விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.6 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பேச்சு:திருநீலகண்ட பதிகம் 1 413770 1944334 484425 2026-06-10T01:59:09Z ~2026-34119-94 16724 1944334 wikitext text/x-wiki {{textinfo | edition = | source = | contributors = | progress = | notes = | proofreaders = }} {{Ping|Kuzhali.india}} : திருநீலகண்ட பதிகத்தை வழங்கியவர் யாரென்ற விபரம் இருந்தால் நன்று. -- [[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 02:48, 28 செப்டம்பர் 2016 (UTC) திருஞானசம்மபந்தர் தேவாரம் 🙏💐 [[சிறப்பு:Contributions/&#126;2026-34119-94|&#126;2026-34119-94]] ([[பயனர் பேச்சு:&#126;2026-34119-94|talk]]) 01:59, 10 சூன் 2026 (UTC) 8664pl3u8fwwa28ib8rozn7pnkf12b3 பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/1 250 441760 1944587 1515545 2026-06-10T10:28:42Z Rakshana T 16697 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rakshana T" /></noinclude>________________ {{center|{{Xx-larger|<b>ஆலயப்பிரவேச உரிமை.</b>}}}} {{c|{{larger|<b>(முதற் பாகம்)</b>}} }} {{dhr}} {{center|{{larger|ஆசிரியர்:}} {{larger|<b> P. சிதம்பரம் பிள்ளை, B.A., B.L., M. L. A.</b>}} (திருவிதாங்கூர்) }} {{rule|10em|align=}} {{dhr}} {{c|{{larger|<b>PUBLISHED BY THE AUTHOR</b>}} {{dhr}} {{rule|10em|align=}}}} {{c|Printed at the {{larger|CHITHRANJAN PRESS,}} <b>Nagercoil.</b> }} {{dhr}} {{rule|10em|align=}} {{c|<poem><b>Rights Reserved | 1935 | விலை அணா 5.</b></poem>}}<noinclude></noinclude> 8yq8x8sdy7o5mebs4iuyi3tq4hdznha பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/303 250 620842 1944111 1866038 2026-06-09T15:01:08Z Sridevi Jayakumar 15329 1944111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்-பெற்றோர் உறவு|277|ஆசிரியர்-பெற்றோர் உறவு}}</noinclude>கள், ஆசிரியர் வழிகாட்டிகள், கற்பிக்கும் கருவிகள், கையேடுகள், சோதனைக் கருவிகள், மாணவர் குறிப்பேடுகள் ஆகியன, கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள் மூலம் முறையாக உருவாக்கப்பட வேண்டும். கல்வி நிலையைப் படிப்படியாக உயரச் செய்வதற்குத் தொடர் மதிப்பீடும் தேவைப்படுகிறது. இத்தொடர் மதிப்பீட்டில் நீண்ட, நிலையான, கடினமான ஆராய்ச்சிகள் மூலம், கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான மதிப்பீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இக்கருவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கல்வி நிலையை உயரச் தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகத்தின் செயலாகும். இப்பொழுது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இக்கழகம் இயங்கி வருகிறது. இதன் கள அலுவலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுகின்றனர். இக்கழகம் பல்வேறு வகைகளில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அவற்றில் ஒன்று ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்சியாளர்கள், கல்வி நிருவாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர்க்குப் பணியிடைப் பயிற்சி அளிப்பதாகும். <b>மாநிலக்கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகம்</b>: தரமுள்ள கல்வியின் தேவைக்கேற்ப வளர்ந்து வரும் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சியின் தேவைகளை நிறைவு செய்ய மாநில அளவில் மாநிலக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமும் ஆசிரியர்களுக்குப் பலவகையான பணியிடைப் பயிற்சிகளை அளிக்கிறது. <b>விரிவாக்கப் பணித்துறை</b>: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பள்ளிகளுடன் தொடர்பு கொண்டு அப்பள்ளிகள் தேவைக்கேற்பக் கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள், செயல்முறை விளக்கங்கள், குழுவிலா தம் போன்ற வகைகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. <b>தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்</b>: தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கழகத்தின் ஓர் உறுப்பாகும். இத்துறையும் ஆசிரியர்களுக்குப் பல வகையான பணியிடைக் கல்விப் பயிற்சிகளை அளித்து ஆசிரியர்களின் நிலையினை மேம்படுத்துகிறது. <b>பல்கலைக் கழக நிதிக்குழு</b>: இக்குழு பல்கலைக்கழகக் கல்வித் துறைகளுடன் இணைந்து உயர்கல்வி ஆசிரியர்களுக்காகப் பல பணியிடைப் பயிற்சிகளை அளித்து வருகிறது.{{Right|கே.சி.சா.}} <section end="ஆசிரியர் பணியிடைப் பயிற்சி"/> <section begin="ஆசிரியர் - பெற்றோர் உறவு"/> {{dhr}} <b>ஆசிரியர் - பெற்றோர் உறவு</b>: மாணாக்கரின் ஒழுங்கின்மை, கட்டுப்பாடற்ற தன்மை, கவலையற்ற போக்கு, சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை, மதிப்புகளை மறந்த போக்கு, பெற்றோரின் பொறுப்பற்ற நெறி போன்ற கல்விச் சூழ்நிலைச் சீர் கேடுகளை அகற்றும் அருமருந்து பெற்றோர் - ஆசிரியர் நல்லுறவாகும். பெற்றோர் ஆசிரியர் உறவு பழங்காலத்தில் இருந்த நிலையை இலக்கியங்கள் இயம்புகின்றன. மாணாக்கரின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஆசிரியர்களைப் பெற்றோர் மிகவும் மதித்து அவர்களின் குடும்ப நலன்களைப் போற்றிய தன்மையை வரலாற்றுச் செய்திகள் பகரும். பற்பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு அரசியல், சமூகப் பொருளாதாரப் பின்னணிகளால் பெற்றோர் ஆசிரியர் உறவு பழுதுற்று வருதலைக் காணலாம். இவ்வுறவுச் சீர்கேடு மாணாக்கர் நல்வாழ்விற்கு ஒரு தடைக்கல் என்பது அனைவரும் அறிந்த உண்மை இவ்வுறவு சீரடைந்தால் மாணாக்கரின் வாழ்வு ஒளிமயமாகும். பெற்றோர், ஆசிரியருக்கிடையே உறவை மேம்படுத்த எண்ணிய தமிழகக் கல்வி இயக்குநரகம், பெற்றோர் ஆசிரியர் கழகங்களை ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்த நெறிமுறைகளை அமைத்து, அனை எவ்வாது சிறந்த முறையில் இயங்க வேண்டும் என்று வழியமைத்துள்ளது. பல பள்ளிகளில் இப்பெற்றோர் ஆசிரியர் உறவு சிறந்து விளங்குவதால், பள்ளிக் குழந்தைகள் கல்வி மேம்பாடடைந்து சிறப்புறுகின்றனர் என்பது கண்கூடு. பல பள்ளிகளில் இவ்வுறவு, ஏட்டளவிலும் சில பள்ளிகளில் பேச்சளவிலும் சில பள்ளிகளில் வெறும் கற்பனை வடிவிலுமே உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்குங் காலத்திலும், பள்ளிக் கல்வி முடிந்து விடுப்புச் சான்றிதழ் பெதும் நேரத்திலும், கையெழுத்து இட வேண்டிய கட்டாயச் சூழ்நிலைகளிலும் மட்டுமே பள்ளிகட்கு வருகின்றனர். பள்ளிக் கல்வி என்பது, மாணாக்கர் ஆசிரியர் என்ற இருவரைப் பொறுத்தது என்பது பெற்றோர்களின் கோட்பாடாக உள்ளது. குழந்தைகள் கல்வி மேம்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தங்கட்குப் பெரும் பொறுப்பு உண்டு என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். ஆனால், பெற்றோர்களுள் மூன்றில் இருபங்கினர் எழுத்தறிவற்றவர்கள் என ஆய்வுகள் சான்று பகர்கின்றன. பள்ளிகளில் கேட்கப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் சீருடைகள் தைத்துக் கொடுப்பதும் தேர்ச்சி அறிக்கைகளில் கையெழுத்து இடுவதும், மதிப்பெண்கள் குறைத்துப் பெற்றால் தனிப்பாடக், கூடத்தில் குழந்தைகளைச் சேர்ப்பதுந்தான் கல்வி எனப் பெரும்பாலான பெற்றோர்கள் எண்ணி வருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> egbbwpqo3k9ml5gpfrihpx1qgg95wxt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/304 250 620843 1944114 1866039 2026-06-09T15:06:50Z Sridevi Jayakumar 15329 1944114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்-பெற்றோர் உறவு|278|ஆசிரியர்-பெற்றோர் கழகம்}}</noinclude>தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் யார்? குழந்தைகளின் கல்வி இடர்ப்பாடுகள் யாவை? அவர்கள் எவ்வாறு கற்கின்றனர்? கற்றல் சூழ்நிலை பள்ளிகளிலும் வீடுகளிலும் எவ்வாறு உள்ளது? தங்கள் குழந்தைகளிடம் எவ்வகைப் பழக்க வழக்கங்கள் உள்ளன? நற்பழக்கங்கள் வேரூன்றி உள்ளனவா? தீய பழக்கங்கள் மெல்ல மெல்லச் சூழ்கின்றனவா? பள்ளிகளில் எதிர்பார்ப்புகள் மிகுதியாக உள்ளனவா பள்ளியின் எதிர்பார்ப்புகளும் குழந்தைகளின் இயற்கைத் திறன்களும் சமன் நிலையில் உள்ளனவா? இல்லை எனில் அவ்வாறாக ஏன் இல்லை? என்பன போன்றவற்றைப் பெரும்பாலான பெற்றோர் எண்ணுவதேயில்லை. இத்தகு சூழ்நிலையில் பெற்றோர் ஆசிரியார் உறவு சிறந்திருக்குமேயானால், இப்புதிர்களுக்கு, சிக்கல்கட்குத் தீர்வுகாண முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்விக் கூடத்திற்கு அனுப்பியவுடன் பொறுப்பு முடிந்து விட்டதாக எண்ணாமல் கல்வி அனுபவங்கள் ஒவ்வொன்றிலும் தோன்றாத் துணையாக இருத்தல் வேண்டும். அச்சூழ்நிலையில் எக்காரணங் கொண்டும் குழந்தைகளின் முன்னிலையில் ஆசிரியர்களைப் பழித்தல் கூடாது. பள்ளிக் கல்வி அனுபவங்கள் வெறும் ஏட்டு அனுபவங்களாக இருந்து விடாமல், வெளியுலகில் மெய்யானதாக அமையப் பெற்றோர் துணை புரிதல் வேண்டும். பீட்டர் உட்சு (Peter Woods) என்ற அறிஞர் “நாம் நம் குழந்தைகட்கு நல்வ பழக்கங்களைக் கற்றுத் தருகின்றோம். ஆனால், அவை அனைத்துமே வெளியுலகில் மெய்யற்றனவாக ஆக்கப்படுகின்றன. அவற்றைப் பயனுள்ளனவாக்குவதில் பெற்றோரின் பொறுப்பு மிகப் பெரியது” என்கிறார். எனவே, ஒரு குழந்தையைச் சீர்தூக்கி வளர்க்க, அதன் பெற்றோரைச் சீர்படுத்துதல் முதற்படி. மேலும் பெற்றோர், ஆசிரியரிடம் நல்லுறவு கொண்டு அவ்வுறவுப் பின்னணியில் பள்ளி, வீடு ஆகியவற்றிற்கிடையே ஓர் இறுக்கமான பிணைப்பை அன்பு, நம்பிக்கை, கூட்டுறவு என்னும் நற்பண்புகளின் மூலம் ஏற்படுத்த வேண்டும். நகரங்களில் வாழும் பெற்றோர் பலரிடம், உலகியற் பெருநோக்கு பின்னிப் பிணைந்துள்ளதால் அவர்கள் தங்கள் குழந்தைகட்கெனச் சிறிது நேரம் கூட ஒதுக்காமல் சமூகத் தொண்டு, மனமகிழ்மன்றம், பற்பல களியாட்டங்கள், பொழுது போக்குகள், திண்ணைப் பேச்சு, ஊர் வம்பு போன்றவற்றில் நேரத்தைச் செலவிடுகின்றனர். குழந்தைகளின் கல்விச் செயல்களில் பங்கு ஏற்பதே இல்லை. பள்ளி-வீடு ஆகியவற்றின் சமுக உறவிற்கும் மாணாக்கரின் தேர்ச்சித் திறனிற்கும் மிகை நேமியல் உறவு (Positive Correlation) இருப்பதாகப் பிளொடன் (Plowdone-1967) ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. ஐ.நா கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு நிறுவனம், (UNESCO) “வாழக்கற்றல்” (Learning to be) என்னும் நூலில், பெற்றோர் ஆசிரியர்கள் மூலமே பள்ளியின் பயன்கள் சமுதாயத்திற்கு எட்டும் என்றும். சமுதாய நோக்கில் பெற்றோர் ஆசிரிய உறவு மேம்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. பள்ளிகளிலும் வீடுகளிலும் தோல்வியுற்ற மாணவர்களே வீட்டை விட்டு ஓடுகின்றனர் என்று பலவகைச் செய்தித் திரட்டுகளும் சான்றுகள் தருகின்றன. டாக்டர் அர்னால்டு தாயின்பி (Arnold Toynbee) கூறியவாறு வழிவழியாகச் சமூகப் பண்பாட்டுப் படி முறைகளை வளர்த்து வரும் பணிகள். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் சமுதாயத்தில் உள்ளவர்களாலும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் தேசிய அளவில் தமிழகத்தில்தான் இளங்குற்றவாளிகள் எண்ணிக்கை மிகுதியாக உள்ளன என்று புள்ளி விவரங்கள் புலப்படுத்துகின்றன. இச்சூழ்நிலையில், பெற்றோர் ஆசிரியர் உறவு சிறந்திருந்தால்தான், கல்வித் திட்ட இலக்குகளை (Educational Objectives) செயல் வெளியீடுகள் (Tasks) மூலம் அடைய இயலும். ஆசிரியர் பெற்றோர் இருசாரார் மட்டுமன்றிச் சமுதாயமும் இவ்வுறவுப் பாலம் சிறக்க அடிகோலிட வேண்டும். மேலும் சமுதாயப் பொதுநலக் கழகங்கள் அனைத்துமே, ஆசிரியர் பெற்றோர் உறவு மேம்பாட்டுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.{{Right|எஸ்.மோ.}} <section end="ஆசிரியர் - பெற்றோர் உறவு"/> <section begin="ஆசிரியர்-பெற்றோர் கழகம்"/> {{dhr}} <b>ஆசிரியர்-பெற்றோர் கழகம்</b>: பெற்றோர் குழந்தையின் முதல் ஆசிரியராகவும் ஆசிரியர் குழந்தையின் இரண்டாம் பெற்றோராகவும் கருதப்படுவர். ஆதலின் குழந்தையின் மன நலத்திலும் கல்வி வளத்திலும் இரு திறத்தாருக்கும் பொறுப்புண்டு. இவர்களுக்குள் ஆழ்ந்த ஈடுபாடும் நெருங்கிய இணக்கமும் மிக மிக இன்றியமையாதவையாகும். இவ்விணைப்பு, ஆசிரியர்களைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்கும் பெற்றோர்களை ஆசிரியர்கள் புரிந்து கொள்வதற்கும் குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரும் ஆசிரியரும் முரண்படாது ஒத்துழைத்துச் செயல் புரிவதற்கும் பெரிதும் துணை செய்கிறது. இதற்குரிய வாய்ப்புகளை ஆசிரியர் பெற்றோர் கழகங்கள், பெருமளவில் நல்குவதுடன், கற்றலும் கற்பித்தலும் முழுமை அடைய வழியையும் வகுக்கின்றன. <b>ஐக்கிய அமெரிக்க நாட்டில்</b> வாசிங்டனிலுள்ள, ஆர்லிங்டன் என்னும் சிற்றுண்டி விடுதிக்<noinclude></noinclude> 28sbtjnpymxh2hw2fix98g9rz4pssms பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/306 250 620846 1944123 1866042 2026-06-09T15:19:37Z Sridevi Jayakumar 15329 1944123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர்-பெற்றோர் கழகம்|280|ஆசிரியர் மாணவர் உறவு}}</noinclude>பெற்றோர் பள்ளிக்கு வந்து பள்ளியின் பணிகளையும் நடைமுறைகளையும் நேரில் காண வாய்ப்பளிக்கப்படுகிறது. பள்ளிகளில் பெற்றோர்களுக்கும் பொறுப்புண்டு என்பதனை உணர்த்துவது மட்டுமன்றி ஆசிரியருக்கும் சமூகத்தில் பங்குண்டு என்பதை அறிவிக்கும் வகையில் ஆசிரியருக்குச் சமூக ஊழியப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. பிளொடன் (Plowdone) அறிக்கையில் (1967-இல் வந்தது) ஆசிரியர்-பெற்றோர் கழகங்களின் குறைந்த அளவுச் செயல்திட்டங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவையாவன: 1. பெற்றோர்களுக்குப் பள்ளியில் நல்வரவு தருதல், 2. பள்ளியில் சேர்ந்த ஆறு திங்களுக்குப்பின், பெற்றோர் தவறாது வருகை தந்து. வகுப்பாசிரியருடன் தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலையைப் பற்றி ஆய்தல், 3. ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்நாளில் பெற்றோர்களை வரவழைத்துப் பள்ளிப் பணிகளைப் பார்வையிட வாய்ப்பளித்தல், ஆகியவை பெற்றோர் ஆசிரியர் கழகம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகளாகும். <b>இந்தியாவில்</b>: இந்திய நாட்டில், தேசிய அளவில் 1952-இல் இந்தியத் தேசிய ஆசிரியர்-பெற்றோர் கழகம், தில்லியில் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் மாநாடுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப் பெறுகின்றன. 1975-ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய ஆசிரியர் பெற்றோர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாடு குறிப்பிடத்தக்கதாகும். இக்கழகம், மூன்று திங்களுக்குரிய இதழை நடத்திக் கருத்துப் பொதிந்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. தமிழ் நாட்டில் 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் - பெற்றோர் கழகம். தோற்றுவிக்கப் பெற்றது. இக்கழகம், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் செயற்படுகிறது. தமிழக அரசின் கல்வி அமைச்சர் இக்கழகத்தின் பதவி வழித் தலைவராவர். இக்கழகம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்தம் பெற்றோர்கள் பணியாற்றும் ஆசிரியர்கள் இவர்களிடையே நட்புறவையும் கூட்டுறவையும் தோற்றுவித்துக் கல்வி வளர்ச்சியில் தனிக் கவனத்துடன் செயலாற்றி வருகிறது. சாதி, சமய, மொழி வேறுபாடுகளைக் கடந்து, தக்க விதிமுறைகளை வகுத்துப் பணியாற்றுகிறது. மேலும் மாவட்ட அளவிலும் பள்ளி அளவிலும் அமைத்துக் கொண்டுள்ளது. இக்கழகம், 1964-63-ஆம் ஆண்டுகளில் 22 கிளைக் கழகங்களைக் கொண்டு தன் பணியைத் தொடங்கிற்று. இப்போது 27,632 கிளைக் கழகங்களைத் தோற்றுவித்து. அவற்றின் தலைமைக் கழகமாக விளங்குகிறது. சமூகம், பொருளாதாரம், கலை, கல்வி முதலிய துறைகளில், இனம் தலைமுறையினர் முன்னேற்றம் பெறுதல்; வாழ்வில் உறுதியான முதலிடம் பெறவும் தலைமைப் பொறுப்பு ஏற்கவும் சிறந்த குடிமக்களாகத் திகழவும் தொண்டாற்றுதல்; பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்திச் சிறுவர்களின் நல்வளர்ச்சிக்கு ஆசிரியர் பெற்றோர் ஒத்துழைப்பின் வாயிலாக வாய்ப்புகளைத் தோற்றுவித்தளித்தல்; பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஆகியவர்களிடையே தேசிய ஒருமைப் பாட்டுணர்ச்சி ஓங்கவும், தங்களுக்குள் தடையின்றிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் உரிய வாய்ப்புகளைத் தருதல் போன்ற பல்வேறு நோக்கங்களில் இக்கழகம் பணியாற்றிவருகிறது. மாவட்டங்கள்தோறும், உள்ள மாவட்டப் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும், மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் இணைப்புப் பாலமாக அமைந்து மேற் கூறிய நோக்கங்கள் ஈடேறும் வகையில் செயற்படுகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கழகத்தின் பதவி வழித் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், பொதுக்குழு, நிருவாகக்குழு, நிதிக்குழு குறிப்பிட்ட பணிகளுக்காக அமைக்கப்படும் குழு என நான்கு உட்பிரிவுகளைக் கொண்டு இக்கழகம் செயலாற்றுகிறது. பள்ளி ஆசிரியர்-பெற்றோர் கழகம், அவ்வப் பள்ளிக் கட்டிடத்தில், தனக்கென ஓர் அலுவலகம் பெற்று இயங்குகிறது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அடங்கிய பொதுக்குழு அமைக்கப்பட்டு, அதிலிருந்து பத்துப் பெற்றோர்களும் ஐந்து ஆசிரியர்களும் கொண்ட நிருவாகக் குழ தேர்ந்தெடுக்கப்பெற்று இயங்குகிறது, பெற்றோரே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். பள்ளியின் தேவைகள், கட்டிட வசதிகள், நூலகம் நிறுவுதல் முதலிய பணிகளுக்குத் தேவையான நிதிவசதிகளைப் பெற ஆசிரியர்-பெற்றோர் சுழகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. சமுதாயத்தில் ஆசிரியர்களின் மதிப்பு நிலையினை உயர்த்தவும் இக்கழகங்கள் உதவுகின்றன.{{Right|சி.பொ.}} <section end="ஆசிரியர்-பெற்றோர் கழகம்"/> <section begin="ஆசிரியர் மாணவர் உறவு"/> {{dhr}} <b>ஆசிரியர் மாணவர் உறவு</b> : ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர், மாணவர் உறவு (Teacher Student Relationship) எனச் சொல்லப்படும். பண்டைக் காலத்தில் கல்வி வாழ்வோடு இயைந்து கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல்,<noinclude></noinclude> 939z2lp2phidui32uuohxyijvlc9ne8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/308 250 620855 1944128 1866045 2026-06-09T15:25:55Z Sridevi Jayakumar 15329 1944128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரியர் மையங்கள்|282|ஆசிரியரும் சமுதாயமும்}}</noinclude>::5. ஆசிரியரின் மேம்பட்ட கற்பித்தல் (Effective Teaching) மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது.{{Right|எஸ்.மோ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Amos R.,</b> Teacher's Attribution of Responsibility, Unpublished Doctoral Disertation, Indiana University, 1973.<br> <b>Drophy J. E., and Thomas L. Good,</b> Teacher Students Relationships, Holt, Rinehart & Winston, New York, 1974. <section end="ஆசிரியர் மாணவர் உறவு"/> <section begin="ஆசிரியர் மையங்கள்"/> {{dhr}} <b>ஆசிரியர் மையங்கள்</b>: முதலில் ஆசிரியர் மையங்கள் இங்கிலாந்து நாட்டில் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர்த் தோன்றியது. அரசாங்கக் கையேடு 1976-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொன்று இங்கிலாந்து நாட்டில் மட்டும் 560 ஆசிரியர் மையங்கள் உள்ளனவென்று கூறுகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இத்தகைய மையங்கள் தோன்றலாயின. தமிழ் நாட்டில் 1983 ஆம் ஆண்டிலிருந்து ஏழு ஆசிரியர் மையங்கள் செயற்படுகின்றன. இவை ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களாலேயே நடத்தப்படும் அமைப்புகளாம். இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளவும் தங்கள் தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை வழங்குவதே இம்மையங்களின் இன்றியமையாத நோக்கம், கல்விக்குத் தேவையான கையேடுகள், துணைக்கருவிகள் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் உருவாக்கிக் கொள்ளத் தேவையான வசதிகள் இம்மையங்களில் உள்ளன. இதைத் தவிர ஆசிரியர்களது தொடர் கல்விக்குத் தேவையான நூல்கள். படங்கள் போன்றவை இங்கு இடம் பெறுகின்றன. அவர்களது தேவைக்கு ஏற்பப் பணியிடைப் பயிற்சிகளையும் இம்மையங்கள் வழங்குகின்றன. ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியாலேயே தங்கள் தொழில் தொடர்பான தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இம்மையங்களில் உள்ளன பிற இடங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் சில நாட்கள் தங்குவதற்கும் இம்மையங்கள் இடமளிக்கின்றன. கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு அமைக்கப்படும் கண்காட்சிகளுக்கு இம்மையங்கள் ஊக்கமளிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இடத்திலுள்ள ஆசிரியர்கள் அதிக இடர்ப்பாடின்றி வந்து பயன்படுத்தக்கூடிய இடங்களில் இம்மையங்களை அமைத்திருக்கிறார்கள். இதன் வெவ்வேறு பணிகளைக் கவனிக்கப் பணியாளர்கள் இருந்தாலும் இதனை மேற்பார்வை இடும் பொறுப்பு ஆசிரியர் குழுக்களிடம் இருக்கிறது. இம்மையங்களை நடத்துவதற்குத் தேவையான பண உதவியைப் பெரும்பாலும் அரசாங்கமே தந்து உதவுகிறது.{{Right|ஜி.எம்.ஜா.}} <section end="ஆசிரியர் மையங்கள்"/> <section begin="ஆசிரியரும் சமுதாயமும்"/> {{dhr}} <b>ஆசிரியரும் சமுதாயமும்</b>: ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அமைதி, ஆக்கப் பண்பு ஆகியன அச்சமுதாயத்தில் பரவியுள்ள கல்வி முறையினைச் சார்ந்து அமைவனவாம். இவ்வுண்மையினைக், கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வி ஆய்வுக் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், “இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது”, என்றும் அது குறிப்பிட்டுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலையும் வேகத்தையும் வழிமுறையையும் தோற்றுவிப்பவர்கள் ஆசிரியராவார்கள். இவ்வாசிரியர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை நெறிப்படுத்தி, அவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக் கொணர்ந்து முழுமையாக்கத் தக்கவர்கள்; மேலும் சமூகப் பண்புகள் சமுதாய மதிப்புகள் ஆகியன தோன்றி வளர வித்திட்டு, அவர்களின் நல்வாழ்வினையும் சமுதாயத்தின் நலத்தினையும் பேணுபவர்கள். ஆசிரியர்கள் சமுதாயச் சிற்பிகளாகச் செயலாற்றுகிறார்கள். சீராக இயங்கும் சமுதாயத்தில்தான் நல்லாசிரியர்கள் உருவாகிறார்கள். பள்ளிகள் சமுதாயத்திற்கப்பாற்பட்ட - தனித்தியங்கும் நிலையங்கள் அல்ல; அவை தேவைகளை நிறைவு செய்வதற்கெனச் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்டு, அதன் தொடர்ந்த ஆதரவுடன் செயற்படும் சமூக நிலையங்கள் (Social Institution) ஆகும். ஆசிரியர்கள் சமுதாயத்தின் மதிப்பு மிக்க பணிப்பிரிவினருள் ஒரு வகையினர். எனவே, ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்குமிடையே காணப்படும் தொடர்பு நெருக்கமானதாகவும் இருபுறச் சார்புடையதாகவும் அமைகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணியினை நேரிய மனப்பான்மையுடன் அணுகினால், அவர்களால் தம் மாணாக்கர்களின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியினையும் புரட்சியினையும் தோற்றுவிக்க முடியும். இம்மனம் புரட்சி சமுதாய முன்னேற்றத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்திச், சுதந்திரப் பண்பும் சமூக நுண்ணுணர்ச்சியும் உடைய ஆளுமையினை (Personality) ஒவ்வொரு மாணாக்கனும் பெற ஆசிரியர்கள் பாடுபடுவார்களாயின், தம்<noinclude></noinclude> svdh8q7011dxaceao0x2xqzz5yjrlcs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/311 250 620875 1944139 1867379 2026-06-09T15:38:01Z Sridevi Jayakumar 15329 1944139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசிரிய விருத்தம்|285|ஆசீவக வாதம்}}</noinclude>படுத்தாத சமுதாயம், இவை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் போது வன்மையாகக் கண்டிக்கிறது. இறுதியாக, ஆசிரியர்கள் தாமே சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்பதனை மறக்கக்கூடாது. இவர்களுக்குத் தம் பணிசார்ந்த சமுதாயக் கடமைகளுடன் நேரடியாகவும் பல சமுதாயப் பொறுப்புகள் உள்ளன. இப்பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் ஆசிரியர்களது சமுதாய மதிப்பு உயர்வது உறுதி. சமுக-முதியோர் கல்வித் திட்டங்கள், குடும்ப நல்வாழ்வுத் திட்டங்கள், சுற்றுப்புறத் தூய்மைப் பாதுகாப்புச் செயல் திட்டங்கள், பல்வேறு முறைசாராக் கல்வித் திட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் நேரடிப்பங்கு பெறவேண்டும். இது சமுதாய-பள்ளிப் பிணைப்பினையும், ஆசிரியர் - பெற்றோர் தொடர்பினையும் வலுப்படுத்தும். கல்வி ஏதோ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துள் முடிவடையும் ஒன்றன்று; அதன் தேவை இன்றைய சமுதாயத்தில் வாழ்நாள் முழுதும் எழுகிறது. அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கப்படவேண்டும். இவற்றை “வாழக் கற்றல்” (Learning to be) என்று ‘யுனெசுகோ’ கல்வி அறிக்கை குறிப்பிடுகிறது. இக்கருத்தின்படி, ஆசிரியர்கள் தம் சமுதாயப் பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டும். அதுபோலவே, வாழ்க்கை வசதிகளையும், பணிச் சூழ்நிலையினையும் எல்லா ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தித் தருவது சமுதாயத்தின் மிக இன்றியமையாக் கடைமையாகும்.{{Right|எஸ்.ச.}} <section end="ஆசிரியரும் சமுதாயமும்"/> <section begin="ஆசிரிய விருத்தம்"/> {{dhr}} <b>ஆசிரிய விருத்தம்</b> என்பது ஆசிரியப்பாவின் மூவகை இனங்களில் ஒன்றாகும். இது அகவல் விருத்தம் என்றும் வழங்கப்பெறும். தம்மில் அளவொத்து அமையும் கழிநெடிலடி நான்கு கொண்டு பாடப்பெறும் செய்யுள் ஆசிரிய விருத்தம் எனப்படும். கழிநெடிலடி என்பது ஆறுசீரும் அதற்கு மேற்பட்ட சீர்களும் கொண்ட அடியினைக் குறிக்கும். ஆசிரிய விருத்தச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் இடம்பெறும் சீர்களைக் கொண்டு அவை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவாகப் பெயர் பெறும். 6 முதல் 8 சீர்கள் வரை கொண்ட அடிகளால் அமையும் ஆசிரிய விருத்தங்களே சிறப்புடையனவாகக் கருதப்படும். 9,10 முதலான சீர்களால் ஆகிய அடிகளைக் கொண்டு அமையும் விருத்தங்கள் சிறப்பிலவாகக் கருதப்படும். எனினும் 64 சீர்கள் கொண்ட அடிகளால் ஆகிய ஆசிரிய விருத்தங்களும் பாடப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களுக்கும் இனம் வகுத்து இலக்கணங் கூறும் மரபு தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியதாகும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற பிற்கால யாப்பிலக்கண நூல்கள் ஆசிரிய விருத்தம் போன்ற பாவினங்களுக்கும் இலக்கணம் வகுத்துள்ளன. “குறைவில் தொல்சீர் அகவல், விருத்தம், கழிநெடில் நான்கு ஒத்து இறுவது” என்பது யாப்பருங்கலக் காரிகை கூறும் ஆசிரியவிருத்த இலக்கணமாகும். பிற்காலத்தில் பாவினங்கள் பலவற்றுள்ளும் ஆசிரிய விருத்தம் முதன்மை பெற்றது. பெருங்காப்பியங்கள் பல விருத்தப்பாக்களினால் உருவாகும் நிலை தோன்றியது. சீவகசிந்தாமணி, விருத்தப்பாவினத்தால் தோன்றிய முதற் காப்பியமாகும். <section end="ஆசிரிய விருத்தம்"/> <section begin="ஆசிரியன் பெருங்கண்ணன்"/> {{dhr}} <b>ஆசிரியன் பெருங்கண்ணன்</b> சங்ககாலப் புலவர். இவரது ஒரு பாடல் குறுந்தொகை 239-ஆம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது குறிஞ்சித் திணையில், தலைவிகூற்றாக அமைந்துள்ளது. இவர் ஓர் ஆசிரியராக விளங்கினார் என்பது பெயரடையிலிருந்து புலனாகிறது. இவர், காந்தள் மலரை ஊதும் தும்பி, பாம்பு உமிழும் மணிபோலத் தோன்றுமென்று உவமை காட்டியுள்ளார்.{{Right|த.கோ.}} <section end="ஆசிரியன் பெருங்கண்ணன்"/> <section begin="ஆசீவகர்"/> {{dhr}} <b>ஆசீவகர்</b> மாக்கலி கோசலரின் சீடர்கள். ஆசீவகர்களுக்குத் துணை நின்ற அரசாங்க அலுவலர்கள். ஒரு காலத்தில் போற்றப்பெற்றார்கள். பொது வாழ்வில் பெரும் பதவி வகித்தார்கள். ஆசீவகர் பல்வகையான நோன்புகளை நோற்றனர். இவர்கள் குதிகாலில் குந்தியிருக்கும் பழக்கத்தையும் வானில் வௌவால்களைப் போல் பறக்கும் திறமையையும் பெற்றிருந்தார்கள். சோதிடத்தில் திறமை பெற்றிருந்த இவர்கள் மக்களுக்குச் சகுனம், நல்ல நாள் ஆகியவற்றைப் பார்த்துக் கருத்துரைகள் வழங்கினார்கள். இவர்கள் இல்லறத்திலுள்ள சமணர்கள். கோசவர் என்பவர் கெளதம புத்தருக்கும் மகாவீரருக்கும் பின் வந்தவர். ஆசீவகர்களைப் பற்றிய விவரங்கள் அசோகரின் கல்வெட்டுகளிலும் பௌத்த சமய சாதகக் கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. <section end="ஆசீவகர்"/> <section begin="ஆசீவக வாதம்"/> {{dhr}} <b>ஆசீவக வாதம்</b>: புத்தர், மகாவீரர் வாழ்ந்த அதே காலத்தில் மகசுரின்புத்த கோசாலா என்ற ஒரு சமயத்தலைவர் வாழ்ந்தார். அவரைத் தமிழ் நூல்கள் மற்கலி என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. மற்கலியினால் தோற்றுவிக்கப்பட்ட சமய வாதம் ஆசீவக வாதம் எனப்படுகிறது. ஆசீவக வாதக் கருத்துகள் மற்கலிக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பே தோன்றிவிட்ட போதிலும், அவை உருப்பெற்றது மற்கலியின் முயற்சியினால்தான் எனச்சொல்வது சாலப் பொருத்தமானது. இவ்வாதத்தின் அடிப்படைக் கருத்தோட்டத்தைத் தெளிவாக அறிவிக்கும் நூல்கள் வட-<noinclude></noinclude> 05i1yuet14jbiwgtdgl3fr5spb80dkd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/312 250 620876 1944148 1867378 2026-06-09T15:47:23Z Sridevi Jayakumar 15329 1944148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசுக்வித்து|286|ஆசுகார் ஒயில்டு}}</noinclude>மொழியிலோ பாலி அல்லது பிராகிருத மொழியிலோ இன்று இல்லை. தமிழ்க் காப்பியங்களான மணிமேகலையிலும் நீலகேசியிலும் பிற்காலத்தே தோன்றிய சமய உரை நூல்களிலுந்தான் இதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆசீவக வாதிகள், நில அணு, நீர் அணு, வளி அணு, தீ அணு, உயிர் அணு ஆகிய ஐம்பொறிகளைப் படைப்பின் மூலப் பொருள்களாக எண்ணுகின்றனர். இவ்வணுக்களின் சேர்க்கை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே ஏற்படும். அச்சேர்க்கையின் விளைவாக பிறப்பு இறப்பு, இன்ப துன்பம் ஆகியவை உண்டாகின்றன. பிறப்பு ஆறு வகையானது என்பது ஆசீவகவாதிகளின் துணிபு. அவை கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை எனப்படுவன அவற்றில் தூய வெண்மைப் பிறப்புத்தான் உயர்நிலைப் பிறப்பு. அதை அடைந்தவர் தாம் வீட்டுலகம் எய்துவர். உயிர்கள, எண்பத்துநான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பில் பட்டு உழலும். அதன் பின்னரே அவை வீட்டுலகை அடையும். இந்த நியதி எக்காலத்தும் மாறாது. இந்த உலக வாழ்வில் நல்லறிவு பெற்று, கூடவே நற்செயல்களை ஒருவன் செய்வானேயானால் படிப்படியாக உயர்ந்து, பின் தனக்குரிய காலம் வந்ததும் வீடு பேறு அடைவான். உயிர்கள் நியதியினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவை எக்காலத்தும் தம் விருப்பப்படி செயற்பட முடியாது. எனவே, அவை தாம் செய்யும் நன்மை தீமைகளுக்குப் பொறுப்பல்ல. ஆசீவக வாதம், ஆன்மா உண்டென்றும் அது உணர்வுள்ளதென்றும் உருப்பெற்றதென்றும் கருதுகிறது.{{Right|ஜி.வி.ச.}} <section end="ஆசீவக வாதம்"/> <section begin="ஆசுக்வித்து"/> {{dhr}} <b>ஆசுக்வித்து (கி.பி. 1852-1928)</b> ஆங்கில அரசியல் வல்லுநர்: மார்லி என்னும் ஊரில் கி.பி. 1852 ஆம் ஆண்டில் பிறந்தவர். இங்கிலாந்தின் தலைமை அமைச்சராக 1908 முதல் 1916 வரை இருந்தவர். ஆசுக்வித்து (Asquith) 1908 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பெற்ற முதியோர் ஓய்வூதியச் சட்டத்தைக் கொணர்ந்தமையால், இவருடைய அமைச்சரவை சீரிய இடத்தைப் பெற்றது. தேசிய ஆயுட் காப்பீட்டுச் சட்டம் (1911). பாராளுமன்றச் சட்டம் (911) ஆகியவை பிற சிறப்பான சட்டங்களாம். பிரபுக்கள் சபையின் அதிகாரத்தைக் கி.பி. 1911 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பெற்ற பாராளுமன்றச் சட்டம் கட்டுப்படுத்தியது. ஆசுக்லித்து 1914 ஆம் ஆண்டில் ஐரிசுத் தன்னாட்சி முன்வரைவைக் கொணர்ந்த போதிலும், அவ்வாண்டில் மூண்ட முதல் உலகப்போரின் விளைவாக, அந்த முன்வரைவு ஒத்திவைக்கப் பெற்றது. ஆசுக்வித்துக்குப் பின்னர் தேவிடு இலாயிடு சார்சு (David Lloyd George) என்பார் 1916 ஆம் ஆண்டில் தலைமை அமைச்சரானார். ஆசுக்வித்துக்கும் இலாயிடு சார்சுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுகளினால், முதல் உலகப் போருக்குப் பின்னர் இலிபரல் கட்சி (Liberal Party) நலியத் தொடங்கிற்று. இவர் 1925-ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பிரபுவாக்கப்பட்டார். <section end="ஆசுக்வித்து"/> <section begin="ஆசுகவிராச சிங்கம்"/> {{dhr}} <b>ஆசுகவிராச சிங்கம்</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர் இயற்பெயர் கவிராச பிள்ளை என்பது. இவரைச் சேறைக் கவிராச பிள்ளை என்றும் கூறுவர். சேறை என்பது இவர் பிறந்தவூராகலாம். கருணீகர் மரபில் வந்த இவர் வண்ணக் கவி வல்லவராதலின் “வண்ணர் களஞ்சியம்” என்றும் சிறப்பிக்கப்பட்டார். “திருக்காளத்தி நாதர் உலா”, “திருவண்ணாமலை யார் வண்ணம்” “திருவாட் போக்கி நாதர் உலா” என்னும் நூல்களும் இவரால் இயற்றப்பட்டுள்ளன என்பதை, அந்தகக் கவி வீரராகவ முதலியார் தாம் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். இவர் திருக்காளத்தி வேங்கடாசம் முதலியாரால் ஆதரிக்கப்பெற்றார்.{{Right|வி.பா}} <section end="ஆசுகவிராச சிங்கம்"/> <section begin="ஆசுகார் ஒயில்டு"/> {{dhr}} <b>ஆசுகார் ஒயில்டு (கி.பி. 1856-1900)</b> ஆங்கில இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றவர். ஐரிசுக்காராகிய இவர் கவிஞரும், நாடகாசிரியரும், நாவலாசிரியரும், சிறுகதையாளரும், கட்டுரையாளரும், ஆராய்ச்சியாளரும், அழகியல் வழிபாட்டினருமாவர். தப்ளின் நகரத்துத் திரினிட்டி கல்லூரியிலும், ஆக்கபோர்டு மாக்டலின் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். மும்மொழிப்புலவர்; ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளில் தம் இலக்கியம் படைப்புகளைத் தந்தவர். திசுரேலியைப் போல் மிக ஆடம்பரமான ஆடைகளை உடுத்துபவர். செரிடனைப் போல் அறிவுக் குறும்பாகவும் வேடிக்கையாகவும் பேசுவதில் வல்லுநர். “வாழ்க்கை எனக்கு ஒரு புதிர், ஆனால் நானும் வாழ்க்கைக்கு ஒரு புதிர்தான்” என்பது போன்ற அறிவார்ந்த முரண் சிந்தனை கொண்டவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதி கி.பி. 1881 இல் வெளிவந்தது. ‘தோரியன் கிரேயைப் பற்றிய சித்திரம்’ என்ற இவர் புதினம் சிறந்தது. இவர்தம் புகழ் பெற்ற நாடகங்கள்: ‘சீமாட்டி விண்டர் மீனின் விசிறி’ ‘முதன்மையில்லாத பெண்’, ‘உண்மையாயிருப்பதன் இன்றியமையாமை’ என்பவை இன்பியல் சார்ந்தவை. இவரது ‘சலோம்’ என்பது புகழ்பெற்ற துன்பியல் நாடகம் ஆகும். இவருடைய<noinclude></noinclude> eh5rjxhe51eujocfe3hzmjlvqtr5326 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/313 250 620883 1944155 1867381 2026-06-09T16:00:05Z Sridevi Jayakumar 15329 1944155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசுட்டிரோ கார்சுகி......|287|ஆசுட்டின். சேன்}}</noinclude>சிறையனுபவம் (De Profundis) உலகக் கடித இலக்கியத்தில் தனிச்சிறப்புடையது.{{Right|த.கோ.}} <section end="ஆசுகார் ஒயில்டு"/> <section begin="ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு"/> {{dhr}} <b>ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு (கி.பி. 1854-1919)</b> உருசிய அரசியல் வல்லுநர், பீட்டர்சுபர்கில் (Petersburgh) கல்வி கற்ற இவர் சிறிது காலம் உருசிய அரசின் நீதித்துறையின் வெளியீட்டுப் பகுதிப் பணியில் அமர்ந்திருந்தார். பின்னர்ப் பிரான்சு நாடு சென்று அங்கு அரசியல் கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். “மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும்” என்னும் இவரது நூல் ஐரோப்பிய மொழியான பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. சிறிது காலம் இவர் இங்கிலாந்திலும் வாழ்ந்தார். இவர் 1906-ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். அங்கு உருசியச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இவர் 1919 இல் காலமானார். <section end="ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு"/> <section begin="ஆசுட்டின் ஏரி"/> {{dhr}} <b>ஆசுட்டின் ஏரி</b> மேற்கு ஆசுத்திரேலியாவில் மாக்னெட் குன்றுகளுக்கு அண்மையிலுள்ளது. ஆசுட்டின் ஏரியின் (Austin Lake) அருகில் மீக்கா தாராத் தங்கச் சுரங்கம் உள்ளது. இதன் பரப்பு 829 ச.கி.மீ. இவ்வேரி அடிக்கடி வறண்டு விடும் தன்மையுடையது. இந்த ஏரி பெர்த்து (Perth) நகருக்கு வடக்கு வட கிழக்கில் அமைந்துள்ளது. <section end="ஆசுட்டின் ஏரி"/> <section begin="ஆசுட்டின், சேன்"/> {{dhr}} <b>ஆசுட்டின், சேன் (கி.பி.1775-1817)</b> ஆங்கிலப் புதின எழுத்தாளருள் ஒருவர். இவர், ஆரவாரம், பரபரப்பு நிகழ்ச்சிகள், விந்தையான சூழல், குணபாத்திரங்கள், புரட்சிச் சாயல், கலையாரவாரம், புத்தார்வக் (Romance) கதைப் பாங்கு, உணர்ச்சிப் பகட்டு, வெற்றும் பகட்டுரை ஆகியவற்றோடு கொச்சை மரபும் பெருகி மலிந்துள்ள நெடும்புனை கதைத் (Novel) துறையில், அவற்றினின்றும் அறவே நீங்கி. மெல்லடைவான நடையில், அன்றாடப் பொது நிகழ்ச்சிச் சூழலில் நம் கவனத்துக்கு அப்பால் ஆங்காங்கே மலிந்து கிடக்கும் நகுதிறல் இயலை (Comedy) நுட்பமாகத் தமக்கே உரிய நயமிகு உரையாடல் பாணியில் ஆறு புதினங்களை இயற்றினார். அவை அங்கதச் சாயலும் (Satire), நகை ஏளனச் சுவையும், உள்ளுறை முரண் நயமும் (Irony) விரவி அமைந்தன. அவற்றால், ஆசுட்டின் சேன் (Austin Jane) செம்பாங்கு இலக்கியத் தரத்தில் (Status of a Classic) சேர்க்கப்பட்டு. ஆழ்புலமையாளர் மதிப்பீட்டில் உயர்ந்து விளங்குகிறார். அடக்கமாக ஒதுங்கி வாழும் இயல்புடைய இவர் செல்வாக்கு நாட்டத்தையோ செல்வம் ஈட்டலையோ குறியாது, எந்தத் தனி முறை மரபுக் குழுவிலும் சாராது, இலக்கியச் சீர்மையையே முதன்மை இலக்காகக் கருதி எழுதினார். இவரது கலையின் வள நேர்த்திப் பட்டியலில் இடங்கொள்ளும் மேம்பாடுகள் - நடுநேர்மை நோக்குடன் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைக் கையாளுதல், கூர் நோக்கும் (Observation) நுண்காட்சித் திறனும் (Insight) கொண்டு மெய்ம்மை மாறுபடாமல் சித்திரிக்கும் பாங்கு, நுண்ணிய ஒப்பீடு மாறுபாட்டுத் திறன் (Discrimination). நல்லறிவு நலம் (Sanity) போற்றல் (Precision), எளிமை, உயர்வு நேர்த்தி (Good taste), குறுகிய எல்லையுள் மிக நுட்பமாக விரித்துரையாடும் வித்தகம் (Subtle Commentary) முதலியனவாகும். இத்தகைய நலங்களால் நெடும் புனைகதைப் படிவத்திற்குக் (Novel form) குறிப்பாக நகுதிறல் கதைக்கு (Comedy) ஆழ்ச்சியும் முதிர்ச்சியும் அளித்த பெருமை இவருக்கே உண்டு. தாம் நன்கறிந்த சின்னஞ்சிறு துறையைப் பற்றியே எழுதும் பிரெஞ்சு எழுத்தாளர்களைப் போல் இவர் எழுதியவை, பின்னர் என்றி சேம்சு, (Henry James) செம்மைப்படுத்திய பாணிக்கு முன்னோடியாயின எனக் கருதலாம். அன்று ஐரோப்பாவை உலுக்கி வந்த போர்களும், நெப்போலியனின் போர்களும், இயந்திரப் புரட்சியினால் சமுதாயத்தில் எழுந்த ஏற்றத்தாழ்வுப் பிறழ்ச்சிகளும் எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர்ந்த போது, இவர் எடுத்தாண்டதோ மிகக் குறுகிய செயற் பரப்புச் சூழல் ஆகும். தேர்ந்த எழுத்தாளரையும் மனந்தளர்ந்து பின்வாங்கச் செய்யும் அளவுக்குக் குறுகிய நிகழ்ச்சி எல்லை வரையறை. பரபரப்புப் போக்கில் ஈடுபட்டிருந்த வாசகர்களுக்கு இந்தப் பாணி எடுபடுமோ என்ற ஐயத்தைத் தோற்றுவித்தது. செல்வம் பெருகி வரும் இடைத்தர மாந்தரின் (Rising middle class) நாட்டுப்புற மாளிகை, திருக்கோயில் கூட்டங்கள். விருந்தினர் வரவேற்பறை, பூங்கா ஆகிய இடங்களில், நிலம் படைத்துச் செயல்படாதோரின் அளவளாவல் கூட்டம், கூட்டருந்தல் குழுமம், குழு நடனம், இணைவு முயற்சி (Match- making). மண ஒப்பந்தம் (Engagement). எளிய சடங்குகள் ஆகியவை இவர்தம் கதை மூலப்பொருளாகும். இவர் இவற்றைக் கட்டுக்கோப்பான் நிகழ்ச்சிக் கோவையில் (Plot) அமைத்தார். இவரது இலக்கிய நோக்கிற்கு இலக்கானவை: இடைத்தரக் குடும்பங்கள் வளம் மிகுந்து வருங்காலத்தில் புதிதாக உண்டான சமுதாய ஏற்ற இறக்க உணர்வுகள் (Status Consciousness), சிறு மாகாணச் சம்பிரதாயச் சிற்றலைகள், தலைமுறைப்<noinclude></noinclude> g7yf6vll58s4llth89xq83ign2pc44h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/315 250 620885 1944167 1867383 2026-06-09T16:16:13Z Sridevi Jayakumar 15329 1944167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசுட்ராகான்|289|ஆசுத்திரியா}}</noinclude>புனைந்து தம் நாற்பத்திரண்டாம் வயதில் முது கன்னியாய் இறந்துவிட்டார். சிறு வயதில் இவர் எழுதியவற்றுடன் பதிப்பேறா இரு நூல்களும் உள. ஒன்று சூசான் சீமாட்டி (Lady Susan) என்பது. இது கடித வடிவில் அமைந்தது. மற்றொன்று, வாட்சன் குடும்பத்தினர் (The Watsons) என்னும் முடிவு பெறாக் சுதை. இவர் இறக்கும் போது, சான்டிடன் (Sanditon) என்ற தலைப்பில் முதல் நிலைக் குறிப்பு நிலையில் (Sketch) ஒரு நூலை விட்டுச் சென்றார். கிறித்தவக் குருமார் குடும்பத்தில் ஏழாம் குழந்தையாகப் பிறந்த இவர்தம் ஆறு அண்ணன்மார்களுள் இருவர் கடற்படையில் பெருந்தலைவர்களாக (Admirals) இருந்துள்ளனர். தங்கை காசாண்ட்ரா இவரைப் போலவே முதுகன்னியாகவே காலங் கழித்தார். சேன் ஆசுட்டின் பள்ளி சென்று பயிலாதவர்,{{Right|ந.ச.}} <section end="ஆசுட்டின், சேன்"/> <section begin="ஆசுட்ராகான்"/> {{dhr}} <b>ஆசுட்ராகான்</b> சோவியத்து உருசிய நாட்டின் தென்பகுதியில் வோல்கா ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு நகரம். ஆசுட்ராகான் (Astrakhan) கசிபியன் கடலுடனும், வோல்கா ஆற்றுத் துறை முகங்களுடனும் நல்ல நீர்த் தொடர்புகளைக் கொண்டுள்ளதால், சீரிய வாணிக மையமாக விளங்குகிறது. மீன்பிடித்தல் இங்கு நடைபெறும் முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். உப்பிட்டு உலர்த்திய உயர்தர மீன்வகையின் கருச் சினையும் ஆசுட்ராகான் என்னும் கவர்ச்சியான ஆட்டுத்தோலும் இப்பகுதியின் குறிப்பிடத்தக்க உற்பத்திப் பொருள்கள். <section end="ஆசுட்ராகான்"/> <section begin="ஆசுடா"/> {{dhr}} <b>ஆசுடா</b> வட இத்தாலியில் பீட்மாண்டில் உள்ள ஊர். தூரின் (Turin) என்ற நகருக்கு வடமேற்கில் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 550 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள நகரம். ஆல்பசு சிகரங்கள் முப்பக்கம் நிற்கும் பள்ளத்தாக்கில் உள்ள ஆசுட்டர் (Austor) நல்ல தட்பவெப்ப நிலைக்குப்பெயர் பெற்ற இடம். இங்கிருந்து பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் சுரங்கப் பாதைகள் செல்கின்றன. <section end="ஆசுடா"/> <section begin="ஆகத்திரியா"/> {{dhr}} <b>ஆகத்திரியா</b> நடு ஐரோப்பாவில் அழகிய மலைத்தொடர்களுக்கும் இயற்கைக் காட்சிகளுக்கும் பெயர்பெற்ற சிறு நாடு. உயர்ந்த ஆல்ப்சு மலைகளும் அந்நாட்டின் மேற்கிலும் தெற்கிலும் நடுவிலும் படர்ந்த மலையடிவாரங்களும் கண்கொள்ளாக் காட்சியாகும். பல பகுதிகளில் விரிந்து அகன்ற பசும் பள்ளத்தாக்குகள் மலைத்தொடரைப் பிரித்துள்ளன. கண்ணாடி போன்று தெளிந்த நீர் நிறைந்த ஏரிகளும், அடர்ந்த காடுகளும் இந்நாட்டைப் போர்வை மூடினாற்போன்று மூடியுள்ளன. ஆசுத்திரியா ஓர் உள்நாட்டுப்பகுதி; கடற்கரைகள் இல்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 315 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 110 |oTop = 52 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|ஆசுத்திரியா}} <b>எல்லைகள்</b>: ஆசுத்திரியாவின் மேற்கில் இலீச்டென்சுடீன் (Liechtenstein) நாடும் சுலிட்சர்லாந்தும் அமைந்துள்ளன. வடக்கில் மேற்குச் செருமனியும், செக்கோசுலோவாகியாவும் இத்தாலியும் இதன் எல்லைகள். <b>தலைநகர்</b>: ஆசுத்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா. அது தான்யூப் (Danube) ஆற்றங்கரையில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசுத்திரிய மக்களும் பெரும்பாலோர் மாநகரங்களிலும் நகரங்களிலும் வசிக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் ஐந்திலொரு பங்கினர் தலைநகரான வியன்னாவில் வாழ்கின்றனர். ஆசுத்திரியாவின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் நோக்குடன் பல இலட்சம் பயணியர் ஒவ்வோராண்டும் இந்நாட்டுற்கு வந்து செல்கின்றனர். ஆசுத்திரியா ஒருகாலத்தில் ஐரோப்பாவின் வலிமைவாய்ந்த நாடுகளுள் ஒன்றாகப் கருதப்பெற்றது. ஆப்சுபர்க்கு என்னும் பெயர் கொண்ட அரசக் குடும்பத்தினர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஆசுத்திரியாவை ஆண்டு, பெரும் பேரரசு ஒன்றினையும் நிலைநாட்டினர். இப்பேரரசு 1918-ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின்போது வீழ்ச்சியுற்றது. பின்னர் ஆசுத்திரியா குடியரசானது. இருப்பினும் பொருளாதார மந்தமும் அரசியல் குழப்பமும் மிகுந்திருந்தன. ஆனால், 1950-ஆம் ஆண்டிலிருந்து ஆசுத்திரியா தொழில் வளர்ச்சியுற்ற நாடாக உருமாறிப் படிப்படியாகப் பொருளாதார முன்னேற்றம் பெற்று வரும் நாடுகளுாள் ஒன்றாகத் திகழ்கிறது. இது வல்லரசுக் குழுக்களில் சேராமல் நடுநிலை வகிக்கிறது.{{nop}}<noinclude></noinclude> 3l1yzr36umd8jz3xoujfjhykp8h0mij 1944173 1944167 2026-06-09T16:21:35Z Sridevi Jayakumar 15329 1944173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆசுட்ராகான்|289|ஆசுத்திரியா}}</noinclude>புனைந்து தம் நாற்பத்திரண்டாம் வயதில் முது கன்னியாய் இறந்துவிட்டார். சிறு வயதில் இவர் எழுதியவற்றுடன் பதிப்பேறா இரு நூல்களும் உள. ஒன்று சூசான் சீமாட்டி (Lady Susan) என்பது. இது கடித வடிவில் அமைந்தது. மற்றொன்று, வாட்சன் குடும்பத்தினர் (The Watsons) என்னும் முடிவு பெறாக் சுதை. இவர் இறக்கும் போது, சான்டிடன் (Sanditon) என்ற தலைப்பில் முதல் நிலைக் குறிப்பு நிலையில் (Sketch) ஒரு நூலை விட்டுச் சென்றார். கிறித்தவக் குருமார் குடும்பத்தில் ஏழாம் குழந்தையாகப் பிறந்த இவர்தம் ஆறு அண்ணன்மார்களுள் இருவர் கடற்படையில் பெருந்தலைவர்களாக (Admirals) இருந்துள்ளனர். தங்கை காசாண்ட்ரா இவரைப் போலவே முதுகன்னியாகவே காலங் கழித்தார். சேன் ஆசுட்டின் பள்ளி சென்று பயிலாதவர்,{{Right|ந.ச.}} <section end="ஆசுட்டின், சேன்"/> <section begin="ஆசுட்ராகான்"/> {{dhr}} <b>ஆசுட்ராகான்</b> சோவியத்து உருசிய நாட்டின் தென்பகுதியில் வோல்கா ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு நகரம். ஆசுட்ராகான் (Astrakhan) கசிபியன் கடலுடனும், வோல்கா ஆற்றுத் துறை முகங்களுடனும் நல்ல நீர்த் தொடர்புகளைக் கொண்டுள்ளதால், சீரிய வாணிக மையமாக விளங்குகிறது. மீன்பிடித்தல் இங்கு நடைபெறும் முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். உப்பிட்டு உலர்த்திய உயர்தர மீன்வகையின் கருச் சினையும் ஆசுட்ராகான் என்னும் கவர்ச்சியான ஆட்டுத்தோலும் இப்பகுதியின் குறிப்பிடத்தக்க உற்பத்திப் பொருள்கள். <section end="ஆசுட்ராகான்"/> <section begin="ஆசுடா"/> {{dhr}} <b>ஆசுடா</b> வட இத்தாலியில் பீட்மாண்டில் உள்ள ஊர். தூரின் (Turin) என்ற நகருக்கு வடமேற்கில் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 550 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள நகரம். ஆல்பசு சிகரங்கள் முப்பக்கம் நிற்கும் பள்ளத்தாக்கில் உள்ள ஆசுட்டர் (Austor) நல்ல தட்பவெப்ப நிலைக்குப்பெயர் பெற்ற இடம். இங்கிருந்து பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்திற்கும் சுரங்கப் பாதைகள் செல்கின்றன. <section end="ஆசுடா"/> <section begin="ஆசுத்திரியா"/> {{dhr}} <b>ஆசுத்திரியா</b> நடு ஐரோப்பாவில் அழகிய மலைத்தொடர்களுக்கும் இயற்கைக் காட்சிகளுக்கும் பெயர்பெற்ற சிறு நாடு. உயர்ந்த ஆல்ப்சு மலைகளும் அந்நாட்டின் மேற்கிலும் தெற்கிலும் நடுவிலும் படர்ந்த மலையடிவாரங்களும் கண்கொள்ளாக் காட்சியாகும். பல பகுதிகளில் விரிந்து அகன்ற பசும் பள்ளத்தாக்குகள் மலைத்தொடரைப் பிரித்துள்ளன. கண்ணாடி போன்று தெளிந்த நீர் நிறைந்த ஏரிகளும், அடர்ந்த காடுகளும் இந்நாட்டைப் போர்வை மூடினாற்போன்று மூடியுள்ளன. ஆசுத்திரியா ஓர் உள்நாட்டுப்பகுதி; கடற்கரைகள் இல்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 315 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 110 |oTop = 52 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|ஆசுத்திரியா}} <b>எல்லைகள்</b>: ஆசுத்திரியாவின் மேற்கில் இலீச்டென்சுடீன் (Liechtenstein) நாடும் சுலிட்சர்லாந்தும் அமைந்துள்ளன. வடக்கில் மேற்குச் செருமனியும், செக்கோசுலோவாகியாவும் இத்தாலியும் இதன் எல்லைகள். <b>தலைநகர்</b>: ஆசுத்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா. அது தான்யூப் (Danube) ஆற்றங்கரையில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசுத்திரிய மக்களும் பெரும்பாலோர் மாநகரங்களிலும் நகரங்களிலும் வசிக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் ஐந்திலொரு பங்கினர் தலைநகரான வியன்னாவில் வாழ்கின்றனர். ஆசுத்திரியாவின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் நோக்குடன் பல இலட்சம் பயணியர் ஒவ்வோராண்டும் இந்நாட்டுற்கு வந்து செல்கின்றனர். ஆசுத்திரியா ஒருகாலத்தில் ஐரோப்பாவின் வலிமைவாய்ந்த நாடுகளுள் ஒன்றாகப் கருதப்பெற்றது. ஆப்சுபர்க்கு என்னும் பெயர் கொண்ட அரசக் குடும்பத்தினர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஆசுத்திரியாவை ஆண்டு, பெரும் பேரரசு ஒன்றினையும் நிலைநாட்டினர். இப்பேரரசு 1918-ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின்போது வீழ்ச்சியுற்றது. பின்னர் ஆசுத்திரியா குடியரசானது. இருப்பினும் பொருளாதார மந்தமும் அரசியல் குழப்பமும் மிகுந்திருந்தன. ஆனால், 1950-ஆம் ஆண்டிலிருந்து ஆசுத்திரியா தொழில் வளர்ச்சியுற்ற நாடாக உருமாறிப் படிப்படியாகப் பொருளாதார முன்னேற்றம் பெற்று வரும் நாடுகளுாள் ஒன்றாகத் திகழ்கிறது. இது வல்லரசுக் குழுக்களில் சேராமல் நடுநிலை வகிக்கிறது.{{nop}}<noinclude></noinclude> ph0rre8tvcc2e25zs85yqocsmjdcbko பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/323 250 620898 1944178 1869283 2026-06-09T16:24:44Z Sridevi Jayakumar 15329 1944178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுத்திரியா|297|ஆசுத்திரேலியா}}</noinclude>றிருந்த அரசியல் அமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றத் தொடங்கியது. ஆசுத்திரியாவில் 1945 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலை அடுத்து அங்குத் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்வரசாங்கத்தில் இரு கட்சியின் தலைவர்களும் பங்கு கொண்டனர். இவ்விரு கட்சிகளின் கூட்டாட்சி அரசாங்கத்தால் நாட்டில் நிலையான அரசியலுக்கு வழி பிறந்தது. வல்லரசுகளும் 1955-ஆம் ஆண்டு ஆசுத்திரியாவைக் கைவிட்டன. சுதந்திரத்தைப் பெறும் பொருட்டு ஆசுத்திரியா நடு நிலைமை நாடாக இருக்க ஏற்றுக்கொண்டது. ஆசுத்திரியா 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தது. ஆசுத்திரியாவில் 1966-ஆம் ஆண்டு வரை கூட்டாட்சி அரசாங்கங்களே நீடித்தன. அந்த ஆண்டில் மக்கள் கட்சியின் தலைவரான சோசபு கிளாசு (Josef Klaus) என்பார் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். பின்னர் 1970-ஆம் ஆண்டுத் தேர்தலில் சமதருமக் சுட்சிக்குப் (Socialist Party) பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டாலும் வலிமை மிகுந்த கட்சியாக மாறியது. அக்கட்சி, ஆசுத்திரியாவின் முதல் சமதரும் அரசாங்கத்தை நிலைநாட்டியது. புரூனோ கிரிசுக்கி (Bruno Kreisky) தலைமை அமைச்சரானார். சமதருமவாதிகள் 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று கட்சியை நிறுவினர், பின்னர் 1975-1979 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர்களே ஆட்சியைப் பிடித்தனர். ஆசுத்திரிய தொடர்ந்து நடுநிலை நாடாகவே திகழ்கிறது. அதன் தலைநகரான வியன்னாவில் ஐக்கிய நாடுகளின் இரு அமைப்புகள் இயங்குகின்றன. அவை (1) பன்னாட்டு அணுசக்தி நிறுவனம், (2) ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனம், ஐக்கிய நாடுகளின் மையம் 1979 இல் சொந்தக் கட்டடத்தையே வியன்னாவில் கட்டிக் கொண்டுள்ளது. இங்கு ஐக்கிய நாடுகளின் மாநாடுகள் பல கூடும். குர்ட்டு வால்தைம் (Kurt Waldheim) என்னும் ஆசுத்திரிய நாட்டு அறிஞர் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக 1972 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்மையில் அப்பதவியிலிருந்து ஒய்வுபெற்றார், சமதருமக்கட்சி 1982 இலும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு இன்று தொடர்ந்து பதவியில் உல்ளது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Leeper, Alexander W.A.,</b> A History of Mediaeval Austria. New York and London, 1941.<br> <b>Taylor, Alan J.P.,</b> The Habsburg Monarchy. 1809,1918, London, 1948.<br> <b>Taylor, Alan J.P,</b> A History of the Austrian Empire and Austria Hungary, London, 1948.<br> <b>Graf, Max.,</b> The Legend of a Musical City, New York, 1945. <section end="ஆசுத்திரியா"/> <section begin="ஆசுத்திரேலியா"/> {{dhr}} <b>ஆசுத்திரேலியா</b> ஒரு கண்டம். உலகில் ஒரு கண்டமே ஒரு நாடாக இருப்பது ஆசுத்திரேலியா (Australia) மட்டும்தான். பரப்பளவில் இது உலகில் ஆறாவது பெருநாடாகும். ஆனால், கண்டங்களில் மிகச்சிறியது இதுவே. இந்தியப் பெருங்கடலுக்கும் தென் பசிபிக்குப் பெருங்கடலுக்கும் இடையில் ஆசுத்திரேலியா அமைந்துள்ளது. ஆசுத்திரேலியா என்னும் பெயர் ஆசுட்ராலிசு (Australis) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ‘ஆசுட்ராலிசு’ என்றால் தெற்கு என்று பொருள். உலக உருண்டையின் தென்பாதியில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது போலும். ஆசுத்திரேலியா வறண்டதும், மக்கள் தொகை மிகக் குறைந்ததுமான நாடாகும். இக்கண்டம் தெற்கு வடக்காக 3153 கி.மீ. கிழக்கு மேற்காக 4005 கி.மீ. பரந்துள்ளது. தாசுமேனியாவை (Tasmania) உள்ளிட்ட இக்கண்டத்தின் பரப்பளவு 76,85,413 கி.மீ. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 323 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 140 |oTop = 255 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|ஆசுத்திரேலியா-அரசியால் பிரிவுகள்}} <b>இயற்கைப் பிரிவுகள்</b>: ஆசுத்திரேலியாவை மூன்று பெரும் இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.<noinclude> <b>வா.க. 2-38</b></noinclude> 25bdqsz8sz439svzkg3lenxilg2s0ca பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/334 250 620980 1944194 1876739 2026-06-09T16:35:43Z Sridevi Jayakumar 15329 1944194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|308|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்}}</noinclude>Fraser) என்பாரைத் தலைமை அமைச்சராக்கிச் சிக்கலைத் தீர்த்து வைத்தார். பிரேசர் முற்போக்குக் கட்சியைச் சார்ந்தவர். அக்கட்சி 1975, 1977-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றமையால், அவரே தொடர்ந்து தலைமை அமைச்சராக இருந்தார். சுரங்கத் தொழில் வளர்ச்சியுறுவதால் 1980-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆசுத்திரேலியா பொருளாதார முன்னேற்றம் பெறப் பெரும் வாய்ப்புள்ளது. உரேனியம் அங்குக் கிடைக்கும் விலைமதிப்பற்ற கனிப் பொருளாகும். வருங்காலத்தில் அத்தொழிலின் முன்னேற்றம் பற்றிக் கூறுவது எளிதன்று. அணு ஆயுதங்களை ஆசுத்திரேலியா உற்பத்தி செய்யாமையால், உரேனியம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இப்போது (1984) ஆசுத்திரேலியாவின் தலைமை அமைச்சராய் இருப்பவர் இராபர்ட்டு ஆக்கு (Robert Hawke) என்பவராவார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Appleyard, Reginald T.,</b>British Emigration to Australia, Toronto, 1964.<br> Commonwealth Scientific and Industrial Research Organization, The Australian Environment, 3rd Ed., Melbourne, 1960.<br> <b>Shann, E. O. G.,</b> An Economic History of Australia, Melbourne, 1963.<br> <b>Overacker, Lourise,</b> Australian Party Politics Melbourne, 1964.<br> <b>Scott, Sir Ernest,</b> A Short History of Australia, 7th.Ed., Oxford, 1947. <section end="ஆசுத்திரேலியா"/> <section begin="ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்"/> {{dhr}} <b>ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்</b>: ஆசியாவிற்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது ஆசுத்திரேலியா, இக்கண்டம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளில் இந்தியப் பெருங்கடலினாலும் கிழக்கில் தென் பசிபிக்குக் கடலினாலும் சூழப்பட்டுள்ளது. வளைதடி, கங்காரு என்ற பெயர்களைக் கேட்டவுடன் நம் நினைவிற்கு வருபவர் ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளாவர். அக்கண்டம் பிற கண்டங்களிலிருந்து தனித்து நிற்பதால், இவ்விடத்தில் மக்கள் குடியேற்றம் மிகத்தாமதமாக ஏற்பட்டது. கருப்புத் தோலினையுடைய ஆதிக்குடிகள் இக்கண்டத்தில் கடைசிப் பனியுகத்தில் குடியேறியிருக்கக் கூடும் என்பது கருதப்படுகிறது. இவர்கள் கருப்பு நிறத்துடனும், சராசரி உயரத்துடனும் திகழ்கிறார்கள். இவர்களின் உடலமைப்பு ஐரோப்பிய நீக்ரோக்கள், மெலனேசியர்கள், மங்கோலியர் முதலியோரினின்றும் மாறுபடுவதால் மானிடவியலார் இவ்வினத்தை “ஆசுத்திரலாயிடு” (Australoid) என்னும் தனிப் பெயரிட்டு அழைத்தனர். இவர்களின் தலைமுடி, அலை அலையாகவும் சுருண்டும் பொதுவாகக் கருத்த நிறத்துடனும் காணப்படுகிறது. இவர்கள் உயர்ந்த முன்நெற்றி, பருத்த புருவங்கள், உள் அடங்கிய பழுப்பு நிறக் கண்கள், அகன்ற தாடை எலும்புகள், சதைப்பற்றான உதடுகள் அகன்ற நாசித்துளை முதலிய உடற்கூறுகளைக் கொண்டுள்ளனர். ஆசுத்திரலாயிடு வகை, முதன் முதலில் எங்குத் தோன்றியது என்பதை அறிய முடியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இவ்வினமக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்திருந்து, பின்னர் மக்கள் பெருக்கத்தினாலோ முன்னேற்றமடைந்த மக்களின் செல்வாக்கினாலோ அங்கிருந்து இலங்கையிலும் மலாயாத் தீபகற்பத்திலும் குடியேறிப் பின்னர், கிழக்கிந்தியத் தீவுகளின் வழியாக ஆசுத்திரேலியாவை அடைந்தனர் என அறிஞர்கள் கருதுகின்றார்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 334 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 130 |oTop = 195 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|ஆசுத்திரேலிய ஆதிக்குடிகள்.}} ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளுள் உங்காரின்யுன், வொரோரா, நியுல் நியுல், கரட்செரி (வடமேற்கு ஆசுத்திரேலியா), அரண்டா (Aranta) (நடு ஆசுத்திரேலியா), இண்டவருந்தா அரபானா (தெற்கு ஆசுத்திரேலியா), விக்முன்கள், கபி, கமிலரொயி (கிழக்கு ஆசுத்திரேலியா) போன்ற பல வட்டார வகை வேறுபாடுகள் உள்ளன. எனினும் இவ்வினக்குழுக்கள் அனைத்தும் பொதுத் தன்மையினைக் கொண்டவை. ஆசுத்திரேலியா முழுமையிலும் பலதார மணம் காணப்படுகிறது. தந்தை அவரது மனைவியர்<noinclude></noinclude> 00fbcmblh1579c370dj8wu8ob1idocx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/336 250 620994 1944195 1876792 2026-06-09T16:42:47Z Sridevi Jayakumar 15329 1944195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|310|ஆசு துரை}}</noinclude>றினை அறிகிறான். ஏற்புச் சடங்கு செய்து கொள்ளும் இளைஞன்மீது கட்டுடல் உள்ளோர், தங்கள் இரத்தத்தை ஊற்றுவதன் வாயிலாக அவனுக்கு எதையும் தாங்கும் இதயத்தையும் பெரியோர் இடத்தையும் அளிக்கின்றனர். அச்சம் தரும் ஒலியினூடே வலிதரும் வகையில் முன்பல்லைத் தட்டி எடுப்பதும், உடலில் கற்கத்திகளைக் கொண்டு கீறி உண்டாக்கும் வடுக்களும். அவன் அவ்வினத்தைச் சார்ந்தவன் என்பதையும், அவ்வினத்திற்கு அவன் செய்ய வேண்டிய கடமையினையும் வலியுறுத்துகின்றன. முழுமையாக ஏற்புச் சடங்கினைப் பெற்றவர் மட்டுமே இதில் கலந்து கொள்ளவியலும். இச்சடங்கின் மூலம் இயற்கை வளம் மிகுந்து, எல்லாப் பருவங்களிலும் வளம் பெருகும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். கங்காரு வேட்டைக்குச் செல்லும் முன்னரும் பின்னரும் ஒரு சடங்கினைச் செய்கின்றனர். இதனைத் ‘கங்காருச் சடங்கு’ என்கின்றனர். இது போன்றே வறட்சியின்போது மழைதரும் சடங்கினை மேற்கொள்கின்றனர். ஆதிக்குடிகளின் எண்ணிக்கை, கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அங்குக் குடியேறிய ஐரோப்பியருடன் செய்த போரினாலும், பெரியம்மை, மேக நோய் ஆகியவற்றாலும் குறைந்தது. அவர்கள், தங்கள் பண்பாட்டுப் பெருமையினை உணராத ஐரோப்பியரால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டு நிலத்தையும் வாழிடங்கனையும் இழந்து ஒருவித மனநோயால் தாக்கப்பட்டனர். அங்கு 1930-ஆம் ஆண்டு மக்கள் கணிப்பின்படி 61,000 கலப்பற்ற ஆகிக்குடிகளும் 18,000 கலப்பு ஆதிக்குடிகளும் மட்டுமே எஞ்சினர், பொதுக்குடி ஒப்பந்தத்தின் விளைவாக 1967-ஆம் ஆண்டில், ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. இவர்களிடையே பெரும்பாலும் காணப்பட்ட குடிப்பழக்கம், ‘திராகோமா’ என்னும் கண்நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்கான நிதியொன்றும் அமைக்கப்பட்டது. முற்போக்கு அரசாங்கத்தால் 1977-ஆம் ஆண்டு மே மாதம் ஆதிக்குடிகள் நலனுக்காக மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இன்று ஆசுத்திரேலியாவிலுள்ள 1,35,000 ஆதிக்குடிகள், மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமேயாவர். இதில் 45,000 பேர் மட்டுமே கலப்பற்ற ஆதிக்குடிகளாவர், எனினும் இந்த ஆதிக்குடிகளுன் முதிய தலைமுறையினரும் நாட்டுப் புறங்களில் வாழ்வோரும் இன்னும் தம் பண்பாட்டுப் பெருமையினைப் பாதுகாத்து வருகின்றனர்.{{Right|ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Loffler, Race and Warner,</b> The Australian People Hutchinson Group, Pvt., Ltd., Victoria, 1977.<br> <b>Elkin A.P.,</b> The Australian Aborigines, Halstead Press, Sydney, 1956. <section end="ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்"/> <section begin="ஆசுதுருபல்"/> {{dhr}} <b>ஆசுதுருபல்</b> கார்த்தசீனியப் படைத்தலைவர். இவர் ஆமில்கர் பார்க்காவின் மருமகன்; ஆமில்கர் கி.மு. 229 இல் நீரில் மூழ்கி இறந்துபோனபிறகு, இசுபெயினில் கார்த்தேசின் படைகளின் தலைவரானார். அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி இசுபெயினில் கார்த்தசீனியரின் அதிகாரத்தையும் செல்வத்தையும் பெருக்கிக் கொண்டார். புதிய கார்த்தேசு (Carthage) நகரத்தை அமைத்தவரும் இவரே. உரோமானியருடன் கி.மு. 226-இல் உடன்படிக்கை செய்து கொண்டு இசுபெயினில் தற்காலிகமாக உரோமானிய விரிவை நிறுத்தினார். ஆசு துருபல் (Hasdrubal) கி.மு. 221-இல் கொலை செய்யப்பட்டார். மற்றொரு ஆசு துருபல், ஆமில்கரின் மகனும் ஆனிபாலின் தம்பியும் ஆவார். இரண்டாம் பியுனிக்குப்போர் தொடங்கிய போது அவர் இசுபெயினில் தங்கியிருந்தார். அப்போர் கார்த்தேசுக்கும் உரோமாபுரிக்குமிடையே (கி.மு. 218-201) நடந்தது. இசுபெயினில் தங்கி அங்குப் படை வீரர்களையும் பொருளையும் திரட்டி, ஆனிபாலின் இத்தாலியப் படையெடுப்பிற்கு உதவினார். அவர் கி.மு. 207-இல் காலமானார். <section end="ஆசுதுருபல்"/> <section begin="ஆசுதுரை"/> {{dhr}} <b>ஆசுதுரை</b>: இராபர்ட்டு வில்லியம் தெசுட்கோட் ஆசு (Robert William Diestcouat Ashe) திருநெல்வேலியின் மாவட்ட ஆட்சியாளராக (Collector) இருந்தவர். வாஞ்சிநாதன் என்ற தமிழ்நாட்டுப் புரட்சிவீரர் 1911-ஆம் ஆண்டு மணியாச்சிப் புகைவண்டிச் சந்திப்பில் இவரைச் சுட்டுக் கொன்றார். இவர் 1911-ஆம் ஆண்டு சூன் 19-ஆம் நாள் முற்பகல் 11 மணி அளவில் தம் மனைவியுடன் திருநெல்வேலியிலிருந்து மணியாச்சிச் சந்திப்பு வந்து சேர்ந்தார். அங்கு அவர்கள் தூத்துக்குடி விரைவு வண்டியை எதிர்பார்த்துக் கோடைக்கானல் போகக் காத்திருந்தார்கள். மனைவியை முதல் வகுப்புப் பெட்டியில் ஏற்றிவிட்டு மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் மேடையில் உலவிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆசு துரையின் உடல் பாளையங்கோட்டை ஆங்கிலத் திருச்சபைக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவுத் தூணும் எழுப்பப் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude> r2ul9xuer3g61yiwhnw5tsoptia27ih 1944196 1944195 2026-06-09T16:44:33Z Sridevi Jayakumar 15329 1944196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|310|ஆசு துரை}}</noinclude>றினை அறிகிறான். ஏற்புச் சடங்கு செய்து கொள்ளும் இளைஞன்மீது கட்டுடல் உள்ளோர், தங்கள் இரத்தத்தை ஊற்றுவதன் வாயிலாக அவனுக்கு எதையும் தாங்கும் இதயத்தையும் பெரியோர் இடத்தையும் அளிக்கின்றனர். அச்சம் தரும் ஒலியினூடே வலிதரும் வகையில் முன்பல்லைத் தட்டி எடுப்பதும், உடலில் கற்கத்திகளைக் கொண்டு கீறி உண்டாக்கும் வடுக்களும். அவன் அவ்வினத்தைச் சார்ந்தவன் என்பதையும், அவ்வினத்திற்கு அவன் செய்ய வேண்டிய கடமையினையும் வலியுறுத்துகின்றன. முழுமையாக ஏற்புச் சடங்கினைப் பெற்றவர் மட்டுமே இதில் கலந்து கொள்ளவியலும். இச்சடங்கின் மூலம் இயற்கை வளம் மிகுந்து, எல்லாப் பருவங்களிலும் வளம் பெருகும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். கங்காரு வேட்டைக்குச் செல்லும் முன்னரும் பின்னரும் ஒரு சடங்கினைச் செய்கின்றனர். இதனைத் ‘கங்காருச் சடங்கு’ என்கின்றனர். இது போன்றே வறட்சியின்போது மழைதரும் சடங்கினை மேற்கொள்கின்றனர். ஆதிக்குடிகளின் எண்ணிக்கை, கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் அங்குக் குடியேறிய ஐரோப்பியருடன் செய்த போரினாலும், பெரியம்மை, மேக நோய் ஆகியவற்றாலும் குறைந்தது. அவர்கள், தங்கள் பண்பாட்டுப் பெருமையினை உணராத ஐரோப்பியரால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டு நிலத்தையும் வாழிடங்கனையும் இழந்து ஒருவித மனநோயால் தாக்கப்பட்டனர். அங்கு 1930-ஆம் ஆண்டு மக்கள் கணிப்பின்படி 61,000 கலப்பற்ற ஆகிக்குடிகளும் 18,000 கலப்பு ஆதிக்குடிகளும் மட்டுமே எஞ்சினர், பொதுக்குடி ஒப்பந்தத்தின் விளைவாக 1967-ஆம் ஆண்டில், ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. இவர்களிடையே பெரும்பாலும் காணப்பட்ட குடிப்பழக்கம், ‘திராகோமா’ என்னும் கண்நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்கான நிதியொன்றும் அமைக்கப்பட்டது. முற்போக்கு அரசாங்கத்தால் 1977-ஆம் ஆண்டு மே மாதம் ஆதிக்குடிகள் நலனுக்காக மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இன்று ஆசுத்திரேலியாவிலுள்ள 1,35,000 ஆதிக்குடிகள், மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமேயாவர். இதில் 45,000 பேர் மட்டுமே கலப்பற்ற ஆதிக்குடிகளாவர், எனினும் இந்த ஆதிக்குடிகளுன் முதிய தலைமுறையினரும் நாட்டுப் புறங்களில் வாழ்வோரும் இன்னும் தம் பண்பாட்டுப் பெருமையினைப் பாதுகாத்து வருகின்றனர்.{{Right|ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Loffler, Race and Warner,</b> The Australian People Hutchinson Group, Pvt., Ltd., Victoria, 1977.<br> <b>Elkin A.P.,</b> The Australian Aborigines, Halstead Press, Sydney, 1956. <section end="ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்"/> <section begin="ஆசுதுருபல்"/> {{dhr}} <b>ஆசுதுருபல்</b> கார்த்தசீனியப் படைத்தலைவர். இவர் ஆமில்கர் பார்க்காவின் மருமகன்; ஆமில்கர் கி.மு. 229 இல் நீரில் மூழ்கி இறந்துபோனபிறகு, இசுபெயினில் கார்த்தேசின் படைகளின் தலைவரானார். அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி இசுபெயினில் கார்த்தசீனியரின் அதிகாரத்தையும் செல்வத்தையும் பெருக்கிக் கொண்டார். புதிய கார்த்தேசு (Carthage) நகரத்தை அமைத்தவரும் இவரே. உரோமானியருடன் கி.மு. 226-இல் உடன்படிக்கை செய்து கொண்டு இசுபெயினில் தற்காலிகமாக உரோமானிய விரிவை நிறுத்தினார். ஆசு துருபல் (Hasdrubal) கி.மு. 221-இல் கொலை செய்யப்பட்டார். மற்றொரு ஆசு துருபல், ஆமில்கரின் மகனும் ஆனிபாலின் தம்பியும் ஆவார். இரண்டாம் பியுனிக்குப்போர் தொடங்கிய போது அவர் இசுபெயினில் தங்கியிருந்தார். அப்போர் கார்த்தேசுக்கும் உரோமாபுரிக்குமிடையே (கி.மு. 218-201) நடந்தது. இசுபெயினில் தங்கி அங்குப் படை வீரர்களையும் பொருளையும் திரட்டி, ஆனிபாலின் இத்தாலியப் படையெடுப்பிற்கு உதவினார். அவர் கி.மு. 207-இல் காலமானார். <section end="ஆசுதுருபல்"/> <section begin="ஆசுதுரை"/> {{dhr}} <b>ஆசுதுரை</b>: இராபர்ட்டு வில்லியம் தெசுட்கோட் ஆசு (Robert William Diestcouat Ashe) திருநெல்வேலியின் மாவட்ட ஆட்சியாளராக (Collector) இருந்தவர். வாஞ்சிநாதன் என்ற தமிழ்நாட்டுப் புரட்சிவீரர் 1911-ஆம் ஆண்டு மணியாச்சிப் புகைவண்டிச் சந்திப்பில் இவரைச் சுட்டுக் கொன்றார். இவர் 1911-ஆம் ஆண்டு சூன் 19-ஆம் நாள் முற்பகல் 11 மணி அளவில் தம் மனைவியுடன் திருநெல்வேலியிலிருந்து மணியாச்சிச் சந்திப்பு வந்து சேர்ந்தார். அங்கு அவர்கள் தூத்துக்குடி விரைவு வண்டியை எதிர்பார்த்துக் கோடைக்கானல் போகக் காத்திருந்தார்கள். மனைவியை முதல் வகுப்புப் பெட்டியில் ஏற்றிவிட்டு மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் மேடையில் உலவிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆசு துரையின் உடல் பாளையங்கோட்டை ஆங்கிலத் திருச்சபைக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவுத் தூணும் எழுப்பப் பெற்றுள்ளது. <section end="ஆசுதுரை"/> {{nop}}<noinclude></noinclude> lsuznrtxmv0t66c11hckz8aq8p28668 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/337 250 620996 1944197 1877036 2026-06-09T16:45:35Z Sridevi Jayakumar 15329 1944197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுதோசு முகர்சி|311|}}</noinclude><section begin="ஆசுதோசு முகர்சி"/> {{dhr}} <b>ஆசுதோசு முகர்சி (கி.பி.1864-1924)</b> என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கல்வியாளர்; நீதியாளர். இவர் வங்காள மாநிலத்தில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி, இந்திய மறுமலர்ச்சிக்கே வழிகாட்டியாக உயர்ந்திருந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் தேசிய இயக்கத்தில் தீவிரவாதிகளின் தீரச் செயல்கள் மிகுந்திருந்தன. அக்காலம்தான் வங்காளப் பிரிவினைக் காலம். அதுவரை ஆங்கில இந்தியப் பேரரசின் தலைநகராக இருந்த கல்கத்தா 1912-ஆம் ஆண்டில் மாற, புதுதில்லி இந்தியப் பேரரசின் தலைநகராக உயர்வு பெற்ற காலம். சுதேசி இயக்கம், மகாத்மா காந்தியின் தேசியத் தலைமையின் தொடக்கம், அவரது ஒத்துழையாமை, வரிகொடா இயக்கம் ஆகியவற்றின் தொடக்கக் காலம். அது இந்திய வரலாற்றின் எழுச்சி மிகு காலமும் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில்தான் ஆசுதோசு முகர்சி (Astosh Mukerjee) கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏறத்தாழ இருபது ஆண்டுக்காலம் (1904-1923) நீதிபதியாகவும், அதே காலத்தில் இருமுறை (1906-1914, 1921-1922) கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் அரும்பணியாற்றினார். மேலும் கி.பி. 1899 லிருந்து 1903-ஆம் ஆண்டு வரை வங்காளச் சட்டமன்றம், பேரரசுச் சட்டமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர்தம் சிந்தனையும் செயல்களும் தொடக்க முதலே இந்திய உயர்கல்வியினைத் திருத்தியமைத்து, அது இந்தியரனைவருக்கும் உகந்ததாகச் செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டிருந்தன. இரவின் முடிவில் இளஞாயிறு எழுந்து ஒளிபரப்புவது போன்று, அறிவொளி பெற்ற பின்னர் அரசியல் விழிப்புணர்வும், சுதந்திர வேட்கையும் எழுமென இவர் உறுதியாக நம்பினார். அரசியல்வாதிகளின் தன்னலம், அரசு அதிகாரிகளின் அதிகாரத் தலையீடு போன்றவையின்றிக் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் கல்விமுறைதான் இளைஞர்களிடையே விடுதலை உணர்வினைத் தட்டியெழுப்பித் தேசிய உணர்வினை ஊட்டுவிக்கும். எனவே, அத்தகு சிறப்பு நிலை உருவாக்கப்பட ஆசுதோசு முகர்சி நான்கு வழிகளைக் குறிப்பிட்டிருந்தார். 1) அதுவரை உயர் குலத்தோரின் செல்வந்தரின் தனிச்சொத்தாக இருந்த உயர் கல்வித் துறையின் கதவுகள் முழுவதுமாகத் திறக்கப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும். உயர் கல்வி என்ற நிலை ஏற்பட வேண்டும். இந்தியச் சமுதாயத்தில் புரையோடியிருந்த மூடப்பழக்க வழக்கங்கள் அகற்றப்பட வேண்டும். இவையே இந்தியாவில் புத்தொளி பிறக்க வழி வகை செய்யும். 2) மேலை நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களும் திருத்தியமைக்கப்பட வேண்டும். 3) தேர்வுகள் நடத்திப் பட்டங்களை மட்டுமே வழங்கும் நிலையினை மாற்றிக் கற்பித்தல், ஆராய்தல் என்ற பணிகளை உள்ளடக்கியதாகக் கல்கத்தாப் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும். 4) அதிகார வருக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரமாகப் பாடத் திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்தும் உரிமையினைப் பல்கலைக்கழகங்கள் பெற வேண்டும் என்பன அவையாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 337 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 210 |oTop = 40 |oLeft = 198 |Location = center |Description = }} {{center|ஆசுதோசு முகர்சி}} இந்து சமய மரபுகளில் பற்றுறுதி கொண்டிருந்த அந்தணர் குலத்தில் தோன்றி ஆசுதோசு முகர்சி இந்தியச் சமுதாயப் பணிகளை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்டவராகத் திகழ்ந்தார். திருமணத்தின் போது சீதனம் வாங்கும் கொடுமையினைச் சாடுவதற்கு இவரே எடுத்துக்காட்டாக விளங்கினார். விதவைகள் மறுமணத் திட்டத்தினை ஆதரித்தார். குழந்தைப் பருவத்திலேயே மணந்து கைம்பெண்ணாகி விட்ட தம் செல்வ மகளுக்கு மறுமணம் செய்வித்தார். தீண்டாமை ஒழிப்பினையும் முழுமனத்தோடு ஆதரித்தார். மற்றவர் இவற்றைப் பற்றிச்-<noinclude></noinclude> dj4pi0s6h2aco4qkbumot31glvtkupn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/340 250 620999 1944199 1877074 2026-06-09T16:49:08Z Sridevi Jayakumar 15329 1944199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுதோசு முகர்சி|314|ஆசுமூர் - கார்ட்டியர் தீவுகள்}}</noinclude>துணைவேந்தர் பதவியினின்று விலகிய பின்னரும் ஆசுதோசின் கல்விப் பணி மேலும் தொடர்ந்தது. இவரது, கல்விப்பணியின் மேன்மையினை உணர்ந்த ஆங்கில அரசு, பலத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் இவரைச் ‘சாட்லர் பல்கலைக்கழகக் குழு’ (1917)வின் உறுப்பினராக்கியது. இலிட்டன் பிரபுவுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகத் துணைவேந்தர் பதவியினை உதறித் தள்ளிய பின்னர், அரசியலில் ஈடுபட்டு, அநீதிகளை எதிர்க்கும் தமது போராட்டப் பணியினைத் தொடர எண்ணிணார். செல்வர்கள் மட்டுமே அரசியலில் செல்வாக்குப் பெற முடியும் என்ற நிலையிருந்தபோது, அதற்கான தகுதியோ மனப்பாங்கோ தம்மிடம் இல்லாமையால், ஆசுதோசு அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. இவர் 1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் நாள் நீதிபதி பதவியினின்றும் ஓய்வு பெற்றுப் பின்னர் 1924-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் நாள் இவ்வுலக வாழ்வினைத் துறந்தார். ஆசுதோசு முகர்சி பெற்ற சிறப்புகள் பின்வருமாறு: :1. ஆங்கில அரசிடமிருந்து ‘சர்’ பட்டம் பெற்றார் (1911). :2. கல்கத்தா ஆசியக் கழகத்தின் தலைவர். :3. இலண்டன் நகரிலிருந்த பேரரசு ஆசியக் கழகத்தின் உறுப்பினர். :4. இலண்டன், எடின்பரோ, பாரிசு, பாலர்மோ, நியூயார்க்குப் போன்ற நகரங்களின் கணிதக் கழகங்களில் உறுப்பினர். :5. எடின்பரோ அரசக்கழகத்தின் உறுப்பினர். :6. அரச வானியல் கழக உறுப்பினர். :7. அயர்லாந்து அரசக் கழக உறுப்பினர். :8. இந்திய அருங்காட்சியக ஆட்சிக் குழு உறுப்பினர். :9. கல்கத்தாக் கணிதக் கழகத்தினைத் தோற்றுவித்துப் பல ஆண்டுகள் தலைமையேற்று நடத்தியவர். :10. இந்திய-இலங்கைப் பௌத்த சமய நிலையங்கள் வழங்கிய ‘சம்புத காம சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தினைப் பெற்றவர். நீதித்துறைத் தீர்ப்புகள், பல கழகங்களில் ஆற்றிய சொற்பெருக்குகள், இந்திய, அயல்நாட்டு இதழ்களுக்கு எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் ஆகியவற்றைத் தவிர மேலும் சில நூல்களையும் ஆசுதோசு முகர்சி எழுதியுள்ளார்.{{Right|வ.இரா.}} <section end="ஆசுதோசு முகர்சி"/> <section begin="ஆசுபெட்டு"/> {{dhr}} <b>ஆசுபெட்டு</b>: கருநாடக மாநிலத்துப் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள நகரம். இவ்வூரில் இருப்புப் பாதை நிலையம் ஒன்று உள்ளது. பெல்லாரியிலிருந்து ஏறத்தாழ 60 கி.மீ. தொலைவிலுள்ளது ஆசுபெட்டு (Hospet). இவ்வூருக்கு 10 கி.மீ. வடமேற்கில் விசயநகரப் பேரரசின் அழிவுச் சின்னங்களைக் கொண்டு விளங்கும் அம்பி (Hampi) அமைந்துள்ளது. <section end="ஆசுபெட்டு"/> <section begin="ஆசுபேசியா"/> {{dhr}} <b>ஆசுபேசியா</b> ஆதன்சின் அரசியல் வல்லுநராகிய பெரிக்கிளிசின் (Pericles) மனைவி. கிரீசு நாட்டில் மயிலிடசில் (Miletas) பிறந்தவள் (கி.மு. 500). ஆசுபேசியா (Aspasia) பெரிக்கிளிசுடன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வாழ்ந்தாள், பெரிக்கிளிசுக்குப் புத்துணர்ச்சியையும் மனத்திட்பத்தையும் அளித்தவள் ஆவாள். எனினும் இவர்களின் திருமணத்தை அதீனீயச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிக்கிளிசின் முதல் மனைவிக்குப் பிறந்த இரு பிள்ளைகளும் காலமானபோது, ஆசுபேசியாவுக்குப் பிறந்த மகன் ஆதன்சின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆதன்சில் பெண்கள் குடும்பப் பொறுப்பை நிருவகிப்பவர்கள்: பொது வாழ்வில் ஈடுபாடு கொள்வதில்லை. ஆனால் ஆசுபேசியா புதிய கருத்துகளைக் கொண்டவன்; பொது வாழ்வில் பெரிதும் ஈடுபாடு கொண்டவள். சாக்ரட்டீசு அவளை மதித்தார். அவர்தம் சீடர்கள் ஆசுபேசியாவின் நினைவைச் சாகாமல காத்தனர். அவள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் தள்ளப்பட்டுக் குற்றமற்றவள் என்று நிரூபிக்கப்பட்டாள். பெரிக்கிளிசு காலமான பின்னர் ஆசுபேசியா இலைசிக்கிளிசு (Lysicles) என்னும் கால்நடை வணிகரைக் கணவனாக அடைந்து தம் இரண்டாம் மகனைப் பெற்றாள். <section end="ஆசுபேசியா"/> <section begin="ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்"/> {{dhr}} <b>ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்</b> ஆசுத்திரேலியாவுக்குச் சொந்தமான நிலப்பகுதி. இந்தியப் பெருங்கடலில் ஆசுத்திரேலியாவின் வடமேற்குக் கடற்கரையையொட்டியுள்ள ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள் (Ashmore Cartier Islands) ஆசுத்திரேலியாவிலிருந்து 282 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஆசுமூர்த் (Ashmore) தீவுக் கூட்டமும், கார்ட்டியர் (Cartier) தீவும் அடங்கும். ஆசுமூர்த் தீவுக் கூட்டத்திற்கு மத்திய கிழக்கு, மேற்குத் தீவுகள் என்ற பெயரும் உண்டு. இத்தீவுகளில் மக்கள் வாழவில்லை. மொத்தப் பரப்பளவு 199 ச.கி.மீ. இங்கிலாந்து கி.பி. 1878-இல் ஆசுமூர்த் தீவுகளையும், 1909-இல் கார்ட்டியர் தீவையும் உரிமை கொண்டாடியது. இவையனைத்தையும் ஆசுத்திரேலியாவுக்கு (Australia) 1931 இல் ஆங்கிலேயர் கொடுத்து விட்டனர். வடக்கு ஆசுத்திரேலிய மாநிலம் 1938 இல் இவற்றைக் கைப்பற்றிக் கொண்டது. ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள் 1978-இல் காமன்வெல்த்து நிறுவனத்தின் நேரடிப்-<noinclude></noinclude> 63l6rgbhv9fbibmsjhon1hptrzfjdsn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/341 250 621000 1944356 1877075 2026-06-10T03:45:00Z Sridevi Jayakumar 15329 1944356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுலோ|315|ஆசூர்பானிபல்}}</noinclude>பொறுப்பில் வந்தன. ஆசுத்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்தோனேசியா இத்தீவுகளில் மீன் பிடிக்கும் உரிமையையும், தண்ணீர் கொள்ளும் உரிமையையும் பெற்றுள்ளது. ஆசுத்திரேலியக் கப்பற் படையைச் சார்ந்த கப்பல்களும் விமானங்களும் அவ்வப்போது இத்தீவுகளில் ஆய்வு நடத்துகின்றன. <section end="ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்"/> <section begin="ஆசுலோ"/> {{dhr}} <b>ஆசுலோ</b> நார்வே நாட்டின் தலைநகரம். ஐரோப்பாக் கண்டத்தின் வடக்கிலுள்ள இசுகாண்டிநேவியத் (Scandinaviya) தீபகற்பத்தில் நார்வே, சுவீடன் என்னும் இரு நாடுகள் உள்ளன. நான்காம் கிறித்தியன் என்னும் அரசரால் இந்நகரம் கி.பி. 1624-இல் புதுப்பிக்கப்பட்டது, இதை 1925-ஆம் ஆண்டு வரை கிறித்தியானியா (Christiania) என்று குறிப்பிட்டனர். இக்காலத்தில் நார்வே மக்கள் தங்கள் தாய்மொழிச் சொல்லாகிய ஆசுலோ (Oslo) என்னும் பெயராலேயே இந்நகரைக் குறிப்பிடுகிறார்கள். வட கடலையும் பால்டிக்குக் கடலையும் இணைக்கும் நீர்ப்பிரிவு இசுகாகராக் (Skagerrak) கிலிருந்து தென் கிழக்காக ஆசுலோ நீர்த்துறையின் முகப்பில் இந்நகரம் அமைந்துள்ளது. ஆசுலோ நார்வே நாட்டின் பொருளாதாரத்திற்கும் போக்குவரத்திற்கும் பண்பாட்டிற்கும் மையமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 341 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 115 |oTop = 230 |oLeft = 12 |Location = center |Description = }} {{center|ஆசுலோ நகரம்}} நார்வேயின் தொன்மையான பல்கலைக்கழகம் ஆசுலோவில்தான் அமைக்கப் பெற்றுள்ளது. அதனைப் பிரடெரிசானாப் பல்கலைக்கழகம் என்பர். இந்நகரம் இரண்டாம் உலகப் போரின் போது செருமானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. போருக்குப் பின்னர் விடுதலை பெற்றது. மக்கள் தொகை 4,50,386(1982). <b>ஆசூர் பானிபல்</b>: அசிரிய நாட்டின் கடைசி மன்னர். இவர் தந்தையின் பெயர் இசார் ஆடோன் (Esar Haddon), இவர் கி.மு. 668-ஆம் ஆண்டில் அசிரிய நாட்டு மன்னராக முடி சூட்டிக் கொண்டு கி.மு. 627-ஆம் ஆண்டுவரை அசிரியாவின் பேரரசராக ஆட்சி செய்தார். இவரை அசுர் பானிபல் என்றும் அழைப்புதுண்டு. இவர் கொடுங்கோலாட்சிக்கும், வீரத்திற்கும் வெற்றிக்கும் பெயர் பெற்றவர். இவரது தலைநகர் நினேவா (Ninevah) ஆகும். இவருடைய ஆட்சியின்போது தம் நாட்டின் செல்வாக்கை எகிப்தில் நிலைநாட்டியதும், பாபிலோனை ஒடுக்கியதும் சிறப்புமிகு சாதனைகளாக அமைந்தன. பின்னர்ப் பாரசீகமும் சிரியாவும் பாலசுத்தீனமும் (Palestine) இவரது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டன. பினீசியாவைச் சேர்ந்த ஒரு சில நகரங்களும் ஆசியாமைனர் பகுதியைச் சேர்ந்த பல மாநிலங்களும் இவரது தலைமைக்குப் பணிந்தன. இவரை யூதர்கள் ‘அசுனாப்பர்’ (Asnapper) என்ற பெயராலும், கிரேக்கர்கள் ‘சர்தானாபாலசு’ (Sardanapallos) என்ற பெயராலும், உரோமர்கள் ‘சர்தானாபாலுசு’ (Sardanapalus) என்ற பெயராலும் குறிப்பிடுவர். இவரது ஆட்சிக்குப் பின்னர் இவர் பிள்ளைகள் ஆசூர்-எதிலிலானி (Ashur-Etililani), சின்-சார்-இசுகுன் (Sin-Shar-Ishkun) ஆகியோர் போதிய திறமையின்மையின் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே பழம்பெருமையை இழந்த நிலையில் எங்கள் ஆட்சி அழியக் காரணமாகி விட்டார்கள். எனவே கி.மு. 612-ஆம் ஆண்டில் பாபிலோனியர்களும் சித்தியக் குடியினரும் (Seythians), மீட்சுக் குடியினரும் (Medes) ஒரு கூட்டணியை அசிரியாவுக்கு எதிராக அமைத்துப் படையெடுத்து நினேவாவை முற்றுகையிட்டு, அசிரியப் பேரரசைச் சூறையாடியதோடு மக்களையும் அடிமைப்படுத்தினர். ஆசூர் பானியல் (Ashur Banipal) ஒரு சிறந்த கலைஞர். பாபிலோனியா, சுமேரியா, அசிரியா போன்ற பண்டைய நாகரிகங்களைச் சேர்ந்த பல்வகை எழுத்து முறைகளைத் தம் அரண்மனையிலே வைத்துப் பாதுகாத்தார். களிமண் வரைபட்டித் தொகுதிகளைக் (Tablets) கொண்டே ஒரு நூல் நிலையத்தையும் அமைத்தார். அந்த நூல் நிலையம் இன்று ஆங்கில அருங்காட்சியகத்தில் உள்ளது. மெசபொடோமியாவின் பண்டைய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவதற்கு இந்த நூல் நிலையம் தான் சிறந்த சான்றுகளை அளிக்கிறது. ஆசூர் பானிபல் இலக்கியத் துறைக்கும் கட்டிடக் கலைக்கும் அறிவியல் துறைக்கும் வேண்டிய அரசு ஆதரவைத் தந்தவர்.{{nop}}<noinclude></noinclude> 0jda2f5ox1j11y0kjklfs0zcz4jl8az 1944357 1944356 2026-06-10T03:46:09Z Sridevi Jayakumar 15329 1944357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆசுலோ|315|ஆசூர்பானிபல்}}</noinclude>பொறுப்பில் வந்தன. ஆசுத்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்தோனேசியா இத்தீவுகளில் மீன் பிடிக்கும் உரிமையையும், தண்ணீர் கொள்ளும் உரிமையையும் பெற்றுள்ளது. ஆசுத்திரேலியக் கப்பற் படையைச் சார்ந்த கப்பல்களும் விமானங்களும் அவ்வப்போது இத்தீவுகளில் ஆய்வு நடத்துகின்றன. <section end="ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்"/> <section begin="ஆசுலோ"/> {{dhr}} <b>ஆசுலோ</b> நார்வே நாட்டின் தலைநகரம். ஐரோப்பாக் கண்டத்தின் வடக்கிலுள்ள இசுகாண்டிநேவியத் (Scandinaviya) தீபகற்பத்தில் நார்வே, சுவீடன் என்னும் இரு நாடுகள் உள்ளன. நான்காம் கிறித்தியன் என்னும் அரசரால் இந்நகரம் கி.பி. 1624-இல் புதுப்பிக்கப்பட்டது, இதை 1925-ஆம் ஆண்டு வரை கிறித்தியானியா (Christiania) என்று குறிப்பிட்டனர். இக்காலத்தில் நார்வே மக்கள் தங்கள் தாய்மொழிச் சொல்லாகிய ஆசுலோ (Oslo) என்னும் பெயராலேயே இந்நகரைக் குறிப்பிடுகிறார்கள். வட கடலையும் பால்டிக்குக் கடலையும் இணைக்கும் நீர்ப்பிரிவு இசுகாகராக் (Skagerrak) கிலிருந்து தென் கிழக்காக ஆசுலோ நீர்த்துறையின் முகப்பில் இந்நகரம் அமைந்துள்ளது. ஆசுலோ நார்வே நாட்டின் பொருளாதாரத்திற்கும் போக்குவரத்திற்கும் பண்பாட்டிற்கும் மையமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 341 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 115 |oTop = 230 |oLeft = 12 |Location = center |Description = }} {{center|ஆசுலோ நகரம்}} நார்வேயின் தொன்மையான பல்கலைக்கழகம் ஆசுலோவில்தான் அமைக்கப் பெற்றுள்ளது. அதனைப் பிரடெரிசானாப் பல்கலைக்கழகம் என்பர். இந்நகரம் இரண்டாம் உலகப் போரின் போது செருமானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. போருக்குப் பின்னர் விடுதலை பெற்றது. மக்கள் தொகை 4,50,386(1982). <section end="ஆசுலோ"/> <section begin="ஆசூர் பானிபல்"/> {{dhr}} <b>ஆசூர் பானிபல்</b>: அசிரிய நாட்டின் கடைசி மன்னர். இவர் தந்தையின் பெயர் இசார் ஆடோன் (Esar Haddon), இவர் கி.மு. 668-ஆம் ஆண்டில் அசிரிய நாட்டு மன்னராக முடி சூட்டிக் கொண்டு கி.மு. 627-ஆம் ஆண்டுவரை அசிரியாவின் பேரரசராக ஆட்சி செய்தார். இவரை அசுர் பானிபல் என்றும் அழைப்புதுண்டு. இவர் கொடுங்கோலாட்சிக்கும், வீரத்திற்கும் வெற்றிக்கும் பெயர் பெற்றவர். இவரது தலைநகர் நினேவா (Ninevah) ஆகும். இவருடைய ஆட்சியின்போது தம் நாட்டின் செல்வாக்கை எகிப்தில் நிலைநாட்டியதும், பாபிலோனை ஒடுக்கியதும் சிறப்புமிகு சாதனைகளாக அமைந்தன. பின்னர்ப் பாரசீகமும் சிரியாவும் பாலசுத்தீனமும் (Palestine) இவரது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டன. பினீசியாவைச் சேர்ந்த ஒரு சில நகரங்களும் ஆசியாமைனர் பகுதியைச் சேர்ந்த பல மாநிலங்களும் இவரது தலைமைக்குப் பணிந்தன. இவரை யூதர்கள் ‘அசுனாப்பர்’ (Asnapper) என்ற பெயராலும், கிரேக்கர்கள் ‘சர்தானாபாலசு’ (Sardanapallos) என்ற பெயராலும், உரோமர்கள் ‘சர்தானாபாலுசு’ (Sardanapalus) என்ற பெயராலும் குறிப்பிடுவர். இவரது ஆட்சிக்குப் பின்னர் இவர் பிள்ளைகள் ஆசூர்-எதிலிலானி (Ashur-Etililani), சின்-சார்-இசுகுன் (Sin-Shar-Ishkun) ஆகியோர் போதிய திறமையின்மையின் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே பழம்பெருமையை இழந்த நிலையில் எங்கள் ஆட்சி அழியக் காரணமாகி விட்டார்கள். எனவே கி.மு. 612-ஆம் ஆண்டில் பாபிலோனியர்களும் சித்தியக் குடியினரும் (Seythians), மீட்சுக் குடியினரும் (Medes) ஒரு கூட்டணியை அசிரியாவுக்கு எதிராக அமைத்துப் படையெடுத்து நினேவாவை முற்றுகையிட்டு, அசிரியப் பேரரசைச் சூறையாடியதோடு மக்களையும் அடிமைப்படுத்தினர். ஆசூர் பானியல் (Ashur Banipal) ஒரு சிறந்த கலைஞர். பாபிலோனியா, சுமேரியா, அசிரியா போன்ற பண்டைய நாகரிகங்களைச் சேர்ந்த பல்வகை எழுத்து முறைகளைத் தம் அரண்மனையிலே வைத்துப் பாதுகாத்தார். களிமண் வரைபட்டித் தொகுதிகளைக் (Tablets) கொண்டே ஒரு நூல் நிலையத்தையும் அமைத்தார். அந்த நூல் நிலையம் இன்று ஆங்கில அருங்காட்சியகத்தில் உள்ளது. மெசபொடோமியாவின் பண்டைய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவதற்கு இந்த நூல் நிலையம் தான் சிறந்த சான்றுகளை அளிக்கிறது. ஆசூர் பானிபல் இலக்கியத் துறைக்கும் கட்டிடக் கலைக்கும் அறிவியல் துறைக்கும் வேண்டிய அரசு ஆதரவைத் தந்தவர்.{{nop}}<noinclude></noinclude> k36cp5zlrlmttfku9vvsp30v5rh7sco பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/342 250 621001 1944358 1877110 2026-06-10T03:47:40Z Sridevi Jayakumar 15329 1944358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆஞ்சு|316|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை}}</noinclude>ஆசூர் பானிபல் தம் 43-ஆம் வயதில் அளவுக்கு மீறிய செல்வத்தைக் குவித்துப், பகட்டான அரச வாழ்க்கையை அனுபவித்தார். விண்மீன்களின் வரலாற்றை அறிவதில் மிகுந்த நாட்டம் செலுத்தினார். மேன்மேலும் படிக்க வேண்டும் என்ற வேட்கையுடையவராக விளங்கினார். தலைநகராகிய நினேவாவில் உள்ள நூல் நிலையத்தில் வரலாற்றுத் தொடர்பான பதிவேடுகளையும், சமயச் சார்பான நூல்களையும், அரசுச் சார்பான கடிதங்களையும், பல்வேறு செய்யுட் பகுதிகளையும், வரலாறு, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகியவை பற்றிய நூல்களையும், இலக்கிய, இலக்கண நூல்களையும் வைத்துப் பாதுகாத்தார்.{{Right|பொன்.சு.}} <section end="ஆசூர் பானிபல்"/> <section begin="ஆஞ்சு"/> {{dhr}} <b>ஆஞ்சு</b> மேற்குப் பிரான்சில் இருந்த முன்னாள் மாநிலங்களுள் ஒன்று. இதன் வடக்கே மெய்ன் (Maine) என்னும் மாநிலமும், கிழ்க்கே தூரேய்ன் மாநிலமும், தெற்கே பாய்ட்டோ (Poitou) என்னும் மாநிலமும் மேற்கே பிரெடிக்னி மாநிலமும் எல்லைகளாக உள்ளன. உலோயர் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆஞ்சு மேட்டு நிலத்தை இரண்டாகப் பிரிக்கிறது. இம்மாநிலத்தின் மேற்கில் சமவெளிகளும், தெற்கில் மாயின், சார்தே (Sarthe) ஆகிய ஆறுகளின் தாழ்நில வடிநிலங்களும் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதன் வாழ்ந்ததற்கான பெருங்கற்காலச் சின்னங்கள் இப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பெற்றன. உரோமானிய ஆட்சியின் போது இப்பகுதி பேபியசு என்பவரால் வென்று கொள்ளப் பெற்றது. மூன்றாம் வேலன்டினியன் (கி.பி. 419-455) ஆட்சியின்போது மேலை உரோமானியப் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு ஆர்மோரிகள் கூட்டாட்சிக் குழுவில் இணைந்து கொண்டது. ஆஞ்சுவின் முதல் கோமகனாகக் கி.பி. 720-இல் இரெயின் பிராய் என்பார் அமர்ந்தார். ஆஞ்சுவின் (Anjou) பதினோராம் கோமகனாகிய சியோப்ரோவைப் பிளாண்டாகெனட்டு என்றனர். அவர் கொப்பூழ்க் கொடியொன்றை அணிந்து கொண்டமையால் இப்பெயர் பெற்றார். அவர் இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றியின் மகள் மாடில்டாவை மணந்து கொண்டார். அவருக்குப்பின் அவர் மகன் ஆஞ்சுவின் கோமகனானார். அவரே பின்னர் இரண்டாம் என்றி என்னும் பட்டத்துடன் இங்கிலாந்தின் அரசரானார். இங்கிலாந்து அரசர்கள் கி.பி. 1203-ஆம் ஆண்டுவரை அஞ்சுவைத் தம் பிடியில் வைத்திருந்தனர். இங்கிலாந்து அரசராகிய சான் மன்னரிடமிருந்து பிலிப்பு அகசுடசு என்பார் கி.பி. 1203க்குப் பின்னர் ஆஞ்சுவைக் கைப்பற்றிக் கொண்டார். பிரான்சு மன்னர்களாகிய ஒன்பதாம் லூயி, ஆறாம் பிலிப்பு ஆகியோர்களின் காலத்தில் ஆங்கிலேயர் ஆஞ்சுவை ஆண்டனர். பதினோராம் லூயி மன்னர் ஆஞ்சுவைப் பிரான்சுடன் இணைத்து விட்டார். பிரெஞ்சுப் புரட்சியின் போது குடியரசுவாதிகளுக்கெதிராக ஆஞ்சு மாநிலம் போரிட்டது. ஆஞ்சு மாநிலம் கி.பி. 1790-இல் மெய்ன்-யத்-லோயா என்னும் நிருவாகப் பிரிவின் பகுதியாயிற்று. <section end="ஆஞ்சு"/> <section begin="ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை"/> {{dhr}} <b>ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை</b>: குறிப்பிட்ட ஒன்றைச் செய்யுமாறோ செய்யாதிருக்குமாறோ ஒருவருக்கு எழுத்து மூலம் உத்தரவிடும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற ஆணைதான் நீதிப் பேராணை என்பதாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 225-ஆம் பிரிவின்படி இந்திய உயர்நீதிமன்றங்கள், இவ்வாணை பிறப்பிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். உச்ச நீதிமன்றமும் 32-ஆம் பிரிவின்படி இந்தப் பேராணையை வழங்கலாம். அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்ட அல்லது பறிபோன ஒருவர், இவ்வாணை அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உயர் நீநிமன்றத்தில் முறையீடு செய்யலாம். சிறப்பாக இந்த நீதிப் பேராணைகள் நெறிமுறை உறுத்தும் நீதிப்பேராணை (Writ of Certiorari), ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus), தடையுறுத்தும் நீதிப்பேராணை (Writ of Prohibition), செயலுறுத்தும் நீதிப்பேராணை (Writ of Mandamus), தகுதி முறை வினவும் நீதிப்பேராணை (Writ of Quo Warranto) என நீதிப்பேராணைகள் ஐந்து வகைப்படும். இவ்வாணைகளைக் கொண்டு சீர்குலைந்த அல்லது பறிக்கப்பட்ட உரிமைகளை உயர் நீதிமன்றத்தின் மூலம் நிலைநிறுத்தச் செய்யலாம். உரிய காரணமின்றிச் சிறைப்படுத்தப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து, சிறைப்படுத்தியதற்கான காரணத்தை விளக்கும்படி சிறைப்படுத்தியவருக்கு இடப்படும் ஆணையே ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணையாகும். ஒருவரை மற்றொருவர் சிறைப்பிடித்து வைத்திருந்தால், சிறைப்படுத்திவைக்கப்பட்டிருப்பவரைச், சிறைப்படுத்தியவர் நீதிமன்றத்தின் முன்னர்க் கொண்டுவந்து காட்டி, என்ன காரணங்களுக்காகச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். சிறைப்படுத்தியிருப்பதற்கான காரணம் உகந்ததல்லாமல் இருந்தால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும். இந்த நீதிப்பேராணையை நடைமுறைப் படுத்துவதில், குறிப்பிட்ட வழக்குகளில் பின்பற்றிப்படும் சுருக்கமான நடைமுறை (Summary Procedure) பின்பற்றப்படும். இப்பேராணை, குற்றமிழைத்தவரைத் தண்டிப்பதில்லை. முறையின்றிச் சிறைப்-<noinclude></noinclude> 8y6q2fdrzziaro245g9b9jqbhxz02p0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/343 250 621002 1944360 1877111 2026-06-10T03:48:39Z Sridevi Jayakumar 15329 1944360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|317|ஆட்சிச் சொற்கள்}}</noinclude>படுத்தப் பட்டவரை அச்சிறைப் பிடியிலிருந்து நீதிமன்றம் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவிக்கிறது. இந்த நீதிப்பேராணை, தவறு இழைக்கும் அரசுக்கும் தனிப்பட்டவருக்கும் எதிராகச் செலுத்தப்படும். சிறையில் இருப்பவர் சார்பில் அவர்தம் உறவினரோ நண்பரோ அவரை விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம். அவ்வாறு மனுச் செய்யும்போது, சிறையில் இருப்பவர், மனுச்செய்ய இயலாமைக்குரிய காரணங்களைக் கூறவேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் சட்டமுறையில் அமைந்த காப்பாளர்களே இந்த நீதிப் பேராணைக்காக மனுச் செய்யலாம். அவர் அவ்வாறு மனுச் செய்ய இயலாதவராக இருந்தால், குழந்தையின் உறவினர்கள் உரிய காரணங்களுடன் மனுச்செய்யலாம். இந்த நீதிப்பேராணை மனு, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் தகுதிகள் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டுத் தள்ளப்பட்டு விட்டால், அதே காரணங்களுக்கான அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இயலாது. மேல்முறையீடு மட்டில் உண்டு. ஆனால், ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணையைப் பொறுத்தவரை இந்த விதி ஏற்புடையதாக இல்லை என்று குலாம் சார்வார் எதிர் (Vs) ‘ஏர் இந்திய யூனியன்’ (Air 1967 S. C. 1335) என்ற வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. சட்டத்திற்கு மாறாக, அரசைத் தவிர வேறு ஒருவரால் ஒருவர் சிறைப்படுத்தப்பட்டு அல்வது பிறர் அறியாமல் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தால், உச்சநீதி மன்றத்தின் முன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆம் பிரிவின் கீழ், நேராக மறுச் செய்து ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை கேட்க இயலாது. ஒருவர் சட்டப்படி பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தாலோ சட்டப்படி தண்டிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலோ இந்த நீதிப் பேராணை எழாது. வழக்குத் தொடரப்பட்ட தேதியில் உள்ள நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நீதிப்பேராணை வழங்கப்படுவதன்று; நீதிப் பேராணை பிறப்பிக்கப்படும் தேதியில் உள்ள நிலையைக் கருத்திற்கொண்டே வழங்கப்படுவதாகும். ஒரு சட்டம் நிருவாக முறையில் செயற்படுத்தப்படும்பொழுது, ஏற்படும் குறைகளை நிறைவு செய்து கொள்ளும் தீர்வழியினை அச்சட்டத்திலேயே குறிப்பிடின் பாதிக்கப்பட்டவர், அவற்றை நாடியே குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமேயன்றி, 226-ஆம் பிரிவின் கீழ்த் தீர்வழியினைத் தேடலாகாது. அவ்வாறுதேடி உயர்நீதிமன்றத்தை நாடினால், அது ஆணை பிறப்பிக்கத் தயங்கவே செய்யும். உயர்நீதிமன்றம், இராணுவ நீதிமன்றங்களின் தீர்ப்பு நடவடிக்கைகளில் காணப்படும் ஒருசில நடைமுறை ஒழுங்கீனங்களைப் பற்றிக் கண்டுகொள்ளாது. ஆயினும், இராணுவ நீதிமன்றத்தின் அதிகார ஆட்சி எல்லைகள் வரம்பு மீறாமலிருக்கின்றனவா என்று முறையிட்டுக் கொண்ட இவ்வாணையின் வேண்டுகோளினை விசாரணை செய்யலாம். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Basu D.D.,</b> Constitutional Law of India, Prentice-Hall of India Pvt. Ltd., New Delhi, 1983.<br> <b>Kaghi M.C.,</b> Constitution of India, 2v. Metropolita Book Co., Pvt. Ltd., New Delhi, 1984. <section end="ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை"/> <section begin="ஆட்சிச் சொற்கள்"/> {{dhr}} <b>ஆட்சிச் சொற்கள்</b> என்பது, ஓர் அரசு தன் ஆட்சிமுறையில் பயன்படுத்தும் கலைச் சொற்களைக் குறிக்கும். தனக்கென ஆட்சிமுறை ஒன்றை அமைப்பதும், தன் ஆட்சிமொழியை வரையறை செய்வதும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாத செயல்களாகும். தமிழ் நாட்டில் கி. பி. 1956-ஆம் ஆண்டு தமிழ் மொழி ஆட்சிமொழியாக (Official Language) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருவதால், ஆட்சிச் சொற்கள் இன்றுவரை ஆங்கில மொழியில் அமைந்துள்ளன. தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப் பெற்றவுடன் அரசு ஓர் ஆட்சிச் சொல் அகராதியினைத் (Dictionary of Administrative Terms) உருவாக்கி வெளியிட்டது. அதன் பின்னர்க் கடிதப் போக்குவரத்தில் பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் அகராதியாகச் சிறப்புச் சொல்லகராதிகள் நாற்பத்தாறு துறைகளுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இவை தவிர, அறிஞர் சிலர் ஆட்சிச் சொல் அகராதிகள் சிலவற்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். தாய் மொழியில் ஆட்சிச் சொற்களைப் புதிதாக அமைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம். தமிழில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான கலைச்சொற்கள் இல்லை எனவும், புதிதாகத் தமிழில் ஆக்கப்பெறும் சொற்கள் பொருட்செறிவு இன்றிப் புரிந்து கொள்வதற்குக் கடினமாகவும் குழப்பத்தை விளைவிப்பனவாகவும் அமையும் எனவும் பலர் கருதுகின்றனர். ஆட்சித் துறையில் தமிழைப் புகுத்தும் நிலையில் முதலில் ஒரு சொல்லுக்குப் பல மொழிபெயர்ப்-<noinclude></noinclude> oyj8zg5ppsu604ahz8pq3etimxx83qy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/344 250 621003 1944361 1877115 2026-06-10T03:49:19Z Sridevi Jayakumar 15329 1944361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்சிச் சொற்கள்|318|ஆட்சிச் சொற்கள்}}</noinclude>புகள் அல்லது சீர்மையற்ற பல ஆக்கச் சொற்கள் காணப்பெறலாம்: காலப்போக்கில் இவற்றுள் ஒன்று மட்டில் நிலைபெறும். தொடக்கத்தில் எல்லா நிலையினருக்கும் தமிழ் ஆட்சிச் சொற்களைப் புரிந்துகொள்வதும், மனத்தில் நிலைநிறுத்திக் கொள்வதும் கடினமாகத் தோன்றினாலும், காலப் போக்கில் இப்பான்மை மிகவும் எளிமையாக அமையும். ஆங்கில முறையில் பழகியவர்களுக்குப் புதிய தமிழ் ஆட்சிச் சொற்களில் ஆர்வம் குறைந்து காணப்படலாம். புதுப் பழக்கத்தை மேற்கொள்ளும் போது பரந்துபட்ட உணர்வோடு செயற்படுதல் வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால் சட்டவழுக்கள் நேராவண்ணம் தமிழில் ஆட்சிச் சொற்களைக் கையாளலாம். இன்றைய அலுவலர்களுக்கு ஆங்கிலச் சொல் எளிதில் புரியலாம். புதிதாக ஆக்கப் பெறும் தமிழ் மொழிச் சொல் புரியாமலிருக்கலாம். ஆனால், இனி வரும் தமிழ் இளைஞர்களுக்கு இந்நிலை ஏற்படாது. ஆட்சிச் சொற்களைச் செயற்படுத்தும் போது சில குறைகள் காணப்படினும் காலப்போக்கில் அனைத்து இடர்ப்பாடுகளும் நீங்கிவிடும். புதிய ஆட்சிச் சொற்களை உருவாக்கும் நிலையில் சில விதிமுறைகள் பின்பற்றப்படல் நன்று. இன்றேல், ஆட்சிச் சொற்கள் செய்திகளைத் திட்டவட்டமாக எடுத்துரைக்க இயலாது போகும். ஆட்சிச் சொற்களை உருவாக்குவதற்கு இலக்கிய வழக்குச் சொற்கள், கல்வெட்டுச் சொற்கள், பேச்சுவழக்குச் சொற்கள், கடன் சொற்கள், புதிய ஆக்கச் சொற்கள் முதலியன அடிப்படைகளாக அமையலாம். அரிய ஆட்சிச் சொற்கள் பல இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. சான்றாக, ‘புல வரை’ (Survey) போன்றவற்றைக் கூறலாம். கல்வெட்டுகளிலும் சிறந்த பல ஆட்சிச் சொற்கள் அமைந்துள்ளன. அவற்றுட் சில இன்று பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. ‘கருவூலம்’ (Treasury), ‘நோக்கர்’ (Care-taker), ‘ஆவணம்’ (Document), ‘தண்டம்’ (Fine) போன்ற ஆட்சிச் சொற்கன் கல்வெட்டுகளிலிருந்து பெறப்பட்டு, இன்று நிலைபெற்றுள்ளன. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொற்களுள் பல ஆட்சித் துறைக்குப் பெரிதும் பொருந்தும். ‘கட்டுமானம்’ (Construction) போன்றவை வெவ்வேறு கிளைமொழிகளைச் (Dialects) சார்ந்த பேச்சு வழக்கிலிருந்து பெறப்பட்ட ஆட்சிச் சொற்களாகும். அடிப்படைச் சொல் (Original Form) உணர்த்தும் கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் புதிதாக ஆட்சிச் சொற்கள் (பேருந்து-Bus, தந்தி-Telegram) பெறலாம். இங்குக் கூறப்பெற்ற நான்கு நிலைகளிலும் ஆட்சிச் சொற்களின் உருவாக்கம் அமையப் பெறாத நிலையில், பிறமொழிச் சொற்களை (பாங்கு-Bank, பென்சில் - Pencil) இடைக்கால ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம். மேலும் வழக்கிலில்லாத பழைய சொற்களைச் சீர் செய்து, புதிய பொருளில் கையாளலாம். இவ்வடிப்படையில் ‘மாவட்டம்’ (District), ‘வட்டம்’ (Taluk), ‘வாரியம்’ (Board) போன்ற ஆட்சிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடிச்சொற்களோடு (Stems) விகுதிகளை (Suffixes) இணைத்தும், இரண்டு அடிச்சொற்களை இணைத்தும் புதிய ஆட்சிச் சொற்களை ஆக்கமுடியும். விகுதிகளை அடிச்சொல்லோடு இணைத்துப் புதிய சொல் ஆக்கும் முறைமைக்கு ‘அலுவலர்’ (Officer) ‘தருநர்’ (Payer), ‘தீர்ப்பு’ (Judgement) போன்றவை தக்க எடுத்துக்காட்டுகளாகும். இரண்டு வினையடிகளை (Verbal Stems) அல்லது இரண்டு பெயரடிகளை (Nominal Stems) இணைத்தும் புதிய ஆட்சிச் சொற்களை அமைக்கலாம். ‘சட்டமன்றம்’ (Assembly), ’ஊராட்சி’ (Panchayat), ‘பாகுபாடு’ (Classification) என்பன இம்முறையில் ஆக்கப் பெற்றவை ஆகும். அன்றியும் பிற மொழிச் சொற்களை ஒப்பொலியாக்கத்தாலும் ஏற்கலாம். பிறமொழிச் சொற்களுக்கு ஒத்த ஒலியுடைய தமிழ்ச்சொற்களை ஈடாக வழங்குதல் ஒப்பொலியாக்கம் எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டாகப் ‘பாரீஸ்’-பாரி, கெல்லிஸ்-கிள்ளி என்பவற்றைக் காட்டலாம். புதிய ஆட்சிச் சொற்களை ஆக்கும்போது ஒலி பெயர்ப்பு, வேற்றொலிக் கலப்பு ஆகியவற்றைத் தவிர்த்தல் நன்று, இங்ஙனம், புதிதாக ஆக்கப் பெறும் ஆட்சிச் சொற்கள் கூடியவரையிலும் தாய்மொழிச் சொற்களாக அமைதல் வேண்டும்; பொருள் பொருத்தமுடையனவாகவும், நுண்ணிய வேறுபாடுகளை எடுத்துக்காட்டும் பாங்குடையனவாகவும் (நிகழ்நிரல் - Programme., பொருள்நிரல் - Agenda) இருத்தல் வேண்டும். ஆட்சிச் சொல் உருவாக்குதல், வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அடிப்படைச் சொல் உணர்த்தும் முழுப் பொருளையும் புதிதாக ஆக்கப் பெறும் சொல் சுட்டுவதாக அமைந்து, கருத்தாக்கமாக அமைதல் வேண்டும். ஆட்சிச் சொற்களை உருவாக்குவதில் ஒருமைப்பாடு பின்பற்றப்படல் வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களை இப்பணியில் ஈடுபடுத்தல் வேண்டும்.{{Right|ஏ.ஆ.}} <section end="ஆட்சிச் சொற்கள்"/> {{nop}}<noinclude></noinclude> 4suvnt8n6urh8uuzihz1yquygxcqa6s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/345 250 621004 1944363 1877138 2026-06-10T03:50:53Z Sridevi Jayakumar 15329 1944363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்சிப்திகா|319|ஆட்சி வேண்டாக் கொள்கை}}</noinclude><section begin="ஆட்சிப்திகா"/> {{dhr}} <b>ஆட்சிப்திகா</b>: கருநாடக இசையில் இராக ஆலாபனையின் முதற்பகுதி. இதனை “ஆயத்தம்” என்று கூறுவதுமுண்டு, தொடக்கத்தில் சிற்சில ஒலிக்கோவைகளின் மூலம் இராகத்தின் சாயலைக் கேட்பவருக்கும் புரியும்படியாக மிகச் சுருக்கமாக இதைப் பாடவேண்டும். மத்தியத்தாயி (அரக்கு) சட்சத்தில் தொடங்கி, வரிசையாகத் தாரபஞ்சமம் வரையில் பாடி, மீண்டும் மத்தியத்தாயி சட்சத்தில் (குரல்) கொண்டு வந்து இராகத்தைச் சுருக்கமாகப் பாடும் இப்பகுதிக்கு ஆட்சிப்திகா என்பது பெயர். இது குறைந்தது 5 நிமிட நேரத்திற்குள் முடிய வேண்டும். <section end="ஆட்சிப்திகா"/> <section begin="ஆட்சி மொழிகள் சட்டம்"/> {{dhr}} <b>ஆட்சி மொழிகள் சட்டம்</b>: பாரதம் பல மொழி பேசும் மக்களைக் கொண்ட பரந்த நாடு ஆகும். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், இந்த நாட்டின் நிருவாக மொழியாக இருந்தது. இப்போது இந்தி மொழி, அலுவலக மொழியாக அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஆங்கில மொழியும் இணைந்து செயற்பட வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசியல் சட்டம் 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் இணைந்து செயற்பட வேண்டும் என்று வரையறை செய்தது. இந்தப் பதினைந்து ஆண்டுக் காலம் 1965, சனவரி மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இப்பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பாராளுமன்றம், ஆங்கிலத்தைத் தொடர்ந்து நீடிக்கும் படியும், தேவநாகரி எண்களைத் தொடர்ந்து செயற்படுத்தும்படியும் சட்டம் இயற்றியுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் 1952 ஆம் ஆண்டு பிறப்பித்த கட்டளை ஒன்று, மாநில ஆளுநர்கள், உயர்நீதிமன்றம், தலைமை நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் ஆகியவர்களின் பணி அமர்த்தல் பற்றிய கட்டளைகள் ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் இருக்க வேண்டுமென்று கூறியது. இதுபோன்று 1955-ஆம் ஆண்டும் குடியரசுத் தலைவர் பிறப்பித்த கட்டளை ஒன்று, பொது மக்களுடன் அரசு வைத்துக் கொள்ளும் தொடர்பு, நிருவாக அறிக்கைகள், நாடாளுமன்ற அறிக்கைகள், அரசின் தீர்மானங்கள், சட்டங்கள், இந்தி மொழியைப் பணிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு வைத்துக்கொள்ளும் தொடர்புகள், இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்கள், வெளிநாடுகளுடன் வைத்துக் கொள்ளும் தொடர்புகள், தூதரகத் தொடர்பு, பன்னாட்டு அமைப்புகளுடன் கொள்ளும் தொடர்புகள், தூதர்களுக்கும் வணிகத் தொடர்பு பற்றிய தூதரக அலுவலர்களுக்கும் கொடுத்தனுப்பும் சான்றிதழ்கள் (Credentials), இந்தியப் பேராளர்கள் பன்னாட்டு அமைப்புகளில் பயன்படுத்தும் மொழி ஆகியவற்றிலெல்லாம் இந்தி மொழியே இடம் பெற வேண்டும் என்று கூறியது. இந்தி மொழி, இந்தியத் தேசிய ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்றம் சட்ட மூலம் தேவையான வழிவகைகளைச் செய்து கொள்ளலாம் என அதிகாரம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றம், 1963-ஆம் ஆண்டில் ஆட்சி மொழிகள் சட்டம் (Official Languages Act, 1963, No. 19 of 1963) ஒன்றை ஏற்படுத்தியது. அச்சட்டம், ஆங்கிலம் 1965-ஆம் ஆண்டிற்குப் பின்னும் இந்தி மொழியுடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இருமொழிகளும் அனைத்துப் பணிகளுக்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறியது. அச்சட்டம், 1968 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட அச்சட்டம், “இந்தி மொழியுடன் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்” என்று கூறுகிறது. பல்வேறு சிக்கல்களை நீக்கும் பொருட்டு, இந்த இரண்டு மொழிகளையும் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமென்று நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சி மொழிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, கனடா, ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் இணைத்துப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நான்கு மொழிகளைப் பயன்படுத்துகிறது. அதில் ஒரு மொழியைத் தவிர, மற்ற மூன்று மொழிகளை ஆட்சிமொழியாகப் பயன்படுத்துகின்றது. பெல்சியமும் தென் ஆப்பிரிக்கக் குடியரசும் இரு மொழிகளைப் பயன்படுத்துகின்றன. சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சிமொழிகளாகச் செயற்பட்டு வருகின்றன. <section end="ஆட்சி மொழிகள் சட்டம்"/> <section begin="ஆட்சி வேண்டாக் கொள்கை"/> {{dhr}} <b>ஆட்சி வேண்டாக் கொள்கை</b> என்பது கட்டுப்பாடில்லாத சமுதாய அமைப்பு முறையை ஆதரிக்கும் கொள்கை. இந்த அமைப்பில் நாடு (State), அரசு (Government), தனி உடைமை (Private Property), சமயம் ஆகியவற்றிற்கு இடமில்லை. இக்கொள்கைக்கு வித்திட்டவர் பிரௌதான் (Proudhon) ஆவார். அறிவியல் சார்ந்த வகையில் இக்கொள்கையை அறிவித்தவர் மைக்கேல் பாக்குனின் (Michael Bakunin) ஆவார். அவர், தாம் இயற்றிய ‘கடவுளும் நாடும்’ (God and the State) என்ற நூலில் இக்கொள்கையைப் பற்றிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். பீடர் கிரோபாட்கின் (Peter Kropotkin)<noinclude></noinclude> 681779m23e2n4wakpqik1yvacf5kedt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/349 250 621021 1944366 1877341 2026-06-10T03:52:16Z Sridevi Jayakumar 15329 1944366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்சி வேண்டாக் கொள்கை|323|ஆட்டங்களும் விளையாட்டுகளும்}}</noinclude>ஆட்சியற்ற சமுதாயத்தை அமைப்பது எப்படி? சமுதாயப் படிமுறை வளர்ச்சி புரட்சி ஆகியவற்றின் வாயிலாக அதனை அமைக்கமுடியும் என்று பாகுனினும், கிரோபாட்கினும் கருதுகின்றனர். படிமுறை வளர்ச்சி புரட்சியின் வாயிலாகத்தான் முற்றுப்பெற இயலும். புரட்சி முதலில் நாசத்தையும் வன்முறையையும் விளைவிக்கும். எல்லா நிறுவனங்களும் ஒழிக்கப்படும். ஆளுநர்கள் நீக்கப்படுவார்கள். சிறைகளும் கோட்டைகளும் தகர்க்கப்படும். படைகளும் காவற்படைகளும் கலைக்கப்படும். நீதிமன்றங்களும் அலுவலகங்களும் அழிக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எவரேனும் எதிர்த்தால் அவர்களும் அழிக்கப்படுவர். அதனால், இரத்தம் சிந்த வேண்டியிருந்தால் அதற்குத் தயக்கம் கொள்ளக் கூடாது என்று பாக்குனின் கூறியுள்ளார். அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களை ஒழித்த பின்னர்த் தனி உடைமையை ஒழிக்க வேண்டும். நிலச் சொந்தக்காரர்களைக் குடியானவர்கள் துரத்துவர். தொழிலதிபதிகளைத் தொழிலாளர்கள் விரட்டுவார்கள். போதுமான வீட்டு வசதி பெறாதவர்கள் தேவைக்குமேல் இடவசதி பெற்றிருப்போரின் வீட்டில் குடிபெயர்வார்கள். புதிய சமுதாயத்தை அமைக்கு முன்னர் வேறு வகை அரசு எதனையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்படுத்தினால் புரட்சிக்குச் சமாதி கட்டி விட்டதாகும். நாடு அழியத் தொடங்கியவுடன், தாமாக ஏற்படுத்தப்பெறும் சங்கங்கள் உடனே தோற்றுவிக்கப்படும். நாடு அழிந்த மறுகணமே, சுதந்தர சமுதாயம் அமைக்கப்பெறும். அவற்றினுக்கிடையே இடைவெளி இராது. <b>ஆட்சி வேண்டாக் கொள்கைக்கு இக்கால மறுப்பு</b>: ஆட்சி வேண்டாக் கொள்கை என்பது கருத்தளவில் உள்ள ஒரு கவர்ச்சியான கற்பனையே ஆகும். நடை முறையில், மனிதர்களிடையே இயல்பாகக் காணப்படுகிற திறமை, ஏற்றத்தாழ்வுகள், விருப்பு வெறுப்புகள், அறியாமைகள் முதலியவைகளையும், அவற்றின் காரணமாக எழுகிற தீய செயல்களையும், அவற்றால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் பார்க்கும்பொழுது, ஒவ்வொருவருடைய உரிமைக்கும் வரையறை ஏற்படுத்தி, அதை நல்ல முறையில் செயற்படுத்துவதற்கும், இந்த வகையாக யாவருடைய உரிமைகளையும் பாதுகாத்தற்கும் நல்ல சட்டங்களும் காவல் துறையும் நீதி நிருவாகத் துறைகளும், சுருங்கச் சொல்லின் இறைமையுடைய ஓர் அரசு (Sovereign State) என்ற அமைப்புத் தேவையே என்ற முடிவுக்குத்தான் மக்கள் வருவர். சங்கங்களை வைத்துக்கொண்டே பொருள் உற்பத்தி, பங்கீடு முதலியவைகளை நல்ல முறையில் செய்துவிடுதல் இயலுமென்பதும், ஓரளவுதான் உண்மை ஆகும்; அரசு என்ற ஓர் அமைப்பு இல்லாவிடில் இச்சங்கங்களிடையே மட்டுமல்லாமல், மற்றச் சங்கங்களிடையேயும், ஒவ்வொன்றின் அதிகார எல்லை குறித்து மோதல்கள் ஏற்படுமென்பதையும், பொதுவாகச் சங்கங்களிடையே ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கவும், ஒவ்வொன்றின் உரிமையைக் காக்கவும், பொதுவாக ஒரு நடுவணர் போலப் பணிசெய்தற்கு இறைமை அரசால்தான் இயலும் என்பதையும் மக்கள் உணர வேண்டும். இந்தக் கழகமுறைக் கோட்பாடு பொதுவுடைமை என்னும் சோசலிசக் கோட்பாட்டில் சி.டி.எச். கோல் (G.D.H. Colf) என்ற ஆங்கிலச் சிந்தனையாளரால் புகுத்தப்பட்டது. அவரே பின்னர் அரசின் தேவையை ஒப்புக்கொண்டார். அரசு ஒன்றுக்குத்தான் இறைமை என்ற தலைமை அதிகாரம் இருத்தல் வேண்டுமென்ற ஆசுட்டினின் இறைமை பற்றிய ஒருமைக் கோட்பாட்டை (Austin's Monistic Theory of Sovereignty) ஒப்புக்கொள்ள மறுத்து, சங்கங்களுக்கு அல்லது கழகங்களுக்கு இறைமை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டுமென்ற இறைமை பற்றிய பன்மைக் கோட்பாட்டை (H.J. Laski's Pluralistic Theory of Sovereignty) ஆதரித்த எச்.சே. இவாசுக்கி போன்ற பன்மைக் கோட்பாட்டாளர்களும், இறுதியில் அரசு ஒன்றுக்குத் தான் தலைமையான அதிகாரம் (அல்லது இறைமை) இருத்தல் வேண்டுமென்று ஒப்புக்கொண்டனர். ஆகையால் ஆட்சி அல்லது அரசு வேண்டா நிலை நடைமுறைக்கு வர இயலாத ஒரு கருத்தென்றும். வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் தங்களுடைய உரிமைகளை அரசு, அதிகாரிகள் போன்றவர்கள் கட்டுப்படுத்தாமல் தாங்களே கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு முழுமனவளர்ச்சி பெற்றுள்ள காந்தியடிகள், தால்சுதாய் போன்றவர்களுக்கும் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பை அளிப்பது இறைமை அரசுதான் என்றும், இறைமை என்பதற்கு மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தலைமையான அதிகாரம் என்று மட்டும் (Supreme coercive force) பொருள் கொள்ளக்கூடாதென்றும், பாதுகாப்பளிப்பதோடு, ஆக்கப்பணிகளுக்கேற்ற சூழ்நிலைகளை அமைத்துக் கொடுப்பதற்குமுள்ள அதிகாரமென்று பொருள் கொள்ளுதல் வேண்டுமென்றும் இக்கால அரசியல் சிந்தனையாளர் கூறுவர். இக்கருத்து ஏற்புடையதாகும்.{{Right|டி.ஆர்.இரா.}} <b>துணை நூல்</b>:<br> <b>Appadorai, A.,</b> The Substance of Politics, Oxford University Press, 1972. <section end="ஆட்சி வேண்டாக் கொள்கை"/> <section begin="ஆட்டங்களும் விளையாட்டுகளும்"/> {{dhr}} <b>ஆட்டங்களும் விளையாட்டுகளும்</b>: ஓய்வு வேளையில் மன மகிழ்ச்சிக்காகச் செய்யக்-<noinclude></noinclude> l7e3z1k5sfh6qdwesvukr8cunj3blcv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/359 250 621051 1944367 1882426 2026-06-10T03:54:12Z Sridevi Jayakumar 15329 1944367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sodabottle" />{{rh|ஆட்டங்களும் விளையாட்டுகளும்|333|ஆட்டத் தந்திரக் கோட்பாடு.}}</noinclude>இது கி.பி. 1891-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதலில் விளையாடப்பட்டது. இவ்விளையாட்டு நைசுமித் (Naismith) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மசாசுசெட்சு (Massachussets) மாநிலத்தைச் சேர்ந்த இசுபிரிங்பீல்டு (Springfield) என்னும் ஊரிலிருந்து கல்லூரியிற் பயிற்சி ஆசிரியராக இருந்தபோது இதைக் கண்டுபிடித்தார். <b>குத்துச் சண்டை</b> என்பது இருவர் தங்கள் கைகளினால் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் விளையாட்டாகும். ஆட்டக்காரர் தம் கைகளில் உறைகளை அணிந்திருப்பர். குத்துச்சண்டைத் திடல் வளையம் (Ring) என்று குறிப்பிடப்படுகிறது. இவ்விளையாட்டு மிகப் பழைமையானதாகும். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சுமேரியர்கள் இவ்விளையாட்டில் ஈடுபட்டு வந்ததைத் தொல் பொருள் குறிப்புகள் சுட்டுகின்றன. பண்டைக் கிரேக்கத்தில் இவ்விளையாட்டு கொடூரம் நிறைந்ததாக இருந்தது, உரோமானியர்களும் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான குத்துச் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். காலப்போக்கில் இதில் காணப்பட்ட கொடூரங்கள் மிகுந்து வந்தமையால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் இவ்விளையாட்டு உரோமானிய நாட்டில் தடை செய்யப்பட்டது. இங்கிலாந்தில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் குத்துச் சண்டை மறுபடியும் தொடங்கப்பட்டது. கி.பி. 1872-ஆம் ஆண்டில் குவீன்சுபரி விதிமுறைகள் (Queensberry Rules) வரையக்கப்பட்ட பின்னர்க் குத்துச் சண்டை ஆட்டக்காரர்கள் தம் கைகளில் உறை அணியத் தொடங்கினர். கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இது தடை செய்யப்பட்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் சிறிது சிறிதாகச் சில மாநிலங்களில் இவ்விளையாட்டு பரவத் தொடங்கியது. முகமது அலி என்பவரால் இவ்விளையாட்டு உலகெங்கும் புகழ் பெற்றது. இரு ஆட்டக்காரருள் ஒருவர் தாக்குண்டு கீழே விழுந்து விட்டால் பத்து வினாடிகளுக்குள் மீண்டும் எழுந்து சண்டையைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நடுவரும் வளையத்திற்குள் இருக்கும் இரு நீதிபதிகளும் ஆட்ட முடிவை அறிவிப்பர். வீழ்ந்தவர் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். குத்துச் சண்டை வளையம் 16 முதல் 24 அடி வரையிலான சதுரத்திடல் ஆகும். இரப்பரால் (Rubber) ஆன தரையின்மீது முரட்டுத் துணி விரிக்கப்பட்டிருக்கும். ஆட்டத்தைக் காண்பவர் அமரும் நிலத்திலிருந்து 4 அடி உயரத்தில் வளையம் அமைக்கப்பட்டிருக்கும். குத்துச் சண்டைப் போட்டி சுற்று (Round) என்று குறிப்பிடப்படுகிறது. போட்டிகளில் 4 முதல் 15 சுற்றுகள் வரை ஆடுவர். உலகக் குத்துச் சண்டைக் கழகமும் (World Boxing Council), உலகக் குத்துத் சண்டைச் சங்கமும் (World Boxing Association) பன்னாட்டு அளவில் குத்துச்சண்டைப் போட்டிகளுக்கான விதிமுறைகளை வரையறுத்துள்ளன. காண்க: விளையாட்டுகள்.{{Right|எஸ். கோ.}} <section end="ஆட்டங்களும் விளையாட்டுகளும்"/> <section begin="ஆட்டத் தந்திரக் கோட்பாடு"/> {{dhr}} <b>ஆட்டத் தந்திரக் கோட்பாடு</b> என்பது பொருளாதாரப் போட்டித் தந்திர ஆட்டங்களில் பங்கு கொள்ளும் ஆட்டக்காரர்களுக்கு உயர் ஆதாயம் தரக்கூடிய ஆட்ட வகை எது என்பதை ஆராய்ந்து, அவற்றின் தன்மையையும் போக்கையும் கணக்கியல் முறையில், ஐயப்பாடற்ற வகையில் வகுத்துக் கூறும் கோட்பாடாகும். போர் முனையில் எதிரிகள் தங்கள் போர்த் தந்திரங்களையும் உத்திகளையும் பயன்படுத்தித் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வெற்றிப் பயனை உச்சமாக்கிக் கொள்ள முனைகிறார்கள். ஒரு வேளை தோல்வி ஏற்படின், அதன் அளவைக் குறைத்துக்கொள்ள முனைகிறார்கள். அவ்வாறே, பண்டங்களை உற்பத்தி செய்வோரும், விற்பனை செய்வோரும் அங்காடியில் தங்கள் ஆதாயத்தை உச்சமாக்கிக்கொள்ள முயல்கின்றார்; அல்லது இழப்பின் அளவைக் குறைவாக்கிக் கொள்ள முயல்கின்றனர். இவ்வாறு, போர்க்களத்திலும், அரசியல் அரங்கிலும், விற்பனைக் களத்திலும் போட்டியிடும் மக்கள் தம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கையொன்றில் எதிராளி உடனுக்குடன் இறங்கக் கூடும் என்பதையும் உணர்வார்கள். அதன் விளைவாக, தொடக்கத்தில் தாம் எதிர்பார்த்த ஆதாயத்தின் அளவை எதிராளி குறைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறான் என்பதையும் உணர்வார்கள். சதுரங்க (Chess) ஆட்டத்தில், எதிர் எதிரான அணிகளில் வெட்டுகள் நிகழ்த்தி, விளையாட்டுக் காரர்கள் தங்கள் வெற்றி வாய்ப்பினைப் பெருக்கிக் கொள்ள, அல்லது இழப்பின் அளவை மிகவும் குறைவாக்கிக் கொள்ள முனைவர். இது போன்றே, அங்காடிப் போட்டியாளர்களும் (Market Competitors) எதிர் எதிர் ஆட்டங்கள் ஆடி, ஆதாயப் பெருக்கலில் ஈடுபடுகிறார்கள். போர்த் தந்திரமானாலும், அரசியல் தந்திரமானாலும், அங்காடியில் ஆதாய வேட்டைக்குரிய தந்திரமானாலும், ஆட்டத்தந்திரக் கோட்பாடு (Game Theory) அவற்றிற்கெல்லாம் மாதிரியாகப் பொருந்தக் கூடியதே என்பதைச் சில கணித மேதைகளும், பொருளியல் வல்லுநர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர். இக்கோட்பாட்டின் இன்றியமையா-<noinclude></noinclude> 3mr33sbxatc1fboubpzfd60ldfv4qpf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/119 250 625856 1944118 1877437 2026-06-09T15:13:08Z ஹர்ஷியா பேகம் 15001 1944118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரம்|75|உருத்திரவர்மன்}}</noinclude>செய்யப்படும். இது ‘உருத்ரைகாதசனி’ என்று கூறப்படும். இவ்வாறு பதினோர் உருத்ரைகாதசனி பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் இலகுருத்திரம் என்றும், அவ்வாறு பதினோர் இலகுருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஒரு மகாருத்திரம் என்றும் அவ்வாறு பதினோரு மகாருத்திரம் பாராயணம் செய்யப்பட்டால் அது ஓர் அதிருத்திரம் என்றும் கூறப்படும். நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிலும் இறைவன் பாகுபாடின்றி, அவையேயாய்க் கலந்து நிற்றல் பற்றி இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து, உருத்திரம் அவனுக்கு வணக்கம் கூறுகிறது. பெரியபுராணத்தில் இடம்பெறும் உருத்திர பசுபதி நாயனார் இந்த உருத்திரத்தைப் பாராயணம் செய்து சிவப்பேறு பெற்றவராவார். அவர் இந்த உருத்திர மந்திரத்தினைக் கழுத்தளவு நீரிடை நின்று, புலனடக்கி ஓதி வழிபட்டார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது (காண்க, உருத்திரபசுபதி நாயனார்). சேக்கிழார் உருத்திரத்தினை, ‘ஆய அந்தணர் அருமறை உருத்திரம்’ என்றும், ‘அருமறைப் பயனாகிய உருத்திரம்’ என்னும் குறிப்பிட்டுள்ளார். தமிழில் அமைந்துள்ள சிவஞானபோத நூலின் முதல் நூற்பா ‘அரனே முதற்கடவுள்’ என்னும் உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. அவ்வாறே உருத்திரம், உருத்திரனே பரமன் ஆவான் என்னும் உண்மையை விரிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டு அவனுக்கு வணக்கம் கூறுகிறது. திருநாவுக்கரசர் அருளிய, ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ எனத் தொடங்கும் நின்ற திருத்தாண்டகம், சிவபரம் பொருள் இயங்கியல் நிலையியற் பொருள் ஆகிய அனைத்திலும் கலந்து நிற்கும் பாங்கினை விளக்கிப் போற்றுகிறது. இத்திருத் தாண்டகம் உருத்திரத்தின் வழிவந்தது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். நின்ற திருத்தாண்டகம், உருத்திரம் ஆகிய இரண்டினையும் நன்கு கற்று ஆராய்வோர் அவற்றினிடையே விளங்கும் நுட்பமான வேறுபாட்டினை உணர்தல்கூடும். வடமொழி வேதங்களில் உருத்திரம் பெற்றுள்ள இடத்தையும் சிறப்பையும் அறிந்த ஆய்வாளர்கள், தமிழ் மறையாகிய திருமறையிலும் அத்தகையதொரு சிறப்பு விளங்குவதனைக் கண்டு காட்டியுள்ளனர். வட மொழியில் வேதங்கள் நான்கு என்னும் மூன்று என்றும். கூறப்படும் மரபிற்கேற்ப, தமிழ் வேதங்களும் நால்வர் அருளிச் செயல்களையும் (தேவாரம், திருவாசகம் திருக்கோவையார்) மூவர் தேவாரத்தையும் நான்கு மூன்று என்ற எண்ணிக்கையில் அமைத்துப் போற்றும் மரபுண்டு. மூவர் தேவாரங்களுள் இடையில் விளங்குவது அப்பர் தேவாரமாகும். அவர்தம் தேவாரத் திருமுறைகளுள் இடையில் நிற்பது ஐந்தாம் திருமுறையாகும். அத்திருமுறையின் நடுவே 51-ஆம் பதிகமாக இருப்பது திருப்பாலைத் துறைப் பதிகமாகும். அப்பதிகத்தின் நடுவில் அமைந்துள்ள 6-ஆம் பாடலுள் ‘சிவாய’ என்னும் பாசம் நீங்கிய சீபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து) இடம்பெற்றுத் திகழ்கிறது. வடமொழித் திருமறையிலும் தமிழ்மொழித் திருமுறையிலும் சீபஞ்சாட்சரம் இவ்வாறு அமைந்துள்ள சிறப்பின் அருமையை உணர்ந்து அறிஞர் போற்றியுள்ளனர்.{{Right|அ.மா.ப}} <section end="உருத்திரம்"/> <section begin="உருத்திரமாதேவி"/> {{dhr}} <b>உருத்திரமாதேவி (கி.பி. 1259-95)</b>தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார். உருத்திரமாதேவி (Rudramadevi) கணபதிதேவரின் மகள். இவளுக்கு உருத்திராம்பா, உருத்திராம்பதேவி, உருத்திராதேவா என்னும் பல பெயர்கள் உண்டு. இவர் கி.பி.1259-இல் கணபதி தேவரை அடுத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டார். இவருடைய தொடக்ககால ஆட்சியின்போது கோப்பெருஞ்சிங்கரும் ஏனைய குறுநில மன்னர்களும் பல தொல்லைகள் கொடுத்தனர். ஆனால், அனைத்துத் தொல்லைகளையும் அரசிக்கு உறுதுணையாக இருந்த காயசுத்தத் தலைவர் அம்பதேவர் அடக்கிவிட்டார். யாதவத் தலைவரான மகாதேவர் இவருக்கு எதிராகப் படையெடுத்துத் தோற்றுப் போனார் எனினும் மகாதேவருக்குப் பின்னரும் யாதவர்களுடன் இருந்த தொல்லை தொடர்ந்தது. இவர்தம் பேரர் பிரதாபருத்திரதேவர் இப்போர்களில் நெற்றிவாகை சூடினார். இவர் பிரதாபருத்திர தேவரை இளவரசராக கி.பி. 1280-ஆம் ஆண்டில் நியமித்தார். எட்டாண்டுகளுக்குப் பின்னர் அம்பதேவரும் ஓய்சலர், யாதவர் போன்றவர்களின் துணையோடு இவர் மீது போர் தொடுத்தார். ஆனால், பிரதாபருத்திரர் அதனையும் கி.பி. 1291-இல் அடக்கி ஒடுக்கினார். உருத்திராம்பா கி.பி. 1295-இல் காலமானபோது இவருடைய பேரர் இரண்டாம் பிரதாபருத்திரர் என்னும் பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.{{Right|இரா.அ.}} <section end="உருத்திரமாதேவி"/> <section begin="உருத்திரவர்மன்"/> {{dhr}} <b>உருத்திரவர்மன்</b> தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் இந்தோ-சீனாத் தீபகற்பத்தில் பூனான் (Funan) என்னும் பகுதியை ஆண்ட மன்னர், இவரை, ‘பதவியைப் பறித்துக் கொண்டவர்’ என இகழ்வர், இவர் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்திருந்தன. எனினும், இவர் ஆறு தூதுக் குழுக்களைச் சீனாவிற்கு கி.பி. 514-க்கும் 539-க்கும் இடைப்பட்ட காலத்தில் அனுப்பினார் என்பது தெரியவருகிறது. தென்பாகத்திலிருந்து படையெடுத்த கெமர் (Khmër)<noinclude></noinclude> fnwpq70na2w0gk3c8hgl4qswulvr1qr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/120 250 625857 1944125 1877438 2026-06-09T15:22:57Z ஹர்ஷியா பேகம் 15001 1944125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரனார்|76|உருதுமொழி}}</noinclude>அரசின் தாக்குதல்களின் விளைவாக இவர் கி.பி 540-ஆம் ஆண்டளவில் பதவியை இழந்தார்.{{Right|இரா.அ.}} <section end="உருத்திரவர்மன்"/> <section begin="உருத்திரனார்"/> {{dhr}} <b>உருத்திரனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் உருத்திரன் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவரது ஒரே பாடல் குறுந்தொகை 274-ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்துள்ள அப்பாடல் பொருள் வலித்ததன் நெஞ்சிற்குத் தலைவன் கூறுவதாக உள்ளது. அப்பாடலில் இவர், விடுகணைகளை வில்லொடு பற்றி, மரக்கிளையில் ஏறி, அவ்வழியே வருபவர்களைத் தாக்கிப் பறித்தற்கு எதிர் நோக்கியிருக்கும் வன்கண் ஆடவர் ‘நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னாக் கானம்’ என்று பாலை நிலத்தின் வெம்மைக் கொடுமையினைக் கவின் பெறக் காட்டியுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உருத்திரனார்"/> <section begin="உருத்திராட்சம்"/> {{dhr}} <b>உருத்திராட்சம்</b> என்பது கண்மணிபோல் உருண்டை வடிவில் அமைந்த ஒருவகை மரத்தின் கொட்டையாகும். இதன் மேலமைப்பு கண்ணீர்த்துளிகள் சிதறிக் கிடப்பன போன்று சிறுசிறு உருண்டைகளால் பொதியப்பட்டுக் காணப்படும். கொட்டை கடினமாகவும், நீளத்தில் பள்ளங்கள் உள்ளதாகவும், மேலெல்லாம் கோணலான கரடுகள் உள்ளதாகவும் இருக்கும். சாதாரணமாக 5 அறைகள் இருக்கும். ஒவ்வோர் அறையின் வெளிப்புறத்தை ஒரு முகம் என்பர். சிலவற்றில் 6 முதல் 13 முகம் வரையிலும், வேறு சிலவற்றிஸ் 1 முதல் 5 முகம் வரையிலும் இருக்கும். மணிகள் ஆறுமுகம் அல்லது அதற்கு மேற்பட்ட முகங்களுள்ளவையும், ஐந்துக்குக் குறைந்த முகங்கள் உள்ளவையும் மேம்பட்டவையாகக் கருதப்படும். முப்புரங்களை எரிக்க எழுந்த உருத்திரனுடைய சினமிக்க கண்ணிலிருந்து வந்த ஓர் அமுதத் துளியினின்றும் இந்த மணி உண்டானதால் இது உருத்தி ராட்சம் என்று பெயர் பெற்றதென்றும், இதை அணிவோர் பாவங்கள் நீங்குமென்றும் சைவர்கள் நம்புகின்றனர். இதன் பெருமையைச் சாபால உபநிடதம், கந்தபுராணம், உபதேச காண்டம், சூத சாங்கிதை, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இது சைவ சமயத்தின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை அணிவோர் கொல்லாமை, புலாலுண்ணாமை, அருளுடைமை போன்ற விரதங்களை மேற்கொண்டொழுக வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.{{Right|இரா.கோ}} <b>உருதுமொழி</b> இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது பிற்காலத்தில் தோன்றிய மொழி ஆகும். முசுலிம்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது தங்களுக்கென ஒரு மொழியையும் உடன் கொண்டு வந்தனர். அம்மொழி அராபிய, பாரசீக துருக்கிய மொழிகளின் கலவையாலானது. இந்தியாவிற்குள் நுழைந்த முசுலிம் படை தில்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறியது. முதலில் மொழி தெரியாத காரணத்தால், மக்களுடன் உரையாட அவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். இச்சிக்கலைத் தீர்க்கக் ‘கடிபோலி’ என்னும் புதிய மொழியை உருவாக்கி, அதற்குத் தங்களின் பாரசீக எழுத்து வடிவத்தைத் தந்தனர். அம்மொழியை ‘உருது’ எனக் குறிப்பிட்டனர். ‘உர்தூ’ என்னும் துருக்கிமொழிச் சொல்லுக்கு இராணுவ இருப்பு என்பது பொருளாகும். இம்மொழியை இதே பொருளில் ‘இலசுகர் மொழி’ எனவும் குறிப்பிட்டனர். இம்மொழி பாகிசுத்தானில் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி (1950) ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 இந்தியத் தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் சம்மு-காசுமீர் மாநிலத்தில் மட்டும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் இது இரண்டாம் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உருது பேசும் மக்கள் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பரந்து வாழ்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களுடைய தொகை சிறுபான்மையாக உள்ளது. இந்தியா, பாகிசுத்தானைத் தவிர ஆப்கானிசுத்தான், பர்மா, இந்தோனேசியா, ஈரான், ஈராக்கு, மலேசியா, மொரீசியசு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இதைப் பேசுபவர்கள் உள்ளனர். உருது மொழியில் வரலாற்றுக் காரணங்களால் பார்சி, அரபு மொழிகளின் செல்வாக்குப் பலவகையில் இடம்பெற்று இருந்தாலும், இலக்கண முறையின் இது முற்றிலும் ஓர் இந்திய மொழியாகவே நிகழ்கிறது. உருதுச் சொற்களின் புள்ளிவிவரப்படி இம்மொழியில் இந்திய மொழிச் சொற்கள் 73.45 விழுக்காடும், பார்சி, அரபுச் சொற்கள் 25.55 விழுக்காடும், மற்ற ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் 1 விழுக்காடும் அமைத்துள்ளமை தெரியவருகிறது. 1 ஆகையால் இது அடிப்படையில் ஓர் இந்திய மொழியே என்பதில் ஐயமில்லை. உருதுவில் மொத்த எழுத்துகள் 37. இது பார்சி அரபு மொழிகளின் வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. இதன் நெடுங்கணக்கும் பார்சி, அரபு மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டதாகும். சில இந்திய மொழி ஒலிகளுக்குரிய எழுத்துகள் புதிதாக இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> h647660dk71pl36658af9avd8ir5xo0 1944127 1944125 2026-06-09T15:24:00Z ஹர்ஷியா பேகம் 15001 1944127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருத்திரனார்|76|உருதுமொழி}}</noinclude>அரசின் தாக்குதல்களின் விளைவாக இவர் கி.பி 540-ஆம் ஆண்டளவில் பதவியை இழந்தார்.{{Right|இரா.அ.}} <section end="உருத்திரவர்மன்"/> <section begin="உருத்திரனார்"/> {{dhr}} <b>உருத்திரனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் உருத்திரன் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவரது ஒரே பாடல் குறுந்தொகை 274-ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்துள்ள அப்பாடல் பொருள் வலித்ததன் நெஞ்சிற்குத் தலைவன் கூறுவதாக உள்ளது. அப்பாடலில் இவர், விடுகணைகளை வில்லொடு பற்றி, மரக்கிளையில் ஏறி, அவ்வழியே வருபவர்களைத் தாக்கிப் பறித்தற்கு எதிர் நோக்கியிருக்கும் வன்கண் ஆடவர் ‘நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னாக் கானம்’ என்று பாலை நிலத்தின் வெம்மைக் கொடுமையினைக் கவின் பெறக் காட்டியுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உருத்திரனார்"/> <section begin="உருத்திராட்சம்"/> {{dhr}} <b>உருத்திராட்சம்</b> என்பது கண்மணிபோல் உருண்டை வடிவில் அமைந்த ஒருவகை மரத்தின் கொட்டையாகும். இதன் மேலமைப்பு கண்ணீர்த்துளிகள் சிதறிக் கிடப்பன போன்று சிறுசிறு உருண்டைகளால் பொதியப்பட்டுக் காணப்படும். கொட்டை கடினமாகவும், நீளத்தில் பள்ளங்கள் உள்ளதாகவும், மேலெல்லாம் கோணலான கரடுகள் உள்ளதாகவும் இருக்கும். சாதாரணமாக 5 அறைகள் இருக்கும். ஒவ்வோர் அறையின் வெளிப்புறத்தை ஒரு முகம் என்பர். சிலவற்றில் 6 முதல் 13 முகம் வரையிலும், வேறு சிலவற்றிஸ் 1 முதல் 5 முகம் வரையிலும் இருக்கும். மணிகள் ஆறுமுகம் அல்லது அதற்கு மேற்பட்ட முகங்களுள்ளவையும், ஐந்துக்குக் குறைந்த முகங்கள் உள்ளவையும் மேம்பட்டவையாகக் கருதப்படும். முப்புரங்களை எரிக்க எழுந்த உருத்திரனுடைய சினமிக்க கண்ணிலிருந்து வந்த ஓர் அமுதத் துளியினின்றும் இந்த மணி உண்டானதால் இது உருத்தி ராட்சம் என்று பெயர் பெற்றதென்றும், இதை அணிவோர் பாவங்கள் நீங்குமென்றும் சைவர்கள் நம்புகின்றனர். இதன் பெருமையைச் சாபால உபநிடதம், கந்தபுராணம், உபதேச காண்டம், சூத சாங்கிதை, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. இது சைவ சமயத்தின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை அணிவோர் கொல்லாமை, புலாலுண்ணாமை, அருளுடைமை போன்ற விரதங்களை மேற்கொண்டொழுக வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.{{Right|இரா.கோ}} <section end="உருத்திராட்சம்"/> <section begin="உருதுமொழி"/> {{dhr}} <b>உருதுமொழி</b> இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது பிற்காலத்தில் தோன்றிய மொழி ஆகும். முசுலிம்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது தங்களுக்கென ஒரு மொழியையும் உடன் கொண்டு வந்தனர். அம்மொழி அராபிய, பாரசீக துருக்கிய மொழிகளின் கலவையாலானது. இந்தியாவிற்குள் நுழைந்த முசுலிம் படை தில்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறியது. முதலில் மொழி தெரியாத காரணத்தால், மக்களுடன் உரையாட அவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். இச்சிக்கலைத் தீர்க்கக் ‘கடிபோலி’ என்னும் புதிய மொழியை உருவாக்கி, அதற்குத் தங்களின் பாரசீக எழுத்து வடிவத்தைத் தந்தனர். அம்மொழியை ‘உருது’ எனக் குறிப்பிட்டனர். ‘உர்தூ’ என்னும் துருக்கிமொழிச் சொல்லுக்கு இராணுவ இருப்பு என்பது பொருளாகும். இம்மொழியை இதே பொருளில் ‘இலசுகர் மொழி’ எனவும் குறிப்பிட்டனர். இம்மொழி பாகிசுத்தானில் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி (1950) ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 இந்தியத் தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் சம்மு-காசுமீர் மாநிலத்தில் மட்டும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் இது இரண்டாம் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உருது பேசும் மக்கள் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் பரந்து வாழ்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களுடைய தொகை சிறுபான்மையாக உள்ளது. இந்தியா, பாகிசுத்தானைத் தவிர ஆப்கானிசுத்தான், பர்மா, இந்தோனேசியா, ஈரான், ஈராக்கு, மலேசியா, மொரீசியசு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இதைப் பேசுபவர்கள் உள்ளனர். உருது மொழியில் வரலாற்றுக் காரணங்களால் பார்சி, அரபு மொழிகளின் செல்வாக்குப் பலவகையில் இடம்பெற்று இருந்தாலும், இலக்கண முறையின் இது முற்றிலும் ஓர் இந்திய மொழியாகவே நிகழ்கிறது. உருதுச் சொற்களின் புள்ளிவிவரப்படி இம்மொழியில் இந்திய மொழிச் சொற்கள் 73.45 விழுக்காடும், பார்சி, அரபுச் சொற்கள் 25.55 விழுக்காடும், மற்ற ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் 1 விழுக்காடும் அமைத்துள்ளமை தெரியவருகிறது. 1 ஆகையால் இது அடிப்படையில் ஓர் இந்திய மொழியே என்பதில் ஐயமில்லை. உருதுவில் மொத்த எழுத்துகள் 37. இது பார்சி அரபு மொழிகளின் வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. இதன் நெடுங்கணக்கும் பார்சி, அரபு மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டதாகும். சில இந்திய மொழி ஒலிகளுக்குரிய எழுத்துகள் புதிதாக இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.{{nop}}<noinclude></noinclude> 2hdi5tng4f3jysipioljk8d3xtg1fpp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/125 250 625895 1944130 1877635 2026-06-09T15:26:23Z ஹர்ஷியா பேகம் 15001 1944130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருப்படி|81|உருப்படிப் பகுப்பாய்வு}}</noinclude><b>Grierson, G. A.,</b> Linguistic Survey of India, vol. IX, Part I, Motilal Banarsidas, Delhi, 1968. <section end="உருதுமொழி"/> <section begin="உருப்படி"/> {{dhr}} <b>உருப்படி</b>: உறுப்புச்சிதைவில்லாமல் முழுதுமாக அமைந்துள்ள பொருள் உருப்படி எனப்படும். இசை உலகில் அவ்வாறு அமைந்து விளங்கும் இசைப்பாட்டும் உருப்படி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இசைப்பாட்டினுள்ளும் தாளக்கட்டினோடு அமைந்த பாடலையே உருப்படி என்று கூறுவர். பாடப்பெறும் இசைப்பாட்டு தாள அறுதிக்கு உட்படுமாறு அமைக்கப்பட்டது என்றும், அவ்வாறு அமைக்கப்படாதது என்றும் இருவகைப்படும். ‘தான தன தன தான தன தன’ என்ற சந்தக் குழிப்பில் ஓர் அடி பாடப்படுமாயின், தொடர்ந்து வரும் அடிகளும் அந்தக் குழிப்பிலேயே அமைவதாகும். ‘பாதி மதிநதி போது மணி சடை’ என்று ஓர் அடி தொடங்கினால், அடுத்தது பாகு கனிமொழி மாது குறமகள் என்று அமையும் சந்தம் மாறுபடாமையால் இவ்வடிகள் தாள அமைப்பில் சிதையாமல் ஒத்து நிற்கும். இவ்வாறு தாள அமைதியில் அமைந்த பாடல்களைப் பாடுதற்கு ஒரே அளவான காலம் தேவைப்படும். சந்த அமைப்பில் அமையும் தாள அறுதி பெறாமல் அடிகள் உருவாக்கப்படுமாயின், அவை யாப்புச் சிதைவில்லாவிட்டாலும் இசைத்துப்பாடுங்கால் வெவ்வேறு கால அளவுட்படும். ‘காருலாவிய’ ‘கல்மனத்தினால்’ என்னும் சீர்கள் ‘நேர் நிரை நிரை’ என்னும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்தனவாயினும், சாகித்தியத்தில் அமைத்துப் பாடும்போது அவை வெவ்வேறு கால அளவு பெற்று இசை வேறுபட்டுவிடும். அதனால் உருப்படி என்னும் இசைப்பாட்டில் ஒரே கால. அறுதிக்குப்படும் சொற்கட்டு அமைந்தால் இசை மாறுபடாமல் அமையும். தாள அமைப்போடு கூடிய இசைப் பாடலாகிய உருப்படியில் அமைந்துள்ள இசை ‘தாது’ என்றும், சாகித்தியம் (சொற்கோவை) மாது என்றும் பெயர் பெறும். சாகித்தியம் இல்லாத உருப்படிகளும் அமைவதுண்டு, நாட்டியங்களில் இடம்பெறும் அலங்காரம், சதிசுரம் முதலியவையும் இராக சஞ்சாரிகளும் இல்லகையில் அமைவனவாகும். இவற்றைப் பாட்டாக அல்லாமல் சுரவடிவாகவே பாடுவர். உருப்படிகளை இசையரங்கில் இசைத்தற்குரியன என்றும், பயிற்சிக்குரியன என்றும் பாகுபடுத்தலாம். இசையரங்கிற்குரிய உருப்படிகள் இராகத்தின் பாவத்தினைத் தெளிவுபட விளக்கும் வகையில் உயர்ந்த இசையில் அமைக்கப்பட்டிருக்கும். கிருதி, இராக மாலிகை, பதம், சாவளி போல்வன இதற்கு எடுத்துக்காட்டாம். பயிற்சிக்குரிய உருப்படிகள் குரல் பயிற்சிக் காகவும் இசைக் கருவிகளில் மேற்கொள்ளும் விரல் பயிற்சிக்காகவும் அமைக்கப்படுவன. அலங்காரம், கீதம் சுரசதி, தாளவருணம் முதலியன இதற்கு எடுத்துக்காட்டு. பயிற்சிக்குரிய உருப்படிகளை நன்கு பயில்வதனால் இசைப்பாடல்களை அழகாகவும், கமகச் சிறப்பு முதலிய நயங்கள் பொருந்தவும் பாடும் இறம் பெறலாம். உருப்படி என்னும் இசைப்பாட்டினைச் சிலப்பதிகார உரையாசிரியர்கள் உரு என்னும் பெயரால் குறிப்பிட்டுள்ளனர்; இவ்வாறு குறிப்பிடுவது இசைத்தமிழ் வழக்கமாகும்.{{Right|அ.மா.ப.}} <section end="உருப்படி"/> <section begin="உருப்படிப் பகுப்பாய்வு"/> {{dhr}} <b>உருப்படிப் பகுப்பாய்வு</b>: ஒரு தேர்வு என்னென்ன குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதோ, அக்குறிக்கோள்களை நிறைவுபடுத்துவதில் ஒவ்வோர் உருப்படியும் அவ்வது கேள்வியும் (Item) செவ்வனே அமைதல் வேண்டும். அவ்வகையான உருப்படிகளை அல்லது கேள்விகளைத் தெரிவு செய்யும் முறையே உருப்படிப் பகுப்பாய்வு (Item Analysis) ஆகும். உருப்படிப் பகுப்பாய்வின் மூலம் தேர்வின் தரத்தை உயர்த்த இயலும். தரம் தாழ்ந்த கேள்விகளைக் கண்டறிந்து, அவற்றிற்குப் பதிலாக மேலும் சிறந்த பொருத்தமான உருப்படிகளை உருவாக்க இயலும். உருப்படிகளின் தரத்தைப் புள்ளியியல் அளவுகளால் முடிவு செய்யலாம். கடினக் குணகம் (Difficulty Index), வேறுபடுத்தும் குணகம் (Discrimination Index) என்ற இரு புள்ளியியல் அளவுகள் கேள்வியின் தரத்தை அளக்க உதவுகின்றன. ஒரு குறிப்பிட்ட தேர்வில் (அதிலும்) குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு விடை அளித்தவர்களுள் எத்தனை விழுக்காடு சரியான விடையளித்துள்ளனர் என்ற அளவீடு கடினக் குணகமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு கேள்விக்குச் சரியான விடைக்கு ‘1’ மதிப்பெண் எனவும் தவறான விடைக்கு ‘0’ எனவும் கொண்டால், பதிலளித்தவர்களுள் எத்தனை பேர் அளித்துள்ளனர்? அவர்கள் மொத்த விடையளித்தவர்களுள் எத்தனை விழுக்காடு என்று கணக்கிடக் கடினக்குணகம் கிடைக்கும். கடினத்தன்மை எத்தனை விழுக்காடு மாணவர்கள் வினாவிற்குச் சரியான விடை கொடுத்துள்ளார்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. கடினக் குணகம் அதிகமுள்ள வினாக்களுக்கு அதிக விழுக்காடு மாணவர்கள் சரியான விடை கொடுத்திருப்பர். மற்றோர் அளவீட்டுக் குணகமான வேறுபடுத்தும் குணகம் ஒரு குறிப்பிட்ட வினாவிற்குச் சரியான விடை அளித்தவர்களுள் தேர்ச்சித் திறன் அதிகம் பெற்றோர், தேர்ச்சித் திறன் அதிகம் பெறாதோர் ஆகிய இருவரையும் வேறுபடுத்திக்-<noinclude> <b>வா. க. 5 - 6</b></noinclude> no4w2500mvb9hj70nyvjup9uqlmlh8w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/129 250 625902 1944131 1877652 2026-06-09T15:27:42Z ஹர்ஷியா பேகம் 15001 1944131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபன் வகைகள்|85|உருபன் வகைகள்}}</noinclude>சரியான விடைக்கு 1 முதல் 5 வரை மதிப்பெண்கள் வழங்கக் கூடிய வகையில் அமைந்த வினாக்களுக்கு ::{| |- |வேறுபடுத்தும் குணகம் || = || SH - SL/nH (X Max. - X Min.) |- | || = || 38-19/10(5-0) |- | || = || 19/50 = 0.38 |- |} அறிஞர் இலாஞ்சே (Lange), இலேமன் (Lehmann), மெக்ரன்சு (Mchrens) ஆகியோர் புதுப்புது உருப்படிகள் தெரிவு செய்யும் பொழுது, மீனவும் புதுப்புது உருப்படிகள் தெரிவு செய்தலைவிட ஒதுக்கிவிட்ட உருப்படிகளை மறுபடியும் புனரமைத்துத் திருத்தம் செய்தலே சாலச் சிறந்தது என்றும், பழைய உருப்படிகளில் இருந்து தெரிந்தெடுப்பதற்கான முயற்சியில் செலவிடப்படும் கால அளவு புதிய உருப்படிகள் தேர்ந்தெடுக்கும் கால அளவீட்டில் 1/5 பங்கு ஆகிறது என்றும் கூறுவர். ஒரு தேர்வில் கடினக் குணகம், வேறுபடுத்தும் குணகம் என்ற இரண்டின் அடிப்படையில் தெரிவு செய்தல் மட்டும் போதாது. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்வு முழுவதற்குமான சராசரி (Mean), தரவிலக்கம் (Standard Deviation) ஆகியனவும் கணக்கிடப்படவேண்டும்.{{Right|எஸ்.மோ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hopkins, D., Kenneth and Julian C. Stanley.,</b> Educational and Psychological Measurement and Education, Prentice Hall, New Jersey, 1981.<br> <b>Scannell. Tracy,</b> Testing and Measurement in the Classroom, Houghton Mufflin Company, Boston, 1975. <section end="உருப்படிப் பகுப்பாய்வு"/> <section begin="உருபன் வகைகள்"/> {{dhr}} <b>உருபன் வகைகள்</b>: ஒருமொழியில் காணப்பெறும் பொருள் தரும் மிகச் சிறிய குறியீட்டு வடிவம் உருபன் (Morpheme) எனப்படும். ஒரு மொழியிலுள்ள அனைத்து உருபன்களையும் அவற்றின் உள்ளமைப்பு, பிற உருபன்களோடு அவை கொண்டுள்ள தொடர்பு ஆகிய இரு அடிப்படைகளிலும் வகைப்படுத்துதல் இயலும், உருபன்களின் உள்ளமைப்பு உருபன்கள் உருவாகத் துணையாய் அமைந்த ஒலியன்கள் (Phonemes), உருபன்களின் வடிவம், உருபன்களின் உறுப்புகளுக்கிடையே காணப்பெறும் தொடர்பு ஆகிய மூன்றின் அடிப்படையில் அமையும். உருபன்களின் உள்ளமைப்பு அடிப்படையில் உருபன்களைக் கீழ்க்காணுமாறு பகுக்கலாம். <b>ஒலியன் அடிப்படை</b>: உருபன்களை அவை உருவாகத் துணைபுரியும் ஒலியன்களின் அடிப்படையில் மூன்று வகையாகப் பகுக்கலாம். சில உருபன்கள் பகுப்பொலியன்களால் (Segmental Phonemes) உருவாகும். இத்தகைய உருபன்கள் முதல் வகையினைச் சாரும். ‘கல்’, ‘மண்’ போன்ற உருபன்கள் முறையே மூன்று பகுப்பொலியன்களால் (க் + அ + ல், ம் + அ + ண்) உருவானவையாகும். சில உருபன்கள் மேற்பகுப்பொலியன்களால் (Supra segmental Phonemes) மட்டுமே ஆக்கம் பெறும். இத்கைய உருபன்கள் இரண்டாம் வகையினைச் சாரும். பேச்சுத் தமிழில் ‘வந்தான்’ என்னும் வினைச்சொல்லின் பால் காட்டும் உருபனாகிய ‘ன்’ இழப்புற்றுத் தனக்கு முன்னுள்ள ‘ஆ’ என்னும் இட உருபனோடு (Personal Morpheme) இணைந்து, அவ்வுருபனை (‘ஆ’வை) மூக்கினச்சாயல் (Nasalization) பெறவைக்கிறது, இங்ஙனம் மூக்கினச்சாயல் பெற்ற உருபனைக் கொண்ட வினைவடிவம் ‘ ’ (வந்தா) எனக் குறியீடிட்டுச் சுட்டப் பெறும். ஈண்டுப் பால் காட்டும் உருபன் ‘ ’ இட உருபனுக்கு மேற்பகுதியில் அமையப் பெறுவதால் இது மேற்பகுப்பொலியனால் அமையப் பெற்ற உருபனாகக் கருதப்படுகிறது. இத்தகைய உருபன்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே ஒரு மொழியில் காணப்படும். பகுப்பொலியன்களாலும் மேற்பகுப்பொலியன்களாலும் அமையப் பெற்ற உருபன்கள் மூன்றாவது வகையினைச் சாரும். ‘மலர்’, ‘கல்’ என்ற உரு-<noinclude></noinclude> sik9dyn4o4y9dp86rhfn6gn3y55iq74 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/133 250 625944 1944132 1877833 2026-06-09T15:29:58Z ஹர்ஷியா பேகம் 15001 1944132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபனும் மாற்றுருபும்|89|உருபனும் மாற்றுருபும்}}</noinclude>அனைத்துமே சொல்முடிப்பு அல்லா உருபன்கள் எனப்படும். தமிழ்மொழியில் காணப்பெறும் கால உருபன்கள், பால் காட்டும் உருபன்கள் போன்றவை அனைத்தும் சொல்முடிப்பு அல்லா உருபன்களே.{{Right|ஏ.ஆ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hocket, Charles, F., </b> A Course in Modern Linguistics, The Macmillan Company, New York, 1958.<br> <b>Karunakaran, K. and Edward Williams, T,</b> Morphology: An Introduction, Grace Publications, Nagercoil, 1934.<br> <b>Nida, E.A.,</b> Morphology: The Deseriptive Analysis of Words, The University of Michigan Press, Anna Arbor, 1946. <section end="உருபன் வகைகள்"/> <section begin="உருபனும் மாற்றுருபும்"/> {{dhr}} <b>உருபனும் மாற்றுருபும்</b>: மொழியின் கூட்டமைப்பினைப் பல்வேறு துணையமைப்புகளாகப் பிரித்துக் கண்ட கட்டமைப்பியலார் அக அமைப்பாகக் கொண்ட மூன்று உட்பிரிவுகளுள் ஒன்றாக இயக்கணத் திட்டத்தைக் குறிப்பிடுவர். இத்திட்டம் மொழியில் பயன்படுத்தப்படும் உருபன்களையும், அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள உறவினடிப்படையில் கட்டப்படும் முறையினையும் விளக்குவதாகும். மொழியின் இரண்டு தன்மைகளான வடிவம், கருத்து ஆகிய இரண்டிற்கும் ஒலியும் உருபும் முறையே அடிப்படை உறுப்புகளாக அமைகின்றன. இவையே ஒரு குறிப்பிட்ட மொழியின் ஒலியன் எனவும் உருபன் எனவும் வழங்கப்படுகின்றன. உருபன் (Morpheme) என்பது ஒரு மொழியின் மிகச் சிறிய பொருள் பொதிந்த கூறாகும். ஒலியனை இனங்காண்பதற்கு இரு ஒலிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடும் தன்மை மட்டுமே போதுமானதாக இருக்க, உருபனை இனங்காண்பதற்கு அங்ஙனம் வேறுபடும் பொருளும் தேவையாகிறது. கட்டமைப்பியலார் நெறிப்படி இவ்வுருபன் நிலையிலேயே பொருளும் மொழி ஆய்லில் பயன்படுத்தப்படுகிறது. உருபன்களை இனங்காணப் பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டாலும் ‘பயின்றுவரும் பகுதிகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காணுதல்’ என்பதே அடிப்படையாகும். இவ்விரு தன்மைகளும் இல்லாதவிடத்து உருபன்களை இனங்காணல் எளிதன்று. என்னய், அம்மாவய், நாயய், பூவய் போன்ற எடுத்துக்காட்டுகளுள் -அய் என்னும் வடிவம் பயின்று வருதலைக் காணலாம். இவ்வடிவம் தனி உறுப்பாகப் பாகுபாடு செய்யப்பட்டு, இவற்றிடையே காணப்படும் பொருளை ஒப்பிட்டு நோக்கினால், அனைத்து இடங்களிலும் ஒரே பொருள் கிடைப்பதைக் காணலாம். மேலும் - அய் என்பதனை இதற்கு மேலும் அ+ய் எனப் பிரித்துப் பொருள் காண முடியாது. அய் என்பதே மிகச் சிறிய பொருள் பொதிந்த ஒரு கூறாகும். அதாவது உருபனாகும். தாமரய், முல்லய், கய்தய் போன்றவற்றுள்ளும் இறுதியில் அய் என்னும் கடியம் பயின்று வந்துள்ளது. ஆனால் இந்த வடிவத்தின் ‘பொருளும்’ முன்னர்க் கண்ட வடிவத்தின் பொருளும் ஒன்றன்று. உண்மையில் இவ்வெடுத்துக்காட்டுகளில் -அய் என்பதைத் தனியே பிரிக்கவே முடியாது. எனவே இது மிகச்சிறிய கூறுமன்று; பொருள் பொதிந்ததுமன்று; உருபனுமன்று. பைபயன்கள், பெண்கள், குழந்தைகள் போன்றவற்றில் உள்ள -கள் என்னும் வடிவம் பயின்று வருவதனாலும், மிகச்சிறிய கூறாக இருப்பதனாலும் ஒரே பொருளைக் கொண்டிருப்பதனாலும் இதனைத் தனி உருபனாகக் கொள்ளலாம். இதைப் போன்றே தங்கைமார், மாமாமார் போன்றவற்றில் உள்ள மார் என்பதையும் கொள்ளலாம். இவ்விரண்டு உருபன்களுமே ஒரே பொருளைக் கொண்டிருந்தாலும், வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. ஆனால், மொழியில் இவை வழங்குமுறையை ஒப்பிட்டு நோக்கும்போது ஓர் உண்மை புலனாகும். மார் என்னும் உருபன் உறவுமுறைச் சொற்களோடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கள், மார் என்னும் இரண்டுமே ஒன்றுக்கொன்று மாற்றாக நின்று துணைநிலை வழக்கில் அமைந்துள்ளன. இவ்வாறு வடிவத்தால் வேறுபட்டாலும், பொருளால் ஒன்றுபட்டு, ஒன்றோடொன்று துணைநிலை வழக்கில் அமைந்துள்ள பகுதிகளும் ஒரே உருபனாகவே கொள்ளப்படும், இவை ஓர் உருமனின் மாற்றுவங்களாகக் கருதப்படுகின்றன; இவையே மாற்றுருபுகள் (Allomorphs) எனப்படுகின்றன. கள் என்னும் பன்மை உருபன் ஆண்கள் என்னும் போது -gal எனவும், ஆடுகள் என்னும் போது - xal எனவும், பூக்கள் என்னும்போது kat எனவும் ஒலிக்கப்படுவதனைக் காணலாம். இவ்வேறு பாடுகள் தனக்கு முன்னே நிற்கும் ஒலியினாய் ஏற்படுபவை, மூக்கொலியை அடுத்து ஒலிப்புடைத் தடையொலியும், இரண்டு உயிர்களுக்கிடையே உரசொலியும், ஏனை இடங்களில் ஒளிப்பிலாத் தடையொலியும் வழங்குவது தமிழ் ஒலியக் கட்டமைப்பில் காணப்-<noinclude></noinclude> pt8sfuklupl6z6cw6t9246k16xeawgl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/134 250 625946 1944133 1877837 2026-06-09T15:32:28Z ஹர்ஷியா பேகம் 15001 1944133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபாரி|90|உருபு புணர்ச்சி}}</noinclude>படும் தன்மையாகும். இலை மற்றோர் ஒலியினால் வேறுபடுத்தப்படுவதனால், ஒலியினாற் கட்டுண்ட மாற்றுருபுகள் எனப்படுகின்றன. -கள்,-மார் ஆகிய இரண்டும் சில சொற்களினால் வேறுபடுத்தப்படுவதனால், இவை உருபனாற் கட்டுண்ட மாற்றுருபுகள் ஆகும்.{{Right|ஜே. நீ}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hocket, C.F.,</b> A Course in Modern Linguistics, The Macmillan Co.. New York. 1958.<br> <b>Nida, E.A.,</b> Morphology, The University of Michigan Press, Anna Arbor. 1972. <section end="உருபனும் மாற்றுருபும்"/> <section begin="உருபாரி"/> {{dhr}} <b>உருபாரி</b> தென்னமெரிக்க இந்தியப் பழங்குடியினராவர். வடகிழக்கு அமேன் பகுதியில் வாழும் இவர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். உருபாரிப் (Yurupary) பழங்குடியினர் உயரமானவர்கள்: உடல் வலிமைமிக்கவர்கள். இவர்கள் கலப்புப் பொருளாதார வாழ்க்கை மேற்கொண்டிருப்பவர்களாவர். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், கால்நடை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல் முதலானவை இவர்களின் முதன்மைத் தொழில்கள், துணிநெய்தல், மட்பாண்டங்கள் செய்தல், கூடைமுடைதல், வேட்டைக் கருவிகள் செய்தல் முதலானவை இவர்களின் துணைத் தொழில்கள், இவர்கள் நடு அமெரிக்க இந்தியர்களைப் போன்று கற்களாலான வீடுகளைக் கட்டுவதில்லை. இவர்களின் வீட்டுப் பொருள்கள் பெரும்பான்மையாக மரப் பொருள்களாலும் விலங்குத் தோல்களாலும் விலங்குகளின் கொம்புகளாலும் ஆனவை. குலவழி அடிப்படையில் சிறு குடும்பங்களாக வாழும் இவர்கள் ஒரு மண முறையைக் கொண்டவர்கள். பலதுணை மணம் சில குடும்பங்களில், குறிப்பாகத் தலைவன் குடும்பங்களில் உள்ளது. உருபாரிகள் சமூகத்தில் ஏற்புச் சடங்குகள் (Initiation Ceremonies) மிகவும் விரிவானவை இரகரியச் சமூகங்களுக்கு அனுப்பி வைப்பதில் இச்சடங்கு முதன்மை இடம் பெறுகிறது. இவர்கள், உடலின் பல இடங்களில் கோடுகளும் அடையாளங்களும் வரையப்பட்டு, வயதுவந்தோரின் இரகசியச் சங்கத்தில் உறுப்பினராகின்றனர்; உடலில் பல வகையான வண்ணப் பூச்சுகளைப் பூசி அலங்கரித்துக் கொள்கின்றனர். வேட்டையாடும் கருவிகளும் தோட்டப் பயிரிடும் கருவிகளும் வீட்டுச் சாமான்களுமே முதன்மையான சொத்தாதலால், இவர்களிடையே மரபுரிமை வழக்குகளும் சிக்கல்களும் எழுவதில்லை. இவர்களது சமூக அமைப்பும் எளிதானது. ஆதலால் இவர்களின் பழங்குடித் தலைவனே இவர்களிடையே எழும் சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறான். இவர்கள் ஆவியுலக நம்பிக்கை கொண்டு, முன்னோர் ஆளிகளையும் இயற்கைப் பொருள்களையும் வழிபடுகின்றனர். தெய்வத் தன்மையுற்றவனைக் (Shaman) கொண்டும் கூட்டுச் சடங்குகள் மூலமும் இயல் பிறந்த இயற்கையையும் ஆவிகளையும் தம் நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் செயற்பட வைக்கின்றனர். உருபாரிகள் சமயச் சடங்குகளில் பிற அமெரிக்க இந்தியப் பழங்குடிகளைப் போன்று மாய வித்தையையும் பில்லி சூனியத்தையும் கொண்டுள்ளனர். தெய்வத் தன்மையுற்றவர் இச்சமூகத்தினரின் சமயச் செயற்பாடுகளை நிகழ்த் துபவராக மட்டுமல்லாமல், மருத்துவராகவும் சமூகச் சடங்குகளை நடத்துபவராகவும் உள்ளார்.{{Right|சீ.ப.}} <section end="உருபாரி"/> <section begin="உருபு புணர்ச்சி"/> {{dhr}} <b>உருபு புணர்ச்சி</b>: வேற்றுமை எட்டு ஆயினும், செயப்படுபொருள் முதலாக இடப்பொருள் ஈறாக வேறுபடுத்தும் ஆறுவகை உருபுகளையே வேற்றுமை உருபு என்றும், அவை மறைந்து நின்று அப்பொருள் புலப்படப் புணரும் புணர்ச்சியை “வேற்றுமைப் புணர்ச்சி” என்றும், விரிந்து நிற்குமிடத்து அவ்வுருபுகள் பெயர்ச் சொல்லோடு புணரும் புணர்ச்சியை ‘உருபு புணர்ச்சி’ என்றும் கூறுவர். பெயர்ச் சொற்களின் பின் ஐ முதலிய உருபுகள் புணருமிடத்துச் சிறுபான்மை இயல்பாகவும் பெரும்பான்மை திரிபாகவும் புணரும். திரிபாவது பெரும்பான்மை சாரியை பெறுதலும் சிறுபான்மை உருபேற்கும் பெயர்கள் வடிவு திரிதலுமாம். பெயர்சொற்கள் ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் உருபுகள் புணருமிடத்து, புறா+ஐ = புறாவை என இயல்பாகவும், பலா + இன் +ஐ= பலாவினை எனச்சாரியை பெற்றும், நிலாவை / நிலாவினை என இரு நிலைமையாகவும் புணரும். பெயரொடு உருபுகளை இணைக்கும் சாரியைகள் இன், வற்று, அன், ன், ஒன், அத்து, தம், நம், நும், தன் என்பனவாகும். வற்று என்பதை அற்று எனக் கொள்வார் பிற்கால இலக்கண நூலோர். மகர ஈற்றுச் சொற்கள் பெரும்பான்மை அத்துச் சாரியை பெறும், மரத்தை, மரத்தொடு என்றும் சிறுபான்மை அத்தொடு இன்னும் பெற்று மரத்தினை என்றும் வரும். உருமினை, திருமினை எனச் சிலமகர ஈற்றுச் சொற்கள் இன் சாரியை மட்டும் பெறும்.{{nop}}<noinclude></noinclude> fune87zlpig1pxjom49tqc68yo9omnu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/135 250 625976 1944135 1877999 2026-06-09T15:35:01Z ஹர்ஷியா பேகம் 15001 1944135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபு மயக்கம்|91|உருபொலியன் எழுத்து}}</noinclude>உருபேற்கும் பொழுது சில பெயர்கள் திரிபுறும்; தாம், நாம், யாம், தான், யான், நீர், நீ என்பவை குறுகித் தம், நம், எம், தன், என், நும், நின் என்று வரும், தம், எம், நும், தன், என், நின் என்பன நான்காம் உருபு ஏற்கும்போது ஓர் அகரத்தைச் சாரியையாகப் பெறும். திசைப்பெயர்கள் ஏழாம் உருபேற்கும் போது இறுதி கெட்டு, வடக்கண் தெற்கண் என வருதலும் உண்டு. ஐ, ஓடு, கு முதலாக வகுக்கப் பெற்ற வேற்றுமை உருபுகளேயன்றி, உருபின் பொருள்பட வரும் பொருட்டு, நின்று, உடைய அகம், புறம், சார்புடை என வரும் சொல்லுருபுகள் வரினும் அவ்விதிகளைப் பெறும்.{{Right|ச.பா.}} <section end="உருபு புணர்ச்சி"/> <section begin="உருபு மயக்கம்"/> {{dhr}} <b>உருபு மயக்கம்</b>: மயக்கம் என்னும் சொல் ஒன்று மற்றொன்றினோடு கலப்பதனை உணர்த்தும். ஒரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தினில் பிறிதொரு வேற்றுமை உருபு நின்று, தனது பொருளைத் தாராமல், எப்பொருளைத் தரவேண்டுமோ அப்பொருளைத் தந்து நிற்பது வேற்றுமை மயக்கம் என்று இலக்கண ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். இது வேற்றுமை உருபு மயங்கிவருதல், வேற்றுமைப் பொருள் மயங்கிவருதல் ஆகிய காரணங்களால் உருபு மயக்கம், பொருள் மயக்கம் என்று இரு வகைப்படும். முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் நீங்க, எஞ்சிய ஆறு வேற்றுமைகளே இவ்வாறு மயங்கி வரப்பெறும். உருபு மயக்கம் என்பது ஒரு வேற்றுமைக் குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விடுத்து, வேறொரு வேற்றுமைப் பொருளில் மயங்கி வருவதாகும். ‘கிளையரி நாணற் கிழங்கு மணற்கின்ற, முனையோரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ என்னும் அகநானூற்றுப் பாடற் (212) பகுதியில், தலைவியின் அழகிய கூரிய வெண்பல்லினுக்கு மணலில் தோன்றியுள்ள நாணற்கிழங்கின் முளை உவமையாகக் கூறப்பட்டுள்ளது. ‘நாணற் கிழங்கு மணற்கீன்ற’ என்ற தொடரில் உருபு மயக்கம் அமைந்துள்ளது. நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ என்பது கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல் என்னும் பொருள்களில் வரும். நான்காம் வேற்றுமை உருபேற்று வந்துள்ள ‘மணற்கீன்ற’ என்னும் தொடரில் ‘மணல்’ என்னும் சொல் தான் ஏற்ற நான்காம் வேற்றுமை உருபிற்குரிய பொருள் எதனையும் கொள்ளாமல், ‘மணற்கண்’ என்னும் ஏழாம் வேற்றுமையின் இடப் பொருளில் அமைந்துள்ளது. தொடரில் நான்காம் வேற்றுமை உருபு அமைந்திருந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளில் பொருள் கொள்ளாமல், அவ்விடத்திற்குப் பொருந்துமாறு ஏழாம் வேற்றுமை இடப் பொருளையே கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, அமைந்துள்ள உருபிற்கேற்பப் பொருளைக் கொள்ளாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் ‘கிழங்குமணற் கீன்ற’ என்பது ஏழாவதன்கண் நான்காவது வந்த உருபுமயக்கம் எனப்படும்.{{Right|அ.மா.