விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.7
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/670
250
623007
1948044
1858891
2026-06-19T15:48:18Z
Sridevi Jayakumar
15329
1948044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலம்பூர்|630|ஆலம் பெர்ட்டு சீன்}}</noinclude>திரை ஆறு கிருட்டிணா ஆற்றுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கு 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் உள்ளன. இவை முற்கால மேலைச் சாளுக்கியரின் கோயிற் கட்டிடக் கலை அமைப்பைப் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இக்கோயில்களின் அமைப்பு, கருநாடக மாநிலப் பட்டடக்கல் கோயில்களின் அமைப்பைப் போன்று காணப்படுகிறது. ஆலம்பூரில் உள்ள கோயில்கள் எண்கோண வடிவமான சிகரங்களைக் கொண்டுள்ளன. இவ்வமைப்புச் சிகரங்கள், தென்னகக் கோயில் கலைப்பாணி வகையைச் சார்ந்தனவாகும். இதன் மேல் உச்சியில் ‘அமலகா’ என்று சொல்லப்படும் வரிவரியாக உள்ள உருண்டைகள் காணப்படுகின்றன. இவை வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக ஒரிசாக் கோயில்களில் காணப்படுகின்றன. தென்னகக் கோயில் கலைப்பாணியும் வட இந்தியக் கோயில் கலைப்பாணியும் இணைந்து, ஆலம்பூர்க் கோயில்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலம்பூரில் இருக்கும் ஒன்பது கோவில்கள் சிவன் கோவில்களாக இருப்பினும் இவற்றின் பெயர்கள் பிரமாவின் பெயர்களைக் கொண்டுள்ளன. 1. பால பிரமா, 2. குமர பிரமா, 3. ஆர்க்க பிரமா, 4. வீர பிரமா, 5. விகவ பிரமா. 6. தர்க்க பிரமா 7. கருட பிரமா, 8. சுவர்க்க பிரமா, 9. பத்ம பிரமா என்பன இக்கோயில்களின் பெயர்களாகும். மக்கள் இக்கோவில்களைச் சிறந்தனவாகக் கருதுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல் குறுக்கிச் சோமநாதர் (Palkuriki Somanatha) என்பவர் பாண்டித்தார்த்தியா சரித்திரம் (Panditardya Charitra) என்னும் தமது நூலில் ஆலம்பூரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 670
|bSize = 375
|cWidth = 175
|cHeight = 138
|oTop = 288
|oLeft = 8
|Location = center
|Description =
}}
{{center|ஆலம்பூர்க் கோயில்}}
இக்கோவில்கள் பொதுவாகக் கருவறையையும் அதனைச் சுற்றி நடைபாதையையும் (சுற்றுப்பிராகாரம்) கருவறைக்கு முன்பு இரண்டு தூண்களுடைய முகவறையையும் கொண்டு காட்சியளிக்கின்றன. இத்தூண்களிலும் இவற்றின் மேலுள்ள கூரைகளிலும் கலைதுட்பம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மாடக் குழிகள் மகர அமைப்புகளுடன் காணப்படுகின்றன. அம்மாடக் குழிகளில் மாடத் தெய்வங்களாகக் கங்காதரர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி, கிராதர், நடராசர் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. இவை தவிர மேலும் பல மாடத் தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. கோவிலின் முன்கூடத்தில் அமைந்திருக்கும் இலாட வடிவமான சாளரங்களில் நடராசரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரபிரமன் கோவிலின் முகப்பில் நடராசர் தம் தேவியுடன் இசைவாணர்கள் புடைசூழக் காணப்படுகிறார், 16 கைகளையுடைய சிவன் போர்க் கோலத்துடன் ஆலம்பூர்ச் சுவர்க்க பிரமன் கோவிலில் காட்சி தருகிறார்.
இங்குள்ள கோயில்களில் வீரபத்திரர், ஏழு பெண் தெய்வங்களுடனும் தாய்த் தெவ்வத்துடனும் (Mother Goddess) காட்சி அளிக்கிறார், தாய்த் தெய்வம் தலையில்லாமலும், தலையிருக்க வேண்டிய இடத்தில் தாமரை விளங்கப் பிறந்த மேனியாகவும் விளங்குகிறது. கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பட்டடக்கல் கோயில்களில் காணப்படும் இரண்டாம் விக்கிரமாதித்தனின் கல்வெட்டுகளைப் போன்னும், அவர் மனைவி திரிலோக்கியமகா தேவியாருடைய கல்வெட்டுகளைப் போன்றும் உள்ளன. இக்கோயில்களைக் கட்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் சிற்பிகளைத் தென்னகத்தில் இருந்து கூட்டிச் சென்றான் என்று கூறுகின்றனர். இக்கோயில்களில் குப்த வாகாடகர் கோயில் பாணிகளும் காணப்படுகின்றன.
ஆலம்பூரில் உள்ள அருங்காட்சியகம் சீரிய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இவ்வருங்காட்சியகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
<section end="ஆலம்பூர்"/>
<section begin="ஆலம் பெர்ட்டு சீன்"/>
{{dhr}}
<b>ஆலம் பெர்ட்டு சீன் (கி.பி. 1717-1783)</b> தென்சின் என்ற அம்மையாருக்கும் (Mmede Tencin)தேதோசெக (Chevalier Destouches) என்பருக்கும் முறைகேடான (Illegitimate) குழந்தையாகப் பிறந்தார்; பிறந்த சில நாட்களில் கோயிலில் பெயரிடும்பொழுது புறக்கணிக்கப்பட்டார். இவர் சான் செனிசுட்டு (Joha Jenist) கல்லூரியில் பயின்றார்.<noinclude></noinclude>
bakzqi71y3gv0svgle1pt1y16qn1oxt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/671
250
623009
1948046
1858900
2026-06-19T15:50:50Z
Sridevi Jayakumar
15329
1948046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலம்பேரி சாத்தனார்|631|ஆலவட்டம்}}</noinclude>இக்கல்லூரிக்கும் இயேசு சங்கத்தாருக்கும் இடையே நடந்த வழக்கு வாதத்தில் அகப்பட்டுக் கொண்ட இவர் புலன் கடந்த மெய்ப்பொருளியல் (Metaphysics) ஆராய்ச்சியில் ஏற்படும் வாதங்களை வாழ்க்கை முழுவதும் வெறுத்தார்.
சட்டமும் மருத்துவமும் படித்தபிறகு ஆலம் பெர்ட்டுசான் கணிதப்படிப்பில் கவனம் செலுத்தினார். பிறகு கி.பி. 1741-இல் ‘டிரெயிட் டி டைநாமிக்கு’ (Traite, de Dynamique) என்ற நூலை வெளியிட்ட பிறகு இவருக்கு நூலகவியல் கழகத்தில் இடம் கிடைத்தது. தேகார்ட்டும் பேகனும் இவரைப் பெரிதும் கவர்ந்தார்கள். மெய்ப்பிக்க முடியாத அடிப்படை மெய்ம்மை இவருடைய பொறியியல் துறைக்கு (Mechanics) ஆதாரமாக அமைந்திருந்தது. உய்த்துணர் அளவையியலின் முடிவுகள், (Deduction results) நன்கு ஆராய்ந்த ஆய்வு முறையின் அடிப்படையில் அமைய வேண்டும். முடிவின் உண்மை ஆய்வுமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும். மறைபொருள் உண்மையான அறிவை வலியுறுத்தாது.
ஆலம்பெர்ட்டு சீனும் திடெராட்டும் (Diderot) சேம்பர்சு (Chamber Encyclopaedia). அறிவுத் தொகுதியைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார்கள். இவர் 1751-இல் ஒரு சிறந்த தத்துவ நூலை வெளியிட்டார். இலாக்கு (Locke) கூறிய புலன்களால் அறிகின்ற கொள்கையை விரிவுபடுத்தினார். கருதுகோள் (Hypothesis) உலகைப் பற்றிய அறிவுக்கு வழி வகுக்காது. எல்லா அறிவிற்கும் அடிப்படை, புலன்களால் அறிவிற்குக் தன்மைதான். புலன்களால் அறிகின்ற அறிவிற்குச் சிறப்பிடம் கொடுத்துக் கல்வித் துறையிலும் அதைப் புகுத்தினார். தத்துவம், அறிவியல், இசை ஆகிய மூன்றிலும் ஆராய்ச்சி செய்தார். இறைமையை ஏற்கும் கொள்கை உடையராயிருந்தார். சிறந்த அறிவோடு கூடிய காரணம் இல்லாமல் அறிவுத் திறமையை விவரிக்க முடியாது என்று கூறினார். ஆனால் கி.பி. 1760-இல் திடெராட்டினால் இவர் நாத்திகராக மாறினார், பின்னர் வாழ்நாள் முழுவதும் நாத்திகராகவே விளங்கிக் காலமானார்.{{Right|இரா.கோ.}}
<section end="ஆலம் பெர்ட்டு சீன்"/>
<section begin="ஆலம்பேரி சாத்தனார்"/>
{{dhr}}
<b>ஆலம்பேரி சாத்தனார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இயற்பெயர் சாத்தனார் என்றும், இவரது ஊர் ஆலம்பேரி என்றும் தெரிகிறது. ஆலம்பேரி என்பது ஆலம்பேரேரி என்பதன் சிதைவு. இது நெல்லை மாவட்டத்து ஊர்களுள் ஒன்று.
இவர் பெயர் ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும், ஆர்வல நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும் ஏடுகளிற் காணப்படுகிறது. கல்வெட்டுகளிற் காணப்படும் ஆர்வலக் கூற்றமே இவ்வாறு ஆர்வல நாடு எனவும், ஆறாலவிய நாடு எனவும் வழங்கப்பட்டிருக்கக் கூடும்.
இப்புலவர், மதுரை மாவட்டத்திலுள்ள சிறுமலையையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், கடலன் என்பானின் புகழ் வாய்ந்த விளங்கில் என்னும் ஊரையும், பிட்டன் என்பவனையும் அவனுடைய குதிரை மலையையும் புகழ்ந்து பாடியுள்ளார். நற்றிணையில் இவர்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (152,225, 303, 338).{{Right|என்.இ.இ}}
<section end="ஆலம்பேரி சாத்தனார்"/>
<section begin="ஆலம்பொழில்"/>
{{dhr}}
<b>ஆலம்பொழில்</b> தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. இது தஞ்சை மாவட்டத்தில் திருப்பூந்துருத்திக்கு ஒரு கல் தொலைவில் உள்ளது; தஞ்சையிலிருந்து பேருந்து வழியாகச் சென்றடையலாம். இது காவிரிக் கரையிலுள்ளது; ஆலமரம் இதன் தலமரமாகும். இது அட்டவசுக்கள் வழிபட்ட இடமாகும். இத்தலத்திற்குத் திருநாவுக்கரவர் தேவாரம் உள்ளது. இறைவன் பெயர் ஆத்மநாதேசுரர்; இறைவி பெயர் ஞானாம்பிகை.
ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலிபோர்னியாவிலுள்ள நகரம். இது சான் பிரான்சிசுகோ நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில், ஒரு செயற்கைத் தீவில் அமைந்துள்ளது; அழகு மிக்க நகரம்; கல்வி நல்வாழ்வு நிறுவனங்கள் உள்ள நகரமுமாம், பென்சில், தீப்பெட்டி, நீர் இறைக்கும் குழாய்கள் போன்ற குடிசைத் தொழில்கள் ஆலமீடாவில் (Almeida) நடைபெறுகின்றன.
<section end="ஆலம்பொழில்"/>
<section begin="ஆலவட்டம்"/>
{{dhr}}
<b>ஆலவட்டம்</b> என்பதற்குப் பெருவிசிறி, கால் செய்வட்டம், விசிறி என்னும் பொருள்கள் அகராதிகளில் குறிக்கப்பட்டுள்ளன. இது வட்ட வடிவமான விசிறி; நறுமணமிக்க வேர்களால் அல்லது பனை ஓலையால் அமைக்கப்பட்டிருக்கும். இதனை ஊர் வலங்களின் முன்னே எடுத்துச் செல்வது வழக்கம். பொதுவாகக் கோவில் திருவிழாக்கள், அரசனது உலாக்கள் ஆகியவற்றில் ஆலவட்டம் சுற்றுவது உண்டு.
‘படுவேய் வெள் வளையமும் தண்பட்டு ஆலவட்டமும்’ என்றும், ‘வீசு ஆலவட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற’ என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனால், ஊர்வலத்தில் பதாகை, குடை, கோல், வளையம், சாமரம், கவரி, போன்றவற்றுடன் ஆலவட்டமும் எடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதனைப் பெண்களே ஏந்தி வந்தனர் என்றும் அறியலாம்.
ஆலவட்டம் பார்வைக்கு அழகாகவும் நறுமணம் மிக்கதாகவும் இருப்பதால் ஊர்வலங்களில் சுற்றும் போது அழகுடன் மணமும் பரவுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
0tuzwbbu5j11ugrof5iyvwh4m01lgus
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672
250
623010
1948048
1858920
2026-06-19T15:53:34Z
Sridevi Jayakumar
15329
1948048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலவாய்|632|ஆலிக்கார்னாசசு}}</noinclude>ஒருவர் மற்றொருவரைத் தலைமேல் தூக்கிய வண்ணம் தானும் சுழன்று கொண்டு சுழற்றுவதனையும், நின்ற நிலையில் பெரியவர்கள் சிறுவர்களின் இருகைகளையும் பற்றிச் சுற்றுவதையும் ஆலவட்டம் என்கின்றனர்.
‘ஆர் கொடுத்த சேலையடி ஆயவட்டம் போடுதடி’ என்ற தெம்மாங்கு வரிகள், ஆலவட்டம் என்பதற்கு அழகுறச் சுற்றுவது என்றே பொருள் தருகின்றன.{{Right|சு.ச}}
<section end="ஆலவட்டம்"/>
<section begin="ஆலவாய்"/>
{{dhr}}
<b>ஆலவாய்</b> மதுரையின் வேறுபெயர்களுள் ஒன்று. திருவிளையாடற் புராணத்தில் ஒரு காண்டம் ஆலவாய்க் காண்டம் என்னும் பெயர் கொண்டுள்ளது. காண்க: மதுரை.
<section end="ஆலவாய்"/>
<section begin="ஆலன்புரூக்கு பிரபு"/>
{{dhr}}
<b>ஆலன்புரூக்கு பிரபு (கி.பி. 1883-1963)</b> இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் நாட்டுப் படைத்தலைவர்களுள் ஒருவர். இவர் தன்கர்க்கிலிருந்து (Dunkirk) நேசப்படைகள் பின்வாங்கிய நேரத்தில் தலைமையேற்றுச் சிறப்பான இடத்தைப் பெற்றவர். மேலுமிவர் 1941 முதல் 1946 வரை பேரரசுப் பொதுப் படையின் தலைவராகப் பணிபுரிந்தார். இவர் இங்கிலாந்தில் இராயல் இராணுவ நிறுவனத்தில் பயின்றார்; முதல் உலகப் போரின் போது, பிரான்சில் போரிட்டார். இரண்டாம் உலகப் போரைப் பற்றி இவர் எழுதிய குறிப்புகளைச் சர் ஆர்தர் பிரியன்ட்டு என்பார் 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்த் தொகுத்து வெளியிட்டார்.
<section end="ஆலன்புரூக்கு பிரபு"/>
<section begin="ஆலாபனை"/>
{{dhr}}
<b>ஆலாபனை</b> கருநாடக இசையில் இசைத் தமிழ் நூல்களால் ஆளத்தி என்று கூறப்படுகிறது. இசை நூலார் இதைக் காட்டாளத்தி, நிறவாளத்தி எனப் பிரித்துள்ளனர். காட்டாளத்தி என்பது குறில் எழுத்துகளால் தாளத்துடன் பாடுவது எனவும், நிறவாளத்தி என்பது நெடில் எழுத்துகளால் தாளத்துடன் பாடுவது எனவும் வகுத்துள்ளனர். ஆலாபனையின் முதற்பகுதி, ஆட்சிப்திகா என்ற சுருக்கமான பகுதியாகவும், இரண்டாம் பகுதியான இராகவர்த்தனி விரிவான பகுதியாகவும் பாடப்பட வேண்டும்.
<section end="ஆலாபனை"/>
<section begin="ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)"/>
{{dhr}}
<b>ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)</b> கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிவல்ல தமிழ்ய புலவர்களுள் ஒருவர். காஞ்சிபுரத்தில் பிறந்தவராதலால் காஞ்சி ஆலால சுந்தரம்பிள்ளை என அழைக்கப்பட்டார். இவர் தந்தையார் பெயர் அமிர்தாநந்தர். அமிர்தாநந்தர் தம் மைந்தர் நல்ல கல்வியும் சிறந்த ஒழுக்கமும் பெறும் பொருட்டு அவரை இளமையிலேயே அச்சுதாநந்தர் என்னும் சான்றோரிடம் அனுப்பிவைத்தார். அவர் தமிழ் வடமொழிப் புலமை, சமய ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து, துறவு நெறி மேற்கொண்டவர். அவரிடம் பயிற்சி பெற்றமையால் ஆலால சுந்தரம்பிள்ளை சிறந்த கல்வியாளராகவும் ஒழுக்க சீலராகவும் வினங்கினார். தம் ஆசிரியர் அறிவுரைப் படி திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தார். காஞ்சி முத்துக் கச்சபேச சிவாசாரியாரவர் கள்பால் சிவ தீட்சை பெற்றார். பெரியபுராணத்தில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார்.
பிற்காலத்தில் சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று சிறப்பிக்கப்பெற்ற சோமசுந்தரநாயகர், பூவை கலியாண சுந்தரனார் போன்றார் இவருடன் பயின்ற மாணவர்களாவர். தம் ஆசிரியர் மறைவிற்குப் பின்னர் இவர் பலவிடங்களுக்கும், பிறநாடுகட்கும் சென்று சமயச் சொற்பொழிவாற்றலானார். ஞானபானு என்னும் பத்திரிகையினைத் தொடங்கி அதில் சைவ சமயச் சார்பான கட்டுரைகள் பல எழுதி வந்தார். சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் முடிக்காது விடுத்த காஞ்சிப்புராணம், திருப்போரூர் சந்நிதி முறை ஆகிய நூல்களின் உரைப் பணியினை நிறைவு செய்தார். பெரியபுராணத்தின் தில்லை வாழ் அந்தணர் சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் ஆகியவற்றிற்கு உரை வரைந்துள்ளார். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆகிய சித்தாந்த சாத்திர நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார்.
காமாட்சி லீலா பிரபாவம் என்னும் வடமொழி நூலைப் பைரவ சிவாச்சாரியாரோடு சேர்ந்து மொழி பெயர்த்துள்ளார். தேவிபாகவதம், சாதாக்கியம் ஆசிய வடமொழி நூல்களையும் தமிழில் பெயர்த்து ஆக்கியுள்ளார். எழுபது ஆண்டுகள் வாழ்ந்த இவர், கி.பி. 1922-ஆம் ஆண்டில் காலமானார். இவருடைய சமாதி திருவொற்றியூரில் அமைந்துள்ளது.
<section end="ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)"/>
<section begin="ஆலிக்கார்னாசசு"/>
{{dhr}}
<b>ஆலிக்கார்னாசசு</b> கேரியாவிலுள்ள சிராமிக்கு வளைகுடாவின் வட கடற்கரையிலுள்ள தொன்மையான நகரம். தென்மேற்குத் துருக்கியின் பொட்ரும் (Bodrum) என்னும் நகரம், இக்காலத்தில் ஆலிக்கார்னாச்சு (Halicarnassus) இருந்த இடத்தில் அமைந்துள்ளது. இங்குக் கிரேக்கர்கள் கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் கேரியா குடியேற்றத்தை அமைத்தனர் என்பது மரபு வழக்காகக் கருதப்படுகிறது. இதன் அண்மையில் மைசீனிய நாகரிகச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடக்கக் கால வரலாறு புரியாத புதிராக உள்ளது. குரோசியசு என்னும் அரசர் இதை வென்றார். பின்னர் இது பாரசீகர்களின் வசமாயிற்று. அவர்களின் ஆட்சிக் காலத்தில் இதனை உள்ளூரைச் சார்ந்த கொடுங்கோலர்கள் ஆண்டனர். ஆர்ட்டிமிசா என்பவர் இதை ஆண்டபோது, பார-<noinclude></noinclude>
q0nu9znyw7bnachvqxh9tcdgh6mo1hq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/673
250
623011
1948056
1858927
2026-06-19T15:58:09Z
Sridevi Jayakumar
15329
1948056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலிப்புலவர்|633|ஆலிபாக்சு}}</noinclude>சீகப் பெருமன்னரான செர்க்க (Xerxes) கிரேக்க நாட்டின் மீது கி.மு. 480-இல் படையெடுத்தார். ஆர்ட்டிமிசாவும் அவருடன் இணைந்து கொண்டார். பின்னர் இது தீலியக் குழுவில் சேர்ந்தது. பாரசீகப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சுதந்திரப் பகுதியாகக் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இது உள்ளூர் அரசர்களால் ஆளப்பட்டது. இதனை ஆண்ட சிறப்பு மிக்க அரசர் மாலோசு என்பவராவர். இவர் பெரும் வீரர்; மைலசா என்னும் நகரிலிருந்த தம் தலைநகரைக் கி.மு. 362-ஆம் ஆண்டளவில் ஆலிக்கார்னாசசுக்கு மாற்றினார். மகா அலெக்சாந்தர் இந்நகரைக் கி.மு. 334-ஆம் ஆண்டில் நீண்ட முற்றுகைக்குப் பின்னர்க் கைப்பற்றினார். இதனைக் கி.மு. 281 முதல் கி.மு. 197 வரை தாலமி (Ptolemy) அரசர்கள் ஆண்டனர். பின்னர் மீண்டும் இது விடுதலை பெற்றது. உரோமானியர் ஆட்சியின்போது இது சிறப்பிழந்த நிலையிலிருந்தது.
வட்டவடிவமான துறைமுகமும் அதனையொட்டி வளைந்து காணப்படும் சரிவுகளும் இந்நகரின் சிறப்புக்குக் காரணங்கள். துறைமுகத்திற்கு கிழக்கில் தீவுபோன்றிருந்த இடத்தில் மாசோலசு (Mausolus) தம் மாளிகையைக் கட்டியதுடன் தமக்குச் சொந்தமான தனித்த துறைமுகத்தையும் அமைத்துக் கொண்டார். செயிண்ட்டு சானின் வீரர்கள் கி.பி. 1402-ஆம் ஆண்டில் கோட்டையொன்றைக் கட்டியிருந்தார்கள். அதன் அழிவுச் சின்னங்களையும், நகரின் சுவர்களையும் இன்றும் காணலாம். இந்நகரத்தின் அழகிய கட்டிடமாகக் கருதப்பட்ட கல்லறை, (Mausoleum) உலகின் ஏழு விந்தைப் பொருள்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல்லறையைக் கட்டத் திட்டமிட்டவர், மாசோலசின் மனைவியான ஆர்ட்டிமிசியா ஆவாள்.
எரடோட்டசு (Herodotus), தயோனிச்சு (Dionysius) போன்ற தலைசிறந்த கிரேக்க வரலாற்றுப் பேரறிஞர்கள் ஆலிக்கார்னாசசில்தான் பிறந்தார்கள்.
<section end="ஆலிக்கார்னாசசு"/>
<section begin="ஆலிப்புலவர்"/>
{{dhr}}
<b>ஆலிப்புலவர்</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் செய்கு அலி என்பதாகும். இவர் ஆலி என்று அன்பாக அழைக்கப் பெற்றார். தந்தையின் பெயர் செய்கு அபூபக்கர். இவருடைய ஊர் மங்கை நகராகும். இது இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் தேச மாணிக்கம், சேரன் மாதேவி ஆகிய ஊர்களுக்கிடையில் அமைந்துள்ள மேலைச் செவ்வல் என வழங்கப்படும் ஊராகும்.
இவரது நூலான மிராச்மாலை (மிஃராஜ்மாலை) 12 படலங்களையும் 745 செய்யுட்களையும் உடையது. இந்த நூல் முசுலீம் புலவர்களுக்கு வழி காட்டியாகவும், தமிழ்க் காப்பியம் போல நாடு நகரப் படலச் செய்யுட்கள் கொண்டதாகவும் உள்ளது. இந்நூல் நபி அவர்களின் விண் ஏற்றத்தைப் பற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. இது அரபு மொழியிலிருந்து ‘காலி’ என்பவரின் உதவியோடு தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்நூலினைக் கோட்டாற்றில் அரங்கேற்றம் செய்ய முயன்றபோது, அங்குள்ள முசுலீம் மக்கன் உதவி செய்யவில்லை என்றும், அவ்வூரில் இருந்த இவர் மாணவராகிய சிவலிங்கம் செட்டியாரும் பாவாடைச் செட்டியாரும் உதவிபுரிந்தனர் என்றும் கூறுவர். அரங்கேற்றியபோது, நபிகள் நான்காம் முறை விண் சென்றதைப் புலவர் பாடி விளக்கம் செய்தபோது, நபிகள் புலவருக்குக் காட்சியளித்தருளினார் என்னும் செய்தி கூறப்படுகிறது. பாவாடைச் செட்டியாருக்கும் காட்சி தந்து குருடராயிருந்த அவரை ஒளி பெறச் செய்தார் என்றும் கூறுவர்,
<section end="ஆலிப்புலவர்"/>
<section end="ஆலிபாக்சு"/>
{{dhr}}
<b>ஆலிபாக்சு</b> என்னும் ஊர் கனடா நாட்டின் நோவாசுகோசியா (Nova Scotia) மாநிலத்தின் தலைநகர் ஆகும். இது கனடாவின் நான்கு அட்லாண்டிக்கு மாநிலங்களிலும் மிகப் பெரிய ஊர். இங்குள்ள துறைமுகம் பெரியது. இது கனடாவின் கடற்படைத் தளமும் பரபரப்பான கிழக்குக் கரைத் துறைமுகமுமாகும். ஏனைய கீழ்க்கரைத் துறைமுகங்கள் பனி மூடுவதால் செயல் முடக்கம் ஏற்படும் போதும் இத்துறைமுகம் செயற்படும் என்பது இதன் சிறப்பாகும். நோவாசுகோசியாவின் கிழக்குக் கரையில் ஆலிபாக்சு (Halifax) அமைந்துள்ளது. ஆலிபாக்சு கி.பி. 1749-இல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் அதை இராணுவத் தளமாகவே உருவாக்கினர். வட அமெரிக்காவைக் கட்டுப்படுத்த, பிரான்சுடன் நடைபெற்ற போராட்டங்களின்போது இராணுவத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டது இந்நகரம். இவ்வூருக்கு அண்மையிலிருந்த உலூயிபோக்கு (Louis Bourg) என்னுமிடத்தில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
ஆலிபாக்சு பிரபு சார்சு தங்கு (George Dunk, Earl of Halifax) என்பாரின் பெயரால் இவ்வூர் ஆலிபாக்சு எனப்பட்டது. அப்போது இவர் அரசுக் குழுவின் கண்காணிப்பாளராக இக்குடியேற்றப் பகுதியின் நிருவாகத்தைக் கவனித்தார்.
ஆலிபாக்சு கனடா நாட்டின், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று. நோவாசுகோசியா மாநிலத்தின் முதல் பிரதிநிதித்துவ அரசின் பொது அவை, ஆலிபாச்ச நகரில்தான் கி.பி. 1758-இல் நிறுவப்பட்டது. அதேபோல் கனடாவின் முதல் பிராட்டசுடெண்டுத் திருச்சபை இங்குத்தான் கி.பி. 1749-<noinclude>
<b>வா.க. 2-80</b></noinclude>
b9kszx11wgi0vlxslylxwa6rs9uaon3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/674
250
623012
1948057
1858947
2026-06-19T15:58:55Z
Sridevi Jayakumar
15329
1948057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலிபாக்சு|634|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 674
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 185
|oTop = 30
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|தவுன் டவுன் பகுதி-ஆலிபாக்சு}}
-இல் கட்டப்பட்டது. மேலும் கனடாவின் முதல் நாளிதழ் கி.பி. 1752-இல் வெளியானதும் இந்நகரிலிருந்தேயாகும். பாசுடனிலிருந்து ஆங்கிலப் படைகள் கி.பி. 1776-இல் விரட்டியடிக்கப்பட்டபோது, அப்படைகள் ஆலிபாக்சுக்குச் சென்றுதான் திருத்தியமைக்கப்பட்டன. உள்நாட்டுப் போரின்போது (கி.பி. 1812-ஆம் ஆண்டு) ஆங்கிலத் தனியாரின் போர்க் கப்பல் போர்த்தளமாக இது இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இவ்வூர் கூட்டாட்சித் தடுப்பு வீரர்களின் தளமாக இருந்தது. முதல் உலகப் போரின்போது அமெரிக்கா, கனடா நாட்டுப் படைகள் இங்கிருந்து கப்பலில் புறப்பட்டுச் சென்றன. கலகக்காரக் கப்பல் ஒன்று 1917-இல் துறைமுகத்தில் மோதியதால் ஏறத்தாழ 2000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆலிபாக்சு நகரின் வடபகுதி தரைமட்டமாகி அழிந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் முழுதும் நேசப் படைகளுக்குப் போர்த்தள வாடங்களை வழங்கும் சிறப்பான தளமாக இவ்வூர் அமைந்திருந்தது. போர்க் கப்பல்களைப் பகைவர்களின் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதலிலிருந்து காக்கும் நோக்குடன் துறைமுகம் முழுதும் உருக்கு வலைகளால் பின்னப்பட்டிருந்தது. இந்நகரம் 1955-ஆம் ஆண்டிவ் ஆங்கசு எல். மாக்டொனால்டு பாலத்தினால் தார்ட்மத்துத் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டது. இப்பாலம் துறைமுகத்தின் கிழக்குப் பக்கம் உள்ளது.
ஆலிபாக்சு தார்ட்மத்துத் துறைமுகப் பகுதியில் எண்ணெயைத் தூய்மைப் படுத்தும் ஆலைகள் உள்ளன. மேற்கு இந்தியத் தீவுகளில் உற்பத்தியாகும் சர்க்கரையைப் பதப்படுத்தல், மீன் முதலான உணவுப் பொருள்களைப் பதப்படுத்தல், கப்பல் கட்டும் தொழில், கப்பலைப் பழுதுபார்க்கும் தொழில், வார்ப்படத் தொழிற்சாலைகள், இயந்திரக் கடைகள், நூற்பாலைகள், கயிறு தொழில்கள் போன்றவை இங்கு நடைபெறும் சிறப்பான தொழில்களாம்.
ஆலிபாக்சு கல்விக்கும் பண்பாட்டிற்கும் மையமாகத் திகழுகிறது. தல் அவுசி (Dolhousie) பல்கலைக்கழகம், பல்கலைக்கழக அரசர் கல்லூரி, புனித மேரி பல்கலைக்கழகம், நோவாசுகோசியா தொழில் நுட்பக் கல்லூரி, கலைக்கூடப் பள்ளி, இசைப் பாதுகாப்பகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. ஆலிபாக்சு கி.பி. 1842- இல் மாநகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மக்கள்தொகை 1,14,594 (1981).
<section end="ஆலிபாக்சு"/>
<section begin="ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு"/>
{{dhr}}
<b>ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு (கி.பி. 1661-1715)</b> என்பார் ஆங்கில அரசியல் வல்லுநரும், பொருளியல் வல்லுநருமாவார். ஆலிபாக்சு (Halifax, Charles Montague) இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன் சயரிலுள்ள ஆர்ட்டன் (Horton) என்னும் ஊரில், கி.பி. 1661 ஏப்பிரல் 16-ஆம் நாள் பிறந்தார். இவர் சர் என்றி மாண்டேகுவின் (Sri Henry Montague) பேரர். வெசுட்டுமினிசுடர் (West Minister) பள்ளியிலும் கேம்பிரிட்சுத்திரினிட்டிக் (Trinity) கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் சர் ஐசக்கு நியூட்டனின் அணுக்கத் தோழராவார். இவரிடம் ஆழ்ந்த இலக்கியப் புலமை மிளிர்ந்தது. இவர் காமன்சு அவைக்குக் கி.பி. 1689-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அரசராகப் புது நியமனம் பெற்ற மூன்றாம் வில்லியத்தை இவர் ஆதரித்தார். பாராளுமன்றத்தில் சொல்லாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். இவர் கி.பி.1692-இல் சட்ட முன்வரைவை உருவாக்கி இங்கிலாந்து வங்கியினை நிறுவினார். பொருளாதாரத் துறையில் இவருக்கிருந்த திறமைக்குப் பரிசாக இவர் ஆலிபாக்சு கருவூலத் தலைவராக (சான்சலர்) நியமிக்கப் பெற்றார். இவர் கி.பி. 1695 முதல் கி.பி. 1699 வரையிலான ஆண்டுகளில் ஆங்கில நாணய முறையைச் சீர்திருத்தி அமைத்தார். நாணயப் புழக்கம் சுருங்கிய காரணத்தால், காகிதப் பணத்தை நடைமுறைப்படுத்தினார், இவர் கி.பி. 1697 முதல் கி.பி. 1699 வரை நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் காமன்சு சபையைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தார். ஆனால் தோரிக் (Tory) கட்சியினர் காமன்சு சபையில் பெரும்பான்மை-<noinclude></noinclude>
6zfnr7f2hfwclipo09ewrh8howdjmtk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/675
250
623014
1948059
1858991
2026-06-19T16:00:53Z
Sridevi Jayakumar
15329
1948059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலிபாக்சு பிரபு|635|ஆலே}}</noinclude>பெற்றபோது, ஆலிபாக்சு தம் பதவியை இழந்தார். இவர் கி.பி. 1700-இல் பாரன் பிரபுவாக்கப் பெற்றார். இவர் கி.பி. 1701-இலும் கி.பி. 1703-இலும் முறைகேடாக ஊழலில் ஈடுபட்டாரெனக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அக்குற்றங்கள் நிறுவப்படாமற் போயின. இவர் விக்குக் (Whig) கட்சியின் ஆதரவாளர். அதனால், முதலாம் சார்சு கி.பி. 1714-இல் மன்னராக அரியணை ஏறியதை இவர் ஆதரித்தார். பின்னர் இவர் பிரபுவாக நியமிக்கப் பெற்றார். இவர் தலைசிறந்த பொருளியல் வல்லுநர். இவர் கி.பி. 1715-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் நாள் இலண்டனில் காலமானார்.
<section end="ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு"/>
<section begin="ஆலிபாக்சு பிரபு"/>
{{dhr}}
<b>ஆலிபாக்சு பிரபு (கி.பி. 1633-1695)</b> ஆங்கில அரசியல் வல்லுநரும், எழுத்தாளருமாவார். சார்சு செவில் (George Sevile) என்னும் பெயருடைய இவர் கி.பி. 1633-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் யார்க்சயரிலுள்ள தார்ன்கில் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருக்குச் செவில் பாரன் பிரபு என்றும், வைகவுண்ட்டு ஆலிபாக்சு என்றும் விருதுப் பெயர்கள் உண்டு. இவ்விருதுகள் கி.பி. 1688-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டன. இவர் கி.பி. 1679-இல் அரசரால் புதிதாக உருவாக்கப்பெற்ற அரச மன்றத்தின் (Privy Council) உறுப்பினரானார். அப்போது இங்கிலாத்தின் அரசராக இருந்த இரண்டாம் சார்லசு மன்னர் இவர் திறமைகளைப் பாராட்டி இவர்பால் அன்பு கொண்டார். இவருக்கு ஆலிபாக்சு பிரபுப் பட்டம் கொடுக்கப்பட்டது. யார்க் பிரபுவான சேம்சு கத்தோலிக்கச் சமய ஆதரவாளர் ஆதலால் அவர் அரசராக வருவதை ஆலிபாக்சு விரும்பவில்லை. அதேபோல் சாப்டுசுபலி (Shaftesbury) பிரபுவின் கையாளாக இருந்த பிராட்டசுடண்டு மான்மத்துப் பிரபு, இரண்டாம் சார்லசுக்குப் பின்னர் அரசராவதையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் மிதவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தவர், இரண்டாம் சார்லசின் தம்பி சேம்சு பட்டத்திற்கு வருவதைத் தடுக்கும் சட்ட முன்வரைவை (மசோதா) இவர் கடுமையாகப் பிரபுக்கள் அவைவில் சாடினார். கத்தோலிக்கச் சமயப்பற்றுள்ள அவர் அரசராவதைத் தடுப்பதே இவ்வரைவின் நோக்கமாகும். இச்சட்ட முன்வரைவு நிறைவேத்தப்படவில்லை, இவர் கி.பி.1681-மே மாதம் முதல் கி.பி 1682-சூன் மாதம் முடிய சார்லசின் சிறப்பு அறிவுரையாளராக இருந்து மிதவாதக் கொள்கையை வற்புறுத்தினார். இவருக்கு இரு கட்சியிலும் சேராதவர் (Trimmer) என்னும் மறுபெயரும் உண்டு. இவர் கி.பி. 1682 ஆகசட்டு 22-ஆம் நாள் ஆலிபாக்சு கோமகன் என்று சிறப்பிக்கப் பெற்றார். அதே ஆண்டு அக்டோபரில் இவர் முத்திரை நாயகப் பிரபு (Lord of the Privy Seal) ஆனார். இருப்பினும் இவர் இரண்டாம் சேம்சின் கொள்கைகளை அடியோடு ஏற்றுக்கொள்ள மறுத்தார். குருதி சிந்தாப் புரட்சிக்குப் பில்லர், ஆரஞ்சு வில்லியத்தைச் சற்றுத் தயக்கத்துடன் அரசராக ஏற்றுக்கொண்டார், பாராளுமன்றக் கருத்துகளைச் சீரான முறையில் உருவாக்க முயன்றார். இவர் பத்திரிகைச் சுதந்திரத்தை ஆதரித்தார். இவர் கி.பி.1695-ஆம் ஆண்டு ஏப்பிரல் 5-ஆம் நாள் இலண்டனில் காலமானார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘கட்சியில் சேராதவரின் குணவியல்பு’ (A Character of Trimmer) என்னும் நூல் 1946-இல் வெளியிடப்பட்டது.
<section end="ஆலிபாக்சு பிரபு"/>
<section begin="ஆலியார்"/>
{{dhr}}
<b>ஆலியார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்; ஆலி என்னும் ஊரில் பிறந்தவர். பல சிறு நாடுகளைக் கொண்ட சோழ நாட்டில் ஆலி நாடும் ஒன்று. ஆலி நாட்டின் தலைநகர் ஆலியூர் ஆகும். இது திருவாலி எனவும் வழங்கும். தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியிலிருந்து திருவெண்காட்டுக்குச் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. திருமால் அடியாராகிய திருமங்கை மன்னன் தோன்றிய பெருமை இவ்வூர். ஒன்பதாம் திருமுறையைச் சேர்ந்த திருவிசைப்பாப் பாடிய அமுதனார் என்பவரும் இவ்வூரைச் சார்ந்தவரே.
சில ஏடுகளில் இப்பெயர் ஆவியார் என்றும் காணப்படுகிறது. அவ்வாறாயின் இது குடிபற்றி அமைந்த பெயராகும். ஆனியார் என்னும் பாடமும் உண்டு. கரந்தைத் திணையில் நெடுமொழித் துறையாக அமைந்துள்ள இவர்தம் புறநானூற்றுப் பாடல் வீரன் ஒருவனின் ஆண்மைச் சிறப்பினைப் புலப்படுத்துவதாக உள்ளது. ‘பகைவர் தம் மதிலைச் சூழ்ந்து; இதழ் மடித்துச் சென்று முந்துக என்று தன்னை அனுப்பாது, தானே முற்பட்டுச் சென்ற தலைவன் இன்னாதவன்’ என்று கூறுவதன் வாயிலாக ஒரு வீரன் தன் வீரத்தினை வெளிப்படுத்தியுள்ளான்.
<section end="ஆலியார்"/>
<section begin="ஆலே"/>
{{dhr}}
<b>ஆலே</b> என்பது கிழக்குச் செருமனியில் சாலே (Saale) ஆற்றங்கரையில் அமைந்துள்ள வாணிக மையம். இந்நகரில் பெருமளவில் உப்பு உற்பத்தியாகிறது. இயந்திரங்கள், இரும்பு, செப்பும் பொருள்கள் போன்றவை ஆலேயின் (Halle) செய் பொருள்கள். பிராண்டன்பர்க்கைச் சார்ந்த மூன்றாம் பிரடரிக்கு என்பவரால் கி.பி. 1694-ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பெற்ற ஆலே பல்கலைக்கழகம் இவ்வூரில் உள்ளது. பாடலாசிரியரான சார்சு ஆண்டல் என்பார் பிறந்த ஊர் இதுவாகும். இரண்டாம் உலகப் போரின்போது இந்நகரம் பன்முறை விமானத்தாக்குதலுக்காளாயிற்று. மக்கள்தொகை 2,32,217. ஆலே ஒரு மாவட்டத்தின் பெயருமாகும். இம்-<noinclude></noinclude>
75mys0fjsm6vgmw8ynmpnxbks76szoz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/676
250
623015
1948060
1859001
2026-06-19T16:03:13Z
Sridevi Jayakumar
15329
1948060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|636|ஆவணக் காப்பகம்}}</noinclude>மாவட்டப் பரப்பளவு 8771 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 18,37,500.
<section end="ஆலே"/>
<section begin="ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா"/>
{{dhr}}
<b>ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா</b> அவாய்த் (Hawn) தீவுகளில் ஒன்றான மவீ (Mavi) தீவில் உள்ள பூங்காவாகும். இது அவாய்த்தேசியப் பூங்காவாக 1916-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்தது. இதுவே ஆலேயாக்கவாத் தேசியப் பூங்கா (Haleakala National Park)என 1960-இல் பெயர் மாற்றப்பட்டது, இங்குள்ள எரிமலை இக்காலத்தில் எரிவதில்லை. இவ்வெரிமலை அழகும் வனப்பும் மிக்கது. ஆலேயாக்கலா என்பதற்குக் கதிரவன் வீடு என்பது பொருள். இதன் பாறை கனிறுறு அமைப்பினைக் கொண்டது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ. ஆகும்.
<section end="ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா"/>
<section begin="ஆவஞ்சி"/>
{{dhr}}
<b>ஆவஞ்சி</b> என்பது பழந்தமிழ் நாட்டில் செய்யப்பட்டு வந்த தோற்கருவிகளுன் ஒன்றாகும். இது குடுக்கை, இடக்கை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ஆவின் வஞ்சித்தோலைப் போர்த்தலால் இக்கருவி ஆவஞ்சி எனப் பெயர் பெற்றது. குடுக்கையாக அடைத்ததால் குடுக்கை என்பது பெயராயிற்று. நீத்தார் கடன் செய்யும் போது இடக்கையால் இயக்குதலின் இடக்கை எனப் பெயர்பெற்றது. ஆவஞ்சி என்பது இடக்கையின் மற்றொரு பெயர்.
இக்கருவி தலைக்கருவி வகையில் சேர்க்கப்பட்டுள்ளது; அகமுழவு என்ற வகையைச் சேர்ந்தது. குடுக்கை என்ற பெயரில் மென்மைக்கருவி வகையில் இது சேர்கிறது.
<section end="ஆவஞ்சி"/>
<section begin="ஆவடு துறை"/>
{{dhr}}
<b>ஆவடு துறை</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. குடந்தையிலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் சென்று இத்தலத்தினை அடையலாம். தஞ்சை விழுப்புரம் இருப்புப் பாதையிலுள்ள நரசிங்கம் பேட்டை நிலையத்தில் இறங்கி இரண்டு கல் தொலைவு கடந்தும் இத்தலத்தினை எய்துதல் கூடும். இறைவன் பெயர் மாசிலாமணீசுவரர்; இறைவி பெயர் ஒப்பிலாமுலையம்மை. தீர்த்தம் கோமுத்தி என்பதாகும். தலமரம் அரசு பசுவடிவுடன் உமா தேவியார் இறைவளை வழிபட்ட இடமாதலால் ஆவடுதுறை என்று இத்தலம் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளிக்கப்பட்ட இடம் என்றும், சித்தர் பவர் அட்ட மாசித்தி அடைந்த இடமென்றும் இது கூறப்படுகிறது. இன்று இத்தலம் திருவாவடுதுறை என்னும் பெயரில் வழங்கி வருகிறது. தேவார முதலிகள் மூவரும் இத்தலத்திறைவனைப் பதிகம் பாடிப் பரவியுள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம் எனப் பெயரிய சைவத்திருமடம் இத்தலத்தில் உள்ளது. திருமூலர் தம் திருமந்திரத்தினை இத்திருப்பதியிலிருந்து அருளிச் செய்தார். திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான திருமாளிகைத் தேவர் இத்தலத்தில் வாழ்ந்தார். சேந்தனார் தம் திருவிசைப்பாவில் இத்தல இறைவனைப் பாடிப் பரவியுள்ளார்.
<section end="ஆவடு துறை"/>
<section begin="ஆவணக் காப்பகம்"/>
{{dhr}}
<b>ஆவணக் காப்பகம்</b> என்பது அன்றாட வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளின் தொடர்பாக உள்ள குறிப்பேடுகளைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமாகும். அரசுகளுக்குள் ஏற்படும் உடன்படிக்கைகள், கடிதப் பரிமாற்றங்கள், முக்கியக் கொள்கை அறிவிப்புகள், தனிப்பட்டோர்களுக்குள் நிகழும் கொள்வன கொடுப்பன தொடர்பான உடன்படிக்கைகள், உறுதிப் பத்திரங்கள், குழுத் தீர்மானங்கள், ஒழுங்கு விதிகள் போன்றவைகள் எடுத்துக் காட்டுகளாகும்.
வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் வரலாற்றுச் சான்றுகளை வளரும் சமுதாயத்திற்காகச் சேகரித்தும் பாதுகாப்பது என்பது, அரிய பணியாகவே உள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு ஆவணங்கள், பொருள்கள், கடிதங்கள், நாட்குறிப்புக்கள் போன்றவற்றைத் தொகுத்து, அவற்றை வரிசைப்படுத்தி வைப்பது ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கும். ஆகவே கி.பி. 1891-ஆம் ஆண்டு மேற்கண்ட ஆவணங்களைத் தொகுத்துப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய ஆவணக் காப்பகம் என்ற அமைப்பு, தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் இருந்த இந்தியத் தலைநகரை 1911-ஆம் ஆண்டு தில்லிக்கு மாற்றியபொழுது, அனைத்து ஆவணங்களையும் கல்கத்தாவிலிருந்து புதிய தலைநகரான தில்லிக்கு மாற்றுவது மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இந்த இடமாற்றும் பணி 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று, 1937-ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்தக் காப்பகத்தின் நிலை, இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஆவணப் பாதுகாப்பாளர் என்று இருந்த நிலை, ஆவணக் காப்பக இயக்குநர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
இக்காப்பகத்தில் பல இலட்சம் பொது ஆவணங்கள், தேசப் படங்கள், தனியார் கடிதங்கள், மைக்ரோ பிலிம் ஆவணங்கள் மற்றும் 25 கிலோ மீட்டர் தூரம் வைக்கக் கூடிய நூல்கள் ஆகியவை இங்கு உள்ளன. இக்காப்பகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கடிதத் தொடர்பான ஆவணங்களையும், இலண்டன் ஆவண நூலகம், பிரான்சு, நெதர்லாந்து, தென்மார்க்கு முதலிய இடங்களிலிருந்தும், பல்வேறு மூலங்களிலிருந்தும் கி.பி. 1707-48க்கு இடைப்பட்ட காலத்திற்குரிய ஆவணங்களையும் அன்பளிப்பாகவும், விலை கொடுத்தும் வாங்கிப் பாதுகாத்து வருகிறது.<noinclude></noinclude>
oakju7hqfewb04cexeejqr207i81ome
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/679
250
623029
1948061
1859248
2026-06-19T16:04:46Z
Sridevi Jayakumar
15329
1948061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவணக் காப்பகம்|639|ஆவணச் சான்று}}</noinclude>ழில் எழுதியுள்ள நாட்குறிப்புகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இந்திய மக்களிடம், குறிப்பாகத் தமிழ் மக்களிடம் பிரெஞ்சுக்காரர்களின் தொடர்பு, பழக்க வழக்கங்கள், தூப்ளேயின் அந்தரங்க வாழ்க்கை, அன்றாட நிருவாகம் முதலியவற்றை அறிய இந்த நாட்குறிப்புகள், சிறந்த அடிப்படைச் சான்றுகளாக விளங்குகின்றன. இந்த நாட்குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்று, பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி ஆவணங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் ஏறக்குறைய 5,00,000 நூல்களும் உள்ளன. இவை 1873-ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டவை; தமிழக அரசு தலைமைச் செயலகத்திலிருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்தும் மற்றும் அரசின் பல துறைத் தலைவர்களிடமிருந்தும் மாற்றப்பட்ட நூல்களும் இந்நூல்களுள் அடங்கும். இந்த நூல்கள், தமிழகத்தின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாணிகம் ஆகியவற்றைக் கூறுகின்றன. புனித சார்சுக்கோட்டை ஆவணங்களும் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள நூல்களும், சிறப்பாக ஆசியாவின் வரலாற்றையும், குறிப்பாகத் தென்னிந்தியாவின் வரலாற்றையும் அறிந்துகொள்ளக் கலங்கரை விளக்கம்போல் பயன்படுகின்றன. பல வல்லுநர்களின் அறிக்கைகளும் இக்காப்பகத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக 1859-ஆம் ஆண்டு ஏ.சி. காட்டன் அறிக்கையில் வற்றாத நதிகளை இணைத்துக் கால்வாய்ப் போக்குவரத்தை வளர்ச்சி செய்வது பற்றிய சாத்தியக் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்கள், இவ்விருபதாம் நூற்றாண்டில் கங்கை-காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், கிருட்டிணா நதி நீரைத் தமிழகத்திற்குக் கொண்டுவரும் திட்டம் ஆகியவை பற்றி இந்தியத் தேசியவாதிகளால் மிகுந்த அக்கறையுடன் கருதப்படுகின்றன.
இவற்றைத் தவிர, பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைச் சார்ந்த தச்சு, தேனிசு (Danish), பெர்சியன், பிரஞ்சு, போர்ச்சுகீசு, மோடி, மராத்தி ஆகிய மொழிகளில் உள்ள ஆவணங்களும் உள்ளன. இங்குள்ள நூலகத்தில், வேறெந்த நூலகத்திலும் கிடைப்பதற்கரிய அச்சிட்ட பழைய நூல்களும் அரசு வெளியீடுகளும், அரசிதழ்களும் உள்ளன.
அறிவியல் முறையில் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும் ஆய்வாளர்கள் வந்து ஆவணங்களைப் பயன்படுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஆய்வுக் கூடம் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயற்பட்டு வருகிறது.
இங்குள்ள நூலகத்தில் ஆய்வாளர்களுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துகளும் இரண்டாம் நிலைச் சான்றுகளும் கிடைக்கின்றன. விலை கொடுத்துப் பெற்ற நூல்களும் நன்கொடையாகவும் நூல்மாற்று முறையிலும் பெற்ற நூல்களும், நூற்பதிவுச் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் நூல்களும் சேர்க்கப்படுகின்றன. இந்நூலகத்தில் சேர்க்கப்படும் வெளியீடுகள், அவற்றின் தன்மையைப் பொறுத்துப் பல்வேறு பகுப்புகளாகப் பகுத்து வைக்கப்படுகின்றன.
பழைய மன்னர்கள், சமீன்தார்கள், மதத்தலைவர்கள், தனியார்துறை அலுவலர்கள், தனிப்பட்டவர்கள் முதலியோரிடம் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய ஓலைச் சுவடிகளையும் ஆவணங்களையும் பெற்று, அவற்றைத் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பாதுகாக்க, வரலாற்று ஆவண மதிப்பீட்டு மாநிலக்குழு (Regional Committee for Survey of Historical Records) என்னும் குழுவை அரசு அமைத்துள்ளது. இம்மாநிலக்குழு, ஆவணக் காப்பக ஆணையரின் மேற்பார்வையாலும், உறுப்பினர்களாக உள்ள பல அறிஞர்கள், அலுவலர்கள் ஆகியோர் கருத்துக்களாலும் ஒத்துழைப்பாலும் இயங்கி வருகிறது.
<section end="ஆவணக் காப்பகம்"/>
<section begin="ஆவணச் சான்று"/>
{{dhr}}
<b>ஆவணச் சான்று</b>: உரிமை இல்லையேல் வழக்கில்லை. சான்றுகள் இல்லையேல் தீர்ப்புகள் இல்லை. சிக்கலிலுள்ள பொருண்மைகளைச் சான்றுகளைக் கொண்டு மெய்ப்பித்தாலன்றித் தீர்ப்பு வழங்க இயலாது. சான்றுகள் வாய் மொழிச் சான்று, ஆவணச் சான்று என இருவகைப்படும். விசாரணையிலிருக்கும் பொருண்மை தொடர்பான செய்திகளைப் பொறுத்து, நீதிமன்றம் தன்முன் கொடுக்குமாறு சாட்சிகளை அனுமதிக்கும் அல்லது கோரும் உரைகள் வாய்மொழிச் சான்றாகும். நீதிமன்றத்தின் ஆய்வுக்காகத் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தும் ஆவணச் சான்றாகும். ஆவணம் என்பது, ஏதேனுமொரு செய்தியினைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு எழுத்துகள், எண்கள் அல்லது குறிகள் மூலமாக ஏதேனும் பொருளின் மீது வெளியிடப்பட்ட அல்லது வரையப்பட்ட செய்தி என்று பொருள் படும்.
ஆவணச் சான்றுகள் நம்பத்தக்கவை. வாய்மொழிச் சான்றை ஏற்றுக்கொள்வதைவிட ஆவணச் சான்றை நீதிமன்றங்கள் மிகுதியாக ஏற்றுக் கொள்கின்றன. இருபிரிவினரும் தம்மிச்சையாகத் தங்கள் சொத்துரிமைத் தொடர்பான நடவடிக்கைகளை எழுத்து மூலமாக ஆவணங்களாக்குகிறார்கள். இதற்கு மேல் சட்டத்தின் கட்டாயத்தின்கீழ் ஒரு சில செய்திகள்<noinclude></noinclude>
qsewz6n4tbv81igtbcuoaatx4lu5nau
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/684
250
623034
1948064
1859266
2026-06-19T16:06:02Z
Sridevi Jayakumar
15329
1948064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவணம்|644|ஆவணம்}}</noinclude>றையோ குறிப்பிடுமிடத்து, அந்த ஆட்களில் எவரை அல்லது அந்தப் பொருள்களில் எதனைக் குறிக்கிறது என்பதைக் காட்டும் பொருண்மை பற்றிய சாட்சியம் கொடுக்கலாம். பிரிவினர்களின் உட்கருத்தையும் சாட்சியத்தில் உறுதி செய்யலாம்.
ஓர் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், ஆவணம் எழுதிக் கொடுத்தவரின் உட்கருத்தினை முழுமையாக வெளிக் கொணரவில்லையெனில் அச்சொற்களின் பொருளறிந்து அவ்வா வணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கு தாக்குவது நீதிமன்றத்தின் கடமை.{{Right|வி.ஆர்.கு.}}
<section end="ஆவணச் சான்று"/>
<section begin="ஆவணம்"/>
{{dhr}}
<b>ஆவணம்</b>: எழுத்துகள், எண்கள், குறிகள் ஆகியவற்றைக் காகிதம், ஓலை, செப்புத்தகடு, கல் போன்றவற்றில் செய்தியாகப் பொறித்து வைக்கப் பெறுவது ஆவணம் (Document) எனப்படும்.
இச்செய்திகள் சட்டத்தில் சான்றாகக் காட்டக் கூடியனவாதலின் ஆவணம் இன்றியமையாததாக உள்ளது.
நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் மூதாதை ஒருவர், தமக்கு அடிமை ஓலை எழுதிக் கொடுத்திருப்பதாக வழக்குக் கூறிச் சிவபெருமான் அந்த ஓலை ஆவணத்தைச் சான்றாகக் காட்டியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
ஒன்றைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு செய்தியை அல்லது பல செய்திகளைப் பதித்து வைத்துத் கொள்ளும் வழக்கம் மக்களிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்தப் பதிவுக் குறிப்புகளும் ஆவணங்கள் என்று பொதுவாகத் தமிழில் குறிப்பிடப்படுகின்றன.
முற்காலத்தில் ஒருவருக்கு அரசர் நிலம் அல்லது வேறு மானியம் வழங்கினால், அந்த விவரத்தைச் செப்பேடுகளில் பதித்து முத்திரையிட்டுக் கொடுப்பது வழக்கம், அரசனது ஆணையைக் குறிப்பெடுத்துக் கொள்பவர் ‘திருவாய்க் கேள்வி’ என்றும். அதை ஓலையில் எழுதிக்கொள்பவர் ‘திருமந்திர ஓலை’ வென்றும், பிழையின்றி எழுதப்பட்டுள்ளதா என்று பார்ப்பவர் ‘திருமந்திர ஓலை நாயகம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். நிலம் தொடர்பான ஆணையாயின், அது ஆவணக் களரி அலுவலர்களால் பார்க்கப்பட்டுப் பின்னர் ‘ஆணத்தி’ என்பவரால் நிறைவேற்றி வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் செப்பேடுகள், ஓலைச் சுவடிகல் முதலியவற்றைப் பாதுகாத்து வைப்பதற்காக ஆங்காங்கே காப்பகங்கள் அமைக்கப்பட்டன. அக்காப்பகங்களுக்கு ‘ஆவணக் களரிகள்’ என்று பெயர். இவை நிலத் தொடர்பான குறிப்பேடுகளையெல்லாம் தம்மகத்தே கொண்டு விளங்கின. இவற்றில் பல அலுவலர் பணியாற்றினர். தலைமை அலுவலர் ‘திணைக்கள நாயகம்’ என்ற பெயரிலும், மற்ற அலுவலர்கள் ‘வரிப் பொத்தகம்’ என்ற பெயரிலும் பணியாற்றி வந்தனர்.
கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ‘அட்சபடலா’ என்று ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடுகிறது. அக்காப்பகத்தில் தலைமைப் பொறுப்பாளர் ‘மகா அட்சபாலிகா’ என்று குறிப்பிடப்படுகிறார்.
உலகின் வெவ்வேறு நாடுகளிலும் ஆவணக் களரிகள் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் அனைத்து நாட்டு அரசுகளும் அரசாங்க ஆவணங்களைப் பாதுகாத்து வருவதற்காக ஆவணக் களரிகள் நிறுவியுள்ளன
இற்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன்னதாகச் சிரியா நாகரிகத்தைச் சார்ந்த ஆவணக் காப்பகம் ஒன்று தொல்லியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது, பூமிக்குள், பழைய நகரம் இருந்த பகுதியில் எழுத்துகள் பொறித்த செங்கல் பாளங்கள் ஒரு குவியலாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அவை அக்காலச் சமுதாயப் பழக்க வழக்கங்களையும் வணிக முறையையும் நாட்டு நடப்புகளையும் குறிப்பனவாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
எகிப்தின் இரோகிளிப்சு எழுத்தில் உள்ள முத்திரைகள், சுமேரியர்களின் முத்திரைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள், களிமண் தகடுகள் ஆகியன, அக்கால மக்கள் தங்கள் நடவடிக்கைகளை எழுத்தில் பொறித்துப் பாதுகாத்து வைத்திருந்ததன் அடையாளங்களாகும். பழைய ஆவணங்கள் முந்தைய வரலாற்றை அறிவதற்கும் எழுதுவதற்கும் பெரிதும் துணைசெய்துள்ளன.
சொத்துக்களுக்கான உரிமைகளையும் உடைமைகளையும் நிலைநாட்ட ஆவணத்தைச் சான்றாகக் காட்ட வேண்டுமெனச் சட்டம் வற்புறுத்துகிறது. அதனால், இந்தியச் சான்றியல் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் ஆவணம் என்பதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எழுதி வைக்கப்பட்ட செய்தியும் அச்சடித்துள்ள செய்தியும் வரைபடம் மூலம் குறிக்கும் செய்தியும் ஆவணங்களே என்று அச்சட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில் ‘ஆவணம்’ என்னும் சொல் விளக்கப்படுகிறது. ‘அது எண்ணாலோ எழுத்தாலோ, குறி-<noinclude></noinclude>
jurj7724aka7qa1fovo1imzqwh3emiy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/687
250
623037
1948066
1859271
2026-06-19T16:06:59Z
Sridevi Jayakumar
15329
1948066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவணி அவிட்டம்|647|ஆவணி அவிட்டம்}}</noinclude>சான்றளிக்கப்பட்ட படிகள் சான்றாகக் காட்டப்படலாம். வெளிநாட்டைச் சேர்ந்த பொது ஆவணங்கள் எவ்வாறு மெய்ப்பிக்கப்படலாம் என்பதனைச் சான்றியல் சட்டம் குறிப்பிடுகிறது.
வழக்கில் காட்டப்படும் ஆவணத்தை அது உண்மையானதாயின் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். ஆவணத்தின் உண்மைத் தன்மையைப் பொறுத்து உரிய சான்று அளிக்கப்படுதல் வேண்டும். சில ஆவணங்களை அவை உண்மையானவை என்று நீதிமன்றம் துணிபு கொள்ளவேண்டுமெனச் சான்றுச் சட்டத்தின் 79 முதல் 80 வரையுள்ள பிரிவுகள் கூறுகின்றன. முறையான உறுதிச் சான்று பெற்ற ஆவணங்கள், அரசுச் சட்டங்கள், அதிகாரப் பத்திரங்கள் போன்றவை அவை. முப்பதாண்டுப் பழைமையுடைய ஆவணம் ஒன்று அது யாருடைய கைவசத்தில் இருப்பது முறையோ அவருடைய கைவசத்திலிருந்து தாக்கல் செய்யப்படுமிடத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி உரிய முறையில் எழுதிக் கொடுக்கப்பட்டுச் சான்றொப்பமும் இடப்பட்டது என நீதிமன்றம் துணிபு கொள்ளலாம். கட்டாயம் துணிபு கொள்ள வேண்டியவை யாவை, எவைபொறுத்துத் துணிபு கொள்ளலாம் என்பன சான்றுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆவணச் சான்று சிறப்புத் தன்மை உடையதாக இருப்பதால், சிலர் பொய்யாவணம் புனையவும், அதனை உண்மையானதெனப் பயன்படுத்திப் பலன் பெறவும் முற்படுவதுண்டு. அவ்வாறு செய்வதைக் குற்றம் எனக்கொண்டு தண்டனைகள் வழங்க இந்தியச் சட்டத்தின் பதினெட்டாவது அத்தியாயம் வகை செய்கிறது. அதில் ஆவணங்கள் தொடர்பான குற்றச் செயல்களும் உரிய தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன.{{Right|கு.இரா.}}
<section end="ஆவணம்"/>
<section begin="ஆவணி அவிட்டம்"/>
{{dhr}}
<b>ஆவணி அவிட்டம்</b> என்பது ஆவணி மாதம் முழுநிலாவில் திருவோண நட்சத்திரத்திலோ அவிட்ட நட்சத்திரத்திலோ தொடங்குவதாகும். பொதுவாகத் தென்னகத்திலும், சிறப்பாகத் தமிழகத்திலும் ஆவணி மாதம் தொடங்கியதும் மழைக் காலம் அல்லது கார்காலம் தொடங்கும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்கள் மழை பொழியும் மாதங்களாகும். இந்நான்கு மாதங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாது. எனவே, இக்காலத்தைக் கற்றோகும் மாணாக்கரும் முன் கற்றதை மனப்பாடம் செய்யும் காலமாகப் பயன்படுத்தினர். தாம் கற்ற பாடங்கள் மறந்து விடாமல் மனத்தில் நிலைத்து நிற்கும் வண்ணம், வெளியில் செல்ல இயலாத இம்மழைக் காலத்தைப் பயன்படுத்தி மனப்பாடம் செய்து வந்தனர் பண்டைக்கால மாணாக்கர். இக்காலத்திலும் இம்முறை ஓரளவு பண்டைய மரபில் ஊறியுள்ளவர்களால் பின்பற்றப்படுகிறது.
நம் நாட்டில் பழங்காலக் கல்வி முறையில் இவ்வாறு மனப்பாடம் செய்தல் ஒரு சிறப்பான கல்வி கற்கும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது தெரிய வருகிறது. பண்டைக் காலத்தில், இக்காலத்தைப் போன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நூல்களைப் பெருமளவில் விரைவாக அச்சிடும் முறையை மக்கள் அறிந்திலர். எனவே, வாய்மொழியாக ஆசிரியர் சுற்றுக் கொடுப்பதைச் ‘செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து’ என்ற முறையில் மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். அதனால், வழிவழியே சான்றோர் இயற்றிய பல்வகை நூல்களும் காப்பாற்றப்பட்டன. பண்டைக் காலத்தில் நூல்கள் எழுதி வைக்கப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. எனவே, மனப்பாடம் செய்வது தேவையான கற்கும் முறையாக அமைக்கப்பட்டது இயற்கையே. ஆனால், சிறந்த முறையில் விரைவாக அச்சிடும் கலை பரவியுள்ள இக்காலத்தில் மனப்பாடம் செய்யும் முறை குறைந்து வருகிறது. எனினும் இந்நாளில் மிகக் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே இது நடைபெற்று வருகிறது என்று கூறலாம்.
ஒதல் அல்லது மனப்பாடத் தொடக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் வழங்கினர். தொடக்கம் என்னும் பொருளைத் தன்னகத்துக் கொண்ட உபாகர்மம் என்னும் சொல்லாலும் இது வழங்கப்பட்டது.
வேதங்களுக்கு அடிப்படையான சிறந்த முனிவர்களின் பெயரை இந்த ஆவணி அவிட்டவிழா தொடங்கும்பொழுது கூறித் தருப்பணம் செய்வது முறையாகும்.
‘மேதை’, ‘சிரத்தை’ ஆகியன கல்வியில் தேவதைகளாகக் கருதப்படுவது வேதகால மரபு. ஆகவே முதற்கண் இக்கல்வியின் தேவதைகளை வழிபட்டு ஓமம் செய்வர். அந்தணர் முதலியோர், அணிந்துள்ள பழைய பூணூலை நீக்கிவிட்டுப் புதுப் பூணூலை மகிழ்ச்சியுடன் அணிந்து கொள்வர்.
ஆவணி அவிட்ட விழாவெடுக்க இருக்கு வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் சிறப்பானது; யசுர் வேதிகளுக்குப் பௌர்ணமி திதி சிறப்பானது. சாம வேதிகள் புரட்டாசி அத்த நட்சத்திரத்தில் இதைச் செய்வர். பொதுவாக, மழைக்காலம் அல்லது கார்காலம் தைத் திங்களில் முடிவடையும். அப்பொழுது நிறைவுச் சடங்கு நடத்தி, ஓதலை முடித்துக்கொள்வது பண்டைக்கால முறையாகும்.{{nop}}<noinclude></noinclude>
4kceadlar70350bvjnixy0cdo6foenh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/688
250
623038
1948067
1859276
2026-06-19T16:09:53Z
Sridevi Jayakumar
15329
1948067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவர்கள்|648|ஆவியர்}}</noinclude>இக்காலத்தில் ஆண்டு முழுவதும் ஒதல் அல்லது மனப்பாடம் தடைபெறுவதாகக் கருதப்படுவதால், ஓதல் நிறைவு விழாவையும் ஆவணி அவிட்டத் தன்றே செய்துவிடுகின்றனர். ஆவணி அவிட்டத்தில் தமிழகத்தில் செட்டிமார்களுள் ஒரு பிரிவினர், அன்று மணமக்கட்குப் புத்தாடை அளித்துச் சிறப்பிப்பதும் உண்டு. இக்காலத்தில் எல்லாக் கோயில்களிலும் அன்று சிறப்புப் பூசை செய்யப்படுகிறது.{{Right|அ. கா. ப.}}
<section end="ஆவணி அவிட்டம்"/>
<section begin="ஆவர்கள்"/>
{{dhr}}
<b>ஆவர்கள்</b>, தான் (Don), வால்கா ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த கூட்டத்தினராவர், இவர்கள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் ஊணர் (Huns) களைப் பின்பற்றி ஐரோப்பாவில் நுழைந்தார்கள். தான்யூப்பு (Danube) ஆற்றைச் சுற்றிக் குடியேறிய ஆவர்கள் (Avars) உரோமானியப் பேரரசர் சசுட்டினியனுக்கு (Justinian) ஆதரவாக இருந்தார்கள். இலம்பார்டியருக்கு உதவி செய்து பன்னோனியப் பகுதியினைப் பெற்றனர்; பால்கன் தீபகற்பத்தைச் சூறையாடினர். இவர்கள் கருங்கடல் வரை தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினார்கள். பால்கன் மக்கள் கூட்டாகச் சேர்ந்து கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இவர்கள் மேலாண்மையை அழித்தார்கள். பேரரசர் சார்லிமேனால் (Charlimagne) ஒடுக்கப்பட்ட இவர்கள் முற்றிலும் நசுக்கப்பட்டார்கள். பின்னர்ச் செருமானியர்களோடும், பல்கேரியர்களோடும் கவத்துவிட்டனர்.
<section end="ஆவர்கள்"/>
<section begin="ஆவர்த்தம்"/>
{{dhr}}
<b>ஆவர்த்தம்</b> கருநாடக இசையில் ஒரு முழுத்தாளம் அல்லது தாளவட்டம் ஆவர்த்தம் எனப்படும். இதனை ஆவர்த்தனம் என்றும் கூறுவர், தாளத்தின் எல்லா உறுப்புகளையும் ஒரு முறை கணக்கிட்டு முடிப்பதற்கு ஆவர்த்தம் என்பது பெயர். தாளத்தின் 16 உறுப்புகளுக்கும் ஏற்ப ஆவர்த்தங்கள் மாறுபடும். ஒரு தாளம் ஒரு முறை முழுவதும் வரிசைப்படி எண்ணப்பட்டவுடன் அந்தத் தாளத்தின் ஆவர்த்தம் முடிந்துவிட்டதாகக் கொள்ளப்படுகிறது.
இசைக்கலையில் ஆவர்த்தத்திற்கு வாய்ப்பு என்னும் பொருளும் உண்டு, இசை நிகழ்ச்சியின் பாடகர் இசைக்கருவியாளருக்குத் தனி ஆவர்த்தங்கள் நிகழ்த்தும் வாய்ப்புக் கொடுப்பதனால் அவர்களுடைய திறமைகளை அவையினருக்குத் தெரியப்படுத்த முடியும்.{{Right|பி.ஆர்.}}
<section end="ஆவர்த்தம்"/>
<section begin="ஆவா"/>
{{dhr}}
<b>ஆவா,</b> பர்மாவின் தலைநகரமாக இருந்த நகரம். ஐராவதி ஆற்றங்கரையில் மாந்தலேயிலிருந்து (Mandalay) ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது. தடோமின்பாயா என்ற அரசர் கி.பி. 1364-இல் ஆவாநகரை (Ava) உருவாக்கினார். இந்நகரம் நான்கு நூற்றாண்டுகள் தலைநகரமாய் இருந்து இன்று அழிந்த நிலையில் உள்ளது. அரண்மனையின் சில பகுதிகளில் உள்ள கோயில்கள் பெரும்பாலும் அழிந்த நிலையில் உள்ளன. பழங்காலத் தலைநகரமான அமரபுரம் இந்நகருக்கு அருகிலுள்ளது.
<section end="ஆவா"/>
<section begin="ஆவிசென்னா"/>
{{dhr}}
<b>ஆவிசென்னா (கி.பி. 980-1037)</b>: இவர் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உருசியாவில் உசுபெக்கிசுதானிலுள்ள (Uzbekistan) புக்காரா (Bukhara)விற்கு அருகில் அப்சுகேனா (Afskena) என்னும் ஊரில் பிறந்தார், இவர் இயற்பெயர் அபு-அலில் அசன் இபின் அப்துல்லா இபின் சின்னா (Abu-Alial Husayn Ibn Abdullah-Ibn Sina) ஆகும். இவர் இசுலாமிய சமயத்தைச் சார்த்தவர்; தமது 18-ஆம் வயதில் அரபு மொழி, மருத்துவம், கணிதம், அளவையியல், அறிவியல், தத்துவம் ஆகிய துறைகளில் உயர்ந்த கல்வியறிவைப் பெற்றுச் சிறந்தவராக விளங்கினார். மருத்துவம், தத்துவம் ஆகிய துறைகளில் நூல்கள் பல எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, மருத்துவம் பற்றிய நூலாகும். இந்நூல், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிறந்த மருத்துவ நூலாக மேலை நாடுகளில் கருதப்பட்டது.
