விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/218 250 108950 1947605 1930364 2026-06-18T07:59:56Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|216||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம். "ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை. இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர், {{left_margin|3em|நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல்.}} இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க. {{gap2}}- தென்றல் மலர் : இதழ் 21 (5.11.55) {{larger|<b>வள்ளுவர் உள்ளம் உரைப் பாயிரம்</b>}} சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.<noinclude></noinclude> 2opigo8i8ra2uiawu8zbp1iq79htv06 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/221 250 108953 1947580 1946934 2026-06-18T07:41:41Z காயத்ரி1115 16736 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="காயத்ரி1115" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||219}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித்திய மாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடல் (மணி, சமய. 227-232)</poem>}} என்பதால் பகவன் இலக்கணம் அறியப்படும். <b>எண்ணூலை வடவர் சாங்கியம் என்பர். எண்ணுால் என்பது அனைத்தும் இருபத்தைந்து தத்துவமென எண்ணப்படுதலின் வந்த காரணப் பெயர். சாங்கியம் என்பது சங்கியையை உடையது. சாங்கியம்</b> ஆனது. வடமொழித் தத்திதப் பெயர். இவ்வாறு மொழி பெயர்த்துக் கொண்டனர் வடவர். எண்ணூல் திருவாரூர்க் கபிலரால் முதற்கண் ஆக்கி இவ்வுலகுக்கு அளிக்கப்பட்ட தத்துவ நூல். தலைக் கழக நாளினின்று சென்ற 2500 ஆண்டு முன் வரை இஃது எழுதாக்கிளவியாய் இருந்தது. பின்னர் கபிலர் நூலாக்கினார் என்பர் ஆராய்ச்சியாளர். மேல் நாட்டில் எழுந்த தத்துவ நூல்களுக்கும் எண்ணுாலே அடிப்படை என அறிதல் வேண்டும். எந்நாளில் நூல் தோன்றுகின்றதோ அந்நாளில் மக்களிடம் பரவியிருந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் நூற்கருத்துக்களும் அமையும் என்பது இயற்கைச் சட்டம். (திருவள்ளுவர் திருக்குறளும் பெரும்பாலும் எண்ணூற் கொள்கையின் அடிப்படையில்தான் எழுந்துள்ளது என்பது மறுக்கக் கூடியதன்று) இஃது மேல் வரும் செய்யுட்களின் உரைகளில் எடுத்துக்காட்டப் பெறும். மற்றும் <b>நீத்தார் பெருமை ஏழாம் செய்யுள் உரையில் எண்ணுற் கொள்கை விரிக்கப்படும் அங்குக் காண்க. </b> இக் குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினார். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப்படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதி வழியே நூல் செய்தாரிலர். வள்ளுவர் உள்ளம் என்னும் இவ்வுரையின் மேல் எழும் ஆத்திக நாத்திக வினாவும் விடையும் வருமாறு: ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு. அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா? உரை ஆசிரியர் : ஆமாம். அறிவான தெய்வமே என்று தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதர என்று அருணகிரி நாதரும், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந் நூலாசிரியரும் போல. நாத்திகன் :- அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா?<noinclude></noinclude> on7lb7fn5nsey4r29gjw0c23n89075r பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/222 250 108954 1947597 1930384 2026-06-18T07:55:04Z காயத்ரி1115 16736 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="காயத்ரி1115" />{{rh|220||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>உரை ஆசிரியர் :- பெறத்தக்கது அறிவு என்று நான் உண்மை உரை கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய்விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப் போகும்? ஆத்திகன் :- மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் <b>அறிவாகிய கடவுள் என்று ஏன் கூறவில்லை? </b> உரை ஆசிரியர் :- கடவுள் என்ற சொல் மக்கள் அறிவு பெறாத காலத்தில் ஏற்பட்டதாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்று அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்? <b>இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்.</b> நாத்திகன் :- சாங்கியம் என்பது ஒரு மதமா? உரை ஆசிரியர் :- <b>இல்லை. தமிழர்பால் தொன்று தொட்டு இருந்து வரும் பண்பாடு. இடையில் திருவாரூர் கபிலர் எண்ணூல் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார். </b> நாத்திகன் :- அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக்கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா? உரை ஆசிரியர் :- மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும் நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் உண்டாகும். கீழ்ப் புறத்திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார். உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்றார்? அந்தக் கருத்தின், பண்பாட்டின் அடிப்படையில்தான் அக்கால நூற்களும் அமைந்தன. உலகம் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்படையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது. சாங்கியம் மதமன்று. அது எவராலும் உண்டாக்கப்பட்டது அன்று. அக் கருத்துக்களின் தொகுதியே எழுத்தாக்கிளவி எனப்பட்டது. எழுதிய பின் எண்ணூல் எனறாா்கள. எண்ணூல் பல மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது. <b>சாங்கிய கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை. பகுத்தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன. </b> மதம், சமையம் என்று சொலலப்படுவன அனைத்தும் ஒருவனால் ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன. சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரை தம் பக்கம்<noinclude></noinclude> 0fflxixmgqijobkmu6hpw5g0jbdqq72 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/223 250 108955 1947598 1946935 2026-06-18T07:56:53Z காயத்ரி1115 16736 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="காயத்ரி1115" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||221}}{{rule}}</noinclude>இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க. ஆத்திகன் :- எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக் காரணமாகக் கொண்டவை. அதாவது அகரத்தனன்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின. இது பெரியோர் கொள்கையல்லவா? உரையாசிரியர் : எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஒள வரைக்குமுள்ள உயிர்கள் பன்னிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாய்ச் சிறையில் இருக்கும் பன்னிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினான் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல்லத்தான் வேண்டும் என்று மதமக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது. ஆத்திகன் :- எழுத்துகளில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா? உரை ஆசிரியர் :- ஆமாம், கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போக வேண்டும்? <b>வள்ளுவரைப் பின்பற்ற வேண்டுவது வையத்தின் கடனன்றோ?</b> ஆத்திகன் : இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன? உரை ஆசிரியர் :- இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை. நாத்திகன் :- முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா? உரை ஆசிரியர் :- இல்லை என்று வ.உ.சிதம்பரனார் எண்ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவதும் நீர் படித்தபின் நான் சொல்லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம். (குயில் 1.12.59) ஆத்திகன் :- உலகு பகவன் முதற்று என்பதன் பொருளைத் தெளிவுப்படுத்த முடியுமா? உரை ஆசிரியர் - உலகு - உலகினர் பகவன் முதற்று - பகவனை முதன்மையாகக் கொள்ளத்தக்கவர். இங்கு முதன்மை என்பது காரண முதன்மையன்று. இடமுதன்மை. எனவே அறிவை உலக மக்கள் முதலிடத்ததாக கொள்ளத்தக்கவர். மக்கள் பெறத்தக்கது அறிவே ஆகும் என்றாம். அறிவு ஒன்றை ஆக்கத்தக்கதன்று. எவற்றிற்கும் மேலானது; சிறந்தது; பெறத்தக்கது என்க. (குயில் 8.12.59) {{Right|{{larger|<b>- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்</b>}}}}<noinclude></noinclude><noinclude></noinclude> sasx38gjoughr2d4nj4ap2al8v6y7r9 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/224 250 108956 1947599 1930387 2026-06-18T07:58:00Z காயத்ரி1115 16736 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="காயத்ரி1115" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>திருக்குறளுக்கு<br> உரை எழுதிய பதின்மர் யார்?</b>}}}} உலகத் தமிழ் மறையாக விளங்கி வரும் வாழ்வியல் நூல் திருக்குறளுக்குப் பழைய உரைகாரர்கள் பதின்மர் இருந்தார்கள். அவர்கள் : <b>தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர்</b> என்று கூறுவர். இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே! மற்ற உரைகள் நிலை தெரியவில்லை. பரிமேலழகர் என்பவர், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பூசாரியாக இருந்த பார்ப்பனர் என்பர். இவரது உரைதான் இன்று சிறந்த உரையாகக் கற்றோரால் போற்றப்படுகின்றது. அவருடைய வர்ணாசிரம வெறியை உரையினின்றும் நீக்கி விட்டால், திருக்குறளுக்கு அந்த உரைதான் மிகச் சிறந்த உரையாகும். இவர் பரிபாடல் பாக்களுக்கும் உரை கண்டுள்ளார்! மணக்குடவர் உரை, கற்றார்க்கு ஐயம் நீக்கும் உரையாக வாழ்கின்றது. எனவே, அந்த உரையையும் நாம் படித்தால் சில உண்மை நிலைகள் நமக்குப் புரியும். தற்காலத்தில் பல உரைகள் வெளிவந்துள்ளன. அவை அவரவர் கொள்கைகளின் சார்புரைகளாக சரணம் பாடுகின்றன. இவைகட்கெல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் போன்றவர்களே உரை வழிகாட்டிகளாக உள்ளார்கள். மேற்கண்ட உரைகளில் எது வள்ளுவர் பெருமானுடைய உள்ளம், சிந்தனை என்பதைக் காண முடியவில்லை. இலக்கியங்களில் தடுக்கி விழுந்தவன் எல்லாம் குறளுக்கு உரை எழுத முன்வந்ததே காரணம். நாவல் எழுதிக் கும்பி வளர்ப்போனென்லாம், திருக்குறளுக்கு எளிய உரை எழுத வந்ததால்தான், அழுக்காறு என்ற சொல்லுக்குப் பெருமை: என்று உரை கூறி பணம் தேடுகிறான். இதற்கு அந்த ஆள் எழுதிய உரை முதற்பதிப்பே சான்று! தமிழ் படியாதவனெல்லாம் பதிப்பகம் நடத்த வந்த அறிவுக்கேடு! என்ன செய்வது தமிழ் வளரும் காலவினை அதைத் தமிழ் அனுபவித்து வருகின்றது! வாழ்க காலமறிதல்!.<noinclude></noinclude> 7h1yds49mm3e8bs5v8d6gaiickapwkt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/225 250 108957 1947607 1930388 2026-06-18T08:00:29Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>திருக்குறளுக்குரிய<br> காரணப் பெயர்கள்</b>}}}} 1. முப்பால், 2. பொய்யாமொழி, 3. வாயுறை வாழ்த்து, 4. உத்தரவேதம், 4. தெய்வ நூல், 5. திருவள்ளுவர், 6. தமிழ்மறை, 7. பொதுமறை, 9. திருவள்ளுவப் பயன், 10. பொருளுரை, 11. பொதுமொழி, 12. அறம் {{center|{{x-larger|<b>திருவள்ளுவருக்கு<br> வழங்கும் பெயர்கள்</b>}}}} 1. தேவர், 2. தெய்வப் புலவர், 3. பொய்யில் புலவர், 4. முதற்பாவலர், 5. பெருநாவலர், 6. மாதாநுபங்கி, 7 செந்நாப் போதார், 8. நாயனார், 9. நான்முகனார், 10. புலவர், 11. திருக்குறளார். {{center|{{x-larger|<b>திருவள்ளுவருக்கு<br> வடமொழி சூட்டிய பெயர்</b>}}}} தஞ்சை நகரிலுள்ள சரசுவதி பண்டாரத்தில், திருக்குறட் மொழி பெயர்ப்பாய் அமைந்த வடநூல் ஒன்று உள்ளதெனவும், இது நூறு வருஷங்களுக்கு முன்பிருந்த ஸமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இயற்றியது என்றும், இவர் குறளாசிரியரை வல்லபாசாரியார் என்ற பெயரால் வழங்கியுள்ளார் என்றும் கூறுபவர் யார் தெரியுமா? இதைக் கூறியவர் டாக்டர் பூரீமாந், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்னிடம் ஒருகால் அறிவித்த செய்தி இங்கே குறிப்பிடத்தக்கது. {{Right|<b>— மு. இராகவையங்கார்</b><br>[சேது சமஸ்தானம் புலவர், வரலாற்றாசிரியர், பெரும்புலவர்,<br> 'செந்தமிழ் இதழ், தொகுதி 8, 1910-ஆம் ஆண்டு பதிப்பு.]}}<noinclude></noinclude> 69gx2m9htio8b50180is640z2ulj7dx பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/226 250 108958 1947582 1930391 2026-06-18T07:51:45Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மலேசியா, உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு — 2005</b>}} {{larger|திருக்குறள் போட்டியில் முதல் பரிசு பெற்றக் கட்டுரை}}}} மலேசியா நாட்டிலுள்ள கோலாலம்பூர் நகரில், 2005-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 17,18,19-ஆம் நாட்களில், உலகத் தமிழ் மறை ஆராய்ச்சி மாநாடு நடத்தியக் கட்டுரைப் போட்டியில், “திருக்குறள் சொற்பொருள் சுரபி' என்ற இந்த நூலின் ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ. அவர்கள் எழுதிய <b>'உலக பார்வையில் தமிழ்மறை'</b> என்ற கட்டுரை முதற்பரிசு பெற்றது. அந்தக் கட்டுரை. அந்த மாநாடு வெளியிட்டுள்ள மலரில்' எனது பார்வையில் தமிழ் மறை” என்ற தலைப்பில், எனது பெயாரல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரை இது : "எழுத்தின் வடிவத்தையும், எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள். ஞாலம், ஞானத் திரட்சிக்காக கையேந்தி நிற்கும் காலத்தில் கோலத் தமிழ் எழுத்து ஓவியக் கூட்டங்களை, அவர்கள் உருவாக்கினார்கள். ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஒர்ந்து, ஆங்கார ஆதவனின் எரி நெருப்பை அலட்சியப்படுத்தி, பாங்கான தங்களின் பண்புகளுக்கு வாழ்த்துக் கூறியவர்கள் - அந்தத் தமிழ் அறிஞர்கள். தீங்கு உளம் நடுங்கும் தீந்தமிழ் மனமுடைய அவர்கள், பரன்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை - ஓவியமாய் - காவியமாய், வாழ்க்கைத் தத்துவமாய் இயற்றி மறைந்தார்கள். அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சு, சிரித்துக் கொண்டே சாகும்வரை - வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை, அகம்-புறம் என்று தமிழிலே வடித்துத் தந்தார்கள். காலம்: அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ் சிந்தனையாளர்கள் தேடித் தந்த சிந்தனைச் செல்வங்கள் - இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன. குடல் விழுங்கும் உணவைப்போல, கபாடபுரத்து பைந்தமிழ்க் கருவூலங்களை, தென் மதுரைத் தமிழ்ப் புதையல்களை, கடல் விழுங்கிய போதும், கண்டு கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள்.<noinclude></noinclude> 2tmfkj43fgyv91c3rs4wxo0dedtfhlh பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/227 250 108959 1947585 1946936 2026-06-18T07:52:46Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||225}}{{rule}}</noinclude>உலகமே சிந்திக்கத் திராணியற்றுக் காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில் - யாதும் ஊரே - யாவரும் கேளிர் என்ற ஓருலகச் சமுதாயத் தத்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாகக், கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழினம். காலக் கரையான்களால் அழிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலே தான், பரன்பரை பரம்பரையாகத் தமிழ்மேதைகள் தோன்றித் தெள்ளு தமிழை வளர்ப்பதற்காகச் சீரியத் தொண்டாற்றி வந்தார்கள் நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் பண்பாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்து, அவர்களிலே ஒருவராக இன்றும் நிலைத்து நிற்பவர்தான் திருவள்ளுவர் பெம்மான். நெசவுத் தொழிலைச் செய்து கொண்டே, அவர் வாழ்க்கையையும் நெய்து வந்தார் மனித வாழ்க்கை, தறியின் பாவைவிட மிக வேகமாக ஓடுவதையும் கண்டார். அதனால்தான், வாழ்க்கையை நெய்ய ஆரம்பித்தார். இல்லையென்றால், உண்மையைப் பெய்ய ஆரம்பித்தார் என்று காலம் அவரைக் கணிக்கின்றது. திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31- என்று தமிழகப் புலவர் குழு வரம்பு கட்டியுள்ளது. அதாவது இன்றைக்கு 2036-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்திலே அவர் வாழ்ந்ததாகக் கால வட்டம் அறிவிக்கின்றது. தமிழ்ப் பெரும் புலவர், ஆராய்ச்சி வித்தகரான ஞா. தேவநேயப் பாவணர் அவர்கள், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்து, திருக்குறளுக்கு மரபுரையும் எழுதியுள்ளார். எனவே, திருவள்ளுவர் வாழ்ந்தபோது, இயேசு நாதர் என்ற மழையே பெய்யவில்லை. அதனால், கிறித்துவம் முளைவிடாத நேரம். இசுலாம். என்ற புல் பூண்டுகள் அரேபியப் பாலைவனச் சோலையிலே அரும்பாத காலம். அத்தகைய கால வட்டம் வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த காலக் கட்டம். யூதம், கன்பூசியிசம், பார்சியம் போன்ற மதநெறிகள் வள்ளுவர் காலத்துக்குச் சிறிது முற்பட்டவை. என்றாலும், அவை தமிழ்நாட்டில் காற்சுவடுகளைப் பதித்தில. சைவம், வைணவம், வைதீகம், பெளத்தம், சமணம் மதக் கொள்கைகள் அப்போது பரவியிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்காலம் போல் அவை பரவியிராத சூழ்நிலை. எனவே, திருவள்ளுவர் முதன் முதலாக எழுத முற்பட்டபோது, அவருடைய எழுத்தின் கழுத்தின் மேல் மதங்களின் கூரிய வாட்கள் விழ<noinclude></noinclude> ka4ahjlvyhavpe4cz4dndjmwlgsqz60 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/228 250 108960 1947587 1930398 2026-06-18T07:53:17Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|226||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>ஆரம்பித்தன. அந்த அற்புத மாயங்களை எல்லாம் மீறி நின்று திருவள்ளுவர் சிந்தித்தார். கி.மு. 427க்கும் - 347க்கும் இடையே உள்ள காலக் கட்டத்தில் வாழ்ந்ததாக உலக வரலாறு கூறும் கிரேக்க பேரறிஞர் பிளாட்டோ, "Knowledge has its seat in the head; it is the eye of desire and can become the pilot of the soul' - Plato. 'அறிவு தலைமையாய் நின்று மனித விருப்பத்தை விழுமியதாய் நிறைவேற்றும் விழிபோல உள்ளது. உயிர் வாழ்வு துன்புறாதபடி நல்ல வழிகாட்டியாய் அது அமைந்து நிற்கிறது என்ற கருத்துக்கேற்ப, திருவள்ளுவரது சிந்தனை நிழலாடி இருக்கலாம்: "The people need the guidance of philosophers; as desires need the enlightenments of knowledge' - என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, உலகில் தோன்றிய ஒவ்வொருவனும் தான் பிறந்த மண்ணுக்குரிய தத்துவக் கடமைகளைச் செய்திட வழிகாட்டும் உரிமையுடையவனாவான். வீணாகக் காலத்தைக் கழிப்பவன் கடையனாவான்' என்பதால், திருவள்ளுவர், எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்ற குறட்பாவை எழுதித் தமிழ் பண்பாட்டிற்கு மட்டுமன்று - உலக மக்களது வாழ்வியலுக்குரிய இலக்கணமாய், இலக்கியமாய் இன்றும் இயங்கி வருகின்றார். ஏனென்றால், "There is nothing great in the world, but man and in man there is nothing great - but mind''. 'மனிதனைவிடச் சிறந்த ஒரு பொருள் இல்லை; மனிதனுக்குள் இருப்பவற்றில் சீரிய அறிவைவிட அரிய பொருள் ஒன்றும் இல்லை" என்ற சாக்ரடீசின் ஞானத்தை அவர் பெற்றிருந்ததே காரணமாகும். இத்தகைய உலக மக்கள் வாழ்கின்ற இந்த உலகத்தை; இன்று நான்கு மதங்கள் ஆட்சி செய்கின்றன. அவை-பவுத்தம், கிறித்துவம், இசுலாம், அன்றைய வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் என்பவை ஆகும். இந்த மதங்கள் எந்தெந்த உலக நாடுகளை மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்கின்றன; ஆள்கின்றன என்பதை உலக அறிஞர்கள் நன்கு உணர்வார்கள். மதம் என்றாலே - கடவுள், உயிர், ஆன்மா, வழிபாடுகள் ஆகிய அந்தந்த மதக் கோட்பாடுகளை அமல்படுத்தும் நெறிகளைக் கொண்டவை. அவற்றை உலகப் பார்வையில் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம். திருவள்ளுவர் தனது திருக்குறள் நூலை - வெண்பா பாவின இலக்கணத்திலுள்ள இறுதி ஈற்றடிகளின் முதலடியில் நாற்சீர்களாலும், இரண்டாம் இறுதி அடியில் முச்சீர்களையும் அமைத்து, ஏழுசீர்களில் ஏன் எழுதினார்?<noinclude></noinclude> 0g0lzucw4jxt591ael287oqxdd7me18 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/229 250 108961 1947590 1946937 2026-06-18T07:53:53Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||227}}{{rule}}</noinclude>இறைவனை அடைதற்குரிய படிமுறைகள் நான்கு. அவை : சீலம், நோன்பு, செறிவு (யோகம்) அறிவு என்பவை. இறைவன் உயிர்களிடத்திலே ஒன்றாய், வேறாய், உடனாய், புணரும் முப்புணர்ப்பால் புணர்ந்து - தனது அருளை, இன்பத்தை உயிர்கட்கு வழங்குபவன் என்பதால், திருக்குறள், பா அமைப்பை ஏழு சீர்களால் உருவாக்கினார். ஏன் அவ்வாறு திருவள்ளுவர் எழுதினார்? அவர் காலத்தில் ஓரளவு பரவியிருந்த சாங்கியம், மீமாஞ்சம், வைதீகம், சமணம், பவுத்தம், சார்வாகம் போன்ற சமயங்கள், கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறி, இறை கொள்கை இல்லாதவையாக இருந்தன. அறவாழ்வு, அல்லது ஒழுக்கம் மட்டுமே இருந்தால் போதும் மக்கள் வாழ்க்கை சிறக்கும் என்று பிரச்சாரம் செய்திருந்தன. இந்தச் சமைய நெறியைத் திருவள்ளுவர் மிக எச்சரிக்கையோடு எதிர்த்து, அறவாழ்வு, ஒழுக்கம் அமைந்து நிலை பெறுவதற்குக்கூட, இறையுணர்வும், வழிபாடும் தேவை என்று வலியுறுத்தி - வற்புறுத்தியதால் தான். {{left_margin|3em|<poem>'அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தார்க்குஅல்லால் பிற ஆழி நீந்தல் அரிது (3)</poem>}} {{left_margin|3em|<poem>'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்; ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார் (6) </poem>}} - என்ற இறை ஒழுக்க நெறிகளைக் கூறினார். திருவள்ளுவர் தான் எழுதிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துப் பாடல்களோடு நில்லாமல், உலகியற்றியான், வகுத்தான் வகுத்த வகையல்லால், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்ற குறட்பாக்களில் இறையுண்மையை, இறை வலிமையை வற்புறுத்தினார். திருக்குறளில் கடவுள் உண்மையை, வழிபாடுகளைத் திருவள்ளுவர் வலியுறுத்திக் கூறிய பிறகே, தமிழ் நூல்களில் கடவுள் வணக்கம் என்ற பாக்களைப் பிற்காலத்தில் சேர்த்து நூலுடன் எழுதப்பட்டன. உலக மக்களும், இந்தியாவில் வாழ்ந்த வேத கால மக்களும் கடவுள் பலர் என்று கூறி வந்தார்கள். இந்திரன், சோமன், மித்திரன், வருணன் என்ற Polytheism கொள்கையைப் புகுத்தி வழிபாடு செய்து வந்தார்கள். திருவள்ளுவர், அந்த பல கடவுள் தத்துவத்தை மறுத்தார். "ஒன்றே தேவன்', 'இறைவன் ஒருவனே என்ற Monotheism கொள்கையை வெளியிட்டார். அந்த ஒரே இறை, 'ஆதி-பகவன் என்றார். அவரை முதலாக உடையதே உலகு என்றார். கடவுள் உலகமாகப் பரவியுள்ளார் என்ற Panthesim தத்துவத்தைத் திருவள்ளுவர் கண்டித்தார். ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார். கடவுள் வேறு, உலகம் வேறு. கடவுள் உலகத்திற்கு, நிமித்த காரணன் என்றும் திருவள்ளுவர் அறிவித்தார்.<noinclude></noinclude> iwlwwugf6qqoju6s31x3f9qma4yo49f பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/230 250 108962 1947595 1930401 2026-06-18T07:54:41Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|228||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>என்றும் இருப்பது உலகம் - எவராலும் அது உருவாக்கப்பட்டது அன்று. அது தோன்றுவதும் இல்லை; அழிவதும் இல்லை என்ற சமணர் கொள்கையை மறுத்தார். 'உலகம் கடவுளை முதலாக உடையது; அதற்குத் தோற்றம், நிலை இறுதி என்ற மூன்று தொழில்கள் உண்டு என்பதற்குச் சான்றாக, 'உலகியற்றியான், ஆதி-பகவன் முதற்றே உலகு என்றார். 'உயிர் என்ற ஒன்று இல்லை எந்தப் பொருளுக்கும் ஆன்மா என்பது ஒன்றும் இல்லை என்று வாதிட்ட பெளத்தர், உலகாயதர் வாதங்களைத் திருவள்ளுவர் மறுத்தார். 'மன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ, மன்னுயிர், 'ஓம்பி அருளாள்வர்', 'உடம்பொடு உயிரிடை நட்பு என்று தனது குறட்பாக்களில் திருவள்ளுவர் முழக்கமிட்டார். ஒரே ஓர் உயிர் தான் பல உடல்களிலும் இருந்து வருகின்றது என்ற Monism கொள்கையைப் போதித்தவர்களைத் திருவள்ளுவர் மறுத்தார், 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற குறளைத் தீட்டினார். எனவே, பல்லுயிர் உண்டு என்பதற்குப் பற்றுக்கோடாக கடவுட் கொள்கையை சான்றாக்கினார். கடவுள் நிறை குணங்களின் உருவம். உயிர் இயல்பாகவே அறியாமை உடையது. அது முயன்று அறிவினைப் பெற்று உயரலாம் என்பது திருவள்ளுவரது கோட்பாடு. அந்த முயற்சியில் ஈடுபடும்போது உருவாகும் வினைச் சார்புகளே வாழ்க்கை நிலைகள் என்றார். இதற்குச் சான்றாக, கடவுள் வாழ்த்துப் பாவில், 'இருள்சேர் இருவினையும் சேரா என்றார். 'இருள் நீங்கி இன்பம் பயக்கும்', 'மருள் நீங்கி - மாசறு காட்சியவர்க்கு என்று 65-ஆம் குறளில் குறிப்பிடுகின்றார். இருள் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதைக் காட்டுகிறது. அதாவது, இறைவனை இருள் மறைத்துள்ளது. ஞானிகளின் அறிவுரைகளை ஏற்றுப் பின்பற்றி நடந்தால், இருளை - அந்த மருளை அழிக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். ஞானியர் அறிவுரைகள் என்றால், சங்கராச்சாரியர் போன்றவர்களது இன அறிவுரைகள் கூறுவோரல்லர், திருவள்ளுவரே எங்களைத் தான் சுட்டுகிறார் என்று, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்ற 134-வது குறளையும், அறுதொழிலோர் நூன்மறப்பர் என்ற 560-வது கொடுங்கோன்மை அதிகாரச் சொற்களையும் அவர்கள் சான்றுக்கு இழுப்பார்கள். 'அந்தணர் என்பர் அறவோர் என்ற குறட் கருத்தால் மேற்கண்ட இனவெறியை எதிர்க்கின்றார் திருவள்ளுவர். காரணம், 'மற்றெவ்வுயிர்க்கும் குளிர்ந்த அருளைச் செலுத்தும் செந்தண்மை அந்த இனத்திற்கு இல்லையே' என்பது தான்<noinclude></noinclude> km79wizcge3fcu00cg45xhg2hplauwi பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/231 250 108963 1947601 1946938 2026-06-18T07:59:12Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||229}}{{rule}}</noinclude>கடவுள் என்ற பெயரை - இறை என்று சுட்டுகிறோம். கடவுள் காப்பவர்! அதனால் இறை எனப்படுகிறார். அதே காக்கும் தொழில் மன்னனிடமும் அமைந்திருப்பதால், நாட்டின் காவலனும் இறை என்று கூறப்படுகிறான். அதைத்தான் இறைமாட்சி என்ற அதிகாரத்தால் திருவள்ளுவர் விளக்குகிறார். நாட்டைக் காப்பவன் 'இறை என்று அழைப்பதைப் போல; வீட்டைக் காக்கும் இல்லறக் காவலன் கொழுநன்’ என்ற சிறு தெய்வமாகின்றான். அதனால் தான், 'தெய்வம் தொழாஅள் என்ற குறளில் அந்தக் கருத்தைச் சுட்டுகிறார் திருவள்ளுவர். தெய்வம் தொழுதற்குரிய எண்வகைப் பொருட்களான நிலம், நீர், தீ, உயிர், காற்று, நிலா, சூரியன், புலனாய மைந்தன் என்ற படிமுறைகளில், மண் முதல் விண் வரையுள்ள ஐந்தும் பஞ்சபூத சக்திகளாகும், நிலா, சூரியன் இரண்டும் ஒளி வழங்கும் பொருட்களாக, தனிப்பட எங்கும் தோன்றுவன. இவற்றுக்கெல்லாம் மேம்படும் இறை - வானுறை தெய்வமாகும். கணவன் மனைவி இருவரும் ஞான மெய்யடியார்களைத் தொழுபவர்கள். மனைவிக்கு கணவன் உடனுறையும் தெய்வமாவான். பிற தெய்வங்களாகிய சூரியன், நிலா, வானுறை தெய்வம் ஆகியவற்றைத் தொழாமல், கணவனைத் தெய்வமாகத் தொழல் வேண்டும். தெய்வமாக எண்ணி வழிப்படல் வேண்டும். இது பாவனை, பாவனைப் பயன், பாவிப்போர்க்கும், பாவிக்கப்படும் பொருளுக்கும் வந்து சேருமாதலால், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் என்ற பாவனை கூறப்பட்டது. தொல்காப்பியர், இன்பமும் - பொருளும் - அறனும் - என்றாங்கு, அன்பொடு புணர்ந்து ஐந்தினை மருங்கின்' என்றார். திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப்பட்ட 'அறத்தை, திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவர் எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார். அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பமே சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரீகப் புரட்சிக் கொடியை, அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல’ என்று வீரப்பண் பாடி - வீறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக்கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300<noinclude></noinclude> sn0f43pukdv7aj29gbczr6mu59qxyxo பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/232 250 108964 1947602 1930407 2026-06-18T07:59:34Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|230||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>ஆண்டுகட்கு முன்பே மறுத்து, தமிழர் பண்பாடுகளை நிலைநாட்டிய மதச் சீர்த்திருத்த ஞானப் புரட்சியாளரான திருவள்ளுவர் பெருமானுக்கு 1972, மே, 3-4-ஆம் நாட்களில் ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது. தமிழ் மறைச் சிற்பியான திருவள்ளுவருக்கு உலகில் இத்தகைய ஒரு மத ஆய்வுப் போர்க்களம் அவர் வாழ்ந்திருந்த காலம் முதல் அன்று வரை வேற்று மதச் சவாலால் உண்டானதில்லை, உருவானதில்லை. அந்த விவரம் கீழே உள்ளது. சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வநாயகம் என்பவர், திருவள்ளுவர் கிறித்தவரா?, ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார், எழு பிறப்பு! சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி, திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார். இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர். திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3, 4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது. திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார். இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக, இந்தக் கட்டுரை ஆசிரியரான புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., பணியாற்றினார். புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டார்கள். இரு நாட்கள் மாநாட்டிலும் நடைபெற்றத் திருக்குறள் அறுவை சிகிச்சையால் விளைந்த அனுபவத்தைக் கேட்டிட, அறிஞர்களது ஆய்வுகளின் ஆழமறிந்திட, ஆயிரக்கணக்கான அறிஞர் பெருமக்கள் வருகை தந்தார்கள். காரணம், இதற்கான விளம்பரங்கள் தினமணி', 'முரசொலி நாளேடுகளில் வந்ததால்தான்.<noinclude></noinclude> 5xh0haxdjpvleh9fa4zrky5vwxopp1z பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/233 250 108965 1947606 1946939 2026-06-18T08:00:05Z S Roshan 003 16738 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="S Roshan 003" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||231}}{{rule}}</noinclude><b>ஐந்தவித்தான் யார்?</b> திருக்குறள் பீடம் அழகரடிகள் அணித்தலைவர் : டாக்டர் ச. பால சுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பண்ணாராய்ச்சி வித்தகர். பேராசிரியர் பி. சுந்தரேசனார், சமண மதத் தலைவர், ஜீவபந்து டி.எஸ். ரீபால், பேராசிரியர் வி.பா.கா. சுந்தரம், எம்.ஏ., பேராசிரியை ப. தமிழ்ச்செல்வி, எம்.ஏ., ஆகியோர் ஐந்தவித்தான் யார்? அணி உறுப்பினர் அறிஞர்களாவர். <b>வான் எது?</b> அணித் தலைவர் : பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், எம்.ஏ., எல்.டி., விசாரத் (இந்தி), அணி உறுப்பினர்கள் : டாக்டர் என். சுப்பு ரெட்டியார், எம்.ஏ., பி.எச்.டி., டாக்டர் ஞானப்பிரகாசம், எம்.ஏ., பி.எச்.டி., பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கே. எஸ். மகாதேவன், எம்.ஏ., தத்துவக் கவிஞர் குடியரசு. <b>நீத்தார் யார்?</b> அணித் தலைவர் : டாக்டர் வ.சுப. மாணிக்கம், எம்.ஏ., எம்.ஓ.எல். பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் மு. கோவிந்தசாமி, எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி., புலவர் மு. சண்முகம் பிள்ளை, பேராசிரியர் பொன். ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., எம்.ஓ.எல்., பேராசிரியை சரஸ்வதி இராமநாதன், எம்.ஏ., பேராசிரியர் இ.சு. முத்துசாமி எம்.ஏ.பி.டி., <b>எழு பிறப்பு!</b> அணித் தவைர் : தவத்திரு. குன்றக்குடி அடிகளார், எம்.எல்.சி., அணி உறுப்பினர்கள் : டாக்டர் இரா. சாரங்கபாணி, எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., வித்வான் வை. இரத்தின சபாபதி, பி.ஓ.எல்.எம்.ஏ., மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வித்வான் வி.பி. நடராசன். <b>சான்றோர் யார்?</b> அணித் தலைவர் : இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை, அணி உறுப்பினர்கள் : பேராசிரியர் டாக்டர் புலவர் மா. நன்னன், எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா, எம்.ஏ., தமிழ்நாடு காவல்துறை சு.மி. டயஸ், ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., (சமனர்), பேராசிரியை சாரதா நம்பியாரூரான், எம்.ஏ., சோம. இளவரசு. <b>திருவள்ளுவர் கிறித்துவரா?</b> அணித் தவைர் : டாக்டர் மெ. சுந்தரம், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., அணி உறுப்பினர்கள் : க.த. திருநாவுக்கரசு, எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ. (வரலாறு), எம்.லிட், டாக்டர் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., (வரலாறு), எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ., பி.எச்.டி, புலவர் க. வெள்ளை வாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன், எம்.ஏ.<noinclude></noinclude> rl9wi90eo9opsw1dfac0zeglrchj4vw பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/234 250 108966 1947604 1930410 2026-06-18T07:59:42Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|232||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>இறுதியாக மாநாட்டின் இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வி. முனுசாமி, பி.ஏ., பி.எல். சிறப்புரை ஆற்றினார். இரண்டு நாள் திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கும் தலைமை வகித்த தலைவர் தேவநேயப் பாவாணர், அவர் ஒரு கிறித்துவராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு நியாயமான, நேர்மையான, கடமையான நீதியை, தீர்ப்பை வழங்கினார். என்ன அந்தத் தீர்ப்பு? திருவள்ளுவர், செயிண்ட் தாமஸ் என்ற பாதிரியார் மத உரையை சென்னை மாநகரிலே கேட்டுத் திருக்குறள் நெறிகளை எழுதியவரல்லர். அவரது வணிக நண்பரான ஏலேலசிங்கர் மூலமாகவும், கிறித்துவக் கருத்துக்களை அறிந்து திருக்குறளை எழுதியவரல்லர். நவநீத கிருஷ்ணன்தான் இயேசுநாதர் என்று சிலர் கூறுவதைப் போல இருக்கின்றது. மேற்கண்ட ஆராய்ச்சிகள். நான் எழுதிய திருக்குறள் மரபுரையில் திருவள்ளுவரது காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளேன். உலகத்தை உய்விக்க வந்த தீர்க்க தரிசிகளது வாக்குகள், நெறிமுறைகள், ஒவ்வொரு நாட்டு ஞானியர்கள் இடையே தோன்றுவதும், கூறுவதும் அந்தந்தக் காலக் கட்டத்துச் சிந்தனையில் மலர்வதுமுண்டு. அதனால், அவரிடமிருந்து இவர் சிந்தனைகளைப் பெற்றார் என்றோ, இவரிடமிருந்து அவர் பெற்றார் என்றோ நினைப்பது இயல்பு. அதற்காக, அந்த ஞானியர்களுக்குக் களங்கம் கற்பிக்க மாட்டார்கள் தேர்ந்த சிந்தனையாளர்கள். எனவே, திருவள்ளுவர் காலத்திற்கும் - இயேசு நாதர் காலத்திற்கும் உள்ள இடைவெளியில் நடைபெற்ற மதக்கோட்பாட்டு நெறிகளது வளர்ச்சிகளை நினைத்துக் கொண்டு திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்புவதில் எனக்கு உடன்பாடன்று என்று தேவநேயப் பாவாணர் தனது முடிவுரைத் தீர்ப்பைக் கூறி முடித்தார். இந்த மாநாட்டின் வரவேற்பாளராக இருந்த புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ., அவர்கள், மாநாட்டுக்கு வருகை தந்திருந்த புலவரேறுகளை எல்லாம் வரவேற்றுத் தனது வரவேற்புரையில் பேசும்போது : 'திருக்குறளை யாத்த திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக் காலத்தில், இத்தகைய ஒரு வேற்று மதச் சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை. வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஓர் அகராதி திருக்குறள்: குறள் பிறந்த நாள் முதல் இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றாதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை. எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம், தன் மதம் தாண்டவமாடுகின்றதே<noinclude></noinclude> cveax6gfjor3nqr5m7f6q08dwftlblz பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/235 250 108967 1947600 1946940 2026-06-18T07:59:11Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|புலவர் என்.வி. கலைமணி|233}}{{rule}}</noinclude>அன்றி, எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை. கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே Second hand person னால் எழுதப் பெற்ற பகவத் கீதை, பைபிள், திருக்குரான் போன்றவைகூட, நேரிடையான பொருளை ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது. ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும், மதத் தத்துவங்கள் அனைத்தும், தங்களுடைய அடிப்படைகளுக்கு ஏதாவது கிடைக்காதா என்று, குறளை மட்டும் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் திருக்குறள் பெருமை என்னே! தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்தப் பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும், பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு தமிழ் மண்ணுக்குப் பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில் குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கூடச் சொல்லி விடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை. ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் இறப்பும் காலண்டரில் தெரிகின்றது. குறளாசிரியர் எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார் என்றுகூட இதுவரைத் தெரியவில்லை. அதன் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் அவரவர் முடிவுக்குக் கிட்டிய மதிப்பீட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள். இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் உலகத்திலேயே ஒன்றுகூட இல்லை - திருக்குறளைத் தவிர: இந்தக் குறளுக்கு இதுதான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன், இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது. வியப்பிற்குரிய பிறப்பை எடுக்காமல், சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தர் பெருமான் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள்கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள்கூட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கின்றது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது, திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஓடுகின்றது என்பதை வியப்போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. அந்தந்தக் காலத்திலே உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக்<noinclude></noinclude> fnmszl196vhfiuulrpurcu10t3mj33o பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/236 250 108968 1947583 1895124 2026-06-18T07:51:53Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|234||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>காலத்தை வைத்தே திருக்குறளின் காலத்தை நிர்ணயித்தார்கள். அதனால் தான், குறளுக்கு உரையாசிரியர்கள் இவ்வளவு வேகமாகப் பெருகலானார்கள். திருக்குறளின் காலம் இதுவரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்போது அது எந்த மதத்துக்குச் சொந்தம்? உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள காலம் தானா - திருவள்ளுவர் காலம்? அந்த அறிவுக்குத் திட்டவட்டமான கால வரம்பு கண்டதுண்டா? திருக்குறளைப் பொறுத்தவரை காலம் கடந்த ஒன்றாக இருக்கும்போது, காலச் சக்கரத்தில் மதங்கள் அடிபடுகின்றபோது, தமிழன் என்ற முறையில் - எனக்கு மகிழ்ச்சி. என்றாலும், ஆராய்ச்சி என்ற முறையிலே அது வெறுப்பைத்தான் அளிக்கின்றது. எனது திருக்குறளை யாரும் பாராட்டலாம் என்பது வேறு எவனும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது வேறு! 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியார் கூறினார். ஆனால், ஒரு மதத்திற்கே தந்து என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனத்திலிருத்த வேண்டுகின்றேன். இந்தக் காலத்தில் ஒரு பூஞ்செடியைக்கூட, ஒருவன் தனி உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், இயற்கை முன்னே அது பொதுச் சொத்து. எவனுடைய விரல்களிலிருந்து எழுத்தாணி அசைந்தாலும் சரி, அவன் எழுதுகின்ற எழுத்து அவனது அடுக்களைக்குச் சொந்தமல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அது, கட்டளையில்லாமல் வருகின்ற, காற்றில் கலக்க வேண்டிய பொதுச் சொத்தாகும். நேரிடையாகவே நான் கேட்கிறேன். உங்களுடைய மதங்கள் கடவுளால் நேரிடையாகப் படைத்ததுதானே! அதே கடவுளுடைய பொதுத் தன்மையில் ஓர் அனுகூட இருக்காதா மனிதனுக்கு? ஆகவே, இங்கே ஆய்வுக்காக வந்திருக்கின்ற முப்பத்தெட்டுப் புலமையாளர்களையும் நான் தாள் பணிந்துக் கேட்கின்றேன். உங்களுடைய மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து, வெளி வருகின்ற ஆற்றல் படைத்த சிறகுகள், உங்களுக்கு முளைக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். அப்படி முளைக்காவிட்டால், உங்களுடைய முட்டைகளை நீங்கள் சோதனையிடுங்கள். மனிதன் சரி பார்க்க முடியாத மிருகமல்ல. அத்தகைய நிலையிருந்தால், அவனைக் கடவுள் படைக்கவில்லை! சிந்தனைகள் மிருகத்திற்கு இல்லாதபோது, மனிதனுக்கு மட்டும் இருக்கும்போது, உரிமைகள், வேட்கைகள் இவற்றைத் தாண்டிச்<noinclude></noinclude> jcovcssbd7mqds8w35hi37mbovro12e பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/237 250 108969 1947586 1895127 2026-06-18T07:52:53Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||235}} {{rule}}</noinclude>சிந்திக்கின்ற அவனுக்கு, அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவனைக் கடவுள் படைக்கவில்லை. திருக்குறள் என்பது, கையில் கிடைத்த பலகாரமல்ல. உங்களது விருப்பம் போல பங்கிடு செய்து உண்பதற்கு. மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும். திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் துணுக்கம், முடியாத மர்மக் கதையாகவே இருக்கின்றது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறிவிட்டால், பிறக்கப் போகும் தொட்டில்கள், உங்களை மறந்து விடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக்கூட இருக்கலாம் அல்லவா? எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப சிந்தியுங்கள். உங்களுடைய விவாதங்கள் அனைத்தையும், அய்யன் திருவள்ளுவரது உயிர்ச் சொல்லோட்டக் குறள் நாதங்கள் காற்றிலிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன. அய்யன் திருவள்ளுவர் முன்னாலே நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக் கூடாது. அவர் எதிர்பார்த்த, முதிர்ச்சியடைந்த முழு மனிதனை உங்களுடைய ஆய்விலே உருவாக்கிக் காட்டுங்கள். திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு, அண்ட அளவில் வைத்து மறைந்த சிறு புள்ளியாகக் கருதுகின்றேன். ஏனென்றால், அய்யன் திருவள்ளுவன் அண்டத்தைவிட விரிந்தவன் என்பது பொது மக்கள் கருத்து. இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள், தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யார் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. தன் கருத்தே எதிர்காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல். பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்றபோது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது? நேற்றைய கருத்தே - இன்றையே கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற பரந்த நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள்.<noinclude></noinclude> qgni67jklth9q6cn7n3yyettqefwl0u பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/238 250 108970 1947545 1895129 2026-06-18T06:19:35Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|236||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> நமது திருக்குறள், எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளத்தத்தின் கருத்து, இசுலாமியத்தின் கருத்து, கிறித்தவர்களின் கருத்து, திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்து கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும். ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை, கருத்து வண்ணங்கள் இதுவரையில் ஆய்வு நிறக் கலையிலே தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது. திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம்! நாத மர்மம்! கருத்துச் சூழல்! சிந்தனை மயக்கம்! அறிவின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல்! குறி பார்த்தடிக்க முடியாத குறி! விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிச வாய்வு! மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து. அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் விசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த ஒருவன்கூட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே - ஏன்? ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய, தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும், சூத்திர வடிவில், யாப்பு செய்யுள் வடிவில், நுட்பம் செறிந்த செஞ் சொற்களைப் பெய்து, மந்திரம் - மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள். திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அது வராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். எனவே, மனிதன் என்பவன், எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால்தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும். இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு!<noinclude></noinclude> 0sphqg5wrj4rasf7zu0uguzttq8wgxk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/239 250 108971 1947546 1895131 2026-06-18T06:19:53Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||237}} {{rule}}</noinclude> அவற்றை ஆழ்ந்து, கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை! தமிழ் மொழியில் அத்தகைய சங்க கால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச்சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது மனிதன் மனம், முழு முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக் கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது. ஏனென்றால், திருவள்ளுவர் மனம் ஒரு திறந்தவெளி ஒன்றுமில்லாத நிலையில் ("status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") இருந்து எழுதியவர் அவர். எழுதிய அய்யன் திருவள்ளுவன் - இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா? மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் இயேசு பெருமானுக்குச் சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா? திருக்குறளுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்றுவரை கூடினவா? பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வி. முனுசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக்கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே! இருந்தாலும், இந்த நேரத்தில் இதே கிறிஸ்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல, ஜி.யூ. போப்பைப் போல, வீரமா முனிவரைப் போல! கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால், வேறொரு கோணத்தில் நோக்கும்போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது. திருக்குறள் மத நூல் அல்ல. வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதி நூல்! வேண்டுமானால் இவ்வாறு கூறலாம். அய்யன் திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மதக் கருத்துக்களை ஏற்று,<noinclude></noinclude> ijtirusccguhnwfau576k4jahsaa4yc 1947547 1947546 2026-06-18T06:20:19Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||237}} {{rule}}</noinclude>அவற்றை ஆழ்ந்து, கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை! தமிழ் மொழியில் அத்தகைய சங்க கால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச்சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது மனிதன் மனம், முழு முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக் கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது. ஏனென்றால், திருவள்ளுவர் மனம் ஒரு திறந்தவெளி ஒன்றுமில்லாத நிலையில் ("status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") இருந்து எழுதியவர் அவர். எழுதிய அய்யன் திருவள்ளுவன் - இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா? மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் இயேசு பெருமானுக்குச் சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா? திருக்குறளுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்றுவரை கூடினவா? பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வி. முனுசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக்கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே! இருந்தாலும், இந்த நேரத்தில் இதே கிறிஸ்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல, ஜி.யூ. போப்பைப் போல, வீரமா முனிவரைப் போல! கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால், வேறொரு கோணத்தில் நோக்கும்போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது. திருக்குறள் மத நூல் அல்ல. வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதி நூல்! வேண்டுமானால் இவ்வாறு கூறலாம். அய்யன் திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மதக் கருத்துக்களை ஏற்று,<noinclude></noinclude> j4aj22i1wpec52llawj83lue62lazlp பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/240 250 108972 1947548 1895134 2026-06-18T06:20:44Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|238||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>அவற்றை மறுத்து, மதச் சார்பற்ற தமிழர் நெறிகட்குத் தனித்துவம் தந்துள்ளார் என்று! நீங்கள் தான் அதற்கு கட்ட வேண்டும் நியாய வரம்பு! மதநூல் என்றால் அதிலே மாயம் இருக்கும்! அற்புதம் கூத்தாடும்! அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு விலா நோகச் சிரிக்கும்! திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே! மதமே கூடாது என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஓடுகின்ற அருவி. பொதுவாகப் பார்ப்பவன் மனிதனானான். குறிப்பாகப் பார்ப்பவன் மதவாதியானான்! 'செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை' என்றான் - கார்ல் மார்க்சு! தேவையான ஆசைகளைப் பூர்த்திச் செய்து கொள்பவன் திராணியுள்ள மனிதன் என்றான் - ஏஞ்சல்சு. ஆனால், அய்யன் திருவள்ளுவர், மனக் கலவரத்திலே ஈடுபட்டுத் தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார். மனம், என்ன என்பதை விளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர், அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னார். 'மனத்தின் கண் மாசிலனாதல்' என்ற நிலையை உருவாக்க நினைத்தார்! மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான்சு நாட்டுத் தத்துவவாதிகளான ஆல்பிரைட் கேமு-வைவிட, ஜீன்பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு உலகத் தத்துவ ஞானி திருவள்ளுவரே! வெறும் டைலக்டிகல் அனாலிசஸ் என்று சொல்வார்களே, அதைத் திருவள்ளுவர் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்க மாட்டார் - படித்தவர்களிடையே சென்று சேர்ந்திருப்பார். மனம் உள்ளவரை மாச்சர்யங்கள் உண்டு. அதன் அடிப்படையில் ஒழுக்கங்களை கற்பிப்பது இமாலயப் பிரச்சனை. 'நீங்கள் வெறுமனே இருங்கள்' ("Be in nothingness") என்று கூறுவதற்குப் ஃபிரெஞ்சு நாடு காத்திருக்கிறது. ஆனால், எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன் என்ற தத்துவத்தை 1972-ஆம் ஆண்டுக்கு முன்பே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன். இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை - மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை. என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை. அறிவிலே நுட்ப ஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதீகன் ஆன்மீக சாயம் பூசிவிட்டான் அவ்வளவுதான்.<noinclude></noinclude> njxsofp3826mm9y6y11s4bz018dqzaf பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/241 250 108973 1947549 1895158 2026-06-18T06:21:03Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||239}} {{rule}}</noinclude>இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை - புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார். இந்த விசாரணையில், நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ! - மீட்டுக் கொள்வீர்களோ! - அது எனக்குத் தெரியாது. மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை - அது ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு! அதற்குமேல் சரித்திரமில்லை - அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருக்குறளின் எழுத்துக்கள் - வைதீக அடிப்படையில், வானத்திலிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது. மிருகத்தைவிட - ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன், இவ்வளவு தான் சிந்திருத்திருப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ, தெரிவதற்கு பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்கு காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற இறுதி ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது! அவருக்கென்று ஒரு மதம் இல்லை, அவ்வளவு தானே ஒழிய, வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? இத்தகைய திருவள்ளுவரை இந்த ஆய்வு மாநாடு என்ற போர்க் களத்தில் நீங்களும் சந்திக்கின்றீர்கள் - புலவர் தெய்வநாயகமும் சந்திக்கின்றார். நீங்கள் இருவரும், காலமாகிக் காணாமல், காற்றிலே கலந்த திருவள்ளுவரைத் தேடுவதற்காக முனைகின்றீர்கள். 'பார்வை ஒழுங்காக இருப்பவர்களுக்கே பாதாளம் தெரியும்' என்றான் அரிஸ்டாட்டில். திருக்குறள் ஆழத்தை நோக்கி இறங்குவதற்கு வந்திருக்கின்ற தண்டமிழ்ச் சான்றோர்களே! உங்கள் முன்னாலே விரிக்கப்பட்ட ஆறு கிறித்துவப் புத்தகங்கள் வழியாக, நீங்கள் உதிர்க்கின்ற கருத்துக்கள், இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரைக் காட்டுவதற்காகவாவது அமைய வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசையாகும். பல நூற்றாண்டுகட்கு ஒரு வள்ளுவராகப் பிறப்பவர் தான் திருவள்ளுவர்!<noinclude></noinclude> qfoy64g1dnxsiwr3ycd7kevju1yvn1k பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/242 250 108974 1947550 1895140 2026-06-18T06:21:20Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|240||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>இதுவரையில், கடவுள்தான் நினைவில் நிற்பவன் என்று தத்துவங்கள் கூறுகின்றன. வேதங்களையும், அதற்குச் சாட்சியாகக் கோயிலையும், பூசையையும் காட்டுகின்றனர் வேதாந்திகள்! அருள் கூர்ந்து, நீங்கள் அய்யன் திருவள்ளுவரைக் கோயிலில் இல்லா இறைவனாக, பூசையில்லா இறைவனாக, மனிதநேய மனிதத்தில் மணக்கும் மனமாகக் காட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன். திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்பி; அதற்காகப் பொருட் செலவு செய்து தோல்வி பெறுவதைவிட, அருட்திரு. டாக்டர். ஜி.யூ.போப் அவர்கள் "Humility, Charity and forgiveness of injuries being Christian qualities are not described by aristle... Now these three are forcibly inculcated by the Tamil moralists these are the themes of his finest verses. So far, then we may call this Tamil poet a christian" 'அடக்கம், அறம், பாவமன்னிப்பு' என்பன கிறித்துவ இலட்சியங்களாக இருந்தும்கூட, அவற்றை அரிஸ்டாட்டில் தமது நூலில் குறிப்பிடவில்லை. தமிழ் அறநெறியாளரான திருவள்ளுவர், இந்த மூன்றையும் மிக வலிமையாக மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளார். அவருடைய அருமையான செய்யுட்களுக்கு - இவைதாம் ஆய்வுப் பொருட்களாக உள்ளன. எனவே, நாம் அந்தத் தமிழ்க் கவிஞரை ஒரு கிறித்துவர் என்றே அழைக்கலாம்" என்று குறிப்பிட்டார். திரு. டாக்டர். போப் அவர்கள் கிறித்துவத் திருமறைக் காவலராக இருந்ததினால்தான். May Call என்ற வார்த்தையை ஆட்சி செய்துள்ளார். திருக்குறள் ஆய்வு மாநாட்டினர்களைப் போல, திருவள்ளுவரைக் கிறித்துவராக ஆக்கிட விரும்பவில்லை. காரணம், அவர் ஒரு மத எல்லையின் காவலராக இருந்ததால், தன்னை உயர்த்திக் கொண்டார். 'உலக பார்வையில் தமிழ் மறை' என்ற தலைப்பில், இக்கட்டுரையை எழுதும்போது, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டேன் என்றால், இந்த மாநாட்டில் திருவள்ளுவர் கிறித்துவரல்லர் என்ற இந்த மாநாட்டின் முடிவை, சென்னை மாநாட்டார் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிட வழங்காமல் இரும்புத் திரையிட்டு மறைத்து விட்டார்கள். எனவே, திருவள்ளுவர் பெருமானுடைய பாதை - மக்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தனி ஒரு பாதை பொதுவான பாதை; - யாரையும், எவரையும் நல்வாழ்க்கைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அறம் சார்ந்த பாதை! நம்பி ஏற்கத் தகுந்த துணிந்த உலகத் தமிழ்மறைப் பாதையாகும். {{Right|{{larger|<b>- புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ.,</b>}}}}<noinclude></noinclude> lrq47j3zhjslmghg1fioj8jtyvxh6gy பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/243 250 108975 1947551 1895145 2026-06-18T06:21:35Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude> {{dhr|3em}} {{c|{{Xx-larger|<b>இயற்கையோடு விஞ்ஞானம்<br> இணைந்த நூல் திருக்குறள்</b>}}}} அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்பு இயைந்திருக்கக் கூடியனவும், ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது. வள்ளுவர் திருக்குறள். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லாரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியுள்ளது. மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவேதான், <b>எல்லா மக்களும், எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக் கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.</b> ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறிகள் முதலியவைகளுக்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம் மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். வள்ளுவரையும், நாம் ஒரு மனிதராக மதித்தே, மக்களிடையே காணப்படும் இழிவு நீங்கி மனிதத் தன்மை வளர்ந்தோங்க வேண்டும் என்ற கருத்தோடு பாடுப்பட்ட ஒரு பெரியாராக மதித்தே - நாம் குறளை ஒப்புக் கொள்கிறோமே ஒழிய; அதை நாம் கடவுள் வாக்காகவோ, அசரீரி வாக்காகவோ ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் - வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி என்னவென்றால் குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்க மாட்டான்; <b>யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்.</b> ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து - மறுப்பு திருக்குறள்தான். திருவள்ளுவ மாலையில் பல புலவர்களே இதைக் கூறியுள்ளனர்.<noinclude></noinclude> 56lr0jumaf5kmdem9bpqutji6na14qp பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/244 250 108976 1947552 1895151 2026-06-18T06:21:50Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|242||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> ஆரியப் புரட்டை வெளியாக்கி மடமையைப் போக்கும் நூலே திருக்குறள். ஆதலால், குறள் வழி நின்று பகுத்தறிவு பெற்றுப் புது மனிதனாகுங்கள். புராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்த பின், மூடக் கருத்துக்கள் ஆட்டங்கண்ட பின்தான், <b>குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் வந்தேன்.</b> <b>இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு - பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப்</b> பற்றிப் பேசுகின்றேன். அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான். குறளைப் பாராட்டியே தீருவான் சிறிதாவது பின்பற்றிக் குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான். குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவப் பூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும். குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல் திருக்குறள். பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களை வெளிர்க்குவதற்கென்றே எழுதப்பட்ட நூல். ஆகவே, திருவள்ளுவர் ஒரு பகுத்தறிவாளியாக இருந்திருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு செய்யுளும் பபார்ப்பனர்களின் அயோக்கியத் தன்மைகளை விளக்குகிறது. {{Right|{{larger|<b>- தந்தை பெரியார்</b>}} [1934, ஆம் ஆண்டுகளின், எழுதிய<br> இதழ்களிலிருந்து சில குறிப்புகள்]}}<noinclude></noinclude> bgzywxx96je5pifgtvv59rxsntkv1j8 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/245 250 108977 1947553 1895159 2026-06-18T06:22:06Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude> {{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>உலக அற நூல்; <br>திருக்குறள்</b>}}}} அறிஞர் அண்ணா, சென்னை மீர்சாகிப்பேட்டையிலுள்ள வள்ளுவர் வாசகச் சாலையின் 9-வது ஆண்டுவிழாவில் 26.10.1958-ல் ஓர் அரிய உரையை ஆற்றினார். அந்த உரையை அப்படியே இங்கே தருகிறோம். “இதுவரை திருக்குறளைப் பற்றியும், வள்ளுவரைப் பற்றியும் இங்கு பலர் பேசினார்கள். நான்திருவள்ளுவரின் திருக்குறளிலே செலுத்தும் நோக்கம் அவர்கள் பேசியதிலிருந்து வேறுபட்ட்து; முரண்பட்டதல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோணத்திலிருந்து திருக்குறளை ஆராய்ந்தர்கள். நான் இன்னொரு கோணத்திலிருந்து நோக்குகிறேமன். எனக்கு முன் பேசியவர்கள், உலகத்தில் உள்ள பல்வேறு நூல்களையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு, திருக்குறள் சிறப்பு வேறு எந்த நூலிலும் இல்லை என்பதை எடுத்துக் காட்டினார்கள். திருக்குறளை, உலக அறநூல்' என்றார்கள். தத்துவஞானி சக்ரடி சீனநாட்டுப் பேரறிஞன் கன்பூஷியஸ் போன்ற மேதைகளை எல்லாம்வி சிறந்தவர் வள்ளுவர் என்று சொன்னார்கள். எதிலும் காணக் கிடைக்க கருத்துக்ள் வள்ளுவரின் குறளிலே காணக் கிடைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டின்ார்கள். வேத, புராண இதிகாசங்களுக்குக் கிடைக்காத சிறப்பு உலகத்தில் திருக்குறளுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு பெருமைக்குரிய குறளை இடைக்காலத்தில் நாம் மறந்தோம். இதனை நாம் ஆராய்ந்தால், தமிழர் மேற்கொள்ள வேண்டிய நல்ல பொறுப்பு நமக்குத் தெரியும். கண்ணகியுடன்,முதலில் கொஞ்சி, குலவி, இடைக்காலத்தில் மாதவியுடன் வாழ்ந்து, பிறகு ஊடல் காரணமாக மாதவியை விட்டுப் பிரிந்து, மீண்டும் கண்ணகியைப் பார்க்க வந்த கோவலனைக் கொஞ்சம் உங்கள் மனக்கண் முன்னே நிறுத்திப் பாருங்கள். வலிவும், பொலிவும் இழந்து பொருளிழந்து, பிறகு வாழ வழித் தெரியாமல் திண்டாடிய நிலையில் கோவலன் கண்ணகியைக் கண்டான். கண்ணகியோ தன்னிடமுள்ள பொருள்களையெல்லாம் இழந்து, மையிழந்த கண்ணோடு, தைலுமிழந்த கூந்தலோடு மேனி மெருகு குலைந்து இருந்த நிலையைப் பார்த்தக் கோவலன்<noinclude></noinclude> ktig1pd1b41ss4kobwg40jzgrw12e42 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/246 250 108978 1947554 1895157 2026-06-18T06:22:24Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|244||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> 'நான் இனி உன்னோடுதான் வாழ வேண்டும். ஆனால், இந்த ஊரிலே இனி நாம் வாழலாகாது. எனவே, மதுரையம்பதிக்குச் சென்று ஏதேனும் வாணிபம் நடத்திப் பிழைக்கலாம்' என்று அழைத்த நேரத்தில், வாணிபத்துக்கு மூலப் பொருளாகக் காலிலே இருந்த காற்சிலம்பைக் கழற்றிக் கொடுத்து விற்றுவரச் சொன்னாள் கண்ணகி. இந்தக் கதையை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். மாதவியிடம் சிக்கி மீண்ட கோவலனிடம், கடைசிக் காலத்தில், இதோ காற்சிலம்பு என்று கூறி, கண்ணகி கழற்றிக் கொடுத்த கடைசிக் கருவூலத் ப் போல; தமிழர்கள் வலிவிழந்து, வாழ்விழந்து, தத்தளித்த நேரத்தில் தமிழ்த் தாயின் கடைசிப் பொக்கிஷமாக நமக்குக் கிடைத்து திருக்குறள்! இதை விற்க வேண்டிய இடத்தில் விற்றால் கிடைக்க வேண்டிய விலை கிடைக்கும் இடம் தவறி விற்றால் தலை போகும் - கோவலனைப் போலச் சாக நேரிடும் இதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்தினால் வாழ்வு கிடைக்கும் இல்லையேல் தாழ்வுதான் கிட்டும்! திருக்குறளை ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளுக்குத் தக்கவாறு ஆராய்கிறார்கள். உதாரணமாக, அன்பர் ஆச்சாரியார் அவர்கள், கல்கி' இதழிலே திருக்குறள் விளக்கம் எழுதுகிறார்; திருவாவடுதுறை மடாதிபதியும் திருக்குறளைப் போற்றுகிறார்கள்; ஜீவானந்தமும் மாதம் ஒரு முறையாவது திருக்குறளைப் பற்றிப் பேசுகிறார் - எழுதுகிறார்; காங்கிரஸ்காரர்களும் குறளைப் பயன்படுத்துகிறார்கள்; நாமும் பயன்படுத்துகிறோம். நாம் குறளைப் பயன்படுத்துவதற்கும் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. அவர்கள் குறளை எப்படிப் போதிக்கிறார்கள் என்றால், அறம் - பொருள் - இன்பம் என்று குறளில் வகுக்கப்பட்டுள்ளது. அறம் என்றால் தர்மம், தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் போதனர்களான வசிஷ்டர், வியாசர் முதலானோர் பாரதம் போன்ற தர்ம நூல்களை எழுதினார்கள். ஆகையினாலே, பாரதத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற தர்மோபதசேங்களை அனைவரும் படித்துணர வேண்டும் என்று ஆச்சாரியார் அவர்கள் சொல்லக் கூடும். 'அறம் என்றால் தர்மம்; தர்மம் செழிக்க சமத்துவம் வேண்டும்; சமத்துவத்துக்குப் பொதுவுடைமையே அடிப்படை, அந்தப் பொதுவுடைமை பூத்துக்குலுங்கும் இரஷ்யாவைப் பாருங்கள், இரஷ்யாவைப் போல இந்நாட்டிலே ஏற்பட வேண்டுமானால் எங்களை ஆதரியுங்கள் என்று ஜீவானந்தம் சொல்லாம்: 'அறம் என்றால் தர்மம்; தர்மம் நிலைக்க சர்க்கார் சரிவர இயங்க வேண்டும்; அதற்கு அனைவரும் நிறைய வரி செலுத்த வேண்டும்' என்று ஆளும் கட்சியினர் சொல்லலாம். 'அறம் என்றால் தர்மம். தர்மம் செழிக்க சகோதரத்துவம் ஏற்பட வேண்டும். அந்தச் சகோதரத்துவம் வளர வேண்டுமானால் மதம் செழிக்க<noinclude></noinclude> fovfcr5p8c50lnkd17qpcgj23lua84y பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/247 250 108979 1947555 1895162 2026-06-18T06:22:43Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||245}} {{rule}}</noinclude>வேண்டும்; மதம் வளரக் காணிக்கைகளைக் கொண்டு வந்து குவியுங்கள்' என்று மடாதிபதிகள் சொல்லக்கூடும். இப்படி, ஒவ்வொருவரும் அவரவர் போக்குக்குச் சாதகமாகக் குறளை வியாக்கியானம் செய்யலாம். பதினைந்து ஆண்டுகட்கு முன்பு, நான் பேசுவதற்காகச் சென்றிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில், அந்தப் பள்ளிக்கூடத்துத் தமிழாசிரியர் ஒருவர் மாணவர்களைப் பார்த்து ஒரு குறளுக்குப் பொருள் கூறினார். அவர் ஒரு வைணவர்; திருநாமம் சாத்திக் கொண்டிருந்தார். {{left_margin|3em|<poem>'கற்றதனா லாயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனின்'</poem>}} என்ற குறளுக்கு, ஆண்டவனின் திருவடிகளைத் தொழாவிட்டால் என்ன படித்துத்தான் என்ன பயன்? என்று அவர் பொருள் சொல்லியிருப்பாரேயானால் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை; எம் பெருமானான ஶ்ரீமன் இராமச்சந்திர மூர்த்தியைத் தொழா விட்டால் படித்தும் என்ன பயன்? என்று பொருள் கூறினார். எனக்கு எதிரிலேயே இப்படி அவர் கூறியதைக் கேட்டு நான் திகைப்பும் வியப்பும் அடைந்தேன். 'வாலறிவன் என்றால் இராமச்சந்திரன் என்று பொருள் சொல்வதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், 'வால்' என்பது அனுமான் வாலைக் குறிக்கும்; அந்த அனுமானை அறிந்தவன் இராமன்; அதனாலே, ஶ்ரீஇராமச்சந்திர மூர்த்தியைத்தான் வாலறிவன் என்பது குறிக்கிறது என்றார். அவர் சொன்ன கருத்தைத்தான் பிள்ளைகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்; ஏனென்றால் அவர் ஒரு புலவர் பள்ளியாசிரியர். குறளிலே நாம் பார்க்கின்ற பொருள் வேறு. குறளில் இல்லாத பெருமையை நான் ஆராய விரும்பவில்லை. அதை அறிய எனக்கு எந்த அளவுக்கு அறிவு ஆற்றல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கூட்டம் முடிந்ததும் நீங்களெல்லாம் வீடு திரும்பும்போது மவுண்ட்ரோடு பஸ், நிற்குமிடத்தில் பஸ்ஸூக்காகக் காத்திருப்பீர்கள். பஸ் வரும் வரை, அருகே இருக்கின்ற மோட்டார் கம்பெனி ஒன்றில் கண்ணாடி அறைக்குள்ளே அழகான புதிய மோட்டார் வண்டிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை உங்களில் சிலர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும். அந்த மோட்டார் காரில் உள்ள வெள்ளி போன்ற மெருகையும், தங்க நிறப் பூச்சுகளையும், வெல்வெட்டு மெத்தையையும் இன்னும் விதவிதமான ஜோடனைகளையும் காண்பீர்கள். கண்ணாடிக்குப் பின்னாலே உள்ள அந்த மோட்டார்களை நீங்கள் ஏறிச்செல்லும் பஸ் வரும் வரைதான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். பஸ் வந்ததும், பக்கத்திலே உள்ளவர்கள், 'பார்த்தது போதும் பஸ் வந்துவிட்டது; வாருங்கள் போகலாம் என்று அழைப்பார்கள். நீங்கள் எல்லோரும் பஸ்ஸிலேயே ஏறிப் போய்விடுவீர்கள். பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மோட்டார்களிலே உங்களால் ஏறிச் செல்ல முடியாது.<noinclude></noinclude> 4745al83z5fpj4iyhr4c3lhpk0lqakh பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/248 250 108980 1947556 1930392 2026-06-18T06:23:05Z Gunathamizh 3151 1947556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|246||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>அதைப்போல, இப்படிப்பட்ட திருக்குறள் விழாக்களையும் கொண்டாடி விட்டு, அடுத்து வரும் தீபாவளியையும் கொண்டாடி பட்டாசு கொளுத்துவீர்களேயானால் பயனில்லை. தமிழ்நாட்டிலே நடக்கும் பல்வேறு விழாக்களும் - பஸ்ஸூக்காகக் காத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடிக்குள்ளிருக்கும் மோட்டார்களைப் பார்ப்பது போலக் கொண்டாடப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்களெல்லாம் பஸ் வரும் வரை உங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடி அறையிலுள்ள மோட்டார்களைப் பார்ப்பீர்கள் எனச் சொன்னேன் இன்னொரு கனவான், தன் மோட்டாரிலே வந்திறங்கி தன்னிடமில்லாத வேறொரு வகை மோட்டார் இருக்கிறதா 'போர்டு' வாங்கலாமா - எனக் கருதி, கடைக்குச் செல்வார். அவர் பார்ப்பதற்கும் நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் சிலர், 'இன்ன நடிகை இன்ன காரில்தான் செல்வார்; இன்ன அதிகாரியின் கார் இன்ன மாடல் என்றெல்லாம் கூறி, கார்களைப் பார்ப்பார்கள்.. இப்படிப் பார்ப்பதிலே பயனில்லை. வாலிபர்களாகிய உங்களுக்கு என்ன தேவை என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் விரும்புவது கடையிலே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 'நாட்டை காக்க - வாழ்வுக்கேற்ற வழிவகைகள் - நாட்டிலுள்ள அத்தனை பேரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கொப்ப, எல்லோரும் இன்புற்றிருக்க குறளிலே வழி இருக்கிறதா என்று பார்த்தால் தெள்ளத் தெளிவாக - வேறு எந்த நூலிலும் இல்லாத - யாரும் இதுவரை எடுத்துக்காட்டாத அறம் நிறைய இருக்கின்றது. சாதியைப் பற்றி சொல்லி இருக்கிறதா என்றால்; 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்! - சந்தேகமற. 'சாதி கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது. கல்வியைப் பற்றி என்னச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் “கற்கக் கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'</b></poem>}} என்று அறிவைப் பற்றி வரையறுக்கப் பட்டிருக்கிறது. மனித உள்ளத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. எத்தகைய சந்தேகங்களையும் போக்க வல்லது திருக்குறள். எல்லோரும் வாழ வேண்டும்' என்ற ஓர் இலட்சியத்தை வகுத்துக் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தைத்தான் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.<noinclude></noinclude> 5lhc09kg85oc71ml3oncfi42rk0c7r5 1947588 1947556 2026-06-18T07:53:29Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|246||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>அதைப்போல, இப்படிப்பட்ட திருக்குறள் விழாக்களையும் கொண்டாடி விட்டு, அடுத்து வரும் தீபாவளியையும் கொண்டாடி பட்டாசு கொளுத்துவீர்களேயானால் பயனில்லை. தமிழ்நாட்டிலே நடக்கும் பல்வேறு விழாக்களும் - பஸ்ஸூக்காகக் காத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடிக்குள்ளிருக்கும் மோட்டார்களைப் பார்ப்பது போலக் கொண்டாடப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்களெல்லாம் பஸ் வரும் வரை உங்கள் ஓய்வு நேரத்தில் கண்ணாடி அறையிலுள்ள மோட்டார்களைப் பார்ப்பீர்கள் எனச் சொன்னேன் இன்னொரு கனவான், தன் மோட்டாரிலே வந்திறங்கி தன்னிடமில்லாத வேறொரு வகை மோட்டார் இருக்கிறதா 'போர்டு' வாங்கலாமா - எனக் கருதி, கடைக்குச் செல்வார். அவர் பார்ப்பதற்கும் நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இன்னும் சிலர், 'இன்ன நடிகை இன்ன காரில்தான் செல்வார்; இன்ன அதிகாரியின் கார் இன்ன மாடல் என்றெல்லாம் கூறி, கார்களைப் பார்ப்பார்கள்.. இப்படிப் பார்ப்பதிலே பயனில்லை. வாலிபர்களாகிய உங்களுக்கு என்ன தேவை என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் விரும்புவது கடையிலே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 'நாட்டை காக்க - வாழ்வுக்கேற்ற வழிவகைகள் - நாட்டிலுள்ள அத்தனை பேரும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கொப்ப, எல்லோரும் இன்புற்றிருக்க குறளிலே வழி இருக்கிறதா என்று பார்த்தால் தெள்ளத் தெளிவாக - வேறு எந்த நூலிலும் இல்லாத - யாரும் இதுவரை எடுத்துக்காட்டாத அறம் நிறைய இருக்கின்றது. சாதியைப் பற்றி சொல்லி இருக்கிறதா என்றால்; 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்! - சந்தேகமற. 'சாதி கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது. கல்வியைப் பற்றி என்னச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் “கற்கக் கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'</b></poem>}} என்று அறிவைப் பற்றி வரையறுக்கப் பட்டிருக்கிறது. மனித உள்ளத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. எத்தகைய சந்தேகங்களையும் போக்க வல்லது திருக்குறள். எல்லோரும் வாழ வேண்டும்' என்ற ஓர் இலட்சியத்தை வகுத்துக் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தைத்தான் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.<noinclude></noinclude> p718f98c6xv0cdjdlbxghut6ao50org பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/249 250 108981 1947591 1946941 2026-06-18T07:54:03Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||247}}{{rule}}</noinclude>வள்ளுவரின் குறளைப் படித்து ஆராய்வதற்கு முன்பு, வாலிபர்கள் - இளந் தமிழ்த் தோழர்களாகிய நீங்கள் உங்கள் இலட்சியம் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை அடைய வழிமுறைகள் குறளிலே இருக்குமா என்றால், தாராளமாக இருக்குமென உறுதியிட்டுச் சொல்வேன். அதற்கான நல்ல வழி, சிறந்த நெறி அதிலே உண்டு. இலட்சியத்தைத் தீர்மானித்துக் கொண்டு வள்ளுவரை நாடினால் நல்ல பலன் கிட்டும். கடைக்குப் போவதற்கு முன்பு கடையிலே இன்னின்ன சாமான்கள் வாங்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டுதான் பணப்பெட்டி்யைத் திறக்க வேண்டுமே தவிர, பணப்பெட்டிக்குள் கையை விட்டு, கிடைக்கிற பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து கடைக்காரன் கொடுக்கிற சாமான்களை எல்லாம் வாங்கி வருவது நல்லதல்ல. அதைப்போல, ஒரு பழைய நூலை ஆராய வேண்டுமானால், அந்த நூலை ஒரு பலசரக்குக் கடையாக நினைக்க வேண்டும். நமக்கு என்ன பண்டம் வேண்டுமென்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நமக்கு என்ன, தேவை? அடிமைப்பட்டு அடித்தளத்திலே கிடந்துழலும் நம் சமுதாயத்துக்கு இன்னின்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒற்றுமை, அன்பு நெறி வளர வேண்டும். சமுதாயத்தில் ஒருவனை ஒருவன் கெடுக்க நினைப்பது ஒருவனை ஒருவன் சுரண்டுவது. ஆண்டவனின் பேரால், அநீதிகள் புரிவது - இவைகளை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தம் பெட்டியைத் திறந்து குறளைப் புரட்டினால் நமக்குத் தேவையான பண்டங்கள் கிடைக்கும். ஆச்சாரியார் சொல்வதை வைத்துக் கொண்டு பார்த்தால் அதுவும் கிடைக்கும். பூட்டுக் கடையிலே போய், அங்கிருக்கின்ற பூட்டுக்களைப் பார்க்கின்றபோது, எந்தப் பூட்டு உடையாமல் நன்றாக இருக்கும்; அலிகார் பூட்டு வாங்கலாமா அல்லது வேறு எது நல்லது என்று உடைமைக்கு உடையவன் யோசிப்பான். அதே கடைக்கு வரும் இன்னொரு பூட்டு உடைக்கும் திருடன் என்ன நினைப்பான் எந்த ஆணியைப் போட்டு நெம்பினால் இந்த பூட்டு உடையும் என்பதை ஆராய்வான். அதைப்போல திருவள்ளுவர் தந்த நல்ல பூட்டை சிலர் கள்ளச் சாவிப் போட்டுத் திறக்க முயலுகிறார்கள். எனவே, வள்ளுவர் விழாவிலே தமிழருக்கு எந்த இலட்சியம் தேவை என்பதை நாம் மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எது நமக்கு இல்லை? தன் மனைவியைப் பார்த்து ஒரு கணவன்'என்ன சாமான் வேண்டும்?' என்று கேட்டல், அந்த மனைவி உடனே தன் வாயில் வந்தவற்றை எல்லாம் சொல்ல மாட்டாள். அடுக்களைக்குச் சென்று அங்குள்ள பழங்கலத்திலே கைவிட்டுத் துழாவி, என்னென்ன சாமான் இல்லையோ அவற்றைத்தான் சொல்லுவாள். அதைப்போலச்<noinclude></noinclude> ancov5r5qtiu3lbym80vjevc0jr97hc பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/250 250 108982 1947593 1930395 2026-06-18T07:54:29Z Ragul prasath K 16737 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Ragul prasath K" />{{rh|248||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>சமுதாயத்துக்குத் தேவையானது எது குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து, அந்தக் குறைப்போக்கும் பண்டத்தைப் பெற வேண்டும். இன்றைய சமுதாயம் பல சாதிப் பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இன்று காலை என்னைப் பார்க்க வேண்டுமென்று பீகாரைச் சேர்ந்த ஒருவர் என் வீட்டுக்கு வந்தார்; அவர் பீகார் அரசியலில் நீண்ட நாளாகப் பங்கேற்றிருப்பவர். அவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் என்ன சாதி? என்பதுதான். 'நான் திராவிடன் என்றேன். உடனே அவர், 'நான் அதைக் கேட்கவில்லை. என்ன சாதி? என்று மீண்டும் கேட்டார். நான் மீண்டும், திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்றேன். அவர், கொஞ்சம் தயங்கி, 'இங்குள்ள எல்லோரும் திராவிடர்தான் இருந்தாலும் நீங்கள் பிற்பட்ட (Backward) சமுகத்தைச் சேர்ந்தவரா? முன்னணி (Forward) சமூகத்தைச் சேர்ந்தவரா? என அறிய விரும்புகிறேன். நான்கூட எங்கள் மாநிலத்திலுள்ள பிற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவன் என்றார். அதன்பிறகு, நானும் பிற்பட்ட சமூகத்தவன்தான் என்றேன். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நமக்குள்ளே ஒருவரை யொருவர் பார்த்து, நீ என்ன சாதி? என்று கேட்டுக் கொள்வது அவமானமாகும். தெருவிலே போகின்ற ஒரு பெண்ணைப் பார்த்து, நீ அழகா, அவலட்சணமா? என்று கேட்டால், என்ன அர்த்தம்? அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம் வராதா? மேல் நாட்டில், ஒரு வெள்ளைக்காரப் பெண்னைப் பார்த்து, உன் வயது என்ன? என்று கேட்பதும், அந்த நாட்டு ஆடவரைப் பார்த்து, 'உன் சம்பாத்தியம் என்ன? என்று கேட்பதும் கூடாது; அப்படிக் கேட்பது ஒர் அவமானமாக அங்கு கருதப்படுகிறது; இது மேல்நாட்டு நாகரிகம். நம் நாட்டில் ஒருவரைப் பார்த்து மற்றொருவர். நீ என்ன சாதி? என்று கேட்கும்போது, நமது ஊனும், உள்ளமும் குன்றிப் போகிறது. அமெரிக்காவிலே உள்ளவர்கள், இப்படி 'உன் சாதி என்ன? அவன் சாதி என்ன? என்று கேட்க மாட்டார்கள். கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிற நேரம் வரை ஒருவரும் சாதி கேட்பதில்லை. கல்யாணப் பேச்சு பேசுகிற நேரத்தில் மட்டும் சாதி குறுக்கிடுகிறது. பையன் யார்? என்று பெண் வீட்டார் கேட்பார்கள் என்ன சாதி என்று கேட்பது அநாகரிகம் என்று கருதி, பொதுப்படையாக பையன் யார்? என்பார்கள். உடனே, பையன் இன்னாருக்குச் சொந்தம்; இன்னாரின் மகன் என்று சொல்லும்போது, இன்ன நாடாருக்குச் சொந்தம், அல்லது இன்ன ரெட்டியாருக்கு உறவு என்று மறைமுகமாகச் சாதியைச் சொல்லுவார்கள். இப்படி ஒருவர் சாதியை ஒருவர் புரிந்து கொண்டுதான் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சாதிப்பற்று அவ்வளவு சுலபத்தில் போய்விடாது. நம்முடைய பிள்ளைகளிடத்தில் - பேரன்மார்களிடத்தில், நாமெல்லாம் செட்டியார் என்றால், அவர்கள் கேட்பார்கள் - செட்டியார் என்றால் யார்? -என்று!<noinclude></noinclude> gx4r4xh0ayrkw631ou8a878u7llpjjc பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/251 250 108983 1947611 1946942 2026-06-18T08:03:20Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||249}}{{rule}}</noinclude>ஆனால், இந்தத் தலைமுறையில் அது அடியோடு போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சாதியைச் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும். <b>வள்ளுவர் குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியிருக்கிறார். உலகம் பார்த்து, பேரறிவாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு பெரியார் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் அது வெற்றி பெற்றது.</b> 'என் பேச்சை நம்ப வேண்டாம்; வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் - வள்ளுவரை நீதிமன்றத்துக்கு அழைத்தால் - நம் வழக்கு வெற்றி பெறும்; குற்றமற்றவர்கள் என நாம் விடுவிக்கப்படுவோம். குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் - நியாயம் தேடுபவர்கள் ஒரு வழக்கறிஞரை நாடுவது போல, சமுதாய மன்றத்திலே வள்ளுவரைக் கொண்டு வந்து நிறுத்தி நாம் வாதாடலாம். நாமெல்லாம் 'சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சூரியனைத் தொழுதால் சொர்க்க லோகம் கிட்டும்; விநாயகரைத் தொழுதால் கைலாசப் பதவி கிடைக்கும் என்று ஏமாற்றுப் பிரச்சாரம் செய்பவர்களை நாம் கண்டித்தால் நாத்திகர்கள் என்று நம் மீது குற்றஞ் சாட்டுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழ் விழாக்களிலே, மக்கள் மன்றங்களிலே வள்ளுவர் குறளைச் சொல்லி இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்கலாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை எடுத்துச் சொல்லி வழக்காடினால் வழக்குத் தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும். வழக்குத் தொடுத்தவர்கள் முக்காடிட்டுச் செல்வார்கள். எனவே, நீதிமன்றத்திற்கு நல்ல நெறியை தந்திருப்பவர் திருவள்ளுவர். எனவே, இப்படிப்பட்ட மன்றங்கள் கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலே வள்ளுவர் வாசக சாலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைப் படித்திருப்பீர்கள். திருக்குறள் ஒவ்வொருவரின் பார்வையில் ஒவ்வொரு விதமான பொருளை வழங்குவதை அண்ணா அவருக்கே உரிய பாணியில் எடுத்துக் காட்டியிருந்தார். அண்ணா என் குறளின் பன்முகப் பொருளைக் காட்டுகின்றார் என்றால் திருக்குறளுக்கு உலகம் தழுவிய ஒரே மாதிரியான பொருள் வழங்கப்பட வேண்டும் என்பதினால்தான்! ஆகையினாலேதான் அறிஞர் அண்ணா பேச்சை முடிக்கிறபோது, 'கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டும்' என்றார். {{Right|{{larger|<b>- அறிஞர் அண்ணா</b>}}}} {{dhr}}<noinclude></noinclude><noinclude></noinclude> qupp4ha6ciwy25ub1vf3o6q0y961rdw பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/252 250 108984 1947603 1933854 2026-06-18T07:59:37Z கீதான் 16742 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="கீதான்" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>{{larger|1812-ஆம் ஆண்டு வரை ஓலைச் சுவடியிலே இருந்த}} {{rule}} {{Xx-larger|திருக்குறளை அச்சேற்றிப் பதிப்பித்த<br> ஞானப்பிரகாசர், அம்பலவாணர் வாழ்க!}}</b>}}}} இருபதாம் நூற்றாண்டு நிறைவுற்று. புதிய நூற்றாண்டின் புதிய ஆயிரத்தாம் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்க நாளில் வான்புகழ் பெற்ற வள்ளுவருக்கு வானளாவிய சிலை இந்திய நாட்டின் தென் கோடியில். கன்னியா குமரியில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் நிறுவப் பெற்றுள்ளது. இமயத்தின் இமயமென் உயர்ந்து நிற்கிறார். திருவள்ளுவர், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே ஏற்றத் தாழ்வற்ற சமனிலைச் சமுதாயத்தை உருவாக்க விழைந்தவர். மேலிருந்தவரும் மேலல்லர், கீழிருந்தவரும் கீழல்லர் என்ற உரத்த சிந்தனையின் மூலம் உலகறத்தை உணர்த்திய பெருந்தகையாளர். பண்பையும் அறிவையும் முதன்மைப்படுத்திச் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காண விழைந்தவர். மரனூடம் அவர் தம் பாடுபொருளாக விளங்கியதால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரை நினைந்து போற்றுகின்றோம். - இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருவள்ளுவரின் எண்ணங்கள் காலந்தோறும் ஏற்றம் பெற்று விளங்குகின்றன. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைத் தனித்தன்மையாகக் கொண்டு தன்னையும், தன் மொழியையும், தம் மக்களையும் தன் நாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டுகின்ற அறிவுச்சுடராகத் திருவள்ளுவம் விளங்குகின்றது. திருக்குறள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை அதன் பாடுபொருளைப் பன்முகப் பார்வை கொண்டு ஆய்ந்தோர் பலர் திருக்குறளுக்குப்பின் எழுந்த பல்வேறு இலக்கியங்களும் அதன் கருத்துச் செறிவையும், சொல்லாட்சித் திறத்தையும் பயன்படுத்திக்கொண்டன. திருக்குறளின் விளக்கங்களாக, உரை மரபின் முன்னோடிகளாக, பழந்தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களாக அவை விளங்கின. அவற்றிற்குப் பின்னர் இலக்கியங்களின் நுட்பத்தை அறிய விழைந்த உரையாசிரியர்கள் திருக்குறளில் மூழ்கி அவற்றின் தொடரிலும், சொற்புதுமையிலும், எளிமையிலும் நுட்பம் கண்டு மகிழ்ந்தனர்.{{block_center|<poem></poem>}}<noinclude></noinclude> hlhtaq8ve38zq3c3v35k35ix0uwd0be பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/253 250 108985 1947610 1946977 2026-06-18T08:02:41Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||251}}{{rule}}</noinclude>திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம் விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தினர். காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. சமயந்தொறும் நின்ற தனி நூலாகத் திருக்குறள் விளங்கியது. சைவமும், வைணவமும் சமணமும் பெளத்தமும் கிறித்தவமும் பிற சமயங்களும் திருவள்ளுவரைத் தம்மவராகவே ஏற்றிப் போற்றின. திருவள்ளுவரின் குறள் ஈரடிகளைத் தாம் ஏத்தும் இறையாகவே போற்றினார் சிவப்பிரகாசர். மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812-ஆம் ஆண்டில் முதன் முதல் திருக்குறள் அச்சேற்றப் பெறுகின்றது. தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத் தம்பிரானும் இந்த முதல் பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகில் பெருமை பெறுகின்றனர். அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகளாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக் கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம் கொள்கிறது. திருக்குறள் எழுந்த காலச் சூழலின் பின்னணியை ஆராய்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழின் பண்பாட்டை நிலை நிறுத்தத் திருவள்ளுவர் மீட்டெடுத்த புதிய மரபுகளை ஆய்ந்து வெளியிட்டனர். தமிழ் அகமரபிலும் புதிய சிந்தனையைக் கண்ட புத்திலக்கியச் சிற்பியாகப் போற்றினர். அறத்தின் பல்வேறு வீறுகளையும் மானுட வாழ்க்கைக்குப் பொருத்திக் கண்ட வள்ளுவரின் சிந்தனைப் போக்கை விவரித்தனர். உலகியலும் உளவியலும் சார்ந்த வள்ளுவ நெஞ்சம் மானுட மேம்பாட்டையே போற்றி வலியுறுத்தியது என்பதை ஆய்வாளர் திறம்படச் சுட்டினர். பல்வேறு சமய, அரசியல், பண்பாட்டு இயக்கங்களும், வள்ளுவத்தின் பொதுமையை உணர்ந்து தழுவிச் சிறப்புப் பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தமிழ் இதழ்கள் பலவும் திருக்குறளையே குறிக்கோள் தொடராகக் கொண்டு வரலாற்றில் இடம்பெற்றன. தங்கள் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்துக் களஞ்சியமாகவும் திருக்குறளை மேற்கோள் காட்டி மகிழ்ந்தனர்.<noinclude></noinclude> dmgygqpi1osojx8c1j0xbjy7637th3w பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/254 250 108986 1947608 1933857 2026-06-18T08:00:52Z கீதான் 16742 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="கீதான்" />{{rh|252||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> விடுதலைக்கு முன்னும் பின்னும் தேசிய இயக்கங்களும் பகுத்தறிவு இயக்கங்களும் வான்புகழ் வள்ளுவரின் கருத்தைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டன. இந்திய வரலாற்றின் நிகழ்வுகளிலும் தலைவர்களும், அறிஞர்களும் திருக்குறளின் கருத்துகளைப் பரப்பினர். விடுதலைக்கு முன்னரே தந்தை பெரியார் குறட்பாவைத் தமிழர்தம் அடையாளச் சின்னமாக எடுத்துக் காட்டினார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் அண்ணா திருக்குறளைத் திருப்பணியாகவே கொண்டு எழுச்சியுறச் செய்தார். குறளோவியம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொல்லிலும் கல்லிலும் திருவள்ளுவரை வடித்துக் காட்டி திருவள்ளுவருக்கு என்றும் அழியாத சின்னத்தை உருவாக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சிலையை வியந்து பாடிய (1904) திருமணம் செல்வக்கேசவராயரின் எண்ணத்தை எதிரொலிக்கும் வண்ணம் முக்கடல்கள் இணையும் தமிழ் மண்ணில் மனித சிந்தனையின் தூய உருவமாகத் திகழும் திருவள்ளுவரின் திருவுருவம் கம்பீரமாக எழுந்து நின்று புதிய ஆயிரத்தா மாண்டிற்கு நல்வரவு கூறுகின்றது. {{Right|{{larger|<b>- முனைவர் இ. சுந்தரமூர்த்தி</b>}} தமிழ் பேராசிரியர்,<br>சென்னைப் பல்கலைக்கழகம்.}} {{dhr|10em}}<noinclude></noinclude> mzi4fxlkuju7vseln01roon5oit1gbt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/255 250 108987 1947609 1933859 2026-06-18T08:02:09Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மண்ணில் விண் அல்லது<br> வள்ளுவர் கூட்டுடமை</b>}}}} {{larger|<b>வள்ளுவர் கூட்டுடமை</b>}} {{left_margin|3em|<poem>பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்:44)</poem>}} பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன் கன்னெஞ்சன் தன்னலக்காரன் மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்னும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந்தியங்கும். {{left_margin|3em|<poem>பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (குறள் 227)</poem>}} எப்போதுந் தன்பொருளைப் பலரொடு பகிர்ந்துண்டலை இயல்பாகக் கொண்டவனை, பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது. {{left_margin|3em|<poem>இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் (பழ)</poem>}} {{left_margin|3em|<poem>பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை. (பழ 322)</poem>}} ஒருவன் தன்பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகை யுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இரு வகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம். பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவுமிருக்கலாம். துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இல்லறத்தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரிவிக்கும். ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல் பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு; களவு செய்யாமை இல்லறம், களவு செய்யக் கருதாமை துறவறம்.<noinclude></noinclude> 98ghbvop8be8253nn7fp1kc9sb2pon9 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/256 250 108988 1947584 1934011 2026-06-18T07:52:35Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|254||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (மேற்படி 107). </poem>}} என் அழகிய காதலியின் தழுவின்பம், ஒருவர் தம் சொந்த வீட்டிற் குடியிருந்து தாம் தேடிய பொருளைப் பலரொடும் பகிர்ந்துண்ணும் இன்பத்தை ஒத்தாகும். இந்நாற் குறளாலும், திருவள்ளுவர் உடையவர்தம் பொருளை இல்லாரொடு பகிர்ந்துண்ணும் கூட்டுடமையைத் தெரிவித்தார். அவர் காலத்தில் மக்கட்டொகை மிகமிகக் குறைவு. நிலப்பரப்பில் முக்காற்பங்கு மரமடர்ந்த காடு; காற்பங்கு மக்கள் வாழும் நாடு முத்தமிழ் நாட்டிலும் மக்கள் முக்கோடிக்கு மேல் இருந்திருக்க முடியாது. நெட்டிடையிட்டு அரிதாக நேரும் பஞ்சந்தவிர, ஆண்டுதோறும் கோடை மழையும் கால மழையும் அடைமழையும் தப்பாது பெய்யும். நில வளமும் நீர்வளமும் மிக்கிருந்தது. ஆகவே, உணவுத் தட்டும் வேலையில்லாத் திண்டாட்டமும் நலக்குறைவும் ஒரு சிறிதுமில்லை. ஆதலால், வறுமை வருந்தும் சோம்பேறியை நோக்கி; {{left_margin|3em|<poem>இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (குறள் 1040)</poem>}} என்று கண்டித்தார் திருவள்ளுவர். இனி, உழவதிகாரத்தை அடுத்து, நல்குரவு, இரவு, இரவுச்சம், கயமை என்னும் நாலதிகாரங்களை வரிசையாக வைத்திருப்பதால், உழவை, மேற்கொள்ளாவிடின் வறுமையும், வறுமையால் இரப்பும், இரப்பால் அஞ்சத் தக்க துன்பமும், அத்துன்ப மிகுதியால் கயமையும் (போக்கிரித்தனமும்) ஏற்படுமென்று குறிப்பாற் பெற வைத்தாரேனும் {{left_margin|3em|<poem>இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது (குறள் 1041) </poem>}} {{left_margin|3em|<poem>இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும் (குறள் 1942) </poem>}} {{left_margin|3em|<poem>தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை(குறள் 1043) </poem>}} என வறுமையைக் கடுமையாகக் கண்டித்தும், {{left_margin|3em|<poem>இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று (குறள் 1051) </poem>}} என்று ஒருசார் வறியரை ஒரு சார் நன்மக்களிடம் இரக்க ஏவியும் இருப்பதால், தனிப்பட்டவன் தவற்றாலன்றி வேறு வழிகளாலும் வறுமை நேருமென்றும்; அத்தகைய வறுமையை நன்மக்களும் அரசனுமே நீக்கவேண்டுமென்றும் அறிந்து அவ்வறத்தைச் செய்யுமாறு ஆங்காங்குத்<noinclude></noinclude> d6nnenvzjpat0yhlfnew2doak1hozeu பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/257 250 108989 1947589 1946978 2026-06-18T07:53:44Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||255}}{{rule}}</noinclude>தனிக்குறள்களால் ஏவியது மட்டுமன்றி, ஒப்புரவறிதல், ஈகை என்னும் ஈரதிகாரங்களையும் அமைத்தார் திருவள்ளுவர் என்று தெரிகின்றது. <b>வறுமையடையும் வகைகள்</b> <b>இயற்கை</b> :- களைகண் (ஆதரவு) இன்மை, உறுப்பின்மை, தீராநோய், சேதநேர்ச்சி (வெள்ளம், கடல்கோள், தீப்பிடிப்பு, நில நடுக்கம்). <b>செயற்கை</b> : சோம்பல், கல்லாமை அல்லது தொழில் பயிலாமை, குடி விலைமகள் கூட்டு, குது, களவு, கொள்ளை, போர், கடன்படல், கடன் கொடுத்தல், வீண் செலவு, பன்மக்கட்பேறு, பகைவர்.