ஏற்போர் தம்மை ‘ஐயுறவுக் கொள்கையினர்’ (Sceptics) எனக் கூறிக் கொள்ளத் தொடங்கினர், இரசஸ் (Russell) போன்ற சிறந்த தத்துவப் பேரறிஞர்களும் ஐயுறவுக் கொள்கையினராகவே விளங்கினர். சில தத்துவ ஆராய்ச்சியில், உண்மையறிவு பெறுதலில் சான்றுகள், கருத்துகளை ஒப்புநோக்குதல் ஆகியவற்றை இன்று இக்கொள்கையினர் வலியுறுத்தி வருகின்றனர். இன்று எழுந்துள்ள தருக்கச் சார்புள்ள ‘நேர்காட்சிக் கொள்கை’ (Logical Positivism) போன்றன அறியொணாமைக் கொள்கையினின்றும் தோன்றியளையேயாகும். இக்கொள்கையும் சிந்தனைக்கப்பாற்பட்ட வாழ்க்கையின் அடிப்படையான வினாக்களுக்கு விடைகாண முற்படுவது பயனற்றது என்பதனை ஏற்கிறது. மக்களிடையே திறந்த உளப்பாங்கினையும் சிக்கல்களை அறிவியல் நோக்குடன் அணுகுவதன் தேவையினையும் பரப்புவதில் அறியொணாமைக் கொள்கை உதவியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். {{Right|எஸ்.ச.}}
<section end="அறியொணாமைக் கொள்கை"/>
<section begin="அறிவனார்"/>
{{dhr}}
<b>அறிவனார்</b> பஞ்சமரபு என்னும் நூலினை இயற்றியவர், அடியார்க்கு நல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரையில் அறிவனாரையும் அவர்தம் நூலான பஞ்ச மரபினையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர்தம் காலம் அடியார்க்கு நல்லார் காலமாகிய கி.பி. 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். அடியார்க்கு நல்லார் கடலாடு காதையில் ஒன்பது வகை இசைப்பாக்களைக் கூறும்போது ஒரு வெண்பாவைப் பஞ்சமரபிலிருந்து மேற்கோளாகக் காட்டி. அதன் ஆசிரியர் அறிவனார் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.{{nop}}<noinclude></noinclude>
1xx9wmbmu5e7h8q8irw7amm86z7pd8h
1939991
1939990
2026-06-05T02:08:14Z
Sridevi Jayakumar
15329
1939991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறியொணாமைக் கொள்கை|70|அறிவனார்}}</noinclude>தீவிரப் பிரிவினர் இறைத் தத்துவம் பற்றித் தமக்குத் தனிப்பட்ட தெளிவுணர்ச்சி உள்ளது என்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், மனிதனது அறிவு அவனைச் சூழ்ந்துள்ள, அவன் புலன்களைப் பாதிக்கும் உலகினைப் (Phenomenal World) பற்றி மட்டுமே எழக்கூடியதென்று குறிப்பிட்டனர். இவ்வாறு கூறுவது, புலன்களுக்கப்பாற்பட்டதும் அவற்றின் மூல காரணமாக அமைவதுமான ஓர் உண்மையுலகினையோ ‘ஆன்மா’ போன்ற அருவக் கருத்துகளையோ மறுப்பதன்று என்றும் இவ்வெதிர்ப்பாளர் குறிப்பிட்டனர். செருமன் நாட்டுத் தத்துவ அறிஞர் இம்மானுவெல் காண்ட்டு (Immanuel Kant) என்பாரின் கருத்துகள் அறியொணாமைக் கொள்கையின் நிலையைத் தெளிவுபடுத்துவனவாம்.
அறியொணாமைக் கொள்கை சடப்பொருட் கோட்பாட்டினையோ (Materialism) இறையின்மைக் கோட்பாட்டினையோ (Atheism) ஆதரிப்பதாக அமையாது என காண்ட்டு திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இறைவன், ஆன்மா போன்றன பற்றி நமக்கு இதுவரை அறிவின் அடிப்படையில் ஏதும் தெரியாதென்றும் இனியும் இவை போன்றன பற்றி ஆராய்ந்துணர்தல் இயலும் என நம்புவதற்கிடமில்லை என்றும், குறிப்பிட்ட சில வரையறைகளுக்குட்பட்டுச் செயற்படும் மனித சிந்தனை, எல்லைகளற்றவை பற்றிப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவாதென்றும் காண்ட்டு கருத்துத் தெரிவித்துள்ளார். அறியொணாமைக் கொள்கையானது இறைக்கருத்துப் போன்றவற்றை மறுப்பதும் இல்லை; ஏற்பதும் இல்லை. அவற்றை ஆராய்ச்சியினின்றும் ஒதுக்கி வைக்கிறது.
அறியொணாமைக் கொள்கை. சிறப்பாக 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் முன்னிலையிற் காணப்பட்டது. அக்சுலி, திண்டல் (Tyndall). இசுபென்சர் போன்ற அறிஞர்தம் முயற்சியின் விளைவாக ஐரோப்பிய நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. இசுபென்சரின் ‘ஆதாரக் கோட்பாடுகள்’ (First Principles) என்னும் நூலும், திண்டலின் பெல்பாசுடு நகரச் சொற்பொழிவுகளும் (Belfast Lectures) அறியொணாமைக் கொள்கைக்கு ஓர் உறுதிப்பாட்டினை அளிப்பனவாக அமைந்தன. மரபு வழி வந்த யூத கிறித்தவ இறைக்கோட்பாடுகளையும் இதேபோன்ற இறையிலிக் கோட்பாட்டினையும் ஏற்கவியலாது என்பதனை ‘அறிவியலும் கிறித்தவ மரபும்’ என்னும் தம் நூலில் அக்சுலி குறிப்பிட்டுள்ளார். அறியொணாமைக் கொள்கைக்கு இவர் தரும் விளக்கம் வருமாறு:
“தான் ஏற்கும் எக்கருத்திற்கும் தருக்கத்தின் அடிப்படையிலமையும் சான்றுகளை எடுத்துக்கூற இயலாவிடின் அதனை ஒருவன் உண்மையெனக் கொள்வது தவறு”. ஏற்கத் தக்க சான்றுகள் இல்லாவிடினும் சமயக் கருத்துகளை ஒருவன் ஏற்க மறுப்பது பாவச் செயலெனக் கூறுகிறார். வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் பற்றி இறுதி முடிவுகளெடுத்தலைத் தள்ளிப் போடவேண்டும்; ஏனெனில் இத்தகைய முடிவுகளை எடுத்தலுக்குத் தேவைப்படும். சான்றுகளனைத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்தலும் அரிது என்கிறார் இவர். அறியொணாமைக் கொள்கை, மரபு வழி ஏற்கப்பட்ட கிறித்தவ சமயக் கருத்துக்களை எதிர்க்கவும், பின்னர்ச் சார்லசு தார்வின் என்பாரது மனிதத் தோற்றம் பற்றிய படிவளர்ச்சிக் (Evolution) கருத்திற்குத் துணை செய்யவும் பயன்படுத்தப்பட்டது. இக்கொள்கையின் சமய எதிர்ப்பு காலப்போக்கில் இதனை ஆதரிப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோட்பாட்டினை ஏற்போர் தம்மை ‘ஐயுறவுக் கொள்கையினர்’ (Sceptics) எனக் கூறிக் கொள்ளத் தொடங்கினர், இரசஸ் (Russell) போன்ற சிறந்த தத்துவப் பேரறிஞர்களும் ஐயுறவுக் கொள்கையினராகவே விளங்கினர். சில தத்துவ ஆராய்ச்சியில், உண்மையறிவு பெறுதலில் சான்றுகள், கருத்துகளை ஒப்புநோக்குதல் ஆகியவற்றை இன்று இக்கொள்கையினர் வலியுறுத்தி வருகின்றனர். இன்று எழுந்துள்ள தருக்கச் சார்புள்ள ‘நேர்காட்சிக் கொள்கை’ (Logical Positivism) போன்றன அறியொணாமைக் கொள்கையினின்றும் தோன்றியளையேயாகும். இக்கொள்கையும் சிந்தனைக்கப்பாற்பட்ட வாழ்க்கையின் அடிப்படையான வினாக்களுக்கு விடைகாண முற்படுவது பயனற்றது என்பதனை ஏற்கிறது. மக்களிடையே திறந்த உளப்பாங்கினையும் சிக்கல்களை அறிவியல் நோக்குடன் அணுகுவதன் தேவையினையும் பரப்புவதில் அறியொணாமைக் கொள்கை உதவியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். {{Right|எஸ்.ச.}}
<section end="அறியொணாமைக் கொள்கை"/>
<section begin="அறிவனார்"/>
{{dhr}}
<b>அறிவனார்</b> பஞ்சமரபு என்னும் நூலினை இயற்றியவர், அடியார்க்கு நல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரையில் அறிவனாரையும் அவர்தம் நூலான பஞ்ச மரபினையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர்தம் காலம் அடியார்க்கு நல்லார் காலமாகிய கி.பி. 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். அடியார்க்கு நல்லார் கடலாடு காதையில் ஒன்பது வகை இசைப்பாக்களைக் கூறும்போது ஒரு வெண்பாவைப் பஞ்சமரபிலிருந்து மேற்கோளாகக் காட்டி. அதன் ஆசிரியர் அறிவனார் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.
<section end="அறிவனார்"/>
{{nop}}<noinclude></noinclude>
8wyylzs0vv7xkinm26c4qrkanfdhnn0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/95
250
616889
1939992
1842479
2026-06-05T02:08:51Z
Sridevi Jayakumar
15329
1939992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவாய்வு|71|அறிவாய்வு}}</noinclude><section begin="அறிவாய்வு"/>
{{dhr}}
<b>அறிவாய்வு</b>: மனிதன், உடல் உள்ளம் ஆகிய இரு கூறுகள் இணைந்து செயற்படும் ஓர் உயிரியாகக் கருதப்படுகிறான். உள்ளம் என்று ஒன்று இருத்தலை அதன் செயல் விளைவுகளான பட்டறிவுகளின் (Experiences) வாயிலாக உணர்தல் கூடும். உள்ளப் பட்டறிவுகள் அடிப்படையில் மூவகைப்பட்டவை. அவை அறிதல், எழுச்சி, முயற்சி ஆகியவற்றினைச் சார்ந்து அமைகின்றன. அறிதலைச் சிந்தனை (Thinking) எனவும் குறிப்பிடுவர். சிந்தனைப் பட்டறிவில் வழியே நமக்கு அறிவு கிட்டுகிறது. சிந்தனை இரு நிலைப்படுவதாகும். புலன்காட்சி (Perception) வழியே பெறப்படும் உடனடி அறிவு, சிந்தனையின் அடிப்படை நிலையின் விளைவாகும். முடிவு செய்தல் (Judging). அறிவாய்வு (Reasoning) போன்றன சிந்தனையில் உயர்நிலையினைக் குறிப்பனவாம். இவ்வுயர் நிலைச்சிந்தனையின் சிந்தனைச் செயல்களில் பொதுமைக் கருத்துகள் (Concepts) உருவாக்குதலுக்கும் சிந்தனை தேவைப்படும். ஒரேவகைப்பட்ட பலவற்றை உற்று நோக்கி, அவற்றின் சிறப்பு, பொதுப்பண்புகளைத் தனிப்படுத்தி இணைத்து, இப்பண்புகளின் ஒருங்கிணைப்பினை மொழிச் சொல் ஒன்றினால் குறிப்பிடுவது, பொதுமைக் கருத்து எழுதலின் அடிப்படையாகும். பொதுமைக் கருத்துகள் பொருள்கள் பற்றியனவாகவோ பண்புகள் அல்லது தொடர்புகள் பற்றியனவாகவோ இருக்கலாம். பல பொதுமைக் கருத்துக்கள், படிப்படியாக விரிவடைந்து மேல் நிலைகளுக்குச் செல்பவையாகவும் அமையும். ‘பசு’ என்னும் பொதுக் கருத்தைவிட ‘விலங்கு’ என்பது விரிவானது, ‘உயிரி’ என்பது இதனைக் காட்டிலும் விரிவானது. இத்தகைய பொதுமைக் கருத்துகளின்றிச் சிந்தனையின் உயர்நிலைச் செயல்களான அறிவாய்வு போன்றவை பயனுள்ள வகையிலும் சிக்கனமான முறையிலும் இயங்கவியலா. மற்றும் அறிவியல், தத்துவம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு இவ்வகைக் கருத்துகள் இன்றியமையாதவை. முடிவு செய்தலிலும் அறிவாய்தலிலும் இப்பொதுமைக் கருத்துகள் தொடர்பு படுத்தப்பட்டு, இத்தொடர்பின் அடிப்படையில் புதிய அறிவு பெறப்படுகிறது. முடிவு செய்தலில் இணைக்கப் பெறும் கருத்துகள், காட்சிப் பொருள்களைக் குறிப்பனவாகவோ (இவ்வாற்றில் வெள்ளம் வந்துள்ளது), கருத்துப் பொருள்கள் பற்றியனவாகவோ (நேர்மை நன்மை பயக்கும்) இருக்கக் கூடும்.
சிந்தனையின் உயரிய நிலையாகக் கருதப்படுவது அறிவாய்வு அல்லது ‘ஆய்வு’ எனப்படும். உள்ளச் செயல்களிலே சிக்கல் மிகுந்ததும், கடினமானதுமாகிய புதிய புதிய அறிவினை மக்களுக்குத் தருவதால் சிறப்பு மிகுந்ததாக அறிவாய்வுச் செயல் உளவியலறிஞர்களால் கருதப்படுகிறது. இதன் இயல்பு பற்றி, ஆழ்ந்து ஆராய்ந்த சான் தூயி (John Dewey) என்னும் அறிஞர் இச்செயலினைச் ‘சிந்தனைச் செயலின் முழுமையானஉரு’ எனக் குறிப்பிடுகிறார். ஏனெனில் இதில் பிற சிந்தனைச் செயல் முறைகளான புலன் காட்சிச் சிந்தனை, முடிவு செய்தல் போன்றனயாவும் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவாய்வு எனப்படும் உயர் உளச்செயல், மக்கள் தம் கருத்துகளைப் புதிய முறையில் அமைத்து அப்புது அமைப்பின் துணைக்கொண்டு தம்மை எதிர் நோக்கியுள்ள ஒருபுதிர் அல்லது சிக்கலுக்குத் (Problem) தீர்வு காண்பதாகும் என்று சான் தூயி விளக்கம் தருகிறார். அறிவாய்வின் இறுதி நோக்கம் சிக்கலுக்கு விடை காண்பதாகும். இச்செயல்முறை பகுத்தறிதல் (Deduction), தொகுத்தறிதல் (Induction) என வகைப்படுத்தப்படும். அனுமானித்தலில் (Inference) இருவகைகளும் இணைந்து காணப்படும். பகுத்தறிதல், ஏற்கெனவே அறிந்துள்ள பொது விதியொன்றினை அதனுள் அடங்கும் ஒரு கூற்றுடன் (Proposition) தொடர்பு படுத்தி, ஒரு முடிவினைப் (Conclusion) பெறுதலாகும். தொகுத்தறிதல், தனிப்பட்ட பல கருத்துகளைத் தொடர்புபடுத்தி ஆராய்ந்து, இவை யாவற்றுக்கும் பொதுவான ஒரு விதியினை வருவித்தலாகும். அறிவாய்வுச் செயலில் அடங்கிக் காணப்படும் பல்வேறு படிகளில் இவ்விரண்டு வகைச் சிந்தனை இயங்கு முறைகளும் இருத்தலைக் காணலாம்.
அறிவாய்வுச் செயலின்பின் ஏதாவது ஒரு நோக்கம் இருத்தல் தெளிவு, பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் சிந்தனைக் கருவியாக இருத்தலோடு, அறிவாய்வு பலபோது புதிய அறிவினைப் பெற உதவுவதாகவும் உள்ளது. ஏனெனில், இச்செயலில் ஈடுபடும்போது பழைய கருத்துத் தொகுப்புகளினின்றும் வேண்டுவனவற்றைத் தேர்ந்தெடுத்தலுடன் நின்றுவிடாமல், மக்களை எதிர்நோக்கியுள்ள சிக்கல்களுக்கு விடைகாண உதவத்தக்க புது விவரங்களையும் இவற்றினிடையே புதுத் தொடர்புகளையும் ஒழுங்கான முறையில் தேடியறிய முற்படவேண்டும். ஒருவன் பெற்றுள்ள அறிவாய்வுத் திறனின் அளவு அவனது பொது நுண்ணறிவின் (General Intelligence) அளவினைப் பொறுத்து அமையும் என்பர் உளவியலறிஞர், நுண்ணறிவின் தன்மையினை ஆராய்ந்த இசுபியர்மேன் (Spearman) என்பார் குறிப்பிடும் ‘தொடர்பு காணல்’ (Education of Relations), ‘தொடர்புப் பொருள் காணல்’ (Education of Correlations) ஆகிய இரு செயல்களும், அறிவாய்வில் காணப்படுகின்றன. நுண்ணறிவின் அளவில்<noinclude></noinclude>
5hj5dz1msfql2i5ti3d3ejon0dzfdhz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/97
250
616894
1939993
1842483
2026-06-05T02:09:44Z
Sridevi Jayakumar
15329
1939993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவாய்வு|73|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்}}</noinclude>உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கருதுகோள்களை உருவாக்கும்பொழுது தொகுத்தறி அனுமான முறை சிறப்பாகப் பயன்படுத்தப்படுவது போன்று, சரி பார்த்தல் நிலையில் பகுத்தறி அனுமானச் செயல் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவாய்வின் இறுதிக்கட்டத்தில் உரியதொரு மதிப்பீடு செய்யப்பட்ட கருதுகோளினைக் கொண்டு சிக்கலுக்குத் தீர்வு காணலாம். இது போன்ற வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுத்த முடியும். சரிபார்க்கப்பட்ட கருதுகோள் ஓர் அறிவியற் சிக்கலுக்கானதாகவிருப்பின் அதனை ஒரு பொது விதியாக உயர்த்தவும் கூடும். அறிவியல் ஆராய்ச்சியில் இந்த ஐந்து நிலைகளும் மிகத் தெளிவாக இருத்தலை எந்த ஓர் அறிவியல் ஆராய்ச்சியை உற்று நோக்கினாலும் விளங்கும். அன்றாட வாழ்க்கையில் எழும் எளிய
சிக்கல்களுக்குத் தீர்வுகாண அறிவாய்வுச் செயலில் ஈடுபடும்போதும் இந்நிலைகளை உணரக்கூடும். பலபோது இந்நிலைகள் ஒன்றுடன் ஒன்று மேற்படிந்து பிரித்துணரவியலாமற் காணப்படுதலும் உண்டு.
சான் தூயியின் இவ்விளக்கம் சிலரால் குறை கூறப்படுகிறது என்பதனையும் ஈண்டு சுட்டிக்காட்ட வேண்டும். இவர் அறிவாய்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை விரித்துக் கூறுகிறாரேயன்றி, அச்செயல் இயல்பாக எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பர் ஒருசிலர். மேலும், அறிதல் திறன் வளர்ச்சி பற்றி இன்று பியாசே (Piaget) என்னும் அறிஞரால் எடுத்துக் கூறப்பட்டுள்ள புதிய விளக்கம் அறிவாய்வு பற்றிச் சில புது விவரங்களைக் கூறுவதாக அமைந்துள்ளது. உளவியலறிஞர்களின் இம்முயற்சிகள் யாவும் மனித சமுதாய வளர்ச்சிக்கும் அறிவியல் - தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் அடிப்படையான அறிவாய்வின் இயல்பினை ஓரளவேனும் வெளிப்படுத்தலில் உதவியுள்ளன. அறிவாய்வுத் திறமை இன்றைய இளைஞர்களிடையே வளர்த்தலுக்கு ஒரு சில முறைகளைக் கல்வியாளர் குறிப்பிடுகின்றனர். பொதுமைக் கருத்துகளும் உண்மையான விவரங்களும் போதிய அளவில் பெற்றிருத்தல் அறிவாய்வின் வலுமிக்க அடித்தளமாக அமையும். தீர்வு காணப்படவேண்டிய சிக்கல் எந்த அளவுக்குத் தொடர்புடையதாகத் தெளிவாக உணரப்படுகிறதோ அந்த அளவுக்கு அது அறிவாய்வுக்குத் தூண்டுகோலாக அமையும். சார்பெண்ணங்கள் (Prejudices) இன்றியும் அறிவியல் பாங்குடனும் திறந்த உள்ளத்துடனும் சிக்கலை அணுகுதலும் பயன்மிகுந்த அறிவாய்வுக்குத் துணையாம், இன்று கல்விமுறையில், வெறும் பொருளறிவினை மட்டும் ஆசிரியர்கள் தங்கள் விரிவுரைகளின் வழியே மாணாக்கர்களின் உள்ளத்தில் பதிய வைப்பதற்கு மாறாக, அவர்களிடையே அறிவாய்வின் வழியே தாமே முயன்று புதுக்கருத்துகளையும் விடைகளையும் பெறும் சிந்தனைத் திறன் வளர்ச்சியை வலியுறுத்துவது வரவேற்கத்தக்க கல்வி மாற்றம் என்பது தெளிவு.{{Right|எஸ்.ச.}}
<section end="அறிவாய்வு"/>
<section begin="அறிவாராய்ச்சியியலும் கல்வியும்"/>
{{dhr}}
<b>அறிவாராய்ச்சியியலும் கல்வியும்</b>: கல்விச் செயல்முறை குறிப்பிட்ட சில நோக்கங்கள் அடைவதை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இந்நோக்கங்கள் கற்போனுக்கும் அவன் வாழ்ந்து வரும் சமுதாயத்துக்கும் ஒருசேர நலம் பயப்பனவாக அமைதல் வேண்டும். கல்வியின் இறுதி நோக்கங்கள் அதன் பல்வேறு கூறுகளான கல்வி ஏற்பாடு, கற்பிக்கும் முறைகள், கல்வி மதிப்பீட்டின் தன்மை, பள்ளியின் நிருவாக அமைப்பு போன்றவற்றைப் பாதிப்பனவாக உள்ளன. கல்வியின் நோக்கங்களுக்கு அடிப்படையாக அமைவன தத்துவக் கோட்பாடுகளாகும். தத்துவம் எனப்படும் பழம்பெரும் அறிவுத் துறைக்கும் பல்வேறு மாறுபட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. தத்துவ விசாரணை மாந்தருக்கு இயல்பாக எழுவதாகும். தான் பெறும் அனுபவங்களைப் பற்றி நன்கு சிந்தித்து இவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மெய்யறிவுக் கோட்பாடுகளை உணரும் முயற்சியாகத் தத்துவம் உள்ளது. ‘முறைப்பட்ட ஒருங்கிணைந்த முழுமையான அறிவினைப் பெற மனிதனால் மேற்கொள்ளப்படும் முயற்சி தத்துவமெனப்படும்’ என்று பால்சன் (Paulson) என்பார் குறிப்பிடுகிறார், இம்முயற்சியின் விளைவாக மனித வாழ்க்கை பற்றியும் மனிதன் வாழும் உலகம் பற்றியும் அடிப்படையான சில கோட்பாடுகள் எழுந்து மனித மனப்பான்மையினையும் நடத்தை முறையினையும் உருவாக்குகின்றன. கல்வி அமைப்பைத் திட்டமிடுதலிலும், இவை நடுவிடம் வகிக்கின்றன. தத்துவக் கருத்துகளுக்கு வாழ்க்கையில் செயலுருவம் தரும் முறையாகக் கல்வி அமைகிறது. என்றும், எனவே கல்விக்கும் தத்துவத்திற்குமிடையேயுள்ள தொடர்பு மிக நெருக்கமானது என்னும் கல்வி வல்லுநர் சுட்டிக் காட்டியுள்ளனர். பல்வேறு கல்விச் சிக்கல்களை ஆராய்கையில் அவை தத்துவக் கோட்பாடுகளுடன் இணைந்த சிக்கல்களாக இருத்தல் தெளிவு என்பதையும் இவ்வல்லுநர்கள் விளக்கி, தத்துவக் கோட்பாடுகள் பற்றிய அறிவு, கல்விச் சிக்கல்களுக்கு விடைகாணலில் இன்றியமையாதது என்பதனையும் வலியுறுத்துகின்றனர்.
தத்துவத்தின் பல்வேறு பகுதிகளில் ஒன்று ‘அறிவாராய்ச்சியியல்’ (Epistemology) என்பதாகும்.<noinclude></noinclude>
ra3e3oez188ku5teqn75300o2f5hfsv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/99
250
616910
1939994
1842486
2026-06-05T02:10:33Z
Sridevi Jayakumar
15329
1939994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|75|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்}}</noinclude>கருத்துகளிடையே பொருத்தம் (Coherence), கருத்துகளின் நடைமுறைப் பயன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவின் உண்மையினை மதிப்பிட முற்படுகின்றனர்.{{Right|எஸ்.ச.}}
<section end="அறிவாராய்ச்சியியலும் கல்வியும்"/>
<section begin="அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்"/>
{{dhr}}
<b>அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்</b>: மக்களுக்குரிய சிறப்பியல்பு மனம் என்னும் அகக்கருவியைப் பெற்றிருத்தல் ஆகும். மன வளர்ச்சியை ஒட்டி அறிவாற்றல் ஒவ்வொருவருள்ளும் வளர்ந்து, அகன்று, பெருகிவரும். இவ்வாற்றலின் வளர்ச்சியையும், அது செயல்படும் விதத்தையும் உளவியலறிஞர்கள் ஆய்ந்து விளக்கியுள்ளனர். இவ்வாற்றலை இனங் கண்டு அளத்தறிய முற்பட்டோருள் முதன்மையானவர் பினே (Binet) என்னும் பிரான்சு நாட்டறிஞராவார். அவர், அறிவு சார்ந்த செயல்கள் அனைத்துக்கும் காரணமான ஒரு பொதுத் திறன் என்றே இவ்வாற்றலைக் கருதினார். முழுமையாகவே இவ்வாற்றல் செயற்படும் எனவும் நம்பினார். தார்ன்டைக்கு (Thorndike) என்னும் அமெரிக்க அறிஞர், மக்கள் பற்றியும் (சமூக நுண்ணறிவு), பருப்பொருள் பற்றியும் (பருமை நுண்ணறிவு), குறியீடுகள் பற்றியும் (நுண்மை நுண்ணறிவு) இவ்வாற்றல் படர்ந்து செல்லும் என்றார். காரணிப் பகுப்பாய்வு மூலம் இவ்வாற்றலில் பலவகை நுண்திறன்கள் அடங்கியுள்ளன என இவர் விளக்கினார். இவர்தம் கொள்கை, அறிவாற்றல் பற்றிய பலகாரணிக் கொள்கை (Multi-Factor Theory) எனப்படும். இசுபியர்மேன் (Spearman) என்னும் ஆங்கில அறிஞர் பல காரணிக் கொள்கைக்கு எதிராக இரு காரணிக் கொள்கை (Two-Factor Theory) ஒன்றை நிறுவினார். எல்லாவகை அறிவு (மன)ச் செயல்கட்கும் அடிப்படையான பொதுக் காரணி ஒன்றும், சிறப்பான அறிவுச் செயல் ஒவ்வொன்றுக்குமான தனிக் காரணிகள் பலவும் அறிவாற்றலில் அடங்கியுள்ளன என்பதே இவர் கொள்கை. பொதுக் காரணித் திறனில் மக்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். தனிக் காரணிகளில் ஒருவர்க்குள்ளேயே வேறுபாடுகள் உள்ளன. பல காரணிக் கொள்கை, இரு காரணிக் கொள்கை இரண்டிற்கும் இடைப்பட்டதாய்க் குழுக் காரணிக் கொள்கை (Group-Factor Theory) ஒன்றை, தர்சுடன் (Thurstone) என்ற அமெரிக்க நாட்டவர் வெளிப்படுத்தினார். ‘முதன்மையான மன ஆற்றல்கள்’ (Primary Mental Abilities) என எழுவகை ஆற்றல்களைக் காரணிப் பகுப்பாய்வு மூலம் இவர் கண்டார். காரணிப் பகுப்பாய்வு (Factor Analysis) என்ற புள்ளியியல் முறையைக் கொண்டே கில்போர்டு (Guilford) என்னும் அமெரிக்கர் அறிவாற்றல் அமைப்பு என்ற முப்பரிமாண விளக்கமொன்றை அறிவாற்றலுக்கு அளித்தார். இவ்விளக்கத்தில் அறிவுச் செயலின் உள்ளீடு (Content), செயற்படும் பாங்கு (Process), செயல் விளைவு (Product) என்ற முப்பரிமாணங்களை ஒட்டி நூற்றிருபது மனத் திறன்கள் குறிக்கப்படுகின்றன.
அறிவாற்றலின் வளர்ச்சி பற்றிய ஆய்வாளர்களுள் பியாசே (Piaget) என்ற சுவிட்சர்லாந்து நாட்டவரும், புரூனர் (Bruner) என்ற அமெரிக்க நாட்டவரும் குறிப்பிடத்தக்கவர்கள். பியாசேயின் அணுகுமுறை ‘வளர்நிலைகளை’ (Stage Approach) ஒட்டி அமைந்தது; புரூனரின் அணுகுமுறை. செயற்படும் பாங்கினை (Process Approach) ஒட்டியது. மனித அறிவாற்றல் வளர்ச்சியில் நான்கு நிலைகளைப் பியாசே குறிப்பிடுவார். இந்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒரே வரிசையில் எல்லோர்க்கும் அமையும். நிலைகளின் வரிசை அமைப்பில் வேறுபாடு இருப்பதில்லை. ஒவ்வொரு நிலையிலும் அமையும் அறிவாற்றலின் செயல் தன்மையில் வேறுபாடு உண்டு. குழந்தையின் அறிவாற்றல், செயல் தன்மை, சிந்தனைப் போக்கு இம்மூன்றும் இனைஞனின் சிந்தனைப் போக்கினின்று மாறுபட்டவை.
குழந்தையின் பிறப்பிலிருந்து இரண்டாண்டு வரையான காலம் அறிவாற்றல் வளர்ச்சியின் முதல் நிலை. இது புலன்-இயக்க (Sensory Motor) நிலை. புலன் உணர்வு (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்), இயக்கம் (அசைவு) ஆகியவற்றை ஒட்டியே இந்நிலையில் குழந்தையின் வெளியுலகு பற்றிய சிந்தனை அமையும். இரண்டாம் நிலை, இரண்டாண்டு முதல் ஏழு அல்லது எட்டாண்டுகள் வரை நீடிக்கும். இது அறிவு செயற்படத் தொடங்குதற்கு முந்திய நிலை (Pre-Operational Stage) ஆகும், சிந்தனை, குறியீடுகளை ஒட்டி அமையத் தொடங்கும். அது குழந்தையின் தற்சார்பு நோக்கிலேயே அமையும். பிறர் நிலையிலிருந்து, சூழலை (Environment) எண்ணிப்பார்க்கும் அறிவாற்றல் இன்னும் குழந்தைக்குக் கைவரவில்லை. எண்ணப்போக்கும் புறத்தோற்றத்தை மையமாகக் கொண்டே இருக்கும். ஒரே அளவினதாயினும். வாய் குறுகிய, நீண்ட குவளையில் பெய்யப்பட்ட தண்ணீர் வாயகன்ற, குறுகிய குவளையில் பெய்யப்பட்ட நீரினும் மிகுந்துள்ளதாய்க் குழந்தை எண்ணும். தண்ணீரின் அளவை மாறாத் தன்மையை (Conservation) உணரும் திறனைக் குழந்தை இன்னும் பெறவில்லை. தான் கண்ட காட்சிகளை முறையாகப் பின்னோக்கி எண்ணிக் கூறும் ஆற்றலும் (Reversibility) இல்லை. மூன்றாம் நிலை எட்டு முதல் பன்னிரண்டாண்டு வரையான காலத்தில் அமைவது. இது பருப் பொருள் பற்றி அறிவு செயற்படும் நிலை (Concrete Operational Stage) எனப்படும். இரண்டாம் நிலை-<noinclude></noinclude>
7noj7j1bicglocamgrldw4jitsxerfo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/101
250
617002
1939995
1842660
2026-06-05T02:13:24Z
Sridevi Jayakumar
15329
1939995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|77|அறிவிப்பு}}</noinclude>மாறுபடுவதில்லை, குழந்தைப் பருவத்தே இவை திறன் குன்றியனவாயும், தெளிவு பெறாதனவாயும் உள்ளன. அறிவாற்றல் வளர்ச்சி என்பது, சிந்தனைக்கு அடிப்படையான நால்வகை எண்ணக்களைக் கொண்டு நால்வகைப் பாங்கில் புற உலகைத் தன்னுள் தெளியக் காண மனம் கொள்ளும் முயற்சியின் விரிவே.
மனங்கொண்ட உணர்ச்சியை (புற உலகு பற்றிய அறிவை) மூளை மூவகைகளில் வெளிப்படுத்தவல்லது. ஒருவகை, பொருள்களின் அல்லது நிகழ்ச்சிகளின் செயல்களை ஒட்டிய பாங்கிலேயே காட்டுவது. புரூனர் (Bruner) இவ்வகையைச் ‘செய்து காட்டு’ வகை (Enactive Mode) என்பார். செயல்களைத் தவிர்த்துப் படங்கள், (நிழல்) உருக்கள் வழியாகக் காட்டும் வகை பிரதிமை அல்லது மாதிரி வகை (Iconic Mode) ஆகும். செயல், உரு இரண்டினையும் தவிர்த்துக் குறியீடுகள் மூலம் (மொழி, பிற குறிப்புகள்) வெளிப்படுத்தும் மூன்றாம் நிலை குறியீட்டு வகை (Symbolic Mode) எனப்படும். இம் மூவகை வெளிப்பாடுகளும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் காணப்படுகின்றன. பியாசே, புரூனர் ஆகியோர் கூறியதைப் போல் அறிவாற்றலையே (Cognition) வகைப்படுத்தித் தொகுத்துள்ளார் புளும் (Bloom) என்ற அமெரிக்க நாட்டறிஞர். அறிவாற்றல் அறுவகை நிலைகளைக் கொண்டது. தெரிதல் (Perception), புரிதல் (Understanding), பயன்படுத்தல் (Application), பகுத்தல் (Analysis), தொகுத்தல் (Synthesis), மதிப்பிடல் (Evaluation) என்பன அவை. ஒரு பொருள் பற்றித் தெரிந்து, விளங்கப் புரிந்து, வேண்டும்போது பயன்படுத்தி, அதன் கூறுகளைப் பகுத்து, அக்கூறுகள் இணக்கமுறப் பொருந்தியுள்ள விதத்தைத் தொகுத்து, அது இத்தன்மையுடையது என மதிப்பிட்ட பின்னரே, அதனைப் பற்றிய முழு அறிவு பெறக்கூடும். இவ்வாறு, ஒரு பொருள் அல்லது கருத்துப் பற்றி முற்றும் அறிதற்கு, அறிவாற்றல் ஆறு படிகளைக் கடந்து, அப்பால் நின்று, அதனைப் பற்றி அறிய வேண்டும். இப்படிகளுள்ளும் ஒரு வரிசை முறை அமைந்திருத்தலைக் காணலாம். ஒன்றைத் தெரிந்து, பின்னரே அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். தெரியாதவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறே, ஒவ்வொரு மேல்நிலையும், அதன் கீழுள்ள நிலைகளை உள்ளடக்கியிருக்கும். பயன்படுத்தல், தெரிதலையும் புரிதலையும் உள்ளடக்கியது; மதிப்பிடுதல், ஏனைய ஐந்து நிலைகளையும் தாண்டிச் சென்ற பின்னரே கைகூடும்.
கற்றல், அறிவாற்றலின் வளர்ச்சி நிலையை ஒட்டி அமையும் போது சிறப்புற அமைகிறது. ஆசிரியர், மாணவரின் அறிவாற்றல் வளர்ச்சி நிலைக்கு ஏற்பக் கற்றல் அனுபவங்களை (Learning Experience) அமைத்துத் தருதல் வேண்டும். இத்தகைய அனுபவங்களே மாணவர்க்குப் பொருளுடையனவாகும். வகுப்பறைச் சூழலில் இவ்வகை அனுபவங்கள் மிகும் போது, அவ்வந்நிலைகளில் அறிவாற்றல் முழு வளர்ச்சி பெறும். இத்தகைய அனுபவங்கள் இல்லாத போது அறிவாற்றல் முழுமையாக வளர்ச்சி பெறுவதில்லை. ஒரு நிலையில் முழுமையான வளர்ச்சியின்றேல், அது அடுத்து வரும் நிலைகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்துவிடும்.{{Right|பி.எஸ்.பா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ault, R.L.,</b> Children's Cognitive Development, Oxford University Press, New York, 1977.
<b>Furth, H.G.,</b> Piaget for Teachers, Englewood Cliff, NJ, Prentice Hall, 1970.
<b>Diggory, Sylvia Faruham,</b> Cognitive Process in Education, Harper and Row, New York, 1972.
<section end="அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்"/>
<section begin="அறிவிப்பு"/>
{{dhr}}
<b>அறிவிப்பு</b>: ஒரு பொருள் இருக்கிறது என்பதைப் பொருண்மைகளின்றும் (Facts) அறிந்து கொள்ளும்படி அப்பொருண்மைகளை மட்டும் வழங்காது, அவற்றைப் பற்றி நேரடியாகவும் உறுதியாகவும் கூறும் கூற்றினை அறிவிப்பு (Notice) எனலாம். ஒருவர் அறியாதனவற்றை அறியவைப்பதும் அறிவிப்பேயாகும். அறிவிப்பு சட்ட முறையில் உள்ளதாகவோ உண்மையானதாகவோ நடைமுறையில் உள்ளதாகவோ நேரடியானதாகவோ (Actual) ஆக்கச் சார்பானதாகவோ கொள் நிலையானதாகவோ (Constructive) இருக்கலாம்.
உண்மையான அறிவிப்பு அல்லது நடைமுறையில் உள்ள அறிவிப்பு என்பது, ஒருவர் மற்றொருவருக்கு வெளிப்படையான சொற்கள் மூலமாவோ, வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அறிவிப்பது ஆகும். இதனை வெளிப்படையான அறிவிப்பு (Expressed Notice) அல்லது நேரடி அறிவிப்பு எனவும் கூறலாம்.
குறித்த குழ்நிலைகளினின்று ஒருவருக்கு ஒரு பொருண்மை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமெனக் கருதப்படும் நிலையில் அது “கொள்நிலை அறிவிப்பு” எனப்படும்.
சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு, அறிவிப்பினை வரையறை செய்கிறது. நேரடி அல்லது வெளிப்படையான அறிவிப்பு, கொள்நிலை அல்லது உட்கிடையான அறிவிப்பு என்பவற்றை அறிவிப்புக் கொள்கை விளக்கிக் கூறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
7u9kh4ydgyzrgy1syhop9qzm9snizlq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/105
250
617048
1939996
1842675
2026-06-05T02:14:24Z
Sridevi Jayakumar
15329
1939996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவிப்பு|81|அறிவியல் ஆசிரியர்}}</noinclude>அக்காலத்திற்கு மேல் நீட்டிக்கத் தொடர்புடையவர்கள் விரும்பினால் நீட்டித்துக் கொள்ளலாம். அந்நிலையில், ஒரு பகுதியினர் முன்பு செய்யப்பட்ட முடிவினை முறித்துக் கொள்ள முற்பட்டால் அல்லது எண்ணினால், மற்றொரு பகுதியினருக்கும் தகுந்த அரசிற்கும் அறிவிப்புக் கொடுத்து முறித்துக் கொள்ளலாம்.
இந்திய ஒப்பந்தச் சட்டம், 130-ஆம் பிரிவின் படி, தொடர்பொறுப்புறுதி ஒப்பந்தத்தில் பொறுப்புறுதியளிப்பவர், தமது கடப்பாட்டினைச் கடன் கொடுத்தவருக்கு அறிவிப்புக் கொடுப்பதன் மூலம் முறித்துக் கொள்ளலாம்.
இந்திய ஒப்பந்தச் சட்டம் 229-ஆம் பிரிவின்படி, முகவருக்குக் கொடுக்கும் அறிவிப்பு, முதலவருக்குக் கொடுத்ததாகக் கொள்ளப்படும். இது கொள்நிலை அறிவிப்பு (Constructive or Implied Notice) 206-ஆம் பிரிவின்படி, முதலர், ஒழுங்கின்றி முகவரியத்தை முறித்துக்கொள்ளும்போது, தகுந்த அறிவிப்புக் கொடுக்க வேண்டும். அறிவிப்புக் கொடுக்கவில்லையெனில், முகவருக்கு, முதலர் தகுந்த இழப்பீடு கொடுக்கக் கடப்பாடுள்ளவராகிறார்.