<section end="ஆவிசென்னா"/>
<section begin="ஆவியர்"/>
{{dhr}}
<b>ஆவியர்</b> தமிழ்நாட்டில் பழங்காலத்தில் பல்வேறு குடியினர் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர். பொதினிமலையைச் சூழ்ந்த நாட்டுப் பகுதியினை ஆண்டு வந்த பழங்குடியினர் ஆவியர் எனப்பட்டனர். இன்றுள்ள பழனிமலையும் அதனைச் சூழ்ந்துள்ள குன்றுங்குழியும் நிறைந்த பகுதியும் சேர்ந்ததே அந்த நாளில் பொதினிமலைப் பகுதியாக வழங்கி வந்தது. அப்பொதினிமலைப் பகுதியை ஆண்டுவந்த பழங்குடியினரை ஆவியர் என்று குறித்தனர். ஆவி என்ற சொல்லுக்குப் புகை என்பது பொருள். புகைபோன்ற மேகங்கள் சூழ்ந்த மலைப் பகுதியை ஆண்டு வந்ததனால் ஆவியர் என்று குறிக்கப் பெற்றனர் போலும்! ஆவி என்ற பழங்குடியின் வழித்தோன்றல்களை ஆவியர் என்றழைத்தனர். அந்த ஆவியர் குடியில் பிறந்தவர்கள் வீரத்திலும் தீரத்திலும் மன ஈரத்திலும் சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர். அப்பழங்குடியில் தோன்றிப் புகழ் பெற்ற குறுநில மன்னராய்த் திகழ்ந்தவர் போகன் என்பவராவார். அவர் மயிலுக்கு ஆடை கொடுத்த வள்ளல் ஆவார், அவர், கடையேழு வள்ளல்களுள் ஒருவர். அப்பேகனை ‘ஆவியர் கோ’ என அழைத்தனர். ஆவியர் குடிக்கே பெருமை சேர்த்தவர் பேகன் என்னும் வள்ளலாவார். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், பெருங்குன்றூர் கிழார் முதலான புலவர்கள் ஆவியர் குடியில் பிறந்த பேகனை, ‘ஆவியர் கோ’ ‘ஆவியர் பெருமகன்’ எனக் குடியோடு சேர்த்துப் புகழ்ந்து கூறியுள்ளனர்.{{Right|கே.நா.}}
<section end="ஆவியர்"/>
{{nop}}<noinclude></noinclude>
4xdfwpj28epks0zwcdlooofvegqwc54
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/689
250
623050
1948069
1859938
2026-06-19T16:10:47Z
Sridevi Jayakumar
15329
1948069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவியுலகக் கோட்பாடு|649|ஆவியுலகக் கோட்பாடு}}</noinclude><section begin="ஆவியுலகக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>ஆவியுலகக் கோட்பாடு</b>: தொன்மைச் சமயத்தைப் பற்றி விளக்க முற்பட்ட முதல் மானிடவியல் கோட்பாடே ஆவியுலகக் கோட்பாடு எனப்படும். இங்கிலாந்தில் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மானிடவியலாளரான எட்வர்டு பர்னட் தைலர் (Edward Burnett Tylor) அடிப்படையில் படி முறை வளர்ச்சியியலாராக இருந்தும், கி.பி. 1871-ஆம் ஆண்டில் தம் சிறந்த ஆய்வின் அடிப்படையில் வகுத்த ஆவியுலகக் கோட்பாடு (Animism), தொன்மைச் சமயத்தின் தொடக்க நிலை எவ்வாறு இருந்தது, அனைத்து மக்களிடையேயும் எந்தெந்த நிலையில் காணப்பட்டது, இச்சமயத்திற்கு எத்தகைய பெயர்கள் மக்களிடையே காணப்பட்டன என்பன போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டது.
தொன்மைச் சமயத்தின் தோற்றம் பல முகங்களைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டாலும் தைலர் தம் படைப்புக் கொள்கை வழித், ‘தன்னைச் சுற்றிலுமுள்ள கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகளுக்கு மனிதன் கட்டுப்படுகிறான்’ என்று உறுதியாக நம்பினார். கொள்கை நிலையிலன்றி, மானிடவியலின் எல்லாத் துறைகளிலும் சமயத்தைப் பற்றிய படிமுறைக் கருத்தினைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுதும் இக்கருத்து உறுதிப்படும் என்கிறார். இந்த ஆவிகள், மனிதச் செயல்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவோ உதவவோ ஊறுவிளைவிக்கவோ செய்யும் இயல்புடையன. இத்தகைய எண்ணற்ற ஆவிகளின் பால் மனிதர் கொண்டுள்ள நம்பிக்கையே ஆவியுலகக் கோட்பாடு ஆகும். இவ்வாறு ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட சமயமாகத் ‘தொன்மைச் சமயம்’ உருப்பெற்றது.
தைலர் தம் அடிப்படைக் கொள்கை வழி, ஒவ்வொரு பண்பாடும், சமயம் அல்லது சமய நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், அச்சமய நம்பிக்கையே அப்பண்பாட்டின் அடிக்கல்லாக அமையும் என்றும் நம்பினார். பண்பாட்டு வளர்ச்சி ஒரே கோட்டில் செல்ல வில்லையாயினும் சிறிய, எளிய நிலையிலிருந்து சிக்கலான, வளர்ந்த நிலைவிலேயே செல்கிறது. அவர், பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியில், ஆவியுலக நம்பிக்கை ஏற்றுக்கொண்ட பல்வேறு திரிபு நிலைகளையும் மாற்றங்களையும் சமயப் படிமலர்ச்சி இயலாரும் மானுடவியலாரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் ஆராய்ந்திருக்கிறார். ஆவியுலக நம்பிக்கை, வெவ்வேறு பண்பாடுகளில் அவற்றின் இயற்கைச் சூழ்நிலையோடு ஒன்றிப் பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சி நிலையைப் பல்கடவுள் வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாடு ஏற்பட்டது என்ற தன் கோட்பாட்டோடு இயைபுபடுத்தி ஆராய்கிறார். மேலும், பல்வேறு நிலைகளைக் கொண்ட பண்பாட்டின் படிமுறை வளர்ச்சியை விளக்கும்பொழுது, சமயத்திற்கு முந்தைய பண்பாட்டு நிலையையும் அறுதியிட்டுக் கூற முயல்கிறார். எனினும், இதனை விரிவுபடுத்த எவ்விதத் தனிப்பட்ட கொள்கையும் தைலர் வகுக்காமல், குறுகிய பரப்புக்கொண்ட சமூகப் படிமலர்ச்சிக் கொள்கையோடு நோக்குகிறார்.
ஆவிக் கோட்பாடுடைய ஆதிக்குடிகளின் தொன்மைச் சமயத்தை அறுதியிட்டு விளக்க முற்பட்ட பொழுது இவர் குறைந்த அளவு சமய வரையறையைக் கொண்டு வந்தார். இந்த வறையறைப்படி, ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஆவியுலக நம்பிக்கையையாவது கொண்டிருத்தல் வேண்டும். இந்தத் தொடக்க நிலையினைக் கடந்த பின்னரே மனிதகுலம் சமயக் கோட்பாடுடைய பண்பாட்டை அடைந்தது.
உலகத்தில் ஒருசில ஆதிக்குடிகளிடையே ஆவி நம்பிக்கை இல்லாமலிருக்க வாய்ப்புண்டென்று தைலர் கொள்கையளவில் ஒப்புக்கொள்ளுகிறார். மேலும் பொதுவான சமய வரையறையை உருவாக்குதற்கு இத்தகைய ஐயப்பாடுடைய விதிவிலக்கு தடையாகாது என்றும் குறிப்பிடுகிறார். எனவே மக்கள் அனைவரும் ஆவி நம்பிக்கையுடைய சமயத்தை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தனர் என்பது தைலரின் முடிந்த முடிபாகும். இக்கோட்பாட்டைத் தெளிவுபடுத்தத் தொடர்ச்சியான மாதிரி நியதிகள் பலவற்றை முன்வைத்துப் பேச முற்பட்டார். இக்கோட்பாட்டின் ஒரு கூறாக, காடும் விலங்குகளும், வானும் பறவைகளும், தண்ணீரும் மீன்களும் இணைந்திருப்பதைப் போலவே, மனிதனும் ஆவியும் ஒன்றோடொன்று ஒன்றியிருக்கின்றனர் என்கிறார். எனவே, ஆவியில்லாமல் மனிதன் வாழமுடியாது என்பது கருத்தாகும்.
ஆவிக்கோட்பாட்டில் (Doctrine of Spirits) இருந்தே சமயம் தோன்றியது என்றும், இக்கோட்பாடு இறப்பு, களவு ஆகியவற்றின் சிந்தனைக்குட்பட்ட பிரதிபலிப்போடு ஒன்றியமைந்த உயிர்க்கோட்பாடு (Doctrine of Souls) என்றும் கூறுகிறார்.
கனவின் வியக்கத்தக்க நிகழ்ச்சிகனை மனிதன் உணர்ந்தபொழுது தோன்றியதே ஆவியுலகம் என்று தைலர் உறுதியாக நம்பினார். கனவு ஒருவித மயக்கத்தை உண்டாக்கி மாயையான அனுபவத்தையும் ஏற்படுத்துகிறது. ஆதிக்குடியினர் நங்கள் கனவிலும் தூக்கத்திலும், இறந்த மூதாதையரையும் குளம், நீரோடைகளில் காணப்படும் தங்கள் நிழல் போன்றவற்றையும் உணர்ந்த சூழலில், அவற்றினின்று தம்மை விடுவித்துக்கொள்ள இயலவில்லை. தம் உணர்வு<noinclude>
<b>வா.க. 2-82</b></noinclude>
kfgk07693e3o0wfrla19z3d4ljfpkjz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/691
250
623052
1948071
1859956
2026-06-19T16:13:01Z
Sridevi Jayakumar
15329
1948071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவுடையம்மாள்|651|ஆவூர்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Durkheim E.,</b> The Elementary Forms of Religious Life, The Free Press, New York, 1965.<br>
<b>Frazer, J.,</b> The Golden Bough, Macmillan Company, New York, 1930.<br>
<b>Lowie, R. H.,</b> Primitive Religion, Liveright Publishing Corporation, New York, 1948.<br>
<b>Marett, R. R.,</b> The Threshold of Religion, Methuen, London, 1969.<br>
<b>Needham, J.,</b> Science, Religion and Reality, Macmillan Company, New York, 1925.
<section end="ஆவியுலகக் கோட்பாடு"/>
<section begin="ஆவுடையம்மாள்"/>
{{dhr}}
<b>ஆவுடையம்மாள்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் தென்காசிக்கருகிலுள்ள செங்கோட்டை என்னும் ஊரைச் சேர்த்தவர்; வேதாந்தல் கொள்கையுடையவராக விளங்கியவர்; வேதாந்தக் கோட்பாட்டினை நன்குணர்ந்து அதனை விளக்கும் நூல்கள் எழுதியுள்ளார். ‘வேதாந்த வித்யா சோபனம்’ என்னும் நூல், வேதாந்தக் கருத்துகளைச் சோபனப் பாட்டில் அமைத்து விளக்குகிறது. இந்நூல் கி. பி. 1890-இல் வெளி வந்தது. கி. பி. 1896-இல் வெளிவந்த ‘வேதாந்தப் பள்ளு’ என்னும் இவரது நூல், வேதாந்தக்கொள்கைகளை, எளிய மக்களின் பேச்சுமொழில் அமையத்தக்க பள்ளு என்னும் சிற்றிலக்கிய வாயிலாக விளக்குகிறது.
<section end="ஆவுடையம்மாள்"/>
<section end="ஆவுடையார் கோயில்"/>
{{dhr}}
<b>ஆவுடையார் கோயில்,</b> பாண்டி நாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்று. இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திலுள்ளது. இறைவன் திருக்கோயிலுக்குரிய ‘ஆவுடையார் கோயில்’ என்னும் பெயரே இன்று ஊர்ப் பெயராக வழங்குகிறது. இவ்வூர் திருமுறைகளிலும், பிற இலக்கியங்களிலும் திருப்பெருந்துறை என்று வழங்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது. மணிவாசகப் பெருமானாகிய திருவாதவூரடிகளைப் பாண்டிய மன்னன் குதிரை வாங்கிவரப் பணித்தபோது, கடல் கடந்த வெளிநாடுகளிலிருந்து கலங்களில் குதிரைகள் கொண்டுவரப்பெற்று இங்கு இறக்கப்பட்டன என்னுஞ் செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கு 66 கோடித் தீர்த்தங்கள் உள்ளமையால், இத்தலம் பெருந்துறை என்னும் பெயர் பெற்றது. என்று புராணங்கள் விளக்குகின்றன. இத்தலத்திற்குச் சிவபுரம் முதலான ஒன்பது சிறப்புப் பெயர்களும், பரையேகாவனம் முதலிய வேறு பெயர்களும் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. இத்தல இறைவன் பெயர் ஆன்மநாயகர்; இறைவி பெயர் சிவயோகநாயகி தல மரம் குருந்தமாகும், தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய அறுபத்தாறு கோடி தீர்த்தம், மணிவாசகப் பெருமான் குருவருள் பெற்றது திருப்பெருந்துறை என்னும் இத்திருத்தலத்திலாகும். இங்குள்ள திருக்கோயில் அழகும் அருமைப்பாடும் கொண்டது. இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கல்லாலாகிய கொடுங்கை மிகவும் நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கல்லினை மெல்லிதாய் இழைத்துச் செய்யப் பெற்றுள்ள இல்கொடுங்கை வேலைத்திறன் அக்காலக் கல்தச்சர்களின் கைவினைத்திறத்திற்கு அரிய எடுத்துக்காட்டாகும். இது தோன்றிய பின்னர் இப்பக்கத்தில் கல்தச்சர்கள் பணி ஒப்பந்தச் செய்யுங்கால் ‘ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்வோம்’ என்று கூறும் மரபு சொல்லப்படுகிறது. இக்கோவிலில் மேளம் வாசிக்கப்படுவதில்லை. கோயிலுள் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமேனிகள் அமைக்கப்படவில்லை. நந்தி வடியமோ கொடிமரமோ நிறுவப்படவில்லை, திருவிழாக் காலங்களில் மணிவாசகர் திருமேனிப் படிவமே ஊர்வலமாக வரும். இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆட்சிக்குட்பட்டுள்ளது. திருப்பெருந்துதைப் புராணம் என்னும் பெயரில், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும், சுந்தரலிங்க முனிவராலும் இருவேறு தலபுராணங்கள் பாடப்பெற்றுள்ளன. திருப்பெருந்துறையின் வளத்தையும், ஆண்டுக் கோயில் கொண்டு வினங்கும் பெருமானின் திறத்தையும் மணிவாசகர் தம் திருவாசகத்தில் அழகுறக் காட்டியுள்ளார்.
<section end="ஆவுடையார் கோயில்"/>
<section begin="ஆவூர்"/>
{{dhr}}
<b>ஆவூர்</b> சோழ நாட்டிலுள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. கும்பகோணத்திலிருந்தும் தஞ்சையிலிருந்தும் திருக்கருகாவூரிலிருந்தும் பேருந்து வழியாகச் சென்று இத்தலத்தினை அடையாலம். பசுக்கள் வழிபட்ட தலம் ஆதலால் ஆவூர் எனப்பட்டது. இங்குள்ள திருக்கோயிலுக்குப் பசுபதீச்சுரம் என்பது பெயர். ஊர்ப்பெயரோடு கோவிற்பெயரும் சேர்ந்து ஆவூர்ப்பசுபதீச்சுரம் என்று வழங்கப்படுகிறது. இறைவன் பெயர் பசுபதீச்சுரர். மங்களவல்லி, பங்கசவல்லி என்று இரண்டு அம்பாள் சந்திதிகள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் பிரம தீர்த்தம் எனப்படும். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் தேவாரம் உண்டு.
ஆவூர் என்னும் ஊர்ப் பெயரை முன்னடையாகக் கொண்டுள்ள ஐந்து புலவர்கள் சங்க நூலிற் காணப்படுகின்றனர். அவர்கள் பெயர் வருமாறு:-<noinclude></noinclude>
879p7bonx5w8rif0oxrb418hfnrxfkh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/692
250
623053
1948074
1859975
2026-06-19T16:17:09Z
Sridevi Jayakumar
15329
1948074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|652|ஆவூர் மூலங்கிழார்}}</noinclude>ஆவூர் கிழார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க் கௌதமன்சாதேவன், ஆவூர் மூலங்கிழார், ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்.
<section end="ஆவூர்"/>
<section begin="ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்"/>
{{dhr}}
<b>ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்</b> சங்க சாலப் புலவர்களுள் ஒருவர். இவர் ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர், இவ்வூர் சோணாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூராயிருக்கலாம் எனவும், இது இந்நாளில் பசுபதி கோயில் என வழங்குகிறது எனவும் கூறுவர். பசுக்கள் பூசித்தமையால் ஆவூர் எனப் பெயர் பெற்றது. பழங்காலத்தில் ஆக்களைப் பேணி வாழ்ந்த மக்கள் பலராதலின், ஆவூர்களும் எல்லாப் பகுதியிலும் இருந்துள்ளனவாதலால், இவர் எந்த ஆவூரைச் சேர்த்தவர் என்று கூறுவதற்கில்லை.
சாதேவனார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இப்புலவர், அரசர்க்கு அறிவுரை கூறும் அமைச்சர் தொழில் மேற்கொண்டு ‘காவிதி’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். ஆவூர் என்னும் ஊரில் வாழ்ந்ததனால், ஊர்ப் பெயரும் சேர்த்து ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்று அழைக்கப் பெற்றார், காவிதி என்பது, பாண்டி நாட்டு வேளாளருள் உழவுத் தொழில் செய்வோருக்கு அரசரளிக்கும் பட்டம் என்பர்.{{Right|என்.இ.இ.}}
<section end="ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்"/>
<section begin="ஆவூர்க் கௌதமன் சாதேவனார்"/>
{{dhr}}
<b>ஆவூர்க் கௌதமன் சாதேவனார்</b> சங்க காலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சங்க நூல்களில் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெயர்களும் ஒரு புலவரையே குறிக்கின்றன என்பது கருதப்படுகிறது. ஆவூர் என்னும் பெயர் ஆமூர் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. சாதேவன் என்பது இயற்பெயர். இது சகாதேவன் என்பதன் மரூஉ வடிவமாகும். கௌதமன் என்பது இவரது பெயரடையாயின் இவர் கெளதமகோத்திரத்துப் பிறந்த அந்தணராவர்; காவிதிகள் என்பது அடையாயின் உழுவித்துண்ணும் வேளாளருள் காவிதிப் பட்டம்பெற்ற ஒருவராவர். இவரது அகநானூற்றுப் பாடல் (159) பாலைத்திணையில் தோழி கூற்றாக உள்ளது. இதன்கண் குறிப்பிடப்பட்டுள்ள ஆமூர் என்பது, குறும்பொறை மலையின் கீழ்ப்பாலுள்ள பாலை நிலத்தில் அமைந்துள்ளது என்பதனால், இது சேர நாட்டைச் சார்ந்த எனச் கருதுகின்றனர். புவவர் தம்மூரைச் சிறப்பித்துக் கூறும் மரபினால் இதில் குறிப்பிடப்பட்ட ஆமூர் இவருடைய சொந்த ஊராக இருக்கலாம். ‘ஆமூர் என்னும் சிறப்புடைய ஊரைப் பெற்றாலும், தலைவன் தலைலியை மறந்து, சென்றவிடத்தில் தங்கிவிட மாட்டான்’ என்று இவர் பாடியுள்ளார். இவரது மற்றொரு பாடல் நற்றிணையில் 264 ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல். உடன்போகா நின்ற தலைமகன் கூற்றாக அமைந்துள்ளது. தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்ற தலைமகன் தலைவியிடம், ‘தோகை விரித்தாடும் மயில்போல, மலர் சூடிய கூந்தலில் காற்றடிக்க விரைந்து செல்வாயாக’ எனக் கூறுவது (நற். 264) நயமிக்கதாக உள்ளது.
<section end="ஆவூர்க் கௌதமன் சாதேவனார்"/>
<section begin="ஆவூர்கிழார்"/>
{{dhr}}
<b>ஆவூர்கிழார்</b> கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்; ஆவூரினைச் சார்ந்தவர். தமிழகத்தில் ஆவூர்ப் பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவரது ஆவூர் இன்னதென உறுதியாகக் கூறுதல் இயலாது. இவர் பாடலில் மருத நிலவளம் பேசப்படுவது கொண்டு இவரது ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள ஊராகலாம் என்பது கருதப்படுகிறது. ஆனால், அப்பாடலில் முல்லை நிலக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆவூர் எவ்விடத்தில் இருந்தாலும், இது பல சங்கப் புலவர்களைத் தோற்றுவித்த பெருமை சான்றதாகும். இப்புலவரின் மக்களும் சங்கப் புலவர்களாகக் காணப்படுகின்றமையால், இவர் குடும்பம் தமிழ்ப் புலமை சான்ற ஒரு குடும்பமாக அக்காலத்தில் விளங்கியுள்ளது. புறநானூற்றின் 322-ஆம் பாடலாக அமைந்த இவரது ஒரே பாடல் வாகைத் திணை, வல்லாண் முல்லைத் துறையில் அமைத்துள்ளது. இப்பாடல் வேந்தரும் அஞ்சுமாறு வாழ்ந்த ஒரு வீரனின் வீரச் சிறப்பையும் அவன் ஊர்வளத்தையும் விளக்குகிறது. இப்புலவர் பெயர் ஆவூர் அழகியார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது.
<section end="ஆவூர்கிழார்"/>
<section begin="ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்"/>
{{dhr}}
<b>ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். தமிழ்ப் புலவர் பலரைப் பெற்றெடுத்த ஆவூர் இவர் பிறந்த ஊராகும். இவர் தந்தை ஆவூர் கிழாரும் சங்கப் புலவர்களுள் ஒருவராக உள்ளார்.
ஆவூர் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்ற பெயரிலும் ஒரு புலவர் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது. அவர் கண்ணனாரின் உடன்பிறந்தார் எனவும் கருதப்படுகிறார். அதனால் ஆவூர் கிழாரின் குடும்பமே புலவர்கள் மிக்க குடும்பமாகத் திகழ்ந்துள்ளது. இவர் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ளது அகநானூற்றிலுள்ள ஒரே பாடலாகும். (202).
<section end="ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்"/>
<section begin="ஆவூர் மூலங்கிழார்"/>
{{dhr}}
<b>ஆவூர் மூலங்கிழார்</b> சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; ஆவூரில் தோன்றியவர். ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ளது. சங்கப் புலவர்களுள் சிலர், ஆவூர்ப் பெயரோடு காணப்படுகின்றமையால், இவ்வூர் அக்காலத்தே புலவர் பலரைத் தோற்றுவித்த பெருமை பெற்று விளங்கியது என்பது புலனாகிறது. மூலங்கிழார் என்னும் பெயரினை நோக்குங்கால், இப்-<noinclude></noinclude>
9rd1ne5fjkfwfogh018zsmlanvfq15k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/693
250
623054
1948075
1860021
2026-06-19T16:19:07Z
Sridevi Jayakumar
15329
1948075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆவூர் மூலங்கிழார் மகனார்.....|653|ஆழ்ந்த சிந்தனை}}</noinclude>பெயர் மூல விண்மீன் நாளில் தோன்றியமையால் அமைந்ததாகும் என்பதனை உய்த்துணரலாம். ஒருவன் பிறத்த விண்மீனால் அவனுக்குப் பெயரிடும் மரபுண்டு.
இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும் (புறம். 38,40), சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும் (புறம். 166), மல்லிகிழான் காரியாதி என்னும் பெரு வீரனையும் (புறம்.177), பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநிலத் தலைவனையும் (புறம். 178), பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் (புறம். 196) பெயர் அறியாப் புரவலன் ஒருவனின் வள்ளன்மை, அவன் இல்லாதபோது அவன் வீடுகளையிழந்து காணப்பட்டமை ஆகியவற்றையும் (புறம். 261) பாடியுள்ளார், புறம் 301-ஆம் பாடலும் இவர் பாடியுள்ளதே.
அகநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் முல்லை, மருதம், பாலை (24, 156, 341) ஆகிய திணைகளில் அமைந்துள்ளன.
<section end="ஆவூர் மூலங்கிழார்"/>
<section begin="ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்"/>
{{dhr}}
<b>ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்</b>: கடைச்சங்கப் புலவருள் ஒருவர், இவரது இயற்பெயர் சாத்தனார் என்பதாகும். இவர் இயற்பெயர் குறிக்கப்படாமல் ஆவூர் மூலங்கிழார் மகனார் என்றும் ஏட்டில் குறிக்கப்படுள்ளார். இவரது ஒரே பாடல் அகநானூற்றில் முல்லைத் திணைப் பாடலாக (224) அமைந்துள்ளது. வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுவதாக இப்பாடல் உள்ளது. ஆவூர் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ளது. இவர் தந்தையார் மூலங்கிழார் ஆவர். அவரும் சங்கம் புலவர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். அவருடைய பாடல்கள் அகநானூற்றிலும் புறநானூற்றிலும் இடம் பெற்றுத் திகழ்கின்றன. சங்கப் புலவர்களுள் ஒருங்கே இடம் பெறும் அளவில் தந்தையும் மகனும் பெரும் புலமை பெற்று விளங்கும் சிறப்பினை இவரது பெயரைக் கொண்டு உணரமுடிகிறது.{{Right|கி.கோ.}}
<section end="ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்"/>
<section begin="ஆழ்ந்த சிந்தனை"/>
{{dhr}}
<b>ஆழ்ந்த சிந்தனை</b>: ஆற்றலால் மனிதன் விலங்குகளிடமிருந்தும் ஏனைய உயிர்களிடமிருந்தும் வேறுபடுகிறான். பல்வேறான நிலைகளில் மனிதன் தன் சிந்தனை ஆற்றலைப் பல்வேறு முறையில் செயற்படுத்துகிறான். உலகிலுள்ள பொருள்களை இனம் கண்டு கொள்ள அறிவு புலன்களுக்கு உதவுகிறது. அப்பொருள்களைப் பற்றி ஆராயும்போது அவனுடைய நுண்ணறிவுத் திறன் உயருகிறது. அதையே அவன் முறைப்படுத்தி, ஆழ்ந்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால், அவனுடைய சிந்தனை ஆற்றுல் சிறந்து விளங்கும். ஆடந்த உயர்ந்த படியில், அவனுடைய சித்தனை ஆற்றல் வளர்ந்து, உலகத்திலுள்ள பொருள்களின் அடிப்படைத் தன்மையை ஆராய்ந்து, தத்துவ விளக்கங்களைக் கொடுக்க முற்படுகிறது. இந்தக் கட்டத்தில் அவன் அறிவு, பொருள்களின் தனித்தன்மையை ஆராய்வதிலிருந்து வேறுபட்டு, உலகத்தில் மனித வாழ்க்கையின் அடிப்படைகளை ஆராய்வதில் ஆழ்ந்து செல்கிறது. இந்த நிலைவில் பிறப்பதே அறிவாகும். மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறான் என்றால், அவன் தனக்கு அளிக்கப்பட்ட தனிப்பெரும் சொத்தான அறிவைத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கருவியாக மட்டும் கொள்ளாமல், அடிப்படை உண்மைகளை அறியும் ஒரு பெரும் ஆற்றலாகவும் போற்றுகிறான். இதையே அறிவு என்றும், மெய்யுணர்வு என்றும் பகுத்தறிவு என்றும் கூறுகிறோம். வெவ்வேறாயினும், இவற்றிற்கெல்லாம் அடிப்படை சிந்தனை ஆற்றலே.
சிந்தனை என்பது என்ன? கண்டதைப் பற்றி மனம்போன போக்கில் சிந்திப்பது சிந்தனை ஆகாது. கண்டதை ஒரு வகைப்படுத்திக் காணாததையும் மனத்தில் கொண்டு, கல்வி, கேள்வி ஞானங்களினால் தெளிந்த அறிவை ஒரு நிலையில் பரவவிடுவதே சிந்தனையின் சிறப்பாகும். இதை ஆழ்ந்த சிந்தனை (Deep Contemplation) என்று சொல்லலாம்.
ஆழ்ந்த சிந்தனை சிந்தைையைச் சுழல விடாமல், எண்ணத்தின் எழுச்சியாக இராமல், வெறும் எண்ணக் குவிப்பாக, அறிவுக் குவிப்பாக இருக்க வேண்டும். விவேகானந்தரைப் போன்றவர்கள் மனித இனத்திற்கு அடிக்கடி இதை நினைவு படுத்துகிறார்கள். குருகுலக் கல்வி முறையில் சிலர் ஆழ்ந்த சாத்திர அறிவு பெற முடிந்தது. சிலருக்குத் தற்காப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் வில், வாள்பயிற்சி அளிக்கப்பட்டது. மற்றும் சிலர் வாழ்க்கைச் சூழ்நிலையைப் பொறுத்துப் பொது அறியு பெற முடிந்தது. எவ்வகைப்பட்ட கல்வியாயினும், மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றலே சிறந்த பங்கு வகித்தது. மனத்தை ஒரு நிலைப்படுத்தி, ஒரு சிறந்த சிக்கலை உடன் மாணவர்களுடனும் ஆசிரியருடனும் அலசி ஆராய்ந்து, முழுமையாக உணர்வதற்குப் பயிற்சி பெறுகிறான். ஆசிரியர் ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பிப்பவராக இல்லாமல், தமது கல்வி அறிவை மாணாக்கருக்குப் பலவகைகளில் தந்து மாணாக்கர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்வார். இக்கல்வி முறையின் சிறப்பு மாணாக்கர் மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கற்றலாகும். இந்தப்-<noinclude></noinclude>
3mwwk7675lmhnxa1ckys9m1avsgsrvw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/694
250
623055
1948076
1860022
2026-06-19T16:19:54Z
Sridevi Jayakumar
15329
1948076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆழ்நிலைத் தியானம்|654|ஆழ்நிலைத் தியானம்}}</noinclude>பயிற்சியினால் எந்தச் சிக்கலையும் தீரக் கவனம் செலுத்தி ஆராய்ந்து முடிவு காண முடிந்தது.
மனிதனுக்குப் பகுத்தறிவு இல்லையெனில் மனத்தை ஒரு முகப்படுத்த இயலாது. ஒரு முகப்படுத்தவில்லையெனில் மனம் தெளியாது; தெளிவில்லா நெஞ்சத்தில் கவலைகளும் கெடுதலான எண்ணங்களுமே தலைதூக்கி நிற்கும். மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு ஏனைய உயிரிகளிடமிருந்து வேறுபடாத நிலையில் வாழ்க்கையைக் கழிப்பான்.
மற்ற உயிர்கள் இயற்கைக்கேற்ப வாழ்க்கையை வகுத்துக்கொண்டு காலம் கழிக்கின்றன. மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, இயற்கையைத் தன் வசதிக்கேற்ப மாற்ற முயல்கிறான். இயற்கையை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. இயற்கை வளத்தை அழிப்பது வேறு: அது எல்லா உயிர்களும் செய்வது, மனிதன் இயற்கையையே மாற்ற முயல்கிறான்.
அதற்கு அவனுக்கு உறுதுணையாக இருப்பன பகுத்தறிவும் (Reason), மனத்திண்மையும் (Determination) மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலும் (Contemplation) ஆகும்.
மனிதனுடைய சிறப்பு, பகுத்தறிவு பெற்றிருத்தல், அதைத் தெளிந்த நிலையில் வைத்து மனத்தை ஒரு முகப்படுத்தி நிலையான வழியை அடைந்த போது, எந்தவொரு கருத்தையும் தெள்ளத் தெளிய ஆராய்ந்து எடுக்கும் முடிவே மனிதனைச் செயலாற்றுபவனாகச் செய்கிறது.
கல்வி என்பது, வெறும் எண்ணக் குவியல் அன்று. மனத்தை நல்ல முறையில் செயற்படுத்தப் பெறும் பயிற்சியே கல்வியாகும். எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. பகுத்தறிவு அவற்றைத் தூண்டுகிறது. மனத்திண்மையும் அறிவின் குவிப்பும் எண்ணச் குழலைத் தனிப்படுத்தி நிலைப்படுத்துகின்றன. ஆகவே மூளை, பகுத்தறிவு, அறிவின் குவிப்பு ஆகிய மூன்றும் இணைந்து இயங்குவதுதான் சிந்தனைச் சக்தி ஆகும்.{{Right|எம்.வெ.}}
<section end="ஆழ்ந்த சிந்தனை"/>
<section begin="ஆழ்நிலைத் தியானம்"/>
{{dhr}}
<b>ஆழ்நிலைத் தியானம்</b>: பண்டைய காலத்திலிருந்தே உடல் நவம், உள்ளத்தெளிவு ஆகியவற்றை முன்னிட்டு மனிதன் பல்வேறு தியான முறைகளைக் கையாண்டு வந்திருக்கிறான், பதஞ்சலியோக சாத்திர முறையை அடிப்படையாகக் கொண்ட யோகாசனப் பயிற்சிகள் இப்பொழுது புகழ்பெற்று வருகின்றன. இந்தியப் பண்டை மறைநூல்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தியான வழிகள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பிராணாயாமம் என்பது முறையாக மூச்சு விடுதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தியான முறையே ஆகும். ஆனால், இக்கால மக்கள் எதையும் தம் முன்னோர்கள் செய்தனர் என்பதால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. பண்டைய தியான முறையாக இருந்தபோதிலும் அது எந்த அளவு மனிதனுக்குப் பலனளிக்கும் என்பதை அறிவியல் வழியாக ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்கின்றனர்.
மகரிசி மகேசு யோகி (Maharshi Mahesh Yogi) என்பவர், சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறி ‘ஆழ்நிலைத் தியானம்’ என்ற யோக முறையை மக்களிடையே பரப்பினார். டி.எம் (T.M.) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிக்கப்படும் ‘ஆழ்நிலைத் தியானம்’, இப்போது மகேசு யோகியின் மாணவர்களாலும் அவர்களிடம் பயின்ற மாணவர்களாலும் உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு தியான முறையாக மட்டுமன்றிப் பல்வேறு உடல் உளப்பிணிகளுக்கு ஒரு மருத்துவ முறையாகவும் பயன்பட்டு வருகிறது.
மனிதன் தன் அகண்ட நனவு நிலையை (Cosmic Conscious State) இத்தியான முறையில் அடைவதால், அவன் தன் உள்ளத்தில் புதைந்து கிடக்கும். ஆனால் வெளிக்கொணர்ந்து பயன்படுத்தாத படைப்பாற்றல்சார் நுண்ணறிவை (Creative Intelligence) உணர்வதே, ஆழ்நிலைத் தியானமுறையின் அடிப்படைத் தத்துவமாகும். ஆழ்நிலைத் தியானம், முறைப்படி ஆசிரியரால் கற்பிக்கப்படுகிறது. தியானம் பழகுவோரின் நம்பிக்கைக்குத் தக்கவாறு மந்திரச் சொல் ஒன்று ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்படும். இது கடவுளின் பெயராகவோ ஒரு நிறம் அல்லது பொருளின் பெயராகவோ இருக்கலாம். பொதுவாகச் சாய்வு இருக்கையில் அமர்ந்து கொண்டே இச்சொல்லை மனத்தளவில் வேண்டும். திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் இச்சொல்லை விடுத்து மற்ற வேண்டாத எண்ணங்கள் தோன்றக் கூடும். அதைப் பொருட்படுத்தாமல் பயிற்சியில் ஈடுபட்டால் தேர்த்தெடுத்த சொல் ஒன்றை மட்டும் கவனத்திற்குக் கொண்டுவர முடியும். பின்பு இக்கவனமும் படிப்படியாக நம் எண்ண அலைகளில் மறையும்போது நாம் மனத்தின் ஆழ்நிலையை நோக்கிப் பயணம் புரியத் தொடங்கி விட்டோம் எனப்புரிந்து கொள்ளலாம். இந்நிலைக்கு மனத்தை வழிபடுத்தச் சிவ மாதங்கள் கூடத் தேலைப்படலாம். குறிப்பாக, முறையான பயிற்சியால் அமைதியான இடத்தில் அமர்ந்த சில நொடிகளிலேயே இந்நிலைக்கு மனத்தைச் செலுத்த ஆயத்தம் செய்து கொண்டோமானால், ஆழ்நிலைத் தியானத்தில் ஓரளவு வெற்றி கண்டுவிட்டதாகக் கொள்ளலாம். காலை மாலை இரு வேளையும் ஏறக்குறைய அரை மணிநேரம் இப்பயிற்சியில் ஈடுபட்டால் நல்ல பயன்பெறுவது திண்ணம். சோர்வின்மை, பயமின்மை, நிம்மதியான தூக்கம், பதற்றமின்மை, தெளிந்த அறிவு, மறதியின்மை ஆகியவை-<noinclude></noinclude>
516zpk6i25ak4awvvqorcx4z4xz3txs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/695
250
623056
1948077
1860053
2026-06-19T16:20:49Z
Sridevi Jayakumar
15329
1948077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|655|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்}}</noinclude>ஆழ்நிலைத் தியானத்தினால் ஏற்படும் பலன்களாகும். மேலும் இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய நோய், தீராத தலைவலி போன்ற பலவகைப் பிணிகளிலிருந்து குணமடைவதும் இம்முறையால் கூடும். சுருங்கக் கூறின், மனிதனின் மன அமைதிக்கு ஆழ்நிலைத் தியான முறை ஒரு சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.{{Right|என்.மா.}}
<section end="ஆழ்நிலைத் தியானம்"/>
<section begin="ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்"/>
{{dhr}}
<b>ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்,</b> தமிழகத்தில் மலர்ந்த பக்தி, இலக்கிய வரலாற்றில் பெற்றுள்ள இடம் குறிப்பிடத் தக்கதாகும்.
நெஞ்சைப் பண்படுத்தும் பண்டைக் காதற்பாடு பொருளும், நினைவை ஊக்குவிக்கும் வீரப்பாடு பொருளும் பின்னர்ப் பக்திப் பாடல்களாக வளர்ந்து மேலோங்கியிருந்த காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீட்டித்த பக்தி இலக்கியக் காலமாகும். இவ்வாறு தோன்றிய பக்திப் பாடல்கள் பெரும்பாலும், சிவபெருமானையும் திருமாலையும் அவர்தம் செயற்கருஞ் செயல்களையும் சீரிய குணங்களையும் பாடுபொருளாகக் கொண்டமைந்தனவாகும்.
தொடக்கக் காலத்தில் சிவபெருமானைப் பற்றி எழுந்த பாடல்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சைவசமயச் சான்றோர் மூவர் பாடியனவாகும். இவை தேவாரம் என்று சிறப்பிக்கப் பெற்றன.
இவ்வாறே திருமாலைப் பற்றி எழுந்த பாடல்களைப் பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளினர். இவை பாசுரங்கள் என்று போற்றப்பெறுகின்றன. ஆழ்வார்கள் பாடியருளின பாசுரங்கள் சிறப்பாகத் தமிழகத்திலும், பொதுவாக இந்தியாவிலும் வைணவத் தத்துவத்தையும், திருமால் பக்தியையும் பாதுகாத்து வளர்ப்பனவாக விளங்குகின்றன.
திருமாலின் திருக்குணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், அவன் பக்திக் கடலிலே அழுந்திக் கிடப்பவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
ஆழ்வார்கள் திருமாலின் உறுப்புகளாகக் கருதப்படுவர். வைணவத் தத்துவப்படி, திருமாலே தலைவனும் காப்பவனும் எல்லாவற்றுக்கும் காரண முதல்வனும் ஆவார். உயிர்க்குரிய உடல் முதலான பொருள்கள் அனைத்தும் தலைவனாகிய திருமாலுக்கே உரியன. ஆனால், ‘நான்’ ‘எனது’ என்னும் உணர்வால் மனிதன், ‘தான் திருமாலுக்கு அடிமை’ என்பதை மறந்து விடுகிறான். அதனால் திருமாலுக்குப் பணி செய்வதாகிய பேரின்பத்தையும் இழந்து விடுகின்றான். இவ்வாறு தன்னை மறந்து, தலைவனையும் மறத்து, தனக்கேயுரிய பேரின்பத்தையும் இழந்து நெறியல்லா நெறியிலே சென்று உழல்கின்ற சீவர்களாகிய மனிதர்களைத் துன்பக் கடலிலிருந்து கரையேற்றுவதற்காகத் திருமால் தாமே பல பிறப்புகளை எடுத்தார். அவற்றினாலும் அனைத்து உயிர்களையும் கரையேற்ற இயவவில்லை. அதனால், மானைக் காட்டி மானைப் பிடிப்பவர்போல, மனிதர்களைக் காட்டி மனிதர்களைத் தடுத்தாட்கொள்ள அவர் பேரருள் கொண்டார். அதன் பயனாகத் தம் உறுப்புகளாகிய சங்கு, சக்கரம் முதலியவற்றை மண்ணுலகில் தோற்றுவித்தார். அத்தோற்றங்களே ஆழ்வார்கள். திருமாலின் நற்குண, நற்செய்கைகளை எல்லாம் அவர்கள் துய்த்து அவ்வாறு தாம் துய்த்த இன்பத்தை உலகெலாம் பெறுமாறு செய்தனர்.
ஆழ்வார்கள் பல சாதியினர்; பல குலத்தவர்; பல தொழிலினர்; பல்வேறு காலத்தவர்; பலவகையான வாழ்க்கையினர்; ஆனால், ஒரே குறிக்கோளினர்.
ஆழ்வார்கள் பன்னிருவராவர். எனினும், பதின்மர் என்னும் கருத்தும் உள்ளது. தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய், அடியனாய் அமைந்து, அவரையே பாடிய மதுரகவியையும், புதுவையர் கோன் விட்டு சித்தன் மகளாராகிய ஆண்டாளையும் விடுத்து மற்றையோரை ஆழ்வார் பதின்மர் என்று கூறும் மரபும் உள்ளது.
காலக் கண் கொண்டு கருதி ஆழ்வார்களைம் பின்வரும் வரிசையில் தொகுத்தும் வகுத்தும் கூறுவர். அவர்கள் முதலாழ்வார் மூவர், திருமழிசை யாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மதுரகவி ஆகியோராவர்.
<b>முதலாழ்வார்கள்</b>: பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முதலாழ்வார் ஆவர். இவர்கள் மற்ற ஆழ்வார்களுக்குக் காலத்தால் முந்தியவர்கள்; கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். அன்றியும் காஞ்சி, மாமல்லபுரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் முறையே தோன்றியவர்கள் ஆழ்வார்கள் வரலாறு கூறும் குருபரம்பரை, இவர்கள் மூவரும் திருக்கோவலூயில் சந்தித்து, ஒரே நேரத்தில் திருமாலைக் கண்டு தொழுத திறத்தைப் பத்திச் சுவை சொட்டச்சொட்ட எடுத்துக்கூறும். இவர்கள் காலம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. என்றாலும், மாமல்லையைப் பற்றிய குறிப்புகள் பூதத்தாழ்வார் பாடலில் (பாசுரம். 70) வருதலால் இவர்காலம் மாமல்லை அல்லது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) தோன்றியதற்குப் பின்னரே ஆதல் வேண்டும். மாமல்லபுரம், பல்லை வேந்தன் முதலாம் நரசிம்ம-<noinclude></noinclude>
1dajtuk6d29mg1nwp3f7vezzmisqjw3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702
250
623099
1948078
1860474
2026-06-19T16:22:16Z
Sridevi Jayakumar
15329
1948078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆழ்வார் திருநகரி|662|ஆழ்வார் திருநகரி}}</noinclude>தத்துவ விளக்கங்களாகவும், இறை அனுபவ வெளியீடுகளாகவும், தமிழ் இலக்கிய நலங்களை எடுத்துக்காட்டுவனவாகவும் அமைந்து இலங்குகின்றன.{{Right|பொன்.சௌ.}}
<section end="ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்"/>
<section begin="ஆழ்வார் திருநகரி"/>
{{dhr}}
<b>ஆழ்வார் திருநகரி</b> திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர்ச் சாலையில், நெல்லையிலிருந்து சாலை வழியாக 31 கி.மீ. தூரத்திலும், இருப்புப்பாதை வழியாக 33 கி.மீ தூரத்தினும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைத்துள்ளது. மக்கள் தொகை 12,000. மக்களுள் பெரும் பகுதியினர் வேளாண்மை அல்லது அதனுடன் தொடர்புடைய தொழிலை மேற்கொண்டவர்கள். சிலர் ஊதுபத்தி செய்தல், தீப்பெட்டித் தொழில், பாய் முடைதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். ஆண் பெண் இருபாலாரும் சேர்ந்து பயிலும் ஒரு மேல்நிலைப்பள்ளியும், மூன்று நடுநிலைப்பள்ளிகளும், நான்கு தொடக்க நிலைப்பள்ளிகளும் உள்ளன.
குருகூர் அல்லது குருகை எனவும், ஆதிபுரி எனவும் வழங்கப்பட்டு வந்த இவ்வூரின் பெயர், பன்னிரு ஆழ்வார்களுள் தலைமை சான்றவரான நம்மாழ்வார் (காண்க - நம்மாழ்வார்) தோன்றிப் புகழ் பரப்பிய பின்னர், ஆழ்வார் திருநகரி என வழங்கலாயிற்று.
நான்கு மாடவீதிகளும் நான்கு இரத வீதிகளும் மாசித் தெரு, சித்திரைத் தெரு ஆகிய தெருக்களும் கொண்ட இவ்வூரில், திருமலைநாயக்கர் மண்டபம், திருக்குறுங்குடி மண்டபம் உட்பட்ட பல மண்டபங்களும், கோவிந்தப்ப நாயக்கன் சத்திரம் முதலிய பல சத்திரங்களும் அமைந்துள்ளன. தாமிரபரணியில் சங்கணித்துறை புனிதத்துறையாகக் கருதப்படுகிறது. ஊர் சீர்கேடுற்றிருந்த இடைக்காலத்தில் திரு வாய்மொழிப்பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி ஊரைச் சீர்திருத்தி, இராமாநுசருக்கு ஒரு திருக்கோயில் அமைத்து, அப்பகுதிக்கு இராமாநுச சதுர் வேதிமங்கலம் எனப் பெயர் சூட்டி விளங்கச் செய்தார். ஆழ்வார் கோயிலைச் சூழ உள்ள இடம் பராங்குச் சதுர்வேதிமங்கலம் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது. குருகூரைச் சுற்றி 8.கி.மீ. சுற்றளவுள்ள இடம், திருவழுதி வளநாடு என்றும் பெயச் பெற்றிருந்தது. தாந்தன், சங்கன் ஆகியோருக்கு இவ்வூரில் முத்தியளிக்கப்பட்டதாகத் தலபுராணம் உரைக்கிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் பிறப்புத் தலமாகிய திருக்கோளூர் இவ்வூரின் அருகில் உள்ளது.
தென்னகத்தின் வைணவ வரலாற்றில் ஆழ்வார் திருநகரி மிகவும் சிறப்பான இடம் பெறத்தக்கது. இவ்வூரில் அமைந்துள்ள ஆதிநாதப் பெருமாள் கோயில், நெல்லை, மாவட்டத்திலுள்ள பெருங் கோயில்களுள் ஒன்றாகும். இதன் பரப்பளவு 8.5 எக்டேர். இது மூன்று திருச்சுற்றுகளையும் ஆதிநாதர், நம்மாழ்வார், ஆதிநாச்சியார், குருகூர் நாச்சியார், ஞானப்பிரான், திருவேங்கடத்தான், இலட்சுமி நரசிம்மர், இராமர், சேனைமுதலிகள் ஆகியோரின் சந்நிதிகளையும் கொண்டு விளங்குகிறது.
கோயிலின் உள்ளே ஏழு பெரிய பகுதிகளாக அமைந்துள்ள உறங்காப்புளி என்று சிறப்பிக்கப்படும் மரத்தின் அடியில் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்து தம் தெய்விகப் பாசுரங்களை இயற்றினார் என்பர். இதன் அடியில் இப்பொழுதைய நம்வாழ்வார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இம்மரம் பூத்தல் காய்த்தலோடு நின்று விடுகிறது. காய்கள் பெருத்துப் பழுப்பதில்லை. இலை இரவில் உறங்குவதில்லை. இம்மரம் ஆதிசேடனின் அவதாரமாகக் கருதப்படுகிறது.
கோயிலில் நம்மாழ்வார் சந்நிதி, பெருமான் சந்திதி, திருமாமணி மண்டபம், கண்ணாடி மண்டபம் ஆகியவை சிறந்த சிற்பத் திறத்தோடு அமைக்கப் பெற்றுள்ளன. பெருமாள் கோயிலின் முன் உள்ள மூன்று மாடங்களைக் கொண்ட கோபுரத்தில், மரத்தாலாகிய தூண், யாளி, சாளரம், சிங்கப் போதிகை, உத்திரம், மேற்கட்டு ஆகியவை துட்பமான வேலைத்திறனுடன் விளங்குகின்றன. கோயிலின் விமானம் கோவிந்த விமானம் எனச் சிறப்பிக்கப்படும்.
கோயிலில் மிகவும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த கல் நாதசுரம் ஒன்று உள்ளது. தட்டினால் இசை எழுப்பும் இசைத்தூண்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
கோவிலுக்குச் சொந்தமான 4 தேர்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று நம்மாழ்வார் உலாவரும் வெள்ளித்தேர் ஆகும்.
இராமாநுசர், மணவாளமுனிகன், பட்சிராசன், தேசிகர், அழகர், ஆண்டான், கூரத்தாழ்வார், உய்யக் கொண்டார், பெரியநம்பி பிள்ளை லோகாசாரியார், நம்பிள்ளை, திருக்கச்சிநம்பி ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகள் ஊரின் மற்றைய பகுதிகளில் அமைந்துள்ளன.
இவ்வூரில் மாதம் தோறும் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, மார்கழி மாதத் திருவிழாக்கள் சிறப்புடையன. வைகாசி மாதத்தில் 5-ஆம் திருநாளில் இவ்வூரைச் சூழ்ந்துள்ள ஒன்பது வைணவத் திருப்பதிகளிலிருந்தும் பெருமாள்கள் இவ்வூருக்கு எழுந்தருளிக் கருடசேவை அளிக்கிறார்கள். மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் அத்தியயனத் திருவிழா மிகவும் சிறப்பானது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இவ்விழாக் காலத்தில் ஓதப்பெறும். இராப்பத்துத் திருவிழாவில் திருவாய்மொழிக்கு<noinclude></noinclude>
sfxfb8fwjmolukcttv5v16d91j0cyl9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/703
250
623101
1948133
1860536
2026-06-20T05:09:44Z
Sridevi Jayakumar
15329
1948133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆழ்வார் திருநகரி|663|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை}}</noinclude>இயல், இசை, நாடகப்பாங்குடன் உரை கூறிப்பாடி ஆடி விளக்கும் அரையர் சேவை காணத்தக்கது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அரையர் சேவை நிகழ்த்திவரும் பழமையான குடும்பங்களில் ஒன்றே எஞ்சியிருந்து, இவ்வரிய மரபைக் காத்து வருகிறது. காண்க: அரையர் சேவை.
நம்மாழ்வாரின் தோற்றத்தால் சிறப்புப் பெறும் இவ்வூர், பிற்காலத்தில் தென்னக வைணவம் சிறப்புறப் பலதிறத் தொண்டாற்றிய மணவாளமாமுனிகள் தோன்றிய சிறப்பும் பெற்றது. தொடர்ந்து வைணவ சமயப் பெரியார்கள் இத்தலத்தில் எழுந்தருளிச் சமயத் தொண்டாற்றியும் நூல்களும் உரைகளும் இயற்றியும் வந்துள்ளனர். இடைக்காலத்தில் வழக்கின்றி (அனுசந்தானம்) யிருந்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை, வீரநாராயணபுரத்திலிருந்து நாதமுனிகள் இவ்வூருக்கு எழுந்தருளி, நம்மாழ்வார் வாயிலாகப் பாட்டோலை கொண்டு வெளிப்படுத்தினர்.
இதலாமியர் ஆட்சிக் காலத்தில் கோயில் சிதைவடைந்தது; நம்மாழ்வார் திருமேனி அப்புறப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் திருவாய்மொழிப் பிள்ளையும், தோழப்பரும் நம்மாழ்வாரின் திருமேனியைக் கேரளப் பகுதியிலிருந்து மீளக் கொணர்ந்து, காடுமூடிக்கிடந்த கோயிலின் இருப்பிடத்தையும் கண்டுதெளிந்து, புதுப்பித்து, நம்மாழ்வாருக்கும் ஆதிநாதப்பிரானுக்கும் மீண்டும் சந்நிதிகள் அமைத்து நித்திய வழிபாடும் விழாக்களும் எடுத்தனர்.
ருருகைமான்மியம், குருகூர்வரி, குருகூர்ப்பள்ளு மாறன் பலனிக் குறம், நம்மாழ்வார் தாலாட்டு என்னும் தமிழ் நூல்கள் இவ்வூரின், சிறப்பை எடுத்தியம்புவன. சடகோபர் அந்தாதி, மாறன் அலங்காரம், நம்மாழ்வார் திருத்தாலாட்டு என்பன நம்மாழ்வாரின் சிறப்புகளைக் கொண்டன.
தாமிரபரணியின் வடகரையில் காந்தீசுவரம் என்னும் சைவத் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏகாந்தலிங்கம், அறம் வளர்த்த நாயகி ஆகியோருக்கு இங்குக் கோயில்கள் உள்ளன. இத்தலத்தில் கருவூர்ச் சித்தர் வழிபாடு செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இவ்வூரில் கிறித்தவக் கோயில் ஒன்றும் இரண்டு மசூதிகளும் அமைந்துள்ளன.
இரும்புக்காலப் புதை பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரின் அண்மையில் உள்ள ஆதிபுரி எனப் பெயர்பெற்றுத் தொன்மைக்காலம் தொட்டு விளங்கியதாகப் புராணங்கள் கூறும் இவ்வூரும் இதன் சுற்றுப்புறங்களும், மேலும் ஆராயப்பட்டால் வரலாற்றுச் செய்திகள் பல புலனாகும்.
<section end="ஆழ்வார் திருநகரி"/>
<section begin="ஆழ்வாரப்பப் பிள்ளை"/>
{{dhr}}
<b>ஆழ்வாரப்பப் பிள்ளை</b> திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் அரசாங்க வருவாய்த் துறையில் அதிகாரியாக அலுவல் பார்த்தவர், சிறந்த சைவ சித்தாந்தி, இவர் முருகதாச சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். இவரது காலம் கி.பி. 1839-ஆம் ஆண்டிற்கும் 1924-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாகும். இவர் வள்ளியூர்த் தலபுராணம், வள்ளியூர்க் காவடி வைபவம், கிருகத்தர்மம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பல கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். வள்ளியூரைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதியுள்ளமையால், இவரது ஊர் வள்ளியூராக இருத்தல் கூடும்.{{Right|வி.பா.}}
<section end="ஆழ்வாரப்பப் பிள்ளை"/>
<section begin="ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை"/>
{{dhr}}
<b>ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை</b> என்பது நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்குண்டான பதிவுகள் (Entries) முதலில் துணையேடுகளில் பதிவு செய்யப்பட்ட பின்னர், அதற்குரிய பேரெடுகளில் எழுதப்படுவது. ஆள் சாராப் பேரேடுகளில் (Impersonal Ledgers) வணிகத்தைப் பற்றிய கணக்குகள் இடம் பெறுகின்றன. இந்தக் கணக்குகள் பெயரளவுக் கணக்குகளாக அல்லது சொத்துக் (Assets) கணக்குகளாக இருக்கலாம். ஆதாயம், இழப்புகள், வரவு-செலவு இனங்களைச் சார்ந்தவற்றைப் பெயரளவுக் கணக்கு (Nominal), என்றும் சொத்துகளைச் சார்ந்தவற்றைச் சொத்துக் கணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆள் சாராப் பேரேடுகள் பொதுப் பேரேடு (General Ledger), என்றும் பெயரளவுப் பேரேடு (Nominal Ledger) என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் பேரேட்டில் காணப்படும் கணக்குகளைக் கொண்டுதான், நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்குகளும், இருப்பு நிலைக் குறிப்பும் (Balance Sheet) தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பேரேட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அது ஆதாய இழப்புக் கணக்கையும் இருப்பு நிலைக் குறிப்பையும் தவறுடையனவாகச் செய்யும்.
தீய எண்ணம் கொண்டவர்கள், ஆள் சார் கணக்குகளைத் திருத்தி எழுதி, அதற்குச் சமமான புனைவுப் பதிவுகளை ஆள்சாராக் கணக்குகளிலும் எழுதிவிடுவர். ஆகையால், தணிக்கையாளர்கள் (Auditors) ஆள்சாராப் பேரேட்டை மிகவும் கவனமாகச் சீர்தூக்க வேண்டும். இப்பதிவேட்டைத் தணிக்கையர், சான்றாய்வு (Certify) செய்யும்போது சில முக்கிய செய்திகளைக் கவனிக்க வேண்டும். துணை ஏடுகளிலிருந்து இந்தப் பேரேட்டிற்கு எடுத்தெழுதியுள்ள பதிவுகளை நன்கு ஆராய வேண்டும். கைவசப் பண ஏட்டிலிருந்து (Cash Book) பதிவுகள் பல, ஆள் சாராக் கணக்குக்கு எடுத்து எழுதப்பட்டிருக்கும். அவற்றுக்குண்டான ஆதாரச் சீட்டை<noinclude></noinclude>
92ayo5vmfgpgsdgis02oetveilvhmf8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/706
250
623105
1948135
1860568
2026-06-20T05:10:54Z
Sridevi Jayakumar
15329
1948135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|666|ஆள்நிலம்}}</noinclude>மூலதனச் செலவாகவோ இருக்கலாம். கோட்பாடுகளின் அடிப்படையில், செலவுகள் மூலதனச் செலவாகவும் நடைமுறைச் செலவாகவும் பிரிக்கப்படுகின்றன. பின்வரும் செலவுகள், மூலதனச் செலவாகக் கருதப்படுகின்றன. பொருள் உற்பத்திக்குத் துணை செய்யும் நோக்கத்துடன் வாங்கப்பட்ட புதிய சொத்தின் செலவுகள், தொழிலின் பொருளீட்டும் திறனை மிகுதிப்படுத்தல், மதிப்புள்ள உரிமையைப் பெறுதல், சொத்துகளின் ஆயுட்காலத்தை நீடிக்கும் வகையில் செய்யப்படும் செலவுகள், நிலையான சொத்துகளை விரிவு படுத்தக் கூடுதல் சொத்துகளைச் சேர்ப்பதற்காகும் செலவு ஆகியவை மூலதனச் செலவாகும். வாணிகத்தின் நற்பெயரின் பொருட்டு ஆகும். செலவும், காப்புரிமை, பதிப்புரிமை முதலியவற்றின் செலவும் மூலதனச் செலவில் அடங்கும். நிலையான சொத்துகள் வாங்குவதில் ஏற்பட்ட சட்டச் செலவுகள். முத்திரை வரி, கூலி, சுமைக்கூலி முதலியனவும் மூலதனச் செலவாகக் கருதப்படும். பொதுவாகப் பல ஆண்டுகளுக்குப் பயன் தரக்கூடிய செலவுகள் மூலதனச் செலவாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து எழும் தன்மையுள்ளதாகவும் நிறுவனத்தின் அன்றாடத் தொழில் நிகழத் தேவைப்படுவதாகவும் உள்ள செலவுகள், நிலையான சொத்துகளைப் பாதுகாத்தற்காரும் செலவுகள், நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திறனைக் காக்க ஏற்படும் செலவுகள் முதலியன நடைமுறைச் செலவாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கட்டடத்திற்கு வெள்ளையடித்தல், பழுதுபார்த்தற் செலவுகள், வாடகை, ஊதியம், கூலி செலவுகள், கழிவு, பயணச் செலவு, தள்ளுபடி போன்ற செலவுகள், சொந்தப் பயன்பாட்டிற்கு அல்லாமல் விற்பனைக்கென்றே வாங்கப்படும் பொருள்களின் செலவுகள் ஆகியவை நடைமுறைச் செலவுகளாகக் கொள்ளப்படும். ஒரு பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டினால் பெருஞ் செலவு ஏற்படும். புதிய கட்டிடத்திம் மதிப்புப் பழைய கட்டிடத்தின் மதிப்பை விட எவ்வளவு மிகுதியாக உள்ளது எனக் கணக்கிட்டு, அதனை மட்டும் மூலதனச் செலவாகக் கொண்டு எஞ்சியதை நடைமுறைச் செலவாகக் கணக்கிட வேண்டும். நடைமுறைச் செலவுகள் அனைத்தும் ஆதாய இழப்புக் தனச் கணக்கில் காட்ட வேண்டும். மூலதனச் செலவுகள் அனைத்தும் இருப்பு நிலைக் குறிப்பில் காட்டப்படும். இவற்றில் தவறு ஏற்பட்டால், ஆதாய இழப்புக் கணக்கும் இருப்பு நிலைக் குறிப்பும் பாதிக்கப்படும். நடைமுறை வரவுகள் ஆதாய இழப்புக் கணக்கிலும், மூலதன வரவுகள் இருப்பு நிலைச் குறிப்பிலும் காட்டப்படும். மூலதனச் செலவு, நடைமுறைச் செலவாகக் காட்டப்பட்டால், ஆதாயம் குறைந்து போகும். நடைமுறைச் செலவு மூலதனச் செலவாகக் காட்டப்பட்டால், ஆதாயம் மிகுதியாக இருக்கும். இவ்வகை வசைகேடுகள், வருமானவரி, பங்காதாயம் வழங்குதல் முதலியவைகளுக்கு இடையூறு விளைவிக்கும். பெரிய செலவுகள் மூலதனச் செலவு என்றும், சிறிய செலவுகள் நடைமுறைச் செலவு என்றும் ஒருபோதும் எண்ணி விடக்கூடாது. நிறுவனத்தின் செலவுகள் நடைமுறைச் செலவு, மூலதனச் செலவு என்று முறையான வகையில் பாகுபாடு செய்யப்பட்டிருக்கின்றன. என்று பொறுப்பு வாய்ந்த அலுவலர் ஒருவர் சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்தச் சான்றிதழினைத் தணிக்கையர் ஏற்றுக்கொண்டு, அந்த விவரத்தைத் தமது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். {{Right|பி.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ghatalia, S.V.,</b> Spicer and Pegler's Practical Auditing, Allied Publishers Private Ltd., New Delhi, 1965.<br>
<b>Tandon, B.N.,</b> A Hand Book of Practical Auditing, s. Chand & Company, New Delhi, 1970.<br>
<section end="ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை"/>
<section begin="ஆள் நிலம்"/>
{{dhr}}
<b>ஆள் நிலம்</b> என்பது ஆளப்படும் நிலம் எப்பகுதி வரை பரவியுள்ளதோ அதனைக் குறிக்கும். இது ஒரு நாட்டின் சிறப்பு உறுப்புகளுள் ஒன்றாகும். தனக்கென்று ஒரு நிலப்பரப்பு இன்றி ஒரு நாடு இயங்க இயலாது, நாடோடிக் கூட்டம் ஓர் இடத்தில் நிலைத்து வாழ்த்து வரும் வரை அக்கூட்டத்தை நாடற்றதாகவே கருதுகின்றனர்.
ஆள்நிலம் (Territory) முதலாவதாக, அதன் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பையும், இரண்டாவதாக, உள்நாட்டு நீர்ப்பரப்புகளையும்ன் (குளம், ஆறு, வாய்க்கால் முதலியன), மூன்றாவதாக, கரையோரக் கடலையும் கொண்டதே ஆகும்.
நாட்டின் ஆள்நிலப்பரப்பினை அதன் எல்லைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அவை ஒரு நாட்டினைப் பிற நாட்டினின்றும் பிரித்துக் காட்டுகின்றன. எல்லைகள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அமையலாம். ஆறுகளும் மலைகளும் கடல்களும் ஒருநாட்டின் இயற்கை எல்லைகளாகும். செயற்கை எல்லைகள் சுவர், எல்லைக்கல் முதலியனவாம். ஆறுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை 1. தேசிய ஆறுகள் (National Rivers), 2. எல்லை ஆறுகள் (Boundary Rivers), 3. நாட்டிடை அல்லாத ஆறுகள் (Non-National Rivers), 4. பன்னாட்டு ஆறுகள் (International Rivers) எனப்படும்.<noinclude></noinclude>
51k3pp0b7f9qjrmx5iw5b5ra1gwg2ba
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/710
250
623109
1948136
1860592
2026-06-20T05:13:12Z
Sridevi Jayakumar
15329
1948136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆள் நிலம்|670|ஆள்வலத் தேவைக் கல்வி}}</noinclude>சேர்த்தல் (Adjudication) என்று குறிப்பிடலாம். இது கொடுத்தல் முறையில் நிலம் பெற்றதாகக் கருதப்படும்.
ஒரு நாடு தனது நிலப்பரப்பில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்குக் குத்தகைக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு விடலாம். அந்தக் காலம்வரை அந்நிலம் குத்தகைக்கு எடுத்த நாட்டின் நிலமாகக் கருதப்படும். இவ்வாறு குறிப்பிட்ட காலம்வரை நிலப்பரப்பைச் சேர்க்கும் முறையைக் குத்தகை முறையால் (Lease) நிலம் சேர்த்தல் என்று குறிப்பிடலாம்.
ஆள் நிலம் இழத்தல் கொடுத்தல் (Cession), இயற்கையின் விளைவுகள் (Operation of Nature), தோல்வி இழப்பும் அனுபோசு இழப்பும் (Subjugation and Prescription), கைவிடல் (Dereliction), கிளர்ச்சி (Revolt) என்று ஐந்து வகைப்படும்.
<b>அனுபோக வசதித்தடை</b>: ஒரு நாடு பயனடையும் படியாக மற்றொரு நாட்டின் ஆள்நிலத்தின்மேல் கட்டுப்பாடுகள் விதித்து, அதற்கேற்ப அதன் ஆள்நில ஆதிக்கத்தை (Territorial Jurisdiction) உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தும் சிறப்புக் கட்டுப்பாட்டை அணுபோக வசதித்தடை (Servitude) எனலாம்.
அல்சேசு (Alsace) மாகாணத்திலிருக்கும் கியூனின்சன் (Huiningen) என்னும் எல்லை நகரத்தில், சுவிட்சர்லாந்தின் பகுதியாகிய பாசில் (Basle) நாட்டின் பாதுகாப்புக்காகக் கோட்டை கொத்தளங்கள் என்றுமே எழுப்பப்படுதல் கூடாது என்று உடன்படிக்கை மூலம் ஒத்துக்கொண்டிருப்பது, பன்னாட்டு அனுபோக வசதித்தடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்த உரிமை, நிலத்தோடு கூடிய நிலைத்த உரிமையாதலாலும், உலகறிந்தது ஆதலாலும், இந்த ஆள் நிலங்கள் கைமாறினாலும், அவற்றின் மேலுள்ள அனுபோக வசதித்தடை அற்றுப் போகாது.
அனுபோக வசதித்தடைக் கோட்பாடு, உரோமானிய உள்நாட்டுச் சட்டத்திலிருந்து எடுத்துப் பன்னாட்டுச் சட்ட நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பன்னாட்டு அரங்கில் இது வெற்றி பெறவில்லை என்று அறிஞர் கூறுகின்றனர். இதனையே இசுடார்க்கு (Starke) என்னும் மேல்நாட்டு அறிஞர். ஒரு நாட்டு எல்லைக்குள் மற்றொரு நாட்டுக்குக் கொடுக்கப்படும் ஆள்நில வசதி நலன் (Territorial Facilities) என்று கூறுகிறார்.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Starke, J.G.,</b> Introduction to International Law, Ed., 8, Butterworths, London, 1977.<br>
<b>பழனிசாமி.அ.,</b> சர்வதேசச் சட்டம், பதி, 3. சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979.
<section end="ஆள் நிலம்"/>
<section begin="ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்"/>
{{dhr}}
<b>ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்</b> என்பது ஒருவர் மற்றொருவராக நடிப்பது; ஒருவரை மற்றொருவருக்குப் பதிலாக்குவது; தன்னை அல்லது மற்றொருவரை மாற்றி வேறொருவர் என்று தெரிவிப்பது ஆகிய இம்மூன்று வழிகளில் ஒன்றினைக் கையாண்டு அடுத்தவரை ஏமாற்றுதல் (Cheating by Personation) ஆகும். இது ஒரு குற்றம் (Crime) என்று இந்தியத் தண்டனைச் சட்டம் கூறுகிறது.
ஏமாற்றுவதற்குப் பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. அவற்றுள் ஆள் மாறாட்டமும் ஒன்று, ஆள்மாறாட்டம் என்றால் உருமாறி வேடம் போட வேண்டும் என்பதில்லை. தம் நடத்தையால், ஒருவர் மற்றொருவராக தடிப்பதே ஏமாற்றுவதாகும்.
ஒருவர் பெயரில் உள்ள பயணச் சீட்டினை மற்றொருவர் வைத்துக் கொண்டு பயணம் செய்தல். தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவருக்குப் பதிலாக மற்றொரு மாணவர் தேர்வு எழுதுதல், காவலர் அல்லாத ஒருவர், தாம் காவல் துறையினைச் சார்ந்தவர் என்று கூறிப் பிறரை ஏமாற்றுதல் ஆகியவை, ஏமாற்றுதல் என்னும் குற்றத்தைச் சார்ந்தன ஆகும்.
ஆகவே, ஆள்மாறாட்டம் செய்வது சொல்லாலோ செயலாலோ நடத்தையாலோ இருக்கலாம்.
ஒருவர் இன்னொருவராக ஆள்மாறாட்டம் செய்வது என்றால், அந்த இன்னொருவர். உண்மையான ஆளாக (Person) இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயிருள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவர் கற்பனைப் பெயரினராகவும் இருக்கலாம். இறந்துபோன ஒருவராக நடித்து ஏமாற்றுவதும் குற்றமே.
ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுபவருக்கு இந்தியத் தண்டனைச் சட்டப்படி மூன்றாண்டுக் காலம்வரை சிறை, ஒறுப்புத் தொகை ஆகியவை தண்டனைகளாகும்.
<section end="ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்"/>
<section begin="ஆள்வலத் தேவைக் கல்வி"/>
{{dhr}}
<b>ஆள்வலத் தேவைக் கல்வி</b>: பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி ஒரு தலைசிறந்த காரணி-<noinclude></noinclude>
l9pivpyoj62k8zohcrmu41aloetskjh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/713
250
623146
1948137
1861046
2026-06-20T05:31:47Z
Sridevi Jayakumar
15329
1948137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆள்வார்|673|ஆளத்தி}}</noinclude>பயக்கவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கவும் கல்வித் திட்டங்கள், ஆள்வலத் தேவை பற்றிய மதிப்பீடுகனைக் கருத்திற் கொண்டு வரையப்பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், கல்வியில் செய்யப்படும் முதலீடு, ஆள்வலத் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
“திறமை உள்ளவர் பற்றாக்குறை, வளர்ச்சியைத் தடை செய்கிறது” என்ற ஆதம் கர்லியின் (Adam Curlie) கூற்று கல்வியும் ஆள்வவத் தேவையும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செல்ல வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது.{{Right|ஆர்.சீ.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Education and National Development</b> - Report of Education Commission, 1966.<br>
<b>John Vaizcy,</b> The Economics of Education, Macmillan, London, 1973.<br>
<b>Mark Blaug,</b> An Introduction to the Economics of Education, Penguin Book, 1976.<br>
<b>Alex A.V.,</b> Human Capital Approach to Economic Development, Metropolitan, New Delhi, 1983.<br>
<b>Adam Curlie,</b> Educational Strategies for Developing Societies, TAVI Stock Publications Ltd., London, 1970.
<section end="ஆள்வலத் தேவைக் கல்வி"/>
<section begin="ஆள்வார்"/>
{{dhr}}
<b>ஆள்வார்</b> இராசபுதனத்தில் இருக்கும் ஒரு பழமையான ஊர். இவ்வூரை ஆம்பர்நாட்டு கசகவாகாக் குடும்பத்தைச் சார்ந்த அலதுராயர் என்பவர் ஏற்படுத்தினார். பெரிசுடா (Ferishta) என்னும் இசுலாமியப் பயணி இந்நகரைப் பற்றித் தமது நூல் குறிப்பிட்டுள்ளார். ஆள்வார் இராசபுத்திராகளுக்கும், ஆசுமீர் இராசபுத்திரர்களுக்கும் இடையே போராட்டம் கி.பி. 1195-ஆம் ஆண்டு நடந்தது என்று பெரிசுடா குறிப்பிட்டுள்ளார். இவ்வூர்ப் பல்வேறு அரச மரபுகளின் ஆளுகைக்குட்பட்ட வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலமும் ஏனைய சான்றுகளின் மூலமும் அறியலாம்.
பகாதுர நாகரா என்னும் பெயர்கொண்ட இராசபுத்திரர் ஒருவர் இப்பகுதியின் ஆளுநராக இருந்தார். இவர் சமயம் மாறித் தில்லிச் சுல்தான் பிரோசா துக்ளக்கின் நன்மதிப்பைப் பெற்றார். பாபரின் காலத்தில், ஆள்வார் கோட்டை பாபரின் படை அதிகாரி பாதிகான் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாபரும் இவ்வூரில் தங்கி இருந்திருக்கிறார். அக்பர் பதேப்பூர் சிக்கிக்குச் செல்லும்பொழுது ஆள்வாரினைப் பார்வையிட்டுப் பின்னர் பதேப்பூர் சிக்கிரிக்குச் சென்றார். அவருடன் வரலாற்று ஆசிரியர், பதோனியும் இந்தகருக்கு வருகை புரிந்தார். அப்போது ஆள்வார், இசுலாமிய சமய குரு சேக்முபாரக்கு மெளலானா என்பவரின் உறைவிடமாக இருந்து வந்தது. இவரை அக்பர் சந்தித்ததாகத் தெரிகிறது. ‘அயினி அக்பரி’ என்னும் நூல், மேவாரின் மூன்று பகுதிகளில் ஆள்வார் ஒரு பகுதி என்றும், ஆள்வார் மேலும் நாற்பத்துமூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது என்றும் கூறுகிறது. இந்நகருக்கு அருகில் அழகு மிக்க வரலாற்றுச் சின்னம் உள்ளது. இதன் பெயர் மோதி தூங்காரி அல்லது பான்னிபிளாசர என்பதாகும். இங்குப் பல கோயில்களும் மசூதிகளும் கல்லறைகளும் சமண மடாலயங்களும் உள்ளன.