ப}} <section end="உருபு மயக்கம்"/> <section begin="உருபொலியன் எழுத்து"/> {{dhr}} <b>உருபொலியன் எழுத்து</b>: ஒருமொழியில் வழங்கும் எழுத்துகள் ஒவ்வொன்றும் மொழி அமைப்பில் ஒலி, ஒலியன், உருபொலியன் ஆகியவற்றில் எதைக் குறிக்கிறது என்ற அடிப்படையில் எழுத்துகளைப் பாகுபடுத்தலாம். ஓர் எழுத்து ஒலியை எப்பொழுதும் குறித்தால் அதற்கு ஒலி எழுத்து என்றுபெயர். அப்படியில்லாமல் ஓர் எழுத்து ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகளைக் குறித்து நின்று, அந்த ஒலிகள் வருமிடம் வரையறுக்கக் கூடியதாயும், அந்த ஒலிகளின் பண்பில் ஒற்றுமை உடையதாயும் இருந்தால் அது ஒலியன் எழுத்து எனப்படும். தமிழில் சொல்லுக்கு முதலில் க, த, ப ஆகிய எழுத்துகள் இசையிலா ஒலி (Voiceless) யாகவும் (உரோமன் எழுத்தில் k, t, p என்று குறிக்கப் பெறுவன). அவை மெல்லெழுத்துக்குப் பிறகு வரும்போது இசை ஒலி (Voiced) யாகவும் (உரோமன் எழுத்தில் g, d, b என்று குறிக்கப் பெறுவன), சொல்லுக்கு நடுவில் இரண்டு உயிரொலிகளுக்கு இடையே வரும்போது உரசொலி (Fricative) ஆகவும் இருந்தாலும், அந்த மூன்று இடங்களிலும் ஒரே வரிவடிவத்தையே (க, த, ப,) பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்ட மூன்று வல்லின எழுத்துகளும் ஒலியன் எழுத்துகள் ஆகும். இந்த முறையை இரண்டு சொற்கள் சேரும்போது கடைப்பிடிப்பதால் சொல்லுக்குரிய எழுத்துக்களில் சொல்லெழுத்து (Spelling) மாற்றம் ஏற்படுகிறது. (எ-டு) மரம் என்ற சொல்லைக் குறிது, சிறிது, பெரிது போன்ற சொற்களோடு சேர்க்கும்போது மரங்குறிது, மரஞ்சிறிது, மரம்பெரிது என்று எழுதுவர். இங்கு மரம் என்பதை மரங், மரஞ் என்று மாற்றுவதற்கு உச்சரிப்பு வேறுபாடும், ஒலியன் வேறுபாடும் காரணங்கள் ஆகும். எனவே இப்படி எழுத்து அமைந்தால் அது ஒலியன் எழுத்து (Phonemic spelling) என்று பெயர்பெறும். ஒரு மொழியில் இரண்டு ஒலிகள் வேறுவேறு ஒலியனாக இருந்து தனித்தனி எழுத்துகளைப் பெற்றிருந்து, சில இடங்களில் அந்த இரண்டு ஒலியன்களும் துணைநிலை வழக்கில் (ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வருவதில்லை) இருக்குமானால், ஒரே எழுத்தில் எழுதப்படுவது உருபொலியன் எழுத்து (Morphophonemical spelling) என்று கூறப்படும். தமி-<noinclude></noinclude> d0csixog69zro4uvnj632i14vtz03jp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/136 250 625978 1944137 1878001 2026-06-09T15:36:42Z ஹர்ஷியா பேகம் 15001 1944137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபொலியனியல் அமைப்பு|92|உருபொலியனியல் அமைப்பு}}</noinclude>ழில் அகரமும் ஐகாரமும் வேற்றுநிலை வழக்கில் (கட-கடை: நட-நடை) இருப்பதால் இரண்டும் வெவ்வேறு வரிவடிவம் பெற்றுள்ளது. ஆனாலும் தலை, தலைமை ஆகிய இரண்டு சொற்களிலும் ஐகார ஒலி அமையாவிட்டாலும் ஐகார வடிவமே எழுதப்பட்டுள்ளது. தலைமை என்ற சொல்லில் ‘லை’ என்பது ‘ல’ என்றே உச்சரிக்கப்படுகிறது. அங்கு ‘அ’ (அதாவது தலமை) என்று எழுதாமல் ‘ஐ’ (அதாவது தலைமை) என்று எழுதுவது உருபொலியன் எழுத்துமுறை என்று சொல்லப்பட வேண்டும். ஏனென்றால் சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் இரண்டு ஐகாரம் வரும் போது முதல் ஐகாரம் அகரமாக உச்சரிக்கப்படுகிறது. எனவே, இங்கு ஐ, அ என்ற ஒலியன்கள் மாற்று வடிவமாக (தலை என்ற சொல்லில் ஐகாரமாகவும் தலைமை என்ற சொல்லில் தலமை என்று அகரமாகவும்) இருந்தும் வரிவடிவில் ஒரே எழுத்து கையாளப்படுவதால் அது உருபொலியன் எழுத்து ஆகும். பழை என்ற அடிச்சொல்லில் இருந்து பிறந்த மற்றொரு சொல்லான பழைமை என்ற சொல்லைப் பழமை என்றே பலரும் எழுதுகிறார்கள். இங்கு அது ஒலியன் எழுத்தாகக் கருதப்பட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் பழைய என்ற சொல்லில் அகர உச்சரிப்பு (பழய) காணப்பட்டாலும் ஐகாரமே எழுதப்படுவதால், பழைய என்பதில் உருபொலியன் எழுத்து உளது என்று கருதவேண்டும். இந்த முறை ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் காணப்படுகிறது. பன்மையைக் குறிக்க -S என்று எழுதினாலும், அது இசை ஒலியை இறுதியாக உடைய சொற்களில் (Z) என்றும் (எ-டு bags, cubs), இசையிலா ஒலியை இறுதியாக உடைய சொற்களில் (S) என்றும் (cooks, tips) உச்சரிக்கப்படுகின்றது. ஆங்கில மொழியில் (S), (Z) என்று தனித்தனி வரிவடிவங்களைப் பெற்றிருந்து, பன்மை விகுதியில் இரண்டு உச்சரிப்பு இருந்தும் ஒரே எழுத்தில் எழுதுவதால் உருபொலியன் எழுத்து முறையாக அமைகிறது. மொழியில் உருபொலியன் எழுத்து முறை அதிகமாகக் காணப்படுவதில்லை.{{Right|செ.வை.ச.}} <section end="உருபொலியன் எழுத்து"/> <section begin="உருபொலியனியல் அமைப்பு"/> {{dhr}} <b>உருபொலியனியல் அமைப்பு</b>: ஒரு மொழியின் மைய அமைப்பின் (Central system) மூன்று பெரும் பிரிவுகளுள் ஒன்று உருபொலியனியல் அமைப்பு (Marghophonemic system) ஆகும். இல்வமைப்பு மைய அமைப்பின் பிற இரு அமைப்புகளாகிய ஒலியனியல் அமைப்பையும் (Phonological system) இலக்கண அமைப்பையும் (Grammatical system) இணைக்கும் ஒரு பாலமாகச் செயற்படுகின்றது. ஒலியனியல் அமைப்பு, ஒலியன்கள் (Phonemes), அவற்றின் வருகை முறை (Distribution) ஆகியவற்றையும், இலக்கண அமைப்பு, உருபன்கள் (Morphemes), அவற்றின் வருகைமுறை ஆகியவற்றையும் விவரிக்கும். சொற்கள் புணருங்கால் அவற்றின் கண்ணுள்ள ஒலியன்களில் ஏற்படும் மாற்றங்களை உருபொலியனியல் அமைப்பு விவரிக்கும். இங்ஙனம் புணர்ச்சியின் போது உருபன்களிலுள்ள ஒலியன்களில் ஏற்படும் மாற்றங்களைச் சித்திரிக்கும் வகையில் இவ்வமைப்பு ஓலியவியல் அமைப்பினையும் இலக்கண அமைப்பினையும் இணைக்கும் அமைப்பாகச் செயற்படுகின்றது. உருபன்களின் மாற்றுருபுகளே (Allomorphs) உருபொலியனியல் அமைப்பின் அடிப்படையாக அமைகின்றன. புணர்ச்சி காரணமாகவும் ஓர் உருபனுக்குப் பல்வேறு மாற்றுருபுகள் அமைதலுண்டு. இரண்டு சொற்கள் புணருங்கால் அவற்றின் ஒலியன்கள் சூழலுக்கேற்ப மாற்றமடைதலுண்டு. இத்தகைய மாற்றங்கள் உருபொலியனியல் மாற்றங்கள் (Morphophonemic Changes) அல்லது புணர்ச்சி மாற்றங்கள் (Sandhi Changes) எனப்படும். புணர்ச்சியின்கண் மாற்றமடைகின்ற ஒலியன் உருபொலியன் (Morphophoneme) எனப்படும். ‘மரம்’ என்னும் உருபன் ‘காடு’, ‘சோலை’, ‘தொட்டி’, ‘பெட்டி’, ‘லேர்’ ஆசிய உருபன்களோடு புணரும் நிலையில் முறையே ‘மரக்காடு’, ‘மரச்சோலை’, ‘மரத் தொட்டி’, ‘மரப்பெட்டி’, ‘மரவேர்’ என அமைகின்றது. ஈண்டு ‘மரம்’ என்னும் உருபனின் ஈற்று மகரம் உருபொலியனாகக் கருதத்தக்கது. தமிழில் புணர்ச்சியின்கண் திரிதல் (Replacement Substitution), தோன்றல் (Addition), கெடுதல் (Deletion), இயல்பு (No Change) ஆகிய நான்கு வகையான மாற்றங்கள் நடைபெறுதலுண்டு. புணர்ச்சியில் ஈடுபடும் முதற்சொல் நிலைமொழி அல்லது நிறுத்த சொல் எனவும் இரண்டாம் சொல் வருமொழி அல்லது குறித்து வருகிளவி எனவும் கட்டப்பெறும். தமிழ் மொழியில் புணர்ச்சியினை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வகையினவாக வகைப்படுத்துதல் இயலும். அடிப்படை நிலையில் புணர்ச்சியினைப் புறப்புணர்ச்சி (External Sandhi or Syntactical Sandhi) எனவும், அகப்புணர்ச்சி (internal Sandhi or Morphological Sandhi) எனவும் இருவகைப்படுத்தலாம். இரு தனி வடிவங்கள் (Free Forms) புணர்வது புறப்புணர்ச்சி எனப்படும். மண், குடம் என்னும் இரண்டு வடிவங்களும் புணர்ந்து ‘மட்குடம்’ என மாற்றம் பெறுவது இவ்வகையாகும். ஒரு தனிவடிவ-<noinclude></noinclude> j30qrof0ft44q3h8qttr5tix4c2wfic பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/138 250 625980 1944138 1878003 2026-06-09T15:37:52Z ஹர்ஷியா பேகம் 15001 1944138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருபொலியனியல் அமைப்பு|94|உருமண்ணுவா}}</noinclude>வருமொழி முதலொலியனாகிய சகரத்திற்கேற்ப நிலைமொழி ஈற்றொலியனாகிய மகரம் சகரத்தின் இன ஒலியனாகிய ஞகரமாக மாறுகின்றமையால் இது ஓரளவு ஓரினமாதலுக்குத் தகுந்த சான்றாகும். சூழல் ஒலியனின் தன்மைக்கேற்ப, மாற்றமடையும் ஒலியன் முற்றிலும் மாறிவிடும் சூழயில் (மரம் + கொம்பு > மரக்கொம்பு) அப்புணர்ச்சி முற்றிலும் ஓரினமாதம் எனப்படும். இச்சான்றில் வருமொழி முதல் ஒலியனுக்கு (க்) ஏற்ப நிலைமொழி ஈற்றொலியன்(ம்) வெடிப்பொலியனாக (க்) மாறுகிறது. ஓரினமாதல் மாற்றமடையும் ஒளியலின் நிலையிடத்திற்கு (Position) ஏற்ப, நிலைமொழி நோக்கிய ஓரினமாதல் (Regressive Assimilation), வருமொழி நோக்கிய ஓரினமாதல் (Progressive Assimilation), இருமொழி நோக்கிய ஓரினமாதல் (Reciprocal Assimilation) என மூன்று வகைப்படும். புணர்ச்சியின் போது நிலைமொழி ஈற்றொலியன் வருமொழி முதலொலியனுக்கு ஏற்ப மாற்றமடையுமாயின் (மரம் + தோல் > மரத்தோல்) அது நிலைமொழி நோக்கிய ஓரினமாதல் ஆகும். வருமொழி முதலொலியன் நிலைமொழி ஈற்றொளியனுக்கு ஏற்ப மாற்றமடையுமாயின் (பொன் + தீது > பொன்றீது) அது வருமொழி நோக்கிய ஓரினமாதல் எனப்படும். நிலைமொழி ஈற்றொலியன், வருமொழி முதலொலியன் ஆகிய இரண்டும் தத்தம் தாக்கத்தால் மாற்றமடையின் (மண் + தீமை > மட்டீமை) அது இருமொழி நோக்கிய ஓரினமாதல் எனப்படும். இருமொழி நோக்கிய ஓரினமாதலுக்குக் கொடுக்கப்பட்ட சான்றில் முதல்நிலையில் வருமொழி முதலொலியனுக்கேற்ப நிலைமொழி ஈற்தொலியன் மாற்றமடைகிறது (மட்தீமை). இரண்டாம் நிலையில் நிலைமொழி ஈற்றொலியனுக்கேற்ப வருமொழி முதலொலியன் மாற்றமடைகிறது (மட்டீமை). ஒரே இனத்தைச் சார்ந்த நிலைமொழி ஈற்றொலியனும் வருமொழி முதலொலியனும் புணர்ச்சியில் வேறுவேறு இனத்தைச் சார்ந்த ஒலியன்களாக மாற்றம் பெறின் அப்புணர்ச்சி வேறினமாதல் எனப்படும். தமிழில் வேறினமாதலுக்கு முறையான சான்றுகள் இல்லை. உருபொலியனியல் அமைப்பில் இருவகை மாற்றங்கள் நடைபெறலாம். முதல்வகை மாற்றம் வடிவ மாற்றம் (Shape Change) எனப்படும். தமிழில் ‘இரா’ என்னும் வடிவம் புணர்ச்சியின்கண் ‘இரவு’ என மாற்றம் பெறுகிறது. காலப் போக்கில் ‘இரவு’ என்னும் வடிவமே நிலைபெற்று விடுகின்றமையால் இத்தகைய மாற்றத்தினை வடிவமாற்றம் எனலாம். இரண்டாம் வகை மாற்றம் மாற்றுவடிவ மாற்றம் (Alternation Change) ஆகும். தமிழில் ‘மண்’ என்னும் உருபனுக்கு ‘மட்’, ‘மண்’ என்னும் இரு மாற்றுருபுகள் உண்டு. இக்காலத்தில் பேச்சுவழக்கில் ‘மம்பானை’ என்பதில் வரும் ‘மம்’ என்பது புதிய ஒரு மாற்றுருபாகச் செயற்படுகிறது. புணர்ச்சி காரணமாக ‘மண்’ என்னும் உருபனுக்கு ‘மம்’ என்னும் புதிய மாற்றுருபு தோற்றம் பெறுவது மாற்று வடிவ மாற்றத்திற்குத் தக்க சான்றாக அமைகிறது.{{Right|ஏ.ஆ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Elson, S. and Picket, V.S.,</b> An Introduction to Morphology and Syntax, Summer Institute of Linguistics, California, 1953.<br> <b>Gleason Henry A.Jr.,</b> An Introduction to Descriptive Linguistics, New York, 1955.<br> <b>Hocket. Charles, F.,</b> A Course in Modern Linguistics, Oxford and IBH Publishing Co., New- Delhi, 1976. <section end="உருபொலியனியல் அமைப்பு"/> <section begin="உருமண்ணுவா"/> {{dhr}} <b>உருமண்ணுவா</b> கொங்குவேனிர் இயற்றிய பெருங்கதைக் காப்பியக் கதை மாந்தர்களுள் ஒருவன். வத்தவ நாட்டு அரசன் உதயணனுக்கு உற்ற நண்பராயும், அமைச்சராயுமிருந்த நால்வருள் யூகி என்பானுக்கு அடுத்த நிலையில் இவன் இருந்தான். இவன் யாராலும் நுழைய இயலாத அரண்மனையையும், பெருமை மிக்க படையையுமுடையவன்: சிறந்த வீரன்; நூற்கேள்விமிக்கவன். உதயணனும் வாசவதத்தையும் இவன் நாட்டில் தான் திருமணம் புரிந்து கொண்டனர். உதயணன் வாசவதத்தையின் மீது கொண்ட தீராக் காதலினால் ஆட்சியில் நாட்டமில்லாதவனாக இருந்தபோது, யூகி என்பான் உருமண்ணுவாலின் துணைக்கொண்டு உதயணனுக்கு நன்மை விளையும் செயல்களைச் செய்தான். உதயணன் இருந்த அரண்மனைக்குத் தீ வைத்து, வாசவதத்தையைப் பிரித்துச் சாங்கியத் தாய் மூலம் யூகி இறந்துபட்டானென, உதயணனுக்கு மறைமுகமாக அறிவித்தான். அதனால் வேதனையுற்ற உதயணனை இவன், தேற்றுகிறான். வாசவதத்தையையும் சாங்கியத்தாயையும் சுரங்கப் பாதை வழியே வெளியேற்றி யூகியிடம் சேர்ப்பித்தான், தீயில் இறந்துபட்ட கள்வர் இருவர் உடலைக்காட்டி வாசவதத்தையும் சாங்கியத்தாயும் இறந்துபட்டனரென நம்பச் செய்து, அவனுக்கு ஏதும் தீங்கு நேராவண்ணம் விழிப்புடனிருக்கிறான். அவன் இறந்துபடாமலிருக்கக் காகதுண்டன் என்னுந் துறவியைக் கொண்டு, அவன் மனைவி அவனை<noinclude></noinclude> rk6th5o7970d5uj2tix01b34ggl19a0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/139 250 625982 1944141 1878005 2026-06-09T15:39:32Z ஹர்ஷியா பேகம் 15001 1944141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருமண்ணுவா|95|உருமேனியா}}</noinclude>வந்தடைவாள் எனக் கூறச் செய்ததன்வழி அவனைக் காப்பாற்றினான். மற்ற நண்பரான வயந்தகன், இடபகனுடன் மகதநாட்டு மன்னன் திருசகனுடன் உதயணன் உறவு கொள்ளுதற்குரியநிலை ஆராய்ந்து, அவன் குறிப்பறிந்து அவனை மகதம் அழைத்துச் சென்று துறவோர் பள்ளியில் தங்கச் செய்தான். அங்கே உதயணனும் தருசகன் தங்கை பதுமாவதியும் காதல் கொண்டது உதயணனுக்கு ஆக்கம் தரும் என மகிழ்ச்சியும் கொண்டான். தருசகன் உதயணனுடன் தட்டிப் பூண்டு அவனை அரண்மனையில் தங்கச் செய்த பொழுது அவனைக் காப்பதற்காக. அரண்மனையில் உருக்கரந்து வாழ்ந்தான். தருசகனோடு போர் செய்ய விரிசகன் முதலிய பகைவர் எண்மர் வந்தபோது உதயணனுக்கு உறுதுணையாக நின்று, பகைவர் புறங்காட்டி ஓடச் சூழ்ச்சி செய்தான். மேலும் உதயணன், தருசகன் ஆகிய இருவர் தந்தையரும் நண்பர்கள் என்பதை எடுத்துக்காட்டி, உதயணன் பதுமாவதியின் தள வொழுக்கம் கூறப்படின் தருசகன் பதுமையைக் கேகய நாட்டரசன் அச்சுவனுக்குத்தாரான் என எடுத்துக்காட்டினான். உருமண்ணுவாவைச் சங்க மன்னர் சிறை வைத்தபோது, தருசகன் இவனைச் சிறையினின்றும் விடுவித்தான். இச்சங்க மன்னரையும் உதயணனுக்கு நண்பராக்கும் செயல்களைச் செய்தான் உருமண்ணுவா. சாதகன் என்னும் இளையோன் வாயிலாக யூகியிடமிருந்து ஆற்றவேண்டிய காரியங்களை அறிந்து அவ்வண்ணமே நடந்தான். சத்தியூதி என்பானைத் தன்னொடு அழைத்துக் கொண்டு புண்டா நகரத்தை அடைந்து, கரந்துறையும் வாசவதத்தை முதலியோரைக் கண்டு, அவர்களை மதுகம்பீர வனத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கோசம்பி சென்றான். இறுதியில் அனைவரும் ஒன்று பட வைத்தான். இவ்வாறு உற்ற நண்பனாக இருந்த உருமண்ணுலாலைச் சிறப்பிக்க ஏழுநாள் விழா எடுத்தான் உதயணன். அவ்விழாவில் அவன் முத்தீ வளர்ப்போரும், ஐம்பெருங்குழுவும், செல்வரும், செல்வச்சிறப்பு மிக்க பெருங்குடி மாந்தரும், வாசவதத்தையும், பதுமாவதியும், படைத்தலைவர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் அணிந்துள்ள தன் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை, ‘இப்பெருமகன் நம் படைத்தலைவன் ஆகட்டும்’ எனக் கூறி, உருமண்ணுவாவிற்கு அணிவித்தான். மேலும், பதுமாவதியின் தோழி இராசனை என்பவளையும் அவனுக்குத் திருமணம் செய்து, பல்வேறு பரிசில்களையும் தந்து, சயந்தி, இலாவாணக நகரங்களுக்கு அரசனாக்கினான்.{{Right|பி.பா.உ.}} <section end="உருமண்ணுவா"/> <section begin="உருமேனியா"/> {{dhr}} <b>உருமேனியா</b> கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பொதுவுடைமை நாடுகளுள் ஒன்று. உரோமானியர்களைத் தம் மூதாதையராகவும் உரோமானிய மொழியைத் தம் மொழியின் அடிப்படையாகவும் கொண்டு, கிழக்கு ஐரோப்பாவில் நிலைத்திருப்பனர்கள் உருமேனியர்களே. புகாரெசுட்டு (Bucharest) உருமேனியாவின் தலைநகரும் பெருநகருமாகும். <b>இருப்பிடம்</b>: உருமேனியா உருசியா தாட்டிற்குத் தென்மேற்கிலும் பால்கன் தீபகற்பத்திற்கு வடக்கிலும் அமைந்துள்ளது. இதன் கிழக்குக் கரையில் கருங்கடல் உள்ளது. <b>பரப்பு</b>: உருமேனியாவின் பரப்பளவு 2,37,500 ச.கி.மீ. <b>மக்கள்தொகை</b>: இந்நாட்டின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 2,25,37,000 ஆகும். மக்கள்தொகையில் 51 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களிலும் 49 விழுக்காட்டினர் நாட்டுப் புறங்களிலும் வாழ்கிறார்கள். இதன் மக்கள்தொகை 1986-இல் 2,36,87,000 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உருமேனியாவின் மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினர் உரோமானிய மரபில் வந்தவர்கள். அங்கேரியர்கள் உருமேனியாவில் வாழும் சிறுபான்மையினர். அவர்களின் தொகை 8 விழுக்காடாகும். செருமானியர் 2 விழுக்காடு இங்கு உள்ளனர். பல்கேரியர்கள், நாடோடிகள், யூதர்கள், துருக்கியர் போன்றோர் எஞ்சியவர்கள். <b>மொழி</b>: உருமேனிய மொழியே நாட்டின் ஆட்சி மொழி. அனைத்து மக்களும் இம்மொழியையே பேசுகின்றனர். இங்கு வாழும் செருமானியர்களும் அங்கேரியர்களும் தம்தம் மொழியைப் பேசுகிறார்கள். உருமேனிய மொழி இலத்தீன் மொழியிலிருந்து உருவாகி வளர்த்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய மொழிகளுள் இலத்தீன் தொடர்புள்ள மொழி இம்மொழி ஒன்றேதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இம்மொழி கிழக்கு ஐரோப்பாவில் வழங்கும் ஏனைய மொழிகளிலிருந்து வேறுபட்டது, பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகீசியம், இசுபானியம் போன்ற<noinclude></noinclude> c3jmk38yde9iwst0ls91u9roz5l86bo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/147 250 626003 1944144 1878165 2026-06-09T15:43:56Z ஹர்ஷியா பேகம் 15001 1944144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவக் கந்தம்|103|உருவகம்}}</noinclude>தூக்கிப் பாராமல் ஒப்புக்கொண்டதில்லை. அவர்கள் பழைமையான பண்பாட்டில் ஆர்வம் உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள்.{{Right|இரா.கோ.}} <b>துணை நூல்</b>:<br> <b>Georghiu, M.,</b> Social and Political Science in Romania, Academia Republicic Socialiste Romania, Bucharest, 1981. <section end="உருமேனியா"/> <section begin="உருவக் கந்தம்"/> {{dhr}} <b>உருவக் கந்தம்</b>: இது பௌத்த மதத்தில் ‘சௌத்திராந்திகம்’ என்னும் பிரிவில் சொல்லப்படுகிற ஒரு தத்துவம். கந்தம் என்பது இத்தத்துவத்தில் சமூகம் அல்லது தொகுதி என்னும் பொருளில் சொல்லப்படுகிறது. அம்மதக் கொள்கையின்படி அறிவு புறச் சமுதாயம். அகச்சமுதாயம் என்னும் இருவகைச் சமுதாயம் பற்றி உண்டாகும். அவற்றுள் அகச்சமுதாயம் சித்தம். சித்தப் பகுதி என இரண்டு ஆகும். விரண்டிற்கும் காரணமாய் இருப்பவை ஐந்து வகைக் கந்தம். அவை உருவக் கந்தம், வேதனைக் கந்தம், ஞானக் (அறிவு) கந்தம், குறிக்கந்தம், வாசனைக் கந்தம் என்பன, உருவக் கந்தம் என்பது ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளும் அடங்கியதாகும்.{{Right|சி.அ.}} <section end="உருவக் கந்தம்"/> <section begin="உருவகம்"/> {{dhr}} <b>உருவகம்</b>: இரண்டு பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுதல் உருவகம். தாமரை, முகம் என்பன இரண்டு வேறுபட்ட பொருள்கள், ‘இம்முகம் தாமரை’ என்று கூறும் பொழுது முகம் தாமரை மேல் ஏற்றிக் கூறப்படுகிறது. இதனை உருவகம் என்பர். ‘தாமரை போன்ற முகம்’ என்று கூறும்பொழுது அதனை உவமை என்பர். ‘இம்முகம் தாமரை’ என்னும் தொடரில், தாமரையும் முகமும் வெவ்வேறானவை என்னும் வேற்றுமை நீக்கப்பட்டு, இரண்டும் ஒன்றே என்னும் பொருள் புலப்படுகிறது. ‘தாமரை போன்ற முகம்’ என்னும் பொழுது, தாமரையும் முகமும் வெவ்வேறானவை; இரண்டிற்கும் இடையிலுள்ள பொதுப் பண்பு அழகு மட்டுமே என்னும் கருத்து அமைகிறது. தமிழ் மொழியில் அணி இலக்கணம் முதன்முதலாகத் தொல்காப்பிய உவம இயலில் பேசப்படுகிறது. தொல்காப்பியர் உவம அணி ஒன்றினை மட்டுமே விளக்கியுள்ளார். ஏனைய அணிகள் உவமையுள் அடங்கும் என்பதனைத் தொல்காப்பியர் குறிப்பாக உணர்த்துகிறார். ‘உவமையே அணிகளுக்குத் தாய்’ என்று வடமொழி அறிஞர் அப்பைய தீட்சிதர் கூறியுள்ளார். உருவகம் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளவில்லை எனினும், உருவகம் பற்றிய கருத்து அவருடைய உவமையலுள் உள்ளது. ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்’ என்பது அவருடைய நூற்பா. பொருளினை உவமம் ஆக்கி, உவமத்தை உவமிக்கப்படும் பொருளாக்கிக் கூறினும், அதுவும் எனப்படும் என்பது இந்நூற்பாவின் கருத்து. ‘திருமுகம் மலர்ந்த தெய்வத் தாமரை’ என்பது இந்நூற்பாவுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. திருமுகம் தெய்வத் தாமரை என்னும் இருவேறு பொருள்களில் திருமுகம் உவமேயம்; தெய்வத் தாமரை உவமானம். ‘தெய்வத் தாமரை போல் அலர்ந்த திருமுகம்’ என்று சொற்களை அமைத்தால் இத்தொடர் உவம அணி ஆகும். உவமிக்கப்படும் பொருளான திருமுகத்தை உவமம் ஆக்கி, உவமம் ஆன தெய்வத் தாமரையை உவமிக்கப்படும் பொருளாக்கி, மாற்றிக் கூறும்போழுது ‘திருமுகம்மலர்ந்த தெய்வத் தாமரை’ என்னும் தொடர் கிடைக்கிறது. இவ்வாறு மொழி வதை அணிநூலார் உருவகம் என்று கூறுகின்றனர். ஆயின், தொல்காப்பியர் இதனையும் உவமை என்றே கொள்கிறார். பவளவாய் உவமை: வாய் பவளம் உருவகம் என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழில் அணியிலக்கணம் பற்றிக் கூறும் தண்டியலங்காரத்தில் பொருளணிகளுள் ஒன்றாக உருவகம் கூறப்படுகிறது. உவமானம், உவமேயம் என்னும் இரண்டிற்கும் இடையிலுள்ள வேற்றுமையை நீக்கிக் கூறுதல் உருவகம் என்பது தண்டியலங்காரம் தருகிற இலக்கணம். ‘கண் வண்டு’ உருவகம் என்பதில் கண்ணுக்கும் வண்டுக்கும் இடையிலுள்ள வேற்றுமையை ஒழித்துக் கண்ணையே வண்டு எனக் கூறுவது உருவகம். தண்டியலங்காரம் உருவகத்தை 15 வகைகளாகப் பகுத்து விளக்குகிறது. உருவகம் பிற அணிகளோடும் கலந்துவரும் என்பதும் இந்நூலில் கூறப்படுகிறது. பரத முனிவர் (Bharata) இயற்றிய நாடக நூலில் உருவகம் ஓர் அணியாகக் கூறப்பட்டுள்ளது. பாமகர் (Bhamaha), உருத்திரடர் (Rudrata), தண்டி (Dandin) போன்ற அணிநூலார் உருவகத்தைப் பல பகுப்புகளாகப் பகுத்து விளக்கியுள்ளனர். வேறுபட்டவை போலத் தோன்றும் பொருள்களுக்கிடையிலும் ஓர் ஒப்புமை காண்பதுதான் உருவகம் என்று கிரேக்கச் சிந்தனையாளர் அரிசுடாட்டில் (Aristotle) கூறுகிறார். மாந்தனின் சிந்தனை உருவகத்தை அடித்தளமாகக் கொண்டே முகிழ்க்கிறது என்று இரிச்சர்டுசு (I.A. Richards)<noinclude></noinclude> 68fqbxcbz4vouxsdhy3ptwb48oqy5vs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/148 250 626004 1944147 1878166 2026-06-09T15:46:54Z ஹர்ஷியா பேகம் 15001 1944147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவப் ......|104|உருவ வழிபாடு}}</noinclude>கூறுகிறார். மொழியியல் உருவகத்தைப் பொருண்மை இயலில் (Semantics) ஆராய்கிறது. மொழியில் வழங்கும் சொற்களில் பல, மொழியின் தொடக்க நிலையில் உருவகங்களாக இருந்தன என்று மொழியியல் கூறுகிறது. ஒரு மொழியில் எண்ணற்ற புதுப்புதுத்கள் அமைவதைப் போன்று, எண்ணற்ற புதுப்புது உருவகங்களும் அமைகின்றன. மக்கள் தம் பேச்சு மொழியில் உருவகங்களை அவ்வப்போது புத்தம் புதிதாகப் படைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக தொடர் ஒருவரைக் கேலி செய்யும் முறையில் எருமை, கரடி, மாடு என்று மக்கள் சூட்டும் பெயர்கள் உருவகங்களாக அமைகின்றன. உருவகம், சூழமைச் சார்புடையது (Context Dependent) என்று மொழியியலார் கூறுகின்றனர். சூழமைவினைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாவிட்டால் பொருள் புலப்பாடு கடினமாகிறது. ‘கறுப்பை வெள்ளை ஆக்கினான்’ என்னும் தொடர் இதற்கு எடுத்துக்காட்டு. சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டிய பொருள் கறுப்புப்பணம் என்றும், சட்டப்படி செல்லுபடி ஆக்குதல் வெள்ளைப் பணம் ஆக்குதல் என்றும் கூறப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ளாவிட்டால் இத்தொடரின் பொருளை உணர இயலாது. புதுக்கவிதைகளில் உருவகங்களை மிகுயாகப் பயன்படுத்துகின்றனர். அக்கவிதைகளில் இருண்மை (Obscurity) மிகுந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.{{Right|அ.பா.}} <section end="உருவகம்"/> <section begin="உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி"/> {{dhr}} <b>உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி</b> புறநானூற்றில் பரணராலும் பெருங்குன்றூர் கிழாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்ற சோழ இளவரசன். யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படைகளும் உடைய இவன், தேரில் வரும்போது பொலிவோடும் வலிவோடும் காட்சி தருவான் என்று பரணர் பாடுகிறார். வீரன், கொடையாளி என்று சிறப்பாகப் பேசப்படும் இச்சோழனுக்கும் பல்வகைத் தேர்கள் உடைமையாக இருந்தன. பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டான் என்பர். பேரரசர், சிற்றரசர் வீடுகளில் பெண் கேட்பதும் மணப்பதும் வழக்கமாக இருந்ததால், இவன் அழுந்தூர்வேள் என்னும் வேளிர் குலத் தலைவன் மகளை மனைவியாக ஏற்றான். இச்சோழன் இவனுடைய தமையனுக்காகப் போர்க்களம் சென்று பகைவர்களைத் தோற்கடித்துள்ளான். எனினும், இவன் முடி சூடா மன்னனாகவே இருந்திருக்கிறான். அதனால், இவனுடைய பெயர் இளஞ்சேட் சென்னி என்றும் வழங்கப்பெற்றது. இவ்விளஞ்சேட் சென்னியின் மகனே கரிகாலன். இவன் பிறக்குமுன் தந்தை இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான். கரிகாலனுக்கு மற்றொரு பெயர் ‘உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்’ என்பதாகும். தாய்வயிற்றில் இருக்கும்போதே அரச உரிமையைப் பெற்றுவிட்டதாகப் பொருநராற்றுப்படை கூறுவதால், இக்கரிகாலன், தந்தை முகம் காணாச் சிறுவன் ஆவான்.{{Right|பி.தெ.}} <section end="உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி"/> <section begin="உருவப்பள்ளிச் செப்பேடு"/> {{dhr}} <b>உருவப்பள்ளிச் செப்பேடு</b>: இது பல்லவ இளவரசர் விட்டுணு கோபவர்மன் வழங்கியது. இச்செப்பேட்டில் விட்டுணுகோபவர்மன், இரண்டாம் கந்தவர்மனின் (கி.பி. 400-436) மகன் என்றும், வீரவர்மனின் (கி.பி.385-400) பெயரனென்றும், கந்தவர்மனின் (கி.பி. 370-385) கொள்ளுப்பெயரன் என்றும் கூறப்பட்டுள்ளது. கோபவர்மன் இச்செப்பேட்டினைத் தம் அண்ணன் முதலாம் சிம்மவர்மனின் (கி. பி. 436-460) ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளான். இச்செப்பேடுகளின் மைப்படம் சர். வால்டர் எலியட்டு என்பவரால் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை, டாக்டர் பிளீட்டு என்பார் முதன் முதல் உரிய குறிப்புகளுடன் வெளியிட்டார். இது ஐந்து செப்பேடுகளைக் கொண்டது. செப்பேட்டில் உள்ள முத்திரையின் நடுவில் படுத்திருக்கும் ஒரு விலங்கின் உருவம் காணப்படுகிறது. ஏறத்தாழ இது மங்களூர்ச் சாசனங்களின் எழுத்தை ஒத்திருக்கிறது. இவ்வெழுத்தைப் பெட்டித்தலை (Box headed) எழுத்து எனவும் கூறுவர். சேனாதிபதியான விட்டுணுவர்மன் எடுப்பித்த விட்டுணு ஆரதேவகுலம் என்ற திருமால் கோயிலுக்கு, முண்டராட்டிரத்தில் உள்ள உருவப்பள்ளி என்னும் சிற்றூரில் 200 நிவர்த்தன நிலத்தைத் தேவபோகமாக அளித்த செய்தியை இச்செப்பேடு கூறுகிறது. உருவப்பள்ளியில் உள்ள நிலத்தைத் தானமாக அளித்ததால் இச்செப்பேடு இப்பெயர் பெற்றது. இக்கோயில் எடுப்பித்த விட்டுணுவர்மன், கதம்ப குலத்து வேந்தனும், அசுவமேதயாகம் புரிந்தவனுமான முதலாம் கிருட்டிணவர்மன் மகன் என்று அறிஞர் கருதுவர். பல்லவர்களின் முன்னோர் பற்றி அறிந்து கொள்ள இச்செப்பேடு பயன்படுகிறது விட்டுணுகோபவர்மன் மக்களின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்று இச்செப்பேடு கூறுகிறது.{{Right|ம.இரா.த.}} <section end="உருவப்பள்ளிச் செப்பேடு"/> <section begin="உருவ வழிபாடு"/> {{dhr}} <b>உருவ வழிபாடு</b>: அறிவு முதிர்ச்சி பெறாத எளியமக்களுக்கு இறை நம்பிக்கையை ஏற்படுத்துவதில்<noinclude></noinclude> kx5khir3sz1ds6xvd8roki5e2yawydv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/149 250 626007 1944149 1878176 2026-06-09T15:48:05Z ஹர்ஷியா பேகம் 15001 1944149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவ வழிபாடு|105|உருவாக்கப் பொருளியல்}}</noinclude>உருவ வழிபாடு இணையற்று விளங்குகிறது. முனிவர்களும் மெய்யுணர்வாளர்களும் அனுபூதிமான்களும், தங்கள் அனுபவத்தில் கண்ட இறைக் காட்சியை மறைகளிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் விளக்கியுள்ளனர். அவற்றை ஆதாரமாகக் கொண்டே எங்கும் நிறைந்த இறைவனுக்கு உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், ஓரளவு அறியுள்ள மக்களுக்கு ஓர் உருவத்தைப் பார்க்கும்பொழுதுதான் இறை நம்பிக்கையும், பக்தியுடன் கூடிய மனஎழுச்சியும் மேலிடுகின்றன. இந்து சமயத்தில் உருவ வழிபாடு என்பது வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருவதாகும். உலகமே வெறும் வெற்றுக் காட்சி என்ற வாதத்தை நிலை நாட்டிய அத்துவைத நிறுவனராகிய ‘ஆதிசங்கரர்’ கூட உருவ வழிபாட்டை விலக்கவில்லை. உருவ வழிபாட்டிற்கு மறுமலர்ச்சி தந்த பெருமை ஆழ்வார்களையும் நாயன்மார்களையுமே சாரும். அவர்கள் ஏற்றுக் கொண்ட கடவுளர்களாகிய நாராயணன், சிவன் ஆகியோரின் உருவங்களைக் காடுகளையும் மலைகளையும் கடந்து இமயம் முதல் குமரி வரை நடந்து சென்று பாடிப் பரவியுள்ளார்கள். அவர்கள் சென்ற கோயில்கள் மங்களாசாசனம் பெற்ற திருப்பதிகள் என்றும், பாடல் பெற்ற பதிகள் என்றும் இன்றும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. மனிதனால் தெரிந்தெடுக்கப்பட்ட தோர் உலோகத்தால் அல்லது ஒரு பொருளால் ஆக்கப்பட்ட சிலைகளில் இறைவன், அந்த உலோகம் அல்லது அந்தப் பொருள் சம்பத்தப்படாத ஓர் உடம்புடன் விளங்குகிறான். பாஞ்சராத்திர ஆகமங்கள் இறைவனுக்குப் பரநிலை, வியூக நிலை, அவதார நிலை, அந்தர்யாமி நிலை, உருவ நிலை, என ஐந்து நிலைகள் உள்ளதாகக் கூறுகின்றன. இந்த ஐந்தனுள் உருவ நிலை மட்டுமே மக்களால் நேருக்கு நேர் காணக்கூடிய நிலையாகும். ஞானிகளால் மட்டுமே இறைவனுடைய அந்தர்யாமி நிலையை உள்ளூர உணர முடியும். இறைவன் அவதாரம் எடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அவதார நிலையை உணர முடியும். பரநிலையும், வியூக நிலையும் மனிதர்களுடைய சக்திக்கு அப்பாற் பட்டவையாகும். ‘என்னுடைய பக்தன் எந்த உருவத்தில் நினைத்து என்னை வணங்கினாலும், அந்த உருவத்தில் இருந்து அவனுக்கு நான் காட்சியளித்து குறைகளைத் தீர்த்து வைப்பேன்’ என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவது நினைக் கற்பாலது. காலத்தையும் இடத்தையும் கடந்த கடவுள் கருணையின் காரணமாய் உருவத்தை மேற்கொள்கிறான். உலகில் பொருள்களாகவும், அவற்றில் விளங்கும் ஆற்றல்களாகவும், இயற்கையின் ஒருமைப் பாட்டின் பின்னணியாகவும் விளங்கும் கடவுளின் தன்மைக்கும், செயல் முறைகளுக்கும் உருவங்கள் குறியீடுகளாக விளங்குகின்றன. நாம் வெறும் உருவங்களை வணங்குவதில்லை. உருவங்களைக் குறியீடுகளாகக் கொண்ட கடவுளைத்தான் வணங்குகிறோம். எல்லாமாகவும் விளங்கும் கடவுள், உருவங்களிலும் இருக்கவேண்டிய உண்மை அளவையியலின்படி ஏற்புடையதாகும். உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றே சிந்திக்க முடிகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வர வாய்ப்பில்லை. இப்படி உருவங்களில் இருந்து விளங்குவதால் கடவுளினுடைய அளவிலா நலங்களுக்குக் குறைகள் ஏற்படுவதில்லை. ஆதியந்தமில்லாத பரம்பொருள் அன்பிற்குக் கட்டுப்பட்டு உருவங்களில் விளங்குகிறது. இந்த உலகத்தையே தனது உடலின் வெளிப்பாடாகக் கொண்டுள்ள இறைவன், உருவ நிலையில் தன் பக்தனின் உடைமையாக ஆகிவிடுகிறான். உருவ வழிபாட்டில் மனிதன் தனது மனத்தை உருவத்தினிடம் பறிகொடுக்கிறான். உருவ வழிபாட்டினால் இவனுக்குத் தன்ளையறியாத மனத்திட்பமும் தன்னம்பிக்கையும் ஏற்படுகின்றன. உருவ வழிபாட்டின்போது செய்யப்படும் அபிடேகம், அலங்காரம், தூபம், தீபம், படையல் போன்ற செயல் முறைகள் வணங்குபவனுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கின்றன. உருவ வழிபாட்டினால், மனிதனுக்கு உடல் தூய்மை, உள்ளத் தூய்மை, பணிவு, ஒழுங்கு முறை, அடக்கமுடைமை முதலிய நற்பண்புகள் வளர்கின்றன. உருவ வழிபாடு பலதரப்பட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுகூடவும், தங்கள் பண்பாட்டினைப் பரிமாறிக் கொள்ளவும், பரந்த மனப்பான்மை வளரவும் வழி வகுக்கிறது.{{Right|இல.மு.}} <section end="உருவ வழிபாடு"/> <section begin="உருவாக்கப் பொருளியல்"/> {{dhr}} <b>உருவாக்கப் பொருளியல்</b>: இலக்கணத்தில் பொருளியவின் இடம் பற்றியும் தன்மை பற்றியும் மொழியியலாளர் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். ஜம்பதுகளின் மத்தியில் சோம்சுகி (Chomsky) தொடங்கிய உருவாக்க மாற்றிலக்கணத்தின் (Generative Transformational Grammar) வரலாற்றில் பொருளியலின் இடமும் தன்மையும் மாறி வத்திருக்கின்றன. சோம்சுகியின் தொடரமைப்பு (Syntactic Structure, 1957) என்ற நூலில் ஒரு சொற்றொடரின் இலக்கணத் தன்மை (Grammaticality) பொருளை நோக்காமலேயே முடிவு செய்யப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 4td18ml4xf5frn62ta599w3m2f8gzuf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/151 250 626010 1944151 1878187 2026-06-09T15:49:26Z ஹர்ஷியா பேகம் 15001 1944151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவாக்கப் பொருளியல்|107|உருவாண்டா}}</noinclude>பொருள் மட்டுமன்றி, மொழியைப் பேசுவோரின் தம் பிச்கைகளும் (Beliefs), தோக்கங்களும் (Intensions) ஒரு தொடரின் இலக்கணத் தன்மையை முடிவு செய்யத் தேவைப்படுகின்றன. எனவே, அவையும் இலக்கணத்தில் இடம் பெற வேண்டும் என்பது கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, ‘என் அப்பா என்னைக் கழுதை என்றார்; நானும் அவரைத் திட்டினேன்’ என்னும்போது இலக்கணத் தன்மையில் இடர்ப்பாடு இல்லை. ஆனால், ‘என் அப்பா என்னைச் சிங்கக் குட்டி என்றார், நானும் அவரைத் திட்டினேன்’ என்னும் போது இடர்ப்பாடு வருகிறது. ஏனென்றால், ஒருவனைச் சிங்கக்குட்டி என்பது திட்டுவது ஆகாது என்பது நம்பிக்கை. ‘என் அப்பா என்னைக் கறுப்புச் சட்டைக்காரன் என்றார், நானும் அவரைத் திட்டினேன்’ என்னும்போது இலக்கணத் தன்மையில் இடர்ப்பாடு இருக்கிறதா என்று அறிய, ஒருவனைக் கறுப்புச் சட்டைக்காரன் என்பது திட்டுவது ஆகுமா என்ற ஐயத்தின் பாற்பட்ட கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதன்படி, ஒரு தொடரின் இலக்கணத் தன்மை அதைப் பேசுவோரின் உளக்கருத்தைச் சார்ந்து முடிவு செய்யப்படுகிறது. இதைப்போல, ‘நீங்கள் கதவைத் திறக்கிறீர்களா’ என்ற தொடரைக் கேள்வியாகப் பொருள் கொள்ளாமல், வேண்டுகோளாகப் பொருள் கொள்ளும்போது, சொல்லுவோரின் நோக்கம், பொருளை விளக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதன்படி பொருள் விளக்க விதிகள் சொல்லுவோனின் நோக்கத்தை வெளிப்படுத்தும் உரையாடல் விதிகளைச் சார்ந்து வரவேண்டும். இப்படிப் பொருளியலின் எல்லை விரித்தபோது இதுவரை இலக்கணத்தின் அங்கமாகக் கருதப்படாத புதுவகைச் செய்திகள் இலக்கணத்தில் பங்கு பெற்றன. இதன் விளைவாகப் புதுவகையான இலக்கண விதிகள் தேவைப்பட்டன. மேலும், அக அமைப்பின் இடையீடு இல்லாமல் நேரடியாகப் பொருளமைப்பிலிருந்து புறநிலைத் தொடர்களை மாற்று விதிகளின் மூலம் கொண்டுவந்த போது, புதிய சக்திமிக்க மாற்று விதிகள் தேவைப்பட்டன. இந்த இரண்டு தன்மைகளும் இலக்கணத்தில் அடிப்படைத் தன்மைகளையே மாற்றின. இலக்கணத்தின் கட்டுப்பாட்டுத் தன்மை (Constraints) குறைந்தது. இலக்கண விதிகளைக் கட்டுக்கோப்பான வடிவத்தில் (Rigid Formalism) அமைப்பது கடினமாயிற்று. தொடரின் இலக்கணத் தன்மைக்கும் ஏற்புத் தன்மைக்கும் (Acceptability) வேறுபாடு குறைந்தது. இலக்கணத்தின் இந்த நிலைகனைச் சிலர் ஏற்கவில்லை. மேலும், உருவாக்கப் பொருளியலை வளர்த்தவர்களும் இலக்கணத்தின் வரம்பை விரிப்பதில் காட்டிய சுவனத்தைக் கட்டுக்கோப்பான விதிகள் அமைப்பதில் (Formulation of Rules) காட்டவில்லை, இவை போன்ற காரணங்களால் எழுபதுகளின் மத்தியிலிருந்து உருவாக்கப் பொருளியலைத் தீவிரமாகப் பின்பற்றுவோர் குறைந்தனர்.{{Right|இ.அ.}} <section end="உருவாக்கப் பொருளியல்"/> <section begin="உருவாண்டா"/> {{dhr}} <b>உருவாண்டா</b> உலகநடுக்கோட்டிற்குத் தெற்கில் கிழக்கு ஆப்பிரிக்காவின் நடுவில் உள்ளதொரு சிறுநாடு. மக்கள்தொகை மிக்க ஆப்பிரிக்க நாடுகளுள் இதுவும் ஒன்று. உருவாண்டா (Rwanda) ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழை நாடுகளுள் ஒன்று. இந்நாட்டில் தொழிற்சாலைகளோ இருப்புப்பாதைகளோ இல்லை. இந்நாட்டு மண்ணும் வளம் குறைந்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 151 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 145 |oTop = 187 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|உருவாண்டா}} சிகாலி (Kigali) இந்நாட்டின் பெருநகரமும் தலை நகருமாகும். <b>பரப்பு</b>: உருவாண்டாவின் பரப்பளவு 26,338 ச.கி.மீ. இது தென் வடலாக 144 கி.மீ.அகலமும், கிழக்கு மேற்காக 233 கி.மீ. நீளமும் கொண்டது. <b>மக்கள்தொகை</b>: இந்நாட்டின் மக்கள்தொகை 49,75,000 ஆகும் (1981).{{nop}}<noinclude></noinclude> 19owyh66zetqo3u2523g5qmwno9se3p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/155 250 626016 1944171 1878201 2026-06-09T16:20:35Z ஹர்ஷியா பேகம் 15001 1944171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவிலா மாற்றம்|111|உருவிலா மாற்றம்}}</noinclude>தேர்த்தெடுக்கப்பட்டார். மீண்டும் அவர் 1955, 1969 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துத்சிகள் மிகுதியாயுள்ள புருண்டியில் ஏற்பட்ட தாக்குதல் ஒன்றின் விளைவாக 1964-இல் உருவாண்டாவில் பல துத்சிகள் கொல்லப்பட்டனர்; எண்ணற்றோர் நாட்டை விட்டு வெளியேறினர். மேலும், அண்டை நாடான செப்ரேயுடன் (Zaire) இடைக்காலத்தில் 1967-68-ஆம் ஆண்டுகளில் உறவில் நெருடல் ஏற்பட்டது. அப்போது கூலிப்பட்டாளமாய்ப் பணியாற்றிய சில வெள்ளையர்கள் உருவாண்டாவில் தஞ்சம் புகுந்தனர். உகாண்டாவுடன் 1971-72-இல் உறவுமுறை சீர்கெட்டது. உகாண்டாவின் குடியரசுத் தலைவர் இடி அமீன் (Idi Amin) மீது குற்றஞ்சாட்டி, அவரைப் பதவியிலிருந்து அகற்றப்பாடுபட்ட கலகக் காரர்களுக்கு உருவாண்டா உறுதுணை நின்றதாகத் தூற்றினார். மீண்டும் 1973-ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் ஊத்துகளுக்கும் துத்திகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறத்தாழ 600 துத்சிகள் உகாண்டாவிற்கு ஓடிச் சென்றனர். உருவாண்டாவில் 1973-இல் இராணுவப் புரட்சியொன்று நிகழ்ந்தது. கயிபண்டா பதவியிலிருந்து விலக்கப்பட்டார். தேசிய பாதுகாப்புப் படையின் தலைவரான சுவினல் அப்யலிமனா (Juvenal Habyalimana) குடியரசுத் தலைவரானார். இப்புரட்சி குருதியற்ற புரட்சி ஆகும். பரம குத்து (Paramehutu) எனப்படும் ‘குடியரசு மக்களாட்சி இயக்கம்’ என்னும் ஒரே சட்டமுறையில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சி, சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டது; தேசிய அவையும் கலைக்கப்பட்டது. அப்வலிமனா நாட்டின் வடபகுதியிலிருந்து வந்த ஊத்துகளுள் ஒருவராவார். அவர் ஊத்துகளுக்கும் துத்சிகளுக்குமிடையே நல்லுறவை நிலைநாட்ட முயன்றார். மேலும், அரசியல் அதிகாரத்தை ஊத்து மக்களிடையே பரவலாகப் பகிர்த்தளிக்கவும் முயன்றார். வாக்காளர்கள் அப்யலிமனாவை 1978-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.{{Right|இரா.அ.}} <section end="உருவாண்டா"/> <section begin="உருவிலா மாற்றம்"/> {{dhr}} <b>உருவிலா மாற்றம்</b> என்பது, மொழியில் ஏற்படும் மாற்றங்களில் ஒரு வகையினைக் குறிக்கும். மொழி மக்களால் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் வாழ்விலும் வளத்திலும் பங்கு கொண்டு, அவர்களோடே வளர்ந்து வருகிறது. எனவே, அது தன் வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. ஒலியில் சொல்லில், இலக்கணத்தில், தொடரில் மாற்றங்கள் விளைகின்றன. மொழியில் ஏற்படும் மாற்றங்கம் இருவகைப்படும், காலப்போக்கில் முயற்சி எளிமை காரணமாகவும், மிசை காரணமாகவும் ஒலிகளில் நிகழும் மாற்றங்கள் ஒரு வகை; சந்தியில் நிகழும் மாற்றங்கள் மற்றொரு வகை. இவ்விரு நிலைகளிலும் நிகழும் மாற்றங்களை இலக்கண ஆசிரியர்கள் விகாரம் என்பர். அவ்விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். இவற்றுள் கெடுதல் என்று சொல்லப்படுவதனை இக்கால மொழியியலார் உருவிலா மாற்றம் (Zero Change) என்று குறிப்பிடுவர். காலப்போக்கில் மொழியில் ஏற்படும் ஒலிமாற்றம் வரலாற்று ஒலி மாற்றம் (Historical Sound Change) எனப்படும். யாறு, யாண்டு என்பவை பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களின் முதலில் உள்ள யகரம் இடைக் காலத் தமிழில் மறைந்து ஆறு, ஆண்டு என்று வழங்கப்படுகிறது. அதனால், யானை என்னும் சொல் இன்று ஆனை என்று வழங்கவும் எழுதவும் படுகிறது. இலக்கியத் தமிழில் சொல்லிறுதியில் காணப்படும் பல மெய்கள் பேச்சுத் தமிழில் காணப்படுவதில்லை. அவை உருவிழந்து விட்டன. எடுத்துக்காட்டாகப் பேச்சுத் தமிழில் சொல்லிறுதியில் அமையும் பல்லசைச் சொற்களில் உள்ள லகர, ளகர மெய்களும், மெல்லின மெய்களும் காணப்படுவதில்லை. மூலத்திராவிடத்தில் மொழி முதலில் இருந்த சகரம் தமிழ் மொழியில் காத்துக் கொள்ளப்படவில்லை. தமிழில் உள்ள ‘உப்பு’ என்னும் சொல் மூலத்திராவிட மொழியில் ‘சுப்பு’ என இருந்தது என்று அறிஞர்கள் நிறுவி உள்ளனர். எ-டு. :{| |- |<b>ப.த.</b> || <b>இடை.த.</b> |- |யாறு யாண்டு || ஆறு ஆண்டு || முதல் யகரம் கேட்டது |- |<b>இல.த.</b> || <b>பே.த.</b> |- |வாய்க்கால் || வாய்க்கா || |- |அவள் குடம் || அவ குட || இறுதி மெய் கெட்டது. |- |<b>மு.தி.மொ.</b> || <b>தமிழ்</b> |- |சுப்பு || உப்பு - முதல் சகரம் கெட்டது. |- |} சொற்கள் இணையும் போதும், சொற்களோடு உருபுகள் சேரும் போதும் சந்தி மாற்றம் விளையும். சந்தியிலும் உருவிலாமாற்றம் நிகழும்.{{nop}}<noinclude></noinclude> 8uiob5aexfh9duoqez25lwkaigne5f6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/156 250 626030 1944176 1878343 2026-06-09T16:23:19Z ஹர்ஷியா பேகம் 15001 1944176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருவிலா மாற்றுருபு|112|உருசுவெல்ட்டு, எப்.டி.,}}</noinclude>எ-டு. :பட்டு+ஆடை — பட்டாடை (உகரம் கெட்டது) :மேல் + நாடு — மேனாடு (லகரம் கெட்டது) :தரும்+வளவன் — தருவளவன் (மகரம் கெட்டது) :காடு+ஆ — காடா (உகரம் கெட்டது) {{Right|க.மு.}} <section end="உருவிலா மாற்றம்"/> <section begin="உருவிலா மாற்றுருபு"/> {{dhr}} <b>உருவிலா மாற்றுருபு</b>: உருபன் எல்லா இடங்களிலும் ஒரே வடிவத்தைக் கொண்டிராமல் ஒட்டிவரும் மற்ற உருபனுக்கும் (Morpheme) ஒலியனுக்கும் (Phoneme) தக்கபடி மாற்றுருக் கொண்டிருக்கும். ஓர் உருபனின் மாற்றுருக்கள் மாற்றுருபுகள் (Allomorphs) எனப்படும். மாற்றுருபு ஒலி வடிவம் இவ்வாமலும் இருக்கலாம். அத்தகைய மாற்றுருபு, உருவிலா மாற்றுருபு (Zero Allomorph) எனப்படும். மொழியில் வடிவமில்லாத நிலையும் பொருள் உணர்த்தும் என்ற கருத்தை முதன்முதல் பாணினி கூறியிருக்கிறார். இக்கால மொழியியலில் புளும்பீல்டு (Bloomfield) இதை உருவிலா மாற்றுருபு என்று அறிமுகப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் பன்மையைக் குறிக்க, -s, -en முதலான மாற்றுருபுகள் இருக்கின்றன. செம்மறியாடுகள் என்று பன்மைப் பொருளில் வரும் ‘Sheep’ என்ற சொல்லில் பன்மையைக் குறிக்க உருபு எதுவும் இல்லை. ஆங்கிலச் சொல்லமைப்பின்படி ஒருமைப் பெயருக்குப் பின் பன்மையைக் குறிக்க உருபு வர வேண்டும். வரவேண்டிய இடத்தில் உருபு இல்லாத போது இங்கு ஓர் உருபு இருப்பதாகக் கொண்டு, உருவில்லாததால் உருபிலா மாற்றுருபு வந்திருக்கிறது என்று கொள்வர். தமிழில் செய்யமாட்டான், செய்யாது என்ற சொற்களில் இரண்டாவது சொல்லை செய்+ஆது என்று பிரித்து, எதிர்மறையைக் குறிக்க மாட்டு என்ற உருபு வரவேண்டிய இடத்தில் உருபு எதுவும் வராததால், ஒன்றன்பால் விகுதிக்கு முன்னால் எதிர்மறை உருவிலா மாற்றுருபால் உணர்த்தப்படுகிறது எனலாம். (ஆனால் - ஆது என்ற உருபன் எதிர்மறையையும் ஒன்றன்பாலையும் உணர்த்துகிறது என்று விளக்கம் சொன்னால் உருபிலா மாற்றுருபு தேவை இல்லை.) மாறாக, இச்சொல்லைச் செய்+அ+அது என்று பிரித்தால் எதிர்மறையைக் குறிக்க -அ- என்ற மாற்றுருபு இருக்கிறது. இந்த இரண்டில் ஒன்றே சரியான விளக்கம் என்பதால் தமிழில் உருவிலா மாற்றுருபு இல்லை எனலாம். உருவிலா மாற்றுருபு இலக்கணம் பொருளைக் குறிக்கவே வரும். அடிச்சொற்களின் மாற்றுருபுகளில் உருபிலா மாற்றுருபு இராது. உருவிலா மாற்றுருபு பொதுவாக ஒட்டுநிலை (Agglutinative) மொழிகளிலேயே இருக்கும். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருமையைக் குறிக்க எந்தச் சொல்லுக்கும் உருபு சேர்ப்பதில்லை. ஓர் இலக்கணப் பொருளைக் குறிக்க எந்தச் சொல்லோடும் உருபு வாராதபோது, அதை உருவிலா மாற்றுருபு என்று சொல்வதில்லை. உருபிலா உருபன் (Zero Morpheme) என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தேவை இல்லை. அது இலக்கணத்தில் பல உருபிலா உருபன்களைத் தோற்றுவித்து. உருபிலா உருபன் என்ற கருத்தைப் பொருளற்றதாக்கிவிடும். எந்தச் சொல்லோடும் உருபு வாராத நிலையைக் குறியிடாத (Unmarked) இலக்கணக் கூறு என்பர். தமிழில் பன்மையைக் குறிக்கும் பெயர் பன்மை உருபன் பெற்றும் வரலாம்; பெறாமலும் வரலாம். எ-டு- மாடு வந்தன; மாடுகள் வந்தன. இவ்வாறு விரவிவரும் (Optional) உருபன் வாராமல் இருக்கும் போது, அந்த இடத்தில் மாற்றுருபு உருவில்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதை விரவு உருபன் (Optional Morpheme) என்று சொல்வர்.{{Right|இ.அ.}} <section end="உருவிலா மாற்றுருபு"/> <section begin="உருவேலா"/> {{dhr}} <b>உருவேலா</b> என்பது ஓர் ஊரின் பெயர்: மிகத் தொன்மையானது. இதனைச் சுற்றிலும் அழகான ஏரிகளும், நிழல் மரங்களும், சம நிலங்களும் சூழ்ந்திருந்தன. உருவேலா (Uruvella) பண்டைக்கால அரசான மகத நாட்டில் அமைந்திருந்தது. இந்த இடத்தையே தியானம் செய்வதற்கேற்றதெனக் கௌதம புத்தர் தேர்ந்தெடுத்தார். இங்குத்தான் புத்தர் ஞானம் இலீலாசன் பெற்றாரெனக் கூறுவர். இவ்வூரிலுள்ள இலீலாசன் (Lilajan) என்று இப்பொழுது கூறப்படும் நிரஞ்சனா ஆற்றில் புத்தர் மூழ்கி, அரசமரத்தடியிலமர்ந்து ஞானம் பெற்றார் எனக் கூறப்படுகிறது. ஞானம் பெற்றபின் புத்தர் உருவேலாவில் அசபாலா என்னும் ஆலமரத்தடியில் அமர்ந்து வாழத் தொடங்கினார் என்பர். உருவேலா இன்றைய பீகார் மாநிலத்தைச் சார்ந்த கயா (Gaya) என்னும் நகரத்திற்கு அருகில் உள்ளது. புத்தியை அறிந்தவரானபடியால் கௌதமரைப் புத்தர் என்று கூறுவர்.{{Right|இரா.அ.}} <section end="உருவேலா"/> <section begin="உரூசுவெல்ட்டு, எப்.டி."/> {{dhr}} <b>உரூசுவெல்ட்டு, எப்.டி., (கி.பி. 1882-1945)</b>: வளம்கொழிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வறுமை. சாதாரணமான வறுமை அன்று; பயங்கர வறுமை.<noinclude></noinclude> eotypyvq4qxc2o75hoxiikf2qbnqsca பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/160 250 626035 1944179 1878369 2026-06-09T16:25:15Z ஹர்ஷியா பேகம் 15001 1944179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உருசுவெல்ட்டு, எப்.டி.|116|உருசுவெல்ட்டு, தியோடோர்}}</noinclude>நாடு பங்கு கொள்ளுமாறு செய்ததுடன், இறுதியில் வெற்றியையும் பெற்றுத் தந்தார். உத்தமர் உரூசுலெல்ட்டு, அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கையில் வரவேற்கத்தக்க பல் நல்மாறுதல்களையும் தோற்றுவித்தார். ஒதுங்கி நிற்கும் அமெரிக்கக் கொள்கை கைவிடப்பட்டது. உலக அரங்கில் தலைமை வகிக்கும் எண்ணத்துடன், அட்லாண்டிக்குச் சாசனம், ஐக்கிய நாடுகள் அறிக்கை ஆகியவற்றில் உரூசுவெல்ட்டு காட்டிய ஆர்வம் மிகவும் போற்றத்தக்கது. இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளைக் கண்ட உரூசுவெல்ட்டு, இனி, மீண்டும் போரே எழாத வண்ணம் செய்வதற்காகப் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இவர் ஐக்கியநாடுகள் சபை பற்றிய திட்டங்களை வரைவதற்காக, அமெரிக்க, சோவியத்து, ஆங்கிலேய, சீனப் பேராளர்கள் அமெரிக்காவில் பலமுறை கூடிப் பேச ஏற்பாடுகள் செய்தார். வாசிங்டனில் உள்ள தம்பர்ட்டன் ஓக்சு என்னும் மாளிகையில் ஐ.நா. சாசனம் 1944-இல் இறுதி வடிவம் பெற்றது. உள்நாட்டுச் சீர்கேடுகளைப் போக்கியதுடன், 1939 முதல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரையும் திறம்பட நடத்திவந்த உரூசுவெல்ட்டை அமெரிக்க நாட்டு மக்கள், தம் சட்டம், மரபு முதலிய எதனையும் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில் எவ்வித வியப்பும் இல்லை. குடியரசுத்தலைவர் தேர்தல்களில் (1932, 1936, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடந்தன) உரூசுவெல்ட்டையே மக்கள் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி, வரலாறு காணாத மாபெரும் சாதனையாகும். இவருடைய வாழ்க்கை வெற்றிக்கு மிகவும் அடிப்படையான இரகசியம் இவர் பொதுமக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான், அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத முறையில் இவர் வானொலி வாயிலாகப் பொது மக்களுடன் பழகிவந்தார். இவர் மனைவியார் திருமதி உரூசுவெல்ட்டும் சமூக ஊழியத்தில் ஊக்கம் காட்டி அயராது உழைத்து வந்தார். கணவன், மனைவி இருவரும், உலகில் ஒரு புது யுகத்தினைத் தோற்றுவிக்க அயராது உழைத்தனர். உரூசுவெல்ட்டு, முன்னரே நோய்வாய்ப்பட்டு முடமானவர். மனித உடல் எந்த அளவுக்குக் கடும் சோதனைகளைத் தாங்க முடியும்? அல்லும் பகலும் அயராது உழைத்த உரூசுவெல்ட்டு 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் மாரடைப்பினால் மரணமுற்றார். நாடு, தமக்கு என்ன நன்மைகளைச் செய்யும் என்று கேட்டுக் கொண்டிராமல், நாட்டுக்காகவே தம்முடைய உடலையும் உயிரையும் தியாகம் செய்த அரும்பெருந்தலைவர்களுள் உரூசுவெல்ட்டு மிக முக்கியமான ஒருவர் என்பதில் ஐயமில்லை. இந்தியாவுக்கு மிகுதியான நலங்களைச் செய்யமுடியாத சூழ்நிலையில் இவர் இருந்தபோதிலும், இந்தியர்களிடம் இவருக்குப் பரிவும் பாசமும் நிரம்ப இருந்தது. மறக்க முடியாத தலைவர்களுள் இவரும் ஒருவர்.{{Right|சை.வே.சி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Rosenman, Samuel I.,</b> The Public Papers and Addresses of Franklin D. Roosevelt, 13 Vol. 1938.<br> <b>Leuchtenberg, William E.,</b> Franklin D. Roosevelt and the New Deal, 1932-40. <section end="உரூசுவெல்ட்டு, எப்.டி."/> <section begin="உரூசுவெல்ட்டு, தியோடோர்"/> {{dhr}} <b>உரூசுவெல்ட்டு, தியோடோர்: (கி.பி. 1858-1919)</b> ஐக்கிய அமெரிக்க நாட்டின் இருபத்தாறாம் குடியரசுத் தலைவராகிய தியோடோர் உரூசுவெல்ட்டு (Theodore Roosevelt) கி.பி. 1858-ஆம் ஆண்டில் நியூயார்க்கு நகரத்தில் தீயோடோர் என்பவருக்கும், மார்த்தா புல்லோக் உரூசுவெல்ட்டு என்பவருக்கும் பிறந்தார். இவர் மூதாதையர் ஐரோப்பாவிலுள்ள ஆலந்து நாட்டிலிருந்து கி.பி 17-ஆம் நூற்றாண்டின் நடுவில் நியூயார்க்கு நகரத்திற்குச் சென்று குடியேறினர். அங்கு அவர்கள் பொருள் தேடி வசதியுடனிருந்தனர். இளமையில் தியோடோர் உரூசுவெல்ட்டு நோயினால் நலிவுற்றிருந்தமையால், இவர் பள்ளிக் கூடத்தில் சேராமல், வீட்டிலிருந்தே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்றார். ஆர்வர்டுப் பல்கலைக்கழகத்தில் (Harvard University) பயின்ற பின்னர் ஐரோப்பாவில் பயணம் செய்தார். இவர் கல்லூரியில் பயிலும்போதே, ‘கி.பி. 1812-ஆம் ஆண்டுப் போரின் கடற்படை வரலாறு’ என்ற நூலை எழுதினார். பின்னர் ‘மேற்கை வெல்லுதல்’ என்ற நூலை (Winning of the West) நான்கு பாகங்களில் எழுதினார். இவர் மேலும் பல நூல்களெழுதியுள்ளார். இவர் ஆர்வர்டில் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு, கி.பி.1880-இல் ஆலிசு அதாவே லீ என்ற பெண்ணை மணந்து கொண்டார். முதல் மனைவி கி.பி.1884-இல் இறந்ததும், எடித் கெர்மிட் காரோ என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவருக்கு முதல் மனைவியிடம் ஒரு குழந்தையும் இரண்டாம் மனவியிடம் ஐந்து குழந்தைகளும் பிறந்தன. இவர் கி.பி. 1881-இல் அரசியல் வாழ்வில் ஈடுபட்டார்; நியூயார்க்கு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பாகப் (Republican Party) போட்டியிட்டார். ஊழலை ஒழித்து, நல்லாட்சி முறையை நிறுவுவதே தம் நோக்கமென்று கூறினார். இவர் சில கருத்துகளிலும், செயல்களிலும் தம் கட்சியாளருக்கு விட்டுக் கொடுக்காததனால், வெற்றிபெறவில்லை. இவருடைய சுதந்திர உணர்வு எல்லோர்-<noinclude></noinclude> g4k7uthv4qt10inhyhdfbkxuhh7kd4o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/163 250 626038 1944182 1878373 2026-06-09T16:27:30Z ஹர்ஷியா பேகம் 15001 1944182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூசோ|119|உரூசோ}}</noinclude>தலையிட்டுக் கட்டுப்படுத்தல் வேண்டுமென்றும் கூறினார். தன்னூரிலிருந்து கொண்டே போர் முயற்சிகளை ஆதரித்தார். இவர் 1919-இல் நியூயார்க்கில் ஆயிசுடர்பே (Oyster Bay)யிலுள்ள தம் இல்லத்தில் காலமானார். ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு உறுதியான வெளிநாட்டுக் கொள்கையையும், பெரும்பாலரான ஏழைகளின் நலத்தின் பொருட்டுச் செயற்படத்தக்க அதிகாரங்கள் மிக்குடைய அரசாங்கத்தையும் இவர் ஆதரித்தார்.{{Right|பா.சூ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Harbaugh, William Henry.</b> Power and Responsibility: The Life and Times of Theodore Roosevelt, New York, 1961.<br> <b>Pringle, Henry F..</b> Theodore Roosevelt, New York, 1956.<br> <b>patnam, Carleton,</b> Theodore Roosevelt: The Formative Years, 1858-1886, New York, 1956. <section end="உரூசுவெல்ட்டு, தியோடோர்"/> <section begin="உரூசோ"/> {{dhr}} <b>உரூசோ</b>: உலக வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய பிரஞ்சுப்புரட்சிக்கு ஆர்வமூட்டிய கி.பி.18-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய எழுத்தாளர்களுள் சீன் சாக்கு உரூசோ (கி.பி. 1712-1778) ஒருவராவர். அரசியலில் இவர் வகுத்த சமூக ஒப்பந்தக் கோட்பாடு (Theory of Social Contract), இவர் காலத்திய ஆங்கிலத்தாராளப் பொருளாதாரச் சிந்தனையாளர்களுடைய (Economic Liberalism of English Thinkers) கருத்தையும், மாண்டெசுக்கு (Montesquieu) என்ற இன்னொரு மாண்புமிக்க பிரஞ்சு அரசியற் சிந்தனையாளருடைய நேர்காட்சி வாதக் கொள்கையையும் (Positivist Attitude) விடப் புகழ்மிக்க ஒன்றாக ஆயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 163 |bSize = 375 |cWidth = 55 |cHeight = 83 |oTop = 330 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|உரூசோ}} <b>வாழ்க்கை</b>: சீள் சாக்கு உரூசோ (Jean Jacques Rousseau) சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா (Geneva) நகரத்தில் ஐசக் உரூசோ என்ற கடிகாரத்தொழிலாளிக்கும் கால்வினியக் கிறித்தவ நெறியைச் சேர்ந்த அவர்தம் மனைவிக்கும் பிறந்தார். இளமையில் செனிவா நகர ஒதுக்குப் புறத்தில் தொழிலாளர் வாழ்தலையும், செல்வரும் வணிகரும் நகரத்தின் வசதியான பகுதியில் வாழ்தலையும் உரூசோ கண்டார். தொழிலாளர் குழுவில் பழகிய அவர் குடியரசுக் கொள்கையை (Republican Principle) ஆதரித்தார். இவர் நகரத்துக்கு வெளியே வேறொருவருடன் சிலகாலம் தங்கி, பின்னர் வெளியேறிச் சவாய் (Savoy) சென்று, அங்கு உரோமானியக் கிறித்தவ நெறியை ஏற்றார். இறைமைக்கோட்பாடு, அதிகார ஒப்படைப்பின் தீங்குகள் (Delegation of Authority), மக்கள் வாக்கெடுப்பின் வாயிலாக வரி விதிப்பு, மக்களுடைய விருப்பத்தோடு நடைபெறும் தேர்தல் ஆகியவை பற்றி இவர் சில கருத்துகளைக் கொண்டிருந்தார். சிறிது காலம் குருமார் பயிற்சிப்பள்ளியிலிருத்தல், சிறிது காலம் பெண்களுக்கு இசை கற்றுக் கொடுத்தல், சில காலம் வாரன்சு என்ற அம்மையாருடன் வாழ்க்கை நடத்தல், சில காலம் வரி அலுவலராகப் பணிபுரிதல், சில காலம் வேலையின்றித் திரிதல் என்று இவ்வாறாக இவர் இளமைக்காலம் கழித்தது. ஆனால், இவர் நூல்கள் பல பயின்றும் சிந்தித்தும் எழுதியும் வந்தார். பாரிசு நகரத்திலிருந்தபோது இசைநூல் ஒன்று வெளியிட்டார். வெனிசில் பிரஞ்சுத் தூதரகத்தில் பணியாற்றிவிட்டு, முரண்பாட்டின் காரணமாக அதை விட்டு நீங்கி, மீண்டும் பாரிசுக்கு வந்து, அங்கு ஒரு விடுதிப் பெண்ணை மணந்து, குழந்தைகள் பெற்றுப் பின் நீங்கினார். திதரோ என்ற தத்துவ ஆசிரியருடன் உரூசோ தொடர்பு கொள்ள, அவருடைய தூண்டுதலின் பேரில், ‘மீட்கப்பட்ட அறிவியல்களும், கலைகளும் ஒழுக்கத் தூய்மைக்கு உதவி செய்தனவா?’ என்ற தலைப்பில் போட்டிப் பரிசுக்கு ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி, திசான் கழகத்துக்கு (Dijon Academy) அளிக்க, அது அக்கட்டுரைக்கு முதற்பரிசு அளித்தது. அதில் இவர், ‘அரசர்கள் தங்கள் குடிகளிடையே கலைகளின்மீதும், மேம்போக்கான வாழ்க்கையின் மீதும் பற்று ஏற்படுதலை விரும்புவர்; அத்தகைய பற்றின் விளைவாக நாட்டின் செல்வம்’ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாத வரையில் அப்பற்று வளருதல் விரும்பத்தக்கதே; மக்களிடையே அடிமைத் தன்மை பரவுதற்கு மிக ஏற்றதான ஆன்மிகச் சிறுமையை (Spiritual Pettiness) அவர்களுடைய தேவைகள் வளர்ப்பது மட்டுமன்றி, அவர்களைப் பிணிக்கின்ற அடிமைத்தளைகளுமாகும். மக்களைப் பிணிக்கின்ற இரும் புத்தளைகளைச் சுற்றி அமைந்துள்ள மலர்மாலைகளே அறிவியங்களும் இலக்கியங்களும் கலைகளுமாகும்.{{nop}}<noinclude></noinclude> jn9km1tpk30v67zn88z53s0l4795woz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/169 250 626052 1944187 1878388 2026-06-09T16:31:09Z ஹர்ஷியா பேகம் 15001 1944187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூடால்பு|125|உரூடால்பு}}</noinclude>போல நிற்கும் என்கிறார். அறிவியல் கற்பதால், தவறான எண்ணங்கள் விலக வழியுண்டு. ‘எமிலி ஒரு மணி நேரம் வேலை செய்து கற்றுக்கொள்வது அவன் ஒரு நாள் முழுவதும் வாய்மொழியாகக் கற்றுக்கொள்வதைவிட நீண்ட நாள் இருக்கும்’ என்று கூறுகிறார். அவர் செயல்முறைக் கல்விக்கு (Active Method) முதலிடம் தருகிறார். காளைப் பருவமே (15-20 வயது) கற்பிக்கக் கூடிய சரியான பருவம். இப்பருவத்தில்தான் உண்மையான கல்வி தொடங்கப்பட வேண்டும் என்கிறார். இப்பருவத்தில் நீதிநெறிகள், சமூகப்பயிற்சி ஆகியவற்றை மாணவருக்கு அறிமுகப்படுத்தப் பரிந்துரைக்கிறார்.{{Right|எஸ்.த.}} <b>துணை நூல்</b>:<b></b> <b>Veughan, C.E.,</b> Political Writings of Jean Jacques Rousseau, 2 vols, Combridge, 1915. <section end="உரூசோ"/> <section begin="உரூடால்பு1"/> {{dhr}} <b>உரூடால்பு (கி.பி. 1858-1889)</b> என்பார் ஆசுத்திரியா-அங்கேரியைச் சார்ந்த பட்டத்து இளவரசர்; திறமையாளர். இவர் பேரரசர் முதலாம் பிரான்சிசு சோசப்பு (Emperor Francis Joseph I) என்பாருக்கும் பவேரியாவைச் சார்ந்த எலிசபெத்து என்பாருக்கும் மகனாக கி.பி. 1858-இல் பிறந்தார். வியன்னா (Vienna) பட்டத்து இளவரசர் என்னும் தகுதிக்கேற்ப இவர் இராணுவப் பயிற்சியை உள்ளிட்ட பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். பாடங் கற்பித்த நல்லாசிரியர்கள் இவருக்கு இயற்கை அறிவியலிலும், பொருளியல் போன்ற பாடங்களிலும் மிகுந்த நாட்டங்கொள்ளும்படி தூண்டினார்கள். மொழிகளைக் கற்கும் மனப் பக்குவத்தை வளர்த்திருந்த இவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். ‘கீழைநாட்டுப் பயணங்கள்’ (Travels in the East) என்னும் இவருடைய நூலுக்கு வியன்னாப் பல்கலைக்கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. ஆப்சுபர்கு மரபினரின் அமைப்பு, வரலாறு குறித்துப் பல தொகுதிகளில் எழுதும் பணியைத் திட்டமிடும் நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார். உரூடால்பு கிளர்ச்சி செய்யும் உணர்ச்சி கொண்டவர்; சமயக் கோட்பாடுகளில் சுதந்திரச் சிந்தனையாளர். அரண்மனை நடவடிக்கைகளை இவர் பெரிதும் வெறுத்தார். தம் பேச்சிலும் எழுத்திலும் உயர்குடிச் சமுதாயத்தைக் கடுமையாகக் குறை கூறினார். இவர் ஒரு முற்போக்குவாதி; பிரான்சு நாட்டின் மீது நட்புறவு கொண்டவர். ஆசுத்திரிய-அங்கேரியப் பேரரசினால் செக்கு (Czech), குரோட்டுச் (Croat) சிறுபான்மை மக்கள் நன்கு நடத்தப்படவேண்டுமென்னும் கருத்துக் கொண்டவர். அதேபோல், ஏழைக் குடியானவர்கள் மீதும் இரக்கவுணர்வு கொண்டவர். கிழக்கு ஐரோப்பாவில் மேலை நாகரிகத்தைப் பரப்பும் பொறுப்பு அரச மரபுக்குண்டு என்பது இவர்தம் ஆழ்ந்த நம்பிக்கை. பழைய மரபுகளில் ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த இவர்தம் தந்தையார், உரூடால்பின் மரபுக்கெதிரான தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடினார். எனவே, பொதுப் பணிகளில் இவருக்குப் போதுமான வாய்ப்புகளை அரசர் நல்கவில்லை, தம் தந்தையாரின் நோக்கத்தைக் கண்டு உணர்ச்சிவயப்பட்ட இவர் சொல்லொணா வருத்தமுற்றார். உரூடால்பு (Rudholph of Hapsburg) கி.பி.1881-ஆம் ஆண்டில் பெல்சிய நாட்டைச் சார்ந்த இசுடீபெனி (Stephanie) என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவ்விருவரின் மண வாழ்க்கை இன்பம் பயப்பதாய் இருக்கவில்லை. <section end="உரூடால்பு1"/> <section begin="உரூடால்பு2"/> {{dhr}} <b>உரூடால்பு{{sup|<b>2</b>}} (கி.பி. 1552–1612)</b> இவர் இரண்டாம் உரூடால்பு ஆவார். இவர் புனித உரோமானியப் பேரரசர். இவர் இனிமையான பழக்க வழக்கங்கணைக் கொண்டவர்; இலக்கிய ஆர்வம் மிக்கவர். கிறித்தவ மறுப்புரையாளர்களைக் (Protestants) கட்டுப்படுத்த இவர் பல கட்டளைகளைப் பிறப்பித்தபோது, சில மாவட்டங்களில் உள்நாட்டுப் போர் மூண்டது. பேரரசின் மேற்குப் பகுதியினர் அரசரின் திட்டங்களைச் செயற்பட முடியாமல் தடுத்தனர். பின்னர், இவர்கள் தம் உரிமைகளைக் காக்க உடன்படிக்கை செய்து கொண்டனர். எனினும், ஆசுத்திரியா, பொகீமியா, அங்கேரி போன்ற பகுதிகளில் இவர்களின் சமயம் ஒடுக்கப்பட்டது. இத்தருணத்தில் துருக்கியர்கள் பேரரசின் கிழக்குப் பகுதியைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களின் தலைவரான முகமது என்பான் கி.பி. 1596-ஆம் ஆண்டில் அங்கேரியின் மீது படையெடுத்து எர்லா (Erlau) என்னும் ஊரைக் கைப்பற்றிக்கொண்டு ஆசுந்திரியர்களையும் தோற்கடித்தான். ஆனால், அதன் பின்னர் முகமது தன் படையெடுப்பை நிறுத்திக் கொண்டான். உரூடால்பின் சகோதரர் மத்தியாசு (Matthias) துருக்கியருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அங்கேரியர்களை அமைதிப்படுத்திவிட்டுத் தம்மையே அங்கேரியின் அரசராகவும், ஆசுத்திரியா, மோரோவியா பகுதிகளின் ஆளுநராகவும் அமர்த்தும்படி உரூடால்பை வலியுறுத்தினார். வேறு வழியின்றி மத்தியாசுவை இவர் ஏற்றுக்கொண்டபோது ஆசுத்திரியாவில் சமயச் சலுகைகளும் உறுதிப்படுத்தப்பட்டன. உரூடால்பு கி.பி. 1611-ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கப்பட்டு மத்தியாசு அரசரானார். கெப்லர் (Keplar), அதச்சோ பிராசி (Tycho Brahe)<noinclude></noinclude> 2fpe6m88zcne482xhl43ycls1z7e5t9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/170 250 626054 1944190 1878390 2026-06-09T16:33:00Z ஹர்ஷியா பேகம் 15001 1944190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூடால்பு ஏரி|126|உரூபர்}}</noinclude>போன்ற வானநூல் ஆய்வாளர்களைப் போற்றிய புரவலர் இவர். இவ்விரு வானநூல் அறிஞர்களின் முடிவுகள் (Calculations) உரூடால்பின் பட்டியல்கள் (Rudolphine Tables) எனப்படுகின்றன. இவர் கி.பி. 1612-ஆம் ஆண்டு பிரேகு (Prague) நகரில் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உரூடால்பு"/> <section begin="உரூடால்பு ஏரி"/> {{dhr}} <b>உரூடால்பு ஏரி</b> உலக நடுக்கோட்டிற்கு அண்மையில், நடு ஆப்பிரிக்காவிலுள்ள கெனியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரி நீண்டு குறுகலானது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 6475 ச.கி.மீ. ஆகும். எத்தியோப்பியாவின் தென் எல்லையை இந்த ஏரி தொட்டு நிற்கிறது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதி வறண்டுள்ளது. ஆசுத்திரிய ஆய்வாளர் இதனை கி.பி. 1888-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். அதன் பின்னரே இவ்வேரியை ஐரோப்பியர் அறியலாயினர். கவுண்டு பால் தெலேக்கி (Count Paul Teleki) என்பாரே இவ்வாய்வுப் பயணத்திற்குத் தலைமையேற்றவர். ஆசுத்திரியாவின் இளவரசர் உரூடால்பு என்பாரின் பெயரால் இந்த ஏரிக்கு உரூடால்பு ஏரி (Lake Rudolf) என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த ஏரியைச் சுற்றிலும் எரிமலைகள் அமைந்துள்ளன. இதன் நீர் வெளியே பாய்வதற்கான வாய்க்கால்கள் இல்லாமையால், இது உப்புநீர் ஏரியாக உருமாறி வருகிறது.{{Right|இரா.அ.}} <section end="உரூடால்பு ஏரி"/> <section begin="உரூபர்"/> {{dhr}} <b>உரூபர்</b> பஞ்சாபு மாநிலத்தில் அம்பாலா மாவட்டத்தில் சிந்து ஆற்றின் துணையாறான சட்லசின் இடக்கரையில் அமைந்துள்ள பேரூர். இவ்வூர் சிந்துச்சமவெளி நாகரிகத்தின் சின்னங்களைக் கொண்டு விளங்குகிறது. உரூபரின் (Rupar) இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் ஒய்.டி.சர்மா என்பவரின் தலைமையில் 1953-ஆம் ஆண்டு முதல் 1955-ஆம் ஆண்டுவரை அகழாய்வினை மேற்கொண்டனர். ஏறக்குறைய 21 மீ. உயரம் கொண்ட பழம் மண்மேட்டில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. சிந்துச்சமவெளி நாகரிகம் முதல் இக்காலம் வரை ஆறு பண்பாட்டுக் காலத் தொன்மைக் கூறுகள் இவ்வகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முதல் இருவகைக் கூறுகள் வரலாற்றுத் தொடக்க (Proto-History) காலத்தைச் சார்ந்தவை. <b>முதற்காலம்: (கி.மு.2000-1400)</b> சிந்துச் சமவெளி நாகரிகத்தை எடுத்துணர்த்தும் வகையில் சிந்துச்சமவெளி எழுத்துக்களுடன் கூடிய முத்திரைகள், முத்திரையிடப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட விளக்கு, ‘செர்ட்டு’ {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 170 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 160 |oTop = 250 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|உரூபர் - புதைக்கப்பட்ட மனிதனின் எலும்புக்கூடும் ஈமப் பொருள்களும்}}<noinclude></noinclude> 7pyh8z86rhgp7fdcsjmr2pfn1lo6bko பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/171 250 626055 1944192 1878391 2026-06-09T16:34:35Z ஹர்ஷியா பேகம் 15001 1944192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உரூபர்|127|உரூபர்ட்டு இளவரசர்}}</noinclude>வகைக் கற்களால் செய்யப்பட்ட இருபக்க முனைக் கருவிகள், செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் கருவிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட முக்கோணவடிவ வில்லைகள் (Terracotta Cakes), மணிகள், ‘பியான்சு’ மணி வகையில் செய்யப்பட்ட வளையல்கள் முதற்கால மண்ணடுக்குகளில் கிடைத்தன. இவை தவிர வீடுகள் இருந்தமைக்கான சான்றுகளும் கிட்டியுள்ளன. இவ்வீடுகள் கூழாங்கற்கள், செங்கற்கள், சுண்ணாம்புக்கட்டிகள் முதலியவற்றால் கட்டப்பட்டவை. செங்கற்களின் வடிவமைப்பு அரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன் போன்ற இடங்களில் கிட்டிய செங்கற்களை ஒத்துள்ளன. பொதுவாக வீடுகள் கற்களால் கட்டப்பட்ட மேடைகளின் மீது எழுப்பப்பட்டுள்ளன. இது இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைக் காட்டுகிறது. இறந்தவர்களைக் குழிகளில் புதைத்தனர். பிணத்தின் தலைப்பாகம் வடபுறத்தில் வைக்கப்பட்டு அதனுடன் ஈமப்பொருள்கள் முதலியனவும் வைக்கப்பட்டன. இந்நாகரிகம் ஏறக்குறைய கி.மு. 2000-1400 முதல் வழக்கில் இருந்தது. மீண்டும் இங்கு ஏறக்குறைய கி.மு.1000-இல் புதிய குடியேற்றம் ஏற்பட்டது. <b>இரண்டாம் காலம் (கி.மு. 1000-700)</b>: வண்ணம் தீட்டப்பெற்ற சாம்பல் நிற மட்கலன்களைப் பயன்படுத்திய மக்கள் இக்காலத்தில் இங்கு வாழ்ந்தனர். இவ்வண்ணப் பூச்சுப் பெற்ற சாம்பல் நிற ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், வளையல்கள், அரிய மணிக்கற்கள், எலும்பு முனைகள், தந்தத்தில் செய்யப்பட்ட அஞ்சனம் தீட்டும் குச்சிகள், செம்புக் கருளிகள் ஆகியவை. இக்கால மண்ணடுக்குகளில் கிடைத்தன. சிந்து வெளி மக்கள் கண்ணாடியை அறிந்திலர். ஆனால், இக்காலப் பண்பாட்டு மக்கள் அதனை அறிந்திருந்தனர். இம்மக்களே கண்ணாடியை அறிமுகப்படுத்தியிருக்கக்கூடும். <b>மூன்றாம் காலம் (கி.மு. 600-200)</b>: வடஇந்தியாவில், குறிப்பாக கங்கை வெளிப் பகுதியில் சிறப்புடன் ஒரு வகையான கறுப்பு வண்ணம் தீட்டப்பட்ட மெருகூட்டிய மட்கலன்களைப் (N.B.P.) பயன்படுத்திய மக்கள் இங்குச் சிறு இடைவெளிக்குப் பின் ஏறக்குறைய கி.மு.600-இல் குடியேறியிருக்க இக்கால கட்டத்தில் (கி.மு. 600-200) முத்திரையிடப்பட்ட நாணயங்களும் முத்திரையிடப்படாத நாணயங்களும் இங்குக் கிட்டின. இவை தவிர செம்பு மற்றும் இரும்பினால் ஆன கருவிகளும் மௌரியர் காலத்தைச் சார்ந்த பிராமி எழுத்துடன் கூடிய தந்த முத்திரைகளும் கிடைத்தன. மேலும், மௌரியர் காலத்திற்கே உரித்தான மெருகூட்டிய கல்லால் செய்யப்பட்ட சிறுவில்லை ஒன்றும் அகழாய்வில் கிட்டியது. இச்சிறுவில்லையில் வளமைக் கடவுள் உருவம் (Fertility Cult) ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்ற சிறு வில்லைகள் தட்சசீலத்திலும் பாட்னாவிலும் கிட்டின. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுச் சுண்ணாம்புப் பூச்சுப் பெற்று விளங்கின. சுட்ட செங்கற்களால் எழுப்பப்பட்ட குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உறைக் கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. <b>நான்காம் காலம் (கி.மு. 200-கி.பி.500)</b>: இக்கால கட்டத்தில் கங்கர், குசானர், குப்தர் கால மக்கள் இங்கு வாழ்ந்தனர், இக்கால கட்டத்தில் குசானர், குப்தர் காலத்தைச் சார்ந்த செப்புக் கரசுகள் ஓர் இடத்தில் புதையலாகக் கிட்டின. சுடுமண் பொம்மைகளும் முத்திரைகளும் இங்குக் கிடைத்தன. <b>ஐந்தாம் காலம் (கி.பி. 500-800)</b>: இக்காலத்தில் மிகிரகுலர் தோரமானர், ஊண அரசர்களின் நாணயங்கள் இங்குக் கிடைத்தன. <b>ஆறாம் காலம்</b>: சிறிது இடைவெளிக்குப் பின் ஆறாம் கால கட்டத்தில் மொகலாயர் காலத்தைச் சேர்ந்த இலகோரிச் (Lakhauri) செங்கற்களும் முகமதியர் கால் நாணயங்களும் கிடைத்தன.{{Right|.இரா.}} <section end="உரூபர்"/> <section begin="உரூபர்ட்சுலாந்து"/> {{dhr}} <b>உரூபர்ட்சுலாந்து</b> என்பது கனடா நாட்டில் அட்சன் விரிகுடாவை வளப்படுத்தும் ஆறுகள் பாயும் பகுதியைக் குறிப்பதாகும். உரூபர்ட்டு இளவரசரின் (Rupert, Prince) நினைவாக இப்பகுதிக்கு உரூபாட்சுலாந்து (Rupertsland) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உரூபர்ட்டு அட்சன் விரிகுடா வணிகக் குழுவின் (Hudson's Bay Company) முதல் ஆளுநராக அமர்த்தப் பெற்றிருந்தார், இப்பகுதிக்கான பட்டயத்தை இங்கிலாந்து நாட்டை ஆண்ட இசுடூவர்ட்டு மரபின் அரசரான இரண்டாம் சார்லசு (Charles II) வழங்கினார். ஆனால் கி.பி. 1870-இல் இவ்வணிகக் குழுவின் ஆதிக்கம் முடிவுற்று, உரூபர்ட்சுலாந்து கனடாவின் பகுதியாக்கப் பெற்றது. கனடா நாட்டின் வடமேற்கு மாநிலத்தை முதலில் உரூபர்ட்சுலாந்து மற்றும் வட மேற்குப்பகுதி என்றே அழைத்தனர். இன்று இதனை வடமேற்குப் பகுதிகள் மாநிலம் (North West Territories) என்று கூறுவர்.{{Right|இரா.அ.}} <section end="உரூபர்ட்சுலாந்து"/> <section begin="உரூபர்ட்டு இளவரசர்"/> {{dhr}} <b>உரூபர்ட்டு இளவரசர் (கி.பி. 1619-1692)</b> பிரேகு (Prague) நகரில் கி.பி. 1619-இல் பிறந்தார், இவர் பொகீமியா நாட்டுப் பட்டத்து அரசராயிருந்த-<noinclude></noinclude> kswr789n7wnk0pzkdg7by8gf7klq2eu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/405 250 626869 1944095 1934408 2026-06-09T13:06:28Z Booradleyp1 1964 1944095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கன்‌ ஆபிரகாம்‌|377|இலிங்காயத்துகள்}}</noinclude>லும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இறுதியாக கி.பி. 1864 மார்ச்சு மாதத்தில் யுலிசசு எசு. கிராண்ட்டு (Ulysses S. Grant) என்பாரை ஐக்கியப் படைகள் அனைத்தின் படைத்தலைவராக இலிங்கன் நியமித்தார். அவர் வெற்றிபெற்றார். தென் மாநிலப் படைகள் தோற்கத் தொடங்கின. {{larger|<b>போரின் முடிவு:</b>}} ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குடியரசுத் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிப் பொறுப்பை ஏற்றபோது, உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. ஒருமைக்காகப் பாடுபட்ட மக்களின் பெரும் எண்ணிக்கையும், பெருமளவில் கிடைத்த படைத்தளவாடங்களும் போரின் வெற்றிக்குக் காரணமாயின. கிராண்ட்டு, செருமன் (Sherman), செரிடன் (Sheridan) போன்றவர்கள் விழுமிய படைத்தலைவர்கள், தென்மாநிலப் படைத்தலைவர்களை விட இவர்கள் வல்லவர்களாயிருந்தனர். இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது இலிங்கன் ஆற்றிய உரையின் இறுதிச் சொற்கள் உலகப் புகழ் படைத்தவை. இலிங்கன் தம் இறுதிச் சொற்களைப் பேசி முடித்த போது போரும் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருந்தது. இவர் அமைதிக்கான திட்டங்களைத் தீட்டி வந்தார். மீண்டும் தென் மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைய வேண்டுமென விரும்பிய இலிங்கன் அவற்றை இணையுமாறு வரவேற்றார். போரினால் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்துவிடும்படியும் இவர் வேண்டினார். தென் மாநிலங்களின் படைத்தலைவரான இலீ (Lee) கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9–ஆம் நாள் சரணடைந்தார். அவருக்குப்பின் மற்றவர்களும் சரணடைந்தனர். ஒருவாறாகப் போர் முடிவுற்றது. இலீ சரணடைந்ததையும், தம் தலைமையின் கீழ் அமெரிக்க நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டதையும் இலிங்கன் உயிருடன் இருக்கும்போதே அறிந்து மகிழ்ந்தார். போர்டு கலையரங்கத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்றைப் பார்க்க இவர் கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14–ஆம் நாள் சென்றார். மனநிறைவோடு நாடகத்தைக் கண்டுகளித்திருந்த போது சான் வில்கீசு பூத்து என்னும் கொடியவன் இலிங்கனைச் சுட்டான். காயமுற்ற இலிங்கன் உணர்விழந்து கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15–ஆம் நாள் உயிர்துறந்தார். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Thomas, Benjamin, P.,</b> Abraham Lincoln, Knopf, 1952. <b>McCarthy, Charles H.,</b> Lincoln’s Plan of Reconstruction, AMS Press, 1960. <b>Angle, Paul M.,</b> A Shelf of Lincoln Books, Rutgers University Press, 1955. <section end="இலிங்கன், ஆபிரகாம்"/> <section begin="இலிங்காயத்துகள்"/> {{dhr}} {{larger|<b>இலிங்காயத்துகள்:</b>}} வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இலிங்காயத்துகள் எனச் சொல்லப்படுவர். இவர்கள் கருநாடகத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இலிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்கள். சிவன் கோயில்களில் இலிங்கம் மூன்று பகுதிகள் கொண்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலிங்கத்தில் பீடம் என்ற அடிப்பகுதி உண்டு. அதற்கு மேல் கோமுகம் என்ற அமைப்புள்ள பகுதி நடுப்பகுதி ஆகும். குழவி என்ற அமைப்புடைய பகுதி மேலே அமைக்கப்பட்டிருக்கும். இம்மூன்று பகுதிகளும் ஒரு சேர அமைந்துள்ள வடிவந் தான் சிவலிங்கம் எனச் சொல்லப்படுகிறது. குடமுழுக்கு விழாவின் போது எண்வகை மருந்துகளால் செய்யப்பட்ட ‘அட்ட பந்தனம்’ என்ற மருந்துப் பொருளை இலிங்கத்தின் அடிப்பகுதியில் பதியப் பூசுவார்கள். வீர சைவர்கள் அட்டபந்தனம் என்பது எண்வகை முறைகளில் இணையும் அட்டசயிலம் என்ற இணைப்பு முறை என்றும், அது உயிரும் இலிங்கமும் இணைக்கப்பட்டு மறைக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறதென்றும் கூறுவர். மேலும் வீரசைவர்கள் கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபடமாட்டார்கள். அவர்கள் வழிபடும் இலிங்கம் அட்டபந்தனத்தால் எல்லாப் பகுதியையும் மூடிக் கொண்டிருக்கும், குழவி வேறு பீடம் வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத வகையில் அட்ட பந்தனத்தை நிறைவு செய்திருப்பார்கள். பார்த்துவுடன் அதை இலிங்கம் என்று தெரிந்து கொள்ள முடியாது. இதனையே வீரசைவர்கள் வழிபடுவார்கள். இலிங்கத்தின் எல்லாப் பகுதியையும் முழுமையாக மூடிக்கொண்டிருக்கும் ஒரு கட்டை போன்ற குண்டலத்தைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள். கோயில்களில் விசேட காலங்களில் எண்வகையான மருந்துகளால் செய்யப்பட்ட அட்டபந்தனம் என்ற கலவையை இரண்டு இடங்களில் இணைப்புக்காக வைப்பார்கள். அவ்விடங்களுள் ஒன்று குழவியும் பீடமும் பொருந்தும் இடம்; மற்றொன்று இலிங்கமும் தரையும் இணைகின்ற இடம். பழங்காலத்தில் அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ததின் விளைவாக மிகச் சிறிய இலிங்கங்கள் கிடைத்தன. அந்த இலிங்-<noinclude></noinclude> 0vego7jnup4nrk36hbtrt1696g29xc8 1944097 1944095 2026-06-09T13:10:56Z Booradleyp1 1964 1944097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கன்‌ ஆபிரகாம்‌|377|இலிங்காயத்துகள்}}</noinclude>லும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இறுதியாக கி.பி. 1864 மார்ச்சு மாதத்தில் யுலிசசு எசு. கிராண்ட்டு (Ulysses S. Grant) என்பாரை ஐக்கியப் படைகள் அனைத்தின் படைத்தலைவராக இலிங்கன் நியமித்தார். அவர் வெற்றிபெற்றார். தென் மாநிலப் படைகள் தோற்கத் தொடங்கின. {{larger|<b>போரின் முடிவு:</b>}} ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குடியரசுத் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிப் பொறுப்பை ஏற்றபோது, உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. ஒருமைக்காகப் பாடுபட்ட மக்களின் பெரும் எண்ணிக்கையும், பெருமளவில் கிடைத்த படைத்தளவாடங்களும் போரின் வெற்றிக்குக் காரணமாயின. கிராண்ட்டு, செருமன் (Sherman), செரிடன் (Sheridan) போன்றவர்கள் விழுமிய படைத்தலைவர்கள், தென்மாநிலப் படைத்தலைவர்களை விட இவர்கள் வல்லவர்களாயிருந்தனர். இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது இலிங்கன் ஆற்றிய உரையின் இறுதிச் சொற்கள் உலகப் புகழ் படைத்தவை. இலிங்கன் தம் இறுதிச் சொற்களைப் பேசி முடித்த போது போரும் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருந்தது. இவர் அமைதிக்கான திட்டங்களைத் தீட்டி வந்தார். மீண்டும் தென் மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைய வேண்டுமென விரும்பிய இலிங்கன் அவற்றை இணையுமாறு வரவேற்றார். போரினால் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்துவிடும்படியும் இவர் வேண்டினார். தென் மாநிலங்களின் படைத்தலைவரான இலீ (Lee) கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9–ஆம் நாள் சரணடைந்தார். அவருக்குப்பின் மற்றவர்களும் சரணடைந்தனர். ஒருவாறாகப் போர் முடிவுற்றது. இலீ சரணடைந்ததையும், தம் தலைமையின் கீழ் அமெரிக்க நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டதையும் இலிங்கன் உயிருடன் இருக்கும்போதே அறிந்து மகிழ்ந்தார். போர்டு கலையரங்கத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்றைப் பார்க்க இவர் கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14–ஆம் நாள் சென்றார். மனநிறைவோடு நாடகத்தைக் கண்டுகளித்திருந்த போது சான் வில்கீசு பூத்து என்னும் கொடியவன் இலிங்கனைச் சுட்டான். காயமுற்ற இலிங்கன் உணர்விழந்து கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15–ஆம் நாள் உயிர்துறந்தார். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Thomas, Benjamin, P.,</b> Abraham Lincoln, Knopf, 1952. <b>McCarthy, Charles H.,</b> Lincoln’s Plan of Reconstruction, AMS Press, 1960. <b>Angle, Paul M.,</b> A Shelf of Lincoln Books, Rutgers University Press, 1955. <section end="இலிங்கன், ஆபிரகாம்"/> <section begin="இலிங்காயத்துகள்"/> {{dhr}} {{larger|<b>இலிங்காயத்துகள்:</b>}} வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இலிங்காயத்துகள் எனச் சொல்லப்படுவர். இவர்கள் கருநாடகத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இலிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்கள். சிவன் கோயில்களில் இலிங்கம் மூன்று பகுதிகள் கொண்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலிங்கத்தில் பீடம் என்ற அடிப்பகுதி உண்டு. அதற்கு மேல் கோமுகம் என்ற அமைப்புள்ள பகுதி நடுப்பகுதி ஆகும். குழவி என்ற அமைப்புடைய பகுதி மேலே அமைக்கப்பட்டிருக்கும். இம்மூன்று பகுதிகளும் ஒரு சேர அமைந்துள்ள வடிவந் தான் சிவலிங்கம் எனச் சொல்லப்படுகிறது. குடமுழுக்கு விழாவின் போது எண்வகை மருந்துகளால் செய்யப்பட்ட ‘அட்ட பந்தனம்’ என்ற மருந்துப் பொருளை இலிங்கத்தின் அடிப்பகுதியில் பதியப் பூசுவார்கள். வீர சைவர்கள் அட்டபந்தனம் என்பது எண்வகை முறைகளில் இணையும் அட்டசயிலம் என்ற இணைப்பு முறை என்றும், அது உயிரும் இலிங்கமும் இணைக்கப்பட்டு மறைக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறதென்றும் கூறுவர். மேலும் வீரசைவர்கள் கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபடமாட்டார்கள். அவர்கள் வழிபடும் இலிங்கம் அட்டபந்தனத்தால் எல்லாப் பகுதியையும் மூடிக் கொண்டிருக்கும், குழவி வேறு பீடம் வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத வகையில் அட்ட பந்தனத்தை நிறைவு செய்திருப்பார்கள். பார்த்தவுடன் அதை இலிங்கம் என்று தெரிந்து கொள்ள முடியாது. இதனையே வீரசைவர்கள் வழிபடுவார்கள். இலிங்கத்தின் எல்லாப் பகுதியையும் முழுமையாக மூடிக்கொண்டிருக்கும் ஒரு கட்டை போன்ற குண்டலத்தைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள். கோயில்களில் விசேட காலங்களில் எண்வகையான மருந்துகளால் செய்யப்பட்ட அட்டபந்தனம் என்ற கலவையை இரண்டு இடங்களில் இணைப்புக்காக வைப்பார்கள். அவ்விடங்களுள் ஒன்று குழவியும் பீடமும் பொருந்தும் இடம்; மற்றொன்று இலிங்கமும் தரையும் இணைகின்ற இடம். பழங்காலத்தில் அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ததின் விளைவாக மிகச் சிறிய இலிங்கங்கள் கிடைத்தன. அந்த இலிங்-<noinclude></noinclude> 1vtfr3y6si7uesdtbzje9xuhlbykt7o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/444 250 627007 1944365 1935403 2026-06-10T03:52:04Z Booradleyp1 1964 1944365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெமார்க்கு|416|இலெமார்க்கு}}</noinclude>இன்னும்‌ கல்வித்‌ தரம்‌ தாழ்ந்தே உள்ளது. அறிவியல்‌ பாடங்கள்‌ அனைத்தும்‌ அயல்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால்‌, அந்த மொழியில்‌ அனைத்து மாணவர்களும்‌ திறன்‌ பெற்றவர்‌களாக இல்லை. இந்நாட்டுக்‌ கல்வித்‌ திட்டம்‌ இன்‌னும்‌ மாற்றப்படாமல்‌ பழையதாகவே இருந்து வருகிறது. <section end="இலெபனான் நாட்டில் கல்வி"/> <section begin="இலெமார்க்கு"/> {{dhr}} {{larger|<b>இலெமார்க்கு</b>}} பிரெஞ்சு நாட்டு இயற்கையியலாருள்‌ முதன்மையானவர்‌. உயிரினங்களின்‌ வளர்ச்சியை விளக்கும்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ வலுப்பெறத்‌ துணை நின்ற கோட்பாடிகளுள்‌, செவிலியர் தி சீன்‌ பாப்திசுது பியரி அண்டாய்னி மோனெட்டு இலெமார்க்கு (Chevalier De Jean Baptiste Pierre Antoine De Monet Lamark) கொள்கைகள்‌ முதன்மையானவையாகும்‌. இலெமார்க்கு பிரெஞ்சு நாட்டில்‌ பிக்கார்டி (Picardy) என்னுமிடத்தில்‌ கி.பி. 1744–ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இவர்‌ பெற்றோரின்‌ 11 குழந்தைகளுள்‌ இவரே இளையவர்‌. கத்தோலிக்கப்‌ பள்ளியில்‌ பயின்று கொண்டிருந்த இவர்‌ தந்தையின்‌ மறைவிற்‌குப்பின்‌ இராணுவத்தில்‌ கி.பி. 1761–68 வரை பணிபுரிந்‌தார். உடல்‌ நலமின்மையால்‌ இராணுவத்திலிருந்து விலகிப்‌ பாரிசுக்குச்‌ சென்று மருத்துவம்‌, தாவரவியல் ஆகியவற்றைப் பயின்றார்‌. இங்குப்‌ பயின்று கொண்டிருந்தபோது பிரெஞ்சுத்‌ தாவரவியல்‌ அறிஞர்‌ சார்‌டின் து இராய்‌ (Jardin du Roi) அவர்களுடன்‌ தொடர்பு கொண்டு ‘இராயல்‌’ தாவரவியல்‌ பூங்காவில்‌ பணியாற்றினார்‌. இவர்‌, தம்‌ களஆய்வுப்‌ பட்டறிவினைக்‌ தொகுத்து கி.பி. 1278–ஆம்‌ ஆண்டு ‘பிரெஞ்சு நாட்டின்‌ தாவரங்கள்‌’ (French Flora) என்னும்‌ தலைப்பில்‌ மூன்று தொகுதிகளை வெளியிட்டார்‌. இந்த வெளியீடு தாவரலியலுக்கு மிகுந்த பயனுடைய கையேடாக அமைந்தது. இதன் பின்னர்‌, இலெமார்க்கு ஐரோப்பாவின்‌ பல்வேறு அருங்காட்சியகங்‌களுக்கும்‌ பூங்காக்களுக்கும்‌ சென்று ஆய்வு செய்தார்‌. திதரோத்து (Diderot) தொடங்கிய முறையியற்‌ கலைக்‌ களஞ்சியப்‌ (Methodic Encyclopaedia) பணியினை அவரது மறைவிற்குப்பின்‌ தொடர்ந்து பல தொகுதிகளை வெளியிடும்‌ பொறுப்‌பையும்‌, அரசு உலர்தாவரக்‌ கூடத்தின்‌ (Royal Herbarium) காப்பாட்சியர்‌ பொறுப்பையும்‌ ஏற்றார்‌. அருங்காட்சியகச்‌ சீரமைப்பில்‌ இவரது பங்கு கலையானது. ‘இயற்கை வரலாற்றில்‌ அருங்காட்சியகம்’ (Museum d Historic Naturelle) தொடங்கப்பட்டபோது முதுகெலும்பில்லாப்‌ பிரிவின்‌ தலைமைப்‌ பொறுப்பை ஏற்று அரிய விலங்கினங்களைச்‌ சேகரித்து வகைப்படுத்தி வைத்தார்‌. இதன்‌ பயனாய் விலங்கினங்களையும்‌ தாவரங்களையும்‌ வகைப்படுத்‌தும்‌ அறிவியல்‌ துறையில்‌ ஈடுபட்டார்‌. படிமலர்ச்சி பற்றிய இலெமார்க்கின்‌ ‘பயனுண்மை–பயனின்மை விதி’ (Law of Use and Disuse), ‘முயன்று பெற்ற பண்புகள்‌ மாபுவழியிலமைவதாகும்‌’ (Inheritance of Acquired Characters) என்னும்‌ இரண்டு கொள்‌கைகளுமே படிமலர்ச்சியியலில்‌ குறிப்பிடத்தக்க வாதத்தைத்‌ தொடங்கின. இவர்‌ செருமானிய மொழியில்‌ எழுதி கி.பி. 1809–ஆம்‌ ஆண்டு வெளியிட்ட ‘விலங்கியல்தத்துவம்‌’ (Zoological Philosophy) என்‌னும்‌ நூலில்‌ இக்கோட்பாடுகளைக்‌ குறிப்பிட்டார். விலங்குகளும்‌ தாவரங்களும்‌ தாம்‌ வாழும்‌ சூழ்நிலைகளின்‌ அமைப்பிற்கேற்றவாறு தகவமைந்து அச்சூழலின்‌ பண்புகளை ஏற்று வாழ்கின்றன. இவ்வாறு ஒரு புதிய சூழலின்‌ பண்பினை ஏற்று வாழும்‌ போது பழைய சூழலில்‌ தான்‌ கொண்டிருந்த தகவமைப்பை மாற்றிக்‌ கொள்கிறது. இதனால்‌ உறுப்புகளும்‌ அதன்‌ தன்மைகளுக்கேற்ப மாற்றம்‌ பெறுகின்‌றன. தேவையுள்ள உறுப்புகள்‌ வளம்‌ பெற்றும்‌ தேவையற்ற உறுப்புகள்‌ வலுவிழந்தும்விடுகிறது என்பதே இலெமார்க்கின்‌ ‘பயனுண்மை விதியாகும்‌’, இந்த விதியினை நிலைநிறுத்த இலெமார்க்கு பல எடுத்துக்காட்டுகளைக்‌ காட்டியுள்ளார்‌. முற்காலத்‌திய ஒட்டகச்‌ சிவிங்கி குட்டையான முன்னங்கால்‌களையும்‌ குட்டையான கழுத்தினையும்‌ கொண்டிருந்‌தது. அப்போது இவ்விலங்கு புற்களையும்‌ தாழ்ந்த இடத்திலுள்ள செடிகொடிகளையுமே உண்டுகொண்டிருந்தது. காலப்‌ போக்கில்‌ இவ்விலங்கின்‌ வாழிடச்‌ சூழலில்‌ புற்களும்‌ தாழ்வுஇடச்‌ செடிகொடிகளும்‌ குறைந்து விட்டதால்‌ ஒட்டகச்சிவிங்கி மரக்கிளைகளை நாடிச்‌ சென்றது, உயரத்திலிருந்த தழைகளை மேயக் கழுத்தை நீட்டியும்‌, முன்னங்கால்களை தூக்‌கியும்‌ செயற்பட்டு வந்ததால்‌ காலப்போக்கில்‌ மிக நீண்ட கழுத்தினையும்‌ நீண்ட முன்னங்கால்களையும்‌ பெற்றுவிட்டது. இலெமார்க்கின்‌ இரண்டாம்‌ கொள்கை ‘முயன்று பெற்ற பண்புகள்‌ மரபுவழியமைவதாகும்‌’ என்பது உயிரிகளின்‌ வாழிடச்‌ சூழலில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ போது அப்புதிய சூழ்நிலையில்‌ வாழ வேண்டிய தேவை ஏற்படுகிறது. இப்புதிய சூழலில்‌ வாழ்க்கை அமைப்பை மேற்கொள்ளப் புதிய தகவமைப்புத் தேவையாகும்‌ போது அதனால்‌ எற்படும்‌ மாற்றங்கள்‌ மரபுவழி அமையப்‌ பெறுகின்றன என்பது இலெமார்க்‌கின்‌ வாதமாகும்‌. முன்கூறப்பட்ட எடுத்துக்காட்டின்‌ படி, நீண்ட கழுத்தையும்‌ நீண்ட முன்னங்கால்களையும்‌ பெற்ற ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ வழிக்‌ தோன்றல்‌களிடத்திலும்‌ இப்பண்பு காணப்படும்‌ என்றார்‌. {{nop}}<noinclude></noinclude> ddec8gpmtxowfuuyt06itohza0kehja பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/31 250 644425 1944407 1939697 2026-06-10T05:58:36Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம் எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும் அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!! பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலுமாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும் உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள் மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்' கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான் குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால், எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது, என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. "உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா பரவி இருக்கிறது உன் தேசத்திலே...." என்று கட்டியக்காரன் கேட்கிறான். பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள் பேசுகிறாள்: "ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்? பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே பஞ்சம், பட்டினி.” 'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று கட்டியக்காரன் கேட்டான். ''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக் கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல தங்காள். "அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக் கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே கட்டியக்காரன்!!<noinclude></noinclude> emzt11mowhdy313625hph9d08eo4zlf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/32 250 644426 1944061 1939702 2026-06-09T12:27:19Z 04jayapriya 16662 1944061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'குபீர்' என்ற சிரிப்பொலி கிளம்பிற்று. "அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா? பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங் குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன, பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம் செய்கிறாயே! தர்மமா?" என்று நல்லதங்காள் கேட்கிறாள். கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன், "அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம். உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம். சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள் தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி கிடையாது - அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!" என்று கூறிவிட்டுக் காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி கிளம்பிற்று. நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி, "அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே, பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா மந்திரிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள். "ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்" என்றான் கட்டியக்காரன். "இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக் கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாம லிருக்கிறாய்?" என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன், 'அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்களாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து மந்திரிகளாக்கினோம்" என்று கூறிவிட்டு, மாட்டுப் பொட்டியில் ஓட்டுப் போட்டோம், மகராஜி<noinclude></noinclude> 289yyzb7nam7t6hc71vrkj0kp10on3q 1944408 1944061 2026-06-10T05:59:30Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'குபீர்' என்ற சிரிப்பொலி கிளம்பிற்று. "அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா? பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங் குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன, பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம் செய்கிறாயே! தர்மமா?" என்று நல்லதங்காள் கேட்கிறாள். கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன், "அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம். உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம். சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள் தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி கிடையாது - அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!" என்று கூறிவிட்டுக் காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி கிளம்பிற்று. நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி, "அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே, பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா மந்திரிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள். "ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்" என்றான் கட்டியக்காரன். "இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக் கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாம லிருக்கிறாய்?" என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன், 'அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்களாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து மந்திரிகளாக்கினோம்" என்று கூறிவிட்டு, மாட்டுப் பொட்டியில் ஓட்டுப் போட்டோம், மகராஜி<noinclude></noinclude> mipe0lvjw9imoybhk8qp8pgzopwmevj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/33 250 644427 1944410 1939739 2026-06-10T06:00:31Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||23}}{{rule}}</noinclude>எங்க வயித்திலே மண்ணைப் போட்டாங்க, மகராஜி! என்று பாடவே ஆரம்பித்தான். 'மக்கள், 'கரகோஷம்' சொல்லி முடியாது. தம்பி ! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்திலேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!" என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!! நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து. அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், 'சாலோக சாமீப சாரூப சாயுச்ய' பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து, கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து 'ராஜா'! திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிஷி அவர்முன் தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!” என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிஷி, மன்னனை அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால், உனக்குச் சகலமும் சித்திக்கும்" என்று கூறி, அவன் காதருகே, இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி, 'ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர் விநாடிகளிலே 'மஹாமந்திர' உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிஷியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில்,<noinclude></noinclude> aii8llcs2c2ap9ncwx89p7zch23euk9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/34 250 644428 1944062 1939741 2026-06-09T12:28:46Z 04jayapriya 16662 1944062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி விட்டு, {{left_margin|3em|<poem>மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே!</poem>}} என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து” நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர் விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார். காமராஜர்!<noinclude></noinclude> 1wuxh6026ijzkcakig7o3rgken3szme 1944411 1944062 2026-06-10T06:01:18Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி விட்டு, {{left_margin|3em|<poem>மாதவ பூஜிதரே! உம் மலரடிதனை நிதம் பதமுடன் தொழுவேன், மாதவ பூஜிதரே!</poem>}} என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து” நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக் கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்! மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர் விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர் காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான் வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா சொல்ல முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார். காமராஜர்!<noinclude></noinclude> lftn2dd3dtx9camiey9c2be872zbjgp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/35 250 644429 1944064 1939743 2026-06-09T12:29:39Z 04jayapriya 16662 1944064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude> யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். {{left_margin|3em|<poem>15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர்</poem>}} இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்' உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude> lojm3rnvqbv4fpin93xrph5a4nb0jou 1944413 1944064 2026-06-10T06:01:54Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude> யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத் தொலைத்தார்கள்! ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன். {{left_margin|3em|<poem>15. ராமநாதபுரம், பரமக்குடி 16. வில்லிபுத்தூர், தளவாய்புரம் 17. சாத்தூர், விருதுநகர் 18. அருப்புக்கோட்டை 19. சின்னமனூர்</poem>}} இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!! ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்! மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே! நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்' உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்! கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude> 3gjo8ahe1ilgf8fyqpc5z6zd44peogu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/36 250 644430 1944065 1939746 2026-06-09T12:30:28Z 04jayapriya 16662 1944065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" - கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.<noinclude></noinclude> e7pb56rdchwt1odn2678epurimum4dz 1944415 1944065 2026-06-10T06:02:27Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகளை நம்பாதே! திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம். வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது. வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை. காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது. ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது. பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவுதான்! பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே! இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு தேவைப்படும்! கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய், அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்! காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர் கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது கோபம்! கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" - கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.<noinclude></noinclude> bziqq1qzlc5o1a887hlbgeoyf3oabr3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/37 250 644431 1944066 1939751 2026-06-09T12:31:17Z 04jayapriya 16662 1944066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude> இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை' ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude> ivadbnbpxt34aa6c5a484kiu7u3gu0y 1944416 1944066 2026-06-10T06:02:59Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude> இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை' ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்! வறுமை கொட்டுகிறது பொறு! பொறு! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது? இரு! இரு! அகவிலையால் கஷ்டப்படுகிறோம்! ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில். பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது! ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும். இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே! இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது. மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude> lkr67ks2co8ciqqttusd2yg1idcr4ik பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/38 250 644432 1944418 1939754 2026-06-10T06:03:23Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்? நமக்காக அல்ல. இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும். இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்றுகளுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது. ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை. வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்று விட்டன.<noinclude></noinclude> j0kez40gq26vi872hgoikezeba8smt4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/39 250 644433 1944419 1939861 2026-06-10T06:03:56Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||29}}{{rule}}</noinclude>தம்பி! திராவிடத்திலே, 'திராவிடம்' என்பதைக் கற்பனை என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது. நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத் தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம் காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ் ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம் இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலாசத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ முதலமைச்சர்! மக்கள் என்ன எண்ணுகிறார்கள்? திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும், வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும், பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர் பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர் “அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!" என்பதன்றி, தக்க வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார்களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான் எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனம் குமுறும் நிலையில் உள்ள மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல; பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும், சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி, ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள், முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார் என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்!<noinclude></noinclude> k5rgdpzdk0mbt3bgsa9rsh4oxjuthqk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/40 250 644434 1944420 1939862 2026-06-10T06:04:26Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது 'நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் 'கடுவிஷம்' என்றார், இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த 'உயர்வு' கண்டு உளம் பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா விலாசத்தைக் காட்டலாமே! ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர், மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி, 'தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ, குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின் தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள் சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன. கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்! சுட்டுத் தள்ளுகிறார்கள் வெட்டிக் கொல்லுகிறார்கள் துரத்தித் தாக்குகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள் பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது, ஆயிரம் 'கோவா' நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது தாயகம் இருக்கிறது. காமராஜர் என்றோ தமிழர் கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர் சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம் அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளுகிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி<noinclude></noinclude> pr647unxr4rgcylhsy7wvmizsu7ucr3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/41 250 644435 1944422 1939863 2026-06-10T06:05:01Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||31}}{{rule}}</noinclude>கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார், காமராஜர், கனம்! திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்டவரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே, செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத் தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர். கோவா கொடுமையைக் கண்டிக்க, 'நா' இருந்தது; தமிழன் தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர். வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர் மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்; கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட 'பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்! "கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள் நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில் விழவில்லையே" - என்று பதறிக் கேட்கிறது, 'சுதந்திரம்'. எப்படி ஐயா, விழும்! "இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான், கலந்து கொள்கிறேன்" என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில் - குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்! நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன். தி.மு.க.வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு, வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என் கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா'வில் இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக் கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில் புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து<noinclude></noinclude> c3wlrz3ycnprus27epljzojdo4yihot பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/42 250 644436 1944068 1939864 2026-06-09T12:33:58Z 04jayapriya 16662 1944068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள் இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள். {{rh|<br>24-6-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> ojvpw9n8nqu6233lr6j68qdy0hjkurr 1944423 1944068 2026-06-10T06:05:42Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள் இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள். {{rh|<br>24-6-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> oirxs0uroxf2dplibhl9hfcu4g32ju1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/43 250 644437 1944070 1942457 2026-06-09T12:36:03Z 04jayapriya 16662 1944070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{Right|<b>கடிதம் : 55</b>}} {{center|{{x-larger|<b>டமாஸ்கஸ் முதல்....</b>}}}} {{left_margin|3em|<poem><b>நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>ம</b>}}லாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.<noinclude></noinclude> owt8nn6bv3bji1jd4fl8si9gtx46j6j 1944071 1944070 2026-06-09T12:36:16Z 04jayapriya 16662 1944071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{Right|<b>கடிதம் : 55</b>}} {{center|{{x-larger|<b>டமாஸ்கஸ் முதல்....</b>}}}} {{left_margin|3em|<poem><b>நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>ம</b>}}லாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.<noinclude></noinclude> 3wdal6z8ir98dbiy7box1xrhp955aww 1944424 1944071 2026-06-10T06:06:15Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> {{Right|<b>கடிதம் : 55</b>}} {{center|{{x-larger|<b>டமாஸ்கஸ் முதல்....</b>}}}} {{left_margin|3em|<poem><b>நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>ம</b>}}லாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்! கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.<noinclude></noinclude> n89vkja9v6wirfubnbsf72pw9plxde8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/44 250 644438 1944073 1940509 2026-06-09T12:37:25Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1944073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude> frp1impqwohlc3vhvdso4whq1osaqn7 1944406 1944073 2026-06-10T05:56:42Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude> nb0rlfq996frygxl6ypm9zlq6g67b8r 1944426 1944406 2026-06-10T06:06:55Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி,உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும். மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?" என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!! இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன். எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில். எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன். டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின்<noinclude></noinclude> 04933o5la3xqfzidy7uobkh8pvvf5rh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/45 250 644439 1944427 1939867 2026-06-10T06:07:26Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||35}}{{rule}}</noinclude>கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை! அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடைக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால்; நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சினையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க" என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்! டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்! “வயது என்ன?" "நூறு.” "நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது? "அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதையுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும்<noinclude></noinclude> gjvmvio5xz78wn13k2y72xqjgfkrkct பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/46 250 644440 1944428 1939868 2026-06-10T06:07:53Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்..." "உம்!'சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்... சரி.. உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே, 'ஜெயில்' வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்.. வேறென்ன.?" “பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?" "மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்." - "நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டிருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான். இந்த வயதிலே சிறை செல்கிறேன்."<noinclude></noinclude> 4lkbe2w95p64cw02cz5w1z5dhxa3rdk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/47 250 644441 1944075 1939869 2026-06-09T12:38:45Z 04jayapriya 16662 1944075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude>மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்" அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude>23, த.அ.க</noinclude> cn736gebzkldp23bvn8xhexedhj62e5 1944076 1944075 2026-06-09T12:39:16Z 04jayapriya 16662 1944076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude>மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்" அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude> 23, த.அ.க</noinclude> 2497h08b60qfv01ad7ic0demmgfad2x 1944429 1944076 2026-06-10T06:08:25Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude>மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும். டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது! நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது. துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது! டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்" அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!<noinclude> 23, த.அ.க</noinclude> s96nc3lq2w5m7wuu80bh52yd4rnrirb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/48 250 644442 1944431 1939870 2026-06-10T06:09:02Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க் கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன் நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர் வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம் புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை வளர்த்தனர் - ஏதன்ஸ் ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும் சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது; பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்! ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது. தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன். அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச் செல்கிறார் மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர். அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப் பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம் நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார். என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம் நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர். நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம், சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி" கேட்கிறது உள்ளம் - பூரித்துத்தானே போகும்!<noinclude></noinclude> lz5hnurxfudb00vkln9ihr8w81v00tp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/49 250 644443 1944433 1939871 2026-06-10T06:09:40Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||39}}{{rule}}</noinclude>சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே சுண்டைக்காய் அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு? என்று கேட்டாரா? கேட்பாரா? சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய் அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும் படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப் பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்! விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர் இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர், மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்; கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம், சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க, எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம் இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக் காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும் இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம் என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும். சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்! இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!! தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்! பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது; என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர். நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி சிலர் குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில் பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி, வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.<noinclude></noinclude> 5zyejm032cr8qld8a8mc4ogiersyp3s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/50 250 644444 1944434 1939872 2026-06-10T06:10:17Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>முற்றுகையிட்டு முறியடிப்போம்! படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம். என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச் செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர் வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும் போர் இவ்வளவு 'மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே; பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும் இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத் தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக் காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத் தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம் இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக! என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள். தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன. புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன. கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர். நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது. கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது. இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல் அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. எப்படி இருக்கிறது நிலைமை? இன்னமும் கலகம் ஒழியவில்லையா? என்று வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கேட்கிறார்கள். சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?<noinclude></noinclude> pehfybdnhyqw7hjeqedrd8glosq1xd8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/51 250 644446 1944435 1939873 2026-06-10T06:10:46Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||41}}{{rule}}</noinclude>என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும் வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால், துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின் வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில் மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று 'பிரசாரம்' செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள், கண் சிமிட்டின. எல்லாம் நாகநாடு நிலைமை! சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்; உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள், சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச் சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது, கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும் நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக, சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு, இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர் நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது. சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான், ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக் குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள்<noinclude></noinclude> ff94jz5gpmhswa4gir9xnv33z8y6irf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/52 250 644447 1944436 1939874 2026-06-10T06:11:16Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்' என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்; ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!" என்று வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர். நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின் ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும் கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள் கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக் கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்! அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்! இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக் கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில் உலவுகிறார். "இலங்கை இனிக் குடியரசு நாடு! இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!! என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே. பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி பிடித்துக் குலுக்குவேன் என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ் பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது, அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச் சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!<noinclude></noinclude> oz51bg8tmdawlyvpi7o7rzg9kgsicc5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/53 250 644448 1944438 1939950 2026-06-10T06:11:47Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||43}}{{rule}}</noinclude>என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார். தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன் வந்திருக்கிறார். சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர் உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார். நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக் கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு ஒழுகத்தான் பேசிக்கொள்வர். "மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்”. 'ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை தருகிறார்!" "தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம் பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும் கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன? இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத் திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!" "நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும். என்று பிடிவாதம் செய்கிறார்." "ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக்கிறது?” "மனம்தான் காரணம்!" "மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ் செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!" "நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம் என்று கூறுவேன்," "சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன “ரகளை” தீர்ந்தபாடில்லையே!" "ஆமாம், நான் பரிதாபப்பட்டு, பயல்களை ஏதோ பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி<noinclude></noinclude> 1oxl40m3le42172r3d8lfkhmwbzlxux பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/54 250 644449 1944439 1939951 2026-06-10T06:12:22Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம், தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது, உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்." "அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம் பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் ஜனநாயகக் கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது. ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப் பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள் தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்." "மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே மாற்றிவிட வேண்டும் என்று. 'ஓட்டு' ஒன்று இருக்கிறது என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன." "ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்." "வெறி அளவுக்குச் செல்கிறது..." "அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச் சிரமப்பட வேண்டி இருக்கிறது." "வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்..." "அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான் தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்” "நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?" "ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா? "அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினைகளிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்." "நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம் தவறான வழி சென்ற ஜனங்களை" "தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்."<noinclude></noinclude> 7fk25byhahpcj2dai9zkiz8plo6zvxi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/55 250 644450 1944440 1939953 2026-06-10T06:12:52Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||45}}{{rule}}</noinclude>"அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும் மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம் கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி அடக்கினவராயிற்றே அவருக்கு ஆட்சிப் பொறுப்பும், அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.” தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு சென்றிருக்கிறார். தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது பண்பும் பட்டுப்போய் விட்டது. எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்! உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின் இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப் பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே. பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு. என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால் பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம் பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி, விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக் கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில், தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப் பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப் பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.<noinclude></noinclude> rroc9igjpfy5g8lyavd9ho05o477t8f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/56 250 644451 1944441 1939954 2026-06-10T06:13:21Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக் கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார், கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும் என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம் வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும் பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான் பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால் அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும் தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான் சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான் இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில் பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில் சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன், என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு, பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார் மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் 'சேதி'யை மன்னார்குடிக்கு வந்து கூறுவார். மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும். அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும்,அடக்குமுறை அவிழ்த்து விடப்படும். வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும். ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!- என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான். அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ் காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் -நீ மட்டும் தம்பி, நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு - ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும்<noinclude></noinclude> 1v5wqxb1uj241hruk08ykch7nl2q5mk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/57 250 644452 1944078 1939955 2026-06-09T12:41:58Z 04jayapriya 16662 1944078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude>கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும். {{rh|<br>1-7-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> m25ccr6kjmlnw6dgdxv22dfnz4kraj3 1944442 1944078 2026-06-10T06:13:51Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude>கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும். {{rh|<br>1-7-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> rwgsxa2bb4js9o5oq1omobncwhhr4na பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/58 250 644453 1944080 1942458 2026-06-09T12:43:29Z 04jayapriya 16662 1944080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> {{Right|<b>கடிதம் : 56</b>}} {{center|{{x-larger|<b>மாமியார் வீட்டில்...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>மா</b>}}மியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் 'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude> ihued2q4lxbpwxjnflma22liguxdkon 1944082 1944080 2026-06-09T12:44:04Z 04jayapriya 16662 1944082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude> <b>கடிதம் : 56</b> {{center|{{x-larger|<b>மாமியார் வீட்டில்...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>மா</b>}}மியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் 'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude> e55uvo2832kocv4ekdrsrsi45l223m5 1944444 1944082 2026-06-10T06:14:16Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude> <b>கடிதம் : 56</b> {{center|{{x-larger|<b>மாமியார் வீட்டில்...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும் தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>மா</b>}}மியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே, கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார், சொல்லுவார்கள், சுவையாக இருக்கும். பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும் பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை. கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான் சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம் புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது, மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக் கூறிவிட்டு வருவது! மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம் கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில் 'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude> hjn8s78ulhebft5wmsrwa77aznbiaq3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/59 250 644454 1944445 1939957 2026-06-10T06:14:46Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>தொகுதி 5</b>||49}}{{rule}}</noinclude>அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள் அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்! வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை என்று மாமியார் சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள் கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் மதிப்புப் பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் - ‘பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான். மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது, என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான். சிம்மிளி - என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள். தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன் வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து, உரலிலிட்டு 'மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால், அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை தருவதாக இருக்கும். இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி உலர்த்தும் வரையில் இருக்கும். "மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ" "உஹும், வேண்டாம்" "ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை." "வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது" "சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு." "ஐயயே! எனக்கு அந்த 'நெடி'யே பிடிப்பதில்லை." "எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை,"<noinclude></noinclude> ifozlgiv7ejqbwepkv2uhooa44on2gr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/60 250 644455 1944446 1939958 2026-06-10T06:15:25Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>"தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார மெல்லாம் பிடிக்காது." மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில் நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை. வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான். இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன் மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன் டாட்டா கம்பெனி 'ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு உயரும் என்று எண்ணிக்கொண்டான். "எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு தின்றாலும் தெவிட்டாது" - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே கூறிக்கொண்டான். வீணான பிகுவு பிடிவாதம் கௌரவம் பார்க்கிறார். என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப் பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்டு! உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை! மணம், காற்றடிக்க அடிக்க, 'கமகம'வெனக் கிளம்புகிறது. மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது. பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்! கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்! ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிட்டிருக்கலாம். மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள். நான்தான் சற்று அதிகமாகவே 'பிகுவு' காட்டிவிட்டேன்.<noinclude></noinclude> 2nu5hu7ov0xim2n62rqlbjznomg9ctd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/101 250 644498 1944183 1943967 2026-06-09T16:27:55Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 5</b>||91}}{{rule}}</noinclude>{{delete}}திருந்தால், பெருமூச்சுடன் ‘ஆமய்யா, ஆம்!' என்று நாம் ஒப்புக்கொள்வோம்! <b>ஆனால், காமராஜர் அகராதியில் அரசியலுக்காகத் தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம் என்று பொருள் இருக்கும் போலும்!</b> பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை! இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக் கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர், சம்பளம் எவ்வளவு பெறுகிறார்? தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக் கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள் தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும், அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும் இருந்தால் போதும். <b>பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது பேதமை, பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.</b> பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும், அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது கடும் போட்டி இருக்கத்தான் போகிறது. சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம் படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில் கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல் தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன். இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டுகோல்; முழு நாடகமல்ல!! பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.<noinclude></noinclude> e5tfniw4i96zqex73liewmat5xrw6jq 1944184 1944183 2026-06-09T16:28:19Z Info-farmer 232 1944184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 5</b>||91}}{{rule}}</noinclude>திருந்தால், பெருமூச்சுடன் ‘ஆமய்யா, ஆம்!' என்று நாம் ஒப்புக்கொள்வோம்! <b>ஆனால், காமராஜர் அகராதியில் அரசியலுக்காகத் தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம் என்று பொருள் இருக்கும் போலும்!</b> பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை! இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக் கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர், சம்பளம் எவ்வளவு பெறுகிறார்? தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக் கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள் தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும், அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும் இருந்தால் போதும். <b>பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது பேதமை, பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.</b> பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும், அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது கடும் போட்டி இருக்கத்தான் போகிறது. சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம் படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில் கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல் தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன். இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டுகோல்; முழு நாடகமல்ல!! பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில் எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.<noinclude></noinclude> 430vvikad56g8445jwgct7j729chop3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/102 250 644499 1944042 1944039 2026-06-09T12:01:41Z 04jayapriya 16662 1944042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு 'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,... {{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}} {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு இரயில்வே ஸ்டேஷன் <b>இருப்போர் :</b> செட்டுக்காரர்}} {{left_margin|3em|அவர் கணக்காளர் பணியாட்கள் போட்டர் சின்னான்}} {{Hanging indent|3em|<b>காலம் :</b> 1940 <b>நிலைமை :</b> கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.}} {{left_margin|3em|சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார். கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள். வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள். ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude> pj61p5s2zjz7u4pcgiil8jv7uy4s8r5 1944046 1944042 2026-06-09T12:07:59Z 04jayapriya 16662 1944046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு 'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,... {{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}} {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு இரயில்வே ஸ்டேஷன் <b>இருப்போர் :</b> செட்டுக்காரர்}} {{left_margin|3em|<poem>அவர் கணக்காளர் பணியாட்கள் போட்டர் சின்னான்</poem>}} {{Hanging indent|3em|<b>காலம் :</b> 1940 <b>நிலைமை :</b> கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.}} {{left_margin|3em|சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார். கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள். வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள். ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude> tg50dlraagb3ur8w6noi1b5bem6zbge 1944185 1944046 2026-06-09T16:29:20Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு 'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப் படித்துப்பார், தம்பி,... {{c|<b>பெரிய மனிதர்கள்..!</b>}} {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு இரயில்வே ஸ்டேஷன் <b>இருப்போர் :</b> செட்டுக்காரர்}} {{left_margin|3em|<poem>அவர் கணக்காளர் பணியாட்கள் போட்டர் சின்னான்</poem>}} {{Hanging indent|3em|<b>காலம் :</b> 1940 <b>நிலைமை :</b> கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக் கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.}} {{left_margin|3em|சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக் கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும் அணிந்துகொண்டு இருக்கிறார். கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்; பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்கொண்டு பணியாட்கள் வருகிறார்கள். வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு பணிப்பெண் வருகிறாள். ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும், செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல் செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான் வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி வருத்தப்படுகிறான்.}}<noinclude></noinclude> eyqc4cprjn1o08haw27hkqfbpskklq2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/103 250 644500 1944186 1944029 2026-06-09T16:30:56Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude> {{left_margin|3em|புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும் நிலையில் ஓடி வருகிறார். அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி...}} {{Hanging indent|3em|<b>செட்டிக்காரர்:</b> என்ன சாமி! <b>புண்யகோடீஸ்வரர் :</b> (பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே கிளம்பிடறதோண்ணு, பயம்...}} {{left_margin|3em|(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து, அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார். செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து கொண்டபடி.)}} {{Hanging indent|3em| <b>செட் :</b> இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர். அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில் புறப்பட... <b>புண் :</b> நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம் போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா.. <b>செட் :</b> யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ? <b>புண் :</b> நம்ம பாகு...! <b>செட் :</b> அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா? <b>புண் :</b> என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால் மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்... நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம் வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே, இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச் சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன். அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்' நின்னுதுன்னு வையுங்கோ...}}<noinclude></noinclude> mnubu8prfwmjx1ms836961qkdj60x5u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/104 250 644501 1944049 1942508 2026-06-09T12:11:08Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| <b>செட்டு :</b> அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம். <b>புண் :</b> இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம் கண்ணைப் பறிச்சுட்டுது போங்க... <b>செட் :</b> அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே... பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா. <b>புண் :</b> தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்? <b>செட் :</b> எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான். <b>புண் :</b> சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச் சொன்னேன். <b>செட் :</b> அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்... <b>புண் :</b> ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம், அம்பாளோடே போட்டி போடறது போலத்தான் இருந்ததுன்னு சொல்லணும்... <b>செட்:</b> போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான் பிரமாதமாப் புகழ்ந்து பேசறது.. <b>புண் :</b> கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை.. உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா?}} {{left_margin|3em|('பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும் போர்ட்டரைப் பார்த்து)}} {{Hanging indent|3em|<b>செட் :</b> ஏண்டா, மரமாட்டமா நிற்கறே.. சாமான்களை எடுத்து வண்டியிலே வையேன்...}} {{left_margin|3em|(போர்ட்டர் மகிழ்ச்சியுடன். சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.)}} {{Hanging indent|3em| <b>புண் :</b> கின்னையம்பதியிலே எத்தனை நாள்? <b>செட் :</b> நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி அது முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான். <b>புண் :</b> என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு...}}<noinclude></noinclude> pmauof7dlgs403x4wl3tmrlqyptd6c9 1944051 1944049 2026-06-09T12:12:21Z 04jayapriya 16662 1944051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| <b>செட்டு :</b> அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம். <b>புண் :</b> இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம் கண்ணைப் பறிச்சுட்டுது போங்க... <b>செட் :</b> அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே... பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா. <b>புண் :</b> தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்? <b>செட் :</b> எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான். <b>புண் :</b> சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச் சொன்னேன். <b>செட் :</b> அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்... <b>புண் :</b> ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம், அம்பாளோடே போட்டி போடறது போலத்தான் இருந்ததுன்னு சொல்லணும்... <b>செட்:</b> போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான் பிரமாதமாப் புகழ்ந்து பேசறது.. <b>புண் :</b> கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை.. உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா?}} {{left_margin|3em|('பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும் போர்ட்டரைப் பார்த்து)}} {{Hanging indent|3em|<b>செட் :</b> ஏண்டா, மரமாட்டமா நிற்கறே.. சாமான்களை எடுத்து வண்டியிலே வையேன்...}} {{left_margin|3em|(போர்ட்டர் மகிழ்ச்சியுடன். சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.)}} {{Hanging indent|3em| <b>புண் :</b> கின்னையம்பதியிலே எத்தனை நாள்? <b>செட் :</b> நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி அது முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான். <b>புண் :</b> என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு...}}<noinclude></noinclude> 5sm8h9k80khr529q76hwuuliqc6lmrz 1944189 1944051 2026-06-09T16:32:26Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| <b>செட்டு :</b> அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம். <b>புண் :</b> இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம் கண்ணைப் பறிச்சுட்டுது போங்க... <b>செட் :</b> அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே... பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா. <b>புண் :</b> தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்? <b>செட் :</b> எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான். <b>புண் :</b> சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச் சொன்னேன். <b>செட் :</b> அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்... <b>புண் :</b> ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம், அம்பாளோடே போட்டி போடறது போலத்தான் இருந்ததுன்னு சொல்லணும்... <b>செட்:</b> போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான் பிரமாதமாப் புகழ்ந்து பேசறது.. <b>புண் :</b> கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை.. உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா?}} {{left_margin|3em|('பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும் போர்ட்டரைப் பார்த்து)}} {{Hanging indent|3em|<b>செட் :</b> ஏண்டா, மரமாட்டமா நிற்கறே.. சாமான்களை எடுத்து வண்டியிலே வையேன்...}} {{left_margin|3em|(போர்ட்டர் மகிழ்ச்சியுடன். சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.)}} {{Hanging indent|3em| <b>புண் :</b> கின்னையம்பதியிலே எத்தனை நாள்? <b>செட் :</b> நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி அது முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான். <b>புண் :</b> என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு...}}<noinclude></noinclude> tj1qadz6zq4yvq3hr47ngpfsuenh4cs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/105 250 644502 1944053 1942509 2026-06-09T12:15:12Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>தொகுதி 5</b>||95}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட் :</b> கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது. அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கான்... <b>புண் :</b> என்ன சொல்லுங்கோ- அவன், எத்தனை பெரிய சேட் நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல, இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே, பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது.. <b>செட் :</b> டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா, திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள் கொஞ்சம் 'கலாட்டா' செய்துவிட்டானுக... <b>புண் :</b> கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ? <b>செட் :</b> அதெல்லாம் இல்லே... எல்லாம் வெளியூர்லே இருந்து கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும் காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன். திருப்தியாத்தான் பேசினார்.. ஆனா, நம்ம ஊர் பசங்களும், வரவர தலையரட்டலாயிட்டுதுங்க.. <b>புண் :</b> சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம் வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே என்ன..?}} {{left_margin|4em|(போர்ட்டர் பணிவாக)}} {{Hanging indent|3em|<b>போர் :</b> வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம், வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா.?}} {{left_margin|4em|<poem>(செட்டுக்காரர் கோபம் கொள்கிறார். கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு அவரை எதிர்கொண்டு அழைக்கிறார். கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.)</poem>}} {{Hanging indent|3em|<b>கலெக்டர் :</b> சீலமா..? <b>செட் :</b> இல்லே, சின்னையம்பதிக்குத்தான்.. எப்படி இருக்குது ஊர் நிலைமை... என்னமோ சத்தியாக்கிரகம்.. நின்னு}}<noinclude></noinclude> 4zfveqhkjgkdg26et4nlq0njz5uowk5 1944191 1944053 2026-06-09T16:34:08Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 5</b>||95}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட் :</b> கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது. அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கான்... <b>புண் :</b> என்ன சொல்லுங்கோ- அவன், எத்தனை பெரிய சேட் நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல, இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே, பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது.. <b>செட் :</b> டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா, திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள் கொஞ்சம் 'கலாட்டா' செய்துவிட்டானுக... <b>புண் :</b> கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ? <b>செட் :</b> அதெல்லாம் இல்லே... எல்லாம் வெளியூர்லே இருந்து கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும் காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன். திருப்தியாத்தான் பேசினார்.. ஆனா, நம்ம ஊர் பசங்களும், வரவர தலையரட்டலாயிட்டுதுங்க.. <b>புண் :</b> சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம் வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே என்ன..?}} {{left_margin|4em|(போர்ட்டர் பணிவாக)}} {{Hanging indent|3em|<b>போர் :</b> வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம், வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா.?}} {{left_margin|4em|<poem>(செட்டுக்காரர் கோபம் கொள்கிறார். கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு அவரை எதிர்கொண்டு அழைக்கிறார். கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.)</poem>}} {{Hanging indent|3em|<b>கலெக்டர் :</b> சீலமா..? <b>செட் :</b> இல்லே, சின்னையம்பதிக்குத்தான்.. எப்படி இருக்குது ஊர் நிலைமை... என்னமோ சத்தியாக்கிரகம்.. நின்னு}}<noinclude></noinclude> dcfe6g4hxugevh9k9muojzzrar3ne14 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/106 250 644503 1944055 1942510 2026-06-09T12:17:36Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக...}} {{Hanging indent|3em|<b>கலெக் :</b> ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு..}} வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே! என்ற கோஷம் கேட்கிறது. எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது. எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள். வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள். போர்ட்டர் சின்னான் ஒரு சுதர் மாலை போடுகிறான். இதற்குள் போலீஸ்படை வருகிறது. கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள். போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான். கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார். (போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட) <b>புண் :</b> என்னடா இது, பாவிப் பயலே! <b>போர்ட் :</b> (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா..?}}<noinclude></noinclude> 4ixqbldoblk42551afttvbcgkhe2smf 1944057 1944055 2026-06-09T12:18:50Z 04jayapriya 16662 1944057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக...}} {{Hanging indent|3em|<b>கலெக் :</b> ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு.. வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே! என்ற கோஷம் கேட்கிறது. எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது. எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள். வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள். போர்ட்டர் சின்னான் ஒரு சுதர் மாலை போடுகிறான். இதற்குள் போலீஸ்படை வருகிறது. கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள். போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான். கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார். (போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட) <b>புண் :</b> என்னடா இது, பாவிப் பயலே! <b>போர்ட் :</b> (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா..?}}<noinclude></noinclude> m105wpfkwp4hidukpwdwft5kq0ekezi 1944193 1944057 2026-06-09T16:35:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக...}} {{Hanging indent|3em|<b>கலெக் :</b> ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு.. வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே! என்ற கோஷம் கேட்கிறது. எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது. எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள். வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள். போர்ட்டர் சின்னான் ஒரு சுதர் மாலை போடுகிறான். இதற்குள் போலீஸ்படை வருகிறது. கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள். போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான். கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார். (போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட) <b>புண் :</b> என்னடா இது, பாவிப் பயலே! <b>போர்ட் :</b> (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா..?}}<noinclude></noinclude> gxxfvyoia122wmmdpqsaj6b0elo2zzy 1944335 1944193 2026-06-10T02:47:07Z 04jayapriya 16662 1944335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு, அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத் தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி விடுவானுக...}} {{Hanging indent|3em|<b>கலெக் :</b> ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது, கவர்மெண்டு.. {{left_margin|3em|வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே! என்ற கோஷம் கேட்கிறது. எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது. எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள்.}} வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன் இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள். போர்ட்டர் சின்னான் ஒரு சுதர் மாலை போடுகிறான். இதற்குள் போலீஸ்படை வருகிறது. கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள். போலீஸ் தடியடி நடத்துகிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம் ஏற்படுகிறது. மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும் பக்கம் வருகிறான். கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார். (போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட) <b>புண் :</b> என்னடா இது, பாவிப் பயலே! <b>போர்ட் :</b> (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா..?}}<noinclude></noinclude> 2y6mt60v3gh9vwduzork3bm130ljvve பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/107 250 644504 1944336 1942511 2026-06-10T02:58:39Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>தொகுதி 5</b>||97}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புண் :</b> வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை.? அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே போகணும்னேன்..? <b>போர் :</b> என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை, பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என் சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்... <b>செட் :</b> யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி! இனி ஊர்லே ஒரே ரகளைதான்.. டே! நீ, போர்ட்டர் தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே பிழைக்க வேண்டியவன்... <b>போர் :</b> ஆமாங்க. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க? அள்ளக் கூடாது திருடக் கூடாது... <b>செட் :</b> சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட என்னடா வேலை... பெரிய லீடர் அந்தத் திருமலை.. நீ போனயோ, அவனைத் தரிசனம் செய்ய... <b>புண் :</b> (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ... <b>செட் :</b> போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா மண்டையிலே போடப்படாதா.? எனக்கு மட்டும் ஒரு ஆறு மாதம் 'பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப் பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக் கொள்ளுவானுங்க. <b>போர் :</b> (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா... சுட்டுத் தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்... கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித் தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு- <b>செட் :</b> என்னடா ஒரு தினுசாகப் பேசறே - திமிரு பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக் கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை... எவனோ சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும், வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு...}}<noinclude></noinclude> gzgmo7twowth0xkmm8p0a0vf9oidx3w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/108 250 644505 1944337 1942512 2026-06-10T03:00:35Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போர் :</b> வேண்டாமுங்க... மகாத்மாவைப் பத்தி இழிவாப் பேசாதிங்க...பாவமுங்க... <b>புண் :</b> டே! பாவ புண்யத்தைப் பத்தி நோக்கு என்னடா தெரியும், மண்டு! கூலி வேலை செய்து பிழைக்கிற உனக்கெல்லாம் ஏன் இந்தக் காரியம்னு அவர் சொன்னாரே தவிர, மகாத்மாவையா இழிவாப் பேசறார்? <b>செட் :</b> (கோபமாக) என்ன ஐயரே? அந்தப் பயகிட்ட என்னமோ விளக்கம், சமாதானம் பேசறீர்! ஏ! ஏலே, டே! இதோ, இப்படிப் பாருடா! மகாத்மாவைக் கூடத்தான் கேவலமாய்ப் பேசறேன், என்ன செய்துவிடப் போறீங்க. தலையைச் சீவி விடுவிங்களா.? வெடிகுண்டு கொண்டுவந்து என் மோட்டார் மேலே போடுவிங்களா! வெட்டிப் பசங்களா! வெள்ளைக்காரனை ஓட்டிடப் போறிங்க இல்லே, வீரப்புலிக! துப்பாக்கியைத் தூக்கினா காதூரம் ஓடிப்போறிங்க, வாய் மட்டும் இருக்கு வந்தே மாதரக் கூச்சல்போட. சுயராஜ்யம் வரப்போகுது இல்லே, உங்களோட கூச்சல் கேட்டு? அறிவு கெட்ட பயலுக! அவன் வந்துதானேடா, இந்த நாட்டுக்கே 'யோகம்' பிறந்தது.. அவனிடம் போய் வாலாட்டினா, ஒட்ட நறுக்கி.. <b>போர் :</b> வெள்ளைக்காரன் கூட இப்படிப் பேசமாட்டான் போலிருக்குதுங்களே! அவனே கூட, இது உங்களோட தேசம்தான், நான் அந்நியன்தான். போகத்தான் போறேன், ஆனா கொஞ்சம் பொறுத்துப் போறேன்னுதான் சொல்றானாம். நீங்க ஒரே அடியா, எங்களை முட்டாளுக, காலிப் பசங்க, என்றெல்லாம் ஏசிப்பேசறிங்க... ஏனுங்க, வீணா ஊரெல்லாம் ஒரு வழியாப் போனா, நீங்க நேர்மாறாப் போகணும்... (செட்டுக்காரர் கோபமாக போர்ட்டரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இரயில் புறப்படுகிறது. செட்டுக்காரர் ஏறிக்கொண்டு ஒரு நாலணா சில்லறையை வீசுகிறார். அதைப் பொறுக்கி எடுக்கவும் மனமின்றி, கண்கலங்கி நிற்கிறான் போர்ட்டர். பணிப்பெண் சில்லறையைப் பொறுக்கி எடுத்து, போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு...)}}<noinclude></noinclude> kpi9zzgi0hfbndfedj4qnixw7wy3yl8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/109 250 644506 1944338 1942515 2026-06-10T03:02:40Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>தொகுதி 5</b>||99}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>பணி :</b> உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம். அவரோட சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத் தேடிகிட்டயே... <b>புரோ :</b> ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார் கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும். <b>பணி :</b> அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை பட்டுப்பட்டுன்னு பேசிடுது... <b>புரோ :</b> செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர் டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன் ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ! கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு வேண்டியவா... <b>போர் :</b> இருக்கட்டுமே... அதனாலே... நம்ம நாட்டிலே அந்நியன் ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா, மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க, மாண்டு போறாங்க... <b>புரோ :</b> அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே..? <b>போர் :</b> இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத் தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்... ஏனய்யா, செய்யமாட்டாரு... பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க இருக்கறிங்களே... <b>பணி :</b> ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி, சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு, கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப் போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே.. ஏசினயா...?}}<noinclude></noinclude> jbcw64p1wxveqod1w9ihj026asziggm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/110 250 644507 1944339 1942521 2026-06-10T03:04:19Z 04jayapriya 16662 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப் போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்.. <b>பணி :</b> அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான். <b>போர் :</b> ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்களாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... ({{Right|கவலையுடன் செல்கிறான்)}} <b>புரோ :</b> உலகம் போற போக்கு தெரியாத பய... பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா? <b>பணி :</b> யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்கூடமே வைச்சி நடத்தலாம்... <b>புண் :</b> (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி செய்யறே. <b>பணி :</b> ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,<noinclude></noinclude> 498b2av9jlk5533nxvlaqcd56xw0z71 1944340 1944339 2026-06-10T03:04:39Z 04jayapriya 16662 1944340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப் போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்.. <b>பணி :</b> அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான். <b>போர் :</b> ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்களாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... ({{Right|கவலையுடன் செல்கிறான்)}} <b>புரோ :</b> உலகம் போற போக்கு தெரியாத பய... பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா? <b>பணி :</b> யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்கூடமே வைச்சி நடத்தலாம்... <b>புண் :</b> (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி செய்யறே. <b>பணி :</b> ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,}}<noinclude></noinclude> 0m7omc7g18qauunj6v1kth9hm3abtvr 1944341 1944340 2026-06-10T03:05:14Z 04jayapriya 16662 1944341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="04jayapriya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப் போறது... நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம் துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார் அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு, இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ... எப்பவும் சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா அப்படித்தான்.. <b>பணி :</b> அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான், கேட்டது கிடைக்குது... அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே, அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச் சரிப்படுத்த முடியறதில்லே... சண்டை போட்டுக்கறாரு... ஐயர் தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான். <b>போர் :</b> ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான், பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்களாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும் இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும் என்கிறதிலேதான் குறி இருக்கும்னு... {{Right|(கவலையுடன் செல்கிறான்)}} <b>புரோ :</b> உலகம் போற போக்கு தெரியாத பய... பெரிய மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா? <b>பணி :</b> யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்கூடமே வைச்சி நடத்தலாம்... <b>புண் :</b> (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி செய்யறே. <b>பணி :</b> ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,}}<noinclude></noinclude> pknf9tgi1g3ygg0iv5ybdorq9jaz9nr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/111 250 644508 1944342 1938477 2026-06-10T03:23:41Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ...}} {{Hanging indent|3em|<b>புண் :</b> இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்) <b>பணி :</b> (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு.. (போகிறாள்) திரையில் 1940 1941 1942 1943 என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி) <b>இடம் :</b> கீரோடு ரயில்வே ஸ்டேஷன். <b>இருப்போர் :</b> செட்டுக்காரர் பணியாள் புரோகிதர் போர்ட்டர் பணிப்பெண், <b>நிலைமை :</b> (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார். வைரம், வழக்கம்போல் மின்னுகிறது. பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.}}<noinclude>25, த.அ.க.</noinclude> hhx0s4psdtva034vrkgancoo5ib4zjl 1944343 1944342 2026-06-10T03:25:33Z Saranya V R 14232 1944343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ...}} {{Hanging indent|3em|<b>புண் :</b> இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்) <b>பணி :</b> (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..}} {{left_margin|3em|<poem>(போகிறாள்) திரையில் 1940 1941 1942 1943</poem>}} என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி) {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு ரயில்வே ஸ்டேஷன். <b>இருப்போர் :</b> செட்டுக்காரர் பணியாள் புரோகிதர் போர்ட்டர் பணிப்பெண், <b>நிலைமை :</b> (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார். {{left_margin|3em|வைரம், வழக்கம்போல் மின்னுகிறது. பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.}}}}<noinclude>25, த.அ.க.</noinclude> k2zg8lnq5bqpkpgfn5p6otountbqzsk 1944344 1944343 2026-06-10T03:26:05Z Saranya V R 14232 1944344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ...}} {{Hanging indent|3em|<b>புண் :</b> இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்) <b>பணி :</b> (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..}} {{left_margin|3em|<poem>(போகிறாள்) திரையில் 1940 1941 1942 1943</poem>}} என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி) {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு ரயில்வே ஸ்டேஷன். <b>இருப்போர் :</b> செட்டுக்காரர் பணியாள் புரோகிதர் போர்ட்டர் பணிப்பெண், <b>நிலைமை :</b> (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார். {{left_margin|3em|வைரம், வழக்கம்போல் மின்னுகிறது. பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.}}}}<noinclude>25, த.அ.க.</noinclude> oykznxo2oem5o9kbrcboke4xuznklwc 1944345 1944344 2026-06-10T03:26:50Z Saranya V R 14232 1944345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம், போ...}} {{Hanging indent|3em|<b>புண் :</b> இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை செலுத்துகிறார்) <b>பணி :</b> (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..}} {{left_margin|3em|<poem>(போகிறாள்) திரையில் 1940 1941 1942 1943</poem>}} என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி) {{Hanging indent|3em|<b>இடம் :</b> கீரோடு ரயில்வே ஸ்டேஷன். <b>இருப்போர் :</b> செட்டுக்காரர் பணியாள் புரோகிதர் போர்ட்டர் பணிப்பெண், <b>நிலைமை :</b> (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து கொண்டிருக்கிறார். {{left_margin|3em|வைரம், வழக்கம்போல் மின்னுகிறது. பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.}}}}<noinclude>25, த.அ.க.</noinclude> 213ne2sz40rc86odr0d8hy8y50oxib8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/112 250 644509 1944346 1939164 2026-06-10T03:31:30Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது. பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான். புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார். ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}} {{Hanging indent|3em|<b>புண் :</b> போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ... (குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில் வைத்துக்கொண்டு) <b>செட் :</b> போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும் இல்லையா... <b>புண் :</b> ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே இல்லைன்னு சொன்னாராம்... <b>செட் :</b> யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக் கொண்டிருந்தானாமா..? <b>புண் :</b> கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர், பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி, அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது, அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்.. <b>செட் :</b> பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude> npqh152xwsgds90emt6wetvhh47sg0g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/113 250 644510 1944349 1938482 2026-06-10T03:35:37Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக, இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க, மந்திரியாகணும்னு... <b>செட் :</b> (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி இருப்பாரு.. நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட ஆகல்லே... <b>புண் :</b> அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன, வருஷக்கணக்கா பழகவேணுமா..? <b>செட் :</b> அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப் போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்குன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு... நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா... <b>புண் :</b> சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா? மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும் அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை, இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன், ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...? (போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.) இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன், இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட வாதப்படி பார்த்தா. <b>செட் :</b> போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு.. அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்.. <b>சின்னான் :</b> கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம உடம்பிலே பொருந்தலிங்க... <b>செட் :</b> கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே... <b>போர் :</b> நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான் எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...<noinclude></noinclude> ipshq8e5zplnpwjbi7gy0ymtuvayh2f 1944350 1944349 2026-06-10T03:35:58Z Saranya V R 14232 1944350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>புரோ :</b> அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக, இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க, மந்திரியாகணும்னு... <b>செட் :</b> (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி இருப்பாரு.. நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட ஆகல்லே... <b>புண் :</b> அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன, வருஷக்கணக்கா பழகவேணுமா..? <b>செட் :</b> அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப் போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்குன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு... நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா... <b>புண் :</b> சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா? மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும் அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை, இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன், ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...? (போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.) இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன், இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட வாதப்படி பார்த்தா. <b>செட் :</b> போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு.. அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்.. <b>சின்னான் :</b> கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம உடம்பிலே பொருந்தலிங்க... <b>செட் :</b> கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே... <b>போர் :</b> நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான் எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...}}<noinclude></noinclude> lz77wu90odj62po9ebz2m4txmona71i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/114 250 644511 1944352 1938484 2026-06-10T03:38:29Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட்டு :</b> உன் வாயாடிக் குணம்மட்டும், மாறமாட்டேங்குது.. இப்ப என்ன நீ, கழகமாயிட்டாயா?.. <b>போர் :</b> கழகம், எங்களவங்களுது ஆயிட்டுதுங்க.. <b>புண் :</b> என்னடா, இப்படி ஏட்டிக்குப் போட்டியாப் பேசிண்டிருக்கே. இப்ப, நம்ம எஜமானரு, காங்கிரசாயிட்டார், தெரியுமோன்னோ.. <b>போர் :</b> தெரியுமுங்க.. <b>புண் :</b> முன்னே அவருக்குக் காங்கிரஸ் பக்தி வேணும்னு சொன்னவனாச்சே நீ, இப்ப நீயே காங்கிரசைவிட்டுப் போயிட்டேன்கிறயே.. என்னடா காரணம்? <b>போர் :</b> காரணம் என்னங்க? 'எஜமானரு' காங்கிரசாயிட்டாருன்னு நீங்களே சொல்லிவிட்டிங்களே, போதாதுங்களா! காங்கிரசும் 'எஜமானருங்க கட்சியாயிட்டுது; நாங்க ஏழை பாழைங்க, ஏனுங்க இனி, இந்தக் காங்கிரசுக்கு... <b>செட் :</b> (கோபமாக) ஓஹோ! மண்டைக் கர்வம் பிடிச்சாச்சு பயலுக்கு. காங்கிரசை ஒழிச்சிடப் போறாயோ.. ஏண்டா! கழகம்! நீ, எதிர்த்தாச்சு, இனிக் காங்கிரஸ் தலை எடுக்காது, ஏண்டாப்பா, அதுதானே உண்னோட எண்ணம். <b>புண் :</b> கிடக்கிறான், விட்டுத் தள்ளுங்கோ, கழகம்னு எப்ப ஆச்சோ, அப்ப இவன், மட்டுமரியாதையா நடக்கமாட்டான். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசுவான். <b>செட் :</b> பேசுவான்... பேசுவான்.. இழுத்துக்கொண்டு போய் செம்மையா உதை கொடுக்க சொன்னா, என்ன செய்வானாம்! வயித்துச் சோத்துக்கு வக்கு இல்லை, மூட்டை சுமந்து பிழைக்க வேணும், இதுகள், அரசியலிலே புரட்சி செய்யப் போவுதாம், காங்கிரசைக் கவிழ்த்து விடப்போறானுங்களாம்... அகில உலகமே நடுநடுங்குது நேரு பேர் கேட்டா.. <b>போர் :</b> (குத்தலாக) அது உண்மைதானுங்க... அகில உலகம் என்னங்க, எங்களுக்கே கூட பயம்தானுங்க, நேரு பேர் கேட்டாலே.. மனுஷன் என்னெல்லாம் சொன்னாரு, ஏழை எளியவங்கசார்பா, இப்ப, மாட்டிகிட்டி முழிக்கிறாரு முதலாளிங்ககிட்ட}}<noinclude></noinclude> h0l1upmbhi56v8fgh8nnce611f0hn0f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/115 250 644512 1944354 1938485 2026-06-10T03:40:21Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட் :</b> டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ, தெரியுதா.. <b>போர் :</b> மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு, ஐயா, பேசறது பார்த்தா.. (திருமலை வாழ்க!) திராவிட நாடு திராவிடருக்கே! சிறைக்கஞ்சா சிங்கம் திருமலை வாழ்க! என்ற முழக்கம் கேட்கிறது. கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு செல்கிறார்கள்.) <b>போர் :</b> யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப் பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்... <b>செட் :</b> அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..? <b>போர் :</b> இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம் செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப் போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு இருக்கறிங்களே... <b>புண் :</b> கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு பேசறியா..... <b>செட் :</b> பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும் இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன் அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய் வந்ததும்... <b>போர் :</b> கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர் உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த<noinclude></noinclude> tmrd1m0r19nam68aj725jm7phufd8tz 1944355 1944354 2026-06-10T03:40:50Z Saranya V R 14232 1944355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>செட் :</b> டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ, தெரியுதா.. <b>போர் :</b> மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு, ஐயா, பேசறது பார்த்தா.. (திருமலை வாழ்க!) திராவிட நாடு திராவிடருக்கே! சிறைக்கஞ்சா சிங்கம் திருமலை வாழ்க! என்ற முழக்கம் கேட்கிறது. கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு செல்கிறார்கள்.) <b>போர் :</b> யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப் பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்... <b>செட் :</b> அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..? <b>போர் :</b> இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம் செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப் போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு இருக்கறிங்களே... <b>புண் :</b> கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு பேசறியா..... <b>செட் :</b> பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும் இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன் அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய் வந்ததும்... <b>போர் :</b> கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர் உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த}}<noinclude></noinclude> f51qjwl61zw1xp86jwsa9fgqt44ekb9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/116 250 644513 1944362 1938486 2026-06-10T03:50:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர் இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து கொண்டாச்சிங்க... (போலீஸ்!) போலீஸ்! என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார் போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம் வைக்கிறார்கள்.)}} {{Hanging indent|3em|<b>செட் :</b> இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான். (போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது. இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும் வண்டியில் ஏறி அமருகிறார்கள். வண்டி சென்ற பிறகு.) <b>போலீஸ் :</b> சரி, போய்யா... பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா, வம்பு... அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு தெரியாமே... <b>போர் :</b> பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன் அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக் கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க. <b>போலீஸ் :</b> அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான் இருப்பானுங்க... <b>போர் :</b> அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்! இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப, ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம் சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக் கொட்டுது...}}<noinclude></noinclude> oc8qt63m3lptg5vmrx6wcg4oct8ibmd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/140 250 644552 1944592 1939089 2026-06-10T10:33:06Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன? அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப் பிரச்சினையையே ஆராய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச - ஐரோப்பிய நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை. மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம் பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை. 'இந்தியா'வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப் பெரிது. தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர், நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும் நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது. இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின் அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும். சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும் இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள். உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில் தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித் துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற, அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக்<noinclude></noinclude> 8tl3k6tz6p8vu02jcjbkvfsmbf9rbud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/141 250 644553 1944594 1939095 2026-06-10T10:33:38Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||131}}{{rule}}</noinclude> கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில் திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு, நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை. உழைப்பின் பலனாகக் கிடைக்கும் 'விளைவுகள்' அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர், உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக அமைப்பு இடம் தரவில்லை. நல்ல உழைப்பாளி! - என்று பேசும்போது, பாராட்டுகிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம் ஊழியர்களின் 'சேவை' கண்டு மகிழ்கிறார்கள் - தட்டிக் கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள். இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படுபவர்கள். அவர்களிடம் உள்ள தொழில் திறமை - கைவண்ணம் - அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை, 'ஜாதி முறை' தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று நிர்ணயிக்கிறது. அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம் - ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவனுக்கோ அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப்படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த வகுப்பினருக்குக் கிடைக்கிறது. கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும், வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து<noinclude></noinclude> kn3kl2m9hc9rl6hsjbr8qvt4kybc8w0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/142 250 644554 1944596 1939106 2026-06-10T10:34:03Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப்பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும், நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு இங்கு இருப்பதுபோல, வேறு எங்கும் இருந்திட அனுமதித்ததில்லை. ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும் அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப்பட்டிருப்பதாகும். அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாததாகும். ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம் பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு ஏற்படவில்லை. கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது, எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது. கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக் காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது. நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும், இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர். பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று.<noinclude></noinclude> fieao652iwjk33ex7duy1mjfvdmb91b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/143 250 644555 1944599 1939112 2026-06-10T10:35:56Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||133}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாம லிருந்தது. மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் 'மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி,வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர். சென்ற தேர்தலின்போது, இந்தக் 'கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது. வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.<noinclude></noinclude> fntwda9satxny7si903ug34tii4wqsz 1944663 1944599 2026-06-10T11:33:20Z Saranya V R 14232 1944663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||133}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாம லிருந்தது. மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் 'மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி,வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர். சென்ற தேர்தலின்போது, இந்தக் 'கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது. வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.<noinclude>26, த.அ.க.</noinclude> 4kdvbdebsmj590wnj9l4ba2afbhjmc9 1944664 1944663 2026-06-10T11:33:48Z Saranya V R 14232 1944664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||133}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு ஆளாயினர் - தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாம லிருந்தது. மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம் பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும் தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் 'மேல் கீழ்' பேசிக் கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர். மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும், மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும், இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான், வகுப்பு நீதி,வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப் பற்றிப் பேசலாயினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக் கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர். சென்ற தேர்தலின்போது, இந்தக் 'கருவி' மிக நன்றாகப் பயன்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து, அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது. வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ் கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி, அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில், காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.<noinclude> 26, த.அ.க.</noinclude> kozafh26zut2szbiwndz5iye68ik3cg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/144 250 644556 1944607 1939114 2026-06-10T10:41:38Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ் கட்சி கவனிக்க மறுத்தது. கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது. அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம், நாட்டு மக்களிடம், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம், அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப் பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப் பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக் கூறப்பட்டது. நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற 'தேசிய' உணர்வு பெற்ற மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம், 'சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே, காங்கிரஸ், அந்தப் பிரச்சினையை, 'குப்பைக் கூடை'க்கு அனுப்பிவிட்டு, தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச் செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றன. பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள் பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது. பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல் எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன் பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன் திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று,<noinclude></noinclude> h08fps8i5mcprs98xfai4tjg4kaxcpy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/145 250 644557 1944610 1939115 2026-06-10T10:44:00Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||135}}{{rule}}</noinclude> சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர். வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார். காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், S.S.இராமசாமி கிடைத்தார். அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருவர் கிடைத்தனர். அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும். இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை. இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது. குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும், எஸ். எஸ். இராமசாமி 'ஸ்தல ஸ்தாபன'ங்களை ஆளவும் அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம் தரப்படவில்லை. எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும் பொறுப்பைப் பெறவில்லை. எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடவில்லை.<noinclude></noinclude> fj5u427fxp588427p1zesx5nki8ny9i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/146 250 644558 1944613 1939760 2026-06-10T10:46:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்' முற்றிவிட்டது. அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? {{left_margin|3em|எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்."}} "உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.<noinclude></noinclude> 23rc3o2eo95hdk5cd4vtf8wiz6ag9ec 1944615 1944613 2026-06-10T10:47:36Z Saranya V R 14232 1944615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்' முற்றிவிட்டது. அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? {{left_margin|3em|எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்."}} "உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.<noinclude></noinclude> ngolfhpe3vhdgsn1twhyy0004udnhyn 1944616 1944615 2026-06-10T10:48:59Z Saranya V R 14232 1944616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப் போய்விட்டது என்று கூறலாம். இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை வற்புறுத்தவும் வழி இருந்தது. இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும் அடைபட்டுப் போய்விட்டது! இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்! உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்' முற்றிவிட்டது. அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர் S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன், காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார். அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால் வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர் போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்? {{left_margin|3em|எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும் பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும் நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில் சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன், தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண் போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை மனவேதனையுடன் கேட்கின்றோம்."}} "உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது போல எழுதுகிறார்.<noinclude></noinclude> ddjbx2aiferf0q3o7817ai8wue73w3s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/147 250 644559 1944618 1939761 2026-06-10T10:49:43Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||137}}{{rule}}</noinclude> வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற 'தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக் கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார் கூறவேண்டிய நிலைமை இருக்கிறது. "மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு" என்றும் ‘என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய் விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம் கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார். சுயநலம் - பச்சோந்திக் குணம் பதவிப் பாசம் - என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார். இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால், அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார் - பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம் என்று 'சிபாரிசு' செய்கிறார்! தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு என்பார், 'உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில் உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள் வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார். நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச் சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால், கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம் கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்? உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான் ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாமலிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும். வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர்<noinclude></noinclude> 301vpmzvep2hkzxscdusa8dfed6ib15 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/148 250 644560 1944621 1939763 2026-06-10T10:52:05Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து போவதுதானா, இளைஞர் கடமை!! பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர் உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா? திறம் இல்லையா? பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர் திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள் ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று 'குடித்தனம்’ நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்! விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில் தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும் தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்? பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப் போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம் தானாக வருகிறபோது வரட்டும், முதலில் எங்கள் முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும் கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன் இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்திகளாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கிறார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிராது. இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும், அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள் ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம் கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா சொல்லுவார்கள்!!<noinclude></noinclude> qhzt4gdmp1esou09l5aua1vsaxaer1k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/149 250 644561 1944622 1939772 2026-06-10T10:52:29Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||139}}{{rule}}</noinclude> எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின் தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர் கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்; கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல் சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள், பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன் பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும், கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ ‘இலவு காத்த கிளி'யாகத்தான் இருக்கும். பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக் கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது, இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள் போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக, நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய, போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தேயொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக முடியாது; முடியவே முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள், தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள். நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம் இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.<noinclude></noinclude> p6dv4fslbr27g1jtilme064kxgoywxr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/150 250 644562 1944624 1939774 2026-06-10T10:52:59Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான், பச்சோந்திகளாய் புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டு விடுகிறது. எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில் கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத் திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி, அதனால் என்ன! நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு, உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர், குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று மனவேதனைப்படுகிறார்களே. இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள் உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல, நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும். இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா, தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும் என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய<noinclude></noinclude> s78oi55kyxdxk9nnfmps0szeaqu4d91 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/151 250 644563 1944627 1939775 2026-06-10T10:54:25Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||141}}{{rule}}</noinclude> விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில் தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது ப ணி, ஆர்வமும் எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது. {{rh|<br>12-8-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> bfjcf4ojrfwln8t9a33iexq31bc01ap பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/152 250 644564 1944632 1939776 2026-06-10T10:58:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 62</b> {{center|{{x-larger|<b>"ஒரே ஒரு பிரச்சினை..!”</b>}}}} {{left_margin|3em|<poem><b>அரசியலில் பெரியார் - பெரியார் பார்வையில் காமராஜர்</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>"நே</b>}}ற்று, கூட்டத்திலே என்ன விசேஷமான விஷயம் பேசினார். நான் வேறோர் இடத்திலே மாட்டிக்கொண்டேன், வம்பிலே சிக்கிக்கொண்டேன். அதனால் வரமுடியவில்லை.” "போயும் போயும் உனக்கு நேற்றுத்தான் நாள் கிடைத்ததா வேறு வேலை பார்க்க. நேத்துப் பிரமாதம்... "என்ன? என்ன? புது சேதி ஏதாவது.." "சாகடித்துவிட்டார்! அந்தப் பயல்கள் இருந்திருந்தால் முகம் செத்துப் போயிருக்கும். ஏண்டா பசங்களா! நீங்களா சட்டசபைக்குப் போகணும்? என்று கேட்டுவிட்டு ஒரு சமாசாரம் சொன்னார், தூக்கிவாரிப் போட்டுவிட்டது போயேன்..." "என்ன சொன்னார்.. என்ன?” "என்னோடு இருந்துவிட்டு ஓடிப்போனான்களே இந்தப் பசங்க, இதுகளெல்லாம், என்னமோ எம்.ஏ, பி.ஏ. என்று போட்டுக் கொள்கிறானுங்க. இந்த எம்.ஏ., பி. ஏ. எல்லாம் எப்படிக் கிடைச்சுது? போனா போகட்டும்னு நான் பல பேருக்குச் சொல்லி, மார்க்கு போடச் சொல்லி, இதுகளுக்கு பி.ஏ, எம்.ஏ ன்னு வாங்கிக் கொடுத்தேன் - என்று சொன்னாரு... சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போச்சி போ." “அப்படியா சொனார்?"<noinclude></noinclude> 0cczy0l6ug8umkjsamue2uaf4cfnjrb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/153 250 644565 1944635 1939777 2026-06-10T11:01:54Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||143}}{{rule}}</noinclude> "ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம் பிடுங்கித் தின்னுமல்லவா?" "அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது; இப்படியெல்லாமா பேசுவது?" "அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?" "நீயும் நானும் பி.ஏ. இல்லெ... ஆனா, நம்ம குருசாமி ஒரு பி.ஏ; நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி, வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா! என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும் பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம் எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏவும் வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப் பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ.. எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்... வெட்கமா இருக்கும்" "அடெ, அதுக்குச் சொல்றியா" "தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக் கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான் வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு இருக்கிற பி.ஏ.எம். ஏக்களுக்கும் இதே 'சூடு' தானே கிடைக்கும், இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க, பேசிக்கொள்ள மாட்டாங்களா?" "அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச் சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது; இல்லையா?" "அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்படவில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே! அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா, கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால்,<noinclude></noinclude> kbiurgkaai0ppwkuhsvfnprc93tdyon பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/154 250 644566 1944637 1939779 2026-06-10T11:03:06Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச் சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின் முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப் பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக் கொடுத்தேன்னு. அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளுவாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக்கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக, யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக் கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர் பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா உள்ளவங்க எண்ணிக்கொள்ளமாட்டாங்களா? அதை நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது." "பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை. நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.” "அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும் கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர்களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது" "அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான் நீ... போ..." என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல். கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத் தோன்றும் தம்பி! கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன். சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல், முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல. இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில், எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் 'சபாஷ்' வாங்கிக் கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே<noinclude></noinclude> flg55g3josbwzxymimivcsre0j4yfn7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/155 250 644567 1944639 1939782 2026-06-10T11:04:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||145}}{{rule}}</noinclude> சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல் ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார் தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம் வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும் சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது - நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது. திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில் ஒருவகை. வாதிடுவது-வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப் பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில். தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும் மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம். மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும் நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும் இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, 'ரோய ரோய'த் திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான் ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே! நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால் எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல பலன் தராது - என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும் திடுக்கிடட்டும், தீ போலச் சுடட்டும் என்ற முறையைப் பிறர் கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார் யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி - வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் - பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ எதிர்பார்த்து ஏவல் செய்வோர், "ஒழிந்தானுக! இனித் தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும் எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!" - என்று<noinclude></noinclude> h587rn1uio7e74yi4n3i9nq511r2vq6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/156 250 644568 1944642 1939786 2026-06-10T11:04:48Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் - உருவான பலன் கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால், உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும் விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக் கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி விட்டோம் என்பதும் புரியும். ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை. அதனினும் கொடியது, கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு, அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும் ஏமாற்றம்! அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும். பொறுக்கிப் பசங்க போக்கிடமத்ததுக என்ற 'பாஷை' மளமளவென்று பிறக்கும். இது சகஜம். 'திராவிட முன்னேற்றக் கழகம்' துவக்கியதிலிருந்து தம்பி, நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள? திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள் போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம் என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம் வெளியேறினோம். வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன், திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை<noinclude></noinclude> 9c62wwgnix8dszgwsigaos83y6cy54z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/157 250 644569 1944644 1939792 2026-06-10T11:05:49Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||147}}{{rule}}</noinclude> தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர் யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம். அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடிகளெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா? இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப் போகிறார்கள் திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி, தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று “வாழ்த்தி வழியனுப்பினார்கள்.” தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப் போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம். எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தராமலிருக்கும். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை. எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது. சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக் கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில், தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர்களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும். மிகச் சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது. இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா!<noinclude></noinclude> 97h4xuiqb308cshdzlmve9b32ciiufh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/158 250 644570 1944645 1939794 2026-06-10T11:06:18Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக் கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும், அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது - சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி! இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை - கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப் போனவனல்ல. அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு, அவர் சலித்துக் கொள்கிறார். ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றிருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை பெற்றவர்களாகிவிட முடியாது. சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும் பெற்றதில்லையே! கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர் கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது பிய்த்தெறியப்படுகிறார்கள். ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணியனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும் இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும், புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய், ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள்.<noinclude></noinclude> o3kn0gialcomtzlmxdq7i01vg65xh84 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/159 250 644571 1944646 1939795 2026-06-10T11:06:50Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||149}}{{rule}}</noinclude> நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது, என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட அல்ல. நண்பர் குருசாமிக்கே இது 'மூன்றாவது ஜென்மம்' என்று கருதுகிறேன் - இருமுறை அவரும் 'புளித்தவராகி' விட்டவர்தான். விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் அந்தந்த 'கால கட்டத்துக்கு' ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர் வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும், பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி, கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக் குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண் வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள், சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு, எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர் சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம் செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து நடத்துகிறோம். நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு ஏற்படுவதற்கான காரணம் இதுதான். 'விரோதியாகு!" என்கிறார்கள், "ஐயா! அது எப்படிச் சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால் எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக் கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்" என்று நாம் கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாகவெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள் - இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர். அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட, அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து வரும் தேர்தல்.<noinclude></noinclude> 5imjoxvmxunacvg2st0np8abnsvzqxp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/160 250 644572 1944647 1939797 2026-06-10T11:07:17Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "பயல்கள் சினிமா நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம் தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால் பார்த்துவிட்டுத்தான்...." என்று கூறினாராம், நீண்டகால நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயக மானவர்! பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து வேண்டுமென்று விரும்புகிறார். கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை எத்தனையோ இருக்கிறது - எண்ணத்தில் அவைகளைக் கொள்ளக் கூடாதா! இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன் உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத் தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது போலவும், அது கண்ட அவர், கையொப்பம் போடுவது போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட கூட்டத்தில், “பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில் திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன். கேட்டு இன்புறுக" என்று படித்துக் காட்டுவது போலவும், நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா? ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று நாம் பிச்சை எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்! பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான் பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதா! தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து, தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந்தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம் என்று அன்பர் ஆசைப்படுகிறார். தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக<noinclude></noinclude> o0dqnfq34v7hsw4083aghaxe6tjkauw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/161 250 644573 1944648 1939800 2026-06-10T11:07:40Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||151}}{{rule}}</noinclude> அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால், தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம், துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை, மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல், நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத் தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது. எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண விரும்பினார். முடியத்தான் இல்லை. திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம் நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும் காட்சியைக் காண விரும்பினார். நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை எடுத்துரைத்தேன். இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன். இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல; ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை. இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில் இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால் போதுமல்லவா!! தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப் போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறாய்? காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் - எனவே அவர்மீது 'தூசு' விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது போலவாம்!<noinclude></noinclude> pad6jaaz85k7uuq3w8qd1ajrgm1nj76 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/162 250 644574 1944649 1939801 2026-06-10T11:08:42Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன? திராவிட நாடு தேவை என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால் அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல். காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார். தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால், நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால், காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம். பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக. தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு, முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல், விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா! அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக் காட்டுகிறார்கள். இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான். "நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா? "ஆம்?" என்றால் என் நண்பன். 'இல்லை' என்றால் எனக்கு எதிரி. "இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது. முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக் கிடையாது." எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல இல்லையா!<noinclude></noinclude> sfif4qz1t2kx5dh1h9eoo6x3m2tixuw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/163 250 644575 1944650 1939802 2026-06-10T11:09:49Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||153}}{{rule}}</noinclude> யாருடைய மணிமொழி? விடுதலைதான்!! திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன், அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை! விட்டுத் தள்ளு! என்கிறார். வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து விட்டெரிகிறது அல்லவா? அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர் - ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு - பாவிகளா, நீங்கள் பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும் முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான் வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல் மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான் வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார். ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக் கொண்டாரோ? இல்லை; இல்லை, அவரிடம் அதுபற்றி இவர் கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார். திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார் - பெரியாரோ, பி.ஏ, எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது என்று பேசுகிறார். தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை. "திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள். தனது தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்? இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்" தம்பி! தீப்பொறி கண்டாயா?<noinclude></noinclude> p7m1dijjrngcq6hmoalvcqh5trpkvxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/164 250 644576 1944651 1939803 2026-06-10T11:11:44Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்! துரோகியின் முகத்தில் காரித்துப்புங்கள்! விடுதலையில் வந்த வீர முழக்கம். எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால் முகம் சுளிக்கின்றானோ, அவன் துரோகி. அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப்போகிறது என்று கேட்டது விடுதலை. திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று கேட்கிறார் காமராஜர். தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர். அவருக்கு "திருஷ்டி கழித்து', ஆலம்சுற்றிப் பொட்டிட்டு, அரசாள அழைக்க, 'லாலி' பாட வேண்டுமாமே, சரியா? {{rh|<br>19-8-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}}<noinclude></noinclude> h0sz8gw20cghwysi9vasyhh5m4ei24b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/165 250 644577 1944653 1942459 2026-06-10T11:17:58Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 63</b> {{center|{{x-larger|<b>பேரகராதி</b>}}}} {{left_margin|3em|<poem><b>சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு - 'விடுதலை'யும் காங்கிரசும்.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>"தி</b>ருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது; விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். சங்கரன்கோயில் தாலுகாவில், சிவகிரி பகுதியில், நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்” என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.}} பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும் கண்டு 'ஐயா! அப்பா!' என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே. “ஆமய்யா {{larger|M.L.A}}., அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன சாதித்துவிட்டீர்?" என்று யாராவது கேட்டு விட்டால், "நமது மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம் தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே! இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து" பார்த்திடுக! இதோ “மித்திரன்” படித்திடுக!" - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க இது உதவட்டும் என்பதற்காகவே இந்த {{larger|M.L.A}}., இவ்விதம் சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி! காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின் 'கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் - எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டுமென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம்<noinclude></noinclude> mz2spx172383owut4qv36zbcz0inewt 1944654 1944653 2026-06-10T11:18:44Z Saranya V R 14232 1944654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 63</b> {{center|{{x-larger|<b>பேரகராதி</b>}}}} {{left_margin|3em|<poem><b>சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு - 'விடுதலை'யும் காங்கிரசும்.</b></poem>}} <b>தம்பி,</b> {{larger|<b>"தி</b>}}<b>ருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது; விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். சங்கரன்கோயில் தாலுகாவில், சிவகிரி பகுதியில், நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்” என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.</b> பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும் கண்டு 'ஐயா! அப்பா!' என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே. “ஆமய்யா {{larger|M.L.A}}., அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன சாதித்துவிட்டீர்?" என்று யாராவது கேட்டு விட்டால், "நமது மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம் தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே! இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து" பார்த்திடுக! இதோ “மித்திரன்” படித்திடுக!" - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க இது உதவட்டும் என்பதற்காகவே இந்த {{larger|M.L.A}}., இவ்விதம் சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி! காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின் 'கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் - எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டுமென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம்<noinclude></noinclude> j3qxpipln6eu9msl4umxivv2w8106ty பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/166 250 644578 1944655 1939805 2026-06-10T11:20:45Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சுமத்துபவர்களின் வாய்க்கு ஆப்பாகவாவது இது பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி எனக்கு. திருநெல்வேலிச் சீமையே வளம் குன்றித் திண்டாடுகிறது - தேயிலைக் காட்டிலே பாடுபட்டு எலும்புந் தோலுமாகி, அந்தப் பிழைப்பின் வாயிலும் மண் விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள், வேறு வாழவழி கேட்டுக்கொண்டு வறட்சியால் வாட்டப்படும் நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர். ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம். <b>"கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 12-ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் கிடையாது" என்று வி.கே. பழனிச்சாமிக் கவுண்டர் எனும் காங்கிரஸ் {{larger|M.L.A.}} அதே சட்டசபையில் கூறுகிறார்.</b> கோவை மாவட்டம் காங்கிரசுக்குத் தேர்தல் செலவுக்குத் தயாராக இருக்கும் பணப்பெட்டி தொழிலதிபர்களின் கோட்டம். இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக் கேட்டை எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் {{larger|M.L.A}}-க்கு ஏற்பட்டது கண்டு எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி. 'பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?' என்று பாரதியார் பாடினார். ஆமாம், ஆமாம் என்று காங்கிரசாட்சி அறைகின்றது. பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி வந்து பிழைக்க வழி கேட்கும் 'பராரிகள்' மற்றோர் புறம், நோய் நொடி நெளிவது வேறோர்புறம், என்று இப்படி நிலைமை இருக்கும்போது, மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத் தோன்றும், தம்பி! மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால் வேறொன்று பொங்கி வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள், மற்றோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசுவதை. <b>"வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் விமரிசையாக நடந்து வருகிறது! சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்" என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாரிமுத்து என்பவர் பேசுகிறார்.</b><noinclude></noinclude> 4p50pln4yd90lb1zxqlxsttjj916g48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/167 250 644579 1944656 1939937 2026-06-10T11:21:32Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||157}}{{rule}}</noinclude> "சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையோ' என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே தவிர, வேறு 'அதிமுக்கியமான' ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது; 'கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்' விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின் அரண்மனையப் பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது!! வெள்ளையாட்சிக் காலத்தில், கோடையின்போது, 'ஊட்டி' செல்வர். இங்கு மேடையில் 'கோடை இடி' யெனக் காங்கிரசார் முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச மகா ஜனங்களே! இங்கு கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும் நிலையில், கை புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும் நிலையில், நாம் பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது இங்கு; நமது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக் கும்பல், கோடை தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள், உல்லாசமாகக் காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா இராம ராஜ்யம்!! - என்று வெளுத்து வாங்கினார்கள். கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்; இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க ஏற்பாடாகி வருகிறது. <b>"ஊட்டியில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது என்கிறீரே, ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம் தளர்த்தப் படுகிறதாமே, உண்மையா?" என்று தெய்வசிகாமணி எம்.எல்.ஏ. கேட்கிறார்.</b> அமைச்சர் கூறுகிறார், "இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை" என்று. இப்படியாகத்தானே காங்கிரஸ் இராஜ்யபாரம், நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான ஆட்சியை "கேள்வி கேட்பாரற்ற" முறையிலே விட்டுவிடக் கூடாது, அடுத்த தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற நோக்குடன், நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட மிட்டாலோ, "எமது கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர் காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு? அடபாவிகளா! நீங்கள் நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல அவர் கிடைத்திருக்கிறார்!! அவருக்கு 'உலை' வைக்கலாமா?" என்று கேட்கின்றனர்.<noinclude></noinclude> s8bl8oqnoxkcs142l67jd5aug1deurf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/168 250 644580 1944657 1939938 2026-06-10T11:22:12Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்பவன் நண்பன்; இல்லை என்பவன் எதிரி! இதுதான் இனி ஒரே பிரச்சினை - என்ற பேச்சு 'பழங்கதை'யாகிவிட்டது. இப்போது உள்ள ஒரே பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண வேண்டும் என்று கூறுகின்றனர். பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான் பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை! என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக் கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்குவதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான் வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது. <b>"காங்கிரஸ் கட்சியானது இந்துமதக் கோவில்களிலுள்ள மண்டபங்களைப் போலிருக்கிறது. உள்ளே புகுந்தால் ஒரே இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம். அண்ணாந்து பார்த்தால் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத் தவிர வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில் மண்டபம் என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில் கூற வெட்கப்படுகின்ற பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக் காலத்துக் காங்கிரஸ் ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று கருதிக்கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டு மண்டபத்திற்குள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். திருட்டுக்கும் கொலைக்கும் தவிர ஆயிரக்கால் மண்டபம் வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா? காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான். அந்த மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்" இது, தம்பி, பெரியார் கருத்து; விடுதலை மூலம் நாட்டுக்கு அளிக்கப்பட்டது.</b> காமராஜர், அந்த மண்டபத்தில்தான் கொலுவீற்றிருக்கிறார்!<noinclude></noinclude> 37j74p14c9ztljs37vb2hiqd9rn3ywh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/169 250 644581 1944658 1939940 2026-06-10T11:22:51Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||159}}{{rule}}</noinclude> பக்தர்கள்தான், வெளவால் புழுக்கையின் துர்நாற்றத் தையும் சகித்துக் கொண்டு, அந்த நாள் மண்டபம் எனப் பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை? பக்தர்களே கூட, நாற்றம் அதிகமாகிவிட்டால், பதை பதைக்கிறார்கள் - மண்டபத்தைச் சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். எல்லை குறைகிறதென்றால் "விடமாட்டேன்" என்று வங்கம் சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால், மராட்டியர் "பார்க்கிறோமே ஒருகை" என்கிறார்கள்; குஜராத் தனி மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து தாக்குகிறார்கள் குஜராத்திகள். இங்கு தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோட்டையில் ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே மாதரம் - என்று வாளா இருந்துவிடச் சொல்லி விட்டார் காமராஜர். யாராவது வாய் திறந்தாலோ, அவர்கூட, நியாயந்தானே, உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள் என்று கூறுவார் போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர் மீது எதிர்ப்பு எழலாகாது' என்கிறார்கள். ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு இன்று வரை பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச் செய்து கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும், மனம் இடம் தருகிறது! "காங்கிரசை இப்போது மட்டும், கடையனே! ஆதரிக்கவா செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல, வௌவால் புழுக்கை துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்; எங்களுக்கு அந்த மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும் போல; ஆனால், காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர், ஏதோ நாம் எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள் செய்து வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும் என்று ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?" என்று கேட்டுக் கெக்கலி செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர், தமது இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார் என்று கூடக் கேட்க வேண்டாம் - பொதுஜன நன்மையை<noinclude></noinclude> g35qvuaojvida5qmn5vywizfk85pvn6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/170 250 644582 1944659 1939943 2026-06-10T11:24:30Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக் கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம், இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ் தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக, அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக் காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா? என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா? இதற்கும் எனக்குத் துணை 'பெரியாரின் பேரகராதி' தான் {{left_margin|3em|இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லையென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம். பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம் பெருமைப் படுகிறோம். ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? 1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள் - பாட்டாளிகள் ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம். 2. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது. 3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது. 4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை அழித்து வருகிறது.}} இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி, இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது என்பதுதானே பொருள். தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச் சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல் லாம் பெயரெடுத்தார்.<noinclude></noinclude> ieg51glk4s28obo0dz3gy44g0mhhbgb 1944660 1944659 2026-06-10T11:25:45Z Saranya V R 14232 1944660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக் கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம், இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ் தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக, அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக் காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா? என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா? இதற்கும் எனக்குத் துணை 'பெரியாரின் பேரகராதி' தான் {{left_margin|3em|இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லையென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம். பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம் பெருமைப் படுகிறோம். ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? 1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள் - பாட்டாளிகள் ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம். 2. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது. 3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது. 4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை அழித்து வருகிறது.}} இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி, இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது என்பதுதானே பொருள். தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச் சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல் லாம் பெயரெடுத்தார்.<noinclude></noinclude> tuc5qhfc64clxd1ls4rewbn7gvgqu50 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/172 250 644585 1944661 1939945 2026-06-10T11:29:16Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|காமராஜரும் இப்போது கோயில் கோயிலாகச் செல்கிறார். கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க அஞ்சா நெஞ்சுடன் அன்று கிளம்பினார். எத்தனை பெரிய சுயமரியாதைக் கிளர்ச்சிக்கும் இடம் தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல; ஆச்சாரியார் காலம், பிள்ளையார் உடைத்த நேரம்.}} எனவே, இந்த சர்ட்டிபிகேட் தந்து, காமராஜருக்கு ஆதரவு திரட்டுவதிலும் அர்த்தமில்லை. மற்றோர் உண்மையையும், அறிந்து வைத்துக்கொள் தம்பி, குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த நாட்களில், (13-10-51) பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி, <b>"திராவிட கழகத்தார் கோயில்கள் முன்பு கூட்டம் போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே இதைத் தடுக்க முடியாதா?"</b> என்று கேட்டனர், அதற்கு குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்? எந்தப் பத்திரிகை, நிருபராவது, காமராஜரிடம் இந்தக் கேள்வி கேட்டால், {{left_margin|3em|"போங்க, போங்க, வேறே வேலையே கிடையாதா உங்களுக்கு?உங்க கோயிலும், உங்களோட சாமிகளும் “மகாலட்சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்".}} என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத் துடிப்பவர்கள் என் மனக்கண்முன் தெரிகிறார்கள். குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி ததும்பும் உள்ளத்தினர், நம்மவர் - அவர் நமது ஆதரவினைப் பெற்றுத் தீர வேண்டியவர் - என்று நாம் கூறினது கூட இல்லை; எனினும், தம்பி, நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்? <b>"திராவிட கழகத்தினர் கடவுள்களைத் திட்டுவதுபற்றி யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க முடியாது. கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே நடவடிக்கை எடுக்க முடியும்"</b><noinclude></noinclude> pedfta5poya5pas6rvstyfqe6pneqp9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/173 250 644586 1944662 1939947 2026-06-10T11:31:57Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||163}}{{rule}}</noinclude> இப்படித்தான் சொன்னாரே தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க!" நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து விடுகிறோம்" என்று கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு முதல் அமைச்சராக வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத் தளபதிகளாக இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித் தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப்பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும் வாதிடுவது, அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை. குமாரசாமி ராஜா, இன்னும் தெளிவாகவே கூறினார்: {{left_margin|3em|"மதச் சார்பற்ற சர்க்காரில் மதத்தைக் கண்டித்துப் பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன் ஒரு கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி அளித்தபிறகு, அதே இடத்தில் கூட்டம் போடத் திராவிட கழகத்துக்கோ, இதர கட்சிக்கோ, அனுமதி மறுக்க முடியாது"}} இதைவிட, தம்பி, காமராஜர் போக்கிலே என்ன புதுமை, புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!! குமாரசாமி ராஜா ஓமந்தூரார் ஆகியோர் நல்லவர்கள் - நேர்மையாக நடந்து கொண்டவர்கள் என்பது கண்டோம் - எனினும், அப்போது, <b>"தென்னாட்டான் தன் நாட்டுக்குச் செய்யவேண்டிய முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!"</b> என்று அழுத்தந்திருத்தமாக விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும் நானும் தோள்தட்டிக் கொண்டு கிளம்பினோம், காங்கிரசை எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!! ஏனெனில், நமக்கு 'விடுதலை' எடுத்துக் காட்டிற்று, அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம், இவர் நேர்மையாளராக இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட முடியாது, வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாது என்று அறிவூட்டியது.<noinclude></noinclude> 1hc44jdmksbctd50ty0m478i4dgvck3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/174 250 644587 1944652 1939949 2026-06-10T11:14:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி, முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி. காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி - வட நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி. காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி வாழ்கின்ற பணநாயக் கட்சி. என்று அன்று 'விடுதலை' எழுதிய நிலையில்தான் இன்றும் காங்கிரஸ் இருக்கிறது. அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர் முதலமைச்சராக வேண்டும். அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை எப்படிச் சகித்துக் கொள்வது" என்று கேட்ட 'விடுதலை' இன்று வாதாடுகிறது. "பேரகராதி'யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன். தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ, வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல் கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால் புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா, பேரகராதி எழுதிற்று.. இப்போது..? என்று எண்ணித்தான், திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார் என்ன எண்ணுகிறார்களோ! {{rh|<br>26-8-1956||அன்பன்,<br> {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_05,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 29 |bSize = 450 |cWidth = 182 |cHeight = 60 |oTop = 390 |oLeft = 238 |Location = right |Description = }}}} {{c|✽ ✽ ✽ ✽}}<noinclude></noinclude> 5d8jkg0ovlqcikxue4v7fv0lvg4asgv பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1944188 1943785 2026-06-09T16:31:24Z Desappan sathiyamoorthy 14764 1944188 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 {{Multicol-end}} tmg50rbk0n5f19taaxljuq4fhwgc5u3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/111 250 644947 1944208 1939903 2026-06-09T17:16:45Z Fathima Shaila 6101 /* Problematic */ 1944208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> அறச்சாலை தி. மு. க. மீது தாக்குதல் - காட்கில்லின் "மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும். தம்பி, சிறைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude> ay0rqv3rom0fr8rkc34ac93qjx46t7o 1944229 1944208 2026-06-09T17:51:25Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> <b>{{Right|கடிதம் : 52}} {{center|{{x-larger|அறச்சாலை}}}} {{left_margin|3em|<poem>தி. மு. க. மீது தாக்குதல் - காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும்.</poem>}} தம்பி,</b> {{X-larger|சி}}றைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude> sqlz7ihurtrer67eb3n7rcs7obywib4 1944271 1944229 2026-06-09T23:48:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /></noinclude> <b>{{Right|கடிதம் : 52}} {{center|{{x-larger|அறச்சாலை}}}} {{left_margin|3em|<poem>தி. மு. க. மீது தாக்குதல் - காட்கில்லின் 'மராட்டியர்' உணர்ச்சி- தேவிகுளமும் பீர்மேடும் காமராஜரும்.</poem>}} தம்பி,</b> {{X-larger|சி}}றைச்சாலை காண அழைக்கிறேன், உன்னை! ஆரம்பமாகிவிட்டதா, அண்ணா, மாநில மாநாடு ஒரு கிழமை இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் செல்ல அழைப்பா! ஏனண்ணா, நான் என்ன சித்தம் சோர்ந்து விடுவேன் அல்லது ஏதேனும் தத்துவ விவாதம் நடத்தித் தப்பித்துக் கொள்ளுவேன் அல்லது விதிவிலக்கு அளிக்கும்படி கேட்பேன் என்று எண்ணிக்கொண்டனையோ! ஏளனம் பேசுவது அழகா! நான், என்ன, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற கவிதையை அறியாதவனா? வேடிக்கை கேள் அண்ணா! நான் இந்தக் கவிதையைச் சுவைத்துப் படித்த இடமே சிறைச்சாலை! எந்தச் சமயத்தில், கழகம் கட்டளையிட்டதும் களம் புகாதிருந்தேன்! தொட்டிற் குழந்தை என்று பிறர் கூறிய நிலையில் நமது கழகம் இருந்த நாட்களிலேயே, வடநாட்டு அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டி, திராவிடத்தின் 'மனக்கசப்பை' வடவர் அறிந்திடச் செய்ய வேண்டும் என்று திட்டம் தரப்பட்டதே, நானென்ன ஓடி ஒளிந்தேனா, ஒய்யாரம் பேசினேனா. தடியடி தந்தனர் - தழும்பு கிடைத்தது! சிறையில் தள்ளினர்-கஞ்சிக் கலயம் கிடைத்தது! நெஞ்சு சிறைக்கே அஞ்சும் நிலையில் இருக்குமாயின், நாம்<noinclude></noinclude> 3eah9nznnhbnk6tulekneda5n8lq0he பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/112 250 644948 1944209 1939577 2026-06-09T17:18:42Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற 'கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்' திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள், நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளையிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல - அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன் - என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா....<noinclude></noinclude> kdpeljgospj7vh11ylefwt0ea0ieumt 1944272 1944209 2026-06-09T23:52:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெற்றாக வேண்டிய திராவிடத்தைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் தீயர்கள் சித்திரவதை செய்து நம் சிந்தையைச் சிதைத்திடத் துணிவரே, அப்போது என்ன ஆகும்? அத்தகைய கோழை உள்ளம் படைத்தவனல்ல, உன் தம்பி! திட்டம் தயாராகட்டும், அறப்போர் நடைபெறட்டும், ஆணையை ஏற்றுச் சிறைபுகத் தயாராகத்தான் இருக்கிறேன்; நான் மட்டுமல்ல, எண்ணற்றவர்கள்! எண்ணற்றவர்கள்! சிறை செல்ல அழைப்பு வரும் என்பதை நான் எதிர்பார்த்தபடிதான் இருந்து வந்தேன். எனவே திடுக்கிட்டுப் போகவில்லை! மாநில மாநாடு மறவர்தம் படைவீடு! என்பதனை நான் அறிந்தவன். அங்கு நாம் கூடிப் பேசித் தீட்டப்போகும் திட்டம், ஆட்சியாளர்களின் உச்சி மோந்து மகிழ்வதா அல்லது உள்ளங்காலை முத்தமிட்டுக் களிப்படைவதா, எட்ட இருந்து கொண்டே கட்டிக்கரும்பே! என்று அழைப்பதா அல்லது செங்காயே கனியாயோ? செந்தேனாய் மாறாயோ? என்ற கொஞ்சுவதா, என்று வெட்கத்தால் முகம் சிவக்க, ஆவலால் உள்ளம் துடிக்கச் சிலர் தீட்டியது போன்ற 'கண் சிமிட்டிக் கை ஜாடை காட்டும்' திட்டம்போலவா இருந்திடும்! ஆட்சியாளர்கள், நமது நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர், பொது மக்களின் எழுச்சிக் குரலைத் துச்சமெனக் கருதுகின்றனர், நமது பிறப்புரிமையைப் பறித்துக்கொண்டவர்கள், நாம் பட்டிமாடுகளாகிக் கிடக்க வேண்டும் என்ற கட்டளையிடுகின்றனர் - இந்தக் கேடு களைந்திட, நம்நாடு நமதாக, நாம் எத்தகைய முறையில் செயலாற்ற வேண்டும், செயலாற்றுங்காலை நாம் எத்தகைய காணிக்கைகளைக் களத்திலே தந்தாக வேண்டும் - என்ற இன்ன பிற பற்றியன்றோ, எண்ணித் துணிந்திடக் கூடுகிறோம் - சிறை தன் அகன்ற வாயைத் திறந்து நம்மை விழுங்கிடத்தானே செய்யும்! இவை அறியாதவனல்ல - அறிந்தே, மாநில மாநாட்டுக்கு வந்திருந்து, என் பங்கினைச் செலுத்திட நான், முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு, மற்ற நண்பர்கள் அதுபோன்றே ஆவலுடனும் ஆர்வத்துடனும், கடமை உணர்ச்சியுடனும் அஃதளிக்கும் களிப்புடனும் புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது கண்டு பூரித்து நிற்கிறேன் - என்னை அறிந்திருந்தும், என் பணியின் தன்மை தெரிந்திருந்தும், என் உள்ளத்தில் மூண்டெழுந்துள்ள நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரிவது தெரிந்திருந்தும், அண்ணா! ஏளனம் செய்வது போல, சிறைச்சாலை செல்வோம் வா, தம்பி! என்று கூறுகிறாயே, சரியா, முறையா....<noinclude></noinclude> st6us11zr9i5kyp6ckfgxqoka4rbzyh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/113 250 644949 1944210 1939578 2026-06-09T17:20:43Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>103}}{{rule}}</noinclude> தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை 'திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண! காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே கக்குகிறார், செல்லுமிடமெல்லாம். கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார். காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது - எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்! பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான 'சேவை' செய்ய முடிகிறது அவரால்!! அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான 'சாடி' கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார். ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, 'பக்கத்துக்குப் பக்கம்', முதலமைச்சரின் 'அடாணா' வாகவே இருக்கிறது! தி. மு. க. மீது கண்டனம் தி. மு. க.வுக்கு எச்சரிக்கை தி. மு. க. ஒரு குழப்பக் கட்சி தி. மு. க.வை ஒழித்துக்கட்ட வேண்டும். என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் - காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது 'தாக்குதலை' நடத்திய வண்ணம் இருக்கிறார்.<noinclude></noinclude> i5q9ipg0c2sptmzb5p29ifsihh9kcuc 1944273 1944210 2026-06-09T23:55:10Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>103}}{{rule}}</noinclude> தம்பி! மளமளவென்று நீ, இவ்விதமாகத்தான் பேசுவாய் என்பது தெரியும் எனக்கு. சென்ற கிழமை நான் உன்னை 'திருமணம்' காண அழைத்தேன் - இந்தக் கிழமை சிறை காண அழைக்கிறேன், சிந்தனைச் சிறகடித்துச் செல்வதற்குத்தான். உண்மையாகவே சிறை செல்லும் கட்டம் பிறக்கும்போது, நீண்ட கடிதமா தேவை! கழகத்தின் தீர்மானம் போதாதா! அதை நான் அறியேனா? சிறையிலே நீ, சித்தம் கலங்காது சிங்கமென உலவியதைக் கண்டு களித்தவனல்லவா உன் அண்ணன். இப்போது உன்னை அழைப்பது, சிறைக் காட்சியைக் காண! காமராஜர் கடுங்கோபம் கொண்டு கனலே கக்குகிறார், செல்லுமிடமெல்லாம். கனல் கக்கவே, பல இடங்கட்குச் செல்லுகிறார். காரணம், அவர், தமிழகத்தின் அரசியலில், எப்பக்கம் திரும்பினாலும், வாழ்த்தும் வரவேற்வும், பாராட்டுதலும் உறவாடலும் காண்கிறார் - நமது முகாமில் முழக்கம் கேட்கிறது - எனவே அவருக்கு முகம் கடுகடுப்பாகி விடுகிறது - புருவத்தை நெரிக்கிறார் - கனலைக் கக்குகிறார்! பாவம், அதையேனும் செய்யட்டும்! வேறு என்ன, பிரமாதமான 'சேவை' செய்ய முடிகிறது அவரால்!! அவரிடம் தம்பி, குறிப்பாக என்னைப் பற்றியும், பொதுவாக நமது கழகப் பேச்சாளர் குறித்தும் பலர் பல்வேறு விதமான 'சாடி' கூறி அவரைச் சல்லடம் கட்டச் சொல்லிச் சிலம்பு போடுகிறார்களாம் - அவரும் ஆவேசம் கொண்டு விட்டார். ஒவ்வோர் நாளும், பத்திரிகையிலே, 'பக்கத்துக்குப் பக்கம்', முதலமைச்சரின் 'அடாணா' வாகவே இருக்கிறது! தி. மு. க. மீது கண்டனம் தி. மு. க.வுக்கு எச்சரிக்கை தி. மு. க. ஒரு குழப்பக் கட்சி தி. மு. க.வை ஒழித்துக்கட்ட வேண்டும். என்று தலைப்புகள் கொடுத்துக் கொடுத்து, இதழாசிரியர்களே சற்று அலுத்துவிட்டிருக்கிறார்கள் - காமராஜர், அலுக்காமல் சளைக்காமல், தி. மு. க. மீது 'தாக்குதலை' நடத்திய வண்ணம் இருக்கிறார்.<noinclude></noinclude> l4kfc1ko9u4dfpzqjvg78sfgeeu4jvy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/114 250 644950 1944211 1939579 2026-06-09T17:21:57Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப்படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது. ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்! அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை! அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக! என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம். அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி! அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்! வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்! பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், 'பழுத்த ஓலை' ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது. எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை! குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது. சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் 'இருப்பு'க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும்<noinclude></noinclude> nurnpbzwblvlfz23wat8b5azouke2tz 1944274 1944211 2026-06-09T23:58:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போகிற போக்கைப் பார்த்தால், தம்பி, அதிக நாட்களுக்கு, அவர், நம்மை வெளியே விட்டுவைக்க மாட்டார் போலத் தெரிகிறது. எனவே, சிறைச்சாலைக்குள் எந்த நேரத்திலும் நாம் தள்ளப்படக்கூடும்! அதிலும் மாநில மாநாடு, நமக்கு நல்லதோர் செயல் திட்டம் தருகிறது என்றால், நாம் மாநில மாநாட்டின் வனப்புப் பற்றியும் சிறப்புக் குறித்தும் பேசி மகிழ வேண்டிய இடமே சிறைச்சாலையாகத்தான் இருக்கும்! சூழ்நிலை, அவ்விதம் உருவாகிக்கொண்டு வருகிறது. ஆனால், தம்பி, நான் இப்போது உன்னை சிறை காண அழைக்கிறேன்! அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை! அடக்குமுறை ஆட்சி அடியோடு ஒழிக! என்று முழக்கமிட்டுக்கொண்டு கருப்புக்கொடி காட்டவோ, மறியல் நடத்தவோ, வரி கொடாதீர்கள் என்று மக்களைக் கிளப்பி விடவோ, வடநாட்டுச் சாமான்களைக் கொளுத்துங்கள் என்று இயக்கம் நடத்தவோ புறப்பட்டு விடாதே - என்னோடு புறப்பட்டு வா, ஒரு சிறைக் காட்சியைக் காண்போம். அதோ பார், தம்பி, ஓர் மூதாட்டி! அந்தக் கண்களிலே கவனித்தாயா, ஓர் புத்தொளி பூத்திடுவதை! என்ன ஆவல்! எத்துணை ஆர்வம்! வழிமேலே விழிவைத்து நிற்கிற நிலையைப் பார்! பட்டமரம் துளிர்த்திடும் என்கிறார்களல்லவா, பழமொழி! இதோ பார், 'பழுத்த ஓலை' ஓர் புத்தம் புது இளமை எழில் பெறுகிறது. எதையோ, மிகமிக ஆவலாக எதிர்பார்க்கிறார் இந்த அம்மை! குதூகலம் கொந்தளிக்கிறது மனதில் - முகம், அகத்திலே ததும்பும் அந்த ஆனந்தத்தைக் காட்டுகிறது. சற்றுத் தொலைவிலே ஓர் காலடிச் சத்தம்! இங்கே அந்த அம்மையால் 'இருப்பு'க்கொள்ள முடியவில்லை! நீர் துளிர்க்கிறது கண்களில் - நிழலுருவம் கண்டதும்<noinclude></noinclude> kay31pmqpq5iqcdyu3j993rgv3ptzd8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/115 250 644951 1944212 1939580 2026-06-09T17:23:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>105}}{{rule}}</noinclude> மகளே,.... அம்மா,.... வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த 'மாதரசி' மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள். மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம். காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை. சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்! ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் - என்று தாய், தலையிலடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது. “அம்மா!” என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது. “மகளே!” என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது. சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்! மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்! ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது!<noinclude></noinclude> qhn5kh1279hat3hquxlb09ck8ct935r 1944275 1944212 2026-06-10T00:01:19Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>105}}{{rule}}</noinclude> மகளே,.... அம்மா,.... வாடி, என் அருமை மகளே! வந்தேன் அம்மா, இதோ. புரிகிறதா, தம்பி, இந்தப் புதுமைக் காட்சி. தாயும் மகளும்!! சிறைச்சாலையில் சந்திக்கிறார்கள். மகளைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியால்தான் அந்த 'மாதரசி' மலர்ந்த முகமும், நீர் துளிர்க்கும் கண்களும் கொண்ட நிலையில் காட்சி தந்தார்கள். மகளைத் தழுவிக்கொண்டு முத்தமிடத் தாய் ஓட, தாயின் தாளைத் தொட்டுக் கும்பிட அந்தத் தையல் ஓடி வர காண்கிறோம் நாம். காணக் கிடைக்காத காட்சியடா தம்பி, இது! கண்டோர் என்றென்றும் மறந்திட முடியாது, இந்தக் காட்சியினை. சிறையிலே சந்திப்பு - தாயும் மகளும்! ஐயோ! அம்மா! உனக்கு இந்தக் கதி வந்ததே - என்று மகள் கதற, என் விதி! என் வினை! என்ன செய்யலாமடி மகளே! நீ, பெற்றெடுக்கும் செல்வத்தைத் தூக்கி வளர்த்து மகிழ்ந்திடவும் கொடுத்து வைக்காத பாவியானேன் - என்று தாய், தலையிலடித்துக் கொண்டு அழ, சிறைக் காவலாட்கள், சரி! சரி! நேரமாகிவிட்டது! கிளம்பு! கிளம்பு! என்று உத்தரவு பிறப்பிக்க- இத்தகைய காட்சி அல்ல இது. “அம்மா!” என்ற தாயின் குரலில் ஓர் மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒலிக்கிறது. “மகளே!” என்ற தாயின் குரலில் பாசமும் வெற்றி இன்பமும் கேட்கிறது. சிறைப்பட்ட தாயுடன் சேர்ந்து சிறையில் இருக்க வருகிறாள் மகள்! மகளும் என்னுடன் சிறையில்! - என்று மகிழ்ந்து பேசும் நிலையில், தாய்! ஒப்பற்றதோர் காட்சியன்றோ இது!<noinclude></noinclude> apt3gz0ovn4ahe20esedhbkwk1235yy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/116 250 644952 1944213 1939581 2026-06-09T17:25:55Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை - என்று தாய் கூற - என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம். காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்! அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்! காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்! தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதறிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார். மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது, இக் காட்சியினைக் காணத் தருகிறது. காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, அறப்போர் நடத்திச் சிறைப்பட்டுள்ளனர். மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்! எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய<noinclude></noinclude> 0ub111mh17y64pm1253jh44c6alx6oc 1944276 1944213 2026-06-10T00:04:23Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பெற்றேன், என் பெருமையைப் பெரிதாக்கும் பண்புள்ள மகளை - என்று தாய் கூற - என் தாயின் உதிரம் எத்தகையது என்பதை என்னைக் கண்டு உணருமின் என்று மகள் கூற தாயும் மகளும் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்ட, இவரிருவரும் என் மக்கள்! இது போன்ற வீரப்புதல்வியரும் வீரப்புதல்வர்களும் ஏராளம் ஏராளம்! - என்று மராட்டிய மாதா மகிழ, இதென்ன எழுச்சி! ஈடில்லா எழுச்சியாகவன்றோ இருக்கிறது - என்று எதேச்சாதிகாரி கூட எண்ணித் திகைத்திட - காட்சி ஒன்று காண்கிறோம். காட்கில் பெற்றெடுத்த பொற்கொடி, அந்த மங்கை நல்லாள்! அவரைக் கணவராகக் கொண்டவர், அந்தத் தாய்! காட்கிலின் துணைவியாரும், மகளும், ஒரு சேரச் சிறையிலே உள்ளனர்! தாய், முன் நடந்து வழி காட்டுவது போல, முதறிற் சிறைப்பட்டார்கள். என் அன்னையைச் சிறையிலே தள்ளி விட்டால், அறப்போர் பட்டுவிடுமோ, அறிவிலிகாள்! இதோ, மகள் நானிருக்கிறேன், மாதா விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து பணியாற்ற என்று கூறுவதுபோல மகளும், சிறைக்கோட்டம் புகுந்தார். மராட்டியமே! உன் மண்ணின் வளமே வளம்! மாவீரன் சிவாஜி ஊட்டிச் சென்ற வீரம், இத்தனை தலைமுறைகளுக்குப் பிறகும், எத்துணையோ இன்னல் இடர்ப்பாடு இழிநிலை ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகும், கருகாமலிருக்கிறது, இக் காட்சியினைக் காணத் தருகிறது. காட்கிலின் துணைவியாரும் திருமகளாரும், தாயகத்துக்க வந்துற்ற கேட்டினை நீக்கிட, அறப்போர் நடத்திச் சிறைப்பட்டுள்ளனர். மராட்டியம், எவ்வளவு பூரிப்படையும்! எனக்கா தளைகள்? ஏமாளிகளே, என்னையா அக்கிரமத் திட்டம் கொண்டு தாக்கத் துணிந்தீர்கள்! அதோ காணீர், என் கண்ணின் மணிகளை! வீராங்கனைகளை!! தாயும் மகளும்!! சிறையில் இருவரும்!! என் பொருட்டு, என்மீது வீசப்பட்டுள்ள வஞ்சக வலையை அறுத்தெரிய, வன்கணாளர் பூட்டிய<noinclude></noinclude> 5gzhrimih70vx7pywonzkxwybw2xi6j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/117 250 644953 1944215 1939582 2026-06-09T17:30:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>107}}{{rule}}</noinclude>தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்! கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா? காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர். கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில். காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் - ஆற்றல் மிக்கவர். அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர். மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர். ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர். இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும். வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம் - எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர். ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது. காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.<noinclude>{{rh|20 த.அ.க||}}</noinclude> rgz75zbikqx7bft635fsrm20lwloum7 1944277 1944215 2026-06-10T00:07:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>107}}{{rule}}</noinclude>தளைகளை நொறுக்கிட, தாயும் மகளும் சேர்ந்து சிறையில் புகுந்துள்ளனர். என்று கூறிப் பெருமை கொள்கிறது மராட்டியம்! மராட்டிய மண்டலத்து மனைதொறும் மனைதொறும், தாயுடன் மகளும் சிறைபுக மாகாதையையன்றோ பேசிப் பேசி மகிழ்வர்! கோழையும் வீரனாகாமலிருக்க முடியுமா? காட்கில் காங்கிரஸ்காரர் - இன்னமும் காங்கிரசிலேதான் உறுப்பினர். கொடி தூக்கியாக மட்டுமல்ல, கோலோச்சும் நிலைமையும் பெற்றிருந்தவர், காட்கில். காட்கில், டில்லியில் அமைச்சராகப் பணியாற்றியவர் - ஆற்றல் மிக்கவர். அவர் ஓர் காங்கிரஸ்காரர் - ஆனால், தானோர் மராட்டியர் என்பதை மறக்க மறுக்கும் பண்பாளர். மராட்டியர் என்ற உணர்வு இருக்கிற காரணத்தால், மற்றையோர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மமதைக் கொள்கை கொண்டவரோ எனின், இல்லை, இல்லை. மராட்டியர் யாருக்கும் மண்டியிட மாட்டார், யாரும் அவர் முன் மண்டியிட்டுத் தாழ்ந்திடத் தேவையுமில்லை என்ற மாண்புமிகு நோக்கம் கொண்ட நேர்மையாளர். ஆளமட்டுமே காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட சேதுபதியோ என்று எண்ணிடாதே தம்பி, காட்கில், காங்கிரஸ் நடாத்திய கடும் போர்களில் ஈடுபட்டவர். இப்போதும் அவர் டில்லி தேவதைகளைத் தொழுதால் கேட்கும் வரம் பெற முடியும். வீரம், தீரம், அறிவு, ஆற்றல், சேவை, தியாகம் - எல்லாவற்றிலும் அவர் காமராஜர்களைக் காட்டிலும் பன்மடங்கு மேலானவர். ஆனால் காமராஜரால் ஆட்சியின் முதல்வராகத் திகழமுடிகிறது. காட்கிலோ, மகளையும், துணைவியாரையும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.<noinclude>{{rh|20 த.அ.க||}}</noinclude> k0mrtjqhinwnk76qevcksespszoo41y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/118 250 644954 1944216 1939583 2026-06-09T17:31:46Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் - காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் - குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் - காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்! அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார். அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள். காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி! இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம். மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்! அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஒர்<noinclude></noinclude> 4or3obm9kgn9k7d4g27dsl9enefnzq1 1944278 1944216 2026-06-10T00:10:32Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காரணம், காட்கில் காமராஜராக மறுக்கிறார் - காங்கிரஸ்காரர் என்பதற்காக, தாயகத்துக்குக் கேடு செய்வோரைச் சளைக்காமல் சாடுகிறார் - குகைக்குள்ளே இருந்தபடியே சிங்கத்தின் பிடரியைப் பிடித்தாட்டுவது ஒன்று உண்டு - காட்கில்தான் அந்தப் பேச்சுக்குப் பொருள் கிடைக்கச் செய்தவர் - காங்கிரசில் இருந்து கொண்டே, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் நடாத்தும் காதகத் திட்டத்தைக் கண்டிக்கிறார்! அவர், உள்ளே இருந்துகொண்டு போராடுகிறார். அவர் துணைவியாரும் திருமகளாரும், அறப்போர்க் களம் புகுந்து போராடி, சிறையில் வதிகிறார்கள். காவியம் புனையலாம், ஓவியம் தீட்டலாம், காணற்கரிய இக்காட்சி பற்றி - தாயும் மகளும் தாயக மானம் காக்க அறப்போரில் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றது பற்றி! இத்துணை எழுச்சி தரும் இச் சம்பவம், எதன் பொருட்டு? பம்பாய் நகரம் மராட்டியருக்கே சொந்தம்; அதனை மராட்டிய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்; வேறு வகையான ஏற்பாடுகள் எதனையும் மராட்டியம் ஏற்காது - என்ற நோக்கமே அறப்போருக்குக் காரணம். மராட்டிய மொழி பேசுவோர் உள்ள பகுதிகள் ஒரே இராஜ்யமாக்கப்பட்டு மராட்டிய மண்டலம் உருவாகிறது; அதிலே பம்பாய் இல்லை! இதற்கு, தாயும் மகளும் ஒரு சேரச் சிறை புகும் வீரச் சம்பவம் கொண்டதோர் அறப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயோ, காமராஜர் கேட்கிறார், தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தால் என்ன? அவை எங்கோ போயா விட்டன? நம்மிடம் இருந்தாலென்ன, மலையாள இராஜ்யத்தோடு இருந்தாலென்ன? என்று அறிவுரை கூறுகிறார்! அந்தோ! திராவிடமே!! - என்று அலறித் துடித்து அழுவதா அல்லது ஐயா! அதிமேதாவியாரே! தேவிகுளமும் பீர்மேடும் எங்கே இருந்தாலென்ன என்று பேசுகிறீரே, காட்கில் குடும்பம், பம்பாய் எங்கிருந்தால் என்ன என்றா பேசுகிறது? மராட்டியருக்குச் சொந்தமான பம்பாயை, மராட்டியரிடம்தான் தர வேண்டும் என்று வாதாட காட்கிலும், போராடிச் சிறைபுக அவர் துணைவியாரும் மகளாரும் முன்வந்துள்ளனரே அறியீரா? என்று கேட்பதா, மேடாவது குளமாவது என்று பேசிடும் ஒர்<noinclude></noinclude> jgdq8ikm1dh0rhn17wz6ejhupqsd4ga பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/119 250 644955 1944217 1939584 2026-06-09T17:34:57Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>109}}{{rule}}</noinclude>மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை! வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, - அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார். அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ?- என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா? தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் - இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை 'உள்ளே' அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது. மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை - மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள். காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா? சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென்றாலும் துயரமில்லையாம்! இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது. சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது.<noinclude></noinclude> dpb5i22xf6uk8vu91n47ugf3l6pjmym 1944279 1944217 2026-06-10T00:13:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>109}}{{rule}}</noinclude>மேதையை முதலமைச்சராகக் கொண்டோமே, நமக்கு இதுவும் வேண்டும் இதனினும் கொடியதும் வேண்டும் என்று நம்மை நாமே நொந்து கொள்வதா? என்ன செய்வதென்றே தெரியவில்லை! வீர மராட்டியமே! ஒரு காலத்தில், கொடி கட்டி ஆண்டோம்! கொற்றம் மாற்றாருக்கு ஈட்டியாக, உற்றாருக்குக் கேடயமாக இருந்து வந்தது! எமது புகழ் எங்கும் பரவிற்று! இன்று, எமக்கோர் காட்கில் இல்லை, - அம்மட்டோ! - எமக்கோர் காமராஜர் இருக்கிறார். அவருக்கு தேவிகுளம் போனாலும் பீர்மேடு போனாலும் கவலை எழாது, பதவிக்குத் துளி ஆட்டம் என்று தெரிந்தாலோ, தேசியக் கவலை - தேசியத் திகில் - கிளம்பி விடும் - மராட்டியமே! உன் மலைகளிலே தவழ்ந்து, மனைகளிலே புகுந்து மக்களை மாவீரராக்கும் வீரத்தை, உனக்குப் பயன்பட்டது போக, மீதி இருப்பதில், ஒரு துளியை, எமது மாகாண முதலமைச்சருக்கு அன்பளிப்பாக அளிக்கவல்லாயோ?- என்றெல்லாம் கேட்டிடத் தோன்றுகிறதல்லவா? தம்பி! புனா, பம்பாய், ஷோலாப்பூர் - இங்கெல்லாம் சிறையில், மராட்டிய அறப்போர் வீரர்கள் அரசோச்சுகிறார்கள். அவர்களை 'உள்ளே' அனுப்பிய ஆட்சியாளர்களை அச்சம் ஆட்டிப் படைக்கிறது. மராட்டியத்துக்குப் பம்பாய் கிடைத்தாக வேண்டும் என்பதற்காக, மராட்டியத்திலே மட்டும் அறப்போர் நடைபெறவில்லை - மராட்டிய மாவீரர்கள், டில்லி சென்று இதற்காக அறப்போர் நடத்துகிறார்கள் - சிறைப்படுகிறார்கள். காமராஜரோ, டில்லி சென்று தேவிகுளம் இல்லையா? சரி! பீர்மேடும் இல்லையா? சரி! சரி! செங்கோட்டையில் பாதி வேண்டுமா? சரி! சரி! சரி!-என்று கூறிவிட்டு வருகிறார். காரணம் என்ன தெரியுமா, தம்பி, அவர் கூறுவது? தேசியம் அவருக்கு அவ்வளவு ததும்பி வழிகிறதாம்!! அதனால் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாமாம். தமிழரின் உடைமை எது போனாலும் கவலையில்லையாம். உரிமை யாவும் டில்லிக்குப் போயிற்றென்றாலும் துயரமில்லையாம்! இப்படி, டில்லி, ஒவ்வோர் வகையான அநீதி இழைக்கும் போதும், காமராஜர் ஆவலோடு, ஒரு உத்தரவாதம் கேட்டுக் கொள்வார் போல இருக்கிறது. சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது.<noinclude></noinclude> mzu6sl6graqnhyrmmnb0sbpjlh3g2ee பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/120 250 644956 1944218 1939585 2026-06-09T17:37:19Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது. அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் - அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! - என்று அவரால் பேச முடிகிறது. வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம். சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன! வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது - அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் 'விடுதலை' பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம். பீகாரும் - வங்கமும் இணைகிறது - என்றார், வங்க முதலமைச்சர்! இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில்<noinclude></noinclude> nkhesatl6f1t34a9v60cpsf0yuup03v 1944280 1944218 2026-06-10T00:16:41Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சரி! தேவிகுளம் தந்து விடுகிறேன், செங்கோட்டையும் கொடுத்துவிடுகிறேன். முதலமைச்சர் வேலை, என்னிடம்தானே? அதற்கு என்றும் ஆபத்து இல்லையே? - என்று கேட்டு, உத்தரவாதம் பெற்றுக்கொள்வார் போல இருக்கிறது. அதனால்தான், உரிமை பறி போகும் போது, உடைமை கொள்ளைபோகும் போது, மக்கள் கோரிக்கை மண்ணாக்கப் படும்போது, சட்டசபைத் தீர்மானம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும்போது, சென்னை காங்கிரஸ் கமிட்டியின் முகத்தில் கரி பூசப்படும்போது - எத்தகைய இழிவு நேரிடும் போதும் - அதனாலென்ன? போனாலென்ன? குளமாவது மேடாவது! - என்று அவரால் பேச முடிகிறது. வங்கம் செல்வோம் தம்பி! எங்கள் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறிக் காங்கிரஸ்காரர்கள் பூரிப்பது வழக்கமல்லவா, முன்பெல்லாம் - அந்தப் போஸ் ஜெனித்த தங்கத் தரணி செல்வோம். சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன! வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது - அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது. பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் 'விடுதலை' பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம். பீகாரும் - வங்கமும் இணைகிறது - என்றார், வங்க முதலமைச்சர்! இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில்<noinclude></noinclude> fbj320wyjp6l4bt3awwbb1deyj4uzga பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/121 250 644957 1944219 1939586 2026-06-09T17:38:52Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>111}}{{rule}}</noinclude>தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடிகுண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த 'தர்மவான்' எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? - என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்! பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும். பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் - பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன. ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் - காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை. இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, 'விஷப்பரீட்சை'யாகி விட்டது. யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று<noinclude></noinclude> r7od38i6r48ltaewdlzev2lzz6qbabx 1944281 1944219 2026-06-10T00:19:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>111}}{{rule}}</noinclude>தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடிகுண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த 'தர்மவான்' எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? - என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்! பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும். பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் - பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன. ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் - காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை. இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, 'விஷப்பரீட்சை'யாகி விட்டது. யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று<noinclude></noinclude> h6ipzuxd73eq8cb4xou1ol0pb0v4ow1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/122 250 644958 1944220 1939587 2026-06-09T17:40:14Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்! இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! - என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!! எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம். இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் - அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர் என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார். 'ஓட்டு' இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு? "தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா? எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா? தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா?<noinclude></noinclude> amqumw9qnk6hdq7af2ft0vbwo5uqj9n 1944282 1944220 2026-06-10T00:22:50Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்! இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! - என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!! எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம். இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், 'தமிழ்நாடு' என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் - அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர் என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார். 'ஓட்டு' இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு? "தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா? எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா? தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா?<noinclude></noinclude> 96dtwx5oj4zps7bprhwbvmyvseuito4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/123 250 644959 1944221 1939588 2026-06-09T17:42:14Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>113}}{{rule}}</noinclude> அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா? செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக 'ஓட்' அளித்தனர். தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், 'கனம்' ஆகிக் காலந்தள்ளும் 'கண்ராவி'க் காட்சி காணவா 'ஓட்' அளித்தனர்? தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா 'ஓட்' அளித்தனர்? தமிழருக்குரிய 'நிலத்தை' இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா 'ஓட்' அளித்தனர்? தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில். இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி. இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம்<noinclude></noinclude> nlm4tji4i2cm57z6j7uvn6tsl8y4k9j 1944284 1944221 2026-06-10T00:25:55Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>113}}{{rule}}</noinclude> அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா? செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக 'ஓட்' அளித்தனர். தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், 'கனம்' ஆகிக் காலந்தள்ளும் 'கண்ராவி'க் காட்சி காணவா 'ஓட்' அளித்தனர்? தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா 'ஓட்' அளித்தனர்? தமிழருக்குரிய 'நிலத்தை' இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா 'ஓட்' அளித்தனர்? தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில். இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி. இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம்<noinclude></noinclude> kl1pr74lijylrjy67r3h3qvs9usn6a2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/124 250 644960 1944223 1939589 2026-06-09T17:43:22Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி - உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா...?.... இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் - அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் - என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது, அவர்கள் எனக்குத் 'தைரியம்' ஊட்டுகிறார்கள். திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று. பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு - இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்.<noinclude></noinclude> eutigmz7tsz2wsku9flc0c5kr135926 1944286 1944223 2026-06-10T00:28:59Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி - உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா...?.... இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் - அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் - என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது, அவர்கள் எனக்குத் 'தைரியம்' ஊட்டுகிறார்கள். திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று. பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு - இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்.<noinclude></noinclude> 33srf9gf8dsu8myb8aj7axsgyz7l62g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/125 250 644961 1944224 1939590 2026-06-09T17:45:06Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>115}}{{rule}}</noinclude> லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தாலல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி - கண்ணபிரான் கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான். ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார். விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும், கொண்டுவந்து குவிக்கிறேன் - என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன். எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், 'உண்டி'ப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா - இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் “பாகமுறை” என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர்.<noinclude></noinclude> 9mm3wk82uewj49rewo56mxenydti8g0 1944288 1944224 2026-06-10T00:32:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>115}}{{rule}}</noinclude> லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தாலல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி - கண்ணபிரான் கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான். ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார். விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும், கொண்டுவந்து குவிக்கிறேன் - என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன். எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், 'உண்டி'ப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா - இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் “பாகமுறை” என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர்.<noinclude></noinclude> gyxmzbesaos4y5vjwr8n3ewh77vsmfy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/126 250 644962 1944225 1939591 2026-06-09T17:46:21Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா? ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும். அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும். இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள 'கம்பம்' தனில் காணக் கிடைக்கும். இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் - எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்! வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி,<noinclude></noinclude> m9c7f3kajeevo1ek8ax9cl5ts8lfrr8 1944291 1944225 2026-06-10T00:35:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா? ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும். அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும். இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள 'கம்பம்' தனில் காணக் கிடைக்கும். இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் - எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்! வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி,<noinclude></noinclude> 3j2u9993ejjrl7fzq2e9z7ws43t06az பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/127 250 644963 1944226 1939592 2026-06-09T17:47:34Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>117}}{{rule}}</noinclude>கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட! ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் - அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள். அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்! போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும் - மாநில மாநாட்டு வெற்றி மூலம். அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு. நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா;<noinclude></noinclude> 1xs8h5kftzjmufou689r5lj26zzr5ym 1944294 1944226 2026-06-10T00:38:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 4||</b>117}}{{rule}}</noinclude>கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட! ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் - அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள். அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்! போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும் - மாநில மாநாட்டு வெற்றி மூலம். அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு. நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா;<noinclude></noinclude> 8wrpinlmbc9zutx9peeyma9llvltfdc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/128 250 644964 1944227 1939593 2026-06-09T17:48:48Z Fathima Shaila 6101 /* Problematic */ 1944227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி {{left_margin|3em|<poem>வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!!</poem>}} என்ற பண் பாடிட வாராய். அன்பன்,<noinclude></noinclude> dxy62e8a45hdy65g2h6mh7hp3yf50hj 1944230 1944227 2026-06-09T17:53:08Z Fathima Shaila 6101 /* Proofread */ 1944230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி {{left_margin|3em|<poem>வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!!</poem>}} என்ற பண் பாடிட வாராய். வா {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 13-5-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> cu4phidojequ2201pwrjfay8hd9t1y8 1944298 1944230 2026-06-10T00:41:18Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>'மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி {{left_margin|3em|<poem>வாழ்க! வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்க! வாழ்கவே!!</poem>}} என்ற பண் பாடிட வாராய். வா {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 13-5-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 29jn7rl3bisohqrydlb035r384omxkr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/154 250 644990 1944326 1940477 2026-06-10T01:40:51Z Info-farmer 232 1944326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேடிக்கைக்காக மன்னன் ‘எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே, "ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!" என்று கூவிற்றாம். செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை. {{left_margin|3em|எனக்குப் பயந்து எடுத்தான் ஓட்டம் இதோ ஒரு ராஜா!}} என்று பாடிற்றாம். போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் - குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை! "குருவியைக் கொல்ல வருகிற ராஜா பறந்து வா, பார்ப்போம்!" என்று சவால் விட்டதாம்! மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை. "எனக்குப் பயந்து ஓடிப் போனான் ஏமாந்த ராஜா" என்று கூவிற்றாம். கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி<noinclude></noinclude> k4rqshtsm3zwhkgnr45zr62mmyfi5r3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/175 250 645011 1944332 1941431 2026-06-10T01:56:00Z Info-farmer 232 <poem> 1944332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|<b>தொகுதி 4||</b>165}}{{rule}}</noinclude> கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது. மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஓடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் வகை, அதைப் பாராட்டிய புலவர், நல்கினும் நல்கானாயினும் 'காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க! போரில் வெல்லும் திறன் படைத்தவனம், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக! என்று பாடுகிறார். தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் - ஆயினென்! தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்! {{left_margin|3em|<poem>இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் போரருத் தித்தன் காண்கதில் அம்ம</poem>}}<noinclude></noinclude> h1a1xj3421wccbfwvs4x814qtkte8w4 1944333 1944332 2026-06-10T01:57:42Z Info-farmer 232 1944333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|<b>தொகுதி 4||</b>165}}{{rule}}</noinclude> கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது. மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஓடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் வகை, அதைப் பாராட்டிய புலவர், {{left_margin|3em|நல்கினும் நல்கானாயினும் 'காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க!}} போரில் வெல்லும் திறன் படைத்தவனம், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக! என்று பாடுகிறார். தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் - ஆயினென்! தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்! {{left_margin|3em|<poem>இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் போரருத் தித்தன் காண்கதில் அம்ம</poem>}}<noinclude></noinclude> j1pk5s5bssss0kal63yu01vzu3dan0x பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1944200 1942983 2026-06-09T16:49:25Z Sridevi Jayakumar 15329 1944200 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ he710stoqm5nxcb1wiqx21pze11b689 1944368 1944200 2026-06-10T03:54:28Z Sridevi Jayakumar 15329 1944368 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ pcms7quxzehcx3mk9al3x7ddcb69frw பயனர்:Bharathblesson/test 2 645148 1944557 1943847 2026-06-10T09:17:06Z Bharathblesson 15164 1944557 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80- {{Multicol-break}} {{Multicol-end}} i9so7s2ckcggysz8zy40d6q63ru9kfl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/540 250 645232 1944108 1942286 2026-06-09T14:22:58Z Leelasuresh37 16607 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூ.பை. 53 தீ பரவட்டும் - ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் - 17-50 54 ரோமபுரி ராணிகள் - 55 மாஜி கடவுள்கள் - 40 56 உலகப் பெரியார் காந்தி - 10-00 57 இன்பத் திராவிடம் - 13-50 58 குடியாட்சி கோமான் - 17-00 59 புன்னகை - 13-50 60 தேவ லீலைகள் - 9-00 61 ஆரியமாயை - 20-00 62 கம்பரசம் - 25-00 63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - 30-00 64 இலக்கியச் சோலை (இலக்கியம்) 10-00 65 முதல்வர் அண்ணா (சொற்பொழிவுகள்) 20-00 66 கைதி எண் 6342 (கடிதம்) 48-00 67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள் 68 நாட்டினரே நண்பர்களே 513196 031:49093 P2-4<noinclude></noinclude> bss9g92m9ex603pkkglouu8xegbpksg 1944109 1944108 2026-06-09T14:23:41Z Leelasuresh37 16607 1944109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூ.பை. 53 தீ பரவட்டும் - ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் - 17-50 54 ரோமபுரி ராணிகள் - 55 மாஜி கடவுள்கள் - 40-00 56 உலகப் பெரியார் காந்தி - 10-00 57 இன்பத் திராவிடம் - 13-50 58 குடியாட்சி கோமான் - 17-00 59 புன்னகை - 13-50 60 தேவ லீலைகள் - 9-00 61 ஆரியமாயை - 20-00 62 கம்பரசம் - 25-00 63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - 30-00 64 இலக்கியச் சோலை (இலக்கியம்) 10-00 65 முதல்வர் அண்ணா (சொற்பொழிவுகள்) 20-00 66 கைதி எண் 6342 (கடிதம்) 48-00 67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள் 68 நாட்டினரே நண்பர்களே 513196 031:49093 P2-4<noinclude></noinclude> hq1xyiu7sklq4vfy2esqq3miz4zyoog 1944110 1944109 2026-06-09T14:24:20Z Leelasuresh37 16607 1944110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூ.பை. 53 தீ பரவட்டும் - ஏ, தாழ்ந்த தமிழகமே! கட்டுரைகள் - 17-50 54 ரோமபுரி ராணிகள் - 55 மாஜி கடவுள்கள் - 40-00 56 உலகப் பெரியார் காந்தி - 10-00 57 இன்பத் திராவிடம் - 13-50 58 குடியாட்சி கோமான் - 17-00 59 புன்னகை - 13-50 60 தேவ லீலைகள் - 9-00 61 ஆரியமாயை - 20-00 62 கம்பரசம் - 25-00 63 அண்ணாவின் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - 30-00 64 இலக்கியச் சோலை (இலக்கியம்) 10-00 65 முதல்வர் அண்ணா (சொற்பொழிவுகள்) 20-00 66 கைதி எண் 6342 (கடிதம்) 48-00 67 அறிஞரைப் போற்றும் அறிஞர்கள் 68 நாட்டினரே நண்பர்களே 518196 031:49093 P2-4<noinclude></noinclude> p34m8jlkg9p2bs9q0x45hafzok65ezc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/537 250 645234 1944102 1942291 2026-06-09T14:01:10Z Leelasuresh37 16607 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude> டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்பெற்ற எழுத்தோவியங்கள் ரு. பை. டாக்டர் பேரறிஞர் அண்ணா 1. பேரறிஞர் அண்ணாவின் நாடகத் தொகுதி - 1 250 2 பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் 200 3 பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி 250 4 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 1 250 5 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரை தொகுதி - 2 200 6 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 1 250 7 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 2 250 8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 3 250 9 தும்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 250 10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 5 250 11 தம்பிக்கு அண்ணாவின் கட்தங்கள் தொகுதி - 6 250 12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 7 250 13 பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 14 ரங்கோன் ராதா (நாவல்) 50 15 பார்வதி பி.ஏ. (நாவல்) 50<noinclude></noinclude> tlg2fa7rjqv6ch9kw0ixeltggfyd1f4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/538 250 645235 1944103 1942290 2026-06-09T14:08:40Z Leelasuresh37 16607 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூபை. 16 சொர்க்கவாசல் நாடகம்! 40-00 17 இன்பொளி - 22-50 18 கட்டைவிரல் - 11-50 19 நீதிதேவன் மயக்கம் - 12-00 20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00 21 வேலைக்காரி - 20-00 22 யார் கேட்க முடியும்? - 13-50 23 ஆடிய பாதம் - 11-50 24 பாரதம் - 20:00 25 திரும்பிப்பார் - 10-25 26 துரோகி கப்லான் - 10-00 27 சந்திரோதயம் - 15-00 28 அல்லாடும் ஆண்டவன் - 12-90 29 ரோம் எரிகிறது - 10-00 30 பாவையின் பயணம் - 9-00 31 ஓர் இரவு - 20-00 32 காதல் ஜோதி - 34-00 3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00 34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00 35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude> 4nbmznokrqd64x80ixye0y1qqjfmhgh 1944104 1944103 2026-06-09T14:09:11Z Leelasuresh37 16607 1944104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூபை. 16 சொர்க்கவாசல் நாடகம்! 40-00 17 இன்பொளி - 22-50 18 கட்டைவிரல் - 11-50 19 நீதிதேவன் மயக்கம் - 12-00 20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00 21 வேலைக்காரி - 20-00 22 யார் கேட்க முடியும்? - 13-50 23 ஆடிய பாதம் - 11-50 24 பாரதம் - 20:00 25 திரும்பிப்பார் - 10-25 26 துரோகி கப்லான் - 10-00 27 சந்திரோதயம் - 15-00 28 அல்லாடும் ஆண்டவன் - 12-90 29 ரோம் எரிகிறது - 10-00 30 பாவையின் பயணம் - 9-00 31 ஓர் இரவு - 20-00 32 காதல் ஜோதி - 34-00 3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00 34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00 35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude> ks0u0rpz1kapqv5aba1k8upx9lv6a9j 1944107 1944104 2026-06-09T14:16:40Z Leelasuresh37 16607 1944107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>ரூபை. 16 சொர்க்கவாசல் (நாடகம்) 40-00 17 இன்பஒளி - 22-50 18 கட்டைவிரல் - 11-50 19 நீதிதேவன் மயக்கம் - 12-00 20 கண்ணாயிரத்தின் உலகம் - 16-00 21 வேலைக்காரி - 20-00 22 யார் கேட்க முடியும்? - 13-50 23 ஆடிய பாதம் - 11-50 24 பாரதம் - 20:00 25 திரும்பிப்பார் - 10-25 26 துரோகி கப்லான் - 10-00 27 சந்திரோதயம் - 15-00 28 அல்லாடும் ஆண்டவன் - 12-90 29 ரோம் எரிகிறது - 10-00 30 பாவையின் பயணம் - 9-00 31 ஓர் இரவு - 20-00 32 காதல் ஜோதி - 34-00 3 சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - 15-00 34 இரு பரம்பரைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 25-00 35 செவ்வாழை - 20-00<noinclude></noinclude> 1dgaqt4v0vo05stei47gp8mnskdrsn5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/539 250 645236 1944106 1942288 2026-06-09T14:15:00Z Leelasuresh37 16607 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /></noinclude>டாக்டர் பேரறிஞர் அண்ணா ரூ.பை. 36 மக்கள் தீர்ப்பு - 18-00 37 பவழபஸ்பம் - 17-50 38 அப்போதே சொன்னேன் - 12-50 39 வண்டிக்காரன் மகன் - 22-50 40 நீதிடதி வக்கீலானார் - 10-00 41 அறுவடை - 12-50 42 செங்கரும்பு - 12-50 43 மழை - 10-00 44 தசாவதாரம் - 20-00 45 கடைசிக்களவு (குறுநாவல்) 11-00 46 குமாஸ்தாவின் பெண் - 10-00 47என் வாழ்வு (நாவல்) 30-00 48 கன்னி விதவையான கதை (குறுநாவல்) 20-00 49 இரும்பு முள்வேலி - 40-00 50 பிடிசாம்பல் (வரலாற்று நவீனம்) 19-50 51 அரசாண்ட ஆண்டி - 13-50 52 கலிங்கராணி -<noinclude></noinclude> saem3u3p9s5t79vfr0y8tz7ndpdxg51 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/75 250 645266 1944507 1943460 2026-06-10T07:38:14Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண! <b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே. <b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . . {{Hanging indent|3em| மா: ஏண்டா! வீ: பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா. மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . . வீ: போனேனுங்க. . . . மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே! வீ: மாமாங்கம்ங்க. . . . . மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .! வீ: ஆமாங்க. . . . . மா: சுத்தமாவா இருந்தது? வீ: இல்லிங்க. . . . மா:அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . . வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . . மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?}}<noinclude></noinclude> h3vbkxl5ghhs11xfnnloz6ynpvr6usr 1944519 1944507 2026-06-10T07:58:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> மாடி வீடு; கூடம்! செல்வர் அங்கு; அவரை அண்டி, வாடிக்கையாக வேலை செய்திடும் வீராச்சாமி! செல்வர் பேர், மாசிலாமணி. இருவர் பேசும் நிலைதான் காட்சி. பேச்சோ கொச்சை, எனினும் காணக் கருத்துகள் புதியன பலவும் உண்டு. தம்பி! படிக்கலாம்! நடிக்கலாம்; பகுத்தறிவு காண! <b>மாசிலாமணி:</b> டே! வீராச்சாமி! ஏன், வேலைக்காரி, கண்ணைக் கசக்கிக்கொண்டு இருந்தா, உள்ளே. <b>வீராச்சாமி</b>: கொஞ்சம் திட்டிப்போட்டேனுங்க. . . . {{Hanging indent|3em| மா: ஏண்டா! வீ: பாருங்க எஜமான், நான் குளிக்கணும்னு தண்ணி எடுத்து வைத்தேன். அவ போயி, கையைக் கழுவினா அதிலே அவ கையிலே அழுக்கு, அதைப் போயி அதிலே கழுவி, குளிக்கிற தண்ணியையே அசுத்தப்படுத்திவிட்டா. மா: இதுக்காடா கோவிச்சிக்கிட்டே. அட மடப்பயலே! ஏண்டா! போன வருஷம் நீ, தஞ்சாவூர் போயிட்டு வர்ரேன்னு என்கிட்ட புளுகிட்டு, கும்பகோணம் போனேயேல்லோ. . . . வீ: போனேனுங்க. . . . மா: எதுக்குடா? பன்னீரிலேயா குளிச்சே! ஏண்டா! சேத்திலே தானேடா புரண்டுட்டு வந்தே, எருமைபோலே! வீ: மாமாங்கம்ங்க. . . . . மா: ஆமாங்க, மாமாங்கங்தானுங்க, ஆனா தண்ணி எப்படி இருந்தது, சேறுதானே. . . .! வீ: ஆமாங்க. . . . . மா: சுத்தமாவா இருந்தது? வீ: இல்லிங்க. . . . மா:அதைவிடவா, அவை கை கழுவின தண்ணி அசுத்தமாப் போச்சி. . . . வீ: அழுக்குக் கையைக் கழுவினாங்க. . . . மா: அட அறிவு கெட்டவனே! அவ, அழுக்குக் கையைக் கழுவினா, அதனாலே தண்ணி அசுத்தமாப் போச்சுன்னு சொல்லறயே, இந்தப் புத்தி அண்ணிக்கு எங்கேடா, போச்சு?}}<noinclude></noinclude> 47tslcfrvuav71dg52o2ufk1vftmi74 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/76 250 645267 1944134 1944033 2026-06-09T15:33:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|தொகுதி நான்கு||75}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: நான் மட்டும் இல்லிங்க. . . . ரொம்பப் பேரு. . . . மா: அவனை எல்லாம் நான் போயிக் கேட்கவா? நீ, ஏண்டா, புரண்டே அந்தச் சேத்திலே? வீ: தெரியாமெத்தான். . . . மா: ஆயிரமாயிரமா விழுந்திங்களே குளத்திலே, தண்ணியோ குறைச்சலு, அதிலே இவ்வளவு பேரும் போய் விழுந்தா, குழம்பிச் சேறாத்தானே போகும். . . வீ: ஆமாங்க. . . மா: குளிக்கப்போயிச் சேத்தைப் பூசிக்கொள்றவனுக்கு என்னடா பேரு. . . ? வீ: தெரியாதவன்னுதான் சொல்லணும். . . மா: நல்லா, பச்சையாத்தான் சொல்லேண்டா, மடப் பயலே! வேலைக்காரி கையைக் கழுவிட்டா, அந்த அழுக்கு, தண்ணியை அசுத்தப்படுத்திவிட்டதுன்னு சொல்லமட்டும் அறிவு இருக்கு. மகாமகம் கதை தெரியுமாடா உனக்கு. . . வீ: தெரியும்ங்க. பாவத்தைப் போக்கிக்க 12 வருடத்துக்கு ஒரு முறை போறது... மா: பழைய கணக்கைப் பைசல் செய்தூட்டு, புதுசா தயார் செய்றதுக்கு? ஏண்டா, அப்படித்தானே, அதைக் கேட்கலே, மகாமகத்துக் கதையைக் கேட்டேன். வீ: புண்யம் வருதுங்களாம், குளிச்சா. மா: புண்யம் வருவதும், வராததும் தெரியறதில்லை சரியா, ஆனா ஊர்லே கால்ரா வருது. அது தெரியுது விளக்கமா. . . எவனெவனோ என்னென்ன நோய் பிடித்தவ னெல்லாமோ, விழுந்து எழுந்திருக்கிறான் அந்தக் குளத்திலே அதிலே போய் குளிக்கிறதாம், அதுக்கு பேறு புண்யமாம், என்ன புத்திடா, டே!}} {{left_margin|3em|(ஒரு, ஊர்ப் பெரியவர் வந்து உட்காருகிறார்)}} {{left_margin|4em|("சதாசிவம்! சம்போ! மகா தேவா!'' என்று கூறிக் கொண்டு, கட்டுக் கட்டாக விபூதி; கையில் சில புத்தகங்கள். மாசிலாமணி அவரைப் பார்த்துவிட்டு; பிறகு வீராசாமியைப் பார்த்து. . .)}}<noinclude></noinclude> torv7odusbqj9v4txa0nzrj24wq0jh1 1944520 1944134 2026-06-10T07:59:11Z Santharabanu 15679 top space added 1944520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="04jayapriya" /> {{Rh|தொகுதி நான்கு||75}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: நான் மட்டும் இல்லிங்க. . . . ரொம்பப் பேரு. . . . மா: அவனை எல்லாம் நான் போயிக் கேட்கவா? நீ, ஏண்டா, புரண்டே அந்தச் சேத்திலே? வீ: தெரியாமெத்தான். . . . மா: ஆயிரமாயிரமா விழுந்திங்களே குளத்திலே, தண்ணியோ குறைச்சலு, அதிலே இவ்வளவு பேரும் போய் விழுந்தா, குழம்பிச் சேறாத்தானே போகும். . . வீ: ஆமாங்க. . . மா: குளிக்கப்போயிச் சேத்தைப் பூசிக்கொள்றவனுக்கு என்னடா பேரு. . . ? வீ: தெரியாதவன்னுதான் சொல்லணும். . . மா: நல்லா, பச்சையாத்தான் சொல்லேண்டா, மடப் பயலே! வேலைக்காரி கையைக் கழுவிட்டா, அந்த அழுக்கு, தண்ணியை அசுத்தப்படுத்திவிட்டதுன்னு சொல்லமட்டும் அறிவு இருக்கு. மகாமகம் கதை தெரியுமாடா உனக்கு. . . வீ: தெரியும்ங்க. பாவத்தைப் போக்கிக்க 12 வருடத்துக்கு ஒரு முறை போறது... மா: பழைய கணக்கைப் பைசல் செய்தூட்டு, புதுசா தயார் செய்றதுக்கு? ஏண்டா, அப்படித்தானே, அதைக் கேட்கலே, மகாமகத்துக் கதையைக் கேட்டேன். வீ: புண்யம் வருதுங்களாம், குளிச்சா. மா: புண்யம் வருவதும், வராததும் தெரியறதில்லை சரியா, ஆனா ஊர்லே கால்ரா வருது. அது தெரியுது விளக்கமா. . . எவனெவனோ என்னென்ன நோய் பிடித்தவ னெல்லாமோ, விழுந்து எழுந்திருக்கிறான் அந்தக் குளத்திலே அதிலே போய் குளிக்கிறதாம், அதுக்கு பேறு புண்யமாம், என்ன புத்திடா, டே!}} {{left_margin|3em|(ஒரு, ஊர்ப் பெரியவர் வந்து உட்காருகிறார்)}} {{left_margin|4em|("சதாசிவம்! சம்போ! மகா தேவா!'' என்று கூறிக் கொண்டு, கட்டுக் கட்டாக விபூதி; கையில் சில புத்தகங்கள். மாசிலாமணி அவரைப் பார்த்துவிட்டு; பிறகு வீராசாமியைப் பார்த்து. . .)}}<noinclude></noinclude> 2zm9pwvhjsl0gvgdcvh42xussp9019q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/77 250 645268 1944495 1940981 2026-06-10T07:26:08Z Rathai palanivelan 11183 1944495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராசாமி! யாருடைய அது. . . வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . :{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)<noinclude></noinclude> sowt0qw6l93kke7vxzremcfncp5ecrr 1944496 1944495 2026-06-10T07:27:39Z Rathai palanivelan 11183 symb 1944496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராசாமி! யாருடைய அது. . . வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . :{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)}}<noinclude></noinclude> 7xmuto3ahasz4kex8ho4yveto4kpn8i 1944497 1944496 2026-06-10T07:28:16Z Rathai palanivelan 11183 1944497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராசாமி! யாருடைய அது. . . :{{overfloat left|align=right|padding=1em|வந்தவர்:}} நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. :{{overfloat left|align=right|padding=1em|மா:}} டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். :{{overfloat left|align=right|padding=1em|மா:}} வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! :{{overfloat left|align=right|padding=1em|வந்:}} பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . :{{overfloat left|align=right|padding=1em|மா:}} ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)}}<noinclude></noinclude> 6k16uhqb91e57p74t6obh3er02w9hc1 1944499 1944497 2026-06-10T07:31:18Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா:டே! வீராசாமி! யாருடைய அது. . . வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். மா: இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? வந்: இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. மா: டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . வந்: அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். மா: இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. வந்: நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். மா: வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! வந்: பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . மா: ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)}}<noinclude></noinclude> 2uh1wgxopkq1ph7f1wp66bf5vqpgy8j 1944524 1944499 2026-06-10T08:06:19Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா:டே! வீராசாமி! யாருடைய அது. . . வந்தவர்: நமஸ்காரம். நான், இந்த ஊர்தான், பிரசங்க பூஷணம் பிரம்மானந்த மூர்த்தி ஸ்வாமிகள்னு பேர். மா: இங்கே, என்ன காரியமா வந்தீர்கள். . .? வந்: இங்கே வராமல் வேறே எங்கே வரமுடியும்? தாங்கள் தானே, எங்களைப்போன்றவளை, ஆதரித்து இரட்சிக்க வேண்டியவா. மா: டே! வீராச்சாமி, எதற்கு வந்ததார், என்ன விசேஷம்னு கேட்டு, பதில் சொல்லி அனுப்பு போ. . . வந்: அவனுக்கு என்ன தெரியும்? நான் இந்த ஊரிலே புராணப் பிரசங்கம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் ஆதரவு தரவேண்டும். மா: இப்ப, இப்படிக் கிளம்பிவிட்டிங்களா? உங்களைக் கூப்பிட்டனுப்பின காலம் போயி, இப்ப நீங்களாகவே கிளம்பிவர ஆரம்பிச்சாச்சா. சரி, சரி, மார்க்கட் ரொம்ப டல்லாயிடுத்து போலிருக்கு. வந்: நிலைமை ஒரு விதத்திலே அதுதான். ஆனால், நான் புராணத்திலே சில புது உண்மைகளை, சில அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறேன்; ஊரிலே இப்போ இந்தச் சுயமரியாதைக்காரா கொஞ்சம் தொந்தரவு தருகிறா பாருங்கோ, அவாகூட, என்னுடைய புராணப் பிரசங்கத்திலே தப்புக் கண்டுபிடிக்க முடியாது. சகலருக்கும் பிடிக்கும்படியா, ஒருவருக்கும் மனக்கஷ்டம் வராத விதமா இருக்கும் நம்ம பிரசங்கம். மா: வெண்டைக்காய்போல, வழவழப்பு இருக்கும்னு சொல்லுய்யா; அதானே! பணத்துக்குத்தானே! வந்: பணத்துக்காக அல்ல. சிவ! சிவ! பணம் எதற்கு? என்ன பிரயோஜனம்? யார் அதை மதிப்பா? காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி யில்லையோ. . . மா: ஆமாம்! காதற்ற ஊசி கடை வழி வரத்தான் செய்யாது, காதறுந்த ஊசியை யாரு வாங்குவாங்க. போய்யா எழுந்து. (புராணிகர் எழுந்து போகிறார். பிறகு வேலையாளிடம்.)}}<noinclude></noinclude> 3g3im9yt74o0bze00d4ng2dw4025op2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/78 250 645269 1944501 1940985 2026-06-10T07:32:33Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||77}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . . வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே. மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல. வீ: கழுதை, கைலாயம் போனதாகவா? மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது. வீ: உம். மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு? வீ: அந்தப் பொண்ணு. மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை? வீ: கழுதையும், எருதையும். மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது. வீ: அடிதாங்கமாட்டாமே. . . மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது. வீ: ஓடின வேகத்திலே. மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம்}}<noinclude></noinclude> qn854o41lhixgfph1z3b3tjet4qpdl4 1944521 1944501 2026-06-10T08:03:14Z Santharabanu 15679 - added added at the end 1944521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||77}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . . வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே. மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல. வீ: கழுதை, கைலாயம் போனதாகவா? மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது. வீ: உம். மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு? வீ: அந்தப் பொண்ணு. மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை? வீ: கழுதையும், எருதையும். மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது. வீ: அடிதாங்கமாட்டாமே. . . மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது. வீ: ஓடின வேகத்திலே. மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம்}}-<noinclude></noinclude> eqtp8jj4hjp64sbt8ihfifqqwmrxo4k 1944522 1944521 2026-06-10T08:04:44Z Santharabanu 15679 1944522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||77}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . . வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே. மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல. வீ: கழுதை, கைலாயம் போனதாகவா? மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது. வீ: உம். மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு? வீ: அந்தப் பொண்ணு. மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை? வீ: கழுதையும், எருதையும். மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது. வீ: அடிதாங்கமாட்டாமே. . . மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது. வீ: ஓடின வேகத்திலே. மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம்-}}<noinclude></noinclude> jdlo7jusfwlucve2yakmvx0wev7s2gx 1944525 1944522 2026-06-10T08:07:09Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||77}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| மா: இவனுங்க தொல்லை பெரிசாப்போச்சு. இவனுங்களுக்கு வேறே பிழைப்பு இல்லை, இப்படிப் புளுகிக்கிட்டு, ஊரைக் கெடுத்துகிட்டு இருக்கறானுங்க. . . வீ: புராணம், படிச்சாலும் கேட்டாலும், கைலாயம் போவலா முங்களாமே. மா: கைலாயம் போவணுமாம் கைலாயம்! டே வீராசாமி! கழுதைகூடப் போயிருக்குடா கைலாயம். . . ஏண்டா! நான், போக்கிரித்தனமாகப் பேசுவதாக நினைக்கறயா, நிஜத்தைச் சொன்னேண்டா. ஒரு புராணம் இருக்கு, அதுபோல. வீ: கழுதை, கைலாயம் போனதாகவா? மா: ஆமாண்டா, கழுதை, எருது, எல்லாம் போனதாகக் கதை, புண்ய கதை இருக்கு. ஒரு ஆதித் திராவிடப் பெண்ணு, புல்வெட்டிப் பிழைக்கிறது. வீ: உம். மா: ஆதித்திராவிடப் பெண் வேறே என்னடா செய்யும், பிழைப்புக்கு. அது என்ன ஐயமார் வீட்டுப் பெண்ணா. நாட்டியம் ஆடி, மெடல் வாங்க; புல் செதுக்கி ஜீவிக்கிறது வழக்கம். ஒரு நாள் ஒரு பிள்ளையார் கோயில் பக்கமா, புல்லைக் கொட்டி வைச்சுது. யாரு? வீ: அந்தப் பொண்ணு. மா: அப்ப, கேளுடா, கழுதை எருது இரண்டும் புல்லை மேய ஆரம்பிக்கவே, அந்தப் பொண்ணு, இரண்டையும் அடிச்சு விரட்டிச்சி. எதை? வீ: கழுதையும், எருதையும். மா: கழுதையும் எருதும், அந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றி ஓட ஆரம்பிச்சுது. வீ: அடிதாங்கமாட்டாமே. . . மா: அடியும் தாங்க முடியல்லே, புல்லையும்விட மனம் இல்லை. ஓடினபோது, புல்லும் கொஞ்சம் கொஞ்சம் கீழே விழுந்தது. வீ: ஓடின வேகத்திலே. மா: ஆமாம்! இவ்வளவுதாண்டா நடந்தது. உடனே புள்ளையார் கோயிலைச் சுற்றி வலம் வந்து, அருகம்-}}<noinclude></noinclude> a1llix5h58tqnz5yc9q5k70o3p43mxa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/79 250 645270 1944502 1940991 2026-06-10T07:33:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| புல்லைக்கொண்டு கழுதையும் எருதும் அர்ச்சனை செய்ததுன்னு, சொல்லி, வந்துவிட்டார்கள் சிவகணங்கள். வீ: வந்து? மா: வந்து, என்ன? கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, தேர் திருவிழாச் செய்து, தேவ பூஜை எல்லாம் செய்து, பக்திமான்க, எங்கே போகிறாங்க? கைலாயத்துக்குத்தானே, அந்தக் கைலாயத்துக்கு இந்தக் கழுதையையும், அழைச்சி கிட்டுப் போனாங்க. . . வீ: எஜமான், எவன் எழுதினான் இது மாதிரி கதையை? ரொம்ப முட்டாத்தனமா இருக்கே. . . மா: வேணுமானா, யாராவது புராணம் படிக்கிறவனிடம் கேட்டுப்பாரு, இப்படி ஒரு கதை இருக்கா இல்லையான்னு. இதுமட்டுமாடா; ஒரு ஆசாமி, ஒரே காமவெறி பிடித்த வனாகி, தன் தாயாரையே. . . வீ: கொன்றுபோட்டுவிட்டானா. மா: அது செய்தாக்கூட பரவாயில்லையேடா. தன் தாயாரையே கற்பழிச்சான்... வீ: அது யாருங்க அந்தப் பாவிப்பய? எங்கே இருக்கிறான்? மா: இப்போ கைலாயத்திலே இருக்காண்டா, கேளு கதையை தாயைக்கற்பழிச்சானா. பிறகு தகப்பனார் இருந்தாத் தொந்தரவுதானேன்னு, அவனையும் கொன்று விட்டான்... வீ: பெத்த தாயைப் பெண்டாண்டு, சொந்த அப்பனைக் கொன்றுபோட்டு. அவனைத் துண்டுதுண்டா வெட்ட வேணாமா? முள் பிப்பாயிலே போட்டு உருட்ட வேணாமா? மா: நீ செய்வே. நான் செய்வேன். அதுபோல, அக்ரமக் காரனுக்குத் தக்க தண்டனை தரவேணும்னு. நடந்ததைக் கேள்டா சிவபெருமான் அவனை மன்னிச்சிவிட்டார். அந்த மகா பாதகனும் புண்யவானாகிக் கைலாயம் போய்ச் சேர்ந்தான்... வீ: நிஜந்தானுங்களா? நம்பவே முடியலைங்களே. .. மா: திருவிளையாடற்புராணத்திலே மாபாதகம் தீர்த்த படலம்னு இருக்கு, கேட்டுப்பாரு.