செயல், வழக்கீடு, அரசு கவர்வு, வணிக இழப்பு, போட்டி, கூலி அல்லது சம்பளக்குறைவு, செய்பொருள் விலையாகாமை, நேர்மைக் கொள்கை, தாய்மொழி தாழ்த்தப் படுகை வைப்பக (Bank) நொடிப்பு, தொழில் தாழ்வு தீண்டாமை, ஒழுக்க மின்மை, வேலையின்மை, அழிபொருளாக மாற்றிய உடமையைப் பேணாமை. இவற்றுட் சில இடைக் காலத்தன. சில இக்காலத்தன. அழி பொருளாக மாற்றிய உடமையைப் பேணாமை என்பது முழுச் சொம்மையும் (சொத்தையும்) தாட்காசாக (Currency Notes) மாற்றிக் கறையான் (செதில்) அரிக்கவிடுதல் போல்வது. இன்மை, எளிமை என வறுமை இருதிறப்படும்; முன்னது ஒன்றுமின்மை, பின்னது சிறுவிட்டிற் குடியிருந்து குறைவாக உண்டுடுத்து வருந்தி வாழ்தல். இன்மை உழைக்க வியலாமையால் ஏற்படுவது அது உறுப்புக் குறைவு. நோய், முதுமை களைகணில்லாச் சிறுபருவம் துறவு ஆகிய ஐந்நிலைமைகளில் நேர்க்கூடும். அந்நிலைமையர் களைகணில்லாக்கால் உயிர்வாழ வேண்டின் இரப்பெடுத்தல் இன்றியன்மயாததாகும். இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பல தொழிலாளர், சிறப்பாக நெசவாளர் செல்வரையும் பெருஞ் சம்பளக்காரரையும் இரக்க நேர்கின்றது. இரப்பு உயர்திணை மகனின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தலால், - {{left_margin|3em|<poem>இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள் 1062)</poem>}} என்று, உலகத்தைப் படைத்த இறைவன் மேலும் தம் சினத்தைக் காட்டினார் திருவள்ளுவர். இரத்தலைத் தவிர்க்க வேண்டுமென்றே, இக்கால நன்மைகளும் அரசும் களைகண் இல்லம்'(Orphahages) தொழுநோயர் விடுதி (Leper Home), முதியோர் மனை (House for the old) முதலியன ஆங்காங்குக் கட்டியும் அமைத்தும் உள்ளனர். ஆயினும், அளவிற்கு மிஞ்சி இருமடங்கும் மும்மடங்கும் மக்கட்டொகை பெருத்தும் ஆயிரக்கணக்கான இலக்கண்க்கானவரும்<noinclude></noinclude> 4nktmdwa25keaqzfkue1bxp3y521t9q பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/258 250 108990 1947592 1934014 2026-06-18T07:54:06Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|256||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> வேலையின்றியும் இருக்கும் இக்காலத்தில், திருவள்ளுவர் வகுத்த பரித்துண்டலே எல்லா மக்களும் பண்பாட்டுடன் வாழ்தற்கு இன்றியமையாததாகின்றது. <b>மக்கட் பண்பாடு</b> ஆறறிவு படைத்த மாந்தன் உயிரினங்கள் எல்லாவற்றுள்ளும் தான் உயர்திணை அல்லது உயர்குலம் என்று அறிவதால், பாத்துண்ணும் இயல்புடைய காக்கை போல சில அஃறிணையினங்களினும் பண்பாட்டில் தாழாவாறு, பாத்தூணறத்தைச் சிறப்பாகக் கடைபிடிக்கக் கடமைப்பட்டுள்ளான். <b>1. மன்பதை முழுதும் ஓரினம்</b> 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார் பூங்குன்றனார், 'ஒன்றே குலம் ஒருவனே தேவனும்' என்றார் திருமூலர். ஆதலால் ஒவ்வொருவனும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதல் வேண்டும். <b>2. அடிப்படைத் தேவை அனைவர்க்கும் பொது</b> {{left_margin|3em|<poem>தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே யீதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே (புறநானூறு 189) </poem>}} {{left_margin|3em|<poem>உடுப்பவை யிரண்டே என்றது கீழாடை மேலாடைகளை உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்</poem>}} <b>3. செல்வத்தின் பயன் அஃதில்லார்க் கீதல்</b> <b>4. இறக்கும்போது செல்வம் உடன் வராது</b> {{left_margin|3em|<poem>பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லைபிறந்துமண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை (திருவேகம்ப 7)</poem>}} {{left_margin|3em|<poem>காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே (திருத்தில்லை 10) அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே (திருத்தில்லை 13) </poem>}} <b>5. அகக்கரண புறக்காரண ஆற்றல்கள் இயற்கையில் வேறு பட்டுள்ளமையால் ஒருவரைப் புகழ்தலும் இகழ்தலும் கூடாது </b> {{left_margin|3em|<poem>நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பத றிவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறநானூறு 192)</poem>}}<noinclude></noinclude> 1bdjcplqea0yyv5srv3r0mnyb9zm1ps பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/259 250 108991 1947594 1946979 2026-06-18T07:54:31Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||257}}{{rule}}</noinclude>முறையென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கையென்று கொள்க. உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம். இல்லாமையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல் வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவுவதைப் பாராட்டல் வேண்டும். <b>6. மக்கட் பிறப்பு பண்பாட்டையே பெரிதுத் தழுவியது</b> {{left_margin|3em|<poem>புறத்துறப் பெல்லாம் எவன்செய்யு யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள் 79) </poem>}} {{left_margin|3em|<poem>உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள் 923) </poem>}} {{left_margin|3em|<poem>அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் (குறள் 997) </poem>}} ஆதலால், பாத்துண்டலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடமையாட்சியே, இந்தியா போன்ற மக்கட் பெருக்க வறுமை நாட்டிற்கு ஏற்றதாம். <b>வள்ளுவர் கூட்டுடமையின் தனிச்சிறப்பு</b> <b>1. எல்லார்க்கும் ஏற்றது :-</b> காரல் மார்க்கசு கூட்டுடமைக் கொள்கையைத் தொழிலாளர்க்கென்றே வகுத்தார். இரசிய சீன நாடுகளின் கூட்டுடமையாட்சியிற் கைத்தொழிலருங் கல்வித் தொழிலருமான எல்லா வகுப்பினரும் வாழினும், தொழிலாளர் கையிலேயே அதிகாரம் அமைந்துள்ளது. அவ்விருநாடுகளையும் தழுவியுள்ள இந்தியக் கூட்டுடமைக் கட்சிகளும் தொழிலாளர் ஒன்றியங்களாகவே இயங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தாக்குண்டவர் தொழிலாளர் மட்டுமல்லர், பல்லாயிரக்கணக்கான பொறிவினைஞரும் மருத்துவரும் ஆசிரியரும் பிறரும் ஆவர். ஆதலால், கூட்டுடமையாட்சி கற்றோரும் மற்றோருமான அனைவர்க்கும் பொதுவானதே. <b>2. ஈகையாளர்க்கும் புதுப்புனை வாளர்க்கும் தமிழ்ப் புரவலர்க்கும் கல்வி வள்ளலர்க்கும் செல்வ வரம்பிடாதது :-</b> சிலர்க்குப் புதுப்புனவாற்றலோ புதுச் செய்முறை கண்டுபிடிப்பாற்றலோ இருக்கலாம். அவர் விருப்பப்படி விட்டுவிடின், அவ்வாற்றலை மேன்மேலும் வளர்த்துப் பெரும் பொருளிட்ட வழியுண்டாகும்; பெரும் பயன்வினையும். அதனால் "ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம்" என்பதை உணர்தல் வேண்டும். மேனாடுகளில் சிறப்பாக வட அமெரிக்காவில், பல்வேறு சூழ்ச்சிப் பொறிகளைப் புதுப்புனைந்தவர்க்கு அரசு உரிமையளித்து ஊக்கியதனால், அவரும் செல்வத்திற் சிறந்ததோங்கினர்; அவர் நாடுகளும் செழித்துப் பொருள் வளங்கொழித்தன. கொழிக்கின்றன.<noinclude></noinclude> emvjcqy2lvlgqyybmzixdh3huui9v28 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/260 250 108992 1947596 1934018 2026-06-18T07:54:50Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" />{{rh|258||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>இங்கே இந்தியாவில் அதற்கு நேர்மாறாக நேர்ந்துள்ளது. கோவைக் கோ. துரைசாமி நாயக்கரை (G.D. Naidu) நடுவணரகம் ஊக்கவில்லை; நாட்டரசும் ஊக்கவில்லை. அவரை ஊக்கியிருந்தால் உலக முழுவதற்கும் பயன்படும் ஒரு எடிசனாகி இருப்பார், நடுவணரசு அவரை ஊக்குவதற்கு மாறாக, அன்முறையான அளவிறந்த வருமானவரி சுமத்தி அவர் உள்ளந் தளரவும் நெஞ்சம் புண்படவும் செய்தது. அதனால், அவர் தம் மன நோவின் கடுமையை தம் புதுப்புனைவுகளையுங் கண்டுபிடிப்புகளையும் வெளிப்படையாகச் சுட்டெரித்துக் காட்டினார். இக் காலத்திற் பொன்னும் எண்ணெயும் போன்ற கனியப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம், புதுப்புனைவுகளாலும், கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்க முடியும். ஆதலால், அவ் வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல் வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால் புதுப்புனைவாளரையெல்லாம் குல மத கட்சி வேறுபாடின்றி நாட்டு வளம் பெருக்கியவராகவும் உலகப் பொது நலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும். இனி, தன்னலமின்றி மன்னலமே பேணி தம் பொருளையெல்லாம் வரையா தீயும் வள்ளல்கட்கும் செல்வ வரம்பிருத்தல் கூடாது. {{left_margin|3em|<poem>ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)</poem>}} {{left_margin|3em|<poem>பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் (குறள் 216)</poem>}} {{left_margin|3em|<poem>மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் (குறள் 217)</poem>}} வள்ளன்மார் நாட்டு வறுமையைப் போக்குவதால் அரசின் கடமையை ஆற்றுபவரும் அதன் சுமையைக் குறைப்பவரும் ஆவர். ஈகையாளர்க்கு ஈதலே இன்பம். ஈயாமை அவர்க்கு இறப்பினுங் கொடிய துன்பம் {{left_margin|3em|<poem>ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்தாமுடமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)</poem>}} {{left_margin|3em|<poem>சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ஈதன் இயையாக் கடை (குறள் 230) </poem>}} {{left_margin|3em|<poem>முந்நூ றுர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்தூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (புறநானூறு 110) </poem>}} {{left_margin|3em|<poem>ஈகை யரிய யிழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில் </poem>}}<noinclude></noinclude> pogvdphq7yqzib35921ockfe5mawuep அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1947513 1938940 2026-06-18T05:29:31Z TI Buhari 4634 1947513 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நூ|நூ]]|{{DJVU page link 2|121|99}}}} {{Dtpl|symbol= |3.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நெ|நெ]]|{{DJVU page link 2|150|128}}}} {{Dtpl|symbol= |4.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நே|நே]]|{{DJVU page link 2|214|192}}}} {{Dtpl|symbol= |5.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நை|நை]]|{{DJVU page link 2|257|235}}}} {{Dtpl|symbol= |6.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நொ|நொ]]|{{DJVU page link 2|284|262}}}} {{Dtpl|symbol= |7.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நோ|நோ]]|{{DJVU page link 2|310|288}}}} {{Dtpl|symbol= |8.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/ப|ப]]|{{DJVU page link 2|367|340}}}} {{Dtpl|symbol= |9.{{gap+|1}}|[[அறிவியல் களஞ்சியம் 14/பொருளடைவு|பொருளடைவு]]|{{DJVU page link 2|949|927}}}} {{gap|3em}}<b>கலைச்சொற்கள்</b> {{Dtpl|symbol= |10.{{gap+|1}}|[[அறிவியல் களஞ்சியம் 14/கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)|தமிழ்–ஆங்கிலம்]]|{{DJVU page link 2|959|937}}}} {{Dtpl|symbol= |11.{{gap+|1}}|[[அறிவியல் களஞ்சியம் 14/கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்)|ஆங்கிலம்–தமிழ்]]|{{DJVU page link 2|964|942}}}} <br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நூ|அருஞ்சொல் அட்டவணை நூ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நெ|அருஞ்சொல் அட்டவணை நெ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நே|அருஞ்சொல் அட்டவணை நே]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நை|அருஞ்சொல் அட்டவணை நை]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நொ|அருஞ்சொல் அட்டவணை நொ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நோ|அருஞ்சொல் அட்டவணை நோ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_ப|அருஞ்சொல் அட்டவணை ப]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] q8d4v20ww9d5pw8y7vg23y4ex82k4g3 பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/29 250 547046 1947378 1657353 2026-06-17T15:02:06Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|28|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>'''கி'''.மு.20-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் சோழப் பெருமன்னன் கரிகாலன் திருநகரம் பூம்புகார்ப் பட்டினம் புதிய பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையையொட்டி அமைந்திருந்த வான்முட்டும் மாட மாளிகைகளில் எல்லாம் சோழனது கொடியும் பாண்டியனது கொடியும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டு பறந்தன. யவனப் பெருமக்களின் மாளிகைகளில் எழில் நிறைந்த தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. "வாழ்க சோழ பாண்டியர் உறவு!” என்ற எழுத்துக்களை முத்துக்களால் பதித்த கம்பீரமான நுழைவு வாயில்கள் பட்டினப்பாக்கமெங்கும் காட்சி தந்து கொண்டிருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் வாழும் வணிகர், பட்டாடை, பருத்தியாடை, கம்பள ஆடை நெய்வோர். பொற்கொல்லர், பூக்கட்டுவோர், ஓவியர், சிற்பிகள், மாலுமிகள் அனைவரும் புத்தாடை புனைந்து அரச வீதி நோக்கி விரைந்தனர். நிலக்கிழார், மருத்துவர், மறையவர், அரண்மனை அலுவலர், பாணர், இசைவாணர், புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் வாழ்கின்ற பட்டினப்பாக்கத்தையே விழாக்கோலம் பூணச்செய்து, தங்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அரச வீதியை இமைகொட்டாது ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். உலகமே வறுமைக் காடாக மாறிவிட்டாலும் பூம்புகார் வறுமைக் கோலம் கொள்ளாது என்று முழங்கிக் கொண்டிருந்த புகார்த் துறைமுகப்பட்டினத்தின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் புலியுடன் மீன் கொடியும் சேர்ந்து பறந்த பெருமைக்குரிய காட்சியை அனைவரும் கண்டு பூரிப்புக் கொண்டனர். கரிகால் பெருவளத்தானுக்கு மகத நாட்டு மன்னன் வழங்கிய பட்டி மண்டபம் ஒளிமயமாக விளங்கிற்று. வச்சிர நாட்டான் அளித்த கொற்றப் பந்தர், அழகின் சிகரமாக அமைந்திருந்தது. அவந்தி நாட்டு மன்னன் தந்த 'தோரண வாயில்' 'மதுரைக் கொற்றவனே வருக! வாழ்க!' என்று முழங்கிக் கொண்டிருந்தது. எழில்சேர் மங்கையர் யானைகளின் மீதமர்ந்து முன் செல்ல, பூம்புகார்ப்பட்டினம் அதுவரை காணாத மாபெரும் பனியொன்று அந்த மாநகரில் நடைபெற்றது. தானைத் தலைவர்களும் நாற்படை வீரர்களும் அணிவகுத்து வர இரு யானைகளின்மீது மாமன்னர்<noinclude></noinclude> aie5awizs6oeq3025hmvd1bd26691bf பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/30 250 547060 1947382 1657441 2026-06-17T15:06:11Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|29|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>இருவர் அமர்ந்திருக்க - அன்று நடைபெற்ற அந்தப் பவனி கண்டு தமிழ்த் தரணியே வியப்பு மேலீட்டால் விழித்து நின்றது. ஒரு யானையின்மீது சோழப் பேரரசன் கரிகாலன் வீற்றிருந்தான். அதனையொட்டி மெல்ல நடைபோட்டு வரும் மற்றொரு யானையின் மீது பாண்டிய நாட்டு வேந்தன் பெருவழுதி அமர்ந்திருந்தான். "வாழ்க கரிகால் மன்னர்" "வாழ்க பெருவழுதிப் பாண்டியர்!" "வளர்க சோழ, பாண்டியர் உறவு!" - என்ற முழக்கம் விண்ணதிரக் கிளம்பிற்று. காவிரியாற்று நீரையள்ளித் தெளித்து விளையாடியவாறு பூம்புகாரின் வாலிபரும் மாதரும் விழாக்கொண்டாடினர். தெருவெங்கும் மலர்களைத் தூவினர். "தேன் தமிழ் வெல்க!" என்று கூவினர். எங்கு திரும்பினும் விழாக்காட்சி! இசை முழக்கம்! அகமுழவு எல்லாம் ஒலித்தன. இடக்கை, உடுக்கை, பேரிகை, படகம் எனப்படும் தோற்கருவிகள் அனைத்தும் ஆர்த்தெழுந்தன. குழல், வாக்கியம் என்னும் துளைக்கருவிகளும், சகோடயாழ், பேரியாழ், மகரயாழ் போன்ற நரம்புக்கருவிகளும் பவனியினூடே உற்சாகத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தன. மக்களின் வாழ்த்துக்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டு ஒருவரைப் பார்த்து ஒருவர் முறுவல் செய்தவாறு கரிகாலனும் பெருவழுதியும் யானைமீது கம்பீரமாக அமர்ந்திருந்தனர். அரசவீதிகளைக் கடந்து அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன் அழகுற நடந்த அந்தப் பவனியின் சிறப்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர், சோழநாட்டுத் தானைத் தலைவர்கள். சோழப் பெருங்குடி மக்கள் பாண்டியன் பெருவழுதியின் தோற்றங் கண்டு அவனுக்குத் தாங்கள் மரியாதை செலுத்தக் கடமைப்பட்டவர்களே என்பதை உணர்ந்தனர். எடுப்பான உடற்கட்டும் மிடுக்கான விழி நோக்கும் பெற்று, அகன்ற மார்பில் கொற்கை முத்துக்களால் கோத்த ஆரங்களை அணிந்து மணிமுடியின் மதிப்பைக் காப்பாற்றும் பெருமை வாய்ந்த வேந்தனே தான் என்று சோழர் குடியினர் எண்ணிப் புகழ்ந்திடுமளவுக்குப் பவனி வந்தான் பெருவழுதி. "இமயத்தை முட்டிக் கலக்கிய தோள்களன்றோ அவைகள்! எதிர்த்து வந்த மன்னாதி மன்னர்களையெல்லாம் தூளாக்கிய வேலன்றோ கையில் பிடித்திருப்பது! நாடு காக்கும் மறக்குலத் தன்மையன்றோ முகத்தில் ஒளி விடுவது! இவரைத் தலைவனாகப் பெற்ற நாமன்றோ பெரும்பேறு<noinclude></noinclude> ptbpf2qk06qxvfpof83rqrghsbs8zll பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/31 250 547065 1947383 1657471 2026-06-17T15:07:40Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|30|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>பெற்றவர்கள்!" என்று கரிகால்மன்னவனைப் பவனியிலே கண்ட அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். முதியவர் வாழ்த்தினர். இளையவர் தங்கள் நாடு வாழ்க என அதிர்ந்தனர். அரச வீதிகளிலே அழகேற்றியவாறு அந்த மன்னர்களின் ஊர்வலம் நகர்ந்தது மெல்ல மெல்ல! இருபெரும் வேந்தர்களையும் நோக்கிய தலைநகரத்து மாந்தரது விழிகள், பாண்டிய மன்னனையொட்டி வெள்ளைப் புரவியொன்றில் அமர்ந்து வெற்றிப் புன்னகை காட்டியவாறு ஊர்வலத்தில் சென்ற பாண்டிய நாட்டு வீரன் ஒருவனைக் காணத் தவறவில்லை. அவன் குதிரையில் வீற்றிருந்த அழகே தனியாக இருந்தது. கடிவாளத்தைக் கரத்தில் ஏந்தியிருந்த பாவனையே எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தது. சிறிய இளம் முறுக்கு மீசை, சுருண்டு காய்ந்த மிளகாய்கள் போலச் சுருள் சுருளான தலைமுடி! ஒவ்வொரு அசைவிலும் வீரந் துள்ளுவது போன்ற காட்சி! புன்னகையிலே ஒரு தனிக் கவர்ச்சி! யானைமீது வரும் அரசர்களையும் புரவிமீது வரும் அந்த வாலிபனையும் மாறி மாறிப் பார்த்தவாறு மக்கட் பெருங்கடல் உற்சாகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது. பட்டினப்பாக்கத்திலுள்ள புலவர் தெருக்களை அணுகியது ஊர்வலம். தமிழ் வளர்க்கும் காவலர்கள் அரசர்கட்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். அரசன் கரிகாலன் ஆவலோடு புலவர் கூட்டத்தை நோக்கினான். அவனது வாள் போன்ற கண்கள் அந்தக் குழுவில் யாரையோ மிக அக்கறையோடு தேடுகின்றன என்பதை தமிழ்ச் சான்றோர் புரிந்து கொண்டு, "என்ன மன்னவா?" எனக் கேட்டனர். கரிகாலன் கேட்டான், “காரிக்கண்ணனார் எங்கே?" என்று! "அவர் தனது இல்லத்தின் வாயிலில் காத்து நிற்கிறார்” என்று பதில் மொழிந்தனர் புலவர்கள். காரிக்கண்ணனார் தனது வீட்டு வாயிற்புறத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது அகமகிழ்ச்சி முகத்தில் பீரிட்டெழுவது கண்டு கரிகாலன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். புலவரின் கண்கள் குளமாகிவிட்டன. அந்த ஆனந்தக் கண்ணீரில் ஒத்தியெடுக்கப்பட்ட இருமலர்களைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் அளித்தார். மன்னர்கள் அவற்றைப் பெற்றுத் தம் மணிமுடியில் வைத்துக் கொண்டனர். எல்லாப் புலவரிடத்தும் காட்டுகின்ற அன்பையும் மரியாதையையும் விடக்<noinclude></noinclude> 3h3ufiry995h03x9alfav03o8f01l1j பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/32 250 547067 1947384 1657474 2026-06-17T15:11:41Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|31|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>காரிக்கண்ணனாரிடத்தில் கரிகாலன் அதிக அளவு அன்பையும் மரியாதையையும் காட்டுவதைப் பாண்டியன் உணர்ந்து, தன் கழுத்திலே யிருந்த முத்தாரம் ஒன்றினைக் கழற்றிப் புலவருக்கு அணிவித்து மகிழ்ந்தான். "புலவரே! அரண்மனை சேர்ந்ததும் ஆள் அனுப்புகிறேன். வந்து எம்மைத் தமிழால் வாழ்த்துவீராக!" என்று கேட்டுக் கொண்டான் சோழநாட்டு வேந்தர் பெருந்தகை! "வருகிறேன் அரசே! வாழ்க!" எனக் கூறி வணக்கம் தெரிவித்தார் புலவர். அப்போது, யானை மீதிருந்த பாண்டியன் பெருவழுதியின் கண்கள், காரிக்கண்ணனார் வீட்டுக்குள்ளே பாய்ந்தன. அதே சமயம், பாண்டியனுக்கு அண்மையில் புரவியில் அமர்ந்திருந்த வாலிப வீரனின் கண்களும் வீட்டுப்புறமாகத் தாவிச் சென்றன. புலவர் வீட்டு வாயிற்கதவின் ஓரமாக ஒளிந்து நின்றவாறு முழுநிலா முகத்தை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாள் ஒரு வடிவழகி. தன்னைப் பிறர் பார்த்து விட்டனர் என்பதை உணர்ந்ததுதான் தாமதம்! உடனே உள்ளே தன்னையிழுத்துக் கொண்டாள். பாண்டிய மன்னன் பார்வை அந்தக் கதவோரத்தைவிட்டு மீள்வதற்குச் சற்றுத் தயங்கிற்று. கரிகாலனோ மற்றவர்களோ தன்னைப் பார்க்கிறார்களோ என்ற பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான் பெருவழுதி!' "சே! என்னஇது" என்று தன்னைத் தானே இடித்துரைத்துக் கொண்டான். புரவியிலிருந்த வாலிபன், காரிக்கண்ணனாரையும் அவரது வீட்டையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு பவனியிலே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டான். எழுந்த நிலவு அறுந்து வீழ்ந்தது போல் மறைந்து விட்டது அந்தச் சுந்தரமுகம்! பவனியின் சிறப்பைக் கண்டு களித்தவாறு அது அந்தத் தெருவை விட்டு அகலும் வரையில் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டுக் கடைசியாகத் தன் வீட்டுக்குள் நுழைந்தார், காரிக்கண்ணனார். நுழைந்தவர் "முத்துநகை! முத்துநகை!" என்று அன்பைக் குழைத்து பெயரை உச்சரித்து அழைத்தார். "அப்பா! என்ன வேண்டும்?" என்றவாறு அவள் ஓடி வந்தாள். ஆமாம்!; அவள்தான்! பவனி சென்ற மன்னர்களை ஒளிந்திருந்து நோக்கிய அந்தப் பருவக் கிள்ளைதான்! அவளைக் கண்டதும் புலவர் "பார்த்தாயா முத்துநகை, உனக்கொரு முத்துநகை!" என்று தன் கழுத்திலே பாண்டியன் அணிவித்த முத்-<noinclude></noinclude> bx5y1dsmxqs09bsmee8wqv9vjz1zhfx பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/33 250 547069 1947385 1657490 2026-06-17T15:12:54Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|32|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>தாரத்தையெடுத்து அவள் கரத்திலே தந்தார். அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். "பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றாலே அவைகளுக்குத் தனி ஒளிதான்! இல்லையா அப்பா?" என்று கேட்டாள் முத்துநகை. "ஆம் அம்மா! அதிலென்ன ஐயப்பாடு! கொற்கை முத்துக்களுக்கு ஈடான முத்துக்கள் உலகத்திலே வேறெங்கும் கிடையாது! ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டை அரசாண்டு பரிதாபகரமாகச் செத்தும் போனாளே கிளியோபாத்ரா என்ற அழகி, அவளுக்கு இந்த முத்துக்கள் இல்லாவிட்டால் கள்ளே அருந்த முடியாதாம். மதுக் கிண்ணங்களில் இந்த முத்துக்கள் எழுப்பும் ஓசைதான் அவளுக்குப் பிடித்தமான சங்கீதமாம்! ரோமாபுரியிலே இருக்கிற மக்களுக்குப் பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றால் உயிர்! அவர்களது ஆடை அணிகள் ஒவ்வொன்றிலும் இந்த முத்துக்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன!" "ஏனப்பா! பாண்டிய மன்னருக்கும் சோழ மன்னருக்கும் இன்றைய தினம் நடைபெறுகிற நட்புறவு ஒப்பந்தம் வெற்றிகரமாக ஆகி விடுமல்லவா!" "என்ன இப்படிக் கேட்கிறாய்? இப்படியொரு உறவு ஏற்பட வேண்டுமென்று மன்னர் கரிகால் திருமாவளவனை இத்தனை நாளும் வற்புறுத்தியதே நான்தான்! எனக்கு நம்பிக்கையிருக்கிறது, சோழர் பாண்டியர் உறவு நீடிக்குமென்று!" "இந்த உறவை எப்படியும் முறித்துவிட வேண்டுமென்று யாரோ சில சிற்றரசர்கள் முயல்வதாகக் கூறினீர்களே!" "அதெல்லாம் இனிமேல் முடியாது! உறுதிப்பட்டு விட்ட உறவு இது! நமது சோழ மன்னரிடம் தோற்றோடிப்போன சிற்றரசன் இருங்கோவேள் என்பவன்தான் ஏதாவது குந்தகம் விளைவிக்கக் கூடும். அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை." இதைக் காரிக்கண்ணனார் தன் மகளிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே தெருவிலே பெருத்த ஆரவார ஒலி கேட்டது. திடுக்கிட்டார் புலவர். முத்துநகை கதவுப்புறம் ஓடினாள்! ஓடியவள். "அப்பா! அப்பா! இங்கே வாருங்கள்!" என்று கூவினாள். புலவர் தெருப்பக்கம் விரைந்தார். தெருவிலே இரண்டு குதிரை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். குதிரைகள்<noinclude></noinclude> ilj83fa7a43sa94dtjecivxhq2akwun பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/34 250 547070 1947392 1657492 2026-06-17T15:28:44Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|33|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude>ஒன்றன் மீதொன்று பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டன. அவைகளின் மீது அமர்ந்திருந்த வீரர்களோ தங்கள் கைகளில் தாங்கிய ஈட்டிகளைக் கொண்டு யார் உயிரை யார் முதலில் போக்குவதென்று உணர்ச்சிக் கொந்தளிப்போடு போரிட்டனர். புலவர் அவர்களை உற்றுக் கவனித்தார். ஒருவனை அவரால் அடையாளம் புரிந்து கொள்ள முடிந்தது. பாண்டியன் பெருவழுதியின் பக்கத்தில் குதிரையில் அமர்ந்து பவனியிற் சென்ற பாண்டிய நாட்டு வீரன்தான் அவன். மற்றொருவன் யார்? அவருக்குப் புரியவில்லை. ஆனால் அவனும் பாண்டிய நாட்டு வீரர்களின் உடையிலேதான் இருந்தான். இந்தப் போராட்டம் எப்படி முடியுமோ தெரியவில்லையே என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்தனர் கூடியிருந்தவர்கள். ஒருவன் புலியெனப் பாய்கிறான்; மற்றவன் சிங்கமென உறுமுகிறான். இருவர் ஈட்டிகளும் ஒன்றையொன்று அதனதன் கூர்மையான முனைகளில் தொட்டுத் தாக்குகின்றன என்றால், குறிபார்த்து எதிரியைக் கொன்று தீர்ப்பதில் அவர்கள் எவ்வளவு வல்லவர்களாய் இருந்திட வேண்டும்! இறுதியில் ஈட்டி முனைக்குத் தன் மார்பகத்தைக் காட்டி ஒரு மறவன் தெருவில் வீழ்ந்தான். வீழ்ந்தவனின் உடையைக் கிழித்துப் பார்த்தான் பெருவழுதியுடன் வந்த வீரன், மேலே அணிந்திருந்தது தான் பாண்டிய நாட்டு உடை! உள்ளே அவனது உண்மையான உடையிருந்தது. சோழனின் எதிரியான இருங்கோவேள் என்பவனின் தானைத் தலைவன் அவன் என்பது தெரிந்துவிட்டது. எதிரியின் தானைத் தலைவன் பிணமாக வீழ்ந்து விட்டான். அவனை வீழ்த்திய வீரன், போரிட்ட களைப்பால் மயக்கமுற்றுப் புலவர் வீட்டுப் படிக்கட்டில் சாய்ந்தான். புலவர், பரபரப்புடன் அவனை உள்ளே அழைத்துச் சென்று மயக்கம் தெளிவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அவன் நெஞ்சிலே பலமான காயங்கள் இருந்தன. நெற்றியிலே எதிரியின் ஈட்டி உண்டாக்கிய புண்ணிலேயிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது! புலவரும் முத்துநகையும் ஓடியாடி அவனுக்குச் சிகிச்சைகள் செய்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தான். காயங்களின் வலி பொறுக்க முடியவில்லை. உடம்பை நெளித்துநெளித்துத் துவண்டான். கொதிக்க வைத்த மஞ்சளை ஊமைக்காயங்களில் போட்டாள் முத்துநகை. ஏதேதோ மருந்துகளைத் தேடியெடுத்து இரத்தங்கசியும் புண்களில் தடவினார் புலவர் பெருமான். "நீ யாரப்பா?" {{nop}}<noinclude></noinclude> cfo9cqfuc3cvf1f45jkpj0ugxf3khhx பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/27 250 574504 1947374 1802774 2026-06-17T14:58:14Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" />{{Rvh4|26|'''ரோமாபுரிப் பாண்டியன்'''|'''கலைஞர் மு. கருணாநிதி'''}}{{rule}}</noinclude> இதுவும் புதிராகவே இருக்கிறதல்லவா? இருக்கட்டும்! இருக்கட்டும்! முதலில் ரோமாபுரிக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளும், காலக்குறிப்புகளும், சமகால மன்னர்களின் பெயர்களும் ஐயமின்றித் தெரிந்தால் போதும். அவை தெளிவாகத் தெரிந்துவிட்டன இப்போது! {{c|இனி, கதையைத் தெடரலாம் அல்லவா?}} {{dhr|10em}}<noinclude></noinclude> n5f3sifl20ataqjwcu9xhapvhqv167v பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/28 250 574505 1947377 1802785 2026-06-17T15:00:56Z Samritha07 16729 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Samritha07" /></noinclude> {{dhr|4em}} {{c|<b>{{Xxxx-larger|1}}</b>}} {{dhr|15em}} {{left_margin|3em|<b>{{Xx-larger|கரிகாற் சோழனும்}}</b> {{X-larger|{{gap+|1}}பெருவழுதிப்}} {{Xx-larger|<b>பாண்டியனும்</b>}}}}<noinclude></noinclude> 1mmeanm5zkh3vpn8nr1ixjfr8rw6j96 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/645 250 628298 1947332 1936375 2026-06-17T13:21:49Z Booradleyp1 1964 1947332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈசாப்புக்‌ கதைகள்‌|615|ஈசான சிவ பண்டிதர்}}</noinclude>றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேரி தி பிரான்சு (Marie de France) என்பவரால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டன. வில்லியம் காக்சுடன் தம் பதிப்பின் முன்னுரையில் இக்கதைகள் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று அறிவு புகட்டும் ஆற்றலுடையனவென்றும், விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவற்றைப் கொண்டு மனித பாத்திரங்களாகக் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றனவென்றும் எழுதியுள்ளார். சேவலும் விலையுயர்ந்த கல்லும் பற்றிய கதை முதலாவதாக இத்தொகுதியில் இடம் பெறுகிறது. குப்பையில் கிடக்கிற வைரக்கல்லைப் பயனற்றதாக ஒதுக்கும் சேவலைப் போன்று இக்கதைகளில் புதைந்து கிடக்கும் மேலான அறிவைப் புறக்கணித்துவிட்டு, முட்டாள்களாக வேண்டாமென்று ஆசிரியர் குறிப்பால் அறிவுறுத்துகிறார். இரண்டாம் கதையில் ஆடு ஒன்று பல குற்றங்கள் செய்ததால், அதனை உண்ணத் தனக்கு உரிமையுண்டு என்று கூறும் ஓநாய் இடம்பெறுகிறது. பேராசையுள்ள நாய் வாயில் மாமிசத் துண்டோடு ஓடையைக் கடக்கும்பொழுது, அதன் நிழலை நீரில் கண்டு, அதனையும் கவ்வுதற்கு நீரில் பாயும் மடமையை ஐந்தாம் கதை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்னொரு கதையில் எளியோரை ஏய்த்துப் பிழைக்க முயல்வோர் தம்மினும் வலியோரால் தண்டிக்கப்படுவார் என்பது சுட்டப்படுகிறது. குயிலின் கூட்டிற்கு வரும் கழுகு அது நன்றாகப் பாடாவிடில் அதன் குஞ்சுகளில் ஒன்றைத் தின்று விடுவேனென்று மிரட்டுகிறது. அப்பொழுது அங்கு வரும் வேடன் அக்கழுகைப் பிடித்துச் செல்கிறான். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அதனால் அறியப்பட வேண்டிய நீதி வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. இந்நீதிகள் யாரால் எக்காலத்தில் சேர்க்கப்பட்டனவென்பதிலும் அறிஞர்களிடையே உடன்பாடு இல்லை. ஈசாப்பு என்பவர் யார், அவர் எக்காலத்தில் வாழ்ந்தார், உண்மையிலேயே அவரால் சொல்லப்பட்ட கதைகள் எவையெவை, அவை எச்சமயங்களில் எந்நோக்குடன் சொல்லப்பட்டன என்பன போன்ற வினாக்களுக்குச் சரியான விடைகள் கிடைக்கவில்லையாயினும், அவர் பெயரால் வழங்குகிற கதைகளுள் பல உலக இலக்கிய வரலாற்றில் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விட்டன என்பது உறுதி. அவற்றின் தாக்கத்தினால் உலகில் பல்வேறு மொழிகளில் பொருளாழம் மிகுந்த விலங்குக் கதைகள் தோற்றம் பெற்றன. ஈசாப்பின் கதைகளில் ‘நரியும் திராட்சைப் பழங்களும்’, ‘வைக்கோல் போரில் நாய்’, ‘எறும்பும் வெட்டுக்கிளியும்’ போன்றவை உலகின் எல்லா நாடுகளிலும் மத, இன, நிற, மொழி வேறுபாடின்றி, எல்லோராலும் அறியப்பட்டவையாகத் திகழ்வது அவற்றின் சிறப்புக்குச் சான்றாகும். பல்வேறுபட்ட மனிதப் பண்புகளை மிகவும் நுண்ணிய முறையில் ஆராய்ந்து, எளிய, எல்லோருக்கும் புரியக் கூடிய கதைகளால் அவற்றை விளக்க முற்பட்டது ஈசாப்பின் தனிப் பெருமையாகும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Jacobs, J.,</b> The Fables of Aesop, New York, 1889. <b>Daby, Lloyd W.,</b> Aesop without Morals, New York, 1961. <b>Handford, Stanley, A.,</b> Fables of Aesop Baltimore, 1954. <section end="ஈசாப்புக் கதைகள்"/> <section begin="ஈசான சிவ பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>ஈசான சிவ பண்டிதர்</b>}} முதலாம் இராசராச சோழனின் (கி.பி. 985–1014) அரசகுரு போன்றவர். முதலாம் இராசராசன் கங்கைக் கரையில் சிறப்புற்று விளங்கிய சைவ சமய குருமார் பலரைத் தஞ்சைக்கு வரவழைத்து, தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பூசை செய்வதற்கு அமர்த்தினான். அவர்களுள் அருச்சகர் குழுத்தலைவர் ஈசான சிவ பண்டிதர் குறிப்பிடத்தக்கவர். இவர் இராசராசனின் குருவாகி அவனுக்கு நல் வழி காட்டினார். இவர் கோயில் விமானத்தின்மீதும் எட்டுத் திசைக் காவலர்களின் தளிகள்மீதும் வைப்பதற்காக, தங்கமுலாம் பூசப்பட்ட எட்டுச் செம்புக் கலசங்களை வழங்கினார். ஈசான சிவ பண்டிதர் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குக் கற்பூரம் வாங்குவதற்கு 180 காசுகளைத் தானமளித்துள்ளார் என்பதனை, முதலாம் இராசேந்திரனின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியலாம். தஞ்சைப் பெருங்கோயிலில் காணப்படும் மற்றொரு கல்வெட்டு அக்கோயிலில் எழுந்தருளுவிக்கப்பட்ட ‘குருக்களின்’ பதுமத்திற்கு முன் விளக்கேற்றுதற்கு இவர் பணம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகின்றது. இப்பண்டிதர் காஞ்சிபுரத்திற்குத் தெற்கிலுள்ள கூழம்பந்தல் என்னுமிடத்தில் கங்கை கொண்ட சோழீச்சுரர் கோயிலைக் கட்டுவித்தார் என்பது, முதலாம் இராசேந்திரனது 22-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாலறியப்படுகிறது. மேலும், முதலாம் இராசேந்திரனது 20–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், தஞ்சைப் பெருங்கோயிலின் தலைமைக் குருக்களாகச் சர்வ சிவ பண்டிதர் விளங்கினார் என்று குறிக்கப்பட்டுள்ளமையால். இவர் கி.பி. 1031 வரை தஞ்சை<noinclude></noinclude> c2nvh3hulbq9i0gevxbqkxm5chozqkp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/646 250 628299 1947333 1936376 2026-06-17T13:22:18Z Booradleyp1 1964 1947333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈசான சிவாச்சாரியர்|616|ஈசான முனிவர்‌}}</noinclude>கோயிலின் நிருவாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார் என்று கொள்ளலாம். <section end="ஈசான சிவ பண்டிதர்"/> <section begin="ஈசான சிவாச்சாரியார்"/> {{dhr}} {{larger|<b>ஈசான சிவாச்சாரியார் (1900–1963)</b>}} சென்னி மலையில் 16.6.1900–இல் பிறந்தார். இவர் தந்தையார் சிவசுப்பிரமணியக் குருக்கள். இவர் தம் தந்தையார், காவேரி சுப்பிரமணியக் குருக்கள், மேலைப்பு லோலி நா. கதிரைவேற்பிள்ளை போன்ற புலவர்களிடம் கற்றுத் தமிழ், வடமொழிகளிலும் சைவ சித்தாந்தத்திலும் தேர்ச்சி பெற்றார். இவர் சென்னிமலையில் கலாஞான சங்கத்தை ஏற்படுத்தி, அங்கு ஒரு நூலகத்தையும் நிறுவினார். இவர் மெய் வருத்தத்தையோ பொருட்செலவையோ பொருட்படுத்தாமல், பாரத நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேபாளத்திற்கும் சென்று, சைவாகமச் சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பேணினார். இவர் காசியில் 12 ஆண்டுகள் ஆகம ஆராய்ச்சி செய்து ‘காசிவாசி’ என்ற பட்டம் பெற்றார். பின்னர்ப் பழநியில் வாழத் தொடங்கி, அங்குள்ள சிவாகமபாடசாலைத் தலைவராகப் பணியாற்றினார். சைவ சித்தாந்த சரபம் என்னும் பட்டத்தினைத் தருமபுர ஆதீனமும், மகா மகோபாத்தியாய, சிவாகமக்கடல், சிவாகம ஞானபாநு முதலிய பல பட்டங்களைப் பல்வேறு நிறுவனங்களும் இவருக்கு வழங்கிப் பாராட்டின. இவர் பல சைவ சமய மாநாடுகளில் பங்கேற்று உரைநிகழ்த்தியுள்ளார். ஆயிரக்கணக்கானோருக்குச் சமயத் தீட்சை வழங்கியுள்ளார். சைவ சமய நெறியினையும் கோயில் வழிபாட்டு முறையினையும் பரப்பி, நெறியில் வாழ்ந்த இப்பெரியார் 10.4.1963–இல் காலமானார். {{right|<b>இரா.ச.</b>}} <section end="ஈசான சிவாச்சாரியார்"/> <section begin="ஈசான சுவாமிகள்1"/> {{dhr}} {{larger|<b>ஈசான சுவாமிகள்</b>}} திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த புலவர்களுள் ஒருவர்; கவிஞர். இவர் கடம்பர் கோயிற் புராணத்தை இயற்றியுள்ளார். <section end="ஈசான சுவாமிகள்1"/> <section begin="ஈசான சுவாமிகள்2"/> {{dhr}} {{larger|<b>ஈசான சுவாமிகள்{{sup|2}}</b>}} பொம்மபுர ஆதீனப் புலவர், வசவ புராணம் இயற்றியவர். இப்புராணம் சேக்கிழார் காலத்தைய பசவேசர் என்னும் வச வண்ணர் வரலாற்றைக் கூறுவதாகும். இது வீரசைவ சமயச் செய்திகளைக் கூறும் நூல். <section end="ஈசான சுவாமிகள்2"/> <section begin="ஈசானதத்தர்"/> {{dhr}} {{larger|<b>ஈசானதத்தர்</b>}} கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர் ஈசானவர்மன் காலத்தவர். இவர் ஒரு முனிவர். இவருடன் வித்தியாரண்யர் என்பாரும் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. கம்போடியா மன்னர்கள் இந்து சமயங்களான சைவம், வைணவம் போன்றவற்றைப் போற்றிக் காத்தவர்கள். இந்துக்களின் ஆசிரம வாழ்க்கையையும் வேதவேள்விகளையும் செய்வதில் வல்லவர்களான முனிவர்கள் இம்மன்னர்களுக்கு உறுதுணையாக இருந்தனர் என்பதற்கு ஈசானதத்தரும் வித்தியாரண்யரும் சான்றாவர். <section end="ஈசானதத்தர்"/> <section begin="ஈசான தேசிகர்"/> {{dhr}} {{larger|<b>ஈசான தேசிகர்</b>}} ‘இலக்கணக் கொத்து’ நூலின் ஆசிரியர். இவர்தம் இயற்பெயர் சாமிநாத தேசிகர். கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் பிறந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஐந்தாம் பட்டத்தில் இருந்த மாசிலாமணி தேசிகரிடம் தீட்சை பெற்றுத் துறவு பூண்டு குட்டித் தம்பிரானாக விளங்கினார். மயிலேறும் பெருமாள் பிள்ளையிடம் தமிழ் நூல்களையும் செப்பறைக் கனகசபாபதிக் குருக்களிடம் வடமொழி நூல்களையும் பயின்றார். இவர் திருவாவடுதுறையில் தங்கியிருந்தபோது இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகரோடு தொடர்பு கொண்டார். பின்னர்ச் சங்காபிடேகம் செய்யப் பெற்று, ஈசானதேசிகர் எனப் பட்டம் சூட்டித் திருநெல்வேலி ஈசான மடத்தின் தலைவரானார். இவர் திருச்செந்திற் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய நூலையும் இலக்கணக் கொத்து என்னும் இலக்கண நூலையும் தசகாரியம் என்னும் சித்தாந்த சாத்திர நூலையும் இயற்றினார். சிவஞானபோதச் சூர்ணிக் கொத்தினையும் இவரே இயற்றினார் என்றும் கூறுவர். இலக்கணக் கொத்து தமிழ் இலக்கணத்தில் வடமொழி இலக்கணக் கலப்புப் பற்றி ஆராய்ந்து கூறும் நூலாகும். சொல்லிலக்கணம் பற்றி நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும், பலவிடங்களிற் கூறியும் கூறாது விடுத்தும் உள்ள செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்து இந்நூல் அளிக்கிறது. இந்நூல் இலக்கணத் திறனாய்வு போல அமைந்திருந்தபோதிலும் இவருடைய வடமொழிச் சார்பு காரணமாகப் பிற்காலத் தமிழறிஞர்களால் பின்பற்றப்படவில்லை. திருச்செந்திற் கலம்பகம் திருச்செந்தூர்ச் செந்திலாண்டவன் கோவிலில் பூசைக் காலத்தின்போது ஓதப்படுகிறது. தசாகரியம் பண்டார சாத்திரம் என்னும் சித்தாந்த சாத்திரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. நன்னூல் விருத்தியுரை ஆசிரியர் சங்கர நமச்சிவாயப் புலவர் இவர் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர். <section end="ஈசான தேசிகர்"/> <section begin="ஈசான முனிவர்"/> {{larger|<b>ஈசான முனிவர்</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாச்சாரியார்களுள் ஒருவர்; வேம்பத்தூரில் பிறந்தமையால் நிம்பை ஈசான முனிவர் எனவும்<noinclude></noinclude> tt0h3fhgsux8znp0ts157n8rdzx6jtc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/655 250 628332 1947334 1936577 2026-06-17T13:34:56Z Booradleyp1 1964 1947334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈசுவரதத்தர்‌|625|ஈட்டன்‌}}</noinclude>காளத்தில் வாழ்ந்த அறிஞர்; கல்வியாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர். இவரை வங்காள மொழியின் உரைநடைத் தந்தை என்றும் கூறுவர். விதவை மறுமணத்திற்கான சட்டமொன்றை இயற்ற கி.பி. 1856–ஆம் ஆண்டின் இவர் உறுதுணையாக இருந்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார்; பல இதழ்களின் தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்தார். நூற்றுக்கணக்கான பள்ளிகளைத் தொடங்கி, இவர் கல்வித்துறையில் பெருந் தொண்டாற்றினார். இவர் வடமொழியில் தலைசிறந்த அறிஞர். அதனால் இவரைப் பண்டித வித்தியாசாகரர் என்றும் கூறுவர். இந்துக் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்வது முறையானதே என்று பல கிளர்ச்சிகளைத் தீவிரமாக நடத்தினார். தம் கொள்கையை நிலைநிறுத்தும் நோக்குடன் இவர் இந்து அறநூல்களிலிருந்து பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி. கைம்பெண் மறுமணம் சட்டத்திற்குட்பட்டதே என்பதை மெய்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கானவர் கையெழுத்திட்ட விண்ணப்பங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்பினார். அதன் விளைவாகவே விதவை மறுமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இவர் கி.பி. 1898–ஆம் ஆண்டில் காலமானார். <section end="ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்"/> <section begin="ஈசுவரதத்தர்"/> {{dhr}} {{larger|<b>ஈசுவரதத்தர்</b>}} என்பார் மேலைச்சத்திரப்பர்களின் (Western Satraps) மரபுகளில் ஒன்றான சாசுத்தான வமிசத்தின் (Chashtana Dynasty) ஆட்சியைப் பறித்தவர். மேலைச்சத்திரபர்களின் அரசரான முதலாம் உருத்திரதாமன் என்பாரை மாளவம், கத்தியவார் மார்வார், கட்சு, சிந்து, வடகொங்கணம் போன்ற பகுதிகளை உச்சயினியிலிருந்து ஆண்ட மகாசத்திரபர் என்று கிர்நார் கல்வெட்டு கூறுகிறது. இவ்வமிசத்தைச் சார்ந்த 20 இளவரசர்கள் அரசாண்டார்கள். இவ்வரசர்களைப் பற்றிய கல்வெட்டுகள், காசுகள் போன்றவை இவ்வமிசத்தின் வரலாற்றை வரிசைப்படுத்தி விவரமாகக் கூறுகின்றன. உருத்திரதாமனை அடுத்து அரசோச்சிய 18 இளவரசர்கள் மகாசத்திரபர்கள் என்னும் விருதினைச் சூட்டிக்கொண்டார்கள். இவர்களின் ஆட்சியைப் பறித்துக்கொண்டவர்தாம் ஈசுவரதத்தர். இவரை ஈசுவரதத்த ஆபிரர் என்று கூறுவர். இவர் கி.பி. 236–இல் ஆட்சியைப் பறித்து கி.பி. 238 வரை ஆண்டதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி வேறு வரலாற்றுச் செய்திகள் கிடைத்தில. <section end="ஈசுவரதத்தர்"/> <section begin="ஈசுவர முனிகள்"/> {{dhr}} {{larger|<b>ஈசுவர முனிகள்</b>}} நாதமுனிகளின் திருமகனார் ஆவார். தந்தை சொல்லை மந்திரமாகக் கொண்டு பணி செய்து மகிழ்ந்தவர். காட்டு மன்னார்குடி என்னும் வீரநாராயணபுரத்தில் தந்தையுடன் இருந்துவருங்கால், காட்டுமன்னார் கட்டளைப்படி தந்தையார் வடநாட்டுத் தலப்பயணம் மேற்கொண்ட போது உடன் சென்றார் வடமதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவாரகை, அயோத்தி முதலான திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் கார்மேகவண்ணன் திருக்கோலங்களைக் கண்டுகளித்தார். இயமுனைக் கரையில் உள்ள கோவர்த்தனபுரம் அடைந்து, தந்தையாரோடு தாமும் அங்கே தங்கித் தந்தையாருக்கும், தூய பெருநீர் இயமுனைத் துறைவருக்கும் கைத்திருத்தொண்டு செய்து மகிழ்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர்த் தந்தையோடு காட்டுமன்னார்குடி வந்து சேர்ந்தார். சீரங்கநாயகி என்ற இவர்தம் மனைவியார் கி.பி. 976–ஆம் ஆண்டு ஆண் மகவொன்றை ஈன்றெடுத்தார். நாதமுனிகள் தம் பேரனுக்கு இயமுனைத் துறையன் எனப் பெயரிட்டார். ஈசுவர முனிகள் தம் மகனுக்கு முறைப்படி இளமைக்காலக் கடமைகள் யாவற்றையும் நிறையேற்றி மகிழ்ந்தார். இயமுனைத்துறைவர் ‘ஏகசந்தக் கிராகி’. அதனால் ஒருமுறை ஒரு செய்தியினைக் கூறக் கேட்ட அளவில் மனத்தில் இருத்திக்கொள்வார். சிறுவயதிலேயே வேதம் முதலாகப் பல கலைகளையும் சுற்றுத் தெளிவு பெற்றார். இவர் தம் ஆசிரியர் மகாபாடிய பட்டர் காரணமாக அப்போது சோழன் அவைப் புலவராக இருந்த ஆக்கியாழ்வானை வாதில் வென்று பெரும்புகழ் பெற்றார். வாதில் இவரே வெல்வார் என்று சோழன் மனைவி உறுதி கூறியிருந்தார். அதனால், இவர் வென்றவுடன் அரசமா தேவி ‘என்னை ஆளவந்தார்’ என்று இவரைப் பாராட்டி மகிழ்ந்த சிறப்பால், இவர் அன்று முதல் ஆளவந்தார் என்றே அழைக்கப்பெற்றார். ஆளவந்தாருக்குத் தத்தையாராகவும் நாதமுனிகட்குத் தனயராகவும் திகழ்ந்தவர் ஈசுவரமுனிகள். {{right|<b>கொ.இ.</b>}} <section end="ஈசுவர முனிகள்"/> <section begin="ஈசுவரன்"/> {{dhr}} {{larger|<b>ஈசுவரன்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]]. <section end="ஈசுவரன்"/> <section begin="ஈட்டன்"/> {{dhr}} {{larger|<b>ஈட்டன்</b>}} என்பது இங்கிலாந்து நாட்டிலுள்ளதொரு நகரம். இது பக்கிங்காம் சயரில் (Bucking–hamshire ) அமைந்துள்ளது. தேம்சு ஆற்றங்கரை நகரமான இவ்வூரில் உலகப் புகழ்பெற்ற கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏழை மாணவர்களும் படிக்கும் பொதுப்பள்ளிகளில் பல்லாயிரம் மாணவர்கள் கல்வி கற்றுப் பெரும் புகழ் படைத்தனர். முதன்மையான படைவீரர்களையும் அரசியல் வல்லுநர்களையும் இங்கிலாந்து பெற்றமைக்கு இக்கல்வி நிறுவனம் காரணமாயிருந்தது. உடலுக்கு உறுதியூட்டும் விளையாட்டுகள், உடலையும் உள்ளத்தையும் உரனாக்கி அரண் செய்யும் என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் பழமொழியொன்று ஈட்டனின் (Eton)<noinclude></noinclude> 40mtdhkkzljgbp3l9erk97pcyl36j8h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/659 250 628345 1947335 1936582 2026-06-17T13:39:27Z Booradleyp1 1964 1947335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்‌|629|ஈடன் அந்தோனி}}</noinclude>னப் பொருள்களில் மாற்றங்கள் செய்தோ, கடனீந்தோர் செயற்பட்டால் பொறுப்புறுதி கொடுத்தவர் விடுவிக்கப்படுவார். அவர் அனுமதியின்றி இவற்றைச் செய்யக்கூடாது. (4) பொறுப்புறுதி கொடுத்தவரின் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கடனீந்தோர் செயற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, கோதுமையை அடைமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தால், கடன் கொடுத்தவர் அந்தக் கோதுமையைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பொறுப்புறுதி கொடுத்தவர் கடனைச் செலுத்தினால் அவரிடம் கோதுமையை ஒப்படைக்க வேண்டும். {{larger|<b>ஈட்டுறுதிக்கும் பொறுப்புறுதிக்கும் உள்ள வேறுபாடுகள்:</b>}} இவை இரண்டும் மேலோட்டமாக ஒன்று போலத் தோன்றினாலும், இவற்றிற்கு இடையில் பல வேறுபாடுகள் உள்ளன: (1) பொறுப்புறுதியில் கடனாளிக்கும் கடனீந்தோருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும், கடனீந்தோருக்கும் பொறுப்புறுதி அளிப்பவருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும் ஆக இரண்டு ஒப்பந்தங்கள் உள்ளன. ஈட்டுறுதியில் ஈட்டுறுதி அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம் மட்டுமே உள்ளது. (2) பொறுப்புறுதியில் கடனாளி, கடனீந்தோர், பொறுப்புறுதி அளிப்பவர் என மூவர் உள்ளனர். ஈட்டுறுதியில் ஈட்டுறுதி அளிப்பவர், பெறுபவர் இருவர் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள். (3) பொறுப்புறுதியில் பொறுப்புறுதி அளித்தவரின் பொறுப்பு இரண்டாம் நிலையிலுள்ளது. கடனாளி கடனைச் செலுத்தாவிட்டால்தான் பொறுப்புறுதி அளித்தவர் செலுத்த வேண்டும். ஆனால், ஈட்டுறுதி அளிப்பவர் பொறுப்பு முதன்மையானது. ஒப்பந்தப்படி, ஈட்டுறுதி அளிப்பவர் மட்டுமே இழப்பை ஈடுகட்ட வேண்டியவர் ஆகிறார். (4) பணம் செலுத்திய பிறகு, பொறுப்புறுதி அளித்தவருக்கு மாற்றமர்வு உரிமைகள் வருகின்றன. ஈட்டுறுதி கொடுத்தவருக்கு இத்தகைய உரிமைகள் இல்லை. (5) பொறுப்புறுதி வெளிப்படத் தெரியும் கடனுக்கோ கடமைக்கோ தரப்படுகிறது. ஆனால், ஈட்டுறுதி எதிர்காலத்தில் நிகழும் எதிர்பாராத செயலுக்கோ நிகழ்ச்சிக்கோ தரப்பட்டுப் பெரும்பாலும் இழப்பில் முடிகிறது. (6) பொறுப்புறுதி கொடுத்தவர் அது நிறைவேறிப் பணம் கொடுத்தால், அதைத் திரும்பப் பெறக் கடனாளி மீது வழக்குத் தொடரலாம். ஆனால், ஈட்டுறுதியில் சில சூழ்நிலைகளில் தவிரப் பெரும்பாலும் இழப்பு ஈட்டுறுதி கொடுத்தவரையே சார்கிறது. (7) பொறுப்புறுதி கொடுத்தவர் பொறுப்புறுதியினால் தமக்கு ஏற்பட்ட வட்டி, தள்ளுபடி, சரக்கு வைத்துள்ள இட வாடகை, காப்பீட்டுச் செலவு முதலிய சட்டப்படியான செலவுகள் அனைத்தையும் கடனாளியிடமிருந்து வாங்கலாம். ஈட்டுறுதியில் இனவு நிகழ்வதில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் 124 ஆம்பிரிவு ஈட்டுறுதியை வரையறை செய்கிறது. அதன் 126–ஆம் பிரிவு முதல் 147–ஆம் பிரிவு முடிய பொறுப்புறுதி பற்றிய விளக்கங்கள் உள்ளன. ஈட்டுறுதி பற்றிய வரையறை இந்தியச் சட்டத்தை விட ஆங்கிலச் சட்டத்தில் விளக்கமாக உள்ளது. நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பிலிருந்து ஒருவரைக் காப்பாற்றச் செய்யப்படும் வாக்குறுதியே ஈட்டுறுதியாகும் என்பது ஆங்கிலச் சட்டம். பொதுவாக ஆங்கிலச் சட்டத்தின் நியாயமான கோட்பாடுகள் இந்தியச் சட்டத்திற்கும் பொருந்தும். {{right|<b>சோ.சோ.மீ.சு.</b>}} <section end="ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்"/> <section begin="ஈடன்"/> {{dhr}} {{larger|<b>ஈடன்</b>}} என்னும் பெயரில் இங்கிலாந்திலும் இசுகாட்லாந்திலும் பல ஆறுகள் உள்ளன. அவற்றுள் சிறப்பானதாக வட இங்கிலாந்தில் வெகட்டுமூர்லாந்தில் உற்பத்தியாகும் ஈடன் ஆற்றைக் குறிப்பிடலாம். இந்த ஆறு கம்பர்லாந்தின் குறுக்கே வடமேற்காகப் பாய்ந்து சால்வே கடற்கழியில் கலக்கிறது. ஈடன் (Eden) பல்லத்தாக்குப் பண்ணைத் தொழிலுக்குகந்த நிலமாகும். <section begin="ஈடன்"/> <section begin="ஈடன் அந்தோனி"/> {{dhr}} {{larger|<b>ஈடன் அந்தோனி</b>}} உலகப் புகழ்பெற்றவர். இவர் திறமை மிக்க அரசியல் வல்லுநர். இவரது திறன் இவரை இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் பதவி வரை உயர்த்தியது. ஈடன் அந்தோணி (Eden Anthony) தர்காமில் (Durham) கி.பி. 1897–ஆம் ஆண்டு பிறந்தார். பழம்பெருங் குடும்பத்தைச் சார்ந்தவராதலின் இவர் பிறவியிலேயே எல்லா வாய்ப்பினையும் பெற்றிருந்தார். இவர் ஈட்டன் (Eton) பள்ளியில் சேர்ந்து படித்தார். முதலாம் உலகப் போர் 1914–இல் தொடங்கியவுடன் படையில் சேர்ந்தார். இவர் தமது இருபதாம் வயதிலேயே இராணுவ விருதுகள் பல பெற்றார். போர் முடிந்ததும் தமது கல்வியைத் தொடர்ந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கீழ்நாட்டு மொழிகளில் சிறப்புப் பட்டமும் பெற்றார். இவர் 1923–இல் வார்விக் லீமிங்க்டன் தொகுதியின் பேராளராக நாடாளுமன்றத்திற்குப் பழமை விரும்புவோர் (Conservative) கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியின் பேராளராக 1957 வரை நாடாளுமன்றத்தில் பணிபுரிந்தார். {{nop}}<noinclude></noinclude> bfopwol3yumet5xvrxw428wbskpr5op பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/666 250 628394 1947338 1936619 2026-06-17T13:48:07Z Booradleyp1 1964 1947338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈபோயே|636|ஈமப்‌ பேழைகள்‌}}</noinclude>சுதந்தரம் பெற்றது. பின்னர்ப் பல நாட்கள் அங்கு உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது கூட்டாட்சிப் படைவீரர்கள் பிரிந்து செல்ல நினைத்த பயாப்ராவின் மீது படையெடுத்தனர். பயாப்ரா தனி நாடாக முயற்சி செய்ததை அடுத்துப் பல்லாண்டு நைசீரியாவின் பகுதிகளுக்கிடையே சச்சரவுகள் எழுந்தன. அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஈபோ மக்கள் வடபகுதியில் 1966–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஒனிட்சா (Onitsha), ஆபா (Aba) என்பவை ஈபோ மக்கள்வாழும் பகுதியிலுள்ள பெரு நகரங்களாகும். ஈபோ மக்கள் தொழில் நுட்பம் தெரிந்த கருமாரத் தெழிலாளர்களாகவும் மரக்கடைசலிடும் தொழிலாளர்களாகவும் இரபியா என்னும் துணி வகையை நெய்யும் நெசவாளர்களாகவும் சந்தைக் கடை வணிகர்களாகவும் விளங்குகிறார்கள். <section end="ஈபோ"/> <section begin="ஈபோயே"/> {{dhr}} {{larger|<b>ஈபோயே</b>}} என்பது தென்கிழக்குக் கிரீசிலுள்ளதொரு தீவு. கிரீசு உள்நாட்டுப் பகுதிகளான பொயோசியா (Boeotia) வையும் அட்டிகா (Attica) வையும் இவிரிபோசு (Euripos) நீர்ப்பிரிவு பிரிக்கிறது. ஈபோயேயை (Euboca) ஈவியா (Evvoia) என்றும் கூறுவர். ஈவியா பொதுவாக மலைகளால் சூழப்பட்டுச் செழிப்பான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. இங்குச் செம்மறியாடு, கால்நடை போன்றவை வளர்க்கப்படுகின்றன; ஒலிவமரம், திராட்சை கோதுமை போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன. அயக்காந்தமும் பழுப்பு நிலக்கரியும் (Lignite) இங்குத் தோண்டி எடுக்கப்படுகின்றன. இங்குப் பளிங்குக் கற்களும் வெட்டியெடுக்கப்படுகின்றன. அயோனியரும், திரேசியரும் இத்தீவில் குடியேறினர். இங்குள்ள நகரங்களுள் கல்கிசு (Khalkis), எரிட்ரியா (Eretria) என்பவை சிறப்புமிக்கவை. செல்வச் சிறப்பிலும் வலிமையான ஆட்சியிலும் இந்நகரங்கள் கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் மாசிடோனியாவிலும், தெற்கு இத்தாலியிலும், சிசிலியிலும் குடியேற்றப் பகுதிகளை நிலைநாட்டிக் கொண்டிருந்தன. ஈபோயே தீவு கி.மு. 506க்கும் 411க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதென்சு நகரின் செல்வாக்கிற்குட்பட்டன. மாசிடோனியாவின் மன்னரான இரண்டாம் பிலிப்பு (Philip II) என்பார் ஏறத்தாழ கி.மு. 338–ஆம் ஆண்டில் இத்தீவைக் கைப்பற்றிக் கொண்டார். உரோமாபுரி இத்தீவை கி.மு. 194–ஆம் ஆண்டில் அதன் பேரரசுடன் இணைத்துக் கொண்டது. பின்னர்ப் பைசாண்டியரின் ஆட்சிக்கு இது கைம்மாறியது. நான்காம் சிலுவைப் போரின் போது (கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்) இத்தீவு வெனிசு நகரின் குடியேற்றப் பகுதியாயிற்று. உதுமானியத் துருக்கியப் பேரரசுக்கு இது கி.பி. 1470–ஆம் ஆண்டில் கொடையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், இத்தீவு மக்கள் துருக்கியர் ஆட்சியை எதிர்த்து கி.பி. 1821–இல் கிளர்ச்சி செய்தனர். கிரீசுடன் இது கி.பி. 1830–ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. <section end="ஈபோயே"/> <section begin="ஈமச் சடங்குகள்"/> {{larger|<b>ஈமச் சடங்குகள்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச்சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச்சடங்குகள்]] <section end="ஈமச் சடங்குகள்"/> <section begin="ஈமப் பேழைகள்"/> {{dhr}} {{larger|<b>ஈமப் பேழைகள்</b>}} உலோக கால மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பின்பற்றிய பல முறைகளுள் இதுவும் ஒன்று. சிலர் இறந்தோரைப் புதைக்கச் சுடுமண் தாழிகளையும், கால்களுடன் கூடிய தாழிகளையும் பயன்படுத்தினர். இறந்தோரைப் படுக்கை நிலையில் அடக்கம் செய்வதற்கேற்ப, நீண்ட தொட்டிகளைப் போன்ற பேழைகளைத் தயார் செய்து, அதனை ஈமக்கலமாகப் பயன்படுத்துதலே ஈமப்பேழை (Legged Terracotta Sacrophagus) எனப் பெயர் பெற்றது. புதை குழிகளில் பயன்படுத்தப்பட்ட கலல்களில், பொதுவாக நான்கு கால்களே இருக்கும். ஈமப் பேழைகளிலோ, அதன் நீளத்திற்கேற்பப் பல கால்கள் காணப்படும். செங்கற்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் 12 கால்களுடன் கூடிய ஈமப்பேழைகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஈமப் பேழைகள் சுடுமண்ணால் செய்யப்படுவன. சில இடங்களில் கல்லாலான ஈமப்பேழைகளும் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 666 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 200 |oTop = 354 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|ஈமப் பேழைகள்}}<noinclude></noinclude> m8rt3cqp8a8pbavrs213rj1c8us94kj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/688 250 628585 1947345 1936661 2026-06-17T14:01:45Z Booradleyp1 1964 1947345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈரோடு மாவட்டம்‌|658|ஈலம்‌}}</noinclude>இந்த ஏரியை முதன் முதலாகக் கண்டவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த ஆய்வுப் பயணியான இலூயி சோலியத்து (Louis Jolliet) ஆவார். இவர் இதைக் கி.பி. 1669–இல் கண்டுபிடித்தார். தொடக்கத்தில் ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும், பின்னர் ஆங்கிலேயரும் அமெரிக்கரும் இதை உரிமைப்படுத்திக் கொள்ளப் போரிட்டுக் கொண்டார்கள். ஈரி ஏரிப் போர் (1813) அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் அமெரிக்கர் வெற்றி பெற்றனர். <section end="ஈரி ஏரி"/> <section begin="ஈரோடு மாவட்டம்"/> {{dhr}} {{larger|<b>ஈரோடு மாவட்டம்:</b>}} காண்க: [[தமிழ்நாட்டு ஆட்சிப் பிரிவுகள்]]. <section end="ஈரோடு மாவட்டம்"/> <section begin="ஈலம்"/> {{dhr}} {{larger|<b>ஈலம்:</b>}} தென்மேற்கு ஈரானில் குசிசுத்தான் (Khuzistan), இலூரிசுதான் (Luristan) பகுதியே முன்பு ஈலம் (Elam) என்று குறிப்பிடப்பட்டது. இங்குத் தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் தொல்லியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி சமவெளிகளும் மலைகளும் நிறைந்தது. கார்கேக்கு (Karkhch), கரூன் (Karun) ஆகிய ஆறுகளினால் இப்பகுதி வளம் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதி மேட்டுப்பாங்கான நிலத்தைக் கொண்டிருந்ததால் இதனை யூதர்கள் ஈலம் எனப் பெயரிட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் ஈலமியர்கள் (Elamites) எனப்பட்டனர். ஈலமியர்கள் இப்பகுதியை ஆல்ட்டாம்டி (Haltamti) எனக் கூறினர். ஆல்ட்டாம்டி என்பதற்கு இறைநிலம் (Lord's land) என்று பொருள். ஈலமியர்கள் முதன்முதலில் ஈரானியப் பீடபூமி பகுதியில் வசித்து வந்தனர்; பின்னர்த் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கத் தலைப்பட்டனர். அவர்கள் இப்பகுதியிலிருந்து குதிரைகள், மரப்பொருள்கள், மணிக்கல் வகைகள், உலோகப் பொருள்கள் போன்றவற்றை அக்காடு (Akkad), சுமர் (Sumer) பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தனர். {{larger|<b>வரலாறு:</b>}} தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழாய்வுகள் செய்து இங்கிருந்த நாகரிகம் கி.மு. 4500–ஆம் ஆண்டைச் சார்ந்தது என்னும், எகிப்து, சுமேரியா, சிந்து நாகரிகங்களின் காலத்தை ஒத்தது என்றும் கூறினர். மேலும், இங்குப் புதிய கற்காலக் கருவிகளும் அக்காலத்தைச் சார்ந்த மட்பாண்டங்களும் கிடைத்ததிலிருந்து புதிய கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறி தெரியவந்துள்ளது. ஈலமிய மக்கள் முதலில் நாடோடிகளாக நிலையற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். பின்னர்ப் படிப்படியாக நிலையான இடத்தில் வாழத் தலைப்பட்டனர். ஈலமியர்கள் விலங்குகளை வளர்த்தும் பருவ காலங்களில் வேளாண்மை செய்தும் வந்தனர். செம்பின் பயனை இவர்கள் அறிந்திருந்தனர். தந்தம், சங்கு, செம்பு போன்ற பொருள்களிலிருந்து அணிகலன்கள் செய்தனர். கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் ஈலமியர்களுக்கும் சுமேரியர்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதில் ஈலமியர்கள் வெற்றி பெற்றனர். அக்காடு மன்னன் சார்கன் (Sarcon of Akkad) கல்வெட்டுகள் ஈலத்தையும் சுமேரியாவையும் சார்கன் வென்றதாகக் கூறுகின்றன. அரசர்கள் கூட்டாட்சி முறையில் (Federation of Rulers) ஈத்தை ஆண்டார்கள். ஈலமியர்கள் சித்திர வடிவ எழுத்துமுறையை அறிந்திருந்தனர். இந்த ஆதி–ஈலமிய எழுத்து (Proto–Elimite) வகை இன்றளவும் புரிந்து கொள்ள இயலாததாகவே உள்ளது. ஈலத்தை அக்காடியர்கள் தங்கள் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தபொழுது ஆப்பு எழுத்துகள் புழக்கத்தில் வந்தன. ஈலத்தின் தாழ்நிலப் பகுதி பன்னெடுங்காலமாகச் சுமேரியர்களின் வசம் இருந்தது. ஈலமியர்கள் சுமேரியர்களுக்குச் சொந்தமான சில பகுதிகளையும் குறிப்பாக ‘ஊர்’ (Ur) நகரையும் தங்களின் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தனர். ஈலத்தையும் மெசபடோமியாவையும் வடக்கத்திய இனத்தவரான காசைட்டுகளும் (Kassites) உரியன்சுகளும் (Hurrians} கி.மு. 2000 ஆண்டளவில் கைப்பற்றினர். ஆக்கிரமிப்புக் கொள்கை கொண்ட ஈலமிய அரசர்கள் கி.மு. 1300–இல் கீழை மெசபடோமியாவைத் தங்கள் ஆளுகைக்குக் கொண்டு வர அசிரியாவுடன் போரிட்டனர். இக்காலத்தில்தான் ஈலத்தில் கலைகளும் கைத்தொழில்களும் பெருமளவில் வளர்ச்சியடைந்தன. நகரங்களில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன. அவற்றில் சூசா (Susa), சிகுராத்து (Zigurats), சோகா-சான்பில் (Choga-Zanbil) நகரங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிறப்புமிக்கவை. நெபுகாத்நேசர் ஈலத்தை கி.மு. 1200–இல் போரிட்டுச் சூறையாடினார். சூசா நகரம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போரின் விளைவாக ஈலத்தை ஆண்ட ஈல மரபினர் ஆட்சி முடிவுற்றது. இதன் பின்னர் ஈலத்தின் வரலாறு ஏறக்குறைய 300 ஆண்டுகள் வரை தெளிவாக அறியப்படவில்லை. இதனை ஈலத்தின் இருண்டகாலம் என்பர். புதிய ஈலமிய அரசு கி.மு. 8–ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் ஏற்பட்டது. இவ்வரசு அசிரிய அரசர் சார்கானுடனும் அவன் வழி வந்தவர்களுடனும் போரிட்டது. புதிய ஈலமிய அரசு பாபிலோனியாவுடன் கூட்டுச் சேர்ந்து அசிரிய அரசர் சென்னாசெரிபை எதிர்த்தது. ஆனால், சென்னா-<noinclude></noinclude> r57j79ofzlsj4snruhk28vuvx4nxoaz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/696 250 628646 1947348 1936666 2026-06-17T14:08:42Z Booradleyp1 1964 1947348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈழமண்டல சதகம்‌|666|ஈழவர்}}</noinclude>ஏறத்தாழ 2100 ஆண்டுகளுக்கு முன்பு, ஏளார (கி.மு. 161–117) என்னும் தமிழ் மன்னன் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டு வந்தான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தீவின் மேற்குப் பகுதி, வடக்குப் பகுதி, கிழக்குக் கரையோரப் பகுதி, அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட வன்னியப்பகுதி ஆகியன தமிழரின் வாழ்விடங்களாக இருந்தன. இத்தீவின் தெற்குப் பகுதியிலும் தென்மேற்குப் பகுதியிலும் சிங்களவர் செறித்து வாழ்ந்தனர். ஈழம் சிலகாலம் தமிழக வேந்தர்களான முற்காலப் பாண்டியர், பல்லவர், பிற்காலச் சோழர் முதலானோரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. குறிப்பாக, முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகிய இருவர் ஆட்சிக்காலத்திலும் தமிழரின் ஆட்சி ஈழத்தில் கொடி கட்டிப் பறந்தது. இவர்கள் காலத்தில் வங்காள விரிகுடா ‘சோழரின் குடா’ எனக் குறிக்கப்பட்டது. ஈழம் மும்முடிச் சோழமண்டலம் எனப் பெயரிடப்பட்டுச் சோழரால் ஆளப்பட்டு வந்தது. பின்னர், இலங்கையில் மாகனின் ஆட்சி (கி.பி. 1215–55) பாண்டியப் படைகளின் உதவியுடன் நடைபெற்றது. ஆரியப் பேரரசர்களின் தனியாட்சி கி.பி. 1282–இல் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்ட தமிழராட்சி சிறப்புடையது. இவர்கள் இராமேசுவரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். மாமன்னன் அசோகனுக்குப்பின் இலங்கையில் புத்த சமயம் பரவி நன்கு வளர்ச்சி பெற்றது. தமிழ் வேந்தர் ஈழ வேந்தனுக்கு உதவி புரிவதும், ஈழ வேந்தர் தமிழக அரசனுக்கு உதவி புரிவதும் வழக்கமாக இருந்தன. இதனால், பண்டு இரு அரசுகளும் நெருங்கிய உறவால் பிணைக்கப்பட்டமை புலனாகும். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="ஈழம்"/> <section begin="ஈழமண்டல சதகம்"/> {{dhr}} {{larger|<b>ஈழமண்டல சதகம்</b>}} இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு, மூர்த்தி, தலம், தீர்த்தச் சிறப்பு, சைவ சித்தாந்தக் கொள்கைச் சிறப்பு ஆகியவை பற்றிக் கூறுகிறது. இதற்குச் சந்திர மௌலீசுவரர் சதகம் என்ற பெயரும் உண்டு. இதன்கண் 104 பாடல்கள் (காப்பு–1, தற்சிறப்பாயிரம்–2, நூல்–100, முடிப்புரை–1) உள்ளன. இதன் ஆசிரியர் திரு. ம.க. வேற்பிள்ளை. இவர் கி.பி. 1849–இல் இலங்கையிலுள்ள மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் கணபதிப் பிள்ளை, இவர் கார்த்திகேயர், ஆறுமுக நாவலர், பொன்னம்பலப்பிள்ளை போன்றோரிடம் கற்றுப் புலமை நிரம்பினார்; தம் மாணவர்கள் பலரைப் புலவராக்கினார். இவர் திருவாதவூரர்ப் புராணம் போன்ற சில நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவரால் இயற்றப்பெற்ற பிற செய்யுள் நூல்கள் புலோலி பர்வதவர்த்தினி அம்மை தோத்திரம், புலோலி வயிரவக் கடவுள் தோத்திரம் ஆகியன. மட்டுவில் என்பது பிறமொழிப் பெயராயிருத்தலால், இவர்தம் வழிபடு கடவுளான சந்திரமௌலீசர் பெயரால் அவ்வூரைச் சந்திரமௌலீசர்புரம், சந்திரபுரம் என்று நூலில் குறிப்பிட்டுள்ளார். குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் போன்று இச்சதகப் பாடல் ஒவ்வொன்றின் ஈற்றிலும், ‘சந்திரமௌலீசனே ஐந்தொழில் விலாசனே சந்த்ரபுரதலவாசனே’ என்ற முடிப்பு வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று பிரகரணங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை, பொதுப் பிரகரணம் (13), இலங்காபுரிப் பிரகரணம் (36), வீணாகானபுரப்பிரகரணம் (51) என்பன. பொதுப் பிரகரணத்தில் சைவ சித்தாந்தக் கொள்கை சிறப்பாகப் பதின்மூன்று பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தம், பதி, மகேசுரமூர்த்தங்கள், பத்துநாள் விழாவின் உண்மை, பசு, ஆதிசைவர் சிறப்பு, அரசர், வைசியர் முதலியோர் சிறப்புகள், பாசம், தத்துவத்திரயம் முதலியன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலங்காபுரிப் பிரகரணத்தில் இலங்கையின் சிறப்பு 7 பாடல்களில் கூறப்பட்டுள்ளது. திருக்கேதீச்சரம், திரிகோணமலை பற்றி ஏழு பாடல்களில் கூறப்பட்டுள்ளன. பின்னர், இறைவனுறையும் பல மலைகள், கதிர்காமமலை ஆகியவற்றின் சிறப்பினை 22 பாடல்களில் இந்நூலாசிரியர் கூறுகிறார். வீணாகானபுரப் பிரகரணத்தில் யாழ்ப்பாணத்தின் சிறப்பு, பெயர்க்காரணம் அங்கு வாழும் துறவியர், பண்டைப் புலவர்கள், மருத்துவம் முதலிய கலைகள் வளர்ந்த வரலாறு, ஆண்ட அரசர்கள், அதனைச் சுற்றியுள்ள சிறந்த ஊர்கள், ஆலயங்கள் ஆறுமுகநாவல சற்குரு, பொன்னம்பலப்பிள்ளை, அருகிலுள்ள நகுலேசுரம் போன்ற தலங்கள் ஆகியன பற்றி 51 பாடல்களில் விளக்கியுள்ளார். இந்நூல் (68) இலங்கையின் பெயர்க்காரணத்தினைச் ‘சொல்லு நூற்றெட்டுத் திருத்தலங்களுள் மிக்குத் துலங்கலில் இலங்கையாம் பேர்’ என்று குறிப்பிடுகிறது.{{right|<b>இரா.ச.</b>}} <section end="ஈழமண்டல சதகம்"/> <section begin="ஈழவர்"/> {{dhr}} {{larger|<b>ஈழவர்</b>}} சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படும் மக்கள். இவர்களுடைய<noinclude></noinclude> tnf3kfwuki593b24jqvf1r9ujnvpj5p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/704 250 628700 1947354 1936916 2026-06-17T14:15:57Z Booradleyp1 1964 1947354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்கிரகுமார பாண்டியன்‌|674|உக்கிரகுமார பாண்டியன்‌}}</noinclude>வழங்கிற்று. இது அக்காலத்தில் தெலுங்குக் கல்வெட்டுகளிலும் பிறகு அம்மொழியிலும் பெருவாரியாக வழங்கலாயிற்று. ஆனால், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் காணப்படவில்லை. சில அடிப்படை வினைச் சொற்களில் விளியன்றி வேறு நிலைகளில் உகர விகுதி இறுதியில் தோன்றுகிறது. (எ.டு) வா > வரு, தா > தரு என்பன. ஊ என்னும் நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரைக்கு மேல் அளபெடுக்கும் பொழுது அதற்கு அறிகுறியாக அந்நெடிலை அடுத்து உகரம் குறிக்கப்பெறும். (எ–டு) கெடுப்பதூஉம், எடுப்பதூஉம். தமிழ் எண்மானத்தில் உ என்பது 2 (இரண்டு) என்னும் எண்ணைக் குறிக்கும். ஆனால், அதன் தோற்றமும் வரிவடிவமும் வேறு விதமாகக் காணப்படுகிறது: <center> {| |அனைத்திந்தியப் பின்னணியில் சாதவாகனர், <br>கச்சிப்பல்லவர் முதலியவரின் கல்வெட்டுகள் <br>(கி.பி. 1–இலிருந்து 5–ஆம் நூற்றாண்டு வரை). || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 54 |cHeight = 65 |oTop = 224 |oLeft = 185 |Location = center |Description = }} |- |பாண்டியன் சடையவர்மன் பராந்தகன்<br> (முதல் வரகுணன்) கி.பி 8-ஆம் நூற்றாண்டு || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 47 |cHeight = 35 |oTop = 282 |oLeft = 194 |Location = center |Description = }} |- |உத்திர மேரூர் பார்த்திவேந்திரன் <br>கல்வெட்டு கி.பி. 10–ஆம் நூற்றாண்டு || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 41 |cHeight = 30 |oTop = 309 |oLeft = 198 |Location = center |Description = }} |- |இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச்<br> செப்பேடு கி.பி. 1025 || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 32 |cHeight = 29 |oTop = 335 |oLeft = 204 |Location = center |Description = }} |- |} </center> சொல்லிறுதியில் ஒலி குறைந்து வரும் உகரத்தைக் குற்றியலுகரம் என்பர் இலக்கணநூலார், (எ–டு) நாகு, எஃகு, வரகு முதலியன. இக்கால வழக்கில் பெரும்பாலும் மெய்யிறுதிச் சொற்கள் உகரத்துடனேயே முடிகின்றன. (எ–டு) கண்>கண்ணு, காண்>காணு, புல்>புல்லு, ஆள்>ஆளு.{{right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="உ"/> <section begin="உக்கிரகுமார பாண்டியன்"/> {{dhr}} {{larger|<b>உக்கிரகுமார பாண்டியன்:</b>}} பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இம்மன்னன் வரலாறு அப்புராணத்தில் உக்கிரகுமாரன் திரு அவதாரப் படலம், உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம், கடல் சுவற்வேல் விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம், மேருவைச் செண்டாலடித்த படலம் ஆகிய பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. இவன் பெயர், வரலாறு முதலியன சிறிய மாற்றங்களுடன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்திலும் கூறப்பட்டுள்ளன. இம்மன்னன் சோமசுந்தர பாண்டியனுக்கும் தடாதகைப் பிராட்டிக்கும் மைந்தனாகப் பிறந்தான்; இளமையில் கலைகள் பல பயின்றான்; உரிய காலத்தில் சோமசேகரன் என்னும் மன்னன் மகள் காந்திமதியை மணந்து, மதுரை ஆட்சியினை மேற்கொண்டான். இறைவன் அருளால் வளை, வேல், செண்டு ஆகிய படைகள் பெற்றான். இவன் 96 அசுவமேதயாகம் செய்து பெருமை பெற்றமை கண்டு, பொறாமை கொண்டு, இந்திரன் மதுரையை அழிக்கக் கடலை ஏவினான். சித்தராகத் தோன்றிய சிவபெருமான் தூண்டுதலால் உக்கிர குமார பாண்டியன் மதுரையைச் சூழ்ந்த கடலின்மீது தன் வேலினைச் செலுத்தி, அதன் வீறினை அடக்கினான். இவன் காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யாமல் வறுமை மிகவே, மழைவேண்டி இந்திரனின் உதவியை நாடி, சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் தேவருலகு சென்றனர். அவர்களின் வருகை உணர்ந்த இந்திரன் மூவர்க்கும் தனித்தனி இருக்கை அமைத்திருந்தான். சேர சோழ மன்னர் இருவரும் தத்தமக்கு அமைக்கப்பட்ட இருக்கையில் அமர, இப்பாண்டிய மன்னன் இந்திரனோடு ஓர் இருக்கையில் அமர்ந்தான். அது கண்டு மனம் புழுங்கிய இந்திரன் அதனை வெளிக்காட்டாமல் சேர சோழ மன்னர்க்கு உரிய சிறப்புச் செய்து அனுப்பி, அவர்கள் நாட்டில் மழை பொழியுமாறு செய்தான். பாண்டியனைப் பாராட்டுவதுபோன்று பலர் கூடிச் சுமக்கத்தக்க ஒரு பெரிய மாலையினை அவனுக்கு அணிவித்தான். பாண்டியன் அதனை மிகவும் எளிதாகத் தோளில் ஏற்று விளங்கினான். அதனால், இப்பாண்டியன் ‘ஆரந்தாங்கு பாண்டியன்’ என்று இந்திரனால் சிறப்பிக்கப்பட்டான். பாண்டி நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமலிருந்தது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற பாண்டியன் அங்கு வந்த இந்திரனுடைய மேகங்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். அவற்றை மீட்க எண்ணிப் படை எடுத்துவந்த இந்திரன் முடியினை வளை எறிந்து விழச் செய்தான். ‘மழை பெய்விக்கிறேன் மேகங்களை விடுக’ என வேண்டி இந்திரன் தூதனுப்பவும் இசையாமல், அவனுக்கு நண்பனான ஒருவேளாண் மகன் இந்திரனுக்குப் பிணையாகி வேண்ட விடுவித்தான். பிறிதொரு சமயம் நாட்டில் மழை பெய்யாமற் போக, பாண்டியன் சோமசுந்தரப் பெருமானை வேண்டினான். வறட்சி ஓராண்டு நீடிக்கும் என்றும், அது நீங்க மேருமலை சென்று அங்குள்ள பொன்னறை திறந்து பொன்னை எடுத்தபின் அதனை<noinclude></noinclude> 3s6lg2v4kl7nlk24f6ispx4xjhm26z8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/732 250 628793 1947359 1936932 2026-06-17T14:31:59Z Booradleyp1 1964 1947359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்ச நம்பக வெளியீட்டுக்‌ கோட்பாடு|702|உச்சப்‌ பணவீக்கம்‌}}</noinclude>(Australia), கனடா, நியூசிலாந்து, அர்செண்டினா ஆகிய நாடுகளும் இம்முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா 1927 முதல் 1956 வரை இம்முறையைப் பின்பற்றியது. அதன்படி மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கக் கட்டி, தங்கக் காசுகள், இசுதெர்லிங்கு (Sterling) ஆகியவற்றைப் பிணையங்களாகவும், எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு பிணையங்களைப் உரூபாயில் மதிப்பிட்ட பிணையமாகவும் (Rupee valued Sccurities) கொண்டு பணத்தாள்களை வெளியிட்டது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டம் 1934–இன்படி, மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கமும் எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு இசுதெர்லிங்கும் பிற அயற்செலாவணியும் பிணையமாக வைக்க வேண்டுமென்பதை ஏற்படுத்தியது. இது விழுக்காட்டு வைப்பு முறை (Percentage Deposit System) என வழங்கப்பட்டது. ஒப்புவீதக் காப்பு முறையில் நெகிழ்ச்சித் தன்மை, பிணையங்களின் அளிப்பைப் பொறுத்திருப்பதால் பல நாடுகளில் இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அரசு சட்டப்படி வரையறுக்கும் ஒப்புவீதக் காப்பு அளவுகுறைக்கப்படக்கூடிய தன்மையற்றதால், தங்க அளிப்புக் குறையும்போது பணத்தாள்களின் அளிப்பும் குறைந்து பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வழி வகுக்கிறது. {{larger|<b>குறைந்த காப்பு இருப்பு முறை:</b>}} இம்முறையில் ஒரு நாட்டின் பணவியல் ஆணையகம் (Monetery Authority) ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவுத் தங்கத்தைச் சட்டப்படி பிணையமாக வைத்துக்கொண்டு பணத்தாள்களை வெளியிடலாம். இந்தியா இம்முறையை 1956–இலிருந்து பின்பற்றி வருகிறது. இந்திய மைய இருப்பு வங்கி குறைந்த அளவு உரூ. 200 கோடி மதிப்புப் பெறும் பிணயங்களை மொத்தப் பணத்தாள் வெளியீட்டிற்குக் காப்பாக வைத்திருக்க வேண்டும். இவற்றில் உரூ. 115 கோடி மதிப்புத் தங்கம் காப்பாக (Reserve) இருக்க வேண்டும். குறைந்த காப்பு இருப்பு முறையில் உச்ச நெகிழ்ச்சித் தன்மை அடங்கியுள்ளது. அதனால், பொருளாதாரத் தேவைக்குகந்த வகையில் மைய வங்கி பணத்தாள்களை வெளியிடலாம். ஆனால், நடைமுறையில் அரசுகள் தங்கள் நிதித் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு மைய வங்கிகளை மிகையான அளவு பணத்தாள்களை வெளியிட வற்புறுத்துகின்றன. அதனால், பணவீக்கம் ஏற்பட்டுப் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பணத்தாள் வெளியீட்டு முறைகளை நன்கு பகுத்தாய்வு செய்தால் கோட்பாடுகளையும் முறைகளையும் விடச் செலாவணியின் மதிப்பு இக்காலத்தில் அதன் வாங்கும் திறனைப் பொறுத்தே அமைந்துள்ளது. பணத்தாள்களைத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய மாறுபட்ட பொதுமக்களின் கண்ணோட்டம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் நடைமுறை வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு உந்தாத நெகிழ்ச்சியுள்ள பணத்தாள் வெளியீட்டு முறையே இக்காலத்தின் இன்றியமையாத் தேவையாகக் கருதப்படுகிறது. இதற்குத் திறமையான பணவியல் மேலாண்மையே (Monetary Management) தேவை. பின் தங்கிய நாடுகளுக்கு வளர்ச்சி படைந்து வரும் நாடுகளுக்கும் குறைந்த காப்பு இருப்பு முறையே சிறந்ததாகக் கருதப்படுகிறது. <section end="உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு"/> <section begin="உச்சநீதி மன்றம்"/> {{dhr}} {{larger|<b>உச்சநீதி மன்றம்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 3/இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றம்]]. <section end="உச்சநீதி மன்றம்"/> <section begin="உச்சப் பணவீக்கம்"/> {{dhr}} {{larger|<b>உச்சப் பணவீக்கம்:</b>}} பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பு மிகுந்து மதிப்புக் குறைந்து, விலைகள் எவ்வகைப் பணவியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் வெகுவேகத்தில் உயர்ந்து கொண்டு செல்லுதலே உச்ச விலையேற்ற நிலையாகும். இவ் உச்சப் பணவீக்கத்தைத் (Hyper Inflation) தாவி ஓடும் பணவீக்கம் (Galloping Inflation) என்றும் தப்பி ஓடும் பணவீக்கம் (Runaway Inflation) என்றும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் விலைகள் தொடர்ந்து உச்ச வரையறையின்றி உயர்ந்து கொண்டே செல்லும், பணவியல் வல்லுநர் பிலிப் கேகன் (Phillip Cagan) கருத்துப்படி விலைகள் 50 விழுக்காட்டு வீதத்தில் உயரத் தொடங்கும் நிலை உச்சப் பணவீக்க நிலைக்கான தோற்றமாகும். பெரும்பாலும் அரசு மிகுந்த பணத்தை வெளியிடும் போது அதற்கு ஈடாக உற்பத்திப் பெருக்கம் இல்லாத காலங்களில் உச்சப் பணவீக்கம் தோன்றுகின்றது. உச்சப் பணவீக்க நிலையில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படுமாகையால் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழும், மிகுதியான பண அளிப்பு (Quantity of Money) குறைந்த அளவு பண்டங்களையும் பணிகளையும் பெற முனைவதால் உற்பத்தி, வேலை, வருமானம் ஆகியவற்றின் தேவை நிறைவு செய்ய இயலாத வீதத்தில் பெருகும். உற்பத்தியாளர், முதலீட்டாளர், விற்பனையாளர் போன்றவர்களுக்குத் தங்களின் முதலீடும் முயற்சியும் ஆதாயத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்-<noinclude></noinclude> 8qf2qfdneym9j1su0zmoewh27rp9zty பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/750 250 628952 1947424 1937119 2026-06-18T02:07:00Z Booradleyp1 1964 1947424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசேன்|720|உசை}}</noinclude>சமசுகிருதக் கழகம் (Sanskrit Academy) என்னும் கல்வி மையம் 1954–ஆம் ஆண்டிலிருந்து உசுமானியாப் பல்கலைக்கழக உதவியுடன் பணியாற்றி வருகிறது. கிடைத்தற்கரிய பழைய சமசுகிருதக் கையெழுத்துப் படிகளைத் தேடுதல், பாதுகாத்தல், ஆராய்தல் போன்ற பணிகளை இம்மையம் செய்து வருகிறது. மேலும், இது அவற்றைப் பதிப்பித்து நூல்களாகவும் வெளியிட்டு வருகிறது. இம்மையத்தில் சமசுகிருத மொழி வளர்ச்சியை யொட்டிய ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. <section end="உசுமானியாப் பல்கலைக்கழகம்"/> <section begin="உசேன்"/> {{dhr}} {{larger|<b>உசேன்</b>}} முகமது நபியின் மகள் பாத்திமாவிற்கும் நான்காம் கலீபா அலிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் சகோதரர் அசன் கலீபா பதவியை உமயது மரபைச் சேர்ந்த முசூவியா என்பவருக்கு விட்டுக் கொடுத்தார்; பின்பு நஞ்சூட்டப்பட்டு இறந்தார். முசூவியா தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தம் மகன் எசீது (Yezid) என்பவரைக் கலீபாவாக அமர்த்தினார். நற்பண்புகளும் ஆட்சித்திறமையுமில்லாத எசீது கலீபாவாக ஆக்கப்பட்டதை எல்லோரும் எதிர்த்தனர். முகமது நபியின் பேரர் என்ற முறையிலும் காலஞ்சென்ற கலீபா அலியின் மகன் என்ற முறையிலும் உசேன் உரிமைக்குரல் எழுப்பினார். அப்பொழுது அவர் தம் குடும்பத்துடன் மதினாவில் வாழ்ந்துவந்தார். பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். குறிப்பாக ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba) என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் உசேனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர். அவர்களை நம்பிய உசேன் தம் உறவினர்களடங்கிய ஒரு சிறு படையுடன் ஈராக்கை நோக்கிச் சென்றார். ஆனால், உசேன் கூபாவை அடைந்தபொழுது அங்குள்ள மக்கள் தம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை; உசேனுக்கு உதவவில்லை. கூபாவின் ஆளுநராக இருந்த உபயதுல்லா (Ubaidullah) தம் பெரும்படையுடன் கர்பலா என்ற இடத்தில் கி.பி. 680–இல் உசேனைச் சந்தித்தார். உசேனின் சமாதானப் பேச்சு பயனளிக்காததால் போர் மூண்டது. போரில் உசேன் குடும்பத்தின் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். உசேனும் வீரப்போர் செய்து வீழ்ந்தார். எஞ்சியிருந்த உசேனின் குடும்பத்தினர் கலீபா எசீதிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலீபாவால் அரச மரியாதைகளுடன் நடத்தப்பட்டனர். கர்பலாவில் நடந்த போருக்கும், உசேனின் இறப்பிற்கும் தாம் பொறுப்பல்ல என்றும் தம் படைத்தலைவர்தான் காரணமென்றும் கலீபா கூறினார். ஆனால், இசுலாமிய உலகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதுநபியின் பேரரான உசேனும் அவர் குடும்பத்தவர்களும் கொல்லப்பட்ட முறையை அறிந்த சில இசுலாமியர்கள் சினமுற்றுக் கிளர்ந்தெழுந்தனர். நாளடைவில் அவர்களே சீயர்கள் என்று பெயர் பெற்றனர். கர்பலாவில் இறந்த உசேன் சீயர்களின் இமாம் (தலைவன்) எனக் கருதப்படுகிறார். அவர் புதையுண்டிருக்கும் கர்பலா அவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. <section end="உசேன்"/> <section begin="உசேன் நிசாம்சா"/> {{dhr}} {{larger|<b>உசேன் நிசாம்சா</b>}} தக்காணத்திலிருந்து அகமது நகர அரசினை ஆண்ட அரசர். இவர் தக்காணத்திலிருந்து வேறு இசுலாமிய அரசுகளுடன் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விசயநகரப் பேரரசை கி.பி. 1565–ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தோற்கடித்தவர்களுள் ஒருவர். இவர் காலமானதும் இவர்தம் மகன் முதலாம். முர்தசா நிசாம் சா (Murtaza Nizam Shah I) என்பார் பட்டத்திற்கு வந்தார். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசேன் நிசாம்சா"/> <section begin="உசை"/> {{dhr}} {{larger|<b>உசை</b>}} இருக்கு வேதம் கூறும் பெண் தெய்வங்களுள் முதன்மையானது. இவள் விடியற் காலையில் கிழக்கில் தோன்றுவாள். ஒளியை ஆடையாக உடுத்தியுள்ள இவள் ஆடல் அழகியாகச் சிறப்பிக்கப்படுதிறாள். ஒளிவீசுதல் என்னும் கருத்துடைய ‘வஸ்’ என்னும் வினையடியாகத் தோன்றியது இப்பெயர். உசை (Usha) இருளைக் களைகிறாள். இருக்கு வேதத்தில் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களில் இவள் போற்றி வணங்கப்படுகிறாள். இப்பாடல்கள் இவளுக்கு உருவம் கொடுத்துப் பாடுகின்றன. பல காலம் கழிந்தும் பல பருவங்கள் கடந்தும் முதிர்ச்சியுள்ள இவள் இளமை குறையாமல் உலா வரும் காட்சியினைக் கவிஞர் வியந்து பாடியுள்ளார். ஆனால், இவள் மக்களின் ஆயுளைத் தேய்ந்தழியும்படி செய்கிறாள். புதுப்புது உருவங்களோடு நாள்தோறும் விடியற்காலையில் தோன்றுவதால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெண்ணாகவும் விண்ணின் கதவுகளைத் திறப்பவளாகவும் இவள் புனைந்துரைக்கப்பட்டுள்ளாள். இருளைப் போக்கும் இவள் அரக்கரை விரட்டுகிறாள். இவள்தன் ஒளிக்கிரணங்கள் மாட்டு மந்தை போல் காட்சியளிக்கின்றன. இவள் ஒளிவீசத் தொடங்கும்போது பறவையினங்கள் கூட்டிலிருந்து பறந்து வெளியில் செல்கின்றன. மக்களும் உணவு தேடப் புறப்படுகின்றனர். வானத்தில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் இவளை வானத்தின் மகளாகவும் இரவினுடன் பிறந்த மூத்தவளாகவும் பல பாடல்கள் கூறுகின்றன. ஆடவன் பெண்ணைத் தொடர்வதைப் போல் சூரியன் இவ-<noinclude></noinclude> pwnbelv9p7i56rz7ld0yrkq26guv0xe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/751 250 629053 1947423 1937120 2026-06-18T02:06:28Z Booradleyp1 1964 1947423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உஞ்சை|721|உட்கட்சிக்‌ கருத்‌துரிமை}}</noinclude>ளைத் தொடர்கிறான். இவள் சூரியனின் மனைவி, சூரியன் எழுமுன் இவள் தோன்றுவதால் சூரியனைப் பிறப்பிப்பவள் என்றும் சூரியனின் தாய் என்றும் கவிஞரால் விவரிக்கப்படுகிறாள். வேறொரு கவிஞர் நல்ல ஒளிபொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாக புனைந்துரைத்துள்ளார். விடியற்காலையில் இவள் தோன்றுவதாலும் அப்போது வேள்வித்தீ மூட்டப்படுவதாலும், அக்கினியையும் இவளையும் தொடர்புபடுத்தி அக்கினியின் காதலியாக இவளை மற்றுமொரு கவிஞர் கூறியுள்ளார். விடியற்காலைப் பொழுதுடன் இணைத்துக் கூறப்படுபவர்கள் அசுவினி தேவர்களாவர். அவர்களுடன் இவளைத் தொடர்புபடுத்திப் பாடும் பல பாடல்கள் இருக்குவேதத்தில் அமைந்துள்ளன. இருளால் மறைக்கப்பட்டுக் கிடக்கும் செல்வங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை உடையவளாகவும் இவள் இருக்கிறாள். இப்பெண் தெய்வம் தன்னை வணங்குவோர்க்குப் புகழ், பெருமை, செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வு முதலியனவற்றை எல்லாம் வழங்கும் என்று இருக்கு வேதம் கூறுகிறது. <section end="உசை"/> <section begin="உசை2"/> {{dhr}} {{larger|<b>உசை{{sup|2}}</b>}} பலி என்பவனின் பேர்த்தியும் ஆயிரம் தோள்களையுடையவன் என்று கூறப்படும் பாணாசுரனின் மகளும் ஆவாள். அரக்கர் இளவரசியான உசை (Usha) கனவில் அநிருத்தனைத் தழுவுவது போல் கண்டு விழித்துக் கொண்டாள். பின்னர், அவனைக் காணாமல் வருத்தமுற்றாள். தன் தோழி சித்திரலேகையிடம் அச்செய்தியினைக் கூறினாள். சிறந்த ஓவிய வல்லுநளாகிய சித்திரலேகை பல்வேறு அரசர்களுடைய உருவங்களையெல்லாம் எழுதிக் காட்டினாள். அவற்றைக் கண்டு அவற்றில் இன்ன உருவமுடையவன் என உசை அவளுக்குச் சொல்லி அவனைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படி அவளிடம் வேண்டிக் கொண்டாள். சித்திரலேகை அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அதிருந்தனைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து உசையிடம் சேர்த்தாள். இவளும் அநிருத்தனும் இன்பம் துய்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அக்களவினை அறிந்த தந்தை அநிருத்தனை விலங்கிட்டுச் சிறையிலடைத்தான். இதனை நாரதரால் அறிந்த கண்ணன் தன் பேரனான அநிருத்தனை மீட்கும் பொருட்டுப் பாணாசுரனுடன் போரிட்டான். போரில் தோற்ற பாணாசுரன் உசையையும் அநிருத்தனையும் கண்ணனிடம் சேர்ப்பித்துத் தன்னைப் பொறுத்தருள வேண்டினான். உசை தான் விரும்பியபடி அநிருத்தனை மணந்து வாழ்ந்தாள். <section end="உசை2"/> <section begin="உஞ்சை"/> {{dhr}} {{larger|<b>உஞ்சை</b>}} என்பது உச்சயினி நகரம், இது உஞ்சேனை எனவும் வழங்கப்படும். காண்க: [[உச்சயினி]]. <section end="உஞ்சை"/> <section begin="உஞ்சை மாகாளம்"/> {{larger|<b>உஞ்சை மாகாளம்:</b>}} தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும். அத்தகு வைப்புத் தலங்களுள் ஒன்று உஞ்சை மாகாளம். இது உஞ்சேனை மாகாளம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைத் தம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் ‘நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்’ (சம். தேவா. 2–39–9) என்றும், திருநாவுக்கரசர் ‘மதில் உஞ்சை மாகாளம்’ (அப். தேவா. 6–7–11), ‘உஞ்சேனை மாகாளம்’ (அப். தேவா. 6–70–8) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்புகளிலிருந்து இத்திருத்தலம் சோலை சூழ்ந்தது என்றும் மதில் அரண் கொண்டது என்றும் தெரிகிறது. தேவாரத் தலங்களை நாட்டடிப்படையில் தொகுத்துக் காண்போர் இத்தளம் வடநாட்டின்கண் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். உஞ்சை என்னும் பெயர் மத்திய பிரதேசத்து உச்சயினி நகரினைக் குறிப்பதாகும். உச்சயினி நகரம் உதயணன் கதை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உஞ்சேனை மாகாளம் என்னும் பெயர் உஞ்சை என்னுமிடத்தில் அமைந்த மாகாளம் என்னும் சிவன்கோயிலைக் குறிப்பதாகும். ஊர்ப்பெயரும் அங்குள்ள சிவன் கோயிற் பெயரும் சேர்ந்து தலப்பெயராக அமைந்து விளங்கும் மரபு திருமுறைப் பதிகங்களில் காணப்படுகிறது. உஞ்சை, உஞ்சேனை என வழங்கப்பெற்ற உச்சயினியில் உள்ள சிவன்கோயில் உச்சயினி மாகாளம் என்றும் கூறப்படும். உச்சயினி நகரத்தில் முருகவழிபாடு சிறந்திருந்ததாகப் பெருங்கதை கூறுகிறது. உச்சயினியில் சமண புத்த மடங்களும் மிக்கிருந்தன என்பதும் இந்நகருக்குப் புறத்தில் மாகாளவனம் என்னும் காட்டில் காளிதேவிக்குப் பெருங்கோயில் அமைந்திருந்தது என்பதும் கூறப்படுகின்றன. பல சமயங்களுக்கும் இடமாகத் திகழ்ந்த உச்சயினியிலுள்ள சிவாலயத்தின் சிறப்புணர்ந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நேரே சென்று அத்தலத்தினைத் தனிப் பதிகங்களால் பாடாவிடினும், தங்கள் பதிகப் பாக்களில் வைப்புத்தலமாக அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர். <section end="உஞ்சை மாகாளம்"/> <section begin="உட்கட்சிக் கருத்துரிமை"/> {{dhr}} {{larger|<b>உட்கட்சிக் கருத்துரிமை</b>}} அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும். அரசாங்கம்<noinclude></noinclude> lv4f6bkx625oll1vnvo1tozmyajb1il 1947425 1947423 2026-06-18T02:09:26Z Booradleyp1 1964 1947425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உஞ்சை|721|உட்கட்சிக்‌ கருத்‌துரிமை}}</noinclude>ளைத் தொடர்கிறான். இவள் சூரியனின் மனைவி, சூரியன் எழுமுன் இவள் தோன்றுவதால் சூரியனைப் பிறப்பிப்பவள் என்றும் சூரியனின் தாய் என்றும் கவிஞரால் விவரிக்கப்படுகிறாள். வேறொரு கவிஞர் நல்ல ஒளிபொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாக புனைந்துரைத்துள்ளார். விடியற்காலையில் இவள் தோன்றுவதாலும் அப்போது வேள்வித்தீ மூட்டப்படுவதாலும், அக்கினியையும் இவளையும் தொடர்புபடுத்தி அக்கினியின் காதலியாக இவளை மற்றுமொரு கவிஞர் கூறியுள்ளார். விடியற்காலைப் பொழுதுடன் இணைத்துக் கூறப்படுபவர்கள் அசுவினி தேவர்களாவர். அவர்களுடன் இவளைத் தொடர்புபடுத்திப் பாடும் பல பாடல்கள் இருக்குவேதத்தில் அமைந்துள்ளன. இருளால் மறைக்கப்பட்டுக் கிடக்கும் செல்வங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை உடையவளாகவும் இவள் இருக்கிறாள். இப்பெண் தெய்வம் தன்னை வணங்குவோர்க்குப் புகழ், பெருமை, செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வு முதலியனவற்றை எல்லாம் வழங்கும் என்று இருக்கு வேதம் கூறுகிறது. <section end="உசை"/> <section begin="உசை2"/> {{dhr}} {{larger|<b>உசை{{sup|2}}</b>}} பலி என்பவனின் பேர்த்தியும் ஆயிரம் தோள்களையுடையவன் என்று கூறப்படும் பாணாசுரனின் மகளும் ஆவாள். அரக்கர் இளவரசியான உசை (Usha) கனவில் அநிருத்தனைத் தழுவுவது போல் கண்டு விழித்துக் கொண்டாள். பின்னர், அவனைக் காணாமல் வருத்தமுற்றாள். தன் தோழி சித்திரலேகையிடம் அச்செய்தியினைக் கூறினாள். சிறந்த ஓவிய வல்லுநளாகிய சித்திரலேகை பல்வேறு அரசர்களுடைய உருவங்களையெல்லாம் எழுதிக் காட்டினாள். அவற்றைக் கண்டு அவற்றில் இன்ன உருவமுடையவன் என உசை அவளுக்குச் சொல்லி அவனைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படி அவளிடம் வேண்டிக் கொண்டாள். சித்திரலேகை அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அதிருந்தனைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து உசையிடம் சேர்த்தாள். இவளும் அநிருத்தனும் இன்பம் துய்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அக்களவினை அறிந்த தந்தை அநிருத்தனை விலங்கிட்டுச் சிறையிலடைத்தான். இதனை நாரதரால் அறிந்த கண்ணன் தன் பேரனான அநிருத்தனை மீட்கும் பொருட்டுப் பாணாசுரனுடன் போரிட்டான். போரில் தோற்ற பாணாசுரன் உசையையும் அநிருத்தனையும் கண்ணனிடம் சேர்ப்பித்துத் தன்னைப் பொறுத்தருள வேண்டினான். உசை தான் விரும்பியபடி அநிருத்தனை மணந்து வாழ்ந்தாள். <section end="உசை2"/> <section begin="உஞ்சை"/> {{dhr}} {{larger|<b>உஞ்சை</b>}} என்பது உச்சயினி நகரம், இது உஞ்சேனை எனவும் வழங்கப்படும். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]]. <section end="உஞ்சை"/> <section begin="உஞ்சை மாகாளம்"/> {{larger|<b>உஞ்சை மாகாளம்:</b>}} தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும். அத்தகு வைப்புத் தலங்களுள் ஒன்று உஞ்சை மாகாளம். இது உஞ்சேனை மாகாளம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைத் தம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் ‘நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்’ (சம். தேவா. 2–39–9) என்றும், திருநாவுக்கரசர் ‘மதில் உஞ்சை மாகாளம்’ (அப். தேவா. 6–7–11), ‘உஞ்சேனை மாகாளம்’ (அப். தேவா. 6–70–8) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்புகளிலிருந்து இத்திருத்தலம் சோலை சூழ்ந்தது என்றும் மதில் அரண் கொண்டது என்றும் தெரிகிறது. தேவாரத் தலங்களை நாட்டடிப்படையில் தொகுத்துக் காண்போர் இத்தளம் வடநாட்டின்கண் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். உஞ்சை என்னும் பெயர் மத்திய பிரதேசத்து உச்சயினி நகரினைக் குறிப்பதாகும். உச்சயினி நகரம் உதயணன் கதை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உஞ்சேனை மாகாளம் என்னும் பெயர் உஞ்சை என்னுமிடத்தில் அமைந்த மாகாளம் என்னும் சிவன்கோயிலைக் குறிப்பதாகும். ஊர்ப்பெயரும் அங்குள்ள சிவன் கோயிற் பெயரும் சேர்ந்து தலப்பெயராக அமைந்து விளங்கும் மரபு திருமுறைப் பதிகங்களில் காணப்படுகிறது. உஞ்சை, உஞ்சேனை என வழங்கப்பெற்ற உச்சயினியில் உள்ள சிவன்கோயில் உச்சயினி மாகாளம் என்றும் கூறப்படும். உச்சயினி நகரத்தில் முருகவழிபாடு சிறந்திருந்ததாகப் பெருங்கதை கூறுகிறது. உச்சயினியில் சமண புத்த மடங்களும் மிக்கிருந்தன என்பதும் இந்நகருக்குப் புறத்தில் மாகாளவனம் என்னும் காட்டில் காளிதேவிக்குப் பெருங்கோயில் அமைந்திருந்தது என்பதும் கூறப்படுகின்றன. பல சமயங்களுக்கும் இடமாகத் திகழ்ந்த உச்சயினியிலுள்ள சிவாலயத்தின் சிறப்புணர்ந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நேரே சென்று அத்தலத்தினைத் தனிப் பதிகங்களால் பாடாவிடினும், தங்கள் பதிகப் பாக்களில் வைப்புத்தலமாக அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர். <section end="உஞ்சை மாகாளம்"/> <section begin="உட்கட்சிக் கருத்துரிமை"/> {{dhr}} {{larger|<b>உட்கட்சிக் கருத்துரிமை</b>}} அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும். அரசாங்கம்<noinclude></noinclude> s18i85ce71k3hltd2mm3vup31vmrde9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/760 250 629084 1947426 1937128 2026-06-18T02:16:48Z Booradleyp1 1964 1947426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்டு ஆவணம்‌|730|உட்டோப்பியா}}</noinclude>கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினர். சர் தாமசு மன்ரோ (Sir Thomas Munroe) சென்னை ஆளுநராகப் பதவியேற்றதும் கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டார். அவரது முயற்சியால் சாதகமான சூழ்நிலைகள் உருவாயின. பின்னர், கி.பி. 1838–இல் ஆளுநராகப் பதவியேற்ற எல்பின்சுடன் பிரபு பல்கலைக் கழக உயர்நிலைப் பள்ளி (High School of the University) என்ற நிறுவனத்தையும் மாவட்டப் பள்ளிகளையும் அமைத்தார். சர் சார்லசு உட்டு (Sir Charles Wood) கி.பி. 1854–ஆம் ஆண்டு சூலை மாதம் 19–ஆம் நாள் கல்வி பற்றிய அறிக்கை ஒன்று வெளியிட்டார். தொடக்கச் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை கல்விப் பயிற்சிக்கு வரையறுக்கப் பெற்ற குறிக்கோள்கள் தேவையென இவர் வலியுறுத்தினார். இந்திய நாட்டுக் கல்வி வரலாற்றில் கி.பி. 1854–ஆம் ஆண்டு அறிக்கையை உச்சக் கட்டமெனக் கூறலாம். அதற்குமுன் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகள் அவ்வாண்டில் முடிவுற்றன. பல முன்னேற்றங்கள் அவ்வாண்டிலிருந்து தொடங்கின. ‘இந்திய நாட்டு ஆங்கிலமுறைக் கல்வியில் மகா சாசனம்’, ‘இந்திய அறிவுப் பெருக்கின் ஒளிவிளக்கு’ என்ற புகழுரைகளை உட்டு ஆவணம் (Wood's Dispatch) பெற்றது. {{larger|<b>பரிந்துரைகள்:</b>}} ::{{overfloat left|align=right|padding=1em|அ.}} ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறை இயக்குநர் அமர்த்தப்பட வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|ஆ.}} தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்குப் பயிற்சிக் கல்லூரிகளும் உயர்நிலை இடைநிலைப் பள்ளிகளும் அமைத்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|இ.}} கல்விக்கூடங்கள் அமைப்பதில் தனியார் முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|ஈ.}} திட்டம் செயற்படுவதைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறையை (Department of Public Instruction) அமைக்கவேண்டும். இசுலாமிய மற்றும் இந்துமதச் சார்புடைய கல்விக்கூடங்கள் பல அப்போது இயங்கிவந்தன. கிறித்தவச் சமயத்தினரும் கல்விநிலையங்கள் ஏற்படுத்தியிருந்தனர். நடைமுறையில் தொண்டாற்றி வரும் கல்வி நிறுவனங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசு சேகரித்தது. இந்தியச் சூழல்களைப் புறக்கணித்து, மேலைநாட்டு முறைகளைப் புகுத்துவது முறையாகாது என்ற கருத்து நிலவியிருந்தது. உயர்நிலைக் கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி வாயிலாகப் பயிற்றுவிப்பது கல்வியின் தரத்தைப் பாதுகாக்கும் என்ற கருத்தை உட்டு வலியுறுத்தினார். ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் புலமைமிக்க ஆசிரியர்களின் துணையுடன், கல்வி புகட்டுவது அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். தாய்மொழியின் மதிப்பைச் செயல்முறையால் உட்டு ஆவணம் குறைத்தது எனக் கூறுவதே பொருந்தும். நாட்டில் நிலவியிருந்த வறுமையும், ஆங்கிலக் கல்வி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாமென மக்கள் கருதியமையும் இவ்விளைவை ஏற்படுத்தின. வாழ்வாங்கு வாழ்வதற்கு இத்திட்டம் பயன்படவில்லை; ஆட்சி நிறுவனங்களில் பணித் தேவைகளை ஈடுசெய்யும் முறையில் எண்ணற்ற எழுத்தர்களை இத்திட்டம் உருவாக்கியது. எனினும் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை அமைத்தல் வேண்டும் எனத் திட்டம் வலியுறுத்தியதைச் சிறப்பாகக் கூறவேண்டும். தன்னாட்சி நிலை (Autonomous Status) பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படவில்லை. இப்பரிந்துரைகள் கி.பி. 1857–ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன. அவ்வாண்டில் பெருங்கிளர்ச்சி தோன்றியது. கல்வித்திட்டம் கிளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்றன்று என்பதை உறுதி செய்து கொண்டு, கி.பி. 1859–ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இந்திய அரசுச் செயலர் (Secretary of State for India) வெளியிட்ட அறிக்கை, கல்விக் கூடங்களில் மத போதனைகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியது. கிறித்தவப் பாதிரிகளுள் சிலர் மத போதனை வகுப்புகளைத் தொடர்வதற்கு அனுமதி வேண்டினர். ‘மதச் சார்பற்ற கல்வியை ஆதரித்து அரசு மேற்கொள்ளும் பணிகளில் எவ்வித மாறுதலையும் அரசு ஏற்காது’ என அவர் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். {{right|<b>தி.வெ.கு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Luriya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narain Agarwal, Agra, 1981. <b>Smith, V.A., and Percival Spear,</b> The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976. <section end="உட்டு ஆவணம்"/> <section begin="உட்டோப்பியா"/> {{dhr}} {{larger|<b>உட்டோப்பியா</b>}} என்னும் சொல் குறைவொன்றுமில்லாத கற்பனை உலகத்தைக் குறிக்கும். உட்டோப்பியா (Utopia) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘இந்த இடமல்ல’ (No Place) என்பது பொருள், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகன் இல்லாத இலட்சிய சமுதாயத்தை இச்சொல் குறிப்பிடுவதா-<noinclude></noinclude> c9npk7et3u9bsx7xo0ttdwib8z91iz6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/763 250 629087 1947427 1937159 2026-06-18T02:21:33Z Booradleyp1 1964 1947427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்பிரிட்சு... ...|733|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்}}</noinclude>பொருள்களிடமிருந்து வெளிப்பட்டாலும் அது உலகத்தில் நிகழ்கிற சில மாற்றங்களை ஆளுகிற தன்மை உடையது. உணர்வு (Consciousness) என்பது சூழ்நிலையில் அமைந்திருக்கிற பொருள்களை அறிவது மட்டுமல்லாமல், அவற்றின் தரத்திற்கேற்ப மரியாதை செலுத்துவதுமாகும். அது பொருள்களின் இருத்தல் தன்மையை முன்கூட்டியே உணருகிறது. இயற்கைக் கோட்பாடும் செயல்முறைக் கோட்பாடும் ஒன்று எனக் கூறும் உட்பிரிட்சு, அரிசுடாட்டிலின் புலன் கடந்த நுண்பொருள் கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறார். இவர் கருத்துப்படி, இயற்கைக் கோட்பாடு என்பது ஒரு வித மனப்பான்மையே தவிரத் தனித்தன்மை வாய்ந்த கோட்பாடன்று. ஆனால், சில இக்கால எழுத்தாளர்கள் இயற்கைக் கோட்பாட்டை ஒரு நிறைவான அமைப்பாக (Form) ஏற்றுக் கொண்டுள்ளனர். சமய அறிஞர்கள் இயற்கைக் கோட்பாட்டை ஆன்மிகக் கொள்கையோடு ஒப்பிடும்பொழுது குறைவாக மதித்தனர். ஆனால், உட்பிரிட்சு இத்தகைய மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் வானம், பூமி, கடல் ஆகியவற்றையும் அவற்றிலுள்ள பொருள்களையுமே இயற்கையாகக் கருதுகின்றனர் என்று இவர் கூறுகிறார். உட்பிரிட்சு கருத்துப்படி இயற்கை எல்லாவற்றையும் தன்னுள் அடங்கச் செய்யும். இயற்கை என்பது ஒவ்வொருவரையும் சூழ்ந்து, காணத் தகுந்தவாறு இருக்கிற பொருள்கள் ஆகும். இயற்கைக் கொள்கை நல்ல முறையில் ஆய்வு செய்வதற்குரிய ஒரு முறை மன்ற (Summons) அமைப்பாக உள்ளது. உட்பிரிட்சின் படைப்புகள் இயற்கைக் கொள்கைகள், செயல் முறைக் கோட்பாடுகள் ஆகியவை பற்றி நன்கு விளக்குகின்றன. அவர் எழுதிய கட்டுரைகளுள் ‘பொருள்’, ‘சமய சித்தாந்தம்’, ‘படைப்புத் தொழில்’, ‘அமைப்பு’, ‘மனிதன்’ ஆகியன குறிப்பிடத்தக்கன. காலம் பற்றியும் அதன் மாறுதல் பற்றியும் உட்பிரிட்சு பின்வருமாறு கூறுகிறார்; ஒரு நிகழ்ச்சி என்பது அதற்குமுன் நடந்த காரணத்தின் காரியம் (Effect) ஆகும். முன்பே நடந்த பொருளின் விரிவாகும். காலம் என்பது இறந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கும் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் மாறுவது என்ற கருத்து உட்பிரிட்சுக்கு ஏற்புடையது அன்று. அது நிகழுதற்கு வாய்ப்புள்ளது (Possible) என்னும் தன்மையிலிருந்து உண்மையாக நிகழக் கூடியது (Actual) ஆகிறது. ஆற்றலாக இருந்த தன்மையை இருத்தல் நிலைக்கு அது கொண்டு வருகிறது. இச்செயல் தன்னை மறந்த நிலையிலோ எதிர்பாராமலோ நினைவுற்ற நிலையிலோ நடைபெறுகிறது. கடந்த காலத்திலிருந்து வருகிற நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளிப்பதோடு கடினமான வரையறையினையும் அமைக்கிறது. அது ஒருவருக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அளிக்காமல் அவர் தம் குறிகோளை உணரத் துணை செய்கிறது. <section end="உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்"/> <section begin="உட்பிரிவும் நிலச் சிதறல்களும்"/> {{dhr}} {{larger|<b>உட்பிரிவும் நிலச் சிதறல்களும்:</b>}} இந்திய வேளாண்மையின் பல கூறுகளுள் குறிப்பிடத்தக்கது வளஞ்சான்ற விளைவாகும். ஓர் உழவன் பயிரிடும் நிலம் ஒரே இடத்தில் அமையாமல் உரிமை மாற்றங் காரணமாகப் (Transfer of Ownership) பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுதலும் (Sub-Division), அவை பல இடங்களில் துண்டு நிலங்களாகச் சிதறிக் கிடத்தலும் (Fragmentation) உட்பிரிவும் நிலச் சிதறல்களும் எனக் கூறப்படுகின்றன. நிலங்களின் உட்பிரிவினாலும் சிதறலினாலும் தொழில்நுட்ப மாற்றங்களை வேளாண்மையில் புகுத்துவது கடினமாயுள்ளது. இத்தகைய நிலங்களில் உழவர்கள் தங்கள் கடின உடல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருப்பினும், அவர்கள் பெறும் வருவாய் மிகக் குறைவானதாயிருப்பதால் அது உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஊக்கத்தை அளிப்பதில்லை. எனவே, இவை உழவர்களின் ஆக்கத்திறனையும் நிலத்தின் ஆக்கத்திறனையும் (Productivity) குறைத்து வேளாண்மைத் துறையின் வளர்ச்சியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கின்றன. உயர்ந்த அளவு விளைவை அளிக்கும் பயிரிடும் நில அளவு (Unit of Land) திட்டவட்டமாக வரையறுக்க இயலாதது. இவ்வளவு நிலத்தின் மூல வளம், செழிப்பு, காலநிலை, வேளாண்மையினரின் கல்வியறிவு, திறமை, ஊக்கம் போன்ற பல்வகை உள்ளீட்டுக் (Input) காரணிகளைச் சார்ந்து நாட்டுக்கு நாடு வேறுபடுவதுடன், ஒரு நாட்டிற்குள்ளும் பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கும். அரசியல் சமூகப் பொருளாதாரக் காரணிகளும் பயிரிடும் நில அளவை வரையறுப்பதில் சிறந்த சிறந்த பங்கேற்கின்றன. இவ்வளவினை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். இது குடும்ப அளவு (Family Holding), உத்தம அளவு (Optimum Holding), பொருளாதார அளவு (Economic Holding) என மூவகைப்படும். இந்திய நிலச் சீர்திருத்த ஆய்வுக் குழுவின் (Panel on Land Reforms) அறிக்கையின்படி ஐந்து பேர் கொண்ட ஒரு வேளாண்மைக் குடும்பத்திற்கு உரூ. 1600 ஆண்டு வருவாய் கொடுக்கக்கூடிய பயிரிடும்<noinclude></noinclude> l64qqh4xe9kuwp4uxtlxl0qnjxo6z3u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/816 250 629362 1947428 1937427 2026-06-18T02:40:27Z Booradleyp1 1964 1947428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உடனிலை|786|உடிகா}}</noinclude>பியர் 558–ஆம் சூத்திரம் பிற்பகுதியில் உடனிகழ்ச்சி வேற்றுமை பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறும் நான்குவகை உடனிகழ்வையும் பொருள் அடிப்படையில் பார்த்தால், உடனிகழ்ச்சி வேற்றுமையாக இருக்க முடியுமா என்ற எண்ணம் மேலெழுகிறது. 1. அதனொடு மயங்கல்: (எ.டு.) தேனொடு பால் கலந்தது; 2. அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவி: (எ.டு) சாத்தனொடு கொற்றன் வந்தான்; 3. அதனொடு இயைந்த வேறுவினைக் கிளவி (எ.டு) மலையொடு பொருத மால்யானை; 4. அதனொடு இயைந்த ஒப்பல் ஒப்புரை; (எ.டு.) பொன்னொடு இரும்பனையார் நின்னொடு பிறரே. பொருளடிப்படையில் (1) உம் (3) இடவேற்றுமையைக் குறிக்கின்றன. (4)–ஆவது ஒப்புமையைக் காட்டுகிறது. (2)–வது மட்டுந்தான் உடனிகழ்ச்சி வேற்றுமையைக் காட்டுகிறது. தொல்காப்பியர் சூத்திரம் 557–இல், ஒடு என்ற ஒரேயொரு வேற்றுமை உருபையே மூன்றாம் வேற்றுமையில் வரும் கருவிவேற்றுமை, உடனிகழ்ச்சி வேற்றுமை ஆகிய இரு வேற்றுமைகளுக்கும் கூறுகிறார். நன்னூலார் சூத்திரம் 297–இல் மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாக ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவற்றைக் கூறுகிறார். சங்க இலக்கியத்தில் ஒடு, ஓடு, ஆல் போன்ற உருபுகளும் கண், உடன், வயின் போன்ற சொல்லுருபுகளும் உடனிகழ்ச்சி வேற்றுமைக்குப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். இக்காலத் தமிழில் ஓடு என்ற ஒரேயோர் உருபும் உடன், கூட ஆகிய சொல்லுருபுகளும் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, 5. கண்ணன் மணிவண்ணனோடு விளையாடினான் 6. அவர் காந்தியடிகளாருடன் வந்தார். 7. இரமணி அப்பா கூடப் போனான். சில வேளைகளில் உடனிகழ்ச்சி வேற்றுமை உருபாகிய ஓடு-வும் சொல்லுருபாகிய ‘கூட’ என்பதும் சேர்ந்து உடனிகழ்ச்சி வேற்றுமைப் பொருளைத் தருவதைக் காணலாம். (எ.டு) என்னோடு கூட இரமணி வந்தான். {{right|<b>வே.சா.அ.</b>}} <section end="உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை"/> <section begin="உடனிலை"/> {{dhr}} {{larger|<b>உடனிலை</b>}} புறப்பொருள் துறைகளுள் ஒன்று. ‘ஒருங்கிருத்தல்’ என்பது இதன் சொற்பொருளாகும். இரண்டு அரசர்கள் தோழமை உணர்வோடு ஒருங்கிருக்கும்போது அவர்களைச் சிறப்பித்துப் பாடுவது உடனிலை என்னும் துறையின் பாற்படும் என்பது புறநானூற்றுச் செய்யுள் ஒன்றின் (புறம் – 58, அடிக்குறிப்பு) அடிக்குறிப்பினால் அறியப்படுகிறது. இத்துறை புறப்பொருள் திணைகளுள் ஒன்றான பாடாண்டிணையின் துறைகளுள் ஒன்றாக அப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புறநானூற்றுப் பாடல் சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தபோது, காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரால் பாடப்பட்டது. அவர் அப்பாடலில் இரண்டு அரசர்களையும் சிறப்பித்து, அவர்கள் பலராமனும் கண்ணனும் போல் விளங்கினர் என்று பாராட்டியுள்ளார். மேலும், அவர்கள் இன்று போலவே என்றும் வாழ வேண்டும். என்பதனை, ‘இன்றே போல்க நும்புணர்ச்சி’ எனக்கூறி வாழ்த்தியுள்ளார் (புறம். 58: 14–16; 28). இப்பாடலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் ‘இருவரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இது உடனிலை ஆயிற்று’ என்று துறை விளக்கம் செய்துள்ளார். அப்புறப் பாடலுக்குத் திணை துறை வகுத்த பெருமக்கள் அதனைப் பாடாண்டிணை, உடனிலைத் துறையில் அடக்கியுள்ளனர். தொல்காப்பியப் பாடாண்டிணையில் உடனிலை என ஒரு துறை இடம் பெறவில்லை. அவ்வாறே, பின்னர்த் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை விளக்கும் பாடாண்டிணையிலும் உடனிலைத் துறை இடம்பெறவில்லை. இவற்றைக் காணுமிடத்து, புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை துறை வகுத்தோர். காலத்தால் முற்பட்ட அகத்தியம், தொல்காப்பியம், பிற்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களையேயன்றி, அவர்கள் காலத்திலங்கிய வேறு புறப்பொருள் இலக்கண நூலையும் பின்பற்றியுள்ளனர் என்பது புலனாகிறது. <section end="உடனிலை"/> <section begin="உடனுறை"/> {{dhr}} {{larger|<b>உடனுறை:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]]. <section end="உடனுறை"/> <section begin="உடிகா"/> {{dhr}} {{larger|<b>உடிகா:</b>}} துனீசியாவில் மசார்தா (Majardah) ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தொன்மை மிக்க நகரம். பியூனிசியர்கள் கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் உடிகா (Utica) வில் குடியேறி வாழ்ந்தனர். ஆப்பிரிக்காவில் பியூனிசியர்களின் கார்த்தேசு (Carthage) நகருக்கு அடுத்தபடியாக இந்நகரம் விளங்கியது. உரோமானியர்கள் கார்த்தேசு நகரத்தின்மீது போரிட்டுத் தாக்கியபொழுது உடிகா உரோமானியர்களுக்கு உதவியது. இதன் மூலம் கார்த்தேசு நகரம் அழிக்கப்பட்டதுடன் உடிகாவின் நிலையும் உயர்ந்தது. உரோமாபுரியின் அரசியல் நடவடிக்கைகள். உடிகாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. ஆக்டே-<noinclude></noinclude> h84qbwg5tj6doo0hsbc9e3fu9ja4seh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/829 250 629397 1947429 1937438 2026-06-18T02:48:16Z Booradleyp1 1964 1947429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உடைய நங்கை|799|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு}}</noinclude>(Solon) என்ற அறிஞர் ஏதென்சு நகரரசில் நிறுவிய அரசியலமைப்புக் கோட்பாட்டிலிருந்தே வருவிக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டையும் நடைமுறையில் செயற்படுத்துவது எளிதன்று. எனவே சொலோனின் அரசியலமைப்பும் வலுவிழந்தது. குறிக்கோளளவில் காணும்போது, நீதியான அரசுக்கு ஆதாரமாக உள்ளது. தீவிர நிலையிலில்லாத சமமான சொத்துரிமை என்ற பிளேட்டோவின் கருத்தை அரிசுடாட்டிலும் பிற்கால பல அரசியற் சிந்தனையாளரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். எனினும் தனியார் தன் முயற்சி உரிமைக் கொள்கையும், பொருள் பெருக்குவதற்குரிய பல அறிவியல் புதிய முறைகளும் பெருகியுள்ள இக்காலத்தில் பிளேட்டோ கூறும் சமமான சொத்துரிமைக் கோட்பாட்டிற்கும், பொருள் சேர்க்கும் இக்கால நோக்கத்துக்கும் முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Barker, Ernest,</b> Greek Political Theory: Plato and His Predecessors, London, 1951. <b>Barker, Ernest,</b> The Laws of Plato, Manchester, 1920. <section end="உடைமையும் அரசியலுரிமையும்"/> <section begin="உடைய நங்கை"/> {{dhr}} {{larger|<b>உடைய நங்கை</b>}} ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வாருக்குத் தாயார். இவர் திருவண்பரிசாரம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாழ்மார்பர் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். ஆழ்வார் திருநகரி எனப் பெயரிய திருக்குருகூரில் பொற்காரியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் காரியார் என்ற பெயர் கொண்டு விளங்கும் தம் மகனுக்கு உடைய நங்கையாரை மணம் செய்விக்க விரும்பி, உறவினரோடு திருவண்பரிசாரத்திலுள்ள திருவாழ்மார்பரின் இல்லத்திற்குச் சென்று மணம் பேசினார். உடைய நங்கைக்கும் காரியாருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் சிலநாள் திருவண்பரிசாரத்தில் இருந்தபின்னர்த் திருக்குருகூர் வந்தடைந்தனர். காரியாரும் உடையநங்கையும் தமக்கு ஒரு மகனை அளிக்கவேண்டும் என்று குருகூர்ப் பெருமானை வேண்டிக் கொள்ள, அவரும் ‘நாமேவந்து பிறக்கிறோம்’ என்று அருள் செய்தார். அவ்வாறு, பெருமான் அருளால் உடையநங்கைக்கும் காரியார்க்கும் தோன்றியவரே பிற்காலத்தில் நம்மாழ்வார் என்று சிறப்புற்று விளங்கியவர் ஆவார். <section end="உடைய நங்கை"/> <section begin="உடையவர்"/> {{dhr}} {{larger|<b>உடையவர்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]. <section end="உடையவர்"/> <section begin="உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு:</b>}} சமூகத்திலுள்ள எல்லாச் செல்வ வளங்களும் தனியாருடைய உடைமைகளாக இல்லாமல், சமூகத்தவரனைவருக்கும் பொதுவுடைமையாக ஆக்கப்படுதல் வேண்டும். யாவருக்கும் அச்செல்வ வளங்களோடு தமது உழைப்பைக் கலக்கவும், உழைப்பின் பயன்களைத் துய்க்கவும் சமமான உரிமையும் வாய்ப்பும் இருத்தல் வேண்டும். இதுவே சமநிலைக் கோட்பாட்டின் சுருக்கமான பொருள் ஆகும். இத்தகையய சமநிலைக் கோட்பாட்டைப் பொதுவுடைமைக் கருத்தாக வடித்தெடுத்து ஓர் அரசியல் கோட்பாடாக முதல் முதலிற் கூறியவர் கி.மு. ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிளேட்டோ என்ற கிரேக்க அரசியற் சிந்தனையாளராவர். அடுத்து கி.பி. 1477–ஆம் ஆண்டிற்கும் கி.பி. 1535–ஆம் ஆண்டிற்கும் இடையில் வாழ்ந்த சிறந்த ஆங்கிலக் கலை மறுமலர்ச்சி எழுத்தாளரும் (English Renaissance Writer), மனிதப் பற்றாளருமாகிய (Humanist) சர் தாமசு மூர் (Sir Thomas More) என்பவர் இலத்தீன் மொழியில் கி.பி. 1515–ஆம் ஆண்டில் எழுதி, 1516–ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது ‘உடோப்பியா’ (Utopia) என்ற நூலில் கூறியுள்ள சமநிலைக் கருத்துகள், ‘உடோப்பிய சமநிலைக் கோட்பாடு’ என்று கூறப்படும். உடோப்பியா என்ற சொல் எந்தவிதமான தவறும் அல்லது குறையும் இல்லாத பொருள்களெல்லாவற்றையும் தன்னிடத்தே உள்ள கற்பனை உலகு என்று பொருள்படும். இது மிகச் சிறந்த பொருளாதார, சமூக நிலைகளையுடைய ஒருவகைச் சமுதாயத்தைக் குறிப்பிடுவதாகும். ஆகையால் செயற்படுத்த இயலாத, கருத்தளவாகவே உள்ள சீர்திருத்தத் திட்டங்களைக் குறிப்பிடும்போது, அவற்றை உடோப்பியத் திட்டங்கள் எனக் கூறுதல் வழக்கம். நடைமுறையில் காணப்படாத மிகச் சிறந்த எடுத்துக்காட்டான ஒரு சமூகத்தை அவர் கற்பனை செய்து கொண்டு அதனைப் பற்றி விளக்கம் தருவதால், அச்சமூகத்தார் வாழ்ந்த ஒரு தீவுக்கு அவர் அளித்த கற்பனைப் பெயரே உடோப்பியா (Utopia) என்பதாகும். இத்தீவு புதிய உலகமாசிய அமெரிக்கக் கரைக்கப்பால் உள்ளதென்றும், இதற்கு மூன்று தடவை அமெரிகோ வெசுபூகியுடன் கடற்பயணம் செய்து போய்வந்த இராபேல் இதிலோடேய் (Raphael Hythlodaye) என்ற போர்ச்சுகீசிய மீகான் (Sailor), இவ்வியத்தகு தீவில் வாழ்ந்த நன்மக்களுடைய சமத்துவநிலையையும் செழிப்பையும் கல்வியையும் அறிவையும் விரித்துக்கூறுவதாகவும் இந்நூல் கூறுகிறது; இதன் ஆசிரியர் மூர் இக்கற்பனைச் சமூகத்தவருடைய நற்பண்புகளைக் கூறும்போது, தம்கால ஐரோப்பிய, ஆங்கிலச் சமூகத்தாரிடம் காணப்பட்ட சீர்கேடுகளையும் ஒப்பிட்டு வஞ்சப்புகழ்ச்சியாகக் (Satire) குறிப்பிடுகிறார். தாம்<noinclude></noinclude> ej2xwxw1ayrjdf8xdjtnaorjpofokea பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/836 250 629429 1947492 1911849 2026-06-18T04:38:14Z Booradleyp1 1964 1947492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உண்டியல்கள்|806|உண்டியல்கள்}}</noinclude>{{dhr}} {{Box| {{dhr|2em}} {{rh|<b>உரூ. 5000/–</b>||}} {{rh|||தஞ்சாவூர்,<br>1.1.85.{{gap|1em}}}} மூன்று மாதங்களுக்குப் பின்னர்த் திரு. சண்முகத்திற்கு அல்லது அவரது ஆணைக்குப் பண்டங்களைப் பெற்றுக்கொண்ட வகையில் உரூ. 5000/– செலுத்துக. {{rh|பெறுநர்<br><br>{{larger|<b>திரு. சண்முகம்,</b>}}<br>கோட்டையூர்,<br>மதுரை.<br>(Payee)|ஏற்கப்பட்டது<br><br>{{larger|<b>சிதம்பரம்</b>}}<br>(வரையப்<br>படுபவர்)<br>(Debtor)|கையொப்பம்<br><br>{{Xxxx-larger|☐}}{{gap|2em}}<br>(வரைபவர்)<br>(Creditor){{gap|1em}}}} }} கேட்பு உண்டியல் வரையப்படுவோர் கால இழப்பின்றி உடன் பணம் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், தவணை உண்டியலாயின் குறிப்பிட்டுள்ள தவணை முடிந்த பின்னரே பணம் கிடைக்கும். எனவே, அக்குறிப்பிட்ட நாளுக்கு முன்னர், ஓர் உண்டியலின் உரிமையாளர் அதற்குரிய தொகையைப் பெற விழையின், அதனை அவருடைய வங்கியிடம் கொடுத்துக் கழிவு செய்து (Discount) பெற்றுக் கொள்ளலாம். வங்கி தம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளத் தக்க உண்டியல்களை ஏற்கும். இப்பணிக்கு ஈடாக உண்டியலின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையினைக் கழிவுத் தொகையாக எடுத்துக் கொண்டு மிகுதித் தொகையை வரைபவருக்குச் செலுத்திவிடும். இவ்வாறு உண்டியலில் காலத் தவணைக்கு முன்னர், அதற்குரியவர் அதனை ஒரு வங்கியிடம் கொடுத்து அதற்குரிய தொகையினைப் பெறுதல் உண்டியல் கழிவு செய்தல் எனப்படுகிறது. உண்டியலைக் கழிவு செய்து தந்த வங்கி அதனைத் தவணைத் தேதியில் வரைபவரிடம் கொடுத்து அதன் மதிப்பைப் பெற்றுக் கொள்கிறது. உண்டியல்கள் அவற்றின் உரிமையாளரால் ‘மேல் எழுத்து’ச் (Endorsement) செய்வதன் மூலம், எளிதே பிறருக்கு மாற்றியளிக்கப்படுகின்றன. இவ்வகையில் உண்டியல் மிகவும் எளிதான கடன் கருவியாகும். கடன் ஈவோரிடமிருந்து உண்டியலை வாங்கிய நிதியாளராகிய வங்கிக்குத் தவணைக் காலத்திற்கு முன்னர்ப் பணம் தேவைப்படுமாயின், இந்த உண்டியலை வங்கி சந்தையில் மறு கழிவு (Rediscount) செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம். {{right|<b>ஆர்.இ.</b>}} பொதுவாக உண்டியல் தவணை உண்டியல், கேட்பு உண்டியல், உள்நாட்டு உண்டியல், அயல்நாட்டு உண்டியல், பணவசதி உண்டியல், ஆவணங்கள் சேர்ந்த உண்டியல், கொணர்பவர் உண்டியல் கட்டளை உண்டியல், பொருள் மயக்கம் தரும் உண்டியல், நிறையுறாத உண்டியல், பெயரளவு உண்டியல், கருவூல உண்டியல், உண்டியல் கோவை, இடங்குறி உண்டியல் எனப் பதினான்கு வகைப்படும். அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதப்படுகின்ற உண்டியல்களும் உண்டு. இவை வணிகர்களின் பழக்க வழக்கங்-<noinclude></noinclude> 55lc5x6kxhgyl59rynwrh1fov5u1g0n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/839 250 629439 1947494 1937874 2026-06-18T04:39:45Z Booradleyp1 1964 1947494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உண்டு வில்கெல்ம்|809|உண்ணாமுலை எல்லப்ப நயினார்}}</noinclude>இச்சோதனைக் கூடம் பல நாடுகளிலிருந்த மாணவர்களை ஈர்த்தது. இதுவே உளவியல் துறையைத் தத்துவத் துறையிலிருந்து பிரித்துத் தனித்தியங்கும் ஒரு புதிய துறையாக உருப்பெற வழி செய்தது. இவரது முதல் ஆய்வறிக்கை ‘சிறு நீரில் சோடியயம் குளோரைடு’ என்பதாகும். ‘இயற்பியல்சார் தத்துவ ஆய்வு’ (Philosophische) என்ற திங்களிதழை கி.பி. 1881–ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழின் மூலம் தம் ஆய்வுகளையும் சோதனைக் கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளையும் வெளியிட்டார். ‘நாட்டுப்புற உளவியல்’ (Folk Psychology) என்ற தலைப்பில் பத்துத் தொகுதிகளை வெளியிட்டார். பெரும்பாலோர் உண்டு வில்கெல்மை ஓர் உளவியலறிஞர் என்று மட்டும் கருதினர். காரணம் இத்துறையின் மூலமாகவே இவர் பலருக்கும் தெரிந்தவரானார். ஆனால், இவர் தம்மை ஒரு தத்துவ அறிஞர் என்றும் பண்பாட்டு வரலாற்றாளர் என்றும் கருதினார். இவர் கி.பி. 1880–ஆம் ஆண்டிலிருந்து தாம் இறக்கும் வரை பல நூல்களை எழுதிக் கொண்டிருந்தார். தம் அளவையியல் (Logic) என்ற நூலை விரிவுபடுத்தி மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்தார். இவருடைய பெரிய படைப்புகளுள் இது சிறப்பானது. இதில் உளவியல்சார் சிந்தனை போன்ற கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அறநெறியியல் (Ethics), தத்துவ அமைப்பு முறை (System des philosophie) போன்ற பல நூல்களையும் இவர் எழுதினார். தம் ‘நாட்டுப்புற உளவியல்’ என்ற நூலில் மொழி, புனைகதைகள், சமயம், கலை, சமூகம், சட்டம், பண்பாடு, வரலாறு போன்ற பல கருத்துகளை விளக்கியுள்ளார். மனிதப் பண்பாட்டின் வரலாற்றை ஆய்வு செய்த இவர், மனிதனின் சிந்தனை இயல்பையும் உளச் செயல்களையும் அக நோக்கு முறையின் மூலம் சோதனைக் கூடத்திற்குள் ஆய்வு செய்வது இயலாது என்பதைக் கண்டார். ஆகவே, தம் ‘உடலியல்சார் உளவியல் கோட்பாடு’ என்ற நூலில் சிந்தனையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அமைப்பியல் கோட்பாடு (Structuralism) என்ற உளவியல் கோட்பாட்டை உருவாக்குவதற்குக் காரணமானவர் வில்கெல்ம் ஆவர். உளவியல் என்பது அனுபவத்தைப் பற்றி விளக்குவதாகும் என்று இவர் கருதினார்; அதாவது, தம் நனவுநிலை உளத்துடன் தொடர்புடைய அனுபவத்தைப் பற்றி விளக்குவதென்று கருதினார்; குறிப்பாக, மனத்தின் அமைப்புப் பற்றி விளக்குவதென்று கருதினார்; எந்த ஒரு சிக்கலையும் அறிய முற்படும்பொழுது அதைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அப்பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத்தார். வில்கெல்மின் சோதனைகள் பெரும்பாலும் புலன் சார்ந்தனவாகவும் (Sensory) புலன்காட்சி இயங்கும் தன்மை பற்றியனவாகவும் இருந்தன. இதன் விளைவாகப் புலன் உணர்வுகள் (Sensations), உருவம் (Images), உணர்வுகள் (Feelings) ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். இவர் தம் சோதனைக் கூடத்தில் குறிப்பாக இரு குறிக்கோள்களின் அடிப்படையில் ஆய்வுசெய்தார். ஒன்று, புலன் உணர்வு (Sensations), புலன் காட்சி (Perception) ஆகியவை பற்றியதாகும். இதில் ஐம்புலன்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்விற்கு பெக்னரின் (Fechner) உள இயற்பியல் முறைகள் பின்பற்றப்பட்டன. மற்றொன்று, மறி வினையாற்றும் நேரத்தை அறிவதாகும். இதை இவர் கழித்தல் முறை (Subtractive Procedure) என்று குறிப்பிட்டார். இதன் மூலம் இவர் புலன் உணர்விற்கு 0.1 நொடிகள் தேவைப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்தார். இதே முறையில் அறிதல், இயைதல் போன்ற (Association), பிரித்தறிதல் ஆகியவை பலவற்றிற்கும் உரிய கால அளவைக் கண்டறிந்தார். உளவியல் வரலாற்றில் சிறப்பானவராகக் கருதப்படும் இவருடைய கருத்துகள் பலவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் புதிய உளவியல் துறையின் அடிப்படைக்கு வித்திட்டவர் இவரே என்பது குறிப்பிடத் தக்கதாகும். {{right|<b>வே.சு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Morris Charles, G.,</b> Psychology: An introduction, Prentice Hall, Englewood Cliffs, New Jersey, 1979. <b>Bourne, Lyle E., Ekstrand, Bruce K.,</b> Psychology, CBS College Publishing, New York, 1982. <section end="உண்டு வில்கெல்ம்"/> <section begin="உண்ணாமுலை எல்லப்ப நயினார்"/> {{dhr}} {{larger|<b>உண்ணாமுலை எல்லப்ப நயினார்</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் 25 கல் தொலைவில் உள்ள தாழைநகர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சைவ சமயத்தைச் சேர்ந்த இவர் வன்னியகுல சத்திரிய மரபினராவர். இவர் எல்லன், எல்லநயினான், காலிங்கராயன், எல்லபூபதி, எல்லான், காலிங்கராயன், உண்ணாமுலை எல்லப்ப நயினார், எல்லான் காலிங்கராயன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டார். இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். இவர் சிறந்த தேவி வழி-<noinclude></noinclude> nolg6u4dtristdo2mbhqhpx1otjsndj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/850 250 629487 1947496 1938239 2026-06-18T04:54:42Z Booradleyp1 1964 1947496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வுசார்‌ ஆசிரியர்‌ கல்வி|820|உணர்வுசார்‌ கற்றல்‌}}</noinclude>மனித உறவுத் தொடர்பான உணர்வுப் பகுதியினை ஒதுக்கிவிட்டன என்பது அவர்களின் குற்றச்சாட்டு. மெனர்ட்டு (Mehnart, 1979) என்பவர், இன்றைய ஆசிரியர் கல்வியின் குறைபாட்டால், மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை ஆசிரியர்கள் அறிய இயலாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சியோடு ஒன்றாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சித் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கல்வி உத்திகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் உள்ளனரெனக் கூறுகிறார். முரே (Murray, 1979) என்பவர், ‘ஆசிரியர், கற்பித்தல் திறன்களைப் பெற்றிருப்பதோடு, மனித உறவுகளைப் பலப்படுத்தும் திறன்களைக் கொண்டவராகவும் தன்னையும் பிறரையும் அறியும் உணர்வுத் திறன் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்’ எனக் கூறுகிறார். உணர்வுசார் ஆசிரியர் கல்வியின்படி, கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவர் என்ற இரண்டு ஆளுமைகளுக்கு (Personality) இடையே நிகழும் ஒரு நிகழ்ச்சி; இதில் ஆசிரியர் உயர்ந்தவர் என்றோ மாணவர் தாழ்ந்தவர் என்றோ எண்ண இடமில்லை. உயர்ந்த அனுபவமுள்ளவரின் வழிகாட்டலாக ஆசிரியர் செயல் மாணவர்களுக்கு அமைகிறது. மாணவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளுதல், வகுப்பறையில் மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் காரணத்தைக் கண்டறிதல், அவ்வுணர்ச்சிகளுக்கு ஏற்றவகையில் கற்பித்தல், உத்திகள் அமைத்தல், மாணவர்களின் உணர்ச்சி உந்துதல்களையொட்டிப் பாடத்திட்டம் அமைத்தல் – போன்றவற்றில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதே உணர்வுசார் ஆசிரியர் கல்வியின் அடிப்படை நோக்கங்கள் என பிரவுன் (Brown, 1975) குறிப்பிடுகிறார். இக்குறிக்கோள்களை அடையும் வகையில், ‘நடைமுறைச் செயற்’ பகுப்பாய்வு (Transactional Analysis), தனியாள் வளர்ச்சித் திட்டம் (Personal Development Programme), உணர்வுசார் கல்வி வளர்ச்சித் திட்டம் (Affective Education Development Programme), ஆசிரியர் திறப் பயிற்சித் திட்டம் (Teacher Effectiveness Training Programme), மனித ஆற்றல் வளர்ச்சி மாதிரி (Human Resources Development Model), செய்தித் தொடர்பு முறைத் திட்டம் (Communication Network Programme) ஆகிய கல்விப் பயிற்சி முறைகள் உணர்வுசார் ஆசிரியர் கல்வியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பங்கேற்பு (Role–play), கற்பனை அனுபவம், போலி நிலை (Simulation) போன்ற உத்திகளும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. அசுபி, உரோபக்கு (Aspy and Roebuck, 1982) ஆகியோரது ஆராய்ச்சியின் முடிவின்படி, மனித உறவுத் தொடர்பான உணர்ச்சிப் பாங்கினை ஆசிரியர்கள் பயிற்சியின் வழியாக உயர்த்திக் கொள்ள இயலும் என்பது புலனாகிறது. மேலும், இவர்களின் மற்றோர் ஆய்வு முடிவின் படி, உயர்ந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்கள் குறைந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்களை நோக்க மிகக் குறைந்த அளவே சிக்கல்களையும் இடையூறுகளையும் வகுப்பறையில் ஏற்படுத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. உயர்ந்த உணர்ச்சித் திறம் பெற்ற ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி, மனப்பாங்கு, வருகைப்பதிவு, தன்னோக்குக் கருத்து (Self-concept), நடத்தை (Behaviour) ஆகியவற்றில் சிறந்திருந்தனர் என்பதையும் அவர்களது, ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. மனித உறவுகள் தொடர்பான திறன்களை (Interpersonal Skills) ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்க இயலும் என்பது பலருடைய ஆராய்ச்சி முடிவில் கண்ட உண்மை. ஆயினும், இன்று பொதுவாக ஆசிரியர் கல்வியில் அறிவுப் பகுதி வளர்ச்சிக்கு (cognitive domain development) மட்டுமே மிகுந்த முதலிடம் தரப்படுகிறது. வருங்கால ஆசிரியர் கல்வியில் உணர்ச்சிப் பகுதி வளர்ச்சிக்கும் (Affective domain development) பயிற்சி தருவதன் மூலம், அப்பயிற்சியினை முழுமையுடையதாக்குவது அவசியமாகும். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Gordon, I.,</b> Teacher Effectiveness Training, Wyden Newyork, 1974. <section end="உணர்வுசார் ஆசிரியர் கல்வி"/> <section begin="உணர்வுசார் கற்றல்"/> {{dhr}} {{larger|<b>உணர்வுசார் க<blockquote></blockquote>ற்றல்:</b>}} உணர்வுகள், மதிப்புகள், மனப்பாங்குகள் ஆகியவற்றின் மாறுதல்களையொட்டித் தோன்றும் நடக்கை, திறன், துலக்கம் போன்றவற்றை மாற்றம் அடையச் செய்யும் கல்வி முறையே உணர்வுசார் கற்றல் எனச் சொல்லப்படுகிறது. இவ்வகைக் கற்றல் முறை, வயதுவந்தோர் கல்வியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கிரத்வால் (Krathwohl, 1964) என்னும் அறிஞர் உணர்வுப் பகுதியானது (Affective domain) விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுதல், ஆர்வத்தோடு பங்கு பெறுதல், மனப்பாங்குகளை மதித்துப் பண்படுத்துதல், பொறுப்பேற்றல், மதிப்புக் கோலங்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற அடிப்படை அனுபவங்களையும், மதிப்புகளின் எடுத்துக்காட்டாக இருத்தல், அவற்றையொட்டி வாழ்ந்துகாட்டுதல் போன்ற உயர் அனுபவங்களையும் கொண்டது எனக் கூறுகிறார். {{nop}}<noinclude></noinclude> 1pi21a9umvvtzunw3nkrw8cs6ozlr2w 1947497 1947496 2026-06-18T04:55:22Z Booradleyp1 1964 1947497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வுசார்‌ ஆசிரியர்‌ கல்வி|820|உணர்வுசார்‌ கற்றல்‌}}</noinclude>மனித உறவுத் தொடர்பான உணர்வுப் பகுதியினை ஒதுக்கிவிட்டன என்பது அவர்களின் குற்றச்சாட்டு. மெனர்ட்டு (Mehnart, 1979) என்பவர், இன்றைய ஆசிரியர் கல்வியின் குறைபாட்டால், மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை ஆசிரியர்கள் அறிய இயலாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சியோடு ஒன்றாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சித் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கல்வி உத்திகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் உள்ளனரெனக் கூறுகிறார். முரே (Murray, 1979) என்பவர், ‘ஆசிரியர், கற்பித்தல் திறன்களைப் பெற்றிருப்பதோடு, மனித உறவுகளைப் பலப்படுத்தும் திறன்களைக் கொண்டவராகவும் தன்னையும் பிறரையும் அறியும் உணர்வுத் திறன் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்’ எனக் கூறுகிறார். உணர்வுசார் ஆசிரியர் கல்வியின்படி, கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவர் என்ற இரண்டு ஆளுமைகளுக்கு (Personality) இடையே நிகழும் ஒரு நிகழ்ச்சி; இதில் ஆசிரியர் உயர்ந்தவர் என்றோ மாணவர் தாழ்ந்தவர் என்றோ எண்ண இடமில்லை. உயர்ந்த அனுபவமுள்ளவரின் வழிகாட்டலாக ஆசிரியர் செயல் மாணவர்களுக்கு அமைகிறது. மாணவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளுதல், வகுப்பறையில் மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் காரணத்தைக் கண்டறிதல், அவ்வுணர்ச்சிகளுக்கு ஏற்றவகையில் கற்பித்தல், உத்திகள் அமைத்தல், மாணவர்களின் உணர்ச்சி உந்துதல்களையொட்டிப் பாடத்திட்டம் அமைத்தல் – போன்றவற்றில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதே உணர்வுசார் ஆசிரியர் கல்வியின் அடிப்படை நோக்கங்கள் என பிரவுன் (Brown, 1975) குறிப்பிடுகிறார். இக்குறிக்கோள்களை அடையும் வகையில், ‘நடைமுறைச் செயற்’ பகுப்பாய்வு (Transactional Analysis), தனியாள் வளர்ச்சித் திட்டம் (Personal Development Programme), உணர்வுசார் கல்வி வளர்ச்சித் திட்டம் (Affective Education Development Programme), ஆசிரியர் திறப் பயிற்சித் திட்டம் (Teacher Effectiveness Training Programme), மனித ஆற்றல் வளர்ச்சி மாதிரி (Human Resources Development Model), செய்தித் தொடர்பு முறைத் திட்டம் (Communication Network Programme) ஆகிய கல்விப் பயிற்சி முறைகள் உணர்வுசார் ஆசிரியர் கல்வியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பங்கேற்பு (Role–play), கற்பனை அனுபவம், போலி நிலை (Simulation) போன்ற உத்திகளும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. அசுபி, உரோபக்கு (Aspy and Roebuck, 1982) ஆகியோரது ஆராய்ச்சியின் முடிவின்படி, மனித உறவுத் தொடர்பான உணர்ச்சிப் பாங்கினை ஆசிரியர்கள் பயிற்சியின் வழியாக உயர்த்திக் கொள்ள இயலும் என்பது புலனாகிறது. மேலும், இவர்களின் மற்றோர் ஆய்வு முடிவின் படி, உயர்ந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்கள் குறைந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்களை நோக்க மிகக் குறைந்த அளவே சிக்கல்களையும் இடையூறுகளையும் வகுப்பறையில் ஏற்படுத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. உயர்ந்த உணர்ச்சித் திறம் பெற்ற ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி, மனப்பாங்கு, வருகைப்பதிவு, தன்னோக்குக் கருத்து (Self-concept), நடத்தை (Behaviour) ஆகியவற்றில் சிறந்திருந்தனர் என்பதையும் அவர்களது, ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. மனித உறவுகள் தொடர்பான திறன்களை (Interpersonal Skills) ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்க இயலும் என்பது பலருடைய ஆராய்ச்சி முடிவில் கண்ட உண்மை. ஆயினும், இன்று பொதுவாக ஆசிரியர் கல்வியில் அறிவுப் பகுதி வளர்ச்சிக்கு (cognitive domain development) மட்டுமே மிகுந்த முதலிடம் தரப்படுகிறது. வருங்கால ஆசிரியர் கல்வியில் உணர்ச்சிப் பகுதி வளர்ச்சிக்கும் (Affective domain development) பயிற்சி தருவதன் மூலம், அப்பயிற்சியினை முழுமையுடையதாக்குவது அவசியமாகும். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Gordon, I.,</b> Teacher Effectiveness Training, Wyden Newyork, 1974. <section end="உணர்வுசார் ஆசிரியர் கல்வி"/> <section begin="உணர்வுசார் கற்றல்"/> {{dhr}} {{larger|<b>உணர்வுசார் கற்றல்:</b>}} உணர்வுகள், மதிப்புகள், மனப்பாங்குகள் ஆகியவற்றின் மாறுதல்களையொட்டித் தோன்றும் நடக்கை, திறன், துலக்கம் போன்றவற்றை மாற்றம் அடையச் செய்யும் கல்வி முறையே உணர்வுசார் கற்றல் எனச் சொல்லப்படுகிறது. இவ்வகைக் கற்றல் முறை, வயதுவந்தோர் கல்வியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கிரத்வால் (Krathwohl, 1964) என்னும் அறிஞர் உணர்வுப் பகுதியானது (Affective domain) விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுதல், ஆர்வத்தோடு பங்கு பெறுதல், மனப்பாங்குகளை மதித்துப் பண்படுத்துதல், பொறுப்பேற்றல், மதிப்புக் கோலங்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற அடிப்படை அனுபவங்களையும், மதிப்புகளின் எடுத்துக்காட்டாக இருத்தல், அவற்றையொட்டி வாழ்ந்துகாட்டுதல் போன்ற உயர் அனுபவங்களையும் கொண்டது எனக் கூறுகிறார். {{nop}}<noinclude></noinclude> jl1bh5sfc4ttl63wryeb76vkiaoiy38 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/851 250 629489 1947498 1938240 2026-06-18T04:56:51Z Booradleyp1 1964 1947498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வுசார்‌ கற்றல்‌|821|உணர்வூட்டல்}}</noinclude>உணர்வுசார் கற்றல் என்பது வளர்ச்சியடைந்த மனிதனின் உணர்ச்சி, கிளர்ச்சி, அன்பு, பயம், காதல், இரக்கம், கோபம், எழுச்சி போன்ற பல்வகை அனுபவங்களைக் குறிப்பது எனக் கிது (Kidd, 1973) என்னும் அறிஞர் கூறுகிறார். தன் உணர்வுகளை உணர்ந்து அவற்றோடியைந்து வாழ்க்கையில் மிகுந்த மனநிறைவு கொள்வது உணர்வுசார் கற்றலை வெளிப்படுத்தும். மன உளைச்சலை உதறித் தள்ள முனைவதும் பிறர்மேல் அன்பு காட்டுவதும், பிறர் அன்பு காட்டத் தகுந்தவராவதும் உணர்வுசார் கற்றல் நடைபெற்ற தன்மையினைக் காட்டும். இலாசுகர் (Lasker, 1980) என்பார் கற்றல் முறையை நடத்தைக் கொள்கை, அறிவுக் கொள்கை, மனிதவியல்புக் கொள்கை என்ற மூவகைகளில் பிரிக்கிறார். உணர்வுசார் கற்றல் மனிதவியல்புக் கொள்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். மனிதவியல்புக் கொள்கை, கல்வி கற்றலின் நோக்கம் முழுமையான மனிதனாவதும் மனிதநேயமுடையவனாவதும் ஆம் எனக் கூறும். குடும்பவாழ்வு, தொழில் வாழ்வு, பண்பாட்டு அரசியல், பொருளாதார வாழ்வு, சொந்த (தனியார்) வளர்ச்சி, வாழ்நாள் கற்றல் ஆகிய ஐந்து பகுதிகளில் வயதுவந்தோர் (Adults) உணர்வுசார் கற்றல் பண்பினைப் பெறுவதன் மூலம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள இயலும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று. குடும்ப வாழ்க்கையில், உணர்வுசார் கற்றல் என்பதில் ஆண்–பெண் உறவுமுறை பற்றி அறிந்திருத்தல், குடும்பநலம் (Birth Control) பற்றி நல்ல மனப்பாங்கும் உணர்வும் கொண்டிருத்தல், குழந்தை நலம் பேணுதல், ஊட்டச்சத்துணவு பற்றிய கருத்துகளை வளர்த்தல், பெற்றோர் பங்கும் பணியும் அறிந்திருத்தல், திருமண உறவும் நெறியும் தெரிந்திருத்தல் போன்றவை யாவும் அடங்கும் என நாக்சு (Knox, 1977) என்னும் அறிஞர் கூறுவர். இதே போல், தொழில் வாழ்க்கையில் பணியளிப்போர், பணியாளர் உறவை வளப்படுத்துவது, தொழிலூக்கம் கொள்வது, பணிகுறித்த மனநிறைவு பெறுதல் போன்றவை உணர்வுசார் கற்றலில் அடங்கும். நேர்மையோடு நடத்தல், சட்டத்தை ஏற்று மதித்துப் பின்பற்றுதல், ஒழுக்க நெறிமுறையுடன் நடத்தல், இனம், பண்பாடு போன்ற வேறுபாடுகளை மதித்துப் போற்றுதல், சுற்றுப்புறச் சூழல் ஆபத்துகளை உணர்தல், மனித வாழ்வைப் பாதிக்கும் வகையில் எழக்கூடிய அரசியற் சிக்கல்களையும் வளர்ச்சியையும் உணர்தல் போன்றவையும் பண்பாட்டு, அரசியல், பொருளாதாரம் சார்ந்த உணர்வுசார் கற்றல் வகையில் அடங்கும் எனக் கிராசு (Cross, 1981) என்பார் மொழிவார். தன்னைப் பற்றிய நேரான தற்கருத்தினை-வாழ்நாள் முழுவதும் வளர்த்துக்கொள்வதும், வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டேயிருப்பதற்கான அடிப்படைத்திறன், பொறுப்பு ஆகியன குறித்த மனப்பாங்கினை வளர்ப்பதுவும் உணர்வுசார் கற்றலின் தலையாய பங்காகும் என நோவலசு (Knowles, 1975) கூறுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, உணர்வுசார் கற்றல் பண்புகளைப் பிறரது அல்லது ஆசிரியரின் கண்காணிப்பில் வளர்த்துக் கொள்வதை விட, தாமே மாணவர்கள் முயன்று கற்று வளர்த்துக் என்ற கொள்வது வாழ்நாள் முழுவதும் கற்றல் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Kidd, J.R.,</b> How Adults Learn, Association Press, New York, 1973. <b>Knowles, M.S.,</b> Self-directed Learning: A Guide for Learners and Teachers, Follett, Chicago, Illinois, 1975. <b>Krathwohl, D.R.,</b> Taxonomy of Educational Objectives: Affective Domain, Mekay, New York, 1964. <section end="உணர்வுசார் கற்றல்"/> <section begin="உணர்வூட்டல்"/> {{dhr}} {{larger|<b>உணர்வூட்டல்:</b>}} அறியாமையில் மூழ்கிச் கிடக்கும் ஏழை, எளிய ஊரக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பவுலோ பிரைரே (Paulo Freire) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித்தல்–கற்றல் முறையே உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கம் (Conscientization) எனக் குறிக்கப்படுகின்றது. உணர்வூட்டல் கல்விபெறும் ஏழை எளிய மக்கள் தம்மைப் போன்ற எளிய மனித குலத்தைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வதோடு, தம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழ்மைச் சமுதாயத்திற்கு விடுதலை தேடித் தருவதிலும் ஈடுபடுகின்றனர். பிரைரே வழங்கிய உணர்வூட்டல் கல்வியில், கற்போர், ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களாக மட்டும் கருதப்படாமல் அவர்களே கல்வி நிகழ்ச்சியை முழு ஈடுபாட்டுடன் நடத்திக் காட்டுபவர்களாகவும் கருதப்படுகின்றனர். பிரைரேவின் கல்விப் பயிற்சி முறை, முதன் முதலில் பிரேசில் (Brazil), சிலி (Chile) ஆகிய இலத்தீன்<noinclude></noinclude> feaiez0l0r977sz77op7y7tn38w7efg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/858 250 629512 1947504 1938242 2026-06-18T05:07:05Z Booradleyp1 1964 1947504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு|828|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்}}</noinclude>ரிங்கு (Herring) என்ற கடல்மீன், மற்ற மீன்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறார்கள். சோவியத்து மக்கள் விரும்பியுண்பது பாலாடைக் கட்டி பொதிந்திருக்கும் பிளினி (Blini) என்ற அடை. இதனுடன் கெர்ரிங்கு மீன், உப்பிட்டு உலர்த்திய பெரிய மீன் முட்டைகள், பார்ச்சு (Borsch) என்ற பீட்ரூட்டுச் சாறு (Soup) ஆகியவற்றைச் சேர்த்து உண்ணுகிறார்கள். மத்திய ஆசிய நாடுகளில் கோதுமை மாவில் பிசைந்த பிட்டா உரொட்டி என்ற உரொட்டிதான் முக்கியமான உணவு. இசுரேலில் பிட்டா உரொட்டியுடன், நன்றாக அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி, ‘சிக்-பீ’ என்ற பயறு, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் பெலபெல் (Fellafel) என்ற பண்டத்தையும் சேர்த்து உண்ணுகிறார்கள். மெக்சிகோவில் மக்காச் சோள மாவினால் செய்யப்படும் அடை போன்ற தார்டீலா (Tortilla) என்ற உரொட்டிதான் முதன்மையான உணவு. இந்தியாவிலும் தென் சீனாவிலும் சப்பானிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரிசிதான் முதன்மையான உணவு. இந்தியர்கள் அரிசிச் சோற்றில் குழம்பு சேர்த்து உண்ணுகிறார்கள். சப்பானியர் அரிசிச் சோற்றுடன் உறைப்பில்லாத குழம்பு, வறுத்த காய்கறித் துண்டுகள், இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கலந்து உண்ணுகிறார்கள். வட, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் செமோலினா என்ற தானிய மாவை வேக வைத்துத் தயாரிக்கப்படும் கூசுகூசு (Couscous) என்ற மாவு உணவே முதன்மையான உணவாகும். இதனுடன் மசாலாப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கடலைகள், இனிப்புப் பொருள்கள் ஆகியவற்றையும் சேர்த்து உண்ணுகிறார்கள். உண்ணுகிற வேளைகளும் வழக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன. பெரும்பாலான நாடுகளில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை மட்டுமே உணவு உண்ணப்படுகிறது. வழக்கத்தின் அடிப்படையில் இது அமைகிறது. இப்பொழுது மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் காப்பி அல்லது தேநீருடன் கூடிய மாலைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது. உணவு உண்ணும் விதம் கூட வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் மக்கள் தட்டில் உணவை வைத்துக் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றால் உணவை எடுத்து உண்ணுகிறார்கள். இந்தியர் தட்டில் அல்லது இலையில் உணவு பரிமாறப்பட, அதைக் கைகளால் எடுத்து உண்ணுகின்றனர். சீனாவிலும் சப்பானிலும் மாவுருண்டையினை மக்கள் குச்சிகளால் எடுத்து உண்ணுகிறார்கள். {{larger|<b>இக்கால உணவு முறை:</b>}} வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தாங்களாகவே உணவு உற்பத்தி செய்து தம் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவு உற்பத்திக்கென்றே ஒரு தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலில் உணவுகள் சுகாதாரமான முறையில் பக்குவப்படுத்தப்பட்டு, தகரக்கலத்தில் (tin), அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இறைச்சி, மீன் கூட இவ்விதம் பக்குவப்படுத்தப்பட்டுத் தகரக்கலத்தில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. புதிய அறிவியல் வளர்ச்சியின் காரணமாகச் செயற்கை உணவுகளும் புழக்கத்திற்கு வத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கை முட்டைகளுக்கு மாற்றாகச் செயற்கை (Synthetic) உணவுப் பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. {{right|<b>சி.என்.ந.</b>}} <section end="உணவு"/> <section begin="உணவுக் கட்டுப்பாடு"/> {{dhr}} {{larger|<b>உணவுக் கட்டுப்பாடு:</b>}} காண்க: [[உணவுக் கொள்கை]]. <section end="உணவுக் கட்டுப்பாடு"/> <section begin="உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்"/> {{dhr}} {{larger|<b>உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம் (1954):</b>}} இது உணவுக் கலப்படத்தைத் தடுப்பதற்கான செய் ஒரு சட்டமாகும். இதன்கண் 1) கலப்படஞ் செய்பொருள், 2) கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பண்டம், 3) உணவு பற்றிய பொதுவான வகை முறை, 4) உணவு ஆய்வாளர் 5) வழக்கு நடைமுறை, போன்றவை ஆராயப்படுகின்றன. {{larger|<b>கலப்படஞ் செய்பொருள்:</b>}} கலப்படம் செய்யும் பொருட்டுப் பயன்படுத்தப்படுகிற அல்லது பயன்படுத்தப்படக்கூடிய எந்தப் பொருளும் கலப்படஞ் செய்பொருள் எனப்படும். {{larger|<b>கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பண்டம்:</b>}} அ) ஒரு விற்பனையாளரால் விற்கப்படும் பண்டம். விலைக்கு வாங்குகிறவர் கோரிய தன்மையோ ஊட்டச்சத்தோ தரமோ இல்லாதிருக்கும்போது; அல்லது ஆ) அதன் தன்மை, சத்து அல்லது தரம் வேறு ஏதேனும் ஒரு பொருளால் பாதித்திருக்கும்போது; அல்லது இ) அந்தப் பண்டத்தின் தன்மை, சத்து அல்லது அதன் தரத்துக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் அதைவிட மட்டமான அல்லது மலிவான பொருள் ஏதேனும் முழுவதுமாகவோ பகுதியாகவோ கலக்கப்பட்டிருக்கும்போது; அல்லது ஈ) அதன் தன்மை, சத்து அல்லது தரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்தப் பண்டத்தின் அமைப்பான எதுவும், முழுவதுமாகவோ பகுதியாகவோ பிரித்தெடுக்கப்பட்டிருக்கும்போது; அல்லது உ) அந்தப் பண்டம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டோ சிப்பமாகக் கட்டப்பட்டோ குறைபாடுற்றதாகவோ உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய-<noinclude></noinclude> so3zmhbfp17x3didovgkh1lmtq9h5gi 1947506 1947504 2026-06-18T05:10:21Z Booradleyp1 1964 1947506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு|828|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்}}</noinclude>ரிங்கு (Herring) என்ற கடல்மீன், மற்ற மீன்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறார்கள். சோவியத்து மக்கள் விரும்பியுண்பது பாலாடைக் கட்டி பொதிந்திருக்கும் பிளினி (Blini) என்ற அடை. இதனுடன் கெர்ரிங்கு மீன், உப்பிட்டு உலர்த்திய பெரிய மீன் முட்டைகள், பார்ச்சு (Borsch) என்ற பீட்ரூட்டுச் சாறு (Soup) ஆகியவற்றைச் சேர்த்து உண்ணுகிறார்கள். மத்திய ஆசிய நாடுகளில் கோதுமை மாவில் பிசைந்த பிட்டா உரொட்டி என்ற உரொட்டிதான் முக்கியமான உணவு. இசுரேலில் பிட்டா உரொட்டியுடன், நன்றாக அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி, ‘சிக்-பீ’ என்ற பயறு, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் பெலபெல் (Fellafel) என்ற பண்டத்தையும் சேர்த்து உண்ணுகிறார்கள். மெக்சிகோவில் மக்காச் சோள மாவினால் செய்யப்படும் அடை போன்ற தார்டீலா (Tortilla) என்ற உரொட்டிதான் முதன்மையான உணவு. இந்தியாவிலும் தென் சீனாவிலும் சப்பானிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரிசிதான் முதன்மையான உணவு. இந்தியர்கள் அரிசிச் சோற்றில் குழம்பு சேர்த்து உண்ணுகிறார்கள். சப்பானியர் அரிசிச் சோற்றுடன் உறைப்பில்லாத குழம்பு, வறுத்த காய்கறித் துண்டுகள், இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கலந்து உண்ணுகிறார்கள். வட, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் செமோலினா என்ற தானிய மாவை வேக வைத்துத் தயாரிக்கப்படும் கூசுகூசு (Couscous) என்ற மாவு உணவே முதன்மையான உணவாகும். இதனுடன் மசாலாப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கடலைகள், இனிப்புப் பொருள்கள் ஆகியவற்றையும் சேர்த்து உண்ணுகிறார்கள். உண்ணுகிற வேளைகளும் வழக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன. பெரும்பாலான நாடுகளில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை மட்டுமே உணவு உண்ணப்படுகிறது. வழக்கத்தின் அடிப்படையில் இது அமைகிறது. இப்பொழுது மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் காப்பி அல்லது தேநீருடன் கூடிய மாலைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது. உணவு உண்ணும் விதம் கூட வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் மக்கள் தட்டில் உணவை வைத்துக் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றால் உணவை எடுத்து உண்ணுகிறார்கள். இந்தியர் தட்டில் அல்லது இலையில் உணவு பரிமாறப்பட, அதைக் கைகளால் எடுத்து உண்ணுகின்றனர். சீனாவிலும் சப்பானிலும் மாவுருண்டையினை மக்கள் குச்சிகளால் எடுத்து உண்ணுகிறார்கள். {{larger|<b>இக்கால உணவு முறை:</b>}} வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தாங்களாகவே உணவு உற்பத்தி செய்து தம் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவு உற்பத்திக்கென்றே ஒரு தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலில் உணவுகள் சுகாதாரமான முறையில் பக்குவப்படுத்தப்பட்டு, தகரக்கலத்தில் (tin), அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இறைச்சி, மீன் கூட இவ்விதம் பக்குவப்படுத்தப்பட்டுத் தகரக்கலத்தில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. புதிய அறிவியல் வளர்ச்சியின் காரணமாகச் செயற்கை உணவுகளும் புழக்கத்திற்கு வத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கை முட்டைகளுக்கு மாற்றாகச் செயற்கை (Synthetic) உணவுப் பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. {{right|<b>சி.என்.ந.</b>}} <section end="உணவு"/> <section begin="உணவுக் கட்டுப்பாடு"/> {{dhr}} {{larger|<b>உணவுக் கட்டுப்பாடு:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]]. <section end="உணவுக் கட்டுப்பாடு"/> <section begin="உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்"/> {{dhr}} {{larger|<b>உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம் (1954):</b>}} இது உணவுக் கலப்படத்தைத் தடுப்பதற்கான செய் ஒரு சட்டமாகும். இதன்கண் 1) கலப்படஞ் செய்பொருள், 2) கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பண்டம், 3) உணவு பற்றிய பொதுவான வகை முறை, 4) உணவு ஆய்வாளர் 5) வழக்கு நடைமுறை, போன்றவை ஆராயப்படுகின்றன. {{larger|<b>கலப்படஞ் செய்பொருள்:</b>}} கலப்படம் செய்யும் பொருட்டுப் பயன்படுத்தப்படுகிற அல்லது பயன்படுத்தப்படக்கூடிய எந்தப் பொருளும் கலப்படஞ் செய்பொருள் எனப்படும். {{larger|<b>கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பண்டம்:</b>}} அ) ஒரு விற்பனையாளரால் விற்கப்படும் பண்டம். விலைக்கு வாங்குகிறவர் கோரிய தன்மையோ ஊட்டச்சத்தோ தரமோ இல்லாதிருக்கும்போது; அல்லது ஆ) அதன் தன்மை, சத்து அல்லது தரம் வேறு ஏதேனும் ஒரு பொருளால் பாதித்திருக்கும்போது; அல்லது இ) அந்தப் பண்டத்தின் தன்மை, சத்து அல்லது அதன் தரத்துக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் அதைவிட மட்டமான அல்லது மலிவான பொருள் ஏதேனும் முழுவதுமாகவோ பகுதியாகவோ கலக்கப்பட்டிருக்கும்போது; அல்லது ஈ) அதன் தன்மை, சத்து அல்லது தரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்தப் பண்டத்தின் அமைப்பான எதுவும், முழுவதுமாகவோ பகுதியாகவோ பிரித்தெடுக்கப்பட்டிருக்கும்போது; அல்லது உ) அந்தப் பண்டம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டோ சிப்பமாகக் கட்டப்பட்டோ குறைபாடுற்றதாகவோ உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய-<noinclude></noinclude> hcxagau8xk858sj0gkyqnpgi3jtzcbl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/888 250 629605 1947515 1938276 2026-06-18T05:32:13Z Booradleyp1 1964 1947515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர ராமாயண நாடகம்‌|858|உத்தரன்}}</noinclude>பெரிய இதிகாசங்களும் இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் கதைப் பகுதிகள் பிற இந்தியச் சமய இலக்கியங்களிலும் சிலபல வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பர் தமிழில் இராமகாதையினை விரிவாகச் செய்த பின்னர் நாடகம், அம்மானை, கும்மி, இசைப்பாடல், நாட்டுப் பாடல்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் அது உருப்பெற்றுத் திகழ்கிறது. சீர்காழி அருணாசலக்கவிராயர் இராமாயணத்தைக் கீர்த்தனை, விருத்தங்கள் ஆகியவற்றால் நாடகமாக அமைத்துள்ளார். அது ‘இராம நாடகக் கீர்த்தனை’ எனப்படும். அதில் அவர் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள பகுதியில் அமைந்த வரலாற்றையே நாடகப்படுத்தியுள்ளார்; உத்தரகாண்டப் பகுதியைச் சேர்க்காது விடுத்துள்ளார். உத்தரகாண்டம் என்னும் பகுதியிலடங்கிய செய்திகளை நாடகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததே ‘உத்தர ராமாயண நாடகம்’ என்னும் நூல். இந்நூலும் இராம நாடகக் கீர்த்தனை போலவே கீர்த்தனைகள், விருத்தங்கள் முதலியவற்றால் இயற்றப்பட்டதாகும். இதன்கண் சில கட்டளைக் கலிப்பாக்களும் வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கீர்த்தனைகள் இராக தாளக் குறிப்பினைக் கொண்டுள்ளன. உத்தர ராமாயண நாடகத்தை இயற்றியவர் அனந்த பாரதி அய்யங்கார். தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய இவர் கி.பி. 1786 முதல் கி.பி. 1846 வரை வாழ்ந்தார். இவர் தம் நாடக நூலினைக் குடந்தைச் சாரங்கபாணித் திருக்கோயில் சிங்கார மண்டபத்தில் அரங்கேற்றினார். இதனைக் ‘கவி வாதி சிங்கார மண்டபத்தில், அனந்தவேதன் அரங்கேற்றினானே’ என்னும் இந்நூலிலுள்ள செய்யுட்பகுதி குறிப்பிடுகிறது. ‘தமிழில் இராமாயண உத்தரகாண்டம்’ என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. அது விருத்தச் செய்யுட்களால் ஆகியது. அவ்வகையில் நாடக வடிவில் அமைக்கப்பட்ட இந்த நூலை ‘உத்தரகாண்ட நாடகம்’ என்னாமல், ‘உத்தர ராமாயண நாடகம்’ என்று ஆசிரியர் பெயர் அமைத்துள்ளதிலிருந்து, இராமாயணத்தின் உந்தரகாண்டம் உத்தர ராமாயணம் என்னும் பெயராலும் வழங்கப்பட்ட செய்தி புலனாகிறது. இராவணன் இறப்புக்குப் பின்னர், அயோத்தி நகர் திரும்பி முடிபுனைந்து கொண்ட இராமன் வேண்டிக்கொள்ள, உத்தர காண்ட வரலாற்றை அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இராவணன், கும்பகருணன் ஆகியோர் பிறப்பு வரலாறு, கும்பகருணன் வரம், மேகநாதன் வரலாறு, குபேரன் வரலாறு, இலங்கை நகர அமைப்பு, சூர்ப்பணகை கணவன் கொல்லப்படல் முதலிய செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மேலும், சீதைக்கு உண்டாகிய பழிச்சொல், சீதை வான்மீகி ஆசிரமத்தில் உறைவது, குசனும் இலவனும் பிறத்தல், வான்மீகி குசலவர்க்குத் தம் இராமாயண காவியத்தைப் பாடக் கற்பித்தல், இராமனின் அசுவமேதயாகம், குசலவர் அவ்வேள்வியில் இராமாயண கானம் பாடுதல், சீதை அங்குவந்து சூளுரைத்துத் தான் குற்றமற்றவள் என்பதனை நிருவுதல், சீதை இரசாதல உலகம் செல்லுதல், சீதையைத் தம்மிடமிருந்து பிரித்த பூமி தேவியை இராமன் சினத்தல், அச்சினத்தைப் பிரமன் தணித்தல், சீதையைப் பிரிந்த இராமன் பொன்னால் சீதை உருவமைத்துப் பத்தாயிரம் ஆண்டு ஆளுதல், குசலவர் முதமியோர்க்கு ஆட்சி நல்குதல், இயமன் அந்தணனாக வந்து இராமனை ஒருவரும் அறியாமல் மேலுலகம் அழைத்துச் செல்லுதல், இராமன் சரயு நதிக்கரை சென்று, விண்ணுலகிலிருந்து வந்த விமானத்தேறித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளுதல், வீடணன், அனுமன் ஆகியோர்க்கு அவன் அழியா வரம் (சிரஞ்சீவித் தன்மை) அளித்தல், அனுமன் வரலாறு ஆகிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாகம் இந்நூலாசிரியரின் சீடர் ஒருவரால் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூல் சென்னை அரசாங்கக் கையெழுத்துப்படிவ நூலகத்தால் 1960–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. <section end="உத்தர ராமாயண நாடகம்"/> <section begin="உத்தரன்"/> {{dhr}} {{larger|<b>உத்தரன்</b>}} மகாபாரதக் கதைமாந்தருள் ஒருவன்; மச்சநாட்டு மன்னன்; விராடன் என்பவனுக்கு மகன். இவன் தாயின் பெயர் சுதட்சணை, பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த (அஞ்ஞாதவாச) காலத்தில் இவன் நாட்டில்தான் வாழ்ந்தனர். துரியோதனன் ஆட்கள் இதனைக் குறிப்பாக கு உணர்ந்து, வெளிப்படுத்தும் கருத்தில் அந்நாட்டில் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். உத்தரன் பேடி ஒருவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டு ஆனிரை மீட்கச் சென்றான். எதிரியின் படை கண்டு அஞ்சிப் பின் வாங்கினான். பேடி வடிவில் இருந்த அருச்சுனன் தன் உண்மையை அவனுக்கு உணர்த்தி, உத்தரனைத் தேரோட்டியாகக் கொண்டு போர் செய்து வென்று ஆனிரைகளை மீட்டான். தன் மகனே போரிட்டு வென்றதாக விராடன் எண்ணினான். ஆனால் மறைந்து வாழ்ந்த தருமரால் அவன் உண்மை<noinclude></noinclude> qc7iq4a11se1xzv1v1c1mp660l5ool3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/889 250 629606 1947514 1938717 2026-06-18T05:31:49Z Booradleyp1 1964 1947514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்‌தரன்‌|859|உத்தரை}}</noinclude>உணர்ந்தான். பாரதப் போர் நடைபெற்ற காலத்தில், உத்தரன் முதல்நாள் போரில் சல்லியன் என்பவனால் கொல்லப்பட்டான். <section end="உத்தரன்"/> <section begin="உத்தரன்2"/> {{dhr}} {{larger|<b>உத்தரன்{{sup|2}}</b>}} சிலப்பதிகாரத்தால் அறியலாகும் வடநாட்டு அரசர்களுள் ஒருவன்; கண்ணகிக்குச் சிலையமைக்க விரும்பிய சேர மன்னன் செங்குட்டுவன், அதற்காக இமய மலையில் கல் கொணரும் பொருட்டுப் படையொடு வடநாடு சென்றான்; நூற்றுவர் கன்னர் அளித்த படகுகளின் உதவியால் கங்கையாற்றைக் கடந்து, உத்தரநாடு சென்று பாசறை அமைத்திருந்தான். செங்குட்டுவனை எதிர்த்த வடநாட்டு மன்னர்களாகிய கனகவியசருக்குத் துணையாகப் பல மன்னர் ஒன்று திரண்டு வந்து எதிர்த்தனர். அவர்களுள் ஒருவன் உத்தரன். ஏனைய மன்னர் விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் ஆகியோர். இவர்களுடன் செங்குட்டுவன் புரிந்த போரில் இம்மன்னர்கள் தோற்றுச் சிதறியோடினர். <section end="உத்தரன்2"/> <section begin="உத்தராயணம்"/> {{dhr}} {{larger|<b>உத்தராயணம்:</b>}} அயணம் என்பதற்கு வினை அடிப்படையில் செல்லும் வழி என்பது பொருள். இடத்திற்கு ஏற்ப இதற்குக் கதி, இருப்பிடம் என்றும் பொருள் அமையும். நாராயண, இராமாயண, பாராயண போன்ற தொடர்களில் இதனைக் காணலாம். கதிரவன் கதிர்கள் (கிரணங்கள்) நேராகவன்றிச் சற்றுச் சாய்வாகவும் பாய்வதாலேயே பொருள்களில் உள்ள ஈரம், உரம் போன்றவற்றை அவற்றால் உரிஞ்ச முடிகிறது. சூரிய சக்தி கொண்ட மின்னாற்றல் எப்பொழுதும் குறுக்கேதான் பாயும். கதிரவனின் ஆயிரம் கதிர்களின் நடுவே மிக நுண்ணிய துளை இருக்கலாம் என்று வேதம் கூறுகிறது. உள்ளத்திற்கும் உடலுக்கும் வலிமை ஊட்ட வல்ல ‘மர்த்யம்’ என்ற ஆற்றல் உடலிலும், ஆன்மபலம் அளிக்கவல்ல ‘அம்ருதம்’ என்னும் ஆற்றல் உச்சந்தலையின் முன் பகுதியிலும் கதிரவன் கதிர்கள் சிலவற்றின் வழியாகப் பாய்கின்றன என்று வேதம் கூறுகிறது. காலம் என்பது கடவுள் போன்று பிரிக்கவியலாத ஒரு தத்துவம். அது தவறின்றிச் செயற்படவல்லது. வைதிக நெறியில் இயற்றப்பட வேண்டிய கடன்கள் நேரம், நாள் கருதிச் செய்ய வேண்டி இருப்பதால், சோதிட சாத்திரத்திற்கிணங்க ஊழி, ஆண்டு, பருவம், மாதம், நாள் முகூர்த்தம், ஓரை முதலியனவாகக் காலம் பிரிக்கப்பட்டுள்ளது. கதிரவன் பூமியைச் சுற்றுகிறான் என்ற கொள்கை கொண்ட சாத்திர நூல்கள், கதிரவன் பூமியின் வட பகுதியில் சற்றுச் சாய்ந்து செல்லும் கால அளவை உத்தராயணம் எனவும், தெற்குப் பகுதியில் சாய்ந்து செல்லும் கால அளவைத் தட்சிணாயணம் எனவும் கூறுகின்றன. அமரம் என்னும் நிகண்டு காலத்தை நிமிடம், காட்டை, கலை, கணம், முகூர்த்தம், பொழுது (பகல் அல்லது இரவு), நாள், பட்சம், மாதம், பருவம், அயணம் எனப் பகுத்து விளக்குகிறது. மூன்று பருவங்கள் கொண்டது ஓர் அயணம். தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்கள் உத்தராயணம் எனப்படும். காலவகைகளுள் நன்மை பயப்பனவும் தீமை விளைவிப்பனவும் உள்ளன. அவை முறையே மங்கல காலம், அமங்கல காலம் எனப்படுகின்றன. இராகு காலம், அமங்கலயோகம், தியாச்சியம் முதலிய காலங்களில் நற்செயல்கள் செய்தல் தகாது. கால நுட்பங்களை நன்கு உணர்ந்த ஆபசுத்தம்ப முனிவர் உத்தராயணம் வளர்பிறையில் குறிப்பிட்ட நாளில் மங்கல வேளையில்தான் செயல்களைச் செய்ய வேண்டும் எனவும், அப்பொழுதுதான் பூமியில் கதிரவன் கதிர்கள் வாயிலாக நிலச்சத்து ஏற்படும்; பூமிக்கடியில் உள்ள இரத்தினங்கள் முதலியன கெடாமலும் இருக்கும்; உயிரினங்களின் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றில் ‘ஊர்க்கு’ என்ற சீவாதார இரசாயனப் பொருள் சுரக்கும் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், அவர் கிரகணம் தவிர்த்து மற்றைய வேளைகளில் பூமலம், நீர்மலம், வானமலம் போன்ற மலங்கள் கதிரவன் கதிர்களுக்குள் புகா எனவும் கூறுகிறார். பழைய சாத்திர நூல்களில் தீயவர்களின் உயிர்க் காற்று உடலில் உள்ள 9 துளைகளுள் ஒன்றின் மூலம் வெளிப்படும். ஆனால் வீரர்கள், யோகிகள், சரணாகதர்கள், மெய்யடியார்கள் ஆகியோரின் உயிர்க் காற்று உச்சந்தலை மூர்த்தன்ய நாடி மூலம் வெளிப்பட்டு, சூரிய மண்டலத்தின் நடுவழியாகச் செல்லும். அவர்களுக்கு நரகம் வாய்க்காது. இவ்வாறு ஆன்மா செல்லும் வழியை அனுபூதி மார்க்கம், சமாதிமார்க்கம், அர்ச்சிராதிமார்க்கம் எனக் கூறுவர். அர்ச்சிராதிமார்க்கத்தில் முதன் முதலில் உத்தராயண தேவதை, வளர்பிறைத் தேவதை, பகல்தேவதை ஆகியோர் வழி நடத்துகின்றனர் என வைணவச் சாத்திரங்கள் கூறுகின்றன. {{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <section end="உத்தராயணம்"/> <section begin="உத்தரை"/> {{dhr}} {{larger|<b>உத்தரை</b>}} பாரதப்போர் வீரர்களுள் ஒருவனும் மச்ச நாட்டின் அரசனுமாகிய விராடனுக்கும் சுதட்சணைக்கும் பிறந்தவள். பாண்டவர்கள் துரியோதனன் கூறியவாறு ஓராண்டுக் காலம் மறைந்துறையும் வாழ்க்கை (அஞ்ஞாத வாசம்) நடத்த விராடனிடம் சென்றனர். அப்போது பேடி உருவங் கொண்டிருந்த அருச்சுனனிடம் இவள் நடனம் கற்றுக் கொண்டாள். விராடன் மகன் உத்தரன் இவளை<noinclude></noinclude> lbgela2fro8mxmbftl725vy0jfbo0jr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/891 250 629614 1947517 1938719 2026-06-18T05:35:15Z Booradleyp1 1964 1947517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தான துவாதசி|861|உத்தான பாதன்}}</noinclude>வேறு, இவன் வேறு; மரம் வேறு, விலங்கு வேறு என்பன போன்ற வேற்றுமை உணர்வு தோன்றுகிறது. ஆனால் பிரம்மனை அறிந்து ஒடுங்கிய நிலையில் எல்லாம் பிரம்மனாகவே விளங்கும். பல்வேறு வகைப் பூக்களிலிருந்து கொண்டுவரப் பெற்ற தேன் எல்லாம் தேன் கூட்டிற்குள் வந்தபோது, வேறுபாடின்றித் தேன் என்னும் ஒன்றாகவே அமைவதை எடுத்துக்காட்டி, இதனை உத்தாலகர் புலப்படுத்துகிறார். தானும் பிரம்மனும் ஒன்று என்னும் உணர்வு அடைவதே வீடு அடைதல் ஆகும். இவ்வுணர்வு அடைந்தோர் கடலுள் வந்து கலந்த அனைத்து ஆற்றுநீரும் பிறப்பிடம், ஊர்ந்த இடம், பெயர் போல்வன மறைந்து கடல்நீர் என்னும் ஒன்றாகவே அமைதலைப் போன்று, எல்லாம் தாமே என்னும் ஒருமைப்பாட்டுணர்வில் திளைப்பர் என்று கூறும் இவர், உடல் ஆன்மா வெளியேறியதும் உருமாறத்தக்கது; ஆனால் ஆன்மா நுண்பொருளாக அழிவின்மை உடையது என விளக்குகிறார். உத்தாலகரிடம் மெய்யறிவு பெற்ற சுவேதகேது தன்னை உணர்ந்தநிலையில் பேரறிஞன் ஆனான். <section end="உத்தாலகர்"/> <section begin="உத்தான துவாதசி"/> {{dhr}} {{larger|<b>உத்தான துவாதசி</b>}} என்பது கார்த்திகை மாதத்தில் வரும் வளர் பிறையின் பன்னிரண்டாம் நாளைக் குறிக்கும். மாதந்தோறும் அமையும் ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களும் திருமாலுக்குகந்த நாட்களாகக் கருதப்படுகின்றமையால், அவற்றில் வைணவர்கள் நோன்பு மேற்கொள்வர். சந்திரன் இயக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிக்கும் முறை இந்தியாவில் முற்காலத்தில் இருந்துவந்தது. சந்திரன் எனப்பொருள்படும் மதி, திங்கள் என்னும் சொற்களின் அடிப்படையில் தமிழில் மாதம் என்றும் திங்கள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இப்பெயர்கள் நான்கு வாரங்கள் கொண்ட காலப்பகுதியைக் குறிப்பன. அமாவாசைக்கு அடுத்த முதற்பிறைநாளை முதல் நாளாகக் கொண்டு எண்ணுங்கால், பன்னிரண்டாம் நாள் துவாதசி எனப்படும். அவ்வாறே, பௌர்ணமியினை அடுத்த நாளை முதலாகக் கொண்டு எண்ணப்படும் பன்னிரண்டாம் நாளும் துவாதசி எனப்படும். ஆடிமாத வளர்பிறைத் துவாதசியன்று திருமால் உறங்கத் தொடங்குவார் என்றும், கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசி அன்று அவர் துயிலெழுந்து, தம் படைப்புத் தொழிலில் முனைந்து ஈடுபடுவார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால் ஆடி மாத வளர்பிறைத் துவாதசி ‘சயன துவாதசி’ என்றும், கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசி ‘உத்தான துவாதசி’ என்றும் கூறப்படுகின்றன. உத்தானம் என்பது துயில் எழுதல் என்று பொருள்படும். வைதிகச் சமயத் துறவியர் ஆடி மாத ஏகாதசியன்று தாம் மேற்கொள்ளும் சாதுர் மாச நோன்பினைத் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறைத் துவாதசியில் நிறைவு செய்வர். அக்காலம் மழைக் காலமாதலின் அவர்கள் இடம்பெயராது ஓரிடத்தே தங்கியிருந்து, வேதம் ஓதுதல் முதலியவற்றை மேற்கொண்டு நோன்பியற்றுவர். உத்தான துவரதசியன்று திருமாலை நினைந்து நோன்பியற்றுவோர் அவரைத் தாமோதரன் என்னும் திருநாமத்தால் வழிபடுவது சிறப்பாகும். திருமால் துளசியிலும் நெல்லியிலும் உகந்து உறைவார் என்று கூறப்படுகின்றமையால், உத்தான துவாதசி நோன்பியற்றுவோர் பிருந்தாவனம் எனப்படும் துளசி மாடத்தில் நெல்லிக் கொம்பினை வைத்து, அதன் அடியில் கண்ணன் திருவுருவினை அமைத்து வழிபாடு செய்வர். வைணவர்கள் தங்கள் இல்லங்களில் துளசிமாடம் அமைத்துத் திருமாலை நாள்தோறும் வழிபடுவது முறையாகும். அங்ஙனம் துளசி, நெல்லி அமைத்து நாடோறும் வழிபட இயலாதவர்கள் உத்தான துவாதசி நாளில் அவ்வாறு வழிபடுவார்களாயின் நற்பயன் அடைவார்கள் என்பது மரபுவழி அமைந்த நம்பிக்கையாகும். உத்தான துவாதசிக்கு முதல் நாள் உத்தான ஏகாதசி எனப்படும். <section end="உத்தான துவாதசி"/> <section begin="உத்தானபாதன்"/> {{dhr}} {{larger|<b>உத்தானபாதன்</b>}} சுவாயம்பு மநுவிற்கும் சதரூபை என்பவளுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன். இவனுடைய அண்ணன் பெயர் பிரியவரதர். இவர்கள் இருவரும் வாசுதேவருடைய கூறாக விளங்கினார்கள். உலகத்தைப் பார்ப்பதில் நோக்கமுடையவர்களாக இருந்தார்கள். அரச மரபில் உதித்த உத்தானபாதனுக்குச் சுநீதி, சுருசி ஆகிய இரண்டு துணைவியர் இருந்தனர். இவனுக்குச் சுநீதியின் மூலம் துருவன் என்ற மகனும் சுருசியின் மூலம் உத்தமன் என்ற மகனும் இருந்தனர். இவன் சுநீதியிடம் அன்பில்லாமல் சுருசியிடத்தில் மிகவும் அன்புள்ளம் கொண்டவனாக இருந்தான். ஒரு சமயம் சுருசியின் மகனாகிய உத்தமன் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது துருவனும் தன் தந்தையின் இருக்கையில் அமர்ந்து விளையாடச் சென்றான். அரசன் அவனைப் பொருட்படுத்தவில்லை. சுருசி துருவனை நோக்கி நீ என் வயிற்றில் பிறவாமையினால் அரசனுடைய ஆசனத்தில் ஏறுவதற்குத் தகுதியற்றவன். ஆகையினால் தவத்தினால் திருமாலை வழிபட்டு அவருடைய அருள் பெற்று என்னுடைய வயிற்றில் பிறந்தால்<noinclude></noinclude> l4f1v6tojz38oash3kej8puhe7xzgoz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/1005 250 630023 1947373 1939845 2026-06-17T14:57:27Z Booradleyp1 1964 1947373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உரிச்சொல்‌ நிகண்டு|975|உரிச்சொல்‌ நிகண்டு}}</noinclude>உரியியலைச் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதியாகவே அமைத்துள்ளனர் என்பதும் தெளிவு. இது வரை கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உரிச்சொற்களின் இயல்புகளை விளக்கும் முயற்சியில் சில முடிவுகள் இவண் தரப்படுகின்றன. 1. உரிச்சொற்கள் முழுமையும் ஒருங்குசேர ஒரே சொல்வகையினுள் அடங்குவதில்லை. 2. உரிச்சொற்களுள் பல வேர்ச்சொற்களாக அமைகின்றன. எனினும், அவை எல்லாவற்றையும் தாதுக்கள் என்றோ வேர்கள் என்றோ கூறுதல் இயலாது. 3. தொல்காப்பிய உரியியலில் உறு, தவ, நனி, கய, வய போன்ற பதினாறு சொற்களும் பிற இலக்கண நூல்களில் சில சொற்களும் தழுவும் சொற்களாக உள்ளன. இவற்றைப் பெயர்வினைகளாகக் கொள்ளுதல் இயலாது. 4. தொல்காப்பியர் சொல்வகைளில் ஒன்றாக உரிச்சொல்லைக் கொள்ளவில்லை எனவும் உரையாரிசிரியர்களும் பிற்கால இலக்கண நூலாரும் அதனை ஒரு தனிச்சொல்வகையாகக் கொள்ளவே அது மொழி மரபில் அத்தகைய இடத்தைப் பெற்றுவிட்டது எனவும் கருத்துகள் உள. 5. இலக்கண நூல்களில் உரியியல் சில வழக்கிழந்த பொருள் கூறும் நோக்குடனேயே அமைக்கப்பட்டிருக்கலாம். எனவே, அதனைச் சொற்களஞ்சியஞ் சார்ந்த பகுதி என்பதில் தவறில்லை. {{Right|<b>மோ.இ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>ஆதித்தன், அ.கு.,</b> உரிச்சொல் விளக்கம், சாந்தி நூலகம் சென்னை, 1967. <b>வெள்ளைவாரணர். க.,</b> தொல்காப்பியம்-நன்னூல் (சொல்லதிகாரம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். <b>Vaiyapuri Pillai, S.,</b> History of Tamil Language and Literature, New Century Book House, Madras, 1956. <b>மீனாட்சி சுந்தரன். தெ.பொ.,</b> உரிச்சொல், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1974. <section end="உரிச்சொல்"/> <section begin="உரிச்சொல் நிகண்டு"/>{{dhr}} {{larger|<b>உரிச்சொல் நிகண்டு</b>}} திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுகளைப் பின்பற்றி இயற்றப்பட்டதாகும். இதற்கு ஆசிரிய நிகண்டு என்னும் பெயரும் உண்டு. இதன் ஆசிரியர் காங்கேயர். இவர் தம் நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயரிட்டார் என்பது, ‘முந்துள திவாகரம் பிங்கல நிகண்டும் முந்துகாங் கேயன் உரிச்சொல்’ என்னும் இதன்பாயிரப்பகுதியால் அறிய வருகிறது. இந்நூல் வெண்பாவினால் செய்யப்பெற்றுள்ளது. சைவசாத்திரமாகிய சிவப்பிரகாசத்துக்குச் சிவப்பிரகாசர் என்பாரின் பேருரை கி.பி. 1488–இல் இயற்றப் பெற்றது. இவ்வுரையில், ‘உயிர்ப்பொலி வங்கூழ் சலனன் வாதம் வளி மாருதம்’ என வரும் உரிச்சொல் நிகண்டுப் பகுதியை (1:35) இவர் மேற்கோளாகக் காட்டியுள்ளார் (சிவப். 38 உரை). எனவே, இவர் காலத்திற்கு முந்தியது இந்நூல் என்பது தெளிவு. ‘வணங்கல்’ என்னும் பொருளில் வரும் சொற்களுள் ‘சலாம் செய்தல்’ என்பதனையும் இந்நூல் (9:2) தருகிறது. ‘சலாம்’ என்பது முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் நாட்டு வழக்கிற் புகுந்தது. ஆகவே, இந்த உரிச்சொல் நிகண்டை கி.பி. 14-ஆம் நூற்றாண்டைய நூல் எனலாம். இதற்குரிய பழம் பதிப்பு கி.பி. 1840-இல் வந்த துத்தன்துரை என்பாரின் பதிப்பாகும். உரிச்சொல் நிகண்டில் 12 தொகுதிகள் இப்பொழுது அச்சில் காணப்படுகின்றன. ஆனால், முந்திய பதிப்புகளில் 10-ஆவதான ‘ஒலி பற்றிய பெயர்த் தொகுதி’யும் 12–ஆவதான பல் பெயர்க்கு ஒரு பெயர்த் தொகுதியும் காணப் பெறவில்லை. பழைய ஏடுகளிலும் 10 தொகுதிகளே உள்ளன. :‘உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல் தன்னை :{{gap|1em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}...{{gap|3em}}... :பத்துத் தொகுதியில் சேர்த்தான் எவரும் படித்திடவே’ எனவரும் அரிய செய்யுளும் இந்நூல் 10 தொகுதிகளையே உடையது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றால் 10, 12–ஆம் தொகுதிகளைப் பிற்காலத்து ஆசிரியர் ஒருவர் பாடிச் சேர்த்திருக்க வேண்டும் என்பது தெரியவரும். சொற்பொருள் உணர்ந்து ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதியில் 36 வெண்பாக்கள் உள. இவற்றில் விளக்கப் பெற்ற சொற்கள் 151. பல்பொருட் சொற்கள் வெண்பாவில் அமையும் வகையில் வைத்துப் பாடப்பெற்றுள்ளனவே யன்றி, தக்க காரணங்களால் அடைவுபடுத்தியதாகக் கொள்ளக் கூடவில்லை. {{Right|<b>மு.ச.</b>}} <section end="உரிச்சொல் நிகண்டு"/> {{nop}}<noinclude></noinclude> e3x1ddtqomdxn581pv9ceptbzgoit5o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262 250 639258 1947438 1938594 2026-06-18T03:15:26Z Saranya V R 14232 1947438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Leelasuresh37" /> {{Rh|238||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பஞ்சாப் நாஷனல் பாங்க் டால்மியா — ஜெயின் குடையின் கீழ்! இவ்விதமான பொருளாதாரத்துறை ஆதிக்கத்தைத் தகர்த்திடத்தான், பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று முற்போக்காளர் வலியுறுத்துவது. 1962-ம் ஆண்டு, நமது கழகத் தேர்தல் அறிக்கையிலே நாம் இதனை ஆதரித்திருக்கிறோம். காங்கிரஸ் அரசும் கட்சியும் இந்த முதலாளிகளுக்குக் கட்டியம் கூறிக்கொண்டும் மக்களிடம் மயக்கமொழி பேசிக்கொண்டும் வருகிறது. பாங்குகளை சமுதாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்போகிறோம் என்ற பேச்சு, இப்போது யோசித்துப் பார் தம்பி! கதையிலே சீமான் சொல்கிறானே, எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று, அது போன்ற விந்தைப் பேச்சா, வேறா? உனக்கும் எனக்கும் புரிந்திருக்கிறது. பயன்? நாட்டுக்கல்லவா புரிய வேண்டும்! {{rh|<br>30.10.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> i8tu5062le853dl0kn11aa5b7me7ij0 1947439 1947438 2026-06-18T03:15:52Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|238||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> பஞ்சாப் நாஷனல் பாங்க் டால்மியா — ஜெயின் குடையின் கீழ்! இவ்விதமான பொருளாதாரத்துறை ஆதிக்கத்தைத் தகர்த்திடத்தான், பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று முற்போக்காளர் வலியுறுத்துவது. 1962-ம் ஆண்டு, நமது கழகத் தேர்தல் அறிக்கையிலே நாம் இதனை ஆதரித்திருக்கிறோம். காங்கிரஸ் அரசும் கட்சியும் இந்த முதலாளிகளுக்குக் கட்டியம் கூறிக்கொண்டும் மக்களிடம் மயக்கமொழி பேசிக்கொண்டும் வருகிறது. பாங்குகளை சமுதாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்போகிறோம் என்ற பேச்சு, இப்போது யோசித்துப் பார் தம்பி! கதையிலே சீமான் சொல்கிறானே, எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று, அது போன்ற விந்தைப் பேச்சா, வேறா? உனக்கும் எனக்கும் புரிந்திருக்கிறது. பயன்? நாட்டுக்கல்லவா புரிய வேண்டும்! {{rh|<br>30.10.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> oto9vpcnzvw02tbcl69cg08kofhoncr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274 250 639269 1947440 1938601 2026-06-18T03:19:04Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|250||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால் அவர்களின் பெருந்தலைவர் காமராஜரே, ஜெய்பூர் மாநாட்டிலே பேசினார்; தெரிந்துதான் பேசி இருக்க வேண்டும்! என்ன, பேசினார் என்பதனை நான் ராஜ்ய சபையிலேயே எடுத்துரைத்தேன். பதினோரு ஆண்டுகளாக நாம் சோஷியலிசம் பேசுகிறோம்; ஆனால் செயல்படுத்தவில்லை. ஏழை–பணக்காரர் பேதத்தைப் போக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, அதனைக் குறைக்கக்கூட நம்மால் முடியவில்லை. இந்தக் கருத்துப்படவே காமராஜர் பேசியிருக்கிறார். அதனையே நாம் சுட்டிக் காட்டும்போது ‘சுரீல்’ என்று கோபம் பிறக்கிறது; விட்டேனா பார்! என்று வீறாப்பு பேசுகிறார். காங்கிரசில், மாஜி—மன்னர்களையும் தொழில் அதிபர்களையும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் இலட்ச இலட்சமாகப் பணமும் ‘கைநீட்டி’ வாங்கிக்கொண்டு, அதைக் கொண்டு ஓட்டு வேட்டை ஆடிக்கொண்டு, நான் சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறேன் என்று பேசி வருவது, குடை ராட்டினத்துச் சிங்கப் பொம்மை மீது உட்கார்ந்து கொண்டு என்னைச் சாமான்யமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்; நான் சிங்கத்தையே அடக்கி, அதன்மீது சவாரி செய்பவன்! என்று சிறுவர்கள் பேசி, கேட்பவர்களுக்குச் சிரிப்பு மூட்டுவதற்கு ஒப்பானதாகும் இல்லையா! {{rh|<br>6.11.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 3unj51nru7ajy6cj7lxvhd4sa6dfy61 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 639616 1947441 1938607 2026-06-18T03:20:55Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|262||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> மக்கள் இதனை அறியமாட்டார்களா—இப்படிப்பட்டவர்களைக் கொண்டு இயங்கி வரும் காங்கிரஸ் கட்சி, எப்படி சோஷியலிசத்தை கொண்டுவர முடியும் என்று கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் ஏற்படவே செய்யாதா காமராஜருக்கு? ஏற்படும்! ஆனால், கதை தந்துள்ளேனே அதுபோல, குதிரையைப் பறக்க வைக்கிறேன் என்று கூறி, மரண தண்டனையிலிருந்து இப்போதைக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறானே தந்திரக்காரன் அதுபோலக் காமராஜர், பின்னாலே என்னவோ நடந்துவிட்டுப் போகட்டும், இப்போதைக்கு சோஷியலிசம் பேசி மக்களை மயக்கி ஓட்டுக்களைத் தட்டிக்கொண்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்று திட்டமிடுகிறார். புரிகிறதல்லவா? {{rh|<br>13.11.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}} .<noinclude></noinclude> kv2ge4buy7v3l03c2k1weq4g7dmwiz9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288 250 639688 1947442 1927304 2026-06-18T03:24:17Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|264||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இணையில்லா விழிப்புணர்ச்சி! என்று எண்ணத்தக்க நிலைமை! காண்கின்றேன், களிப்புக் கடலில் மூழ்கிடுகின்றேன். எத்தனை கடமை உணர்ச்சி இவர்கட்கு! உழைத்திடும் உத்தமர்களாம் இவர்கள் ஊர் சீர்படப் பாடுபட்டாக வேண்டும் என்ற பண்பு மிக்கோராகவன்றோ விளங்குகின்றனர். ஏழ்மை! நலிவு! வாழ்வின் சுமை! எல்லாவற்றையும், தாங்கித் தாங்கிக் கூனிப்போய்க் குறுகிப்போய், எதிலும் ஈடுபாடு கொண்டிடத்தக்க தெம்பு அற்றுப்போய், 'இருக்கின்றோம் இறந்துபட இறந்துபடும் வரையில் இடர்ப்பாட்டில் உழல்கின்றோம்! என்னே இவ் வாழ்க்கை! எதற்கோ இவ்வாழ்கை! என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்திடும் இவர்களா, நாடு, மொழி, வளம், உரிமை, நல்லறம், நல்லாட்சி என்பன போன்ற இலட்சியங்களை உணர்ந்து அவைதமைச் செயலிலே கண்டிட கிளம்பிடப் போகிறார்கள் என்ற ஐயப்பாடு குடையும் நிலையினனாகப் புறப்பட்ட என்னையே, அவர்கள் தமது ஆர்வத்தினால், சலியாத உழைப்பினால், தளராத ஊக்கத்தினால், புது நம்பிக்கை கொண்டிடச் செய்துவிட்டனரே! {{left_margin|3em|நான் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டிடச் சென்றேன்! அவர்களல்லவா எனக்கு உன்னதமான உணர்ச்சியினைத் தந்துள்ளனர். ஏதாகிலும் கிடைத்திடாதா, கிழங்கு கிளிஞ்சல் போன்றவை யேனும் என்றெண்ணிப் பூமியினைக் குடைந்திடும்போது, தங்கப்பாளம் கரத்தினில் தட்டுப்பட்டால் பெறுபவன் எத்துணை மகிழ்ச்சி பெற்றிடுவான். அந்நிலையன்றோ எனக்கு! உணர்ச்சி ஒரு செல்வம்! உண்மை! அந்தச் செல்வத்தைக் குவியல் குவியலாக, குன்றன்ன அளவினதாகக் காண்கின்றேன்; ஒவ்வோர் நாளும்; ஒவ்வோர் இடத்திலும்.}} காலையிலே, மேயரும், மாவட்டச் செயலாளரும், மணிமொழியாரும் மற்ற நண்பர் சிலரும் மாநில மாநாட்டுக்கான 'திடல்' காண அழைத்துச் சென்றனர். சென்ற இடத்திலே, எத்தனை இனிய முகங்கள். நட்பு மொழிகள், வரவேற்கும் கண்கள்! இடத்திலே கள்ளி காளான் நிரம்ப உள்ளனவே என்கின்றேன்; இதுதான் இடம் என்று தீர்மானித்து விடுங்கள். எட்டே நாளில் இந்த இடம் பட்டுப் போல பளபளக்கிறது பாருங்கள் என்கிறார்கள். இங்கேதான் மாநாடாம்! மாநில மாநாடாம்! தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் வெளியிட அமைகின்ற மாநாடாம்! நமது பக்கத்தில்! நமது பேட்டையில்! நமது வட்டத்தில்!-என்றெல்லாம் பரிவுடன் பேசுகின்றனர். கழகத்திடம் அவர்கள் கொண்டுள்ள பாசம், வைத்துள்ள நம்பிக்கை தூய்மையானது; அது வளர்ந்த படியும் இருக்கிறது.<noinclude></noinclude> i7fhmo0s9ys5xgm5ltek5ykd34d15fp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289 250 639689 1947444 1927313 2026-06-18T03:27:15Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>வஞ்சகத்தாலும் சதிச் செயலாலும் அதனை வீழ்த்திடவோ குன்றச் செய்திடவோ முடியவில்லை. காலைக் கதிரவன் போன்ற ஓர் எழிலுடன், உயிரூட்டம் தரும் சக்தியுடன், அந்த எழுச்சி விளங்குகிறது. {{left_margin|3em|கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைத்திட முடியாத கருவூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது; உண்மை உழைப்பாளரின் உணர்ச்சி எனும் செல்வம்.}} ஆடவர் மட்டுமல்ல, தாய்மார்கள்; வாலிபர் மட்டுமல்ல, முதியோர்கள், சிறார்கள்; எல்லோரிடமுமே இந்த உணர்ச்சி ததும்பிடக் காண்கின்றேன்; உள்ளன்பு இருந்திடக் காண்கின்றேன். கண்டதும் ஓர் கனிவு! சொல் கேட்டதும் ஓர் பற்று! அழைத்ததும் ஓர் பாசம்! இதனைவிடச் சிறந்ததோர் செல்வம் எங்கும் இருந்திட முடியாது. {{left_margin|3em|பெருமழையால் வீடிழந்து விம்மிக் கிடந்திடுவோரைக் காணச் செல்கின்றேன், அவர்கள் வாழத்தொலி எழுப்பி அல்லவா வரவேற்கிறார்கள்! அண்ணன் வந்தானாமே, உங்கள் அண்ணன்! என்ன கொண்டு வந்து தந்தான்? உமது அல்லலைப் போக்கிட ஆளுக்கு ஆயிரம் என்றா அள்ளித் தந்தான்!-என்று கேலி மொழி பேசிடக் கூடச் சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள், நான் என்ன தந்தேன் என்றா கேட்டார்கள், அண்ணன் வந்தான்! எமது அல்லலைக் கண்டான்! ஆவன செய்திடுவான்!! என்றல்லவா நெஞ்சம் நெகிழக் கூறுகின்றனர்!}} அத்தகைய உள்ளன்பும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பியுள்ள நிலை கண்டேன், பெருமகிழ்வு கொண்டேன்; ஆனால் மறுகணமோ கவலை என் மனத்தினைக் குடைந்தெடுக்கலாயிற்று. இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சிப் பெருக்கையும், துச்சமென்று எண்ணி அல்லவா, ஆளவந்தார்கள், மீண்டும் நாங்களே அரியாசனம் அமர்வோம் என்று கூறுகின்றனர். அகந்தை எது என்போம். ஆயினும் எதனால் பிறந்துளது அந்த அகந்தை! இத்தனைத் தெளிவாக ஏழை எளியோர் பாட்டாளி விவசாயி கழகப் பற்றினைத் தெரிவித்திடுவது கண்டும் ஆளவந்தார்கள். மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெறப் போவதாக, எந்தத் தைரியத்தினால் கூறுகின்றனர்? {{left_margin|3em|எழுச்சி இருக்கிறது; நிரம்ப; ஆனால் ஏழையரிடம்! ஏழையர், விலை கொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள். உணர்ச்சி இருக்கிறது; நிரம்ப!}} ஆனால் அந்த உணர்ச்சியை மங்கச் செய்திடலாம். மடியச் செய்திடலாம். காசு வீசி!<noinclude></noinclude> hoai0nk3x414g8399qex3h7lequ596e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/290 250 639690 1947446 1927323 2026-06-18T03:31:07Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|266||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இவ்விதமாகவன்றோ, தம்பி! காங்கிரஸ் கட்சியினர் எண்ணுகின்றனர். ஏழையர்! ஆகவே அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம்; பணத்தால் அடித்து வீழ்த்தி விடலாம் என்றல்லவா எண்ணுகின்றனர். {{left_margin|3em|மனித இதயத்தை, தன்மானத்தை, உரிமை உணர்ச்சியை, கொள்கைப்பற்றை, அவ்வளவு மலிவான பண்டமாக அல்லவா கருதுகின்றனர்! பணம் பெருத்தான்கள்!}} கேவல ஜென்மங்கள் என்றல்லவா கருதுகின்றனர்! ஏழையரை! இதனை எண்ணும்போதுதான் தம்பி! கவலை என் உள்ளத்தைப் பிய்த்துத் தின்னுகிறது. {{left_margin|3em|காங்கிரஸ் ஆளவந்தார்கள் எண்ணுவது போல, ஏழையர் வீழ்ந்துபடுவர் என்ற அச்சம் அல்ல எனக்கு; எங்ஙனம் அவ்விதமான அச்சத்தை நான் கொள்ள முடியும். நான் காணும் கண்ணொளி, பாவனையா! நான் கேட்டிடும் பாசப்பேச்சு, பாவனையா! இல்லை! இல்லை! முக்காலும் இல்லை! இதயம் பேசுகிறது! உணருகின்றேன்! ஆகவே அவர்களை விலைகொடுத்து ஆளவந்தார்கள் வாங்கிவிடுவர் என்ற அச்சம் நான் கொண்டிடவில்லை! நான் கவலைகொள்வதற்குக் காரணம். பெரும்பாலான மக்களை ஏழ்மையிலே தள்ளி வைத்துள்ள எத்தர்கள், வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல, கேவலப் படுத்தவும் துணிகின்றனரே என்பதுதான்.}} மந்தகாச வாழ்வு நடாத்தும் சீமானின் மாளிகைகளிலே கொள்ளை இலாபமடிக்கும் வணிகக் கோட்டங்களிலே கூடிப்பேசுகின்றனர். தம்பி! கொந்தளித்தபடி இருக்கும் இந்த எழுச்சியை எப்படி வீழ்த்துவது என்பது பற்றி, போர் முறை வகுக்கிறார்கள். {{left_margin|3em|எதிர்த்துத் தாக்குவதா! சுற்றி வளைத்துக்கொள்வதா! பக்கவாட்டத்திலே பாய்ந்து பிளப்பதா! கோட்டைக்குள்ளே குத்துவெட்டு எழச்செய்வதா!}} எந்த முறையிலே தாக்குதலை அமைத்துக்கொள்வது என்று சூழ்ச்சி வகுத்தபடி உள்ளனர். காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள ஓட்டுகள் சிதறிடாதபடி பார்த்துக் கொள்ள, மும்முனைப் போட்டியைத் தவிர்த்திட வேண்டும் என்பதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடினும், ஏதாகிலும் ஒரு கட்சியைக கிளப்பி விட்டோ, தனிப்பட்டவர்களைத் தூபம் போட்டோ, மும்முனைப் போட்டியை உண்டாக்கியே தீருவது என்பது காங்கிரஸ்காரரின் சூழ்ச்சித் திட்டங்களிலே ஒன்று.<noinclude></noinclude> 5h8o4aff51r091edwnk22i4wo40bkp7 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1947343 1947204 2026-06-17T14:00:37Z Booradleyp1 1964 /* அட்டவணை 6 */ 1947343 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ ggjdp66qznifk9nfvid9ihighqjrtte 1947350 1947343 2026-06-17T14:12:19Z Booradleyp1 1964 1947350 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ au1m6rshda6ogobyzexn9rtektkow3e 1947361 1947350 2026-06-17T14:39:42Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1947361 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ je21y4278vj3xdqi9r0sbj68buxjvhq 1947371 1947361 2026-06-17T14:53:55Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1947371 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ tqs3cifc0jv2zqfp3psb03bq0ahh93y 1947430 1947371 2026-06-18T02:48:36Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1947430 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]]829 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ lb6q2e12iopcue2a7i2wbz9i9e8ibmv 1947484 1947430 2026-06-18T04:33:11Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1947484 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]]829 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ nnt7krewwiu435iwpvgy2hpoiqq44r3 1947500 1947484 2026-06-18T04:59:46Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1947500 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ 55uoidjgw94xypk3u9v4ynfqkc911yx 1947519 1947500 2026-06-18T05:43:06Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1947519 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ sw5ualzr4vfhiklwduz8d75b4tvefuv 1947520 1947519 2026-06-18T05:43:43Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1947520 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ lhzya7z49vuzasah2szhty4zte7f0ux 1947522 1947520 2026-06-18T05:45:57Z Booradleyp1 1964 1947522 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ jvnvxu9uxm2ik51wo50b9qlfhjx46kw 1947523 1947522 2026-06-18T05:47:34Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1947523 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ n05lro5prfk4fwa9ct3nr42u0q7o3di 1947524 1947523 2026-06-18T05:48:10Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1947524 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 9== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 8 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ eu0kpbnnfnh27j8sn8agrt5tjqd0g80 1947525 1947524 2026-06-18T05:48:35Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1947525 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 9== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ 8ztqip1j5i5hoye19tqrv95bxp602e3 1947526 1947525 2026-06-18T05:48:58Z Booradleyp1 1964 /* அட்டவணை 9 */ 1947526 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 9== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ lxr3r3j0nkzbfi6sildjqaz6w4adqf0 1947527 1947526 2026-06-18T05:49:20Z Booradleyp1 1964 /* அட்டவணை 9 */ 1947527 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 9== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]]-901 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ 6cw5zbrv25vdvj6kpbs8z56yt94fu2f அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf 253 643761 1947362 1935777 2026-06-17T14:44:26Z Info-farmer 232 பங்களிப்பு விவரங்கள் 1947362 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == == க.எ.130 == க.எ.130/ ப.எ.124+10 ; பரிசோதனைக்காக. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:05, 21 மே 2026 (UTC) muank9p80eohul5vifhhhzjvwe58dr8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/117 250 644514 1947449 1946184 2026-06-18T03:35:02Z Saranya V R 14232 1947449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ! <b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு... <b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே... <b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க... <b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு... <b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது... <b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது.. :(போகிறான்)}} தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும். எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude> gp1zjvj6gtaed64jfx2bykprzgqwxi9 1947613 1947449 2026-06-18T08:09:16Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ! <b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு... <b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே... <b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க... <b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு... <b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது... <b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது.. :(போகிறான்)}} தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும். எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude> 5rdkpj1qdrpvvkh040f2r12bgrh6vhz 1947636 1947613 2026-06-18T08:22:26Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ! <b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு... <b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே... <b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க... <b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு... <b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது... <b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது.. :(போகிறான்)}} தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும். எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude> t91jzob1uf66iagysnw6c50asp9noko 1947654 1947636 2026-06-18T08:33:25Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ! <b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு... <b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே... <b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க... <b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு... <b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது... <b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது.. :(போகிறான்)}} தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும். எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude> 5rdkpj1qdrpvvkh040f2r12bgrh6vhz 1947655 1947654 2026-06-18T08:45:38Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude> {{Hanging indent|3em|<b>போலீஸ் :</b> சரி! சரி! போ! போ! <b>பணிப் பெண் :</b> அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே, எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு... உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை வரப்போவுது இவருக்கு... <b>போர் :</b> அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே... <b>பணி : </b>நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத் தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே, எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன், பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா, சீமானாவறாங்க... <b>போர் :</b> ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான் காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு... <b>பணி :</b> நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும் அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத் தெரியுது... <b>போர் :</b> கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத் தெரியுது.. :(போகிறான்)}} தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படக் கூடும். எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று; கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude> iwik91z0ob98g8q8lo1hkbl5ss739cs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/118 250 644515 1947614 1945182 2026-06-18T08:11:32Z Santharabanu 15679 top space added 1947614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> 4oqqmtx8349bjo2nktpvrk5m1p006c0 1947615 1947614 2026-06-18T08:11:46Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> esiw85uzkbqk85yn5njentngjx1hww4 1947637 1947615 2026-06-18T08:22:43Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> daax2bxb7kfnvew8dlwzqvl4mb0bnc1 1947653 1947637 2026-06-18T08:32:59Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> esiw85uzkbqk85yn5njentngjx1hww4 1947657 1947653 2026-06-18T08:47:13Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு, இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக் கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> ia97mevjbyoxhkox2banft33tmcrxwl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/119 250 644516 1947616 1938489 2026-06-18T08:12:23Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> கடிதம் : 60 அடித்தாலும், அணைத்தாலும்...! காமராஜரும் பெரியாரும் - பெரியாரின் அரசியல் விளக்கம் நேருவும் திலகரும். தம்பி! அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும் பாசமது அறிந்துருகும். என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால் மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த மொழிகேட்டு இன்புற்று, மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே! நின் நோக்கம் அறிந்தேனன்றோ! மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ? இது அறமோ? என்றே கேட்பர் கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ! உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன் ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன், காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்; கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே! பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ? தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்<noinclude></noinclude> 47no81fxp2abjynwk8kbfxm0zh4pucb 1947638 1947616 2026-06-18T08:22:59Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> கடிதம் : 60 அடித்தாலும், அணைத்தாலும்...! காமராஜரும் பெரியாரும் - பெரியாரின் அரசியல் விளக்கம் நேருவும் திலகரும். தம்பி! அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும் பாசமது அறிந்துருகும். என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால் மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த மொழிகேட்டு இன்புற்று, மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே! நின் நோக்கம் அறிந்தேனன்றோ! மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ? இது அறமோ? என்றே கேட்பர் கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ! உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன் ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன், காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்; கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே! பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ? தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்<noinclude></noinclude> kd1gauga4mzmp7ajc7fb7svivd9e3ys 1947693 1947638 2026-06-18T11:24:40Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 60</b>}} {{center|{{x-larger|<b>அடித்தாலும், அணைத்தாலும்...!