<section end="ஆள்வார்"/>
<section begin="ஆளத்தி"/>
{{dhr}}
<b>ஆளத்தி</b> என்பது ஆலாபனையைக் குறிக்கும். அகளித்துப்பாடுவது - ஆளத்தி, ஒரு பண்ணுக்குரிய கோவைகளைப் (சுரங்களைப்) பல்வேறு வகை வகையாகப் பின்னிப் பின்னிப் பிணைந்து மெலிவு, சமன், வலிவு ஆகிய சுரத்தான நிலைகளிலும் (3 தாயிகளிலும்) நிரவிச் சுவை தோன்றப் பாடுவதே ஆளத்தியாகும்.
ஆளத்தி பாடுதற்குப் பதினோரு வகை இலக்கணங்களைச் சிலப்பதிகார அரும்பத உரை கூறுகிறது. ‘இசைப்புலவன், ஆளத்தி வைத்த பண்ணீர்மையை, முதலும் முறையும் முடிவும் நிறைவும் குறைவும், கிழமையும், வலிவும் மெலிவும் சமனும் வரையறையும், நீர்மையும் என்னும் பதினோரு பாகுபாட்டினாலும் அறிந்து, அவை தாளநிலையில் எய்த வைத்த திறம் தன் கவியினிடத்தே தோன்ற வைக்க வல்லன்’ என்பது உரைச்செய்தி (சிலப் 3:41-2 அரும்பதவுரை)
பண் பகுதியில் முதலில் தொடுக்கப்படும் சுரமும், அச்சுரத்தைச் சுற்றிச் சுரக்கோப்பு அமைப்பதும் ‘முதல்’ அல்லது தொடக்கம் எனப்படும்.
பண்ணை வளர்த்துப்பாடும் முறைமைகள்: நாலன் நடை, மூன்றன் நடை, ஐந்தன் நடை, ஏழன் நடை முதலிய நடைகளில் (சதுகரம், திசுரம், கண்டம், மிசிரம்) சுரங்களை அடுக்கிக் கோத்து வளர்ப்பது முறைமை எனப்படும். இதில் சுர அணி அடுக்குகளும், இரட்டை அடுக்குகளும், தாண்டு அடுக்குகளும் இடம்பெறும்.
மேற்காட்டிய நடைகளைக் கோக்குங்கால், ஒவ்வொரு நடைப்பகுதிக்கும் ஈற்றில் ஒரு முடிவு காட்டுவதே ‘முடிவு’ எனப்படும். அடுத்த பகுதிக்குச் செல்லப் போவதையும் இம் ‘முடிவு’ என்பது காட்டுகிறது.
ஒவ்வொரு பண்ணிலும் நீண்டு ஒலித்தற்குரிய சுரங்கள் உண்டு. அவற்றை மரபாக நீள ஒலித்து நின்று நிறைப்பது நிறைவு எனப்படும். இது இன்று பருத்துவம் எனப்படும்.{{nop}}<noinclude></noinclude>
ry3wp1w7dyxukzotyfi9g65871jf8qo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/715
250
623148
1948153
1861051
2026-06-20T08:18:50Z
Sridevi Jayakumar
15329
1948153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளவந்தார்|675|ஆளவந்தார்}}</noinclude>இவ்வரையறைகளைக் கல்லாட நூலுள் ஒரு மேற்கோள்பாடல் காட்டுகிறது. மேற்கண்டவாறு, நின்ற நரம்புக்கு (கரத்திற்கு) மேலே எண்ணிக் கணக்கிட்டு, எய்தும் நரம்பைக் கண்டு கொள்ளுதல் வேண்டும்; இவ்வாறு ஆனத்தியில் பண்ணிற்குரிய இணை, கிளை, நட்புக் கிழமை நரம்புகளை இணைத்துப்பாடுவது-கிழமை பாடுவதாகும்.
சமன் மண்டிலத்திற்கு (மத்திம தாயினுக்கு) மேலே நாலைந்து சுரங்கள் வரை பாடுவது வலிவுத் தாளநிலை பாடுதவாகும் (உச்ச தாயி). சமன் மண்டிலத்திற்கும் கீழே மூன்று நான்கு சுரங்கள் வரை பாடுவது மெலிவுத் தானநிலை பாடுதலாகும் (மந்தர தாயி). சமன் மண்டிலத்திலே பண்ணைப் பாடுதல் சமன் தான நிலை பாடுதலாகும். ஒரு தான நிலையில் நின்று பாடும்போது-பிற தான சுரங்களையும் ஒருவாறு இணைத்துக் கொள்ளல் இன்பம் பயப்பதாகும்.
ஒவ்வொரு பண்ணும் இந்த இந்த நேரத்திற்குரியது என்றும், இந்த இந்தச் சுவைக்குரியது என்றும், இந்த இந்தச் சுரங்களை ஏறு இறங்கு நிரல்களில் கொண்டது என்றும் வரையறைகள் உள்ளன. பண்ணுக்குரிய உயிரான நரம்புகள் பற்றிய வரையறையுமுண்டு.
பண்ணில் தீட்டல் குறுக்கல் இடங்களில் இட வேண்டிய வகைபெறு சுரங்கள் - ‘ஈடு கோவை’ எனப்படும், பண்ணில் நீக்க வேண்டிய சுரம் ‘ஓரிடுக்கோவை’ எனப்படும். சொற்களை இசை பூணும்படி வைத்தல், பண்ணைப் பகுதிகளாக வகுத்தல், வகுத்தவற்றைத் தொகுத்தல், விரித்தல்-முதலிய ஆளத்தி முறைகளை இளங்கோ அரங்கேற்று காதையில் குறித்துள்ளார் (சிலப். 3:30-41); பண்ணிலே நிறம் தோன்ற வைத்தல் என்பது வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல் முதலிய உள்ளோசைகளை நிறைத்து உணர்ச்சி தோன்றவைத்தல் ஆகும். இவையே நீர்மை என்னும் பதினோராவது இலக்கணம்.
இவ்வாறு பண்களைப் பகுத்துப்பாடும் முறை சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வருகிறது. இன்றும் இம்முறைகள் நடைமுறையில் உள்ளன; இவற்றால் தென்னக ஆளத்தி பாடும் முறை மரபாக வருவது அறியலாகும்.{{Right|வீ.ப.கா.சு}}
<section end="ஆளத்தி"/>
<section begin="ஆளவத்தார்"/>
{{dhr}}
<b>ஆளவத்தார்{{sup|<b>1</b>}}: (கி.பி. 11-12-ஆம்நூற்றாண்டு)</b> வைணவ ஆசாரிய பரம்பரையில் முதலாவதாகச் சிறப்பிக்கும் பெருமை பெற்றவர். ஆசாரிய பரம்பரையின் முதல்வர் நாதமுனிகள், அவருடைய காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி.11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். அவருடைய மாணவர்களுள் சிறப்பானவர் உய்யக்கொண்டார், உய்யக்கொண்டாரின் நெருக்கமான மாணவர் மணக்கால் நம்பி, நம்பியின் தலையான மாணவரே ஆளவந்தார். சிம்மேந்திரர், பெரிய முதலியார், யமுனாசாரியார், யமுனைத்துறைவர் ஆகிய பெயர்களால் விளங்கும் ஆளவந்தார் நாதமுனிகளின் பேரரும், ஈசுவர முனிகளின் மகனும் ஆவார்.
ஆளவந்தாரின் மாணாக்கரான பெரிய திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, திருக்கோட்டியூர் நம்பி ஆகியோர் திருப்பெரும்பூதூர் இராமாநுசரின் (கி.பி. 1137) ஆசிரியர் ஆவர். எனவே ஆளவந்தாரின் காலம் கி. பி. 11-12-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் என்பர். இவர் செய்த நூல்கள் ஆகமப் பிரமாணியம், புருட நிர்ணயம், ஆத்ம சித்தி, கீதார்த்த சங்கிரகம், சிரீதோத்திரம், சதுச்சுலோகி என்பனவாகும்.{{Right|த.கோ.}}
<b>ஆளவந்தார்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 18-ஆம் 18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த வடமொழி வல்ல தமிழ்ப் புலவர்களில் ஒருவர். பாண்டி நாட்டினைச் சார்ந்த வீரை என்னும் ஊரில் பிறந்தவர். அதனால் அவ்வூர்ப் பெயரையும் சேர்த்து வீரை ஆளவந்தார் எனவும் இவர் வழங்கப்படுகிறார். இவரது ஊர் வேம்பத்தூர் என்று கூறுவாருமுளர். இவர் மாதவப்பட்டர் (மகா தேவபட்டர்) எனப் பெயரிய முனிவர் மரபில் தோன்றிய அந்தணராவார். இவர் வேதாந்தக் கோட்பாட்டினை நன்குணர்ந்து தம் மாணவர் பலர்க்கும் அதனை விளக்கி வந்தார். வடமொழியில் அமைந்துள்ள வாசிட்டம் என்னும் வேதாந்த நூலைத் தமிழில் விருத்தயாப்பிலமைத்து, 2055 செய்யுட்கள் கொண்ட சிறந்த நூலாக இயற்றியுள்ளார்.
ஞான வாசிட்டம் என்பது வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு ஆன்ம ஞானம் உண்டாவதற்காக அறிவுறுத்தியதாகும். அப்பொருளை வான்மீகி முனிவர் பாரத்துவாச முனிவருக்குக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. ஆளவந்தார் தமிழில் பெயர்த்தமைத்த இந்த நூலை ‘ஞானவாசிட்ட அமல ராமாயணம்’ என்றும் வழங்குவர். இது வைராக்கியப் பிரகரணம் முதலாக நிருவாணப் பிரகரணம் ஈறாக ஆறு பிரகரணங்களைக் கொண்டது. பொறையாறு எனப்படும் பிறையாறு என்னும் ஊரில் வாழ்ந்த அருணாசல சாமிகள் இந்நூலுக்குச் சிறப்பான உரை வரைந்துள்ளார். இவ்வுரையாளர், அவர் தம் ஊர்ப் பெயரோடு சேர்த்துப் பிறசை அருணாசல சுவாமிகள் என அழைக்கப்பட்டார். இந்த ஞானவாசிட்ட உரை, தரங்கையில் வாழ்ந்த சபாபதி என்பாரின் வேண்டுகோளின்படி எழுதப்பட்டது. முதன் முதலாக கி.பி. 1870 இல் பதிப்பிக்கப்பெற்ற இவ்வுரை, சென்ற நூற்றாண்டின் பலமுறை மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்-<noinclude></noinclude>
0ajv7o2qosbom4aw9bes15ytkmokwrr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/716
250
623149
1948154
1861055
2026-06-20T08:21:20Z
Sridevi Jayakumar
15329
1948154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|676|ஆளுடைய......}}</noinclude>ளமை கொண்டு. இந்நூலிற்கும் உரைக்கும் இருந்த நன்மதிப்புப் புலனாகும்.
<section end="ஆளவத்தார்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்</b> திருஞான சம்பந்தர் மீது இயற்றப்பட்ட பிரபந்தங்களுள் ஒன்று. இதனை நம்பியாண்டார் நம்பி இயற்றியுள்ளார். இவர் திருநாரையூரில் தோன்றியவர்; ஆதிசைவ மரபினர். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். இவர் ஆளுடைய பிள்ளையார் என வழங்கப் பெற்ற ஞானசம்பந்தரைத் தம் ஞானாசிரியராகக் கொண்டு வழிபட்டு வந்தார். அவரைப் பாராட்டி ஆறு பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அவர் பெயரால் இந்நூல் ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’ என்னும் பெயர் பெற்றுள்ளது. இது, சைவத்திருமுறை பன்னிரண்டில், பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள 40 பிரபந்தங்களுள் ஒன்றாய்த் திகழ்கிறது, இந்நூல் 49 செய்யுள்களையே கொண்டுள்ளது. அப்பாடல்கள் அந்தாதி அமைப்பில் உள்ளனவேனும், நூலின் தொடக்கமும் இறுதியும் மண்டலித்து முடியாமையால் இதன் ஈற்றில் பாடல்கள் ஏட்டுச் சிதைவால் அழிந்துபட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் முதலில் அமைந்துள்ள ஒரு போகு சொச்சகக் கலிப்பாவில் தரவு என்னும் பகுதி காணப்படவில்லை. அதுவும் சிதைந்துபட்டிருத்தல் கூடும். இக்கலம்பகப் பாடல்கள், திருஞான சம்பந்தரின் அருட்செயல்கல், அவர்தம் தேவாரத் திருப்பதிகங்களின் சிறப்பு ஆகியவற்றைத் தெளிவுபடக் குறிப்பிடுகின்றன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்</b> சைவ சமயப் பனுவலான பன்னிரு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் அடங்கியுள்ள 40 பிரபந்தங்களுள் ஒன்றாகும். இதனை நம்பியாண்டார் நம்பி இயற்றியுள்ளார். இவர் திருநாரையூரில் ஆதிசைவ மரபில் தோன்றியவர். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியும் ஆகும். இவர் திருஞானசம்பந்தரை ஞானகுருவாகக் கொண்டு வழிபட்டு வந்தார். இவர் தம் ஞானகுருவின் மீது பாடியுள்ள 6 பிரபந்தங்களுள் திருச்சண்பை விருத்தம் ஒன்றாகும். ஆளுடைய பிள்ளையார் என்பது திருஞானசம்பந்தரின் வேறு பெயராகும். சண்பை, திருஞானசம்பந்தர் தோன்றிய சீகாழிப் பதிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. இந்நூல் பதினொரு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆரியது. இறுதியில் அமைந்துள்ள விருத்தம், முன்னர் அமைந்துள்ள பத்து விருத்தங்களின் தொடக்கச் சீர்களைக் கொண்டமைக்கப்பட்ட முதல் நினைப்பு விருத்தமாகும். திருஞானசம்பத்தரின் வரலாறு நிகழ்ச்சிகள் பலவற்றினைக் குறிப்பிட்டு போற்றுவனவாக இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன, திருஞானசம்பந்தர் தோன்றிய சீகாழியின் (சண்பை, நகர்) சிறப்பினை விளக்குவதால் இந்நூல், ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்னும் பெயர்பெற்றது. சிவபெருமான் அருளைப் பெறத் தமிழில் வழிகண்டவர் என்னும் கருத்தில் ‘ஆற தேறும் சடையான் அருள் மேவ, அவனியர்க்கு, வீறதேறும் தமிழால் வழி கண்டவன்’ என்று இந்நூல் திருஞானசம்பந்தரைப் போற்றுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை</b>: சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் அடங்கிய 40 பிரபந்தங்களுள் ஒன்று. இது நம்பியாண்டார் நம்பி அவர்களால் இயற்றப்பட்டது. திருநாரையூமில் தோன்றிய இவர், ஆதிசைவ மரபில் வந்தவராவார். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியும் ஆகும். இவர் சைவ சமயாசாரியர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டார். இவர் தம் ஞானகுருவைப் போற்றிப் பாராட்டி பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று இப்பிரபந்தம். இதன் பெயரில் அமைந்துள்ள ஆளுடைய பிள்ளையார் என்பது, திருஞான சம்பந்தரைக் குறிக்கும். கலிவெண்பாவில் அமைந்துள்ள இப்பிரபந்தம் 65 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் திருஞானசம்பந்தரின் வரலாற்று நிகழ்ச்சிகள், தொடக்க முதல் இறுதி வரை தொடர்ச்சியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை</b>: நம்பியாண்டார் நம்பி, திருஞானசம்பந்தர் மீது இயற்றிய பிரபந்தங்களுள் ஒன்று, இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பதினொன்றாந் திருமுறையுள் இடம் பெற்றுத் திகழ்கிறது. நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் தோன்றியவர்; ஆதிசைவ மரபினர். திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டு வழிபட்டு வந்த இவர், ஞானசம்பந்தர் மீது ஆறு பிரபந்தங்கள் இவற்றிப் போற்றியுள்ளார். அந்த ஆறு பிரபந்களும், ஆளுடைய பிள்ளையார் பெயரிலேயே அமைந்துள்ளன. ஞானசம்பந்தரின் வேறு பெயர்களுள் ஒன்று ஆளுடைய பிள்ளையார் என்பதாகும். இந்த மும்மணிக்கோவைப் பிரபந்தம் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகைப்பாடல்களிலும் வகைக்குப் பத்துப் பாடல்களாக முப்பது பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. அந்தாதி<noinclude></noinclude>
r7aanqn6yui72pbneezrtzjhnf7wcgx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/717
250
623150
1948156
1861061
2026-06-20T08:26:01Z
Sridevi Jayakumar
15329
1948156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|677|ஆளுநர்}}</noinclude>யாப்பில் அமைந்துள்ள இப்பிரபந்தம் ‘திங்கட் கொழுத்தொடு’ எனத் தொடங்கி ‘திங்கட் கொழுந்தே’ என்று மண்டலித்து முடிந்துள்ளது. இதில் திருஞானசம்பந்தரைப் போற்றும் பாக்களும், அவரது தேவாரப்பதிகங்களைப் போற்றும் பாக்களும், அகத்துறைப் பாடல்களும் உள்ளன, இந்நூலிலுள்ள ‘அடுசினக்கடகரி’ எனத் தொடங்கும் ஆசிரியப்பா, திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் பலவற்றையும் தொகுத்துச் சுட்டுகிறது. ஞானசம்பந்தர் தேவாரம் பிறவிக் கடலைக் கடக்க அமைந்த தோணி போன்றது என்பதனைப் ‘பிறவி எனும் பொல்லாப் பெருங்கடலை நீத்தத், துறவி எனும் தோல் தோணி கண்டீர்’ என இந்நூல் போற்றுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி</b> சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராத் திருமுறையினைச் சார்ந்த பிரபந்தங்களுள் ஒன்று. இதன் ஆசிரியர், திருநாரையூல் ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாண்டார் நம்பி ஆவார். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். இவர் திருஞானசம்பந்தரை ஞானகுருவாகக் கொண்டவர்; அவர் மீது பாடிய ஆறு பிரபந்தங்களுள் இவ்வந்தாதி ஒன்றாகும். ஆளுடைய பிள்ளையார் என்பது திருஞானசம்பந்தரின் வேறு பெயராகும். அந்தாதி அமைப்பில் 100 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களைக் கொண்டுள்ள இந்தப் பிரபந்தம், பார்மண்டலம் எனத் தொடங்கிப் பாரசுத்தே என்று மண்டலித்து முடிகிறது. இந்நூலாசிரியர், தமது திருத்தொண்டர் திரு அந்தாதியினைப் பாடுவதற்கு முன்னரே இந்நூலினைப் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. திருஞானசம்பந்தரின் திருப்பெயர்களே ஒருவருக்கு ‘உறவும் பொருளும் ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும்’ ஆகிய அனைத்தையும் அருளவல்லன என்று இந்நூல் குறிப்பிடுகிறது. இந்நூல் திருஞான சம்பந்தரைக் கவுணியர் தீபன், பரசமயகோளரி, அருகாசனி, தமிழாகரன், தமிழ் விரகன், சைவசிகாமணி முதலிய பெயர்களால் போற்றுகிறது. திருஞானசம்பத்தரைப் பாட்டுடைத் தயைவராகவும் கிளவித் தலைவராகவும் கொண்டமைந்துள்ள அகத்துறை நலஞ் சார்ந்த பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை</b> நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பத்தரைப் போற்றிப் பாடிய பிரபந்தங்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் திருநாரையூரில், ஆதி சைவ மரபில் தோன்றியவர். இவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் கொண்ட காலப்பகுதியில் வாழ்ந்தவராவார் இவர் ஆளுடைய பிள்ளையார் எனப்படும் திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டு வழிபட்டு வந்தார், தம் ஞான குருவைப் பாராட்டிப் போற்றிச் செய்த ஆறு பிரபந்தங்களுள் ஒன்று இத்திருவுவாமாலையாகும். கலிவெண்பாவால் அமைந்த இப்பிரபந்தம் 143 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்நூல் உலா என்று பெயர் பெறாமல், உலா மாலை என்று பெயர் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக உலாக்களில் உலா வரும் தலைவன் இயல்பும், அவன்பால் காதல் கொண்ட ஏழு பருவப் பெண்கள் இயல்பும் கூறப்படுவது மரபு. இப்பிரபந்தத்தில் உலாத் தலைவரான ஞானசம்பந்தர் இயல்பே பெரிதும் பேசப்படுகிறது. ஏழு பருவப் பெண்களின் செய்தி தனித்தனி விரிவாகப் பேசப்படவில்லை. பொதுப்படவே கூறப்பட்டுள்ளது. அதனால் இந்நூல் உலா மாலை எனப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் அமைந்துள்ள மாலை என்பதன் பொருள் இயல்பு என்பதாரும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் திருவிராகம், திருவிருக்குக் குறள், யாழ்முரி, ஈரடிமுக்கால், சக்கர மாற்று முதலிய பெயர்களில் யாப்பு விகற்பங்களாகப் புதுமைப்படப் பாடியுள்ள திறத்தினைக் குறிப்பிட்டு இந்நூல் பாராட்டுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை"/>
<section begin="ஆளுநர்"/>
{{dhr}}
<b>ஆளுநர்:</b> ஆளுநரின் நியமனம் முதலியன பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 153-ஆம் பிரிவு முதல் 162-ஆம் பிரிவு வரையில் உள்ள பத்துப் விளக்கமாகக் கூறுகின்றன. மாநில அரசின் தலைவர் ஆளுநர் (Governor). வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மற்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆளுநர் உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை மைய அரசு பணி அமர்த்தல் செய்யலாம். குடியரசுத் தலைவர், மாநில ஆளுநரைத் தம் கையாலேயே அவரது பணி அமர்த்தல் பற்றிய கட்டளையினை எழுதி, அவரது முத்திரையினைப் பதித்துப் பணி அமர்த்தம் செய்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரின் கருத்துகளைக் கேட்டறிந்து பணி அமர்த்தம் செய்யப்படுவது மரபாக உள்ளது. ஆளுநராகப் பணி அமர்த்தம் செய்யப்படுபவர் இந்தியக் குடிமகனாகவும், முப்பத்தைந்து வயது நிறைவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்குட்பட்டு ஆளுநர் ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வசிப்பார், பதவிப் பொறுப்பினை எற்றுக்கொண்டதிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும், புதியதாக நியமனம் செய்யப்படுபவர் பொறுப்பினை ஏற்கும் வரையில் இவர் பதவியில்<noinclude></noinclude>
rn5unnqp0v555yd4atn1kzfpisdseov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/718
250
623151
1948157
1861064
2026-06-20T08:27:29Z
Sridevi Jayakumar
15329
1948157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுநர்|678|ஆளுமை}}</noinclude>தொடர்ந்து நீடிப்பார், ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலோ மாநிலச் சட்ட சபைகளிலோ உறுப்பினராக இருக்க இயலாது. அவ்வாறு இருப்பின், ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் அவ்வுறுப்பினர் பதவியை விட்டுவிட வேண்டும். ஆளுநர், ஊதியம் பெறும் எந்தவொரு பொறுப்பினையும் ஏற்கக்கூடாது. ஆளுநர் இலவசமாக உறைவிடமும், பாராளுமன்றத்தினால் உறுதி செய்யப்படும் ஊதியமும், அவ்வூதியம் சார்ந்த உதவித் தொகையும் பிற தனி உரிமைகளும் பெறுவார். ஆளுநர் பதவியேற்பதற்கு முன்னர் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அனுபவம் முதிர்ந்த நீதிபதி முன்னிலையில் உறுதி மொழி எடுத்துப் பதவியை ஏற்றுக் கொள்வார். ஆளுநர் இல்லாத சமயத்தில் அவருக்குப் பதிலாகப் பணியாற்றுவதற்குரிய ஒருவரை அரசியல் அமைப்புச் சட்டம் கூறாமல் இருப்பினும், குடியரசுத் தலைவர் அப்பணியினை நிறைவேற்றுவதற்குரிய ஒருவரைப் பணி அமர்த்த வழிவகை செய்வார். மரபுப்படி, ஓய்வு பெற்ற ஆளுநர் ஒருவரோ, அம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அப்பணியை ஆற்றுவர். ஆளுநர், மாநில நிருவாக அதிகார எல்லைக்குள் நிலவிவரும் சட்டங்களுக்கெதிராகக் குற்றம் புரிந்தவர்களின் குற்றங்களை மன்னிக்கவும் தண்டனைகளைத் தள்னிப்போடவும் குறைக்கவும் மாற்றவும் அரசியல் அமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்றுள்ளார். பணியில் ஆளுநரின் சட்டமுறையான நிலை பற்றிப் பம்பாய் மாநில வழக்கொன்றில் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161-ஆம் பிரிவின்படி ஆளுநரின் அதிகாரத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆளுநரின் அதிகாரம் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டது.
ஆளுநர் தேவையில்லையானால் குடியரசுத் தலைவராலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டுத் திருப்பி அழைத்துக் கொள்ளப்படுவார். ஆளுநரை நீக்க மாநிலச் சட்டசபைகள் செயற்படுவதையோ அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகச் செல்வதாகக் குற்றம் கூறிப் பதவி நீக்கம் செய்வதையோ செய்ய முடியாதபடி, அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. ஆளுநரைத் திரும்பப் பெறும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆளுநர் சட்டசபையின் விருப்பத்திற்கிணங்கிப் பதவியில் நிலைத்து நீடிக்கிறார்.
ஆளுநர் அரசியல் சட்டத்தின்கீழ் இருவகையான பணிகளைச் செய்யக் கடமைப்பட்டுள்ளார். 1. மாநில அரசின் தலைவர், 2. அவர் மத்திய அரசின் பிரதிநிதியாகவும் பணியாளராகவும் செயற்படுகிறார். மாநில அரசின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சரையும் பிற அமைச்சர்களையும் பணி அமர்த்தம் செய்கிறார். சட்டசபையைக் கூட்டவும் முடித்து வைக்கவும், கலைக்கவும், சில சட்ட முன் வரைவுகளை அவர் குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு ஒதுக்கி வைக்கவும், சட்டசபை நடைபெறாதபோது ஆணைச் சட்டங்கள் (Ordinance) பிறப்பிக்கவும் செய்கிறார். இப்பணிகளை அவர், அமைச்சரவையின் அறிவுரை பெற்றுச் செயலாற்றுகிறார். இவர் மத்திய அரசின் பணியாளராகவே பணியாற்றுகிறார். மாநிலம் ஒன்றில், அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை உருவானால், குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டு வரலாம்.
<section end="ஆளுநர்"/>
<section begin="ஆளுபர் (ஆளுவர்)"/>
{{dhr}}
<b>ஆளுபர் (ஆளுவர்)</b> கருநாடக மாநிலத்தில் வனவாசிப் பகுதியினைக் கி.பி. 7 முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட சிற்றரசர்கள், சாளுக்கிய மன்னர்களான இரண்டாம் புலிகேசி, விநயாதித்தன் போன்றவர்களின் கல்வெட்டுகளில் இச்சிற்றரசர்களின் சில பெயர்கள் காணப்படுகின்றன. பில்கணர் என்னும் கவிஞர் ஆளுபரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். குணசாகரன், முதலாம் சித்திரவாகனன் என்ற ஆளுப சிற்றரசர்கள் விநயாதித்தனின் காலத்தவர்கள். இவர்களின் தலைநகரம் ஆளுவ கேடம் ஆறாயிரம் என்பதாகும். இரண்டாம் சித்திர வாகனனும் இரணசாகரனும் கி.பி. 800-ஆம் ஆண்டு அரசுக்குப் சித்திரவாசனன் முதலில் உடுப்பி நகரைக் கைப்பற்றினான். பின்னர் அந்நகரம் இரணசாகரன் கைவசமாயிற்று. இச்செய்தியை உதியாவரம் என்னும் இடத்திலுள்ள நடுகல் கல்வெட்டுக் குறிப்பிட்டுள்ளது. பிருதிவி சாகரன், மாரம்மன், விசயாதித்தன் போன்ற ஆளுப அரசர்களின் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன.
<section end="ஆளுபர் (ஆளுவர்)"/>
<section begin="ஆளுமை"/>
{{dhr}}
<b>ஆளுமை</b>: தனிமனிதனுடைய எண்ணங்கள், செயற்படும் முறை, நடத்தைகள், அவன் பிறருடன் பழகும் முறை, மனப்பான்மைகள் அவனுடைய வாழ்க்கைத் தத்துவம், அறிவாற்றல், உணர்ச்சிகள் ஆகிய யாவும் சேர்ந்த தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் ஒரு தனித்தன்மை ஆளுமை எனப்படும். அவனுடைய உடல் தோற்றமும் அவன் உடைப் பாணியும் நடையும் அவனிடம் காணப்படும் அன்பு, பொறாமை, ஊக்கம், அச்சம், இரக்கம், நன்றியுணர்வு, தந்திரம் போன்ற பல விதமான பண்புகளும் அவனுடைய ஆளுமையில் அடங்கும்.
இப்போகிரேட்டிக (Hippocrates) என்னும் கிரேக்க மருத்துவ அறிவியலார், மளித உடலில் நான்கு வகைகளான நீர்மங்கள் இருக்கின்றன என்றும். அவற்றின் மிகைக்கு ஏற்ப மனித ஆளுமைகளை<noinclude></noinclude>
amnnb6xo59yyvqqzfpr8yn7mffuvb9j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/721
250
623154
1948158
1861072
2026-06-20T08:28:35Z
Sridevi Jayakumar
15329
1948158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுமை|681|ஆளுமைக்......}}</noinclude>அமைப்பினை ஓரளவு முடிவு செய்கின்றன என்று கண்டுபிடித்தார். இவ்வாறு வகைப்படுத்தப் பட்டவர்களுள் நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணல் முறையில் மதிப்பீடு செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்கள், நேர்காணல் துலங்கல்கள், நடத்தைகள் ஆகியவைகளை உற்றுநோக்கி, 80 பண்புக் கூறுகளைக் கண்டுபிடித்தார். மூன்று பெரும் உடலமைப்புப் பிரிவுகளையும் அவற்றிற்கு உரித்தான மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் வகைப்படுத்தினார், ஆராய்சினின் முடிவாகச் செல்டன் ஒவ்வொரு உடலமைப்பினரிடமும் 20 பண்புக்கூறுகள் காணப்படும் என்று கூறினார். தம்முடிவுகளை மேலும் நம்பிக்கையுடையவைாக்குவதற்காகச் செல்டன் 200 கல்லூரி மாணவர்களை இப்பண்புத் தொகுதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தினார். பண்புக் கூறுகள் பின் குறிப்பிட்டுள்ளவாறு தொடர்பு கொண்டன என்று செல்டன் கண்டார்
செல்டனின் வகைப்படுத்தவில் அகவயச் செல்வாக்கு இடையிட்டதைப் பல உளவியலறிஞர்கள் கண்டனர். இதன் காரணமாக அவருடைய ஆளுமை வகைப்படுத்தலில் நம்புந் தன்மை குறைந்து இருக்கலாம் என்று அவர்கள் கருதினர். மேலும் செல்டனின் மூவகைப்பட்ட உடல் அமைப்பினரும், சமூக, பொருளாதார, சூழ்நிலைக் காரணங்களினால், அத்தகைபோருக்குச் சமூகத்தில் பொதுவாக உருச்சட்டம் (Stereotype) கொடுக்கப்பட்டுள்ள முறையினின்றும் மாறி, வேறு விதமாகச் செயற்பட்டு, வேறுவிதமான ஆளுமையுடையவராகக் காணப்படுவதும் உண்டு. எ-டு மெலிந்த சிந்தனை வயப்பட்டோன் (Cerebrotonic) அறிவாளனாகவும், கட்டமைந்த உடலமைப்பினன் அடைவு ஊக்கிசார் செயல்களில் ஈடுபடுபவனாகவும், உருண்டையான உடலமைப்பினன் மற்றவர்களின் செல்வாக்கிற்கு எளிதாக வயப்படக்கூடியவனாகவும் இருப்பன் என்றும் மக்கள் கருதுகின்றனர். இப்பொதுமையாக்கத்தின் (Generalisation) அடிப்படையில், செல்டனின் ஆய்வுகளும் வகைப்படுத்தல்களும் அமைந்துள்ளன. உடல் அமைப்பும் அவற்றின் பண்புக்கூறுகளும் மரபணுக்களால் அடுத்தடுத்த பரம்பரைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று செல்டன் கூறினார். தனிமனிதனின் ஆளுமையில் சூழ்நிலைக் காரணிகளும் பெருஞ்செல்வாக்குக் கொண்டுள்ளன என்பதைச் செல்டனின் கோட்பாடு வலியுறுத்தவில்லை. இக்காரணங்களால் செல்டனின் வகைப்படுத்தல் கோட்பாட்டினை உளவியலார் ஏற்றுக்கொள்ளவில்லை.
யுங்கு (Jung) என்னும் உளவியலறிஞர் அகமுகப்பட்டவர்கள், புறமுகப்பட்டவர்கள் என இரண்டு வகைகளாக ஆளுமையைப் பிரித்துள்ளார். அகமுகப்பட்டவன் புற உலக நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சிந்தனை, கற்பனை நினைவுகள் கொண்டு, தன்னுடைய மனவெழுச்சிகளைப் பிறருக்குக் காட்ட மாட்டான். சிறு தோல்வியையும் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையற்றவனாக இருப்பான். ஆனால், புறமுக வகைப்பட்டவனோ, தன்னாய்வுத் திறன். ஒளிவுமறைவு இல்லாமை, பிறர் காணும் குற்றங்களைப் பொருட்படுத்தாமை போன்ற இயல்புகளைப் பெற்றிருப்பான். ஒருவருடைய உள் ஊக்குத் திறன் (Libido) எவ்விதம் வெளிப்படுகிறதோ அதுவே அவனுடைய ஆளுமை என உளப்பகுப்புக் கோட்பாட்டினர் கருதுகின்றனர். மக்களையும் பொருள்களையும் நாடிச் சென்று உள்வாக்குத் திறன் புறத்தே வெளியானால், அது புறமுகம் என்றும், கருத்துகளும் எண்ணங்களும் உள்நோக்கி வெளிப்படும்போது அது அகமுகம் என்றும் கூறுவர். இவ்விரண்டு ஆளுமைப் பண்புகளிலும் எது சிறந்தது, எது தாழ்ந்தது என்ற வினாவிற்கு இடமில்லை. இரண்டும் தனிப்பட்ட முறைகளில் சிறந்த ஆளுமைப் பண்புகளாகும். எடுத்துக்காட்டாக தார்வினின் (Darwin) உள் ஊக்குத்திறன் அவரை வெவ்வேறு உயிரினங்களின் மீதும் தாவரங்களின்மீதும் நாட்டங்கொள்ளச் செய்து, புதிய மலர்ச்சிக் கொள்கையைத் தந்தது. ஆதி சங்கரரின் உள்ஊக்குத்திறன் உள்நோக்கி ஏவப்பட்டதன் விளைவாக, அத்துவிதம் என்ற தத்துவம் பிறந்தது. புறமுக ஆளுமையினரும் அகமுக ஆளுமையினரும் சமூகத்தில் சிறப்பான தொண்டுகளை ஆற்றுகின்றனர், காண்க: ஆளுமைக் கோட்பாடுகள்.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>William Samuel,</b> Personality, Mc Graw Hill Koga kusha Ltd., Japan, 1981.<br>
<b>Ernest,R. Hilgard,</b> et. al, Introduction to Psychology 6th Ed.,Oxford and IBH Ltd., New Delhi. 1975.
<section end="ஆளுமை"/>
<section begin="ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்"/>
{{dhr}}
<b>ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்</b>: குழந்தைகளிடம் பேச்சுத்திறன் வளர்ச்சி அடைவதற்கு முன் சொற்களைப் புரிந்து கொள்ளும் திறமை வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தை பேசக்கூடிய சொற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகுதியான சொற்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சுத்திறன் அடைவதற்குமுன் இளங்குழவி அழுகை, மழலை, மனவெழுச்சி வெளியீடுகள், சைகைகள் ஆகியவற்றைச் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறது. ஏறக் குறைய ஒரு வயதாகும்பொழுது குழந்தை முழுச்சொற்களைப் பேசுந் திறனை அடைகிறது. அதற்குப் பின்னர் ஒற்றைச் சொல்லாலான சொற்றொடரைப்-<noinclude>
<b>வா.க. 2-86</b></noinclude>
alklh7tkhpn0lcnjitvj9aox37v7mdw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/723
250
623160
1948159
1861312
2026-06-20T08:29:31Z
Sridevi Jayakumar
15329
1948159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|683|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>குரல் கோளாறுகள் குழந்தைகளிடம் பொதுவாகக் காணக்கூடிய ஒன்றாகும். தாக்குந் தன்மையுடைய குழந்தைகள் கரகரப்பான குரலுடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவைக்கூச்சமுடைய குழந்தைகள் மெதுவாகப் பேசுவதைக் காணலாம். குழந்தைகள் தமக்கு விருப்பமான சூழ்நிலையில் பேசுவதையும், மன அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் பேசாமல் இருப்பதையும் காணமுடியும். இதைத் தேர்ந்த பேசாமை (Selective Silence) என்று கூறுவர். உளக்கூறுமாற்றக்கோளாறும் (Hysteria) குழந்தைகளிடம் பேச்சுக் கோளாறுகளுக்குக் காரணமாக இருக்க முடியும்.{{Right|ஏ.டி.ப.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bharath Raj,</b> Stuttering, Causes, remedies, prevention-A Guide book for parents and stutterers, Swayam Siddhan Prakashana, Mysore, 1978.<br>
<b>Bhavani, A.D.,</b> Some Psychological Aspects in Speech and Hearing Problems, The Journal of All India Institute of Speech and Hearing- January, 1972.<br>
<b>Kuppuswamy, B.,</b> Child Behaviour and Development, Vikas Publishing House, Pvt. Ltd.. Delhi, 1974.<br>
<b>Hurlock, E.B.,</b> Developmental Psychology, A Life Span Approach, 1980.
<section end="ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்"/>
<section begin="ஆளுமைக் கோட்பாடுகள்"/>
{{dhr}}
<b>ஆளுமைக் கோட்பாடுகள்</b>: ஆளுமையைப் பற்றிய ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புகள், அறிவியல்சார் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆளுமை என்னும் கருத்தினை விளக்குதலே ஆளுமைக் கோட்பாடு (Personality Theory) ஆகும். ஆளுமை கைப்பற்றிய விளக்கங்கள், ஆளுமையின் வரையறைகள் ஆகியவற்றை மட்டுங் கொண்டு ஆளுமையைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள இயலாது, புறத்தூண்டுதல்களின் உதவியாலும் நடத்தைக் கோலங்களினாலும் நாம் ஆளுமையைப் பற்றி அறிந்துகொண்ட பிறகே, அதனை விளக்குதற் பொருட்டு, ஒரு கொள்கையினையும் அதற்கேற்ற விதிகளையும் உருவாக்க முடியும். குறிப்பிட்ட சில சூழமைவுகளினால் ஆளுமை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்யவும் ஆராய்ச்சியின் பயனாக நாம் கண்டுபிடிக்கும் முடிவுகளுக்கு விளக்கம் கொடுக்கவும், ஒரு கொள்கையடிப்படை இன்றியமையாததாகும். ஆளுமை என்னும் கருத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெறுவதற்கும் இத்தகைய கொள்கையடிப்படை, பேருதவியாக இருக்கிறது. மேலும் புதிய சூழமைவுகள் மனிதர்களின் நடத்தையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். என்னும் ஊகங்களுக்கும் இக்கோட்பாடுகள் அடிப்படையாக இருக்கின்றன. உளவியல் அண்மைக் காலத்திய அறிவியல் துறையாயினும், இத்துறையில் கருத்து வேறுபாடுகளைக் கொண்ட பல ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் ஆளுமையின் பல்வேறு கூறுகளையும் காரணிகளையும் விளக்கும் வகையில், பல்வேறு விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இவ்விளக்கங்கள் உளவியல் துறையில் ஆளுமைக் கோட்டுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இக்கோட்பாடுகள், கொள்கைகளின் அடிப்படையில் பின்வரும் வரிசையில் விளக்கப்பட்டுள்ளன.
1. மனித இன நல-இருத்தல் நிலைசார் கோட்பாடு (Humanistic-Existential Model)
2. வகையியல் கோட்பாடுகள் (Typology Model)
3. உளப்பகுப்புக் கோட்பாடு (Psychoanalystic Model)
4. சமூகத் தன்முனைப்புக் கோட்பாடு (Ego-Social Model)
5. ஆளிடைக் கோட்பாடு (Interpersonal Model)
6. நடத்தைக் கோட்பாடு (Behaviouristic Model)
<b>1. மனித இன நல-இருத்தல் நிலைசார் கோட்பாடு</b> என்பது மனித இயல்புகள் பற்றியும், மனித வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றியும் ஆராயும் கொள்கை ஆகும். இக்கொள்கையினர் விலங்கியல் நடத்தை அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆல்போர்ட்டு, இராசர்சு, மாசுலோ, எரிக்பிரோம் ஆகியோர் இக்கொள்கையினை உருவாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கள்ஆவர் பண்பாடு, சமூகம் இரண்டும் மனிதர்களின் நடத்தைகளை உருவாக்குகின்றன. ஆயினும் மனித இயல்புகளும் ஆற்றல்களும் ஆளுமையின் அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. மாசுலோ மனிதனின் மேம்பாட்டு நிலையைத் தன்னிறைவு நிலை என்று குறிப்பிட்டார். இராசர்சு மாணவர்களின் தனிப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினார். ஆல்போர்ட்டு, பிரோம் ஆகியோரும் சமூகத்தில் மக்கள், தாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் சிறந்த நிலையை அடையப்பாடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டனர். மனிதர்களின் நடத்தைகள் அவர்களுடைய தற்கருத்து அல்லது தன்னுணர்வினால் மாற்றியமைக்கப்படலாம். ஆயினும் மனிதர்களின் இயல்புகளுள் சிலவற்றை மாற்றமுடிாது. இக்காரணத்தினால் மக்கள் தம் வாழ்க்கையில் பல சமூகப் பொருத்தப்பாடுசார் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இவ்வடிப்படையில் எழுந்ததே மனித இன நல இருத்தல் நிலைக் கோட்பாடாகும்.{{nop}}<noinclude></noinclude>
ercblr920jsu31rwjz0v4etq4t5ijns
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/762
250
623381
1948161
1862811
2026-06-20T08:32:04Z
Sridevi Jayakumar
15329
1948161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|722|ஆளுமைக் கோளாறுகள்}}</noinclude>என்று கூறுகின்றனர். வாழ்க்கையில் எல்லோருக்கும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.
இக்காலத்தில் இடையுறவும் பகுப்பாய்வு மேலாண்மைத்திறன் முன்னேற்றத்தில் பெரும்பங்கு கொண்டிருக்கிறது. பணியாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இணைந்து பணி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு வகையான மனித நடத்தைக் கோலங்களையும் இடையுறவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளன. அதிகாரிகள் தம் மேலாளருடனும் தம் உடன் அதிகாரிகளுடனும் தம் கீழ்ப்பணி புரிபவர்களுடனும் சிறந்த முறையில் இயங்குவதற்கு இடையுறவுப் பகுப்பாய்வுப் பயிற்சி தரப்படுகிறது. இப்பயிற்சி, மனக்குலைவுசார் நடத்தைகளையும், பிறருக்கு ஊறு செய்யும் உரையாடல், இடையுறவு, செயல்கள் ஆகியவற்றையும் தவிர்க்கும் குறிக்கோளுடன் நடத்தப்படுகிறது. நிறுவனங்களில் மட்டுமன்றி, மருத்துவ இல்லங்களிலும், கல்வி நிலையங்களிலும், குடும்பத்திலும் இடையுறவுப் பகுப்பாய்வின் உதவியால் மக்கள் தத்தம் தன்முனைப்பு நிலை பற்றியும் பிறகுறுடய தன்முனைப்பு நிலை பற்றியும் அறிந்து, சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலும்.
<b>நடத்தைக் கோட்பாடு</b>: இது ஆளுமைக் கோட்பாடு பற்றிய அண்மைக் கால விளக்கமாகும். தனி மனிதனின் சூழ்நிலைத் தூண்டல்களுக்கு ஏற்ப அவனுடைய ஆளுமை அமைகிறது. ஆளுமைப் பண்புகள் நிலையாக அமைவதில்லை. அவை குறிப்பிட்ட தூண்டல்களுக்கு ஏற்ப அமைகின்றன என்ற அடிப்படைக் கருத்துகளைக் கொண்ட ஆளுமைக் கோட்பாடு நடத்தைக் கொள்கையாகும் (Behaviourism). நடத்தைச் கோட்பாட்டினருள் முதன்மையானவர்கள் வாட்சன் (Watson), அண்டர் (W. S. Hunter) இலாசுலே (Lashley. K.S) கத்ரி (Guthrie), கோல்ட்டு (Holdt), அல் (Hull), தார்ன்டைக்கு (Thorn dike Edward. L), பாவ்லவ் (Pavlov Ivan. P), இசுகின்னர் (Skinner. B. F), ஆகியவர்கள். இசுகின்னர் தானியங்கு ஆக்கநிலையிருத்தம் பற்றிய விரிவான சோதனைகளைச் செய்துள்ளார்.
பாவ்லவ் தம் பரிசோதனைகளின் வாயிலாக ஆக்க நிலையிருத்தம், கற்றல் நிகழ்முறை ஆகியவை பற்றிச் சில முடிவுகளை வெளியிட்டார். இம்முடிவுகள் உயிரியை ஒரு குறிப்பிட்ட நடத்தையை நோக்கிச் செலுத்தும்; உந்து, நடத்தையைத் திசைப்படுத்தும் தூண்டல், தூண்டலுக்கான துலங்கல், வலுப்படுத்திகள் ஆகியவை பற்றிய கருத்துக்கனைத் தெளிவுபடுத்தும்.
மனிதனின் வெளிப்படையான நடத்தையை மட்டிலுமே ஆராய்ந்து அவனுடைய ஆளுமையை அறியலாம் என்பதே நடத்தைக் கொள்கையாகும். மனித நடத்தை, இயக்க நடத்தை, குரல் நாண்களின் அசைவுகள், உள் உறுப்புகளின் உறுப்புகளின் இயக்கத்தினின்று எழும் நடத்தைகள் என மூன்று வகைப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் செயல்களும் உடல் இயக்கங்களின் விளைவாக ஏற்படுவனவே என்று வாட்சன் குறிப்பிட்டார். தூண்டல்-துலங்கல் தொடர்புகளாக ஏற்படும் மறிவினைகளை நடத்தையின் அடிப்படை ஆகும். இவை ஆக்கநிலையிருத்தவால் மாறுபட்டுப் பல்வேறு வகைப்பட்ட நடத்தைக்கோலங்களாக உருவெடுக்கின்றன என்று நடத்தைக் கொள்கையினர் கூறுகின்றனர். இவர்கள் மனிதனின் நடத்தையைப் பொருள்முதல் அணுகுமுறையில் (Materialistic Approach) நோக்குகின்றனர்.
தாலர்டு, மில்லர் (Dollard, Miller) ஆகியோர், ஆளுமை வளர்ச்சியில் அச்சம் முதன்மைத் தூண்டலாக விளங்குகிறது என்றும், அச்சத்தைத் தவிர்க்க உதவும் நடத்தைகள் ஆளுமையில் சிறப்பிடம் கொண்டுள்ளன என்றும் கூறினர். ஆல்பர்ட்டு பண்டுரா (Albert Bandura), இரிச்சாடு வால்டர்சு (Richard Walters) போன்றோரின் கோட்பாடுகளும் சமூக நிலைமைகளில் கற்றலின் சிறப்பை வலியுறுத்துகின்றன. பண்டூரா தம்முடைய நடத்தை மாற்ற விதிகள் (Principles of Behaviour Modifrotin) என்னும் நூலில், இக்கருத்தினைக் கூறியுள்ளார்.
இக்காலத்தில் நாவு அனுபவ இயல் (Phenomenology) மனித நல இயல் (Humanism) போன்ற கருத்துகளைச் சார்ந்த ஆளுமைக் கொள்கைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Maslow A.H,</b> Motivation & Personality, Harper & Row, New York, 1970.<br>
<b>Erich Fromme.,</b> Beyond the Chains of illusion: My encounter with Mars and Freud, Simon and Schuster: New York, 1962.<br>
<b>Freud, Sigmund,</b> An Outline of Psychoanalysis. Norton, New york, 1949.<br>
<b>Dicaprio Nicholas S.,</b> Personality Theories, CBS College Pub. Co., New York, 1983.<br>
<b>Samuel William,</b> Personality, Mc Graw Hill, London, 1981.<br>
<b>Alfred Adler,</b> The Individual Psychology, Harper & Row, New York, 1956.
<section end="ஆளுமைக் கோட்பாடுகள்"/>
<section begin="ஆளுமைக் கோளாறுகள்"/>
{{dhr}}
<b>ஆளுமைக் கோளாறுகள்</b> தனி மனிதனின் சமூகச் செயல்களில் மிகுந்த அளவில் சிதை-<noinclude></noinclude>
opfb215vpd9lnhvo76kcxxgvvuhec3a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/765
250
623390
1948162
1862872
2026-06-20T08:33:02Z
Sridevi Jayakumar
15329
1948162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுமைக் கோளாறுகள்|725|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>செல்லாமை, வீட்டிற்கு வராமல் இரவில் வெளியே தங்கி விடுதல், திருடுதல் போன்ற நடத்தைக் கூறுகள் வயது வந்தோர் பருவத்தில் தொடர்ந்து காணப்படின் இவை. தனிமனிதனிடம் சமூக எதிர்ப்புக் கூறுகளாகின்றன.
எர்வி கிளக்சுபி (Hervey Ceeckspey) என்பார் பின்வரும் ஆளுமைக் கூறுகள் சமூக எதிர்ப்பு ஆளுமையினரிடம் காணப்படுவன என்று வரையறுத்துள்ளார்.
1. மிகையான நுண்ணறிவு, கவர்ச்சி, நட்பு ஆகிய பண்புகள் காணப்படும். வரவேற்கத்தக்க முதல் கருத்துப்பதிவை (First Impression) ஏற்படுத்துவர்.
2. திரிபுணர்வு, திரிபுச் சிந்தனை, மனநிலை மாற்றம் ஆகியவை இல்லாதவர்- இயல்பான மனநிலையுடையவர்,
3. பதற்ற நிலை அடையாதவர்.
4. பொறுப்பற்ற தன்மையினர்-தம்மைச் சார்ந் திருப்போரிடம் (எ-டு. தம் குழந்தைகள்) பொறுப்பில்லாதவர்.
5. பொய்வயப்பட்டவர்; நம்பிக்கை அற்றவர்; உண்மையை ஏளனமாக எண்ணுபவர்-கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மாட்டாதவர்.
6. மற்றவர்களுக்குத் தாம் இழைக்கும் துன்பங்களுக்காக மனம் வருந்தாதவர்.
7. தகுந்த ஊக்கியின்றியே சமூக எதிர்ப்புச் செயலில் ஈடுபடுபவர்.
8. விவேகமற்றவர் தம் செயல்களின் விளைவுகளைக் கண்டு மனம் தெளியாதவர்.
9. மற்றவர்களை விரும்பிய போதிலும் அன்பு செலுத்த முடியாதவர்; தன்னலவயப்பட்டலர்.
10.உவகை, களிப்புப் போன்ற மனவெழுச்சிகளை உணர முடியாதவர்.
11. அகநோக்குத்திறன் அற்றவர். தம் செயல்களைத் தாமே மதிப்பீடு செய்யமுடியாதவர்.
12. மற்றவர்களுடன் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்.
13. விந்தையான நடத்தையுடையவர்.
14. தமக்குத்தாமே ஊறுவிளைவித்துக் கொள்ளமாட்டாதவர்.
15. சொந்த வாழ்க்கையில் இல்லற உறவு, மன நிறைவு தருவதாகவோ நிலைத்ததாகவோ இருக்காது.
16. வாழ்க்கையில் இலக்கு எதுவும் இல்லாதவர்; நிகழ்காலச் சம்பவங்களிலேயே வாழ்பவர்.
சமூக எதிர்ப்பு ஆளுமைக்குப் பரம்பரையும் காரணமாக இருக்கலாம். பொதுவாக ஆண் உயிரணுப்பிரிவில் ‘எக்சு, ஒய்’ என்ற உயிரணுக்கோல்களும் பெண் உயிரணுப் பிரிவில் ‘எக்சு, எக்சு’ என்ற உயிரணுக்கோல்களும் காணப்படுகின்றன. குற்ற நடத்தையில் ஈடுபட்டவர்களுள் பெரும்பாலோர் எக்சு (X), ஒய் (Y), ஒய் (Y), என்ற உயிரணுப்பிரிவை (அதாவது மிகையான ஓர் ஒய் உயிரணுக்கோல்) உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. ஆனால், இத்தகையோர் குறைந்த நுண்ணறிவினரா என்பதைப் பற்றி இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. சமூக எதிர்ப்பு ஆளுமையினரிடம் மின் மூளைமானியின் (Electro Encephalogram) உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகள், இத்தகையோரிடம் மூளை அலைப்பிறழ்வுகள் காணப்படுவதாகக் கூறுகின்றன. அதாவது மின் மூளை அலைகள் முதிர்ச்சியடையாத நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. இவ்வலைகள் முதிர்ச்சி நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஆதலின் இத்தகையோர் நுண்ணறிவு முதிர்ச்சி குன்றியவர்களாக இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. மனவெழுச்சிக்கான வலிமை வாய்ந்த சாதாரண மனிதனுக்குத் தூண்டல்களாக அமையக் கூடிய நிகழ்ச்சிகள், சமூக எதிர்ப்பு ஆளுமையினரின் தானியங்கு நரம்பு மண்டலத்தை, மனவெழுச்சி நிலைக்கு எழுப்புவதில்லை. குடும்பச் சூழ்நிலையும் சமூக எதிர்ப்பு ஆளுமைக்குக் காரணமாக அமைகின்றன. மேலும் மேம்பாட்டுளம், பயனுள்ள தன்முனைப்பு ஆகியவை உருவாகுவதற்கு இவர்களின் பெற்றோர் இவர்களுக்கு உறுதுணையாக இருக்காத காரணத்தினால், இவர்கள் பண்படா மனத்தின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றனர்.
<b>துணை நூல்</b>:<br>
<b>Joseph Mehr,</b> Abnormal Psychology, CBS College Publishing. New York. 1983.
<section end="ஆளுமைக் கோளாறுகள்"/>
<section begin="ஆளுமை மதிப்பீடு"/>
{{dhr}}
<b>ஆளுமை மதிப்பீடு</b> என்பது, தனிமனிதனின் பண்புகளை உளவியல் விதிகளின் உதவியுடன் பலகூறுகளில் ஆராய்தலாகும். அன்றாட வாழ்க்கையில் ஒருவனுக்குப் பல்வேறு வகையான சமூக உறவுகள் ஏற்படலாம். இவ்வுறவுகளையொட்டிய நடத்தைகளைப் புரிந்து கொள்வதற்கு அவனுடைய ஆளுமையைப் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. தனிமனிதனிடம் காணக் கூடிய நிலையான நடத்தைக் கூறுகளை அவனுடைய ஆளுமைப் பண்புக்கூறுகள் என்று<noinclude></noinclude>
jnf7t0bdqlqlh5v06p6kb0q1w2ydgnb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/786
250
623575
1948167
1863942
2026-06-20T09:16:33Z
Sridevi Jayakumar
15329
1948167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆளுமை மதிப்பீடு|746|ஆற்றலும் ஆணையுரிமையும்}}</noinclude>என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. பணியாளர் தேர்வு நிகழும்பொழுதே அவர்களிடம் தாக்குதல் தன்மை (Aggression). வன்முறை (Violence), கருத்துத்திரிபு மனப்பாங்கு (Paranoid Tendency), பிடிவாதம், கருத்துவயமாதல் (Supprestibility) போன்ற உளக்கூறுகள் காணப்படுகின்றனவா என்பதைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு பண்புக் கூறுகளைக் கண்டுபிடிப்பதனால் தொழிலமைதி, நிறுவன ஒழுங்கு போன்றவற்றினுக்கு ஊறு செய்யக் கூடியவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்க்கலாம். பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு செய்யப்படும் பொழுதும் இத்தகைய சோதனைகளைப் புதியனவாக அவ்வப்பொழுது அமைத்துப் பயன்படுத்துகின்றனர்.
கல்வி நிலையங்களிலும் இச்சோதனை, மாணவர்களின் பண்புக் கூறுகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆவன செய்யப் பேருதவியாக இருக்கிறது. இராணுவத்தில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆளுமைச் சோதனைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இத்துறையில் தனிப்பட்ட பயிற்சி பெற்றவர்களாலும் உளநோய் நீக்கு உளவியலாளர்களாலும் மட்டிலுமே ஆளுமைச் சோதனைகளை உருவாக்குதலும் அமைத்தலும் பயன்படுத்தலும் இயலும்.
இக்காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஆளுமைச் சோதனைகளுள் சில இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன :
பதற்ற அளவை (Anxiety Scale), மாட்கலி ஆளுமைப் பட்டியல் (Maudsley's Personality Inventory), ஐசங்கு அளுசமப் பட்டியல் (Eysenk Personality Inventory), உளச்சோர்வு அளவை (Depression Scale), வாழ்க்கை நிகழ்ச்சிகள் அளவை (Life Events Scale), பொது உளக் கோளாறு அளவை (General Neurotic Scale), கில்போர்டு சிம்மர்மன் மனப்பாங்கு அளவீடு (Guilford-Zimmerman Temperament Survey), மூனி சிக்கல் சீராய்வுப் பட்டியல் (Mooney Problem Check List), தார்ன்டைக்கு மனப்பாங்குப் பரிமாணங்கள் (Thorndike Dimensions of Temperament). கெண்ட்டு உரோசனாப்புத் தடையிலா இயையுச் சோதனை (Kent Rosanoff Free Association Test), படக் கதைச் சோதனை (Make A Picture Story - MAPS Test), உரோசன்சுவெர்கு மனக் குலைவுப் படச் சோதனை (Rozcnzwerg Picture-Frustration Study P-F Study), பிளாக்கி படங்கள் (Blacky Picture), முதியோர் பொருள் இணைத்தறி சோதனை (Gerontological Appreception Test), பதினாறு ஆளுமைக் காரணிப் பட்டியல், மின்னி சோட்டா பன்முக ஆளுமைப் பட்டியல், உரோர்சாக்கு மைத்தடச் சோதனை.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Anne Auasasi.</b> Psychological Testing, Collier Macmillian international Edition, New York, 1976.<br>
<b>William Samuel,</b> Personality, McGraw Hill Inc, New York. 1981.<br>
<b>Lee J. Cronbach,</b> Essentials of Psychological Testing, Harper & Row Publishers. New York. 1949.<br>
<b>Ernest R. Hilgard, et al,</b> Introduction to Psychology, Harcourt Brace Jovanovich, New York, 1975.
<section end="ஆளுமை மதிப்பீடு"/>
<section begin="ஆற்றலும் ஆணையுரிமையும்"/>
{{dhr}}
<b>ஆற்றலும் ஆணையுரிமையும்</b>: ஆற்றலைப் போன்ற தன்மையுடையது செல்வாக்கு. ஆனால் இரண்டும் ஒன்றன்று. ஆற்றல் வேறு; செல்வாக்குவேறு, ‘செல்வாக்கு மற்றவர்களை ஒரு குறிப்பிட்ட நிலையான வழியில் நடக்குமாறு தூண்டும் தன்மை கொண்டது. ஆனால், ஆற்றல் (Power) மற்றவர்களை ஒரு நிலையான வழியில் நடக்குமாறு கட்டாயப்படுத்தும் தன்மை கொண்டது’. செல்வாக்கிற்கு ஒருவர் தம் விருப்பத்தோடு இணங்குகிறார். ஆனால், ஆற்றலுக்கு அவர் விரும்பினாலும், விரும்பாவிடினும் அடிபணிய வேண்டியிருக்கிறது. ஆகவே, அவர் ஆற்றலுக்குக் கட்டாயமாக அடிபணிகிறார். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத் தொண்டர் ஆடு, கோழிகளைக் கோயில்களில் பலியிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளும்போது, அவருடைய வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், செல்வாக்கு இடம்பெறுகிறது. ஆனால், ஓர் அரசாங்க அதிகாரி அத்தகைய சூழலில் ஆடு கோழிகளைப் பலியிடக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்ளும்போது ஆற்றல் இடம்பெறுகிறது. மக்கள் ஆற்றலுக்கு அடிபணிகிறார்கள்.
மேலும், ஒருவர் தம் செல்வாக்கைப் பயன்படுத்தும்போது அது உரிமை அடிப்படையில் நிகழ்வதில்லை. ஆனால், ஆற்றலைப் பயன்படுத்தும்போது அது உரிமை அடிப்படையில் நிகழ்கிறது. எனவே ஆற்றலைப் பயன்படுத்துவதில் உரிமை அடங்கியிருக்கிறது.
ஆற்றல் பயன்படுத்தப்படும்போது அதைப் பயன்படுத்துபவர் அதற்கு உட்படுபவர் என்ற தொடர்பு நிலை - (ஆற்றல் தொடர்பு நிலை) உண்டாகிறது. இந்த நிலை உண்டாவதற்கு, ஆற்றலைப் பயன்-<noinclude></noinclude>
t8bnghqsbrwt14faizlex0a5m8n598h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/789
250
623578
1948168
1863963
2026-06-20T09:17:35Z
Sridevi Jayakumar
15329
1948168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆற்றுப்படை இலக்கியம்|749|ஆற்றுப்படை இலக்கியம்}}</noinclude>Social Sciences, Ed, by Julius Gould and William L. Kolb, New York 1964.<br><b>Tiamsheff, N.S.,</b> Sociological Theory, Its Nature and Growth Random House, New York, 1967.
<section end="ஆற்றலும் ஆணையுரிமையும்"/>
<section begin="ஆற்றுப்படை இலக்கியம்"/>
<b>ஆற்றுப்படை இலக்கியம்</b>: ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர் பாடுதற்கு மேற்கொண்ட துறை வகைகளுள் ஒன்று. தொல்காப்பியர் புறத்திணையியலில், ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச், சென்றுபய னெயிரச் சொன்ன பக்கமும்’ என்னும் நூற்பாப் பகுதியில் ஆற்றுப்படையின் இலக்கணம் கூறியுள்ளார். ஆற்றுப்படையென்பது கூத்தர் முதலானவருள் ஒருவர் ஒருவள்ளல்பால் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த இரவலர்க்கு அறிவுறுத்தி அவரும் அவன்பாற் சென்று தாம் பெற்றது போலப் பெறுமாறு வழிப்படுத்துவதாகும். ஆறு வழி; படை-படுத்துதல் என்பதாம். ஒரு திணைக்குரிய துறை வகையாக அமைந்த ஆற்றுப்படை, அதன் சிறப்பினால், வளர்ச்சியுற்றுத் தனியே ஓர் இலக்கிய வகையாக அமைந்தது. பின்னர்ச் சிற்றிலக்கியங்களாகிய பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டபோது, அவற்றுள் ஒன்றாக இடம்பெற்றது. பிரபந்த இலக்கணங் கூறும் பாட்டியல் நூல்கள் இதன் இலக்கணத்தைக் குறிக்கலாயின.
இவ்விலக்கணம் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களில் விரிவடைந்து காணப்படுகிறது. கூத்தர் பாணர் பொருநர் விறலியர் போலவே புலவரையும் புரவலன்பால் ‘செல்கென விடுப்ப தாற்றுப்படை’ என்றும், ‘புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே’ என்னும் பன்னிருபாட்டியல் விதி வகுக்கிறது, தொல்காப்பியத்தில் புலவரை ஆற்றுப்படுத்துதல் என்பது இடம்பெறாது போகவே, யுறநானூற்றில் இடம் பெறும் புலவராற்றுப்படை, பத்துப்பாட்டில் இடம் பெறும் திருமுருகாற்றுப்படை இவற்றை நினைந்து இவ்விலக்கணம் பின்னர் எழுதப்பட்டதாகக்கொள்ளலாம்.
சங்கவிலக்கியங்களுள் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்றில் பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை ஆகிய துறைக்குரிய சில பாடல்களும், பதிற்றுப்பத்தில் பாணாற்றுப் படை விறலியாற்றுப் படை ஆகிய துறைக்கான சில பாடல்களும் காணப்படுகின்றன.
இவ்விரு இலக்கியங்களிலும் இடம்பெறும் ஆற்றுப்படைப் பாடல்களில் பாணரின் அல்லது விறலியரின் வறுமைநிலை, அவர்தம் இசைக்கருவிகள், மன்னர்களின் போர்ச்சிறப்பு, நாட்டுச்சிறப்பு, ஊர்ச்சிறப்பு ஆகியவை குறிக்கப்படினும், கொடையாளிகளின் கொடைச் சிறப்பே மையப்பொருளாக அமையக் காணலாம். ‘எத்துணை யாயினும் ஈத்தல் நன்று’ (புறம். 141) என்று புரவலர்கள் ஈதலையே அழகிய செயலாகத் தம் வாழ்நாளிற் கொண்டனர் என்பதையும், அவ்வீதல் தானும் அவரால் மறுமை நோக்கிச் செய்யப்பட்டதன்று, பிறர் வறுமை நோக்கிச் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. எந்நாளும் உடுத்தாது; போர்த்தித் திரியாது என அறிந்துவைத்தும் மயிலுக்குப் போர்வையளித்த பேகனின் கொடை மடம் கூறப்படுகிறது. பேகனைக் காணா முன்பு ‘நின்னினும் புல்லியேம்’ என்றும், அவனைக் கண்டபின்பு, ‘இனியே இன்னேம் ஆயினேம்’ என்றும் பாணன் கூறும் கூற்றுகள் பேகனின் வண்மையை எடுத்துக்காட்டுகின்றன. ஊடற்காலத்துத் தம் மகளிர் சினந்துயார்த்த பார்வைக்கு அஞ்சுதலைக் காட்டிலும் இரவலர்தம் பசித்துன்பத்தை அஞ்சுகின்ற நெஞ்சினன் என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் பாடுவதும், பிறன்கடை மறப்ப நல்குவன் (புறம். 68) என்று நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடுவதும், இரவலர் வறுமையைப் போக்குவது மட்டுமேயன்றி, அவர்கள் மீண்டும் இரவாது வாழ வேண்டும் என்று எண்ணிய அன்றைய கொடையாளிகளின் அருள் உள்ளங்களையும் தெரிவிக்கின்றன.
புறத்திலும், பதிற்றுப்பத்திலும் இடம்பெறும் பாடல்கள் சிலவடிகளையே கொண்டனவாதலின் இரப்பார், வள்ளல்கள், அவர்தம் நாடுகள், தமிழகத்தின் நிலவளம் போன்றவை பற்றிய செய்திகள் அவற்றில் விரிவாகக் கூறப்படவில்லை. இவற்றை விரிவாகக் கூறவேண்டும் என்று புலவர்கள் எண்ணிய எண்ணத்தின் விளைவே பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படை இலக்கிய நூல்களாகும்.
பத்துப்பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை இலக்கியங்களாக இடம் பெறுவதினின்றும் அக்காலத்தே இவ்விலக்கிய வகை பெற்றிருந்த செல்வாக்கை உணரலாம். அவை முருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பனவாகும்.
முருகாற்றுப்படை நக்கீரரால் இயற்றப்பட்டது. முருகாற்றுப்படை என்றுந்தொடருக்கு, ‘வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது’ என்று நச்சினார்க்கினியர் பொருள் விளக்கம் தந்துள்ளார். இது பிற ஆற்றுப்படைகளினின்றும் வேறுபடுகிறது. பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப் படுபவர்களின் பெயரொடு சார்த்தி வழங்கப்பட, இவ்வாற்றுப்-<noinclude></noinclude>
k2xlhlnsdwm8kkluvajwas19ty93j9n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/792
250
623627
1948169
1864265
2026-06-20T09:18:27Z
Sridevi Jayakumar
15329
1948169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குப் ............|752|ஆற்றுப் பள்ளத்தாக்குப் ............}}</noinclude>கொண்டு விளங்கும் ஐயப்பன்பால் ஆற்றுப்படுத்தும். ‘ஐயப்பன் ஆற்றுப்படை’ என்னும் நூலும் அண்மையில் தோன்றியுள்ளது. இவ்வாறு ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆற்றுப்படை அமைப்பில் மாறாது, பல பொருள் அடிப்படையில் தமிழில் தோன்றிச் செழித்துள்ளன.{{Right|இரா.செ.}}
<section end="ஆற்றுப்படை இலக்கியம்"/>
<section begin="ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்"/>
{{dhr}}
<b>ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்</b>: இத்திட்டம் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தப் பன்முக நோக்குடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதாகும். ஒரே காலத்தில் இத்திட்டங்கள் பல நோக்கங்களை உள்ளடக்கிச் செயலாற்றுவதால் மொத்தச் செலவில் மிகையான சேமிப்போடு, வளங்கள் வீணாவது தடுக்கவும்படுகின்றது. நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவையான முதலாக்கத்திற்கு (Capital Formation) இத்திட்டங்கள் அடிகோலுகின்றன. வேளாண்மை வணத்திற்கான நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான மின் உற்பத்தி, போக்குவரத்துக்கான நீர்வழிப் போக்குவரவு வசதிகள், இவற்றுடன் தொடர்புடைய பிற தொழில்கள், குடிதண்ணீர் வசதித் திட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப் படுகின்றன. இவை பொருளாதாரத்தின் அகக் கட்டுமானங்கள் (Infrastructure) ஆகும்.
இத்திட்டங்களின் நோக்கங்களாகக் குறிப்பிடத்தக்கவற்றுள் முதலிடம் பெறுவது நீர்ப்பாசனமாகும். ஆறுகளில் பெருகியோடும் தண்ணீர் கடலில் சென்று சேருமுன், அணைகள் வாயிலாகத் தேக்கப்பட்டு, நிலங்களுக்கு நீர்வளம் தந்து உணவு உற்பத்தியைப் பெருக்க உதவுகிறது. இத்திட்டத்தால் பயிரிடப்படாத நிலங்கள், வறண்ட நிலங்கள் முதலியன நீர்ப் பாசனம் பெற்று வேளாண்மை வளம் சிறக்கிறது. முன்னரே பயிரிடப்படும் நிலங்கள் மிகுதியான நீர் வளம் பெறுவதால் கால இடைவெளியின்றி ஆண்டு முழுவதும் அவை பயிரிடப்படுகின்றன. நீர்வளம் பெறும் நிலங்களின் மதிப்பு (Value of Land) உயர்வதால், குடியானவர்களின் வருமானமும் உயருகிறது. அணைக்கட்டின் கட்டிடப் பணி வழியாகக் கட்டிடத் தொழிலும். புதுக் குடியிருப்பும், இவற்றைத் தொடர்ந்து வாணிகம் போன்ற தொழில்களும் தொடங்கப்பட்டுச் சுற்றுப்புறம் முன்னேற்றமடைகிறது. அணைக்கட்டுகள் நீர்ப்பாசன வளத்தைப் பெருக்குவன மட்டுமல்லாமல், வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் நில அரிப்பைத் தடுப்பதற்கும் குடிநீர் வசதிகளுக்கும் பெரிதும் உதவுகின்றன. அழிவுக்குட்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நிலங்களின் ஆக்கத்திறன் மிகுதிப்பட்டுப் பக்கத்திலுள்ள நிலங்களும் செறிந்த அளவில் பயன்படுத்தப் (Intensive Use) படுகின்றன. வெள்ளப் பெருக்கினால் ஆண்டுதோறும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் இழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன. குடிநீர் வசதிகள் இல்லாத இடங்களுக்கும், சுத்தம் செய்யப்பட்ட குடிநீர் பெறாத இடங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும்படி இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. திட்டத்திற்குட்பட்ட இடங்களும் சுற்றுப் புறங்களும் மீன்டிம், வனவிலங்கு, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் ஆய்வு நிலையங்களுக்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றன. ஆற்றுப் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம் (Multi-Purpose River Valley Project), உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களையும் செயலாற்றுகிறது; புது நீர்வழித் தடங்களை (Routes) உருவாக்குகிறது; நீர்வழிப் போக்குவரத்திலுள்ள இடர்களைப் போக்கியும், தாமதங்களைத் தவிர்த்தும், சாலை, இரயில்வே போக்குவரத்துத் தடங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்தும் திறமையான, நீண்டதூர, குறுகிய நீர்வழிப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குகிறது.
ஆற்றுப் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டத்தின் கீழ்ச் செயற்படும் நீர் மின்சாரத் திட்டங்கள் (Hydro-Electric Power Projects) குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அவை தொழிற்சாலைகளுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் மின்சாரம் அளிப்பதால், ஆக்கத்திறனும் பொருளாதார முன்னேற்றமும் விரைவில் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களின் வாயிலாகப் பன்னோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
<b>தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்</b>: இத்திட்டம் தாமோதர், போரகார் (Borakar) ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ளப் பெருக்கத்தைத் தவிர்க்கவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும், நீர்வழிப் போக்குவரத்து வசதியை உருவாக்கவும் தொடங்கப்பட்டது, திலெயா (Tilaiya), கோனார் (Konar), மெதான் (Maithon), பன்செட் மலை (Panchet Hill), ஆகிய நான்கு இடங்களிலும் பெரிய நீர்த்தேக்க அணைகளும் நீர்மின் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு, நான்கு அணைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. பொகாராவில் 2,25,000 கி.வா. மின் ஏற்றம் கொண்ட அனல் மின் நிலையம் (Thermal Power Station), 800 கல் தூர மின்விசை அலை ஆற்றல் இணைப்பு (Power Transmission Grid) ஆகியவை நிறுவவும்துர்க்காபூரில் ஒரு குறுக்கணை கட்டவும், 1550 கல் நீள நீர்ப்பாசனக் கால்வாய் வெட்டவும், அதனைக் கூக்ளி (Hooghly) நதி வரை 85 கல் தூரத்திற்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவிலுள்ள தென்னசிப்-<noinclude></noinclude>
t6imt4k4no5xowumzrbs1xs24byg9c1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/793
250
623628
1948170
1864269
2026-06-20T09:19:39Z
Sridevi Jayakumar
15329
1948170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆற்றுப் பள்ளத்தாக்குப்........|753|ஆறுகள்}}</noinclude>பள்ளத்தாக்கு ஆணையத்தின் (Tennessee Valley Authority) அமைப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட, 1948-ஆம் ஆண்டு தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவரை 1225 கோடி உரூபாவுக்கு மேலாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களுக்குப் பயன்படுவதாக உள்ளது.