}}<noinclude></noinclude> q8v17wpdyxjdw8ow1yi1hw3mk2z45nt 1944526 1944502 2026-06-10T08:08:23Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| புல்லைக்கொண்டு கழுதையும் எருதும் அர்ச்சனை செய்ததுன்னு, சொல்லி, வந்துவிட்டார்கள் சிவகணங்கள். வீ: வந்து? மா: வந்து, என்ன? கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, தேர் திருவிழாச் செய்து, தேவ பூஜை எல்லாம் செய்து, பக்திமான்க, எங்கே போகிறாங்க? கைலாயத்துக்குத்தானே, அந்தக் கைலாயத்துக்கு இந்தக் கழுதையையும், அழைச்சி கிட்டுப் போனாங்க. . . வீ: எஜமான், எவன் எழுதினான் இது மாதிரி கதையை? ரொம்ப முட்டாத்தனமா இருக்கே. . . மா: வேணுமானா, யாராவது புராணம் படிக்கிறவனிடம் கேட்டுப்பாரு, இப்படி ஒரு கதை இருக்கா இல்லையான்னு. இதுமட்டுமாடா; ஒரு ஆசாமி, ஒரே காமவெறி பிடித்த வனாகி, தன் தாயாரையே. . . வீ: கொன்றுபோட்டுவிட்டானா. மா: அது செய்தாக்கூட பரவாயில்லையேடா. தன் தாயாரையே கற்பழிச்சான்... வீ: அது யாருங்க அந்தப் பாவிப்பய? எங்கே இருக்கிறான்? மா: இப்போ கைலாயத்திலே இருக்காண்டா, கேளு கதையை தாயைக்கற்பழிச்சானா. பிறகு தகப்பனார் இருந்தாத் தொந்தரவுதானேன்னு, அவனையும் கொன்று விட்டான்... வீ: பெத்த தாயைப் பெண்டாண்டு, சொந்த அப்பனைக் கொன்றுபோட்டு. அவனைத் துண்டுதுண்டா வெட்ட வேணாமா? முள் பிப்பாயிலே போட்டு உருட்ட வேணாமா? மா: நீ செய்வே. நான் செய்வேன். அதுபோல, அக்ரமக் காரனுக்குத் தக்க தண்டனை தரவேணும்னு. நடந்ததைக் கேள்டா சிவபெருமான் அவனை மன்னிச்சிவிட்டார். அந்த மகா பாதகனும் புண்யவானாகிக் கைலாயம் போய்ச் சேர்ந்தான்... வீ: நிஜந்தானுங்களா? நம்பவே முடியலைங்களே. .. மா: திருவிளையாடற்புராணத்திலே மாபாதகம் தீர்த்த படலம்னு இருக்கு, கேட்டுப்பாரு.}}<noinclude></noinclude> mug86ljuxi0gqsnj1ommnvllrf1wgls பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/80 250 645271 1944504 1943462 2026-06-10T07:33:44Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி நான்கு||79}}{{rule}}</noinclude>{{Hanging indent|3em| வீ: எப்படிங்க சாமிக்கு ஒப்பிச்சி இப்படிப்பட்ட மகா பாவியைக் கைலாயத்துக்குச் சேர்த்துக்கொள்ள? மா: டே அவன் ஜாதியிலே யாரு தெரியுமா? ஐயருடா ஐயர்! ஆமாம் நீ என்ன கைலாயத்திலே, இப்படிப்பட்டவ னெல்லாம் இல்லைன்னு நினைச்சிக்கிட்டாயா? நாக்கை அறுத்தவன் மூக்கை அறுத்தவன், தலையை அறுத்தவன், இந்தமாதிரிக் கொலைகாரப் பசங்க வேண பேர் இருக்காங்கடா அங்கே; கேட்டா பக்தியிலே செய்தா னுன்னுவாங்க. நான், இல்லாததைச் சொல்றேன்னு எண்ணிக்கொள்ளாதே. ஒரு ஆசாமி. தன் மனைவியோடு கோயிலுக்குப் போனான், திருவாரூரிலே கோயிலுக்குள்ளே பூ கிடந்தது கீழே, பெண்களுக்கு பூன்னா இஷ்டமில்லையா? வீ: ஆமாங்க. மா: அந்தம்மா, பூவைப் பார்க்கவே, எடுத்து, மோந்து பார்த்தாங்க.. வீ: அந்தம்மா புருஷன்..? மா:அவன் இன்னொரு பக்கமா இருந்தான். பக்தி செய்து கிட்டு. வீ: சரிங்க. அப்புறம் என்னா நடந்தது? மா: கோயிலிலே இருந்தான் இன்னொரு பக்தன், அவன் ஓடி வந்தான், பொம்பளை, பூ எடுத்து மோந்ததைப் பார்த்து... வீ: வந்து ? மா: நீதான் சொல்லுடா, என்ன செய்வான், ஒரு யோக்கியமான மனுஷன்? வீ: ஆரம்மா இது, பூவை எடுக்காதே. அது சாமிக்குன்னு சொல்வான். மா. கொஞ்சம் முரட்டுப்பயலா இருந்தா, திட்டுவான் கண்டபடி. இவன் என்ன செய்தான் தெரியுமோ? உள்ளே ஓடி, ஒரு அரிவாள் கொண்டு வந்தான். வீ: அரிவா கொண்டு வந்து... மா: அந்தப் பொம்பளை மூக்கை அறுத்துப்போட்டுட்டாண்டா?}}<noinclude></noinclude> opb6poopn7aquhr0r0thap48dfik5bx 1944523 1944504 2026-06-10T08:05:11Z Santharabanu 15679 top space added 1944523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி நான்கு||79}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: எப்படிங்க சாமிக்கு ஒப்பிச்சி இப்படிப்பட்ட மகா பாவியைக் கைலாயத்துக்குச் சேர்த்துக்கொள்ள? மா: டே அவன் ஜாதியிலே யாரு தெரியுமா? ஐயருடா ஐயர்! ஆமாம் நீ என்ன கைலாயத்திலே, இப்படிப்பட்டவ னெல்லாம் இல்லைன்னு நினைச்சிக்கிட்டாயா? நாக்கை அறுத்தவன் மூக்கை அறுத்தவன், தலையை அறுத்தவன், இந்தமாதிரிக் கொலைகாரப் பசங்க வேண பேர் இருக்காங்கடா அங்கே; கேட்டா பக்தியிலே செய்தா னுன்னுவாங்க. நான், இல்லாததைச் சொல்றேன்னு எண்ணிக்கொள்ளாதே. ஒரு ஆசாமி. தன் மனைவியோடு கோயிலுக்குப் போனான், திருவாரூரிலே கோயிலுக்குள்ளே பூ கிடந்தது கீழே, பெண்களுக்கு பூன்னா இஷ்டமில்லையா? வீ: ஆமாங்க. மா: அந்தம்மா, பூவைப் பார்க்கவே, எடுத்து, மோந்து பார்த்தாங்க.. வீ: அந்தம்மா புருஷன்..? மா:அவன் இன்னொரு பக்கமா இருந்தான். பக்தி செய்து கிட்டு. வீ: சரிங்க. அப்புறம் என்னா நடந்தது? மா: கோயிலிலே இருந்தான் இன்னொரு பக்தன், அவன் ஓடி வந்தான், பொம்பளை, பூ எடுத்து மோந்ததைப் பார்த்து... வீ: வந்து ? மா: நீதான் சொல்லுடா, என்ன செய்வான், ஒரு யோக்கியமான மனுஷன்? வீ: ஆரம்மா இது, பூவை எடுக்காதே. அது சாமிக்குன்னு சொல்வான். மா. கொஞ்சம் முரட்டுப்பயலா இருந்தா, திட்டுவான் கண்டபடி. இவன் என்ன செய்தான் தெரியுமோ? உள்ளே ஓடி, ஒரு அரிவாள் கொண்டு வந்தான். வீ: அரிவா கொண்டு வந்து... மா: அந்தப் பொம்பளை மூக்கை அறுத்துப்போட்டுட்டாண்டா?}}<noinclude></noinclude> 47cv5pa7wsyqn0oixntnpv7593nk8qs 1944528 1944523 2026-06-10T08:11:04Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|தொகுதி நான்கு||79}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: எப்படிங்க சாமிக்கு ஒப்பிச்சி இப்படிப்பட்ட மகா பாவியைக் கைலாயத்துக்குச் சேர்த்துக்கொள்ள? மா: டே! அவன் ஜாதியிலே யாரு தெரியுமா? ஐயருடா ஐயர்! ஆமாம் நீ என்ன கைலாயத்திலே, இப்படிப்பட்டவ னெல்லாம் இல்லைன்னு நினைச்சிக்கிட்டாயா? நாக்கை அறுத்தவன் மூக்கை அறுத்தவன், தலையை அறுத்தவன், இந்தமாதிரிக் கொலைகாரப் பசங்க வேண பேர் இருக்காங்கடா அங்கே; கேட்டா பக்தியிலே செய்தா னுன்னுவாங்க. நான், இல்லாததைச் சொல்றேன்னு எண்ணிக்கொள்ளாதே. ஒரு ஆசாமி. தன் மனைவியோடு கோயிலுக்குப் போனான், திருவாரூரிலே கோயிலுக்குள்ளே பூ கிடந்தது கீழே, பெண்களுக்கு பூன்னா இஷ்டமில்லையா? வீ: ஆமாங்க. மா: அந்தம்மா, பூவைப் பார்க்கவே, எடுத்து, மோந்து பார்த்தாங்க.. வீ: அந்தம்மா புருஷன்..? மா:அவன் இன்னொரு பக்கமா இருந்தான். பக்தி செய்து கிட்டு. வீ: சரிங்க. அப்புறம் என்னா நடந்தது? மா: கோயிலிலே இருந்தான் இன்னொரு பக்தன், அவன் ஓடி வந்தான், பொம்பளை, பூ எடுத்து மோந்ததைப் பார்த்து... வீ: வந்து ? மா: நீதான் சொல்லுடா, என்ன செய்வான், ஒரு யோக்கியமான மனுஷன்? வீ: ஆரம்மா இது, பூவை எடுக்காதே. அது சாமிக்குன்னு சொல்வான். மா. கொஞ்சம் முரட்டுப்பயலா இருந்தா, திட்டுவான் கண்டபடி. இவன் என்ன செய்தான் தெரியுமோ? உள்ளே ஓடி, ஒரு அரிவாள் கொண்டு வந்தான். வீ: அரிவா கொண்டு வந்து... மா: அந்தப் பொம்பளை மூக்கை அறுத்துப்போட்டுட்டாண்டா?}}<noinclude></noinclude> s2xqggyp9315qm4teb2oikohru20z3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/81 250 645272 1944505 1941091 2026-06-10T07:34:43Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: அட பாதகா! பூவை எடுத்து மோந்ததுக்கா. . . ஒருத்தன் பெண்ணு மூக்கை அறுத்தான். என்னா அக்ரமங்க.. எனுங்க, அவ புருஷன் என்னா செய்தான்? எப்படிப்பட்ட சொரணையத்தவனுக்குக்கூட ரோஷம் வருமே. மா: கேள் வீராசாமி அந்தக் கூத்தையும், அல புருஷன் ஓடி வந்து, என்னான்னு கேட்டான். இப்படி இப்படி நடந்ததுன்னு சொன்னான் அந்த மூக்கறுத்தவன். இவன் உடனே அந்த அரிவாளைப் பிடுங்கி... வீ: போட்டானா அவன் தலையிலே வெட்டு . . . மா: இல்லை, கையிலே, போட்டான் வெட்டு . . . வீ: போடவேண்டியதுதான், அந்தக் கையாலேதானே அவ மூக்கை அறுத்தான் அந்தப் பாவி கையை வெட்ட வேண்டியதுதான். மா: டே! மடப்பயலே! யார் கையை வெட்டினான்னு நினைச்சிக்கிட்டுப் பேசறே. தன் பெண்டாட்டி கையை வெட்டினாண்டா, பூ எடுத்த கையை வெட்டவேணும்னு சொல்லி... வீ: அட ரோஷங்கெட்ட, அக்ரமகாரா! மா. திட்டாதேடா! இரண்டு பேரும் நாயன்மாருக. இப்ப. தெரியுமா? மூக்கறுத்தவனும் கைலாயவாசம் செய்கிறான். கையை வெட்டினவனும் அங்கேதான் இருக்கிறான். பக்திடா பக்தி வீ: இதுதானுங்களா பக்தி! மூக்கை அறுக்கறதும், பெண்டாட்டி கையை வெட்றதும் பக்தியா. ? மா: மூக்கறுத்தவன் பேரு, <b>செருத்துணை</b>. கையை வெட்டினவன் பேரு. <b>கழற்சிங்கம்</b>. காலட்சேபம் செய்யலே. அவர்களை வேணுமானா கேளு. பெரியபுராணத்திலே இது இருக்கா. இல்லையான்னு. இந்த மாதிரி ஆசாமி களெல்லாம் போயிருக்காங்க. கைலாயத்துக்கு. ஏண்டா நாம்ப போகணும்? வீ :எஜமான்! நான் என்னமோ நினைச்சிகிட்டு இருந்தேன், கைலாய்ம்னா, இப்பத்தான் தெரிஞ்சுது விஷயம். இந்த மாதிரி ஆசாமிக இருக்கிற இடமா அது? நமக்கு வேண்டாம் எஜமான், அந்த மாதிரி இடம்!}}<noinclude></noinclude> f21com0ab4gnzmhwu99snmwma6ozng7 1944529 1944505 2026-06-10T08:13:04Z Santharabanu 15679 top space added 1944529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: அட பாதகா! பூவை எடுத்து மோந்ததுக்கா. . . ஒருத்தன் பெண்ணு மூக்கை அறுத்தான். என்னா அக்ரமங்க.. எனுங்க, அவ புருஷன் என்னா செய்தான்? எப்படிப்பட்ட சொரணையத்தவனுக்குக்கூட ரோஷம் வருமே. மா: கேள் வீராசாமி அந்தக் கூத்தையும், அல புருஷன் ஓடி வந்து, என்னான்னு கேட்டான். இப்படி இப்படி நடந்ததுன்னு சொன்னான் அந்த மூக்கறுத்தவன். இவன் உடனே அந்த அரிவாளைப் பிடுங்கி... வீ: போட்டானா அவன் தலையிலே வெட்டு . . . மா: இல்லை, கையிலே, போட்டான் வெட்டு . . . வீ: போடவேண்டியதுதான், அந்தக் கையாலேதானே அவ மூக்கை அறுத்தான் அந்தப் பாவி கையை வெட்ட வேண்டியதுதான். மா: டே! மடப்பயலே! யார் கையை வெட்டினான்னு நினைச்சிக்கிட்டுப் பேசறே. தன் பெண்டாட்டி கையை வெட்டினாண்டா, பூ எடுத்த கையை வெட்டவேணும்னு சொல்லி... வீ: அட ரோஷங்கெட்ட, அக்ரமகாரா! மா. திட்டாதேடா! இரண்டு பேரும் நாயன்மாருக. இப்ப. தெரியுமா? மூக்கறுத்தவனும் கைலாயவாசம் செய்கிறான். கையை வெட்டினவனும் அங்கேதான் இருக்கிறான். பக்திடா பக்தி வீ: இதுதானுங்களா பக்தி! மூக்கை அறுக்கறதும், பெண்டாட்டி கையை வெட்றதும் பக்தியா. ? மா: மூக்கறுத்தவன் பேரு, <b>செருத்துணை</b>. கையை வெட்டினவன் பேரு. <b>கழற்சிங்கம்</b>. காலட்சேபம் செய்யலே. அவர்களை வேணுமானா கேளு. பெரியபுராணத்திலே இது இருக்கா. இல்லையான்னு. இந்த மாதிரி ஆசாமி களெல்லாம் போயிருக்காங்க. கைலாயத்துக்கு. ஏண்டா நாம்ப போகணும்? வீ :எஜமான்! நான் என்னமோ நினைச்சிகிட்டு இருந்தேன், கைலாய்ம்னா, இப்பத்தான் தெரிஞ்சுது விஷயம். இந்த மாதிரி ஆசாமிக இருக்கிற இடமா அது? நமக்கு வேண்டாம் எஜமான், அந்த மாதிரி இடம்!}}<noinclude></noinclude> 988m5myoq03wvsg8md48h0hyt9keis4 1944530 1944529 2026-06-10T08:13:56Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em| வீ: அட பாதகா! பூவை எடுத்து மோந்ததுக்கா. . . ஒருத்தன் பெண்ணு மூக்கை அறுத்தான். என்னா அக்ரமங்க.. எனுங்க, அவ புருஷன் என்னா செய்தான்? எப்படிப்பட்ட சொரணையத்தவனுக்குக்கூட ரோஷம் வருமே. மா: கேள் வீராசாமி அந்தக் கூத்தையும், அல புருஷன் ஓடி வந்து, என்னான்னு கேட்டான். இப்படி இப்படி நடந்ததுன்னு சொன்னான் அந்த மூக்கறுத்தவன். இவன் உடனே அந்த அரிவாளைப் பிடுங்கி... வீ: போட்டானா அவன் தலையிலே வெட்டு . . . மா: இல்லை, கையிலே, போட்டான் வெட்டு . . . வீ: போடவேண்டியதுதான், அந்தக் கையாலேதானே அவ மூக்கை அறுத்தான் அந்தப் பாவி கையை வெட்ட வேண்டியதுதான். மா: டே! மடப்பயலே! யார் கையை வெட்டினான்னு நினைச்சிக்கிட்டுப் பேசறே. தன் பெண்டாட்டி கையை வெட்டினாண்டா, பூ எடுத்த கையை வெட்டவேணும்னு சொல்லி... வீ: அட ரோஷங்கெட்ட, அக்ரமகாரா! மா. திட்டாதேடா! இரண்டு பேரும் நாயன்மாருக. இப்ப. தெரியுமா? மூக்கறுத்தவனும் கைலாயவாசம் செய்கிறான். கையை வெட்டினவனும் அங்கேதான் இருக்கிறான். பக்திடா பக்தி வீ: இதுதானுங்களா பக்தி! மூக்கை அறுக்கறதும், பெண்டாட்டி கையை வெட்றதும் பக்தியா. ? மா: மூக்கறுத்தவன் பேரு, <b>செருத்துணை</b>. கையை வெட்டினவன் பேரு. <b>கழற்சிங்கம்</b>. காலட்சேபம் செய்யலே. அவர்களை வேணுமானா கேளு. பெரியபுராணத்திலே இது இருக்கா. இல்லையான்னு. இந்த மாதிரி ஆசாமி களெல்லாம் போயிருக்காங்க. கைலாயத்துக்கு. ஏண்டா நாம்ப போகணும்? வீ :எஜமான்! நான் என்னமோ நினைச்சிகிட்டு இருந்தேன், கைலாய்ம்னா, இப்பத்தான் தெரிஞ்சுது விஷயம். இந்த மாதிரி ஆசாமிக இருக்கிற இடமா அது? நமக்கு வேண்டாம் எஜமான், அந்த மாதிரி இடம்!}}<noinclude></noinclude> 389lez034v85b1zujo1wbdhhnr60ugi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/536 250 645332 1944101 1942293 2026-06-09T13:44:51Z Leelasuresh37 16607 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />{{rh|தொகுதி நான்கு||535}}{{rule}}</noinclude>மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கைகொண்டு, இந்த மசோதாவை விட்டுவிடுங்கள். அதற்கு இசைவு தர, இயலவில்லையானால், நெருக்கடி நேரத்தை எண்ணி, இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினைகளைப் பின்னணியில் வைத்திருக்கவேண்டும். அவைபற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவருபவர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள, இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சியுடைய, முறைகள், நடவடிக்கை, மசோதா, இவற்றினுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 3-2-1963 {{dhr|10em}}<noinclude></noinclude> ru2f5v3u7x6hfwye8kmv4frzqs2vm1b 1944121 1944101 2026-06-09T15:17:08Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தொகுதி நான்கு||535}}{{rule}}</noinclude>மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கைகொண்டு, இந்த மசோதாவை விட்டுவிடுங்கள். அதற்கு இசைவு தர, இயலவில்லையானால், நெருக்கடி நேரத்தை எண்ணி, இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினைகளைப் பின்னணியில் வைத்திருக்கவேண்டும். அவைபற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவருபவர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள, இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சியுடைய, முறைகள், நடவடிக்கை, மசோதா, இவற்றினுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 3-2-1963 {{dhr|10em}}<noinclude></noinclude> ru6n5e9xt83lmaug9xqyco93hq3178f 1944174 1944121 2026-06-09T16:22:04Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|தொகுதி நான்கு||535}}{{rule}}</noinclude>மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கைகொண்டு, இந்த மசோதாவை விட்டுவிடுங்கள். அதற்கு இசைவு தர, இயலவில்லையானால், நெருக்கடி நேரத்தை எண்ணி, இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினைகளைப் பின்னணியில் வைத்திருக்கவேண்டும். அவைபற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவருபவர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள, இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சியுடைய, முறைகள், நடவடிக்கை, மசோதா, இவற்றினுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 3-2-1963 {{dhr|10em}}<noinclude></noinclude> mh0b7yn5z5yt0v97pir3d5jr8hm71pd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/257 250 645341 1944553 1943781 2026-06-10T09:06:06Z Rathai palanivelan 11183 1944553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|256||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே! {{left_margin|3em|<poem><b>ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! :இரக்கம் துளியும் எழாத மனம்! ::இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! :::காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!</b></poem>}} ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!! <b>மூன்று பெரிய<br>ஆபத்து</b> {{left_margin|3em|<poem><b>முன்கூட்டியே சொல்லிவிட்டோம் ஆண்டொன்றுக்கு ஏழை தலையில் விழப்போகுது {{Hanging indent|3em| 1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள். 2. அரிசிச் சாதம் கூடாதென்று அதிகாரத்தின் துணைகொண்டு கோதுமை திணிக்கப் போகிறார்கள். 3. தமிழை அழிக்க இந்தி தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.}} மூன்று பெரிய ஆபத்து முன்கூட்டியே சொல்லிவிட்டோம்</b></poem>}}<noinclude></noinclude> 2wn7qdhv6ctx9rsnl84znph20ur7ijy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/258 250 645342 1944554 1943782 2026-06-10T09:09:09Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||257}}{{Rule}}</noinclude> {{c|<poem><b> ஆபத்துகளைத் தடுத்திட ஆற்றலுள்ளது தி. மு. க. ஓட்டுகள் உதய சூரியனுக்கே! என நாட்டினர் அறிவித்துவிட்டால் ஆபத்து இல்லை {{gap2}}அறிவீர்! அறிவீர்! நாட்டுக்கும்! {{gap2}}தோழர்களே!!</b></poem>}} வீடுதோறும், இதனை எடுத்து விளக்கிடவேண்டும். வருவது தெரியாமலுள்ளோர் பலர் உளர்; நாம் அறிந்திருப்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அரசியல் கடமை; மக்களாட்சியில் ஒவ்வொருவரும் செய்து தீரவேண்டிய பொறுப்பு மிகு பணியாகும். எத்தனை பெரிய ஆபத்துகள், மக்களைத் தாக்க இருக்கின்றன என்பதை நாம் மட்டும் அறிந்தால் போதாது - நாடு அறியவேண்டும் - அதற்கு, உன் நல்லறிவுப் பிரசாரம் நாளும் தேவை. வேலை அதிகம், தம்பி! நாட்கள் மிகமிகக் குறைவு!! ஆகவே, வண்டுபோல் சுற்றிடவேண்டும்; நானோ, என் உடல் வலிவுக்கு ஏற்ற அளவினைவிட, மிக அதிகமாகப் பணியாற்றி வருகிறேன் என்பதை, நன்கு அறிந்துதான் இருக்கிறாய். இரவு 11 மணி வரையில் கூட்டம் - பிறகு திருக்கோவிலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கற்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் நிலைமைகள் குறித்து உரையாடல் - மூன்று மணிக்குத்தான் எழுத வாய்ப்பு - இதோ அ. க. தங்கவேலர் அனுப்பிய மோடார் அழைக்கிறது, தஞ்சைக்குச் செல்கிறேன். எல்லா ஊர்களுக்கும், ஒவ்வொரு இல்லத்துக்கும், நானே சென்று எல்லாவற்றையும் கூறிட இயலாதே - விருப்பம் உண்டு - நேரம் இல்லை! மேலும் நீயிருக்கப் பயம் ஏன்? என்ற துணிவும் உண்டு. எனவே, தம்பி! {{c|<poem><b>மூன்று பக்கம் கடல் இங்கே! கப்பற்படை தலைமை வடக்கே!</b></poem>}}<noinclude> 9- த.அ.க. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude> qg8pox8wupl9x37sjojq5iaesmbihqk 1944598 1944554 2026-06-10T10:35:33Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||257}}{{Rule}}</noinclude> {{c|<poem><b> ஆபத்துகளைத் தடுத்திட ஆற்றலுள்ளது தி. மு. க. ஓட்டுகள் உதய சூரியனுக்கே! என நாட்டினர் அறிவித்துவிட்டால் ஆபத்து இல்லை {{gap2}}அறிவீர்! அறிவீர்! நாட்டுக்கும்! {{gap2}}தோழர்களே!!</b></poem>}} வீடுதோறும், இதனை எடுத்து விளக்கிடவேண்டும். வருவது தெரியாமலுள்ளோர் பலர் உளர்; நாம் அறிந்திருப்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அரசியல் கடமை; மக்களாட்சியில் ஒவ்வொருவரும் செய்து தீரவேண்டிய பொறுப்பு மிகு பணியாகும். எத்தனை பெரிய ஆபத்துகள், மக்களைத் தாக்க இருக்கின்றன என்பதை நாம் மட்டும் அறிந்தால் போதாது - நாடு அறியவேண்டும் - அதற்கு, உன் நல்லறிவுப் பிரசாரம் நாளும் தேவை. வேலை அதிகம், தம்பி! நாட்கள் மிகமிகக் குறைவு!! ஆகவே, வண்டுபோல் சுற்றிடவேண்டும்; நானோ, என் உடல் வலிவுக்கு ஏற்ற அளவினைவிட, மிக அதிகமாகப் பணியாற்றி வருகிறேன் என்பதை, நன்கு அறிந்துதான் இருக்கிறாய். இரவு 11 மணி வரையில் கூட்டம் - பிறகு திருக்கோவிலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கற்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் நிலைமைகள் குறித்து உரையாடல் - மூன்று மணிக்குத்தான் எழுத வாய்ப்பு - இதோ அ. க. தங்கவேலர் அனுப்பிய மோடார் அழைக்கிறது, தஞ்சைக்குச் செல்கிறேன். எல்லா ஊர்களுக்கும், ஒவ்வொரு இல்லத்துக்கும், நானே சென்று எல்லாவற்றையும் கூறிட இயலாதே - விருப்பம் உண்டு - நேரம் இல்லை! மேலும் நீயிருக்கப் பயம் ஏன்? என்ற துணிவும் உண்டு. எனவே, தம்பி! {{c|<poem><b>மூன்று பக்கம் கடல் இங்கே! கப்பற்படை தலைமை வடக்கே!</b></poem>}}<noinclude> 9- த.அ.க. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude> e7hdgjow0kb7u1kkbdjqv1pe925pvm1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/125 250 645378 1944384 1942627 2026-06-10T05:10:38Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்லதான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கிவிட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப்போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும், செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக் கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்து விடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும்போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்து கிடப்போர், இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப் போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சிலபோது, ஐயப்பாடும், அச்சமும், கவலையும் கலக்கமும் ஏற்பட்டுவிடுகின்றன; கை பிசைந்துகொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று தெரிந்தால், பேயாட்டமாடு கிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு-<noinclude></noinclude> gz834iq6ovqqyfbw51ggfixc9s789gy 1944490 1944384 2026-06-10T07:16:02Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்லதான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கிவிட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப்போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும், செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக் கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்து விடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும்போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்து கிடப்போர், இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப் போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சிலபோது, ஐயப்பாடும், அச்சமும், கவலையும் கலக்கமும் ஏற்பட்டுவிடுகின்றன; கை பிசைந்துகொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று தெரிந்தால், பேயாட்டமாடு கிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு-<noinclude></noinclude> f9huan8o613r2l2bn4vsply87n67jr7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/126 250 645379 1944385 1941219 2026-06-10T05:13:01Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||125}}{{rule}}</noinclude>ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும். உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்ய மாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem> இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பினியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட் சிரீயா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் </poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!<noinclude></noinclude> czgpqzy2flqkm4c71o05ax757niwidq 1944388 1944385 2026-06-10T05:17:06Z Rathai palanivelan 11183 + 1944388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||125}}{{rule}}</noinclude>ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும். <b>உதுமானிய</b> சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்ய மாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem> இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பினியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட் சிரீயா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் </poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!<noinclude></noinclude> kja81nvlwo4l2ylveuhbr26qksqfb92 1944494 1944388 2026-06-10T07:23:03Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||125}}{{rule}}</noinclude>ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும். <b>உதுமானிய</b> சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்ய மாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem> இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பினியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட் சிரீயா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் </poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!<noinclude></noinclude> kbp7hxibvq3b2xtuq3231xk7hs99kl0 1944500 1944494 2026-06-10T07:31:28Z Santharabanu 15679 1944500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||125}}{{rule}}</noinclude>ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும். <b>உதுமானிய</b> சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. {{left_margin|3em|<poem> இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பினியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட் சிரீயா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் </poem>}} இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!<noinclude></noinclude> 82ooli9b8l6vbvcqgb88ywovg8nhhmj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/127 250 645380 1944386 1941221 2026-06-10T05:14:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அதுபோல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907ஆம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக்கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக்கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்த மாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல், மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> 8xqgni01i0abo9sv6rgqbi7dvl8vz51 1944506 1944386 2026-06-10T07:35:42Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அதுபோல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907ஆம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக்கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக்கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்த மாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல், மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> 7akb6xpgrakn5ullafoy6kdie7jvsu4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/128 250 645381 1944387 1941223 2026-06-10T05:16:35Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||127}}{{rule}}</noinclude> இமய முதல் குமரி வரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ்வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற்கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்த வில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனதை விட்டு அகலவே இல்லை. அராபியம் துருக்கியரும் கலப்பு மணம் செய்துகொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப் பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{c|☐}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்துவிடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத் தியாகிகளின் இரத்தம் கொட்டப்பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், <b>கெனியா</b> நாட்டு விடுதலைக் கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி <b>டாம் இம்போயா</b>, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார்.<noinclude></noinclude> tjp833wut3rnyrfnouesrzp0ud83tjf 1944509 1944387 2026-06-10T07:44:41Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||127}}{{rule}}</noinclude> இமய முதல் குமரி வரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ்வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற்கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்த வில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனதை விட்டு அகலவே இல்லை. அராபியம் துருக்கியரும் கலப்பு மணம் செய்துகொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப் பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. {{c|☐}} அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்துவிடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத் தியாகிகளின் இரத்தம் கொட்டப்பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், <b>கெனியா</b> நாட்டு விடுதலைக் கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி <b>டாம் இம்போயா</b>, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார்.<noinclude></noinclude> t29764q5cj94rb03aw2xfuzbcec2i98 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/129 250 645382 1944389 1941225 2026-06-10T05:18:21Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது. இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்டவில்லையா என்று கேட்கத் தோன்றும். தம்பி இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத் தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்கவேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப்பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போகவிடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாμங்டனிலோ இதுபற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம்பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம், வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டி தொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபடவேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம் என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத்<noinclude></noinclude> n60qgo7y7kgzi3szaw96lvvy0yxv6gz 1944513 1944389 2026-06-10T07:47:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது. இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்டவில்லையா என்று கேட்கத் தோன்றும். தம்பி இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்கவேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப்பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போகவிடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாμங்டனிலோ இதுபற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம்பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம், வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டி தொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபடவேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம் என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத்<noinclude></noinclude> j3o8ir9nc2fm84dx73ynp660l2rpc21 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/130 250 645383 1944397 1941229 2026-06-10T05:30:21Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||129}}{{rule}}</noinclude> தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறவேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப் பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும். தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப்போவதில்லை. பொருள்தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கே கூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர், நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதுவும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால் தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல்கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப் போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. <b>'நாகநாடு'</b> கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப்பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் <b>’தனிநாடு'</b> போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கிறார்; நாகர் இணங்க மறுக்கின்றனர்.<noinclude> 5 - த அக. தொ. 4 பூ. வெ. எண்.514</noinclude> h88m8qbrkj4povflrzh0m8l5rk6qa5e 1944514 1944397 2026-06-10T07:48:54Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||129}}{{rule}}</noinclude> தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறவேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப் பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும். தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப்போவதில்லை. பொருள்தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கே கூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர், நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதுவும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல்கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. <b>'நாகநாடு'</b> கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப்பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் <b>’தனிநாடு'</b> போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கிறார்; நாகர் இணங்க மறுக்கின்றனர்.<noinclude> 5 - த அக. தொ. 4 பூ. வெ. எண்.514</noinclude> luyqdvb10t1tfm1wxpqucso753pyd4x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/131 250 645384 1944398 1941233 2026-06-10T05:32:02Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> <b>’பஞ்சாபி சுபா'</b> கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணி கேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது <b>வங்கம்</b> எவருக்கும் அடி பணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள். அவரெலாம் அடவி தன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்து, தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். <b>ஆப்பிரிக்கக்</b> கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார், ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாகமெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவதெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு?<noinclude></noinclude> a3kq7cmlk1d387dg0bk2ugsmx3hveeb 1944518 1944398 2026-06-10T07:56:27Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> <b>’பஞ்சாபி சுபா'</b> கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணி கேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது <b>வங்கம்</b> எவருக்கும் அடி பணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள். அவரெலாம் அடவி தன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்து, தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். <b>ஆப்பிரிக்கக்</b> கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார், ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாகமெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவதெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு?<noinclude></noinclude> 8vmo4nvr24ssdc1cj91uv35849v87xu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/133 250 645386 1944390 1942541 2026-06-10T05:20:34Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் 156</b> {{center|{{Xx-larger|<b>குன்றின்மேலிட்ட விளக்கு</b>}}}} {{left_margin|5em|<poem><b> திருப்பரங்குன்றம் மாநாடு கழகம் விடுதலை இயக்கமே தஞ்சைச் சம்பவம் தரும் படிப்பினை பதவிப் பித்தர்கள் யார்? சோற்றுப் பிரச்சினை தி. மு. க. : அரசியல் வெட்டுக்கிளி அன்று மக்களாட்சி என்பதன் பொருள் மெழுகுவர்த்தியால் பெற்ற பாடம் அண்ணாவின் உடற்கூறும் உளப்பாங்கும் செய்தித்தாள்களின் வேலைத் திறம் சிங்களத்தில் சித்திரவதை</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>உ</b>}}ரிமையுடன் பெருமிதம்கொள்கிறாய் - உன் புன்னகையிலேயே ஓர் புது எழில் காண்கிறேன் - பனித்துளியுடன் காணப் படும் புதுமலர் உன் கண்கள் - ஆமாம்! வெற்றிக் களிப்புடன் இருக்கிறாய் - வேழத்தின் தந்தத்தை முரித்து, உடலில் பாய்ந்திருந்த வேலினைப்பறித்தெடுத்த மாற்றான்மீது வீசி வெற்றி கண்ட வீரமரபின் வழி வந்தவனன்றோ - இன்று விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, வீறுகொண்டெழுந்து வெற்றிப் பாதையிலே நடைபோடுகிறாய் - உன் கை வண்ணமாக, கருத்தோவியமாக, எழுச்சி வடிவமாகத் தோற்றமளித்த,<noinclude></noinclude> orm59p50qsddqv76s9dsid6356l6qr2 1944531 1944390 2026-06-10T08:17:32Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் 156</b> {{center|{{Xx-larger|<b>குன்றின்மேலிட்ட விளக்கு</b>}}}} {{left_margin|5em|<poem><b> திருப்பரங்குன்றம் மாநாடு கழகம் விடுதலை இயக்கமே தஞ்சைச் சம்பவம் தரும் படிப்பினை பதவிப் பித்தர்கள் யார்? சோற்றுப் பிரச்சினை தி. மு. க. : அரசியல் வெட்டுக்கிளி அன்று மக்களாட்சி என்பதன் பொருள் மெழுகுவர்த்தியால் பெற்ற பாடம் அண்ணாவின் உடற்கூறும் உளப்பாங்கும் செய்தித்தாள்களின் வேலைத் திறம் சிங்களத்தில் சித்திரவதை</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>உ</b>}}ரிமையுடன் பெருமிதம்கொள்கிறாய் - உன் புன்னகையிலேயே ஓர் புது எழில் காண்கிறேன் - பனித்துளியுடன் காணப் படும் புதுமலர் உன் கண்கள் - ஆமாம்! வெற்றிக் களிப்புடன் இருக்கிறாய் - வேழத்தின் தந்தத்தை முரித்து, உடலில் பாய்ந்திருந்த வேலினைப்பறித்தெடுத்த மாற்றான்மீது வீசி வெற்றி கண்ட வீரமரபின் வழி வந்தவனன்றோ - இன்று விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, வீறுகொண்டெழுந்து வெற்றிப் பாதையிலே நடைபோடுகிறாய் - உன் கை வண்ணமாக, கருத்தோவியமாக, எழுச்சி வடிவமாகத் தோற்றமளித்த,<noinclude></noinclude> oan0wqu7de8jblhfa1oaornqdsoc8ih பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/135 250 645387 1944392 1941248 2026-06-10T05:22:28Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இரண்டு திங்கள், இதழ்கள் எல்லாம், இந்தச் சேதிகளையே தாங்கிக்கொண்டு வந்தன. விடிந்ததும், இன்று என்ன தூற்றலோ? இன்று எவர் அறிக்கையோ? எவருடைய அறைகூவலோ? என்று நினைத்த வண்ணமே, இதழ்களைப் பிரிக்க முடியும் என்ற நிலைமை. இப்படி ஒரு தாக்குதல் இதுவரையில், இந்த இயக்கத்தின் மீதாவது தொடுக்கப்பட்டதுண்டா என்று நானும் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன், ஒன்றுகூட எனக்குத் தெரியவில்லை. மனமுரிவுகள் ஏற்பட்டதுண்டு, - பிளவுகள் காணப்பட்டதுண்டு - முகாம்கள் அமைக்கப்பட்டதுண்டு - புகார்கள் வெளியிடப்பட்டதுண்டு - ஆனால், அப்பப்பா! பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்டதுண்டா? எப்போதாகிலும்? எந்தக் கட்சியிலாகிலும்? காந்தியாருக்கும், சுபாஷ்சந்திரபோசுக்கும் மூண்ட பெரும் தகராறுகூட, ஊரூருக்கும் 'முகாம்கள்' அமையவும், தலைவர்கள் அறிக்கைகள் விடவுமான நிலைமையைத்தான் ஏற்படுத்திற்றே தவிர, பழிச் சொல், இழிமொழி பதற பதறத் தூற்றுவது, பகையைக் கக்குவது போன்ற சிறுமைச் செயல்கள் தலைதூக்கவில்லை. நம்மை நோக்கியோ, நச்சரவினும் கொடிய பழிச்சொற்கள், நாராசத்திலே தோய்த்தெடுக்கப்பட்ட இழிமொழிகள் நாளைக்கு ஒரு புகார், வேளைக்கு ஒரு குற்றச்சாட்டு - வீசப்பட்டன. நேசம் முரிந்ததே, பாசம் அற்றுப்போய்விட்டதே, தொடர்பும், தோழமையும் அறுபட்டுப்போகின்றனவே கூடிப் பணியாற்றிய இனிய நாட்கள் முடிவுற்றுப் போகின்றனவே, கண்டதும் களிப்பு பேசும்போது மகிழ்ச்சி என்பதை எண்ணியே, என் மனம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும்போது, இருபது முப்பது ஆண்டுகள் எல்லாத்துறைகளிலும் பகை மூண்டு மூண்டு, பார்த்த உடனே, முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்குக் கடுகடுப்பாகத்தக்க கசப்புணர்ச்சி கப்பிக்கொண்டால், எப்படி இழித்தும் பழித்தும் பேசிக்கொள்வார்களோ, எதிர்ப்பு மூட்டிக்கொள்வார்களோ, எதிரிகளுடன் கூடிக்கொண் டாகிலும் அழித்துவிட முனைவார்களோ, அப்படி அப்படி அல்லவா, விலகிய விநாடியே வேகம், விறுவிறுப்பு, பகை கக்குவதிலே காட்டத் தொடங்கினார்கள். அதை எண்ணும் போதுதானே, தம்பி! இவர்கள் நெடுங்காலமாகவே, இவ்வளவு<noinclude></noinclude> 79jewc8vuak1gfevvxhlq9uylu85vmr 1944535 1944392 2026-06-10T08:23:51Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இரண்டு திங்கள், இதழ்கள் எல்லாம், இந்தச் சேதிகளையே தாங்கிக்கொண்டு வந்தன. விடிந்ததும், இன்று என்ன தூற்றலோ? இன்று எவர் அறிக்கையோ? எவருடைய அறைகூவலோ? என்று நினைத்த வண்ணமே, இதழ்களைப் பிரிக்க முடியும் என்ற நிலைமை. இப்படி ஒரு தாக்குதல் இதுவரையில், இந்த இயக்கத்தின் மீதாவது தொடுக்கப்பட்டதுண்டா என்று நானும் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன், ஒன்றுகூட எனக்குத் தெரியவில்லை. மனமுரிவுகள் ஏற்பட்டதுண்டு, - பிளவுகள் காணப்பட்டதுண்டு - முகாம்கள் அமைக்கப்பட்டதுண்டு - புகார்கள் வெளியிடப்பட்டதுண்டு - ஆனால், அப்பப்பா! பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்டதுண்டா? எப்போதாகிலும்? எந்தக் கட்சியிலாகிலும்? காந்தியாருக்கும், சுபாஷ்சந்திரபோசுக்கும் மூண்ட பெரும் தகராறுகூட, ஊரூருக்கும் 'முகாம்கள்' அமையவும், தலைவர்கள் அறிக்கைகள் விடவுமான நிலைமையைத்தான் ஏற்படுத்திற்றே தவிர, பழிச் சொல், இழிமொழி பதற பதறத் தூற்றுவது, பகையைக் கக்குவது போன்ற சிறுமைச் செயல்கள் தலைதூக்கவில்லை. நம்மை நோக்கியோ, நச்சரவினும் கொடிய பழிச்சொற்கள், நாராசத்திலே தோய்த்தெடுக்கப்பட்ட இழிமொழிகள் நாளைக்கு ஒரு புகார், வேளைக்கு ஒரு குற்றச்சாட்டு - வீசப்பட்டன. நேசம் முரிந்ததே, பாசம் அற்றுப்போய்விட்டதே, தொடர்பும், தோழமையும் அறுபட்டுப்போகின்றனவே கூடிப் பணியாற்றிய இனிய நாட்கள் முடிவுற்றுப் போகின்றனவே, கண்டதும் களிப்பு பேசும்போது மகிழ்ச்சி என்பதை எண்ணியே, என் மனம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும்போது, இருபது முப்பது ஆண்டுகள் எல்லாத்துறைகளிலும் பகை மூண்டு மூண்டு, பார்த்த உடனே, முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்குக் கடுகடுப்பாகத்தக்க கசப்புணர்ச்சி கப்பிக்கொண்டால், எப்படி இழித்தும் பழித்தும் பேசிக்கொள்வார்களோ, எதிர்ப்பு மூட்டிக்கொள்வார்களோ, எதிரிகளுடன் கூடிக்கொண் டாகிலும் அழித்துவிட முனைவார்களோ, அப்படி அப்படி அல்லவா, விலகிய விநாடியே வேகம், விறுவிறுப்பு, பகை கக்குவதிலே காட்டத் தொடங்கினார்கள். அதை எண்ணும் போதுதானே, தம்பி! இவர்கள் நெடுங்காலமாகவே, இவ்வளவு<noinclude></noinclude> szpbo59hjsp6boay1325uld6isw598d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/136 250 645388 1944393 1941249 2026-06-10T05:23:18Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||135}}{{rule}}</noinclude>பகை உணர்ச்சியை மனத்திலே குவித்து வைத்துக்கொண்டிருந் தார்கள். சமயம் வரட்டும் வரட்டும் என்று பார்த்துக்கொண் டிருந்தார்கள் என்பது புரிகிறது நானோர் ஏமாளி - துளியும் இப்படி இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில், கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் - விதிமுறைகளில் மாற்றம் காண விழைகிறார்கள் - என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன் - சிறிதளவு கூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கைபற்றியோ, இத்தனை பகை, அவர்கள் <b>உள்ளத்தில் புற்றரவுபோல</b> இருக்கிறது என்று நினைக்கவே இல்லை. தேக்கிவைக்கப்பட்ட வெள்ளம், கரையிலே சிறு விரிசல் ஏற்பட்ட உடனே, அந்த வழியாகப் புகுந்து, விரிசலை உடைப்பு ஆக்கி, கரையைப் பெயர்த்துக்கொண்டு வெளியே பாய்ந்து, சுற்றுப்புறம் முழுவதையும் வெள்ளக்காடாக்கி, மாடுமனை அழித்து, மக்கள் கூட்டத்தைப் பாழ்படுத்தி, வயல்களை நாசமாக்கி, வாழ்வைக் குலைப்பதுபோலல்லவா. வெறுப்புணர்ச்சி இருந்திருக்கிறது, இந்த அளவு; இன்று வெள்ளமாக வெளியே பாய்கிறது! இதை நான் துளிகூட எதிர்பார்க்கவே இல்லை. அதனால், என் வேதனை மற்றவர்க்குள்ளதைவிடப் பன்மடங்கு அதிகம். அந்த நிலையிலே மாநாடு என்ற அறிவிப்பு. எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை, அதற்கான முன்னேற்பாடு களிலே ஈடுபடும் ஆர்வத்தையும் நான் போதுமான அளவு பெறவில்லை. ஜூலை 13ஆம் தேதி மாநாடு - தம்பி! நான் ஜூலை 9ஆம் தேதிவரையில், வடாற்காட்டிலே கூட்டங்களில் கலந்துகொண் டிருக்கிறேன். பொருளாளர் கருணாநிதி மாநாட்டு அமைப்பாளர் அலுவலையும் சேர்த்துப்பார்க்கவேண்டி நேரிட்டது. கலைக் காட்சிப் பொறுப்போ, நண்பர்கள் பார்த்தசாரதி, இராஜாராம், பொன்னுவேல், செழியன் ஆகியோரிடம்; நண்பர் மதி, நடராசன், நாவலர் ஆகியோர் மாநாட்டுக்கான அறிவிப்புக்களை, அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்தனர். மதுரைத் தோழர் முத்துவுடன், மாவட்டத் தோழர்களும், அன்பிலும் மன்னார் குடியும்! நானோ, ஊரூருக்கும், தர்மலிங்கம் எம். பி. அவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்! நடைபெறுவதோ, நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பொது மாநாடு. எண்ணி நாலு நாட்கள்கூட, நான் அந்த மாநாடு குறித்து<noinclude></noinclude> 2x1t34gj5gt0f6rzmotu0z26zx45ysq 1944536 1944393 2026-06-10T08:24:09Z Santharabanu 15679 top space added 1944536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||135}}{{rule}}</noinclude> பகை உணர்ச்சியை மனத்திலே குவித்து வைத்துக்கொண்டிருந் தார்கள். சமயம் வரட்டும் வரட்டும் என்று பார்த்துக்கொண் டிருந்தார்கள் என்பது புரிகிறது நானோர் ஏமாளி - துளியும் இப்படி இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில், கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் - விதிமுறைகளில் மாற்றம் காண விழைகிறார்கள் - என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன் - சிறிதளவு கூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கைபற்றியோ, இத்தனை பகை, அவர்கள் <b>உள்ளத்தில் புற்றரவுபோல</b> இருக்கிறது என்று நினைக்கவே இல்லை. தேக்கிவைக்கப்பட்ட வெள்ளம், கரையிலே சிறு விரிசல் ஏற்பட்ட உடனே, அந்த வழியாகப் புகுந்து, விரிசலை உடைப்பு ஆக்கி, கரையைப் பெயர்த்துக்கொண்டு வெளியே பாய்ந்து, சுற்றுப்புறம் முழுவதையும் வெள்ளக்காடாக்கி, மாடுமனை அழித்து, மக்கள் கூட்டத்தைப் பாழ்படுத்தி, வயல்களை நாசமாக்கி, வாழ்வைக் குலைப்பதுபோலல்லவா. வெறுப்புணர்ச்சி இருந்திருக்கிறது, இந்த அளவு; இன்று வெள்ளமாக வெளியே பாய்கிறது! இதை நான் துளிகூட எதிர்பார்க்கவே இல்லை. அதனால், என் வேதனை மற்றவர்க்குள்ளதைவிடப் பன்மடங்கு அதிகம். அந்த நிலையிலே மாநாடு என்ற அறிவிப்பு. எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை, அதற்கான முன்னேற்பாடு களிலே ஈடுபடும் ஆர்வத்தையும் நான் போதுமான அளவு பெறவில்லை. ஜூலை 13ஆம் தேதி மாநாடு - தம்பி! நான் ஜூலை 9ஆம் தேதிவரையில், வடாற்காட்டிலே கூட்டங்களில் கலந்துகொண் டிருக்கிறேன். பொருளாளர் கருணாநிதி மாநாட்டு அமைப்பாளர் அலுவலையும் சேர்த்துப்பார்க்கவேண்டி நேரிட்டது. கலைக் காட்சிப் பொறுப்போ, நண்பர்கள் பார்த்தசாரதி, இராஜாராம், பொன்னுவேல், செழியன் ஆகியோரிடம்; நண்பர் மதி, நடராசன், நாவலர் ஆகியோர் மாநாட்டுக்கான அறிவிப்புக்களை, அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்தனர். மதுரைத் தோழர் முத்துவுடன், மாவட்டத் தோழர்களும், அன்பிலும் மன்னார் குடியும்! நானோ, ஊரூருக்கும், தர்மலிங்கம் எம். பி. அவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்! நடைபெறுவதோ, நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பொது மாநாடு. எண்ணி நாலு நாட்கள்கூட, நான் அந்த மாநாடு குறித்து<noinclude></noinclude> 395rubv0e3ovdritq5elc0wpmqc3xad 1944538 1944536 2026-06-10T08:26:15Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||135}}{{rule}}</noinclude> பகை உணர்ச்சியை மனத்திலே குவித்து வைத்துக்கொண்டிருந்தார்கள். சமயம் வரட்டும் வரட்டும் என்று பார்த்துக்கொண் டிருந்தார்கள் என்பது புரிகிறது நானோர் ஏமாளி - துளியும் இப்படி இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு எனக்கு எழவே இல்லை! கடைசி விநாடி வரையில், கழகத்தின் கட்டுக்கோப்புக்காக வாதாடுகிறார்கள் - விதிமுறைகளில் மாற்றம் காண விழைகிறார்கள் - என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன் - சிறிதளவு கூட என்னைப்பற்றியோ, அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த ஏற்புடைய கொள்கைபற்றியோ, இத்தனை பகை, அவர்கள் <b>உள்ளத்தில் புற்றரவுபோல</b> இருக்கிறது என்று நினைக்கவே இல்லை. தேக்கிவைக்கப்பட்ட வெள்ளம், கரையிலே சிறு விரிசல் ஏற்பட்ட உடனே, அந்த வழியாகப் புகுந்து, விரிசலை உடைப்பு ஆக்கி, கரையைப் பெயர்த்துக்கொண்டு வெளியே பாய்ந்து, சுற்றுப்புறம் முழுவதையும் வெள்ளக்காடாக்கி, மாடுமனை அழித்து, மக்கள் கூட்டத்தைப் பாழ்படுத்தி, வயல்களை நாசமாக்கி, வாழ்வைக் குலைப்பதுபோலல்லவா. வெறுப்புணர்ச்சி இருந்திருக்கிறது, இந்த அளவு; இன்று வெள்ளமாக வெளியே பாய்கிறது! இதை நான் துளிகூட எதிர்பார்க்கவே இல்லை. அதனால், என் வேதனை மற்றவர்க்குள்ளதைவிடப் பன்மடங்கு அதிகம். அந்த நிலையிலே மாநாடு என்ற அறிவிப்பு. எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை, அதற்கான முன்னேற்பாடுகளிலே ஈடுபடும் ஆர்வத்தையும் நான் போதுமான அளவு பெறவில்லை. ஜூலை 13ஆம் தேதி மாநாடு - தம்பி! நான் ஜூலை 9ஆம் தேதிவரையில், வடாற்காட்டிலே கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். பொருளாளர் கருணாநிதி மாநாட்டு அமைப்பாளர் அலுவலையும் சேர்த்துப்பார்க்கவேண்டி நேரிட்டது. கலைக் காட்சிப் பொறுப்போ, நண்பர்கள் பார்த்தசாரதி, இராஜாராம், பொன்னுவேல், செழியன் ஆகியோரிடம்; நண்பர் மதி, நடராசன், நாவலர் ஆகியோர் மாநாட்டுக்கான அறிவிப்புக்களை, அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்தனர். மதுரைத் தோழர் முத்துவுடன், மாவட்டத் தோழர்களும், அன்பிலும் மன்னார் குடியும்! நானோ, ஊரூருக்கும், தர்மலிங்கம் எம். பி. அவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்! நடைபெறுவதோ, நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பொது மாநாடு. எண்ணி நாலு நாட்கள்கூட, நான் அந்த மாநாடு குறித்து<noinclude></noinclude> 58qfw7tf1gjxbi28fo6e98yjl7wljhx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/137 250 645389 1944394 1941250 2026-06-10T05:24:10Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஏதும் செய்வதற்கு இல்லாமலே போய்விட்டது - எனினும், மாநாடு, எழிலும் ஏற்றமும், பயனும் சுவையும் மிக்க முறையிலே, நடந்தேறித் திராவிடத்துக்குப் புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. எங்கெங்குக் 'கால்' நடுவது என்பதிலே இருந்து எந்த இடத்திலே எந்தப் படம் இருக்கவேண்டும் என்பது வரையிலே, திருச்சி மாநில மாநாட்டிலே, நான் கவனித்துக்கொண்டேன். மதுரையிலோ உள்ளே நுழைகிறவரையில், கொட்டகையின் அளவோ, வகையோ, அதன் வண்ணமோ எனக்குத் தெரியாது. மாநாட்டு வேலைகளுக்கும் எனக்கும் அவ்வளவு தொடர்பற்ற நிலைமை! இருந்தால் என்ன? மாநாடு காண்போர் களித்திடும் சீருடன் நடைபெற்றது. காருலாவிற்று - சீர்கெடக்கூடிய மழையாகிவிடவில்லை - வெப்பத்தைத் தணித்திடும் குளிர் காற்றளிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாள், இயற்கை அன்னை! இந்த நிலையினின்றும், நானோர் பாடம் பெற்றேன். நாம் கவனிக்காவிட்டால், கருத்துடன் காரியமாற்றா விட்டால், செம்மை ஏற்படாது என்ற எண்ணம், அகந்தையளவு எனக்கு எப்போதும் எழுவதில்லை என்றாலும், அச்சம் தரத்தக்க அளவுக்கு எழுவதுண்டு. இதைச் செய்யவேண்டுமே, அதை இப்படி அமைக்கவேண்டுமே எதை எதை எப்படி எப்படிக் கெடுத்துவிடுவார்களோ என்றெல்லாம், ஒரு பதைப்பு, பரபரப்புணர்ச்சி ஏற்படும். அதனால், எல்லாக் காரியத்திலும் ஏதேனும் ஓர்விதமான தொடர்பு இருக்கவேண்டும் என்று துடிப்பதுண்டு! அப்படித் தொடர்பு இருப்பதனால்தான். காரியம் செம்மையாக நடக்கிறது என்ற நினைப்பும் உண்டு - மறைப்பானேன்!! ஆனால், தம்பி! இம்முறை நடைபெற்ற மாநாடு, எனக்கிருந்து வந்த அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை நான் உணரச் செய்தது. தென்னங்கீற்றிலே அணில் அமர்ந்திருக்கும்! காற்றடிக்கும்! கீற்று ஊஞ்சலாடும்! பார்த்திருக்கிறாயல்லவா? அப்போது, அந்த அணில், கீற்றினை ஆடவைப்பது தான் தான் என்று எண்ணிக் கொள்ளுமோ என்னவோ - நடைபெறுகிற காரியத்தில் ஒரு தொடர்பு இருந்தால், அந்தக் காரியத்தை நான் செய்வதாக, எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அது தேவையற்றது என்பதைத்<noinclude></noinclude> dvip9hs8n1vms1uui64uzbfrix9698i 1944539 1944394 2026-06-10T08:26:57Z Santharabanu 15679 top space added 1944539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஏதும் செய்வதற்கு இல்லாமலே போய்விட்டது - எனினும், மாநாடு, எழிலும் ஏற்றமும், பயனும் சுவையும் மிக்க முறையிலே, நடந்தேறித் திராவிடத்துக்குப் புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. எங்கெங்குக் 'கால்' நடுவது என்பதிலே இருந்து எந்த இடத்திலே எந்தப் படம் இருக்கவேண்டும் என்பது வரையிலே, திருச்சி மாநில மாநாட்டிலே, நான் கவனித்துக்கொண்டேன். மதுரையிலோ உள்ளே நுழைகிறவரையில், கொட்டகையின் அளவோ, வகையோ, அதன் வண்ணமோ எனக்குத் தெரியாது. மாநாட்டு வேலைகளுக்கும் எனக்கும் அவ்வளவு தொடர்பற்ற நிலைமை! இருந்தால் என்ன? மாநாடு காண்போர் களித்திடும் சீருடன் நடைபெற்றது. காருலாவிற்று - சீர்கெடக்கூடிய மழையாகிவிடவில்லை - வெப்பத்தைத் தணித்திடும் குளிர் காற்றளிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாள், இயற்கை அன்னை! இந்த நிலையினின்றும், நானோர் பாடம் பெற்றேன். நாம் கவனிக்காவிட்டால், கருத்துடன் காரியமாற்றா விட்டால், செம்மை ஏற்படாது என்ற எண்ணம், அகந்தையளவு எனக்கு எப்போதும் எழுவதில்லை என்றாலும், அச்சம் தரத்தக்க அளவுக்கு எழுவதுண்டு. இதைச் செய்யவேண்டுமே, அதை இப்படி அமைக்கவேண்டுமே எதை எதை எப்படி எப்படிக் கெடுத்துவிடுவார்களோ என்றெல்லாம், ஒரு பதைப்பு, பரபரப்புணர்ச்சி ஏற்படும். அதனால், எல்லாக் காரியத்திலும் ஏதேனும் ஓர்விதமான தொடர்பு இருக்கவேண்டும் என்று துடிப்பதுண்டு! அப்படித் தொடர்பு இருப்பதனால்தான். காரியம் செம்மையாக நடக்கிறது என்ற நினைப்பும் உண்டு - மறைப்பானேன்!! ஆனால், தம்பி! இம்முறை நடைபெற்ற மாநாடு, எனக்கிருந்து வந்த அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை நான் உணரச் செய்தது. தென்னங்கீற்றிலே அணில் அமர்ந்திருக்கும்! காற்றடிக்கும்! கீற்று ஊஞ்சலாடும்! பார்த்திருக்கிறாயல்லவா? அப்போது, அந்த அணில், கீற்றினை ஆடவைப்பது தான் தான் என்று எண்ணிக் கொள்ளுமோ என்னவோ - நடைபெறுகிற காரியத்தில் ஒரு தொடர்பு இருந்தால், அந்தக் காரியத்தை நான் செய்வதாக, எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அது தேவையற்றது என்பதைத்<noinclude></noinclude> tksay6sjegm18wtot2odzdryyordh3w 1944540 1944539 2026-06-10T08:27:33Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஏதும் செய்வதற்கு இல்லாமலே போய்விட்டது - எனினும், மாநாடு, எழிலும் ஏற்றமும், பயனும் சுவையும் மிக்க முறையிலே, நடந்தேறித் திராவிடத்துக்குப் புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று. எங்கெங்குக் 'கால்' நடுவது என்பதிலே இருந்து எந்த இடத்திலே எந்தப் படம் இருக்கவேண்டும் என்பது வரையிலே, திருச்சி மாநில மாநாட்டிலே, நான் கவனித்துக்கொண்டேன். மதுரையிலோ உள்ளே நுழைகிறவரையில், கொட்டகையின் அளவோ, வகையோ, அதன் வண்ணமோ எனக்குத் தெரியாது. மாநாட்டு வேலைகளுக்கும் எனக்கும் அவ்வளவு தொடர்பற்ற நிலைமை! இருந்தால் என்ன? மாநாடு காண்போர் களித்திடும் சீருடன் நடைபெற்றது. காருலாவிற்று - சீர்கெடக்கூடிய மழையாகிவிடவில்லை - வெப்பத்தைத் தணித்திடும் குளிர் காற்றளிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாள், இயற்கை அன்னை! இந்த நிலையினின்றும், நானோர் பாடம் பெற்றேன். நாம் கவனிக்காவிட்டால், கருத்துடன் காரியமாற்றா விட்டால், செம்மை ஏற்படாது என்ற எண்ணம், அகந்தையளவு எனக்கு எப்போதும் எழுவதில்லை என்றாலும், அச்சம் தரத்தக்க அளவுக்கு எழுவதுண்டு. இதைச் செய்யவேண்டுமே, அதை இப்படி அமைக்கவேண்டுமே எதை எதை எப்படி எப்படிக் கெடுத்துவிடுவார்களோ என்றெல்லாம், ஒரு பதைப்பு, பரபரப்புணர்ச்சி ஏற்படும். அதனால், எல்லாக் காரியத்திலும் ஏதேனும் ஓர்விதமான தொடர்பு இருக்கவேண்டும் என்று துடிப்பதுண்டு! அப்படித் தொடர்பு இருப்பதனால்தான். காரியம் செம்மையாக நடக்கிறது என்ற நினைப்பும் உண்டு - மறைப்பானேன்!! ஆனால், தம்பி! இம்முறை நடைபெற்ற மாநாடு, எனக்கிருந்து வந்த அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை நான் உணரச் செய்தது. தென்னங்கீற்றிலே அணில் அமர்ந்திருக்கும்! காற்றடிக்கும்! கீற்று ஊஞ்சலாடும்! பார்த்திருக்கிறாயல்லவா? அப்போது, அந்த அணில், கீற்றினை ஆடவைப்பது தான் தான் என்று எண்ணிக் கொள்ளுமோ என்னவோ - நடைபெறுகிற காரியத்தில் ஒரு தொடர்பு இருந்தால், அந்தக் காரியத்தை நான் செய்வதாக, எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அது தேவையற்றது என்பதைத்<noinclude></noinclude> 54h7nfqq86c3runns9qckthdbbft1ha பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/138 250 645390 1944395 1941251 2026-06-10T05:27:27Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||137}}{{rule}}</noinclude>தெளிவாக்கும் வகையிலே, நான் தொடர்புகொள்ள முடியா திருந்தும், மாநாடு சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும் மிகச் செம்மையாக நடைபெற்றிருக்கின்றன. தம்பி! இதன் உட்பொருள் என்ன, தெரிகிறதல்லவா? நடு நாயகர்களின் திறமையால் மட்டுமே, நமது இயக்கம் வாழ முடியும், வளரமுடியும், என்பது தவறான தத்துவம்; பல இலட்சக்கணக்கானவர்களின் அறிவாற்றலால், உழைப்பினால், வடிவமெடுத்துள்ள இயக்கம், <b>தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும்</b>, மற்றவர்களை இயங்க வைக்கவுமான ஓர் நிலையை, வலிவை, தன்மையைப் பெற்றுவிட்டது! இந்தப் 'பாடம்' எனக்குக் கிடைத்ததைப்போலக் கிடைத்திருந்தால், ஒருவேளை, விலகி வீறாப்புப் பேசுவோர் தன்னடக்கம் கொண்டிருக்க முடியுமோ, என்னவோ!! மாநாட்டு வெற்றி, நிச்சயமாக, ஏற்கனவே இருந்து வந்த தவறான எண்ணத்தைப் போக்கியதுடன், இயக்கத்திடம் எனக்கு முன்பு இருந்ததைவிட அதிகமான மதிப்பும் நம்பிக்கையும் கொள்ளச் செய்தது. வீரனுடைய, ஆற்றலின் காரணமாகத்தான், அம்பு பாய்கிறது! ஆனால், விடுபட்ட <b>அம்புக்கு</b>, செலுத்துபவனிடம் உள்ளதைக்காட்டிலும், <b>வேகமும் துளைக்கும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது அல்லவா? </b> அம்பினை எய்துவிட்டு, எய்தவனே முயன்றாலும் அதன் வேகத்தைத் தடுக்க, கெடுக்க, மடக்க முடியாது அல்லவா? தம்பி! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோர் அளவு, இயக்கம் வளர வகையும் வடிவமும்பெறத் துணை நின்றோம். <b>நமது கூட்டு முயற்சியின் விளைவுதான், தி. மு. க.</b> ஆனால், அந்த அமைப்பு செம்மைப்பட்டதும், நாமே கண்டு வியக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலே, நமது பங்கு இது, அதன் தரம் இத்தகையது என்று, பிரித்தெடுத்துக் காட்ட இயலாது - உரிமை கொண்டாடுவதும் பொருளற்றதாகும். வண்ணக் கலயங்களில் உள்ள சிவப்பும் பச்சையும், நீலமும், மஞ்சளும், கருப்பும் பிறவுமான வண்ணங்கள், தூரிகைகொண்டு ஓவியம் வரைவோனின் திறமையினால், வானமாகி, வாவியாகி, மலராகி, மாதாகி, கனியாகி, கிள்ளையாகி, அருவியாகி, அல்லி யாகிவிடுகிறது. கலயத்தில் இருந்தபோது, வெறும் வண்ணக் குழம்பு! ஓவியமான பிறகோ, புத்தம் புதிய வடிவங்கள்!<noinclude></noinclude> kfbiiuw8w1ngj3i3ki2w94otc8jqttc 1944541 1944395 2026-06-10T08:28:46Z Santharabanu 15679 top space added 1944541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||137}}{{rule}}</noinclude> தெளிவாக்கும் வகையிலே, நான் தொடர்புகொள்ள முடியா திருந்தும், மாநாடு சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும் மிகச் செம்மையாக நடைபெற்றிருக்கின்றன. தம்பி! இதன் உட்பொருள் என்ன, தெரிகிறதல்லவா? நடு நாயகர்களின் திறமையால் மட்டுமே, நமது இயக்கம் வாழ முடியும், வளரமுடியும், என்பது தவறான தத்துவம்; பல இலட்சக்கணக்கானவர்களின் அறிவாற்றலால், உழைப்பினால், வடிவமெடுத்துள்ள இயக்கம், <b>தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும்</b>, மற்றவர்களை இயங்க வைக்கவுமான ஓர் நிலையை, வலிவை, தன்மையைப் பெற்றுவிட்டது! இந்தப் 'பாடம்' எனக்குக் கிடைத்ததைப்போலக் கிடைத்திருந்தால், ஒருவேளை, விலகி வீறாப்புப் பேசுவோர் தன்னடக்கம் கொண்டிருக்க முடியுமோ, என்னவோ!! மாநாட்டு வெற்றி, நிச்சயமாக, ஏற்கனவே இருந்து வந்த தவறான எண்ணத்தைப் போக்கியதுடன், இயக்கத்திடம் எனக்கு முன்பு இருந்ததைவிட அதிகமான மதிப்பும் நம்பிக்கையும் கொள்ளச் செய்தது. வீரனுடைய, ஆற்றலின் காரணமாகத்தான், அம்பு பாய்கிறது! ஆனால், விடுபட்ட <b>அம்புக்கு</b>, செலுத்துபவனிடம் உள்ளதைக்காட்டிலும், <b>வேகமும் துளைக்கும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது அல்லவா? </b> அம்பினை எய்துவிட்டு, எய்தவனே முயன்றாலும் அதன் வேகத்தைத் தடுக்க, கெடுக்க, மடக்க முடியாது அல்லவா? தம்பி! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோர் அளவு, இயக்கம் வளர வகையும் வடிவமும்பெறத் துணை நின்றோம். <b>நமது கூட்டு முயற்சியின் விளைவுதான், தி. மு. க.</b> ஆனால், அந்த அமைப்பு செம்மைப்பட்டதும், நாமே கண்டு வியக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலே, நமது பங்கு இது, அதன் தரம் இத்தகையது என்று, பிரித்தெடுத்துக் காட்ட இயலாது - உரிமை கொண்டாடுவதும் பொருளற்றதாகும். வண்ணக் கலயங்களில் உள்ள சிவப்பும் பச்சையும், நீலமும், மஞ்சளும், கருப்பும் பிறவுமான வண்ணங்கள், தூரிகைகொண்டு ஓவியம் வரைவோனின் திறமையினால், வானமாகி, வாவியாகி, மலராகி, மாதாகி, கனியாகி, கிள்ளையாகி, அருவியாகி, அல்லி யாகிவிடுகிறது. கலயத்தில் இருந்தபோது, வெறும் வண்ணக் குழம்பு! ஓவியமான பிறகோ, புத்தம் புதிய வடிவங்கள்!<noinclude></noinclude> 1z9h63gam08jfhk6zausgz8abhl1az0 1944542 1944541 2026-06-10T08:30:07Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||137}}{{rule}}</noinclude> தெளிவாக்கும் வகையிலே, நான் தொடர்புகொள்ள முடியா திருந்தும், மாநாடு சம்பந்தமான எல்லா நிகழ்ச்சிகளும் மிகச் செம்மையாக நடைபெற்றிருக்கின்றன. தம்பி! இதன் உட்பொருள் என்ன, தெரிகிறதல்லவா? நடு நாயகர்களின் திறமையால் மட்டுமே, நமது இயக்கம் வாழ முடியும், வளரமுடியும், என்பது தவறான தத்துவம்; பல இலட்சக்கணக்கானவர்களின் அறிவாற்றலால், உழைப்பினால், வடிவமெடுத்துள்ள இயக்கம், <b>தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும்</b>, மற்றவர்களை இயங்க வைக்கவுமான ஓர் நிலையை, வலிவை, தன்மையைப் பெற்றுவிட்டது! இந்தப் 'பாடம்' எனக்குக் கிடைத்ததைப்போலக் கிடைத்திருந்தால், ஒருவேளை, விலகி வீறாப்புப் பேசுவோர் தன்னடக்கம் கொண்டிருக்க முடியுமோ, என்னவோ!! மாநாட்டு வெற்றி, நிச்சயமாக, ஏற்கனவே இருந்து வந்த தவறான எண்ணத்தைப் போக்கியதுடன், இயக்கத்திடம் எனக்கு முன்பு இருந்ததைவிட அதிகமான மதிப்பும் நம்பிக்கையும் கொள்ளச் செய்தது. வீரனுடைய, ஆற்றலின் காரணமாகத்தான், அம்பு பாய்கிறது! ஆனால், விடுபட்ட <b>அம்புக்கு</b>, செலுத்துபவனிடம் உள்ளதைக்காட்டிலும், <b>வேகமும் துளைக்கும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது அல்லவா? </b> அம்பினை எய்துவிட்டு, எய்தவனே முயன்றாலும் அதன் வேகத்தைத் தடுக்க, கெடுக்க, மடக்க முடியாது அல்லவா? தம்பி! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோர் அளவு, இயக்கம் வளர வகையும் வடிவமும்பெறத் துணை நின்றோம். <b>நமது கூட்டு முயற்சியின் விளைவுதான், தி. மு. க.</b> ஆனால், அந்த அமைப்பு செம்மைப்பட்டதும், நாமே கண்டு வியக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலே, நமது பங்கு இது, அதன் தரம் இத்தகையது என்று, பிரித்தெடுத்துக் காட்ட இயலாது - உரிமை கொண்டாடுவதும் பொருளற்றதாகும். வண்ணக் கலயங்களில் உள்ள சிவப்பும் பச்சையும், நீலமும், மஞ்சளும், கருப்பும் பிறவுமான வண்ணங்கள், தூரிகைகொண்டு ஓவியம் வரைவோனின் திறமையினால், வானமாகி, வாவியாகி, மலராகி, மாதாகி, கனியாகி, கிள்ளையாகி, அருவியாகி, அல்லியாகிவிடுகிறது. கலயத்தில் இருந்தபோது, வெறும் வண்ணக் குழம்பு! ஓவியமான பிறகோ, புத்தம் புதிய வடிவங்கள்!<noinclude></noinclude> 9kcywjre1apwpym1l0hdgobcuaflhmn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/134 250 645391 1944391 1941247 2026-06-10T05:21:36Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||133}}{{rule}}</noinclude>திருப்பரங்குன்றம் மாநாடு, உன்னையும் என்னையும், மரபின் மாண்பையும், தாயகப் பெருமையையும் மறவாத அனைவரையும், களிப்புக் கடலில் நீந்திடச் செய்தது. எப்படி, அண்ணா! என் பணி? - என்று கேட்கிறாய். என் சொல்வேன், தம்பி! உன்னிடம் இத்தகைய அரும் ஆற்றல் நிரம்ப இருப்பது அறிந்துதானே, நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட, நான் துணிந்தது. தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை என்பதை, நிகழ்ச்சி களையும் நிலைமைகளையும் ஆராய்வோர் அனைவரும் உணருவர். விடுதலை இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரியதோர் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று மாற்றார் இகழ்ந்துரைக்கும் நேரம்! தி. மு. க. சுடுகாடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று, அரசாளும் இடம் (தகுதி என்று கூற மனம் இடம் தரவில்லை) பெற்றதனால், ஆணவமாக அமைச்சர் பேசும் காலம்! உட்குழப்பம் மூட்டிவிட்டோம், இனி ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான் என்று 'சாபம்' கொடுக்கும் போக்கிலே, மாற்றார்கள் தூற்றி நிற்கும் நாட்கள். இத்தகைய நேரத்திலல்லவா, நாம் கூடினோம் - திருப்பரங் குன்றத்தில். தம்பி! திருச்சியிலே நடைபெற்ற மாநில மாநாட்டுக் காக, நாம் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகள், செய்த விளம்பரங்கள், திரட்டிய ஆதரவுகள்போல, இம்முறை எதுவும் செய்ய முடியாத நிலை - அறிவாய். விடுதலை இயக்கத்திலே ஒரு வெடிப்பு உண்டாக்கி, வீழ்த்தும் சதி திட்டமிடப்பட்டதோ, அல்லது கேடான நிலைமை அப்படி ஒரு விளைவுக்கு வழிகோலியதோ நான் அறியேன்; எனினும் ஏற்பட்ட நெருக்கடி, என் நெஞ்சுக்குப் பெரிய அதிர்ச்சியாகவும், நமது தோழர்களுக்குப் பெருத்த வேதனையாகவும் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அச்சு முரிந்துவிட்டது என்று அச்சமூட்டியோரும், பயிர் அழிகிறது என்று பச்சாதாபம் காட்டினோரும், கழகம் கலைகிறது என்று கலக்கமூட்டியோரும் பலர்.<noinclude></noinclude> 67s6bmqfh4hql17sztisjmrt4aatn2o 1944532 1944391 2026-06-10T08:18:41Z Santharabanu 15679 top space added 1944532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||133}}{{rule}}</noinclude> திருப்பரங்குன்றம் மாநாடு, உன்னையும் என்னையும், மரபின் மாண்பையும், தாயகப் பெருமையையும் மறவாத அனைவரையும், களிப்புக் கடலில் நீந்திடச் செய்தது. எப்படி, அண்ணா! என் பணி? - என்று கேட்கிறாய். என் சொல்வேன், தம்பி! உன்னிடம் இத்தகைய அரும் ஆற்றல் நிரம்ப இருப்பது அறிந்துதானே, நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட, நான் துணிந்தது. தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை என்பதை, நிகழ்ச்சி களையும் நிலைமைகளையும் ஆராய்வோர் அனைவரும் உணருவர். விடுதலை இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரியதோர் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று மாற்றார் இகழ்ந்துரைக்கும் நேரம்! தி. மு. க. சுடுகாடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று, அரசாளும் இடம் (தகுதி என்று கூற மனம் இடம் தரவில்லை) பெற்றதனால், ஆணவமாக அமைச்சர் பேசும் காலம்! உட்குழப்பம் மூட்டிவிட்டோம், இனி ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான் என்று 'சாபம்' கொடுக்கும் போக்கிலே, மாற்றார்கள் தூற்றி நிற்கும் நாட்கள். இத்தகைய நேரத்திலல்லவா, நாம் கூடினோம் - திருப்பரங் குன்றத்தில். தம்பி! திருச்சியிலே நடைபெற்ற மாநில மாநாட்டுக் காக, நாம் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகள், செய்த விளம்பரங்கள், திரட்டிய ஆதரவுகள்போல, இம்முறை எதுவும் செய்ய முடியாத நிலை - அறிவாய். விடுதலை இயக்கத்திலே ஒரு வெடிப்பு உண்டாக்கி, வீழ்த்தும் சதி திட்டமிடப்பட்டதோ, அல்லது கேடான நிலைமை அப்படி ஒரு விளைவுக்கு வழிகோலியதோ நான் அறியேன்; எனினும் ஏற்பட்ட நெருக்கடி, என் நெஞ்சுக்குப் பெரிய அதிர்ச்சியாகவும், நமது தோழர்களுக்குப் பெருத்த வேதனையாகவும் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அச்சு முரிந்துவிட்டது என்று அச்சமூட்டியோரும், பயிர் அழிகிறது என்று பச்சாதாபம் காட்டினோரும், கழகம் கலைகிறது என்று கலக்கமூட்டியோரும் பலர்.<noinclude></noinclude> 6c1wadqixll15otjrag5a77xm24aqoe 1944533 1944532 2026-06-10T08:22:28Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||133}}{{rule}}</noinclude> திருப்பரங்குன்றம் மாநாடு, உன்னையும் என்னையும், மரபின் மாண்பையும், தாயகப் பெருமையையும் மறவாத அனைவரையும், களிப்புக் கடலில் நீந்திடச் செய்தது. எப்படி, அண்ணா! என் பணி? - என்று கேட்கிறாய். என் சொல்வேன், தம்பி! உன்னிடம் இத்தகைய அரும் ஆற்றல் நிரம்ப இருப்பது அறிந்துதானே, நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட, நான் துணிந்தது. தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை என்பதை, நிகழ்ச்சி களையும் நிலைமைகளையும் ஆராய்வோர் அனைவரும் உணருவர். விடுதலை இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரியதோர் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று மாற்றார் இகழ்ந்துரைக்கும் நேரம்! தி. மு. க. சுடுகாடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று, அரசாளும் இடம் (தகுதி என்று கூற மனம் இடம் தரவில்லை) பெற்றதனால், ஆணவமாக அமைச்சர் பேசும் காலம்! உட்குழப்பம் மூட்டிவிட்டோம், இனி ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான் என்று 'சாபம்' கொடுக்கும் போக்கிலே, மாற்றார்கள் தூற்றி நிற்கும் நாட்கள். இத்தகைய நேரத்திலல்லவா, நாம் கூடினோம் - திருப்பரங் குன்றத்தில். தம்பி! திருச்சியிலே நடைபெற்ற மாநில மாநாட்டுக்காக, நாம் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகள், செய்த விளம்பரங்கள், திரட்டிய ஆதரவுகள்போல, இம்முறை எதுவும் செய்ய முடியாத நிலை - அறிவாய். விடுதலை இயக்கத்திலே ஒரு வெடிப்பு உண்டாக்கி, வீழ்த்தும் சதி திட்டமிடப்பட்டதோ, அல்லது கேடான நிலைமை அப்படி ஒரு விளைவுக்கு வழிகோலியதோ நான் அறியேன்; எனினும் ஏற்பட்ட நெருக்கடி, என் நெஞ்சுக்குப் பெரிய அதிர்ச்சியாகவும், நமது தோழர்களுக்குப் பெருத்த வேதனையாகவும் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அச்சு முரிந்துவிட்டது என்று அச்சமூட்டியோரும், பயிர் அழிகிறது என்று பச்சாதாபம் காட்டினோரும், கழகம் கலைகிறது என்று கலக்கமூட்டியோரும் பலர்.<noinclude></noinclude> 0up38ys7pcqo0tkj5jekxeohwvvfklx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/139 250 645392 1944405 1941252 2026-06-10T05:55:46Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வண்ணக்குழம்பின்றி ஓவியம் இல்லை! உண்மை! எனினும், ஓவியமான பிறகு, வண்ணக்குழம்பு என்னால்தான் இவையாவும் என்று உரிமைகொண்டாடவா முடியும்? நம் உழைப்பு, தம்பி, அந்த வண்ணக்குழம்புக்கு ஒப்பிடலாம்! <b>ஓவியன் நிலையில் உனது காலக்கரம்!!</b> காலக்கரத்தின் வேலைத் திறத்தால், வடிவம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் ஈடுபட்டு, பதவி பிடிக்கும் அரசியல் சூதாட்டத்துக்காக அமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால், அப்போது, மேட்டுக் குடியினர், மேடை அதிரப் பேசுவோர், கூடுவிட்டுக் கூடு பாய்வோர், குலவிக் கெடுக்கவல்லோர், சிண்டு முடிந்துவிடுவோர், சீமான்களை வலை போட்டு இழுக்கத் தெரிந்தோர், இருபொருள் தரும் 'இலட்சியம்' கூறுவோர் எனும் தரத்தினர் தேவைப்படுவர். எவரிடம் இரும்புப் பெட்டி அல்லது மற்றவர்களின் இரும்புப் பெட்டியைத் தனதாக்கிக்கொள்ளும் தந்திரமோ இருக்கிறதோ அவர், கட்சிக்குக் கர்த்தாவாகிடவேண்டிவரும். அவருடைய 'ஆதரவு' இருந்தால் மட்டுமே கட்சி வளரும், வெற்றி கிட்டும். அவர் விலகினாலோ, அல்லது அவர் செல்வம் கரைந்து போய்விட்டாலோ, கட்சி கருகும். அரசியலில் உள்ள, விளைந்த காட்டுக் குருவிகள், அப்படிப்பட்ட கட்சியில் 'பசையும் உருசியும்' உள்ள வரையில், இடம் பெற்று இருக்கும்; பசையும், உருசியும் உலர்ந்தால், பறந்தோடும் வேறோர் பசை தேடி. எவருக்கு என்ன விலை? யாரைக் கொண்டு யாரை வீழ்த்தலாம்? எவரெவருக்குள்ளே பகை உளது? - என்று மோப்பம் பிடிக்கத் தெரிந்தவர்கள் அப்படிப்பட்ட கட்சிக்கு நடுநாயகர்களாகக்கூடும். ஆனால், தி. மு. க. தேர்தலில் ஈடுபடுகிறது என்றாலும், இடம் பிடித்து இனிப்புப்பெற அல்ல; பதவி பிடித்துச் சுவைக்க அல்ல; பல்வேறு நாட்டின் தலைவர்கள், இன்று அக்கறை காட்ட மறுக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினை குறித்து; அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஆதரவைப் பெறவும், தேர்தல் வெற்றியின் மூலம், பொதுமக்களின் ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கத்துக்காகவே! எனவே, தேர்தலில் ஈடுபட்டாலும், கழகம் விடுதலை இயக்கம் எனும் மாண்பினை இழந்துவிடாது;<noinclude></noinclude> iaqg02iu4kf9njn7swhkqemc9ezgrom 1944543 1944405 2026-06-10T08:30:20Z Santharabanu 15679 top space added 1944543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> வண்ணக்குழம்பின்றி ஓவியம் இல்லை! உண்மை! எனினும், ஓவியமான பிறகு, வண்ணக்குழம்பு என்னால்தான் இவையாவும் என்று உரிமைகொண்டாடவா முடியும்? நம் உழைப்பு, தம்பி, அந்த வண்ணக்குழம்புக்கு ஒப்பிடலாம்! <b>ஓவியன் நிலையில் உனது காலக்கரம்!!</b> காலக்கரத்தின் வேலைத் திறத்தால், வடிவம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் ஈடுபட்டு, பதவி பிடிக்கும் அரசியல் சூதாட்டத்துக்காக அமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால், அப்போது, மேட்டுக் குடியினர், மேடை அதிரப் பேசுவோர், கூடுவிட்டுக் கூடு பாய்வோர், குலவிக் கெடுக்கவல்லோர், சிண்டு முடிந்துவிடுவோர், சீமான்களை வலை போட்டு இழுக்கத் தெரிந்தோர், இருபொருள் தரும் 'இலட்சியம்' கூறுவோர் எனும் தரத்தினர் தேவைப்படுவர். எவரிடம் இரும்புப் பெட்டி அல்லது மற்றவர்களின் இரும்புப் பெட்டியைத் தனதாக்கிக்கொள்ளும் தந்திரமோ இருக்கிறதோ அவர், கட்சிக்குக் கர்த்தாவாகிடவேண்டிவரும். அவருடைய 'ஆதரவு' இருந்தால் மட்டுமே கட்சி வளரும், வெற்றி கிட்டும். அவர் விலகினாலோ, அல்லது அவர் செல்வம் கரைந்து போய்விட்டாலோ, கட்சி கருகும். அரசியலில் உள்ள, விளைந்த காட்டுக் குருவிகள், அப்படிப்பட்ட கட்சியில் 'பசையும் உருசியும்' உள்ள வரையில், இடம் பெற்று இருக்கும்; பசையும், உருசியும் உலர்ந்தால், பறந்தோடும் வேறோர் பசை தேடி. எவருக்கு என்ன விலை? யாரைக் கொண்டு யாரை வீழ்த்தலாம்? எவரெவருக்குள்ளே பகை உளது? - என்று மோப்பம் பிடிக்கத் தெரிந்தவர்கள் அப்படிப்பட்ட கட்சிக்கு நடுநாயகர்களாகக்கூடும். ஆனால், தி. மு. க. தேர்தலில் ஈடுபடுகிறது என்றாலும், இடம் பிடித்து இனிப்புப்பெற அல்ல; பதவி பிடித்துச் சுவைக்க அல்ல; பல்வேறு நாட்டின் தலைவர்கள், இன்று அக்கறை காட்ட மறுக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினை குறித்து; அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஆதரவைப் பெறவும், தேர்தல் வெற்றியின் மூலம், பொதுமக்களின் ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கத்துக்காகவே! எனவே, தேர்தலில் ஈடுபட்டாலும், கழகம் விடுதலை இயக்கம் எனும் மாண்பினை இழந்துவிடாது;<noinclude></noinclude> mbiup3d4kumtmyugimk71geuousvdlf 1944544 1944543 2026-06-10T08:31:11Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> வண்ணக்குழம்பின்றி ஓவியம் இல்லை! உண்மை! எனினும், ஓவியமான பிறகு, வண்ணக்குழம்பு என்னால்தான் இவையாவும் என்று உரிமைகொண்டாடவா முடியும்? நம் உழைப்பு, தம்பி, அந்த வண்ணக்குழம்புக்கு ஒப்பிடலாம்! <b>ஓவியன் நிலையில் உனது காலக்கரம்!!</b> காலக்கரத்தின் வேலைத் திறத்தால், வடிவம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலில் ஈடுபட்டு, பதவி பிடிக்கும் அரசியல் சூதாட்டத்துக்காக அமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால், அப்போது, மேட்டுக் குடியினர், மேடை அதிரப் பேசுவோர், கூடுவிட்டுக் கூடு பாய்வோர், குலவிக் கெடுக்கவல்லோர், சிண்டு முடிந்துவிடுவோர், சீமான்களை வலை போட்டு இழுக்கத் தெரிந்தோர், இருபொருள் தரும் 'இலட்சியம்' கூறுவோர் எனும் தரத்தினர் தேவைப்படுவர். எவரிடம் இரும்புப் பெட்டி அல்லது மற்றவர்களின் இரும்புப் பெட்டியைத் தனதாக்கிக்கொள்ளும் தந்திரமோ இருக்கிறதோ அவர், கட்சிக்குக் கர்த்தாவாகிடவேண்டிவரும். அவருடைய 'ஆதரவு' இருந்தால் மட்டுமே கட்சி வளரும், வெற்றி கிட்டும். அவர் விலகினாலோ, அல்லது அவர் செல்வம் கரைந்து போய்விட்டாலோ, கட்சி கருகும். அரசியலில் உள்ள, விளைந்த காட்டுக் குருவிகள், அப்படிப்பட்ட கட்சியில் 'பசையும் உருசியும்' உள்ள வரையில், இடம் பெற்று இருக்கும்; பசையும், உருசியும் உலர்ந்தால், பறந்தோடும் வேறோர் பசை தேடி. எவருக்கு என்ன விலை? யாரைக் கொண்டு யாரை வீழ்த்தலாம்? எவரெவருக்குள்ளே பகை உளது? - என்று மோப்பம் பிடிக்கத் தெரிந்தவர்கள் அப்படிப்பட்ட கட்சிக்கு நடுநாயகர்களாகக்கூடும். ஆனால், தி. மு. க. தேர்தலில் ஈடுபடுகிறது என்றாலும், இடம் பிடித்து இனிப்புப்பெற அல்ல; பதவி பிடித்துச் சுவைக்க அல்ல; பல்வேறு நாட்டின் தலைவர்கள், இன்று அக்கறை காட்ட மறுக்கிறார்கள், திராவிட நாடு பிரச்சினை குறித்து; அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், ஆதரவைப் பெறவும், தேர்தல் வெற்றியின் மூலம், பொதுமக்களின் ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கத்துக்காகவே! எனவே, தேர்தலில் ஈடுபட்டாலும், கழகம் விடுதலை இயக்கம் எனும் மாண்பினை இழந்துவிடாது;<noinclude></noinclude> 7u9f4qzrtycdnr3dm2sgqvg7wctp589 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/140 250 645393 1944404 1941253 2026-06-10T05:54:47Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||139}}{{rule}}</noinclude>விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு கட்டமாகவே, கழகம் தேர்தலில் ஈடுபடுவதைக் கொள்கிறது. தம்பி! விடுதலை இயக்கத்துக்குத் தேவைப்படுபவர் - எட்டு இலட்சம் கொட்டிக் கொடுக்கத்தக்க செல்வவான் அல்ல - எதிர்ப்புக்கு அஞ்சாத ஏறுகள் வேண்டும்! வேளைக்கு ஒரு வேடமிடும், அரசியல் கழைக்கூத்தாடிகள் அல்ல, எந்தச் செயலையும், இலட்சியத்துக்கு வலிவு தரத்தக்கதாக அமைத்துக் கொள்ளத்தக்கவர்கள் வேண்டும். அவர்கள் குடிசை வாழ்வோ ராக இருக்கலாம்; ஆனால், கொள்கைத் தங்கம்கொண்டோராக இருத்தல்வேண்டும். தேர்தலில் ஈடுபடலாம்; ஆனால் வெற்றிக் காக ஏக்கம்கொண்டு, <b>கூடாநட்பும், கொள்கை இழப்பும் தேடிக்கொள்ளக்கூடாது.</b> தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, நாடாள முடியும்; நாடாண்டால்தான், நமது கட்சியின் வளர்ச்சிக்கான வழி தேடிக் கொள்ளலாம் என்ற நப்பாசையால், ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், சிற்றரசர்களையும் சீமான்களையும், ஆலை அதிபர்களையும் தட்டிக் கொடுத்தும் கட்டித் தழுவியும், பணம் பெற்று வருவது உலகறிந்த இரகசியமாகும். சபர்மதி குடிலில் இருந்து சாந்தம் போதித்து, காந்தியார் திரட்டிய செல்வாக்கு மட்டும், தேர்தலில் வெற்றிபெறப் போதாது என்று உணர்ந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, இன்று கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேர்தலில் செலவழித்துத் தான், வெற்றிபெற முடியும் என்பதை அறிந்து, அந்தப் பணம் பெற, எப்படிப்பட்ட படுபாதகச் செயல் புரிவோராக இருப்பினும் கவலை இல்லை என்று கூறிப் பணம் திரட்டிடக் காண்கிறோம். "நமஸ்தே" - பயபக்தியுடன் கூறுகிறான், கட்டுடல் படைத்தவன். "நமஸ்தே!" என்று நடுக்கும் குரலில் பேசுகிறார், அந்தக் காங்கிரஸ் தலைவர். "நெடுநாட்களாக எனக்கு ஒரு ஆவல், என்னால் ஆன தொண்டு செய்யவேண்டும் என்று. இன்றுதான் அதற்குச் சந்தர்ப்பம் கிட்டிற்று; <b>ஜென்மம் சாபல்யமாகும் இனி</b>," என்று உருக்கமாகப் பேசுகிறான், ஓங்கி வளர்ந்தவன். பயத்தால் உதடு உலருகிறது, நா வறளுகிறது, உடல் ஆடுகிறது காங்கிரஸ்<noinclude></noinclude> 4cdl0c2jqwsdcewl7kbhav6yc24z8xz 1944545 1944404 2026-06-10T08:33:03Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||139}}{{rule}}</noinclude>விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு கட்டமாகவே, கழகம் தேர்தலில் ஈடுபடுவதைக் கொள்கிறது. தம்பி! விடுதலை இயக்கத்துக்குத் தேவைப்படுபவர் - எட்டு இலட்சம் கொட்டிக் கொடுக்கத்தக்க செல்வவான் அல்ல - எதிர்ப்புக்கு அஞ்சாத ஏறுகள் வேண்டும்! வேளைக்கு ஒரு வேடமிடும், அரசியல் கழைக்கூத்தாடிகள் அல்ல, எந்தச் செயலையும், இலட்சியத்துக்கு வலிவு தரத்தக்கதாக அமைத்துக் கொள்ளத்தக்கவர்கள் வேண்டும். அவர்கள் குடிசை வாழ்வோராக இருக்கலாம்; ஆனால், கொள்கைத் தங்கம்கொண்டோராக இருத்தல்வேண்டும். தேர்தலில் ஈடுபடலாம்; ஆனால் வெற்றிக்காக ஏக்கம்கொண்டு, <b>கூடாநட்பும், கொள்கை இழப்பும் தேடிக்கொள்ளக்கூடாது.</b> தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, நாடாள முடியும்; நாடாண்டால்தான், நமது கட்சியின் வளர்ச்சிக்கான வழி தேடிக் கொள்ளலாம் என்ற நப்பாசையால், ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், சிற்றரசர்களையும் சீமான்களையும், ஆலை அதிபர்களையும் தட்டிக் கொடுத்தும் கட்டித் தழுவியும், பணம் பெற்று வருவது உலகறிந்த இரகசியமாகும். சபர்மதி குடிலில் இருந்து சாந்தம் போதித்து, காந்தியார் திரட்டிய செல்வாக்கு மட்டும், தேர்தலில் வெற்றிபெறப் போதாது என்று உணர்ந்துகொண்ட காங்கிரஸ் கட்சி, இன்று கோடிக்கணக்கான ரூபாய்களைத் தேர்தலில் செலவழித்துத் தான், வெற்றிபெற முடியும் என்பதை அறிந்து, அந்தப் பணம் பெற, எப்படிப்பட்ட படுபாதகச் செயல் புரிவோராக இருப்பினும் கவலை இல்லை என்று கூறிப் பணம் திரட்டிடக் காண்கிறோம். "நமஸ்தே" - பயபக்தியுடன் கூறுகிறான், கட்டுடல் படைத்தவன். "நமஸ்தே!" என்று நடுக்கும் குரலில் பேசுகிறார், அந்தக் காங்கிரஸ் தலைவர். "நெடுநாட்களாக எனக்கு ஒரு ஆவல், என்னால் ஆன தொண்டு செய்யவேண்டும் என்று. இன்றுதான் அதற்குச் சந்தர்ப்பம் கிட்டிற்று; <b>ஜென்மம் சாபல்யமாகும் இனி</b>," என்று உருக்கமாகப் பேசுகிறான், ஓங்கி வளர்ந்தவன். பயத்தால் உதடு உலருகிறது, நா வறளுகிறது, உடல் ஆடுகிறது காங்கிரஸ்<noinclude></noinclude> odtbngs76xhic8k6zu73ka913t3yvzc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/141 250 645394 1944409 1941254 2026-06-10T05:59:57Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>தலைவருக்கு; ஏனெனில், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டிற்று என்று சொல்பவன், பெரிய கொள்ளைக்காரன்; இடம்: மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு காடு!! வழிப்பறி நடத்துபவன்; போலீஸ் வளையத்தில் சிக்காதவன் இந்தக் கொள்ளைக்காரன் - இவனிடம் வந்து சிக்கிக் கொண்டோமே; பாவி, என்ன பாடுபடுத்தப்போகிறானோ என்று எண்ணினார் அந்தக் காங்கிரஸ் பிரமுகர். கும்பிடுவதும் குழையக் குழையப் பேசுவதும், பிறகு குத்தவும் வெட்டவும் குழி பறித்துத் தள்ளவுந்தான் இருக்கும்! வேறென்ன? கொள்ளைக்காரன் கொஞ்சிப் போவானா? சூது! பசப்பு! ஏமாற்றுவித்தை - என்றெல்லாம் எண்ணி நடுநடுங்கினார் அந்தக் காங்கிரஸ்காரர். ஆனால், நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! அந்தக் கொள்ளைக் காரன், பெருந்தொகை நன்கொடையாகத் தந்து, அதனைக் காங்கிரசின் தேர்தல் நிதிக்கு வைத்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான்! நடத்துவது வழிப்பறி! கொடுப்பது காங்கிரசுக்கு நன்கொடை! எப்படி இருக்கிறது விசித்திரம்!! அதுகூடக் கிடக்கட்டும், எப்படியெல்லாம் இருக்கிறது பார்த்தனையா காங்கிரசுக்குத் தேர்தல் நிதி குவியும் வகை!! வழிப்பறி நடத்துபவன், எவரெவருடைய வயிறு எரிய எரியப் பார்த்தானோ இந்தப் பணத்தை! காது அறுத்தானோ! யாராரைப் பதறப்பதற வெட்டினானோ! 'ஐயா! ஐயா! எல்லா நகைகளையும் பறித்துக்கொண்டாயிற்று; இதை மட்டும் விட்டுவிடு! அவர் தொட்டுக் கட்டிய தாலி! புனிதமானது! என் உயிரினும் மேலானது! இதை மட்டும் பறிக்காதே!' என்று காரிகை கதறி இருப்பாள் - அவன், கன்னத்தில் அறைந்தானோ, கைகளை முறித்தானோ, கடகடவெனச் சிரித்தானோ, கனல் கக்கினானோ, யாரறிவார்கள்! தாலியையும் பறித்தெடுக்கத் தயங்காத காதகன்! அவன் தருகிறான், கொள்ளைப் பொருளிலே, ஒரு பங்கு! காங்கிரசின் தேர்தல் நிதிக்கு!! பெறுகிறார் பிரமுகர், கூச்சமின்றி. கதைகளிலே மட்டுமே படித்திருக்கிறோம், "தாயே! மகமாயி! தயாபரியே! அருளுமம்மா! போகும் இடந்தன்னிலே, ஆபத்து வராமல் காத்து நில்லம்மா! மாகாளி! மகேஸ்வரி! ஆடு கோழியுடன் ஆர்ப்பாட்ட பூஜையெல்லாம், அடியேன் செய்திடுவேன், அன்னை மனம் மகிழ! மையிருட்டு வேளையிலே மதிலேறித் தாவுகையில், எவர் கண்ணிலும் சிக்காமல் எனைக்காக்க வேணுமம்மா! -" என்றெல்லாம் திருடர்கள்<noinclude></noinclude> ba3mz3kc70q8vulyv7jtj9royxjyhkr 1944546 1944409 2026-06-10T08:34:48Z Santharabanu 15679 top space added 1944546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தலைவருக்கு; ஏனெனில், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டிற்று என்று சொல்பவன், பெரிய கொள்ளைக்காரன்; இடம்: மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு காடு!! வழிப்பறி நடத்துபவன்; போலீஸ் வளையத்தில் சிக்காதவன் இந்தக் கொள்ளைக்காரன் - இவனிடம் வந்து சிக்கிக் கொண்டோமே; பாவி, என்ன பாடுபடுத்தப்போகிறானோ என்று எண்ணினார் அந்தக் காங்கிரஸ் பிரமுகர். கும்பிடுவதும் குழையக் குழையப் பேசுவதும், பிறகு குத்தவும் வெட்டவும் குழி பறித்துத் தள்ளவுந்தான் இருக்கும்! வேறென்ன? கொள்ளைக்காரன் கொஞ்சிப் போவானா? சூது! பசப்பு! ஏமாற்றுவித்தை - என்றெல்லாம் எண்ணி நடுநடுங்கினார் அந்தக் காங்கிரஸ்காரர். ஆனால், நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! அந்தக் கொள்ளைக் காரன், பெருந்தொகை நன்கொடையாகத் தந்து, அதனைக் காங்கிரசின் தேர்தல் நிதிக்கு வைத்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான்! நடத்துவது வழிப்பறி! கொடுப்பது காங்கிரசுக்கு நன்கொடை! எப்படி இருக்கிறது விசித்திரம்!! அதுகூடக் கிடக்கட்டும், எப்படியெல்லாம் இருக்கிறது பார்த்தனையா காங்கிரசுக்குத் தேர்தல் நிதி குவியும் வகை!! வழிப்பறி நடத்துபவன், எவரெவருடைய வயிறு எரிய எரியப் பார்த்தானோ இந்தப் பணத்தை! காது அறுத்தானோ! யாராரைப் பதறப்பதற வெட்டினானோ! 'ஐயா! ஐயா! எல்லா நகைகளையும் பறித்துக்கொண்டாயிற்று; இதை மட்டும் விட்டுவிடு! அவர் தொட்டுக் கட்டிய தாலி! புனிதமானது! என் உயிரினும் மேலானது! இதை மட்டும் பறிக்காதே!' என்று காரிகை கதறி இருப்பாள் - அவன், கன்னத்தில் அறைந்தானோ, கைகளை முறித்தானோ, கடகடவெனச் சிரித்தானோ, கனல் கக்கினானோ, யாரறிவார்கள்! தாலியையும் பறித்தெடுக்கத் தயங்காத காதகன்! அவன் தருகிறான், கொள்ளைப் பொருளிலே, ஒரு பங்கு! காங்கிரசின் தேர்தல் நிதிக்கு!! பெறுகிறார் பிரமுகர், கூச்சமின்றி. கதைகளிலே மட்டுமே படித்திருக்கிறோம், "தாயே! மகமாயி! தயாபரியே! அருளுமம்மா! போகும் இடந்தன்னிலே, ஆபத்து வராமல் காத்து நில்லம்மா! மாகாளி! மகேஸ்வரி! ஆடு கோழியுடன் ஆர்ப்பாட்ட பூஜையெல்லாம், அடியேன் செய்திடுவேன், அன்னை மனம் மகிழ! மையிருட்டு வேளையிலே மதிலேறித் தாவுகையில், எவர் கண்ணிலும் சிக்காமல் எனைக்காக்க வேணுமம்மா! -" என்றெல்லாம் திருடர்கள்<noinclude></noinclude> g5h1hpl76orrxtadom4gerdnb07xqec 1944547 1944546 2026-06-10T08:35:26Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> தலைவருக்கு; ஏனெனில், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டிற்று என்று சொல்பவன், பெரிய கொள்ளைக்காரன்; இடம்: மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு காடு!! வழிப்பறி நடத்துபவன்; போலீஸ் வளையத்தில் சிக்காதவன் இந்தக் கொள்ளைக்காரன் - இவனிடம் வந்து சிக்கிக் கொண்டோமே; பாவி, என்ன பாடுபடுத்தப்போகிறானோ என்று எண்ணினார் அந்தக் காங்கிரஸ் பிரமுகர். கும்பிடுவதும் குழையக் குழையப் பேசுவதும், பிறகு குத்தவும் வெட்டவும் குழி பறித்துத் தள்ளவுந்தான் இருக்கும்! வேறென்ன? கொள்ளைக்காரன் கொஞ்சிப் போவானா? சூது! பசப்பு! ஏமாற்றுவித்தை - என்றெல்லாம் எண்ணி நடுநடுங்கினார் அந்தக் காங்கிரஸ்காரர். ஆனால், நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! அந்தக் கொள்ளைக் காரன், பெருந்தொகை நன்கொடையாகத் தந்து, அதனைக் காங்கிரசின் தேர்தல் நிதிக்கு வைத்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான்! நடத்துவது வழிப்பறி! கொடுப்பது காங்கிரசுக்கு நன்கொடை! எப்படி இருக்கிறது விசித்திரம்!! அதுகூடக் கிடக்கட்டும், எப்படியெல்லாம் இருக்கிறது பார்த்தனையா காங்கிரசுக்குத் தேர்தல் நிதி குவியும் வகை!! வழிப்பறி நடத்துபவன், எவரெவருடைய வயிறு எரிய எரியப் பார்த்தானோ இந்தப் பணத்தை! காது அறுத்தானோ! யாராரைப் பதறப்பதற வெட்டினானோ! 'ஐயா! ஐயா! எல்லா நகைகளையும் பறித்துக்கொண்டாயிற்று; இதை மட்டும் விட்டுவிடு! அவர் தொட்டுக் கட்டிய தாலி! புனிதமானது! என் உயிரினும் மேலானது! இதை மட்டும் பறிக்காதே!' என்று காரிகை கதறி இருப்பாள் - அவன், கன்னத்தில் அறைந்தானோ, கைகளை முறித்தானோ, கடகடவெனச் சிரித்தானோ, கனல் கக்கினானோ, யாரறிவார்கள்! தாலியையும் பறித்தெடுக்கத் தயங்காத காதகன்! அவன் தருகிறான், கொள்ளைப் பொருளிலே, ஒரு பங்கு! காங்கிரசின் தேர்தல் நிதிக்கு!! பெறுகிறார் பிரமுகர், கூச்சமின்றி. கதைகளிலே மட்டுமே படித்திருக்கிறோம், "தாயே! மகமாயி! தயாபரியே! அருளுமம்மா! போகும் இடந்தன்னிலே, ஆபத்து வராமல் காத்து நில்லம்மா! மாகாளி! மகேஸ்வரி! ஆடு கோழியுடன் ஆர்ப்பாட்ட பூஜையெல்லாம், அடியேன் செய்திடுவேன், அன்னை மனம் மகிழ! மையிருட்டு வேளையிலே மதிலேறித் தாவுகையில், எவர் கண்ணிலும் சிக்காமல் எனைக்காக்க வேணுமம்மா! -" என்றெல்லாம் திருடர்கள்<noinclude></noinclude> j8x1ulc46u6axdiwo769z4vvl46kfda பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/142 250 645395 1944412 1941256 2026-06-10T06:01:39Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||141}}{{rule}}</noinclude>வேண்டிக்கொள்வார்களாம், கொள்ளை அடித்துவிட்டுப் பிடிபடாமல் காடு திரும்பியதும், 'வேண்டுதலை' நிறைவேற்று வார்களாம்!! காட்டுத்தேவதைகளுக்குப் பூஜை போடும் கொள்ளைக்காரக் கூட்டம்போலல்லவா, மத்தியப் பிரதேசத்துக் கொள்ளைக்காரன் நடந்துகொண்டிருக்கிறான்! இவனைத் தள்ளுங்கள்! தலைமறவாகக் கிடப்பவன் சட்டத்தை மதிக்காதவன்! போலீசுக்குத் தப்பித்திரியும் பேர்வழி! பிடிபட்டால், சுட்டுத்தள்ளுவார்கள். சமுதாயம் இவனைக் காறித் துப்பும். <b>முந்திராவைத்</b> தெரியுமல்லவா? பல நாட்கள், பத்திரிகைகளிலே, அவனுடைய பெயர் அடிபட்டபடி இருந்ததே! படம்கூட வெளியிட்டார்களே, நினைவு இருக்கிறதல்லவா? உருட்டுவிழி இல்லை; முறுக்கு மீசை இல்லை! கையிலே கட்டாரி இல்லை, கட்டுடல்கூட இல்லை! 'நவநாகரிக'த் தோற்றம்! <b>பார்வையிலே பாகு கலந்தளிக்கக்</b>கூட முடிகிறது அவனால், சமுதாயத்திலே, அவனுக்குப் பளபளப்பான இடம்! மாளிகை வாசி! சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவன்! ஆனால், சட்டம் எட்டிப் பிடிக்க முடியாத விதத்தில், ஏமாற்று வித்தைகள் பல நடத்தி, கோடிகோடியாகப் பொருள் ஈட்டினான். துரைத்தனத்தின் கண்களிலேயே மண்தூவிக் கோடி ரூபாய் பறித்துக்கொண்டான்! எனினும், அவனை அயோக்யன் என்றல்ல, சீமான் என்று அழைத்தனர். அக்கிரமக்காரன் என்று அல்ல, 'அதிர்ஷ்டசாலி' என்று அழைத்தனர்! அவன் வணிகக் கோமான்! வியாபார தந்திரம் தெரிந்த நிபுணன்! - என்றெல்லாம் பாராட்டினர். அவனோ, வழிப்பறி நடத்திய கொள்ளைக் காரனைவிடக் கொடுமைகளைக் கூசாமல் செய்துதான் 'கோடீஸ்வரன்' ஆனான். கத்தி காட்டினான் வழிப்பறிக்காரன் - இவன் புன்னகை காட்டினான், பொருள் பறிக்க! காடு, வழிப்பறிக்காரனிடம் உறைவிடம், தொழிலிடம்! இவனுக்கோ நகரம் உறைவிடம்! அங்காடி தொழிலிடம்! பகற் கொள்ளைக்காரன் இவன் - பதறப்பதற வெட்டினானில்லை, பசப்பிப் பசப்பி ஏய்த்தான்!<noinclude></noinclude> ibvtochq1iwvfaxbkbg8qhkn3hsno5m 1944567 1944412 2026-06-10T10:04:21Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||141}}{{rule}}</noinclude>வேண்டிக்கொள்வார்களாம், கொள்ளை அடித்துவிட்டுப் பிடிபடாமல் காடு திரும்பியதும், 'வேண்டுதலை' நிறைவேற்று வார்களாம்!! காட்டுத்தேவதைகளுக்குப் பூஜை போடும் கொள்ளைக்காரக் கூட்டம்போலல்லவா, மத்தியப் பிரதேசத்துக் கொள்ளைக்காரன் நடந்துகொண்டிருக்கிறான்! இவனைத் தள்ளுங்கள்! தலைமறவாகக் கிடப்பவன் சட்டத்தை மதிக்காதவன்! போலீசுக்குத் தப்பித்திரியும் பேர்வழி! பிடிபட்டால், சுட்டுத்தள்ளுவார்கள். சமுதாயம் இவனைக் காறித் துப்பும். <b>முந்திராவைத்</b> தெரியுமல்லவா? பல நாட்கள், பத்திரிகைகளிலே, அவனுடைய பெயர் அடிபட்டபடி இருந்ததே! படம்கூட வெளியிட்டார்களே, நினைவு இருக்கிறதல்லவா? உருட்டுவிழி இல்லை; முறுக்கு மீசை இல்லை! கையிலே கட்டாரி இல்லை, கட்டுடல்கூட இல்லை! 'நவநாகரிக'த் தோற்றம்! <b>பார்வையிலே பாகு கலந்தளிக்கக்</b>கூட முடிகிறது அவனால், சமுதாயத்திலே, அவனுக்குப் பளபளப்பான இடம்! மாளிகை வாசி! சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவன்! ஆனால், சட்டம் எட்டிப் பிடிக்க முடியாத விதத்தில், ஏமாற்று வித்தைகள் பல நடத்தி, கோடிகோடியாகப் பொருள் ஈட்டினான். துரைத்தனத்தின் கண்களிலேயே மண்தூவிக் கோடி ரூபாய் பறித்துக்கொண்டான்! எனினும், அவனை அயோக்யன் என்றல்ல, சீமான் என்று அழைத்தனர். அக்கிரமக்காரன் என்று அல்ல, 'அதிர்ஷ்டசாலி' என்று அழைத்தனர்! அவன் வணிகக் கோமான்! வியாபார தந்திரம் தெரிந்த நிபுணன்! - என்றெல்லாம் பாராட்டினர். அவனோ, வழிப்பறி நடத்திய கொள்ளைக் காரனைவிடக் கொடுமைகளைக் கூசாமல் செய்துதான் 'கோடீஸ்வரன்' ஆனான். கத்தி காட்டினான் வழிப்பறிக்காரன் - இவன் புன்னகை காட்டினான், பொருள் பறிக்க! காடு, வழிப்பறிக்காரனிடம் உறைவிடம், தொழிலிடம்! இவனுக்கோ நகரம் உறைவிடம்! அங்காடி தொழிலிடம்! பகற் கொள்ளைக்காரன் இவன் - பதறப்பதற வெட்டினானில்லை, பசப்பிப் பசப்பி ஏய்த்தான்!<noinclude></noinclude> nh5s21a2abncd2i8niyfol0o5kpo4tt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/143 250 645396 1944417 1941257 2026-06-10T06:03:03Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட பகற்கொள்ளைக்காரன், காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பணம் கொடுத்திருக்கிறான்!! பெற்றுக்கொண்டனர், காங்கிரஸ் தலைவர்கள் - கூசாமல், குமுறாமல்!! முந்திரா ஊழல்பற்றிய விசாரணை நடந்தபோது, இந்த அக்கிரமம் அம்பலமாயிற்று!! காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பெரும் பொருள் கொடுத்து, ஆளவந்தார்களின் அன்புக்கு உரியவனாகிவிட்டதனாலேயே, முந்திரா, அக்கிரமச் செயலைத் துணிந்து செய்திடமுடிந்தது என்று ஆய்ந்தறிந்த அறிவாளர் அறிந்தனர்!! வழிப்பறி நடத்தியோ, மோசடி செய்தோ, இருட்டுச் சந்தை நடத்தியோ, இலாப வேட்டையாடியோ, பொருள் ஈட்டி னாலும், எமக்கு அதிலே என்ன பங்கு? என்று கேட்டுப் பெற்றிடும் போக்கிலே, நாட்டுக்குரியார் யாமே! - என்று நாப்பறை கொட்டும் காங்கிரஸ் நாயகர்கள் நடந்துகொண்டனர். நாடு அறியும் நல்லோர் மனம் பதறிற்று; நாமும் அறிவோம். "சட்டப்படி, குற்றமற்றதாக இருக்கலாம் - ஆனால், பெரிய தொழிலதிபர்களிடம் கைநீட்டிப் பெரும் பொருளை ஆளும் கட்சி பெறுவது, அறம் ஆகாது! அத்தகைய முறைகேடு நேரிடுவது, குடியாட்சியின் மாண்பினையே குலைத்துவிடும்" என்று நீதிமன்றத்தினரே எடுத்துக் காட்டினர், <b>டாட்டா</b> எனும் வட நாட்டுக் கோடீஸ்வரரிடமிருந்து பெரும் தொகையைக் காங்கிரஸ், தேர்தல் நிதியாகப் பெற்றது குறித்து வழக்கொன்று தொடுக்கப்பட்டபோது. "காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சிப்பொறுப்பு இருந்தால் மட்டுமே, எமது தனி உடைமைக்குப் பாதுகாப்பும், இலாபம் ஈட்டிக் குவிக்க நல்வாய்ப்பும் இருக்கும்; மேலும் காங்கிரசாட்சி அமைந்தால்தான் எஃகுத் தொழில் தேசிய மயமாகப்படாம லிருக்கும்; எனவே, எங்கள் தனிஉடைமையின் தற்பாதுகாப்புக்காகக் காங்கிரசாட்சி தொடர்ந்து இருக்கச் செய்வது, எமது கடமையாகிறது" என்ற கருத்துப்பட, வழக்கு மன்றத்திலே, டாட்டா வணிகக் கோட்டத்தினர் எடுத்துரைத்தனர். தம்பி! காட்டில் மறைந்து திரியும் கொள்ளைக்காரனும், சட்டத்தை ஏய்த்துச் சுரண்டும் பகற்கொள்ளைக்காரனும், சர்க்காரிடம் சலுகைகள் பெற்றுக் கொழுத்துக் கிடக்கும்<noinclude></noinclude> 986oaba9tn1w5a9ekplmzryyjb0qsl9 1944568 1944417 2026-06-10T10:05:06Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட பகற்கொள்ளைக்காரன், காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பணம் கொடுத்திருக்கிறான்!! பெற்றுக்கொண்டனர், காங்கிரஸ் தலைவர்கள் - கூசாமல், குமுறாமல்!! முந்திரா ஊழல்பற்றிய விசாரணை நடந்தபோது, இந்த அக்கிரமம் அம்பலமாயிற்று!! காங்கிரசின் தேர்தல் நிதிக்குப் பெரும் பொருள் கொடுத்து, ஆளவந்தார்களின் அன்புக்கு உரியவனாகிவிட்டதனாலேயே, முந்திரா, அக்கிரமச் செயலைத் துணிந்து செய்திடமுடிந்தது என்று ஆய்ந்தறிந்த அறிவாளர் அறிந்தனர்!! வழிப்பறி நடத்தியோ, மோசடி செய்தோ, இருட்டுச் சந்தை நடத்தியோ, இலாப வேட்டையாடியோ, பொருள் ஈட்டி னாலும், எமக்கு அதிலே என்ன பங்கு? என்று கேட்டுப் பெற்றிடும் போக்கிலே, நாட்டுக்குரியார் யாமே! - என்று நாப்பறை கொட்டும் காங்கிரஸ் நாயகர்கள் நடந்துகொண்டனர். நாடு அறியும் நல்லோர் மனம் பதறிற்று; நாமும் அறிவோம். "சட்டப்படி, குற்றமற்றதாக இருக்கலாம் - ஆனால், பெரிய தொழிலதிபர்களிடம் கைநீட்டிப் பெரும் பொருளை ஆளும் கட்சி பெறுவது, அறம் ஆகாது! அத்தகைய முறைகேடு நேரிடுவது, குடியாட்சியின் மாண்பினையே குலைத்துவிடும்" என்று நீதிமன்றத்தினரே எடுத்துக் காட்டினர், <b>டாட்டா</b> எனும் வட நாட்டுக் கோடீஸ்வரரிடமிருந்து பெரும் தொகையைக் காங்கிரஸ், தேர்தல் நிதியாகப் பெற்றது குறித்து வழக்கொன்று தொடுக்கப்பட்டபோது. "காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சிப்பொறுப்பு இருந்தால் மட்டுமே, எமது தனி உடைமைக்குப் பாதுகாப்பும், இலாபம் ஈட்டிக் குவிக்க நல்வாய்ப்பும் இருக்கும்; மேலும் காங்கிரசாட்சி அமைந்தால்தான் எஃகுத் தொழில் தேசிய மயமாகப்படாம லிருக்கும்; எனவே, எங்கள் தனிஉடைமையின் தற்பாதுகாப்புக்காகக் காங்கிரசாட்சி தொடர்ந்து இருக்கச் செய்வது, எமது கடமையாகிறது" என்ற கருத்துப்பட, வழக்கு மன்றத்திலே, டாட்டா வணிகக் கோட்டத்தினர் எடுத்துரைத்தனர். தம்பி! காட்டில் மறைந்து திரியும் கொள்ளைக்காரனும், சட்டத்தை ஏய்த்துச் சுரண்டும் பகற்கொள்ளைக்காரனும், சர்க்காரிடம் சலுகைகள் பெற்றுக் கொழுத்துக் கிடக்கும்<noinclude></noinclude> lqklkcpesn4lsjr8iwg21aajwtc05at பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/144 250 645397 1944421 1941258 2026-06-10T06:04:59Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||143}}{{rule}}</noinclude> கோடீஸ்வரனும், கொட்டிக் கொடுக்கும், பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கிறோம் பொதுமக்கள் ஆதரவால்! - என்று பேசுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். ஒரிசாவில், ஒரு திங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் நடத்திய தில்லுமுல்லுகளைப் பல தலைவர்கள் எடுத்துக் காட்டினர் - படித்திடும் எவரும் பதறாமல் இருக்க முடியாது. பத்துப் பதினைந்தே ஆண்டுகளில், ஒரிசா மாநிலத்திலேயே மிகப் பெரிய முதலாளியாகத் தொழிலதிபராக ஓங்கி வளர்ந்து விட்டுள்ள <b>பட்நாயக்</b> என்பவர் பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டி, வாரி இறைத்து, வெற்றியைத் தட்டிப் பறித்துக் கொண்டார். பொது மக்களின் நல்லாதரவை அல்ல; பெரும் பொருள் படைத்தோர் துணிந்து இறங்கினால், ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கித் தமக்கு "எடுபிடி'யாக்கிக்கொள்ள முடியும், என்பதைத்தான் ஒரிசாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "சட்டம் ஒரு கழுதை - பயந்து பின்னால் செல்பவர்களைக் காலால் உதைக்கும்; துணிந்து முன்புறம் சென்றாலோ, பயந்து ஓடும்" என்று காலஞ்சென்ற <b>கல்கி</b> கூறினார். ஒரிசாத் தேர்தலில் சட்டம் குறுக்கிடுமோ என்ற அச்சமற்று, பட்நாயக் நடந்துகொண்டார்; வெற்றி கிட்டிற்று. இந்தியத் துரைத்தனத்தின் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் கிருஷ்ணமேனன். இவர் நேருவின் நண்பர்; பட்நாயக்குக்கு மிகவும் வேண்டியவர். பாதுகாப்புத்துறைக்கு ஜீப் மோட்டார்கள் தேவை; இதற்கான 'ஒப்பந்தம்' பட்நாயக்கின் யோசனைப்படி பம்பாயில் உள்ள மகேந்திரா கம்பெனிக்குத் தரப்பட்டதாம்! அந்த மகேந்திரா கம்பெனியினர், பாதுகாப்புத் துறைக்காகத் தயாரிக்கப் பட்டிருந்த ஜீப் மோட்டார்களில் நூறு மோட்டார்களை, இலவசமாக, ஒரிசா தேர்தலுக்குக் கொடுத்தனராம். ஒரிசாவில், மூலை முடுக்கெல்லாம், ஓடிக்கொண்டிருந்த, புத்தம் புதிய ஜீப் மோட்டார்களைக் கண்டு, பொதுமக்களே மலைத்துப் போயினர்; மாற்றுக் கட்சிகள் மருண்டு போயின! தேர்தல் முடிந்ததும், ஜீப் மோட்டார்கள், திரும்பவும் கம்பெனிக்கு அனுப்பப்பட்டுப் பழுதுபார்க்கப்பட்டு, மெருகு ஏற்றப்பட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்படுமாம்!!<noinclude></noinclude> 9z96jo4wwecjgj6wokta7cinlmsx13p 1944569 1944421 2026-06-10T10:06:43Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||143}}{{rule}}</noinclude> கோடீஸ்வரனும், கொட்டிக் கொடுக்கும், பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கிறோம் பொதுமக்கள் ஆதரவால்! - என்று பேசுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். ஒரிசாவில், ஒரு திங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் நடத்திய தில்லுமுல்லுகளைப் பல தலைவர்கள் எடுத்துக் காட்டினர் - படித்திடும் எவரும் பதறாமல் இருக்க முடியாது. பத்துப் பதினைந்தே ஆண்டுகளில், ஒரிசா மாநிலத்திலேயே மிகப் பெரிய முதலாளியாகத் தொழிலதிபராக ஓங்கி வளர்ந்து விட்டுள்ள <b>பட்நாயக்</b> என்பவர் பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டி, வாரி இறைத்து, வெற்றியைத் தட்டிப் பறித்துக் கொண்டார். பொது மக்களின் நல்லாதரவை அல்ல; பெரும் பொருள் படைத்தோர் துணிந்து இறங்கினால், ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கித் தமக்கு "எடுபிடி'யாக்கிக்கொள்ள முடியும், என்பதைத்தான் ஒரிசாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "சட்டம் ஒரு கழுதை - பயந்து பின்னால் செல்பவர்களைக் காலால் உதைக்கும்; துணிந்து முன்புறம் சென்றாலோ, பயந்து ஓடும்" என்று காலஞ்சென்ற <b>கல்கி</b> கூறினார். ஒரிசாத் தேர்தலில் சட்டம் குறுக்கிடுமோ என்ற அச்சமற்று, பட்நாயக் நடந்துகொண்டார்; வெற்றி கிட்டிற்று. இந்தியத் துரைத்தனத்தின் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சர் கிருஷ்ணமேனன். இவர் நேருவின் நண்பர்; பட்நாயக்குக்கு மிகவும் வேண்டியவர். பாதுகாப்புத்துறைக்கு ஜீப் மோட்டார்கள் தேவை; இதற்கான 'ஒப்பந்தம்' பட்நாயக்கின் யோசனைப்படி பம்பாயில் உள்ள மகேந்திரா கம்பெனிக்குத் தரப்பட்டதாம்! அந்த மகேந்திரா கம்பெனியினர், பாதுகாப்புத் துறைக்காகத் தயாரிக்கப் பட்டிருந்த ஜீப் மோட்டார்களில் நூறு மோட்டார்களை, இலவசமாக, ஒரிசா தேர்தலுக்குக் கொடுத்தனராம். ஒரிசாவில், மூலை முடுக்கெல்லாம், ஓடிக்கொண்டிருந்த, புத்தம் புதிய ஜீப் மோட்டார்களைக் கண்டு, பொதுமக்களே மலைத்துப் போயினர்; மாற்றுக் கட்சிகள் மருண்டு போயின! தேர்தல் முடிந்ததும், ஜீப் மோட்டார்கள், திரும்பவும் கம்பெனிக்கு அனுப்பப்பட்டுப் பழுதுபார்க்கப்பட்டு, மெருகு ஏற்றப்பட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்படுமாம்!!<noinclude></noinclude> 9f071fm2jpow2mp2juwgzn9tddtdvaj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/145 250 645398 1944425 1941259 2026-06-10T06:06:33Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> சட்டப்படி பார்த்தால், மிகப் பெரிய குற்றம். அறமுறைப்படி பார்த்தால், சகிக்க முடியாத அக்கிரமம். ஆயினும், துணிந்து செய்தனர்; சட்டம் வாய் பொத்திக் கிடந்தது; அறம், மாண்டுதான் <b>ஆண்டு பதினான்கு ஆகி விட்டனவே!</b> பாவம், அறம் என்ன செய்ய முடியும்!! ஒரிசாவில் நடைபெற்றது, ஒத்திகை! <b>பட்நாயக்</b> முறை பொதுத் தேர்தலின்போது எல்லா மாநிலங்களிலும் புகுத்தப் படும் - என்று வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களைவிட 'ஆபத்தானவர்கள்' அந்த யோசனையை, உள்ளத்திலே மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டிலிருந்து ஜனநாயகத் தேன் துளியைச் சொட்ட விடுபவர்கள்!! <b>கோர்வாலா</b> என்பவர், நிர்வாகத்துறை நிபுணர். அவருக்குக் காங்கிரஸ் கட்சியிடம் மனமாச்சரியம் ஏற்பட எந்தக் காரணமும் இல்லை - எதையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த எரிச்சல்காரர் அல்ல; எதிர்க்கட்சி நடத்திடுபவருமல்ல. துரைத்தனம் தூய்மையாக நடத்தப்படாவிட்டால், பொது மக்களின் வாழ்வு குலையும் என்ற எண்ணம் கொண்டவர். காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டும் போக்கைக் கோர்வாலா மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். மக்களாட்சி முறைப்படி நடத்தப்படும் தேர்தல் பணச் செலவின்றி நடைபெறாதுதான்; பெரும் அளவு பணம் தேவைப் படத்தான் செய்யும்; ஆனால், அந்தப் பணம், எந்த முறையில், எவரெவரிடம் திரட்டப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான், நேர்மை நிலைக்குமா என்பது இருக்கிறது. இலட்சக்கணக்கிலும், பல்லாயிரக் கணக்கிலும், பெரிய புள்ளிகளிடம், காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டுகிறது. அந்த விதமாகத் தேர்தல் நிதி திரட்டினால், பிறகு அந்தப் பெரிய புள்ளிகளைப் பாதிக்கத்தக்க திட்டங்களை, எப்படி காங்கிரசாட்சி மேற்கொள்ள முடியும்? சமதர்மம்பற்றி இனிக்க இனிக்கப் பேசலாமே தவிர, செயல்பட முடியுமா? - என்று கோர்வாலா, கேட்கிறார். பதில் உண்டா? இல்லை!! <b>அசோக் மேத்தா</b> கூறினார், பம்பாய் அமைச்சராக <b>மொரார்ஜி தேசாய்</b> இருந்தபோது, பெரிய தொழிலதிபர்களை<noinclude></noinclude> 6meect8d9kj3p6g6ogcly4p6d9sp5lg 1944570 1944425 2026-06-10T10:08:10Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> சட்டப்படி பார்த்தால், மிகப் பெரிய குற்றம். அறமுறைப்படி பார்த்தால், சகிக்க முடியாத அக்கிரமம். ஆயினும், துணிந்து செய்தனர்; சட்டம் வாய் பொத்திக் கிடந்தது; அறம், மாண்டுதான் <b>ஆண்டு பதினான்கு ஆகி விட்டனவே!</b> பாவம், அறம் என்ன செய்ய முடியும்!! ஒரிசாவில் நடைபெற்றது, ஒத்திகை! <b>பட்நாயக்</b> முறை பொதுத் தேர்தலின்போது எல்லா மாநிலங்களிலும் புகுத்தப் படும் - என்று வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களைவிட 'ஆபத்தானவர்கள்' அந்த யோசனையை, உள்ளத்திலே மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டிலிருந்து ஜனநாயகத் தேன் துளியைச் சொட்ட விடுபவர்கள்!! <b>கோர்வாலா</b> என்பவர், நிர்வாகத்துறை நிபுணர். அவருக்குக் காங்கிரஸ் கட்சியிடம் மனமாச்சரியம் ஏற்பட எந்தக் காரணமும் இல்லை - எதையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த எரிச்சல்காரர் அல்ல; எதிர்க்கட்சி நடத்திடுபவருமல்ல. துரைத்தனம் தூய்மையாக நடத்தப்படாவிட்டால், பொது மக்களின் வாழ்வு குலையும் என்ற எண்ணம் கொண்டவர். காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டும் போக்கைக் கோர்வாலா மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். மக்களாட்சி முறைப்படி நடத்தப்படும் தேர்தல் பணச் செலவின்றி நடைபெறாதுதான்; பெரும் அளவு பணம் தேவைப் படத்தான் செய்யும்; ஆனால், அந்தப் பணம், எந்த முறையில், எவரெவரிடம் திரட்டப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான், நேர்மை நிலைக்குமா என்பது இருக்கிறது. இலட்சக்கணக்கிலும், பல்லாயிரக் கணக்கிலும், பெரிய புள்ளிகளிடம், காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டுகிறது. அந்த விதமாகத் தேர்தல் நிதி திரட்டினால், பிறகு அந்தப் பெரிய புள்ளிகளைப் பாதிக்கத்தக்க திட்டங்களை, எப்படி காங்கிரசாட்சி மேற்கொள்ள முடியும்? சமதர்மம்பற்றி இனிக்க இனிக்கப் பேசலாமே தவிர, செயல்பட முடியுமா? - என்று கோர்வாலா, கேட்கிறார். பதில் உண்டா? இல்லை!! <b>அசோக் மேத்தா</b> கூறினார், பம்பாய் அமைச்சராக <b>மொரார்ஜி தேசாய்</b> இருந்தபோது, பெரிய தொழிலதிபர்களை<noinclude></noinclude> f7t2hveytaqjo2s58ag6qou5q7tybk9 1944571 1944570 2026-06-10T10:09:17Z Santharabanu 15679 1944571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> சட்டப்படி பார்த்தால், மிகப் பெரிய குற்றம். அறமுறைப்படி பார்த்தால், சகிக்க முடியாத அக்கிரமம். ஆயினும், துணிந்து செய்தனர்; சட்டம் வாய் பொத்திக் கிடந்தது; அறம், மாண்டுதான் <b>ஆண்டு பதினான்கு ஆகி விட்டனவே!</b> பாவம், அறம் என்ன செய்ய முடியும்!! ஒரிசாவில் நடைபெற்றது, ஒத்திகை! <b>பட்நாயக்</b> முறை பொதுத் தேர்தலின்போது எல்லா மாநிலங்களிலும் புகுத்தப்படும் - என்று வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களைவிட 'ஆபத்தானவர்கள்' அந்த யோசனையை, உள்ளத்திலே மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டிலிருந்து ஜனநாயகத் தேன் துளியைச் சொட்ட விடுபவர்கள்!! <b>கோர்வாலா</b> என்பவர், நிர்வாகத்துறை நிபுணர். அவருக்குக் காங்கிரஸ் கட்சியிடம் மனமாச்சரியம் ஏற்பட எந்தக் காரணமும் இல்லை - எதையும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த எரிச்சல்காரர் அல்ல; எதிர்க்கட்சி நடத்திடுபவருமல்ல. துரைத்தனம் தூய்மையாக நடத்தப்படாவிட்டால், பொது மக்களின் வாழ்வு குலையும் என்ற எண்ணம் கொண்டவர். காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டும் போக்கைக் கோர்வாலா மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். மக்களாட்சி முறைப்படி நடத்தப்படும் தேர்தல் பணச் செலவின்றி நடைபெறாதுதான்; பெரும் அளவு பணம் தேவைப் படத்தான் செய்யும்; ஆனால், அந்தப் பணம், எந்த முறையில், எவரெவரிடம் திரட்டப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான், நேர்மை நிலைக்குமா என்பது இருக்கிறது. இலட்சக்கணக்கிலும், பல்லாயிரக் கணக்கிலும், பெரிய புள்ளிகளிடம், காங்கிரஸ் கட்சி தேர்தல் நிதி திரட்டுகிறது. அந்த விதமாகத் தேர்தல் நிதி திரட்டினால், பிறகு அந்தப் பெரிய புள்ளிகளைப் பாதிக்கத்தக்க திட்டங்களை, எப்படி காங்கிரசாட்சி மேற்கொள்ள முடியும்? சமதர்மம்பற்றி இனிக்க இனிக்கப் பேசலாமே தவிர, செயல்பட முடியுமா? - என்று கோர்வாலா, கேட்கிறார். பதில் உண்டா? இல்லை!! <b>அசோக் மேத்தா</b> கூறினார், பம்பாய் அமைச்சராக <b>மொரார்ஜி தேசாய்</b> இருந்தபோது, பெரிய தொழிலதிபர்களை<noinclude></noinclude> cb2zetf4zktn23f0wbuakfhgesvo3rz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/146 250 645399 1944432 1941261 2026-06-10T06:09:06Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||145}}{{rule}}</noinclude> நயத்தாலும் பயத்தாலும் மயக்கியும் மிரட்டியும் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டினார் என்று. பெரிய தொழிலதிபர்கள் எவரும் பணம் தந்ததில்லை என்றா மொரார்ஜி தேசாய், பதிலளித்தார்? இல்லை! மிரட்ட வில்லை! மயக்கவில்லை! தாமாக முன்வந்து, காங்கிரஸ் மீது உள்ள பக்தியினால் பணம் கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்! புத்திக்கூர்மை இருக்கிறது பதிலில், ஆனால், இதயசுத்தி இருக்கிறதா? <b>சில நாடகங்களில்</b> காண்கிறோமல்லவா, கூரிய கட்டாரியை முதுகுப்புறம் அழுத்திக்கொண்டே, இன்று முதல் படைத்தலைவர் இட்டதுதான் சட்டம்! யோகாப்பியாசத்தில் நான் ஈடுபடப்போவதால், இன்றுமுதல், அரச அலுவலை, என் அன்புக்குரிய படைத்தலைவர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடுகிறேன் - என்ற பிரகடனத்தை மன்னனைக் கொண்டே பிரபுக்களுக்குப் படித்துக் காட்டச் செய்யும் படைத் தலைவனை!! <b>அதுபோல</b>, அதிகாரபலம், அதனால் மூட்டக் கூடிய அச்சம், எழச்செய்யக்கூடிய ஆசை, இவைகளைக் காட்டிக் காங்கிரஸ் அமைச்சர்கள், கனதனவான்களை, காங்கிரஸ் பக்தர்கள் என்று அறிவிக்கச் செய்கிறார்கள். இது நாடறிந்த உண்மை!! வேறொன்று; பணம் அதிகம் இல்லாவிட்டாலும், அதை ஈடுசெய்யத்தக்க விதமான தந்திர புத்தி படைத்த சிலர், சீமான்களாகிக்கொண்டிருக்கும் நிலையிலுள்ளவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் திருப்பார்வை நமது பக்கம் விழ வைக்கத் தந்திர முறைகளைக் கையாண்டு வருகின்றனர். தம்பி! இது நடைபெற்ற ஒரு சம்பவம்! ஊரையும் பேரையும் மட்டும் கேட்காதே. {{left_margin|3em|"அவருக்கு, நமது கழகத்தின்மீது மிகுந்த பற்றுதல்." "அவருக்கா? சிவப்பழம் என்கிறார்கள். நம்மை நாத்திகர் என்று தூற்றுகிறார் என்கிறார்கள்." "வெளியே அப்படித்தான் தெரிவார்; பேசுவார்; ஆனால், உள்ளூர அவர், முழுக்க முழுக்க நம்மவர்." "என்னவோ அப்பா! என்னால் நம்பமுடியவில்லை!" "யாருமேதான் நம்பமாட்டார்கள். ஆனால் நான் சொல்வது உண்மை என்பதை, நீங்களே பார்க்கத்தானே }}<noinclude></noinclude> e5nyopfsi1ocsz6qo0en4p3ic4eedb6 1944573 1944432 2026-06-10T10:10:34Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||145}}{{rule}}</noinclude> நயத்தாலும் பயத்தாலும் மயக்கியும் மிரட்டியும் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டினார் என்று. பெரிய தொழிலதிபர்கள் எவரும் பணம் தந்ததில்லை என்றா மொரார்ஜி தேசாய், பதிலளித்தார்? இல்லை! மிரட்டவில்லை! மயக்கவில்லை! தாமாக முன்வந்து, காங்கிரஸ் மீது உள்ள பக்தியினால் பணம் கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்! புத்திக்கூர்மை இருக்கிறது பதிலில், ஆனால், இதயசுத்தி இருக்கிறதா? <b>சில நாடகங்களில்</b> காண்கிறோமல்லவா, கூரிய கட்டாரியை முதுகுப்புறம் அழுத்திக்கொண்டே, இன்று முதல் படைத்தலைவர் இட்டதுதான் சட்டம்! யோகாப்பியாசத்தில் நான் ஈடுபடப்போவதால், இன்றுமுதல், அரச அலுவலை, என் அன்புக்குரிய படைத்தலைவர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடுகிறேன் - என்ற பிரகடனத்தை மன்னனைக் கொண்டே பிரபுக்களுக்குப் படித்துக் காட்டச் செய்யும் படைத் தலைவனை!! <b>அதுபோல</b>, அதிகாரபலம், அதனால் மூட்டக் கூடிய அச்சம், எழச்செய்யக்கூடிய ஆசை, இவைகளைக் காட்டிக் காங்கிரஸ் அமைச்சர்கள், கனதனவான்களை, காங்கிரஸ் பக்தர்கள் என்று அறிவிக்கச் செய்கிறார்கள். இது நாடறிந்த உண்மை!! வேறொன்று; பணம் அதிகம் இல்லாவிட்டாலும், அதை ஈடுசெய்யத்தக்க விதமான தந்திரபுத்தி படைத்த சிலர், சீமான்களாகிக்கொண்டிருக்கும் நிலையிலுள்ளவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் திருப்பார்வை நமது பக்கம் விழ வைக்கத் தந்திர முறைகளைக் கையாண்டு வருகின்றனர். தம்பி! இது நடைபெற்ற ஒரு சம்பவம்! ஊரையும் பேரையும் மட்டும் கேட்காதே. {{left_margin|3em|"அவருக்கு, நமது கழகத்தின்மீது மிகுந்த பற்றுதல்." "அவருக்கா? சிவப்பழம் என்கிறார்கள். நம்மை நாத்திகர் என்று தூற்றுகிறார் என்கிறார்கள்." "வெளியே அப்படித்தான் தெரிவார்; பேசுவார்; ஆனால், உள்ளூர அவர், முழுக்க முழுக்க நம்மவர்." "என்னவோ அப்பா! என்னால் நம்பமுடியவில்லை!" "யாருமேதான் நம்பமாட்டார்கள். ஆனால் நான் சொல்வது உண்மை என்பதை, நீங்களே பார்க்கத்தானே }}<noinclude></noinclude> f9ayr55m63ewfuwk182qqiavpcymeev பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/147 250 645400 1944437 1941262 2026-06-10T06:11:17Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|போகிறீர்கள் - இன்று. கூட்டம் முடிந்ததும், விருந்து அவர்வீட்டிலேதான்!!" "அவருடைய வீட்டிலா? ஏனப்பா, அப்படி ஏற்பாடு செய்கிறாய்? நமது கட்சியில் உள்ளவரல்லவே, அவர்!" "நம்ம வீட்டிலேதான் விருந்து, என் கண்டிப்பான உத்தரவு - என்று கூறிவிட்டாரே." "அவர் யாரப்பா, நமக்கு உத்தரவு போட?" "உத்தரவு என்று நான் தவறுதலாகச் சொல்லிவிட்டேன். வேண்டுகோள்!"}} தம்பி! எனக்கும், ஒரு ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்து, என்னை அழைத்துப்போக வந்திருந்த கழகத் தோழருக்கும், நடைபெற்ற உரையாடல், மேலே குறித்திருப்பது. கழகத் தோழர் குறிப்பிட்டவர், பெரிய புள்ளியாகிக் கொண்டுவருபவர்! அதற்கான அறிகுறிகள் இருந்தன! அலுவல்கள் அப்படி! நிலபுலம் உண்டு! தொழில்கள் பலப்பல! அவருடைய அரசியல் என்பது, <b>மொத்தமாக ஒரு வாரத்துப் பத்திரிகையை, ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுப்</b> பழைய பேப்பர்க் காரனுக்கு எடை போட்டுக் கொடுக்கும் அளவிலும் வகையிலுந்தான் இருந்தது. அமைச்சர்கள், திறப்புவிழாக்களுக்கு வருகிறபோதெல்லாம், அடக்க ஒடுக்கத்தையும், பற்று பாசத்தையும் காட்டிக்கொள்ளும் விதமாக, மேடைக்குப் பக்கம் அமருவார்! அமைச்சரின் உரையின் அருமையை உணர்த்தக் கையொலி எழுப்புவார்! கதர்மாலை போடுவார்! கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, அவருக்கு நமது கழகம் என்றால் உயிர் என்று தோழர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கூட்டம் நடைபெற்றது; அவர் மேடை அருகில் இல்லை. மாலை போட்டார்கள் எனக்கு; அவர் பெயரால் அல்ல; அவருடைய <b>கம்பெனியின்</b> பெயரால்!! பொருளும் விளங்கிற்று; என் நண்பனுடைய திகைப்பும் தெரிந்தது. :விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். :வீட்டுக்கு வெளியே வரவேற்று நின்றார், பெரிய புள்ளி!<noinclude></noinclude> ha43uk2rkbpr5ba240xhg1bbiu3xyyc 1944574 1944437 2026-06-10T10:11:47Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|போகிறீர்கள் - இன்று. கூட்டம் முடிந்ததும், விருந்து அவர்வீட்டிலேதான்!!" "அவருடைய வீட்டிலா? ஏனப்பா, அப்படி ஏற்பாடு செய்கிறாய்? நமது கட்சியில் உள்ளவரல்லவே, அவர்!" "நம்ம வீட்டிலேதான் விருந்து, என் கண்டிப்பான உத்தரவு - என்று கூறிவிட்டாரே." "அவர் யாரப்பா, நமக்கு உத்தரவு போட?" "உத்தரவு என்று நான் தவறுதலாகச் சொல்லிவிட்டேன். வேண்டுகோள்!"}} தம்பி! எனக்கும், ஒரு ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்து, என்னை அழைத்துப்போக வந்திருந்த கழகத் தோழருக்கும், நடைபெற்ற உரையாடல், மேலே குறித்திருப்பது. கழகத் தோழர் குறிப்பிட்டவர், பெரிய புள்ளியாகிக் கொண்டுவருபவர்! அதற்கான அறிகுறிகள் இருந்தன! அலுவல்கள் அப்படி! நிலபுலம் உண்டு! தொழில்கள் பலப்பல! அவருடைய அரசியல் என்பது, <b>மொத்தமாக ஒரு வாரத்துப் பத்திரிகையை, ஒரு புரட்டுப் புரட்டிவிட்டுப்</b> பழைய பேப்பர்க் காரனுக்கு எடை போட்டுக் கொடுக்கும் அளவிலும் வகையிலுந்தான் இருந்தது. அமைச்சர்கள், திறப்புவிழாக்களுக்கு வருகிறபோதெல்லாம், அடக்க ஒடுக்கத்தையும், பற்று பாசத்தையும் காட்டிக்கொள்ளும் விதமாக, மேடைக்குப் பக்கம் அமருவார்! அமைச்சரின் உரையின் அருமையை உணர்த்தக் கையொலி எழுப்புவார்! கதர்மாலை போடுவார்! கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, அவருக்கு நமது கழகம் என்றால் உயிர் என்று தோழர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கூட்டம் நடைபெற்றது; அவர் மேடை அருகில் இல்லை. மாலை போட்டார்கள் எனக்கு; அவர் பெயரால் அல்ல; அவருடைய <b>கம்பெனியின்</b> பெயரால்!! பொருளும் விளங்கிற்று; என் நண்பனுடைய திகைப்பும் தெரிந்தது. :விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். :வீட்டுக்கு வெளியே வரவேற்று நின்றார், பெரிய புள்ளி!<noinclude></noinclude> 74upzeo5yh04jf5bgzjwv7as43x88xk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/148 250 645401 1944443 1941263 2026-06-10T06:13:55Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||147}}{{rule}}</noinclude> கதராடை! கட்டுக்கட்டாக விபூதி! கனிவான பார்வை - ஆனால், அதிலே ஓர்விதமான கம்பீரம் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருந்தது!! "இவர்தான். . ." என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். "நம்ம கழகம் என்றால் உயிர்! இந்தக் கூட்டம் நடத்தக்கூட இவருடைய உதவி, நிரம்ப!" - என்றார் மற்றோர் கழகத்தோழர். "அப்படியா?" என்றேன் யான். <b>அசை! பொருள் இல்லை!!</b> "அதெல்லாம் நம்பாதீர்கள். நான், காங்கிரஸ் கட்சி. கழகம் நல்லதோ கெட்டதோ, எனக்குத் தெரியாது. ஊருக்குப் பெரியவன் என்ற முறையில், நமது ஊருக்கு வருகிற 'பெரிய மனிதர்களை' வரவேற்று உபசரிப்பது, என் கடமை. எங்கள் குடும்பத்தில் இது, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. கிருபானந்தவாரியார் நம்ம வீட்டில்தான் தங்குவார்! கிட்டப்பா கூட ஒரு தடவை இங்கு வந்து தங்கி இருந்ததைப் போன வருஷம், கே. பி. சுந்தரம்மாள் இதே இடத்திலே நின்றுகொண்டுதான் சொன்னார்கள்! கம்யூனிஸ்ட் கந்தசாமியும் இங்கு வருவார்! வேறு எங்கே போவார்கள்? எங்கே வீடே ஒரு குட்டிப் பார்லிமெண்டு! என் கடையிலே கணக்கு வேலை பார்க்கிறானே <b>கபாலி</b> அவன், கழகம்! இன்று கூட்டத்துக்கான வேலையிலே பாதி அவன் தலையிலேதான் விழுந்தது. 'என்னமோடா அப்பா! மாடுபோல உழைக்கிற ஜென்மம் நீ. இப்படி உயிரையே வைத்திருக்கிறாய் கழகத்தின்மீது. கழகம் உனக்கு என்ன வாரிக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை' என்று நான்கூடக் குத்தலாகப் பேசுவேன் - பயல் சளைக்கவேமாட்டான் - முதலில் கடமை, பிறகே உரிமை என்பான். கெட்டிக்காரன்!'' என்று பேசிக் கொண்டே போனார். <b> கூட உட்கார்ந்து சாப்பிடவில்லை!</b> அது அமைச்சர்கள் வருகிறபோது செய்வார்போலிருக்கிறது, 'அமைச்சர்கள் சம்மதித்தால்!' தம்பி! மற்ற விவரம் சலிப்பை உண்டாக்கும்; பாடம் என்ன என்பதைக் கேள். . . அவர், கழகத்தாருடன் கனிவாக இருக்கிற 'சேதி' கிளம்பியதும், உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலே பேச்சு! மாவட்டம்வரை பரவிற்று! மந்திரிகளின் காதுக்கே சென்றதாம்! விளைவு என்ன தெரியுமோ? அமைச்சர் அந்த ஊருக்கு வந்த போது, பக்கத்திலே இவர்!! ஆமாம்! காங்கிரசுக்குத் 'தூண்' ஆகிவிட்டார்! தேர்தலுக்கும் தயாராம்!!<noinclude></noinclude> t5b1slzi0qdyktvysz5l8z2aicfok78 1944447 1944443 2026-06-10T06:16:42Z Rathai palanivelan 11183 + 1944447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||147}}{{rule}}</noinclude> கதராடை! கட்டுக்கட்டாக விபூதி! கனிவான பார்வை - ஆனால், அதிலே ஓர்விதமான கம்பீரம் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருந்தது!! "இவர்தான். . ." என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். "நம்ம கழகம் என்றால் உயிர்! இந்தக் கூட்டம் நடத்தக்கூட இவருடைய உதவி, நிரம்ப!" - என்றார் மற்றோர் கழகத்தோழர். "அப்படியா?" என்றேன் யான். <b>அசை! பொருள் இல்லை!!</b> "அதெல்லாம் நம்பாதீர்கள். நான், காங்கிரஸ் கட்சி. கழகம் நல்லதோ கெட்டதோ, எனக்குத் தெரியாது. ஊருக்குப் பெரியவன் என்ற முறையில், நமது ஊருக்கு வருகிற 'பெரிய மனிதர்களை' வரவேற்று உபசரிப்பது, என் கடமை. எங்கள் குடும்பத்தில் இது, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. கிருபானந்தவாரியார் நம்ம வீட்டில்தான் தங்குவார்! கிட்டப்பா கூட ஒரு தடவை இங்கு வந்து தங்கி இருந்ததைப் போன வருஷம், கே. பி. சுந்தரம்மாள் இதே இடத்திலே நின்றுகொண்டுதான் சொன்னார்கள்! கம்யூனிஸ்ட் கந்தசாமியும் இங்கு வருவார்! வேறு எங்கே போவார்கள்? எங்கே வீடே ஒரு குட்டிப் பார்லிமெண்டு! என் கடையிலே கணக்கு வேலை பார்க்கிறானே <b>கபாலி</b> அவன், கழகம்! இன்று கூட்டத்துக்கான வேலையிலே பாதி அவன் தலையிலேதான் விழுந்தது. 'என்னமோடா அப்பா! மாடுபோல உழைக்கிற ஜென்மம் நீ. இப்படி உயிரையே வைத்திருக்கிறாய் கழகத்தின்மீது. கழகம் உனக்கு என்ன வாரிக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை' என்று நான்கூடக் குத்தலாகப் பேசுவேன் - பயல் சளைக்கவேமாட்டான் - முதலில் கடமை, பிறகே உரிமை என்பான். கெட்டிக்காரன்!'' என்று பேசிக் கொண்டே போனார். <b> கூட உட்கார்ந்து சாப்பிடவில்லை!</b> அது அமைச்சர்கள் வருகிறபோது செய்வார்போலிருக்கிறது, 'அமைச்சர்கள் சம்மதித்தால்!' தம்பி! மற்ற விவரம் சலிப்பை உண்டாக்கும்; பாடம் என்ன என்பதைக் கேள். . . அவர், கழகத்தாருடன் <b>கனிவாக இருக்கிற 'சேதி'</b> கிளம்பியதும், உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலே பேச்சு! மாவட்டம்வரை பரவிற்று! மந்திரிகளின் காதுக்கே சென்றதாம்! விளைவு என்ன தெரியுமோ? அமைச்சர் அந்த ஊருக்கு வந்த போது, பக்கத்திலே இவர்!! ஆமாம்! காங்கிரசுக்குத் 'தூண்' ஆகிவிட்டார்! தேர்தலுக்கும் தயாராம்!!<noinclude></noinclude> nfrkjk4qrn7wotiqlemdoxrmee5m6d8 1944575 1944447 2026-06-10T10:12:56Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||147}}{{rule}}</noinclude> கதராடை! கட்டுக்கட்டாக விபூதி! கனிவான பார்வை - ஆனால், அதிலே ஓர்விதமான கம்பீரம் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருந்தது!! "இவர்தான். . ." என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர். "நம்ம கழகம் என்றால் உயிர்! இந்தக் கூட்டம் நடத்தக்கூட இவருடைய உதவி, நிரம்ப!" - என்றார் மற்றோர் கழகத்தோழர். "அப்படியா?" என்றேன் யான். <b>அசை! பொருள் இல்லை!!</b> "அதெல்லாம் நம்பாதீர்கள். நான், காங்கிரஸ் கட்சி. கழகம் நல்லதோ கெட்டதோ, எனக்குத் தெரியாது. ஊருக்குப் பெரியவன் என்ற முறையில், நமது ஊருக்கு வருகிற 'பெரிய மனிதர்களை' வரவேற்று உபசரிப்பது, என் கடமை. எங்கள் குடும்பத்தில் இது, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. கிருபானந்தவாரியார் நம்ம வீட்டில்தான் தங்குவார்! கிட்டப்பா கூட ஒரு தடவை இங்கு வந்து தங்கி இருந்ததைப் போன வருஷம், கே. பி. சுந்தரம்மாள் இதே இடத்திலே நின்றுகொண்டுதான் சொன்னார்கள்! கம்யூனிஸ்ட் கந்தசாமியும் இங்கு வருவார்! வேறு எங்கே போவார்கள்? எங்கே வீடே ஒரு குட்டிப் பார்லிமெண்டு! என் கடையிலே கணக்கு வேலை பார்க்கிறானே <b>கபாலி</b> அவன், கழகம்! இன்று கூட்டத்துக்கான வேலையிலே பாதி அவன் தலையிலேதான் விழுந்தது. 'என்னமோடா அப்பா! மாடுபோல உழைக்கிற ஜென்மம் நீ. இப்படி உயிரையே வைத்திருக்கிறாய் கழகத்தின்மீது. கழகம் உனக்கு என்ன வாரிக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை' என்று நான்கூடக் குத்தலாகப் பேசுவேன் - பயல் சளைக்கவேமாட்டான் - முதலில் கடமை, பிறகே உரிமை என்பான். கெட்டிக்காரன்!'' என்று பேசிக் கொண்டே போனார். <b> கூட உட்கார்ந்து சாப்பிடவில்லை!</b> அது அமைச்சர்கள் வருகிறபோது செய்வார்போலிருக்கிறது, 'அமைச்சர்கள் சம்மதித்தால்!' தம்பி! மற்ற விவரம் சலிப்பை உண்டாக்கும்; பாடம் என்ன என்பதைக் கேள். . . அவர், கழகத்தாருடன் <b>கனிவாக இருக்கிற 'சேதி'</b> கிளம்பியதும், உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலே பேச்சு! மாவட்டம்வரை பரவிற்று! மந்திரிகளின் காதுக்கே சென்றதாம்! விளைவு என்ன தெரியுமோ? அமைச்சர் அந்த ஊருக்கு வந்த போது, பக்கத்திலே இவர்!! ஆமாம்! காங்கிரசுக்குத் 'தூண்' ஆகிவிட்டார்! தேர்தலுக்கும் தயாராம்!!<noinclude></noinclude> fyuxp9dpuacg2d3qfxuax4ddot8ueik பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/149 250 645402 1944448 1941264 2026-06-10T06:16:49Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட <b>தந்திர முறை தெரிந்த</b> செல்வவான்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!! எவரையும் காங்கிரஸ் கட்சி, பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை!! <b>தஞ்சைத் தரணியில்</b> நடைபெற்ற 'சம்பவம்' ஒன்று கூறுகிறேன், தம்பி! இன்றைய காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களின் இயல்பு விளங்கிவிடும். கள்ளுக்கடை மறியல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். தூய கதருடையும் அதனினும் தூய்மையான இதயமும்கொண்ட தொண்டர்கள், கள்ளுக்கடை மறியல் செய்கிறார்கள். குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். கடைக்காரனிடம் மன்றாடுகிறார்கள். ஊரெங்கும் ஒரே பரபரப்பு! "யார் பெத்த பிள்ளைகளோ பாவம், இப்படிப் படாத பாடு படுகிறார்கள், பாழாய்ப்போன குடியை ஒழிக்க" என்று மூதாட்டிகளெல்லாம் கூறி வாழ்த்தினர். "பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - ஆனால், பானையைப் பார்த்தால், விட மனம் வரமாட்டேன் என்கிறதே! நல்ல பிள்ளைகள்! நம்ம காலிலே வீழ்ந்தே கும்பிடுகிறார்கள். நல்லதுதான் சொல்கிறார்கள் - குடி, குடி கெடுக்கும், விட்டுவிடு! வீடு விளங்கும்! நாடு வாழும்! என்றெல்லாம் சொல்கிறார்கள். உருட்டி மிரட்டிப் பார்த்தால்கூட அசையமாட்டேன்கிறார்கள். பரிதாபமாகத்தான் இருக்கிறது" என்று குடிகாரனேகூட பச்சாதாபம் காட்டுகிறான். அப்படிப்பட்ட நேரத்திலே, கள்ளுக்கடை நடத்தி, கனவான் ஆகிக்கொண்டுவந்த <b>ஒருவர்</b>, கடுங்கோபம் கொண்டார்! அவர், தம் வீட்டுப் பிள்ளை பீடி குடித்தானென்று கேள்விப்பட்டால்கூட, அலறித் துடித்து அடித்து மிரட்டி "ஆகுமாடா பயலே இந்தக் கெட்ட காரியம்? கேவலமல்லவா? பீடி பிடித்தால், மார்பு உலர்ந்து, இருமல் ஏற்பட்டு, ஈளைகட்டி ஆளையே உருக்கித் தள்ளிவிடுமே! உனக்கேன்னடா இந்தக் கெடுமதி?" என்று கொதித்துக் கூறி இருப்பார்; கோல்கொண்டு தாக்கியிருப்பார். ஆனால், குடிகெடுக்கும் குடிமூலம் கொள்ளை<noinclude></noinclude> 1sxjkfbsuhymo7tg0xqhxwftpme4rta 1944577 1944448 2026-06-10T10:17:58Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ {{left_margin|3em|}} 1944577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட <b>தந்திர முறை தெரிந்த</b> செல்வவான்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!! எவரையும் காங்கிரஸ் கட்சி, பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை!! <b>தஞ்சைத் தரணியில்</b> நடைபெற்ற 'சம்பவம்' ஒன்று கூறுகிறேன், தம்பி! இன்றைய காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களின் இயல்பு விளங்கிவிடும். கள்ளுக்கடை மறியல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். தூய கதருடையும் அதனினும் தூய்மையான இதயமும்கொண்ட தொண்டர்கள், கள்ளுக்கடை மறியல் செய்கிறார்கள். {{left_margin|3em|குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். கடைக்காரனிடம் மன்றாடுகிறார்கள். ஊரெங்கும் ஒரே பரபரப்பு!}} "யார் பெத்த பிள்ளைகளோ பாவம், இப்படிப் படாத பாடு படுகிறார்கள், பாழாய்ப்போன குடியை ஒழிக்க" என்று மூதாட்டிகளெல்லாம் கூறி வாழ்த்தினர். "பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - ஆனால், பானையைப் பார்த்தால், விட மனம் வரமாட்டேன் என்கிறதே! நல்ல பிள்ளைகள்! நம்ம காலிலே வீழ்ந்தே கும்பிடுகிறார்கள். நல்லதுதான் சொல்கிறார்கள் - குடி, குடி கெடுக்கும், விட்டுவிடு! வீடு விளங்கும்! நாடு வாழும்! என்றெல்லாம் சொல்கிறார்கள். உருட்டி மிரட்டிப் பார்த்தால்கூட அசையமாட்டேன்கிறார்கள். பரிதாபமாகத்தான் இருக்கிறது" என்று குடிகாரனேகூட பச்சாதாபம் காட்டுகிறான். அப்படிப்பட்ட நேரத்திலே, கள்ளுக்கடை நடத்தி, கனவான் ஆகிக்கொண்டுவந்த <b>ஒருவர்</b>, கடுங்கோபம் கொண்டார்! அவர், தம் வீட்டுப் பிள்ளை பீடி குடித்தானென்று கேள்விப்பட்டால்கூட, அலறித் துடித்து அடித்து மிரட்டி "ஆகுமாடா பயலே இந்தக் கெட்ட காரியம்? கேவலமல்லவா? பீடி பிடித்தால், மார்பு உலர்ந்து, இருமல் ஏற்பட்டு, ஈளைகட்டி ஆளையே உருக்கித் தள்ளிவிடுமே! உனக்கேன்னடா இந்தக் கெடுமதி?" என்று கொதித்துக் கூறி இருப்பார்; கோல்கொண்டு தாக்கியிருப்பார். ஆனால், குடிகெடுக்கும் குடிமூலம் கொள்ளை<noinclude></noinclude> 1myqsdiaogokucvod2a332hl1pe4az8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/150 250 645403 1944449 1941266 2026-06-10T06:18:43Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||149}}{{rule}}</noinclude>அடிக்கிற காரணத்தால் குடிக்கவேண்டாம் என்று கெஞ்சுகிற மறியல் தொண்டர்கள்மீது கோபத்தைக் கக்குகிறார்! காட்டுக் கூச்சலிடுகிறார்! பேயாட்டமாடுகிறார்! குடிகாரர்களுக்குப் போலீஸ் பாதுகாப்புத் தருகிறார். "பயப்படாதீங்கடா! எல்லாம் பொடிப்பயலுங்க! ஏலே டே! எவனாச்சும் என் கடை வாசற்படியை மிதிச்சி கும்பிடு போட்டா, தொலைச்சிடுவேன் தொலைச்சு. குடி குடியைக் கெடுக்குமாமா? புதுசாக் கண்டுபிச்சானுக! காந்தி சொன்னாராம் காந்தி! கொண்டாங்கடா உங்க காந்தியை! கேட்கிறேன். குடிகெடுதலா! அப்படின்னா காப்பி, டீ, கொக்கோ, ஓவல் இதெல்லாம் கெடுதல் இல்லையான்னு கேட்கறேன்? சொல்லச் சொல்லு பதில்! முடியுமா? அட பாலைத்தான் எடுத்துக்கொள்ளேன். என்னவாம் அது? பசுவோட இரத்தமல்லவா? அதை மட்டும் குடிக்கலாமா குடம் குடமா?" இவ்விதமாகவெல்லாம் பேசிக் காங்கிரஸ் தொண்டர்களை ஏசிக் கடையை இலாபகரமாக நடத்திக்கொண்டு வந்தார். காங்கிரஸ் தொண்டர்களோ துளியும் தளர்ச்சியடையவில்லை. கடை முதலாளியின் ஏவுதலால் குடியர்கள் எச்சிலைத் துப்புவார்கள்! எதிரே நின்று ஏசுவார்கள்! ஆபாசமாக நடந்து கொள்வார்கள். இவர் இடி இடியெனச் சிரிப்பார்! சபாஷ் பட்டம் கொடுப்பார்! அது மட்டுமா? அந்த வீரச் செயலுக்குப் பரிசாக <b>ஒரு மொந்தையோ இரண்டோ</b> இனமாகக்கூடத் தருவார்! அப்படிப்பட்ட அறம் அறிந்த நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்!! இதனாலெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்காதது கண்டு வெகுண்டார். மூளை வேகமாக வேலை செய்தது; ஒரு திட்டம் தீட்டினார்! ஒருவனைப் பிடித்து, உள்ளே ஊற்றி, தன் யோசனையைச் சொன்னார். அவன் எடுத்தான் சவுக்கு! ஓடினான் கள்ளுக்கடை நோக்கி ஓங்காரக் கூச்சலிட்டபடி! கடைமுன்னால் மறியல் நடத்திக்கொண்டிருந்தனர் காங்கிரஸ் தொண்டர்கள் - அவர்கள்மீது வீசினான் சவுக்கு!<noinclude></noinclude> 84zb9224wphiiw62zsqrk2q6vytppfb 1944578 1944449 2026-06-10T10:18:28Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||149}}{{rule}}</noinclude>அடிக்கிற காரணத்தால் குடிக்கவேண்டாம் என்று கெஞ்சுகிற மறியல் தொண்டர்கள்மீது கோபத்தைக் கக்குகிறார்! காட்டுக் கூச்சலிடுகிறார்! பேயாட்டமாடுகிறார்! குடிகாரர்களுக்குப் போலீஸ் பாதுகாப்புத் தருகிறார். "பயப்படாதீங்கடா! எல்லாம் பொடிப்பயலுங்க! ஏலே டே! எவனாச்சும் என் கடை வாசற்படியை மிதிச்சி கும்பிடு போட்டா, தொலைச்சிடுவேன் தொலைச்சு. குடி குடியைக் கெடுக்குமாமா? புதுசாக் கண்டுபிச்சானுக! காந்தி சொன்னாராம் காந்தி! கொண்டாங்கடா உங்க காந்தியை! கேட்கிறேன். குடிகெடுதலா! அப்படின்னா காப்பி, டீ, கொக்கோ, ஓவல் இதெல்லாம் கெடுதல் இல்லையான்னு கேட்கறேன்? சொல்லச் சொல்லு பதில்! முடியுமா? அட பாலைத்தான் எடுத்துக்கொள்ளேன். என்னவாம் அது? பசுவோட இரத்தமல்லவா? அதை மட்டும் குடிக்கலாமா குடம் குடமா?" இவ்விதமாகவெல்லாம் பேசிக் காங்கிரஸ் தொண்டர்களை ஏசிக் கடையை இலாபகரமாக நடத்திக்கொண்டு வந்தார். காங்கிரஸ் தொண்டர்களோ துளியும் தளர்ச்சியடையவில்லை. கடை முதலாளியின் ஏவுதலால் குடியர்கள் எச்சிலைத் துப்புவார்கள்! எதிரே நின்று ஏசுவார்கள்! ஆபாசமாக நடந்து கொள்வார்கள். இவர் இடி இடியெனச் சிரிப்பார்! சபாஷ் பட்டம் கொடுப்பார்! அது மட்டுமா? அந்த வீரச் செயலுக்குப் பரிசாக <b>ஒரு மொந்தையோ இரண்டோ</b> இனமாகக்கூடத் தருவார்! அப்படிப்பட்ட அறம் அறிந்த நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்!! இதனாலெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் அடங்காதது கண்டு வெகுண்டார். மூளை வேகமாக வேலை செய்தது; ஒரு திட்டம் தீட்டினார்! ஒருவனைப் பிடித்து, உள்ளே ஊற்றி, தன் யோசனையைச் சொன்னார். அவன் எடுத்தான் சவுக்கு! ஓடினான் கள்ளுக்கடை நோக்கி ஓங்காரக் கூச்சலிட்டபடி! கடைமுன்னால் மறியல் நடத்திக்கொண்டிருந்தனர் காங்கிரஸ் தொண்டர்கள் - அவர்கள்மீது வீசினான் சவுக்கு!<noinclude></noinclude> 5cg62w9tl0rzoedc8rfe6e2kyhik7cl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/151 250 645404 1944450 1941267 2026-06-10T06:19:58Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "சண்டாளப் பசங்களா! எனக்கா துரோகம் செய்யத் துணிந்துவிட்டிங்க! குடிகாரன் குடிகாரன்னு, நீங்க யாரைச் சொல்கிறீங்களோ, அவங்களெல்லாம், என்னோட பக்தனுங்களாச்சே! என் பக்தனுங்களுக்கு ஒரு கெடுதல் வந்தா, நான் பார்த்துகிட்டா இருப்பேன்! பார், உங்களை என்ன பாடு படுத்தறேன் என்று. படுத்துத் தூங்கும்போது, பாம்பா வந்து கடிக்கப்போறேன்! வாயிலும் மூக்கிலும் இரத்தமா வடிஞ்சி, ஐயோன்னு மாண்டுவிடப் போறிங்க! என் சாபம் பொல்லாதது! நான் யார் தெரியுமா? தெரியுமடா நான் யாருன்னு? நான் தாண்டா, மதுரை வீரன்!" - என்று கொக்கரித்தான். ஆவேசம் வந்ததுபோலப் பாசாங்கு செய்து. சவுக்கடிப்பட்டனர்; சாபம் பெற்றனர்; எனினும், சளைக்கவில்லை. மதுரை வீரனாக நடக்கச் சொல்லிக் காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சவுக்கடி வாங்கிக்கொடுத்த தூயவர். மேலவர் இன்று தம்பி! காங்கிரஸ் எம். எல். ஏ.யாகிவிட்டார், பரிசுத்தமாகி விட்டார்!! கள்ளுக்கடைகளை அடைத்தாகவேண்டும் என்று சட்டம் பிறக்கிற வரையிலே அதிலே அடித்துத் திரட்டவேண்டியதைத் திரட்டிக்கொண்டார்! கள்ளுக்கடை நடத்தச் சட்டம் இடம் கொடுக்காது என்று ஏற்பட்ட பிறகு கதர்க்கடையின் தயவு பெற்றால் ஆளவந்தார்களின் அன்பும் ஆதரவும் கன கச்சிதமாகக் கிடைக்கும் என்பதைக் கண்டுகொண்டார்; காங்கிரஸ்காரராகிவிட்டார்!! அன்று அப்படி நடந்துகொண்டோமே என்ற அச்சம் அவருக்கு இல்லை; அன்று நமது கட்சியை, தொண்டர்களை இழிவுபடுத்தியவரை எப்படி மனம் ஒப்பி, நமது கட்சியிலே நடுநாயகமாக்கிக்கொள்வது என்ற வெட்கம் காங்கிரசின் தலைவர்களுக்கு இல்லை! ஏன்? பெரியபுள்ளி! நிறையப் பணம்!! தேர்தலில் வாரி இறைப்பார்! வெற்றி கிடைக்கும் கிடைத்தால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று கொண்டாடலாம் என்று ஒரு நப்பாசை பாவம், காங்கிரசாருக்கு!! உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாவம் வேதனை இருக்கிறது - இருந்து? அவர்களுக்குக் காங்கிரசிலே இடம் ஏது? தொண்டு செய்யவேண்டிய நிலையே இல்லாதபோது<noinclude></noinclude> 2zlw8epk1t6lkq2q3kf5td3kyloq97n 1944579 1944450 2026-06-10T10:19:22Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "சண்டாளப் பசங்களா! எனக்கா துரோகம் செய்யத் துணிந்துவிட்டிங்க! குடிகாரன் குடிகாரன்னு, நீங்க யாரைச் சொல்கிறீங்களோ, அவங்களெல்லாம், என்னோட பக்தனுங்களாச்சே! என் பக்தனுங்களுக்கு ஒரு கெடுதல் வந்தா, நான் பார்த்துகிட்டா இருப்பேன்! பார், உங்களை என்ன பாடு படுத்தறேன் என்று. படுத்துத் தூங்கும்போது, பாம்பா வந்து கடிக்கப்போறேன்! வாயிலும் மூக்கிலும் இரத்தமா வடிஞ்சி, ஐயோன்னு மாண்டுவிடப் போறிங்க! என் சாபம் பொல்லாதது! நான் யார் தெரியுமா? தெரியுமடா நான் யாருன்னு? நான் தாண்டா, மதுரை வீரன்!" - என்று கொக்கரித்தான். ஆவேசம் வந்ததுபோலப் பாசாங்கு செய்து. சவுக்கடிப்பட்டனர்; சாபம் பெற்றனர்; எனினும், சளைக்கவில்லை. மதுரை வீரனாக நடக்கச் சொல்லிக் காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சவுக்கடி வாங்கிக்கொடுத்த தூயவர். மேலவர் இன்று தம்பி! காங்கிரஸ் எம். எல். ஏ.யாகிவிட்டார், பரிசுத்தமாகி விட்டார்!! கள்ளுக்கடைகளை அடைத்தாகவேண்டும் என்று சட்டம் பிறக்கிற வரையிலே அதிலே அடித்துத் திரட்டவேண்டியதைத் திரட்டிக்கொண்டார்! கள்ளுக்கடை நடத்தச் சட்டம் இடம் கொடுக்காது என்று ஏற்பட்ட பிறகு கதர்க்கடையின் தயவு பெற்றால் ஆளவந்தார்களின் அன்பும் ஆதரவும் கன கச்சிதமாகக் கிடைக்கும் என்பதைக் கண்டுகொண்டார்; காங்கிரஸ்காரராகிவிட்டார்!! அன்று அப்படி நடந்துகொண்டோமே என்ற அச்சம் அவருக்கு இல்லை; அன்று நமது கட்சியை, தொண்டர்களை இழிவுபடுத்தியவரை எப்படி மனம் ஒப்பி, நமது கட்சியிலே நடுநாயகமாக்கிக்கொள்வது என்ற வெட்கம் காங்கிரசின் தலைவர்களுக்கு இல்லை! ஏன்? பெரியபுள்ளி! நிறையப் பணம்!! தேர்தலில் வாரி இறைப்பார்! வெற்றி கிடைக்கும் கிடைத்தால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று கொண்டாடலாம் என்று ஒரு நப்பாசை பாவம், காங்கிரசாருக்கு!! உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாவம் வேதனை இருக்கிறது - இருந்து? அவர்களுக்குக் காங்கிரசிலே இடம் ஏது? தொண்டு செய்யவேண்டிய நிலையே இல்லாதபோது<noinclude></noinclude> cfdmdh4bv39pvuymg9hs3e78edi78ho பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/152 250 645405 1944452 1941268 2026-06-10T06:21:04Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||151}}{{rule}}</noinclude>தொண்டர்கள் எதற்கு? இப்போது இளைஞர் காங்கிரசல்லவா தேவைப்படுகிறது! காங்கிரஸ் தொண்டர்களல்லவே! தம்பி! காங்கிரசுக்கு ஒரே நோக்கம் - தேர்தலில் வெற்றி பெறுவது. அதற்காக, எவரெவர் கிடைத்தாலும், முன்பு அவர் எப்படி நடந்துகொண்டவராக இருப்பினும். பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொண்டு, அவருடைய பணத்தைக்கொண்டு ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கிக் கட்சி வெற்றி பெற்றது என்ற விருதுபெறவேண்டும் - இதுதான், நோக்கமாகி விட்டது. அண்ணா! நாம் தேர்தலில் ஈடுபடுவதும், சொந்த இலாபம் கருதித்தானாம்! கொள்கை பரப்ப அல்லவாம்! சட்டசபையிலா! திராவிடநாடு கிடைக்கும், அடப் பைத்தியக்காரர்களா! தூக்கு மேடை ஏறி அல்லவா திராவிடநாடு பெறமுடியும்!! என்று கேட்கிறார்கள் என்று கூறுகிறாய் - தம்பி! புரிகிறது!! கூறுபவரில் இருவகையினர் உளர். ஒருவகையினர், நெடுநாட்களாகக் கூறிவருபவர்கள் - பரம்பரை ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன் - ஒரு பேச்சுக்குச் சொல்லி வைத்தேன். அவர்கள் உண்மையிலேயே 'பிரபுக்கள்.' அந்தஸ்தில்! இன்னொரு வகையினர், எரிச்சலால் பேசுபவர் - பஞ்சத்தால் ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன். எவராக இருப்பினும், அவர்தம் இந்தப் பேச்சுக்கு, ஏச்சுக்கு, நான் பதில் தேடித் தொல்லைப்படவேண்டியதில்லை. அறிவுத் தெளிவும், அபாரமான துணிவும் கொண்டவர்கள், 'அருளிய' பதில், ஏராளமாகக் கைவசம் இருக்கிறது!! அது அத்தனையும் 'குப்பைகூளம்' - என்று கூறி இதோ தருகிறோம் கட்டித் தங்கம், கெட்டி முத்து என்று, இன்று முற்றிலும் மாறான பேச்சுப் பேசுபவரேல் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் என்ற கவிதா வாக்கியத்தைத்தான் பரிசாக அளிக்கவேண்டும்! வேறென்ன தரமுடியும்!! இந்தத் தினாமூனாக்காரர்களைக் கேட்கிறேன், அட மடையர்களே! திராவிட நாடு வேண்டும் என்கிறீர்களே! அது கிடைக்கும் இடம் சட்டசபையா! குதிரைக்குக் கொம்பு இருந்தால், சட்டசபையில் திராவிடநாடு இருக்கும்!! - என்று பேசிவிட்டு, எப்படி? வெண்கலக்கடையிலே வேழம் புகுந்தது<noinclude></noinclude> hy3z7eqzaw73ht0anuwgk0u3e66zz9c 1944580 1944452 2026-06-10T10:20:21Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||151}}{{rule}}</noinclude>தொண்டர்கள் எதற்கு? இப்போது இளைஞர் காங்கிரசல்லவா தேவைப்படுகிறது! காங்கிரஸ் தொண்டர்களல்லவே! தம்பி! காங்கிரசுக்கு ஒரே நோக்கம் - தேர்தலில் வெற்றி பெறுவது. அதற்காக, எவரெவர் கிடைத்தாலும், முன்பு அவர் எப்படி நடந்துகொண்டவராக இருப்பினும். பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொண்டு, அவருடைய பணத்தைக்கொண்டு ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கிக் கட்சி வெற்றி பெற்றது என்ற விருதுபெறவேண்டும் - இதுதான், நோக்கமாகி விட்டது. அண்ணா! நாம் தேர்தலில் ஈடுபடுவதும், சொந்த இலாபம் கருதித்தானாம்! கொள்கை பரப்ப அல்லவாம்! சட்டசபையிலா! திராவிடநாடு கிடைக்கும், அடப் பைத்தியக்காரர்களா! தூக்குமேடை ஏறி அல்லவா திராவிடநாடு பெறமுடியும்!! என்று கேட்கிறார்கள் என்று கூறுகிறாய் - தம்பி! புரிகிறது!! கூறுபவரில் இருவகையினர் உளர். ஒருவகையினர், நெடுநாட்களாகக் கூறிவருபவர்கள் - பரம்பரை ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன் - ஒரு பேச்சுக்குச் சொல்லி வைத்தேன். அவர்கள் உண்மையிலேயே 'பிரபுக்கள்.' அந்தஸ்தில்! இன்னொரு வகையினர், எரிச்சலால் பேசுபவர் - பஞ்சத்தால் ஆண்டிகள் என்று வைத்துக்கொள்ளேன். எவராக இருப்பினும், அவர்தம் இந்தப் பேச்சுக்கு, ஏச்சுக்கு, நான் பதில் தேடித் தொல்லைப்படவேண்டியதில்லை. அறிவுத் தெளிவும், அபாரமான துணிவும் கொண்டவர்கள், 'அருளிய' பதில், ஏராளமாகக் கைவசம் இருக்கிறது!! அது அத்தனையும் 'குப்பைகூளம்' - என்று கூறி இதோ தருகிறோம் கட்டித் தங்கம், கெட்டி முத்து என்று, இன்று முற்றிலும் மாறான பேச்சுப் பேசுபவரேல் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் என்ற கவிதா வாக்கியத்தைத்தான் பரிசாக அளிக்கவேண்டும்! வேறென்ன தரமுடியும்!! இந்தத் தினாமூனாக்காரர்களைக் கேட்கிறேன், அட மடையர்களே! திராவிட நாடு வேண்டும் என்கிறீர்களே! அது கிடைக்கும் இடம் சட்டசபையா! குதிரைக்குக் கொம்பு இருந்தால், சட்டசபையில் திராவிடநாடு இருக்கும்!! - என்று பேசிவிட்டு, எப்படி? வெண்கலக்கடையிலே வேழம் புகுந்தது<noinclude></noinclude> a30gtlepmositci423dp3e8fv0nzj23 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/153 250 645406 1944454 1941269 2026-06-10T06:22:32Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>போலிருந்ததா பேச்சு? என்று பக்கம் உள்ளோரைக் கேட்டு பரவசமடையக்கூடும்! அருமை! அருமை! தாங்கள் பேசிய உடனே, எனக்குக் கற்பனை சுரக்க ஆரம்பித்துவிட்டது; கவிதை வழியப் போகிறது, கலயம் கலயமாக என்று கூறி, {{left_margin|3em|<poem>திராவிடநாடு திராவிடர்க்கென்று தேடிடும் மதியிலிகாள்!! திராவிடநாடு எலும்புக்கூடு எழுந்து நடவாது!! எண்ணம் பலிக்காது!! </poem>}} என்று பாடி மகிழக்கூடும். அதிலும், நம்மைவிட்டு நண்பர்கள் சிலர் விலகிவிட்டதால், புதிய துணிவுபெற்ற, போக்கிடமற்றவர்கள், மெத்தத் தெரிந்தவர் போல், ஏதேதோ பேசித் திரிகின்றனர். திராவிட நாடு சட்டசபையில் இல்லை! சட்டசபை என்பது இந்தியப் பேரரசுக்கு உட்பட்டது. அதில் இருந்துகொண்டே, திராவிட நாடு கேட்டுப்பெற முடியும் என்பது வெறும் சூது. பதவிப் பித்துக்கொண்டதனாலேயே, சட்டசபை நுழைய விழைகிறார்கள். பொதுமக்களை ஏய்த்திட, தமது பதவிப்பித்தை மறைத்திட, திராவிட நாடு பெறப் போகிறோம் என்று பசப்புகிறார்கள்! நாட்டினரே நம்பாதீர்கள்! நல்லோரே நம்பாதீர்கள்! - என்று பேசுகின்றனர். தம்பி! பதவிப்பித்தன் யார் என்பதற்கு ஒரு இலக்கணம் வேண்டுமா? நான் கண்டுபிடித்தது அல்ல! ஏ! அப்பா! என்னால் முடிகிற காரியமா அது!! தரப்பட்ட இலக்கணம்! "கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே பதவிப் பித்தர்கள்!" பலே! பலே! இரத்தினச் சுருக்கமா இருக்கிறதே, என்கிறாயா? 'இரத்தினம்', 'மாணிக்கம்', 'முத்து', 'வைடூரியம்' என்றெல்லாம் போற்றத்தக்க அறிவுரைகள் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவந்த வேளையில், நம்மை நாடி வந்த நல்லுரை இது!! நீர் நிரம்பிய ஆற்றினிலே, வாளையும் வராலும் துள்ளிடக்<noinclude></noinclude> ene2z95xvj03iyjjlir801qmxd4wlyc 1944581 1944454 2026-06-10T10:21:25Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>போலிருந்ததா பேச்சு? என்று பக்கம் உள்ளோரைக் கேட்டு பரவசமடையக்கூடும்! அருமை! அருமை! தாங்கள் பேசிய உடனே, எனக்குக் கற்பனை சுரக்க ஆரம்பித்துவிட்டது; கவிதை வழியப் போகிறது, கலயம் கலயமாக என்று கூறி, {{left_margin|3em|<poem>திராவிடநாடு திராவிடர்க்கென்று தேடிடும் மதியிலிகாள்!! திராவிடநாடு எலும்புக்கூடு எழுந்து நடவாது!! எண்ணம் பலிக்காது!! </poem>}} என்று பாடி மகிழக்கூடும். அதிலும், நம்மைவிட்டு நண்பர்கள் சிலர் விலகிவிட்டதால், புதிய துணிவுபெற்ற, போக்கிடமற்றவர்கள், மெத்தத் தெரிந்தவர் போல், ஏதேதோ பேசித் திரிகின்றனர். திராவிட நாடு சட்டசபையில் இல்லை! சட்டசபை என்பது இந்தியப் பேரரசுக்கு உட்பட்டது. அதில் இருந்துகொண்டே, திராவிட நாடு கேட்டுப்பெற முடியும் என்பது வெறும் சூது. பதவிப் பித்துக்கொண்டதனாலேயே, சட்டசபை நுழைய விழைகிறார்கள். பொதுமக்களை ஏய்த்திட, தமது பதவிப்பித்தை மறைத்திட, திராவிட நாடு பெறப் போகிறோம் என்று பசப்புகிறார்கள்! நாட்டினரே நம்பாதீர்கள்! நல்லோரே நம்பாதீர்கள்! - என்று பேசுகின்றனர். தம்பி! பதவிப்பித்தன் யார் என்பதற்கு ஒரு இலக்கணம் வேண்டுமா? நான் கண்டுபிடித்தது அல்ல! ஏ! அப்பா! என்னால் முடிகிற காரியமா அது!! தரப்பட்ட இலக்கணம்! "கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே பதவிப் பித்தர்கள்!" பலே! பலே! இரத்தினச் சுருக்கமா இருக்கிறதே, என்கிறாயா? 'இரத்தினம்', 'மாணிக்கம்', 'முத்து', 'வைடூரியம்' என்றெல்லாம் போற்றத்தக்க அறிவுரைகள் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவந்த வேளையில், நம்மை நாடி வந்த நல்லுரை இது!! நீர் நிரம்பிய ஆற்றினிலே, வாளையும் வராலும் துள்ளிடக்<noinclude></noinclude> 46a0d6kek2gyjcydm2f33talxb4zfsn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/154 250 645407 1944455 1941270 2026-06-10T06:23:50Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||153}}{{rule}}</noinclude>காண்கிறோம்! நீர் வற்றிப்போய், இங்கும் அங்கும் சேற்றுக்குழம்பு இருக்கும்போது, கெண்டைக் குஞ்சுகள்! தவளைக் கூட்டங்கள்! நண்டுகள்! நத்தைகள்! புழுக்கள்! பூச்சிகள்! இவை தாமே, இருக்க முடிகிறது! பாவலர் பாடிட, பாவையர் குடைந்து விளையாடிட, தீட்டிடத் தகும் அழகு என்று ஓவியர் கொண்டாடிட, கோலாகல மாகத்தான் ஆறு, கலகலவெனும் ஒலி எழுப்பியே, கண்டவர் களித்திடும் விதத்திலே களிநடமிடுகிறது - பிறகோ, வருவாய் குறைந்து, உள்ளது செலவாகி வறண்டு போகிறது! தெள்ளிய நீரினை அள்ளிப் பருகினால் போதும். கவலையும், களைப்பும் பறந்தோடியே போகும், கனிரசமும் இதற்கு ஈடாகாது என்றெல்லாம் பாராட்டத்தக்க விதமாகத்தான், ஆறு காட்சி தருகிறது. ஆனால் நீர் குறைந்துபோன பிறகு? அதுபோலத்தான், தம்பி! ஒரு கொள்கையிடம் எவருக் கேனும், பற்றுமிகுந்து, இருக்கும்போது, அதற்கான விளக்கம் கூற முற்படுவது, கூர்வாள் ஏந்திடும் வீரன். மாற்றார் இடையே பாய்ந்து செல்வதுபோன்றதுபோல இருக்கும்! வாதம் பிரமாத மாக இருக்கும்! உவமைகள் உருண்டோடி வந்திடும்! காரணங்கள் அடுக்கடுக்காகக் கிடைக்கும்! மறுப்பரேல், கண்கள் கனலைக் கக்கும், வார்த்தைகள் வலிமைமிக்கனவாகும்! கடுமொழி கூறிடத் தோன்றும்!! திராவிட நாடு எனும் கொள்கையிலே பற்றுக்கொண்ட நிலையில், அதற்கு ஆக்கம் தேடிட அரியதோர் வாய்ப்பாகச் சட்டசபை நுழைவினை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இதுகண்டு மனம் பொறாதார், சட்டசபையிலா திராவிட நாடு என்று கடாவினர்; கடுங்கோபம் பிறந்தது! பதவிப் பித்துக்கொண்டுதான், கழகத்தவர் சட்டசபை செல்லத் துடிக்கின்றனர் என்று கூறினர் - கூறினோர் சிறுமதியாளர்! என்று சினந்தெழத் தோன்றிற்று. அப்போது இதயத்திலிருந்து வெளிவந்த இலக்கண விளக்கம்தான். {{block_center|"கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக்<br> காவி கொடுப்போரே பதவிப் பித்தர்கள்.''}} எனும் பழமொழி! அது அப்போது, அண்ணா! இப்போது, வேறு என்று கூறுகிறார்! தம்பி! நமக்கு, அந்த 'அப்போது'தான் தேவை! 'இப்போது' இருக்கிறதே, அது நமக்கு வேண்டாம்!<noinclude></noinclude> ajsx2auvqw16lnagd0o41fcsrrbja4e 1944582 1944455 2026-06-10T10:23:11Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||153}}{{rule}}</noinclude>காண்கிறோம்! நீர் வற்றிப்போய், இங்கும் அங்கும் சேற்றுக்குழம்பு இருக்கும்போது, கெண்டைக் குஞ்சுகள்! தவளைக் கூட்டங்கள்! நண்டுகள்! நத்தைகள்! புழுக்கள்! பூச்சிகள்! இவை தாமே, இருக்க முடிகிறது! பாவலர் பாடிட, பாவையர் குடைந்து விளையாடிட, தீட்டிடத் தகும் அழகு என்று ஓவியர் கொண்டாடிட, கோலாகல மாகத்தான் ஆறு, கலகலவெனும் ஒலி எழுப்பியே, கண்டவர் களித்திடும் விதத்திலே களிநடமிடுகிறது - பிறகோ, வருவாய் குறைந்து, உள்ளது செலவாகி வறண்டு போகிறது! தெள்ளிய நீரினை அள்ளிப் பருகினால் போதும். கவலையும், களைப்பும் பறந்தோடியே போகும், கனிரசமும் இதற்கு ஈடாகாது என்றெல்லாம் பாராட்டத்தக்க விதமாகத்தான், ஆறு காட்சி தருகிறது. ஆனால் நீர் குறைந்துபோன பிறகு? அதுபோலத்தான், தம்பி! ஒரு கொள்கையிடம் எவருக் கேனும், பற்றுமிகுந்து, இருக்கும்போது, அதற்கான விளக்கம் கூற முற்படுவது, கூர்வாள் ஏந்திடும் வீரன். மாற்றார் இடையே பாய்ந்து செல்வதுபோன்றதுபோல இருக்கும்! வாதம் பிரமாத மாக இருக்கும்! உவமைகள் உருண்டோடி வந்திடும்! காரணங்கள் அடுக்கடுக்காகக் கிடைக்கும்! மறுப்பரேல், கண்கள் கனலைக் கக்கும், வார்த்தைகள் வலிமைமிக்கனவாகும்! கடுமொழி கூறிடத் தோன்றும்!! திராவிட நாடு எனும் கொள்கையிலே பற்றுக்கொண்ட நிலையில், அதற்கு ஆக்கம் தேடிட அரியதோர் வாய்ப்பாகச் சட்டசபை நுழைவினை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இதுகண்டு மனம் பொறாதார், சட்டசபையிலா திராவிட நாடு என்று கடாவினர்; கடுங்கோபம் பிறந்தது! பதவிப் பித்துக்கொண்டுதான், கழகத்தவர் சட்டசபை செல்லத் துடிக்கின்றனர் என்று கூறினர் - கூறினோர் சிறுமதியாளர்! என்று சினந்தெழத் தோன்றிற்று. அப்போது இதயத்திலிருந்து வெளிவந்த இலக்கண விளக்கம்தான். {{block_center|"கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக்<br> காவி கொடுப்போரே பதவிப் பித்தர்கள்.''}} எனும் பழமொழி! அது அப்போது, அண்ணா! இப்போது, வேறு என்று கூறுகிறார்! தம்பி! நமக்கு, அந்த 'அப்போது'தான் தேவை! 'இப்போது' இருக்கிறதே, அது நமக்கு வேண்டாம்!<noinclude></noinclude> f3ry3uw7fwnv03ec4qbrkm4yfb2lx0i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/155 250 645408 1944456 1941271 2026-06-10T06:25:25Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> அப்போது திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருந்தது - அதனால் அப்படிச் சொன்னார்கள் - என்று கூறுவது கேள் தம்பி! நமக்கு இப்போதும் அந்தத் திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருக்கிறது - எனவே, நம்மைப் பொறுத்தவரையில், அப்போது வேறு, இப்போது வேறு என்பது இல்லை. எனவே, 'அப்போது' - அதாவது திராவிட நாடு கொள்கையில் நம்பிக்கை உள்ள நிலையில் - கூறப்பட்டதுதான் இப்போதும் போதுமானதாக, அறிவு நிரம்பியதாக இருக்கிறது!! ஆகவே, தம்பி! சட்டசபை நுழைவு குறித்துப் பொச்சரிப்புக் காரணமாகவோ பொறுப்பற்ற தன்மையாலோ, எவர் என்ன கூறிடினும், இதோ, இஃதன்றி வேறோர் விளக்கம் நாம் அளிக்க வேண்டுவதில்லை - ஏனெனில், கொண்ட கொள்கையில் பழுது ஏற்படாத காலத்துக் கருத்து இது. "உலகத்தின் அனுதாபத்தைப் பெறாமல் உலகின் எந்த மூலையிலும், அரசியல் நிலையை வேற்றுருக்கொண்டுவிடுவது எளிதல்ல." "இந்தியாவிற்கு விடுதலை எப்படிக் கிடைத்தது? நேருவே சொன்னார் - நாங்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், இந்தியாவிற்குத் திடீரெனச் சுதந்திரம் கிடைத்துவிட்டது; நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுவதற்குத் தயாராகக்கூட இருக்க வில்லை" - என்பதாக! "ஜெர்மனியைப் பாசிச வெறியன் என்று அழைத்துக் கொண்டிருந்த பிரிட்டன், உலகத்தின் முன் தன் முகத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிற்று." "1938-க்குப் பிறகுதான் இந்தியாவின் விடுதலைப் பிரச்சினை - ஒரு பிரச்சினை என்பதாக உலகத்தவரின் கண்களுக்குப் புலப்பட்டது." "1939ஆம் ஆண்டில், இந்தக் காங்கிரசார் எல்லாம் சட்ட சபைகளில் நுழைந்து, இந்தியாவின் விடுதலை குறித்துப் பேசினார்கள்." "ஜின்னாவின் பாக்கிஸ்தான் கோரிக்கை, நமது திராவிட நாடு கோரிக்கையைவிட 'மாற்றுக் குறைந்தது; முஸ்லீம்கள் - அவர்கள் பல இனத்தவராயிருந்தாலும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்' என்றுகூறி, அவர்களுக்காகப் பாகிஸ்தான் கோரப்பட்டது."<noinclude></noinclude> t4eg4fi8sfz2un71cgj87g2yshh717c 1944583 1944456 2026-06-10T10:24:21Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> அப்போது திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருந்தது - அதனால் அப்படிச் சொன்னார்கள் - என்று கூறுவது கேள் தம்பி! நமக்கு இப்போதும் அந்தத் திராவிட நாடு கொள்கையிலே நம்பிக்கை இருக்கிறது - எனவே, நம்மைப் பொறுத்தவரையில், அப்போது வேறு, இப்போது வேறு என்பது இல்லை. எனவே, 'அப்போது' - அதாவது திராவிட நாடு கொள்கையில் நம்பிக்கை உள்ள நிலையில் - கூறப்பட்டதுதான் இப்போதும் போதுமானதாக, அறிவு நிரம்பியதாக இருக்கிறது!! ஆகவே, தம்பி! சட்டசபை நுழைவு குறித்துப் பொச்சரிப்புக் காரணமாகவோ பொறுப்பற்ற தன்மையாலோ, எவர் என்ன கூறிடினும், இதோ, இஃதன்றி வேறோர் விளக்கம் நாம் அளிக்க வேண்டுவதில்லை - ஏனெனில், கொண்ட கொள்கையில் பழுது ஏற்படாத காலத்துக் கருத்து இது. "உலகத்தின் அனுதாபத்தைப் பெறாமல் உலகின் எந்த மூலையிலும், அரசியல் நிலையை வேற்றுருக்கொண்டுவிடுவது எளிதல்ல." "இந்தியாவிற்கு விடுதலை எப்படிக் கிடைத்தது? நேருவே சொன்னார் - நாங்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், இந்தியாவிற்குத் திடீரெனச் சுதந்திரம் கிடைத்துவிட்டது; நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுவதற்குத் தயாராகக்கூட இருக்க வில்லை" - என்பதாக! "ஜெர்மனியைப் பாசிச வெறியன் என்று அழைத்துக் கொண்டிருந்த பிரிட்டன், உலகத்தின் முன் தன் முகத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிற்று." "1938-க்குப் பிறகுதான் இந்தியாவின் விடுதலைப் பிரச்சினை - ஒரு பிரச்சினை என்பதாக உலகத்தவரின் கண்களுக்குப் புலப்பட்டது." "1939ஆம் ஆண்டில், இந்தக் காங்கிரசார் எல்லாம் சட்ட சபைகளில் நுழைந்து, இந்தியாவின் விடுதலை குறித்துப் பேசினார்கள்." "ஜின்னாவின் பாக்கிஸ்தான் கோரிக்கை, நமது திராவிட நாடு கோரிக்கையைவிட 'மாற்றுக் குறைந்தது; முஸ்லீம்கள் - அவர்கள் பல இனத்தவராயிருந்தாலும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்' என்றுகூறி, அவர்களுக்காகப் பாகிஸ்தான் கோரப்பட்டது."