</b>}}}} {{dhr|3em}} {{left_margin|3em|<poem><b>காமராஜரும் பெரியாரும் - பெரியாரின் அரசியல் விளக்கம் நேருவும் திலகரும்.</b></poem>}} <b>தம்பி,</b> <poem> {{larger|<b>அ</b>}}டித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும் {{gap+|13}}பாசமது அறிந்துருகும். என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால் {{gap2}}மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த {{gap+|13}}மொழிகேட்டு இன்புற்று, மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே! {{gap+|8}}நின் நோக்கம் அறிந்தேனன்றோ! மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ? {{gap+|11}}இது அறமோ? என்றே கேட்பர் கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ! {{gap2}}உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன் ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன், {{gap2}}காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்; {{gap2}}கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே! பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ? {{gap}}தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான் </poem><noinclude></noinclude> lny7qu1vpbqljalxms2g743bgzbwjq8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/120 250 644517 1947617 1944698 2026-06-18T08:12:38Z Santharabanu 15679 top space added 1947617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான், பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே. பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்; அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ! அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ! அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா? அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ? அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ? ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ! அறியாது போனதுமேன், அறிவற்றோனே! அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்! அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்! பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச் சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி. அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு, சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்பட்டது; பதிகம் தரப்படவில்லை. மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது! சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப் பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்! பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டியதுண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது - வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude> tl3ojkbul6azuyooro0mtwbpj9dnzro 1947618 1947617 2026-06-18T08:13:30Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான், பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே. பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்; அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ! அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ! அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா? அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ? அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ? ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ! அறியாது போனதுமேன், அறிவற்றோனே! அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்! அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்! பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச் சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி. அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு, சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்பட்டது; பதிகம் தரப்படவில்லை. மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது! சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப் பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்! பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டியதுண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது - வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude> my0irqoydvqike47i1s1ukc61903hsv 1947635 1947618 2026-06-18T08:21:57Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான், பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே. பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்; அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ! அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ! அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா? அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ? அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ? ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ! அறியாது போனதுமேன், அறிவற்றோனே! அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்! அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்! பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச் சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி. அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு, சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்பட்டது; பதிகம் தரப்படவில்லை. மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது! சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப் பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று வைத்துக்கொள்ளேன்! பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டியதுண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது - வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின் வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude> qcu7foa6w7x5m23cgf21414p2b1rotc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/121 250 644532 1947633 1938491 2026-06-18T08:21:15Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude> பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது. அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில். பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி. அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே! அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே. அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர். அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்? ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude> kqizjicftiwr5hgvi4vk7wse3v1wl4j 1947634 1947633 2026-06-18T08:21:35Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude> பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது. அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில். பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி. அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே! அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே. அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர். அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்? ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude> qwt1mzcbomee21aeuxt4vtgzmny942i 1947652 1947634 2026-06-18T08:32:25Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude> பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது. அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில். பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி. அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே! அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே. அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர். அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்? ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude> kqizjicftiwr5hgvi4vk7wse3v1wl4j 1947658 1947652 2026-06-18T08:48:33Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude> பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம் என் நினைவிற்கு வந்தது. அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் - என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில். பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே, அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான் என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும், பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி. அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன் உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும் புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம் பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப் பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கே! அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே. அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன் முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர். அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித் தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில் கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்? ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில் தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்; மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன் நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ, அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude> t78go5cfp8hr43r6l321226zjbiipy2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/122 250 644533 1947649 1944696 2026-06-18T08:31:05Z Santharabanu 15679 top space added 1947649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப் போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள். பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க. சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ? அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும் ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக் கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா தீர்மானித்துக் கொள்வது. வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது, நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம் பணியாற்றுகிறோம். காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத் தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்; காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில், நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள வேண்டும். 'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற அளவுக்கா செல்வது! கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல வேண்டும்.<noinclude></noinclude> ktadpdey1wkrc4g914o3357qr5wljj0 1947650 1947649 2026-06-18T08:31:27Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப் போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள். பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க. சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ? அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும் ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக் கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா தீர்மானித்துக் கொள்வது. வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது, நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம் பணியாற்றுகிறோம். காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத் தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்; காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில், நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள வேண்டும். 'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற அளவுக்கா செல்வது! கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல வேண்டும்.<noinclude></noinclude> ouahg42tc7jg2axat0tb9i3cuck3byw 1947659 1947650 2026-06-18T08:51:44Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப் போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள். பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க. சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ? அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும் ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக் கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா தீர்மானித்துக் கொள்வது. வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது, நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம் பணியாற்றுகிறோம். காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத் தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்; காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில், நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள வேண்டும். 'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற அளவுக்கா செல்வது! கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல வேண்டும்.<noinclude></noinclude> 75zf8bus2pmkid27roj9n56nekh9vnw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/123 250 644534 1947619 1938496 2026-06-18T08:14:30Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||113}}{{rule}}</noinclude> கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது! தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால், மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும், அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய், இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன், அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம் கொண்டவர்கள்! காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர். காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர். நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர் என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று. எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக என்னால் உணர முடியவில்லை. பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா, அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன் வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர் என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக் கூறமுற்பட்டேன். பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை, திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்?<noinclude></noinclude> j7hzn92j1dg3z25zp9refylzbzcefdy 1947661 1947619 2026-06-18T08:56:58Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||113}}{{rule}}</noinclude> கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது! தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால், மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும், அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய், இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன், அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம் கொண்டவர்கள்! காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர். காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர். நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர் என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று. எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக என்னால் உணர முடியவில்லை. பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா, அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன் வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர் என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக் கூறமுற்பட்டேன். பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை, திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்?<noinclude></noinclude> 8mw6hex6r4msumnnogam6gl79d72wsg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/124 250 644535 1947557 1938497 2026-06-18T06:24:57Z Saranya V R 14232 1947557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவர் கடமை!</b>}} திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க மறுக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவர் நிலைமை!</b>}} இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்கவில்லையே அது ஏன்? {{c|<b>அது அவர் காட்டும் பொறுமை</b>}} தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச் செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு, வாளா இருக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய நிலைமை!</b>}} சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும் பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர், அது ஏன்? {{c|<b>அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை</b>}} இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர் என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம் இருக்கிறதே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!</b>}} காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும் பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக் கொஞ்சுகிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய ராஜதந்திரம்!</b>}} ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன், என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறாரே, அது ஏன்?<noinclude></noinclude> prsxxvo4kjwswwf2bcbdtwbt7msooxl 1947620 1947557 2026-06-18T08:15:08Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவர் கடமை!</b>}} திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க மறுக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவர் நிலைமை!</b>}} இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்கவில்லையே அது ஏன்? {{c|<b>அது அவர் காட்டும் பொறுமை</b>}} தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச் செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு, வாளா இருக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய நிலைமை!</b>}} சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும் பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர், அது ஏன்? {{c|<b>அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை</b>}} இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர் என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம் இருக்கிறதே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!</b>}} காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும் பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக் கொஞ்சுகிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய ராஜதந்திரம்!</b>}} ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன், என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறாரே, அது ஏன்?<noinclude></noinclude> 9z5bo493t32vwvc2im87341w5zlj91p 1947663 1947620 2026-06-18T08:58:10Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவர் கடமை!</b>}} திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க மறுக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவர் நிலைமை!</b>}} இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்கவில்லையே அது ஏன்? {{c|<b>அது அவர் காட்டும் பொறுமை</b>}} தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச் செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு, வாளா இருக்கிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய நிலைமை!</b>}} சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும் பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர், அது ஏன்? {{c|<b>அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை</b>}} இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர் என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம் இருக்கிறதே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!</b>}} காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும் பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக் கொஞ்சுகிறாரே, அது ஏன்? {{c|<b>அது அவருடைய ராஜதந்திரம்!</b>}} ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன், என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறாரே, அது ஏன்?<noinclude></noinclude> e6jhkm5yokl486d8kqrn09a218i98wf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/125 250 644537 1947558 1938499 2026-06-18T06:25:47Z Saranya V R 14232 1947558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||115}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவருக்கு மாமந்திரம்</b>}} இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும், செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம் கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி, பதிகத்தைப் படி! இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை எழுதுகிறேன். அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், 'பாசவலை வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால் சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப் பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம் நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக் காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது. திலகர் எனது மாபெருந் தலைவர்! சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண ஓடியிருக்கிறேன்! நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர். அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத் செலுத்துகிறேன். நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது போலப் பேசினார் இலண்டனில். திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார். நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல.<noinclude></noinclude> p6rfihf6qnmsx05797js3khf7kjrgaa 1947621 1947558 2026-06-18T08:15:33Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||115}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவருக்கு மாமந்திரம்</b>}} இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும், செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம் கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி, பதிகத்தைப் படி! இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை எழுதுகிறேன். அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், 'பாசவலை வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால் சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப் பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம் நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக் காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது. திலகர் எனது மாபெருந் தலைவர்! சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண ஓடியிருக்கிறேன்! நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர். அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத் செலுத்துகிறேன். நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது போலப் பேசினார் இலண்டனில். திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார். நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல.<noinclude></noinclude> n1x8fue7cgevwty6cilipd4onfpt2z5 1947664 1947621 2026-06-18T08:59:03Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||115}}{{rule}}</noinclude> {{c|<b>அது அவருக்கு மாமந்திரம்</b>}} இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும், செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம் கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி, பதிகத்தைப் படி! இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை எழுதுகிறேன். அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், 'பாசவலை வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால் சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப் பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம் நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும், அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக் காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது. திலகர் எனது மாபெருந் தலைவர்! சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண ஓடியிருக்கிறேன்! நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர். அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத் செலுத்துகிறேன். நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது போலப் பேசினார் இலண்டனில். திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார். நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு சாமான்யமானதல்ல.<noinclude></noinclude> pwd60bm4plqalpffm8ngfcmpjqdiekn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/126 250 644538 1947559 1938500 2026-06-18T06:26:41Z Saranya V R 14232 1947559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை! அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை! புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.}} அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில், இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி, தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார். அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சலி செலுத்துகிறார் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர் எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர். மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை, நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன் பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம் உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்! மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று இருந்துவிடவில்லை. 'பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும் அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள். நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள். பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க மிடுகிறார்கள். நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம் காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப் பாசவலை விரிக்கிறார்கள். பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும் என்றுதான் மராட்டியம் கூறுகிறது. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று அரசியலில் பதிகம் பாடவில்லை.<noinclude></noinclude> 382vnpdxe4gt3jbqk4rg35nzzl5ddpu 1947622 1947559 2026-06-18T08:16:01Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை! அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை! புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.}} அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில், இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி, தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார். அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சலி செலுத்துகிறார் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர் எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர். மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை, நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன் பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம் உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்! மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று இருந்துவிடவில்லை. 'பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும் அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள். நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள். பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க மிடுகிறார்கள். நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம் காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப் பாசவலை விரிக்கிறார்கள். பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும் என்றுதான் மராட்டியம் கூறுகிறது. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று அரசியலில் பதிகம் பாடவில்லை.<noinclude></noinclude> t45h7pgeaxpdeeij1216n469nfqif33 1947665 1947622 2026-06-18T09:00:13Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை! அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை! புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.}} அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில், இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி, தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார். அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சலி செலுத்துகிறார் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர் எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர். மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை, நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன் பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம் உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்! மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று இருந்துவிடவில்லை. 'பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும் அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள். நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள். பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க மிடுகிறார்கள். நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம் காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப் பாசவலை விரிக்கிறார்கள். பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும் என்றுதான் மராட்டியம் கூறுகிறது. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று அரசியலில் பதிகம் பாடவில்லை.<noinclude></noinclude> ej751o9m3dqbdiu11dzke8zlbko00ny பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/127 250 644539 1947624 1938502 2026-06-18T08:16:32Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||117}}{{rule}}</noinclude> நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல. திலகரின் பேரனுக்கு இல்லக்கிழத்தியாகியுள்ள அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார். திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப் படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச் செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர் மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும் கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும் பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம் கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க வேண்டும் - பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும், டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும் திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே, பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார் புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர் என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல் புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும் அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத் தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார்.<noinclude></noinclude> iozlp134rgkwymc42ifil2hjxegnwnd 1947666 1947624 2026-06-18T09:00:48Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||117}}{{rule}}</noinclude> நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல. திலகரின் பேரனுக்கு இல்லக்கிழத்தியாகியுள்ள அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார். திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப் படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச் செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர் மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும் கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும் பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம் கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க வேண்டும் - பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும், டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும் திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே, பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார் புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர் என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல் புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும் அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத் தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார்.<noinclude></noinclude> dnfx5mcnng3ich3jh8df89ykc22417c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/128 250 644540 1947560 1939073 2026-06-18T06:28:51Z Saranya V R 14232 1947560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர் திருவிளக்கு! அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம். நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின் உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர் என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும், எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள் மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர் நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர் அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும் இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின் பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது. {{c|<b>"திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின் பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம் செய்தனர்." {{Right|(சு. மித்திரன்)}}</b>}} பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம் வெளியே தெரியாதவண்ணம். பாவனைகாட்ட மெத்தச் சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது தெரியுமல்லவா! பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து, பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித நேருவுக்கு ஜே! என்று அல்ல! கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக்கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர்<noinclude></noinclude> kdmm41bnzy4708s29pmkspiopf01dw7 1947625 1947560 2026-06-18T08:17:03Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர் திருவிளக்கு! அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம். நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின் உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர் என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும், எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள் மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர் நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர் அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும் இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின் பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது. {{c|<b>"திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின் பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம் செய்தனர்." {{Right|(சு. மித்திரன்)}}</b>}} பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம் வெளியே தெரியாதவண்ணம். பாவனைகாட்ட மெத்தச் சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது தெரியுமல்லவா! பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து, பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித நேருவுக்கு ஜே! என்று அல்ல! கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக்கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர்<noinclude></noinclude> 7jk986852db50ghcuvcv7fkbel8bplt 1947667 1947625 2026-06-18T09:02:31Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர் திருவிளக்கு! அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம். நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின் உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர் என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும், எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள் மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர் நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர் அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும் இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின் பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது. {{c|<b>"திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின் பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம் செய்தனர்." {{Right|(சு. மித்திரன்)}}</b>}} பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம் வெளியே தெரியாதவண்ணம். பாவனைகாட்ட மெத்தச் சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது தெரியுமல்லவா! பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து, பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித நேருவுக்கு ஜே! என்று அல்ல! கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக்கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர்<noinclude></noinclude> 4wymkeotb84ff2i92h25wlseqpwpk9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/129 250 644541 1947561 1944699 2026-06-18T06:30:21Z Saranya V R 14232 1947561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude>ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை. இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி. இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார். பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம். இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. <b>இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக</b> என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது. இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude> 0pqt5iiagz0vdw8acanyiyqhu7ltgqy 1947626 1947561 2026-06-18T08:17:24Z Santharabanu 15679 top space added 1947626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude> ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை. இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி. இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார். பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம். இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. <b>இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக</b> என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது. இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude> 0kt4enhn69c2d5cdnoja4lqfx7h7vtv 1947627 1947626 2026-06-18T08:17:46Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude> ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை. இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி. இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார். பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம். இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. <b>இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக</b> என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது. இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude> qz5uvtasp5rout7u0q5wr82f62sirgt 1947668 1947627 2026-06-18T09:03:30Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude>ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில், பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம், பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர் நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!. அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல, மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை. இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட, தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் - தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது, டில்லி. இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக் கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார். பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப் பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர், அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை. பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம், சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப் பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம். இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக! என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த குரலிலாவது. <b>இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர் திருந்துக</b> என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம் கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக் கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது. இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude> k1thc82rfmdh6xy2ijgcyps11vf3s5p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/130 250 644542 1947628 1944700 2026-06-18T08:18:14Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய கடமையைச் செய்கிறார். நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறித்து விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்; அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது. இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப் பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது மட்டும் 'தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப் போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை! உனக்குப் புரிகிறதா? {{left_margin|3em|ஏன்? என்ற கேட்டாலோ, ராஜரத்தினம் அப்பாதுரை சுந்தரவடிவேலு}} என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம் உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள். இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும் வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம் கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும், காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும் பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத் தோன்றவில்லை. இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார் என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர் தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம்<noinclude></noinclude> fnl4eek6ezb2wvzty3keanxx3kcrx3i 1947669 1947628 2026-06-18T09:04:17Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய கடமையைச் செய்கிறார். நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறித்து விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்; அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது. இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப் பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது மட்டும் 'தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப் போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை! உனக்குப் புரிகிறதா? {{left_margin|3em|ஏன்? என்ற கேட்டாலோ, ராஜரத்தினம் அப்பாதுரை சுந்தரவடிவேலு}} என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம் உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள். இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும் வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம் கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும், காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும் பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத் தோன்றவில்லை. இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார் என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர் தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம்<noinclude></noinclude> 2czel0zz01cbvwvjxpq0wc2y7yldul0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/131 250 644543 1947562 1944701 2026-06-18T06:32:16Z Saranya V R 14232 குறி 1947562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude>பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு' விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. {{left_margin|3em|காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய, வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது}} போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது. தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்' கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது. உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர்.<noinclude></noinclude> aw7nbikxwbk1bq8zrnlm97ra9kqujeu 1947629 1947562 2026-06-18T08:18:30Z Santharabanu 15679 top space added 1947629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude> பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு' விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. {{left_margin|3em|காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய, வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது}} போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது. தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்' கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது. உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர்.<noinclude></noinclude> eu0n97953ssinuedld23i2kg16lcn59 1947630 1947629 2026-06-18T08:18:49Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude> பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு' விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. {{left_margin|3em|காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய, வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது}} போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது. தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்' கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது. உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர்.<noinclude></noinclude> d0l9a92swhsvffflfi5ajo30sve8jav 1947670 1947630 2026-06-18T09:05:25Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude> பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு' விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. {{left_margin|3em|காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய, வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது}} போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம் இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம் பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது. தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம் சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில் அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, - எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள் கூறாமலில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம் முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார் குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்' கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே -தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது. உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே! எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர் தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல் விடுத்தனர்.<noinclude></noinclude> ds0i9vvy74xhpqd1j04aabbhgy35mlt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/132 250 644544 1947563 1938513 2026-06-18T06:34:02Z Saranya V R 14232 1947563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர். சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது. நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது. எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள். அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும். உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] காஞ்சிபுரம் <br>5-8-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> qmgpj82dk5prifru21zs3p8f6thnw3n 1947631 1947563 2026-06-18T08:19:03Z Santharabanu 15679 top space added 1947631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர். சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது. நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது. எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள். அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும். உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] காஞ்சிபுரம் <br>5-8-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 4c4876jwe8deeodve6hl4lnhl3djc8i 1947632 1947631 2026-06-18T08:19:21Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர். சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது. நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது. எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள். அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும். உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] காஞ்சிபுரம் <br>5-8-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 1wol53t70l2h2frkmrjbamhfavkak4c 1947671 1947632 2026-06-18T09:06:08Z Saranya V R 14232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர், கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர் - என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக் குழுவினர். சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத் தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார், மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக் கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம் காணப்படுகிறது. நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது. எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை, பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா, மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம் குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க் கோலம் பூண்டெழுகிறார்கள். அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன் என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி, பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக வேண்டும். உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான் நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] காஞ்சிபுரம் <br>5-8-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 79hyx155qac90p3my4x77yp8w91n34q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/134 250 644546 1947564 1944702 2026-06-18T06:35:46Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார். அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார். {{left_margin|3em|நல்ல மருந்து நலிவு தீர்க்கும் மருந்து நான் கண்ட மாமருந்து நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!}} என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார். மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது! எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர! அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன். இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி! அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான். அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude> 255hrokimjqlfxvym9hfv3f6nbp0aqo 1947639 1947564 2026-06-18T08:23:49Z Santharabanu 15679 top space added 1947639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார். அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார். {{left_margin|3em|நல்ல மருந்து நலிவு தீர்க்கும் மருந்து நான் கண்ட மாமருந்து நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!}} என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார். மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது! எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர! அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன். இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி! அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான். அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude> 7a3zorfl6np7vh1xhbb5zgiabmwjqgg 1947640 1947639 2026-06-18T08:24:49Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார். அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார். {{left_margin|3em|நல்ல மருந்து நலிவு தீர்க்கும் மருந்து நான் கண்ட மாமருந்து நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!}} என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார். மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது! எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர! அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன். இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி! அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான். அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude> 0dimqxjm3zy95fs46n0oc90mmb6518a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/135 250 644547 1947566 1939076 2026-06-18T06:37:37Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude> அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான். குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு. மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது. நோயாளி யார்? வன்னிய சமூகம்! மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது. மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகிவிட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார். வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் 'உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார். 'மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார். {{left_margin|3em|"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!"}} அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது! காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து<noinclude></noinclude> 3jxaufhc9q8a1x5796h1f763zcf5351 1947568 1947566 2026-06-18T06:38:25Z Saranya V R 14232 +தொடக்கம் 1947568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude> அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான். குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு. மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது. நோயாளி யார்? வன்னிய சமூகம்! மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது. மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகிவிட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார். வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் 'உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார். 'மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார். {{left_margin|3em|"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!"}} அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது! காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து<noinclude></noinclude> m05plxxf2x7ultsa167gt0d6pjioyea 1947641 1947568 2026-06-18T08:25:30Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude> அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான். குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு. மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது. நோயாளி யார்? வன்னிய சமூகம்! மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது. மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகிவிட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார். வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் 'உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார். 'மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார். {{left_margin|3em|"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!"}} அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது! காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து<noinclude></noinclude> 1s2wnouyhboi5ew0hj3barz0p5gw9gu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/136 250 644548 1947569 1944694 2026-06-18T06:39:25Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன். மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி 'வீரம்' அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், 'உழைப்பாளி'யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்! மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!! தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டுமென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன். எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்டதில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது. அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே; பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட<noinclude></noinclude> 0osnmym7xae8gmf04ojsxsyzonf5ca7 1947642 1947569 2026-06-18T08:25:43Z Santharabanu 15679 top space added 1947642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன். மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி 'வீரம்' அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், 'உழைப்பாளி'யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்! மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!! தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டுமென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன். எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்டதில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது. அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே; பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட<noinclude></noinclude> 0bp3wpbomihuixj2p7il3jckaz618il 1947643 1947642 2026-06-18T08:25:57Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன். மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி 'வீரம்' அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், 'உழைப்பாளி'யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்! மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!! தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டுமென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன். எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்டதில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது. அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே; பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட<noinclude></noinclude> ewvcmopogqj4vb4ho9fx1fn57xd7bpb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/137 250 644549 1947570 1944703 2026-06-18T06:40:04Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||127}}{{rule}}</noinclude>வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்! அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று! அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக் காட்டுகிறது. வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி! முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது. உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான். எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude> r48fxnx9417a7a43b51jaiptkq4iv2i 1947644 1947570 2026-06-18T08:26:08Z Santharabanu 15679 top space added 1947644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||127}}{{rule}}</noinclude> வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்! அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று! அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக் காட்டுகிறது. வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி! முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது. உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான். எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude> 1ydu8dh1qsrmiqzdzoe13mjgzam90z6 1947645 1947644 2026-06-18T08:26:27Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||127}}{{rule}}</noinclude> வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்! அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று! அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக் காட்டுகிறது. வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி! முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது. உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான். எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude> rja5pz66b39rm3xvy7bcih7mkx7qumo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/138 250 644550 1947571 1944704 2026-06-18T06:40:52Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங்கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா? பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை! பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன? வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்! ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்? ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத்துரோகி- காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள். ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிடவில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான்,<noinclude></noinclude> 1xpz1v1r6mcluy6kw5qek9c4ymdt2fr 1947646 1947571 2026-06-18T08:26:40Z Santharabanu 15679 top space added 1947646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங்கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா? பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை! பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன? வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்! ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்? ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத்துரோகி- காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள். ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிடவில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான்,<noinclude></noinclude> 59hpse2lsf4hodhf5t6opnft0h3dtl9 1947647 1947646 2026-06-18T08:27:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங்கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா? பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை! பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன? வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்! ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்? ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத்துரோகி- காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள். ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிடவில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான்,<noinclude></noinclude> 9n9ylt3ddbqe4scai91harksxid0993 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/139 250 644551 1947544 1939084 2026-06-18T06:16:13Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude> "நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள் போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை கண்டோமில்லை" என்று, 1-7-56-ல் 'உழைப்பாளி' எழுதுகிறது. "வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?” என்று 'உழைப்பாளி' உரிமையுடன் இடித்துக் கேட்கிறது. கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில் கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர். ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும், இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து, என்றும் ‘இலவு காத்த கிளிபோல்' ஆகிவிட்டோம் என்றும், கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும் கொட்டிக்காட்டுகிறது, 'உழைப்பாளி'! தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இடம் பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கிக் கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள் நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது? என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும். ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும் கப்பிக்கொண்டிருக்கும் பிணி. உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும் இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு, ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம். ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும் என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல், பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட<noinclude></noinclude> 4rea0jpq5s9lox5mrjt0bqfo26u6gnn 1947648 1947544 2026-06-18T08:27:38Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude> "நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள் போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை கண்டோமில்லை" என்று, 1-7-56-ல் 'உழைப்பாளி' எழுதுகிறது. "வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?” என்று 'உழைப்பாளி' உரிமையுடன் இடித்துக் கேட்கிறது. கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில் கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர். ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும், இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து, என்றும் ‘இலவு காத்த கிளிபோல்' ஆகிவிட்டோம் என்றும், கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும் கொட்டிக்காட்டுகிறது, 'உழைப்பாளி'! தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இடம் பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கிக் கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள் நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது? என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும். ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும் கப்பிக்கொண்டிருக்கும் பிணி. உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும் இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு, ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம். ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும் என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல், பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட<noinclude></noinclude> 1cmlfe7nf7iaipdo5fb94agcviuihpm பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1947368 1947213 2026-06-17T14:46:10Z Desappan sathiyamoorthy 14764 1947368 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 {{Multicol-end}} 1mx7chfl76ag4721vcaph9ck73ze0m6 1947684 1947368 2026-06-18T10:26:55Z Desappan sathiyamoorthy 14764 1947684 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 {{Multicol-end}} dqbrdtbs9xl8q8vchldpo3f3fjh4emy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/46 250 644880 1947339 1947265 2026-06-17T13:53:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1947339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude><b>சீமான்</b> : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை. <b>ஒருவர்</b> : சரி.... அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை.... <b>சீமான்</b> : சொல்லுங்கள் <b>ஒருவர்</b> : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும். வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி.... <b>சீமான்</b> : ரொம்ப சந்தோஷமுங்க.... <b>மற்றவர்</b> : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ.... <b>சீமான்</b> : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா? காணோமே.... <b>ஒருவர்</b> : அதல்ல.... ஆவடி காங்கிரஸ் பற்றி.... <b>சீமான்</b> : அதுங்களா.... ஒவ்வொரு நாளும் வருதுங்க.... படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க.... <b>மற்றவர்</b> : செலவு ஏராளமா இருக்குது.... <b>சீமான்</b> : இதென்னங்க பிரமாதம்.... பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது.... <b>மற்றவர்</b> : அப்படிச் செய்யலாமா.... அதிகாரம் இருக்குன்னு வையுங்க.... எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான்.... ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க.... அதனாலேதான், பணம் 'தண்டி'..... பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி.... உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு. <b>சீமான்</b> : நீங்க ஒரு வேடிக்கை.... டாட்டாவும், பிர்லாவும் தரலாம்.... நான் என்னங்க, தகரக் குவளை.... என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க.... <b>மற்றவர்</b> : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத் தெரியாதாம்.... பிறர் சொன்னாத்தான் தெரியுமாம்....கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட<noinclude></noinclude> bub46mbtj9ehmxg4io4s0ytdamhg0km 1947340 1947339 2026-06-17T13:54:25Z Info-farmer 232 top space added 1947340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> <b>சீமான்</b> : எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை. <b>ஒருவர்</b> : சரி.... அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப் பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை.... <b>சீமான்</b> : சொல்லுங்கள் <b>ஒருவர்</b> : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும். வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி.... <b>சீமான்</b> : ரொம்ப சந்தோஷமுங்க.... <b>மற்றவர்</b> : பேப்பர்லே பார்த்திங்களேல்லோ.... <b>சீமான்</b> : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா? காணோமே.... <b>ஒருவர்</b> : அதல்ல.... ஆவடி காங்கிரஸ் பற்றி.... <b>சீமான்</b> : அதுங்களா.... ஒவ்வொரு நாளும் வருதுங்க.... படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா இருக்குதுங்க.... <b>மற்றவர்</b> : செலவு ஏராளமா இருக்குது.... <b>சீமான்</b> : இதென்னங்க பிரமாதம்.... பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம் ஒதுக்கிவிட்டாப் போகுது.... <b>மற்றவர்</b> : அப்படிச் செய்யலாமா.... அதிகாரம் இருக்குன்னு வையுங்க.... எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன் இருக்கான்.... ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது பாருங்க.... அதனாலேதான், பணம் 'தண்டி'..... பிரமாதமா நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி.... உங்களிடமிருந்து, ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு. <b>சீமான்</b> : நீங்க ஒரு வேடிக்கை.... டாட்டாவும், பிர்லாவும் தரலாம்.... நான் என்னங்க, தகரக் குவளை.... என் சக்திக்கு ஏற்றதை நான் தருவேனுங்க.... <b>மற்றவர்</b> : அனுமாருக்கு, அவரோட சக்தி அவருக்குத் தெரியாதாம்.... பிறர் சொன்னாத்தான் தெரியுமாம்....கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட<noinclude></noinclude> gpv4t7x0nzzppfag4oe6f48gvkg36pc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/47 250 644881 1947342 1947283 2026-06-17T13:57:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>37}}{{rule}}</noinclude>முடியும்னு.... ஜாம்பவான் சொன்னாராம்.... அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு.... தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத் தெரியாது.... நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக் குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல.... உங்கள் யோக்யதைக்கும்.... <b>சீமான்</b> : பிடிவாதம் செய்யாதிங்க.... பெரியவரை எதிரே வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப் போடாதிங்க.... இந்த வருஷம் ரொம்ப 'டல்லு'ங்க.... வியாபாரம் சரியில்லை.... நம்ம ஆபீசருங்களும் புலியாப் பாயறாங்க.... மேலே விழுந்துக்கறாங்க.... எந்த மாதிரியா எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான் தெரியுது.... நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன்.... ஏதோ என் அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு.... <b>ஒருவர்</b> : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை.... <b>சீமான்</b> : சரிங்க. நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன். <b>ஒருவர்</b> : அதென்னங்க அஞ்சும் பிஞ்சு.... <b>சீமான்</b> : உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு.... <b>ஒருவர்</b> : இதுபோலப் பேரம் பேசப் போறது நெரிஞ்சிருந்தா.... இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க மாட்டோம். <b>அவர்</b> : பரவாயில்லை.... எனக்கு ரொம்ப நாளா இவரைப் பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது அவர் சவுகரியம்.... பத்து கொடுக்கிற வங்க 'லிஸ்டு' ஒண்ணு பண்டித நேருவுக்குப் போவுது.... அதிலே இவர் பெயர் இருக்க வேணும் என்பது என் ஆசை <b>சீமான்</b> : அப்படிங்களா.... நீங்க உத்தரவு போடுங்க.... நான் மீறவா போறேன்.... ஐயா! கணக்குப்பிள்ளை!! (கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான் பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார், 'பாதாம்கீர்' அனைவருக்கும் தரப்படுகிறது.)<noinclude></noinclude> s6jr2y8y0afz694v466x6s6t2m5h3tj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/48 250 644882 1947344 1947299 2026-06-17T14:00:53Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ் சென்றுள்ளனர். ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட, தேசியப் போராட்டம், 'இந்திய முதலாளிகளுக்கு'ச் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த 'பிர்லாக்கள், 'காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு, ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும் குறிப்பிடாத 'செக்'கும் அனுப்பினாராம். மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள் பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள் கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல், 'செக்' அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகளில் 'சேதி' வெளியிட்டார்கள். ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர்களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல. வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக் காடு ஆகும் என்ற 'நப்பாசையால்' அந்த ஆசையும் அவர்கட்கு ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள் 'கூர்க்கா'வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ் ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும் நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். {{left_margin|3em|பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர் நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில்}}<noinclude></noinclude> 61n2uwcomft2ljbnewtionoqt2u1ado பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/49 250 644883 1947341 1947315 2026-06-17T13:55:27Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1947341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>39}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர்.}} தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன். சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன். தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன். இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்! காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது. "யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude> 51fs3sfe7somschk0ep0ldjlmtov2xo 1947346 1947341 2026-06-17T14:04:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>39}}{{rule}}</noinclude>{{left_margin|3em|ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி, பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும் பெற்றுள்ளனர்.}} தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி வைக்கிறேன். என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து விடுகிறேன். சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன். தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும் நான் அனுப்பி வைக்கிறேன். இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள். எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால் ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும், காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது என்பதல்ல பொருள் - துரைத் தனம் இன்று காந்திக் குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ் கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்! காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண் காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர் பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும் மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப் பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும், அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும், வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ் தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப் பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக் கொள்ளவும் முடிகிறது. "யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக் கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த இளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude> ojkipt1xp172mnyjcouq4uxkbjqmdxn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/50 250 644884 1947347 1947317 2026-06-17T14:07:23Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கண்டேன் இந்தக் காரிகையை...." என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டுள்ள 'ராஜாக்களும்' கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே இடம் காங்கிரஸ் மாநாடுதான்! உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக் கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும் சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும் காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும். அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள் கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின் புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக் கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச் சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில் உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம், கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள் ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர் மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில் பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால், காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச் சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம் காண்கின்றனர். நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர், வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது!<noinclude></noinclude> 32s2zm6zlgb98fj3qadr2l690yq5u91 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/51 250 644885 1947349 1947318 2026-06-17T14:11:23Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>41}}{{rule}}</noinclude>படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக் கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும் கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி, கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன் போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல், இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று எதிர்பார்த்திடாதே! திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு ஒரு திட்டம் காட்டும் திருச்சபை - வாழ்விழந்தோருக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி - வழி தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி! ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி பூத்திடும்!! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம் மாநாடு. மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!! பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு 'கர்வம்' கூடக் கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே, எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம் சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப் பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய், புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர் துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய் புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப் பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்!<noinclude></noinclude> sy3n5q1oa7hgfbzliqrkxc3ncibxapx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/52 250 644886 1947353 1947320 2026-06-17T14:15:23Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம். திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும் கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடையாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான் நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக! நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால் முடியவில்லை. நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும், நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந்தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன் - உல்லாசம் காண அல்ல. திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள் - திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல! வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த் தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல் மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக, மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, "நான் உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?" என்று தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக் காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம் அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம் காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா ! காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும் உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப் பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள<noinclude></noinclude> igszlse9p99jtkccqdtdwjiqpve6a51 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/53 250 644887 1947356 1947322 2026-06-17T14:18:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1947356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>43}}{{rule}}</noinclude>பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும் ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே! செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர் களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும், அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே! பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம் விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான், உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்! அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர். அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி, சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின், மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! - என்று கூறிட வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன். வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட்படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச் செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளனர். முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம் சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப் பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம் எள்ளி நகையாடுகிறது. பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே! பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது, எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள், கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும் சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள் துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா? - என்று ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி.<noinclude> 18, த.அ.க.</noinclude> e4n701av5ovpaqte4hf7347fpuo0ee5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/54 250 644888 1947370 1939381 2026-06-17T14:53:54Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம் பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல், கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக் காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும், ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும் திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்! நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார் காமராஜர். வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர். இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா! களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம். பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல,<noinclude></noinclude> 80qdql5gs960ps7xz3kc0ty0935dfog 1947372 1947370 2026-06-17T14:54:25Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம் பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல், கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக் காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும், ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும் திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்! நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார் காமராஜர். வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர். இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா! களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம். பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல,<noinclude></noinclude> kjhtfnmv3okqac3pbw7e0npcp6jj3av பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/55 250 644889 1947375 1939382 2026-06-17T14:59:44Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>45}}{{rule}}</noinclude>நமது 'வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல! களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள். வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழிவகை காணக் கூடுகிறோம். {{left_margin|3em|கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம். நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம்.