<b>இராகுட் அணைத்திட்டம் (Hirakud Dam Project)</b>: இது, 1937-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வணை உலகிலேயே நீளமானதாகக் கருதப்படுகிறது. கட்டாக்கு (Cuttack), பூ (Puri), மாவட்டங்களில் 8000 சதுரக்கல்லுக்கு மேல் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் இடங்கள், 200 கோடி உரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்ட இத்திட்டத்தால் பாதுகாப்புப் பெற்றுள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் ஒரிசா மாநில வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு அடிகோலுவதாக உள்ளது.
<b>பக்ரா-நங்கல் திட்டம்</b>: இத்திட்டத்தினால் பக்ரா, நங்கல் அணைகளும் மின் நிலையங்களும் தோற்றுவிக்கப்பட்டு, பஞ்சாபு (Punjab), இராசசுத்தான் (Rajasthan) மாநிலங்கள் வேளாண்மையிலும் தொழில் துறையிலும் வளமடைந்துள்ளன. இங்கு 1946-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
<b>பிற திட்டங்கள்</b>: பீகார் மாநில வெள்ளப் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கோசி திட்டம் 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், பிற திட்டங்களைப் போல் இது முடிவு பெறவில்லை. இத்திட்டத்தினால் 36 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்வளம் கிடைத்துள்ளது. அன்றியும், 20 ஆயிரம் கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் முழுமையும் பயன்பெறும் நாகார்ச்சுனசாகர் திட்டத்தின் (Nagarjunasagar Project) மூலம் கிருட்டிணா ஆற்றின் மேல் அணை கட்டப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், இராசசுத்தான் மாநிலங்களின் சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம் 1952-இல் தொடங்கப்பட்டது. இராசசுத்தானில் ஓடும் சம்பல் ஆற்றின் மேல் கட்டப்பட்ட அணையின் மூலம் உருவாக்கப்பட்ட காந்தி சாகர் நீர்த் தேக்கமும், கோதா (Kotah) குறுக்கணையும் நீர்ப்பாசன வசதியையும் மின்சார ஆக்கத்தையும் மிகுதிப்படுத்தியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் ஓடும் பிரீசுப் (Rihand) ஆற்றின் குறுக்கே அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவியுடன் 1955-ஆம் ஆண்டு ஓர் அணை கட்டி, அதன் மூலம் 2,50,000 கி.வா. ஆற்றல் உள்ள நீர்மின் நிலையம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாராட்டிர மாநிலத்திலுள்ளன கொய்நா திட்டம் 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 50 கோடி உரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டு முடிவு பெற்றுள்ளது.
பன்னோக்குத் திட்டங்கள் பல, முடிவு பெற்றவை எனக் குறிப்பிட்டாலும், அவற்றின் பல நோக்கங்கள் நிறைவேற்றப்படாமல், பல கட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டும், சிலவற்றில் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இத்திட்டங்களின் திட்ட வரைவுகள் (Designs) பணப் பற்றாக்குறைகளினாலும், நுட்பத் தேவையின் காரணமாகவும், தொழிலாளர் போராட்டங்களினாலும் எதிர் பார்த்த காலத்தில் முடிவு பெறவில்லை: எதிர்பார்த்த பலன்களும் அளிக்கவில்லை. குறைபாட்டுத் திட்டங்களினாலும், தனியார் ஒப்பந்தக்காரர்களின் ஆதாய நோக்கங்களினாலும், திறமையற்ற மேலாண்மையினராலும் வளங்கள் பெருமளவுக்கு வீணடிக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இடங்கள் பெரும்பாலும் முன்னேற்றமடையாத நிலையிலிருந்தமையால், உருவாக்கப்பட்ட ஆக்கத் திறன், முதலாக்கம் ஆகியவை முழுமையாகப் பயன்படுத்தும் பக்குவம் பெறவில்லை. சுற்றுப் புறங்கள் தொழிலிலும், வேளாண்மையிலும் வளர்ச்சியடையா நிலையில் உண்டாக்கப்பட்ட நீர்ப்பாசன, மின்சார வசதிகள் முழுப்பயனை அடையவில்லை. இத்திட்டங்களின் பாதுகாப்புச் செலவு மிகுதியான அளவிலிருப்பதால், அண்மைக் காலங்களில் புதுத்திட்டங்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் சிறப்பிடம் பெற்று நிறைவேற்றப்பட்ட பன்னோக்குத் திட்டங்கள், பசுமைப் புரட்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் அடிப்படைக் காரணியாகவும் நாட்டின் பொருளாதார் அகக் கட்டுமான அடிப்படை மூலதனமாகவும் விளங்குகின்றன எனலாம். இத்திட்டங்களின் நன்மைகளை உடனுக்குடன் அறிய இயலாது. இவை இயங்கத் தொடங்கி, நீண்டகாலம் செயற்பட்ட பிறகு, ஆய்வுகள் மூலம் ஆக்கச் செலவின் பயன் விகிதத்தை அறியலாம்.{{Right|அ.இரா.}}
<section end="ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்"/>
<section begin="ஆறகழூர்"/>
{{dhr}}
<b>ஆறகழூர்</b> தென்னாட்டில் பண்டைக்காலத்தில் மகதம் என்று வழங்கிய ஒரு சிறு பகுதியின் தலைநகரம். அம்மகதம் இன்றைய சேலம் மாவட்டத்தின் கீழ்ப் பகுதியும், தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்குப் பகுதியும் கொண்டது. இந்நாட்டினைப் பாணர்கள் (Banas) ஆண்டனர். அவர்கள் வாணர்கள், வாணாதிராசர், வாணகோவரையர் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர் அவர்கள் குறுநில மன்னர்கள்.{{Right|ம.இரா.}}
<section end="ஆறகழூர்"/>
<section begin="ஆறுகள்"/>
{{dhr}}
<b>ஆறுகள்</b> இயற்கையான நீர்ப் பெருக்கையும் நிலையான போக்கையும் கொண்டு நிலத்தில்<noinclude></noinclude>
3wtbngzdlaer4oucnxxxjrx9il1xogk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/796
250
623632
1948171
1864281
2026-06-20T09:23:11Z
Sridevi Jayakumar
15329
1948171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுகள்|756|ஆறு நாட்டார் மலை}}</noinclude>உலகின் சிறப்பான ஆறுகள் சிலவற்றைக் கீழ்க் காணும் பட்டியலில் காணலாம்.
::{|
|<b>இந்தியா</b> || <b>நீளம் (கி.மீ)</b>
|-
|பிரமபுத்திரா || 2897
|-
|கங்கை || 2510
|-
|கோதாவரி || 1450
|-
|கிருட்டிணா || 1280
|-
|நருமதை || 1245
|-
|தபதி || 950
|-
|மகாநதி || 885
|-
|காவிரி || 765
|-
|<b>பாகிசுத்தான்</b> ||
|-
|சிந்து || 2897
|-
|<b>ஆசியா</b> ||
|-
|யாங்கட்சி || 6300
|-
|ஓயாங்கோ || 4828
|-
|இரிட்டிசு || 4442
|-
|ஆமூர் || 4353
|-
|இலேனா || 4270
|-
|மீகாங்கு || 4184
|-
|எனிசி || 4184
|-
|ஒப்பு || 3681
|-
|யூபரெட்டீசு || 3597
|-
|<b>ஐரோப்பா</b> ||
|-
|வோல்கா || 3690
|-
|தான்யூபு || 2858
|-
|<b>ஆசுத்திரேலியா</b> ||
|-
|மர்ரே டார்லிங் || 3718
|-
|<b>ஆப்பிரிக்கா</b> ||
|-
|நைல் || 6738
|-
|காங்கோ || 4700
|-
|நைசர் || 4184
|-
|<b>வட அமெரிக்கா</b> ||
|-
|கென்மசி || 4241
|-
|மிசிசிப்பி || 3779
|-
|மிசூரி || 3726
|-
|செயிண்ட்டு இலாரன்சு || 3058
|-
|இரியோ கிராண்டு || 3034
|-
|யூகான் || 2849
|-
|நெல்சன் || 2575
|-
|அர்கன்சா || 2334
|-
|கொலொராடோ || 2334
|-
|<b>தென் அமெரிக்கா</b> ||
|-
|அமேசான் || 6337
|-
|புருசு || 3380
|-
|மடீரா || 3240
|-
|சாவோ பிரான்சிசுகோ || 3199
|-
|பரானா || 2940
|-
|சாபுரா || 2816
|-
|தாகண்டிசு || 2699
|-
|பராகுவே || 2549
|-
|நீக்கிரோ || 2253
|-
|}
<section end="ஆறுகள்"/>
<section begin="ஆறு நாட்டார் மலை"/>
{{dhr}}
<b>ஆறு நாட்டார் மலை</b> திருச்சி மாவட்டம் கரூர் வட்டத்தில் அமைந்துள்ள வேலாயுதம் பாளையம் கிராமத்தின் தென்பகுதியில் உள்ளது. இம்மலையை ஆர்நாட்டார் மலை, ஆர்நாட்டா மலை. புகழி மலை, ஆறுநாட்டார் மலை முதலான பல பெயர்களால் குறிக்கின்றனர். 1. அரையநாடு, 2. தலைய நாடு, 3, தட்டைய நாடு, 4. கீழங்க நாடு, 5. வெங்கால நாடு, 6. குறுப்பு நாடு ஆகிய ஆறுநாட்டினருக்கும் உரிமை உடைய மலையாதலின் இது ஆறுநாட்டார் மலையாயிற்று என வழக்காறுகள் குறிக்கும். இம்மலையின் உச்சியில் முருகப் பொருமானின் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசனை உரிமை பெற்றவர்கள் வேட்டுவர் ஆவர். இம்மலையின் உச்சியில் தென் புறமும் வட புறமும் பத்துக்கும் மேற்பட்ட சமணப்படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளின் அருகிலும், குகை வாயிலின் மேற்புறத்திலும், வெளிச்சுவர்களிலும் தமிழ் - பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு கோ ஆதன் செல்லிரும்பொறை, இவன் மகன் பெருங்கடுங்கோன், இவன் மகன் இளங்கடுங்கோன் என்ற மூன்று சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.{{nop}}<noinclude></noinclude>
6vr4bp8kal06szqp0fusu10tatjmyx1
1948172
1948171
2026-06-20T09:23:54Z
Sridevi Jayakumar
15329
1948172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுகள்|756|ஆறு நாட்டார் மலை}}</noinclude>உலகின் சிறப்பான ஆறுகள் சிலவற்றைக் கீழ்க் காணும் பட்டியலில் காணலாம்.
::{|
|<b>இந்தியா</b> || <b>நீளம் (கி.மீ)</b>
|-
|பிரமபுத்திரா || 2897
|-
|கங்கை || 2510
|-
|கோதாவரி || 1450
|-
|கிருட்டிணா || 1280
|-
|நருமதை || 1245
|-
|தபதி || 950
|-
|மகாநதி || 885
|-
|காவிரி || 765
|-
|<b>பாகிசுத்தான்</b> ||
|-
|சிந்து || 2897
|-
|<b>ஆசியா</b> ||
|-
|யாங்கட்சி || 6300
|-
|ஓயாங்கோ || 4828
|-
|இரிட்டிசு || 4442
|-
|ஆமூர் || 4353
|-
|இலேனா || 4270
|-
|மீகாங்கு || 4184
|-
|எனிசி || 4184
|-
|ஒப்பு || 3681
|-
|யூபரெட்டீசு || 3597
|-
|<b>ஐரோப்பா</b> ||
|-
|வோல்கா || 3690
|-
|தான்யூபு || 2858
|-
|<b>ஆசுத்திரேலியா</b> ||
|-
|மர்ரே டார்லிங் || 3718
|-
|<b>ஆப்பிரிக்கா</b> ||
|-
|நைல் || 6738
|-
|காங்கோ || 4700
|-
|நைசர் || 4184
|-
|<b>வட அமெரிக்கா</b> ||
|-
|கென்மசி || 4241
|-
|மிசிசிப்பி || 3779
|-
|மிசூரி || 3726
|-
|செயிண்ட்டு இலாரன்சு || 3058
|-
|இரியோ கிராண்டு || 3034
|-
|யூகான் || 2849
|-
|நெல்சன் || 2575
|-
|அர்கன்சா || 2334
|-
|கொலொராடோ || 2334
|-
|<b>தென் அமெரிக்கா</b> ||
|-
|அமேசான் || 6337
|-
|புருசு || 3380
|-
|மடீரா || 3240
|-
|சாவோ பிரான்சிசுகோ || 3199
|-
|பரானா || 2940
|-
|சாபுரா || 2816
|-
|தாகண்டிசு || 2699
|-
|பராகுவே || 2549
|-
|நீக்கிரோ || 2253
|-
|}
<section end="ஆறுகள்"/>
<section begin="ஆறு நாட்டார் மலை"/>
{{dhr}}
<b>ஆறு நாட்டார் மலை</b> திருச்சி மாவட்டம் கரூர் வட்டத்தில் அமைந்துள்ள வேலாயுதம் பாளையம் கிராமத்தின் தென்பகுதியில் உள்ளது. இம்மலையை ஆர்நாட்டார் மலை, ஆர்நாட்டா மலை. புகழி மலை, ஆறுநாட்டார் மலை முதலான பல பெயர்களால் குறிக்கின்றனர். 1. அரையநாடு, 2. தலைய நாடு, 3, தட்டைய நாடு, 4. கீழங்க நாடு, 5. வெங்கால நாடு, 6. குறுப்பு நாடு ஆகிய ஆறுநாட்டினருக்கும் உரிமை உடைய மலையாதலின் இது ஆறுநாட்டார் மலையாயிற்று என வழக்காறுகள் குறிக்கும். இம்மலையின் உச்சியில் முருகப் பொருமானின் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசனை உரிமை பெற்றவர்கள் வேட்டுவர் ஆவர். இம்மலையின் உச்சியில் தென் புறமும் வட புறமும் பத்துக்கும் மேற்பட்ட சமணப்படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளின் அருகிலும், குகை வாயிலின் மேற்புறத்திலும், வெளிச்சுவர்களிலும் தமிழ் - பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் ஒரு கல்வெட்டு கோ ஆதன் செல்லிரும்பொறை, இவன் மகன் பெருங்கடுங்கோன், இவன் மகன் இளங்கடுங்கோன் என்ற மூன்று சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
<section end="ஆறு நாட்டார் மலை"/>
{{nop}}<noinclude></noinclude>
aw9y0d38r7gomuusvgl083ec3elm40k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/797
250
623706
1948173
1864919
2026-06-20T09:26:37Z
Sridevi Jayakumar
15329
1948173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுமுக அடிகள்|757|ஆறுமுக நயினார்ப்பிள்ளை}}</noinclude><section begin="ஆறுமுக அடிகள்"/>
{{dhr}}
<b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>1</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; திருநெல்வேலி மாவட்டம் இராசபாளையம் தோப்புப் பட்டியைச் சேர்ந்தவர்; ஏழு வயதில் செய்யுள் இயற்றும் திறம்பெற்றவர்; பன்னிரண்டு வயதில் வழிபாட்டில் ஈடுபட்டவர். பேய்ச்சிமுத்து அம்மையை மணந்து, ஐந்து ஆண்டுகள் இல்லறம் நடத்திய இவர் காஞ்சி நிச்சல இராமாநந்த சுவாமிகளிடம் உபதேசம் பெற்றுத் துறவியானார், தொண்டைநாட்டு ஆர்க்காட்டை அடுத்த தாசர்புரத்தில் மடம் அமைத்து, வாழ்ந்து, மறைத்தார். இவர் இயற்றிய வள்ளலார் புராணம் வடலூர் இராமலிங்க அடிகளின் வரலாறு கூறுவதாகும். 3000 பாடல்கள் கொண்ட சிதானந்த சாகரம் என்னும் நூலில் வேதாந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார். இவர் குருவருட் புகழ் என்னும் நூலும் செய்துள்ளார்.
<b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர ஆதீனத் தம்பிரான்களுள் ஒருவர். சாசிமடத்துத் தலைவர் மீது பல தனிப்பாடல்கள் செய்துள்ளார்.
<b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>3</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் திருவெண்காட்டில் வாழ்ந்தவர்; பண்டார மரபில் வந்தவர்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் விருத்தம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் விருத்தம் ஆகிய நூல்களை இயற்றினார், திருப்புகழினைப் பதிப்பித்துள்ளார்.
<b>ஆறுமுக அடிகள்</b>{{sup|<b>4</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், இவரது ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் காளையார் கோயிலுக்கு அருகிலுள்ள மரக்காத்தூர், பெற்றோர் நாகலிங்கம் பிள்ளை, காமாட்சியம்மாள் ஆவர். வேளாண் மரபில் தோன்றிய இவர் இளமைவில் இல்லறம் துறந்து கோயிலூரில் முத்துக் கருப்ப சாமிகளிடம் உபதேசம் பெற்றார். வேதாந்த மடங்கள் பல சென்று, வேதாந்தம் கற்றார். காசி சென்று மீண்ட இவர், மதுரையில் தங்கி வேதாந்த நூல்களைக் கற்பித்தார். முருகப் பெருமானிடம் ஈடுபாடு உள்ளவர். ஞானவாசிட்டம், கிளிக்கண்ணி, விவேக சூடாமணி, அத்து வித உண்மை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.{{Right|த.கு.மு.}}
<section end="ஆறுமுக அடிகள்"/>
<section begin="ஆறுமுக ஆச்சாரி"/>
{{dhr}}
<b>ஆறுமுக ஆச்சாரி</b> தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்; இராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையைச் சார்ந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டம் மூண்டகாலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகசுட்டு 17-ஆம் நாள் தேவகோட்டையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இவர் குண்டடிபட்டு இறந்தார்.
<section end="ஆறுமுக ஆச்சாரி"/>
<section begin="ஆறுமுக சாமிகள்"/>
{{dhr}}
<b>ஆறுமுக சாமிகள்</b>{{sup|<b>1</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், தஞ்சை மாவட்டத்திலுள்ள தருமபுரத்தைச் சேர்ந்தவர். இவர் மாயூரம் முத்துச்சாமிப்பிள்ளை இயற்றிய ‘திருப்பனந்தாட் சிலேடை வெண்பா’, ‘தருமை சொக்கநாதர் மாலை’ முதலிய நூல்களுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார்.
<b>ஆறுமுக சாமிகள்</b>{{sup|<b>2</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலம் வல்ல தமிழ்ப் புலவர். இவர் ‘இங்கிலீசும் தமிழுமாகிய ஒக்கபுலேரியும் டையலாக்கும்’ (English and Tamil Vocabulary and Dialogue) என்னும் நூலினைக் கி.பி. 1881-ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலச் சொற்கள் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் ஆங்கிலச் சொற்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும் இவர் ‘சேந்தன் திவாகரம்-தெய்வப் பெயர்த் தொகுதி மூலம்’, ‘மாரியம்மன் தாலாட்டு’, ‘நன்னூல் மூலமும் காண்டிகை உரையும்’, ‘வைத்திய ரத்தினச் சுருக்கம்’, ‘மதுரைவீர சாமி கதை’, ‘கைவல்ய நவநீதம் என்னும் நூலுக்குப் பிறையாறு அருணாசல சாமி இயற்றிய உரை’ ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
<section end="ஆறுமுக சாமிகள்"/>
<section begin="ஆறுமுகஞ்சேர்வை"/>
{{dhr}}
<b>ஆறுமுகஞ்சேர்வை</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புவவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை அருகே உள்ள செம்பூர் இவர் ஊராகும். கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலரிடம் பயின்று, முறையூர்ச் சண்முகம் செட்டியாரின் சமூகவித்துவானாக இருந்தார். பின் சென்னையில் ‘ஆனந்த போதினி’ இதழாசிரியராகப் பணி செய்தார்.
இவர் நாலடியார், நரிவிருத்தம், சிறுபஞ்சமூலம், நளவெண்பா, குமரேசு சதகம், கபிலர் அகவல், விவேக சிந்தாமணி முதலிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அரிச்சந்திர புராண வசனம், அருணாசல புராண வசனம், குசேலோபாக்கியான வசனம், அண்டப் புளுகன் முதலிய உரைநடை நூல்களும், கம்பராமாயணச் சுருக்கம் என்னும் தொகுப்பு நூலும் செய்துள்ளார்.{{Right|த.கு.மு.}}
<section end="ஆறுமுகஞ்சேர்வை"/>
<section begin="ஆறுமுக நயினார்ப்பிள்ளை"/>
{{dhr}}
<b>ஆறுமுக நயினார்ப்பிள்ளை</b> 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி நகரினைச் சேர்ந்த பேட்டையில் பிறந்தவர். சைவ வேளாள மரபில் வந்த இவர்தம் தந்தையார் பெயர் தருமசிவபிள்ளை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடம் இலக்கண இலக்கியக் கல்வி கற்றார். விருதைச் சிவஞானயோகி வரலாறு, மகா சைவர்<noinclude></noinclude>
cjkot5bfgh93t2cu63pye074e81aq50
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/798
250
623708
1948174
1864931
2026-06-20T09:28:08Z
Sridevi Jayakumar
15329
1948174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுமுக நாவலர்|758|ஆறுமுக நாவலர்}}</noinclude>புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். புராணச் சொற் பொழிவாற்றும் திறம்பெற்ற இவர், இலங்கை சென்று சைவ சமயத் தொண்டு புரிந்துள்ளார்.
<section end="ஆறுமுக நயினார்ப்பிள்ளை"/>
<section begin="ஆறுமுக நாவலர்"/>
{{dhr}}
<b>ஆறுமுக நாவலர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் கி. பி. 1822-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லுரில், கந்தப்பிள்னைக்கும் சிவகாமியம்மைக்கும் ஐந்தாவது மகனாகத் தோன்றியவர். அரசு அலுவல் மேற்கொண்டிருந்த இவர்தம் தந்தையார் பல நாடகங்கள் எழுதித் தமிழ் மொழிக்குச் சிறந்த தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் ஆறுமுக நாவலரும் தமிழின் பால் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார், தந்தையார் தம் மக்கள் மூவரையும் ஆங்கிலக் கல்வியும் தமிழ்க் கல்வியும் கற்கச் செய்தார். இவரைத் தவிர ஏனைய உடன்பிறந்தார். நால்வரும் அரசு அலுவலில் ஈடுபட்டனர். ஆனால் நாவலர் தமிழார்வம் மிக்குச் சரவண முத்துப் பிள்ளையிடமும் சேனாதிராயரிடமும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். மேலும், இளமையில் தாமாகவே நீதி நூல்களையும், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் கற்றார். தம் தந்தையார் எழுதி முடிக்காமல் குறையாக விட்டுச் சென்ற நாடகத்தை இவர் எழுதி நிறைவு செய்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 798
|bSize = 375
|cWidth = 78
|cHeight = 100
|oTop = 260
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|ஆறுமுக நாவலர்}}
இவர் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் கொண்டு, பார்சிவல் துரை நடத்திவந்த பள்ளிக்குச் சென்று கல்வி கற்றார், தம் பத்தொன்பதாம் வயதில் அப்பள்ளியிலேயே ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு மேல் வகுப்புக்குத் தமிழும், கீழ்வகுப்புக்கு ஆங்கிலமும் கற்பித்தார். பார்சிவல் துரை, இவரிடம் விவிலிய நூலை மொழி பெயர்க்குமாறு வேண்டினார். அதனை ஏற்று, விவிலியக் கருத்துகள் சிறிதும் மாறுபடாதவாறு மொழிபெயர்த்துத் தந்தார். சென்னைக் கிறித்தவ சபையினரும் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தனர். இரண்டு மொழி பெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, நாவலருடைய மொழிபெயர்ப்பே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்தனர். இதனால், இவர் தம் ஆங்கிலப் புலமையும், மொழி பெயர்க்கும் திறனும் நன்கு புலனாயின. இவர் வடமொழியையும் தாமே கற்றுச் சிறந்த புலமையுடையவராக விளங்கினார்.
சைவமும் தமிழும் இருகண்களென எண்ணிய இவர் மற்ற சமயத்தினர் ஆற்றும் சமயத் தொண்டினைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்து சைவசமயத்தை வளர்க்கத் திட்டமிட்டார். இதற்கு மொழியுணர்வு இன்றியமையாதது எனக் கருதி, நாடெங்கிலும் பள்ளிகள் அமைக்க எண்ணினார். இதன் விளைவாக இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் கி. பி. 1848-ஆம் ஆண்டு ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ என்னும் பள்ளியைத் தொடங்கினார். இதற்காகும் செலவை ஈடு செய்யப் படியரிசி பெற்று அவற்றைப் பயன்படுத்தினார். புத்தகங்களைப் பிழையின்றிப் பதிப்பிக்க எண்ணித் தாமே கி.பி. 1849-ஆம் ஆண்டு ‘வித்தியாநுபாலன யந்திரசாலை’ என்னும் அச்சகம் ஒன்றை அமைத்தார். நாவலர் தாம் பதிப்பித்த நூல்களில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, கருத்துப்பிழை, குறுயீடுகளில்லாமை போன்றவற்றை நீக்கிச் செம்மையாக வெளியிட்டார் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, முதலிய நிறுத்தக் குறியீடுகளைத் தமிழ் நூல்களில் முதன் முதலில் பயன்படுத்தியவர் இவரேயாவார். இவர் சிதம்பரத்திற்கு வந்து, கி.பி. 1865-ஆம் ஆண்டு ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ என்னும் பெயரில் பள்ளியொன்றைத் தொடங்கினார். அதுவே இன்று ‘ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி’ யாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், கி.பி. 1872-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ‘சைவ ஆங்கில வித்தியாசாலை’ என்னும் பள்ளியையும் தொடங்கினார்.
‘ஒவ்வொரு கோயிலிலும் சைவ சமய உண்மைகளை மக்களுக்குத் தாய் மொழியிலேயே கற்பித்தல் வேண்டும்’ என்பது காமிகாகமத்தில் இறைவனால் விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியினை எடுத்துணர்த்தினார். நாவலர் பேச்சுக் கலையில் சிறந்து விளங்கியதால் சமயச் சொற் பொழிவாற்றுவதிலும், பள்ளிகளில் பயிற்றுவதிலும்<noinclude></noinclude>
l4njb787pa8gt7yjb2h5x0wdqqwk1uf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/799
250
623710
1948175
1864943
2026-06-20T09:29:29Z
Sridevi Jayakumar
15329
1948175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுமுக நாவலர்|759|ஆறுமுக முதலியார் வரகவி}}</noinclude>தம் திறமையை வெளிப்படுத்தினார். இவர் சென்னையினின்றும் குடந்தைக்கு வந்ததைக் கேள்வியுற்ற மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவரைத் திருவாவடுதுறை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, இவர் சொற்பொழிவைச் செவிமடுத்து மகிழ்ந்த ஆதீனத் தலைவர் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்ததோடு, ‘நாவலர்’ என்னும் பட்டத்தையும் அளித்துப் பாராட்டினார். இவர் இராமலிங்க சுவாமிகளின் பாக்களை அருட்பா என ஒத்துக் கொள்ளாமையால், அது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடர்ந்தார். இறுதியில் இருவரிடையேயும் ஒற்றுமை உண்டாயிற்று.
இவர் தமிழ் இலக்கிய இவக்கணங்களுக்கு எளிய முறையில் உரையெழுதி வெளியிட்டார். உரையெழுதிய நூல்கள் வருமாறு: நன்னூல், ஆத்திகுடி, கொன்றை வேந்தன், நல்வழி, கோயில் புராணம், சைவசமய நெறி, திருச்செந்தில் நிரோட்டகயமகவந்தாதி, திருமுருகாற்றுப்படை, மறைசை யந்தாதி. இவர் எழுதிய நன்னூல் உரை, காண்டிகை உரையாகும்.
இவர் பல நூல்களுக்கு உரை கண்டதோடு பல துறை மக்களும் மாணவர்களும் எளிதாகப் பயிலுமாறு நூல்கள் பல எழுதியுள்ளார். அவை வருமாறு: இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, அனுட்டான விதி, குருவாக்கியம், உடையவர் உபயம், சிவ சேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சிவாலய தரிசன விதி, சுப்ரபோதம், சூசனம், சைவசமயம் (தலைமைப் பேருரை), சைவ தூடணப் பரிகாரம், சைவ வினாவிடை, நன்னெறி, நித்திய கரும விதி, பாலபாடம் (ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு), திருவிளையாடற் புராண வசனம், யாழ்ப்பாணச் சமய நிலை, வள்ளியம்மை திருமணப் படலம், விநாயகர் கவசம், சிவகவசம், சக்தி கவசம், சரசுவதி தோத்திரம், இலக்குமி தோத்திரம் முதலியன.
இவர் பதிப்பித்த நூல்கள்: அருணகிரியந்தாதி, இலக்கணக்கொத்து மூலமும் உரையும், உபநிடதம் மூலமும் உரையும், கந்தபுராணம், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, காசித் துண்டி விநாயகர் திருவருட்பா, சிங்கைச் சிலேடை வெண்பா, சிவஞானபோதமும் பொழிப்புரையும், சிவதத்துவ விவேகம், சிதம்பர மும்மணிக்கோவை, சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், சேதுபுராண மூலம், திருக்குறன் மூலமும் பரிமேலழகர் உரையும், தருக்க சங்கிரகமும்-தருக்க சங்கிரக தீபிகையும், திருக்கருவை வெண்பா வந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கோவையார், திருச்செந்தூரகவல், திருவாசகம், திருவேங்கடையர் செய்த உபமான சங்கிரகம், தெய்வானையம்மை திருமணப்படலம், தேவாரத் திரட்டு, தொல்காப்பியம் (சொல்லதிகாரம்-சேனாவரையருரை), நன்னூல் (சிவஞான முனிவர் விருத்தியுரை), பட்டணத்துப் பிள்னையார் அருளிச் செய்த திருப்பாடல் திரட்டு, பதினோராம் திருமுறை, பிரயோக விவேக மூலமும் உரையும், புட்ப விதி, மகர பாரதம், மருதூரந்தாதி முதலியனவாகும்.
இவ்வாறு தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டு புரித்த நாவலர் கி.பி. 1870-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள தம் இல்லத்தில் காலமானார்.
<section end="ஆறுமுக நாவலர்"/>
<section begin="ஆறுமுகம் பிள்ளை, பூ."/>
{{dhr}}
<b>ஆறுமுகம் பிள்ளை, பூ.,</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் பூலாறுசாமிப்பிள்ளை. ஆசிரியர் சரவணப் பெருமாள் கவிராயர், இவர் தமிழில் செய்யுள் இயற்றும் திறம் பெற்று விளங்கினார். உடன்தலக் குறைவு ஏற்பட்ட பொழுதும் செய்யுள் இயற்றும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு சமயம் உடல் நலக் குறைவால் படுக்கையிலிருந்தபொழுது வீடு தீப்பற்றி எரிந்தது. அவ்வமயம் இவர், உதவி நாடிப் பழ.சி. சண்முகம் செட்டியாருக்குப் பல பாடல்கள் இயற்றி அனுப்பினார் என்பதும் அவர். இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார் என்பதும் கூறப்படுகின்றன. இவர் விநாயகர் திரிபு வெண்பா அந்தாதி, குழந்தாபுரிக் குமரேசர் மாலை, சித்தி விநாயகர் மும்மணி மாலை, தாயுமான சுவாமிகள் புராணம், தில்லை நடராசர் பதிகம், மதுரை யமக அந்தாதி, திருத்தொண்டர் வந்தனைக் கோவை, திருவுத்தர கோசமங்கைப் பதிகம், மருதூர் இரட்டை மணிமாலை, பஞ்சாதசத் திருப்புகழ், காரைக்குடிக் கொப்புடையம்மன் பதிகம், குழந்தாபுரிப் பதிற்றுப்பத்துப் பதிகம், கொடுமனூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, சித்தி விநாயகர் பதிகம், முகவைத் திரிபுரசுந்தரியம்மை பதிகம், அரிச்சந்திர வண்ணம் ஆகிய 16 நூல்கள் இயற்றியுள்ளார். அந்நூல்கள் சோடசப் பிரபந்தம் என்னும் பெயரில் கி.பி. 1899-ஆம் ஆண்டு ஒரே தொகுதியாக வெளியிடப்பட்டன. இவர் இயற்றியவற்றுள் 13 செய்யுள்கள், தனிச் செய்யுட் சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளன.
<section end="ஆறுமுகம் பிள்ளை, பூ."/>
<section begin="ஆறுமுக முதலியார் வரகவி"/>
{{dhr}}
<b>ஆறுமுக முதலியார் வரகவி</b> கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தொண்டை நாட்டுக் கருவம்பாகை என்னும் ஊரில் காராள மரபில் தோன்றியவர். இவர் தந்தை முத்தய்யா முதலியார். சென்னை வரதராச முதலி-<noinclude></noinclude>
2uadwhy3d0a5yqtfkrqs3lcdikk0leg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/800
250
623712
1948176
1864955
2026-06-20T09:31:00Z
Sridevi Jayakumar
15329
1948176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆறுமுக மெய்ஞ்ஞான...|760|ஆன் (தென்மார்க்கு)}}</noinclude>யாரிடம் இவர் தொல்காப்பியத்தினைப் பயின்றார். விரைந்து கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்ததால் இவர் வரகவி எனப்பட்டார். இவர் இயற்றிய ‘பூம்பாவை விலாசம்’ என்னும் நாடகம், சென்னை மயிலையில் திருஞானசம்பந்தர் எறும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைக் கூறுவது. இது செய்யுளும் உரைநடையும் கலந்தது.{{Right|த.கு.மு}}
<section end="ஆறுமுக முதலியார் வரகவி"/>
<section begin="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/>
{{dhr}}
<b>ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்; கர்நூல் மாவட்டத்தில் ஆத்மகூரில் கப்பம்மாள், சுப்பிரமணிய ஐயர் மகனாகத் தோன்றியவர். கல்வி முடிந்ததும் திருவண்ணாமலை நமசிவாயர் மடத்தில் ஆளும் முறையில் நமசிவாய அடிகளிடம் சிவலிங்க பஞ்சாக்கர உபதேசமும் பெற்றவர். செய்த நூல்கள் நிட்டாநுபூதி சாரம், வீரசைவ உண்மை அகவல், சதுர்லிங்க தச கோத்திர சதகம், இட்ட லிங்கத் திருத்தலமாலை, சிவசோடசமாலை, ஆசைச்சோடச மாலை, உய்யப்பத்து, ஓலப்பத்து, கரதலப்பத்து, கரதல நாயக பஞ்சகம், ஆடுதுறைக் குற்றம் பொறுத்தார் தோத்திரம், இட்டலிங்கப் பதிகம், சண்முகர் உரை, கரதலத் திருப்புகழ், தென்பாங்கு, மாசிலாமணிப் பதிகம், சிவசிவ பதிகம், சிவசிவ அரகர பதிகம், வீரட்டேசுவர மகாகுக அனுபவ தோத்திரக் கலிப்பா, கலித்துறை, தோத்திர மங்களம், இலிங்கப் புலம்பல். அருள்வாம உண்மை விளக்கம், பிரமதீர்க்க நிச்சயம், வெற்தருலா, உண்மையுரை, பரம உபதேச ஒழுக்கம், சிவாத்வைதக் கும்மி, ஞானிகள் நிலைமை, மேல்மைப் பதிகம் முதலியனவாகும்{{Right|த.கு.மு.}}
<section end="ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்"/>
<section begin="ஆறைகிழார்"/>
{{dhr}}
<b>ஆறைகிழார்</b> கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; ஆறை நாட்டு அவிநாசி என்னும் ஊரினர்; வைதிக சமயத்தவர்; கொங்குமண்டல வேளாளர், திருநாராவணபுரத்திலுள்ள வைணவ சமயத்தவரான மாதவ யோகியின் மாணவர். இவர் தம் ஆசிரியரின் குலமான கார் காத்த வேளாளர் மரபைப் புகழ்ந்து ‘கார்மண்டல சதகம்’ பாடியுள்ளார். இறுதியில் எட்டுச் செய்யுள்கள் கார்மண்டலச் சிறப்புக் கூறுவன. இந்நூலுக்கு முத்துத் தாண்டவராயப்பிள்ளை என்பவர் உரை எழுதியுள்ளார். அரிசில்கிழார், அதியன், அன்னி, ஆலியார், இளங்கோ வேண்மான். உமட்டூர் கிழார், உம்பற்காட்டிளங் கண்ணனார், எருமையூரன், எவ்வி, கங்கர், கூடலூர் கிழார், வெள்ளி வீதியார் முதலிய சங்ககால வள்ளல்களும் புலவர்களும், நாதமுனி, நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கார்காத்த வேளாளராவர் என்று இந்நூல் கூறுகிறது.{{Right|த.கு.மு.}}
<section end="ஆறைகிழார்"/>
<section begin="ஆன்"/>
{{dhr}}
<b>ஆன் (கிளீவ்சு - கி.பி. 1515-1557)</b> ஆன் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் நான்காம் மனைவியாவார். மணமான ஆறாம் திங்களில் இவரை அரசர் மணவிலக்கம் செய்தார். இவர் கி.பி. 1515-ஆம் ஆண்டில், கிளீவ்சு கோமகன் சானின் (John Duke of Cleves) மகளாகப் பிறந்தவர். என்றி அரசருக்கு இவளைத் திருமணம் செய்விக்க உறுதி செய்தபோது, அரசர் இவளைப் பார்த்ததில்லை. இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பெற்றதாகும். கத்தோலிக்கப் பிரான்சுக்கும், புனித உரோமானியப் பேரரசுக்கும் எதிராக நடைபெற்ற இத்திருமணம், பாராளுமன்ற ஆணையின்படி முறிக்கப் பெற்றது. இத்திருமணத்தைச் செய்விக்க உறுதுணையாக விளங்கிய தாமசு கிராம்வெல் கொல்லப்பட்டார். இங்கிலாந்திலேயே வாழ்ந்த ஆன், கி.பி. 1557-இல் காலமானார்,
<b>ஆன் (தென்மார்க்கு கி.பி. 1574-1619)</b> தென்மார்க்கைச் சார்ந்தவர். இங்கிலாந்து மன்னர் முதலாம் சேம்சின் (James I) துணைவியார்: பகட்டான காதல் வாழ்விற்கும் பெயர் பெற்றவர். இவர் கி.பி. 1574-இல் நார்வே - தென்மார்க்கு அரசர் இரண்டாம் பிரடரிக்கின் மகளாகப் பிறந்தவர். அரசரை நேரில் காணாமலேயே இவர் கி.பி.1589 இல் முதலாம் சேம்சை மணந்தார். அப்போது சேம்சு, இசுகாட்லாந்து அரசர் ஆறாம் சேம்சு என்று அழைக்கப்பெற்றார். இவர் எடின்பரோவில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். முதல் இசுடூவர்ட்டு அரசராகச் சேம்சு கி.பி. 1603-இல் அரியணையேறிய-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 800
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 130
|oTop = 205
|oLeft = 245
|Location = center
|Description =
}}
{{center|ஆன் (தென்மார்க்கு)}}<noinclude></noinclude>
8294jlofni7ojkpoorc3dossyzrpmdu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/659
250
628345
1948026
1947335
2026-06-19T15:05:51Z
Booradleyp1
1964
1948026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|629|ஈடன் அந்தோனி}}</noinclude>னப் பொருள்களில் மாற்றங்கள் செய்தோ, கடனீந்தோர் செயற்பட்டால் பொறுப்புறுதி கொடுத்தவர் விடுவிக்கப்படுவார். அவர் அனுமதியின்றி இவற்றைச் செய்யக்கூடாது. (4) பொறுப்புறுதி கொடுத்தவரின் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கடனீந்தோர் செயற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, கோதுமையை அடைமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தால், கடன் கொடுத்தவர் அந்தக் கோதுமையைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பொறுப்புறுதி கொடுத்தவர் கடனைச் செலுத்தினால் அவரிடம் கோதுமையை ஒப்படைக்க வேண்டும்.
{{larger|<b>ஈட்டுறுதிக்கும் பொறுப்புறுதிக்கும் உள்ள வேறுபாடுகள்:</b>}} இவை இரண்டும் மேலோட்டமாக ஒன்று போலத் தோன்றினாலும், இவற்றிற்கு இடையில் பல வேறுபாடுகள் உள்ளன: (1) பொறுப்புறுதியில் கடனாளிக்கும் கடனீந்தோருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும், கடனீந்தோருக்கும் பொறுப்புறுதி அளிப்பவருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும் ஆக இரண்டு ஒப்பந்தங்கள் உள்ளன. ஈட்டுறுதியில் ஈட்டுறுதி அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் உள்ள ஒப்பந்தம் மட்டுமே உள்ளது. (2) பொறுப்புறுதியில் கடனாளி, கடனீந்தோர், பொறுப்புறுதி அளிப்பவர் என மூவர் உள்ளனர். ஈட்டுறுதியில் ஈட்டுறுதி அளிப்பவர், பெறுபவர் இருவர் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள். (3) பொறுப்புறுதியில் பொறுப்புறுதி அளித்தவரின் பொறுப்பு இரண்டாம் நிலையிலுள்ளது. கடனாளி கடனைச் செலுத்தாவிட்டால்தான் பொறுப்புறுதி அளித்தவர் செலுத்த வேண்டும். ஆனால், ஈட்டுறுதி அளிப்பவர் பொறுப்பு முதன்மையானது. ஒப்பந்தப்படி, ஈட்டுறுதி அளிப்பவர் மட்டுமே இழப்பை ஈடுகட்ட வேண்டியவர் ஆகிறார். (4) பணம் செலுத்திய பிறகு, பொறுப்புறுதி அளித்தவருக்கு மாற்றமர்வு உரிமைகள் வருகின்றன. ஈட்டுறுதி கொடுத்தவருக்கு இத்தகைய உரிமைகள் இல்லை. (5) பொறுப்புறுதி வெளிப்படத் தெரியும் கடனுக்கோ கடமைக்கோ தரப்படுகிறது. ஆனால், ஈட்டுறுதி எதிர்காலத்தில் நிகழும் எதிர்பாராத செயலுக்கோ நிகழ்ச்சிக்கோ தரப்பட்டுப் பெரும்பாலும் இழப்பில் முடிகிறது. (6) பொறுப்புறுதி கொடுத்தவர் அது நிறைவேறிப் பணம் கொடுத்தால், அதைத் திரும்பப் பெறக் கடனாளி மீது வழக்குத் தொடரலாம். ஆனால், ஈட்டுறுதியில் சில சூழ்நிலைகளில் தவிரப் பெரும்பாலும் இழப்பு ஈட்டுறுதி கொடுத்தவரையே சார்கிறது. (7) பொறுப்புறுதி கொடுத்தவர் பொறுப்புறுதியினால் தமக்கு ஏற்பட்ட வட்டி, தள்ளுபடி, சரக்கு வைத்துள்ள இட வாடகை, காப்பீட்டுச் செலவு முதலிய சட்டப்படியான செலவுகள் அனைத்தையும் கடனாளியிடமிருந்து வாங்கலாம். ஈட்டுறுதியில் இனவு நிகழ்வதில்லை.
இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் 124 ஆம்பிரிவு ஈட்டுறுதியை வரையறை செய்கிறது. அதன் 126–ஆம் பிரிவு முதல் 147–ஆம் பிரிவு முடிய பொறுப்புறுதி பற்றிய விளக்கங்கள் உள்ளன. ஈட்டுறுதி பற்றிய வரையறை இந்தியச் சட்டத்தை விட ஆங்கிலச் சட்டத்தில் விளக்கமாக உள்ளது. நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பிலிருந்து ஒருவரைக் காப்பாற்றச் செய்யப்படும் வாக்குறுதியே ஈட்டுறுதியாகும் என்பது ஆங்கிலச் சட்டம். பொதுவாக ஆங்கிலச் சட்டத்தின் நியாயமான கோட்பாடுகள் இந்தியச் சட்டத்திற்கும் பொருந்தும்.
{{right|<b>சோ.சோ.மீ.சு.</b>}}
<section end="ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்"/>
<section begin="ஈடன்"/>
{{dhr}}
{{larger|<b>ஈடன்</b>}} என்னும் பெயரில் இங்கிலாந்திலும் இசுகாட்லாந்திலும் பல ஆறுகள் உள்ளன. அவற்றுள் சிறப்பானதாக வட இங்கிலாந்தில் வெகட்டுமூர்லாந்தில் உற்பத்தியாகும் ஈடன் ஆற்றைக் குறிப்பிடலாம். இந்த ஆறு கம்பர்லாந்தின் குறுக்கே வடமேற்காகப் பாய்ந்து சால்வே கடற்கழியில் கலக்கிறது. ஈடன் (Eden) பல்லத்தாக்குப் பண்ணைத் தொழிலுக்குகந்த நிலமாகும்.
<section end="ஈடன்"/>
<section begin="ஈடன் அந்தோனி"/>
{{dhr}}
{{larger|<b>ஈடன் அந்தோனி</b>}} உலகப் புகழ்பெற்றவர். இவர் திறமை மிக்க அரசியல் வல்லுநர். இவரது திறன் இவரை இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் பதவி வரை உயர்த்தியது.
ஈடன் அந்தோணி (Eden Anthony) தர்காமில் (Durham) கி.பி. 1897–ஆம் ஆண்டு பிறந்தார். பழம்பெருங் குடும்பத்தைச் சார்ந்தவராதலின் இவர் பிறவியிலேயே எல்லா வாய்ப்பினையும் பெற்றிருந்தார். இவர் ஈட்டன் (Eton) பள்ளியில் சேர்ந்து படித்தார். முதலாம் உலகப் போர் 1914–இல் தொடங்கியவுடன் படையில் சேர்ந்தார். இவர் தமது இருபதாம் வயதிலேயே இராணுவ விருதுகள் பல பெற்றார். போர் முடிந்ததும் தமது கல்வியைத் தொடர்ந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கீழ்நாட்டு மொழிகளில் சிறப்புப் பட்டமும் பெற்றார்.
இவர் 1923–இல் வார்விக் லீமிங்க்டன் தொகுதியின் பேராளராக நாடாளுமன்றத்திற்குப் பழமை விரும்புவோர் (Conservative) கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியின் பேராளராக 1957 வரை நாடாளுமன்றத்தில் பணிபுரிந்தார்.
{{nop}}<noinclude></noinclude>
psdfjxovz77qhtjy267lkmfa6lytv2n
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு
4
635621
1948087
1947055
2026-06-19T16:59:18Z
Info-farmer
232
/* அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் */ * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன்.
1948087
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன்.
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || || ||
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || || ||
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || || ||
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 || || ||
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || ||
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || ||
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || ||
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| || ||
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || || ||
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || ||
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || ||
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 || || ||
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02|| || ||
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || ||
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 || || ||
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || ||
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03|| || ||
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 || || ||
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 || || ||
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || ||
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || || ||
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 || ||
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 || || ||
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 || || ||
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 || || ||
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 || || ||
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 || || ||
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 || || ||
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 || || ||
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 || || ||
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 || || ||
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 || || ||
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 || || ||
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 || || ||
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 || || ||
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 || || ||
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 || || ||
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 || || ||
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 || || ||
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07|| || ||
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 || || ||
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
kzsen3lvwg8jjanmqpb7zkhirt31vlc
1948093
1948087
2026-06-19T17:09:20Z
Info-farmer
232
- துப்புரவு
1948093
wikitext
text/x-wiki
{{Under_construction}}
* https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.)
* ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
== அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ==
* '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது.
** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963
*** மொத்த கடிதங்கள்: 172
** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன.
*** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964
*** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69
*** மொத்த கடிதங்கள் : 116
*** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288.
{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன்.
=== பதிப்பகங்கள் ===
*அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது.
# 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள்
# 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள்
# 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள்
# 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள்
# அமராவதி பதிப்பகம்
# அருள்மொழி பிரசுரம்
# செண்பகா பதிப்பகம்
# பாரத் பதிப்பகம், சென்னை
# பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை
==== பதிப்பகக் குறிப்புகள்====
* பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும்.
** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன.
* தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.
* 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..)
* பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது.
== கடிதக் காலக்கோடு ==
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர்
|-
| 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 ||
|-
| 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01
|-
| 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01
|-
| 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]]
|-
| 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01
|-
| 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04
|-
| 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01
|-
| 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01
|-
| 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02
|-
| 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04
|-
| 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02
|-
| 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04
|-
| 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04
|-
| 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04
|-
| 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02
|-
| 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02
|-
| 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02
|-
| 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03
|-
| 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04
|-
| 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03
|-
| 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]]
|-
| 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]]
|-
| 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]]
|-
| 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]]
|-
| 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]]
|-
| 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]]
|-
| 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04
|-
| 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03
|-
| 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04
|-
| 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04
|-
| 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04
|-
| 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04
|-
| 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04
|-
| 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04
|-
| 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04
|-
| 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04
|-
| 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04
|-
| 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04
|-
| 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04
|-
| 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04
|-
| 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04
|-
| 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04
|-
| 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04
|-
| 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05
|-
| 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06
|-
| 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06
|-
| 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07
|-
| 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07
|-
| 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07
|-
| 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07
|-
| 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
| 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07
|-
|}
== இருபது தொகுதிகளில் விடுபட்டவை ==
{| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki>
! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு
|-
| 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|-
| 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] ||
|}
bmtedj0r8sz3u8m50aitome4cqn1vba
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234
250
639198
1947983
1947920
2026-06-19T13:51:46Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{Rh|210||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{hanging indent|4em|
பே : (ஆர்வத்துடன்) பயம் வேண்டாம்! நமது மாளிகையிலே, ஏராளமான பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இடத்தைக் கண்டுபிடித்து, செல்வத்தை எடுத்து, மாளிகையைச் சீரும் சிறப்புமுள்ளதாக்குவோம்!
:(பலர், சபாஷ், பலே! என்று களிப்புடன் கூவுகின்றனர்.)
சீ : (கனைத்துக் கொண்டு) முடியும். செய்யலாம். ஆனால்...
பே : செய்ய முடியாது என்ற பயமே எம்மிடம் கிடையாது. இந்த மாளிகையைக் கைப்பற்ற முனைந்தபோது காட்டிய மாவீரம் மங்கிவிடவில்லை...
சீ : அந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால், புதைந்துள்ள பொருளைக் கண்டுபிடித்து, பிறகு மாளிகையைத் திருத்துவது என்றால் காலம் அதிகமாகும். அதற்குள் கலனான பகுதி மேலும் கலனாகக்கூடும். காசூர் உதவியைப் பெற்றால், இப்போதே மாளிகையைப் பழுது பார்க்கலாம்.
{{left_margin|3em|(ஒரு குரல் : காசூர் உதவி, வெள்ளையூர் வேலையாக முடிந்தால் என்ன செய்வது?)}}
சீ : பழைய பயத்தை மறந்து, இந்தக் காரியத்தைத் துவக்கவேண்டும்.
{{left_margin|3em|(ஒரு குரல் : அது எங்களுக்குத் தெரியும்)}}
சீ : தெரியாமலென்ன! நீங்கள் மாவீரர்கள்! உங்கள் மூதாதையர் ஞானிகள்! இதோ பேசுகிறாரே உங்கள் தலைவர், அவர் அஞ்சா நெஞ்சு படைத்தவர். உங்கள் மாளிகையோ, பிரம்மாண்டமானது. ஆஹா, இதை மட்டும், திட்டமிட்டுக் கட்டி முடித்தால் காண்போர் களிப்புக் கடலில் மூழ்குவர். காசூர், இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை, ஓர் கைங்கர்யமாகக் கருதுகிறது. காசூருக்கு, வெள்ளையூரார்போல, பிறர் மாளிகையில் புகுந்துகொண்டு, ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே கிடையாது...
பே : அதுதான் சிலாக்கியமான கொள்கை. எந்த ஆட்சியும் சொந்த ஆட்சிக்கு ஈடாகாது...
சீ : இதையே எங்கள் தலைவர் எழுபத்தெட்டு தடவை சொல்லியிருக்கிறார். உங்களுடைய மாளிகையை உங்கள் மாளிகையிலேயே எங்கெங்கோ புதைத்து வைக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டு, புதிதாக்குவது சிரமம், காலக்கேடு; நீங்கள்}}<noinclude></noinclude>
fm0sc5pzz83rz86kuaip7kkdq5hh8j2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235
250
639199
1947984
1947844
2026-06-19T13:53:17Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||211}}{{rule}}</noinclude>{{left_margin|4em|விரும்பினால், காசூர் பணம் தரும். பழுதுபார்த்து, அழகிய வேலைப்பாடுகள் செய்து முடித்து, அதிலே நீங்கள் குதூகலமாக இருப்பதைக் கண்குளிரக் கண்டுகளிக்கும் நோக்கந்தான் காசூருக்கு...}}
{{hanging indent|4em|பே : நேர்மையான நோக்கம். நெஞ்சிலே வஞ்சமின்றி.
சீ : வஞ்சகமா! அது பஞ்சையர்களின் குணம். காசூர், நேசர்களின் கொஞ்சுதலைப்பெற, தன்னையே அர்ப்பணிக்குமளவு நல்ல நோக்கம் கொண்டது.
பே : ஆஹா! மகிழ்ந்தேன்! பூரித்தேன்! இப்படிப்பட்ட உதவி கிடைத்ததற்கா இறைவனை வணங்குகிறேன்.
சீ : நன்று! நான் சென்று வருகிறேன். காசூர் சென்று, மாசுமறுவற்ற உமது மனத்தை எடுத்துக் கூறி, இந்த மாளிகை பழுதுபார்க்கும் மகத்தான கைங்கரியத்தை, தெய்வகாரியமாக மேற்கொள்ளும்படி வற்புறுத்திக் கூறுவேன்.
பே : மெத்த சந்தோஷம். ஜெயவிஜயீபவ!
சீ : சந்தேகம் வேண்டாம். எதற்கும், காசூருக்கு உதவி கோரி, இங்கிருந்து யாரையாவது அனுப்பிவைத்தால்...
பே : ஆகா ! செய்வோம்! பாபாஜீ!
பாபா : இதோ, கிளம்புகிறேன்.}}
{{left_margin|3em|(சீமான் விடைபெற்றுக் கொள்கிறார்)}}
{{c|<b>காட்சி 3</b>}}
{{hanging indent|4em|இடம் : காசூர்
உறுப்பினர் : கோடீஸ்வரர்
ஒரு கோடீஸ்வரர், கடிதமொன்றைப் பிரித்துப் படித்துவிட்டுப் புன்சிரிப்புடன், அதை மற்றவரிடம் தருகிறார். சுமார் அறுபதுபேர் கூடியிருக்கிறார்கள் அங்கு, ஒவ்வொருவராகக் கடிதத்தைப் படித்து மகிழ்கிறார்கள்.
ஒரு கோடி : தூதர்...
இன். கோ. : சாமர்த்தியசாலி!
வேறு. கோ : அனுபவசாலி!
ஒரு கோ : பக்குவமாகக் காரியத்தை முடித்திருக்கிறார்.
வேறு கோ : பழைய மாளிகையைப் புதிதாக்கும் உதவி செய்வதென்றால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்துதானே போகும்.}}<noinclude></noinclude>
aazh10xm8r3v7peapp677vj37mnzzel
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262
250
639258
1947988
1947439
2026-06-19T13:58:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|238||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பஞ்சாப் நாஷனல் பாங்க்
டால்மியா — ஜெயின் குடையின் கீழ்!
இவ்விதமான பொருளாதாரத்துறை ஆதிக்கத்தைத் தகர்த்திடத்தான், பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று முற்போக்காளர் வலியுறுத்துவது.
1962-ம் ஆண்டு, நமது கழகத் தேர்தல் அறிக்கையிலே நாம் இதனை ஆதரித்திருக்கிறோம்.
காங்கிரஸ் அரசும் கட்சியும் இந்த முதலாளிகளுக்குக் கட்டியம் கூறிக்கொண்டும் மக்களிடம் மயக்கமொழி பேசிக்கொண்டும் வருகிறது.
பாங்குகளை சமுதாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்போகிறோம் என்ற பேச்சு, இப்போது யோசித்துப் பார் தம்பி! கதையிலே சீமான் சொல்கிறானே, எல்லாச் சொத்தும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று, அது போன்ற விந்தைப் பேச்சா, வேறா?
உனக்கும் எனக்கும் புரிந்திருக்கிறது. பயன்? நாட்டுக்கல்லவா புரிய வேண்டும்!
{{rh|<br>30.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
f47hkhz6bmd92f9tb0taz5kiql8hcwh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263
250
639259
1947989
1947849
2026-06-19T13:59:17Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{Right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{larger|காஞ்சிக் கடிதம்: 279}}}}
{{Right|{{x-larger|<b>சிங்கத்தை அடக்கினேன்!</b>}}}}
}}
:<b>★ தடுத்தது யார்? துடிப்பது ஏன்?
:★ ஆடுகளுக்கு ஓநாய் இரத்ததானம் தரப்போகிறதாம்!
:★ ஏழையின் பெருமூச்சு பேச்சை விட வலிவு மிக்கது!
:★ முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது!
:★ சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது!</b>
தம்பி,
இப்படி ஒரு உரையாடல் உன் செவியில் விழுந்தால் என்ன எண்ணிக் கொள்வாய்?
{{hanging indent|4em|ஒரு குரல் : நான் சிங்கத்தின் மீது சவாரி செய்தேன்.
மற்றோர் குரல் : நான் யானை மீது உட்கார்ந்தேன்.
வேறோர் குரல் : ஜோரான குதிரைமீது நான் உட்கார்ந்து கொண்டேன்.
இன்னோர் குரல் : நான் அன்னப்பட்சி மீது உட்கார்ந்திருந்தேன்.
மற்றோர் குரல் : அழகான மயில்மீது நான் உட்கார்ந்து கொண்டேன்.}}
இவ்விதமாகக்கூட ஒரு உரையாடல் நடைபெற்றிருக்க முடியுமா? கற்பனை இருக்க வேண்டியதுதான், ஆனால் இப்படியா சிங்கத்தின் மீது அமர்ந்தேன், யானை மீது அமர்ந்தேன் — என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் நிலைமை எங்கே இருக்க முடியும்?—என்று கேட்கத் தோன்றும்.
இப்படி ஒரு உரையாடல், நடைபெற்றிருக்கவே முடியாது என்று அடித்துப் பேசிவிடாதே தம்பி! நன்றாக யோசித்துப் பார்த்துச் சொல்லு, இவ்விதமான பேச்சு உன் காதில் விழுந்தால், என்ன எண்ணிக் கொள்வாய்? யார் இப்படிப் பேசியிருக்க முடியும்? எந்த இடத்தில் இவ்விதமான பேச்சு இருந்திருக்க முடியும்? விளங்கவில்லையா? சரி! நானே கவனப்படுத்துகிறேன்.
திருவிழா, பேரூரில். உள்ளூர் வெளியூர் கூட்டம் நிரம்ப. மகிழ்ச்சி. ஆரவாரம்! கடைகள், அலங்காரமாக! களியாட்டம்! கரக ஆட்டம்! மயிலாட்டம் ஒயிலாட்டம்! சிறுவர் சிறுமியர் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்! இங்கு ஒரு பக்கத்தில் குடைராட்டினம்– (சில இடங்களிலே<noinclude></noinclude>
93nbl6oqwdi3m49hamrngxokurxdic6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274
250
639269
1947990
1947440
2026-06-19T14:00:09Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|250||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால் அவர்களின் பெருந்தலைவர் காமராஜரே, ஜெய்பூர் மாநாட்டிலே பேசினார்; தெரிந்துதான் பேசி இருக்க வேண்டும்! என்ன, பேசினார் என்பதனை நான் ராஜ்ய சபையிலேயே எடுத்துரைத்தேன்.
பதினோரு ஆண்டுகளாக நாம் சோஷியலிசம் பேசுகிறோம்; ஆனால் செயல்படுத்தவில்லை.
ஏழை–பணக்காரர் பேதத்தைப் போக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, அதனைக் குறைக்கக்கூட நம்மால் முடியவில்லை.
இந்தக் கருத்துப்படவே காமராஜர் பேசியிருக்கிறார்.
அதனையே நாம் சுட்டிக் காட்டும்போது ‘சுரீல்’ என்று கோபம் பிறக்கிறது; விட்டேனா பார்! என்று வீறாப்பு பேசுகிறார்.
காங்கிரசில், மாஜி—மன்னர்களையும் தொழில் அதிபர்களையும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் இலட்ச இலட்சமாகப் பணமும் ‘கைநீட்டி’ வாங்கிக்கொண்டு, அதைக் கொண்டு ஓட்டு வேட்டை ஆடிக்கொண்டு, நான் சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறேன் என்று பேசி வருவது, குடை ராட்டினத்துச் சிங்கப் பொம்மை மீது உட்கார்ந்து கொண்டு என்னைச் சாமான்யமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்; நான் சிங்கத்தையே அடக்கி, அதன்மீது சவாரி செய்பவன்! என்று சிறுவர்கள் பேசி, கேட்பவர்களுக்குச் சிரிப்பு மூட்டுவதற்கு ஒப்பானதாகும் இல்லையா!
{{rh|<br>6.11.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
27gz2lvrpfwgmxg8cr3s441fkkgtiug
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275
250
639270
1947995
1947850
2026-06-19T14:06:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{larger|காஞ்சிக் கடிதம்: 280}}}}
{{Right|{{x-larger|<b>பறக்கும் குதிரை!</b>}}}}
}}
:<b>★ ஓநாயும் இருக்கும்; முயல்களும் ஓடி ஆடும்!
:★ காமராசர் தேர்தலிலே நிறுத்த இருப்போர் விளைந்த காட்டுக் குருவிகள்!
:★ பள்ளம் பள்ளம்தானே!
:★ கொல்லாமை பேசும் குரு தின்பது யாது?
:★ பேரரசு நடத்தும் காமராசரின் வலக்கரம் சோஷியலிசம் பேசலாமா?</b>
தம்பி,
வெகு வேகமாகக் கிளம்பி, மிக முடுக்குடன் பேசி, வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் பொதுவாகப் படித்தவர்களையும் காங்கிரசுக்குள் கொண்டுவந்து சேர்த்து விடப்போவதாகச் சூள் உரைத்து, பொதுத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதாக அறிவித்து, ஆரவாரத்துடன் நமது கழகத்தை ஏசி வந்த முன்னாள் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், ஏன் திடீரென்று வாய் மூடிக்கொண்டுவிட்டார்; கூவி விற்றிட இருந்த சரக்கு தீர்ந்து போய் விட்டதா? அல்லது விற்பனை எதிர்பார்த்த விதமாக நடைபெறாததால், ‘கடை’யை மூடிவிட்டாரா? என்ன காரணம் அந்த ‘மேதை’யின் சந்தடி அதிகமாகக் காணோமே? என்று நண்பரொருவர் கேட்டார். உடனிருந்த மற்றோர் நண்பர்—அவர் பெரியார் கட்சி— ஒரு நேர்த்தியான புன்னகையை உதிர்த்து விட்டுச் சொன்னார்:
{{left_margin|3em|காரணம் விளங்கவில்லையா? அய்யா, ஒரு ஜாடை காட்டினார், காமராஜருக்கு; போயும் போயும் இந்த ஆசாமியையா நம்புகிறாய் என்பதாக; உடனே காமராஜர், கிருஷ்ணமாச்சாரியாரைக் கூப்பிட்டு “போதும் அய்யரே! உம்முடைய வேலை!” என்று சொல்லிவிட்டார்!}}
என்று விளக்கம் அளித்தார்.
“அப்படி ஒரு மனப்பால் குடிப்பதானால் குடித்தபடி இரும்!” என்று கூறிவிட்டு, ஒரு கனைப்பு, ஒரு முறைப்புடன், மற்றோர் நண்பர் பேசலானார்; அவர் காங்கிரசை ஆதரிப்பவர்.
{{left_margin|3em|பெரியார் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்திடவா எங்கள் பெரியவர் இருக்கிறார்! அவர் என்ன பெரியாரைப் போல, பிராமணர்களைப் பார்ப்பான் என்று பேசிடும் போக்கினரா?
}}<noinclude></noinclude>
ly4hezvqye4oxleftfmgkhckl2p7955
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276
250
639606
1947994
1947712
2026-06-19T14:05:34Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|252||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|எத்தனையோ கீர்த்திமிக்க அய்யர்—அய்யங்கார்—சாஸ்திரி—சர்மாக்கள்—-காமராஜருக்கு நண்பர்கள்! டி.டி.கே. இப்போது அதிகமாகப் பேசப் போவதில்லை; காரணம் அவர் காங்கிரஸ் சர்க்காரின் நிலைமையிலே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அதிர்ச்சிகள் ஆகியவை பற்றி அதிகக் கவலை கொண்டுள்ளார். இருக்குமல்லவா? பாருங்கள், இப்போது இந்த நந்தா விலகி விட்டார்; இந்திராகாந்தியார் உடனே, அனுபவம் மிக்க டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை அழைத்துப் பொறுப்பை ஒப்புவிக்க வேண்டுமல்லவா? செய்தாரா? இல்லையே! அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் வேதனையாகத்தானே இருக்கும்—என்றார்.}}
நான், எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமலிருக்கக் கண்ட அவர்கள், என்னைப் பார்த்தபடி ‘உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்கள்.
“திட்டவட்டமாக ஏதும் கூறமுடியாது; ஆனால் ஒரு எண்ணம் தோன்றுகிறது, எனக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி, காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்வது, அதிலும் சோஷியலிசம் பேசுவது, கேட்பவர்களுக்கே ஏதோ ஒரு கேலிக் கூத்துபோல இருப்பதை அவரே உணர்ந்துகொண்டுதான், நமது பிரசார வேகத்தைக் குறைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன் என்று நான் கூறினேன்
எதையாவது சொல்லிவைக்கலாம் என்ற போக்கிலே சொல்லவில்லை. உள்ளபடி, டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள், சோஷியலிசம் பேசுவதைக் கேட்கும்போது, மக்கள் ஒரு கேலிச் சிரிப்பொலிதான் எழுப்புகிறார்கள்.
{{left_margin|3em|காங்கிரசிலே ‘தூண்களாக’வும், வலது கரங்களாகவும் உள்ளவர்கள், எப்படிப்பட்ட முதலாளிகள் என்பதை நமது கழகப் பேச்சாளர்கள் எடுத்து விளக்கிவிட்டு, இத்தகையவர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிதான் சோஷியலிசம் பேசுகிறது என்று கூறும்போது எழும் கையொலி வெறும் ஒலி அல்ல; உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன்.}}
மக்களுக்கு மயக்கமூட்டும், சொக்கவைக்கும் என்ற நினைப்புடன்தான், பாவம், காங்கிரசின் தலைவர்கள், சோஷியலிசம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தத்துவத்திற்குத் தந்திடும் விளக்கம் இருக்கிறதே அதனைக் கேட்டதும், மக்கள் அடைகின்ற எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சமல்ல. இதைத்தான் சோஷியலிசம் என்கிறீர்களா? இவர்களை வைத்துக் கொண்டுதான் சோஷியலிசம் கொண்டுவரப் போகிறீர்களா? இவர்களெல்லாம் இப்போது உள்ளது போலவே இருப்பார்கள். ஆனால் சோஷியலிசமும் இருக்கும் என்கிறீர்களா? ஓநாயும் இருக்கும்,<noinclude></noinclude>
41x9cphl2fqadiybknu9ffbyto9d2cu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277
250
639607
1948004
1947713
2026-06-19T14:10:25Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1948004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>முயல்களும் ஓடி ஆடியபடி இருக்கும்; புலியும் இருக்கும் புள்ளிமான்களும் இருக்கும்; அப்படித்தானே இருக்கும் என்கிறீர்கள்!—என்று கேட்கிறார்கள்: வாய் திறந்து அல்ல; தமது குறும்புப் புன்னகையால்; கேலிப்பார்வையால்!
{{left_margin|3em|இதனைக் கண்டறிந்ததால் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் வெட்கப்பட்டுக் கொண்டு, சே! நாம் போய் மேடைமீது நின்றுகொண்டு சோஷியலிசம் பேசினால் எப்படி நம்புவார்கள்? வீண் முயற்சி; விளைவு விபரீதமானாலும் ஆகிவிடக்கூடும் என்று எண்ணிக்கொண்டுதான், தமது இடி முழக்கத்தை நிறுத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும்.}}
மக்கள், தெளிவற்றவர்களாகவே இருந்துவிடுவார்கள்; பசப்புமொழி கேட்டு மயங்கிவிடுவார்கள்; இருபொருள் தந்திடும் பேச்சைப் பேசி அவர்களை ஏய்த்து விடலாம் என்று நினைத்திடும் காங்கிரஸ் தலைவர்கள் உளர்.
டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசும் போது, மக்கள் மிக எளிதாக அவர்கள் பேகம் சோஷியலிசம்,
{{left_margin|3em|வஞ்சகமானது
பசப்புமிக்கது
இருபொருள் கொண்டது}}
என்பதனை உணர்ந்துகொண்டு விடுகின்றனர்.
மக்கள், உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதனைக் கண்டறிந்த பிறகு எப்படி அவர்களுக்குப் பேச இயலும்! கடையைக் கட்டிக்கொள்கிறார்கள்!!
டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசிடும் சோஷயலிசம், உண்மையான சோஷியலிசமாக இருக்க முடியாது; ஏனெனில் அவர்களே, முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்கள்; அந்த அமைப்பிலே இருந்து கொண்டே, மக்களுக்கு இனிப்பளிக்கும் என்பதற்காக சோஷியலிசம் பேசுகிறார்கள் என்பதைப் பொதுமக்கள், அறிந்துகொண்டுவிட்டனர்.
டி.டி.கிருணமாச்சாரியார் தமது மின்னல் வேகச் சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டதற்கும்,
காமராஜர்கூட, சோஷியலிசம் என்ற பேச்சுப்பேசி மக்களை மயக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டு,
{{left_margin|3em|நிலவரியை எடுத்துவிடுகிறேன்!
ஆளுக்கு ஒரு வீடு தருகிறேன்!}}<noinclude></noinclude>
siwwwxrcwudgq58fd535rru70eb65c0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278
250
639608
1948007
1947714
2026-06-19T14:11:56Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1948007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|254||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|பார்க்குமிடம் எங்கும் பள்ளிக்கூடங்கள் கட்டித்தருகிறேன் என்றெல்லாம் பேசிச் சுவைப் பண்டங்கள் வீசி மக்களை மயக்கலாமா என்று இப்போது முயற்சி செய்திட முனைவதற்கும் இஃதே காரணம்.}}
{{***|3|1em|char=★}}
எல்லோரும் பேசும்விதமாகப் பேசக்கூடாது; பேச்சிலே ஒரு புதுமை வேண்டும்; புதுமுறையாகத் தன் பேச்சு அமையவேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஒரு வாலிபன், திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தரும்படி தன் காதலியிடம் கேட்டிடலானான். எப்படி?
{{left_margin|3em|“கண்ணே நீ என் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும்”}}
காதல் செய்த எந்தப் ‘பயலும்’ கேட்காத விதமான பேச்சு இது; மற்றவர், வாழ்க்கைத் தோணியிலே போகலாமா என்றோ, என் மன மாளிகையிலே உள்ளவளே! என்வீட்டின் திருவிளக்குமாகவேண்டும், சம்மதந்தானே கண்ணே! என்றோ கேட்டிருப்பார்கள்; நாமோ! கேட்ட உடன், அவள் சொக்கிப்போய்விடுவாள்; அப்படியே தோளின்மீது சாய்வாள்; அடிமூச்சுக் குரலாலே,‘அத்தான்....' என்பாள், அள்ளி அணைத்திடலாம், இன்பம் பருகிடலாம்—என்றெல்லாம் அவன் எண்ணிக்கொண்டான்,
ஆனால், கன்னியோ, கடுங்கோபம் கொண்டவளாகி அவனைப் பார்த்து.
“காதகா! இத்தனை காலமும் என்னைக் காதலிப்பதாக ஏமாற்றிக் கொண்டிருந்தாயா! ஏற்கனவே மணமாகி, குழந்தைகள் உள்ளவனா நீ! என்னை இரண்டாந்தார மாக்கிக்கொள்ளவா இத்தனை காதல் நாடகமாடினாய்!” என்றெல்லாம் கடிந்துரைத்துவிட்டு, எழுந்தோடிவிட்டாள்!
அவன், புதுமுறையிலே பேசுவதாக எண்ணிக்கொண்டு, கடிமணமாகி, காதற்கனி பிறந்திடும் நிலை பெற்றிடலாம் என்ற கட்டத்தைக்கூறினான். பெண்ணோ, ‘என் குழந்தைகள்’—என்று அவன் குறிப்பிட்டது. ஏற்கனவே ஒருத்தியை மணந்து அவன் பெற்ற குழந்தைகள் என்று எண்ணிக்கொண்டு, எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டாள்.