அதுபோன்று, கடல் வழியாகப் பொருள்கள் ஏற்றிச் செல்லுதல் (Carriage of goods by Sea) சட்டத்தின்படி, பொருள்களைக் காப்பீடு செய்துகொள்ளும் வகையில், வாங்குபவருக்கு அறிவிப்பு அனுப்ப வேண்டும். பொருள்களை விற்றல் (Sale of Goods Act) சட்டம் 52-ஆம் பிரிவின்படி, விலைத் தொகை பெறாத விற்றவர், பொருள்களை ஏற்றிச் செல்லும்போது வழியில் நிறுத்தும் உரிமையினை. யாரிடம் பொருள் உடைமை உள்ளதோ அவருக்கோ பொருள்களை ஏற்றிச் செல்பவருக்கோ அறிவிப்புக் கொடுப்பதன் மூலமாகச் செயற்படுத்தலாம். அவ்வறிவிப்பினைப் பொருள் உண்மையில் யாரிடம் உள்ளதோ அவருக்கோ அவர்தம் முதலருக்கோ கொடுக்கலாம். முதலருக்கு அறிவிப்புக் கொடுப்பதாயின், முதலர் தம் முகவர் அல்லது பணியாளர், வாங்குபவர் ஆகியோருக்குப் பொருள்களைக் கொடுத்துவிடா வண்ணம், குறிப்பிட்ட காலத்திறகுள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கொடுக்க வேண்டும். இவ்வறிக்கை எழுத்து வடிவிலோ குறிப்பிட்ட படிவடிவிலோ இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
பற்றுரிமையினை அல்லது வழியில் நிறுத்தும் உரிமையினைச் செயற்படுத்திய விற்றவர், பொருள்களை மீண்டும் விற்க உரிமை பெற்றுள்ளார். அப்பொருள்கள் கெட்டுப் போகக் கூடியனவல்லவெனில், விற்றவர், அவற்றை மீண்டும் விற்கப் போவதாக வாங்கியவருக்குத் தகுந்த அறிவிப்புக் கொடுக்க வேண்டும். இவ்வறிவிப்புக் கொடுப்பதன் நோக்கம், மீண்டும் விற்பதற்கு முன்பாக வாங்கியவர், இறுதித் தறுவாயினும், விலைப் பணத்தைச் செலுத்தி ஒப்பந்தத்தினை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புத் தருவதேயாகும். இரண்டாவதாக முன்பு வாங்கியவர் அப்போதும் விலைப் பணம் செலுத்த இயலாதிருப்பின் அப்பொருள்கள் மீண்டும் விற்கப்படும்போது தகுந்த விலைக்கு விற்கப்படுவதற்கு முயலலாம். கெட்டுப் போகக் கூடிய பொருள்களை மீண்டும் விற்பதற்கு அறிவிப்புத் தேவையில்லை. கடற்றுறைக் காப்பீட்டுச் சட்டத்தின் (Marine Insurance Act) படி, தம்மிடத்தில் காப்பீட்டு ஒப்பந்த ஈட்டுறுதி ஆவணத்தினை (Policy) வைத்துள்ள தரகர், விட்டு விடுகைக்கான (Abandonment) அறிவிப்பினை அனுப்பப் பொறுப்புள்ளவர். கொள்நிலை முழு இழப்பிற்கு (Constructive total loss) விட்டுவிடுகைக்கான அறிவிப்புக் கட்டாயமாகிறது. காப்புறுதி பெற்றவர் (Assured) கொள்நிலை முழு இழப்பிலிருந்து பலன் எய்த எண்ணினால், விட்டுவிடுகைக்கான அறிவிப்பைக் காப்புறுதி செய்பவருக்கு அனுப்ப வேண்டும். விட்டுவிடுகைக்கான அறிவிப்பு என்பது, காப்புறுதி பெற்றவர், காப்புறுதி அளித்தவரின் பயன் படுத்தலுக்கு அளிக்கப்போவதாகக் குறிப்பதாகும். இவ்வறிவிப்பு குறிப்பிட்ட படிவத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. அது முழுமையானதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருக்க வேண்டும். இவ்வறிவிப்பு வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ இருக்கலாம்.
தொழிற்சாலைகள் சட்டத்தின் 7-ஆம் பிரிவின்படி, தொழிற்சாலை உரிமையாளர், தொழிற் சாலைக்கான இடத்தைப் பதிவு செய்வதற்காகத் தொழிற்சாலை ஆய்வாளருக்கோ அரசிற்கோ அறிவிப்பு அனுப்ப வேண்டும். அவ்வறிவிப்பில் உரிமையாளர் பெயர், தொழிற்சாலையில் செய்யவிருக்கும் தொழில், இடம் போன்ற விவரங்கள் கூறப்பட்டிருக்க வேண்டும். அச்சட்டத்தின் 61-ஆம் பிரிவின்படி, வயது வந்தோர் பணிபுரிய வேண்டிய காலம் குறிப்பிடப்பட்ட, ஓர் அறிவிப்பு தொழிற்சாலையில் வைக்கப்பட வேண்டும்.{{Right|அ.பி.பொ.}}
<section end="அறிவிப்பு"/>
<section begin="அறிவியல் ஆசிரியர்"/>
{{dhr}}
<b>அறிவியல் ஆசிரியர்</b>: அறிவியல் இன்றைய உலகில் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. அனைத்துப் பாடங்களைக் கற்பதற்கும் அறிவியல் அறிவு அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே பள்ளிப் பாடத் திட்டத்தில் அறிவியல் இன்றியமையாத பாடமாக இடம் பெற்றுள்ளது. தொடக்கக் கல்வி நிலையில் அறிவியல், புதுமுறை அறிவியல் எனவும், உயர் நிலைப்பள்ளி நிலையில் பொது அறிவியல்<noinclude></noinclude>
jyy1vtok8vnpz5v4h2inx2s72b6ured
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/108
250
617202
1939997
1842753
2026-06-05T02:15:24Z
Sridevi Jayakumar
15329
1939997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவியல் ஆய்வகம்|84|அறிவியல் ஆய்வகம்}}</noinclude>யர்களின் செயல்களைக் கூர்ந்து நோக்குதல், ஆசிரியர் தொழிற் சங்கங்களில் உறுப்பினராதல், பணியிடைப் பயிற்சி, பணிமனைச் செயல்கள், மாவட்ட, மாநில அனைத்துப் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல், வேலை அனுபவ நிகழ்ச்சிகள், பல்வேறு நிலையில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் பங்கு பெறுதல் போன்றவை ஆகும். இதனுடன் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து, அறிவியல் கழகங்களை அமைத்துக் கல்வி ஏற்பாட்டை முன்னேற்றவும், கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளவும், கற்பித்தல் முறைகள் பற்றிக் கலந்து முடிவெடுக்கவும், அறிவியல் பொருட்காட்சிச் சோதனைச் செயல் திட்டங்கள், செய்து காட்டல் ஏற்பாடுகள் போன்றவற்றைச் செய்யவும் வழிவகைகளை மேற்கொண்டு தொழிலில் வளர்ச்சி பெறலாம். தங்கள் பள்ளியில் ஆண்டு இதழ்களுக்குக் கட்டுரை எழுதுவதன் மூலமும் பிற கல்வி இதழ்களுக்கு எழுதுவதன் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆசிரியரின் தொழில் வளர்ச்சிக்கு மேல்படிப்புத் தகுதியும் உதவும். இது தொடர்பாக அண்மையில் பல்கலைக்கழக நிதிக்குழுவானது ‘ஆசிரியர் கல்வி நிதியுதவி’ (Teacher-Fellowship Scheme) என்ற திட்டத்தின் மூலம் அனைத்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் ஆராய்ச்சிக் கால முழுமைக்கும் ஊதியமும் விடுப்பும் வழங்கி அவர்களை மேற்படிப்புப் படிக்கச் செய்ய உதவியுள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கும் தங்கள் தொழில் தொடர்பான பயிற்சி பெறுவதற்கும், மேற்படிப்புக்கும் விடுப்பு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை அறிவியல் ஆசிரியர்கள் பயன்படுத்தி ஆசிரியத் தொழிலில் வளர்ச்சி பெற வேண்டும். அறிவியல் வளர்ச்சியினால் கற்பிக்கும் இயந்திரங்கள் ஆசிரியரது பணியைச் செய்யத் தொடங்கி விட்டபோதிலும் ஒரு போதும் ஆசிரியரது இடத்தை எந்த இயந்திரமும் நிரப்ப முடியாது. ஆசிரியர் அல்லாத ஒருவரும் நிரப்ப இயலாது.{{Right|த.ச.}}
<section end="அறிவியல் ஆசிரியர்"/>
<section begin="அறிவியல் ஆய்வகம்"/>
{{dhr}}
<b>அறிவியல் ஆய்வகம்</b>: சோதனை செய்யும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கும் அறிவியல் மனப்பான்மை பெறுவதற்கும் அறிவியல் கற்றுக் கொள்ளவதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் ஆய்வகம் இன்றியமையாததாகும். ஆய்வகம் எனப்படுவது பொதுவாக மாணவர்கள் சோதனைகளை நிகழ்த்தும் இடத்தையே குறிக்கும். ஆய்வகத்துடன் இணைந்து வேறு அறைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, வேதியியல் ஆய்வகம் எனில், மாணவர்கள் சோதனை செய்யும் இடத்தைத் தவிர, வேதியியல் பொருள்களைச் சேமித்து வைக்கும் அறையும் (Store Room). தராசு அறையும் (Balance Room), தயாரிப்பு அறையும் (Preparation Room) தேவைப்படுகின்றன. பொருளியல் ஆய்வகமாயின், நிழற்பட வேலைக்கென, ஓர் இருட்டறையும் (Dark Room) பொருள்களைச் சேமித்து வைக்கும் அறையும், தயாரிப்பு அறையும் தேவைப்படுகின்றன. உயிரியல் ஆய்வகமெனில், தாவர அறையும் (Green Room) விலங்கு அறையும் (Animal Room) பொருட்காட்சி அறையும் சேமிப்பு அறையும் தேவைப்படுகின்றன.
நடுநிலைப் பள்ளிக்குப் பொது அறிவியல் கற்பிப்பதற்கென ஓர் ஆய்வகமும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவியலின் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு ஆய்வகமும் அமைந்துள்ளன. ஒவ்வொரு அறிவியல் பிரிவின் ஆய்வகத்திற்கும் தேவைப்படுகின்றவை வேறு வேறாக இருப்பதால், தனித்தனி ஆய்வகங்களை ஏற்படுத்தி, அந்தந்தப் பிரிவு ஆசிரியர்களிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன.
பொதுவாக ஆய்வகத்தில் மாணவர்கள் தனித் தனியாகச் சோதனைகளில் ஈடுபட வசதியாகச் செய்முறை மேசைகளும் (Work Tables) இருக்கைகளும் உள்ளன. ஆய்வகத் தேவைக்கேற்பச் செய்முறை மேசைகளுக்கு மின் இணைப்புகளும் வாயு இணைப்புகளும் நீர் இணைப்புகளுடன் கூடிய கழிவு நீர்த் தொட்டிகளும் அமைக்கப்படும். ஆய்வகங்களில் நல்ல காற்றோட்ட வசதி இருப்பதுடன், போதிய வெளிச்சமும் இருக்கும். இயற்கை வெளிச்சத்துடன் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டிருக்கும். வேதியியல் ஆய்வகத்தில் காற்றினை வெளியேற்றும் விசிறிகளும் அமைக்கப்படும். நச்சுவாயுக்கள் தயாரிக்கவெனத் தாழ்வாரத்தில் தனி ஏற்பாடு இருக்கும். இவையன்றி ஆசிரியர் சில சோதனைகளைச் செய்து காட்டும் பொருட்டு ஆய்வகத்தில் செய்து காட்டும் மேசையும் இருக்கும். அதனை ஒட்டிய சுவரில், பெரிய அளவில் நீளமாகக் கரும்பலகை அமைப்பும் இருக்கும்.
ஆய்வகத்திற்குத் தேவையான பொருள்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பற்றிய விலைப்பட்டியலைக் குறைந்தது மூன்று அறிவியல் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களிலிருந்து பெற்றும் பொருள்களின் விலை குறைவாக உள்ள நிறுவனங்களிலிருந்தே பொதுவாக அவற்றை வாங்குவர். இதற்கு விதிவிலக்குத் தேவைப்படின் போதிய காரணங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு பெற்ற பொருள்களை ஒப்பு நோக்கி, உடையக் கூடியவையா அல்லது நிலையாயுள்ள பொருளா எனப் பார்த்து அவை ஒவ்வொன்றையும் அதற்கெனவுள்ள ஆய்வகப் பதிவேடுகளில் குறித்துவைப்பர்.
ஆய்வகத்தில் இரும்பு, மரம், பித்தளை, கண்ணா-<noinclude></noinclude>
h57yzlhovb0hkxjkilva9saewoa953p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/109
250
617209
1939998
1842754
2026-06-05T02:17:29Z
Sridevi Jayakumar
15329
1939998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|85|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்}}</noinclude>டிச் சாமான்கள், இரப்பர்க் குழாய்கள் எனப் பல வகையான பொருள்கள் இருக்கும். இவையன்றிப் பல்வேறுவகையான வேதியியல் பொருள்களும் உண்டு. அவற்றில் சில எளிதில் ஆவியாகக் கூடியவை; சில நீரை உறிஞ்சும் தன்மை உடையவை; சில பொரிந்து போகும் தன்மை உடையவை; சில தீப்பற்றி எரிபவை; சில நச்சுத்தன்மை உடையவை. ஆகவே இவற்றைப் பாதுகாப்பதுடன் முன்னெச்சரிக்கையாகச் சீசாக்களில் போட்டு நன்கு மூடி அவற்றின் மேல் தெளிவாக அப்பொருள்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பர். குறுகிய வாயுள்ள சீசாக்களில் நீர்மப் பொருள்களையும், அகன்ற வாயுள்ள சீசாக்களில் திடப் பொருள்களையும் வைத்திருப்பர்.
நன்முறையில் அமைக்கப்பட்டுச் செயற்படும் ஆய்வகத்தில் இன்னல்கள் விளைவது மிகவும் அரிது. இன்னல் ஏதாவது ஏற்படுமாயின் முதன் முதலாகக் கேட்கப்படும் கேள்வி ‘வேண்டிய அளவு முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டனவா’ என்பதே. ஆகவே ஆய்வக வேலை சிறந்து செயற்பட, மாணவருக்கும் ஆசிரியருக்கும் உதவக் கூடிய—அவர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகளையும் எச்சரிக்கைகளையும் தெளிவு படுத்துதல் வேண்டும். ஆய்வகத்தில் இன்னலை விளைவிக்கக்கூடிய சோதனைகளின் வகைகளை வேதியியல் ஆசிரியர் அறிந்து வைத்திருத்தல் நலம் பயக்கும்.
ஆசிரியரும் மாணவரும் பின்பற்ற வேண்டிய விதிகளை எவ்வளவு திருத்தமாக அமைத்து மிகவும் கவனமாகப் பின்பற்றினாலும் ஆய்வகங்களில் எதிர்பாராது இன்னல்கள் ஏற்படுவதுண்டு. அமிலம், காரம், பாசுவரம், சோடியம், பொட்டாசியம் போன்ற பொருள்கள் உடலில் படுவதால் புண் உண்டாதல், சாதாரண வெட்டுக் காயங்கள் ஏற்படுதல், கண்ணில் அமிலம் படுதல், நச்சுப் பொருள்களை விழுங்குதல், நச்சுக் காற்றை உள்ளிழுத்தல், மின் தாக்கு, மயக்கமுறுதல், தீ விபத்துகள் போன்றவை பொதுவாக ஆய்வகத்தில் ஏற்படும் இன்னல்களாகும். இவை ஒவ்வொன்றுக்கும் அறிவியல் ஆசிரியர் செய்யக்கூடிய முதலுதவியை அறிந்திருத்தல் இன்றியமையாதது. மேலும் ஆய்வகத்தில் முதலுதவிக்கென முதலுதவிப் பெட்டியும் தீ அணைப்பான்களும் இருத்தல் இன்றியமையாதன.{{Right|ஏ.ப.செ.}}
<section end="அறிவியல் ஆய்வகம்"/>
<section begin="அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்"/>
{{dhr}}
<b>அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்</b>: ஒரு நாடு பல துறைகளில் முன்னேற்றமடையத் திறமையாகத் திட்டமிடுதலும் நாட்டின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சி செய்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தலும் வேண்டும், மேலும், அவற்றை விரைவு படுத்தத் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் அத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் அறிய வேண்டும், அதற்காக அறிவியல் செய்திகள் எங்குக் கிடைப்பினும் ஒன்று திரட்டி உரிய காலத்தில் சரியான செய்திகளைக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இத்தகு பணிகள் அரசால்தான் செய்யமுடியும். இதை உணர்ந்த ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) பல நாடுகளில் அந்தந்த அரசு உதவியுடன் தேசிய ஆவணத் தொகுப்பு மையங்களை (National Scientific Documentation Centre) ஏற்படுத்தப் பல வகைகளில் உதவி புரிந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய ஆவணத் தொகுப்பு மையம் இந்தியாவில் 1952-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
<b>இந்திய அறிவியல் மையங்களின் வளர்ச்சி</b>: இந்திய அறிவியல் வளர்ச்சி கி.பி. 1784-ஆம் ஆண்டு ‘வங்காள அரசாங்க ஆசியக் கழகம்’ (Royal Asiatic Society of Bengal) என்ற நிறுவனத்தின் தொடக்கத்தோடு தொடங்குகிறது. இந்நிறுவனத்தைத் தொடர்ந்து, கி.பி. 1800-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை மதிப்பீடு (Trigonometric Survey) என்ற ஆய்வு நிலையமும், இந்நூற்றாண்டின் இறுதியில் தாவரவியல் (Botanical), புவியியல் (Geological), மருத்துவஇயல் (Medicine) ஆகியவற்றின் மதிப்பீட்டு ஆய்வுக் கழகங்களும் தொடங்கப்பட்டன. விலங்கியல் (Zoological), தொல்பொருள் ஆய்வியல் (Archaeological) மானிடவியல் (Anthropological) ஆகியவற்றின் மதிப்பீட்டு மையங்கள் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டன. மேலும் கி.பி. 1857-ஆம் ஆண்டில் கல்வித்துறை ஆராய்ச்சியில் பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களால் முன்னேறத் தொடங்கியது. சமூகப் பொருளாதாரத் தாக்கங்களால் ஏற்படும் அடிப்படைச் சிக்கல்களைப் பற்றிய ஆய்வு நிலையங்களும், இக்காலத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கூடம் என்றழைக்கப்படும் இம்பீரியல் வேளாண்மை ஆய்வுக்கழகமும், வன ஆய்வு நிலையமும், மத்திய ஆய்வுக் கூடமும், கிங்கு ஆய்வுக் கூடமும், பாசுடர் ஆய்வு நிலையமும், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகமும், இந்திய ஆய்வு நிதிக் கழகமும், தேசியக் கட்டிட அமைப்புக் கழகமும், மத்திய வாரியங்களான நீர்ப்பாசனம், சக்தி ஆகியவற்றின் ஆய்வுக் கழகங்களும், நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் வகையில் எண்ணெய், இயற்கை வாயுக்குழுவும், இந்தியச் சுரங்கத் துறையரங்கம் முதலிய ஆய்வுக் கழகங்களும் நிறுவப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு இக்கழகங்களின் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் தொழில் நுட்ப அறிவியல்<noinclude></noinclude>
2km41huog043z1zdro1ugs9c6q6w81h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/112
250
617314
1939999
1843361
2026-06-05T02:19:05Z
Sridevi Jayakumar
15329
1939999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அறிவியல் கற்பிக்கும் முறைகள்|88|அறிவியல் கற்பிக்கும் முறைகள்}}</noinclude>தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய மொழிபெயர்ப்பு மையத்துடன் இணைந்து செயற்படுகிறது. இது, 1971-ஆம் ஆண்டில் உருசியத் தகவல் நிலையத்தையும் தொடங்கியுள்ளது. இவ்வமைப்பின் மூலம் சோவியத்து நாட்டில் வெளியிடப்படும். ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்த்து இந்திய அறிஞர்களுக்கு ‘இணக்கப் பட்டியல்’, ‘சோவியத்து அறிவியல் பருவ இதழ்களின் நவீனப்பட்டியல்’ என்ற இரு பட்டியல் மூலமாக அறிவிக்கிறது. இப்பொழுது அதிவிரைவுத் தகவல் தொடர்புப் பணியினை தொடங்கியுள்ளது. இதன் ஒவ்வொரு படியும் தேர்ந்தெடுக்கப்பட்ட உருசிய ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பினைக் கொண்டு வெளிவருகிறது. மேற்கூறிய ஆவணத் தொகுப்புப் பணிகளைத் தவிர இம்மையம் தனிப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் சிறப்புத் தகவல்களை இம்மையத்தில் கிடைக்கும் செய்திக் குறிப்புகளைக் கொண்டு தொகுத்துப் பணியாற்றி வருகிறது. இப்படிப்பட்ட பணியினைப் பலர் விரும்புவதால் உரிய காலத்தில் செய்திகளைத் தொகுத்து வழங்குவதற்கு இம்மையம், பல மண்டல மையங்களைச் சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களில் அமைத்துக்கொண்டு வருகிறது. இம்மையம் ஓராண்டுக் கால ஆவணத் தொகுப்புப் பயிற்சி வகுப்பு ஒன்றையும் நடத்துகிறது. இவ்வகுப்பு 1964-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.
இந்தியத் தேசீய அறிவியல் ஆவணத் தொகுப்பு மையத்தை நவீன மையமாக்க வேண்டி இந்திய அரசு ஒரு திட்டக் குழுவை 1972-ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. இக்குழு ஒரு தேசீய அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் தகவவ் அமைப்பு (National Information System for Science and Technology (NISSAT) Programme) ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தால் இதன் பணிகள் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.{{Right|எம்.எஸ்.சு.}}
<section end="அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்"/>
<section begin="அறிவியல் கற்பிக்கும் முறைகள்"/>
{{dhr}}
<b>அறிவியல் கற்பிக்கும் முறைகள்</b>: அறிவியல் அறிவு, வாய்மொழியினாலோ நூலறிவினாலோ மட்டும் வளர்ந்து விடுவதில்லை. எதனையும் ஆராய்ந்து பார்த்து, செய்து கற்றலே (Learning by doing) சிறந்த முறையாகும். இம்முறைக்கு முன்னோடியாக விளங்குவது கண்டறியும் முறை (Heuristie Method) ஆகும். சென்ற 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் கற்பித்தலில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தியவர் பேராசிரியர் ஆர்ம்சுடிராங்கு (H.E.Armstrong) ஆவார். உயர் கல்விக்காக சிலரை நாடிய மாணவர்களில் எவருக்கும் சோதனைகள் செய்வதற்குரிய அடிப்படை அறிவு இல்லாதிருந்தது குறித்து வருத்தமுற்று அவர் புதியமுறை ஒன்றினை உருவாக்கினார். புதிய அறிவினைக் காண்பதில் முனைந்து நிற்கும் அறிவியல் அறிஞர்கள் நிலையில் மாணவர்களை வைத்துப் புதிர்களை எழுப்பி, அவர்களுக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்து, அவர்களே சோதனை செய்து அறிவியல் உண்மைகளைக் காணுமாறு பணித்தல் இம்முறையின் நோக்கமாகும். இம்முறையில் மாணவர்கள் எவ்வளவு கருத்துக்கள் கற்கிறார்கள் என்பதைவிட எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதே அடிப்படையாகும். மாணவர்கள் தாமாகவே எண்ணிச் சோதனைகளை அமைத்து, விவரங்களைச் சேகரித்து அவற்றிலிருந்து உண்மையை அறிகின்றனர். பிரிசுலி (Priestly), பெசுடலாசி (Pestalazzi), இலாக்கு (Locke), உரூசோ (Rousseau) போன்ற அறிஞர்களும், அறிவியற் செய்திகளை ஆராய்ந்து காண்பதே சிறந்த முறை என்று கூறியுள்ளனர். ஆல்பர்ட்டு ஐன்சுடைனும் (Albert Einstein) அறிவைப் பெறுவதைவிட ஆராயும் மனமே சிறந்தது என்றார்.
செய்து கற்றல் என்பது மிகச் சிறந்த கல்விக் கொள்கையாகச் சென்ற பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில் மாணவர்களைத் தனியாகவோ குழுக்களாகவோ பிரித்து, சில அறிவியல் செயல் திட்டங்களில் (Science Projects) அவர்களை ஈடுபடுத்திச் சிக்கல்களைத் தீர்க்கச் செய்யலாம். எடுத்துக்காட்டாகப் பல்வேறு இயற்கைப் பொருள்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தி அமைத்தல், புதியனவற்றை வகைப்படுத்துதல், சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் புதிய கருவிகளை அமைத்தல், சோப்புச் செய்தல், வானிலைக் குறிப்புகளை நாடோறும் கருவிகளைப் பயன்படுத்தி அறிந்து வெளியிடுதல் போன்ற பல்வேறு வகைகளில் இந்த முறையைப் பயன்படுத்திக் கற்கச் செய்யலாம். அறிவியல் கற்பித்தலில் அறிவியல் மனப்பான்மையைப் பெற ஆய்வக முறை மிகவும் வலியுறுத்தப்படுகிறது. இம்முறையில் மாணவர், ஆசிரியர் மேற்பார்வையில், அவர் கொடுத்த குறிப்புகளின் பேரிலோ நன்கு உருவாக்கப்பட்ட ஆய்வகக் குறிப்பேடுகளில் (Laboratory Manuals) துணையுடனோ சோதனையைச் செய்யுமாறு அமைக்கலாம். ஆனால் இது போன்ற அமைப்பில் ஒரே தன்மையான பல கருவிகள் தேவைப்படுகின்றன. போதுமான கருவிகள் இல்லாவிடில் மாணவரைக் குழுக்களாகப் பிரித்து. குழுவினர் அனைவரும் பாடப் பகுதியிலுள்ள வெவ்வேறு சோதனைகளைச் செய்யுமாறு அமைக்கலாம். ஒரு நாளில் ஒரு சோதனையைச் செய்த குழுவினர், அடுத்த ஆய்வக வேளையில் வேறு சோதனையைச் செய்வர். சோதனை செய்யும் போது மாணவர்கள் தாங்கள் உற்று நோக்கிய செய்திகளை வகைப்படுத்தி, அட்டவணையிட்டு. உற்றுநோக்கிப் பெறப்பட்ட விவரங்களைக் குறிப்புப்<noinclude></noinclude>
7y1j2jo2zfii3nuvcurpwbwd0syaani
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/44
250
644438
1940017
1938341
2026-06-05T07:40:40Z
Sridharrv2000
12752
1940017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>________________
34
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும்.
மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!!
இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன்.
எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில்
எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன்.
டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude>
55yg7146aipisv66n7ac16pc05p9kg8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/64
250
644459
1940021
1938361
2026-06-05T08:09:07Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>'மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும்
என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு
அந்த எண்ணம் தோன்றிற்று?"
"உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார்
என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு
அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ்
பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்து
விட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த
மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு"
மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த
உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்
உண்மையைக் கூறமாட்டார்கள்!!
ஆனால், ஒருவர்மீது ஒருவர் 'சாடி' சொல்லும்போது
மட்டும், உண்மையைக் 'கசிய' விடுவார்கள்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி
சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள்
கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப்
பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று
விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை
எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும்
சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான 'அர்த்தால்’
மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக்
கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது,
அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற
விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம்
காட்டினார்?
டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய
மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப்
பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!!
இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும்
'உதவாக்கரை'களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர்
குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? -
என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர்
"நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள்,<noinclude></noinclude>
an1al4dwd49hawztbe6jiu841113472
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/65
250
644460
1940023
1938362
2026-06-05T08:15:26Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||55}}{{rule}}</noinclude>பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!" என்று, 'ரோஷம்' இருந்தால்,
அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி,
பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின்
தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக,
தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம் -
பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது
என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப்
பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள்
முன்னிலையில் 'முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள்,
பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள்
''ராஜிநாமா'க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என்
முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து
வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி
கொடுத்ததும், 'விக்கல், விம்மல்' ஆக அல்லவா மாறிவிட்டது!!"
என்று சொல்லக்கூடும்.
அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி!
உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த
அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை
மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும்,
மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில்
மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம்
முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே
எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை
உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட
வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ
இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா
உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும்
-எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து,
தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில்,
பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று
பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி,
குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார்
என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே,
இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம்,
மாவட்டக் கலெக்டரிடம்.<noinclude></noinclude>
m6ip6vopmminwr13sg1bp53nzf02ui0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/66
250
644461
1940024
1938363
2026-06-05T08:19:24Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ்
என்றெல்லாம் 'வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை
விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே
என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்!
என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும்
தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார் -
சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்!
ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும்
நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு
வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள்
- என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும்,
மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை!
நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ,
அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்",
“பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்" இருந்ததில்லை.
யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், 'நம்பிக்கையில்லை'
என்று முணுமுணுத்தார் - அது கேட்ட நமது மறைந்த மாவீரர்
பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர்
பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை
உலகறியச் செய்தார்!
இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு
சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து
கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில்,
எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!!
"சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக்
கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல்
இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே
வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த
வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும்
மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! P.தவாக்கரைகளை ஏன்
வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை
போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும்.<noinclude></noinclude>
oy47q2fo651hguyu8g1irsy20ossvyz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/67
250
644462
1940026
1938364
2026-06-05T08:26:06Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||57}}{{rule}}</noinclude>அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும், "ரதகஜ
துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்!
முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும்
பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும்.
இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை!
இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும்
உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத்
தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக
வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி
வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க
வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு
விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன்,
உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு
அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில்
நடுக்கம் என்கின்றனர் சிலர்.
அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக்
கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால்
ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன
அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள்,
பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன்
ஆளச்சொல்கிறீர்கள்? என்று கேட்கமாட்டார்களா?
கேட்கிறார்கள்!!
ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில்
யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில்
இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி
சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் இதுதானே
இன்றுள்ள நிலைமை!!
டில்லிக்கு இந்த 'வாய்ப்பு' இருப்பதனால்தான், இங்குள்ள
காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு
வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் - சில சமயங்களில்
கதையில் கண்டோமே 'மாப்பிள்ளை' - அது போன்ற
கண்றாவியும் நேரிட்டு விடுகிறது.<noinclude></noinclude>
9mgce0jp55ddgq9702d2y85cp8i8dia
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/68
250
644464
1940029
1938365
2026-06-05T08:53:55Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர்
தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு
உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர்
தலையங்கம் தீட்டினேன்.
ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப்
பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை
வீசினார்!!
சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர்
மீது காந்தியார் கண்டனம் வீசினார்.
சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர்
குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை!
ஆனால் முற்றுப் பெறாதது!!
இப்போதும் அதே போன்ற 'சூழ்நிலை' உருவாகிக் கொண்டு
வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது!
அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப்
பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும்
வழியாகவும் இருந்து வருகிறது.
இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம்
- நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காக
முந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும்
வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது
என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான்,
இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற
கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க
வேண்டும் - இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய
பிரச்சினை,
எத்துணைதான் 'தேசியம்' கொண்டிருப்பினும், நாட்டின்
பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு
அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக்
கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம்
செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி
ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள்
கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது<noinclude></noinclude>
jcvwvr8nh1ng6lycnq6d3s0k15lo749
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/69
250
644465
1940030
1938366
2026-06-05T09:00:26Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||59}}{{rule}}</noinclude>என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே, ஏதும்
வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும்
வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது.
'அகில இந்தியா' - என்ற அடைமொழியுடன் இயங்கும்
எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான்.
இங்கே பேரறிவாளர் உளர் - வீரர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை
தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது!
அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர் - வட
நாட்டார்!
அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட
நாட்டவர்.
அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய்
கோஷ்!
அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல
ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!!
அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர்
லோகியா!
அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல
கோல்வால்கர்!
இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம
சமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை
அமைந்திருப்பது வடக்கேதான்!
உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான்
சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா -
பெருமதிப்பு கொண்டேன் - எனினும் என் உள்ளத்திலே ஓர்
எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார்
வினோபா.
மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறுபட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள்<noinclude></noinclude>
75wb5sczjcd18gj028yvdu0bi9javwi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/70
250
644466
1940032
1938367
2026-06-05T09:05:48Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர்
வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு,
அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன்
பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம்
நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன்.
இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த
நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில்,
குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, 'பவனி' நடத்தியதுண்டா?
இப்போதாவது முடிகிறதா!
திருக்குறளையும் திருவாய்மொழியையும் தாம்
கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக்
கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று
மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை
என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே,
(களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற)
சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள
வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா?
அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும்,
அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட
இங்கு 'தலைவர்கள்' வருகின்றனர் - இங்கிருந்து, அங்கு?
ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது!
வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம்
எழத்தான் செய்தது.
எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச்
செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில்
மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு
விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள்,
டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள்.
பாரேன் ஒரு சம்பவத்தை.<noinclude></noinclude>
ip9inj7jligafk8uelxhkr3e0352l6m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/71
250
644467
1940033
1938423
2026-06-05T09:12:39Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||61}}{{rule}}</noinclude>தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான்
என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம்
பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக்
கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும் -
எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் - இவை
கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் -
பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச்
சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய
தில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில்
போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி,
என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை - என்றார் நிதி
அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன்
வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்?
டில்லியின் தயவு வேண்டும்!
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள்,
குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள் - என்று டில்லி
அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி
குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ்
தலைவர்கள் இருக்கிறார்கள் - காங்கிரசை மீறியும்
தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
4fz9ecs65gd0yfjntllx5typvs5z4p5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/72
250
644468
1940034
1938369
2026-06-05T09:17:40Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால்
கோழையும் வீரனாவான்!!
'கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது'
என்கிறார்.
'நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்!
அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்' என்கிறார்.
கிளர்ச்சி ஓயவில்லை - அறப்போர் நடந்தவண்ண
மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர்.
தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால்,
நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது - நான்
மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார்.
பஞ்சாப், வங்காளம், பீகார் - எங்கும், தம்பி, உரிமை
பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து
நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது
மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான்
'தலைவர்கள்' இருக்கிறார்கள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே!
கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர்
இங்கே!!
பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட
நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில்
தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய
வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும்
வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே
தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி
நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல
முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப்
பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது.
12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி.
சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது -
எனினும், ஆட்டப்படைக்கும் அதிகாரம் டில்லியில்<noinclude></noinclude>
0c2fm4tf2s4x9z8llvul59uyzjg0s9f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/73
250
644469
1940035
1938425
2026-06-05T09:20:29Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது,
அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது
அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப்
பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும்
இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை
எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன்
கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக்
குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை
பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும்
நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண்
போகாது! நிச்சயமாக!!
8-7-1956
அன்பன்,
Jimmy<noinclude></noinclude>
so93f2o8460opj3apuyd1sy5wk117ve
1940036
1940035
2026-06-05T09:22:41Z
Subisena
16382
1940036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது,
அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது
அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப்
பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும்
இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை
எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன்
கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக்
குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை
பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும்
நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண்
போகாது! நிச்சயமாக!!
{{rh|<br>8-7-1956||அன்பன்,<br>
{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf
|Page = 29
|bSize = 450
|cWidth = 182
|cHeight = 60
|oTop = 390
|oLeft = 238
|Location = right
|Description =
}}}}<noinclude></noinclude>
l3cspul5rnteqztjfvesjh2wqzgkfpn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/75
250
644471
1940049
1938428
2026-06-05T09:48:08Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||65}}{{rule}}</noinclude>வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால்
உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று
எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை
எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும்,
பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி
யாளே!"
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும் பேய்க்
குணம் கொண்டோராயினர்! வானத்து
வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள்
காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு
குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது
திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே!
நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து
வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன்,
ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர்
துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத்
தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்
கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான்
உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன?
மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு,
கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
197r3tvkph8l3km3nprqi6so6dz5z2b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/76
250
644472
1940047
1938373
2026-06-05T09:46:13Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை
விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி
காணவேண்டும்!
"பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக,
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான்.
ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு
பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும்
பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட
முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்."
“பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு
மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!"
"அப்பாவியும் அப்படிக் கூறானே! அன்புக்கே
உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல்
எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு
பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு
விளக்கம் தர வேண்டுகிறேன்."
"பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால்
பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப்
பொருள் தேவைப்படுகிறது."
'பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து
வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது
விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?"
"இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்."
"நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்."
என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி,
எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை,
விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம்,
தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்?
எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப்
படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான்
கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து<noinclude></noinclude>
b8nkyb2b2kdh5s6j38z2apro7wsht8q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/77
250
644473
1940044
1938430
2026-06-05T09:44:05Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||67}}{{rule}}</noinclude>பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில்
கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப்
பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற
அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல்
தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச்
சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும்
புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில்
உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு,
கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும்
காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப்
பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி
யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக
இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட
நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில்
காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும்
புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும்,
தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக
மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும்
மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம்
நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய,
பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும்
கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும்
கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப்
பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம்
இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
j3ahr0yaeszfi1my4snn1ztvmp1np7w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/78
250
644474
1940041
1938375
2026-06-05T09:42:28Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, சட்டம்
இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக்
காணோம்.
இங்கு - காமராஜர் - கேட்கிறார் - அவர் கேட்கிறாரே
நாமும் அதே 'பாணியில்' பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை
மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும்
கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று.
உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில்,
நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட
முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத்
திகழும் சூயென்லாய், அந்த 'நடிப்புச் செல்வி'யைப்
பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன.
தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு
செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை
உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல்
கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம்
வெதும்பிய நிலையில் உள்ளவர்கள்.
'நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும்
என்ன சம்பந்தம்?' என்று கேட்கின்றனர்.
நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில்
ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது
தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால்
கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத்
தாக்குதல், எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை
கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக்
கவலைப்படப் போவதில்லை.
சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது;
களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா
என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள்
என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள்
நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் தங்களிடம்
இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்!
நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று
இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும்<noinclude></noinclude>
qztx5bvpl9cowcxrp01xhcigi9m3u3f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/79
250
644475
1940039
1938432
2026-06-05T09:38:06Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி
வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த,
பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன
கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!!
பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்
துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில்
காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத்தக்க
திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம்
கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த
விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா
என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது
மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில் -
வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச்
செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என்
வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
{{left_margin|3em|<poem>"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"</poem>}}
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.<noinclude></noinclude>
a80phs6kp6yj3m2r1wcz47sg54wkza5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/80
250
644476
1940038
1938378
2026-06-05T09:30:41Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1940038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும்
கரையச் செய்யும் என்பார்கள்.
இந்தச் 'சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி
நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!
இந்த ருசிகரமான சேதியை 'சோஷலிஷ்டு' இதழில்
காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை
கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று
எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச்
சம்மதித்தால்.
{{left_margin|3em|"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச்
சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடக
மாடுவோர்கள், நாடாள்வதாவது?" என்று கேட்கிறார்.}}
இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும்
என்னும் கதையாக, ஒரு அருமையான 'பாயிண்டைக்" காமராஜர்
பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.
இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு சில
சம்பவங்கள் தெரியும்.
ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர்
கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து
சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில்
சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக
நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார
பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும்
தானே கவனித்துக் கொண்டாராம்.
இந்த இளைஞர்தான், இன்றைக்கு <b>ஆசியாவிலே வயது
முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி
தங்கத்தூரு பிரகாசம் பந்துலுகாரு அவர்கள்.</b> அவர்
நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி
பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?
அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை
உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை
வாய்ந்தவர் <b>ஸ்ரீ சத்திய மூர்த்தி</b> அவர்கள்.<noinclude></noinclude>
oiub7cqlwg1qgcdkk16aedkr713nad8
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1939966
1939931
2026-06-04T15:31:32Z
Desappan sathiyamoorthy
14764
1939966
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
o4zol1hh2458w86ecljep7hs4hy0wod
1939974
1939966
2026-06-04T17:51:45Z
Desappan sathiyamoorthy
14764
1939974
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
ttyajgpwgbu47j4wnxmab3axmfkoiqx
1939977
1939974
2026-06-04T18:16:46Z
Desappan sathiyamoorthy
14764
1939977
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
bb7fhfuhbrw7fktr3qx801u8rga1kir
1940028
1939977
2026-06-05T08:30:46Z
Desappan sathiyamoorthy
14764
1940028
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
64d1ig2otlnlglk0l3kbnd5l1urdvs3
1940031
1940028
2026-06-05T09:01:37Z
Desappan sathiyamoorthy
14764
1940031
wikitext
text/x-wiki
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
kr2xaq8slcvzasfiwmqp19lih1m47nn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/51
250
645152
1939964
2026-06-04T12:20:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் நிலப்படத்தை உருவப்படத்துடன் இணைத்து வரைந்தார். இவர் பரந்த தோற்றங்களில் அமைந்த நாட்டுப்புற இயற்கைக் காட்சியின் பின்னணியில் சிறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேன்சு பரோ, தாமசு|25|கேனோபநிடதம்}}</noinclude>இவர் நிலப்படத்தை உருவப்படத்துடன் இணைத்து வரைந்தார். இவர் பரந்த தோற்றங்களில் அமைந்த நாட்டுப்புற இயற்கைக் காட்சியின் பின்னணியில் சிறிய அளவிலான உருவங்களை வரைந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 51
|bSize = 480
|cWidth = 153
|cHeight = 247
|oTop = 110
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|பரோவின் கிரகாம் ஓவியம்}}
கேன்சுபரோ (Gainsborough, Thomuas) இங்கிலாந்திலுள்ள சட்பரி (Sudbury) என்னுமிடத்தில் கி.பி. 1727–இல் ஓர் ஏழைக் கம்பனி வணிகருக்கு மகனாகப் பிறந்தார். ஓவியத்தின் மீது கொண்ட நாட்டத்தின் காரணமாகத் தம் 14–ஆம் வயதிலேயே இலண்டனுக்கு ஓவியப் பயிற்சி பெறச் சென்றார். அங்கு மார்கரெட்டு பர் (Margaret Burr) என்ற பெண்ணை கி.பி. 1746–இல் மணந்தார். பின்னர் கி.பி. 1748–இல் தம் சொந்த ஊருக்குத் திரும்பி, இப்சு விச்சு (Ipswich), பாத்து (Both) ஆகிய இடங்களில் தங்கி ஓவியப் பணியாற்றினார். இவர் மத்திய தரைப் பகுதிகளில் சில காலம் ஒரு சுற்றுலா உருவப்பட ஓவியராகத் திகழ்ந்தார். அங்கிருந்து கி.பி 1768–இல் இலண்டனுக்குச் சென்று ஓவியக் காட்சியினைத் தொடங்கினார். இவர் பேரரசுக் கல்விக் கழகத்தைப் (Royal Academy) பிறருடன் சேர்ந்து உருவாக்கினார்.
பண்ணையின் இயற்கைக் காட்சிப் பின்னணியுடன் இவர் கி.பி. 1750–இல் வரைந்த இராபர்ட்டு ஆண்ட்ரூசு (Robert Andrews) என்ற கணவன் மனைவியின் உருவப்படம் ஒரு முன்மாதிரியான ஆங்கில உருவப் படமாகத் திகழ்ந்தது. இவர் தீட்டிய உருவப் படங்களுக்கு கி.பி. 1759–க்குப் பின்னர் அதிகமான வரவேற்பு இருந்தது. அதற்குப் பின்னரே இவர் தாம் விரும்பிய நிலப்படங்களை வரைவதில் ஆர்வம் காட்டினார். வான் தைக்கு (Van Dyck) என்ற ஓவியரின் தாக்கத்தினால் கி.பி. 1770–இல் இவர் வரைந்த ‘நீலச் சிறுவன்’ (Blue Boy) என்ற ஓலியம் அதிகமான புகழ் பெற்றது. இந்த ஓவியம் 1928–இல் 8 இலட்சம் தாலருக்கு (Dollar) விலை போயிற்று. அண்டிங்டன் (Huntington) கலைக் கூடத்தில் வைத்திருந்த இலிகோனர் பிரபுவின் (Viscount Ligonier) ஓவியமும், எடின்பர்குத் தேசியகூடத்தில் வைத்திருந்த கிரகாமின் ஓவியமும் மிகவும் புகழ்பெற்ற படைப்புகளாகும். சிறப்புமிக்க இந்த ஆங்கில ஓவியர் கி.பி. 1788–ஆம் ஆண்டு இலண்டனில் இறந்தார்.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கேன்சு பரோ, தாமசு"/>
<section begin="கேனோபநிடதம்"/>
{{dhr}}
{{larger|<b>கேனோபநிடதம்</b>}} சாமவேதத்தைச் சார்ந்தது. இவ்வேதத்திற்குத் தாண்டிய, தலவகார என்னும் இரு பிராம்மணங்கள் உண்டு. தலவகாரப் பிராம்மணத்தின் நான்காம் அத்தியாயத்தில், 10–ஆம் அநுவாகத்தில் இவ்வுபநிடதம் உள்ளது. எனவே, தலவசார உபநிடதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.
சீடன், எதனால் தூண்டப்பட்டு மனம் தனக்கு விருப்பமான பொருள்களைத் தெரிந்து கொள்ளுகிறது என்று கேட்க, குரு விடையளிக்கிறார். இவ்விதமே சீடன் மேலும் மேலும் வினாக்களைக் கேட்கிறான். ஒவ்வொன்றிற்கும் அவர் விடை கூறுகிறார். ஆகையால் ‘எதனால்’ என்ற பொருளைக் குறிக்கும் ‘கேன’ என்ற வடமொழிச் சொல்லால் இவ்வுபநிடதம் கேனோபநிடதம் என வழங்குகிறது.
இதில் 35 செய்யுள்கள் நான்கு பகுதிகளில் உள்ளன. முதற் பகுதி: எதனால் தூண்டப்பட்டு மனம், பிராணன், பேச்சு, கண், காது இவை இயங்குகின்றன என்ற சீடனுடைய கேள்விக்கு, குரு விடை கூறுகின்றார். காதுக்குக் காதாகவும், மனத்துக்கு மனமாகவும், பேச்சுக்குப் பேச்சாகவும், பிராணனுக்குப் பிராணனாகவும், கண்ணுக்குக் கண்ணாகவும் எது உள்ளதோ அதுதான் தூண்டுகிறது. இதைத் தெரிந்து கொண்டவர் அமரர்களாக ஆவார்கள். நாம் அறிந்து கொண்டவற்றினின்றும் அது வேறுபட்டது. மனத்தால் அதை எண்ணவும் முடியாது. கண்ணால் பார்க்கவும் முடியாது, காதால் கேட்கவும் முடியாது. இதுதான் பிரம்மம் என்னும் பரம்பொருள். இரண்டாம் பகுதி: நான் அதனை அறிகிறேன் என்று சொன்னால், அதனுடய மிகச் சிறிய பாகத்தைத் தான் நீ அறிந்த-<noinclude></noinclude>
6kxjhvd8kj22o5hzqmdegknoy7uq0tz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/52
250
645153
1939965
2026-06-04T12:31:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வனாக ஆவாய். நான் அதனை நன்றாக அறிந்துள்ளேன் என்று எண்ண முடியவில்லை; அறியவில்லை என்றும் கூற முடியவில்லை. எவன் இவ்விதம் உணர்கிறானோ அவன் அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேனோபநிடதம்|26|கேனோபநிடதம்}}</noinclude>வனாக ஆவாய். நான் அதனை நன்றாக அறிந்துள்ளேன் என்று எண்ண முடியவில்லை; அறியவில்லை என்றும் கூற முடியவில்லை. எவன் இவ்விதம் உணர்கிறானோ அவன் அதனைத் தெரிந்துகொண்டவன் ஆவான். மூன்றாவது பகுதி: அசுரர்களைத் தேவர்கள் சண்டையில் வென்றபோது தாங்களே வென்றதாக எண்ணினர். அப்போது பிரம்மம் அவர்களுக்கு முன்பு தோன்றியது. அது யார் என்று அக்கினி தேவனாலும், வாயு தேவனாலும், இந்திரனாலும் அறிய முடியவில்லை. அவர்கள் அதனிடம் ஒவ்வொருவரும் சென்று நீ யார் என்று வினவ, அது அக்கினியைப் பார்த்து நீ இந்தப் புல்லை எரித்துவிடு என்று சொல்லிற்று. அதைக் கொளுத்த அக்கினியால் முடியவில்லை. அவ்விதமே இந்தப் புல்லை எடுத்துச் செல் என்று வாயுவைப் பார்த்துக் கூற, வாயுவால் அதனை அசைக்கவும் முடியவில்லை. அப்போது இந்திரன் அதன் அருகில் வர, அது மறைந்துவிட்டது. அச்சமயம் இமவானுடைய பெண்ணாகிய உமை அங்கு வந்தாள். அவளிடம் இது யார் என்று இந்திரன் கேட்டான். நான்காம் பகுதி: உமை இந்திரனிடம் அது பிரம்மம் என்று கூறினாள். அதனால் அக்கினி, வாயு, இந்திரன் ஆகிய மூவரும் மற்றத் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு முன்பு தோன்றியது பிரம்மம் என்று அவர்கள் அறிந்தார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்திரன் ஒருவனே உமையினிடமிருந்து இதனைத் தெரிந்து கொண்டதால் அவன்தான் தேவர்கட்குத் தலைவன். இத்தேவர்களுக்கு முன்பு தோன்றிய பிரம்மம் மின்னலைப் போல் தோன்றி மறைந்துவிட்டது. கண்களுக்குத் தோற்றமளித்தது போல், மனத்திற்கும் பிரம்மம் தோன்றும். ஆனால் மனம் இதனை நீண்ட காலம் நினைக்கமுடியாது. பிரம்மமானது அடையத் தக்கது; விரும்பத்தக்கது. இதுதான் பிரம்மத்தைப் பற்றி உபநிடதத்தில் கூறப்படும் செய்தி. இந்திரியங்களை அடக்கி வைத்தல், தான் செய்ய வேண்டிய கருமத்தைச் செய்தல் ஆகியவை பிரம்மத்தை அடைவதற்கு உரிய வழிகள்.
{{Right|<b>வி.வ.</b>}}
<section end="கேனோபநிடதம்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
9la04498umid45b7tw6tei1mpo4jb5o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/53
250
645154
1939969
2026-06-04T16:57:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கை"/> {{dhr}} {{dropinitial|கை}} ககர மெய்யோடு ஐகாரத்துக்குரிய முயற்சியும் கலந்தால் இந்த ஒலி தோன்றுகிறது. க என்ற மெய்யெழுத்துக்கும் ஐ என்ற உயிரெழு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கை"/>
{{dhr}}
{{dropinitial|கை}} ககர மெய்யோடு ஐகாரத்துக்குரிய முயற்சியும் கலந்தால் இந்த ஒலி தோன்றுகிறது. க என்ற மெய்யெழுத்துக்கும் ஐ என்ற உயிரெழுத்துக்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க வாயைத் திறந்து அடித் தொண்டையிலிருந்து எழும் ககர ஒலியோடு, இளித்து மேலண்ணத்தை இறக்கிய நிலையில் தோன்றும் ஒலியே கையாகும்.
ஓரெழுத்து ஒரு மொழியாக மக்களுடைய உடல் உறுப்புகளுள் ஒன்றை இது உணர்த்துகின்றது. அதனடியாகப் பல பொருள்களையும் தரவல்லது.
{|
|-
|<b>உருவம்:</b> இடப்புறம் நோக்குக் ககரத்தின் உருவத்திலிருந்து இழுக்கப்படும் கோடுகளே இதன் உருவம் ஆகும். ஒரே இடத்திலிருந்து மேலும் கீழுமாக இழுக்கப்படலாம். கி.மு. 3–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டில் மேலும் கீழுமாகக் காணப்படுகின்றது. அரச்சலூர்க் கல்வெட்டில் கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் ஒரே இடத்திலிருந்து இந்த இரு கோடுகளும் இழுக்கப்பட்ட உருவம் காணப்படுகின்றது. இது லை என்ற எழுத்தில் காணப்பட்டாலும்
‘கை’க்கும் பொருத்தும். || ...... ||rowspan=5 |{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 53
|bSize = 480
|cWidth = 56
|cHeight = 237
|oTop = 276
|oLeft = 365
|Location = center
|Description =
}}
|-
|அடுத்தபடியாக இந்த இரு கோடுகளும் இரு வளைந்த கோடுகளாக மாறின. ஒன்றை ஒன்று அடுத்து எழுதப்பட்டன. பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகளில் இந்த உருவம் வேறு எழுத்துகளுக்குக் காணப்படுகின்றது. ‘கை’ க்கும் இது அமையும் என்று சொல்லலாம். || ... ... ||
|-
|அடுத்த நிலையில் இவ்விரண்டும் முற்றிலும் இரட்டைக் கொம்பாக இணைத்து எழுதப்பட்டன. விசயநகர மன்னன் அச்சுத ராயனின் திருவரங்கம் கல்வெட்டில் இக்காலத்து உருவம் காணப்படுகின்றது. || ... ... ||
|-
|வட்டெழுத்தில் முதலில் இருந்தே ஏறக்குறைய ஒரே உருவந்தான் காணப்படுகின்றது. திருநாதர்குன்றுக் கல்வெட்டிலும் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு) அதற்குப்பின் கேரளத்தில் (கி.பி. 17–ஆம் நூற்றாண்டு) பாலியம் செப்பேடுகளிலும் இவ்வுருவத்தைக் காணலாம். || ... ||
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கை"/>
<section begin="கைக்கோடரி"/>
{{dhr}}
{{larger|<b>கைக்கோடரி</b>}} பழங்கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளும் ஒரு வகை. இக்காலக் கோடரி போன்று இது வடிவம் கொண்டுள்ளமையால் கைக்கோடரி எனக் கூறப்படுகிறது. இக்கருவி பெரும்பாலும் தோண்டுவதற்கே பயன்பட்டது. இது தடித்த தலைப் பாகத்தையும் அதிகமான அளவில்<noinclude></noinclude>
mwk25ufvz1vllb5j6al5qd2l1ds6056
1939971
1939969
2026-06-04T16:59:44Z
Desappan sathiyamoorthy
14764
1939971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கை"/>
{{dhr}}
{{dropinitial|கை}} ககர மெய்யோடு ஐகாரத்துக்குரிய முயற்சியும் கலந்தால் இந்த ஒலி தோன்றுகிறது. க என்ற மெய்யெழுத்துக்கும் ஐ என்ற உயிரெழுத்துக்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க வாயைத் திறந்து அடித் தொண்டையிலிருந்து எழும் ககர ஒலியோடு, இளித்து மேலண்ணத்தை இறக்கிய நிலையில் தோன்றும் ஒலியே கையாகும்.
ஓரெழுத்து ஒரு மொழியாக மக்களுடைய உடல் உறுப்புகளுள் ஒன்றை இது உணர்த்துகின்றது. அதனடியாகப் பல பொருள்களையும் தரவல்லது.
<b>உருவம்:</b> இடப்புறம் நோக்குக் ககரத்தின் உருவத்திலிருந்து இழுக்கப்படும் கோடுகளே இதன் உருவம் ஆகும். ஒரே இடத்திலிருந்து மேலும் கீழுமாக இழுக்கப்படலாம். கி.மு. 3–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டில் மேலும் கீழுமாகக் காணப்படுகின்றது. அரச்சலூர்க் கல்வெட்டில் கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் ஒரே இடத்திலிருந்து இந்த இரு கோடுகளும் இழுக்கப்பட்ட உருவம் காணப்படுகின்றது. இது லை என்ற எழுத்தில் காணப்பட்டாலும்
‘கை’க்கும் பொருத்தும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 53
|bSize = 480
|cWidth = 56
|cHeight = 237
|oTop = 276
|oLeft = 365
|Location = center
|Description =
}}
அடுத்தபடியாக இந்த இரு கோடுகளும் இரு வளைந்த கோடுகளாக மாறின. ஒன்றை ஒன்று அடுத்து எழுதப்பட்டன. பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகளில் இந்த உருவம் வேறு எழுத்துகளுக்குக் காணப்படுகின்றது. ‘கை’ க்கும் இது அமையும் என்று சொல்லலாம்.
அடுத்த நிலையில் இவ்விரண்டும் முற்றிலும் இரட்டைக் கொம்பாக இணைத்து எழுதப்பட்டன. விசயநகர மன்னன் அச்சுத ராயனின் திருவரங்கம் கல்வெட்டில் இக்காலத்து உருவம் காணப்படுகின்றது.
வட்டெழுத்தில் முதலில் இருந்தே ஏறக்குறைய ஒரே உருவந்தான் காணப்படுகின்றது. திருநாதர்குன்றுக் கல்வெட்டிலும் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு) அதற்குப்பின் கேரளத்தில் (கி.பி. 17–ஆம் நூற்றாண்டு) பாலியம் செப்பேடுகளிலும் இவ்வுருவத்தைக் காணலாம்.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கை"/>
<section begin="கைக்கோடரி"/>
{{dhr}}
{{larger|<b>கைக்கோடரி</b>}} பழங்கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளும் ஒரு வகை. இக்காலக் கோடரி போன்று இது வடிவம் கொண்டுள்ளமையால் கைக்கோடரி எனக் கூறப்படுகிறது. இக்கருவி பெரும்பாலும் தோண்டுவதற்கே பயன்பட்டது. இது தடித்த தலைப் பாகத்தையும் அதிகமான அளவில்<noinclude></noinclude>
0xqzc27na217fajbpp4z16v3vdt8xhi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/54
250
645155
1939972
2026-06-04T17:34:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மூல ஓட்டினையும் கொண்டு விளங்கும் கருவியாகும். அபிவில்லியன் பண்பாட்டுக் கைக்கோடரிகள் ஒழுங்குருவம் அற்ற கைக்கோடரிகளாக விளங்குகின்றன...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைக்கோடரி|28|கைகேயி}}</noinclude>மூல ஓட்டினையும் கொண்டு விளங்கும் கருவியாகும். அபிவில்லியன் பண்பாட்டுக் கைக்கோடரிகள் ஒழுங்குருவம் அற்ற கைக்கோடரிகளாக விளங்குகின்றன. கைக்கோடரி முதன்முதலில் ஆப்பிரிக்காவில் கூழாங்கற் கருவிகளைப் பயன்படுத்திய மக்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலும் இக்கைக்கோடரிகளைப் பழங்கற்கால மக்கள் பயன்படுத்தினர். உலக நாடுகளில் கிடைக்கும் கைக்கோடரிகள் யாவும் அமைப்பில் ஒரே வடிவம் கொண்டவை. சிறு சிறு மாறுதல்களே இவற்றில் காணப்பட்டன. அச்சூலியன் காலக் கைக்கோடரிகள் அபிலில்லியன் கைக்கோடரிகளைவிடத் தரத்தால் உயர்ந்தவை; கூர்மையான வெட்டுப் பகுதியை உடையவை. அச்சூலியன் காலத்தின் பிற்பகுதியில் கிடைத்த கைக்கோடரிகள் இருமுக வெட்டுப் பகுதிகளைக் கொண்டு விளங்கின. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் வட்டத்தில் கிடைக்கும் பழங்கற்காலக் கைக்கோடரிகள் சென்னைக் கைக்கோடரிகள் (Madras Hand Axes) எனக் கூறப்படுகின்றன. இவற்றுள் வடமதுரையில் கிடைக்கும் கைக்கோடரிகள் அபிவில்லியன் கைக்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 54
|bSize = 480
|cWidth = 123
|cHeight = 205
|oTop = 297
|oLeft = 61
|Location = center
|Description =
}}
{{center|கைக்கோடரி}}
கோடரிகளை ஒத்தவை; கரடு முரடானவை; வெட்டு விளிம்பு நேரற்றவை; ஒழுங்குருவம் அற்றவை. இப்பகுதியிலேயே கிடைக்கும் அச்சூலியன் கைக்கோடரிகள் செதிள் போன்ற தோற்றம் பெற்று அபிவில்லியனை விட நேர்த்திமிக்கவை. இவை சிறுத்த அளவில் பேரிக்காய் உருவமும் நீள்வட்ட உருவமும் பெற்று விளங்குபவை. இக்கைக்கோடரிகள் மண்ணைத் தோண்டவும் மரத்தை வெட்டவும் சீவவும் இறைச்சியை வெட்டவும் பயன்பட்டன.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கைக்கோடரி"/>
<section begin="கைகேயி"/>
{{dhr}}
{{larger|<b>கைகேயி:</b>}} வாய்மையும் மரபுங்காத்த தயரத மன்னரின் இளைய பட்டத்தரசியாயும், கேகயமன்னனின் மகளாகவும், மாண்பமை பரதனின் தாயாகவும் இராமாயணக் காவியத் திருப்பு மையமாகவும், பேரெழில் மடவரலாகவும் சித்திரிக்கப்படுகின்ற காலிய நாயகியே கைகேயியாவாள். இக்கைகேயியின் பணிப் பெண்ணாக விளங்கியவள் மந்தரை என்னும் கூனி.
தயரதச் சக்கரவர்த்தி தன் மூத்த மகன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்தான். அச்செய்தி நகர மாந்தர் அனைவர்க்கும் அறிவிக்கப்பட்டது. மறு நாள் இராமன் மணி முடி தரித்து அயோத்தியின் இளவரசுப் பட்டம் சூடப்போகின்றாள் என்று மகிழ்ச்சிக் கடலில் மக்கள் திளைத்தனர்.
அயோத்தி நகர மாந்தர் அனைவரும் தத்தம் வீட்டு விழாவாக எண்ணி நகரை அலங்கரிக்கத் தொடங்கினர். பேரொலியும் மகிழ்ச்சி ஆரவாரமும் எங்கும் நிறைந்தன. ‘நாளை இராமன் மணி முடி சூடுவன்’ என்ற பேச்சே அயோத்தி எங்கும் எதிரொலித்தது. இத்தருணத்தே இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல் கொடுமையின் உருவாகிய கூனி தோன்றி நகரணிக்குக் காரணங் கேட்டறிந்து நலிவும் சோர்வுமுற்றாள். இவ்விடத்தேதான் கைகேயி என்னும் கேகயன் மயிலும், தூய மடநெஞ்சினளும், பரதனை ஈன்றவளும், இராகவனைத் தன் உயிரினும் மேலாகக் கருதியவளும் ஆகிய கன்னமற்ற உள்ளமுடைய கைகேயி அறிமுகமாகின்றாள்.
தீய உள்ளத்தினளாகிய மந்தரை, கேகயன் மகள் கைகேயியின் அரண்மனைக்கு விரைந்து சென்று அவளைக் கண்டாள். அச்செய்தியினைக் கூறி இடித்துரைத்து அவள் உள்ளத்தினைத் திரிபடையச் செய்தாள். கைகேயி, தன் மகன் பரதனினும் மேலாக இராமனைக் கருதியிருந்த எண்ணத்தைப் படிப்படியாக மாற்றிவிட்டாள். தூமனம் படைத்த கைகேயி தீமனக் கூனியின் கூற்றாலும், அரக்கர் செய்த பாவத்தாலும் அல்லவர் செய்த அறத்தாலும் சிறிது சிறிதாக மாறி, நல்லருளைத் துறந்து, அம்மந்தரையின் கைப்பாவையாகி விடுகின்றால், தூய சிந்தனையுடைய கைகேயி தீயவளாக மாறிய பின்னர்த் தன்னை நோக்கித் தன் இல்லம் ஏகும் தயரதன் வரவினை ஆவலோடு எதிர் நோக்கியிருந்தாள். கைகேயி தயரதனிடம் தனக்கு முன்னர்க் கொடுத்த இரு<noinclude></noinclude>
4pg04towfknu6e0do3tiwwfrmvx0s18
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/55
250
645156
1939973
2026-06-04T17:51:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரங்களில் ஒன்றினால் பரதன் அயோத்தியை ஆளவும், மற்றொன்றினால் சீதை கேள்வனாகிய இராகவன் கானகம் செல்லவும் பணிக்குமாறு வேண்டினாள். இக்கடுஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைகேயி|29|கைகொட்டிக்களி}}</noinclude>வரங்களில் ஒன்றினால் பரதன் அயோத்தியை ஆளவும், மற்றொன்றினால் சீதை கேள்வனாகிய இராகவன் கானகம் செல்லவும் பணிக்குமாறு வேண்டினாள். இக்கடுஞ்சொல்லை மன்னன் பொறுக்காது இறந்துபடுவான் என அறிந்தும் தூய சிந்தை திரிந்த கைகேயி இவ்வாறு மன்னனிடம் அழுத்தமாகக் கூறித் தன் எண்ணத்தை முடித்தாள். பின்னர்க் கைகேயி இராமனை அழைத்து ‘இவ்வாழி சூழ் உலகினைப் பரதனே ஆள, நீ தாழ்சடை தாங்கித்தவம் மேற் கொண்டு கானகம் சென்று ஏழிரண்டு ஆண்டுகள் கழிந்து வருக இது மன்னர் ஆணை’ எனக் கூறி அறந்துறந்த நெஞ்சினனாய் ஆணையிட்டாள்.
ஆகவே, தன் கணவன் இறப்பிற்கு இக்கொடியவளே காரணமாக அமைந்துவிட்டனள். பரதனே தன் தாயாகிய கைகேயியைக் குகனுக்கு அறிமுகப்படுத்தும்போது உலகில் உள்ள துன்பங்கட்கெல்லாம் தாய் இவள் எனவும், பழி பாவத்தினை அருமையாகப் போற்றி வளர்க்கும் செவிலி இவள் எனவும், இவளது குடரிலே கிடந்து வளர்ந்த பாவி தான் எனவும், உலகமே இராமன் பிரிவால் துயருறும்போது இவள் ஒருத்தியே சிறிதும் துன்புறாது இருப்பவள் எனவும் உள்ளதனை உள்ளவாறு கூறி அறிமுகம் செய்துவைத்தான்.
தயரதனும் இறுதியாக ‘நீ எனக்குத் தாரமுமில்லை உன் மகன் பரதன் எனக்கு மகனுமில்லை’ என்று சபித்துவிட்டு இறக்கின்றான். இதனையே இராமன் அரைவடிவில் தோன்றித் தன்னிடம் வந்து வரம் கேள் என்ற தயரதனிடம் ‘தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மாலும் தாயும் தம்பியுமாம் வரம் தருக’ என வேண்டி நின்ற செயலால் கைகேயியும் பரதனும் தயரதனால் மன்னிக்கப்படுகின்றனர். மேலும், தயரதன் கைகேயி தவறுடையவள் அல்லள் எனக்கூறி அமைதியுறச் செய்து அன்று அவள்பெற்றதும் இருவரம், ஒன்றினால் நின்னைக் காடாளவும், பிறி தொன்றினால் பரதனை நாடாளவும் செய்தாள். இன்று நீ என்பால் பெறும் வரமும் இரண்டு; என்றுரைத்து ஆசி கூறித்தயரதன் ஆவிமறைந்தது.
தயரதன், கைகேயியின் பேரெழில் காரணமாகவும், இளமை காரணமாகவும் மணந்து அவளைத் தன் இளைய பட்டத்தரசியாக ஆக்கினான். மேலும் தயரதன் சம்பராசுரன் என்ற அரக்கனோடு போர் செய்யும் போது தேர் அச்சு முறிந்துபோக அவ்வமயம் இக்கைகேயி தேர்ச்சாரதியாக இருந்து அப்போரில் தயரதன் வெற்றிக்குக் காரணமாய் விளங்கினாள். அவ்வமயம் அவளுடைய வீரத்திற்கும், காலத்தினாற் செய்த உதவிக்கும் மகிழ்ந்து அவள் தம்மிடம் இரு வரங்கள் பெறும் உரிமையைத் தயரதன் நல்கினான். இவள் அப்போது அவ்வரங்களைப் பெறவில்லை. பல ஆண்டுகளாக வாளாயிருந்துவிட்டுத் தக்க தருணத்தே அவ்வரங்களைப் பெற்றுத் தன் எண்ணம் நிறைவேற்றியமை, கைகேயியின் கூர்த்த மதியினையும் வஞ்ச உள்ளத்தினையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
{{Right|<b>கி.கோ.</b>}}
{{larger|<b>கைகொட்டிக்களி</b>}} என்பது பெண்கள் ஆடுகின்ற சிறுநடன வகையாகும். இது, கேரள நாட்டு நடனமாகும். திருவோணவிநா, திருவாதிரை விழா ஆகிய காலங்களில் இந்த நடனம் நடைபெறும். வேடம் புனையாமல், பகலிலும் இரவிலும் ஆடுவர். வெள்ளை ஆடையை நடனத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வாடையை ‘நேரியதுசாரி’, புடவையும் கவுனியும் என்று அழைப்பர்.
வீட்டு முற்றத்தில் அல்லது பந்தல் போட்டு ஆடுவர். விளக்கொன்றை ஏற்றிவைத்து அதனைச் சுற்றிச் சுற்றி ஆடிவருவர். ஆறுமுதல் பதினெட்டுப் பெண்கள் வரை இந்நடனத்தில் பங்குபெறுவர். ஒருவர் பாட மற்றவர்கள் அதைத் தொடர்ந்து இருகையையும் தட்டி ஒலி எழுப்பித் தாளத்திற்கேற்ப முன்னும் பின்னும் காலெடுத்து வைத்தாடுவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 55
|bSize = 480
|cWidth = 214
|cHeight = 155
|oTop = 334
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{center|கைகொட்டிக்களி}}
உயரத்தில் கயிற்றினைக் கட்டி அதில் ஒரு சிறுவனை அமரச் செய்வர். மேலிருந்து ஆறு ஏழு கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கும். சிறுவனை மையமாகக் கொண்டு கயிறுகள் அமைக்கப்பட்டிருக்கும். முதலில்<noinclude></noinclude>
9gwnfx4kc7sian7nyuyz5f1l03w1fci
1939975
1939973
2026-06-04T17:56:10Z
Desappan sathiyamoorthy
14764
1939975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைகேயி|29|கைகொட்டிக்களி}}</noinclude>வரங்களில் ஒன்றினால் பரதன் அயோத்தியை ஆளவும், மற்றொன்றினால் சீதை கேள்வனாகிய இராகவன் கானகம் செல்லவும் பணிக்குமாறு வேண்டினாள். இக்கடுஞ்சொல்லை மன்னன் பொறுக்காது இறந்துபடுவான் என அறிந்தும் தூய சிந்தை திரிந்த கைகேயி இவ்வாறு மன்னனிடம் அழுத்தமாகக் கூறித் தன் எண்ணத்தை முடித்தாள். பின்னர்க் கைகேயி இராமனை அழைத்து ‘இவ்வாழி சூழ் உலகினைப் பரதனே ஆள, நீ தாழ்சடை தாங்கித்தவம் மேற் கொண்டு கானகம் சென்று ஏழிரண்டு ஆண்டுகள் கழிந்து வருக இது மன்னர் ஆணை’ எனக் கூறி அறந்துறந்த நெஞ்சினனாய் ஆணையிட்டாள்.
ஆகவே, தன் கணவன் இறப்பிற்கு இக்கொடியவளே காரணமாக அமைந்துவிட்டனள். பரதனே தன் தாயாகிய கைகேயியைக் குகனுக்கு அறிமுகப்படுத்தும்போது உலகில் உள்ள துன்பங்கட்கெல்லாம் தாய் இவள் எனவும், பழி பாவத்தினை அருமையாகப் போற்றி வளர்க்கும் செவிலி இவள் எனவும், இவளது குடரிலே கிடந்து வளர்ந்த பாவி தான் எனவும், உலகமே இராமன் பிரிவால் துயருறும்போது இவள் ஒருத்தியே சிறிதும் துன்புறாது இருப்பவள் எனவும் உள்ளதனை உள்ளவாறு கூறி அறிமுகம் செய்துவைத்தான்.
தயரதனும் இறுதியாக ‘நீ எனக்குத் தாரமுமில்லை உன் மகன் பரதன் எனக்கு மகனுமில்லை’ என்று சபித்துவிட்டு இறக்கின்றான். இதனையே இராமன் அரைவடிவில் தோன்றித் தன்னிடம் வந்து வரம் கேள் என்ற தயரதனிடம் ‘தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மாலும் தாயும் தம்பியுமாம் வரம் தருக’ என வேண்டி நின்ற செயலால் கைகேயியும் பரதனும் தயரதனால் மன்னிக்கப்படுகின்றனர். மேலும், தயரதன் கைகேயி தவறுடையவள் அல்லள் எனக்கூறி அமைதியுறச் செய்து அன்று அவள்பெற்றதும் இருவரம், ஒன்றினால் நின்னைக் காடாளவும், பிறி தொன்றினால் பரதனை நாடாளவும் செய்தாள். இன்று நீ என்பால் பெறும் வரமும் இரண்டு; என்றுரைத்து ஆசி கூறித்தயரதன் ஆவிமறைந்தது.
தயரதன், கைகேயியின் பேரெழில் காரணமாகவும், இளமை காரணமாகவும் மணந்து அவளைத் தன் இளைய பட்டத்தரசியாக ஆக்கினான். மேலும் தயரதன் சம்பராசுரன் என்ற அரக்கனோடு போர் செய்யும் போது தேர் அச்சு முறிந்துபோக அவ்வமயம் இக்கைகேயி தேர்ச்சாரதியாக இருந்து அப்போரில் தயரதன் வெற்றிக்குக் காரணமாய் விளங்கினாள். அவ்வமயம் அவளுடைய வீரத்திற்கும், காலத்தினாற் செய்த உதவிக்கும் மகிழ்ந்து அவள் தம்மிடம் இரு வரங்கள் பெறும் உரிமையைத் தயரதன் நல்கினான். இவள் அப்போது அவ்வரங்களைப் பெறவில்லை. பல ஆண்டுகளாக வாளாயிருந்துவிட்டுத் தக்க தருணத்தே அவ்வரங்களைப் பெற்றுத் தன் எண்ணம் நிறைவேற்றியமை, கைகேயியின் கூர்த்த மதியினையும் வஞ்ச உள்ளத்தினையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
{{Right|<b>கி.கோ.</b>}}
{{larger|<b>கைகொட்டிக்களி</b>}} என்பது பெண்கள் ஆடுகின்ற சிறுநடன வகையாகும். இது, கேரள நாட்டு நடனமாகும். திருவோணவிநா, திருவாதிரை விழா ஆகிய காலங்களில் இந்த நடனம் நடைபெறும். வேடம் புனையாமல், பகலிலும் இரவிலும் ஆடுவர். வெள்ளை ஆடையை நடனத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வாடையை ‘நேரியதுசாரி’, புடவையும் கவுனியும் என்று அழைப்பர்.
வீட்டு முற்றத்தில் அல்லது பந்தல் போட்டு ஆடுவர். விளக்கொன்றை ஏற்றிவைத்து அதனைச் சுற்றிச் சுற்றி ஆடிவருவர். ஆறுமுதல் பதினெட்டுப் பெண்கள் வரை இந்நடனத்தில் பங்குபெறுவர். ஒருவர் பாட மற்றவர்கள் அதைத் தொடர்ந்து இருகையையும் தட்டி ஒலி எழுப்பித் தாளத்திற்கேற்ப முன்னும் பின்னும் காலெடுத்து வைத்தாடுவர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 55
|bSize = 480
|cWidth = 214
|cHeight = 175
|oTop = 334
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{center|கைகொட்டிக்களி}}
உயரத்தில் கயிற்றினைக் கட்டி அதில் ஒரு சிறுவனை அமரச் செய்வர். மேலிருந்து ஆறு ஏழு கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கும். சிறுவனை மையமாகக் கொண்டு கயிறுகள் அமைக்கப்பட்டிருக்கும். முதலில்<noinclude></noinclude>
p5rloetv5wizpg1r76675tqcawnaprd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/56
250
645157
1939976
2026-06-04T18:15:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கையை மட்டும் தட்டிக்கொண்டு சுற்றி வருவர். இரண்டாவதாகக் கட்டையால் (கழிக்கம்பு) தட்டிக் கொண்டு பாடி வருவர்; மூன்றாவதாகக் கயிற்றைப் பிடித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைகோபாத்து|30|கைட்டல் வில்கெம்}}</noinclude>கையை மட்டும் தட்டிக்கொண்டு சுற்றி வருவர். இரண்டாவதாகக் கட்டையால் (கழிக்கம்பு) தட்டிக் கொண்டு பாடி வருவர்; மூன்றாவதாகக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பாடிச் சுற்றுவர், சுற்றி வரும் போது கயிறு அழகாகப் பின்னப்படும்; பிறகு பின்னல் நீங்குமாறு திருப்பிச் சுற்றிப் பாடிவருவர். கயிறு பின்னிப் பாடும்போது ஆடுபவர்கள் பாடலை வாங்கிப் பாடுவர். பாடலின் முதலடியைத் தனியே நின்று ஒருவர் பாடுவார். அவரை ஆசான் என்றழைப்பர்.
உயர்ந்த இனத்திவரே இந்த நடனத்தில் பங்கு பெறுவர். கூந்தலை வட்டமான கொண்டையாகப் போட்டிருப்பர்.
<b>பாடலமைப்பு:</b> கணபதி, சரசுவதி, ஆசிரியர், குலதெய்வம் – ஆகியோரைப் போற்றும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கும். இதிகாச, புராணக் கதைகளே பாடலாக அமையும். பாடல்களைக் கவிஞர்களே அமைப்பர். வித்துவான் மச்சாத்து இளையது என்பவரின் பாடல்களே, “கைகொட்டிக்களி” நடனத்திற்குச் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. அவர் திப்பு சுல்தான் அரசவையின் தலைமைக் கவிஞராவர். கதகளிக்குரிய பாடல்களையும் பின்னாளில் இந்நடனத்தில் இணைத்தனர்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆசான் வந்து இந்நடனத்தைக் கற்றுத் தருவார். இடைக் காலத்தில் இந்நடனக்கலைக்குத் தொய்வு ஏற்பட்டது. இக்காலப் பெண்கள் ஆர்வமுடன் ஆடிவருகின்றனர்.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கைகொட்டிக்களி"/>
<section begin="கைகோபாத்து"/>
{{dhr}}
{{larger|<b>கைகோபாத்து</b>}} தில்லியில் அரசு செலுத்திய சுல்தான்களுள் ஒருவர். இவர் சிறப்புமிக்க தில்லிச் சுல்தான் பால்பனின் பேரன். இவர் ஆட்சிப் பொறுப் பேற்றபோது இவரது வயது 17. இளமை தொட்டு மிகக் கட்டுப்பாடான சூழலில் வளர்ந்த இவர், பெருஞ்செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் உரிமையானவராக மாறியவுடன் தம் கட்டுப்பாடுகளையும் ஒழுக்கத்தையும் கைவிட்டு, மது, மங்கை போன்ற உலகியல் இன்பங்களில் மூழ்கித் திளைக்கத் தொடங்கினார். அதன் விளைவாக ஆட்சித்துறை கவனிப்பாரற்றது.
குடிமயக்கத்திலும், சிற்றின்பங்களிலும் கைகோபாத்து மூழ்கிக் கிடக்கையில், அரசரின் பெயரால் ஆட்சியை நிசாமுதீன் என்பவர் நடத்தினார். இவர் பேராசை உடையவர். இவருடைய செயல்களும், இவர் பதவிக்கு உயர்ந்த விதமும் பலரைப் புண்படுத்தின.
அவர்களுள் அரிசு–இ–மமாலிக்கு (Ariz–i–mamalic) என்ற பதவி வகித்திருந்த கில்சி அமீர் சலாலுதீன் பிரோசு (Khilgi Amir Jalalud din Firaz) செல்வாக்கு மிக்க ஒரு பிரிவுக்குத் தலைவராகிவிட்டார். சலாலுதீனின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பல துருக்கிய மாலுக்களும் அமீர்களும் அவர் பக்கம் சேர்ந்து கொண்டனர்.
கைகோபாத்து நோய்வாய்ப்பட்டார். ஆகவே, அவர் மகன் காயுமரா அரசரானார். முடிவில் கைகோபாத்து கில்சி மாலிக்கு ஒருவரால் கொல்லப்பட்டார்.