}} நாவலர் - நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன் ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும் துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின் வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும் போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!! அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே தம்பி காடு மலை வனம் குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும் தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத் திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத் துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி! உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.<noinclude></noinclude> e8hopbpd6573y1c1z6gqvk37fzonm4q 1947376 1947375 2026-06-17T15:00:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>45}}{{rule}}</noinclude>நமது 'வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல! களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள். வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழிவகை காணக் கூடுகிறோம். {{left_margin|3em|கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம். நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம்.}} நாவலர் - நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன் ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும் துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின் வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும் போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!! அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே தம்பி காடு மலை வனம் குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும் தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத் திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத் துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி! உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.<noinclude></noinclude> 52l3ag15cqbm3vf7eaetqefsd5n1ioj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/56 250 644890 1947380 1939383 2026-06-17T15:04:12Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும். உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை அனைவருக்கும் அறிவிக்கட்டும். குன்றுகளிலும், சிற்றூர்களிலும், வயலோரங்களிலும், ஆலைகளிலும், பள்ளிகளிலும் பணிமனைகளிலும், பட்டினங்களிலும், அங்காடிகளிலும் பண்புள்ளோர் காணப்படும் எல்லா இடங்களிலும், இன்றிலிருந்து, தம்பி, எடுத்துக்கூறு, திருச்சி தீரரை அழைக்கிறது, மே 17, 18, 19, 20 நாட்களில் என்பதை. தேனென இனிக்கும் சேதி என்பர் திராவிடர்; பிறர்க்குக் தேட்கடிபோல் தேரன்றும், இச்சேதி. புதியதோர் அரசு காணப் புறப்படுவோம், புல்லர்தம் புரட்டாட்சி ஒழித்திடப் போரிடுவோம். திருஇடம் காண்பதற்கே திரண்டிடுவோம், தீரரெலாம் திருச்சி மாநகரில்தானே!! {{Right|அன்புள்ள,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 8-4-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> mbgut41715hpj93pghe3oktduqw14mu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/57 250 644891 1947395 1943700 2026-06-17T15:57:34Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 45</b>}} {{center|{{x-larger|<b>குடும்ப பாசம்</b>}}}} {{left_margin|3em|<poem><b>தி.மு.க. - வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள் </b></poem>}} <b>தம்பி,</b> {{x-larger|நா}}ன் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பத்திடம் - இப்போதாவது புரிகிறதா, நான் ஏன் சங்கடப்படுகிறேன்? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும் பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி கொண்டது. டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான், அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன், எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன் கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான் நண்பர்களிடம், "இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட....." என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக் கேட்டேன், "இப்போதாவது புரிகிறதா?<noinclude></noinclude> iqlcoz33y76723aqiz28ua92fsu9w2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/58 250 644892 1947396 1939385 2026-06-17T16:01:55Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா? ஏன் எனக்குத் தொல்லை?" என்று கேட்டேன். திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம் திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர் வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி, சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப் பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் 'விடுதலை'யில் கூடிப் பணியாற்றிய காலம் அது. விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார் - விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான் - சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டனர். இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில் சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு - போகும் போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது போலிருக்கிறது ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக் கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள். {{left_margin|3em|இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித் தானா? பொறுப்பேற்கத் தயக்கமா? இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத் தவறினால், நாடு நம்மை நிந்திக்கும். குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார். விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது.}} இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக் கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத் தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன்<noinclude></noinclude> b4yxrmi17qzp4zfsgn9pm6swj3s3aww 1947397 1947396 2026-06-17T16:02:25Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா? ஏன் எனக்குத் தொல்லை?" என்று கேட்டேன். திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம் திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர் வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி, சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப் பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் 'விடுதலை'யில் கூடிப் பணியாற்றிய காலம் அது. விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார் - விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான் - சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டனர். இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில் சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு - போகும் போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது போலிருக்கிறது ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக் கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள். {{left_margin|3em|இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித் தானா? பொறுப்பேற்கத் தயக்கமா? இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத் தவறினால், நாடு நம்மை நிந்திக்கும். குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார். விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப் பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது.}} இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக் கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத் தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன்<noinclude></noinclude> oridvmyw1zzjmu759ipf55sdl34lv0d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/59 250 644893 1947410 1939386 2026-06-17T18:29:05Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>49}}{{rule}}</noinclude>செயலாற்ற இணங்கினேன் - ஆனால் அதே போது, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித்தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுவது போலிருந்த, டிஸ்ரேலி படக் காட்சி என்னைத் தூக்கி வாரிப்போட்டது; அதனால்தான் பெருமூச்செறிந்தபடி சம்பத்தை, "இப்போது புரிகிறதா என் சஞ்சலத்துக்குக் காரணம் இருப்பது?" என்று கேட்டேன். அவன் தந்த பதிலோ, காட்சியைக் கண்டதால் ஏற்பட்டதைவிட அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது - உன்னிடம் சொல்வதிலே தவறு என்ன? சிறிதளவு வெட்கம்கூடத்தான் ஏற்பட்டது. சம்பத்து மட்டுமே என்னிடம் அவ்வளவு தாராளமாகவும், சரளமாகவும் பேச முடிகிறது. சம்பத்தை மட்டுமே, நான் எவ்வளவோ முயன்றாலும்கூட, அவர் இவர் என்று கூற முடிவதில்லை! பொறுப்பேற்றுக் கொள்வதிலே உள்ள கலக்கத்தைக் காட்டும் காட்சியையும், அதன் மூலம் பெறப்படும் கருத்தையும் நான் என் நிலைக்குக் காரணமாகக் கொண்டு, இப்போது புரிகிறதா? என்று சம்பத்தைக் கேட்டேனல்லவா - பதில் என்ன கிடைத்தது தெரியுமா? இவ்வளவு பெரிய பாரத்தை, சுமையை எப்படி நான் தாங்க முடியும்? என்றல்லவா டிஸ்ரேலி கேட்ட முறைப்படியே நான் கேட்டேன் - பதில் என்ன என்று எண்ணுகிறாய்? "சுமையை - பாரத்தை - தாங்கப் போவது நான் ஒருவன்தான் என்று ஏன் அண்ணா! நீங்கள் எண்ணிக் கொள்கிறீர்கள்? சுமையைத் தாங்கப் போவது, நாம் - நாம் - உம்மீது மட்டுமல்ல பாரம் - " என்றானே அந்தப் போக்கிரி! நான் உண்மையில் வெட்கப்பட்டேன். இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய சுமை - பாரம் - பொறுப்பு அவ்வளவும் என் மீது மட்டுமே ஏற்றப்படும் - என்று எண்ணினதால்தானே, இவ்வளவு சுமையைத் தாங்க என்னால் எப்படி முடியும் என்ற கலக்கம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறானது என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சம்பத்து அளித்த பதில் - அந்தப் பதிலிலே பொதிந்துள்ள தத்துவம்தான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அச்சாணியாக அமைந்திருக்கிறது - 'நாம்' என்பது வலிவும் பொலிவும் கொண்டதோர் தத்துவம் - 'நான்' என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம் அல்லது மனமயக்கம் என்கிறார்கள் என்றால், அரசியலில் அது அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால் ஆபத்தை, அடுக்கடுக்காகக் கிளப்பிவிடக் கூடியதுமாகும்!<noinclude></noinclude> scny49mh8rozateholwtvvmcn98t7xf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/60 250 644894 1947412 1939387 2026-06-17T18:34:48Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு தத்துவங்களிலும் எது மேலானது என்பதை மேதினிக்கு விளக்கிக் காட்டுகிறார்கள். 'நான்'- என்பது தவறு - 'நாம்' - என்பதுதான் நிலைமை என்பதை அன்று படக்காட்சிக் கொட்டகையில் கண்டதிலிருந்து, அந்தப் பொலிவும் வலிவும் பொருந்திய தத்துவம், கழகத்துக்கு எவ்வளவு மாண்பளித்திருக்கிறது என்பதை அறியவும், அகமகிழவும், வாய்ப்புகள் பலப்பல வந்தவண்ணமுள்ளன. 'நாம்' என்ற கூட்டுச் சக்தியை - குடும்ப சக்தியைக் காட்டிடும் அந்தச் சொல்லுக்கு எழிலோவியமாக அமைந்து விட்டது, தி. மு. க. நானும் நீயும் - நம்மில் ஒவ்வொருவரும் அந்த 'நாம்' என்பதிலே இருக்கிறோம் - அதிலே இருப்பதன் மூலம் ஏற்றம் பெறுகிறோம் - அந்த ஏற்றம் நாட்டுக்குப் பயன்படுகிறது. 'நாம்' என்ற அந்தக் கூட்டுச் சக்தியைக் காட்டிடும் சொல்லினுள் பொதிந்துள்ள அரிய பாடம், ஜனநாயகப் பண்பாட்டுக்கே அடிப்படையாகிறது - அகில உலகிலும், எங்கு, எந்தச் சமயத்தில் எத்தகைய அரசியல் குழப்பமோ,அவல நிலையோ விளைகிறது என்றாலும், 'நாம்' என்பதிலே உள்ள தூய்மையிலே ஏதோ ஓர்வித தூசு படிந்து விட்டது என்று கூறலாம் - 'நான்' என்பது, 'நாம் என்பதை வலுச்சண்டைக்கு இழுக்கிறது என்று பொருள் கொள்ளலாம். தம்பி! 'நான்' - என்பதிலிருந்து 'நாம்' என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!! இவ்வளவு 'பலி' வாங்கிய பிறகும்கூட, இன்றும் 'நாம்' என்பதை 'நான்' என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப் பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!! திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் துறையில், பிறர் பார்த்து, பாராட்டத்தக்க (பிறர் என்பது நம்மை மனிதர் என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது) அளவில், வெற்றிபெற்று, வீரர் கோட்டமாய், தோழர்களின் கூடமாய், குடும்பமாய்த் திகழ்கிறது, அந்தக் குடும்பத்துக்குக் குதூகலத் திருவிழா மே 17, 18, 19, 20-ல், எப்படி வராமலிருக்க முடியும், குடும்பத்தில் ஒருவர் என்ற பாசம் உள்ளவர்களால்?<noinclude></noinclude> bvamwuj954j0qufbm0dqyzhcszg6lyr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/61 250 644895 1947413 1939388 2026-06-17T18:50:15Z Sasirajaa 16182 1947413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{Rh|<b>தொகுதி 4||</b>51}}{{rule}}</noinclude>{{left_margin|3em|நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார்.}} பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும் இடையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து கிளம்புகிறோம் அண்ணா! என்று 'சேதி' தருகிறார் மற்றோர் தோழர். பல்வேறு ஊர்களிலிருந்து 'சைக்கிள்' படைகள், திருச்சி வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது, தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும், 'நாம்' என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான் - நான் - நான் - என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச் சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, 'நாம்' பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது, வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது. 'என்னையே நம்பி' என்ற சொற்றொடருக்கு, தி. மு. க. இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது; என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக் காண்கிறோம். கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக் காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப் பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும் வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர் எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும் பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி. மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம்.<noinclude></noinclude> 0upiga6wovt32ycnabm58dy7hyds3mh 1947414 1947413 2026-06-17T18:50:36Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>51}}{{rule}}</noinclude>{{left_margin|3em|நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர் முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார்.}} பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும் இடையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து கிளம்புகிறோம் அண்ணா! என்று 'சேதி' தருகிறார் மற்றோர் தோழர். பல்வேறு ஊர்களிலிருந்து 'சைக்கிள்' படைகள், திருச்சி வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது, தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும், 'நாம்' என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான் - நான் - நான் - என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச் சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, 'நாம்' பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது, வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது. 'என்னையே நம்பி' என்ற சொற்றொடருக்கு, தி. மு. க. இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது; என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும், அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக் காண்கிறோம். கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக் காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப் பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும் வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர் எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும் பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி. மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம்.<noinclude></noinclude> drrq17twnjpe7k9xv1j46kuw7gs2u7g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/62 250 644896 1947415 1939389 2026-06-17T18:54:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்! இங்கு கிளை! அங்கு கிளை! எங்கும் தழைக்கிறது கிளைகள்! இடைவிடாத பிரச்சாரம்! இணையில்லா ஊக்கம்! மகத்துறை ஊழல்களைத் தாக்குகிறாக்ள். ஆளவந்தாரின் போக்கை அம்பலப்படுத்துகிறார்கள்! இழந்த இன்பத்தை மீட்போம் என்று முழக்க மிடுகிறார்கள்; சுகபோகிகளையும் சுரண்டிப் பிழைப்போரையும் சாடுகின்றனர். புதிய அரசு கேட்கின்றனர். பெரும் பத்திரிகைகளின் இருட்டடிப்பு! பணம் படைத்தோரின் பரிகாசம் மதப் புரட்டர்களின் சாபம்! மாற்றுக் கட்சியினரின் தூற்றல். ஆளவந்தாரின் அடக்குமுறை. இவ்வளவும் கிளம்பிக் கொக்கரிக்கின்றன - எனினும் வளருகிறார்கள் - வளர்ந்த வண்ணமிருக்கிறார்கள். <center><b>ஏன்? எப்படி? எதற்காக ?</b></center> நாடு கேட்கிறது இவ்வண்ணம். நமது வளர்ச்சி நாட்டிலே புதிய பிரச்சினையாகிவிட்டது. கழகம் ஒரு கேள்விக் குறியாகி விட்டது - அபாயக் குறி என்று அலறுபவர்களும் உளர். எனவே, நமது முழு உருவமும் விளங்கும் வண்ணம் மாநில மாநாடு அமைதல் வேண்டும். குடும்பத்திலோர் குதூகலவிழா - மாநில மாநாடு - தடையும் பணமுடையும் குறுக்கிட்டாலும், யாரும் திருச்சிக்கு வருகிற கடமையிலிருந்து மட்டும் தவற முடியாது - குடும்ப பாசம் அனைவரையும், மே 17, 18, 19, 20 நாட்களில் திருச்சிக்குக் கொண்டு வந்தே சேர்க்கும்.<noinclude></noinclude> qvu9w0jaw9q1i57tejsvq19r2fj95fr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/63 250 644897 1947416 1939390 2026-06-17T19:02:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>53}}{{rule}}</noinclude> நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம் சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம் நடாத்தி நவநிதியைக் குவித்த ஓர் இனம், பாபத்துக்குக் கழுவாய் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்லேந்தியின் பாதம் கழுவிய பரிதாபக் காதை, கோட்டை கட்டிக் கொற்றம் நடாத்திய ஓர் இனம், வேட்டையாடி வீரத்தைக் காட்டிய ஓர் இனம், சேட்டைகளைச் சடங்குகளாகக் கொண்டு, 'கேட்டை மூட்டை' களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுத்து ஏமாளிகளாகி விட்ட இதயம் நோகச் செய்யும் காதை - இவைகளை உணராமலேயே, நாடு, இனம், மொழி, வாழ்க்கை முறை அனைத்தையும் மறந்துபோய், மாற்றானை மகேசனின் தூதுவன் எனக்கொண்டு, மதி இழந்து, மதிப்பிழந்து போன, மனதை வேகவைக்கும் காதை; கப்பிக் கொண்டிருந்த மன இருள் விடிவெள்ளியால் மெள்ள மெள்ள விலகிய வரலாறு, ஒளி கிடைத்ததும் உள்ளத்துக்கு ஏற்பட்ட உத்வேகம், அதன் பயனாக ஏற்பட்ட இயக்கம், அதன் வளர்ச்சி ஆகிய இன்றைய வரலாறு, இதன் மூலம் நாம் அடைய இருக்கும் இலட்சியம், அது அளித்திடப் போகும் இன்பம், அதன் பயனாக நாடு பெறப் போகும் ஏற்றம், அதன் விளைவாக ஏற்பட இருக்கும் பெருமிதமிக்க எதிர்காலம் பற்றிய கணக்கெடுப்பு ஆகிய இவைபற்றியெல்லாம் நாம் பேசவும், பேசுவதைக் கேட்கவும், உரையாடவும், உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்ளவும், வழிவகை பற்றி ஆய்வுரை வழங்கிடவும், திட்டம் தீட்டிடவும், செயல்படு முறைபற்றித் தீர்மானித்திடவும், நாலு நாட்கள் போதா! நாலே நாலு நாட்கள்தான்!! அந்த நாலு நாட்களுக்குள், நாம் நமது உள்ளத்திலே ஊற்றெடுக்கும் ஓராயிரம் எண்ணங்களையும், வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, செயல்படத்தக்க செம்மையினைத் தேடிப் பெற்றிடவும் வேண்டும். தலைமுறை தலைமுறையாக - பன்னெடுங் காலமாகப் பாழ்பட்டுப் போயுள்ள நிலையினை மாற்றிடத்தக்க மகத்தானதோர் பணியில் ஈடுபட்டுள்ள நாம், மாநில மாநாடு நடாத்துவது, கூடிக் கலைந்திட அல்ல - குடும்ப பாசத்துடன் கூடி, நாட்டு விடுதலைக்கான நல்லார்வத்தை எந்த அளவிலும் வகையிலும் மற்றையோருக்கு ஊட்டினோம் என்பது பற்றி ஆய்ந்தறிந்து, நமது முறைகளிலே குற்றம் குறை உளவா என்று பேசிக் கண்டறிந்து, திருத்தப்பட வேண்டியவை, நிறுத்தப் பட வேண்டியவை; புகுத்தப்படத்தக்கவை, களையப்பட -<noinclude></noinclude> ba3f56m87rvb0626vwc0u0x0tveymi7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/64 250 644898 1947420 1939391 2026-06-17T19:31:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து,நாம் ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட எழுச்சியும் விழுச்சியும் வீறுகொண்டெழுந்துள்ள இந்தக்கால கட்டத்துக்கு ஏற்ற வழிவகை கண்டறிந்தாக வேண்டும். நாலே நாட்கள் மட்டுமே உள்ளன! எனவே, ஒவ்வோர் நாளும், ஒவ்வோர் மணியும் மிக மிக அக்கறையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமாகிறது. பொதுச் செயலாளர் நான் இந்தக் கட்டுரை தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் யூகித்துக் கொள்ளவும் முடிகிறது - பரிதாபப்படவும்தான் செய்கிறேன். இளமை எழிலளிக்கிறது, இன்பபுரிக்கு அழைக்கிறது. இயக்கமோ அவரை திருச்சிக்குத் துரத்துகிறது ! தாமரை பூத்த தடாகத்தருகே சென்று முகத்தாமரையாளிடம் அகத்துறை இலக்கணம் கற்றிட வேண்டிய காளையர்தான் - பருவத்தை எண்ணிடின் - எனினும், களம் சென்று தமிழரின் தன்மானத்தைக் காத்திட வேண்டிய கட்டம் வருகிறபோது, வல்லூறு வட்டமிடும் களத்தில், மலர்த் தோட்டத்தில் காணும் இன்பத்தைவிட அதிகமன்றோ காண்பராம், வீரத் தமிழர்கள் - வீழ்ச்சியுறாத நாட்களில், நமது பொதுச் செயலாளர், அகமும் புறமும் நன்கு பயின்றவர் - எனவே, புறநானூற்றுக் காட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றுள்ளார். பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது? பாய்களை வாங்கிவிட்டீரோ? பணிமனையில் இன்று என்ன நிலைமை? கொடி மரம் உயரம் எவ்வளவு? இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வோர் வேலையையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். அவர் உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற்கெனவே 'சிட்டுப் போல் பறந்து பணியாற்றிக் கொண்டுவரும் திருச்சித் தோழர்களுக்கு, மேலும் உரமும், திறமும், தரமும் தருகிறது - வேலை மும்முரமாக நடைபெற்ற வண்ணமிருக்கிறது. வேலையோ, தம்பி, ஏராளம், ஏராளம்!! தடைபல கடந்திட வேண்டி இருக்கிறது - ஒவ்வோர் கட்டமும் புதுப்புதுப் பிரச்சினையைக் கிளப்புவதாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டானதும், வெற்றி இன்பத்தைக் கூடச் சுவைக்க முடிவதில்லை. வேறோர் பிரச்சினை கிளம்பி விடுகிறது. நாலே நாலு நாட்கள் - அப்பப்பா! கடந்த<noinclude></noinclude> azp22fatw3ul6t47w1aefr4lb0i8u6c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/65 250 644899 1947474 1939392 2026-06-18T04:23:33Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>55}}{{rule}}</noinclude>நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை. ஆனால், திருச்சி தாங்கிக்கொள்ளும். நினைவிருக்கிறதா, தம்பி, எனக்குச் செந்தேனாக இனிக்கிறது நினைவு - திருச்சிதான், திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் பணியாற்றத் தொடங்கியதும், நாம் நடாத்திய முதல் மாநாடு - மாவட்ட மாநாடு!! திருச்சியில் அந்த மாநாடு நடத்த நாம் திட்டமிட்ட உடனே, உனக்குத் தெரியுமோ என்னவோ, திகிலூட்டினார்கள் - நம்மை நிந்திப்பதிலே நித்யானந்தம் காண்பவர்கள். திருச்சியிலா? மாநாடா? மக்கள் வருவார்களா? எங்கே இருந்து கொண்டு வரப்போகிறார்கள்? இடம் கொடுப்பவர் யார்? இரண்டு நாள் தங்கிட வசதி உண்டா? ஒரு வேளைச் சோற்றுக்கு வழியுண்டா? திருச்சியிலா, மாநாடு! பேஷ்! பேஷ்! இங்கு தோல்வி தாக்கும் - மூலைக்கு ஒருவராக முக்காடிட்டுக் கொண்டு ஓடிவிடப் போகிறார்கள்!! - என்றெல்லாம் திகிலூட்டினர், எரிச்சலை மூட்டினர். என்னைத் தான் தம்பி, உனக்கு நன்றாகத் தெரியுமே! சிறு சங்கடமென்றாலும் பெருத்த குழப்பம் புகுந்துவிடுமே உள்ளத்தில். அதனால் நான் பயந்து போனேன். மாவட்ட மாநாட்டுக்கான கொட்டகை அமைக்கப்பட்டு விட்டது - மறுநாள் மாநாடு - முன்னாள் மாலை சென்று பார்க்கிறேன் - பசியுடன் உள்ள பெரும் புலி தன் அகன்ற வாயைத் திறந்துகொண்டிருப்பது போல, கொட்டகை காட்சியளிக்கிறது. இதோ என் மனக்கண்ணால் காணமுடிகிறதே அந்தக் கொட்டகையை. "சாம்பு!" "என்னண்ணா!...." "பந்தல்.... கொட்டகை....?" "அவசரத்தில் போட்டது. இவ்வளவுதான் முடிந்தது...."<noinclude></noinclude> 0pz0sv0rwl6ydt1hirtdygqq0z5jpuo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/66 250 644900 1947480 1939393 2026-06-18T04:29:12Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "இவ்வளவுதான் முடிந்ததா.... என்ன சாம்பு, விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன் போட்டாய்? யார் போடச் சொன்னது? இவ்வளவு பெரிய கொட்டகைக்கு, ஆட்கள் எங்கே இருந்து கொண்டு வந்து குவிப்பது? நாளைக்கு இதிலே கால் பகுதிக்குக்கூட தோழர்கள் வருவார்களோ இல்லையோ! இவ்வளவும் நாளைக்குக் 'காலி'யாக இருக்குமே! எப்படி அந்த அவமானத்தைத் தாங்குவது? என்ன வம்பு செய்துவிட்டாய், சாம்பு!" "அண்ணா! கொட்டகை பெரிது என்கிறாயா?" "இதிலே சந்தேகம் வேறா உனக்கு. போ, சாம்பு, போய், பந்தல்காரர்களை அழைத்து வா. பந்தலில் பாதி அளவுக்கு மேல், தனித்தனி விடுதிகளாக மாற்றி அமைத்தாக வேண்டும். காலி இடமாகக் கொட்டகை தெரியக் கூடாது. இதிலேயே ஒரு இடத்திலே தொண்டர்கள் முகாம், மற்றோர் பக்கம் பிரதிநிதிகள் ஜாகை, இன்னோர் பக்கம் ஏதாவது ஓர் விடுதி, எதையாவது செய்து கொட்டகையின் அளவைக் குறைத்திட வேண்டும்." "வேண்டாம் அண்ணா!" "சாம்பு என்னிடம் விளையாடாதே! இதுதான் முதல் மாநாடு. நாம் கழகம் துவக்கி, காலை ஊன்றி வைக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்திலே, மாகாண மாநாட்டுப் பந்தல் போலக் கொட்டகை போட்டுவிட்டு, ஆள் கிடைக்காமல், நாளைக்கு அசிங்கப்படுவதா? வீண் விஷப் பரிட்சை வேண்டாம். காலையில் நான் பார்க்க வருவேன் - அதற்குள் கொட்டகையின் அளவு சிறிதாக்கப்பட வேண்டும்..." "சரி, அண்ணா....." "தர்மு, இந்த வேலையை உடனே கவனி. பராங்குசம், என்னவோ ஏதோ என்று இருந்துவிடாதே! மணி, கவனமிருக்கட்டும்! சாம்பு! உடனே வேலை நடந்தாக வேண்டும்." கொட்டகை பெரிது, கூடிட ஆட்கள் வரமாட்டார்கள் என்ற சந்தேகம் குடைந்தது - சாம்புவிடம் சண்டைக்கு நின்றேன். அதே திருச்சியில், அதே சாம்புவே, இரண்டாயிரத்துக்கு ஆயிரம் என்ற அளவிலே கொட்டகை அமைத்துக் கொண்டிருக்கிறார்! தம்பி! இந்த இன்பம் எத்தகையது என்பதை எண்ணும்போது, ஆஹா! எப்படியிருக்கிறது என்கிறாய்!!<noinclude></noinclude> 70w1jbml3u4o4rcpwwy4m71g7qc46dh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/67 250 644901 1947487 1939394 2026-06-18T04:34:51Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>57}}{{rule}}</noinclude> சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை, இந்த இன்பத்தை உடனிருந்து சுவைக்க - இயற்கையெய்தி விட்டார் - ஓடி ஆடி வேலை செய்து, சிறப்பினைக் கூட்டித் தந்திட நண்பர் இருதயராஜ் இல்லை, அணைந்து விட்டது அந்தத் திருவிளக்கு - இந்த வாட்டம் என்னை வதைக்கத்தான் செய்கிறது. தயக்கத்துடன் நாம் திருச்சியில் முதல் மாவட்ட மாநாடு துவக்கினோம் - தூய உள்ளத்துடன் பணியாற்றி வந்த வண்ணமிருக்கிறோம் - கொள்கையிலிருந்து வழுவினோமில்லை, கொடுமைகளைக் கண்டு கலங்கினோமில்லை, பாதை வகுத்துக் கொள்வதிலே பொறுப்புக் காட்டினோம், வகுத்துக் கொண்ட பாதையிலே நடந்து செல்லும் போது குறுக்கிட்ட இடையூறு கண்டு அஞ்சி அயர்ந்தோமில்லை - பயணம் துவக்குமுன்பு பல்வேறு மனக்குழப்பமிருந்தது - எண்ணித் துணிந்தோம் - இதோ இன்று இரண்டாவது மாநில மாநாடு, திருச்சியில் நடை பெறுகிறது - நகருக்குள் கிடைக்கும் திடல்கள் போதுமானவை அல்ல என்று, ஊர்ப்புறம் தேடி, விரிந்து பரந்து கிடக்கும் திடலை நாடினோம் - அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டோம். காரணம், தம்பி, நாம் - நாம் - அதனால்!! நாத்திகர்கள் ! துவேஷிகள் ! குழப்பக்காரர்கள் ! கூவித் திரிவோர் ! வகுப்புவாதிகள் ! என்னென்னவோ ஏசுகிறார்கள் - கேட்கும் மக்களின் தொகை குறையக் குறைய, வகை மட்டமாக மட்டமாக, தூற்றலின் வேகம் அதிகமாகக்கூடத் தெரிகிறது. கட்டைவிரலை வெட்டிவிடுவேன். கையில் கிடைப்பது கொண்டு அடிப்பேன். ஈ, எறும்புபோல நசுக்கிவிடுவேன். இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன். கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் !! காமராஜரும் சரி, ஆச்சாரியாரும் சரி, இதுபோல உருட்டி மிரட்டிப் பேசத் தவறியதில்லை. உருட்டல் மிரட்டலோடு நின்று விடவில்லை - 'தேனீ' நடத்திக் காட்டிடவும் அவர்களுக்கு வசதி இருந்தது. நாவலர்<noinclude></noinclude> dhkgbk8nksjjpwwr2g1tqla62vtr34f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/68 250 644902 1947507 1939395 2026-06-18T05:14:58Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த, உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர் இடம் பெற்றவர்கள் - தியாகராசர்கள் முனைந்தனர் ! 144-ம் தடியடியும், சிறையும், சித்திரவதையும், துப்பாக்கியும், நம்மைத் தாக்கின - தாக்குதலின் வேகமான கட்டத்துக்குத் துரைத்தனம் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்! கழகத்தின் முன்னணியில் நின்று பணியாற்றுவோர் அனைவருமே சிறை அனுபவம் பெற்று விட்டார்கள்! சாமான்யர்களாகிய நாம், ஒரு விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும்போது, அலட்சியப் பார்வையால், ஏளனப் புன்னகையால், இரண்டோர் இழிமொழியால் நம்மை இருக்குமிடம் தெரியாமல் செய்திட முடியும் என்றுதான், கோட்டையில் கொடி நாட்டியவர்கள் எண்ணிக்கொள்வார்கள். நாம் வளர்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதே தங்கள் பெருமைக்குக் களங்கம் என்ற அளவுக்கு ஆணவம் பிடித்தவர்கள், நமது மாற்றார்கள் - இதனையும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. நாம் வளர்ந்துவிட்டோம், இனி மறைத்துப் பயனில்லை என்ற கட்டம் பிறந்ததும், முழு மூச்சுடன் நம்மை எதிர்ப்பர் கடுமையாக எதிர்ப்பர் - என்பதும் எதிர்பார்த்ததுதான். இவை கட்கெல்லாம், நான் அஞ்சியதில்லை, 'நாம்' ஓர் இலட்சியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆதலால். எனக்கு மட்டும் ஒரு அச்சம் இருந்தது - அது திராவிட கழகத்தைப் பற்றி. ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பகைத்துக் கொள்வதற்கான காரணம் பல கிளம்பிவிடினும், திராவிடர் கழகம் என்பது, நமது 'பாசத்தைப்' பெற்ற இடமல்லவா!! சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சியே இனி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட வேண்டியதுதான் என்று 'அண்ணாத்துரை தீர்மானம்' என்ற பெயரிட்டு பெரியார் திட்டம் தந்தாரல்லவா, அதற்கும் முன்பே, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் என்பதாக அமைப்பு அரும்பிற்று. சேலத்துக்குப் பிறகு, சீமான்களின் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளவும், பதவிப் பிரியர்களின் பகையை எதிர்த்து நிற்கவும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது,<noinclude></noinclude> 7uam5pdtl196le2wactcr8mvivxvixm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/69 250 644903 1947508 1939396 2026-06-18T05:22:03Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>59}}{{rule}}</noinclude>தொகுதி 4 - சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு 'சிண்டு' முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம் 'அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி தேடிடப் பல முயற்சி - இவ்வளவு தொடர்பு பாசத்தை மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின் திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி, முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது. எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி, எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல - பிரிந்து போனார்கள் பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள், அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன், அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள் என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள், போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால் போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே, அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும் எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள், என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள், ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் - என்று பெரியார் அன்புடன் பேசினால் - பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!! பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான் அப்போது என்ன செய்திருக்க முடியும்? {{left_margin|3em|என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு குறையவில்லை.}} என்ன காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !!<noinclude></noinclude> 28x8o3bxf41cosycbexmjbtbl320o6t 1947509 1947508 2026-06-18T05:22:28Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>59}}{{rule}}</noinclude>சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு 'சிண்டு' முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம் 'அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி தேடிடப் பல முயற்சி - இவ்வளவு தொடர்பு பாசத்தை மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின் திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி, முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது. எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி, எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல - பிரிந்து போனார்கள் பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள், அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன், அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள் என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள், போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால் போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே, அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும் எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள், என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள், ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் - என்று பெரியார் அன்புடன் பேசினால் - பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!! பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான் அப்போது என்ன செய்திருக்க முடியும்? {{left_margin|3em|என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு குறையவில்லை.}} என்ன காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே பாவிக்கிறார். நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !!<noinclude></noinclude> tmjhsb1tjawwx8koxhgbsfrgdh9cska பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/70 250 644904 1947511 1939398 2026-06-18T05:29:14Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்னவோ 'விஷக்கடி வேளை' என்பார்களே, அது போல, திருமண மூலம் ஒரு பேதம் - பிளவு ஏற்பட்டது - அவரோ நம்மைப் பகைவர் என்று கொள்ளவில்லை - பரிவு காட்டுகிறார் - பாசம் வைத்திருக்கிறார். பிரிந்து, தனியாகிவிட்ட போதிலும், எதிரிக்கு நம்மைக் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையை நாம், நமது முகாமிலிருந்து பரப்புகிறோம் என்ற வகையில் மகிழ்கிறார் - ஆதரிக்கிறார். கோபம் கொண்டு நாம்தான் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டோமே தவிர, அவருடைய பொன்னான குணத்தைப் பார். துளியாவது நம்மிடம் துவேஷம், பகை, இருக்கிறதா? இப்போதும், நல்ல பிள்ளைகள், நம்ம பிள்ளைகள் என்று பாசத்தோடு பேசுகிறார். இப்படிப்பட்ட பெரியாரிடமிருந்து நாம் பிரிந்துவிட்டோமே! என்ன பேதமை! என்ன பேதமை!! தம்பி! இவ்விதமெல்லாம் தானே நாம் எண்ணி இருந்திருப்போம் - கோபம் தணிந்து விட்டிருக்கும் - வெட்கம் கூட நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும் - மெள்ள மெள்ள, நம்மிலே சிலரே, போகட்டும், நண்பரே! ஏதோ நடந்தது நடந்து விட்டது - இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம். அவர் இவ்வளவு அன்பும் பாசமும் காட்டும்போது, நாம் பேதமும் விரோதமும் காட்டுவது சரியல்ல. திருமணம்பற்றித் திடுக்கிட்டுப் போனோம் - கோபத்தால் வெளியே வந்தோ - வெளியே வந்ததால், வேறு கட்சியாகப் பணியாற்றினோம், அவர் இவ்வளவுக்குப் பிறகும் நம்மிடம் பிரிவு காட்டும்போது, நாம் பழையபடி ஒன்றாகிவிட வேண்டியதுதான் - என்று கூறிடத் தானே செய்திருப்போம் - பிறகு முன்னேற்றக் கழகம் ஏது!" ஒன்றாகிவிட்டிருக்க வேண்டியதுதான்! இடையிலே, ஓடியதும், ஆடியதும், பரணி பாடியதும், படை கூடியதும் வீண்! வீண்!! இவ்விதமான ஓர் நிலைமை ஏற்பட்டுவிடுமா, என்ற அச்சம் மட்டும் எனக்குத் துவக்கத்தில் இருந்தது. எதையும் தாங்கிக் கொள்ள முடியும், ஆண்டு பலவாக நம்மை நடத்திச் சென்றவர், நாம் அறிந்த ஒரே தலைவர், யாருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை எல்லாம் தத்துவம் என்று கொண்டாடும் அளவுக்கு நாம் 'பக்தி' செலுத்தி வந்தோமோ, அப்படிப்பட்ட பெரியார், அன்புக் கணைகளை ஏவியிருந்தால், அதனை மட்டும் நம்மால் எதிர்த்திருக்கவே முடியாது.<noinclude></noinclude> 87v0mlzx9u5lny5jbdls6ute9ykl0w6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/71 250 644905 1947518 1939399 2026-06-18T05:36:14Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 4||</b>61}}{{rule}}</noinclude> பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை எழும்பியிருந்தால் போதும், முன்னேற்றக் கழகம் இல்லை! பெரியாரின் போர்முறை இவ்விதம் அமைந்துவிடுமானால் தனிக் கழகம் தானாகவே வீழ்ந்துபடும் - இதற்கு, ஆயிரம் பாடுகள் படுவானேன் - என்று நான் எண்ணினதுண்டு. ஆனால், அந்த என் அச்சம், பொருளற்றதாக்கப்பட்டு விட்டது. அன்பினால் நம்மை வீழ்த்தியிருக்க முடியும் - ஆரம்பக் கட்டத்தில் - பாசத்தால் நம்மை இழுத்துக்கொண்டிருக்க முடியும் - நேசம் காட்டி இருந்தால், நம்மில் பலருக்கு நெறித்த புருவம் இருந்திராது. ஆனால், அந்த முறைக்கு இடமில்லாதபடி 'சர்வ ஜாக்ரதை'யுடன், மிகத் திறமையாகக் கவனித்துக் கொண்டார், தூண்டிவிட்டு, துண்டு தேடிக்கொண்டு ஒடிவிட்ட உத்தமர். என்றென்றும் ஒன்று கூடவே முடியாத நிலையில் 'இரு பிரிவுகளையும் வைத்துவிட்டார், இடம் தேடி ஏங்கிக் கிடந்தவர். அன்பு எங்கே சுரந்து விடுகிறதோ - என்று பயந்து. நரகல் நடையை அள்ளி அள்ளி வீசியும், அபாண்டம் சுமத்தியும், பழி பாவத்துக்கு அஞ்சாத புகார்களை அவிழ்த்து விட்டும் பெரியாரின் பெருந்தொண்டுக்குரிய பலனை, 'குத்தகை'க்கு எடுத்துக்கொண்டார் அந்தக் குணாளர். துரோகிகள் காலிகள் கூலிகள் போக்கிடமற்றவர்கள் வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்றவர்கள் அப்பாவிகள் சூதர்கள் கொலைபாதகர்கள் பொறுக்கிகள் தம்பி! எழுதக்கூடக் கூச்சமாக இருக்கிறது, அப்படி யெல்லாமல்லவா ஏசத் தலைப்பட்டார்கள்! ஒவ்வொரு தூற்றலும், பிரிந்தோர் பிரிந்தோரே என்பதை உறுதிப்படுத்தத்தான் உதவிற்று!! பிரிவினால் இலாபம் தேடியவருக்கு மகிழ்ச்சி பிடரியைப் பிடித்தாட்டிற்று.<noinclude></noinclude> 71eniq0tm010yiaxtlhwtrx8mhzcd88 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/72 250 644906 1947521 1939400 2026-06-18T05:44:23Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்' என்றார் வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி செய்து விட்டார் நீண்ட நாள் பசியால் வாடிக்கிடந்தவர். அந்த 'இராஜதந்திரம்' அவருக்குப் பெருத்த இலாபம் என்று எண்ணி மகிழ்கிறார் என்கிறார்கள். மகிழட்டும்! ஆனால், அந்தப் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைநிறுத்திவிட்டதுடன், அதன் மூலம், நாட்டிலே புதியதோர் 'சக்தி' வளர வழி செய்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழகம்cஎன்பது கோபத்தினின்றும் முளைத்தது என்ற நிலை மாறி, கொள்கையைப் பண்புடன் பரப்பிடவும், ஆற்றலுடன் செயல்படுத்தவும், அஞ்சா நெஞ்சுடன் அறப்போர் நடாத்தவும், இறுதி இலட்சியம் ஈடேறும் வரையில், இன்பத் திராவிடம் காணும் வரையில், இடையறாது பாடுபடவும், இடையில் எவர் புகுந்து இளித்தாலும், கண் சிமிட்டினாலும், இது, அது என்று ஆசை மூட்டினாலும், எமது இலட்சியம் இன்பத் திராவிடம், அதைப் பெறவே எமது கழகம் என்று கூறி, ஏறு நடையுடன் இலட்சியப் பாதையில் நடந்திட ஓர் நேர்மையான படை, நேர்த்தியான குடும்பம் நிலைத்து விட்டது. நிந்தனை நமது கழகக் கழனிக்கு உரமாயிற்று. தூற்றல், நமது குடும்பத்துக்குள் தோழமை மலர்ந்திடச் செய்தது. இழிமொழியும் பழிச்சொல்லும் வீசினர்; நமது இதயத்தில் ஈட்டி கொண்டு தாக்கினர். மனப்புண் போக்கிட மாமருந்து தேடினோம். குடும்ப பாசம், அந்த மருந்தாக அமைந்தது. அத்தகைய குடும்பம் நடாத்தும் குதூகல விழாவல்லவா தம்பி, 17, 18, 19, 20 !! கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்கும் வரலாறு, இத்தகைய சம்பவங்களைப் பொன்னெனப் போற்றுகிறது. வா, தம்பி, வா!! நண்பர் குழாத்துடன் வா!! {{Right|அன்புள்ள,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 15-4-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> flbhsvrzk1esp134bgpl0jvx8tt2u0y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/167 250 645003 1947530 1941012 2026-06-18T06:03:30Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 4||</b>157}}{{rule}}</noinclude> ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருக்கும், ஆர்ப்பாட்டக்காரர் தொகை. பம்பாய் மராட்டியருக்குக் கிடையாது என்ற அநீதியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் கிளர்ச்சி பலாத்கார உருவெடுத்தது - காங்கிரஸ் தலைவர்கள் கதிகலங்கிப் போயினர். நேரு பண்டிதர் மட்டும்தான் தாக்கப்படவில்லை - என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. இவ்வளவு கொந்தளிப்பு, எரிச்சலுக்கிடையேயும், நேரு பண்டிதரிடம் அன்பும் மரியாதையும் காட்டத் தவறவில்லையே மக்கள் மொரார்ஜியும் பட்டீலும் படாதபாடு படுத்தப்பட்டனர், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இழிவாக நடத்தப்பட்டனர், என்றாலும், ஆத்திரம் கொண்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட நேரத்திலேயும், பண்டிதர், பார்புகழ் தலைவர், அவரிடம் பரிவும் மதிப்பும் காட்டத் தவறக்கூடாது என்று மராட்டிய மக்கள் கருதினரே. இஃதன்றோ செல்வாக்கின் மகத்துவம் என்று நான் எண்ணி மகிழ்ந்தேன், நேரு பண்டிதருக்குத்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்று செய்தி படித்தபோது. ஆனால், தம்பி, அடுத்த வரியைப் படித்ததும், மகிழ்ச்சி அல்ல, சிரிப்பே வந்தது; நேரு பண்டிதருக்கு மட்டும்தான் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை என்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? கலகம் ஆரம்பமாவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே நேரு கொட்டகைக்குச் சென்று விட்டாராம்! மக்கள் ஏமாந்தனர் என்று வேறோர் இடத்தில் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. கருப்புக்கொடி காட்ட மக்கள் கூடினராம், நேரு பண்டிதரோ, அவர்கள் நுழைவு வாயிலில் இருந்தது தெரிந்து, கொல்லைப்புறமாகக் கொட்டகைக்குள் நுழைந்து, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டக்காரர்களை ஏமாற்றி விட்டாராம்! இவ்விதமெல்லாம் இடர்ப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும், மனம் நொந்த நேரு பண்டிதர், 'உலகத்துக்கு உபதேசம் செய்கிறேன் நான்! வெளிநாடுகள் சென்று சாந்தம், சீலம் போதிக்கிறேன்! என் நாட்டிலேயோ நிலைமை இங்ஙனம் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகள் சென்று பேசுவது? என்று கேட்கிறார்.<noinclude></noinclude> blap6pw26aoh21ggz6yxhv8h5rrh9lr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/168 250 645004 1947531 1941255 2026-06-18T06:04:18Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்த நிலையில் பேசும்போது, நேரு பண்டிதர், தேர்தல் வெற்றி பற்றிக் கவலை இல்லை, பலாத்கார வெறி உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும் - அதுதான் முக்கியம் என்று கூறுகிறார். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும் - ஒரு குறிப்பிட்ட இலட்சியம் நமது நன்மதிப்பையும் அக்கறையையும் பெற்று விட்டால், தேர்தல் வெற்றியிலே ஆர்வம் காட்டுவதைவிட, அந்த இலட்சியத்திடம்தான் அதிகமான அக்கறை காட்ட வேண்டும் என்ற தத்துவத்தை நேரு பண்டிதரே கூறுகிறார். தம்பி! நாம் மேற்கொண்டுள்ள இலட்சியம் மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வளரவும், தேர்தல் காரியம் பயன்பட வேண்டும் என்பதிலேதான், நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும்; வெறும் தேர்தல் வெற்றிக்காக, இலட்சியத்தை மாற்றிடும் போக்கு ஆகாது - கூடாது - எழாது. எத்தனை எத்தனை இல்லங்களிலும் இதயங்களிலும் நமது இலட்சியத்தைப் பதியவைப்பதற்கு, இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, என்னென்ன சூது, சூழ்ச்சி, வளைதல், நெளிதல் நடாத்தி வெற்றி தேடுகிறோம். என்பது அல்ல. ஆம், தம்பி! இதை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும், இந்தப் புதிய கட்டத்தில். தேர்தலில், எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆசைக்கு நாம் ஆட்பட்டுப்போய், அதற்கான வழி தேடுவது என்று இறங்கினால், தம்பி, நிச்சயமாகக் கூறுகிறேன், மாற்றார்கட்கும் சொல்கிறேன், இயலாத காரியம் அல்ல. நாளையிலிருந்து துவங்கி தட்சிணப் பிரதேசம் எனும் திட்டத்துக்கு ஆதரவு காட்டுவது என்று ஆரம்பித்தால் போதும், மெயிலும், இந்துவும், மித்திரனும், மணியும், மேல் விழுந்து கொண்டு ஆதரவு காட்டும், நமது தோழர்களின் படங்கள் பளிச்சிடும், நமது ஊர்வலக் காட்சிகள் படமாகும். நமது பேச்சுகள் அந்த ஏடுகளின் தலையங்கங்களுக்கு உயிரூட்டும்! திடீர்ப் பிரமுகர்களே ஆகிவிடலாம்! இந்த நிலைமையை நாம் அறியாமலும் இல்லை, இந்த வித்தை செய்திட அதிகச் சிரமமுமில்லை!<noinclude></noinclude> qdktgj6lofvobk2f4c8z0fanc6oeg4r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/169 250 645005 1947533 1941260 2026-06-18T06:04:58Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 4||</b>159}}{{rule}}</noinclude> ஆச்சாரியாரும் ஆசைத் தம்பியும், சுப்ரமணியமும் சிற்றரசும், ஒரே மேடையில்! கல்கியில், நமது கழகத்தின் புத்தி கூர்மைக்குப் பாராட்டும். ஆனந்த விகடனில் நமது ஆற்றலுக்கு நற்சான்றும், கட்டுரையாய், கவிதையாய் வடிவம் காட்டும். இம்மட்டோ! கருநாடகக் கனதனவான்களும், கேரளத்துப் பெரியவர்களும், ஆதரவு தருவர். பணமா? ஏ! அப்பா! திகட்டும் அளவுக்கு!! வெற்றி - பல முனைகளில். தேர்தலில் வெற்றி கிட்டச்செய்வது ஒன்றுதான் நமது வேலை என்றால், இதுபோல் எண்ணற்ற ஏற்பாடுகள், கண்சிமிட்டிக்கொண்டு, நிற்கின்றன. நாம் கை காட்டினால், இடை நெறிய, ஆடை நெகிழ, புன்னகை பூத்திட ஓடிவரும் 'மாய மோகினிகள்' ஏராளம். ஆமாம், தம்பி, நாம் மட்டும், சபலத்துக்கு இடமளித்திடச் சம்மதித்தால் போதும். ஆனால் நாம், தேர்தலில் வெற்றி பெற வழி என்ன என்று மட்டும் ஆராயும், அற்ப ஆசைக்காரரல்ல; நமது நோக்கம், நாம் எந்த இலட்சியத்துக்காகப் பணியாற்றுகிறோமோ அஃது, கைகூடும் வாய்ப்பு வளரத்தக்க வகையில் எப்படி இந்தத் தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான். இதனை நாம் மறக்கவும் கூடாது - மறைத்திடவும் தேவையில்லை. தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே, நமது நோக்கமாகக் கொண்டால், எத்தனையோ எதிர்பாராத அணைப்புகளும் ஆதரவுகளும் பெற முடியுமே. எடுத்துக் காட்டுக்காகக் கூறுதற்குக்கூட எனக்குத் தம்பி, கூச்சமாக இருக்கிறது, எனினும் மந்தமதியினருக்கும் விளங்கட்டும் என்பதற்காகக் கூறுகிறேன், நாளையிலிருந்து தொடங்கி அமெரிக்காதான் அகில உலக ஜனநாயக ரட்சகன். அந்த நாட்டுடன் இந்திய சர்க்கார் பட்டும் படாத முறையில் உறவு கொண்டாடுவது சரியல்ல, நேசமும் பாசமும் வளரவேண்டும், ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம் என்று வைத்துக்கொள், தம்பி! அமெரிக்க ஏடுகள் அவ்வளவுமல்லவா, நமது பிரச்சார சாதனங்களாகிவிடும்! ஒரே கிழமையில், நாம் அகில உலக அறிமுகம் பெற்றவர்களாகிவிடலாமே!<noinclude></noinclude> 0d0948je9kezqr61ktgrvb0svkombwa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/170 250 645006 1947534 1941265 2026-06-18T06:06:18Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நெடுந்தொலைவுகூடப் போக வேண்டாம்; தொழில்களைச் சர்க்கார் நடத்தினால், உற்பத்தி ஒழுங்காகப் பெருகாது, செல்வம் வளராது, தரம் இருக்காது - எனவே தனிப்பட்ட முதலாளிகளிடமே இருக்க வேண்டும் என்று பேசினால் போதாதா, சென்னையில் இன்றுள்ள 'அறிவகம்' ஏன் நமக்கு, கோவையில் 'லட்சுமி கிரஹம்' கட்டிவிடலாமே! தேர்தலில் வெற்றி பெறுவதுதான், நாம் இந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் பாடுபட்டதற்கு ஈடாக நாம் எதிர்பார்க்கும் பலன் என்றால், வழி இல்லாமற் போகவில்லை தம்பி! அந்த வேலையும் மெத்தக் கடினமானதல்ல. நாம் அதற்காக அல்ல அரும் பணியாற்றி வருவது; தந்தையர் நாடு தனி அரசு பெறவேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறோம் - தேர்தலையும் இந்தப் பணியிலே ஒரு கட்டமாகக் கொள்கிறோம். தேர்தலை, தம்பி, பல அரசியல் கட்சிகள் அறுவடைக் காலம் என்று கொள்கின்றனர். நாமோ, தேர்தலையும் உழவுக் காலமாகவே கொள்கிறோம்; தேர்தலை வாய்ப்பாகக்கொண்டு, மக்களின் நெஞ்சத்தில் நற்கருத்துக்களைத் தூவிடும் நற்பணியில் ஈடுபடப்போகிறோம். எனவே நமக்கு தேர்தலில், நாம் எத்துணை இடங்களைக் கைப்பற்றுகிறோம் என்பதல்ல, பார்க்க வேண்டிய கணக்கு – நாம் ஏதோ அந்தக் கணக்கு காணவே துடிப்பது போலவும், அந்தக் கணக்கப் பொய்த்துப்போனால் நமது கழகத்தின் உயிர் போயேவிடும் என்றும், வெகுண்டெழுந்தான் பிள்ளை வீறாப்புப் பேசுகிறாரே, அது, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை, திகிலால் அவர் இழந்ததன் விளைவு - வேறென்ன! {{left_margin|3em|தேர்தல் என்றால் என்ன சாமான்யமா? பண பலம் பத்திரிகை பலம் ஜாதி அபிமானம் வலைபோட்டுப் பிடிக்கும் வித்தை.}}<noinclude></noinclude> 22m53vyy1qugwdozs7h8j93zmvmu2oo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/171 250 645007 1947535 1941309 2026-06-18T06:07:17Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 4||</b>161}}{{rule}}</noinclude> இப்படி எத்தனையோ தேவைப்படுமே - இவர்களிடம் ஏது? என்று கேட்கிறார், வெகுண்டெழுந்தான் பிள்ளை. நாம் தம்பி, கூறத்தக்க பதிலெல்லாம், அப்பழுக்கற்ற கொள்கை, அசைக்கொணா ஆதாரங்கள், சேர்க்க இதனை எடுத்துரைக்கும் ஆற்றல். ஓயாது உழைத்திடும் பண்பு. விளைவுபற்றி அஞ்சாமை. இந்தப் பலம் எம்மிடம் இருக்கிறது - போதும் என்பதுதான். வானம் இடிவதுபோலக் கூவுகிறார்களல்லவா கீதா வாக்கியமென்று, வடமொழியில், நிஷ்காமியகர்மம் என்று - (பலனைப்பற்றிய கவலையற்று கடமையைச் செய்வது) அது இதுதான்! இதற்கு இந்துவில் இருபது தலையங்கம் ஆதரவாக வந்தே ஆகவேண்டும் என்று 'விதி' யொன்றும் இல்லை! 'மெயில்' தன் தலையங்கத்தில் 'தி.மு.க. தேர்தலில் ஈடுபடுகிறது - இது கவனிக்கத்தக்க புது பிரச்சினை. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வசதிகள் தி.மு.க. வுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் - என்று ஏளனமும், எரிச்சலும், திகிலும் ஏககாலத்தில் தொனிக்கும் விதமாக எழுதுகிறது. வசதிகள்!! தம்பி! பொருள் தெரிகிறதா? போடியும் போலாவரமும், ஜெமீனும், ஆலையும், பாங்கும், பாரத் சேவா சமாஜமும், எம்மிடம் - பைத்தியக்காரர்களே! உம்மிடம் இந்த வசதிகள் உண்டா என்பதுதான் பொருள். நமது ஏழ்மையும் எளிமையும் - இவற்றினாலும் பாழ்படாத நமது தூய்மையும் நமக்கு வெற்றிதரப் போதுமானவை என்று நான் திடமாக நம்புகிறேன், என்பதைக் கூறினால், தம்பி, பணத்தையும் பண்புகெட்ட தனத்யுைம் நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஆனால், நமக்கு நமது ஏழ்மைதான் வலிவளிக்கப் போகிறது! ஐயோ! இவ்வளவு இலட்சத்தை வாரி வாரி இறைத்து விட்டோமே, வெற்றியோ தோல்வியோ, என்ன ஆகிறதோ? என்ற பதைப்பு நமக்கு ஏற்படவே செய்யாது. நாம் செலவிடப் போவது எதுவுமில்லை - அந்த வசதி நிச்சயமாக நம்மிடம் இல்லை.<noinclude></noinclude> dfwisg7ws34hy4am2edp2velsc9ucqm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/172 250 645008 1947536 1941345 2026-06-18T06:08:46Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம். அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம். ஆளவந்தார்கள் செய்துள்ள அக்ரமங்களை அம்பலமாக்கப் போகிறோம். இதனை அஞ்சாது, அயராது செய்திடப்போகிறோம். மக்களை, நித்த நித்தம் சந்திக்கப் போகிறோம் - நமக்கும் மக்களுக்கும் இடையே தேர்தல் தரகர்கள் இருக்கப் போவதில்லை. ஊராள வந்தவர்கள் நடத்திடும் ஊழலை விளக்கப் போகிறோம் - அதனால் கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை எடுத்துக் காட்டப் போகிறோம்; அந்தப் பணம், தமது வியர்வை, இரத்தம், கண்ணீர், என்பதை மக்கள் அறியும்படிச் செய்யப் போகிறோம். தமிழ் மரபுக்கு மாசும், இனத்துக்கு இழுக்கும், உரிமைக்கு ஊறும், உடைமைக்குக் கேடும் விளைவித்த துரோகச் செயலை எடுத்துக் காட்டப் போகிறோம். மக்களைக் காணவே இந்த மகானுபாவர்கள் அஞ்சிடத் தக்கதோர் நிலையை உருவாக்கிக் காட்டப் போகிறோம். இதற்கு நமக்கு இரும்புப் பெட்டியும் கரும்புத் தோட்டமும் தேவையில்லை; இதய சுத்தியும் அஞ்சாத தன்மையும் போதும் - அக்கருவூலம் நம்மிடம் ஏராளம்! தம்பி! பணம் இல்லாததாலேயே, பட்டுப்போவோம் என்று மனப்பால் குடிக்கட்டும் - பட்டால்தான் அவர்களுக்குத் தெரியும்!! காந்தியார் பெயர் கூறிக் 'கனம்' ஆனவர்கள், காந்தீயத்தைக் கொன்றொழித்த காதையை மக்கள் அறியச் செய்வோம். 'அகில இந்தியா' எனும் அலங்காரம் பேசுவார்கள், திரு இடத்துக்கு, ஐந்தாண்டுத் திட்டத்தில் இழைத்துள்ள வஞ்சகத்தை, வரண்ட தலையினர் அனைவரும் உணர்ந்திடச் செய்வோம். தொட்டது துலங்காத துரைத்தனம் நடாத்துபவர்களல்லவா நீங்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிப் பேர்வழி<noinclude></noinclude> 62e64wbbe9hvgkke5aepgjbjmrqgtwy 1947538 1947536 2026-06-18T06:11:41Z Saranya V R 14232 குறி 1947538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாம் ஊராருக்கு உண்மையை எடுத்துரைக்கப் போகிறோம். அதனை ஓயாது எடுத்துரைக்கப் போகிறோம். ஆளவந்தார்கள் செய்துள்ள அக்ரமங்களை அம்பலமாக்கப் போகிறோம். இதனை அஞ்சாது, அயராது செய்திடப்போகிறோம். மக்களை, நித்த நித்தம் சந்திக்கப் போகிறோம் - நமக்கும் மக்களுக்கும் இடையே தேர்தல் தரகர்கள் இருக்கப் போவதில்லை. ஊராள வந்தவர்கள் நடத்திடும் ஊழலை விளக்கப் போகிறோம் - அதனால் கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை எடுத்துக் காட்டப் போகிறோம்; அந்தப் பணம், தமது வியர்வை, இரத்தம், கண்ணீர், என்பதை மக்கள் அறியும்படிச் செய்யப் போகிறோம். தமிழ் மரபுக்கு மாசும், இனத்துக்கு இழுக்கும், உரிமைக்கு ஊறும், உடைமைக்குக் கேடும் விளைவித்த துரோகச் செயலை எடுத்துக் காட்டப் போகிறோம். மக்களைக் காணவே இந்த மகானுபாவர்கள் அஞ்சிடத் தக்கதோர் நிலையை உருவாக்கிக் காட்டப் போகிறோம். இதற்கு நமக்கு இரும்புப் பெட்டியும் கரும்புத் தோட்டமும் தேவையில்லை; இதய சுத்தியும் அஞ்சாத தன்மையும் போதும் - அக்கருவூலம் நம்மிடம் ஏராளம்! தம்பி! பணம் இல்லாததாலேயே, பட்டுப்போவோம் என்று மனப்பால் குடிக்கட்டும் - பட்டால்தான் அவர்களுக்குத் தெரியும்!! காந்தியார் பெயர் கூறிக் 'கனம்' ஆனவர்கள், காந்தீயத்தைக் கொன்றொழித்த காதையை மக்கள் அறியச் செய்வோம். 'அகில இந்தியா' எனும் அலங்காரம் பேசுவார்கள், திரு இடத்துக்கு, ஐந்தாண்டுத் திட்டத்தில் இழைத்துள்ள வஞ்சகத்தை, வரண்ட தலையினர் அனைவரும் உணர்ந்திடச் செய்வோம். தொட்டது துலங்காத துரைத்தனம் நடாத்துபவர்களல்லவா நீங்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிப் பேர்வழி-<noinclude></noinclude> towq6pb0zoc79004ay8h1mv2dgzvmix பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/173 250 645009 1947539 1941384 2026-06-18T06:12:19Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 4||</b>163}}{{rule}}</noinclude>களல்லவா நீங்கள். சிந்தையில் கள்விரும்பி சிவசிவா என்பதுபோல், வந்தே மாதரம் என்பார் வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடியது உங்கள் பொருட்டல்லவோ, நீங்கள் குடிபுகுந்துவிட்டீர்கள் என்பதறிந்துதானே, 'காங்கிரசைக் கலைத்துவிடுக' என்று காந்தியாரே கட்டளையிட்டார். ஐந்தாண்டுத் திட்ட மூலம், பக்ராநங்கல், சிந்திரி, ஹீராகுட் என்றெல்லாம் அமைத்து, வடநாட்டைச் சீமையாக்கி திராவிடத்தைத் தேய வைக்கும் தீயோரல்லவா நீங்கள். வடக்கே விஞ்ஞானம், இங்கே பஜனைஞானம், வடக்கே ஆலைகள், இங்கே அம்பர் ராட்டை, வடக்கே அணு ஆராய்ச்சி இங்கே அப்பளத் தொழில். வடக்கே அதிகாரம், இங்கே காவடி தூக்குவோர். இப்படி ஓர் இழி நிலையை ஏற்படுத்தியவர் களல்லவா நீங்கள். தேவிகுளம் பீர்மேடு தமிழருக்குரியது என்று நாடே கூற, நல்லோர் எடுத்துக் கூற, ஆமாம் என்று தலையையும் அசைத்துவிட்டு, பிறகு இஞ்சி தின்றுவிட்டு இளித்திடும் மந்திபோல் உம்மை வடவர் ஆக்கிட, மேடாவது குளமாவது என்று கேலி பேசிய, தமிழ் இனத் துரோகிகளல்லவா நீங்கள்! தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூட, சூடு சொரணையற்றுப் போனவர்களல்லவா நீங்கள்! ஓட்டா வேண்டும் ஓட்டு! ஏனாம்? எம்மை ஓட்டாண்டியாக்கினது போதாதா என்று மக்கள் கேட்கப் போகிறார்கள் - கேட்கச் செய்வோம். இதற்கெல்லாம் தம்பி, நமக்கு இலட்சங்கள் தேவையில்லை, கொள்கையில் உறுதி இருந்தால் போதும். “தி.மு.கவில் நல்ல இளைஞர் பலர் இருக்கிறார்கள், உற்சாகமும், நல்ல நாவன்மையும் அவர்களுக்கு இருக்கிறது' மேடையிலே கொட்டி முழக்கவும் அவர்களுக்குத் திறமை இருக்கிறது. இது மட்டுமல்ல, கட்டுக்கோப்பும் படை பலமும் கூட அவர்களுக்கு இருக்கிறது. தேர்தலில் கலந்துகொள்ள இதற்குமேல் என்ன வேண்டும் என்று சுலபமாகக் கேட்டுவிடலாம். விடைகொடுப்பது அவ்வளவு சுலபமல்ல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெரிய தடை ஒன்று இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது." "தி.மு.க. வின் முடிவு காங்கிரசுக்கு ஏற்பட்ட எதிர்க்கட்சிப் போராட்டம் மட்டுமல்ல. தி.க. வுக்கும், ஏற்படும் பலப்பரீட்சை போராட்டமாகவும் விளங்கப் போகிறது."<noinclude></noinclude> 5lu9crvy55cqky2v8hzyv08rejx29x8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/174 250 645010 1947540 1941405 2026-06-18T06:12:58Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சிவாஜி எனும் ஓர் காங்கிரஸ் ஏடு எழுதுவது இது. பலருடைய ஆசை இது. பலர் இதற்காகத் தவமாய்த் தவமிருக்கிறார்கள். தி.மு.க.வைத் தாக்குவது என்ற ஒர் நப்பாசை இருந்து வருகிறது. இதிலும் வெகுண்டெழுந்தான் பிள்ளை ஏமாறத்தான் போகிறார். பட்டம் பதவிக்காகவோ, பணத்தாசை பகட்டுக்காகவோ இவர்கள் தேர்தலில் ஈடுபடாமல், பொதுமக்களுக்குப் பணி புரிவதற்காகவே தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்று எனக்குப் பட்டால், நான் ஆதரிப்பேன் - என்று தி.மு.க. குறித்துப் பெரியார் பேசியதாக 'தமிழ் நாடு' இதழில் காண்கிறேன். நாம் தேர்தலில் ஈடுபடுவது, தூய நோக்குடன்தான் என்பதை நாம், விளக்கமாக எடுத்துக் கூறியபடி இருப்போம் - பெரியாரின் பேராதரவு நமக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் பணிபுரிவோம். நப்பாசைக்காரர்கள் தூபமிட்டு, பெரியாரின் தி.க.வைக் கொண்டு நம்மை எதிர்க்க வைக்கிறார்கள் என்றே வைத்துக்கொள், தம்பி நமக்கென்ன, அதனால் இழிவு என்றா எண்ணுகிறாய்!! இல்லை! இல்லை! நான் அதனைப் பெறற்கரிய பேறு என்றே கொள்வேன். பெரியார், நமது போர்த்திறனைக் கண்டு களிப்படையினும், அடையாது போயினும், காணவேண்டும் என்றே நான் பெரிதும் விழைகிறேன்! காங்கிரசுடன் நாம் தேர்தல் களத்தில் போரிடுவதைக் கண்டிடும்போது, பெரியார், என்னதான் நம்மிடம் பெருங்கோபம் கொண்டிருப்பினும், நாம் திறமையுடன் காங்கிரசை எதிர்த்து வீழ்த்தினால் மகிழாதிருக்க முடியாது! அவர் அளித்த ஆற்றலையன்றோ, நாம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம்!! தித்தன் எனும் ஒருவன் தன் தந்தையிடம், மனவேறுபாடு கொண்ட கோப்பெருநற்கிள்ளி எனும் மன்னர் மகன் பற்றிய செய்யுளொன்று புறநானூற்றில் உளது. தந்தையும் மகனும் வேறாயினர் - கோப்பெருநற்கிள்ளியிடம் தந்தை தொடர்பு கொள்ளாது தனித்திருந்தனன்.<noinclude></noinclude> 267d7hbo6nkyx5bjtycixazzxem15or பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/175 250 645011 1947541 1944333 2026-06-18T06:13:29Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>தொகுதி 4||</b>165}}{{rule}}</noinclude> கோப்பெருநற்கிள்ளி கட்டிளங்காளை, போரில் வல்லான். அவன் ஒரு சமயம், முக்காவல் நாட்டு ஆமூர் எனும் இடத்தே, மல்லன் ஒருவனைப் போரில் வென்றான்! அதனைப் பாராட்டி, சாத்தந்தையார் எனும் புலவர் பெருமகனார் பாடியது, என் நினைவிற்கு வருகிறது - தேனாய் இனிக்கிறது. மற்போரினைக் கண்டு களித்தார் அப்புலவர். மல்லன் வலிவுமிக்கவன்; கோப்பெருநற்கிள்ளியின் மார்பின்மீது உட்கார்ந்துகொண்டு அழுத்துகிறான்; கிள்ளி அந்த அழுத்தத்தை அகற்ற, மல்லனுடைய தலையையும் காலையும் வளைத்திழுத்து ஒடித்துத் தோற்கடித்தான். பசி மிகுந்த யானை, மூங்கிலைப்பற்றி இழுத்து ஓடிக்குமே, அதுபோலிருந்ததாம், கிள்ளியின் மற்போர் வகை, அதைப் பாராட்டிய புலவர், {{left_margin|3em|நல்கினும் நல்கானாயினும் 'காண விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெல்போர்ப்போர் அருந் தித்தன் காண்க!}} போரில் வெல்லும் திறன் படைத்தவனம், எதிர்ப்பாரற்ற வலிவுடையோனுமாகிய, கிள்ளியின் தந்தையாம் தித்தன் காண்பானாக! என்று பாடுகிறார். தந்தையும் மகனும் மனவேறுபாடு கொண்டவர்தாம் - ஆயினென்! தத்தனும் கிள்ளியும் வேறு வேறு இடத்திலேதான் வாழ்கின்றனர். எனினும், மகனுடைய மற்போர் வெற்றியைக் காண்பதன்றோ, தந்தைக்குக் கிடைத்தற்கரிய பேறு! எனவே, கிள்ளியின் வெற்றியைத் தந்தை காண வேண்டும் -அவருக்குக் காட்சி களிப்பளிப்பினும், அளித்திடாது போயினும், கவலையில்லை, கண்டால் போதும் என்கிறார் சாத்தந்தையார்! {{left_margin|3em|<poem>இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்ஒதுங் கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் போரருத் தித்தன் காண்கதில் அம்ம</poem>}}<noinclude></noinclude> ta1h5qfztaoub2m7a7gi7cdzf3qw59s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/176 250 645012 1947543 1945181 2026-06-18T06:14:16Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை ஓசிய ஏற்றிக் களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே {{Right|-புறநானூறு 80 }}</poem>}} தம்பி! கடினமாக இருக்கிறதா - சிறிதளவு எளிதாக்க முயல்கிறேன். ஆமூரில் வலிமைமிக்க மல்லனின் ஆற்றலை அடக்கி, அவன் மார்பில் ஒருகாலை ஊன்றி, மற்றொரு, காலால் அவன் எதிர்ப்புக்களை விலக்கி, பச்சை மூங்கிலை வளைத்து ஒடித்துத் தின்ன முயலும் யானையைப்போல, அம்மல்லனின் காலும் தலையும் முறிய அவனைக் கொன்று வெற்றி மாலை புனையும் இவனை (போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை) போர் வெல்லும் திறமைமிக்க தித்தன் என்னும் இவன் தந்தை, மகிழ்ந்தாலும் மகிழாவிட்டாலும் காண்பானாக. மைந்து வலிவு-; முருக்கி - கெடுத்து; போர் அரும் - போரில்மிக்க; பணை- மூங்கில்; இருதலை - தலையும் காலும் ஓசிய - முறிய; தித்திக்கிறதல்லவா! தித்தன் - கிள்ளி - மல்லன்! தி.க.- தி.மு.க. காங்கிரஸ் என்று எண்ணிப் பார்த்திடும்போது, எனக்கு மட்டும் இனிப்பாகவா இல்லை? தித்தன் போல் 'அவரும் காணட்டும் அகமகிழட்டும்' என்று எண்ணி, தேர்தல் களத்திலே இறுமாந்து நிற்கும் மல்லனுடன் போரிட்டாக வேண்டும். தமிழ் மரபினை மறவாத உன் ஆற்றல், பலன் தராமலா போகும்! {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 10-6-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> dqss17ngk0ar058b4uy4nf255xr4atw அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நொ 0 645105 1947510 1939747 2026-06-18T05:28:18Z TI Buhari 4634 1947510 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நொ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நொ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொச்சி|நொச்சி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொடிப்பு|நொடிப்பு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொண்டுதல்‌|நொண்டுதல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நொணலை|நொணலை]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி|நொதி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி உற்பத்தி, தொழிலக|நொதி உற்பத்தி, தொழிலக]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதிச்‌ செயலியல்‌|நொதிச்‌ செயலியல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதி (உயிர் வேதியியல்‌)|நொதி (உயிர் வேதியியல்‌)]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதித் தடுப்பு|நொதித் தடுப்பு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொதித்தல்‌|நொதித்தல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொபிலியம்‌|நொபிலியம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொய்ம்மை|நொய்ம்மை]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நொலையாளி|நொலையாளி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌|நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நொறுங்குமை|நொறுங்குமை]] | |- |}{{nop}} 66mkm0itky0fce0xgva6fzusegpfcqr பயனர்:Bharathblesson/test 2 645148 1947673 1947263 2026-06-18T09:08:18Z Bharathblesson 15164 1947673 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} runmkkz2wa401cdmvo78795u9z6b5ln பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/3 250 645799 1947677 1941455 2026-06-18T10:11:55Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>முனைவர் <b>கோ. விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008 <center><b>அணிந்துரை</b></center> தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> tlv9seozb8o6zouxtlhyl84d2rir7kf 1947679 1947677 2026-06-18T10:12:43Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude><poem>முனைவர் <b>கோ. விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008</poem> <center><b>அணிந்துரை</b></center> தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> sn1m35ahgeutqxs0fnje95tl1sz0ydl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/4 250 645800 1947680 1941458 2026-06-18T10:22:09Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது. தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்! இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி. தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது. உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் <b>மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் <b>திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி. <b>{{rh|||இயக்குநர்}}</b><noinclude></noinclude> 2folli9k67ezelbawr7z09qbdfea6mc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/5 250 645801 1947685 1941461 2026-06-18T10:27:08Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}} {{x-larger|"20}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை "தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிட மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> 8ovkqwdj2rtfo6e8np38vv9s5y036vj 1947686 1947685 2026-06-18T10:27:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} {{x-larger|"20}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை "தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிட மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> 82iku0jn1lbau09wvhx436bgvujopbt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/6 250 645802 1947687 1941464 2026-06-18T10:33:32Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள், உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் 'உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன், இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்,' என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும். கடிதத்தைப் படிப்போருக்கும், கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும். கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை. 'புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா, தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன் அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude> 0od1ft4nhdqaa2mmn1pvecb8fpfj8pq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/7 250 645803 1947688 1941466 2026-06-18T10:38:49Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா?, தமிழர் திருநாள். அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் 'ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன" என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார். 1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude> r28h5rxow3k43o9u9ig7zkpy1pppu1c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/8 250 645804 1947689 1941468 2026-06-18T10:41:27Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1947689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{rh|||அன்புடன்,}} LaGyó<noinclude></noinclude> 3c2s7jht31e6gnvbinub2lrgjivfs5j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/11 250 645807 1947690 1941473 2026-06-18T10:49:24Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 75</b>}} {{center|{{x-larger|<b>மிரட்டல்! விரட்டல்!</b>}}}} {{left_margin|3em|<b>டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும் - டில்லியின் ஓரவஞ்சனை - கல்வி, கலை, அரசியலில்.</b>}} <b>தம்பி!</b> <b>{{x-larger|த}}</b>க்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா - கோபமில்லையே என்மீது அதற்காக!! மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார் - அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல - ஆசிரியத் தொழிலில் இருப்பவர் - அமைதியில் ஆனந்தம் காண்பவர் - அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூட மாட்டார் - இவ்வளவு போதும் - கோடிட்டுக் காட்டினாலும் போதும் - இப்போதைக்கு இவ்வளவுபோதும் - என்று அவ்வப் போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர் - என் நண்பர் - தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர் - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர் மு. வரதராசன். பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர்,<noinclude></noinclude> 2bbwuv90t3pgn0aynvok2qdglij8bqv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/12 250 645808 1947691 1942630 2026-06-18T10:59:14Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|2||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகின்றோம். இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, "பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!" என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, "ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை" என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர். அதிலும், தமிழாசிரியர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் - ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அவர்களை, 'நாத்திகர்' என்று நிந்திக்கவும், ஆட்சியாளர்கள் துடித்தெழுகின்றனர். எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை - அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம். அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர். பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசும்போது, ஆம் என்றுதான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின்கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச்<noinclude> 7, த.அ.க.2</noinclude> mjbgjft32e0iiezxub79p68mq4arzon பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/13 250 645809 1947692 1942631 2026-06-18T11:08:37Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||3}}{{rule}}</noinclude>சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன் - கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடுகளையும் கலைத்தொழித்துக்கூட 'உலகு ஒன்று' என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை. ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடத்திடும்போது மனம் வெதும்புகிறது - இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல் வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர். விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார் - சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான் இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார். தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத் துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்லி துரைத்தனம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக்கொண்டு விடுகின்றனர். டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர்<noinclude></noinclude> qrh0qfowtayymj6v2ra5tk9gz6ezxxz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/14 250 645810 1947694 1942632 2026-06-18T11:27:06Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|4||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில் டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும் போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்படவழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, 'டில்லி - சென்னை தொடர்பினை' எடுத்துக் காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை - நாட்டு மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது. கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்கு வந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம் - கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது. கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல் - விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக்கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல் - விரட்டல்!! தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக் கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக் கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேரு பண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.<noinclude></noinclude> 158xco7m4lkjsnt4xxgbfytowtjav0g பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/305 250 646056 1947505 1942894 2026-06-18T05:07:58Z TVA ARUN 3777 - 1947505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொலையாளி 283}}</noinclude>தனிமங்கள்‌) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான இணை திறன்‌ நிலைகளைக்‌ கரைசல்‌ நிலையில்‌ கொண்டுள்ளன. பதினான்கு எலெக்ட்ரான்களைக்‌ கொண்ட நிறைவுற்ற 5f ஆர்பிட்டால்களைக்‌ கொண்டிருப்பதை(No<sup>+2</sup>) அயனியின்‌ நிலைப்புத் தன்‌மைக்குக்‌ காரணமாகும்‌. நிலையான ஈரிணைத் திறன் சேர்மங்களைத்‌ தரும்‌ லாந்தனைடு வரிசைத்‌ தனிமமான இட்டர்பியம்‌ என்பதுடன்‌ நொபிலியத்தை ஒப்பிடலாம் {{right|—<b>க. சேது</b>}} <b>துணை நூல்</b>. A.K.De, <i>Text book of Inorganic Chemistry</i>, sixth edition, Wiley Eastern Ltd, New Delhi.1987. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="184"/><section begin="185"/>{{fs|110%|<b>நொய்ம்மை‌‌</b>}} ஓர்‌ உலோகத்தில்‌ இயற்பியல்‌ அல்லது வேதி மாற்றங்கள்‌ ஏற்படுவதன்‌ விளைவாக, அதன்‌ நீளுந் தன்மை (ductility) அல்லது கடினத் தன்மை (toughness) குறைவது நொய்ம்மை (embritlement) எனப் படுகிறது. ஒவ்வோர்‌ உலோகமும்‌ வெவ்வேறு சூழ்நிலைகளில்‌ உட்படுத்தப்படும்‌. உலோகங்களில்‌ நொய்ம்மை பின் வரும்‌ மாற்றங்களால்‌ ஏற்படலாம்‌. அவை வெப்ப நிலை மாற்றம்‌, உலோகத்தின்‌ உள்‌ மூலக் கூற்றுக்‌ கட்டமைப்பில்‌ ஏற்படும்‌ மாற்றம்‌, அரித்தல்‌ (corrosion) நடை பெறும்‌ அல்லது நடை பெறாத சூழலுக்கு (environment) உட்படுத்துதல்‌ போன்றவை. <b>வெப்ப நிலை மாற்றத்தால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை</b>. வெப்ப நிலை மாற்றத்தால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை, உலோகத்தின்‌ படிகக்‌ கூட்டமைப்பு அணிக் கோவை (crystal lattice) வழியாகவோ, நுண் படிமங்களைப்‌ (crystallities) பிரிக்கும்‌ எல்லைகளிலோ, பிளவு (fracture) ஏற்படுத்தும். குறைந்த வெப்ப நிலையால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை உலோகத்தில்‌ உரு மாற்றம்‌ (deformation) அல்லது பிளவை உண்டாக்கும்‌. மிகு வெப்ப நிலையால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை உலோகங்களின்‌ மூலக் கூற்றுக் கட்டமைப்புகளை மாற்றும்‌. <b>சூடாக்குவதால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை</b>. எஃகுகள்‌, பாள இரும்புகள்‌ இவற்றைச்‌ சூடாக்கும் போது, நொய்ம்மைக்கு உட்படுத்தப் படுகின்றன. எ-கா: எஃகு அல்லது அய உலோகக்‌ கலவைகளை (ferrous alloys) கடுங்கரை காரத்திற்கு (caustic alkali) நீண்ட நேரம்‌ உட்படுத்தும் போது, நொய்ம்மை உண்டாகிறது. இதனால்‌, கொதி கலன்களில்‌ பழுதுறல்‌, வெடித்தல்‌ இவை உண்டாகின்றன. தகுந்த முறையில்‌ நீரைப்‌ பயன் படுத்தி, இக்குறைபாடுகளை நீக்கலாம்‌. <b>சூழல்‌ மாற்றத்தால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை</b>. இவ்வகை நொய்ம்மையை நீர்ம உலோக நொய்ம்மை, தகைவு–அரித்தல்‌ நொய்ம்மை, ஹைட்ரஜன்‌ நொய்ம்மை என மூவகையாகப்‌ பிரிக்கலாம்‌. <b>நீர்ம உலோக நொய்ம்மை</b>. ஒரு திண்ம உலோகத்தின்‌ ஆக்சைடற்ற பரப்பில்,‌ நீர்ம உலோகம்‌ ஒன்றின்‌ மெல்லிய படலத்தை வைக்கும் போது, படலத்தில்‌ பிளவு ஏற்படுகிறது.எ-கா: பித்தளையில்‌ பாதரசத்தை வைக்கும் போது ஏற்படும்‌ பிளவு. <b>தகைவு-அரித்தல்‌ நொய்ம்மை</b>. ஓர்‌ உலோகத்தைத்‌ தகைவிற்கு உட்படுத்திய உடனே, அரித்தல்‌ இயல்புடைய அல்லது இயல்பற்ற சூழலுக்கு உட்படுத்தினால்‌, உலோகத்தில்‌ விரிசல்‌, பிளவு இவை உண்டாகும்‌. எ-டு: விண்வெளி பயன்பாடுகளில்‌ இடம் பெறும்‌ அமிலத்தைப்‌ பயன் படுத்தித்‌ தூய்மையாக்கும் போது, ஏற்படும்‌ விரிசல்‌. <b>ஹைட்ரஜன்‌ நொய்ம்மை</b>. ஓர்‌ உலோகத்திற்கு முலாம்‌ பூசும் போது, அவ்வுலோகம்‌ ஏற்கும்‌ ஹைட்ரஜன்‌ அணுவால்‌ ஏற்படும்‌ நொய்ம்மை ஹைட்ரஜன்‌ நொய்ம்மை எனப் படுகிறது. இவ்வகை நொய்ம்மையை நீக்க உலோகத்தை மீண்டும்‌ சூடாக்க வேண்டும்‌. {{right|—<b>இரா. இந்து</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="185"/><section begin="186"/>{{fs|110%|<b>நொலையாளி‌‌</b>}} இச்சிறுமரம்‌ யூஃபோர்பியேசிக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்தது. இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ ஆண்டிடெஸ்மா பியூனியஸ்‌ (<i>Antidesma bunius</i>) ஆகும்‌. இது பசுமை குன்றா மர வகையைச்‌ சேர்ந்தது. இந்தியாவின்‌ வெப்பம்‌ மிகுந்த பகுதிகளிலும்‌, இலங்கையிலும்‌ இம்மரத்தைக்‌ காணலாம்‌. இதனைப்‌ பழங்களுக்காக வளர்ப்பதுண்டு. பழங்கள்‌<noinclude></noinclude> sb5a713cbcoci399h0weo7d6fuoy4pp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/314 250 646137 1947443 1944235 2026-06-18T03:25:59Z TI Buhari 4634 1947443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|292 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1927 |width=30% {{ts|vtt}}|ஹையன்ரிச்‌ வீலேன்ட்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |பிwidth=50% {{ts|vtt}}|பித்த நீர்‌ (bile acid) பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1928 |அடால்‌ஃப்‌ வின்டாஸ்‌ |ஜெர்மனி |ஸ்டீரால்களின்‌ அமைப்பும்‌, வைட்டமின்களுடன்‌ அவற்றின்‌ தொடர்பும்‌ |-{{ts|vtt}} |1929 |சர்‌ ஆர்தர்‌ ஹார்டென்‌ |இங்கிலாந்து |rowspan="2"|சர்க்கரை நொதித்தல்‌ குறித்தும்,‌ இதனுடன்‌ தொடர்புடைய நொதிகள்‌ பற்றியுமான ஆய்வு |-{{ts|vtt}} | |ஹெச்‌. வான்‌ ஆயிலர்‌செல்ப்பின்‌ |சுவீடன்‌ |-{{ts|vtt}} |1930 |ஹேன்ஸ்‌ ஃபிஷர்‌ |ஜெர்மனி |ஹீமின்‌, குளோரோஃபில்‌ ஆய்வு, ஹீமின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1931 |கார்ல்போஸ்ஷ்‌ ஃபிரெடரிக்‌ பெர்ஜியஸ்‌ |ஜெர்மனி |வேதி உயர்‌ அழுத்தம்‌ செயல் முறை உருவாக்கம்‌ மற்றும்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1932 |இர்விங்‌ லாங்மியூர்‌ |அமெரிக்கா |புறப் பரப்பு வேதியியலில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1933 |– |-{{ts|vtt}} |1934 |ஹாரால்டு யூரே |அமெரிக்கா |கன ஹைட்ரஜன்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1935 |ஃபிரெடரிக்‌ ஜீலியட்‌–கியூரி |ஃபிரான்ஸ் |புதிய கதிரியக்கத்‌ தனிமங்களின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1936 |பீட்டர்‌ டிபை |நெதர்லாந்து |இரு முனைத்‌ திருப்புத்‌ திறன்‌, எக்ஸ் கதிர்க்‌ கோட்டம்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1937 |சர்‌ வால்ட்டர்‌ ஹாவோர்த்‌ |இங்கிலாந்து |கார்போ ஹைட்ரேட்டுகள்‌, வைட்டமின்‌ குறித்தான ஆய்வு |-{{ts|vtt}} |1938 |ரிச்சர்டு குஹன்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |கரோட்டினாய்டு வைட்டமின்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1939 |அடால்‌ஃப்‌ பியூட்டனான்ட்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |பாலின ஹார்மோன்கள்‌ ஆய்வு |-{{ts|vtt}} | |லியோபால்ட்‌ ருசிகா |சுவிட்சர்லாந்து |பாலிமெத்தீலீன்‌ மற்றும்‌ உயர்‌ மூலக் கூறு எடை டெர்யூன்களில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1940 |– |-{{ts|vtt}} |1941 |– |-{{ts|vtt}} |1942 |– <!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---> |-{{ts|vtt}} |1943 |ஜியார்ஜ்‌ டிஹெவிசி |ஹாங்காங்‌ |வேதி ஆய்வில்‌ ஐசோடோப்புகள்‌ தடமறிப்‌ பொருள்களாக (Tracer) பயன் படுவது குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1944 |ஆட்டோ ஹான்‌ |ஜெர்மனி |உயர்‌ அணு எடைத்‌ தனிமங்கள்‌ அணுக் கருப்‌ பிளவு வினையில்‌ஈடுபடுதல்‌ குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1945 |ஆர்ட்டூரி |ஃபின்லாந்து |கால்‌ நடைத் தீவனம்‌ பாதுகாப்புப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1946 |ஜேம்ஸ்‌ சம்மர்‌ |அமெரிக்கா |நொதிப்‌ படிகமாதல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1947 |சர்‌ ராபர்ட்‌ ராபின்சன்‌ |இங்கிலாந்து |அல்கலாய்டு, பிற தாவர விளைபொருள் முக்கியத்துவம் |-{{ts|vtt}} |1948 |ஆரென்‌ டிசிலியஸ்‌ |சுவீடன்‌ |மின்‌ சவ்வூடு பரவல்‌, புற பரப்புக்‌ கவர்ச்சி ஆய்வு |-{{ts|vtt}} |1949 |வில்லியம்‌ கியாக்‌ |அமெரிக்கா |மிகக் குறைந்த வெப்ப நிலைகளில்‌ பொருள்‌களின்‌ பண்புகளைப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1950 |ஆட்டோமீல்ஸ்‌ குர்ட்‌ ஆல்டர்‌ |ஜெர்மனி |டையீன்‌ தொகுப்பு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1951 |எட்வின்‌ மெக்மிலன்<br>கிளென் டி. சீபார்க் <!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு----> |அமெரிக்கா<br>அமெரிக்கா |யுரேனியம்‌ கடந்த தனிமங்கள்‌ மிக்மில்லன்‌ கண்டு பிடிப்பும்‌, ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1952 |ஆர்செர்‌ மார்டின்‌<br>ரிச்சர்டு சின்ஜ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |பங்கீட்டு நிறச் சாரல்‌ பிரிகை (Partition chromatography) செய்முறை உருவாக்கம்‌ |-{{ts|vtt}} |1953 |ஹெர்மான்‌ ஸ்டாடிஞ்சர்‌ |ஜெர்மனி |பெருமூலக் கூறுகள்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1954 |லைனஸ்‌ பாலிங்‌ |அமெரிக்கா |வேதிப் பிணைப்புகள்‌ தொடர்பான ஆய்வு |-{{ts|vtt}} |1955 |வின்சென்ட்டி விக்யான்ட்‌ |அமெரிக்கா |பாலிபெப்டைடு ஹார்மோன்‌ தொகுப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> lc8ru3lj7qyesux3jvdlak76c7d74yf 1947445 1947443 2026-06-18T03:28:38Z TI Buhari 4634 1947445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|292 நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1927 |width=30% {{ts|vtt}}|ஹையன்ரிச்‌ வீலேன்ட்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |பிwidth=50% {{ts|vtt}}|பித்த நீர்‌ (bile acid) பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1928 |அடால்‌ஃப்‌ வின்டாஸ்‌ |ஜெர்மனி |ஸ்டீரால்களின்‌ அமைப்பும்‌, வைட்டமின்களுடன்‌ அவற்றின்‌ தொடர்பும்‌ |-{{ts|vtt}} |1929 |சர்‌ ஆர்தர்‌ ஹார்டென்‌ |இங்கிலாந்து |rowspan="2"|சர்க்கரை நொதித்தல்‌ குறித்தும்,‌ இதனுடன்‌ தொடர்புடைய நொதிகள்‌ பற்றியுமான ஆய்வு |-{{ts|vtt}} | |ஹெச்‌. வான்‌ ஆயிலர்‌ செல்ப்பின்‌ |சுவீடன்‌ |-{{ts|vtt}} |1930 |ஹேன்ஸ்‌ ஃபிஷர்‌ |ஜெர்மனி |ஹீமின்‌, குளோரோஃபில்‌ ஆய்வு, ஹீமின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1931 |கார்ல்போஸ்ஷ்‌ ஃபிரெடரிக்‌ பெர்ஜியஸ்‌ |ஜெர்மனி |வேதி உயர்‌ அழுத்தம்‌ செயல் முறை உருவாக்கம்‌ மற்றும்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1932 |இர்விங்‌ லாங்மியூர்‌ |அமெரிக்கா |புறப் பரப்பு வேதியியலில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1933 |– |-{{ts|vtt}} |1934 |ஹாரால்டு யூரே |அமெரிக்கா |கன ஹைட்ரஜன்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1935 |ஃபிரெடரிக்‌ ஜீலியட்‌–கியூரி |ஃபிரான்ஸ் |புதிய கதிரியக்கத்‌ தனிமங்களின்‌ தொகுப்பு |-{{ts|vtt}} |1936 |பீட்டர்‌ டிபை |நெதர்லாந்து |இரு முனைத்‌ திருப்புத்‌ திறன்‌, எக்ஸ் கதிர்க்‌ கோட்டம்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1937 |சர்‌ வால்ட்டர்‌ ஹாவோர்த்‌ |இங்கிலாந்து |கார்போ ஹைட்ரேட்டுகள்‌, வைட்டமின்‌ குறித்தான ஆய்வு |-{{ts|vtt}} |1938 |ரிச்சர்டு குஹன்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |கரோட்டினாய்டு வைட்டமின்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1939 |அடால்‌ஃப்‌ பியூட்டனான்ட்‌ மறுத்து விட்டார்‌ |ஜெர்மனி |பாலின ஹார்மோன்கள்‌ ஆய்வு |-{{ts|vtt}} | |லியோபால்ட்‌ ருசிகா |சுவிட்சர்லாந்து |பாலிமெத்தீலீன்‌ மற்றும்‌ உயர்‌ மூலக் கூறு எடை டெர்யூன்களில்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1940 |– |-{{ts|vtt}} |1941 |– |-{{ts|vtt}} |1942 |– <!---- 1940 to 1942 நோபல் பரிசு வழங்கப் படவில்லை. ஆதாரம்: https://www.thoughtco.com/chemistry-nobel-prize-winners-608597 ---> |-{{ts|vtt}} |1943 |ஜியார்ஜ்‌ டிஹெவிசி |ஹாங்காங்‌ |வேதி ஆய்வில்‌ ஐசோடோப்புகள்‌ தடமறிப்‌ பொருள்களாக (Tracer) பயன் படுவது குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1944 |ஆட்டோ ஹான்‌ |ஜெர்மனி |உயர்‌ அணு எடைத்‌ தனிமங்கள்‌ அணுக் கருப்‌ பிளவு வினையில்‌ஈடுபடுதல்‌ குறித்த ஆய்வு |-{{ts|vtt}} |1945 |ஆர்ட்டூரி |ஃபின்லாந்து |கால்‌ நடைத் தீவனம்‌ பாதுகாப்புப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1946 |ஜேம்ஸ்‌ சம்மர்‌ |அமெரிக்கா |நொதிப்‌ படிகமாதல்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1947 |சர்‌ ராபர்ட்‌ ராபின்சன்‌ |இங்கிலாந்து |அல்கலாய்டு, பிற தாவர விளைபொருள் முக்கியத்துவம் |-{{ts|vtt}} |1948 |ஆரென்‌ டிசிலியஸ்‌ |சுவீடன்‌ |மின்‌ சவ்வூடு பரவல்‌, புற பரப்புக்‌ கவர்ச்சி ஆய்வு |-{{ts|vtt}} |1949 |வில்லியம்‌ கியாக்‌ |அமெரிக்கா |மிகக் குறைந்த வெப்ப நிலைகளில்‌ பொருள்‌களின்‌ பண்புகளைப்‌ பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1950 |ஆட்டோமீல்ஸ்‌ குர்ட்‌ ஆல்டர்‌ |ஜெர்மனி |டையீன்‌ தொகுப்பு கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1951 |எட்வின்‌ மெக்மிலன்<br>கிளென் டி. சீபார்க் <!----- See: https://ta.wikipedia.org/wiki/வேதியியலுக்கான_நோபல்_பரிசு----> |அமெரிக்கா<br>அமெரிக்கா |யுரேனியம்‌ கடந்த தனிமங்கள்‌ மிக்மில்லன்‌ கண்டு பிடிப்பும்‌, ஆய்வும்‌ |-{{ts|vtt}} |1952 |ஆர்செர்‌ மார்டின்‌<br>ரிச்சர்டு சின்ஜ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |பங்கீட்டு நிறச் சாரல்‌ பிரிகை (Partition chromatography) செய்முறை உருவாக்கம்‌ |-{{ts|vtt}} |1953 |ஹெர்மான்‌ ஸ்டாடிஞ்சர்‌ |ஜெர்மனி |பெருமூலக் கூறுகள்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1954 |லைனஸ்‌ பாலிங்‌ |அமெரிக்கா |வேதிப் பிணைப்புகள்‌ தொடர்பான ஆய்வு |-{{ts|vtt}} |1955 |வின்சென்ட்டி விக்யான்ட்‌ |அமெரிக்கா |பாலிபெப்டைடு ஹார்மோன்‌ தொகுப்பு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 7o9r6xc6aip1ye5q87rqt4atmytm6wu பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/315 250 646138 1947447 1944234 2026-06-18T03:32:45Z TI Buhari 4634 1947447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 293}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |width=10% {{ts|vtt}}|1956 |width=30% {{ts|vtt}}|நிக்கோலெய்‌ செம்யோனோவ்‌ |width=10% {{ts|vtt}}|சோவியத்‌ ரஷ்யா |rowspan="2" width=50% {{ts|vtt}}|வேதி வினைகளின்‌இயக்க ஆய்வுகள்‌ |-{{ts|vtt}} | |சர்‌ சிரில்‌ ஹின்ஷெல்ட்‌ |இங்கிலாந்து |- |-{{ts|vtt}} |1957 |சர்‌ அலெக்சாண்டர்‌ டாட்‌ |இங்கிலாந்து |நியூக்ளியோடைடு, நியூக்ளியோடைடு சக நொதி ஆய்வுகள்‌ |-{{ts|vtt}} |1958 |ஃபிரெடிரிக்‌ சங்கர்‌ |இங்கிலாந்து |இன்சுலின்‌ மூலக் கூறு அமைப்பு ஆய்வு |-{{ts|vtt}} |1959 |ஜெர்ஸ்லோவ்‌ ஹீரோவீஸ்கி |செக்கஸ்லோ வாக்கியா |முனைவாக்க வரைவியல்‌ (polarography) ஆய்வு |-{{ts|vtt}} |1960 |வில்லார்டு லிபி |அமெரிக்கா |கதிரியக்கக்‌ கார்பன்‌ வழிக்‌ காலம்‌ அறிதல்‌ (Carbon dating) செயல்‌ முறைக்‌ கண்டு பிடிப்பு |-{{ts|vtt}} |1961 |மெல்வின்‌ கால்வின்‌ |அமெரிக்கா |ஒளிச் சேர்க்கை வினை வழி முறை ஆய்வு |-{{ts|vtt}} |1962 |ஜான்‌ சி.கேன்ட்ரு<br>மேக்ஸ்‌ எஃப்‌ பெருட்ஸ்‌ |இங்கிலாந்து<br>இங்கிலாந்து |ஹீமோ புரத அமைப்பு ஆய்வு |-{{ts|vtt}} |1963 |கியூலியோ நட்டா<br>கார்ல்‌ சைக்ளர்‌ |இத்தாலி<br>ஜெர்மனி |நெகிழி, பல்லுறுப்பு ஆகியவற்றின்‌ அமைப்பும்‌, தொகுப்பும்‌ |-{{ts|vtt}} |1964 |டோராதி எம்‌.சி.ஹாட்சின்‌ |இங்கிலாந்து |மரணத்தை விளைவிக்கும்‌ குருதிச்‌சோகையைத்‌ தடுக்க உதவும்‌ உயிர்‌ வேதிச்‌ சேர்மங்களின்‌ அமைப்பை அறுதியிடல்‌ |-{{ts|vtt}} |1965 |ராபர்ட்‌ பி. உட்வேர்ட்‌ |அமெரிக்கா |உயிர்ப் பொருள்களால்‌ மட்டுமே தயாரிக்க முடியும்‌ என்று கருதப் பட்ட ஸ்டீரால்‌, குளோரோஃபில்‌ போன்ற பிற பொருள்களைத்‌ தொகுப்பு முறையில்‌ தயாரித்தல்‌ |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> m0iip4qlm6zfgm8td90miahzf1yf2ja பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/317 250 646166 1947448 1943682 2026-06-18T03:34:49Z TI Buhari 4634 1947448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 295}} {{block_center/s}}<div style="width:450px; font-size: 80%;"> {|</noinclude>|- |colspan=4|<center>{{fs|120%|<b>மருத்துவம்‌</b>‌}}</center> |- |width=10% {{ts|vtt}}|1901 |width=30% {{ts|vtt}}|எமில்‌ வான்‌ பெஹிரில்‌ |width=10% {{ts|vtt}}|ஜெர்மனி |width=50% {{ts|vtt}}|சீரம்‌ மருத்துவ ஆய்வு |-{{ts|vtt}} |1902 |சர்‌ ரோனால்ட்‌ ரோஸ்‌ |இங்கிலாந்து |ஓர்‌ உயிரியில்‌ எவ்வாறு மலேரியா ஏற்படுகிறது என்பது பற்றிய ஆய்வு |-{{ts|vtt}} |1903 |நீல்ஸ்‌ ஆர்‌ ஃபின்சென்‌ |டென்மார்க்‌ |ஒளியைப்‌ பயன் படுத்தித்‌ தோல்‌ நோய்களை நலமாக்கல்‌ |-{{ts|vtt}} |1904 |இவான்‌ பாவ்லவ்‌ |ரஷ்யா |செரிமானத்தில்‌ நிகழும்‌ உடலியங்கியல்‌ |-{{ts|vtt}} |1905 |ராபர்ட்‌ கோஷ்‌ |ஜெர்மனி |காச நோய்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1906 |காமிலோ கோல்கை |இத்தாலி |நரம்பு அமைப்பு ஆய்வு |-{{ts|vtt}} |1907 |அல்‌ஃபோன்ஸ்‌ லேவ்ரான்‌ |ஃபிரான்ஸ்‌ |நோய்களில்‌ புரோட்டோ சோவாக்களின்‌ பணி |-{{ts|vtt}} |1908 |பால்‌ எர்லிச்‌<br>இல்யா மெக்னிகோவ்‌ |ஜெர்மனி<br>ரஷ்யா |தடுப்பாற்றல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1909 |எமில்‌ கோச்சர்‌ |சுவிட்சர்லாந்து |தைராய்டுச்‌ சுரப்பியின்‌ இயங்கியல்‌, நோய்க் குறி இயல்‌, |-{{ts|vtt}} |1910 |ஆல்பிரெசட்‌ கோசல்‌ |ஜெர்மனி |செல்சார்‌ வேதியியல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1911 |ஆல்வார்‌ குஸ்ஸ்டிரான்ட்‌ |சுவீடன்‌ |கண்‌ நோய்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1912 |அலெக்சிஸ்‌ காரெல்‌ |ஃபிரான்ஸ்‌ |உறுப்புப்‌ பரிமாற்றம்‌, செல்‌ குழல்‌ நாளம்‌ சார்‌ அறுவை |-{{ts|vtt}} |1913 |சார்லஸ்‌ ரிகெட்‌ |ஃபிரான்ஸ்‌ |உடனடி ஒவ்வாமை ஆய்வு (analphylaxis) |-{{ts|vtt}} |1919 |ஜீலிஸ்‌ போர்டெட்‌ |பெல்ஜியம்‌ |தடுப்பாற்றல்‌ ஆய்வு |-{{ts|vtt}} |1920 |ஆகஸ்ட்‌ குரோஷ்‌ |டென்மார்க்‌ |நுண் குழாய் மோட்டார் ஒழுங்கு படுத்தும் பொறி முறை |-{{ts|vtt}} |1921 |– |– |– |-{{ts|vtt}} |1922 |அர்ச்சிபால்டு ஹில்‌ |இங்கிலாந்து |தசையில்‌ வெப்பம்‌ உருவாதல்‌ தொடர்பானஆய்வு |-{{ts|vtt}} | |ஆட்டோ மெயர்ஹாஃப்‌ |ஜெர்மனி |தசையில்‌ லாக்டிக்‌ அமிலம்‌ வளர் சிதை மாற்றம்‌ அடைதல்‌ ஆய்வு |-<noinclude>| |}</div>{{block_center/e}}{{nop}}</noinclude> 35ei5gpnxih5infu6m2rof042dc3x5m அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf 253 646557 1947369 1946305 2026-06-17T14:46:27Z Info-farmer 232 விரிவு 1947369 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] 3sbznwx5aqf14wks1dxlojsi6myxfks 1947381 1947369 2026-06-17T15:05:15Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ தரவு ஏற்றம் 1947381 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில் இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103343 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகியவற்றைக் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] jjr552e8k3lsmvt28ofmske1bi0thp1 1947387 1947381 2026-06-17T15:22:36Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ 106407 1947387 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில் இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகியவற்றைக் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] 9ilvzmjhira48mouspqtsatun1fngic 1947388 1947387 2026-06-17T15:23:23Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ தரவு ஏற்றம் 1947388 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகியவற்றைக் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] lcsdhks37d6wyl4ubr2bd6vxcq10c0y 1947390 1947388 2026-06-17T15:27:00Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். 