தம்பி! சொல்ல நினைப்பதை விளங்கும்படியும் வேறு பொருள் கொண்டிட முடியாத விதத்திலும் கூறிட வேண்டும். இல்லையேல் விபரீதமான விளைவுகள் நேரிடக் கூடும் என்பதனை விளக்கிடும் கதை இது.
{{left_margin|3em|இந்தக் காதலன் வஞ்சகன் அல்ல! புத்திசாலித்தனத்தைக் காட்டிவிடவேண்டும் என்று துடித்திட்ட ஏமாளி.}}
வஞ்சகன், தன் நிலையை மூடிமறைத்திட முயலுவான்;<noinclude></noinclude>
c8ham76ylix38a1ceepevl7kujyr1t4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279
250
639609
1948002
1947715
2026-06-19T14:09:52Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1948002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|என் இதயத்தில் முதன்முதலாக இடம் பெற்றவள் நீயே!
இல்லறம் என்ற நல்லறம் நடாத்திடவே உன்னை நாடுகிறேன்!}}
என்று எதையாவது இனிப்புள்ளதாகக் கூறிவைப்பான். பெண் மயங்கி மனத்தைப் பறிகொடுத்தான பிறகு, அவன் ஏற்கனவே வேறோர் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன் என்பதனை அறிந்து பதறும்போது கூட, வஞ்சகன் கூசாமல் கூறிடுவான்.
{{left_margin|3em|என் இதயத்தில் அவளுக்கு நான் இடம் அளித்திடவில்லை! வீட்டில் மட்டுந்தான்; அதுவும் பெற்றோர் கொடுத்த தொல்லைக்காக மட்டுமே!
அவள் வீட்டில் இருக்கிறாள், ஆனால், அவளுடன் சேர்ந்து நான் இல்லறம் நடாத்தவில்லை. அதனை நான் முன்பே உனக்குக் கூறினேனே! கவனிக்க வில்லையா?
என் இதயத்தில் முதன் முதலாக இடம் பெற்றவள் நீயே—என்று அன்று சொன்னேன்; இன்றும் அதனையே கூறுகிறேன்; மனைவி என்ற பெயருடன் ஒருத்தி என் வீட்டில் இருப்பதாலேயே என் இதயத்திலும் இருப்பாள் என்று எண்ணிக்கொள்ளலாமா! அங்கு உனக்குத்தான் இடம்! உனக்கு மட்டுந்தான்!}}
என்று பசப்புவான்; தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்ட பாவை என் செய்வாள்?
இவ்விதமான பேச்சு, இருபொருள் தருவதாக அமைவது; உண்மையை மறைத்திட, பொய்மைக்கு ஒரு பொலிவளிக்கும் பூச்சுச் சேர்த்துத் தந்திடும் முறை.
அவ்விதமான பேச்சு பலன் தரவில்லை என்பதனை உணர்ந்துகொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதிலே எப்படித் ‘தெம்பு’ பிறந்திட முடியும்!
காமராஜரோ, ‘தெம்பு’ இருக்கிறதோ இல்லையோ இந்த சோஷியலிசப் பேச்சு தவிர, மக்களுக்குச் சுவையூட்டும் பேச்சு வேறு இல்லை என்பதை உணருவதாலே, அதனைப் பேசிவருவது என்று தீர்மானித்துவிட்டார். வேறு என்ன செய்வார்!
{{left_margin|3em|கட்டிய பள்ளிக்கூடங்களைப் பார்த்தீர்களா? என்று காமராஜர் கேட்டால், கொட்டிக் கொடுத்த வரிப்பணம் கொஞ்சமா? என்று மக்கள் கேட்கிறார்களே! பதில் என்ன சொல்ல முடியும்!!
பார்!பார்! மின்சார விளக்கு பார்!—என்கிறார்; இதைவிட அதிசயத்தைக் காட்டினான் வெள்ளைக்காரன்—ஆகாய விமானமே}}<noinclude></noinclude>
nrj1bo7tgmwptwhv4xj37jk3np9gwoh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280
250
639610
1948001
1947716
2026-06-19T14:09:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1948001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|256||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|காட்டினான்! அவன்கூட இப்படி, பார்! பார்! என்று கூவிடவில்லையே என்று மக்கள் எண்ணிக் கொள்கிறார்கள்! காமராஜரின் பேச்சு அவர்கள் மனத்திலே அவர் எதிர்பார்க்கின்ற ஒரு களிப்பினை ஊட்டிட முடியவில்லை.
எப்படிப்பட்டவர் தெரியுமா தலைவர்? உலகப் பெருந்தலைவர்!! என்று உடனிருப்போர் உடுக்கை அடிக்கிறார்கள்! ஆமாமய்யா ஆமாம்! அவர் புகழ் ஏறுகிறது, உச்சிக்கு; எங்கள் வயிறு காய்கிறது பட்டினியால்!— என்று மனம் நொந்து கூறுகிறார்கள் மக்கள்.}}
ஆகவே காமராஜர், காங்கிரசின் சாதனைகள் பற்றிய பட்டியலை நீட்டி, ஓட்டுக் கேட்டிட முடியவில்லை. தேர்தலிலே நிற்பதற்காக அவர் தேடிப் பிடித்து இழுத்து வந்திடுவோரும், காங்கிரசிலே நீண்ட காலமாக இருந்து பணியாற்றி, இன்னல் இழப்புக்களுக்கு ஆளானவர்கள் அல்ல.
{{left_margin|3em|விளைந்த காட்டுக் குருவிகள்!}}
ஆகவே, இருப்பதற்குள் ஓரளவு சுவையூட்டக்கூடிய பேச்சு, சோஷியலிசம்தான் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு நாலு கூட்டத்தில் அதுபற்றிப் பேசிப் பார்க்கிறார்.
சோஷியலிசம் பேசுகிறீர்கள்; ஆனால் இத்தனை சீமான்களையும் உடன் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே— எப்படி இது பொருந்தும்? மக்கள் நம்புவார்களா? என்று அவரிடம் யாராவது கேட்டால், தம்பி! ஒரு பெரிய வெடிச் சிரிப்புச் சிரித்துவிட்டு,
{{left_margin|3em|சோஷியலிசம் பேசிவிட்டால், ஓட்டு வந்து குவிந்துவிடுமா!
நோட்டுகள் வேண்டாமா—தேர்தலை நடத்த!!
நோட்டுகளை யார் தருவார்கள்? ஓட்டர்களா!!
ஓட்டாண்டிகளிடம் ஏது நோட்டு?
நோட்டுப் பெற்றிட சீமான்கள் தேவைப்படுகிறார்கள்; ஓட்டு வைத்திருக்கும் ஏழைகளுக்குத் தித்திப்புத் தந்திட சோஷியலிசம் பேச வேண்டி இருக்கிறது என்று பச்சையாகவே சொல்லிவிடுவார்! பச்சைத் தமிழரல்லவா!!}}
தம்பி! காங்கிரஸ் கட்சியின் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், காங்கிரஸ் ஆட்சியின் செயல் முறைகளை ஆராய்ந்து பார்த்தாலும், சோஷியலிசம் வருவதற்கான சூழ்நிலையே இல்லை என்பது நன்றாகப் புரிகிறது.
என்றாலும், காமராஜர், சோஷியலிசம் பேசுகிறார்; எந்தத் துணிவு காரணமாக?<noinclude></noinclude>
0z7w8vyhrw33symrbpnzndm7fkxsw25
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281
250
639611
1948000
1947717
2026-06-19T14:09:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1948000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>
அதனை விளக்கிட ஒரு சிறு கதை கூறியாக வேண்டும், தம்பி! கூறட்டுமா?
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், மன்னன் முன் மண்டியிட்டு, அரசே! ஒரு வேண்டுகோள்; என்னை இப்போதே தூக்கிலே போட்டுவிடச் சொல்லாதீர்கள், ஒரு வருடம் எனக்கு அவகாசம் தருக! அதற்குள் நான், தங்கள் பட்டத்துக் குதிரைக்கு ‘பறந்திடக்’ கற்றுக்கொடுக்கிறேன்; அதனைக் கண்டபிறகு, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தள்ளுபடி செய்துவிடலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு, குதிரைக்குப் பறக்கும் சக்தி வந்திடச் செய்யத் தவறினால் என்னைத் தூக்கிலே போட்டுவிடுங்கள்’ என்று முறையிட்டுக் கொண்டான். மன்னன், குதிரையே பறந்திடுமாமே, பார்ப்போமே என்று எண்ணிக்கொண்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தவனுக்கு ஒரு வருடம் விடுதலை தந்தான்.
மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த தந்திரக்காரனை அவனுடைய நண்பன் பார்த்து, “ஒரு வருடத்தில் குதிரைக்குப் பறக்கும் சக்தி பெற்றுத் தருவதாகக் கூறிவிட்டு, ஒரு வருட விடுதலை பெற்றுக் கொண்டாயே! ஒரு வருடம் முடிந்ததும், உன்னைத் தூக்கிலே போடாமல் விடுவார்களா? மன்னனுக்கு இப்போது உள்ள கோபத்தைவிட அதிகமாக அல்லவா கோபம் வரும், நம்மை ஒரு ஏமாளி என்றா இவன் எண்ணிக் கொண்டான்? தூக்கு மரத்திலே தொங்கட்டும். இவன் உடலைக் கழுகும் நரியும் விருந்தாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றல்லவா கட்டளை பிறப்பிப்பான்! என்ன செய்வாய் அப்போது!” என்று கேட்டான்.
தந்திரக்காரன் சொன்னான்,
{{left_margin|3em|ஒரு வருடத்திற்குப் பிறகு நடக்கக் கூடியதுபற்றி இப்போது ஏன் எண்ணிக் கொண்டு வேதனைப்பட வேண்டும்?
தூக்கு மேடையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்; ஒரு வருடம் அவகாசமும் கிடைத்திருக்கிறது.
இந்த ஒரு வருஷத்திற்குள் அரசனே இறந்துபடக் கூடும்.
அல்லது நானே மடிந்து போகக்கூடும்!
அல்லது குதிரை, பறக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடக்கூடும்!!
ஒரு வருடத்தில் என்னென்னவோ நடைபெறலாம்.
நம்பிக்கை கொள்ள வேண்டும்! உடனடியாகக் கிடைத்திடும் பலனைத்தான் கணக்குப் போட்டுப் பார்த்திட வேண்டும். ஒரு}}<noinclude></noinclude>
cq899wv84st5y2ndfczarzq2r6m4fdz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282
250
639612
1947999
1947718
2026-06-19T14:08:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|258||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|வருடத்திலே ஏதேதோ நடக்கலாம்; அதன் காரணமாக, எனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஒரு வருடத்திற்குப் பிறகு, தூக்கிலே போடுவார்களே என்பதுபற்றி இப்போதே எண்ணி எண்ணி மனம் புண் ஆவானேன்?
ஒரு வருடம் கிடைத்திருக்கிறது! அந்தக் காலத்தில், பெறவேண்டிய வசதியை, வாழ்க்கை இன்பத்தை ஏன் இழந்திட வேண்டும்? என்று கேட்டானாம்.}}
அதுபோலக் காமராஜர், சோஷியலிசம் கொண்டு வரவில்லையே; முடியாமற் போய்விட்டதே என்று எண்ணி ஏக்கம் கொள்ளாமல், குதிரையைப் பறக்க வைக்கப்போகிறேன் என்று பேசி, மரண தண்டனையைத் தவிர்த்துக் கொண்டவன் போலப் பேசுகிறார், சோஷியலிசம்பற்றி.
சோஷியலிசம் பேசி ஓட்டுகளைப் பறித்துக் கொள்வோம், முதலில்; பிறகு, சோஷியலிசம் ஏன் கொண்டு வரவில்லை என்று மக்கள் கேட்டுவிட்டுப் போகட்டுமே! கொடுத்த ஓட்டுகளைத் திருப்பியா வாங்கிக்கொள்ள முடியும்!!— என்று அவர் எண்ணுகிறார் என்பது விளங்கவில்லையா, தம்பி! ஆம், என்கிறாய். மற்றவர்களும் விளக்கம் பெற்றிட வேண்டாமா?
{{left_margin|3em|அதற்காகத் தம்பி! சோஷியலிசம் பேசிடும் காமராஜரின் காங்கிரசிலே, எத்தகைய முதலாளிகள் கொலு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டிட வேண்டும்.}}
‘வலதுகரம்’- என்றும், தேர்தல் பிரசார பீரங்கி என்றும் கொண்டாடுகிறார்களே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரை; அவருந்தானே பேசுகிறார், சோஷியலிசமே எமது இலட்சியம் என்று; அவர்நிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டாமா?
ஒருவரிடம், வருவாய் தரத்தக்க தொழில், வாணிப அமைப்புகள் குவிந்துவிடுமானால், மக்களின் உழைப்பினால் உற்பத்தியாகும் செல்வத்திலே பெரும் பகுதி, அந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. ஏழை பணக்காரன் பேதம், அகன்ற வாய்கொண்ட பெரிய பள்ளமாகிவிடுகிறது.
இதைப் போக்குவதுதானே சோஷியலிசம்?
இதைத்தானே காங்கிரஸ் தனது திட்டமாகக் கொண்டுள்ளதாக, டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கூறுகிறார்.
“அப்படியானால், அந்த நேர்த்திமிக்க இலட்சியவாதி எந்த நிலையிலே இருக்கிறார்?<noinclude></noinclude>
g3h6n8wgzq92uhnvi811ns1ydowtt79
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283
250
639613
1947998
1947719
2026-06-19T14:08:13Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude>
அவருடைய குடும்பத்திடம் உள்ள தொழில் அமைப்புகள் – வருவாய்த் துறைகள்–எப்படி உள்ளன? அளவும் வளமும் எப்படி இருக்கிறது என்பதனை நாடு தெரிந்து கொள்ள வேண்டாமா?
டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், தமக்கு இந்தியப் பேரரசில் கிடைத்திருந்த அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, தொழில் அமைப்புகளைப் பெரிதாக்கிக் கொண்டார் என்ற புகார் கிளம்பிற்று.
நான் அந்தப் புகார்பற்றிய நோக்கத்துடன் இதனைக் குறிப்பிடவில்லை.
மிகமிக நியாயமான, நேர்மையான முறைகளிலேயே இந்தத் தொழில் வாணிப அமைப்புகள் வளர்ந்தன என்றே வைத்துக்கொள்வோம்; ஆனால் இவ்வளவு வருவாய்த் துறைகள், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பம் ஒன்றினிடம் இருந்திடலாமா? இருக்க விடுவது, சோஷியலிசமா? இருக்கும்போது, அவர் சோஷியலிசம் பேசுவதிலே பொருள்தான் உண்டா? என்ற இவைபற்றிச் சிந்தனையைக் கிளறிவிடுவதற்காகவே கூறுகிறேன்.
வெட்டப்பட்டதோ, வெடிப்பு விரிவானதோ, எதுவாக இருந்தால் என்ன, பள்ளம் பள்ளந்தானே!
தம்பி! சோஷியலிசம் பேசிடும், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்திடம் உள்ள தொழில்-வாணிப அமைப்புகளின் பட்டியல்-எனக்குக் கிடைத்துள்ள அளவு- தருகிறேன்- பார்த்திடு!-காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம், நம்பத்தகுந்ததுதானா என்பது பற்றிய தெளிவு, தன்னாலே வந்திடும்.
:டில்லி
:கல்கத்தா
:விஜயவாடா
:பம்பாய்
:விசாகபட்டினம்
:சென்னை
:ஐதராபாத்
:கொச்சி
:பெங்களூர்
:ஆமதாபாத்
:கோயம்புத்தூர்
இத்தனை நகரங்களிலே, டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் குடும்பத்தாரின் வணிக அமைப்புகள் உள்ளன.<noinclude></noinclude>
a7dhhqxfe7v553rbhtkl2zy16y7n4mt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284
250
639614
1947997
1947720
2026-06-19T14:07:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|260||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
‘ஏகபாரதம்’—எத்தனை எழிலுடன் விளங்குகிறது என்பதனை எடுத்துக்காட்ட, இந்தப் ‘பேரரசு’ அமைக்கப்பட்டிருக்கிறதுபோலும்!
இங்கெல்லாம் உள்ள கம்பெனிகளில், எத்தனை இவர் அமைச்சர் வேலை பெற்ற பிறகு வளர்ந்தன, மூலதனம் எப்படியெப்படி கிடைத்தன என்பன பற்றிய தகவல் அறிந்திட நான் முனையவில்லை.
நான், இந்தப் பிரச்சினையில் ஊழல் இருக்கிறதா, அக்ரமம் நடந்திருக்கிறதா என்ற கேள்வியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
எனது நோக்கமெல்லாம், சோஷியலிசம் பேசிடும் ஒருவரின் குடும்பம், பொருளாதாரப் பேரரசு அமைத்து ஆண்டு கொண்டிருக்கும் விந்தையை நாடு அறியச் செய்ய வேண்டும் என்பதேயாகும்.
கொல்லாமை பற்றி உருக்கமான ‘உபன்யாசம்’ செய்திடும் ‘குரு’ சாப்பிடும் கோழிப் பிரியாணியின் அளவு பற்றிய தகவலைத்தான் நான் தருகிறேன்; கோழி விலை போட்டு வாங்கியதா, கொல்லைப் புறத்தில் மேயவந்த வேறோர் வீட்டுக் கோழியா என்பது பற்றிய ‘மர்மம்’ நான் தரவுமில்லை; எனக்குத் தெரியவும் தெரியாது. இனி அந்தப் பேரரசைக் காணலாம்.
:1. ஓரியண்டல் காஸ்மாடிக்ஸ்
:2. டி.டி. கெமிகல்ஸ்
:3. டார்டாய்ஸ் இந்தியா
:4. ஓரியண்ட் பர்மா
:5. கொப்பா பார்மா
:6. ரைட் எய்ட்ஸ் ஓரியண்ட்
:7. டி.டி. லிமிடெட்
:8. டைம் எய்ட்ஸ், இந்தியா
:9. லண்டன் ரப்பர் கம்பெனி
:10. பாக்வெல் இண்டஸ்ட்ரீஸ்
:11. பிரிசைசன் என்ஜினியர்ஸ்
:12. இன்டர்நேஷனல் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ்
:13. எல்.டி. ஸேமோர் அண் கோ
:14. காட்டரி, ப்ரை இந்தியா
:15. செஸ்பிரோ பிராண்டு இந்தியா
:16. இந்தூரிஃபாரம்
:17. ஏ.கே. பார்மா கெமிக்ஸ்டிக்ஸ்
:18. டி.டி. கிருஷ்ணமாச்சாரி கம்பெனி.<noinclude></noinclude>
swg0bn0e80h45zytgzmev0c88m9m7wi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285
250
639615
1947993
1947721
2026-06-19T14:04:34Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude>
தம்பி! பெயர்கள் யாவும் ஆங்கிலம்–நான் செய்த தவறு அல்ல; அந்தக் குடும்பம் பெற்ற பேறு!!
இந்த அமைப்புகளுடன், நாடெங்கும் மக்கள் விரும்பி வாங்கிடத்தக்க பல பொருள்களுக்கு, இந்தக் குடும்பம், ‘ஏஜென்சி’ உரிமை பெற்றிருக்கிறது.
:1. உட்வார்ட்ஸ் கிரைப் வாடர்
:2. பாண்ட் கிரீம்
:3. வாடர்மென் இங்க்; பேனா
:4. பிரஸ்டிஜ் குக்கர்
:5. வெஸ்ட்கிளாக்ஸ் கடிகாரங்கள்
:6. அதுல் உற்பத்திப் பொருள்கள்
:7. நவஸ்ரி ஆயில் மில்ஸ்
:8. ஸ்வஸ்திக் ஆயில் மில்ஸ்
:9. பக்கிம்ஹாம் கர்னாடிக் மில்ஸ்
:10. குட்லாஸ் வால் பிக்மண்ட் அண்டு ரிஸின்ஸ்
:11. காட்பெரி சாக்லட்
:12. போர்ன்விடா
:13. மாத்ஸ்ஃபாக்டர் காஸ்மாடிக்ஸ்
:14. எஸ்ஸோவின் பிளிட்
:15. மெட்டல் ஸ்ப்ரேயர்கள்
:16. டாக்டர் வெஸ்ட்டின் பல் பிரஷ்
:17. வில்லியம் ஷேவிங் சோப்
:18. காரெட் பிளேடுகள்
:19. எபிக் டூத் பேஸ்ட்
:20. ஸ்கைலைன் கட்லரி
:21. சாயம்—ரசாயனப் பொருள்கள்
அளவும், வகையும் விளங்குகிறதல்லவா, தம்பி!
பிளேடுகூட! பிரஷ்கூட! பல்பசைகூட! பூச்சி மருந்தைக் கூட விடவில்லை!!
இத்தகைய ஒரு பேரரசு இந்தக் குடும்பத்துக்கு, இந்தக் குடும்பத்தலைவர் பேசுவதோ சோஷியலிசம்!! தம்பி! மக்களை ஏமாளிகள் என்றே தீர்மானித்து விட்டிருந்தாலொழிய, பேசிடும் துணிவு பிறந்திடுமா?
இந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியார், காமராஜருக்கு வலதுகரமாம்!
ராஜதந்திர முறை கூறிடும் மூளையாம்! பேசிக் கொள்கிறார்கள்;<noinclude></noinclude>
alzmhyfv0pg4qquq2ujqpkw7nkftylu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286
250
639616
1947991
1947722
2026-06-19T14:03:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|262||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
மக்கள் இதனை அறியமாட்டார்களா—இப்படிப்பட்டவர்களைக் கொண்டு இயங்கி வரும் காங்கிரஸ் கட்சி, எப்படி சோஷியலிசத்தை கொண்டுவர முடியும் என்று கேட்கமாட்டார்களா என்ற எண்ணம் ஏற்படவே செய்யாதா காமராஜருக்கு? ஏற்படும்!
ஆனால், கதை தந்துள்ளேனே அதுபோல, குதிரையைப் பறக்க வைக்கிறேன் என்று கூறி, மரண தண்டனையிலிருந்து இப்போதைக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறானே தந்திரக்காரன் அதுபோலக் காமராஜர், பின்னாலே என்னவோ நடந்துவிட்டுப் போகட்டும், இப்போதைக்கு சோஷியலிசம் பேசி மக்களை மயக்கி ஓட்டுக்களைத் தட்டிக்கொண்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்று திட்டமிடுகிறார். புரிகிறதல்லவா?
{{rh|<br>13.11.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}
.<noinclude></noinclude>
chty6ty7l1wjw3ln7ich4aqnbujuu2s
அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
253
639670
1947979
1947893
2026-06-19T13:36:33Z
Info-farmer
232
1947979
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106459 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106469 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:36, 19 சூன் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
===வடிவ மேம்பாட்டுக் கருத்து===
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
ef4pme4x7ba1r4l7q5s93wug2veoqbi
1947981
1947979
2026-06-19T13:41:51Z
Info-farmer
232
+ விரிவு
1947981
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106459 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106470 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106471 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:36, 19 சூன் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
===வடிவ மேம்பாட்டுக் கருத்து===
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
ecp1r2390031txoqcs6mfaxce1qt095
1947982
1947981
2026-06-19T13:50:09Z
Info-farmer
232
+ விரிவு
1947982
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106459 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
* மஞ்சள் என்பது இரண்டாகப் பிரிந்த சொற்களை இணைத்தவர்கள், எழுத்துப்பிழைகளைக் களைந்தவர்கள் செய்தது என மேற்பார்வையிட்டு, விக்கிக் குறியீடுகளை இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106470 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106471 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:36, 19 சூன் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
===வடிவ மேம்பாட்டுக் கருத்து===
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
6pf2vhim1dciy1h8jcz9k7ahya9k85f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288
250
639688
1947985
1947442
2026-06-19T13:55:10Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|264||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இணையில்லா விழிப்புணர்ச்சி! என்று எண்ணத்தக்க நிலைமை!
காண்கின்றேன், களிப்புக் கடலில் மூழ்கிடுகின்றேன். எத்தனை கடமை உணர்ச்சி இவர்கட்கு! உழைத்திடும் உத்தமர்களாம் இவர்கள் ஊர்
சீர்படப் பாடுபட்டாக வேண்டும் என்ற பண்பு மிக்கோராகவன்றோ
விளங்குகின்றனர். ஏழ்மை! நலிவு! வாழ்வின் சுமை! எல்லாவற்றையும்,
தாங்கித் தாங்கிக் கூனிப்போய்க் குறுகிப்போய், எதிலும் ஈடுபாடு
கொண்டிடத்தக்க தெம்பு அற்றுப்போய், 'இருக்கின்றோம் இறந்துபட
இறந்துபடும் வரையில் இடர்ப்பாட்டில் உழல்கின்றோம்! என்னே இவ்
வாழ்க்கை! எதற்கோ இவ்வாழ்கை! என்றெல்லாம் எண்ணி எண்ணி
ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்திடும் இவர்களா, நாடு, மொழி, வளம்,
உரிமை, நல்லறம், நல்லாட்சி என்பன போன்ற இலட்சியங்களை
உணர்ந்து அவைதமைச் செயலிலே கண்டிட கிளம்பிடப் போகிறார்கள்
என்ற ஐயப்பாடு குடையும் நிலையினனாகப் புறப்பட்ட என்னையே,
அவர்கள் தமது ஆர்வத்தினால், சலியாத உழைப்பினால், தளராத
ஊக்கத்தினால், புது நம்பிக்கை கொண்டிடச் செய்துவிட்டனரே!
{{left_margin|3em|நான் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டிடச் சென்றேன்! அவர்களல்லவா எனக்கு உன்னதமான உணர்ச்சியினைத் தந்துள்ளனர்.
ஏதாகிலும் கிடைத்திடாதா, கிழங்கு கிளிஞ்சல் போன்றவை
யேனும் என்றெண்ணிப் பூமியினைக் குடைந்திடும்போது, தங்கப்பாளம் கரத்தினில் தட்டுப்பட்டால் பெறுபவன் எத்துணை
மகிழ்ச்சி பெற்றிடுவான். அந்நிலையன்றோ எனக்கு!
உணர்ச்சி ஒரு செல்வம்! உண்மை! அந்தச் செல்வத்தைக்
குவியல் குவியலாக, குன்றன்ன அளவினதாகக் காண்கின்றேன்;
ஒவ்வோர் நாளும்; ஒவ்வோர் இடத்திலும்.}}
காலையிலே, மேயரும், மாவட்டச் செயலாளரும், மணிமொழியாரும்
மற்ற நண்பர் சிலரும் மாநில மாநாட்டுக்கான 'திடல்' காண அழைத்துச் சென்றனர். சென்ற இடத்திலே, எத்தனை இனிய முகங்கள். நட்பு மொழிகள், வரவேற்கும் கண்கள்!
இடத்திலே கள்ளி காளான் நிரம்ப உள்ளனவே என்கின்றேன்;
இதுதான் இடம் என்று தீர்மானித்து விடுங்கள். எட்டே நாளில் இந்த
இடம் பட்டுப் போல பளபளக்கிறது பாருங்கள் என்கிறார்கள்.
இங்கேதான் மாநாடாம்! மாநில மாநாடாம்! தேர்தல் அறிக்கையும்
வேட்பாளர் பட்டியலும் வெளியிட அமைகின்ற மாநாடாம்! நமது
பக்கத்தில்! நமது பேட்டையில்! நமது வட்டத்தில்!-என்றெல்லாம் பரிவுடன் பேசுகின்றனர். கழகத்திடம் அவர்கள் கொண்டுள்ள பாசம், வைத்துள்ள நம்பிக்கை தூய்மையானது; அது வளர்ந்த படியும் இருக்கிறது.<noinclude></noinclude>
jktwah8crecj5mtv42jzmuqgjo45xwr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289
250
639689
1947986
1947444
2026-06-19T13:56:20Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1947986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||265}}{{rule}}</noinclude>வஞ்சகத்தாலும் சதிச் செயலாலும் அதனை வீழ்த்திடவோ குன்றச்
செய்திடவோ முடியவில்லை. காலைக் கதிரவன் போன்ற ஓர் எழிலுடன், உயிரூட்டம் தரும் சக்தியுடன், அந்த எழுச்சி விளங்குகிறது.
{{left_margin|3em|கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைத்திட முடியாத
கருவூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது; உண்மை உழைப்பாளரின்
உணர்ச்சி எனும் செல்வம்.}}
ஆடவர் மட்டுமல்ல, தாய்மார்கள்; வாலிபர் மட்டுமல்ல, முதியோர்கள்,
சிறார்கள்; எல்லோரிடமுமே இந்த உணர்ச்சி ததும்பிடக் காண்கின்றேன்; உள்ளன்பு இருந்திடக் காண்கின்றேன். கண்டதும் ஓர் கனிவு! சொல் கேட்டதும் ஓர் பற்று! அழைத்ததும் ஓர் பாசம்! இதனைவிடச் சிறந்ததோர் செல்வம் எங்கும் இருந்திட முடியாது.
{{left_margin|3em|பெருமழையால் வீடிழந்து விம்மிக் கிடந்திடுவோரைக்
காணச் செல்கின்றேன், அவர்கள் வாழத்தொலி எழுப்பி அல்லவா
வரவேற்கிறார்கள்!
அண்ணன் வந்தானாமே, உங்கள் அண்ணன்! என்ன கொண்டு
வந்து தந்தான்? உமது அல்லலைப் போக்கிட ஆளுக்கு ஆயிரம்
என்றா அள்ளித் தந்தான்!-என்று கேலி மொழி பேசிடக் கூடச்
சிலர் உளர் எனினும் அந்த உத்தமர்கள், நான் என்ன தந்தேன் என்றா
கேட்டார்கள், அண்ணன் வந்தான்! எமது அல்லலைக் கண்டான்!
ஆவன செய்திடுவான்!! என்றல்லவா நெஞ்சம் நெகிழக் கூறுகின்றனர்!}}
அத்தகைய உள்ளன்பும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பியுள்ள நிலை
கண்டேன், பெருமகிழ்வு கொண்டேன்; ஆனால் மறுகணமோ கவலை
என் மனத்தினைக் குடைந்தெடுக்கலாயிற்று.
இவ்வளவு உள்ளன்பையும் உணர்ச்சிப் பெருக்கையும், துச்சமென்று
எண்ணி அல்லவா, ஆளவந்தார்கள், மீண்டும் நாங்களே அரியாசனம்
அமர்வோம் என்று கூறுகின்றனர். அகந்தை எது என்போம். ஆயினும்
எதனால் பிறந்துளது அந்த அகந்தை! இத்தனைத் தெளிவாக ஏழை
எளியோர் பாட்டாளி விவசாயி கழகப் பற்றினைத் தெரிவித்திடுவது
கண்டும் ஆளவந்தார்கள். மீண்டும் தாமே தேர்தலில் வெற்றி பெறப்
போவதாக, எந்தத் தைரியத்தினால் கூறுகின்றனர்?
{{left_margin|3em|எழுச்சி இருக்கிறது; நிரம்ப; ஆனால் ஏழையரிடம்!
ஏழையர், விலை கொடுத்து வாங்கிவிடத் தக்கவர்கள்.
உணர்ச்சி இருக்கிறது; நிரம்ப!}}
ஆனால் அந்த உணர்ச்சியை மங்கச் செய்திடலாம். மடியச்
செய்திடலாம். காசு வீசி!<noinclude></noinclude>
avqz7s6oj53wkho32ik6fbp285bky9i
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/31
250
642367
1947966
1930586
2026-06-19T12:21:03Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|30 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>
<b>தந்நலமற்ற மன்னர்கள்</b>
பழந்தமிழ் வேந்தர்களிலே பலர், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர். குடிகள் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற் கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப் பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என் னும் பாண்டிய மன்னனாலேயே பாடப்பட்டது பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப் பாடல் ஒரு தூண்டா விளக்காகத் துலங்குகின்றது.
''என்னையும், எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விடமாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசை யும். அவர்களையும் பிடித்துக்கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடை நிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி 'எமது அரசன் கொடுங்கோலன் என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன்.
{{left_margin|3em|<poem>
சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை
அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேன் ஆயின், பொருந்திய
என்நிழல் வாழ்நர், செல்நிழல் காணாது
'கொடியன்எம் இறை' எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக." {{float_right|(புறநா. 72)}}
</poem>}}
இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொண்டுவர வடநாட் டிற்குப் புறப்படுகின்றான். அப்பொழுது அவன். 'என்னை இகழ்ந்த வடதிசை மன்னர்களின் தலையிலே கண்ணகி சிலை
____________________
சிறுசொல் - பழிச்சொல், சமம் - போர்.<noinclude></noinclude>
5b6ep14c50jio6xw98vcz1wgblojn1n
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/32
250
642551
1947967
1931198
2026-06-19T12:26:02Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|31 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் {{Right|31}}
செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன்.
அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா
திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலை
யணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை
நடுங்கச் செய்யாமல், பல நன்மைகளையும் தரும் இவ்வுல
கிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்த
னாவேன்" என்று சூளுரைக்கின்றான்.
{{left_margin|3em|<poem><b>வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்,
கடவுள் எழுத,ஓர் கற்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகின்,
செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப்
பகை அரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன.
{{float_right|(சிலம்பு. கால்கோள்.)}}
</b></poem>}}
மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண்
டாலும் மன்னர்களின் - பண்டைத் தமிழ் வேந்தர்களின்
கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம்.
<b>புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள்</b>
பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை
அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள்
அறிஞர்களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம்
காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர்
களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும்
மதிப்புப் பெற்றிருந்தனர். ஆதலால்தான் மன்னர்கள்
புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர்.
புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே
மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர்.
அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப்
கடவுள் எழுத - தெய்வப் படிவம் அமைக்க, வாய்வாள் - கூர்மையான
வாள். செருவெம் - போரை விரும்பும். வைப்பு - காடு.<noinclude></noinclude>
eyn1hnniuvakcsbz3undbbf407fahgb
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1948055
1947902
2026-06-19T15:57:52Z
Desappan sathiyamoorthy
14764
1948055
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
{{Multicol-end}}
r2jf4je13n6iq0xuxgfj73q7gskcvvu
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1948079
1947162
2026-06-19T16:22:27Z
Sridevi Jayakumar
15329
1948079
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
dspj4pv7os5kg9u8n71fj0m3vod0ok2
1948177
1948079
2026-06-20T09:31:26Z
Sridevi Jayakumar
15329
1948177
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-break}}
e4j94fl4ivx817tht7ictjhvc3izque
பயனர்:Bharathblesson/test
2
645148
1948166
1947950
2026-06-20T08:58:24Z
Bharathblesson
15164
1948166
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
oyyd8vk56hy7y5eidnjiof7dvuewctq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/32
250
645828
1947963
1942650
2026-06-19T12:01:03Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|22||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே
நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர்.
இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார்
மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை.
தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன?
தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து,
வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, 'கட்டை' போடுவதும் வேறு வேறா!!
எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே,
காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை!
இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி
எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும்
'வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி.
1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி
விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத்
தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர்.
1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர்.
1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக்
கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை.
1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும்
நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக்<noinclude></noinclude>
pympjpi62n88gq2y6zusolafpj7xkxc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/33
250
645829
1947964
1942651
2026-06-19T12:09:22Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||23}}{{rule}}</noinclude>கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில்
வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்?
நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம்
கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க
வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா?
1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம்.
என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல்
தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம்
தருகிறது.
தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே
தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்! எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது!
பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன்
என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு
அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம்
தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார்,
{{left_margin|3em|உங்கள் தொழிற்சாலை, 'கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறுவதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது.
இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்?
இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!}}
1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க;
1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று
சொல்லை வைத்துக்கொண்டு 'ஜாலம்' செய்தார்கள்!!<noinclude></noinclude>
38d5r3har1rvyyv6iesp6yx6oboxz7q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/34
250
645830
1947965
1942652
2026-06-19T12:17:46Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|24||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார்
கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!!
சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட!
இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற்சாலையினர் (Caustic soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்!
இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி!
ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான
பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ
அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி,
வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி.
இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி
வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி.
வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான
பணமும் குப்பைதானே!!
தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி.
1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக்
கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச்
விக்டோரியா!
1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி
T.V. சுந்தரம் ஐயங்காருடையது!!
பக்கத்திலே, யாராவது, 'பாரத மாதாவின் பிள்ளை' இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக்
கவனித்துப்பார், தம்பி!
ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ்
அமைச்சர்!<noinclude></noinclude>
0neo9c994tn98by9z8ar6mn5iaih32o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/35
250
645831
1948102
1942653
2026-06-19T19:17:36Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||25}}{{rule}}</noinclude>
T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை!
ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன
தாம்பூலம் அளிப்பானேன்?
ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது?
அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை
ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக்
கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர
உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி
இருந்திருக்கக் கூடும்!
நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல!
பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது!
காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம்.
வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!!
டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார்.
எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார்.
இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக
ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே
தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா,
சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம்
செய்தாராம்!
தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும்<noinclude></noinclude>
tj0z08ot05af0x966415m3b3xnxqat9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/36
250
645832
1948103
1942654
2026-06-19T19:23:42Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|26||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது!
நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது
காங்கிரஸ் நண்பர்கள்!
வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக்
கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் 'சேதி'யைக்
கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும்
அடித்துக்கொள்ளட்டும்.
ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக
T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி
பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா
ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக்
கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது!
தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று.
துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார்.
சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே!
அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர்.
எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் 'சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்!
இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில்
கூறவில்லை.
இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே
விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது!
தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான்<noinclude></noinclude>
hurir5tpm0vkg9yc0gatsdv2nsvm4z6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/37
250
645833
1948105
1942655
2026-06-19T19:38:05Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||27}}{{rule}}</noinclude>அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு
ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில்.
சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை.
சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை.
மத்திய சர்க்காருடைய 'லகா'னில் நாம் இருக்கிறோம்.
இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது.
எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின்.
இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும்.
உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!!
இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை!
பட்டால்தான் தெரிகிறது பலருக்கும்.
உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம்
கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில
காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான
பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச்
விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள
வாக்கியங்கள்:
The Madras Government have been approached several times, the
Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme.
The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras.
WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT.
It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic<noinclude></noinclude>
sf3jag1yl5xpn43o37joa785nznujj5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/38
250
645834
1948106
1942656
2026-06-19T19:44:29Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|28||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>freedom of the State in particular and the South as a whole, is not taken away from us.
சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம்
இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு
வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில்
வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி,
இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத்
தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம்
பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை,
காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச்
வெளியிட்டிருக்கிறார்.
தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர்
காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு
என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர்
என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!!
ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி
நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும்,
பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில்
ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான்
திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல்,
குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று!
இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த
உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து
எதிர்பார்த்துப் பயன் இல்லை.
சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட<noinclude></noinclude>
2puvyl8lpcgrwlxwa3caj6v4202v1r2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/39
250
645835
1948129
1942657
2026-06-20T04:44:51Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||29}}{{rule}}</noinclude>டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக
இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம்.
இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப்
போரிடக் கிளம்புவர்?
சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்!
தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும்
தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி
வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப்
பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல்
காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர்,
உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம்
மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு
உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு
நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும்.
நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ்
சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும்.
ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும்.
ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன்
சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!!
{{Right|அன்பன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
2-12-1956
{{dhr|10em}}<noinclude></noinclude>
r42a7435duj3vbrkldvgrgzknf4lhmr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/40
250
645836
1948130
1943686
2026-06-20T04:50:45Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 77</b>}}
{{center|{{x-larger|<b>வெற்றிபுரி செல்ல...</b>}}}}
{{left_margin|3em|<b>தமிழ் நாட்டில் வறுமை - தேர்தல் கால அரசியல்.</b>}}
<b>தம்பி!</b>
{{x-larger|ம}}ருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப்
போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன்
பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப் போய்க் காட்டுவார்கள் - குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் - எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக் கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட வா, தம்பி, வா!
அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து
அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன்
போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி
துடிக்கிறான் இளைஞன்.
பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்! - என்று கனிவுடன் கூறிக் கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் "கொள்கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!!
உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை<noinclude></noinclude>
jk89rpo4grktdr5gw2tzs2oqou576my
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/41
250
645837
1948131
1942659
2026-06-20T05:03:20Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||31}}{{rule}}</noinclude>வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால்,
இந்நேரம் 'ஜன்னி' பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும்.
இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும்,
அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!!
தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான்
வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும்
இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா!
இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி!
உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம்.
{{left_margin|3em|"வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி"
"கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?"
"யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்"
"டாக்டர், என்ன சொல்கிறார்?"
"அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்."
"நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?"<noinclude></noinclude>
cd8xnoqx7sg4pitocrjnv09p9pd0qdt
1948132
1948131
2026-06-20T05:03:59Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||31}}{{rule}}</noinclude>வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால்,
இந்நேரம் 'ஜன்னி' பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும்.
இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும்,
அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!!
தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான்
வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும்
இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா!
இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி!
உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம்.
{{left_margin|3em|"வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி"
"கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?"
"யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்"
"டாக்டர், என்ன சொல்கிறார்?"
"அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்."
"நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?"}}<noinclude></noinclude>
gful1n844lqfcmvhdpipqtr0p8a7cq0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/42
250
645838
1948134
1942660
2026-06-20T05:10:01Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|32||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா?
அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா?
மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம்,
நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன் - நாய் பிழைப்புத்தான்!
இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான்.
அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு
இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி
இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான்.
இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம் -
படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான்.
தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்!
முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன் - பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாம
லிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு
வியாபாரத்தால் கொழுத்தவர் - பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன்.
ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் - உடன்
இருப்போர், மருத்துவர், அனைவரும்.
சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும்
பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர்.
தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில்
நன்கொடை கூடத் தரக்கூடும் - வசதி உண்டு.
ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக்
கொடுத்தார்.
காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்!
இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான் -
நல்லது... என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு<noinclude></noinclude>
om210pss7rr4pchwqypcd66n681v75u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/43
250
645839
1948147
1942661
2026-06-20T07:19:55Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|<b>தொகுதி 7</b>||33}}{{rule}}</noinclude>நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது
மட்டுமல்ல.
படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன்,
உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு - சீந்து
வாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே
காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு - இந்த இரு வேறு
காரணங்கள்தான், இருவேறு விதமான மனப்பான்மையை,
காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது.
ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்! - என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், "சனியன்! கண்றாவி!" என்று
அருவருப்புடன் பேசுகிறார்கள்.
ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத்
திரும்பிக் கொண்டிருந்தான் - இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது - பலர் பதறினர் - தண்ணீர் இறைத்தனர் - மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, ஐயோ! குழந்தை, தொட்டிலில்... தொட்டிலில் குழந்தை..." என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு - உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான் - அலறல் கேட்டான் - உள்ளே, குழந்தை, தொட்டிலில் - என்ற மூன்றே வார்த்தைகள்தான் - எதிரே பெரு நெருப்பு - பாய்ந்தோடினான் உள்ளே!
ஐயோ ஐயோ! என்று அலறினர் - ஆண்டியின் காதில்
மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை.
இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப்போட்டு
மூடி இருந்தான் - குழந்தை பிழைத்தது, ஆண்டியின்
உடலெல்லாம் தீப்புண்!!
சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக்
கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்து<noinclude></noinclude>
o706dexv9n1r70snzofg70lrb15pl1z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/44
250
645841
1948149
1942662
2026-06-20T07:34:31Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{rh|34||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>விட்டதே, சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம்
பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச்
சென்று, "சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க" என்று சமாதானம் கூறிய குப்பியை...! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக் கொண்டது-சீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான் - அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது - சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது!
ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம்
மருத்துவ மனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி
காண்போம்.
விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம் - மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம்.
அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை -
அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத் தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக 'மூக்குத்தி'யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல்
நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள் - அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன் - அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறி விட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!!
"லட்சுமி எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?"
"மார்வாடி கடைக்குத்தான் மாமி"<noinclude>
8.த.அ.க.2</noinclude>
3akc19oe29rqelzs4skm0wv2x50kejp
அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf
253
646557
1947978
1947405
2026-06-19T13:32:11Z
Info-farmer
232
- துப்புரவு
1947978
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தும் பங்களிப்பில், இந்நாள் வரையில் ஈடுபட்டவர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106407 இதனைச் சொடுக்கவும்.]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:32, 19 சூன் 2026 (UTC)
== OCR ==
OCR - indic ocr வேலைசெய்யவில்லை. google ocr வழியாக செய்யும்போது சில நேரங்களில் இடர் வருவதைக் காணமுடிகிறது. /50-409; 56-415; 63-422; 70-429; 84-443; 58-444; 92-451/ [[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 09:36, 13 சூன் 2026 (UTC)
:நன்றி. அப்பக்கங்களை உங்களுடன் இணைந்து சீர் செய்தோம். அப்பக்கங்கள், பள்ளி மாணவியின் எழுத்துணரியாக்கப் பயிற்சியினால் உருவாகியிருந்தன. அதனால் அப்பக்கங்களில் இடர் வந்தன. மீண்டும் அவருக்கு, அவரின் பெற்றோரின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:15, 14 சூன் 2026 (UTC)
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை]]
6f1snx01fuvyoi22siahlsejfarp6c1
விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை
4
646953
1948072
1947901
2026-06-19T16:15:27Z
Info-farmer
232
[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
1948072
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|}
ke6mitvk2xobt1rp3m9w623ip16zvv4
1948073
1948072
2026-06-19T16:16:38Z
Info-farmer
232
[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
1948073
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|}
48bw1kgt3hupwoek2bwsfzjwutdilrf
1948080
1948073
2026-06-19T16:23:30Z
Info-farmer
232
+ விரிவு
1948080
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] | ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]*<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || || ||
|}
7oyl8kgb2k9aqj0vdd1s0g5z5m0biip
1948083
1948080
2026-06-19T16:34:46Z
Info-farmer
232
[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459]
1948083
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106459] || ||
|}
1yqs4qmwst2kpsie3s1yu3gmbhzu9sf
1948084
1948083
2026-06-19T16:37:37Z
Info-farmer
232
+ விரிவு
1948084
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் !! மஞ்சள்நிலை !! பச்சைநிலை
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] || ||
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] || ||
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] || ||
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] || ||
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] || ||
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] || ||
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] || ||
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] ||
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] || ||
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] || ||
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] || ||
|}
md3nekoiu2okp9b5r0w7zue1lkmg3h9
1948086
1948084
2026-06-19T16:53:10Z
Info-farmer
232
1948086
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர்
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422]
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
|}
hbdgu3rgy8cxqbpqe4ullwjpc5l11n1
1948088
1948086
2026-06-19T17:02:11Z
Info-farmer
232
+ விரிவு
1948088
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{{c|{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}}}
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர்
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422]
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
|}
7b66achn8m2ejfq0c0djh74ddgr2eaw
1948089
1948088
2026-06-19T17:02:49Z
Info-farmer
232
- துப்புரவு
1948089
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
{{c|{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}}}
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர்
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422]
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
|}
568sv9cj0k3vkfbu89c6sz7wwjaf0xd
1948094
1948089
2026-06-19T17:12:29Z
Info-farmer
232
+ தொடக்கம்
1948094
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
== திட்டத்தினால் உருவான அட்டவணைகள் ==
== திட்டத்தினால் உருவான கடிதங்கள் ==
{{c|{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' நாம் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}}}
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர்
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422]
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
|}
4z3u2vn6oq49uklvdkoexfbwnpkj9ax
1948095
1948094
2026-06-19T17:13:48Z
Info-farmer
232
திட்டத்தினால்/* திட்டத்தினால் உருவான கடிதங்கள் */
1948095
wikitext
text/x-wiki
* இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
* நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும்.
== திட்டத்தினால் உருவான அட்டவணைகள் ==
== திட்டத்தினால் உருவான கடிதங்கள் ==
{{c|{{Box|
* '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும்.
* ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும்.
}}}}
{| class="wikitable sortable collapsible"
! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர்
|-
| புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415]
|-
| புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418]
|-
| புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419]
|-
| புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420]
|-
| புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457]
|-
| புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422]
|-
| புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422]
|-
| புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407]
|-
| புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409]
|-
| புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
| புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459]
|-
|}
ba941xn3a5q1zr5xg1vgi452zhieaup
அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
253
647037
1947971
1947897
2026-06-19T13:00:21Z
Info-farmer
232
/* பங்களிப்பு விவரங்கள் */ இணைப்பு
1947971
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106457 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
# ஊதா - முதல்நிலையான எழுத்துப்பிழை நீக்கியவர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/106424 இதனைச் சொடுக்கவும்.]
#* இதன் தரவு தெரியாது. ஏனெனில், இந்நூல் முழுவதும் பச்சை நிலைக்கு மேம்படுத்தி நிறைவு பெற்றுள்ளது.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களை காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:39, 17 சூன் 2026 (UTC)
24lhx3spyql8xq6e2do2pqrj7l5s9nu
1947973
1947971
2026-06-19T13:07:08Z
Info-farmer
232
விரிவு
1947973
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106457 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
# ஊதா - முதல்நிலையான எழுத்துப்பிழை நீக்கியவர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/106424 இதனைச் சொடுக்கவும்.]
#* இதன் தரவு தெரியாது. ஏனெனில், இந்நூல் முழுவதும் பச்சை நிலைக்கு மேம்படுத்தி நிறைவு பெற்றுள்ளது.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:39, 17 சூன் 2026 (UTC)
nlfk8fqlnms965umpnztu7t6jhg56um
1947977
1947973
2026-06-19T13:25:06Z
Info-farmer
232
- துப்புரவு
1947977
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106457 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
# ஊதா - முதல்நிலையான எழுத்துப்பிழை நீக்கியவர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/106424 இதனைச் சொடுக்கவும்.]
#* இதன் தரவு தெரியாது. ஏனெனில், இந்நூல் முழுவதும் பச்சை நிலைக்கு மேம்படுத்தி நிறைவு பெற்றுள்ளது.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106469 இதனைச் சொடுக்கவும்.]
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:39, 17 சூன் 2026 (UTC)
nh51ir4nevce0wmdwved38vhal7yqvo
1947980
1947977
2026-06-19T13:38:27Z
Info-farmer
232
- துப்புரவு
1947980
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* நூலகத்தில் தேடி உரிய நூலினைக் கண்டறிதல், உரிய நூலினை மின்வருடல் செய்தல், அம்மின்வருடல்களைத் துப்புரவு செய்தல், அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என சரிபார்த்தல், மின்னூலை உருவாக்குதல் அகியப் பணிகள் இக்கணக்கீடுகளின் கீழ் வருவதில்லை.
* '''குறிப்பு''': கீழுள்ள கணக்கீடுகள், வெளியிட்ட இந்நாளுக்குப் பிறகு, பங்களித்தவர்களை அறிய, இணைக்கப்பட்டுள்ள "குவாரி"(quarry) நிரலை, மீண்டும் இயக்கி அறிய வேண்டும்.
# இந்நூலினை மேம்படுத்தியவர்களின் பெயர்களையும், அவர்தம் தொகுப்பு எண்ணிக்கைகளையும் அறிய, [https://quarry.wmcloud.org/query/106457 இதனைச் சொடுக்கவும்.]
#* மேம்படுத்தும் பங்களிப்பு என்பது அட்டவணை அலகுகளை நிரப்புதல், மேலடி, கீழடி ஆகிய பங்களிப்புகளையும் குறிக்கும்.
# ஊதா - முதல்நிலையான எழுத்துப்பிழை நீக்கியவர்களை அறிய [https://quarry.wmcloud.org/query/106424 இதனைச் சொடுக்கவும்.]
#* இதன் தரவு தெரியாது. ஏனெனில், இந்நூல் முழுவதும் பச்சை நிலைக்கு மேம்படுத்தி நிறைவு பெற்றுள்ளது.
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106468 இதனைச் சொடுக்கவும்.]
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்களைக் காண, [https://quarry.wmcloud.org/query/106469 இதனைச் சொடுக்கவும்.] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:38, 19 சூன் 2026 (UTC)
8hpirqpxjdmrpdspo33dkv6eyvw0d9l
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/34
250
647183
1947968
1947955
2026-06-19T12:44:45Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|33 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் {{Right|33}}
யெனக் கருதியிருந்தனர். குடிமக்களின் பாராட்டைப் பெற
வேண்டுமே யன்றி அவர்களுடைய பழிப்பைப் பெறக்
கூடாது என்பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்தனர்.
தங்கள் நாட்டைப்பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும்
என்று ஆவல் கொண்டிருந்தனர், மன்னர்களுக்குத் தனி
யாட்சி உரிமை இருந்த காலத்திலும் அவர்கள் செங்கோல்
மன்னர்களாகச் சிறந்து வாழ்ந்ததற்குக் காரணம் அவர்க
ளுடைய உயர்ந்த குணமும், சிறந்த உள்ளமுந்தான். இவ்
வுண்மையை மேலே காட்டியவற்றைக்கொண்டு அறியலாம்.
புலவர்களின் பாராட்டைப் பெறக்கூடிய ஒரு நாட்டின்
சிறப்பென்ன? அந்நாடு எந்நிலையிலிருக்கும்? அந்நாட்டின்
ஆட்சியும், அவ்வாட்சியின் தலைவனும் எப்படி இருப்பான்?
என்பவைகளை ஒரு சிறந்த செய்யுளால் காணலாம்.நேர்மை
யாக செங்கோல் முறையில் ஆட்சி செலுத்திய நாட்டை அப்
பாடல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.
பிசிராந்தையார் என்பவர் ஒரு சிறந்த புலவர். பெரிய
அரசியல் அறிஞர். அவருடைய பாடல்களிலே
பல உயர்ந்த உண்மைகளைக் காணலாம். அவர் நீண்டகாலம்
நோய் நொடியின்றி உயிர்வாழ்ந்த புலவர். அவரைப்பற்றித்
தமிழ்நாட்டினர் பலர் பல காலமாக அறிந்திருந்தனர்.
அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தவர்களிலே பலர்.
அவர் நரைத்த கிழவராயிருப்பார் என்று நம்பியிருந்தனர்.
இப்படி எண்ணியிருந்தவர்களிலே சிலர், ஒருநாள் அவரை
நேரே பார்த்துவிட்டனர். அப்பொழுது அவர் நரைதிரை
யில்லாமல் இளைஞர்போல் தோற்றம் அளிப்பதைக் கண்டு
வியந்தனர். வயது பலவாகியும் மரையில்லாமலிருப்பதற்கு
என்ன காரணம் என்று புலவரையே கேட்டுவிட்டனர். அப்
பொழுது அவர் விடையளிப்பதாக அமைந்திருக்கின்றது
அச் செய்யுள்.
.
"'வயது பலவாகியும் இன்னும் உமது மயிர் நரைக்க
வில்லையே, இந்திலை எப்படி உண்டாயிற்று?' என்று கேட்
பீர்களானால், உண்மையை உரைக்கின்றேன் கேளுங்கள்.
சிறந்த என் மனைவியும், மக்களும் கல்வியும் அறிவும் நிரம்பி
யவர்கள். ஆதலால் எனக்குக் குடும்பக் கவலையில்லை<noinclude></noinclude>
054t38ztbhwlvp83vgv86i5y0tmltab
1947969
1947968
2026-06-19T12:45:30Z
சந்தானம் க
7674
1947969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|33 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் {{Right|33}}
யெனக் கருதியிருந்தனர். குடிமக்களின் பாராட்டைப் பெற
வேண்டுமே யன்றி அவர்களுடைய பழிப்பைப் பெறக்
கூடாது என்பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்தனர்.
தங்கள் நாட்டைப்பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும்
என்று ஆவல் கொண்டிருந்தனர், மன்னர்களுக்குத் தனி
யாட்சி உரிமை இருந்த காலத்திலும் அவர்கள் செங்கோல்
மன்னர்களாகச் சிறந்து வாழ்ந்ததற்குக் காரணம் அவர்க
ளுடைய உயர்ந்த குணமும், சிறந்த உள்ளமுந்தான். இவ்
வுண்மையை மேலே காட்டியவற்றைக்கொண்டு அறியலாம்.
புலவர்களின் பாராட்டைப் பெறக்கூடிய ஒரு நாட்டின்
சிறப்பென்ன? அந்நாடு எந்நிலையிலிருக்கும்? அந்நாட்டின்
ஆட்சியும், அவ்வாட்சியின் தலைவனும் எப்படி இருப்பான்?
என்பவைகளை ஒரு சிறந்த செய்யுளால் காணலாம்.நேர்மை
யாக செங்கோல் முறையில் ஆட்சி செலுத்திய நாட்டை அப்
பாடல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.
பிசிராந்தையார் என்பவர் ஒரு சிறந்த புலவர். பெரிய
அரசியல் அறிஞர். அவருடைய பாடல்களிலே
பல உயர்ந்த உண்மைகளைக் காணலாம். அவர் நீண்டகாலம்
நோய் நொடியின்றி உயிர்வாழ்ந்த புலவர். அவரைப்பற்றித்
தமிழ்நாட்டினர் பலர் பல காலமாக அறிந்திருந்தனர்.
அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தவர்களிலே பலர்.
அவர் நரைத்த கிழவராயிருப்பார் என்று நம்பியிருந்தனர்.
இப்படி எண்ணியிருந்தவர்களிலே சிலர், ஒருநாள் அவரை
நேரே பார்த்துவிட்டனர். அப்பொழுது அவர் நரைதிரை
யில்லாமல் இளைஞர்போல் தோற்றம் அளிப்பதைக் கண்டு
வியந்தனர். வயது பலவாகியும் மரையில்லாமலிருப்பதற்கு
என்ன காரணம் என்று புலவரையே கேட்டுவிட்டனர். அப்
பொழுது அவர் விடையளிப்பதாக அமைந்திருக்கின்றது
அச் செய்யுள்.
"'வயது பலவாகியும் இன்னும் உமது மயிர் நரைக்க
வில்லையே, இந்திலை எப்படி உண்டாயிற்று?' என்று கேட்
பீர்களானால், உண்மையை உரைக்கின்றேன் கேளுங்கள்.
சிறந்த என் மனைவியும், மக்களும் கல்வியும் அறிவும் நிரம்பி
யவர்கள். ஆதலால் எனக்குக் குடும்பக் கவலையில்லை<noinclude></noinclude>
h17y0dbze707tnj9b9boacuhv4khabg
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/35
250
647184
1947970
1947956
2026-06-19T12:56:02Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|34 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>34 {{center|பழந்தமிழர் அரசியல்}}
என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் என்னுடைய
குறிப்பறிந்து நடப்பவர்கள். அதாவது எனக்கும் என்னிடம்
வேலை செய்வோர்க்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு
அதனால் நான் செய்யும் தொழில் தடைப்படுவதேயில்லை.
இவைகளுக்கெல்லாம் காரணம் எனது நாட்டு அரசன்
ஒருபொழுதும் அநீதி செய்யவே மாட்டான்: நேர்மையாக
நாட்டைக் காத்து வருகின்றான். அன்றியும் நான் வாழும்
நாட்டிலே. நான் வாழும் ஊரிலே பல அறிஞர்கள் உண்டு.
அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்: செருக்கின்றி
அடங்கிய அறிவுள்ளவர்கள் : புலன் அடக்கமும் உள்ளவர்
கள். ஆதலால்தான் நான் நரையில்லாமல் வாழ்கின்றேன்;
என் குடும்பம் அமைதியாக இருக்கின்றது: எனது நாடும்
நல்ல அரசாட்சி பெற்று உயர்ந்திருக்கின்றது. ஆதலால்தான்
நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றேன் ; கவலையற்ற
இளைஞனைப்போல் காணப்படுகின்றேன்.
{{left_margin|3em|<poem><b>யாண்டுபல ஆக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் ;
யான்கண் டனையர்என் இளைஞரும் ; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் ; அதன் தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.''</b></poem>}}
{{Right|(புறநா. 191)}}
இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்கு வியப்
புண்டாகின்றது. இப்படி ஒரு நாடு பண்டைத் தமிழகத்தில்
இருந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. இருந்ததோ
இல்லையோ, அதைப்பற்றி நாம் துருவித் துருவி ஆராய்ந்து
மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம்.
இப்படி ஒரு நாடு இருந்தால் அது இன்பங் கொழிக்கும் நாடாகத்தான்
இருக்கும் என்பதில் ஐயமில்லை.
_____________________
யாங்கு ஆகியர் - எப்படி ஆனீர். மாண்ட - சிறந்த, இளைஞர் - வேலைக்
காரர்கள், அல்லவை - தீமை. ஆன்று - அறிந்து. அவிந்து - அடங்கி,
அடங்கிய - புலன் அடக்கம் உள்ள.<noinclude></noinclude>
egxxqwzguqwkdloofv0k4e8cnbrkv7s
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/36
250
647185
1947972
1947957
2026-06-19T13:01:34Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1947972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|35 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகவே மன்னர்கள்}} {{Right|35}}
இந்தப் பாட்டு தனியாட்சி உரிமை படைத்த மன்னர்கள்
ஆண்ட காலத்திலே எழுந்த பாட்டு. இதைத்தான் நாம்
எண்ணிப் பார்க்கவேண்டும். பண்டைத் தமிழ் மன்னர்கள்
எல்லா மக்களும் கல்வி கற்றிருக்க வேண்டும். வேலைக்காரர்
களும் தலைவர்களும் ஒத்து வாழவேண்டும். அறிவும் அடக்க
மும் ஒழுக்கமும் பொருந்திய சான்றோர்களின் அறிவுரைப்
படி ஆட்சி நடைபெறவேண்டும் என்று நினைத்தார்கள்:
இதற்காக முயன்றார்கள் என்பதற்கு இப் பாடலே சான்
றாகும். பண்டைத் தமிழரசர்களிலே சிறந்த மன்னர்கள்
பலர் இருந்தனர் என்பதற்கு இப் பாடலும் ஒரு எடுத்துக்
காட்டு.
இதனாலும் மக்கள் வாழ்வுக்கும். நாட்டின் நன்மைக்கும்
அரசாட்சியே அடிப்படை என்பதைக் காணலாம். தனியாட்சி
முறை வெற்றியுடன் நடைபெற்றதற்கு அவ்வாட்சித் தலைவர்
களின் அரிய பண்புகளே காரணம்; அருங்குணங்களே
அப்பழுக்கற்ற நடத்தைக்கு அடிப்படை என்ற உண்மையை
யும் உணரலாம்.
சில மன்னர்கள் இவ்வாறு சிறந்த பண்புள்ளவரா
யிருந்தனர் என்பதைக் கொண்டு, தனிப்பட்டவர்களிடமே
அதிகாரம் இருக்கவேண்டும் என்று முடிவுகட்டிவிடக் கூடாது.
அதிகாரச் செருக்கால் தீமை செய்தவர்கள் - செய்கின்றவர்
கள் - பலர் உண்டு. பண்டை மன்னர்களிலும் சிலர் இருந்
தனர். இவ்வுண்மையைப் பின்னர்க் காணலாம்.<noinclude></noinclude>
7gicfaos2j3c2letup1h8cxlj0hzxzu
அட்டவணை:கவுசிகர் மையும், பெருமாள்திருமொழியும் (1910).pdf
252
647186
1947974
2026-06-19T13:13:40Z
Clintacc
16664
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947974
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கவுசிகர் மையும், பெருமாள்திருமொழியும்
|Language=ta
|Author=கவுசிகர் & குலசேகரப் பெருமாள்
|Translator=
|Illustrator=பாரம்பரிய தமிழ் மருத்துவம், மாய வித்தைகள் மற்றும் வைணவ பக்தி இலக்கியம் சார்ந்த நூல்.
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=சென்னை
|Year=பி. வி. கண்ணன் நிறுவனத்தார்
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist 1=நூலட்டை 2-34 />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
1nxllgj9wgednlx8i96gg41sr8x5d59
1947975
1947974
2026-06-19T13:17:15Z
Clintacc
16664
1947975
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கவுசிகர் மையும், பெருமாள்திருமொழியும்
|Language=ta
|Author=கவுசிகர் & குலசேகரப் பெருமாள்
|Translator=
|Illustrator=பாரம்பரிய தமிழ் மருத்துவம், மாய வித்தைகள் மற்றும் வைணவ பக்தி இலக்கியம் சார்ந்த நூல்.
|Editor=
|Volumes=
|School=
|Publisher=பி. வி. கண்ணன் அண்ட் கோ.
|Address=சென்னை
|Year=1910
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist 1=நூலட்டை 2-34 />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
b5zgyymvoufl0xywkupggjylh4k4cfj
1947976
1947975
2026-06-19T13:18:30Z
Clintacc
16664
1947976
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கவுசிகர் மையும், பெருமாள்திருமொழியும்
|Language=ta
|Author=கவுசிகர் & குலசேகரப் பெருமாள்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=பி. வி. கண்ணன் அண்ட் கோ.
|Address=சென்னை
|Year=1910
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist 1=நூலட்டை 2-34 />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
eh32iauvv2sd56lmnvu32wjiot884cn
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை
0
647187
1947987
2026-06-19T13:58:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுர கீதை | previous = [[../ஈசுடர் தீவு/]] | next = [[../ஈசுர பாரதியார்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947987
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுர கீதை
| previous = [[../ஈசுடர் தீவு/]]
| next = [[../ஈசுர பாரதியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="651" to="652" fromsection="ஈசுர கீதை" tosection="ஈசுர கீதை" />
68haw9mid8daz7ojgq0h7wem3djehdx
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்
0
647188
1947992
2026-06-19T14:04:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுர பாரதியார் | previous = [[../ஈசுர கீதை/]] | next = ../ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947992
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுர பாரதியார்
| previous = [[../ஈசுர கீதை/]]
| next = [[../ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="652" to="652" fromsection="ஈசுர பாரதியார்" tosection="ஈசுர பாரதியார்" />
4jy51vsbehssorxqcoz8fhaxfcnvajf
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.
0
647189
1947996
2026-06-19T14:07:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ. | previous = [[../ஈசுர பாரதியார்/]] | next = ../ஈசுரா ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1947996
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.
| previous = [[../ஈசுர பாரதியார்/]]
| next = [[../ஈசுரா பவுண்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="652" to="652" fromsection="ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ." tosection="ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ." />
gt6xw6r1lilldp6yy5gmhkqd4234ys3
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/84
250
647190
1948003
2026-06-19T14:09:58Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|83 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{Right|82}}
மெய்ப்பிக்கப்பப்டால், அவரைத் திருப்பிக் கொண்டுவர
முடியாது; ஆதலால் கொலைத் தண்டனை கூடாது," கொலைத்
தண்டனையை மறுப்போர் கூறும் கருத்துக்களில் இதுவே
முதன்மையானது.
“கொலையாளிகள் உயிர்வாழ இடங்கொடுத்தால்,
மேலும் மேலும் கொலைக் குற்றம் பெருகிக்கொண்டே வரும்;
கொலையாளிகள் தெரகையும் வளர்ந்து வரும்; கொலைக்
குற்றத்திற்குக் கொலைத் தண்டனை கொடுத்தால்தான்
கொலைக் குற்றங்களைத் தடுக்க முடியும்” என்பதே கொலைத்
தண்டனை கொடுக்கும் முறையை மாற்றக்கூடாது என்போர்
கூறும் கருத்துக்களில் முதன்மையானது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மையான குற்ற
வாளியா ? அல்லவா ? என்பதைக் கண்டுபிடித்தாக வேண்
டும். இத்தகைய திறமை படைத்தவர்கள் கையில்தான்
அந்த அதிகாரம் ஓப்படைக்கப்பட வேண்டும்; நேர்மையும்
நுண்ணறிவும் படைத்தவர்கள் அறங்கூறும் அவையங்களிலே
அமர்ந்து நீதி வழங்கவேண்டும். இந்த முறை ஒழுங்காகப்
பின்பற்றப்பப்டால் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாக
ஆக்கப்பட மாட்டார்கள். ஆதலால் குற்றமற்றவர்கள், குற்ற
வாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டனைக்கு ஆளாவார்கள்
என்று வைத்துக்கொண்டு, கொலைத் தண்டனையே கூடாது
என்பது பொரும்தாது.
கொலைத் தண்டனை இருக்கவேண்டும் என்பதுதான்.
முன்னோர்கள் கருத்து: அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த
ஆன்றோர்கள் முடிவு: தெய்வத்திற்கும் அநீதிக்கும் அஞ்சி
வாழ்ந்த பண்டைய அறிஞர்களின் கருத்து, இன்றைய
உலக அறிஞர்களில் பெரும்பாலோர் கொலைத் தண்டனை
முறையை ஆதரிப்பவர்கள் என்பதிலே ஐயம் இல்லை.
பழந்தமிழர் அரசியலிலே கொலைத் தண்டனை கையாளப்
பட்டு வந்தது. நாட்டு மக்களின் நல்வரழ்வுக்காக, அரசாங்
கங்கள் கடும் குற்றம் புரிந்தோர்க்குக் கொலைத் தண்டனை
கொடுக்கப் பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத் திரு
வள்ளுவர் தெளிவாக உரைக்கின்றார்.<noinclude></noinclude>
pdin4t57jpd0zeftbk0h9q5vehfadkf
1948005
1948003
2026-06-19T14:10:29Z
சந்தானம் க
7674
1948005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|83 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{Right|83}}
மெய்ப்பிக்கப்பப்டால், அவரைத் திருப்பிக் கொண்டுவர
முடியாது; ஆதலால் கொலைத் தண்டனை கூடாது," கொலைத்
தண்டனையை மறுப்போர் கூறும் கருத்துக்களில் இதுவே
முதன்மையானது.
“கொலையாளிகள் உயிர்வாழ இடங்கொடுத்தால்,
மேலும் மேலும் கொலைக் குற்றம் பெருகிக்கொண்டே வரும்;
கொலையாளிகள் தெரகையும் வளர்ந்து வரும்; கொலைக்
குற்றத்திற்குக் கொலைத் தண்டனை கொடுத்தால்தான்
கொலைக் குற்றங்களைத் தடுக்க முடியும்” என்பதே கொலைத்
தண்டனை கொடுக்கும் முறையை மாற்றக்கூடாது என்போர்
கூறும் கருத்துக்களில் முதன்மையானது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மையான குற்ற
வாளியா ? அல்லவா ? என்பதைக் கண்டுபிடித்தாக வேண்
டும். இத்தகைய திறமை படைத்தவர்கள் கையில்தான்
அந்த அதிகாரம் ஓப்படைக்கப்பட வேண்டும்; நேர்மையும்
நுண்ணறிவும் படைத்தவர்கள் அறங்கூறும் அவையங்களிலே
அமர்ந்து நீதி வழங்கவேண்டும். இந்த முறை ஒழுங்காகப்
பின்பற்றப்பப்டால் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாக
ஆக்கப்பட மாட்டார்கள். ஆதலால் குற்றமற்றவர்கள், குற்ற
வாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டனைக்கு ஆளாவார்கள்
என்று வைத்துக்கொண்டு, கொலைத் தண்டனையே கூடாது
என்பது பொரும்தாது.
கொலைத் தண்டனை இருக்கவேண்டும் என்பதுதான்.
முன்னோர்கள் கருத்து: அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த
ஆன்றோர்கள் முடிவு: தெய்வத்திற்கும் அநீதிக்கும் அஞ்சி
வாழ்ந்த பண்டைய அறிஞர்களின் கருத்து, இன்றைய
உலக அறிஞர்களில் பெரும்பாலோர் கொலைத் தண்டனை
முறையை ஆதரிப்பவர்கள் என்பதிலே ஐயம் இல்லை.
பழந்தமிழர் அரசியலிலே கொலைத் தண்டனை கையாளப்
பட்டு வந்தது. நாட்டு மக்களின் நல்வரழ்வுக்காக, அரசாங்
கங்கள் கடும் குற்றம் புரிந்தோர்க்குக் கொலைத் தண்டனை
கொடுக்கப் பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத் திரு
வள்ளுவர் தெளிவாக உரைக்கின்றார்.<noinclude></noinclude>
1l4o4dvw6slwdxbsx7hxy67f6l1s2ga
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு
0
647191
1948006
2026-06-19T14:11:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுரா பவுண்டு | previous = [[../ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ./]] | next = ../ஈசுவர்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948006
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுரா பவுண்டு
| previous = [[../ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ./]]
| next = [[../ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="652" to="653" fromsection="ஈசுரா பவுண்டு" tosection="ஈசுரா பவுண்டு" />
olouynjiak6nb0zwonuu7ezna8hzqjc
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு
0
647192
1948008
2026-06-19T14:14:54Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு | previous = [[../ஈசுரா பவுண்டு/]] | next = ../ஈசுவர அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948008
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு
| previous = [[../ஈசுரா பவுண்டு/]]
| next = [[../ஈசுவர அவிகாரவாத சைவம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="653" to="654" fromsection="ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு" tosection="ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு" />
85tyx2mtamhpdztwhhqh8m0r4q25pv5
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/37
250
647193
1948009
2026-06-19T14:17:23Z
சந்தானம் க
7674
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "3. அறநெறி காத்த அரசர்கள் பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறி தல றாமல் அரசாண்டு வந்தனர். இதை விளக்கும் சான்றுகள் பல பழக்கமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="சந்தானம் க" />{{Rvh|36 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>3. அறநெறி காத்த அரசர்கள்
பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறி தல
றாமல் அரசாண்டு வந்தனர். இதை விளக்கும் சான்றுகள்
பல பழக்கமிழ் நூல்களில் கரணப்படுகின்றன. தமிழ்
மன்னர்கள் தங்களிடம் வந்து குறைகளைத் தெரிவித்துக்
கொள்ளும் குடிமக்களின் மனம் மகிழ்ச்யெடையும்படி மலம்
புரிந்தனர் ; மாறுபட்ட இருவர், தங்களுக்கு முறை செய்
யும்படி வேண்டினால் ஈறநிலையிலே கின்று அவர்களுக்கு
தீதி வழங்கிவர்தனர்.