{{Right|<b>நி.ஆர்.இரா.</b>}}
<section end="கைகோபாத்து"/>
<section begin="கைசர்"/>
{{dhr}}
{{larger|<b>கைசர்:</b>}} செருமானிய மொழியில் கைசர் அல்லது கெய்சர் (Kaiser) என்னும் சொல் பேரரசனைக் குறிக்கும். உருசிய சொல் ‘சார்’ (Tsar), செருமானியச் சொல் ‘கெய்சர்’ ஆகிய இரண்டும் உரோமப் பேரரசன் சீசர் (Ceasar) என்ற சொல்லிலிருந்து உண்டானவை.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கைசர்"/>
<section begin="கைட்டல் வில்கெம்"/>
{{dhr}}
{{larger|<b>கைட்டல் வில்கெம் (கி.பி. 1882–1946)</b>}} செருமெனியில் வல்லாட்சி புரிந்த இட்லருக்கு உதவி செய்து, தண்டனை பெற்ற பலருள், கைட்டல் வில்கெம் (Keital Wilhelm) ஒருவர். செருமானியப் படை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 56
|bSize = 480
|cWidth = 95
|cHeight = 121
|oTop = 322
|oLeft = 305
|Location = center
|Description =
}}
{{center|கைட்டல் வில்கெம்}}
வீரர்களுள் ஒருவராக இருந்த இவர் தனது ஆற்றல் காரணமாக உயர் பதவிகளைப் பெற்றார். முதல் உலகப் போரில் இவர் தலைமையின்கீழ் செருமானியப் பீரங்கிப்படை இயங்கியது. இட்லர் இவரது ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பி, இவரை மிகுதியாக ஆதரித்தார். இட்லருக்கு அடுத்த இராணுவத் தலைமை கைட்டலுக்கு வழங்கப்பெற்றது. இரண்டாம் உலகப் போரில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. செருமனி அப்போரில் தோல்வியுற்ற பின், அத்தோல்வியை ஒப்புக் கொண்டு நாட்டின் சார்பாகக் கையெழுத்திட்டார். அப்போருக்குப்பின்<noinclude></noinclude>
qxhvdtracamf9wqiog0s0j4omprxqxe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/57
250
645158
1940000
2026-06-05T05:09:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூரம்பர்கில் நடந்த போர்க்குற்றவாளிகள் விசாரணையில் குற்றங்கள் பல புரிந்த கைட்டலுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்றது. {{Right|<b>தெ.பா.</b>}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தறி நெசவுத் தொழில்|31|கைத்தறி நெசவுத் தொழில்}}</noinclude>நூரம்பர்கில் நடந்த போர்க்குற்றவாளிகள் விசாரணையில் குற்றங்கள் பல புரிந்த கைட்டலுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்றது. {{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கைட்டல் வில்கெம்"/>
<section begin="கைத்தறி நெசவுத் தொழில்"/>
{{dhr}}
{{larger|<b>கைத்தறி நெசவுத் தொழில்:</b>}} நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து, உலகளவில் பல நாடுகளிலும் நடந்துவரும் தொழில் கைத்தறி நெசவாகும். கையால் நூற்கும் நூலைக் கொண்டு கைத்தறியால் செய்யப்படுவது கதர் எனப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் உரோமாபுரியில் நெசவுத் தொழிலும், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் பட்டு நெசவுத் தொழிலும் தோன்றின. பஞ்சாடை நெசவும் இந்தியாவிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது. நெசவுத்தொழிலில் சணற் கயிறு, கோரை ஆகியவற்றின் நெசவும் அடங்கும். இந்தியாவில் பழங்காலத்திலிருந்து தலையாய ஊரகத் தொழில்களுள் ஒன்றாக விளங்கி வருவது கைத்தறி நெசவுத் தொழில் ஆகும். இது குடிசைத் தொழில்களிலும் முதன்மை இடத்தைப் பெறுகிறது. இது பொதுமக்களின் துணித் தேவையை நிறைவு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வேளாண்மைக்கு அடுத்து இத்தொழில் தன்னிச்சையான வேலைக்கும் (Self-Employment) கூட்டுறவுப் பணிக்கும், கூலி வேலைக்கும் வாய்ப்பு அளித்து, நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
நெசவுத்தொழிலில் தலையாய இடம்பெறும் பஞ்சாடை நெசவு இந்தியாவில் பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் நடைபெறுகிறது. அடுத்த இடம்பெறும் பட்டுநெசவு, தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் பரவலாகவும், பனாரசு (Banaras) போன்ற சில குறிப்பிட்ட நகரங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. சணல் நெசவு வங்காளத்திலும், ஆந்திராவின் வட பகுதியிலும், உரோம நெசவு அசாம் (Assam), காசுமீரம் (Kashmir), மைசூர், ஐதராபாது, பஞ்சாபு ஆகிய மாநிலங்களிலும் சிறப்புற்று விளங்குகின்றன. கயிறு நெசவு கேரளா மாநிலத்தில் நடைபெறுகிறது.
தொன்றுதொட்டு நெசவுத்தொழிலில் குறிப்பிட்ட வகுப்பினரே ஈடுபடுகின்றனர். எனினும், இக்காலத்தில் அப்பழக்கம் மாறி வருகிறது. அசாமில் எல்லா வகுப்பினரும் நெசவுத் தொழில் செய்கின்றனர். சிந்துச் சமவெளியில் இல்லந்தோறும் பருத்தியினால் ஆடை உற்பத்தி செய்யும் நெசவு நடந்ததற்கு மொகஞ்சதாரோவின் தொல்லியல் ஆய்வுகளிலிருந்து சான்றுகள் கிடைத்துள்ளன. அங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கதிர்கள் களிமண்ணாலும் சங்காலும் பளிங்காலும் உண்டாக்கப்பட்டவை.
தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே நெசவுத்தொழில் நடைபெற்றது என்பதற்குத் தொல்காப்பியத்தில் குறிப்புகள் உள்ளன. மயிரினாலும் பருத்தியினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்பதற்குப் பழைய நூல்களில் காணப்படும் ‘பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண் வினைஞர்’, ‘அரவுரியன்ன அறுவை’, ‘ஆவியன்ன அவிர் நூற் சுலிங்கம்’ ஆகியன சான்றுகளாகும்.
இந்தியாவின் நெசவுத்துறை உற்பத்தி செய்த தொன்மைக் கால மசுலின் (Musslin), சீட்டி, காலிக்கோ போன்றவை உலக அங்காடியில் புகழ் பெற்றவையாகும். மிக மெல்லிய 15 மீட்டர் மசுலின் துணி ஒரு மோதிரத்திற்குள் அடங்கும் எனவும், அவை தீப்பெட்டிகள் போன்றவற்றில் அடைத்துப் பாதுகாக்கப்பட்டன எனவும், கைத்தறி நெசவின் சிறப்புத் தன்மையைப் புகழ்ந்து பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் எரோடோட்டசு (Herodotus), பிளினி (Pliny), கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து இந்தியா வந்துசென்ற இரேனால்டு (Renaold), கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த சீன அறிஞர் சாவோ சு குவா (Cha O–Ju–Kua), இத்தாலிய அறி ஓர் மார்க்கோ போலோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
நெசவுத்தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து மிக உச்சக் கட்டத்தையடைந்தது. எனினும், கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் முகமதியர்களின் படையெடுப்பிலிருந்து அவர்களது ஆட்சி இந்தியாவில் வேரூன்றும் இந்தியக் கைத்தறி நெசவு வலுவிழந்து நலிவுற்றது. இசுலாமிய அரசர்கள் பிற்காலத்தில் நெசவுத் தொழிலை ஊக்குவித்து அதனைச் செழிப்புறச் செய்தனர். அக்காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கைத்தறி மசுலின், தமிழகக் காலிக்கோ, வங்காளச் சரிகை ஆகியன ‘மாலைப் பனி’, ‘தென்றல் ஆடை’, ‘ஓடும் நீர்’ போன்ற வருணனைகளால் புகழ் பெற்றன. இசுலாமிய மன்னர்களின் அரண்மனைகளிலும் உயர்குடி மக்களின் இல்லங்களிலும் தனியார், கைத்தறி நெசவுக்கூடங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் சித்திர வேலைப்பாடுகளடங்கிய பட்டுத்துணிகள், சரிகையடங்கிய துணிகள், மெல்லிய மசுலின் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டன.
மீண்டும் தொடர்ந்து வளர்ச்சியடைந்த கைத்தறித் துணிகள், ஐரோப்பிய வாணிகக் கழகங்களின் பெருக்கத்தால் ஏற்றுமதியில் தனி இடம்பெற்றுப் புதுப் பொலிவு பெற்றன. குறிப்பாகக் காலிக்கோ,<noinclude></noinclude>
db575t31hvv0nzx6uiu77z68r8s3api
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/58
250
645159
1940001
2026-06-05T06:00:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சீட்டி போன்ற துணிகள் இங்கிலாந்தில் பெரிய அளவில் இறக்குமதியானபடியால், அங்குள்ள உரோம நெசவுத்தொழில் பாதிப்புக்குள்ளாவிற்று. எனவே, இங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தறி நெசவுத் தொழில்|32|கைத்தறி நெசவுத் தொழில்}}</noinclude>சீட்டி போன்ற துணிகள் இங்கிலாந்தில் பெரிய அளவில் இறக்குமதியானபடியால், அங்குள்ள உரோம நெசவுத்தொழில் பாதிப்புக்குள்ளாவிற்று. எனவே, இங்கிலாந்தில் கி.பி. 1660–இல் இந்தியத் துணி இறக்குமதியை எதிர்த்துப் பெருமளவில் கிளர்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளைக் காலிக்கோ தவிரப் பிற அச்சிட்டதும் சாயம் போடப்பட்டதுமான துணிகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. எனினும், கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் 20 இலட்சம் மதிப்புள்ள கைத்தறித் துணிகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாயின. அவற்றும் 33.3 விழுக்காடு தமிழகத்தில் நெய்யப்பட்ட துணிகளாகும். பெரும்பாலானவை வங்காளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி காரணமாகப் பெருமளவில் உற்பத்தி (Large Scale Production) பெரிய தொழிற்சாலைகளில் நடைபெற்றது. இலங்காசயர் (Langashire), மேன்செசுட்டர் (Manchester) போன்ற இடங்களில் பஞ்சாலைகள் செறிந்து வளர்ச்சியடைந்தன. அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து கைத்தறித் துணிகள் ஏற்றுமதி படிப்படியாக நிறுத்தப்பட்டதுடன், அவ்வாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளான பருத்தி இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாயிற்று. இந்தியாவிலும் பஞ்சாலைகள் நிறுவப்பட்டனவெனினும், இந்திய அங்காடிகளில் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆலைத்துணிகள் குவிக்கப்பட்டன. இக்காரணங்களால் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இந்தியக் கைத்தறி நெசவுத் தொழில் நலிவுற்றது. அதற்குத் தேவையான அளவில் மூலப்பொருள் எளிதாகக் கிடைப்பது அரிதாயிற்று. உற்பத்தியான பொருள்களை விற்பதில் தடைகளும், ஆலைத் துணிகளின் போட்டியும் உள்நாட்டு, அயல்நாட்டு அங்காடியில் மிகுதியாயின. தொடர்ந்து அந்நிலை 20-ஆம் நூற்றாண்டிலும் நீடித்தது. சப்பான் (Japan) நாட்டு மலிவான துணிகளும் இந்திய அங்காடிகளில் குவித்தன.
முதல் உலகப்போரின்போது கைத்தறித்தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாயிற்று. நெசவாளர் பேரளவில் வேலை வாய்ப்பினை இழந்து வறுமைக்குள்ளாயினர், காந்தியடிகள் கதர் இயக்கத்தைத் தொடங்கி நாடெங்கிலும் அயல்நாட்டாரின் துணிகள், நூல்கள் ஆகியவற்றின் பயன்பாட்டினால் உண்டாகும் தீமைகளை விளக்கினார். அனைத்திந்திய நூற்போர் கழகமும் (All India Spinners Association) கைத்தறி நெசவின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டது. உலகப் பொருளாதார மந்தம் (Great Depression) 1930–ஆம் ஆண்டளவில் இந்தியக் கைத்தறி நெசவையும் பாதிப்புக்குள்ளாக்கியது.
நலிந்த கைத்தறி நெசவுத்தொழிலைச் செயலாக்க மூட்ட அக்காலத்து ஆங்கிலேய அரசு மாநில (மாகாண) அரசுகளுக்குச் சீர்திருத்த விதிகளை வரையறுத்து அவற்றைச் செயற்படுத்தப் பண உதவிகளையும் அளித்தது. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கைத்தறித் தொழில் மறுமலர்ச்சியடைந்து மீண்டும் செழிப்புற்றது. எனினும், போர் முடிந்தவுடன் மீண்டும் நலிவுற்றது. நூல், சரிகை போன்ற மூலப் பொருள்களின் பற்றாக்குதையும், விற்பனையில் போட்டியும் சிக்கல்களாக இருந்தன. அவற்றை ஒழிக்கத் தனியாரும், கதர் இயக்கமும், அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. அவற்றுள் நெசவுத் தொழில் ஆய்வுக்குழு, நெசவாளர் வாணிக நிலையம், கூட்டுறவு நிறுவனம், கூட்டுறவு ஆலை நிறுவனம், அரசின் உதவிக் கொடை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
இந்தியா விடுதலையடைந்த பின்னர்க் கைத்தறித் தொழில் வளர்ச்சிக்கான பல திட்டங்களை மைய, மாநில அரசுகள் செயற்படுத்தி வருகின்றன. அனைத்திந்தியக் கைத்தறி வாரியம் (All India Handloom Board) 1952–இல் நிறுவப்பட்டு, அதன்மூலம் கைத்தறி முன்னேற்றத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களிலும் கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1986–இல் 5.56 இலட்சம் கைத்தறிகள் இருந்தன. இத்துறை சுமார் 10 இலட்சம் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 2,300 மிலியன் மீட்டர் கைத்தறித் துணியில் தமிழகத்தில் 600 மிலியன் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 700 மிலியன் மீட்டர் உற்பத்தி செய்யத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத் திட்டத்தில் கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாப்பது சிறப்பிடம் பெறுகிறது. கைத்தறி நெசவத்தொழில் முன்னேறப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கைத்தறி நெசவாளர்களை இடைத்தரகர்கள் சுரண்டாதிருக்கவும், அவர்களைக் கூட்டுறவு அமைப்பின் கீழ்க் கொண்டு வரவும் அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கூட்டுறவு அமைப்பின்கீழ் 1985–ஆம் ஆண்டிற்குள் 75 விழுக்காட்டுக்குக் கைத்தறிகளைக் கொண்டு வர இலக்கு வரையறுக்கப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
25lkco39r9xz80d8i5qt442bzc23yrw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/2
250
645160
1940002
2026-06-05T06:04:06Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1940002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/3
250
645161
1940003
2026-06-05T06:05:17Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1940003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/4
250
645162
1940004
2026-06-05T06:06:16Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1940004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/5
250
645163
1940005
2026-06-05T06:08:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|15em}} {{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}} {{dhr|15em}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|15em}}
{{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dhr|15em}}
{{nop}}<noinclude></noinclude>
np4u794ov0cn0d55tmmijybsilxsbm4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/6
250
645164
1940006
2026-06-05T06:09:20Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1940006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/7
250
645165
1940007
2026-06-05T06:11:58Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}}}} {{center|தொகுதி ஒன்பது</b><br> சிராண்டு - தர்ன்வால்டு}} {{dhr|20em}} {{center|{{larger|<b>தமிழ்ப் பல்கலைக் கழகம்}}<br>தஞ்சாவூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}}}}
{{center|தொகுதி ஒன்பது</b><br>
சிராண்டு - தர்ன்வால்டு}}
{{dhr|20em}}
{{center|{{larger|<b>தமிழ்ப் பல்கலைக் கழகம்}}<br>தஞ்சாவூர்</b>}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
r8z86p5tf6uf31bbwtt2r3m7c3ns0rt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/8
250
645166
1940008
2026-06-05T06:17:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{rh|||<b>ISBN : 81 - 7090 - 131 - 6}} {{dhr|5em}} ::தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு : {{larger|53 - 9}}<br>திருவள்ளுவராண்டு - {{larger|2019 - 1988}}</b> ::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;" |{{ts|vtt}}|<br>நூல்|| : ||<br><b>வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr}}
{{rh|||<b>ISBN : 81 - 7090 - 131 - 6}}
{{dhr|5em}}
::தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு : {{larger|53 - 9}}<br>திருவள்ளுவராண்டு - {{larger|2019 - 1988}}</b>
::{|style="margin-right: auto; margin-right: auto; border: none;"
|{{ts|vtt}}|<br>நூல்|| : ||<br><b>வாழ்வியற் களஞ்சியம்<br>தொகுதி ஒன்பது</b>
|-
|முதன்மைப் பதிப்பாசிரியர்|| : ||முனைவர் நா. பாலுசாமி
|-
|மொழி|| : ||தமிழ்
|-
|பொருள்|| : ||களஞ்சியம்
|-
|{{ts|vtt}}|<br>பதிப்பு|| : ||<br>முதற் பதிப்பு {{larger|1988}}<br>மறுபதிப்பு {{larger|2004, <b>2009</b>}}
|-
|பக்கம்|| : ||1028
|-
|தாள்|| : ||டி.என்.பி.எல் மேப்லித்தோ 16kg
|-
|அளவு|| : ||{{larger|1/4}} டெம்மி
|-
|நூற்கட்டுமானம்|| : ||முழு காலிகோ கட்டு
|-
|விலை|| : ||உரூ. {{larger|<b>800/-</b>}}
|-
|படிகள்|| : ||{{larger|500}}
|-
|{{ts|vtt}}|<br>அச்சு|| : ||<br>நடராஜ் ஆர்ட்ஸ் கிராப்ட்ஸ்<br>சிவகாசி.
|}{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
gzroqjbsyife5hlg8gg9clhaklm53ms
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/9
250
645167
1940009
2026-06-05T06:24:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}} {{dhr|3em}} {{center|வேந்தர்<br> {{larger|<b>மேதகு டாக்டர் பி.சி. அலெக்சாண்டர்</b>}}<br> ஆளுநர், தமிழ்நாடு}} {{dhr|2em}} {{center|துணைவேந்தர்<..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dhr|3em}}
{{center|வேந்தர்<br>
{{larger|<b>மேதகு டாக்டர் பி.சி. அலெக்சாண்டர்</b>}}<br>
ஆளுநர், தமிழ்நாடு}}
{{dhr|2em}}
{{center|துணைவேந்தர்<br>
{{larger|<b>பேரா. டாக்டர் ச. அகத்தியலிங்கம்</b>}}}}
{{dhr|2em}}
{{center|முதன்மைப் பதிப்பாசிரியர்<br>
{{larger|<b>பேரா. டாக்டர் நா. பாலுசாமி</b>}}}}
{{dhr|2em}}
{{center|பொறுப்பாசிரியர்கள்<br>
{{larger|<b>திரு.சீ.பக்தவச்சலு</b>}}<br>
{{larger|<b>திரு பூ. தர்மலிங்கம்</b>}}}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
rvjd3k7zpd7jn5qon6nensx4punjwgb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/10
250
645168
1940010
2026-06-05T06:26:14Z
Bharathblesson
15164
/* உரையில்லாதவை */
1940010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Bharathblesson" /></noinclude><noinclude></noinclude>
9yic2g872c62wptvday91t21kd2eh72
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/59
250
645169
1940011
2026-06-05T06:34:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களின்கீழ் வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு எக்காலத்திலும் பருத்தி நூல் கிடைப்பதில் இடையூறுகள் பல உள்ளன. இச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தறி நெசவுத் தொழில்|33|கைத்தறி நெசவுத் தொழில்}}</noinclude>நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களின்கீழ் வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு எக்காலத்திலும் பருத்தி நூல் கிடைப்பதில் இடையூறுகள் பல உள்ளன. இச்சிக்கலைத் தீர்க்க இந்திய அரசு, இந்தியப் பருத்தி ஆலைகள் இணையத்திற்கு 20 முதல் 40–ஆம் எண் வரையிலுள்ள நூல்களை 1981–ஆம் ஆண்டு சனவரியில் வெளி அங்காடியில் நிலவிய நூல் விலையைவிட 10 விழுக்காடு, அதாவது, ஆலையின் விலையில் 7.5 விழுக்காட்டு அளவிற்குக் குறைக்கவும், 5,000 கட்டுகள் (Bales) 40–ஆம் எண்நூற் சிட்டங்களைக் குறைந்த விலையில் கைத்தறி நெசவாளர்களுக்குப் பங்கீடு செய்யவும் ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் 3.33 இலட்சம் கதிர்த்திறனைக் கொண்டு, மாதம் ஒன்றுக்கு 10,000 கட்டுப் பருத்தி நூலை உற்பத்தி செய்கின்றன. புதிய நூற்பு ஆலைகளை உரூ. 31.53 கோடி செலவில், 54 இடங்களில் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. தருமபுரி, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பு ஆலைகள் 1983–84–இல் அமைக்கப்பட்டன. எட்டையபுரம் மற்றும் கமுதியில் 2 கூட்டுறவு நூற்பு ஆலைகள் அமைக்கப்பட்டன. இவை 1984–ஆம் ஆண்டின் முடிவில் உற்பத்தியைத் தொடங்கின.
தனியார் துறையில் உள்ள நெசவாளர்கள் நூலின் விலை ஏற்றம் காரணமாகவும், மின்வெட்டின் காரணமாகவும் மிகுந்த இன்னலுக்கு ஆளாயினர். அதனால், 1984–85–ஆம் ஆண்டில் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம், தனியார் ஆலைகளிடமிருந்து நூலினைக் கொள்முதல் செய்து, அவற்றைக் கைத்தறி நெசவாளர்களுக்குப் பங்கீடு செய்தது. செயற்கை இழைப்பட்டு நூலின் விலை உயர்ந்ததால், தென்னிந்திய ‘விசுகோசு’ நிறுவனத்திடமிருந்து தனி ஒதுக்கீடு பெற்று, அவற்றைத் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்குப் பங்கீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கைத்தறிக் கூட்டுறவு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காவும், இடு (Input) பொருள்கள் வழங்குவதற்காகவும், அரசு பல நிறுவனங்களை அமைத்துள்ளது. தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு நிறுவனம் (Co–optex) அவற்றிற்கான தலைமை நிறுவனமாகும். அதன் நோக்கம், மூலப் பொருள்களான நூல், பட்டு, சரிகை, சாயம், இரசாயனப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கி, அவற்றைத் தொடக்க நெசவாளர் நிறுவனங்களுக்கு வழங்குவதும், உற்பத்தி செய்யும் கைத்தறித் துணிகளுக்கு லிற்பனை வசதியைப் பெருக்குவதும் ஆகும். தமிழகத்தில் 264 விற்பனை நிலையங்களை இத்தலைமை நிறுவனம் நடத்திவருகிறது.
கைத்தறித் தொழில் நுட்பத் திறமையும், உற்பத்தியையும் உயர்த்துவதற்கான திட்டத்தின் ஒரு பருதியாக இந்நிறுவனம் நெசவாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய மதுரை, திருச்சி, சேலம், கோவை, கடையநல்லூர் ஆகிய 5 இடங்களில் வடிவமைப்புப் பணி நிலையங்களை அமைத்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அயோத்தியா புடவைகள், காஞ்சனா புடவைகள்’ மகளிரிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன.
மாநிலத் தலைநகரங்களிலும், நாட்டின் முக்கிய நகரங்களிலும் புதிய விற்பனைக் கூடங்களை அமைத்து நவீனப்படுத்துவதற்கான திட்டத்தை இந்நிறுவனம் செயற்படுத்தி வருகிறது.
மக்களின் மாறும் விருப்பங்களுக்கேற்பக் கைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளின் புதிய வடிவமைப்புகளை மாற்றவும் உற்பத்தி முறையைச் சீர்படுத்தவும், இது மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெற்று மதுரையிலும், திருச்சியிலும் ஒவ்வொன்றும் உரூ. 3.50 இலட்சம் செலவில், மாதிரி வடிவமைப்புப் பணி நிலையங்கள் இரண்டைத் தொடங்கியுள்ளது.
<b>விற்பனை வசதிகள்:</b> இத்தலைமை நிறுவனம் அதனுடன் இணைந்துள்ள தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களின் உற்பத்தியில் சுமார் 50 விழுக்காட்டு அளவிற்கு விற்பனைக்கு வழி வகை செய்கிறது. இந்நிறுவனம் 1984 முதல் 1985–க்குள் தொடக்க நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து உரூ. 55 கோடி மதிப்புள்ள கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்தது. இதன்மூலம் இந்நிறுவனம் உரூ. 72 கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இது இந்தியா முழுவதிலும் உள்ள தன்னுடைய 630 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறது. வேட்டிகள், புடவைகள், உலுங்கிகள் முதலியவற்றை மலிவு விலையில் உற்பத்தி செய்யத் தமிழகத்தில் சுமார் 28,000 தறிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 1984–85–ஆம் ஆண்டில் 32.80 மிலியன் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
சனதா வகை வேட்டிகள், புடைவைகள், உலுங்கிகள் முதலியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் சுமார் 10,000 கைத்தறிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவைகளின் உதவியால் நலிவுற்ற பிரிவினர்களுக்குக் குறைந்த விலையில் வழங்கப்படும்<noinclude>
<b>வா.க. 8 – 9</b></noinclude>
j7noi7skpk7ihkeg2v8jkginoytttde
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/11
250
645170
1940012
2026-06-05T06:38:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பதிப்புக் குழு</b>}}}} <b>முதன்மைப் பதிப்பாசிரியர்</b>: ::பேராசிரியர் டாக்டர் <b>நா. பாலுசாமி,</b> எம்.ஏ.,பி.எல்., எம்.லிட், பிஎச்.டி. — சட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{X-larger|<b>பதிப்புக் குழு</b>}}}}
<b>முதன்மைப் பதிப்பாசிரியர்</b>:
::பேராசிரியர் டாக்டர் <b>நா. பாலுசாமி,</b> எம்.ஏ.,பி.எல்., எம்.லிட், பிஎச்.டி. — சட்டம், அரசியல்
<b>பதிப்பாசிரியர்</b>:
{|
|-
||1. டாக்டர் அ.மா.பரிமணம்,<br>{{gap}}எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி.{{gap}}(20.9.84) || - || மொழி, மொழியியல், தத்துவம்
|-
|2. பேராசிரியர் தெ. பாலசுப்பிரமணியன்.<br>{{gap}}பி.ஏ.(ஆனர்சு).எம்.ஏ.,எம்.ஏ.(விசுகான்சின்).<br>(எப்.ஜ.எச்.).{{gap}}(5.8.86) || - || வரலாறு, அகழாய்வு
|-
|}
<b>செய்தி திரட்டுவோர்</b>:
{|
|-
{|
|1. திரு. சு. இராசவேலு, எம்.ஏ.,எம்.பில்.,<br>{{gap}}(25.4.84) || - || வரலாறு, அகழாய்வு
|-
|2. திரு. சீ. பக்தவச்சலு. எம்.ஏ.,எம்.ஏ.{{gap}}(4.2.85) || - || மானிடவியல், கல்வியியல்
|-
|3. திரு. பூ. தர்மலிங்கம், எம்.ஏ.,எம்.பில்.<br>{{gap}}(1.8.86.) || - || உளவியல், சமூகவியல்
|-
|4. திரு.சா.உதயசூரியன், எம்.ஏ., எம்.பில்.<br>{{gap}}(25.11.87) || - || மொழி, மொழியியல், தத்துவம்
|-
|5. 5. திருமதி.கா.தி.இந்துமதி, எம்.ஏ.எம்.பில்<br>{{gap}}(4.12.87) || - || பொருளியல், வணிகவியல்
|-
|}
<b>மொழி வல்லுநர் - மெய்ப்புத் திருத்துநர்</b>:
{|
|-
|திரு.உ.பழதி, எம்.ஏ., பி.ஓ.எல், || || (1.10.84)<noinclude></noinclude>
7y8t1re52efcnswxcr46gixvmh7a0n3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/12
250
645171
1940013
2026-06-05T06:45:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|2em}} {{center|<b>{{X-larger|நன்றியுரை}}</b>}}<br> {{dhr}} {{center|<b>ஒன்பதாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள <br>ஒளிப்படங்களுக்குப் பயன்பட்ட நூல்கள்</b>}} Encyclopaedia Britannica, Encyclopedia Americana, Compton's E..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|2em}}
{{center|<b>{{X-larger|நன்றியுரை}}</b>}}<br>
{{dhr}}
{{center|<b>ஒன்பதாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள <br>ஒளிப்படங்களுக்குப் பயன்பட்ட நூல்கள்</b>}}
Encyclopaedia Britannica, Encyclopedia Americana, Compton's Encyclopaedia, The Illustrated Encyclopaedia of Mankind, The Art of India By C. Sivarama Murthi, Archaeological Remains, Monuments and Museums, Parts I & II., Larousse Encyclopaedia of Archaeology, The World Book Encyclopaedia, Anthropology by Victor Barnouw, Physical Anthropology by Philip L. Stein and Bruce M. Rowe, Physical Anthropology by Gabriel W. Lasker, Sociology by Elbert W. Stewart, Sociology by David Popenoe, கலைக் களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம்.
{{center|<b>ஒளிப்படங்கள் வழங்கிய தனியார் மற்றும்<br>பொது நிறுவனங்கள்</b>}}
அரசு அருங்காட்சியகம், சென்னை; தமிழ்நாடு அரசுத் தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னை; திரு.என். அரிநாராயணா, சென்னை; டி.வி.எஸ்.நிறுவனம், சென்னை; திரு. சு. இராசகோபால், மதுரை.
மேலே கண்ட நூல்களின் உரிமையாளர்களுக்கும், தனிப்பட்ட பெரு மக்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சிய மையத்தின் சார்பில் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்திய தொகுதிகளைப் போன்றே இத்தொகுதியும் சிறப்பாக அமைவதற்கு ஆலோசனைகள் வழங்கிய மதிப்பிற்குரிய துணைவேந்தர் பேரா. டாக்டர் <b>ச. அகத்தியலிங்கம்</b> அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி உரியது. அயராது உழைத்து வரும் வாழ்வியற் களஞ்சிய அனைத்துப் பணியாளர்களுக்கும், களஞ்சியச் செயற்பாட்டிற்குத் துணைநிற்கும் பதிவாளர் முனைவர் பெ. சின்னையன் அவர்களுக்கும், துணைப்பதிவாளர் திரு.இரா.சுப்பராயலு அவர்களுக்கும், பொறுப்புடன் விரைவாக அச்சிட்டு உதவிய அண்ணாமலைநகர் கே.பி.டி. அச்சக உரிமையாளர் திரு. சேரன் அவர்களுக்கும், அழகிய முறையில் வெளியிட்டுதவிய தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகத்தார்க்கும், ஓவியர் திரு.தே. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் எனது நன்றி.
{{rh|தஞ்சாவூர்<br>நாள்: 26—7—88||நா.பாலூசாமி<br>முதன்மைப் பதிப்பாசிரியர்}}
{{nop}}<noinclude></noinclude>
pjnqek2khkofi77bk6dcj88nj1xlz7g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/13
250
645172
1940014
2026-06-05T06:57:53Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{larger|<b>ஒன்பதாம் தொகுதி - கட்டுரையாளர் பட்டியல்</b>}}}} <b>அ.அ.ம.</b><br>டாக்டர் அ.அ.மணவாளன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ் மொழித்துறை<br>சென்னைப் பல்கலைக்கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{center|{{larger|<b>ஒன்பதாம் தொகுதி - கட்டுரையாளர் பட்டியல்</b>}}}}
<b>அ.அ.ம.</b><br>டாக்டர் அ.அ.மணவாளன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ் மொழித்துறை<br>சென்னைப் பல்கலைக்கழகம்<br>சென்னை.
<b>அ.ஆ.</b><br>திரு அ. ஆரோக்கியசாமி, எம்.ஏ.,<br>
தமிழ்த் துணைப் பேராசிரியர்<br>அ.வீ.வா. நினைவு புட்பம் கல்லூரி<br>பூண்டி<br>தஞ்சை மாவட்டம்.
<b>அ.இரா.</b><br>திரு அ. இராமமூர்த்தி, எம்,ஏ,பி.எல்., பி.டி.<br>வழக்கறிஞர்<br>காமராசர் சாலை<br> சீனிவாசபுரம், தஞ்சாவூர்.
<b>அ.இராம.</b><br>டாக்டர் அப்பன் இராமானுஜம், எம்.ஏ., பி.எச்.டி.<br>24, சங்கம் மெயின்ரோடு<br> இலக்குமிபுரம்<br>குரோம்பேட்டை<br>சென்னை.
<b>அ.க.</b><br>டாக்டர் அ.கணபதி, எம்.ஏ., பிஎச்.டி.<br> 53, நீயூ. எல்.ஐ.சி. காலனி<br>அண்ணாநகர்<br>மதுரை.
<b>அ.கு.சா.</b><br>திருமதி டாக்டர் அரோமா குளோரிசாம், எம்.ஏ., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>சமூகவியல் துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>அ.ச.</b><br>அ. சந்திரன்<br>இலுப்பையூர் (அஞ்சல்)<br> (வழி)திருச்சுழி<br>காமராசர் மாவட்டம்.
<b>அ.சி.</b><br>டாக்டர் அ. சிவசங்கரன், எம்.ஏ., பிஎச்.டி.<br>வரலாற்றுத்துறை<br>திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி<br>திருவாருர்.
<b>அ.சு.</b><br>திரு அ. சுப்பிரமணியம்<br>நிகழ்ச்சி அமைப்பாளர்<br>அகில இந்திய வானொலி நிலையம்<br> திருச்சி.
<b>அ.த.</b><br>பேரா. அ. தட்சிணாமூர்த்தி, எம்.ஏ., எம்.பில்.<br>தமிழ்த்துறை<br>அ.வி.வா. நினைவு புட்பம் கல்லூரி<br>பூண்டி<br>தஞ்சாவூர் மாவட்டம்.
<b>அ.மா.ப.</b><br>டாக்டர் அ.மா. பரிமணம், எம்.ஏ.,எம்.லிட்,, பிஎச்.டி.<br>20, கிருட்டிணன் கோயில் 3-ஆம் தெரு<br>மானம்புச்சாவடி<br>தஞ்சாவூர்.
<b>அ.வி.</b><br>டாக்டர் அ.விசுவநாதன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ்ப் பேராசிரியர்<br>அழகப்பா பல்கலைக் கழகம்<br>காரைக்குடி.
<b>ஆ.ஆ.</b><br>டாக்டர் ஆ. ஆனந்தராசன், எம்.ஏ., பிஎச்.டி.<br>சைவசித்தாந்தத் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>ஆ.ச.</b><br>பேரா. ஆ.சந்திரசேகரன் எம்.ஏ., எம் எல்.<br>டி-69 ஏ,7-ஆம் தெரு<br>பெசண்ட் நகர்<br>சென்னை.<noinclude></noinclude>
d1muvdb2edp4ipymop7h1932124h51u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/14
250
645173
1940015
2026-06-05T07:24:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>ஆ.செ.</b><br>திரு ஆ. செல்லபெருமாள், எம்.ஏ.<br> துணைப் பேராசிரியர்<br>புனித சவேரியார் கல்லூரி<br> பாளையங்கோட்டை. <b>ஆ.செய.</b><br>பேரா. ஆவுடைத்தாய் செயராமன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||ii|}}</noinclude><b>ஆ.செ.</b><br>திரு ஆ. செல்லபெருமாள், எம்.ஏ.<br> துணைப் பேராசிரியர்<br>புனித சவேரியார் கல்லூரி<br> பாளையங்கோட்டை.
<b>ஆ.செய.</b><br>பேரா. ஆவுடைத்தாய் செயராமன், எம்.ஏ., எம்.பில்.<br>9, தவுலத்து நகர்<br>கடலூர்.
<b>ஆ.ந.</b><br>டாக்டர் ஆனந்த நடராசன், எம்.ஏ., பி எச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>தமிழ்த் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>அண்ணாமலைநகர்.
<b>ஆர்.கி.</b><br>திரு ஆர்.கிருட்டிணமூர்த்தி, எம்.ஏ.எல்.டி.<br>டி. 34. திருநகர்<br>மதுரை.
<b>ஆர்.ப.</b><br>டாக்டர் ஆர்.பட்டமுத்து<br>உளநோய் நீக்கு உளவியலார்<br>அரசு மருத்துவமனை<br>சென்னை.
<b>ஆர்.வே.</b><br>டாக்டர் ஆர்.வேங்கடராமன், எம்.ஏ., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>வரலாற்றுப் புலம்<br>
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>இர.கி.</b><br>டாக்டர் இரத்தின கிருட்டிணமூர்த்தி, எம்.ஏ., பிஎச்.டி<br>சண்முகபுரம்<br>பழனி<br>அண்ணா மாவட்டம்.
<b>இரா.அ.</b><br>பேரா. இரா. அண்ணாமலை, எம்.ஏ.,எம்.லிட்,, பி.டி.<br>ஏ.54, அண்ணாநகர் கிழக்கு <br>சென்னை.
<b>இரா.ஆ.</b><br>திரு இரா.ஆலாலசுந்தரம், எம்.ஏ.<br>
முதல்வர்<br>திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி<br> திருவாரூர்.
<b>இரா.இ.</b><br>புலவர் இரா. இளங்குமரன்<br> தமிழியல்துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> அழகர் கோயில் சாலை<br>மதுரை.
<b>இரா.க.</b><br>டாக்டர் இரா. கலைக்கோவன், எம்.பி.பி.எஸ்., டி.ஓ.<br>சி-87, 10-ஆம் குறுக்குச் சாலை <br>தில்லைநகர் மேற்கு<br>திருச்சி.
<b>இரா.குரு.</b><br>
திரு பிரா. குருநாதன், எம்.ஏ., எம்.பில்,<br>துணைப் பேராசிரியர் தமிழ்த்துறை<br>உமா மகேசுவரனார் கல்லூரி <br>கருந்தட்டான்குடி<br>தஞ்சாவூர்.
<b>இரா.கோ.</b><br>டாக்டர் இரா. கோலப்ப பிள்ளை, எம்.ஏ., பிஎச்.டி.<br>சிறப்புநிலை ஆய்வாளர்<br>தத்துவ மையம்<br>தமிழ்ப்பல்கலைக்கழகம்<br>காஞ்சிபுரம்.
<b>இரா.ச.</b><br>புலவர் அம்பை இரா. சங்கரன்<br> பெருஞ்சொல்லகராதித் துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம் <br>தஞ்சாவூர்.
<b>இரா.சா.</b><br>டாக்டர் இரா.சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி<br>330, குறள் இல்லம்<br>மாரியப்பா நகர்<br>அண்ணாமலைநகர்.
<b>இரா.சு.</b><br>திரு இரா. சுப்பராயலு, எம்.காம்., எம்.பி.ஏ.<br>துணைப் பதிவாளர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
{{nop}}<noinclude></noinclude>
fsn7gxbqjsy8te9ozbo6zcepb0i6ogc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/15
250
645174
1940016
2026-06-05T07:33:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>இரா.செ.</b><br>டாக்டர் இரா. செயபால், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ்ப் பேராசிரியர்<br>அ.வீ.வா.நினைவு புட்பம் கல்லூரி<br>பூண்டி<br>தஞ்சை மாவட்டம். <b>இரா.ப.</b><br>டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||iii|}}</noinclude><b>இரா.செ.</b><br>டாக்டர் இரா. செயபால், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ்ப் பேராசிரியர்<br>அ.வீ.வா.நினைவு புட்பம் கல்லூரி<br>பூண்டி<br>தஞ்சை மாவட்டம்.
<b>இரா.ப.</b><br>டாக்டர் இரா. பவுன்துரை, எம்.ஏ., பிஎச்.டி.<br>தொழில்நுட்ப உதவியாளர்<br>அருங்காட்சியகம் <br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>இரா.பா.</b><br>டாக்டர் இரா. பாவனாசம், எம்.ஏ., எம்.எட்., பிஎச்.டி.<br>கல்வியியல் பேராசிரியர்<br> அழகப்பா பல்கலைக்கழகம்<br>காரைக்குடி.
<b>இரா.பால.</b><br>பேரா. இரா. பாலகிருட்டிணன், எம்.ஏ.எம்.பில்,<br>உளவியல் துறை<br>பூ.சா.கோ. கலைக் கல்லூரி<br>கோயம்புத்தூர்.
<b>இரா.பி.தே.</b><br>டாக்டர் இராஜம்மாள் பி. தேவதாஸ் <br>துணைவேந்தர்<br>ஸ்ரீ அவினாசிலிங்கம் மனையியல் உயர்கல்வி நிறுவனம் (பல்கலைக்கழகம்)<br> கோயம்புத்தூர்.
<b>இராம.பெ.</b><br>டாக்டர் இராம. பெரியகருப்பன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தமிழ்த்துறைத் தலைவர்<br>
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>இரா.வே.</b><br>டாக்டர் இரா. வேங்கடபதி, எம்.ஏ., பிஎச்.டி.<br>மேலாண்மையியல்துறை<br>பாரதியார் பல்கலைக்கழகம்<br>கோயம்புத்தூர்.
<b>எச்.அ.</b><br>பேரா.எச்.அமீர் அலி, எம்.ஏ.<br> வரலாற்றுத் துறை<br>ஏ.வி.சி.கல்லூரி<br>மயிலாடுதுறை.
<b>எம்.க.</b><br>திரு எம்.கருணாநிதி, எம்.ஏ.<br>32, காந்திநகர்<br>மயிலாடுதுறை.
<b>எம்.சு.</b><br>டாக்டர் எம்.சுசீலா,எம்.ஏ., பிஎச்.டி.<br> மொழியியல் விரிவுரையாளர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம் <br>தஞ்சாவூர்.
<b>என்.அ.</b><br>திரு என்.அரிநாராயணா, எம்.எஸ்சி.<br> அருங்காட்சியகங்களின் இயக்குநகர்<br>அரசு அருங்காட்சியகம்<br>எழும்பூர்<br>சென்னை.
<b>என்.எஸ்.பா.</b><br>டாக்டர் என்.எஸ்.பாலசுப்ரமணியன், எம்.ஏ., பிஎச்.டி.<br>பொருளியல் துறைத் தலைவர்<br> என்.எம்.எஸ்.எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> மதுரை.
<b>என்.சீ.</b><br>திரு என்.சீனிவாசன்<br>21, ஏ.எஸ்.எம்.காலனி<br>இராமநாதபுரம் அஞ்சல்<br> தஞ்சாவூர்.
<b>எஸ்.இல.</b><br>டாக்டர் எஸ்.இலக்குமணன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தத்துவத்துறைப் பேராசிரியர்<br>44, செட்டி வீதி <br>கும்பகோணம்.
<b>எஸ்.ஒ.இரா.</b><br>டாக்டர் எஸ்.ஓ.இரா. இராமகிருட்டிணன், எம்.ஏ.,பிஎச்.டி<br>தத்துவத்துறைப் பேராசிரியர்<br>தேசியக் கல்லூரி<br>திருச்சி.