1947390 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] s4yu8p4puzh2oiwatcxd4hyk74grmk2 1947403 1947390 2026-06-17T17:16:03Z Info-farmer 232 விரிவு 1947403 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] 5tunvzisekev0i031sgqccnvsf9mfw7 1947405 1947403 2026-06-17T17:48:49Z Info-farmer 232 - துப்புரவு 1947405 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். # இந்நூலின் பக்கங்களை ஊதா நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/103344 இதனைச் சொடுக்கவும்.] #* ஊதா நிறம் - இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள். # இந்நூலின் பக்கங்களை மஞ்சள் நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/100364 இதனைச் சொடுக்கவும்.] #* மஞ்சள் நிறம் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடுகளை இட்டவர்கள் # இந்நூலின் பக்கங்களை பச்சை நிறமாக மாற்றியவர்களையும், அவர்தம் செய்த பக்கப்பெயர்களையும் அறிய. [https://quarry.wmcloud.org/query/103067 இதனைச் சொடுக்கவும்.] #* பச்சை நிறம் - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். == OCR == OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC) :நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC) [[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]] hfjhuvgxt7gjuffd0f3isikn7fbknni பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/367 250 646705 1947461 1946457 2026-06-18T03:49:42Z TI Buhari 4634 1947461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பக்கவாதம்‌ 345}}</noinclude>அமினோ புரோப்பியோனிக்‌ அமிலம்‌ போன்ற அமினோ அமில வினை வேக மாற்றி உடனிருக்க, கீட்டோன்களுடன்‌ குறுக்க வினை புரியும்‌. எ-டு: அசெட்டோன்‌ ஐசோ புரோப்பிலிடின்‌ சயனோ அசெட்டிக்‌ எஸ்ட்டரை உண்டாக்‌குதல்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 367 |bSize = 1030 |cWidth = 420 |cHeight = 135 |oTop = 285 |oLeft = 70 |Location = center}} சயனோ சேர்மங்கள்‌ எளிதில்‌ நீராற் பகுப்படைந்து, அவற்றை ஒத்த கரிம அமிலங்களைக்‌ கொடுப்பதால்‌, இவ்வினையை R₂C = CH – COOH எனும்‌ வாய்ப்பாடுடைய α, β நிறைவுறாக்‌ கரிமச்‌ சேர்மங்கள்‌ தயாரிக்கப்‌ பயன் படுத்தலாம்‌. {{right|—<b>த. தெய்வீகன்‌</b>}} <b>துணை நூல்</b>. Robert Thronton Morrson and Robert Neilson Boyd, <i>Organic Chemistry</i>, 4th Edtion, Allyn and Bacon, inc, Boston, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="199"/><section end="நோ"/> <section begin="200"/><section end="200"/> <section begin="ப"/>{{fs|110%|<b>பக்க அலைப் பட்டை</b>}} ஓர்‌ ஊர்தி அலையின்‌ அதிர்வெண்ணுக்கும்‌ மேலான அல்லது குறைவான அதிர்வெண்களை உடைய அலைகளைக்‌ கொண்ட பட்டை, பக்க அலைப் பட்டை (Side band) எனப் படுகிறது. அப்பட்டை, ஊர்தி அலையை ஒட்டி அமையும்‌, பண்பேற்றச்‌ செயல்பாட்டில்‌ உண்டாக்கப் படும்‌ அலையின்‌ அதிர்வெண்‌ ஆக்கக் கூறுகள்‌ பக்க அலைப்‌ பட்டையில்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலை மட்டுமின்றி, ஒரு வீச்சுப் பண்பேற்றப் பட்ட சைன்‌ கோட்டு வடிவ ஊர்தி அலையின்‌ அனைத்து ஆக்கக் கூறுககளையும்‌ மொத்தமாகக்‌ கணக்கிலெடுத்துக்‌ கொள்ளும் போது, அவை ஊர்தி அலையின்‌ இரு புறங்களிலும்‌ ஆடிப்பம்பச்‌ சமச் சீர்‌மையுள்ள இரண்டு பக்கப்‌ பட்டைகளாக அமையும்‌. அவற்றில்‌, பண்பேற்றுகிற அலையின்‌ அனைத்து ஆக்கக்‌ கூற்று அதிர்வெண்களும்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலையின்‌ மேல்‌ பக்கமிருப்பது மேல்‌ப் பக்கப்‌ பட்டை எனவும்‌, கீழ்ப்‌ பக்கமிருப்பது கீழ்ப் பக்கப்‌ பட்டை எனவும்‌ குறிப்பிடப்படும்‌. {{right|—<b>கே. என்‌. ராமச்சந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="ப"/> <section end="ப"/> <section begin="201"/>{{fs|110%|<b>பக்கவாதம்</b>}} இந்நோய்‌ நிலையில்,‌ ஒரு பக்கக்‌ கையும்,‌ காலும்‌ செயலற்று விடுகின்றன.ஹெமி (hemi) என்றால்,‌ ஒரு பக்கம்‌ (அரைப்‌ பகுதி) என்றும்‌, (plegia)என்றால்‌, செயலிழப்பு என்றும் பொருள்‌. இதையே பக்கவாதம்‌ (hemi plegia) என்பர்‌. சில போது, முகத்தின்‌ ஒரு பாதியும்‌ செயலற்று விடுகிறது. பொதுவாக, இத்தகைய செயலிழப்பு பெருமூளை தண்டு வடப்‌ பாதையில்‌ ஏற்படும்‌ நைவுகளால்‌ உண்டாகிறது. நைவு ஏற்பட்டுள்ள இடத்தை, நோயின்‌ அறிகுறிகள்‌ கொண்டு உறுதி செய்யலாம்‌. பெருமூளைப்‌ புறணி மற்றும்‌ பெருமூளையின்‌ வெள்ளைப்‌ பகுதி, உட்புறப்‌ பொதியம்‌ ஆகியவற்றில்‌ நைவு ஏற்படலாம்‌. எதிர்ப்‌ பக்கத்தில்‌ கை, கால்‌, முகம்‌ செயலிழக்கிறது அல்லது வலிமையிழக்கிறது (hemiparesis). இத்துடன்‌ வலிப்பு, பேச்சின்மை, உணர்ச்சி மரத்துப் போதல்‌, பார்வைத்‌ தளத்தில்‌ கோளாறு ஏற்பட்டால்‌, பெருமூளைப்‌ புறணி அல்லது புறணி அடி பாதிக்கப்‌ பட்டிருக்ககலாம்‌. பெருமூளைத்‌ தண்டு வடமும்‌, மூளைத்‌ தண்டும்‌ பாதிக்கப் பட்டால்‌, மேற்கூறிய எதிர்ப் பக்க பக்கவாதத்துடன்‌, அதே பக்கத்தில்‌ கண்‌ இயக்க நரம்பு பாதிக்கப் பட்டு (3ஆம்‌ கபால நரம்பு) கண்‌ தசைகள்‌ செயலிழக்கின்றன. இதுவே வெபர்‌ நோயியம்‌ (Weber's syndrome)எனப் படுகிறது. சில போது, நோய்‌ நைவு கீழ்‌ மட்டத்தில்‌ இருக்கும் போது, ஆறு அல்லது ஏழாம்‌ கபால நரம்பு ஒரு பக்கத்தில்‌ பாதிக்கப் பட்டு, எதிர்ப் பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இதை மில்லர்டு–கூப்ளர்‌ நோயியம்‌ என்பர்‌. அரிதாகத்‌ தண்டு வடக்‌ கழுத்துப்‌ பகுதியின்‌ வெளிப்‌ புறம்‌ பாதிக்கப் பட்டால்‌, அதே பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இங்கு, இரண்டு கைகளும்,‌ இரண்டு கால்களும்‌ செயலிழக்கலாம்‌, (quadriplegia) இந்நிலையில்‌, செயலிழந்த பக்கத்‌ தசைகள்‌ சூம்பி விடும்‌. பெருமூளைப்‌ புறணி, மூளைத்‌ தண்டு ஆகியவற்றின்‌ குருதி நாள அடைப்பு, காயம்‌, மூளைக் கட்டி, மூளையில்‌ சீழ்க் கட்டி, மூளை அழற்சி, மூளை உறை அழற்சி, காச நோய்‌, மேக நோய்‌ போன்றவை பக்கவாத நோய்க்குக்‌ காரணங்களாகின்றன. {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. A. Broad, <i>Neurological Anatomy in relation to clinical Medicine</i>, Oxford University Press, Newyork, 1969. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="201"/> {{nop}}<noinclude></noinclude> i2npiee4ygjloly9elu6jmcl90sdsjz 1947462 1947461 2026-06-18T03:51:00Z TI Buhari 4634 1947462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பக்கவாதம்‌ 345}}</noinclude>அமினோ புரோப்பியோனிக்‌ அமிலம்‌ போன்ற அமினோ அமில வினை வேக மாற்றி உடனிருக்க, கீட்டோன்களுடன்‌ குறுக்க வினை புரியும்‌. எ-டு: அசெட்டோன்‌ ஐசோ புரோப்பிலிடின்‌ சயனோ அசெட்டிக்‌ எஸ்ட்டரை உண்டாக்‌குதல்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 367 |bSize = 1030 |cWidth = 420 |cHeight = 135 |oTop = 285 |oLeft = 70 |Location = center}} சயனோ சேர்மங்கள்‌ எளிதில்‌ நீராற் பகுப்படைந்து, அவற்றை ஒத்த கரிம அமிலங்களைக்‌ கொடுப்பதால்‌, இவ்வினையை R₂C = CH – COOH எனும்‌ வாய்ப்பாடுடைய α, β நிறைவுறாக்‌ கரிமச்‌ சேர்மங்கள்‌ தயாரிக்கப்‌ பயன் படுத்தலாம்‌. {{right|—<b>த. தெய்வீகன்‌</b>}} <b>துணை நூல்</b>. Robert Thronton Morrson and Robert Neilson Boyd, <i>Organic Chemistry</i>, 4th Edtion, Allyn and Bacon, inc, Boston, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="199"/><section end="நோ"/> <section begin="200"/> <section begin="ப"/>{{fs|110%|<b>பக்க அலைப் பட்டை</b>}} ஓர்‌ ஊர்தி அலையின்‌ அதிர்வெண்ணுக்கும்‌ மேலான அல்லது குறைவான அதிர்வெண்களை உடைய அலைகளைக்‌ கொண்ட பட்டை, பக்க அலைப் பட்டை (Side band) எனப் படுகிறது. அப்பட்டை, ஊர்தி அலையை ஒட்டி அமையும்‌, பண்பேற்றச்‌ செயல்பாட்டில்‌ உண்டாக்கப் படும்‌ அலையின்‌ அதிர்வெண்‌ ஆக்கக் கூறுகள்‌ பக்க அலைப்‌ பட்டையில்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலை மட்டுமின்றி, ஒரு வீச்சுப் பண்பேற்றப் பட்ட சைன்‌ கோட்டு வடிவ ஊர்தி அலையின்‌ அனைத்து ஆக்கக் கூறுககளையும்‌ மொத்தமாகக்‌ கணக்கிலெடுத்துக்‌ கொள்ளும் போது, அவை ஊர்தி அலையின்‌ இரு புறங்களிலும்‌ ஆடிப்பம்பச்‌ சமச் சீர்‌மையுள்ள இரண்டு பக்கப்‌ பட்டைகளாக அமையும்‌. அவற்றில்‌, பண்பேற்றுகிற அலையின்‌ அனைத்து ஆக்கக்‌ கூற்று அதிர்வெண்களும்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலையின்‌ மேல்‌ பக்கமிருப்பது மேல்‌ப் பக்கப்‌ பட்டை எனவும்‌, கீழ்ப்‌ பக்கமிருப்பது கீழ்ப் பக்கப்‌ பட்டை எனவும்‌ குறிப்பிடப்படும்‌. {{right|—<b>கே. என்‌. ராமச்சந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="ப"/> <section end="ப"/> <section begin="201"/>{{fs|110%|<b>பக்கவாதம்</b>}} இந்நோய்‌ நிலையில்,‌ ஒரு பக்கக்‌ கையும்,‌ காலும்‌ செயலற்று விடுகின்றன.ஹெமி (hemi) என்றால்,‌ ஒரு பக்கம்‌ (அரைப்‌ பகுதி) என்றும்‌, (plegia)என்றால்‌, செயலிழப்பு என்றும் பொருள்‌. இதையே பக்கவாதம்‌ (hemi plegia) என்பர்‌. சில போது, முகத்தின்‌ ஒரு பாதியும்‌ செயலற்று விடுகிறது. பொதுவாக, இத்தகைய செயலிழப்பு பெருமூளை தண்டு வடப்‌ பாதையில்‌ ஏற்படும்‌ நைவுகளால்‌ உண்டாகிறது. நைவு ஏற்பட்டுள்ள இடத்தை, நோயின்‌ அறிகுறிகள்‌ கொண்டு உறுதி செய்யலாம்‌. பெருமூளைப்‌ புறணி மற்றும்‌ பெருமூளையின்‌ வெள்ளைப்‌ பகுதி, உட்புறப்‌ பொதியம்‌ ஆகியவற்றில்‌ நைவு ஏற்படலாம்‌. எதிர்ப்‌ பக்கத்தில்‌ கை, கால்‌, முகம்‌ செயலிழக்கிறது அல்லது வலிமையிழக்கிறது (hemiparesis). இத்துடன்‌ வலிப்பு, பேச்சின்மை, உணர்ச்சி மரத்துப் போதல்‌, பார்வைத்‌ தளத்தில்‌ கோளாறு ஏற்பட்டால்‌, பெருமூளைப்‌ புறணி அல்லது புறணி அடி பாதிக்கப்‌ பட்டிருக்ககலாம்‌. பெருமூளைத்‌ தண்டு வடமும்‌, மூளைத்‌ தண்டும்‌ பாதிக்கப் பட்டால்‌, மேற்கூறிய எதிர்ப் பக்க பக்கவாதத்துடன்‌, அதே பக்கத்தில்‌ கண்‌ இயக்க நரம்பு பாதிக்கப் பட்டு (3ஆம்‌ கபால நரம்பு) கண்‌ தசைகள்‌ செயலிழக்கின்றன. இதுவே வெபர்‌ நோயியம்‌ (Weber's syndrome)எனப் படுகிறது. சில போது, நோய்‌ நைவு கீழ்‌ மட்டத்தில்‌ இருக்கும் போது, ஆறு அல்லது ஏழாம்‌ கபால நரம்பு ஒரு பக்கத்தில்‌ பாதிக்கப் பட்டு, எதிர்ப் பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இதை மில்லர்டு–கூப்ளர்‌ நோயியம்‌ என்பர்‌. அரிதாகத்‌ தண்டு வடக்‌ கழுத்துப்‌ பகுதியின்‌ வெளிப்‌ புறம்‌ பாதிக்கப் பட்டால்‌, அதே பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இங்கு, இரண்டு கைகளும்,‌ இரண்டு கால்களும்‌ செயலிழக்கலாம்‌, (quadriplegia) இந்நிலையில்‌, செயலிழந்த பக்கத்‌ தசைகள்‌ சூம்பி விடும்‌. பெருமூளைப்‌ புறணி, மூளைத்‌ தண்டு ஆகியவற்றின்‌ குருதி நாள அடைப்பு, காயம்‌, மூளைக் கட்டி, மூளையில்‌ சீழ்க் கட்டி, மூளை அழற்சி, மூளை உறை அழற்சி, காச நோய்‌, மேக நோய்‌ போன்றவை பக்கவாத நோய்க்குக்‌ காரணங்களாகின்றன. {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. A. Broad, <i>Neurological Anatomy in relation to clinical Medicine</i>, Oxford University Press, Newyork, 1969. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="201"/> {{nop}}<noinclude></noinclude> jfydx9ox5j944lzw7mymc6no7ddnlho 1947463 1947462 2026-06-18T03:51:56Z TI Buhari 4634 1947463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பக்கவாதம்‌ 345}}</noinclude>அமினோ புரோப்பியோனிக்‌ அமிலம்‌ போன்ற அமினோ அமில வினை வேக மாற்றி உடனிருக்க, கீட்டோன்களுடன்‌ குறுக்க வினை புரியும்‌. எ-டு: அசெட்டோன்‌ ஐசோ புரோப்பிலிடின்‌ சயனோ அசெட்டிக்‌ எஸ்ட்டரை உண்டாக்‌குதல்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 367 |bSize = 1030 |cWidth = 420 |cHeight = 135 |oTop = 285 |oLeft = 70 |Location = center}} சயனோ சேர்மங்கள்‌ எளிதில்‌ நீராற் பகுப்படைந்து, அவற்றை ஒத்த கரிம அமிலங்களைக்‌ கொடுப்பதால்‌, இவ்வினையை R₂C = CH – COOH எனும்‌ வாய்ப்பாடுடைய α, β நிறைவுறாக்‌ கரிமச்‌ சேர்மங்கள்‌ தயாரிக்கப்‌ பயன் படுத்தலாம்‌. {{right|—<b>த. தெய்வீகன்‌</b>}} <b>துணை நூல்</b>. Robert Thronton Morrson and Robert Neilson Boyd, <i>Organic Chemistry</i>, 4th Edtion, Allyn and Bacon, inc, Boston, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="199"/><section end="நோ"/> <section begin="200"/> <section begin="ப"/>{{fs|110%|<b>பக்க அலைப் பட்டை</b>}} ஓர்‌ ஊர்தி அலையின்‌ அதிர்வெண்ணுக்கும்‌ மேலான அல்லது குறைவான அதிர்வெண்களை உடைய அலைகளைக்‌ கொண்ட பட்டை, பக்க அலைப் பட்டை (Side band) எனப் படுகிறது. அப்பட்டை, ஊர்தி அலையை ஒட்டி அமையும்‌, பண்பேற்றச்‌ செயல்பாட்டில்‌ உண்டாக்கப் படும்‌ அலையின்‌ அதிர்வெண்‌ ஆக்கக் கூறுகள்‌ பக்க அலைப்‌ பட்டையில்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலை மட்டுமின்றி, ஒரு வீச்சுப் பண்பேற்றப் பட்ட சைன்‌ கோட்டு வடிவ ஊர்தி அலையின்‌ அனைத்து ஆக்கக் கூறுககளையும்‌ மொத்தமாகக்‌ கணக்கிலெடுத்துக்‌ கொள்ளும் போது, அவை ஊர்தி அலையின்‌ இரு புறங்களிலும்‌ ஆடிப்பம்பச்‌ சமச் சீர்‌மையுள்ள இரண்டு பக்கப்‌ பட்டைகளாக அமையும்‌. அவற்றில்‌, பண்பேற்றுகிற அலையின்‌ அனைத்து ஆக்கக்‌ கூற்று அதிர்வெண்களும்‌ இடம்‌ பெறும்‌. ஊர்தி அலையின்‌ மேல்‌ பக்கமிருப்பது மேல்‌ப் பக்கப்‌ பட்டை எனவும்‌, கீழ்ப்‌ பக்கமிருப்பது கீழ்ப் பக்கப்‌ பட்டை எனவும்‌ குறிப்பிடப்படும்‌. {{right|—<b>கே. என்‌. ராமச்சந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="200"/><section end="ப"/> <section begin="201"/>{{fs|110%|<b>பக்கவாதம்</b>}} இந்நோய்‌ நிலையில்,‌ ஒரு பக்கக்‌ கையும்,‌ காலும்‌ செயலற்று விடுகின்றன.ஹெமி (hemi) என்றால்,‌ ஒரு பக்கம்‌ (அரைப்‌ பகுதி) என்றும்‌, (plegia)என்றால்‌, செயலிழப்பு என்றும் பொருள்‌. இதையே பக்கவாதம்‌ (hemi plegia) என்பர்‌. சில போது, முகத்தின்‌ ஒரு பாதியும்‌ செயலற்று விடுகிறது. பொதுவாக, இத்தகைய செயலிழப்பு பெருமூளை தண்டு வடப்‌ பாதையில்‌ ஏற்படும்‌ நைவுகளால்‌ உண்டாகிறது. நைவு ஏற்பட்டுள்ள இடத்தை, நோயின்‌ அறிகுறிகள்‌ கொண்டு உறுதி செய்யலாம்‌. பெருமூளைப்‌ புறணி மற்றும்‌ பெருமூளையின்‌ வெள்ளைப்‌ பகுதி, உட்புறப்‌ பொதியம்‌ ஆகியவற்றில்‌ நைவு ஏற்படலாம்‌. எதிர்ப்‌ பக்கத்தில்‌ கை, கால்‌, முகம்‌ செயலிழக்கிறது அல்லது வலிமையிழக்கிறது (hemiparesis). இத்துடன்‌ வலிப்பு, பேச்சின்மை, உணர்ச்சி மரத்துப் போதல்‌, பார்வைத்‌ தளத்தில்‌ கோளாறு ஏற்பட்டால்‌, பெருமூளைப்‌ புறணி அல்லது புறணி அடி பாதிக்கப்‌ பட்டிருக்ககலாம்‌. பெருமூளைத்‌ தண்டு வடமும்‌, மூளைத்‌ தண்டும்‌ பாதிக்கப் பட்டால்‌, மேற்கூறிய எதிர்ப் பக்க பக்கவாதத்துடன்‌, அதே பக்கத்தில்‌ கண்‌ இயக்க நரம்பு பாதிக்கப் பட்டு (3ஆம்‌ கபால நரம்பு) கண்‌ தசைகள்‌ செயலிழக்கின்றன. இதுவே வெபர்‌ நோயியம்‌ (Weber's syndrome)எனப் படுகிறது. சில போது, நோய்‌ நைவு கீழ்‌ மட்டத்தில்‌ இருக்கும் போது, ஆறு அல்லது ஏழாம்‌ கபால நரம்பு ஒரு பக்கத்தில்‌ பாதிக்கப் பட்டு, எதிர்ப் பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இதை மில்லர்டு–கூப்ளர்‌ நோயியம்‌ என்பர்‌. அரிதாகத்‌ தண்டு வடக்‌ கழுத்துப்‌ பகுதியின்‌ வெளிப்‌ புறம்‌ பாதிக்கப் பட்டால்‌, அதே பக்கத்தில்‌ பக்கவாதம்‌ உண்டாகிறது. இங்கு, இரண்டு கைகளும்,‌ இரண்டு கால்களும்‌ செயலிழக்கலாம்‌, (quadriplegia) இந்நிலையில்‌, செயலிழந்த பக்கத்‌ தசைகள்‌ சூம்பி விடும்‌. பெருமூளைப்‌ புறணி, மூளைத்‌ தண்டு ஆகியவற்றின்‌ குருதி நாள அடைப்பு, காயம்‌, மூளைக் கட்டி, மூளையில்‌ சீழ்க் கட்டி, மூளை அழற்சி, மூளை உறை அழற்சி, காச நோய்‌, மேக நோய்‌ போன்றவை பக்கவாத நோய்க்குக்‌ காரணங்களாகின்றன. {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. A. Broad, <i>Neurological Anatomy in relation to clinical Medicine</i>, Oxford University Press, Newyork, 1969. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="201"/> {{nop}}<noinclude></noinclude> d96lzvilzhlszbiemuoi8a6zedyblwb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/375 250 646856 1947472 1946812 2026-06-18T04:21:08Z TI Buhari 4634 1947472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பகு திறன்‌ 353}}</noinclude><section begin="209"/>{{fs|110%|<b>பகு திறன்‌</b>}} ஒரு பொருளின்‌ தோற்ற அளவு, அது கண்ணில்‌ அமைக்கும்‌ பார்வைக்‌ கோணத்தைப்‌ பொறுத்தது. பார்வைக்‌ கோணம்‌ அதிகரிக்கும்‌ போது, பொருளின்‌ அளவும்‌ அதிகமாகத்‌ தோன்றும்‌. இரு பொருள்கள்‌ கண்ணில்‌ ஏற்படுத்தும்‌ பார்வைக்‌ கோணத்தின்‌ வேறுபாடு 1'க்கும்‌ குறைவாக இருந்தால்,‌ இவ்விரு பொருள்களையும்‌ தனித்துக்‌ காண முடியாது. இதையே கண்ணின்‌ பகு திறன்‌(resolving power) என்பர்‌. பார்வைக்‌ கருவி அமைப்பில்‌ தலையாய செயல்‌, கருவியின்‌ பார்வைக்‌ கோணத்தை அதிகரிப்பதேயாகும்‌. இவ்வாறு பார்வைக்‌ கோணத்தை அதிகரிக்கச்‌ செய்யும்‌ கருவிகள்‌ உருப் பெருக்கு கருவிகள்‌ எனப் படும்‌. பார்வைக்‌ கருவியின்‌ பகு திறன்‌ என்பது ஒரு பொருளைப்‌ பற்றிய நுண்ணமைப்‌புகளைத்‌ தெளிவாகக்‌ கண்ணிற்கு ஏற்படுத்தும்‌ திறன்‌ ஆகும்‌. பார்வைக்‌ கருவி, ஒரு புள்ளிப்‌ பொருளின்‌ பிம்பத்தை ஒரு புள்ளியாகத்‌ தராமல்‌, விளிம்பு விளைவு வளையங்களை உண்டாக்கும்‌. இரு பொருள்களின்‌ விளிம்பு விளைவு வளையங்கள்‌ மேற்பொருந்தாமல்‌ இருக்கும்‌ போது மட்டுமே அப்பொருள்கள்‌ பகுக்கப் படும்‌. இதற்கான ராலே நிபந்தனையைக்‌ கீழ்க் காணுமாறு கூறலாம்‌. ஒரு பொருளின்‌ விளிம்பு விளைவு மையப்‌ பெருமம்‌ அருகிலுள்ள மற்றொரு பொருளின்‌ விளிம்பு விளைவு முதல்‌ சிறுமத்துடன்‌ பொருந்தும் போது, அப்பொருள்கள் பகுக்கப் படும்‌. ஒரு நுண்ணோக்கியினால்‌ தெளிவாகப்‌ பார்க்கப் படும்‌ அருகருகே உள்ள இரு பொருள்களின்‌ மீச்சிறு இடைத்‌ தொலைவு எல்லை <math display=inline> x = \frac {\lambda} {2\mu sin x}</math> ஆகும்‌.இதில்‌ λ ஒளியின்‌ அலை நீளமாகும்‌. μ ஊடகத்தின்‌ ஒளி விலகல்‌ எண்‌. 2α என்பது புள்ளிப்‌ பொருள்கள்‌ பொருளருகு வில்லையுடன்‌ ஏற்படுத்தும்‌ கோணமாகும்‌. இச்சமன்பாட்டின்படி, கருவியின்‌ பகு திறன்‌ அதிகரிக்க வேண்டுமாயின்,‌ பார்வைக்‌ கோணம்‌ 2α மிக அதிகமாக இருத்தல்‌ வேண்டும்‌. வில்லையின்‌ குவியத்‌ தொலைவு மிகக்‌ குறைவாக (2/3, 1/6, அல்லது 1/12 அங்குலம்‌) இருத்தல்‌ வேண்டும்‌. ஆபேயின்‌ எண்ணெய்‌ அமிழ்ப்பு பொருளருகு வில்லை பகு திறன்‌ மிக அதிகம்‌ பெற்றதாகும்‌. இதில்‌ உள்ள செடார்‌ மர எண்ணெயின்‌ அடர்வு காரணமாக, ஒளி விலகல்‌ எண்‌ அதிகரிக்கப் படுவதால்,‌ பகு திறனும்‌ அதிகரிக்கிறது. மேலும்‌, ஒளியின்‌ அலை நீளத்தைக்‌ (λ)குறைப்பதாலும்,‌ பகு திறனை அதிகரிக்கலாம்‌. இந்த வகையில்‌, புற ஊதாக் கதிர்‌ நுண்ணோக்கி அமைக்கப் படுகிறது. கண்ணுறும்‌ ஒளியை ஒப்பிட அலைநீளம்‌ λ பாதியாகக்‌ குறைக்கப் படுவதால்‌, பகு திறன்‌ இரு மடங்கு உயர்கிறது. எதிரொளிப்பு நுண்ணோக்கியில்‌ பொருள்‌ மிகத்‌ தொலைவில்‌ இருந்த போதும்‌, நுண்ணோக்கியின்‌ பகு திறன்‌ அதிகமாக உள்ளது. எலெக்ட்ரான்‌ நுண்ணோக்கி எலெக்ட்‌ரான்களுடன்‌ செறிந்துள்ள அலைகளால்‌ செயல் படுகிறது. எலெக்ட்ரான்களின்‌ வேகம்‌ அதிகரிக்கும்‌ போது, அதன்‌ அலை நீளம்‌ குறைவதால்,‌ நுண்ணோக்கியின்‌ பகு திறன்‌ மிக அதிகமாகிறது. ஒளியியல்‌ நுண்ணோக்கியை விட இந்நுண்ணோக்கியினால்‌ பெறப் படும்‌ பகு திறன்‌ 1,00,000 மடங்கு அதிகமாகும்‌. <b>தொலை நோக்கிகள்</b>‌. அருகருகே உள்ள இரு புள்ளிகள்‌ தொலை நோக்கியின்‌ பொருளருகு வில்லையில்‌ ஏற்படுத்தும்‌ கோணம்‌ Φ‌ எனில்‌, தொலை நோக்கியின்‌ பகுப்பு எல்லை <math>\phi = 1.22 \frac {\lambda}{a}</math> ஆகும்‌. இதில்‌ λ என்பது ஒளியின்‌ அலை நீளம்‌. a பொருளருகு வில்லையின் விட்டம்‌. விட்டம்‌ அதிகமானால்,‌ தொலை நோக்கியின்‌ பகு திறன்‌ அதிகரிக்கும்‌. எதிரொளிப்பு வகைத்‌ தொலை நோக்கிகளுக்கும்‌ இச்சமன்‌பாடு பொருந்தும்‌. <poem>கண்ணினுடைய பகுப்பு எல்லை = 60 நொடி கோணம்‌ யெர்க்கினஸ்‌ ஒளி விலகு தொலை நோக்கியின்‌ பகுப்பு எல்லை = 15 நொடி கோணம்‌ பலோமர்‌ குன்றில்‌ உள்ள எதிரொளிப்பு வகைத்‌ தொலை நோக்கியின்‌ பகுப்பு எல்லை = 03 நொடி கோணம்‌</poem> இவற்றிலிருந்து கண்ணுடன்‌ ஒப்பு நோக்கும்‌ போது, ஒளியியல்‌ கருவிகளின்‌ பகு திறன்‌ மிகுந்துள்ளமையை அறியலாம்‌. {{right|—<b>ரெ. ஆறுமுகம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="208"/>{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–23}}</noinclude> dk2et5exziivln91ratf1e20azithbt விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை 4 646953 1947328 1947256 2026-06-17T13:04:41Z Info-farmer 232 விரிவு 1947328 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! அடைவு எண் !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார்பதிப்பகம்.pdf/9|* பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார்பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * தமிழ் அரசி 10*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |} stdx3eeez0ukk32vvdahp1td46n2pqi 1947352 1947328 2026-06-17T14:14:49Z Info-farmer 232 விரிவு 1947352 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! அடைவு எண் !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br><br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * தமிழ் அரசி 10*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |} 6oukyng4ty9amxdwnvk2k77cvl5pnpo 1947355 1947352 2026-06-17T14:16:24Z Info-farmer 232 விரிவு 1947355 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br><br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * தமிழ் அரசி 10*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |} 7q13tb2vrh0zu9aw0x3ubvjr6z2o0vs 1947357 1947355 2026-06-17T14:20:18Z Info-farmer 232 - துப்புரவு 1947357 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * தமிழ் அரசி 10*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * தமிழ் அரசி 10<br>* பூம்புகார் 07 || || || |} kyiwqannxmz8ns4spyh0fvgwwm2db02 1947358 1947357 2026-06-17T14:28:59Z Info-farmer 232 /* கடிதக் காலக்கோடு */ புதிய துணைப்பக்கங்கள் இணைக்கப்பட்டன 1947358 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} p9c47dex9emt0sr4byic5w0fefhofh5 1947400 1947358 2026-06-17T17:05:22Z Info-farmer 232 விரிவு 1947400 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} c2k5ekad8s607brguvsvdnijhpdh3a2 1947401 1947400 2026-06-17T17:09:04Z Info-farmer 232 query 1947401 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} jv3rso2qiqn4sle4tmhfivi387no9ou 1947404 1947401 2026-06-17T17:42:57Z Info-farmer 232 - துப்புரவு 1947404 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} oliv7zhzu6hee2e75nuijhy8h94cb3y 1947408 1947404 2026-06-17T18:04:10Z Info-farmer 232 [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] 1947408 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} 155c28ppece1mdgxg09qr98aenn8g04 1947417 1947408 2026-06-17T19:10:38Z Info-farmer 232 [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] 1947417 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} 4b10109my2mfji9v22iaiajux87n5kt 1947419 1947417 2026-06-17T19:29:17Z Info-farmer 232 விரிவு 1947419 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02|| || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} r09ebpk404cov34thff7pwahxer906j 1947422 1947419 2026-06-17T19:44:51Z Info-farmer 232 1947422 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || || |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || || || |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || || |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || || |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || || |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || || || |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| || || |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || || |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106407] || || |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || || |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || || |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || || |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || || |} chqa1ghvwxp8mhvebcp8q4z36wmmk7m பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/386 250 646991 1947478 1947184 2026-06-18T04:27:46Z TI Buhari 4634 1947478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|364 பகுமுறைச்‌ சார்பு}}</noinclude><section begin="213"/>{{fs|110%|<b>பகுமுறைச்‌ சார்பு</b>}} z = x + iy என்னும்‌ சிக்கல்‌ மாறியால்‌ ஆன f(Z) என்னும்‌ சார்புக்கு z தளத்தில்‌ உள்ள a என்னும்‌ புள்ளியில்‌ <math display=block> \lim_{z \to a}\frac {f(z) - f(a)}{z - a }</math> என்னும்‌ எல்லை மதிப்பு இருக்குமானால்,‌ அப்புள்ளியில்‌ f(Z) என்னும்‌ சார்பு பகுமுறை (analysis) உடையது எனலாம்‌. மேற்காணும்‌ மதிப்பைச்‌ சிக்கல்‌ வகையீடாகக்‌ (complex derivative) கருதி f’(a) என்று குறிப்பிடலாம்‌. z எனும்‌ சிக்கல்‌ தளத்தில்‌ உள்ள Ω என்னும்‌ பரப்பிடத்தின்‌ (region) அனைத்துப்‌ புள்ளிகளுக்கும்,‌ அத்தகைய சிக்கல்‌ வகையீடு இருக்குமாயின்,‌ Ω என்னும்‌ பரப்பிடத்தில்‌ f(z) பகுமுறைச்‌ சார்பு (analytic function) எனக்‌ கூறப் படும்‌. எந்தப் புள்ளியிலாவது வகையீடு இரா விட்டால்,‌ அப்புள்ளி சார்பின்‌ தனிப் புள்ளி (singular point) என்று சொல்லப் படும்‌. லியோவில்லி தேற்றத்தின் படி f(Z) என்னும்‌ சார்புக்கு முடிவுள்ள அல்லது முடிவிலா எப்புள்ளியிலும்,‌ தனிப் புள்ளி இல்லையாயின்‌ f(z) என்னும்‌ சார்பு மாறிலியாகும்‌. பகுமுறைச்‌ சார்புகளை வேறு வழிகளிலும்‌ வரையறை செய்வதுண்டு. பகுமுறைச்‌ சார்பு கோஷி—ரீமன்‌ சமன்பாட்டையும்‌, லாப்ஸாஸ்‌ சமன்பாட்டையும்‌ நிறைவு செய்தல்‌ வேண்டும்‌. பரப்பிடத்தின்‌ எப்புள்ளியின்‌ அண்மையிலும்‌ (Neighbourhood) சார்பினை ஒருங்கும்படித்‌ தொடர (convergent power series) அமைக்க முடியுமென்றாலே, அப்பரப்பிடத்தில்‌ பகுமுறைச்‌ சார்பாகும்‌. {{right|—<b>கோ. சண்முகசுந்தரம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="213"/><section begin="214"/>{{fs|110%|<b>பகுமுறை வடிவக்‌ கணிதம்‌</b>}} இயற்கணிதத்தைக்‌ கொண்டு, வடிவக்‌ கணிதத்தை 1637இல்‌ பிரான்ஸ்‌ நாட்டுக்‌ கணித அறிஞர்‌ ரானே டெக்கார்டே என்பார்,‌ ஆராய்ந்ததன்‌ விளைவாகப்‌ பிறந்தது பகுமுறை வடிவக்‌ கணிதம்‌ (analytical geometry) ஆகும்‌. பெர்மாட்‌, நியூட்டன்‌ லீனி ஆகியோர்‌ டெக்கார்டே காட்டிய வழியைப்‌ பின்பற்றிப்‌ பல ஆய்வுகளை நடத்தினர்‌. இரு பரிமாணத்தில்‌ தளத்திலுள்ள இரு புள்ளி ஒன்றுக்கொன்று வெட்டிக்‌ கொள்ளும்‌ இரு கோடுகளைக்‌ கொண்டு குறிக்கப் படுகிறது. இக்கோடுகளுக்கு ஆயங்கள்‌ என்று பெயர்‌. இக்கோடுகளைக்‌ குத்தாயங்களாக எடுத்துக்‌ கொள்வது சிறந்தது. ஆயங்கள்‌ வெட்டிக்‌ கொள்ளும்‌ புள்ளியை ஆதி எனலாம்‌. படுக்கைக்‌ கோட்டை X ஆயமென்றும்‌, நெடுங்கோட்டை Y ஆயமென்றும்‌ கொள்வது மரபு. OX இல்‌ X அலகு தொலைவும்‌, அவ்விடத்திலிருந்து OY க்கு இணையாக Y அலகு தொலைவும்‌ உள்ள ஒரு புள்ளி என்று (X,Y) படம்‌ 1இல்‌ உள்ளவாறு குறிக்கப் படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 386 |bSize = 1080 |cWidth = 420 |cHeight = 130 |oTop = 495 |oLeft = 590 |Location = center}} இதே போன்று தளத்திலுள்ள ஏனைய புள்ளிகள்‌ குறிக்கப் படுகின்றன. இரு புள்ளியின்‌ P(X₁, Y₁), Q(X₂, Y₂) என இருப்பின்,‌ அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவை <math display=inline>PQ = \sqrt { \big( X_1 - X_2)^2 + (Y_1 - Y_2)^2}</math> என்னும்‌ வாய்ப்பாட்டால்‌ அறியலாம்‌. இது பித்தாகரஸின்‌ வழியைக்‌ கொண்டு காணப் படுகிறது. எந்த இரண்டு புள்ளிகளுக்கு இடைப்‌ பட்ட தொலைவையும்‌ அளவிட, இந்த வாய்ப்பாடு உதவுகிறது. (X₁, Y₁), (X₂, Y₂) எனும்‌ புள்ளிகளைச்‌ சேர்க்கும்‌ கோட்டின்‌ மையப் புள்ளியை <math display=inline>\big[ \frac {X_1 + X_2}{2} , \frac {Y_1 + Y_2}{2} \big]</math> என அறியலாம்‌. ஒரு முக்கோணத்தின்‌ உச்சிகள்‌ (X₁, Y₁), (X₂, Y₂), (X₃,Y₃) என்றாயின்,‌ அம்முக்கோணத்தின்‌ நடுக் கோட்டுச் சந்தி (centroid) <math display=inline>\big[ \frac {X_1 + X_2+X_3}{3} , \frac {Y_1 + Y_2+Y_3}{3} \big]</math> என்று கிடைக்கிறது. அம்முக்கோணத்தின்‌ பரப்பு <math display=inline>\frac {1}{2} \big[ X_1 (Y_2 - Y_3) +X_2(Y_3 - Y_1) + X_3 (Y_1 - Y_2) \big]</math> மூலம்‌ அறியப் படும்‌. நேர்கோட்டை ஒட்டிய சில அடிப்படைச்‌ சமன்பாடுகளை அறிந்து கொள்வது பயனுடையது.{{nop}}<noinclude></noinclude> dd5pxnky73frf7fwuyff0q5ickugg16 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/209 250 647027 1947324 2026-06-17T12:09:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 209 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 163 |oTop = 95 |oLeft = 24 |Location = center |Description = }} {{center|இராசாராணி கோயில்}} களிலும் பல சிற்ப உருவங்கள் உள்ளன. கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|183|கோயில்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 209 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 163 |oTop = 95 |oLeft = 24 |Location = center |Description = }} {{center|இராசாராணி கோயில்}} களிலும் பல சிற்ப உருவங்கள் உள்ளன. கருவறைக்கு மேலே கட்டப்பட்டுள்ள விமானப் பகுதிகள் சதுரம் சதுரமாகக் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலின் முக மண்டபம் செவ்வக வடிவமுடையது. மண்டபத்தில் தூண்கள் பல உள்ளன. இம்மண்டபமும் இரண்டு அடுக்குகளை உடையது. புவனேசுவரத்திலுள்ள மற்றொரு கோயில் வைதல் கோயிலாகும். இக்கோயிலின் சிகரப்பகுதி திராவிடப் பாணியைக் கொண்டிலங்கு றது. இக்கோயில் பஞ்சாயதனம் எனப்படும் ஐந்தேர்க் கோயில் வகையைச் சார்ந்தது. இக்கோயிலில் அழகிய சிற்பங்கள் பல உள்ளன. இக்கோயிலின் மூலவர் சாமுண்டீசுவரி ஆவார். ஒரிசாவில் கி.பி. 900–இலிருந்து கி.பி. 1100 வரை கட்டப்பட்ட கோயில்களைப் பெர்சி பிரௌன் என்பவர் இடைக் காலக் கோயில்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கோயில்களுள் குறிப்பிடத் தக்கவை புவனேசுவரத்தில் உள்ள முத்தேசுவரன் கோயில், இராமேசுவரன் கோயில், பூரியில் உள்ள சசுந்நாதன் கோயில் போன்றவை ஆகும். இக்கோயில்கள் தொடக்க கால ஒரிசாக் கோயில்களை விட அமைப்புகளிலும் வளர்ச்சியிலும் பல வேறுபாடுகளை உடையவை. நாகரக் கோயில்களின் அமைப்பைப் பெரிதும் பெற்று இக்கோயில்கள் விளங்குகின்றன. முத்தேசுவரன் கோயில் பல நுண்ணிய வேலைப்பாடுகளையுடைய கோயிலாகும். இக்கோயிலில் தோரண வாயில் ஒன்றும் காணப்படுகிறது. இக்கோயில் ஐந்தேர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இலிங்கராச கோயில் கருவறை, முக மண்டபம், சபா மண்டபம், போக மண்டபம் ஆகிய நான்கு பகுதிகளைப் பெற்று விளங்குகிறது. பல அணி வேலைப்பாடுகள் கொண்டுள்ள இக்கோயிலின் உச்சிப் பகுதியைச் சுற்றிச் சிறு கோபுரங்கள் நான்கு கட்டப்பட்டுள்ளன. இலிங்கராச கோயிலைப் போன்ற அமைப்பையே பூரி சகந்நாதர் கோயிலும் கொண்டிலங்குகிறது. பிற்கால ஒரிசாக் கோயில்களுள் குறிப்பிடத் தக்கவை இராசாராணி கோயில், கோனாரக்கிலுள்ள சூரியன் கோயில் ஆகியன ஆகும். இவை கி.பி. 1100க்கும் 1250க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவை. இராசாராணி கோயில் ஐந்தேர் அமைப்புடைய கோயிலாகும். இக்கோயிலின் சகமோகன் மண்டபம், பிற மண்டபங்களை விட அணி வேலைப்பாட்டில் பல வேறுபாடுகளைக் கொண்டு அழகுற அமைந்துள்ளது. கோனாரக்கிலுள்ள சூரியன் கோயில் தேரமைப்பில் அமைந்த கோயிலாகும். கதிரவனுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் கதிரவன் தேரில் அமர்ந்து செல்வது போன்று நான்கு சக்கரங்கள் கொண்டும் ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்றும் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கருவறைக்கு முன்னுள்ள சகமோகன் மண்டபம் 700 அடி நீளம் உடையது. இக்கோயில் கருவறைமண்டபம், சகமோகன் மண்டபம், நாட்டிய மண்டபம், மற்றும் பல சிறு கோயில்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. <b>கூர்ச்சரப் பிரதிகாரக் கோயில்கள்:</b> கூர்ச்சரப் பிரதிகாரர்களின் கோயில்கள் இராசசுத்தான், மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் உள்ளன. குவாலியர்ப் பகுதிகளில் காணப்படும் இவர்களின் கோயில்கள் சதுர அமைப்புடையவை. அடி மேடை தாழ்ந்தும் சிகரப் பகுதிகள் எளிய முறையிலும் காணப்படுகின்றன. குவாலியரிலுள்ள தெலிக்கா மந்திர் பிரதிகாரர்களின் மிகப் பெரிய கோயிலாகும். இராசசுத்தானில் ஓசியா என்னும் இடத்தில் இவர்கள் பல கோயில்களைக் கட்டினர். <b>சந்தலர் கோயில்கள்:</b> இந்தியக் கோயில்களுள் மிகச் சிறப்பு வாய்ந்ததும் அணி வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுவதுமான கோயில்கள் சந்தலர் கோயில்களாகும். மத்திய பிரதேசத்தில் கசுராகோவில் காணப்படும். இவர்களுடைய கோயில்கள் புகழ் பெற்றவை. ஏறக்குறைய இங்கு 85 கோயில்கள் உள்ளன இவற்றுள் புகழ் பெற்றது சௌசத் யோகினி என்ற கோயிலாகும். சந்தலர்களின் கோயில்கள் நல்ல<noinclude></noinclude> lnz8llp9bdu6y2rekabb4z3cuq01jnm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/210 250 647028 1947325 2026-06-17T12:32:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 210 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 272 |oTop = 57 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|ஓசியாவிலுள்ள கோயில்}} கருமை நிறமாகக் கருங்கற்களாலும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|184|கோயில்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 210 |bSize = 480 |cWidth = 174 |cHeight = 272 |oTop = 57 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|ஓசியாவிலுள்ள கோயில்}} கருமை நிறமாகக் கருங்கற்களாலும் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கற்களாலும் கட்டப்பட்டன. இந்து சமண, பௌத்த சமயத் தெய்வங்களுக்காக இக்கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில்கள் பொதுவாக உயரமான மேடை மீது கட்டப்பட்டன. கருவறையைச் சுற்றி மிக அகன்ற பாதை தாழ்வார அமைப்பில் காணப்படுகிறது. கருவறையின் எதிரில் பல மண்டபங்களையும் சுற்றிலும் பல கட்டட அமைப்புகளையும் இக்கோயில்கள் கொண்டு விளங்குகின்றன. இவை தனித்தனியே அமைந்திருப்பது போல் மேற்பகுதியில் காணப்படினும் அடிமட்டத்தில் இவையாவும் ஒரு கட்டடத்தின் மேல் அமைந்து குறிப்பிட்ட பகுதி வரை மேலே ஒருங்கிணைந்து செல்கின்றன. கசுராகோ கோயில்களில் பல வகை மண்டபங்களும் பக்கவறைகளும் காணப்படுகின்றன. இக்கோயில்களின் சுவர்கள் மிக அகலமானவை. அவை உள்ளறைகளுக்கேற்றவாறு பல வளைவுகளை ஆங்காங்கே பெற்றுள்ளன. சுவர்களின் மேற்பகுதியிலிருந்து கூரைப்பகுதி படிப்படியாக வளர்ந்து சென்று முடிகிறது. கூரையின் அமைப்பில் பல முகடுகள் உள்ளன. கோயிலின் மேற்பகுதியில் பல சிறு சிகரங்களும் ஆமலகங்களும் காணப்படும். பல அணி வேலைப்பாடுகள் கதவுச் சட்டங்கள், கற்றூண்கள், கூரைகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. கசுராகோவில், சௌசத்யோகினி கோயில், கந்தேரிய மகாதேவன் கோயில், விசுவநாதன் கோயில், தேவி செகதாம்பாள் கோவில், சித்திர குப்தர் கோயில், சமணர் கோயில், பார்சுவ நாதர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 210 |bSize = 480 |cWidth = 207 |cHeight = 164 |oTop = 159 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|பார்சுவநாதர் கோயில்–கசுராகோ}} <b>காலச் சூரிகளின் கோயில்கள்:</b> காலச்சூரி மரபினர் கட்டிய கோயில்கள் யாவும் குப்த, பிரதிகார கோயில்களின் பொதுத் தன்மைகளைப் பெற்றவை. இவர்கலின் கோயில்கள் அர்சூலா, சாந்தரேயி மைகார், நோதா, சோகாபூர், போட்டு, மார்க் கண்டா, நாராயன்பால் போன்ற இடங்களில் உள்ளன. <b>இராசசுத்தான் கோயில்கள்:</b> இராசசுத்தான் கோயில்கள் இந்தியக் கோயில் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளைப் பெற்று விளங்கும் கோயில்களாகும். இராசசுத்தானில் ஓசியன் ஆடி, சோதிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் புகழ்மிக்கவை. இவற்றுள் இந்துசமயக் கோயில்களும் சமணர் கோயில்களும் அடங்கும். சோளங்கி மன்னர்கள் இப்பகுதியில் பல கோயில்களைக் கட்டி வைத்தனர். காச்சா பாசுதர் என்னும் மரபினர் மைய இந்தியாவின் வட மேற்குப் பகுதியை ஆண்டவர்கள். இம்மரபினர் குவாலியர், தூப்புகுண்டு, நார்வார் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு தனித்தனி அரசுகளை அமைத்து ஆண்டனர். இவர்கள் கட்டிய கோயில்கள் குட்டையான கற்றூண்களையும் இலை,<noinclude></noinclude> mgpydiiezp1fzoqsiuxrgkps0v1ncaf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/211 250 647029 1947326 2026-06-17T12:43:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொடி, மலரணிகளையும் பெற்றுத் திகழ்கின்றன. இவர்கள் காலக் கோயில்களுள் குறிப்பிடத்தக்கவை ககன்மத்கோயிலும் முராயத் கோயிலும் ஆகும். ககன்மத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|185|கோயில்‌}}</noinclude>கொடி, மலரணிகளையும் பெற்றுத் திகழ்கின்றன. இவர்கள் காலக் கோயில்களுள் குறிப்பிடத்தக்கவை ககன்மத்கோயிலும் முராயத் கோயிலும் ஆகும். ககன்மத் கோயில் கீர்த்திராசன் என்பவரால் கட்டப்பட்டது. இது சுகனியா என்னுமிடத்தில் உள்ளது. <b>கந்தியவார்ப்பகுதி:</b> மேற்கிந்தியாவில் கத்தியவார் கூர்சரப் பகுதிகளில் வட இந்தியக் கலைப் பாணியை முழுவதும் பெற்ற கோயில்கள் பல உள்ளன. சோளங்கி மரபு அரசர்கள் இப்பகுதிகளில் பல கோயில்களைக் கட்டினர். சோளங்கிகளுக்கு முற்பட்ட கோயில்கள் பலவும் இப்பகுதிகளில் உள்ளன. கோப்பு (Gop) என்னுமிடத்திலுள்ள கோயில் கி.பி. 6–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயிலாகும். இக்கோயில் அழிந்த நிலையில் காணப்படுகிறது. சோளங்கி மரபினர் சுனக்கு, கனோதா, தேமால், காசரா, கூம்லி, செசாக்பூர், மொதேரா, ஆடி (ஆழிநாதர் கோயில், நேமிதாதர் கோவில்) சித்தாபூர், கத்தியவார் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர். <b>காசுமீரம்:</b> இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள காசுமீரத்தில் பௌத்த சமயக் கொயில்களும் இந்து சமயக் கோயில்களும் காணப்படுகின்றன. காசுமீரக் கோயில்கள் காசுமீரக் கட்டட அமைப்பு முறையைக் கொண்டவை. இக்கோயில்களின் கூரைகள் கூம்புவடிவில் பிரமிடுபோல் உள்ளன. மரத்தாலான கட்டடக் கலைப்பாணியே இங்குப் பெரிதும் உள்ளது. காசுமீரத்தில் மார்த்தாண்டு என்னுமிடத்தில் உள்ள சூரியன் கோயில் இப்பகுதியில் உள்ள கோயில்களுள் சிறப்பானதாகும். சிரீ நகரில் அவந்தி வர்மன் என்னும் அரசன் கட்டிய கோயில்கள் இன்று அழிந்தநிலையில் காணப்படுகின்றன. நேபாளம் தனி நாடெனினும் இந்தியப் பண்பாட்டையுடைய நாடாகும். இங்குப் பௌத்த சமயக் கட்டடங்களும் இந்து சமயக் கோயில்களும் உள்ளன. நேபாளத்தில் பல பௌத்த சமயத் தூபிகள் காணப்படுகின்றன. பதான் தர்பார் என்னும் இடத்தில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 211 |bSize = 480 |cWidth = 406 |cHeight = 226 |oTop = 272 |oLeft = 35 |Location = center |Description = }}<noinclude></noinclude> ky2yuf322o1o0m26auj0jkfv28y2vc2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/212 250 647030 1947327 2026-06-17T12:56:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ள கிருட்டிணன் கோயில் மூன்று மாடிகளை உடையது. எண்கோண வடிவில் தூண்கள் பெற்று இக்கோயில் உள்ளது. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|186|கோயில்‌}}</noinclude>உள்ள கிருட்டிணன் கோயில் மூன்று மாடிகளை உடையது. எண்கோண வடிவில் தூண்கள் பெற்று இக்கோயில் உள்ளது. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டுள்ளன. இந்து சமயத்தைச் சார்ந்த பல குடைவரைகளும் ஒற்றைக் கல் கோயில்களும் இந்தியக் கோயிற் கட்டடக் கலைக்கு மிகுந்த சிறப்பை ஊட்டுவன. பெரும்பாலான குடைவரைகள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவை, நாசிக்கு, உதயகிரி, அசந்தா, எல்லோரா, அவுரங்காபாது, பாகு (Bagh) ஆகிய இடங்களில் இவ்வகைக் குடைவரைகள் உள்ளன. இவற்றுள் இந்து சமயக் குடைவரைகளும் அடங்கும். <b>சாளுக்கியரின் கோயில்கள்:</b> தென்னிந்தியக் கோயில்களின் குறிப்பிடத்தக்க கட்டடக் கலைப் பாணியைப் பின்பற்றிச் சாளுக்கியர்கள் கோயில்களைக் கட்டினர். முற்காலச் சாளுக்கியர் கட்டிய கோயில்கள் அய்கொளே என்னுமிடத்தில் உள்ளன. அய்கொளேயில் உள்ள இலடக்கான் கோயில், துர்க்கை கோயில், உச்சிமல்லிகுடி கோயில், மெகுடி சமணக் கோயில் போன்றவை இவர்கள் காலத்தைச் சார்ந்தவை. இவர்களின் தலைநகரமான பாதாமி அல்லது வாதாபியில் குடைவரைகளையும் இவர்கள் அமைத்தனர். இவற்றைத் தவிரப் பட்டடக்கல், ஆலம்பூர் ஆகிய இடங்களிலும் இவர்கள் கட்டிய கோயில்கள் பல உள்ளன. ஒய்சளர் என்னும் மரபினர் மைசூர்ப் பகுதிகளில் ஆட்சி செய்து வந்த மரபினர் ஆவர். ஒய்சளர்களின் கட்டடக் கலைப்பாணி திராவிடம், நாகரம் ஆகிய கலைப்பாணிகளுக்கு இடைப்பட்ட வேசரா கலைப் பாணியாகும். ஒய்சளர் கோயில்கள் கருநிறமான வழவழப்பு மிக்க கருங்கற்களால் கட்டப்பட்டன. இவற்றில் மிகுந்த நுண்ணிய வேலைப்பாட்டு அமைப்புகளும் காணப்படுகின்றன. இவர்கள் கோயில்களைக் கூட்டமாகக் கட்டினர். இரண்டு, மூன்று, ஐந்து என்ற அடிப்படையில் இவை உள்ளன. இக்கோயில்கள் உயரமான நட்சத்திர வடிவ மேடை மீது அமைக்கப்பட்டன. சுவர்கள் பல ஒப்பனைப் பட்டைகளையும் அணி வேலைப்பாடுகளையும் பெற்றுத் திகழ்ந்தன. தூண்கள் மிகுந்த வழவழப்பும் வேலைப்பாடும் மிக்கனவாகத் திகழ்கின்றன. ஒய்சளர்கள் கட்டிய கோயில்களுள் குறிப்பிடத்தக்கவை சோமநாதபுரத்திலுள்ள கேசவன் கோயிலும், அளேபீட்டிலுள்ள ஓய்சளேசுவரன் கோயிலும், பேலூரில் உள்ள சென்ன கேசவன் கோயிலும் ஆகும். இக்கோயில்கள் யாவும் விமானம் பெற்ற கருவறை, அந்தராளம், நவரங்கம் மண்டபம் ஆகிய பகுதிகளைப் பெற்றுத் திகழ்கின்றன. {{Right|<b>சு.இரா.</b>}} <b>தமிழகக் கோயில்கள்:</b> தமிழகத்திற்குப் பல வகைச் சிறப்புகளுண்டு, அவற்றுள் தலையாய ஒன்று, தமிழகத்தின்கண் அமைந்துள்ள எண்ணற்ற கோயில்களாகும். கோயில்கள், தமிழகத்தின் பழம்பெரும் நாகரிகத்தையும், பண்பாட்டு நலன்களையும் விளக்கிக் கொண்டிருக்கும் வரலாற்றுச் சின்னங்களாகும். தமிழகம் வளர்த்த அழகுக் கலைகளுள் இன்றைக்கும் உலகம் போற்றிப் பாராட்டும் நிலையில் பல அழகுக் கலைகள், தமிழகத்திற்குப் புகழையும் பெருமையையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுள் ஒன்று கோயிற் கட்டடக் கலைகளாகும். கோயிற் கட்டடக் கலைக்குத் தமிழகத்தில் எண்ணற்ற நேரடிச் சான்றுகள் உள்ளன. மன்னர்க் காயினும் இறைவனுக்காயினும் சாதாரணக் குடி மக்களுக்காயிலும், அரண்மனை, கோயில், வீடு ஆகியவை அமைப்பதற்கு ஒரு பண்பட்ட இலக்கண முறையை மக்கள் மேற்கொண்டிருந்தனர். இம்முறை நாளடைவில் வளர்ச்சியடைந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தென்னகத்தில் ‘மயன் மரபு’ என்னும் மரபு பழங்காலத்தில் நிலவி வந்திருக்கிறது. ‘மயன் விதித் தன்ன மணிக்கா லமளிமிசை நெடுநிலை மாடத்திடை’ சிலம்பின் கதாநாயகன் கோவலனும் கதாநாயகி கண்ணகியும் அமர்ந்திருந்தனரென இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து மயன் மரபு, சங்க காலந் தொட்டே தமிழகத்தில் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அந்நாள் தொட்டே பழக்கத்திலிருந்த மயன் மரபு பின்னர் எழுத்து வடிவம் பெற்றது. இந்நூல் கிரந்தம், மலையாளம் ஆகிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பதால் இது தென்னகத்துக்கே உரிய நூல் என்று கொள்ளப்படுகிறது. கோயில்கள் பலவகையாகக் கட்டப்பட்டன. கட்டட அமைப்பைக் கொண்டு அவை பலவாறு, பெயர்பெற்றன. திருநாவுக்கரசர் தம் பதிகத்தில் பல வகையான கோயில்களைப் பாடியிருக்கிறார். அவை பெருங்கோயில், கரக்கோவில், ஞாழற்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் போன்றவையாகும். இவ்வகைக் கோயில்களில் சில இன்றுமுள்ளன. இவைகளேயன்றிப் பூங்கோயில், தூங்கானை மாடம் போன்ற கோயில்களையும் திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். இக்கோயில் வகைகள் தவிர மாடக்கோயில் என்றொரு வகையுமுண்டு. கோச்செங்கண்ணான் என்னும் சோழ மன்னன் கி.பி. 4–ஆம் நூற்றாண்டளவில் இத்தகைய கோயில்களைக் கட்டுவித்தான். கருவறை கீழ்த்தளத்தில் இல்லாது மேல்தளத்தில் இருக்கும்<noinclude></noinclude> bcvetkqgnhqsfji8kpphrf4jv0t5lwi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/213 250 647031 1947329 2026-06-17T13:09:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 213 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 170 |oTop = 102 |oLeft = 27 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 213 |bSize = 480 |cWidth = 163 |cHe..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|187|கோயில்‌}}</noinclude> {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 213 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 170 |oTop = 102 |oLeft = 27 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 213 |bSize = 480 |cWidth = 163 |cHeight = 210 |oTop = 71 |oLeft = 274 |Location = right |Description = }} {{Multicol-end}} {{center|நகுல சகாதேவ ரதம், அர்ச்சுன ரதம், மகாபலிபுரம்.}} கோயில்களுக்கு மாடக்கோயில் என்று பெயர். இத்தகைய கோயில்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. தமிழகக் கோயில்கள் அடி, கால், கூரை, கழுத்து, தலை, குடம் என்ற உறுப்புகளைக் கொண்டு விளங்குகின்றன. இவ்வங்கங்களை அடி, கால், தோள், கழுத்து, தலை, முடி என்ற மனித உறுப்புகளுக்கு ஒப்பிடுகின்றனர். கோயிலின் அடிப்பகுதி (அதிட்டானம்) உபானம், சகதி, குமுதம், பத்மம், பட்டிகை என்ற பல பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. அவற்றை மாற்றி மாற்றி அமைப்பதால் பல்வேறு வகையான அடிப் பகுதிகளை உருவாக்கலாம். சில கோயில்களில் அடிப் பகுதியின் கீழ் ‘உபபீடம்’ என்னும் பகுதி அமைக்கப்படும். கங்கைகொண்ட கோழீச்சுவரம். தஞ்சைப் பெருவுடையார் கோயில்களில் இதனைக் காணலாம். கட்டடத்தின் உயரத்தினை உணர்த்துவதற்கும், அழகுபடுத்துவதற்கும் உபபீடத்தை அமைப்பர். பல கோயில்களில் உபபீடமின்றி அடிப்பகுதி மட்டும் அமைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதிதான் மேலுள்ள கட்டடம் முழுவதையும் தாங்குகிறது. அடிப்பகுதியின் மேலுள்ள பகுதி ‘கால்’ அல்லது ‘சுவர்’ எனப்படும். இப்பகுதியை அழகுபடுத்தும் பொருட்டு அரைத்தூண்களும் கோட்டங்களும் மகர தோரணங்களும் அமைக்கப்படும். சுவரின் மேல் வரும் பகுதி கூரை (பிரசுதரம்) எனப்படும். இக்கூரை அறையை மூடும் உறுப்பாகும். இது பூதவரி, கொடுங்கை, யாளிவரி என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்கும். இதன்மேல் ஒன்று. இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் அமைக்கப்படும். மேலே அமைக்கப்படும் தலையின் அமைப்பை யொட்டிச் சதுரமாகவோ வட்டமாகவோ எண் பட்டையாகவோ அமைக்கப்படும் பகுதி கழுத்து (கிரீவம்) எனப்படும். இப்பகுதியின் நான்கு திசைகளிலும், நான்முகன், திருமால், சிவன் அல்லது இந்திரன் ஆகியோரின் உருவங்கள் இடம் பெறும். கழுத்திற்கு மேல் எழுப்பப்படும் பகுதி தலை (சிகரம்) எனப்படும். இது எண்பட்டையாகவே சதுரமாகவோ வட்டமாகவோ அமைக்கப்படும் தலைப்பகுதியின் அமைப்புக் கொண்டு கோயிலை பலவகையாகப் பிரிக்கலாம். தலைப்பகுதி நன் பட்டை வடிவிலிருந்தால் ‘திராவிட சிகரம்’ என்றும் சதுரமாக இருந்தால் நாகரசிகரம் என்றும், வட்டமாக இருந்தால் ‘வேசர சிகரம்’ என்றும் கூறலாம் இவ்வமைப்பு அனைத்தும் தமிழகத்தில் காணப்படுகின்றன. இந்தியாவின் தென்பகுதியிலுள்ள கோயில் அமைப்பைத் ‘திராவிடம்’ என்றும், வடபகுதியிலுள்ளதை ‘நாகரம்’ என்றும், இடையிலுள்ளதை வேசரம் என்றும் கூறலாம். {{nop}}<noinclude></noinclude> okglp409olbzqklcp5wg1furle4igk4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/214 250 647032 1947330 2026-06-17T13:16:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 214 |bSize = 480 |cWidth = 369 |cHeight = 493 |oTop = 63 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|இலிங்கராசர் கோயில் – புவனேசுவரம்}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|188|கோயில்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 214 |bSize = 480 |cWidth = 369 |cHeight = 493 |oTop = 63 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|இலிங்கராசர் கோயில் – புவனேசுவரம்}}<noinclude></noinclude> nvfg597jgrytcvvdde5xn7o6emf0mcr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/215 250 647033 1947331 2026-06-17T13:19:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 215 |bSize = 480 |cWidth = 325 |cHeight = 468 |oTop = 63 |oLeft = 87 |Location = center |Description = }} {{center|தஞ்சைப் பெரிய கோயில்}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்|189|கோயில்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 215 |bSize = 480 |cWidth = 325 |cHeight = 468 |oTop = 63 |oLeft = 87 |Location = center |Description = }} {{center|தஞ்சைப் பெரிய கோயில்}}<noinclude></noinclude> 6rax81i29jiieenh5l8n6jxjkbtcjgm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/216 250 647034 1947336 2026-06-17T13:41:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைப்பகுதியின் மேல் குடம் போன்றும், அதன் மேல் குவிந்த தாமரை போன்றும் உள்ள பகுதியைக் குடம் (தூபி) என்பர். இது உலோகத்தாலோ கதையாலோ கல்லாலோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|190|கோயில்‌}}</noinclude>தலைப்பகுதியின் மேல் குடம் போன்றும், அதன் மேல் குவிந்த தாமரை போன்றும் உள்ள பகுதியைக் குடம் (தூபி) என்பர். இது உலோகத்தாலோ கதையாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். கூரைக்கு மேல் ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகள் (தளங்கள்) அமைக்கப்படுவதுண்டு. ஒரு நிலையிலுள்ள கோயில் ‘சிறுகோயில்’ எனப்படும். நிலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு ‘இருநிலைவிமானம்’ எனவும் மூன்றுநிலை விமானம் எனவும் குறிப்பிடப்படும். ஒவ்வொரு நிலையிலும் சாலைகளும் கூடங்களும் மாலைபோல் சுற்றியமைக்கப்பட்டிருக்கும். நீண்டசதுர அமைப்புடையதைச் சாலை என்றும், சதுர அமைப்புடையதைக் கூடமென்றும் கூறுவர். சில கோயில்களில் கருவறையின் மேல் நிலைகளில், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு கருவறைகள் அல்லது மூன்று கருவறைகள் அமைக்கப்படுவதுண்டு. உத்தரமேரூர் சுந்தரவரதர் கோயில், காஞ்சியிலுள்ள வைகுந்த நாதர் கோயில், மாமல்ல புரத்திலுள்ள தர்மராச ரதம் முதலியவற்றில் மூன்று கருவறைகளைக் காணலாம். கருவறையின் மேல் எழுப்பப்படும் கட்டடப்பகுதி ‘விமானம்’ என்றும் ‘கிரீகோயில்’ என்றும் கோயிலின் நுழைவாயிலை அலங்கரிக்கும் கட்டடப்பகுதி ‘கோபுரம்’ என்றும் சொல்லப்படும். இது பல நிலைகளையுடையதாய் இருக்கும். கருவறையின் மேலுள்ள பகுதி விமான மென்று சொல்லப்படும். மண்டபங்களை எடுப்பிக்க அடி, கால், கூரை என்ற மூன்று உறுப்புகள் தேவைப்படும். மண்டபங்கள் கருவறையின் முன் இணைக்கப்பட்டிருந்தால் ‘முன்மண்டபம்’ என்றும், கோயிலைச் சுற்றி எடுக்கப்பட்டிருக்கும் சுவருக்குத் ‘திருச்சுற்று மதில்’ என்றும், அதையொட்டி மாளிகை எடுக்கப்பட்டிருந்தால் ‘திருச்சுற்று மாளிகை’ என்றும் வழங்கப்படும். <b>பல்லவர் காலம்:</b> கோயில்களில் தொன்மையானவை பல்லவர்களுடைய காலத்திலிருந்துதான் காணப்படுகின்றன. பல்லவர் காலக் கோயில்களைக் குடைவரைக் கோயில்களென்றும், ஒற்றைக் கற்கோயில்களென்றும், கட்டடக்கோயில்களென்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவைகளைக் குடை வித்த கோயில்களென்றும், செதுக்குளித்த கோயில்களென்றும், கட்டுவித்த கோயில்களென்றும் கூறலாம். பல்லவர் காலக் கோயில்களில் மிகவும் தொன்மையானவை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்தவை. இவன் காலத்தில் மண்டகப்பட்டு என்ற {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 216 |bSize = 480 |cWidth = 204 |cHeight = 212 |oTop = 67 |oLeft = 251 |Location = center |Description = }} {{center|தர்மராச ரதம் மகாபலிபுரம்}} ஊரில் திருமால், நான்முகன், சிவன் ஆகிய மூவருக்கும் குடைவரைக்கோயில் ஒன்று எடுக்கப்பெற்றது. அக்கோயிலை மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றித் தோற்றுவித்ததாக அங்குள்ள கல்வெட்டொன்றில் மகேந்திரவர்மன் குறிப்பிடுகிறான். ஆதலின், இதற்கு முன்னர்த் தோற்றுவிக்கப்பட்ட கோயில்களில் மரம், கதை, உலோகம், செங்கல் யாவும் பயன்படுத்தப்பட்டன என்பதை அறியலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 216 |bSize = 480 |cWidth = 165 |cHeight = 184 |oTop = 380 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|கடற்கரைக் கோயில்-மகாபலிபுரம்}} {{nop}}<noinclude></noinclude> i31g0jbrfck7pxk1rz4ky3irooydnap பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/390 250 647035 1947337 2026-06-17T13:45:51Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|368 பகுமுறை வடிவக்‌ கணிதம்‌}}</noinclude>a, b, c எனும்‌ எண்கள்‌, திசைக்‌ கொசைன்களின்‌ விகிதாச்சாரத்திலிருந்தால்‌, அவற்றைத்‌ திசை விகிதங்கள்‌ எனலாம்‌. ஆகவே, <math display=inline> \frac{a}{cos \alpha} = \frac{b}{cos \beta} = \frac{c}{cos \gamma} </math> என்றும்‌, <math display=inline>cos \alpha = \frac {a}{\sqrt{a^2 + b^2 + c^2}}; cos \beta = \frac {b}{\sqrt{a^2 + b^2 + c^2}}; cos \gamma = \frac {c}{\sqrt{a^2 + b^2 + c^2}} </math> என்றும்‌ கிடைக்கின்றன. ‌<b>தளம்‌</b>. ax + by + cz = 0 என்பது ஒரு தளத்தில்‌ பொதுச்‌ சமன்பாடாகும்‌. தளத்தின்‌ சமன்பாடுகளை வரிசைப் படுத்தலாம்‌. மூன்று அச்சுக்களையும்‌ ஒரு தளம்‌ Oவிலிருந்து a, b, c என்னும்‌ தொலைவில்‌ வெட்டினால்‌, அத்தளத்தின்‌ சமன்பாடு <math display=inline> \frac {x}{z} + \frac {y}{b} + \frac {z}{c} = 1</math> என்றும்‌ ஒரு தளம்‌ மூன்று புள்ளிகள்‌ (x₁, y₁, z₁), (x₂, y₂, z₂), (x₃, y₃, z₃) வழியாகச்‌ செல்லும்‌ போது, அதன்‌ சமன்பாடு <math> \begin{vmatrix} x & y & z & 1\\ x_1 & y_1 & z_1 & 1 \\ x_2 & y_2 & z_2 & 1 \\ x_3 & y_3 & z_3 & 1 \\ \end{vmatrix} = 0 </math> என்றும்‌ ஆகின்றன. ஆதியிலிருந்து ஒரு தளத்திற்கு P எனும்‌ செங்குத்துக்‌ கோடு வரைய, அக்கோடு l, m, n எனும்‌ திசைக்‌ கொசைன்களை ஏற்படுத்தினால்‌, தளத்தின்‌ சமன்பாடு lx + my + nz =P ஆகும்‌. (x, y, z) என்னும்‌ ஒரு புள்ளியிலிருந்து ax + by + cz + d = 0 எனும்‌ ஒரு தளத்திற்கு வரையப் படும்‌ செங்குத்துக்‌ கோட்டின்‌ நீளம்‌ <math display=inline>\pm \frac {ax_1 + by_1 + cz_1 + d} {\sqrt {a^2 + b^2 + c^2}}</math> என்றாகிறது. <b>நேர் கோடு</b>. (x₁, y₁, Z₁), (x₂, y₂, Z₂) எனும்‌ இரு புள்ளிகள்‌ வழியாகச்‌ செல்லும்‌ ஒரு நேர் கோட்டின் ‌ சமன்பாடு <math display=inline> \frac {x-x_1}{x_2 - x_1} = \frac {y-y_1}{y_2 - y_1} = \frac {z-z_1}{z_2 - z_1} </math> ஆகும்‌. இரண்டு கோடுகள்‌ {{block_center/s}}<math display=inline> \frac {x-x_1}{l_1} = \frac {y-y_1}{m_1} = \frac {z-z_1}{n_1} ; \frac {x-x_2}{l_2} = \frac {y-y_2}{m_2} = \frac {z-z_2}{n_2} </math>{{block_center/e}} ஒரே தளத்தில்‌ அமைவதற்கு, <math> \begin{vmatrix} x_2-x_1 & y_2 - y_1 & z_2 - Z_1\\ l_1 & m_1 & n_1\\ l_2 & m_2 & n_2 \end{vmatrix} = 0 </math> என்னும்‌ கட்டுப்பாடு கிடைக்க வேண்டும்‌. <b>கோளம்‌</b>. ஆதியை மையமாகவும்‌, r–அலகை ஆரமாகவும்‌ கொண்ட, ஒரு கோளத்தின்‌ சமன்பாடு x² + y² + z² = r² என்றும்‌ (a,b,c) எனும்‌ புள்ளியை மையமாகவும், r அலகை ஆரமாகவும்‌ கொண்ட கோளத்தின்‌ சமன்பாடு (x - a)² + (y - b)² + (z - c)²= r² என்றும்‌ காணலாம்‌. இதைப்‌ பொதுவாக, x² + y² + z² +2ux + 2vy + 2wz + d = 0 என்று குறிப்பது வழக்கம்‌. ஒரு கோளத்தினை ஒரு தளம்‌ வெட்டுமாயின், ‌அவ்வெட்டு வட்டமாகிறது. இவ்வட்டத்திற்குச்‌ சிறு வட்டம்‌ (small circle) என்று பெயர்‌. இத்தளம்‌ கோள மையத்தில்‌ அமையும் போது, அவ்வட்டத்திற்குப்‌ பெரு வட்டம்‌ (great circle) என்று பெயர்‌. {{block_center/s}}x² + y² + z² + 2u₁x + 2v₁y + 2w₁z + d₁ = 0<br> x² + y² + z² + 2u₂x + 2v₂y + 2w₂z + d₂ = 0{{block_center/e}} என்னும்‌ இரு கோளங்கள்‌ செங்குத்தாக வெட்டிக்‌ கொள்ளும்‌ போது, சமன்பாடுகள்‌ 2u₁u₂ + 2v₁v₂ + 2w₁w₂ = d₁ + d₂ என்னும்‌ நிபந்தனையைத்‌ நிறைவு செய்கின்றன. <b>கூம்பு</b>. ஒரு நிலையான புள்ளி V வழியாகச்‌ செல்லுமாறு, நேர்கோடு I ஒரு கொடுக்கப் பட்ட வளை வரை rஐ வெட்டிக்‌ கொண்டோ, ஒரு கொடுக்கப் பட்ட வளை தளப்‌ பரப்பு S–ஐத்‌ தொட்டுக்‌ கொண்டோ, செல்லுமாறு‌ உருவாக்கப் படும்‌ வளை தளப் பரப்பு, கூம்பு எனப்படும்‌. V–ஐ உச்சி என்றும்‌, I–ஐ உருவாக்கி என்றும்‌, r–ஐ, துணை வளை வரை என்றும்‌ சொல்லுவதுண்டு.{{nop}}<noinclude></noinclude> 7iorfjuwxyv5rytguas088fbo3fo82v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/217 250 647036 1947351 2026-06-17T14:12:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபம் போல அமைக்கப்பட்டன. கல்வெட்டுகள் இவற்றை மண்டபக் கோயில்களெனக் குறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|191|கோயில்‌}}</noinclude>மகேந்திரவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபம் போல அமைக்கப்பட்டன. கல்வெட்டுகள் இவற்றை மண்டபக் கோயில்களெனக் குறிப்பிடுகின்றன. பெரும்பாலான குடைவரைக் கோயில்களில் வாயில் காப்போர் சிற்பங்கள் மட்டும் உள்ளன. திருச்சியிலுள்ள மகேந்திரவர்மனின் குடைவரைக்கோயிலில் கங்காதரரின் அழகிய சிற்பம் உள்ளது. இவனுடைய குடைவரைக் கோயில்கள், திருச்சி, சிங்கவரம், பல்லாவரம், மாமண்டூர், மண்டகப்பட்டு, வல்லம் ஆகிய ஊர்களிலுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 217 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 163 |oTop = 180 |oLeft = 19 |Location = center |Description = }} {{center|புலிக் குகை–மகாபலிபுரம்}} ‘இராசசிம்மன்’ என்று சொல்லப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தில் குகைக்கோயில்களையும், ஒற்றைக் கோயில்களையும் சில கட்டடக் கோயில்களையும் எடுப்பித்துள்ளான். இங்குள்ள குகைக் கோயில்களில் ‘ஆதிவராகக்குகை’ ‘மகிடாசுர மர்த்தினி குகை’, ‘வராசுக்குகை’, ‘மும்மூர்த்திகுகை’ ஆகிய நான்கும் குறிப்பிடத்தக்கவை. இக்கோயில்களிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள சாளுவன் குப்பத்தில் இரண்டு குகைக் கோயில்களுள்ளன. அவற்றில் ஒரு குகையின் முகப்பைச் சுற்றிலும் யாளியின் முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் முகங்கள் காண்பதற்கு புலிமுகங்கள் போல் தோன்றுவதால் இக்குகை புலிக்குகை எனப்படுகிறது. இக்குகைக் கோயிலின் அமைப்பு வியக்கும் வண்ணம் உள்ளது. பல்லவ மன்னர்கள் மலைகளைக் குடைவித்து குடைவரைக் கோயில்கள் எடுத்ததோடன்றி, குன்றுகளைச் செதுக்கியும் கோயில்கள் அமைத்துள்ளனர் ஒரு குன்றைச் செதுக்கி எடுக்கப்படும் கோயில் ஒற்றைக் கற்கோயில் எனப்படும். இவ்வகையை சார்ந்த கோயில்கள் மாமல்லபுரத்திலுள்ளன மாமல்லபுரத்தில் பஞ்சபாண்டவரதங்கள் எனப்படும் ஐம்பெரும் தளிகளும் இவ்வகையைச் சார்ந்தவையே இவற்றில் சிவனுக்குரிய தர்மராசரம் மூன்று நிலைகளையும் எண்பட்டைச் சிகரத்தையும் கொண்டது அடுத்து நீண்ட சாலை வடிவிலுள்ள கோயில் பீரதம் எனப்படுகிறது. இக்கோயில் திருமாலுக்குரிய- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 217 |bSize = 480 |cWidth = 378 |cHeight = 154 |oTop = 395 |oLeft = 57 |Location = center |Description = }}<noinclude></noinclude> 421xu87erldzt3z5i8jxvu0b9hqpx3m அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf 253 647037 1947360 2026-06-17T14:39:37Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ புதிய பகுதி 1947360 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:39, 17 சூன் 2026 (UTC) 5hp1p4st6cv2ftqpzuxkzvfkt4qe0pz அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf 253 647038 1947363 2026-06-17T14:45:15Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ புதிய பகுதி 1947363 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) qdpv5vz4f2kzjbadw5z2q9unt10wrze அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf 253 647039 1947364 2026-06-17T14:45:37Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ புதிய பகுதி 1947364 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) qdpv5vz4f2kzjbadw5z2q9unt10wrze பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/218 250 647040 1947365 2026-06-17T14:45:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாய் இருக்கலாம். இரண்டு நிலைகளையும், எண் பட்டைச் சிகரத்தையும் கொண்ட அருச்சுன ரதம் சிவபெருமானுக்குரியது. இதற்கடுத்தாற்போல் குடிசை வடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|192|கோயில்‌}}</noinclude>தாய் இருக்கலாம். இரண்டு நிலைகளையும், எண் பட்டைச் சிகரத்தையும் கொண்ட அருச்சுன ரதம் சிவபெருமானுக்குரியது. இதற்கடுத்தாற்போல் குடிசை வடிவிலுள்ள கோயில் கொற்றவைக்காக எடுப்பிக்கப் பெற்றது. இந்நான்கு கோயிலும் ஒரே குன்றில் செதுக்கப்பட்டவை. இவற்றின் எதிரேயுள்ள கோயிலைச் சகாதேவரதம் என்பர். இதனமைப்பு உறங்கும் யானையின் பின்புற அமைப்பைப் போன்றுள்ளமையால் ‘தூங்கானை மாடமென்பர்’. கட்டடக் கோயில்களை எடுக்கும்பொழுது அடிப் பகுதியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக அடுக்கி மேலே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், ஒற்றைக் கற்கோயிலை எடுக்கும்பொழுது குன்றின் மேலிருந்து படிப்படியாகக் கீழே செதுக்கி வர வேண்டும். பல்லவர்காலக் கட்டடக் கோயில்களுள் மிகவும் பழமையானது கூரம் என்ற ஊரிலுள்ள கோயிலாகும். இது தூங்கானை மாட வடிவிலுள்ளது. இக்கோயிலை முதலாம் பரமேசுவரன் காலத்தில் கி.பி. (670–700) வித்யாலிநீதன் என்பவன் தோற்றுவித்தான். இதன் அடிப்பகுதி மட்டும் இப்பொழுது எஞ்சியுள்ளது. இராசசிம்மன் காலத்தில்தான் சிறந்த கட்டடக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவன் எடுப்பித்த மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், உயர்ந்த விமானத்தையும் பல நிலைகளையும் கொண்டு விலங்குகிறது. இக்கோயிலைச் சுற்றித் திருச்சுற்றும் ஒரு பெரு மண்டபமும் உள்ளன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் சிறப்பும் அழகும் வாய்ந்தது காஞ்சி கைலாசநாதர் கோயிலாகும். பல்லவர் காலத்தில் கட்டப் பெற்ற மிகப் பெரிய கோயில் இதுதான். இதனால் இது ‘பெரிய திருக்கற்றளி’ எனப்பட்டது. இக்கோயிலின் விமானம் உயர்ந்ததாகவும், திருச்சுற்று சிறுசிறு கோயில்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றன. பரிவாரக் கோயில்களையும் தெய்வங்களின் கோயில்களையும் முழுமையாகக் கொண்டு விளங்கும் பெருங்கோயில் இதுதான். இக்கோயிலின் நுழைவாயிலின் மேல்நிலை ‘சாலை’ வடிவிலுள்ளது. பெருங் கோபுரம் இங்கு இல்லை. திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பட்டூர் என்னும் ஊரில் காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்று ஒரு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. கைலாசநாதர் கோயில் எனப்படும் இக்கோயிலும் இராசசிம்மன் காலத்ததாகக் கருதப்படுகிறது. நந்திவர்ம பல்லவமன்னன் கி.பி. 8–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எடுப்பித்ததாகக் கருதப்படும் காஞ்சியிலுள்ள வைகுந்தப் பெருமாள் கோயில், ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று கருவறைகளைக் கொண்ட பெரிய விமானத்துடன் விளங்குகிறது. இவ்வாலயத்தின் திருச்சுற்றில் பல்லவர்களுடைய வரலாறு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 218 |bSize = 480 |cWidth = 203 |cHeight = 184 |oTop = 128 |oLeft = 255 |Location = center |Description = }} {{center|காஞ்சிபுரம் கோயில்}} திருவதிகை வீரட்டானேசுவரம் என்னும் கோயில் பல்லவ மன்னன் பரமேசுவர்மனால் எடுப்பிக்கப்பட்டது. இது நிருபதுங்கன் காவத்தில் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மேற்பகுதி முழுவதும் செங்கல்லாலானது. சுவரைச் சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இக்கோயிலின் அமைப்பில் ஒரு சிறப்பைக் காணலாம். இக்கோயில் அமைப்பைப் பின்பற்றித்தான் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டப்பட்டதென்று கூறுமளவிற்கு இதனமைப்புள்ளது. இக்கோயில் ஏறக்குறைய 80 அடியிலிருந்து 100 அடி உயரமிருக்கும். பல்லவர்காலக் கோயில்களுள் மிகவும் உயரமானது இக்கோயில்தான். உயர்ந்த கோபுரத்தைப் பல்லவர்காலக் கோயில்களில் காணமுடியாது. பல்லவர்காலக் கோயில்களில் விமானந்தான் உயர்ந்து காணப்படும். பல்லவர் காலக் கோயில்கள், கருங்கற்களாலும், செங்கற்களாலும் கட்டப் பெற்றவை. செங்கற்களால் கட்டப் பெற்ற கோயில்களை கி.பி. 8–ஆம் நூற்றாண்டிற்குமுன் காணமுடியவில்லை. கருங்கற் கோவில்களுள் இன்று நிலைத்திருப்பது கி.பி. 7–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கூரம் கோயிலாகும். பல்லவ ரின் சிற்றரசரான முத்தரையரும் பல்லவர் கலைப்<noinclude></noinclude> tdo8ujcs3avbkg2g7wwr3bhfkd3wc1d அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf 253 647041 1947366 2026-06-17T14:45:52Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ புதிய பகுதி 1947366 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) qdpv5vz4f2kzjbadw5z2q9unt10wrze 1947406 1947366 2026-06-17T17:49:45Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ தரவு ஏற்றம் 1947406 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) q001mjvmss9lq6jy9s2bu6hs0uldeck 1947407 1947406 2026-06-17T17:54:44Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ 106415 1947407 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106415 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) s2she7w5gci4bxx4r3yzw79nvjh19ne அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf 253 647042 1947367 2026-06-17T14:45:59Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ புதிய பகுதி 1947367 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * அனைத்துப் பங்களிப்புகள் * ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள் * மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள் * பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள். இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:45, 17 சூன் 2026 (UTC) qdpv5vz4f2kzjbadw5z2q9unt10wrze 1947389 1947367 2026-06-17T15:26:01Z Info-farmer 232 /* பங்களிப்பு விவரங்கள் */ தரவு ஏற்றம் 1947389 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106409 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகியவற்றைக் குறிக்கும். 6gi8d0hdh2gnqvzt8a3i64nvuc7pze0 1947391 1947389 2026-06-17T15:27:41Z Info-farmer 232 ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். 1947391 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பணியில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106409 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்புகள் என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். 8dj6xkhmd3gmx8gparua7w4ymejhlh0 1947402 1947391 2026-06-17T17:12:41Z Info-farmer 232 விரிவு 1947402 wikitext text/x-wiki == பங்களிப்பு விவரங்கள் == * நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை. * '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும். # இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106409 இதனைச் சொடுக்கவும்.] #* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும். m8rgm9v7px2rui5zlarxie5xontyfvl பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/391 250 647043 1947379 2026-06-17T15:03:34Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|பச்சை ஆமை 369}}</noinclude><b>நேர்‌ வட்டக்‌ கூம்பு</b>. முப்பரிமாணத்தின்‌ V–ஒரு நிலையான புள்ளி, VM ஒரு நிலையான நேர்கோடு. V வழியே செல்லும்‌ ஏதேனும்‌ ஒரு நேர் கோடு I, VM–உடன்‌ ஒரு மாறாத கோணம்‌ α–ஐ உண்டாக்கும் போது, I உருவாக்கும்‌ வளை தளப்‌ பரப்பு, நேர் வட்டக்‌ கூம்பு எனப் படும்‌. V–க்கு உச்சி என்றும்‌, α–க்கு அரை உச்சிக்‌ கோணம்‌ என்றும்‌, VM–க்கு அச்சு என்னும்‌ பெயர்‌. நேர் வட்டக்‌ கூம்பை அதன்‌ அச்சுக்குக்‌ செங்குத்தான ஏதேனும்‌ ஒரு தளம்‌ வெட்டுவதால்‌ ஏற்படும்‌ வெட்டு முகம்‌ (plane section) ஒரு வட்டமாகும்‌. எனவே, இக்கூம்பு, நேர் வட்டக் கூம்பு எனக்‌ குறிக்கப் படுகிறது. <b>உருளை</b>. ஒரு நிலையான நேர் கோடு I–க்கு இணையாக உள்ள மற்றொரு மாறும்‌ நேர் கோடு I' ஒரு கொடுக்கப் பட்ட வனை வரை rஐ வெட்டிக்‌ கொண்டோ, ஒரு கொடுக்கப் பட்ட வனை தளப்‌ பரப்பு Sஐத்‌ தொட்டுக்‌ கொண்டோ செல்வதால்‌ உருவாக்கப் படும்‌ வளை தளப்‌ பரப்பு, உருளை எனப்படும்‌. I என்பது உருளையின்‌ அச்சு, I' உருவாக்கி, r–துணை வளை வரையாகும்‌. {{right|—<b>எம்‌. அரவாண்டி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="214"/><section begin="215"/> {{fs|110%|<b>பங்கீட்டு விதி‌</b>}} கொடுக்கப்பட்ட b,c எனும்‌ எண்களின்‌ கூட்டுத்‌ தொகையை a என்னும்‌ எண்ணால்‌ பெருக்குவதால்‌ கிடைக்கும்‌ மதிப்பும்‌, a என்னும்‌ எண்‌ கொண்டு, b.c ஐத்‌ தனித் தனியாகப்‌ பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால்‌ கிடைக்கும்‌ மதிப்பும்‌ சமமாக இருப்பின்‌, அவ்விதியைப்‌ பங்கீட்டு விதி (distributive law) எனலாம்‌. அதன் படி a(b + c) = ab + ac எனக்‌ கிடைக்கிறது. இதே போல, a(b + c + d) = ab + ac + ad என அமைவதைப்‌ பார்க்கலாம்‌. a(b + c) = ab + ac என்பது இடப்‌ பங்கீட்டு விதி எனவும்‌, (b+c)a = ba + ca என்பது வலப்‌ பங்கீட்டு விதி எனவும்‌ குறிப்பிடப் படும்‌. பங்கீட்டு விதிகள்‌ கணிதவியலின்‌ அனைத்துத்‌ துறைகளிலும்‌ அடிப்படையாக விளங்‌குகின்றன. {{right|—<b>எம்‌. அரவாண்டி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="215"/><section begin="216"/> {{fs|110%|<b>பச்சை ஆமை</b>}} ஆமை ஊர்வனவற்றில்‌ முன்னோடியாகக்‌ காணப் படுகிறது. உலகில்‌ பொதுவாக 275 வகை ஆமைகள்‌ உள்ளன. சில வகை ஆமைகள்‌ நிலத்தில்‌ வாழும்‌ தன்மையுடையன. சில வகை ஆமைகள்‌ நீர்‌, நிலம்‌ இரண்டிலும்‌ வாழும்‌ தன்மையுடையன. ஆனாலும்‌, பெரும்பாலான ஆமைகள்‌ நீரில்‌ வாழ்பவையாகவே இருக்கின்றன. கடலில்‌ ஐந்து வகையான ஆமைகள்‌ வாழ்கின்றன. அவற்றில்‌ ஒன்றுதான்‌ பச்சை ஆமை (Chelone mydas) ஆகும்‌. இப்பச்சை ஆமையே, முதன்‌ முதலில்‌ தோன்றிய கடலாமை என்று விலங்கியல்‌ வல்லுநர்கள்‌ கருதுகின்றன. <b>உடலமைப்பு</b>. நல்ல வளர்ச்சியுற்ற பச்சை ஆமை தட்டையான உடலமைப்பைக்‌ கொண்டது. மேற்புறத்‌ தோற்றத்தில்,‌ இவ்வாமையின்‌ மேலோடு முட்டை வடிவத்தில்‌ காணப் படும்‌. வால்‌ பகுதியில்,‌ இது குவிந்த உடலமைப்பைக்‌ கொண்டுள்ளது. வழவழப்பான இதய வடிவ ஓட்டுடன்‌ சிறிய வட்ட வடிவ முன் தலையுடன்‌ கூடிய ஒழுங்கு படுத்தப் பட்ட உடலமைப்பைக்‌ கொண்டது. இவ்‌வோட்டின்‌ பக்கவாட்டில்‌ நான்கு இரட்டைத்‌ தட்டு அமைப்புகள்‌ (lateral sites) காணப் படுகின்றன. முதலில்‌ உண்டான தட்டின்‌ அடியில்‌ ஒன்றன்‌ கீழ்‌ ஒன்றாகப்‌ பல புதிய அடுக்குகள்‌ உண்டாகிக்‌ கொண்டே போவதால்‌, இவ்வாமையின்‌ மூக்குப்‌ பகுதியில்‌ ஒர்‌ இரட்டைச்‌ செதில்கள்‌ காணப் படுகின்றன. வயிற்றுப் பகுதியில்‌ உள்ள ஓடு மஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப் படும்‌. பொதுவாக, இவ்வாமை 250 கி.கி. எடையளவுக்கு வளரக் கூடியது. இவ்வாமை ஊர்ந்து செல்லும்‌ பாதையின்‌ அகலம்‌ ஏறத் தாழ 1 மீ. இருக்கும்‌. ஊர்ந்து செல்லும்‌ பாதை ஆழமாகவும்‌, அதன்‌ முன் கால்களால்‌ பறிக்கப் பட்ட குழி போன்ற அமைப்புடன்‌ காணப் படும்‌. இது பெரிய பரந்த மணற்‌ பரப்புகளில்‌ ஊர்ந்து செல்லும்‌ இயல்புடையது. <b>வாழ்விடம்‌</b>. இப்பச்சை ஆமை தனியாக வாழும்‌ மிகவும்‌ மந்தமான உயிரினமாகும்‌. இதற்குக்‌ காரணம்,‌ இதன்‌ மூச்சு உறுப்புகளின்‌ அமைப்பேயாகும்‌. உடலைக்‌ கெட்டியான ஓடு மூடியிருப்பதால்‌, இதனால்‌ விரியவும்,‌ சுருங்கவும்‌ முடிவதில்லை. <b>பரவல்‌</b>. வெப்ப, மித வெப்ப (25–35°C) நீர் நிலைகளில்‌ பச்சை ஆமை பரந்து காணப் படுகிறது. ஆழமற்ற (25மீ.) பகுதிகளிலும்‌ மிகவும்‌ அதிகமாகக்‌ காணப் படுகிறது. குளிர்ச்சியான தீவுகளில்‌ மிகவும்‌ குறைந்த அளவில்‌ காணப் படுகின்றது. பசிபிக்‌ பெருங்கடல்‌, இந்துப்‌ பெருங்‌ கடல்‌, அந்தமான்‌ நிக்கோபார்‌, லக்காவீல்‌, மினிகாய்‌ போன்ற தீவுகள்‌, கேரளத்தில்‌, கொல்லத்திற்குத்‌ தென்‌ புறத்தில்‌ உள்ள கடற்கரை, தமிழ்நாட்டில்‌ தென் கடலோரப்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா ஆகிய இடங்களில்‌ இவ்வாமை மிகுந்துள்ளது.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–24}}</noinclude> ifj3bsemkjachyevcrvf36g7ekr5amn 1947528 1947379 2026-06-18T05:54:57Z Booradleyp1 1964 1947528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|பச்சை ஆமை 369}}</noinclude><b>நேர்‌ வட்டக்‌ கூம்பு</b>. முப்பரிமாணத்தின்‌ V–ஒரு நிலையான புள்ளி, VM ஒரு நிலையான நேர்கோடு. V வழியே செல்லும்‌ ஏதேனும்‌ ஒரு நேர் கோடு I, VM–உடன்‌ ஒரு மாறாத கோணம்‌ α–ஐ உண்டாக்கும் போது, I உருவாக்கும்‌ வளை தளப்‌ பரப்பு, நேர் வட்டக்‌ கூம்பு எனப் படும்‌. V–க்கு உச்சி என்றும்‌, α–க்கு அரை உச்சிக்‌ கோணம்‌ என்றும்‌, VM–க்கு அச்சு என்னும்‌ பெயர்‌. நேர் வட்டக்‌ கூம்பை அதன்‌ அச்சுக்குக்‌ செங்குத்தான ஏதேனும்‌ ஒரு தளம்‌ வெட்டுவதால்‌ ஏற்படும்‌ வெட்டு முகம்‌ (plane section) ஒரு வட்டமாகும்‌. எனவே, இக்கூம்பு, நேர் வட்டக் கூம்பு எனக்‌ குறிக்கப் படுகிறது. <b>உருளை</b>. ஒரு நிலையான நேர் கோடு I–க்கு இணையாக உள்ள மற்றொரு மாறும்‌ நேர் கோடு I' ஒரு கொடுக்கப் பட்ட வனை வரை rஐ வெட்டிக்‌ கொண்டோ, ஒரு கொடுக்கப் பட்ட வளை தளப்‌ பரப்பு Sஐத்‌ தொட்டுக்‌ கொண்டோ செல்வதால்‌ உருவாக்கப் படும்‌ வளை தளப்‌ பரப்பு, உருளை எனப்படும்‌. I என்பது உருளையின்‌ அச்சு, I' உருவாக்கி, r–துணை வளை வரையாகும்‌. {{right|—<b>எம்‌. அரவாண்டி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="214"/><section begin="215"/> {{fs|110%|<b>பங்கீட்டு விதி‌</b>}} கொடுக்கப்பட்ட b,c எனும்‌ எண்களின்‌ கூட்டுத்‌ தொகையை a என்னும்‌ எண்ணால்‌ பெருக்குவதால்‌ கிடைக்கும்‌ மதிப்பும்‌, a என்னும்‌ எண்‌ கொண்டு, b.c ஐத்‌ தனித் தனியாகப்‌ பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால்‌ கிடைக்கும்‌ மதிப்பும்‌ சமமாக இருப்பின்‌, அவ்விதியைப்‌ பங்கீட்டு விதி (distributive law) எனலாம்‌. அதன் படி a(b + c) = ab + ac எனக்‌ கிடைக்கிறது. இதே போல, a(b + c + d) = ab + ac + ad என அமைவதைப்‌ பார்க்கலாம்‌. a(b + c) = ab + ac என்பது இடப்‌ பங்கீட்டு விதி எனவும்‌, (b+c)a = ba + ca என்பது வலப்‌ பங்கீட்டு விதி எனவும்‌ குறிப்பிடப் படும்‌. பங்கீட்டு விதிகள்‌ கணிதவியலின்‌ அனைத்துத்‌ துறைகளிலும்‌ அடிப்படையாக விளங்‌குகின்றன. {{right|—<b>எம்‌. அரவாண்டி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="215"/><section begin="216"/> {{fs|110%|<b>பச்சை ஆமை</b>}} ஆமை ஊர்வனவற்றில்‌ முன்னோடியாகக்‌ காணப் படுகிறது. உலகில்‌ பொதுவாக 275 வகை ஆமைகள்‌ உள்ளன. சில வகை ஆமைகள்‌ நிலத்தில்‌ வாழும்‌ தன்மையுடையன. சில வகை ஆமைகள்‌ நீர்‌, நிலம்‌ இரண்டிலும்‌ வாழும்‌ தன்மையுடையன. ஆனாலும்‌, பெரும்பாலான ஆமைகள்‌ நீரில்‌ வாழ்பவையாகவே இருக்கின்றன. கடலில்‌ ஐந்து வகையான ஆமைகள்‌ வாழ்கின்றன. அவற்றில்‌ ஒன்றுதான்‌ பச்சை ஆமை (Chelone mydas) ஆகும்‌. இப்பச்சை ஆமையே, முதன்‌ முதலில்‌ தோன்றிய கடலாமை என்று விலங்கியல்‌ வல்லுநர்கள்‌ கருதுகின்றன. <b>உடலமைப்பு</b>. நல்ல வளர்ச்சியுற்ற பச்சை ஆமை தட்டையான உடலமைப்பைக்‌ கொண்டது. மேற்புறத்‌ தோற்றத்தில்,‌ இவ்வாமையின்‌ மேலோடு முட்டை வடிவத்தில்‌ காணப் படும்‌. வால்‌ பகுதியில்,‌ இது குவிந்த உடலமைப்பைக்‌ கொண்டுள்ளது. வழவழப்பான இதய வடிவ ஓட்டுடன்‌ சிறிய வட்ட வடிவ முன் தலையுடன்‌ கூடிய ஒழுங்கு படுத்தப் பட்ட உடலமைப்பைக்‌ கொண்டது. இவ்‌வோட்டின்‌ பக்கவாட்டில்‌ நான்கு இரட்டைத்‌ தட்டு அமைப்புகள்‌ (lateral sites) காணப் படுகின்றன. முதலில்‌ உண்டான தட்டின்‌ அடியில்‌ ஒன்றன்‌ கீழ்‌ ஒன்றாகப்‌ பல புதிய அடுக்குகள்‌ உண்டாகிக்‌ கொண்டே போவதால்‌, இவ்வாமையின்‌ மூக்குப்‌ பகுதியில்‌ ஒர்‌ இரட்டைச்‌ செதில்கள்‌ காணப் படுகின்றன. வயிற்றுப் பகுதியில்‌ உள்ள ஓடு மஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப் படும்‌. பொதுவாக, இவ்வாமை 250 கி.கி. எடையளவுக்கு வளரக் கூடியது. இவ்வாமை ஊர்ந்து செல்லும்‌ பாதையின்‌ அகலம்‌ ஏறத் தாழ 1 மீ. இருக்கும்‌. ஊர்ந்து செல்லும்‌ பாதை ஆழமாகவும்‌, அதன்‌ முன் கால்களால்‌ பறிக்கப் பட்ட குழி போன்ற அமைப்புடன்‌ காணப் படும்‌. இது பெரிய பரந்த மணற்‌ பரப்புகளில்‌ ஊர்ந்து செல்லும்‌ இயல்புடையது. <b>வாழ்விடம்‌</b>. இப்பச்சை ஆமை தனியாக வாழும்‌ மிகவும்‌ மந்தமான உயிரினமாகும்‌. இதற்குக்‌ காரணம்,‌ இதன்‌ மூச்சு உறுப்புகளின்‌ அமைப்பேயாகும்‌. உடலைக்‌ கெட்டியான ஓடு மூடியிருப்பதால்‌, இதனால்‌ விரியவும்,‌ சுருங்கவும்‌ முடிவதில்லை. <b>பரவல்‌</b>. வெப்ப, மித வெப்ப (25–35°C) நீர் நிலைகளில்‌ பச்சை ஆமை பரந்து காணப் படுகிறது. ஆழமற்ற (25மீ.) பகுதிகளிலும்‌ மிகவும்‌ அதிகமாகக்‌ காணப் படுகிறது. குளிர்ச்சியான தீவுகளில்‌ மிகவும்‌ குறைந்த அளவில்‌ காணப் படுகின்றது. பசிபிக்‌ பெருங்கடல்‌, இந்துப்‌ பெருங்‌ கடல்‌, அந்தமான்‌ நிக்கோபார்‌, லக்காவீல்‌, மினிகாய்‌ போன்ற தீவுகள்‌, கேரளத்தில்‌, கொல்லத்திற்குத்‌ தென்‌ புறத்தில்‌ உள்ள கடற்கரை, தமிழ்நாட்டில்‌ தென் கடலோரப்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா ஆகிய இடங்களில்‌ இவ்வாமை மிகுந்துள்ளது.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–24}}</noinclude> 9sxxlvqsf0zwaofakh1wwajkhim5ppt பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/392 250 647044 1947386 2026-06-17T15:19:12Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|370 பச்சை ஆமை}}</noinclude><b>இனப் பெருக்கம்</b>‌. முட்டையிடும்‌ காலத்திற்கு முன்பே, இவ்வாமை புணர்கின்றன. புணரும்‌ போது, சேமித்து வைக்கப் படும்‌ விந்து எதிர் காலத்தில்‌ கருத்தரிக்கப்‌ பயன் படுகிறது. புணர்ச்சி முடிந்தவுடன்‌, பெண்‌ ஆமையைக்‌ கரைக்குக்‌ கொண்டு வந்து, பிளந்து பார்த்தால்,‌ பெண்‌ உறுப்புகளில்‌ முட்டைகள்‌ வளரும்‌ இடத்தில்,‌ முட்டைகள்‌ தென்படுவதில்லை. மாறாக, முட்டைகளை வளர்ப்பதற்குத்‌ தேவையான பாலிக்கிள்‌ (follicle) காணப் படும்‌. ஒவ்வோர்‌ ஆண்டும்‌ புணரும்‌ போது, படிப் படியாகக்‌ கருத்தரிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதன்‌ இனப் பெருக்க இடைவெளி பொதுவாக, இரண்டு ஆண்டுகளாகும்‌. சில சமயங்களில்‌ ஒன்று, மூன்று, நான்கு ஆண்டுச்‌ சுழற்சிகளும்‌ காணப் படும்‌. குறிப்பாக ஆமை, எச்செயலில்‌ ஈடுபட்டிருந்தாலும்‌, புணர்ச்சிக்கு நேரம்‌ வந்து விட்டால்‌, தன்‌ செயலை நிறுத்தி விட்டு, ஆண்‌, பெண்‌ உறவைக்‌ கொண்டாடும்‌ இயல்புடையது. எதிரி உயிரியைக்‌ கவர்வதற்காக மணச்‌ சுரப்பிகள்‌ (scent glands) இதற்கு உள்ளன. இனப் பெருக்கத்தில்‌ இவற்றின்‌ சேர்க்கையும்‌, முட்டையிடலும்‌ அடங்கும்‌. <b>‌முட்டையிடுதல்</b>‌‌. பச்சை ஆமை, தனது இனப்‌ பெருக்கக்‌ காலங்களில்,‌ இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டையிடும்‌. இளவேனிற்‌ காலத்திலும்‌, கோடைக்‌ காலத்திலும்,‌ இப்பச்சை ஆமை முட்டையிடத்‌ தொடங்‌குகிறது. பொதுவாக, ஆமை எப்போதும்‌ மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும்‌. கடலிலிருந்து இவ்வாமை முட்டையிடுவதற்காகக்‌ கடற்கரையை நோக்கி இரவில்‌ வரும்‌. கரைக்கு வந்த பின்னர்,‌ அரை மணி நேரத்தைச்‌ செலவிட்டு, முட்டையிடுவதற்கு உரிய இடத்தைத்‌ தேர்ந்தெடுக்கும்‌. இது உலர்ந்த, அதே சமயம்‌ குறைந்த ஈரமுள்ள மணலையே முட்டையிடத்‌ தேர்ந்தெடுக்கிறது. மேலும்‌, அம்மணலில்‌ காற்றுப்‌ போக்குவரத்து இருக்கிறதா எனவும்‌ பரிசோதிக்கும்‌.பிறகு, முட்டையினைப்‌ பாதிக்கும்‌ கல்‌, கிளிஞ்சல்‌ இல்லாத இடத்தைத்‌ தேர்ந்தெடுக்கும்‌. தகுந்த இடத்தைத்‌ தேர்ந்தெடுத்தவுடன்,‌ ஆமை தன்‌ முன் கால்களின்‌ மூலம்‌ இடத்தைத்‌ தூய்மை செய்து, குப்பைக்‌ கூளங்களை‌ அகற்றுகிறது. பின்னர்‌, தனது முன்‌ கால்களையும்‌, பின் கால்களையும்‌ மாற்றி மாற்றிப்‌ பயன் படுத்திக்‌ குழியைத்‌ தோண்டுகிறது. பச்சை ஆமை போதுமான ஆழத்திற்குக்‌ குழியைத்‌ தோண்டியதும்,‌ குழியின்‌ இரு பக்கங்களிலும்‌ பின் கால்களை உள்ளும்‌ புறமுமாக வைத்து, வாலைக்‌ குழிக்குள்‌ செலுத்தித்‌ தலையை உள்ளிழுத்துக்‌ குழிக்குள்‌ தரையோடு சமமாக உட்கார்ந்து, குழியை மூடி முட்டையிடத்‌ தொடங்கும்‌. இக்குழி உடற்குழி என்று குறிப்பிடப் படுகிறது. குறிப்பாகக்‌ குழி தோண்டும்‌ போது, இவ்வாமையின்‌ கண்களிலிருந்து கண்ணீர்‌ வழிந்து கொண்டிருக்கும்‌. இக்கண்ணீர்‌, கண்களில்‌ காணப் படும்‌ மணற்‌ துகள்களை அகற்றவும்,‌ உடலைச்‌ சம நிலைப் படுத்தவும்‌ பெரிதும்‌ பயன் படுகிறது. இவ்வாமை 2–5 முட்டைகள்‌ இடுகிறது. இறுதி முட்டையை இட்டவுடன்,‌ குழிக்கு வெளியே குவிந்துள்ள மணலைப்‌ பின் கால்களின்‌ உதவியால்‌ தள்ளிக்‌ குழியை மூடுகிறது. பின்னர்‌, பின்‌ கால்களையும்‌, வாலையும்‌ கொண்டு அழுத்தி மணலை நன்றாக மூடுகிறது. பின்னர்,‌ குழியை இடந்‌ தெரியாமல்‌, காலால்‌ மணலைக்‌ கிளறி விட்டுச்‌ செல்கிறது. ஆமை முட்டையிடும் போது, கோழை போன்றுள்ள நீர்மம்‌ முட்டைகளோடு வெளியேறுகிறது. முட்டையின்‌ வடிவம்‌ உருண்டையாக இருப்பதோடு, தோல்‌ போன்றும்‌ காணப் படுவதால்‌, குழியில்‌ விழும் போது உடைந்து போகாமல்‌, பாதுகாப்பாக இருக்கிறது. முட்டை 48 முதல்‌ 70 நாள்கள்‌ வரை கரைகளில்‌ காணப் படுகிறது. சூரிய ஒளியின்‌ உதவியால்,‌ ஆமைக்‌ குஞ்சுகள்‌ முட்டையிலிருந்து வெளி வரும்‌. குஞ்சுகளின்‌ நீளம்‌ 2.5–10 செ.மீ இருக்கும்‌. பொதுவாக, இவ்வாறு முட்டையிருந்து வெளிப் படுவது இரவு நேரத்தில்தான்‌ நடக்கிறது. மணற்பரப்பு சூடாக இருக்கும்‌ போது, குஞ்சுகள்‌ வெளி வருவது கிடையாது. முட்டையிலிருந்து குஞ்சுகள்‌ வெளிப் பட்டவுடன்,‌ கடலை நோக்கி நீந்தத்‌ தொடங்கி விடுகின்றன. குஞ்சுகள்‌ பிறக்கும் போது, கடினமான மேற்புற உடலமைப்பையும்‌, வெளுத்த அடிப் புறத்தையும்‌ பெற்றிருப்பதாலும்‌, உடலின்‌ நிறத்தாலும்‌ எதிரிகளான பெரிய மீன்களிலிருந்தும்‌, பறவைகளிடத்தின்றும்‌ இந்த ஆமையால்‌ தப்பித்துக்‌ கொள்ள முடிகிறது. குஞ்சுகளின்‌ வளர்ச்சி மழைக்‌ காலத்தை விடக்‌ கோடைக்‌ காலத்தில்‌ மிக விரைவாக நடைபெறுகிறது. மழைக் காலத்தில்,‌ குஞ்சுகள்‌ முட்டையிலிருந்து வெளி வர சராசரியாக 91 நாளாகும்‌. ஆனால்‌, கோடைக் காலத்தில்‌, குஞ்சுகள்‌ முட்டையிலிருந்து வெளி வர 56 நாள்களே போதும்‌. <b>‌‌எதிரிகள்‌</b>‌‌. பச்சை ஆமையின்‌ முட்டைகள்‌ பறவைகளாலும், ‌பாலூட்டிகளாலும்‌ அழிக்கப் படுகின்றன. கீரி, முள்ளம்‌ பன்றி, நாய்‌, நரி போன்ற விலங்குகள்,‌ ஆமை முட்டையிடும்‌ இடங்களைக்‌ கண்டு பிடித்து, அம்‌ முட்டைகளை உணவாக உட்கொண்டு விடுவதன்‌ மூலம்,‌ ஆமையின்‌ முதன்மை எதிரிகளாகி விடுகின்றன. மேலும்‌ இவ்விலங்குகள்‌<noinclude></noinclude> 4q67xcuge9kpot9ens40xdsxfim1ka0 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/393 250 647045 1947393 2026-06-17T15:40:11Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசசைக் கிளி}}</noinclude>தோண்டிய குழியில்‌ எஞ்சியிருக்கும்‌ முட்டைகளைப்‌ பருந்துகள்‌ உணவாக உட்தொண்டு விடுகின்றன. முட்டையிலிருந்து வெளி வரும்‌ குஞ்சுகளுக்கும்,‌ எதிரிகள்‌ உண்டு. இவ்வெதிரிகளை நிலத்தில்‌ வாழ்வன, நீரில்‌ வாழ்வன எனப்‌ பாகுபடுத்தலாம்‌. நிலத்தில்‌ வாழும்‌ காக்கை, கடற்காக்கை, பருந்து போன்றவை மிக அதிகமாக இக்குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, இவ்வினத்தை அழிக்கின்றன. நீரில்‌ வாழும்‌ நண்டுகள்,‌ இக்குஞ்சை உணவாக உட்கொள்ளும்‌. குஞ்சுகள்‌ இரவில்‌ முட்டை யிலிருந்து வெளிப் படும்‌ போதே, இவை உண்டு விடுகின்றன. இவ்வெதிரிகளிடமிருந்து தப்பிக்கும்‌ குஞ்சுகள்‌ கடல்‌ நீருக்குள்‌ சென்ற பின்,‌ அங்கிருக்கிற சுறா மீன்களால்‌ உட்கொள்ளப்‌ பட்டு விடுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த முதிய ஆமைகளைத்‌ திமிங்கிலங்கள்‌ உட்கொள்கின்றன. பெரிய ஆமைகள்‌ முட்டையிடுவதற்காக கடற்கரை நோக்கி வரும் போது, மனிதரால்‌ அழிக்கப் பட்டு விடுகின்றன. <b>பிடிக்கும்‌ முறை</b>. பச்சை ஆமையை ஈட்டி, தூண்டில்‌, மிதவை வலை, இறால்‌ முதலியவற்றின்‌ மூலமாகப்‌ பிடிக்கலாம்‌. மேலும்‌, ஆமையைக்‌ களைப்படையச்‌ செய்யும்‌ வரையில்‌ விரட்டிச்‌ சென்று, பிடிக்கும்‌ வழக்கமும்‌ உண்டு. நீரில்‌ நன்கு மூழ்கும்‌ திறன்‌ படைத்தவர்களால்‌ ஈட்டி எய்து பிடிக்கும்‌ முறையும்‌ சில இடங்களில்‌ கையாளப் படுகின்றது. <b>பயன்‌</b>. கடற்புல்லை உண்பதால்‌, இவ்வாமையின்‌ இறைச்சியின்‌ சுவை கூடுதலாகி விடுகிறது. இதனால்‌, பெரும்பாலும்,‌ இறைச்சிக்காக இது பிடிக்கப் பட்டு, உணவாகப்‌ பயன்படுகிறது.இதன்‌ இறைச்சியில்‌ புரதச் சத்து மிகுந்துள்ளமையால்,‌ இது முழு உணவாகும்‌. இவ்வாமையின்‌ தோல்‌ மிகுந்த மதிப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ஆமையின்‌ தோல்‌ பன்னாட்டுச்‌ சந்தையில்‌ முதன்மைப்‌ பொருளாகத்‌ திகழ்கிறது. இவ்வாமையின்‌ மேலோடு, கீழோடு ஆகியவற்றின்‌ ஓரங்களிலிருந்து எடுக்கப் படும்‌ குருத்தெலும்பு விலையுயர்ந்த சாறு தயாரிப்பதில்‌ பெரிதும்‌ பயன் படுகிறது. மேலும்‌, இவ்வாமையின்‌ கழுத்து, வயிற்றுப்‌ பக்கத்திலிருக்கும்‌ குறுத்தெலும்புகளும்‌, வால்‌ பக்கத்திலிருக்கும்‌ எலும்‌புகளும்‌, ஆமைச்‌ சாறு (Soup )செய்யப் பயன்‌ படுகின்றன. ஆமை ஓடு ஐரோப்பாவில்‌ அலங்காரப்‌ பொருளாக விளங்குகிறது. ஜப்பான்‌ நாட்டில்‌ இது கலாச்சார மதிப்பு மிக்கதாகக்‌ கருதப் படுகிறது. மேலும்,‌ திருணச்‌ சடங்குகளில்‌ இன்றியமையாமை பெறுகிறது. ஆமையின்‌ தோல்‌ மிகுந்த மதிப்புள்ளது. தோலிற்காக, இவ்வாமைகளைப்‌ பிடித்து, இறைச்சியினை உண்டு, தோலை மட்டும்‌ ஏற்றுமதி செய்கின்றனர்‌. ஜப்பான்‌, சிங்கப்பூர்‌, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ்‌, பாகிஸ்தான்‌ போன்ற நாடுகள்‌ பெருமளவில்‌ பச்சை ஆமையின்‌ தோலை இறக்குமதி செய்கின்றன. ஆமை எண்ணெய்,‌ பல விதமரன அழகு பொருள்களிலும்‌, இதய நோய்களுக்கான மருந்துகளிலும்‌ பயன் படுகிறது. பச்சை ஆமையின்‌ உடற்‌ பகுதிகள்‌ வணிகச்‌ சிறப்பு வாய்ந்தவை. மேல்‌ ஓடு பலவித அணி கலன்களைச்‌ செய்வதற்குப்‌ பயன் படுகிறது. இப்பச்சை ஆமையின்‌ குருதி, மூல நோயையும்‌, ஆஸ்துமாவையும்‌ குணப் படுத்தும்‌. மிகப்‌ பயனுள்ள ஆமை இனம்‌, நாளுக்கு நாள்‌ மிகவும்‌ அருகி <!---- extinct ---->‌ வருகிறது. இதைப் பாதுகாக்கும்‌ நடவடிக்கைகளை அனைத்துலக விலங்குப்‌ பாதுகாப்புக்‌ கழகத்தார்‌ மேற்‌கொண்டுள்ளனர்‌. {{right|—<b>செ. மரியசூசைநாதன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="216"/><section begin="217"/>{{fs|110%|<b>பச்சைக் கிளி</b>}} இப்பறவை சிட்டாசிடே வகுப்பிலும்‌, சிட்டாசிஃபார்ம்‌ வரிசையிலும்‌ அடங்கும்‌. இதில்‌ ஏறக் குறைய 300 வகைகளும்,‌ 75–80 பேரினங்களும்‌, ஆறு துணை வகுப்புகளும்‌ காணப் படுகின்றன. இந்த ஆறு துணை வகுப்பில்‌ ஒன்றாகிய சிட்டாசினே என்பதே உண்மையான பச்சைக்‌ கிளியாகும்‌. பச்சைக் கிளியில்‌ 60 பேரினங்களும்,‌ 220 வகைகளும்‌ காணப் படுகின்றன. உலகம்‌ முழுவதும்‌ வெப்பமான பகுதிகளில்‌ இது மிகுந்துள்ளன. இக்கிளியின்‌ அலகு குட்டையாகவும்‌, சிறியதாகவும்‌, தடிமனாகவும்‌,மேல்‌ பகுதியில்‌ கொக்கி போன்றும்‌ காணப் படும்‌. நாக்குப்‌ பகுதி கூர்மையற்று மழுங்கிக்‌ காணப் படும்‌. இந்த அலகு கொட்டை, விதை, காய்‌, கனி, முதலியவற்றை உண்பதற்கு ஏற்றவாறு காணப் படுகிறது. பச்சைக் கிளி 33 செ.மீ. நீளம்‌ வரையில்‌ வளரக் கூடியது. சுறுசுறுப்பான இக்கிளி 80 ஆண்டு கூட வாழும்‌ தன்மையுடையது. பச்சைக் கிளியின்‌ இறகு பெரும்பாலும்‌, பச்சை நிறமாகக்‌ காணப் படும்‌. மேலும்‌ ஆஃபிரிக்காவில்‌ காணப் படும்‌ சாம்பல்‌ நிற பச்சைக்‌ கிளி பேசும்‌<noinclude><br>{{rh|அ. க. 14–24அ}}</noinclude> lc3c6be1i98mc1dsqppygi6b920q0wk 1947485 1947393 2026-06-18T04:33:47Z TI Buhari 4634 1947485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசசைக் கிளி}}</noinclude>தோண்டிய குழியில்‌ எஞ்சியிருக்கும்‌ முட்டைகளைப்‌ பருந்துகள்‌ உணவாக உட்தொண்டு விடுகின்றன. முட்டையிலிருந்து வெளி வரும்‌ குஞ்சுகளுக்கும்,‌ எதிரிகள்‌ உண்டு. இவ்வெதிரிகளை நிலத்தில்‌ வாழ்வன, நீரில்‌ வாழ்வன எனப்‌ பாகுபடுத்தலாம்‌. நிலத்தில்‌ வாழும்‌ காக்கை, கடற்காக்கை, பருந்து போன்றவை மிக அதிகமாக இக்குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, இவ்வினத்தை அழிக்கின்றன. நீரில்‌ வாழும்‌ நண்டுகள்,‌ இக்குஞ்சை உணவாக உட்கொள்ளும்‌. குஞ்சுகள்‌ இரவில்‌ முட்டை யிலிருந்து வெளிப் படும்‌ போதே, இவை உண்டு விடுகின்றன. இவ்வெதிரிகளிடமிருந்து தப்பிக்கும்‌ குஞ்சுகள்‌ கடல்‌ நீருக்குள்‌ சென்ற பின்,‌ அங்கிருக்கிற சுறா மீன்களால்‌ உட்கொள்ளப்‌ பட்டு விடுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த முதிய ஆமைகளைத்‌ திமிங்கிலங்கள்‌ உட்கொள்கின்றன. பெரிய ஆமைகள்‌ முட்டையிடுவதற்காக கடற்கரை நோக்கி வரும் போது, மனிதரால்‌ அழிக்கப் பட்டு விடுகின்றன. <b>பிடிக்கும்‌ முறை</b>. பச்சை ஆமையை ஈட்டி, தூண்டில்‌, மிதவை வலை, இறால்‌ முதலியவற்றின்‌ மூலமாகப்‌ பிடிக்கலாம்‌. மேலும்‌, ஆமையைக்‌ களைப்படையச்‌ செய்யும்‌ வரையில்‌ விரட்டிச்‌ சென்று, பிடிக்கும்‌ வழக்கமும்‌ உண்டு. நீரில்‌ நன்கு மூழ்கும்‌ திறன்‌ படைத்தவர்களால்‌ ஈட்டி எய்து பிடிக்கும்‌ முறையும்‌ சில இடங்களில்‌ கையாளப் படுகின்றது. <b>பயன்‌</b>. கடற்புல்லை உண்பதால்‌, இவ்வாமையின்‌ இறைச்சியின்‌ சுவை கூடுதலாகி விடுகிறது. இதனால்‌, பெரும்பாலும்,‌ இறைச்சிக்காக இது பிடிக்கப் பட்டு, உணவாகப்‌ பயன்படுகிறது.இதன்‌ இறைச்சியில்‌ புரதச் சத்து மிகுந்துள்ளமையால்,‌ இது முழு உணவாகும்‌. இவ்வாமையின்‌ தோல்‌ மிகுந்த மதிப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ஆமையின்‌ தோல்‌ பன்னாட்டுச்‌ சந்தையில்‌ முதன்மைப்‌ பொருளாகத்‌ திகழ்கிறது. இவ்வாமையின்‌ மேலோடு, கீழோடு ஆகியவற்றின்‌ ஓரங்களிலிருந்து எடுக்கப் படும்‌ குருத்தெலும்பு விலையுயர்ந்த சாறு தயாரிப்பதில்‌ பெரிதும்‌ பயன் படுகிறது. மேலும்‌, இவ்வாமையின்‌ கழுத்து, வயிற்றுப்‌ பக்கத்திலிருக்கும்‌ குறுத்தெலும்புகளும்‌, வால்‌ பக்கத்திலிருக்கும்‌ எலும்‌புகளும்‌, ஆமைச்‌ சாறு (Soup )செய்யப் பயன்‌ படுகின்றன. ஆமை ஓடு ஐரோப்பாவில்‌ அலங்காரப்‌ பொருளாக விளங்குகிறது. ஜப்பான்‌ நாட்டில்‌ இது கலாச்சார மதிப்பு மிக்கதாகக்‌ கருதப் படுகிறது. மேலும்,‌ திருணச்‌ சடங்குகளில்‌ இன்றியமையாமை பெறுகிறது. ஆமையின்‌ தோல்‌ மிகுந்த மதிப்புள்ளது. தோலிற்காக, இவ்வாமைகளைப்‌ பிடித்து, இறைச்சியினை உண்டு, தோலை மட்டும்‌ ஏற்றுமதி செய்கின்றனர்‌. ஜப்பான்‌, சிங்கப்பூர்‌, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ்‌, பாகிஸ்தான்‌ போன்ற நாடுகள்‌ பெருமளவில்‌ பச்சை ஆமையின்‌ தோலை இறக்குமதி செய்கின்றன. ஆமை எண்ணெய்,‌ பல விதமான அழகுப் பொருள்களிலும்‌, இதய நோய்களுக்கான மருந்துகளிலும்‌ பயன் படுகிறது. பச்சை ஆமையின்‌ உடற்‌ பகுதிகள்‌ வணிகச்‌ சிறப்பு வாய்ந்தவை. மேல்‌ ஓடு பலவித அணி கலன்களைச்‌ செய்வதற்குப்‌ பயன் படுகிறது. இப்பச்சை ஆமையின்‌ குருதி, மூல நோயையும்‌, ஆஸ்துமாவையும்‌ குணப் படுத்தும்‌. மிகப்‌ பயனுள்ள ஆமை இனம்‌, நாளுக்கு நாள்‌ மிகவும்‌ அருகி <!---- extinct ---->‌ வருகிறது. இதைப் பாதுகாக்கும்‌ நடவடிக்கைகளை அனைத்துலக விலங்குப்‌ பாதுகாப்புக்‌ கழகத்தார்‌ மேற்‌கொண்டுள்ளனர்‌. {{right|—<b>செ. மரியசூசைநாதன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="216"/><section begin="217"/>{{fs|110%|<b>பச்சைக் கிளி</b>}} இப்பறவை சிட்டாசிடே வகுப்பிலும்‌, சிட்டாசிஃபார்ம்‌ வரிசையிலும்‌ அடங்கும்‌. இதில்‌ ஏறக் குறைய 300 வகைகளும்,‌ 75–80 பேரினங்களும்‌, ஆறு துணை வகுப்புகளும்‌ காணப் படுகின்றன. இந்த ஆறு துணை வகுப்பில்‌ ஒன்றாகிய சிட்டாசினே என்பதே உண்மையான பச்சைக்‌ கிளியாகும்‌. பச்சைக் கிளியில்‌ 60 பேரினங்களும்,‌ 220 வகைகளும்‌ காணப் படுகின்றன. உலகம்‌ முழுவதும்‌ வெப்பமான பகுதிகளில்‌ இது மிகுந்துள்ளன. இக்கிளியின்‌ அலகு குட்டையாகவும்‌, சிறியதாகவும்‌, தடிமனாகவும்‌,மேல்‌ பகுதியில்‌ கொக்கி போன்றும்‌ காணப் படும்‌. நாக்குப்‌ பகுதி கூர்மையற்று மழுங்கிக்‌ காணப் படும்‌. இந்த அலகு கொட்டை, விதை, காய்‌, கனி, முதலியவற்றை உண்பதற்கு ஏற்றவாறு காணப் படுகிறது. பச்சைக் கிளி 33 செ.மீ. நீளம்‌ வரையில்‌ வளரக் கூடியது. சுறுசுறுப்பான இக்கிளி 80 ஆண்டு கூட வாழும்‌ தன்மையுடையது. பச்சைக் கிளியின்‌ இறகு பெரும்பாலும்‌, பச்சை நிறமாகக்‌ காணப் படும்‌. மேலும்‌ ஆஃபிரிக்காவில்‌ காணப் படும்‌ சாம்பல்‌ நிற பச்சைக்‌ கிளி பேசும்‌<noinclude><br>{{rh|அ. க. 14–24அ}}</noinclude> c12qap0at6d2ovdbx4a2pc6qv2mshmd பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/394 250 647046 1947394 2026-06-17T15:41:43Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|372 பச்சைக் கிளி}}</noinclude>{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 394 |bSize = 450 |cWidth = 420 |cHeight = 525 |oTop = 50 |oLeft = 15 |Location = center}}{{nop}}<noinclude></noinclude> 7hpcp81cfiaurbfnfhp4yq9icflekb6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/395 250 647047 1947398 2026-06-17T16:46:54Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சை குத்துதல்‌ (கால்நடை) 373}}</noinclude>தன்மை உடையது. மேலும்‌ இதன்‌ ஆண்‌ கிளி மனிதர்‌ குரலை ஒத்த ஒலியினை உண்டாக்கும்‌ இயல்பும்‌ கொண்டது. வால்‌ பகுதி சிவப்பு நிறத்திலும்‌, முகம்‌ வெள்ளை நிறத்திலும்‌ காணப் படும்‌. இரு பால்‌ கிளிகளும்‌ ஒரே தோற்றம்‌ பெற்றிசூக்கும்‌. சில கிளிகள்‌ பயிர்களுக்கு மிகுந்த அழிவை ஏற்படுத்தும்‌. அமேசான்‌ பச்சைக் கிளி 25–40 செ.மீ. நீளம்‌ வளரும்‌ தன்மையுடையது. இது குட்டையான, பிரிந்த வால்‌ பகுதியைக்‌ கொண்டது. இந்தக்‌ கிளியின்‌ இறகுகளில்‌ பச்சை நிறத்தை தவிர, மேலும்‌ சில வண்ணங்கள்‌ காணப் படும்‌. இரு பால்‌ கிளிகளும்‌ ஒரே வகைத்‌ தோற்றமுடையன. இந்தக்‌ கிளி, மேற்கிந்தியத்‌ தீவுகள்‌, மெக்சிகோ, தென்‌ அமெரிக்கா போன்ற நாடுகளில்‌ காணப் படுகிறது. நீல வண்ண முன் பக்கமுடைய பிரேசிலில்‌ காணப் படும்‌ ஒரு வகைப்‌ பச்சைக் கிளியின்‌ மேற்பகுதி ஊதா நிறமாகவும்‌, முகம்‌ மஞ்சள்‌ நிறமாகவும்‌, தோள்‌ சிவப்பு நிறமாகவும் காணப் படும்‌. மேலும்‌, பச்சை நிற மியோப்சிட்டா மோனாசஸ்‌ என்னும்‌ ஒரு வகை,தென்‌ அமெரிக்காவில்‌ காணப் படுகிறது. இதன்‌ சிறப்புப்‌ பண்பு மிகவும்‌ நீளமான கூடு கட்டும்‌ வழக்கமாகும்‌. அருகி வரும்‌ இனமான இரவுப்‌ பச்சைக் கிளி, (<i>Geopsittacus occidentalis</i> <!