அக்காலத்திலே நீதிமன்றங்கள் இருக்தன, அவற்றில்
அறிஞர்கள் அறம் கூறும் கீதிபதிகளாக அமர்ந்திருர்தனர்..
ந்த கீறியடுகள் வாயிலாகவும் மக்களுக்கு மீதி வழங்ட
வந்தனர். சில சமயங்களில் மன்னர்கள் தரமேயும், குடி
'மக்கள் கெரண்டுவரும் வழக்குககா மேரே ஆராய்வர் ;
வழக்கிட்டோர் மனக்குறையின் றி - ஒப்புக்சொள்ளும்படி -
முடிவு கூறுவர்.
தீதி மன்றம்
நீதிமன்றத்தை “அறங்கூறு அவையம்' என்று கூறு
ன்றது பத்துப்பாட்டு, நீதிபதிகளின் கேர்மை, அவர்கள்
தீதி வழங்கும் முறை இவைகளைத் தெளிவாக அதிலே
காணலாம்.
யத்துப்பாட்டிலே உள்ள மதுரைக்காஞ்சி மாங்குடி,
மருதனரரல் பாடப்பட்டது. பரண்டியன் நெடுஞ்செழியன்"
அப் பாட்டின் தலைவன், அதிலே நீதி மன்றத்தைப்பற்றிக்
கூறப்படும் பகுதி ஈமக்கு வியப்பைத் தருநின்றது. அத்
தகைய நீதிபதிகள், கீதிமுறை, நீடிமன் றம் டக்காலத்தில்
இருக்கின் றனவஃ என் ற யம் பிறக்கின் றது.
“பயம், துன்பம், ஆசை இலைகளை நீச்யெவர்கள் ; ஒரு
யக்கத்தரரிடம் சினமும், மற்றொரு பக்கத்தாரிடம் மடழ்ச்சி<noinclude></noinclude>
ttthqdstylbtzfhq2x28yi7pxztpn51
1948017
1948009
2026-06-19T14:44:52Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|36 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|3. அறநெறி காத்த அரசர்கள்}}
பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறி தவ
றாமல் அரசாண்டு வந்தனர். இதை விளக்கும் சான்றுகள்
பல பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. தமிழ்
மன்னர்கள் தங்களிடம் வந்து குறைகளைத் தெரிவித்துக்
கொள்ளும் குடிமக்களின் மனம் மகிழ்ச்சியடையும்படி நலம்
புரிந்தனர் ; மாறுபட்ட இருவர், தங்களுக்கு முறை செய்
யும்படி வேண்டினால் நடுநிலையிலே நின்று அவர்களுக்கு
நீதி வழங்கிவந்தனர்.
அக்காலத்திலே நீதி மன்றங்கள் இருந்தன, அவற்றில்
அறிஞர்கள் அறம் கூறும் நீதிபதிகளாக அமர்ந்திருந்தனர். இந்த நீதிபதிகள் வாயிலாகவும் மக்களுக்கு நீதி வழங்கி
வந்தனர். சில சமயங்களில் மன்னர்கள் தாமேயும், குடி
'மக்கள் கெரண்டுவரும் வழக்குகளை நேரே ஆராய்வர் ;
வழக்கிட்டோர் மனக்குறையின்றி - ஒப்புக்கொள்ளும்படி -
முடிவு கூறுவர்.
'''நீதி மன்றம்'''
நீதிமன்றத்தை 'அறங்கூறு அவையம்' என்று கூறு
கின்றது பத்துப்பாட்டு, நீதிபதிகளின் நேர்மை, அவர்கள்
நீதி வழங்கும் முறை இவைகளைத் தெளிவாக அதிலே காணலாம்.
பத்துப்பாட்டிலே உள்ள மதுரைக்காஞ்சி மாங்குடி,
மருதனாரால் பாடப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியன்"
அப் பாட்டின் தலைவன், அதிலே நீதி மன்றத்தைப்பற்றிக்
கூறப்படும் பகுதி நமக்கு வியப்பைத் தருகின்றது. அத்
தகைய நீதிபதிகள், நீதிமுறை, நீதிமன்றம் இக்காலத்தில்
இருக்கின்றனவா என்ற ஐயம் பிறக்கின்றது.
“பயம், துன்பம், ஆசை இவைகளை நீக்கியவர்கள் ; ஒரு
பக்கத்தாரிடம் சினமும், மற்றொரு பக்கத்தாரிடம் மகிழ்ச்சி<noinclude></noinclude>
3m9pomehc0od6ak4tit6q264rlzq1hq
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்
0
647194
1948010
2026-06-19T14:18:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவர அவிகாரவாத சைவம் | previous = [[../ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு/]] | next = ....."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948010
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர அவிகாரவாத சைவம்
| previous = [[../ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு/]]
| next = [[../ஈசுவர குப்தா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="654" to="654" fromsection="ஈசுவர அவிகாரவாத சைவம்" tosection="ஈசுவர அவிகாரவாத சைவம்" />
pe7inj9og7dc94zrbbxqiwzlvxwfrbf
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா
0
647195
1948011
2026-06-19T14:24:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவர குப்தா | previous = [[../ஈசுவர அவிகாரவாத சைவம்/]] | next = ../ஈசுவர சந்திர வீத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948011
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர குப்தா
| previous = [[../ஈசுவர அவிகாரவாத சைவம்/]]
| next = [[../ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="654" to="655" fromsection="ஈசுவர குப்தா" tosection="ஈசுவர குப்தா" />
5t41jdc6twk8dclg2c2b6cjq5jnjtjm
1948013
1948011
2026-06-19T14:26:59Z
Booradleyp1
1964
1948013
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர குப்தா
| previous = [[../ஈசுவர அவிகாரவாத சைவம்/]]
| next = [[../ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="654" to="654" fromsection="ஈசுவர குப்தா" tosection="ஈசுவர குப்தா" />
s7ioqfup6dfahiyytrq1r5gek08a3dr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/251
250
647196
1948012
2026-06-19T14:26:43Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இங்குள்ள கதிரவன் கோயில் திகழ்கிறது. இக்கோயில் கி.பி. 1250–இல் முதலாம் நரசிம்மன் என்னும் கங்க மரபு மன்னனால் கட்டப்பட்டது. சிதைந்துள்ள இக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோனாரக்கு|225|கோனேரியப்ப முதலியார்}}</noinclude>இங்குள்ள கதிரவன் கோயில் திகழ்கிறது. இக்கோயில் கி.பி. 1250–இல் முதலாம் நரசிம்மன் என்னும் கங்க மரபு மன்னனால் கட்டப்பட்டது. சிதைந்துள்ள இக்கோயில் ஒரு முற்றுப் பெறாத கோயிலாகத் திகழ்ந்தாலும் இந்தியச் சிற்பிகளின் கைவண்ணத்தை எடுத்தியம்புவதாக உள்ளது. இக்கோயிலின் நாட்டிய மண்டபம் தனித்துக் காணப்படுகிறது. கோயில் தேர் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு இணை சக்கரங்கள் கொண்ட நீண்ட தேரில் சூரியன் அமர்ந்து ஏழு குதிரைகளைப் பூட்டிச் செலுத்திச் செல்வதுபோல் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 251
|bSize = 480
|cWidth = 410
|cHeight = 212
|oTop = 185
|oLeft = 31
|Location = center
|Description =
}}
{{center|கோனாரக்கு}}
இதன் பக்கம் ஒவ்வொன்றும் 34 மீட்டரும் உயரம் 34 மீட்டரும் ஆகும். இக்கோயில் உயரம் 79.மீ. கோயில் அடிப்பகுதி தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை, சகமோகன் மண்டபம், நாட்டிய மண்டபம், பல சிறிய கோயில்கள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட கோயிலாகத் திகழ்கிறது. இவையாவும் 290 × 180 ச.மீ. உடையவை. இவற்றுள் நாட்டிய மண்டபம் மட்டும் தனித்துக் காணப்படுகிறது. கோயிலினுள் செல்வதற்கு மூன்று பக்கங்களில் நுழைவாயில்கள் உள்ளன. தனித்துள்ள நாட்டிய மண்டபம் ஓர் உயரமான மேடையுடையதாய்க் கட்டப்பட்டுள்ளது. உயரமான மேடைகள் அமைத்தே பிற பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன. ஐந்தேர் அமைப்புடைய இக்கோயிலில் சிறப்புமிக்க பல சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் விமான மேற்பகுதியில் மூன்று பக்கங்களில் கதிரவனின் உருவம் காணப்படுகிறது. சகமோகன மண்டபத்திலும் நாட்டிய மண்டபத்திலும் உள்ள விலங்குகளின் பிற்பங்கள் அழகு வாய்ந்தவை. நாட்டிய மண்டபச் சிற்பங்களுள் இரண்டு போர்க் குதிரைகளின் சிற்பங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாகும்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கோனாரக்கு"/>
<section begin="கோனேரியப்ப முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>கோனேரியப்ப முதலியார்:</b>}} இவர் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவரது காலம் சரியாகக் கூறமுடியாததாக உள்ளது. இவர் தந்தையார் சிவானந்த முதலியார், தாயார் அமுதாம்பிகை, சிவப்பற்று நிறைந்த இவர்கள் நெடுங்காலம் மகப்பேறின்றி வாடினர், குகனுக்கு (முருகனுக்கு) ஓர் ஆலயம் எழுப்பினர்; திருக்குளமும் தோண்டினர். அத்திருக்குளத்திற்குக் ‘குகனேரி’ எனப்பெயரிட்டனர். இறைவனை நோக்கிப் பல ஆண்டுகள் வழிபாடு செய்ததன் பலனாக இவர்களுக்கு ஆண் மகவு பிறந்தது. அம்மகவுக்குக் ‘குகனேரியப்பன்’ எனப்பெயரிட்டனர். ‘குகனேரியப்பன்’ என்னும் பெயரே ‘கோனேரியப்பன்’ என மருவிற்று.
தம் ஐந்தாம் வயதில் வீட்டிலேயே கல்வி கற்கத் தொடங்கிய இவர் விரைவில் கற்பன கற்றுத் தேர்ந்தார். அக்காலத்தில் காஞ்சிபுரத்துக் குமரக் கோட்டத்தில் அருச்சகராகவும் முருகன் அருள் பெற்றவராகவும் விளங்கிய தம் குலகுரு கச்சியப்ப சிவா-<noinclude>
<b>வா.க. 8 – 15</b></noinclude>
dmuhc2qjzi22gjehi9o8akevu10t0tf
அட்டவணை:திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம் 1923.pdf
252
647197
1948014
2026-06-19T14:29:07Z
Clintacc
16664
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948014
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
|Language=ta
|Author=சிதம்பர சுவாமிகள்
|Translator=
|Illustrator=திருப்போரூர் முருகன் பக்தி இலக்கியம் சார்ந்த பதிக நூல்.
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=
|Year=1923
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist 1=நூலட்டை 2-8 />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
sw8uh5bn5midb1twr1szxbdrfkjbej6
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்
0
647198
1948015
2026-06-19T14:31:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவர சந்திர வீத்தியாசாகரர் | previous = [[../ஈசுவர குப்தா/]] | next = ../ஈசுவரதத்தர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948015
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்
| previous = [[../ஈசுவர குப்தா/]]
| next = [[../ஈசுவரதத்தர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="654" to="655" fromsection="ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்" tosection="ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்" />
52tg2q0tnsopks2zlo1n48w61q6lckj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/252
250
647199
1948016
2026-06-19T14:42:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாரியாரிடம் சமய தீக்கை பெற்றார். அவரிடம் தேவாரம், திருவாசகம், முதலிய திருமுறைகளையும் வடமொழிப் புராணங்களையும் சமய தத்துவங்களையும் கற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கோனேரியப்ப முதலியார்|226|கோனேரிராயன்}}</noinclude>சாரியாரிடம் சமய தீக்கை பெற்றார். அவரிடம் தேவாரம், திருவாசகம், முதலிய திருமுறைகளையும் வடமொழிப் புராணங்களையும் சமய தத்துவங்களையும் கற்று வல்லவரானார். தம் குலகுரு கச்சியப்ப சிவாசாரியாருக்கு நெருங்கிய தொண்டராக அமர்ந்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் இவர்தம் ஆசிரியர் கச்சியப்பர் வடமொழியிலுள்ள எட்டுப் புராணங்களுள் ஒன்றாகிய காந்த மகாபுராணத்தின் சங்கர சம்கிதையினை அடிப்படையாகக் கொண்டு கந்த புராணத்தைத் தமிழில் பாடினார், ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ எனத் தொடங்கும். அப்புராணம் உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவகாண்டம், தட்ச காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது. ஏழாம் பிரிவாகிய உபதேச காண்டத்தை அவ்வாறே தமிழிற் பாடுமாறு கச்சியப்ப சிவாசாரியார் தம் மாணவராகிய கோனேரியப்ப முதலியாருக்குக் கட்டளையிட்டார். ஆசிரியரின் கட்டளைப்படி கோனேரியப்பர் உபதேச காண்டத்தை ஒன்பான் சுவைகளும் விளங்க, நான்காயிரத்து முன்னூற்று நாற்பத்தெட்டுச் செய்யுட்களால் தமிழிற் பாடினார். இக்காண்டம் கயிலை மான்மியச் சருக்கம் முதல் சிவகாட்சிப் பேற்றுச் சருக்கம் ஈறாக நாற்பத்தொரு பிரிவுகளையுடையது.
வியாச முனிவரின் மாணவராகிய சூத முனிவர் நைமிச வனத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் பாங்கில் அமைந்த இக்காண்டம் விபூதி, உருத்திராக்கம், ஐந்தெழுத்து, சிவபூசை ஆகியவற்றின் பெருமைகளை விதிமுறையால் விளக்குகிறது. சிவத்துரோகம் முதலியவை நரக வேதனையைத் தரும். ஆதலால் அவற்றை விலக்க வேண்டும் என்று இக்காண்டம் வலியுறுத்துகிறது. {{Right|<b>எம்.செ.</b>}}
<section end="கோனேரியப்ப முதலியார்"/>
<section begin="கோனேரிராயன்"/>
{{dhr}}
{{larger|<b>கோனேரிராயன்:</b>}} சோணாட்டுப் பகுதியை கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்டு வந்த அரசியல் தலைவன். விசயநகரப் பேரரசனான இரண்டாம் விரூபாட்சராயரது ஆட்சிக்காலத்தில் சோணாட்டின் உயரதிகாரியாகப் பணிபுரிந்தவன். விசயநகரப் பேரரசு கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வலிமை குன்றிய போது, இத்தலைவன் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, மத்திய அரசிற்கெதிராகப் புரட்சி செய்தான். ஏறத்தாழ கி.பி. 1478–இல் இவன் விடுதலை பெற்ற வேந்தனானான்; கி.பி. 1498 முடிய தனித்தாண்டான்.
இவன் திருவரங்கம், திருமுட்ணம் சீர்காழி, கோனேரி ராசபுரம், கும்பகோணம், திருமழபாடி, திருவோத்தூர், உய்யக்கொண்டான் திருமலை, திருமலை (விட்டுணு கோயில்) முதலானவற்றிற்கு அறக் கொடைகள் அளித்தான். திருச்செங்காட்டங்குடி உத்திராபதி ஈசுவரருக்கு விழா எடுக்கப் பொன்தானம் செய்தான். திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் கோனேரிராயன் மண்டபமும், திருவோத்தூர்க் கோயிலின் வெளிப்பிரகாரமும், கோபுரமும், திருவோத்தூர்க் கேசவப் பெருமாண் சந்திதியும் இவ்வேந்தனால் கட்டப்பட்டன.
கோனேரிராயனும், அவன் மனைவியர் இருவரும் பரிவாரங்கள் பின்தொடரப் பல்லக்கில் செல்லும் காட்சி சிற்பமாகத் திருவோத்தூர்க் கோயிலின் வெளிப் பிரகாரச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கோனேரிராயன்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
7ukpvw4c5p8yqwvldwy2samvavykk06
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்
0
647200
1948018
2026-06-19T14:44:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவரதத்தர் | previous = [[../ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்/]] | next = ../ஈசுவர முனிகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948018
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவரதத்தர்
| previous = [[../ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்/]]
| next = [[../ஈசுவர முனிகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="655" to="655" fromsection="ஈசுவரதத்தர்" tosection="ஈசுவரதத்தர்" />
8ygzkdb2jjhr1qcrhqcqngwgrtfjg1r
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்
0
647201
1948019
2026-06-19T14:48:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவர முனிகள் | previous = [[../ஈசுவரதத்தர்/]] | next = [[../ஈசுவரன்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948019
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவர முனிகள்
| previous = [[../ஈசுவரதத்தர்/]]
| next = [[../ஈசுவரன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="655" to="655" fromsection="ஈசுவர முனிகள்" tosection="ஈசுவர முனிகள்" />
44769j6l9izs6hv7kiv2bfh7vpzw4q9
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்
0
647202
1948020
2026-06-19T14:51:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈசுவரன் | previous = [[../ஈசுவர முனிகள்/]] | next = [[../ஈட்டன்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948020
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈசுவரன்
| previous = [[../ஈசுவர முனிகள்/]]
| next = [[../ஈட்டன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="655" to="655" fromsection="ஈசுவரன்" tosection="ஈசுவரன்" />
kgdlw9uhalb3s3rs1a7fvw47yea2zpm
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்
0
647203
1948021
2026-06-19T14:54:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈட்டன் | previous = [[../ஈசுவரன்/]] | next = [[../ஈட்டியெழுபது/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948021
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈட்டன்
| previous = [[../ஈசுவரன்/]]
| next = [[../ஈட்டியெழுபது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="655" to="656" fromsection="ஈட்டன்" tosection="ஈட்டன்" />
ktmk6182xjle1i6ip97k2rvcu2kqenv
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது
0
647204
1948022
2026-06-19T14:56:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈட்டியெழுபது | previous = [[../ஈட்டன்/]] | next = [[../ஈட்டுறுதி ஒப்பந்தம்/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948022
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈட்டியெழுபது
| previous = [[../ஈட்டன்/]]
| next = [[../ஈட்டுறுதி ஒப்பந்தம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="656" to="656" fromsection="ஈட்டியெழுபது" tosection="ஈட்டியெழுபது" />
bv03fst1kxnz82g59grwdh31tew02fj
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்
0
647205
1948023
2026-06-19T14:58:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈட்டுறுதி ஒப்பந்தம் | previous = [[../ஈட்டியெழுபது/]] | next = ../ஈட்டுறுதியும் பொறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948023
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈட்டுறுதி ஒப்பந்தம்
| previous = [[../ஈட்டியெழுபது/]]
| next = [[../ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="656" to="657" fromsection="ஈட்டுறுதி ஒப்பந்தம்" tosection="ஈட்டுறுதி ஒப்பந்தம்" />
25900aognvsc31qo90exygeoqg5blwj
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்
0
647206
1948024
2026-06-19T15:01:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும் | previous = [[../ஈட்டுறுதி ஒப்பந்தம்/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948024
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்
| previous = [[../ஈட்டுறுதி ஒப்பந்தம்/]]
| next = [[../ஈடன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="657" to="659" fromsection="ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்" tosection="ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்" />
rug37kfw7en4jskajai4fb03pehcv88
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்
0
647207
1948025
2026-06-19T15:03:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடன் | previous = [[../ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்/]] | next = [[../ஈடன் அந்தோனி/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948025
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடன்
| previous = [[../ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்/]]
| next = [[../ஈடன் அந்தோனி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="659" to="659" fromsection="ஈடன்" tosection="ஈடன்" />
l39mbsi9teoianhwwvcf24hh26tvi8y
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி
0
647208
1948027
2026-06-19T15:08:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடன் அந்தோனி | previous = [[../ஈடன்/]] | next = [[../ஈடித்து சிட்வெல்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948027
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடன் அந்தோனி
| previous = [[../ஈடன்/]]
| next = [[../ஈடித்து சிட்வெல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="659" to="659" fromsection="ஈடன் அந்தோனி" tosection="ஈடன் அந்தோனி" />
46tyk6072piy3srs5h5cx63eayh0m3f
1948028
1948027
2026-06-19T15:09:09Z
Booradleyp1
1964
1948028
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடன் அந்தோனி
| previous = [[../ஈடன்/]]
| next = [[../ஈடித்து சிட்வெல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="659" to="660" fromsection="ஈடன் அந்தோனி" tosection="ஈடன் அந்தோனி" />
g6b7ai1eiwrt365h20roczetjwcq63l
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/407
250
647209
1948029
2026-06-19T15:11:32Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சோந்தி 385}}</noinclude>கிற்குக் கீழ்ப் புறத்தில் மறைந்துள்ள சில பகுதிகளும், இப்பகுதியில் நடைபெறும் சில செயல்களும் காரணமாகவுள்ளன. அதாவது, தோலின் மேலடுக்கிற்குக் கீழேயுள்ள பகுதியில் கறுப்பு, மஞ்சள், சிவப்பு வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் செறிந்து காணப் படுகின்றன. ஒவ்வொரு செல்லிலும், மிகுதியான வண்ண நுண் துகள்களுள்ளன. இத்துகள்கள், இடத்திற்கு இடம் நகரும் தன்மை பெற்றவை. வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் (lanophores) நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன.
உடல் மாற்றம் இளஞ் சாம்பல் நிறத்தில் தொடங்கி, இலைப் பச்சை வண்ணமாக மாறுகிறது. இவ்வண்ண மாற்றம், ஒரு சில நொடிகளில் விரைவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வகைச் சிறப்பினைத்தைச் சார்ந்த பச்சோந்தியும், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தையே வெளிப் படுத்துகிறது. சில பச்சோந்திகள், பச்சை வண்ணத்தை வெளிப் படுத்தும். சில பச்சோந்திகள் பச்சை வண்ணத்தை வெளிப் படுத்துவதில்லை. கெமலியோ ஐட்டுரியன்சிஸ் என்னும் பச்சோந்தி பச்சை வண்ணத்திலிருந்து, மர வண்ணம் அல்லது கறுப்பு வண்ணமாக மாறுகிறது. இதே போல், காங்கோ காடுகளில் வாழும் கெமலியோ ஓவ்னி (<i>Chameleo oweni</i>) என்பது தலையில், மூன்று கொம்புகளைக் கொண்டுள்ள பச்சோந்தியாகவும், இதன் உடல் வண்ணம் மாற்றமடையும் போது, வெள்ளை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் தோன்றுவதாகவும் உள்ளது.
பச்சோந்தி சினமடைவதாலும், அஞ்சுவதாலும், கறுப்பு வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனைய விலங்குகள் துன்புறுத்த முற்படும் போதும், ஏனைய விலங்குகளுடன் போட்டியிடும் போதும், வேறு பட்ட வண்ணத்தை இது வெளிப் படுத்துகிறது. பெண் பச்சோந்தி கருவுற்ற முட்டைகளை இடும் போது, குறிப்பிட்ட வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இரண்டு வேறு பட்ட பச்சோந்திகளை தொலைவில் இருத்தி, ஆய்ந்த போது ஒவ்வொன்றும் பல்வேறு வண்ணத்தை வெளிப் படுத்தின. குறிப்பிட்ட அமைப்பின் உடலை வைத்து, முன்னும், பின்னுமாக அல்லது பக்கவாட்டத்தில் அசைந்து, வாயை அகன்று திறந்து, ஹிஸ் ஒலியை எழுப்பி, ஏனைய விலங்குகளை அச்சுறுத்தின. பச்சோந்தி பகலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப, தன் உடல் வண்ணத்தை மாற்றி வெளிப் படுத்துகிறது. மேலும் பகல் நேரத்திற்கு, மரம் அல்லது இலைகளுக்கிடையே மறைந்து, மறைந்து வாழ்வதற்கேற்ப அடர்ந்த பச்சை வண்ணத்தையும், இரவு நேரத்தில் வெளுத்த வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் பச்சை வண்ணத்தையும், குறைந்த வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் இளமஞ்சள் வண்ணத்தையும் பெறுகின்றன. கறுப்பு வண்ணப் பச்சோந்தியில் தோல் கூடுதலாகச் சூரிய வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், வெளுத்த வண்ணத்தைக் கொண்டுள்ள பச்சோந்தி, குறைந்தளவு வெப்பத்தையே எடுத்துக் கொள்கின்றது. பாலைவனத்திலுள்ள பச்சோந்தி, ஒளியை எதிர்பலிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், கார்மேகங்களுள்ள நேரத்தில், பச்சோந்தி இளம் பச்சை வண்ணத்தையும், மழை பெய்யும் போது, கறுப்பு வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.
பச்சோந்தியை மேலும், மேலும் துன்புறுத்தினால், இவ்விலங்கிலுள்ள அனிச்சை செயல் நரம்பு மண்டலம் (sympathetic nervous system) தோலிலுள்ள வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்களுக்கு, இச்செய்தியை அனுப்புகிறது. இதனால், வண்ண நுண் துகள்களும் செல்களை அரைகுறையாக அல்லது முழுமையாகச் சுருங்கி, விரிவடையச் செய்து வண்ணத்தைக் கொடுக்கும். வண்ண மாற்றத்தின் போது, வண்ண நுண் துகள் செல்கள் பல கிளைகளாகப் பிரிந்து, பெரிய செல்களாக மாறுகின்றன. இந்நிலையில், வண்ண நுண் துகள்கள் சீராகப் பரவி, வண்ணத்தைக் கொடுக்கின்றன. பச்சோந்தி பெரியதாக மாறும் போது, கறுப்பு, சிவப்பு தோல் மஞ்சள் வண்ணத்தைப் பெறுகிறது. இதே போல், சிவப்பு, மஞ்சள் வண்ண நுண் ஆரஞ்சுப் பழ வண்ணத்தை அடைகிறது. வெள்ளை வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் ஒளிரும் தன்மை பெற்றன. வண்ணம், நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்குவதால், அவற்றிலுள்ள இடைவெளி குறைந்து, வண்ண துகள்களை நெருக்கமாகக் கொண்டு காணப் படுகின்றன. இதனால், தோலின் வண்ணம் கறுப்பாக மாறுகிறது. ஆகையால், செல்கள் சுருங்குவதாலும், பச்சோந்தியின் தோலில் வண்ண மாற்றம் நிகழ்கிறது. வண்ண நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்கி விரியவும், அவற்றின் வண்ண மாற்றத்திற்கும் குரிய வெளிச்சம், வெப்பம், தீவிர உணர்ச்சி, செயலியல் போன்றவை முதன்மையாக உள்ளன.
வண்ண நுண் துகள் மாற்றத்திற்குப் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின் பகுதியிலிருந்து வரும் ஹார்மோன்கள் அடிப்படையாகச் செயல் படுகின்றன. உடல் வண்ணத்தை மாற்றி, ஏனைய விலங்குகள் அறியாதவாறு தன் உடலை நீண்ட நேரம் அசையாது, மரக் கிளைகளில் மறைந்திருந்து, விலங்குகளைப் பிடித்துண்ணக் காத்திருக்கிறது. இது புறச் சூழ்நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, உடல்<noinclude></noinclude>
rbgg24216aqmvszg98rzpz5ni2p14hj
1948030
1948029
2026-06-19T15:13:02Z
TI Buhari
4634
1948030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சோந்தி 385}}</noinclude>கிற்குக் கீழ்ப் புறத்தில் மறைந்துள்ள சில பகுதிகளும், இப்பகுதியில் நடைபெறும் சில செயல்களும் காரணமாகவுள்ளன. அதாவது, தோலின் மேலடுக்கிற்குக் கீழேயுள்ள பகுதியில் கறுப்பு, மஞ்சள், சிவப்பு வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் செறிந்து காணப் படுகின்றன. ஒவ்வொரு செல்லிலும், மிகுதியான வண்ண நுண் துகள்களுள்ளன. இத்துகள்கள், இடத்திற்கு இடம் நகரும் தன்மை பெற்றவை. வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் (lanophores) நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன.
உடல் மாற்றம் இளஞ் சாம்பல் நிறத்தில் தொடங்கி, இலைப் பச்சை வண்ணமாக மாறுகிறது. இவ்வண்ண மாற்றம், ஒரு சில நொடிகளில் விரைவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வகைச் சிறப்பினைத்தைச் சார்ந்த பச்சோந்தியும், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தையே வெளிப் படுத்துகிறது. சில பச்சோந்திகள், பச்சை வண்ணத்தை வெளிப் படுத்தும். சில பச்சோந்திகள் பச்சை வண்ணத்தை வெளிப் படுத்துவதில்லை. கெமலியோ ஐட்டுரியன்சிஸ் என்னும் பச்சோந்தி பச்சை வண்ணத்திலிருந்து, மர வண்ணம் அல்லது கறுப்பு வண்ணமாக மாறுகிறது. இதே போல், காங்கோ காடுகளில் வாழும் கெமலியோ ஓவ்னி (<i>Chameleo oweni</i>) என்பது தலையில், மூன்று கொம்புகளைக் கொண்டுள்ள பச்சோந்தியாகவும், இதன் உடல் வண்ணம் மாற்றமடையும் போது, வெள்ளை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் தோன்றுவதாகவும் உள்ளது.
பச்சோந்தி சினமடைவதாலும், அஞ்சுவதாலும், கறுப்பு வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனைய விலங்குகள் துன்புறுத்த முற்படும் போதும், ஏனைய விலங்குகளுடன் போட்டியிடும் போதும், வேறு பட்ட வண்ணத்தை இது வெளிப் படுத்துகிறது. பெண் பச்சோந்தி கருவுற்ற முட்டைகளை இடும் போது, குறிப்பிட்ட வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இரண்டு வேறு பட்ட பச்சோந்திகளை தொலைவில் இருத்தி, ஆய்ந்த போது ஒவ்வொன்றும் பல்வேறு வண்ணத்தை வெளிப் படுத்தின. குறிப்பிட்ட அமைப்பின் உடலை வைத்து, முன்னும், பின்னுமாக அல்லது பக்கவாட்டத்தில் அசைந்து, வாயை அகன்று திறந்து, ஹிஸ் ஒலியை எழுப்பி, ஏனைய விலங்குகளை அச்சுறுத்தின. பச்சோந்தி பகலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப, தன் உடல் வண்ணத்தை மாற்றி வெளிப் படுத்துகிறது. மேலும் பகல் நேரத்திற்கு, மரம் அல்லது இலைகளுக்கிடையே மறைந்து, மறைந்து வாழ்வதற்கேற்ப அடர்ந்த பச்சை வண்ணத்தையும், இரவு நேரத்தில் வெளுத்த வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் பச்சை வண்ணத்தையும், குறைந்த வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் இளமஞ்சள் வண்ணத்தையும் பெறுகின்றன. கறுப்பு வண்ணப் பச்சோந்தியில் தோல் கூடுதலாகச் சூரிய வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், வெளுத்த வண்ணத்தைக் கொண்டுள்ள பச்சோந்தி, குறைந்தளவு வெப்பத்தையே எடுத்துக் கொள்கின்றது. பாலைவனத்திலுள்ள பச்சோந்தி, ஒளியை எதிர்பலிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், கார்மேகங்களுள்ள நேரத்தில், பச்சோந்தி இளம் பச்சை வண்ணத்தையும், மழை பெய்யும் போது, கறுப்பு வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது.
பச்சோந்தியை மேலும், மேலும் துன்புறுத்தினால், இவ்விலங்கிலுள்ள அனிச்சை செயல் நரம்பு மண்டலம் (sympathetic nervous system) தோலிலுள்ள வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்களுக்கு, இச்செய்தியை அனுப்புகிறது. இதனால், வண்ண நுண் துகள்களும் செல்களை அரைகுறையாக அல்லது முழுமையாகச் சுருங்கி, விரிவடையச் செய்து வண்ணத்தைக் கொடுக்கும். வண்ண மாற்றத்தின் போது, வண்ண நுண் துகள் செல்கள் பல கிளைகளாகப் பிரிந்து, பெரிய செல்களாக மாறுகின்றன. இந்நிலையில், வண்ண நுண் துகள்கள் சீராகப் பரவி, வண்ணத்தைக் கொடுக்கின்றன. பச்சோந்தி பெரியதாக மாறும் போது, கறுப்பு, சிவப்பு தோல் மஞ்சள் வண்ணத்தைப் பெறுகிறது. இதே போல், சிவப்பு, மஞ்சள் வண்ண நுண் ஆரஞ்சுப் பழ வண்ணத்தை அடைகிறது. வெள்ளை வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் ஒளிரும் தன்மை பெற்றன. வண்ணம், நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்குவதால், அவற்றிலுள்ள இடைவெளி குறைந்து, வண்ண துகள்களை நெருக்கமாகக் கொண்டு காணப் படுகின்றன. இதனால், தோலின் வண்ணம் கறுப்பாக மாறுகிறது. ஆகையால், செல்கள் சுருங்குவதாலும், பச்சோந்தியின் தோலில் வண்ண மாற்றம் நிகழ்கிறது. வண்ண நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்கி விரியவும், அவற்றின் வண்ண மாற்றத்திற்கும் குரிய வெளிச்சம், வெப்பம், தீவிர உணர்ச்சி, செயலியல் போன்றவை முதன்மையாக உள்ளன.
வண்ண நுண் துகள் மாற்றத்திற்குப் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின் பகுதியிலிருந்து வரும் ஹார்மோன்கள் அடிப்படையாகச் செயல் படுகின்றன. உடல் வண்ணத்தை மாற்றி, ஏனைய விலங்குகள் அறியாதவாறு தன் உடலை நீண்ட நேரம் அசையாது, மரக் கிளைகளில் மறைந்திருந்து, விலங்குகளைப் பிடித்துண்ணக் காத்திருக்கிறது. இது புறச் சூழ்நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, உடல்<noinclude><br>{{rh|அ. க. 14–25}}</noinclude>
8qwqr5mg5kkulr6bjsz9p44nqqykia0
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்
0
647210
1948031
2026-06-19T15:13:54Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடித்து சிட்வெல் | previous = [[../ஈடன் அந்தோனி/]] | next = [[../ஈடிப்பசு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948031
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடித்து சிட்வெல்
| previous = [[../ஈடன் அந்தோனி/]]
| next = [[../ஈடிப்பசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="661" to="661" fromsection="ஈடித்து சிட்வெல்" tosection="ஈடித்து சிட்வெல்" />
bypn7qr54w8jnb7hy4dpcdee7pcoqdd
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு
0
647211
1948032
2026-06-19T15:16:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடிப்பசு | previous = [[../ஈடித்து சிட்வெல்/]] | next = [[../ஈடிப்பசு சிக்கல்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948032
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடிப்பசு
| previous = [[../ஈடித்து சிட்வெல்/]]
| next = [[../ஈடிப்பசு சிக்கல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="661" to="662" fromsection="ஈடிப்பசு" tosection="ஈடிப்பசு" />
hleg1oao7xtnhys7pwnrr0euwyhtaoi
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/408
250
647212
1948033
2026-06-19T15:17:21Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|386 பச்சோந்தி}}</noinclude>வண்ணத்தை மாற்றிக் கொள்வதால், இவ்வமைப்பு ஏனைய விலங்குகளை ஏமாற்றவும், தாக்கவும், தப்பித்துக் கொள்ளவும், இனப் பெருக்கம் செய்யவும் உதவி புரிகிறது. வண்ண மாற்றம் உடலில் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட உடற்செயலினை எடுத்துக் காட்டும் வகையில் அமைகிறது. வண்ண மாற்றமும், பல அறிகுறிகளும், பச்சோந்தி ஏனைய விலங்குகளுடன் சண்டை போடப் போவதை எடுத்துக் காட்டுகின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 408
|bSize = 450
|cWidth = 420
|cHeight = 460
|oTop = 118
|oLeft = 20
|Location = center}}{{nop}}<noinclude></noinclude>
d8yedg1gigyziellkssp1t839fbwrqi
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்
0
647213
1948034
2026-06-19T15:31:51Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடிப்பசு சிக்கல் | previous = [[../ஈடிப்பசு/]] | next = [[../ஈடு/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948034
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடிப்பசு சிக்கல்
| previous = [[../ஈடிப்பசு/]]
| next = [[../ஈடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="662" to="662" fromsection="ஈடிப்பசு சிக்கல்" tosection="ஈடிப்பசு சிக்கல்" />
m3i1a03ql872bw0ryzl7h9v54n2gnta
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு
0
647214
1948035
2026-06-19T15:34:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடு | previous = [[../ஈடிப்பசு சிக்கல்/]] | next = [[../ஈடோ, ஈரோபூமி/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948035
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடு
| previous = [[../ஈடிப்பசு சிக்கல்/]]
| next = [[../ஈடோ, ஈரோபூமி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="662" to="663" fromsection="ஈடு" tosection="ஈடு" />
0fjifaxeg1iu5mx8yun60u6mglrkblj
அட்டவணை:மெய்ஞ்ஞான போதம் (1911).pdf
252
647215
1948036
2026-06-19T15:36:54Z
Clintacc
16664
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948036
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=
|Language=ta
|Author=கோ. வடிவேலு செட்டியார்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=சச்சிதானந்தம் பிரஸ்
|Address=கோமளேசுவரன்பேட்டை, சென்னை
|Year=1911
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist articles="no" tom="yes" lang="ta" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
pjcyfz2b5bwxpxzbhfabtfyaezcr6f7
1948037
1948036
2026-06-19T15:37:17Z
Clintacc
16664
1948037
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=மெய்ஞ்ஞான போதம்
|Language=ta
|Author=கோ. வடிவேலு செட்டியார்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=சச்சிதானந்தம் பிரஸ்
|Address=கோமளேசுவரன்பேட்டை, சென்னை
|Year=1911
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist articles="no" tom="yes" lang="ta" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
i065kgl6tsfxa1jb03lhlkkj3yw1af7
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி
0
647216
1948038
2026-06-19T15:38:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈடோ, ஈரோபூமி | previous = [[../ஈடு/]] | next = [[../ஈப்போ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948038
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈடோ, ஈரோபூமி
| previous = [[../ஈடு/]]
| next = [[../ஈப்போ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="663" to="663" fromsection="ஈடோ, ஈரோபூமி" tosection="ஈடோ, ஈரோபூமி" />
nm4g4b7rzci4wjjkhkxg3z3uwkrb6p6
பக்கம்:மெய்ஞ்ஞான போதம் (1911).pdf/47
250
647217
1948039
2026-06-19T15:39:04Z
Clintacc
16664
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மெய்ஞ்ஞான போதம். as மு ஈன்கதிய கமோநாராய ணாபவென்ற, பாடு மனமுடைப் பத்த குள் ளீர்வக்து பல்லாண் பாதமே” என்பு பெரியாழ்வார் இருவாய் மலர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Clintacc" /></noinclude>மெய்ஞ்ஞான போதம். as
மு ஈன்கதிய கமோநாராய ணாபவென்ற, பாடு மனமுடைப் பத்த
குள் ளீர்வக்து பல்லாண் பாதமே” என்பு பெரியாழ்வார்
இருவாய் மலர்ச் இருப்பதையும், இல்வாராகவரும் பிறவற்றையும்
கண்குணர்க்தவர்ச்கு ம்திரத்தின் அருமை பெருமை செல்லிின்
விளங்கும்,
மழகாட்டிலே மங்கலமென்னு மூரிலை இடையர் குலத்திலே
பிறந்த ஆனாய காயனார் மீ பஞ்சாட்சரத்தை இசைதாத் கூதிய
வா வேய் (புள்ளா)ல் குழலி லமைத்து ஊதின தின வன்றே.
சன்னிலையை யடைந்தலர், இதனால் மர்திரத்இிஜே மனத்தினால்
இர்தித்தலும் வாக்கனாற் சபித்தனு. முடையவன்தி இன்னிலைக்
கருலிகளிற் செப்பமாக வமைத் தக் கூறபவரும் பரமேசுவரன அ.
சருணைக்குப் பாத்திர மரவரென்பது இனிஅ ிளங்கும். எதற்
கும் அன்பே முக்ய காரணமாகும். இனுயரயனார் அன்புமிக்குப்
பஞ்சாட்சரத்தை வேய்ல்குழலி லமைக்குச் சபித்ததின லன்
றே அவர்மேப்த்து வத்த பசுவினங்கனே யன்றி மற்றைப் பற.
வை முதலிய வினங்களும் அன்பால் மெய்ம்மறக் ௫ தம்தொழிலை
விட்டிருந்தன, அன்புமிக்கு மக்திரஜ பஞ்செய்வர்க்கு வசப்படாத
பொருளொன் அ மின்றுமென்பஅ' இதனால் ஈன்கு விளல்கும்,
காரணமின்றி யாதொரு பிராணி பையுங் கொல்லாமை, பிற
ர்ச்குத் இிமையைத் தராத மெய்யினை யுரைத்தல், அன்னியரது
பொருளை யபசரியாமை, இர்இிரியங்சளும் மனமும் புலியோல்
பாய்ந்து விஷயங்களி லோடித் அன்ப முண்டரக்கா வண்ணம்
அவற்றைத் தடுத்தல், அன்னிய சிடத்து மேன்மையான பொரு
ளிருக்கச் கண்டு எனக்கது வேண்டும், எவ்வாதிது எனக்குக்
இடைக்கு மென்று ிந்தியாமை, உடம்பு ரீராவெதரலும் மனம்
உண்மை யுரைப்பதாலும் பரிசுத்தமா யிருத்தல், பிறர்செய்பும்
இமையைக் கூடுமான பரியந்தம் பொறுத்துக் கொள்ளுதல் மது
வரவேண்டு மதுவருச, வெள்ளை விடத்தே தகல வேண்ட ௮௮
'தகல்க” என்னும் தீர்மானத்தோடு போன பொருளுக்காக விரக்க
முழுக வரும் பொருளூச்சாச் சலக்கமுறு. ௮ பெற்றது கொண்டு
மகிழ்தல், உயிரினியல்பு இத்தன்மையத, உல௫னியல்பு இத்தன்.
மையது, கடவுளி னியல்பு இத்தன்மையத, அக்கடவனை யடையு
மார்க்க மித்தன்மையது என்ற கூறும் சத்துவ சாஸ்திரத்தை
வரலாற்று முறையாக வர்த குருமூர்்ி வரலிலாக” வோுதல்,<noinclude></noinclude>
eomortjsnt7ixe79dp0orfxoc5svlir
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/409
250
647218
1948040
2026-06-19T15:40:44Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சோந்தி 387}}</noinclude><b>இனப் பெருக்கம்</b>. இனப் பெருக்கக் காலத்தில், ஆண் உயிரிகள், பெண் உயிரிகளை விட, அழகிய வண்ணத்தைக் கொண்டுள்ளன. ஆண் உயிரிகளின் பின் கால்களில் தடித்த முள்களுள்ளன. ஆண் உயிரிகளுக்கிடையே சண்டை தோன்றுகிறது. இதில் வெற்றி பெற்ற ஆண் உயிரி, பெண் உயிரியுடன் இனப் பெருக்கம் செய்கிறது. இந்நிலையில், ஆண் உயிரி, பெண் உயிரியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. இதன் இனப் பெருக்கக் காலம், இடத்திற்கு இடம் ஏற்ப வேறுபடுகிறது. இனப் பெருக்கக் காலம், பருவக் காலத்தின் நடுவில் தொடங்கி அடுத்து வரும் பருவக் காலத்தின் தொடக்கத்தில் முடிகிறது. இனப் பெருக்கம் முடிந்த பிறகு, சில பச்சோந்திகள் கருவுற்ற சில முட்டைகளை நிலத்தில் இடுகின்றன. அதாவது, முட்டையிடும் பச்சோந்தி மரத்தில் மறைந்து வாழும் பழக்கத்தை விட்டு விட்டு, நிலத்திற்கு வருகிறது. பெண் பச்சோந்தி இலையுதிர் காலத்தில், முன் கால்களாலும் கொண்டைப் பகுதியின் உதவியாலும், நிலத்தில் ஏறத் தாழ 20 செ.மீ. ஆழமும் 10 செ.மீ. விட்டமும் கொண்ட வளையைத் தோண்டுகிறது. தோண்டிய மண்ணைப் பின் கால்களால் வெளியே தள்ளுகிறது. இவ்வாறு முன்பே தோண்டிய வளையில், பெண் பச்சோந்தி கருவுற்ற முட்டைகளையிட்டு, மண்ணைக் கொண்டு மறைத்த பிறகு, மீண்டும் மறைந்து வாழ மரத்திற்கு வருகிறது. பெண் பச்சோந்தி முட்டைகளையிட்ட பிறகு, நீண்ட நாள்களுக்கு வாழ்வதில்லை. சில பெண் பச்சோந்திகள் இட்ட அனைத்து முட்டைகளையும் பாதுகாக்கின்றன. இந்தியப் பச்சோந்தி 30–40 கருவுற்ற முட்டைகளை, ஓர் இனப் பெருக்கக் காலத்தில் தொடர்ந்து இடுகிறது. ஒவ்வொரு முட்டையும் 20 மி.மீ. நீளமும், 10 மி.மீ. விட்டமும் பெற்றிருக்கும். முட்டையின் இரு முனைகளும் ஒரே அளவு விட்டத்தைக் கொண்டுள்ளன.
இம்முட்டை தோல் போன்று, ஒளி ஊடுருவிச் செல்லும் ஓட்டைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முட்டையும், ஒரு கிராமிற்குச் சற்றுக் கூடுதலான எடையைக் கொண்டுள்ளது. வெப்ப நிலைக்கு ஏற்ப, முட்டையை அடை காக்கும் காலமும் 4–10 மாதங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சில பெண் பச்சோந்திகள் [(எ.டு) கெமலியோ பைட்டே நியாட்டஸ், கெ.ஹொனிலி, கெ.இல்லியோட்டி] கருவுற்ற முட்டைகளை நிலத்தில் இடுவதற்குப் பதிலாக, உடலிலும் கருப்பையில் நிறுத்தி வைக்கின்றன.
பச்சோந்தியின் வளர் கரு ஒவ்வொன்றையும் சுற்றி, மென்மையான கருப்புறச்சவ்வுகள் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த பிறகு, இவ்வளர் கரு பக்க வாட்டத்தில் திரும்பி அசைவதால், கருப்புறச் சவ்வுகள் கிழிந்து விடுகின்றன. இதனால், முழு வளர்ச்சியடைந்த வளர் கருதான் உயிரியிலிருந்து உயிருடன் தனித்து வெளியே வருகிறது. கெ.ஹோனில் என்னும் பச்சோந்தி 8–11 குட்டிகளையும், கே.பைட்டே நியாட்டஸ் என்னும் பச்சோந்தி 25 குட்டிகளையும் ஈன்றெடுக்கின்றன. இளம் உயிரிகள் தாய் உயிரியிலிருந்தும், கருப் புறச் சவ்வுகளிலிருந்தும் வெளியே வந்தவுடன், முட்டை ஓட்டில் சிறிதளவு கருவூண் மட்டும் தங்கியுள்ளது. வெளியே வந்த ஒவ்வோர் இளம் உயிரியும், 4 செ.மீ. நீளத்தைக் கொண்டுள்ளது. முட்டையிலிருந்து அல்லது தாய் உயிரியின் இனப் பெருக்க உறுப்பிலிருந்து வெளியே வந்த இளம் உயிரி, ஒவ்வொன்றும் பெற்றோர் உயிரிகளைப் போன்றும், தாய் உயிரியின் உதவியின்றியும், வேகமாகவும், தனித்தும் மரக் கிளைகளுக்கும், புதர்களுக்கும் சென்று, சிறு பூச்சிகளைப் பிடித்துண்டு, உயிர் வாழத் தொடங்கும். இக்குட்டி, ஆங்காங்கே அலைந்து திரிவதால், பல பகுதிகளுக்கும் பிரிந்து செல்கிறது. இது, நிலம் அல்லது மரக் கிளைகளில் நடக்கும் போது, ஊசல் ஆடுவது போன்று, முன்னும் பின்னுமாக அசைகிறது. பெற்றோர் உயிரிகளின் பெரும்பாலான இயல்புகள், பிறந்த இளம் குட்டிகளில் காணப் படுகின்றன. இருப்பினும், இளம் உயிரிகளுக்குரிய வண்ணமும், அடையாளமும் காணப் படுகின்றன. இளம் உயிரி விரைவாக வளர்ந்து, முதலாம் ஆண்டு முடிவதற்குள், பாலின முதிர்ச்சி (Sexual maturity) அடைகிறது. பச்சோந்தியின் வாழ்நாள் இது வரை துல்லியமாக அறிந்து கூறப் படவில்லை. இருப்பினும், இதன் வாழ்நாள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இருக்கலாம்.
<b>வகை</b>. பச்சோந்திக் குடும்பத்தில், இரண்டு இனங்களும் 85–90 சிறப்பினங்களும் உள்ளன. பெரும்பாலான சிறப்பினங்கள் மடகாஸ்கர் தீவு, ஆப்பிரிக்கா, இந்தியக் காடுகளில் மிகுந்து காணப் படுகின்றன. மடகாஸ்கர் தீவில் வாழும் பச்சோந்தி, பல வகைகளில் சிறப்படைந்து காணப் படுகிறது. கெமலியோ என்னும் இனம் மிகப் பெரிய உருவத்தைக் கொண்டுள்ளது. இது 70 சிறப்பினங்களைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டுப் பச்சோந்தியைக் கெமலியோ கெமலியான் (<b>Chameleo chameleon</b>) என்பர். இதன் உடல் நீளம் 25–28 செ.மீ. வரையுள்ளது. வாலின் நீளம் 12 செ.மீ. ஆகும். இது ஆப்பிரிக்காவின் வட பகுதியில் நிலத்தில் வாழ்கிறது. மேலும், பாலைவனச் சோலைப் பகுதியின் ஓரத்திலுள்ள வளைகளிலும், தாவரங்களில்லாத மணல் மேடுகளிலும் வாழும். பச்சை வண்ணத்திற்குப் பதிலாக, மஞ்சள் வண்ணம் கலந்த மர வண்ணத்தை இது<noinclude><br>{{rh|அ. க. 14–25அ}}</noinclude>
eki5t7oph9mp8gxnrnbcypy22b6r2kg
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ
0
647219
1948041
2026-06-19T15:41:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈப்போ | previous = [[../ஈடோ, ஈரோபூமி/]] | next = [[../ஈப்ரோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948041
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈப்போ
| previous = [[../ஈடோ, ஈரோபூமி/]]
| next = [[../ஈப்ரோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="663" to="663" fromsection="ஈப்போ" tosection="ஈப்போ" />
qtnebij7s794qs7r85gnz9g0p23z5b7
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ
0
647220
1948042
2026-06-19T15:45:15Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈப்ரோ | previous = [[../ஈப்போ/]] | next = [[../ஈபல் கோபுரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948042
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈப்ரோ
| previous = [[../ஈப்போ/]]
| next = [[../ஈபல் கோபுரம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="664" to="664" fromsection="ஈப்ரோ" tosection="ஈப்ரோ" />
tjzmksh3h6b8zts3y7c4tkbpajjqgtl
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்
0
647221
1948043
2026-06-19T15:48:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈபல் கோபுரம் | previous = [[../ஈப்ரோ/]] | next = [[../ஈபுரூ உளவியல்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948043
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈபல் கோபுரம்
| previous = [[../ஈப்ரோ/]]
| next = [[../ஈபுரூ உளவியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="664" to="664" fromsection="ஈபல் கோபுரம்" tosection="ஈபல் கோபுரம்" />
4n1awr2p5pwcbynp3wflg6a0w3kdlcs
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்
0
647222
1948045
2026-06-19T15:49:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈபுரூ உளவியல் | previous = [[../ஈபல் கோபுரம்/]] | next = [[../ஈபோ/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948045
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈபுரூ உளவியல்
| previous = [[../ஈபல் கோபுரம்/]]
| next = [[../ஈபோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="664" to="665" fromsection="ஈபுரூ உளவியல்" tosection="ஈபுரூ உளவியல்" />
qkf0oihntn5w5cr7cuse61cu5e78h4l
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ
0
647223
1948047
2026-06-19T15:52:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈபோ | previous = [[../ஈபுரூ உளவியல்/]] | next = [[../ஈபோயே/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948047
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈபோ
| previous = [[../ஈபுரூ உளவியல்/]]
| next = [[../ஈபோயே/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="665" to="666" fromsection="ஈபோ" tosection="ஈபோ" />
dzs894bihoxk7yc4af9sbeuykyb7dou
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/83
250
647224
1948049
2026-06-19T15:54:17Z
சந்தானம் க
7674
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "82 {{center|பழந்தமிழர் அரசியல்}} ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை என்பது இருக்குறள், 541. “தன்கீழ் வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="சந்தானம் க" />{{Rvh|82 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>82 {{center|பழந்தமிழர் அரசியல்}}
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
என்பது இருக்குறள், 541.
“தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை
நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது, நறிவுநிலைமை
யைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்:
டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்
செய்வதே முறையாம்”
என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேழைகர் கூறிய உரை.
இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டின்
பகுதியும், திருக்குறளும், பழந் தமிழர்களின் நீதிமுறையை
விளக்கின. ஒருவன் குற்றவாளிதானா என்பதை நன்றாக
ஆராய்ந்து தெளியவேண்டும். அவன் உண்மையான குற்ற
வாளியானால், அறநூல் விதியின்படி அவனுக்குத் தண்டனை
கொடுக்கவேண்டும். குற்றவாளி யாராயிருந்தாலும் சாி ;
நண்பன், உறவினன், அல்லது பகைவன் என்று கருதாமல்,
குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கவேண்டும். இதுவே
மனித சமுதாயத்தில் குற்றங்கள் வளராமல் தடுக்கும் வழி
யாகும். இதுவே நீநிமுறையாகும். தண்டனை தருவதிலே
சிறிதும் நடுநிலை தவறக் கூடாது என்பதை இப் பாடல்கள் வலியுறுத்துகின்றன.
'''கொலைத் தண்டனை'''
கொலைத் தண்டனையே கூடாது என்று கூறுவோர்
உண்டு, 'நரகரிகம் பெற்ற மக்கள் சமுதாயத்தில் கொலைத்
தண்டனையைப் பின்பற்றுவது அநாகரிகம்; கொலைத்
தண்டனை விதிக்கப்பட்டவர், பின்னர், குற்றமற்றவர் என்று
_____________
ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம் காட்டாமல், இதை
புாிந்து - நடுநிலையில் இருந்து,<noinclude></noinclude>
shl55el307xnt9gr1yx4k8naflo1z6b
1948051
1948049
2026-06-19T15:55:36Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|82 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>82 {{center|பழந்தமிழர் அரசியல்}}
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
என்பது இருக்குறள், 541.
{{center|“தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை
நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது, நறிவுநிலைமை
யைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்:
டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்
செய்வதே முறையாம்”}}
என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேழைகர் கூறிய உரை.
இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டின்
பகுதியும், திருக்குறளும், பழந் தமிழர்களின் நீதிமுறையை
விளக்கின. ஒருவன் குற்றவாளிதானா என்பதை நன்றாக
ஆராய்ந்து தெளியவேண்டும். அவன் உண்மையான குற்ற
வாளியானால், அறநூல் விதியின்படி அவனுக்குத் தண்டனை
கொடுக்கவேண்டும். குற்றவாளி யாராயிருந்தாலும் சாி ;
நண்பன், உறவினன், அல்லது பகைவன் என்று கருதாமல்,
குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கவேண்டும். இதுவே
மனித சமுதாயத்தில் குற்றங்கள் வளராமல் தடுக்கும் வழி
யாகும். இதுவே நீநிமுறையாகும். தண்டனை தருவதிலே
சிறிதும் நடுநிலை தவறக் கூடாது என்பதை இப் பாடல்கள் வலியுறுத்துகின்றன.
'''கொலைத் தண்டனை'''
கொலைத் தண்டனையே கூடாது என்று கூறுவோர்
உண்டு, 'நரகரிகம் பெற்ற மக்கள் சமுதாயத்தில் கொலைத்
தண்டனையைப் பின்பற்றுவது அநாகரிகம்; கொலைத்
தண்டனை விதிக்கப்பட்டவர், பின்னர், குற்றமற்றவர் என்று
_____________
ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம் காட்டாமல், இதை
புாிந்து - நடுநிலையில் இருந்து,<noinclude></noinclude>
dohrej3usfst5qbooeg01mmklinz3e7
1948053
1948051
2026-06-19T15:56:55Z
சந்தானம் க
7674
1948053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|82 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>82 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{center|ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை}}
என்பது இருக்குறள், 541.
{{center|“தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை
நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது, நறிவுநிலைமை
யைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்:
டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்
செய்வதே முறையாம்”}}
என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேழைகர் கூறிய உரை.
இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டின்
பகுதியும், திருக்குறளும், பழந் தமிழர்களின் நீதிமுறையை
விளக்கின. ஒருவன் குற்றவாளிதானா என்பதை நன்றாக
ஆராய்ந்து தெளியவேண்டும். அவன் உண்மையான குற்ற
வாளியானால், அறநூல் விதியின்படி அவனுக்குத் தண்டனை
கொடுக்கவேண்டும். குற்றவாளி யாராயிருந்தாலும் சாி ;
நண்பன், உறவினன், அல்லது பகைவன் என்று கருதாமல்,
குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கவேண்டும். இதுவே
மனித சமுதாயத்தில் குற்றங்கள் வளராமல் தடுக்கும் வழி
யாகும். இதுவே நீநிமுறையாகும். தண்டனை தருவதிலே
சிறிதும் நடுநிலை தவறக் கூடாது என்பதை இப் பாடல்கள் வலியுறுத்துகின்றன.
'''கொலைத் தண்டனை'''
கொலைத் தண்டனையே கூடாது என்று கூறுவோர்
உண்டு, 'நரகரிகம் பெற்ற மக்கள் சமுதாயத்தில் கொலைத்
தண்டனையைப் பின்பற்றுவது அநாகரிகம்; கொலைத்
தண்டனை விதிக்கப்பட்டவர், பின்னர், குற்றமற்றவர் என்று
_____________
ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம் காட்டாமல், இதை
புாிந்து - நடுநிலையில் இருந்து,<noinclude></noinclude>
sboy0p9zbnoh4giv4u3o13vrh0lmspw
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே
0
647225
1948050
2026-06-19T15:54:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈபோயே | previous = [[../ஈபோ/]] | next = [[../ஈமச் சடங்குகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈபோயே
| previous = [[../ஈபோ/]]
| next = [[../ஈமச் சடங்குகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="666" to="666" fromsection="ஈபோயே" tosection="ஈபோயே" />
77n7cpi1ujir71xx7h9feuqv2gyw5vc
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்
0
647226
1948052
2026-06-19T15:56:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈமச் சடங்குகள் | previous = [[../ஈபோயே/]] | next = [[../ஈமப் பேழைகள்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948052
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈமச் சடங்குகள்
| previous = [[../ஈபோயே/]]
| next = [[../ஈமப் பேழைகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="666" to="666" fromsection="ஈமச் சடங்குகள்" tosection="ஈமச் சடங்குகள்" />
pydncg1t2ciu1wztvb56v85nmlbkppc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/253
250
647227
1948054
2026-06-19T15:57:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="கௌ"/> {{dhr}} {{dropinitial|கௌ}} ககரத்தோடு உகரத்தின் அடியாகப் பிறந்த ஔகார ஒலியும் கலந்து இவ்வொலி தோன்றும். குவிந்த நிலையில் இரு உதடுகளையும் நெருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கௌ"/>
{{dhr}}
{{dropinitial|கௌ}} ககரத்தோடு உகரத்தின் அடியாகப் பிறந்த ஔகார ஒலியும் கலந்து இவ்வொலி தோன்றும். குவிந்த நிலையில் இரு உதடுகளையும் நெருக்கி ஒலித்தால் இவ்வொலி வெளிப்படும். ஔ என்ற எழுத்துக்குரிய குறிப்பையும் பார்க்க. கௌ என்ற ஒலி கவ் என்று ஏறக்குறைய ஒலிப்பதால் ஒன்றுக் கொன்று மாற்றாக வழங்கிவருதல் உண்டு. எனவே, கௌ என்ற ஒலிக்கு கவ் என்பதைப் போலியாகக் கொள்ளுதலும் உண்டு. ஔவை, அவ்வை என்ற இரு சொற்களையும் ஒப்பீட்டு நோக்குக. பண்டைய கல்வெட்டுகளில் இவ்வாறே எழுதப்பட்டது.
{|
|-
|<b>உருவம்:</b> இதன் உருவத்தின் மூன்று பகுதிகளில் முதல் இரண்டு உருவங்கள் அதாவது எ, க என்ற இரண்டும் முன்னமேயே சொல்லப்பட்டன. மூன்றாவதான ள என்னும் குறி முதலில் என்று கால் போல் வலப்புறக் கோடாகத் தொடங்கிப்பின் நடுவில் ஒரு வளைவு பெற்றது. ஔ என்ற எழுத்தின் குறிப்பைப் பார்த்துக் கொள்க.||......||{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 253
|bSize = 480
|cWidth = 31
|cHeight = 65
|oTop = 250
|oLeft = 389
|Location = center
|Description =
}}
|-
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="கௌ"/>
<section begin="கௌசாம்பி"/>
{{dhr}}
{{larger|<b>கௌசாம்பி</b>}} வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊர் உத்தரப்பிரதேச மாநிலத்தில். அலகாபாது மாவட்டத்தில் யமுனை நதியின் வடகரையில் அலகாபாதிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. கௌசாம்பி வத்ச நாட்டின் தலைநகரமாக இருந்ததென்று வேதங்கள் கூறுகின்றன. வடமொழி, பாலிமொழி இலக்கியங்களில் கௌசாம்பியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சீனநாட்டுப் பயணிகளான யுவான் சுவாங்கு, பாகியான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து சென்றமை அவர்களுடைய குறிப்புகளிலிருந்து தெரிகின்றது.
பாண்டவர்களின் முதல் தலைநகரமான அத்தினாபுரம் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டப்படியால், அவர்களது தலைநகரம் கௌசாம்பிக்கு மாற்றப்பட்டது. இவ்வூரைப்பற்றிப் புத்தமதத் தொடர்பான சான்றுகளே மிகுதியாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மத்திய தொல்லியல் துறையினர் 1937–38–இல் சோதனை அகழாய்வு ஒன்றை இங்குச் செய்தனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 253
|bSize = 480
|cWidth = 156
|cHeight = 208
|oTop = 336
|oLeft = 273
|Location = center
|Description =
}}
{{center|கௌசாம்பி மதிற் சுவர்}}<noinclude>
<b>வா.க. 8 – 15அ</b></noinclude>
mtrr25ikx7rsjazwky15sc9co99ji71
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்
0
647228
1948058
2026-06-19T15:59:04Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈமப் பேழைகள் | previous = [[../ஈமச் சடங்குகள்/]] | next = [[../ஈமன் டி வேலரா/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948058
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈமப் பேழைகள்
| previous = [[../ஈமச் சடங்குகள்/]]
| next = [[../ஈமன் டி வேலரா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="666" to="667" fromsection="ஈமப் பேழைகள்" tosection="ஈமப் பேழைகள்" />
sgqriua2261tewycixdiuomr9co6bta
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/81
250
647229
1948062
2026-06-19T16:05:21Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கிராமங்களில் ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள்
நடக்க வேண்டும்!</b>}}}}
{{li|த|2em}}மிழ்நாட்டின் கிராமங்களில் ‘தீண்டாமை’க் கொடுமைகள்,
ஒரு வாழ்க்கைப் போக்காகவே மாற்றப்பட்டு விட்டது என்றே
கூறவேண்டும். கீரிப்பட்டி, பாப்பாபட்டி போன்ற பஞ்சாயத்து
களுக்கு அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலே இதற்கு
சரியான சான்று! இந்தப் பஞ்சாயத்துகளை தலித்துகளுக்கான
ரிசர்வ் பஞ்சாயத்துகளாக மாற்றக் கூடாது என்று ஜாதிவெறி
சக்திகள் மிரட்டி வந்தன; தேர்தல் நடத்தவே முடிய வில்லை.
பிறகு, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, தேர்தல் நடத்த
வேண்டிய கட்டாயத் தேர்தல் எப்படி நடந்தது? அந்தக்
கிராமங்களில் ஆதிக்க ஜாதியினராக இருப்பவர்களே, தங்களது
உத்தரவுக்கு பணியக்கூடிய நபர்களைப் பிடித்து போட்டியிட
வைத்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் போட்டி
யிட்டது! ஆதிக்க ஜாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்;
வெற்றி பெற்ற 'தலித்' வேட்பாளர்கள், அதே ஆதிக்க ஜாதியினர்
உத்தரவை ஏற்று தங்களது பதவியையும், வெற்றி பெற்றவுடன்
ராஜினாமா செய்து விட்டனர்! இதற்குப் பெயர் ஜனநாயகமா?
ஜாதி நாயகமா? என்று கேட்கிறோம்!
தமிழ்நாட்டில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்
தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சைதை சட்ட மன்றத்
தொகுதியில் ஆளும் கட்சி, தமிழக வரலாற்றிலே இல்லாத
அளவுக்கு அரசு எந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி
கள்ள ஓட்டுகளைப் போட்டுள்ளது; இதன் காரணமாக, வாக்கு<noinclude>{{nop}}{{rv|79 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''79'''}}}}|{{left|{{larger|'''79'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gw0cktebv0y6o98x2146458eoiigqwq
அட்டவணை:கயிலாசநாதர் சதகம் (1913).pdf
252
647230
1948063
2026-06-19T16:05:22Z
Clintacc
16664
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948063
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=கயிலாசநாதர் சதகம்
|Language=ta
|Author=சேலம் சிதம்பரப்பிள்ளை
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ரிப்பன் அச்சியந்திரசாலை
|Address=சென்னை
|Year=1913
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist articles="no" tom="yes" lang="ta" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
la1w0pjoivkf6t4h7txztixz6kcqv6j
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/82
250
647231
1948065
2026-06-19T16:06:32Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்கு
உரியதுதான்! சட்டமன்றத் தேர்தல் முறைகேடுகளுக்காக, நாடு முழுதும்
வெடித்துக் கிளம்பும் கண்டனக் குரல்கள், பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற
பஞ்சாயத்துக்களில் ஜாதி நாயகம் தலைவிரித்தாடியபோது அமுங்கிப் போய்
விடுவது ஏன்? அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளுமே, இதில் மவுனம்
ஜாதிப்பது ஏன், என்பதுதான் நமது கேள்வி!
இப்போது லால்குடி அருகே உள்ள திண்ணியம் எனும்
கிராமத்திலிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. ஆதிதிராவிடர்
வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், தமக்கு தொகுப்பு வீடு ஒன்று பெறுவதற்காக,
கருப்பையா என்ற தலித் கிராமத்து ஆதிக்க ஜாதியைச் சார்ந்த சுப்ரமணியம்
என்பவரிடம் ரூ.2,000/- பணம் தந்துள்ளார். வீடு கிடைக்கவில்லை;
பணத்தைத் திருப்பிக் கேட்கப் போனவரை, பணம் வாங்கிக் கொண்டவர்
தாக்கியதோடு, மனித மலத்தைச் சாப்பிடுமாறு, உத்தரவு போட்டிருக்கிறார்!
மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகம், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை
எடுத்து, நான்கு பேரைக் கைது செய்துள்ளதோடு, தாழ்த்தப் பட்டோருக்கான
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்;
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவரைப்
பாராட்டுகிறோம்! தமிழ்நாட்டில் பல கிராமங்களின் நிலை இப்படித்தான்
இருக்கிறது. பல கிராமங்களில் நடக்கும் அவலங்கள் வெளியே வருவதே
இல்லை! இந்து பார்ப்பனியத்தின் ஏவலர்களாக கிராமத்து ஆதிக்க
ஜாதியினர் பலரும் செயல்பட்டு வருகிறார்கள்! ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின்
அவசியத்தையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன! தீண்டாமை, ஜாதிய
ஒடுக்குமுறைக்கான ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிராமங்கள் தோறும்
உருவாக்கப்பட்டு, அவைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்! ஜாதியமும் - பார்ப்பனியமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்
குழந்தைகள்! எனவே, பார்ப்பனிய - இந்துத்துவ எதிர்ப்போடு, ஜாதிய,
தீண்டாமை ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கத்தையும் முன்னெடுக்க
வேண்டியது அவசியமாகும்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.06.2002}}<noinclude>{{nop}}{{rv|80 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''80'''}}}}|{{left|{{larger|'''80'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ggyr1yf699tp4cr2v99yuw8uqbevsmk
அட்டவணை:Meghasandesam 1913.pdf
252
647232
1948068
2026-06-19T16:10:17Z
Clintacc
16664
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948068
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=மேகசந்தேசம்
|Language=ta
|Author=காளிதாசர்
|Translator=மு. துரைசாமி ஐயங்கார்
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=V. கல்யாணராமையர் & கோ.
|Address=சென்னை
|Year=1913
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist articles="no" tom="yes" lang="ta" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
8hhp20jq44u0c1ofnu6i3e2gcswnf5n
பக்கம்:Meghasandesam 1913.pdf/3
250
647233
1948070
2026-06-19T16:11:02Z
Clintacc
16664
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Printed by Thompson & Co. at the 33, Broadway, Madras inerva Press"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Clintacc" /></noinclude>Printed by Thompson & Co. at the
33, Broadway, Madras
inerva Press<noinclude></noinclude>
kgqz9pjbiilv5qfxb64ul9tlzsfru8n
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/82
250
647234
1948081
2026-06-19T16:32:19Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|81 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{center|81}}
ஒரு பசுங்கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன்
உயிரையே வாங்கினான் ஒரு தமிழ் மன்னன். இரவிலே
அந்தணர்கள் வீட்டுக் கதவுகளைக் கையால் தட்டிய பாண்டிய
மன்னவன் ஒருவன் அக் குற்றத்திற்காகத் தன் கையையே
துண்டித்துக்கொண்டான். இவைகள் கடும் தண்டனைக்குக்
காட்டாக வழங்கும் கதைகள்.
'''ஒறுக்கும் முறை'''
குற்றமற்றவர்களைத் தண்டிப்பதுதான் கொடுங்
கோன்மை; குற்றமுள்ளவர்களை. ஒறுப்பது ஒழுங்குமுறை
தான். குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப்
பற்றி நன்றாக ஆராயவேண்டும், அவர்கள் குற்றவாளிகள்
தாம் என்று பெய்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர்கள் புரிந்த
குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கவேண்டும், இவ்வாறே
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.
{{center|நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒருத்தி}}
என்பது புறநானூற்றின் 10-வது பாடல்,
“நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்
பட்ட கொடுமையை ஒருவன்பால் காணின், அதனை நீதி
நூற்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தகத் தண்டஞ்
செய்வை"
என்பது இவ்வடிகளின் பழைய உரை. சிறிதும் கண்ணோட்
டம் செய்யாமல் தீமைக்குத் தகுந்தவாறு ஒறுக்க வேண்டும்
என்பதை இப் பாடல் எடுத்துக்காட்டிற்று.
கண்ணோட்டம் இன்றிக் குற்றத்துக்குத் தக்கவாறு
தண்டனை தரவேண்டும் என்பதை வள்ளுவரும் வலியுறுத்து
கின்றார்.
________________
"ஒப்ப - நீதிநூலுக்கு ஏற்ப. நாடி - ஆராய்ந்து, அத்தக - அக்குற்றத்
துக்குத் தக்கபடி. ஒறுத்தி - தண்டிப்பாயாக,<noinclude></noinclude>
msmhd7ybyatr4knkl5w1ddiud415hxc
1948082
1948081
2026-06-19T16:33:43Z
சந்தானம் க
7674
1948082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|81 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{Right|81}}
ஒரு பசுங்கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன்
உயிரையே வாங்கினான் ஒரு தமிழ் மன்னன். இரவிலே
அந்தணர்கள் வீட்டுக் கதவுகளைக் கையால் தட்டிய பாண்டிய
மன்னவன் ஒருவன் அக் குற்றத்திற்காகத் தன் கையையே
துண்டித்துக்கொண்டான். இவைகள் கடும் தண்டனைக்குக்
காட்டாக வழங்கும் கதைகள்.
'''ஒறுக்கும் முறை'''
குற்றமற்றவர்களைத் தண்டிப்பதுதான் கொடுங்
கோன்மை; குற்றமுள்ளவர்களை. ஒறுப்பது ஒழுங்குமுறை
தான். குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப்
பற்றி நன்றாக ஆராயவேண்டும், அவர்கள் குற்றவாளிகள்
தாம் என்று பெய்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர்கள் புரிந்த
குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கவேண்டும், இவ்வாறே
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.
{{center|நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒருத்தி}}
என்பது புறநானூற்றின் 10-வது பாடல்,
“நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்
பட்ட கொடுமையை ஒருவன்பால் காணின், அதனை நீதி
நூற்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தகத் தண்டஞ்
செய்வை"
என்பது இவ்வடிகளின் பழைய உரை. சிறிதும் கண்ணோட்
டம் செய்யாமல் தீமைக்குத் தகுந்தவாறு ஒறுக்க வேண்டும்
என்பதை இப் பாடல் எடுத்துக்காட்டிற்று.