<noinclude></noinclude> 2qghkfjexbnhq0vpgybl6254qw5b10o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/156 250 645409 1944458 1941280 2026-06-10T06:29:02Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||155}}{{rule}}</noinclude> "அந்தக் கோரிக்கை எப்படி ஈடேறிற்று? தேர்தல்கள் நடைபெற்றபோது, முஸ்லிம் லீக் அதில் கலந்துகொண்டது. பஞ்சாபில் முஸ்லீம் லீக் மந்திரிசபை; வங்காளத்தில் பஸ்லுல்ஹக் தலைமையில் முஸ்லிம் லீக் மந்திரிசபை; சிந்து மாகாணத்திலும் லீக் மந்திரிசபை, மேலும் பல மாநிலங்களிலும் முஸ்லீம் லீகர்கள் சட்டசபை உறுப்பினராயிருந்து குரல் எழுப்பிக்கொண்டிருந் தனர். இப்படிச் சட்ட மன்றங்களில் முழங்கப்பட்டபோது பாகிஸ்தான் கோரிக்கை மேலும் வலுப்பெற்று, வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றது." "இன்று உலகத்தில் வளர்ந்துள்ள சூழ்நிலை - இது போன்றே பிரச்சினைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தாலன்றி வெற்றிபெறுவது கடினம் என்பதுதான்." "யாரைப் பதவிப் பித்தர்கள் என்று கூறலாம்? யார் பதவி பெறுவதற்குச் சகலத்தையும் விட்டுவிடுகிறார்களோ, அவர்களைத் தான் கூறலாம்." "உதாரணம் கூறவேண்டுமானால், நமது சென்னை மந்திரிகள் சுப்பிரமணியமும், ராஜாவும் கிடைப்பார்கள்." "தட்சிணப் பிரதேசம் வேண்டும்" என்று பேசிக்கொண் டிருந்தவர்கள், மறுநாள் காலையில், 'தட்சிணப் பிரதேசம் வேண்டுமா - மந்திரி பதவி வேண்டுமா?' - என்று அவர்கள் தலைவர் கேட்டதும், 'எங்களுக்கு மந்திரி பதவிதான் வேண்டும்' என்று கூறிவிட்டார்களே - அவர்கள் 'பதவிப் பித்தர்கள்' எனப்படுவோர்! "கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே 'பதவி பித்தர்கள்!" தனிமனிதர்கள் என்ற அளவிலே பதவிப் பித்துக்கு உதாரணமாக சுப்பிரமணியம், ராஜா ஆகியோரைக் குறிப்பிட்டேன். "கட்சி என்ற முறையில், நமது ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய <b>கம்யூனிஸ்ட்டு கட்சியைக் குறிப்பிடலாம்</b>." "போன பொதுத் தேர்தலுக்கு முன்வரை, 'முதலாளிகளின் முதுகெலும்பை முறிப்போம்' என்று பேசி வந்தவர்கள், தேர்தல் நேரத்தில், 'முதலாளிகளின் விரோதம் எதற்காக?' - என்று எண்ணினார்களோ, என்னவோ, 'உள்நாட்டு முதலாளிகள் எங்கள் நண்பர்கள், அவர்களுக்கு நாங்கள் வெளிநாட்டு<noinclude></noinclude> 0x9ae7zl3zmfqdp1bddlmp9me1s6wvz 1944584 1944458 2026-06-10T10:25:46Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||155}}{{rule}}</noinclude> "அந்தக் கோரிக்கை எப்படி ஈடேறிற்று? தேர்தல்கள் நடைபெற்றபோது, முஸ்லிம் லீக் அதில் கலந்துகொண்டது. பஞ்சாபில் முஸ்லீம் லீக் மந்திரிசபை; வங்காளத்தில் பஸ்லுல்ஹக் தலைமையில் முஸ்லிம் லீக் மந்திரிசபை; சிந்து மாகாணத்திலும் லீக் மந்திரிசபை, மேலும் பல மாநிலங்களிலும் முஸ்லீம் லீகர்கள் சட்டசபை உறுப்பினராயிருந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். இப்படிச் சட்ட மன்றங்களில் முழங்கப்பட்டபோது பாகிஸ்தான் கோரிக்கை மேலும் வலுப்பெற்று, வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றது." "இன்று உலகத்தில் வளர்ந்துள்ள சூழ்நிலை - இது போன்றே பிரச்சினைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தாலன்றி வெற்றிபெறுவது கடினம் என்பதுதான்." "யாரைப் பதவிப் பித்தர்கள் என்று கூறலாம்? யார் பதவி பெறுவதற்குச் சகலத்தையும் விட்டுவிடுகிறார்களோ, அவர்களைத் தான் கூறலாம்." "உதாரணம் கூறவேண்டுமானால், நமது சென்னை மந்திரிகள் சுப்பிரமணியமும், ராஜாவும் கிடைப்பார்கள்." "தட்சிணப் பிரதேசம் வேண்டும்" என்று பேசிக்கொண்டிருந்தவர்கள், மறுநாள் காலையில், 'தட்சிணப் பிரதேசம் வேண்டுமா - மந்திரி பதவி வேண்டுமா?' - என்று அவர்கள் தலைவர் கேட்டதும், 'எங்களுக்கு மந்திரி பதவிதான் வேண்டும்' என்று கூறிவிட்டார்களே - அவர்கள் 'பதவிப் பித்தர்கள்' எனப்படுவோர்! "கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்குக் காவு கொடுப்போரே 'பதவி பித்தர்கள்!" தனிமனிதர்கள் என்ற அளவிலே பதவிப் பித்துக்கு உதாரணமாக சுப்பிரமணியம், ராஜா ஆகியோரைக் குறிப்பிட்டேன். "கட்சி என்ற முறையில், நமது ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய <b>கம்யூனிஸ்ட்டு கட்சியைக் குறிப்பிடலாம்</b>." "போன பொதுத் தேர்தலுக்கு முன்வரை, 'முதலாளிகளின் முதுகெலும்பை முறிப்போம்' என்று பேசி வந்தவர்கள், தேர்தல் நேரத்தில், 'முதலாளிகளின் விரோதம் எதற்காக?' - என்று எண்ணினார்களோ, என்னவோ, 'உள்நாட்டு முதலாளிகள் எங்கள் நண்பர்கள், அவர்களுக்கு நாங்கள் வெளிநாட்டு<noinclude></noinclude> 812cf1cuctydgih20j9gw594kqdcvf1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/157 250 645410 1944461 1941283 2026-06-10T06:30:26Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>முதலாளிகளிடமிருந்து பாதுகாப்புத் தருவோம்' என்று பேச முற்பட்டார்கள். "இப்படி, தேர்தலுக்கு முன்புவரை, முதலாளிகளை ஒழிப்போம் என்று பேசிவிட்டு, தேர்தல் நேரத்தில், சட்ட சபையில் சில இடங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக முதலாளிகளின் பாதுகாப்பாளராக - பணியாளர்களாக மாறு கிறார்களே, அவர்கள், பதவிப்பித்தர்கள்!" "எங்களிடத்தில், அப்படி ஒரு சிறு நெளிவை ஆதாரப் பூர்வமாக எவராலும் எடுத்துக் காட்ட முடியாதே!" "நாங்கள் தேர்தலில் தோற்றாலும் வெற்றிபெற்றாலும், எங்கள் பரிசுத்தமான இதயம் நிலைக்கும்; அதுவே எங்களுக்குப் போதும்!" தி. மு. கழகம் தேர்தலுக்காகத் திடீரென அமைக்கப்பட்ட கழகம் அல்லவே! தோன்றிய எட்டு ஆண்டுகளாகக் கழகம் மக்களுக்கு மகத்தான பணிபுரிந்திருக்கிறது. கொள்கைக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும். எந்த நேரத்திலும் கேட்டாலும் தந்து வந்திருக்கிறது. "இந்த நேரத்தில் சிலர், சட்டப் பிரச்சினை ஒன்றையும் கிளப்பியிருக்கிறார்கள்." "தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் எப்படி இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிக்காமல் பதவிப் பிரமாணம் செய்யமுடியும்? அப்படிச் செய்தால், அதை எப்படி ஏற்பது?" - என்று சிலர் கேட்கின்றனர். "1939ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும், ஆச்சாரி யாரும் - நேருவும், இன்ன பிற காங்கிரசாரும் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு விசுவாசம் தெரிவித்துவிட்டுத்தான் பதவி ஏற்றனர். அதனாலேயே, மன்னரை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று எவரும் கூறவில்லை; மன்னருக்கேகூடத் தெரியும் -'இவர்கள் நமக்கு உள்ளன்போடு விசுவாசம் தெரிவிக்கவில்லை' என்று!" "அதுபோல நாம் இப்போது இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிப்பது என்பது எந்த வகையானது என்பதை நாடு நன்கறியமுடியும்."<noinclude></noinclude> qqiblr2gqwwo971xmuqqdtw4xd7d02d 1944462 1944461 2026-06-10T06:32:18Z Rathai palanivelan 11183 + 1944462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>முதலாளிகளிடமிருந்து பாதுகாப்புத் தருவோம்' என்று பேச முற்பட்டார்கள். "இப்படி, தேர்தலுக்கு முன்புவரை, முதலாளிகளை ஒழிப்போம் என்று பேசிவிட்டு, தேர்தல் நேரத்தில், சட்ட சபையில் சில இடங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக முதலாளிகளின் பாதுகாப்பாளராக - பணியாளர்களாக மாறு கிறார்களே, அவர்கள், பதவிப்பித்தர்கள்!" {{left_margin|3em|"எங்களிடத்தில், அப்படி ஒரு சிறு நெளிவை ஆதாரப் பூர்வமாக எவராலும் எடுத்துக் காட்ட முடியாதே!" "நாங்கள் தேர்தலில் தோற்றாலும் வெற்றிபெற்றாலும், எங்கள் பரிசுத்தமான இதயம் நிலைக்கும்; அதுவே எங்களுக்குப் போதும்!" }} தி. மு. கழகம் தேர்தலுக்காகத் திடீரென அமைக்கப்பட்ட கழகம் அல்லவே! தோன்றிய எட்டு ஆண்டுகளாகக் கழகம் மக்களுக்கு மகத்தான பணிபுரிந்திருக்கிறது. கொள்கைக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும். எந்த நேரத்திலும் கேட்டாலும் தந்து வந்திருக்கிறது. "இந்த நேரத்தில் சிலர், சட்டப் பிரச்சினை ஒன்றையும் கிளப்பியிருக்கிறார்கள்." "தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் எப்படி இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிக்காமல் பதவிப் பிரமாணம் செய்யமுடியும்? அப்படிச் செய்தால், அதை எப்படி ஏற்பது?" - என்று சிலர் கேட்கின்றனர். "1939ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும், ஆச்சாரி யாரும் - நேருவும், இன்ன பிற காங்கிரசாரும் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு விசுவாசம் தெரிவித்துவிட்டுத்தான் பதவி ஏற்றனர். அதனாலேயே, மன்னரை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று எவரும் கூறவில்லை; மன்னருக்கேகூடத் தெரியும் -'இவர்கள் நமக்கு உள்ளன்போடு விசுவாசம் தெரிவிக்கவில்லை' என்று!" "அதுபோல நாம் இப்போது இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிப்பது என்பது எந்த வகையானது என்பதை நாடு நன்கறியமுடியும்."<noinclude></noinclude> 5nry3zuvjlpzx0nojfte9gurytpldvj 1944585 1944462 2026-06-10T10:26:35Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>முதலாளிகளிடமிருந்து பாதுகாப்புத் தருவோம்' என்று பேச முற்பட்டார்கள். "இப்படி, தேர்தலுக்கு முன்புவரை, முதலாளிகளை ஒழிப்போம் என்று பேசிவிட்டு, தேர்தல் நேரத்தில், சட்ட சபையில் சில இடங்களைப் பெறுவதற்கு உதவுவதற்காக முதலாளிகளின் பாதுகாப்பாளராக - பணியாளர்களாக மாறுகிறார்களே, அவர்கள், பதவிப்பித்தர்கள்!" {{left_margin|3em|"எங்களிடத்தில், அப்படி ஒரு சிறு நெளிவை ஆதாரப் பூர்வமாக எவராலும் எடுத்துக் காட்ட முடியாதே!" "நாங்கள் தேர்தலில் தோற்றாலும் வெற்றிபெற்றாலும், எங்கள் பரிசுத்தமான இதயம் நிலைக்கும்; அதுவே எங்களுக்குப் போதும்!" }} தி. மு. கழகம் தேர்தலுக்காகத் திடீரென அமைக்கப்பட்ட கழகம் அல்லவே! தோன்றிய எட்டு ஆண்டுகளாகக் கழகம் மக்களுக்கு மகத்தான பணிபுரிந்திருக்கிறது. கொள்கைக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும். எந்த நேரத்திலும் கேட்டாலும் தந்து வந்திருக்கிறது. "இந்த நேரத்தில் சிலர், சட்டப் பிரச்சினை ஒன்றையும் கிளப்பியிருக்கிறார்கள்." "தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் எப்படி இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிக்காமல் பதவிப் பிரமாணம் செய்யமுடியும்? அப்படிச் செய்தால், அதை எப்படி ஏற்பது?" - என்று சிலர் கேட்கின்றனர். "1939ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும், ஆச்சாரி யாரும் - நேருவும், இன்ன பிற காங்கிரசாரும் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு விசுவாசம் தெரிவித்துவிட்டுத்தான் பதவி ஏற்றனர். அதனாலேயே, மன்னரை இவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று எவரும் கூறவில்லை; மன்னருக்கேகூடத் தெரியும் -'இவர்கள் நமக்கு உள்ளன்போடு விசுவாசம் தெரிவிக்கவில்லை' என்று!" "அதுபோல நாம் இப்போது இந்திய அரசியல் சட்டத்திற்கு விசுவாசம் தெரிவிப்பது என்பது எந்த வகையானது என்பதை நாடு நன்கறியமுடியும்."<noinclude></noinclude> omuwozsf07zbildw58rk54opzj5cqqe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/158 250 645411 1944464 1941286 2026-06-10T06:32:52Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||157}}{{rule}}</noinclude> தம்பி! சட்டமன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலிவூட்டும் நோக்குடனேதான் என்பதைக் கொள்கைப் பற்றுள்ள எவரும் மறுக்க இயலாது என்பதற்குச் சான்று வேறு ஏதும் தேவையில்லை - கொள்கைப் பற்று இருந்தகாலை வெளியிடப்பட்ட இக்கருத்துரை ஒன்றே போதும். திருப்பரங்குன்றம் மாநாட்டிலே குழுமிய கொள்கை மறவாக் கோமான்களுக்கு, இப்படி இலக்கணம் பேசத் தெரியாம லிருக்கலாம்; ஆனால், அவர்கள் கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்காகக் காவு கொடுக்கும் போக்கினரல்ல! ஆகவே தான், இலக்கணம் கூறினோர், கொண்ட கொள்கையைவிட்டுச் சென்றுவிட்டாரெனிலும், இவர்கள் கொள்கையுடன் இணைந்து விட்டோம் என்பதை எடுத்துக்காட்ட எழுச்சியுடன் கூடினர் - எவரும் கண்டு வியக்கத்தக்க விதத்தில்! கொள்கைக்காக வாதாடியவர்களே இன்று அதனை இழந்து பேசுவது, காது குடையும் அளவு கேட்கிறது - மணம் பதறத்தான் செய்கிறது - எனினும், எதிர்ப்புரைப்போருக்கு; மறுப்புரைப்போருக்கு, எரிச்சல் மூட்டுவோருக்கு, ஏளனம் பேசுவோருக்கு, அழித்து விடுவோம், ஒழித்துவிடுவோம் என்று ஆர்ப்பரிப்பவர்க்கு, பதிலளிப்பதும் காலக்கேடு என்று உணர்ந்து, மாநாட்டில் திரண்டு வந்திருந்து தமக்குள்ள கொள்கைப் பற்றினை நாடறியச் செய்தனர். மற்ற நேரங்களில், மாநாடுகளில் கலந்துகொள்வது மகிழ்ச்சிக்குரியதாக இருந்திருக்கும் - இம்முறை, களிப்புப் பெற மட்டுமல்ல திராவிட நாடு திராவிடருக்கே எனும் கொள்கைக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் கடமையை மற்றவர்க்கு உணர்த்தவும் கூடினர். அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால், ஒழித்துவிட்டுத்தான் உறங்கச் செல்வேன். என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை. இழிமொழி பேசுவோருக்குப் பதில் மொழி, அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாதது மல்ல, எவரிடமும் பாடம் கேட்கவும் தேவையில்லை - அறிவின் தரம் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாசநடை மிகுதியாகக் காணப்படும். யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத்துடன் ஐயையோ! என்று அலறுவர்; பன்றி பாய்ந்தோடிவரின்<noinclude></noinclude> 4k4idvz5rnfgsde58vvkx8zv6d0cfgj 1944586 1944464 2026-06-10T10:28:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||157}}{{rule}}</noinclude> தம்பி! சட்டமன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலிவூட்டும் நோக்குடனேதான் என்பதைக் கொள்கைப் பற்றுள்ள எவரும் மறுக்க இயலாது என்பதற்குச் சான்று வேறு ஏதும் தேவையில்லை - கொள்கைப் பற்று இருந்தகாலை வெளியிடப்பட்ட இக்கருத்துரை ஒன்றே போதும். திருப்பரங்குன்றம் மாநாட்டிலே குழுமிய கொள்கை மறவாக் கோமான்களுக்கு, இப்படி இலக்கணம் பேசத் தெரியாமலிருக்கலாம்; ஆனால், அவர்கள் கொண்ட கொள்கையைக் கண்ட பதவிக்காகக் காவு கொடுக்கும் போக்கினரல்ல! ஆகவே தான், இலக்கணம் கூறினோர், கொண்ட கொள்கையைவிட்டுச் சென்றுவிட்டாரெனிலும், இவர்கள் கொள்கையுடன் இணைந்து விட்டோம் என்பதை எடுத்துக்காட்ட எழுச்சியுடன் கூடினர் - எவரும் கண்டு வியக்கத்தக்க விதத்தில்! கொள்கைக்காக வாதாடியவர்களே இன்று அதனை இழந்து பேசுவது, காது குடையும் அளவு கேட்கிறது - மணம் பதறத்தான் செய்கிறது - எனினும், எதிர்ப்புரைப்போருக்கு; மறுப்புரைப்போருக்கு, எரிச்சல் மூட்டுவோருக்கு, ஏளனம் பேசுவோருக்கு, அழித்து விடுவோம், ஒழித்துவிடுவோம் என்று ஆர்ப்பரிப்பவர்க்கு, பதிலளிப்பதும் காலக்கேடு என்று உணர்ந்து, மாநாட்டில் திரண்டு வந்திருந்து தமக்குள்ள கொள்கைப் பற்றினை நாடறியச் செய்தனர். மற்ற நேரங்களில், மாநாடுகளில் கலந்துகொள்வது மகிழ்ச்சிக்குரியதாக இருந்திருக்கும் - இம்முறை, களிப்புப் பெற மட்டுமல்ல திராவிட நாடு திராவிடருக்கே எனும் கொள்கைக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் கடமையை மற்றவர்க்கு உணர்த்தவும் கூடினர். அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று ஒருவர் பேசினால், ஒழித்துவிட்டுத்தான் உறங்கச் செல்வேன். என்று மற்றொருவர் பதிலுரைப்பது, கடினமுமல்ல, அதற்கு அளவற்ற அறிவும் தேவையில்லை. இழிமொழி பேசுவோருக்குப் பதில் மொழி, அதனினும் இழிந்ததாகப் பிழிந்தெடுத்துத் தருவது என்பதும் இயலாதது மல்ல, எவரிடமும் பாடம் கேட்கவும் தேவையில்லை - அறிவின் தரம் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஆபாசநடை மிகுதியாகக் காணப்படும். யானை துரத்திக்கொண்டு வந்தால், அச்சத்துடன் ஐயையோ! என்று அலறுவர்; பன்றி பாய்ந்தோடிவரின்<noinclude></noinclude> 8jx2i6xco2mv2h333htwefm2d5bmaob பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/159 250 645413 1944465 1941287 2026-06-10T06:33:46Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அருவருப்புடன், ஐயையோ! என்று கூறியபடி ஒதுங்கிக் கொள்வர். பொது மாநாட்டிலே கூடிய பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப்புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ விரும்பும் போக்கினரல்லர். நம்மையும் நமது கொள்கையையும், கழகத்தையும் அழித்திடப்போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்டபோது, இன்று அதே செயலில் தம்மைச் சிக்க வைத்துக்கொண்டவர்கள், கழக எதிர்ப்பாளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மாநாட்டிலே கூடியிருந்தோர் மறந்துவிடவில்லை; மறந்துவிடக்கூடியதாகவும் அமைந்ததல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது - நமது நாக்குக்குப் பழக்கமற்ற சரக்கு ஆதலால், வெத்து வேட்டெத்தனை நாள்? வீணாகிப் போகாதீர்! திருந்தித் தமிழ்த்தாயை, திராவிடத்தை வாழவைப்பீர் இல்லையெனில், நீரல்ல; இன்னுமொரு கூட்டம் சூழ்ந்து வருமென்றாலும் தூளாக்கிப் போட்டிடுவோம். எப்படித் தம்பி! வீரம்! தூளாக்கிப் போட்டுவிடுவோம் எதிர்த்து வரும் கூட்டத்தை என்கிறார்! அதுசரி, அண்ணா! இன்னுமொரு என்ற வார்த்தைக்குப் பக்கத்தில், எழுத்தற்ற இடம் இருக்கிறதே, அது என்ன அச்சுப் பிழையா? என்றுதானே கேட்க எண்ணுகிறாய். தம்பி! அச்சுப் பிழை அல்ல! பிழை என்னுடையது! எனக்குத் துணிவில்லை, அந்த இழிமொழியை எடுத்துக்காட்ட - எனவே விட்டொழித்தேன். கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும் போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு. அவர்கள் அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப் பிடித்தம் அவ்வளவு அழுத்தமானது என்பதனால் அல்ல, அவர்களின் "பாணி' அது! பணியும் அஃதே! பிணி என்றும் கூறலாம்!! 'பாணி' கிடக்கட்டும் தம்பி! இன்று அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகூடக் கிடக்கட்டும், கொள்கைப்பற்றுக்கொண்டிருந்த நாட்களில் அவர்கள், எத்துணை அழுத்தந் திருத்தமாக, வாதாடினார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சிகொள்வோம் - நன்றிகூடச் செலுத்திக்கொள்வேன், என்னைப் பொறுத்த வரையில்.<noinclude></noinclude> sy01r4ok9ebpfigoaamru2i64ddek7l 1944588 1944465 2026-06-10T10:29:01Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அருவருப்புடன், ஐயையோ! என்று கூறியபடி ஒதுங்கிக் கொள்வர். பொது மாநாட்டிலே கூடிய பொறுப்புமிக்கோர் மறுப்புரை கூறிடவோ, வெறுப்புரை பேசிடவோ, நாராச நடை மொழிந்திடவோ விரும்பும் போக்கினரல்லர். நம்மையும் நமது கொள்கையையும், கழகத்தையும் அழித்திடப்போவதாக, முன்பு சிலர் முழக்கமிட்டபோது, இன்று அதே செயலில் தம்மைச் சிக்க வைத்துக்கொண்டவர்கள், கழக எதிர்ப்பாளர்களை எத்தகைய சூடான சொற்களால் தாக்கினர் என்பதை, மாநாட்டிலே கூடியிருந்தோர் மறந்துவிடவில்லை; மறந்துவிடக்கூடியதாகவும் அமைந்ததல்ல, அந்தச் சொற்கள்!! சொற்களா? தீப்பொறிகள்!! அதனைக் கூச்சத்துடன்தான் நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது - நமது நாக்குக்குப் பழக்கமற்ற சரக்கு ஆதலால், வெத்து வேட்டெத்தனை நாள்? வீணாகிப் போகாதீர்! திருந்தித் தமிழ்த்தாயை, திராவிடத்தை வாழவைப்பீர் இல்லையெனில், நீரல்ல; இன்னுமொரு கூட்டம் சூழ்ந்து வருமென்றாலும் தூளாக்கிப் போட்டிடுவோம். எப்படித் தம்பி! வீரம்! தூளாக்கிப் போட்டுவிடுவோம் எதிர்த்து வரும் கூட்டத்தை என்கிறார்! அதுசரி, அண்ணா! இன்னுமொரு என்ற வார்த்தைக்குப் பக்கத்தில், எழுத்தற்ற இடம் இருக்கிறதே, அது என்ன அச்சுப் பிழையா? என்றுதானே கேட்க எண்ணுகிறாய். தம்பி! அச்சுப் பிழை அல்ல! பிழை என்னுடையது! எனக்குத் துணிவில்லை, அந்த இழிமொழியை எடுத்துக்காட்ட - எனவே விட்டொழித்தேன். கழக எதிர்ப்பாளர்களைக் கடுமொழியால் தாக்கும் போக்கு நம்மிலே, மிகச் சிலருக்கே உண்டு. அவர்கள் அப்போக்குக் கொண்டதற்குக் காரணமும், நம்மைவிட அவர்கட்கு கொள்கைப் பிடித்தம் அவ்வளவு அழுத்தமானது என்பதனால் அல்ல, அவர்களின் "பாணி' அது! பணியும் அஃதே! பிணி என்றும் கூறலாம்!! 'பாணி' கிடக்கட்டும் தம்பி! இன்று அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகூடக் கிடக்கட்டும், கொள்கைப்பற்றுக்கொண்டிருந்த நாட்களில் அவர்கள், எத்துணை அழுத்தந் திருத்தமாக, வாதாடினார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சிகொள்வோம் - நன்றிகூடச் செலுத்திக்கொள்வேன், என்னைப் பொறுத்த வரையில்.<noinclude></noinclude> j568q09fxy4abagvd0rxl0qd8jh458h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/160 250 645414 1944466 1941292 2026-06-10T06:35:31Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||159}}{{rule}}</noinclude>உன்னைத்தானே அண்ணா! இழிவாக ஏசுகிறார்கள் என்று ஆயாசத்துடன் கேட்கிறாய், தம்பி! எனக்கு, முப்பொரு முறை நான் கூறியபடி, பட்ட கடனைத் தீர்ப்பதுபோன்று, மனத்துக்கு ஒரு நிம்மதியே ஏற்படுகிறது, அவர்கள் ஏசும்போது. எத்துணைப் புகழாரம் சூட்டினார்கள் - விதவிதமான மலர்களைத் தொடுத் தெடுத்து!! நான், அவர்களுக்கு என்ன தர முடிந்தது? தம்பி! என்று தழதழத்த குரலில், அன்பின் காரணமாக, அந்தஸ்து காரணமாக அல்ல, அழைத்தேன்! அது ஒரு பிரமாதமா! ஆயிரம் பேர், அவர்களை 'அண்ணாச்சி' என்று அழைக்கும்போது, நான் தம்பி என்று அழைத்ததுகூட ஒரு தவறு என்று எண்ணுகிறார்களோ என்னவோ! போகட்டும்; பகை உள்ளம் உலைக்கூடம் போன்றிருக்கும் - தீப்பொறிதான் வெளிவரும், நான் வியப்படைய வில்லை; வெகுண்டிடவும் மாட்டேன்! இந்த இயல்பு இறந்து பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கிருக்கும் மகிழ்ச்சியெல்லாம், ஏற்புடைய கொள்கைக்கு எண்ணிலடங்காதார், அதற்கும் அஞ்சாதார், அணிவகுத்து நிற்கின்றார், ஐயப்பாடெழுப்பியும் ஆர்ப்பரித்தும் எதிர்த்தும் சிலர், அன்று நாங்கள் சொன்னதெல்லாம் அபத்தம், அநியாயம்! இன்றே உரைக்கின்றோம். இது உபநிஷதம் என்றே விந்தைப் பேச்சுதனை வீசிடும் இவ்வேளையிலும்! நீண்ட மனக்குழப்பத்திற்குப் பிறகு, அறிவாளர் சிலர், தெளிவு பெற்றனர்; ஏமாளிகளாகவே நீவிர் இன்னும் இருக்கின்றீர்! இதிலே மகிழ்ச்சிகொள, மார்தட்ட என்ன உளது? என்றும் கேட்டிடச் சிலர் உண்டு, அறிவேன், தம்பி. அறிவேன்! அன்னார்க்கொன்றுரைப்பேன்! {{left_margin|3em|<poem>கூக்கூ! கூக்கூ! என்று கூவிடாமலே புறாவும் அக்கா அக்கா! வென்றழைக்கும் கிளியு மாகுமா!! கூகூ! கூகூ! என்று கூவிடும் கிளி! அன்னை, "மாடப்புறாவே! மாமரக்குயிலே! பச்சைக்கிளியே பாகே!" என்று அழைத்திட்டாலும், குழவி, அம்மா! அம்மா! என்றே இசைக்கும், அறியீரோ நீவிர்!! </poem>}} என்ன அண்ணா! புறாவும் குயிலும் கிளியும் குழவியும், எப்படி எப்படிக் குரலெழுப்பும் என்பது யாருக்கும் தெரியா தென்றா, கூறவந்துவிட்டாய் என்று கேட்டுவிடாதே தம்பி!<noinclude></noinclude> ebhyv2es1qpur1846zrq52aaxiqyck3 1944590 1944466 2026-06-10T10:30:05Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||159}}{{rule}}</noinclude>உன்னைத்தானே அண்ணா! இழிவாக ஏசுகிறார்கள் என்று ஆயாசத்துடன் கேட்கிறாய், தம்பி! எனக்கு, முப்பொரு முறை நான் கூறியபடி, பட்ட கடனைத் தீர்ப்பதுபோன்று, மனத்துக்கு ஒரு நிம்மதியே ஏற்படுகிறது, அவர்கள் ஏசும்போது. எத்துணைப் புகழாரம் சூட்டினார்கள் - விதவிதமான மலர்களைத் தொடுத் தெடுத்து!! நான், அவர்களுக்கு என்ன தர முடிந்தது? தம்பி! என்று தழதழத்த குரலில், அன்பின் காரணமாக, அந்தஸ்து காரணமாக அல்ல, அழைத்தேன்! அது ஒரு பிரமாதமா! ஆயிரம் பேர், அவர்களை 'அண்ணாச்சி' என்று அழைக்கும்போது, நான் தம்பி என்று அழைத்ததுகூட ஒரு தவறு என்று எண்ணுகிறார்களோ என்னவோ! போகட்டும்; பகை உள்ளம் உலைக்கூடம் போன்றிருக்கும் - தீப்பொறிதான் வெளிவரும், நான் வியப்படைய வில்லை; வெகுண்டிடவும் மாட்டேன்! இந்த இயல்பு இறந்து பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கிருக்கும் மகிழ்ச்சியெல்லாம், ஏற்புடைய கொள்கைக்கு எண்ணிலடங்காதார், அதற்கும் அஞ்சாதார், அணிவகுத்து நிற்கின்றார், ஐயப்பாடெழுப்பியும் ஆர்ப்பரித்தும் எதிர்த்தும் சிலர், அன்று நாங்கள் சொன்னதெல்லாம் அபத்தம், அநியாயம்! இன்றே உரைக்கின்றோம். இது உபநிஷதம் என்றே விந்தைப் பேச்சுதனை வீசிடும் இவ்வேளையிலும்! நீண்ட மனக்குழப்பத்திற்குப் பிறகு, அறிவாளர் சிலர், தெளிவு பெற்றனர்; ஏமாளிகளாகவே நீவிர் இன்னும் இருக்கின்றீர்! இதிலே மகிழ்ச்சிகொள, மார்தட்ட என்ன உளது? என்றும் கேட்டிடச் சிலர் உண்டு, அறிவேன், தம்பி. அறிவேன்! அன்னார்க்கொன்றுரைப்பேன்! {{left_margin|3em|<poem>கூக்கூ! கூக்கூ! என்று கூவிடாமலே புறாவும் அக்கா அக்கா! வென்றழைக்கும் கிளியு மாகுமா!! கூகூ! கூகூ! என்று கூவிடும் கிளி! அன்னை, "மாடப்புறாவே! மாமரக்குயிலே! பச்சைக்கிளியே பாகே!" என்று அழைத்திட்டாலும், குழவி, அம்மா! அம்மா! என்றே இசைக்கும், அறியீரோ நீவிர்!! </poem>}} என்ன அண்ணா! புறாவும் குயிலும் கிளியும் குழவியும், எப்படி எப்படிக் குரலெழுப்பும் என்பது யாருக்கும் தெரியாதென்றா, கூறவந்துவிட்டாய் என்று கேட்டுவிடாதே தம்பி!<noinclude></noinclude> knwt7vvnvcrryzfiq441ylr4wj9xm2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/161 250 645415 1944467 1941295 2026-06-10T06:37:43Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நான் கூறுவது. வேறொர் உண்மையை விளக்க! எப்படி, குயிலும் கிளியும் புறாவும் குழவியும், தத்தமக்கு இயற்கையாக அமைந்துள்ள ஒலியையே மொழிந்திடுமோ, அதுபோலத் திராவிடர் திராவிட நாடு என்றுதான் முழக்கமெழுப்புவார்கள் - அது இயற்கை அந்த இயற்கையின்படிதான் நாம் நடந்துகொள்வோமே தவிர, ஒரு மாற்றமும் ஏற்படாது - என்பதை விளக்கத்தான், தம்பி, இதனைக் கூறினேன். திராவிடநாடு இலட்சியத்தை அண்ணாத்துரை கைவிட்டு விட்டான் என்று யாரோ கதைத்தனராம் - ஓராண்டுக்கு முன்பு. விடுவார்களா, பேச்சையும் மூச்சையும் அர்ப்பணிப்பவர்கள். பிடித்தார்கள் ஒரு பிடி, என்னைக் குறைவாகப் பேசியவர்களை. எனக்கு எத்தனை பெரிய துணை இருந்தது என்று ஏக்கத்துடன் காட்டிட அல்ல, அதனை இதுபோது எடுத்துரைப்பது, திராவிடர், திராவிட நாடு என்று முழக்கமெழுப்புவது இயற்கையின் பாற்பட்டது என்ற பேருண்மையை, அதனை உரைத்தோரே உளம் குழம்பிப்போயிருக்கும்போது, அவர்கள் தெளிவுபெற அவர்களுக்குத் தருவது முறையல்லவா, அதனால். பித்தம் போக்கும் கஷாயம் தயாரிக்கும் மருத்துவருக்கு, பித்தம் மேலிட்டுவிட்டால், அதே கஷாயத்திலே ஒரு முழுங்கு தரமாட்டோமா, <b>அதுபோல</b> என்று வைத்துக்கொள்ளேன்! திராவிட நாடு எனும் கொள்கை தீதானது என்று பேசிடும் காங்கிரசாருக்கு, அதிலும் குறிப்பாக ஆளவந்தார்களைப் பிடித்துக்கொண்ட பித்தத்தைக் குறைக்கத் தயாரிக்கப்பட்ட கஷாயத்திலே, இதோ ஒரு முழுங்கு. "இப்போது ஒருவர், நான் போகுமிட மெல்லாம் பேசுகிறார் - 'அண்ணா திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கைவிட்டுவிட்டார்' என்று! நான் அவருக்குத் தெரிவிப்பதெல்லாம், புறா - 'கூக்கூ' என்று கத்தும் வரையில், கிளி - 'அக்கா, அக்கா' என்று அழைக்கின்ற வரையில்; குயில் - 'கூகூ, கூகூ' என்று கூவுகின்ற வரையில்; குழந்தை 'அம்மா, அம்மா' என்று சொல்லுகின்ற வரையில், நாங்களும், 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொல்லிக் கொண்டேதான் இருப்போம்! இயற்கையில் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டாலுங்கூட, எங்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பதனை தெளிவாக அவர்கள் அறிதல்வேண்டும்.<noinclude></noinclude> f7y7dhyflojidxosa7n1lbogn8n23ai 1944600 1944467 2026-06-10T10:36:57Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நான் கூறுவது. வேறொர் உண்மையை விளக்க! எப்படி, குயிலும் கிளியும் புறாவும் குழவியும், தத்தமக்கு இயற்கையாக அமைந்துள்ள ஒலியையே மொழிந்திடுமோ, அதுபோலத் திராவிடர் திராவிட நாடு என்றுதான் முழக்கமெழுப்புவார்கள் - அது இயற்கை அந்த இயற்கையின்படிதான் நாம் நடந்துகொள்வோமே தவிர, ஒரு மாற்றமும் ஏற்படாது - என்பதை விளக்கத்தான், தம்பி, இதனைக் கூறினேன். திராவிடநாடு இலட்சியத்தை அண்ணாத்துரை கைவிட்டு விட்டான் என்று யாரோ கதைத்தனராம் - ஓராண்டுக்கு முன்பு. விடுவார்களா, பேச்சையும் மூச்சையும் அர்ப்பணிப்பவர்கள். பிடித்தார்கள் ஒரு பிடி, என்னைக் குறைவாகப் பேசியவர்களை. எனக்கு எத்தனை பெரிய துணை இருந்தது என்று ஏக்கத்துடன் காட்டிட அல்ல, அதனை இதுபோது எடுத்துரைப்பது, திராவிடர், திராவிட நாடு என்று முழக்கமெழுப்புவது இயற்கையின் பாற்பட்டது என்ற பேருண்மையை, அதனை உரைத்தோரே உளம் குழம்பிப்போயிருக்கும்போது, அவர்கள் தெளிவுபெற அவர்களுக்குத் தருவது முறையல்லவா, அதனால். பித்தம் போக்கும் கஷாயம் தயாரிக்கும் மருத்துவருக்கு, பித்தம் மேலிட்டுவிட்டால், அதே கஷாயத்திலே ஒரு முழுங்கு தரமாட்டோமா, <b>அதுபோல</b> என்று வைத்துக்கொள்ளேன்! திராவிட நாடு எனும் கொள்கை தீதானது என்று பேசிடும் காங்கிரசாருக்கு, அதிலும் குறிப்பாக ஆளவந்தார்களைப் பிடித்துக்கொண்ட பித்தத்தைக் குறைக்கத் தயாரிக்கப்பட்ட கஷாயத்திலே, இதோ ஒரு முழுங்கு. "இப்போது ஒருவர், நான் போகுமிட மெல்லாம் பேசுகிறார் - 'அண்ணா திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கைவிட்டுவிட்டார்' என்று! நான் அவருக்குத் தெரிவிப்பதெல்லாம், புறா - 'கூக்கூ' என்று கத்தும் வரையில், கிளி - 'அக்கா, அக்கா' என்று அழைக்கின்ற வரையில்; குயில் - 'கூகூ, கூகூ' என்று கூவுகின்ற வரையில்; குழந்தை 'அம்மா, அம்மா' என்று சொல்லுகின்ற வரையில், நாங்களும், 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொல்லிக் கொண்டேதான் இருப்போம்! இயற்கையில் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டாலுங்கூட, எங்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பதனை தெளிவாக அவர்கள் அறிதல்வேண்டும்.<noinclude></noinclude> 49s88jt01ft10rvuk5mc221apn6pzou பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/162 250 645416 1944468 1941298 2026-06-10T06:40:31Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||161}}{{rule}}</noinclude> "பிரிந்தால் திராவிட நாடு வாழுமா - என்கிறார்கள்! இப்போது ஒன்றாக இருப்பதனால் ஆபத்து வராமலா இருக்கிறது? <b>சீனாக்காரன்</b> 40 ஆயிரம் சதுர மைல்களைப் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறான்; நமது ஆட்சி என்ன செய்கிறது? 'விட்டேனா பார், விட்டேனா பார்' என்கிறது! <b>இதனால் நமக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது!</b> "ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பைப் பொறுத்து இல்லை, அந்த நாட்டு மக்களின் <b>ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும்தான்</b> இருக்கிறது! சிறிய நாடாகிய எகிப்து, பெரிய நாடுகளாகிய இங்கிலாந்தையும் அமெரிக்கா வையும் எதிர்த்துப் பேசியது! இப்போது இரஷ்யாவையே எதிர்த்துப் பேசுகிறது! அந்த வலிமையை அந்த நாடு பெற்றிருக்கையில், அதைவிட எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் திராவிடம் வாழமுடியாதா? வாழ முடியும். எனவேதான் நாம் திராவிட நாடு கேட்கிறோம்." {{left_margin|3em|"இம்மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எவ்வித நன்மையும் மக்களுக்கு ஏற்பட வில்லை! விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது! இவர்கள் எதைத் தொட்டாலும் அது உருப்படுவதில்லை!அதை நடத்துவதற்கு இவர்களுக்கு ஆற்றல் இல்லை! போதுமான அதிகாரம் இல்லை! ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் நம்மைத் திட்டுவதுதான்! அழகேசன் பதவிக்கு வந்த பிறகு காங்கிரசுக் கமிட்டியிலிருந்து பல ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சில பத்திரிகைகளை விட்டு, நம்மைத் திட்டச் சொல்லுகிறார்கள்! முடிந்துபோன சகாப்தத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்! இதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதற்கு நமக்கு மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பளித்து வருகிறது."}} திருப்பரங்குன்றத்திலே திரண்டு வந்திருந்தோர், திராவிட நாடு எனும் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டோர் - எனினும், ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்த காரணத்தினாலேயே எதையும் மறுக்கும் துணிவு பெற்றுவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதனால், பொதுத் தேர்தலில், அதனை முறியடித்துக் காட்டுவதன்மூலம், உலகுக்கு, நமது கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் துணை நிற்கின்றனர் என்பதை விளக்கித் தீரவேண்டும் என்ற உறுதியைப் பெற்றனர்.<noinclude> 6 - தஅக தொ-4 பூ வெ. எண் 514</noinclude> bnmvgbeg1ailixma330exnqv4p6b3zh 1944601 1944468 2026-06-10T10:37:55Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||161}}{{rule}}</noinclude> "பிரிந்தால் திராவிட நாடு வாழுமா - என்கிறார்கள்! இப்போது ஒன்றாக இருப்பதனால் ஆபத்து வராமலா இருக்கிறது? <b>சீனாக்காரன்</b> 40 ஆயிரம் சதுர மைல்களைப் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறான்; நமது ஆட்சி என்ன செய்கிறது? 'விட்டேனா பார், விட்டேனா பார்' என்கிறது! <b>இதனால் நமக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது!</b> "ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பைப் பொறுத்து இல்லை, அந்த நாட்டு மக்களின் <b>ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும்தான்</b> இருக்கிறது! சிறிய நாடாகிய எகிப்து, பெரிய நாடுகளாகிய இங்கிலாந்தையும் அமெரிக்கா வையும் எதிர்த்துப் பேசியது! இப்போது இரஷ்யாவையே எதிர்த்துப் பேசுகிறது! அந்த வலிமையை அந்த நாடு பெற்றிருக்கையில், அதைவிட எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் திராவிடம் வாழமுடியாதா? வாழ முடியும். எனவேதான் நாம் திராவிட நாடு கேட்கிறோம்." {{left_margin|3em|"இம்மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எவ்வித நன்மையும் மக்களுக்கு ஏற்பட வில்லை! விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது! இவர்கள் எதைத் தொட்டாலும் அது உருப்படுவதில்லை!அதை நடத்துவதற்கு இவர்களுக்கு ஆற்றல் இல்லை! போதுமான அதிகாரம் இல்லை! ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் நம்மைத் திட்டுவதுதான்! அழகேசன் பதவிக்கு வந்த பிறகு காங்கிரசுக் கமிட்டியிலிருந்து பல ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சில பத்திரிகைகளை விட்டு, நம்மைத் திட்டச் சொல்லுகிறார்கள்! முடிந்துபோன சகாப்தத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்! இதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதற்கு நமக்கு மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பளித்து வருகிறது."}} திருப்பரங்குன்றத்திலே திரண்டு வந்திருந்தோர், திராவிட நாடு எனும் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டோர் - எனினும், ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்த காரணத்தினாலேயே எதையும் மறுக்கும் துணிவு பெற்றுவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதனால், பொதுத் தேர்தலில், அதனை முறியடித்துக் காட்டுவதன்மூலம், உலகுக்கு, நமது கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் துணை நிற்கின்றனர் என்பதை விளக்கித் தீரவேண்டும் என்ற உறுதியைப் பெற்றனர்.<noinclude> 6 - தஅக தொ-4 பூ வெ. எண் 514</noinclude> cz6ts03hrup7rdlj9ld7gfc83t5utcj 1944603 1944601 2026-06-10T10:39:04Z Santharabanu 15679 1944603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||161}}{{rule}}</noinclude> "பிரிந்தால் திராவிட நாடு வாழுமா - என்கிறார்கள்! இப்போது ஒன்றாக இருப்பதனால் ஆபத்து வராமலா இருக்கிறது? <b>சீனாக்காரன்</b> 40 ஆயிரம் சதுர மைல்களைப் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறான்; நமது ஆட்சி என்ன செய்கிறது? 'விட்டேனா பார், விட்டேனா பார்' என்கிறது! <b>இதனால் நமக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது!</b> "ஒரு நாட்டினுடைய சக்தி அதன் நிலப்பரப்பைப் பொறுத்து இல்லை, அந்த நாட்டு மக்களின் <b>ஒற்றுமையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும்தான்</b> இருக்கிறது! சிறிய நாடாகிய எகிப்து, பெரிய நாடுகளாகிய இங்கிலாந்தையும் அமெரிக்கா வையும் எதிர்த்துப் பேசியது! இப்போது இரஷ்யாவையே எதிர்த்துப் பேசுகிறது! அந்த வலிமையை அந்த நாடு பெற்றிருக்கையில், அதைவிட எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் திராவிடம் வாழமுடியாதா? வாழ முடியும். எனவேதான் நாம் திராவிட நாடு கேட்கிறோம்." {{left_margin|3em|"இம்மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், எவ்வித நன்மையும் மக்களுக்கு ஏற்பட வில்லை! விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது! இவர்கள் எதைத் தொட்டாலும் அது உருப்படுவதில்லை!அதை நடத்துவதற்கு இவர்களுக்கு ஆற்றல் இல்லை! போதுமான அதிகாரம் இல்லை! ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் நம்மைத் திட்டுவதுதான்! அழகேசன் பதவிக்கு வந்த பிறகு காங்கிரசுக் கமிட்டியிலிருந்து பல ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சில பத்திரிகைகளை விட்டு, நம்மைத் திட்டச் சொல்லுகிறார்கள்! முடிந்துபோன சகாப்தத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்! இதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதற்கு நமக்கு மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பளித்து வருகிறது."}} திருப்பரங்குன்றத்திலே திரண்டு வந்திருந்தோர், திராவிட நாடு எனும் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டோர் - எனினும், ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்த காரணத்தினாலேயே எதையும் மறுக்கும் துணிவு பெற்றுவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதனால், பொதுத் தேர்தலில், அதனை முறியடித்துக் காட்டுவதன்மூலம், உலகுக்கு, நமது கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் துணை நிற்கின்றனர் என்பதை விளக்கித் தீரவேண்டும் என்ற உறுதியைப் பெற்றனர்.<noinclude> 6 - தஅக தொ-4 பூ வெ. எண் 514</noinclude> 40txfbrrkud2ag9335uxhrvp93u1w4a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/163 250 645417 1944469 1941300 2026-06-10T06:44:13Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஆனால், காங்கிரஸ் கட்சி, எதைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறது என்பதனை விளக்கவே தொடக்கத்தில், அந்தக் கட்சி திரட்டி வைத்துக்கொண்டுள்ள பணபலம் பற்றியும், கொள்கையைப்பற்றிய கவலையற்று, எவரெவர், பெரிய புள்ளிகளோ அவர்களைப் பிடித்திழுத்துத் தேர்தலில் ஈடுபடுத்தி, வெற்றியைக் கட்சிக்கு விருது ஆக்கிக்கொள்ளலாம் என்று திட்டமிடுவதையும் குறித்து எழுதினேன். ஏகாதிபத்தியத்தின் முன்னாள் எடுபிடிகளெல்லாம் இன்று பெரிதும் காங்கிரஸ் கட்சியிலே உளர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில காங்கிரஸ் தொண்டர்கள் இன்றும், தூய்மை வேண்டும், வாய்மைக்கு மதிப்பளிக்கவேண்டும். கொள்கை வழி நிற்போரையே, தேர்தலில் ஈடுபடுத்தவேண்டும் சுரண்டிப் பிழைப்போர், <b>சுக போகிகள்</b>, வகுப்புவாதிகள், <b>வல்லடி வழக்கினர்</b> ஆகியோரைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று எண்ணுகின்றனர். மனம் குமுறுகின்றனர். இந்த <b>மடல் எழுதிக் கொண்டிருக்கும்</b>போது ஒரு செய்தி பார்த்தேன், ஆங்கில இதழில். {{block_center|<poem>விடுதலை இயக்கத்தை எதிர்த்து வெள்ளை யருடன் குலவிப் பலன் பெற்றவர்கள். பிற்போக்காளர்கள், வகுப்புவாதிகள், பிளவுப் போக்கினர். பர்மிட் லைசென்சு பெற்று இலாப வேட்டை யாடிக் காங்கிரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவோர்.</poem>}} இப்படிப்பட்டவர்களை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் குழு ஒன்றில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நல்லவர்கள்! ஆனால், பாவம், காங்கிரசின் இன்றைய அமைப்பு முறையையும் போக்கையும் அறிந்துகொள்ளாதவர்கள்!! எனவேதான், சீலம் போதிக்கிறார்கள்! பாருக்கெல்லாம் பஞ்சசீலம் போதிக்கும் பண்டிதர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சிக்கு சீலம் எது என்பது தெரியாததாலா சீரழிவு ஏற்பட்டது. சீலம் நிரம்பத் தெரியும் பிறருக்கு எடுத்துரைக்கச் சொன்னால் நாள் கணக்கிலே கூறத் தெரியும்; ஆனால் செயலில் இல்லையே! இவ்வளவு கடுமையான பத்தியம்கூட அல்ல, மிகச் சாதாரணமான ஒரு திருத்தம் கூறினார் சஞ்சீவ ரெட்டியார்,<noinclude></noinclude> mgzax8hasptc9y1y4wqhf4hzmd6ex3q 1944604 1944469 2026-06-10T10:40:02Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஆனால், காங்கிரஸ் கட்சி, எதைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறது என்பதனை விளக்கவே தொடக்கத்தில், அந்தக் கட்சி திரட்டி வைத்துக்கொண்டுள்ள பணபலம் பற்றியும், கொள்கையைப்பற்றிய கவலையற்று, எவரெவர், பெரிய புள்ளிகளோ அவர்களைப் பிடித்திழுத்துத் தேர்தலில் ஈடுபடுத்தி, வெற்றியைக் கட்சிக்கு விருது ஆக்கிக்கொள்ளலாம் என்று திட்டமிடுவதையும் குறித்து எழுதினேன். ஏகாதிபத்தியத்தின் முன்னாள் எடுபிடிகளெல்லாம் இன்று பெரிதும் காங்கிரஸ் கட்சியிலே உளர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில காங்கிரஸ் தொண்டர்கள் இன்றும், தூய்மை வேண்டும், வாய்மைக்கு மதிப்பளிக்கவேண்டும். கொள்கை வழி நிற்போரையே, தேர்தலில் ஈடுபடுத்தவேண்டும் சுரண்டிப் பிழைப்போர், <b>சுக போகிகள்</b>, வகுப்புவாதிகள், <b>வல்லடி வழக்கினர்</b> ஆகியோரைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று எண்ணுகின்றனர். மனம் குமுறுகின்றனர். இந்த <b>மடல் எழுதிக் கொண்டிருக்கும்</b>போது ஒரு செய்தி பார்த்தேன், ஆங்கில இதழில். {{block_center|<poem>விடுதலை இயக்கத்தை எதிர்த்து வெள்ளை யருடன் குலவிப் பலன் பெற்றவர்கள். பிற்போக்காளர்கள், வகுப்புவாதிகள், பிளவுப் போக்கினர். பர்மிட் லைசென்சு பெற்று இலாப வேட்டை யாடிக் காங்கிரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவோர்.</poem>}} இப்படிப்பட்டவர்களை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று பஞ்சாப் காங்கிரஸ் குழு ஒன்றில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நல்லவர்கள்! ஆனால், பாவம், காங்கிரசின் இன்றைய அமைப்பு முறையையும் போக்கையும் அறிந்துகொள்ளாதவர்கள்!! எனவேதான், சீலம் போதிக்கிறார்கள்! பாருக்கெல்லாம் பஞ்சசீலம் போதிக்கும் பண்டிதர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சிக்கு சீலம் எது என்பது தெரியாததாலா சீரழிவு ஏற்பட்டது. சீலம் நிரம்பத் தெரியும் பிறருக்கு எடுத்துரைக்கச் சொன்னால் நாள் கணக்கிலே கூறத் தெரியும்; ஆனால் செயலில் இல்லையே! இவ்வளவு கடுமையான பத்தியம்கூட அல்ல, மிகச் சாதாரணமான ஒரு திருத்தம் கூறினார் சஞ்சீவ ரெட்டியார்,<noinclude></noinclude> l9t0bewwqe29utvdl6q5ymhvh142ksy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/164 250 645418 1944470 1941303 2026-06-10T06:45:30Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||163}}{{rule}}</noinclude> காங்கிரசுக்குத் தலைவராக அமர்த்தப்பட்டிருப்பதனால். தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தோர், இம்முறை தேர்தலில் ஈடுபடாமலிருப்பது நல்லது; இது என் யோசனை என்று கூறினார். எத்துணை பெரிய அதிர்ச்சி காங்கிரஸ் வட்டாரத்தில்! என்னென்ன விதமான பொருள் விளக்கங்கள்!! யாருக்கோ சீட்டுக் கிழிக்க, சஞ்சீவியார் இந்தத் தந்திரத்தைக் கையாள்கிறார் என்பவர்களும், இவருக்குக் கோபால ரெட்டியார் மீது கோபம்; அவரை வீழ்த்தத்தான் இந்த விபரீத யோசனை என்று பேசுபவர்களும், தனக்கு இருந்து வந்த பதவியைப் பதைக்கப் பதைக்கப் பறித்துக்கொண்டவர்கள், ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்ற எரிச்சலின் விளைவு இந்த ஏற்பாடு என்றுரைப்போரும், இந்த யோசனை, பண்டித நேருவுக்கேகூட அல்லவா வேட்டு வைப்பதாக அமைகிறது என்று மிரட்டுவோரும். ஆக, இவ்விதமெல்லாம், மூலைக்கு மூலை எதிர்ப்புக் கிளம்பி, அதனால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைமை ஏற்பட்டு, இப்போது சஞ்சீவியார் நான் சும்மா ஒரு யோசனைதான் சொன்னேன்; அது விதி அல்ல; கட்டளை அல்ல! எல்லோருக்கும் அது பொருந்தும் என்றும் கூறிடவில்லை - என்றெல்லாம் நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது விளக்கம் அளித்தபடி இருக்கிறார். பதவி சம்பந்தப்பட்ட பிரச்சினை எழும்போது, இவ்வளவு பதைபதைப்பு ஏற்படுகிறது; இதனை உணராது, தேர்தலிலே ஈடுபடவே, இன்னின்னாருக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆர்வம் காரணமாகச் சிலர் கூறினால், எரிமலை நெருப்பைக் கக்குவதுபோலல்லவா, காங்கிரஸ் மேலவர்கள் எதிர்ப்பார்கள்!! தூய்மை காத்திடும் பண்பினர் சிலர் காங்கிரசில் உளர் எனினும், அவர்தம் விருப்பம் நிறைவேறத்தக்க வகையில், தேர்தலில், வேட்பாளர்களைக் காங்கிரஸ் நிறுத்த முன்வராது. பணம் பெருத்தான்களைத்தான் பிடித்திழுத்து நிறுத்தி வைக்கும். இதை அறியாமலல்ல, நாம் பொதுத் தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பது. எத்துணைதான் பணபலம் காங்கிரஸ் கட்சியிடம் குவிந்து கிடப்பினும், இந்தப் பதினான்கு ஆண்டு ஆட்சியினால்,<noinclude></noinclude> ii3zgs8j2378f160exqbsxuytss48sq 1944605 1944470 2026-06-10T10:40:47Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||163}}{{rule}}</noinclude> காங்கிரசுக்குத் தலைவராக அமர்த்தப்பட்டிருப்பதனால். தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தோர், இம்முறை தேர்தலில் ஈடுபடாமலிருப்பது நல்லது; இது என் யோசனை என்று கூறினார். எத்துணை பெரிய அதிர்ச்சி காங்கிரஸ் வட்டாரத்தில்! என்னென்ன விதமான பொருள் விளக்கங்கள்!! யாருக்கோ சீட்டுக் கிழிக்க, சஞ்சீவியார் இந்தத் தந்திரத்தைக் கையாள்கிறார் என்பவர்களும், இவருக்குக் கோபால ரெட்டியார் மீது கோபம்; அவரை வீழ்த்தத்தான் இந்த விபரீத யோசனை என்று பேசுபவர்களும், தனக்கு இருந்து வந்த பதவியைப் பதைக்கப் பதைக்கப் பறித்துக்கொண்டவர்கள், ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்ற எரிச்சலின் விளைவு இந்த ஏற்பாடு என்றுரைப்போரும், இந்த யோசனை, பண்டித நேருவுக்கேகூட அல்லவா வேட்டு வைப்பதாக அமைகிறது என்று மிரட்டுவோரும். ஆக, இவ்விதமெல்லாம், மூலைக்கு மூலை எதிர்ப்புக் கிளம்பி, அதனால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலைமை ஏற்பட்டு, இப்போது சஞ்சீவியார் நான் சும்மா ஒரு யோசனைதான் சொன்னேன்; அது விதி அல்ல; கட்டளை அல்ல! எல்லோருக்கும் அது பொருந்தும் என்றும் கூறிடவில்லை - என்றெல்லாம் நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது விளக்கம் அளித்தபடி இருக்கிறார். பதவி சம்பந்தப்பட்ட பிரச்சினை எழும்போது, இவ்வளவு பதைபதைப்பு ஏற்படுகிறது; இதனை உணராது, தேர்தலிலே ஈடுபடவே, இன்னின்னாருக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆர்வம் காரணமாகச் சிலர் கூறினால், எரிமலை நெருப்பைக் கக்குவதுபோலல்லவா, காங்கிரஸ் மேலவர்கள் எதிர்ப்பார்கள்!! தூய்மை காத்திடும் பண்பினர் சிலர் காங்கிரசில் உளர் எனினும், அவர்தம் விருப்பம் நிறைவேறத்தக்க வகையில், தேர்தலில், வேட்பாளர்களைக் காங்கிரஸ் நிறுத்த முன்வராது. பணம் பெருத்தான்களைத்தான் பிடித்திழுத்து நிறுத்தி வைக்கும். இதை அறியாமலல்ல, நாம் பொதுத் தேர்தலில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பது. எத்துணைதான் பணபலம் காங்கிரஸ் கட்சியிடம் குவிந்து கிடப்பினும், இந்தப் பதினான்கு ஆண்டு ஆட்சியினால்,<noinclude></noinclude> thy62wzjsqc8unmj6kxaza19egzxb41 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/165 250 645419 1944471 1941305 2026-06-10T06:46:37Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அக்கட்சி தேடிக்கொண்டுள்ள வெறுப்பும், பொதுமக்களின் மனக் கொதிப்பும், தம்பி! சாதாரணமானதென்று, தள்ளிவிடும் துணிவு, சர்வாதிகார வெறி பிடித்தலையும் காங்கிரசுக்குக்கூட இருக்க முடியாது. எந்தத் துறையிலும், கேடுபாடும், முறைகேடும், சீர்குலைவும் ஏற்பட்டுப் போய்விட்டிருக்கிறதேயன்றி, மக்கள் வளம் காண வழி கோலப்பட்டதாகக் கூறுவதற்கில்லை. மற்ற மற்ற மாநிலங்கள் கிடக்கட்டும், இங்கு பச்சைத் தமிழர் ஆட்சியிலே, பள்ளிகள் பலப்பல ஆயிரமாம், விளக்குகள் சிற்றூர் எங்கணுமாம், கூறுகிறாரே பெரியார், என்பாய். ஆமாம், தம்பி! விளக்குகள் உள்ளன, புற இருளை அகற்ற! பள்ளிகள் உள்ளன அகத்து இருள் நீக்க! ஆனால் இருள் நீக்கப்பட்ட நிலை காண்கிறோமா? அல்லது இந்த விளக்கேற்றும் காரியத்தை, வேறொருவரும் செய்ததில்லையா? செய்ய இயலாதா? செய்திடும் செம்மலும், மாயமந்திரத்தாலா, மாகாளி பூசையாலா செய்து காட்டுகிறார் - இல்லையே, தம்பி! தைலம் தீர்ந்துபோன கட்டைபோல உடலுடையான் உழைக்கிறானே, அவன் சிந்தும் வியர்வைத் துளிகள் வெள்ளிப் பணமாகி வரியாகி, துரைத்தனத்தாரிடம் சேர, அதைக்கொண்டு, சிந்தியது சிதறியது சீரழிவுக்குப் பயன்பட்டது, சிதைந்துபோக, மிச்சம் இருப்பதைக்கொண்டு செய்யப்படும் செயலன்றோ! இதிலே, மார்தட்ட, உரிமை கொண்டாட என்ன இருக்கிறது!! வயிறு காய்கிறது கிராமத்து மக்களுக்கு, அதற்கு வழி செய்யக்காணோம், வெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள். மின்சார விளக்குப் போட்டோம் என்று கித்தாப்புப் பேசுகிறீர்கள் என்று சட்டமன்றத்திலே, நான் கூறியபோது, அமைச்சர் களுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது; நமது தோழர்கள் அனைவருமே, நான் கூறியது முற்றிலும் உண்மை என்றனர் - அவர்களிலே சிலர் இப்போது விளக்குப்போடும் ஆட்சிக்குக் கொடி தூக்கும் தொண்டர்களாகிவிடத் துடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது, நிலைமை அதுபோலானால், உள்ளபடி பரிதாபப்படவேண்டியதுதான். காட்டிலே தன்னிச்சையாக உலவிய அரிமாகூடச் சர்க்கஸ் காரனிடம் சிக்கினால், ஓடு என்றால் ஓடுகிறது, படு என்றால் படுக்கிறது! பார்க்கிறோமே! அந்த நிலை, என்னை நிந்தித்துக் கிடப்போருக்கு ஏற்படக் கூடாது என்று மெத்தவும் விரும்புகிறேன். ஆனால், நண்பர்கள்<noinclude></noinclude> 8b3rbf9hzubvv0l3ps39upds393zjqq 1944606 1944471 2026-06-10T10:41:37Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அக்கட்சி தேடிக்கொண்டுள்ள வெறுப்பும், பொதுமக்களின் மனக்கொதிப்பும், தம்பி! சாதாரணமானதென்று, தள்ளிவிடும் துணிவு, சர்வாதிகார வெறி பிடித்தலையும் காங்கிரசுக்குக்கூட இருக்க முடியாது. எந்தத் துறையிலும், கேடுபாடும், முறைகேடும், சீர்குலைவும் ஏற்பட்டுப் போய்விட்டிருக்கிறதேயன்றி, மக்கள் வளம் காண வழி கோலப்பட்டதாகக் கூறுவதற்கில்லை. மற்ற மற்ற மாநிலங்கள் கிடக்கட்டும், இங்கு பச்சைத் தமிழர் ஆட்சியிலே, பள்ளிகள் பலப்பல ஆயிரமாம், விளக்குகள் சிற்றூர் எங்கணுமாம், கூறுகிறாரே பெரியார், என்பாய். ஆமாம், தம்பி! விளக்குகள் உள்ளன, புற இருளை அகற்ற! பள்ளிகள் உள்ளன அகத்து இருள் நீக்க! ஆனால் இருள் நீக்கப்பட்ட நிலை காண்கிறோமா? அல்லது இந்த விளக்கேற்றும் காரியத்தை, வேறொருவரும் செய்ததில்லையா? செய்ய இயலாதா? செய்திடும் செம்மலும், மாயமந்திரத்தாலா, மாகாளி பூசையாலா செய்து காட்டுகிறார் - இல்லையே, தம்பி! தைலம் தீர்ந்துபோன கட்டைபோல உடலுடையான் உழைக்கிறானே, அவன் சிந்தும் வியர்வைத் துளிகள் வெள்ளிப் பணமாகி வரியாகி, துரைத்தனத்தாரிடம் சேர, அதைக்கொண்டு, சிந்தியது சிதறியது சீரழிவுக்குப் பயன்பட்டது, சிதைந்துபோக, மிச்சம் இருப்பதைக்கொண்டு செய்யப்படும் செயலன்றோ! இதிலே, மார்தட்ட, உரிமை கொண்டாட என்ன இருக்கிறது!! வயிறு காய்கிறது கிராமத்து மக்களுக்கு, அதற்கு வழி செய்யக்காணோம், வெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள். மின்சார விளக்குப் போட்டோம் என்று கித்தாப்புப் பேசுகிறீர்கள் என்று சட்டமன்றத்திலே, நான் கூறியபோது, அமைச்சர் களுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது; நமது தோழர்கள் அனைவருமே, நான் கூறியது முற்றிலும் உண்மை என்றனர் - அவர்களிலே சிலர் இப்போது விளக்குப்போடும் ஆட்சிக்குக் கொடி தூக்கும் தொண்டர்களாகிவிடத் துடிக்கிறார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது, நிலைமை அதுபோலானால், உள்ளபடி பரிதாபப்படவேண்டியதுதான். காட்டிலே தன்னிச்சையாக உலவிய அரிமாகூடச் சர்க்கஸ் காரனிடம் சிக்கினால், ஓடு என்றால் ஓடுகிறது, படு என்றால் படுக்கிறது! பார்க்கிறோமே! அந்த நிலை, என்னை நிந்தித்துக் கிடப்போருக்கு ஏற்படக் கூடாது என்று மெத்தவும் விரும்புகிறேன். ஆனால், நண்பர்கள்<noinclude></noinclude> 037rdw6c4fysk16nblw1snz16mmt1zp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/166 250 645420 1944472 1941319 2026-06-10T06:48:17Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||165}}{{rule}}</noinclude>என்னைக் கேட்கிறார்கள், அண்ணா! விலகியவர்களுக்குத் திராவிடநாடு தீது என்று புது எண்ணம் பிறந்திருக்கலாம் - இருக்கட்டும் - கனியே அழுகிப்போனால், புழு நெளிகிறது! அண்ணாதுரைக்கு அரசியலே தெரியாது என்று பேசலாம் - பேசட்டும், அதனால் குறையேதும் ஏற்பட்டுவிடாது - ஆனால் இதிலெல்லாம் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பது பற்றிச் சளைக்காமல் பேசுகின்றவர்கள். டில்லிப் பேரரசின் ஏகாதிபத்தியப் போக்கு, அதனிடம் இங்குள்ள மந்திரிகள் காவடி தூக்கிடும் கேவலம். டில்லிப் பேரரசின் நிர்வாக ஊழல்களால் கோடி கோடியாகப் பணம் பாழாகும் கொடுமை, அதைத் தடுத்திடத் திறனின்றி, தத்துவம் பேசிக் கிடக்கும் நேருவின் கையாலாகாத் தன்மை, ஐந்தாண்டுத் திட்டங்களில் தென்னகம் வஞ்சிக்கப் படும் கொடுமை, அதனைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் எட்டு உருவாரங்களாக மந்திரிகள் இருக்கும் கேவலத்தன்மை, வரிகள் வளர்ந்து மக்கள் வாட்டமடைவது, அதனைக் குறைத்திட மனமின்றி, மமதை அரசாள்வது, வரிச்சுமை பெரிதும் ஏழையின் முதுகிலேயே ஏற்றப் பட்டு அவன் முதுகெலும்பு முரிந்த நிலையில் நெளிவது, பணக்காரர்கள் மேலும் பொருள் திரட்டிக் கொழுப்பது, சுரண்டிப் பிழைக்கும் சுகபோகிக்கு, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்புப்பெறுபவர் காங்கிரசின் தேர்தல் நிதிக்காகப் பொருள் கொட்டிக் கொடுப்பது, முந்திராபோன்ற மோசடிக்காரனிடம் காங்கிரஸ் குலவிப் பணம் பெற்ற பாதகம், அதைக் கண்டித்தவர்கள்மீது பண்டிதர் பாய்ந்து விழும் அக்கிரமம்,<noinclude></noinclude> i2nwo9qpbx1bh9n6t01c1ujkwtn3gde 1944609 1944472 2026-06-10T10:43:57Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||165}}{{rule}}</noinclude>என்னைக் கேட்கிறார்கள், அண்ணா! விலகியவர்களுக்குத் திராவிடநாடு தீது என்று புது எண்ணம் பிறந்திருக்கலாம் - இருக்கட்டும் - கனியே அழுகிப்போனால், புழு நெளிகிறது! அண்ணாதுரைக்கு அரசியலே தெரியாது என்று பேசலாம் - பேசட்டும், அதனால் குறையேதும் ஏற்பட்டுவிடாது - ஆனால் இதிலெல்லாம் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பது பற்றிச் சளைக்காமல் பேசுகின்றவர்கள். டில்லிப் பேரரசின் ஏகாதிபத்தியப் போக்கு, அதனிடம் இங்குள்ள மந்திரிகள் காவடி தூக்கிடும் கேவலம். டில்லிப் பேரரசின் நிர்வாக ஊழல்களால் கோடி கோடியாகப் பணம் பாழாகும் கொடுமை, அதைத் தடுத்திடத் திறனின்றி, தத்துவம் பேசிக் கிடக்கும் நேருவின் கையாலாகாத் தன்மை, ஐந்தாண்டுத் திட்டங்களில் தென்னகம் வஞ்சிக்கப் படும் கொடுமை, அதனைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் எட்டு உருவாரங்களாக மந்திரிகள் இருக்கும் கேவலத்தன்மை, வரிகள் வளர்ந்து மக்கள் வாட்டமடைவது, அதனைக் குறைத்திட மனமின்றி, மமதை அரசாள்வது, வரிச்சுமை பெரிதும் ஏழையின் முதுகிலேயே ஏற்றப் பட்டு அவன் முதுகெலும்பு முரிந்த நிலையில் நெளிவது, பணக்காரர்கள் மேலும் பொருள் திரட்டிக் கொழுப்பது, சுரண்டிப் பிழைக்கும் சுகபோகிக்கு, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்புப்பெறுபவர் காங்கிரசின் தேர்தல் நிதிக்காகப் பொருள் கொட்டிக் கொடுப்பது, முந்திராபோன்ற மோசடிக்காரனிடம் காங்கிரஸ் குலவிப் பணம் பெற்ற பாதகம், அதைக் கண்டித்தவர்கள்மீது பண்டிதர் பாய்ந்து விழும் அக்கிரமம்,<noinclude></noinclude> k918t6ux75npu5z5y3g39m8uwv0i19j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/167 250 645421 1944474 1941322 2026-06-10T06:52:24Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கடன்மேல் கடன் வாங்கி, எதிர்காலத்தைப் பயங்கர மானதாக்கும் கொடுமை, கடன்பட்டுப் பெற்ற பொருளைக்கொண்டு வட நாட்டை வளமாக்கும் அக்கிரமம், விலைவாசி விஷம் போல ஏறியதால் ஏற்பட்டு உள்ள வேதனை, அதனைக் கவனிக்காது மதோன்மத்தர்களாக மந்திரிமார் இருப்பதன் கேவலம், தென்னகம் தேம்பிக் கிடப்பதைக் கவனியாதிருக்கும் மடமை, அதனால் மூண்டிடப்போகும் புரட்சியின் தன்மை,}} என்றெல்லாம் பொறி பறக்கப் பேசுவார்களே - இப்போது காணோமே! ஏனண்ணா! ஒரு மணி நேரம் உன்னைத் தூற்றச் செலவிடட்டும் - ஒரு அரைமணி நேரமாகிலும், இதற்கு ஒதுக்கக் கூடாதா? காணோமே! காரணம் என்ன? காங்கிரசாட்சியைக் கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவா? அந்த பிரச்சினையிலும் புத்தறிவு ஏற்பட்டுவிட்டதோ? என்று கேட்கிறார்கள். நானென்ன பதில் கூறமுடியும்? காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலங்களைப்பற்றி, மிகக் காரசாரமாகக் கண்டித்தவர்கள், ஐயமில்லை! இப்போது, சித்தம் எப்படியோ தெரியவில்லை! ஆனால் வெளியே கேட்கும் சத்தம் அவ்வளவும், அந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? என்பது தான்!! பார்ப்போம் போகப்போக! காங்கிரசாட்சி விளக்குப் போட்டது. ஒன்றே போதும், மீண்டும் மக்கள் ஆதரவைப்பெற என்று பேசுவோர் எவரெனினும், அவர்தம் திருப்பார்வைக்கு ஒரு தெளிவுரையை வைக்கிறேன் - தெளிவுரை தந்தவர்கள் இன்று சிந்தை திரிந்து போயிருக்கக்கூடும்!! மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தைப் பிரரேபித்துப் பேசுகையில் குறிப்பிட்டார் - ’இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலுமில்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2,500 கிராமங் களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது' - என்று! உண்மைதான்; சென்னை மாநிலத்திற்கு இந்த ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி இதுவரை 2,500<noinclude></noinclude> pwv9htw6dl57qe48szhefq1ep29x526 1944489 1944474 2026-06-10T07:15:46Z Rathai palanivelan 11183 1944489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கடன்மேல் கடன் வாங்கி, எதிர்காலத்தைப் பயங்கர மானதாக்கும் கொடுமை, கடன்பட்டுப் பெற்ற பொருளைக்கொண்டு வட நாட்டை வளமாக்கும் அக்கிரமம், விலைவாசி விஷம் போல ஏறியதால் ஏற்பட்டு உள்ள வேதனை, அதனைக் கவனிக்காது மதோன்மத்தர்களாக மந்திரிமார் இருப்பதன் கேவலம், தென்னகம் தேம்பிக் கிடப்பதைக் கவனியாதிருக்கும் மடமை, அதனால் மூண்டிடப்போகும் புரட்சியின் தன்மை,}} என்றெல்லாம் பொறி பறக்கப் பேசுவார்களே - இப்போது காணோமே! ஏனண்ணா! ஒரு மணி நேரம் உன்னைத் தூற்றச் செலவிடட்டும் - ஒரு அரைமணி நேரமாகிலும், இதற்கு ஒதுக்கக் கூடாதா? காணோமே! காரணம் என்ன? காங்கிரசாட்சியைக் கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவா? அந்த பிரச்சினையிலும் புத்தறிவு ஏற்பட்டுவிட்டதோ? என்று கேட்கிறார்கள். நானென்ன பதில் கூறமுடியும்? காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலங்களைப்பற்றி, மிகக் காரசாரமாகக் கண்டித்தவர்கள், ஐயமில்லை! இப்போது, சித்தம் எப்படியோ தெரியவில்லை! ஆனால் வெளியே கேட்கும் சத்தம் அவ்வளவும், அந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? என்பது தான்!! பார்ப்போம் போகப்போக! காங்கிரசாட்சி விளக்குப் போட்டது. ஒன்றே போதும், மீண்டும் மக்கள் ஆதரவைப்பெற என்று பேசுவோர் எவரெனினும், அவர்தம் திருப்பார்வைக்கு ஒரு தெளிவுரையை வைக்கிறேன் - தெளிவுரை தந்தவர்கள் இன்று சிந்தை திரிந்து போயிருக்கக்கூடும்!! மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தைப் பிரரேபித்துப் பேசுகையில் குறிப்பிட்டார் - ’இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலுமில்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2,500 கிராமங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது' - என்று! உண்மைதான்; சென்னை மாநிலத்திற்கு இந்த ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி இதுவரை 2,500<noinclude></noinclude> ji33eomyug0b0etzatnp3wkg05fnpu1 1944611 1944489 2026-06-10T10:45:43Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கடன்மேல் கடன் வாங்கி, எதிர்காலத்தைப் பயங்கர மானதாக்கும் கொடுமை, கடன்பட்டுப் பெற்ற பொருளைக்கொண்டு வட நாட்டை வளமாக்கும் அக்கிரமம், விலைவாசி விஷம் போல ஏறியதால் ஏற்பட்டு உள்ள வேதனை, அதனைக் கவனிக்காது மதோன்மத்தர்களாக மந்திரிமார் இருப்பதன் கேவலம், தென்னகம் தேம்பிக் கிடப்பதைக் கவனியாதிருக்கும் மடமை, அதனால் மூண்டிடப்போகும் புரட்சியின் தன்மை,}} என்றெல்லாம் பொறி பறக்கப் பேசுவார்களே - இப்போது காணோமே! ஏனண்ணா! ஒரு மணி நேரம் உன்னைத் தூற்றச் செலவிடட்டும் - ஒரு அரைமணி நேரமாகிலும், இதற்கு ஒதுக்கக் கூடாதா? காணோமே! காரணம் என்ன? காங்கிரசாட்சியைக் கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவா? அந்த பிரச்சினையிலும் புத்தறிவு ஏற்பட்டுவிட்டதோ? என்று கேட்கிறார்கள். நானென்ன பதில் கூறமுடியும்? காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலங்களைப்பற்றி, மிகக் காரசாரமாகக் கண்டித்தவர்கள், ஐயமில்லை! இப்போது, சித்தம் எப்படியோ தெரியவில்லை! ஆனால் வெளியே கேட்கும் சத்தம் அவ்வளவும், அந்த அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? என்பது தான்!! பார்ப்போம் போகப்போக! காங்கிரசாட்சி விளக்குப் போட்டது. ஒன்றே போதும், மீண்டும் மக்கள் ஆதரவைப்பெற என்று பேசுவோர் எவரெனினும், அவர்தம் திருப்பார்வைக்கு ஒரு தெளிவுரையை வைக்கிறேன் - தெளிவுரை தந்தவர்கள் இன்று சிந்தை திரிந்து போயிருக்கக்கூடும்!! மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள், இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தைப் பிரரேபித்துப் பேசுகையில் குறிப்பிட்டார் - ’இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலுமில்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2,500 கிராமங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது' - என்று! உண்மைதான்; சென்னை மாநிலத்திற்கு இந்த ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி இதுவரை 2,500<noinclude></noinclude> dqn9i1zan6tth285grtoj7plfk4jq09 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/168 250 645422 1944473 1941325 2026-06-10T06:50:45Z Rathai palanivelan 11183 வடிவமைப்பு 1944473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||167}}{{rule}}</noinclude>கிராமங்களுக்கு மின்சார ஒளி கிடைத்திருப்பதுதான்! "அடுத்து வரும் ஆண்டுகளிலும், ஆண்டொன்றுக்கு 1000 கிராமம் வீதம் மின்சார ஒளிபெறும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். {{left_margin|3em|"கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட் டிருப்பதனாலேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே! மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாகத் தேவையான வசதிகளுள் ஒன்று; ஆனால் அது மட்டுமா மக்களின் தேவை?}} "தமிழ் நாட்டின் இன்றைய தேவை. கிராமங்கள்தோறும், வீடுகள்தோறும் மின்சார விளக்கு வேண்டுமென்பதல்ல; மக்களுடைய பொது வருவாய் அதிகரித்து வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்பதுதானே!” "அதைப்போலவே, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் சென்னையைப் பொறுத்தவரை, கிராமங்களுக்கு மின்சார வசதி செய்வதும், வைத்திய வசதி, அடிப்படைக் கல்வி, குடிசைத் தொழில் இவற்றை அதிகரிப்பதும்தான்” என்று கூறப்படுகிறது. "நோய் போக்க - வைத்திய வசதியும், அறியாமை நீங்க அடிப்படைக் கல்வி வசதியும் அவசியந்தான்; மிக மிக அவசியந்தான்; நோயைப் போக்கிக்கொண்டு மனிதன் வாழ்வதற்கு, உணவே கிடைக்கவில்லை என்றால், ’அவனுக்கு நோய் போக்க வசதி செய்கிறேன்' என்கிறது சென்னை அரசாங்கம்! {{left_margin|3em|"ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன்; அவனுக்குப் பசி கடுமையாக இருக்கிறது; அவன் தனது பசியை நீக்க, அந்த ரூபாயைக்கொண்டு உணவுப் பண்டம் வாங்குவானா? அல்லது "வீட்டிலே கொளுத்தி வைத்தால் "கம்'மென்று மணக்கும்' என்று கருதி ஊதுவத்தி வாங்குவானா? "ஊதுவத்தி வாங்குவேன்' என்கிறார் சுப்பிரமணியம் - தனது வரவு செலவுத் திட்ட சொற்பொழிவின் மூலம்! மனிதனே, சோறின்றிச் சாகும்போது "அந்த மனிதனுக்கு மருந்தும் கல்வியும் தருகிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்!}}<noinclude></noinclude> b5jvho4ns2895jrj2gs2h455oi2xs1c 1944491 1944473 2026-06-10T07:17:04Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||167}}{{rule}}</noinclude>கிராமங்களுக்கு மின்சார ஒளி கிடைத்திருப்பதுதான்! 'அடுத்து வரும் ஆண்டுகளிலும், ஆண்டொன்றுக்கு 1000 கிராமம் வீதம் மின்சார ஒளிபெறும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். {{left_margin|3em|"கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட் டிருப்பதனாலேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே! மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாகத் தேவையான வசதிகளுள் ஒன்று; ஆனால் அது மட்டுமா மக்களின் தேவை?}} "தமிழ் நாட்டின் இன்றைய தேவை. கிராமங்கள்தோறும், வீடுகள்தோறும் மின்சார விளக்கு வேண்டுமென்பதல்ல; மக்களுடைய பொது வருவாய் அதிகரித்து வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்பதுதானே!” "அதைப்போலவே, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் சென்னையைப் பொறுத்தவரை, கிராமங்களுக்கு மின்சார வசதி செய்வதும், வைத்திய வசதி, அடிப்படைக் கல்வி, குடிசைத் தொழில் இவற்றை அதிகரிப்பதும்தான்” என்று கூறப்படுகிறது. "நோய் போக்க - வைத்திய வசதியும், அறியாமை நீங்க அடிப்படைக் கல்வி வசதியும் அவசியந்தான்; மிக மிக அவசியந்தான்; நோயைப் போக்கிக்கொண்டு மனிதன் வாழ்வதற்கு, உணவே கிடைக்கவில்லை என்றால், ’அவனுக்கு நோய் போக்க வசதி செய்கிறேன்' என்கிறது சென்னை அரசாங்கம்! {{left_margin|3em|"ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன்; அவனுக்குப் பசி கடுமையாக இருக்கிறது; அவன் தனது பசியை நீக்க, அந்த ரூபாயைக்கொண்டு உணவுப் பண்டம் வாங்குவானா? அல்லது "வீட்டிலே கொளுத்தி வைத்தால் "கம்'மென்று மணக்கும்' என்று கருதி ஊதுவத்தி வாங்குவானா? "ஊதுவத்தி வாங்குவேன்' என்கிறார் சுப்பிரமணியம் - தனது வரவு செலவுத் திட்ட சொற்பொழிவின் மூலம்! மனிதனே, சோறின்றிச் சாகும்போது "அந்த மனிதனுக்கு மருந்தும் கல்வியும் தருகிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்!}}<noinclude></noinclude> 4f1020na0k5vmmqte8bi7izyf5l9lwq 1944619 1944491 2026-06-10T10:50:52Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||167}}{{rule}}</noinclude>கிராமங்களுக்கு மின்சார ஒளி கிடைத்திருப்பதுதான்! 'அடுத்து வரும் ஆண்டுகளிலும், ஆண்டொன்றுக்கு 1000 கிராமம் வீதம் மின்சார ஒளிபெறும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். {{left_margin|3em|"கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட் டிருப்பதனாலேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே! மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாகத் தேவையான வசதிகளுள் ஒன்று; ஆனால் அது மட்டுமா மக்களின் தேவை?}} "தமிழ் நாட்டின் இன்றைய தேவை. கிராமங்கள்தோறும், வீடுகள்தோறும் மின்சார விளக்கு வேண்டுமென்பதல்ல; மக்களுடைய பொது வருவாய் அதிகரித்து வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்பதுதானே!” "அதைப்போலவே, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் சென்னையைப் பொறுத்தவரை, கிராமங்களுக்கு மின்சார வசதி செய்வதும், வைத்திய வசதி, அடிப்படைக் கல்வி, குடிசைத் தொழில் இவற்றை அதிகரிப்பதும்தான்” என்று கூறப்படுகிறது. "நோய் போக்க - வைத்திய வசதியும், அறியாமை நீங்க அடிப்படைக் கல்வி வசதியும் அவசியந்தான்; மிக மிக அவசியந்தான்; நோயைப் போக்கிக்கொண்டு மனிதன் வாழ்வதற்கு, உணவே கிடைக்கவில்லை என்றால், ’அவனுக்கு நோய் போக்க வசதி செய்கிறேன்' என்கிறது சென்னை அரசாங்கம்! {{left_margin|3em|"ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன்; அவனுக்குப் பசி கடுமையாக இருக்கிறது; அவன் தனது பசியை நீக்க, அந்த ரூபாயைக்கொண்டு உணவுப் பண்டம் வாங்குவானா? அல்லது "வீட்டிலே கொளுத்தி வைத்தால் "கம்'மென்று மணக்கும்' என்று கருதி ஊதுவத்தி வாங்குவானா? "ஊதுவத்தி வாங்குவேன்' என்கிறார் சுப்பிரமணியம் - தனது வரவு செலவுத் திட்ட சொற்பொழிவின் மூலம்! மனிதனே, சோறின்றிச் சாகும்போது "அந்த மனிதனுக்கு மருந்தும் கல்வியும் தருகிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்!}}<noinclude></noinclude> d2w5noaefk77py3yh9s9alq2asbc8wt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/169 250 645423 1944493 1941326 2026-06-10T07:19:08Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "தென்னாட்டில், மந்திரி சுப்பிரமணியம் அவர்கள், கிடைக்கிற மின்சாரத்தைக்கொண்டு மக்களின் பொது வருவாய் அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய காரியங்களைச் செய்யாமல், கிராமங்களுக்கு 'வெளிச்சம்' போட்டுக்கொண்டிருக்கிறார்; ஆனால் வடநாட்டிலோ கிடைக்கின்ற மின்சாரத்தைக்கொண்டு அந்த நாட்டு மக்களின் பொது வருவாயை அதிகரிக்கும் வகையில், புதுப்புதுத் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்கள்; வடநாடு தொழில் வளம் மிகுந்த நாடாக வேகமாக வளர்க்கப்படுகிறது; தென்னாடு விவசாயத்தை மட்டும் நம்பிக்கிடந்து தேயுமாறு செய்யப்படுகிறது." "விவசாயத்தை மட்டும் நம்பிக் கிடக்கும் ஒரு நாடு வளருமா? நாளாவட்டத்தில் தேய்ந்துதான் போகும்! ஏனெனில், விவசாயத்தின் அளவு மாறக்கூடியதல்ல; வளரக்கூடியதல்ல." "இந்த நாட்டில் மக்கள் பெருக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதையும் மனதில்கொண்டு சற்றுக் கவலையோடு சிந்திப்பவர்களுக்கு, 'நாம் வளர முடியாத விவசாயத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எதிர்காலச் சந்ததியினருக்கு வாழ்வளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறோம்' என்பதைப் புரிந்துகொள்ள முடியும்." {{left_margin|3em|"பெருகி வளரக்கூடிய தொழில்கள் எல்லாம் தென்னாட்டில் இல்லை - வடநாட்டில்தான்; இந்த நிலையினால், கூரிய சிந்தனை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம் - தென்னாட்டின் எதிர்காலத்தை!'' }} "திராவிட நாட்டின் விடுதலையை நாமாகவே பெற்றாலும் பெறலாம்; அல்லது வடநாட்டுக்காரர்கள் தாமாகத் தந்தாலும் தந்துவிடலாம்!" "தாசிகள் பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் - தாசி, ஒருவனிடத்தில் பணம் இருக்கும் வரையில்தான், 'என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால் நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது?' 'ஈருடலும் ஓருயிரும்' என்பதுபோலப் பேசுவர்; ஆனால், அவனிடமிருந்து பணம் பூராவும் பறிபோன பிறகு, 'அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு' என்ற நிலைமைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித் தள்ளி விடுவார்கள்; அதைப்போலவேதான் ஏகாதிபத்தியங்களும்!<noinclude></noinclude> asp5vd02v0fsgucd8a3nhu4cljfyjez 1944614 1944493 2026-06-10T10:47:06Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> "தென்னாட்டில், மந்திரி சுப்பிரமணியம் அவர்கள், கிடைக்கிற மின்சாரத்தைக்கொண்டு மக்களின் பொது வருவாய் அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய காரியங்களைச் செய்யாமல், கிராமங்களுக்கு 'வெளிச்சம்' போட்டுக்கொண்டிருக்கிறார்; ஆனால் வடநாட்டிலோ கிடைக்கின்ற மின்சாரத்தைக்கொண்டு அந்த நாட்டு மக்களின் பொது வருவாயை அதிகரிக்கும் வகையில், புதுப்புதுத் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்கள்; வடநாடு தொழில் வளம் மிகுந்த நாடாக வேகமாக வளர்க்கப்படுகிறது; தென்னாடு விவசாயத்தை மட்டும் நம்பிக்கிடந்து தேயுமாறு செய்யப்படுகிறது." "விவசாயத்தை மட்டும் நம்பிக் கிடக்கும் ஒரு நாடு வளருமா? நாளாவட்டத்தில் தேய்ந்துதான் போகும்! ஏனெனில், விவசாயத்தின் அளவு மாறக்கூடியதல்ல; வளரக்கூடியதல்ல." "இந்த நாட்டில் மக்கள் பெருக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதையும் மனதில்கொண்டு சற்றுக் கவலையோடு சிந்திப்பவர்களுக்கு, 'நாம் வளர முடியாத விவசாயத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எதிர்காலச் சந்ததியினருக்கு வாழ்வளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறோம்' என்பதைப் புரிந்துகொள்ள முடியும்." {{left_margin|3em|"பெருகி வளரக்கூடிய தொழில்கள் எல்லாம் தென்னாட்டில் இல்லை - வடநாட்டில்தான்; இந்த நிலையினால், கூரிய சிந்தனை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம் - தென்னாட்டின் எதிர்காலத்தை!'' }} "திராவிட நாட்டின் விடுதலையை நாமாகவே பெற்றாலும் பெறலாம்; அல்லது வடநாட்டுக்காரர்கள் தாமாகத் தந்தாலும் தந்துவிடலாம்!" "தாசிகள் பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் - தாசி, ஒருவனிடத்தில் பணம் இருக்கும் வரையில்தான், 'என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால் நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது?' 'ஈருடலும் ஓருயிரும்' என்பதுபோலப் பேசுவர்; ஆனால், அவனிடமிருந்து பணம் பூராவும் பறிபோன பிறகு, 'அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு' என்ற நிலைமைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித் தள்ளி விடுவார்கள்; அதைப்போலவேதான் ஏகாதிபத்தியங்களும்!<noinclude></noinclude> s2g4z5clud1e8adlrj76lgufeayezb9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/170 250 645424 1944477 1941329 2026-06-10T06:55:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||169}}{{rule}}</noinclude> "இன்று வடநாட்டு ஏகாதிபத்தியம், வடநாட்டைத் தொழில் வளமிக்க நாடாக்கி, அந்தத் தொழில் வளர்ச்சியினால் உற்பத்தியாகும் ஏராளமான பொருள்களுக்குத் தென்னாட்டை ’மார்க்கெட்' ஆக்கித் தென்னாட்டு மக்களின் செல்வத்தைச் சுரண்டி, நாளாவட்டத்தில் அவர்களை ஓட்டாண்டியாக்கிவிடும்; அப்போது இனியும் தென்னாடு வடநாட்டுடன் ஒட்டிக்கொண் டிருப்பதனால் பயனில்லை” என்று தெரிந்ததும், தென்னாட்டிற்கு "விடுதலை” வழங்க முன் வரலாம். "அதுவரையில் - நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசிபோல, ’நாம் எல்லாம் பாரத புத்திரர்களல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே?' - என்பர். நாம் ஓட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வட நாட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்?” என்று பேசுவர் - தாசிபோல! "எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வட நாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக்கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம் கூறுகிறது; அப்போதுதான் இந்த நாட்டு விவசாய, தொழிலாள, பாட்டாளிவர்க்க மக்கள் நலம் பெற்று, நல்ல பல திட்டங்கள் தீட்டி, தொழில் வளர்த்துச் செல்வம் பெருக்கிச் சுதந்திரத்துடன் வாழ முடியும்.” ஓட்டாண்டிகளாகிவிடுமுன்பு, விடுபடுக! வாழ்வு பெறுக! என்றுதான், தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, திருவிடத்தாருக்குத் தெரிவிக்கிறது. திராவிட நாடு கற்பனை என்ற எண்ணம், ஊட்டப்பட் டிருக்கலாம் - விவரமறியாதார் எவரேனும் எழுதிய ஏடு படித்ததால்; அல்லது திராவிடநாடு கொள்கைக்காகக் பரிந்து பேசும் நாம், எந்த ஏடும் படிக்காதவர்கள் என்ற எண்ணம் உள்ளே புகுந்திருக்கலாம். எல்லைபற்றிச் சந்தேகம்; இனம் குறித்து ஐயப்பாடு; நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுபற்றிய அச்சம் பெரும் படை பலத்துடன் உள்ள பேரரசின் தாக்கும் சக்தியைப் பக்கம் நின்று பார்த்ததால் ஏற்பட்ட பீதி; இவை எல்லாம் எழக்கூடும், எவருக்கும். குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் மனத்தில்; கூடிப் பணியாற்றிய இடம் வெறுப்புக்குரியதாகத் தோற்றமளிக்கலாம்; ஒட்டு இல்லை உறவு இல்லை என்ற உறுதி பிறந்திருக்கலாம். மனம்தானே! சிந்தையை அடக்கியே சும்மா இருப்பது அரிது!!<noinclude></noinclude> gb2u9w3tq1bsyy74t4mc3hg2joioi9h 1944617 1944477 2026-06-10T10:49:08Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||169}}{{rule}}</noinclude> "இன்று வடநாட்டு ஏகாதிபத்தியம், வடநாட்டைத் தொழில் வளமிக்க நாடாக்கி, அந்தத் தொழில் வளர்ச்சியினால் உற்பத்தியாகும் ஏராளமான பொருள்களுக்குத் தென்னாட்டை ’மார்க்கெட்' ஆக்கித் தென்னாட்டு மக்களின் செல்வத்தைச் சுரண்டி, நாளாவட்டத்தில் அவர்களை ஓட்டாண்டியாக்கிவிடும்; அப்போது இனியும் தென்னாடு வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருப்பதனால் பயனில்லை” என்று தெரிந்ததும், தென்னாட்டிற்கு "விடுதலை” வழங்க முன் வரலாம். "அதுவரையில் - நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசிபோல, ’நாம் எல்லாம் பாரத புத்திரர்களல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே?' - என்பர். நாம் ஓட்டாண்டிகளான பின், நீங்கள் ஏன் வட நாட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்?” என்று பேசுவர் - தாசிபோல! "எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் வட நாட்டு ஏகாதிபத்திய அணைப்பினின்றும் விலகிக்கொள்ள வேண்டும் என்று தி. மு. கழகம் கூறுகிறது; அப்போதுதான் இந்த நாட்டு விவசாய, தொழிலாள, பாட்டாளிவர்க்க மக்கள் நலம் பெற்று, நல்ல பல திட்டங்கள் தீட்டி, தொழில் வளர்த்துச் செல்வம் பெருக்கிச் சுதந்திரத்துடன் வாழ முடியும்.” ஓட்டாண்டிகளாகிவிடுமுன்பு, விடுபடுக! வாழ்வு பெறுக! என்றுதான், தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, திருவிடத்தாருக்குத் தெரிவிக்கிறது. திராவிட நாடு கற்பனை என்ற எண்ணம், ஊட்டப்பட் டிருக்கலாம் - விவரமறியாதார் எவரேனும் எழுதிய ஏடு படித்ததால்; அல்லது திராவிடநாடு கொள்கைக்காகக் பரிந்து பேசும் நாம், எந்த ஏடும் படிக்காதவர்கள் என்ற எண்ணம் உள்ளே புகுந்திருக்கலாம். எல்லைபற்றிச் சந்தேகம்; இனம் குறித்து ஐயப்பாடு; நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதுபற்றிய அச்சம் பெரும் படை பலத்துடன் உள்ள பேரரசின் தாக்கும் சக்தியைப் பக்கம் நின்று பார்த்ததால் ஏற்பட்ட பீதி; இவை எல்லாம் எழக்கூடும், எவருக்கும். குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் மனத்தில்; கூடிப் பணியாற்றிய இடம் வெறுப்புக்குரியதாகத் தோற்றமளிக்கலாம்; ஒட்டு இல்லை உறவு இல்லை என்ற உறுதி பிறந்திருக்கலாம். மனம்தானே! சிந்தையை அடக்கியே சும்மா இருப்பது அரிது!!<noinclude></noinclude> 8j0gwpa33oyjzatca640ada83yvzxpq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/171 250 645425 1944478 1941339 2026-06-10T06:56:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|170||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஆனால், வடக்கு வஞ்சிக்கிறது தெற்குத் தேய்கிறது என்பதுபற்றிக் காங்கிரசாட்சிக் பாசீசமாகி வருகிறது என்பது குறித்து, வரிப்பளு, கடன் சுமை, விலை ஏற்றம் இவைப்பற்றிக் குழப்பமோ, மனமாற்றமோ ஏற்பட்டிருக்க முடியவே முடியாதே! திராவிட நாட்டுக்காக வாதாடவேண்டாம் - எதிர்ப்புச் செய்வதைக்கூட நிறுத்திக்கொள்ளவேண்டாம் - சுவையும் பயனும் நிரம்பியதாக இருக்கக்கூடும்; ஆனால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ஆட்சி நடத்துகிறதே காங்கிரஸ் கட்சி; அதைக் கண்டிக்க, எதிர்க்க, பொதுமக்களை அதன் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? வழுவலாமா? தி. மு. கழகத்திலிருந்து விலகிக் காங்கிரசிலே சேர்ந்து விடுபவர்களுக்கு, அந்தச் சிக்கல் இல்லை! திராவிட நாடு மட்டும் தானே பிடிக்கவில்லை. அண்ணாதுரையும் பிடிக்கவில்லை. சரி! விட்டுவிடட்டும்! நட்டமில்லை!! ஆனால், ஆட்சிக் கொட்டுகிறது, மக்கள் துடிக்கிறார்கள்; அந்தப் பிரச்சினையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், தன் கடமையை நேர்மையுடன் செய்திட வேண்டாமா? எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழுந்தாலும், நான் ஆச்சரியப்படமாட்டேன், தம்பி! ஆனால், காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட விளைவு கேடுபாடுதான் என்ற பிரச்சினையிலேயும், சந்தேகம் ஏற்பட்டுத் தயக்கம் ஏற்பட்டால்தான், நிச்சயமாகத் திடுக்கிட்டுப் போவேன். அந்த முறையிலே பார்க்கும்போதுதான் நான் ஆதித்த னாரைப் பாராட்டுகிறேன். அவர், திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டிக்கிறார். ஆனால், அதேபோது - தமிழ்நாடு தனிநாடு என்று முழக்கமிடுகிறார் - வடநாட்டுப் பாசீசப் போக்கை எதிர்க்கிறார் - வடநாட்டுப் பேரரசின் பிடியிலிருந்து, தமிழ்நாடு விடுபடவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். எனவே அவர், திராவிட நாடு திட்டத்தை எதிப்பதைக்கூட, என்னைப் பொறுத்தவரையில், கண்ணியமான எதிர்ப்பு என்று கொள்ளுகிறேன். ஆனால், திராவிடநாடு திட்டத்தை எதிர்க்கத் தொடங்கி, வடநாட்டுப் பேரரசுமீது தொடுத்துவந்த எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு, காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளைக் கண்டித்து, அந்த ஆட்சியை ஒழித்தாகவேண்டிய கடமையையும் கைவிட்டுவிடும் போக்கிலே சிலர் நடந்துகொள்ளும்போதுதான் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, திகைப்பாகக்கூட இருக்கிறது.<noinclude></noinclude> iyvanu95s7afepjxbhjpl7bu8532uax 1944623 1944478 2026-06-10T10:52:37Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|170||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஆனால், வடக்கு வஞ்சிக்கிறது தெற்குத் தேய்கிறது என்பதுபற்றிக் காங்கிரசாட்சிக் பாசீசமாகி வருகிறது என்பது குறித்து, வரிப்பளு, கடன் சுமை, விலை ஏற்றம் இவைப்பற்றிக் குழப்பமோ, மனமாற்றமோ ஏற்பட்டிருக்க முடியவே முடியாதே! திராவிட நாட்டுக்காக வாதாடவேண்டாம் - எதிர்ப்புச் செய்வதைக்கூட நிறுத்திக்கொள்ளவேண்டாம் - சுவையும் பயனும் நிரம்பியதாக இருக்கக்கூடும்; ஆனால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ஆட்சி நடத்துகிறதே காங்கிரஸ் கட்சி; அதைக் கண்டிக்க, எதிர்க்க, பொதுமக்களை அதன் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? வழுவலாமா? தி. மு. கழகத்திலிருந்து விலகிக் காங்கிரசிலே சேர்ந்து விடுபவர்களுக்கு, அந்தச் சிக்கல் இல்லை! திராவிட நாடு மட்டும்தானே பிடிக்கவில்லை. அண்ணாதுரையும் பிடிக்கவில்லை. சரி! விட்டுவிடட்டும்! நட்டமில்லை!! ஆனால், ஆட்சிக் கொட்டுகிறது, மக்கள் துடிக்கிறார்கள்; அந்தப் பிரச்சினையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், தன் கடமையை நேர்மையுடன் செய்திட வேண்டாமா? எந்தப் பிரச்சினையிலே சந்தேகம் எழுந்தாலும், நான் ஆச்சரியப்படமாட்டேன், தம்பி! ஆனால், காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட விளைவு கேடுபாடுதான் என்ற பிரச்சினையிலேயும், சந்தேகம் ஏற்பட்டுத் தயக்கம் ஏற்பட்டால்தான், நிச்சயமாகத் திடுக்கிட்டுப் போவேன். அந்த முறையிலே பார்க்கும்போதுதான் நான் ஆதித்த னாரைப் பாராட்டுகிறேன். அவர், திராவிட நாடு எனும் திட்டத்தைக் கண்டிக்கிறார். ஆனால், அதேபோது - தமிழ்நாடு தனிநாடு என்று முழக்கமிடுகிறார் - வடநாட்டுப் பாசீசப் போக்கை எதிர்க்கிறார் - வடநாட்டுப் பேரரசின் பிடியிலிருந்து, தமிழ்நாடு விடுபடவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். எனவே அவர், திராவிட நாடு திட்டத்தை எதிப்பதைக்கூட, என்னைப் பொறுத்தவரையில், கண்ணியமான எதிர்ப்பு என்று கொள்ளுகிறேன். ஆனால், திராவிடநாடு திட்டத்தை எதிர்க்கத் தொடங்கி, வடநாட்டுப் பேரரசுமீது தொடுத்துவந்த எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு, காங்கிரசாட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளைக் கண்டித்து, அந்த ஆட்சியை ஒழித்தாகவேண்டிய கடமையையும் கைவிட்டுவிடும் போக்கிலே சிலர் நடந்துகொள்ளும்போதுதான் எனக்கு வியப்பாக மட்டுமல்ல, திகைப்பாகக்கூட இருக்கிறது.<noinclude></noinclude> igbi6v0z7f4sn0wtppapy5nbq529oh7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/172 250 645426 1944480 1941342 2026-06-10T07:05:24Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||171}}{{rule}}</noinclude> திராவிட நாட்டுத் திட்டத்தை எதிர்ப்பது மட்டுமே தமது திட்டமாக்கிக்கொள்ளாமல், வடநாட்டுப் பேரரசின் பாசீச ஏகாதிபத்தியப் போக்கையும், நேர்மையுடன் கண்டிப்பவர்கள், நமது திட்டத்தை எதிப்பவர்கள் எனினும்கூட, பொதுமக்களைப் பாசீசப் பிடியிலிருந்து விடுவிக்கும் கடமையிலிருந்து தவறாதவர்கள் என்பதற்காக, நாம் பாராட்டக்கூடச் செய்யலாம். திராவிட நாடும் வேண்டாம் - வடநாட்டுப் பிடிபற்றிய கண்டனமும் எதிர்ப்பும் தேவையில்லை - காங்கிரசாட்சியின் கேடுபாடுகளையும் எதிர்க்கத் தேவையில்லை என்றால், தனிக் கொடியும் படையும், நடையும் எற்றுக்கு! இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவா? அதனைக் காங்கிரசுக்குள்ளே இருந்து கொண்டே நடத்திக்கொள்ளலாமே!! என்றுதான் எவரும் கூறுவர். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர, மற்ற அனை வருக்கும், காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகள் பற்றித் துளியும் ஐயப்பாடுகள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? தழும்புகள் இருக்கின்றனவே, தாக்கப்பட்டது நினைவிற்கு வராமலா இருக்கும்! மற்றது கிடக்கட்டும் முதலில், நமது முதலமைச்சர் மறவாமல் கூறுகிற சோற்றுப் பிரச்சினையை பார்க்கச் சொல்லு, தம்பி! ஆட்சியின் இலட்சணம் தெரிந்துவிடும். {| |+ {{c|<b>1956ஆம் ஆண்டு</b>}} |- | படி அரிசி|| - || 54 காசு |- | 1-வீசை புளி|| -|| 66 காசு |- | 1-படி கொத்தமல்லி|| -|| 1-12 காசு |- | மிளகாய் வற்றல் 1 வீசை || -|| 1-86 காசு |- | துவரம் பருப்பு படி || -|| 50 காசு |- | காப்பிக்கொட்டை வீசை|| -|| 6-09 காசு |- | சர்க்கரை வீசை|| -|| 1-22 காசு |- |} தம்பி! 1947-லிருந்து காங்கிரசாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, 1947ஆம் ஆண்டு விலையைவிட இந்த விலை அதிகம். மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்து, வேதனை அதிகமாகிறது. விலைவாசி ஏறிவிட்டதைக் கண்டிக்கின்றன எல்லாக் கட்சிகளும். ஆகட்டும் பார்க்கலாம் என்கிறது காங்கிரஸ் அரசு! அதற்குப் பெயரே ஏழை பங்காளன்!<noinclude></noinclude> fefrioa4ynhl0c4isgdlzdsb6w4v2je 1944625 1944480 2026-06-10T10:53:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||171}}{{rule}}</noinclude> திராவிட நாட்டுத் திட்டத்தை எதிர்ப்பது மட்டுமே தமது திட்டமாக்கிக்கொள்ளாமல், வடநாட்டுப் பேரரசின் பாசீச ஏகாதிபத்தியப் போக்கையும், நேர்மையுடன் கண்டிப்பவர்கள், நமது திட்டத்தை எதிப்பவர்கள் எனினும்கூட, பொதுமக்களைப் பாசீசப் பிடியிலிருந்து விடுவிக்கும் கடமையிலிருந்து தவறாதவர்கள் என்பதற்காக, நாம் பாராட்டக்கூடச் செய்யலாம். திராவிட நாடும் வேண்டாம் - வடநாட்டுப் பிடிபற்றிய கண்டனமும் எதிர்ப்பும் தேவையில்லை - காங்கிரசாட்சியின் கேடுபாடுகளையும் எதிர்க்கத் தேவையில்லை என்றால், தனிக் கொடியும் படையும், நடையும் எற்றுக்கு! இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவா? அதனைக் காங்கிரசுக்குள்ளே இருந்து கொண்டே நடத்திக்கொள்ளலாமே!! என்றுதான் எவரும் கூறுவர். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர, மற்ற அனை வருக்கும், காங்கிரசாட்சியினால் விளைந்துள்ள கேடுபாடுகள் பற்றித் துளியும் ஐயப்பாடுகள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? தழும்புகள் இருக்கின்றனவே, தாக்கப்பட்டது நினைவிற்கு வராமலா இருக்கும்! மற்றது கிடக்கட்டும் முதலில், நமது முதலமைச்சர் மறவாமல் கூறுகிற சோற்றுப் பிரச்சினையை பார்க்கச் சொல்லு, தம்பி! ஆட்சியின் இலட்சணம் தெரிந்துவிடும். {| |+ {{c|<b>1956ஆம் ஆண்டு</b>}} |- | படி அரிசி|| - || 54 காசு |- | 1-வீசை புளி|| -|| 66 காசு |- | 1-படி கொத்தமல்லி|| -|| 1-12 காசு |- | மிளகாய் வற்றல் 1 வீசை || -|| 1-86 காசு |- | துவரம் பருப்பு படி || -|| 50 காசு |- | காப்பிக்கொட்டை வீசை|| -|| 6-09 காசு |- | சர்க்கரை வீசை|| -|| 1-22 காசு |- |} தம்பி! 1947-லிருந்து காங்கிரசாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, 1947ஆம் ஆண்டு விலையைவிட இந்த விலை அதிகம். மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்து, வேதனை அதிகமாகிறது. விலைவாசி ஏறிவிட்டதைக் கண்டிக்கின்றன எல்லாக் கட்சிகளும். ஆகட்டும் பார்க்கலாம் என்கிறது காங்கிரஸ் அரசு! அதற்குப் பெயரே ஏழை பங்காளன்!<noinclude></noinclude> 2009ub24h27gszet0002z3e1pjgftv3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/173 250 645427 1944481 1941348 2026-06-10T07:08:36Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மூன்று ஆண்டுகள் உருண்டோடுகின்றன! எத்தனையோ கண்டனக் கூட்டங்கள் - சட்ட மன்றப் பேச்சுகள் - மாநாடுகள் - தூதுக் குழுக்கள் - பத்திரிகைத் தலையங்கங்கள்! பலன்? தெரிந்துகொள்ளத்தான்வேண்டுமா, தம்பி! சரி! இதோ பாரேன் பலனை!! விலைவாசி விஷம்போல் ஏறுகிறது; வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்றுதானே மக்கள் முறையிட்டார்கள்! ஆகட்டும் பார்க்கலாம் என்றல்லவா காங்கிரஸ் அரசு அறிவித்தது! அறிவித்துவிட்டுப் பிரச்சினை யைக் கவனிக்காமலே இருந்துவிட்டதோ? இல்லை! இல்லை! கவனித்தது! கவனித்ததன் பலன்? கேள், தம்பி அந்தக் கூத்தை!! {| |+ {{c|<b>1959ஆம் ஆண்டு</b>}} |- | படி அரிசி|| - || 1-12 காசு |- | புளி வீசை|| -|| 3-50 காசு |- | மிளகாய் வீசை || -|| 5-00 காசு |- | துவரம் பருப்பு படி || -|| 1-50 காசு |- | காப்பிக்கொட்டை வீசை|| -|| 8-50 காசு |- | சர்க்கரை வீசை|| -|| 3-25 காசு |- |} எப்படி ஏழைபங்காளன் அருள்? விலையைக் குறைக்கச் சொல்- மக்கள் முறையிட்டார்கள். விலை மிக அதிகமோ என்று வினவினர் அரசினர். ஆம்! ஐயனே! படி அரிசி 54 காசு விற்கிறது!! என்று புலம்பினர்! பாலகா! அழாதே! கவனிக்கிறேன் என்று வாக்களித்தது காங்கிரஸ் அரசு. மூன்று ஆண்டுகள் ஓடின - படி அரிசி 54 காசாக இருந்தது 1 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்தது! பதறி இருப்பார்கள் மக்கள்! ஆமாம்! ஆனால் அரசினர் கேட்டிருப்பார்களல்லவா, 1956ஆம் ஆண்டு வந்து முறையிட்டீர் களே விலை ஏற்றமாக இருக்கிறது என்று. இப்போது என்ன சொல்லுகிறிர்கள் என்று. என்ன சொல்லி இருப்பார்கள் மக்கள்! ஐயனே! அது பொற்காலம் படி அரிசி 54 காசுக்குக் கிடைத்தது - இப்போது 1-12 காசு விலை! என்று விம்மியிருப்பர். இந்த விலை ஏற்றத்தைக் கண்டிப்பதற்குக்கூடவா "மேஷ ரிஷபம்'' பார்க்கவேண்டும்! பொதுமக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும் கடமையை மறவாதவர் எவரும் எந்தப் பிரச்சினையிலே மனக்குழப்பம் இருப்பினும், இதிலே தெளிவும் திட்டவட்டமான போக்கும் பெற்று, இந்த நிலைக்குக் காரணமான காங்கிரசாட்சியைக் கண்டிக்கவேண்டுமல்லவா!<noinclude></noinclude> ax200jp7efd3jrp2cirz0v7bnszx21b 1944626 1944481 2026-06-10T10:54:03Z Santharabanu 15679 top space added 1944626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> மூன்று ஆண்டுகள் உருண்டோடுகின்றன! எத்தனையோ கண்டனக் கூட்டங்கள் - சட்ட மன்றப் பேச்சுகள் - மாநாடுகள் - தூதுக் குழுக்கள் - பத்திரிகைத் தலையங்கங்கள்! பலன்? தெரிந்துகொள்ளத்தான்வேண்டுமா, தம்பி! சரி! இதோ பாரேன் பலனை!! விலைவாசி விஷம்போல் ஏறுகிறது; வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்றுதானே மக்கள் முறையிட்டார்கள்! ஆகட்டும் பார்க்கலாம் என்றல்லவா காங்கிரஸ் அரசு அறிவித்தது! அறிவித்துவிட்டுப் பிரச்சினை யைக் கவனிக்காமலே இருந்துவிட்டதோ? இல்லை! இல்லை! கவனித்தது! கவனித்ததன் பலன்? கேள், தம்பி அந்தக் கூத்தை!! {| |+ {{c|<b>1959ஆம் ஆண்டு</b>}} |- | படி அரிசி|| - || 1-12 காசு |- | புளி வீசை|| -|| 3-50 காசு |- | மிளகாய் வீசை || -|| 5-00 காசு |- | துவரம் பருப்பு படி || -|| 1-50 காசு |- | காப்பிக்கொட்டை வீசை|| -|| 8-50 காசு |- | சர்க்கரை வீசை|| -|| 3-25 காசு |- |} எப்படி ஏழைபங்காளன் அருள்? விலையைக் குறைக்கச் சொல்- மக்கள் முறையிட்டார்கள். விலை மிக அதிகமோ என்று வினவினர் அரசினர். ஆம்! ஐயனே! படி அரிசி 54 காசு விற்கிறது!! என்று புலம்பினர்! பாலகா! அழாதே! கவனிக்கிறேன் என்று வாக்களித்தது காங்கிரஸ் அரசு. மூன்று ஆண்டுகள் ஓடின - படி அரிசி 54 காசாக இருந்தது 1 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்தது! பதறி இருப்பார்கள் மக்கள்! ஆமாம்! ஆனால் அரசினர் கேட்டிருப்பார்களல்லவா, 1956ஆம் ஆண்டு வந்து முறையிட்டீர் களே விலை ஏற்றமாக இருக்கிறது என்று. இப்போது என்ன சொல்லுகிறிர்கள் என்று. என்ன சொல்லி இருப்பார்கள் மக்கள்! ஐயனே! அது பொற்காலம் படி அரிசி 54 காசுக்குக் கிடைத்தது - இப்போது 1-12 காசு விலை! என்று விம்மியிருப்பர். இந்த விலை ஏற்றத்தைக் கண்டிப்பதற்குக்கூடவா "மேஷ ரிஷபம்'' பார்க்கவேண்டும்! பொதுமக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும் கடமையை மறவாதவர் எவரும் எந்தப் பிரச்சினையிலே மனக்குழப்பம் இருப்பினும், இதிலே தெளிவும் திட்டவட்டமான போக்கும் பெற்று, இந்த நிலைக்குக் காரணமான காங்கிரசாட்சியைக் கண்டிக்கவேண்டுமல்லவா!<noinclude></noinclude> dfzk9saroov2u4kexvm7rv4n10jmrro 1944628 1944626 2026-06-10T10:54:48Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> மூன்று ஆண்டுகள் உருண்டோடுகின்றன! எத்தனையோ கண்டனக் கூட்டங்கள் - சட்ட மன்றப் பேச்சுகள் - மாநாடுகள் - தூதுக் குழுக்கள் - பத்திரிகைத் தலையங்கங்கள்! பலன்? தெரிந்துகொள்ளத்தான்வேண்டுமா, தம்பி! சரி! இதோ பாரேன் பலனை!! விலைவாசி விஷம்போல் ஏறுகிறது; வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்றுதானே மக்கள் முறையிட்டார்கள்! ஆகட்டும் பார்க்கலாம் என்றல்லவா காங்கிரஸ் அரசு அறிவித்தது! அறிவித்துவிட்டுப் பிரச்சினையைக் கவனிக்காமலே இருந்துவிட்டதோ? இல்லை! இல்லை! கவனித்தது! கவனித்ததன் பலன்? கேள், தம்பி அந்தக் கூத்தை!! {| |+ {{c|<b>1959ஆம் ஆண்டு</b>}} |- | படி அரிசி|| - || 1-12 காசு |- | புளி வீசை|| -|| 3-50 காசு |- | மிளகாய் வீசை || -|| 5-00 காசு |- | துவரம் பருப்பு படி || -|| 1-50 காசு |- | காப்பிக்கொட்டை வீசை|| -|| 8-50 காசு |- | சர்க்கரை வீசை|| -|| 3-25 காசு |- |} எப்படி ஏழைபங்காளன் அருள்? விலையைக் குறைக்கச் சொல்- மக்கள் முறையிட்டார்கள். விலை மிக அதிகமோ என்று வினவினர் அரசினர். ஆம்! ஐயனே! படி அரிசி 54 காசு விற்கிறது!! என்று புலம்பினர்! பாலகா! அழாதே! கவனிக்கிறேன் என்று வாக்களித்தது காங்கிரஸ் அரசு. மூன்று ஆண்டுகள் ஓடின - படி அரிசி 54 காசாக இருந்தது 1 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்தது! பதறி இருப்பார்கள் மக்கள்! ஆமாம்! ஆனால் அரசினர் கேட்டிருப்பார்களல்லவா, 1956ஆம் ஆண்டு வந்து முறையிட்டீர் களே விலை ஏற்றமாக இருக்கிறது என்று. இப்போது என்ன சொல்லுகிறிர்கள் என்று. என்ன சொல்லி இருப்பார்கள் மக்கள்! ஐயனே! அது பொற்காலம் படி அரிசி 54 காசுக்குக் கிடைத்தது - இப்போது 1-12 காசு விலை! என்று விம்மியிருப்பர். இந்த விலை ஏற்றத்தைக் கண்டிப்பதற்குக்கூடவா "மேஷ ரிஷபம்'' பார்க்கவேண்டும்! பொதுமக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும் கடமையை மறவாதவர் எவரும் எந்தப் பிரச்சினையிலே மனக்குழப்பம் இருப்பினும், இதிலே தெளிவும் திட்டவட்டமான போக்கும் பெற்று, இந்த நிலைக்குக் காரணமான காங்கிரசாட்சியைக் கண்டிக்கவேண்டுமல்லவா!<noinclude></noinclude> qrbbk1dh7s5n5sluts5prpfwgcn3q0t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/174 250 645428 1944487 1941353 2026-06-10T07:14:59Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||173}}{{rule}}</noinclude> திருப்பரங்குன்றம் மாநாடு, மிகப் பெரிய கண்டனம் - காங்கிரசாட்சியின் போக்குக்கு. மக்கள் பாடவில்லையே தவிர, முன்பு சுதேசமித்திரனில் வெளிவந்த பாடல், பலருக்கு நினைவிற்கு வந்தது - விலைவாசி ஏறிக்கொண்டேபோவது குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது. பாடக் கற்றுக்கொண்டாகிலும் தம்பி! பலருக்கும் பாடிக் காட்டவேண்டிய, பாடல்: {{left_margin|3em|<poem>புளி மிளகாய் தனியா! - இதற்கு ஏழரை நாட்டுச் சனியா? விலை குறைவது எப்போ? - இதை விளக்கிச் சொன்னால் தப்போ? மிளகாய் தனியா கூடி - வெளி நாட்டுக்குப் போனதோ ஓடி! புளியும் மலடியாச்சோ? - காய்த்துப் பழுக்க மறந்து போச்சோ? குழம்பின் மீது ஆவல் - வைக்கக் கூடா தென்றே மூவர் - அழும்பு எண்ணம்தானோ? - இந்த அவல நிலையும் ஏனோ? மக்களின் மீது வெறுப்பா? - இந்த மூன்றுக்கும் இப்போ சிரிப்பா? அக்கறை காட்ட வேண்டும் - விலை அதிகப் பேயும் அடங்கும்! </poem>}} விலைவாசி ஏற்றம் என்பது எங்கும் ஏற்பட்டுவிட்டுள்ள நிலைமை; இதற்காகக் காங்கிரசாட்சியைக் கண்டிக்கலாமா என்று கேட்போரும், விலைகள் ஏன் ஏற்றமாயின நின்றால், பணம் பெருத்து விட்டது, மக்களிடம் பணப்பழக்கம் அதிகமாகிவிட்டது, எந்தச் சாமான் என்ன விலை என்றாலும் கொடுத்து வாங்கும் சக்தி வளர்ந்துவிட்டது, அதனாலேயே விலையை உயர்த்தி விட்டார்கள் என்றும், பணப்புழக்கம் ஏன் அதிகமாயிற்று என்றால், தொழிலாளர்களும் ஊதியம் பெறுவோரும் முன்பு பெற்றதைவிட அதிக அளவு பணம் பெறுகிறார்கள் என்றும், விளக்கம் என்று எண்ணிக்கொண்டு, ஒரு நிலைமையை மற்றோர் நிலைமைக்குக்<noinclude></noinclude> 4uu8b28zplnq1zjrme1ms1jz7inagb8 1944629 1944487 2026-06-10T10:55:42Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||173}}{{rule}}</noinclude> திருப்பரங்குன்றம் மாநாடு, மிகப் பெரிய கண்டனம் - காங்கிரசாட்சியின் போக்குக்கு. மக்கள் பாடவில்லையே தவிர, முன்பு சுதேசமித்திரனில் வெளிவந்த பாடல், பலருக்கு நினைவிற்கு வந்தது - விலைவாசி ஏறிக்கொண்டேபோவது குறித்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது. பாடக் கற்றுக்கொண்டாகிலும் தம்பி! பலருக்கும் பாடிக் காட்டவேண்டிய, பாடல்: {{left_margin|3em|<poem>புளி மிளகாய் தனியா! - இதற்கு ஏழரை நாட்டுச் சனியா? விலை குறைவது எப்போ? - இதை விளக்கிச் சொன்னால் தப்போ? மிளகாய் தனியா கூடி - வெளி நாட்டுக்குப் போனதோ ஓடி! புளியும் மலடியாச்சோ? - காய்த்துப் பழுக்க மறந்து போச்சோ? குழம்பின் மீது ஆவல் - வைக்கக் கூடா தென்றே மூவர் - அழும்பு எண்ணம்தானோ? - இந்த அவல நிலையும் ஏனோ? மக்களின் மீது வெறுப்பா? - இந்த மூன்றுக்கும் இப்போ சிரிப்பா? அக்கறை காட்ட வேண்டும் - விலை அதிகப் பேயும் அடங்கும்! </poem>}} விலைவாசி ஏற்றம் என்பது எங்கும் ஏற்பட்டுவிட்டுள்ள நிலைமை; இதற்காகக் காங்கிரசாட்சியைக் கண்டிக்கலாமா என்று கேட்போரும், விலைகள் ஏன் ஏற்றமாயின நின்றால், பணம் பெருத்து விட்டது, மக்களிடம் பணப்பழக்கம் அதிகமாகிவிட்டது, எந்தச் சாமான் என்ன விலை என்றாலும் கொடுத்து வாங்கும் சக்தி வளர்ந்துவிட்டது, அதனாலேயே விலையை உயர்த்தி விட்டார்கள் என்றும், பணப்புழக்கம் ஏன் அதிகமாயிற்று என்றால், தொழிலாளர்களும் ஊதியம் பெறுவோரும் முன்பு பெற்றதைவிட அதிக அளவு பணம் பெறுகிறார்கள் என்றும், விளக்கம் என்று எண்ணிக்கொண்டு, ஒரு நிலைமையை மற்றோர் நிலைமைக்குக்<noinclude></noinclude> iczijekvkayo6pms4ii3of5nbq8bj9c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/175 250 645429 1944088 1941356 2026-06-09T12:52:28Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|174||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காரணம் என்று, தாமாகப் பொருத்திக் காட்டச் சிலர் முற்படுகின்றனர். கூலி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளன; ஆனால், அதைவிட வேகமாகவும் அதிக அளவிலும் விலைகள் ஏறிவிட் டிருக்கின்றன. எனவே, கூலி உயர்வு ஏற்பட்டுப் பணபுழக்கம் அதிகமாயும், பாட்டாளிகளால் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களைக்கூடப் போதுமான அளவு பெறமுடியவில்லை; தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பணப்புழக்கம் பொருள் உற்பத்தியும் ஒரே சீராக இருந்திருந்தால், நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்காது. அத்துடன், உற்பத்தி பெருகப்பெருக, முந்திராக்கள் வளர்ந்தால், கள்ளச்சந்தையும் கொள்ளை இலாபமும் தானே வளரும்; வளரும்போது ஏழையின் வயிற்றில்தானே அடிப்பார்கள்! இப்போது நடப்பது இதுதான், இதைக் கட்டுப்படுத்தவேண்டு மென்றால், கள்ளச் சந்தைக்காரர்களிடம் கனிவு காட்டும் போக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியினருக்கு இருத்தல் கூடாது. முந்திரா தரும் பணம், இந்தத் தூய்மையையா காட்டுகிறது? டாட்டா வணிகக் கோட்டம் அள்ளிக் கொடுக்கும் நன்கொடை, எதன் பொருட்டு? உலகெங்குமே விலைவாசி ஏற்றம் இருக்கிறது, இங்கு மட்டுமல்ல என்று, வாதாடி பொறுப்பைத் தட்டிக் கழித்து விடவும் முனைகின்றனர். இதன் உண்மையையும் அறிந்து கொள்ளவேண்டுமல்லவா? ஷெனாய் என்றோர் பொருளாதாரப் பேராசிரியர் இருக்கிறார். அவர் பதவிப்பசி கொண்டதால் ஆளும் கட்சியைப் பகைத்துக்கொண்டவரும் அல்ல; எதிர்க்கட்சி நடத்துவதால் ஏதேனும் பேசித் தீரவேண்டிய நிலையில் உள்ளவர் என்றும் எள்ளி நகையாடிட முடியாது. பொருளாதாரத்துறை நிபுணர் என்ற நிலையில், கருத்தளித்து வருபவர். {{left_margin|3em|"பணப்பெருக்கமும் விலைவாசி ஏற்றமும் எல்லா நாடுகளிலும் உள்ளன என்று ஒரு தவறான வாதம் பேசப்பட்டு வருகிறது. 1955ஆம் ஆண்டு நிலைமையிலிருந்து 1959ஆம் ஆண்டு நிலைமைவரை 27 நாடுகளின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் எல்லா நாடுகளிலும் பணப்பெருக்கமும் விலை ஏற்றமும்}}<noinclude></noinclude> qk466fb1k41o6urnkaofxsyw6hjl05t 1944136 1944088 2026-06-09T15:36:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|174||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காரணம் என்று, தாமாகப் பொருத்திக் காட்டச் சிலர் முற்படுகின்றனர். கூலி உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளன; ஆனால், அதைவிட வேகமாகவும் அதிக அளவிலும் விலைகள் ஏறிவிட் டிருக்கின்றன. எனவே, கூலி உயர்வு ஏற்பட்டுப் பணபுழக்கம் அதிகமாயும், பாட்டாளிகளால் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களைக்கூடப் போதுமான அளவு பெறமுடியவில்லை; தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பணப்புழக்கம் பொருள் உற்பத்தியும் ஒரே சீராக இருந்திருந்தால், நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்காது. அத்துடன், உற்பத்தி பெருகப்பெருக, முந்திராக்கள் வளர்ந்தால், கள்ளச்சந்தையும் கொள்ளை இலாபமும் தானே வளரும்; வளரும்போது ஏழையின் வயிற்றில்தானே அடிப்பார்கள்! இப்போது நடப்பது இதுதான், இதைக் கட்டுப்படுத்தவேண்டு மென்றால், கள்ளச் சந்தைக்காரர்களிடம் கனிவு காட்டும் போக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சியினருக்கு இருத்தல் கூடாது. முந்திரா தரும் பணம், இந்தத் தூய்மையையா காட்டுகிறது? டாட்டா வணிகக் கோட்டம் அள்ளிக் கொடுக்கும் நன்கொடை, எதன் பொருட்டு? உலகெங்குமே விலைவாசி ஏற்றம் இருக்கிறது, இங்கு மட்டுமல்ல என்று, வாதாடி பொறுப்பைத் தட்டிக் கழித்து விடவும் முனைகின்றனர். இதன் உண்மையையும் அறிந்து கொள்ளவேண்டுமல்லவா? ஷெனாய் என்றோர் பொருளாதாரப் பேராசிரியர் இருக்கிறார். அவர் பதவிப்பசி கொண்டதால் ஆளும் கட்சியைப் பகைத்துக்கொண்டவரும் அல்ல; எதிர்க்கட்சி நடத்துவதால் ஏதேனும் பேசித் தீரவேண்டிய நிலையில் உள்ளவர் என்றும் எள்ளி நகையாடிட முடியாது. பொருளாதாரத்துறை நிபுணர் என்ற நிலையில், கருத்தளித்து வருபவர். {{left_margin|3em|"பணப்பெருக்கமும் விலைவாசி ஏற்றமும் எல்லா நாடுகளிலும் உள்ளன என்று ஒரு தவறான வாதம் பேசப்பட்டு வருகிறது. 1955ஆம் ஆண்டு நிலைமையிலிருந்து 1959ஆம் ஆண்டு நிலைமைவரை 27 நாடுகளின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பார்த்ததில் எல்லா நாடுகளிலும் பணப்பெருக்கமும் விலை ஏற்றமும்}}<noinclude></noinclude> pixxo222fwncbo3njvimux40kc011qf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/176 250 645430 1944083 1941360 2026-06-09T12:46:06Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||175}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஏற்பட்டுவிட்டன என்பது பொய்யுரை என்று விளக்கமாகத் தெரிகிறது. <poem>பெல்ஜியம் ஜெர்மனி ஜப்பான்</poem> இம்மூன்று நாடுகளிலும், விலை ஏற்றம் 100-க்கு 1 என்ற அளவில்தான் இருக்கிறது; இங்கோ, 100-க்கு 33 என்ற அளவு விலை ஏறிவிட்டிருக்கிறது. <poem>பிரான்சு இத்தாலி</poem> எனும் இருநாடுகளில், விலைஏற்றம் இல்லை! சில குறிப்பிட்ட பண்டங்களின் விலை விழுந்தே இருக்கக் காண்கிறோம். <poem>கனடா அமெரிக்கா இங்கிலாந்து</poem> ஆகிய நாடுகளிலே விலை ஏற்றம் 100-க்கு 2 என்ற அளவுதான்!''}} பொருளாதார நிபுணர் ஷெனாய், இந்த உண்மையைச் சுட்டிக்காட்டி, இங்கு, விலைவாசிகள் கண்மண் தெரியாமல் ஏறி இருப்பதைக் கண்டிக்கிறார். ஆட்சியிலுள்ளோர் என்ன செய்கின்றனர்? நமது கழகம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்து, விலைவாசிக் கண்டன நாள் நடத்தியபோது, காங்கிரஸ் கட்சியினர், கேபேசின ர் - கலகம் செய்கிறோம் என்றனர் - கலங்கமாட்டோம் என்று வீறாப்புப் பேசினர் - விலைகளைக் குறைக்க வழி என்ன என்று ஆராயவில்லை, செயல்படவில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை எதிர்ப்பு எழும்பினாலும், அச்சப்படத் தேவையில்லை, ஆட்சியிலிருந்து நம்மை அகற்றக்கூடிய வலிவு எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை; எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி வந்தாலும் அது நடவாது என்ற எண்ணம் ஏற்பட்டு ஆணவம் உண்டாகிவிட்டது. ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்துக்கொள்வது அதன் அழிவுக்குத்தான் வழி அமைக்கும். எனவே, ஆர்ப்பரிக்கட்டும்<noinclude></noinclude> demtcyen8irlsrmwxstxkbe7oob474i 1944085 1944083 2026-06-09T12:48:41Z Rathai palanivelan 11183 tag change 1944085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||175}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஏற்பட்டுவிட்டன என்பது பொய்யுரை என்று விளக்கமாகத் தெரிகிறது. ::பெல்ஜியம் ::ஜெர்மனி ::ஜப்பான் இம்மூன்று நாடுகளிலும், விலை ஏற்றம் 100-க்கு 1 என்ற அளவில்தான் இருக்கிறது; இங்கோ, 100-க்கு 33 என்ற அளவு விலை ஏறிவிட்டிருக்கிறது. ::பிரான்சு ::இத்தாலி எனும் இருநாடுகளில், விலைஏற்றம் இல்லை! சில குறிப்பிட்ட பண்டங்களின் விலை விழுந்தே இருக்கக் காண்கிறோம். ::கனடா ::அமெரிக்கா ::இங்கிலாந்து ஆகிய நாடுகளிலே விலை ஏற்றம் 100-க்கு 2 என்ற அளவுதான்!''}} பொருளாதார நிபுணர் ஷெனாய், இந்த உண்மையைச் சுட்டிக்காட்டி, இங்கு, விலைவாசிகள் கண்மண் தெரியாமல் ஏறி இருப்பதைக் கண்டிக்கிறார். ஆட்சியிலுள்ளோர் என்ன செய்கின்றனர்? நமது கழகம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்து, விலைவாசிக் கண்டன நாள் நடத்தியபோது, காங்கிரஸ் கட்சியினர், கேபேசின ர் - கலகம் செய்கிறோம் என்றனர் - கலங்கமாட்டோம் என்று வீறாப்புப் பேசினர் - விலைகளைக் குறைக்க வழி என்ன என்று ஆராயவில்லை, செயல்படவில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை எதிர்ப்பு எழும்பினாலும், அச்சப்படத் தேவையில்லை, ஆட்சியிலிருந்து நம்மை அகற்றக்கூடிய வலிவு எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை; எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி வந்தாலும் அது நடவாது என்ற எண்ணம் ஏற்பட்டு ஆணவம் உண்டாகிவிட்டது. ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்துக்கொள்வது அதன் அழிவுக்குத்தான் வழி அமைக்கும். எனவே, ஆர்ப்பரிக்கட்டும்<noinclude></noinclude> 2pohlqawgi1al9abc1hrtck9g56iuyd 1944140 1944085 2026-06-09T15:39:19Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||175}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஏற்பட்டுவிட்டன என்பது பொய்யுரை என்று விளக்கமாகத் தெரிகிறது. ::பெல்ஜியம் ::ஜெர்மனி ::ஜப்பான் இம்மூன்று நாடுகளிலும், விலை ஏற்றம் 100-க்கு 1 என்ற அளவில்தான் இருக்கிறது; இங்கோ, 100-க்கு 33 என்ற அளவு விலை ஏறிவிட்டிருக்கிறது. ::பிரான்சு ::இத்தாலி எனும் இருநாடுகளில், விலைஏற்றம் இல்லை! சில குறிப்பிட்ட பண்டங்களின் விலை விழுந்தே இருக்கக் காண்கிறோம். ::கனடா ::அமெரிக்கா ::இங்கிலாந்து ஆகிய நாடுகளிலே விலை ஏற்றம் 100-க்கு 2 என்ற அளவுதான்!''}} பொருளாதார நிபுணர் ஷெனாய், இந்த உண்மையைச் சுட்டிக்காட்டி, இங்கு, விலைவாசிகள் கண்மண் தெரியாமல் ஏறி இருப்பதைக் கண்டிக்கிறார். ஆட்சியிலுள்ளோர் என்ன செய்கின்றனர்? நமது கழகம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்து, விலைவாசிக் கண்டன நாள் நடத்தியபோது, காங்கிரஸ் கட்சியினர், கேபேசின ர் - கலகம் செய்கிறோம் என்றனர் - கலங்கமாட்டோம் என்று வீறாப்புப் பேசினர் - விலைகளைக் குறைக்க வழி என்ன என்று ஆராயவில்லை, செயல்படவில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை எதிர்ப்பு எழும்பினாலும், அச்சப்படத் தேவையில்லை, ஆட்சியிலிருந்து நம்மை அகற்றக்கூடிய வலிவு எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை; எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி வந்தாலும் அது நடவாது என்ற எண்ணம் ஏற்பட்டு ஆணவம் உண்டாகிவிட்டது. ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்துக்கொள்வது அதன் அழிவுக்குத்தான் வழி அமைக்கும். எனவே, ஆர்ப்பரிக்கட்டும்<noinclude></noinclude> 34q0ce42w8zhpwljjgw61xe6uzyomab பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/177 250 645431 1944081 1941364 2026-06-09T12:44:04Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆணவத்தால் என்று கூறி, நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ பெறுவது தவறு. ஏனெனில், ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்திருப்பதுபோலவே, எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது; காங்கிரசை வீழ்த்துவது முடியாத காரியமாகி விடுமோ என்ற பயம் பிடித்துக்கொள்கிறது. பொதுமக்களோ, காங்கிரசே எந்தத் தந்திர முறைகளையாவது கண்டுபிடித்து, மீண்டும் பதவியைப் பிடித்துக்கொள்ளும், நாமேன் அதனுடைய பகையைத் தேடிக்கொள்வது; மனம் குமுறுகிறது, என் செய்வது!! என்ற நிலையில், பீதியே அடைகின்றனர். மக்களாகப் பார்த்து மக்களாட்சி அமைக்கிறார்கள்; அந்த உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, என்பது தத்துவம் - எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது அதனை அழகுற எடுத்துரைக்கும் கவிதா வாக்கியம். ஆனால், நடைமுறை? மக்கள் நடுங்கிக் கிடக்கின்றனர், நாடாள முற்பட்ட காங்கிரஸ் கட்சியை நீக்கும் வலிவற்று; வகையற்று. இங்கிலாந்து நாட்டிலே ஒரு மன்னன் - கோனாட்சி என்பது முறுக்கேறியிருந்த நாட்களில், அவன்கூட, மக்களாகத் தமக்கென உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற உரிமை வழங்கினானாம். அந்த உரிமை வழங்கிய மன்னன் வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா, தம்பி! மடாலயத்துக்கு அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் - தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள், மடாலயத்தில் உள்ள துறவிகள். இவர்களுக்கு மன்னன், உரிமை தருகிறான், அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள, அதற்கான அறிக்கை இதோ! {{left_margin|3em|"மடாலயத்துத் துறவிகளே! தேர்தல் நடத்திக் கொள்ளும் உரிமையை உமக்கு அளிக்கிறேன்! நீவிர், கூடி, தாரளமாகத் தேர்தலை, நடத்தி ஒருவரை மடாலய அதிபர் ஆக்கிக்கொள்ளலாம். அந்த உரிமை உமக்கு அளிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. என் கணக்கராகப் பணிபுரியும் ரிச்சார்டு என்பவனைத் தவிர வேறு எவரையும், மடாலய அதிபராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. என் கட்டளை!"}}<noinclude></noinclude> 3ln8k7s76w4ibss2zdwbuo5347ods5m 1944142 1944081 2026-06-09T15:40:46Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆணவத்தால் என்று கூறி, நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ பெறுவது தவறு. ஏனெனில், ஆளும் கட்சிக்கு ஆணவம் பிடித்திருப்பதுபோலவே, எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது; காங்கிரசை வீழ்த்துவது முடியாத காரியமாகி விடுமோ என்ற பயம் பிடித்துக்கொள்கிறது. பொதுமக்களோ, காங்கிரசே எந்தத் தந்திர முறைகளையாவது கண்டுபிடித்து, மீண்டும் பதவியைப் பிடித்துக்கொள்ளும், நாமேன் அதனுடைய பகையைத் தேடிக்கொள்வது; மனம் குமுறுகிறது, என் செய்வது!! என்ற நிலையில், பீதியே அடைகின்றனர். மக்களாகப் பார்த்து மக்களாட்சி அமைக்கிறார்கள்; அந்த உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, என்பது தத்துவம் - எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது அதனை அழகுற எடுத்துரைக்கும் கவிதா வாக்கியம். ஆனால், நடைமுறை? மக்கள் நடுங்கிக் கிடக்கின்றனர், நாடாள முற்பட்ட காங்கிரஸ் கட்சியை நீக்கும் வலிவற்று; வகையற்று. இங்கிலாந்து நாட்டிலே ஒரு மன்னன் - கோனாட்சி என்பது முறுக்கேறியிருந்த நாட்களில், அவன்கூட, மக்களாகத் தமக்கென உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற உரிமை வழங்கினானாம். அந்த உரிமை வழங்கிய மன்னன் வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா, தம்பி! மடாலயத்துக்கு அதிபர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் - தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள், மடாலயத்தில் உள்ள துறவிகள். இவர்களுக்கு மன்னன், உரிமை தருகிறான், அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள, அதற்கான அறிக்கை இதோ! {{left_margin|3em|"மடாலயத்துத் துறவிகளே! தேர்தல் நடத்திக் கொள்ளும் உரிமையை உமக்கு அளிக்கிறேன்! நீவிர், கூடி, தாரளமாகத் தேர்தலை, நடத்தி ஒருவரை மடாலய அதிபர் ஆக்கிக்கொள்ளலாம். அந்த உரிமை உமக்கு அளிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. என் கணக்கராகப் பணிபுரியும் ரிச்சார்டு என்பவனைத் தவிர வேறு எவரையும், மடாலய அதிபராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. என் கட்டளை!"}}<noinclude></noinclude> rb1odrpc411cn6ykaqzk68hv3a0gpzj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/178 250 645432 1944079 1941367 2026-06-09T12:42:35Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||177}}{{rule}}</noinclude> பணக்கோட்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பும் வலிவும் தேடிக்கொண்டுவிடும் கட்சிகள், இந்த மன்னன் தேர்தல் நடத்திக்கொள்ளும் உரிமையை வழங்கி, அதேபோது, இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறானே, அதுபோல, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் உரிமையை மக்களுக்குத் தருகிறார்கள் - தந்துவிட்டு, ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக்கொள்ள ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழச் சென்று ஓட்டு கேட்கும்போது, ஊரைச் சீராக ஆள்வதுபற்றித் தாமே பேசும்போது, உமக்கு உற்ற குறை எதுவெனினும் போக்கும் திறம் எமக்கன்றி வேறு எவர்க்குண்டு என்று எக்காளமிடுகையிலே, ஏழை எளியவர் நிமிர்ந்து நின்று, "நன்று! நன்று! உமது தற்பெருமை! நாடாள நீவிர் வந்த நாள் தொட்டு, நாங்கள் கண்டது வேதனையன்றி வேறென்ன? ஒரு காரியமாவது ஒழுங்காகச் செய்ததுண்டா?" என்றா கேட்கமுடியும். குமுறலை அடக்கிக்கொண்டு, கூனி, கோணி நின்று, உமக்கல்லால் வேறு எவர்க்குண்டு எமை ஆளும் உரிமை என்றன்றோ கூறிவிட வேண்டிவரும். இந்நிலையில், எளியவர்கள், தமது மனச்சாட்சி யின்படி நடந்துகொள்ள வழி ஏது? மக்களாட்சியின் மாண்பு செயல்முறையால் சிதைக்கப்பட்டுப் போகிறது - பெரும்பாலும். இந்திய துணைக்கண்டம் மிகப்பெரிய நிலப்பரப்பு - இங்கு எல்லா மாநிலங்களிலும், அமைப்புகளைக்கொண்டு, ஒரு கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபடுவது என்றால், எளிதான காரியமுமல்ல; அத்தகைய அமைப்பினை விரைவிலே ஏற்படுத்திக்கொள்வதும் இயலாது. விடுதலை பெற்றளித்த வீரர் குழாம் என்ற விருதுடன், காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்திலே குதித்தது - வெற்றி அதனைத் தேடி வந்தது. எதிர்ப்போர்கள் கிளம்பினர். கனதனவான்கள், வணிகக் கோமான்கள், குலத்தலைவர்கள், பட்டதாரிகள், பெரும் பண்ணைகள் - இப்படிப்பட்டவர்கள்! நாடு மீட்ட நல்லவர்களே நாடாளவேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர் - பேழையுடையாரை ஏழையர் உலகு தோற்கடித்தது. மகாராஜாக்கள் - பூபதிகள் - மிட்டாமிராசுகள் - ஆலை அரசர்கள் - வணிகக் கோமான்கள் - பலரும் மண் கவ்வினர்.<noinclude></noinclude> jh9z2b87f693lrqt4bgizhr3y8o8ury 1944143 1944079 2026-06-09T15:42:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||177}}{{rule}}</noinclude> பணக்கோட்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பும் வலிவும் தேடிக்கொண்டுவிடும் கட்சிகள், இந்த மன்னன் தேர்தல் நடத்திக்கொள்ளும் உரிமையை வழங்கி, அதேபோது, இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறானே, அதுபோல, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் உரிமையை மக்களுக்குத் தருகிறார்கள் - தந்துவிட்டு, ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக்கொள்ள ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழச் சென்று ஓட்டு கேட்கும்போது, ஊரைச் சீராக ஆள்வதுபற்றித் தாமே பேசும்போது, உமக்கு உற்ற குறை எதுவெனினும் போக்கும் திறம் எமக்கன்றி வேறு எவர்க்குண்டு என்று எக்காளமிடுகையிலே, ஏழை எளியவர் நிமிர்ந்து நின்று, "நன்று! நன்று! உமது தற்பெருமை! நாடாள நீவிர் வந்த நாள் தொட்டு, நாங்கள் கண்டது வேதனையன்றி வேறென்ன? ஒரு காரியமாவது ஒழுங்காகச் செய்ததுண்டா?" என்றா கேட்கமுடியும். குமுறலை அடக்கிக்கொண்டு, கூனி, கோணி நின்று, உமக்கல்லால் வேறு எவர்க்குண்டு எமை ஆளும் உரிமை என்றன்றோ கூறிவிட வேண்டிவரும். இந்நிலையில், எளியவர்கள், தமது மனச்சாட்சி யின்படி நடந்துகொள்ள வழி ஏது? மக்களாட்சியின் மாண்பு செயல்முறையால் சிதைக்கப்பட்டுப் போகிறது - பெரும்பாலும். இந்திய துணைக்கண்டம் மிகப்பெரிய நிலப்பரப்பு - இங்கு எல்லா மாநிலங்களிலும், அமைப்புகளைக்கொண்டு, ஒரு கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபடுவது என்றால், எளிதான காரியமுமல்ல; அத்தகைய அமைப்பினை விரைவிலே ஏற்படுத்திக்கொள்வதும் இயலாது. விடுதலை பெற்றளித்த வீரர் குழாம் என்ற விருதுடன், காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்திலே குதித்தது - வெற்றி அதனைத் தேடி வந்தது. எதிர்ப்போர்கள் கிளம்பினர். கனதனவான்கள், வணிகக் கோமான்கள், குலத்தலைவர்கள், பட்டதாரிகள், பெரும் பண்ணைகள் - இப்படிப்பட்டவர்கள்! நாடு மீட்ட நல்லவர்களே நாடாளவேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர் - பேழையுடையாரை ஏழையர் உலகு தோற்கடித்தது. மகாராஜாக்கள் - பூபதிகள் - மிட்டாமிராசுகள் - ஆலை அரசர்கள் - வணிகக் கோமான்கள் - பலரும் மண் கவ்வினர்.<noinclude></noinclude> ok8tttsh1w92c235q04i9rirgukab9i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/179 250 645433 1944483 1942622 2026-06-10T07:11:02Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|178||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஜரிகைக் குல்லாய்களைக் காந்திக் குல்லாய் தோற்கடித்தது. இதனைக் கண்டதும் ஏழையர் வெற்றித் திருநடனமிட்டனர்; வேதனை தீர்ந்தது என்று எண்ணினர், வேளை வந்தது புதுவாழ்வுபெற என்று நம்பினர். எமது தோழர்கள், ஏழை பங்காளர்கள், காந்தி சீடர்கள், தியாக சீலர்கள், இந்தக் காங்கிரசார்! இவருக்குத்தான் எமது 'வாக்கு' - இதயம்!! இவரை எதிர்த்திட, எவர்க்கே இயலும்? அரண்மனையின் அலங்காரப் பொம்மைகள், மாளிகை மதோன்மத்தர்கள், இராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கோலாகல எனும் விருது படைத்தோர்கள் என்போரெல்லாம், உருண்டனர் கீழே, தேர்தலில் தோற்று! - என்று எக்காளமிட்டனர். ஏழையர் - திட்டமிட்டனர். தோற்றவர்கள். காங்கிரசில் சேர்ந்துகொண்டனர் - சேர்த்துக் கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் ஈட்டி வைத்திருந்த தியாகம், இந்தச் சீமான்களுக்கு கேடயமாக்கப்பட்டது. தண்டி யாத்திரையின்போது, தரைக்கும் படுக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்துகொண்ட வெறியர்கள்; வெள்ளை நிறம் கண்டாலே வீழ்ந்து கும்பிட்ட அடிமைகள், கதர்த்துணி என்றாலே கோணித்துணி, சாணித்துணி என்று இகழ்ந்து பேசிய அகந்தையினர் அனைவரும், காந்தி கட்சியினராயினர்!! அரண்மனைகளிலே காங்கிரஸ் கொடி பறக்கலாயிற்று நீண்ட காலமாக அந்தக் கொடியைத் தமது குடில்களில் மட்டுமே ஏற்றி வைத்திருந்த ஏழையர் கொடி போட்டுவிட்டோம் பணக்காரர் கோட்டைமீது என்றெண்ணிக் களித்தனர்; கொடி ஏற்றிக்கொண்டோம். இனிக் காந்திபடை, நமது வெற்றிக்குப் பாடுபடும் என்று சீமான்கள் உணர்ந்தனர். குச்சு நாயுடன் குலவும் வெள்ளைக்காரக் கவர்னரின் படத்துக்குத் தங்கமுலாம் பூசப்பட்ட சட்டம் போட்டு, மாடத்தின் கூடத்திலே முன்பு மாட்டி வைத்திருந்த சீமான்கள், அந்தப் படத்தை அப்புறப்படுத்தினர் அண்ணல் காந்தியார் படத்தை அரிஅரன் படத்தருகே தொங்கவிட்டுத் தொழுதிடத்தக்க தேவ தேவன் இவரே என்றனர். இதுகண்டு, காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துப்போயினர். இவ்வளவு இலகுவாக இவர்களை வலையில் போட்டுக் கொள்ள வழி இருக்கும்போது, வறட்டு ஜம்பத்துடன் நாம்<noinclude></noinclude> 2rjp1phjb1yk84t96u4ijeottpzn30e 1944484 1944483 2026-06-10T07:11:37Z Santharabanu 15679 1944484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|178||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஜரிகைக் குல்லாய்களைக் காந்திக் குல்லாய் தோற்கடித்தது. இதனைக் கண்டதும் ஏழையர் வெற்றித் திருநடனமிட்டனர்; வேதனை தீர்ந்தது என்று எண்ணினர், வேளை வந்தது புதுவாழ்வுபெற என்று நம்பினர். எமது தோழர்கள், ஏழை பங்காளர்கள், காந்தி சீடர்கள், தியாக சீலர்கள், இந்தக் காங்கிரசார்! இவருக்குத்தான் எமது 'வாக்கு' - இதயம்!! இவரை எதிர்த்திட, எவர்க்கே இயலும்? அரண்மனையின் அலங்காரப் பொம்மைகள், மாளிகை மதோன்மத்தர்கள், இராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கோலாகல எனும் விருது படைத்தோர்கள் என்போரெல்லாம், உருண்டனர் கீழே, தேர்தலில் தோற்று! - என்று எக்காளமிட்டனர். ஏழையர் - திட்டமிட்டனர். தோற்றவர்கள். காங்கிரசில் சேர்ந்துகொண்டனர் - சேர்த்துக் கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் ஈட்டி வைத்திருந்த தியாகம், இந்தச் சீமான்களுக்கு கேடயமாக்கப்பட்டது. தண்டி யாத்திரையின்போது, தரைக்கும் படுக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்துகொண்ட வெறியர்கள்; வெள்ளை நிறம் கண்டாலே வீழ்ந்து கும்பிட்ட அடிமைகள், கதர்த்துணி என்றாலே கோணித்துணி, சாணித்துணி என்று இகழ்ந்து பேசிய அகந்தையினர் அனைவரும், காந்தி கட்சியினராயினர்!! அரண்மனைகளிலே காங்கிரஸ் கொடி பறக்கலாயிற்று நீண்ட காலமாக அந்தக் கொடியைத் தமது குடில்களில் மட்டுமே ஏற்றி வைத்திருந்த ஏழையர் கொடி போட்டுவிட்டோம் பணக்காரர் கோட்டைமீது என்றெண்ணிக் களித்தனர்; கொடி ஏற்றிக்கொண்டோம். இனிக் காந்திபடை, நமது வெற்றிக்குப் பாடுபடும் என்று சீமான்கள் உணர்ந்தனர். குச்சு நாயுடன் குலவும் வெள்ளைக்காரக் கவர்னரின் படத்துக்குத் தங்கமுலாம் பூசப்பட்ட சட்டம் போட்டு, மாடத்தின் கூடத்திலே முன்பு மாட்டி வைத்திருந்த சீமான்கள், அந்தப் படத்தை அப்புறப்படுத்தினர் அண்ணல் காந்தியார் படத்தை அரிஅரன் படத்தருகே தொங்கவிட்டுத் தொழுதிடத்தக்க தேவ தேவன் இவரே என்றனர். இதுகண்டு, காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துப்போயினர். இவ்வளவு இலகுவாக இவர்களை வலையில் போட்டுக் கொள்ள வழி இருக்கும்போது, வறட்டு ஜம்பத்துடன் நாம்<noinclude></noinclude> hvbcktszt5hphgir09xl2m75v45y853 1944486 1944484 2026-06-10T07:13:03Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|178||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> ஜரிகைக் குல்லாய்களைக் காந்திக் குல்லாய் தோற்கடித்தது. இதனைக் கண்டதும் ஏழையர் வெற்றித் திருநடனமிட்டனர்; வேதனை தீர்ந்தது என்று எண்ணினர், வேளை வந்தது புதுவாழ்வுபெற என்று நம்பினர். எமது தோழர்கள், ஏழை பங்காளர்கள், காந்தி சீடர்கள், தியாக சீலர்கள், இந்தக் காங்கிரசார்! இவருக்குத்தான் எமது 'வாக்கு' - இதயம்!! இவரை எதிர்த்திட, எவர்க்கே இயலும்? அரண்மனையின் அலங்காரப் பொம்மைகள், மாளிகை மதோன்மத்தர்கள், இராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கோலாகல எனும் விருது படைத்தோர்கள் என்போரெல்லாம், உருண்டனர் கீழே, தேர்தலில் தோற்று! - என்று எக்காளமிட்டனர். ஏழையர் - திட்டமிட்டனர். தோற்றவர்கள். காங்கிரசில் சேர்ந்துகொண்டனர் - சேர்த்துக் கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் ஈட்டி வைத்திருந்த தியாகம், இந்தச் சீமான்களுக்கு கேடயமாக்கப்பட்டது. தண்டி யாத்திரையின்போது, தரைக்கும் படுக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்துகொண்ட வெறியர்கள்; வெள்ளை நிறம் கண்டாலே வீழ்ந்து கும்பிட்ட அடிமைகள், கதர்த்துணி என்றாலே கோணித்துணி, சாணித்துணி என்று இகழ்ந்து பேசிய அகந்தையினர் அனைவரும், காந்தி கட்சியினராயினர்!! அரண்மனைகளிலே காங்கிரஸ் கொடி பறக்கலாயிற்று நீண்ட காலமாக அந்தக் கொடியைத் தமது குடில்களில் மட்டுமே ஏற்றி வைத்திருந்த ஏழையர் கொடி போட்டுவிட்டோம் பணக்காரர் கோட்டைமீது என்றெண்ணிக் களித்தனர்; கொடி ஏற்றிக்கொண்டோம். இனிக் காந்திபடை, நமது வெற்றிக்குப் பாடுபடும் என்று சீமான்கள் உணர்ந்தனர். குச்சு நாயுடன் குலவும் வெள்ளைக்காரக் கவர்னரின் படத்துக்குத் தங்கமுலாம் பூசப்பட்ட சட்டம் போட்டு, மாடத்தின் கூடத்திலே முன்பு மாட்டி வைத்திருந்த சீமான்கள், அந்தப் படத்தை அப்புறப்படுத்தினர் அண்ணல் காந்தியார் படத்தை அரிஅரன் படத்தருகே தொங்கவிட்டுத் தொழுதிடத்தக்க தேவ தேவன் இவரே என்றனர். இதுகண்டு, காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துப்போயினர். இவ்வளவு இலகுவாக இவர்களை வலையில் போட்டுக் கொள்ள வழி இருக்கும்போது, வறட்டு ஜம்பத்துடன் நாம்<noinclude></noinclude> 2446vfhxoqkon95k4ob4mfnnx60qsk6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/238 250 645497 1944552 1943748 2026-06-10T09:02:33Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||237}}{{Rule}}</noinclude>என்று பேசிக்கொண்டே வந்தாராம்; காங்கிரஸ் தலைவர், அடடா, பத்து வருஷங்களாகிறது திட்டம் அமுலாகி, இதுவரை நாம் யாரும் இவ்வளவு சுவையாக, சூடாகத் திட்டம் பற்றிப் பேசினதில்லை; பார் இந்த தி. மு. க. பேர்வழி, எப்படிப் பேசுகிறான் என்று, பக்கத்தில் இருந்தவரிடம் மெல்லிய குரலில் கூறினாராம். இதற்குள் பேச்சாளர், மளமளவென்று கொட்டிய படி இருக்கிறார். {{left_margin|3em|<poem> அணைகள், மலைமலையாக! தேக்கங்கள், பிரம்மாண்டமாக! தொழிற்சாலைகள், மிகப்பெரிய அளவில்! ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிடுகிறார்கள். பக்ரா - நங்கல்! தாமோதர் பள்ளத்தாக்கு! சிந்திரி - சித்தரன்ஜன்! பிலாய் ரூர்கேலா! துர்காபூர் - பொகாரா!</poem>}} என்று பேசிக்கொண்டே போனார். காங்கிரஸ் தலைவருக்கு மிகமிக மகிழ்ச்சி. {{left_margin|3em|<poem> எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்; விஞ்ஞானக் கூடங்கள்; மாடமாளிகைகள்! கூடகோபுரங்கள்!</poem>}} என்று சித்தரித்தார். முன்னாள், தி. மு. க; பூரித்துப் போனார். அவரைக் குத்தகைக்கு எடுத்த காங்கிரஸ் தலைவர், பேசிக் கொண்டே, அந்தப் பேச்சாளர், {{left_margin|3em|<poem> இத்தனை பெரிய வளர்ச்சி இவ்வளவு சீரான வளர்ச்சி, இத்துணை செல்வம், எங்கே? எல்லாம் வடக்கே! </poem>}}<noinclude></noinclude> hr5mtngzh1a1ai792kkk45n2yfk6dyi 1944630 1944552 2026-06-10T10:56:47Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||237}}{{Rule}}</noinclude>என்று பேசிக்கொண்டே வந்தாராம்; காங்கிரஸ் தலைவர், அடடா, பத்து வருஷங்களாகிறது திட்டம் அமுலாகி, இதுவரை நாம் யாரும் இவ்வளவு சுவையாக, சூடாகத் திட்டம் பற்றிப் பேசினதில்லை; பார் இந்த தி. மு. க. பேர்வழி, எப்படிப் பேசுகிறான் என்று, பக்கத்தில் இருந்தவரிடம் மெல்லிய குரலில் கூறினாராம். இதற்குள் பேச்சாளர், மளமளவென்று கொட்டிய படி இருக்கிறார். {{left_margin|3em|<poem> அணைகள், மலைமலையாக! தேக்கங்கள், பிரம்மாண்டமாக! தொழிற்சாலைகள், மிகப்பெரிய அளவில்! ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிடுகிறார்கள். பக்ரா - நங்கல்! தாமோதர் பள்ளத்தாக்கு! சிந்திரி - சித்தரன்ஜன்! பிலாய் ரூர்கேலா! துர்காபூர் - பொகாரா!</poem>}} என்று பேசிக்கொண்டே போனார். காங்கிரஸ் தலைவருக்கு மிகமிக மகிழ்ச்சி. {{left_margin|3em|<poem> எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள்; விஞ்ஞானக் கூடங்கள்; மாடமாளிகைகள்! கூடகோபுரங்கள்!</poem>}} என்று சித்தரித்தார். முன்னாள், தி. மு. க; பூரித்துப் போனார். அவரைக் குத்தகைக்கு எடுத்த காங்கிரஸ் தலைவர், பேசிக் கொண்டே, அந்தப் பேச்சாளர், {{left_margin|3em|<poem> இத்தனை பெரிய வளர்ச்சி இவ்வளவு சீரான வளர்ச்சி, இத்துணை செல்வம், எங்கே? எல்லாம் வடக்கே! </poem>}}<noinclude></noinclude> 29suz5f65zhoh0a0sl6eq3qzglwxecz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/239 250 645498 1944562 1943749 2026-06-10T09:23:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|238||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்றாரே! ஒரே கைதட்டல்! ஆரவாரம்! காங்கிரஸ் தலைவர் முகம் வெளுத்துவிட்டது. காங்கிரஸ் அபேட்சகரோ கைபிசைந்துகொண்டாராம். போச்சு! 500 ரூபா பாழாப் பேச்சு! பாவி, வடக்கு - தெற்கு பேசுகிறானே என்று. கூட்டத் தலைவர், சட்டையைப் பிடித்து இழுத்து, பேச்சாளருக்கு 'சிமிட்டா' கொடுக்க, அவர் பாவம், பயந்துபோய், ::பழைய வாசனை ::விட்டகுறை தொட்டகுறை என்று கெஞ்சும் குரலில் சமாதானம் சொன்னாராம். தம்பி! இரவல் சரக்கு!! வேறு எப்படி இருக்க முடியும்? எது எப்படியிருப்பினும், எவ்வளவு பணம் செலவிட்டாகிலும், பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் காங்கிரசார்!! பொதுமக்கள் விவரம் விளக்கம் இல்லாதவர்களா! அவர்களுக்குப் புரிகிறது காரணம்; புன்னகை செய்கிறார்கள்!! மரம் பழுத்ததும் வட்டமிடும் வௌவாலை அவர்கள் பார்த்ததில்லையா - இன்று காங்கிரசிலே புகுந்துள்ளவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அது போதாதா, தனியாக ஒரு ஏடா படிக்கவேண்டும். மார்கழி மாதம் குடுகுடுப்பைக்காரன், நல்ல காலம் பிறக்குது என்று பாடுவதை அவர்கள் கேட்கவில்லையா - தேர்தலின்போது 'வரம்' கொடுக்கும் காங்கிரசாரின் போக்கைப் புரிந்துகொள்ள, அவர்கள் புதிதாகப் பள்ளிக்கூடமா போக வேண்டும்! ::பாடுபட வந்திருக்கிறார் ::தொண்டாற்ற வருகிறார் ::ஊழியம் புரிய வருகிறார் என்று காங்கிரஸ் அபேட்சகர்பற்றிப் பேச்சாளர் பேசும்போது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்கிறாய், ::இவரா தொண்டு புரிபவர்? ::எப்போது வந்ததாம் அந்த எண்ணம்?<noinclude></noinclude> k3704ow803hg26wk0bqlurk1kr7zisb 1944633 1944562 2026-06-10T10:59:34Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|238||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்றாரே! ஒரே கைதட்டல்! ஆரவாரம்! காங்கிரஸ் தலைவர் முகம் வெளுத்துவிட்டது. காங்கிரஸ் அபேட்சகரோ கைபிசைந்துகொண்டாராம். போச்சு! 500 ரூபா பாழாப் பேச்சு! பாவி, வடக்கு - தெற்கு பேசுகிறானே என்று. கூட்டத் தலைவர், சட்டையைப் பிடித்து இழுத்து, பேச்சாளருக்கு 'சிமிட்டா' கொடுக்க, அவர் பாவம், பயந்துபோய், ::பழைய வாசனை ::விட்டகுறை தொட்டகுறை என்று கெஞ்சும் குரலில் சமாதானம் சொன்னாராம். தம்பி! இரவல் சரக்கு!! வேறு எப்படி இருக்க முடியும்? எது எப்படியிருப்பினும், எவ்வளவு பணம் செலவிட்டாகிலும், பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் காங்கிரசார்!! பொதுமக்கள் விவரம் விளக்கம் இல்லாதவர்களா! அவர்களுக்குப் புரிகிறது காரணம்; புன்னகை செய்கிறார்கள்!! மரம் பழுத்ததும் வட்டமிடும் வௌவாலை அவர்கள் பார்த்ததில்லையா - இன்று காங்கிரசிலே புகுந்துள்ளவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அது போதாதா, தனியாக ஒரு ஏடா படிக்கவேண்டும். மார்கழி மாதம் குடுகுடுப்பைக்காரன், நல்ல காலம் பிறக்குது என்று பாடுவதை அவர்கள் கேட்கவில்லையா - தேர்தலின்போது 'வரம்' கொடுக்கும் காங்கிரசாரின் போக்கைப் புரிந்துகொள்ள, அவர்கள் புதிதாகப் பள்ளிக்கூடமா போக வேண்டும்! ::பாடுபட வந்திருக்கிறார் ::தொண்டாற்ற வருகிறார் ::ஊழியம் புரிய வருகிறார் என்று காங்கிரஸ் அபேட்சகர்பற்றிப் பேச்சாளர் பேசும்போது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்கிறாய், ::இவரா தொண்டு புரிபவர்? ::எப்போது வந்ததாம் அந்த எண்ணம்?<noinclude></noinclude> 59m0u5xhchozdd6syb4929tegcq1j70 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/240 250 645499 1944561 1943751 2026-06-10T09:22:23Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||239}}{{Rule}}</noinclude>{{left_margin|4em|<poem>ஏழையின் தலையைத் தடவுவார்! எதுவும் தனக்கு என்று தேடுவார்! ஏமாளியிடம் தட்டிப்பறித்து ஏப்பம் விடுவார்! இளைத்தவன் சொத்தை ஏலம் எடுப்பார்! குடிசைகள் இருந்தால் பிரித்துப் போடுவார்! கோயிலாக இருந்தாலும் கொண்டுவா, கடப்பாரை என்பார்! இவரா, பொதுத்தொண்டு ஆற்றுபவர்? கட்டிய சத்திரம் எத்தனை? வெட்டிய திருக்குளம் உண்டா? பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாரா? பசித்தவனுக்குச் சோறு போட்டாரா? பசுவுக்குக்கூட அகத்திக்கீரை தந்திருக்கமாட்டார். இவர் பொதுமக்களுக்கு ஊழியம் செய்யப்போகிறாராம், ஊழியம்!!</poem>}} என்றுதான் எண்ணிக்கொள்கிறார்கள். உள்ளூரச் சிரிப்பு அவர்களுக்கு. மகாத்மாவுக்கு ஜே! என்றும், நேருவுக்கு ஜே! என்றும், இந்தத் தேர்தல் காங்கிரஸ்காரர்கள், திடீர் காங்கிரஸ் காரர்கள் கூவுவது, ஏறக்குறையப் புரட்டாசி மாதத்திலே போடப்படும் 'கோவிந்தா' போல, என்பது பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை. அவர்களும் ஒரு காரியமாகத்தான், இந்த 'கூத்தை'ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரமாகப் பார்த்தா, சஞ்சீவி ரெட்டியாரும், துணை அமைச்சர் இலட்சுமி மேனன் அவர்களும், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததாலே காங்கிரசின் கண்ணியமே பாழாகிவிட்டது. என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்கவேண்டும். பொதுமக்கள் இதையும் அறிந்திருக்கிறார்கள்; இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை, குறிப்பாகக் காங்கிரஸ் அபேட்சகர் களையும் பார்க்கிறார்கள்; அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது.<noinclude></noinclude> 8rw0kxfrnqqf094c0fugpvp58rlbsp9 1944634 1944561 2026-06-10T11:01:04Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||239}}{{Rule}}</noinclude>{{left_margin|4em|<poem>ஏழையின் தலையைத் தடவுவார்! எதுவும் தனக்கு என்று தேடுவார்! ஏமாளியிடம் தட்டிப்பறித்து ஏப்பம் விடுவார்! இளைத்தவன் சொத்தை ஏலம் எடுப்பார்! குடிசைகள் இருந்தால் பிரித்துப் போடுவார்! கோயிலாக இருந்தாலும் கொண்டுவா, கடப்பாரை என்பார்! இவரா, பொதுத்தொண்டு ஆற்றுபவர்? கட்டிய சத்திரம் எத்தனை? வெட்டிய திருக்குளம் உண்டா? பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாரா? பசித்தவனுக்குச் சோறு போட்டாரா? பசுவுக்குக்கூட அகத்திக்கீரை தந்திருக்கமாட்டார். இவர் பொதுமக்களுக்கு ஊழியம் செய்யப்போகிறாராம், ஊழியம்!!</poem>}} என்றுதான் எண்ணிக்கொள்கிறார்கள். உள்ளூரச் சிரிப்பு அவர்களுக்கு. மகாத்மாவுக்கு ஜே! என்றும், நேருவுக்கு ஜே! என்றும், இந்தத் தேர்தல் காங்கிரஸ்காரர்கள், திடீர் காங்கிரஸ் காரர்கள் கூவுவது, ஏறக்குறையப் புரட்டாசி மாதத்திலே போடப்படும் 'கோவிந்தா' போல, என்பது பொதுமக்களுக்குத் தெரியாமலில்லை. அவர்களும் ஒரு காரியமாகத்தான், இந்த 'கூத்தை'ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரமாகப் பார்த்தா, சஞ்சீவி ரெட்டியாரும், துணை அமைச்சர் இலட்சுமி மேனன் அவர்களும், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததாலே காங்கிரசின் கண்ணியமே பாழாகிவிட்டது. என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்கவேண்டும். பொதுமக்கள் இதையும் அறிந்திருக்கிறார்கள்; இன்றுள்ள காங்கிரஸ்காரர்களை, குறிப்பாகக் காங்கிரஸ் அபேட்சகர் களையும் பார்க்கிறார்கள்; அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது.<noinclude></noinclude> 1dnwsbzshg6536izuxcj31mgoctv1y6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/241 250 645500 1944560 1943752 2026-06-10T09:20:48Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|240||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மற்ற மற்றக் கட்சிகள் யாவும் அந்தந்தக் கட்சியின் சார்பிலே அபேட்சகர்களை நிற்கவைக்கும்போது, அந்தக் கட்சியின் {{left_margin|4em|கொள்கையில் உறுதி படைத்தவர், கொள்கைக்காகப் பாடுபட்டவர், கொள்கையைக் கடைப்பிடித்தபோது ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர், இந்தக் கொள்கைக்காரர் என்று பொது மக்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமாகி உள்ளவர் }} இப்படிப்பட்டவர்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்றுதானே, :யாரிடம் பணம் இருக்கிறது? :யாரிடம் ஜாதித் செல்வாக்கு இருக்கிறது? :யாரிடம் அடி ஆட்கள் அதிகம்? என்று மட்டும் கவனித்து, கொள்கை அறிந்தவரா, கொள்கை வழி நின்றவரா என்று துளியும் கவனிக்காமல், இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் புரியவில்லையா? புரிகிறது! இந்த நிலைமையால் காங்கிரசின் புனிதத் தன்மையும் பொலிவும் வலிவும் பாழாகிக்கொண்டு வருகிறது என்பதும் விளக்கமாகிறது. பாலிலே தண்ணீர் கலக்கக் கலக்க, பாலின் தன்மை கெட்டுவிடுகிறது; ஆனால் பார்ப்பதற்கு பால்போல வெளுப் பாகத்தான் தெரிகிறது. அடுப்பின்மீது ஏற்றிக் காய்ச்சும் போதல்லவா அதன் இலட்சணம் தெரியும்! தண்ணீர் ஆவியாகிப் போகும், பால்மட்டும்தான் மிச்சமாகி நிற்கும். அதேதான், காங்கிரசுக்குக் கதியும். தேர்தலில் சரிவு ஏற்பட்டால், தீர்ந்தது, ஒட்டிக்கொண்ட ஒய்யார புருஷர்கள், கண் சிமிட்டிய கனதனவான்கள், சீவிச் சிங்காரித்த சீமான்கள், ஓடோடிப் போய்விடுவார்கள்? காங்கிரசிடம் பற்றுக்கொண்ட, பணிபுரிந்த தொண்டர்கள், தூயவர்கள் மட்டும்தான் மிச்சமாக நிற்பார்கள். காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டியார், மற்றும் பலர், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதுபற்றிச் சோகக் குரலிற் பேசுவது கேட்டுப் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை!<noinclude></noinclude> 5hrep7tmgslenwsphlhe6uh5ijbtb7e 1944636 1944560 2026-06-10T11:02:22Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|240||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>மற்ற மற்றக் கட்சிகள் யாவும் அந்தந்தக் கட்சியின் சார்பிலே அபேட்சகர்களை நிற்கவைக்கும்போது, அந்தக் கட்சியின் {{left_margin|4em|கொள்கையில் உறுதி படைத்தவர், கொள்கைக்காகப் பாடுபட்டவர், கொள்கையைக் கடைப்பிடித்தபோது ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொண்டவர், இந்தக் கொள்கைக்காரர் என்று பொது மக்களுக்கு நீண்டகாலமாக அறிமுகமாகி உள்ளவர் }} இப்படிப்பட்டவர்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒன்றுதானே, :யாரிடம் பணம் இருக்கிறது? :யாரிடம் ஜாதித் செல்வாக்கு இருக்கிறது? :யாரிடம் அடி ஆட்கள் அதிகம்? என்று மட்டும் கவனித்து, கொள்கை அறிந்தவரா, கொள்கை வழி நின்றவரா என்று துளியும் கவனிக்காமல், இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் புரியவில்லையா? புரிகிறது! இந்த நிலைமையால் காங்கிரசின் புனிதத் தன்மையும் பொலிவும் வலிவும் பாழாகிக்கொண்டு வருகிறது என்பதும் விளக்கமாகிறது. பாலிலே தண்ணீர் கலக்கக் கலக்க, பாலின் தன்மை கெட்டுவிடுகிறது; ஆனால் பார்ப்பதற்கு பால்போல வெளுப் பாகத்தான் தெரிகிறது. அடுப்பின்மீது ஏற்றிக் காய்ச்சும் போதல்லவா அதன் இலட்சணம் தெரியும்! தண்ணீர் ஆவியாகிப் போகும், பால்மட்டும்தான் மிச்சமாகி நிற்கும். அதேதான், காங்கிரசுக்குக் கதியும். தேர்தலில் சரிவு ஏற்பட்டால், தீர்ந்தது, ஒட்டிக்கொண்ட ஒய்யார புருஷர்கள், கண் சிமிட்டிய கனதனவான்கள், சீவிச் சிங்காரித்த சீமான்கள், ஓடோடிப் போய்விடுவார்கள்? காங்கிரசிடம் பற்றுக்கொண்ட, பணிபுரிந்த தொண்டர்கள், தூயவர்கள் மட்டும்தான் மிச்சமாக நிற்பார்கள். காங்கிரஸ் தலைவர் சஞ்சீவ ரெட்டியார், மற்றும் பலர், கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டதுபற்றிச் சோகக் குரலிற் பேசுவது கேட்டுப் பொதுமக்கள் சிந்திக்காமல் இல்லை!<noinclude></noinclude> efrry56b5oc0diy2meei6c1xua8kjw3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/242 250 645501 1944559 1943754 2026-06-10T09:19:15Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||241}}{{Rule}}</noinclude> கண்டகண்ட பேர்வழிகள், கபடநோக்குடன் காங்கிரசிலே நுழைந்தபோது, எப்படி, பழைய காங்கிரசார், தலைவர்கள், உண்மைத் தொண்டர்கள் இடம் கொடுத்தார்கள்! தானாக முளைத்துவிட்ட களையை உழவன் பறித்தெடுத்துவிட்டல்லவா, பயிர் தழைக்கச் செய்கிறான்; இவர்கள் களைகளைத் தாமாகக் கொண்டுவந்து பயிர் நடுவே நடுகிறார்களே; அதுமட்டுமல்ல, புல்பூண்டு, நச்சுக்கொடி இவைகளை நடுவதற்காகப் பயிரைக்கூட அழிக்கிறார்களே, இது என்ன கெடுமதி - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். செலவு ஏராளமாகவும் தாராளமாகவும் செய்யக்கூடிய சீமான்களைத் தேர்தலுக்காகச் சேர்த்துக்கொண்டு, பிறகு ஊர்மெச்ச, உயர்ந்த தத்துவம் பேசத்தொடங்கி, கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால், காங்கிரசே கெட்டுவிட்டது என்று உபதேசம் செய்கிறார்களே, தம்பி! யாருக்கு இந்த உபதேசம்! ஊரார் இதைத்தான் கேட்கிறார்கள். வேலப்பனும் வீரப்பனும் இதுபற்றிப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளேன் - எவ்வளவோ பேர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எப்படி இருக்கும் அவர்கள் பேச்சு என்பதைக் கவனித்திருக்கிறாயா! சிறிது கவிதை நடையும் சேர்த்துப்பாரேன். வேலப்பன்: {{left_margin|3em|<poem>ஆளுங் கட்சியான பிறகு ஐயோ காங்கிரஸ் கட்சியிலே கண்டவர் நுழைந்து கொண்டனரே! கதருடை போட்டுக் கபடமுடன் மாண்பும் மதிப்பும் மடிகிறதே மகாத்மா கண்ட காங்கிரசில். சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார் சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்!</poem>}} வீரப்பன்: {{left_margin|3em|<poem>சஞ்சலப் படுவதில், புண்யமில்லை வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம் நடப்பது முற்றிலும் வேறப்பா! நாடுகிறார்! ஓடித் தேடுகிறார்</poem>}}<noinclude></noinclude> 2ic0d9ybn7d4j7shhygp99j185ldt99 1944638 1944559 2026-06-10T11:03:47Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||241}}{{Rule}}</noinclude> கண்டகண்ட பேர்வழிகள், கபடநோக்குடன் காங்கிரசிலே நுழைந்தபோது, எப்படி, பழைய காங்கிரசார், தலைவர்கள், உண்மைத் தொண்டர்கள் இடம் கொடுத்தார்கள்! தானாக முளைத்துவிட்ட களையை உழவன் பறித்தெடுத்துவிட்டல்லவா, பயிர் தழைக்கச் செய்கிறான்; இவர்கள் களைகளைத் தாமாகக் கொண்டுவந்து பயிர் நடுவே நடுகிறார்களே; அதுமட்டுமல்ல, புல்பூண்டு, நச்சுக்கொடி இவைகளை நடுவதற்காகப் பயிரைக்கூட அழிக்கிறார்களே, இது என்ன கெடுமதி - என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். செலவு ஏராளமாகவும் தாராளமாகவும் செய்யக்கூடிய சீமான்களைத் தேர்தலுக்காகச் சேர்த்துக்கொண்டு, பிறகு ஊர்மெச்ச, உயர்ந்த தத்துவம் பேசத்தொடங்கி, கண்டவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால், காங்கிரசே கெட்டுவிட்டது என்று உபதேசம் செய்கிறார்களே, தம்பி! யாருக்கு இந்த உபதேசம்! ஊரார் இதைத்தான் கேட்கிறார்கள். வேலப்பனும் வீரப்பனும் இதுபற்றிப் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளேன் - எவ்வளவோ பேர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எப்படி இருக்கும் அவர்கள் பேச்சு என்பதைக் கவனித்திருக்கிறாயா! சிறிது கவிதை நடையும் சேர்த்துப்பாரேன். வேலப்பன்: {{left_margin|3em|<poem>ஆளுங் கட்சியான பிறகு ஐயோ காங்கிரஸ் கட்சியிலே கண்டவர் நுழைந்து கொண்டனரே! கதருடை போட்டுக் கபடமுடன் மாண்பும் மதிப்பும் மடிகிறதே மகாத்மா கண்ட காங்கிரசில். சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார் சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்!</poem>}} வீரப்பன்: {{left_margin|3em|<poem>சஞ்சலப் படுவதில், புண்யமில்லை வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம் நடப்பது முற்றிலும் வேறப்பா! நாடுகிறார்! ஓடித் தேடுகிறார்</poem>}}<noinclude></noinclude> qgyg74m8pxt3p46y24dn2gdsolyjukj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/243 250 645502 1944558 1943755 2026-06-10T09:18:22Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|242||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பாடு பாடுபோரை அல்ல! அல்ல! ஊரை அடித்து உலையில் போடும் உத்தமரை! எத்தர்களை!! தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய தேடுகிறார், பணமூட்டைகளை! வலையை வீசுது காங்கிரஸ் வஞ்சகர், சூதர், யாவருக்கும்.</poem>}} வேலப்பன்: {{left_margin|3em|<poem>ஆமாம், அதுவும் உண்மைதான்! ஆகாதென்பது உண்மையென்றால் அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா? சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள் கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக் கதறிவிடுவதால் பயனில்லை.</poem>}} வீரப்பன்: {{left_margin|3em|<poem>காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார். காங்கிரசுக்கா, 'ஓட்டு' இனி? கபடம், சுயநலம், முடிசூடவா? கேட்டிடுவோம். வா, நாட்டினரை.</poem>}} வேலப்பன்: {{left_margin|3em|<poem>கழகம் அதைத்தான் சொல்கிறது அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும். கபடம் சுயநலம் உடைபட நாம் போட்டிடுவோம் நம் ஓட்டுகளை. <b>'உதய சூரியன்</b>' சின்னம் அதற்கே!</poem>}} தம்பி! இதுபோலப் பொதுமக்கள் முறையாகப் பேச, சுவையாகப் பாடிட முடியாது; எண்ணுகிறார்கள் நிச்சயமாக. அவர்தம் எண்ணத்திற்கு வண்ணமளித்து, நாட்டிலே பாட்டு மொழியில் எடுத்துரைக்கும் பொறுப்பு உன்னுடையதல்லவா? உனக்கன்றி வேறு எவருக்கு உண்டு அதற்கான திறமை! பதினான்கு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு, முன்னாள் டில்லி நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்: {{left_margin|3em|<poem>100க்கு 95 மக்கள் பஞ்ச நிலையில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.</poem>}}<noinclude></noinclude> 6pzpttd2db4tujryqyzbw76a0log2v4 1944641 1944558 2026-06-10T11:04:47Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|242||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>பாடு பாடுபோரை அல்ல! அல்ல! ஊரை அடித்து உலையில் போடும் உத்தமரை! எத்தர்களை!! தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய தேடுகிறார், பணமூட்டைகளை! வலையை வீசுது காங்கிரஸ் வஞ்சகர், சூதர், யாவருக்கும்.</poem>}} வேலப்பன்: {{left_margin|3em|<poem>ஆமாம், அதுவும் உண்மைதான்! ஆகாதென்பது உண்மையென்றால் அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா? சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள் கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக் கதறிவிடுவதால் பயனில்லை.</poem>}} வீரப்பன்: {{left_margin|3em|<poem>காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார். காங்கிரசுக்கா, 'ஓட்டு' இனி? கபடம், சுயநலம், முடிசூடவா? கேட்டிடுவோம். வா, நாட்டினரை.</poem>}} வேலப்பன்: {{left_margin|3em|<poem>கழகம் அதைத்தான் சொல்கிறது அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும். கபடம் சுயநலம் உடைபட நாம் போட்டிடுவோம் நம் ஓட்டுகளை. <b>'உதய சூரியன்</b>' சின்னம் அதற்கே!</poem>}} தம்பி! இதுபோலப் பொதுமக்கள் முறையாகப் பேச, சுவையாகப் பாடிட முடியாது; எண்ணுகிறார்கள் நிச்சயமாக. அவர்தம் எண்ணத்திற்கு வண்ணமளித்து, நாட்டிலே பாட்டு மொழியில் எடுத்துரைக்கும் பொறுப்பு உன்னுடையதல்லவா? உனக்கன்றி வேறு எவருக்கு உண்டு அதற்கான திறமை! பதினான்கு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகு, முன்னாள் டில்லி நிதி அமைச்சர், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்: {{left_margin|3em|<poem>100க்கு 95 மக்கள் பஞ்ச நிலையில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.</poem>}}<noinclude></noinclude> 7grdafqcp8zgrrr6pj6f6o6f2t3pv3b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/244 250 645503 1944556 1943757 2026-06-10T09:16:05Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||243}}{{Rule}}</noinclude>என்று. இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டு, 'ஓட்டும்' கேட்கிறார்களே, ஓட்டப்படவேண்டியவர்கள். இந்த அரசியல் அக்ரமத்தை உலகில் வேறு எங்கு காணமுடியும்! ஏழை மக்களைப் பார்த்துக் காங்கிரஸ் கட்சி 'ஓட்டு' போடும்படி கேட்கும்போது, அவர்கள் மனம் என்ன வேதனை அடைகிறது என்கிறாய். {{left_margin|5em|<poem><b>ஓட்டுக்கேட்குது காங்கிரசு :::என்னை ஓட்டாண்டியாக்கிவிட்டு</b></poem>}} என்றல்லவா ஏழை எண்ணுகிறான்; அவனால் எண்ணத்தான் முடியும்; மனதில் உள்ளதை எடுத்துக்கூற முடியுமா? அந்தப் பணி உன்னுடையது! அந்தத் திறமை உன்னிடம் நிரம்ப உண்டு! {{left_margin|3em|<poem><b>ஐயா! சோறு!</b> :என்று ::ஏழை :::கேட்கிறான் ::::காங்கிரசார் :::::பதில், என்ன ::::::தருகிறார்கள் <b>இதோ! நேரு பாரு!</b></poem>}} இவ்வளவுதானே! பார்க்கிறான் நேருவை! கேட்டு மகிழ்கிறான் அவர் ஆற்றிய தொண்டுகளை! ஆனால் அந்த நேரு நடத்தும் காங்கிரசில் இன்று சேர்ந்து ஓட்டுக் கேட்கும் உத்தமர்களின் இலட்சணமும் தெரிகிறதே - வயிறு அல்லவா அவனுக்குப்பற்றி எரிகிறது!! என் கணவனை வெட்டிய கொடுவாள் இது - இதற்கு வெள்ளிக்கிழமைதோறும் நான் பூஜை செய்வேன் என்று எந்த மாதாவது கூறத் துணிவாளா? காங்கிரஸ் பேச்சாளர்கள் துணிந்து கூறுகிறார்களே, இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று, வாய்மை, தூய்மை, அறிவுடைமை, அன்புடைமை, அறம், நெறி, தன்னலமற்ற தன்மை, தொண்டு உள்ளம் எனும் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டவர்களைப் பிடித்திழுத்துக்கொண்டு வந்து. காந்தீய போதகர் சங்கத்தைக் <b>கோட்சே</b> துவக்குவது போலல்லவா இருக்கிறது. காங்கிரசின் கொள்கைளைக்<noinclude></noinclude> 5ua5jxf77rvjmsoe6v9yqeoot59ky92 1944643 1944556 2026-06-10T11:05:31Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||243}}{{Rule}}</noinclude>என்று. இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டு, 'ஓட்டும்' கேட்கிறார்களே, ஓட்டப்படவேண்டியவர்கள். இந்த அரசியல் அக்ரமத்தை உலகில் வேறு எங்கு காணமுடியும்! ஏழை மக்களைப் பார்த்துக் காங்கிரஸ் கட்சி 'ஓட்டு' போடும்படி கேட்கும்போது, அவர்கள் மனம் என்ன வேதனை அடைகிறது என்கிறாய். {{left_margin|5em|<poem><b>ஓட்டுக்கேட்குது காங்கிரசு :::என்னை ஓட்டாண்டியாக்கிவிட்டு</b></poem>}} என்றல்லவா ஏழை எண்ணுகிறான்; அவனால் எண்ணத்தான் முடியும்; மனதில் உள்ளதை எடுத்துக்கூற முடியுமா? அந்தப் பணி உன்னுடையது! அந்தத் திறமை உன்னிடம் நிரம்ப உண்டு! {{left_margin|3em|<poem><b>ஐயா! சோறு!</b> :என்று ::ஏழை :::கேட்கிறான் ::::காங்கிரசார் :::::பதில், என்ன ::::::தருகிறார்கள் <b>இதோ! நேரு பாரு!</b></poem>}} இவ்வளவுதானே! பார்க்கிறான் நேருவை! கேட்டு மகிழ்கிறான் அவர் ஆற்றிய தொண்டுகளை! ஆனால் அந்த நேரு நடத்தும் காங்கிரசில் இன்று சேர்ந்து ஓட்டுக் கேட்கும் உத்தமர்களின் இலட்சணமும் தெரிகிறதே - வயிறு அல்லவா அவனுக்குப்பற்றி எரிகிறது!! என் கணவனை வெட்டிய கொடுவாள் இது - இதற்கு வெள்ளிக்கிழமைதோறும் நான் பூஜை செய்வேன் என்று எந்த மாதாவது கூறத் துணிவாளா? காங்கிரஸ் பேச்சாளர்கள் துணிந்து கூறுகிறார்களே, இவர்தான் காங்கிரஸ் அபேட்சகர் என்று, வாய்மை, தூய்மை, அறிவுடைமை, அன்புடைமை, அறம், நெறி, தன்னலமற்ற தன்மை, தொண்டு உள்ளம் எனும் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டவர்களைப் பிடித்திழுத்துக்கொண்டு வந்து. காந்தீய போதகர் சங்கத்தைக் <b>கோட்சே</b> துவக்குவது போலல்லவா இருக்கிறது. காங்கிரசின் கொள்கைளைக்<noinclude></noinclude> 36abhgr7s0wr7jgb1axy8a1wy63woo4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/279 250 645602 1944510 1943875 2026-06-10T07:45:35Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|278||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி. {| |+ {{c|<b>சுங்க வரி</b>}} |- | 1946 - 47|| - || 89.22 கோடி |- | 1948 - 49|| - || 126.16 கோடி |- | 1950 - 51|| - || 157.15 கோடி |- | 1951 - 53|| - || 231.69 கோடி |} இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப் படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் "பெரும்புள்ளிகள்' இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால். {| |+ {{c|<b>பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு</b>}} |- | 1957 - 58 || - || 279.65 கோடி |- | 1958 - 59 || - || 278.81 கோடி |- | 1959 - 60 || - || 280.18 கோடி |- | 1960 - 61 || - || 310.00 கோடி |} இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும்<noinclude></noinclude> 1qyrezfn2z2fi8jc0zv4x9kk329peft 1944595 1944510 2026-06-10T10:33:55Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|278||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி. {| |+ {{c|<b>சுங்க வரி</b>}} |- | 1946 - 47|| - || 89.22 கோடி |- | 1948 - 49|| - || 126.16 கோடி |- | 1950 - 51|| - || 157.15 கோடி |- | 1951 - 53|| - || 231.69 கோடி |} இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப்படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் "பெரும்புள்ளிகள்' இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால். {| |+ {{c|<b>பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு</b>}} |- | 1957 - 58 || - || 279.65 கோடி |- | 1958 - 59 || - || 278.81 கோடி |- | 1959 - 60 || - || 280.18 கோடி |- | 1960 - 61 || - || 310.00 கோடி |} இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும்<noinclude></noinclude> c9uepxykie5oj1vrlvd6bcpbh0v0lmf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/280 250 645604 1944550 1943898 2026-06-10T08:59:16Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||279}}{{Rule}}</noinclude>இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன? இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை) <b>4971 கோடி</b> என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம் கூறுகின்றார் 1960-61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, <b>143 கோடி</b> என்பதாக! இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று - இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் - சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது. {{left_margin|2em|ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி.}} என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது. என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்! திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி<noinclude></noinclude> i5ai0y0jacrhr2rxvmhuwcx2q8314k7 1944597 1944550 2026-06-10T10:34:52Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|தொகுதி நான்கு||279}}{{Rule}}</noinclude>இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன? இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை) <b>4971 கோடி</b> என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம் கூறுகின்றார் 1960-61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, <b>143 கோடி</b> என்பதாக! இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று - இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் - சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது. {{left_margin|2em|ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி.}} என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது. என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்! திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி<noinclude></noinclude> 0txd7u3lwejb7k5ahvc7jnbns82a79d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/281 250 645605 1944048 1943944 2026-06-09T12:10:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|280||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நடத்துகிறார் ஆங்கிலர் என்றுரைத்தோம். அவர் ஆட்சி அகற்றி விட்டோம், ஆளத் தொடங்கி ஆண்டு பதினைந்தாகிறது. இன்று, முதலாளிகள் முகாமில், கேட்பதென்ன குரல்? இன்று அவர் கோட்டை இடித்திட்டோம் எனக் காட்ட முன்வருவாரா? எங்ஙனம் இது இயலும்? கணக்குக் கேளீர். வெள்ளையராட்சி இங்கு இருந்தபோது இலாபம் பெற்றிட முதலாளிகள் தொழில் நடத்த, மூலதனம் போட்டிருந்தார்; தொகை அன்று 700 கோடி எனக் கணக்குண்டு. இன்று முதலாளிகளின் முகாம், அழித்துயாம் ஏழையரை ஏற்றம் பெறச் செய்ய வந்தோம் என முழக்க மெழுப்பி அரசாள்கின்றார், காங்கிரசார். வெள்ளையர் நாட்களிலே முதலாளி மூலதனம் 700 கோடி எனில், இந்தப் பதினைந்து ஆண்டுகளில், இது எந்த அளவு குறைந்துளது? கணக்குக் காட்டுவரா காங்கிரசார்! காட்ட மாட்டார். அவர் காட்டும் கணக்கெல்லாம் உரக்கூடை, பொலிகாளை! இன்று இவர் ஆட்சியிலே முதலாளிமார்கள் தொழில் நடத்தப் போட்டுள்ள மூலதனம் 1900 கோடி ரூபாயாகும். வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட இன்று முதலாளித்துவ முறை ஏறக்குறைய மும்முடங்கு வளர்ந்துளது; கொழுத்துளது. இதற்கோ திட்டம்? ஏழைகளைக் காப்பதற்கே எமது திட்டம் என்றனரே! நிறைவேற்றிக் காட்டினரா? இன்னமும் கேள், தம்பி! இலாபம் தன்னைக் காண முதலாளிகள் நடாத்தும் தொழில்களுக்குச் சலுகைகள், கடன் தொகைகள், சன்மானம் என்பவைகள் இவர்கள் கொடுத்துள்ளார் - கஞ்சிக்குத் தாய் கதற, கைப்பொருளை அதற்குத் தந்திடாமல், ஆவின்பால் வாங்கி அரவுக்கு ஊற்றுவான்போல், வீடில்லை மாடில்லை என்று ஏழை கதறுகையில், இலாபக் கோட்டை கட்டும் முதலாளிகள் மகிழ, காங்கிரஸ் ஆட்சியினர் தந்த தொகை 590 கோடி ரூபாய்! அறம் இதுவா? இலாபம் தரும் தொழிலெல்லாம் ஏன் நடத்தக்கூடாது என்று நாம் அரசு நடத்துவோரைக் கேட்கும்போது என்ன பதில் கூறுகின்றார்? இதற்கெல்லாம் 'முதல்' போடப் பணத்தைச்<noinclude></noinclude> adozjpgxsts66vj3171jp4asqp635ql பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/282 250 645606 1944052 1943973 2026-06-09T12:13:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||281}}{{Rule}}</noinclude>செலவிட்டுவிட்டால், மற்றப் பல செயல்கள் நடவாதே என்கின்றார். இலாபம் தரும் தொழில் நடத்தப் பணம் இல்லை என்று கூறும் இவர், சுரண்டல் நடாத்தும் அந்தச் சுகபோகிக் கூட்டமாம் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய்! அந்தப் பெருந்தொகையை முதலாளிகட்கு அளித்திடாமல், இவரே தொழில் நடத்தப் போட்டிருந்தால், இன்று செல்வர்களைக் கொழுத்திடவைக்கும் இலாபம் மக்களுக்கன்றோ கிடைத்திருக்கும்? நடத்துவது மக்களாட்சி என நவில்கின்றார் நேர்த்தியாக! சமதர்மம் மேற்கொண்டோம் என்று சமர்த்தாகப் பேசுகின்றார். சமதர்மம் காணும் முறையா அறுநூறு கோடி ரூபாயை அள்ளி முதலாளிக்கு அளித்திடுவது? அறிவற்றோம் துணிவற்றோம் என்றா நமை எண்ணுகின்றார்; அப்பட்டமான பொய்யை அவிழ்த்துக் கொட்டுகின்றார். ஒரு சேதி கேள் தம்பி! இந்தியத் துணைக்கண்டமதில் இரு குடும்பங்கள் மட்டும், தொழிலுலகில் பெற்றுள்ள ஆதிக்கத்தின் அளவு கூறுகின்றேன். இரு குடும்பங்களிடம் மட்டும் பெருந் தொழில்கள் 400 சிக்கிக் கிடக்கின்றன. இத்தனை தொழில்கள் இரு குடும்பத்திடம் இருந்தால், இவை தம்மில் கிடைத்திடும் இலாபம் அவ்வளவும் இரு குடும்பத்துக்கன்றோ சென்று அடைபட்டுவிடும்? இரு குடும்பம் மட்டும் இத்தனை தொழில் நடத்தி இலாபம் ஈட்டிக் கொண்டால், செல்வம் பரவுவது ஏது? செழுமையை மக்கள் காண்பது எங்ஙனம்? அதனால்தான் ஐந்தணாவும் நாலணாவும், இரண்டே அணாக்களும் நாளெல்லாம் பாடுபட்டுப் பெறுவோர்கள் பலகோடி உளர்! இத்தனை கோடி மக்கள் இடர்ப்பாட்டில் இருக்கையிலே, மொத்தமாய் வளர்ச்சி பெற்றோம் திட்டம் நிறைவேற்றி என்று செப்புவது சரியாமோ? சிந்திக்கச் சொல், தம்பி! சீற்றம் விட்டொழித்து. இரு குடும்பம் தம்மிடம் இறுக்கிப் பிடித்துள்ள பெருந் தொழில்கள் நடாத்தப் போட்டுள்ள மூலதனம், எவ்வளவு தொகை என்பதனைக் கேட்டிடுவாய் - <b>500 கோடி ரூபாய்!