<b>எஸ்.கி.</b><br>திரு எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் எம்.ஏ.,பி.எல்.<br>சுதர்சனம் ஆசிரியர்<br>புத்தூர் அக்ரகாரம்<br>திருச்சி.
{{nop}}<noinclude></noinclude>
or0eqqy87yf5atq9ulkufhhy9i80guz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/16
250
645175
1940018
2026-06-05T07:43:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>எஸ்.கே.இரா.</b><br>திரு எஸ்.கே.இராமராசன், வித்துவான்,<br>பெருஞ்சொல்லகராதித்துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர். <b>எஸ்.ச.</b><br>பேரா.எஸ்.சந்தானம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||iv|}}</noinclude><b>எஸ்.கே.இரா.</b><br>திரு எஸ்.கே.இராமராசன், வித்துவான்,<br>பெருஞ்சொல்லகராதித்துறை<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>எஸ்.ச.</b><br>பேரா.எஸ்.சந்தானம்,எம்.ஏ. எம்.எட்.<br> கல்வியியல் கல்லூரிமுதல்வர் (ஓய்வு)<br>23,சி காமராசர் நகர்<br>திருவான்மியூர்<br>சென்னை.
<b>எஸ்.சீ.</b><br>பேரா.எஸ்.சீனிவாச சர்மா,எம்.ஏ.<br> சமசுகிருதத் துறை,<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம் <br>அண்ணாமலைநகர்.
<b>எஸ்.சு.</b><br>டாக்டர் எஸ்.சுவாமிநாத பிள்ளை, எம்.ஏ.,எம்.எட்.,<br>கல்வியாராய்ச்சிப் பேராசிரியர்<br> தொழிற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம்<br>தரமணி <br>சென்னை.
<b>எஸ்.மோ.</b><br>டாக்டர் எஸ்.மோகன், எம்.ஏ.,எம்.எட் பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>அழகப்பா பல்கலைக்கழகம்<br>காரைக்குடி.
<b>ஏ.ஆ.</b><br>டாக்டர் ஏ.ஆதித்தன், எம்.ஏ., பிஎச்.டி.<br> மொழியியல் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம் <br>மதுரை.
<b>க.ச.</b><br>திரு.க,சந்தானம்<br>வேடநத்தம்<br> எம்.ரெட்டிகயட்டி அஞ்சல்<br>(வழி) அருப்புக்கோட்டை<br> காமராசர் மாவட்டம்.
<b>க.சொ.</b><br>செல்வி கஸ்தூரி சொக்கையா, எம்.ஏ.,எம்.லிட்.<br>1. லஜபதிராய் வீதி<br>சொக்கிகுளம் <br>மதுரை.
<b>க.பூ.சீ.</b><br>திரு.க.பூ.சீனிவாசன், எம்ஏ.<br> வரலாற்றுத் துறை<br>அரசு கலைக் கல்லூரி<br>முசிறி.
<b>க.ம.</b><br>புலவர் க.மருதமுத்து<br>தமிழாசிரியர் (ஓய்வு)<br>புதுக்கோட்டை கிராமம்<br>திருமழபாடி அஞ்சல் <br>திருச்சி.
<b>கா.தி.இ.</b><br>திருமதி கா.தி.இந்துமதி, எம்.ஏ., எம்.பில்.<br>வே.காளியாபுரம்<br>பொள்ளாச்சி.
<b>கி.இரா.</b><br>டாக்டர் கி.கிராசேந்திரன்,எம்.ஏ., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர், உளவியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>அண்ணாமலைநகர்.
<b>கி.கோ.</b><br>பேரா.கி.கோதண்டபாணி,எம்.ஏ., பி.ஓ.எல்.<br>11/13, திருமகள் இல்லம்<br>பிரதாப சிம்மபுரம் <br>தஞ்சாவூர்.
<b>கி.சே.</b><br>டாக்டர் கி.சேகர், எம்.ஏ., பிஎச்.டி.<br> தமிழ்த்துறை<br>உருமு தனலட்சுமி கல்லூரி<br>திருச்சி.
<b>கி.பி.</b><br>திருமதி கி.பிரகதாம்பாள்,எம்.ஏ.<br> 64,பி. நாச்சியார் அம்மாள் இல்லம் (மாடி)<br> வெளிப்பட்டினம்<br>கெனிக்கரை<br>இராமநாதபுரம் மாவட்டம்.
{{nop}}<noinclude></noinclude>
j12c8x6s1vp0bv7sbahrgv49mus40gj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/17
250
645176
1940019
2026-06-05T08:00:22Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கு.சு.</b><br>டாக்டர் கு.சுந்தரமூர்த்தி, எம்.ஏ., பிஎச்.டி.<br>முதல்வர்<br>செந்தமிழ்க் கல்லூரி,<br>திருப்பனந்தாள் <br>தஞ்சை மாவட்டம். <b>கு.தி.</b><br>டாக்டர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||v|}}</noinclude><b>கு.சு.</b><br>டாக்டர் கு.சுந்தரமூர்த்தி, எம்.ஏ., பிஎச்.டி.<br>முதல்வர்<br>செந்தமிழ்க் கல்லூரி,<br>திருப்பனந்தாள் <br>தஞ்சை மாவட்டம்.
<b>கு.தி.</b><br>டாக்டர் கு.திருமேனி, எம்.ஏ., பிஎச்.டி.<br>14, வீரேசுவரம்<br>ஸ்ரீரங்கம்<br>திருச்சி.
<b>கே.அர.</b><br>திரு.கே.அரங்கசாமி<br>உளநோய் நீக்கு உளவியலார்<br>மனநலக் காப்பகம்<br>சென்னை.
<b>கே.ஆ.</b><br>டாக்டர் கே.ஆதிநாராயணா, எம்.ஏ., எம்.எட்.,பிஎச்.டி.<br>இலட்சுமி கல்வியியல் கல்லூரி<br>காந்திகிராமம்<br>அண்ணா மாவட்டம்.
<b>கே.என்.இரா.</b><br>டாக்டர் கே.என். இராமானுஜம், எம்.காம். எம்.லிட்., பிஎச்.டி.<br>93. மாரியப்பா நகர்<br>அண்ணாமலைநகர்.
<b>கே.சே.</b><br>டாக்டர் கே. சேஷாத்திரி, எம்.ஏ., பிஎச்.டி.<br>வரலாற்றுத்துறை<br>அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம்<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர்.
<b>கே.தெ.</b><br>திருமதி கே.தெய்வமணி,எம்.ஏ.<br> பொருளியல் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம் <br>மதுரை.
<b>கே.மு.</b><br>பேரா. கே. முருகேசன்<br>37, சத்தியமூர்த்தி தெரு<br>தேவராஜ்நகர்<br>சாலிக்கிராமம்<br> சென்னை.
<b>கே.ஜி.கி.</b><br>திரு கே.ஜி.கிருஷ்ணன், எம்.ஏ.<br> 711, வைஜயந்தி<br>16-ஆம் மெயின் தெரு<br>சரசுவதிபுரம் <br>மைசூர்.
<b>கோ.இ.</b><br>புலவர் கோவை. இளஞ்சேரன்<br>20, மருத்துவக் கல்லூரிச் சாலை<br>தஞ்சாவூர்.
<b>கோ.இரா.</b><br>டாக்டர் கோ. இராமதீர்த்தம், எம்.ஏ., பிஎச்.டி.<br>பேராசிரியர்<br>சமூகவியல் துறை<br>மதுரைக் கல்லூரி<br>மதுரை.
<b>கோ.ச.</b><br>பேரா. கோ. சங்கரராசுலு, எம்.ஏ.,எம்.லிட்.<br>45. சித்ரகலா காலனி<br>திருநகர்<br> மதுரை.
<b>கோ.த.</b><br>டாக்டர் கோ.தங்கவேலு, எம்.ஏ., பிஎச்.டி.<br>தலைவர்<br>வரலாற்றுத் துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>ச.க.</b><br>டாக்டர் ச.கங்காதரன், எம்.ஏ., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>சைவ சித்தாந்தத் துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>ச.சா.</b><br>டாக்டர் ச.சாம்பசிலம், எம்.ஏ., பிஎச்.டி..<br>தமிழ்ப் பேராசிரியர்<br>அஞ்சல்வழிக் கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
{{nop}}<noinclude></noinclude>
6jtw6zvirbpbvnycdekgr5i4px1qm29
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/60
250
645177
1940020
2026-06-05T08:01:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புடைவைகள், வேட்டிகள் போன்றவை மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அரசுப் பணியாளர்களுக்கும், உள்ளாட்சி மன்றப் பணியாளர்களுக்கும் இதன் மூலமாகக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தறி நெசவுத் தொழில்|34|கைத்தறி நெசவுத் தொழில்}}</noinclude>புடைவைகள், வேட்டிகள் போன்றவை மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
அரசுப் பணியாளர்களுக்கும், உள்ளாட்சி மன்றப் பணியாளர்களுக்கும் இதன் மூலமாகக் கடனில் கைத்தறித் துணி விற்பனை செய்யும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. கடன் விற்பனைத் திட்டத்திற்கு நல்ல ஆதரவு இருக்கிறது. கடன் மூலம் விற்பனை செய்யப்பட்ட துணியின் மதிப்பளவு 1980–81–இல் உரூ. 8 கோடி. அதுவே 1981–82–இல் உரூ. 13.26 கோடியாகவும், 1982–83–இல் உரூ. 22.00 கோடியாகவும், 1984–85–இல் உரூ. 26.55 கோடியாகவும் உயர்ந்தது.
பாதுகாப்புத் துறைக்கும், துணை இராணுவப் பிரிவுகளுக்கும் தேவைப்படும் ஒரு பகுதித் துணிகளை அரசுத் தலைமை நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்குப் பாதுகாப்புத் துறையினரை மாநில அரசு அணுகியுள்ளது.
தமிழகக் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தின் கீழ்ப் பயன்படுத்தும் பள்ளிக்கூட மாணவ, மாணவியர்க்குரிய கைத்தறிச் சீருடை இலவசமாக வழங்க முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
<b>ஏற்றுமதி:</b> ‘பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனம்’ (Co–optex International) ஓர் ஏற்றுமதிப் பிரிவை அமைத்துப் படிப்படியாகக் கைத்தறி ஏற்றுமதியைப் பெருக்கி வருகிறது. ஆசுத்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், செருமனி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னேற்றம் கண்டிருப்பதுடன், 1979–80–ஆம் ஆண்டில் உரூ. 2.60 கோடி மதிப்புள்ள துணிகளை ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், 1985–86–ஆம் ஆணடில் குறைந்த அளவு உரூ. 2 கோடி அளவிற்குத் துணியினை ஏற்றுமதி செய்ய இலக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் 1979–80–ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதற்காக 1984–85–ஆம் ஆண்டில் உரூ. 0.12 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
மைய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் நான்கு கைத்தறி வளர்ச்சி முனைப்புத் திட்டங்களையும், இரண்டு ஏற்றுமதி உற்பத்தித் திட்டங்களையும் அரசு நிறுவியுள்ளது. இராமன் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.
கைத்தறி வளர்ச்சித் தீவிரத் திட்டம் காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், மதுரை, கரூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ஆறு இடங்களில் கொண்டுவரப்பட்டது. அதற்காகத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உரூ. 464.32 இலட்சம். அரசினால் வழங்கப்பட்ட நிதி உதவி உரூ. 375.46 இலட்சம். நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டுக் கைத்தறி வளர்ச்சித்தீவிரத் திட்டத்தின்கீழ் ஈரோடு, சென்னிமலை, திருச்செங்கோடு, பவானி, திருப்பூர் ஆகிய இடங்களில் துணை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் பொதட்டூப்பேட்டை, தக்கோலம், பனப்பாக்கம், அம்மையார் குப்பம், அனகாபுத்தூர் ஆகிய இடங்களிலும், சேலத்தில் பாப்பாரப்பட்டி புதுச்சத்திரம், தொள்சம்பட்டி, வேலக்கவுண்டம் பட்டி ஆகிய இடங்களிலும், மதுரை, நாகர்கோவில், கடையநல்லூர் ஆகிய இடங்களிலும் துணை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கைத்தறி வளர்ச்சி முனைப்புத் திட்டத்தின் கீழும் இவ்விடங்களில் துணை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஏற்றுமதி உற்பத்தித் திட்டத்தின்கீழ் குறிஞ்சிப் பாடி, புவனகிரி, நடுவீரப்பட்டி, அன்னியூர், திட்டக்குடி, சிறுபாக்கம், அகரம் ஆகிய இடங்களில் துணை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இத்திட்டங்களில் இதுவரை மொத்தம் 12,300 கைத்தறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிஞ்சிப்பாடித் திட்டத்திற்கு 1979–80–ஆம் ஆண்டில் உரூ. 7.56 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5700 கைத்தறிகளை இத்திட்டங்களில் சேர்த்து 1980–81–இல் மொத்தம் 18,000 கைத்தறிகளாகப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உற்பத்தியைப் பல்திறப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசிடமிருந்து உரூ. 21.00 இலட்சம் நிதி உதவி பெற்றுச் சேலம் கூட்டுறவு நூற்பாலையில் பரவுக் கஞ்சி போடும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் கைத்தறிகளுக்குத் தேவையான பதனிடப்பட்ட பாவுகள் வழங்கப்படுகின்றன.
அரசின் நிதி உதவியுடன் சேலம், திருநெல்வேலி, கிரீவில்லிபுத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் உரூ. 90 இலட்சம் மொத்தத் திட்டச் செலவில் புதுமுறைச் சாயச் சாலைகள் அமைந்துள்ளன. இவ்வாலை உற்பத்தித் திறனைச் சமப்படுத்துவதற்கும், திங்கள் ஒன்றுக்கு 10 இலட்சம் மீட்டர் துணிகளை நவீனப்படுத்துவதற்கும் இந்தியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து உரூ. 22.50 இலட்சம் நீதி உதவி பெற்று விரிவாக்கத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுத் துணி<noinclude></noinclude>
kv8fp13slsxij86m21u8sxfeaflqe97
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/18
250
645178
1940022
2026-06-05T08:09:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>ச.செ.</b><br>திரு ச. செந்தூரன், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்,<br>சேதுபதி மேல்நிலைப்பள்ளி<br>வடக்குவெளி வீதி<br>மதுரை. <b>ச.செய.</b><br>டாகடர் ச.செயப்பிரகாசம், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||vi|}}</noinclude><b>ச.செ.</b><br>திரு ச. செந்தூரன், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்,<br>சேதுபதி மேல்நிலைப்பள்ளி<br>வடக்குவெளி வீதி<br>மதுரை.
<b>ச.செய.</b><br>டாகடர் ச.செயப்பிரகாசம், எம்.ஏ., பிஎச்.டி.<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> அழகர்கோயில் சாலை<br>மதுரை.
<b>ச.பா.</b><br>பேரா. ச. பாலசுந்தரம்<br>367, மேலவீதி<br>தஞ்சாவூர்.
<b>ச.மெ.</b><br>பேரா.ச.மெய்யப்பன், எம்.ஏ.,<br> தமிழ்த்துறை<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர்.
<b>சா.உ.</b><br>திரு சா. உதயசூரியன், எம்.ஏ., எம்.பில்.<br>பெருமாங்குப்பம் அஞ்சலகம்<br>(வழி) கீ.வ.குப்பம்<br> வ.ஆ.மாவட்டம்
<b>சா.வி.</b><br>டாக்டர் சாரா. வில்லியம்ஸ், எம்.ஏ., எம்.எட்.பிஎச்.டி.<br>கல்வியியல் துறை<br>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>அண்ணாமலை நகர்.
<b>சி.ஆர்.வ.</b> <br>டாக்டர் சி.ஆர். வசந்தா, எம்.ஏ., எம்.எட்.,பிஎச்.டி.<br>கல்வியியல் துறை<br>அழகப்பா பல்கலைக்கழகம்<br>காரைக்குடி.
<b>சி.இரெ.</b><br>பேரா.சி.இரெத்தினம், எம்.ஏ.<br> பிளாட் எண். 58<br>முருகவேள் நகர்<br>திருச்சி.
<b>சி.என்.ந.</b><br>டாக்டர் சி. என். நடராசன், எம்.ஏ., பி.எல். பிஎச்.டி.<br>சமூகவியல் துறைத் தலைவர்<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (விரிவாக்க மையம்)<br>பாளையங்கோட்டை.
<b>சி.எஸ்.க.</b><br>திரு சி.எஸ். கண்ணாயிரம்<br> சேக்கிழார் நிலையம்<br>480, வைசியாள் வீதி<br> கோயம்புத்தூர்.
<b>சி.கே.சி.</b><br>டாக்டர் சி.கே. சிவப்பிரகாசம், எம்.ஏ., பிஎச்.டி.<br>வரலாற்றுத்துறைப் பேராசிரியர்<br>அ.வீ.வா. நினைவு புட்பம் கல்லூரி<br>பூண்டி<br>தஞ்சாவூர் மாவட்டம்.
<b>சி.ச.</b><br>டாக்டர் சி. சண்முகானந்தம், எம்.ஏ., பிஎச்.டி.<br>முதல்வர்<br>அரசர் கல்லூரி<br>திருவையாறு <br>தஞ்சை மாவட்டம்.
<b>சி.பா.</b><br>டாக்டர் சி.பாலசுப்பையா, எம்.காம்., எம்.பில்.<br>பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம்<br> பாண்டிச்சேரி.
<b>சிவ.இரா.</b><br>பேரா. சிவ. இராமச்சந்திரன், எம்.ஏ.<br>கல்லூரி வளர்ச்சிக் குழுத் தலைவர்<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>சீ.ப.</b><br>திரு சீ. பக்தவச்சலு, எம்.ஏ., எம்.ஏ.<br>52, செயராம் நகர்<br>கொளத்தூர்<br>சென்னை.
{{nop}}<noinclude></noinclude>
6rto7tfkemp2j3djyy59giwqgni2f8h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/19
250
645179
1940025
2026-06-05T08:19:29Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சீனி.நா.</b><br>டாக்டர் சீனி.நாராயணன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தலைவர்<br>உளவியல் துறை<br>பாரதியார் பல்கலைக்கழகம்<br>கோயம்புத்தூர். <b>சு.ஆ.</b><br>திரு சு. ஆறுமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||vii|}}</noinclude><b>சீனி.நா.</b><br>டாக்டர் சீனி.நாராயணன், எம்.ஏ., பிஎச்.டி.<br>தலைவர்<br>உளவியல் துறை<br>பாரதியார் பல்கலைக்கழகம்<br>கோயம்புத்தூர்.
<b>சு.ஆ.</b><br>திரு சு. ஆறுமுகம், எம்.ஏ., பி.லிப், எஸ்சி <br>நூலக உதவியாளர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர்.
<b>சு.இ.</b>டாக்டர் சு. இன்னாசி, எம்.ஏ., பிஎச்.டி.<br> கிறித்தவ இலக்கியத்துறைத் தலைவர்<br>சென்னைப் பல்கலைக்கழகம்<br>சென்னை.
<b>சு.இரா.</b><br>சு.இராசவேலு, எம்.ஏ., எம்.ஏ., எம்.பில்.<br>வேந்தன் வீதி<br>அண்ணாநகர்,<br> சேண்பாக்கம் அஞ்சல்<br>வேலூர், வ.ஆ. மாவட்டம்.
<b>சு.இராச.</b><br>திரு.சு.இராசகோபால், எம்.ஏ..<br> கல்வெட்டாய்வாளர்<br>தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை<br>நாயக்கர்மகால்<br>மதுரை.
<b>சு.இராம.</b><br>டாக்டர் சு.இராமரத்தினம், எம்.ஏ., பிஎச்.டி.<br>தத்துவத்துறைப் பேராசிரியர்<br>விவேகானந்தா கல்லூரி<br>மைலாப்பூர்<br>சென்னை.
<b>சு.கோ.</b><br>டாக்டர் சு.கோவிந்தராசன், எம்.ஏ., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>தமிழ்த்துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,<br>அண்ணாமலைநகர்.
<b>சு.ச.</b><br>டாக்டர் சு.சக்திவேல், எம்.ஏ., எம்.ஏ., பிஎச்.டி.<br>நாட்டுப்புறவியல் துறைத் தலைவர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>சு.சா.</b><br>டாக்டர் சு.சாமி ஐயா, எம்.ஓ.எல்., பிஎச்.டி.<br>இணைப் பேராசிரியர்<br>தமிழ்த்துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>அண்ணாமலைநகர்.
<b>சு.சு.</b><br>பேரா.சு. சுவர்ணகாளீசுவரன்<br>தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு)<br>தியாகராசர் காலனி<br> திருவையாறு<br>தஞ்சை மாவட்டம்.
<b>சு.சு.தே.</b><br>டாக்டர் க. கனத்தாதேவி, எம்.ஏ.,எம்.பில், பிஎச்.டி<br>தமிழ்த்துறை<br>இராணிமேரி கல்லூரி<br>சென்னை.
<b>சு.பெ.</b><br>திரு சு. பெருமாள், எம்.ஏ., பி.எட்.<br> வேடநத்தம்<br>(வழி) அருப்புக்கோட்டை<br>காமராசர் மாவட்டம்.
<b>சு.மு.</b><br>திரு சு.முத்துக்கிருஷ்ணன்<br>10-பி/1, ஜவகர் இரண்டாம் தெரு<br>எஸ்.எஸ். காலனி<br>மதுரை.
<b>செ.இரா.</b><br>புலவர் செ.இராசு, எம்.ஏ.<br>இணைப் பேராசிரியர்<br>கல்வெட்டுத் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>செ.இரெ.செ.</b><br>திரு செ. இரெ.செயச்சந்திரன், எம்.ஏ., எம்.ஏ.<br>உதவி இயக்குநர்<br>பதிப்புத்துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
{{nop}}<noinclude></noinclude>
1qm2eccdd05e48x4xs0ojshcgib250o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/20
250
645180
1940027
2026-06-05T08:28:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>செ.வை.</b><br>பேரா. செ. வைத்தியலிங்கம், எம்.ஏ., எம்.லிட்,<br>பதிப்பாசிரியர்<br> பெருஞ்சொல்லகராதீத்துறை <br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர். <b>சே.தா.</..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh||viii|}}</noinclude><b>செ.வை.</b><br>பேரா. செ. வைத்தியலிங்கம், எம்.ஏ., எம்.லிட்,<br>பதிப்பாசிரியர்<br> பெருஞ்சொல்லகராதீத்துறை <br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>சே.தா.</b><br>டாக்டர் சேக்கிழார்தாசன், எம்.ஏ., எம்.எட்., பிஎச்.டி.<br>பேராசிரியர்<br>அரசு கல்வியியல் கல்லூரி<br>ஓரத்தநாடு<br>தஞ்சாவூர் மாவட்டம்.
<b>சோ.ந.க.</b><br>டாக்டர் சோ.ந.கந்தசாமி,எம்.ஏ., பிஎச்.டி.<br>இலக்கியத்துறைத் தலைவர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>டி.பி.சி.</b><br>டாக்டர் டி.பி.சித்தலிங்கையா, எம்.ஏ., பிஎச்.டி.<br>சைவ சித்தாந்தத்துறை<br>மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br>மதுரை.
<b>டி.வி.கு.</b><br>திரு டி.வி குப்புசாமி<br>ஆர் 661, நியூ ராஜேந்தர் நகர்<br>புதுதில்லி
<b>த.ஏ.ஞா.</b><br>டாக்டர் த.ஏ.ஞானமூர்த்தி, எம்.ஏ., பிஎச்.டி.<br>18, தாமு நகர்<br>கோயம்புத்தூர்.
<b>த.ச.செ.</b><br>திரு. த.ச.செல்லதுரை, எம்.ஏ.<br> பொருளியல் துறை<br>சரபோசி கல்லூரி<br>தஞ்சாவூர்.
<b>த.பீ.</b><br>டாக்டர் த.பீட்டர், எம்.ஏ., பிஎச்.டி.<br> பொருளியல் துறைத் தலைவர்<br>இசுகாட் கிறித்தவக் கல்லூரி<br>நாகர்கோயில்.
<b>தா.ஈ.</b><br>டாக்டர் தா.ஈசுவரப்பிள்ளை, எம்.ஏ., பிஎச்.டி.<br>இலக்கியத்துறை விரிவுரையாளர்<br>தமிழ்ப் பல்கலைக்கழகம்<br>தஞ்சாவூர்.
<b>தா.எ.</b><br>டாக்டர் தா.எட்மண்ஸ், எம்.ஏ., பிஎச்.டி.<br>வரலாற்றுத்துறை<br>டி.பி.எம். எல். கல்லூரி<br> பொறையார்.
<b>தி.அ.சொ.</b><br>திரு தி.அ.சொக்கலிங்கம், எம்.ஏ. எம்.லிட்.<br>தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br>அண்ணாமலைநகர்.
<b>தி.அர.இரா.</b><br> பேரா.தி.அர. இராமச்சந்திரன்,எம்.ஏ.,எம்.லிட்,<br>37, 8ஆம் குறுக்குத் தெரு<br>செனாய் நகர்<br>சென்னை.
<b>தி.ஆ.இ.</b><br>திருமதி தி.ஆ.இசைமதி<br>இளநிலைப் பேராசிரியர்<br>சட்டக் கல்லூரி<br>மதுரை.
<b>தி.கை.</b><br>திரு தி.கைலாசம், எம்.ஏ.<br> வரலாற்றுத்துறை<br>ஸ்ரீ வாசவி கல்லூரி<br>ஈரோடு.
<b>தி.சீ.</b><br>டாக்டர் தி.சீனிவாசன், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.<br>துணைப்பேராசிரியர்/உளவியல் துறை<br> அரசு கலைக் கல்லூரி<br>கோயம்புத்தூர்.
<b>தி.சு</b><br>திரு தி.சுப்பிரமணியம், எம்.ஏ.,<br> காப்பாளர்<br>இராசராசன் அருங்காட்சியகம்<br>தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை<br>அரண்மனை வளாகம் <br>தஞ்சாவூர்.
{{nop}}<noinclude></noinclude>
58x507he6p18738ar7peoqgc4rs17hz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/61
250
645181
1940037
2026-06-05T09:27:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதனிடும் ஆலை வெளுப்பாக்குதல், சாயமிடுதல், பளபளப்பாக்குதல், துணிகளை அச்சிடுதல், சிட்ட நூல் சாயமிடுதல் ஆகிய வசதிகளைக் கொண்டு செயற்படுகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தறி நெசவுத் தொழில்|35|கைத்தறி நெசவுத் தொழில்}}</noinclude>பதனிடும் ஆலை வெளுப்பாக்குதல், சாயமிடுதல், பளபளப்பாக்குதல், துணிகளை அச்சிடுதல், சிட்ட நூல் சாயமிடுதல் ஆகிய வசதிகளைக் கொண்டு செயற்படுகிறது.
<b>மூடப்பட்ட ஆலைகளைத் திறத்தல்:</b> பஞ்சாலையில் 1976–77–இல் ஏற்பட்ட நெருக்கடியின்போது, தனியார் துறையிலுள்ள நலிந்த துணி ஆலைகள் மாநில அரசு பிணைய உறுதி கொடுத்தமையால் மீண்டும் திறக்கப்பட்டன. நூல் நூற்பு மற்றும் நெசவு ஆலை, கோயம்புத்தூர்; காவேரி நூற்பு மற்றும் நெசவு ஆலை, புதுக்கோட்டை; மீனாட்சி ஆலை, மதுரை; சோதி ஆலை, கோயம்புத்தூர்; செயலட்சுமி ஆலை, கோயம்புத்தூர் முதலியன அவ்வாறு திறக்கப்பட்டவையாகும். ஆலைகள் நல்ல முறையில் திருப்தி கரமாகச் செயற்படுகின்றன என்று சந்தேகமறத் தெரிந்துகொண்ட பின்னர், அரசு தன் பிணைய உறுதியினைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்பது மாநில அரசின் கொள்கையாகும்.
{{center|1979–80 மற்றும் 1980–81–ஆம் ஆண்டுகளில் இந்திய மைய இருப்பு<br>வங்கி அளித்த கடன்தொகை:}}
{| class="wikitable"
|-
! !! 1979–80 அனுமதிக்கப்பட்டது !! 1980–81 பரிந்துரைக்கப்பட்டது
|-
|1. தொடக்க நெசவாளர்<br>கூட்டுறவுச் சங்கங்கள் || <br>உரூ. 16.95 கோடி || <br>உரூ. 22.50 கோடி
|-
|2. தலைமைச் சங்கங்கள் || உரூ. 12.00 கோடி || உரூ. 12.00 கோடி
|}
{{center|1983–84, 1984–85–ஆம் ஆண்டுகளில் இந்திய மைய இருப்பு வங்கி<br>வழங்கியுள்ள மொத்தக் கடன் உதவி:}}
{| class="wikitable"
|-
! !! 1983–84 !! 1984–85
|-
| || colspan=3|உரூ. கோடியில்.
|-
|1. தொடக்க நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் || 53.58 || 56.25
|-
|2. தலைமைச் சங்கங்கள் || 40.00 || 50.00<br>20.00 (பண்டிகைக் காலங்களில்)
|}
{{center|ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டக்குழுவும், ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக்குழுவும்<br>கதர், கைத்தறி குறித்து வரையறுத்த இலக்குகள்:}}
{| class="wikitable"
|-
! !! உற்பத்தி<br>(உரு. கோடியில்)<br>1979–80 1984–85 !! வேலைவாய்ப்பு<br>(மனிதர்கள் இலட்சத்தில்)<br>1979–80 1984–85 !! ஏற்றுமதி<br>(உரூ. கோடியில்)<br>1979–80 1984–85
|-
|கதர், கைத்தறி || 1838{{gap|2em}}2660 || 72.7{{gap|2em}}102.4 || 261{{gap|2em}}370
|}
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 3அ</b></noinclude>
bevaejpfam4jkpo24vko9zwvcjc9vfq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/62
250
645182
1940040
2026-06-05T09:38:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வங்கி வட்டி வீதத்தைவிட 2½ விழுக்காடு குறைந்த வட்டி வீதத்தில் அளிக்கும் இந்திய மைய இருப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தொழில்கள் (இந்தியா)|36|கைத்தொழில்கள் (இந்தியா)}}</noinclude>கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வங்கி வட்டி வீதத்தைவிட 2½ விழுக்காடு குறைந்த வட்டி வீதத்தில் அளிக்கும் இந்திய மைய இருப்பு வங்கியின் (Reserve Bank of India) சலுகை வீத நிதி உதவித் திட்டம், 1980–81–ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படுகிறது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்குக் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உரூ. 8458.47 இலட்சமாகும்.
பொருளாதாரத் திட்டத்தில் இவ்வாறு சிறப்பிடம் பெற்ற கைத்தறி நெசவுத் தொழில் இந்திய மக்களின் இன்றியமையாத துணித் தேவையை நிறைவு செய்து, பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அயற்செலாவணியைப் பெற வழிவகை செய்து, பல வழிகளில் நாட்டுக்கு நன்மை செய்கிறது.
{{Right|<b>ச.கி.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>State Planning Commission,</b> Sixth Five Year Plan 1980–85, Tamil Nadu Government, Madras, 1982.
<section end="கைத்தறி நெசவுத் தொழில்"/>
<section begin="கைத்தொழில்கள் (இந்தியா)"/>
{{dhr}}
{{larger|<b>கைத்தொழில்கள் (இந்தியா):</b>}} கைத்திறனால் பொருளின் உற்பத்தி உருவாக்கப்படுமேயானால் அது கைத்தொழில் எனப்படும். கைத்தொழிலில் கைக்கருவிகளும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கைத்தொழிலில் கருவிகளின் உதவி இருப்பினும், பொருள்களையும் கருவிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துச் சீர்திருத்தம் செய்து, உற்பத்தி செய்வதில் சிறப்புப் பங்கு வகிப்பது கை அல்லது கைத்திறன் ஆகும்.
இக்காலத்தில் இயந்திரத் தொழில்கள் முன்னேற்றம் அடைந்தாலும், அவை கைத்தொழிலின் முன்னேற்றத்தை முறியடித்து விடவில்லை. இயந்திரத் தொழிலில் இயந்திரங்களின் உதவியால் ஒரே மாதிரியான பொருள்களைப் பெருமளவில், விரைவாக உற்பத்தி செய்யமுடியும். அதில் கைத்தொழிலைக் காட்டிலும் உற்பத்தியின் அளவு மிகுதி. ஆனால், இயந்திரம் உற்பத்தி செய்யும் பொருளின் மாதிரி (Model), திட்டம் (Plan), வடிவம் (Design) ஆகியவற்றை உருவாக்குவது கைத்தொழில்தான், மாதிரிப் பொருள் முதலில் கைத்தொழிலால் உருவாக்கப்பட்ட பின்னர் இயந்திரம் அதனைப் பெருமளவு உற்பத்தி செய்கிறது. எனவே, கைத்தொழில் இயந்திரத் தொழிலின் முன்னோடி ஆகும்.
கைத்தொழிலினால் கைவினைப் பொருள்களுக்கும், இயந்திரத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கும் புகழ் கிடைக்கிறது. தேர்வு செய்யும் உணர்வையும் அழகுணர்ச்சியையும் (Aesthetic Sense) அறிவோடு பொருள் வாங்கும் திறனையும் கைத்தொழில் மக்களிடையே உருவாக்குகிறது. கைத்தொழில் மனித வரலாற்றில் கைவினைஞர்களின் பங்கை என்றென்றும் உணர்த்துகிறது.
<b>கருவிகளும் பயன்பாடும்:</b> இந்தியக் கைத்தொழிலில் வெட்டும் கருவிகள், இணைக்கும் கருவிகல் ஆகிய இருவகைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெட்டும் கருவிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கத்தி, கத்தரிக்கோல், அரிவாள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். ஊசி, முடுக்கிகள், கைப்பிடிகள் ஆகியன இணைக்கும் கருவிகளாகும். இக்கருவிகளின் உதவியுடன் பல உள்ளீட்டுப் (Inputs) பொருள்களைப் பயன்படுத்திக் கைத்தொழில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழங்காலத்திலிருந்து இயற்கைப் பொருள்களாகிய மரம், களிமண், கற்கள், தோல், ஓலை, மரத்தக்கை, புல், இழைகள், இலைகள் முதலியனவும், மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களான உலோகம், காகிதம், கண்ணாடி, இழைக்கப்பட்ட மரம், நரம்புகள், மணிகள் முதலியனவும் கைவினைஞச்களில் கைத்தொழிலுக்கு மூலப் பொருள்களாகப் பயன்படுகின்றன.
கைத்தொழிலில் எந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் இரு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலில் மூலப் பொருளானது தேவையான அளவு ஒரு திட்டப்படி அல்லது ஒரு வடிவப்படி வெட்டப்படுகிறது. இரண்டாவதாக, வெட்டப்பட்ட பொருள்கள் புதிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு ஒன்று சேர்க்கப்படுகின்றன. இதில் கலைஞனின் பயிற்சியும் பட்டறிவும் சொந்தக் கலை உணர்வும் உதவி செய்கின்றன.
கைத்தொழிலில் முழுப் பொருளும் தொடக்கம் முதல் இறுதிவரை கைவினைஞர்களாலேயே செய்யப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் மூலமும், கற்பனைத் திறன் மூலமும் புதிய பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. பழைய பொருள்களுக்குப் புதிய உருவம் அளிக்கப்படுகிறது.
<b>நன்மைகள்:</b> இந்தியாவில் மக்கள் கைத்தொழிலால் பெரும் பயன் பெறுகின்றனர். குறிப்பாகப் பொருளை முழுமையாக உற்பத்தி செய்த மன நிறைவும் மகிழ்ச்சியும் கைவினைஞர்களுக்கு உண்டாகின்றன. இயந்திரத் தொழிலில் ஒருவன்,<noinclude></noinclude>
9utrtnbdesm0wgp70q88atpfy86ki9i
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf
252
645183
1940042
2026-06-05T09:42:32Z
Info-farmer
232
விரிவு
1940042
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=பூம்புகார் பதிப்பகம்
|Volumes=7
|School=
|Publisher=பூம்புகார் பதிப்பகம்
|Address=சென்னை
|Year=முதற்பதிப்பு 2002
|Source=pdf
|Image=1
|Number of pages=543
|File size=94.1
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8}}
{{தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
j8iwjbs527g60w3lk0fb8dxc2a8ei9t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/11
250
645184
1940043
2026-06-05T09:44:02Z
Info-farmer
232
/* உரையில்லாதவை */
1940043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude>
dekkyfcqiq04payt0re0iq3al1sz5yh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/12
250
645185
1940045
2026-06-05T09:44:34Z
Info-farmer
232
OCR
1940045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கடிதம் : 149
தம்பி!
விழாக் கோலம்
உழவர் திருநாள்
எல்லைப் பிரச்சினை
இயற்கையின் கோரத்தாண்டவம்
அன்பு மலர்
தெரிகிறது,தெரிகிறது, உன் முகத்திலே அழகு பொங்கி
நிற்கும் காரணம் - புத்தாடை அணிந்துள்ள உன் நடை, காட்டுப்
பாதையில் செல்லும் வேழம், வேங்கையின்மீது உராய்ந்து
செல்லும்போது ஏற்படுவதுபோன்ற ஓசையை அல்லவா
எழுப்புகிறது? கிளியும் புறாவும், நாகண வாயும் சிட்டும், குயிலும்
மயிலும், காட்சிக்கினிய பொருளத்தனையும் ஒரே நேரத்தில், ஒரே
இடத்தில் கலந்துறவாடுவது போலன்றோ. இல்லம்
விளங்கிடவேண்டுமென விழைகிறாய்!
என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று
சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை
அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப்
பதமாகும். புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை;
ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே ஓஹோ! உன்னை
உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா பால் பொங்கிற்றா
என்று! ‘ஆம்' எனப் பதிலும் கூறவேண்டுமா -அகத்தினழகுதான்
முகத்தில் தெரிகிறதே!
தம்பி! மகிழ்ச்சி பொங்கும் நிலையில் நீ இருப்பதற்கு
இந்நாள் வந்தது, எனக்குப் பெருமகிழ்வு தருகின்றது. எப்போதும்<noinclude></noinclude>
p02uncoprgs4tcucj6frsj7r2kwopq4
1940050
1940045
2026-06-05T10:08:58Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>கடிதம் : 149
{{Xx-larger|<b>விழாக் கோலம்</b>}}
<poem><b>உழவர் திருநாள்
எல்லைப் பிரச்சினை
இயற்கையின் கோரத்தாண்டவம்
அன்பு மலர்</b></poem>
<b>தம்பி!</b>
{{larger|<b>தெ</b>}}ரிகிறது, தெரிகிறது, உன் முகத்திலே அழகு பொங்கி நிற்கும் காரணம் - புத்தாடை அணிந்துள்ள உன் நடை, காட்டுப் பாதையில் செல்லும் வேழம், வேங்கையின்மீது உராய்ந்து செல்லும்போது ஏற்படுவதுபோன்ற ஓசையை அல்லவா எழுப்புகிறது? கிளியும் புறாவும், நாகண வாயும் சிட்டும், குயிலும் மயிலும், காட்சிக்கினிய பொருளத்தனையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கலந்துறவாடுவது போலன்றோ, இல்லம் விளங்கிடவேண்டுமென விழைகிறாய்!
என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை; ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே - ஓஹோ! உன்னை உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா - பால் பொங்கிற்றா என்று! 'ஆம்' எனப் பதிலும் கூறவேண்டுமா - அகத்தினழகுதான் முகத்தில் தெரிகிறதே!
தம்பி! மகிழ்ச்சி பொங்கும் நிலையில் நீ இருப்பதற்கு இந்நாள் வந்தது, எனக்குப் பெருமகிழ்வு தருகின்றது. எப்போதும்<noinclude></noinclude>
t9fpaiswvw4v6mo6lsnl45dpcy6ta4h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/10
250
645186
1940046
2026-06-05T09:45:21Z
Info-farmer
232
/* மேம்படுத்த வேண்டியவை */
1940046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude>தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்
தொகுதி-4<noinclude></noinclude>
iq6cwb3x37vnnqt244gmfdwwa53w9br
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/63
250
645187
1940048
2026-06-05T09:48:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு பொருளின் ஒரு பகுதியை மட்டுந்தான் செய்கிறான். வீட்டை அலங்கரிக்கும் பொருள்கள் பல வடிவங்களில் கைத்தொழிலால் கிடைக்கின்றன. இயந்திரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கைத்தொழில்கள் (இந்தியா)|37|கைத்தொழில்கள் (இந்தியா)}}</noinclude>ஒரு பொருளின் ஒரு பகுதியை மட்டுந்தான் செய்கிறான். வீட்டை அலங்கரிக்கும் பொருள்கள் பல வடிவங்களில் கைத்தொழிலால் கிடைக்கின்றன. இயந்திரம் ஒரேமாதிரியான பொருளைத்தான் உற்பத்தி செய்யும். பல வகைகளில் கிடைக்கா. வீடுகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள், அலங்காரத் தட்டுகள், கிண்ணங்கள், மர, உலோகப் பெட்டிகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியனவும், ஆட்கள் பயன்படுத்தும் கைப்பைகள், விலையுயர்ந்த நகைகள் முதலியனவும் பெரும்பாலும் கைத்தொழிலால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கைத்தொழில், ஒரே மாதிரி அமைந்துள்ள மொத்த உற்பத்திப் பொருளிலிருந்தும் இயந்திர வாழ்விலிருந்தும் மனிதனுக்கு விடுதலை அளிக்கிறது; மனமகிழ்ச்சி, உற்சாகம், மனநிறைவு ஆகியவற்றைத் தருகிறது. கைத்தொழிற் பயிற்சி அறிவை வளர்க்கிறது; கற்பனை ஊற்றுக்கு வழி கோலுகிறது; பொருளைச் செய்வதற்குப் பொறுமையை வளர்க்கிறது. கண்பார்வை இழந்தவர்களும் முடவர்களும் நோயாளிகளும் கைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள்.