---- See: https://en.wikipedia.org/wiki/Night_parrot ---->) ஆஸ்திரேலியாவில்‌ மிகுந்து காணப் படுகிறது. இது புல்லின்‌ விதை, பூச்சி ஆகியவற்றை உண்ணும்‌ தன்மையுடையது. இதன்‌ கூட்டின்‌ முன் புறம்‌ குடை போன்று காணப் படும்‌. பச்சைக் கிளி, முட்டையிட்டுத்‌ குஞ்சு‌ பொரிக்கும்‌ தன்மையுடையது. வெண்மையான வட்ட வடிவமான முட்டையை, மரப் பொந்துகளிலோ, துளைகளிலோ இடும்‌. இக்கிளி சிட்டகாசிணுஸ்‌ (psittacosis) எனும்‌ வைரஸ்‌ நோயினைப்‌ பரப்பும்‌ தன்மை கொண்டது. இந்நோய்‌ ஏனைய பறவைகளுக்கும்‌ தொற்றும்‌ வாய்ப்புண்டு. {{right|—<b>அ. சிவானந்தம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="217"/><section begin="218"/> {{fs|110%|<b>பச்சை குத்துதல்‌</b>}} ஊசியைச் சாயங்களில்‌ தோய்த்துத்‌ தோலில்‌ சிறு துளைகளைப்‌ போடுவதே பச்சை குத்துதல்‌ (tattooing) என்பதாகும்‌. இதற்குப்‌ பயனாகும்‌ சாயங்களாக இண்டிகோ, கோபால்‌, கரி, சின்னப்பர்‌, வெர்மில்லியன்‌ (சாதி லிங்கம்‌), காட்மியம்‌ செலினைடு, பிரஷ்ஷியன்‌ நீலம்‌, இந்திய மை போன்றவை உள்ளன. பயன் படுத்தப் படும்‌ சாயங்களும்‌ செய்‌முறைகளும்‌ நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. நிரந்தரமான படங்கள்‌ அடித் தோலில்‌ குத்தும் போது உண்டாகின்றன. அருகேயுள்ள நிலக்‌ கட்டிகளில்,‌ நிறமி படிந்திருப்பது தெரிகிறது. பச்சை குத்தல்‌ பெரும்பாலும்‌ மேற்கை, முன்‌ கை, மார்பு போன்ற பகுதிகளில்‌ செய்யப்‌ படுகின்றது. உடலில்‌ எப்பகுதியிலும்‌ பச்சை குத்தப்‌ படலாம்‌. பச்சை குத்துவதின்‌ ஆழத்தைப்‌ பொறுத்து, நீடிக்கும்‌ காலம்‌ அமைகிறது. இதைக்‌ கொண்டு, குற்றவியல்‌ விசாரணைகளில்‌ பல விபரங்களை அறுதியிடலாம்‌. ‌<b>பச்சை குத்துதலில்‌ சிக்கல்‌‌</b>. இதனால்‌ சீழ்‌ நிலை அழற்சி, சீழ்க் கட்டி, தோல்‌ சிதைவு, மேக நோய்‌, தொழு நோய்‌, காச நோய்‌ போன்றவை உண்டாகலாம்‌. ‌<b>அகற்றல்‌</b>‌. அறுவை முறையில்‌ அகற்றித்‌ தோல்‌ ஒட்டு மருத்துவம்‌ அளிக்கலாம்‌. சிவந்த இரும்புக்‌ கம்பி கொண்டு எரித்து விடலாம்‌. அல்லது கீறி விடலாம்‌. மின்னூட்டம்‌ கொண்டு அகற்றலாம்‌. கிளிசரைனில்‌ பாபேயின்‌, துத்தநாகக்‌ குளோரைடு, டானிக்‌ அமிலம்‌ கொண்ட கலவையைத்‌ தோல்‌ மேல்‌ இட்டு அழற்சி எதிர்‌ வினையையும்‌, தழும்பையும்‌ உண்டாக்கிப்‌ பச்சை குத்தலை அழிக்கலாம்‌. லேசர்‌ கற்றை கொண்டு பச்சை குத்தலை நீக்கலாம்‌. சில சமயங்களில்,‌ மிகத்‌ தீவிர பெரியம்மையோ, தோல்‌ ஒழுகுபடையோ தோன்றினால்,‌ பச்சை குத்தல்‌ மறைந்து விடும்‌. குற்றஞ்சார்‌ மருந்தியலில்‌ பச்சை குத்திய படங்களையும்‌, வடிவங்களையும்‌ கொண்டு, பச்சை குத்தப் பட்டவரின்‌ தன்மையையும்,‌ தாய்‌ நாட்டையும்‌ அறிய இயலும்‌. குற்றவாளிகளும்,‌ விலை மாதர்களும்‌ பச்சை குத்திக்‌ கொள்வதை விரும்புகின்றனர்‌. {{right|—<b>அ. கதிரேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="218"/><section begin="219"/> {{fs|110%|<b>பச்சை குத்துதல்‌‌ (கால்நடை)</b>}} கிராமப்புறங்களில்‌ கால்நடைகளை அடையாளம்‌ சொல்வதற்குக்‌ காரி, மயிலை, செவலை போன்ற நிறங்களில்‌ பெயர்களையும்‌, ஒற்றைக்‌ கொம்பன்‌, மொட்டை வாலன்‌ போன்ற உடற்குறைகளின்‌ பெயர்களையும்‌ பயன்‌ படுத்துவதைக்‌ காணலாம்‌. கால்நடைப்‌ பண்ணைகளிலும்‌, கால்நடைகளை மிகுதியாக வளர்ப்போரும்,‌ இத்தகைய காரணப்‌ பெயர்களைப்‌ பயன் படுத்துவது இயலாததாகும்‌.<noinclude></noinclude> 078fqwc5hmhwpza0ckzwgftjj77ru8y பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/396 250 647048 1947399 2026-06-17T17:01:09Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|374 பச்சை குத்துதல்‌ (கால்நடை)}}</noinclude>எனவே, பல்வேறு கால்நடைக்‌ குறியீட்டு முறைகள்‌ உலகெங்கிலும்‌ பயன் பட்டு வருகின்றன. இக்குறியீட்டு முறைகளில்‌, மிகவும்‌ எளிமையானதும்‌, இன்றளவும்‌ பயன் படுத்தப் பட்டு வருவதும்,‌ பச்சை குத்துதல்‌ ஆகும்‌. <b>பச்சை குத்துவதற்கான காரணங்கள்‌</b>. கால்‌ நடைகளை விற்கும் போதும்‌, வாங்கும்‌ போதும்‌, அவற்றின்‌ மரபு வழிக்‌ குணங்களை அறிந்து கொள்ளப்‌ பச்சை‌ குத்துதல்‌ உதவுகிறது. பால்‌, இறைச்சி போன்றவற்றின்‌ உற்பத்தித் திறனை அறிந்து கொள்ள உதவுகிறது. கிடாக்களின்‌ இனப் பெருக்கத்‌ திறனை அறிந்து, தேவையற்றதை ஒதுக்கவும்,‌ புதிய கிடாக்களைத்‌ தேர்வு செய்யவும்‌, இம்முறை பயன் படுகிறது. கருவூட்டிய கால்‌ நடைகளில்‌ சினையுற்ற கால்நடைகளின்‌ விழுக்காட்டை அறிந்து கொள்ளவும்‌, பயன் படுத்திய விந்தின்‌ தரத்தை ஆராயவும்‌, இது பயன் படுகிறது. சினையுற்ற கால் நடைகள்‌ முழு வளர்ச்சியடைந்த கன்றுகளை ஈன்ற விபரங்களைச்‌ சேகரிக்க உதவுகிறது. ஒரே நேரத்தில்,‌ பல கால்நடைகள்‌ நோயுற்றிருப்‌பின்‌, ஏற்ற மருத்துவத்தை எளிதில்‌ அளித்தற்‌ பொருட்டும்‌ இம்முறை உதவுகிறது. எத்தகைய நோய்களுக்குக் குறிப்பிட்ட கால்நடைகள்‌ தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகுமென்பதை அறிந்து, முன்னதாகவே தடுப்பு நடவடிக்கைகளில்‌ ஈடுபடவும்‌, இக்குறியீட்டு முறை உதவுகிறது. தடுப்பூசி போடுதல்‌, குடற்புழு நீக்கம்‌ செய்தல்‌ போன்ற பராமரிப்புப்‌ பணிகளை உரிய காலத்தில்‌ செய்யவும்‌, மலடு நீக்க மருத்துவம்‌ அளிக்கவும்‌, எருது, எருமைக் கிடா போன்றவற்றின்‌ செயல்‌ திறனை அறிந்து கொள்ளவும்‌ உதவுகிறது. செம்மறி ஆடுகளை அடையாளமிடுவதன்‌ மூலம்‌, பிற ஆட்டுக்‌ குழுவில்‌ கலந்து விட்ட செம்மறி ஆட்டினை வெவ்வேறு விதமாக அடையாளமிடுவதின்‌ மூலம்‌, விற்பனைக்‌ காலங்களில்‌, பெண்ணா என்பதை எளிதில்‌ அறிந்து கொள்ள உதவுவதோடு, நேரத்தையும்,‌ வேலைச்‌ சுமையினையும் குறைக்கிறது. கால்நடைகளைக்‌ காப்பீடு செய்வதற்கு, அடையாளமிடுதல்‌ இன்றியமையாதது.கால்‌ நடைகள்‌ இறந்து விட நேரிடுகையில்‌, இறந்த கால்நடை காப்பீடு செய்யப்பட்டதுதானா என்பதை அறிந்து கொள்ளவும்‌, கால்நடை மற்றும்‌ வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ கழகங்களில்‌, சீரிய இனக்‌ குணங்கள்‌ கொண்ட கால்நடைகளைப்‌ பதிவு செய்து கொள்ளவும்‌, வங்கிக்‌ கடனுதவி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்களின்‌ கீழ் ‌வழங்கப் பட்ட கால்நடைகளை அறிந்து, தனிக்‌ கவனம்‌ செலுத்தவும்,‌ பச்சை குத்துதல்‌ பயனாகும்‌. சரியான முறையில்,‌ அடையாளமிடப்பட்ட கால்நடைகளைக்‌ கவர்தற்குத்‌ திருடர்களும்‌ அஞ்சும்‌ நிலை உள்ளது. <b>குறியீட்டின்‌ தன்மை</b>. கன்று பிறந்தவுடனேயே, அதற்கென ஒரு குறியீட்டு எண்‌ ஒதுக்கப்படல்‌ வேண்டும்‌. இத்தகைய எண்‌, அந்தக்‌ கன்றினை எளிதில்‌ அறிந்து கொள்ள உதவுக்‌ கூடிய எண்ணையும்‌, பிறந்த நாள்‌ போன்ற தகவல்களையும்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அல்லது எளிதில்‌ அக்கன்றினைப்‌ பற்றிய முழு விபரங்களையும்‌ அறிந்து கொள்ள ஏற்றவாறு, பதிவேட்டு வரிசை எண்‌ குறிக்கப் பட வேண்டும்‌. இவ்வரிசை எண்ணைக்‌ கொண்டு, அக்கன்றின்‌ தாய்‌, தந்தையின்‌ விபரங்களைக்‌ கூட அறிந்து கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்‌. அதே நேரத்தில்‌ கூடுதலான எழுத்துகளோ, எண்களோ பயன்‌ படுத்தப் படுமாயின்,‌ அது குழப்பத்தையே விளைவிக்கும்‌ என்பதையும்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. <b>குறியீட்டு வகை</b>. பல வகையான குறியீட்டு முறைகள் நடைமுறையில்‌ இருந்து வருகின்றன. அவையாவன: பச்சை குத்துதல்‌, காதுக்‌ குறி வெட்டல்‌ (ear notching), குறித் தழும்‌பிடல்‌ (branding), காதுத்‌ தோடிடல்‌ (ear tagging), கழுத்துப்‌ பட்டை அணிவித்தல்‌ (neck strap) சிறகு மற்றும்‌ கால்‌ சுற்று (wing and Leg bands), அடையாளப்‌ பதக்கங்கள்‌ அணிவித்தல்‌ (identity metals). <b>மாட்டினங்கள்</b>‌. மாட்டினங்களில்‌ பெரும்பாலும்,‌ பச்சை குத்துதலே பயன் படுகின்றது. சில சமயங்களில்,‌ காதுத்‌ தோடிடலும்‌ உண்டு. இவ்வாறு தோடிடலில்,‌ செலவினங்கள்‌ மிகக் கூடும்‌. இதற்கெனவே, வரிசையில்‌ எண்ணிடப் பட்டும்‌, எழுத்துகள்‌ பொறிக்கப் பட்டும்,‌ ஆயத்த நிலையில்‌ பித்தளைத்‌ தோடுகள்‌ கிடைக்கின்றன. இவ்வகைத்‌ தோடுகளைக்‌ காப்பீட்டு நிறவனங்கள்‌ பெரிதும்‌ பயன்‌ படுத்துகின்றன. இத்தோடுகளைக்‌ காதில்‌ பொருத்துவதற்கு, அதற்கெனவே உள்ள தோடு முக்குவானைப்‌ (tagging forcep) பயன் படுத்த வேண்டும்‌. மாட்டினங்களைக்‌ குறியிடுவதற்குக்‌ குறித் தழும்பிடல்‌ முறையே முன்பு பயன் படுத்தப் பட்டு வந்தது. இதற்‌கெனவே தயாரிக்கப் பட்ட மரக்‌ கைப்பிடியுடன்‌ கூடிய இரும்பைப்‌ (branding iron) பழுக்கக்‌ காய்ச்சிய பின்‌, மாடுகளின்‌ தொடைகளில்‌ குறியீட்டு எண்கள்‌ எழுதப் படுவது வழக்கம்‌. அவ்விடம்‌ புண்ணாகி,பின்னர்,‌ அப்புண்‌ தகுந்த மருந்து மூலம்‌ ஆற்றப் பட்டு, தழும்பு எழுத்துக்கள்‌ தென்படும்‌. இம்முறை கால்‌ நடைகளைத்‌ துன்புறுத்துவதாக இருப்பதாலும்,‌ தோல்‌ மதிப்பு குறைவதாலும்,‌ தற்சமயம்‌ பயன் படுத்தப் படுவதில்லை. தற்போது பெரும்பான்மையாக நடை முறையில்‌ உள்ளது<noinclude></noinclude> dtvbetruxlw3jxnpdk1piiwy6ejlqh0 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/397 250 647049 1947409 2026-06-17T18:08:36Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சை குத்துதல்‌ (கால்நடை) 375}}</noinclude>பச்சை குத்தும்‌ முறையேயாகும்‌. இவ்வாறு பச்சை குத்துவதற்கு முன்பு, காதின்‌ உட்புறத்தைச்‌ சோப்பு நீரினால்‌ நன்கு கழுவ வேண்டும்‌. பிறகு, அழியாத மையைத்‌ தடவ வேண்டும்‌. பின்பு, பச்சை குத்திடுக்கியில்‌ குறியீட்டு எழுத்தையும்,‌ எண்களையும்‌ பொருத்தி, மையின்‌ மீது விழுமாறு அழுத்தி விட வேண்டும்‌. மற்றக் கால்நடைகளை விடச்‌ செம்மறி ஆடுகளுக்கு அடையாளமிடுதல்‌ இன்றியமையாதது. ஏனெனில்,‌ இவை அடிக்கடி பிற ஆட்டுக்‌ குழுக்களுடன்‌ கலந்து, காணாமல்‌ போய்‌ விடுவதுண்டு. மேலும்,‌ பெண்‌ ஆடுகள்‌ சற்றே குறிப்பிடத் தக்க வகையில்‌ அடையாளமிடப் படுவதுண்டு. அடிக்கடி, பெண்‌ ஆடுகள்‌ இனப்‌ பெருக்கத்திற்குத்‌ தேர்வு செய்யப் படுவதாலும்‌, கூடுதலான விற்பனை செய்யப் படுவதாலும்,‌ இவ்வகை அடையாள முறை பெண்‌ ஆடுகளை எளிதில்‌ அறிந்து கொள்ள உதவும்‌. கம்பளி இன ஆடுகளில்‌, வண்ண எழுத்துகளும்‌ (paint brands) பயன் படுத்தப் படுவதுண்டு. இது மிக எளிதான முறையே ஆயினும்,‌ எளிதில்‌ மறைந்து விடக்‌ கூடும்‌.மேலும்‌, வண்ணங்களில்‌ உள்ள வேதிப்‌ பொருள்கள்‌ கம்பளியின்‌ தரத்தைக் குறைத்து விடக்‌ கூடும்‌. இதற்கு மாற்றாகத்‌ தற்போது குறியிடும்‌ தீர்மங்கள்‌ (branding fluids) கிடைக்கின்றன. இதனால்,‌ எழுதப் படும்‌ எழுத்துகள்‌ குறைந்தது ஓராண்டிற்கு நிலைத்து நிற்கும்‌. மேலும்‌, கம்பளியில்‌ இருந்தும்‌ தேவையில்லையெனில்‌, எளிதில்‌ நீக்கி விடவும்‌ முடியும்‌. சிறிய அளவிலான தோடுகளைக்‌ கொண்டு காதுத்‌ தோடிடல்‌ முறையும், ‌நடைமுறையில்‌ உள்ளன. ஒரு காதில்‌, உரிமையாளரைப்‌ பற்றிய குறிப்பும்‌, மற்றொன்றில்‌ ஆட்டுக் குழுவின்‌ குறிப்பும்‌ பொறிக்கப்‌ பட்டிருக்கும்‌. இம்முறை, கூடுதல்‌ செலவினத்தைக்‌ கொடுப்பதால், பச்சை குத்தும்‌ முறையே மிகுதியும்‌ பயன் பட்டு வருகிறது. <b>வெள்ளாடுகள்‌</b>. வெள்ளாடுகளில்‌ மூன்று விதமான குறியிடல்‌ முறைகள்‌ பயன் படுகின்றன. குழைமத்தாலான நீள வடிவத்‌ தோடுகளைப்‌ பயன் படுத்துவது முதல்‌ வகையாகும்‌. இதில்‌ உள்ள எழுத்துகள்‌ நாளடைவில்‌ உராய்வின்‌ காரணமாக அழிந்து விடுவதாலும்‌, தற்சமயம்‌ இதன்‌ பயன்‌ குறைந்து விடுகிறது. இரண்டாம்‌ வகையான காதுத் தோடிடல்‌ முறை குறைந்த அளவில்‌ பயன் பட்டு வருகிறது. மூன்றாவதாக அமைவது பச்சை குத்தும்‌ முறையாகும்‌. பச்சை குத்திடுக்கியில்‌ நான்கு எழுத்துகளைப்‌ பொருத்துவதற்கு வசதியிருப்பதால்‌, முதல்‌ எழுத்து உரிமையாளரையும்‌, ஏனைய எழுத்துகள்‌ ஆட்டின்‌ விபரங்களையும்‌ குறிக்குமாறு அமைக்க வேண்டும்‌. இவ்விபரங்களுடன்‌ கூடிய கழுத்துப்‌ பட்டையையும்‌ சிலர்‌ அளிப்பதுண்டு. <b>நாய்கள்</b>‌. அமெரிக்கா, பிரிட்டன்‌ போன்ற பல நாடுகளில்‌ அடையாளப்‌ பதக்கங்களை, நாய்களின்‌ கழுத்தில்‌ தொங்க விட வேண்டும்‌ என்பது சட்டமாகும்‌. இந்தப்‌ பதக்கங்களில்,‌ நாயின்‌ வீட்டு முகவரி, தொலை பேசி எண்‌ போன்றவையும்‌ குறிக்கப் பட்டிருக்கும்‌. சில நாடுகளில்‌, உரிம எண்ணும்,‌ தடுப்பூசி போடப் பட்ட விபரங்களும்‌, குறிக்கப் பட்டிருக்க வேண்டும்‌. இவ்விபரங்களைச்‌ சிறு தாளில்‌ எழுதி, ஒரு குழைமப்‌ பையில்‌ செருகிக்‌ கழுத்தில்‌ கட்டி விடுவர்‌. ஆனால்,‌ பந்தயங்களில்‌ கலந்து கொள்ளக் கூடிய கிரே ஹௌன்ட்ஸ்‌ போன்ற நாய்களுக்குப்‌ பச்சை குத்தும்‌ முறை மட்டுமே பயன் படுத்தப் படும்‌. <b>‌பன்றிகள்‌</b>‌. பன்றிப்‌ பண்ணையாளர்களும்‌, தூய இன உற்பத்தியாளர்களும்‌, உலகெங்கிலும்‌ காதுக்‌ குறி வெட்டல்‌ முறையையே பெரிதும்‌ பயன் படுத்தி வருகின்றனர்‌. ஒரே ஈற்றைச்‌ சார்ந்த பன்றிகளை அறியவும்‌, தாய்ப்‌ பன்றியின்‌ ஈற்றுத்‌ திறமையைக்‌ கணக்கிடவும்,‌ இம்முறை பயன்‌ படுகிறது. இனப்‌ பெருக்கத்திற்குப்‌ பெண்‌ பன்றிகளைத்‌ தேர்வு செய்யும்‌ திட்டம்‌, இந்தக்‌ காதடி குறி வெட்டிலிலிருந்து தொடங்குகிறது. கீழ்க் காணும்‌ அளவைகளில்‌ காதுக்‌ குறி வெட்டல்‌ முறை பயன் படுகிறது. {{block_center/s}}<div style="width:350px; font-size: 90%;"> {| |- |வலக்‌ காதிற்குக்‌ கீழ்‌ ஒரு வெட்டு |– |{{ts|ar}}|1 |- |இடக்‌ காதிற்குக்‌ கீழ்‌ ஒரு வெட்டு |– |{{ts|ar}}|3 |- |வலக்‌ காதிற்கு மேல்‌ ஒரு வெட்டு |– |{{ts|ar}}|10 |- |இடக்‌ காதிற்கு மேல்‌ ஒரு வெட்டு |– |{{ts|ar}}|30 |- |}</div>{{block_center/e}} குதிரை, மான்‌ போன்ற விலங்கினங்களுக்கும்‌, காதுத்‌ தோடிடலும்‌ பச்சை குத்தலும்‌ பயன் படுத்தப் பட்டு வருகிறது. கோழி, வாத்து போன்ற பறவை இனங்களுக்கு, எண்‌ பொறிக்கப் பட்ட அலுமினியத்தாலான மெல்லிய சிறகு மற்றும்‌ கால்‌ பட்டைகள்‌ காப்பீடு செய்வதற்காகவே பெரும்பாலும்‌ பயன் படுத்தப் படுகின்றன. {{right|—<b>ஆர்‌. கோவிந்தராஜு</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="219"/>{{nop}}<noinclude></noinclude> 8l3ukawnsdf5qmsvwdkjc5fm7qi7ckk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/398 250 647050 1947411 2026-06-17T18:33:31Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|376 பச்சைக்‌ குருவி}}</noinclude><section begin="220"/>{{fs|110%|<b>பச்சைக்‌ குருவி</b>}} எட்டு வகைகளைக்‌ கொண்ட பச்சைக்‌ குருவியின்‌ இனம்‌ குளோராப்சிஸ்‌ ஆகும்‌. இவ்வினம்‌ புல்புல்‌ பறவை இனத்துடன்‌ மிகவும்‌ நெருக்கமான உறவினைக்‌ கொண்டது. சில இடங்களில்‌, இவ்விரண்டு பறவை இனங்களும்‌ ஒரே குடும்பமாகக்‌ காணப் படுகின்றன. இப்பறவையின்‌ நீளம்‌ 17–20 செ.மீ. ஆகும்‌. இதன்‌ இறக்கைகள்‌ நீண்டு‌ காணப் படும்‌. இப்பறவையின்‌ காலின்‌ கீழ்ப் பகுதி குட்டையாகவும்,‌ உறுதியாகவும்‌ இருக்கும்‌. இறகுகள்‌ புல்‌ போன்ற பசுமையான வண்ணத்தைப்‌ பெற்றுப்‌ பளிச்‌சென்று காணப் படும்‌. குறிப்பாக, முதுகில்‌ நீண்டும்‌, தளர்ச்சியாகவும்‌, காணப் படும்‌. பல வகைகளில்,‌ ஆண்‌ குருவியின்‌ முகவாய்த்‌ தொண்டை, தாடை ஆகியவற்றின்‌ நிறம்‌ கறுப்பு அல்லது பளபளப்பான நீல வண்ணமாகும்‌. மரத்தில்‌ வாழும்‌ ஒரு வகையான எலுமிச்சை வயிற்றுப்‌ பச்சைக்‌ குருவியை வேறுபடுத்திக்‌ காட்டுவது அடி வயிற்றில்‌ காணப் படும்‌ பளபளப்பான எலுமிச்சை வண்ணமே. மற்றொரு வகையான பொன்னேற்றிப்‌ பச்சைக்‌ குருவியின்‌ முன் நெற்றியில்,‌ பளபளப்பான மஞ்சள்‌ வண்ணக் குறி காணப் படும்‌. பச்சைக்‌ குருவி கீழ்த் திசை வரை பரவியிருக்கிறது. குறிப்பாக, மலேசியா நாட்டில்‌ இவ்வினங்கள்‌ மிகுந்து காணப் படுகின்றன. மரங்களிடையே வாழும் போது, இறகுகளில்‌ இலைப்‌ பச்சை வண்ணம்‌, வலிவற்ற உரு மறைப்பாகப்‌ பயன் படுகிறது. இப்பறவை பூமரங்களிடையே இணையாகவும்‌, சிறு கூட்டமாகவும் தங்கும்‌. பச்சைக் குருவியின்‌ அலகும்,‌ நாக்கும்‌ தேனை உறிஞ்சுவதற்‌கேற்ற தகவமைப்பைப்‌ பெற்றும்‌ காணப் படுகிறது. மலர்ந்த பூக்களின்‌ கவர்ச்சியால்,‌ மயங்கும்‌ பச்சைக் குருவி, தேனை உறிஞ்ச ஒவ்வொரு வகைப்‌ பூக்களாகச்‌ செல்லும்‌ போது, அயல் மகரந்தச்‌ (cross polination) சேர்க்கையை உண்டாக்குகிறது. இப்பறவை ஒரு மரத்திலிருந்து, மற்றொரு மரத்திற்கு இயல்பாகத்‌ தாவிப்‌ பறக்கக் கூடியது. பச்சைக் குருவி நன்கு பாடும்‌ பறவையாகும்‌. மேலும்‌, ஏனைய பறவைகளைப்‌ போல ஒலி எழுப்பும்‌ திறனையும்‌ கொண்டது. ஒரு பச்சைக்‌ குருவியைத்‌ தொடர்ந்து, மற்றொரு பச்சைக்‌ குருவியென, இடைவிடாது, எவ்விதக்‌ குறுக்கீடுமின்றி, ஏனைய பறவைகளைப்‌ போல ஒலி எழுப்பிக்‌ கேட்பவரைக்‌ குழம்ப வைக்கும்‌. பச்சைக் குருவி புகழ் பெற்ற கூண்டுப்‌ பறவையாக விளங்குகிறது. அனைத்துப்‌ பறவைச்‌ சந்தையிலும்‌ பச்சைக்‌ குருவியைக்‌ காணலாம்‌. குறிப்பாக, பொன்னேற்றிப்‌ பச்சைக் குருவி, பெரும்பான்மையான பறவை வளர்ப்‌போரால்‌ கூண்டுகளில்‌ வளர்க்கப் படுகிறது. வேடிக்கையான, மகிழ்வூட்டுகின்ற, சண்டையிடுகின்ற குணத்தை இக்குருவி பெற்றிருப்பதால்‌, இக்குருவியை ஏனைய பறவைகளோடு, கூட்டில்‌ ஒன்றாக அடைத்து வைக்காமல்‌, இக்குருவியை மட்டும்,‌ தனிக்‌ குழுவாகக்‌ கூண்டில்‌ வளர்ப்பர்‌. இப்பறவை, பூச்சி இனங்களையும்‌, பழங்‌களையும்‌, பூந்தேனையும்‌ உண்டு வாழ்கின்றன. கூண்டில்‌ வாழும்‌ பறவை, வாழைப் பழம்‌, ரொட்டி, பால்‌ இவற்றை உண்டு, நன்றாகச்‌ செழித்துக்‌ காணப் படும்‌. இந்தியாவில்‌ பொன்னேற்றிப்‌ பச்சைக் குருவி (<i>Chlocopsis aurifrons</i>) எலுமிச்சைப்‌ பச்சைக் குருவி (<i>Chloropsis hardwickii</i>), குளோராப்சிஸ்‌ ஜெர்டனி (</i>Chloropsis jerdoni</i>) <!---- See: https://en.wikipedia.org/wiki/Leafbird; https://en.wikipedia.org/wiki/Orange-bellied_leafbird; https://en.wikipedia.org/wiki/Jerdon%27s_leafbird ----> என்னும்‌ மூன்று இனங்கள்‌ காணப் படுகின்றன. பொன்னேற்றிப்‌ பச்சைக்‌ குருவி பளிச்சிடும்‌ பொன்னிறத்தை நெற்றிப்‌ பகுதியிலும்‌, ஊதா நிறத்தை முகவாய்‌ மற்றும்‌ தொண்டைப்‌ பகுதியிலும்‌, பச்சை நிறத்தை முதுகுப்‌ பகுதியிலும்‌ பெற்றுக்‌ காணப் படுகின்றன. இதன்‌ மீசைக் கோடுகள்‌ நீளமாக இருக்கும்‌. இவ்வினப்‌ பறவை மலைப் பகுதிகளில்‌ மிகுதியாகப்‌ பரவியிருக்கிறது. மேலும்‌, சோட்டா நாகபுரி பரப்பிலும்‌, தென்னிந்தியாவிலும்,‌ மியான்மரிலும்‌, இலங்கையிலும்‌ பெரும்பான்மையாக உள்ளன. எலுமிச்சை வயிற்றுப்‌ பச்சைக் குருவி, மிக அழகான, சுறுசுறுப்பான இப்பறவை, புல்‌ போன்ற பசுமையான நிறத்தைப்‌ பெற்றுக்‌ காணப் படும்‌. இதன்‌ அடிப் பகுதியில்‌ ஆழமான ஒளிர்கின்ற எலுமிச்சை வண்ணம்‌ மிளிரும்‌. முகவாய்‌, தொண்டை, மார்பின்‌ மேல் பகுதி ஆகியன பளபளப்பான கரும்‌ சிவப்பு அல்லது ஊதா நிறத்தைப்‌ பெற்றிருக்கும்‌. அலகு கறுப்பு நிறத்துடன்‌ ஒடுங்கி, சற்றே வளைந்து காணப் படும்‌. பெண் பறவையில்‌ நீல நிற மீசைக் கோடு, சற்று ஒளி மங்கிக்‌ காணப் படும்‌. மேலும்‌, வயிற்றின்‌ அடிப் பகுதியில்,‌ இளம்‌ எலுமிச்சை வண்ணம்‌ காணப் படும்‌. இவ்வினப்‌ பறவை மரங்களில்‌ மட்டுமே வாழும்‌ இது, இமயத்தின்‌ புறத்‌ தொடர்களிலே, மைய இமயத்திலும்‌, கீழை இமயத்திலும்‌ மிகுதியாகக்‌ காணப் படும்‌. <b>குளோராப்சின்‌ ஜெர்டனி</b>. பறவையின்‌ நீளம்‌ 7<noinclude></noinclude> mxtmj1tnyyysiqn3wxc6caxhv1tcqwi பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/399 250 647051 1947418 2026-06-17T19:18:42Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சைப்‌ பயறு 377}}</noinclude>அங்குலம்‌, ஆண்‌ பறவையின்‌ இறகின்‌ நிறம்‌ ஒளிரும்‌ பச்சையாகும்‌. நீல நிறமாக, அகன்ற மீசைக்‌ கோட்டைப்‌ பெற்றுக்‌ காணப் படும்‌. நெற்றி, பச்சை கலந்த மஞ்சள்‌ வண்ணத்தைப்‌ பெற்றிருக்கும்‌. இப்பறவையின்‌ கண்‌ திரை, பழுப்பு நிறமாக இருக்கும்‌. சிறகின்‌ வளைவுகளில்‌ மிகவும்‌ பளிச்செனப்‌ பசுமை கலந்த நீலத்தைப்‌ பெற்றிருக்கும்‌. அலகு கருமையாகவும்‌, கால்கள்‌ இள நீலமாகவும்‌ காணப்‌ படும்‌. இக்குருவி மட்டும்‌ பொதுவாகத்‌ திறந்த வெளிகளிலும்‌, வீட்டுத்‌ தோட்டங்களிலும்,‌ பழத்தோட்டங்களிலும்‌ தோப்புகளிலும்‌ இருக்கும்‌. மிகவும்‌ சுறுசுறுப்பான இது, கூடு கட்டியிருக்கும்‌ போது, மிக எச்சரிக்கையாகக்‌ கண்‌காணித்துக்‌ கொள்ளும்‌. உரத்த ஒலி எழுப்பும்‌. இந்தியாவின்‌ பல இடங்களிலும்‌, இலங்கையிலும்‌ இது காணப் படும்‌. <b>கூடு கட்டுதல்‌</b>. மே–ஜுலை இப்பறவை கூடு கட்டுவதற்கு ஏற்ற காலமாகும்‌. நார்ப் பொருள்‌, சுள்ளி, சிறிய குச்சி, சிறு வேர்‌ போன்றவற்றால்‌ கூடு கட்டுகிறது. கூட்டினை மரத்தின்‌ இரண்டு கிளைகளுக்கு இடையே தொங்க விடுகின்றன. தொங்க விடும்‌ போது, இலைகளால்‌ அக்கூடு மறைக்கப் படுகிறது. நிலத்திலிருந்து 6–10 மீட்டருக்கு மேலே உள்ள மரக் கிளைகளில்‌ மட்டுமே கூட்டைக்‌ கட்டுகிறது. <b>முட்டையிடல்</b>‌. முட்டை நீள்‌ உருண்டையாக மென்மையாக, தேர்ச்சியான இழையமைப்பைப்‌ பெற்றுக்‌ காணப் படுகின்றன. வழக்கமாக, இரண்டு முட்டைகளை இடும்‌ இயல்புடையது; சில சமயங்களில்,‌ மூன்று முட்டைகளை இடுவதும்‌ உண்டு. பொதுவாக, முட்டை வெண்மை அல்லது பாலேடு நிறத்தில்‌ அமைந்திருக்கும்‌. <b>பரவல்</b>‌. பச்சைக் குருவி இமயமலைப்‌ பகுதிகளில்‌ பரந்து காணப் படுகிறது. சிம்லா மற்றும்‌ முசௌரியிலிருந்து, கிழக்கு அசாம்‌ வரையிலும்‌, தெற்கு மணிப்பூர்,‌ மியான்மர்‌ வழியாக டினாசீரம்‌ (Tenasserim) வரையிலும்‌, மலையடிவாரத்‌திலிருந்து 2 கி.மீ. உயரமுள்ள மலேசியா வரையிலும்‌ பரவியிருக்கிறது {{right|—<b>செ. மரியசூசைநாதன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="220"/><section begin="221"/> {{fs|110%|<b>பச்சைப்‌ பயறு</b>}} இதற்குப்‌ பாசிப் பயறு என்னும்‌ பெயரும்‌ உண்டு. இதன்‌ தாவரப்‌ பெயர்‌ விக்னா ரேடியேட்டா (<i>Vigna radiata</i>) என்பதாகும்‌. இதன்‌ பழைய பெயர்‌ ஃபேசியோலஸ்‌ ரேடியேட்டஸ்‌ என்பதாகும்‌. ஃபேபேசி என்னும்‌ இரு வித்திலைத்‌ தாவரக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த இது தென்கிழக்கு ஆசியாவைத்‌ தாயகமாகக்‌ கொண்டது. இந்தோ–சீனா, ஜாவா ஆகிய நாடுகளில்‌ பரவி, அண்மையில்‌ மத்திய ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்‌ தீவுகள்‌, அமெரிக்கா ஆகிய இடங்களில்‌ காணப் படுகிறது. இந்தியாவில்‌ இது தொன்று தொட்டுப்‌ பயிரிடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, மியான்மர்‌, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்‌ ஆகிய நாடுகளில்‌ சாகுபடியாகிறது. இந்தியாவின்‌ பாசிப் பயறு உற்பத்தியில்‌ மத்தியப் பிரதேசம்‌, மஹாராஷ்டிரம்‌, உத்தரப் பிரதேசம்‌, பஞ்சாப்‌, ஆந்திரப்‌ பிரதேசம்‌, ராஜஸ்தான்‌, கர்நாடகா முதலிய மாநிலங்கள்‌ முதன்மை பெறுகின்றன. தாய்லாந்திலும்,‌ மியான்மரும்‌ இப்பயிரை ஏற்றுமதி செய்கின்றன. ஜப்பான்‌ இறக்குமதி செய்யும்‌ நாடுகளில்‌ குறிப்பிடத் தக்கது. <b>அமைப்பு</b>. இது நேராக வளரும்‌. ஆணி வேர்த்‌ தொகுதி கொண்ட இழுவிதையிலைத்‌ தாவரமாகும்‌. நன்றாகக்‌ கிளைத்து வளரும்‌ இச்செடியின்‌ மீது, மென்மயிர்‌ அடர்ந்து காணப் படும்‌. சில வகைகளில்‌ செடியின்‌ நுனி, அருகிலுள்ள செடிகளில்,‌ கொடி போலச்‌ சுற்றிக்‌ கொள்ளும்‌. பச்சைப்‌ பயிரில்‌ வெவ்வேறு பண்புகளையுடைய 2000 வகைகள்‌ உள்ளன. வறட்சியைத்‌ தாங்கி வளரும்‌ செடிகளுள்‌ இதுவும்‌ ஒன்று. இதன்‌ தண்டு பெரும்பாலும்‌ பச்சையாகவும்,‌ சில சமயங்களில்‌ கருஞ்சிவப்பு நிறப்‌ பகுதிகளைக்‌ கொண்டும்‌ இருக்கும்‌. மூன்று சிற்றிலைகளைக்‌ கொண்ட இலைகள்‌, தண்டில்‌ மாற்றடுக்கத்தில்‌ உண்டாகியிருக்கும்‌. சிற்றிலைகள்‌ மெலிந்து, முட்டை வடிவில்‌ ஓரம்‌ வளைவின்றி, முழுமையாக இருக்கும்‌. சில வகைகளில்‌ சிற்றிலைகளில்‌, கறுப்புகள்‌ இருக்கும்‌. சிற்றிலைகள்‌ 5–10 செ.மீ. நீளமுடையவை. மேல்‌, கீழ்ப் புறங்களில்‌ மென்‌ மயிருடன்‌ சிற்றிலை இளம் பச்சை அல்லது கரும் பச்சை நிறத்திலிருக்கும்‌. பூக்கள்‌, மஞ்சள்‌ அல்லது பசும்‌ மஞ்சள்‌ நிறத்திலிருக்கும்‌. பூக்கள்‌ 20–30 எனக்‌ கொத்தாக, இலைக் கோணத்திலோ,செடியின்‌ நுனியிலோ உண்டாகியிருக்கும்‌. 1 செ.மீ. நீளமுடைய சிறிய மலர்கள்‌, குறுகிய பூவடிச்‌ செதில்கள்‌ ஆகியன காணப் படுகின்றன. புல்லி வட்டம்‌ சிறு குழாய்‌ போன்று அமைந்துள்ளது. அல்லி இதழ்கள்‌ மஞ்சள்‌ நிறத்துடனும்‌, பிளவு பட்டும்‌ காணப் படுகிறது. கொடி அல்லி (Standrd petal), சிறகு அல்லி (wing petal), படகு அல்லி (keel petal) என மூன்று வித அமைப்புக்‌ கொண்ட அல்லி வட்டம்,‌ இக்‌ குடும்பத்‌ தாவரங்களின்‌ தனித்‌ தன்மையாகும்‌. இந்த அல்லி வட்ட அமைப்பு வண்ணத்துப்‌ பூச்சியை ஒத்துள்ளமையால்,‌ பாப்பிலேயோனேசியஸ்‌<noinclude></noinclude> pm4f3b5g2plxg1rt5ffqpmaakmibh9j பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/400 250 647052 1947421 2026-06-17T19:34:52Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1947421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|378 பச்சைப்‌ பயறு}}</noinclude>அல்லி வட்டம்‌ எனப் படுகிறது. ஐந்து அல்லி இதழ்களில்‌ ஒரு கொடி அல்லி இதழும்‌, இரண்டு சிறகு அல்லி இதழ்களும்‌, இரு படகு அல்லி இதழ்களும்‌, இணையாது தனித்து, இறங்கு வரிசை அடுக்கிதழ்‌ அமைவில்‌ உள்ளது. பத்து மகரந்தக்‌ கேசரங்களில்‌ ஒன்பது இணைந்தும்‌, ஒன்று தனித்தும்‌ காணப் படுகின்றன. ஒரு சூலிலையால்‌ ஆன மேல்‌ மட்டச்‌ சூல் பையில்,‌ எண்ணற்ற சூல்கள்‌ விளிம்பு ஒட்டு முறையில்‌ அமைந்துள்ளன. தனி, உலர்‌ வெடி கனி (legume) வகையைச்‌ சேர்ந்தது. நீளமாக, நுனி சற்று வளைந்தோ, நேராகவோ காணப் படும்‌. தோலின்‌ மேல்‌ மயிரிழைகள்‌ காணப்படா; விதைகள்‌ அவரை விதை போன்ற அமைப்புடையன. <b>சாகுபடி</b>. வடிகால்‌ வசதியுள்ள களிச் சேற்று மண்‌ இதற்கு ஏற்றது. செம்மண் வண்டல்‌ நிலம்‌, கரிசல்‌ நிலங்களிலும்‌, இதைப்‌ பயிரிடலாம்‌. சமவெளியில்‌ பெரும்‌ பரப்பளவில்‌ பயிராகிய போதிலும்,‌ மலைப்‌ பகுதியில்‌ 2 கி.மீ. வரையிலும்‌ விளையும்‌. இதைப்‌ பெருமளவில்‌ புன்செய்‌ பயிராகச்‌ சாகுபடி செய்கின்றனர்‌. சில சமயங்களில்,‌ இறைவைப்‌ பயிராகவும்‌ பயிரிடுகின்றனர்‌. இதன்‌ வளர்ச்சிக்கு 25–30°C வெப்ப நிலை ஏற்றது. வளர்ச்சிப்‌ பருவத்தில்,‌ நன்கு பரவிப்‌ பெய்யும்‌ மழை, இதன்‌ விளைச்சலுக்கு உதவுகிறது. பூக்கும் போது, மழை பெய்தால்,‌ மகரந்தச்‌ சேர்க்கை பாதிக்கப் பட்டுத்‌ தானியம்‌ உண்டாவது தடைப் படும்‌. நீர்‌ தேங்கும்‌ சேர்க்கைப்பகுதிகளில்,‌ இது நன்கு வளர்வதில்லை. பச்சைப்‌ பயறு ஜுன்‌ , ஜுலை மாதங்களில்‌ சோளம்‌, கம்பு, கேழ்வரகு, நிலக்‌ கடலையுடன்‌ கலப்புப்‌ பயிராக விதைக்கப் படுகிறது. தமிழகம்‌, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்,‌ நெல்லுக்குப்‌ பின்‌ பெருமளவில் ஜனவரி–பிப்ரவரி மாதங்களில்‌ விதைக்கப் படுகிறது. இமாலயப்‌ பகுதிகளில்‌, இதைக்‌ கோடையில்‌ சாகுபடி செய்கின்றனர்‌. வட இந்தியச்‌ சமவெளியில்‌ உருளைக்‌ கிழங்கு, கடுகு, கோதுமை ஆகிய பயிர்களில்‌ அறுவடைக்குப்‌ பின்பு, பச்சைப் பயறு சாகுபடி செய்யப் படுகிறது. நேராக வளரும்‌ குறுகிய கால வகைகளை ஊடு பயிராகச்‌ சாகுபடி செய்வதுண்டு. இறைவைப்‌ பயிராக இருப்பின்,‌ பாத்திகளில்‌ சாகுபடி செய்யப் படுகிறது. நெல்‌ வயல்களில்,‌ வரப்புகளில்‌ ஊன்றி வளர்ப்பதுண்டு. மானாவாரிப்‌ பயிரானால்‌, விதைகள்‌ தெளிக்கப் பட்டும்,‌ இறைவைப்‌ பயிரானால்‌, 30 செ.மீ. வரிசையில்‌ ஊன்றப் பட்டும்‌ வளர்க்கப் படும்‌. பொதுவாகப்‌ பயறு வகைப்‌ பயிர்களுக்குச்‌ சாம்பல்‌ சத்து உரம்‌ இடுவதில்லை. மேலுரமாக மண்ணில்‌ எந்தச்‌ சத்து உரமும்‌ சேர்க்கப் படுவதில்லை. செடியில்‌ பாதிப் பூக்கள்‌ உண்டாகிருக்கும்‌ போதும்,‌ அதற்குப்‌ பின்பு, 15ஆம்‌ நாளும்‌ என இரு முறை 2% டைஅம்மோனியம்‌ பாஸ்‌ஃபேட்‌ கைத்தெளிப்பானின்‌ உதவியால்,‌ செடியின்‌ மீது மாலை வேளையில்‌ தெளிக்கப்‌ படுகிறது. இதனால்‌, பூக்கள்‌ உதிர்வது குறைந்து, காய்களின்‌ உற்பத்தி மிகுந்து, விளைச்சல்‌ கூடுகிறது. இறைவையில்‌ விதைக்கும்‌ போதும்,‌ விதைத்த மூன்றாம்‌ நாள்‌ நீர்‌ பாய்ச்ச வேண்டும்‌. பின்பு 10–15 நாள்‌ இடைவெளியில்‌ நீர் ‌பாய்ச்சுதல்‌ வேண்டும்‌. தனிப்‌ பயிராகச்‌ சாகுபடி செய்யும்‌ போது, ஓரிரு முறை களை எடுக்கப் படுகிறது. விதை முளைக்கு முன்,‌ தகுந்த ஈரம்‌ இருக்கும்‌ போது, லாசோ என்னும்‌ களைக் கொல்லியை, ஹெக்டேருக்கு 1.5 கி.கி. வீதம்‌ மண்ணின்‌ மீது தெளித்துக்‌ களைகளைக்‌ கட்டுப் படுத்தலாம்‌. பச்சைப் பயறு வகைகளில்,‌ குறுகிய கால வகைகள்‌ 60–75 நாளிலும்,‌ நீண்ட கால வகைகள்‌ 120–150 நாளிலும்‌ அறுவடைக்குத்‌ தயாராகின்றன. பூத்த 3–4 வாரங்களில்,‌ நெற்றுகள்‌ அறுவடை செய்யப் படுகின்றன. சில வகைகளில்,‌ இரண்டு அல்லது மூன்று முறை நெற்றுகள்‌ அறுவடை செய்யப் படுகின்றன. இந்தியாவில்,‌ தற்போது சாகுபடி செய்யப் பட்டு வரும்‌ வகைகளில்,‌ பெரும்‌பாலானவை ஒரே சீராகப்‌ பூத்துக்‌ காய்த்து, ஒரே தடவையில்‌ நெற்றுகளை அறுவடை செய்யும்‌ தன்மையைக்‌ கொண்டுள்ளன. செடிகளைத்‌ தரைக்கருகில்‌ அறுத்து, வெயிலில்‌ இரண்டு அல்லது மூன்று நாள்‌ உலர்த்திக்‌ குச்சியினால்‌ அடித்தோ, மாடுகளைப்‌ பிணைத்துச்‌ சுற்றிச்‌ சுற்றி நடக்க விட்டோ, நெற்றுகளிலிருந்து விதைகளைத்‌ தனித்தெடுப்பர்‌. பொட்டு (pod cover) மற்றும்‌ எஞ்சிய தாவரப்‌ பகுதிகளைக்‌ கூட்டிச்‌ சேகரித்து வைத்துக்‌ கொண்டு, கால்நடைகளுக்குத்‌ தீவனமாகத்‌ தரலாம்‌. காற்றில்‌ தானியங்களைத்‌ தூற்றித்‌ தூசு போக்கி வைத்துக்‌ கொள்வர்‌. நெற்றுகளைக்‌ குச்சியால்‌ அடித்து, விதைகளைச்‌ சேகரிப்பர்‌. இம்முறையில்‌, விதைகள்‌ உடையாமலும்,‌ அவற்றின்‌ முளைப்புத்‌ திறன்‌ குறையாமலும்‌, பாதுகாக்கலாம்‌. முற்றிய தானியங்களை மட்டுமே விதைக்காகப்‌ பயன் படுத்த வேண்டும்‌. காய்கள்‌ கறுப்பு நிறமான நெற்றாக மாறியதும்,‌ அறுவடை செய்ய வேண்டும்‌. இல்லையெனில்,‌ சில வகைகளின்‌ நெற்றுகள்‌ வெடித்துத்‌ தானியங்கள்‌ சிதறி விடும்‌. அறுவடையைச்‌ சூரியன்‌ எழுவதற்கு முன்பு செய்வதன்‌ மூலம்,‌ நெற்று வெடிப்பதால்‌ ஏற்படும்‌ சேதத்தைக்‌ குறைக்கலாம்‌. பின்னர்‌, விதைகளை உலர்த்திச்‌ சேமிக்க வேண்டும்‌. <b>வகைகள்</b>‌. பச்சைப்‌ பயிறில்‌ டி.1, டி.44, பூசா பைசாசி,பிளஸ்‌ 16, எல்‌.8. கோப்பர்கான்‌, எம்‌.எல்‌.5,<noinclude></noinclude> fw3zdeng6j7s92bt447znw6s3l8o3dh அறிவியல் களஞ்சியம் 14/நொதித் தடுப்பு 0 647053 1947431 2026-06-18T03:03:37Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதித் தடுப்பு | previous = [[../நொதி (உயிர் வேதியியல்‌)/]] | next = [[../நொதித்தல்‌/]] | notes = }} <pages index="அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947431 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதித் தடுப்பு | previous = [[../நொதி (உயிர் வேதியியல்‌)/]] | next = [[../நொதித்தல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="302" to="302" fromsection="182" tosection="182" /> srwbekx4fj4l4gr1sxs8ix6yps23zu5 அறிவியல் களஞ்சியம் 14/நொதித்தல்‌ 0 647054 1947432 2026-06-18T03:05:17Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதித்தல்‌ | previous = [[../நொதித் தடுப்பு/]] | next = [[../நொபிலியம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947432 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொதித்தல்‌ | previous = [[../நொதித் தடுப்பு/]] | next = [[../நொபிலியம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="303" to="304" fromsection="183" tosection="183" /> et5f25u9jz8ctkbyoj7ea5h46t6k14z அறிவியல் களஞ்சியம் 14/நொபிலியம்‌ 0 647055 1947433 2026-06-18T03:06:03Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொபிலியம்‌ | previous = [[../நொதித்தல்‌/]] | next = [[../நொய்ம்மை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947433 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொபிலியம்‌ | previous = [[../நொதித்தல்‌/]] | next = [[../நொய்ம்மை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="304" to="305" fromsection="184" tosection="184" /> bn12lpby39svoavuobxlx2uhvpdvlnr அறிவியல் களஞ்சியம் 14/நொய்ம்மை 0 647056 1947434 2026-06-18T03:07:00Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொய்ம்மை | previous = [[../நொபிலியம்‌/]] | next = [[../நொலையாளி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947434 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொய்ம்மை | previous = [[../நொபிலியம்‌/]] | next = [[../நொலையாளி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="305" to="305" fromsection="185" tosection="185" /> lp5o4z0pciho3h91v5hhd3hwrnnzakz அறிவியல் களஞ்சியம் 14/நொலையாளி 0 647057 1947435 2026-06-18T03:07:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொலையாளி | previous = [[../நொய்ம்மை/]] | next = [[../நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌/]] | notes = }} <pages index="அறிவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947435 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொலையாளி | previous = [[../நொய்ம்மை/]] | next = [[../நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="305" to="306" fromsection="186" tosection="186" /> f4wr1bhk90g81hmw7y1xq0wufcwl2dw அறிவியல் களஞ்சியம் 14/நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌ 0 647058 1947436 2026-06-18T03:08:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌ | previous = [[../நொலையாளி/]] | next = [[../நொறுங்குமை/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947436 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌ | previous = [[../நொலையாளி/]] | next = [[../நொறுங்குமை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="306" to="310" fromsection="187" tosection="187" /> pmhcaixtfjdxsly7csjjftpvwmy9hje அறிவியல் களஞ்சியம் 14/நொறுங்குமை 0 647059 1947437 2026-06-18T03:09:13Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொறுங்குமை | previous = [[../நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌/]] | next = ../நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947437 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நொறுங்குமை | previous = [[../நொறுக்கலும்‌, தூளாக்கலும்‌/]] | next = [[../நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="310" to="310" fromsection="188" tosection="188" /> 5zb6r6fkmvhgbfyvr731ze3p1ply2st அறிவியல் களஞ்சியம் 14/நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு 0 647060 1947450 2026-06-18T03:35:33Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு | previous = [[../நொறுங்குமை/]] | next = [[../நோய்க் குறியியல்‌/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947450 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு | previous = [[../நொறுங்குமை/]] | next = [[../நோய்க் குறியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="310" to="333" fromsection="189" tosection="189" /> 1x5viegysbcaz953jmpc0kownx1er8u அறிவியல் களஞ்சியம் 14/நோய்க் குறியியல்‌ 0 647061 1947451 2026-06-18T03:36:59Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்க் குறியியல்‌ | previous = [[../நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு/]] | next = ../நோய்த்‌ தடுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947451 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்க் குறியியல்‌ | previous = [[../நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு/]] | next = [[../நோய்த்‌ தடுப்பியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="334" to="337" fromsection="190" tosection="190" /> q5y4tdsdggro7zsay72czcxnt0c4z12 அறிவியல் களஞ்சியம் 14/நோய்த்‌ தடுப்பியல்‌ 0 647062 1947452 2026-06-18T03:37:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த்‌ தடுப்பியல்‌ | previous = [[../நோய்க் குறியியல்‌/]] | next = [[../நோய்த் தடுப்பு முறைகள்‌/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947452 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த்‌ தடுப்பியல்‌ | previous = [[../நோய்க் குறியியல்‌/]] | next = [[../நோய்த் தடுப்பு முறைகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="337" to="338" fromsection="191" tosection="191" /> 7524g2fvtkh8b6saljpxkk5knc4vs31 அறிவியல் களஞ்சியம் 14/நோய்த் தடுப்பு முறைகள்‌ 0 647063 1947453 2026-06-18T03:39:13Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த் தடுப்பு முறைகள்‌ | previous = [[../நோய்த்‌ தடுப்பியல்‌/]] | next = [[../நோய்த்‌ தடுப்பூசி/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947453 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த் தடுப்பு முறைகள்‌ | previous = [[../நோய்த்‌ தடுப்பியல்‌/]] | next = [[../நோய்த்‌ தடுப்பூசி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="338" to="340" fromsection="192" tosection="192" /> aybhugzaelfgebt6czstrwvtzky6ka3 அறிவியல் களஞ்சியம் 14/நோய்த்‌ தடுப்பூசி 0 647064 1947454 2026-06-18T03:40:28Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த்‌ தடுப்பூசி | previous = [[../நோய்த் தடுப்பு முறைகள்‌/]] | next = ../நோய்‌ நுண்ணுயிரிக்‌ க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947454 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்த்‌ தடுப்பூசி | previous = [[../நோய்த் தடுப்பு முறைகள்‌/]] | next = [[../நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="341" to="341" fromsection="193" tosection="193" /> qsb9rdchsb2mobmkphmj22gnk3a56dp அறிவியல் களஞ்சியம் 14/நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌ 0 647065 1947455 2026-06-18T03:41:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌ | previous = [[../நோய்த்‌ தடுப்பூசி/]] | next = ../நோய்ப்‌ புலனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947455 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌ | previous = [[../நோய்த்‌ தடுப்பூசி/]] | next = [[../நோய்ப்‌ புலனாய்வு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="341" to="342" fromsection="194" tosection="194" /> 8tp8vs2ps7r3l4bmh339s1en7c1tl24 அறிவியல் களஞ்சியம் 14/நோய்ப்‌ புலனாய்வு 0 647066 1947456 2026-06-18T03:42:51Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்ப்‌ புலனாய்வு | previous = [[../நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌/]] | next = ../நோய்‌ விளைவிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947456 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்ப்‌ புலனாய்வு | previous = [[../நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌/]] | next = [[../நோய்‌ விளைவிக்காதவை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="342" to="346" fromsection="195" tosection="195" /> mzrijejwwwy4glwc0w4pgs9w8inv095 அறிவியல் களஞ்சியம் 14/நோய்‌ விளைவிக்காதவை 0 647067 1947457 2026-06-18T03:43:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்‌ விளைவிக்காதவை | previous = [[../நோய்ப்‌ புலனாய்வு/]] | next = [[../நோயியல்‌, தாவர/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947457 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோய்‌ விளைவிக்காதவை | previous = [[../நோய்ப்‌ புலனாய்வு/]] | next = [[../நோயியல்‌, தாவர/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="346" to="346" fromsection="196" tosection="196" /> gwvynh1ggbllp6siho32160538303g0 அறிவியல் களஞ்சியம் 14/நோயியல்‌, தாவர 0 647068 1947458 2026-06-18T03:45:30Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோயியல்‌, தாவர | previous = [[../நோய்‌ விளைவிக்காதவை/]] | next = ../நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947458 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோயியல்‌, தாவர | previous = [[../நோய்‌ விளைவிக்காதவை/]] | next = [[../நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="346" to="363" fromsection="197" tosection="197" /> 83bksmx8now9n6cgksvmtych9f4j0hg அறிவியல் களஞ்சியம் 14/நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌ 0 647069 1947459 2026-06-18T03:46:40Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌ | previous = [[../நோயியல்‌, தாவர/]] | next = [[../நோவினேகல்‌ வினை/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947459 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌ | previous = [[../நோயியல்‌, தாவர/]] | next = [[../நோவினேகல்‌ வினை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="364" to="366" fromsection="198" tosection="198" /> al0x5pyoypwrzbfseijcy7rck6jgbcc அறிவியல் களஞ்சியம் 14/நோவினேகல்‌ வினை 0 647070 1947460 2026-06-18T03:47:20Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோவினேகல்‌ வினை | previous = [[../நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌/]] | next = ../பக்க அலைப் பட்டை/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947460 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நோவினேகல்‌ வினை | previous = [[../நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌/]] | next = [[../பக்க அலைப் பட்டை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="366" to="367" fromsection="199" tosection="199" /> 6d4edf3ly538i1qa5vn1jbwk60mikal அறிவியல் களஞ்சியம் 14/பக்க அலைப் பட்டை 0 647071 1947464 2026-06-18T03:52:09Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்க அலைப் பட்டை | previous = [[../நோவினேகல்‌ வினை/]] | next = [[../பக்கவாதம்/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947464 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்க அலைப் பட்டை | previous = [[../நோவினேகல்‌ வினை/]] | next = [[../பக்கவாதம்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="367" to="367" fromsection="200" tosection="200" /> 1keml826zo6h6csyceu9yh898k9ehiy அறிவியல் களஞ்சியம் 14/பக்கவாதம் 0 647072 1947465 2026-06-18T03:53:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கவாதம் | previous = [[../பக்க அலைப் பட்டை/]] | next = [[../பக்கவாதம்‌ (கால்நடை)/]] | notes = }} <pages index="அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947465 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கவாதம் | previous = [[../பக்க அலைப் பட்டை/]] | next = [[../பக்கவாதம்‌ (கால்நடை)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="367" to="367" fromsection="201" tosection="201" /> qj1kb3ec8vsc6d7gkpaddopv3c04rop அறிவியல் களஞ்சியம் 14/பக்கவாதம்‌ (கால்நடை) 0 647073 1947466 2026-06-18T03:54:43Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கவாதம்‌ (கால்நடை) | previous = [[../பக்கவாதம்/]] | next = [[../பக்கிக்‌ குருவி/]] | notes = }} <pages index="அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947466 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கவாதம்‌ (கால்நடை) | previous = [[../பக்கவாதம்/]] | next = [[../பக்கிக்‌ குருவி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="368" to="369" fromsection="202" tosection="202" /> iro37750bqfgcnr134y758mjy5eu68m அறிவியல் களஞ்சியம் 14/பக்கிக்‌ குருவி 0 647074 1947467 2026-06-18T04:14:56Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கிக்‌ குருவி | previous = [[../பக்கவாதம்‌ (கால்நடை)/]] | next = [[../பக்ரா–நங்கல்‌ அணைகள்‌/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947467 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்கிக்‌ குருவி | previous = [[../பக்கவாதம்‌ (கால்நடை)/]] | next = [[../பக்ரா–நங்கல்‌ அணைகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="369" to="369" fromsection="203" tosection="203" /> 20d02lhxxn4vyosexw0qh9jw1r6tdtz அறிவியல் களஞ்சியம் 14/பக்ரா–நங்கல்‌ அணைகள்‌ 0 647075 1947468 2026-06-18T04:15:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்ரா–நங்கல்‌ அணைகள்‌ | previous = [[../பக்கிக்‌ குருவி/]] | next = [[../பகிர்வான்‌/]] | notes = }} <pages index="அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947468 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பக்ரா–நங்கல்‌ அணைகள்‌ | previous = [[../பக்கிக்‌ குருவி/]] | next = [[../பகிர்வான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="370" to="370" fromsection="204" tosection="204" /> gfmpa3alqmg53u4v18jfpp1zc8f14sr அறிவியல் களஞ்சியம் 14/பகிர்வான்‌ 0 647076 1947469 2026-06-18T04:16:17Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகிர்வான்‌ | previous = [[../பக்ரா–நங்கல்‌ அணைகள்‌/]] | next = [[../பகுதி அலைகள்‌/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947469 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகிர்வான்‌ | previous = [[../பக்ரா–நங்கல்‌ அணைகள்‌/]] | next = [[../பகுதி அலைகள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="370" to="371" fromsection="205" tosection="205" /> e9z47bmyvw31jkm7js79i1tsl5stn2b அறிவியல் களஞ்சியம் 14/பகுதி அலைகள்‌ 0 647077 1947470 2026-06-18T04:17:08Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதி அலைகள்‌ | previous = [[../பகிர்வான்‌/]] | next = [[../பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947470 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதி அலைகள்‌ | previous = [[../பகிர்வான்‌/]] | next = [[../பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="371" to="373" fromsection="206" tosection="206" /> 4a8pi5c2zy5j3cfmensfccslwx7jsz1 அறிவியல் களஞ்சியம் 14/பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌ 0 647078 1947471 2026-06-18T04:17:54Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌ | previous = [[../பகுதி அலைகள்‌/]] | next = [[../பகுதி வகைக் கெழு/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947471 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌ | previous = [[../பகுதி அலைகள்‌/]] | next = [[../பகுதி வகைக் கெழு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="373" to="374" fromsection="207" tosection="207" /> dmfpxpzebtqpkeapv8wf27ou7rastba அறிவியல் களஞ்சியம் 14/பகுதி வகைக் கெழு 0 647079 1947473 2026-06-18T04:22:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதி வகைக் கெழு | previous = [[../பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌/]] | next = [[../பகு திறன்‌/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947473 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுதி வகைக் கெழு | previous = [[../பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌/]] | next = [[../பகு திறன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="374" to="374" fromsection="208" tosection="208" /> in82oydvlehxtl76kt2we01xgfdsa3o அறிவியல் களஞ்சியம் 14/பகு திறன்‌ 0 647080 1947475 2026-06-18T04:24:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகு திறன்‌ | previous = [[../பகுதி வகைக் கெழு/]] | next = [[../பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947475 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகு திறன்‌ | previous = [[../பகுதி வகைக் கெழு/]] | next = [[../பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="375" to="375" fromsection="209" tosection="209" /> 3i1flvjqvm0xu0bs3rkkwgfie9i928t அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை 0 647081 1947476 2026-06-18T04:25:20Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை | previous = [[../பகு திறன்‌/]] | next = [[../பகுப்பாய்வு (கணிதம்‌)/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947476 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை | previous = [[../பகு திறன்‌/]] | next = [[../பகுப்பாய்வு (கணிதம்‌)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="376" to="377" fromsection="210" tosection="210" /> aejypd5lawbrzwaeefbajv81ag73qep அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு (கணிதம்‌) 0 647082 1947477 2026-06-18T04:26:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு (கணிதம்‌) | previous = [[../பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை/]] | next = ../பகுப்பாய்வு (வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947477 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு (கணிதம்‌) | previous = [[../பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை/]] | next = [[../பகுப்பாய்வு (வேதியியல்‌)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="377" to="379" fromsection="211" tosection="211" /> a4cba5a8c2380tmlvrc50v1d70nwg6g அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு (வேதியியல்‌) 0 647083 1947479 2026-06-18T04:28:33Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு (வேதியியல்‌) | previous = [[../பகுப்பாய்வு (கணிதம்‌)/]] | next = [[../பகுமுறைச்‌ சார்பு/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947479 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுப்பாய்வு (வேதியியல்‌) | previous = [[../பகுப்பாய்வு (கணிதம்‌)/]] | next = [[../பகுமுறைச்‌ சார்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="379" to="385" fromsection="212" tosection="212" /> 0zmsre59vgcfbrkxqsgqbt4zmrm0245 அறிவியல் களஞ்சியம் 14/பகுமுறைச்‌ சார்பு 0 647084 1947481 2026-06-18T04:29:18Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுமுறைச்‌ சார்பு | previous = [[../பகுப்பாய்வு (வேதியியல்‌)/]] | next = ../பகுமுறை வடிவக்‌ கணிதம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947481 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுமுறைச்‌ சார்பு | previous = [[../பகுப்பாய்வு (வேதியியல்‌)/]] | next = [[../பகுமுறை வடிவக்‌ கணிதம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="386" to="386" fromsection="213" tosection="213" /> e50idmyxdeypf03fk6tdmes5v2npfy9 அறிவியல் களஞ்சியம் 14/பகுமுறை வடிவக்‌ கணிதம்‌ 0 647085 1947482 2026-06-18T04:30:33Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுமுறை வடிவக்‌ கணிதம்‌ | previous = [[../பகுமுறைச்‌ சார்பு/]] | next = [[../பங்கீட்டு விதி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947482 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பகுமுறை வடிவக்‌ கணிதம்‌ | previous = [[../பகுமுறைச்‌ சார்பு/]] | next = [[../பங்கீட்டு விதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="386" to="391" fromsection="214" tosection="214" /> 8g28g4adccboyc2kxzyg9aj1auzy9uq அறிவியல் களஞ்சியம் 14/பங்கீட்டு விதி 0 647086 1947483 2026-06-18T04:31:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பங்கீட்டு விதி | previous = [[../பகுமுறை வடிவக்‌ கணிதம்‌/]] | next = [[../பச்சை ஆமை/]] | notes = }} <pages index="அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947483 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பங்கீட்டு விதி | previous = [[../பகுமுறை வடிவக்‌ கணிதம்‌/]] | next = [[../பச்சை ஆமை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="391" to="391" fromsection="215" tosection="215" /> h0ywn16y9qsmlza3enh65rrgb965269 அறிவியல் களஞ்சியம் 14/பச்சை ஆமை 0 647087 1947486 2026-06-18T04:34:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை ஆமை | previous = [[../பங்கீட்டு விதி/]] | next = [[../பச்சைக் கிளி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947486 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை ஆமை | previous = [[../பங்கீட்டு விதி/]] | next = [[../பச்சைக் கிளி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="391" to="393" fromsection="216" tosection="216" /> sy4s4o4g7p4573j3ltvp2t2oje9b007 அறிவியல் களஞ்சியம் 14/பச்சைக் கிளி 0 647088 1947488 2026-06-18T04:34:52Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைக் கிளி | previous = [[../பச்சை ஆமை/]] | next = [[../பச்சை குத்துதல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947488 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைக் கிளி | previous = [[../பச்சை ஆமை/]] | next = [[../பச்சை குத்துதல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="393" to="395" fromsection="217" tosection="217" /> tv73o3udnorjbmwmam22dmy9r8qo6zg அறிவியல் களஞ்சியம் 14/பச்சை குத்துதல்‌ 0 647089 1947489 2026-06-18T04:35:28Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை குத்துதல்‌ | previous = [[../பச்சைக் கிளி/]] | next = [[../பச்சை குத்துதல்‌ (கால்நடை)/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947489 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை குத்துதல்‌ | previous = [[../பச்சைக் கிளி/]] | next = [[../பச்சை குத்துதல்‌ (கால்நடை)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="395" to="395" fromsection="218" tosection="218" /> 8wo8ojk21i1gddbjtvbgkys9guqt1t1 அறிவியல் களஞ்சியம் 14/பச்சை குத்துதல்‌ (கால்நடை) 0 647090 1947490 2026-06-18T04:36:36Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை குத்துதல்‌ (கால்நடை) | previous = [[../பச்சை குத்துதல்‌/]] | next = [[../பச்சைக்‌ குருவி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947490 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சை குத்துதல்‌ (கால்நடை) | previous = [[../பச்சை குத்துதல்‌/]] | next = [[../பச்சைக்‌ குருவி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="395" to="397" fromsection="219" tosection="219" /> pc7g3deok4s3y25ftfs1hm0gt2z48xm அறிவியல் களஞ்சியம் 14/பச்சைக்‌ குருவி 0 647091 1947491 2026-06-18T04:37:42Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைக்‌ குருவி | previous = [[../பச்சை குத்துதல்‌ (கால்நடை)/]] | next = [[../பச்சைப்‌ பயறு/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947491 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைக்‌ குருவி | previous = [[../பச்சை குத்துதல்‌ (கால்நடை)/]] | next = [[../பச்சைப்‌ பயறு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="398" to="399" fromsection="220" tosection="220" /> alkv2j1lf6ngzxmsv0d761jj7rg348h அறிவியல் களஞ்சியம் 14/பச்சைப்‌ பயறு 0 647092 1947493 2026-06-18T04:39:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைப்‌ பயறு | previous = [[../பச்சைக்‌ குருவி/]] | next = [[../பச்சைப் பாம்பு/]] | notes = }} <pages index="அறிவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947493 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பச்சைப்‌ பயறு | previous = [[../பச்சைக்‌ குருவி/]] | next = [[../பச்சைப் பாம்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="399" to="401" fromsection="221" tosection="221" /> ciu560b5191zlj327e0smzcqgz8sr2t அறிவியல் களஞ்சியம் 14/ப 0 647093 1947495 2026-06-18T04:50:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = ப | previous = [[../நோ/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="367" to="948" fromsection="ப" t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947495 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = ப | previous = [[../நோ/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="367" to="948" fromsection="ப" tosection="ப" /> cl8xozlkw8ufzr1id9rauztkt0hodej அறிவியல் களஞ்சியம் 14/பொருளடைவு 0 647094 1947499 2026-06-18T04:57:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பொருளடைவு | previous = [[../ப/]] | next = [[../கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)/]] | notes = }} <pages index="அறிவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947499 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = பொருளடைவு | previous = [[../ப/]] | next = [[../கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="949" to="958"/> tpof9szeq544n0h5sm0ldh8t7y1zcn5 அறிவியல் களஞ்சியம் 14/கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்) 0 647095 1947501 2026-06-18T05:00:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்) | previous = [[../பொருளடைவு/]] | next = ../கலைச்சொற்கள் (ஆங்கிலம்-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947501 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்) | previous = [[../பொருளடைவு/]] | next = [[../கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="959" to="963"/> 3obhlu5bscnaag04uptjl866oyyqnyv அறிவியல் களஞ்சியம் 14/கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்) 0 647096 1947502 2026-06-18T05:02:10Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்)) | previous = [[../கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)/]] | next = [[..//]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947502 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்)) | previous = [[../கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)/]] | next = [[..//]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="964" to="968"/> 4cs2iv96env93safzwxt5y7xlepikij 1947503 1947502 2026-06-18T05:02:52Z TI Buhari 4634 1947503 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = கலைச்சொற்கள் (ஆங்கிலம்-தமிழ்)) | previous = [[../கலைச்சொற்கள் (தமிழ் – ஆங்கிலம்)/]] | next = | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="964" to="968"/> cljvrk1i22288zns7uerz0ccujn9km3 அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நோ 0 647097 1947512 2026-06-18T05:29:15Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நோ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நோ</b>}} |- |width=25%|அறிவியல் களஞ்சியம் 14/நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு|நோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947512 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நோ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நோ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு|நோபல்‌, ஆல்‌ஃபிரட்‌ பெர்ன்ஹார்டு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்க் குறியியல்‌|நோய்க் குறியியல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்த்‌ தடுப்பியல்‌|நோய்த்‌ தடுப்பியல்‌]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்த் தடுப்பு முறைகள்‌|நோய்த் தடுப்பு முறைகள்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்த்‌ தடுப்பூசி|நோய்த்‌ தடுப்பூசி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌|நோய்‌ நுண்ணுயிரிக்‌ கடத்திகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்ப்‌ புலனாய்வு|நோய்ப்‌ புலனாய்வு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நோய்‌ விளைவிக்காதவை|நோய்‌ விளைவிக்காதவை]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நோயியல்‌, தாவர|நோயியல்‌, தாவர]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌|நோயுற்ற கால்நடைகளைப்‌ பேணுதல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நோவினேகல்‌ வினை|நோவினேகல்‌ வினை]] |- |} en1ic792z89474vi37u05d8xfng62re அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை ப 0 647098 1947516 2026-06-18T05:33:13Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—ப</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>ப</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/பக்க அலைப் பட்டை|பக்க அலைப் பட்டை]] |width=25%|[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947516 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—ப</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>ப</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/பக்க அலைப் பட்டை|பக்க அலைப் பட்டை]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/பக்கவாதம்|பக்கவாதம்]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/பக்கவாதம்‌ (கால்நடை)|பக்கவாதம்‌ (கால்நடை)]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/பக்கிக்‌ குருவி|பக்கிக்‌ குருவி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/பக்ரா–நங்கல்‌ அணைகள்‌|பக்ரா–நங்கல்‌ அணைகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகிர்வான்‌|பகிர்வான்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுதி அலைகள்‌|பகுதி அலைகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌|பகுதிப்படுத்தித்‌ தொகையிடல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுதி வகைக் கெழு|பகுதி வகைக் கெழு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகு திறன்‌|பகு திறன்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை|பகுப்பாய்வு, ஒளி உமிழ்வு முறை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு (கணிதம்‌)|பகுப்பாய்வு (கணிதம்‌)]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுப்பாய்வு (வேதியியல்‌)|பகுப்பாய்வு (வேதியியல்‌)]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுமுறைச்‌ சார்பு|பகுமுறைச்‌ சார்பு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பகுமுறை வடிவக்‌ கணிதம்‌|பகுமுறை வடிவக்‌ கணிதம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பங்கீட்டு விதி|பங்கீட்டு விதி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சை ஆமை|பச்சை ஆமை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சைக் கிளி|பச்சைக் கிளி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சை குத்துதல்‌|பச்சை குத்துதல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சை குத்துதல்‌ (கால்நடை)|பச்சை குத்துதல்‌ (கால்நடை)]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சைக்‌ குருவி|பச்சைக்‌ குருவி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/பச்சைப்‌ பயறு|பச்சைப்‌ பயறு]] | | |- |} 27pc7ml079oktpn7ibqzsw74sj3kwf7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/219 250 647099 1947529 2026-06-18T05:58:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 219 |bSize = 480 |cWidth = 205 |cHeight = 150 |oTop = 113 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|ஆனைமலைக் குடைவரை}} பாணியைப் பின்பற்றிப் பல திருக்கோய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|193|கோயில்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 219 |bSize = 480 |cWidth = 205 |cHeight = 150 |oTop = 113 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|ஆனைமலைக் குடைவரை}} பாணியைப் பின்பற்றிப் பல திருக்கோயில்களை எடுத்துள்ளனர். <b>பாண்டியர் காலம்:</b> பல்லவர்களுடைய சம காலத்தவர்களான பாண்டியர்கள், தமிழகத்தின் தென்பகுதியை ஆண்டபொழுது, மலைகளைக் குடை வித்து மண்டபக் கோயில்களை எடுபித்துள்ளனர். பல்லவர்களைக் காட்டிலும் பாண்டியர்கள் குடை வரைக் கோயில்களை மிகுதியாகவே எடுத்துள்ளனர். இவர்களுடைய கோயில்கள் மலையம்பட்டி, குடுமியான்மலை, திருமெய்யம், திருப்பரங்குன்றம், ஆனை மலை, கழுகுமலை முதலிய இடங்களிலுள்ளன. பல்லவர்கள் மாமல்லபுரத்தில் அழகே உருவான ஒற்றைக் கற்கோயில்களைச் செதுக்கி அமைத்தனர். அதுபோன்றே பாண்டியர்கள் கழுகு மலையில் ஒரே ஒரு ஒற்றைக் கற்கோயிலை எடுத்துள்ளனர். இக்கோயில் ‘வெட்டுவான்’ கோயில் என்று சொல்லப்படுகிறது. இக்கோயில் முற்றுப் பெறாமல் உள்ளது. பல்லவர்கள் ஒரு சிறுகுன்றைச் செதுக்கி அதையே கோயிலாக எடுப்பித்தனர். ஆனால், பாண்டியர்கள் ஒரு மலையின் ஒரு பகுதியை மட்டும் செதுக்கி, அப்பகுதியைத் தனியாக்கி, அதில் கோயிலைத் தோற்றுவித்தனர். அவ்வாறு எழுந்ததுதான் கழுகுமலை வெட்டுவான் கோயில். இக்கோயிலில் கண்கவர் சிற்பங்கள் உள்ளன. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் இது போன்று செதுக்கப்பட்டது தான். கழுகு மலைக் கோயிலின் அழகும் அமைப்பும் இதனைத் தென்னக எல்லோரா எனச் சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 219 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 136 |oTop = 143 |oLeft = 247 |Location = center |Description = }} {{center|மண்டகப்பட்டு}} பல்லவ பாண்டியர்களின் சமகாலத்தவர்களான அதியர்கள் காலத்தில் சோமன் என்னும் அதியேந்திரன் நாமக்கல்லில் நரசிம்ம பெருமானுக்கும், பள்ளி கொண்ட பெருமானுக்கும் இரு குகைக் கோயில்களை எடுத்துள்ளான். இரண்டு கோயில்களிலும் அழகிய சிற்பங்களுள்ளன. <b>சோழர் காலம்:</b> சோழர்களுடைய ஆட்சிக் காலத்தைத் தமிழகக் கோயில் வரலாற்றில் ஒருபொற் காலம் எனலாம். விசயாலயன் ஆட்சி முதல் முதலாம் இராசராசன் ஆட்சிவரை கோயிற் கட்டடக் கலை வரலாறு குறிப்பிடத் தக்கதாகவுள்ளது. பல்லவர்கால இறுதியில் கோயில்கள் எந்த அமைப்பில் அமைக்கப்பட்டனவோ அதே அமைப்பில் சோழர் காலத்திலும் பெரும்பாலான கோயில்கள் அமைக்கப்பட்டன. செங்கல்லால் அமைக்கப்பட்ட பல கோயில்கள் சோழர் காலத்தில் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. சோழர்காலக் கோயில்கள் கி.பி. 9, 10–ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டவை. அவை மிக்க உயரமில்லாவிட்டாலும், கலை அழகு மிகுந்தவை. அவைகளின் அடிப்பகுதியில், இராமாயண, சிவபுராணச் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.<noinclude> <b>வா.க. 8 – 13</b></noinclude> k8ig1opga4cdiw5g11t35maabjfmjxa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/220 250 647100 1947532 2026-06-18T06:04:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவை போன்ற சிற்பங்களைக் குடந்தைக் கீழ்கோட்டம், திருப்புறம்பியம், சடையார் கோயில், புஞ்சை முதலிய இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் காணலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|194|கோயில்‌}}</noinclude>அவை போன்ற சிற்பங்களைக் குடந்தைக் கீழ்கோட்டம், திருப்புறம்பியம், சடையார் கோயில், புஞ்சை முதலிய இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் காணலாம். இக்காலக் கோயில்களின் விமானச் சுவர்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில்களின் நுழைவாயில்களில் வாயில் காப்போர் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அகத்தியரின் சிற்பம் ஏதாவதொரு கோட்டத்தில் இடம் பெறுவதைக் காணலாம். சில கோயில்களில் அரசன் தேவியர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகக் குடந்தைக் கீழ்க்கோட்டம், சீனிவாச நல்லூர், திருவாரூர் முதலான கோயில்களைச் சுட்டலாம். தேவகோட்டங்களின் மேலே மகர தோரணங்கள் இடம்பெறுகின்றன. அழகே உருவான மகரதோரணங்களின் நடுவில் சிவனின் பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்காலத்திய சிகரங்கள் சதுரம், எண்பட்டை, வட்டம் ஆகிய வடிவங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தமிழகக் கோயிற் கலை வரலாற்றில் நார்த்தாமலைக் குன்றின் மேல் அமைந்துள்ள விசயாலய சோழீச்சுவரம், அமைப்பில் தனித்தன்மை வாய்ந்தது. இரண்டு சுவர்களைக் கொண்டு விளங்கும் இக்கோயிலின் வெளிச்சுவர் சதுரமாகவும், உட்சுவர் வட்டமாகவும் அமைந்துள்ளது. விமானத்தின் மேல் தளங்கள் சதுரமும் வட்டமுமாக அமைந்துள்ளன. இராசராசன் காலம் வரையில் கோயில்கள் மிகவும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டன. கூரைக்கு மேல் செங்கற்களால் கட்டப்பட்ட விமானங்கள் 30 அடி உயரத்தையே கொண்டிருந்தன. மேல் தளங்கள் செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்களும் 40 அடி உயரத்தை விஞ்சியதில்லை. இராசராசன் தஞ்சையில் எடுப்பித்த, பெருவுடையார் கோயில் ஓர் உன்னத கலைப்படைப்பு. தமிழகக் கட்டடக் கலையின் மாண்பையும், இராசராசனின் கலை ஆர்வத்தையும், சிற்பச் சிறப்பையும் ஓவியக் கலையின் உயர்ச்சியையும் இக்கோயில் உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதனைப் போன்றதோர் கலைநயம் சான்ற {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 220 |bSize = 480 |cWidth = 400 |cHeight = 296 |oTop = 274 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|நார்த்தா மலை}}<noinclude></noinclude> ltaiorhaz2469xrk4aha3mrqji0wa60 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/181 250 647101 1947537 2026-06-18T06:10:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புலவையுடையவராக விளங்கினார். இவர் இரத்தின பவானி, விசயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய புதினங்களை எழுதியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சின்னப்பா பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்னமனூர்|153|சின்னமனூர்}}</noinclude>புலவையுடையவராக விளங்கினார். இவர் இரத்தின பவானி, விசயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய புதினங்களை எழுதியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சின்னப்பா பிள்ளை, சி.வை"/> <section begin="சின்னமனூர்"/> {{dhr}} <b>சின்னமனூர்</b>, மதுரை மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இவ்வூரில் இராசசிம்ம பாண்டியனின் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, இச்செப்பேடுகள் ‘சின்னமனூர்ச் செப்பேடுகள்’ எனப்படுகின்றன. இராச சிம்ம பாண்டியன் தன் பட்டப்பெயரால் இவ்வூருக்கு ‘அரிகேசரிநல்லூர்’ எனப் பெயரிட்டு இவ்வூரை அந்தணர்களுக்குத் தானமளித்தான். முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டிலும், கோச்சடைய மாறனின் கல்வெட்டிலும், குலசேகர தேவரின் கல்வெட்டிலும் ‘அரிகேசரிநல்லூர்’ என இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் பெரிய தொரு சந்தை நகரமாகத் திகழ்ந்தது. இங்கிருந்து, நூல், துணி, சட்டிக்கிழங்கு, சாக்கு, மிளகு, இஞ்சி மஞ்சள் முதலிய பொருள்கள் மற்றைய ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்பண்டங்கள்மீது சுங்க வரி விதிக்கப்பட்டது. இவ்வணிகத்தில் ஈடுபட்டோர் நாலு நகரத்துப் பதினெண் விசயத்தார் என்னும் வணிகக் குழுவினரும், சோணாட்டு தளச்செட்டிகளும் ஆவர். இச்சந்தையிலிருந்து கிடைத்த வருவாயைச் சின்னமனூரிலுள்ள நடுவிற்கோயிலான பெருமாள் கோயில், இராச சிம்மேச்சுவரர் கோயில் ஆகிய கோயில்களில் திருவிழா, பூசை முதலியன நடத்துவதற்குச் செலவிட்டனர் என்னும் செய்தி கல்வெட்டில் உள்ளது. சீவல்லபனின் படைவீடு இவ்வூரின் ஒரு பகுதியாக விளங்கிய விக்கிரமபாண்டீச்சுரத்தில் அமைக்கப்பட்டது என்பதைச் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1278-79) கல்வெட்டால் அறிய முடிகிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் இரண்டாம் மாறவர்மனின் (கி.பி. 1250-65) ஆட்சிக் காலத்தில் சீவல்லபன் படைவீடு விக்கிரமபாண்டீச்சுரத்தில் அமைக்கப்பட்டது. எனவே, பாண்டியர்களின் ஆட்சிக்காலம் வரை சின்னமனூர் நற்செய் கைப்புத்தூர் எனவும், மந்திர கௌரவமங்கலம் எனவும், அரிகேசரிநல்லூர் எனவும் பெயர் பெற்றது எனவும், இதன் ஒரு பகுதி பின்னர் விக்கிரம பாண்டீச்சுரம் எனப்பெயர் பெற்றதெனவும் அறியமுடிகிறது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக இராணி மங்கம்மாள் ஆட்சியின்போது (கி.பி. 1689-1706) பாளையப்பட்டுள் ஒருவனாகிய சின்னமநாயக்கன் என்பவனுடைய பெயரால் இவ்வூர் சின்னமனூர் எனப்பெயர் பெற்றது. இவ்வூரின் அருகே அமைந்துள்ள உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் திரிசூலக் கல்வெட்டில் ‘சின்னம நாயக்கனூர்’ எனக் குறிக்கப்பட்டுள்ள செய்தியால் இவ்வூரின் மற்றொரு பெயர் ‘சின்னம நாயக்கனூர்’ என்பதை அறிய முடிகிகிறது. சின்னமனூரில் வரலாற்றுப் புகழ்பெற்ற இரண்டு கோயில்கள் உள்ளன. இப்பொழுது சிவகாமியம்மன் கோயில் என்று வழங்கப்படும் கோயிலின் பழைமையான பெயர் ‘திருப்பூலாந்துறை’யாகும். இக்கோயிலில் இராசேந்திர சோழனின் கல்வெட்டும், மாறவர்மன் குலசேகரதேவரின் கல்வெட்டும், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சோணாடு வழங்கிய சுந்தரபாண்டிய தேவரின் கல்வெட்டும், சடையவர் மன் வீரபாண்டிய தேவரின் கல்வெட்டும், மாறவர்மன் குலசேகர தேவரின் கல்வெட்டும் காணப்படுகின்றன. சின்னமனூரில் இடம்பெறும் மற்றொரு வரலாற்றுச் சிறப்புடைய கோயில் பெருமாள் கோயிலாகும். இங்குள்ள கல்வெட்டுகளுள் மூன்றாம் இராச சிம்மனின் கல்வெட்டுகளே பழமையானவை. இவ்வூரிலுள்ள நத்தமேட்டுப் பகுதிகளில் பெருங்கற்காலச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. <b>சின்னமனூர்ச் செப்பேடுகள்</b>: இச்செப்பேடுகள் பாண்டிய மன்னர்களின் பரம்பரை, ஆட்சிச்சிறப்பு பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. இச்செப்பேடுகள், சின்னமனூரிலுள்ள பெருமாள் கோயிலுக்கு மடைப்பள்ளி கட்டுவதற்காகத் தோண்டிய கடைக்காலில் கண்டுபிடிக்கப்பட்டன. சின்னமனூர்ச் செப்பேடுகள் சிறிய செப்பேடு எனவும், சின்னமனூர்ப் பெரிய செப்பேடு எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிறிய செப்பேட்டின் இடையில் சில ஏடுகள் காணப்படவில்லை. இச்செப்பேடு 8-11/12 அங்குல நீளமும் 3 அங்குல அகலமும் கொண்டது. இதில் மூன்று ஏடுகள் மட்டும் உள்ளன. இச்செப்பேடு கிரத்த எழுத்தில் வடமொழியிலும், வட்டெழுத்தில் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேடு அரிகேசர் என்பவரால் எழுதப்பட்டது. சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டை வழங்கிய மன்னன் இராசசிம்மன் என்பவனாவான். இவன் இதைச் சிங்கமங்கலத்தைச் சார்ந்த புழல் என்னுமிடத்திலிருக்கும்பொழுது வெளியிட்டான். இச்செப்பேட்டின் முதல் ஏடும் கடைசி ஏடும் கிடைக்கப்படவில்லை. இவ்இரண்டிற்குமிடையே ஏழு ஏடுகள் மட்டும் கிடைத்துள்ளன. இவை 10 அங்குல நீளமும் 3-3/8 அங்குல அகலமும் கொண்டவை. செப்பேட்-<noinclude></noinclude> 354vgyv7z5fe2duxtvfqycazv32mall பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/221 250 647102 1947542 2026-06-18T06:13:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாபெரும் கோயில் அந்நாளில் இந்தியாவில் கட்டப்படவில்லை. இக்கோயிலின் விமானம் உட்சுவர், புறச்சுவர் என இரு சுவர்களின்மேல் வியக்கத்தக்க அள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|195|கோயில்‌}}</noinclude>மாபெரும் கோயில் அந்நாளில் இந்தியாவில் கட்டப்படவில்லை. இக்கோயிலின் விமானம் உட்சுவர், புறச்சுவர் என இரு சுவர்களின்மேல் வியக்கத்தக்க அளவிற்குக் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளது. விமானத்தின் உயரத்திற்கும் அமைப்பிற்கும் ஏற்றாற்போல் பரந்த திருச்சுற்றும் திருச்சுற்றுமறலிகையும் அமைக்கப்பட்டுள்ளன. இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் தஞ்சைப் பெருங்கோயிலைப் போன்றதோர் கோயிலை எடுப்பித்துள்ளான். இது தஞ்சைக் கோயிலை நோக்க, உயரத்தில் சற்றுத் தாழ்ந்திருந்த போதிலும் கட்டடக் கலை நுணுக்குத்தில் சிறப்பு வாய்ந்தது. இக்கோயில் பல்வேறு உறுப்புகளை இணைத்துப் புதுமை மிக்கதாய்க் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டட நுணுக்கத்தைப் போலச் சிற்பங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன. இக்கோயிலின் விமானம் தஞ்சை விமானத்தைக் காட்டிலும் சற்று மாறுபட்ட அமைப்பில் எடுக்கப் பெற்றுள்ளது. விமானத்தின் கீழ்நிலை சதுரமாகவும், மேல்நிலைகள் எண்பட்டையாகவும், சிகரம் வட்டமாகவும் அமைக்கப்பட்டு அழகே உருவாக விளங்குகிறது. முதலாம் இராசேந்திரனுக்குப் பின்னர், முதலாம் குலோத்துங்கன் மேலைக்கடம்பூர் என்னுமிடத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர்போன்ற அமைப்புள்ள ஒரு கோயிலை எடுப்பித்துள்ளான். இரண்டாம் இராசராசன் தாராசுரத்தில் எடுத்துள்ள கோயில் சோழர் காலப் பெருங்கோயிலில் ஒன்றாகும். இங்கும் விமானம் ஓங்கி வளர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. சோழர்காலக் கோயில்களுள் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் கட்டப்பெற்ற கடைசி கோயில் மூன்றாம் குலோத்துங்கன் திரிபுவனத்தில் எடுப்பித்துள்ள ‘திரிபுவன வீரேச்சுரம்’ ஆகும். இக்கோயில் தஞ்சைப் பெருங்கோயிலைப் போன்ற அமைப்புடையது. பல்லவர்கள் சிறந்த சிற்பங்களை உண்டாக்கினர் என்றால், சோழர்கள் சிறந்த கட்டடக் கலையினை உருவாக்கினர் எனலாம். விமானங்கள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் உயரம் குறைவாக எடுக்கப்பெற்றுக் கோபுரங்கள் மிக உயரமாக எடுக்கப் பெற்றன. இராசசிம்மனால் மாமல்லையில் எடுக்கப் பெற்ற கடற்கரைக் கோயிலிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் உள்ள கோபுரங்கள் மிகப் பழமையானவை. இவ்விரு கோயில்களிலும் விமானம் உயரமாகவும் கோபுரங்கள் சிறியனவாகவும் எடுக்கப் பெற்றுள்ளன. பல்லவர்காலக் கோபுரங்கள் என்று குறிப்பிடுவதற்கு இவ்விரண்டு கோபுரங்களைத் தவிர வேறில்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 221 |bSize = 480 |cWidth = 259 |cHeight = 193 |oTop = 355 |oLeft = 105 |Location = center |Description = }} {{center|தாராசுரம்}} {{nop}}<noinclude></noinclude> dntdfl4qy55tq0u37284bbopr29mne3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/182 250 647103 1947565 2026-06-18T06:36:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டில் காணப்படும் கிரந்த எழுத்தில் வடமொழிச் சுவோதங்களும், வட்டெழுத்தில் தமிழ்ப்பகுதியும் இடம்பெற்றுள்ளன. வடமொழியில் உள்ளவை சிறப்பாகப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சின்னூல்|154|சினம்}}</noinclude>டில் காணப்படும் கிரந்த எழுத்தில் வடமொழிச் சுவோதங்களும், வட்டெழுத்தில் தமிழ்ப்பகுதியும் இடம்பெற்றுள்ளன. வடமொழியில் உள்ளவை சிறப்பாகப் பாண்டியர்தம் புகழ்பாடும் புராணக் கதைகளும் அக்கால மன்னர்கள், ஆட்சிப்பகுதி பற்றிய செய்திகளும் ஆகும். வடமொழியில் கூறப்பட்டவை தமிழ்ப் பகுதிகளிலும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்செப்பேடுகளின் வாயிலாகப் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாட்டுப் பிரிவுகள், அதிகார முறைமைகள், அரச நீதிகள் முதலியன தெளிவாகின்றன.{{Right|<b>இரா.ப.</b>}} <section end="சின்னமனூர்"/> <section begin="சின்னூல்"/> {{dhr}} <b>சின்னூல்</b>: காண்க: நேமிநாதம். <section end="சின்னூல்"/> <section begin="சின்னையச் செட்டியார், நா."/> {{dhr}} <b>சின்னையச் செட்டியார், நா.</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் இவர் சேலம் மாவட்டத்திலுள்ள பெண்ணாகரம் என்னும் ஊரைச் சேர்த்தவர், பெற்றோர்: நாகைய செட்டியார், மாறக்கம்மாள். 8-ஆம் வகுப்பு வரை கல்வி கற்ற இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவராக விளங்கினார். சென்னையில் டாக்டர் பி. வரதராசலு நாயுடு என்பவரால் தொடங்கப் பெற்ற தமிழ்நாடு இதழில் பணிபுரிந்தார். இவர் கலப்பு மணம் புரிவதை ஆதரித்தும் கைம்பெண்கள் மரணத்தை எதிர்த்தும் தொண்டு செய்தார், தீண்டாமையை ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டார். இவர் யோக சாதனை, யோகாசனப் பயிற்சி ஆகியவை பற்றிய கருத்துகளை விளக்கிப் பத்மசோதி என்ற இதழிலும் பிறஇதழ்களிலும் கட்டுரைகள் எழுதினார். இவர் ஆன்ம ஞானம் அல்லது அவசிய அறிவு, இன்பம் தரும் இயற்கை வழி, உண்மை ஒளி அல்லது உலக ஒழுக்கம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சின்னையச் செட்டியார், நா."/> <section begin="சின்னைய முதலியார், மணலி"/> {{dhr}} <b>சின்னைய முதலியார், மணலி</b>: இவர் ஒரு சிறந்த வள்ளல். இவர் தந்தையார் முத்துக்கிருட்டிண முதலியார், வள்ளல் சின்னைய முதலியார் அறிஞர்களையும் இசைப் புலவர்களையும் ஆதரிக்கும் இயல்புடையவர். இராமசுவாமி தீட்சிதர் என்ற இசை மேதை இவரிடம் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். தீட்சிதரின் இசைப்புலமையைப் பாராட்டி அவருக்குப் பொற்கிழி அளித்துப் பெருமைப்படுத்தினார். இவருக்குக் கருநாடக இசையில் பேரீடுபாடு உண்டு. இராமசுவாமி தீட்சிதரின் மகன் பாலசுவாமி தீட்சிதர் சென்னையில் தங்கியிருந்த மேனாட்டு இசையாசிரியர் ஒருவரிடம் ‘பிடில்’ (Fiddle) என்னும் நரம்பிசைக் கருவியை மீட்டக் கற்றுக் கொள்வதற்கு முதலியார் ஏற்பாடு செய்தார். சின்னைய முதலியார் பெயரில் அறக்கட்டளைகள் சில இன்றளவும் சென்னையில் செயற்பட்டு வருகின்றன. இவரது காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு.{{Right|<b>சா.உ.</b>}} <section end="சின்னைய முதலியார், மணலி"/> <section begin="சினம்"/> {{dhr}} <b>சினம்</b>: சினம் அல்லது கோபம் மனவெழுச்சி வகையைச் சார்ந்ததாகும். அச்சம், அன்பு, காதல், மகிழ்ச்சி, வருத்தம், துன்பம் ஆகியவைகளும் மனவெழுச்சிகளேயாகும். மனிதன் ஒரு மனவெழுச்சி உயிர்வகையைச் சார்ந்தவனாவான். மனவெழுச்சி என்று ஒன்று இல்லையெனில் மனித வாழ்க்கை சுவையற்றதே. அதனால்தான் அமெரிக்க நாட்டு உளவியல் வல்லுநர் மர்பி (Murphy, G.) என்பவர் மனவெழுச்சிகள், மனித வாழ்க்கையில் நறுமணப் பொருள்களாக இருக்கின்றன என்று கூறுகிறார். எனவே, சினம் மனிதர்களிடம் தோன்றும் முக்கிய மனவெழுச்சிகளுள் ஒன்று. வாட்சன் (Watson, J.B.) கி.பி.1878-1958) என்ற அமெரிக்க உளவியல் வல்லுநர் நடத்தைக் கோட்பாட்டை உருவாக்கினார். அவர் கருத்துப்படி அச்சம், சினம், அன்பு அல்லது காதல் ஆகிய மூன்றுமே அடிப்படை மனவெழுச்சிகள். மற்றவைகள் இந்த மூன்றும் வெவ்வேறு படித்தரத்தில் இணைந்தவைகளாகும் என்று கூறுகிறார். தினமும் அச்சமுந்தான் மனவெழுச்சிகளில் மிகுந்த எழுச்சி நிலையை உண்டாக்குகின்றன. சினமும் அச்சமும் ஒரு வழியில் தொடர்புடையவைகளேயாகும். மேலும், இவை இரண்டும் திடீர்த்தேவை மனவெழுச்சிகளாகும் (Emergency Emotions) மகிழ்ச்சியற்ற வகையைச் சார்ந்தவை. எந்த ஒரு பண்பாட்டிலும் குழந்தைகளை வளர்க்கின்ற முறையில் அச்சமும் சினமும் அடிக்கடி ஏற்படுகின்ற துலங்கல்களே என்றாலும், அச்சத் துலங்கலை விடச் சினத்துலங்கல்தான் மிகுதியாக ஏற்படக் காணலாம். பிரிட்சசு (Bridges) என்பவர் குழந்தைகளின்மீது நடத்திய ஆராய்ச்சிகளில், பிறக்கும்போது மனிதனிடம் சினமில்லை என்று கூறுகிறார். குறிப்பிட்ட சினத்தின் வடிவம் ஒன்று தோன்றும்போது அது ஏற்படுவதற்கான மூலத்துலங்கல் ஒன்று உண்டு. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் சினம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் வலி, சங்கடம், உடல் துன்பம் போன்றவைகளாகும். சினத்தின் புறவெளிப்பாட்டுக் குணப்பண்பு, மனிதனின் வயது அனுபவங்களுக்கேற்ப மாறி வருகிறது. குழந்தைப் பருவத்தில் பொதுவாக ஏற்படுகின்ற சினம் நான்கு குணப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது. மார்கன் (Morgan, 1934) என்பவரின் ஆராய்ச்சியின், முதலாவதாக இளம் குழந்தைப்பருவத்தில் மனிதன் முற்றிலும் தன் முனைப்பாக (Egocentric) இருக்கிறான். தன்னுடைய உடலுக்கு ஏற்படுகின்ற வலி, இடையூறு, அல்லது மனக்குலைவு ஆகியவை தன்<noinclude></noinclude> 5kjsea0d2p1zlvb738cj8j89z43gzxv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/222 250 647104 1947567 2026-06-18T06:38:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சோழர் காலத் தொடக்கத்தில் கோபுரங்கள் விமானங்களை விடச் சிறியவையாகக் கட்டப்பட்டன. மேலப்பழுவூர், கீழப்பழுவூர் முதலிய ஊர்களில் இக்காலக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|196|கோயில்‌}}</noinclude>சோழர் காலத் தொடக்கத்தில் கோபுரங்கள் விமானங்களை விடச் சிறியவையாகக் கட்டப்பட்டன. மேலப்பழுவூர், கீழப்பழுவூர் முதலிய ஊர்களில் இக்காலக் கோபுரங்களைக் காணலாம். இராசராசன் காலத்தில் விமானம் உயரமாகக் கட்டப்பட்டது; விமானத்தின் முன்னர் இரண்டு கோபுரங்கள் கட்டும் வழக்கம் ஏற்பட்டது. முதற்கோபுரம் உயரமாகவும் இரண்டாங் கோபுரம் முதற் கோபுரத்தினும் உயரக் குறைவாகவும் அமைக்கப்பட்டன. இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கோயிலின் நான்கு புறங்களிலும் கோபுரங்கள் எடுக்கும் மரபு தொடங்கியது. தில்லையில் கி.பி. 12, 13–ஆம் நூற்றாண்டில் நான்கு புறங்களிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. இக்கோபுரங்கள் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளமையால் ‘திருநிலை எழு கோபுரம்’ எனப் பெயர் பெற்றன. சோழர்களுக்குப் பின்னர் விசயநகர மன்னர்கள் கோயில்களில் உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். இவர்களுடைய காலத்தைக் கோபுரக் காலம் என்று கூறலாம். கோயில்களின் திருச்சுற்றுகளை அலங்கரிக்க இவர்கள் வானளாவும் கோபுரங்களை எடுப்பித்தனர். காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் உயர்ந்த கோபுரங்களைக் காணலாம். இக்கோபுரங்கள் 150 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரங்களைக் கட்டும் பணி உன்னத நிலையை அடைந்திருந்தது. விசய நகர மன்னர்களின் காலத்தில் கோயிலின் கூரைப் பகுதிகள் தாமரை மலர்போல் செதுக்கப் பெற்று, தாமரை இதழ்களைக் கிளிகள் அலகினால் கொத்துவது போல் அலங்கரிக்கப்பட்டன. இவர்களுடைய காலத்தில் கோயில்களில் முன் மண்டபம், நூற்றுக் கால் மண்டபம், கல்யாண மண்டபம் முதலியன கட்டப் பெற்றன. காஞ்சியிலும் வேலூரிலும் தோற்றுவிக்கப்பட்ட மண்டபங்கள் மிக நுண்ணிய கலை நுணுக்கத்துடன் கூடிய தூண்களைக் கொண்டவை. சுருங்கக் கூறின், விசயநகர மன்னர்கள் கோபுரங்களையும் மண்டபங்களையும் எடுத்துத் தமிழகக் கோயில் கட்டடக் கலைக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளரெனலாம். தமிழகத்தைத் தவிர இவர்களின் தலைநகரான அம்பி (விசயநகரம்) என்னும் இடத்தில் உள்ள அசரா இராமசாமி கோயில், விட்டோபா கோயில் போன்றவை விசய நகரக் கோயிற் கட்டடக் கலைக்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன. விசய நகர மன்னர்களுக்குப் பின்னர் நாயக்கர்கள் கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினார்கள். திருமலை நாயக்கர் மதுரையில் பெரிய கோபுரங்களை எழுப்பி, வண்ணச் சுதை உருவங்களால் அவற்றை அலங்கரித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள வசந்த மண்டபம் நாயக்கர் காலக் கட்டடக் கலையின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. பாவையர்கள் அகல் விளக்குகள் ஏந்தி நிற்கும் சிற்பங்கள் இங்குள்ள மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபம் நாயக்கர்கால அற்புதப் படைப்பாகும். நாயக்கர்கள் உயர்ந்த கோபுரங்கள் கட்டுவதிலும் மண்டபங்கள் அமைப்பதிலும் ஈடுபட்டனர். தமிழகக் கோயில்களின் கட்டடக் கலைச் சிறப்பும் சிற்பக் கலைச்சிறப்பும், சாவா, பாலி, போர் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 222 |bSize = 480 |cWidth = 425 |cHeight = 155 |oTop = 412 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|திருவண்ணாமலைக் கோபுரம்}}<noinclude></noinclude> p1nsknvcl7r7ahi09mud2nnli1ah7h2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/183 250 647105 1947572 2026-06-18T06:49:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னுள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்படுமானால் அது சினத்திற்குக் காரணமாகிறது. அவன் முற்றிலும் தன்னலமுடையவனாகவே (self-centred) இருக்கிறான், இரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சினம்|155|சினம்}}</noinclude>னுள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்படுமானால் அது சினத்திற்குக் காரணமாகிறது. அவன் முற்றிலும் தன்னலமுடையவனாகவே (self-centred) இருக்கிறான், இரண்டாம் கட்டத்தில் தன்முனைப்பாக மட்டுமன்றி உடல் துன்பத்தை முற்றிலும் பொறுத்துக்கொள்ள முடியாதவனாக இருக்கிறான். அவன் பசியோடிருக்கும்போதோ, வலி, உடல்சார்ந்த துன்பம் ஏதும் ஏற்படும்போதோ அவன் அதைச் சினம் கொண்டு வெளிப்படுத்தும்போது வீறிட்டுக் கத்துகிறான்; கால்களைத் தரையில் போட்டு உதைக்கிறான்; உடலை வளைத்துச் சுருட்டுகிறான். மூன்றாவதாக, எதையும் மிக அதிகமாக வேண்டுமென்கிறான். தன்னுடைய உடல் துன்பத்தைச் சிறிதும் பொறுத்துக்கொள்ள முடியாதென்றும், உடனடியான உதவி வேண்டுமென்றும் பிடிவாதம் செய்கிறான். தன்னுடைய தேவைகளின் நிறைவைத் தள்ளி வைக்க முடிவதில்லை. நான்காவதாக, அவனுடைய சினம் வெளிப்படுகின்ற நடவடிக்கைகளில் மிகுந்த சீற்றமும் வன்முறையும் காணப்படுகின்றன. சினத்தின் இந்த நான்கு குணப் பண்புகளெல்லாம் சிறுவர்களிடம் மட்டும் காணப்படுபவைகளல்ல. இவ்வகைச் சினங்கள் குமரப் பருவத்திலும், வயது முதிர்த்தவர்களிடத்திலும் காணப்படுகின்றன. அச்சமயத்தில் அவர் மனவெழுச்சிப் பக்குவமற்றவர் என்று கூறப்படுகிறார். சினத்தின் வன்முறை சார்ந்த திடீர் எழுச்சி சிறுவர்களிடம் மிகவும் பொதுவாகும். குழந்தைப் பருவத்திலும் பள்ளிக்குச் செல்லும் முன் பருவத்திலும் ஒரே தன்மையான சின வெளிப்பாடுகளிருப்பதாக மார்கன் கூறுகிறார். சினத்தைத் தோற்றுவிக்கும் மன முறிவுச் சூழ்நிலைகள் எல்லாம் ஒரே தன்மையானவையல்ல, சினத்தைத் தூண்டும் சூழ்நிலைகளில் சிறுவர்கள் சினம் கொள்ளாமல் இருப்பதுமுண்டு. இது அவர்கள் வளர்த்துவரும் குழ்நிலையையும் வளர்த்துக்கொண்டுள்ள உணர்ச்சி இயல்புகளையும் (Temperaments) குடும்பச் சூழ்நிலையையும் பொறுத்திருக்கிறது. சினத்தை விவரிக்கும் பகைமையுணர்ச்சியையும் (Hostility) சேர்த்தே உளவியலார் கூறுகின்றனர், இவ்விரண்டும் ஒரு காரண அடிப்படையையே கொண்டிருக்கின்றன. இவ்விரண்டும் பெரும்பாலும் ஊக்கிகளின் செயற்குலைவுகள், உணர்ச்சிச்சிதைவுகள் அவமதிப்புகள், பயமுறுத்தல்கள் முதலியவைகளுக்கு எதிர் வினைகளாகின்றன. பொதுவாக, ஒருவர் தம்முடைய குறிக்கோளையடையும் முயற்சியில் தடை களை உண்டாக்கி, ஊக்கிகளைச் செயலிழக்கச் செய்தால் எந்த வயதினருக்கும் சினம் ஏற்படுகிறது. சினம் ஒரு நிலைப்பட்டதன்று. பரந்த அளவுக்கு மாறுபடுந் தன்மையது. மனமுறிவு அல்லது எண்ணக் குலைவு, செயற்குலைவு ஆகியவை காரணமென்றாலும் பல உளவியற் காரணங்களுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தையின் விளையாட்டில் யாரேனும் தலையிட்டால் அவன் சினம் கொள்கிறான் ஒருவருடைய விவாதத்தை மற்றவர் புரிந்து கொள்ளாதபோதும், சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுகின்றபோதும் எந்த மனிதனும் சினம் கொள்கிறான். மனிதர்கள் மட்டுமன்றிப் பறவைகளும் மிருகங்களும் சினம்கொண்டு எதிரிகளைத் தாக்குகின்றன. கோழியின் குஞ்சுகளைக் கோழியின் எசமானி தொட்டாலும் கோழி சினம்கொண்டு தாக்குகின்றது. பூனைக்குட்டியைத் தொட்டால் தாய்ப் பூனைக்குச் சினம் ஏற்படுகிறது. எனவே, சினம் ஒரு மனவெழுச்சித் துலங்கலாகும். அது தாக்கும் செயலில் வெளிப்படலாம். கடுமையான சொல்லிலும் வெளிப்படலாம். சினம், பெருஞ்சினம் (Rage) என்று கூறப்படும்போது அது உடலாற்றல் முழுவதையும் ஒன்றுதிரட்டும் வகையைச் சார்ந்ததோர் மனவெழுச்சியாகிறது. இது ஒரு மனிதனைத் தீவிரமான செயல்வினைக்கு உந்துகிறது. சண்டையிடுத்துக்கான இயல்பூக்கத்தின் (Combat Instinct) விளைவாகவே சினம் அமைகின்றது என்று இயல்பூக்கக் கொள்கையாளரான வில்லியம் மெக்டூகல் (William Mc Dougall, கி.பி. 1871- 1938) என்பவர் கூறுகிறார். சினம், இறப்பு இயல்பூக்கத்தின் (Death Instinct) ஒரு படிவம் என்று சிக்மன் பிராய்டு (Sigmund Freud, கி.பி. 1856-1939) என்பவர் கூறுகிறார். சினம் மரபுநிலைவாகவும் அமைகிறது; பகைவர்களுடன் சண்டையிட்டு அவர்களை அழிக்கும் மரபுவழியில் அமையும் ஒரு துடிப்பாகவும் அமைகிறது. மனமுறிவு-ஆக்கிரமிப்பு, புனைக் கொள்கையின்படி (Frustration-Aggression Hypothesis) சினம் என்னும் மனவெழுச்சி, மனிதன் ஏதேனும் ஒருகுறிக்கோளை நாடும் நடவடிக்கையில் சந்திக்கின்ற மனமுறிவினால் ஏற்படுகிறது என்பதாகும். மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் பல சிறு சிறு மனமுறிவுகளைச் சந்திக்கிறான். அப்பொழுதெல்லாங் கூடஇத்தகைய சினங்களைக் கொண்டிருக்கலாம். சினம் சில இடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனவெழுச்சியாவும் இருக்கிறது. விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டி விளையாட்டுகளில் மிகவும் மூர்க்கத்தனமாக விளையாடுகிறவர்கள் வெற்றி பெறுகின்றனர். விளையாட்டு மைதானத்திலும், போர்முனையிலும் கடல் சார்ந்த போட்டிகளிலும் சினம் முக்கிய பங்கு கொண்டிருக்கிறது. நாகரிகம் முதிர முதிர, மனிதர்கள் மனவெழுச்சிகளை மறைக்கக் கற்றுக்கொள்கின்றனர். சினம், அச்சம், அன்பு முதலியவை தனித்தனி மனவெழுச்சிகளே என்றாலும் அவைகளைக் கோடிட்டுப் பிரித்தறிதல் கடினம். எப்பொழுது சினம், அச்சம், அன்பு ஆகியவை தோன்றி எப்பொழுது மறைகின்றன என்று கூறமுடியாது. சினமோ அச்சமோ மிகவும் செறிவாக<noinclude></noinclude> iujck95gww5as8nm22gnede4vkm6blc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/223 250 647106 1947573 2026-06-18T06:52:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 223 |bSize = 480 |cWidth = 214 |cHeight = 201 |oTop = 69 |oLeft = 13 |Location = center |Description = }} தஞ்சைப் பெரிய கோயில் சுப்பிரமணியர் சந்நிதினியோ, பர்மா, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌|197|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 223 |bSize = 480 |cWidth = 214 |cHeight = 201 |oTop = 69 |oLeft = 13 |Location = center |Description = }} தஞ்சைப் பெரிய கோயில் சுப்பிரமணியர் சந்நிதினியோ, பர்மா, மலாயா, இந்தோனேசியா, சயாம், கம்போடியா முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி விளக்கமுற்றன. சாவாவிலுள்ள போராபுதூர் புத்தர்கோயிலும் (கி.பி. 750–850), கம்போடியா, அங்கோர் தோம் ஆகிய இடங்களிலுள்ள சிவன் கோயிலும் (கி.பி. 802–820), அங்கோர்வாட்டுப் பெருமாள் கோயிலும் (கி.பி. 1110–1150) தமிழகக் கோயிற் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சியின் சிறப்பையும் வளத்தினையும் விளக்குவனவாக உள்ளன. தமிழகத்தின் பழம்பெரும் நாகரிகக் கூறுகளையும், பண்பாட்டு நலங்களையும் கலை, மொழி, உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்திய நாட்டுக் கோயிற் கட்டடக் கலை அமைந்துள்ளமை பாராட்டிற்குரியதாகும். {{Right|<b>அ.