</b><noinclude></noinclude> a0rnc5sjvdxd8ft5didzm97nbw5mie4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/283 250 645607 1944054 1943990 2026-06-09T12:16:36Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|282||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆங்கில ஆட்சியது அக்கிரம ஆட்சியாகும்; கொள்ளை அடிப்போரைக் கொழுக்க வைக்கும் கொடிய ஆட்சியாகும் என இடி முழக்கம் எழுப்பினரே! இவராளத் தொடங்கியபின், இந்நிலையில் முதலாளி, கோட்டை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கின்றான்!! கேட்பார் உண்டா? கேட்பது, நீயும் நானும்! நாட்டவர்க்கும் இது தெரியவேண்டாமோ? தெரிவிப்பாய், தெளிவளிப்பாய். தனிப்பட்டோர் கொழுத்து வாழத் தொழில் நடத்த விட்டுவிடல், ஏன் என்று கேட்டுப்பார் - பதிலா வரும் - செச்சே! பதறிடுவர், பகைத்திடுவர், பழித்திடுவர், பதிலளித்திட முன் வாரார்!! தொழில் நடத்தி இலாபம் குவித்திட, முதலாளிகளுக்கு இடம் கொடுத்திட்டால், அவர் சுரண்டும் தொகையினிலே, காங்கிரஸ் பெருந்தொகை தேர்தல் நிதியாகப் பெற்றிட வழி உளது; அரிமாவின் பின் நடந்தால் சிறுதுண்டு கிடைக்கிறதே, சிறு நரிக்கு, அஃதேபோல்! பிர்லா எனும் பெரிய முதலாளியிடம் உள்ள பல தொழிலிலே ஒன்று, மோட்டார் தொழிலாகும்; இந்துஸ்தான் மோட்டார் என்பது அதன் பெயராகும். இந்த அமைப்பு மட்டும் காங்கிரஸ் தேர்தல் நிதிக்காகக் கொடுத்த தொகை எவ்வளவு? மூர்ச்சையாகிப் போகாதே, தம்பி! பிர்லா தொழிலமைப்புத் தந்த தொகை இருபது இலட்சம்!! இருபது இலட்சம் ரூபாய் நன்கொடையை எளிதாகக் கொடுத்திட, பிர்லாவின் மனம் இடங்கொடுத்தது எதனாலே? காங்கிரஸ் கட்சியது நாடாள்வதாலேதான், தொழில் நடத்திப் பொருள் திரட்டப் பிர்லாவும் பிறரும் வாய்ப்புப் பெறுகின்றார். சுரண்டிக்கொள்ள உரிமை, காங்கிரஸ் அரசு தந்திடும்போது, ஈடுசெய்யவேண்டாமோ? செய்கின்றார்! ஒரு தொழில் அமைப்பு மூலம் மட்டும் இருபது இலட்ச ரூபாய். பெருந்தொகை என்பாய் தம்பி! நமக்கு அது, எண்ணிப் பார்த்திடக்கூட இயலாத தொகையாகும்; ஆனால், அவர் தந்த தொகையினைப் பிர்லா பெற்ற இலாபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், உண்மைநிலை புரியும். பிர்லாவின் மோட்டார் தொழிலில், 1960-ஆம் ஆண்டு கிடைத்துள்ள இலாபம். <b>2,85,71,127</b> ஆகும். இத்தனை பெரிய இலாபம் கிடைத்தது எவராலே? எவர் இவர்க்கு இந்தத் தொழிலை நடத்துதற்குத் துணை<noinclude></noinclude> nt7r5u618soq2anj5vht2jh34qohj7f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/284 250 645608 1944058 1943993 2026-06-09T12:19:42Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||283}}{{Rule}}</noinclude>நிற்கின்றாரோ, அவராலே! அவர் காங்கிரஸ் அரசு நடாத்துபவர்! எனவே, அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைக் காங்கிரசுக்கு அளிக்கின்றார், செல்வம் பெற்றோர். கூட்டுச்சதி என்பதன்றி வேறென்ன இதற்குப் பெயர்? 'ஏழையைக் காட்டிக் கொடுப்பது' என்பதன்றி, இதற்கென்ன வேறு பெயரிடுவீர்? எத்துணை துணிவிருந்தால் இச்செயலில் ஈடுபட்டு, எமதாட்சிக்கு உள்ள குறிக்கோள், சமதர்மம் என்றும் கூறுவர்! வழிப்பறி நடத்துபவன், 'கனம் குறைத்தேன்' என்பதுபோல், பேசுகின்றார்; கேட்டு மக்கள் திகைக்கின்றார். தேபர் என்பார் உனக்குத் தெரிந்திருக்கும் - ஊரார் மறந்திருப்பார் - ஓராண்டு காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராய் இவர் இருந்தார். இவர் கணக்கும், நான் கூறும் கருத்தினையே வலியுறுத்திக் காட்டுகிறது. மொத்தமாய்க் கணக்கெடுத்தால், நாட்டில் ஒருவருக்குச் சராசரி வருவாய், 306-ரூபாய்! எனினும், கிராமத்தார் வருமானம் இந்தக் கணக்கு முறைப்படியே பார்த்திடினும், 95-ரூபாய்தான்! ஏன் இந்த அவலநிலை? இன்னும் கிராமத்தில் உள்ளோரே, பெரும்பாலோர். அவரெல்லாம், மிகக் குறைந்த வருவாய்தான் பெறுகின்றார். திட்டமிட்டு என்ன கண்டோம். இந்நிலையில் இருக்கிறது இவர் போடும் திட்டம்! இதைக் காட்டி, <b>'இன்பத் திராவிடத்தை'</b> ஏன் கேட்டு அலைகின்றீர், நாடு பூங்காவாக நாங்களாக்கிக் காட்டுகின்றோம் என்று நீட்டி முழக்குகின்றார் - அவர் பேச்சை நெட்டுருப்போட்டவர்கள், நாட்டைக் கலக்குகின்றார் நாராச நடை கலந்து. தூற்றிடுவோர் தொகையும் வாகையும் வளர்ந்திடினும், தூய நம் கருத்துத் துவண்டுவிடப்போவதில்லை; ஆர்வம் கொழுந்துவிட்டெரிகிறது. எவர் என்ன ஏசினாலும், எதிர்ப்புப் பல மூட்டிடினும் எடுத்த செயலதனை முடித்திடும் முயற்சிக்கே மூச்சு இருக்கிறதென்ற, உறுதி கொண்டோர் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது காண்! ஆனால், தம்பி! நமது உறுதி உரத்த குரலால், தடித்த சொற்களால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சால், வெளிப் படுத்த நினைப்பது தவறு, தீது; நெடுநாள் நிலைக்காது. 'வேகம்'<noinclude></noinclude> tsfc3aguxd848j7g3jyhs510oi8zld9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/285 250 645609 1944059 1944002 2026-06-09T12:22:47Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|284||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வேகமாக வளரும்; ஒரு சிறு ஐயப்பாடு, அல்லது அச்சம் அல்லது சலிப்பு அல்லது சபலம் ஏற்பட்டால் போதும், மிக வேகமாக வீழ்ந்துவிடும், அல்லது வேறு திக்குத் தாவும்! எனவே, உறுதிக் கழகு உறுமுதல் என்றோ, வீரத்துக்கழகு காரமாய்ப் பேசுதல் என்றோ, தவறான தத்துவம் கொள்ளக்கூடாது. அவ்விதம் வேகம் - காரம் - சூடு - மிக அதிகம் கலந்து, திராவிட நாடு குறித்துப் பேசியோர், பிறகோர் நாள், நிலைகுலைந்து, நினைப்பு அழிந்து, அடியற்ற நெடும்பனையாகிப் போயினர், கண்டோம். குறிக்கோள் மறுத்திடுவோர் கடுமொழியால் நம்மைத் தாக்கிடினும், தாங்கிக்கொள், தம்பி என நான் கூறிவரும் இயல்புடையோன் - கூறுவதுமட்டுமன்று, நான் தாங்கிகொள் கின்றேன். அந்தோ, இப்போக்கு, நம்மைக் கோழைகளாக்கிவிடும். ஏன் இந்த அண்ணன் இதுபோல் பயம்கொண்டு பேசுகிறான்? தூற்றுவோர்தமைத் துதிபாடி அடக்குவதோ? வெட்டுக்கு வெட்டு என்னும் வீரம் கொள்ளவேண்டாவோ? இன்று மாலை வாரீர், என் முழக்கம் கேட்டிடலாம், நான் சாடும் வேகம் கண்டு, சரியுது பார் எதிர்ப்பெல்லாம், அமைச்சர்களைத் துச்சமென்று அடித்துப் பேசினால்தான், அடங்குவர் மாற்றார்கள்; எழுச்சி கொள்வார் நம் தோழர். இந்த முறைதான் நாம் இனி மேற்கொள்ளவேண்டுமென்று சங்கநாதம் செய்த சிங்கங்கள் இன்று எங்கே? நம்மோடு இல்லை! வேகம், விறுவிறுப்பு போன விதம்தானென்ன? அறிவு மேம்பாட்டால் அமைதி அரசோச்சுது என்றும், நாகரிகம் முற்றியதால் நாவடக்கம் பெற்றோம் என்றும் இன்று அவர் பேசுகின்றார். பணிவும் குழைவுமன்றோ பண்பாகும் என்கின்றார். படபடத்த பேச்சு நம் பாங்கான வளர்ச்சியினைப் பாழாக்கும் என்று 'பாடம்' புகட்டுகின்றார். இந்த மாறுதல், இத்துணை விரைவாக இவர்க்கு வரக் காரணம் என்ன? உள்நோக்கம் நான் அறியேன், எனினும், ஒன்று புரிகிறது, வேகமாகப் பேசினரே, அப்போதே உறுதி இருந்த தில்லை. உரத்த குரல் மட்டுந்தான் அவர் உடைமை! என்று தெரிகிறது. நான் சொன்னேன் அன்றே, அடக்கம் அழுத்தத்தின் விளைவு, ஆர்ப்பரிப்பு அஃதன்று என்று. என் சொல்லை நம்பாமல். எதிரியைத் திக்குமுக்காடச் செய்யும் தீப்பொறிப் பேச்சினைரைத் தீரமிகக்கொண்டவர்கள், மாற்றாரைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார் ஏமாற்றம் தான் கண்டார்.<noinclude></noinclude> lbyaqyfil18qi5j9txx1h7r4saqxp84 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/286 250 645610 1944146 1944016 2026-06-09T15:45:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||285}}{{Rule}}</noinclude> {{left_margin|2em|"அரசியலில் ஒதிய மரம்போல் இருக்கும் காமராசரின் தைரியத்தை நாம் அறிவோம். இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நாங்கள் பயப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். கோழிக்குஞ்சு மனம் படைத்தவ ரிடத்தில் நாம் அடங்கி நடக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்."}} காமராசர் ஒதியமரம்! அவருக்கு இருப்பது கோழிக்குஞ்சு மனம்!! இத்துணைக் கேவலமாய்ப் பேசியவர், இன்று என்ன கோலம் கொண்டுவிட்டார்? நாடறியும்! இவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் வேறு பாதை சென்றனர்; அதே வேகம் அங்கேயும்! ஆக அவர்கட்கு உள்ள குணமும் தெரிந்த வித்தையும், வேகம்! மிக வேகம்! மிகமிக வேகம்! - இவ்வளவே என்பது புரிகிறதல்லவா? ஆகவே, தம்பி! காரணமற்ற வேகம்வேண்டாம் - அன்னையைக் கேள், பக்குவமாகப் பண்டம் வெந்துவிட்டது என்றால், கொதிக்கும் சத்தம் குறைந்துவிடும். அதுபோன்றே கொள்கைப்பிடித்தம் நல்ல முறையிலே ஏற்பட்டுவிட்டால், வீணான வேகம் எழாது. சிறிதளவு அழுகிய பழத்தைக் கண்டிருக் கிறாயா - மேலே கசியும். சுவையில் புளிப்பேறிவிட்டது. பக்குவம் கெட்டுவிட்டது என்பது பொருள். கரும்பு, அப்படித் தெரிய வில்லை, பார்த்தனையா, தம்பி! அடக்கமாக இருக்கிறது, எவ்வளவோ சுவையைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு. கொள்கையில் நமக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, 'கனல் கக்குவது, எக்காரணம் கொண்டோ? அக்கொள்கையிலே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டால், உடனே காறி உமிழ்வது, இரண்டுமே, மனம் பக்குவப்படாத நிலையைத்தான் காட்டுகிறது. அது கூடாது, தம்பி! நம் நாவிலிருந்து எது வந்தாலும் நாடு ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிலரை நாட்டிலே தேடிப் பிடித்துக்கொள்ளலாம்', என்ற நினைப்பு எழலாகாது. அது எந்த விதமான 'புத்தி' என்று என்னைக் கேட்காதே, தம்பி! எனக்கு வேறோர் வகையான புத்திபற்றிய குறிப்புத் தெரியும், அதை வேண்டுமானால் கூறுகிறேன். திராவிட நாடு திராவிடருக்கே எனும் நமது குறிக்கோளில் நம்பிக்கை இருப்பதை நாடறியச் செய்யவேண்டும் என்பதுடன்,<noinclude></noinclude> meorfhgh7sq73x6bgqy7t5j4je6m4zw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/287 250 645612 1944150 1944019 2026-06-09T15:48:35Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|286||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> அந்தக் கருத்தை மறுப்போரை நையப் புடைக்கவேண்டும் நாவினால் என்ற நினைப்பு, ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், காங்கிரஸ் அமைச்சர்கள், நமது கொள்கையை இழித்தும் பழித்தும் பேசிவரக் கேட்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன். அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகக் கொள்கையை விளக்க நமக்குப் போதுமான திறமை இன்னும் வளரவில்லை போலும் ஒன்று எண்ணிக்கொண்டிருந்திருப்பேனே தவிர, அமைச்சர்களை ஒதியமரம் என்று தடித்த வார்த்தைகொண்டு ஏச மனம் வந்ததில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி என் நாவினையும் அசிங்கப்படுத்திக்கொண்டதில்லை, கேட்பவர்கள் காதிலே நாராசம் பாயும்படியும் நடந்துகொண்டதில்லை. எனவே, நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர்களுக்கு இருக்கும் புத்தி எந்த விதமான புத்தி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடுமொழியால் தாக்கினதில்லை. வள்ளுவப் பெருந்தகை கூறினார் அல்லவா, 'கனியிருக்கக் காய் கவர்தல் கூடாது' என்று; அம்மொழிவழி நான் நின்று வந்திருக்கிறேன். ஆனால், இன்று, 'திராவிட நாடு' கொள்கை தீது, ஆகாது என்ற கருத்தினைக் கொண்டுவிட்டவர்கள், 'திராவிட நாடு' ஆதரவாளர்களாக இருந்தகாலை, திராவிட நாடு கூடாது என்று கூறிய அமைச்சர்களின் 'புத்தி' எப்படிப்பட்டது என்பதை வீரதீரம் - காரம் - கலந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு எடுத்துரைத்தனர். என்ன விதமான புத்தி இருக்கிறது அமைச்சர்களுக்குத் தெரியுமா, தம்பி! தம்பியாக இருந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றவர்கள், இன்று மறந்துவிட்டிருப் பார்கள்; நான் எப்படி மறக்க முடியும்? அதனால் அதைக் கூறுகிறேன். அமைச்சர்களுக்கு இருப்பது, {{c|<b>"திருவோட்டுப் புத்தி'"</b>}} விளக்கம் கேட்கிறாயா? அவர்களே தந்தனர். அதனைத் தருகிறேன்: {{left_margin|2em|திராவிடம் பிரிந்தால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்கள் கேட்டு நம்மைத் திகைக்க வைக்க நினைக்கிறார்கள். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியவில்லையே. ஐயகோ! அவர்களின் கதி என்ன கதியோ என்று வருத்தப்படுவதைத் தவிர, அவர்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை.}}<noinclude></noinclude> hvysfzbfgngzhwbk43i5b5ajjzm5omo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/288 250 645614 1944152 1944021 2026-06-09T15:51:40Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||287}}{{Rule}}</noinclude> {{left_margin|2em|இங்குள்ள ஆந்திர - கேரள - கருநாடக - தமிழ் மாநிலங்களிலிருந்து வரிப்பணம் டெல்லிக்குப் போகிறது. இது அவர்களுக்குத் தெரியும். டெல்லியிலிருந்து எவ்வளவு பணம் இங்குத் திரும்புகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எப்போதாவது சுயமரியாதை உணர்ச்சி பீறிட்டு வரும்போது, அவர்களே டெல்லியைப் பார்த்துக் கேட்கிறார்கள் - பணம் ஒதுக்கிறது குறைவு என்று. அடுத்த கணமே டெல்லிக்குத் தாசராகிவிடுகின்றனர். வாங்கி வாங்கிச் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்கள், பெருந்தனம் கிடைத்தால் மேலும் வாங்கத்தான் எண்ணு வார்கள். பிச்சை எடுத்துப் பழக்கப்பட்டவன் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விடமாட்டான். பிச்சைக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஆயிரம் ரூபாய் புதையல் கிடைத்ததாம்; அதைக்கொண்டு அவன் தங்கத்தாலான திருவோடு வாங்கினானாம். ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அவனுடைய திருவோட்டுப் புத்தி அவனைவிட்டுப் போகவில்லை. அதுபோல இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் திருவோட்டுப் புத்திதான் இன்னமும் இருக்கிறது. (31-10-59)}} இவ்வளவு வேகமாகப் பேசியவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? திராவிட நாடாவது மண்ணாங்கட்டியாவது அதைக் கேட்பவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்கிறார்கள்; அதைக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தமக்கு, முன்பு கிடைத்த {{block_center|ஒதியமரம்<br> திருவோட்டுப்புத்தி}} போன்ற அர்ச்சனைகளை மறந்துவிட்டு, அந்த அடியைத் துடைத்துக்கொண்டு, திராவிடநாடு கேட்பவர்களை ஒழித்துக் கட்டுவதாக முழக்கமிடுவோரைக் கட்டித்தழுவி, அப்படிச் சொல்லடா என் சிங்கக்குட்டி! என்று பாராட்டுகிறார்கள். இந்தப் புத்தி என்ன வகையோ, எனக்கென்ன புரிகிறது. தம்பி! வண்டி ஒன்று நாம் வாடகைக்குவிட வைத்திருந்தால், அதிலே, அவ்வப்போது கிடைக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போகமாட்டோமா? ஒரு சமயம் அந்த வண்டியிலே கற்பூரம் இருக்கும், பிறிதோர் சமயம் கருவாடு இருக்கும்! கற்பூரம் இருந்த இடத்திலா, கருவாடு என்று யோசித்தால், வண்டிக்கு வாடகை கிடைக்குமா! நா வாணிபம் நடாத்துவோர்,<noinclude></noinclude> c5aq49g4s6049028z0q5jaurra607g9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/289 250 645615 1944153 1944024 2026-06-09T15:54:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|288||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இதே போக்கினரே! வேகமாகப் பேசுவேன், தீரமாகத் தாக்குவேன், எதைப் பேசினாலும் சரி! என்று கூறுகின்றனர். நாம் 'திராவிட நாடு' குறித்துப் பேசுவது, நமது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி, நமது நாவினால் எப்படியெல்லாம் சுடமுடியும் என்பதைக் காட்ட அல்ல! எனவே, தம்பி! உனக்குக் கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கட்டும், அதேபோது அதைக் காட்டக் கடுமொழியும் பேசவேண்டும் என்று எண்ணற்க! அதுபோலவே, முன்பு திராவிடநாடு குறிக்கோளை ஆதரித்தவர்கள், இன்று அக்கொள்கையையும் குறிக்கோளைக் கொண்ட கழகத்தை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்ப வனாக உள்ள என்னையும், முன்பு அமைச்சர்கள்மீது உமிழ்ந்த இழிசொற்களை வீசித் தாக்கினால், கவலை கொள்ளவேண்டாம். கற்பூரம் எடுத்துச் சென்ற வண்டியிலே இப்போது கருவாடு என்று எண்ணிக்கொள்! அது தேவை என்று எண்ணுபவர்கள் அதைத் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும், நீங்கள் அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்; கற்பூரம் இருந்ததே, அதை எண்ணிக் கொள்ளுங்கள். கழகத்தையும், அதிலே ஈடுபாடு கொண்டவன் என்பதால் என்னையும், வரைமுறையற்ற போக்கிலே, காங்கிரசார் கடித்துரைத்தபோது, வரிந்து கட்டிக்கொண்டு என் பக்கம் வந்து நின்று, வருபவனெல்லாம் வரட்டும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று முழக்கமிட்டவர்களிலே சிலர்தானே இன்று, என்னை ஏசுகிறார்கள்; அதனால் என்ன நட்டம்? அன்று ஏசியவர்களுக்கு இன்று ஏசுபவர்கள் தந்த பதில் இருக்கிறதே, அதை ஒரு முறை படித்துப் பார்! உன் கோபம் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போகும்; அவர்களிடம் இரக்கமே எழும் - இவர்களுக்கென்ன, தமக்குள்ள வேகத்தை, தாக்கும் திறத்தை, எவர் பேரிலாகிலும் வீசிக்கொண்டே இருக்கவேண்டும் எனும் இயல்பா! அன்று அப்படிப் பேசினார்கள்; இன்று இப்படிப் பேசுகிறார்களே! இது என்ன நாக்கு! இது என்ன போக்கு? என்று கேட்கத் தோன்றும். என்னை எவரோ ஏசிவிட்டார்கள்; இன்று என்னை ஏசும் ஒருவருக்குக் கொதிப்பும் கோபமும் பீறிட்டுக்கொண்டு<noinclude></noinclude> dvb4o7p25vg1ftgqjj4el6vhkwff4bu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/290 250 645616 1944154 1944031 2026-06-09T15:57:51Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||289}}{{Rule}}</noinclude>அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை! {{left_margin|3em|<poem><b> எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் - நமை எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் - அண்ணன் சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் - அவர் தூளுக்கும் தூளெனக் கூவிடடா! பட்ட வடுக்களைக் காட்டிடடா! - அதிற் பாடும் துணிவினைக் கூறிடடா! - இனித் துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் - அவர் தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா! வானில் பறப்பது நம்கொடிதான் - மொழி வண்ண மடைந்ததும் நம்வழிதான் - அந்தப் பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப் போதனை செய்ததும் நம்மவர்தான்! ஆனை நிகர்த்தநம் சேனைபலம் - தனை ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் - உடல் கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும் குக்கல் மதியினைக் காட்டுகின்றார். தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் - அண்ணன் தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் - இளஞ் சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர் தேம்பி அழுவது சாவகத்தில்! தூய இவர்கள் பிறந்ததெல்லாம் - வெறும் சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! - தெரு நாயி லிழிந்தவர் வாடுகையில் - வட நாட்டவர் எங்கணும் வாழுகிறார். அன்னைத் திராவிடப் பொன்னாடே! - உன் ஆணை! தமிழ்மொழி மீதாணை! மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே - வரும் மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்! அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் - இல்லை ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்! கண்ணையும் காலையும் வெட்டியபின் - இந்தக் காய மிருந்தென்ன போயிமென்ன? </b></poem>}}<noinclude> 10 - த.அக. தொ-4 பூ. வெ. எண். 514</noinclude> s3d7hp6zdkbl50snogrw85dsjqxaeuc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/291 250 645618 1944156 1944034 2026-06-09T16:00:57Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|290||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எப்படித் தம்பி! சுவைமிக்கதாக இல்லையா!! ஆம்! என்பாய், நம்மால் இதுபோலப் பாடவரவில்லையே என்றுகூட ஆயாசப் படுவாய். ஆனால், தம்பி! உனக்கு இதுபோலப் பாடத் தெரியா விட்டால் பரவாயில்லை, இப்படியும் பாடிவிட்டு, பிறிதோர்நாள் என்னை இழித்துப் பாடவும் தூய தமிழை, கவிதைத் திறனைப் பயன்படுத்தாது இருந்தால் போதும். எனக்காகக் சொல்ல வில்லை - தமிழுக்காக - கவிதைத்திறனுக்காக - மரபின் மாண்புக்காக! பொங்கற் புதுநாளன்று பொன்னான கருத்துகளை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும், அதனைச் செய்து முடித்திடப் பயன்படாமல், இந்தத் தேசம் இருந்ததொரு இலாபமில்லை, என்ற உறுதியைக் கொண்டிடு! உத்தமனே! உன் உழைப்பால்! ஏற்றம்பெற்ற கழகம் இன்று எத்துணையோ இன்னலையும் இழிமொழியையும் தாங்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும், பாதை வழுவாமல், உறுதி தளராமல் பணி புரிகிறது. பாற்பொங்கல் சமைத்திட உன் பரிவுக்கு உரியாள், பார்த்தனையா, தீய்த்திடும் தீயினைக் கண்டு அஞ்சாமல், வெப்பம் தாங்கிக்கொண்டு, புகை கிளப்பிக் கண்களைக் கெடுத்திட்டாலும் ஈடுகொடுத்துக்கொண்டு, அளவறிந்து, முறையறிந்து, பண்டங்களைச் சமைத்திடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இன்னலை ஏற்றுக்கொண்டு, ஏற்றி இறக்கிய பிறகல்லவா, நீ கூவி மகிழ்கிறாய்; <b>பொங்கலோ! பொங்கல்!</b> என்று. நாடு மீட்டிடும் நற்காரியம் வெற்றிபெற நாமும் தம்பி! அறிவுடைமை, துணிவுடைமை, பொறையுடைமை எனும் பண்புகளைப் பேணி வளர்த்துக்கொள்ளவேண்டும். திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்! திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக் காட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது. இவ்வாண்டு, பொங்கற் புதுநாள், இந்த எண்ணத்தை உறுதியை அளித்திடல்வேண்டும்.<noinclude></noinclude> 986vi2i65m8kysxe02d7t46uq4wevl6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/292 250 645619 1944157 1944037 2026-06-09T16:02:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தொகுதி நான்கு||291}}{{Rule}}</noinclude> நாடு நமது ஆகி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க முனைவோமாக! அந்நிலைதான், தேனில் தோய்த்த பழம்போல இனிக்கும். தேன்! பழம்! என்று நான் கூறுகிறேன், நீயோ, தம்பி! உன் பாசம் நிறை பார்வையை, எங்கோ செலுத்துகிறாய்! உம்! விருந்துக்கான அழைப்பைப் பெற்றுவிட்டாய்! விட்ட கணையைத் தடுத்திடவா இயலும், போ! போ. பொன்னான நாள் இது! பொற்கதிர் பரப்பும் கதிரவனைப் போற்றிடும் திருநாள்! இல்லம் இன்பப் பூங்காவாகும் நன்னாள்! இந்நாளில், எந்நாளும் நாம் இன்புற்றிருக்கும் நிலைகாண அடிகோலும், பொதுத் தேர்தல் வெற்றிக்குக் கழகம் உன்னைத்தான் நம்பி இருக்கிறது. உருட்டல் மிரட்டலையும் காட்டிப் பணம் கொட்டி நமை மாற்றார் மிரட்டும்போதும் மருளாமல் கழகம் தேர்தலில் ஈடுபட்டிருப்பது உன் ஆற்றலைப் பெரிதும் நம்பித்தான், என்பதை மறவாதே! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 14-1-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> 7e99yryn0yrp4r674p158qyqaf1iv2l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/293 250 645620 1944040 1942991 2026-06-09T11:59:05Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 161</b> {{center|{{x-larger|<b>அறுவடையும் அணிவகுப்பும்<br> (1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>தேர்தலின் முடிவுகள்- காஞ்சீபுரம் தேர்தல்.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>அ</b>}}றுவடை முடிந்து, கட்டுகளைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒற்றையடிப் பாதையிலே, ஒயிலாக நடந்துசெல்லும் காட்சி காணக்காணக் களிப்பூட்டுகிறதல்லவா. காண்போர்க்கு மட்டுமல்ல, கனமான கட்டுகளைச் சுமந்து செல்பவர்களுக்குங் கூடக் களிப்புத்தான். பாரம் தெரியாது, பாதையின் இடர்ப்பாடு பற்றிக் கவலை எழாது. வேலை முடிந்தது. பலனை எடுத்துச் செல்கிறோம் என்ற எண்ணம் செந்தேனாகும். வேறு வேலை களிலே, இத்தனை கனமானதை எப்படித் தூக்கிச் செல்வது என்ற எண்ணம் எழக்கூடும்; அறுவடை செய்து எடுத்துச் செல்லும் கட்டுகளின் கனம் தூக்கக்கூடியதுதானா என்ற எண்ணமே எழாது. பாடுபட்டோம், பலன் கண்டோம். உழுது பயிரிட்டோம். அறுவடையை எடுத்துச் செல்கிறோம் என்ற நினைப்பு, பாரத்தை கவனிக்க விடாது. அதிலும் வயலையும், அதிலே உழைத்திடு வோரையும், விதையையும் அதனின்றும் கிளம்பிய முளையையும் பக்கத்து வயலுடையார் பழித்துப் பேசக்கேட்டு, மனம் பதறிய நிலையும் இருந்திருப்பின், அறுவடை கணிசமான அளவும், தரமான வகையும் கொண்டதாக இருந்திடின், கட்டுகளைச் சுமந்து செல்வோர் கண்கள், முன்பு பழித்துப் பேசினோர் எங்கே என்றல்லவா தேடும்! ஆகாது என்றனையே! ஐயயே என்றனையே! வீண்பாடு என்றனையே! விளையாது என்றனையே! விழலுக்கு<noinclude></noinclude> owy9f1edujolinfckhz5greso4ny33a 1944158 1944040 2026-06-09T16:04:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} <b>கடிதம் : 161</b> {{center|{{x-larger|<b>அறுவடையும் அணிவகுப்பும்<br> (1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>தேர்தலின் முடிவுகள்- காஞ்சீபுரம் தேர்தல்.</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|<b>அ</b>}}றுவடை முடிந்து, கட்டுகளைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒற்றையடிப் பாதையிலே, ஒயிலாக நடந்துசெல்லும் காட்சி காணக்காணக் களிப்பூட்டுகிறதல்லவா. காண்போர்க்கு மட்டுமல்ல, கனமான கட்டுகளைச் சுமந்து செல்பவர்களுக்குங் கூடக் களிப்புத்தான். பாரம் தெரியாது, பாதையின் இடர்ப்பாடு பற்றிக் கவலை எழாது. வேலை முடிந்தது. பலனை எடுத்துச் செல்கிறோம் என்ற எண்ணம் செந்தேனாகும். வேறு வேலை களிலே, இத்தனை கனமானதை எப்படித் தூக்கிச் செல்வது என்ற எண்ணம் எழக்கூடும்; அறுவடை செய்து எடுத்துச் செல்லும் கட்டுகளின் கனம் தூக்கக்கூடியதுதானா என்ற எண்ணமே எழாது. பாடுபட்டோம், பலன் கண்டோம். உழுது பயிரிட்டோம். அறுவடையை எடுத்துச் செல்கிறோம் என்ற நினைப்பு, பாரத்தை கவனிக்க விடாது. அதிலும் வயலையும், அதிலே உழைத்திடு வோரையும், விதையையும் அதனின்றும் கிளம்பிய முளையையும் பக்கத்து வயலுடையார் பழித்துப் பேசக்கேட்டு, மனம் பதறிய நிலையும் இருந்திருப்பின், அறுவடை கணிசமான அளவும், தரமான வகையும் கொண்டதாக இருந்திடின், கட்டுகளைச் சுமந்து செல்வோர் கண்கள், முன்பு பழித்துப் பேசினோர் எங்கே என்றல்லவா தேடும்! ஆகாது என்றனையே! ஐயயே என்றனையே! வீண்பாடு என்றனையே! விளையாது என்றனையே! விழலுக்கு<noinclude></noinclude> mtakd6jbx8pv0e1cgz1qh0cp03n4wu4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/294 250 645621 1944041 1941202 2026-06-09T12:00:46Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||293}}{{Rule}}</noinclude>நீர் இறைக்கும் வீணன் என்று ஏசினையே! பதரப்பா, விதையல்ல என்று பரிகாசம் பேசினையே! பாரப்பா, கட்டுகளை! பாடுதந்த பலன்களை! அவ்வளவும் மணியப்பா! ஆள்தூக்க ஒண்ணாத கனமப்பா! என்றெல்லாம், பழித்தவர்களைக் கண்டு கூறலாமா என்று தோன்றுமல்லவா!! கூறும் உரிமையும் ஏற்படுகிறதல்லவா!! புல் பூண்டு முளைக்காது, புறம்போக்கு, நந்தம் பாழ் என்று கூறினர், முப்போகம் விளைந்திடும் கழனி உடையோர்கள் எனத் தம்மைக் கருதினவர். பாழ்வெளியேயானாலும், பாடுபட்டால் பலன் உண்டு; பாழ்வெளியும் ஈதல்ல, பாங்கான வயலேதான்; பலகாலும் வளம்காண முயலாது விட்டதனால், பாழ்வெளி போல் தோற்றம் கொண்டதிது என்றுகூறி, கிளறிச் சமனாக்கி, கீழ்மண்ணை மேலாக்கி, வளமூட்ட எருவிட்டு, வகையாக நீர்பாய்ச்சி, வயல் உயிர்பெறச் செய்ததனால், வளமாகப் பயிர் ஏறி, அறுவடைக்கு வழி கண்டார். அவரெல்லாம் கட்டுகளைத் தலைமீது கனம்கூடக் கவனியாமல், கொண்டு செல்லும் போதினிலே, குறைகூறியோர் போக்கை எண்ணிச் சிரித்திடாரோ! ஆனால், அறுவடையைச் சுமந்து செல்பவர்கள், சிரித்திடக் காணோம்! கலகலப்பான பேச்சுமில்லை!! கவலைக் கோடுகள் முகத்தில் காணப்படுகின்றன. உழைத்த அலுப்போ? அதுமட்டும் தான் என்று கூறுவதற்கு இல்லை. வேறு ஏதோ ஓர் எண்ணம், மனதிலே குடைகிறது. கடமையைச் செய்கிறார்கள், கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள்; குறுநகை இல்லை, குதூகலம் இல்லை; ஏன்? காரணம் தெரிந்துகொள்ளவேண்டுமா, தம்பி! அதோ, பார்த்தனையா, புங்கமரம்! அதன் நிழலிலே? யாரோ, படுத்துக் கிடக்கிறார்கள். வா! அருகே சென்று பார்ப்போம்! கரத்திலே அரிவாள்! காலிலே வெட்டு! இரத்தம் கசிந்து இருக்கிறது! கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்! விவரம் தெரிகிறதல்லவா? அவனும் அறுவடையில் ஈடுபட்டான், ஆனால் அரிவாள் வெட்டு காலிலே வீழ்ந்தது. மேலால் வேலையில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை! கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். ஏன், காலிலே வெட்டு விழுந்தது? அறுவடை வேலை அறியானோ? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? தம்பி! அதற்கான பதில் தெரிய, அவனுடைய மற்றொரு காலை உற்றுப் பார்! பச்சிலைக்கட்டுத் தெரிகிறதா? கேள், விவரத்தை! பலரும்<noinclude></noinclude> 67uo5jq3x9snzjehkl8kk25dhrca4ic 1944159 1944041 2026-06-09T16:06:00Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தொகுதி நான்கு||293}}{{Rule}}</noinclude>நீர் இறைக்கும் வீணன் என்று ஏசினையே! பதரப்பா, விதையல்ல என்று பரிகாசம் பேசினையே! பாரப்பா, கட்டுகளை! பாடுதந்த பலன்களை! அவ்வளவும் மணியப்பா! ஆள்தூக்க ஒண்ணாத கனமப்பா! என்றெல்லாம், பழித்தவர்களைக் கண்டு கூறலாமா என்று தோன்றுமல்லவா!! கூறும் உரிமையும் ஏற்படுகிறதல்லவா!! புல் பூண்டு முளைக்காது, புறம்போக்கு, நந்தம் பாழ் என்று கூறினர், முப்போகம் விளைந்திடும் கழனி உடையோர்கள் எனத் தம்மைக் கருதினவர். பாழ்வெளியேயானாலும், பாடுபட்டால் பலன் உண்டு; பாழ்வெளியும் ஈதல்ல, பாங்கான வயலேதான்; பலகாலும் வளம்காண முயலாது விட்டதனால், பாழ்வெளி போல் தோற்றம் கொண்டதிது என்றுகூறி, கிளறிச் சமனாக்கி, கீழ்மண்ணை மேலாக்கி, வளமூட்ட எருவிட்டு, வகையாக நீர்பாய்ச்சி, வயல் உயிர்பெறச் செய்ததனால், வளமாகப் பயிர் ஏறி, அறுவடைக்கு வழி கண்டார். அவரெல்லாம் கட்டுகளைத் தலைமீது கனம்கூடக் கவனியாமல், கொண்டு செல்லும் போதினிலே, குறைகூறியோர் போக்கை எண்ணிச் சிரித்திடாரோ! ஆனால், அறுவடையைச் சுமந்து செல்பவர்கள், சிரித்திடக் காணோம்! கலகலப்பான பேச்சுமில்லை!! கவலைக் கோடுகள் முகத்தில் காணப்படுகின்றன. உழைத்த அலுப்போ? அதுமட்டும் தான் என்று கூறுவதற்கு இல்லை. வேறு ஏதோ ஓர் எண்ணம், மனதிலே குடைகிறது. கடமையைச் செய்கிறார்கள், கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள்; குறுநகை இல்லை, குதூகலம் இல்லை; ஏன்? காரணம் தெரிந்துகொள்ளவேண்டுமா, தம்பி! அதோ, பார்த்தனையா, புங்கமரம்! அதன் நிழலிலே? யாரோ, படுத்துக் கிடக்கிறார்கள். வா! அருகே சென்று பார்ப்போம்! கரத்திலே அரிவாள்! காலிலே வெட்டு! இரத்தம் கசிந்து இருக்கிறது! கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்! விவரம் தெரிகிறதல்லவா? அவனும் அறுவடையில் ஈடுபட்டான், ஆனால் அரிவாள் வெட்டு காலிலே வீழ்ந்தது. மேலால் வேலையில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை! கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். ஏன், காலிலே வெட்டு விழுந்தது? அறுவடை வேலை அறியானோ? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? தம்பி! அதற்கான பதில் தெரிய, அவனுடைய மற்றொரு காலை உற்றுப் பார்! பச்சிலைக்கட்டுத் தெரிகிறதா? கேள், விவரத்தை! பலரும்<noinclude></noinclude> glwzyhkq4c9lz5bnyb4du0td07age62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/295 250 645622 1944043 1941204 2026-06-09T12:02:59Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|294||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அறுவடையில் ஈடுபட்டதுபோலத்தான் இவனும் ஈடுபட்டான். வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் விஷப்பூச்சி ஒன்று அவன் காலைக் கடித்தது; துடித்தான்; நிலைகுலைந்தது; அரிவாள் வெட்டு காலில் விழுந்தது; மேலால், வேலையில் வெற்றியுடன் ஈடுபட இயலவில்லை. எனவேதான், மற்றவர்போல், அவன் கட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை; புங்க மரத்தடியிலே இருக்கிறான். ஆனால், தம்பி! கட்டு எடுத்துச் செல்பவர்கள் முகத்தில் களிப்பு இல்லை; காலில் வெட்டுப்பட்டுக்கிடப்பவன் களிப்புடன் இருக்கிறான்!! இந்த விசித்திரத்துக்குக் காரணம் புரிகிறதா? தம்பி! கட்டுக் கலம் காணும்; பட்டபாட்டுக்கேற்ற பலன் கிட்டும் என்ற நிலை இருந்திடினும்; ஈட்டிய வெற்றியினை எடுத்துச் செல்பவர்கள், வேலையிலே ஈடுபட்டு வெட்டுப் பெற்றுக்கிடப்பவனைக் காண்கிறார்கள்; கலக்கமும் கவலையும் குடைகிறது. வெட்டுப்பெற்றுக் கிடப்பவனோ, வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், வெற்றியை எடுத்துச் சென்றிடும் காட்சியைக் காண்கிறான்; எனவே அவன் மகிழ்ச்சிக் கொள்கிறான். உடன் பணியாற்றியோர் வெற்றியை எடுத்துச் செல்கிறார்கள்; பழித்தோர் வெட்கிடும் விதமாக பலனை எடுத்துச் செல்கிறார்கள்; அறுவடை வேலை அரிய வெற்றியாக அமைந்துவிட்டது; விளையாது என்றார்கள். அறுவடை கிடைத்தது! அதோ கொண்டு செல்கிறார்கள்!! - என்று எண்ணுகிறான்; எண்ணிடும்போதே, காலில் வீழ்ந்த அரிவாள் வெட்டு, அதற்குக் காரணமாக அமைந்த நச்சுப்பூச்சி எனும் எதனையும் மறந்துவிடுகிறான். வலி தெரியவில்லை. வருத்தம் எழவில்லை. வேலை முடிந்தது, வீடு திரும்புகிறார்கள். வெற்றியுடன் என்று எண்ணிப் பெருமகிழ்வு பெறுகிறான். எமது வயலையும் உழவு முறையும் வேலைத் திறனையும் கேவலப் படுத்திப் பேசினரே சிலர், அவர் காணட்டும் அறுவடையை எடுத்துச்செல்லும் அணிவகுப்பை என்று அறைகூவி அழைப்பது போலிருக்கிறது அவன் பார்வை, புன்னகை! யாவர்க்கும் முன்னதாக அறுத்தெடுத்துக் கட்டு ஆக்கித் தலைமீது வைத்து வழி நடந்து காட்டவல்ல தோழன், காலில் வெட்டப்பட்டுக் காரியத்தை முடிக்காமல் இருந்திடும்<noinclude></noinclude> 3iyynhccdk7eabkwnk9fhwuf701zjbr 1944161 1944043 2026-06-09T16:07:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|294||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அறுவடையில் ஈடுபட்டதுபோலத்தான் இவனும் ஈடுபட்டான். வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் விஷப்பூச்சி ஒன்று அவன் காலைக் கடித்தது; துடித்தான்; நிலைகுலைந்தது; அரிவாள் வெட்டு காலில் விழுந்தது; மேலால், வேலையில் வெற்றியுடன் ஈடுபட இயலவில்லை. எனவேதான், மற்றவர்போல், அவன் கட்டு எடுத்துக்கொண்டு செல்லவில்லை; புங்க மரத்தடியிலே இருக்கிறான். ஆனால், தம்பி! கட்டு எடுத்துச் செல்பவர்கள் முகத்தில் களிப்பு இல்லை; காலில் வெட்டுப்பட்டுக்கிடப்பவன் களிப்புடன் இருக்கிறான்!! இந்த விசித்திரத்துக்குக் காரணம் புரிகிறதா? தம்பி! கட்டுக் கலம் காணும்; பட்டபாட்டுக்கேற்ற பலன் கிட்டும் என்ற நிலை இருந்திடினும்; ஈட்டிய வெற்றியினை எடுத்துச் செல்பவர்கள், வேலையிலே ஈடுபட்டு வெட்டுப் பெற்றுக்கிடப்பவனைக் காண்கிறார்கள்; கலக்கமும் கவலையும் குடைகிறது. வெட்டுப்பெற்றுக் கிடப்பவனோ, வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர், வெற்றியை எடுத்துச் சென்றிடும் காட்சியைக் காண்கிறான்; எனவே அவன் மகிழ்ச்சிக் கொள்கிறான். உடன் பணியாற்றியோர் வெற்றியை எடுத்துச் செல்கிறார்கள்; பழித்தோர் வெட்கிடும் விதமாக பலனை எடுத்துச் செல்கிறார்கள்; அறுவடை வேலை அரிய வெற்றியாக அமைந்துவிட்டது; விளையாது என்றார்கள். அறுவடை கிடைத்தது! அதோ கொண்டு செல்கிறார்கள்!! - என்று எண்ணுகிறான்; எண்ணிடும்போதே, காலில் வீழ்ந்த அரிவாள் வெட்டு, அதற்குக் காரணமாக அமைந்த நச்சுப்பூச்சி எனும் எதனையும் மறந்துவிடுகிறான். வலி தெரியவில்லை. வருத்தம் எழவில்லை. வேலை முடிந்தது, வீடு திரும்புகிறார்கள். வெற்றியுடன் என்று எண்ணிப் பெருமகிழ்வு பெறுகிறான். எமது வயலையும் உழவு முறையும் வேலைத் திறனையும் கேவலப் படுத்திப் பேசினரே சிலர், அவர் காணட்டும் அறுவடையை எடுத்துச்செல்லும் அணிவகுப்பை என்று அறைகூவி அழைப்பது போலிருக்கிறது அவன் பார்வை, புன்னகை! யாவர்க்கும் முன்னதாக அறுத்தெடுத்துக் கட்டு ஆக்கித் தலைமீது வைத்து வழி நடந்து காட்டவல்ல தோழன், காலில் வெட்டப்பட்டுக் காரியத்தை முடிக்காமல் இருந்திடும்<noinclude></noinclude> a1cm4ky76jj6t3li2z2j8s2zyxxqt5a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/296 250 645623 1944549 1942619 2026-06-10T08:57:54Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{rh|தொகுதி நான்கு||295}}{{rule}}</noinclude>இந்நிலையைக் காணக் கூடவில்லை, கண் கசிவு நிற்கவில்லை. வேலை ஓடவில்லை, வெற்றிக் களிப்பு இல்லை. வேதனை வேலாகி வாட்டி வதைக்குது ஐயோ! வீடு நாம் செல்கிறோம் வெற்றிக் கட்டுடனே, உடனிருந்தவன் எங்கே என ஊரார் கேட்டிடின், உரைத்திடுவது எதனை நாம்? உள்ளம் பதைத்திடுதே, வெட்டு அவன் காலில், வேலை முடியவில்லை. கட்டுக் கொண்டுவர இயலவில்லை அவனாலே; களத்துமேட்டருகே இருக்கின்றான் களைப்புடனே என்றன்றோ கூறவேண்டும். எப்படிக் கூறுவது? எண்ணும்போதே எனக்கு வெற்றிக் கட்டுகள் யாவும் வீண் என்று தோன்றிடுதே; அவனும் கட்டெடுத்து அணிவகுப்பிலே நடந்தால், அறுவடை விழாவாகும். அக மகிழ்வுக்கு எல்லையில்லை. இன்று அந்த நிலை இல்லை, என் செய்வோம், ஏங்குகிறோம் என்றெண்ணி நடக்கின்றார். அறுவடையில் வெற்றிபெற்றார். அதனாலேதான் அவர்க்கு மகிழ்ச்சி துளியும் இல்லை. மரத்தடிக் கிடப்போனோ மகிழ்ச்சியினால் துள்ளுகிறான்; அணிவகுத்து செல்வது பார் அறுவடையினை எடுத்து; அவர் எந்தன் உடன்பிறந்தார். அவருடன் நானுந்தான். இந்த வயலுக்கு உரியவன்! ஆம்! அவர் கொண்டு செல்லும் அந்த அறுவடை எமது உடைமை!! கட்டு எந்தன் தலைமீது இல்லை, கவலை இல்லை. கொண்டுசெல்லும் கட்டெல்லாம், என் கட்டு! என்று கூறும் உரிமை எனக்கும் உண்டு என்று கூறிக் களிப்புடன் இருக்கின்றான். புங்க மரத்தடியில். என்ன தம்பி, யோசனை? எந்த இடத்து வயலைப்பற்றி அண்ணன் இப்படி ஒரு படப்பிடிப்புக் காட்டுகிறான் என்று தானே யோசிக்கிறாய். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். நான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளபடியான எண்ணம், அவர்கள் கொண்டிருந்தனரோ இல்லையோ, நானறியேன், ஆனால், அந்தக் காட்சியைக் கண்டபோது என் மனதிலே இப்படியெல்லாம் தோன்றிற்று அது பல ஆண்டுகளுக்கு முன்பு! பத்து நாட்களுக்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட காட்சி என் மனதிலே கிளறிய எண்ணங்களை, மறுபடியும் நான் கொள்ளத்தக்க நிகழ்ச்சியைச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிதான் என் தோல்வியும். நமது தோழர்களிலே ஐம்பது பேர் பெற்ற வெற்றியும்.<noinclude></noinclude> 06pyv8g70cgig6iacrgnkvw4h8gugnw 1944591 1944549 2026-06-10T10:31:09Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|தொகுதி நான்கு||295}}{{rule}}</noinclude>இந்நிலையைக் காணக் கூடவில்லை, கண் கசிவு நிற்கவில்லை. வேலை ஓடவில்லை, வெற்றிக் களிப்பு இல்லை. வேதனை வேலாகி வாட்டி வதைக்குது ஐயோ! வீடு நாம் செல்கிறோம் வெற்றிக் கட்டுடனே, உடனிருந்தவன் எங்கே என ஊரார் கேட்டிடின், உரைத்திடுவது எதனை நாம்? உள்ளம் பதைத்திடுதே, வெட்டு அவன் காலில், வேலை முடியவில்லை. கட்டுக் கொண்டுவர இயலவில்லை அவனாலே; களத்துமேட்டருகே இருக்கின்றான் களைப்புடனே என்றன்றோ கூறவேண்டும். எப்படிக் கூறுவது? எண்ணும்போதே எனக்கு வெற்றிக் கட்டுகள் யாவும் வீண் என்று தோன்றிடுதே; அவனும் கட்டெடுத்து அணிவகுப்பிலே நடந்தால், அறுவடை விழாவாகும். அக மகிழ்வுக்கு எல்லையில்லை. இன்று அந்த நிலை இல்லை, என் செய்வோம், ஏங்குகிறோம் என்றெண்ணி நடக்கின்றார். அறுவடையில் வெற்றிபெற்றார். அதனாலேதான் அவர்க்கு மகிழ்ச்சி துளியும் இல்லை. மரத்தடிக் கிடப்போனோ மகிழ்ச்சியினால் துள்ளுகிறான்; அணிவகுத்து செல்வது பார் அறுவடையினை எடுத்து; அவர் எந்தன் உடன்பிறந்தார். அவருடன் நானுந்தான். இந்த வயலுக்கு உரியவன்! ஆம்! அவர் கொண்டு செல்லும் அந்த அறுவடை எமது உடைமை!! கட்டு எந்தன் தலைமீது இல்லை, கவலை இல்லை. கொண்டுசெல்லும் கட்டெல்லாம், என் கட்டு! என்று கூறும் உரிமை எனக்கும் உண்டு என்று கூறிக் களிப்புடன் இருக்கின்றான். புங்க மரத்தடியில். என்ன தம்பி, யோசனை? எந்த இடத்து வயலைப்பற்றி அண்ணன் இப்படி ஒரு படப்பிடிப்புக் காட்டுகிறான் என்று தானே யோசிக்கிறாய். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். நான் இப்போது எடுத்துக் காட்டியுள்ளபடியான எண்ணம், அவர்கள் கொண்டிருந்தனரோ இல்லையோ, நானறியேன், ஆனால், அந்தக் காட்சியைக் கண்டபோது என் மனதிலே இப்படியெல்லாம் தோன்றிற்று அது பல ஆண்டுகளுக்கு முன்பு! பத்து நாட்களுக்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட காட்சி என் மனதிலே கிளறிய எண்ணங்களை, மறுபடியும் நான் கொள்ளத்தக்க நிகழ்ச்சியைச் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிதான் என் தோல்வியும். நமது தோழர்களிலே ஐம்பது பேர் பெற்ற வெற்றியும்.<noinclude></noinclude> rt0u97jfshdr7afuyh8pq3mml0yatk7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/297 250 645624 1944044 1941208 2026-06-09T12:04:58Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|296||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> எனக்கு களிப்பு, வெற்றி அணிவகுப்புக் கண்டு. வெற்றி அணிவகுப்புக்கோ என் நிலைகண்டு வேதனை. அவர்கள் எனக்குக் களிப்பூட்டினர். நானோ அவர்களுக்கு கண் கசியும் நிலையைத்தான் தந்தேன். என் செய்வது தம்பி! நான் என் தம்பிகளிடமிருந்து பெறுவது அதிகம்; நான் அவர்களுக்குக் கொடுப்பது குறைவு! அதிலும் இம்முறை, நான் பெருமைப்படத்தக்க பெரு வெற்றி களைப் பெற்றுக் காட்டி, ஐம்பதின்மர் என்னை மகிழ்வித் தார்கள்; அரசியல் வட்டாரங்கள் பலவற்றையும் நான் பெருமிதம் நிரம்பிய பார்வையுடன் கண்டிட வழிசெய்து கொடுத்தனர்; ஆனால் நானோ, அவர்களும் எண்ணற்ற மற்றவர்களும், கண் கலங்கும் நிலையைத்தான் பெற்றுக் கொடுத்தேன். அதை எண்ணும்போதுதான், நான் வருத்தப்படுகிறேன், வெற்றி பெறவில்லை என்பதனால் அல்ல!! எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கத்தான்வேண்டும் என்பதில்லை, பூத்திருந்தால் போதும். எல்லோருமே வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தோல்லி ஏற்படக்கூடும். எதிர்பார்க்கவேண்டியது தான். ஆனால், என்முன் தாம் ஈட்டிய வெற்றிகளைக் கொண்டு வந்து காட்டிடும் எனதரும் தோழர்களுக்கு, நான் எதனையும் தர இயலாது போயினும்; என் தோல்வியின்மூலம் வேதனையை யாவது ஏற்படுத்தித் தராமல் இருந்திடக்கூடாதா என்று எண்ணுகிறேன். இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, கீழே செங்கற் பட்டுத் தொகுதியிலே வெற்றிபெற்ற நமது கழகத் தோழர் விசுவநாதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கவலை நிரம்பிய நிலையில்! வெற்றிபெற்ற இளைஞர்; பணபலம் மிகுந்த ஒருவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்; ஆயினும் விசாரத் துடன்தான் இருக்கிறார். என்னைக் கண்டதும், என்ன பேசுவது என்று புரியவில்லை; நான் பேசவைத்தேன்; அந்தப் பகுதி ஓட்டுகள் எப்படி, இந்தப் பகுதியில் வாய்ப்பு எப்படி என்று கிளறிக் கிளறிப் பேசவைத்தேன். மகிழ்ந்து உரையாட அவரால் முடியவில்லை. அவருக்கு உள்ள சங்கடத்தைக் கண்ட பிறகு தான், இதனை எழுத வந்தேன். தம்பி! இந்த நிலை, கடந்த ஒரு கிழமையாக இருக்கிறது. இனியும் இதுபோல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். அறுவடை வெற்றியுடன் முடிவுற்றதை<noinclude></noinclude> n4ocsub7afvc7kiply7f4okcm4knp76 1944162 1944044 2026-06-09T16:08:47Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|296||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> எனக்கு களிப்பு, வெற்றி அணிவகுப்புக் கண்டு. வெற்றி அணிவகுப்புக்கோ என் நிலைகண்டு வேதனை. அவர்கள் எனக்குக் களிப்பூட்டினர். நானோ அவர்களுக்கு கண் கசியும் நிலையைத்தான் தந்தேன். என் செய்வது தம்பி! நான் என் தம்பிகளிடமிருந்து பெறுவது அதிகம்; நான் அவர்களுக்குக் கொடுப்பது குறைவு! அதிலும் இம்முறை, நான் பெருமைப்படத்தக்க பெரு வெற்றி களைப் பெற்றுக் காட்டி, ஐம்பதின்மர் என்னை மகிழ்வித் தார்கள்; அரசியல் வட்டாரங்கள் பலவற்றையும் நான் பெருமிதம் நிரம்பிய பார்வையுடன் கண்டிட வழிசெய்து கொடுத்தனர்; ஆனால் நானோ, அவர்களும் எண்ணற்ற மற்றவர்களும், கண் கலங்கும் நிலையைத்தான் பெற்றுக் கொடுத்தேன். அதை எண்ணும்போதுதான், நான் வருத்தப்படுகிறேன், வெற்றி பெறவில்லை என்பதனால் அல்ல!! எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கத்தான்வேண்டும் என்பதில்லை, பூத்திருந்தால் போதும். எல்லோருமே வெற்றிபெற்றே தீரவேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தோல்லி ஏற்படக்கூடும். எதிர்பார்க்கவேண்டியது தான். ஆனால், என்முன் தாம் ஈட்டிய வெற்றிகளைக் கொண்டு வந்து காட்டிடும் எனதரும் தோழர்களுக்கு, நான் எதனையும் தர இயலாது போயினும்; என் தோல்வியின்மூலம் வேதனையை யாவது ஏற்படுத்தித் தராமல் இருந்திடக்கூடாதா என்று எண்ணுகிறேன். இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது, கீழே செங்கற் பட்டுத் தொகுதியிலே வெற்றிபெற்ற நமது கழகத் தோழர் விசுவநாதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கவலை நிரம்பிய நிலையில்! வெற்றிபெற்ற இளைஞர்; பணபலம் மிகுந்த ஒருவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்; ஆயினும் விசாரத் துடன்தான் இருக்கிறார். என்னைக் கண்டதும், என்ன பேசுவது என்று புரியவில்லை; நான் பேசவைத்தேன்; அந்தப் பகுதி ஓட்டுகள் எப்படி, இந்தப் பகுதியில் வாய்ப்பு எப்படி என்று கிளறிக் கிளறிப் பேசவைத்தேன். மகிழ்ந்து உரையாட அவரால் முடியவில்லை. அவருக்கு உள்ள சங்கடத்தைக் கண்ட பிறகு தான், இதனை எழுத வந்தேன். தம்பி! இந்த நிலை, கடந்த ஒரு கிழமையாக இருக்கிறது. இனியும் இதுபோல் இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை எழுதுகிறேன். அறுவடை வெற்றியுடன் முடிவுற்றதை<noinclude></noinclude> iavqoknmwxh4t1i61xgqx5165r68o9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/298 250 645625 1944045 1941209 2026-06-09T12:06:20Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||297}}{{Rule}}</noinclude>எண்ணி அகமகிழ்ச்சி கொள்ளவேண்டிய நேரத்தில், அண்ணன் தோற்றுபோனானே என்பதனையே எண்ணி எண்ணி ஏங்கிக் கிடப்பது சரியல்ல, முறையல்ல, தேவையில்லை, எனக்குப் பிடித்தமானதுமல்ல. நச்சுப்பூச்சி தீண்டியதனால் நிலைகுலைந்து, அரிவாள் காலிலே வீழ்ந்து வெட்டு ஏற்பட்டுவிட்டதால், அறுவடையே கெட்டுவிட்டது என்றா பொருள்! பெற்ற வெற்றிகளை எண்ணிப் பெருமிதம்கொண்டு, மாற்றார் கண்டு கலங்கிடும் விதமான வீரப் புன்னகையுடன் ஏறுநடைபோட்டு, அரிமா நோக்குடன் இருந்திடவேண்டிய வேளையில், என் தோல்வியையும், அதுபோன்றே அதிர்ச்சி தரத்தக்க வேறு பல தோல்விகளையும் எண்ணி ஏங்கிக் கிடப்பது நல்லதுமல்ல, என்னை மகிழச் செய்யும் வழியும் அதுவல்ல. நான் எங்கு இருந்துவிட்டு வருகிறேன் தெரியுமா, தம்பி! அதைச் சொல்கிறேன். பிறகேனும் என் மனப் போக்கின் முழுத் தன்மையை அறிந்துகொண்டு, அமைதிபெறும் முயற்சியில் ஈடுபடவேண்டுகிறேன். அரசியல் உலகு, அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், ஆக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புக்கள் எரிச்சலூட்டும் சம்பவங்கள், வெற்றிகள் தோல்விகள் யாவும் நிரம்பிய இடம். எல்லாத் துறைகளும் அவ்விதம்தான், என்பாய். ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும்விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும்; விசித்திரமான உலகு. விசித்திரமானது அரசியல் உலகு என்பதற்கு வேறெந்த எடுத்துக்காட்டும் வேண்டாம். நான் இப்போது எங்கு சென்று விட்டு வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன், கேளேன், அது போதும். பெங்களூர், நகரில் ஜெய்நகர் என்ற பகுதியில், ஜெய விலாஸ் என்ற இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்!! வேடிக்கை அல்ல, தம்பி! விசித்திரம், ஆனால் உண்மை! தோல்வி கிடைத்ததும் நான் சென்று தங்கியிருந்த இடம் ஜெயவிலாஸ் - ஜெய்நகர்!! போதுமா விசித்திரம். என்ன செய்துகொண்டிருந்தேன்? பலரும் வந்திருந்து எனக்கு ஆறுதல் கூற, அதைக்கேட்டுத் துயரத்தைத் துடைத்துக்<noinclude></noinclude> 1vaig0fbgk1qpq6pab1jo3on3gyk5zs 1944163 1944045 2026-06-09T16:10:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||297}}{{Rule}}</noinclude>எண்ணி அகமகிழ்ச்சி கொள்ளவேண்டிய நேரத்தில், அண்ணன் தோற்றுபோனானே என்பதனையே எண்ணி எண்ணி ஏங்கிக் கிடப்பது சரியல்ல, முறையல்ல, தேவையில்லை, எனக்குப் பிடித்தமானதுமல்ல. நச்சுப்பூச்சி தீண்டியதனால் நிலைகுலைந்து, அரிவாள் காலிலே வீழ்ந்து வெட்டு ஏற்பட்டுவிட்டதால், அறுவடையே கெட்டுவிட்டது என்றா பொருள்! பெற்ற வெற்றிகளை எண்ணிப் பெருமிதம்கொண்டு, மாற்றார் கண்டு கலங்கிடும் விதமான வீரப் புன்னகையுடன் ஏறுநடைபோட்டு, அரிமா நோக்குடன் இருந்திடவேண்டிய வேளையில், என் தோல்வியையும், அதுபோன்றே அதிர்ச்சி தரத்தக்க வேறு பல தோல்விகளையும் எண்ணி ஏங்கிக் கிடப்பது நல்லதுமல்ல, என்னை மகிழச் செய்யும் வழியும் அதுவல்ல. நான் எங்கு இருந்துவிட்டு வருகிறேன் தெரியுமா, தம்பி! அதைச் சொல்கிறேன். பிறகேனும் என் மனப் போக்கின் முழுத் தன்மையை அறிந்துகொண்டு, அமைதிபெறும் முயற்சியில் ஈடுபடவேண்டுகிறேன். அரசியல் உலகு, அற்புதங்கள், உற்பாதங்கள், அதிர்ச்சிகள், ஆக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள், எக்களிப்புக்கள் எரிச்சலூட்டும் சம்பவங்கள், வெற்றிகள் தோல்விகள் யாவும் நிரம்பிய இடம். எல்லாத் துறைகளும் அவ்விதம்தான், என்பாய். ஒரு மாறுபாடு உண்டு. மற்ற எந்தத் துறையினையும்விட அரசியல் துறையிலே எதிர்பாராத நிகழ்ச்சிகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் நிரம்ப ஏற்படும்; விசித்திரமான உலகு. விசித்திரமானது அரசியல் உலகு என்பதற்கு வேறெந்த எடுத்துக்காட்டும் வேண்டாம். நான் இப்போது எங்கு சென்று விட்டு வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன், கேளேன், அது போதும். பெங்களூர், நகரில் ஜெய்நகர் என்ற பகுதியில், ஜெய விலாஸ் என்ற இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு வருகிறேன்!! வேடிக்கை அல்ல, தம்பி! விசித்திரம், ஆனால் உண்மை! தோல்வி கிடைத்ததும் நான் சென்று தங்கியிருந்த இடம் ஜெயவிலாஸ் - ஜெய்நகர்!! போதுமா விசித்திரம். என்ன செய்துகொண்டிருந்தேன்? பலரும் வந்திருந்து எனக்கு ஆறுதல் கூற, அதைக்கேட்டுத் துயரத்தைத் துடைத்துக்<noinclude></noinclude> hz1tn6gkp8jtkhhn017504f3ydxtzzs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/299 250 645626 1944047 1941210 2026-06-09T12:09:06Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|298||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கொண்டு மன அமைதி பெற்றுக்கொண்டிருந்தேன்போலும் என்று எண்ணுகிறாய். அதுதான் இல்லை!! பலருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்று, வீடுகூட செல்லாமல் என்னோடு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் <b>தருமலிங்கம்</b> மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதிலும், என்னைப்போலவே காலில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் திருவண்ணாமலைத் <b>தோழர் ப. உ. சண்முகத்துக்கும், வேலூர் சாரதிக்கும்</b> ஆறுதல் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அவர்களுக்கு ஆறுதல் எதற்காகக் கூறினேன்? அவர்கள் தமது தோல்வியைப்பற்றித் துக்கம் துளைத்த நிலையில் இருந்ததால் என்கிறாயா? அதுதான் இல்லை! என்பொருட்டு அவர்கள் கொண்டிருந்த வேதனையைத் துடைத்து ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக அமைந்திருக்கும் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமடீஸ்வரர் சிலையினைக் காணவேண்டும் என்ற ஆவல் உண்டு. அந்த இடத்துக்கு அருகே கூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்த தில்லை. அழகிய சிறு குன்றின்மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான், கண்குளிரக் காண முடிந்தது. பெங்களூர் நகரிலிருந்து நூறுகல் தொலைவில் உள்ள சீரூர் <b>சிரவணபெலகோலா</b> என்பது. அங்குதான், வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின்மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு! பிறந்த மேனி! திறவாக் கண்கள், எனினும் கனிவு வழிகிறது! நின்ற நிலை! காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!! அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீலநிற வானம்! தன்னை மறந்த நிலையில் பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனதினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிடமுடியாத நிலைபெற்று இருக்கும், காட்சி கண்டாரே கருத்தறிவார்; கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை. காலடியில், புற்றுகள்! செடி கொடிகள்! செடி கொடிகள் கோமடீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன! அசையா நிலை! உணரா நிலை! மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடி கொடி படருவதுபற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடி கொடிகள் மட்டும் அல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள்! உடலைச் சுற்றிக்கொண்டுள்ளன! உணர்வு இல்லை! கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!!<noinclude></noinclude> ni5i8nkj9l1kgpd1qcw4sckpe4x8jok 1944164 1944047 2026-06-09T16:11:34Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|298||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கொண்டு மன அமைதி பெற்றுக்கொண்டிருந்தேன்போலும் என்று எண்ணுகிறாய். அதுதான் இல்லை!! பலருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். வெற்றிபெற்று, வீடுகூட செல்லாமல் என்னோடு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் <b>தருமலிங்கம்</b> மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்வதிலும், என்னைப்போலவே காலில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் திருவண்ணாமலைத் <b>தோழர் ப. உ. சண்முகத்துக்கும், வேலூர் சாரதிக்கும்</b> ஆறுதல் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அவர்களுக்கு ஆறுதல் எதற்காகக் கூறினேன்? அவர்கள் தமது தோல்வியைப்பற்றித் துக்கம் துளைத்த நிலையில் இருந்ததால் என்கிறாயா? அதுதான் இல்லை! என்பொருட்டு அவர்கள் கொண்டிருந்த வேதனையைத் துடைத்து ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாகவே எனக்கு, பேசாமலே பல கூறும் பேருருவாக அமைந்திருக்கும் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஈடற்ற எடுத்துக்காட்டாக விளங்கிடும் கோமடீஸ்வரர் சிலையினைக் காணவேண்டும் என்ற ஆவல் உண்டு. அந்த இடத்துக்கு அருகே கூடச் சென்றிருப்பேன்; காண வாய்ப்பும் ஓய்வும் கிடைத்த தில்லை. அழகிய சிறு குன்றின்மீது அமைந்திருக்கும் பேசாப் பேருருவை இம்முறைதான், கண்குளிரக் காண முடிந்தது. பெங்களூர் நகரிலிருந்து நூறுகல் தொலைவில் உள்ள சீரூர் <b>சிரவணபெலகோலா</b> என்பது. அங்குதான், வெளிநாட்டு விற்பன்னர்களும் கண்டு வியந்திடும் அந்தச் சிற்பம் இருக்கிறது, குன்றின்மீது. அறுபது அடி உயரம் அந்தப் பேருரு! பிறந்த மேனி! திறவாக் கண்கள், எனினும் கனிவு வழிகிறது! நின்ற நிலை! காண்போரை நின்ற நிலையினராக்கிவிடும் கவர்ச்சி!! அந்தப் பேருருவுக்குப் பின்னணியாக, நீலநிற வானம்! தன்னை மறந்த நிலையில் பிறந்த மேனியாய் நிற்கும் அந்தப் பேருரு, மனதினை ஓரிடத்தில் பதியவைத்து, மற்ற எதனையும் எண்ணிடமுடியாத நிலைபெற்று இருக்கும், காட்சி கண்டாரே கருத்தறிவார்; கண்டதனை விளக்கிட இயலாது; உண்மை. காலடியில், புற்றுகள்! செடி கொடிகள்! செடி கொடிகள் கோமடீஸ்வரரின் காலிலும் கரத்திலும் மார்பிலும் படருகின்றன! அசையா நிலை! உணரா நிலை! மனம் ஓரிடத்திலே முழுக்க முழுக்க ஒன்றிவிட்டதனால், செடி கொடி படருவதுபற்றிய உணர்ச்சியே எழவில்லை. செடி கொடிகள் மட்டும் அல்ல, தம்பி! சீறிடும் பாம்புகள்! உடலைச் சுற்றிக்கொண்டுள்ளன! உணர்வு இல்லை! கனிவும் கவர்ச்சியும் மிக்கதோர் நிலையில் பேருரு!!<noinclude></noinclude> tcj6m78kxr30vc36kh5oxvql2wzc9lr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/300 250 645628 1944050 1941211 2026-06-09T12:11:54Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||299}}{{Rule}}</noinclude> இவ்வளவையும், இதற்கு மேலாகவும், கல்லுரு காட்டி நிற்கிறது. கண்டு கருத்துப் பெறாதார், நடமாடும் கல்லுரு என்றே கூறலாம். உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை! நெருங்கி நின்று பார்த்தேன்! தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது. உறுதி ஒன்றில் இலயித்துவிட்டால் வேறு எந்த உணர்வும் தீண்டமுடியாத நிலை பெறும் இயல்பு, பேருரு காட்டிடும் அரும்பெரும் பாடம். ஆமாம், தம்பி! தேர்தலிலே தோல்வி என்றால், நெஞ்சிலே துக்கம் துளைக்கிறது என்கிறோமே, பாம்பு சுருட்டிக்கொள்கிறது உடலில், மனம் ஒன்றினிலே இலயித்துப் போனதால், அரவம் தீண்டுவதுபற்றி உணர்வே இல்லை; கண்ட நான், எண்ணிக்கொண்டேன், அந்த உறுதிவேண்டும் ஒன்றின் மனதைப் பதியவைத்துவிட்டால், வேறு உணர்வுகள் நம்மைத் தீண்டிடும் வலிவற்றுப்போகும்நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன். எனக்காக மட்டுமல்ல, தம்பி! உனக்கும் அந்த நிலை, உறுதி, இருந்திட வேண்டும் என்று விரும்பினேன். அந்த எண்ணத்துடன்தான் சிரவணபெலகோலாவை விட்டுத் திரும்பினேன். இங்கே, நீ இன்னமும் என்பொருட்டு ஏங்கிக்கிடப்பது அறியும்போது, என் மனம் எப்படி இருக்கும்? எண்ணிப்பார், தம்பி!! குன்றைவிட்டுக் கீழே வந்தால், ஒரு ஊர்வலம் செல்கிறது; வெற்றி ஊர்வலம்! பிரஜா - சோμயலிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர், <b>சிவப்பா</b> என்பவர், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அந்த ஊர்வலம்!! பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது! பெங்களூர் திரும்பிவந்துகொண்டிருந்தோம், மற்றோர் ஆரவாரமான ஊர்வலம், சுதந்திரக்கட்சியினர் ஒருவர் <b>அந்தானப்பா</b> என்றார்கள், அவருடைய வெற்றி ஊர்வலம். எங்கள் மோட்டார் அதனைக் கடந்து செல்ல இயலவில்லை; சரி, என்று ஊர்வலத்திலேயே சென்றோம்! ஆகவே அண்ணன் வெற்றிபெற்றிருந்தால், ஊர்வலம் நடந்திருக்குமே என்றுகூட நீ ஆயாசப்படத் தேவையில்லை - ஊர்வலமாகச் சென்றேன்!<noinclude></noinclude> c0l7q7ebrjqmqiuljgrs6aqs2ksnpwy 1944165 1944050 2026-06-09T16:13:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||299}}{{Rule}}</noinclude> இவ்வளவையும், இதற்கு மேலாகவும், கல்லுரு காட்டி நிற்கிறது. கண்டு கருத்துப் பெறாதார், நடமாடும் கல்லுரு என்றே கூறலாம். உற்று உற்றுப் பார்த்தேன், அப்பேருருவினை! நெருங்கி நின்று பார்த்தேன்! தொலைவிலிருந்து பார்த்தேன். பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டிருக்கும் எண்ணம் எழுகிறது. உறுதி ஒன்றில் இலயித்துவிட்டால் வேறு எந்த உணர்வும் தீண்டமுடியாத நிலை பெறும் இயல்பு, பேருரு காட்டிடும் அரும்பெரும் பாடம். ஆமாம், தம்பி! தேர்தலிலே தோல்வி என்றால், நெஞ்சிலே துக்கம் துளைக்கிறது என்கிறோமே, பாம்பு சுருட்டிக்கொள்கிறது உடலில், மனம் ஒன்றினிலே இலயித்துப் போனதால், அரவம் தீண்டுவதுபற்றி உணர்வே இல்லை; கண்ட நான், எண்ணிக்கொண்டேன், அந்த உறுதிவேண்டும் ஒன்றின் மனதைப் பதியவைத்துவிட்டால், வேறு உணர்வுகள் நம்மைத் தீண்டிடும் வலிவற்றுப்போகும்நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்பினேன். எனக்காக மட்டுமல்ல, தம்பி! உனக்கும் அந்த நிலை, உறுதி, இருந்திட வேண்டும் என்று விரும்பினேன். அந்த எண்ணத்துடன்தான் சிரவணபெலகோலாவை விட்டுத் திரும்பினேன். இங்கே, நீ இன்னமும் என்பொருட்டு ஏங்கிக்கிடப்பது அறியும்போது, என் மனம் எப்படி இருக்கும்? எண்ணிப்பார், தம்பி!! குன்றைவிட்டுக் கீழே வந்தால், ஒரு ஊர்வலம் செல்கிறது; வெற்றி ஊர்வலம்! பிரஜா - சோμயலிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர், <b>சிவப்பா</b> என்பவர், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அந்த ஊர்வலம்!! பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது! பெங்களூர் திரும்பிவந்துகொண்டிருந்தோம், மற்றோர் ஆரவாரமான ஊர்வலம், சுதந்திரக்கட்சியினர் ஒருவர் <b>அந்தானப்பா</b> என்றார்கள், அவருடைய வெற்றி ஊர்வலம். எங்கள் மோட்டார் அதனைக் கடந்து செல்ல இயலவில்லை; சரி, என்று ஊர்வலத்திலேயே சென்றோம்! ஆகவே அண்ணன் வெற்றிபெற்றிருந்தால், ஊர்வலம் நடந்திருக்குமே என்றுகூட நீ ஆயாசப்படத் தேவையில்லை - ஊர்வலமாகச் சென்றேன்!<noinclude></noinclude> 39ximnv4bq5c4znrmyy14tfkplozx0m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/301 250 645629 1944056 1941212 2026-06-09T12:18:30Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|300||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதுமட்டுந்தான் என்று எண்ணாதே, பெரிதும் கன்னடத் தோழர்களே அதிகம் உள்ள மாவள்ளி எனும் பகுதியில் உள்ள தி. மு. கழகக் கிளையினர், பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் எங்களுக்கு ஒரு தேனீர் விருந்து அளித்தனர். பார்ப்பவர்களைப் பிரமிக்கவைக்கும் <b>சிவசமுத்திரம் நீர்விழ்ச்சியை</b> நான் பல தடவை பார்த்திருக்கிறேன். என்றாலும், மறுபடியும் பார்ப்பதில் எனக்கு விருப்பம். இம்முறையும் கண்டேன். பாறைகளையும் கற்குவியல்களையும் குடைந்து கொண்டும், தழுவிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும், பல்வேறு பக்கங்களிலும் இருந்து பாய்ந்துவரும், காவிரி, நீர்வீழ்ச்சியாகிடும் இடம், சிவசமுத்திரம், சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். இது பல சிற்றாறுகள் ஒரு பேருருவாகி, இத்தனை பெரிய உருவை நான் தாங்கவல்லேன் அல்லேன் என்று காடும் கற்குவியலும் நிறைந்த மலைமுகடு கூறிட, செல்ல எனக்கா இடமில்லை என்று கூறிச் சினந்து கீழே பாயும் காட்சியே, சிவசமுத்திரம் நீர்விழ்ச்சி, மலைமுகடு முழுவதிலும், இங்கும் அங்குமாகச் சலசலவென ஓடிவரும். இந்தக் காவிரியா, மலை அதிர, காண்போர் மனம் அதிர நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துளது என்று எவரும் வியப்படைவர். அதனைக் காணும்போதெல்லாம் எனக்கு. சிறுகச்சிறுக மக்களின் உணர்ச்சி பீறிட்டுக் கிளப்பிடின் ஓர்நாள், பெரிய நீர்வீழ்ச்சி போன்றதோர் உருவம் கொள்ளும் என்ற எண்ணம் தோன்றும். இம்முறை அந்த எண்ணம் மிக அழுத்தமாக ஏற்பட்டது. தம்பி! இப்படி நான் சில நாட்கள் கழித்துவிட்டு உன்னுடன் உரையாடி மகிழ, பணியாற்றி மகிழ்ச்சிபெற வந்துள்ளேன். பெற்ற வெற்றிகளின் பொருள் எத்தன்மையது என்பதனை நாடறியச் செய்திடும் நற்பணியிலே, நாம் இனி ஈடுபடுதல்வேண்டும். சிலர் - என்னையும் சேர்த்தே கூறுகிறேன் - தோற்றனர் - அதனால் என்ன? தம்பி. <b>கருணாநிதி</b> கடற்கரைக் கூட்டத்திலே சுட்டிக்காட்டியதுபோல, அந்தத் தோல்வியால் மூண்டிடும் வேதனை, புதிய உறுதியுடன் பணியாற்றி, பழி துடைத்துக்கொள்வோம் என்று சூள் உரைத்துப் பணியாற்றி, இப்போது பெற்ற வெற்றியினைவிட, அளவிலும் வகையிலும் தரம் உள்ளதான வெற்றியைப் பெற்றளிக்கும் ஆற்றலை நமக்குத் தருவதாக அமையவேண்டும். ஐயோ தோற்றுப் போனார்களே! - என்று அழுத கண்ணினராக இருத்தல்கூடாது. ஆஹா! தோற்கடித்தார்களல்லவா? என்ற கோபம் கொப்பளிக்கும் கண்ணினராதல்வேண்டும், வெற்றி ஈட்டித் தருவோம்!<noinclude></noinclude> kc3lnov0160w3xntyyy4lzdgjo4v7jw 1944166 1944056 2026-06-09T16:14:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|300||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதுமட்டுந்தான் என்று எண்ணாதே, பெரிதும் கன்னடத் தோழர்களே அதிகம் உள்ள மாவள்ளி எனும் பகுதியில் உள்ள தி. மு. கழகக் கிளையினர், பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் எங்களுக்கு ஒரு தேனீர் விருந்து அளித்தனர். பார்ப்பவர்களைப் பிரமிக்கவைக்கும் <b>சிவசமுத்திரம் நீர்விழ்ச்சியை</b> நான் பல தடவை பார்த்திருக்கிறேன். என்றாலும், மறுபடியும் பார்ப்பதில் எனக்கு விருப்பம். இம்முறையும் கண்டேன். பாறைகளையும் கற்குவியல்களையும் குடைந்து கொண்டும், தழுவிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும், பல்வேறு பக்கங்களிலும் இருந்து பாய்ந்துவரும், காவிரி, நீர்வீழ்ச்சியாகிடும் இடம், சிவசமுத்திரம், சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். இது பல சிற்றாறுகள் ஒரு பேருருவாகி, இத்தனை பெரிய உருவை நான் தாங்கவல்லேன் அல்லேன் என்று காடும் கற்குவியலும் நிறைந்த மலைமுகடு கூறிட, செல்ல எனக்கா இடமில்லை என்று கூறிச் சினந்து கீழே பாயும் காட்சியே, சிவசமுத்திரம் நீர்விழ்ச்சி, மலைமுகடு முழுவதிலும், இங்கும் அங்குமாகச் சலசலவென ஓடிவரும். இந்தக் காவிரியா, மலை அதிர, காண்போர் மனம் அதிர நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துளது என்று எவரும் வியப்படைவர். அதனைக் காணும்போதெல்லாம் எனக்கு. சிறுகச்சிறுக மக்களின் உணர்ச்சி பீறிட்டுக் கிளப்பிடின் ஓர்நாள், பெரிய நீர்வீழ்ச்சி போன்றதோர் உருவம் கொள்ளும் என்ற எண்ணம் தோன்றும். இம்முறை அந்த எண்ணம் மிக அழுத்தமாக ஏற்பட்டது. தம்பி! இப்படி நான் சில நாட்கள் கழித்துவிட்டு உன்னுடன் உரையாடி மகிழ, பணியாற்றி மகிழ்ச்சிபெற வந்துள்ளேன். பெற்ற வெற்றிகளின் பொருள் எத்தன்மையது என்பதனை நாடறியச் செய்திடும் நற்பணியிலே, நாம் இனி ஈடுபடுதல்வேண்டும். சிலர் - என்னையும் சேர்த்தே கூறுகிறேன் - தோற்றனர் - அதனால் என்ன? தம்பி. <b>கருணாநிதி</b> கடற்கரைக் கூட்டத்திலே சுட்டிக்காட்டியதுபோல, அந்தத் தோல்வியால் மூண்டிடும் வேதனை, புதிய உறுதியுடன் பணியாற்றி, பழி துடைத்துக்கொள்வோம் என்று சூள் உரைத்துப் பணியாற்றி, இப்போது பெற்ற வெற்றியினைவிட, அளவிலும் வகையிலும் தரம் உள்ளதான வெற்றியைப் பெற்றளிக்கும் ஆற்றலை நமக்குத் தருவதாக அமையவேண்டும். ஐயோ தோற்றுப் போனார்களே! - என்று அழுத கண்ணினராக இருத்தல்கூடாது. ஆஹா! தோற்கடித்தார்களல்லவா? என்ற கோபம் கொப்பளிக்கும் கண்ணினராதல்வேண்டும், வெற்றி ஈட்டித் தருவோம்!<noinclude></noinclude> cn4nbyddk9fjk2mp3vkhydhkn4a3ej7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/302 250 645630 1944060 1941213 2026-06-09T12:26:19Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||301}}{{Rule}}</noinclude>வேதனையினின்றும் ஓர் புதிய வலிவு பெறுவோம்! என்று உணர்ச்சி பெறவேண்டும். நம்மிலே சிலருடைய தோல்வி, மற்றவர்களைச் செயலற்றவர்களாக்குவதற்கு அல்ல, நமது செயலிலே செம்மையும், திறமும், பக்குவமும், பண்பும் மிகுந்திடச் செய்வற்கேயாகும் என்பதனை உணர்தல்வேண்டும். உமது தலைவர் என்ன ஆனார்? பார் - என்று மாற்றார் எழுப்பும் ஏளனம் - எரிச்சலை மூட்டினால் மட்டும் பலன் இல்லை, தம்பி! வீழ்த்திவிட்டீர்கள் இம்முறை, இனி என்றென்றும் அதுபோல் நேரிட முடியாத நிலைக்குக் கழகத்தின் வலிவினை வளர்த்துக் காட்டுகிறோம், பாருங்கள் என்று அறைகூவல் எழுப்பவேண்டும். நமக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கான காரணங்களை - தனிப்பட்டவர்கள்மீது ஐயுறவு கொள்ளாமல் - விருப்பு வெறுப்புக் காட்டாமல் - நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எப்படித் திருத்தலாம், முறைப்படுத்தலாம் என்ற நோக்குடன். என்னைத் தோற்கடித்த காஞ்சிபுரம் தொகுதியையேகூட எடுத்துப்பார். தம்பி! நான் இங்கு எவருக்கும், எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை; என்னால் எவருக்கும் எந்தவிதமான இடர்ப்பாடும் ஏற்பட்டதில்லை. என் பணியிலே மாசு கற்பித்துப் பேசக்கூட அதிகம் பேர் இங்கு இல்லை? எனினும் என்னைப் பெரும்பான்மையினர் ஆதரிக்க மறுத்துவிட்டார்கள். ஏன்? பணம் வெள்ளம்போல் பாய்ந்தது என்கிறார்கள். இருக்கட்டுமே! அதனையும் மீறி அல்லவா, மக்களுக்கு என்னிடம் அன்பு எழவேண்டும். இனி அதே நோக்கத்துடன் அல்லவா, நான் பணியாற்றவேண்டும். முறைகேடுகள். ஒழுங்கீனங்கள், சதிச்செயல்கள், பலப்பல நடைபெற்றன; ஊரறியும் உலகறியும். ஆனால் இவைகளை எல்லாம் முறியடிக்கத் தக்கவிதமாக அல்லவா, என் தொண்டு மக்கள் உள்ளத்தில் என்பால் அன்பு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது ஏற்பட வழி என்ன? என்பதுதானே நான் ஆராய வேண்டிய பிரச்சினை, விஷம் என்று தெரிந்தால், அதனை தங்கக் கோப்பையிலே ஊற்றிக்கொடுத்தாலும், பருகிட எவரேனும் இசைவார்களா? இசையமாட்டார்கள். அதுபோலவே, காங்கிரஸ்<noinclude></noinclude> k8tn4pf225uzdoh5oawesxipy6oee2k 1944168 1944060 2026-06-09T16:16:27Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||301}}{{Rule}}</noinclude>வேதனையினின்றும் ஓர் புதிய வலிவு பெறுவோம்! என்று உணர்ச்சி பெறவேண்டும். நம்மிலே சிலருடைய தோல்வி, மற்றவர்களைச் செயலற்றவர்களாக்குவதற்கு அல்ல, நமது செயலிலே செம்மையும், திறமும், பக்குவமும், பண்பும் மிகுந்திடச் செய்வற்கேயாகும் என்பதனை உணர்தல்வேண்டும். உமது தலைவர் என்ன ஆனார்? பார் - என்று மாற்றார் எழுப்பும் ஏளனம் - எரிச்சலை மூட்டினால் மட்டும் பலன் இல்லை, தம்பி! வீழ்த்திவிட்டீர்கள் இம்முறை, இனி என்றென்றும் அதுபோல் நேரிட முடியாத நிலைக்குக் கழகத்தின் வலிவினை வளர்த்துக் காட்டுகிறோம், பாருங்கள் என்று அறைகூவல் எழுப்பவேண்டும். நமக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கான காரணங்களை - தனிப்பட்டவர்கள்மீது ஐயுறவு கொள்ளாமல் - விருப்பு வெறுப்புக் காட்டாமல் - நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எப்படித் திருத்தலாம், முறைப்படுத்தலாம் என்ற நோக்குடன். என்னைத் தோற்கடித்த காஞ்சிபுரம் தொகுதியையேகூட எடுத்துப்பார். தம்பி! நான் இங்கு எவருக்கும், எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை; என்னால் எவருக்கும் எந்தவிதமான இடர்ப்பாடும் ஏற்பட்டதில்லை. என் பணியிலே மாசு கற்பித்துப் பேசக்கூட அதிகம் பேர் இங்கு இல்லை? எனினும் என்னைப் பெரும்பான்மையினர் ஆதரிக்க மறுத்துவிட்டார்கள். ஏன்? பணம் வெள்ளம்போல் பாய்ந்தது என்கிறார்கள். இருக்கட்டுமே! அதனையும் மீறி அல்லவா, மக்களுக்கு என்னிடம் அன்பு எழவேண்டும். இனி அதே நோக்கத்துடன் அல்லவா, நான் பணியாற்றவேண்டும். முறைகேடுகள். ஒழுங்கீனங்கள், சதிச்செயல்கள், பலப்பல நடைபெற்றன; ஊரறியும் உலகறியும். ஆனால் இவைகளை எல்லாம் முறியடிக்கத் தக்கவிதமாக அல்லவா, என் தொண்டு மக்கள் உள்ளத்தில் என்பால் அன்பு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது ஏற்பட வழி என்ன? என்பதுதானே நான் ஆராய வேண்டிய பிரச்சினை, விஷம் என்று தெரிந்தால், அதனை தங்கக் கோப்பையிலே ஊற்றிக்கொடுத்தாலும், பருகிட எவரேனும் இசைவார்களா? இசையமாட்டார்கள். அதுபோலவே, காங்கிரஸ்<noinclude></noinclude> mzwb18f2amnglst88aqxnqdxtwqe6bx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/303 250 645631 1944063 1941214 2026-06-09T12:28:52Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|302||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுப்பது விஷம் குடிப்பதற்குச் சமானம் என்ற உணர்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்குமானால், பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகக் காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு இடம் அளிக்கச் சம்மதித்து இருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. எனவே, மக்களிடம், காங்கிரஸ் ஆதிக்கம் அறவே கூடாது என்ற எண்ணம், இன்னும் அழுத்தமாக ஏற்பட வேண்டும். நமது பிரசாரம் மேலும் செம்மைப்படவேண்டும். என் தொகுதி நிலைமையைக்கொண்டு, பொதுவாகச் சொல்கிறேன்; நாம் இதுவரையில், ஊர் நடுவே உள்ள திடல்கள், ஊர்க் கோடியில் உள்ள திடல்கள், இங்கு மட்டுமே கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம். நெடுஞ்சாலைகளுக்கு இருமருங்கிலும் உள்ள தெருக்களில் நமது கூட்டங்கள் அதிகமாக நடப்பதில்லை. கூட்டம் அளவில் பெரிதாக இருக்காது. அலங்கார ஏற்பாடுகள் இராது என்ற எண்ணத்தினாலும் திடலில் கூட்டம் நடந்தால், எல்லாத் தெருக்களிலும் இருந்து மக்கள் வந்து கூடுவார்கள் என்ற நினைப்பிலும், ஒவ்வொரு நகரத்திலும் பல பகுதிகளை நாம் கூட்டம் நடத்தாமலே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். எனவே அங்கு அரசியல் விழிப்புணர்ச்சி, புத்துணர்ச்சி மிகமிகக் குறைவாகி, எப்போதோ எக்காரணத்தாலோ ஏற்பட்டுவிட்ட உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. நடந்ததைக் கூறுகிறேன். ஒரு நெசவாளியைக் கண்டேன். அவர், "நான் காங்கிரஸில் நீண்ட காலமாக இருப்பவன். ஆகவே நான் எப்படி உங்களுக்காக மாற முடியும்?" என்று கேட்டார். கோபமாக அல்ல, வெறுப்பாக அல்ல; இயற்கையாக. மாறமுடியாது என்று கூறுகிறீரே, ஐயா! நீங்கள் பற்றுக் காட்டுகிற, காங்கிரசே, மாறிவிட்டதே - கொள்கையில் குணத்தில்; கண்டவர்கள் கூடிக் காங்கிரசைக் கெடுத்துவிட்டார்களே; கெட்டுப்போன பிறகும், காங்கிரசை நான் ஆதரிக்காமல் இருக்கமுடியாது என்கிறீரே, நியாயமா? என்று கேட்டேன். தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இது. ஓட்டு வாங்க நான் சாமர்த்தியமாகப் பேசுகிறேன் என்றுதான், அந்த நெசவாளி அந்த நேரத்திலே எண்ணிக்கொண் டிருந்திருப்பாரே தவிர, யோசித்துப் பார்த்திருக்கமாட்டார். தேர்தல் காலத்துப் பேச்சு, நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மக்கள் கருதமாட்டார்கள். ஆனால், சாதாரண<noinclude></noinclude> j91hp2lb7qt7n2bmpz476eto98tylky 1944169 1944063 2026-06-09T16:17:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|302||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுப்பது விஷம் குடிப்பதற்குச் சமானம் என்ற உணர்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்குமானால், பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகக் காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு இடம் அளிக்கச் சம்மதித்து இருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. எனவே, மக்களிடம், காங்கிரஸ் ஆதிக்கம் அறவே கூடாது என்ற எண்ணம், இன்னும் அழுத்தமாக ஏற்பட வேண்டும். நமது பிரசாரம் மேலும் செம்மைப்படவேண்டும். என் தொகுதி நிலைமையைக்கொண்டு, பொதுவாகச் சொல்கிறேன்; நாம் இதுவரையில், ஊர் நடுவே உள்ள திடல்கள், ஊர்க் கோடியில் உள்ள திடல்கள், இங்கு மட்டுமே கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம். நெடுஞ்சாலைகளுக்கு இருமருங்கிலும் உள்ள தெருக்களில் நமது கூட்டங்கள் அதிகமாக நடப்பதில்லை. கூட்டம் அளவில் பெரிதாக இருக்காது. அலங்கார ஏற்பாடுகள் இராது என்ற எண்ணத்தினாலும் திடலில் கூட்டம் நடந்தால், எல்லாத் தெருக்களிலும் இருந்து மக்கள் வந்து கூடுவார்கள் என்ற நினைப்பிலும், ஒவ்வொரு நகரத்திலும் பல பகுதிகளை நாம் கூட்டம் நடத்தாமலே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். எனவே அங்கு அரசியல் விழிப்புணர்ச்சி, புத்துணர்ச்சி மிகமிகக் குறைவாகி, எப்போதோ எக்காரணத்தாலோ ஏற்பட்டுவிட்ட உணர்ச்சி மட்டுமே இருக்கிறது. நடந்ததைக் கூறுகிறேன். ஒரு நெசவாளியைக் கண்டேன். அவர், "நான் காங்கிரஸில் நீண்ட காலமாக இருப்பவன். ஆகவே நான் எப்படி உங்களுக்காக மாற முடியும்?" என்று கேட்டார். கோபமாக அல்ல, வெறுப்பாக அல்ல; இயற்கையாக. மாறமுடியாது என்று கூறுகிறீரே, ஐயா! நீங்கள் பற்றுக் காட்டுகிற, காங்கிரசே, மாறிவிட்டதே - கொள்கையில் குணத்தில்; கண்டவர்கள் கூடிக் காங்கிரசைக் கெடுத்துவிட்டார்களே; கெட்டுப்போன பிறகும், காங்கிரசை நான் ஆதரிக்காமல் இருக்கமுடியாது என்கிறீரே, நியாயமா? என்று கேட்டேன். தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இது. ஓட்டு வாங்க நான் சாமர்த்தியமாகப் பேசுகிறேன் என்றுதான், அந்த நெசவாளி அந்த நேரத்திலே எண்ணிக்கொண் டிருந்திருப்பாரே தவிர, யோசித்துப் பார்த்திருக்கமாட்டார். தேர்தல் காலத்துப் பேச்சு, நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மக்கள் கருதமாட்டார்கள். ஆனால், சாதாரண<noinclude></noinclude> 9q8nh3qnxsgi6p5t9hdk59fa1iz9vhd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/304 250 645632 1944067 1941215 2026-06-09T12:31:51Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||303}}{{Rule}}</noinclude>காலத்திலே, இந்த வாதத்தை, எவ்வளவு அழுத்தக்காரர் கேட்டாலும், மனம் அசைந்தே தீரும். அதற்கு நாம், நமது கூட்டங்களை, ஒவ்வொரு நகரத்திலும், எந்தப் பகுதியையும் ஒதுக்காமல், எல்லாப் பகுதி மக்களும் கேட்டுப் பயன்பெறத் தக்கவிதத்திலே நடத்தவேண்டும். காஞ்சிபுரம் நகரில் எனக்கு ஓட்டுகள் குறைவாகக் கிடைத்த பகுதிகள் யாவும், நமது கழகக் கூட்டங்கள் தொடர்ந்து சாதாரண காலத்தில் அதிகமான அளவில் நடத்தப்படாத இடங்கள். இங்கெல்லாம், காங்கிரஸ் கூட்டங்களும், கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டங்களும்தான் பரவலாக நடந்திருக்கின்றன. ஓட்டுகள் கிடைத்துள்ள வகையை ஆராய்ந்து பார்க்கும் போது, சென்ற தேர்தலின்போது கழகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்த பல இடங்களில். காங்கிரசுக்கு அதற்கு அடுத்தபடி யாகவும், கம்யூனிஸ்டுக்கு மூன்றாவதாகவும் ஓட்டுகள் கிடைத்தன. இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகள், கழகத்துக்குக் கிடைத்ததைவிட அதிகம்; எந்த முறையில் என்றால் முன்பு காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுக்கும் தனித்தனியே கிடைத்த வாக்கு களின் 'கூட்டு', இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதெல்லாம் காரணம் அல்ல; பல இலட்சம் செலவிட்டார்கள் - என்று கூறுகிறார்கள். ஒன்று கூறுவேன் நமது கழகத் தோழர்களுக்கு, பணம் பல இலட்சம் செலவிட்டுத்தான் காங்கிரஸ் தோற்கடித்தது என்றால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எத்தனை முறை இதுபோல பல இலட்சங்கள் செலவிட முடியும்? எத்தனை இடங்களில் செலவிட முடியும்? எத்தனை காலத்துக்கு இது நடக்கும்? எனவே, நச்சுப்பூச்சி தீண்டிய கதை போலாகுமே தவிர, நிரந்தரமான பலத்தை ஒரு கட்சிக்குக் கொடுத்துவிடாது. எனவே, நாம் பணத்தைக் கண்டு பயம்கொள்ளத் தேவையில்லை. முறையாக, முன்னேற்பாட்டுடன் வேலை செய்தால், நிச்சய மாகப் பணபலத்தையும் தோற்கடிக்க முடியும். அதற்கு, என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பும் திறமையும் கொண்ட தோழர்கள், நகரின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கவேண்டும். வதந்திகளுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரிந்த தெளிவுள்ளவர்கள் இந்தத்<noinclude></noinclude> ng00omw5fmvgxjthbk2qr7wgy4wbrt0 1944170 1944067 2026-06-09T16:20:01Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||303}}{{Rule}}</noinclude>காலத்திலே, இந்த வாதத்தை, எவ்வளவு அழுத்தக்காரர் கேட்டாலும், மனம் அசைந்தே தீரும். அதற்கு நாம், நமது கூட்டங்களை, ஒவ்வொரு நகரத்திலும், எந்தப் பகுதியையும் ஒதுக்காமல், எல்லாப் பகுதி மக்களும் கேட்டுப் பயன்பெறத் தக்கவிதத்திலே நடத்தவேண்டும். காஞ்சிபுரம் நகரில் எனக்கு ஓட்டுகள் குறைவாகக் கிடைத்த பகுதிகள் யாவும், நமது கழகக் கூட்டங்கள் தொடர்ந்து சாதாரண காலத்தில் அதிகமான அளவில் நடத்தப்படாத இடங்கள். இங்கெல்லாம், காங்கிரஸ் கூட்டங்களும், கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டங்களும்தான் பரவலாக நடந்திருக்கின்றன. ஓட்டுகள் கிடைத்துள்ள வகையை ஆராய்ந்து பார்க்கும் போது, சென்ற தேர்தலின்போது கழகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்த பல இடங்களில். காங்கிரசுக்கு அதற்கு அடுத்தபடி யாகவும், கம்யூனிஸ்டுக்கு மூன்றாவதாகவும் ஓட்டுகள் கிடைத்தன. இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகள், கழகத்துக்குக் கிடைத்ததைவிட அதிகம்; எந்த முறையில் என்றால் முன்பு காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுக்கும் தனித்தனியே கிடைத்த வாக்கு களின் 'கூட்டு', இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதெல்லாம் காரணம் அல்ல; பல இலட்சம் செலவிட்டார்கள் - என்று கூறுகிறார்கள். ஒன்று கூறுவேன் நமது கழகத் தோழர்களுக்கு, பணம் பல இலட்சம் செலவிட்டுத்தான் காங்கிரஸ் தோற்கடித்தது என்றால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எத்தனை முறை இதுபோல பல இலட்சங்கள் செலவிட முடியும்? எத்தனை இடங்களில் செலவிட முடியும்? எத்தனை காலத்துக்கு இது நடக்கும்? எனவே, நச்சுப்பூச்சி தீண்டிய கதை போலாகுமே தவிர, நிரந்தரமான பலத்தை ஒரு கட்சிக்குக் கொடுத்துவிடாது. எனவே, நாம் பணத்தைக் கண்டு பயம்கொள்ளத் தேவையில்லை. முறையாக, முன்னேற்பாட்டுடன் வேலை செய்தால், நிச்சய மாகப் பணபலத்தையும் தோற்கடிக்க முடியும். அதற்கு, என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பும் திறமையும் கொண்ட தோழர்கள், நகரின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கவேண்டும். வதந்திகளுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரிந்த தெளிவுள்ளவர்கள் இந்தத்<noinclude></noinclude> dfgnzozqxbx2upcw9omy47goz3doagc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/305 250 645633 1944069 1941216 2026-06-09T12:35:24Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|304||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>துறையிலே பணிபுரிந்தால் பணபலத்தை உருக்குலைக்க முடியும். நச்சுப்பூச்சி நாம் ஏமாந்த நேரத்திலேதான் தீண்டும். பணபலமும் அப்படித்தான். பாம்பினைப் பழுதை என்றோ, பழுதையைப் பாம்பு என்றோ கொண்டிடல் கூடாது. திட்ட வட்டமான தகவல் சேகரிப்பு இதற்கு அடிப்படையாகத் தேவை. பணம் பெற்றுக்கொண்டாலும், அதற்காக 'சத்தியம்' செய்தாலும், அது தம்மைக் கட்டுப்படுத்திவிடத் தேவையில்லை என்ற நிலை, சாமான்யர்களுக்கும், குறிப்பாகத் தாய்மார்களுக்கும் சுலபத்தில் ஏற்படாது. காஞ்சிபுரம் தொகுதியில் திருப்பதி ஏழுமலையான் படத்தின்மீது சத்தியம் செய்துகொடுத்ததால், தாய்மார்கள் திகில் கொண்டுவிட்டார்கள் என்று ஊரே பேசுகிறது. இவர்கள் நம்முடைய கூட்டங்களுக்கு வருகிறவர்கள் அல்ல. வந்திருந்தால் இதுபற்றி நாம் பேசியது கேட்டு, தெளிவும் பயமற்ற நிலையும் பெற்றிருக்கக் கூடும். எனவே, இவர்களின் இந்த மனப்பான்மையை மாற்ற நமது கழகத்துக்கு நிரம்பத் தாய்மார்கள், பிரச்சாரப் பணியில் ஈடுபட வேண்டும். நம்மிடம் அந்த அணி சரியாக அமையவில்லை. அமையாததற்குக் காரணம், நமது கழகத்தவர், தமது இல்லத்துத் தாய்மார்களை, இந்தப் பணியில் ஈடுபடுத்தாதது. ஈடுபடுத்த முடியாததற்குக் காரணம், அரசியலை, நம்முடைய கழகத் தோழர்கள்கூட, ஆடவர்களின் அரங்கம் என்றே இன்னமும் எண்ணிக்கொண்டு தாம் மட்டுமே அதிலே ஈடுபடுவதுதான். இதனை நீக்க, இப்போதிருந்தே பாடுபட்டு வெற்றி கிடைக்கவேண்டுமானால், கழகக் கூட்டங்களுக்கு தமது வீட்டுத் தாய்மார்களை, கூடுமான வரையில் அழைத்துக்கொண்டு வரும் பழக்கத்தை, ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அரசியல் கூட்டப் பேச்சுக்கள் தாய்மார்களுக்குப் பிடிக்காது, புரியாது என்று சாக்குப்போக்குக் கூறுவது சரியல்ல; அதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது எந்த நோக்கத்துடன்? வாங்கினால் என்ன கேடு உண்டாகும் என்பது தாய்மார்களுக்கு<noinclude></noinclude> hj1fnxrtz0lhzl9elgrbrgfaidpx191 1944172 1944069 2026-06-09T16:21:09Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|304||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>துறையிலே பணிபுரிந்தால் பணபலத்தை உருக்குலைக்க முடியும். நச்சுப்பூச்சி நாம் ஏமாந்த நேரத்திலேதான் தீண்டும். பணபலமும் அப்படித்தான். பாம்பினைப் பழுதை என்றோ, பழுதையைப் பாம்பு என்றோ கொண்டிடல் கூடாது. திட்ட வட்டமான தகவல் சேகரிப்பு இதற்கு அடிப்படையாகத் தேவை. பணம் பெற்றுக்கொண்டாலும், அதற்காக 'சத்தியம்' செய்தாலும், அது தம்மைக் கட்டுப்படுத்திவிடத் தேவையில்லை என்ற நிலை, சாமான்யர்களுக்கும், குறிப்பாகத் தாய்மார்களுக்கும் சுலபத்தில் ஏற்படாது. காஞ்சிபுரம் தொகுதியில் திருப்பதி ஏழுமலையான் படத்தின்மீது சத்தியம் செய்துகொடுத்ததால், தாய்மார்கள் திகில் கொண்டுவிட்டார்கள் என்று ஊரே பேசுகிறது. இவர்கள் நம்முடைய கூட்டங்களுக்கு வருகிறவர்கள் அல்ல. வந்திருந்தால் இதுபற்றி நாம் பேசியது கேட்டு, தெளிவும் பயமற்ற நிலையும் பெற்றிருக்கக் கூடும். எனவே, இவர்களின் இந்த மனப்பான்மையை மாற்ற நமது கழகத்துக்கு நிரம்பத் தாய்மார்கள், பிரச்சாரப் பணியில் ஈடுபட வேண்டும். நம்மிடம் அந்த அணி சரியாக அமையவில்லை. அமையாததற்குக் காரணம், நமது கழகத்தவர், தமது இல்லத்துத் தாய்மார்களை, இந்தப் பணியில் ஈடுபடுத்தாதது. ஈடுபடுத்த முடியாததற்குக் காரணம், அரசியலை, நம்முடைய கழகத் தோழர்கள்கூட, ஆடவர்களின் அரங்கம் என்றே இன்னமும் எண்ணிக்கொண்டு தாம் மட்டுமே அதிலே ஈடுபடுவதுதான். இதனை நீக்க, இப்போதிருந்தே பாடுபட்டு வெற்றி கிடைக்கவேண்டுமானால், கழகக் கூட்டங்களுக்கு தமது வீட்டுத் தாய்மார்களை, கூடுமான வரையில் அழைத்துக்கொண்டு வரும் பழக்கத்தை, ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அரசியல் கூட்டப் பேச்சுக்கள் தாய்மார்களுக்குப் பிடிக்காது, புரியாது என்று சாக்குப்போக்குக் கூறுவது சரியல்ல; அதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது எந்த நோக்கத்துடன்? வாங்கினால் என்ன கேடு உண்டாகும் என்பது தாய்மார்களுக்கு<noinclude></noinclude> gzkj0metm1bz95vi52bi123a7rhna4x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/306 250 645634 1944074 1941218 2026-06-09T12:38:41Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||305}}{{Rule}}</noinclude>முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தால், நான் காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றிருக்கவே முடியாது என்பதை, இந்தத் தொகுதியின் நிலவரம் அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். ஒரு கூடை தவிடு தருகிறேன், ஒரு குண்டுமணி தங்கம் கொடு என்றால் கொடுப்பார்களா? கருத்துக் கெட்டவர்கள் கூடத் தரமாட்டார்கள். ஆனால், பளபளப்பான செயற்கை வைரத்தைக் காட்டி, அது வைரம் என்றுகூறித் தங்க நகைக்கு ஈடாகத் தருவதாகச் சொன்னால், சிலர் ஏமாந்துபோவார்கள்; பலர் சபலம் கொள்வார்கள். பணத்துக்காக ஓட்டு கொடுப்பது, தவிட்டுக்காகத் தங்கம் கொடுப்பதாகும் என்பதைத் தாய்மார்களுக்கு எங்கே எடுத்துச் சொல்ல, உணரச்செய்ய, நம்மிடம் அணி இருந்தது? இல்லை! அது இனி அமைக்கப்பட்டாகவேண்டும். என் நெஞ்சை மெத்தவும் உருக்கியதும், என் தோல்விபற்றி எனக்கு ஓரளவு வேதனை ஏற்பட்டதும், என்னால் அதற்குக் காரணமாக அமைந்ததும், எதுவென்றால், எனக்காக, நகர் முழுவதும் வீடுவீடாகச் சென்று என் துணைவி இராணி ஓட்டுக் கேட்டதுதான், துணையாக அலமேலு அப்பாதுரை அவர்கள், மல்லிகா, எங்கள் ஊர் சரசுவதி வெங்கடேசன், சரசுவதி சிற்சபை, கமலா பாபு, உளுந்தூர்பேட்டை இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் சென்றனர். கழகத்துக்கான ஏற்பாடு வேலைகளும், சிக்கல் நீக்கும் காரியமும், மற்றத் தொகுதி வேலைகளும், என்னை அந்த அளவுக்கு, நகரில் ஓட்டு கேட்க இடம் தரவில்லை. இராணியும் துணையாகச் சிலரும் சென்று ஓட்டு கேட்டதுபோல, பேட்டைக்குப் பேட்டை ஒரு சிறு அணி இருந்திருப்பின், பணம் பலித்திருக்காது. இது என் தொகுதிக்கு மட்டுமல்ல நான் சொல்வது, எல்லா இடங்களுக்கும். சென்ற தடவைகூட இராணி வேலை செய்தது உண்டு! என்றாலும், இம்முறை வெகு உற்சாகத்துடனும், மும்முர மாகவும், முறையாகவும் வேலை செய்ததற்குக் காரணம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில், மகளிர் மன்றக் கூட்டங்கள், கழகக் கூட்டங்கள் ஆகியவைகளிலே பெற்ற<noinclude></noinclude> k5mk7m2kwrh2kwrzub4utu7rw3q4fwu 1944175 1944074 2026-06-09T16:23:07Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|தொகுதி நான்கு||305}}{{Rule}}</noinclude>முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தால், நான் காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றிருக்கவே முடியாது என்பதை, இந்தத் தொகுதியின் நிலவரம் அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். ஒரு கூடை தவிடு தருகிறேன், ஒரு குண்டுமணி தங்கம் கொடு என்றால் கொடுப்பார்களா? கருத்துக் கெட்டவர்கள் கூடத் தரமாட்டார்கள். ஆனால், பளபளப்பான செயற்கை வைரத்தைக் காட்டி, அது வைரம் என்றுகூறித் தங்க நகைக்கு ஈடாகத் தருவதாகச் சொன்னால், சிலர் ஏமாந்துபோவார்கள்; பலர் சபலம் கொள்வார்கள். பணத்துக்காக ஓட்டு கொடுப்பது, தவிட்டுக்காகத் தங்கம் கொடுப்பதாகும் என்பதைத் தாய்மார்களுக்கு எங்கே எடுத்துச் சொல்ல, உணரச்செய்ய, நம்மிடம் அணி இருந்தது? இல்லை! அது இனி அமைக்கப்பட்டாகவேண்டும். என் நெஞ்சை மெத்தவும் உருக்கியதும், என் தோல்விபற்றி எனக்கு ஓரளவு வேதனை ஏற்பட்டதும், என்னால் அதற்குக் காரணமாக அமைந்ததும், எதுவென்றால், எனக்காக, நகர் முழுவதும் வீடுவீடாகச் சென்று என் துணைவி இராணி ஓட்டுக் கேட்டதுதான், துணையாக அலமேலு அப்பாதுரை அவர்கள், மல்லிகா, எங்கள் ஊர் சரசுவதி வெங்கடேசன், சரசுவதி சிற்சபை, கமலா பாபு, உளுந்தூர்பேட்டை இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் சென்றனர். கழகத்துக்கான ஏற்பாடு வேலைகளும், சிக்கல் நீக்கும் காரியமும், மற்றத் தொகுதி வேலைகளும், என்னை அந்த அளவுக்கு, நகரில் ஓட்டு கேட்க இடம் தரவில்லை. இராணியும் துணையாகச் சிலரும் சென்று ஓட்டு கேட்டதுபோல, பேட்டைக்குப் பேட்டை ஒரு சிறு அணி இருந்திருப்பின், பணம் பலித்திருக்காது. இது என் தொகுதிக்கு மட்டுமல்ல நான் சொல்வது, எல்லா இடங்களுக்கும். சென்ற தடவைகூட இராணி வேலை செய்தது உண்டு! என்றாலும், இம்முறை வெகு உற்சாகத்துடனும், மும்முர மாகவும், முறையாகவும் வேலை செய்ததற்குக் காரணம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில், மகளிர் மன்றக் கூட்டங்கள், கழகக் கூட்டங்கள் ஆகியவைகளிலே பெற்ற<noinclude></noinclude> 0e63yy7dt99q8t1xaxpld7qilbk6y4j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/307 250 645636 1944077 1941220 2026-06-09T12:39:48Z Rathai palanivelan 11183 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rathai palanivelan" /> {{Rh|306||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கருத்தால் ஏற்பட்ட உணர்ச்சியும், நமது இயக்க ஏடுகளைப் படித்ததால் வந்த உணர்ச்சியும்தான். சென்ற தடவை ஓட்டுக் கேட்டபோது இராணிக்கு இருந்திருக்கக்கூடிய எண்ணம், கணவருக்கு வேலை செய்கிறோம் என்பதுதான்; இம்முறை கழகத்துக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இராணி இந்த அளவு பணியாற்றப் பெருந் துணையாக இருந்தது, என் அக்காவாகும். அவர்கள்போல், மொத்தத்தில் நகரில் ஒரு 50 பேர், தாய்மார்கள் அணி இருந்திருந்தால், 'வெங்கடேசப் பெருமானும் சத்தியமும்' என்ற பேச்சு வலிவிழந்துபோயிருக்கும். இந்த முறை ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்கி, அடுத்த தேர்தல் வருவதற்குள் நல்லதோர் தாய்மார்கள் அணிவகுப்பு ஏற்படவேண்டும். இந்தத் தேர்தலில் இருந்த அணிவகுப்பு, இருதரப்புக்கும் எப்படிப்பட்டது என்பதனை அடுத்த கிழமை எடுத்துக் காட்டுகிறேன். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 11-3-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> i0eiuwp0annqxjvou26am7opw8uc230 1944177 1944077 2026-06-09T16:24:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|306||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கருத்தால் ஏற்பட்ட உணர்ச்சியும், நமது இயக்க ஏடுகளைப் படித்ததால் வந்த உணர்ச்சியும்தான். சென்ற தடவை ஓட்டுக் கேட்டபோது இராணிக்கு இருந்திருக்கக்கூடிய எண்ணம், கணவருக்கு வேலை செய்கிறோம் என்பதுதான்; இம்முறை கழகத்துக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இராணி இந்த அளவு பணியாற்றப் பெருந் துணையாக இருந்தது, என் அக்காவாகும். அவர்கள்போல், மொத்தத்தில் நகரில் ஒரு 50 பேர், தாய்மார்கள் அணி இருந்திருந்தால், 'வெங்கடேசப் பெருமானும் சத்தியமும்' என்ற பேச்சு வலிவிழந்துபோயிருக்கும். இந்த முறை ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்கி, அடுத்த தேர்தல் வருவதற்குள் நல்லதோர் தாய்மார்கள் அணிவகுப்பு ஏற்படவேண்டும். இந்தத் தேர்தலில் இருந்த அணிவகுப்பு, இருதரப்புக்கும் எப்படிப்பட்டது என்பதனை அடுத்த கிழமை எடுத்துக் காட்டுகிறேன். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 11-3-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> 6764bz353f322nufl9fkxvsv0gkpq7d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/463 250 645668 1944180 1943928 2026-06-09T16:26:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1944180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{rh|462||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுப்பார்கள். !}} சி. என். ஏ:- {{left_margin|3em|என், மந்திரிசபையிலேயே இடம் கிடைக்கக் கூடும். லோக்சபையில் கேள்வி கேட்கப்பட்டபோது பிரதம மந்திரி எழுந்திருந்து தனக்கு அதுகுறித்துத் தெரியாது என்று பதில் அளித்தார். அவர் அவ்விதம் சொன்னது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், அவர் ஆமாம். யார் நியமிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் - என் ஒப்புதலும் அதற்கு உண்டு என்றுகூறி இருந்திருப்பாரானால், நான் திடுக்கிட்டுப் போயிருப்பேன் நல்ல வேளையாக, எனக்கு அது தெரியாது என்று அவர் பதில் அளித்தார். இராஜ்ய சர்க்காருக்கும் மத்திய சர்க்காருக்கும் உள்ள தொடர்பு இப்படித்தான் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து அறிவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் உங்கள் சர்க்கார்களிலே ஒருமைப்பாடு ஏற்படுத்துங்கள்! ஏன் அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார், எப்படி அமர்த்தப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறுகிற ஒரு பிரதம மந்திரி இருக்கிறார். இதுபற்றிப் படிக்கும்போது, மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கும்? முந்திரா ஊழல் பிரச்சினையில், இந்த அதிகாரி பிணைக்கப்பட்டிருந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர் பசையுள்ள ஒரு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் படித்தால், மக்கள் என்ன சொல்லுவார்கள்? உங்களுடைய சமதர்மப் பேச்சு, சமதர்ம தத்துவம் கிடக்கட்டும். (இந்த நியமனம்பற்றி) மக்கள் என்ன பேசுவார்கள்? அதனால்தான், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்கிறேன்; ஓட்டைகளை அடைக்க வேண்டுமென்றால், உண்மையான, நிரந்தரமான மாறுதல் நிர்வாக அமைப்பில் ஏற்பட்டாக வேண்டும்.}} நிர்வாகத்தில் என்ன சீரமைப்புச் செய்யவேண்டும் என்பது பற்றி ஆய்வுரை கூற அமைக்கப்பட்ட, கோர்வாலா தமது அறிக்கையில், வருமான வரிமுறைபற்றிக் குறிப்பிடுகையில், இது போலக் கூறியுள்ளார்.<noinclude></noinclude> rniw4e42lrowvia6dbvxy3s8c48rynd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/464 250 645671 1944181 1943938 2026-06-09T16:27:07Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1944181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|தொகுதி நான்கு||463}}{{rule}}</noinclude> {{left_margin|3em|“வருமான வரித்துறையைப் பொறுத்தவரையில், பொதுமக்கள் முறையிடுவது என்னவென்றால், சாமான்யர்களை, காரணமின்றித் தொல்லைப்படுத்துகிறார்கள். ஆனால் பல இலட்சக்கணக்கில் வரிகொடுக்காமல் ஏமாற்றித் திரிபவர்கள் தப்பித்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதுதான். வருமானவரி விசாரணைக் குழுவினால் சரியான எந்தப் பலனையும் பெற்றளிக்கமுடியவில்லை. துளிகூடக் கவலையின்றி, மிகத் துணிகரமாசு, வரி ஏமாற்றும் பேர்வழிகள் தங்கள் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டு போகிறார்கள். இதைக் காணும்போது, மிகுதியும் செல்வாக்குள்ள செல்வவான்களுடன் மோதிக் கொள்ள நேரிடும்போது, இந்தச் சர்க்காரின் கையாலாகாத் தனம்தான் தெரிகிறது, என்ற நம்பிக்கை மிகப் பரவலாக இருக்கிறது.}} கையாலாகாத்தனம் என்பது வார்த்தை. நான் அவ்வளவு கடுமையான வார்த்தையைக் கூற ஒருமுறைக்கு இருமுறை யோசித்து இருப்பேன். ஆனால், பொது நிர்வாக சீரமைப்புக்கான வழி கூறும்படி சர்க்காராலேயே அமைக்கப்பட்ட காரணத்தால், கோர்வாலா அவர்கள் சர்க்காரின் கையாலாகாத் தன்மை என்று கூறுகிறார். உங்கள் சர்க்கார் கையாலாகாத்து என்று கோர்வாலா கூறியிருக்கும்போது, கோடிகோடியாகப் பணம் தரும்படி நீங்கள் எந்த யோக்கியதையின்பேரில் கேட்கிறீர்கள் என்று மந்திரி சபையினரைக் கேட்கலாமல்லவா? எனவே, நிர்வாக அமைப்பிலே இன்னும் சற்று உயிர்ப்புச்சக்தி, செயலாற்றும் திறன் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன். இதோ மற்றோர் கண்டனம்; இது வர்த்தகத்துறை அமைச்சுப் பற்றியது. {{left_margin|3em|பெரிய! வணிக முதலாளிகளின் விருப்பத்துக்கு இசைவு தருவதிலே வணிகத்துறை அமைச்சு மிகவும் கெட்டபெயர் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது;}} வேங்கைகள் உலவுகின்றன என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரி சொன்னது, ஒருவேளை இதை எண்ணித்தான் போலும். வேங்கைகள் வெளியே உலவுகின்றன என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; துணிந்து யூகமாகச் சொல்வதானால், வர்த்தகத் துறை அமைச்சராக அவரே முன்பு இருந்ததால், அவருக்கு<noinclude></noinclude> expgas7bnlwfy9r5tcoavmdpzlx7st2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/465 250 645672 1944508 1942188 2026-06-10T07:41:36Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|464||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அப்படிப்பட்ட விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்; எது எப்படி இருப்பினும், வணிகக் கோமான்களுக்கு லைசென்சுகள் வழங்குவதிலே, வணிகத்துறை அமைச்சு கெட்டபெயர் எடுத்திருக்கிறது. இவைகளெல்லாம் திருத்தப்பட்டால், எனக்கு முன்பு பேசியவர் குறிப்பிட்ட மக்களின் ஆர்வமான ஆதரவு, திட்டத்துக்குக் கிடைக்கக்கூடும். ஆனால், வரிகள் ஏறிக் கொண்டே போவதையும், விலைகள் ஏறிக்கொண்டிருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு பெரிது பெரிதாக வளர்ந்து கொண்டு போவதையும், வாழ்க்கைத் தேவைகளைக் கூட, இன்றுள்ள அரசாங்க அமைப்பினால் தர இயலாதநிலை இருப்பதையும் காணும்போது, திட்டங்களில் ஆர்வம்காட்ட மக்கள் முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்க்காருடைய வரிவிதிப்புக் கொள்கையிலே இந்த அம்சம் சரி, அந்த அம்சம் சரி என்று ஆதரித்துச் சிலர் கூறுகிறார்கள் இந்தியாவிலிருந்து திராவிடநாடு பிரியவேண்டும் என்று வற்புறுத்தும் கட்சியைச் சேர்ந்தவன் நாள் என்றாலும், நீங்கள், தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட முறை இருக்கிறதே, அது இந்தத் துணைக்கண்டத்திலே பெறக்கூடிய முழு அளவு செல்வ வளர்ச்சியைப் பெறத்தக்கவிதமாக இல்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பொருளாதாரச் செயல்முறைகள் ஒரு சீராக அமையவில்லை. தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஒரு சீராக அமையவில்லை. மிகுந்தகால தாமதத்துக்குப் பிறகுதான்... பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|திராவிட நாட்டை விட்டுவிடுங்கள், இந்தியக் குடிஅரசில் ஒரு பகுதியாக இருந்து. தமிழ்நாடு, அதிக தொழில் திட்டங்கள் பெற நாம் ஒன்றுபட்டுப் போராடுவோம் அந்த ஓப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம் அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கிறீரா?}} சி. என். ஏ.:- {{left_margin|3em|என்னுடன் இருக்கவேண்டுமென, ஆவலாக இருப்பதற்காக, நான் பூபேஷ்குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அவரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.}} நீண்டகால தாமதத்துக்குப் பிறகுதான், சர்க்கார், தமது தொழில்வளர்ச்சித் திட்டம் ஒரு சீரானதாக இல்லை என்பதை<noinclude></noinclude> o11dnwunim6znik2kjfvhygpfjjjoii பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/466 250 645674 1944511 1942189 2026-06-10T07:45:55Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||465}}{{rule}}</noinclude>உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் ஒரு பொருளாதாரப் பிரச்சினை பேசுகிறார்கள் - அதன் அடியில் பல அரசியல் தத்துவங்கள் உள்ளன - அதுபற்றிப் பேசுபவர்கள், அந்தத் தத்துவங்களின் பொருளை, முழுவதும் வெளியே காட்டிப் பேசுவதில்லை பிரதேச பொருளாதாரச் சீரமைப்பு என்பதுபற்றிப் பேசுகிறார்கள். சில பிரதேசங்கள் பொருளாதாரத்தில் மிகுதியான வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை. எனவே, தொழில் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டிலே புறக்கணிக்கப்பட்டுப்போன பகுதிகளில் விசேஷ கவனம் செலுத்துவது இனி இந்திய சர்க்காரின் கொள்கையாக இருக்கும் என்கிறார்கள். ஆகவே, திட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த 12 ஆண்டுகளும் நீங்கள் தவறான முறையிலே திட்டமிட்டுக்கொண்டு இருந்தீர்கள், ஒரு சீரான பொருளாதார வளர்ச்சித் திட்டம் போடாமலிருந்திருக்கிறீர்கள். முன்பொருநாள், திருமதி. தேவகி கோபிதாஸ், வளர்ச்சித் திட்டங்களிலே கேரளம் எப்படிப் புறக்கணிக்கப்பட்டுவரப்படுகிறது என்பதனைத் தெளிவாக எடுத்துக் கூறிக்கொண்டு வந்தபோது, திட்டம் தீட்டப்படும்போது, கேரளத்தின் தனித் தன்மைகள், தனியான இயல்புகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, பரிகாரம் தேடவேண்டும், இல்லையேல், இந்திய யூனியன் வளர்ச்சிக்கு அது ஒரு முள்போல் இருக்கும். இந்திய யூனியன் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கருத்துரை, இந்தியா ஒன்று, பிரிக்கப்படக்கூடாதது என்ற நம்பிக்கை கொண்டவரிடமிருந்து வெளிவருகிறது. கேரளத்தின் தனித்தன்மைகள், தனிஇயல்புகள் ஆகியவற்றைக் கவனிக்கா விட்டால், கேரளம் முள்போல இருக்கும் என்கிறார். P A. சாலமன்: {{left_margin|3em|காங்கிரசுக்குள்ளேகூட திராவிட கழக ஆட்கள் இருக்கிறார்கள்.}} சி. என். ஏ :- {{left_margin|3em|காங்கிரசிலே, திராவிட கழக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்.}} P. A. சாலமன்:- {{left_margin|3em|நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தான் குறிப்பிடுகின்றேன்...}} துணைத்தலைவர்:- {{left_margin|3em|மேலும், எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?}}<noinclude></noinclude> aw5xgstxihuniyvln1w8b1inh5oykze பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/467 250 645676 1944515 1942191 2026-06-10T07:51:01Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|466||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> சி. என். ஏ. :- {{left_margin|3em|மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். திருமதி அவர்களே! இந்திய யூனியனுக்கு ஒரு முள்ளாக இருக்கும் என்று அம்மையார் குறிப்பிட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். துணைத்தலைவர் அவர்களே! இதில் கவனம் செலுத்தும்படி தங்கள் மூலமாக பூபேஷ் குப்தா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அம்மையார் இந்திய யூனியனுடைய வளர்ச்சிக்கு ஒரு முள்போலிருக்கும் என்று கூறுகிறார்கள். முட்களை என்ன செய்கிறோம். வெளியே எடுத்து விடுகிறோம்! அதுதான் நாம் செய்வது. அரசியல் அமைப்பிலாயினும் சரி, உடலில் ஆகிலும் சரி, முள் இருப்பின், அந்த முள்ளை வெளியே எடுத்து விடுகிறோம்.}} பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்கவில்லை....}} சி.என். ஏ. :- {{left_margin|3em|உம்முடன் இதுபற்றி விவாதித்துக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை, பிறகு விவாதிக்கலாம். எனவே, திருமதி அவர்களே! இந்திய ஒருமைப்பாட்டிலே நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும், தாம் வாழும் பகுதியில் தொழில்துறையிலே கட்டுப்பாடான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால், இந்திய ஒருமைப்பாடு எனும் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கருதுவதற்கில்லை என்று எண்ணுகிறார்கள்.}} பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|தமிழ்நாட்டிலே உள்ள ஜனநாயக இயக்கத்தை உங்கள் பிரிவினை இயக்கம் வலிவற்றதாக்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டுக் கோரிக்கையையும் அது கெடுத்துவிடும். நீங்கள் விரும்புவதும் கிடைக்காது - அதனை நாங்கள் விரும்பவில்லை - அந்தப் பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் ஏற்படாது.}} துணைத்தலைவர்:- {{left_margin|3em| நீங்கள் பேசி முடியுங்கள்.}} சி.என்.ஏ.:- {{left_margin|3em|பூபேஷ் குப்தாவின் ஆலோசனைக்கு நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு ஜனநாயக முறையில் இருக்கமுடியுமோ அப்படி இருக்க முயற்சிக்கிறோம். ஆனால், அதேபோல் நடந்துகொள்ளும் என்று நான் கம்யூனிஸ்டு கட்சியிடம் எதிர்பார்க்கவில்லை.}} பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|நாங்கள் முழுக்க முழுக்க ஜனநாயக வாதிகள். உங்கள் யோசைைனயை நான் ஏற்றுக்கொள்கிறேன். நல்ல}}<noinclude></noinclude> gqz0xd80dulal6a6a5xx6n7c8ho6yqs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/468 250 645677 1944565 1942193 2026-06-10T09:59:36Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||467}}{{rule}}</noinclude>{{left_margin|3em|யோசனை யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வதிலே தவறில்லை. ஆனால். என் யோசனையை ஏற்றுக்கொண்டு, திராவிடநாடு முழக்கத்தை, இந்தியாவிலிருந்து பிரிவது என்ற கோஷத்தை விட்டுவிடுவாரா? துணைத்தலைவர் அவர்களே! நான் அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.}} துணைத்தலைவர்:- {{left_margin|3em|காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. தயவுசெய்து முடித்துக்கொள்ளுங்கள்.}} மொரார்ஜி தேசாய்:- {{left_margin|3em|அடிக்கடி எழுந்திருந்து, மற்றவர்களின் நேரத்தை பூபேஷ் குப்தா எடுத்துக்கொள்கிறார். அவர் தமது நேரத்தைச் செலவிட்டுவிட்டார். ஏன் அடிக்கடி எழுந்து நிற்கிறார்.}} பூபேஷ் குப்தா- {{left_margin|3em|தி. மு. க. ஸ்லோகங்களில் அவருக்கு மிகுதியாக அனுதாபம் இருப்பதுபோல் தெரிகிறது.}} சி.என். ஏ. :- {{left_margin|3em|துணைத்தலைவர் அவர்களே! நேரம் போதவில்லை. இல்லையென்றால், இதுபற்றி விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் பிரச்சினைகளை இம்மாதிரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்று நான் கருதவில்லை, பிரதேச ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதுபற்றி, எல்லா அரசியல் காட்சியினரிடமும் மனக்குறை உண்மையிலேயே இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட முற்படுகிறேன். இதனை நான் எடுத்துக்காட்டுவது, பிரிவினைக்கு ஆக அல்ல. ஒரு சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாததால், நாட்டிலே மொத்தத்தில் கிடைக்கக்கூடிய செல்வ வளர்ச்சி கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட இதனைக் கூறுகிறேன். அதுதான் என்னுடைய குறி. பிரிவினைக்காக வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிப் பேசிப் பேச்சை வேறு திசை கொண்டுசெல்ல விரும்பவில்லை. ஒரு அங்கத்தினர் அப்படித் திசை தவறிச் சென்று, என்னை சிலோன்போய்ப் பிரசாரம் செய்யும்படி கூட விந்தையாகக் கூறி இருக்கிறார்! அவருக்கு என்னிடம் அதிகமான பற்றும் பாசமும் இருக்கிறதா, அல்லது சிலோன் நாட்டிடம் பற்றும் பாசமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் அவர், தாம் ஒரு திராவிடர் என்பதை ஒப்புக்கொண்டார். நான் பேச்சின் திசையைத் திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் திட்டவட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு. இழிமொழி}}<noinclude></noinclude> qo8y826yr61k09eqfgssof99acahumq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/469 250 645679 1944566 1942195 2026-06-10T10:04:20Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|468||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|எதுவும் என்னை ஏற்றுக்கொண்டுள்ள புனிதப்பணியிலிருந்து தடுத்து நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்துப் பேரப்பேச்சுக்கு இடமே இல்லை. எனவே நான் பேச்சின் திசையைத் திருப்பப்போவதில்லை. பிரதேச ஏற்றத்தாழ்வுப் பிரச்சினைக்கு வருவோம். பிரதேச ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதற்கு பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி ஒரு சுவையான தகவல் தருகிறேன். வருமானவரி நிலுவைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். இராஜ்யவாரியாக அல்லது வட்டாரவாரியாக அந்தத் தகவல் தரப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் (1) பம்பாய் நகரம் (2) மத்திய பம்பாய் சேர்ந்து 36 கோடி ரூபாய் நிலுவை; மேற்குவங்கம், கல்கத்தா நகரம் உட்பட, 43 கோடி ரூபாய் நிலுவை! எனவே மிகப் பெருந்தொகை நிலுவையாக உள்ள அந்த இரண்டு பிரதேசங்களின்பேரிலும், நிதி அமைச்சர் தமது துப்பாக்கியைத் திருப்பவேண்டும்.}} பூபேஷ் குப்தா:- {{left_margin|3em|மேற்கு வங்கத்தில் பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். சாந்தி பிரசாத் ஜெயின் என்பவர், சமீபத்தில் 60 இலட்ச ரூபாய் விலையில் ஒரு வீடு வாங்கினார்.}} சி. என். ஏ. :- {{left_margin|3em|மேற்கு வங்கத்தில் உள்ள முதலில் பெரும் பகுதி வெளி இடத்திலிருந்து வந்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, இராஜ்யத்துக்கு இராஜ்யம் உள்ள விவசாயத்துறை வருமானப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால்கூடப் புரியும். 1958-59ஆம் ஆண்டில், சென்னையில் எங்களுக்கு 343.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்துக்கு 1,146 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 427 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசமோ மேற்கு வங்கமோ வளம் கொழிக்கும் செல்வ பூமியாவதை நான் குறைகூறவில்லை ஆனால், திட்டங்களை நிறைவேற்றியதில், முறைகேடான, சீரற்ற பொருளாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலிருந்திருந்தால், விவசாயத்துறையில், உத்தரப் பிரசேத்தைவிட மிக அதிகமான வருவாய் நாங்கள் பெற்றிருக்கமுடியும். இப்போதுகூட எங்களுக்கு ஒரு பக்ரா - நங்கல் இல்லை, சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் அதிகம் இல்லை. என்றாலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலே தான், ஏக்கர் ஒன்றுக்கு அதிகமான விளைச்சல் ஆகிறது.}} எஸ். சென்னாரெட்டி:- {{left_margin|3em|உங்களுக்குக் குந்தா திட்டம் இருக்கிறது.}}<noinclude></noinclude> 8mlnjbc3c14c7ko0ktj7c59pnktqx1l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/470 250 645680 1944572 1942196 2026-06-10T10:09:27Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||469}}{{rule}}</noinclude> சி. என். ஏ. :- {{left_margin|3em|அது பாசனத்துக்காக இருப்பதைவிட மின்சார உற்பத்திக்காகத்தான் பெரிதும் இருக்கிறது. அத்தகைய உதவிகளின்றி, எமது விவசாய உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது அப்படிப்பட்ட கடுமையாக உழைக்கத்தக்க, புத்தி கூர்மையுள்ள, விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் பக்குவம் உள்ள உழவர்கள் இங்கு இருக்கும் போது, விவசாயத்துறைக்கான திட்டம் தீட்டியபோது, தெற்குப் பகுதிமீது பார்வை சென்றிருக்க வேண்டாமா? தெற்கே, மீன்பிடித் தொழிலை வளர்ச்சி அடையச் செய்திருக்கலாம். போக்கு வரத்துச் சாதனத்துறையிலே வளர்ச்சி கண்டிருக்கலாம்... எத்தனையோ உள்ளன செய்வதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டது மட்டுமல்லாமல், பிரச்சினையை எடுத்தாலே, பிரச்சினையைத் தள்ளிப்போட முற்பட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பிய போது, எங்கு மூலப்பொருள்கள் கிடக்கின்றனவோ, அங்குதான் தொழில்திட்டம் அமைக்கமுடியும்; அதுதான் கண்டிப்பான பொருளாதார தத்துவம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போதுதான், இனிப்பிரதேச ஏற்றத்தாழ்வினை ஒழித்தாகவேண்டும் என்ற கொள்கைளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சபையினர் அறிந்துகொள்வதற்காக, ஒன்று கூறுகிறேன். இதுபோன்றதோர் பிரச்சினை இத்தாலியில் எழுந்தது. வட இத்தாலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தெற்கு இத்தாலி தொழில் வளர்ச்சியில் மிகவும் பிற்போக்காக இருந்தது. இத்தாலிய சர்க்கார் அறிவுத்தெளிவும், துணிவும்மிக்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்கள். தெற்கு இத்தாலிக்கு எனத் தனியான திட்டங்கள் வகுத்தார்கள். இத்தாலியின் தெற்குப்பாகத்தை வளமாக்க, உதவித்தொகை, கடனுதவி ஆகிய சலுகைகளை வழங்கினார்கள். நான் உங்களை வசீகரமான பாதைவழியே அழைத்துச் செல்வதாக எண்ணாதீர்கள். அவ்வழியே சென்று, திரும்பிப்பார்த்து, நாங்கள் இத்தாலி கையாண்ட முறைகளை முன்மாதிரியாகக்கொள்கிறோம் என்று கூறப் பார்க்காதீர்கள். நீங்கள் அந்த முறையைப் பின்பற்றக்கூடும். அந்த முறையைப் பின்பற்றவேண்டாம் என்று நான் உங்களுக்குக் கூறவில்லை. பின்பற்றி நடவுங்கள். ஆனால், அதனால் சமாதான மாகி, எனது அரசியல் கட்சி தனது அரசியல் தத்துவத்தை விட்டுக்கொடுத்துவிடும் என்று நான் உத்தரவாதம் தரமுடியாது. தரத் தேவையில்லை. தரமாட்டேன்.}}<noinclude></noinclude> nznpbxmg713ojkjsnrt0my1tohsjdxe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/471 250 645681 1944576 1942197 2026-06-10T10:16:38Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|470||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>அதனுடைய தத்துவம் பேரப்பேச்சு, சலுகைகள் பெறுவது போன்றவைகளிலிருந்து முற்றிலும் வேறானது. தெற்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சரியானபடி கவனித்திருந்தால், இந்நேரம், செல்வம் மிகுதியாக உற்பத்தி செய்திருக்கமுடியும் என்பதை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்ததோர் கடலோரம் தெற்கே இருப்பது, துறைமுகங்கள் நிரம்ப! பயன்பட்டுக்கொண்டு வருபவை, பயன்படாமலிருப்பவை உள்ளன. என் மதிப்புமிக்க நண்பர் தாயாபாய் படேல் கோபத்துக்கு வரமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்குக் கண்டாலா துறைமுகம் கிடைத்து விட்டது, எமக்கோ இன்னமும் தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டாகவில்லை. வணிகர் சங்கக் கூட்டத்தில் பேசும்போது, எங்கள் இராஜ்ய தொழில் மந்திரி, இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டால் போதாது, இந்திய சர்க்கார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் காரியத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நாடெங்கும் ஏற்பட்டிருக்குமானால், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்குமானால், வரி செலுத்தும்படி அமுல் செய்யும்போது, அவ்வளவு கடினமாகத் தோன்றாமல் இருந்திருக்கும். நான் இந்தப் பிரச்சினையில், வரி செலுத்தும் முறைபற்றி மட்டுமே இப்போது கூறுகிறேன். தன் பிரதேசத்துக்காகக்கூட அல்ல, வேறு பிரதேச வளர்ச்சிக்காக, தன்மீது வரி சுமத்தப்படுகிறது என்று தெற்கு உணருகிறது. உணருவதால், வரிக்கொடுமை இரட்டிப்பு மடங்காகத் தெரிகிறது. எனவே நிதி அமைச்சருக்கும். அவர் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும். எனது வேண்டுகோள் என்னவென்றால், செல்வ வளர்ச்சி அதிகப்படவும். வரிவிதிப்பு குறையவும் ஏற்ற விதமாகத் தென்னகத்தைப் பொருளாதாரத் துறையில் எப்படித் திருத்தி அமைப்பது, சீர்படுத்துவது என்பதுபற்றி வழி காணவேண்டும் என்பதாகும். ஆளுங் கட்சியினர் மற்றோர் தவறான கருத்து ஏற்படச் செய்து வருகின்றனர். இப்போது இலாபத்தைப் பங்கிடுவதுபற்றி, பிரித்துக் கொடுப்பதுபற்றிப் பேசாதீர்கள். உற்பத்தியைப் பெருக்குங்கள், உற்பத்தியைப் பெருக்குவது உமது கடமை. எனவே, மேலும் மேலும் உற்பத்தியைப் பெருக்குங்கள். பகிர்ந்து கொள்வதுபற்றி இப்போது பேசாதீர்கள் ஏனெனில் பகிர்ந்து கொள்வது என்பது, உற்பத்தி முடிந்த பிறகுதான் இயலும் என்று பேசுகிறார்கள். பொருளாதார பாடப் புத்தகங்களிலேதான், முதல் அத்தியாயம் உற்பத்தி, இரண்டாவது அத்தியாயம்<noinclude></noinclude> qikeqn9zzksk6jd2552ci9x3o67sxp0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/472 250 645682 1944589 1942198 2026-06-10T10:29:45Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||471}}{{rule}}</noinclude>விநியோகம் என்று இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன். ஆனால் நடைமுறையிலே, உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போதே விநியோகமும் நடந்துகொண்டுதானிருக்கும் உற்பத்தி செய்துமுடித்துவிட்டு, எல்லாவற்றையும் குவியலாக ஒரு இடத்தில் கொட்டிவைத்தான பிறகு, ஒரு நல்ல நாளில், இனி விநியோகிக்கலாம் என்று நாம் கூறுவதற்கில்லை. பொருளாதார நடவடிக்கைகள் அந்த முறையிலே செயல்பட்டுக்கொண்டில்லை. பொருளாதார பாடப் புத்தகங்கள் எழுத மட்டுமே அது முறையாகக்கொள்ளப்படுகிறது. எனவே, ஆளுங் கட்சியினர் அத்தகைய சொத்தைக் காரணத்தைக் காட்டக்கூடாது. இந்தப் புறத்திலுள்ள நாங்கள், உற்பத்தி செய்யப்படுவது, சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகிறோம். பண்டங்கள் சரியான முறையிலே விநியோகமாயிருந்தால், செல்வம் சரியானபடி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால், நமது நாட்டில், இவ்வளவு வறுமை இருந்திருக்கிறது. வறுமை எந்த அளவு இருக்கிறது என்றால், அனாதைகளாக உள்ள முதியவர்களுக்கு எங்கள் இராஜ்யத்தில் உதவித்தொகை தரப்படவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனது இராஜ்ய சர்க்கார் அப்படி ஒரு ஏற்பாடு மேற்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், அது எங்கள் பகுதியிலே உள்ள தரித்திரத்தைக் காட்டும் குறியாக இருப்பதனையும் கூறுவேண்டி இருக்கிறது. இத்துணை செல்வம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும் இவ்வளவு வறுமை இருக்கக் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், பகிர்ந்தளிக்கும் பிரச்சினைமீது சரியான முறையில் அக்கறை செலுத்தப்படவில்லை. ஆகவேதான், செல்வம் வளருகிறது; புதிய புதிய காடிலாக் கார்களும், புதிய புதிய மாளிகைகளும், புதிய புதிய தொழிலகங்களும் காண்கிறோம். சர்க்காருக்கே தேவைப்படும் அளவு சிமிட்டி கிடைக்காதபோது, தனிப்பட்ட கண்ட்ராக்டர்களுக்கு எவ்வளவு அளவுக்கு வேண்டுமானாலும் சிமிட்டி கிடைப்பது தமக்குத் தூக்கிவாரிப் போடுவதாக இருக்கிறது எனப் பிரதம மந்திரி பேசியதாக அன்றோர் நாள் பத்திரிகையில் பார்த்தேன். கள்ள மார்க்கட். கருப்புப் பணம் என்ற இரண்டு வார்த்தைகள் புழக்கத்திலிருக்கிறதே, இந்த நிலை இந்தத் தேசிய சர்க்காருக்கு அவமானகரமானது என்று கூற விரும்புகிறேன் - அவமானகரம் என்ற பதம், மிகக் கடினமானதோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதங்களை மிகச் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பண்டத்தைப்பற்றியாவது பேச்சு எழும்போது, அங்காடியில்<noinclude></noinclude> jrxxluzfyzkp37zfseswo6p72s5tkgh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/473 250 645684 1944593 1942199 2026-06-10T10:33:35Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|472||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்ன விலை? கள்ள மார்க்கட்டில் என்ன விலை? என்று கேட்கிறோம். இரும்புச் சாமான் கள்ளமார்க்கட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது நமக்கு மிக நன்றாகத் தெரியும் என்று மந்திரிசபையினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையிலே பார்த்தேன் திடுக்கிட்டுப் போனேன். சொன்னவர் இப்போதுள்ள இரும்பு மந்திரி அல்ல. எனவே, கள்ள மார்க்கட் இருப்பது சர்க்காருக்குத் தெரியும், கள்ளமார்க்கட் எப்படி நடத்தப்படுகிறது என்பதும் தெரியும். ஆனால் அந்தக் கள்ளமார்க்கட்காரர் மீது நடவடிக்கை எடுத்துக் கூண்டில்கொண்டுவந்து நிறுத்தினால், தேர்தல்களில் தீர்த்துக்கட்டிவிடுவார்கள் என்பதும் சர்க்காருக்குத் தெரிகிறது. ஆகவேதான் கள்ள மார்க்கட் கொட்டம் அடிக்க விடப்பட்டிருக்கிறது. கள்ள மார்க்கட் இருக்கும்போது, கருப்புப் பணம் உண்டாகிறது. இந்தக் கருப்புப் பணத்தைத் தொழிலுக்கு முதலாகப்போட முடிவதில்லை. தனிப்பட்ட ஒரு அமைப்புக்குத் தொழிலிலே இலாபம் வெளிப்படையாகக் கிடைத்தால், அந்தப் பணத்தை வேறு வியாபாரத்தில் கொண்டுவந்து போடலாம். ஆனால், கணக்கிலே காட்டப்பட முடியாத கருப்புப் பணம் கிடைக்குமானால், அதனைத் தொழிலிலே கொண்டுபோய்ப் போடமுடியாது. ஆகவே, அந்தப் பணம் டம்பாச்சாரி வாழ்வுக்குச் செலவாகிறது. இத்தகைய டம்பாச்சாரிப் போக்கைத் தடுக்கவேண்டும் என்றுதான் அந்த நிதி மந்திரி, செலவு வரி விதித்தார். ஆனால், இன்றுள்ள நிதி மந்திரி, டம்பாச்சாரி செலவு மட்டுப்பட்டுவிட்டது என்பதாலோ, அல்லது டம்பாச்சாரிப் போக்கு நல்லது என்பதாலோ செலவு வரியை எடுத்து விட்டார். அதனால் அதிகமான வருவாய் கிடைக்காமல் இருந்திருக்கலாம். 77 இலட்ச ரூபாய்தான் கிடைத்ததாகத் தெரிகிறது - பத்திரிகைச் செய்திகளிவிருந்து ஆனால் தொகை எந்த அளவாக இருப்பினும், அந்த வரிக்கு அடிப்படையாக அமைந்திருந்த சமுதாயக் கருத்து முக்கியமானது - எனினும் அந்த வரியை இவர் நீக்கிவிட்டார். அதற்கு மாறாக, கிரசின், தீப்பெட்டி, புகையிலை இவைகள்மீது உள்ள வரிகளை மேலும் மேலும் அதிகமாக்கி இருக்கிறார், அன்று நிதி அமைச்சர், லோக்சபையிலே... துணைத்தலைவர்:- {{left_margin|3em|ஐந்து நிமிடம் வேண்டுமெனக் கேட்டீர்கள் - ஆனால் பத்து நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்.}} சி. என். ஏ. :- {{left_margin|3em|இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களில் முடித்து விடுகிறேன்.}}<noinclude></noinclude> mphux70xvj6qa4eopqfwan0xrnn28ej பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/474 250 645685 1944602 1942200 2026-06-10T10:38:58Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||473}}{{rule}}</noinclude> துணைத்தலைவர்:- {{left_margin|3em|தயவுசெய்து முடித்துவிடுங்கள். ஏனெனில் குறுகிய கால அளவே இருக்கிறது.}} சி. என். ஏ. :- {{left_margin|3em|அன்று லோக்சபையில் நிதி அமைச்சர் ஒரு தீப்பெட்டியை எடுத்துக்காட்டி, இதோ வந்திப்பெட்டி, இதனை நியாயமான விலைக்கு வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். இப்போது போய் வாங்கும்படி நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது வத்திப்பெட்டியின் விலையும் ஏறிவிட்டது. மற்ற சாமான்களின் விலையும் ஏறிவிட்டது. ஏனெனில் கான்யூட் மன்னனைப் போல, நிதி அமைச்சர் விலைகள் ஏறாது என்று கூறினார் என்றாலும், கான்யூட் முன்னர் கடல் அலை ஓய்ந்து விடவில்லை; விலைகளும் நிதி மந்திரியாரின் பேச்சினால் ஏறாமல் நின்றுவிடவில்லை. எந்தெந்தச் சமயத்தில் வரி போடப்படுகிறதோ, அப்போதெல்லாம் விலைகள் ஏறிவிடத்தான் செய்யும் விலைவாசி ஏற்றத்தை இந்தச் சர்க்கார் கட்டுப்படுத்த முடிந்தாலாகிலும், புதிய வரிகளுக்கு அதனைக் காரணமாகக் காட்ட முடியாவிட்டாலும், மறைமுகவரி போடப்படுவதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ள வசதியாகவாவது இருந்திருக்கும் எனவே, இந்த வரி மசோதா, ஒரு கசக்கிப் பிழியும் திட்டமாகும். கம்பளி நெய்வதற்காக, ஆடுகளின் ரோமத்தை வெட்டி எடுக்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் நீங்கள் மக்களைக் கசக்கிப் பிழிகிறீர்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள்; திட்டத்தின் பெயரால் ஏழைகளைக் கசக்கிப் பிழிகிறீர்கள். அதனால், மக்கள், திட்டத்தையே மிரட்சியுடன் பார்க்கச் செய்து விட்டீர்கள். மக்கள் திட்டம் வேண்டும் என்கிறார்கள். ஆனால், திட்டம் காரணமாகத்தான் இந்த வரிகளெல்லாம் போட வேண்டி இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, மக்கள் வரிகளை மட்டும் கண்டிக்கவில்லை, திட்டத்தின் அவசியம் பற்றியே சந்தேகப்படத் தொடங்குகிறார்கள் எனவே, ஒரு விதத்தில் எந்தத் திட்டத்துக்கு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்களோ, அதே திட்ட ஏற்பாட்டையே நீங்கள் குலைத்துவிடவும் செய்கிறீர்கள். வாதங்கள், இடைகிடையே புள்ளி விவரங்களை வைத்து அடைத்த மறுப்புரைகள் ஆகியவற்றை நீட்டி முழக்க வேண்டாம்; வறுமையில் நெளியும் மக்கள், அவர்கள் படும்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். வரி செலுத்தக்கூடிய சக்தியின்}}<noinclude></noinclude> 69awwsks62yimzgxg5k3grtmcpd4j4p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/475 250 645686 1944608 1942202 2026-06-10T10:41:59Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|474||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>கடைசிக் கட்டம் வந்தாகி விட்டது. எனவே மறைமுக வரிகளை, அதிலும் அத்தியாவசியப் பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, வேறு இடத்திலிருந்து பணம் தேடிக்கொள்ள முற்படுங்கள். இந்த வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டாலும் அவருக்கு நிரம்ப வருவாய் கிடைக்க இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன் ஏனெனில், எப்போது வரவு செலவு திட்டத்தைக் கொடுத்தாலும் வருவாய் வரக்கூடியது என்று தரப்படும் புள்ளியைக் குறைவாகவே தருவது வாடிக்கை; பிறகு சபையிலே மந்திரவாதி போல் எழுந்து நின்று நான் 23 கோடிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் 32 கோடி கிடைத்தது என்று பேசுவார். ஆகவே இத்தகைய மறைமுக வரிகளுக்கு அவசியம் இல்லை; மக்களைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை என்று கூறுகிறேன். {{center|★}} தம்பி! இன்னும் என்னென்னவெல்லாமோ சொல்லவேண்டுமென்று நினைத்தேன். நேரம் இல்லை. சரி! அடுத்தடுத்து அவைகளை உன்னிடம் கூறி, என் கடமையை நிறைவேற்றி களிப்புத் தேடிக்கொள்கிறேன். கடமையாற்றுவதிலே தன்னிகரற்ற தீரம் காட்டிடும், தம்பி! 30ந்தேதிதான் முழக்கம் எழுப்பப்போகிறாயே, விலை ஏற்றம், வரிப்பளு இவைகளைக் கண்டித்து, சட்டமன்றத்துக்கு எதிரே, கோட்டைக்கு எதிரே அணிவகுப்பு! கடலலையின் ஒலிக்கும், உள் முழக்கத்துக்கும் கடும்போட்டி! பார்ப்போம், ஆளவந்தார்கள் மனம் மாறுகிறதா என்று. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 1-7-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> fmj5ai7lnjettp48alvglf9o4opnojb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/476 250 645688 1944612 1942997 2026-06-10T10:46:22Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம்: 171</b>}} {{center|{{x-larger|<b>“ஞாயிறு போற்றுதும்!”</b>}}}} {{left_margin|3em|<poem><b>நாட்டுக்கும் ஆபத்து - எல்லை காப்பதில் இராணுவம் எதிர்க்கும் போரணியில் நாம் பண்டைய போர்க்கருவிகளும் களக்காட்சிகளும் தமிழ்மொழி காப்புப் பிரச்சினை அரசியல் துறையில் மக்களாட்சியே எழுஞாயிறு! மனித மிருகங்கள் இல்லாத் தமிழகம் இயற்கை பொருள்கள் தரும் விளக்கங்கள்</poem></b>}} தம்பி! {{x-larger|<b>எ</b>}}ன்ன? பொங்கலோ பொங்கல் எனும் மகிழ்ச்சிக் குரலொலி எழுச்சியூட்டத்தக்க முறையிலே கேட்டிடக் காணோம். ஆண்டுக்கோர் நாள் ஈண்டு எழும் அந்த இன்னிசையைக் காணோமே! மாறாக, பொங்களா? பொங்கல்! என்ற ஒலி கேட்கிறது. என் செவி பழுதானதால் ஏற்பட்ட விளைவா, அல்லது உன் மொழியிலேயே ஏற்பட்டிருக்கிறதா இந்த மாற்றம்? உன் விழியிலும், வழக்கமான விழா நாள் களிப்பொலி காணோம்; உருவமே தூசு படிந்த மாமணிபோன்று காணப்படுகிறது. புதுப்பொலிவு காட்டிடுவாய், போக்கிடுவாய், கவலையெலாம், முன்பெலாம் இப்போது கவலையை வெகு பாடுபட்டு மறைக்கப் பார்த்திடும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறாள் என்று எண்ணிடத் தோன்றுகிறதே... என் நினைப்புத்தான் தவறா அல்லது உன் நிலைதான் அதுபோலிருக்கிறதா? இயற்கையாக இன்முகம் காட்டிடுவாய், இந்நாள், பொன்னாள் அண்ணா இன்று! புகழ் மணம் கமழ்ந்திடு நிலையில் முன்னோர் வாழ்ந்தளர் என்ற<noinclude></noinclude> jl9to9p63yge7fprtmd3fckhb3w4tml பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/477 250 645691 1944620 1942204 2026-06-10T10:51:23Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|476||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! - என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம். மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல சுவை தாராக் கன்னல்போல், துள்விடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன் இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய். செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் - இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு - அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல்லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்னிதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது.<noinclude></noinclude> 3vh9jxu1jihtr1eq4mjces6kqf81i0p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/478 250 645694 1944631 1942205 2026-06-10T10:57:57Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|தொகுதி நான்கு||477}}{{rule}}</noinclude>வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு உரைத்திடுவாய் - அகற்றிட வல்லோள் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? கஎனனேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா. தம்பி! ஒன்றல்ல என் கவவை, பல உண்டு கூறுதற்கு கூறத் தயக்கமில்லை. “கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு, நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார். மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?” தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறரைல்ல. வீட்டிலே<noinclude></noinclude> n4pmd9tkvb2gdh5fgavxgcooqmweo17 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/479 250 645695 1944640 1942206 2026-06-10T11:04:38Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|478||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர் அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை. எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிசுக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம். பயம் ஊட்டிக் சாகடித்தோம் அவர் களிப்பை! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா. ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம். கேட்டிடுவோம். வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போளானேன்! உறுதியுடன் போயிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப் பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும் மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஒஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம்<noinclude></noinclude> 5roxwu8qr4xiko8mrme89rma9xpaa10 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/356 250 645723 1944240 1941403 2026-06-09T18:49:53Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||355}}{{Rule}}</noinclude> முழு அளவு கிடைத்துவிடுகிறது. நாமே பெரும்பான்மையான இடங்களையும் பெறுகிற நிலை வருகிறது என்று வைத்துக்கொள். தொடர்ந்து, ஆர்வத்துடன், முறையாக நாம் பணியாற்றினால், அந்த முழு அளவு, அடுத்த தேர்தலில் நாம் பெற்றிடலாம் ஐயம் வேண்டாம். மக்கள் தீர்ப்பு, நாட்டு விடுதலைக்குக் கிடைத்துவிட்டது என்று, திருவிடத்தைப் பிணைத்து வைத்துக்கொண்டுள்ள பேரரசு உணர்ந்து மதித்து விடுதலை அளித்திடின், நன்றி கூறுவோம், நல்லெண்ணத்தை எந்நாளும் மறவோம், நானில் முழுவதிலும் இவர்கள்போல் நமக்குற்ற நண்பர்கள் வேறு எவரும் இலர் என்று வாழ்த்துவோம். ஆனால், அஃதின்றி, இந்த வெற்றிகள் போதா, சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று இலட்சிய முழக்கம் எழுப்பினால் போதாது, வாலிபரை வயோதிகராக்கிடும் இருட்டறை போன்றுள்ள சிறையில் அடைபட்ட நிலையில், கண்காணாத் தீவினில் கரைதெரியாக் கடலைப் பார்த்தபடி கைதியாக இருந்திடும் நிலையில், தூக்கு மேடையில் நின்றபடி, இந்த இலட்சியத்தை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பவல்லாயோ என்று. பேரரசு நடாத்துவோர் கேட்டிடின், ஆம்! ஆம்! ஆருயிரைப் பலியிடவும் அஞ்சாது நிற்கிறோம்! தாயின் சுரத்தில் பூட்டப் பட்டுள்ள தளைகள் பொடிபட, எமது உடல் ஆவியற்ற கூடாயினும் பரவாயில்லை. இன்னுயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்பத் திராவிடத்தைக் கொடுங்கள்! என்று கேட்டிடும், நெஞ்சினராதல் வேண்டும். இனிமேலா, அண்ணா! என்று கேட்டு, என்னை வெட்கப் படச் செய்துவிடுகிறாய், தம்பி! இன்னுயிரை எடுத்துக்கொள்! இன்பத் திராவிடம் கொடுத்திடு! - என்பதுதானே, நமது அணிவகுப்பின் பரணி, என்று கேட்கிறாய், ஆம்! தம்பி! ஆமாம்? மறந்தேனில்லை! நிளைவுபடுத்தினேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 1-4-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> oeohzw4624jr80mk6as1ib2511f2mk1 1944255 1944240 2026-06-09T20:29:10Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||355}}{{Rule}}</noinclude> முழு அளவு கிடைத்துவிடுகிறது. நாமே பெரும்பான்மையான இடங்களையும் பெறுகிற நிலை வருகிறது என்று வைத்துக்கொள். தொடர்ந்து, ஆர்வத்துடன், முறையாக நாம் பணியாற்றினால், அந்த முழு அளவு, அடுத்த தேர்தலில் நாம் பெற்றிடலாம் ஐயம் வேண்டாம். மக்கள் தீர்ப்பு, நாட்டு விடுதலைக்குக் கிடைத்துவிட்டது என்று, திருவிடத்தைப் பிணைத்து வைத்துக்கொண்டுள்ள பேரரசு உணர்ந்து மதித்து விடுதலை அளித்திடின், நன்றி கூறுவோம், நல்லெண்ணத்தை எந்நாளும் மறவோம், நானில் முழுவதிலும் இவர்கள்போல் நமக்குற்ற நண்பர்கள் வேறு எவரும் இலர் என்று வாழ்த்துவோம். ஆனால், அஃதின்றி, இந்த வெற்றிகள் போதா, சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று இலட்சிய முழக்கம் எழுப்பினால் போதாது, வாலிபரை வயோதிகராக்கிடும் இருட்டறை போன்றுள்ள சிறையில் அடைபட்ட நிலையில், கண்காணாத் தீவினில் கரைதெரியாக் கடலைப் பார்த்தபடி கைதியாக இருந்திடும் நிலையில், தூக்கு மேடையில் நின்றபடி, இந்த இலட்சியத்தை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பவல்லாயோ என்று. பேரரசு நடாத்துவோர் கேட்டிடின், ஆம்! ஆம்! ஆருயிரைப் பலியிடவும் அஞ்சாது நிற்கிறோம்! தாயின் சுரத்தில் பூட்டப் பட்டுள்ள தளைகள் பொடிபட, எமது உடல் ஆவியற்ற கூடாயினும் பரவாயில்லை. இன்னுயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்பத் திராவிடத்தைக் கொடுங்கள்! என்று கேட்டிடும், நெஞ்சினராதல் வேண்டும். இனிமேலா, அண்ணா! என்று கேட்டு, என்னை வெட்கப் படச் செய்துவிடுகிறாய், தம்பி! இன்னுயிரை எடுத்துக்கொள்! இன்பத் திராவிடம் கொடுத்திடு! - என்பதுதானே, நமது அணிவகுப்பின் பரணி, என்று கேட்கிறாய், ஆம்! தம்பி! ஆமாம்? மறந்தேனில்லை! நிளைவுபடுத்தினேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 1-4-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> n4wx3bhy9oitmrircn7n5s5uzwzkyca 1944310 1944255 2026-06-10T01:08:03Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||355}}{{Rule}}</noinclude> முழு அளவு கிடைத்துவிடுகிறது. நாமே பெரும்பான்மையான இடங்களையும் பெறுகிற நிலை வருகிறது என்று வைத்துக்கொள். தொடர்ந்து, ஆர்வத்துடன், முறையாக நாம் பணியாற்றினால், அந்த முழு அளவு, அடுத்த தேர்தலில் நாம் பெற்றிடலாம் ஐயம் வேண்டாம். மக்கள் தீர்ப்பு, நாட்டு விடுதலைக்குக் கிடைத்துவிட்டது என்று, திருவிடத்தைப் பிணைத்து வைத்துக்கொண்டுள்ள பேரரசு உணர்ந்து மதித்து விடுதலை அளித்திடின், நன்றி கூறுவோம், நல்லெண்ணத்தை எந்நாளும் மறவோம், நானில் முழுவதிலும் இவர்கள்போல் நமக்குற்ற நண்பர்கள் வேறு எவரும் இலர் என்று வாழ்த்துவோம். ஆனால், அஃதின்றி, இந்த வெற்றிகள் போதா, சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று இலட்சிய முழக்கம் எழுப்பினால் போதாது, வாலிபரை வயோதிகராக்கிடும் இருட்டறை போன்றுள்ள சிறையில் அடைபட்ட நிலையில், கண்காணாத் தீவினில் கரைதெரியாக் கடலைப் பார்த்தபடி கைதியாக இருந்திடும் நிலையில், தூக்கு மேடையில் நின்றபடி, இந்த இலட்சியத்தை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பவல்லாயோ என்று. பேரரசு நடாத்துவோர் கேட்டிடின், ஆம்! ஆம்! ஆருயிரைப் பலியிடவும் அஞ்சாது நிற்கிறோம்! தாயின் சுரத்தில் பூட்டப் பட்டுள்ள தளைகள் பொடிபட, எமது உடல் ஆவியற்ற கூடாயினும் பரவாயில்லை. இன்னுயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்பத் திராவிடத்தைக் கொடுங்கள்! என்று கேட்டிடும், நெஞ்சினராதல் வேண்டும். இனிமேலா, அண்ணா! என்று கேட்டு, என்னை வெட்கப் படச் செய்துவிடுகிறாய், தம்பி! இன்னுயிரை எடுத்துக்கொள்! இன்பத் திராவிடம் கொடுத்திடு! - என்பதுதானே, நமது அணிவகுப்பின் பரணி, என்று கேட்கிறாய், ஆம்! தம்பி! ஆமாம்? மறந்தேனில்லை! நிளைவுபடுத்தினேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 1-4-1962 {{dhr|10em}}<noinclude></noinclude> 8898ujf3tgszx01fs2prcf57t1tey9q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/347 250 645745 1944202 1943747 2026-06-09T16:55:29Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|346||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று! இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, 'அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்களில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால். ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள். தூண்கள், வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால், அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார் இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத் தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல; தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல; வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால். அகில இந்திய நிலையினருக்கு, தமது 'தளபதிகளிடம்' அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்! முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும் போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும். அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும் விதமாக, 'ஏடுகள்' கழகத்திலே தலைதூக்கிய 'எதிர்ப்பாளர்களை'த் தமது 'செல்லப்பிள்ளைகள்' ஆக்கிக்கொண்டு, அவர்களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மையையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக 'புகழ்' கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்! தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரகப் பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை ஏனெனில், நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது. என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள் தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது<noinclude></noinclude> nmglnoub5qbvaatut2jv9zgpsktcpny 1944283 1944202 2026-06-10T00:23:41Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|346||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>என்று! இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தனர். அதுகேட்டு, 'அகில இந்திய' காங்கிரசுத் தலைவர்கள் அகமகிழ்ந்ததுடன் இருந்துவிட்டனர்; எண்ணிப் பார்க்கவில்லை; ஆய்ந்து பார்க்களில்லை. ஆய்ந்து பார்த்திருப்பார்களானால். ஒரு இடத்திலே மிக முக்கியமானவர்கள். தூண்கள், வலிவும் வளர்ச்சியும் தருகிறவர்கள் இருப்பார்களானால், அவர்கள், அந்த இடம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே பொருள் இல்லை; கெட்டுவிட்டது என்று கூறி அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறத் தேவையில்லை; யாரார் இடத்தைக் கெடுத்துவிடுகிறார்களோ அவர்களை இந்தத் தூண்போன்றவர்கள் விரட்டியிருக்கவேண்டும்; அது முடியவில்லை என்பதிலிருந்து, இவர்கள் தூண்களும் அல்ல; தூய்மையாளரும் அல்ல; வல்லமை மிக்கோரும் அல்ல; வளர்ச்சிக்குப் பொறுப்பாளியும் அல்ல; என்பதனைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால். அகில இந்திய நிலையினருக்கு, தமது 'தளபதிகளிடம்' அவ்வளவு நம்பிக்கை! முதுகைத் தட்டிக்கொடுத்தனர்! முதல் மந்திரிகள், மந்திரிகள் என்ற நிலையினர் கூறும் போது, எப்படி நம்பிக்கை ஏற்படாமலிருக்கும். அவர்களின் பேச்சுக்குப் பொருளும் வலிவும் ஏற்றிவைக்கும் விதமாக, 'ஏடுகள்' கழகத்திலே தலைதூக்கிய 'எதிர்ப்பாளர்களை'த் தமது 'செல்லப்பிள்ளைகள்' ஆக்கிக்கொண்டு, அவர்களின் பேச்சிலே பேரறிவையும், போக்கிலே பெருந்தன்மையையும், கனைப்பிலே இடிமுழக்கத்தையும், கண் வீச்சிலே மின்னலையும் கண்டனர்!! பத்தி பத்தியாக 'புகழ்' கொட்டினர்; அவசர அவசரமாக ஆரூடம் கணித்தனர். இதனை நம்பி, அகில இந்தியத் தலைவர்கள் மெத்தவும் ஏமாந்துபோயினர்! தம்பி! நமது கழகத்துக்குள்ளே ஏற்பட்ட கலாம், காங்கிரகப் பெரும் தலைவர்களுக்கு, இனிக் கழகம் தலை தூக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதிலே ஆச்சரியமில்லை ஏனெனில், நம்மிலேயே பலருக்கு அந்தப் பீதி இருந்தது. என்னைப் பொறுத்தமட்டில் எதிர்ப்பாளர்களாகி, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்களே, அவர்களின் அளவிடற்கரிய ஆற்றலால், நாம் அழிக்கப்பட்டுப் போய்விடுவோம்; அவர்கள் தமது கோபப் பார்வையாலேயே நம்மைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற கவலை எழுந்ததே இல்லை; எனக்கிருந்தது<noinclude></noinclude> 23ie1vvbd54jmi0c6wm9lkmobt2dic7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/348 250 645746 1944203 1943756 2026-06-09T16:55:39Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||347}}{{Rule}}</noinclude>எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின. கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன். நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப் போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந் தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன். இலாயக்கற்றவன் என்பதுபற்றிய நமது எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி. என் மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான், வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதினனானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்! அவர்கள் இந்த அளவுக்கு வேகமாகவும், கடுமையாகவும், கேவலமாகவும், முன்தொடர்புபற்றிய நினைப்புக்கே இடமில்லாத முறையில் இழிவாகவும், பேசியும் எழுதியும் இராவிட்டால், நான் நெடுங்காலம் பாச உணர்ச்சி காரணமாகக் குழம்பிய மனதினனாகத்தான் இருந்திருப்பேன்; செயலாற்றும் நினைப்பு நசித்துக்கூடப் போயிருக்கும்; மாறிவிட்டவர்களின் கருத்துக்கள் நியாயமானவைகள்தானோ என்ற ஐயப்பாடுகூட உள்ளத்திலே புகுந்து குடைந்திருக்கும். ஆனால், இவை எதற்கும் இடம் இல்லாத முறையில், எடுத்த எடுப்பிலேயே, என்னைக் காண்பதே களிப்பு என்று ஒருமணி நேரத்துக்கு முன்புவரை பேசியதை மறந்து, என் உருவிலிருந்து உரைவரையில், கொள்கையிலிருந்து கூட்டுத் தோழர்கள்வரை, இழிவாகப் பேசி. ஓ! இவர்கள் ஏதோ புதிய கொள்கை கூறவில்லை; மூண்டு கிடக்கும் பகையைக் கக்குகிறார்கள்; தூண்டி விட்டபடி தாக்குகிறார்கள். என்பதனை நான் உணரச்செய்தனர்; அதனாலேயே! நான் இவ்வளவு விரைவிலே குழப்ப நிலையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிந்தது. காங்கிரசுப் பெருந்தலைவர்களோ தங்களுக்குத் தரப்பட்ட கணக்குகளைச் சரியானவை என்று நம்பி, இனி தி.மு. கழகம் நிலைக்காது; அதனை நிலைக்குலையச் செய்ய அதனிடம் நீண்ட காலமாக இருந்துவந்த நெடியவர்கள் கடும் தாக்குதலை நடத்தி<noinclude></noinclude> n475o6rdzt7efrjzxwwyofbftt0xk18 1944285 1944203 2026-06-10T00:26:47Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||347}}{{Rule}}</noinclude>எல்லாம், மன உளைச்சல். பாசப்பிணைப்பினாலே ஏற்பட்ட உணர்ச்சிகள் என் கண்களைக் குளமாக்கின. கருத்தைக் குழப்பின, செயலற்றவனாகிவிட்டேன். நல்ல வேளையாக, எனக்கிருந்த அந்த மன உளைச்சலைப் போக்கும் விதமாக, விலகியவர்கள் தாங்கள் எவ்வளவு பெருந் தலைவர்கள் என்பதை மட்டுமல்ல, நான் எவ்வளவு அற்பன். இலாயக்கற்றவன் என்பதுபற்றிய நமது எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் எடுத்துச் சொல்லி ஏசி ஏசி. என் மனதிலே அலைமோதிக்கொண்டிருந்த பாச உணர்ச்சி அவ்வளவையும் உலர்ந்துபோகச் செய்தனர். அதனால், நான், வறண்ட கண்ணினனானேன், குழப்பம் நீங்கப்பட்ட மனதினனானேன், செயலற்ற நிலை நீங்கிக் கடமையைச் செய்வோனானேன்! அவர்கள் இந்த அளவுக்கு வேகமாகவும், கடுமையாகவும், கேவலமாகவும், முன்தொடர்புபற்றிய நினைப்புக்கே இடமில்லாத முறையில் இழிவாகவும், பேசியும் எழுதியும் இராவிட்டால், நான் நெடுங்காலம் பாச உணர்ச்சி காரணமாகக் குழம்பிய மனதினனாகத்தான் இருந்திருப்பேன்; செயலாற்றும் நினைப்பு நசித்துக்கூடப் போயிருக்கும்; மாறிவிட்டவர்களின் கருத்துக்கள் நியாயமானவைகள்தானோ என்ற ஐயப்பாடுகூட உள்ளத்திலே புகுந்து குடைந்திருக்கும். ஆனால், இவை எதற்கும் இடம் இல்லாத முறையில், எடுத்த எடுப்பிலேயே, என்னைக் காண்பதே களிப்பு என்று ஒருமணி நேரத்துக்கு முன்புவரை பேசியதை மறந்து, என் உருவிலிருந்து உரைவரையில், கொள்கையிலிருந்து கூட்டுத் தோழர்கள்வரை, இழிவாகப் பேசி. ஓ! இவர்கள் ஏதோ புதிய கொள்கை கூறவில்லை; மூண்டு கிடக்கும் பகையைக் கக்குகிறார்கள்; தூண்டி விட்டபடி தாக்குகிறார்கள். என்பதனை நான் உணரச்செய்தனர்; அதனாலேயே! நான் இவ்வளவு விரைவிலே குழப்ப நிலையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முடிந்தது. காங்கிரசுப் பெருந்தலைவர்களோ தங்களுக்குத் தரப்பட்ட கணக்குகளைச் சரியானவை என்று நம்பி, இனி தி.மு. கழகம் நிலைக்காது; அதனை நிலைக்குலையச் செய்ய அதனிடம் நீண்ட காலமாக இருந்துவந்த நெடியவர்கள் கடும் தாக்குதலை நடத்தி<noinclude></noinclude> 4gxlv0gk2i8zkmwuafogzr99spf36q7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/349 250 645747 1944198 1941393 2026-06-09T16:47:12Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|348||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வருகிறார்கள்; அதன் காரணமாகக் கழகம் கலகலத்துவிடப் போகிறது என்று நம்பிக்கொண்டனர். இங்குள்ளவர்களும், மெத்த நம்பிக்கையுடன் கழகத்தின் கர்த்தா பெரியார்; அவரே தி. மு. கழகத்தை அழிக்கத் துடிக்கிறார். கழகத்தின் கருவூலம் வெளியேறி விட்டது; எனவே, கழகத்துக்கு எதிர்காலம் இல்லை. என்று திட்டவட்டமாகப் பேசி வந்தனர். கழகம், இயக்கம், கட்சி என்றால், அதிலே, யாரார், கடுமையான பேச்சுகளில் வல்லவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்கிறார்களோ, அவர்களாலேயே அது இயங்கி வருகிறது என்று ஆராய்ச்சியில்லாதவர்கள் எண்ணிக்கொள்வது இயல்பு. நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் இங்கு இருந்தபோது, இலட்சியம் அவர்களுக்கு இனிப்பு அளித்ததால், அந்த இலட்சியத்தை எதிர்த்தளர்களை என்னென்ன விதமான சுடுமொழியால் தாக்கினர் என்பதை நாடு அறியும். நமது இலட்சியத்தின் பகைவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா? இடிமுழக்கமிடுவோர் மாறிவிட்டது கண்டதும், முன்னாலே வாங்கிய அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் தடவிப் பார்த்துப் பார்த்து இப்படி நம்மைத் தாக்கியவர்கள் இப்போது நம்மைத் தாக்கப்போவதில்லை; தம்மைத் தாக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இருந்துவிட்டுவந்த இடத்தைத் தாக்கப்போகிறார்கள்; கண்குளிரக் காணலாம் என்று எண்ணி, விலகியவர்களை வரவேற்று, ஆலம்சுற்றி, பொட்டிட்டுச், சேரிடமறிந்து சேர்ந்தோய் வாழி என்று வாழ்த்தி, திருஷ்டி கழித்து, வரவேற்றுத் திருவிழா நடத்தினர். தம்பி! அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் தன்மையையும் அளவையும் வேகத்தையும் என்னாலே உணரமுடிகிறது. எந்த இலட்சியத்தை உலகமே எதிர்ப்பினும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இடிமுழக்கம்போன்ற நிலையில் எடுத்துக் கூறிவந்தார்களோ. அந்த இலட்சியத்தை வாழ்த்தியவர்களே. ஒருநாள் அது தீது, ஆகாது என்று பேசி, அந்த இலட்சிய ஒழிப்புத்தான் இப்போது எமது இலட்சியம் என்று பேசிடக் கேட்டால், நெடுங்காலமாகவே அந்த இலட்சியத்துக்கு வலிவு வளர வளரத் தமது ஆதிக்கத்துக்கு அழிவு என்பதனை உணர்ந்து எதிர்த்து வந்தவர்களுக்கு, அளவிட முடியாத அகமகிழ்ச்சி பொங்காதா!<noinclude></noinclude> 7lkmatg4e4it1eosd1infdcfh4t5xgu 1944204 1944198 2026-06-09T16:55:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|348||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வருகிறார்கள்; அதன் காரணமாகக் கழகம் கலகலத்துவிடப் போகிறது என்று நம்பிக்கொண்டனர். இங்குள்ளவர்களும், மெத்த நம்பிக்கையுடன் கழகத்தின் கர்த்தா பெரியார்; அவரே தி. மு. கழகத்தை அழிக்கத் துடிக்கிறார். கழகத்தின் கருவூலம் வெளியேறி விட்டது; எனவே, கழகத்துக்கு எதிர்காலம் இல்லை. என்று திட்டவட்டமாகப் பேசி வந்தனர். கழகம், இயக்கம், கட்சி என்றால், அதிலே, யாரார், கடுமையான பேச்சுகளில் வல்லவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்கிறார்களோ, அவர்களாலேயே அது இயங்கி வருகிறது என்று ஆராய்ச்சியில்லாதவர்கள் எண்ணிக்கொள்வது இயல்பு. நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் இங்கு இருந்தபோது, இலட்சியம் அவர்களுக்கு இனிப்பு அளித்ததால், அந்த இலட்சியத்தை எதிர்த்தளர்களை என்னென்ன விதமான சுடுமொழியால் தாக்கினர் என்பதை நாடு அறியும். நமது இலட்சியத்தின் பகைவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா? இடிமுழக்கமிடுவோர் மாறிவிட்டது கண்டதும், முன்னாலே வாங்கிய அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் தடவிப் பார்த்துப் பார்த்து இப்படி நம்மைத் தாக்கியவர்கள் இப்போது நம்மைத் தாக்கப்போவதில்லை; தம்மைத் தாக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இருந்துவிட்டுவந்த இடத்தைத் தாக்கப்போகிறார்கள்; கண்குளிரக் காணலாம் என்று எண்ணி, விலகியவர்களை வரவேற்று, ஆலம்சுற்றி, பொட்டிட்டுச், சேரிடமறிந்து சேர்ந்தோய் வாழி என்று வாழ்த்தி, திருஷ்டி கழித்து, வரவேற்றுத் திருவிழா நடத்தினர். தம்பி! அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் தன்மையையும் அளவையும் வேகத்தையும் என்னாலே உணரமுடிகிறது. எந்த இலட்சியத்தை உலகமே எதிர்ப்பினும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இடிமுழக்கம்போன்ற நிலையில் எடுத்துக் கூறிவந்தார்களோ. அந்த இலட்சியத்தை வாழ்த்தியவர்களே. ஒருநாள் அது தீது, ஆகாது என்று பேசி, அந்த இலட்சிய ஒழிப்புத்தான் இப்போது எமது இலட்சியம் என்று பேசிடக் கேட்டால், நெடுங்காலமாகவே அந்த இலட்சியத்துக்கு வலிவு வளர வளரத் தமது ஆதிக்கத்துக்கு அழிவு என்பதனை உணர்ந்து எதிர்த்து வந்தவர்களுக்கு, அளவிட முடியாத அகமகிழ்ச்சி பொங்காதா!<noinclude></noinclude> 6lpn4zdvswjj6qntcourxa4l13pjwr5 1944287 1944204 2026-06-10T00:29:53Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|348||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வருகிறார்கள்; அதன் காரணமாகக் கழகம் கலகலத்துவிடப் போகிறது என்று நம்பிக்கொண்டனர். இங்குள்ளவர்களும், மெத்த நம்பிக்கையுடன் கழகத்தின் கர்த்தா பெரியார்; அவரே தி. மு. கழகத்தை அழிக்கத் துடிக்கிறார். கழகத்தின் கருவூலம் வெளியேறி விட்டது; எனவே, கழகத்துக்கு எதிர்காலம் இல்லை. என்று திட்டவட்டமாகப் பேசி வந்தனர். கழகம், இயக்கம், கட்சி என்றால், அதிலே, யாரார், கடுமையான பேச்சுகளில் வல்லவர்கள் என்று தம்மைக் காட்டிக் கொள்கிறார்களோ, அவர்களாலேயே அது இயங்கி வருகிறது என்று ஆராய்ச்சியில்லாதவர்கள் எண்ணிக்கொள்வது இயல்பு. நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் இங்கு இருந்தபோது, இலட்சியம் அவர்களுக்கு இனிப்பு அளித்ததால், அந்த இலட்சியத்தை எதிர்த்தளர்களை என்னென்ன விதமான சுடுமொழியால் தாக்கினர் என்பதை நாடு அறியும். நமது இலட்சியத்தின் பகைவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா? இடிமுழக்கமிடுவோர் மாறிவிட்டது கண்டதும், முன்னாலே வாங்கிய அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் தடவிப் பார்த்துப் பார்த்து இப்படி நம்மைத் தாக்கியவர்கள் இப்போது நம்மைத் தாக்கப்போவதில்லை; தம்மைத் தாக்கப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இருந்துவிட்டுவந்த இடத்தைத் தாக்கப்போகிறார்கள்; கண்குளிரக் காணலாம் என்று எண்ணி, விலகியவர்களை வரவேற்று, ஆலம்சுற்றி, பொட்டிட்டுச், சேரிடமறிந்து சேர்ந்தோய் வாழி என்று வாழ்த்தி, திருஷ்டி கழித்து, வரவேற்றுத் திருவிழா நடத்தினர். தம்பி! அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் தன்மையையும் அளவையும் வேகத்தையும் என்னாலே உணரமுடிகிறது. எந்த இலட்சியத்தை உலகமே எதிர்ப்பினும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று இடிமுழக்கம்போன்ற நிலையில் எடுத்துக் கூறிவந்தார்களோ. அந்த இலட்சியத்தை வாழ்த்தியவர்களே. ஒருநாள் அது தீது, ஆகாது என்று பேசி, அந்த இலட்சிய ஒழிப்புத்தான் இப்போது எமது இலட்சியம் என்று பேசிடக் கேட்டால், நெடுங்காலமாகவே அந்த இலட்சியத்துக்கு வலிவு வளர வளரத் தமது ஆதிக்கத்துக்கு அழிவு என்பதனை உணர்ந்து எதிர்த்து வந்தவர்களுக்கு, அளவிட முடியாத அகமகிழ்ச்சி பொங்காதா!<noinclude></noinclude> iukkn1l4k68x9cxuhjjiqtj57npici7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/350 250 645748 1944201 1941395 2026-06-09T16:53:47Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||349}}{{Rule}}</noinclude>பொங்கியதுடன் இல்லை; புதிய நம்பிக்கையே பிறந்தது; அந்த நம்பிக்கையினால்தான், அவர்கள், 'கழகம் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு அடியோடு அழிந்துபோகும்' என்று பேசினர்; மேலிடத்தவருக்கும் அந்த நம்பிக்கையைத் திடமாக்கினர். தம்பி! இப்போது கூர்ந்து பார், தேர்தல் களத்தை. ஒருபுறத்தில் கழகம் பிளந்துவிட்டது. கலகலத்துக் கிடக்கிறது; தாக்கும் சக்தியும் தாங்கும் சக்தியும் இல்லை; சலித்துப் போய், களைத்துப்போய், பீதியுடன் தள்ளாடிக்கொண்டு வருகிறது; இதனை ஒரு தட்டுத்தட்டினால் கீழே வீழ்ந்துவிடும். பிறகு எழுந்திருக்கவே முடியாது என்ற நம்பிக்கை வேகத்துடன், எல்லாவிதமானப் போர்க் கருவிகளையும் ஏராளமான அளவு குவித்துவைத்துக்கொண்டு, ஆடுநர், பாடுநர், எடுபிடிகள் உடன்வர, காங்கிரசுக் கட்சியின் அணிவகுப்பு! மற்றோர்புறம், களத்தின் தன்மையைக் கண்டறியவேண்டிய நேரத்தில், கலாம் விளைவிப்போரை அடக்கித் தீரவேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டதால், ஆர அமர ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், போதுமான படைக்கலன் இல்லாமல், கூட இருந்தோர் குடிகெடுத்தனரே, குலவி மகிழ்ந்தோர் குத்திக் குடையத் துணிந்தனரே, கோட்டைக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் காட்டிக்கொடுப்போர்களாகிவிட்டனரே, ஏற்றி ஏற்றித் தொழுதவர்கள் ஏசித் தூற்றித் திரிகின்றனரே, என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது' என்ற கலக்கமும் கவலையும் குடையும் நிலையில், மாற்றாரின் படைவரிசையிலே பளபளப்பான படைக்கலன்கள் இருக்கக் கண்டு, போதுமான படைக்கலன்களைத் தேடிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்கவில்லையே என்று ஏக்கம்கொண்ட நிலையிலே, நமது கழக அணிவகுப்பு. பாய்ந்தோடிப் பதுங்கிக்கொள்ள, அடர்ந்த ஒரு புதர் ஒரு பக்கத்தில்; இரத்தவாடையுடன் கூடிய வாயைத் திறந்தபடி உறுமிக்கொண்டு தாக்கவரும் வேங்கை ஒரு புறம்; எதிர்ப்புறத்தில் வழுக்குப் பாறைமீது காலை மிகக் கஷ்டப்பட்டு ஊன்றிக் கொண்டு, காம்பு ஒடிந்த வேல் கரத்தினில் ஏந்திக்கொண்டு, தாக்கத் தயாராக நிற்கும் துணிவுமிக்க இளைஞன்! தம்பி! தேர்தல் களத்திலே நாம் பெற்றுள்ள வெற்றி மிகப் பெரிது என்பதால் அல்ல. மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையிலே பெற்ற வெற்றி என்பதனாலேயே, அந்த வெற்றியின் அருமையும்<noinclude></noinclude> mrynzuojkzo35bixvf093j112c96nif 1944205 1944201 2026-06-09T16:55:56Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||349}}{{Rule}}</noinclude>பொங்கியதுடன் இல்லை; புதிய நம்பிக்கையே பிறந்தது; அந்த நம்பிக்கையினால்தான், அவர்கள், 'கழகம் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு அடியோடு அழிந்துபோகும்' என்று பேசினர்; மேலிடத்தவருக்கும் அந்த நம்பிக்கையைத் திடமாக்கினர். தம்பி! இப்போது கூர்ந்து பார், தேர்தல் களத்தை. ஒருபுறத்தில் கழகம் பிளந்துவிட்டது. கலகலத்துக் கிடக்கிறது; தாக்கும் சக்தியும் தாங்கும் சக்தியும் இல்லை; சலித்துப் போய், களைத்துப்போய், பீதியுடன் தள்ளாடிக்கொண்டு வருகிறது; இதனை ஒரு தட்டுத்தட்டினால் கீழே வீழ்ந்துவிடும். பிறகு எழுந்திருக்கவே முடியாது என்ற நம்பிக்கை வேகத்துடன், எல்லாவிதமானப் போர்க் கருவிகளையும் ஏராளமான அளவு குவித்துவைத்துக்கொண்டு, ஆடுநர், பாடுநர், எடுபிடிகள் உடன்வர, காங்கிரசுக் கட்சியின் அணிவகுப்பு! மற்றோர்புறம், களத்தின் தன்மையைக் கண்டறியவேண்டிய நேரத்தில், கலாம் விளைவிப்போரை அடக்கித் தீரவேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டதால், ஆர அமர ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், போதுமான படைக்கலன் இல்லாமல், கூட இருந்தோர் குடிகெடுத்தனரே, குலவி மகிழ்ந்தோர் குத்திக் குடையத் துணிந்தனரே, கோட்டைக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் காட்டிக்கொடுப்போர்களாகிவிட்டனரே, ஏற்றி ஏற்றித் தொழுதவர்கள் ஏசித் தூற்றித் திரிகின்றனரே, என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது' என்ற கலக்கமும் கவலையும் குடையும் நிலையில், மாற்றாரின் படைவரிசையிலே பளபளப்பான படைக்கலன்கள் இருக்கக் கண்டு, போதுமான படைக்கலன்களைத் தேடிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்கவில்லையே என்று ஏக்கம்கொண்ட நிலையிலே, நமது கழக அணிவகுப்பு. பாய்ந்தோடிப் பதுங்கிக்கொள்ள, அடர்ந்த ஒரு புதர் ஒரு பக்கத்தில்; இரத்தவாடையுடன் கூடிய வாயைத் திறந்தபடி உறுமிக்கொண்டு தாக்கவரும் வேங்கை ஒரு புறம்; எதிர்ப்புறத்தில் வழுக்குப் பாறைமீது காலை மிகக் கஷ்டப்பட்டு ஊன்றிக் கொண்டு, காம்பு ஒடிந்த வேல் கரத்தினில் ஏந்திக்கொண்டு, தாக்கத் தயாராக நிற்கும் துணிவுமிக்க இளைஞன்! தம்பி! தேர்தல் களத்திலே நாம் பெற்றுள்ள வெற்றி மிகப் பெரிது என்பதால் அல்ல. மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையிலே பெற்ற வெற்றி என்பதனாலேயே, அந்த வெற்றியின் அருமையும்<noinclude></noinclude> 43lhiqvui5rufkt8rpeiubrw4p2xddc 1944289 1944205 2026-06-10T00:33:00Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||349}}{{Rule}}</noinclude>பொங்கியதுடன் இல்லை; புதிய நம்பிக்கையே பிறந்தது; அந்த நம்பிக்கையினால்தான், அவர்கள், 'கழகம் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு அடியோடு அழிந்துபோகும்' என்று பேசினர்; மேலிடத்தவருக்கும் அந்த நம்பிக்கையைத் திடமாக்கினர். தம்பி! இப்போது கூர்ந்து பார், தேர்தல் களத்தை. ஒருபுறத்தில் கழகம் பிளந்துவிட்டது. கலகலத்துக் கிடக்கிறது; தாக்கும் சக்தியும் தாங்கும் சக்தியும் இல்லை; சலித்துப் போய், களைத்துப்போய், பீதியுடன் தள்ளாடிக்கொண்டு வருகிறது; இதனை ஒரு தட்டுத்தட்டினால் கீழே வீழ்ந்துவிடும். பிறகு எழுந்திருக்கவே முடியாது என்ற நம்பிக்கை வேகத்துடன், எல்லாவிதமானப் போர்க் கருவிகளையும் ஏராளமான அளவு குவித்துவைத்துக்கொண்டு, ஆடுநர், பாடுநர், எடுபிடிகள் உடன்வர, காங்கிரசுக் கட்சியின் அணிவகுப்பு! மற்றோர்புறம், களத்தின் தன்மையைக் கண்டறியவேண்டிய நேரத்தில், கலாம் விளைவிப்போரை அடக்கித் தீரவேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டதால், ஆர அமர ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், போதுமான படைக்கலன் இல்லாமல், கூட இருந்தோர் குடிகெடுத்தனரே, குலவி மகிழ்ந்தோர் குத்திக் குடையத் துணிந்தனரே, கோட்டைக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் காட்டிக்கொடுப்போர்களாகிவிட்டனரே, ஏற்றி ஏற்றித் தொழுதவர்கள் ஏசித் தூற்றித் திரிகின்றனரே, என்ன செய்வது, எப்படித் தாங்கிக்கொள்வது' என்ற கலக்கமும் கவலையும் குடையும் நிலையில், மாற்றாரின் படைவரிசையிலே பளபளப்பான படைக்கலன்கள் இருக்கக் கண்டு, போதுமான படைக்கலன்களைத் தேடிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்கவில்லையே என்று ஏக்கம்கொண்ட நிலையிலே, நமது கழக அணிவகுப்பு. பாய்ந்தோடிப் பதுங்கிக்கொள்ள, அடர்ந்த ஒரு புதர் ஒரு பக்கத்தில்; இரத்தவாடையுடன் கூடிய வாயைத் திறந்தபடி உறுமிக்கொண்டு தாக்கவரும் வேங்கை ஒரு புறம்; எதிர்ப்புறத்தில் வழுக்குப் பாறைமீது காலை மிகக் கஷ்டப்பட்டு ஊன்றிக் கொண்டு, காம்பு ஒடிந்த வேல் கரத்தினில் ஏந்திக்கொண்டு, தாக்கத் தயாராக நிற்கும் துணிவுமிக்க இளைஞன்! தம்பி! தேர்தல் களத்திலே நாம் பெற்றுள்ள வெற்றி மிகப் பெரிது என்பதால் அல்ல. மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையிலே பெற்ற வெற்றி என்பதனாலேயே, அந்த வெற்றியின் அருமையும்<noinclude></noinclude> qsc6gt8gumcsdq5ysu2kchpob96udrq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/351 250 645749 1944206 1941396 2026-06-09T17:01:50Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|350||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பெருமையும் தரத்தில் மேலானது என்று, கெடுமதியற்றோர் அனைவருமே பாராட்டுகின்றனர். எரிச்சலூட்டி இன்பம் காணும் போக்கினர் தவிர, மற்றவர்கள், இரு அணிவகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் பெற்ற வெற்றி தரமிக்கது என்று தீர்ப்பளிக்கின்றனர். வெற்றியாம் வெற்றி, என்ன பெரிய வெற்றி இது என்று வேகமாக பேசத் துவங்கியவர்கள்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவாக அமர்ந்தபோது. பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி. கவனித்துத் தீரவேண்டிய பிரச்சினையாகிவிட்டது. என்று கருத்து வெளியிட்டுள்ளனர். நாம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுங் கட்சியை மிரட்டக்கூடியது அல்ல. என்பதைத் தம்பி! நினைவிலே கொள்ளவேண்டும். இப்போதும் 139 அவர்கள்; நாம் 50 ஆமாம்! சட்டசபையிலே நமது கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடத்தக்க வலிவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிதிக்க எண்ணம் பிறக்கும்போது, முன்பு 15 பேர்களாக இருக்கும்போது காலின்கீழ் போட்டு மிதித்துத் துவைத்தோம். அழிந்துவிடவில்லையே, மாறாக பதினைந்தாக இருந்தவர்கள் ஐம்பதாக அல்லவா வளர்ந்துவிட்டனர். இம்முறையும் சென்ற முறைபோலவே எண்ணிக்கை பலம் ஊட்டிவிடும் செருக்கினால் இந்த ஐம்பதின்மரை நசுக்கினால், அதன் விளைவாக, அடுத்த தேர்தலிலே நிலைமை என்ன ஆகுமோ... என்ற அச்சம் அவர்கள் மனதிலே எழத்தான் செய்யும். அடுத்த தேர்தலா? அடுத்த தேர்தவில், அடியோடு அழித்துவிடப்போகிறோம். தீனாமூனாக்களை என்று சில்லறைகள் சினமிகுந்து பேசக்கூடும்; பெரியவர்களுக்கு அந்த நினைப்பு எழாது; அவர்கள் முன்புகொண்ட எண்ணமும் நடைபெற்ற நிகழ்ச்சியும் நினைவிலே நிச்சயம் இருக்கும். உள்ளபடி தம்பி! இந்தத் தேர்தலிலே நமது கழகம் அடியோடு அழிந்துபோகும் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள். நாட்டுமக்களிடம் உறுதியுடன் எடுத்துக் கூறினார்கள். ஆளுங்கட்சியின் அடிபணியச் செல்வவான்கள் திரண்டு நிற்பதையும், பத்திரிகைகள் பலம் தேடித்தருவதையும், பெரியார்<noinclude></noinclude> muntj2t0xkou9dc5ijel9apdi861v15 1944250 1944206 2026-06-09T20:28:24Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|350||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பெருமையும் தரத்தில் மேலானது என்று, கெடுமதியற்றோர் அனைவருமே பாராட்டுகின்றனர். எரிச்சலூட்டி இன்பம் காணும் போக்கினர் தவிர, மற்றவர்கள், இரு அணிவகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் பெற்ற வெற்றி தரமிக்கது என்று தீர்ப்பளிக்கின்றனர். வெற்றியாம் வெற்றி, என்ன பெரிய வெற்றி இது என்று வேகமாக பேசத் துவங்கியவர்கள்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவாக அமர்ந்தபோது. பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி. கவனித்துத் தீரவேண்டிய பிரச்சினையாகிவிட்டது. என்று கருத்து வெளியிட்டுள்ளனர். நாம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுங் கட்சியை மிரட்டக்கூடியது அல்ல. என்பதைத் தம்பி! நினைவிலே கொள்ளவேண்டும். இப்போதும் 139 அவர்கள்; நாம் 50 ஆமாம்! சட்டசபையிலே நமது கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடத்தக்க வலிவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிதிக்க எண்ணம் பிறக்கும்போது, முன்பு 15 பேர்களாக இருக்கும்போது காலின்கீழ் போட்டு மிதித்துத் துவைத்தோம். அழிந்துவிடவில்லையே, மாறாக பதினைந்தாக இருந்தவர்கள் ஐம்பதாக அல்லவா வளர்ந்துவிட்டனர். இம்முறையும் சென்ற முறைபோலவே எண்ணிக்கை பலம் ஊட்டிவிடும் செருக்கினால் இந்த ஐம்பதின்மரை நசுக்கினால், அதன் விளைவாக, அடுத்த தேர்தலிலே நிலைமை என்ன ஆகுமோ... என்ற அச்சம் அவர்கள் மனதிலே எழத்தான் செய்யும். அடுத்த தேர்தலா? அடுத்த தேர்தவில், அடியோடு அழித்துவிடப்போகிறோம். தீனாமூனாக்களை என்று சில்லறைகள் சினமிகுந்து பேசக்கூடும்; பெரியவர்களுக்கு அந்த நினைப்பு எழாது; அவர்கள் முன்புகொண்ட எண்ணமும் நடைபெற்ற நிகழ்ச்சியும் நினைவிலே நிச்சயம் இருக்கும். உள்ளபடி தம்பி! இந்தத் தேர்தலிலே நமது கழகம் அடியோடு அழிந்துபோகும் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள். நாட்டுமக்களிடம் உறுதியுடன் எடுத்துக் கூறினார்கள். ஆளுங்கட்சியின் அடிபணியச் செல்வவான்கள் திரண்டு நிற்பதையும், பத்திரிகைகள் பலம் தேடித்தருவதையும், பெரியார்<noinclude></noinclude> ct3xuax4koh4xfdix7emhgbzrrhltab 1944292 1944250 2026-06-10T00:36:08Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|350||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>பெருமையும் தரத்தில் மேலானது என்று, கெடுமதியற்றோர் அனைவருமே பாராட்டுகின்றனர். எரிச்சலூட்டி இன்பம் காணும் போக்கினர் தவிர, மற்றவர்கள், இரு அணிவகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் பெற்ற வெற்றி தரமிக்கது என்று தீர்ப்பளிக்கின்றனர். வெற்றியாம் வெற்றி, என்ன பெரிய வெற்றி இது என்று வேகமாக பேசத் துவங்கியவர்கள்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவாக அமர்ந்தபோது. பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள வெற்றி. கவனித்துத் தீரவேண்டிய பிரச்சினையாகிவிட்டது. என்று கருத்து வெளியிட்டுள்ளனர். நாம் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு ஆளுங் கட்சியை மிரட்டக்கூடியது அல்ல. என்பதைத் தம்பி! நினைவிலே கொள்ளவேண்டும். இப்போதும் 139 அவர்கள்; நாம் 50 ஆமாம்! சட்டசபையிலே நமது கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துத் துவைத்துவிடத்தக்க வலிவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிதிக்க எண்ணம் பிறக்கும்போது, முன்பு 15 பேர்களாக இருக்கும்போது காலின்கீழ் போட்டு மிதித்துத் துவைத்தோம். அழிந்துவிடவில்லையே, மாறாக பதினைந்தாக இருந்தவர்கள் ஐம்பதாக அல்லவா வளர்ந்துவிட்டனர். இம்முறையும் சென்ற முறைபோலவே எண்ணிக்கை பலம் ஊட்டிவிடும் செருக்கினால் இந்த ஐம்பதின்மரை நசுக்கினால், அதன் விளைவாக, அடுத்த தேர்தலிலே நிலைமை என்ன ஆகுமோ... என்ற அச்சம் அவர்கள் மனதிலே எழத்தான் செய்யும். அடுத்த தேர்தலா? அடுத்த தேர்தவில், அடியோடு அழித்துவிடப்போகிறோம். தீனாமூனாக்களை என்று சில்லறைகள் சினமிகுந்து பேசக்கூடும்; பெரியவர்களுக்கு அந்த நினைப்பு எழாது; அவர்கள் முன்புகொண்ட எண்ணமும் நடைபெற்ற நிகழ்ச்சியும் நினைவிலே நிச்சயம் இருக்கும். உள்ளபடி தம்பி! இந்தத் தேர்தலிலே நமது கழகம் அடியோடு அழிந்துபோகும் என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள். நாட்டுமக்களிடம் உறுதியுடன் எடுத்துக் கூறினார்கள். ஆளுங்கட்சியின் அடிபணியச் செல்வவான்கள் திரண்டு நிற்பதையும், பத்திரிகைகள் பலம் தேடித்தருவதையும், பெரியார்<noinclude></noinclude> 53rc2pemn2s2a29s30v4m5ar71iegbr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/352 250 645750 1944207 1941399 2026-06-09T17:06:30Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||351}}{{Rule}}</noinclude>பக்கத்துணையாக இருப்பதையும், கழகத்தைவிட்டு விலகியோர் பகை சுக்கி வருவதையும் பார்த்தபோது, இந்தத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக்கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை, அமைச்சர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். பொதுமக்களிடம் பேசும்போதும், பத்திரிகை நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும்போதும், அமைச்சர்கள். கழகம் ஒழிந்துவிடும். நாலுபேர் வருவார்களோ ஐந்துபேர் வருவார்களோ என்பதே சந்தேகம் என்று மிக்க உறுதியுடன், தெம்புடன், கூறிவந்தனர். பொதுத் தேர்தலிலே பிரசாரம் களைகட்டுவதற்காகப் பேசப்பட்டது இது என்றுகூடச் சொல்வதற்கு இல்லை. மதுரையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலேயே, பண்டித நேருவும், வேறு சிலரும். திராவிட முன்னேற்றக் கழசுத்தைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாமா என்பதுபற்றிக் கேட்டபோது, இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், நேரு பண்டிதருக்கு உறுதி அளித்தார்கள். "திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். பொதுத் தேர்தல் வருகிறது. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலை எடுக்க ஒட்டாமல் அழித்து விடுகிறோம்." காமராஜரும் சுப்ரமணியமும் வெளியிட்ட கருத்து; தந்த வாக்குறுதி; எடுத்துக்கொண்ட சூளுரை; விடுத்த அறைகூவல், இது. இவர்களின் பேச்சை நம்பித்தாள், பிப்ரவரி 22ல்கூட டாக்டர் சுப்பராயன், சென்னையில் பேசுகையில், திட்ட வட்டமாக, "இந்தத் தேர்தலில் தி. மு. க. வினருக்கு சட்டசபையில் இப்போதுள்ள இடம்கூடக் கிடைக்காது." என்று தெரிவித்தார். நாற்பது ஆண்டுக்கால அனுபவம் அவருக்கு வேகமாகப் பேசுவதை விரும்பும் இயல்பும்கொண்டவர் அல்ல எனினும் அவருக்குத் தரப்பட்டதகவல், அவரை இந்த அளவு உறுதியாகப் பேசச்செய்தது.<noinclude></noinclude> 7z6ehxslcouq9odmfuhc7424564elqc 1944251 1944207 2026-06-09T20:28:33Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||351}}{{Rule}}</noinclude>பக்கத்துணையாக இருப்பதையும், கழகத்தைவிட்டு விலகியோர் பகை சுக்கி வருவதையும் பார்த்தபோது, இந்தத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக்கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை, அமைச்சர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். பொதுமக்களிடம் பேசும்போதும், பத்திரிகை நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும்போதும், அமைச்சர்கள். கழகம் ஒழிந்துவிடும். நாலுபேர் வருவார்களோ ஐந்துபேர் வருவார்களோ என்பதே சந்தேகம் என்று மிக்க உறுதியுடன், தெம்புடன், கூறிவந்தனர். பொதுத் தேர்தலிலே பிரசாரம் களைகட்டுவதற்காகப் பேசப்பட்டது இது என்றுகூடச் சொல்வதற்கு இல்லை. மதுரையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலேயே, பண்டித நேருவும், வேறு சிலரும். திராவிட முன்னேற்றக் கழசுத்தைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாமா என்பதுபற்றிக் கேட்டபோது, இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், நேரு பண்டிதருக்கு உறுதி அளித்தார்கள். "திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். பொதுத் தேர்தல் வருகிறது. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலை எடுக்க ஒட்டாமல் அழித்து விடுகிறோம்." காமராஜரும் சுப்ரமணியமும் வெளியிட்ட கருத்து; தந்த வாக்குறுதி; எடுத்துக்கொண்ட சூளுரை; விடுத்த அறைகூவல், இது. இவர்களின் பேச்சை நம்பித்தாள், பிப்ரவரி 22ல்கூட டாக்டர் சுப்பராயன், சென்னையில் பேசுகையில், திட்ட வட்டமாக, "இந்தத் தேர்தலில் தி. மு. க. வினருக்கு சட்டசபையில் இப்போதுள்ள இடம்கூடக் கிடைக்காது." என்று தெரிவித்தார். நாற்பது ஆண்டுக்கால அனுபவம் அவருக்கு வேகமாகப் பேசுவதை விரும்பும் இயல்பும்கொண்டவர் அல்ல எனினும் அவருக்குத் தரப்பட்டதகவல், அவரை இந்த அளவு உறுதியாகப் பேசச்செய்தது.<noinclude></noinclude> 9dofrjy7j3g08mzcri4wnh7j0l2bz12 1944296 1944251 2026-06-10T00:39:13Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||351}}{{Rule}}</noinclude>பக்கத்துணையாக இருப்பதையும், கழகத்தைவிட்டு விலகியோர் பகை சுக்கி வருவதையும் பார்த்தபோது, இந்தத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தீர்த்துக்கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை, அமைச்சர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். பொதுமக்களிடம் பேசும்போதும், பத்திரிகை நிருபர்களிடம் விளக்கம் அளிக்கும்போதும், அமைச்சர்கள். கழகம் ஒழிந்துவிடும். நாலுபேர் வருவார்களோ ஐந்துபேர் வருவார்களோ என்பதே சந்தேகம் என்று மிக்க உறுதியுடன், தெம்புடன், கூறிவந்தனர். பொதுத் தேர்தலிலே பிரசாரம் களைகட்டுவதற்காகப் பேசப்பட்டது இது என்றுகூடச் சொல்வதற்கு இல்லை. மதுரையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலேயே, பண்டித நேருவும், வேறு சிலரும். திராவிட முன்னேற்றக் கழசுத்தைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாமா என்பதுபற்றிக் கேட்டபோது, இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், நேரு பண்டிதருக்கு உறுதி அளித்தார்கள். "திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். பொதுத் தேர்தல் வருகிறது. அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலை எடுக்க ஒட்டாமல் அழித்து விடுகிறோம்." காமராஜரும் சுப்ரமணியமும் வெளியிட்ட கருத்து; தந்த வாக்குறுதி; எடுத்துக்கொண்ட சூளுரை; விடுத்த அறைகூவல், இது. இவர்களின் பேச்சை நம்பித்தாள், பிப்ரவரி 22ல்கூட டாக்டர் சுப்பராயன், சென்னையில் பேசுகையில், திட்ட வட்டமாக, "இந்தத் தேர்தலில் தி. மு. க. வினருக்கு சட்டசபையில் இப்போதுள்ள இடம்கூடக் கிடைக்காது." என்று தெரிவித்தார். நாற்பது ஆண்டுக்கால அனுபவம் அவருக்கு வேகமாகப் பேசுவதை விரும்பும் இயல்பும்கொண்டவர் அல்ல எனினும் அவருக்குத் தரப்பட்டதகவல், அவரை இந்த அளவு உறுதியாகப் பேசச்செய்தது.<noinclude></noinclude> 44zou2kbdk578lqiuqvat53hdo04a2h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/353 250 645751 1944232 1941400 2026-06-09T18:06:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|352||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகளும், இதே கருத்தினை உறுதியாகத் தெரிவித்தன. 16-2-62ல், காங்கிரஸ் ஆதரவு ஏடு, தலையங்கம் மூலம், கடந்த இரண்டு தேர்தல்களின்போது இருந்ததைக் காட்டிலும், இப்போது காங்கிரஸ்மீது மக்கள் அன்பும் அபிமானமும் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஆகையால் இந்தத் தடவை மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் காங்கிரசுக்கே ஆதரவளிப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை - என்று கருத்தைப் பரப்பிற்று. எதனையும் விளக்கமாக்கிப் பேசுபவர் அல்லவா, சுப்ரமணியனார்!! அவர் கூறியது இது: இன்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்குச் சாதகமான சூழ்நிலை. அசைக்கமுடியாத உறுதியான ஆதரவு, பெருமளவுக்கு இருக்கிறது. பெருமளவு - அதிக இடம் - அதிக ஆதரவு என்று பொதுப் படையாகத்தான் பேசிவந்தார்கள்போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி! பள்ளிவிவரப் புலிகளல்லவா. திட்ட வட்டம் இல்லாமலா பேசுவார்கள். ஜனவரித்திங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சுப்ரமணியனார் தெளிவாகத் தெரிவித்தார். இப்போது சட்டசபையில் காங்கிரசுக்குள்ள ஸ்தானங்களைவிட 15 ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைப்பது உறுதி என்று இப்போதைய சுற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டேன். என்று நிதிமதி இருதுறைகளையும் நிர்வகித்து வந்தவர் கூறினார் மக்களிடம் நேரிடையாகப் பழகும் முதலமைச்சர் காமராஜர், பத்திரிகை நிருபர்களிடம், தமிழ்நாடு சட்டசபையில் தற்பொழுதுள்ள உள்ள ஸ்தானங்களைவிட அடுத்த தேர்தலில் முப்பது ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கும். என்று கூறியிருக்கிறார். தம்பி! அவர்களெல்லாம் போட்ட கணக்குப் பொய்த்துப் போகும்படி செய்துவிட்ட பெருமை, நமது கழக அணி வகுப்பினையே சேரும்.<noinclude></noinclude> 918ogp7txvr5ne39hxse547uj88jhaa 1944252 1944232 2026-06-09T20:28:42Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|352||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகளும், இதே கருத்தினை உறுதியாகத் தெரிவித்தன. 16-2-62ல், காங்கிரஸ் ஆதரவு ஏடு, தலையங்கம் மூலம், கடந்த இரண்டு தேர்தல்களின்போது இருந்ததைக் காட்டிலும், இப்போது காங்கிரஸ்மீது மக்கள் அன்பும் அபிமானமும் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஆகையால் இந்தத் தடவை மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் காங்கிரசுக்கே ஆதரவளிப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை - என்று கருத்தைப் பரப்பிற்று. எதனையும் விளக்கமாக்கிப் பேசுபவர் அல்லவா, சுப்ரமணியனார்!! அவர் கூறியது இது: இன்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்குச் சாதகமான சூழ்நிலை. அசைக்கமுடியாத உறுதியான ஆதரவு, பெருமளவுக்கு இருக்கிறது. பெருமளவு - அதிக இடம் - அதிக ஆதரவு என்று பொதுப் படையாகத்தான் பேசிவந்தார்கள்போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி! பள்ளிவிவரப் புலிகளல்லவா. திட்ட வட்டம் இல்லாமலா பேசுவார்கள். ஜனவரித்திங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சுப்ரமணியனார் தெளிவாகத் தெரிவித்தார். இப்போது சட்டசபையில் காங்கிரசுக்குள்ள ஸ்தானங்களைவிட 15 ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைப்பது உறுதி என்று இப்போதைய சுற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டேன். என்று நிதிமதி இருதுறைகளையும் நிர்வகித்து வந்தவர் கூறினார் மக்களிடம் நேரிடையாகப் பழகும் முதலமைச்சர் காமராஜர், பத்திரிகை நிருபர்களிடம், தமிழ்நாடு சட்டசபையில் தற்பொழுதுள்ள உள்ள ஸ்தானங்களைவிட அடுத்த தேர்தலில் முப்பது ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கும். என்று கூறியிருக்கிறார். தம்பி! அவர்களெல்லாம் போட்ட கணக்குப் பொய்த்துப் போகும்படி செய்துவிட்ட பெருமை, நமது கழக அணி வகுப்பினையே சேரும்.<noinclude></noinclude> g45w8jst19mdf42k0g9yllrkoowbprf 1944299 1944252 2026-06-10T00:42:20Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|352||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகளும், இதே கருத்தினை உறுதியாகத் தெரிவித்தன. 16-2-62ல், காங்கிரஸ் ஆதரவு ஏடு, தலையங்கம் மூலம், கடந்த இரண்டு தேர்தல்களின்போது இருந்ததைக் காட்டிலும், இப்போது காங்கிரஸ்மீது மக்கள் அன்பும் அபிமானமும் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். ஆகையால் இந்தத் தடவை மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் காங்கிரசுக்கே ஆதரவளிப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை - என்று கருத்தைப் பரப்பிற்று. எதனையும் விளக்கமாக்கிப் பேசுபவர் அல்லவா, சுப்ரமணியனார்!! அவர் கூறியது இது: இன்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்குச் சாதகமான சூழ்நிலை. அசைக்கமுடியாத உறுதியான ஆதரவு, பெருமளவுக்கு இருக்கிறது. பெருமளவு - அதிக இடம் - அதிக ஆதரவு என்று பொதுப் படையாகத்தான் பேசிவந்தார்கள்போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி! பள்ளிவிவரப் புலிகளல்லவா. திட்ட வட்டம் இல்லாமலா பேசுவார்கள். ஜனவரித்திங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சுப்ரமணியனார் தெளிவாகத் தெரிவித்தார். இப்போது சட்டசபையில் காங்கிரசுக்குள்ள ஸ்தானங்களைவிட 15 ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைப்பது உறுதி என்று இப்போதைய சுற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டேன். என்று நிதிமதி இருதுறைகளையும் நிர்வகித்து வந்தவர் கூறினார் மக்களிடம் நேரிடையாகப் பழகும் முதலமைச்சர் காமராஜர், பத்திரிகை நிருபர்களிடம், தமிழ்நாடு சட்டசபையில் தற்பொழுதுள்ள உள்ள ஸ்தானங்களைவிட அடுத்த தேர்தலில் முப்பது ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கும். என்று கூறியிருக்கிறார். தம்பி! அவர்களெல்லாம் போட்ட கணக்குப் பொய்த்துப் போகும்படி செய்துவிட்ட பெருமை, நமது கழக அணி வகுப்பினையே சேரும்.<noinclude></noinclude> gnuqjpzbmkmdabxot0do6yycssmuzdy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/354 250 645752 1944238 1941401 2026-06-09T18:38:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||353}}{{Rule}}</noinclude> எனவேதான், கவலைப்படுகிறோம் - கலக்கமடைகிறோம் - கவனித்தாகவேண்டும் - என்று காங்கிரசுப் பெருந்தலைவர்கள் இப்போது பேசவேண்டி வந்திருக்கிறது. பிரச்சார முறைகளைச் செம்மைப்படுத்தினால், அடுத்த முறை, கழகத்தை ஒழித்துவிடலாம் என்று சிலரும். பிரச்சாரம் செய்யவிடாமல் கழகத்தைத் தடுத்துவிட்டால், அடுத்தமுறை கழகத்தை ஒடித்துவிடலாம் என்று சிலரும் பேசுகிறார்கள். வழக்குகளைத் தொடுத்து வாட்டிடலாம் என்று ஒருபுறம் நினைப்பு நெளிகிறது, நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். வழக்கமான சிண்டு முடிந்துவிடும் வேலையில் ஈடுபடலாம் என்று சிலர் முனைகிறார்கள். இழித்தும் பழித்தும் பேசியும், எழுதியும், மக்கள் முன்னால் கழகத்தவர்களைக் கேவலப்படுத்திக் காட்டலாம் என்று, எப்போதும்போல முயற்சி நடைபெற்றபடி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் ஏடுகளும், கழகத்தை எதிர்த்துப் பேசினாலும், எழுதினாலும், பொதுமக்கள், அவ்வளவு அதிகமான கவனம் செலுத்தமாட்டார்கள், கட்சி மாச்சரியத்தால் தாக்குகிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் என்ற பட்டயம் வைத்துக் கொண்டுள்ள கட்சியினரைக்கொண்டு, கழகத்தைக் கேவலப்படுத்தச் செய்வதுதான் அதிகப் பயன்தரும் என்று ஓர் சாகசச் சதித்திட்டமும் தீட்டப்பட்டு. நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வளவும், தம்பி! நமது கழக அணிவகுப்பின் அருந்திறனின் பயனாக, நாம் ஈட்டிய அறுவடையின் அருமையினைக் கண்டதாலே, ஆட்சியினருக்கு ஏற்பட்டுவிட்ட அச்சம் காரணமாக!! நம்மை அலட்சியப்படுத்திய காலம், மலை ஏறிவிட்டது! நம்மை அழித்துவிடமுடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கை நசித்துப்போய்விட்டது. நமக்குள் உட்குழப்பம் மூட்டிவிட்டுக் கலகலக்கச் செய்யலாம் என்ற எண்ணம் தகர்ந்துவிட்டது. பெருமளவு அடியோடு அல்ல!!<noinclude> 12- த.அ.க தொ-4 பூ. வெ எண். 514</noinclude> myho3twi42y4n69bwv9kntdjuguvzbd 1944253 1944238 2026-06-09T20:28:52Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||353}}{{Rule}}</noinclude> எனவேதான், கவலைப்படுகிறோம் - கலக்கமடைகிறோம் - கவனித்தாகவேண்டும் - என்று காங்கிரசுப் பெருந்தலைவர்கள் இப்போது பேசவேண்டி வந்திருக்கிறது. பிரச்சார முறைகளைச் செம்மைப்படுத்தினால், அடுத்த முறை, கழகத்தை ஒழித்துவிடலாம் என்று சிலரும். பிரச்சாரம் செய்யவிடாமல் கழகத்தைத் தடுத்துவிட்டால், அடுத்தமுறை கழகத்தை ஒடித்துவிடலாம் என்று சிலரும் பேசுகிறார்கள். வழக்குகளைத் தொடுத்து வாட்டிடலாம் என்று ஒருபுறம் நினைப்பு நெளிகிறது, நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். வழக்கமான சிண்டு முடிந்துவிடும் வேலையில் ஈடுபடலாம் என்று சிலர் முனைகிறார்கள். இழித்தும் பழித்தும் பேசியும், எழுதியும், மக்கள் முன்னால் கழகத்தவர்களைக் கேவலப்படுத்திக் காட்டலாம் என்று, எப்போதும்போல முயற்சி நடைபெற்றபடி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் ஏடுகளும், கழகத்தை எதிர்த்துப் பேசினாலும், எழுதினாலும், பொதுமக்கள், அவ்வளவு அதிகமான கவனம் செலுத்தமாட்டார்கள், கட்சி மாச்சரியத்தால் தாக்குகிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் என்ற பட்டயம் வைத்துக் கொண்டுள்ள கட்சியினரைக்கொண்டு, கழகத்தைக் கேவலப்படுத்தச் செய்வதுதான் அதிகப் பயன்தரும் என்று ஓர் சாகசச் சதித்திட்டமும் தீட்டப்பட்டு. நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வளவும், தம்பி! நமது கழக அணிவகுப்பின் அருந்திறனின் பயனாக, நாம் ஈட்டிய அறுவடையின் அருமையினைக் கண்டதாலே, ஆட்சியினருக்கு ஏற்பட்டுவிட்ட அச்சம் காரணமாக!! நம்மை அலட்சியப்படுத்திய காலம், மலை ஏறிவிட்டது! நம்மை அழித்துவிடமுடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கை நசித்துப்போய்விட்டது. நமக்குள் உட்குழப்பம் மூட்டிவிட்டுக் கலகலக்கச் செய்யலாம் என்ற எண்ணம் தகர்ந்துவிட்டது. பெருமளவு அடியோடு அல்ல!!<noinclude> 12- த.அ.க தொ-4 பூ. வெ எண். 514</noinclude> 6kg6xm4lbxbyvreffbarjrujdlvhn3q 1944302 1944253 2026-06-10T00:45:27Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||353}}{{Rule}}</noinclude> எனவேதான், கவலைப்படுகிறோம் - கலக்கமடைகிறோம் - கவனித்தாகவேண்டும் - என்று காங்கிரசுப் பெருந்தலைவர்கள் இப்போது பேசவேண்டி வந்திருக்கிறது. பிரச்சார முறைகளைச் செம்மைப்படுத்தினால், அடுத்த முறை, கழகத்தை ஒழித்துவிடலாம் என்று சிலரும். பிரச்சாரம் செய்யவிடாமல் கழகத்தைத் தடுத்துவிட்டால், அடுத்தமுறை கழகத்தை ஒடித்துவிடலாம் என்று சிலரும் பேசுகிறார்கள். வழக்குகளைத் தொடுத்து வாட்டிடலாம் என்று ஒருபுறம் நினைப்பு நெளிகிறது, நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். வழக்கமான சிண்டு முடிந்துவிடும் வேலையில் ஈடுபடலாம் என்று சிலர் முனைகிறார்கள். இழித்தும் பழித்தும் பேசியும், எழுதியும், மக்கள் முன்னால் கழகத்தவர்களைக் கேவலப்படுத்திக் காட்டலாம் என்று, எப்போதும்போல முயற்சி நடைபெற்றபடி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் ஏடுகளும், கழகத்தை எதிர்த்துப் பேசினாலும், எழுதினாலும், பொதுமக்கள், அவ்வளவு அதிகமான கவனம் செலுத்தமாட்டார்கள், கட்சி மாச்சரியத்தால் தாக்குகிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். எனவே காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் என்ற பட்டயம் வைத்துக் கொண்டுள்ள கட்சியினரைக்கொண்டு, கழகத்தைக் கேவலப்படுத்தச் செய்வதுதான் அதிகப் பயன்தரும் என்று ஓர் சாகசச் சதித்திட்டமும் தீட்டப்பட்டு. நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வளவும், தம்பி! நமது கழக அணிவகுப்பின் அருந்திறனின் பயனாக, நாம் ஈட்டிய அறுவடையின் அருமையினைக் கண்டதாலே, ஆட்சியினருக்கு ஏற்பட்டுவிட்ட அச்சம் காரணமாக!! நம்மை அலட்சியப்படுத்திய காலம், மலை ஏறிவிட்டது! நம்மை அழித்துவிடமுடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கை நசித்துப்போய்விட்டது. நமக்குள் உட்குழப்பம் மூட்டிவிட்டுக் கலகலக்கச் செய்யலாம் என்ற எண்ணம் தகர்ந்துவிட்டது. பெருமளவு அடியோடு அல்ல!!<noinclude> 12- த.அ.க தொ-4 பூ. வெ எண். 514</noinclude> n6dr2lee5youudksv2dcsep8h1tb234 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/355 250 645753 1944239 1941402 2026-06-09T18:42:47Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|354||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நம்மை உலகின் கண்களில் படாமல் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் முறிந்துபோய்விட்டன. நம்மை, மிகச்சிறிய கும்பல், கவனிக்கப்படத் தக்கதல்ல என்று நேரு பண்டிதரிடம் கூறிவைத்த பேச்சு, பொய்யுரை என்பதை நேரு பண்டிதரே உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவைகள் எல்லாவற்றினையும்விட, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் வேகமான முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இடம் பெறும் திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சிப் பொறுப்பிலே இடம் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டும், கணக்குப் போட்டுக் கொண்டும் இருக்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல; மற்ற எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத ஒரு விடுதலைக் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம். திராவிடநாடு திராவிடருக்கே என்று கூறும் இயக்கம், என்பதனை உலகு அறிந்துகொண்டதுதான். அணிவகுப்பு ஈட்டியுள்ள பெருமிதமான அறுவடையின் அருமையான தன்மையாகும் தம்பி! நாம் யார்? என்று புரியும்படி, இந்த வெற்றி செய்திருக்கிறது. நாம் எவரெவரால் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறோம் என்பது விளக்கமாக்கப்பட்டுவிட்டது. நாம் எத்தனை எத்தனை விபத்துக்களைச் சமாளித்திருக்கிறோம் என்பதும், உலகு அறிந்துகொண்டுவிட்டது. இனி நாம், அறிவிக்கவேண்டியது, இந்த அணிவகுப்பு, ஆட்சியில் இடம் கேட்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல, அரசு அமைக்க விரும்பும் விடுதலை இயக்கம், திராவிடம் காணத் துடிக்கும் விடுதலை இயக்கம், எனும் பேருண்மையை. இதனை நாம் எடுத்துக்கூற, சட்டசபையும் பாராளுமன்றமும் உள்ளன, போதும் என்று இருந்துவிடுவாயோ-தம்பி! தம்பி! இதனை நாம் அந்த இடங்களிலே இருந்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பு, இப்போது ஓரளவுதான் கிடைத்திருக்கிறது.<noinclude></noinclude> l8aqcm7nqhz35fkttwi6ict6xixcckb 1944254 1944239 2026-06-09T20:29:01Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|354||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நம்மை உலகின் கண்களில் படாமல் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் முறிந்துபோய்விட்டன. நம்மை, மிகச்சிறிய கும்பல், கவனிக்கப்படத் தக்கதல்ல என்று நேரு பண்டிதரிடம் கூறிவைத்த பேச்சு, பொய்யுரை என்பதை நேரு பண்டிதரே உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவைகள் எல்லாவற்றினையும்விட, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் வேகமான முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இடம் பெறும் திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சிப் பொறுப்பிலே இடம் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டும், கணக்குப் போட்டுக் கொண்டும் இருக்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல; மற்ற எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத ஒரு விடுதலைக் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம். திராவிடநாடு திராவிடருக்கே என்று கூறும் இயக்கம், என்பதனை உலகு அறிந்துகொண்டதுதான். அணிவகுப்பு ஈட்டியுள்ள பெருமிதமான அறுவடையின் அருமையான தன்மையாகும் தம்பி! நாம் யார்? என்று புரியும்படி, இந்த வெற்றி செய்திருக்கிறது. நாம் எவரெவரால் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறோம் என்பது விளக்கமாக்கப்பட்டுவிட்டது. நாம் எத்தனை எத்தனை விபத்துக்களைச் சமாளித்திருக்கிறோம் என்பதும், உலகு அறிந்துகொண்டுவிட்டது. இனி நாம், அறிவிக்கவேண்டியது, இந்த அணிவகுப்பு, ஆட்சியில் இடம் கேட்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல, அரசு அமைக்க விரும்பும் விடுதலை இயக்கம், திராவிடம் காணத் துடிக்கும் விடுதலை இயக்கம், எனும் பேருண்மையை. இதனை நாம் எடுத்துக்கூற, சட்டசபையும் பாராளுமன்றமும் உள்ளன, போதும் என்று இருந்துவிடுவாயோ-தம்பி! தம்பி! இதனை நாம் அந்த இடங்களிலே இருந்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பு, இப்போது ஓரளவுதான் கிடைத்திருக்கிறது.<noinclude></noinclude> g6k0agefahzygyuh4t5b9vtf1x7e1u0 1944304 1944254 2026-06-10T00:48:33Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|354||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> நம்மை உலகின் கண்களில் படாமல் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் முறிந்துபோய்விட்டன. நம்மை, மிகச்சிறிய கும்பல், கவனிக்கப்படத் தக்கதல்ல என்று நேரு பண்டிதரிடம் கூறிவைத்த பேச்சு, பொய்யுரை என்பதை நேரு பண்டிதரே உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவைகள் எல்லாவற்றினையும்விட, சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் வேகமான முறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று இடம் பெறும் திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சிப் பொறுப்பிலே இடம் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துக்கொண்டும், கணக்குப் போட்டுக் கொண்டும் இருக்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல; மற்ற எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காத ஒரு விடுதலைக் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் இயக்கம். திராவிடநாடு திராவிடருக்கே என்று கூறும் இயக்கம், என்பதனை உலகு அறிந்துகொண்டதுதான். அணிவகுப்பு ஈட்டியுள்ள பெருமிதமான அறுவடையின் அருமையான தன்மையாகும் தம்பி! நாம் யார்? என்று புரியும்படி, இந்த வெற்றி செய்திருக்கிறது. நாம் எவரெவரால் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறோம் என்பது விளக்கமாக்கப்பட்டுவிட்டது. நாம் எத்தனை எத்தனை விபத்துக்களைச் சமாளித்திருக்கிறோம் என்பதும், உலகு அறிந்துகொண்டுவிட்டது. இனி நாம், அறிவிக்கவேண்டியது, இந்த அணிவகுப்பு, ஆட்சியில் இடம் கேட்கும் வெறும் அரசியல் கட்சி அல்ல, அரசு அமைக்க விரும்பும் விடுதலை இயக்கம், திராவிடம் காணத் துடிக்கும் விடுதலை இயக்கம், எனும் பேருண்மையை. இதனை நாம் எடுத்துக்கூற, சட்டசபையும் பாராளுமன்றமும் உள்ளன, போதும் என்று இருந்துவிடுவாயோ-தம்பி! தம்பி! இதனை நாம் அந்த இடங்களிலே இருந்து எடுத்துச் சொல்லும் வாய்ப்பு, இப்போது ஓரளவுதான் கிடைத்திருக்கிறது.<noinclude></noinclude> 7hj7w14fvhr96d92cdbo7g547aw6w0u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/357 250 645754 1944241 1941413 2026-06-09T18:57:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 165</b>}} {{center|{{x-larger|<b>சூடும் சுவையும்<br>(1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து பிரிவினைபற்றிய குழப்பம்</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|வ}}கை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை, புள்ளினம் இசை அளிக்கிறது அதனிலும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது, பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன். தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு... உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர். சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை. எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது<noinclude></noinclude> qp4yr5un9n3sstb13nmha47z9ap5u6y 1944256 1944241 2026-06-09T20:29:20Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 165</b>}} {{center|{{x-larger|<b>சூடும் சுவையும்<br>(1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து பிரிவினைபற்றிய குழப்பம்</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|வ}}கை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை, புள்ளினம் இசை அளிக்கிறது அதனிலும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது, பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன். தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு... உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர். சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை. எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது<noinclude></noinclude> jks9ukx83uq9cj35lea9gc8zlnrosx3 1944311 1944256 2026-06-10T01:11:57Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 165</b>}} {{center|{{x-larger|<b>சூடும் சுவையும்<br>(1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>இராஜ்ய சபையின் பேச்சிற்குப் பிறர் கருத்து பிரிவினைபற்றிய குழப்பம்</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|வ}}கை வகையான வண்ண மலர்கள் மணம் பரப்பும் பொழில்; பூங்காற்று வருடி இன்பம் வழங்கும் வேளை, புள்ளினம் இசை அளிக்கிறது அதனிலும் சுவைமிகு பாகுமொழி செவியில் விழுகிறது, பார்க்கிறான். இதற்குமுன் பார்த்தறியா வனப்புமிகு பாவையை! அமருக! என்கிறாள் அணங்கு, விழியால் விருந்திட்டு அஃது ஓர் பளிங்கு மண்டபம். அவன் ஓர் இளைஞன் - போர் வீரன். தங்கள் தீரத்தை மெச்சாதார் இல்லை - இங்கு... உறுதி தளராத உள்ளம் என்று உரைத்திடக் கேட்டு உவகைகொண்டேன் - பலர் உரைத்தனர். சீறி எழும் படைகளைச் சின்னாபின்னமாக்கத்தக்க போர்த்திறன் உண்டு, எனினும், காலமறிந்து காரியமாற்ற வேண்டும் என்று தாங்கள் நடந்துகொண்ட போக்கினைக் கண்டு, வியந்து பாராட்டாதார் இல்லை. எதற்கும் அஞ்சமாட்டார் - ஆனால், என் மகனே! என்று பெற்றவள் உருக்கமுடன் பேசும்போது, நிலைகுலையத்தான் செய்யும் என்று கூறினர், சிலர்! தங்கள் தரமும் திறமும் அறியாதார்! பகைவர் வீசிடும் வாளுக்கு எவ்விதம் அஞ்சாது<noinclude></noinclude> 045tpk5bykcvn6zhzchelpye8zqtytv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/358 250 645755 1944242 1941406 2026-06-09T19:06:47Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||357}}{{Rule}}</noinclude>இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும். கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ. அதனை என்ன கூறிப் பாராட்டுவது. மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான். வேறோர் புறத்திலே, அவன் வாழ்த்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர். பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு. கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு. பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட செயற்கை ஓடையில்! பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!! பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல! அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார். இளவரசர். இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!! ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார்- நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி. இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு. இங்கு அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி. இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக. வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை. கோட்டை வலியுள்ளதல்லவோ!<noinclude></noinclude> 5caspta8xc9lk9a3ard86mml1h4aapk 1944257 1944242 2026-06-09T20:29:30Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||357}}{{Rule}}</noinclude>இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும். கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ. அதனை என்ன கூறிப் பாராட்டுவது. மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான். வேறோர் புறத்திலே, அவன் வாழ்த்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர். பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு. கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு. பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட செயற்கை ஓடையில்! பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!! பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல! அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார். இளவரசர். இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!! ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார்- நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி. இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு. இங்கு அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி. இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக. வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை. கோட்டை வலியுள்ளதல்லவோ!<noinclude></noinclude> ms65rcwz8u42jc4oaifvx6nofsuue68 1944312 1944257 2026-06-10T01:15:05Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||357}}{{Rule}}</noinclude>இருப்பீரோ, அதுபோன்ற உமது தாயின் தழதழத்த குரல் கேட்டும். கண்ணீர் கண்டும் தளராது நின்றீரோ. அதனை என்ன கூறிப் பாராட்டுவது. மங்கை பேசுகிறாள் - இளைஞன் இன்பத்தில் மிதக்கிறான். வேறோர் புறத்திலே, அவன் வாழ்த்திட அமைந்ததோர் மாளிகையில், வேலைப்பாடு மிகுந்த இருக்கைகளை வரிசைப் படுத்துவதிலும், மற்றப் பல ஆடம்பரக் கோலங்களை அமைப் பதிலும், எடுபிடிகள் மும்முரமாக இருந்தனர். பொன்னிழை மின்னிடும்அங்கி, வைரமணிகள் பதித்த வாளுறை! அவனுக்கு. கருமுகில் நிறம் கொண்டதும், மின்னல் வேகத்தில் பாயத் தக்கதுமான புரவி - அவனுக்கு. பன்னீர் பெய்கிறார்கள் அவன் குளித்திட செயற்கை ஓடையில்! பழச்சாறு நிரப்பிய கோப்பைகளை ஏந்திச் செல்கிறார்கள். பக்குவமறிந்த பணிப் பெண்கள் - அவன் குற்றேவல் கேட்டு நடந்திடும் குமரிகள்!! பல ஆயிரம் வராகன்கள் பேழையில்! அவ்விதமான பேழைகள் பலப்பல! அன்பரே! ஆருயிர் நண்பரே! - என்று அழைக்கிறார். இளவரசர். இவரில்லாவிட்டால் உமக்கு ஏது இந்த வெற்றி? என்று கேட்டுக் கெக்கலி செய்கிறாள் இளவரசி!! ஓவியர் இரவு பகலென்று பாராமல் வேலை செய்கிறார்- நமது நண்பரின் வடிவத்தைத் தீட்டி, தமது கலைக்கூடத்தை அழகுபடுத்த என்கிறார் இளவரசர். சிலை அல்லவோ, சமைக்க வேண்டும் இவருக்கு! ஓவியம் போதாதே!! - என்கிறாள் இளவரசி. இவர்க்கு ஏற்ற எழிலோவியம் உண்டு. இங்கு அறிவாயோ? என்று கேட்கிறான் இளவரசன்; மின்னலிடையாள்!! - தெரியுமே முன்பே என்று குறுநகையுடன் கூறுகிறாள் இளவரசி. இவ்வளவு விரைவில், இத்துணை எளிதாக. வெற்றி கிடைக்கும் என்று நான் எண்ணினதே இல்லை. கோட்டை வலியுள்ளதல்லவோ!<noinclude></noinclude> 1yqryl89r51xcza000zccn1odvkx8dq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/359 250 645756 1944243 1942044 2026-06-09T19:17:13Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|358||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்! முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம்.... நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால். நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும்... நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது. சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே... தட்டினோம்! திறக்கப்பட்டது! கொட்டினோம் வெற்றி முரசு! படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல. பன்னீர் தெளிக்கிறாள் பாவை. இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு. அன்று சேறு இன்று பன்னீர்!! அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று? "நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்" என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது. காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!! பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது. களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது.<noinclude></noinclude> ebod4v4b0brhq77rxhszivpyq5c3xzq 1944258 1944243 2026-06-09T20:29:39Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|358||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்! முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம்.... நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால். நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும்... நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது. சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே... தட்டினோம்! திறக்கப்பட்டது! கொட்டினோம் வெற்றி முரசு! படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல. பன்னீர் தெளிக்கிறாள் பாவை. இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு. அன்று சேறு இன்று பன்னீர்!! அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று? "நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்" என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது. காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!! பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது. களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது.<noinclude></noinclude> rkazl7141nznti37ce25tq4ug90l9ys 1944313 1944258 2026-06-10T01:18:12Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|358||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> படைக்கலன்களும் நிரம்ப, அவர்களிடம்! முற்றுகை நீண்டுகொண்டே போகும் என்ற கலக்கம் எமக்கெல்லாம்.... நேரடித் தாக்குதலில், நாம் சிக்கிக்கொண்டிருந்தால். நிரம்ப அழிவு நேரிட்டிருக்கும்... நல்ல வேளையாக எதிர்பாராத வகையிலே உதவி கிடைத்தது. சாதாரண உதவியா!! கோட்டையைத் தாக்கித் தகர்த்திட வேண்டிய அவசியமே எழவில்லையே... தட்டினோம்! திறக்கப்பட்டது! கொட்டினோம் வெற்றி முரசு! படையின் தளபதிகள் பேசி மகிழ்கிறார்கள் இதுபோல. பன்னீர் தெளிக்கிறாள் பாவை. இங்கிதமறிந்த முறையில் அன்றோர் நாள், அடவி வழி நுழைந்து மாற்றாரைத் தாக்கப் புரவிமீது சென்றபோது, சேற்றாற்றிலே பாய்ந்ததால், சட்டை எல்லாம் சேறு மயமாகிவிட்டது - அந்த நினைவு வந்தது வீரனுக்கு பலநாள் அந்தச் சேறுபட்ட சட்டையைப் பார்த்துப் பார்த்து அவன் பூரித்ததுண்டு - வெற்றி விருது என்று மகிழ்ந்ததுண்டு. அன்று சேறு இன்று பன்னீர்!! அன்று மாற்றாரைத் தாக்கச் சென்றபோது, சேறு, இன்று? "நமது மண்டலத்துக்கு மகத்தான சேவை செய்த மணிமுடிக்கு மருதூர் மிட்டாவைப் பரிசாகத் தருகிறோம்" என்று மன்னர் அவையிலே அறிவித்து, அதைத் தொடர்ந்து வரவேற்பு விழா நடத்துகிறார் - விழாவிலே ஒரு பகுதிதான் - பன்னீர் தெளித்து, பாவை பளிங்கு மண்டபம் அழைத்துச் சென்று பாடலாலும் ஆடலாலும் சுவையூட்டுவது. காட்டாற்றுச் சேறு முன்பு! கட்டழகி தெளித்திடும் பன்னீர் இப்போது!! பன்னீர் தெளித்திடும்போது அவனுக்குக் காட்டாற்றுச் சேறு நினைவிற்கு வருகிறது. களிப்பு உலருகிறது - கண்களில் நீர் துளிர்க்கிறது.<noinclude></noinclude> 9u9afhclz62ddcqb8tmoxgb8kyc4v4w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/360 250 645757 1944244 1942047 2026-06-09T19:27:29Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||359}}{{Rule}}</noinclude> காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை. <center>★</center> இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள். ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்பறம் அதனினும் கொடியவர்கள் வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீரமாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்ட துண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!! வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம்... இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!... வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!! கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி. திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்? தட்டினோம்! திறக்கப்பட்டது!! வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான். விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு.... ஆமாம். நடத்த வேண்டும்... ஆடை எப்படி இருக்கவேண்டும்.<noinclude></noinclude> 3lkf21fciqo5d38k8wso3jv05xhv62e 1944259 1944244 2026-06-09T20:29:49Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||359}}{{Rule}}</noinclude> காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை. <center>★</center> இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள். ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்பறம் அதனினும் கொடியவர்கள் வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீரமாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்ட துண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!! வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம்... இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!... வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!! கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி. திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்? தட்டினோம்! திறக்கப்பட்டது!! வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான். விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு.... ஆமாம். நடத்த வேண்டும்... ஆடை எப்படி இருக்கவேண்டும்.<noinclude></noinclude> a32quk8f0pr3hjwh88oos9gv9go0t3g 1944314 1944259 2026-06-10T01:21:18Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||359}}{{Rule}}</noinclude> காட்டாற்றுச் சேறு!! - என்று அவன் முன்பு, பலரிடம் காட்டிக் காட்டிக் களிப்படைந்தான். கட்டழகி பன்னீர் தெளிக்கிறாள் - எவரேனும் கண்டுவிடுவரோ என்று எண்ணிக் கலங்குவதுபோல இருக்கிறது அவன் பார்வை. <center>★</center> இரக்கமற்றவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறார்கள். வைக்கோற்புல் பரப்பப்பட்டிருந்த கட்டாந்தரையில் உடலெங்கும் புண் அவனுக்கு - உடை கந்தல் - கீழே வீழ்கிறான் - புல்லில் மறைந்திருந்த பாம்பு சீறுகிறது - பாய்ந்து செல்கிறது - கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கொடியவர்கள். ஒருபுறம் நச்சரவம் - மற்றோர்பறம் அதனினும் கொடியவர்கள் வாட்போரில் வல்லவனாம் - வாகை பல சூடியவனாம்! வீரக் கழல் அணிந்தவனாம்!! ஏடா! நீதானே அது கொட்டிலில் புகுந்துள்ள நீயோ, கொற்றம் ஆண்டவன்!! கொலு மண்ட பத்திலே கோலமயிலாள் ஆட, குயிலால் பாட, மிக்க கெம்பீரமாக வீற்றிருப்பாயாமே! கேள்விப்பட்ட துண்டு! இன்று? உனக்கேற்ற இடம்! நாட்டியமாட நாகம்!! வெற்றி அல்லது வீரமரணம் என்று முழக்கமிடுவானாம்... இப்போது என்ன கூறி முழக்கமிடுவான்! கூவு. கர்வாளை நம்பிக்கெட்டவனே! உரக்கக் கூவு!... வேழப் படையை முன்னே அனுப்பு! வேற்படையைப் பின்னோடு அனுப்பு! வெற்றிமுரசு எடுத்துச் செல்க!! - என்றெல்லாம் கூவு!! கற்கோட்டையைத் துளைத்திட எவராலும் முடியாது என்று எண்ணிக்கொண்டான், ஏமாளி. திறந்துவிட ஆள் இருக்கும்போது எந்த முட்டாள் கோட்டையைத் துளைத்திட நேரத்தைச் செலவிடுவான்? தட்டினோம்! திறக்கப்பட்டது!! வெட்டி வீழ்த்துவோம் என்று வீராப்புப் பேசிக்கொண்டிருந்தான். விழா நடத்துவோமா, வீழ்ந்தவனுக்கு.... ஆமாம். நடத்த வேண்டும்... ஆடை எப்படி இருக்கவேண்டும்.<noinclude></noinclude> 5qzaxxdqh8y9hwq9zky60929djrirrg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/361 250 645758 1944245 1942048 2026-06-09T19:40:15Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|360||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை... ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!! குதிரைக்குப் போடுவானே 'கொள்ளு' அது ஒரு வேளை; வளைக்குப் போடுவானே 'தழை' அது ஒருவேளை இப்படி மாறிமாறி விருந்து. உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!" வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டினார்கள்! திறக்கப்பட்டது! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை. சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள்கிறான். கண்களிலே களிப்பொளி!! கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடைகிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில். காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன். கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால்.<noinclude></noinclude> mzzqo4lbtpubbdx4l8j0fal5m10xqxg 1944260 1944245 2026-06-09T20:29:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|360||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை... ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!! குதிரைக்குப் போடுவானே 'கொள்ளு' அது ஒரு வேளை; வளைக்குப் போடுவானே 'தழை' அது ஒருவேளை இப்படி மாறிமாறி விருந்து. உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!" வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டினார்கள்! திறக்கப்பட்டது! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை. சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள்கிறான். கண்களிலே களிப்பொளி!! கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடைகிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில். காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன். கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால்.<noinclude></noinclude> qlxmbi6trd3b5czigbocajmg67y8cq9 1944315 1944260 2026-06-10T01:24:25Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|360||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இவன் நம்பிக் கிடந்த வேழப்படை சிதறி ஓடியபோது, கீழே வீழ்ந்துவிட்ட முகபடாம், இவனுக்கு ஆடை... ஒடிந்த தந்தங்களைத் தலையிலே வைத்துக் கட்டிடலாம் - முடி! மணி மகுடம்!! குதிரைக்குப் போடுவானே 'கொள்ளு' அது ஒரு வேளை; வளைக்குப் போடுவானே 'தழை' அது ஒருவேளை இப்படி மாறிமாறி விருந்து. உடலெங்கும் வடு; உலராத நிலையில். உள்ளமோ உலைக் கூடம்போல நாடாண்டவன், மாற்றானிடம் பணியாதவன், போர்த்திறமை மிக்கவன். கூடஇருந்து குழி பறிப்போர் இருக்கக் கூடும் என்று துளியும் எதிர்பார்த்தவன் அல்ல. வெஞ்சமரில் வீழ்ந்தானில்லை; வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான்!" வாட்டி வதைக்கிறார்கள்!! பொன்னிறமேனி புழுதி படிந்து கிடக்கிறது. காலிலும் கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. சிறைக்கூடக் காவலை மேற்கொண்ட சிற்றறிவுள்ள கொடியவர்கள், அவன் உண்ண வேகாச் சோற்றினை மண்பாண்டத்திலிட்டு, நாற்றமடிக்கும் சேற்று நீரை மண்குவளையில் ஊற்றி, எதிரே வைக்கிறார்கள். ஒரு கணம் கண்களை மூடுகிறான். என்னென்ன எண்ணுகிறானோ!! அரண்மனையில் அவன் நடத்திய விருந்துகளை எண்ணிக்கொள்கிறானோ? இல்லை! இல்லை! கோட்டையைத் தாக்கித் தகர்த்திடவில்லை! தட்டினார்கள்! திறக்கப்பட்டது! சமர் செய்து வீழ்த்தினார்களில்லை. சதிசெய்து சாய்த்தனர்!! புல்லில் மறைந்திருந்த பாம்புபோல, புல்லன் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டான்; கோட்டை பிடிபட்டது; கொற்றம் அழிந்தது. - இதனைத்தான் எண்ணிக் கலக்கமடைகிறான். உடலிலே உள்ள வடு ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரச் செயலுக்குச் சான்று! அதனை எண்ணிக் கொள்கிறான். கண்களிலே களிப்பொளி!! கட்டழகி பன்னீர் தெளித்திடும்போது, கலக்கம் அடைகிறான் ஒருவன், பளிங்கு மண்டபத்தில். காதகர் கடுமொழி வீசிடும்போது, உடலிலே உள்ள புகழ்க் குறி கண்டு பூரிக்கிறான், வஞ்சகத்தால் வளைக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் கொற்றவன். கொற்றவன் கொடுமை கண்டும் பெருமிதம் குன்றாது இருக்கக் காரணம், அவன் நெறி தவறாததால் - வீரம் குன்றாததால்.<noinclude></noinclude> evkllvynuczdw8dk5cw5txmlp5vp8dz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/362 250 645759 1944249 1942050 2026-06-09T20:27:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||361}}{{Rule}}</noinclude> கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது. பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம். அவள் காட்டிக்கொடுத்த கயவன் அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது அதனால், <center>★</center> என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள் தென்பட்ட குறிகள். இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய். கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம். பளிங்கு மண்டபம். பன்னீர் தெளிக்கும் பாவை சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு. இனைபற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்திகளைக் கூறவேண்டிய வேளையில் என்றுதானே கேட்கிறாய் அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும். மனக்கண்முன் கொண்டு வா. சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன். காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன். இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர். இந்த இருவரில் எவருடன் உறவாட, உரிமை கொண்டாட உடனிருக்க, இசைவு தருவாய்! கேட்கவாவேண்டும் காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மாபினனல்லவா, நீ! இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே <center>★</center> மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம்.<noinclude></noinclude> cnb5t5sxki7935e1pm4pps3fhwu3s43 1944261 1944249 2026-06-09T20:30:07Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||361}}{{Rule}}</noinclude> கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது. பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம். அவள் காட்டிக்கொடுத்த கயவன் அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது அதனால், <center>★</center> என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள் தென்பட்ட குறிகள். இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய். கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம். பளிங்கு மண்டபம். பன்னீர் தெளிக்கும் பாவை சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு. இனைபற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்திகளைக் கூறவேண்டிய வேளையில் என்றுதானே கேட்கிறாய் அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும். மனக்கண்முன் கொண்டு வா. சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன். காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன். இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர். இந்த இருவரில் எவருடன் உறவாட, உரிமை கொண்டாட உடனிருக்க, இசைவு தருவாய்! கேட்கவாவேண்டும் காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மாபினனல்லவா, நீ! இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே <center>★</center> மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம்.<noinclude></noinclude> pwf50uj2ymirp8j72z1iplsm4tn6c3u 1944316 1944261 2026-06-10T01:27:30Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||361}}{{Rule}}</noinclude> கோலமயிலாள் கடை இடை காட்டிப் பன்னீர் தெளித்த போதும், களிப்படையாது. பளிங்கு மண்டபத்து வீரன் கலக்கம் கொண்டிடக் காரணம். அவள் காட்டிக்கொடுத்த கயவன் அந்த நினைப்பு அவன் நெஞ்சினைச் சுட்டெரிக்கிறது அதனால், <center>★</center> என்ன அண்ணா, இது. நெடுந்தொலைவு போய்வந்திருக் கிறாய், நீண்ட நாட்களுக்குப் பிறகு மடல் தீட்டுகிறாய் - சென்ற இடத்துச் சிறப்புகள், செய்த காரியத்தின் அளவு, தரம், கண்ட நண்பர்கள், கூறிய விஷயங்கள் தென்பட்ட குறிகள். இவைபற்றி யெல்லாம் நிரம்பக் கூறப் போகிறாய். கேட்டுச் சுவையும் பயனும் பெறலாம் என்று ஆவலுடன் இருக்கிற எம்மிடம். பளிங்கு மண்டபம். பன்னீர் தெளிக்கும் பாவை சிறைக்கூடம், சீறி வரும் நாகம், கொடியவர் கொற்றவனைப் படுத்திடும் பாடு. இனைபற்றியெல்லாம் கூறத் தொடங்கிவிட்டாய்; தில்லி பற்றிய செய்திகளைக் கூறவேண்டிய வேளையில் என்றுதானே கேட்கிறாய் அவசரப்படாதே, தம்பி! தில்லி போகவேண்டுமென்றால், உடனேவா! நெடுந்தொலைவு அல்லவா? போகலாம்! இப்போது இந்த இருவரை மீண்டும். மனக்கண்முன் கொண்டு வா. சிறையில் அடைபட்ட சித்தம் கலங்கா மன்னன். காட்டிக் கொடுத்ததால் கட்டழகி தெளித்திடும் பன்னீரைப் பரிசுபெற்ற கயவன். இந்த இருவர், இரு வெவ்வேறு நிலைமைகளை விளக்கும் நோக்குடன்தான், உன் முன் காட்டப்பட்டுள்ளனர். இந்த இருவரில் எவருடன் உறவாட, உரிமை கொண்டாட உடனிருக்க, இசைவு தருவாய்! கேட்கவாவேண்டும் காட்டிக் கொடுப்போனிடம் கூடிக் குலாவிடும் கெடுமதி எப்படி உனக்கு ஏற்பட முடியும்!! காட்டாற்றுச் சேறு, கட்டழகி வீசிடும் பன்னீரிலும் மாண் புடையது என்பதனை உணர்ந்த மாபினனல்லவா, நீ! இதோ, இன்னும் இருவர், இவர்களையும் பார், தம்பி! பயனற்ற வேலை என்று நினைத்துவிடாதே - வெறும் படம் அல்ல, பாடம் புகட்டும் படம், மறவாதே <center>★</center> மதிமிகு பெரியீர்! மாண்புடைய நண்பரீர்! குறிப்பறிந்து நடந்திடும் குணாளரே! வருக! வாழ்க!! உமது புகழ் புவி எங்கும் பரவிடத்தக்கதான, பாமாலை தொடுத்திடுவோம்.<noinclude></noinclude> gmk6b29ti5cnhgw0g0w8hu1h4cckuve பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/363 250 645760 1944246 1942051 2026-06-09T19:50:15Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|362||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!! நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!! நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!! வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும் அஃது ஆகாது! பணிவது. இணைவது பாங்கான முறை! பாரிலே. பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப் பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!! தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது. தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது. தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!! எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!! <center>★</center> தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள் முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள். <center>★</center> பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஓடித்து விரட்டுங்கள்! <center>★</center><noinclude></noinclude> 3m991yn3eilucj1aicv1kl9cfkqoz3e 1944262 1944246 2026-06-09T20:30:18Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|362||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!! நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!! நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!! வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும் அஃது ஆகாது! பணிவது. இணைவது பாங்கான முறை! பாரிலே. பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப் பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!! தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது. தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது. தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!! எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!! <center>★</center> தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள் முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள். <center>★</center> பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஓடித்து விரட்டுங்கள்! <center>★</center><noinclude></noinclude> mwz0agilmaz50bpyde1far46ju3ph56 1944318 1944262 2026-06-10T01:30:36Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|362||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> என் நாடு! என் இனம்! என் பித்து நீக்கிய பெம்மானே, வருக! வாழ்க!! நம்பி வந்தவர்க்குக் கை கொடுக்கும் நல்லறிவாளரே, வருக! வாழ்க!! நாட்டுப்பற்று என்பது போதை, அதனை நாம் உட்கொள்ளல் தீது என்று உணர்ந்து, சொல்லால் அல்ல செயலால் விளக்கிய வித்தகரே, வாழ்க! வருக!! வலுத்தவனிடம் மற்றவன் எதிர்த்து நிற்பது அழிவுக்கு வழிகோலும் அஃது ஆகாது! பணிவது. இணைவது பாங்கான முறை! பாரிலே. பங்கரங்களை ஒழித்திடும் முறை இதுவே! - என்று கூறிச் சிற்றரசாகக் கிடந்தோர் இடத்தைப் பேரரசிடம் ஒப்படைத்துச் சிறப்பான சேவை செய்த செம்மலே வருக!! தங்கள் பேச்சிலே, அறிவு மணம் கமழ்கிறது. தங்கள் போக்கிலே, இராஜ தந்திரம் மிளிர்கிறது. தங்கள் பார்வையிலே வேதாந்தம் சொட்டுகிறது வேறோர் நாட்டுக்காரர் என்று இருப்பினும், எமது நாட்டினை இருப்பிட மாகக்கொண்டவரே, வருக! வாழ்க!! எந்நாடுதான் எனக்கு ஏற்புடைய நாடாகும் என்ற தத்துவம் பொடிபடத் தாக்கிய மாவீரனே, வாழ்க! எந்த நாட்டிலே, இன்பம் கிடைக்குமோ, வளம் நிரம்பக் காணப்படுமோ, அந்நாடே எந்நாடு!! என்ற அரிய அரசியல் தத்துவத்தை அவனிக்கே அளித்த ஆசானே! வருக!! <center>★</center> தம்பி! இந்த நிலையில் அரச அவையிலே புகழாரம் சூட்டப்பட்டுக் காணப்படுகிறான் ஒருவன். இதோ மற்றொருவன். அவனைச் சூழ்ந்துகொண்டு, கூவுகிறார்கள், கொக்கரிக்கிறார்கள்; விளையாட்டுச் சிறுவர்கள் கற்களை வீசுகிறார்கள் முரட்டுப் பெரியவர்கள், காலைத் தட்டிக் கீழே உருட்டுகிறார்கள். கடுமொழி வீசுகிறார்கள், கண்டவர்கள். <center>★</center> பிடி! அடி உதை! வெட்டு! குத்து! கொல்லு! காரித் துப்புங்கள் முகத்தில்! காதைப் பிடித்துத் திருகுங்கள்! கண்ணைத் தோண்டிப் போடுங்கள்! கையை ஓடித்து விரட்டுங்கள்! <center>★</center><noinclude></noinclude> a2y1gmiqezd2kio9xn8pqus1pli6vju பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/364 250 645761 1944247 1942053 2026-06-09T20:08:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||363}}{{Rule}}</noinclude> இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன். முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான். இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான். இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா? சரி, அண்ணா! இப்போது எதற்காக. இந்த விஷயமெல்லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது. எங்களை ஏற்றிச்சென்ற விமானம். எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது. கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமானகளை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே. அது தோழர் தருமலிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று, இதமாகப் பேசிப்பேசி என்னை 'இராஜ்யசபை' செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்!முடியாது முடியாது என்று சொன்னவரை. அழைத்துக்கொண்டு போகிறோம். தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்! என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும். என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க<noinclude></noinclude> r2ydh3wed500vvvcigsiqr0pl7kvdkf 1944263 1944247 2026-06-09T20:30:29Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||363}}{{Rule}}</noinclude> இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன். முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான். இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான். இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா? சரி, அண்ணா! இப்போது எதற்காக. இந்த விஷயமெல்லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது. எங்களை ஏற்றிச்சென்ற விமானம். எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது. கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமானகளை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே. அது தோழர் தருமலிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று, இதமாகப் பேசிப்பேசி என்னை 'இராஜ்யசபை' செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்!முடியாது முடியாது என்று சொன்னவரை. அழைத்துக்கொண்டு போகிறோம். தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்! என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும். என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க<noinclude></noinclude> 5ho5vsltdafjvemdq6nfctcx6gjnswn 1944321 1944263 2026-06-10T01:33:42Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||363}}{{Rule}}</noinclude> இவ்விதமான இழிமொழிகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் இவன். முன்னவன், நாட்டைக் காட்டிக்கொடுத்துப் புகழாரம் சுமக்கிறான். இரண்டாமவன், நாட்டுக்காக உழைத்ததற்காக இழி மொழியைப் பரிசாகப் பெறுகிறான். இந்த இருவரில், நாம் போற்றத்தக்கவர், புல்லர்களின் பொல்லாங்கு மொழிக்குப் பயந்துகொண்டு, நாட்டுக்கு உழைப்பதை விட்டுவிட மறுக்கும் மாண்புடைய வீரனல்லவா? சரி, அண்ணா! இப்போது எதற்காக. இந்த விஷயமெல்லாம்? என்றுதானே கேட்கிறாய், தம்பி நான் தில்லிக்குப் பயண மானபோது, இவைபோன்ற எத்தனையோ காட்சிகளை மனக் கண்ணால் கண்டேன். என்னென்னவோ வகையான எண்ணங்கள். அவைகளிலே ஒரு சிலவற்றைத்தான் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவர முடிகிறது. எங்களை ஏற்றிச்சென்ற விமானம். எத்தனை எத்தனையோ விதமான மேகக் குவியல்களைத் தொட்டும் தொடாமலும், சென்றுகொண்டிருந்தது என் மனதிலே பல்வேறு விதமான எண்ணங்கள், அலை அலையாகக் கிளம்பின. இரவு பன்னிரண்டு விமானம் தில்லி நோக்கிப் பறக்கிறது - என் மனமோ உன்னைப் பிரிய மறுக்கிறது. கண்களை மூடியபடி, ஆனால் உறங்காமல், என் பக்கத்தில், தருமலிங்கம் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்திலே ஓர் விதமானகளை - வெற்றிக்களை என்றே கருதுகிறேன் - தெரிந்தது. காரணத் தோடுதான். என்ன காரணம் தெரியுமோ? நான் தில்லிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது இருக்கிறதே. அது தோழர் தருமலிங்கத்தின் வெற்றிகளிலே ஒன்று, இதமாகப் பேசிப்பேசி என்னை 'இராஜ்யசபை' செல்வதற்கு இசையும்படி செய்வதிலே அவர் வெற்றி பெற்றார். பார்!முடியாது முடியாது என்று சொன்னவரை. அழைத்துக்கொண்டு போகிறோம். தில்லிக்கு என்ற எண்ணம்போலும் அவருக்கு. அந்தக் களைதான் முகத்தில்! என்னை அவர் தில்லிக்கு அழைத்துச் செல்வதிலே வெற்றி கண்டுவிட்டார் எனினும். என் மனதிலே, ஐயப்பாடு இருந்தது. செல்வதால் பயன் உண்டா? செய்யத்தக்கனவற்றுக்கு வாய்ப்புக் கிடைக்குமோ? அல்லது அங்குபோய்ச் செயலற்றுக் கிடக்க<noinclude></noinclude> 9unxoj88k0ahlgcun3azhztwsjz6f94 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/365 250 645762 1944248 1942054 2026-06-09T20:16:59Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|364||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது. பேசினாள் எதை எதையோ. முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள். பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான். பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு. எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர். பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை. திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர். என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, கவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன். தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும். என் மனமே மெத்த வேதனைக்காளாகும். பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று. பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து. அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ, பாரேன் தில்லிக்குப் போனதும். சிந்துவார் உண்டா அங்கே. கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான். தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண்டிருக்க முடியமா? அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர் களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள்<noinclude></noinclude> h6nhhweqdfzmqg6ndcr405z08a62y6f 1944264 1944248 2026-06-09T20:30:49Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|364||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது. பேசினாள் எதை எதையோ. முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள். பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான். பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு. எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர். பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை. திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர். என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, கவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன். தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும். என் மனமே மெத்த வேதனைக்காளாகும். பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று. பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து. அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ, பாரேன் தில்லிக்குப் போனதும். சிந்துவார் உண்டா அங்கே. கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான். தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண்டிருக்க முடியமா? அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர் களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள்<noinclude></noinclude> 0ohbbjjtmqut20hvx940zt0rc258egn 1944323 1944264 2026-06-10T01:36:49Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|364||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>வேண்டிவருமோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தபடி இருந்தது. பேசினாள் எதை எதையோ. முதல் தடவை என்பதால் சும்மா விட்டார்கள். பேசிவிட்டு ஓடிவந்துவிட்டான். பேச்சுக்குப் பலத்த எதிர்ப்பு. எல்லோரும் எதிர்த்தனர்; தாக்கினர். பேச்சுக்குப் பலன் கிடைக்கவில்லை. திராவிடநாடு பிரிவினையைப் பிய்த்து எறிந்துவிட்டனர். என்றெல்லாம், பலரும் பேசிவருவதையும் எழுதி வருவதையும் பார்த்த பிறகுதான், தம்பி! தருமலிங்கம் என்னைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போனது பயனற்றுப் போக வில்லை, கவை கிடைக்காமலும் போகவில்லை என்று உணர்ந்து, மகிழ்ச்சியுற்றேன். தில்லிக்குச் சென்று பேசச் சந்தர்ப்பம் கிடைக்காது திரும்ப நேரிட்டால். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது கிடக்கட்டும். என் மனமே மெத்த வேதனைக்காளாகும். பேச வாய்ப்புகிடைத்து, பேசியான பிறகு, அந்தப் பேச்சு கவனிப்பாரற்று. பத்தோடு பதினொன்று ஆக்கப்பட்டு, என்ன பேசினான்? என்று ஒருவர் கேட்க, ஏதோ பேசினான்? என்று அலட்சியமான பதில் கிடைத்து. அந்தப் பேச்சுப்பற்றி, ஒரு விதமான பரபரப்பு எதிரொலி இல்லாமற்போனால், எனக்கு மிகுந்த ஏமாற்றமும், திகைப்பும் ஏற்பட்டுவிடும். என் இயல்புதான் உனக்கு நன்றாகத் தெரியுமே, தம்பி! அங்கு செல்லும் என்னை இங்கிருந்து வாழ்த்தும் நல்லவர்களோ, பாரேன் தில்லிக்குப் போனதும். சிந்துவார் உண்டா அங்கே. கும்பலிலே கோவிந்தா ஆகவேண்டியதுதான். தில்லியில்போய் இங்கு பேசுவதுபோலப் பேசிக்கொண்டிருக்க முடியமா? அது எப்பேற்பட்ட இடம்? எவ்வளவு பெரியவர் களெல்லாம் அங்கே இருக்கிறார்கள்! ஜாம்பவான்கள்<noinclude></noinclude> l95t9e0vsewbmzvxnlkq0dckir41m6z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/366 250 645763 1944265 1942055 2026-06-09T20:38:44Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||365}}{{Rule}}</noinclude>இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும் பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே. தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்கலாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்! தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள். <center>★</center> தம்பி! இப்படி எல்லாம். பரந்த அனுபவம் காரணமாகவும். சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம். நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன. இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது. கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை, இராஜ்ய சபையிலே பேசியபோது... என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள் அப்படிதான் தோன்றும் இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு<noinclude></noinclude> dvde45zzx28b09s759qmm0hhc5n9mra 1944267 1944265 2026-06-09T20:46:39Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||365}}{{Rule}}</noinclude>இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும் பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே. தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்கலாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்! தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள். <center>★</center> தம்பி! இப்படி எல்லாம். பரந்த அனுபவம் காரணமாகவும். சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம். நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன. இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது. கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை, இராஜ்ய சபையிலே பேசியபோது... என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள் அப்படிதான் தோன்றும் இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு<noinclude></noinclude> qyngw9imaqhpqkt37k4jrcvs8awebz0 1944325 1944267 2026-06-10T01:39:55Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||365}}{{Rule}}</noinclude>இருக்கிற இடம். அந்த இடத்தைப் பார்த்ததும் பேச்சா வரும்! குளறிவிடுவான் பாருங்கள். இங்கே மேடைக்கு மேடை கத்துகிறானே, திராவிடநாடு திராவிடநாடு என்று எங்கே. தில்லியிலேபோய்ப் பேசச்சொல்லு பார்ப்போம்! கப்சிப்! வாயைத் திறக்கமுடியாது. சுற்றிவரலாம். சுகம் அனுபவிக்கலாம். கடைவீதிபோய்ச் சாமான் வாங்கலாம் - வேறே என்ன செய்யமுடியும்! தில்லியிலேபோய்ப் பேசினால்கூட இந்தப் பேச்சை யார் கவனிக்கப்போகிறார்கள். கிணற்றிலே கல்விழுந்த மாதிரிதான். ஒருவரும் பொருட்படுத்தமாட்டார்கள். <center>★</center> தம்பி! இப்படி எல்லாம். பரந்த அனுபவம் காரணமாகவும். சொந்த அனுபவம் காரணமாகவும், என்பால் உள்ள நிரம்பிய அன்பு காரணமாகவும், பலர் நல்லுரை கூறித்தானே அனுப்பி வைத்தார்கள்! அதுபோல ஆகிவிட்டிருந்தால், இந்நேரம். நாநர்த்தனம் நாராசமேடையிலே நள்ளிரவு வரையிலும் நடந்திருக்குமே ஆனால், தம்பி! என் மனம் சோர்வு சலிப்பு அடையாத விதமாக நிலைமைகள் வடிவமெடுத்துள்ளன. இராஜ்யசபையிலே நான் பேசிய பேச்சு இன்று அன்று எழும்பிய ஓசை என்ற அளவில் இல்லை. கடந்த ஒரு திங்களாக மாற்றுக்கட்சிப் பேச்சாளர்களுக்கு அது சுவைமிகு தீனியாகி வருகிறது. கிருஸ்துமஸ் தீவில் அமெரிக்கா அழிவுக் கருவியை பரீட்சை பார்த்ததையும், ஜபருல்லாகான் - கிருஷ்ணமேனன் காஷ்மீர் குறித்து நடாத்திய ஐ. நா. சபை விவாதத்தையும் மொரார்ஜிதேசாயின், புதிய வரிகளின் விளைவுகளைப்பற்றியும் T. T. கிருஷ்ணமாச்சாரியார் துறவறத்தைத் துறப்பதுபற்றியும் பேசிக்கொண்டிருக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொரு நாளும் மாற்றுக் கட்சிகளின் மேடையில், கேட்கப்படும் ஒரே பிரச்சினை, இராஜ்ய சபையிலே பேசியபோது... என்பதுதான் இன்னும் ஓயவில்லை. ஓய்ந்துவிட்டால், எனக்கே மனநிம்மதி இருக்காது ஏசிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் மன எரிச்சலைப் போக்கிக்கொள்ள இதுதான் வழி என்று நினைக்கிறார்கள் அப்படிதான் தோன்றும் இயல்பு அது. சொறி பிடித்தவனுக்கு<noinclude></noinclude> lkgsd40qwdyq8m8cdqj2w7ph6lxx2ks பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/367 250 645764 1944266 1942057 2026-06-09T20:46:25Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|366||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எப்படி. கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா. குரங்குப் புண் கதைதான். விடாமல் தாக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும். தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும். எடுத்தேன் கவர்த்தேன் என்று பேசவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற போஸ்' கொடுத்துப் பேசவேண்டும். என்ற முறையில் இராஜ்யசபைப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா. தம்பி! ஒரு நாள் அவன் பேசினான். எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு. இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு 'மல்லு' கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருந்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று. இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள். இப்போது இதை லவத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள். அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில் உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர் நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர். மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர்.<noinclude></noinclude> qm8e54a14v6g51yk27g01o21o1z5y82 1944268 1944266 2026-06-09T20:46:57Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|366||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எப்படி. கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா. குரங்குப் புண் கதைதான். விடாமல் தாக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும். தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும். எடுத்தேன் கவர்த்தேன் என்று பேசவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற போஸ்' கொடுத்துப் பேசவேண்டும். என்ற முறையில் இராஜ்யசபைப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா. தம்பி! ஒரு நாள் அவன் பேசினான். எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு. இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு 'மல்லு' கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருந்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று. இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள். இப்போது இதை லவத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள். அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில் உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர் நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர். மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர்.<noinclude></noinclude> 6p2qo24xjb0z7wapazvubqe1kynwgo3 1944328 1944268 2026-06-10T01:42:59Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1944328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|366||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>எப்படி. கீறிக்கொள்ளக் கீறிக்கொள்ள, நிம்மதியாக இருப்பது போலத் தெரிந்து, பிறகு எரிச்சல் அதிகமாகுமோ, அதுபோலத் தான் அதிலும் பொச்சரிப்புக்கொண்ட மனமாகிவிட்டால், அடே அப்பா. குரங்குப் புண் கதைதான். விடாமல் தாக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் தாக்க வேண்டும். தடித்த வார்த்தைகளை உமிழவேண்டும். எடுத்தேன் கவர்த்தேன் என்று பேசவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற போஸ்' கொடுத்துப் பேசவேண்டும். என்ற முறையில் இராஜ்யசபைப் பேச்சைப்பற்றி - இவர்கள் இங்கு பேசப்பேச, பொதுமக்கள் மனநிலை என்ன ஆகிறது தெரியுமா. தம்பி! ஒரு நாள் அவன் பேசினான். எல்லோரும் கூடிக்கொண்டு ஓயாமல் அதுபற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்களே, காரணம் என்ன? அந்த ஒருநாள் பேச்சு. இவ்வளவு பேர்களையும், உலுக்கி விட்டிருக்கிறதுபோலும், குலுக்கிவிட்டிருக்கிறதுபோலும். இல்லையென்றால், இதற்காக இவர்கள் இவ்வளவு 'மல்லு' கட்டிக்கொண்டு மாரடிப்பானேன் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதிலும், இன்று எரிச்சலால் இழிமொழி பேசும் பேர்வழிகள், இந்தத் திருந்தொண்டினை இப்போதுதான் முதல் முறையாகச் செய்கிறார்கள் என்றாலாவது, கேட்பவர்களுக்குத் திகைப்பு ஏற்படும் - இதென்ன எல்லோரும் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று. இது இவர்கள் நமக்குப் படைக்கும் நித்திய நைவேத்தியம்! - எனவே இப்போது ஏசிப் பேசுகிறவர்கள். இப்போது இதை லவத்துக்கொண்டு ஏசுகிறார்கள் - வழக்கமான வேலை - செய்து தீரவேண்டிய வேலை!! என்று எண்ணுகிறார்கள். அணுகுண்டு வெடித்தார்களாம் என்று முதல்தடவை கேள்விப்பட்டபோது, உலகில் பலநாள், அதுபற்றியேதானே பேசிக்கொண்டிருந்தார்கள் - அவரவர்களின் மனப்பக்குவம், விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற முறையில் உலகைச் சுற்றும் செயற்கை கோள் கிளம்பிற்று - எல்லோரும் அதுபற்றியே விடாமல் பேசலாயினர் நாய்க்குட்டியை வானவெளிக்கு அனுப்பினர் - எல்லோரும் அதுபற்றியே பேசலாயினர். மனிதர்களே வானவெளிப் பயணம் செய்தனர் - எங்கும் எவரும் அதுபற்றியே பேசலாயினர்.<noinclude></noinclude> bab6j7rrlu7kl91rgqs3rlzrcwbbsia பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/368 250 645765 1944479 1942058 2026-06-10T07:02:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தொகுதி நான்கு||367}}{{Rule}}</noinclude> ஆதரித்தோ எதிர்த்தோ, விளங்கிக்கொண்டோ விளங்கிக் கொள்ளாமலோ, இவைபற்றியே அனைவரும் பேசினர் அல்லவா. அதுபோல, மே முதல்நாள் இராஜ்யசபையில் நான் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க, அலசிப் பார்க்கத்தக்க, தாக்கித் தீர்க்கத்தக்க, விளக்கிக் காட்டத் தக்க பிரச்சினையாக்கப்பட்டுவிட்டிருக்கிறதே. இதனைவிடச் சான்று வேறு வேண்டுமா, நாம் கேட்கும் 'திராவிடநாடு' கொள்கையின் பெருமையினை விளக்க. நன்றி கூறிக் கொள்கிறேன். மாற்றார்களின் மகத்தான தொண்டு தரும் பயனுக்காக நான் உள்ளபடி, இவ்வளவு 'கவனிப்பு' என் பேச்சுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை புதிய அரசியல் தத்துவப் பிரசவ வேதனையைக்கூட மறந்துவிட்டு, என் பேச்சிலே உள்ள எழுத்துக்கள், புள்ளிகள், வளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கிடைத்த 'கண்டுபிடிப்பு' காணீர் என்று மக்களிடம் காட்டுவோரும்; எஃகுத் தொழிற் சாலை சேலத்தில் எப்போது துவக்கப்படும் என்ற பேச்சு, தமது இலாகா என்றாலும். அதனைக்கூட இரண்டாவது வரிசைக்கு விட்டுவிட்டு, என் பேச்சுப்பற்றிய தமது ஆழ்ந்த கருத்துரையை அள்ளித்தந்து, எம்மால் எளிதாக முடியக்கூடியது இது, எஃகுத் தொழிற்கூடம் அல்ல, என்பதனை கூறாமற் கூறுவோரும். புதுவரி எதிர்ப்பு, விலைவாசிக் குறைப்புப் போன்றவைகளைக் கவனிக்காதது ஏன் என்று மக்கள் தம்மைப் பார்த்துக் கேட்காதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளச் சிறந்தவழி. என் பேச்சுப்பற்றி ஏசிப்பேசுவதுதான் என்ற யூகமுடன் பேசிக் கிடப்போரும், ஆமாம் தம்பி! இப்படிப்பட்ட வகையினர் அடைந்துள்ள அதிர்ச்சியைக் காணும்போதுதான், பரவாயில்லை, இராஜ்ய சபை சென்று பேசியது, நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது - பிரச்சினைக்குச் சூடும் ஏறுகிறது சுவையும் கூடுகிறது என்ற எண்ணம் உறுதிப்பட்டது. 'திராவிடநாடு' திட்டம் குறித்து நாம் பேசத் தொடங்கியதிலிருந்து இதுவரை, இந்த அளவு ஒரே நேரத்தில், இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களும், இங்குள்ள எல்லா மாற்றுக் கட்சியினரும். ஒருசேர, திராவிடநாடு பிரச்சினை குறித்து எழுத பேச, ஆராய, அலச, தாக்க, முன்வந்தது இல்லை என்பதை எண்ணும்போது, பிரச்சினை எத்தனை பெரிய அளவு ஒரேநாளில் வளர்ந்துவிட்டது என்பது புரிகிறது; மனம் களிநடமிடுகிறது.<noinclude></noinclude> oswctd5dem4e7t5nqfxupxdsmsp2j41 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/369 250 645766 1944485 1942059 2026-06-10T07:12:05Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1944485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|368||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> இந்து மெயில் கதேசமித்திரன் எக்ஸ்பிரஸ் தினமணி டைம்ஸ் ஆப் இந்தியா ஸ்டேட்மென் இந்துஸ்தான் டைம்ஸ் போ, தம்பி! எத்தனையென்று பெயர்களைச் சொல்வது, எல்லா இதழ்களிலும், 'திராவிடநாடு'தானே! கண்டனம். கிண்டல், படம், தலையங்கம், கேள்வி. இப்படிப் பலப்பல. நானறிந்த வரையில் சமீபகாலத்தில். இத்தனை பெரிய பாபரப்பு. வேறு எந்தப் பிரச்சினைக்கும் கிடைத்ததில்லை. ஆயிரம் தூற்றட்டும் தம்பி! அவர்கள், நமது பிரச்சினையை இந்த அளவு. வடிவம்கொள்ளத் துணை புரிந்ததற்கு, நன்றி கூறத்தான் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடனும், தூய நோக்குடனும், நாம் ஆற்றிவரும் பணி, ஆபாசப்பேச்சு, இழிமொழி, பழிச்சொல், தாக்குதல் ஆகியவைகளால் பாழ்படாது - அலட்சியப் படுத்தினால்தான் பாழ்பட்டுவிடும். நமக்கு அந்தப் பயம் எழவிடாமல் செய்துள்ளவர்கள் மாற்றார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டாலும். தம்மையும் அறியாமல் நமக்கு உற்ற நண்பர்களாகின்றனர். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். திராவிடக் கலாசாரம் தனித்தன்மை வாய்ந்தது. உலகுக்கு அந்தக் கலாசாரத்தை எமது பங்காகத் தர விழைகிறோம். பிரிவினை கேட்கும் நாங்கள் மற்றவர்களைப் பகைக்கவில்லை.<noinclude></noinclude> 3vyhf5h7uds0jx7k42mih85k8gpe3j3 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/314 250 646137 1944235 1943367 2026-06-09T18:11:42Z TI Buhari 4634 1944235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|292 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1927 |width=30% {{ts|vtt}}|ஹையன்ரிச்‌ வீலேன்ட்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |பிwidth=50% {{ts|vtt}}|பித்த நீர்‌ (bile acid) பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1928 |அடால்‌ஃப்‌ வின்டாஸ்‌ |ஜெர்மனி |ஸ்டீரால்களின்‌ அமைப்பும்‌, வைட்டமின்களுடன்‌ அவற்றின்‌ தொடர்பும்‌ |-{{ts|vtt}} |1929 |சர்‌ ஆர்தர்‌ ஹார்டென்‌,<br>ஹெச்‌, வான்‌ ஆயிலர்‌ செல்ப்பின்‌ |இங்கிலாந்து,<br><br>சுவீடன்‌ |சர்க்கரை நொதித்தல்‌ குறித்தும்,‌ இதனுடன்‌ தொடர்புடைய நொதிகள்‌ பற்றியுமான ஆய்வு |-{{ts|vtt}} |1930 |ஹேன்ஸ்‌ ஃபிஷர்‌ |ஜெர்மனி |ஹீமின்‌, குளோரோஃபில்‌ ஆய்வு, ஹீமின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1931 |கார்ல்போஸ்ஷ்‌ ஃபிரெடரிக்‌ பெர்ஜியஸ்‌ |ஜெர்மனி |வேதி உயர்‌ அழுத்தம்‌ செயல் முறை உருவாக்கம்‌ மற்றும்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1932 |இர்விங்‌ லாங்மியூர்‌ |அமெரிக்கா |புறப் பரப்பு வேதியியலில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1933 |– |-{{ts|vtt}} |1934 |ஹாரால்டு யூரே |அமெரிக்கா |கன ஹைட்ரஜன்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1935 |ஃபிரெடரிக்‌ ஜீலியட்‌–கியூரி |ஃபிரான்ஸ் |புதிய கதிரியக்கத்‌ தனிமங்களின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1936 |பீட்டர்‌ டிபை |நெதர்லாந்து |இரு முனைத்‌ திருப்புத்‌ திறன்‌, எக்ஸ் கதிர்க்‌ கோட்டம்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1937 |சர்‌ வால்ட்டர்‌ ஹாவோர்த்‌ |இங்கிலாந்து |கார்போ ஹைட்ரேட்டுகள்‌, வைட்டமின்‌ குறித்தான ஆய்வு |-{{ts|vtt}} |1938 |ரிச்சர்டு குஹன்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |கரோட்டினாய்டு வைட்டமின்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1939 |அடால்‌ஃப்‌ பியூட்டனான்ட்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |பாலின ஹார்மோன்கள்‌ ஆய்வு |-{{ts|vtt}} | |லியோபால்ட்‌ ருசிகா |சுவிட்சர்லாந்து |பாலிமெத்தீலீன்‌ மற்றும்‌ உயர்‌ மூலக் கூறு எடை டெர்யூன்களில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1940 |– |-{{ts|vtt}} |1941 |– |-{{ts|vtt}} |1942 |– <!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---> |-{{ts|vtt}} |1943 |ஜியார்ஜ்‌ டிஹெவிசி |ஹாங்காங்‌ |வேதி ஆய்வில்‌ ஐசோடோப்புகள்‌ தடமறிப்‌ பொருள்களாக (Tracer) பயன் படுவது குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1944 |ஆட்டோ ஹான்‌ |ஜெர்மனி |உயர்‌ அணு எடைத்‌ தனிமங்கள்‌ அணுக் கருப்‌ பிளவு வினையில்‌ஈடுபடுதல்‌ குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1945 |ஆர்ட்டூரி |ஃபின்லாந்து |கால்‌ நடைத் தீவனம்‌ பாதுகாப்புப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1946 |ஜேம்ஸ்‌ சம்மர்‌ |அமெரிக்கா |நொதிப்‌ படிகமாதல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1947 |சர்‌ ராபர்ட்‌ ராபின்சன்‌ |இங்கிலாந்து |அல்கலாய்டு, பிற தாவர விளைபொருள் முக்கியத்துவம் |-{{ts|vtt}} |1948 |ஆரென்‌ டிசிலியஸ்‌ |சுவீடன்‌ |மின்‌ சவ்வூடு பரவல்‌, புற பரப்புக்‌ கவர்ச்சி ஆய்வு |-{{ts|vtt}} |1949 |வில்லியம்‌ கியாக்‌ |அமெரிக்கா |மிகக் குறைந்த வெப்ப நிலைகளில்‌ பொருள்‌களின்‌ பண்புகளைப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1950 |ஆட்டோமீல்ஸ்‌ குர்ட்‌ ஆல்டர்‌ |ஜெர்மனி |டையீன்‌ தொகுப்பு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1951 |எட்வின்‌ மெக்மிலன்<br>கிளென் டி. சீபார்க் <!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு----> |அமெரிக்கா<br>அமெரிக்கா |யுரேனியம்‌ கடந்த தனிமங்கள்‌ மிக்மில்லன்‌ கண்டு பிடிப்பும்‌, ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1952 |ஆர்செர்‌ மார்டின்‌<br>ரிச்சர்டு சின்ஜ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |பங்கீட்டு நிறச் சாரல்‌ பிரிகை (Partition chromatography) செய்முறை உருவாக்கம்‌ |-{{ts|vtt}} |1953 |ஹெர்மான்‌ ஸ்டாடிஞ்சர்‌ |ஜெர்மனி |பெருமூலக் கூறுகள்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1954 |லைனஸ்‌ பாலிங்‌ |அமெரிக்கா |வேதிப் பிணைப்புகள்‌ தொடர்பான ஆய்வு |-{{ts|vtt}} |1955 |வின்சென்ட்டி விக்யான்ட்‌ |அமெரிக்கா |பாலிபெப்டைடு ஹார்மோன்‌ தொகுப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 3t8qegdy8show11hkk3phi7ht84l1fm பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/315 250 646138 1944234 1943368 2026-06-09T18:11:13Z TI Buhari 4634 1944234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 293}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1956 |width=30% {{ts|vtt}}|நிக்கோலெய்‌ செம்யோனோவ்‌<br>சர்‌ சிரில்‌ ஹின்ஷெல்ட்‌ |width=10% {{ts|vtt}}|சோவியத்‌ ரஷ்யா<br>இங்கிலாந்து |width=50% {{ts|vtt}}|வேதி வினைகளின்‌இயக்க ஆய்வுகள்‌ |-{{ts|vtt}} |1957 |சர்‌ அலெக்சாண்டர்‌ டாட்‌ |இங்கிலாந்து |நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்‌ |-{{ts|vtt}} |1958 |ஃபிரெடிரிக்‌ சங்கர்‌ |இங்கிலாந்து |இன்சுலின்‌ மூலக் கூறு அமைப்பு ஆய்வு |-{{ts|vtt}} |1959 |ஜெர்ஸ்லோவ்‌ ஹீரோவீஸ்கி |செக்கஸ்லோ வாக்கியா |முனைவாக்க வரைவியல்‌ (polarography) ஆய்வு |-{{ts|vtt}} |1960 |வில்லார்டு லிபி |அமெரிக்கா |கதிரியக்கக்‌ கார்பன்‌ வழிக்‌ காலம்‌ அறிதல்‌ (Carbon dating) செயல்‌ முறைக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1961 |மெல்வின்‌ கால்வின்‌ |அமெரிக்கா |ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு |-{{ts|vtt}} |1962 |ஜான்‌ சி.கேன்ட்ரு<br>மேக்ஸ்‌ எஃப்‌ பெருட்ஸ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |ஹீமோ புரத அமைப்பு ஆய்வு |-{{ts|vtt}} |1963 |கியூலியோ நட்டா<br>கார்ல்‌ சைக்ளர்‌ |இத்தாலி<br>ஜெர்மனி |நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின்‌ அமைப்பும்‌, தொகுப்பும்‌ |-{{ts|vtt}} |1964 |டோராதி எம்‌.சி.ஹாட்சின்‌ |இங்கிலாந்து |மரணத்தை விளைவிக்கும்‌ குருதிச்‌சோகையைத்‌ தடுக்க உதவும்‌ உயிர்‌ வேதிச்‌ சேர்மங்களின்‌ அமைப்பை அறுதியிடல்‌ |-{{ts|vtt}} |1965 |ராபர்ட்‌ பி. உட்வேர்ட்‌ |அமெரிக்கா |உயிர்ப் பொருள்களால்‌ மட்டுமே தயாரிக்க முடியும்‌ என்று கருதப் பட்ட ஸ்டீரால்‌, குளோரோஃபில்‌ போன்ற பிற பொருள்களைத்‌ தொகுப்பு முறையில்‌ தயாரித்தல்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 3joatmkd9c9h281ljxrmg6vs4n4w5ss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/121 250 646195 1944072 2026-06-09T12:37:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னார்கள். அடுத்த நாள் இவர்கள் குவாடலூப்பைக் (Guade–lowpe) கண்டுபிடித்தனர்; அதையடுத்துப் பியூரிடோரீகாவைக் (Puerto Rica) கண்டுபிடித்தார்கள். பின்னர், இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலம்பசு, கிறித்தோபர்‌|95|கொலம்பியா}}</noinclude>னார்கள். அடுத்த நாள் இவர்கள் குவாடலூப்பைக் (Guade–lowpe) கண்டுபிடித்தனர்; அதையடுத்துப் பியூரிடோரீகாவைக் (Puerto Rica) கண்டுபிடித்தார்கள். பின்னர், இவர் தாம் விட்டுச் சென்ற இசுபானியர்களைத் தேடினார். அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டதை அறிந்தார். ஆகவே, குடியிருப்பு அமைக்கப் பாதுகாப்பான இடத்தைத் தேடினார். இறுதியில் இசபெல்லா என்ற நகரை நிறுவினார். இதுவே அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நகரமாகும். இவர் கி.பி. 1494–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சிபாயோ (Cibao) சென்று, அங்குச் சாண்டோதோமாசு என்ற நகரை உண்டாக்கினார். அதையடுத்துச் சமெய்க்காவைக் கண்டுபிடித்து அதற்குச் சாண்டியாகோ என்ற பெயரைச் சூட்டினார். பின் கி.பி. 1496–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10–ஆம் தேதி இவர் இசுபெயினுக்குத் திரும்பினார். தமது மூன்றாம் பயணத்தை கி.பி. 1498–ஆம் ஆண்டு மே மாதம் 30–ஆம் தேதி 6 கப்பல்களுடனும் மாலுமிகள் நீங்கலாக 200 பேர்களுடனும் தொடங்கினார். குடியேற்றங்களை விரிவுபடுத்துவது அப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அப்போது இவருடைய முதல் திட்டத்தின்படி சென்றிருப்பாரேயானால் அமேசானை அடைந்திருக்கக் கூடும். ஆனால் இடையில் பயணத் திசையை மாற்றிவிட்டார். இறுதியில், திரினிடாடை (Trinidad) அடைந்தார். அத்தீவைச் சுற்றிச் சென்று பரியா வளைகுடாவை (Gulf of Paria) அடைந்தார்; வட அமெரிக்காக் கண்டத்தில் காலடி வைத்தார். அதை ஒரு தீவு என்று தவறாகப் புரிந்துகொண்டமையாலும், கியூபாவில் ஏற்பட்ட கலகங்கள் காரணமாகவும் வேகமாக அதை விட்டு நீங்கினார். அக்கலகங்களுக்குக் காரணம் கொலம்பசுக்கு நிருவாகத்திறன் இன்மையேயாகும். கலகங்கள் பற்றிய செய்திகள் இசுபெயினுக்குக் கிட்டின. இசுபானிய அரசு அக்கலகங்கள் பற்றி அறியப் பிரான்சிசுகோ தெ போபாடில்லாவை (Francisco de Bobadilla) அனுப்பி வைத்தது. அவரை ஆளுநராகவும் முக்கிய குற்றவியல் நடுவராகவும் அரசு நியமித்தது. அவர் கி.பி. 1500–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் இசுபானோவாவை அடைந்தார். கொலம்பசு அவருடைய நியமனத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். ஆகவே, இவரைச் சங்கிலியால் பிணித்து இசுபெயினுக்கு அனுப்பினார்கள். இந்த வகையாக இவர் நடத்தப் பெறுவார் என்று யாரும் எண்ணியதில்லை. அரசரும் அரசியும்கூட வேதனையடைந்து இவரை விடுவிக்குமாறு ஆணையிட்டனர். அதன்பிறகு இவர் எருசலேமைத் துருக்கியரிடமிருந்து விடுவிக்க ஆசைப்பட்டார். அதற்குண்டான தங்கத்தைப் புதிய உலகத்தில் தேடிக் கண்டுபிடிக்கத் தமது நான்காம் பயணத்தை 4 கப்பல்களுடனும் 146 பேர்களுடனும் மேற்கொண்டார். இவர் கி.பி. 1502–ஆம் ஆண்டு மே மாதம் 9–ஆம் நாள் புறப்பட்டார்; சூன் மாதம் 15–ஆம் நாள் மார்த்தினிக்குத் தீவைக் (Martinique) கண்டுபிடித்தார். அங்கிருந்து சாந்தோ தாமிங்கோ (Santo Domingo) சென்றார். பின்னர், கோண்டூராசுக் (Honduras) கடற்கரை வழியாகச் சென்று கிரேசியசு முனையை (Cape Gracias) அடைந்தார். அங்கிருந்து 10 நாட்கள் பயணம் செய்தால் கங்கை நதியை அடைந்துவிடலாம் என்று எண்ணினார். பின்னர் கி.பி. 1503–ஆம் ஆண்டு மே 13–ஆம் நாள் பனாமாவை (Panama) அடைந்தார். பலஇன்னல்கள் காரணமாக இசுபெயினுக்குத் திரும்பலானார்; வழியில் நோய்வாய்ப்பட்டார். அசைக்க முடியாத நிலையில் இவர் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் வல்லா டோலிடு (Valla dolid) என்னுமிடத்தில் கி.பி. 1506–ஆம் ஆண்டு மே மாதம் 19–ஆம் நாளன்று இறந்தார். செவில் நகரிலுள்ள மடாலயம் ஒன்றில் புதைக்கப்பட்டார். பின்னர் கி.பி. 1542–இல் இவருடைய எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டு எசுபானோவாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குச் சாந்தோடாமிங்கோவிலுள்ள திருக்கோயிலில் அவை புதைக்கப்பட்டன. {{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <section end="கொலம்பசு, கிறித்தோபர்‌"/> <section begin="கொலம்பியா"/> {{dhr}} {{larger|<b>கொலம்பியா</b>}} தென் அமெரிக்காவின் வட மேற்கில் பனாமாப் பூசந்திக்கு அருகில் (Isthmus of Panama) உள்ள ஒரு நாடாகும். கொலம்பசு கி.பி. 1502–இல் இத்தீவைப் பார்வையிட்டார். எனவே, இவரது பெயரால் இப்பகுதி ‘கொலம்பியா’ (Colombia) என வழங்கப்பட்டது. இதன் பரப்பளவு 1,180,000 ச.கி.மீ. இது அலாசுகாவில் 3/4 பகுதி பரப்பளவு கொண்டது. கொலம்பியக் குடியரசு (Republica de Colombia) என்பது தன் முழுப் பெயர். இக்குடியரசின் தலைநகர் பகோட்டா (Bagota). இதன் மக்கள் தொகை 20,463,000. கொலம்பியாவிற்கு வடமேற்கில் பனாமாவும், வடகிழக்கில் வெனிசுலாவும், தென்கிழக்கில் பிரேசிலும், தெற்கில் பெருவும் ஈக்குவடாரும் (Peru and Ecuador) எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்யில் பசிபிக்குப் பெருங்கடல், வடக்கில் கரீபியன்கடல் ஆகிய இரு நீண்ட கடற்கரைப் பகுதிகளைக் கொலம்பியா கொண்டுள்ளது. அமேசான், ஒரினாலோ ஆறுகளின் கழிமுகங்களில் (Basin) அமைந்துள்ள மேற்கு, தெற்குச் சமவெளிப் பகுதிகள் வெப்பமானவை. இவை இந்நாட்டின் 3/5 பகுதியாகும். தெற்கே வெப்பமண்டல மழைக் காடுகளும் (Tropical rain forests) சாவனாப் புல்வெளிகளும், அடர்த்தியற்ற மரங்கள் கொண்ட நிலங்களும்<noinclude></noinclude> f1yipay3uoa4vwd6gopmntazrr405yz வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள் 0 646196 1944084 2026-06-09T12:47:29Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள் |previous = [[../இலிக்தன் இசுடைன்/]] | next = ../இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944084 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள் |previous = [[../இலிக்தன் இசுடைன்/]] | next = [[../இலிங்கபுராணக் குறுந்தொகை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="389" to="392" fromsection="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்" tosection="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள" /> h1wem53pb8gb4ffwe9lax09urqkeokg 1944086 1944084 2026-06-09T12:50:28Z Booradleyp1 1964 1944086 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள் |previous = [[../இலிக்தன் இசுடைன்/]] | next = [[../இலிங்கபுராணக் குறுந்தொகை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="389" to="392" fromsection="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்" tosection="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்" /> td0sompzkozsvhd28tfapo0gm4f8avz வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை 0 646197 1944087 2026-06-09T12:51:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கபுராணக் குறுந்தொகை |previous = [[../இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்/]] | ne..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944087 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கபுராணக் குறுந்தொகை |previous = [[../இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்/]] | next = [[../இலிங்க புராணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="393" to="393" fromsection="இலிங்கபுராணக் குறுந்தொகை" tosection="இலிங்கபுராணக் குறுந்தொகை" /> nh8of23c8104ypvxyrhzfj5rp3j6yqw வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம் 0 646198 1944089 2026-06-09T12:53:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க புராணம் |previous = [[../இலிங்கபுராணக் குறுந்தொகை/]] | next = ../இலிங்கராசர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944089 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க புராணம் |previous = [[../இலிங்கபுராணக் குறுந்தொகை/]] | next = [[../இலிங்கராசர் கோயில்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="393" to="393" fromsection="இலிங்க புராணம்" tosection="இலிங்க புராணம்" /> dvv5so67h9xjw1xeywpe7v00wqbgg1x வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில் 0 646199 1944090 2026-06-09T12:55:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கராசர் கோயில் |previous = [[../இலிங்க புராணம்/]] | next = [[../இலிங்க ரெட்டியார்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944090 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கராசர் கோயில் |previous = [[../இலிங்க புராணம்/]] | next = [[../இலிங்க ரெட்டியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="393" to="394" fromsection="இலிங்கராசர் கோயில்" tosection="இலிங்கராசர் கோயில்" /> moneisbtq3fjar9jefvyyq2t3d5l7x8 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார் 0 646200 1944091 2026-06-09T12:57:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க ரெட்டியார் |previous = [[../இலிங்கராசர் கோயில்/]] | next = [[../இலிங்க வழிபாடு/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944091 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க ரெட்டியார் |previous = [[../இலிங்கராசர் கோயில்/]] | next = [[../இலிங்க வழிபாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="394" to="394" fromsection="இலிங்க ரெட்டியார்" tosection="இலிங்க ரெட்டியார்" /> 4jgu384jol5jq8m5ligvfkgpksf5vac வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு 0 646201 1944092 2026-06-09T12:59:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க வழிபாடு |previous = [[../இலிங்க ரெட்டியார்/]] | next = ../இலிங்கன் ஆசரெட்சுகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944092 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்க வழிபாடு |previous = [[../இலிங்க ரெட்டியார்/]] | next = [[../இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="394" to="396" fromsection="இலிங்க வழிபாடு" tosection="இலிங்க வழிபாடு" /> j1xnjol1pmngg3cqpfy0z9db7kkpzzk வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை 0 646202 1944093 2026-06-09T13:02:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை |previous = [[../இலிங்க வழிபாடு/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944093 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை |previous = [[../இலிங்க வழிபாடு/]] | next = [[../இலிங்கன், ஆபிரகாம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="396" to="397" fromsection="இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை" tosection="இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை" /> l51fqn7tyusbn1l16go5gz2eb01yaa1 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம் 0 646203 1944094 2026-06-09T13:05:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கன், ஆபிரகாம் |previous = ../இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944094 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கன், ஆபிரகாம் |previous = [[../இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை/]] | next = [[../இலிங்காயத்துகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="397" to="405" fromsection="இலிங்கன், ஆபிரகாம்" tosection="இலிங்கன், ஆபிரகாம்" /> 6tlcdar078ezrsgchyr2xk8qmxk49mi வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள் 0 646204 1944096 2026-06-09T13:09:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்காயத்துகள் |previous = [[../இலிங்கன், ஆபிரகாம்/]] | next = [[../இலிங்கோற்பவர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944096 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்காயத்துகள் |previous = [[../இலிங்கன், ஆபிரகாம்/]] | next = [[../இலிங்கோற்பவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="405" to="406" fromsection="இலிங்காயத்துகள்" tosection="இலிங்காயத்துகள்" /> ecftf2e5revwv9su79ovfyp90na9qe2 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர் 0 646205 1944098 2026-06-09T13:13:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கோற்பவர் |previous = [[../இலிங்காயத்துகள்/]] | next = [[../இலிசுட்டு/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944098 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிங்கோற்பவர் |previous = [[../இலிங்காயத்துகள்/]] | next = [[../இலிசுட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="406" to="406" fromsection="இலிங்கோற்பவர்" tosection="இலிங்கோற்பவர்" /> 1ca6360fnv5iodw607lxxoxlmb0dmui வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு 0 646206 1944099 2026-06-09T13:15:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிசுட்டு |previous = [[../இலிங்கோற்பவர்/]] | next = [[../இலிடா/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944099 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிசுட்டு |previous = [[../இலிங்கோற்பவர்/]] | next = [[../இலிடா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="407" to="407" fromsection="இலிசுட்டு" tosection="இலிசுட்டு" /> mkiqw1ayt6zem9n3bw9w9y4ou830ja1 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா 0 646207 1944100 2026-06-09T13:17:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிடா |previous = [[../இலிசுட்டு/]] | next = [[../இலிண்டன், இரால்பு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944100 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிடா |previous = [[../இலிசுட்டு/]] | next = [[../இலிண்டன், இரால்பு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="407" to="407" fromsection="இலிடா" tosection="இலிடா" /> 33e3b6fx0im7al2rornggo5azr91osx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/122 250 646208 1944105 2026-06-09T14:10:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 122 |bSize = 480 |cWidth = 104 |cHeight = 97 |oTop = 80 |oLeft = 78 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 122 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 159 |oTop = 190..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலம்பியா|96|கொலம்பியா}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 122 |bSize = 480 |cWidth = 104 |cHeight = 97 |oTop = 80 |oLeft = 78 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 122 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 159 |oTop = 190 |oLeft = 29 |Location = center |Description = }} {{center|கொலம்பியா}} உள்ளன. இந்நாட்டின் தட்பவெப்ப நிலை, கடல் மட்டத்திலிருந்து இது அமைந்திருக்கும் உயரத்தைப் பொறுத்துப் பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. சில பகுதிகளில் மிக்க வெப்பமும், சில பகுதிகளில் மிக்க குளிரும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுள் பாதிக்கு மேற்பட்டோர் மெசுடிசோக்கள் (Mestizos) ஆவர். இவர்கள் ஐரோப்பியருக்கும் அமெரிக்க இந்தியருக்கும் பிறந்த கலப்பு இனத்தவர் ஆவர்; இவர்களுள் 1/5 பகுதியினர் ஆப்பிரிக்க வழியினரான முலாட்டோக்கள். எஞ்சியுள்ளோர் பெரும்பாலும் ஐரோப்பிய இனத்தினர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரத்தில் வசிக்கின்றனர். மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை, காப்பி, வாழை, பருத்தி, கரும்பு, புகையிலை, மரம் முதலியன இங்கு மிகுதியாக விளைகின்றன. கோகோ, பீன்சு, உருளைக் கிழங்கு முதலியனவும் இங்குப் பயிராகின்றன. கரும்பு பயிராவதால் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 122 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 231 |oTop = 55 |oLeft = 244 |Location = center |Description = }} {{center|கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதிப்<br>பொருளான வாழைப்பழம்}} காப்பி இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். நிலக்கரி, செம்பு, தங்கம், இரும்புத்தாது, ஈயம், விழுப்பொன் (Platinum) வெள்ளி, வைரம் ஆகியன இங்கு வெட்டி எடுக்கப்படுகின்றன. பெட்ரோலியமும் தங்கமும் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. போக்குவரத்து வசதிகள் போதிய அளவு இல்லாத காரணத்தால் வாணிகம் சிறப்புறவில்லை. கொலம்பியா ஏறத்தாழ கி.பி. 1536 முதல் 1819 முடிய இசுபெயினின் ஆதிக்கத்தில் இருந்தது எனலாம். சைமன் பொலீவரின் தலைமையிலான புரட்சிப் படைகள் கி.பி. 1819–இல் கொலம்பியாவை அயலவர் ஆட்சியிலிருந்து விடுவித்தன. பின்னர், பெரிய கொலம்பியக் குடியரசு (Greater Colombia Republic) என்னும் பெயரில் வெனிசுலா, ஈக்குவடார், பனாமா, கொலம்பியா ஆகியவை இணைந்தன. ஈக்குவடாரும் வெனிசுலாவும் கி.பி. 1830–இல் விடுதலை பெற்றன; வெனிசுலாவும் 1903–இல் இக்கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இறுதியாகக் கொலம்பியா மட்டுமே மிஞ்சியது. கொலம்பியா சிலகாலம் குழப்பத்தில் ஆழ்ந்தது. சட்டம், ஒழுங்கு கெட்டது; இங்கு 1940–50 ஆண்டுகளில் பெரிய கொலைகள் நடந்தன. இதனை அடுத்து 1953 முதல் 1957 முடியச் சருவாதிகார ஆட்சி நடந்தது. இறுதியாக 1958–இல் கொலம்பியாவில் மக்களாட்சி மலர்ந்தது. {{Right|<b>ம.இ.</b>}} {{nop}}<noinclude></noinclude> 0agp1lr2ldo6d955b5rtmlc2g9oof7h வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு 0 646209 1944112 2026-06-09T15:02:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிண்டன், இரால்பு |previous = [[../இலிடா/]] | next = [[../இலிண்டுமன், எட்வர்டு/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944112 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிண்டன், இரால்பு |previous = [[../இலிடா/]] | next = [[../இலிண்டுமன், எட்வர்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="407" to="407" fromsection="இலிண்டன், இரால்பு" tosection="இலிண்டன், இரால்பு" /> bhtbohv88te58zmvsknkjfm5kyabkul வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு 0 646210 1944113 2026-06-09T15:05:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிண்டுமன், எட்வர்டு |previous = [[../இலிண்டன், இரால்பு/]] | next = ../இலி, திரிக்வி ஆல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944113 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிண்டுமன், எட்வர்டு |previous = [[../இலிண்டன், இரால்பு/]] | next = [[../இலி, திரிக்வி ஆல்வ்தன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="407" to="408" fromsection="இலிண்டுமன், எட்வர்டு" tosection="இலிண்டுமன், எட்வர்டு" /> 3u4jol2zjxtobbv7ie18ur0njy8a264 வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன் 0 646211 1944115 2026-06-09T15:07:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலி, திரிக்வி ஆல்வ்தன் |previous = [[../இலிண்டுமன், எட்வர்டு/]] | next = ../இலிதுவேனிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944115 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலி, திரிக்வி ஆல்வ்தன் |previous = [[../இலிண்டுமன், எட்வர்டு/]] | next = [[../இலிதுவேனியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="408" to="408" fromsection="இலி, திரிக்வி ஆல்வ்தன்" tosection="இலி, திரிக்வி ஆல்வ்தன்" /> 0cn7spxtkneirsk4x5b70bfosc8qyqy வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா 0 646212 1944116 2026-06-09T15:10:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிதுவேனியா |previous = [[../இலி, திரிக்வி ஆல்வ்தன்/]] | next = [[../இலிப்மன், வால்டர்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944116 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிதுவேனியா |previous = [[../இலி, திரிக்வி ஆல்வ்தன்/]] | next = [[../இலிப்மன், வால்டர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="408" to="411" fromsection="இலிதுவேனியா" tosection="இலிதுவேனியா" /> 2kox1211dfaxtxdwyds7d06z5ac6b54 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர் 0 646213 1944117 2026-06-09T15:12:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிப்மன், வால்டர் |previous = [[../இலிதுவேனியா/]] | next = [[../இலிபான் கசுடாவு/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944117 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிப்மன், வால்டர் |previous = [[../இலிதுவேனியா/]] | next = [[../இலிபான் கசுடாவு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="411" to="412" fromsection="இலிப்மன், வால்டர்" tosection="இலிப்மன், வால்டர்" /> nl7pk134acukrcejcuqg3mc5m9g8v2r வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு 0 646214 1944119 2026-06-09T15:15:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபான் கசுடாவு |previous = [[../இலிப்மன், வால்டர்/]] | next = [[../இலிபியா/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944119 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபான் கசுடாவு |previous = [[../இலிப்மன், வால்டர்/]] | next = [[../இலிபியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="412" to="412" fromsection="இலிபான் கசுடாவு" tosection="இலிபான் கசுடாவு" /> 2w2itf41jz9ydyg33i2der699fq4mom வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா 0 646215 1944120 2026-06-09T15:17:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபியா |previous = [[../இலிபான் கசுடாவு/]] | next = [[../இலிபியா நாட்டில் கல்வி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944120 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபியா |previous = [[../இலிபான் கசுடாவு/]] | next = [[../இலிபியா நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="412" to="415" fromsection="இலிபியா" tosection="இலிபியா" /> l2svj0wa4hg89vu4cnw0lhzt1a0v3gy வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி 0 646216 1944122 2026-06-09T15:19:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபியா நாட்டில் கல்வி |previous = [[../இலிபியா/]] | next = [[../இலி பிளே, பிரடெரிக்கு/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944122 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிபியா நாட்டில் கல்வி |previous = [[../இலிபியா/]] | next = [[../இலி பிளே, பிரடெரிக்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="415" to="416" fromsection="இலிபியா நாட்டில் கல்வி" tosection="இலிபியா நாட்டில் கல்வி" /> gptbyfy3jlnd5dq7rykmmo34cefdfzm வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு 0 646217 1944124 2026-06-09T15:21:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலி பிளே, பிரடெரிக்கு |previous = [[../இலிபியா நாட்டில் கல்வி/]] | next = ../இலிம்போபோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944124 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலி பிளே, பிரடெரிக்கு |previous = [[../இலிபியா நாட்டில் கல்வி/]] | next = [[../இலிம்போபோ ஆறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="416" to="416" fromsection="இலி பிளே, பிரடெரிக்கு" tosection="இலி பிளே, பிரடெரிக்கு" /> obaa4vl815rrdogejie1n01zdib8j7y வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு 0 646218 1944126 2026-06-09T15:23:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிம்போபோ ஆறு |previous = [[../இலி பிளே, பிரடெரிக்கு/]] | next = ../இலியனார்டோ டா வின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944126 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிம்போபோ ஆறு |previous = [[../இலி பிளே, பிரடெரிக்கு/]] | next = [[../இலியனார்டோ டா வின்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="416" to="417" fromsection="இலிம்போபோ ஆறு" tosection="இலிம்போபோ ஆறு" /> kotumbpfg2usmf50muf6w7fdoxpnm12 வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி 0 646219 1944129 2026-06-09T15:26:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியனார்டோ டா வின்சி |previous = [[../இலிம்போபோ ஆறு/]] | next = [[../இலியாது/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944129 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியனார்டோ டா வின்சி |previous = [[../இலிம்போபோ ஆறு/]] | next = [[../இலியாது/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="417" to="419" fromsection="இலியனார்டோ டா வின்சி" tosection="இலியனார்டோ டா வின்சி" /> 8895h222xsxxp91t9si7vb1ll003lcm பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/33 250 646220 1944145 2026-06-09T15:44:36Z Rakshana T 16697 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " <poem>பாடல்‌ எழுதிவிடமாட்டார்கள்‌. ஒழுக்கமுள்ள மன்னர்களைத்‌ தான்‌ மதித்துப்‌ பாடுவார்கள்‌. செங்கோல்‌ முறை செய்யும்‌ மன்னர்களைத்தான்‌..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rakshana T" />{{Rvh|32 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> <poem>பாடல்‌ எழுதிவிடமாட்டார்கள்‌. ஒழுக்கமுள்ள மன்னர்களைத்‌ தான்‌ மதித்துப்‌ பாடுவார்கள்‌. செங்கோல்‌ முறை செய்யும்‌ மன்னர்களைத்தான்‌ சிறப்பித்துப்‌ பாடுவார்கள்‌. ஆகையால்‌ அக்கால மன்னர்கள்‌ புலவர்களின்‌ பாராட்டைப்‌ பெறு வதையே முதன்மையாகக்‌ கருதினர்‌. புலவர்களின்‌ பாரரட்டைப்‌, பெறவேண்டுமாயின்‌ குடி மக்களுக்குக்‌ கொடுமை புரியாமல்‌ நீதியுடன்‌ ஆட்சி புரிய வேண்டும்‌, ஆதலால்‌ மன்னர்களின்‌ இந்த மனப்பான்மையும்‌ அவர்களுடைய ஆட்சியின்‌ சிறப்பை விளக்குவதாகும்‌. இவ்வுண்மையை மேலே காட்டிய பாண்டியன்‌ தலையால்‌ கானத்துச்‌ செருவென்ற கெடுஞ்செழியன்‌ பாடலின்‌ மற்‌ றொரு பகுதியில்‌ காணலாம்‌. ஓங்கிய சிறப்பின்‌ உயர்ந்த கேன்வி மாங்குடி மருதன்‌ தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ்‌ சிறப்பின்‌ புலவர்‌ பாடாது வரைகளன்‌ நிலவரை. இவ்வரிகள்‌ பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ உள்ளத்தில்‌ குடிகொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன, “கான்‌ பகையரசர்களை வெற்றிகொள்ளாவிட்டால்‌, கெங்கோல வது மட்டும்‌ அன்‌ றி, மற்றொரு பெரும்பழிக்கும்‌ ஆளா வேன்‌. உயர்ந்த தலைமையும்‌, பெரிய நூற்கேள்‌ வியையும்‌ உடைய மாங்குடி மறாதன்‌ என்பவனைத்‌ தலைவனாகக்கொண்ட, உலகம்‌ உள்ளவரையிலும்‌ நிலைத்து கிற்கும்‌ பலரும்‌ புகமும்‌ பெருமையுள்ள, புலவர்களால்‌ எனது காடு பாராட்டிப்‌ பரட்‌ படாமல்‌ ஒழிக'" என்பதே இவ்வரிகளின்‌ பொருள்‌. புலவர்கள்‌ பாராட்டும்படி அரசு செய்யும்‌ காடே றந்த நாடு என்று பண்டைத்‌ தமிழ்‌ வேம்தர்கள்‌ எண்ணினர்‌. இந்த உண்மையை இவ்வரிகள்‌ எடுத்துக்‌ காட்டின. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களிலே பலர்‌ அறகெதறியைப்‌ பின்பற்றி நடந்தனர்‌. மக்கரோக்‌ காப்பதே தங்கள்‌ கடமை.</poem> உலகமொடு நிலைய - உலகம்‌ வள்ளவரை அழியாத, வரைக - சீச்குக.<noinclude></noinclude> oubxcvt7ggjgkkvstpdq1ry8x15fgeo 1944214 1944145 2026-06-09T17:28:27Z Rakshana T 16697 1944214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rakshana T" />{{Rvh|32| center | பழந்தமிழர் அரசியல்}}</noinclude> {{block_center|<poem> பாடல்‌ எழுதிவிடமாட்டார்கள்‌. ஒழுக்கமுள்ள மன்னர்களைத்‌ தான்‌ மதித்துப்‌ பாடுவார்கள்‌. செங்கோல்‌ முறை செய்யும்‌ மன்னர்களைத்தான்‌ சிறப்பித்துப்‌ பாடுவார்கள்‌. ஆகையால்‌ அக்கால மன்னர்கள்‌ புலவர்களின்‌ பாராட்டைப்‌ பெறு வதையே முதன்மையாகக்‌ கருதினர்‌. புலவர்களின்‌ பாரரட்டைப்‌, பெறவேண்டுமாயின்‌ குடி மக்களுக்குக்‌ கொடுமை புரியாமல்‌ நீதியுடன்‌ ஆட்சி புரிய வேண்டும்‌, ஆதலால்‌ மன்னர்களின்‌ இந்த மனப்பான்மையும்‌ அவர்களுடைய ஆட்சியின்‌ சிறப்பை விளக்குவதாகும்‌. இவ்வுண்மையை மேலே காட்டிய பாண்டியன்‌ தலையாங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌ பாடலின்‌ மற்‌றொரு பகுதியில்‌ காணலாம்‌. {{ center|ஓங்கிய சிறப்பின்‌ உயர்ந்த கேள்‌வி மாங்குடி மருதன்‌ தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ்‌ சிறப்பின்‌ புலவர்‌ பாடாது வரைகஎன்‌ நிலவரை.}} இவ்வரிகள்‌ பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ உள்ளத்தில்‌ குடிகொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன, “நான்‌ பகையரசர்களை வெற்றிகொள்ளாவிட்டால்‌, கொடுங்கோல னாவது மட்டும்‌ அன்‌றி, மற்றொரு பெரும்பழிக்கும்‌ ஆளா வேன்‌. உயர்ந்த தலைமையும்‌, பெரிய நூற்கேள்‌வியையும்‌ உடைய மாங்குடி மருதன்‌ என்பவனைத்‌ தலைவனாகக்கொண்ட, உலகம்‌ உள்ளவரையிலும்‌ நிலைத்து நிற்கும்‌ பலரும்‌ புகழும்‌ பெருமையுள்ள, புலவர்களால்‌ எனது நாடு பாராட்டிப்‌ பாடப்‌ படாமல்‌ ஒழிக'" என்பதே இவ்வரிகளின்‌ பொருள்‌. புலவர்கள்‌ பாராட்டும்படி அரசு செய்யும்‌ நாடே சிறந்த நாடு என்று பண்டைத்‌ தமிழ்‌ வேந்தர்கள்‌ எண்ணினர்‌. இந்த உண்மையை இவ்வரிகள்‌ எடுத்துக்‌ காட்டின. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களிலே பலர்‌ அறநெறியைப்‌ பின்பற்றி நடந்தனர்‌. மக்களைக்‌ காப்பதே தங்கள்‌ கடமை. உலகமொடு நிலைய - உலகம்‌ வள்ளவரை அழியாத, வரைக - நீக்குக.</poem>}}<noinclude></noinclude> lzftaqlgh00osmaavvfqsjzoe3xr3w1 1944222 1944214 2026-06-09T17:42:32Z Rakshana T 16697 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rakshana T" />{{Rvh|32| center | பழந்தமிழர் அரசியல்}}</noinclude> {{block_center|width=700px| <poem>பாடல்‌ எழுதிவிடமாட்டார்கள்‌. ஒழுக்கமுள்ள மன்னர்களைத்‌ தான்‌ மதித்துப்‌ பாடுவார்கள்‌. செங்கோல்‌ முறை செய்யும்‌ மன்னர்களைத்தான்‌ சிறப்பித்துப்‌ பாடுவார்கள்‌. ஆகையால்‌ அக்கால மன்னர்கள்‌ புலவர்களின்‌ பாராட்டைப்‌ பெறு வதையே முதன்மையாகக்‌ கருதினர்‌. புலவர்களின்‌ பாரரட்டைப்‌, பெறவேண்டுமாயின்‌ குடி மக்களுக்குக்‌ கொடுமை புரியாமல்‌ நீதியுடன்‌ ஆட்சி புரிய வேண்டும்‌, ஆதலால்‌ மன்னர்களின்‌ இந்த மனப்பான்மையும்‌ அவர்களுடைய ஆட்சியின்‌ சிறப்பை விளக்குவதாகும்‌.இவ்வுண்மையை மேலே காட்டிய பாண்டியன்‌ தலையாங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌ பாடலின்‌ மற்‌றொரு பகுதியில்‌ காணலாம்‌. {{center |ஓங்கிய சிறப்பின்‌ உயர்ந்த கேள்‌வி மாங்குடி மருதன்‌ தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ்‌ சிறப்பின்‌ புலவர்‌ பாடாது வரைகஎன்‌ நிலவரை.}} இவ்வரிகள்‌ பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ உள்ளத்தில்‌ குடிகொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன, “நான்‌ பகையரசர்களை வெற்றிகொள்ளாவிட்டால்‌, கொடுங்கோல னாவது மட்டும்‌ அன்‌றி, மற்றொரு பெரும்பழிக்கும்‌ ஆளா வேன்‌. உயர்ந்த தலைமையும்‌, பெரிய நூற்கேள்‌வியையும்‌ உடைய மாங்குடி மருதன்‌ என்பவனைத்‌ தலைவனாகக்கொண்ட, உலகம்‌ உள்ளவரையிலும்‌ நிலைத்து நிற்கும்‌ பலரும்‌ புகழும்‌ பெருமையுள்ள, புலவர்களால்‌ எனது நாடு பாராட்டிப்‌ பாடப்‌ படாமல்‌ ஒழிக'" என்பதே இவ்வரிகளின்‌ பொருள்‌. புலவர்கள்‌ பாராட்டும்படி அரசு செய்யும்‌ நாடே சிறந்த நாடு என்று பண்டைத்‌ தமிழ்‌ வேந்தர்கள்‌ எண்ணினர்‌. இந்த உண்மையை இவ்வரிகள்‌ எடுத்துக்‌ காட்டின. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களிலே பலர்‌ அறநெறியைப்‌ பின்பற்றி நடந்தனர்‌. மக்களைக்‌ காப்பதே தங்கள்‌ கடமை. உலகமொடு நிலைய - உலகம்‌ வள்ளவரை அழியாத, வரைக - நீக்குக.</poem> }}<noinclude></noinclude> cytbvrvdn5tjw7dsmxj5r0kabx4svhu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/123 250 646221 1944160 2026-06-09T16:07:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கல்வி:</b> நாட்டு வளர்ச்சிக்காக உழைக்கும் திறனறிவுடைய மக்களைப் பயிற்சியால் உருவாக்குவதே கொலம்பியா நாட்டுக் கல்வியின் முதன்மையான நோக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலம்பியா|97|கொலம்பியா மாவட்டம்}}</noinclude><b>கல்வி:</b> நாட்டு வளர்ச்சிக்காக உழைக்கும் திறனறிவுடைய மக்களைப் பயிற்சியால் உருவாக்குவதே கொலம்பியா நாட்டுக் கல்வியின் முதன்மையான நோக்கமாகும். கொலம்பியாவின் தேசிய மொழியாக இசுபானிய மொழி (Spanish) இருப்பதால், கல்வி நிறுவனங்களில் இம்மொழியே பயிற்று மொழியாக உள்ளது. அமெரிக்க இந்திய மக்கள் மிகுதியாக வாழும் இடங்களில் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் விருப்ப மொழிகளாகக் கற்பிக்கப்படுகின்றன. முறைசார்ந்த பள்ளிக் கல்வியானது ஓராண்டு மழலையர் பள்ளி, ஐந்தாண்டுத் தொடக்கப்பள்ளிக் பள்ளிக் கல்வி கல்வி, நான்காண்டு இடைநிலைப் என்னும் மூன்று நிலைகளில் அளிக்கப்படுகிறது. இடைநிலைக்கல்வி முடித்தோர் இடைநிலைத் தொழிற் பள்ளிகளில் (Intermediate Vocational Schools) சேர்ந்தோ, பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் சேர்ந்தோ உயர்கல்வி பெறுகின்றனர். பள்ளிக் கல்வியில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பாடச்செயல் திட்டமும் (Curriculum) பாட வேளைகளும் பின்பற்றப்படுகின்றன. தொடக்கப்பள்ளிக் கல்வி குழந்தைகளுக்கு இலவசமாக்கப்பட்டுள்ளது; ஆனால் கட்டாயமாக்கப்படவில்லை. முறைசாராக் கல்வியில் (Nonformal Education) ஒழுங்குமுறையான பாடச் செயல்திட்டம் அல்லது பாடவேளைகள் ஏதும் இல்லை. வயதுவந்தோரின் தேவைகளையும் சாராக் கல்வியின் பாட வேளையும் அமைகின்றன. படிப்பைப் பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பது போலவே, எழுத்தறிவின்மையும் கொலம்பியாவில் மிகுதி, 7 வயதிலிருந்து 14 வயது வரையிலான 100 குழந்தைகளில், 80 பேர் மட்டுமே தொடக்கப்பள்ளிகளில் சேருகின்றனர். ஆனால், 32 பேர் மட்டுமே தொடக்கப் பள்ளிக் கல்வியை வெற்றியுடன் முடிக்கின்றனர். கொலம்பியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்குப் பெரும்பணி ஆற்றுகின்றன. அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளில் 20 விழுக்காடு குழந்தைகளும், தனியார் நடத்தும் பள்ளிகளில் 20 விழுக்காடு குழந்தைகளும் (1975) சேர்ந்து பயின்றனர். அதுபோலவே இடைநிலைப்பள்ளிக் கல்வியில், 55 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளியிலும் 45 விழுக்காடு மாணவர்கள் தனியார் பள்ளியிலும் சேர்ந்திருந்தனர். கொலம்பியா அரசு தனது ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1980–இல் 38 விழுக்காடு தொடக்கக் கல்விக்கும், 21 விழுக்காடு இடைநிலைக் கல்விக்கும், 21 விழுக்காடு உயர்கல்விக்கும் மீதியினைத் தொழிற் கல்விக்கும் ஒதுக்கியது. கொலம்பியாவில் கல்வியாராய்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது. இருப்பினும் கொலம்பியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் சமுதாய மற்றும் தேசிய தேவைகளை (National needs) ஒட்டி அமையும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. பொகாட்டாவில் (Bogota) கி.பி. 1867–இல் நிறுவப்பட்ட தேசிய பல்கலைக் கழகம் (National University) கொலம்பியாவின் பழமையான பல்கலைக்கழகமாகும். இது தவிரக் கொலம்பியாவில் 97 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சிற்றூர்களில் உள்ள மக்களுக்குக் குறைந்த கல்வி வாய்ப்பு வசதிகள், எழுத்தறிவுத் திட்டத்திற்கும் முறைசாராக் கல்விக்கும் போதுமான தொடர்பின்மை, பாடச் செயல் திட்டத் தயாரிப்பில் போதுமான ஆராய்ச்சியின்மை, பாடச் செயல் திட்டத்தை நாட்டின் பகுதிகளுக்கேற்ப மாற்றியமைக்காத தன்மை போன்றவை கொலம்பியா நாட்டுக் கல்வி முறையில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களாகக் கருதப்படுகின்றன. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கொலம்பியா"/> <section begin="கொலம்பியா ஆறு"/> {{dhr}} {{larger|<b>கொலம்பியா ஆறு:</b>}} கனடா நாட்டின் மேற்கில்‌ கொலம்பியா ஏரியில்‌ தோன்றும்‌ கொலம்‌பியா (Columbia) ஆறு 1945 கி.மீ. நீளமூள்ளது. இந்த நீண்ட வழியில்‌ இது பல துணையாறுகளுடன்‌ சேர்‌கிறது; பல ஏரிகளைக்‌ கடக்கிறது; வாசிங்டன்‌ (Washington), ஆரிகன்‌ (Oregon) மாநிலங்கள்‌ வழியாக ஓடுகிறது. இறுதியில்‌, பசிபிக்கு மாக்கடலில்‌ இது கலக்கிறது. இது பல இடங்களில்‌ போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. இதை முன்பு ஆரிகன்‌ ஆறு என வழங்கினர்‌. இராபர்ட்டு ஒரே (Robert Gray) என்‌னும்‌ அமெரிக்க நில ஆய்வரால்‌ கி.பி. 1792–இல்‌ இந்த ஆறு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்‌ வந்த கப்பலின்‌ பெயரான ‘கொலம்பியா’வைத்‌ தாம்‌ கண்டுபிடித்த ஆற்றுக்கு வைத்தார்‌. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கொலம்பியா ஆறு"/> <section begin="கொலம்பியா மாவட்டம்‌"/> {{dhr}} {{larger|<b>கொலம்பியா மாவட்டம்‌:</b>}} புகழ்பெற்ற இம்மாவட்டம்‌ ஐக்கிய அமெரிக்கக்‌ குடியரசின்‌ மாநிலங்களான வர்‌சீனியாவுக்கும்‌ மேரிலாந்துக்குமிடையே அமைந்துள்ளது. இப்பகுதியில்தான்‌ அமெரிக்காவின்‌ தலைநகரான வாசிங்டன்‌ (Washington) அமைந்துள்‌ளது. இது கூட்டாட்‌சி மாவட்டமானபடியால்‌ தனிச்‌ சிறப்புடன்‌ விளங்குகிறது. பல தொழிற்சாலைகளும்‌ பல பல்கலைக்‌ கழகங்களும்‌ இங்கு உள்ளன. பொட்டொமாக்கு (Potomac) ஆறு இங்கு ஓடுகிறது. முதல்‌ குடியரசுத்‌ தலைவரால்‌ குறிப்பிடப்பட்ட இடத்தில்‌<noinclude></noinclude> j9pi80o77au63j1dmww4fxg3dtmzbi5 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/322 250 646222 1944228 2026-06-09T17:50:43Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|300 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1908 |width=30% {{ts|vtt}}|கிலாஸ்‌ பான்ட்டஸ்‌ அர்னால்ட்சன்‌<br>ஃபிரெடரிக்‌ பேஜர்‌ |width=10% {{ts|vtt}}|சுவீடன்‌<br><br>டென்மார்க்‌ |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1909 |பால் ஹென்றி ஈஸ்டோரனெல்லிஸ்‌ டி கான்ஸ்டன்ட்‌<br>ஆகஸ்ட்‌ பீராநெர்ட்‌ |ஃபிரான்ஸ்‌<br><br><br>பெல்ஜியம்‌ | |-{{ts|vtt}} |1910 |அனைத்துலக அமைதிக் குழு | | |-{{ts|vtt}} |1911 |டோபியாஸ்‌ அஸ்ஸர்‌<br>ஆல்‌ஃபிரட்‌ ஃபிரிட்‌ |நெதர்லாந்து<br>ஆஸ்திரேலியா | |-{{ts|vtt}} |1912 |எலிகூ ரூட்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1913 |ஹென்றி லாஃபென்டைன்‌ |பெல்ஜியம்‌ | |-{{ts|vtt}} |1914 |– || || |-{{ts|vtt}} |1915 |– || || |-{{ts|vtt}} |1916 |– || || |-{{ts|vtt}} |1917 |அனைத்துலகச்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ | | |-{{ts|vtt}} |1918 |– || || |-{{ts|vtt}} |1919 |உட்ரோ வில்சன்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1920 |லியான்‌ போர்ஜியாஸ்‌ |ஃபிரான்ஸ்‌ | |-{{ts|vtt}} |1921 |கார்ல்‌ பிரான்டிஸ்‌<br>கிறிஸ்டியன்‌ லுவஸ்‌ லாங்கே |சுவீடன்‌<br>நார்வே | |-{{ts|vtt}} |1922 |ஃபிரைட்ஜாட்‌ நான்சென்‌ |நார்வே | |-{{ts|vtt}} |1923 |– || || |-{{ts|vtt}} |1924 |– || || |-{{ts|vtt}} |1925 |சர்‌ ஆஸ்டென்‌ சாம்பெர்லெய்ன்‌<br>சார்லஸ்‌ ஜி டேவெஸ்‌<br>அரிஸ்டைடு பிரான்ட்‌ |இங்கிலாந்து<br><br>அமெரிக்கா<br>ஃபிரான்ஸ்‌ | |-{{ts|vtt}} |1926 |குஸ்டவ்‌ ஸ்டெரெஸ்மேன்‌ |ஜெர்மனி | |-{{ts|vtt}} |1927 |ஃபெர்டினான்ட் பியூசன்‌<br>லுட்விக்‌ கியூட்‌ |ஃபிரான்ஸ்‌<br><br>ஜெர்மனி <!---- See: https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு ----> | |-{{ts|vtt}} |1928 |– || || |-{{ts|vtt}} |1929 |ஃபிராங்க்‌ பி.கெல்லாக்‌ |அமெரிக்கா | |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> flqmot3q5ut8lua72p3xcwl1psbfnlb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/323 250 646223 1944231 2026-06-09T18:04:45Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 301}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|-{{ts|vtt}} |width=10%|1930 |width=30%|நாதன்‌ சோடெர்பிளெம்‌ |width=10%|ஸ்வீடன்‌ |width=50%| |-{{ts|vtt}} |1931 |ஜேன்‌ ஆடம்ஸ்‌<br>நிக்கோலஸ்‌ மூர்ரே பட்லர்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா | |-{{ts|vtt}} |1932 |– | |-{{ts|vtt}} |1933 |சர்‌ நார்மன்‌ ஏஞ்சல்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1934 |ஆர்தர்‌ ஹென்டர்சன்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1935 |கார்ல்‌ வான்‌ ஒசிட்ஸ்கி |ஜெர்மனி | |-{{ts|vtt}} |1936 |கார்லஸ்‌ சாவேட்ரா லாமாஸ்‌ |அர்ஜென்டீனா | |-{{ts|vtt}} |1937 |விஸ்கவுன்ட்‌ சீசில்‌ ஆஃப்‌ செல்வுட்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1938 |அனைத்துலக அகதிகள்‌அலுவலகம்‌ |– | |-{{ts|vtt}} |1939 |– | | |-{{ts|vtt}} |1943 |– | | |-{{ts|vtt}} |1944 |அனைத்துலகச்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ |– | |-{{ts|vtt}} |1945 |கார்டெல்‌ ஹல்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1946 |எமிலி கிரீன்‌ பால்ச்‌<br>ஜான்‌ ஆர்‌. மோட்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா | |-{{ts|vtt}} |1947 |அமெரிக்க நண்பர்கள்‌ சேவைக்‌ கழகம்‌<br>நண்பர்கள்‌ சேவைக்‌ கழகம்‌ |அமெரிக்கா<br><br><br>இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1948 |– | | |-{{ts|vtt}} |1949 |லார்ட்‌ பாயெட்‌ ஆர்‌. |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1950 |ரால்‌ஃப்‌ புன்சீ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1951 |லியோன்‌ ஜோஹால்‌ |ஃபிரான்ஸ்‌ | |-{{ts|vtt}} |1952 |ஆல்பர்ட்‌ ஷீவிட்ஸர்‌ |ஃபிரான்ஸ்‌ <!----https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு----> | |-{{ts|vtt}} |1953 |ஜார்ஜ் சி.மார்ஷெல்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1954 |ஐ.நாவின்‌ அகதிகளுக்கான உதவி அலுவலகம்‌ |– | |-{{ts|vtt}} |1955 |– | | |-{{ts|vtt}} |1956 |– | | |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 8yoza88mx3jwcz5vtt4adavxupyuvap 1944233 1944231 2026-06-09T18:09:58Z TI Buhari 4634 1944233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 301}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1930 |width=30% {{ts|vtt}}|நாதன்‌ சோடெர்பிளெம்‌ |width=10% {{ts|vtt}}|ஸ்வீடன்‌ |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1931 |ஜேன்‌ ஆடம்ஸ்‌<br>நிக்கோலஸ்‌ மூர்ரே பட்லர்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா | |-{{ts|vtt}} |1932 |– | |-{{ts|vtt}} |1933 |சர்‌ நார்மன்‌ ஏஞ்சல்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1934 |ஆர்தர்‌ ஹென்டர்சன்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1935 |கார்ல்‌ வான்‌ ஒசிட்ஸ்கி |ஜெர்மனி | |-{{ts|vtt}} |1936 |கார்லஸ்‌ சாவேட்ரா லாமாஸ்‌ |அர்ஜென்டீனா | |-{{ts|vtt}} |1937 |விஸ்கவுன்ட்‌ சீசில்‌ ஆஃப்‌ செல்வுட்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1938 |அனைத்துலக அகதிகள்‌அலுவலகம்‌ |– | |-{{ts|vtt}} |1939 |– | | |-{{ts|vtt}} |1943 |– | | |-{{ts|vtt}} |1944 |அனைத்துலகச்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ |– | |-{{ts|vtt}} |1945 |கார்டெல்‌ ஹல்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1946 |எமிலி கிரீன்‌ பால்ச்‌<br>ஜான்‌ ஆர்‌. மோட்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா | |-{{ts|vtt}} |1947 |அமெரிக்க நண்பர்கள்‌ சேவைக்‌ கழகம்‌<br>நண்பர்கள்‌ சேவைக்‌ கழகம்‌ |அமெரிக்கா<br><br><br>இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1948 |– | | |-{{ts|vtt}} |1949 |லார்ட்‌ பாயெட்‌ ஆர்‌. |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1950 |ரால்‌ஃப்‌ புன்சீ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1951 |லியோன்‌ ஜோஹால்‌ |ஃபிரான்ஸ்‌ | |-{{ts|vtt}} |1952 |ஆல்பர்ட்‌ ஷீவிட்ஸர்‌ |ஃபிரான்ஸ்‌ <!----https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு----> | |-{{ts|vtt}} |1953 |ஜார்ஜ் சி.மார்ஷெல்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1954 |ஐ.நாவின்‌ அகதிகளுக்கான உதவி அலுவலகம்‌ |– | |-{{ts|vtt}} |1955 |– | | |-{{ts|vtt}} |1956 |– | | |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 8mabfi9htxa2igeh64ouai3xza1pdeu பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/324 250 646224 1944236 2026-06-09T18:14:23Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|302 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1957 |width=30% {{ts|vtt}}|லெஸ்டர்‌ பி.பியர்சன்‌ |width=10% {{ts|vtt}}|கனடா |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1958 |டோமினிக்‌ ஜியார்ஜென்‌ பயர்‌ |பெல்ஜியம்‌ | |-{{ts|vtt}} |1959 |பிலிப்‌ நோயல்‌–பேக்கர்‌ |இங்கிலாந்து | |-{{ts|vtt}} |1960 |ஆல்பர்ட்‌ லுட்டூவி |தெ.ஆப்ரிக்கா | |-{{ts|vtt}} |1961 |டேக்‌ ஹேமர்ஸ்க்ஜோல்ட்‌ |ஸ்வீடன்‌ | |-{{ts|vtt}} |1962 |லைனஸ்‌ பாலிங்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1963 |அனைத்துலகச்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌, செஞ்சிலுவைச்‌ சங்கங்‌களின்‌ துணை நிறுவனங்கள்‌ |– | |-{{ts|vtt}} |1964 |மார்ட்டின்‌ லூதர்‌ கிங்‌, ஜுனியர்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1965 |யுனிசெஃப்‌ |– | |-{{ts|vtt}} |1966 |– | |-{{ts|vtt}} |1967 |– | |-{{ts|vtt}} |1968 |ரீன்‌ கேசின்‌ |ஃபிரான்ஸ் | |-{{ts|vtt}} |1969 |அனைத்துலகத்‌ தொழிலாளர்‌ கழகம்‌ |– | |-{{ts|vtt}} |1970 |நார்மன்‌ இ.போர்லாக்‌ |அமெரிக்கா | |-{{ts|vtt}} |1971 |வில்லி பிரான்டெட்‌ |ஜெர்மன்‌ | |-{{ts|vtt}} |1972 |– | |-{{ts|vtt}} |1973 |ஹென்றி கிசிஞ்சர்‌<br>லிடுக்‌ தோ (மறுத்து விட்டார்‌) |அமெரிக்கா<br>வட வியட்நாம்‌ | |-{{ts|vtt}} |1974 |சாட்டோ ஐசாகு<br>சீன்‌ மெக்பிரைட்‌<br> |ஜப்பான்‌<br>அயர்லாந்து | |-{{ts|vtt}} |1975 |ஆன்ட்ரி டி.சக்ரோவ்‌ |சோவியத்‌ ரஷ்யா | |-{{ts|vtt}} |1976 |மெய்ரீட்‌ கோரிகள்‌<br><br>பெட்டி வில்லியம்ஸ்‌ |வட அயர்லாந்து<br>வட அயர்லாந்து | |-{{ts|vtt}} |1977 |அனைத்துலக புகழிடக்‌ கழகம்‌ |– | |-{{ts|vtt}} |1978 |மினாகெம்‌ பெகின்‌<br>அன்வர்‌ சதாத்‌ |இஸ்ரேல்‌<br>எகிப்து | |-{{ts|vtt}} |1979 |அன்னை தெரசா |இந்தியா | |-{{ts|vtt}} |1980 |அடால்‌ஃபா ஃபெரேஸ்‌–எஸ்கிவெல்‌ |அர்ஜென்டீனா | |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> py6mmdtocya2dpiviml9aga0tgcdeka பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/325 250 646225 1944237 2026-06-09T18:27:25Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 303}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|-{{ts|vtt}} |width=10%|1981 |width=30%|அனைத்துலக அகதிகள்‌ கழக அலுவலகம்‌ |width=10%| |width=50%| |-{{ts|vtt}} |1982 |ஆல்வா மிர்டால்‌<br>அல்‌ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்‌ |ஸ்வீடன்‌<br>மெக்சிகோ | |-{{ts|vtt}} |1983 |லெக்‌ வாலேசா |போலந்து | |-{{ts|vtt}} |1984 |டெஸ்மன்ட்‌ டுட்டு |தெ.ஆப்பிக்கா | |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இலக்கியம்‌</center> |-{{ts|vtt}} |1901 |சுல்லி புர்தோம்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1902 |தியோடர்‌ மாம்சென்‌ |ஜெர்மனி |வரலாற்று ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1903 |பி.ஜாரென்சன்‌ |நார்வே |கதாசிரியர்‌, கவிஞர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1904 |ஃபிரெடரிக்‌ மிஸ்ட்ரால்‌<br>ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஸ்பெயின்‌ |கவிஞர்‌<br><br>நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1905 |ஹெச்‌.சைன்கிரிக்ஸ்‌ |போலந்து |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1906 |ஜியோசு கார்டுசி |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1907 |ருட்யார்டு கிப்ளிங்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1908 |ருடால்‌ஃப்‌ ஐகென்‌ |ஜெர்மனி |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1909 |செல்மா லாகெர்லாஃப்‌ |ஸ்வீடன்‌ |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1910 |பால்‌ வான்‌ ஹேசி |ஜெர்மனி |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1911 |மவுரிஸ்‌ மீட்டர்லிங்‌ |பெல்ஜியம்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1912 |ஜெர்ஹார்ட்‌ ஹெப்டுமான்‌ |ஜெர்மனி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1913 |சர்‌. ஆர். தாகூர் |இந்தியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1914 |– | |-{{ts|vtt}} |1915 |ரோமெய்ன்‌ ரோலான்ட்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1916 |வி.வான்‌ ஹெயீடென்ஸ்டேம்‌ |ஸ்வீடன்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1917 |கார்ல்‌ ஜெல்லரப்‌<br> ஹெச்‌.போன்டோ பிடான்‌ |டென்மார்க்‌<br>டென்மார்க்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ----> |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1918 |–<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> lah14qjobiu7dvhqubm9wmo1e8imukz 1944453 1944237 2026-06-10T06:22:27Z TI Buhari 4634 1944453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 303}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1981 |width=30% {{ts|vtt}}|அனைத்துலக அகதிகள்‌ கழக அலுவலகம்‌ |width=10% {{ts|vtt}}| |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1982 |ஆல்வா மிர்டால்‌<br>அல்‌ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்‌ |ஸ்வீடன்‌<br>மெக்சிகோ | |-{{ts|vtt}} |1983 |லெக்‌ வாலேசா |போலந்து | |-{{ts|vtt}} |1984 |டெஸ்மன்ட்‌ டுட்டு |தெ.ஆப்பிக்கா | |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இலக்கியம்‌</center> |-{{ts|vtt}} |1901 |சுல்லி புர்தோம்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1902 |தியோடர்‌ மாம்சென்‌ |ஜெர்மனி |வரலாற்று ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1903 |பி.ஜாரென்சன்‌ |நார்வே |கதாசிரியர்‌, கவிஞர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1904 |ஃபிரெடரிக்‌ மிஸ்ட்ரால்‌<br>ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஸ்பெயின்‌ |கவிஞர்‌<br><br>நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1905 |ஹெச்‌.சைன்கிரிக்ஸ்‌ |போலந்து |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1906 |ஜியோசு கார்டுசி |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1907 |ருட்யார்டு கிப்ளிங்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1908 |ருடால்‌ஃப்‌ ஐகென்‌ |ஜெர்மனி |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1909 |செல்மா லாகெர்லாஃப்‌ |ஸ்வீடன்‌ |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1910 |பால்‌ வான்‌ ஹேசி |ஜெர்மனி |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1911 |மவுரிஸ்‌ மீட்டர்லிங்‌ |பெல்ஜியம்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1912 |ஜெர்ஹார்ட்‌ ஹெப்டுமான்‌ |ஜெர்மனி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1913 |சர்‌. ஆர். தாகூர் |இந்தியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1914 |– | |-{{ts|vtt}} |1915 |ரோமெய்ன்‌ ரோலான்ட்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1916 |வி.வான்‌ ஹெயீடென்ஸ்டேம்‌ |ஸ்வீடன்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1917 |கார்ல்‌ ஜெல்லரப்‌<br> ஹெச்‌.போன்டோ பிடான்‌ |டென்மார்க்‌<br>டென்மார்க்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ----> |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1918 |–<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> i1z0i2tvvppzuqxbyuqj8a0wa5xozzf 1944457 1944453 2026-06-10T06:25:37Z TI Buhari 4634 1944457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 303}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1981 |width=30% {{ts|vtt}}|அனைத்துலக அகதிகள்‌ கழக அலுவலகம்‌ |width=10% {{ts|vtt}}| |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1982 |ஆல்வா மிர்டால்‌<br>அல்‌ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்‌ |ஸ்வீடன்‌<br>மெக்சிகோ | |-{{ts|vtt}} |1983 |லெக்‌ வாலேசா |போலந்து | |-{{ts|vtt}} |1984 |டெஸ்மன்ட்‌ டுட்டு |தெ.ஆப்பிக்கா | |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இலக்கியம்‌</center> |-{{ts|vtt}} |1901 |சுல்லி புர்தோம்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1902 |தியோடர்‌ மாம்சென்‌ |ஜெர்மனி |வரலாற்று ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1903 |பி.ஜாரென்சன்‌ |நார்வே |கதாசிரியர்‌, கவிஞர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1904 |ஃபிரெடரிக்‌ மிஸ்ட்ரால்‌<br>ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஸ்பெயின்‌ |கவிஞர்‌<br><br>நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1905 |ஹெச்‌.சைன்கிரிக்ஸ்‌ |போலந்து |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1906 |ஜியோசு கார்டுசி |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1907 |ருட்யார்டு கிப்ளிங்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1908 |ருடால்‌ஃப்‌ ஐகென்‌ |ஜெர்மனி |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1909 |செல்மா லாகெர்லாஃப்‌ |ஸ்வீடன்‌ |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1910 |பால்‌ வான்‌ ஹேசி |ஜெர்மனி |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1911 |மவுரிஸ்‌ மீட்டர்லிங்‌ |பெல்ஜியம்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1912 |ஜெர்ஹார்ட்‌ ஹெப்டுமான்‌ |ஜெர்மனி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1913 |சர்‌. ஆர். தாகூர் |இந்தியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1914 |– | |-{{ts|vtt}} |1915 |ரோமெய்ன்‌ ரோலான்ட்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1916 |வி.வான்‌ ஹெயீடென்ஸ்டேம்‌ |ஸ்வீடன்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1917 |கார்ல்‌ ஜெல்லரப்‌<br> ஹெச்‌.போன்டோ பிடான்‌ |டென்மார்க்‌<br>டென்மார்க்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ----> |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1918 || || || |–<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> bgm0qzb3tr8w0uc585auo5960sttlra 1944459 1944457 2026-06-10T06:29:14Z TI Buhari 4634 1944459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 303}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1981 |width=30% {{ts|vtt}}|அனைத்துலக அகதிகள்‌ கழக அலுவலகம்‌ |width=10% {{ts|vtt}}| |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1982 |ஆல்வா மிர்டால்‌<br>அல்‌ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்‌ |ஸ்வீடன்‌<br>மெக்சிகோ | |-{{ts|vtt}} |1983 |லெக்‌ வாலேசா |போலந்து | |-{{ts|vtt}} |1984 |டெஸ்மன்ட்‌ டுட்டு |தெ.ஆப்பிக்கா | |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இலக்கியம்‌</center> |-{{ts|vtt}} |1901 |சுல்லி புர்தோம்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1902 |தியோடர்‌ மாம்சென்‌ |ஜெர்மனி |வரலாற்று ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1903 |பி.ஜாரென்சன்‌ |நார்வே |கதாசிரியர்‌, கவிஞர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1904 |ஃபிரெடரிக்‌ மிஸ்ட்ரால்‌<br>ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஸ்பெயின்‌ |கவிஞர்‌<br><br>நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1905 |ஹெச்‌.சைன்கிரிக்ஸ்‌ |போலந்து |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1906 |ஜியோசு கார்டுசி |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1907 |ருட்யார்டு கிப்ளிங்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1908 |ருடால்‌ஃப்‌ ஐகென்‌ |ஜெர்மனி |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1909 |செல்மா லாகெர்லாஃப்‌ |ஸ்வீடன்‌ |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1910 |பால்‌ வான்‌ ஹேசி |ஜெர்மனி |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1911 |மவுரிஸ்‌ மீட்டர்லிங்‌ |பெல்ஜியம்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1912 |ஜெர்ஹார்ட்‌ ஹெப்டுமான்‌ |ஜெர்மனி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1913 |சர்‌. ஆர். தாகூர் |இந்தியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1914 |– | |-{{ts|vtt}} |1915 |ரோமெய்ன்‌ ரோலான்ட்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1916 |வி.வான்‌ ஹெயீடென்ஸ்டேம்‌ |ஸ்வீடன்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1917 |கார்ல்‌ ஜெல்லரப்‌<br> ஹெச்‌.போன்டோ பிடான்‌ |டென்மார்க்‌<br>டென்மார்க்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ----> |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1918 | | | |– |<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> ebxg549qgya4avambm1heedu4kxyae1 1944460 1944459 2026-06-10T06:30:19Z TI Buhari 4634 1944460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 303}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1981 |width=30% {{ts|vtt}}|அனைத்துலக அகதிகள்‌ கழக அலுவலகம்‌ |width=10% {{ts|vtt}}| |width=50% {{ts|vtt}}| |-{{ts|vtt}} |1982 |ஆல்வா மிர்டால்‌<br>அல்‌ஃபோன்சா கார்சியா ரோபெல்ஸ்‌ |ஸ்வீடன்‌<br>மெக்சிகோ | |-{{ts|vtt}} |1983 |லெக்‌ வாலேசா |போலந்து | |-{{ts|vtt}} |1984 |டெஸ்மன்ட்‌ டுட்டு |தெ.ஆப்பிக்கா | |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இலக்கியம்‌</center> |-{{ts|vtt}} |1901 |சுல்லி புர்தோம்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1902 |தியோடர்‌ மாம்சென்‌ |ஜெர்மனி |வரலாற்று ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1903 |பி.ஜாரென்சன்‌ |நார்வே |கதாசிரியர்‌, கவிஞர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1904 |ஃபிரெடரிக்‌ மிஸ்ட்ரால்‌<br>ஜெ. எச்சிகாரேஇ எலில்குரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஸ்பெயின்‌ |கவிஞர்‌<br><br>நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1905 |ஹெச்‌.சைன்கிரிக்ஸ்‌ |போலந்து |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1906 |ஜியோசு கார்டுசி |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1907 |ருட்யார்டு கிப்ளிங்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1908 |ருடால்‌ஃப்‌ ஐகென்‌ |ஜெர்மனி |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1909 |செல்மா லாகெர்லாஃப்‌ |ஸ்வீடன்‌ |கதாசிரியர்‌ |-{{ts|vtt}} |1910 |பால்‌ வான்‌ ஹேசி |ஜெர்மனி |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1911 |மவுரிஸ்‌ மீட்டர்லிங்‌ |பெல்ஜியம்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1912 |ஜெர்ஹார்ட்‌ ஹெப்டுமான்‌ |ஜெர்மனி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1913 |சர்‌. ஆர். தாகூர் |இந்தியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1914 |– | |-{{ts|vtt}} |1915 |ரோமெய்ன்‌ ரோலான்ட்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1916 |வி.வான்‌ ஹெயீடென்ஸ்டேம்‌ |ஸ்வீடன்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1917 |கார்ல்‌ ஜெல்லரப்‌<br> ஹெச்‌.போன்டோ பிடான்‌ |டென்மார்க்‌<br>டென்மார்க்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/Nobel_Prize_in_Literature ----> |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1918 | | | |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> mww6uu40ej5xqes0ncruglc3id7ep6k பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/326 250 646226 1944269 2026-06-09T23:08:55Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|304 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1919 |width=30% {{ts|vtt}}|கார்ல்‌ ஸ்பிட்லெர்‌ |width=10% {{ts|vtt}}|சுவிட்சர்லாந்து |width=50% {{ts|vtt}}|கவிஞர்‌, நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1920 |நட்‌ ஹேம்சன்‌ |நார்வே <!--- ஃபிரான்ஸ்‌ என்பது தவறு. ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Literature ----> |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1921 |அனட்டோல்‌ ஃபிரான்ஸ்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1922 |ஜெ.பெனாவென்டி கி மார்டினெஸ்‌ |ஸ்பெயின்‌ |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1923 |வில்லியம்‌ பட்லர்‌ ஈட்ஸ்‌ |அயர்லாந்து |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1924 |விளாடிசா ரேமாண்ட் |போலந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1925 |ஜார்ஜ் பெர்னாட்சா |அயர்லாந்து |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1926 |கிரேசியா டெலிடா |இத்தாலி |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1927 |ஹென்றி பெர்க்சன்‌ |ஃபிரான்ஸ்‌ |தத்துவாசிரியர்‌ |-{{ts|vtt}} |1928 |சைகிரிட்‌ அன்செட்‌ |ஜெர்மனி |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1929 |தாமஸ்‌ மான்‌ |ஜெர்மனி |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1930 |சின்கிலேர்‌ லூயிஸ்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1931 |எரிக்‌ ஆக்சல்‌ கார்ல்‌ஃபெல்ட்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1932 |ஜான்‌ கிளாஸ்‌ ஒர்த்தி |இங்கிலாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1933 |இவான்‌ புனின்‌ |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1934 |லாகி பிரான்டெலோ |இத்தாலி |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1935 |– |– |– |-{{ts|vtt}} |1936 |யூஜின்‌ ஓ நெயில்‌ |அமெரிக்கா |நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1937 |ரோஜர்‌ மார்ட்டின்‌ டுகார்டு |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1938 |பேர்ல்‌ பெக்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1939 |பிரான்ஸ்‌ எமில்‌ கிளன்பா |ஃபின்லாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1943 |– |– |– |-{{ts|vtt}} |1944 |ஜெ.வி.ஜென்சென்‌ |டென்மார்க் |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1945 |கேபிரியேலா மிஸ்ட்ரால்‌ |சிலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1946 |ஹெர்மான்‌ ஹெஸ்ஸே |சுவிட்சர்லாந்து |நாவலாசிரியர்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 8hpf6v5ck697bq25x0yc3e8hmijj1r6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/327 250 646227 1944270 2026-06-09T23:22:21Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 305}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1947 |width=30% {{ts|vtt}}|அன்ட்ரே கெய்ட்‌ |width=10% {{ts|vtt}}|ஃபிரான்ஸ்‌ |width=50% {{ts|vtt}}|நாவலாசிரியர்‌, கட்டுரையாளர்‌ |-{{ts|vtt}} |1948 |டி.எஸ்‌.எலியட்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, விமர்சகர்‌ |-{{ts|vtt}} |1949 |வில்லியம்‌ ஃபால்க்னர்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1950 |பெட்ரான்டு ரசல்‌ |இங்கிலாந்து |தத்துவ ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1951 |பார்‌ வாகெர்க்விஸ்ட்‌ |ஸ்வீடன்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1952 |ஃபிரான்கோயிஸ்‌ மவுரியாக்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1953 |சர்‌ வின்ஸ்டன்‌ சர்ச்சில்‌ |இங்கிலாந்து |வரலாற்று ஆசிரியர்‌, பேச்சாளர்‌ |-{{ts|vtt}} |1954 |எர்‌னஸ்ட்‌ ஹெம்மிங்வே |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1955 |ஹால்டார்‌ லாக்ஸ்நெஸ்‌ |ஐஸ்லாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1956 |ஜிவான்‌ ரோமன்‌ ஜெம்மிநெஸ்‌ |ஸ்பெயின்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1957 |ஆல்பர்ட்‌ கமெஸ்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1958 |போரிஸ்‌ பாஸ்டெர்நக்‌ (மறுத்து விட்டார்‌) |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌, கவிஞர்‌ |-{{ts|vtt}} |1959 |சால்வடோர்‌ குவாசிமோடோ |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1960 |தூய–ஜான்பேர்ஸ்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1961 |இவா ஆன்ட்ரிக்‌ |யூகோஸ்லேவியா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1962 |ஜான் ஸ்டெயின்பெக்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1963 |ஜியார்ஸ்‌ செஃபரிஸ்‌ |கிரீஸ் |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1964 |ஜீன்‌–பால்‌ சார்ட்டர்‌ (மறுத்து விட்டார்‌) |ஃபிரான்ஸ்‌ |நாடக ஆசிரியர்‌, தத்துவ ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1965 |மிகெய்ல்‌ ஷோலோகோவ்‌ |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1966 |சாமுவேல்‌ யூசெஃப்‌ ஆக்னான்‌<br>நெல்லி சாகஸ்‌ |இஸ்ரேல்‌<br><br>சுவீடன்‌ |நாவலாசிரியர்‌<br><br>கவிஞர்‌ |-{{ts|vtt}} |1967 |மிகுவல்‌ ஏஞ்சல்‌ ஆண்டுரியாஸ்‌ |கவுத்மாலா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1968 |கவபாட்டாயா சுன்னாரி |ஜப்பான்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1969 |சாமுவேல்‌ பெக்கட்‌ |அயர்லாந்து |நாவலாசிரியர்‌,நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1970 |அலெக்சாண்டர்‌ சோல்செனிட்சின் <!