<b>தமிழ்நாட்டில் கைத்தொழில்:</b> தமிழ்நாட்டில் கைவினைஞர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் ஊதியம் தரும் வேலைவாய்ப்பை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் 1979–80–இல், 19,924 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, உரூ. 81.91 இலட்சம் உதவித் தொகையாகவும் வழங்கப்பட்டது. அவர்களுக்குள் 1570 கைவினைஞர்களுக்குக் கருவிகளும், 796 பேருக்குத் தொழிற் கூடங்களுக்காக உரூ. 15.25 இலட்சம் உதவித்தொகையும் கொடுக்கப்பட்டன.
இந்தியாவிலேயே தென்னை உற்பத்தியில் தமிழ் நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. ஊரக மக்களின் பொருளாதார உயர்வுக்குக் கயிற்றுத் தொழில் காரணமாகிறது. தமிழ்நாட்டில் 4391 ஆட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 56 கயிற்றுத் தொழில் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன.
தோல் தொழிலின் வளர்ச்சிக்காகப் புதிய இயந்திரங்களை அமைத்துத் தோல் பதனிடும் தொழிற் கூட்டுறவு நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. சிறிய அளவில் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு உதவி அளித்து வருகிறது. இதற்காக வாணியம்பாடி, இராணிப்பேட்டை, திண்டுக்கல் பேராணைம்பட்டு ஆகிய இடங்களில் தோல் தொழிற் கூட்டுறவு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோல் கைத்தொழில் திட்டத்தில் 1981 முதல் 1983 வரை உரூ. 13.65 இலட்சம் செலவில் 1589 ஊரகக் கைவினைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் 1984–ஆம் ஆண்டில் உரூ. 7.03 இலட்சம் செலவில் 1227 பேருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழில் நிறுவனம், திருமழிசையில் இயந்திர முறையில் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும், சென்னை, விருத்தாசலம், ஓமலூர் ஆகிய இடங்களில் மாக்கல் குழாய்கள், துப்புரவுப் பொருள்கள், கலைத்திறம் வாய்ந்த மண்பாண்டப் பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் மண்பாண்டத் தொழிற் பிரிவுகளையும் நடத்துகிறது.
தென்னார்க்காடு மாவட்டத்தில் 1984 முடிய 4245 கைவினைஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதனால், பல புதிய தொழில்கள் உருவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 5 தையற் கூட்டுறவு நிறுவனங்களும் 5 கயிற்றுத் தொழிற் கூட்டுறவு நிறுவனங்களும், 2 தீப்பெட்டி உற்பத்தியாளர் நிறுவனங்களும் உள்ளன.
தென்னார்க்காடு மாவட்டத்தில் கைவினைஞர்களுக்கு விற்பனை உதவி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மேலச் சித்தனூர் ஊரகத்தில் பனை ஓலைப் பாய் பின்னுவதில் ஈடுபட்டுள்ள 100 குடும்பங்களும் வண்டிப் பாளையம் ஊரகத்தில் மட்பாண்டம், காகிதப் பொம்மைகள் ஆகியன செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 50 குடும்பங்களும், அம்மாப்பேட்டையில் பிரம்புப் பொருள்கள் உற்பத்தி செய்யும் மலைச் சாதியினரைச் சேர்ந்த 100 குடும்பங்களும் இத்தகைய உதவிகளைப் பெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இழைநார் முறுக்குதல், கயிறு, பனை ஓலை பின்னுதல், பூ வேலை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் தச்சர்கள், காலணிப் பணியாளர்கள், தோல் பதனிடுபவர்கள், குலாவர்கள், பாய் முடைபவர்கள் ஆகியோருக்கும், புதுக்கோட்டையில் பாய் முடைவோர் மற்றும் பனை ஓலைப்பணியாளர்களுக்கும் விற்பனை உதவிகள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளர்ச்சிக் கழகம் 17 பயிற்சி உற்பத்தி நிலையங்களையும், 16 விற்பனைக் காட்சி நிலையங்களையும் நடத்தி வருகிறது; ஊரகக் கைவினைஞர்களிடமிருந்தும், தொழிற் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்தும், கைத்திறன் மிக்க தொழில் உற்பத்திப் பொருள்களை வாங்குகிறது. இக்கழகத்தின் விற்பனைத் தொகை 1979–80–ஆம்<noinclude></noinclude>
tequbd5fttdo3aeqd1z6jmd3ekx5yvi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/13
250
645188
1940051
2026-06-05T10:12:40Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>உன்னை - பிரச்சினை, பணி, கடமை என்பவைகளைத் தந்து சுவைத்திடச் சொல்கிறேனல்லவா - அவை யாவும், மெத்தச் சிரமப்பட்டு உண்டால் மட்டும் உவகை தருவன! இன்று, உனக்காக, கரும்பு காத்துக்கொண்டிருக்கிறது; பாற்பொங்கல் படைப்பார்கள்; உண்டு மகிழப் போகிறாய் - உன்னை அந்தக் கோலத்தில் காணவும் விழைகிறேன்.
அறப்போர் வீரனாக, அஞ்சா நெஞ்சனாக, அடக்கு முறையை எதிர்த்து நிற்போனாக, மடமையிலாழ்ந்துவிட்ட மக்களிடை அறிவு கொளுத்துவோனாக, ஆதிக்கவெறி பிடித்தலையும் வடவராட்சியை எதிர்த்து ஆற்றலுடன் பணிபுரிவோனாக - இவ்விதமெல்லாம் உன்னைக் கண்டு, உளம் பூரிக்கிறேன். இன்று, உன்னை விழாக் கோலத்தில் காண மகிழ்கிறேன். - இல்லத்தில் ஒளியளித்து களிப்புடன் விருந்துண்டு உலவும் நிலையில் உன்னை இங்கிருந்து காண்கிறேன். காட்சி, கவர்ச்சி தருகிறது - பார்த்ததும்; ஒரு கணம் பிறகோ. . . .!
இன்று திருநாள்! இல்லந்தோறும் இளைஞரும் முதியோரும், இருபாலரும், "பொங்கலோ பொங்க'லென்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பி, தாமும், தம்மைச் சூழ இருப்பவை யாவுமே புதியதோர் பொலிவு பெற்றிருப்பது கண்டு, "நலிவெலாம் ஒழிந்தன; நல்லன யாவையும் இனிக் கிடைத்திடும்' என்று நம்பி, அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மற்றையோரும், மனைதோறும் மனைதோறும் இருத்தல் கண்டு, நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது என்று பெருமிதம் கொள்வதற்கே அமைந்த விழா நாள்! "பால் பொங்கிற்றா?' - என்று, அன்பு பொங்கக் கேட்டு, அகமகிழச் செய்யும் நன்னாள்! இன்பம் பொங்கும்! எங்கும் தங்கும்! மகிழ்ச்சி பொங்கும்! மனையெல்லாம் வழியும்! புத்தம் புதுக்கோலம்பெற்று, இல்லமெல்லாம் எழிலோவியமாகும்; அன்பு மணம் எங்கும் கமழும்; பூங்கா சென்ற புள்ளினமும், மலரிடை உலவும் வண்டினமும் "கானம்' கிளப்பிடுவது போன்றதோர் களிப்பொலி எங்கும் எழும்! பனி தொலைந்தது; பரிதி அப்பகையினை விரட்டினாள்! நிலமடந்தைக்குப் புதிய எழிலூட்டினாள் - நடுக்கும் குளிர் இனி இல்லை; வாழ்வை நொறுக்கும் கேடுகட்கு இனி ஆதிக்கம் இல்லை!
விளைந்தது குவிந்திடக் கண்டோம்; வினையின் பயனைக் கொண்டோம்; செயலின் செழுமை விளங்கிற்று; செய் தொழிலின் மேன்மை துலங்கிற்று; உழவன் பெருமையை<noinclude></noinclude>
p5j2niqkwzbprk4qm4yuwvfi5b80l1j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/14
250
645189
1940052
2026-06-05T10:13:56Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>உலகே புகழ்கிறது; உலகுக்கே அத்தொழில் அச்சாணி என்று உளமகிழ்ந்து உரைக்கின்றனர், அறிஞர் பெருமக்கள்!
அவன் காலில் படிந்த "சேறும் சகதியும்' வாழ்வுக்குச் சந்தனமாகி மணம் அளிக்கிறது. அவன் பூட்டிய ஏர் அளித்த வளம், பெருந்தேரோடும் நிலையை அரசர்க்கே அளிக்கிறது எனில், மற்றையோர் ஏற்றம் பெறாதிருப்பரோ! அவன் "கஞ்சி' தான் குடித்தான்; கலயமோ மண்ணாலானது; கழனிப் பக்கம் அமர்ந்து கடும் உழைப்புக்குப் பிறகு, உச்சிப்போதிலே அவன் "இச்சைக்கினியாள்' தந்தது!
இதோ, அவன் இஞ்சியும், மஞ்சளும், வாழையும், பலாவும், மாவும் பிறவும் அளித்து, தன் திறமையையும், வள்ளற்றன்மையும் எடுத்துக் காட்டுகிறான். கல்லிலும், முள்ளிலும் நடந்தான் - காரிருள் கலையும் நேரமறிந்து எழுந்தான் - பகலெலாம் பாடு பட்டான் - முளைவிட்டதும் மகிழ்ந்தான் - களை கண்டு கவலை கொண்டான்; உழைத்தான், உழைத்தான் - கழனி பச்சை நிறம் பெற்றது; மீண்டும் பாடுபட்டான்; இதோ, பொன்னாடை போர்த்துக்கொண்டு புவிப் பெண்ணாள், செந்நெல் மணி மாலைகள் அணிந்து தென்றலாளுடன் தேனொழுகப் பேசி, தெவிட்டாது பாடி, கோலம் காட்டி நிற்கிறாள்!
ஓவியன், நீல நிற வானிலே பல்வேறு உருவமாக உலவிடும் கார் கண்டு, தீட்டுகோல் எடுப்பான்; ஏரடிக்கும் சிறு கோலுடைய உழவுப் பெருமகனோ, அண்ணாந்து பார்க்கிறான்; அகமகிழ்கிறான். எதன் பொருட்டு? தன் வாழ்வு சிறக்கும் வகை கண்டோம் என்பதுபற்றி எண்ணி அல்ல; நாட்டின் நல்லறிவாளர் படித்து இன்புறும் ஏடுகள் குறித்து அல்ல; அவனைப் பற்றித் தமிழ்ப் பேரரறிவாளர்கள் - மூதறிஞர்கள் கூறிச் சென்ற பொன்னுரைகள், அகத்திலும் புறத்திலும், தொகையிலும் கலம்பகத்திலும் ஏராளம், ஏராளம்; அவன், அவைபற்றி ஏதும் அறியான்! அவனுக்காக வாதாடிய புலவர் களை அவன் கண்டானில்லை; கருத்தூட்டமளிக்கும் கவிவாணர் பலர், அவன் செய்தொழிலின் சிறப்புக் குறித்துச் செப்பியுள்ள ஒப்பில் புலமை நிறை மணிகளை அவன் கண்டானில்லை; சேரன் அவையின் சிறப்பு, பாண்டியன் பாசறை அமைத்த பெருமை, சோழ நன்னாட்டான் பாடியும் மாடியும் கண்ட அருமை இவைபற்றி அவன் அறியான்; "கருக்கலிலே போகவேண்டும் - பசுந்தழை பத்து வண்டி வேண்டும் - பன்ணையாரிடம் இன்னது கூறவேண்டும் - வேலியை இவ்விதம் சரி செய்யவேண்டும்' - என்ற<noinclude></noinclude>
4eqf7dymfvh5xwgdrpaqhxyct0okea9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/15
250
645190
1940053
2026-06-05T10:15:08Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இவைபற்றித்தான் பேசுகிறான். "பயிர் எவ்வளவு காணும்' என்பதை உரைக்கிறான் - "மணி' அவனுக்கல்ல என்பது தெரிந்தும் மகிழ்ச்சியுடன். அவன் அளித்திடும் "அம்பாரம்' பண்ணையாரைப் பொன்னார் மேனியனாக்குகிறது - புது யாளும் வாய்ப்பினைத் தருகிறது! அவன், தன் கண்ணாரப் பயிர் ஏறுவது கண்டு களிப்பெய்துகிறான் - தன் உழைப்பு நற்பலனைத் தந்தது என்பதறிந்து!
"உழவர் திருநாள், இப்பொங்கற் புதுநாள்' - என்பதை, அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை "சங்கராந்திப் பண்டிகை' யாகவும், "சூரிய நமஸ்காரப்' பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, "அறுவடை விழா' என்றும், "உழவர் திருநாள்' என்றும், "தமிழர் விழா' - "திராவிடர் திருநாள்' என்றெல்லாம் ஏற்றம்பெற்று விளங்கிடக் காண்கிறோம்.
மற்றையோர், கிழமைதோறும், விழா நடத்துபவர்; விழா நடத்துபவர் என்பதைவிட, விழாவினால் நடத்திச்செல்லப் படுபவர் என்பதே பொருந்தும். பெம்மான் பிள்ளைக்கறி கேட்ட நாள்; பேயாண்டியாகிக் கூத்தாடிய நாள்; வெண்ணெய் திருடிய கண்ணன் வேல் விழியாரிடம் மத்தடிபட்ட நாள்; அடிமுடி காண அயனும் அரியும் முயன்ற நாள்; அறுமுகன் சூரனை வதைத்த நாள்; அரிமுகங்கொண்டு அரிபரந்தாமன் அரக்கனை அழித்த நாள்; அன்னை ஜானகியை ஐயன் மணந்த நாள்; - என்று, அடுக்கடுக்காக விழா கொண்டாடுகின்றனர்; புரோகிதரின் பாதம் பணிகின்றனர்; பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஒரு சேர இழக்கின்றனர்.
பண்படுத்திப் பரம்படித்து, எருவிட்டு, ஏர் பிடித்து, விதை தூவி, நாற்று நட்டு, களை எடுத்து, கதிர் முற்றிடக் கண்டு அறுத்தெடுத்துப் புடைத்துக் குவித்து உணவுப் பொருளை உலகோர்க்கு உழவர் அளிக்கும் இவ்விழாதான், நாம் மகிழ்ச்சி யுடனும் பெருமையுடனும் கொண்டாடும் ஒரே விழா!
ஒருநாள் - ஊரெல்லாம் விழா! ஒரு திங்களும் போதுமான தாக இல்லை - நமக்கு, நாட்டவரிடம் இவ்விழாவின் மாண்பினைக் குறித்து, வியந்து விரித்துரைத்திட!
ஆண்டுக்காண்டு, இவ்விழாவின் "கோலம்', வண்ணம் கொள்கிறது; வஞ்சகரின் பிடியில் சிக்கிக் கிடப்போரும்கூட, பிற விழாக்கள்போலன்றி, இஃது பெருமை அளிப்பதாய்<noinclude></noinclude>
lvinke54p13gziykydmb2ssz6n7d18v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/16
250
645191
1940054
2026-06-05T10:16:32Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அமைந்திருத்தல் கண்டு இன்புறத் தொடங்கியுள்ளனர். நமது இயக்கத் தோழர்கள், உள்ளமெலாம் உவகை பொங்க, இந்நாளில் காட்சி கண்டு களிப்புக்கொண்டு, மன்றங்கள் சென்று தமிழரின் தொன்மைச் சிறப்பினை மக்களுக்கு நினைவுபடுத்தி, பொங்கற் புதுநாள் விழாவினைக் கொண்டாடுவது, நாட்டில் ஓர் புத்தார்வத்தை எழுப்பியிருக்கிறது.
ஊர், விழாக்கோலம் கொள்ளவேண்டும்; இசையும் கூத்தும், உடற்பயிற்சி விளையாட்டுகளும் இன்ன பிறவும் நடைபெறவேண்டும்! தமிழரின் தொன்மை பற்றியும், மூதாதையர் காலத்தில் இருந்த பொலிவு பற்றியும், அஃதே பிறகு நலிவாக மாறிவிடும்படி செய்த நயவஞ்சகர் போக்குப் பற்றியும் முத்தமிழ் மூலம் ஆர்வமூட்டி வருதல்வேண்டும்.
பிற எந்த விழாவும், வீட்டோடு அமையும்; அல்லது, கோயிற் பெருவெளியில் நிகழும். மக்கள் மன்றம் கூடி, மகிழ்ச்சிப் பெருக்குடன் கலந்து களிப்பதற்கான விழாவாக இப்பொங்கற் புதுநாளே அமைந்திருக்கிறது.
இந்த ஆண்டும், நாம் விழாக் கொண்டாடியும், மன்றமதில் நின்று மறத்தமிழன் மாண்பினைக் கூறியும், இன்று வந்துற்ற இழிநிலையைப் போக்குவது குறித்தும் எடுத்தியம்பத்தான் போகிறோம்.
ஆரிய மன்னராம் கனகவிசயன் மீது கல்லேற்றிய சேரன் செங்குட்டுவனைக் காட்டுவோம்; ராஜராஜ சோழன், குலோத்துங்கன், வேளிர்கள் ஆகிய அனைவரின் திறம், தீரம் ஆகியவைபற்றி மக்களிடம் பெருமிதத்துடன் பேசி நிற்போம்; தமிழகத்து நிலவளம், நீர்வளம், மலைவளம், காட்டுவளம் அனைத்தையும் காட்டுவோம்; பிற நாட்டவருக்குக் கிடைத் திலாத அரும்பொருள்கள் - கடலிடை முததும், கானிடைக் களிறும், மலையிடைச் சந்தனமும், தென்றலும் நமக்கு உண்டு என்பதனை எடுத்தியம்பி இறும்பூதெய்தி நிற்போம்.
எனினும், இந்த ஆண்டு, ஓர் பெரிய மனக்குமுறலுக்கு இடையிலேயே இந்த விழா கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
நமக்கு வந்துற்ற இடரும் இன்னலும் எத்தகைய நெஞ்சுறுதி கொண்டோரையும் நிலைகுலையச் செய்வதாக இருக்கிறது.
தம்பி! வடவருக்கு நாம் அடிமைப்பட்டு, வாழ்விழந்து தன்மானம் அழிக்கப்பட்டுத் தத்தளித்துக் கிடக்கிறோம் - மனம்<noinclude></noinclude>
8e3go0un4ik0jks0fa9bpcrae9no8j0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/17
250
645192
1940055
2026-06-05T10:17:29Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>எதுபோல் உள்ளது என்பதை அதோ, மத்திடைத் தயிர் காட்டும்!
எந்த மொழிக்காரனும், "சிந்தைக்குச் செந்தேனாக அமைந்துள்ள இத்துணை இலக்கியத்தை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பெற்றிருந்தீரே! என்னே, உம் நாட்டு மனவளம்! எத்துணை நல்லிசைப் புலவர்கள் வீற்றிருந்தனர்! அரசு, அத்தகைய மொழிவளம் மலர்ந்திடச் செய்ததே! கோனாட்சி யிலே இந்த நல்லறம் பூத்ததே! இஃதன்றோ பெருமைக்குரிய செய்தி' - என்றெல்லாம் கூறி வியப்புறுவான்; எனினும், நாம், இந்திக்குத் தலைவணங்கவேண்டுமென இறுமாந்து கூறும் போக்கினரிடமன்றோ சிக்கிக் கிடக்கிறோம்.
விழா நாளன்று விசாரம் ஆகாது எனினும், எண்ணிடும் போது நெஞ்சு பதைத்திடாது இருக்குமோ! எண்ணாது விடத்தான் இயலுமோ!
வடவரின் பிடியுடன் தொல்லை விட்டதோ! இல்லை! எல்லையைக் களவாடி, ஏனையோரும், நமது திராவிட இனத்தினராம் தெலுங்கரும் மலையாளிகளும், இனத்தையும் மறந்த நிலைகொண்டு மொழிவழி அரசு எனும் உரிமையையும் இகழ்ந்து, தமிழருக்கு உரிய பகுதிகளைக் கவர்ந்துகொண்டு, வட்டாட்டமாடுகின்றனர்; இதனைக் கண்டு நீதி வழங்கும் நேர்மையற்று, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது வடவராட்சி. தேவிகுளம், பீர்மேடு தமிழரின் குருதி படிந்த களிறு உலவும் காடுசூழ் இடங்கள்; அங்குச் செழித்து வளரும் தேயிலைத் தோட்டத்தில், ஓய்வின்றி உழைத்து மாய்ந்த தமிழர் ஓராயிரமல்ல, பல்லாயிரவர்! இன்று, "அம்மலைநாட்டினை உமக்களித்திட ஒருப்படேன்' என்று கூறி நிற்கிறது மலையாள நாடு! டில்லி மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழும் போக்கிலே இருக்கிறது.
வடவேங்கடம் - தென்குமரி - என்ற உரை, அரசியல் கிளர்ச்சிக்காரர் இட்டுக் கட்டிய தொன்றல்ல; இலக்கியம், வரலாறு சமைத்தளிக்கும் உண்மை. அதனை மதிக்க மறுத்திடும் ஆந்திரருடன் உடந்தையாக நிற்கிறது, டில்லி - என்று எண்ணத்துக்கும் போக்கிலே, ஆட்சி நடந்துகொள்கிறது.
விழாவின்போது இவைபற்றி எண்ணாமலும், மக்களிடம் எடுத்து இயம்பாமலும் இருத்தல் இயலுமா? எண்ணிடும் போதோ, விழாக் கோலமே கலைகிறது; வேதனை பொங்கி<noinclude></noinclude>
er4gjdui4rivq3g5kq0p4i5u5yo0k2s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/18
250
645193
1940056
2026-06-05T10:19:24Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> வழிகிறது; 'எந்தமிழர் நாட்டிலே ஏன் இந்த அவல நிலை' - என்றெண்ணி வாட நேரிடுகிறது. இம்மட்டோ! அந்தோ! தமிழகம் பெற்றுள்ள வடு, இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுவிட்ட புண் - எண்ணும்போதே, கண்ணீர் கன்னத்தில் புரள்கிறது; கையறைந்து, முகத்தில் மோதிக்கொண்டு கதறும் நிலைக்குச் செல்லவேண்டிய வருகிறது, எனினும், என் செய்வது! விழா, திங்கள்தோறும் வருவதன்று - ஆண்டுக்கோர் விழா; எனவே, கண்ணீரைத் துடைத்துக்கொண்டேனும் இதனைக் கொண்டாடுகிறோம்!
'நேரிட்டுவிட்ட பேரிடியினால் நெஞ்சு ஒடிந்து கிடக்கும் நிலையினை ஓரளவுக்கு மாற்றிக்கொள்வதற்கேனும், விழா பயன்படாதா' - என்ற ஆசை வேறு, உந்துகிறது.
ஏற்பட்ட அழிவை எண்ணிடும்போதோ, உள்ளம் வெந்தழலிடையிட்ட மெழுகாகிறது! பொங்கிய புயலின் கொடுமை, ஐயகோ! எத்தனை நாசத்தை விளைவித்துவிட்டது! அன்பு பொங்கிட அமைந்த இத்திருநாளில், எத்தனை எத்தனை குடும்பங்களிலே, சென்ற ஆண்டு ஓடி விளையாடிய சேயை இழந்து தவிக்கும் தாய்மார்களின் கண்ணீர் பொங்கி வழிகிறதோ; எத்துணைக் குடும்பம் சிதறுண்டு, சிதைத்து, சீர்குலைந்துபோனதனால் வேதனை பொங்கிக் கொப்புளித்துக் கொண்டிருக்கிறதோ; குடியிழந்த மக்கள். 'கொட்டும் குளிர் போயிற்று - குதூகலப் பொங்கல் பிறந்தது - பாலும் பழமும். சோறும் சுவையும் கூட்டிக் குழைத்து உண்டு மகிழும் விழா வந்துற்றது' - என்று பிறர் பேசக் கேட்டு, 'எமக்கும் ஓர் இல்லம் இருந்தது - அங்கு அணியும் மணியும் இருந்ததில்லை; அன்பும் பண்பும் மிகுதியும் இருந்தன. அங்குப் பொன்னும் பொருளும் இருந்ததில்லை; பேசும் பொற்சித்திரங்கள் இருந்தன - கரியும் பரியும் கட்டி வைத்து யாங்கள் கனவான்களாக இருந்தில்லை; அன்புடன் தன் நாவினால் கன்றினைத் தடவிக் கொடுக்கும் அழகிய பசு இருந்தது - உப்பரிகையும் ஊஞ்சலும் இருந்த தில்லை; கொடியும் செடியும், பயனும் மணமும் அளித்து வந்தன - எல்லாம் போய், ஏதுமற்றவரானோம்; எங்கெங்கோ பொங்கல்! பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! - என்று கூவுகிறார்கள்; எம்மைக் கண்டால், ஈரமனம் படைத்த அவர் கண்கள் புனல் நிறையும்; எனவே, அவர் காணாது இருத்தலே சிறந்தது; கண்டிட நேரிடினும், அவர்தம் மகிழ்ச்சியை, நந்தம் துயரத்தைக் காட்டிக் கெடுத்திடாதிருக்கும் திறனாவது நமக்கு வருதல்வேண்டும்' - என்றெல்லாம் எண்ணிக்கொண்டுள்ளனர்.<noinclude></noinclude>
qo1oc3rdf32spceu2hpwbo39qg7xzru
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/19
250
645194
1940057
2026-06-05T10:20:11Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அவதிக்காளாகியுள்ளோருக்கு, "புயலின் கொடுமை எத்துணை வேகமாக அடித்தால் என்ன; அன்பும் பண்பும், எம்மவர்க்குக் கடலினும் பெருமளவு உண்டு; அது எம்மை, எதையும் மறந்திடச் செய்யும் அளவிலும் வகையிலும் வந்து சேர்ந்து, வாட்டத்தை ஓட்டுகிறது,' - என்று கூறத்தகும் வகையிலே, விழா கொண்டாடுவோர், விரைந்து உதவியை அனுப்புதல் வேண்டும்.
நமது கழகம், இத்துறையில் நல்லோர் கண்டு மகிழத்தக்க வகையிலும், நாடாள்வோர் கண்டு மனம் புழுங்கும் நிலையிலும் ஈடுபட்டிருக்கிறது, என்பதை எண்ணியே, வேதனையைக் குறைத்துக்கொள்ள முடிகிறது - ஓரளவுக்கேனும்!
விழாவினன்று, நமது நாடு இன்று எத்துணைத் துயருற்று இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சோகச் சித்திரமாக, புயல் எனும் சிறுகதை இருக்கக் காண்பீர்கள்; கருத்தில் பதியும் விதத்தது, "நாயகம்' என்பார் தருவது.
திருவிடத்தின் நிலை ஏன் சீர் கெட்டுக் கிடக்கிறது என்பதைக் குடை ராட்டினம் எனும் கட்டுரை மூலம், அறிவழகன் - அன்பழகனின் இளவல் அறிவுறுத்தியிருக்கிறார்.
வேதனைக் காட்சிகளைக் கண்டதால், உள்ளத்தில் எழும்பிய புயலை, சித்தார்த்தர் புத்தராகி உலகுக்குப் பொன்னொளி அளிப்பதற்குப் பயன்படுத்திய பாங்கினை, "வெள்ளி முளைத்தது' எனும் வரலாற்று ஓவியம் காட்டுவதாக இருக்கிறது.
ரஷ்ய நாட்டு மேதை டால்ஸ்டாய், பேராசைக்காரன் மெருமளவு நிலத்துக்கு ஆசைப்பட்டு ஆறடி நிலம் பெற்றதைக் கூறியிருக்கிறார் - இதனையும் "வெள்ளி முளைத்தது' தந்த அரங்கண்ணல் தந்திருக்கிறார்.
ஒய்யாரியை ஓவியம் தீட்டித் தரச் சொன்ன மகா அலெக்சாண்டரிடம், துணிந்து, உயிரோவியத்தைத் தருமாறு கேட்டது குறித்துத் தேனொழுகும் பாவினைத் தருகிறார் "சுரதா'.
நம் நாட்டிலே உள்ள நலிவு போன்றும், அதற்கு மேலும் இருந்த நலிவுகள் அத்தனையும் போக்கிடச் சீன நாட்டிலே பாய்ந்தோடிய "அன்பின்அருவி'க்கு அழைத்துச் செல்கிறார் - நீவிர், அடிக்கடி சந்திக்கும் வாணன்.<noinclude></noinclude>
mbt6vl6ik8e2p3mwrphsiimgds4zl58
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/20
250
645195
1940058
2026-06-05T10:22:48Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
கனவிலே சொர்க்கலோகச் சுந்தரிகள் தோன்றி, தத்தமது சுகானுபவத்தை அல்ல - சொர்க்கத்தில் நரகம் இருப்பதை எடுத்துக் கூறும் கற்பனை ஓவியம் "சொர்க்கத்தில் நரகம்' - "யார் கண்டது, சொர்க்கத்தை' - என்று கேட்டுவிடவேண்டாம் - நானாகக் கற்பனை செய்துகொண்டதன் விளைவு, இக்கட்டுரை.
பூலோகத்திலே ஒரு புரட்டன், மந்த மதியினருக்குச் சந்தான சப்ரமஞ்சம் அமைத்துத் தந்தான்! அவன் போன்றோர் நடாத்திய மாயம், மந்திரம் எனும் புரட்டுகளினின்றும் மக்கள் சமுதாயம் ஆராய்ச்சித் துறையிலே அடி எடுத்துவைக்கப்பட்ட கஷ்டங்களைக் காட்டும் வரலாற்றினைப் படித்தறியும் ஆர்வம் எழவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை தந்திருக்கிறேன்.
பாவையின் பயணம் - ஒரு நாடகத் தொடர்; மண வினைக்குப் பக்குவம்பெற்றுள்ளோருக்குத் தேவையான நற்கருத்தளிக்கும் நோக்குடையது.
புதிய பொலிவு - கிராமியக் காதை; இருவேறு உலகிடை உள்ளோருக்குள் ஏற்படும் கூட்டுறவும், அமைந்துவிடும் சூழ்நிலையும், விளக்கமாக உதவும்.
மேலதிகாரி - இன்றைய சூழ்நிலையில் நம்மவர்கள் 'அவாளிடம்' சிக்கிப் படும்பாட்டினை எடுத்துக்காட்டுவதாகும்.
மற்றுமுள்ளவைகள், நான் இம்முறை தரவேண்டும் என்று எண்ணி எழுதியதில் ஒரு பகுதிதான்!
தம்பி! சம்பத், 'கல்கத்தா பாதை'யில் சென்று வந்திருக்கிறான் - என்னைக் காஞ்சியில் கைகடுக்க எழுதிக்கொண்டிருக்கச் செய்துவிட்டு; இருக்கட்டும்; பாடம் கற்பிக்காமலா போவேன்!
நண்பர்கள் பலர் அனுப்பி உதவிய, 'விருந்து', மலர் சிறிய அளவானதால், வைத்து அளிக்க முடியாமல் போய்விட்டது - இப்போதைக்கு!
செங்கரும்பு, பலா, மா, வாழை, செந்நெல், ஆவின்பால், புத்தாடை - ஏதேதோ தரலாம், தம்பி, உனக்கு! ஆனால் என்ன செய்வது? இவைகளை எல்லாம்விட, என் 'அன்பு' இம்மலர் மூலம் உனக்குக் கிடைத்திடச் செய்தலே முறை என்று எண்ணினேன். உன்னிடம் கூறவேண்டுமென்று எண்ணிய கருத்துக்கள் பல; பலப்பல; ஒரு சிலவற்றைத்தான் கதை, கட்டுரை வடிவாக்கி அளித்திட முடிந்தது. இவற்றினைப் பார்க்கும்போது, உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வேறு பல நற்கருத்துகளை<noinclude></noinclude>
ks2alxhfsqkf1y9pjsjcc6t66tcne47
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/21
250
645196
1940059
2026-06-05T10:24:11Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
ஒழுங்குபடுத்தி, வரிசைப்படுத்தி, நற்செயலுக்கு உறைவிடமாக்கி, நமது நாட்டினுக்கு நல்கி, பொங்கலன்று காணும் மகிழ்ச்சி நாட்டின் பொதுமகிழ்ச்சி ஆவதற்கான நற்பணியாற்றிட வரவேண்டும் என்று அழைக்கிறேன் - உரிமையுடன் - நம்பிக்கையுடன்.
'இன்று கூடவா, அண்ணா!' என்றா கேட்கிறாய்?
சரி, சரி, போ! போ! அதோ பொங்கும் இன்பத்தைப் பெறு; பொலிவு கண்டு அகமகிழ்ந்திரு; உள்ளம் நிறைந்திடும் உவகை யுடன் உரையாடிக் களிப்புற்று இரு; நின் இல்லம் இன்பப் பூங்காவாகத் திகழட்டும்; அங்கு அறிவு மனம் கமழட்டும்; அன்பு பொங்கட்டும்; அறம் தழைத்திடத்தக்க அரும்பணியாற்றிடும் ஆற்றல் எழட்டும்.
பொங்கற் புதுநாளன்று என் அன்பு நிறைந்த வாழ்த்துதலை வழங்கி மகிழ்கிறேன்.
அதோ, பெற்றோர் அழைக்கிறார்கள் போலும் சென்று, செங்கரும்பின் சாறன்ன அன்புரை பெற்று இன்புற்றிரு!
அண்ணன்,
14-1-1956<noinclude></noinclude>
jmpyc15r39l0rgbed8y7wuo79n9pogt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/22
250
645197
1940060
2026-06-05T10:26:24Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
கடிதம் : 150
நெடுஞ்செழியன்
அன்றும்! இன்றும்!!
காஞ்சியில் காணக் கிடைக்காதவரைக் காணப் பெருந்திரள்
திருச்சியில் கண்டவரையே காணப் பெருந்திரள்
நாவலரிடம் நமது கழகம்
தம்பி!
நன்றி! உளங்கனிந்த நன்றி! அன்பு கலந்த நன்றி! மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப் போகிறேன். கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது - என் செய்வேன்! என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!!
வெற்றி! மகத்தான வெற்றி! மறக்கொணா வெற்றி! வரலாற்றுச் சுவடியில் இடம் பெறத்தக்க வண்ணம் நிரம்பிய வெற்றி!
உன் செயல் வண்ணம் கண்டேன்! எதிரே நின்று உருட்டி மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில் கால்பட ஓட்டம் பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம் உவகைக் கடலாகிவிட்டது - ஒன்றின்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக் கொண்டு மற்றொன்று என்ற முறையில் நெஞ்சில் களிப்பு அலைகள்!!
அல்லும் பகலும் ஆயாசமும், அச்சமும் பிடித்தாட்டிய நிலையில் இருந்தேன். - அண்ணா என்ற குரல் கேட்டுத்<noinclude></noinclude>
smbbk8unxc88so2apcru7bfb8he5fc2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/23
250
645198
1940061
2026-06-05T10:27:30Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை நான் கண்டேன் - உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த "வள்ளுவர் நகர்' எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம் கேட்டேன் - புதியதோர் இன்பம் கண்டேன். போற்றுகிறேன் உன்னை. "புவியோரே! புவியோரே! காண்மின் இக்காட்சியை! கையில் ஊமையரோ! கருத்தழிந்த நிலையினரோ! செய்தொழில் மறந்தவரோ மனித உருக்கொண்ட பதுமைகளோ! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோம் - எள்ளி நகையாடியும், இழிமொழியால் தாக்கியும் ஏதறிவர் தீது பேசலன்றி என்று இயம்பியும் எம்மை வாட்டிய வன்கணாளரைத் தாங்கி கிடக்கும் வையகமே! இதோ காண்பாய், செயல் வீரர் தரும் சித்திரவதை, கொள்கைக் கோமான்கள் கட்டியுள்ள கோட்டையினைப் பாராய், அவர்தம் படைக்கலனாகத் திகழும் ஆர்வம் காண்பாய், அவர்தம் களிப்பொலி எனும் முரசம் கேட்டாய். அதோ, அதோ இங்கு, அங்கு, எங்கும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் - நெடுஞ்சாலைகளெல்லாம் அணி அணியாக வந்த வண்ணமிருக்கும் இந்த வீரர் கூட்டத்தைப் பாராய், இங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை, இன எழுச்சியை, விடுதலைப் பேரார்வத்தை எடுத்துக் கூறாய்'' - என்றெல்லாம் குன்றேறிக் கூவத் தூண்டுகிறது.
திருச்சி மாநில மாநாட்டில் வெற்றியை நிச்சயமாக எதிர்பார்த்தேன். ஆற்றல்மிக்கதோர் அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகிவிட்டதை அறிந்தவன் என்பதால், நான் மாநில மாநாடு மகத்தானதோர் வெற்றியாகவே திகழும் என்பதிலே நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், தம்பி, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டாய் - தேடித் தேடிப் பார்க்கிறேன் தெள்ளு தமிழில் - வெற்றி என்ற சொல் போதவில்லை, நாம் பெற்றதை விளக்க, புத்துயிர்பெற்றோம் என்பதா - புதியதோர் உலகு கண்டோம் என்பதா - பொற்காலத்துதயம் என்பதா - மாற்றார் புறமுதுகிடும் காட்சியினைக் கண்டோம் என்பதா - நான் திணறுகிறேன் தம்பி, திட்டமான ஓர் சொல் கிட்டவில்லை.
வெற்றிகள் பல நாம் பெற்றிருக்கிறோம்.
தியாகத் தழும்பு எனும் விருதுகளைப் பெற்றிருக்கிறோம்.
நமது மாநாடுகளே, அறிவும் திருவும் நடமிடும் மன்றங் களாகத்தான் எப்போதும் காட்சி தருவன. ஆனால், திருச்சியில்<noinclude></noinclude>
2mlpks326r5klmi92nv0bm0kq29llzt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/24
250
645199
1940062
2026-06-05T10:29:06Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>நான் கண்டது வெறும் வெற்றியா. . . அல்ல தம்பி, அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என் முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ கவலைகொள்வது எதுக்கு? என் மடியில் தவழ்ந்திடும் பேறு உனக்கு இருக்கும்போது எத்தரும் பித்தரும் சத்தமிடுவதுபற்றி நீ ஏன் ஆயாசப்படுகிறாய்? - இதோ நான் உன் முன் நிற்கிறேன் - என் எழில் விழி உமிழும் ஒளி, மாற்றாரின் வஞ்சனையைச் சுட்டுக் கருக்கிப் பிடிசாம்பலாக்கிவிடும் - அஞ்சற்க; ஆயிரம் எண்ணி அயர்ந்துபோய், செயலற்று இருந்து விடாதே, விழி, எழு, இதோ நான் - உனக்காக நான் - என்றல்லவா முழக்கமிட்டது.
அந்திசாயும் வேளையிலே, ஆற்றோர வெண் மணலில், மென்காற்றுத் தாலாட்ட மெல்லியதோர் துயிலினில் வீழ்ந்து பட்ட வீரனிடம், துயில் நீக்கி எழுந்து வாராய், தோகையாள் அழைக்கின்றேன், ஆரத் தழுவிடாயோ, அன்பு முத்தம் தாராயோ என்று வீணாகானத்துடன் பாடி, வண்ண மங்கை அருகே வந்தால். . . வந்த வனிதையும் அந்த இளைஞன் உள்ளத்தில் நீண்ட பெரு நாட்களாக இடம் பெற்றிருந்த இளமங்கைதான் எனின். . . எவ்வண்ணம் இருக்கும்.
தம்பி, திருச்சி உன்போன்ற இளைஞர்கட்கெல்லாம், இது போலல்லவா அமைந்தது.
தாயே, உன் நிலை கண்டு உளம் நொந்து, உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் உடைத்திடவும் துடைத்திடவும் ஆற்றலற்றுப் போனேனே என்று எண்ணி அயர்ந்திருந்த என்முன் நின்று, மகனே, சுரந்தெழும் உன் உள்ளன்பு, என் கண்ணீரைத் தடுத்து விட்டது - விலங்குகள் என்னை வருத்தமுறத்தான் செய்கின்றன. எனினும், அதனை உடைத்திடும் ஆற்றல்பெற்ற மகன் நீ இருக்கிறாய் என்று அறிவதால் ஏற்படும் ஆனந்தம், என் அல்லலைக்கூட ஓரளவு குறைக்கின்றது, மகனே! புலம்பியது போதும், புறப்படு. இதோ என் ஆசி உனக்குக் கவசமாகி நிற்கும், என் வரலாறு, உனக்கு வீரமூட்டும், புறப்படு, போரிடு, வெற்றி பெறு - என்று தாயகம், உச்சிமோந்து கூறிடும் காட்சியாகக் காணப்பட்டது, திருச்சி மாநாடு - அகநானூற்றுப் பருவத்தைக் கடந்துவிட்ட என்போன்றோருக்கு.