கண்ணோட்டம் இன்றிக் குற்றத்துக்குத் தக்கவாறு
தண்டனை தரவேண்டும் என்பதை வள்ளுவரும் வலியுறுத்து
கின்றார்.
________________
"ஒப்ப - நீதிநூலுக்கு ஏற்ப. நாடி - ஆராய்ந்து, அத்தக - அக்குற்றத்
துக்குத் தக்கபடி. ஒறுத்தி - தண்டிப்பாயாக,<noinclude></noinclude>
edy6cdlskzgrs7g50986c5cf2k4a58a
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/81
250
647235
1948085
2026-06-19T16:52:42Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|80 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>80 {{center|பழந்தமிழர் அரசியல்}}
குற்றங்களையே செய்வார்கள். புதிய புதிய குற்றவாளி
களும் பிறந்து வளர்ந்துகொண்டேயிருப்பார்கள்.
இந்த உண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்
தனர். ஆதலால் அவர்கள் குற்றம் புரிக்தோர்க்குக் கடுந்
தண்டனைகள் கொடுத்து வந்தனர்.
பண்டைக் காலத்து அறநூல்களிலே இன்னின்ன
குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் கொடுக்கவேண்டும்
என்று எழுதப்பட்டுள்ளன, இக்காலத்தினர் சிலர் அந்த
அறமுறைகளைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். 'அவை
கள் நாகரிகமற்ற காலத்தில் ஏற்பட்டவை; இக்காலத்
திற்கு எலாதவை; கருணையற்ற கடுந்தண்டனை முறை
மிருகத்தனமானது, மனிதத் தன்மைக்கு மாறானது' என்று
கூறுகின்றனர்.
“குற்றம் புரிந்தால் தப்பித்துக்கொள்ள முடியாது;
கடுந்தண்டனைக்கு ஆளாகியே தீரவேண்டும் ; மக்கள் சமு
தாயத்திற்குத் தீங்ழைத்தால் மாறுகால், மாறுகை வாங்கப்
படும் ; உயிருக்கு ஆபத்துண்டாகும் அல்லது நமது செல்வம்
பறிபோகும், அல்லது நாம் இந்த நாட்டை விட்டு வெளி
யேற்றப்படுவோம்'' என்ற அச்சம் மனித சமுதாயத்தில்
நிலவவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் புரிய நினைப்
போர் தவறு செய்யத் துணியமாட்டார்கள். குற்றங்களுக்
கேற்பக் கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் வாயி
லாகத்தான் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க
முடியும், இந்த உண்மையை உள்ளத்திற் கொண்டுதான்
முன்னோர் சிறு குற்றங்களுக்குக்கூடப் பெருந் தண்டனை
கொடுத்து வந்தனர்.
பண்டைத் தமிழக வேந்தர்கள் - ஆட்சியாளர்கள் -
பொதுமக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்.
ஆதலால் அவர்கள் தவறு செய்வோர்க்குக் 'கடுமையான
தண்டனைகள் தரப் பின்வாங்கவில்லை; இவ்வாறு செய்வது
தான் அரசநீதி - செங்கோல் முறை - காட்டு மக்ககர ௩ல்
வாழ்விலே வாழச் செய்யும் ௮றநெறி - என்பதை மறவா
திருந்தனர். அறிஞர்களும், அறவோர்களும் இத்தகைய
அரசுக்குத் துணை செய்தனர்.<noinclude></noinclude>
lc17bo2i8ehaludbz4fy08fm8bk2jra
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/80
250
647236
1948090
2026-06-19T17:03:49Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|79 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|6. குற்றமும் தண்டனையும்}}
'''குற்றங்கள் குறையும் வழி'''
தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள்
எதையும் செய்யத் துணிவார்கள்; அவர்கள் பழி பாவங்களுக்
குப்பயப்படமாட்டார்கள், பிறரைப்பற்றிச் சிறிதும் கவலைப்
படாமல், தாம் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பது
தரன் தந்நல மாகும், ஏனையோரிடம் இரக்கங் காட்டாத
இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள் ; மனித
சமூகத்திற்குத் தீராத நோயாளிகள். இந்த நோயைப்
போக்க தகுந்த மருந்து கொடுத்தாகவேண்டும் ; இந்தக்
குற்றவாளிகளைச் சீர்திருத்தம் செய்தாகவேண்டும், திருந்
தாத கொடிய குற்றவாளிகளுக்குக் கடுந் தண்டனை கொடுத்
தாக வேண்டும்.
மனித சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாமல் குறைய
வேண்டுமானால் குற்றவாளிகளுக்குக் கொடிய தண்டனைகள்
கொடுத்தாகவேண்டும் ; பெரும் குற்றம் புரிவோரைக் கடுமை
யாகத்தண்டிப்பதிலே தவறில்லை, குற்றம் புரிகின்றவர் சிலர்;
குற்றம் புரியாதவர்கள் பலர், சிலர் செய்யும் பிழைகளால் -
குற்றங்களால் - கொடுமைகளால் - பலர் தீமையடைகின்
றனர், பலர் நன்மைக்காகச் சிலரைத் துன்புறுத்துவது -
தண்டிப்பது - இவைகளின் வாயிலாக அவர்களை நல்லவர்க
ளாக்குவது - அறமாகும் ; நீதியும் நேர்மையுமாகும். இதுவே
பண்டும் இன்றும் உள்ள அரசியல் அறம்.
அரசாங்கத்தின் கடமை மக்கள் எல்லேரரையும்
மகிழ்ச்சியுடன் வாழ வைப்பதாகும். பெரும்பாலான மக்
களின் வாழ்வுக்கு ஒரு சிலர் தந்நல நோக்குடன் பாதகம்
செய்வார்களானால் அவர்களை விட்டு வைப்பது தவறு;
செங்கோல்முறை யாகாது. சமுதாயத்திற்கு இடையூறு
செய்வோர், அமைதியான வாழ்க்கையின் அடிப்படையைத்
தகர்ப்போர் ஆவார்கள்; அவர்களை அடக்குவது அற
முறையேதான், அடக்காமல் விட்டால் அவர்கள் மேலும்<noinclude></noinclude>
i1fadu0daszws8e7x3del640qd2n9ym
1948091
1948090
2026-06-19T17:04:42Z
சந்தானம் க
7674
1948091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|79 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''6. குற்றமும் தண்டனையும்'''}}
'''குற்றங்கள் குறையும் வழி'''
தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள்
எதையும் செய்யத் துணிவார்கள்; அவர்கள் பழி பாவங்களுக்
குப்பயப்படமாட்டார்கள், பிறரைப்பற்றிச் சிறிதும் கவலைப்
படாமல், தாம் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பது
தரன் தந்நல மாகும், ஏனையோரிடம் இரக்கங் காட்டாத
இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள் ; மனித
சமூகத்திற்குத் தீராத நோயாளிகள். இந்த நோயைப்
போக்க தகுந்த மருந்து கொடுத்தாகவேண்டும் ; இந்தக்
குற்றவாளிகளைச் சீர்திருத்தம் செய்தாகவேண்டும், திருந்
தாத கொடிய குற்றவாளிகளுக்குக் கடுந் தண்டனை கொடுத்
தாக வேண்டும்.
மனித சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாமல் குறைய
வேண்டுமானால் குற்றவாளிகளுக்குக் கொடிய தண்டனைகள்
கொடுத்தாகவேண்டும் ; பெரும் குற்றம் புரிவோரைக் கடுமை
யாகத்தண்டிப்பதிலே தவறில்லை, குற்றம் புரிகின்றவர் சிலர்;
குற்றம் புரியாதவர்கள் பலர், சிலர் செய்யும் பிழைகளால் -
குற்றங்களால் - கொடுமைகளால் - பலர் தீமையடைகின்
றனர், பலர் நன்மைக்காகச் சிலரைத் துன்புறுத்துவது -
தண்டிப்பது - இவைகளின் வாயிலாக அவர்களை நல்லவர்க
ளாக்குவது - அறமாகும் ; நீதியும் நேர்மையுமாகும். இதுவே
பண்டும் இன்றும் உள்ள அரசியல் அறம்.
அரசாங்கத்தின் கடமை மக்கள் எல்லேரரையும்
மகிழ்ச்சியுடன் வாழ வைப்பதாகும். பெரும்பாலான மக்
களின் வாழ்வுக்கு ஒரு சிலர் தந்நல நோக்குடன் பாதகம்
செய்வார்களானால் அவர்களை விட்டு வைப்பது தவறு;
செங்கோல்முறை யாகாது. சமுதாயத்திற்கு இடையூறு
செய்வோர், அமைதியான வாழ்க்கையின் அடிப்படையைத்
தகர்ப்போர் ஆவார்கள்; அவர்களை அடக்குவது அற
முறையேதான், அடக்காமல் விட்டால் அவர்கள் மேலும்<noinclude></noinclude>
1c4mtq2cyts7ez07m36pgim0ekkgjd0
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/410
250
647237
1948092
2026-06-19T17:07:31Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|388 பச்சோந்தி}}</noinclude>கொண்டுள்ளது. வெட்டுக் கிளியை விரும்பிப் பிடித்துண்ணும். இது முன்னும், பின்னுமாக அசைந்து மெதுவாக நடக்கும். ஆண், பெண் பச்சோந்திகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாகும். இனப் பெருக்கக் காலத்தில், பல ஆண்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. இனப் பெருக்கம் செய்யும் நேரத்தில், ஆண் பச்சோந்தியின் வண்ணம் கறுப்பாக மாறுகிறது. சில சமயங்களில், இனப் பெருக்கம் செய்து கொண்டிருக்கும் போது, ஆண், பெண் பச்சோந்திகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொள்கின்றன. கருவுற்ற பெண் பச்சோந்தி, முட்டைகளை நிலத்தில் இட்டுப் புதைத்து வைக்கிறது.
ஆப்பிரிக்கப் பச்சோந்தியைக் கெமலியோ ஆப்பிரிக்கன்ஸ் (<i>Chameleo Africans</i>) என்பர். இது 37 செ.மீ. நீளமுள்ளது. இதன் வால் 20 செ.மீ. நீளமுள்ளது. இதன் முதுகுப் பகுதி உயர்ந்து காணப் படுகிறது. ஆண் உயிரியின் பின் கால்களில் தடித்த முள்களுள்ளன. எக்கர்ஸ் என்பாரின் கூற்றுப்படி, இப்பெண் பச்சோந்தி, அக்டோபர் மாதத்தில் 35 கருவுற்ற முட்டைகளை இடுகின்றது. இப்பச்சோந்தி அடுத்து வரும் ஆண்டில், ஜுன் முதல் முட்டைகளிடுவதில்லை. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இளம் உயிரிகள் முட்டையிலிருந்து வெளியே வருகின்றன. இவ்விளம் உயிரிகளில் ஆண் பச்சோந்தி 16 மாதங்களில் 8–31 செ.மீ. நீளம் வளர்கிறது. தொடர்ந்து, அதே இலையுதிர் காலத்தில் முதிர்ச்சியடைந்த பெண் பச்சோந்தி, ஏறத் தாழ ஏழு கருவுற்ற முட்டைகளை இடுகிறது. இதே பெண் பச்சோந்தி, அடுத்து வரும் ஆண்டில், கூடுதலான கருவுற்ற முட்டைகளை இடுகிறது. ஆனால், இம்முட்டைகளிலிருந்து எவ்வித இளம் உயிரிகளும் வருவதில்லை.
முட்டையிலிருந்து வெளியே வந்த புதிய, முதிர்ச்சியடைந்த இளம் உயிரிகள் 14–15 மாதங்களுக்குப் பிறகே, இனப் பெருக்கம் செய்கின்றன. ஆகஸ்ட்டு மாத இறுதியில், கருவுறுதல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, பெண் பச்சோந்தி அதிக வண்ணத்தையும், உடலில் அதிகக் கொழுப்புப் பொருளையும் சேர்த்து வைக்கிறது. பிறகு, இப்பெண் பச்சோந்தி, அக்டோபர் மாத நடுவில் 53 கருவுற்ற முட்டைகளை வளையில் இட்டு, மண்ணால் மூடி மறைக்கிறது. ஒவ்வொரு முட்டையும் 13 மி.மீ. விட்டமும், 18 மி.மீ. நீளமும் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஒரு சில முட்டைகளிலிருந்து 6 செ.மீ. நீளமுள்ள இளம் உயிரிகள் வெளியே வருகின்றன. அடுத்த ஜுலைக்குள் அனைத்து முட்டைகளிலிருந்தும், இளம் உயிரிகள் வெளியே வருகின்றன. அனைத்து இளம் உயிரிகளும், அடுத்து வரும் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை வாழ்கின்றன. இவை டிசம்பர் மாதம் வரை தூங்கிய நிலையிலுள்ளன. மேலும், இவற்றின் பெற்றோர் ஜனவரி மாதம் வரை உறக்க நிலையிலுள்ளன. இவ்வகைப் பச்சோந்திகள், ஆப்பிரிக்காவிலிருந்து எத்தியோப்பியா வரை பரவிக் காணப் படுகின்றன.
கெமலியோ டில்லிப்பிஸ் (<i>Chamaleo dilepis</i>) வகைப் பச்சோந்தி, ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. இது, கெமலியோ ஆப்பிரிக்கானஸ் என்னும் பச்சோந்தியைப் போன்று, தோற்ற ஒப்புமையைக் கொண்டு உள்ளது. கெ.டில்லிப்பிஸ் பச்சோந்தியின் தலையின் மேல், தசை மடிப்புகள் காணப் படுகின்றன. அடுத்த உயிரியைத் கண்டவுடன், இது தசை மடிப்புகளை உயர்த்தி, விரித்துக் காட்டுகிறது.இது இடர் ஏற்படும் போது, கரும் பச்சையுடன், மஞ்சள், வெள்ளை வண்ணப் புள்ளிகளைத் தோற்றுவிக்கிறது. இப்பச்சோந்தி இலைகளுக்கிடையில், பச்சை வண்ணத்தையும், மரப் பட்டையிலும், கிளைகளின் மேலும் இருக்கும் போது, மர வண்ணத்தையும் கொண்டுள்ளது. பெரும்பாலும், இது சிறிய மரத்திலும், புதர்களிலும் வாழ்கிறது. புதிய புதருக்குச் செல்ல அல்லது நிலத்தில் வளை தோண்ட, இது புதரிலிருந்து நிலத்திற்கு இறங்கி வருகிறது. ஆறு மாதம் தோண்டிய வளையில் 30–40 முட்டைகளை இடுகிறது. எதிரிகளைச் சந்திக்கும் போது, பாம்பை போன்று உடலை விரித்து, உயர்த்தி வரிகளை ஏற்படுத்தி ‘ஹிஸ்’ என்னும் ஒலியை உண்டாக்குகிறது.
கெமலியான் வல்காரிஸ் (<i>Chameleon valgaris</i>) என்னும் சிறப்பினம் வட ஆப்பிரிக்கா, சிரியா, ஆசியா ஐரோப்பாவின் தென் பகுதியில் காணப் படுகிறது. கெமலியோ கிரிஸ்ட்டாட்டஸ் (<i>Chamelio cristatus</i>) என்னும் வகைப் பச்சோந்தி, ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் வாழ்கிறது. இதன் முதுகுப் புறத்தில், நெடுக்காக முள் போன்ற செதில்கள் பின் புறம் நோக்கிக் காணப் படுகின்றன. இப்பச்சோந்தி, மகரதப் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளது. இவ்வண்ணம், மடகாஸ்கர் தீவுப் பகுதியில், வறண்ட நிலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது பெரும்பாலும், பெரிய வெட்டுக் கிளிகளைப் பிடித்துண்ணுகின்றது. மேலும், சிறிய பல்லி, பறவையின் குஞ்சு, சிறிய பாலூட்டி ஆகியவற்றையும் உண்கிறது. கெமலியோ வெருக்கோசன் (<i>Chameleo verrucosus</i>) என்னும் சிறப்பினம், தன் உடல் வண்ணத்தை மாற்றும் தன்மையை இழந்துள்ளது. இது வறண்ட காட்டிலும், பாலைவனத்திலும் உயர் வெப்ப நிலையில் வாழ்கிறது. இது கருவுற்ற முட்டைகளை நிலத்திலுள்ள வளைகளிலிட்டு, மண்ணால் மூடி மறைக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
qqp6y7hcq9uobj5stvczwtv67xrqrgn
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/411
250
647238
1948096
2026-06-19T17:26:11Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பச்சோந்தி 389}}</noinclude>கெமலியோ பார்டாலிஸ் (<i>Chameleo pardalis</i>) என்னும் பச்சோந்தியைப் பேந்தர் கெமலியாஸ் என்பர். இது மொரிசியஸ் தீவுகளில் மிகுந்து காணப் படுகிறது. இதன் உடலில், நெடுக்காக ஒரு பச்சை வண்ணக் கோடும், கறுப்பு சிவப்புக் கலந்த பல குறுக்குக் கோடுகளும் காணப் படுகின்றன. கண்ணாடியில், தன் உருவத்தைப் பார்த்தவுடன், இது தன் உடல் வண்ணத்தை மங்கலாக மாற்றிக் கொள்கிறது.வாயின் விளிம்புப் பகுதி, மஞ்சள் வண்ணமாகக் காணப் படுகிறது.
இப்பச்சோந்தி, பகலில் குறிப்பிட்ட நேரத்தில் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறது.தூங்குவதற்கும், வெளிச்சத்தில் காய்வதற்கும், மரத்தில் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுக்கிறது. இடர் ஏற்பட்டால், உணவு உண்ணாது, உடலைப் பெருக்கச் செய்து, இருட்டுப் பகுதிக்குச் செல்கிறது. வெட்டுக் கிளி, வண்ணத்துப் பூச்சி புழுக்களை விரும்பி உண்ணுகிறது. கெமலியோ பார்சோனி (<i>Chameleo parsoni</i>) என்னும் பச்சோந்தியைப் பார்சன் கெமலியான் என்பர். இதன் மேல் தாடை நுனியின் வெளிப் புறத்தில் மேல் புறமாகத் திரும்பியுள்ள இரண்டு கொம்பு போன்ற மொட்டுப் பகுதிகளுள்ளன. தலையின் உச்சியில், கவசம் போன்ற நீண்ட பின் புறம் உள்ளது. இச்சிறப்பினத்தைப் பற்றி ஆய்வுக் கருத்துக்கள் உள்ளன. இது வாழும் பகுதியாகிய, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. கெமலியோ பிரிவிக்கார்நிஸ் (<i>Chameleo brevicornis</i>) என்னும் மடகாஸ்கர் தீவில் வாழும் சிறப்பினங்கள், குட்டையான கொம்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலின் நீளம் 25–34 செ.மீ. வாலின் நீளம் 13.5–20 செ.மீ. ஆண் உயிரியின் மேல் தாடை நுனியில் மட்டும், ஒரு மொட்டுப் போன்ற பகுதியுள்ளது. இம்மொட்டின் மேல் பகுதியில், மிகுதியான பெரிய செதில்களுள்ளன. ஆண், பெண் உயிரினங்கள் தலையில் பின் புறத்தின் உச்சியில், ஒரு பெரிய தோல் மடிப்பை, யானையின் காது போன்று விரித்து உயர்த்தி அச்சுறுத்தும். பச்சை–சிவப்பு வண்ணங்களில் இது அமைகிறது. பெண் பச்சோந்தியிலுள்ள குட்டையான கொம்புகள், நிலத்தில் வளை தோண்ட உதவுகின்றன. இப்பச்சோந்தி ஏறத் தாழ, 40 முட்டைகளை இடுகிறது. ஒவ்வொரு முட்டையும் 1 செ.மீ நீளமுள்ளது. மென்மையான ஒளி ஊடுருவிச் செல்லும் தோல் போன்ற முட்டைஓட்டைக் கொண்டுள்ளது.முட்டைகளை, மண்ணால் மூடி வைக்கிறது. அடுத்த நாளில், பெண் பச்சோந்தி வெட்டுக் கிளியை மிகுதியாகப் பிடித்துண்ணுகிறது. மேலும், வண்ணத்துப் பூச்சியில், புழுக்களையும், சுண்டெலியின் குட்டிகளையும் உண்கிறது. முட்டைகள் வயிற்றில் இருக்கும் போது, சீரான மர வண்ணத்தைக் கொண்டுள்ளன.
கெமலியோ ஒவ்னி (<i>Chameleo oweni</i>) என்னும் பச்சோந்தியை, ஒன் மெகலியான் என்பர். இதன் மூக்கின் மேல் 14–15 செ.மீ. நீளமுள்ள மூன்று கொம்புகளுள்ளன. இதனால், இப்பச்சோந்தி தோற்றத்தில் கிரிட்டேசியன் காலத்தில் வாழ்ந்த டிரிசெரட்டோப்ஸ் என்னும் ராட்சசப் பல்லிக்கு ஒப்பாகவுள்ளது. இப்பச்சோந்தி, சுறுசுறுப்பாகச் செயல் படக் கூடியது. மனிதர்களை நோக்கி அஞ்சாது, நெருங்கி வாழக் கூடியது.
கெமலியோ மெல்லெரி (<i>Chamaeleo mellari</i>) என்னும் பச்சோந்தி மில்லர் மெகலியான் எனப் படுகிறது. 54–58 செ.மீ. நீளமுள்ள வாலைக் கொண்டுள்ளது. இது மடகாஸ்கர் தீவிற்கு வெளிப் பகுதியில் காணப் படும் பச்சோந்திகளில் மிகப் பெரியதாகும். இதன் மூக்கின் மேல், சிறிய கொம்புகள் காணப் படுகின்றன. இக்கொம்புகள் ஆண், பெண் இரண்டிற்கும் காணப் படுகின்றன. இதன் உடலில், இளம் பச்சை வண்ணத்தையும், மஞ்சள் வண்ணப் பட்டைக் கோடுகளையும், பக்க வாட்டத்தில், பெரிய கறுப்பு வண்ணப் புள்ளிகளையும் காணலாம். ஆண் பச்சோந்தி தலையைத் தொடர்ந்து, அடிக்கடி அசைக்கிறது. இதற்கு மாறாகப் பெண் பச்சோந்தி, உடலை முன்னும் பின்னுமாக அசைக்கிறது. இவ்வகைப் பச்சோந்தி நிலத்தில் முட்டையிடுகிறது.
கெமலியோ ஃபர்சிஃபர் (<i>Chameleo furcifer</i>) என்னும் சிறப்பினம், மடகாஸ்கர் தீவுப் பகுதியில் வாழ்கிறது. இது 13.5 செ.மீ. உடல் நீளத்தையும், 6.5 செ.மீ. வால் நீளத்தையும் கொண்டுள்ளது. மூக்கின் மேல் சில மொட்டுகளுள்ளன. கெமலியோ ஃபிரிச்சேரி (<i>Chameleo fischeri</i>) என்னும் பச்சோந்தியின் மூக்கின் மேல் கொம்பு போன்ற பகுதிகள் காணப் படுகின்றன. இது ஆப்பிக்காவில் மிகுந்து காணப் படுகிறது. இவ்வகைப் பச்சோந்தியை, ஃபிரிச்சேரி கெமலியான் என்பர். ஆண் பச்சோந்தி எதிரிகளைக் கொம்புகளின் உதவியால் தாக்குகிறது. இது, ஏனைய சிறிய பல்லி வகைகளுடன் பின் தொடர்ந்து செல்கிறது. புதிய சூழ்நிலைக்கு வரும் போது, நீண்ட நேரம் தன் நாக்கின் உதவியால், மரக் கிளைகளை நக்கி உணர்ந்த பிறகே, மரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்கிறது.
கெமலியோ லேட்டிராலிஸ் (<i>Chameleon lateralis</i>) என்பது நீலம், மஞ்சள், கறுப்பு வண்ணம் கலந்த உடலைக் கொண்டுள்ளது. ஓய்வாக இருக்கும் போது, கரும் பச்சை வண்ணத்தையும் உடலின் நெடுக்கு வாட்டத்தில், ஒரு கோட்டையும் பெற்றுள்ளது. வாலில், பல குறுக்குக் கறுப்புக் கோடுகளுள்ளன. உடலின் பக்க வாட்டத்தில், பல வளையக் கோடுகளுள்ளன. இவ்வகைப் பச்சோந்தி மடகாஸ்கர் தீவில்<noinclude></noinclude>
nxwl3awgy5gwb7j2q51fkxlrtcmzy2e
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/79
250
647239
1948097
2026-06-19T17:29:50Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|78 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>78 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{center|இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்,”}} {{Right|(கு.448)}}
மேலே கூறியவைகளைக் கொண்டு பண்டைப் புலவர்
கள் அரசர்களுக்கு வலியுறுத்தி வந்த கருத்துக்களைக் காண
லாம்.
படைபலத்தைக் காட்டி மன்னர்கள் மக்களை அச்
சுறுத்தித் தங்கள் விருப்பப்படி ஆள முடியாது. மக்கள்
ஆட்சியினர் குடிமக்களுக்கு எந்த கன்மையும் செய்யாமல்
மக்களாட்சி - குடிமக்கள் ஆட்சி - ஜனகாயக ஆட்டி- சய ஆட்டி
என்ற சொற்களைக் கூறிக்கொண்டு ஏமாற்ற முடியாது.
காட்டு மக்களின் ஒத்துழைப்பைப் பெறாமல் அரசாள முடி
பாது ; ஆட்சியிலே நிலைக்க முடியாது. ஆட்சி பீடத்திலே
அமர்க்இருக்தாலும் நீடித்து வாழ முடியாது. இவ்வுண்மை
யைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நெளிவாகச் சொல்லி
யிருக்கின்றன.<noinclude></noinclude>
7po422wysbazsqtmw2l9hdc8jjw8tjt
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/412
250
647240
1948098
2026-06-19T17:39:24Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|390 பச்சோந்தி}}</noinclude>பல பகுதிகளில் காணப் படுகிறது. இது உயர்ந்த நிலப் பகுதியில் மிகுந்துள்ளது. சூரியன் தோன்றிய பிறகு, இதைப் பிடிக்க முடிவதில்லை. மரக் கிளையின் நுனி வரை சென்று, சூரிய வெளிச்சத்திற்கு நேர் செங்குத்தாக இது அமர்கிறது. உடலின் தேவையான வெப்பத்தைப் பெற்ற பிறகு, இது நிழல் பகுதியை நோக்கிச் சென்று, பச்சை வண்ணத்தைப் பெற்றுக் காணப் படுகிறது. கெமலியோ மோன்ட்டியம் (</i>Chameleo montium</i>) என்னும் பச்சோந்தியை மவுன்டன் கெமண்டால் என்பர்.
இதற்கு நீண்ட கண்டங்களாலான இரண்டு கொம்புகளுள்ளன. முதுகுப் புறத்தில், நெடுக்காகத் துடுப்புப் போன்ற தோல் மடிப்புக் காணப் படுகிறது. இத்தோல் மடிப்பு, வாலின் தொடக்கம் வரை காணப் படுகிறது. பகலில் இதைப் பார்ப்பது அரிது. மாலையில் அல்லது இரவில், புதர்களின் மேல் ஒளியைச் செலுத்தினால், இது நடந்து செல்வதை அறியலாம்.
இது பொதுவாக, மரத்தின் வெளிப் புறத்திலுள்ள கிளைகளில் இளம் பச்சை வண்ணத்துடன் ஓய்வு எடுக்கிறது. பச்சோந்தி அழகிய வண்ணத்துடன் காணப் படுகிறது. உடல் இலைப் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளது. ஆங்காங்கே நீல நிறப் புள்ளிகளும், மஞ்சள் வண்ணத்தில் மின்னும் புள்ளிகளும் உள்ளன.
மரத்தில் மறைந்திருக்கும் போது, இதைக் கண்டு பிடிப்பது கடினம். மனிதர்களைக் கண்டவுடன், இது பறந்து செல்கிறது. இவ்வுயிரியிலுள்ள கொம்புகள், இனப் பெருக்கக் காலத்தில் இடர் தரும் உயிரிகளைத் தாக்க உதவுகின்றன.
கெமலியோ ஜாக்சோனி (<i>Chameleo jacksoni</i>) என்னும் பச்சோந்தியின் மூக்கின் மேல், மூன்று கொம்புகள் உள்ளன. பெண் பச்சோந்தியில், நடுவிலுள்ள கொம்பு மட்டும் சிறியதாகக் காணப் படுகிறது. கண்களின் மேல் சிறிய மொட்டுப் போன்ற கொம்புப் பகுதிகள், இளம் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளன.
விடியற்காலையில், இது உடலைச் செங்குத்தாகவும், தட்டையாகவும், சூரியனை நோக்கி வைத்துக் கொள்கிறது. சூரிய வெப்பத்தை உடலினுள் எடுத்து, மஞ்சள் வண்ணமாக மாறுகிறது. இது முட்டையிட்டுக் குட்டிப் போடுகிறது. முட்டைகள் மென்மையான தோல் போன்ற ஓட்டைக் கொண்டுள்ளன. இப்பச்சோந்தி 36–40 முட்டைகளை இட்டுக் குட்டிகளைப் பெற்றெடுக்கிறது.
இளம் குட்டி பிறந்தவுடன் 52–55 மி.மீ. நீளமுள்ளது. வால் 23–25 மி.மீ. நீளமுள்ளது. ஒவ்வொரு பிறந்த குட்டியின் மூக்கின் மேலும், தெளிவான சிறிய கொம்புப் பகுதி காணப் படுகிறது. இக்கொம்புப் பகுதியின் மேல், கூம்பு வடிவச் செதில் காணப் படுகிறது. கண்ணிற்கு முன் புறத்தில் இரண்டு குட்டையான கொம்புகள் இணைந்து, காணப் படுகின்றன. இவை பச்சை, கறுப்பு, வெள்ளை வண்ணங்களைக் கொண்டுள்ளன.
இளம் குட்டிகள் சாம்பல் வண்ணத்துடன் கறுப்பு வண்ணக் கோடுகளைப் பெற்றுள்ளன. கூரிய முனையின் கீழ் நோக்கி முக்கோண வடிவ 3–4 வெள்ளை வண்ணப் புள்ளிகள் காணப் படுகின்றன. இக்குட்டிகள் பிறந்த நாளில் விடியற்காலையிலேயே, உணவு உண்ணத் தொடங்குகின்றன.
குட்டி பெற்றோர்களைப் போன்று, உடலின் நீளத்தை விட, மிகுந்த நீளமான நாக்கினை மின்னல் வேகத்தில் வேகமாக நீட்டிச் சிறு பூச்சிகளைப் பிடித்துண்ணுகிறது. இக்குட்டி அச்சமின்றித் தாய்ப் பச்சோந்தியுடன் காணப் படுகிறது.
உடலைப் பக்க வாட்டத்தில் ஒட்டினாற் போல், தட்டையாக மாற்றிக் கறுப்பு வண்ணத்தைப் பெற்றுக் காணப் படுகிறது. குட்டையான கால்களின் உதவியால், உடலை முன்னும், பின்னுமாக அசைக்கிறது. மேலும் அடிக்கடி வாயை அகன்று திறக்கிறது.
கெமலியோ பையிட்டேனியேட்டஸ் (<i>Chameleo pitaniatus</i>). இப்பச்சோந்தியை ஆப்பிரிக்க இரண்டு கோடுகளுள்ள பச்சோந்தி என்பர். இது, ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் வாழ்கிறது. இது கரு முட்டைகளை வயிற்றினுள் வைத்துக் குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையைச் சார்ந்தது.
இதில் பச்சை வண்ணம் தோன்றுவதில்லை. ஆண் உயிரியில், வெளுத்த மர வண்ணமும், உடலின் பக்க வாட்டத்தில் பல கோடுகளும் காணப் படும். பெண் உயிரியில், வெள்ளை வண்ணமுள்ள சில புள்ளிகள் மர வண்ணமுள்ள புள்ளிகளின் மேல் காணப் படுகின்றன.
பெண் பச்சோந்தி மிகக் குறைந்த கறுப்பு வண்ணத்தைக் கொண்டுள்ளது. ஆனால், ஏனைய உயிரி தாக்க வரும் போது, இது சுறுசுறுப்பாக வாயைத் திறந்து ‘ஹிஸ்’ என ஒலி<noinclude></noinclude>
7e726oovyn3g4ycrgrkmxu5dsyst57y
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/413
250
647241
1948099
2026-06-19T17:58:29Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசலை 391}}</noinclude>எழுப்புகிறது. ஒரு பருவத்தில் மட்டும் 10–25 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. 4 செ.மீ. நீளமுள்ள இளம் குட்டி ஓராண்டு வரை வளர்கிறது.
கெமலியோ ஹோனிலி (<i>Chamaeleo hoehneli</i>) என்னும் பச்சோந்தி கரு முட்டைகளை வயிற்றில் நிறுத்தி, முழு வளர்ச்சியடைந்த குட்டிகளை ஈன்றெடுக்கும் சிறப்பினமாகும். இது, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள உயர்ந்த காடுகளில் மிகுதியாக வாழ்கிறது. மெலியோ பைபிட்டே னியட்டஸ் என்னும் சிறப்பினத்துடன், இனத் தொடர்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், தனிச் சிறப்பினமாகக் கருதப் படுகிறது. இது, தன் மர வண்ணம் அல்லது கறுப்பு வண்ணத்தைப் பல்வேறு வகைப் பச்சை வண்ணங்களாக மாற்றுகிறது.
ஆண் உயிரியின் தலையின் மேலும், முதுகுப் பகுதியிலும் மஞ்சள் வண்ணம் காணப் படுகிறது. இளம் குட்டிகள் பச்சை வண்ணத்தைக் காட்டுவதில்லை. ஆண் பச்சோந்திகளுக்கிடையே சண்டை ஏற்படுகிறது. தோற்ற உயிரி கறுப்பு வண்ணத்தைப் பெறுகிறது. பெண் பச்சோந்தி, பத்து இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. இவ்விளம் குட்டி பிறந்த இடத்திலிருந்து முதல் நாளிலேயே வேகமாக நீண்ட தொலைவு செல்கிறது. இக்குட்டிகள் தாவரங்களில் இருக்கும் போது, சூரிய ஒளி படும் பகுதியை நோக்கி, விருப்பமாகச் செல்கிறது. இந்நிலையில், ஏனைய உயிரிகள் அருகில் சென்றால், வாயைத் திறந்து அச்சுறுத்துகிறது. பத்து மாத வயதுள்ள பெண் பச்சோந்தி 5 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது.
கெமலியோ பூமிலஸ் (<i>Chamaeleo pumilus</i>) என்னும் பச்சோந்தியை, டுவார்ஃப் கெமலியான் என்பர். இது குட்டி போடும் (Ovovivoparous) வகையைச் சார்ந்தது. தென் ஆப்பிரிக்காவில், குளிர்ந்த மலைப் பகுதிகளில், இது பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. இதன் முதுகுப் பகுதியில், தலையிலிருந்து வாலின் இறுதி வரை, நெடுக்காகவும், வரிசையாகவும் செதில்கள் முள் போன்று நீண்டு காணப் படுகிறது. ஒரு பெண் பச்சோந்தி 3 செ.மீ. நீளமுள்ள, குறைந்தது 17 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இவ்விளம் குட்டி நாக்கை வெளியே நீட்டிப் பழ ஈக்களைப் பிடித்துண்ணுகிறது. நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும் இக்குட்டி, முதலில் வாயையும், கண்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன் படுத்தத் தெரிந்து கொள்கின்றது. பிறந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, இக்குட்டி முதன் முதலாகத் தோலை உரிக்கின்றது. ஒரு மாதத்திற்கு பிறகு, இக்குட்டி பச்சை அல்லது மஞ்சள் வண்ணமாக மாறுகிறது. முதிர்ச்சியடைந்த பச்சோந்தி, பச்சை வண்ணத்துடன், நீல வண்ணப் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு காணப் படுகிறது. மேலும், செயல் நிலையையும், காலத்தையும்; வெப்ப நிலையையும் பொறுத்துப் பச்சோந்தியின் வண்ணம் மஞ்சளிலிருந்து கறுப்பாக மாறுகிறது.
இது குனிந்த நிலையில், வாலை நீட்டிக் கொண்டு ஓடுகிறது. ஏனைய உயிரிகளைத் தன்னை நோக்கி அழைக்கவும், அச்சுறுத்தவும் தன் கழுத்தை விரித்து, வாயைத் திறந்து, உடலைப் பக்க வாட்டத்திலும், தலையை முன்னும், பின்னுமாகவும் அசைக்கும். தலையை முன்னும், பின்னுமாக அசைத்தல் இனப் பெருக்கச் செயல் தொடங்குவதற்கு முன்பே நடைபெறுகிறது.
புரூக்கேசியா என்னும் இனத்தில், நான்கு துணை இனங்கள் காணப் படுகின்றன. இவை மேற்கு–கிழக்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவுப் பகுதிகளில் காணப் படுகின்றன. இவ்வகைப் பச்சோந்தி குட்டையாக, தடித்த சுருளாத நீண்ட வாலைக் கொண்டுள்ளது. வால் உடலின் நீளத்தை விடக் குட்டையாகவுள்ளது. வால் சுழன்று, கிளைகளைப் பிடித்துக் கொள்ளும் ஆற்றலை இழந்து விட்டது. இருப்பினும், இவ்வுயிரி அரிதாக வாலின் உதவியால், மரக் கிளைகளைச்சுழற்றிப் பிடித்துக் கொள்கிறது. இவ்விலங்கால் துல்லியமாக உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இது மர வண்ணத்தைக் கொண்டுள்ளது. இவ்வண்ணம், காய்ந்து உதிர்ந்த இலைகளின் வண்ணத்திற்கு ஒப்பாக உள்ளது. மரத்தில் வாழ்வதற்குப் பதிலாகப் பாலைவனத்தில் நிலம் மற்றும் உதிர்ந்த இலைகளுக்கிடையே தங்கி வாழ்கிறது. இதன் கால்கள் மெலிந்து, பூச்சிகளின் கால்களுக்கு ஒப்பாகக் காணப் படுகின்றன. இப்பச்சோந்தி மிகவும் மெதுவாக நடந்து செல்கிறது. இது அடிக்கடி ஒரே இடத்தில் அசையாது, பல மணி நேரமாகக் காணப் படுகிறது.எனவே, இதை எளிதாகப் பார்க்க முடிகிறது.
{{right|—<b>உ. கருப்பணன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="227"/><section begin="228"/>{{fs|110%|<b>பசலை</b>}}
இதற்குப் பசலி, பசரை, வசயிலைக் கீரை, கொத்துப் பசலை, சிறு பசலை, குத்துப் பசலை என்னும் பெயர்களும் உண்டு. இதன் தாவரப் பெயர் ஃபைனேசியா ஒலிரேஷியா (<i>Spinacea oleracea</i>) என்பதாகும். இது கீனா போடியேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் தென் மேற்கு<noinclude></noinclude>
holy566dm92qu3zehbkvut8ca55tyz8
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/414
250
647242
1948100
2026-06-19T18:13:35Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|392 பசலை}}</noinclude>ஆசியா. அங்கிருந்து அரேபியர்களால், உணவுப் பயிராகச் சாகுபடி செய்யப் பட்டது. வட ஆப்பிரிக்காவிலிருந்து, மூர் இன மக்களால், ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டு, அங்கிருந்து உலகம் முழுவதும் பரவலாயிற்று. அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில், இதன் மலைப் பகுதிகளிலும், பிற நிலப் பகுதிகளிலும் பயிராகிறது.
<b>அமைப்பு</b>. இது 30–60 செ.மீ. உயரம் வளரும் செடி. இதன் தண்டும், இலையும் பசுமையானவை. இலைகள், மாற்று இலை அடுக்கத்தில் அமைந்துள்ளன. இலை முட்டை வடிவிலோ, அடி அகன்று, நுனி குறுகிய அமைவிலோ, அம்பு வடிவ அமைப்பிலோ காணப் படுகிறது. இலை பலவாறாகப் பிளவு பட்டும் , மென்மையாகவும், சதைப் பற்றுடனும் காணப் படுகிறது. சாறு நிறைந்த சதைப் பற்றுடைய இலைகள் உண்ணக் கூடியவை. ஒரு பால் மலர்கள் பசுமை நிறங் கொண்டவை. ஆண் மலர்கள், இலையற்ற தூவி (Spike) மஞ்சரியில் அமைந்துள்ளன. இம்மஞ்சரி , தாவர நுனியில் காணப் படும். பெண் மலர்கள், இலைக் கோணத்தில் கொத்தாகக் காணப் படுகின்றன. 4 அல்லது 5 பூவிதழ்கள் காணப் படுகின்றன. 4 அல்லது 5 மகரந்தக் கேசரங்களும் காணப் படுகின்றன. ஒரு சூலிலையால் ஆன சூல் பை, கனி, உலர் வெடியாக் கனி (utricle) வகையைச் சேர்ந்தது. இக்கனி, தட்டையாகவும், கடினமாகவும் உள்ளது. கனித் தோலில் சிறு முள்கள் போன்ற வளரிகள் காணப் படும்.
இலையின் வடிவம், விதையமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பசலையை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவில், இலைகள் முக்கோண வடிவிலும் , விதைகளும், சிறு முள்கள் போன்று வளரிகள் கொண்ட மேல் தோல் கொண்டும் காணப் படுகின்றன. இவ்வகைப் பசலை இலையுதிர்–மழைக் காலப் பருவங்களில், மலைகளில் பயிரிட ஏற்றதாகும். மற்றொரு பிரிவுப் பசலையில், வட்டமான இலைகளும், மென்மையான மேலுறை கொண்ட விதைகளும் காணப் படுகின்றன. இப்பிரிவை பசலை, கோடை–வசந்த காலப் பருவங்களில், மலைகளில் பயிரிடவும், இலையுதிர் காலத்தில் சமவெளிகளில் பயிரிடவும் ஏற்றதாகும்.
<b>சாகுபடி முறை</b>. பசலை ஒரு குளிர் பருவப் பயிராகும். இதன் வளர்ச்சிக்குக் கார அமில நிலை (pH) 6.0–7.0 இருப்பது சிறந்தது. வளமான மண் நிறைந்த நிலம், இதன் சாகுபடிக்கு ஏற்றது. மிதமான வெப்பமுடைய இடங்களில், ஆண்டு முழுவதும் இதனை வளர்க்கலாம். ஆனால் குளிர் காலத்தில்தான், இது செழித்து வளர்ந்து, மிகுதியான தழை வளர்ச்சியைத் தரும். எனவே, மழை தொடங்கியதும், வளர்க்கத் தொடங்குவது சிறந்தது. இதனை, முட்டைக் கோஸ், பட்டாணி ஆகிய பயிர்களுடன் ஊடு பயிராகவும், சாகுபடி செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 35–45 கி.கி. விதை தேவைப் படுகிறது. இளந்தண்டுகளைத் தனித்தெடுத்து நட்டும், இனப் பெருக்கம் செய்யலாம். நன்றாக உழுத நிலத்தில், விதைகளை 15–20 செ.மீ. இடைவெளி தந்து விதைத்தல் வேண்டும். வரிசை விதைப்புச் செய்தால், காலத்தில் களை எடுப்பதற்கு எளிதாகிறது. நாற்று விட்டு, 25 நாள் வயதுடைய நாற்றுகளைப் பிடுங்கி விடலாம். நேராக விதைத்தால், 6 வாரங்களில் இலைகளை அறுவடை செய்யலாம். இச்செடியின் வயது 60–70 நாளாகும். இதனை இறைவைப் பயிராகச் செய்தால், உயர் விளைச்சல் கிடைக்கும்.
சாகுபடி செய்யப் படும் வீரிய வகைகளில், விதைகள் மென்மையாகவும், வட்டமாகவும் இருக்கும். இவை திடீர் மாற்றத்தால் (mutation) உண்டானவை. பசலையில் சுருக்கமுடைய இலை வகை, மென்மையான இலை வகை என்று இரண்டு வகைகள் உள்ளன. இவற்றுள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப் படுகிற சுருக்க இலை வகையைச் சேர்ந்த வெர்ஜீனிய சவாய் (<i>Virginia savoy</i>) என்னும் வகையும், மென்மையான இலைகளை யுடைய இயர்லி ஸ்மூத் லீஃப் (Early smooth leaf) என்னும் வகையும் குறிப்பிடத் தக்கவை, மென் இலை வகையின் விதைகள் வட்டமாகவும், மென்மையான விதைத் தோலுடனும் இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறத்துடனும், அளவில் சிறிவையாகவும், நுனி கூர்மையாகவும் இருக்கும். காற்றின் மூலம், மகரந்தத் தாள்கள் பரவுகின்றன. விதை உற்பத்திக்காகப் பயிரிடப் படும் போது, இரண்டு வகைகளுக்குமிடையே 2 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். அடிப்படை விதை உற்பத்திக்கு இரண்டு வகைகளுக்குமிடையே 2–4 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
<b>பயன்</b>. வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதற்கேற்ற காய்கறி வகைகளில், பசலைத் தாவரமும் ஒன்றாகும். இக்கீரையில் இளந் தண்டுகளும், இலைகளும் மிகச் சிறந்த உணவாகும். பசலைக் கீரையைப் பச்சையாகவும் உண்ணலாம். வைட்டமின் நிறைந்த கீரை, உடலுக்கு உரந்தரும். இலையை அரைத்து, நெற்றியில் பற்றிட<noinclude></noinclude>
l6o4d1l19u8gnerd3a9ybnj06wijpbt
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/415
250
647243
1948101
2026-06-19T18:28:58Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசால்ட் 393}}</noinclude>வெப்பத்தால் உண்டான தலை நோய் நீங்கும். இக்கீரையை உணவில் சேர்த்து உண்டு வரக் குருதிச் சோகை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.
இலையை நன்றாகச் சிதைத்துக் கொப்புளம், கழலை, வீக்கம் முதலியவற்றின் மீது பற்றிட அவை குணமாகும். இக்கீரை, சிறுநீர்க் கடுப்பு, நீரடைப்பு, ஒழுக்கு, வெள்ளை, சுவையின்மை, வாந்தி ஆகியவற்றைப் போக்கும். மலத்தை இளக்கும். குருதி அழுத்த, இதய நோயாளிகள், இதன் இலைச் சாற்றை இளநீருடன் கலந்து நாள் தோறும் இரண்டு முறை அருந்த, பெரும் பயன் பெறுவர். வயிற்று வலி, திருகு வலி ஆகியவை குணமாகக் கொள்ளுடன், இவ்விலையைச் சேர்த்,து வடிசாறு தயாரித்து, எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து, நாளும் இரு முறை அருந்த வேண்டும். தொண்டைக் கம்மலுக்கு, இவ்விலைச் சாற்றால், வாயைக் கொப்புளிக்க வேண்டும். கீரையை உண்ண, நினைவாற்றல் கூடும். உடல் வெப்பம், பித்தம், கல்லீரல் நோய் போகும். இலைகளையும், விதைகளையும் அரைத்துத் தீப்புண் மற்றும் தோல் நோய்களுக்குப் பூச அவை குணமாகும். கீரைத் தண்டை, மை போல் அரைத்து உடல் எரிச்சல், வேர்க் குரு, முகப் பரு முதலியவற்றிற்குத் தடவலாம்.
{{right|—<b>கோ. அர்ச்சுனன்</b>}}
<b>துணை நூல்</b>. B.Chowdhry, <i>Vegetables</i>, National Book Trust of India,New Delhi,1967.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="228"/><section begin="229"/>{{fs|110%|<b>பசால்ட்</b>}}
எரியியல் வயமான கார வகை அனற் பாறைகள் பலவற்றைப் பசால்ட் என்பர். இவை கருத்த சாம்பல் நிறம், பசுங்கருமை நிறம் கொண்டவை. நசிவுற்றதும், பழுப்பு நிறமாக மாறும் தன்மையுடையவை. நுண் படிக அமைப்பில், புலனாகா அளவுக்குக் கனிமங்களைக் கொண்டவை. சராசரியாக 45%–52% சிலிகா கனிமச் சத்தினைக் கொண்டவை.
பசால்ட் பாறைப் படலம் ஆழ் கடல் தரை மட்டத்திற்குக் கீழேயும், கண்டங்களின் அடியில் சிலிகா–மக்னிஷியா பாறைப் படலமாகப் புவிப் போர்வைக்கும் (mantle) புவிப் பொருக்குக்கும் (crust) இடையேயுள்ள மொஹரோவிசிக் (Mohorovicic) படல விரிவுக்கு (Discontinunity) மேல் உள்ளது. ஆழ் கடல்களின் தரை, பசால்ட் பாறைகளால் ஆனது. 2.7–3.1 ஒப்படர்த்தி கொண்ட கனமான பசால்ட் படலத்தின் மேல் கிரேனைட் போன்ற சுமை குறைந்த பாறைகளால் ஆன கண்டங்கள், தெப்பம் போல் மிதக்குமெனக் கூறுவர்.
பசால்ட்டால் ஆன, தூண் போன்ற பிளவுகளைக் கொண்ட (Columnar joints) எரிமலைக் குழம்புப் படலங்கள் தக்காண பீடபூமியில் காணப் படுகின்றன. இவை மாபெரும் படிக் கட்டுகள் போல், மேற்கரையோரமாகப் பெருமலை உயரத்திலிருந்து, படிப்படியாகக் கிழக்கு நோக்கிக் குறைந்து வரும் உயரங்களில் காணப் படுகின்றன. இவை மும்பை முதல் பீகாரில் ராஜ்மகால் மலை வரை பரவியுள்ளன.
பெரும்பாலான எரிமலைக் குழம்பிலிருந்து உண்டான பாறைகள் பசால்ட் பாறைகளாகும். உலகிலுள்ள எரிமலைப் பாறைகளில் பசால்ட், ஏனையவற்றை விட 5 மடங்கு மிகுந்துள்ளது. ஆண்டிசீன், ஒலிகோசீன் போன்ற பிளோஜிகிளேசுகளும், ஆகைட்டும் இதன் முதன்மைக் கனிமங்கள், மேக்னடைட்டும், இல்மனைட்டும் துணைக் கனிமங்கள். பசால்ட்டைக் கேப்ரோவின் நுண் துகள் இனம் எனக் கூறலாம். இதன் கனிமங்கள் மிக நுண்ணியவை. திரள் படிக அமைப்புடையவை. இதன் படிகப் பற்றுக் காரையில் படிவமும் (Glass) காணப் படுகிறது.
பசால்ட்டில் வளிமம் வெளியேறிய உட்புழைகள் இருந்தால், உட்புழைவயப் பசால்ட் (Vesicular basalt) என்று பெயர் பெறும். உட்புழைகளைப் பின் தோன்றிய கனிமங்கள் அடைந்திருந்தால், புழைத் தினி அல்லது கண்ணடை (Amy galoloidal) பசால்ட் என்று பெயர் பெறும். இவ்வாறு, கண்ணடைத்துள்ள பின்னுறு கனிமங்கள், சால்சைட், ஜியோலைட், குளோரைட், எபிடோட் ஆகிய கனிமங்கள் ஆக இருக்கக் காணலாம்.
பசால்ட் பாறை கெட்டியானது, கடினமானது. இணைப்புகள் மிகுந்ததாக உள்ளது. கருத்த நிறமுடையது. இதன் நொறுங்கு வலிமை (Crushing strength) ச.செ. மீட்டருக்கு 1800–2800 கி.கிராம். மிகக் குறைவான புரைமையும் (Porosity) நீர் உறிஞ்சும் தன்மையும் கொண்டது. எளிதில் தேயாதது. பனி இயக்கம், நெருப்பு ஆகியவற்றுக்கு நல்ல எதிர்ப்பு உடையது. பளபளப்பு ஏற்குமாறு, தேய்க்க ஏற்றது.
<b>பயன்</b>. இது ஒரு சிறந்த சாலைக் கல்லாகவும், சிமெண்டுக்<noinclude></noinclude>
elwm9buskclg5lgtbimc0ojdu2oeeau
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/416
250
647244
1948104
2026-06-19T19:33:48Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|394 பசிஃபிக் பெருங்கடல்}}</noinclude>கலவைக் கல்லாகவும் விளங்குகிறது. பாறை முகப்பீட்டுக் கற்கள், ரயில் தண்டவாளத்துக்கு அடியில் போடும் கற்கள் எனப் பல வகையில் பயன் படுகிறது. பொதுவாகப் பசால்ட் பாறைகள் மிகுந்த நிலத்தில் நீர் கிடைப்பது எளிது. ஏனெனில், இதில் பிளவுகளும், உட்புழைகளும் மிகுந்து காணப் படுகின்றன. உட்புழைகளைத் திணித்த படியுள்ள கனிமங்கள், பல குறை மணிக் கற்களாகப் பயன் படுகின்றன. இவற்றுள், அகேட், அமிதிஸ்ட், சால்சிடொனி, குவார்ட்ஸ் வகைகள் குறிப்பிடத் தக்கவை. பல ஜியோலைட் கனிமங்களும், பசால்ட் பாறைகளில் திணிப்புகளாகக் காணப் படுகின்றன.
{{right|—<b>ம.ச.ஆனந்த்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="229"/><section begin="230"/>{{fs|110%|<b>பசிஃபிக் பெருங்கடல்</b>}}
உலகில் காணப் படும் பெருங்கடல்களில் பசிஃபிக் பெருங் கடலே மிகப் பெரியது. இது முக்கோண வடிவில் அமைந்துள்ளது. முக்கோணத்தின் உச்சி பேரிங் நீர்ச் சந்தியிலும் அடிப் பக்கம் அண்டார்க்டிக்காவின் கடற்கரையிலும் அமைந்துள்ளன. நில நடுக் கோடு இப்பெருங்கடலை வட பசிஃபிக் என்றும், தென் பசிஃபிக் என்றும் பிரிக்கிறது. மகல்லன் என்பாரே, பசிஃபிக் பெருங் கடலுக்குப் பெயர் சூட்டியவராவர். பசிஃபிக் என்னும் சொல்லுக்கு அமைதி என்பது பொருளாகும்.
இதன் பரப்பு 165,245,000 ச.கி.மீ. ஆகும். பேரிங் நீர்ச் சந்தியிலிருந்து, தெற்கே ஆடேர் முனை வரை பசிஃபிக் பெருங்கடலின் அகலம் 24,000 கி.மீ. ஆகும். இக்கடலின் சராசரி ஆழம் 4,028 மீ. மேற்குப் பகுதியில் கிழக்குப் பகுதியை விடவும், வட பகுதியில் தென் பகுதியை விடவும் ஆழம் மிகுதி. உலகிலேயே, ஆழம் மிக்க பகுதியான சாலஞ்சர் ஆழ் குழி இப்பெருங்கடலில் உள்ளது.
<b>எல்லைகள்</b>. பசிஃபிக்கின் மேற்கு எல்லை இந்தியப் பெருங்கடலின் கிழக்கு எல்லையாகும். இக்கடலின் தெற்கு எல்லை, அண்டார்டிகா வட்டம் என்றும், அண்டார்டிகாவின் கடற்கரை என்றும், கடல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அண்டார்டிக்காவின் கடற்கரையே தெற்கு எல்லை என்று பொதுவாகக் கருதப் படுகிறது. கிழக்கு எல்லை பேரிங் நீர்ச் சந்தியில் ஆர்க்டிக் வட்டத்திலிருந்து தொடங்கி, அமெரிக்காவின் தென் முனையை அடைந்து 66.04' மேற்கு நெடுங்கோடு வழியாக அண்டார்டிக்காவை அடைகிறது. வட எல்லை பேரிங் நீர்ச் சந்தியில் ஓடும் ஆர்க்டிக் வட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். வட எல்லையை நிலம் சூழ் பகுதியென்றே கூறலாம். ஏனெனில் பேரிங் நீர்ச்சந்தி 55 கி.மீ. அகலம் கொண்ட ஒரு குறுகிய நீர்ப் பரப்பாகும். பசிஃபிக்கின் மேற்கில், சிங்கப்பூரிலிருந்து ஆசியாக் கண்டத்தின் கிழக்குக் கடற்கரையே மேற்கு எல்லையாக அமைகிறது.
<b>பசிஃபிக் பெருங்கடலின் வரலாறு</b>. புதிய உலகையும், பழைய உலகையும் பிரிக்கும் இப்பெருங்கடலைப் பல காலமாகப் பன்னாட்டவர்கள் கடற் பயணம் செய்து, ஆய்ந்து வருகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பாலினியர்களே பசிஃபிக்கின் குறுக்காக, முதன் முதலில் கடற்பயணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. 850இல் சோலிமன் என்னும் அரேபியர் கான்டன் வரை சென்று திரும்பினார். 1295இல் மார்க்கோ போலோ சீனா சென்று, மலாக்கா நீர்ச் சந்தி வழியாய்த் திரும்பினார். பசிஃபிக்கின் குறுக்காக, முதன் முதலில் பயணம் செய்த ஐரோப்பியர், மகல்லன் என்பாராவார். பின்னர், டச்சு நாட்டவர்கள் பசிஃபிக் கடலைச் சுற்றி ஆய்வு செய்தனர். 1679 - 91 இல் வில்லியம் டாம்பியர் என்னும் கடற் கொள்ளைக்காரர் பசிஃபிக் பெருங் கடலைப் பற்றிய பல செய்திகளைத் திரட்டித் தந்தார். 1724–30இல் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேரிங் என்பார், வட பசிஃபிக்கில் பயணம் செய்தார்.
1768–78இல் காப்டன் குக் பசிஃபிக்கில் நடத்திய பல சுற்றாய்வுகளே சிறப்பாகக் கருதப் படுகின்றன. பின், ஜெர்மானியர்களும், ஃபிரான்ஸ் நாட்டவரும், பேரிங் கடலில் பல சுற்றாய்வுகள் நடத்தினர். பசிஃபிக்கைப் பல வல்லுநர்கள் ஆயத் தலைப் பட்டனர். 1931இல் பீகிள் கப்பலில், டார்வின் செய்த பயணம் சிறப்பு மிக்கதாகும். எவ்வாறாயினும்,பசிஃபிக் பற்றிய அறிவியல் அடிப்படையான ஆய்வுகள், சாலஞ்சர் என்னும் புகழ் பெற்ற ஆய்வுக் கலம் நடத்திய சுற்றாய்வின் போது, தொடங்கின. தற்போது, பசிஃபிக்கின் கரையிலுள்ள பல நாடுகள் அப்பெருங்கடல் பற்றி, இன்றும் ஆய்ந்து வருகின்றன.
<b>பசிஃபிக் பெருங்கடலின் தன்மை, வெப்பம்</b>. கடல் அமைந்திருக்கும் இடம், கடலின் வடிவம் ஆகியன வெப்ப நிலைப் பரவலைப் பாதிக்கின்றன.பசிஃபிக் பெருங்கடலுடன் ஆர்க்டிக் பெருங்கடலின் தொடர்பு மிகுதியாக இராமையால், அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை விடப் பசிஃபிக் கடலின் வெப்ப நிலை மிகுதியாகும். பசிஃபிக்கின் சராசரி வெப்ப நிலை 10.9°C ஆகும். பசிஃபிக் பெருங்கடல் 30°C வட அகலாங்கு<noinclude></noinclude>
cvc8045qtuwuabfjngz2laj7151md6e
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/417
250
647245
1948107
2026-06-19T23:15:17Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசிஃபிக் பெருங்கடல் 395}}</noinclude>30°C தென் அகலாங்குக்கு உட்பட்ட பகுதியில் உள்ளமையால், பசிஃபிக் பெருங்கடலின் வெப்ப நிலை மிகுந்தே காணப் படுகிறது.
உலகின் அனைத்துக் கடல்களிலும், உவர்ப்பியம் ஒரே அளவாக இல்லை. கடலுக்குக் கடல், உவர்ப்பியம் மாறு படுகிறது. உவர்ப்பிய மிகுபாட்டிற்கு ஆவியாதலே பெருங்காரணமாகும். விஸ்ட் என்பாரின் கருத்துப் படி, ஆண்டு ஒன்றிற்கு மூன்றிலிருந்து நான்கு இலட்சம் க.கி.மீ. நீர் ஆவியாகிறது. மிகு வெப்பப் பகுதியிலும், வெப்ப மண்டலப் பகுதியிலும் ஆவியாதல் மிகுவதால், உவர்ப்பியமும் கூடுகிறது.
பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் மழை மிகுந்துள்ளமையால், உவர்ப்பியம் குறைவாகும். நில நடுக் கோட்டுக்கு அருகில் பசிஃபிக்கின் உவர்ப்பியம் 26% ஆகும். தென் பசிஃபிக்கில், வட பசிஃபிக்கில் காணப் படுவது போன்று, பெரும் உவர்ப்பிய வேறுபாடுகள் காணப் படவில்லை. வட பசிஃபிக்கை விடத் தென் பசிஃபிக்கில் உவர்ப்பியம் சிறிது கூடுதலாகிறது. வட பசிஃபிக்கில் 36% சம உவர்ப்பியமே காணப் படவில்லை. ஆனால், தென் பசிஃபிக்கில் 150° மேற்கிலிருந்து 105° மேற்கு வரையுள்ள 15° தெற்குக் குறுக்கோட்டைச் சுற்றிய பகுதியில் 36°C சம உவர்ப்பியம் அமைந்துள்ளது. பெரு, சிலி, கடற்கரையை ஒட்டிய உவர்ப்பியம் 33% ஆகும்.
<b>அடர்த்தி</b>. கடல் நீரின் அடர்த்தி, நீரின் வெப்ப நிலை, உவர்ப்பியம், அழுத்தம், நீர் கூடுகை, அழுத்தம் ஆகிய வற்றுக்கு உட்பட்டு அமைந்துள்ளது. வெப்ப நிலையை மட்டும் வைத்து நோக்கினால், அடர்த்தி பொதுவாக, நில நடுக் கோட்டிலிருந்து துருவம் நோக்கி மிகுதல் வேண்டும். ஆனால், அடர்த்தியினைப் பாதிக்கும் காரணிகள் வேறு பலவும் உள்ளமையால், அடர்த்தியின் கிடையான பரவல் பலவாறாக உள்ளது. ஆனால், இங்கு நீரோட்டங்கள் வெப்ப நீரை எடுத்து வந்து, அது இக்குறுங் கோடுகளில் குளிரும் போது, அந்நீரில் அடர்த்தி அதிகரிக்கிறது. கல்ஃப் நீரோட்டம், லாப்ரடார் நீரோட்டத்தைச் சந்திக்கும் இடத்திலும், கூரோஷயோ (Kuro-shio), ஓயாஷியோ நீரோட்டத்தைச் சந்திக்கும் இடத்திலும் இந்நிலைமை காணப் படுகிறது.
<b>பசிஃபிக் பெருங்கடலின் அலைகள்</b>. தடக் காற்றுப் பகுதியில், அலைக் களம் நன்கு அமைந்திருப்பினும், போதுமான அளவிற்குக் காற்று இராமையால், சிறப்பாக எழுவதில்லை.
<b>பசிஃபிக் கடல் நீரோட்டங்கள்</b>. பசிஃபிக் கடலின் நீரோட்டங்களை, வட பசிஃபிக் நீரோட்டங்கள், தென் பசிஃபிக் நீரோட்டங்கள் என்று பிரிக்கலாம்.
<b>வட பசிஃபிக் நீரோட்டங்கள்</b>. அட்லாண்டிக் வளைகுடா நீரோட்டத்திற்கு ஈடானது, கூரோஷயோ நீரோட்டமாகும். வட நில நடு நீரோட்டத்திலிருந்து லூசான் வழியாகவும், ஃபார்மோசா வழியாகவும் வந்து சேரும் நீரே கூரோஷயோ நீரோட்டத்தைத் தோற்றுவிக்கிறது. இது 35° வரை ஜப்பான் கடற்கரையைத் தழுவிச் செல்கிறது. ஃபார்மோசாவிலிருந்து, ரியூகியூ தீவுகள் வரையிலான இடைப்பட்ட பகுதியில், இந்நீரோட்டத்தின் வேகம் நொடிக்கு 1 மீ. ஆகும். 700 மீ. ஆழம் வரை காணப் படும் இதில், நொடிக்கு 20 மில்லியன் க.மீ. நீர் செல்கிறது.
ரியூகியூவிற்கு வடக்கே இதன் வேகம் மிகுதியாகிறது.(33° வடக்கில் வேகம் 1.3–2மீ/நொடி). இங்கு, கடற்கரையிலிருந்து 150 கி.மீ. தொலைவிற்கு உள்ளேயே, இந்நீரோட்டம் அமைந்துள்ளது. இங்கு உவர்ப்பியம் 36% வெப்பநிலை 8°C. ஆயினும், ஆண்டு வெப்ப நிலையின் அளவு மிகுதியாக உள்ளது. இந்நீரோட்டத்திற்கு இணையாகக் கூரோஷயோ எதிர் நீரோட்டம், தெற்கு நோக்கி விரைகிறது. 35° வடக்கில் இது இரண்டாகப் பிரிந்து அகன்று, கிழக்காகச் சென்று வட பசிஃபிக் நீரோட்டமாக மாறுகிறது. மற்றொன்று, வடக்காக 42° வரை சென்று, ஓயாஷியோ நீரோட்டத்தோடு கலக்கிறது.
மேற்குத் திசைக் காற்றால், வட அமெரிக்கா நோக்கிச் செல்லும் வெப்ப நீரோட்டமான இது 150° மே வரை சென்று, பிரிகிறது. இந்நீரோட்டத்தின் பெரும் பகுதி, தெற்காகத் திரும்பிக் கலிஃபோர்னியா நீரோட்டமாக ஓடுகிறது.
ஒயாஷியோ நீரோட்டம், ஒரு கடுங் குளிர் நீரோட்டமாகும். ஆர்க்டிக் நீர், பேரிங் நீர்ச் சந்தி வழியாகப் பசிஃபிக்கில் நுழைந்து, காம்சட்கா தீவுக் கூட்டத்தில், கிழக்குக் கடற்கரை வழியாகத் தெற்காக 35°C வரை வருகிறது. லாப்ரடார் நீரோட்டமும், ஐரோஷியோ நீரோட்டமும் சந்திக்கின்றன. கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள கிளையும், வட பசிஃபிக் நீரோட்டத்தின் தென் கிளையும், ஓயாஷியோ நீரோட்டத்தைத் தோற்றுவிக்கின்றன.
<b>தென் பசிஃபிக் நீரோட்டங்கள்</b>. பெரு நீரோட்டத்தை ஹம்போல்ட் நீரோட்டம் என்றும் கூறுவர். பசிஃபிக்கின் நீரோட்டங்களிலேயே நன்கு ஆயப்பட்ட நீரோட்டம், தென் பசிஃபிக் நீரோட்டமாகும். இது சிலி, பெரு நாடுகளின்<noinclude></noinclude>
s4hfcvzjyf6tg3emcjloym2r55nyebb
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/418
250
647246
1948108
2026-06-20T03:04:58Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|396 பசிஃபிக் பெருங்கடல்}}</noinclude>கடற்கரை வழியாக வடக்காக ஓடும் கடுங்குளிர் நீரோட்டமாகும். மேற்குக் காற்று ஊர்மியிலிருந்து கிளம்பி, நில நடுக் கோடு வரை சென்று, மேற்காகத் திரும்பித் தென் நில நடு நீரோட்டத்தோடு கலந்து விடுகிறது. இதன் அகலம் 800 கி.மீ. ஆகும். இது 10–15 மில்லியன் க.மீ. நொடி நீரைக் கடத்துகிறது. இதன் வேகம் மணிக்கு 1.5 கி.மீ. ஆக உள்ளது.
<b>பசிஃபிக் பெருங் கடலின் கடலடி நிலப் புவி புறவியல்</b>. கடலின் ஆழத்தை அளவிட முயன்ற போது, கடலடி நிலத் தோற்றங்கள் தெரியவாயின. பாசிடோனியல் என்பார் கி.மு. 100இல் நில நடுக் கடலில் 1.5 கி.மீ. வரை ஆழத்தை அளவிட்டதாக வரலாறு கூறுகிறது. பசிஃபிக் பெருங் கடலையொட்டிய நிலப் பகுதிகள் ஆஸ்திரேலியா, கிழக்கு இந்தியத் தீவுகள், ஆசியா போன்றவையாகும். இவற்றின் கிழக்கே, அகலமாகக் கண்டத் திட்டுகள் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே உள்ள சாகுல் என்பது உலகின் அகலமான திட்டுகளில் ஒன்றாகும். இத்திட்டத்தின் அகலம், வடமேற்காக ஏறத் தாழ 1120 கி.மீ. ஆகும். குவீன்ஸ்லாண்டு கடற்கரைத் திட்டு வடக்கில் குறுகி இருப்பினும், தெற்கில் 300 கி.மீ. அகலத்திற்கு விரிகிறது. இத்திட்டில்தான் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் கடல் பாறை உள்ளது. ஆஸ்திரேலியாவின் தெற்குக் கடற்கரைத் திட்டு, இது வரை முழுவதுமாக ஆயப் படவில்லை.
சுமத்திரா, ஜாவா, போர்னியோ போன்ற தீவுகள் இதன் கிழக்கு ஆசியக் கடற்கரையை அடுத்த கண்டத் திட்டிலேயே அமைந்துள்ளன. ஹைனான் தீவிற்குத் தெற்கிலுள்ள திட்டு மிகுதியான ஆழத்தில் உள்ளது. சீனக் கடற்கரையை அடுத்து, திட்டு அகலமாக உள்ளது. ஜப்பான் கடலின் வாஸ்டாவிக்கை அடுத்து, திட்டின் அகலம் 50 கி.மீ. ஆகும். அலூஷன் தீவுகளுக்கு வடக்கே, பேரிங் கடல் திட்டு 650 கி.மீ. அகலத்தோடு உள்ளது.
வட அமெரிக்காவிற்கு மேற்கே சாண்டியாகோவை அடுத்து, ஓர் அகலமான திட்டு அமைந்துள்ளது. இதற்கு வடக்கே உள்ள திட்டு குறுகியே உள்ளது. தெற்கே கொலராடோ டெல்டாவை அடுத்துள்ள திட்டு, குறுகலாகவும் காணப் படும். பனாமா வளைகுடாவில் காணப் படும் திட்டு 120 கி.மீ அகன்று, 180 கி.மீ. ஆழத்தில் முடிகிறது. இங்கு உள் திட்டில் மண்ணும், வெளித்திட்டில் மணலும், சிப்பிகளும் பரவியுள்ளன. தென் அமெரிக்காவிற்கு மேற்கே, ஹார்ன் முனைக்கு வடக்கே, திட்டு அகன்றுள்ளது. இத்திட்டு பள்ளங்கள் மிகுந்து, கரடு முரடாகக் காட்சியளிக்கிறது.
<b>பசிஃபிக் பெருங் கடலின் கண்டச் சரிவு</b>. பசிஃபிக் பெருங் கடலின் மேற்குப் புறத்தே ஸ்கிரிப்ஸ் கழகமும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பற்படையின் கடலாய்வுத் துறையும், பசிஃபிக்கின் கிழக்குப் புறத்தே சோவியத் நாடும், சிறப்பாகப் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்குக் கிழக்கே கண்டச் சரிவு ஓரளவு சரிவாகவே உள்ளது. இது வடக்கு நோக்கி மிகுதியாகச் சரிவடைகிறது. பிலிப்ஃபைன்ஸ் தீவுகளை அடுத்துக் கண்டச் சரிவு 11° சரிதலை அடைகிறது. இந்தோசீனா, மியான்மர் ஆகிய பகுதிகளை அடுத்துக் குறைவான சரிவும், ஃபார்மோசா, தெற்கு ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து, மிகுதியான சரிவும் ஏற்பட்டுள்ளன. ஃபார்மோசாவை அடுத்துள்ள சரிவில், குடைவுப் பள்ளத்தாக்குகளும் கடற் குன்றுகளும் காணப் படுகின்றன. சரிவின் தளமும், பாறைத் தளமாக அமைந்துள்ளது. தெற்கு ஜப்பானை அடுத்துள்ள சரிவின் சரிதல் 2° முதல் 10° வரை உள்ளது. டோக்கியாவிற்கு வடக்கே, கிழக்குக் கடற்கரைச் சரிவு 2° அளவில் சரிந்து, மென் சரிவைக் காட்டுகிறது. இங்கு, பாறைத் தளமும், அதில் மணல், பரல் கற்கள் போன்றவையும் காணப் படுகின்றன. உகாட்ஸ் கடலில், சரிவு கரடு முரடாக உள்ளது. பேரிங் கடலில் சரிதல் 20° முதல் 25° வரை உள்ளது. உலகில் சரிதல் மிக்க கண்டச் சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, மிகச் சிறப்பாக ஆயப் பட்டுள்ளது. அலூஷன் தீவுகளை ஒட்டிய சரிவு, தாழ்வாகவே உள்ளது. இச்சரிவில், நீண்ட பள்ளத்தாக்குகள் காணப் படுகின்றன. அலாஸ்கா வளைகுடாவின் சரிவு, வன்சரிவைக் கொண்டுள்ளது. வான்கூர் தீவிற்கு வடக்கே உள்ள சரிவில், குடைவுப் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. 5° முதல் 6° வரையிலான அளவில் உள்ள இச்சரிவு 2–5 கி.மீ. ஆழமுடையது. வான்கூர் தீவிலிருந்து, கொலம்பியா ஆற்றுத் தொடுவாய் வரை உள்ள கண்டச் சரிவு 3° சரிதல் கொண்டு (2500மீ) 2.5 கி.மீ. ஆழத்தில் முடிகிறது. இங்கும் குடைவுப் பள்ளத்தாக்குகள் மிகுதியாக உள்ளன.கொலம்பியா ஆற்றுத் தொடுவாயிலிருந்து, ஈல் ஆற்றுத் தொழுவாய் வரை உள்ள கண்டச் சரிவில் குடைவுப் பள்ளத்தாக்குகள் காணப் படவில்லை. கலிஃபோர்னியா கடற்கரையை அடுத்து, கண்டச் சரிவு, வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் சரிவடைந்துள்ளது. ஆங்காங்கே, குடைவுப் பள்ளத்தாக்குகளும் காணப் படுகின்றன. பருமணலும் பரல் கற்களும் மிகுந்து கிடக்கின்றன.