அ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Brown, Percy,</b> Indian Architecture–Buddhist and Hindu Periods, Bombay, 1942. <b>Coomaraswamy, A.,</b> History of Indian and Indonesian Art, New York, 1927. <b>Soundararajan, K.V.,</b> Indian Temple Style, Delhi, 1970. <section end="கோயில்"/> <section begin="கோயில் திருப்பண்ணியர் விருத்தம்"/> {{dhr}} {{larger|<b>கோயில் திருப்பண்ணியர் விருத்தம்</b>}} என்னும் நூல் நம்பியாண்டார் நம்பிகளால் அருளிச் செய்யப்பட்டது. அவர் காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டினிறுதியும் 10–ஆம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும். இந்நூல், பதினோராம் திருமுறையில் உள்ள 40 நூல்களில் 32–ஆம் நூலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. விருத்தம் என்னும் பெயர் கட்டளைக் கலித்துறைக்கும் அக்காலத்து வழங்கி வந்திருப்பது இந்நூற் பெயரிலிருந்து தெரிகிறது. இந்நூலில் 70 பாக்கள் உள்ளன. அவை யாவும் கட்டளைக் கலித்துறையே. கோயில் என்பது சைவசமயத்தில் சிறப்பாகச் சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரத்திலுள்ள பெருமானைப் பற்றிப் பண்ணாலியன்ற பாடல்களால் பரவிப் போற்றும் இந்நூல் கோயில் திருப்பண்ணியர் விருந்தம் என வழங்கப்பெற்றது. அது சாம்பல் சாம்பர் என்றாற் போன்ற இலக்கணப் போலியாய் அமைந்தது என்பர் அறிஞர். இந்நூல் அந்தாதியாப்பில் பொருந்தி வந்துள்ளது. மேலும், இந்நூல் முதற் செய்யுளில் நெஞ்சம் எனத் தொடங்கி இறுதிச் செய்யுளில் நெஞ்சமே என்று முடிந்து மண்டலித்தும் வந்துள்ளது. இத்நூலின் ஆசிரியர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் பலரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சுந்தர மூர்த்தி சுவாமிகள், கழறிற்றறிவார், கண்ணப்பர், சாக்கியர், அமர்நீதி நாயனார், கலிக்காமர் முதலியோரின் பத்திச் சிறப்பினை இந்நூலில் காணலாம். அகப்பொருள் துறை அமைந்த பல பாடல்களும் இதன்கண் உள்ளன. விதிப்படி பத்தியோடு வழிபடு வார்க்கல்லது பல நூல்களைப் படித்து அதனால் கல்விச் செருக்கோங்கியவருக்கு அரனருள் வாய்க்காது என்பதை, ‘ஆகமிகர்க்கு அல்லால், புத்தகப் பேய்களுக்கு எங்குத்ததோ அரன் பொன்னடியே’ (53) என இந்நூலாசிரியர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். (ஆகமிகர்–ஆகமத்தின்படி சமய முறையாக வழிபடுபவர்) பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச் சந்தன் கொடுக்க அதுவுந் திருவமிர்தாகியதே (26) எனச் சேந்தனார் பத்திச் சிறப்பை இவ்வாசிரியர் போற்றுகிறார். ‘திருவாசகச் சிறப்பினை முற்றும் உணர்ந்த திருச்சிற்றம்பலவனைப் பற்றித் திருவாதவூர் பாடிய திருக்கோவையாரின் பெருமையை அறியாதார் வேறு கோவைகள் பாடிக் கழிகின்றனரே’ என, மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார்ச் சிறப்பினை இந்நூலாசிரியர் உளமாரப் பாராட்டுகிறார் (58). நீறு பூசிய மேனியனாய் இறைவன் திருவடியிலேயே தன் முடியை வைத்து அவன் திருவருளையே கண்ணாகக் கொண்டு நின்ற பெரிய அன்பின் வரகுண தேவராய<noinclude></noinclude> 7u8c4f0fb4uwi93rpg4xbg7kbd9wtc7 பக்கம்:கலைக்களஞ்சியம் 9.pdf/40 250 647107 1947574 2026-06-18T06:53:47Z TVA ARUN 3777 1 txt 1947574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ லாமா மங்கோலிய இளவரசனால் ஐந்தாம் தலாய் லாமாவிற்கு திபெத்தை ஆளும் உரிமை கிடைத்தது. அது முதல் லாமாக்களே நாட்டின் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மகாயான பெளத்தமதக் கொள்கைக்குச் சிறிதே வேறுபாடுள்ள இக்கொள்கை லாமா மதம் (Lamaism) எனப்படும். இதுவே திபெத்திலுள்ள மக்களிற் பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் சமயம் லாமா (Llama) பாலூட்டிகளிலே ஒட்டகக் குடும்பத்தைச் சேர்த்த ஒரு விளங்கு. இக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு விலங்குகள் தென் அமெரிக்காவில் வாழ்கின்றன. ஒன்று அல்பாக்கா (த.க.), மற்றொன்று லாமா. லாமா அல்பாக்காவை விடப் பெரியது. இதற்குத் திமில் என்னும் உறுப்பு இருப்பதில்லை. இது தோளருகே -5அடி உயரயிருக்கும். இதன் உடல் 4-5 அடி நீளமிருக்கும். இது பெரு, பொலிவியா முதலிய நாடுகளில் உள்ளது. அங்கு உயர் மலைகளில் வளரும் செடி, புதர், லைக்கென் [[லாமா]] முதலிய தாவரங்களைத் தின்னும். இது பல நாட்களுக்கு நீர் உண்ணாமல் இருக்கக்கூடும். இது உண்ணும் தாவரங்களிலுள்ள நீரே இதற்குப் போதுமானதாகும். லாமா நெடுங்காலமாக அல்பாக்காவைப் போலவே வளர்ப்பு விலங்காக இருந்து வருகிறது. இதை அந்நாட்டு மக்கள் பொதி சுமக்கும் விலங்காகப் பயன்படுத்துவர். ஆயிரக்கணக்கான லாமாக்களை உயர் மலைகளில் சாலைகள் அமைப்பதற்கும், வேறு பொறியியல் வேலைகளை நடத்துவதற்கும் சாமான்களைச் சுமந்து செல்லப் பயன் படுத்துகின்றனர். பாறையான இடங்களிலே இது எளிதாக வழுக்காமல் நன்றாகக் காலை ஊன்றி நடந்து போகும் ஆற்றலுடையது. இது பாரத்தையும் அதிக வேலையையும் பொறுக்கக்கூடியது. ஒன்று ஓர் அந்தர் (112 ராத்தல்) பாரம் சுமக்கும். ஆயினும் அதிக பாரம் ஏற்றிவிட்டால் படுத்துக்கொள்ளும். என்ன செய்தாலும் எழுந்திருக்காது. இதற்குக் கோபம் வந்தால் ஒரு வித நாற்றமுள்ள இதன் எச்சிலைத் தொந்தரவு கொடுக்கும் பிராணிமீது துப்பும். அதிக கோபமானால் வாந்தி யெடுத்துக் கக்கவும் செய்யும். லாமாவின் மயிர் முரடானது. அதிலிருந்து பெரு முதலிய நாட்டு மக்கள் ஆடை நெய்வார்கள். லாமா ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். லாமார்க்கு லாமார்க்கு (Lamarck 1744-1829) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி. டார்வின் (த.க.) இனங்களின் தோற்றம் (1859) என்னும் நூலை வெளியீடுவதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே (1809) உயிரினங் தனியாகப் படைக்கப் கள் ஒவ்வொன்றும் தனித் பட்டவையல்ல; அவை தோன்றின காலமுதல் மாறா மல் ஒரே சீராக இருப்பன வல்ல; காலப்போக்கிலே அவற்றுள் மாறுபாடுகள் ஏற்படுகின்றன; இவ்வித மாறுபாடுகளால் புதிய இனங்கள் உண்டாகின்றன; முன்னிருந்த எளிய இனங் களிலிருந்து சிக்கலான புதிய இனங்கள் உண்டாகின்றன என்னும் பரிணாமக் கொள் கையை வெளியிட்டவர். பார்க்க: பரிணாமம். லாமார்க்கு லாமார்க் பிக்கார்டி என் னும் ஊரில் 1744 ஆகஸ்டு முதல் நாளில் பிறந்தார். இவருடைய தந்தை ஓர் ஏழைப் பிரபு. அவர் தம் மகன் ஒரு பாதிரியாக வேண்டுமென விரும்பி ஏமியென்ஸ் என்னும் ஊரி லுள்ள கத்தோலிக்கப் பாடசாலையில் கல்வி பயிற்று வித்து வந்தார். அக்கல்வியிற் பிள்ளைக்கு விருப்பமில்லை. லாமார்க்குக்குப் பதினேழு ஆண்டுகளானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போது லாமார்க் பாடசாலையை விட்டு பிரெஞ்சுப் படையில் சேர்ந்தார். அப்போது ஏழாண்டுப் போர் (Seven Years War) நடந்து கொண்டிருந்தது. லாமார்க் படையில் சேர்ந்த மறு நாளே இவரது வீரம் விளங்குவதற்கு ஒரு வாய்ப்பு உண்டாயிற்று. அன்று நடந்த ஒரு சண்டையில் இவரிருந்த படைப் பகுதிக்குரிய தலைவர் எல்லோரும் மடிந்தனர். இளைஞரான லாமார்க் ஆட்களையெல்லாம் சிதறிப்போகாமல் திரட்டி, உதவி வந்து சேரும் வரை யில் தங்கள் இடத்தை விடாமல் காத்தார். இவ்வீரச் செயலுக்காக இவரை விரைவில் ஓர் உயர் பதவியில் நியமித்தனர். போர் முடிந்தபிறகு இவர் உடல் நலம் குன்றினமையால் படையை விட்டு விலகிக் கொண்டார். வடையை இவருக்குக் கிடைத்த மிகச் சிறிய ஓய்வுச் சம்பளத் பயின்றார். நான்கு ஆண்டுகள் இத்துறையில் பயின்று, தைக் கொண்டு பாரிசுக்குச் சென்று மருத்துவக் கல்வி பிறகு அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த ஐஸ்ஸியூ (Jus sieu) என்னும் தாவர விஞ்ஞானியிடம் தாவரவியல் கற்கத் தொடங்கினார். இவர் பிரெஞ்சு தேசத்து மர ஆராய்வதில் ஆர்வங்கொண்டிருந்தார். 1778-ல் பிரெஞ்சு மரவடை (Florae Francaise) என் னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் இவர் தாவ ரங்களை ஓர் எளிய புதிய முறையில் பாகுபாடு செய் தார். கவைத்தல், கவைத்தலாகச் (Dichotomous) செல்லும் அம்முறையால் மாணவர் தாவரங்களை எளி தாக வகைப்படுத்தி, அவற்றின் இனங்களைத் தெளியக் கூடியதாயிற்று. இந்நூலை வெளியிடுவதற்கு லாமார்க் குக்குப் பொருள் வசதியில்லை. அக்காலத்தில் புவோன் (Buffon 1707-1768) என்னும் இயற்கை விஞ்ஞானி லாமார்க்குக்கு அரசாங்கத்தார் உதவி செய்வதற்கு ஏற்பாடு பண்ணினார். புவோன் மற்றொரு வகையிலும் லாமார்க்குக்கு உதவினார். தம்முடைய மகன் ஐரோப்<noinclude></noinclude> 3oumdo8ko9syx9wb3h4wjxkgivtsxwe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/184 250 647108 1947575 2026-06-18T07:01:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருந்தால்தான் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தறிய முடியுமென்று கிளர்ச்சிக் கொள்கையாளர் (Activationists) கூறுகின்றனர். சினத்தின் வெளிப்பாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சினாய் மலை|156|சினாய் மலை}}</noinclude>இருந்தால்தான் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தறிய முடியுமென்று கிளர்ச்சிக் கொள்கையாளர் (Activationists) கூறுகின்றனர். சினத்தின் வெளிப்பாடு பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுகிறது. எனவே, சினத்தின் எந்த நிலையும் உலகம் முழுவதும் ஒரே தன்மையாக இருப்பதில்லை. சினம் மிகவும் செறிவாக இருக்குமானால் அது உடலுக்கு ஊறு செய்கிறது; சமநிலையைச் சிதைக்கிறது. தானியங்கு நரம்பு மண்டலத்தின் (Autonomous Nervous System) ஒரு பகுதியான ஒத்துணர்வு நரம்பு மண்டலம் (Sympathetic Nervons System) செயலில் ஈடுபடுகிறது. உடல் துடிக்கிறது, நாடித்துடிப்பு மிகுகிறது, குருதியழுத்தம் மிகுதியாகிறது. சுவாசங்கள் வேகமாகச் செயற்படுகின்றன. குருதியோட்டம் தசைதார்களில் பெருகுகிறது. செறிமானம் தடைபடுகிறது, கண்கள் சிவக்கின்றன, இயல்பான நிலையைவிட உடலில் செயலாற்றல் மிகுகிறது. இந்தநிலையில் சினம் ஒரு உளவியல் ஊக்கியாகவும் செயற்படுகிறது. இது சக்தியை ஒன்றுதிரட்டித் தீவிர நடவடிக்கையில் ஈடுபடுத்திக் குறிக்கோளை வெற்றியடையவும் செய்கிறது.{{Right|<b>மு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Arnold, M.B.,</b> Emotion and Personality, Columbia University Press, New York, 1980.<br> <b>Kendler, H.H.,</b> Basic Psychology, Metheuen and Co. Ltd., London, 1963.<br> <b>McDougall, W.,</b> An Outline of Social Psychology, Metheuen, London, 1935.<br> <b>Morgan, C.T.,</b> Physiologicai Psychology, Megraw- Hill Book Co., New York, 1936. <section end="சினம்"/> <section begin="சினாய் மலை"/> {{dhr}} <b>சினாய் மலை</b>: எகிப்து, இசுரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள முக்கோண வடிவமான முந்நீரகம் சினாய் மலை என்ற இடமாகும். இவ்விடத்திற்கு வடக்கே மத்திய தரைக்கடல் அமைந்துள்ளது. சூயசுக் கால்வாயும், சூயசு வளைகுடாவும் மேற்கில் அமைந்துள்ளன. இதன் தென்கிழக்கில் அகாமா வளைகுடா அமைந்துள்ளது. பொதுவாக நோக்குங்கால், இப்பகுதி ஆசியாவைச் சேர்ந்தது எனலாம். சியல்முறையில் பார்க்கும் போது, இது ஐக்கிய அரபுக் குடியரசு என்று சொல்லப்படும் எகிப்தின் பகுதியாகும். அகாடியாவின் தெய்வமான ‘சின்’ என்ற பெயரிலிருந்து ஏற்பட்டது ‘சினாய்’ என்பது. சினாய்ப் பகுதியில் பழம் பெரும் பாறைகள் உள்ளன. இங்கு மிக உயர்ந்த மலைகளும் உள்ளன. சுருங்கக்கூறின், இது பாறைகளும் மரங்களும் அடர்ந்த பகுதியாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 184 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 118 |oTop = 33 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|சினாய் மலை}} சினாய்ப் (Sinai) பகுதியின் பரப்பளவு 60,714 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 10, 104(1976). இதன் தலைநகர் அல்அரிசு (Al-Arish). இப்பகுதியில் விளங்குகளைக் காண்பது அரிதாகும். இதன் தட்பவெப்பநிலை உடல் நலத்திற்கு உகந்ததாக அமைந்துள்ளது. மலைப்பகுதிகளாக இருப்பதால், இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. கோடைக் காலங்களில் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெயில் கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளது. மழைக் காலங்களில் பெரும் வெள்ளச் சேதங்கள் ஏற்படுகின்றன. மக்கள் கிணறுகளின் மூலம் குடிதண்ணீர் பெறுகிறார்கள். காட்டுப்பகுதியான இவ்விடத்தில் சிறுத்தை, காட்டுப்பூனை, நரி, முயல் போன்றவை நடமாடுகின்றன. சினாய்ப் பகுதியின் மக்கள் ‘பெது’ (Bedu) அல்லது ‘பெரிதாயின்’ இனத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் ‘சாவாலிகா’ என்றும், ‘தெராபின்’ என்றும் இரு பிரிவாக உள்ளனர். இப்பகுதியில் வண்டிகள் செல்வது கடினம், போக்குவரத்து குறைந்தே காணப்பட்டதால், இப்போது அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சினாய் மலை பழம் பெருமை வாய்ந்ததாகும். இங்குத்தான் மோசசு (Moses) என்பாரின் பணி தொடங்கியது. இங்குப் புனித காதரைன் மடாலயம் கட்டப்பட்டது. ஏ.எச். கார்டினர், ஈ.டி. பீட்டு என் போர் அப்பகுதிவாழ் மக்களின் தொடக்க எழுத்து முறைகளை வெளியிட்டுள்ளனர். உரோமப் பேரரசு காலத்தில் அராபிய மாநிலமாகச் சில காலம் இது இருந்துவந்தது. கிறித்தவ ஊழியின் தொடக்க காலத்-<noinclude></noinclude> pkrpchus1nty72xqrwz210kjb8qgw2h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/185 250 647109 1947576 2026-06-18T07:14:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தில் துறவிகள் வாழ்விடமாக இது விளங்கிவந்தது. முதலாம் சசுத்தினியன் (Jastinian) காலத்தில் மேற்கூறிய மடாலயம் கட்டப்பட்டது என்று ஆதாரங்கள் தெளிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சினிமா|157|சினேந்திர மாலை}}</noinclude>தில் துறவிகள் வாழ்விடமாக இது விளங்கிவந்தது. முதலாம் சசுத்தினியன் (Jastinian) காலத்தில் மேற்கூறிய மடாலயம் கட்டப்பட்டது என்று ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இடைக்காலத்தில் இது புனிதப் பயணம் பேற்கொள்ளுபவர்கள் அனைவரும் செல்லும் புனிதத் தலமாக விளங்கியது. கன்னிமேரி பின் நினைவாக இங்கு ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு நூல் நிலையமும் இங்கு உள்ளது. இது கி.பி. 1517-ஆம் ஆண்டிற்குப்பின் உதுமானியத் துருக்கியர் வசம் போய்ச்சேர்ந்தது. இப்ராகிம் பாசாவின் காலத்தில், அதாவது கி.பி. 1831-ஆம் ஆண்டில், இது நல்ல முன்னேற்றம் கண்டது. முதல் உலகப் போரின் இறுதியில் இப்பகுதி எகிப்துக்கு அளிக்கப்பட்டது; எகிப்து - இசுரேல் போரில் (கி.பி. 1956) பெரிதும் இன்னதுக்குட்பட்டது. ஐ.நா.வின் தலையிட்டால் இசுரேல் படை இங்கிருந்து விலகியது. ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நிலவழிப் பாலமாக அமைந்துள்ள சினாய் மத்தியகிழக்கு விவகாரங்களின் மையமாக அமைந்துள்ளது எனலாம்.{{Right|<b>நா.ஜெ.</b>}} <section end="சினாய் மலை"/> <section begin="சினிமா"/> {{dhr}} <b>சினிமா</b>: காண்க: திரைப்படக் கலை. <section end="சினிமா"/> <section begin="சினேந்திர மாலை"/> {{dhr}} <b>சினேந்திர மாலை</b>: சினேந்திர மாலை என்னுஞ் சோதிட நூல் உபேந்திராசாரியார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இவருக்குச் சைன மாமுனிவர், சினேந்திரர் என்ற பெயர்களும் உண்டு. சோதிடக்கலை பற்றிய பல அரிய செய்திகள் வெண்பா யாப்பில் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. இந்நூலில் 24 காண்டங்களும், 464 பாடல்களும் உள்ளன. இந்நூல் வடமொழிநூலைப் பின்பற்றியது. சைவ சமயத்தைச் சார்ந்த ஒருவர் இதற்கு உரை எழுதியிருக்கிறார். ஆய கலைகள் அறுபத்து நான்கில் சோதிடக் கலையும் ஒன்று. இதைப் பற்றிப் பாடக் கவிஞராக இருந்தால் மட்டும் போதாது. கணிதஞானம் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். கவிதையிலும் கணக்கிலும் வானநூல் அறிவிலும் வல்லவராக இம்முனிவர் நிகழ்சிறார். சோதிடக்கலை பற்றிப் பாடிச் ‘சினேந்திர மாலை’ என்று பெயரிட்டிருப்பது ஆசிரியர் அருகன் மேல் கொண்டுள்ள அளவற்ற பக்தியைப் புலப்படுத்துகிறது. தாயினிடத்துப் பிள்ளைகளுக்கும், கடவுளிடத்து அன்பர்களுக்கும் சிரத்தை உண்டாதல் போல, ஆரூட சாத்திரிகளிடத்து ஆரூடம் கேட்க வருகின்றவர்களுக்கும் அது உண்டாக வேண்டும் என்று பாயிரம் குறிப்பிடுகிறது. கிரத்தையில்லாதவர்க்கு வேதமும் பொய்க்கும். அதுபோல நம்பிக்கை இல்லாதவருக்குச் சோதிடம், மந்திரம், மருந்து அனைத்தும் பொய்க்குமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், காணிக்கை செலுத்தாமல் வெறுங்கையோடு வருகின்றவர்களுக்குச் சோதிடம் சொல்லப்படுதல் கூடாது என்ற செய்தியும் பாயிரத்தில் காணப்படுகிறது. காண்டப் பொழிப்பு என்னும் முதல் காண்டத்தில், உதயத்தை ஓர்ந்ததனைச் - சிந்தித்து, நாடிக் கொணர்ந்தெண்ண என்று நண்ணும் ஆசிரியர் கூறுகிறார். உதயம் அதாவது பிறக்கின்ற நேரம் சரியாகக் குறிக்கவேண்டும் என்று கூறுகிறார். சிறிது நேரம் தவறி எழுதப்படினும் எல்லாம் பிறழ்ந்து போகும் என்பது இங்குக் குறிக்கப்படுகிறது. மேலும், இதே காண்டம் கோள்களைப் பற்றியும் இராசிகளைப் பற்றியும் மிக நுணுக்கமாக எடுத்துக்காட்டுகிறது. ஆண் கோள், பெண் கோள், அலிக்கோள் பற்றிய குறிப்பும், ஆண் இராசி, பெண் இராசி, அலி இராசி பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளன. இவற்றின் குலம், நிறம், கால், வடிவம், கொம்பு, கதிர், அளவு, வயது, வடு (மச்சம்), வடுவின் பக்கம், வடுவின் வடிவம் ஆகியன தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களின் சேர்விடங்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோளுக்குமுரிய மணிகளும், மரங்களும் தானியங்களும் தாது காண்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. சீவ காண்டம் இன்னின்ன கிரசு அமைப்பால் இன்னின்ன பிறவிகள் உண்டாகும் என்று காட்டுகிறது. இங்கு விலங்குப் பிறவிகளுக்குரிய கிரக அமைப்புகளும் சொல்லப்படுகின்றன. சோதிடக் கட்டங்களில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் பலன்கள் யார் யாருக்குரியது என்பது நட்ட முட்டி சிந்தனைக் காண்டத்தில் குறிக்கப்படுகிறது. இதே காண்டம், பொது விதியையும், இழப்புகள் எங்ஙனம் ஏற்படுகின்றன என்பதையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது. இழப்பு வரக்கூடிய திசை முதலில் சொல்லப்படுகிறது. இழப்பு தன்னால் வருமா, பிறரால் ஏற்படுமா என்பதும் விளக்கப்படுகிறது. கள்ளர்கள் ஆண்களா, பெண்களா என்று சொல்லப்பட்டு அவர்களின் நிறம், குலம், வடு ஆகியனவும் உணர்த்தப்படுகின்றன. நலந்தீங்கு காண்டம் கிரக அமைப்புகளால் ஒருவருக்கு ஏற்படக் கூடிய நன்மை, தீமைகளை நன்கு விளக்குகிறது. கொலை, களவு, விடந் தீண்டுதல், தீப்படுதல், மரணம் வருதல் ஆகியன எந்தெந்தக் கோள்களால் ஏற்படும் என்பதை இது விளக்குகிறது. நினைத்த காரியம் கைகூடுதலுக்கு உள்ள அமைப்பும் கூறப்படுகிறது. பிணிக் காண்டம் பிணி வருவதற்கான சாத்தியக் கூறுகளையும், எந்தெந்த உறுப்புகள் பிணியால் தாக்-<noinclude></noinclude> toacfjeieujt3ls14udkh9n3olvcdqa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/186 250 647110 1947577 2026-06-18T07:21:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கப்படும் என்றும், இன்னின்ன கிரக அமைப்பிற்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அவை தீர்க்கக் கூடிய பிணிகளா தீர்க்கவியலாப் பிணிகளா என்றும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சினேந்திர மாலை|158|சினேந்திர மாலை}}</noinclude>கப்படும் என்றும், இன்னின்ன கிரக அமைப்பிற்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அவை தீர்க்கக் கூடிய பிணிகளா தீர்க்கவியலாப் பிணிகளா என்றும் எடுத்துக்காட்டுகிறது. மரண காண்டம் ஒருவருக்கு ஏற்படக்கூடிய கண்டங்களைக் காட்டுகிறது. மேலும் மரணம் ஏற்படக் கூடிய காலத்தையும், மரண வேதனையையும், மரணம் நேரும் இடத்தையும், மரணத்தின் பின் அடையும் மறுபிறவியையும் உணர்த்துகிறது. சகுன காண்டம், சகுனமின்மை, சகுனத்தடை, நற்சகுனங்கள், சகுனம் வலமாதல்- இடமாதல் ஆகியவற்றை நன்கு எடுத்துக்காட்டுகிறது. காம காண்டம் இல்லற வாழ்க்கையை விளக்குகிறது. தலைவி தலைவனின் குடியும் குலமும் உணர்த்திக் கற்புடையார் எவர், கற்பிலார் எவர் அன்புடையார் எவர், அன்பில்லாதவர் எவர், என்றும் சயனத் தவறுகளையும் சரியாகக் காட்டுகிறது. மகப்பேறு காண்டம் மகப்பேறும், மகப்பேறின்மையும் காட்டுகிறது. மேலுமது மகப்பேற்றில், ஆண் பெண் உணர்த்தி மகப்பேறு காலம் உணர்த்தி பாலரிட்டத்தையும், தாய் தந்தைக்கு ஏற்படக்கூடிய தன்மை தீமைகளையும் காட்டுகிறது. படை வரவு காண்டம் படை வருதலையும் வெற்றி தோல்விகளையும் நிருணபிக்கிறது. யாத்திரைக் காண்டம் யாத்திரை கிட்டுமா? கிட்டாதா? என்றும், யாத்திரைத் திசைகளையும், சென்ற இடத்திலே ஏற்படக்கூடிய இடையூறுகளையும் இயம்புகிறது. யாத்திரை சென்றார் வருவாரா, மாட்டாரா என்பதும் சொல்லப்படுகிறது. மழை வரவு காண்டம் மழை பெய்தலையும் பெய்யாமையையும் காட்டுகிறது. ஆசிரியர் கிரகங்கலினால் ஒருவருக்கு நேரக்கூடிய இன்ப துன்பங்களை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டியிருக்கிறார். விலங்குகளுக்குரிய கிரகங்கள் குறித்தும் சொல்லியிருப்பது வியப்புக்குரியது. சமணர்கள் அனைத்துத் துறையிலும் வல்லவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு மனித வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைத்தது. அவை நேருவதற்கான சூழ்நிலைகளைச் சினேந்திர மாலை மூலம் நன்கு அறியலாம்.{{Right|<b>சு.சு.தே.</b>}} {{nop}}<noinclude></noinclude> cxne3wwcsd0xee51hg78mh5tgrx8o01 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/187 250 647111 1947578 2026-06-18T07:38:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சினேந்திர மாலை"/> <section begin="சீ"/> {{dhr}} ::{| |{{dropinitial|சீ}} சிகரத்திற்கு உரிய குறிப்பைப் பார்க்க. அதே முறையில் வளர்ச்சி அடைந்தது. முதன்முதலில் சீ என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="சினேந்திர மாலை"/> <section begin="சீ"/> {{dhr}} ::{| |{{dropinitial|சீ}} சிகரத்திற்கு உரிய குறிப்பைப் பார்க்க. அதே முறையில் வளர்ச்சி அடைந்தது. முதன்முதலில் சீ என்ற எழுத்திற்கு நெடில்குறி முதல் பல்லவ பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகளில் காணப்படுகிறது இடப்புறம் சுழிக்கப்பட்டது. || ................. ||rowspan=2 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 187 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 120 |oTop = 85 |oLeft = 380 |Location = center |Description = }} |- |பின்னர்ச் சிகரத்திற்குக் கூறப்பட்டதே இதற்கும் பொருந்தும், || |- |வட்டெழுத்தில் சிகரத்திற்குக் காணப்படும் உருவத்தில் ஒரு சுழி இடம்பெறும். || ............... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சீ"/> <section begin="சீக்கிய சமயம்"/> {{dhr}} <b>சீக்கிய சமயம்</b>: பஞ்சாபு மாகாணத்தில் சீக்கிய மதம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டில் குருநானக்கு என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. அம்மதத்தினரைச் சீக்கியர்கள் என்று குறிப்பிட்டார்கள். சீக்கியர்கள் என்றாலே சீடர்கள் என்று பொருள்படும். குருநானக்கு முதல் கோவிந்தசிங்கு ஈறாகப் பத்துக் குருமார்கள் இருந்தனரெனக் கூறப்படுகிறது. சீக்கிய மதமானது இந்து வைணவ பக்தி மார்க்கத்தின் வளர்ச்சியடைந்த நிலையாகும் என்று கருதப்படுகிறது. வடநாட்டில் இது இராமாநுசரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இசுலாமிய மதத்துடன் கி.பி. 14,15-ஆம் நூற்றாண்டுகளில் எதிர்ப்புஏற்பட்டு மெதுவாக இந்திய, கங்கைச் சமவெளியில் பரவியது. பக்தர்கள் கடவுளைப் பல பெயர்கள் கூறித் தோத்திரம் செய்தாலும், அவர் ஒருவரே; மற்றவை எல்லாம் மாயையே; அவருடைய நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பதே மேலான வழியாகும். தியானம் செய்வதற்குக் குருவின் உதவி தேவையாகும். பக்தி மார்க்கமானது சாதி வேறுபாடுகளைக் கண்டிப்பதோடன்றி அந்தணர்களின் தனி உரிமையையும் மறுக்கிறது. கபீர் என்பவர் இந்து பக்தி மார்க்கத்தையும் இசுலாமிய சூபி மார்க்கத்தையும் இணைத்தார். சீக்கிய மதம் மேற்கூறிய இரண்டு மதங்களிலுமுள்ள நல்ல கருத்துகளைப் பின்பற்றியது. நானக்கு என்பவர் கி.பி. 1469-ஆம் ஆண்டு இவாகூரின் அருகிலுள்ள இராய் போய் தி தால்வான் டி (Rai Bhoi di Tal-vandi) என்னும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயது முதற்கொண்டே அவர் பெரிய துறவிகளுடன் தொடர்பு கொண்டார். சுல்தான்பூரில் நானக்கு இறைவனைக் காணும் பேறு பெற்றார். இந்து என்றும் முகம்மதியர் என்றும் வேறுபாடுகிடையாது என்று அவர் கூறினார். அவர் கி.பி. 1539-ஆம் ஆண்டு இறந்தார். அவருக்குப்பிறகு அவர் சீடர் அங்காடு (Angad) என்பவர் குருவானார். அதன் பிறகு பல குருமார்கள் வந்தார்கள். <b>கல்சாவின் (Khalsa) தோற்றம்</b>: முகம்மதியர்கள் சீக்கிய குருமார்களைக் கொன்றதால் சீக்கியர்கள் ஆயுதங்களை ஏந்தினர். கோவிந்தராய் (Gobind Rai) என்பவர் ஐந்து சீக்கியர்களுக்கு ஞானஉபதேசம் செய்து, அவர்களைக் கல்சா என்னும் பெரியோர்கள் அடங்கிய சபையில் சேர்த்தார். அவர்களைச் சிங்கு என்றழைத்தார். அதன் பிறகு சீக்கியர்கள் பஞ்சாபில் ஆட்சி செய்தார்கள். இரஞ்சித் சிங்கு (Ranjit Singh) என்பவர் கி.பி. 1799-ஆம் ஆண்டு தலைநகரை ஏற்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபின் அரசரானார். ஆங்கிலேயர்களும் ஆப்கானிசுத்தானில் தலையிட்டு, இரஞ்சித் சிங்குடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். ஆதிகிரந்தம் (Adi Granth) என்ற நூலை அர்சுன் (Arjun) என்ற குரு தொகுத்தார். இந்து மதத்தின்<noinclude></noinclude> n08951sz39h6t12f8fg0xjfiqdnstb4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/224 250 647112 1947579 2026-06-18T07:38:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாண்டியனின் பத்திப் பெருக்கைச் சிறப்பித்து நம்பியாண்டார் நம்பிகள் 62–ஆம் செய்யுளில் பாடியுள்ளார். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கோயில் திருப்பண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயில்‌ நான்மணி மாலை|198|கோயிலொழுகு}}</noinclude>பாண்டியனின் பத்திப் பெருக்கைச் சிறப்பித்து நம்பியாண்டார் நம்பிகள் 62–ஆம் செய்யுளில் பாடியுள்ளார். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கோயில் திருப்பண்ணியர் விருத்தம்"/> <section begin="கோயில் நான்மணி மாலை"/> {{dhr}} {{larger|<b>கோயில் நான்மணி மாலை:</b>}} நான்கு மணிகளைச் சேர்த்து அமைக்கும் மாலை பொலிவு பெற்று விளங்குதல்போல் சிற்றிலக்கியங்களுள் நால்வகைப் பாக்களால் அமையும் நான்மணிமாலை சிறப்பிடம் பெற்று ஒளிர்கிறது. ‘நான்மணி மாலை’ என்னும் நூல் வெண்பா, கலித்துறை, ஆசிரியவிருத்தம், அகவற்பா ஆகிய நான்கு வகைச் செய்யுட்களால் இயற்றப்பட்டு அந்தாதித் தொடையில் நாற்பது பாக்களைக் கொண்டமைவதாகும். நான்மணி மாலையின் இயல்பு பற்றி இலக்கண விளக்க ஆசிரியர், ‘வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல்‌, பின்‌ பேசும்‌ அந்தாதியினாற்பது பெறின்‌, நான்மணி மாலை யாமென நவில்வர்’ எனக்‌ கூறுகிறார்‌. நான்‌மணி மாலை என்னும்‌ பெயரில்‌ பல காலங்களில்‌ பல நூல்கள்‌ உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாகிய நூல்‌களுள் கோயில்‌ நான்மணி மாலை, நால்வர்‌ நான்மணி மாலை, திருவாரூர்‌ நான்மணி மாலை, பழனி நான்‌மணி மாலை முதலியன சிலவாகும்‌. அவற்றுள்‌ கோயில்‌ நான்மணிமாலை சிறப்பான இடத்தைப்‌ பெற்று விளங்குகிறது. சைவர்களால்‌ கோயில்‌ என்று சிதப்புறப்‌ போற்‌றப்படுவது தில்லைச்‌ சிற்றம்பலமாகிய சிதம்பரம்‌ ஆகும்‌. கோயில்‌ என்று சிறப்பாகச்‌ சொல்லப்படும்‌ சிதம்பரத்தில்‌ கோயில் கொண்டருளும்‌ ஆடவல்லானின்‌ அருட்சிறப்பு முதலியன இந்நூலுள்‌ விளக்கமாக உரைக்கப்படுகின்‌றன. இந்நூலாசிரியர்‌, இறைவன்‌ பால்‌ மனமுருகி வேண்டும்‌ வேண்டுதலையும்‌, இறைவன்பால்‌ மக்கள்‌ நீங்காப்‌ பற்றுக்‌ கொண்டு வாழ வேண்டும்‌ என்று அறிவுறுத்தலையும்‌ இந்நூலின்‌ செய்‌யுள்கள்‌ அழுத்தமாக விளக்குகின்றன. இந்நூற்கண்‌ அமைந்துள்ள சொன்னயம்‌ பொருணயம்‌ ஆகியன இந்நூலினைப்‌ பயில்வார்க்குப்‌ புதிய இலக்கிய இன்‌பத்தினை நல்குவவாய்‌ உள்ளன. கோயில்‌ நான்மணி மாலையின்‌ பாட்டுடைத்‌ தலைவர்‌ கண்ணுதற்‌ கடவுளாம்‌ தில்லைச்‌ சிற்றம்பலவனேயாவார்‌. இறைவன்‌ திருவருளை விரும்பிப்‌ பாடப்பெற்ற நூலே இந்நூலாகும்‌. பத்தித்திறமும்‌ கற்பனை வளமூம்‌ இறந்து விளங்‌கும்‌ இந்நூலினைப்‌ பட்டினத்தடிகள்‌ இயற்றியுள்‌ளார்‌. பதினோராம்‌ திருமுறைத்‌ தொகுப்பில்‌ அதிராவடிகள்‌ பாடல்களை அடுத்துப்‌ ‘பட்டினத்துப்‌ பிள்ளையார்‌ அருளியவை’ என, 1. கோயில்‌ நான்மணி மாலையும்‌, 2. திருக்கழுமல மும்மணிக்‌ கோவையும்‌, 3. திருவிடைமருதூர்‌ மும்மணிக்‌ கோவையும்‌, 4. திருவேகம்பமுடையார்‌ திருவந்தாதியும்‌, 5. திருவொற்றியூர்‌ ஒருபா ஒருபஃதும்‌ என ஐந்து நூல்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டினத்தார்‌ என்னும்‌ பெயரில்‌ பலர்‌ வெவ்‌வேறு காலங்களில்‌ இருந்துள்ளார்‌ என்று அறிஞர்கள்‌ கூறுகின்றனர்‌. ‘பட்டினத்தார்‌ பாடல்‌ திரட்டு’ என்ற பெயரில்‌ பல தத்துவப் பாடல்களும்‌ இறையன்புமிக்க கனிவான பாக்களும்‌ நிலையாமை அடிப்படையில்‌ எழுந்த பாக்களுமாக அமைந்த நூல்‌ ஒன்று உள்ளது. மேற்கூறியவாறு பதினோராம்‌ திருமுறையில்‌ இடம்‌ பெற்ற பட்டினத்தார்‌ கி.பி. 10–ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்தவராவர்‌ என்று ஆய்வாளர்‌ கூறுகின்றனர்‌. இரண்டாமவர்‌ எனக்‌ கருதப்படும்‌ பட்டினத்தார்‌ காலம்‌ கி.பி. 14–ஆம்‌ நூற்றாண்டாகலாம்‌. இப்பட்டினத்தார்‌ பூம்புகாரில்‌ வணிகர்‌ மரபில்‌ பிறந்தவரென்று தெரிகிறது. இவர்‌ ‘திருவெண்காடர்’ என்னும்‌ இயற்பெயர்‌ பெற்று விளங்கினார்‌. இவர்‌ தாயார்‌ பெயர்‌ ஞானகலை எனவும்‌, தந்தையார்‌ சிவநேசர்‌ எனவும்‌, மனைவி பெயர்‌ ‘சிவகலை’ எனவும்‌ அறியப்படுகிறது. இவர்‌ தன வணிகர்‌ என வழங்கப்‌படும்‌ நாட்டுக்கோட்டை நகரத்தார்‌ மரபினரெனவும்‌, உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தால்‌ விளக்‌கம்‌ பெற்‌றவரெனவும்‌ கூறுகின்றனர்‌. இக்கதைகளை அடிப்படையாகக்‌ கொண்டு புராணங்களாயும்‌ வரலாறுகளாயும்‌ பின்னர்த்‌ தமிழகத்தில்‌ தோற்றம்‌ எடுத்தவைகளே மிகுதியாகும்‌. தமிழ்‌, வடமொழி ஆகிய இருமொழிகளிலும்‌ வல்லவராய்க்‌ கடல்‌ வாணிகம்‌ மூலம்‌ எல்லையற்ற பெரும்பொருள்‌ ஈட்டி மன்னரும்‌ வியக்கத்தக்க செல்வராய்‌ விளங்கினர்‌. பின்னர்‌ அனைத்தையும்‌ துறந்து விளங்கியமையால்‌ ‘முற்றும்‌ துறந்த பட்டினத்தடிகள்‌’ எனப்‌ புகழ்‌ பெற்றார்‌. {{Right|<b>கி.கோ.</b>}} <section end="கோயில்‌ நான்மணி மாலை"/> <section begin="கோயிலொழுகு"/> {{dhr}} {{larger|<b>கோயிலொழுகு</b>}} என்பது ‘கோயில்‌’ என்று சிரீவைணவர்கள்‌ அனைவராலும்‌ வழங்கப்படும்‌ திருவரங்கம்‌ கோயில்‌ வரலாற்றை இதிகாச புராண காலத்திலிருந்து கி.பி. 18–ஆம் நூற்றாண்டின்‌ இறுதி வரை கூறும்‌ நூலாகும்‌. திருவரங்கம்‌ கோவில்‌ அதிகாரிகளால்‌, செவிவழிச்‌ செய்திகளையும்‌, கல்வெட்டுகளையுங்‌ கொண்டு அவ்வப்போது தொகுக்கப்பட்டு உருவான நூல்‌ இது. இதேபோல்‌ திருமலையின்‌ வரலாற்றைக்‌ கூறும்‌ ‘திருமலை ஒழுகு’ என்னும்‌ நூல்‌ திருப்பதியில்‌ அச்சிடப்பட்டுள்ளது. எம்பெருமானார்‌ திருவரங்கம்‌ கோயில்‌ நிருவாகத்தை ஒழுங்குபடுத்தியவர்‌ என்பது அனைவரும்‌ அறிந்ததாகும்‌. எம்பெருமானார்‌ திருவரங்கம் கோயில்‌<noinclude></noinclude> 7jx8ct5z2mjsp2c6yny4b9mh4wtyi3a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/188 250 647113 1947581 2026-06-18T07:49:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நூல்களிலிருந்து பல கருத்துகள் சீக்கிய கொள்கையில் சேர்க்கப்பட்டன. சீக்கியர்கள் சம்சாரக் கொள்கையான, பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீக்கிய சமயம்|160|சீக்கிய சமயம்}}</noinclude>நூல்களிலிருந்து பல கருத்துகள் சீக்கிய கொள்கையில் சேர்க்கப்பட்டன. சீக்கியர்கள் சம்சாரக் கொள்கையான, பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு முதலியவைகள் ஒரு மனிதனின் செயல்களால் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர். அவர்கள் பிறவிகளுள் சிறந்தது மனிதப் பிறவி என்றும், இந்தப் பிறவியில்தான் முக்தியடைய முடியும் என்றும் கருதினர். கல்சா என்னும் பெரியோர்கள் அடங்கிய சபையினர் ஐந்து கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். குடியை வெறுத்தல், புகையிலையை நீக்குதல் போதையூட்டும் பொருள்களை ஒதுக்கல், பிரார்த்தனை செய்தல், நேர்மைக்காகப் போராடுதல் முதலியன. மேலும், அவர்கள் முடியையும் தாடியையும் வளர்த்தார்கள். சீப்பும் கால்சட்டையும் கிர்பானும் வலக்கையில் காப்பும் அணிந்திருப்பார்கள். நானக்கு ‘ஓம்’ என்ற அடையாளம் கடவுளைக் குறிக்கிறது என்று கூறினார். அவர் வைத்து கடவுள் ஒருவர், உண்மையானவர், படைக்கிறவர், என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர் என்றும் கூறினார். சீக்கிய மதம் உருவ வழிபாட்டை ஆதரிக்கவில்லை. சீக்கியர்கள் ஆதிகிரந்தத்தை வழிபட்டார்கள், அவர்கள் சூரியனையும் நதிகளையும் மரங்களையும் வழிபடுவதில்லை; புனித யாத்திரைகள் செய்வதுமில்லை. இந்து மதத்தில் அந்தணர்களைப் போல், சீக்கிய மதத்தில் உயர்ந்த சாதி என்று இல்லை. குருவின் உதவி சீடர்களுக்குத் தேவை என்று சீக்கிய மதம் கூறுகிறது குரு உண்மையை அறிய வழி காட்டுவார்; இறைவனின் தன்மையை உணர்த்துவார். சீக்கிய மதத்தை நாம மார்க்கம் எனச் சொல்லுவதுண்டு. நாமம் ஆன்மாவின் அழுக்கை மாற்றுகிறது; ஆணவத்தை அகற்றுகின்றது; ஆசை, கோபம், யற்று, தற்பெருமை முதலியவற்றை அகற்றுகிறது. சீக்கியர்கள் குழந்தையைக் குருத்துவாரத்திற்குக் கொண்டு சென்று, ஆதிகிரந்தத்தைப் படிக்கச் செய்வார்கள். திருமணச் சடங்கில் ஆதிகிரந்தத்தைச் சுற்றி மணமக்கள் நான்கு தடவை வரவேண்டும். மரணமடைந்தால் அதிலுள்ள வாக்கியங்களைப் படிப்பார்கள். இறந்தவருடைய சாம்பலைக் கங்கையிலோ புனித நதியிலோ கரைப்பார்கள். இறைவனை வணங்குவதற்கேற்ற நேரம் காலை நேரம். தியானம் செய்வதற்கேற்ற நேரமும் அதுவேயாகும். அமிர்தசரசிலுள்ள அரிமந்திர் (Harimander) புனித யாத்திரை செய்வதற்கேற்ற இடமாகும். நானக்கு பிறந்த இடமான நான்கானா (Nankana) இரண்டாம் குறிப்பிடத்தக்க இடமாகும். சீக்கியர்களால் நான்கு அரசிருக்கைகள் சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவையாவன, அமிர்தசரசு, அனந்தப்பூர், பாட்னா, நன்தெது (Nanded), பாட்னாவில் குருகோபிந்த சிங்கு பிறந்தார்; நன்தெத்தில் இறந்தார். குருநானக்கு சீக்கிய சமய வழிபாட்டிற்காகக் கார்தர்பூர் (Kartarpur) என்ற இடத்தில் கோயில் கட்டினார். அதன்பிறகு சீக்கிய கோயில் குருத்வாரா (Gurdwara) எனப் பெயர் பெற்றது. குருத்வாரா என்றால் குருவையடையும் வாயில் என்று பொருள். ஏறக்குறைய இருநூறு குருத்வாராக்கள் இருக்கின்றன. சீக்கிய குருத்வாரா கி.பி. 1925-ஆம் ஆண்டு சட்டப்படி குருத்வாராக்களை மேற்பார்வை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குருத்வாராவில் செலுத்தப்படும் காணிக்கைகள் எல்லாம் கல்சா அமைப்பின் கீழுள்ள பள்ளிகளுக்கும் சுல்ஜாரிகளுக்கும் செயவு செய்யப்படுகின்றன. சீக்கியர்கள் ஆதிகிரந்தத்தை மட்டும் வழிபடுகிறார்கள். வழிபடுகிறவர்கள் பணமும் மலர்களும் வைத்து வணங்குகிறார்கள். அவர்களுக்கு காரா பிரசாதம் (Karal Prasad) அதாவது மாவும் நெய்யும் சீனியும் அளிக்கப்படும். வடஇந்தியாவில் இந்துக்கள் கொண்டாடுகின்ற எல்லாத் திருவிழாக்களையும் சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். மேலும் முதல் குருவின் பிறந்த நாளையும், கடைசிக் குருவின் பிறந்த நாளையும் கொண்டாடுகின்றனர். கல்சா சங்காத்து (Khatsa Sangat) என்றால் புனித மனிதர்களின் கூட்டம் என்று பெயர். அது தெய்விகத் தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு குருத்துவாரத்திலுள்ள சங்கமும் அவர்களின் ஆட்சிக் குழுவினைத் தேர்ந்தெடுக்கும், பெண்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். கோவிந்த சிங்குடன் குருக்கள் சந்ததி முடிந்து விடவில்லை என்றும், இப்பொழுதும் குருவானவர் இருக்க வேண்டும் என்றும் கல்சா (Khalsa) குழுவினர் நம்புகிறார்கள். ஒவ்வொரு சீக்கியரும் ஐந்து அணிகலன்கள் அணிய வேண்டும். அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களைக் குறிப்பது. அதாவது 1, கங்கம் (சீப்பு) தூய்மையைக் குறிப்பது, 2. கரம் (கைவளை) நேர்மையான குணத்தைக் குறிப்பது, 3, கச்சம் (அரைக்கச்சம்) ஐம்புலன்களின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, 4. கிர்பான் (கத்தி) ஆன்மிக சக்தியைக் காட்டும், 5. கேசம் (நீண்டமுடி) தியாக மனப்பான்மையைக் குறிப்பது. மேற்கூறிய ஐந்து அணிகலன்களையும் அணித்து, மிகவும் தைரியத்துடன் வாழ வேண்டும் என்பது குரு கோவிந்த சிங்கின் திட்டமாகும்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Jogendra Singh & Raja Daliit Singh,</b> The Great Humanist Guru Nanak, Languages Dept., Punjab, 1970.<noinclude></noinclude> t9ioev2qi1egk1jbzff1twkfxr1g4gq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/189 250 647114 1947612 2026-06-18T08:04:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Suda, J.P.,</b> Religions in India - A Study of their essential Unity, Sterling Publishers, Pvt., Ltd., New Delhi, 1978. <section end="சீக்கிய சமயம்"/> <section begin="சீக்கியப் போர்கள்"/> {{dhr}} <b>சீக்கியப் போர்கள்</b>: சீக்கியர்கள் கி.பி...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீக்கியப் போர்கள்|161|சீக்கியப் போர்கள்}}</noinclude><b>Suda, J.P.,</b> Religions in India - A Study of their essential Unity, Sterling Publishers, Pvt., Ltd., New Delhi, 1978. <section end="சீக்கிய சமயம்"/> <section begin="சீக்கியப் போர்கள்"/> {{dhr}} <b>சீக்கியப் போர்கள்</b>: சீக்கியர்கள் கி.பி. 19- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயருடன் போரில் ஈடுபட்டனர். அப்போர்கள், சீக்கியப் போர்கள் எனக்குறிப்பிடப் பெறுகின்றன. முதலாம் சீக்கியப் போர் ஆர்டிஞ்சுப் பிரபுவின் பதவிக் காலத்தில் கி.பி. 1845 முதல் கி.பி. 1846 முடிய நடைபெற்றது. இரண்டாம் சீக்கியப் போர் தல்கெளசிப் பிரபுவின் பதவிக் காலத்தில், கி.பி. 1848 முதல் 1849 முடிய நிகழ்ந்தது. <b>முதலாம் சீக்கியப் போர்</b> (கி.பி. 1845-கி.பி. 1846): காரணங்கள் 1) இரஞ்சித்சிங்லின் இறப்பிற்குப்பின், பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்களும் கொலைகளும் ஆங்கிலேயரை விழிப்படையச் செய்தன. மேற்கெல்லையான சட்லசு (Sutlej) ஆற்றையும் கடந்து சீக்கியரின் அட்டகாசம் பரவிவிடுமோ என்று ஆங்கிலேயர் அச்சம் கொண்டனர். எனவே, அவ்வெல்லையைப் பாதுகாக்கப் படைகளைக் குவித்தனர். ஆனால், சீக்கியர்களோ தம்மீது வலுத்தாக்குதல் நடத்தப் போகிறார்களோ என்று ஆங்கிலேயர் பால் ஐயங்கொண்டனர். எனவே, சீக்கியரும் ஆயத்த நிலையில் நின்றனர். 2) முதலாம் ஆப்கானியப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்றதால், வெள்ளையரை வெல்வது எளிதென்று சீக்கியர் நினைத்தனர். 3) கல்சாப் படையின் தான்தோன்றித்தனத்தைக் கண்டு அஞ்சிய அரசி சிண்டான் அதனை ஆங்கிலேயருடன் மோதவிட்டுப் புத்திபுகட்ட எண்ணினார். கல்சாப் படைத்தலைவர் தேசுசிங்கும் அமைச்சர் இலால் சிங்கும் 1845-இல் சீக்கியப் படைகளை நடத்திச் சென்று, சட்லெசு ஆற்றைக் கடந்து ஆங்கிலேயரது எல்லைக்குள் புகுந்தனர். ஆங்கிலப் படைக்கும் சீக்கியப் படைக்கும் பிரோகபூர், மாவட்டத்திலுள்ள மூட்டு என்னுமிடத்தில் பெரும் போர் நிகழ்ந்தது. போரின் இறுதியில் சர் கியூ காபு (Sir Hugh Gough) தமைமையிலான ஆங்கிலப்படை வெற்றி பெற்றது. இருப்பினும் ஆங்கிலப் படைக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது. இப்போரில் தேசுசிங்கு போர்க்களத்திலிருந்து ஓடியதால்தான் தொடக்கத்தில் வெற்றி முகமாகச் சென்ற சீக்கியப்படை தோற்றது. ஒரு மாதம் சென்ற பின்னர், சீக்கியப்படை இரஞ்சோர் சிங்கு தலைமையில் மீண்டும் போரைத் தொடங்கியது. புத்திவால் என்னுமிடத்தில் 1845-இல் சர் ஆரிசுமித்து தலைமையிலான ஆங்கிலப்படையைச் வெற்றி கண்டனர். ஆனால், உலூதியானாவிற்கு அருகில் உள்ள அலிவால் என்னுமிடத்தில் சீக்கியர் தோற்கடிக்கப்பட்டனர். இறுதிவாக, சட்லெசு ஆற்றங்கரையிலுள்ள போக்ரான் (இலாகூர் மாவட்டம்) என்னுமிடத்தில் நடந்த போரில், சர் கியூ, சர் ஆரிசுமித்து ஆகியோரின் கூட்டு முயற்சியால் சீக்கியர் முறியடிக்கப்பட்டனர். இதில் 8000 சீக்கிய வீரர்களும் 2383 ஆங்கிலப் படைவீரர்களும் மாண்டனர். இப்போரின் விளைவாக ஆங்கிலேயருக்கு வட இந்தியாவில் இருந்த பேரிடர் நீங்கியது. இலாகூர் என்னுமிடத்தில் இருதிறத்தாருக்குமிடையே ‘இசைகர் உடன்பாடு’ (கி.பி.1846) கையெழுத்தாயிற்று. ஆங்கில-இந்திய வரலாற்றில் இவ்வுடன்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்த தொன்றாகும். இவ்வுடன்பாட்டின் விளைவாக 1) சட்லெசு, பியாசு ஆறுகளுக்கிடையில் உள்ள சலந்தர் பிரதேசம் ஆங்கிலேயர் வசமாயிற்று. 2) காசுமீரம், அசாரா ஆகிய இடங்களும் ஆங்கிலேயர் வசமாயின. 3) சீக்கியர், போர் இழப்பீட்டுத் தொகையாக ஒன்றரைக் கோடி ரூபாயை ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டியதாயிற்று. 4) சீக்கியப்படை குறைக்கப்பட்டது. 5) பஞ்சாபின் தலைநகரில் ஆங்கில நிலையர் ஒருவர் அமர்த்தப்பட்டார். 6) துலீப்சிங்கு சீக்கிய மன்னராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். முதலமைச்சர் இலால்சிங்கின் அறிவுரைப்படியே அவர் நடக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. அவ்வுடன்படிக்கையைச் சீக்கியர் ஏற்றுக்கொள்ளாமல், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதைக் கண்ட ஆங்கிலேயர் கி.பி.1846-இல் மீண்டும் ஓர் உடன்படிக்கையை உருவாக்கினார். இதுவே ‘பகீரோவால் உடன்பாடு’ எனக் குறிக்கப் பெறுகிறது. இதனால், பஞ்சாபில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் பெருகியது. இலாகூரின் நிருவாகம் எட்டுச் சீக்கியச் சர்தார்கள் கொண்ட பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் ஆங்கில நிலையரின் (Residant) அறிவுரைப்படியே செயற்பட தேர்ந்தது. திலீப்சிங்கு உரிய வயதடையும் வரையில் சீக்கிய நாட்டில் ஆங்கிலப்படை நிறுத்தப்பட்டது. அதன் செலவைச் சீக்கியரே ஏற்க வேண்டியவராயினர். இவ்வுடன்படிக்கையால் முடி ஆங்கில நிலையர் என்றி லாரன்சு பஞ்சாபின் சூடாமன்னராக விளங்கினார். அவர் பல சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். <b>இரண்டாம் சீக்கியப் போர்</b> (கி.பி. 1848 - கி.பி. 1849): ஆங்கில நிலையரின் பஞ்சாபு நிருவாகம், பல சீக்கியர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. அரசி சிண்டானை ஆங்கிலேயர் பதவியினின்றும் விலக்கியதால், சீக்கியரின் ஆத்திரம் மிகுந்தது. ஆங்கிலேயர் முகமதியர்களுக்குக் காட்டிய சலுகைகளை சீக்கியர் வெறுத்தனர். அதனால் சீச்கிய-ஆங்கிலேய பகைமை<noinclude> <b>வா.க. 9-11</b></noinclude> f573f4171lcyojsn0n4n1nuxz4pxin3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/190 250 647115 1947623 2026-06-18T08:16:14Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளர்ந்து போராக உருவெடுத்தது. தல்கெளசிப் பிரபு 1848-இல் இரண்டாம் சீக்கியப் போரைத் தொடங்கினார். நவம்பர் 16-ஆம் நாள் தளபதி காபு இரவி ஆற்றைக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீக்கியர்|162|சீகன்பால்கு பார்த்தலோமியா}}</noinclude>வளர்ந்து போராக உருவெடுத்தது. தல்கெளசிப் பிரபு 1848-இல் இரண்டாம் சீக்கியப் போரைத் தொடங்கினார். நவம்பர் 16-ஆம் நாள் தளபதி காபு இரவி ஆற்றைக்கடந்து, இராம் நாரில் போரைத் தொடங்கினார். முல்தான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. ஆங்கிலேயர் வெற்றிவாகை சூடினர். சிலியன்வாலா என்னுமிடத்தில் 1849-இல் இருதிறத்தாருக்கும் கடும்போர் நடைபெற்றது. ஆங்கில வீரர் பலர் கொலையுண்டனர். போர் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இருப்பினும் 21.2.1849-இல் இறுதிப்போர் நடைபெற்றது. சீக்கியரும் ஆப்கானியரும் இணைந்து ஆங்கிலேயருடன் போரிட்ட போதிலும் தோல்வியுற்றனர். பீரங்கிப் போர்க்களம் எனப் போற்றப்படும் ‘குசராத்துப் போர்க்களம்’ சீக்கியரின் கல்லறையாயிற்று. இப்போருக்குப் பின்னர்ப் பஞ்சாபு முழுமையும் ஆங்கில அரசுடன் இணைக்கப்பட்டது. பேரரசர் தீலீப்சிக்கு அரச பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பஞ்சாபை கி.பி. 1849-இல் தல்கௌசி பிரபு ஆங்கில அரசுடன் இணைத்த செயல் அநீதியான செயல்தான். இருப்பினும் திருவாகச் சீர்திருத்தங்களால் சீக்கியர் அமைதிப்படுத்தப்பட்டனர்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="சீக்கியப் போர்கள்"/> <section begin="சீக்கியர்"/> {{dhr}} <b>சீக்கியர்</b>: வடஇந்தியாவில் குருநானக்கு என்ற பெரியோரால் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பெற்ற சீக்கிய மதத்தைப் பின்பற்றுவோர் சீக்கியர் எனப்பட்டனர். சீக்கிய சமூகம் அக்காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்காலச் சமூகங்களில் ஒன்று. கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கையுடன் சீக்கியர், சாதி சமய வேறுபாடுகளையும் சமயச் சடங்குகளையும் கண்டித்தனர். வழிவழியாக வந்த பல குருமார்கள் தலைமையின்கீழ்ச் சீக்கியரின் எண்ணிக்கையும் நிலப்பரப்பும் பெருகின, சீக்கியருக்கும் முகலாயப் பேரரசர்களுக்கும் இடையே பகைமை வளர்ந்தது. சீக்கியர் பல இடுக்கண்களுக்கு உள்ளாயினர். முகலாயரின் வீழ்ச்சி சீக்கியரின் புதிய எழுச்சிக்கு உதவியது. ஆனால், ஆங்கிலேயருடன் போரிட வேண்டிய கட்டாயம் சீக்கியர்களுக்கு ஏற்பட்டது. இப்போர்களின் விளைவாகச் சீக்கியரின் வளர்ச்சி குன்றியது. இறுதியில் ஆங்கிலேயரும் சீக்கியரும் தமது பகைமையை மறந்து நட்புப் பூண்டனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சீக்கியர்"/> <section begin="சீகன்பால்கு பார்த்தலோமியா"/> {{dhr}} <b>சீகன்பால்கு பார்த்தலோமியா</b> செருமானிய நாட்டினர். இளமையில் பெற்றோரை இழந்தவர். இறக்குந்தறுவாயில் இவர்தம் தாய் விவிலியத்தைப் படிக்குமாறும், திருமறைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். அதன் விளைவாக இவர் சமயப்பணியில் ஆர்வம் கொண்டார். செருமானியம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்த இவர் மெர்சேபாகு (Merseburg), எர்பர்ட்டு (Erfurt) ஆகிய இரு இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். அச்சமயத்தில் வெளிநாடுகளில் மறைப்பணியாற்றத் தொண்டர்கள் தேவை என்னும் தென்மார்க்கு மன்னரின் எண்ணம் தெரியவந்தது. சமயப்பணியில் ஈடுபட எண்ணியிருந்த இவருக்கு இச்செய்தி நல்வாய்ப்பாக அமைந்தது. இவர், கி.பி. 1765-இல் கப்பற்பயணம் செய்து தமிழகத்தில் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். அங்குள்ளோர் ஆதரவு தர மறுத்தனர். பல்வேறு இன்னல் கட்கிடையே எர் ஆர்தர் (Herr Arthur) என்பார் உதவியால் அவருடன் தங்கினார். தமிழின் சிறப்பினை உணரத் தலைப்பட்டதும் தமிழ்ரோடு வாழவும், தமிழைத் தமிழரைப்போலக் கையாளவும், அம்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினார். ஆதலின் தொடக்கத்தில் திண்ணைப் பள்ளியில் தமிழ் பயின்றார். தமிழோடு தச்சு, தேனிசு, செருமானியம் ஆகிய மொழிகளை அறிந்திருந்த எல்லப்பன் (Aleppa) என்பாருடன் தொடர்பு கொண்டு தமிழ்ப் புலமையில் சிறந்தார். இவர் கி.பி.1708 நவம்பர் 19-ஆம் நாள் அரசு அலுவலர் ஒருவரின் பொறாமை காரணமாகச் சிறைப்படுத்தப்பட்டார். சிறைச்சாலையில் காவலர் உதவியால் எழுதுகோல், காகிதங்களைப் பெற்றுத் தம் திருமறைப் பணிகள், சிந்தனைகளை எழுதினார். ‘கிறித்தவம்’ என்னும் தியான நூல் உருவாகும் நிலையில் விடுதலையடைந்தார். பின்னர்த் தரங்கம்பாடியை விட்டுத் தஞ்சாவூருக்குத் திருமறைப் பணியாற்றச் சென்றார். இவர் கி.பி. 1714-இல் ஐரோப்பா சென்றார். கி.பி. 1715-இல் மரிய தோரத்தே (Maria Dorathea) என்பாரைத் திருமணம் செய்துகொண்டார். மீண்டும் தரங்கம்பாடிக்கு கி.பி. 1716-இல் திரும்பினார். இவர் கி.பி.1708-இல் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி கி.பி. 1714-இல் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளையும் பதிப்பித்தார். கி.பி. 1715-இல் அப்போசு தலருடைய நடவடிக்கைகளை மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். அதன்பின் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இடையில் உரூத்து ஆசுமத்துடன் நிறுத்தி விட்டு ஐரோப்பாவிற்குச் சென்றார். முதன் முதல் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சேற்றிய பெருமை இவருக்கே உரியது. {{nop}}<noinclude></noinclude> ld1z75i7a4azdpm27ew29jyhmpku9cr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/191 250 647116 1947651 2026-06-18T08:31:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர்தம் அகராதிப் பணியும் குறிப்பிடத்தக்கது, வழக்குச் சொற்களையும் பிறவற்றையும் சேர்த்து 40,000 சொற்களையுடைய அகராதி ஒன்றனையும் 17,000 சொற்களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீகாளத்தி|163|சீகாளத்திப் புராணம்}}</noinclude>இவர்தம் அகராதிப் பணியும் குறிப்பிடத்தக்கது, வழக்குச் சொற்களையும் பிறவற்றையும் சேர்த்து 40,000 சொற்களையுடைய அகராதி ஒன்றனையும் 17,000 சொற்களையுடைய செய்யுள் அகராதி ஒன்றனையும் தொகுத்து வைத்திருந்தார். தாம் பார்வையிட்ட, படித்த நூல்களின் அட்டவணை ஒன்றையும் தயாரித்துள்ளார். அதுவும், அச்சேறாத ‘கிறித்தவம்’ என்னும் நூலும் ஆலே நகர நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தாம் சேர்த்து வைத்திருந்த நூல்கள் அனைத்தையும் இலூட்கேன்சுக்கு (Lutkens) அனுப்பி வைத்திருந்தார். கையெழுத்துச் சுவடிகளாக உள்ள அவையனைத்தும் ஆலேயில் இப்பொழுதுபட்டுள்ளன. சீகன்பால்கு அவற்றை நான்கு பகுதிகளாகப் பாகுபாடு செய்திருந்தார். முதற்பகுதி இவர் எழுதிய 14 நூல்களுக்கான விளக்கமாகும். இரண்டாம் பகுதி உரோமன் கத்தோலிக்க மறை பரப்புநர் எழுதிய 21 நூல்கள் ஆகும். மூன்றாம் பகுதி இந்துக்கள் தம் சமயம் பற்றி எழுதிய 119 நூல்கள். நான்காம் பகுதி இசுலாமிய சமயத்தினர் அவர்தம் சமயம் பற்றி எழுதியவை. கி.பி. 1707-இல் புதிய செரூசலேம் (New Jerusalem) என்னும் பெயரில் ஒரு கோவிலை எழுப்பினார். அவ்வளாகத்தில் முதன் முதல் அடக்கம் செய்யப்பட்டவரும் இவரே. கடலூரில் ஒரு பள்ளியையும் நிறுவியுள்ளார்.{{Right|<b>சூ.இ.</b>}} <section end="சீகன்பால்கு பார்த்தலோமியா"/> <section begin="சீகாளத்தி"/> {{dhr}} <b>சீகாளத்தி</b>: காண்க: காளத்தி. <section end="சீகாளத்தி"/> <section begin="சீகாளத்திப் புராணம்"/> {{dhr}} <b>சீகாளத்திப் புராணம்</b> என்னும் நூல் இப்பொழுது திருக்காளத்தி என வழங்கும் ஊரின் சிறப்பினைக் கூறுவது. சீ என்பது சிலந்திப் பூச்சியையும் காளம் என்பது பாம்பினையும் அத்தி என்பது யானையையும் குறிப்பதாகக் கொண்டு சிலந்தி, பாம்பு, யானை ஆகியவற்றால் வழிபடப் பெற்றது இவ்வூர் என்று இவ்வூரின் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று. சீகாளத்திப் புராணத்தைக் கருணைப் பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்பதேசிகர் ஆகிய மூவரும் இயற்றியுள்ளார்கள். இப்புராணத்தின் பலவிடங்களிற் சிவப்பிரகாசரின் கற்பனைத் திறங்களை அங்கங்கே காணலாம். திருக்காளத்தி பஞ்சபூதத்தலங்களுள் வாயுத்தலமென்று கூறப்படும். இப்புராண உண்மையை, இப்பொழுதும் இங்குள்ள திருக்கோயிற் கருவறையினுள் இறைவன் திருமுன் எரியும் பல விளக்குகளுள் ஒன்று காற்றினால் மோதம் பெற்றதுபோல எப்பொழுதும் அசைந்து கொண்டிருப்பது கொண்டு உணரலாம். இத்திருவூரைத் தென் கயிலாயம் என்று சிறப்பிக்கின்றது இந்நூல். இத்திருக்காளத்தி இறைவனைத் திருமால், பிரமன், திருமகள், கலைமகள், திக்குப்பாவகச் முதலான தேவர்களும், அகத்தியர், வசிட்டர் முதலான முனிவர்களும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமய குரவர்களும், மேலும் முசுகுந்த சக்கரவர்த்தி, நக்கீரர் முதலான பெரியோர்களும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்பை இந்நூல் விவரிக்கின்றது. அன்பின் திருவடிவான கண்ணப்பர் வரலாற்றை மிக உருக்கமாக அன்புச் சித்திரமாக இந்நூல் விளக்கிக் காட்டுகின்றது. கண்ணப்பராகிய திண்ணனார் காளத்திநாதராகிய சிவபெருமான் சிவலிங்கவடிவில் மலையுச்சியில் தனித்திருப்பதைக் கண்டு தனித்திருக்கின்றாயே பெருமானே, உனக்கு இங்கு யார் துணையுமில்லையே கொடிய விலங்குகள் நிறைந்த காடாயிற்றே எனக் கலங்கும் காட்சி, உணவு கொண்டு வரச் செல்லும் பொழுது ஏதாவது விலங்குகளாலோ வேடர்களாலோ துன்பம்வரின் என்னை ‘ஓய்ய்’ எனக் கூவி அழை; உடன் ஓடிவந்து துன்பத்தை நீக்குவேன் என்று கூறும் காட்சி முதலியன உள்ளத்தை நெகிழ்விப்பனவாக உள்ளன. இப்புராணத்தில் பெரிய புராணத்தில் காணப் பெறாத ஒரு செய்தி காணப்படுகிறது. கண்ணப்பரது முற்பிறப்பு வரலாறு இந்நூலில் கூறப்பெறுகின்றது. அருச்சுனன் பாசுபதாத்திரத்திற்காகத் தவம் செய்தபோது, அதற்கு இடையூறாக வந்த முகாகரனாகிய பன்றியை இறைவன் வேட வடிவத்தோடு துரத்திக் கொண்டு வந்து அருச்சுனன் எதிரேவிட, அருச்சுனனும் அம்பு தொடுக்க. தன் அம்பால் தான் பன்றி வீழ்ந்தது என்று வேட வடிவம் கொண்ட இறைவன் கூற, அருச்சுனன் தன்னாலேதான் வீழ்ந்தது என்று கூறி வேட வடிவங் கொண்ட இறைவனை வில்லாலடிக்க, இறைவன் காட்சி தந்து பாசுபதாத்திரம் நல்கி மறுபிறப்பில் நீ வேடனாகத் தோன்றி என்பால் காளத்தியில் அன்பு காட்டி முத்தி அடைவாய் என அருளிச் செய்தார். அவ்வாறே அருச்சுனன் கண்ணப்பராகப் பிறந்து முத்தி அடைந்தான் என்னும் செய்தியினைச் சிகாளத்திப்புராணம் கூறுகிறது. {{nop}}<noinclude> <b>வா.க. 9 - 11அ</b></noinclude> 7c5d8gj8m9yciq6pf95ui1gkdww55m1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/225 250 647117 1947656 2026-06-18T08:45:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிருவாகத்தை ஒழுங்குபடுத்திய முறை குருபரம்பரை நூல்களிலும் காணக்கிடக்கிறதானாலும், கோயிலொழுகிலேயே அது விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயிலொழுகு|199|கோயிற்புராணம்‌}}</noinclude>நிருவாகத்தை ஒழுங்குபடுத்திய முறை குருபரம்பரை நூல்களிலும் காணக்கிடக்கிறதானாலும், கோயிலொழுகிலேயே அது விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதிகாச புராண கால வரலாறுகளுடன், ஆழ்வார்கள், எம்பெருமானாருக்கு முந்திய ஆசாரியர்கள் கால வரலாறுகளும் இதில் சுருக்கமாகவே குறிக்கப்பட்டும் எம்பெருமானார் கால வரலாறு மிக விரிவாகலே குறிக்கப்பட்டுமிருப்பதால், இக்கோயிலொழுகு எம்பெருமானார் காலத்தில் அல்லது அவரையடுத்த காலத்தில் எழுதத் தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்பது விளங்குகிறது. இந்தக் கோயிலொழுகில் பல அரசர்களும் அருளாளர்களும் திரவரங்கம் பெரிய கோயிலுக்குச் செய்த கைங்கரியங்கள் விளக்கப்படுகின்றன. தென்னாட்டின்மேல் கசினி முகம்மது காலத்தில் ஒரு படையெடுப்பு நடந்தது. அப்பொழுது ‘அழகிய மணவாளன்’ என்று அழைக்கப்படும் சிரீரங்கநாதர் உற்சவத் திருமேனி தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிரீரங்கம் தலத்தார் தில்லி சென்று அந்தத் திருமேனியை மீட்டு வந்தனர். உற்சவத் திருமேனி மலைநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது என்றும், முகம்மதியர் படையெடுப்பு அகன்ற பின்னர் திருவரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்றும் குருபரம்பரை வரலாறுகள் கூறுகின்றன. இதனிடையே பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. சிரீரங்க நாதனை நேரில் கண்டவர்கள் எவருமில்லை. மிகவும் வயது முதிர்ந்து கண் தெரியாமலிருந்தவராய் அழகிய மணவாளனுக்கு உடை வெளுப்பவர் ஒருவர் அவருடுத்துக் களைந்த பீதகவாடையின் நறுமணத்தைக் கொண்டு ‘இவரே நம் பெருமாள்’ என்று அறுதியிட்டார். அதிலிருந்து அழகிய மணவாளனுக்கு ‘நம் பெருமாள்’ என்னும் பெயர் அமைந்தது. பிற்காலத்தில் மாலிக்காபூரால் தென்னாட்டில் ஒரு படையெடுப்பு நிகழ்ந்தது. அப்பொழுது ‘பிள்ளை லோகாசாரியர்’ முதலான ஆசாரியர்கள் அழகிய மணவாளனை மேலக்கோட்டைத் திருநாராயண புரத்துக்குக் கொண்டு சென்றார்கள். அக்காலத்தில் பெருமானைக் காப்பதற்காகப் பல வைணவர்கள் உயிர்விட்டனர். பிறகு, பெருமாள் திருவேங்கடம் வழியாகத் திருவரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டார். இந்த இரண்டு படையெடுப்புகளின் போதும் அழகிய மணவாளன் பல ஆண்டுகள் வெளியில் சென்ற வரலாற்றுச் செய்திகள் இக்கோயிலொழுகில் காணப்படுகின்றன. மற்றும், ஆழ்வார்கள், ஆசாரியர்கள், அரையர்கள், அரசர்கள் முதலானோர் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இதில் காணப்படுகின்றன. {{Right|<b>எஸ்.சி.</b>}} <section end="கோயிலொழுகு"/> <section begin="கோயிற்புராணம்"/> {{dhr}} {{larger|<b>கோயிற்புராணம்</b>}} சிதம்பரத் தலத்தைப் பற்றிக்கூறும் பழைய வரலாறு. இதன் ஆசிரியர் சைவ சமய சந்தான ஆசாரியர்களுள் நான்காமவராய உமாபதி சிவாச்சாரியார். அவர் காலம் கி.பி. 14–ஆம் நூற்றாண்டு. அவர் இந்நூலைத் தவிரச் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய சித்தாந்த அட்டகம் என்னும் எட்டு நூல்களையும் திருமுறை கண்டபுராணம். சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக் கோவை, பவுட்கர விருத்தி ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். இக்கோயிற்புராணம் காப்பு 1. பாயிரம் 28, வியாக்கிரபாதச் சருக்கம் 30, பதஞ்சலிச் சருக்கம் 99, நடராசச் சருக்கம் 71, இரணியவன்மச் சருக்கம் 133, திருவிழாச் சருக்கம் 53 என ஆறு பகுதிகளையும் 415 திருவிருத்தங்களையும் உடையது. பாயிரத்தில் கூத்தப் பிரான், சிவகாமியம்மை, விநாயகர், முருகர், நால்வர், தில்லை மூவாயிரவர் துதிப்பாடல்களுடன் தில்லையைப் பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் என்னும் பெயர் பெற்ற அநபாய சோழனுக்கும் துதி கூறப்பட்டிருக்கிறது மற்றும் திருச்சிற்றம்பலம், தில்லைத்தலப் பெருமைகளும் நூல் வரலாறு, நூற் பயன்களும் கூறப்பட்டிருக்கின்றன. வியாக்கிர பாதச் சருக்கத்தில் மத்தியந்த முனிவருக்குக் குழந்தை பிறத்தல், முனிவரே அக்குழந்தைக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்தல், சிவனை வழிபடுமாறு கூறல், தந்தையுரைப்படி மகனாகிய மழ முனிவர் தில்லைவனத்தில் நித்திய கடன்களாற்றி மலர் கொண்டு இறை வழிபாடாற்றல் முதலியன கூறப்படுகின்றன. மழமுனிவர் அதிகாலையில் மலர் பறிக்கப் புலியைப் போன்ற கையும் காலும் நல்ல பூவைப் பார்த்தறிய நகத்திலே கண்ணும் அமைய வேண்டுமென இறைவனிடம் வேண்டி வரம் பெற்றார். ஆதலின், இவருக்குப் புலிக்கால் முனிவர் என்னும் பெயர் ஏற்பட்டது. தந்தையின் அறிவுரைப்படி புலிக் கால் முனிவர் திருமணம் செய்து கொண்டு உபமன்னியு என்னும் குழந்தையைப் பெற்றார். அக்குழந்தையை அருந்ததி எடுத்துச் சென்று காமதேனுவைக் கொண்டு பாலூட்டி வளர்த்தார். குழந்தையைப் பெற்ற தாய் தான் வளர்க்க விரும்பி அக்குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார். ஒருசமயம் பாலின்மையால் குழந்தை அழ, புலிக்கால் முனிவர் இறைவன்<noinclude></noinclude> csfzspy0eu2n5m4dryh9hlw8ggdhig0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/192 250 647118 1947660 2026-06-18T08:53:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வீரை ஆனந்தக்கூத்தர் பாடிய புராணம் ஒன்று இவ்வூருக்கு உள்ளது. ஆயினும், சீகாளத்திப் புராணமே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.{{Right|<b>சு.சு.</b>}} <section..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீசர், சூலியசு|164|சீட்டாட்டம்}}</noinclude>வீரை ஆனந்தக்கூத்தர் பாடிய புராணம் ஒன்று இவ்வூருக்கு உள்ளது. ஆயினும், சீகாளத்திப் புராணமே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.{{Right|<b>சு.சு.</b>}} <section end="சீகாளத்திப் புராணம்"/> <section begin="சீசர், சூலியசு"/> {{dhr}} <b>சீசர், சூலியசு</b>: காண்க: உரோமப் பேரரசு. <section end="சீசர், சூலியசு"/> <section begin="சீட்டாட்டம்"/> {{dhr}} <b>சீட்டாட்டம்</b> ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. இது உலகம் முழுவதிலுமுள்ள சூதாட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்று. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு பணத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் இது விளையாடப்படுகிறது. இச்சீட்டாட்டத்தில் (Card Playing) பலவகைகளுண்டு. இது எளிய வழியில் பணம் ஈட்ட விரும்புவோரை பெரிதும் கவருகிறது, இல்விளையாட்டில் நல்லூழைப் (Luck) பொறுத்தே வெற்றி-தோல்விகள் அமைகின்றன. சீட்டாட்டத்தைப் பொறுத்தவரை திறமையை விட நல்லூழிலையே ஆடுபவர் சார்த்திருக்க வேண்டியுள்ளதாக டாக்டர் மமோரியா (Dr. Mamoria) என்ற அறிஞரும் குறிப்பிடுகிறார். சீட்டாட்டம் எந்த நாட்டில், எக்காலத்தில், யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது அறியப்படவில்லை. இந்தியா, சீனா, அரேபியா ஆகிய நாடுகளில் இது நெடுங்காலத்திற்கு முன்பே இருந்துவந்ததாகச் சான்றுகள் உள்ளன. சீனாவில் கி. பி. 969-இல் இவ்வாட்டம் பரவியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் இது கி.பி. 12-ஆம் நூற்றாண்டுச் சீன இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த ஆட்டம் பரவியது. செருமனி (Germany), இசுபெயின் (Spain) போன்ற நாடுகளில் கி.பி. 1377-இலும், பெல்சியத்திலும் (Belgium) இத்தாலியிலும் கி.பி. 1379-இலும் பிரான்சில் கி.பி. 1392- இலும் இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க கால இத்தாலிய, இசுபானியச் சீட்டுக்களில் 1) கோப்பை (Cup), 2) வாள் (Sword), 3) பணம் (Money), 4) தடி (Club) ஆகிய நான்கு சாதிகள் இருந்தன. இவற்றில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் இருந்தன. தொடக்கத்தில் ஒரு சீட்டுக்கட்டில் 78 சீட்டுகள் இருந்தன. அவைகளில் 56 சீட்டுகள் மட்டும் எண்களை உடையவை. மற்றவை படச்சீட்டுக்கள், வட இந்தாலியிலும் மத்திய ஐரோப்பாவிலும் இன்றும் 78 சீட்டுகள் வைத்து ஆடும் ஆட்டம் நடைபெற்று வருகிறது. பழங்காலத்துக் சீட்டுகள் இங்கிலாந்து அருங்காட்சியகத்திலும், பின்சினாட்டியிலுள்ள அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் ஐரோப்பாவில் சீட்டுகள் கையாலேயே தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பெற்றன. எனவே மிகுதியான விலைக்கே கிடைத்தன. ஆனால் இப்பொழுது இயந்திரத்தின் மூலம் அட்டைகளில் செய்யப்படுகின்றன. மேலும் வெடியகக்காடியும் மரக்கூறும் கலந்த கலவையாலான (Nitro-cellulose) தகடுகளினால் உயர்ந்தரகச் சீட்டுகள்கூட இப்பொழுது உற்பத்தி செய்யப்படுகின்றன. சீட்டுக்கட்டுக்களின்மீது ஒவ்வோர் அரசாங்கமும் வரி விதித்திருப்பதால் அரசாங்கங்களுக்கு இதன்மூலம் ஒரு நிலையான வருமானமும் கிடைக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 192 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 110 |oTop = 160 |oLeft = 193 |Location = center |Description = }} இக்கால வழக்கிலுள்ள ‘இசுபேடு’ (Spade), ‘ஆடுதன்’ (Heart), ‘தயமண்டு’ (Diamond), ‘கிளாவர்’ (Club) ஆகிய நால்வகைச் சாதியில் 52 சீட்டுகளுடன் கூடிய சீட்டுக்கட்டு முதன்முதலாக 16-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் செய்யப்பட்டது. இருப்பினும் கி.பி. 1806-இல்தான் படங்கள் மேலும்கீழும் தலை உள்ளனவாகச் செய்யப்பட்டன. பின்னர் இன்றுவரை சீட்டுக் கட்டுகளில் எந்தவித மாறுதல்களும் ஏற்படவில்லை. ஒவ்வொரு சீட்டுக்கட்டிலும் நான்கு சாதியிலுமாக 52 சீட்டுகள் இருக்கும்படியாகச் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சாதியிலும் குறைந்த மதிப்புள்ள ஒரே குறி மட்டுமுள்ளது ‘ஆசு’ (Acc) என்று சொல்லப்படுகிறது. மற்றவை 2 முதல் 10 வரை எண்ணுள்ள குறிகளும், ஓர் அரசனும், ஓர் அரசியும், ஒரு ‘சாக்ரியும்’ (Jack) ஆகும். சீட்டாட்டத்தில் பலவகையான விளையாட்டுகள் உள்ளன. அவை பொழுதுபோக்கிற்காகவோ பணத்-<noinclude></noinclude> 6hauvfba5pgzrbvgez5ouwcu1q2lrf1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/226 250 647119 1947662 2026-06-18T08:57:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சந்நிதியில் அதனைக் கிடத்தி முறையிட இறைவன் பாற்கடலையே உபமன்னியுக்கு வரச்செய்து ஊட்டினார். பின்னர்த் தில்லை வனத்திலே புலிக்கால் முனிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோயிற்புராணம்‌|200|கோரக்பூர்}}</noinclude>சந்நிதியில் அதனைக் கிடத்தி முறையிட இறைவன் பாற்கடலையே உபமன்னியுக்கு வரச்செய்து ஊட்டினார். பின்னர்த் தில்லை வனத்திலே புலிக்கால் முனிவர் இறைவன் அனவரத தாண்டவம் கண்ணுறத் தவம் கிடந்தார். பதஞ்சலிச் சருக்கத்தில் ஆணவம் மிகுந்த தாருகாவனத்து முனிவர்களையும் அவர்கள் மனைவியரையும் ஆட்கொள்ள விரும்பிச் சிவன் காபாலி வேடமும், திருமால் மோகினி வேடமும் கொண்டு சென்று அவர்களைக் காமுகராக்கி நிறை இழக்கச்செய்தார். இதனைத் தெரிந்த தாருகாவன முனிவர்கள் ஆபிசார ஓமம் செய்ய அதில் தோன்றிய புலி, பூதம், பாம்பு, தீ முதலியவற்றையெல்லாம் சிவன் மேல் ஏவ, அவர் அவைகளை ஏற்றுக்கொள்ளவே, அம்முனிவர்கள் பிழை பொறுக்க வேண்டினர். பின்னர்த் தம் நடனத்தைக் காட்டி அவர்களைச் சிவபெருமான் ஆட்கொண்டார். இதனைக் கேட்ட ஆதிசேடன் தானும் சிவனருள் பெறும் விருப்பத்தைத் திருமாலிடம் கூற அவரும் விடைகொடுக்கவே அவ்வாதி சேடனே இறையருளால் பதஞ்சலி முனிவராகித் தில்லைவனத்து அனந்தீசுவரத்தில் இறைவனை வழிபட்டுப் புலிக்கால் முனிவருடன் தாண்டவம் காண விரும்பித் தவம் கிடந்தார். இவ்விரு முனிவரும் இறைவன் திருநடம் கண்டுகளிக்கத்தவம் புரிவதைத் தெரிந்து முனிவர், தேவர்கள் முதலிய யாவரும் தில்லைவனம் சார்ந்து தாங்களும் நடம் காண விரும்பி இறைவனை வணங்கித் துதித்தனர். சிவனும் அருள்கூர்ந்து சிவகாமியம்மையுடன் வந்து நடனக்காட்சி கொடுத்தார். அந்நடனச் சிறப்பை யாவரும் கண்டின்புற்ற நிலையையும், புலிக் கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் அவ்வழிபாட்டையும் தாண்டவத்தையும் என்றும் கண்டின்புற வரம்கேட்டு அவ்வாறே பெற்றதையும். அச்சபை பொற்சபையாகத் தேவர் முதல் வாவரும் இன்றும் அந்நடனத்தைக் கண்டின்புறுவதையும் நடராசச் சருக்கம் கூறுகிறது. கௌடதேசத்து அரசன் சிங்கவர்மன் சிதம்பரத் தலத்தையடைந்து வழிபட்டுச் சிறப்புற்றதை இரணிய வன்மச் சருக்கம் கூறுகிறது. அவனே சிதம்பரம் கோயிலை நன்முறையில் நிறுவி நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்தான், சிதம்பரத்தில் நிகழும் திருவிழாக்களின் சிறப்பையும் அவற்றைக் கண்ணுற்று மக்கள் அடையும் பயனையும் திருவிழாச் சருக்கம் கூறுகிறது. இந்நூலில் சைவசித்தாந்தக் கருத்துகளை ஆசிரியர் ஆங்காங்கு மக்களுக்கு அறிவுறுத்தும் திறம் மிகவும் சிறப்பாயுள்ளது. {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கோயிற்புராணம்‌"/> <section begin="கோரக்பூர்"/> {{dhr}} {{larger|<b>கோரக்பூர்</b>}} உத்தரப்பிரதேசத்திலுல்ஸ நகரம், இதுவே கோரக்பூர் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. கோக்ரா நதியின் உபநதியான இரப்தி (Rapti) நதியின் இடக் கரையில் உள்ள இந்நகரம் காசியிலிருந்து (Varanasi or Benares) வடக்கே 150 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கி.பி. 1400 அளவில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொகலாயப் பேரரசர் அக்பர், ஔத்தின் (Oudh) பிரிவான சர்க்கார் ஒன்றின் தலைமையிடமாகக் கோரக்பூரை (Gorakhpur) ஆக்கி அங்கு மொகலாயப் படை பிரிவினை நிறுத்தி வைத்தார். அவுரங்கசீபு தம் ஆட்சிக்காலத்தில் கோரக்பூருக்கு அருகில் உள்ள உருது கடைத்தெருவில் (Urdu Bazaar) சாமி மசூதியைக் (Jami Masijid) கட்டினார். கி.பி. 1801–இல் கோரக்பூர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் ஆட்சிக்கு உட்பட்டபின், இந்நகரம் பல முன்னேற்றங்களைக் கண்டது. தொடக்க காலத்திலிருந்தே இந்நகரம் இராணுவ முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. கி.பி. 1885 இல் இந்நகரம் இரயில் பாதையால் இணைக்கப்பட்டபோது, முக்கியத்துவம் பெற்று மேலும் வளரத் தொடங்கியது. பின்னர் இது வட கிழக்கு இரயில்வே பிரிவின் தலைமையகமாகவும் செயற்பட்டது. 1947–இல் சாலைப் போக்குவரத்தின் (Road Transport) பிராந்திய மையமாகவும் ஆக்கப்பட்டது. இந்நகரம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நெசவாலைகள், (குறிப்பாக கைத்தறித் தொழில்), பொறியியல் தொழிற்சாலைகள், அச்சுத் தொழில், காகிதம் செய்தல், இரசாயன சாயத் தொழில், தொடர்வண்டி இயக்குபொறித் தொழிற்சாலை ஆகியன இங்கு உள்ளன. புகையிலையும் இங்கு மிகுதியாக விளைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 180,255 (1961) ஆகும். மக்கள் தொகையில் 45% தொழிலிலும் வாணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர். முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் (கி.பி. 1857) நடைபெற்ற போது, கிளர்ச்சி நடந்த நகரங்களுள் கோரக்பூர் முதன்மையான இடத்தை வகித்தது. {{Right|<b>ம.இ.</b>}} <b>பல்கலைக்கழகம்</b> உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் (Gorakhpur) என்னுமிடத்தில் உள்ளது. கோரக்பூர் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்டம் 1956–ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஓராண்டு கழித்து இப்பல்கலைக்கழகம் 1957–இலிருந்து செயற்படத் தொடங்கியது. கோரக்பூர் பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, பிற கல்லூரிகளுக்கு இணைப்புரிமை வழங்குதல் (Affliation) ஆகியவற்றைச் செய்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்திடம் இணைப்புரிமை பெற்றுள்ளன. {{nop}}<noinclude></noinclude> 25fserfai8yigm0lq73uo9y6kwvuwqe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/193 250 647120 1947672 2026-06-18T09:07:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திற்காகவோ விளையாடப்படலாம். இதில் ஒருவரே ஆடும் ஒருவகைச் சீட்டாட்டம் பொறுமை (Patience) எனப்படும். இருவருக்கு மேற்பட்டவர்கள் ஆடுவதற்குப் பல ஆட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீட்டுக்கவி|165|சீட்டுக்கவி}}</noinclude>திற்காகவோ விளையாடப்படலாம். இதில் ஒருவரே ஆடும் ஒருவகைச் சீட்டாட்டம் பொறுமை (Patience) எனப்படும். இருவருக்கு மேற்பட்டவர்கள் ஆடுவதற்குப் பல ஆட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டுமே ஆடக்கூடிய சில ஆட்டங்களும் உண்டு. இந்தியாவில் முக்கியமாகத் தென்னிந்தியாவில் ‘ரம்மி’ (Rummy), ‘அவுட்டு’ (Out), பிடி, கழுதை, 28,304,504 முதலிய ஆட்டங்கள் வழக்கில் இருப்பவையாகும். இவற்றைத் தவிர, தெரிந்தெடுத்தல் (Pick), ‘பெசிக்கு’ (Bezique), ‘ஏலப்பிரிட்சு’ (Auction Bridge), ‘ஒப்பந்தப் பிரிட்சு’ (Contract Bridge), ‘போக்கர்’ (Pocker), ‘விசுட்டு’ (Whist) முதலிய மேலை நாட்டு ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. நல்லூழினை தம்பியே பெரும் அளவு இந்த ஆட்டம் இருப்பதாலும், மிக்க உழைப்பின்றிப் பணம் கிடைக்க வழி இருப்பதாலும் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் விரும்பி ஆடுகின்றனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இந்தச் சீட்டாட்டத்தால் அழிந்துபோன குடும்பங்கள் மிகப்பல. எனவேதான், இங்குச் சீட்டாட்டம் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பொதுச் சூதாட்ட விதி சீட்டாடுவதற்குத் தண்டனையும் விதிக்கிறது. இருப்பினும், அரசு அனுமதிபெற்ற சீட்டாட்ட நிலையங்களிலும், அனுமதி பெறாத பொது இடங்களிலும் சீட்டாட்டங்கள் நடைபெற்றே வருகின்றன. காண்க: சூதாட்டம்.{{Right|<b>பூ.த.</b>}} <section end="சீட்டாட்டம்"/> <section begin="சீட்டுக்கவி"/> {{dhr}} <b>சீட்டுக்கவி</b> கடித முறையில் எழுதப்படும் செய்யுள், ஓலை, முடங்கல், முகம், திருமுகம், கையோலை, கைச்சீட்டு, சீட்டு என்னும் சொற்களும் கடிதம் என்னும் பொருளையே குறிப்பன. பனை ஓலையில் எழுதப்பட்டது ஓலை எனப் பெற்று, அதில் தூதுச் செய்திகளும், புலவர்தம் வேண்டு கோள்களும் சங்க காலத்தில் எழுதப்பட்டன. பாரதியார் ‘ஓலைத்தூக்கு’ என்னும் சொல்லைக் கையாண்டார். ஓலையில், மடலில் எழுதி முடக்கி-மடக்கி-மடித்து அனுப்பியதால் ‘முடங்கல்’ எனப்பெற்றது. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம் ‘முடங்கல்’ என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. முகத்திற்கு முன் முகம் நிறுத்தி நேருக்கு நேர் உரைப்பது போன்று எழுதப்பட்டதால் ‘முகம்’ என்றாகி, மங்கலச் சொல்லாகத் ‘திரு’ என்னும் அடைமொழி பெற்றுத் ‘திருமுகம்’ என்றும் பெயரைப் பெற்றது. 16-ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட திருவிளையாடற்புராணத்தில் சேரமான் பெருமாள் நாயனார்க்குச் சிவபெருமான் எழுதியதாகக் கூறப்படும் மூடங்கல் ‘திருமுகம்’ எனப்பெற்றது. இக்கதையைக் கூறும் படலமும் ‘திருமுகம் கொடுத்த படலம்’ எனப் பெயர் கொடுக்கப்பெற்றது. இத்திருமுகம் பின்னர்ச் ‘சீட்டுகவி’ என்று பெயர் பெற்றது. ‘சீட்டுக்கவி’ என்னும் சொல்லைச் செய்யுள் ஆட்சியாகப் பெரிதும் காணமுடியவில்லை. ‘திருவிளையாடற் பயகரமாலை’ (கி.பி. 17.நூ.) என்னும் நூலில் மேற்கண்ட திருமுகம் எழுதப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடப்பெறும் பாடலில், ‘சேரற்குச் சீட்டுக்கவி பாடிக்கொடுத்த சொக்கே பரதேசி பயகரனே’ எனவரு தலின் ‘சீட்டுக்கவி’ என்னும் சொல்லைக் காணலாம். அந்நூலில் 'திருமுகம்' என்னும் சொல்லும் உள்ளது. தொடர்ந்து ‘சீட்டுக்கவி’ வழக்காயிற்று. உமாபதி சிவம் என்னும் சைவப் பெரியாருக்குச் சிற்றம்பலவர் பெத்தான் சாம்பானுக்கு முத்திகொடுக்கவேண்டிப் பரிந்துரைத்து அனுப்பிய பாடலில் ‘கைச்சீட்டு’ என்னும் சொல் உள்ளது. ‘சீட்டு’ என்னுஞ்சொல் ‘சில’ என்னும் அடித்தளப் பொருளில் தனிஇதழ், பட்டியல் என்னும் பொருள்களில் வழங்கப்பெறுகிறது. பிரயோக விவேக உரைகாரர் ‘நூற்றொரு பேதமாய்விரியுமென்று பாடியகாரர் சீட்டுக் (பட்டியல்) கொடுத்தார்’ என்று ‘பட்டியல்’ என்னும் பொருளில் ‘சீட்டு’ என்னும் சொல்லைக் கையாண்டார். முடங்கலைத் தனி ஓலையில் தனித்தாளில் எழுதியதாலும் அதில் தாம் விரும்பும் பொருள்களைப் பட்டியலிட்டு எழுதியதாலும் அவ்வாறெழுதப்பட்ட பாட்டு, ‘சீட்டுக்கவி’ எனப் பெற்றது. அவ்வந்நாளைய கணக்குப் பட்டியல் கொண்டது சிட்டை எனப்படுவதும், தனித்தனிக் குறிகள் கொண்ட விளையாட்டு அட்டைகளின் தொகுதி ‘சீட்டுக்கட்டு’ எனப்படுவதும், ‘ஒரு சீட்டுக் கொடுத்தனுப்பு’ என்னும் வழக்கும் நடைமுறையில் உள்ளன. சீட்டுக்கவிக்கெனத் தனி இலக்கணம் வகுக்கப்பெறவில்லை. இது ஒரு தனிப்பாடல் ஆதலால் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகவில்லை, தனிப் பாடலுக்கு இலக்கணம் வகுத்துள்ள ‘இலக்கண விளக்கம்’ என்னும் நூலிலும் இதற்கு இலக்கணம் இல்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறுதல் முறையாதலின், இந்தச் சீட்டுக்கவியின் தோற்ற வளர்ச்சியைக் கண்டு இலக்கணத்தை அமைத்துக் கொள்ளலாம். முற்காலத்தில் கருத்துகளையோ செய்திகளையோ செய்யுளாகவே எழுதி அனுப்பினர். அவ்வாறு எழுதப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்புகள் சங்கத் தொகை நூல்களாக உள்ளன. அவை திணை, துறை என்னும் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு அமைந்-<noinclude></noinclude> 3ljnzjehevq22jhvwolyg39a1oq1bg2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/227 250 647121 1947674 2026-06-18T09:18:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்பியல், தாவரவியல், வேதியியல், கணிதவியல், இராணுவ அறிவியல் (Military Science), விலங்கியல் ஆகிய அறிவியல் துறைகளும், பண்டைய வரலாறு மற்றும் பண்பாடு, வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோல்டு கோசுட்டு|201|கோல்டுசுமித்து, ஆலிவர்}}</noinclude>இயற்பியல், தாவரவியல், வேதியியல், கணிதவியல், இராணுவ அறிவியல் (Military Science), விலங்கியல் ஆகிய அறிவியல் துறைகளும், பண்டைய வரலாறு மற்றும் பண்பாடு, வணிகவியல், பொருளியல், கல்வியியல், கவின்கலையும் இசையும் (Fine Arts & Music), நிலவியல் (Gcography), இடைக்கால மற்றும் இக்கால வரலாறு (Medieval and Modern History), சட்டவியல், தத்துவம், அரசியலறிவியல், உளவியல், சமூகவியல் ஆகிய கலைத்துறைகளும், உருது, சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் துறைகளும் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ளன. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கோரக்பூர்"/> <section begin="கோல்டு கோசுட்டு"/> {{dhr}} {{larger|<b>கோல்டு கோசுட்டு</b>}} (Gold Cost): காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/கானா|கானா]]. <section end="கோல்டு கோசுட்டு"/> <section begin="கோல்டுசுமித்து, ஆலிவர்"/> {{dhr}} {{larger|<b>கோல்டுசுமித்து, ஆலிவர்:</b>}} இவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் ஆங்கிய இலக்கிய வரலாற்றில் ஒரு நிலையான இடம்பெற்றுத் திகழ்கிறார். ஏனைய ஆங்கில இலக்கிய வல்லுநர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஆலிவர் கோல்டுசுமித்து (Oliver Goldsmith) மிகச் சிறந்த ஒரு நூலாசிரியர் என்று கூற இயலாதபோதிலும், இவரது இலக்கியத் தொண்டைக் குறைத்து மதிப்பிட இயலாது. கோல்டுசுமித்து உரைநடை, கவிதை, நாடகம் என்ற மூன்று இலக்கிய அமைப்புகளிலும் தம்முடைய இலக்கியச் சிறப்புகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 227 |bSize = 480 |cWidth = 128 |cHeight = 130 |oTop = 398 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|கோல்டுசுமித்து ஆலிவர்}} கோல்டுசுமித்து அயர்லாந்தைச் சேர்ந்த பல்லாசு (Pallas, Ireland) என்ற கிராமத்தில் கி.பி. 1728–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தையார் ஒரு மதகுரு ஆவார். கோல்டுசுமித்துக்கு இரண்டு வயது ஆகும் போது அவருடைய குடும்பம் பல்லாசிலிருந்து இலிசாய் (Lissoy) என்ற கிராமத்திற்கு இடம் மாறியது. எலிபைத் தீலாம் என்ற அம்மையார் கோல்டுசுமித்துக்கு முதன்முதலாகக் கல்வி கற்பித்தார். பிறகு இலிசாய்ப் பள்ளியில் தாமசு பியரன் என்பவரிடத்தில் கல்வி பயின்றார். பிறகு திரினிடி கல்லூரியில் (Trinity College) கி.பி. 1744–இல் சேர்ந்து படித்தார். படிப்புக்கான செலவுகளுக்கு ஈடாகக் கல்லூரியில் கீழ்நிலை வேலைகளை முகம் சுளிக்காது செய்தார். தந்தையார் காலமான பின்னர் கி.பி. 1749–ஆம் ஆண்டு பல இன்னல்களுக்குப் பிறகு கோல்டுசுமித்து பி.ஏ. பட்டம் பெற்றார். கோல்டுசுமித்தைக் கிறித்தவ சமய சேவையில் பாதிரியாராக்க உற்றார் விரும்பினர். அவ்விருப்பம் நிறைவேறாது போயிற்று. கோல்டுசுமித்து உறவினர் உதவியால் சட்டம், மருத்துவம் பயிலச் சென்று, அக்கல்விகளை முடிக்காமலேயே திரும்பினார். பின்னர் பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று சுற்றுப்பயணம் செய்து விட்டு கி.பி. 1756–இல் இங்கிலாந்து திரும்பினார். நாடோடில் கலைஞராகவும், சிற்றாசிரியராகவும், மருத்துவராகவும் பணிபுரிந்து வாழ்ந்தார். இரிச்சர்டுசன் என்பவருக்கு எழுத்துப் பிழை திருத்துபவராக இருந்து, பெக்சாம் என்னுமிடத்தில் டாக்டர் மில்னே என்பவரின் கலைக்கழகத்தில் (Dr. Milae's Classical Academy) சில மாதங்கள் பணியாற்றி, விலகிக்கொண்டார். கோல்டுசுமித்தின் வாழ்க்கை கி.பி. 1760–ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை ஒரு போராட்டமாகவே அமைந்திருந்தது. இவர் கி.பி. 1760–ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1774–ஆம் ஆண்டு வரையில் பல இலக்கியப் படைப்புகளை உலகிற்கு வழங்கினார். அவை யாவுமே சிறப்பான படைப்புகள் என்று கூற இயலாது. ‘இப்போதைய ஐரோப்பாவின் கல்வி நிலையைப் பொறுத்து ஒரு புலனாய்வு’ (An Enquiry Concerning the Present State of Learning in Europe) என்ற உரைநடைக் கட்டுரையினை கி.பி. 1760–ஆம் ஆண்டில் வரைந்தார். அடுத்த ஆண்டில் உலகக் குடிமகன் (Citizen of the World) என்ற தலைப்பில் ஓர் உரைநடைத் தொடரைத் தொடங்கினார். அதில் ஒரு சீனனைக் கற்பனைக் கதைமாந்தனாக்கி, அவன் தன்னாட்டு மக்களுக்கு ஆங்கிலேயர்களைப் பற்றி எழுதுவதுபோல் அமைத்-<noinclude></noinclude> tto6bmmpvcptxmq9dm4m07euaxo0laz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/228 250 647122 1947675 2026-06-18T09:37:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துள்ளார். அந்தத் தொடர் வரிசையில் ‘கருப்பு அங்கி அணிந்த மனிதன்’ (The Man in Black) பகட்டு திப்சு (Beau Tibbs) போன்ற சிறந்த படைப்புகள் இடம் பெறுகின்றன. நிரந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோல்டுசுமித்து, ஆலிவர்‌|202|கோல்புருக்கு, என்றி தாமசு}}</noinclude>துள்ளார். அந்தத் தொடர் வரிசையில் ‘கருப்பு அங்கி அணிந்த மனிதன்’ (The Man in Black) பகட்டு திப்சு (Beau Tibbs) போன்ற சிறந்த படைப்புகள் இடம் பெறுகின்றன. நிரந்தர வறுமையின் காரணத்தினால் சாதாரண கதை கட்டுரைகள் வரைய வேண்டிய நிலை கோல்டுசுமித்துக்கு ஏற்பட்டது. அந்தக் கட்டாயத்தில் தோன்றியவைதாம் உரோமானிய வரலாறும், உயிர்ப்புடைய இயற்கையின் வரலாறும். பல வழிகளில் எழுதிப் பணம் சம்பாதித்தும், இல்லாமையின் துன்பத்தில் வாடிப்போன எழுத்தாளர்களுள் முதன்மையிடம் கோல்டுசுமித்தையே சாரும். டாக்டர் சாமுவேல் சான்சன் கோல்டுசுமித்தினிடம் பணம் சேர்க்க வழிபார்க்கவேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் கோல்டுசுமித்தினிடம் ஏதானும் எழுத்துப் பிரதிகள் உண்டா என்று கேட்டார். அவ்வமயம் கோல்டுசுமித்தினிடம் வேக்பீல்டு பாதிரியார், (Vicar of Wakefield) என்ற படைப்பு இருந்தது. அதனைப் பெற்றுக் கொண்ட டாக்டர் சான்சன் அதனை 70 பவுண்டுகளுக்கு விற்றுக் கோல்டுசுமித்தின் வாழ்வை ஒழுங்குபடுத்தினார். அப்புத்தகத்தினால் நல்ல பெயரும் புகழும் கோல்டுசுமித்துக்குக் கிட்டின. கோல்டுசுமித்து ‘நற்குணம் உள்ள மனிதன்’ (The Good Natured Man). ‘அவள் பணிவது வெல்வதற்கே’ (She Stoops to Conquer) என்ற நாடகங்களினால் சிறந்த நாடக ஆசிரியர் என்ற புகழைப் பெற்றார். கோல்டுசுமித்துக்கு அழியாத புகழைத் தேடித் தந்தது ‘புறக்கணிக்கப்பட்ட கிராமம்’ (The Deserted Village) என்னும் கவிதையாகும். இலிசாய் கிராமத்தில் தொழிற்புரட்சியின் விளைவாக ஒரு சாராரிடத்தில் பணப் பெருக்கம் மிகுந்தது. இந்தப் பணப்பெருக்கத்தினால் ஆபர்ன் நிலங்கள் கைமாறி ஒரு சில பணக்காரர்களின் கைவசமாயின. அதன் விளைவாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த நிலத்தை இழந்து, வேலையையும் இழந்து ஏழை விவசாயிகள் ஆபர்ன் கிராமத்தைப் புறக்கணித்து விட்டு வேற்றூருக்குச் சென்றுவிட்டனர். ஆகையால், ஆபர்ன் புறக்கணிக்கப்படுகிறது. முன்பிருந்த செழுமை, இயற்கை, இசை, அழகு, அமைப்பு எல்லாமே அழிந்துவிட்டன. ஆபர்னின் ஆபரணமாக விளங்கிய அந்த உணவுச் சத்திரம் (Village Inn) இப்பொழுது இல்லை. இருந்தபோது எல்லாமே இன்ப மயமாக விளங்கின. ஆங்கில இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இக்கவிதை சொல் நயம், பொருள் வளம், கவிதை நயம் யாவும் சிறப்புற அமையப்பெற்றுள்ளது. இவ்வாறாக இலக்கியத் தொண்டு புரிந்த ஆலிவர் கோல்டுசுமித்து கி.பி. 1774–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் மறைந்தார். {{Right|<b>எம்.கே.ஸ்ரீ.</b>}} <section end="கோல்டுசுமித்து, ஆலிவர்‌"/> <section begin="கொல்புரூக்கு, என்றி தாமசு"/> {{dhr}} {{larger|<b>கொல்புரூக்கு, என்றி தாமசு</b>}} என்பவர், ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தார் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தம் ஆட்சியை நிறுவிய காலத்தில், இந்தியாவுக்கு வந்து, இந்திய இயக்கியங்களையும் சட்ட முறைகளையும் பயிறு, இந்து சட்டத்தொகுப்பு (The Digest of Hindu Law) என்ற அரியதொரு நூலை எழுதித் தொண்டு செய்த ஆங்கிலப் புலவர் ஆவர். ஐரோப்பாவிலேயே முதல் முதலாக வடமேழிப் புலவர் எனப் புகழ் பெற்றவர் இவரே. என்றி தாமசு கோல் புரூக்கு (Henry Thomas Cole brooke) கி.பி. 1765–இல் இலண்டனில் பிறந்தார். இவர் தந்தை ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தில் ஓர் அலுவலராகப் பணியாற்றினார். ஆகையால், இளமையில் கோல்புரூக்கு அவ்வாணிகக் கழகத்தில் பணியாளராகச் சேர்ந்து, வங்காளத்துக்கு வந்து, அங்கு வேளாண்மைத் தொழிலைப் பற்றி ஆய்வு செய்தார். அப்போதே இவர் வடமொழிப் பயிற்சியிலும் இந்தியச் சட்டக் கல்வியிலும் ஆர்வம் மிக்குடையவராயினார். இவரைப் போன்று இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த கால்கெடு வில்கின்சு (Halhed Wilkins), வில்லியம் சோன்சு (William Jones) முதலிய ஆங்கில அறிஞரெல்லோரும் இந்திய மொழிகளையும், கலைகளையும் அறிவதில் ஆர்வத்துடன் இருந்தனர். கோல்புரூக்கு, ஆசியக் கழகத்தினால் கல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்ட ஆசிய ஆய்வுகள் (Asiatic Researches) என்ற வெளியீட்டில் இந்தியக் கவிதைகள், சமயநெறி, அறிவியல் முதலியவை பற்றிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். முதலில் வாணிகக் கழகத்தில் வங்காளத்தில் ஓர் எழுத்தாளராகப் பணி செய்த கோல்புரூக்கு வடமொழியிலும் சட்டத்துறையிலும் ஆர்வத்தோடிருந்தமையால், அரசாங்கத்தின் வருவாய்த் துறையிலிருந்து, சட்டத் துறைக்கு மாற்றப்பட்டார். இவர் நாகபுரி அரசருடைய அவைக்கு ஆங்கிலத் தூதுவராக கி.பி. 1799–1801–இல் சென்று வந்தார். அதன் பின்னர் இவர் பல உயர்நீதி அலுவல்களில் பணி செய்து, பல சட்டங்களை எழுதினார். இவர் கி.பி. 1837–இல் இலண்டனில் மறைந்தார். <b>இவர் பணிகள்:</b> கோல்புரூக்கு கி.பி. 1794–இல் மிச்சாபூரில் நீதிபதியாக அமர்த்தப்பட்டார். வெல்லசுலிபிரபு தலமை ஆளுநராக இருந்த காலத்தில் கோல்புரூக்கு, கி.பி. 1801–இல் கல்கத்தாவிலிருந்த வாணிகக் கழகத்தின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் வில்லியம் கோட்டைக் கல்லூரியில் இந்து சட்டத்துக்கும், வட<noinclude></noinclude> nuryid37t9d58kty9b4qvouiorag12t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/229 250 647123 1947676 2026-06-18T09:59:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மொழிக்கும் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவர் கி.பி. 1807–இல் தலைமை ஆளுநரின் குழுவில் ஓர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுப் பின் கி.பி. 1814–இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|203|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌}}</noinclude>மொழிக்கும் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவர் கி.பி. 1807–இல் தலைமை ஆளுநரின் குழுவில் ஓர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுப் பின் கி.பி. 1814–இல் அப்பதவியிலிருந்து விலகினார். இவர் இந்து சமய இலக்கியங்களிலும், தத்துவத்திலும், பண்டைய இந்திய கணிதத்திலும், வானவியல் நூலிலும் மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர் இலண்டனுக்குத் திரும்பிச் சென்ற பின் கி.பி. 1823–இல் இலண்டனில் பிரித்தானிய அரசின் ஆசியக் கழகம் என்ற நிறுவனத்தை (Royal Asiatic Society of Great Britain) அமைத்தார். இவர் கி.பி. 1798–இல் இந்து ஒப்பந்தங்கள், வாரிசு முறைகள் பற்றிய சட்டத்தொகுப்பு (Digest of Hindu Law on Contracts and Successions) என்ற நூலையும், கி.பி. 1805–இல் வடமொழி இலக்கண நூலையும், இந்து வேதங்கள், சமணர் நிலை பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். இந்துக்களின் தாய உரிமைச் சட்டத்தைப் பற்றிய இரு கட்டுரைகள் என்ற நூலும் (Two Treatises on the Hindu Law of Inheritance) கி.பி. 1810–இல் இவரால் எழுதப்பட்டதே ஆகும். இவர் எழுதிய இந்து சட்டத் தொகுப்பு என்ற நூலே இத்துக்களின் தாயமுறை, வாரிசு திருமணம் முதலியவற்றிலெழும் வழக்குகளில் கையாளப்பட்டது. சுருங்கக்கூறின் இக்கால இந்து உரிமைச் சட்டத்துக்கு அடிப்படையைக் கோல்புரூக்கு அமைத்தார் எனலாம். {{Right|<b>பா.சூ.</b>}} <section end="கோல்புருக்கு, என்றி தாமசு"/> <section begin="கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்"/> {{dhr}} {{larger|<b>கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர் (கி.பி. 1772-1834):</b>}} ஓட்டெரி புனித மேரி (Ottery St. Mary) என்ற இடத்தில் சமய குரு ஒருவரின் மகனாகச் சாமுவேல் தெய்வர் கோல்ரிட்சு (Samuel Taylor Coleridge) கி.பி. 1772–இல் பிறந்தார். இவருக்கு ஒன்பது வயதான போது தந்தையை இழந்ததால், இவரைக் கிறித்து மருத்துவமனைக்கு (Christ's Hospital) அனுப்பிவைத்தனர். வீடில்லாது, பேணுவாரற்ற அநாதையாக, அந்த அநாதை இல்லத்தின் ஆதரவில் வளரும் அவப்பேறு வாய்க்கப்பெற்ற இவர். நிறையப் படித்து, கேம்பிரிட்சு கிறித்து கல்லூரியில் (Cambridge Jesus College) மேற்படிப்பிற்காகச் சென்றார். சமயப் பணியில் சேர்வதற்காக கி.பி. 1793–இல் அக்கல்லூரியை விட்டு வெளியேறினார். ஆயினும் இவர் பட்டமும் பெறவில்லை; சமயப் பணியிலும் ஈடுபடவில்லை. கவிஞர் சதேயின் (Southey) தொடர்பினால் புரட்சியாளராய் மாறி, மனித இனத்தைச் சீர்திருத்தும் பாண்டிசோக்ரசி (Pantisocracy) இயக்கத்தின் பேச்சாளராகத் திகழ்ந்தார். ஒருமுறை செருமனிக்குச் சென்று திரும்பியபோது இவர் மனமாற்றம் பெற்றார்; மெய்யுணர்வாளராய் மாறினார்; அதனோடு கஞ்சாப் பிரியரானார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 229 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 200 |oTop = 92 |oLeft = 262 |Location = center |Description = }} {{center|கோல்ரிட்சு}} எழுத்துத் துறைக்குத் திரும்பிய கோல்ரிட்சு நிறையக் கட்டுரைகள் எழுதினார். பல இதழ்களுக்குக் கட்டுரைகள் வரைந்தார். இவருடைய உரைநடைப் படைப்புகள் அறிவு பூர்வமான, சிந்தனை வீச்சுடையனவாக உள்ளன. இவர்தம் முருகியல் மதிப்பீடுகள் தத்துவப் பார்வையில் முறைப்படுத்தப்பட்டன. கோல்ரிட்சுதான் முதன் முதலாகத் திறனாய்வு என்பது கற்பனை நயம் படைத்த, உயர்ந்த படைப்பிலக்கிய மதிப்புடையது என்று நிறுவியவராவார். இவர் கி.பி. 1810 முதல் 1818 வரையிலான கால கட்டத்தில் சேக்சுபியர் பற்றியும் பிற கவிஞர் பற்றியும் சிறப்புச் சொற்பொழிவுகள் பல நிகழ்த்தினார். இவர் சொற்பொழிவுகளும் எழுத்துகளும் பலரையும் கவர்ந்ததால் இவரைச் சுற்றி நண்பர் வட்டம் ஒன்று உருவாகியது. கோல்ரிட்சின் இளமைக் காலக் கவிதைகள் இவரைப் பற்றிய பிரதிபலிப்பாகவே அமைந்தன; அலங்கார நடையில் இயற்றப்பட்டன. கவிதையின் உயிர்த்துடிப்பான தனித்தன்மையை அக்கவிதைகளில் காணமுடியாது. கோல்ரிட்சு கவிதையின் பாடுபொருள்கள் பலதிறத்தன. செல்லும் ஆண்டைப் பற்றிய கவிதை (Ode to the Departing Year), தனிமையில் அச்சம் (Fear in Solitude), நள்ளிரவுப் பனி (Frost at Midnight), உறக்கத்தின் வேதனைகள் (Pains of Sleep) என்பவை குறிப்பிடத்தக்கன. {{nop}}<noinclude></noinclude> sc9iutw44aidvf5bqsuef65oamq92v9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/230 250 647124 1947678 2026-06-18T10:12:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோல்ரிட்சு எழுதிய கவிதைகளில் கிறிசுடபெல் (Christabel), குப்லாகான் (Kublakhan) போன்றவை உயர்தரமுடையன. மேற் குறித்த கவிதைகள் கி.பி. 1798–இல் வெளிவந்தன. இக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோலம்‌|204|கோலம்‌}}</noinclude>கோல்ரிட்சு எழுதிய கவிதைகளில் கிறிசுடபெல் (Christabel), குப்லாகான் (Kublakhan) போன்றவை உயர்தரமுடையன. மேற் குறித்த கவிதைகள் கி.பி. 1798–இல் வெளிவந்தன. இக்கவிதைகள் கவிஞன் ஒருவன் தன் கற்பனை நயத்தால் எத்தகு சிறப்புப் படைப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. வேர்ட்சுலொர்த்து (Wordswarth) எளிமையான பொருளுக்கும் கவிதை வடிவம் தருபவர்; நடப்பியல் கவிஞர் கோல்ரிட்சு அரிய நிகழ்வுகளைக் கற்பனை மெருகில் உருவாக்கிக் காட்டும் படைப்பாளி. இவர் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையே பெரிதும் விரும்பிக் கவிதை புனைவார். கோல்ரிட்சு காலம் புனைவியல் கோட்பாட்டுக் காலம். மருமமும், இயற்கை மீறிய நிகழ்வுகளும் கற்பனைப் பூச்சுடன் கவிதைப் பொருள்ளாய் உருவாக்கம் பெற்று மக்களைக் கவர்ந்த நாளில், இக்கவிஞர் காலத்தேவைக்கேற்ப மிகு கற்பனைப் புனைவுகளாய்ப் படைத்தார். மென்மையான ஆன்மிகச் சாயல் கொண்ட புனைவியல் உலகினையே கோல்ரிட்சு படம் பிடித்துக் காட்டினார். கோல்ரிட்சு படைப்புகளில் சிறந்த உரைநடை நூல் அவரது ‘இலக்கிய வரலாறு’ (Biographia Litereria) ஆகும். இந்நூலின் முதற்பகுதி தன் வரலாற்றுக் கூறுகள் நிறைந்தது. இரண்டாம் பகுதி ஆங்கில மொழியின் மிகச் சிறந்த திறனாய்வுக் கோட்பாடுகளைக் கொண்டது; சேக்சுபியர் மற்றும் பிற கவிஞர்கள் பற்றிய சொற்பொழிவுகளைக் கொண்ட நூல். செருமானிய எழுத்தாளர்கள் பற்றிய அறிமுக நூல் ஒன்றைக் கோல்ரிட்சு எழுதினார். இது ஆங்கில வாசகர்கள் செருமானியப் படைப்பாளிகளை அறிந்து கொள்ள மிகவும் துணைபுரிந்தது. இவர் எழுதிய கடிதங்கள் இலக்கிய மதிப்புடையவை. {{Right|<b>பி.எஸ்.வே.</b>}} <section end="கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌"/> <section begin="கோலம்"/> {{dhr}} {{larger|<b>கோலம்:</b>}} இது தமிழ்நாட்டுக் கலைகளில் ஒன்றாகும். கோலம் என்ற சொல்லிற்கு, அழகு, ஒப்பனை, மாதிரி போன்ற பொருள்களைக் கூறுவர். பெருவிரலுக்கும், அடுத்த விரலுக்கும் இடையில் கோலப் பொடியினை வைத்து நெடியதாய் விழுமாறு செய்து, அதனால் தரையில் வடிவங்களை அமைப்பது கோலமாகும் தெய்வங்களை அமைப்பதற்கு முன்பாக, பீடத்தின் அடியில் செப்புத் தகட்டில் உரிய கட்டங்கள் அமைத்து மந்திரங்களை எழுதிவைப்பர். அவ்வாறு மந்திரத்தாபனம் செய்து தெய்வச் சிலையை அதன்மீது நிறுவிய பின்னர், அந்த மந்திரத் தகட்டினைப் பார்க்கமுடியாது. அந்த மந்திரத் தகட்டில் வரைந்தது போன்று, மாவினால் தரையில் கோலங்கள் அமைத்து வழிபடும் மரபு, பிற்காலத்தில் கலை நுட்பம் கலந்து சிறக்கத் தொடங்கியது. இன்றும் இம்மரபு கேரள மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பகவதி அம்மன் கோவிலில் மந்திரத் தகடுபோலக் கோலமிட்டு அக்கோலத்தையே அம்மனாகக் கருதி வழிபடுவர். தமிழகத்தில் மந்திரத் தகடுபோல் கோலம் வரையாமல் எதேனும் ஒரு கோலம் வரைந்து உற்சவ மூர்த்தியை அதன்மேல் வைத்து வழிபடும் மரபை இன்றும் காணலாம். குத்துவிளக்குப் பூசை செய்பவர்கள், கோலம் இட்டு அதன் மீது விளக்கை வைத்து வழிபடுவர். கோலம் வரையும் பயிற்சியைத் தம் தாய் அல்லது தமக்கையரிடமிருந்து சிறுமியர் கற்றுக் கொள்வர். இப்பயிற்சி, ஏறத்தாழ ஐந்து வயது முதல் தொடங்குவது உண்டு. புதுப்பெண்ணாகச் சென்று கணவன் வீட்டில், புதுமையான முறையில் கோலம் இடும் பெண்ணிற்கு அத்தெருவில் புகழ் கிடைப்பது எளிதாகும். தமிழகப் பெண்களுக்குக் கோலக் கலையின் மீது தணியாத வேட்கை என்றும் உண்டு. தமிழகத்தில் சிறு கோலம் முதல், பெரிய கோலம் வரை வரைந்த குறிப்பேடுகள் இல்லாத வீடு இல்லை எனலாம். சாதாரண காலங்களில் கோலமிடுவதற்கு அதற்குரிய கல்லினை இடித்துப் பெற்ற பொடியினைப் பயன்படுத்துவர். இப்பொடி வெண்மை நிறம் உடையதாகும். சிறப்பான திருவிழாக்காலங்களிலும், மங்கல நிகழ்ச்சி நடைபெறும் காலங்களிலும் பச்சரிசியை அரைத்து மாவாக்கிக்கோலம் போடுதல் மரபாகும். தரையில் போடப்படும் பச்சரிசி மாக்கோலம் காய்ந்தவுடன் அந்த மாக்கோடுகள் படல், படலாகப் பெயர்த்தெடுக்கும்படி இருக்கும். அதனை எறும்பு, அணில், பறவைகள் ஆகியன எடுத்துத் தின்னும். வீட்டின் முன்புற வாயிலில் பச்சரிசிப் பொடி கொண்டு கோலமிடப் பெறும். அப்பொடிகள் மங்கல அலங்காரமாகத் திகழ்வதோடு எறும்பு முதலிய சிற்றுயிர்களுக்கு உணவாகவும் பயன்படும். இதனால், அலங்காரம் கருதிய செயலும் அறச்செயலாக அமையக் காணலாம். மங்கல நிகழ்ச்சிகளுக்காகப் போடப்படும் கோலங்கள் நல்ல நேரம் பார்த்த பிறகே போடப்படும். அதனை யாரும் மிதிப்பதற்கோ தாண்டுவதற்கோ அனுமதிப்பதில்லை. {{nop}}<noinclude></noinclude> jiqzthysxnicloodje4agkbgh45ggoz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/231 250 647125 1947681 2026-06-18T10:23:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 200 |oTop = 91 |oLeft = 10 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cH..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோலம்‌|205|கோலம்‌}}</noinclude> {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 200 |oTop = 91 |oLeft = 10 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 201 |oTop = 95 |oLeft = 235 |Location = right |Description = }} {{Multicol-end}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 260 |cHeight = 193 |oTop = 341 |oLeft = 100 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> rzmbb72q28ufye5l2k3erslos9omorf 1947682 1947681 2026-06-18T10:23:55Z Desappan sathiyamoorthy 14764 1947682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோலம்‌|205|கோலம்‌}}</noinclude> {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 200 |oTop = 91 |oLeft = 10 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 208 |cHeight = 201 |oTop = 95 |oLeft = 235 |Location = right |Description = }} {{Multicol-end}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 231 |bSize = 480 |cWidth = 260 |cHeight = 193 |oTop = 341 |oLeft = 100 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> rjbn6lahny3sf7hx83sjbxb1tb82ozv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/232 250 647126 1947683 2026-06-18T10:25:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 358 |cHeight = 486 |oTop = 100 |oLeft = 43 |Location = center |Description = }} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1947683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோலம்|206|கோலம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 358 |cHeight = 486 |oTop = 100 |oLeft = 43 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 3ia8qluhoaqewku85bb1umjtwwun1kt