அனைவருக்கும், தம்பி, இது வெறும் வெற்றியாக மட்டும் தோன்றவில்லை - மாநாட்டிலே சம்பத் எடுத்துச் சொன்னபடி இலட்சியப் பாதையிலே நாம் எத்துணை நெடுந்தூரம் முன்னேறி<noinclude></noinclude>
omtuqp5k6ihtu1s9ds2rbsfjsm7xbzt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/25
250
645200
1940063
2026-06-05T10:30:50Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இருக்கிறோம் என்பதை மட்டுமல்ல, குறிக்கோள் வெற்றி பெற, இன்பத் திராவிடம் காண, நாம் மேலே செல்லவேண்டிய பாதை அதிகமில்லை என்பதனையும் திருச்சி மாநில மாநாடு காட்டிற்று. வெற்றி என்ற சொல் மட்டும், எங்ஙனம், இந்த நிலையினை விளக்கிடப் போதுமானதாகும்.
தம்பி, மோனநிலை என்று மதத்துறையினர் ஓர் கட்டத்தைக் கூறுவர். எண்ணவேண்டியதை எல்லாம் எண்ணி யான பிறகு, சொல்லவேண்டுவனவற்றைச் சொல்-யான பிறகு, மோனநிலை பிறக்கும் என்கிறார்கள். அப்போது, ஏதும் சொல்வதும் தேவைப்படுவதில்லையாம். மணம் வீசும் சந்தனம், மரமாக இருக்கும்போது, ஒலியும் கிளப்புகிறது - அரைபட்டு உடலில்போய்ச் சேர்ந்தான பிறகு - மணம் மட்டுந்தானே இருக்கிறது, ஒலியில்லை.
நான் "மோனநிலை'யில் இருந்திட விரும்புகிறேன்.
மாநில மாநாட்டின் வெற்றி, அதன் மகத்தான தன்மை, அதற்கான காரணங்கள், இவைகளைக் குறித்தெல்லாம் பேச, எழுதக்கூடத் தோன்றவில்லை. அந்தக் கட்டத்தைக் கடந்ததோர் நிலை - மோனநிலை என்கிறார்களே அது, இதுதான்போலும்.
"என்னடி பெண்ணே! புன்னகைக்குக் காரணம்? கிள்ளையும் இல்லை எதிரே; சுழலாடவும் காணோம்! தானாகப் புன்னகை புரிந்தபடி இருக்கிறாயே. . .'' - தாய் கேட்கிறாள்.
"ஒன்றுமில்லை அம்மா!'' - அவ்வளவுதான் மங்கையால் கூற முடிகிறது.
"இதென்ன வேடிக்கை; பித்துப் பிடித்த பெண்ணே, காரண மற்றுக் களிப்பு வருமோ?'' என்று தாய் கடாவுகிறாள், உண்மையை உணர முடியாத தாயே, உன்னிடம் நான் எப்படிச் சொல்வேன், என் புன்னகையின் காரணத்தை! - என்று மகள் கூறவில்லை, எண்ணிக்கொள்கிறாள் - புன்னகை மேலும் மலருகிறது!! அகநானூற்று நிலையுடன் தமிழக இல்லங்கள் இருந்த நாட்களில் காணக் கிடந்த காட்சி இதுபோன்றது. மாநில மாநாட்டு வெற்றி தரும் மகிழ்ச்சியை என்னாலும் இப்போது எடுத்து இயம்பவும் முடியவில்லை - சுவையுள்ள தேன், சுகமளிக்கும் தேன் - என்று கூறிக்கொண்டிருக்க முடிகிறதா, தேன் பருகும்போதும் சரி, தேன்மொழியாளரிடம் சொல் விருந்து பெறும்போதும் - அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியைச் சுவைத்துக்கொண்டு மற்ற<noinclude></noinclude>
r9fdw0nu9rvlx390cekrx3eowhqlohj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/26
250
645201
1940064
2026-06-05T10:31:58Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>எல்லாவற்றையும் மறந்து கிடக்கிறேன் - மோனநிலை, - எனவே, அதிகமாகக்கூடப் பேச விருப்பம் எழவில்லை.
மாநாடு எப்படி?
வெற்றி.
மக்கள் திரளாக வந்தனரோ?
வெள்ளம்போல்
என்னென்ன சிறப்புகள் மாநாட்டிலே, சொல்லு கேட்போம்.
சிறப்புகளா. . .? மாநாட்டுச் சிறப்புகளா. . .? - என்று வாய்விட்டுக் கூறுகிறேன், மேலால் பேச விருப்பம் எழவில்லை, என் உள்ளத்தை விட்டு நீங்காத அந்த எழிலைக் காண்கிறேன், இன்புறுகிறேன் - எடுத்தியம்பும் நிலையையும் இழந்து கிடக்கிறேன்.
இதோ நான், இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், நானிருக்கும் இடத்திலிருந்து ஆறேழு கல் தொலைவில் வினோபா இருக்கிறார்.
அவருடைய வருகைக்காக "சர்வோதய நகரம்' காஞ்சியின் மற்றோர் கோடியில் இருக்கிறது. இடையில் மூவாயிரம் போலீஸ் வீரர்களும், சில நூறு அதிகாரிகளும், பல கோடி ரூபாய்களின் சொந்தக்காரரும் உள்ளனர். சர்வோதய நகரின் பந்தல் அமைப்புக்கும் பாதை அமைப்புக்கும், உண்டி உறைவிடம் அமைப்பதற்கும் ஊராள்வோர், நிபுணர்களைக்கொண்டு திட்டம் தீட்டி பயிற்சி பெற்றோரைக்கொண்டு உருவாக்கி வைத்துள்ளனர்.
நேற்றைவிட இன்று வண்டிகள் அதிகம் - நாளைக்கு மேலும் அதிகமாகும் - பாதை நடுவில் செல்லாதீர்கள் - ஓரமாகச் செல்லுங்கள் - என்று அறிவுரை புகன்றபடி போலீஸ் வான் செல்லுகிறது. காஞ்சி நகரில், பெரியதோர் நிகழ்ச்சியாக இஃது உருவாக்கப்பட்டு வருகிறது. வினோபா வருகிறார் என்றாலே, போதும், விசேஷமான மாநாடாக்கிவிடலாம். இங்கோ வினோபா மட்டுமல்ல, பாபு ராஜேந்திரர் வருகிறார், - ஜெயப் பிரகாஷ் நாராயணன் வருகிறார், - கவர்னர் பிரகாசா வருகிறார், - முதலமைச்சர் காமராஜர் வருகிறார், - வேறு மாநிலங்களின் காமராஜர்கள் சிலர் வருகின்றனர் - ஆசிரியப் பெருங்குழு<noinclude></noinclude>
mwfdk2hes3yjpe6by7nithoxvz76zzb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/27
250
645202
1940065
2026-06-05T10:33:23Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>வருகிறது, - கல்வித்துறை நிபுணர்கள் வருகிறார்கள் - கலாச்சாரக் கோஷ்டிகள் வருகின்றன - கனதனவான்கள் வருகின்றனர் - வந்துகொண்டு இருக்கின்றனர் - இவற்றை எல்லாம்விட 40 இலட்சம் ஏக்கருக்குமேல் "தான நிலம்' இருக்கிறது - பங்கு போட்டிடும் திட்டம் தயாரிக்கப் போகிறார்கள்.
வினோபாவை அடிக்கடி காண முடியாது.
ஜெயப்பிரகாசரும் வந்த வண்ணம் இருப்பவரல்ல.
எனவே, காணக் கிடைக்காத காட்சியைக் காண, பெருந் திரள் குவியலாம் காஞ்சியில்.
இப்போதைக்குப் பெரும் போலீஸ் படை குவிந்துவிட்டிருக்கிறது.
சர்க்காருடைய நிர்வாக யந்திரம், மும்முரமாகவும், திறம்படவும் ஒரு புறம் பணியாற்றுகிறது; "சாது சன்யாசிகள்' வரிசையில் சேர்ந்து சன்மார்க்கம் போதிக்கும் வினோபாவின் செல்வாக்கு மற்றோர்புறம் பணியாற்றுகிறது. இதனால் இங்கு எழிலும் ஏற்றமும், பெருங் கூட்டமும் பிரமுகர் நடமாட்டமும் மிகுதியும் இருந்திடக் காரணமிருக்கிறது.
இவ்வளவுக்கும் பிறகு, நடைபெற இருக்கும் வரதர் தேர் திருவிழாவின் துணையையும் நாடுகின்றனர்.
தம்பி! வறண்ட தலையினர் கூடினோம் திருச்சியில். வாழ்ந்துகெட்ட இனத்தினர் கூடினோம். வீழ்ச்சியுற்ற நிலையி னின்றும் மீட்சிபெற, எழுச்சிபெறக் கூடினோம். எண்ணி எழுபது போலீஸ் உண்டா? ஏற்பாடுகளைக் கவனிக்க வசதிகள் உண்டா? பிரமுகர்களின் கடைக்கண் பார்வை உண்டா? இல்லை. இல்லை! நீ! உன் உள்ளத்தில் உள்ள உவகை! திருச்சியின் எழிலுக்கு இவை தான் இருந்தன. ஆனால் இவை எவ்வளவு மகத்தானவை என்பதை நான்கு நாட்கள் கண்டேன் - நான் மேற்கொண்டுள்ள பணியின் மேன்மையிலே எனக்கு எப்போதும் உள்ள நம்பிக்கை, ஆயிர மடங்கு மேலோங்கி வளர்ந்தது.
ஒரு இலட்சம் என்று முதல் நாள் கூறினார் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக் குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார்.
யாரைக் காணக் கூடினர்? காண்பது பெரும் பேறு என்று கருதத்தக்க நிலைபெற்ற ஞானவான்களையா? மனமருளை ஓட்டி,<noinclude></noinclude>
2xl0y1984bl3g5neevb76llqyg0icgi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/28
250
645203
1940066
2026-06-05T10:34:15Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அஞ்ஞானத்தை விரட்டிடும் ஆற்றல் பெற்ற அருளாளர்களையா? திடுக்கிடவைக்கும் திட்டம் தந்தோர், உலகு கண்டு பதறத்தக்க போர்வகை கண்டோர் ஆகியோர்களையா? கவர்னரையா? முதலமைச்சர்களையா? மூதறிஞர்களையா? இல்லை தம்பி, இல்லை. சாமான்யர்களைக் காணக் கூடினர் - சதாசர்வ காலமும் யாரை, சந்தைச் சதுக்கத்திலும், அங்காடிப் பக்கமும் ஊருணித் திட-லும் காணுகின்றனரோ, அவர்களையே காணத்தான்.
நாவலர் நெடுஞ்செழியன் என்பவர் யார்? எப்படி இருப்பார்? எங்கிருந்து வருகிறார்? - என்று ஆவலுடன் கேட்டு, ஆர்வம் கொந்தளிக்கும் நிலைபெற்று மக்கள் குவிந்தனர் என்றா கொள்ள முடியும்! அவரைத் தமிழகம் அறியும்; மிக நன்றாக அறியும். மாநாட்டுக்கு முன்பு மூன்று திங்களுக்கு ஓர் முறை யேனும் திருச்சி அவர் உரை கேட்டிருக்கும். மதுரையில் அவர் முழக்கம் பழக்கமானதாகிவிட்டது. பட்டிதொட்டிகளிலும் அவர் அடிக்கடி நடமாடி வருபவர்.
மற்றையோர் அதேபோல, எப்போதும் மக்கள் மத்தியிலே உலவியபடி இருப்பவர்கள்.
காணக் கிடைக்காத தங்கங்களல்ல - சாமான்யர்கள்.
அவர்கள்தான் மாநாட்டில் - மூன்று இலட்சம் மக்கள் அங்கு கூடுகின்றனர்.
பொருள் விளங்குகிறதா தம்பி! பொருள் என்ன என்பதை மாற்றார் உணருகிறார்களா என்று கேட்டுப்பார்.
சாமான்யர்கள் அழைக்கிறார்கள் - ஜனசமுத்திரம் கூடுகிறது.
அவர்களுக்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் படை வரிசை இல்லை.
அவர்கள்மீது ஏதும் புத்தம் புது மெருகு பூசப்படவில்லை.
அவர்கள் நேற்று வந்தார்கள் - பேசினார்கள் - நாளை வருவார்கள் பேசுவார்கள் - நாடு அறியும் - எனினும் அவர்கள் மட்டுந்தான் வருகிறார்கள் என்று தெரிந்தும், 3 இலட்சம் மக்கள் கூடினர் - நாலு நாட்கள் ஆர்வத்தைச் சொரிந்தனர் - காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடியும் வரையில் நடைபெறும் - அவ்வளவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த மகத்தான நிகழ்ச்சியின் உட்பொருளை உணர்வோரே,<noinclude></noinclude>
6n1nu25fnsfnngabrjmp205alo1jijl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/29
250
645204
1940067
2026-06-05T10:35:15Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>காலத்தின் கருத்தை அறியமுடியும். பிறர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டோம் என்று பின்னையோர் நாள் கை பிசைந்து கூறிக்கொள்ளவேண்டி நேரிடும்.
மாநில மாநாடு, மாபெரும் தலைவர்களைத் தரிசிக்க ஏற்பட்ட ஏற்பாடல்ல - நாட்டின் விடுதலை வேட்கையை, விழிப்புணர்ச்சியை எடுத்துக் காட்டும் ஏற்பாடு.
இதனை உணர்ந்ததால்தான், பல நூறு தடவை, யாரார் உரைகளைக் கேட்டிருக்கின்றனரோ, அவர்களேதான் மாநில மாநாட்டிலே பேசுவர் என்பதை அறிந்திருந்தும், நாம் அறிந்த வர்கள்தானே என்று அலட்சியமாக இல்லை. நாம் பல தடவை கேட்ட பேச்சுத்தானே என்று அக்கறையற்றுக்கிடவில்லை. நமது மாநாடு கூடுகிறது, நாம் அதிலே கலந்துகொண்டாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் மூன்று இலட்சம் மக்கள் கூடினர்.
பிற கட்சிகளில் இருப்பினும், சிந்தனைத் திறனை இழந்திடாமலிருக்கும் பெரியவர்களை, இதுபற்றி எண்ணிப் பார்த்து, உட்பொருளை உணர்ந்து, உலகுக்கு உரைத்திடச் சொல்கிறாயா, தம்பி? முயன்று பார்.
என்ன இதன் உட்பொருள், தம்பி! சாமான்யர்களின் மாநாடு. ஏன் இத்துணைச் சிறப்புடன் விளங்கிற்று? காரணம் உண்டு, கருத்துள்ளோர் அறிவர் - அறிந்திடும் மாற்றார் கலங்குவர்.
கை கொட்டிச் சிரித்தனர் தலைக்கனம் கொண்டவர்கள்.
கரியும் பரியும் மந்தை மந்தையாக உள்ளன. தேர்ப் படையும் காலாட் படையும் பெரிதும் உடையேம், எமது வீரத்தின் எதிர் நிற்பார் எவர் உளர் என்று இறுமாந்து பேசினர்.
அவன் இளைஞன், எது செய வல்லான் - என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை - பேரரசர்கள்.
இளைஞன்தான் - எனினும் ஏச்சும் பேச்சும் கேட்டாக வேண்டுங்கொல்!
படையின் தொகை மிகுதியாக இல்லாதிருக்கலாம், ஆயின் அதனைக் காட்டி என் வீரத்தைப் பழிக்கப் போமோ?<noinclude></noinclude>
4cbo4b4dsqo1cguc54at74lpjs5gntz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/30
250
645205
1940068
2026-06-05T10:36:30Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பேரரசராயின் ஆகுக. அதுபற்றி அவர் சிற்றரசர்தமைச் சீரழிவாகப் பேசுதல் முறையோ, - என்றெல்லாம் இளஞ்சீய மன்னனான அத்தமிழன் எண்ணினான்.
உள்ளம் வெதும்பிற்று, அது வீரத்தைக் கருக்கிவிடவில்லை - வீரம் கொழுந்துவிட்டெரிந்தது. வஞ்சினம் கூறினான்.
நாவடக்கமற்று எனை இழித்தோரை எதிர்த்து அறிவு புகட்டுவேன்.
களத்திலே அவருடன் போரிட்டு, அவர்தம் முரசு பறிப்பேன்.
அங்ஙனம் யான் செய்யாதொழியின், கொடுங்கோலன் என்ற வசையைத் தாங்கித் தாழ்வுறுவோனாகக் கடவேன். புலவர் பாடிடத் தகுதிபெறாத நாட்டுக்குரியோன் என்ற இழிநிலை பெற்றவனாகக் கடவேன். இரப்போருக்கு ஈந்திடும் நிலையையும் இழந்தவன் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்கானவன் ஆகக் கடவேனாக - என்றெல்லாம் வஞ்சினன் கூறினன்.
{{left_margin|3em|<poem>நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவனென உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
</poem>}}
என்று.
இதுகளுமன்றோ ஓர் கட்சி நடாத்துகின்றன!
அன்னக்காவடிகளுக்கு அரசியலில் என்ன வேலை?
இந்து உண்டோ? மித்திரன் உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக் கழகம் கண்டனர் - என்று சிறுசொற் சொல்லிய சிறு மதியாளர்கட்குப் பாடம் கற்பிக்க விரும்பினர் தம்பி நமது கழகத் தோழர்கள் - அதுதான் திருச்சி மாநாடு.
எமது கழகம்பெற்றுள்ள ஏற்றம் எத்தகையது என்பதை மாற்றாரே, மதியற்றாரே உணரும் விதத்தில், திருச்சியில் வெள்ளம்போல் தமிழர் கூட்டமொன்றை, வெற்றிகொள் வீரர்<noinclude></noinclude>
7fxyub331cnke0q81vmcv2xgx7vk6pm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/31
250
645206
1940069
2026-06-05T10:37:50Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>கூட்டமொன்றை, வெற்றிகொள் வீரர் கூட்டமொன்றைத் திரட்டிக் காட்டிடுவோம். காணீர். அங்ஙனம் செய்யாதுபோயின், எமக்கென ஓர் கொடி வேண்டோம், கழகம் வேண்டோம், குறுந்தடிகொண்டோர் காலடி வீழ்ந்தழிந்து போவோம் - என்று, தம்பி, நீயும் நானும் சேர்ந்து வஞ்சினம் கூறினோம்.
சினங்கெழு வேந்தர், சிறுசொற் கூறினர். வஞ்சினம் கூறினன் வேந்தன்; இளையன்!! யாது கூறினன்?
{{left_margin|3em|<poem>அருஞ்சமம் சிதையத் தாக்கின் முரசமொடு
ஒருங்கு அகப்பட்டே (எ)ன் ஆயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையா னுறவே!
{{float_right|(புறநானூறு 72)}}
</poem>}}
இது அந்த வீர மன்னன் கூறிய வஞ்சினம்.
இழித்தும் பழித்தும் பேசிடும் அரசர் தம் முரசு பறிப்பேன் - அஃது நான் செய்யாதுபோயின், கொடுங்கோலன் என்று இகழட்டும் என்னை, புலவர் பெருமக்கள் என் நாட்டைச் சிறப்பித்துப் பாடாது இருக்கும் இழிவைப் பெறுவேனாக! - தம்பி, - தமிழ்ப்புலவரிடம் பொருள் கேட்டுப்பெற்று இன்புறுவாய்.
இளையோன், பெரும் படையற்றோன் என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர் தமிழ் மன்னன் - வீரன் - இளைஞன் - என்பதையும் - அவன் வஞ்சினம் - கூறியதற்கொப்பச் செரு வென்றனன், போரில் வெற்றி பெற்றனன் என்பதை மட்டுமே, மாந்தரை நிறையுடையோர் ஆக்கத்தக்க தமிழ் இலக்கியத்தில் குறையறிவு மட்டுமே கொண்ட நான் உனக்கு எடுத்துக்காட்ட முடியும் - சுவையும் பயனும் மிகுதியும் பெறத்தம்பி, நமது நாவலரை நாடு!<noinclude></noinclude>
ftlie5wyfx6pqr7vprsu2enweki32ed
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/32
250
645207
1940070
2026-06-05T10:40:03Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
வஞ்சினம் கூறினன் முரசு பறிப்பேன் என்று.
பகை முடித்தனன் களத்தில் நின்று - அன்று - தமிழ் மன்னன்.
இன்று, நம்மை ஏதுமிலாதார், இல்லாமையால் இடர்ப் படுவோர், இலட்சியம் பேசுவர் எனினும் அதிலே வெற்றி காணும் வசதிகளற்றோர் என்று இறுமாந்து கூறினர், பொருள் உடையாரும், புகழ் சுமப்போரும், பதவிபிடித்தோரும். நாமும் வஞ்சினம் கூறினோம். திருச்சி மாநாடு, நமது வெற்றியாகத் திகழ்ந்தது. தம்பி! கேட்டால் உடல் புல்லரித்துப் போகும், இதோ நான் தரப்போகும் செய்தி கேட்டு.
வஞ்சினம் கூறிச் செருவென்ற அம்மன்னன் யார் அறிவாயோ?
{{c|<b>தலையாலங்கானத்துச் செருவென்ற <br> நெடுஞ்செழியன்</b>}}
நமக்குக் கிடைத்திருப்பவரும் நெடுஞ்செழியன்.
வஞ்சினம் கூறினோம்; வெற்றி கண்டோம் திருச்சியில்.
ஆயின், களத்திலே நின்றுள்ள நாம், சிறு சொற் சொல்-ய சிறு மதியாளர் அகலக் கண் திறந்து ஆச்சரியப் படத்தக்க வெற்றியை, மகத்தான மாநாடு கூட்டிக்காட்டியதன் மூலம் பெற்றோம் - ஆனால், நாம் பெறவேண்டிய வெற்றி வேறொன்றுளது. அதனைப் பெறுதற்கே நமக்கோர் நெடுஞ்செழியன் கிடைத்துள்ளார். நாமும் நமது கழகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ் மரபறிந்த அவர் தலைமையில் சிறுசொற் கூறிடும் சிறுமதியாளர்களின் கொட்ட மடக்கி, மாங்குடி மருதன்போன்ற பெரும் புலவர்கள் பாடிப் போற்றிய இத் திருவிடத்தை வடவர் பிடியி-ருந்து விடுவித்து, வாகைசூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும் - வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயகத்தின் தளையினை உடைத்திடும் அறப்போருக்கு அஞ்சா நெஞ்சமும் நமது பொதுச் செயலாளரின் அழைப்புக் கிடைத்ததும், நெடுநல்யானையும் தேரும் மாவும் கொண்டு இறுமாந்து கிடந்த மன்னர்களைச் செருவென்றதுபோல, பண பலம், பதவி பலம், பத்திரிகைப் பலம் படைத்தோரை, நாம் நமது தூய உள்ளத்தில் துளிர்த்தெழும்<noinclude></noinclude>
gs15sav1a7jr24okbmmwiww8i1uexim
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/33
250
645208
1940071
2026-06-05T10:41:06Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அறப்போர்த் திறத்தால், வீழ்த்துவோம் - விடுதலைபெற்ற தாயகம் கண்டு வாழ்த்துவோம். திருச்சி மாநில மாநாடு, நமக்கு இந்த வீர உணர்ச்சியை அளித்திருக்கிறது. எல்லாம் உன் அறிவாற்ற-ன் விளைவு! உன் உழைப்பின் பலன்! உன் உள்ளத்தில் ஊற்றெடுத்துவரும் உணர்ச்சியின் காரணமாகக் கிடைத்தது. தம்பி! உன் ஆற்றல் வளரட்டும் - புகழ் ஓங்கட்டும் - வாழ்த்துகிறேன் உன்னை.
அண்ணன்,
27-5-1956<noinclude></noinclude>
k8chd8ca4vv8dk5ukkv3fu2ex8jiy3u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/34
250
645209
1940072
2026-06-05T10:44:56Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>கடிதம் : 151
வாகையூர்
பொதுத் தேர்தல்
பெரியார் பணி "பாரி பறித்த பறி'
நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த பாங்கு
சங்கரலிங்கனார் செய்த தியாகம்
தம்பி!
பொங்கற் புதுநாள்! தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள்!
இன்பம் பொங்கிடும் எழிலோவியமாக இல்லமெலாம் விளங்கிடும் விழா நாள்!
புதுக்கோலம் காட்டி, பூரிப்பை ஊட்டிடும் கண்கவர் வண்ணம் பல எழும் நாள்!
பசுமையின் பாங்கும் பயனும், பளிச்சிடும் பொன்னாள்!
மனைதொறும் மனைதொறும் மயிலும் குயிலும், மானும் உலவிடும், மலர்வனமாகும் மாண்புபெறும் நன்னாள்!
ஏராளர் தம்மாலே மாந்தரெலாம் சீராளர் ஆயினர் காண் என்று, செந்நெலும் செங்கரும்பும் செப்பிடும் சீரிய நாள்!
மேலே பார்த்துப் பெருமூச்செறியாது, மேதினியை மறந்து ஏதினிவாழ்வு என்று ஏக்கமுறாது, என் மனை என் மகவு, என் உழைப்பு, என் உயர்வு என்று மட்டுமல்லாது நம் இல்லம், நம் நாடு, நமது நலன் என்று நயம் கூறி, தோழமை வழங்கிடும், தூய்மை துளிர்த்திடும் திருநாள்!
2- த அக தொ 4 பூ. வெ. எண். 514<noinclude></noinclude>
dligkyebx3qs8nd28a8rgkzaofq8dbr
1940073
1940072
2026-06-05T10:45:57Z
Rathai palanivelan
11183
1940073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
<b>கடிதம் : 151</b>
{{center|{{x-larger|<b>வாகையூர்</b>}}}}
{{left_margin|3em|<poem><b>பொதுத் தேர்தல்
பெரியார் பணி "பாரி பறித்த பறி'
நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த பாங்கு
சங்கரலிங்கனார் செய்த தியாகம்</b></poem>}}
தம்பி!
பொங்கற் புதுநாள்! தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள்!
இன்பம் பொங்கிடும் எழிலோவியமாக இல்லமெலாம் விளங்கிடும் விழா நாள்!
புதுக்கோலம் காட்டி, பூரிப்பை ஊட்டிடும் கண்கவர் வண்ணம் பல எழும் நாள்!
பசுமையின் பாங்கும் பயனும், பளிச்சிடும் பொன்னாள்!
மனைதொறும் மனைதொறும் மயிலும் குயிலும், மானும் உலவிடும், மலர்வனமாகும் மாண்புபெறும் நன்னாள்!
ஏராளர் தம்மாலே மாந்தரெலாம் சீராளர் ஆயினர் காண் என்று, செந்நெலும் செங்கரும்பும் செப்பிடும் சீரிய நாள்!
மேலே பார்த்துப் பெருமூச்செறியாது, மேதினியை மறந்து ஏதினிவாழ்வு என்று ஏக்கமுறாது, என் மனை என் மகவு, என் உழைப்பு, என் உயர்வு என்று மட்டுமல்லாது நம் இல்லம், நம் நாடு, நமது நலன் என்று நயம் கூறி, தோழமை வழங்கிடும், தூய்மை துளிர்த்திடும் திருநாள்!
2- த அக தொ 4 பூ. வெ. எண். 514<noinclude></noinclude>
710kdem5ylkwcmvq42j2oth5ggglo9g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/35
250
645210
1940074
2026-06-05T10:47:02Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>வீழ்ந்துபட்டான் ஒரு கொடியன் விண்ணவன் அருள தாலே! ஆங்கவன் தன் அருள்பெறவே, அடிபணிந்தே அளித்திடுவீர், தேன் கதலி பலாவுடனே செம்பொன்னும் ஆடையுந்தான்! யாம் வான்சுரரை விட்டு வந்த பூசுரர் காண் என்று கூறி, ஆன்றோர் நெறிமறந்தார் அனைவரையும் அலைக்கழிக்கும், ஆரியத்தின் காவலர்கள் மக்களை அண்டிடாத அருந்திருநாள்.
உழைப்போனின் உதிரத்தை உண்டு உருசி கண்டவனும், ஒருகணம் உள்ளமதில் உண்மைக்கு இடமளித்து "பெற்றோம் நாம் பெருஞ்செல்வம் மற்றெதனால்? அவர் உழைப்பதனால்! உழைத்தோர் உருக்குலைந்தார், உண்ட நாம் பெருத்து விட்டோம். என்றும் இந்நிலைதான் என்றே இறுமாந்து இருந்திடுதல் இனியும் நடவாது, குன்றெடுக்கும் நெடுந்தோள்கள் குலுக்குவது கண்டிட்டோம், ஆட்காட்டி விரலுக்கு அடங்கினோர், ஏன்? என்று அழுத்தமும் திருத்தமும் அழகுபெறக் கேட்டெழுந்தார், ஆர்த்தெழுந்து அவர் உரிமைக்கவர், ஆணையிட்டுக் காட்டு முன்னம், அவா அடக்கி, அவரவர் உழைப்புக்கு அவரவரே உரிமையாளர் என்றுள்ள அறநெறிக்கு அடி பணிவோம்; பிணியாகோம்'' - என்று தனக்குத் தானேனும் தத்துவம் கூறிக்கொள்ளும், புத்தறிவு பூத்திட மெத்தவும் உதவும் மேலான நாள்.
தமிழரின் இத்திருநாளன்று, நுமது இல்லமெல்லாம் இன்பம் பொங்குக! என்ற என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன் - அதுபோன்றே நீவிர் எனக்களிக்கும் நல்லன்புக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
கார் கண்டதால் கலாபம் விரித்தாடும் மயில்போன்று இந்தத் திருநாள் காணும்போதே, தமிழரின் உள்ளத்தில் உவகை மலர்ந்திடக் காண்கிறோம்.
இத்தனைக்கும், இதற்கு முன் இல்லாத அளவிலும் முறையிலும் விளக்குகளின் வரிசைகளோ, மணியோசைகளோ, காது குடைந்திடும் ஒலி கிளம்பும் வேட்டுச் சத்தமோ, வீண் ஆரவாரமோ, இந்நாளில் இருப்பதில்லை.
"பொங்கலோ! பொங்கல்!'' என்று இல்லத்துள்ளார் அனைவரும் எழுப்பிடும் குரலொலி, இன்னிசையாகிறது; காலத்தின் பல கோலங்களைக் கண்டு கண்டு தெளிந்து, முதுமைக் கோடுகள் முகத்தினில் பதிந்துள்ள பெரியவரின் குரலும், தத்தை<noinclude></noinclude>
a7c2ijvesbcu7lt9llde3uqhfabsy93
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/36
250
645211
1940075
2026-06-05T10:48:08Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பெற்றெடுத்த அஞ்சுகத்தின் தீஞ்சுவைக் குரலும், முழக்கமிடும் காளையர்கள் வழக்கத்தை மாற்றி, கனிவுகூட்டி எழுப்பிடும் குரலொலியும், பொங்கலோ! பொங்கல்! என்று கூறுவது, புதுப்பானை தன்னிலே பொங்கிடும் பால் கண்டுமட்டுமல்ல, உள்ளமதில், உன்னைக் கண்டதால், உயிருக்குயிரே! பொங்கி எழும் காதலினையும் குறித்தேதான் என்று கண்ணால் பேசிடும், ஆரணங்கின் இசையொலியும், எல்லாம் கலந்து, இன்னதென்று விளக்கிட முடியாததோர் இன்னிசையாகிறது!
பொங்கிற்றா பால், தம்பி, பால் பொங்கிற்றா, அக்கா, - என்று பாங்குடன் கேட்டு மகிழ்வர். நாட்டிலே மனைகள் பலப் பல இருப்பது, தோட்டத்திலே பலப்பல மலர்ச்செடிகள் இருத்தல்போல; எல்லாவற்றிலும் நறுமணம் எழுந்தால், பொழில் முழுதும் மணம் பரவும், அங்குப் பயிலும் காற்றும் மலராகி அனைவருக்கும் சுவை தரும் என்பதுபோல், வீடெங்கும் விழா இருந்தால், நாடே விழாக்கோலம் காட்டும்; இன்பம் சில இல்லங்களிலும், இருள் பலவற்றிலும் இருக்குமானால், அது எருக்கம் செடிகள் படர்ந்துள்ள காடதனில், இங்கொன்றும் அங்கொன்றுமாக இஞ்சியும் மஞ்சளும் இருத்தல் போன்றதாகும்; எனவே, பொங்குக இன்பம், எங்கும் பொங்குக, எல்லோர்க்கும் இன்பம் கிடைத்திடுக! - என்று வாழ்த்தும் மாண்பினை அனைவரும் பெற்றிடும், பயிற்சி நாள் ஆகிறது, பொங்கற் புதுநாள்.
இந்த ஆண்டோ! பொங்கற் புதுநாளன்று, நமக்கெல்லாம், ஓர் புதுவிதமான இன்ப உண்ர்ச்சி, கருவில் உலவும் களிப்புப் போல் எழுகிறது.
மனத்துக்கிசைந்த மங்கை நல்லாள், கருவுற்றாள் என்று, மெல்லிய குரலில் பேசி, ஓர் புன்னகையை வீசுகிறார்களே, அது கெட்ட அடலேறு, "ஓ! ஓ! தேன் துளி, தெவிட்டாத பாகு, யான் பெற்றேன் இன்பத்தின் கனியை,'' என்றெல்லாம் எண்ணி எண்ணி, களிநடம் புரியும் இதயம்கொண்டோனாகிறானே, அஃதேபோல, நாம் ஈடுபடுவது இந்தப் பொதுத் தேர்தலில் என்று திட்டம் வகுத்துக்கொண்டுவிட்டதனால், அதன் விளைவாக நாம் பெறக் கிடைக்கும் வெற்றி பற்றிய எண்ணம், உள்ளத்துக்குப் புதியதோர் உணர்ச்சியைத் தரத்தான் செய்கிறது. இதோ, இன்று இல்லம் கொள்ளும் விழாக் கோலம்போன்ற மற்றோர் மகிழ்ச்சிகொள் கோலம், நாடு பெறுமன்றோ, நாம் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பெற்றி பெற்றால் என்று எண்ணாத இளைஞர் இல்லை,<noinclude></noinclude>
cutahkauqsrf1z0qfym7202un1fif9m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/37
250
645212
1940076
2026-06-05T11:15:53Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பேசிடாத பெரியவர் இல்லை, இதனை விரும்பிடாத நல்லவர்கள் இல்லை, அதனை நஞ்செனக் கருதும் சிலர் உளர் என்கிறார்கள் - மலர் தூவிய பஞ்சணையிலேகூடத்தான் மலர்க்காம்பு முள்ளாகுமாம், சில வேளைகளில், அதனால் என்ன?
இதற்கு முன்பெல்லாம் நாம் கண்டுகளித்த பொங்கற் புதுநாளைவிட, இந்த ஆண்டு, நமக்கெல்லாம் அதிகமான அளவுக்கு ஆர்வம் தருவதாக அமைகிறது; நமது உழைப்பையும் தூய்மையையும் உணர்ந்து பாராட்டி, நமது இடையறாத பணியினைக் கண்டு மகிழ்வுற்று, மேலும் பணியாற்றிடும் வாய்ப்பினை வழங்கிட, நாடு எந்த அளவுக்குப் பக்குவப்பட் டிருக்கிறது, நல்லன செய்தால் அல்லன அகலும் என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, நாடு, நடந்துகொள்வதிலே, எந்த அளவுக்குத் திறம்பெற்றுத் திகழுகின்றது என்பனவற்றை எடுத்துக் காட்டிட உதவும் பொன்னான வாய்ப்பாக அமைகிறது, இந்தப் பொதுத் தேர்தல். எனவே, பால் பொங்கி, அதனால் மகிழ்ச்சி பொங்கிடும் மனைகளிலே வீற்றிருக்கும் அன்பர்கட்கெல்லாம், நாடு புதியதோர் தொண்டர் படையினைப்பெற்று, ஆட்சித் துறைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எழுந்துள்ள வேளை இது என்ற எண்ணம் கனிந்திருக்கத்தான் செய்யும்.
அவர்தம் பேராதரவு பெறத்தக்க விதத்திலே, பணியாற்றி வந்துகொண்டிருக்கிறோம் என்பதனாலே, நமக்கு, உரிமையோடு கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் எழுந்தது, மக்கள் மன்றத்திலே இதற்கான ஒப்பமும் கிடைத்தது, இதுபோது செயல்படு கட்டம் அடைந்துள்ளோம், செய்நன்றி மறவாதார் தொகை குறைந்துபடவில்லை என்ற நம்பிக்கை நாதமாகி நிற்கிறது, பயணத்தைத் துவக்கிவிட்டோம், போதுமான அளவு பலம் தேடித் திரட்டிக்கொள்ளக்கூட நேரமின்றி. ஏனெனில், நாம் நமது மக்களுடைய நேர்மையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறோம். உற்றார் எவர்? மாற்றார் யாவர்? உண்மை ஊழியம் புரிந்திடும் பண்பு எவரிடத்தில் உளது? ஊரை அடித்து உலையில் போட்டிடும் உலுத்தர்போக்கு கொலு வீற்றிருப்பது எவ்விடத்தில்? என்பதனையெல்லாம் ஆய்ந் தறிந்திடும் ஆற்றல்மிக்கவர்கள் நமது மக்கள், என்பதிலே நாம், நம்பிக்கை கொள்கிறோம்; எனவேதான், மலை என உருவும் மதயானையன்ன போக்கும்கொண்டு, எதிர்ப்பட்டோர் அழிவர், அழிவர் என்று ஆர்ப்பரித்திடும் ஆளும்கட்சியை, தடுத்து நிறுத்தி, தட்டிக் கேட்டிட, கணக்குக் காட்டச் சொல்லிட,<noinclude></noinclude>
gyrijzbjuml39mse65641ri4b3lcc6s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/38
250
645213
1940077
2026-06-05T11:17:36Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>முனைந்து நிற்கிறோம்; மூக்கு உடைபடும் என்போரும், முகத்தில் கரி பூசப்படும் என்று ஏசுவோரும், மூலைக்கு மூலை துரத்தி அடிப்போம் என்று முழக்கம் எழுப்புவோரும், உளர்; சந்தனக் காட்டிலேயே, சத்தற்ற செடி கொடி அறவே இல்லாமலே உள்ளன? உள்ளன; இருக்கட்டும், மக்களின் அறிவுக்கண் நல்ல முறையில் விளங்கிடுமானால், கறை பூசிக் காரியத்தைக் கெடுத்திட முனைந்திடும் 'கண்ணியர்களின்' செயல், நாணறுந்த வில்லில், முனை ஒடிந்த அம்பினை, கரம் குறைந்தவன் ஏற்றிடும், காதையாகிப்போகும்.
இந்தக் 'காரக்கருணை' ஒரு புறம் இருக்கட்டும் - கரும்பும் மஞ்சளும், இதோ; அவைதமைக் காண்கிறோம், அகம், இன்பம் பொங்கும் கலமாகிறது.
நடைபாதை வியாபாரிகள்: பொருள் என்ன இதற்கு?
நாளங்காடி - அல்லங்காடி: இவை தமிழர் தாழ்ச்சியுறாத நாட்களில் இருந்து வந்த எழில்.
இன்று, தமிழ் இனம், சொந்த நாட்டிலேயே "சோற்றுக்கு அலைபவர்கள்' ஆகியுள்ளனரன்றோ; இவர்தமில் ஒருசிலர் சென்னை நகரில், கடை வீதியில், நடைபாதையில் நின்றும், நடந்தும், இருந்தும், போலீஸ் புகும்போது மறைந்தும், சிறு சிறு சாமான்களை விற்று வாழ்கிறார்கள். இவர்கள் "இலாபம்' என்ன பெறுவர்? அணாக்கள்; மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தால், ஒரு நாளில் சில அணாக்களே கிடைக்கும்; இதில் ஒரு பகுதியைச் சேர்த்துத் துளிகளைத் திரட்டித் தூய உள்ளம் படைத்த அந்தத் தோழர்கள் தேர்தல் நிதிக்கு என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலே, என்னிடம் தந்தனர்; நான், எங்கெங்கோ சென்றேன், அந்தக் கணம்.
மழையால் நனைந்து வந்த ஔவைப் பெருமாட்டிக்கு "எந்தையும் இழந்தோம், எம்குன்றும் பிறர்கொண்டார்'' என்று கூறிடவேண்டிய நிலைபெற்று நலிந்து நின்ற பாரி மகளிர், ஒரு நீலச் சிற்றாடை தந்தனராமே, அதுபோது, மூதாட்டி அம் மகளிரின் மாண்பு கண்டு நெஞ்சு நெக்குருகி,
பாரி பறித்த பறியும், பழயனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராய் என்றழைத்த சொல்லும்இம் மூன்றும்,
நீலச்சிற் றாடைக்கு நேர்!<noinclude></noinclude>
oakdhy4ec2jfgqlaz1imxcf462fxjnt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/39
250
645214
1940078
2026-06-05T11:18:14Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>என்று பாடினதாகக் கூறுகிறார்களே, அந்த நிலைக்குத் தாவிற்று, என் உள்ளம்.
அந்த "நீலச் சிற்றாடை' தரும் நேர்மையாளர்கள், நிரம்ப இருக்கிறார்கள் நாட்டில், மிக நிரம்ப.
பெரியாரின் பெரும்படையின் பகைப் பேச்சினைக்கூட நான், "பாரி பறித்த பறியா'கவே கொள்கிறேன். ஆம்!