---- See: https://ta.wikipedia.org/wiki/இலக்கியத்துக்கான_நோபல்_பரிசு_பெற்றவர்களின்_பட்டியல்----> |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1971 |பாப்லோ நெருடா |சிலி |கவிஞர்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> hgnrjbdbys5n0x27sfiopg2u6qzoyuc 1944383 1944270 2026-06-10T04:57:51Z TI Buhari 4634 1944383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 305}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1947 |width=30% {{ts|vtt}}|அன்ட்ரே கெய்ட்‌ |width=10% {{ts|vtt}}|ஃபிரான்ஸ்‌ |width=50% {{ts|vtt}}|நாவலாசிரியர்‌, கட்டுரையாளர்‌ |-{{ts|vtt}} |1948 |டி.எஸ்‌.எலியட்‌ |இங்கிலாந்து |கவிஞர்‌, விமர்சகர்‌ |-{{ts|vtt}} |1949 |வில்லியம்‌ ஃபால்க்னர்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1950 |பெட்ரான்டு ரசல்‌ |இங்கிலாந்து |தத்துவ ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1951 |பார்‌ வாகெர்க்விஸ்ட்‌ |ஸ்வீடன்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1952 |ஃபிரான்கோயிஸ்‌ மவுரியாக்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌, நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1953 |சர்‌ வின்ஸ்டன்‌ சர்ச்சில்‌ |இங்கிலாந்து |வரலாற்று ஆசிரியர்‌, பேச்சாளர்‌ |-{{ts|vtt}} |1954 |எர்‌னஸ்ட்‌ ஹெம்மிங்வே |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1955 |ஹால்டார்‌ லாக்ஸ்நெஸ்‌ |ஐஸ்லாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1956 |ஜிவான்‌ ரோமன்‌ ஜெம்மிநெஸ்‌ |ஸ்பெயின்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1957 |ஆல்பர்ட்‌ கமெஸ்‌ |ஃபிரான்ஸ்‌ |நாவலாசிரியர்‌, நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1958 |போரிஸ்‌ பாஸ்டெர்நக்‌ (மறுத்து விட்டார்‌) |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌, கவிஞர்‌ |-{{ts|vtt}} |1959 |சால்வடோர்‌ குவாசிமோடோ |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1960 |தூய–ஜான்பேர்ஸ்‌ |ஃபிரான்ஸ்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1961 |இவா ஆன்ட்ரிக்‌ |யூகோஸ்லேவியா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1962 |ஜான் ஸ்டெயின்பெக்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1963 |ஜியார்ஸ்‌ செஃபரிஸ்‌ |கிரீஸ் |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1964 |ஜீன்‌–பால்‌ சார்ட்டர்‌ (மறுத்து விட்டார்‌) |ஃபிரான்ஸ்‌ |நாடக ஆசிரியர்‌, தத்துவ ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1965 |மிகெய்ல்‌ ஷோலோகோவ்‌ |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1966 |சாமுவேல்‌ யூசெஃப்‌ ஆக்னான்‌<br>நெல்லி சாகஸ்‌ |இஸ்ரேல்‌<br><br>சுவீடன்‌ |நாவலாசிரியர்‌<br><br>கவிஞர்‌ |-{{ts|vtt}} |1967 |மிகுவல்‌ ஏஞ்சல்‌ ஆண்டுரியாஸ்‌ |கவுத்மாலா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1968 |கவபாட்டாயா சுன்னாரி |ஜப்பான்‌ |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1969 |சாமுவேல்‌ பெக்கட்‌ |அயர்லாந்து |நாவலாசிரியர்‌,நாடக ஆசிரியர்‌ |-{{ts|vtt}} |1970 |அலெக்சாண்டர்‌ சோல்செனிட்சின் <!---- See: https://ta.wikipedia.org/wiki/இலக்கியத்துக்கான_நோபல்_பரிசு_பெற்றவர்களின்_பட்டியல்----> |சோவியத்‌ ரஷ்யா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1971 |பாப்லோ நெருடா |சிலி |கவிஞர்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}} <br>{{rh|அ. க. 14–20}}</noinclude> 46ly9pqwzwom90hs6ag0xruqvroejou வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது 0 646228 1944290 2026-06-10T00:34:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியாது |previous = [[../இலியனார்டோ டா வின்சி/]] | next = [[../இலியூ சாவ்‌–சி/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944290 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியாது |previous = [[../இலியனார்டோ டா வின்சி/]] | next = [[../இலியூ சாவ்‌–சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="419" to="421" fromsection="இலியாது" tosection="இலியாது" /> tbzeli2c7jth5bdheu6uvxvr8r0vmbz வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி 0 646229 1944293 2026-06-10T00:36:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியூ சாவ்‌–சி |previous = [[../இலியாது/]] | next = [[../இலியோகரசு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944293 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியூ சாவ்‌–சி |previous = [[../இலியாது/]] | next = [[../இலியோகரசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="421" to="421" fromsection="இலியூ சாவ்‌–சி" tosection="இலியூ சாவ்‌–சி" /> f5faljt1ife9568xzegdhhrra54791g வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு 0 646230 1944295 2026-06-10T00:38:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியோகரசு |previous = [[../இலியூ சாவ்‌–சி/]] | next = [[../இலியோனிதாசு/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944295 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியோகரசு |previous = [[../இலியூ சாவ்‌–சி/]] | next = [[../இலியோனிதாசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="421" to="422" fromsection="இலியோகரசு" tosection="இலியோகரசு" /> 57dl15z799cokoyl9bxh9naq1hbdgef வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு 0 646231 1944297 2026-06-10T00:41:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியோனிதாசு |previous = [[../இலியோகரசு/]] | next = [[../இலிவர்ப்பூல்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944297 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலியோனிதாசு |previous = [[../இலியோகரசு/]] | next = [[../இலிவர்ப்பூல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="422" to="422" fromsection="இலியோனிதாசு" tosection="இலியோனிதாசு" /> a6ks6tk6uozzed4fnqugoyjk08bsaxh வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல் 0 646232 1944300 2026-06-10T00:43:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவர்ப்பூல் |previous = [[../இலியோனிதாசு/]] | next = [[../இலிவி/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944300 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவர்ப்பூல் |previous = [[../இலியோனிதாசு/]] | next = [[../இலிவி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="422" to="423" fromsection="இலிவர்ப்பூல்" tosection="இலிவர்ப்பூல்" /> bdj7zte2clp6q42izfcppm054rle7s3 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி 0 646233 1944301 2026-06-10T00:45:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவி |previous = [[../இலிவர்ப்பூல்/]] | next = [[../இலிவிங்சுடன், தாவீது/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944301 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவி |previous = [[../இலிவர்ப்பூல்/]] | next = [[../இலிவிங்சுடன், தாவீது/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="423" to="424" fromsection="இலிவி" tosection="இலிவி" /> ts0m1d26uls0if649zjyuwv5fxhb233 வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது 0 646234 1944303 2026-06-10T00:47:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவிங்சுடன், தாவீது |previous = [[../இலிவி/]] | next = ../இலிவோவு, சார்சி யுவசினிவிச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944303 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவிங்சுடன், தாவீது |previous = [[../இலிவி/]] | next = [[../இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="424" to="425" fromsection="இலிவிங்சுடன், தாவீது" tosection="இலிவிங்சுடன், தாவீது" /> irngn86zlfbpkiskyphge2ahtq6ypoi வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு 0 646235 1944305 2026-06-10T00:51:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு |previous = [[../இலிவிங்சுடன், தாவீது/]] | next = ../இலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944305 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு |previous = [[../இலிவிங்சுடன், தாவீது/]] | next = [[../இலின்பியாவோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="425" to="425" fromsection="இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு" tosection="இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு" /> aczzgfr2noiga240cxr24uy6mhm9zy0 வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ 0 646236 1944306 2026-06-10T00:54:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலின்பியாவோ |previous = [[../இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு/]] | next = [[../இலினாய்/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944306 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலின்பியாவோ |previous = [[../இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு/]] | next = [[../இலினாய்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="425" to="426" fromsection="இலின்பியாவோ" tosection="இலின்பியாவோ" /> 8sfb8yivoam58p7fyifvfwjfwhr9lyp வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் 0 646237 1944307 2026-06-10T00:57:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலினாய் |previous = [[../இலின்பியாவோ/]] | next = [[../இலினாய் உள மொழியியல் திறன் சோதனை/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944307 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலினாய் |previous = [[../இலின்பியாவோ/]] | next = [[../இலினாய் உள மொழியியல் திறன் சோதனை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="426" to="427" fromsection="இலினாய்" tosection="இலினாய்" /> 2560hs87nglwleh1lq920yt8345t07p வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை 0 646238 1944308 2026-06-10T00:59:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலினாய் உள மொழியியல் திறன் சோதனை |previous = [[../இலினாய்/]] | next = ../இலீகாக்கு, இச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944308 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலினாய் உள மொழியியல் திறன் சோதனை |previous = [[../இலினாய்/]] | next = [[../இலீகாக்கு, இசுடீபன் பட்லர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="427" to="428" fromsection="இலினாய் உள மொழியியல் திறன் சோதனை" tosection="இலினாய் உள மொழியியல் திறன் சோதனை" /> gk25a2s22brib4t8r5yoe5tk3cgnr4y வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர் 0 646239 1944309 2026-06-10T01:02:29Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீகாக்கு, இசுடீபன் பட்லர் |previous = [[../இலினாய் உள மொழியியல் திறன் சோதனை/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944309 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீகாக்கு, இசுடீபன் பட்லர் |previous = [[../இலினாய் உள மொழியியல் திறன் சோதனை/]] | next = [[../இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="428" to="429" fromsection="இலீகாக்கு, இசுடீபன் பட்லர்" tosection="இலீகாக்கு, இசுடீபன் பட்லர்" /> 7hgmfv3fv5bz61chdbe29wtq2gqjx59 வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு 0 646240 1944317 2026-06-10T01:27:48Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு |previous = [[../இலீகாக்கு, இசுடீபன் பட்லர்/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944317 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு |previous = [[../இலீகாக்கு, இசுடீபன் பட்லர்/]] | next = [[../இலீப்சிக்குப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="429" to="430" fromsection="இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு" tosection="இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு" /> jx8pc3rdf3fkb2cu29hapypqhycyk4d வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர் 0 646241 1944319 2026-06-10T01:30:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீப்சிக்குப் போர் |previous = [[../இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு/]] | next = ../இலீ, ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944319 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீப்சிக்குப் போர் |previous = [[../இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு/]] | next = [[../இலீ, போர்ட்டர் இரேமாண்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="430" to="430" fromsection="இலீப்சிக்குப் போர்" tosection="இலீப்சிக்குப் போர்" /> tof65hasbrso65hzm789bezdkg3xcvq வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு 0 646242 1944320 2026-06-10T01:33:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீ, போர்ட்டர் இரேமாண்டு |previous = [[../இலீப்சிக்குப் போர்/]] | next = [[../இலீலாவதி/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944320 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீ, போர்ட்டர் இரேமாண்டு |previous = [[../இலீப்சிக்குப் போர்/]] | next = [[../இலீலாவதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="430" to="430" fromsection="இலீ, போர்ட்டர் இரேமாண்டு" tosection="இலீ, போர்ட்டர் இரேமாண்டு" /> 5jutpsdfvmtetdwanmimuyqvclsgdnj வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி 0 646243 1944322 2026-06-10T01:36:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீலாவதி |previous = [[../இலீ, போர்ட்டர் இரேமாண்டு/]] | next = [[../இலூசான்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944322 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலீலாவதி |previous = [[../இலீ, போர்ட்டர் இரேமாண்டு/]] | next = [[../இலூசான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="430" to="430" fromsection="இலீலாவதி" tosection="இலீலாவதி" /> ghuggakrrb84fwfrnp9zibbue7ovm52 வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான் 0 646244 1944324 2026-06-10T01:38:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூசான் |previous = [[../இலீலாவதி/]] | next = [[../இலூசியானா/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944324 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூசான் |previous = [[../இலீலாவதி/]] | next = [[../இலூசியானா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="430" to="431" fromsection="இலூசான்" tosection="இலூசான்" /> hgbngh8428rfgancpc4w62d8syddu97 வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா 0 646245 1944327 2026-06-10T01:41:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூசியானா |previous = [[../இலூசான்/]] | next = [[../இலூரி ஆரி இலாரன்சு/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944327 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூசியானா |previous = [[../இலூசான்/]] | next = [[../இலூரி ஆரி இலாரன்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="431" to="432" fromsection="இலூசியானா" tosection="இலூசியானா" /> nruvwcibx17s91f5z10tce0roy8swgd வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு 0 646246 1944329 2026-06-10T01:44:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூரி ஆரி இலாரன்சு |previous = [[../இலூசியானா/]] | next = [[../இலூவிசு, ஆசுகார்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944329 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூரி ஆரி இலாரன்சு |previous = [[../இலூசியானா/]] | next = [[../இலூவிசு, ஆசுகார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="432" to="433" fromsection="இலூரி ஆரி இலாரன்சு" tosection="இலூரி ஆரி இலாரன்சு" /> h59ygq9xc330vd5oo6mlhip1zz8a8nl வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார் 0 646247 1944330 2026-06-10T01:46:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூவிசு, ஆசுகார் |previous = [[../இலூரி ஆரி இலாரன்சு/]] | next = ../இலெசப்சு, பெர்டினா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944330 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலூவிசு, ஆசுகார் |previous = [[../இலூரி ஆரி இலாரன்சு/]] | next = [[../இலெசப்சு, பெர்டினாண்டு டி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="433" to="433" fromsection="இலூவிசு, ஆசுகார்" tosection="இலூவிசு, ஆசுகார்" /> myqr6xp7eu04iu5btrf6li6kny1jw36 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி 0 646248 1944331 2026-06-10T01:49:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசப்சு, பெர்டினாண்டு டி |previous = [[../இலூவிசு, ஆசுகார்/]] | next = [[../இலெசோத்தோ/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944331 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசப்சு, பெர்டினாண்டு டி |previous = [[../இலூவிசு, ஆசுகார்/]] | next = [[../இலெசோத்தோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="433" to="434" fromsection="இலெசப்சு, பெர்டினாண்டு டி" tosection="இலெசப்சு, பெர்டினாண்டு டி" /> r7fjkfc1offg75eh15tcjf7cz51362f வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ 0 646249 1944347 2026-06-10T03:31:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசோத்தோ |previous = [[../இலெசப்சு, பெர்டினாண்டு டி/]] | next = ../இலெசோத்தோ நாட்டில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944347 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசோத்தோ |previous = [[../இலெசப்சு, பெர்டினாண்டு டி/]] | next = [[../இலெசோத்தோ நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="434" to="436" fromsection="இலெசோத்தோ" tosection="இலெசோத்தோ" /> 98bdpsykw6ksupxw3vd0z4ejildragb வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி 0 646250 1944348 2026-06-10T03:33:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசோத்தோ நாட்டில் கல்வி |previous = [[../இலெசோத்தோ/]] | next = ../இலெட்சுவொர்த்து வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944348 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெசோத்தோ நாட்டில் கல்வி |previous = [[../இலெசோத்தோ/]] | next = [[../இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="436" to="437" fromsection="இலெசோத்தோ நாட்டில் கல்வி" tosection="இலெசோத்தோ நாட்டில் கல்வி" /> ryafj7vr102x3zf25yad2b3c9xxuhc9 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர் 0 646251 1944351 2026-06-10T03:36:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர் |previous = [[../இலெசோத்தோ நாட்டில் கல்வி/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944351 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர் |previous = [[../இலெசோத்தோ நாட்டில் கல்வி/]] | next = [[../இலெப்டிசு மக்னா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="437" to="438" fromsection="இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்" tosection="இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்" /> iq1rlj6etrdpeoqvkqlwvog1d6lbrkq வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா 0 646252 1944353 2026-06-10T03:39:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெப்டிசு மக்னா |previous = [[../இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்/]] | next = ../இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944353 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெப்டிசு மக்னா |previous = [[../இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்/]] | next = [[../இலெபனான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="438" to="438" fromsection="இலெப்டிசு மக்னா" tosection="இலெப்டிசு மக்னா" /> 9s5xt0dkvxlt9a60p0gsazjfky9s799 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் 0 646253 1944359 2026-06-10T03:47:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெபனான் |previous = [[../இலெப்டிசு மக்னா/]] | next = [[../இலெபனான் நாட்டில் கல்வி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944359 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெபனான் |previous = [[../இலெப்டிசு மக்னா/]] | next = [[../இலெபனான் நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="438" to="442" fromsection="இலெபனான்" tosection="இலெபனான்" /> 7ehvyyyedk4l7kenyhljpxi8ii8k1vq வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி 0 646254 1944364 2026-06-10T03:51:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெபனான் நாட்டில் கல்வி |previous = [[../இலெபனான்/]] | next = [[../இலெமார்க்கு/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944364 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெபனான் நாட்டில் கல்வி |previous = [[../இலெபனான்/]] | next = [[../இலெமார்க்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="442" to="444" fromsection="இலெபனான் நாட்டில் கல்வி" tosection="இலெபனான் நாட்டில் கல்வி" /> 32mfric53si6ym9n0oezun81c95tbc0 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு 0 646255 1944369 2026-06-10T03:54:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெமார்க்கு |previous = [[../இலெபனான் நாட்டில் கல்வி/]] | next = ../இலெய்பாக்கு மாநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944369 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெமார்க்கு |previous = [[../இலெபனான் நாட்டில் கல்வி/]] | next = [[../இலெய்பாக்கு மாநாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="444" to="444" fromsection="இலெமார்க்கு" tosection="இலெமார்க்கு" /> mabqtkn9d9m5bch6jh2x43bxomd2u3j 1944370 1944369 2026-06-10T03:55:17Z Booradleyp1 1964 1944370 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெமார்க்கு |previous = [[../இலெபனான் நாட்டில் கல்வி/]] | next = [[../இலெய்பாக்கு மாநாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="444" to="445" fromsection="இலெமார்க்கு" tosection="இலெமார்க்கு" /> noxjtc6940uh96gwt7k8zb1a0lz2d84 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு 0 646256 1944371 2026-06-10T03:57:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெய்பாக்கு மாநாடு |previous = [[../இலெமார்க்கு/]] | next = ../இலெயிட்டர் அனைத்துலகச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944371 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெய்பாக்கு மாநாடு |previous = [[../இலெமார்க்கு/]] | next = [[../இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="445" to="445" fromsection="இலெய்பாக்கு மாநாடு" tosection="இலெய்பாக்கு மாநாடு" /> 56uws64khi8mqs3kvm04gcky60d78d2 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை 0 646257 1944372 2026-06-10T04:00:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை |previous = [[../இலெய்பாக்கு மாநாடு/]] | next = ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944372 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை |previous = [[../இலெய்பாக்கு மாநாடு/]] | next = [[../இலெவலாசியன் நுட்பம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="445" to="446" fromsection="இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை" tosection="இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை" /> e3gucfzkkwxp15vvol8h9vnborjta6q வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம் 0 646258 1944373 2026-06-10T04:02:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெவலாசியன் நுட்பம் |previous = [[../இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944373 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெவலாசியன் நுட்பம் |previous = [[../இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை/]] | next = [[../இலெவின்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="446" to="446" fromsection="இலெவலாசியன் நுட்பம்" tosection="இலெவலாசியன் நுட்பம்" /> 8f9dhwr9hbtgtq95t5kbd77bgvjtrpi வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின் 0 646259 1944374 2026-06-10T04:06:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெவின் |previous = [[../இலெவலாசியன் நுட்பம்/]] | next = [[../இலென்பர்கு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944374 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெவின் |previous = [[../இலெவலாசியன் நுட்பம்/]] | next = [[../இலென்பர்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="446" to="446" fromsection="இலெவலாசியன் நுட்பம்" tosection="இலெவலாசியன் நுட்பம்" /> cnkyn5wjkf106xnnogte60k5j7mmx5e 1944375 1944374 2026-06-10T04:07:10Z Booradleyp1 1964 1944375 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெவின் |previous = [[../இலெவலாசியன் நுட்பம்/]] | next = [[../இலென்பர்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="446" to="446" fromsection="இலெவின்" tosection="இலெவின்" /> 2q9b04y4t5ghv31saou6katg4l31e7k வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு 0 646260 1944376 2026-06-10T04:09:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலென்பர்கு |previous = [[../இலெவின்/]] | next = [[../இலெனின்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944376 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலென்பர்கு |previous = [[../இலெவின்/]] | next = [[../இலெனின்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="446" to="446" fromsection="இலென்பர்கு" tosection="இலென்பர்கு" /> pqlyr0svxbu7tfeokifvidovc9egcw8 வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் 0 646261 1944377 2026-06-10T04:12:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெனின் |previous = [[../இலென்பர்கு/]] | next = [[../இலெனின் கிராடு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944377 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெனின் |previous = [[../இலென்பர்கு/]] | next = [[../இலெனின் கிராடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="447" to="450" fromsection="இலெனின்" tosection="இலெனின்" /> s152ze39wmvxodyuit0gjetc6qj9d9c வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு 0 646262 1944378 2026-06-10T04:14:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெனின் கிராடு |previous = [[../இலெனின்/]] | next = [[../இலே/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944378 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலெனின் கிராடு |previous = [[../இலெனின்/]] | next = [[../இலே/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="450" to="452" fromsection="இலெனின் கிராடு" tosection="இலெனின் கிராடு" /> 155np42s56qs3qqhkqh9powmvp4xbqs பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/328 250 646263 1944379 2026-06-10T04:44:20Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|306 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|-{{ts|vtt}} |width=10%|1972 |width=30%|ஹெய்ன்ரிச்‌ போல்‌ |width=10%|ஜெர்மனி |width=50%|நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1973 |பாட்ரிக்‌ ஒயிட்‌ |ஆஸ்திரேலியா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1974 |ஐவின்ட்‌ ஜான்சன்‌<br>ஹாரி மார்ட்டின்சன்‌ |சுவீடன்‌<br>சுவீடன்‌ |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌, கவிஞர்‌ |-{{ts|vtt}} |1975 |யூஜினோ மோன்டேல்‌ |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1976 |சால்‌ பெல்லோ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1977 |வின்சென்ட்‌ அலெக்சாண்டர்‌ |ஸ்பெயின்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1978 |ஐசக்‌ பஷ்விஸ்‌ சிங்கர்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1979 |ஒடிசஸ்‌ எலிடிஸ்‌ |கிரீஸ்லாந்து |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1980 |செஸ்டவ்மிட்டோஷ்‌ |அமெரிக்கா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1981 |எலியாஸ்‌ டுகன்டி |பெல்ஜியம்‌ |நாவலாசிரியர்‌, கட்டுரையாளர்‌ |-{{ts|vtt}} |1982 |கேபிரியேல்‌ கார்சியா மார்குயிஸ்‌ |கொரியா |நாவலாசிரியர்‌, இதழாளர்‌, சமூக விமர்சகர்‌ |-{{ts|vtt}} |1983 |வில்லியம்‌ ஹோல்டிங்‌ |இங்கிலாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1984 |ஜெர்ஸ்லோவன்‌ செய்‌ஃபெர்ட்‌ |செக்கோஸ் லோவாக்கியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இயற்பியல்‌</center> |-{{ts|vtt}} |1901 |வில்ஹெம்‌ ரான்ட்ஜன்‌ |ஜெர்மனி |எக்ஸ்‌–கதிர்களின்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1902 |ஹென்டிரி அண்டுன்‌<br>லாரென்ஸ்‌<br>விடுபியட்டர்‌ சீமன்‌ |நெதர்லாந்து<br>நெதர்லாந்து<br>நெதர்லாந்து |அணுக் கதிர் வீச்சு நிகழ்வில்‌ காந்தத்தின்‌ பாதிப்பு |-{{ts|vtt}} |1903 |ஆன்டொனி ஹென்றி<br>பெக்யூரெல்‌ பியரி கியூரி<br> மேரி கியூரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஃபிரான்ஸ்‌<br><br>ஃபிரான்ஸ்‌ (போலந்து) |இயற்கைக்‌ கதிரியக்கம்‌, ரேடியம்‌, பொலோனியம்‌ ஆகிய கதிரியக்கத்‌ தனிமங்கள் கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1904 |ராலே |இங்கிலாந்து |ஆர்கான்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1905 |பிலிப்‌ லெனார்டு |ஜெர்மனி |எதிர் மின் முனைக்‌ கதிர்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1906 |சர்‌ .ஜே.ஜே.தாம்சன்‌ |இங்கிலாந்து |வளிமங்கள்‌ வழியே மின்னோட்டம்‌ கடத்தப் படுதல்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> erks54yzon3z9a9h2ybkmeuqkdw4du3 1944380 1944379 2026-06-10T04:47:40Z TI Buhari 4634 1944380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|306 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1972 |width=30% {{ts|vtt}}|ஹெய்ன்ரிச்‌ போல்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |width=50% {{ts|vtt}}|நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1973 |பாட்ரிக்‌ ஒயிட்‌ |ஆஸ்திரேலியா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1974 |ஐவின்ட்‌ ஜான்சன்‌<br>ஹாரி மார்ட்டின்சன்‌ |சுவீடன்‌<br>சுவீடன்‌ |நாவலாசிரியர்‌<br>நாவலாசிரியர்‌, கவிஞர்‌ |-{{ts|vtt}} |1975 |யூஜினோ மோன்டேல்‌ |இத்தாலி |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1976 |சால்‌ பெல்லோ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1977 |வின்சென்ட்‌ அலெக்சாண்டர்‌ |ஸ்பெயின்‌ |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1978 |ஐசக்‌ பஷ்விஸ்‌ சிங்கர்‌ |அமெரிக்கா |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1979 |ஒடிசஸ்‌ எலிடிஸ்‌ |கிரீஸ்லாந்து |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1980 |செஸ்டவ்மிட்டோஷ்‌ |அமெரிக்கா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |1981 |எலியாஸ்‌ டுகன்டி |பெல்ஜியம்‌ |நாவலாசிரியர்‌, கட்டுரையாளர்‌ |-{{ts|vtt}} |1982 |கேபிரியேல்‌ கார்சியா மார்குயிஸ்‌ |கொரியா |நாவலாசிரியர்‌, இதழாளர்‌, சமூக விமர்சகர்‌ |-{{ts|vtt}} |1983 |வில்லியம்‌ ஹோல்டிங்‌ |இங்கிலாந்து |நாவலாசிரியர்‌ |-{{ts|vtt}} |1984 |ஜெர்ஸ்லோவன்‌ செய்‌ஃபெர்ட்‌ |செக்கோஸ் லோவாக்கியா |கவிஞர்‌ |-{{ts|vtt}} |colspan=4 {{ts|fwb|fs130}}|<center>இயற்பியல்‌</center> |-{{ts|vtt}} |1901 |வில்ஹெம்‌ ரான்ட்ஜன்‌ |ஜெர்மனி |எக்ஸ்‌–கதிர்களின்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1902 |ஹென்டிரி அண்டுன்‌<br>லாரென்ஸ்‌<br>விடுபியட்டர்‌ சீமன்‌ |நெதர்லாந்து<br>நெதர்லாந்து<br>நெதர்லாந்து |அணுக் கதிர் வீச்சு நிகழ்வில்‌ காந்தத்தின்‌ பாதிப்பு |-{{ts|vtt}} |1903 |ஆன்டொனி ஹென்றி<br>பெக்யூரெல்‌ பியரி கியூரி<br> மேரி கியூரி |ஃபிரான்ஸ்‌<br><br>ஃபிரான்ஸ்‌<br><br>ஃபிரான்ஸ்‌ (போலந்து) |இயற்கைக்‌ கதிரியக்கம்‌, ரேடியம்‌, பொலோனியம்‌ ஆகிய கதிரியக்கத்‌ தனிமங்கள் கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1904 |ராலே |இங்கிலாந்து |ஆர்கான்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1905 |பிலிப்‌ லெனார்டு |ஜெர்மனி |எதிர் மின் முனைக்‌ கதிர்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1906 |சர்‌ .ஜே.ஜே.தாம்சன்‌ |இங்கிலாந்து |வளிமங்கள்‌ வழியே மின்னோட்டம்‌ கடத்தப் படுதல்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 3u5k7xb3uzxg70blubm1gtmm9bzm010 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/329 250 646264 1944381 2026-06-10T04:56:18Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 307}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1907 |width=30% {{ts|vtt}}|எ.எ.மைக்கல்சன்‌ |width=10% {{ts|vtt}}|அமெரிக்கா (ஜெர்மனி) |width=50% {{ts|vtt}}|குறுக்கீட்டு விளைவு அளவியின்‌ கண்டு பிடிப்பும்‌, நிற மாலை விண்ணியல்‌ தொடர்பான ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1908 |கேப்ரியேல்‌ லிப்மேன்‌ |ஃபிரான்ஸ்‌ |வண்ணப் படப் பதிவு உருவாக்குதல்‌ |-{{ts|vtt}} |1909 |குக்லில்மோ மார்க்கோனி<br>கார்ல்‌ பிரான்‌ |இத்தாலி<br><br>ஜெர்மனி |கம்பியில்லாத்‌ தந்தி முறையில்‌ சீரமைப்பு |-{{ts|vtt}} |1910 |ஜெ.வாண்டர்‌ வால்ஸ்‌ |நெதர்லாந்து |வளிமப் பாய்‌ பொருள்களுக்கான சமன்பாடு |-{{ts|vtt}} |1911 |வில்ஹெம்‌ வியென்‌ |ஜெர்மனி |வெப்பக்‌ கதிர் வீச்சு விதிகள்‌ |-{{ts|vtt}} |1912 |நில்‌ கஸ்டாப்‌ டேலன்‌ |ஸ்வீடன்‌ |தானியங்கிக்‌ கடற்கரை விளக்கு அமைப்பு |-{{ts|vtt}} |1913 |H.காமர்லிங்‌ ஒன்னஸ்‌ <!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ----> |நெதர்லாந்து |தாழ்‌ வெப்ப நிலைகளில்‌, பொருள்களின்‌ தன்மைகளை அறிதல்‌ மற்றும்‌ நீர்ம ஹீலியம்‌ தோற்றுவித்தல்‌ |-{{ts|vtt}} |1914 |மேக்ஸ்‌ வான்‌ லாவே |ஜெர்மனி |படிகங்களில்‌ எக்ஸ்–கதிர்கள்‌ விளிம்பு விளைவு பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1915 |சர்‌ வில்லியம்‌ பிராக்‌<br>சர்‌ லாரன்ஸ்‌ பிராக்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |எக்ஸ்‌–கதிர்களின்‌ துணை கொண்டு படிக அமைப்பை அறிதல்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1916 |– |– |– |-{{ts|vtt}} |1917 |சார்லஸ்‌ பார்க்லா |இங்கிலாந்து |தனிமங்களின்‌ சிறப்பு எக்ஸ்‌–கதிர்களின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1918 |மேக்ஸ்‌ பிளாங்க்‌ |ஜெர்மனி |அடிப்படைக்‌ குவாண்டம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1919 |ஜோகன்னஸ்‌ ஸ்டார்க்‌ |ஜெர்மனி |நேர் மின்‌ அயனிக் கதிர்களில்‌ டாப்ளர்‌ விளைவு கண்டு பிடிப்பு மற்றும்‌ மின் புலத்தால்‌ நிற மாலை வரிகள்‌ பிளவு படுதல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1920 |சார்லஸ்‌ கியூல்லாம்‌ |சுவிட்சர்லாந்து |கலப்பு உலோகங்களின்‌ முரண்பாட்டுப்‌ பண்புகள்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1921 |ஆல்பர்ட்‌ ஐன்ஸ்டீன்‌ |அமெரிக்கா |ஒளி மின்‌ விளைவு விதி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1922 |நீஸ்போர்‌ |டென்மார்க்‌ |அணுக்களின்‌ அமைப்புக்‌ கதிர் வீச்சு பற்றி ஆய்வு |-{{ts|vtt}} |1923 |ராபர்ட்‌ மில்லிகன் |அமெரிக்கா |அடிப்படை மின்னூட்டம்‌, ஒளி மின் விளைவு குறித்து ஆய்வு |-{{ts|vtt}} |1924 |கார்ல்‌ சீக்பான்‌ |ஸ்வீடன்‌ |எக்ஸ்‌–கதிர்களின்‌ நிற மாலை பற்றிய கண்டு பிடிப்புகள்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}} <br>{{rh|அ. க. 14–20அ}} 329</noinclude> 28cn53x53wm81smaxly3wv27bivvl4w 1944382 1944381 2026-06-10T04:56:48Z TI Buhari 4634 1944382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 307}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1907 |width=30% {{ts|vtt}}|எ.எ.மைக்கல்சன்‌ |width=10% {{ts|vtt}}|அமெரிக்கா (ஜெர்மனி) |width=50% {{ts|vtt}}|குறுக்கீட்டு விளைவு அளவியின்‌ கண்டு பிடிப்பும்‌, நிற மாலை விண்ணியல்‌ தொடர்பான ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1908 |கேப்ரியேல்‌ லிப்மேன்‌ |ஃபிரான்ஸ்‌ |வண்ணப் படப் பதிவு உருவாக்குதல்‌ |-{{ts|vtt}} |1909 |குக்லில்மோ மார்க்கோனி<br>கார்ல்‌ பிரான்‌ |இத்தாலி<br><br>ஜெர்மனி |கம்பியில்லாத்‌ தந்தி முறையில்‌ சீரமைப்பு |-{{ts|vtt}} |1910 |ஜெ.வாண்டர்‌ வால்ஸ்‌ |நெதர்லாந்து |வளிமப் பாய்‌ பொருள்களுக்கான சமன்பாடு |-{{ts|vtt}} |1911 |வில்ஹெம்‌ வியென்‌ |ஜெர்மனி |வெப்பக்‌ கதிர் வீச்சு விதிகள்‌ |-{{ts|vtt}} |1912 |நில்‌ கஸ்டாப்‌ டேலன்‌ |ஸ்வீடன்‌ |தானியங்கிக்‌ கடற்கரை விளக்கு அமைப்பு |-{{ts|vtt}} |1913 |H.காமர்லிங்‌ ஒன்னஸ்‌ <!---- See: https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ----> |நெதர்லாந்து |தாழ்‌ வெப்ப நிலைகளில்‌, பொருள்களின்‌ தன்மைகளை அறிதல்‌ மற்றும்‌ நீர்ம ஹீலியம்‌ தோற்றுவித்தல்‌ |-{{ts|vtt}} |1914 |மேக்ஸ்‌ வான்‌ லாவே |ஜெர்மனி |படிகங்களில்‌ எக்ஸ்–கதிர்கள்‌ விளிம்பு விளைவு பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1915 |சர்‌ வில்லியம்‌ பிராக்‌<br>சர்‌ லாரன்ஸ்‌ பிராக்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |எக்ஸ்‌–கதிர்களின்‌ துணை கொண்டு படிக அமைப்பை அறிதல்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1916 |– |– |– |-{{ts|vtt}} |1917 |சார்லஸ்‌ பார்க்லா |இங்கிலாந்து |தனிமங்களின்‌ சிறப்பு எக்ஸ்‌–கதிர்களின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1918 |மேக்ஸ்‌ பிளாங்க்‌ |ஜெர்மனி |அடிப்படைக்‌ குவாண்டம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1919 |ஜோகன்னஸ்‌ ஸ்டார்க்‌ |ஜெர்மனி |நேர் மின்‌ அயனிக் கதிர்களில்‌ டாப்ளர்‌ விளைவு கண்டு பிடிப்பு மற்றும்‌ மின் புலத்தால்‌ நிற மாலை வரிகள்‌ பிளவு படுதல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1920 |சார்லஸ்‌ கியூல்லாம்‌ |சுவிட்சர்லாந்து |கலப்பு உலோகங்களின்‌ முரண்பாட்டுப்‌ பண்புகள்‌ கண்டுபிடிப்பு |-{{ts|vtt}} |1921 |ஆல்பர்ட்‌ ஐன்ஸ்டீன்‌ |அமெரிக்கா |ஒளி மின்‌ விளைவு விதி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1922 |நீஸ்போர்‌ |டென்மார்க்‌ |அணுக்களின்‌ அமைப்புக்‌ கதிர் வீச்சு பற்றி ஆய்வு |-{{ts|vtt}} |1923 |ராபர்ட்‌ மில்லிகன் |அமெரிக்கா |அடிப்படை மின்னூட்டம்‌, ஒளி மின் விளைவு குறித்து ஆய்வு |-{{ts|vtt}} |1924 |கார்ல்‌ சீக்பான்‌ |ஸ்வீடன்‌ |எக்ஸ்‌–கதிர்களின்‌ நிற மாலை பற்றிய கண்டு பிடிப்புகள்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}} <br>{{rh|அ. க. 14–20அ}}</noinclude> of54eu8zxt7p2fnplbdlbiyttyuek4m பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/330 250 646265 1944396 2026-06-10T05:27:59Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|308 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|-{{ts|vtt}} |width=10%|1925 |width=30%|ஜேம்ஸ்‌ ஃபிராங்‌க் |width=10%|ஜெர்மனி |width=50%|அணுவிற்கும்‌ எலெக்ட்ரானுக்கும்‌ இடையே மோதல்கள்‌ குறித்த விதிகளின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1926 |கண்டாவ்‌ ஹெர்ட்ஸ்‌<br>ஜீன்‌ பெர்ரின்‌ |ஜெர்மனி<br>பிரான்ஸ்‌ |பகுப்‌ பொருளின்‌ தொடர்ச்சியற்ற அமைப்பு பற்றிய கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1927 |சார்லஸ்‌ வில்சன்‌<br><br><br><br>ஆர்தர்‌ ஹெச்‌. காம்டன்‌ |இங்கிலாந்து<br><br><br><br>அமெரிக்கா |மின்னூட்டம்‌ கொண்ட துகள்களின்‌ பாதைகளைக்‌ கண்ணுக்குப்‌ புலனாக்கும்‌ முறை கண்டு பிடிப்பு<br>மின்னூட்டம்‌ கொண்ட துகள்களால்‌ X கதிர்களின்‌ சிதறல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1928 |சர்‌ ஓவன்‌ ரிச்சர்ட்சன்‌ |இங்கிலாந்து |ரிச்சர்ட்சன்‌ விதி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1929 |லூயி டி பிராக்லி |ஃபிரான்ஸ்‌ |எலெக்ட்ரான்களின்‌ அலைப் பண்பு |-{{ts|vtt}} |1930 |சர்‌. சி.வி.இராமன்‌ |இந்தியா |ஒளிச் சிதறல்‌ குறித்த ஆய்வு, இராமன்‌ விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1931 |– |– |– |-{{ts|vtt}} |1932 |வெர்னர்‌ ஹைசன்பர்க்‌ |ஜெர்மனி |குவாண்டம்‌ எந்திரவியல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1933 |பி.எ.எம்‌.டிராக்‌<br>எட்வின்‌ சுரோடிஞ்சர்‌ |இங்கிலாந்து<br>ஆஸ்திரியா |குவாண்டம்‌ எந்திரவியல்‌ அலைச்‌ சமன்பாடு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1934 |– |– |– |-{{ts|vtt}} |1935 |ஜேம்ஸ்‌ சாட்விக்‌ |இங்கிலாந்து |நியூட்ரால்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1936 |விக்டர்‌ ஹெஸ்‌ |ஆஸ்திரியா |காஸ்மிக்‌ கதிர்கள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1936 |கார்ல்‌ ஆண்டர்சன்‌ |அமெரிக்கா |பாசிட்ரான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1937 |கிளிண்டன்‌ டேவிசன்‌<br>ஜார்ஜ்‌ பி.தாம்சன்‌ |அமெரிக்கா<br><br>இங்கிலாந்து |படிகங்களால்‌ எலெக்ட்ரானின்‌ விளிம்பு விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1938 |என்ரிகோ ஃபெர்மி |இத்தாலி |நியூட்ரான்‌ கதிர் வீச்சின்‌ மூலம்‌ செயற்கைக்‌ கதிரியக்கத்‌ தனிமங்களின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1939 |இ.ஒ.லாரன்ஸ்‌ |அமெரிக்கா |சைக்ளோட்ரான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1940 |– |– |– |-{{ts|vtt}} |1941 |– |– |– |-{{ts|vtt}} |1942 |– |– |– |-{{ts|vtt}} |1943 |ஆட்டோ ஸ்டெர்ன்‌ |அமெரிக்கா |புரோட்டானின்‌ காந்தத்‌ திருப்புத் திறன்‌ பற்றிய கண்டு பிடிப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> lq7kq313p33zv9qitz0b9v8hc108lal 1944401 1944396 2026-06-10T05:42:12Z TI Buhari 4634 1944401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|308 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1925 |width=30% {{ts|vtt}}|ஜேம்ஸ்‌ ஃபிராங்‌க் |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |width=50% {{ts|vtt}}|அணுவிற்கும்‌ எலெக்ட்ரானுக்கும்‌ இடையே மோதல்கள்‌ குறித்த விதிகளின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1926 |கண்டாவ்‌ ஹெர்ட்ஸ்‌<br>ஜீன்‌ பெர்ரின்‌ |ஜெர்மனி<br>பிரான்ஸ்‌ |பகுப்‌ பொருளின்‌ தொடர்ச்சியற்ற அமைப்பு பற்றிய கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1927 |சார்லஸ்‌ வில்சன்‌<br><br><br><br>ஆர்தர்‌ ஹெச்‌. காம்டன்‌ |இங்கிலாந்து<br><br><br><br>அமெரிக்கா |மின்னூட்டம்‌ கொண்ட துகள்களின்‌ பாதைகளைக்‌ கண்ணுக்குப்‌ புலனாக்கும்‌ முறை கண்டு பிடிப்பு<br>மின்னூட்டம்‌ கொண்ட துகள்களால்‌ X கதிர்களின்‌ சிதறல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1928 |சர்‌ ஓவன்‌ ரிச்சர்ட்சன்‌ |இங்கிலாந்து |ரிச்சர்ட்சன்‌ விதி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1929 |லூயி டி பிராக்லி |ஃபிரான்ஸ்‌ |எலெக்ட்ரான்களின்‌ அலைப் பண்பு |-{{ts|vtt}} |1930 |சர்‌. சி.வி.இராமன்‌ |இந்தியா |ஒளிச் சிதறல்‌ குறித்த ஆய்வு, இராமன்‌ விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1931 |– |– |– |-{{ts|vtt}} |1932 |வெர்னர்‌ ஹைசன்பர்க்‌ |ஜெர்மனி |குவாண்டம்‌ எந்திரவியல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1933 |பி.எ.எம்‌.டிராக்‌<br>எட்வின்‌ சுரோடிஞ்சர்‌ |இங்கிலாந்து<br>ஆஸ்திரியா |குவாண்டம்‌ எந்திரவியல்‌ அலைச்‌ சமன்பாடு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1934 |– |– |– |-{{ts|vtt}} |1935 |ஜேம்ஸ்‌ சாட்விக்‌ |இங்கிலாந்து |நியூட்ரால்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1936 |விக்டர்‌ ஹெஸ்‌ |ஆஸ்திரியா |காஸ்மிக்‌ கதிர்கள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1936 |கார்ல்‌ ஆண்டர்சன்‌ |அமெரிக்கா |பாசிட்ரான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1937 |கிளிண்டன்‌ டேவிசன்‌<br>ஜார்ஜ்‌ பி.தாம்சன்‌ |அமெரிக்கா<br><br>இங்கிலாந்து |படிகங்களால்‌ எலெக்ட்ரானின்‌ விளிம்பு விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1938 |என்ரிகோ ஃபெர்மி |இத்தாலி |நியூட்ரான்‌ கதிர் வீச்சின்‌ மூலம்‌ செயற்கைக்‌ கதிரியக்கத்‌ தனிமங்களின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1939 |இ.ஒ.லாரன்ஸ்‌ |அமெரிக்கா |சைக்ளோட்ரான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1940 |– |– |– |-{{ts|vtt}} |1941 |– |– |– |-{{ts|vtt}} |1942 |– |– |– |-{{ts|vtt}} |1943 |ஆட்டோ ஸ்டெர்ன்‌ |அமெரிக்கா |புரோட்டானின்‌ காந்தத்‌ திருப்புத் திறன்‌ பற்றிய கண்டு பிடிப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> c9jrjiltqwb5nsv85k26zqf9d7dq1e9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/331 250 646266 1944399 2026-06-10T05:36:58Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 309}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|-{{ts|vtt}} |width=10%|1944 |width=30%|இசிடோர்‌ ராபி |width=10%|அமெரிக்கா |width=50%|அணுக் கருவின்‌ காந்த ஒத்திசைவு |-{{ts|vtt}} |1945 |உல்‌ஃப்காங்‌ பாலி |ஆஸ்திரியா |குவாண்டம்‌ தவிர்க்கைத்‌ தத்துவம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1946 |பெர்சி பிரிட்ஜீமன்‌ |அமெரிக்கா |உயர்‌ அழுத்த இயற்பியல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1947 |சர்‌ எட்வர்டு ஆப்பிள்டன்‌ |இங்கிலாந்து |மேல் வளி மண்டலத்தில்‌ ஆப்பிள்டன்‌ அடுக்குக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1948 |பேட்ரிக்‌ பிளாக்கெட்‌ |இங்கிலாந்து |காஸ்மிக்‌ கதிர் வீச்சு, அணுக் கரு இயற்பியலில்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1949 |யுகாவா ஹிடெகி |ஜப்பான்‌ |மேசான்‌ துகள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1950 |செகில்‌ பவெல்‌ |இங்கிலாந்து |அணுக் கரு நிகழ்வுகளைப்‌ படப் பதிவு முறை மூலம ஆய்ந்தறிதல்‌, மேசான்‌ குறித்த கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1951 |சர்‌ ஜான்‌ காக்ராஃபிட்‌<br>எர்னஸ்ட்‌ வால்டன்‌ |இங்கிலாந்து<br><br>அயர்லாந்து |செயற்கை முறையில்‌ முடுக்கப் பட்ட அணுக்‌ கருக்கள்‌ மாற்றம்‌ செய்தல்‌ |-{{ts|vtt}} |1952 |ஃபெலிக்ஸ்‌ பிளாச்‌<br><br>எட்வர்டு பர்செல்‌ |அமெரிக்கா (சுவிட்சர்லாந்து)<br>அமெரிக்கா |அணுக் கருவின்‌ காந்தப்‌ புலன்களை அளவிடுதல்‌ |-{{ts|vtt}} |1953 |ஃபிரிட்ஸ்‌ ஸ்செர்னைக்‌ |நெதர்லாந்து |கட்ட மாறு பட்ட நுண்ணோக்கிக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1954 |மேக்ஸ்‌ பார்ன்‌<br><br><br>வால்தர்‌ போத்தே |இங்கிலாந்து<br><br><br>ஜெர்மனி |அலைச் சார்பைப்‌ புள்ளியியல்‌ மூலம்‌ விளக்கும்‌ பகுப்பாய்வு<br>ஒன்றிப்பு முறை மூலம்‌ காஸ்மிக்‌ கதிர்களின்‌ பகுப்பாய்வு |-{{ts|vtt}} |1955 |வில்லிஸ்‌ லேம்ப்‌, ஜுனியர்‌<br>பாலிகார்ப்‌ குஸ்ச்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா |ஹைட்ரஜன்‌ நிற மாலை<br><br>எலெக்ட்ரான்‌ காந்தத்‌ திருப்புத்‌ திறன்‌ |-{{ts|vtt}} |1956 |வில்லியம்‌ ஷாக்லி<br>ஜான் பார்டீன்‌<br>வால்டர்‌ பிரட்டயன்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா<br>அமெரிக்கா |டிரான்‌சிஸ்ட்டரின்‌ கண்டு பிடிப்பும்‌, குறை கடத்திகள்‌ பற்றிய ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1957 |சங்‌ டான்‌ லீ<br>சென்‌ நிங்யாங்‌ |சீனா<br>சீனா |அடிப்படை துகள்களின்‌ ஒப்புமை நிலைத்திராமை |-{{ts|vtt}} |1958 |பேவல்‌ ஏ. செரங்கோவ்‌<br>இல்யா எம்‌. ஃபிராங்க்‌<br>இகோர்‌ ஒய்‌. டேம்‌ |ரஷ்யா<br><br>ரஷ்யா<br><br>ரஷ்யா |செரங்கோவ்‌ விளைவின்‌ கண்டு பிடிப்பும்‌, விளக்கமும்‌ |-{{ts|vtt}} |1959 |ஓவன்‌ சேம்பர்லைன்‌<br>எமிலியே செக்ரெ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா (இத்தாலி) |எதிர்ப்‌ புரோட்டான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1960 |டொனால்டு கிளேசர்‌ |அமெரிக்கா |குமிழிக் கலம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1961 |ராபர்ட்‌ ஹாஃப்ஸ்டாட்டர்‌ |அமெரிக்கா |அணுக் கருத்‌ துகள்களின்‌ உருவமைப்பு கண்டு பிடிப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 46aw85d3bxtr2zcq60svw7y9wsg9bdp 1944400 1944399 2026-06-10T05:41:30Z TI Buhari 4634 1944400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 309}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1944 |width=30% {{ts|vtt}}|இசிடோர்‌ ராபி |width=10% {{ts|vtt}}|அமெரிக்கா |width=50% {{ts|vtt}}|அணுக் கருவின்‌ காந்த ஒத்திசைவு |-{{ts|vtt}} |1945 |உல்‌ஃப்காங்‌ பாலி |ஆஸ்திரியா |குவாண்டம்‌ தவிர்க்கைத்‌ தத்துவம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1946 |பெர்சி பிரிட்ஜீமன்‌ |அமெரிக்கா |உயர்‌ அழுத்த இயற்பியல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1947 |சர்‌ எட்வர்டு ஆப்பிள்டன்‌ |இங்கிலாந்து |மேல் வளி மண்டலத்தில்‌ ஆப்பிள்டன்‌ அடுக்குக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1948 |பேட்ரிக்‌ பிளாக்கெட்‌ |இங்கிலாந்து |காஸ்மிக்‌ கதிர் வீச்சு, அணுக் கரு இயற்பியலில்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1949 |யுகாவா ஹிடெகி |ஜப்பான்‌ |மேசான்‌ துகள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1950 |செகில்‌ பவெல்‌ |இங்கிலாந்து |அணுக் கரு நிகழ்வுகளைப்‌ படப் பதிவு முறை மூலம ஆய்ந்தறிதல்‌, மேசான்‌ குறித்த கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1951 |சர்‌ ஜான்‌ காக்ராஃபிட்‌<br>எர்னஸ்ட்‌ வால்டன்‌ |இங்கிலாந்து<br><br>அயர்லாந்து |செயற்கை முறையில்‌ முடுக்கப் பட்ட அணுக்‌ கருக்கள்‌ மாற்றம்‌ செய்தல்‌ |-{{ts|vtt}} |1952 |ஃபெலிக்ஸ்‌ பிளாச்‌<br><br>எட்வர்டு பர்செல்‌ |அமெரிக்கா (சுவிட்சர்லாந்து)<br>அமெரிக்கா |அணுக் கருவின்‌ காந்தப்‌ புலன்களை அளவிடுதல்‌ |-{{ts|vtt}} |1953 |ஃபிரிட்ஸ்‌ ஸ்செர்னைக்‌ |நெதர்லாந்து |கட்ட மாறு பட்ட நுண்ணோக்கிக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1954 |மேக்ஸ்‌ பார்ன்‌<br><br><br>வால்தர்‌ போத்தே |இங்கிலாந்து<br><br><br>ஜெர்மனி |அலைச் சார்பைப்‌ புள்ளியியல்‌ மூலம்‌ விளக்கும்‌ பகுப்பாய்வு<br>ஒன்றிப்பு முறை மூலம்‌ காஸ்மிக்‌ கதிர்களின்‌ பகுப்பாய்வு |-{{ts|vtt}} |1955 |வில்லிஸ்‌ லேம்ப்‌, ஜுனியர்‌<br>பாலிகார்ப்‌ குஸ்ச்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா |ஹைட்ரஜன்‌ நிற மாலை<br><br>எலெக்ட்ரான்‌ காந்தத்‌ திருப்புத்‌ திறன்‌ |-{{ts|vtt}} |1956 |வில்லியம்‌ ஷாக்லி<br>ஜான் பார்டீன்‌<br>வால்டர்‌ பிரட்டயன்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா<br>அமெரிக்கா |டிரான்‌சிஸ்ட்டரின்‌ கண்டு பிடிப்பும்‌, குறை கடத்திகள்‌ பற்றிய ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1957 |சங்‌ டான்‌ லீ<br>சென்‌ நிங்யாங்‌ |சீனா<br>சீனா |அடிப்படை துகள்களின்‌ ஒப்புமை நிலைத்திராமை |-{{ts|vtt}} |1958 |பேவல்‌ ஏ. செரங்கோவ்‌<br>இல்யா எம்‌. ஃபிராங்க்‌<br>இகோர்‌ ஒய்‌. டேம்‌ |ரஷ்யா<br><br>ரஷ்யா<br><br>ரஷ்யா |செரங்கோவ்‌ விளைவின்‌ கண்டு பிடிப்பும்‌, விளக்கமும்‌ |-{{ts|vtt}} |1959 |ஓவன்‌ சேம்பர்லைன்‌<br>எமிலியே செக்ரெ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா (இத்தாலி) |எதிர்ப்‌ புரோட்டான்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1960 |டொனால்டு கிளேசர்‌ |அமெரிக்கா |குமிழிக் கலம்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1961 |ராபர்ட்‌ ஹாஃப்ஸ்டாட்டர்‌ |அமெரிக்கா |அணுக் கருத்‌ துகள்களின்‌ உருவமைப்பு கண்டு பிடிப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> keo3nkcgpvuvyow6ry4gefj8zday1gc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/67 250 646267 1944402 2026-06-10T05:43:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யவைகளைக் கையாளவும், வாணிகம் செய்யவும் உரிமை இல்லாதிருந்த நிலையை முன்மாதிரியாகக் கொண்டார். பிளேட்டோ தமது ‘குடியரசு’ (Republic) என்ற நூலில் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலாவக்கு மொழி|39|சிலாவக்கு மொழி}}</noinclude>யவைகளைக் கையாளவும், வாணிகம் செய்யவும் உரிமை இல்லாதிருந்த நிலையை முன்மாதிரியாகக் கொண்டார். பிளேட்டோ தமது ‘குடியரசு’ (Republic) என்ற நூலில் மிகச் சிறந்த அரசின் சிதைந்த அரசாங்க வகையாக இராணுவ அரசையும் (Timocracy or Military State), இராணுவ அரசின் சிதைந்த வடிவமாகச் செல்வர்கள் ஆட்சி அல்லது சிலர் நல ஆட்சியையும் குறிப்பிடுகிறார். சிலர் நல ஆட்சியின் சிதைந்த வடிவமே குடியாட்சி ஆகும். குடியாட்சியிலிருந்து தோன்றும் சினதந்த வடிவமே வல்லாட்சியாகும். அவர்தம் இரண்டாம் நுாலாகிய ‘அரசியலறிஞர்’ (Statesman) என்ற நூலில் முடியாட்சியையும், உயர்குடிப் பிரபுக்களாட்சியையும், மிதமான குடியாட்சியைவும் தூயவகை ஆட்சிகளாகவும், இவற்றின் சிதைந்த வகைகளாக முறையே வல்லாட்சி, சிலர் நல ஆட்சி, தீவிரக்குடியாட்சி முதலியவைகளையும் குறிப்பிடுகிறார். அக்கட்டாட்டிலும், பிளேட்டோவைப் பின்பற்றிச் சிலர் நல ஆட்சியை உயர்குடிப் பிரபுக்களாட்சியின் சிதைந்த வடிவமாகக் கூறுகிறார். சிலர் நல வகுப்பார் எப்போதும் தந்நலப் போக்குடன் செயற்பட்ட காரணத்தால் அவர்களுக்கும் அளவிற் பெரிய சாதாரண வகுப்புக்கும் பகைமை இருந்தது. அதன் காரணமாகவே பண்டைய கிரேக்க நகரரசுகள் உட்பூசலினால் நலிவுற்றுப் பெரிய அரசுகளினால் வெல்லப்பட்டன. செல்வர்கள் உழவர்களைத் துன்புறுத்தியும், கடனாளிகளை ஒடுக்கியும், வந்தமையால் அவர்களுடைய ஆட்சி பொதுமக்களால் வெறுக்கப்பட்டது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Greenidge, A.H.J.,</b> A Handbook of Greek Constitutional History, Macmillan, 1920<br> <b>Sidgwick, H.,</b> The Development of European Polity Macmillan, 1903. <section end="சிலர் நல ஆட்சி"/> <section begin="சிலாவக்கு மொழி"/> {{dhr}} <b>சிலாவக்கு மொழி</b>: சிலாவக்கு மொழி ஒரு இந்திய ஐரோப்பிய மொழியாகும். இது இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பால்டோ-சிலாவிக்கு மொழிப் பிரிவைச் சேர்ந்த சிலாவிய மொழிகளின் ஒன்றாகும். இம்மொழி செக்கசுலோவாக்கியாவின் அரசியல் மொழிகளுள் ஒன்று. இது செக்கசுலோவாக்கியாவின் ஒரு பகுதியான சிலாவாக்கியாவில் வழங்கப்படுகிறது. சுமார் 4,00,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதலே சிலாவாக்கியா அங்கேரிய ஆட்சியின் கீழ் இருந்தபோதும் சிலாவக்கு மொழி பிற மொழிகளால் பெரிதும் பாதிக்கப்படாது, தன்னுடைய பழைமைக் கூறுகள் பலவற்றைப் பாதுகாத்து வந்திருப்பது இம்மொழியின் ஒரு சிறப்பாகும். இதனாலேயே இம்மொழி என்றாச் சிலாவிய மொழி மக்களும் ஓரளவு புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. அங்கேரிய ஆட்சியின் கீழ்ப் பல நூற்றாண்டுகள் இம்மொழியினர் இருந்தமையால் இம்மொழி வளர்ச்சி அடையாத நிலையிலேயே இருந்தது. இன்றைய இலக்கிய மொழி கி.பி. 19-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலப் பகுதியில் தான் உருவெடுத்தது. ஆயினும் இம்மொழியின் பழைய எழுத்துருவங்களை கி.பி.11-ஆம் நூற்றாண்டு முதலே காணலாம். அங்கேரியன் ஆட்சியில் இலத்தீன் எழுத்து மொழியாக இருந்தபோது அம்மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் (கி.பி. 11-15-ஆம் நூற்றாண்டு) பல சிலாவக்கு மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. கி.பி. 14,15,16-ஆம் நூற்றாண்டுகளில் செக்கு மொழியின் செல்வாக்கு இப்பகுதியில் ஓங்கத் தொடங்கியது. சிலாவக்கு மொழியுடன் மிக நெருங்கிய ஒற்றுமைகள் கொண்ட செக்குமொழி இப்பகுதியில் விரைவாக வளர்ந்து இலக்கிய மொழியாக வாழத் தலைப்பட்டது. செக்கு பயின்ற பல சிலாவக்கு அறிஞர்கள் எழுதிய செக்கு புத்தகங்களில் லொவக்குக் கூறுகள் பல கலந்த நிலையில் செக்கசுலாவக் என்ற கலப்பு மொழி ஒன்றும் தோன்றி வளர்ந்தது. கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே இம்மொழியின் சில எழுத்துப் பிரதிகளைக் காணலாம். ஆனால் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்நிலை மாறியது. கத்தோலிக்க மதகுருக்கள் பலர் சிலாவக்கு மொழியிலேயே எழுதவேண்டும் என எண்ணியதால் வேதாகமம் கோயில் நூல்கள் போன்றவை இம்மொழியிலேயே எழுதப்பட்டன. இம்மொழியிலேயே முக்கியமான, சிலாவக்கு நூல்கள் பல தோன்றின. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இம்மொழிக் கவிதைகள் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளன. சிலாவக்கு மொழி உரோமன் எழுத்து முறையில் எழுதப்படுகிறது. இம்மொழியின் கண் பதினான்கு உயிர்களும். இருபத்தேழு மெய்களும் உள்ளன. உயிர்களில் குறில், நெடில் வேற்றுமை காணப்படுகிறது. சிலாவக்கு மொழி இருமை எண்ணை இழந்து ஒருமை, பன்மை ஆகிய இரு வேறுபாடுகளையே கொண்டுள்ளது. ஆயினும் ஒரு சில பெயர்களில் இருமை எண் காணக்கூடியதாக இருக்கிறது. எழுவாய், அது, கு ஐ,ஆன், கண் ஆகிய ஆறு வேற்றுமைகளைக் கொண்டுள்ள இம்மொழியில் விளிவேற்றுமை இல்லை. {{nop}}<noinclude></noinclude> lstm86n5x4kq1d38fe2xe5iifcwf5h5 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/332 250 646268 1944403 2026-06-10T05:48:48Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|310 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1961 |width=30% {{ts|vtt}}|ருடால்‌ஃப்‌ மாஸ்பாயர்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |width=50%{{ts|vtt}}|மாஸ்பாயர்‌ விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1962 |லென்‌ டி. லாண்டோ |ரஷ்யா |சுருங்கிய பொருள்‌ பற்றிய அறிமுறை, மீபாய்‌ தன்மை, மீகடத்துந் தன்மை பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1963 |ஜே. எச்‌.டி. ஜென்சன்‌<br>மரியா கோப்பர்ட்‌ மேயெர்‌<br>யூஜின்‌ பால்‌ விக்னர்‌ |ஜெர்மனி<br>ஜெர்மனி<br><br>அமெரிக்கா |அணுக் கருவின்‌ கூடு மாதிரி அமைப்புப்‌ பற்றிய அறிமுறை <br><br>அணுக் கருவினுள்‌ புரோட்டோன்‌, நியூட்ரான்‌ இடையீடு பற்றிய அறிமுறை |-{{ts|vtt}} |1964 |சார்லஸ்‌ எச்‌. டௌனஸ்‌<br>நிக்கோலாய்‌ பேசோ<br>அலெக்சாண்டர்‌. பீரகோரோவ்‌ |அமெரிக்கா<br><br>ரஷ்யா<br><br>ரஷ்யா |குவாண்டம்‌ மின்னணுவியலில்‌ மேசர்‌–லேசர்‌ விதிகளை அடிப்படையாகக்‌ கொண்ட கருவி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1965 |ஜீலியன்‌. சுவிங்கர்‌<br>ரிச்சர்டு ஃபெய்ன்மன்‌<br>டொமனாகா ஷின்‌ இச்சிரோ |அமெரிக்கா<br>அமெரிக்கா<br><br>ஜப்பான்‌ |குவாண்டம்‌ மின்னியக்கவியலின்‌ அடிப்படைக்‌ கொள்கை |-{{ts|vtt}} |1966 |ஆல்ப்ரெட்‌ காஸ்லர்‌ |ஃபிரான்ஸ்‌ |அணுக்களில்‌ ஹெர்ஷியன்‌ ஒத்தியைபைப்‌ பற்றிய அறிய ஒளியியல்‌ முறைகளின்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1967 |ஹான்ஸ்‌ எ. பெத்தே |அமெரிக்கா (ஜெர்மனி) |விண்மீன்களில்‌ ஆற்றல்‌ தோன்றும்‌ முறை பற்றி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1968 |லூயிஸ்‌ டபிள்யூ. ஆல்வரெச்‌ |அமெரிக்கா |அடிப்படைத் துகள்‌ பற்றிய ஆய்வு, ஒத்தியைவு நிலை பற்றிய ஆய்வு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1969 |முர்ரே ஜெல்‌ மான்‌ |அமெரிக்கா |அடிப்படைத் துகள்களை வகைப் படுத்துதல்‌, அவற்றின்‌ இடையீடு பற்றிய ஆய்வு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1970 |லூயிஸ்‌ டபிள்யூ. நீல்‌<br>ஹான்ஸ்‌ ஆல்ப்வென்‌ |ஃபிரான்ஸ்‌<br>ஸ்வீடன்‌ |காந்த நீர்ம இயக்கவியல்‌ பற்றிய ஆய்வு, ஃபெர்ரோ மற்றும்‌ எதிர்‌ ஃபெர்ரோ காந்தப் பொருள்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1971 |டென்னிஸ்‌ கேபோர்‌ |இங்கிலாந்து (ஹங்கேரி) |முப்பரிமாணப்‌ படமாக்கும்‌ ஹோலோ கிராஃபி கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1972 |ஜான்‌ பார்டீன்‌<br>லியான்‌ என்‌.கூப்பர்‌<br>ராபர்ட்‌ ஸ்ச்ரெய்‌ஃபர்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா<br>அமெரிக்கா |மீ கடத்துந்திறன்‌ பற்றிய கொள்கை கண்டு பிடிப்ப |-{{ts|vtt}} |1973 |லியே சொகி<br>ஐவார்‌ ஜியாயெவர்‌<br><br>பிரயன்‌ ஜோசப்சன்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா (நார்வே)<br>இங்கிலாந்து |குறைகடத்தி, மீ கடத்திகளில்‌ சுரங்கமிடல்‌ விளைவு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1974 |சர்‌ மார்டீன்‌ ரைல்‌<br>அண்டோனி ஹியூவிஷ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |ரேடியோ தொலை நோக்கி மூலம்‌ துடிப்பு விண் மீன்‌ கண்டு பிடிப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> iybvy1c63oeqi1fj70qtd5nrhm4k2ko பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/68 250 646269 1944414 2026-06-10T06:02:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழ் மொழியைப் போன்றே சிலாவக்கு மொழியிலும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்கள் உள்ளன. இம்மொழியில் சுட்டுப் பெயர்களும், மூவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலாவிய மொழிகள்|40|சிலாவிய மொழிகள்}}</noinclude>தமிழ் மொழியைப் போன்றே சிலாவக்கு மொழியிலும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்கள் உள்ளன. இம்மொழியில் சுட்டுப் பெயர்களும், மூவிடப் பெயர்களும் தனித்தனியாக உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. ஓனென் (Onen) ‘அது (சுட்டு); ஓனொ (ono) ‘—அது (மூவிடப் பெயர்). சிலாவக்கு மொழியில் பெயரடைகளும் வேற்றுமை உருபுகளை ஏற்பதுடன் எண், பால் வேற்றுமைகளையும் காட்டுகின்றன. வினைச் சொற்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற கால வேற்றுமைகளையும், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இட வேற்றுமைகளையும் காட்டி நிற்கின்றன. தமிழ்மொழியைப் போலன்றி தன்மை, முன்னிலையிலும், இம்மொழி வினைச் சொற்கள் பால் வேற்றுமை காட்டுவதைக் காணலாம். {| class="wikitable" |- |நியெசொல் || சொம் || niesol || som || சுமந்தேன் (ஆண்) |- |நியெசொல் || சி || niesol || si || சுமந்தாய் (ஆண்) |- |நியெசொல் || || niesol || || சுமந்தான், சுமந்தது (ஆண்) |- |நியெசுல || சொம் || niesla || som || சுமந்தேன் (பெண்) |- |நியெசுல || சி || niesla || si || சுமந்தாய் (பெண்) |- |நியெசுல || || niesla || || சுமந்தாள், சுமந்தது (பெண்) |- |நியெசுலி || சுமர் || niesli || smr || சுமந்தோம் (ஆண்) |- |நியெசுலி || சுதெ || niesli || ste || சுமந்தீர்கள் (ஆண்) |- |நியெசுலி || || niesli || || சுமந்தார்கள் (ஆண்) |- |நியெசுலை || சுமெ || niesly || sme || சுமந்தோம் (பெண்) |- |நியெசுலை || சுதெ || niesly || ste || சுமந்தீர்கள் (பெண்) |- |நியெசுலை || || niesly || || சுமந்தார்கள் (பெண்) |- |} {{Right|<b>எம்.சு.</b>}} <section end="சிலாவக்கு மொழி"/> <section begin="சிலாவிய மொழிகள்"/> {{dhr}} <b>சிலாவிய மொழிகள்</b> இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சதம் மொழிப் பிரிவைச் சேர்ந்தவை, இவை சிலாவானிக்கு மொழிகள் எனவும் பெயர் பெறும். உருசியா, போலந்து, கிழக்குச் செருமனி, செக்கசுலோவாக்கியா, யூகசுலோவியா, பல்கேரியா ஆகிய நாடுகளில் வாழும் சுமார் 268,000,000 மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். இவை இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் பால்டிக்கு மொழிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையவை. ஆகவே, இவ்விரு பிரிவு மொழிகளையும் இணைத்துப் பால்டோ-சிலாவிய மொழிகள் எனக் கூறப்படுகின்றன. சிலாவிய மொழிப் பிரிவில் 11 முக்கிய மொழிகள் உள்ளன. இவற்றைத் தெற்குச் சிலாவிய மொழிகள், கிழக்குச் சிலாவிய மொழிகள், மேற்குச் சிலாவிய மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிப்பர். <b>தெற்குச் சிலாவிய மொழிகள்</b>: பல்கேரியன், மாசிடோனியன். செர்போகிரேசியன், சிலாவினியன் ஆகியவை தெற்குச் சிலாவிய மொழிகளாகும். இவை பல்கேரியா, யூகசுலோவியா, கிரீசு ஆகிய நாடுகளில் வழங்குகின்றன. பல்கேரியன் மொழியை 7,000,000 மக்களும், மாசிடோனியன் மொழியை 1,000,000 மக்களும், செர்போ கிரேசியன் மொழியை 15,000,000 மக்களும் சிலாவினியன் மொழியை 2,000,000 மக்க ளும் பேசுகின்றனர். இவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் இவற்றைக் கிழக்குப் பிரிவு மொழிகள், மேற்குப் பிரிவு மொழிகள் என இரண்டாகப் பிரிப்பர் பல்கேரியன். மாசிடோனியன் ஆகிய இரண்டும் கிழக்குப் பிரிவு மொழிகள்; செர்போ கிரேசியன், சிலாவினியன் ஆகிய இரு மொழிகளும் மேற்குப் பிரிவு மொழிகள். வரலாற்று நோக்கில் தெற்குச் சிலாவிய மொழிகள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சிலாவிய மொழிகள் அனைத்திற்கும் ஒளி கொடுத்து அவற்றின் இலக்கியங்களின் பிறப்பிற்குக் காரணமாக இருந்தது பழைய சிலாவினிய மொழியே. இன்றைய சிலாவிய மொழிகளின் சிரில்லிக்கு எழுத்து முறையினைத் தந்தசிரில், மெதோடியசு ஆகியோரின் பிறப்பிடம் மாசிடோனியாவே ஆகும். தம்முடைய பேச்சுமொழியின்<noinclude></noinclude> c2rufy4pmyrqrq6y8u5yyt30v1ptine பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/333 250 646270 1944430 2026-06-10T06:08:31Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 311}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1975 |width=30% {{ts|vtt}}|ஆகே போர்‌<br>பென்‌ மோட்டெல்சன்‌<br>ஜேம்ஸ்‌ ரெயின்‌ வாட்டர்‌ |width=10% {{ts|vtt}}|அமெரிக்கா<br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா |width=50% {{ts|vtt}}|அணுக் கருப்‌ பிணைவிற்கு அடிப்படையாக உள்ள அணுக் கருக்களின்‌ வடிவமைப்புக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1976 |பர்ட்டன்‌ ரிட்சர்‌<br>சாவோ சுங்‌ டிங்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா |சை (ψ) அல்லது மேசான் (meson) என்னும்‌ பளுவான அடிப்படைத்‌ துகள்‌ கண்டு பிடிப்பு <!---- https://en.wikipedia.org/wiki/J/psi_meson ----> |-{{ts|vtt}} |1977 |பிலிப்‌ W. ஆண்டர்சன்‌<br>சர்‌ நெவில்‌ மாட்‌<br>ஜான்‌ எச்‌. வேன்‌ வீளெக்‌ |அமெரிக்கா<br><br>இங்கிலாந்து<br>அமெரிக்கா |காந்தப் பொருள்‌ மற்றும்‌ படிகமிலாத்‌ திண்மப்‌ பொருள்‌ ஆகியவற்றில்‌ எலெக்ட்ரானின்‌ செயல்பாடு பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1978 |அர்னோ ஏ. பென்சியாஸ்‌<br>ராபர்ட்‌ டபிள்யூ. வில்சன்‌<br>பியோட்டர்‌ எல்‌. காபிட்ஸா |அமெரிக்கா (ஜெர்மனி)<br>அமெரிக்கா<br><br>ரஷ்யா |பெரு வெடிக்‌ கொள்கையைப்‌ பயன் படுத்திக்‌ காஸ்மிக்‌ நுண்ணலைப்‌ பின்னணிக்‌ கதிர் வீச்சின்‌ கண்டு பிடிப்பு<br>தாழ் வெப்பநிலை இயற்பியலில்‌ அடிப்படை |-{{ts|vtt}} |1979 |ஸ்டீவன்‌ வெயின்பர்க்‌<br>ஷெல்டன்‌ எல்‌. கிளாஸ்ஷோ<br>அப்துஸ்சலாம்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br><br>பாகிஸ்தான்‌ |துணை அணுத் துகள்களில்‌, மின் காந்த மற்றும்‌ வலிகுறை இடையீடுகளுக்கிடையேயான ஒப்புமை பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1980 |ஜேம்ஸ்‌ W. க்ரோனின்‌<br>வால்‌ L. ஃபிட்ச்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா |புரோட்டான்‌ முடுக்கியைப்‌ பயன் படுத்திப்‌ புதிய அடிப்படைத்‌ துகளான கே. மேசான்களின்‌ பகுப்பாய்வு மூலம்‌ அணுவினுள்‌ உள்ள சீரற்ற நடத்தை பற்றிய கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1981 |கை. எம்‌. சீக்பான்‌<br>நிகோலஸ்‌ பிளொயெம்‌ பெர்ஜன்‌<br>ஆர்தர்‌. எல்‌. ஸ்சாவ்லோவ்‌ |சுவீடன்‌<br>அமெரிக்கா<br><br><br>அமெரிக்கா |வேதியியல்‌ பகுப்பாய்விற்கான எலெக்ட்ரான்‌ நிற மாலையியல்‌ <br><br>லேசர்‌ நிற மாலையியல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1982 |கென்னத்‌ ஜி வில்சன்‌ |அமெரிக்கா |தொடர்ச்சியான கட்ட மாறு நிலைகளின்‌ பகுப்பாய்வு |-{{ts|vtt}} |1983 |சுப்பிரமணியம்‌ சந்திரசேகர்‌<br>வில்லியம்‌ ஏ. பௌலெர்‌ |அமெரிக்கா (இந்தியா)<br>அமெரிக்கா |விண்மீன்களின்‌ தோற்றம்‌, மற்றும்‌ அழிவு குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1984 |கார்லோ ருபியா<br>சைமன்‌ வாண்டர்மீர்‌ |இத்தாலி<br>நெதர்லாந்து |துணை அணுத் துகள்களான W மற்றும்‌ Z துகள்கள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1985 |கிளாஸ் வான்‌ கிளிட்சிங்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ----> |மேற்கு ஜெர்மனி |திண்ம நிலை இயற்பியலில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1986 |எர்னஸ்ட்‌ ரஸ்கா<br>ஜெர்டு பின்னிங்‌<br>ஹென்ரிச்‌ ரோரர்‌ |ஜெர்மனி<br>ஜெர்மனி<br>சுவிட்சர்லாந்து |எலெக்ட்ரான்‌ நுண்ணோக்கிக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1987 |அலெக்ஸ்‌ முல்லர்‌<br>ஜார்ஜ்‌ பெர்நாட்ஸ்‌ |சுவிட்சர்லாந்து<br>சுவிட்சர்லாந்து |மிகு வெப்ப நிலை மீக்கடத்திக்‌ கண்டு பிடிப்பு |- | |}</div>{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude> izyyz4epscpbqej1c40r26necqrka50 1944488 1944430 2026-06-10T07:15:30Z TI Buhari 4634 1944488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 311}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1975 |width=30% {{ts|vtt}}|ஆகே போர்‌<br>பென்‌ மோட்டெல்சன்‌<br>ஜேம்ஸ்‌ ரெயின்‌ வாட்டர்‌ |width=10% {{ts|vtt}}|அமெரிக்கா<br>அமெரிக்கா<br><br>அமெரிக்கா |width=50% {{ts|vtt}}|அணுக் கருப்‌ பிணைவிற்கு அடிப்படையாக உள்ள அணுக் கருக்களின்‌ வடிவமைப்புக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1976 |பர்ட்டன்‌ ரிட்சர்‌<br>சாவோ சுங்‌ டிங்‌ |அமெரிக்கா<br>அமெரிக்கா |சை (ψ) அல்லது மேசான் (meson) என்னும்‌ பளுவான அடிப்படைத்‌ துகள்‌ கண்டு பிடிப்பு <!---- https://en.wikipedia.org/wiki/J/psi_meson ----> |-{{ts|vtt}} |1977 |பிலிப்‌ W. ஆண்டர்சன்‌<br>சர்‌ நெவில்‌ மாட்‌<br>ஜான்‌ எச்‌. வேன்‌ வீளெக்‌ |அமெரிக்கா<br><br>இங்கிலாந்து<br>அமெரிக்கா |காந்தப் பொருள்‌ மற்றும்‌ படிகமிலாத்‌ திண்மப்‌ பொருள்‌ ஆகியவற்றில்‌ எலெக்ட்ரானின்‌ செயல்பாடு பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1978 |அர்னோ ஏ. பென்சியாஸ்‌<br>ராபர்ட்‌ டபிள்யூ. வில்சன்‌<br>பியோட்டர்‌ எல்‌. காபிட்ஸா |அமெரிக்கா (ஜெர்மனி)<br>அமெரிக்கா<br><br>ரஷ்யா |பெரு வெடிக்‌ கொள்கையைப்‌ பயன் படுத்திக்‌ காஸ்மிக்‌ நுண்ணலைப்‌ பின்னணிக்‌ கதிர் வீச்சின்‌ கண்டு பிடிப்பு<br>தாழ் வெப்பநிலை இயற்பியலில்‌ அடிப்படை |-{{ts|vtt}} |1979 |ஸ்டீவன்‌ வெயின்பர்க்‌<br>ஷெல்டன்‌ எல்‌. கிளாஸ்ஷோ<br>அப்துஸ்சலாம்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா<br><br>பாகிஸ்தான்‌ |துணை அணுத் துகள்களில்‌, மின் காந்த மற்றும்‌ வலிகுறை இடையீடுகளுக்கிடையேயான ஒப்புமை பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1980 |ஜேம்ஸ்‌ W. க்ரோனின்‌<br>வால்‌ L. ஃபிட்ச்‌ |அமெரிக்கா<br><br>அமெரிக்கா |புரோட்டான்‌ முடுக்கியைப்‌ பயன் படுத்திப்‌ புதிய அடிப்படைத்‌ துகளான கே. மேசான்களின்‌ பகுப்பாய்வு மூலம்‌ அணுவினுள்‌ உள்ள சீரற்ற நடத்தை பற்றிய கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1981 |கை. எம்‌. சீக்பான்‌<br>நிகோலஸ்‌ பிளொயெம்‌ பெர்ஜன்‌<br>ஆர்தர்‌. எல்‌. ஸ்சாவ்லோவ்‌ |சுவீடன்‌<br>அமெரிக்கா<br><br><br>அமெரிக்கா |வேதியியல்‌ பகுப்பாய்விற்கான எலெக்ட்ரான்‌ நிற மாலையியல்‌ <br><br>லேசர்‌ நிற மாலையியல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1982 |கென்னத்‌ ஜி வில்சன்‌ |அமெரிக்கா |தொடர்ச்சியான கட்ட மாறு நிலைகளின்‌ பகுப்பாய்வு |-{{ts|vtt}} |1983 |சுப்பிரமணியம்‌ சந்திரசேகர்‌<br>வில்லியம்‌ ஏ. பௌலெர்‌ |அமெரிக்கா (இந்தியா)<br>அமெரிக்கா |விண்மீன்களின்‌ தோற்றம்‌, மற்றும்‌ அழிவு குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1984 |கார்லோ ருபியா<br>சைமன்‌ வாண்டர்மீர்‌ |இத்தாலி<br>நெதர்லாந்து |துணை அணுத் துகள்களான W மற்றும்‌ Z துகள்கள்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1985 |கிளாஸ் வான்‌ கிளிட்சிங்‌ <!---- See : https://en.wikipedia.org/wiki/List_of_Nobel_laureates_in_Physics ----> |மேற்கு ஜெர்மனி |திண்ம நிலை இயற்பியலில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1986 |எர்னஸ்ட்‌ ரஸ்கா<br>ஜெர்டு பின்னிங்‌<br>ஹென்ரிச்‌ ரோரர்‌ |ஜெர்மனி<br>ஜெர்மனி<br>சுவிட்சர்லாந்து |எலெக்ட்ரான்‌ நுண்ணோக்கிக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1987 |அலெக்ஸ்‌ முல்லர்‌<br>ஜார்ஜ்‌ பெர்நாட்ஸ்‌ |சுவிட்சர்லாந்து<br>சுவிட்சர்லாந்து |மிகு வெப்ப நிலை மீக்கடத்திக்‌ கண்டு பிடிப்பு |- | |}</div>{{block_center/e}} <section end="189"/>{{nop}}<noinclude></noinclude> o4123j31p589b9ieu34jh4tlx877l4g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/69 250 646271 1944451 2026-06-10T06:20:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடிப்படையிலேயே சிரில் இவ்வெழுத்து முறையினை அமைத்தார். <b>மேற்குச் சிலாவிய மொழிகள்</b>: போலிசு, செக்கு, சிலாவக்கு, உலுசேசியன் ஆகிய மொழிகள் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலாவிய மொழிகள்|41|சிலி}}</noinclude>அடிப்படையிலேயே சிரில் இவ்வெழுத்து முறையினை அமைத்தார். <b>மேற்குச் சிலாவிய மொழிகள்</b>: போலிசு, செக்கு, சிலாவக்கு, உலுசேசியன் ஆகிய மொழிகள் மேற்குச் சிலாவிய மொழிகளாகும். இவை செக்கசுலோவாக்கியா, போலந்து, செர்மனி ஆகிய நாடுகளில் வழங்குகின்றன. போலிசு மொழியை 65,700,000 மக்களும், செக்கு மொழியை 10,000,000 மக்களும், சிலாவக்கு மொழியை 4,000,000 மக்களும், உலுசேசியன் மொழியை 1,000,000 மக்களும் பேசுகின்றனர். போலந்தில் வாழும் 200,000 மக்களும் பேசும் கசுபியன் மொழியையும், எல்ப்பு நதிக்கரையில் பேசப்பட்டு வழக்கிழந்த பொலாபியன் மொழியையும் போலிசு மொழியுடன் இணைத்து இலெக்டிக்கு மொழிகள் எனத் தனியொரு பிரிவாகக் கருதுவர் மொழியியல் அறிஞர்கள், இதுபோன்றே செக்கு, சிலாவக்கு ஆகிய இரண்டையும் இணைத்துச் செக்கசுலோவக்கு என்று பெயரிட்டனர். சிலாவக்கு மொழி எல்லாச் சிலாவிய மொழி மக்களும் ஓரளவு புரிந்துகொள்ளும் நிலையில் கிழக்கு மேற்கு, தெற்குச் சிலாவிய மொழிக் கூறுகள் சிவைற்றைக் கொண்டுள்ளது. உலுசேசியன் மொழிகளை வெண்டிசு அல்லது சோர்பியன் மொழிகள் என்றும் கூறுவர். மேற்குச் சிலாவிய மொழிகளில் மேற்கு ஐரோப்பிய மொழிகளின் செல்வாக்கினை நன்கு காண முடியும். இவை உரோமன் எழுத்து முறையிலேயே எழுதப்படுவதுடன் இலத்தீன் மொழியின் செல்வாக்கினையும் கொண்டுள்ளன. <b>கிழக்குச் சிலாவிய மொழிகள்</b>: இரசியன், உக்ரேனியன், பைலோ உருசியன் ஆகிய மூன்றும் கிழக்குச் சிலாவிய மொழிகளாகும். இவற்றை முறையே பெரிய உருசியன், சின்ன உருசியன், வெள்ளை உருசியன் எனவும் கூறுவர். இவை உருசிய நாட்டில் வழங்குகின்றன. சுமார் 136,000,000 மக்கள் உருசிய மொழியையும், 38,000,000 மக்கள் உக்ரேனியன் மொழியையும், 7,000,000 மக்கள் பைலோ உருசியன் மொழியையும் பேசுகின்றனர். உருசியன், உக்ரேனியன், பைலோ உருசியன் என மூன்று மொழிகளாகப் பிரிவதற்கு முன்னர் வழங்கிய பொதுவான மொழியைப் பழைய உருசியன் என்று கூறுவர். கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் பழைய ரசியன் உக்ரேனியன், உருசியன் என இரண்டாகப் பிரிந்தது. பின்னர், கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டுகளில் உருசியன் மொழி பைலோரசியன், உருசியன் என இரண்டாகப் பிரிந்தது. இம்மொழிகளில் இன்று உருசிய மொழியே உலக மொழியாகச் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.{{Right|<b>எம்.சு.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>அகத்தியலிங்கம், ஈ.,</b> உலகமொழிகள் - இரண்டாம் பகுதி, அண்ணாமலைநகர், 1969. <section end="சிலாவிய மொழிகள்"/> <section begin="சிலி"/> {{dhr}} <b>சிலி</b> தென்னமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு, இதன் வடக்கில் பெரு நாடும், கிழக்கில் பொலிவியாவும், தெற்கிலும் மேற்கிலும் பசிபிக்கு மாக்கடலும் உள்ளன. இதன் மேற்கிலும் தெற்கிலும் உள்ள பல தீவுகள் சிலிக்கு (Chile) உரியன. சிறப்பாக, ஈசுட்டர் தீவு குறிப்பிடத்தக்கது. சிலி ஏறத்தாழ 4240 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைப் பெற்றுள்ளது. இதன் சராசரி அகலம் சுமார் 192 கி.மீ. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 69 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 275 |oTop = 153 |oLeft = 230 |Location = center |Description = }} {{center|சிலி அமைவிடம்}}<noinclude></noinclude> lrnhp7lq1w2vvqvskc4yowqryd1f8vu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/70 250 646272 1944463 2026-06-10T06:32:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டின் பரப்பு 756, 943 ச.கி.மீ. தலைநகரம் சாண்டியாகோ (Santiago), நாட்டின் மக்கள் தொகை 11,682,260 (1983). தலைநகரின் மக்கள் தொகை 4,132,293 (1983). அண்டார்க்டிகாவின் (Antarctica) ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலி|42|சிலி}}</noinclude>நாட்டின் பரப்பு 756, 943 ச.கி.மீ. தலைநகரம் சாண்டியாகோ (Santiago), நாட்டின் மக்கள் தொகை 11,682,260 (1983). தலைநகரின் மக்கள் தொகை 4,132,293 (1983). அண்டார்க்டிகாவின் (Antarctica) ஒரு பகுதியிலும் சிலி உரிமை கொண்டாடுகிறது. ஒழுங்கற்ற தெற்குக் கடலோரத்தைக் கொண்ட சிலி நாட்டில் பல துறைமுகங்களும் பல கடற்கழிகளும் உள்ளன. இத்தாட்டின் வடக்குப் பகுதி பாலைநிலம், இதற்கு அட்டகாமா (Atacama) என்று பெயர். வெப்பம் நிறைந்த இந்த வறண்ட பகுதியில் மிகுதியாகத் தாதுப் பொருள்கள் கிடைக்கின்றன. நாட்டின் நடுப்பகுதி ஒரு பள்ளத்தாக்கு. இது நீர்வளமும் நிலவளமும் மிகுந்ததாக உள்ளது. மக்கள் இங்கு வேளாண்மையைச் சிறப்புறச் செய்து வருகின்றனர். நாட்டின் தெற்குப் பகுதி மலைப்பாங்கானது. குளிர் மிகுதியாக உள்ள இப்பகுதியில் காடுகள் பல உள்ளன. மிகுதியான மழை எல்லாக் காலத்திலும் இங்குப் பெய்கிறது. இந்நாட்டின் ஆறுகள் மிகக் குறுகியனவாக இருந்தபோதிலும், மிக விரைவாக ஓடுகின்றன. சில ஆறுகளே தீர்ப்பாசனத்திற்குப் புயன்படுத்தப்படுகின்றன. சிலி நாட்டில் பல தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. முக்கியமாக, வெடியகி என்னும் உப்பியற் பொருள் (Nitrate) குறிப்பிடத்தக்கது. உலகிலேயே இந்நாட்டில்தான் இயற்கை வெடியகி மிகுதியாகவும், பூமியின் மேற்புறத்திலும் கிடைக்கின்றது. அடுத்து, இங்கு மிகுதியாக உள்ள தாதுப் பொருள் செம்பு. மேலும், மங்கனம், வெள்ளி, பொன், இரும்பு, நிலக்கரி முதலியனவும் கிடைக்கின்றன. தியரா-நெல்-பியூகோ (Tierra-del-Fuego) என்னும் நகரில் எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இந்நாட்டுக் காடுகளிலிருந்து மிகுதியான மரங்கள் கிடைக்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 70 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 185 |oTop = 245 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|சாண்டியாகோ நகரம்}} இங்கு நடைபெறும் கைத்தொழில்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை: மருந்து தயாரித்தல், கண்ணாடி உற்பத்தி, புகையிலைப் பொருள்கள் தயாரித்தல், காகிதம் செய்தல், மிதி அடிகள் உற்பத்தி, பட்டுநெசவு, கம்பள உற்பத்தி, சராாயம் தயாரித்தல் ஆகியனவாம். கால்நடை வளர்த்தலும் சுரங்கத் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 70 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 160 |oTop = 178 |oLeft = 188 |Location = center |Description = }} {{center|சிலி நாட்டைச் சார்ந்த அழகுமிக்க தீவு}} <b>வரலாறு</b>: இசுபானியர் (Spaniards) கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வருவதற்கு முன்பு அரௌகானிய இந்தியர் (Araucanian Indians) என்ற ஆதிகுடிகள் நீண்டகாலமாக இந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய எதிர்ப்புக் காரணமாக கி.பி. 1535-36-இல் இசுபானியர் இங்குக் குடியேற முயன்றது தோல்வியுற்றது. ஆனால், மீண்டும் கி.பி. 1540-இல் பெட்ரோ-டி-வால்டீவியா (Pedro-de-Valdivia) என்பவனின் தலைமையின்கீழ் இசுபானியர் சிலியுள் நுழைந்து எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு கி.பி. 1541-இல் சாண்டியாகோ குடியேற்றத்தை நிறு-<noinclude></noinclude> j4us1tbfublp3wxwq2iyyibc1im5pyf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/124 250 646273 1944475 2026-06-10T06:54:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கி.பி. 1790–91–ஆம் ஆண்டுச் சட்டங்களின்படி இம்மாவட்டம் நிறுவப்பெற்றது. இதன் மக்கள்தொகை 689000 (1978). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கொலம்பியா மாவட்டம்"/> <section begin="கொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலராடோ|98|கொலராடோ}}</noinclude>கி.பி. 1790–91–ஆம் ஆண்டுச் சட்டங்களின்படி இம்மாவட்டம் நிறுவப்பெற்றது. இதன் மக்கள்தொகை 689000 (1978). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கொலம்பியா மாவட்டம்"/> <section begin="கொலராடோ"/> {{dhr}} {{larger|<b>கொலராடோ</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு மாநிலம். மேற்கு மத்திய மாநியமாக இடம் பெற்றுள்ள இம்மாநிலத்தின் தலைநகரம் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 124 |bSize = 480 |cWidth = 210 |cHeight = 159 |oTop = 160 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|கொலராடோ}} தென்வர் (Denver) ஆகும். பியூயெப்ளோ, கொலராடோ, சுபிரிங்சு, கிரீலி ஆகியன இங்குள்ள முக்கிய நகரங்கள். இது கி.பி. 1876–இல் தனி மாநிலத் தகுதி பெற்றது. கொலராடோ (Colorado) ‘இராக்கி மலை மாநிலம்’ எனவும் ‘நூற்றாண்டு நீடித்த மாநிலம்’ (Centennial State) எனவும் வழங்கப்படுகிறது. இம்மாநிலம் 270,000 ச.கி.மீ. பரப்பளவும், 2,207,259 (1970) மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள செங்குத்தான, மிக உயர்ந்த, பனி படர்ந்த பைக்சு சிகரம் (Pikes Peak) அழகும் கவர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றது. இச்சிகரம் இராக்கி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது கொலராடோவின் பரப்பளவில் 2/5 பங்கு உள்ளது. இசுபானிய மொழியில் கொலராடோ என்பது சிவப்பு அல்லது செம்மை எனப் பொருள்படும். முதலில் ததியைக் குறிக்கப்பயன்பட்டுப் பின்னர் நாட்டையே இச்சொல் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கொலராடோ நகரம் கொலராடோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பசிபிக்குப் பெருங்கடலுக்கும் மிசிசிப்பி நடுக்கும் இடையிலும் கனடிய எல்லைக்கும் மெக்சிகோ எல்லைக்கும் இடையிலும் அமைந்துள்ள கொலராடோ மாநிலம், ஏறத்தாழச் செவ்வக வடிவில் உள்ளது. கிழக்கு மேற்கில் 620 கி.மீ. தொலையும், தெற்கு வடக்கில் 443 கி.மீ. தொலைவும் கொண்டு, மிக {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 124 |bSize = 480 |cWidth = 375 |cHeight = 222 |oTop = 352 |oLeft = 41 |Location = center |Description = }} {{center|பைக்சு சிகரம்}}<noinclude></noinclude> mer11tmy1bqzf83aw1ds2qryhrkctni பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/71 250 646274 1944476 2026-06-10T06:54:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வினர், இசுபானிய ஆதிக்கம் வேருன்றியது. இதை எதிர்த்துச் சிலி மக்கள், கி.பி. 1310-இல் விடுதலைப் போரைத் தொடங்கினர். சான் மார்ட்டின் (John Martin) என்பான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலிமென், என்றிச்சு|43|சிலிமென், என்றிச்சு}}</noinclude>வினர், இசுபானிய ஆதிக்கம் வேருன்றியது. இதை எதிர்த்துச் சிலி மக்கள், கி.பி. 1310-இல் விடுதலைப் போரைத் தொடங்கினர். சான் மார்ட்டின் (John Martin) என்பானின் தலைமையின்கீழ், அடுத்துள்ள அர்சண்டைனாவில் விடுதலைப் போர் ஏற்பட்டதால், அத்தலைவனின் ஆதரவு சிலி மக்களுக்கும் கிடைத்தது. சாக்காதுக்கோ (Chacavaco) என்னுமிடத்திவ நடந்த போரில் இசுபானியப் படை தோல்வி கண்டது (கி.பி.1817). உடனே, அடுத்த ஆண்டில் சிலி விடுதலை பெற்று ஒரு குடியரசாகியது. ஓ’கிகின்சு (Higgins) என்பவன் சிறிது காலம் இங்கு வல்லாட்சி நடத்தினாள். நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு கி.பி.1825-இல் வகுக்கப்பெற்றது. இதன்படி குடியரசுத் தலைவர் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆளவை மன்றம் (Senate), ஆட்பேர் மன்றம் (Chamber of Deputers) என்ற அவைகளைக் கொண்ட ஒரு சட்டசபை அமைக்கப்பட்டது. மக்களாட்சித் துறையில் போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால், சிலி மக்களின் ஆட்சி அமைப்பு அடிக்கடி மாறுதல்களுக்கு உட்பட்டது. சருவாதிகார முறையில் பல சிக்கல்களுக்குத் தீர்வு காண நேர்ந்தது. புதிய அரசியலமைப்பு 1981-ஆம் ஆண்டு முதல் நிலவி வருகிறது. இதன்படி எட்டு ஆண்டுகள் சென்றபின் (1981 முதல்) முழுக்குடியாட்சி முறை செயற்படும் என்றும், அது வரை நாட்டின் தலைவர் சருவாதிகார முறையில் செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மாநிலங்களைக் கொண்ட சிலி, ஆட்சி முறை வசதிக்காக 15 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் ஆளுநர் உண்டு.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சிலி"/> <section begin="சிலிமென், என்றிச்சு"/> {{dhr}} <b>சிலிமென், என்றிச்சு</b> செருமானியத் தொல்லியலறிஞராவர், இவர் திராய் (Troy), மைசினே (Mycenae), திரின்சு (Tiryns) போன்ற பண்டைய நகரங்களை அகழாய்வு செய்து புகழ் பெற்றவர். சிலிமென், என்றிசசு (Schliemann, Heinrich) கி.பி. 1822-ஆம் ஆண்டு சனவரி மாதம் 6-ஆம் நாள் செருமனியில் மெக்லன்பர்கிலுள்ள (Mecklenburg) நியூபுகவு (Neubukow) என்ற இடத்தில் பிறந்தார். வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கிரீசை உலகிற்கு வெளிப்படுத்தியவர் என இவர் போற்றப்படுகிறார். சிலிமேனின் தந்தை ஆயராக இருந்தவர். தம் மகனுக்குத் திராய் நகரத்தைப் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் அளித்தார். ஓமரின் கவிதைகளில் கூறப்பட்டுள்ள வரலாற்று நகரங்களைக் கண்டறியும் ஆர்வம் இளமையிலேயே இவரது மனத்தில் எழுந்தது. சிலிமேன் தம் 14-ஆம் வயதில் மளிகைக் கடையில் சேர்ந்தார். பல ஆண்டுகள் அங்குப் பணிபுரிந்தபின் உடல்நலக் குறைவால் அப்பணியிலிருந்து விலகி. அம்பர்க்கிலிருந்து வெனிசுலாச் செல்லும் கப்பலில் பணியாளராகச் சேர்ந்தார். தச்சுக் கடற்கரையில் அக்கப்பல் உடைந்த பின் ஓர் அலுவலகத்தில் ஊழியராகவும் ஆம்சுடர்டாமில் ஒரு நிறுவனத்தில் கணக்கெழுத்தராகவும் பணியாற்றினார். இவர் பல மொழிகளைத் தடையின்றிப் பேசுவதிலும் நினைவாற்றலிலும் வல்லவராக விளங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 71 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 135 |oTop = 112 |oLeft = 217 |Location = center |Description = }} {{center|சிலிமென் என்றிச்சு}} இவர் பணிபுரிந்த நிறுவனம் இவரை கி.பி. 1846-இல் புனித பீட்டர்சுபர்க்கிற்கு அனுப்பிவைத்தது. இவர் கி.பி. 1852-இல் எகதரினா இலைசின் (Ekaterina Lyschin) என்னும் பெண்ணை மணந்தார். இவர் 1850-ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடிமகனானார். இவர் முப்பத்தாறாம் வயதில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியலை ஆய்வதில் ஈடுபட்டார். கிரீசு, இத்தாலி, இசுகாண்டி நேவியா, செருமனி, சிரியா ஆகிய நாடுகளில் முழுவதுமாகச் சுற்றிய என்றிச்சு இந்தியா, சீனா, சப்பான் ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். இவர் கி.பி. 1868-ஆம் ஆண்டு கிரீசிற்குச் சென்று ஓமற்குறிப்பிட்ட பண்டைய நகரங்களைப் பார்வையிட்டார். அது குறித்து ஓர் ஆய்வு நூலையும் வெளியிட்ட இவர் இசார்விக்கு என்னும் இன்றைய பகுதியே அன்றைய திராய்நகரம் எனக் குறிப்பிட்டார். உருசிய நாட்டைச் சார்ந்த இவர் மனைவி எகதிரினாவை மணவிலக்குச் செய்துவிட்டுக் கிரீசு நாட்டைச் சார்ந்த பள்ளி மாணவி சோபியா எங்கசுட்ரோமனசு (Sophia Engastromenos) என்பவளை மணம்புரிந்து கொண்டார்.{{nop}}<noinclude></noinclude> dffr6ouezzoqdqwsx9a2325v5lzigkg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/72 250 646275 1944482 2026-06-10T07:08:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிரீசின் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாற்றை உருவாக்கிய பெருமை சிலிமெனையே சாரும். இசார்லிக்கில் கி.பி. 1871-இல் அகழாய்வுகளை மேற்கொண்ட இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலிமென் என்றிச்சு|44|சிலுவைப் போர்கள்}}</noinclude>கிரீசின் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாற்றை உருவாக்கிய பெருமை சிலிமெனையே சாரும். இசார்லிக்கில் கி.பி. 1871-இல் அகழாய்வுகளை மேற்கொண்ட இவர் கட்டடங்களின் அழிபாடுகளையும் பல தொன்மைச் சின்னங்களையும் வெளிப்படுத்தியதுடன் தங்க அணிகலன்கள் பலவற்றயுைம் கண்டுபிடித்தார். தங்க அணிகலப் புதையல் (Priam) அரசருடையது பிரயாம் என இவர் கருதினார். இவர் கண்டுபிடித்தவற்றைத் திரோசன் அரும்பொருள்கள் (Trojan Antiquity) என்ற நூலில் குறித்துள்ளார். ஆர்கோமினசு (Orchomenus) என்ற இடத்தில் கி.பி. 1874-76-ஆம் ஆண்டுகளில் இவர் அகழாய்வுகளை மேற்கொண்டார். மைசீனேவில் அகழாய்வை மேற்கொண்ட இவர் கி.பி. 1876 ஆகசுட்டு மாதம் சிங்க நுழைவாயிற் பகுதியிலும், நகர அரணின் உட்பகுதியிலும் குழிகளைத் தேர்ந்தெடுத்து அகழ்ந்தார். இவ்வகழாய்வுகளில் பொன் புதையலும், வெள்ளி, செம்பு, தந்தப் பொருள்களும் பெருமளவில் கிடைத்தன, இவையாவும் அகமெம்னன் (Agamemnon) கல்லறையைச் சார்ந்த பொருள்கள் என இவர் கருத்துத் தெரிவித்தார். மைசீனே அகழாய்வைக் குறித்து கி.பி. 1878-ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டார். இதாகாப் பகுதியில் செய்த அகழாய்வில் யாதொரு பயனும் கிடைக்காத நிலையில் இசார்விக்கில் மீண்டும் அகழாய்வுகளை இவர் கி. பி. 1878-இல் மேற் கொண்டார். அக்காலத்திலேயே திராய் நகரை மீண்டும் அகழாய்வுகள் செய்தார். திராய் நகரில் முதலில் அகழாய்வு மேற்கொண்டபொழுது இவர் மனைவி சோபியா உதவி புரிந்தார். எமில் பர்னாபு (Emile Burnouf) என்பவர் கி.பி. 1879-இல் இவருக்கு ஆய்வில் உதவிகள் புரிந்தார். செருமனியைச் சார்ந்த உருடால்பு விர்சௌ (Rudolf Virchow) என்பவரும் இவ்வகழாய்வுகளில் கலந்து கொண்டார். இறுதிக் கால அகழாய்வுகளில் சிலிமெனுக்கு உதவியாக வில்கெல்ம் தோர்பெல்டு (Wihelm Dorfeld) என்பவர் உதவியாளராக இருந்தார், தோர்பெல்டு, ஒலிம்பியா அகழாய்வுகளில் பங்கு கொண்டவர். அவர் திராய் நகருக்கு வரவழைக்கப்பட்டார். தொல்லியலில் மிக்க ஈடுபாடு கொண்ட அவர் மண்ணடுக்காய்வில் (Stratigraphy) சிறந்த வல்லுநராக விளங்கினார். சிலிமென் அவருடன் இணைந்து கி.பி. 1884-இல் மைசீனேவிற்கு அருகில் திரின்சு (Tiryns) என்னும் அரண் நகரை அகழ்ந்தார். சிலிமென், தம் இறுதிக் காலத்தின் காதுவலியால் துன்பப்பட்டார். அதற்காகச் சிகிச்சை பெற ஐரோப்பா முழுவதும் சென்றார். ஆயினும் அத்துன்பத்தை எவராலும் நீக்க இயலவில்லை. நேப்பிள்சு நகரச் சதுக்கத்தின் வழியாக கி. பி. 1890-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் நாள் நடந்து சென்றபொழுது வலி அதிகமாகி மறுநாள் உயிர் நீத்தார். சிலிமென், ஓமரின் திராய் நகரைக் கண்டுபிடித்ததுடன் ஓமருக்கும் முன்பு இருந்த செப்புக் காலக் கிரீசை உலகிற்கு வெளிப்படுத்தினார். துருக்கியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டு புதிய நாகரிகங்களைக் கண்டுபிடித்த பெருமை சிலிமெனைச் சாரும். வரலாற்றுக்கு முற்பட்ட கிரீட்டு நாகரிகத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும், தொல்லியலின் சிறப்பை இதழ்கள் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்திய பெருமையும் சிலிமெனையே சாரும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சிலிமென், என்றிச்சு"/> <section begin="சிலுவைப் போர்கள்"/> {{dhr}} <b>சிலுவைப் போர்கள்</b>: இசுலாமியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் புனித இடங்களைப் (Holy Places) பற்றி நடைபெற்ற போர்களுக்குச் சிலுவைப் போர்கள் என்பது பெயர், கிறித்தவர்கள், சிலப்புத் துணியிலான சிலுவைச் சின்னத்தைத் தங்கள் ஆடையில் அணிந்துகொண்டு போர் செய்தமையால் இலை சிலுவைப் போர்கள் எனப்பட்டன. எட்டுச் சிலுவைப் போர்கள் நடைபெற்றனவெனக் கூறப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 72 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 195 |oTop = 230 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|முதலாம் இரிச்சர்டு மூன்றாம் சிலுவைப்போரில்<br>கலந்து கொள்ளுதல்}}<noinclude></noinclude> jzvv0qjqa2nz9fcnzxv9lqv480jxymb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/73 250 646276 1944492 2026-06-10T07:18:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயேசு கிறித்து பிறந்து, வளர்த்து, மறைந்த இடம் என்பதால் பாலசுத்தீன நாட்டைப் புனித இடமாகக் கிறித்தவர்கள் கருதுகின்றனர். அதில் அடங்கியுள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலுவைப் போர்கள்|45|சிலுவைப் போர்கள்}}</noinclude>இயேசு கிறித்து பிறந்து, வளர்த்து, மறைந்த இடம் என்பதால் பாலசுத்தீன நாட்டைப் புனித இடமாகக் கிறித்தவர்கள் கருதுகின்றனர். அதில் அடங்கியுள்ள பெத்லகேம் மற்றும் செருசல நகரில் உள்ள புனித இடங்களுக்கு ஐரோப்பியக் கிறித்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டு வந்தனர். அராபிய முசுலீம்கள் கி.பி.637-இல் செருசலத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கிறித்தவப் பயணிகளைத் துன்புறுத்தவில்லை. அவர்கள் பாலத்தீனத்திற்குப் புனித பயணம் மேற்கொள்ளுவதைத் தடை செய்யவுமில்லை. பின்னர் கி.பி. 1076-இல் செருசலத்தைத் துருக்கியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அவர்கள் கிறித்தவப் பயணிகளை மிகவும் துன்புறுத்தினர். பிரான்சு நாட்டைச் சார்ந்த பீட்டர் என்ற கிறித்தவ முனிவர் ஐரோப்பாயின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புனித இடங்களை மீட்கப்போர் தொடுக்க வேண்டினார். அவருடைய பேச்சாற்றல் கேட்போர் மனத்தை நெகிழ வைத்ததோடல்லாமல் அவர்களை வீறிட்டெழவும் செய்தது. செருசலத்தைத் துருக்கியரிடமிருந்து மீட்டு அங்குக் கிறித்தவப் பேரரசை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடையே வளர்த்தார். இந்தச் சூழ்நிலையைத் தமக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போப்பு இரண்டாம் அர்பன் முடிவு செய்தார். கிளர்மாண்டு என்னும் ஊரில் கி.பி. 1905-இல் ஒரு கிறித்தவப் பேரவையைக் கூட்டினார். கிறித்தவர்கள் படும் துன்பங்களை எடுத்துக்கூறி, முசுலீம்களிடமிருந்து புனித நாட்டை மீட்கும்படி கேட்டுக் கொண்டார். அங்குக் கூடியிருந்த மக்கள் அதைக் கடவுளின் ஆணையாகக் கருதிப் போர்புரிய ஆயத்தமாயினர். போப்பு அவர்களுக்குச் சிலுலையை வழங்கி அதனைச் சின்னமாகத் தங்கள் உடைகளில் அணியும்படி கூறினார். கிறித்தவப் படை கி.பி.1096-இல் கிழக்கு நோக்கிப் புறப்பட்டது. சமயக் காரணங்களேயன்றி வேறுசில காரணங்களும் இப்போர்களுக்கு உண்டு. இடைக்காலத்தில் நிலமானிய முறை நடைமுறையில் இருந்தது. நிலமானியப் பிரபுக்கள் வீரச்செயல்கள் புரிய விருப்பங்கொண்டிருந்தனர். சிலுவைப் போர்கள் அவர்களுடைய வீரத்தைக் காட்டுவதற்கு வாய்ப்பளித்தது. விலங்குகள் போல் நடத்தப்பட்டு வந்த விவசாய அடிமைகள் (Serfs) இப்போர்களில் சேர்வதால் சுதந்திரம் பெறுவர் என்றும், கடன்காரர்கள் தங்களுடைய கடன் தொல்லைகளில் இருந்து மீளலாம் என்றும் கிளர்மாண்டு சபையில் அறிவிக்கப்பட்டது. எனவே, அவர்கள் இப்போரில் சேர்ந்தனர், வணிகர்கள் புதிய வழிகளை ஆராய்ந்தறிந்து தங்களுடைய கீழை நாட்டு வாணிகத்தைப் பெருக்க இப்போரில் கலந்து கொண்டனர். முதலாவது சிலுவைப்போர் 1096-இல் தொடங்கியது. இதில் ஐரோப்பிய அரசர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை, பல பிரபுக்கள் இதில் பங்கு கொண்டனர். அவர்களுள் காட்பிரேயும் (Godfrey) பால்டுவினும் (Balwin) முக்கியமானவர்கள், அவர்கள் செருசலத்தைக் கைப்பற்றி அங்குக் கிறித்தவ அரசு ஒன்றைக் காட்பிரேயின் தலைமையில் அமைத்தனர். அவ்வாறே எடிசா (Edessa), ஆண்டியாக்கு (Antioch) ஆகிய இடங்களிலும் கிறித்தவ அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. புனித இடங்களைக் காக்கவும், புனித பயணிகளுக்கு உதவவும் சமய வீரர்கள் அடங்கிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் சான் முனிவரின் வீரர்கள் (Knight of St. John), கோயில் வீரர்கள் (Knight Templers) என்னும் அமைப்புகள் குறிப்பிடத்தக்களவாகும். எடிசாவில் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவ அரசை முசுலீம்கள் வீழ்த்தியதால் இரண்டாம் சிலுவைப்போர் கி.பி. 1147இல் தொடங்கியது. இம்முறை பிரான்சு நாட்டரசர் ஏழாம் லூயியும், செருமானியப் பேரரசர் மூன்றாம் கான்ராடும் கலந்துகொண்டனர். அவர்கள் தாமசுகசு நகரம் அடைவதற்குள் அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதனால், கிறித்தவர்கள் தோல்வி கண்டனர். சலாவுத்தீன் (Salaudin) கி.பி. 1187-இல் செருசலத்தைக் கைப்பற்றினார். எனவே, முன்றாம் போர் தொடங்கியது. இதில் செருமானியப் பேரரசர் பிரெடரிக் பார்பரோசாவும் பிரெஞ்சு அரசர் இரண்டாம் பிலிப் அகசுடசும் இங்கிலாந்து மன்னர் முதலாவது இரிச்சர்டும் கலந்துகொண்டனர். போகும் வழியில் நீரில் மூழ்கிப் பிரெடரிக்கு இறந்துவிட்டார். ஏக்கர் (Acre) என்ற இடத்தை அடைந்த பிறகு பிலிப் அகசுடசு. இரிச்சாருடன் சண்டை போட்டுக் கொண்டு நாடு திரும்பிவிட்டார். தனியாக விடப்பட்ட இரிச்சர்ந்தொடர்ந்து போரிட்டு வந்தார். இறுதியில் சலாவுத்தீனுடன் சமாதானம் செய்துகொண்டு வெறுங்கையுடன் நாடு திரும்பினார். ஆயினும், கிறித்தவர்கள் புனித இடங்களுக்குச் சென்றுவரச் சலாவுத்தீன் அனுமதிதந்தார். அதற்காக அவர்கள் சிறுவரியொன்றைச் செலுத்தவேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. நான்காம் சிலுவைப்போர் கி.பி. 1202-இல் தொடங்கியது. போப்பு மூன்றாம் இன்னொசென்ட்டு இதற்குக் காரணமாவார். புனித இடங்களை மீட்கும் நோக்கம் நிறைவேறவில்லை. அதற்குமாறாகக் கிறித்தவ ஆட்சி நடைபெற்று வந்த கான்சுடாண்டி<noinclude></noinclude> ikwwtlqm6b9c8k87w1bg8gl6j78wrht பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/74 250 646277 1944498 2026-06-10T07:28:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நோபிளைத் தாக்கி அந்நகரைச் சூறையாடினர். அங்கு இலத்தீன் அரசு ஒன்று நிறுவப்பட்டது. கிரேக்கத் திருச்சபை போப்பின் அதிகாரத்துக்கு உட்படுத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிலுவைப் போர்கள்|46|சிலுவைப் போர்கள்}}</noinclude>நோபிளைத் தாக்கி அந்நகரைச் சூறையாடினர். அங்கு இலத்தீன் அரசு ஒன்று நிறுவப்பட்டது. கிரேக்கத் திருச்சபை போப்பின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஐந்தாம் சிலுவைப்போரை (கி.பி. 1218-1221) குழந்தைகள் சிலுவைப்போர் என்பர். செருமானியச் சிறுவன் நிக்கோலசும், பிரெஞ்சுச் சிறுவன் இசுடீப்னும் இவர்களுக்குத் தலைவர்கள். 45,000 குழந்தைகள் இதில் பங்கேற்றனர். ஆல்ப்சு மலையைக் கடந்து இத்தாலிக்குச் சென்றனர். அங்குப் பலர் இறந்தனர். பலர் மத்தியதரைக் கடலைக் கடக்கும்போது உயிரிழந்தனர். வேறு பலர் பசியால் மடிந்தனர். மற்றும் பலர் முசுலீம்களால் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். ஆநாம் சிலுவைப்போர் (கி.பி.1228-1229) செருமானியப் பேரரசர் இரண்டாம். பிரெடரிக்கின் தலைமையில் நடத்தப்பட்டது. சிலுவைப் போரை அவர் நடத்தப் போவதாகப் பல முறை வாக்களித்தும் அதைச் செய்யாமையால் அவரைப் போப்பு மதவிலக்குச் செய்தார். அத்தண்டனையிலிருந்து மீளச் சிலுவைப்போர் ஒன்றை அவர் மேற்கொண்டார். அச்சமயம் முகலிம்களுக்கிடையே செருசலத்தில் சச்சரவு நடந்துகொண்டிருந்தது. அது பிரெடரிக்கு மன்னருக்குத் துணையாயிற்று. முசுலிம்கள் அவருடன் உடன்படிக்கை செய்துகொண்டனர், செருசலத்தின் மன்னராகப் பிரெடரிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டார். செருசலம் மீண்டும் கி.பி. 1324இல் முசுலிம்கள் கைகளுக்கு மாறியது. பிரெஞ்சு மன்னர் ஒன்பதாம் லூயி செருசலத்தை மீட்க ஏழாம் சிலுவைப்போரை நடத்தினார். அவர் தாமெய்ட்டா (Damietta) துறைமுகத்தைக் கைப்பற்றினார்; கெய்ரோ (Cairo) நோக்கி முன்னேறினார். வழியில் மன்சூரா என்றும் இடத்தில் நடந்த போரில் அவர் தோல்வி கண்டார். உலூயி சிறைப்பட்டார் பின்னர்ப் பணம் கொடுத்து அவரை விடுவித்துக்கொண்டனர். எட்டாம் சிலுவைப் போரை ஒன்பதாம் லூயி கி.பி. 1270-ல் நடத்தினார். துனீசியாவிலுள்ள கார்த்தேசு என்றும் இடத்தில் பாசறையிட்டு இருந்த போது அவரது பாசறையில் தொற்றுநோய் பரவி எண்ணற்ற வீரர்களைப் பலிவாங்கியது. உலூயியும் அவர்களுள் ஒருவர். அச்சமயம் இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு துனீசியாவிற்குச் சென்று சிலுவைப் போரில் பங்குகொண்டார். அவர் ஏக்கருக்குச் சென்று சில நாள்கள் தங்கிவிட்டு நாடு திரும்பினார். இசுலாமியர் மீண்டும் கி.பி. 1291 இல் ஏக்கரை மீட்கப் போர் தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டனர். கிறித்தவர்களுடைய தோல்விக்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் அவர்களிடம் ஒற்றுமையில்லை. நல்ல தலைவர்களை அவர்கள் பெற்றிலர். தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட வீரத்தைக் காட்டிப் பேரும் புகழும் பெறவிரும்பினர், புனித இடங்களை அடைய வீரர்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டியதாக இருந்தது. வழியில் பல இன்னல்களை அவர்கள் சந்தித்தனர். பேரரசர்களுக்கும் போப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் மக்களுடைய சமய ஆர்வத்தைக் குறைத்துவிட்டன. கைப்பற்றிய புனித இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கிறித்தவ அரசுகள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டன. மேலும், கான்சுடாண்டி நோபிளைத் தாக்கியதால் கிழக்கு உரோமானியப் பேரரசர்கள் சிலுவைப்போர் வீரர்களுக்கு உதவுவதற்கு மாறாக இடையூறுகளை விளைவித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாகத் துருக்கிய வீரர்கள் வீரத்துடன் போர் புரிந்தமையாலும், சமய உணர்வு அவர்களிடம் மேலிட்டெழுந்திருந்தமையாலும், சலாவுத்தீன் போன்ற சிறந்த தலைவர்களைக் கொண்டிருந்தமையாலும் அவர்கள் வெற்றி கண்டனர். சிலுவைப் போர்களில் எண்ணற்ற ஐரோப்பியர்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான பணம் வீணாயிற்று. ஐரோப்பாவின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. அரசர்களுடைய அதிகாரத்தைப் பெருக்க அவை உதவின. அரசருடைய அதிகாரப் பெருக்கத்திற்குத் தடையாக இருந்த நிலமானியத் திட்டம் அழிந்தது. அத்திட்டத்தில் முக்கிய அங்கம் வகித்திருந்த பிரபுக்கள் பலர் இப்போர்களில் உயிரிழந்தனர். போர்க்களத்தில் இருந்து திரும்பிய பலர் ஏழைகளாகி விட்டனர். மற்றொரு அங்கமான விவசாய அடிமைகள் போரில் ஈடுபட்டு விடுதலை பெற்றுவிட்டனர். மேலும், நகரங்கள் போருக்குத் தேவையான பணத்தைப் பிரபுக்களுக்குக் கொடுத்துவிட்டுச் சுதந்திரம் பெற்றுவிட்டன. அதனால், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் வாணிகம் பெருகியது. மேலும், ஆசியாவுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக ஐரோப்பியர்கள் சர்க்கரை, நறுமணப் பொருள்கள் போன்ற புதிய பொருள்களை அறிந்தனர். அவற்றை விரும்பலாயினர். அதனாலும் வாணிகம் வளர்ந்தது. நகரங்கள் தோன்றின புதிய நடுத்தர வகுப்பாரும் தோன்றினர். திருச்சபை இப்போர்களை நடத்தக் காரணமாக இருந்தமையால் அதன் அதிகாரம் வளர்ந்தது. இப்போர்கள் காரணமாக அரேபிய நாகரிகம் ஐரோப்பாவில் பரவியது. அரேபிய மருத்துவ முறை, வேதியியல், கட்டடக்கலை ஆகியவை ஐரோப்பியரின் மனத்தைக் கவர்ந்தன. ஐரோப்பாவில் தோன்-<noinclude></noinclude> b68b1x5va6ecp0252mq20x0n6wbzl8b பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/334 250 646278 1944503 2026-06-10T07:33:37Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|312 நோய்க்குறியியல்‌}}</noinclude><section begin="190"/>{{fs|110%|<b>நோய்க் குறியியல்‌</b>}} மருத்துவத்தின்‌ ஒரு பிரிவாகிய நோய்க் குறியியல்‌, நோயினால்‌ திசுக்களிலும்‌, உறுப்புகளிலும்‌ ஏற்படும்‌ மாறுதல்களைக்‌ கண்டறிந்து, நோயினை அறிய உதவுகிறது. நோய்க் குறியியலைப்‌ பற்றிக்‌ காண்பதற்கு முன்பு, நலமான நிலையில்‌ உறுப்புகளும்‌, திசுக்களும்‌ அமைந்திருக்கும்‌ விதத்தைப்‌ பற்றி அறிய வேண்டும்‌. அதாவது, உறுப்புகள்‌ திசுக்களின்‌ அமைப்பு, செயல் முறை, வேதி நிலை ஆகியவற்றை நன்கு ஆராய வேண்டும்‌. இதனால்‌, நோய்‌ வாய்ப் பட்ட நிலையில்‌ ஏற்படும்‌ மாற்றங்களைக்‌ கண்டறிய முடியும்‌. ஏனெனில்,‌ நோய்‌ எனப் படும்‌ நிலை இயல்பான நிலையின்றும்‌ மாறு பட்டதாகும்‌. நோய்க்‌ குறியினைப்‌ பின் வரும்‌ வகைகளாகப்‌ பிரிக்கலாம்‌. <b>பொது நோய்க்‌ குறியியல்‌</b>. இப்பிரிவு, பல்வேறு வித நோய்களினால்‌ திசுக்களிலும்,‌ உறுப்புகளிலும்‌ ஏற்படும்‌ பொதுவான மாற்றங்களைக்‌ கொண்டுள்ளது. <b>சிறப்பு நோய்க் குறியியல்‌</b>. இவ்வகையில்‌, ஒரு குறிப்பிட்ட உறுப்பையோ, திசுவையோ தாக்கும்‌ நோய்களினால்‌ ஏற்படும்‌ மாற்றங்களைப்‌ பற்றிக்‌ கூறப்படும்‌. அதாவது, குருதி ஒட்ட உறுப்புகளைத்‌ தாக்கும்‌ நோய்‌, சிறுநீரக உறுப்புகளில்‌ ஏற்படும்‌ நோய்‌ ஆகியவற்றினால்‌ ஏற்படும்‌ மாற்றங்களால்,‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ இப்பிரிவில்‌ விளக்கப் படும்‌. <b>நோயறியும்‌ நோய்க் குறியியல்‌</b>. இது எந்நோய்‌ ஏற்பட்டுள்ளது எனக்‌ கண்டறிய மருத்துவ நிலைகளில்‌ உதவுகிறது. <b>ஆய்வு நோய்க்‌ குறியியல்</b>‌. இது செயற்கையாக ஆய்வக விலங்கினங்களில்‌ ஏற்படுத்தப் படும்‌ நோயினால்‌ உண்டாகும்‌ மாற்றங்களைக்‌ கண்டறிய உதவுகிறது. <b>ஒப்பீட்டு நோய்க் குறியியல்‌</b>. இப்பிரிவில்‌ விலங்கினங்களில்‌ ஏற்படும்‌ நோய்களும்,‌ மனிதர்களில்‌ ஏற்படும்‌ நோய்களும்‌ ஒப்பீடு செய்யப்படுகின்றன. <b>காரண நோய்க் குறியியல்</b>‌. இப்பிரிவில்‌ நோய்க்‌ குறியியலை, நோயுண்டாக்கும்‌ காரணங்களைக்‌ கொண்டு ஆய்வு செய்யலாம்‌. இதனால்,‌ நோயினைத்‌ தடுக்கப்‌ பல்வேறு வழி முறைகளைக்‌ கையாள முடிகிறது. நோயுண்டாக்கும்‌ காரணங்கள்‌ உடலின்‌ உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ உண்டாகின்றன. இவ்வகைக்‌ காரணங்களை இயற்பிய, வேதியிய, உயிரியல்‌ அடிப்படையில்‌ வகைப்படுத்தலாம்‌. உயிரியல்‌ காரணங்களை நுண்ணுயிரியல்‌, நச்சுயிரியல்‌, பூசணக்‌ காளான்களால்‌ ஏற்படும்‌ நோய்க்குறியியல்‌ என மேலும்‌ வகைப் படுத்தலாம்‌. <b>நோயுண்டாக்கக் காரணங்கள்‌</b>. விலங்கினங்கள்‌ சோதித்து அறியப் படும்‌ இவ்வகைக்‌ காரணங்கள்‌ உடனடிக்‌ காரணங்களாகவோ, மறைமுகக்‌ காரணங்களாகவோ, அடிப்படைக்‌ காரணங்களாகவோ இருக்கலாம்‌. நோய்‌ உற்பத்திக் குறியியல்‌ என்பது நோய்‌ உண்டாகக்‌ காரணமாக உள்ள அடிப்படைச்‌ செயல்களைப்‌ பற்றி விளக்குகிறது. காட்டாகப்‌ புற ஊதாக் கதிர்‌, வெண்ணிறத் தோல்‌ உடைய விலங்கினங்‌களில்‌ ஏற்படுத்தும்‌ நோயினைப்‌ பற்றிக்‌ கூறலாம்‌. வெண்ணிறத்‌ தோலில்‌, வடி கட்டும்‌ நிறப்‌ பொருள்கள்‌ இல்லாமையால்‌, இக்கதிர்கள்‌ ஊடுருவி, குருதி நாளங்களில்‌ குருதி கசியும்‌ நிலை அதிகரித்து, சிவப்பு நிற வீக்கங்கள்‌ ஏற்படுகின்றன. இந்நிலையைச்‌ சூரிய–எரிப்பு எனக்‌ கூறுவர்‌. இதற்குத்‌ தோலில்‌ உள்ளவை சுட்டும்‌ நிறப்‌ பொருள்களின்‌ செயல்பாடு அடிப்படையாக விளங்குகிறது. <b>நோய்க் குறிகள்</b>‌. அறிவுப்‌ பிரிவில்‌ பாதிக்கப் பட்ட விலங்குகளோ, மனித இனமோ வெளிப்புறமாகத்‌ தோற்றுவிக்கும்‌ குறிகளைப்‌ பற்றி விளக்கப் படுகிறது. நுரையீரல்‌ வீக்க நோயில்‌, காய்ச்சல்‌, சுவாசத்தில்‌ கடினம்‌, வேக நாடித்‌ துடிப்பு,சளி வெளியேறுதல்‌ போன்ற குறிகள்‌ காணப் படும்‌. <b>நோய்ச்‌ சுவடுகள்</b>‌. நோயினால்‌ நிறத்திலும்‌, உறுப்புகளிலும்‌ ஏற்படும்‌ மாற்றங்களை நோய்ச் சுவடுகள்‌ எனலாம்‌. இம்மாற்றங்கள்‌ கண்களாலும்‌ உருப்‌ பெருக்கியாலும்‌ காணக் கூடியவாறு உள்ளன. எடுத்துக்‌ காட்டாகப்‌ பெரிய அம்மை நோய்,‌ தோலில்‌ ஏற்படுத்தும்‌ மாற்றங்கள்‌ அவற்றின்‌ சுவடுகளாக விளங்குகிறன. நோய் கண்டறியும்‌ முறையில்,‌ நோயுண்டாகும்‌ காரணம்‌, நோய்ச் சுவடு, நோய்க்‌ குறி ஆகியன பற்றி விளக்கப் படுகிறது.நோய்க்‌ காரணி தாக்கிய நாளிலிருந்து நோய்‌ தோன்றும்‌ நாள்‌ வரை நோய்‌ வெளிப் படும்‌ காலம்‌ ஆகும்‌. காட்டாக, வெக்கை நோய்க்கான நச்சுயிரி, விலங்கினத்தைத்‌ தாக்கிய நாளிலிருந்து 4–5 நாள்களுக்குப்‌ பிறகு, நோய்க்‌ குறிகள்‌ தோன்றும்‌. எனவே, வெக்கை நோய்க்கு, நோய்‌ வெளிப்படும்‌ காலம் 4–9 நாள்கள்‌ ஆகும்‌. இக்காலம்‌ சில மணி நேரங்களிலிருந்து, பல ஆண்டுகள்‌ வரை அமையலாம்‌.{{nop}}<noinclude></noinclude> 3opb5vqezzb8c3sdhrgty8nokqiesot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/75 250 646279 1944512 2026-06-10T07:46:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றிய மறுமலர்ச்சிக்கு இப்போர்கள் காரணமாக இருந்தன என்றால் அது மிகையாகாது.{{Right|<b>தி.ஆ.இரா.</b>}} <section end="சிலுவைப் போர்கள்"/> <section begin="சிராவசுத்தி"/> {{dhr}} <b>ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவக்கந்தவர்மனின்...|47|சிவக்கொழுந்து தேசிகர்}}</noinclude>றிய மறுமலர்ச்சிக்கு இப்போர்கள் காரணமாக இருந்தன என்றால் அது மிகையாகாது.{{Right|<b>தி.ஆ.இரா.</b>}} <section end="சிலுவைப் போர்கள்"/> <section begin="சிராவசுத்தி"/> {{dhr}} <b>சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்,</b> ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள நரசசாவ் பேட்டைக்கு அருகில் உள்ள மயிதவோலு என்னுமிடத்தில் கி.பி. 1899-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ நாட்டினை ஆண்டு வந்த யுவமகாராசன் சிவக்கந்தவர்மனால் இச்செப்பேடுகள் வழங்கப்பட்டன. மயிதலோலு சாசனத்தைக் கல்வெட்டறிஞர் டாக்டர் உல்சு (Dr. Hulzsch) இந்தியக் கல்வெட்டியல் (Epigraphica Indica) ஆறாம் தொகுதி 86-89-ஆம் பக்கங்களில் முதன் முதலில் வெளியிட்டார். இச்சேப்பேடுகள் இப்போது சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல்லவ குலத்தினனும், பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவனுமான யுவமகாராசன் சிவக்கந்தவர்மன், ஆந்திர பதத்திலுள்ள விரிபரம் என்னும் கிராமத்தைத் தனது வெற்றி, தருமம், ஆயுள்- ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகப் பூர்வகோட்டி ஆரியன், கோதந்தி ஆரியன் ஆகிய இரு பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிய செய்தியே இச்செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. தான் வழங்குகின்ற இந்தப் பிரமதேயதானத்தை நிறைவேற்றும்படி, இவ்வேந்தன் தான்யகடகத்திலுள்ள தன் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்தமையை இச்செப்பேடுகள் கூறுகின்றன. தானம் வழங்கப்பட்ட கிராமமாகிய விரிபரம் நரசராவ்பேட்டை வட்டத்திலுள்ள விப்ரல்லா என்னும் கிராமமாக இருக்கலாம். சிலர் இரண்டாம் புலிகேசியின் கொய்பரம் செப்பேடுகளில் குறிக்கப்பெறும் விற்பாறு எனும் கிராமமே இது என்பர். எப்படியிருப்பினும், இப்பகுதி, சாசனம் வழங்கப்பட்ட காலத்தில் பல்லவரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது தெளிவு. இதில் எட்டுச் செப்பேடுகள் கோக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கோத்திருக்கும் வளையத்தின் இணைப்பில் அமைக்கப்பட்டுள்ள முத்திரையில், படுத்த நிலையில் உள்ள காளைமாட்டின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 28 வரிகளே பொறிக்கப்பட்டுள்ளன. சாசனம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் செயவர்மனின் கொண்டமுடிச் செப்பேடுகளைப் போன்றுள்ளன. பல்லவர் காலத்திய எழுத்து வடிவங்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இச்செப்பேடுகள் மிகவும் பயன்படும். இதில் காணப்படும் அ,க,ர ஆகிய எழுத்துகளின் நேர்கோடுகள் பெரும்பாலும் நாகார்ச்சுன கொண்டாவின் எழுத்துகளை ஒத்துள்ளன. ஸ.ம ஆகிய எழுத்துகள் சாதாரண பிராமி எழுத்துகளைப் போன்றில்லை. இதனைப் போன்றே ஹ, ஜ, என்னும் எழுத்துகளும் அந்தக் காலத்துப் பிராமி எழுத்து வடிவத்தை ஒத்திருக்கவில்லை. <b>கிரகடகள்ளிச் செப்பேடுகள்</b>: இவை பிராமணர்களுக்குச் சிவக்கந்தவர்மன் அளித்த தானத்தைக் குறிப்பிடுகின்றன, இத்தானம் முன்னதாகவே மகாராசாவான பப்பசுவாமிகள் என்பவரால் வழங்கப்பட்டது. பப்பசுவாமிகள் அளித்த நிலங்களுடன் வேறு சில நிலங்களையும் சேர்த்துச் சிவக்கந்தவர்மன் மறுபடியும் அளித்துப் பட்டயத்தையும் வழங்கினான். மகாராசாவான பப்பசுவாமிகள், சாதாகநி இராட்டிரத்தில் (ஏறத்தாழப் பெல்லாரி மாவட்டம்) சில்லரேக கொடுங்க என்னும் ஊரிலுள்ள தோட்ட நிலத்தை ஆபிட்டி எனும் கிராமத்தில் வசிப்பவர்களும் சில்லரேக கொங்க கிராமத்தை அனுபவித்து வருபவர்களுமான பிராமணர்களுக்குத் தானமாக முன்னாளில் வழங்கினான். பின்னர்ச் சிலகாலங் கழித்து. காஞ்சிபுரத்திலிருந்துகொண்டு, அக்னிட்டோம, வாசபேய, அசுவமேதயாகங்கள் புரிந்த தர்மராசாதிராசனான பல்லவ வேந்தன் சிவக்கந்தவர்மன், அப்பிராமணர்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட நிலங்களுடன் மேலும் சில தியங்களையும் சேர்த்து வழங்கியுள்ளான். இப்பட்டயத்தில் இவ்வேந்தன் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவன் என்றும், யாகங்கள் பல இயற்றியவன் என்றும் கூறப்பட்டுள்ளான். இதனால் இவ்வேந்தன் ஆற்றல் மிக்கவனாகவும் பேரரசனர்கவும் திகழ்ந்தான் என்பது புலனாகும். சித்தம் எனும் மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இச்சாசனம் பிராகிருத மொழியில் உள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இச்செப்பேடுகள் 8 தகடுகளைக் கொண்டுள்ளன. இச்சாசனம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள கிரகடகள்ளி என்னும் ஊரிலுள்ள சென்னப்பா எனும் வணிகரிடமிருந்து வாங்கப்பட்டது. இந்தியக் கல்வெட்டியல் முதல் தொகுதி-இரண்டாம் பக்கத்தில் இது முதன் முதலில் வெளியிடப்பட்டது. இச்செப்பேடுகள் பல்லவர் அரசு நிறுவப்பெற்ற காலத்தைத் கணிக்கப் பேருதவியாக உள்ளன. பட்டிசம்மன் என்னும் அந்தரங்கக் காரியதரிசி இதனை எழுதியுள்ளான்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்"/> <section begin="சிவக்கொழுந்து தேசிகர்"/> {{dhr}} <b>சிவக்கொழுத்து தேசிகர்</b>; காண்க: கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்.<noinclude></noinclude> ghfq02b1ziqc13ayizwutsxwrd1b93p பயனர்:Santharabanu/common.js 2 646280 1944516 2026-06-10T07:54:10Z Santharabanu 15679 importScript('User:Boopalan28012003/effort.js'); 1944516 javascript text/javascript importScript('User:Boopalan28012003/effort.js'); al5r4njiel8wj6wfeos8xt8jkvuqro6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/335 250 646281 1944517 2026-06-10T07:55:33Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1944517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோய்க் குறியியல்‌ 313}}</noinclude>நோய்‌ உண்டாகும்‌ வழி, எவ்வகை உறுப்புகள்‌ அல்லது திசுக்களின்‌ வழியாக நோய்‌ சென்று, அதன்‌ முடிவு நிலையை அடைகிறது என்பதைப்‌ பற்றி விளக்குகிறது. நோயின்‌ தொடக்கம்‌, விரைவாகவோ, மெதுவாகவோ இருக்கலாம்‌. மேலும்‌, பாதிக்கப்பட்ட விலங்கினம்‌, நோயினால்‌ விடுபட்டு, இயல்பு நிலையை அடையலாம்‌ அல்லது இறப்பையும்‌ ஏற்படுத்தலாம்‌. நோய்க்‌ குறியியல்‌ வல்லுநர்‌ இறந்த விலங்கினத்தை அறுவை செய்து காணும்‌ மாற்றங்களைப்‌ பிண ஆய்வில்‌ காணலாம்‌. நோய்த்‌ திசு ஆய்வினைக்‌ கொண்டு பாதிக்கப்பட்ட உயிருடன்‌ உள்ள விலங்கினத்திலிருந்து எடுக்கப்படும்‌ திசுக்களைக்‌ கொண்டு நோய்‌ அறியப் படுகிறது. <b>நோய்க்‌ காரணங்கள்</b>‌. நோய்க்‌ காரணங்களை இருவகையாகப்‌ பிரிக்கலாம்‌. அவற்றில்‌ ஒன்று அடிப்படைக்‌ காரணம்‌, மற்றொன்று நோயினைத்‌ தோற்றுவிக்கும்‌ காரணம்‌. நோய்க்கான அடிப்படைக்‌ காரணம்‌ மரபியல்‌ வழியாகவும்‌, மரபியல்‌ அற்ற வகையாகவும்‌ இருக்கலாம்‌. சில விலங்கினப்‌ பிரிவுகள்‌ சில வகை நோய்க்கு உள்ளாக வல்லவை. சான்றாகப்‌ பாலுக்காக வளர்க்கப் படும்‌ மாடு, இறைச்சிக்காக வளர்க்கப் படும்‌ மாடுகளைவிட எளிதில்‌ பாதிக்கப்‌ படக் கூடியது. அதிக உடல்‌ எடையைக்‌ கொண்ட அல்ஷேசன்‌ போன்ற நாய்கள்,‌ எலும்பு தொடர்பான நோய்க்கு எளிதில்‌ உட்படக்‌ கூடியவை. பொதுவாக, பெண்‌ விலங்கினங்கள்‌, சில வகை நோய்க்கு எளிதில்‌ ஆட்படக் கூடியவை, காட்டாக, சிறுநீரக நோய்‌ ஆண்‌ நாய்களையும்‌, பசுக்களையும்‌ எளிதில்‌ தாக்க வல்லது. விலங்கினங்களில்‌ நிறமும்,‌ சில நோய்க்குக்‌ காரணமாக விளங்குகிறது. சாம்பல்‌ நிறக்‌ குதிரைகள்‌ ஒரு வகைத்‌ தோல்‌ புற்று நோய்க்கு எளிதில்‌ உள்ளாகக்‌ கூடியவை. வெண்மை நிற விலங்கினங்கள்,‌ சூரிய ஒளியினால்‌ பாதிக்கப்பட்டு, நோய்‌ வாய்ப்படக்‌ கூடியவை. நோயினைத்‌ தோற்றுவிக்கும்‌ காரணங்களை, இயற்பிய காரணங்கள்‌, வேதிக்‌ காரணங்கள்‌, உயிரியல்‌ காரணங்கள்‌ எனப்‌ பிரிக்கலாம்‌. கதிர் வீச்சு, உறை நிலை மின்சாரம்‌, வெளிப் புறக்‌ காற்றழுத்தம்‌, காயங்கள்‌ போன்றவை இயற்பிய காரணங்களாகலாம்‌. பல்வேறு வித அமிலப்‌ பொருள்‌களும்‌, வேதிப்‌ பொருள்களும்‌, பூச்சிக்‌ கொல்லிகளும்‌, காளான் கொல்லிகளும்‌, மருந்துப்‌ பொருள்களும்‌ நோய்‌ உண்டாக்கக்‌ காரணங்களாகின்றன <b>‌உயிரியல்‌ காரணங்கள்</b>‌‌. நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணி, பூசணம் போன்றன நோயுண்டாக்கும்‌ காரணங்களாக உள்ளன. இவ்வகை உயிரியல்‌ காரணங்கள்‌, பல்வேறு நச்சுப்‌ பொருள்களை உற்பத்தி செய்வதன்‌ மூலமாகவும்‌, ஒவ்வாமை காரணமாகவும்‌, பல்வேறு உறுப்புகளை அடைந்து, செயலற்றதாக்கச்‌ செய்வதன்‌ மூலமாகவும்‌ நோயுண்டாக்குகின்றன. <center>{{fs|130%|<b>நோய்‌ வாயில்கள்‌</b>}}</center> <b>தோல்‌</b>. தோல்‌ வழியாகப்‌ பல்வேறு நோய்கள்‌ உடலை ஊடுருவுகின்றன. சில வகை ஒட்டுண்ணிகள்‌ நோயில்‌ சில உயிரினங்கள்‌, தோல்‌ பாதிக்கப் படும் போது, உள்‌ நுழைந்து நோயுண்டாக்குகின்றன. கடிக்கும்‌ ஒட்டுண்ணி, கொசு மூலமாகவும்‌, தோல்‌ வழியாக நோய்‌ ஏற்பட வாய்ப்புண்டு. <b>உணவுக் குழாய்</b>‌. உணவுக்‌ குழாய்‌, வாய்‌, குடல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ பல்வேறு வகை நோய்‌ பரவ வாய்ப்புண்டு. வாயிலோ, குடலிலோ புண்கள்‌ ஏற்படும்‌ போது, அவற்றின்‌ வழியாக நோயுண்டாக்கும்‌ நுண்ணுயிரிகள்‌ நுழைந்து, நோயினை ஏற்படுத்துகின்றன. கண்‌ வழியாகப்‌ பரவும்‌ நுண்ணுயிரிகளால்,‌ மாடுகளில்‌ கருச் சிதைவு நோய்‌ பரவக்‌ கூடும்‌. <b>சுவாசக்‌ குழாய்‌ </b>. சுவாசக்‌ குழாயில்‌ உள்ள சளிப்‌ பொருளால்‌, பல வித நோய்கள்‌ பரவ வாய்ப்புண்டு. மேலும்‌, இனப்‌ பெருக்க உறுப்பு மூலமாக, நாய்களில்‌ ஒரு விதப்‌ புற்று நோய்‌, பசுவினத்தில்‌ கருச் சிதைவு நோய்‌, பால் வினை நோய்களும்‌ ஏற்படலாம்‌. புரத வளர்ச்சி மாற்றம்‌ பாதிக்கப் படுவதால்,‌ செல்கள்‌ கலங்கிய நிலையுடனும்,‌ வீக்கத்துடனும்‌ காணப் படும்‌. இது செல்களில்‌ முதல்‌ முதலாகத்‌ தோன்றும்‌ மாற்றம்‌ ஆகும்‌. ஆக்சிஜன்‌ இராமையினாலும்‌, நச்சுப்‌ பொருள்‌ தாக்குவதாலும்‌ இந்நிலை ஏற்படுகிறது. இதே போல்‌, செல்களில்‌ ஓட்டைகள்‌ தோன்றுதல்‌, செல்கள்‌ கண்ணாடி போன்ற நிலையினை அடைதல்‌, செல்களில்‌ அயற்பொருள்‌ காணப் படல்‌ ஆகிய பல்வேறு நிலைகள்‌ தோன்றுகின்றன. <b>குருதி அணுக்கள்‌ நுண்ணுயிரிகளைக்‌ கொல்லுதல்</b>‌. நோய்க்‌ குறியியலில்‌, குருதி அணுக்கள்‌ நுண்ணுயிரிகளைக்‌ கொல்லுவது இன்றியமையாத செயலாகும்‌. இதில்‌, வெள்ளையணுக்கள்‌ பெரும் பங்கு கொள்ளும்.‌ இந்த அணுக்கள்‌ நுண்ணுயிரிகளை வளைத்து, பல்வேறு நொதிப்‌ பொருள்களை அவற்றின்‌ மேல்‌ செலுத்தி,<noinclude></noinclude> ayovvdusdccz84au6rbrh2pieufkutf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/76 250 646282 1944527 2026-06-10T08:09:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சிவக்கொழுந்து தேசிகர்"/> <section begin="சிவகங்கை"/> {{dhr}} <b>சிவகங்கை</b>: இது தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்திலுள்ள ஒரு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவகங்கை|48|சிவகங்கை}}</noinclude><section end="சிவக்கொழுந்து தேசிகர்"/> <section begin="சிவகங்கை"/> {{dhr}} <b>சிவகங்கை</b>: இது தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டம். இவ்வட்டத்தின் தலைநகருக்கும் சிவகங்கை என்பதேபெயர். சிவகங்கை வரலாற்றை அறிவதற்குச் சில அரிதான மூலங்களே உள. அவற்றுள் குறிப்பிடத்தக்கது நீல நூலாகும் (Blue Book). இதுவும் இப்போது நல்ல நிலையில் இல்லை. சிவகங்கைக்கு வடக்கே சில கிலோ மீட்டர் தொலைவில் நாலுகோட்டை என்னும் சிறிய கிராமம் உள்ளது. இது ஒக்கூர் கிராமத்திற்குத் தென்மேற்கே உள்ளது. பல்லாண்டுகள் இது இராமநாதபுரச் சேதுபதிகளின்கீழ இருந்தது. கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்குவந்த விசய இரகுநாதன் கரவத்திலிருந்துதான் நாலுகோட்டை குடும்பத்தைப் பற்றி அறியமுடிகிறது. நாலுகோட்டை உடைய தேவர் என்பவர் சேதுபதிகளின்கீழ் முதன்மையான பதவி வகித்திருந்தார். அவருக்குச் சசிவர்ண தேவர் என்ற மகன் இருந்தார். சேதுபதி அவருக்குத் தன் மகள் அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமணம் செய்வித்துச் சீதனமாக வரிவிலக்குப் பெற்ற சில நிலங்களை வழங்கினார். பிரான்மலை, திருப்புத்தூர், சோழபுரம், திருப்புவனம் ஆகிய நாலுகோட்டைகளைச் சசிவர்ணத்தேவரிடம் சேதுபதி ஒப்படைத்தார். சசிவர்ணத் தேவர் திறமையுள்ளவராக இருந்தார். இராமநாதபுரத்தில் நிலவிய குழம்பிய சூழலைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார். இவரது உறுதுணையுடன்தான் கட்டையத்தேவர் சேதுபதி மன்னரானார். அதற்குக் கைம்மாறாக இவருக்குப் பல உரிமைகளை வழங்கினார். சேதுபதி இவருக்கு இராசமுத்து விசய இரகுநாத பெரிய உடையதேவர் என்ற பட்டத்தையும் வழங்கினார். இவருடைய ஆட்சியில் சாத்தப்ப ஐயர் என்ற ஒரு ஞானி இவருக்கு ஆலோசராக இருந்தார். சசிவர்ணர் அவரது பெயரில் ஓர் மடத்தையும் அமைத்தார். இவர் காலத்தில் சிவகங்கை வரது தலைநகராக ஆகியிருக்கக்கூடும். இவர் கி.பி. 1750-இல் இறத்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் முத்து வடுகநாத பெரிய உடையதேவர் பதவிக்கு வந்தார். அவர் அரியணையில் முப்பது ஆண்டுகள் வீற்றிருந்தார்; அமைதியாக ஆட்சியை நடத்தினார். அனைத்துப் போர் முறைகளிலும் இவர் வல்லவர். பாரதக் கதை மூலம் மக்களிடையே வீரத்தைப் பெருக்கி அவர்களைப் போருக்குப் பழக்கிவந்தார். ஒவ்வோர் ஊரிலும் திரௌபதியம்மன் கோயிலை உருவாக்கினார். அங்கே ஒவ்வொரு நாளும் பாரதம் படிக்க ஏற்பாடு செய்தார். ஒருவர் பஞ்ச பாண்டவர்களின் வீர வரலாற்றை ஆவேசமாகச் சொல்வார். அதைக் கேட்கும் மக்களுக்கு உணர்ச்சி பிறக்கும். பாரதக் கதைகள் நாடகங்களாக நடிக்கப்படும். அதைக் காண்பவர் வீர உணர்வு கொள்வர். மக்களுக்குக் குத்துச் சண்டை, சிலம்பம், வாள்வீச்சு, துப்பாக்கிச் சுடுதல், கோட்டை ஏறுதல் முதலியவற்றில் பயிற்சி அளித்தார். நாட்டை அடிமைப்படுத்த முற்படும் அந்தியரைத் துரியோதனர் கூட்டமாகவும், உரிமைப் போரிலீடுபட்டோரைப் பாண்டவர்படையாகவும் கருதச்செய்தவர் வடுகநாதர். வரிகட்டும்படி கேட்டு வெள்ளையர் அனுப்பிய அஞ்சலை நான்காகக் கிழித்து உறையில் வைத்து அவர்களுக்கே திருப்பியனுப்பினார் முத்துவடுகநாதர். அவர் வெள்ளையரை எதிர்த்துக் காளையார் கோவிலில் நடத்திய போரில் வீரமரணம் அடைந்தார். கணவனை இழந்த வேலு நாச்சியார் மனம் தளரவில்லை. அவரிடமும் லரிகேட்டு வெள்ளையர் அஞ்சல் எழுதினர். அதை அவர் எட்டாகக் கிழித்து வெள்ளையர்களுக்கே திருப்பி அனுப்பினார். முத்துவடுகநாதனுக்கு ஆண் வாரிசு இல்லை. வேல நாச்சியாரும், அவர் மகள் வெள்ளச்சியும் சிவகங்கையைவிட்டு ஓடினர். அப்போதுதான் மருது சகோதரர்கள் சிவகங்கை அரசியலில் தலையிடத் தொடங்கினர். இவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் முன்பு முத்துவடுகநாதனின் அடைப்பைக்காரர்களாக இருந்தனர். கருநாடக நவாபைச் சிவகங்கையிலிருந்து துரத்துவதற்கு இவர்கள் மைசூர் வீரர் ஐதர் அலியின் உதவியை நாடினாரெனத் தெரிகிறது. அவருடைய உறுதுணையுடன் வேலு நாச்சியாரை மீண்டும் அரியணை ஏற்றி, அம்மையாரின் அமைச்சர்களாகவும் இராணுவ வீரர்களாகவும் ஆயினர். வேலு நாச்சியார் கௌரிவல்லபன் என்பவரைத்தத்து எடுத்தார். வேலு நாச்சியாருக்குப் பிறகு கௌரி வல்லபன் ஆட்சிக்கு வருவதை மருது சகோதரர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் வெள்ளச்சியை நாலு கோட்டையைச் சேர்ந்த வெங்கள் பெரிய உடைய தேவருக்கு மணமுடித்தனர். இதனிடையே கி.பி. 1790-இல் வேலு நாச்சியாகும் இறந்தார். உடனே வெள்ளச்சியை அடுத்த வாரிசாக அறிவித்தனர் மருது சகோதரர்கள். வெள்ளச்சி பெயரளவில்தான் அரசியாக இருந்தார். செயலளவில் மருது சகோதரர்கள் தான் ஆட்சி செய்தனர்.{{nop}}<noinclude></noinclude> onaty3dsmkyjfwlqi7xcct4hw7iiint பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/77 250 646283 1944534 2026-06-10T08:22:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெள்ளச்சியும் கி.பி.1793-இல் இறந்தாள். உடனே வெள்ளை மருது தம் மகளைப் பெரிய உடைய தேவருக்கு மணமுடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பிறகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவகங்கை|49|சிவகீதை}}</noinclude>வெள்ளச்சியும் கி.பி.1793-இல் இறந்தாள். உடனே வெள்ளை மருது தம் மகளைப் பெரிய உடைய தேவருக்கு மணமுடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பிறகு அவர் சகோதரர் ஊமைத்துரை இந்திய விடுதலைப் போரைத் தொடர்ந்தார். இவர் நேரே மருது வீரரிடம் சென்றார். போர்க்களம் திருநெல்வேலிச் சீமையிலிருந்து சிவகங்கைச் சீமைக்கு மாறிற்று. மருது சகோதரர்களிடம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட போர் வீரர்கள் இருந்தனர். ஏறக்குறைய பத்தொன்பதாண்டுகள் மக்கள் உள்ளத்திலே நாட்டுப்பற்றைப் பரப்பி இருந்தனர். ஆகவே, அவர்களின் போராட்டம் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டத்துக்கே முடியாக அமைந்தது. மண்டியிட்டு மாற்றார் உரிமையின் கீழ் நல்வாழ்வு வாழ்வதிலும் சாவதே மேல் என்று இவர் போராடினார். கமுதி, காளையார் கோயில் (கானப்பேரெயில் சிறுவயல் ஆகிய இடங்களில் அவர்கள் வெள்ளையருடன் பொருதனர், துரோகிகள் காட்டிக் கொடுத்த தன் விளைவாக, மருது பாண்டியன் என்ற சின்ன மருது பிடிபட்டான். பெரிய மருது வெள்ளையருடன் போர் செய்த போது அவர் தொடையில் வெள்ளையரின் குண்டு ஒன்று பாய்ந்தது. பெரிய மருதுவும், சின்ன மருதுவும் தூக்கிலிடப்பட்டனர், அவர்களின் உடல்களைத் திருப்புத்தூரிலும், தலைகளைக் காளையார் கோவிலிலும் புதைத்தனர். மருது சகோதரர்கனின் வீரமரணத்திற்குப் பிறகு கி.பி. 1801-இல் கௌரி வல்லப பெரிய உடையதேவர் சிவகங்கைக் சமீன்தாராக ஆக்கப்பட்டார். இம்மரபினர் 1948 க்குப் பிறகு அரசுக்கு அனைத்து விதங்களிலும் உதவி புரிகின்றனர். இவர்களது அரண்மனை இப்போது அரசு கல்லூரியாகத் திகழ்கிறது. சிவகங்கை முத்துராமலிங்க மாவட்டத்தின் தலைநகராக இப்போது விளங்குகிறது. <b>சிவகங்கை</b> (2): இது கருநாடக மாநிலத்தில் உள்ள ஊர், இது தென்காசி என்றும் சொல்லப்படுகிறது. இங்கே உள்ள குன்றுக்குக் காகுத்கிரி என்று பெயர். இது 5000 அடி உயரத்தில் உள்ளது. இவ்வூரின் தலபுராணம் காகுதிரி மகாத்மியம் எனப்படுகிறது. இங்குள்ள கோவில் வடக்குத்திசையில் உள்ளது. படிகளைக் கடக்கும்போது, கணபதி, வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய-உருவங்களைப் பார்க்கலாம். பிறகு கங்காதரேச்சுரர் கோயிலும், எருமேபாகவா என்று சொல்லப்படுகின்ற ஒரு பெண் நந்தியும் உள்ளன. இக்கோயில் வடக்கு நோக்கி உள்ளது. நான்கு முகங்களும் நான்கு கரங்களும் கொண்ட பிரம்மனது உருவத்தில் சந்திரசேகரர் இங்கே இருக்கின்றார். இவர் கரத்தில் திரிசூலத்தையும், கோடரியையும் தண்ணீர்ப் பானையையும் தாங்கி நிற்கிறார். இக்கோயிலின் உள் சுற்றில் சப்தமாதர்களின் உருவம் உள்ளது. அட்டதிக்குப் பாலகர்கள், நவக்கிரகங்கள், முனிவர்கள், இசை மேதை உருவங்கள் ஆகியவை உள்ளன. இவர்கள் அனைவரும் சிவ-பார்வதி திருமணத்தைப் பார்க்க அங்கே குழுமியுள்ளனர் என்பது ஐதிகம். விமானம் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்னதேவி (Honne Devi) கோவில் கிழக்குத் திசையில் உள்ளது. ஒன்னதேவி வடமொழியில் சுவர்ணாம்பாள் என்று சொல்லப்படுகின்றாள். இங்கேயுள்ள சாத்தனீசுவர் கோயில் கி.பி. 1139-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இக்கோயிலில் இராமாயண பாகவத புராணக்கதைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளன. இராமனின் பிறப்பு முதல் முடிசூட்டுவது வரையிலான நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டிருக்கின்றன. சிறப்பாக, இரிசிய சிருங்கர் ஆடற்பாவைகளினால் அயோத்திக்குக் கொணரப்பட்ட நிகழ்ச்சியும் இங்கே காணப்படுகிறது. இங்கேயுள்ள படிகளில் பல விலங்குகளின் உருவங்கள் காணப்படுகின்றன. குன்றின்மேல் கன்வ, குருபவதி, பாதாள கங்கை, சக்கரதீர்த்தம், சங்கராச்சாரியார் தீர்த்தம், மைத்ரேய தீர்த்தம், மண்டலியதீர்த்தம், கங்கை தீர்த்தம், அகத்தியதீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.{{Right|கே.சே.}} <section end="சிவகங்கை"/> <section begin="சிவகாசி"/> {{dhr}} <b>சிவகாசி</b>: தமிழ்நாட்டில் காமராசர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் உள்ளதொரு நகரம். இந்நகரத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், வெடி மருந்துப் பொருள்கள், வண்ண அச்சுத் தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன. தமிழ்நாட்டில் இந்நகரத்தின் தீப்பெட்டித் தொழிற்சாலை முதன் முதல் 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாண்டில் வெடிபொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்குத் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே குடிசைத் தொழில் முறையில் தீப்பெட்டியும் வெடிமருந்துகளும் தயாரிப்பதில் இந்நகரம் முதலிடம் பெறுகிறது. இந்தியாவின் வெடிமருந்துப் பொருள்கள் இந்நகரத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சிவகாசி"/> <section begin="சிவகீதை"/> {{dhr}} <b>சிவகீதை</b>: தை என்னும் சொல் பாடப்பட்டது என்று பொருள்படும். சிவகீதை ஆன்ம தத்துவத்தைச் கூறும் நூலாகும். மகாபாரத்தின் வீடும பருவத்தில், கண்ணன் அருச்சுனனுக்குப் போர்க்களத்தில் போதித்ததாக அமைந்துள்ள ‘பகவத் கீதை’யைப்-<noinclude> <b>வா. க. 9 - 4</b></noinclude> mt3p459h01r55mtlp8w4jx6708v6fy3 1944537 1944534 2026-06-10T08:24:45Z Bharathblesson 15164 1944537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவகங்கை|49|சிவகீதை}}</noinclude>வெள்ளச்சியும் கி.பி.1793-இல் இறந்தாள். உடனே வெள்ளை மருது தம் மகளைப் பெரிய உடைய தேவருக்கு மணமுடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பிறகு அவர் சகோதரர் ஊமைத்துரை இந்திய விடுதலைப் போரைத் தொடர்ந்தார். இவர் நேரே மருது வீரரிடம் சென்றார். போர்க்களம் திருநெல்வேலிச் சீமையிலிருந்து சிவகங்கைச் சீமைக்கு மாறிற்று. மருது சகோதரர்களிடம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட போர் வீரர்கள் இருந்தனர். ஏறக்குறைய பத்தொன்பதாண்டுகள் மக்கள் உள்ளத்திலே நாட்டுப்பற்றைப் பரப்பி இருந்தனர். ஆகவே, அவர்களின் போராட்டம் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டத்துக்கே முடியாக அமைந்தது. மண்டியிட்டு மாற்றார் உரிமையின் கீழ் நல்வாழ்வு வாழ்வதிலும் சாவதே மேல் என்று இவர் போராடினார். கமுதி, காளையார் கோயில் (கானப்பேரெயில் சிறுவயல் ஆகிய இடங்களில் அவர்கள் வெள்ளையருடன் பொருதனர், துரோகிகள் காட்டிக் கொடுத்த தன் விளைவாக, மருது பாண்டியன் என்ற சின்ன மருது பிடிபட்டான். பெரிய மருது வெள்ளையருடன் போர் செய்த போது அவர் தொடையில் வெள்ளையரின் குண்டு ஒன்று பாய்ந்தது. பெரிய மருதுவும், சின்ன மருதுவும் தூக்கிலிடப்பட்டனர், அவர்களின் உடல்களைத் திருப்புத்தூரிலும், தலைகளைக் காளையார் கோவிலிலும் புதைத்தனர். மருது சகோதரர்கனின் வீரமரணத்திற்குப் பிறகு கி.பி. 1801-இல் கௌரி வல்லப பெரிய உடையதேவர் சிவகங்கைக் சமீன்தாராக ஆக்கப்பட்டார். இம்மரபினர் 1948 க்குப் பிறகு அரசுக்கு அனைத்து விதங்களிலும் உதவி புரிகின்றனர். இவர்களது அரண்மனை இப்போது அரசு கல்லூரியாகத் திகழ்கிறது. சிவகங்கை முத்துராமலிங்க மாவட்டத்தின் தலைநகராக இப்போது விளங்குகிறது. <b>சிவகங்கை</b> (2): இது கருநாடக மாநிலத்தில் உள்ள ஊர், இது தென்காசி என்றும் சொல்லப்படுகிறது. இங்கே உள்ள குன்றுக்குக் காகுத்கிரி என்று பெயர். இது 5000 அடி உயரத்தில் உள்ளது. இவ்வூரின் தலபுராணம் காகுதிரி மகாத்மியம் எனப்படுகிறது. இங்குள்ள கோவில் வடக்குத்திசையில் உள்ளது. படிகளைக் கடக்கும்போது, கணபதி, வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய-உருவங்களைப் பார்க்கலாம். பிறகு கங்காதரேச்சுரர் கோயிலும், எருமேபாகவா என்று சொல்லப்படுகின்ற ஒரு பெண் நந்தியும் உள்ளன. இக்கோயில் வடக்கு நோக்கி உள்ளது. நான்கு முகங்களும் நான்கு கரங்களும் கொண்ட பிரம்மனது உருவத்தில் சந்திரசேகரர் இங்கே இருக்கின்றார். இவர் கரத்தில் திரிசூலத்தையும், கோடரியையும் தண்ணீர்ப் பானையையும் தாங்கி நிற்கிறார். இக்கோயிலின் உள் சுற்றில் சப்தமாதர்களின் உருவம் உள்ளது. அட்டதிக்குப் பாலகர்கள், நவக்கிரகங்கள், முனிவர்கள், இசை மேதை உருவங்கள் ஆகியவை உள்ளன. இவர்கள் அனைவரும் சிவ-பார்வதி திருமணத்தைப் பார்க்க அங்கே குழுமியுள்ளனர் என்பது ஐதிகம். விமானம் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்னதேவி (Honne Devi) கோவில் கிழக்குத் திசையில் உள்ளது. ஒன்னதேவி வடமொழியில் சுவர்ணாம்பாள் என்று சொல்லப்படுகின்றாள். இங்கேயுள்ள சாத்தனீசுவர் கோயில் கி.பி. 1139-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இக்கோயிலில் இராமாயண பாகவத புராணக்கதைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளன. இராமனின் பிறப்பு முதல் முடிசூட்டுவது வரையிலான நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டிருக்கின்றன. சிறப்பாக, இரிசிய சிருங்கர் ஆடற்பாவைகளினால் அயோத்திக்குக் கொணரப்பட்ட நிகழ்ச்சியும் இங்கே காணப்படுகிறது. இங்கேயுள்ள படிகளில் பல விலங்குகளின் உருவங்கள் காணப்படுகின்றன. குன்றின்மேல் கன்வ, குருபவதி, பாதாள கங்கை, சக்கரதீர்த்தம், சங்கராச்சாரியார் தீர்த்தம், மைத்ரேய தீர்த்தம், மண்டலியதீர்த்தம், கங்கை தீர்த்தம், அகத்தியதீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சிவகங்கை"/> <section begin="சிவகாசி"/> {{dhr}} <b>சிவகாசி</b>: தமிழ்நாட்டில் காமராசர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் உள்ளதொரு நகரம். இந்நகரத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், வெடி மருந்துப் பொருள்கள், வண்ண அச்சுத் தொழிற்சாலைகள் போன்றவை உள்ளன. தமிழ்நாட்டில் இந்நகரத்தின் தீப்பெட்டித் தொழிற்சாலை முதன் முதல் 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாண்டில் வெடிபொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்குத் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே குடிசைத் தொழில் முறையில் தீப்பெட்டியும் வெடிமருந்துகளும் தயாரிப்பதில் இந்நகரம் முதலிடம் பெறுகிறது. இந்தியாவின் வெடிமருந்துப் பொருள்கள் இந்நகரத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சிவகாசி"/> <section begin="சிவகீதை"/> {{dhr}} <b>சிவகீதை</b>: தை என்னும் சொல் பாடப்பட்டது என்று பொருள்படும். சிவகீதை ஆன்ம தத்துவத்தைச் கூறும் நூலாகும். மகாபாரத்தின் வீடும பருவத்தில், கண்ணன் அருச்சுனனுக்குப் போர்க்களத்தில் போதித்ததாக அமைந்துள்ள ‘பகவத் கீதை’யைப்-<noinclude> <b>வா. க. 9 - 4</b></noinclude> 69cwtjejqs09zhfp3aqqechmct5wrm4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/78 250 646284 1944548 2026-06-10T08:40:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்பற்றி எழுந்த நூல்களுள் சிவகீதையுமொன்று. கண்ணன் அருச்சுனனுக்கு ஆன்ம தத்துவத்தைப் போதித்தது போன்றே, சிவபிரான் இராமனுக்கு உபதேசித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவகுருநாதப் பிள்ளை. ந|50|சிவசம்புப் புலவர்}}</noinclude>பின்பற்றி எழுந்த நூல்களுள் சிவகீதையுமொன்று. கண்ணன் அருச்சுனனுக்கு ஆன்ம தத்துவத்தைப் போதித்தது போன்றே, சிவபிரான் இராமனுக்கு உபதேசித்ததாக இந்த நூல் அமைந்துள்ளது. இதுவும், உரையாடல்களைப் போன்று. சுலோகங்களால் அமைக்கப்பெற்றுள்ளது. இந்நூல் பதும் புராணத்தின் ஒரு பகுதியாகும். பகவத்கீதை தோன்றுவதற்குக் காரணமான சூழலைப் போன்றதொரு சூழலில் சிவகீதையும் தோன்றியுள்ளது. சீதையின் பிரிவினால் மனம் தளர்ந்த இராமன் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கியபோது, அம்முனிவர் இராமனிடம், ‘விரசா தீட்சை’ செய்து கொண்டு சிலபெருமானைக் குறித்துப் பாசுபத விரதத்தை மேற்கொள்ளுமாறு கூறினார். அவ்வாறே இராமன் பாசுபத விரதத்தை மேற்கொண்டார். அதனால் மகிழ்ந்த சிவபிரான் இராமன் முன்தோன்றி இராவணனை வெல்லுதற்குரிய ஆயுதங்களைக் கொடுத்தார். அப்போது பிரபஞ்ச உற்பத்தி, மனித உற்பத்தி, வீடுபேறு முதலியவற்றை விளக்குமாறு இராமன் சிவனிடம் வேண்டினார். சிவன் கூறிய விடையாக அமைந்ததே சிவகீதை. பகவத் கீதையின் கருத்தளவிலும், சொல்லளவிலும் ஒப்புமை காணக்கூடிய பல இடங்கள் சிவகீதையிலுமுண்டு. இந்த நூல் உரையுடன் அச்சில் வெளிவந்துள்ளது. வீடு பேற்றை அடைவதற்கு நான்கு வருணத்தாரும், பெண்களும் உரியவராவர். சிவனே பரம்பொருள் அவனை வணங்கியே ஞானத்தைப் பெறமுடியும். கருமங்களால் மட்டுமே இறைவனை அடையமுடியாது. உலகப்பற்றே அனைத்துத் துன்பங்களுக்கும் மூல காரணம். இந்தப் பற்றைத் துறக்க வேண்டுமாயின், சிவபெருமானைப் பற்றவேண்டும். அப்போது தான் மற்றப் பற்றுகள் விடுபடும். அந்த நிலையில் ஞானம் ஏற்படும். அனைத்துக் கருமங்களும் அழிந்து இறைவனோடு கலக்கும் ஆனந்த நிலையைப் பெறலாம் என்பதே சிவகீதையின் முடிந்த பொருளாகும்.{{Right|<b>என்.சீ.</b>}} <section end="சிவகீதை"/> <section begin="சிவகுருநாதப் பிள்ளை,ந."/> {{dhr}} <b>சிவகுருநாதப் பிள்ளை,ந.</b> கி.பி 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் பாண்டி நாட்டைச் சேர்ந்த எட்டையபுரம் என்னும் ஊரில் நமச்சிவாயம் பிள்ளைக்கும் மகாலட்சுமி அம்மாளுக்கும் கி.பி. 1873-ஆம் ஆண்டு மகனாகத் தோன்றினார். இவருடன் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ.உ. சிதம்பரம்பிள்ளையாவார். இவர் இளமையிலிருந்தே சமய நால்களைப் பயின்று புலமை சிறக்கப்பெற்றார். அதன் பயனாக இவர் மாணவர்களுக்குச் சைவ சித்தாந்த நூல்களைக் கற்பிக்கும் பணியினை ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர்ந்து செய்தார். இவர்தம் சிறப்பையுணர்த்து சென்னைத் தமிழ்ச் சங்கத்தார் இவருக்குச் ‘சித்தாந்தப் பேராசிரியர்’ என்னும் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 78 |bSize = 375 |cWidth = 94 |cHeight = 120 |oTop = 80 |oLeft = 235 |Location = center |Description = }} {{center|சிவகுருநாதப்பிள்ளை, ந.}} சித்தாந்தப் புலமை மிக்கவரான இவர் தூத்துக்குடியில் கி.பி.1892-ஆம் ஆண்டு ‘சைவப்பிரகாச அச்சகம்’ என்ற ஓர் அச்சகத்தை நிறுவினார். நீண்ட நாள்கள் அதன் செயலாளராகவும் இருந்து பணியாற்றியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ‘சைவ சித்தாந்த சபை’யில் கி.பி.1889 முதல் உறுப்பினராகவும் இருந்தார். இவர் சைவத்தில் கொண்ட ஈடுபாட்டால் சைவப் பேரவை உள்ள இடங்களுக்கெல்லாம் சென்று சைலசித்தாந்த விரிவுரைகள் நிகழ்த்தி வந்தார், மேலும், இவர் சிவஞான சித்தியார் ஆராய்ச்சி நூலொன்று எழுதி 1949-இல் வெளியிட்டார். இவ்வாது சைவத்திற்கு இடையறாது தொண்டு புரிந்த இவர் 1953-இல் இறந்தார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சிவகுருநாதப் பிள்ளை,ந."/> <section begin="சிவசம்புப் புலவர்"/> {{dhr}} <b>சிவசம்புப் புலவர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், இவர் யாழ்ப்பாணத்திலுள்ள உடுப்பிட்டி என்னும் ஊரில் அருளம்பல முதலியாருக்கு கி.பி. 1830-ஆம் ஆண்டு மகனாகத் தோன்றினார். சைவக் குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார், இவர்தம் ஆசிரியர்கள் யாழ்ப்பாண நல்லூரைச் சேர்ந்த சரவண முத்துப் புலவரும் சம்பந்தப் புலவரும் ஆவர். இவர் இளமையிலிருந்தே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். அதனால் இவருக்கு ஆறுமுகநாவலர் புலவர் பட்டம் வழங்கிச்-<noinclude></noinclude> jzyw1kbshp0r6x6rc5d0uw5k2doh0pz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/79 250 646285 1944551 2026-06-10T08:59:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறப்பித்தார். பிரபந்தங்களை மிகுதியாகப் பாடிய புலவர் ஈழநாட்டில் இவர் ஒருவரே என்று கூறுவர். தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இவர், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவசமுத்திரம்|51|சிவஞான சித்தியார்}}</noinclude>சிறப்பித்தார். பிரபந்தங்களை மிகுதியாகப் பாடிய புலவர் ஈழநாட்டில் இவர் ஒருவரே என்று கூறுவர். தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இவர், பல நூல்களும் பல நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். இவர் இராமநாதபுரம் பாசுகர சேதுபதியைப் புகழ்ந்து கல்லாடசாரக் கலித்துறை என்னும் நூல் இயற்றியுள்ளார். மேலும், இவர் பாசுகர சேதுபதி இரட்டைமணிமாலை, பாசுகர சேதுபதி நான்மணிமாலை, பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை புலோலி நான்மணிமாலை, மயில்வாகன வம்ச வைபவம், கந்தவன நாதர்பதிகம், கந்தவனநாதர் ஆசிரிய விருத்தம், பராக்கு மங்களம், வல்லிபுரநாதர் கலிவெண்பா, செந்தில் யமகவந்தாதி, தருவேரக் அந்தாதி, திருச்செந்திற்றிருவந்தாதி, எட்டுக்குடிப் பிரபந்தம், பருத்தித் துறை விநாயகர் ஊஞ்சல், எச்சரிக்கை முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவர் யாப்பருங்கலக் காரிகையுரையும், மறைசையந்தாதியுரையும், கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப் படல உரையும் எழுதியுள்ளார். இவர் பாடல்கள் சொல்லும் பொருளும் தொடைவகைகளும் சிறப்பாக அமையப் பெற்றவை. இவ்வாறு நூல்கள் உரைகள் பல எழுதியும் தமிழைப் பலருக்குக் கற்பித்தும் தமிழ்த் தொண்டு புரிந்த இவர் 1910-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சிவசம்புப் புலவர்"/> <section begin="சிவசமுத்திரம்"/> {{dhr}} <b>சிவசமுத்திரம்</b>: கருநாடக மாநிலத்தில் பெங்களூருக்கும் மைசூருக்குமிடையே உள்ள மத்தூருக்கு அருகில் உள்ள இந்நகரம் இம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுதியாக உதவுகிறது. காவிரி ஆற்றினால் இது சிறப்புப்பெறுகிறது. இங்கு இந்த ஆறு இரண்டாகப் பிரிந்து நீர்வீழ்ச்சிகளாக விழுகின்றது. ஒவ்வொரு நீர்வீழ்ச்சியும் ஏறத்தாழ 320 கி.மீ. உயரமுள்ளது. இப்பகுதி இயற்கை வளங்களை மிகுதியாகப் பெற்றுள்ளது. இயற்கை அழகை மேல்நாட்டுப் பயணிகளும் வியந்து எழுதியுள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள நீர் மின்சார நிலையம், கோலார் தங்கவயல், பெங்களூர் முதலிய பல இடங்களுக்கு மின்சாரவசதியை அளித்துவருகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சிவசமுத்திரம்"/> <section begin="சிவசுப்பிரமணியக் கவிராயர்"/> {{dhr}} <b>சிவசுப்பிரமணியக் கவிராயர்</b> கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள லிடைக் குறிச்சி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பொதிகை நிகண்டு இயற்றிய சாமிநாதக் கவிராயர் என்பவராவார். இவர் நாமதீப நிகண்டு, பூவைப் புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். நாமதீப நிகண்டு என்னும் நூல் வெண்பா யாப்பில் அமைந்து உயர்திணைப் படலம், அந்திணை புயிர்ப் படலம், அஃறிணையுயிரில் படலம், குணநாமப் படலம் ஆகிய நான்கு படலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு படலமும் பல வருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இது மற்ற நிகண்டுகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிகண்டு நூல் ஏனைய நிகண்டு நூல்களைக் காட்டிலும் காலத்தால் பிற்பட்டதாகும். பூவைப் புராணம் என்னும் நூல் கி.பி.1810-ஆம் ஆண்டில் அரங்கேற்றப் பட்டதாகும்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சிவசுப்பிரமணியக் கவிராயர்"/> <section begin="சிவஞானச் செட்டியார்"/> {{dhr}} <b>சிவஞானச் செட்டியார்</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சென்னையைச் சேர்ந்தவர். முருகப்பச் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர் தமிழில் ஈடுபாடு கொண்டு திகழ்ந்தார். இவர் தோத்திரப் பாடல் பாடுவதிலும் இசைப்பாட்டுப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் வரசித்தி விநாயகர் தோத்திரம் என்ற நூலும் இசைப்பாடல் என்ற பெயரில் ஒரு நூலும் இயற்றியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சிவஞானச் செட்டியார்"/> <section begin="சிவஞானசித்தியார்"/> {{dhr}} <b>சிவஞானசித்தியார்</b>: சைவ சமய மெய்ப்பொருள் (தத்துவம்) நுவலூம் நூல்களுள் பதினான்கினைத் தொகுத்து அறிஞர்கள் போற்றியுள்ளனர். அவை திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபா இருபஃது, சிவப்பிரகாசம், திருவருட்பயன், கொடிக்கவி, வினா வெண்பா, நெஞ்சு விடுதது, போற்றிப் பஃறொடை, சங்கற்ப நிராகரணம், உண்மை விளக்கம், உண்மை நெறி விளக்கம் என்பனவாம். இவற்றுள் சிவஞான சித்தியார் பல்லாற்றானும் போற்றிப் பாராட்டத்தகும் பெரு நூலாகும். இதனை அருளியவர் அருள்நந்தி சிவாசாரியார் ஆவர். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர். தம் குருமூர்த்திகளாகிய மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்திற்கு விரிநூலாக இந்நூலைச் செய்துள்ளார். ‘சிவத்திற்கு மேல் தெய்வம் இல்லை, சித்திக்குமேல் நூல் இல்லை’ என்னும் பழ மொழியாலும், ‘பார் விரித்த நூல் எல்லாம் பார்த்தறியச் சித்திபிலே, ஓர் விருத்தப் பாதி போதும்’ எனவரும் சிவபோகசாரத்தாலும், ‘வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே, தெள்ளு பரி மேலழகன் செய்தஉரை - ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓர் ஆறும், தண்டமிழின் மேலாம் தரம்’ என வரும் பழம் பாடல் ஒன்றாலும் இதன் பெருமை விளங்கும்.{{nop}}<noinclude> <b>வா. க. 9 - 4அ</b></noinclude> rjmidcvuiirvezjlha5yb5pfubjf51t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/80 250 646286 1944555 2026-06-10T09:15:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் பிறர் மதத்தை விதந்துரைத்து மறுத்திருக்கும் நூல்கள் இரண்டாம். அவை சங்கற்ப நிராகரணமும், இச்சிவஞான சித்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சிவஞானசித்தியார்|52|சிவஞான பாடியம்}}</noinclude>மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் பிறர் மதத்தை விதந்துரைத்து மறுத்திருக்கும் நூல்கள் இரண்டாம். அவை சங்கற்ப நிராகரணமும், இச்சிவஞான சித்தியாரும் ஆம். இவ்இரண்டனுள்ளும் பிறன் கோள் மறுத்ததோடு அமையாது, தன் கோள் நிறுவியும் அமைந்த சிறப்பு இச்சிவஞான சித்தியார்க்குண்டு. பிறன் கோள் மறுப்பைப் பரபக்கம் என்னும் பெயராலும், தன்கோள் நிறுவுவதைச் சுபக்கம் என்னும் பெயராலும் அமைத்து ஆசிரியர் விளக்குகின்றார். தாம் எடுத்துக்கொண்ட மெய்ப்பொருளை அளவைகளானும் பொருந்து மாற்றானும் கூறமுற்படும் ஆசிரியர் அளவைகளின் இலக்கணத்தை ‘அளவையியல்’ எனும் பகுதியால் முதற்கண் எடுத்து விளக்கியுள்ளார். இதன் கண் உள்ள பாடல்கள் பதினான்காம். இது இந்நூற்கு அமைந்த தனித்தன்மையாம். பிறர் கொள்கைகளை எடுத்து மறுக்கும் பரபக்கத்தில் பதினான்கு கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. அக்கொள்கையினர் உலகாயதர், செளத்திராந்திகர். யோகசாரர், மாத்தியமிகர், வைபாடிகர், நிகண்டவாதி, ஆசிவகர், பட்டாச்சாரியர் பிரபாகரர், சத்தப்பிரமவாதி, மாயாவாதி, பாற்கரியர் நிரீச்சுர சாங்கியர், பாஞ்சராத்திரி என்போராவர். இப்பகுதிக்கண் அமைந்த பாடல்கள் 301. சுபக்கம் என்பது தன் கோள் நிறுவும் பகுதியாகும். இப்பகுதியில் அமைந்த பாடல்கள் 328. ‘மெய்கண்டான் நூல் சென்னியில் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்கலுற்றாம்’ என்று தாம் குரு வணக்கம் கூறியதற்கு ஏற்ப இப்பகுதியைச் சிவஞான போதத்தின் வழி நூலாக அமைத்துள்ளார். சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் அமைந்த முதல் உரைநூல் இது எனக் கருதலாம். ‘அவன் அவள் அது எனும், அவை மூவினமையின் தோற்றிய திதியே’ என்பது சிவஞசவபோதம், ‘ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம் வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே தருபவன் ஒருவன் வேண்டும்’ என்பது சிவஞானசித்தியார், ‘அளவையே தானேயாய்’ என்பது சிவஞான போதம். ‘உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய்’ என்னும் சித்தியார் முதனூல் கருத்தை வழிநூல் எவ்வளவு பாங்காக விளக்கி நிற்கின்றது என்பதை இவற்றின் வழி அறியலாம். இவ்வாறே, ‘ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்து’ என வரும் எட்டாவது நூற்பாவின் தொடரை, மன்னவன் தன் மகன் வேடரிடத்தே தங்கி, எனத் தொடங்கும் விருத்தப் பாடலால் முற்றுருவகப்படுத்தி, ஒரு சிறு நாடக நிகழ்ச்சியாகவே விளக்கிக் காட்டியிருக்கும் திறம் பெரிதும் போற்றற்குரியதாகும். மெய்ப்பொருள் கருத்துகளை இவ்வாறெல்லாம் விளக்கி இருக்கும் இந்நூல் சிற்சில இடங்களில் அறவுரை வழங்கும் அருள் நூலாகவும் காட்சியளிக்கின்றது.{{Right|<b>கு.சு.</b>}} <section end="சிவஞானசித்தியார்"/> <section begin="சிவஞான பாடியம்"/> {{dhr}} <b>சிவஞான பாடியம்</b>: தமிழில் தத்துவ ஞானத்தை உணர்த்தும் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் தலையாய நூலாசு விளங்குவது மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் ஆகும். சிவஞான போதத்திற்குப் பழைய உரைகள் சில உள. ஆயின், அவையெல்லாம் அந்நூற் பொருளின் ஆழத்தையும் அகலத்தையும் காட்டுவன அல்ல. பின் வந்த சிவஞான முனிவரே தமது சிற்றுரை, பேருரை என்னும் இரு சீரிய உரைகளாலும் நூலின் உட்கிடையை உள்ளவாறு கண்டு இனிது விளக்கினார். வடமொழியில் பேருரையை ‘மகாபாசியம்’ என வழங்குவர். அவ்வழக்குப் பற்றிச் சிவஞான முனிவர் செய்த பேருரை ‘மாபாடியம்’ எனப்படுறேது. பாடியம் செய்தவர் பெயரையும் இணைத்துப் பதஞ்சலி பாடியம், சங்கர பாடியம் என இவ்வாறு வழங்குதல் மரபு. அவ்வாறே சிவஞான போதப் பேருரையைச் செய்தவர் ‘சிவஞானம்’ என்னும் பெயருடையவர் ஆதலால் அவரது பெவரையும் சேர்த்துச் ‘சிவஞான மாபாடியம்’ என வழங்குதல் மரபாயிற்று. வடமொழியில் உள்ள வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கரராலும், இராமாநுசராலும், மத்துவராலும், நீலகண்டராலும் பாடியங்கள் இயற்றப்பட்டிருப்பதுபோலத் தமிழ்மொழியில் சிவஞானபோதத்திற்குச் சிவஞான முனிவரால் பாடியம் செய்யப்பட்டுள்ளது. அதனால், அவரது பாடியம் ‘திராவிடமாபாடியம்’ என வழங்கப்படுகிறது. இப்பேருரை உபநிடதங்களையும், ஆகமங்களையும் பன்னிரு திருமுறைகளையும், திருக்குறள் முதலிய நூல்களையும் தழுவித்திட்ப நுட்பம் செறிய இயற்றப்பெற்றது; மேலும் இலக்கண நெறி பிறழாமல் அமைந்திருத்தலோடு தருக்க முறையிலும் சிறந்து விளங்குகிறது. வெஞானபோத நூலின் உட்பகுதிகள் யாவும் பொருள் தொடர்ச்சி அமைய இயைபு பெற்று விளங்குதலைப் பாடியம் திறம்பட எடுத்துக்காட்டுகிறது. அவ்வியைபு ஐந்து வகைப்படும். அவை: நூல் இயைபு, அதிகார இயைபு, இயல் இயைபு, பாத-<noinclude></noinclude> rzwjypihvl0xddkfq7c1lsgupedxu41 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/125 250 646287 1944563 2026-06-10T09:25:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உயரமான மாநிலமாக அமைந்துள்ளது. இராக்கி மலைத்தொடரின் உயரமான சிகரங்கள் இம்மாநிலத்தில்தான் உள்ளன. இங்கே 4267.மீ. உயரத்திற்கு மேற்பட்ட சிகரங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1944563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலராடோ|99|கொலராடோ}}</noinclude>உயரமான மாநிலமாக அமைந்துள்ளது. இராக்கி மலைத்தொடரின் உயரமான சிகரங்கள் இம்மாநிலத்தில்தான் உள்ளன. இங்கே 4267.மீ. உயரத்திற்கு மேற்பட்ட சிகரங்கள் ஐம்பதிற்கு மேற்பட்டே உள்ளன. கொலராடோ மாநிலத்தின் உயர்ந்த பகுதி மௌண்ட்டு எல்பர்ட்டு (4399 மீ.) ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 125 |bSize = 480 |cWidth = 203 |cHeight = 159 |oTop = 138 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|தென்வர் நகரம்}} இம்மாநிலத்தின் மேற்குப் பகுதி பீடபூமிவாகவும், கிழக்குப் பகுதி சமவெளியாகவும், மத்திய பகுதி இராக்கி மலைத் தொடர்ப் பகுதியாகவும் உள்ளன. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மெசாவெர்டேயில் (Mesaverde) உள்ள மலைகளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இந்தியர்கள் தங்கள் கோட்டைக் குடியிருப்புகளை அமைத்தனர். இம்மாநிலத்தில் கி.பி. 1858–இல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால், பலர் இப்பகுதியில் வந்து குடியேறினர்; பல தொழில்களை மேற்கொண்டனர். தங்கம் குறைந்த பின்பு மக்கள் வேளாண்மையில் நாட்டம் கொண்டனர். இருப்பினும் சுரங்கத் தொழில் சுருங்கிவிட வில்லை. சமவெளிகளில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. இங்கு ஆறுகள் பல ஓடுகின்றன. இவற்றுள் மிசிசிப்பி–மி–சௌரி ஆற்றின் கிளை ஆறுகள், கொலராடோ, பிரியோரொண்டி ஆகியன குறிப்பிடத்தக்கவை. கோதுமை, பார்லி, ஓட்சு முதலான தானியங்களும், உருளைக்கிழங்கு முதலான காய்கறிகளும் ஆப்பிள் முதலான பழ வகைகளும் விளைகின்றன. உணவும் உணவுப் பொருள்களும், இயந்திரங்கள், அடிப்படை உலோகங்கள், பாலாலான பொருள்கள், ஆட்டிறைச்சி ஆகியனவும் இங்குத் தயாராகின்றன. இங்கு நிலக்கரி, பொன், வெள்ளி, தாமிரம், விண்மத்தாது, பெட்ரோலியம் ஆகியன கிடைக்கின்றன. எனவே, மக்கள் தொழில் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சுரங்கத் தொழில், உலோகச் சுத்திகரிப்பு, இரும்பு, எஃகுப் பொருள் தயாரிப்பு, சர்க்கரைத் தொழில், மரத்தொழில் ஆகியன இங்கு நடைபெறும் முக்கிய தொழில்களாகும். இங்கு 1950க்குப் பின்னர் விஞ்ஞான வளர்ச்சியேற்பட்டதால் பல நுண்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இராக்கி மலைத்தொடரைக் கண்டுகளிக்க வெளிநாட்டுப் பயணிகள் மிக்க அளவில் கொலராடாவிற்கு வருகை புரிகின்றனர். கொலராடோவில் வாழ்ந்து வரும் மக்கள் தொகையில் 50 விழுக்காடு கொலராடோவினர். மீதிப் பேர்களுள் ஐரோப்பியரும், கனடா, மெக்சிகோ, சப்பான் நாட்டினரும் அடங்குவர். அமெரிக்க–இந்தியரும் இங்கு வாழ்கின்றனர். தலைநகர் தென்வரில் பெரிய அரசு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. போல்டரில் கொலராடோப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொலராடோப் பாலைவனமும் இம்மாநிலத்தில் உள்ளது. {{Right|<b>ம.இ.</b>}} <b>கொலராடோ ஆறுகள்:</b> கொலராடோ என்ற பெயரையுடைய ஆறுகள் மூன்று உள்ளன. ஒன்று, வடஅமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் ஓடுகிறது. கொலராடோ மாநிலத்தில், இராக்கி மலையில் தோன்றும் இந்த ஆறு யூட்டா, அரிசோனா, நவாடா, கலிபோர்னியா முதலான மாநிலங்களின் வழியாக ஓடிக் கலிபோர்னியா வளைகுடாவில் கலக்கிறது. இதன் நீளம் 2,333 கி.மீ. வடிகால் பரப்பு 360 ச.கி.மீ. அமெரிக்காவின் நைல் ஆறு என இது சொல்லப்படுகிறது. வடஅமெரிக்காவிலுள்ள தெக்சாசு மாநிலத்தில் ஓடும் ஆறுகளுள் ஒன்று கொலராடோ ஆறு. இது மேற்கு மத்திய சமவெளி ஓரத்தில் தோன்றித் தென் கிழக்காக ஓடி மெக்சிகோ வளைகுடாவில் கலக்கிறது. இது நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுவதுடன் மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது. தெக்சாசு மாநிலத்தி-<noinclude> <b>வா.க. 8 – 7அ</b></noinclude> mcw4vs4d8y9s08a53qe785vlqbmdmft 1944564 1944563 2026-06-10T09:27:02Z Desappan sathiyamoorthy 14764 1944564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கொலராடோ|99|கொலராடோ}}</noinclude>உயரமான மாநிலமாக அமைந்துள்ளது. இராக்கி மலைத்தொடரின் உயரமான சிகரங்கள் இம்மாநிலத்தில்தான் உள்ளன. இங்கே 4267.மீ. உயரத்திற்கு மேற்பட்ட சிகரங்கள் ஐம்பதிற்கு மேற்பட்டே உள்ளன. கொலராடோ மாநிலத்தின் உயர்ந்த பகுதி மௌண்ட்டு எல்பர்ட்டு (4399 மீ.) ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 125 |bSize = 480 |cWidth = 203 |cHeight = 242 |oTop = 138 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|தென்வர் நகரம்}} இம்மாநிலத்தின் மேற்குப் பகுதி பீடபூமிவாகவும், கிழக்குப் பகுதி சமவெளியாகவும், மத்திய பகுதி இராக்கி மலைத் தொடர்ப் பகுதியாகவும் உள்ளன. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மெசாவெர்டேயில் (Mesaverde) உள்ள மலைகளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இந்தியர்கள் தங்கள் கோட்டைக் குடியிருப்புகளை அமைத்தனர். இம்மாநிலத்தில் கி.பி. 1858–இல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால், பலர் இப்பகுதியில் வந்து குடியேறினர்; பல தொழில்களை மேற்கொண்டனர். தங்கம் குறைந்த பின்பு மக்கள் வேளாண்மையில் நாட்டம் கொண்டனர். இருப்பினும் சுரங்கத் தொழில் சுருங்கிவிட வில்லை. சமவெளிகளில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. இங்கு ஆறுகள் பல ஓடுகின்றன. இவற்றுள் மிசிசிப்பி–மி–சௌரி ஆற்றின் கிளை ஆறுகள், கொலராடோ, பிரியோரொண்டி ஆகியன குறிப்பிடத்தக்கவை. கோதுமை, பார்லி, ஓட்சு முதலான தானியங்களும், உருளைக்கிழங்கு முதலான காய்கறிகளும் ஆப்பிள் முதலான பழ வகைகளும் விளைகின்றன. உணவும் உணவுப் பொருள்களும், இயந்திரங்கள், அடிப்படை உலோகங்கள், பாலாலான பொருள்கள், ஆட்டிறைச்சி ஆகியனவும் இங்குத் தயாராகின்றன. இங்கு நிலக்கரி, பொன், வெள்ளி, தாமிரம், விண்மத்தாது, பெட்ரோலியம் ஆகியன கிடைக்கின்றன. எனவே, மக்கள் தொழில் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சுரங்கத் தொழில், உலோகச் சுத்திகரிப்பு, இரும்பு, எஃகுப் பொருள் தயாரிப்பு, சர்க்கரைத் தொழில், மரத்தொழில் ஆகியன இங்கு நடைபெறும் முக்கிய தொழில்களாகும். இங்கு 1950க்குப் பின்னர் விஞ்ஞான வளர்ச்சியேற்பட்டதால் பல நுண்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இராக்கி மலைத்தொடரைக் கண்டுகளிக்க வெளிநாட்டுப் பயணிகள் மிக்க அளவில் கொலராடாவிற்கு வருகை புரிகின்றனர். கொலராடோவில் வாழ்ந்து வரும் மக்கள் தொகையில் 50 விழுக்காடு கொலராடோவினர். மீதிப் பேர்களுள் ஐரோப்பியரும், கனடா, மெக்சிகோ, சப்பான் நாட்டினரும் அடங்குவர். அமெரிக்க–இந்தியரும் இங்கு வாழ்கின்றனர். தலைநகர் தென்வரில் பெரிய அரசு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. போல்டரில் கொலராடோப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொலராடோப் பாலைவனமும் இம்மாநிலத்தில் உள்ளது. {{Right|<b>ம.இ.</b>}} <b>கொலராடோ ஆறுகள்:</b> கொலராடோ என்ற பெயரையுடைய ஆறுகள் மூன்று உள்ளன. ஒன்று, வடஅமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் ஓடுகிறது. கொலராடோ மாநிலத்தில், இராக்கி மலையில் தோன்றும் இந்த ஆறு யூட்டா, அரிசோனா, நவாடா, கலிபோர்னியா முதலான மாநிலங்களின் வழியாக ஓடிக் கலிபோர்னியா வளைகுடாவில் கலக்கிறது. இதன் நீளம் 2,333 கி.மீ. வடிகால் பரப்பு 360 ச.கி.மீ. அமெரிக்காவின் நைல் ஆறு என இது சொல்லப்படுகிறது. வடஅமெரிக்காவிலுள்ள தெக்சாசு மாநிலத்தில் ஓடும் ஆறுகளுள் ஒன்று கொலராடோ ஆறு. இது மேற்கு மத்திய சமவெளி ஓரத்தில் தோன்றித் தென் கிழக்காக ஓடி மெக்சிகோ வளைகுடாவில் கலக்கிறது. இது நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுவதுடன் மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது. தெக்சாசு மாநிலத்தி-<noinclude> <b>வா.க. 8 – 7அ</b></noinclude> r1n73h188wtgw7w6eom4rxchssi4wwy