பரிசு தந்தான் பாரி. பெற்ற மூதாட்டியார், புறப்பட்டார், போக. பாரிக்கு, பிரிந்து நிற்க, மனமில்லை. மூதாட்டியைச் சொல்லால் தடுத்திட இயலாது என்று எண்ணினான். எனவே, தன் ஆட்கள் சிலரை அனுப்பினானாம், எதற்கு? தான் மனமுவந்து தந்து பரிசுகளை, வழியில், பறித்துக்கொண்டு வந்து விடுவதற்காக.
ஔவை அறியார், பாரியின் இந்தப் போர் முறையை.
வழிப்பறி கள்வர் செயல் இது, என்று எண்ணிக் கொண்டார், பொருள் பறிக்கப்பட்டபோது.
பொருள் பறிபோயிற்றே என்பதைவிட, பாரியின் ஆட்சி நடந்திடும் இக்காலையிலா, கள்வர் இத்துணைத் துணிவுடன் உள்ளனர்; அந்தோ! அஃது அவனது ஆட்சிக்கேயன்றோ இழுக்கு என்பதை எண்ணியே, மூதாட்டியார் பெரிதும் மனம் வாடினராம்.
நாட்டிலே இத்தகு கொடுஞ்செயல் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக்கூறச் சென்றார் - ஔவையார். வந்தார், தமிழுக்கு வாழ்வளிக்கும் பெருமாட்டி என்பதைக் கண்ட பாரி, களிப்புற்று, பிறகே, நடந்ததன் உட்பொருளை எடுத்துரைத்தானாம்.
'பாறி பறித்த பறி' இதுதான். பெரியார், இதுபோது, இதே முறையைத்தான் கையாள்கிறார் என்றெண்ணி, முன்னம் பாரி காலத்து முறைபற்றிய காதை, கருத்தளித்திருப்பதால், நான், மன அமைதி கொள்கிறேன். சில வேளைகளில், மகிழக்கூட முடிகிறது.
நாடெங்கணும், நமக்கு "நீலச் சிற்றாடை' தந்தேனும் மகிழ்விக்கவேண்டும் என்றெண்ணும் பாரி மகளிர் உளர்.
இந்தத் தூய துணை வீண்போகும் என்றெண்ணவும் கூசுகிறது.<noinclude></noinclude>
o4ux9cp0ua6gl6qblz4eui4n15pthln
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/40
250
645215
1940079
2026-06-05T11:18:45Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>இத்துணை ஆதரவு தந்திடும் நேர்மையாளர்களும், ஆற்றலுடன், அதனைத் திரட்டி உருவாக்கிடும் திறம் படைத்த, தம்பிகள் எண்ணற்றவர்களும் இருந்திடும்போது, காடுமலை குறுக்கிட்டாலென்ன, கடுஞ்சொற்கள் மழையெனப் பொழிந்தா லென்ன, வா, தம்பி! வா, வா, கடமை கட்டளையிடுகிறது, நாட்டவர் கனிவு நம் பக்கம் துணை நிற்கிறது, செல்வோம், புறப்படு; - என்று அழைத்திட என்னால் முடிகிறது. அழைக் கிறேன்! என் உள்ளம் உன்போன்றோருக்கெல்லாம் புரிகிறது, வருகிறீர்கள்; இனி, வாகையூர் போய்ச் சேரவேண்டும்! - வழி கொடிது, கொடிது! எனினும், மேற்கொண்டுள்ள பணியின் மேம்பாட்டினை அவ்வப்போது நினைவிற்குக் கொண்டுவந்தால் போதும். பாலையில் நடந்திடும்போதும் இன்பம் காணக் கிடைக்கும்.
பாய்களைப் புயற்காற்றுப் பிய்த்தெறிந்துவிடுமே என்று அஞ்சி, கலம் செலுத்தாமல், கரையில் படுத்துறங்கிக் கிடந்தானோ, தமிழன்?
கொல்லும் புலி உண்டு காட்டினிலே என்று தெரிந்தும், உள்ளே சென்று, சந்தனம் கொண்டுவராமலா இருந்தான், நமது முன்னவன்?
மூச்சை அடக்கி ஆழ்கடலுக்குள் மூழ்கி, ஒரு கரத்தால் சுறாவைத் தள்ளிவிட்டு, மறு கரத்தால் சிப்பியைப் பற்றி எடுத்து வந்தல்லவா, தமிழன் முத்து தந்தான் முத்தம் பெற்றான்!!
வழி வழி வந்த நாம், பாதையின் வளைவு கண்டா பயணத்தை விட்டுவிடுவோம்?
அதோ, உன் அன்பினைப்பெற்றதால், அன்னமென நடந்து, மின்னலிடை துவள, உனக்கென, கன்னல் சுவைகொண்ட கனி களைத் தட்டினில் வைத்துக்கொண்டுவரும், தாமரையாளைக் கேட்டுப்பார், வழி நெடிது, கொடிது என்பதன் பொருட்டு, வாழ்விலே நாம் நமக்கு என்று ஏற்றுக்கொண்டுவிட்டஒரு குறிக்கோளை மறந்திடப்போமா? என்று. பதில் கிடைக்காது - ஆனால், அப்பாவையின் கண்களிலே ஓர் பயங்கரம் தோன்றும்! இங்ஙனம் பேசிட எப்படி இவரால் முடிகிறது? இவர் அழைத் தால், நான் பாம்பு புரளும் காடாயினும் பாய்ந்தோடிச் செல்வேனே, கொடுவழி கண்டு குறிக்கோளை இவர் மறக்கும் இயல்பினரானால், அம்மவோ! பிறகு கொண்டவளின் அன்பினைப் பெறுதற்காக, குறுநடை நடந்தாலும், குதி வலிக்கும் என்றும் எண்ணி, துறப்பரோ, என்று அந்தப் பார்வை பேசுகிறது!<noinclude></noinclude>
qplulk6ldz3c8kvryks6m141gga6i9j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/41
250
645216
1940080
2026-06-05T11:19:09Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பயணத்திலே, வெற்றிபெற, நாம் பெறவேண்டிய ஆற்றலை, எவ்வெவ்வழிகளால் பெறல்வேண்டும் என்பதை எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றி வரும் உன்னிடம், நானேன், தயக்க மடைவோர், தளர்நடைக்காரர், துவண்டு விழுவோர் ஆகிய இன்ன பிறர் பற்றிய பேச்சினைக் கிளப்பிடவேண்டும். தம்பி, உன் தகுதி நானறிவேன், உன் ஆற்றல் நான் கண்டிருக்கிறேன். நாடு அதனைத் தக்க விதத்தில், மெச்சத்தக்க முறையில், உருவான பலன் கிடைக்கத்தக்க அளவில், காணவேண்டும். பிறகென்ன, வெற்றிதான்! மலையளவுள்ள மதகரியை அடக்குபவன், அதனினும் பெரிய உடல் அளவா கொண்டுள்ளான்? மார்பிலே தைத்ததும் குருதியை வெளியே கொண்டுவருகிறதே, அம்பு, அதன் முனையில் உள்ள கூர்மை பொருந்திய இரும்பு, தம்பி, எத்துணை சிறியது அளவில். எனவே, அளவுபற்றி, எண்ணி, நாம் ஆயாசப் படப்போவதில்லை.
சிறிதளவு பால்தான் பெய்தாள் உன் அன்னை உண்ண உண்ண மகிழ்கிறாயே.
தேனை, தம்பி! குடம் குடமாகவா பருகிடவேண்டும் சில துளிகள், அதிலும், உன் சிந்தைக்கினியவள் கரம் பட்டதென்றால், தேன் மட்டுமா இனிக்கும்! தொட்ட அத்தனையுமன்றோ உனக்கு, மலைத்தேனாகும்!
அளவுபற்றி, அஃதொன்று மட்டுமே பெற்றுள்ளோர், பேசி மகிழட்டும், எண்ணி ஏமாற்றம் காணட்டும்.
நாம், எளியவர், மறந்தோமில்லை, நாம் எடுத்துக் கொண்டுள்ள செயல் சீரியது, மறவோம் இதனை.
அல்லலும் தொல்லையும் வறுமையும் நிரம்பிய வாழ்வின ராக, நம்மவரில் மிகப் பெரும்பாலோர் உளர். இந்நிலையிலேயே நம்மால் ஓர் திருநாள் கொண்டாடமுடிகிறது. அறுவடை விழா என்கிறோம், அறுப்பவன் ஒருவன், அனுபவிப்பவன் வேறொருவன் நிலை குலையாதிருக்கும்போதுகூட. ஆனால், நாம் விரும்பிடும் நாடு கிடைத்துவிட்டால்!
நமக்கென்று ஒரு கொற்றம் - நமது முயற்சிகளுக்குத் தங்கு தடை இல்லாததோர் துரைத்தன முறை - நம் நாடு வளம் பெறுவதற்கான வழிவகை காணும் உரிமையைப் பறித்திடும் ஆதிக்கம் எவரிடமும் இல்லாததோர் அரசுமுறை அமைந்துவிட்டால்?<noinclude></noinclude>
1fzkzmjqx641arq3tuwohmabdjx2784
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/42
250
645217
1940081
2026-06-05T11:20:56Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அமைந்துவிட்டால், கூனன் நிமிர்ந்திடுவான், கரம் கூப்பிப் பிழைப்போன் மனிதனாவான், மங்கிய கண்களில் ஒளி பிறக்கும்; புதியதோர் தமிழர் சமுதாயம் அரசோச்சும்; நரம்பு புதுப்பிக்கப் பட்ட வீணை காண்போம்; கானம் எழும்; மாசு துடைக்கப்பட்ட மணியிலிருந்து ஒளி கிளம்பும்; விழாக் கோலம் நாடெங்கும்; என்றும்.
வழி நெடிதா, கொடிதா என்பது குறித்துக் கண்டறிந்த பிறகா பயணப்படவேண்டும்; இந்த வாகையூர் காண?
மாணிக்க விளக்கு ஒளி தருகிறது.
புலிச் சங்கிலியிட்டுச் செய்த இருக்கையில், படுத்திருக் கிறான் மன்னன்.
காவலாளிகள், சுற்றித் திரிந்தபடி உள்ளனர்; மாற்றா ரிடமோ, உற்றாரிடமோ, நடப்பனவற்றை உளறிக்கொட்ட முடியாத நிலையினர்; ஊமையர்.
விளக்குகள் அணையும்போது, பந்தத்தைக் கொளுத்தி விளக்குகளை எரியச்செய்கிறார்கள் கச்சையணிந்த மங்கையர்.
கச்சையணிந்த மங்கையர்தானே, என்று கெடுமதியாளர் எண்ணிடத் துணியமுடியாது - அம்மங்கையர் வாள் அணிந்துள்ளனர்.
மெய்காப்பாளர்களும் காவலிருக்கின்றனர்.
காலத்தைக் கணக்கிட்டு, "நாழிகை' கூறி நின்றனர், சிலர்.
இருக்கையில் உள்ளான் மன்னன் - நடுநிசிக்குப் பிறகும் உறக்கம் கொள்ளவில்லை! பள்ளி அறை அல்லவே! பாசறை! அடர்ந்த காட்டினை அழித்து, அமைக்கப்பட்ட பாசறை! அங்கு உலவிய கொடிய மிருகங்களையும், கொடியோரையும், அழித்தும் அகற்றியும், முள்வேலி அமைத்துக் காவலாக்கிய நிலையில் உள்ள பாசறை!
உறக்கம் கொள்ளாதது ஏன்? கடும்போர் நடந்திருக்கிறது! அதிலே படுகாயமுற்றனர், தன் படையினர்! அதனை எண்ணி, வெற்றிபெற்று, தன் கொற்றத்தின் சிறப்பினை நிலைநாட்டிட, அவ்வீரர், பட்ட கஷ்டங்களை எண்ணி, உள்ளம் உருகுகிறான் மன்னன்!
போர்வீரர்கள் குறித்து மட்டுமல்ல, பகைவரின் தாக்கு தலால் புண்பட்ட, கரிபரி குறித்தும் கவலையுறுகிறான்!<noinclude></noinclude>
7jv8lbxlfb1wbsz42u5q69vcxrhqgbk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/43
250
645218
1940082
2026-06-05T11:22:15Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>ஒரு கரம் படுக்கையில்! மற்றோர் கரம்கொண்டு கண்களைத் தடவிக்கொண்டுள்ளான் மன்னன்!
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் அளித்துள்ள முல்லைப்பாட்டு, பாசறையில் இருந்த மன்னனைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
வீரத்தையும் வீழ்ந்துபடாக் கொற்றத்தையும் தமிழர் பெற்றிருந்த காலை, பாசறையில் இது நிலைமை.
தமிழகத்தைக் காட்டிடும் இக்காட்சியை, நினைவிற் கொள்ளும் நாம், மறந்துகிடப்போருக்கு நினைவூட்டும் நாம்; எங்ஙனம், நாம் மேற்கொண்டுள்ள பயணத்திலே, வழி நெடிதா, கொடிதா என்பதுபற்றிக் கலங்க முடியும்?
தம்பி! நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த "பாங்கு' காண்போம்! நக்கீரர், காட்டுகிறார், நெடுநல்வாடையில்.
பாசறையில், தூக்கம் வரவில்லை, பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு. களத்திலே, களிறுகளின் துதிக்கைகளை வெட்டி வீழ்த்திக் கடும்போரிட்டுக் களைத்துக் கிடக்கின்றனர் வீரர்கள்!
வாடைக்காற்று அடித்துக்கொண்டிருக்கிறது.
விளக்கின் சுடர்கள், வாடை காரணமாகத் தென் திசையாகச் சாய்ந்து காட்டுகின்றன!
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தோளின்மீதுள்ள ஆடை நழுவிடுவதை, இடப்பக்கத்தில் இறுக்கிப் பிடித்தபடி, பாசறைப் பகுதியில், விழுப்புண்பெற்றுப் படுத்துக் கிடக்கும் வீரர்களைச் சென்று பார்க்கிறான்.
வேம்பு அணிந்த வேந்தன், தன் கொற்றத்தின் ஏற்றத்தைக் குறைத்திடத் துணிந்த மாற்றாரின் கொட்டத்தை அழித்திட, களம் புகுந்து கடும் போரிட்டு, விழுப்புண்பெற்று, வீரராய்த் திகழ்ந்திட இத்துணை ஆற்றலர்கள் உள்ளனர் என்பதைக் காண்பதால்போலும், முகமலர்ச்சியுடன் காணப்படுகிறான்!
இது மன்னன் நிலை - பாசறையில்.
அழகான அரண்மனை! அந்தப்புரம்! படுக்கை அறை!
யானையின் கொம்பினால் வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட கட்டில்,<noinclude></noinclude>
kj3kztdfl12d1yjtssxrqd3w5x2rkiq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/44
250
645219
1940083
2026-06-05T11:23:09Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>தந்தக் கட்டில்தானே என்று கருதிவிடக்கூடாது, தம்பி! நக்கீரர் வெகுண்டெழுவார்! அந்தக் கட்டில், செல்வ நிலையை மட்டும் காட்டுவது அல்ல.
போரிலே ஈடுபட்டு இறந்துபட்ட, யானையின் கொம்புகள்! நாற்பது வயதானதாக இருக்குமாம், யானை!
முத்தாலே சாளரங்கள்! புலி வடிவமும், பூவேலைப்பாடு முடைய திரைகள்! முல்லையும் பிற மலர்களும் அன்னத்தின் தூவியும் தூவப்பட்ட படுக்கை!
அதிலே, படுத்திருக்கும்போது, துயில் வரவில்லை!
அவள் அடியினை, அழகு மகளிர், மெல்ல வருடுகிறார்கள், துயில் கொள்ளட்டும் என்று; பயன் இல்லை!
தலைவன் இல்லை, துயிலும் இல்லை.
தலைவன் இல்லாததால், துயில் மட்டுமா இல்லை! மார்பிலே முத்து மாலைகள் இல்லை! கரங்களிலே பொன் மணி வளைகள் இல்லை; சங்கு வளையல்களே உள்ளன! நூற்புடைவை தான் - அதிலும் மாசு நிரம்ப! அணிபணி அகற்றிவிட்டு, பிரிவாற்றாமையால், பெருந்துயர் உற்று, கண்களிலே துளிர்த்திடும் நீர்த்துளியைத் தன் கைவிரலாற் போக்கி, கலங்கித் தவிக்கிறாள், அரசி.
தந்தக் கட்டிலில் படுத்துத் துயில்கொள்ளாது துயரம் மிகுந்து, தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த அரசியைப் பிரிந்து தான், பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறையில் உலவிக் கொண்டிருக்கிறான்.
"நெடுநல்வாடை' காட்டும் பாடம், மறக்கப்போமோ!!
நமது பொதுச் செயலாளருக்கு நெடுஞ்செழியன் என்ற பெயர் அமைந்திருப்பதும், அவரும் பிரிவு பற்றிய கலக்கமற்றுத் தான் நமக்காக அரும்பணியாற்றுகிறார் என்பதனையும் எண்ணும்போது, எப்படி இருக்கிறது, உனக்கு, எனக்குத் தம்பி! செருங்கரும்பின் சாற்றிலே, நம் குழந்தையின் உமிழ்நீரும் கலந்திருப்பதுபோல் இனிக்கிறது!
களம் செல்வதெனின், காதலையும் மறந்திடும் ஆற்றல் கொண்டவர், தமிழர்.
காதலின்பம் பற்றிய கருத்தற்றவரோ, மனை மாண்பு அறியாதாரோ, எனின், அகம் கேலி செய்யும், அதற்கென்றே<noinclude></noinclude>
o1cmjmv2u6c9e5ptzeyj6060ptfi452
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/45
250
645220
1940084
2026-06-05T11:24:06Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> ஓர் களஞ்சியமாக நிற்கிறேன், அறிவிலிகாள்! ஏன் உமக்கு, அர்த்தமற்ற ஐயப்பாடு என்று கேட்கும்.
வறிய நிலத்திலே, உள்ளது நெரிஞ்சி. சிறிய இலைகள் கொண்டது; கண்ணுக்கினிய பூக்கள்கொண்டது. பூ உதிர்ந்ததும், காய் காய்க்கும், அது முள்ளாகிக் காலில் குத்தும்.
நெரிஞ்சியோ, புதுமலர் தருகிறது. கண்ணுக்கு இனிமை கிடைக்கிறது.
அதே நெரிஞ்சியே முள்ளும் உதிர்க்கிறது, காலில் தைக்கிறது. இதனை எடுத்துக் காட்டி, என் காதலர் எனக்கு இனியது செய்தும் மகிழ்விக்கிறார்; அவரே பிறகு இன்னலை விளை விக்கிறார் எனைப் பிரியும்போது; நெரிஞ்சிபோல!! - என்று பிரிவுத்துயரை விளக்கிடத் தமிழணங்குக்குத்தான் தெரிகிறது!
நோம்என் நெஞ்சே!
நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற
சிறிஇலை நெரிஞ்சி
கட்குஇன், புதுமலர்,
முள்பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல், நோம்என் நெஞ்சே!
கண்ணுக்கு இனிமை தரும் புதுமலர் கிடைப்பதும் நெரிஞ்சியில்! - முள் பயந்து குத்துவதும் நெரிஞ்சியால்! என்று இயற்கை உவமையைக் காட்டி தன் உள்ளத்து நிலையை விளக்கிடும் தமிழணங்கு காண்கிறோம்.
இத்துணை அளவுக்குப் பிரிவாற்றாமை ஏற்படுகிறது என்பது அறிந்துந்தான், களம் சென்றனர் - உரிமை காத்திட, மரபு வாழ்ந்திட!
களம் செல்லாக்காலை, எத்துணை கவர்ச்சி கண்டனர் காதலில்!!
கார் காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது! முல்லை மலருகிறது! உடனே, தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான்; காதலியிடம் கூறுகிறான்.<noinclude></noinclude>
4wh0z1a1kjn1n7invo43vljvejs9h5n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/46
250
645221
1940085
2026-06-05T11:25:05Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> மயிலைக் கண்டேன், உன்னைப்போலவே இருந்தது!
முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்!
ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! - என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது!
நின்னே போலும்
மஞ்ஞை!
என்று "ஐங்குறுநூறு' அழகாகக் கவிதை அளிக்கிறது.
காதலில் இத்துணை ஈடுபாடும், அதன் மாண்பினிலே சிறந்த பற்றும் கொண்டோரெனினும், நாடு காத்திடப் போர் எழுந்ததெனின், நள்ளிரவிலும் தூக்கம் வராமல், பாசறையில், பணியாற்றினர் தமிழர். அவர் வழிவந்தோம் - பழிச்சொற் களாகவா மாறிவிடுவது! வேண்டாம், தமிழர்காள்! வேண்டாம்! வீழ்ந்துபடுவதாயினும், வெஞ்சமர் புரிந்தான் பிறகு என்று உறுதிப்பாடு கொள்வோம்.
தமிழகம், தனி அரசோச்சிய நாட்களிலே, வீரம் குன்றாமல், அறமும் அடுபோரிற் காட்டவேண்டிய ஆற்றலும் குறைவற இருந்ததால், கொற்றம் தழைத்தது, இயற்கையுடன் உழைப்பும் கலந்து, வளம் கொழித்திருந்தது! வாரி வாரி வழங்கிடவும், வண்ணம் பல கண்டிடவும், வாணிபத்தில் சிறந்திடவும், இலக்கியச் செல்வத்தை ஈன்றெடுத்து வளர்த்திடவும் முடிந்தது.
கடலிலே கிடக்கிறது, தம்பி, காவிரிப்பூம்பட்டினம். எனினும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் தந்துள்ள பட்டினப் பாலையில், அந்நகர் அழியாது நின்று தன் அழகை எடுத்தளிக்கிறது, காண்போம்: இதோ பார் சோழ நாடு!
மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது.
கழனிகளில் விளைச்சல் அமோகமாக!
கழனிகளில், கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகிவிடுகின்றன.
நெற் கதிர்களைத் தின்று தெவிட்டிப்போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன!<noinclude></noinclude>
qplyikfkwiu3o44mnz16sfpuws10sy4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/47
250
645222
1940086
2026-06-05T11:26:51Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
கதிர்களை, அவை தின்று தீர்த்ததால், குறை வந்ததுற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான், எருமைக்கன்றுகள் துயில்கொள்ளுகின்றன!
தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை, எங்கும்!
நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டு வாசலில்,
கோழிகள் தின்ன வருகின்றன.
அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்!
இந்த வளம் உள்ளது சோழநாடு!
இங்கிருந்து, கடல் கடந்து சென்றுள்ளனர் தமிழர், இற்றை நாளில், சோற்றுக்கு இங்கு வழியற்று!!
இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம்.
உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக, நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்கவைக்கப்பட்டுள்ளன.
சோலைகள், பொய்கைகள், ஏரிகள்!
மதில் சூழ்ந்த நகரம்!
மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்!
மதிலிலே, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
சோறிடும் சாலைகள் ஏராளம்!
அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகி, பிறகு உலர்ந்து, புழுதியாகிறதாம்!
கடல் வழி வந்த குதிரைகள்
நிலவழி வந்த மிளகுப் பொதிகள்
இமயச் சாரலின் மணியும் பொன்னும்,
குடகு மலைச் சந்தனமும், அகிலும்,
தென்கடல் முத்து
கீழ்க்கடல் பவளம்
ஈழ நாட்டுப் பொருள்
காழக நாட்டுப் பொருள்
இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட் டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும்,<noinclude></noinclude>
sg04ckb8gnvnkuwouihmcycw4y6xeam
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/48
250
645223
1940087
2026-06-05T11:27:22Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பாடலும் அழகியதாய் அமைந்திருந்தனவாம்! கடலடி சென்று விட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம்; நீங்காப் பெரும் பழியை ஏற்று நிற்கிறோம்.
வளம், தமிழகமெங்கணுமே கொழித்திருந்தது, நன்கு தெரியத்தக்க கவிதைகள் இருந்துகொண்டு நம்மை இன்று, வேதனைக்கும், வெட்கும் நிலைக்கும் தள்ளியபடி உள்ளன! தமிழில் என்ன உண்டு என்றெண்ணிடும் பெருமதியேனும் பெற்றோமா! இல்லையே! தமிழின் இனிமையும், தொன்மையும், உள்ளத்தைத் தொட்டுத் தொட்டு அவ்வப்போது நம்மைத் தமிழனாக்கிவிடுகின்றன!
பெருங்குன்றூர்ப் பெரும்புலவரொருவர் பாடியுள்ள மலைபடுகடாம், நம்மைத் தம்பி, படாதபாடு படுத்துகிறது! இவற்றினை நாடாமல், தேடாமல், நமக்கென்று கிடைத்துள்ள இலக்கியக் கருவூலம் என்று எண்ணாமல் எல்லாம் ஒன்றுதான் - எதில் எது இருந்தால் என்ன - எது போனால் என்ன - என்று எண்ணிக்கொள்ளத்தக்க துணிவினைப் பெற்றிட முடியவில்லை - கல்லாமை எனும் செல்வத்தை நாம் பெறாததால்! சில பல கற்றுத் தொலைத்தோம் - கருத்துகள் குடைகின்றன! அக்காலத்து அழகும் இக்காலத்து இடரும் இழிவும் ஒருசேரத் தெரிகின்றன!
மலைபடுகடாம் காட்டிடும் வளம், காண்போம், வா, தம்பி!
மழை, வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன!
விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பதுபோல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன.
எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார், புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம்.
தினைக்கதிர்களைக் காண்கிறார் - கண்டதும், யானைக் கன்றுகள், விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோ டொன்று பிணைந்துகொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம், தினைக்கதிர்கள்.<noinclude></noinclude>
cevvt6djtd8ziv1tw4dl9336roopnia
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/49
250
645224
1940088
2026-06-05T11:27:52Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்!
கரும்பு கண்டதும், புலவர் களமே சென்றுவிடுகிறார்!
மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினாலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!
வேண்டாம், தம்பி, வேண்டாம்! அந்த வளமத்தனையும் விளக்க விளக்க, இன்றைய வெறிச்சிட்ட நிலை தரும் வேதனை அதிகப்படும்.
இன்று இடர் படர்ந்துள்ளது, இல்லாமை கொட்டுகிறது; கல்லாமை அரசாள்கிறது.
தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லை.
உயிர் தருகிறேன், உரிய பெயரை, உரிமைப் பெயரை, முன்னோர் நானிலமெங்கணும் சென்று பெருமிதத்துடன் கூறிய பெயரினைத் தாருமய்யா என்று கேட்டுக் கேட்டு, மடிந்தார், வீரத் தியாகி சங்கரலிங்கனார்! அதனாலென்ன - என்று கேட்டிடும் அன்பர் அரசாள்கிறார்!
இடருக்கு இடையிலும், மின்னிடும் செல்வமோ, சிலரிடம் சிக்கிச் சீரழிகிறது.
செப்பனிட்டுத் தீரவேண்டியன ஓராயிரம் உள்ளன!
எதற்கும், செயல்படும் உரிமைபெற்ற கொற்றம் வேண்டுமே, அது மறுக்கப்பட்டுக் கிடக்கிறது.
மனை அறம் கண்டு மகிழ்ந்திடும், இந்நாளில், தமிழகம் புதிய பொலிவு பெறுவதற்கான வழிவகை கண்டிடுவதே, எம் வாழ்வின் குறிக்கோள், என்று கொண்டிட வேண்டுகிறேன்.
அதற்கான பாசறையே தி. மு. க.
அதன் செயல்படுதிறன் உன் ஆற்றலைப் பொறுத்தது!
தம்பி, நீ விரும்பினால், இந்நாட்டைப் பொன்னாடு ஆக்க முடியும் - அதற்கு ஒன்று தேவை - பொன்னும் பொருளும் நமக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்று எண்ணும் தன்னலம் சுட்டெரிக்கப்படல் வேண்டும்.
முத்து முத்தாக, உன் திங்கள் முகத்தழகி, வியர்வையைச் சிந்தி, வெந்தழலின் வெப்பத்தைத் தாங்கிக்கொண்ட பிறகுதான்,<noinclude></noinclude>
i5up1al2y5ei2d50fqeymau82q0c62j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/50
250
645225
1940089
2026-06-05T11:28:32Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>உனக்கு, இந்தப் பாற்பொங்கலும் பல்வகை உண்டியும் சுவை தந்து மகிழ்விக்கிறது! சுந்தரியின் "தியாகம்' எனும் தேன் அதிலே கலந்திருக்கிறது.
அந்த உண்மையை உணரச் செய்யும் உன்னத நாள் இன்று.
மகிழ்ந்திரு! இன்புற்று உரையாடு! எவரிடமும் இன்சொல் பேசு, ஏற்புடைய நாட்டவர் நாம் என்பதனை மறந்திடாது இருந்திடச் சொல்லி, மற்றையோர்க்கும் சொல்லு.
அனைவரும் சீரும் சிறப்பும் பெருக்கெடுக்கத்தக்க செல்வ ராய்த் திகழ, தமிழகம் புதிய பொலிவு பெறவேண்டும், அதற்கான முயற்சியிலே ஒரு கட்டம் இந்தப் பொதுத் தேர்தல், இதிலே ஈடுபட்டுள்ள தி. மு. க. வெற்றிபெறவேண்டும்; வாகையூர் சென்று வளமெல்லாம்பெற்று, தமிழர் வாழ்ந்திட, அது தான் வழி - என்பதனை எடுத்துக் கூறு.
வாழ்க தமிழர்!
வாழ்க தமிழகம்!
இந்த என், வாழ்த்துரையை உனக்கு இல்லத்தார் தரும் இன்சுவைப் பண்டங்களுடன் கலந்துண்டு; இன்புற்று இரு - என் அருமைத் தம்பி! இன்புற்று இரு! வாகையூர் சென்றிடத்தக்க வலிவினை, உள்ளத் தூய்மையினை, இவ்விழா வழங்கிடுமாக!
அண்ணன்,
14-1-1957<noinclude></noinclude>
qu3tbfcwsh0r23uj40n3lst0topzxj7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/51
250
645226
1940090
2026-06-05T11:31:06Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>
கடிதம் : 152
கொட்டடி எண் : 9
இரத்தப் பொங்கல்
சைதைச் சிறை: அன்றும் இன்றும்
அடையாறு 'லாக்கப்'பில் ஆட்சியாளர் இழைத்த
கொடுமைகள்
அறிவாற்றல் வளர்க!
தம்பி!
முடுகு முரசொலி
முடுகு முழவொலி
முடுகு முருடொலி
முடிவிலாக்
கடுகு பறையொலி
கடுகு கலமொலி
கனிவெழாத்
தொடுகு குழலொலி
தொடுகு குரலொலி
தொடுகு துதியொலி
தொடுதலாற்
படுகு முகிலொளி
படுகு கடலொலி
படுதலில் மணமாயதே!
உடன்பிறந்தோரே! தமிழகத்தைக் காட்டுகிறார் கவி! ஆங்கு எழும் ஒலிகளைக் கேட்கச் சொல்கிறார்.
இன்றைய தமிழகத்தில் நித்தநித்தம் கேட்டிடக் கிளம்பிடும் ஒலி அனைவர் உள்ளத்தையும் வாட்டுவதாக உளது. ஒரேவழி.<noinclude></noinclude>
540o498b0at1j40np1ek7n1xu16auko
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/52
250
645227
1940091
2026-06-05T11:33:18Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>பழந்தமிழகத்தைப் புலவர் பெரு மக்கள் காட்டிடக் காண்பது, பயனற்றதாகிவிடாது; பெருமூச்சும் புன்னகையும் கலந்திடும் ஓர் நிலை தரும்.
அந்நிலையில்தானே, உள்ளோம்! இருந்ததையும், இனிக் காண விழைவதையும் எண்ணிடுங்காலை புன்னகை; இருப்ப தையும் இழப்பதையும் எண்ணிடும்போதோ, பெருமூச்சு!
பொங்கற் புதுநாள் என்று வரும் என்று வரும் என்று ஆவலுடன் வரவேற்கும் நிலையுடையார், அதிகம் இல்லை; வருமே என்று அஞ்சுவோரின் தொகையே அதிகம்; எனினும், எப்பாடு பட்டேனும் எவ்வளவு தொல்லையைத் துரத்தியபடி யேனும், தமிழர் உளமெலாம் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடிக் களித்திடுவது, இந்தத் திருநாளைத்தான்!
இந்தத் திருநாள், இவ்வாண்டு, "இரத்தப் பொங்கலோ?'' என்று கூறத்தக்க வகையிலே, நடைபெற்ற அடக்குமுறை அலங்கோலத்தை, நாடு கண்டு, நடுக்கம் கொண்டுள்ள நேரத்திலே வந்துளது.
நாலாயிரவருக்குமேல் எனலாம், நாடாள்வோரால், வேட்டையாடப்பட்டவர்கள்.
ஆயிரவருக்கு இருக்கும் என்கின்றனர், அடிபட்டோர், படுகாயமுற்றோர்.
சிறை சென்றோரின் தொகை கணித்திட இயலவில்லை.
வழக்குகள் பல, வாய் பிளந்தவண்ணம் உள்ளன.
இவற்றினுக்கிடையே, பொங்கற் புதுநாள் வருகிறது - எங்ஙனம் நாம் மகிழ்ச்சி அடைவது? கண்ணீர் பெருக்கியும், செந்நீர் சிந்தியும் செந்தமிழ் நாட்டார் இருக்கையிலே, ஐயயோ! அம்மவோ! என்றலறி, கை உடைந்தது, கால் முறிந்தது, துவைத்து விட்டனர், துரத்தித் தாக்கினர், எலும்பு நொறுங்கிற்று, இரத்தம் கொட்டிற்று, என்றெல்லாம், பதறிக் கதறிப் பலரும் இருந்திடும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!'' என்று கூறிக்கொண்டாட நாவும் எழாதே, என்றெண்ணி நானிருந்தேன்.
எனினும், நாள்பலவில் திரு காணாதிருக்கிறோம், விழா பலவும் வீணாட்டம் என வெறுத்தொதுக்கி, வேண்டாம் வெற்றாட்டம் என்றே கூறிவிட்டோம், ஆண்டுக்கோர் நாள், அருமைமிகு பொன்னாள், பொங்கற் புதுநாள், புது வாழ்வு<noinclude></noinclude>
bcotnt1qux24ymw7acea0c49z87e5ap
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/53
250
645228
1940092
2026-06-05T11:34:38Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> மலரும் நாள் என்றே இதனை நாம் நன்றெனக் கொண்டாடி வருதல், நாடு கண்ட முறை அல்லவோ என்றெண்ணி எப்படியும் விழாவினை நாம் ஏற்றமுடன் நடாத்துதல்தான், அடிப்போம். குடல் அறுப்போம் என்றே ஆர்ப்பரிக்கும் ஆணவக்காரருக்கும் அரும்பாடம் தானளிக்கும் என்று உறுதிகொண்டு, ஏற்புடைய விழாவினை எவ்விதத்தும் நடத்துதலே சால்புடைத்து என்று கண்டோம்.
இந்த நிலைகூட வந்திடுமோ, வாராதோ என்று எண்ணிடும் வகை ஒன்றும், என்னையும் என்போன்ற நமதருமைத் தோழரையும், வந்து கைப்பற்றிற்று.
சிறையில் சென்றிருந்தோம்; சில நாட்கள்!
விரைவிலே வெளிவருவோம் என்ற நிலை அல்ல அது.
இந்த ஆண்டுப் பொங்கற் புதுநாள், உடன்பிறந்தோரோ! உம்மிடமெல்லாம் அளவளாவும் வாய்ப்புக் கிடைக்குமோ, மறுக்கப்படுமோ என்ற ஐயப்பாடு என்னை வாட்டிக்கொண் டிருந்த நிலையில், சென்ற கிழமை, நான் 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தேன்.
துளியும் எதிர்பாராத நிகழ்ச்சி - அதிலேயும் ஒரு வேடிக்கை இழைந்திருந்தது. அதே 9ஆம் எண்ணுள்ள கொட்டடியில், நான் இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அடைக்கப்பட்டிருந்தேன். இருபதாண்டுகள் உருண்டோடி விட்டன; இந்த இருபதாண்டுகளுக்குள், நாட்டிலே உலகிலே, என் மன நிலையிலே, என்னென்ன மாறுதல்கள்! எத்துணை வளர்ச்சி!
திட்டமிட்டு நடத்தப்படுவதுபோல, அதே கொட்டடிக்குள் இருபதாண்டுகளுக்குப் பிறகு, நான் சென்றேன்!!
அப்போது - இருபதாண்டுகளுக்கு முன்பு - 1938இல் நான் ஒரு நாள் "அந்தி சாயும்' நேரத்தில் அங்கு இழுத்துச் செல்லப் பட்டேன். கட்டாய இந்தியை எதிர்த்து நடத்தப்பட்ட கிளர்ச்சியில், நான் "மறியலை'த் தூண்டிப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டேன். வழக்கு விசாரணைக் காக, என்னை அந்தக் கொட்டடியில் அடைத்து வைத்தார்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே "பிடிக்கப்பட்ட' நூற்றுக் கணக்கானவர்கள், சென்னை மத்திய சிறையில் இருந்தனர். என்னை மட்டும், தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள்-<noinclude></noinclude>
rp1e6rhyl5ode6qobho0gu7gpjekt0r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/54
250
645229
1940093
2026-06-05T11:35:11Z
Rathai palanivelan
11183
/* மேம்படுத்த வேண்டியவை */
1940093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude>9ஆம் எண்ணுள்ள கொட்டடிக்கு - சைதாப்பேட்டை சப்ஜெயிலில்!!
அதே சிறை!! அதே கொட்டடி! அப்போது, உள்ளே பூராவும் "கருப்பு' சாயம் பூசப்பட்டிருந்தது! இப்போது "வெள்ளை' அடிக்கப்பட்டிருக்கிறது!
அறை மட்டுமா? நானேகூடத்தான்!! அப்போது கருத்த மீசை! இன்று வெளுத்துக் கிடக்கிறது! அப்போது காளை! கல்லூரி முலாம் கலையாத பருவம்! இப்போது, கட்டுத் தளர்ந்து, கல்லூரி முலாம் குலைந்து, "பட்டிக்காட்டான்' என்பார்களே, அந்த "உருவம்' பெற்றுவிட்டிருக்கிறேன். அப்போது "சிறை' என்றால், ஏதோ ஓர் இனம் அறியாப் பயம்! இப்போது? சிறையி லிருப்பதற்கும் வெளியில் இருப்பதற்கும் அதிக மாறுபாடு காண முடியாத மனப்பக்குவம் பெற்றுவிட்டேனல்லவா? அப்போது, நான் தனியாகச் சென்றேன்! இப்போது, என்னுடன் எழுபது தோழர்கள்! அப்போது, நான் பெரியாரின் "புதிய கண்டுபிடிப்பு!' இப்போதோ பெரியாருக்குத்தான் என் பெயர் என்றாலே கசப்பாமே!
அந்தி சாயும் வேளையிலே, அன்று, உள்ளே என்னை அழைத்துச் சென்ற போலீஸ்காரர், சிறைக் "காவலர்' முன் நிறுத்தினார்.
முதியவர்! நாட்டு நடப்புபற்றி அதிகம் ஏதும் அறியாதவர் - அறிந்துகொள்ளவேண்டுமென்ற நினைப்பும் கொள்ளாதவர்.
இப்போது, சைதாப்பேட்டை "சப்-ஜெயில்' உள்ளே நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, என் மனக்கண் முன்னால், அந்த முதியவர் தெரிந்தார்; அவர் "உரையாடல்' ஒலித்தது!
ஒரு "உம்' போட்டபடி என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த முதியவர்!
சிறை என்றால் இப்படித்தான் பார்ப்பது வாடிக்கை போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். நாமாகப் பேசுவதுகூடாது - அது ஒரு வேளை, சிறையிலே, குற்றமென்று கருதப்படக்கூடும்; நமக்கேன் வீண் தொல்லை என்று நினைத்துக் கொண்டு, சிலையாக நின்றேன். முதியவர், சிரிக்கவில்லை - ஆனால், புன்னகைக் கோடுகள் முகத்திலே காணப்பட்டன.
"மணி ஆறுக்கு மேலாகிவிட்டது! இந்த நேரத்திலே, வந்தால் சோறு ஏது'' என்றார் சிறைக் காவலர்.<noinclude></noinclude>
3rrvm80y0qqphu5nqgr9kdbyclfcppe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/543
250
645230
1940094
2026-06-05T11:50:08Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "'பேரறிஞர்' அண்ணா அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள்,' விண் மீன்கள், பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1940094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>'பேரறிஞர்' அண்ணா
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க
வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு
ஒளிர்ந்த மின்மினிகள்,' விண் மீன்கள்,
பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப்
புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்'
அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர்
எழுத்துத் துறையிலும், சுவை குன்றாது.
எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும்
வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும்
எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும்.
எழுத்துக்கு ஒரு நடை.
மேடைப் பேச்சுக்கு ஒரு
நடை உரையாடலுக்கு ஒரு நடை
என்பது
அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்.
எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்,
பூம்புகார் பதிப்பகம்
127, ப. எண் : 63).
பிரகாசம் சாலை (பிராட்வே),
சென்னை 600 108.
தொலைபேசி:5267543<noinclude></noinclude>
6k45llophhsthehgx1k6zzy42d8zbyd