தென் அமெரிக்காவிற்கு மேற்கே கண்டச் சரிவு மிகு<noinclude></noinclude>
5pz6waapf9azj5iusyjjkql628lsw27
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/419
250
647247
1948109
2026-06-20T03:20:30Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசிஃபிக் பெருங்கடல் 397}}</noinclude>ஆழத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். சராசரியாக 5.5–7.5 கி.மீ. ஆழத்தில் கண்டச் சரிவு காண்ப் படுகிறது. ஓரிடத்தில் ஆண்டீஸ் மலைச் சரிவையும் சேர்த்துக் கணக்கிடின், 13 கி.மீ. ஆழம் வரை சரிவு மண் சரிவாகவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் சராசரி சரிதல் 5° ஆகும். 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் இச்சரிதல் சற்று மிகுகிறது.
</b>பசிஃபிக் பேரகழிகள்</b>. பேரகழிகள் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப் படுகின்றன. கடலடி நிலப் பரப்பில் நூற்றுக்கு ஒன்று என்னும் கணக்கில் பேரகழிகள் பரவியுள்ளன. எண்ணிக்கைகளிலும், ஆழத்தின் அளவிலும் பசிஃபிக் பேரகழியே முன்னிற்கிறது.
<b>பசிஃபிக் பேரகழியின் மலைத் தொடர்கள்</b>. பிற பேரகழிகள் போன்று, பசிஃபிக்கின் மலைத் தொடர்கள் சிறப்பாக அமையவில்லை. பசிஃபிக்கின் கிழக்கில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு ஒரு தொடர் அமைந்துள்ளது. இத்தொடரைப் பசிஃபிக் தொடர் என்பர். இது அகன்ற தொடர் என்பதால், சிலர் இத்தொடரை அல்பாட்ராஸ் பீடபூமி என்றும் குறிப்பிடுவர்.
அண்டார்க்டிக்காவின் வடக்கே, பசிஃபிக் அண்டார்க்டிக் தொடராகத் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று, தென் அமெரிக்காவிற்கு மேற்கே, தென் கிழக்கே பசிஃபிக் பீடபூமியாக விரிந்து, மேலும், வடக்காக அல்பாட்ராஸ் மேட்டு நிலமாகச் சென்று, கலிஃபோர்னியாவின் தென் முனை நிலத்தோடு சேர்ந்து மறைந்து விடுகிறது. அண்டார்டிகாவிலிருந்து கலிஃபோர்னியா வரை செல்லும் இத்தொடருக்குப் பல பெயர்கள் ஆங்காங்கு இருப்பினும், மொத்தமாகக் கிழக்குப் பசிஃபிக் தொடர் என்றே இதைக் கூறுகின்றனர். கிழக்குப் பசிஃபிக் தொடர் 2–3 கி.மீ. உயர்ந்தும், 2-4 கி.மீ. அகன்றும் அமைந்துள்ளது. பசிஃபிக்கின் இத்தொடர்களில், சிறு பிளவுப் பள்ளத்தாக்குகள் பல இணையாக அமைந்துள்ளன. இவை பெரிதும் கரடுமுரடாக உள்ளன. ஆங்காங்கே பிளவுகளும் உள்ளன.
<b>கடற்குன்றுகளும் முட்குன்றுகளும்</b>. கடல் தரையிலிருந்து 200–700 மீ.உயரத்தில் அமைந்துள்ள தனித்த குன்றுகளே கடற்குன்றுகளாகும். இக்குன்றின் மேல் பகுதி மட்டமாக இருக்குமானால், அதை மட்டக் குன்று என்பர்.
கடற்குன்றுகள் கூர்மையான உச்சிகளைக் கொண் டுள்ளன. சிறிய கடற்குன்றுகளின் பக்கங்கள் 30° சரிதலையும், பெரிய கடற்குன்றுகளின் பக்கங்கள் 12° முதல் 14° வரையிலான சரிதலையும் பெற்றுள்ளன. குன்றுகளைச் சுற்றிக் கடல் தரையில் அகழி உள்ளது. கடற்குன்றுகளில் தற்போது மாங்கனீஸ் உள்ளதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.
சில கடற்குன்றுகள் நீருக்கு மேலும் காணப் படலாம். இவ்வாறு காணப் படின், அவை தீவாக அமையும். எ-டு. ஹவாய்த் தீவுகள். நீருக்கு வெளியே காணப் பட்ட சில குன்றுகள் அலை அரிப்பினால் நீரினுள் மூழ்கி விடலாம். எடுத்துக் காட்டு: டாங்கா தீவை ஒட்டி, நீரினுள் மூழ்கிக் காணப் படும் பால்கன் திட்டுக் கரை, முன்பு பால்கன் தீவாக இருந்தது.
உலகில் அனைத்துக் கடல்களிலும், கடற் குன்றுகள் காணப் படுகின்றன. ஆனால், பசிஃபிக்கில் சிறப்பாக, இவை அமைந்துள்ளன. பசிஃபிக்கின் நடுவில், வடக்கிலும், கடற்குன்றுகள் மிகுதி. 80–100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பசிஃபிக்கின் கடற்குன்றுகள் லேக் தீவுகளிலிருந்து, ஹவாய்த் தீவுகள் வரை, நடு பசிஃபிக் மலைத் தொடராய், ஆங்காங்கே தீவுகளோடு அமைந்தன என்பதை, 1969இல் பசிஃபிக்கில் நடத்திய ஸ்கிரிப்ஸ் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பசிஃபிக்கில் 1400 கடற்குன்றுகள் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர். பொதுவாக, இவை சங்கிலித் தொடர் போன்று நீண்டு அமைந்துள்ளன. மேற்குப் பசிஃபிக்கில், காம்சட்காவிலிருந்து வடக்கே 20° வரையிலும், அலாஸ்காவிற்குத் தெற்கிலும், ஹவாய்க்கு மேற்கே மரியானா தீவுகளிலிருந்து, மார்ஷல் தீவுகள் வரையிலும், வட்டக் குன்றுகள் சிறப்பாக அமைந்துள்ளன.
<b>பசிஃபிக் பெருங்கடலில் காணப் படும் பவளப் பாறைகள்</b>. பசிஃபிக் பெருங்கடலில் கேப்டன் குக் என்பார், தம் கடல் பயணத்தில் எதிர்ப்பட்ட பவளத் தீவுகள் பற்றித் தெரிவித்தார். பவளப் பாறைகள் வடக்கே 35°–15° மற்றும் தெற்கே 32° வரையுள்ள வெப்ப மிகு கடற்கரைப் பகுதியில், 19 கோடி ச.கி.மீ. பரப்பில் பரவியுள்ளன. தென் பசிஃபிக்கின் மேற்குப் பாதிப் பகுதியே, உலகின் பவளக் கடலாகும். இப்பகுதியில் பல பவளத் தீவுகள் உள்ளன. இங்கு, புகழ் பெற்ற பெரிய தடைப் பாறை அல்லது கிரேட் பேரியர் ரிஃப் (Great Barrier reef) உள்ளது.
<b>பசிஃபிக் பெருங்கடலின் கனி வளங்கள்</b>. கடலில் உப்புப் போன்ற கனிமப் பொருள்கள் உள்ளன. இயற்கையில் 104 மூலப் பொருள்களில், அனைத்தும் நீரில் உள்ளன என்றாலும்,<noinclude></noinclude>
rjqsee6l2itvq6ol6y9ic6pz6xrggkv
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா
0
647248
1948110
2026-06-20T03:27:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈமன் டி வேலரா | previous = [[../ஈமப் பேழைகள்/]] | next = [[../ஈமு/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948110
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈமன் டி வேலரா
| previous = [[../ஈமப் பேழைகள்/]]
| next = [[../ஈமு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="667" to="668" fromsection="ஈமன் டி வேலரா" tosection="ஈமன் டி வேலரா" />
lhg4oaxt1nhzrt8v7uwrvf5qypfr5dz
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு
0
647249
1948111
2026-06-20T03:29:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈமு | previous = [[../ஈமன் டி வேலரா/]] | next = [[../ஈயுண்ணி மாதவப் பெருமாள்/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948111
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈமு
| previous = [[../ஈமன் டி வேலரா/]]
| next = [[../ஈயுண்ணி மாதவப் பெருமாள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="668" to="669" fromsection="ஈமு" tosection="ஈமு" />
phe25ap314wewbot6s1gqfh29nld39z
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்
0
647250
1948112
2026-06-20T03:33:15Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈயுண்ணி மாதவப் பெருமாள் | previous = [[../ஈமு/]] | next = ../ஈர்ந்தூர் கிழான் தோயன் மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948112
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈயுண்ணி மாதவப் பெருமாள்
| previous = [[../ஈமு/]]
| next = [[../ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="668" to="669" fromsection="ஈமு" tosection="ஈமு" />
onz193w5yd5wcv6b0b8sh2brb2j6te2
1948113
1948112
2026-06-20T03:34:45Z
Booradleyp1
1964
1948113
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈயுண்ணி மாதவப் பெருமாள்
| previous = [[../ஈமு/]]
| next = [[../ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="669" to="669" fromsection="ஈயுண்ணி மாதவப் பெருமாள்" tosection="ஈயுண்ணி மாதவப் பெருமாள்" />
406esrtdzhlxlqub5myqxae5y6pn9as
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
0
647251
1948114
2026-06-20T03:37:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் | previous = [[../ஈயுண்ணி மாதவப் பெருமாள்/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948114
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
| previous = [[../ஈயுண்ணி மாதவப் பெருமாள்/]]
| next = [[../ஈரவைச் சட்டமன்றம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="669" to="669" fromsection="ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்" tosection="ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்" />
1vpp8ayag252ndd60bdpb36eve96m46
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்
0
647252
1948115
2026-06-20T03:39:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரவைச் சட்டமன்றம் | previous = [[../ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்/]] | next = ../ஈராக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948115
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரவைச் சட்டமன்றம்
| previous = [[../ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்/]]
| next = [[../ஈராக்கு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="669" to="672" fromsection="ஈரவைச் சட்டமன்றம்" tosection="ஈரவைச் சட்டமன்றம்" />
p9glzcq4xgog5nq9p0k1snym356q8ev
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு
0
647253
1948116
2026-06-20T03:43:21Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈராக்கு | previous = [[../ஈரவைச் சட்டமன்றம்/]] | next = [[../ஈராக்குடு அணை/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948116
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈராக்கு
| previous = [[../ஈரவைச் சட்டமன்றம்/]]
| next = [[../ஈராக்குடு அணை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="673" to="677" fromsection="ஈராக்கு" tosection="ஈராக்கு" />
9x3l1xa6jow80u2bm956qq1gkbq5s2z
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/420
250
647254
1948117
2026-06-20T03:45:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|398 பசு}}</noinclude>இது வரை 61 மூலப் பொருள்களை, நீரிலிருந்து பிரித்துக் காட்டியுள்ளனர். பசிஃபிக் பெருங்கடலில் கிடைக்கும் சில கனிமப் பொருள்களைக் கீழ்க் காணும் பட்டியலில் காணலாம்.
{{block_center/s}}
{|
|-{{ts|vtt|fwb}}
|கனிமப் பொருள்{{gap|1em}}
|மொத்த அளவு<br>(மில்லியன் டன்)
|-
|அலுமினியம்
|{{ts|ar}}|43,000
|-
|மாங்கனீஸ்
|{{ts|ar}}|3,58,000
|-
|செம்பு
|{{ts|ar}}|7,000
|-
|நிக்கல்
|{{ts|ar}}|14,700
|-
|கோபால்ட்
|{{ts|ar}}|5,200
|-
|}{{block_center/e}}
<b>பசிஃபிக் பெருங்கடலின் வயது</b>. அனைத்துப் பெருங்கடல்களுக்கும் வயது பற்றிய மதிப்பீடுகள் இருக்கின்றன. ஆனால், பசிஃபிக் பெருங்கடலின் சரியான வயதை, இது வரை கணிக்க இயலவில்லை. எவ்வாறாயினும், கடலின் வயது, புவியின் வயதை விடக் குறைவு எனலாம். அதாவது, புவி தோன்றிய பின்னரே, கடல் தோன்றியது எனக் கூறலாம். கனடாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் காணப் படும் உயிரினக் காலத்து இறுகிய பாறை 2300 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணக்கிட்டுள்ளனர். புவி தோன்றும் போது இருந்த இறுகிய பாறை 6000 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். எனவே, பசிஃபிக் பெருங்கடல், இன்றிலிருந்து 6000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளது என்று சிலர் கணிக்கின்றனர்.
{{right|—<b>யூசுப் ஷரீப்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="230"/><section begin="231"/>
{{fs|110%|<b>பசு</b>}}
கால்நடைகள் மனிதர்களுக்குப் பல வகையில் பயனாகின்றன. குறிப்பாக, பால் தரும் பசு மாடுகள் மிக இன்றியமையாதவையாக விளங்குகின்றன.
<center>{{fs|120%|<b>தென்னாட்டுப் பசு</b>}}</center>
<b>அமிர்த மகால் பசு</b>. இது கொல்லர், ஹல்லிக்காரா என்னும் வடநாட்டு மலையினத்தவரால், முதலில் மைசூருக்குக் கொண்டு வரப் பட்டுச் சிதல்துர்க்கம். தும்கூர் பகுதிகளில் பரவியது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பரந்த மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் இப்பசு வளர்க்கப் படுகிறது.
அமிர்த மகால் பசு சாம்பல் நிறம் கொண்டது. தலையும், திமிலும் கறுப்பாக இருக்கும். விலா எலும்பு நன்றாக வளைந்தும், வயிறும், மார்பும், உருளை போன்றும் தோற்றமளிக்கும். குறுகிய முகமும், நெற்றியில் இரண்டு பெரிய கண்களுக்கும் இடையில், பள்ளமும் இருக்கும். கொம்புகள் மிக நீளமாகவும் பின்புறம் வளைந்தும், நுனி முன்புறம் நீண்டும் இருக்கும். இப்பசு பால் மிகுதியாகத் தராது.
<b>ஆலம்பாடி பசு</b>. பவானி, கொள்ளேகால், ஹோசூர், தருமபுரி, அதனை அடுத்துள்ள மைசூர்ப் பகுதிகளில், ஆலம்பாடி இனம் காணப்படும். இதற்கு லம்பாடி, மலை மாடு காவேரி என்னும் பெயர்களும் உண்டு.
சேலம், கோயம்புத்தூர், பெங்களுரில் மேய்ச்சல் நிலம், நதிக் கரை ஆகிய இடங்களில் இவ்வினப் பசு செழித்து வளர்கிறது. இப்பசுவும் மிகுதியாகப் பால் தராது.
<b>காங்கேயம் பசு</b>. தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த இப்பசு, தாராபுரம், ஈரோடு, பழனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் மிகுதியாக வளர்க்கப் படுகிறது. இவ்வகைப் பசு வெள்ளை நிறமாகவும், இளங்கன்று சிவப்பாகவும் இருக்கும். இளங்கன்று ஆறு மாதத்திற்குப் பின்னர், வெள்ளையாக மாறும். இப்பசு பொதுவாகக் குறைந்த அளவு பாலையே தருகிறது. பசு 15 மாதங்களுக்குப் பிறகும், 12 மாதங்களுக்குப் பிறகும் கன்று ஈனும். எளிதில் சினைப் படாத பசுவை விவசாயத்திற்குப் பயன் படுத்துவர். பசுவின் கண்களைச் சுற்றி இருண்ட வளையங்கள் இருந்தால், அது தரம் குன்றிய பால் மாடாகும்.
<b>ஓங்கோல் பசு</b>. கரவாடி, கண்டகர், கருமஞ்சி, போந்தூர், நீடனூர், ஜெயவரம் ஆகிய சிற்றூர்களில் இந்த இனத்தின் சிறந்த மாடுகள் உள்ளன. பொதுவாக 3 ஆண்டுகள் 4 மாதங்களில், இப்பசு, முதல் கன்றை ஈனும். இதற்கு மிகுதியாகப் பால் தரும் திறம் உண்டு. இப்பசு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் சிறப்பைக் கொண்டது. இது, ஏறத் தாழ 8 மாதம் பால் தரும் திறனுடையது. 5 ஈற்றுக்கு மேல் இது கன்று போடுவதில்லை. இவ்வினத்தின் சிவப்பு நிறப் பசு சற்றுத் தரம் குறைந்தது.
<b>பர்கூர் பசு</b>. பவானிப் பகுதியில், பர்கூர் மலைகளில், இந்தப் பசு உற்பத்தியாகிறது. பல தரப் பட்ட சூழல்களில், தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கிக் கொள்ளும் திறமுடையது. இது<noinclude></noinclude>
95dnl9cekpqoifeabpchq6ml40hoiwi
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை
0
647255
1948118
2026-06-20T03:46:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈராக்குடு அணை | previous = [[../ஈராக்கு/]] | next = [[../ஈராக்கு நாட்டில் கல்வி/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948118
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈராக்குடு அணை
| previous = [[../ஈராக்கு/]]
| next = [[../ஈராக்கு நாட்டில் கல்வி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="677" to="678" fromsection="ஈராக்குடு அணை" tosection="ஈராக்குடு அணை" />
2muzait2oswghpazu68ixtohh4a2kkb
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி
0
647256
1948119
2026-06-20T03:51:14Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈராக்கு நாட்டில் கல்வி | previous = [[../ஈராக்குடு அணை/]] | next = [[../ஈராசு/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948119
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈராக்கு நாட்டில் கல்வி
| previous = [[../ஈராக்குடு அணை/]]
| next = [[../ஈராசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="678" to="679" fromsection="ஈராக்கு நாட்டில் கல்வி" tosection="ஈராக்கு நாட்டில் கல்வி" />
q7wj24obnkkmxtoam38v6xybuht2kh2
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு
0
647257
1948120
2026-06-20T03:54:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈராசு | previous = [[../ஈராக்கு நாட்டில் கல்வி/]] | next = [[../ஈராசு பாதிரியார்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948120
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈராசு
| previous = [[../ஈராக்கு நாட்டில் கல்வி/]]
| next = [[../ஈராசு பாதிரியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="679" to="679" fromsection="ஈராசு" tosection="ஈராசு" />
rzvx7iv3b3tbtfkaq0qa5c5lnuxpd8b
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்
0
647258
1948121
2026-06-20T03:58:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈராசு பாதிரியார் | previous = [[../ஈராசு/]] | next = [[../ஈரான்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948121
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈராசு பாதிரியார்
| previous = [[../ஈராசு/]]
| next = [[../ஈரான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="679" to="680" fromsection="ஈராசு பாதிரியார்" tosection="ஈராசு பாதிரியார்" />
h713ldravpb3pef80hf0t3sv3d522b2
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்
0
647259
1948122
2026-06-20T04:01:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரான் | previous = [[../ஈராசு பாதிரியார்/]] | next = [[../ஈரான் நாட்டில் கல்வி/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948122
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரான்
| previous = [[../ஈராசு பாதிரியார்/]]
| next = [[../ஈரான் நாட்டில் கல்வி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="680" to="685" fromsection="ஈரான்" tosection="ஈரான்" />
j83nrizuy9oc92j4j76vpq0o0tgv7vl
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/421
250
647260
1948123
2026-06-20T04:02:46Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசு 399}}</noinclude>வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தைப் பெற்றிருக்கும்.
<b>உம்பளாச்சேரி பசு</b>. இது நாகை மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள உம்பளாச்சேரி என்னும் ஊரைச் சேர்ந்தது. இப்பசு, பால் மிகுதியாகத் தராது. இதன் பால் மடி சிறியது. குட்டையான காம்புகளைப் பெற்றிருக்கிறது. ஐந்து வயது முதல், இப்பசு கன்று ஈனும்.
<b>தட்சின் பசு</b>. ஆந்திராவில் பத்ராசலம் பகுதிகளில், இந்த இனப் பசு காணப் படுகிறது. இப்பசு மிகுதியாகப் பால் தரும் இயல்புடையது.
<b>திருச்செங்கோடு பசு</b>. வட ஆர்க்காடு, திருவண்ணாமலைப் பகுதியைச் சேர்ந்த இப்பசு, பால் மிகுதியும் தராது. இதன் பொதுவான நிறம் சிவப்பு. சில பசுக்கள் வெள்ளை, சிவப்புப் நிறப் புள்ளிகளையுடைய வாலைக் கொண்டிருக்கின்றன.
<b>புங்கனூர் குட்டைப் பசு</b>. ஆந்திராவில் சித்தூர் வட்டத்தில் உள்ள குட்டையான இனத்சைச் சேர்ந்த இப்பசு, பெரும்பாலும் சிவப்பு நிறமாக இருக்கும். இதற்கு ஆகும் தீவனச் செலவு மிகவும் குறைவு. சிறிய அளவில் குடும்பத் தேவைக்கென வளர்க்க, இந்தப் பசு மிகவும் ஏற்றது. மேலும், இப்பசு எவரும் எளிதில் கையாள ஏற்ற வகையில், அமைதிப் பண்பு கொண்டது.
<center>{{fs|120%|<b>இந்தியப் பசு</b>}}</center> <b>சாகிவால் இனப் பசு</b>. மையப் பஞ்சாப், தெற்கு பஞ்சாப் ஆகிய இடங்களில் இவ்வினப் பசு தோன்றியது. இவ்வினத்தை, மாண்டகோமாரி இனம் என்றும் கூறுவர். இப்பசு, கனத்த கட்டைக் கால்களைப் பெற்றிருக்கிறது. குட்டையான முகம், அகன்ற நெற்றி, குட்டையான கொம்பு, பெரிய பால் மடி, நீளமான காம்பு இவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். இப்பசு, மிகுதியாகப் பால் தரும். மேல் நாட்டுப் பசுக்களுக்கு இணையாகக் கருதத் தக்க இப்பசு, மழை குறைந்த வறள் பகுதிகளுக்கு ஏற்றது.
<b>சிந்தி இனப் பசு</b>. இது இந்து மாகாணத்தில் மேற்குப் பகுதிகளில், பலுசிஸ்தானத்தைச் சேர்ந்த வால்பெலா பகுதிகளில் தோன்றிய இனமாகும். குட்டையான தலை, அகன்ற நெற்றி, குட்டையான கொம்புகள், நீண்ட காது, நீளமான வால், வால் நுனியில் கரிய மயிர்க் குஞ்சம், அகன்ற பெரிய மடி, நீளமான காம்பு ஆகியவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். சிந்தி இனங்கள் எந்த இனத்துடன் சேர்ந்தாலும், தனித் தன்மையை இழக்காதவை. இந்த இனங்களைப் பிரேசில், கொரியா, கியூபா ஆகிய நாடுகள் பெரிதும் விரும்பி, இறக்குமதி செய்துள்ளன. மேலும் இப்பசு, நோய் எதிர்ப்பு ஆற்றலும், அனைத்துத் தட்ப வெப்ப நிலையையும் தாங்கிச் செயல் படும் திறனும் கொண்டது.
இவ்வினப் பசு கன்று ஈன்றதும், பத்து மாதங்கள் வரை பால் தரும். மூன்று வயதிற்குப் பின், இது கன்று ஈனும். இரண்டு முறை சேர்ந்தாலும், எளிதில் சினைப் படாது. மூன்றாம் முறை சேர்ந்தாலே, சினைப் படும்.
<b>தார்பார்க்கர் இனப் பசு</b>. இது தார்ப் பாலைவனத்தைச் சேர்ந்த இனம். கட்ஜ், ஜோதிபுரி, ஜெய்சால்மர் பகுதிகளில் இந்த இனப் பசு மிகுந்து காணப் படுகிறது. இதை, வெள்ளைச் சிந்தி என்றும் கூறுவர். நீண்ட முகம், புடைத்த நெற்றி, அகன்ற உச்சி, மெல்லிய கொம்பு, தூய்மையான கால் அமைப்பு, சீரான குளம்பு, அகன்ற பால் மடி, நீளமான காம்பு இவை, இப்பசுகளின் பொதுத் தோற்றமாகும். மழை குறைவான வறள் பகுதிகளிலும், மணற்பாங்கான பகுதிகளிலும், வசிக்க ஏற்றது. குறைந்த தீவனத்தில் கூடுதலாகப் பால் தருதல், கண் கவரும் உடலமைப்பு ஆகியவை தார்பார்க்கர் இனப் பசுவின் சிறப்புகளாகும்.
<b>காங்கிரீஜ் இனப் பசு</b>. தார்பார்க்கர் மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியும், அகமதாபாத்தும், இவ்வினப் பசு மிகுந்திருக்கும் இடங்களாகும். நிமிர்ந்த நோக்கு, ஓரளவு நீண்ட உடல், குட்டையான முகம், அகலமான நெற்றி, கனத்த வளைந்த கொம்பு, அகன்ற மார்பு, இவை இப்பசுவின் பொதுத் தோற்றமாகும். கூடுதலான பால் தரும் இவ்வினப் பசுவை அமெரிக்காவில் இறக்குமதி செய்துள்ளனர்.
<b>கீர் பசு</b>. சிங்கங்கள் மிகுந்துள்ள கீர் காடுகளில், இவ்வினப் பசு பெரும்பான்மையாக உள்ளது. மேலும், வட மும்பை, பரோடா, மேற்கு ராஜபுதனம் போன்ற இடங்களிலும், பரந்த அளவில் காணப் படுகிறது. இப்பசு, ஆண்டுக்கு ஒரு கன்று ஈனும். பத்து மாதங்கள் வரை, தொடர்ந்து பால் தரும் இயல்புடையது. கூடுதலாகப் பால் தரும் இது, நான்கு வயதில் சினைப் படும்.
<b>ஹரியான இனப் பசு</b>. இது டில்லி, பஞ்சாப் பகுதியில் காணப் படுகிறது. நீண்ட முகம், குட்டையான நெற்றி, வளைந்த, மேல் நோக்கிக் காணப்படும் கொம்பு, நீண்ட உடல், சதைப் பற்றுடன் காணப் படும் உறுதி மிக்க கால், சிறப்பான குளம்பு அமைப்பு, அகன்ற பால் மடி, நீண்ட காம்பு இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது பால் உற்பத்தியில் உயர்ந்த இடம் பெற்றுள்ளது.{{nop}}<noinclude></noinclude>
161a16nxpi5pvofylku37tb560v1ud6
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி
0
647261
1948124
2026-06-20T04:04:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரான் நாட்டில் கல்வி | previous = [[../ஈரான்/]] | next = [[../ஈரானிய அரசியல்/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948124
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரான் நாட்டில் கல்வி
| previous = [[../ஈரான்/]]
| next = [[../ஈரானிய அரசியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="685" to="686" fromsection="ஈரான் நாட்டில் கல்வி" tosection="ஈரான் நாட்டில் கல்வி" />
fjtp9ap2m08cdohdptlk0i45z47bp9e
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்
0
647262
1948125
2026-06-20T04:08:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரானிய அரசியல் | previous = [[../ஈரான் நாட்டில் கல்வி/]] | next = [[../ஈரி ஏரி/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948125
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரானிய அரசியல்
| previous = [[../ஈரான் நாட்டில் கல்வி/]]
| next = [[../ஈரி ஏரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="686" to="686" fromsection="ஈரானிய அரசியல்" tosection="ஈரானிய அரசியல்" />
6tnltvspp3r9s0er3nofdi4b3jnrmjh
1948126
1948125
2026-06-20T04:10:34Z
Booradleyp1
1964
1948126
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரானிய அரசியல்
| previous = [[../ஈரான் நாட்டில் கல்வி/]]
| next = [[../ஈரி ஏரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="686" to="687" fromsection="ஈரானிய அரசியல்" tosection="ஈரானிய அரசியல்" />
sjxtkrmjlo599op2gdvi4wxd4ius6ou
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி
0
647263
1948127
2026-06-20T04:11:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரி ஏரி | previous = [[../ஈரானிய அரசியல்/]] | next = [[../ஈரோடு மாவட்டம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948127
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரி ஏரி
| previous = [[../ஈரானிய அரசியல்/]]
| next = [[../ஈரோடு மாவட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="687" to="688" fromsection="ஈரி ஏரி" tosection="ஈரி ஏரி" />
cba8qhwt18pc5h0st5l2oj3p7rha0qc
வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்
0
647264
1948128
2026-06-20T04:14:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈரோடு மாவட்டம் | previous = [[../ஈரி ஏரி/]] | next = [[../ஈலம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948128
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = ஈரோடு மாவட்டம்
| previous = [[../ஈரி ஏரி/]]
| next = [[../ஈலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="688" to="688" fromsection="ஈரோடு மாவட்டம்" tosection="ஈரோடு மாவட்டம்" />
tngd7xjfak9ptojsr72ny5cep8ei58m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/206
250
647265
1948138
2026-06-20T06:00:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விட்னி (Whilney)யின் உயரம் 4,420.7 மீ. இம்மலைத் தொடரின் இடையே உள்ள ஒரு கணவாய் 2162 மீ. வரை மேல்மட்ட முடையது. இதன் வழியாகவே, கி.பி. 1800-ஆம் ஆண்டளவில் ஆயிரக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீலம் ஆறு|178|சீலாந்து}}</noinclude>விட்னி (Whilney)யின் உயரம் 4,420.7 மீ. இம்மலைத் தொடரின் இடையே உள்ள ஒரு கணவாய் 2162 மீ. வரை மேல்மட்ட முடையது. இதன் வழியாகவே, கி.பி. 1800-ஆம் ஆண்டளவில் ஆயிரக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து உட்புகுந்தனர். சீராநெவாடாவின் இயற்கைக் காட்சி மிகவும் காணத்தக்க பேரழகுடையது.
இதே பெயரை உடைய ஒரு மலைத்தொடர் தெற்கு இசுபெயின் (Spain) நாட்டில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சீராநெவாடா"/>
<section begin="சீலம் ஆறு"/>
{{dhr}}
<b>சீலம் ஆறு</b> பஞ்சாபு மாநிலத்தில் பாய்கின்ற ஐந்து ஆறுகளுள் ஒன்று, இவ் ஆறு (Jhelum) பாகிசுத்தானிலும் பாய்கிறது. இது வெர்னாகு (Vernag) என்னும் இடத்தில் ஊற்றாகத் தோன்றுகிறது. வெர்னாகு சம்மு காசுமீரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆறு பீர்பஞ்சால் மலைத்தொடரின் சரிவுகளில் ஓடி, காசுமீரில் நுழைந்து, வடமேற்காக வளைந்து செல்கிறது. பின்னர் அனந்துனாக்கு, சிரீநகர் வழியாக ஓடி ஊலர் ஏரியில் (Wular Lake) கலக்கிறது. ஊலர் ஏரியிலிருந்து பீர்பஞ்சால் மலைத்தொடரைச் சோபூர் (Sopur) என்னுமிடத்தில் கடந்து இரண்டாகப் பிரிந்து செல்கிறது. ஆசாது காசுமீரின் தலை நகரமான முசபராபாத்தில் கிசன் கங்கை (Kishan Ganga) ஆற்றுடன் கலந்து தெற்கில் வளைந்து சென்று ஆசாத்துக் காசுமீரின் கிழக்கு எல்லையாக விளங்குகிறது. பின்னர்ப் பாகிசுத்தானின் தென்பகுதியில் பாய்ந்து செல்கிறது. சிவாலிக்குக் குன்றுகளில் ஊடுருவிப் பாயும் சீலம் ஆறு மங்கலா (Mangala) என்ற இடத்தில் வண்டல் மண் சமவெளியை உருவாக்கியுள்ளது. இச்சமவெளியின் பழங்கால மண்ணடுக்குகளில் மனித நாகரிகத் தடயங்களும் விலங்கினப் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பாகிசுத்தானில் உள்ள சீலம் நகரில் இந்நதி தென்மேற்காகத் திரும்பிக் குசாபு (Khushab) என்னும் இடத்திற்குச் செல்கிறது. அங்கிருந்து மீண்டும் தெற்கே வளைந்து சீனாபு (Chenab) ஆற்றுடன் திரிம்மு (Trimmu) என்ற இடத்தில் இணைகிறது. சீலம் ஆற்றின் நீளம் ஏறக் குறைய 750 கி.மீ. ஆகும். சீலம் மாவட்டம் ஒன்றும் பாகிசுத்தானில் உள்ளது.
சீலம் ஆறு வேளாண்மைக்குப் பெரிதும் பயன்படுகிறது. நீர்மின்சக்தியும் எடுக்கப்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கில் மங்கலா அணை கட்டப்பட்டுள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சீலம் ஆறு"/>
<section begin="சீலாந்து"/>
{{dhr}}
<b>சீலாந்து</b>: நெதர்லாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலத்தின் பெயர் சீலாந்து. இது கடல் வாணிபத்துக்குக் புகழ் பெற்ற மாநிலம். இது 2,700 கி.மீ. பரப்பளவு உள்ளது. புவியியல் அமைப்பில் சீலாந்து முக்கியமானது. பெல்சியம் நாட்டின் எல்லைப்பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. கடல் உள்ளே புகுந்ததால், சீலாந்தின் பல பகுதிகள் காலப்போக்கில் கடலில் மூழ்கிவிட்டன. எனினும், கடல் ஆதிக்கத்திலிருந்து சீலாந்து (Zeeland) தப்பித்துவருவதால், ‘நான் போராடுகிறேன், நான் வெற்றிபெறுகிறேன்’ என்ற பழமொழியும் அந்நாட்டில் வழங்குகிறது.
வெள்ளம் பெருக்கெடுத்து இம்மாநிலத்தை அழிக்கும் நிலையும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. வெள்ளப் பெருக்கால் (1933) 1,800 மக்களுக்கு மேல் உயிரிழந்தனர். பொருட்சேதம் அதிகம் ஏற்பட்டது. கடல் உள்ளே புகுந்துவிடாமல் தடுக்கத் தடுப்புச் சுவர் தச்சு (Dutch) அரசாங்கத்தினால் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், சீலாந்து மாநிலத்தின் சமூக, பொருளாதாரத் துறைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள் மூலம் சீலாந்து மாநிலமானது, மத்திய ஆலந்து, உரோட்டர்டாம் (Rotterdam) பகுதியோடும் மற்ற தீவுகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
சீலாந்து தச்சு நாட்டின் ஐந்தாவது சிறிய மாநிலம், மக்கள் தொகையும் குறைவு, தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. பெரிய நகரங்களும் கிடையா. பிளசிங்கு (Flushing) என்ற நகரில் 40,440 மக்கள் வாழ்கின்றனர். கப்பல் கட்டும் தொழிற் சாலைகள் உள்ளன. மிடிஸ்பாகு (Middle Burg) என்ற நகரம்தான் சீலந்தின் தலைநகர் ஆகும். கோயசு (Geos) என்ற சிறுநகரம் கல்வித் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. வாணிபம் இங்கு சிறந்து விளங்குகிறது. தெர்னியூசென் (Terneuzen) என்ற நகரில் பல தொழிற்சாலைகள் உள்ளன.
கெண்டு - தெர்னெசென் (Ghent Ternesen) கால்வாய் இம்மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது. சீலாந்து மாநிலம் வேளாண்மையில் மிகவும் முன்னேறியுள்ளது. புதியமுறை வேளாண் கருவிகளை உபயோகித்து, அதிக உற்பத்தியினைப் பெற்று முன்னேறும் மாநிலம் இது. கோதுமை, பார்லி, ஓட்சு, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பல்வேறு தானியங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
08c8bmocbbn12w95u6yiittv7k6sdcl
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/78
250
647266
1948139
2026-06-20T06:06:14Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|77 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்}} {{Right|77}}
இக் குறள், 'அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய
செங்கோல்தரன் ; படை வலிமையால் மட்டும் பயன் இல்லை
என்று கூறிற்று.
குடிமக்களைத் தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை ;
எவ்வளவு அயுத பலம் படைத்திருந்தாலும் கொடுங்கோல்
அரசுக்குக் கொற்றமில்லை; வாழ்வும் இல்லை. இக் கருத்
தையே: மேலே காட்டிய இரண்டு குறள்களும் வலியுறுத்து
கின்றன.
பண்டைத் தமிழ்ப் புலவர்களிலே பலர் சிறந்த அரசியல்
அறிஞர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் பாடல்கள்
காட்டுன்றன. அவர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக்
கருத்தில் கொண்டிருந்தனர். அடிக்கடி அரசர்களுக்கு அர
சியல் நீதிகளை அஞ்சாமல் எடுத்துரைத்து வந்தனர்.
அரசர்கள் எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தா
லும், அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் சான்றோ
ரைத் துணையாகக் கொண்டிருக்கவேண்டும், அவர்கள்
சொல்வழி ஆட்சி புரியவேண்டும் என்றும் வலியுறுத்தி
வந்தனர்.
“தம்மைக்காட்டிலும் கல்வியறிவுகளிலே சிறந்த பெரி
யேரர்களைத் தமக்குத் துணையாகக் கொள்ளவேண்டும்; அப்
பெரியோர்கள் காட்டும் வழியிலே நடக்கவேண்டும்; இதுவே
அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும் சிறந்த வலிமை
யாகும்.
{{left_margin|3em|<poem>தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை,"</poem>}}
“தான் தவறு செய்யும்போது சிறிதும் அஞ்சாமல், கண்டித்
துப் புத்தி புகட்டுவோரைத் துணையாகக் கொள்ளாத
வேர்தன் சிறிதும் பாதுகாப்பற்றவன் ; அவனைக் கெடுப்
பதற்குப் பகைவர்களே வேண்டாம், அவனே அழிந்து
போவான்.<noinclude></noinclude>
7qpxvwqxcspjsd4h0anbeqc5p6ca5v3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/207
250
647267
1948140
2026-06-20T06:15:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சீலாந்து மாநிலத்தில் மிகச் சிறந்த, வலிமையான குதிரைகளை வளர்க்கின்றனர். இக்குதிரைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை. பழத் தோட்டங்களுக்குப் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவகசிந்தாமணி|179|சீவகசிந்தாமணி}}</noinclude>சீலாந்து மாநிலத்தில் மிகச் சிறந்த, வலிமையான குதிரைகளை வளர்க்கின்றனர். இக்குதிரைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.
பழத் தோட்டங்களுக்குப் பெயர்போனது சீலாந்து மாநிலம். இரண்டாம் உலகப் போரினால் இந்த மாநிலம் பலத்த சேதமுற்றது. மக்களின் பணிகளின் மூலம் கடும் உழைப்பால், திருமாணப் பொருளாதாரத் துறையில் நல்ல முன்னேற்றத்தினை இம்மாநிலம் அடைந்துள்ளது.
இங்கு 1953-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் அடைந்த சேதத்தினைக் கணக்கிட்டு வெள்ளத்தினைத் தடுத்திடப் பல பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன பண்ணைகள் செழிப்பாக உள்ளன.
மீன்பிடிதொழிலில் புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளமையால், மிகவும் இலாபகரமான தொழிலாக உள்ளது. புரூன்னிசே (Brunnese), பிலிப்பைன் (Philippine) என்ற இரண்டு கிராமங்கள் மீன் பிடித்தல் தொழிலில் மிகவும் முன்னேறியுள்ளன.
இந்த மாநிலத்தில் பக்கத்தில் அழகிய கடற்கரைப் பகுதிகள் இயற்கையாகவே அமைந்திருப்பதால் வெளிநாட்டவர் ஓய்வு எடுக்க இப்பகுதிக்கு ஏராளமாக வருகின்றனர்.
சீலாந்து மாநிலத்தில், முக்கிய இடங்கள் இருப்புப் பாதைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக உள்ளது.{{Right|<b>தா.எ.</b>}}
<section end="சீலாந்து"/>
<section begin="சீவகசிந்தாமணி"/>
{{dhr}}
<b>சீவகசிந்தாமணி</b> தமிழ்ப் பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர். இவர் ஒரு சமணத் துறவி. இவர் சோழ நாட்டில் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
இக்காப்பியம் நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் ஈறாகப் பதின்மூன்று இலம்பகங்களையும் 3145 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது.
சீவகசிந்தாமணி ஏமாங்கத நாட்டு இளவரசனாகிய சீவகனின் கதையைக் கூறுகிறது. சச்சந்தன் என்பவன் ஏமாங்கத நாட்டு மன்னனாவன். அவன் தன் மாமன் மகள் விசயையைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். அவள்பால் தான் கொண்ட ஆராக் காதலினால் அவளை ஒருகணமும் அவனால் நாட்டின் பிரிந்திருக்க இயலவில்லை. எனவே தன் தன் முதலமைச்சனாகிய ஆட்சிப் பொதுப்பைத் கட்டியங்காரனிடம் ஒப்படைத்து முழுநேரமும் சச்சந்தன் தன் மனைவியோடு இன்பப் பொழுது போக்குகிறான். கட்டியங்காரன் கொடியவன், அவ்ன் திடீரென அரசனைத் தாக்கி அவனைக் கொள்கிறான். விசயை அப்போது கருவுற்றிருந்த அவன் மனைவி மயிற்பொறி என்னும் வானவூர்தியின் துணையால் அரண்மனையிலிருந்து தப்பி வெளியேறுகிறாள். விண் வழியாகச் சென்ற மயிற்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது. அங்கு விசயை ஒரு மகனை ஈன்றெடுக்கிறாள். இறந்த தன் மகன் உடலைப் புதைப்பதற்காகக் கந்துக்கடன் என்ற வணிகன் அச்சுடுகாட்டிற்கு வருகிறான். அவனைக் கண்ணுற்றதும் விசயை குழந்தையைத் தனியே தரையில் கிடத்தி ஒரு மரத்தின் பின் மறைந்து கொள்கிறாள். விசயையின் குழந்தையைக் கந்துக் கடன் காண்கிறான். அவன் மிகவும் மகிச்சியடைந்து குழந்தையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று அதற்குச் சீவகன் என்று பெயரிட்டு வளர்த்து வருகிறான்.
சீவகன் ஓர் அழகு மிக்க இளைஞனாக வளர்கிறான். அவன் ஆசிரியர் அச்சணந்தி என்பவரிடம் பல கலைகளையும் பயின்று தேர்ச்சி பெறுகிறான்; அவரிடமிருந்து தன் உண்மை வரலாற்றையும் அறிகிறான்; தன் தந்தையைக் கொன்ற கட்டியங் காரனை எதிர்த்துப் போரிட விரும்புகிறான். ஓராண்டு வரை கட்டியங்காரனை எதிர்க்கக்கூடாது என்ற வாக்குறுதியை அச்சணந்தி ஆசிரியர் சீவகனிடமிருந்து பெறுகிறார்.
காந்தருவதத்தை என்ற வித்தியாதா மகளைச் சீவகன் யாழ்ப் போட்டியில் வென்று திருமணம் செய்து கொள்கிறான். குணமாலை என்ற அழகு மிக்க நங்கையை அசனிவேகம் என்ற பட்டத்து யானையிடமிருந்து சீவகன் காப்பாற்றுகிறான். தன்னைக் காப்பாற்றிய சீவகன் மீது குணமாலை காதல் கொள்கிறாள். அவளுடைய பெற்றோர்கள் அவளை கொடுக்கிறார்கள், அவனுக்குத் திருமணம் செய்து தன் பட்டத்து யானையைச் சீவகன் அடக்கிய செய்தியைக் கட்டியங்காரன் அறிந்து சீற்ற முறுகிறான்; சீவகனைச் சிறை செய்யும்படி கட்டியங்காரன் ஆணையிடுகிறான். கட்டியங்காரனின் வீரர்கள் சீவகனைச் சிறை செய்யும்போது சீவகனின் நண்பனான சுதஞ்சணன் என்ற வித்தியாதரன் வீரர்களிடையே குழப்பம் விளைவித்து அவர்கள் அறியாமல் சீவகனைத் தன் நாட்டிற்குத் தூக்கிச் செல்கிறான். பின்பு சீவகன் பல நாடுகளுக்கும் செல்லுதற்குரிய வழிகளைக் கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறான்.
சீவகன் பல்லவ நாடு செல்கிறான். அங்கு மன் மன்னன் மகள் பதுமை என்பவள் பாம்பால் கடியுண்டு உணர்விழந்திருப்பதை அறிந்து சீவகன் விரைந்து சென்று, பதுமையின் உடலினின்றும் விடத்தை நீக்கி-<noinclude>
<b>வா. க 9 - 12அ</b></noinclude>
e9vxm9wycm9lfu3ugndqt9ll0v1dd16
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/77
250
647268
1948141
2026-06-20T06:18:27Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|76 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>76 {{center|பழந்தமிழர் அரசியல்}}
{{left_margin|3em|<poem>பல்வேல் இரும்பொறை ! நின்கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த,
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி,
நோயிலை ஆகியர் நீயே"</poem>}} {{Right|(பதிற்றுப்பத்து, 89)}}
இப் பதிற்றுப்பத்துப் பாடலும் நாட்டு மக்கள் ஆதரவும்
அன்பும் பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும் என்று
கூறிற்று, “நாளின் மாளின் நாடு தொழுது ஏத்த” என்ற
வரியில் அமைந்த ஆழமான பொருள், என்றும் அழியாத
உண்மையாகும்.
குடிகளின் ஆதரவைப் பெற்ற அரசன்தான் நிலைத்து
வாழ முடியும் என்ற கருத்தை வள்ளுவரும் வலியுறுத்து
கின்றார் :
“தனது நாட்டுக் குடிமக்களின் கருத்தைத் தழுவி,
செங்கோல் நடத்தும் அரசனது அடியை உலகம் ஆதரித்து
நிற்கும்.
{{left_margin|3em|<poem>குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.”</poem>}} {{Right|(கு. 544)}}
இக்குறள் குடிமக்களின் கருத்தைத் தழுவி ஆளுவதே சிறந்த
ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று.
“அரசனுக்குப் போரிலே வெற்றி தருவது அவனுடைய
வேற்படை அன்று. அவனுடைய செங்கோல்தான் வெற்றி
தரும்; அதுவும் சிறிதும் வளையாமல் இருக்கவேண்டும்,
{{left_margin|3em|<poem>வேல்அன்று வென்றி தருவது, மன்னவன்
கோல்;அதூஉம் கோடாது எனின்”</poem>}} {{Right|(கு. 546)}}
_____________
நின்கோல் செம்மையின் - உனது ஆட்சியின் நன்மையினால். செருமேம்
தோன்றி - போரிலே மேம்பட்டு நின்று.<noinclude></noinclude>
780zba6ixubkbgxqsotbblbo10vy2p8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/208
250
647269
1948142
2026-06-20T06:27:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உணர்வு பெறும்படி செய்கிறான். பதுமை அவனைக் கண்டதும் அவன்பால் காதல் கொள்கிறாள். பிறகு இருவருக்கும் திருமணம் நிகழ்கிறது. அடுத்து, சீவகன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவகசிந்தாமணி|180|சீவகசிந்தாமணி}}</noinclude>உணர்வு பெறும்படி செய்கிறான். பதுமை அவனைக் கண்டதும் அவன்பால் காதல் கொள்கிறாள். பிறகு இருவருக்கும் திருமணம் நிகழ்கிறது. அடுத்து, சீவகன் தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரம் செல்கிறான். அங்குச் செல்வமிக்க வணிகன் மகள் கேமசரி என்பவளைக் கண்டு திருமணம் புரிந்து கொள்கிறான். கேமமாபுரத்திலிருந்து அவன் மத்திமதேயம் சென்று கனகமாலை என்ற இளவரசியை மணம் செய்து கொள்கிறான். பின்பு தண்ட காரண்யத்தில் முதன் முதலாகத் தன் தாய் விசயையைச் சந்திக்கிறான். தன் மாமன் கோவிந்தன் துணை கொண்டு கட்டியங்காரனை எதிர்த்துத் தன் நாட்டை மீட்கும் படி அவள் சீவகனுக்கு அறிவுறுத்துகிறான். அவ்வாறே செய்வதாகச் சீவகன் உறுதி கூறி, ஏமாங்கத நாட்டின் தலைநகராகிய இராசமாபுரத்திற்குத் திரும்புகிறான். வழியில் பேரழகு வாய்ந்த பாவையாகிய வி லை என்பவளை எதிர்ப்பட்டு அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆடவர்பால் மிகவும் வெறுப்புக் கொண்டிருக்கும் சுரமஞ்சரி என்பவளைச் சீவகன் கிழவன் வேடம் பூண்டு தனக்கு இணங்குமாறு செய்து, பின்பு தன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்தித் திருமணம் புரிகிறான்.
தன் மாமன் கோவிந்தனின் படை உதவி கொண்டு சீவகன் கட்டியங்காரனை எதிர்த்துக் கொல்கிறான். பின்பு ஏமாங்கத நாட்டின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான். அவனுடைய மாமன் கோவிந்தன் தன் மகள் இலக்கணையை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறான்.
சீவகனின் அன்பும் அருளும் நிறைந்த ஆட்சியில் குடிமக்கள் அனைவரும் வாழ்க்கையில் வளமுற்று இன்ப வாழ்வு வாழ்கின்றனர். சீவகனும் தன் மனைவியர் எண்மரோடு முப்பது ஆண்டுகள் வாழ்க்கை இன்பம் திளைக்கிறான். பின்பு துறவுபூண்டு, கடுந்தவமியற்றி ஈறிலா இன்பப் பேற்றை எய்துகிறான்.
சீவகன் கதையின் பெரும்பகுதி அவனுடைய காதல் செயல்களைப் பற்றியும் திருமணங்களைப் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறது. இத்தகைய கதையைத் திருத்தக்க தேவர் தம் காப்பியத்திற்குரிய கதையாக ஏன் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்பது சிந்திக்கற் பாலது இவ்வுலக இன்பத்தை முழுமையாகத் துய்க்கும் ஆன்மா நாளடைவில் பண்பட்டு முடிவில் பெருநிலையை எய்தும் என்பது திருந்தக்க தேவரின் நம்பிக்கையாகும் எனலாம். திருத்தக்க தேவரின் கொள்கை எப்பிகூரசு (Epicurus) என்ற அதீனிய தத்துவ அறிஞரின் (Athenian philosophe) கொள்கையோடு ஒப்புநோக்கத்தக்கது. இவ்வுலகத்தின் இன்ப வாழ்க்கையே பெரு நன்மை பயக்க வல்லது என்பது எப்பிகூரசின் கொள்கையாகும். உண்மையும் தூய்மையும் வாய்ந்த இவ்வுலக இன்பமே மனித வாழ்க்கையில் முடிவாகவும் அவர் கொண்டார். ஆனால் சிந்தாமணி ஆசிரியர் ஆன்மா பெருநிலை எய்துதற்கு இவ்வுலக இன்பத்தினை ஒருவழியாகக் கொள்கிறார். இவ்வுண்மையை விளக்குதற்குச் சீவகன் கதை மிகவும் பொருத்தமுடையதாகும்.
இவ்வுலக இன்பத்தை ஆரத்துய்த்த சீவகன் ஒருநாள் தன் மனைவியர் எண்மரோடும் சோலையில் உலாவச் செல்கிறான். அங்குச் சோலைக் காவலன் மந்தியின் கையிலிருந்த பலாப்பழத்தைப் பிடுங்கிக் கொள்வதை அவன் கண்ணுறுகிறான். இச்சிறு நிகழ்ச்சி அவன் மெய்யுணர்வு பெறச் செய்கின்றது. வலி குன்றியவனை வலி மிக்கவன் வெல்ல முடியும் என்ற உண்மையினை அக்காட்சி அவனுக்கு உணர்த்துகிறது. மந்தியினும் சோலை காவலன் உடல் வன்மைமிக்கவன் ; ஆகையினால் அதனிடமிருந்து பலாப் பழத்தை எளிதில் பிடுங்கிக் கொள்ள அவனால் முடிந்தது என்றும், தானும் கட்டியங்காரனை விட ஆற்றல் மிக்கவனாய் இருந்தமையால் அவனிடமிருந்து அரசியலைக் கைப்பற்றத் தன்னால் முடிந்ததென்றும், தன்னைவிட வலிமையுடையவன் தோன்றின் தன்னாட்டினை அவனும் எளிதில் கைப்பற்றிக்கொள்ள இயலும் என்றும் சீவகன் எண்ணுகிறான், இத்தகைய எண்ணங்கள் இவ்வுலக நிலையாமையை அவன் நன்குணருமாறு செய்கின்றன. உடனே அவன் இந்நிலவுலக வாழ்வை வெறுத்துத் துறவுபூண்டு, ஓராண்டுக் காலம் மலை உச்சியின் கண் கடுந்தவமியற்றி முத்தி எய்துகிறான்.
சீவக சிந்தாமணி முழுமையும் இலக்கியச் சுவையும் நயமும் எழிலும் மிளிர்கின்றன. அதன்கண் இலக்கியக் கூறுகளில் தலைசிறந்ததாகிய உணர்ச்சிக் கூறு மிக்க ஆற்றலோடும் பலவகைத் திறத்ததாயும் தரம் மிகுந்ததாயும் விளங்குகிறது. இவ்வுணர்ச்சியே காப்பியத்தின் இலக்கீயத் தரம் சிறந்து விளங்கும் படியாகச் செய்துள்ளது.
கனகமாலையிடமிருந்து விடைபெறுவதற்காகச் சீவகன் அவளிடம் செல்கிறான். அவனுடைய பிரிவைக் குறித்து அவள் பெரிதும் தனக்குள் வருந்துகிறாள். பிரிவைத் தாங்கொணாது பெருமூச்செறிகிறாள். வகுத்த மிகுதியால் அவளுடைய பெருமூச்சு மிகுந்த வெப்பத்தோடு வெளிப்பட்டு அதனால் அவள் கையிலிருந்த சிலந்த செங்கழுநீர் மலர் கருகி விடுகிறது. இதனைக் கவிஞர் ‘செங்கழுநீர் மலரினைக் கருங்குவளை மலராக ஆகும்படி செய்தாள்’ என்று கூறுகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
hna7sk2rect3s9mac5609jkmt21qt0b
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/76
250
647270
1948143
2026-06-20T06:29:40Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|75 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்}} {{Right|75}}
யில்லை, படை பலத்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடி
யாது. அறநெறி தவறாமையே ஆட்சிக்கு அடிப்படையாகும் ;
அதுவே அரசர்க்கு வெற்றி தருவதாகும்.
{{left_margin|3em|<poem>கடும் சினத்த கொல்களிறும்,
கதழ் பரிய கலிமாவும்,
நெடும் கொடிய நிமிர்தேரும்,
நெஞ்சுடைய புகல் மறவரும், என,
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.”</poem>}}{{Right|(புறம், 55)}}
இதுதான் மதுரை மருதன் இளநாகனார் அரசனுக்கு
உரைத்த அறவுரை, இது பழந்தமிழ் மக்களின் அரசியல்
அறிவை எடுத்துக்காட்டுகின்றதன்றோ?
பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர்
பெருங்குன்றூர்க் கிழார், குடக்கோ இளஞ்சேரல் இரும்
பொறையின்மேல் பாடப்பட்டது இந்த ஒன்பதாம் பத்து.
இதில், சேரனுக்கு அப் புலவர் கூறும் அரசியல் அறிவுரை
குறிப்பிடத்தக்கது.
"மிகுந்து வேற்படைகளையுடைய இரும்பொறையே !
உன்னுடைய செங்கோல்முறையைல் கண்டு மகிழ்ந்து, ஒவ்
வொரு நாளும் உனது நாட்டினர் உன்மேல் அன்பு மிகுந்து
உன்னை வணங்கிப் பாராட்டுவார்களாக ! உயர்ந்த இவ்
வுலகில் உள்ள சான்றோர்கள் உன்னைப் போற்றுவரர்களாக !
அரசியலிலே எத்தகைய தவறும் ஏற்படாமல் பாதுகாப்பா
யாக! உனக்கு நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் இருப்
பதனால், உன் பகைவருடன் செய்யும் போரிலே 'நீ வெற்றி
பெறுவாயாக ! நீயும் நீண்ட நாள் நோயின்றி - எத்தகைய
துன்பமும் இன்றி - வாழ்வாயாக !
_____________
கதழ்பரிய - விரைந்து ஓடும் தன்மையுள்ள. நெஞ்சுடைய - மனோ
வலிமையுள்ள. புகல் - போரை விரும்பும், மாண்டது - சிறந்தது.<noinclude></noinclude>
but6jj3qoq1tpu0zhrjqpbxor1uqwkr
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/75
250
647271
1948144
2026-06-20T06:39:04Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|74 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>74 {{center|பழந்தமிழர் அரசியல்}}
'''பொதுமக்கள் ஆதரவு'''
முடி அரசாயினும் சரி, குடி அரசாயினும் சரி, பொது
மக்களின் ஆதரவைப் பெற்ற அரசுதான் நிலைத்து நிற்கும் ;
எல்லா மக்களும் நல்வாழ்வு பெறத் திட்டம் வகுத்து, அதனை
நன்றாக நடத்திவைப்பதே ஆட்சியின் கடமை. சாதி, மத,
இன, மொழி வேற்றுமை பாராட்டாமல் அனைவர்க்கும் ஒத்த
நீதி வழங்குவதே ஆளுவோர் கடமை. இத்தகைய ஆட்சியே
செங்கோல் ஆட்சி, மக்கள் ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று
சொல்லப்படும்.
படை பலத்தையும், அதிகார உரிமையையும் காட்டி
மக்களை அடக்கி ஆண்டுவிட முடியாது ; நல்லாட்சிக்கு நாட்டு
மக்கள் அனைவரும் அடங்கி நடப்பார்கள்: நல்லாட்சியை
எதிர்த்துக் கவிழ்க்க எவராலும் ஆகாது. இந்த உண்மையை
மறந்த ஆட்சி எதுவாயினும் அதற்கு ஆயுள் அற்பந்தான்,
இக்த இயற்கை உண்மையைப் பண்டைக் காலத் தமிழ்
அறிஞர்கள் அரசர்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வந்
தனர். மன்னர்களின் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சியாக
மாறாமல் இருப்பதற்கு அவர்களால் ஆனவரையில் அரும்
பாடுபட்டு வந்தனர்,
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனுக்கு, மதுரை
மருதன் இளநாகனார் என்ற புலவர் அறிவுரை சுறுவதாக
ஒரு செய்யுள் புறநானூற்றில் காணப்படுகின்றது. அச்
செய்யுளில் காணப்படும் அரசியல் உண்மை ' எக்காலத்
திற்கும் ஏற்றதாகும்.
"கடுமையான கோபத்தையும், கொல்லுந் தன்மையும்
உள்ள யானைப்படையிருந்தால் என்ன ? விரைந்து செல்லும்
நெஞ்சுரம் உள்ள குதிரைப்படையிருந்தால் என்ன ? நீண்ட
கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை இருந்தால் என்ன ?
அஞ்சாத நெஞ்சம் உள்ள போரை விரும்புகின்ற வீரர்கள்
நிறைந்த காலாட்படை இருந்தால் என்ன ? - இவைகள்
எவ்வளவு சிறந்திருந்தாலும் அதனால் ஆட்சிக்குப் பெருமை<noinclude></noinclude>
c7x1rmwfm7m1p62kikakic6o218tpa5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/209
250
647272
1948145
2026-06-20T06:56:39Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "‘கையிற், புள்ளாவிச் செங்கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள்’ (சிந்தா. 1887) இதனின்றும் அவளுடைய பிரிவுத் துன்ப மிகுதியை உணர முடிகிறது. சீவகன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவகசிந்தாமணி|181|சீவகன்}}</noinclude>‘கையிற், புள்ளாவிச் செங்கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள்’ (சிந்தா. 1887) இதனின்றும் அவளுடைய பிரிவுத் துன்ப மிகுதியை உணர முடிகிறது.
சீவகனின் வித்தியாதர நண்பனாகிய சுதஞ்சணன் சீவகன் பல நாடுகளுக்கும் செல்லுதற்குரிய வழிகளை விளக்கிக் கூறுகிறான். வழியில் சீவகன் அடைதற்குரிய ஒரு நீண்ட நேரான வழியை அவன் குறிப்பிடுகிறான். ‘அந்நீண்ட நெறியில் நறுமணமிக்க அழகான முல்லை மலர்களும் கத்திகை மலர்களும் வேறு பல மலர்களும் உதிர்ந்து நிறைத்திருக்கும். அக்காட்சி மலர் மாலை வீழ்ந்து கிடப்பது போலத்லோன்றும். கற்புடைய மகளிர் மனம்போல அவ்வழி நேராக அமைந்திருக்கும். பூக்களிலுள்ள மகரந்தப் பொடிகள் படிந்து வழி மென்மைத் தன்மையுடையதாய் அமைந்திருக்கும்’ என்று அவ்வழியின் தன்மையை விளக்குகிறான்.
‘கற்புடை மாதரார் மனமெனக் கிடந்தசெந்நெறிதாதின் மேல்நடந்ததோர் தன்மைத் தென்பவே’ (சிந் 1208) கற்புடைய பெண்டிரின் மனம் தூய்மையுடைய தாய் நேர்மை பொருந்தியதாய், அன்பும் அருளும் நிறைந்து மென்மையுடையதாய் இருக்கும். அதுபோல் அந்நீண்ட செந்நெறி மலர்கள் படிந்து நறுமணமிக்க தாயும் நேர்மையுடையதாயும் மென்மைத் தன்மை வாய்ந்ததாயும் உள்ளதாகும் எனக் கூறுவது உண்மையிலேயே கற்போர் நெஞ்சைத் தொட்டு உயர்தர உணர்ச்சியை மிகுவிக்கிறது.
மேற்கூறிய சான்றுகளிலிருந்து சிந்தாமணியிலுள்ள கற்பனை நயங்களை உணரலாம். இக்காப்பியத்தில் கற்பனைகள் பல திறத்தனவாக அமைந்து இலக்கிய இன்பத்தைப் பெருக்குகின்றன.
சீவக சிந்தாமணியில் பல சிறந்த வாழ்க்கை உண்மைகள் பொதிந்துள்ளன. அவலமிக்க சச்சந்தன் கதை வாயிலாக ஒருவர் காமத்திற்கு இரையாகக் கூடாது என்பதும், அவர் கடமையிலிருந்து எக்காரணத்தையொட்டியும் தவறுதல் கூடாது என்பதும் புலப்படுத்தப்பட்டுள்ளன. சீவகன் பல அரிய பண்புகள் ஒருங்கே வாய்க்கப் பெற்றுத் தனிப் பெருங் குரிசிவாகத் திகழ்கிறான். அப்பாத்திரத்தின் வாயிலாக உணர்த்தப் பெறும் நிலைபேறுடைய உண்மைகளுள் கீழ்க்காணுபவை குறிப்பிடத்தக்கனவாகும்.
(1) இவ்வுலக நிலையாமையை உணர்தற்கு மனிதன் காமத்திற்கு அடிமையாகாமல் இவ்வுலக வாழ்க்கை இன்பங்களை முழுமையாகத் துய்த்தல் வேண்டும்.
(2) உண்மை வீரமாவது எல்லாக் காலங்களிலும் நிலைகளிலும் அகிம்சை நெறியை மேற்கொண்டொழுகுவதாகும்.
(3) மனிதனின் ஆன்மா நிறைவெய்தி உயர்வு பெறுதற்கு ஆன்மிக உணர்வு இன்றியமையாததாகும்.
இவை போன்று எஞ்ஞான்றும் பயன்தரத்தக்க பல வாழ்க்கை உண்மைகள் சிந்தாமணியில் நிறைந்து காப்பியத்திற்குப் பெருஞ் சிறப்புத் தந்து விளங்குகின்றன.
தமிழ்க் காப்பிய வரலாற்றில் சீவகசிந்தாமணி தனிச் சிறப்பு வாய்ந்ததெனலாம். விருத்தப்பாக்கனால் ஆக்கப்பட்ட முதற்காப்பியம் சிந்தாமணியேயாகும். ஒரு காப்பியத்தைக் கடவுள் வாழ்த்தோடு தொடங்க வேண்டும் என்ற புதிய முறையைப் புகுத்தியதும் இக்காப்பியமேயாகும். மேலும் நாட்டு வருணனை, ஆற்று வருணணை, நகர வருணனை ஆகியவைகளைக் கொண்டு விளங்கும் முதல் காப்பியமும் இதுவேயாம். சிந்தாமணி ஆசிரியரே அவையடக்கம் என்ற மற்றொரு பகுதியையும் புதுமையாகப் பாடியவராவார். சிந்தாமணிக்கு முன் தோன்றிய இலக்கியங்களில் அவையடக்கத்தைக் காண இயலாது.
சீவகசிந்தாமணி மற்றைய சிறந்த காபியங்களைப் போல் என்றும் பயனுடைய ஒரு பேரிலக்கியமாகும். அதன்கண் மிளிரும் பெருநிகழ்ச்சிகள், சிறந்த பாத்திரப் படைப்புகள், இலக்கியச் சிறப்புக்கள், பேருண்மைகள் இன்னோரன்னவைகளால் இப்பெருங்காப்பியம் என்றும் நிலவுலகில் நிலைத்து நின்று மாந்தருக்கும் பெரும் பயன் அளிக்கவல்லதாகும்.{{Right|<b>தா.ஏ.ஞா.</b>}}
<section end="சீவகசிந்தாமணி"/>
<section begin="சீவகன்"/>
{{dhr}}
<b>சீவகன்</b> சிந்தாமணிக் காப்பியத் தலைவனாவன். இவன் இளம்பருவத்தில் அச்சணந்தி ஆசிரியரிடமிருந்து பல கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெறுகிறான். அவரிடமிருந்து தன் தந்தையாகிய மன்னன் சச்சந்தனை முதலமைச்சன் கட்டியங்காரன் கொன்று அரசினைக் கவர்ந்து கொண்டதையும், அப்போது கருவுற்றிருந்த தன் தாய் விசயை அரண்மனையிலிருந்து தப்பிச் சென்று தன்னைச் சுடுகாட்டில் ஈன்றதையும், கந்துக்கடன் தன்னை வளர்த்து ஆளாக்கி உயர்நிலைக்குக் கொணர்ந்ததையும் அறிகிறான். தன் ஆசிரியரின் ஆணைப்படி கட்டியங்காரனை ஓராண்டுக்குப் பிறகு எதிர்த்து நாட்டைக் கவர்வதென முடிவு செய்கிறான்.
இவன் யாழ்ப் போட்டியில் வென்று காந்தருவ தந்தையையும், தான் அசனிவேகம் என்ற பட்டத்து<noinclude></noinclude>
5s8m0hkw1mckcwfot6aksm76e12tul8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/210
250
647273
1948146
2026-06-20T07:10:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யானையினின்று காப்பாற்றிய குணமாலையையும் பல்லவநாட்டில் பதுமையையும் தக்கநாட்டில் கனக மாலையையும் திருமணம் செய்து கொள்கிறான். தன் தாய் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவகன்|182|சீவகன்}}</noinclude>யானையினின்று காப்பாற்றிய குணமாலையையும் பல்லவநாட்டில் பதுமையையும் தக்கநாட்டில் கனக மாலையையும் திருமணம் செய்து கொள்கிறான். தன் தாய் விசயையைத் தண்டகாரண்யத்தில் கண்டு இராசமாபுரத்திற்குத் திரும்பிய பிறகு விமலை என் பவளையும் சுரமஞ்சரியையும் திருமணம் புரிகிறான், பின்பு கட்டியங்காரனை எதிர்த்துக் கொன்று ஏமாங்கத நாட்டின் அரசனாகிறான். இவனுடைய மாமன் கோவிந்தன் தன் மகள் இலக்கணையை இவனுக்கு எட்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொடுக்கிறான்.
சீவகன் நீதிநெறி வழுவாமல் அரசு புரிந்து தன் மனைவியர எண்மரோடும் முப்பது ஆண்டுகள் இன்ப வாழ்வு வாழ்கிறான். பிறகு இவ்வுலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, துறவு பூண்டு தவமியற்றிப் பேரின்ப நிலையை எய்துகின்றான்.
சீவகன் பல அரிய பண்புகள் வாய்க்கப் பெற்றுத் தன்னிகரில்லாத் தலைவனாக விளங்குகிறான். இவன் பேரழகு வாய்ந்தவன். இவனைக்காணும் காரிகையர் அனைவரும் இவன் அழகின்பால் தங்கள் கருத்தை இழக்கின்றனர். சீவகன் பல கலைகளிலும் வல்லவன். யாழ் போட்டியில் இவன் காந்தருவதத்தையை வென்றது இவன் இசைப் புலமைக்குச் சான்றாகும். வில்லாற்றலிலும் சீவகன் பேராற்றல் வாய்ந்தவன். இவன் காந்தருவதத்தையை யாழிலே வென்றதும், கட்டியங்காரனின் தூண்டுதலால் யாழ்ப் போட்டியில் தோல்வியுற்ற பல மன்னர்களும் சீவகனை எதிர்த்து விற்போர் புரிகின்றனர். சீவகன் தன் வில்லாற்றலால் அம்மன்னர் அனைவரையும் கொன்று வெற்றி பெறுகிறான். வேட்டுவர்கள் கவர்ந்து சென்ற ஆயர்களின் பசுக்களை மீட்பதற்குச் சீவகன் வேட்டுவர்களோடு விற்போர் புரிகிறான். இப்போரில் வேடர்களில் ஒரு வரைக்கூடக் கொல்லாமல் அவர்களே தளர்ச்சியுற்றுத் தோற்று ஓடும்படி சீவகன் அவர்களோடு போர் புரிந்தான். அது இவன்தன் வில்லாற்றளின் தனித் திறமையைப் புலப்படுத்துகிறது. முடிவில் இவன் கட்டியங்காரனோடு போர் செய்து அவனைக் கொன்றது, விற்கலையில் இவன் எய்தியிருந்த தனிப் பெருந்திறமையை உணர்த்துகிறது.
வீரமந்திரம், ஐம்பதமந்திரம், மங்கையரை மயக்கும் மந்திரம், காமனும் விரும்பும் வண்ணம் இனிமையான குரலைத்தரத்தக்க மந்திரம், பாம்பின் நஞ்சினைத் தீர்க்கும் மந்திரம், வேற்றுருவத்தைத் தரத்தக்க மந்திரம் ஆகியன சீவகனுக்கு நன்கு தெரியும். மேலும் பல்வகையான அழகிய மாலைகளைத் தொடுக்கும் கலை, ஒப்பனைக் கலை, ஓவியக் கலை முதலிய கலைகளிலும் இவன் வல்லவன்; சமய தத்துவங்களிலும் ஆழ்ந்த புலமையுடையவன்.
அகிம்சை நெறியியே உயர்வான நெறி என்பது சீவகனின் உறுதியான நம்பிக்கை. குணமாலையைப் பட்டத்து யானை துரத்திச் சென்றபோது அந்த புண்படுத்தாமலும் யானையை எந்த வகையிலும் துன்புறுத்தாமலும் குணமாலையை அதனின்றும் விடுவிக்கிறான். வேள்விக்கென வைத்திருந்த உணவை உண்ட நாய் அந்தணர்களால் உடல் முழுவதும் அடிபட்டு நீர்நிலையில் உயிர் தவித்துக் கொண்டிருந்தபோது, சீவகன் பேரிரக்கங் கொண்டு நீரிலிருந்து அந்நாயைக் கரைக்கு எடுத்து வந்து அதன் செவியில் ஐம்பத மந்திரத்தை ஓதுகிறான். அம்மந்திரத்தின் ஆற்றலால் அந்நாய் தேவனாக மாறுகிறது. அத்தேவனே சுதஞ்சணன் என்ற பெயரோடு சீவகன் நண்பனாகிறான்.
சிந்தாமணிக்காப்பியம் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் தோன்றியதாகும், அக்காலப் பழக்கவழக்கத்தையொட்டியே அக்காப்பியத் தலைவனாகிய சீவகன் மங்கையர் எண்மரை மணந்தான் என்பது உணரற்பாலது. பிற்காலச் சோழ மன்னர்கள் ஒவ்வொருவரும் பல மனைவியரை மணந்தனர் என்பதை அவர்களுடைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஒருவன் பல மனைவியரை மணப்பது அக்கால நினைக்கு இன்றியமையாததாய் இருந்தது.
சீவகனின் எட்டுத் திருமணங்கள் வாயிலாகத் திருத்தக்கதேவர் மற்றோர் உண்மையை உணர்த்துகிறார். சீவகனின் தந்தையாகிய சச்சந்தன் ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளினும் அவளழகிலே அவன் தன் சிந்தையை மறந்து முடிவில் அழிகிறான். சீவகன் எண்மரை மணந்தும் இறுதிவரை காம இன்மத்தில் ஆழ்ந்துபடாமலும் கடமையை மறக்காமலும் ஒழு, நாட்டை மீட்பதாகிய தன் குறிக்கோளை நிறைவேற்றுகிறான். இவன் தன் மனைவியர் எண்மரோடு இன்பவாழ்வு வாழத் தொடங்கியதிலிருந்தே இவன் உள்ளம் ஆன்மிக நெறியை நாடத்தலைப்பட்டது. இவன்தன் கனிந்த இன்ப வாழ்வின் விளைவாக அது பண்பட்டுப் பக்குவம் எய்துகிறது. முடிவாக இவன் உள்ளத்தில் உலக நிலையாமை வேரூன்றுகிறது. உடனே இவன் வாழ்க்கையைத் துறந்து மலை உச்சியின்கண் ஓராண்டு கடுத்தவம் புரிந்து முத்தி அடைகிறான்.
இவ்வாறு சீவகன், சீவகசிந்தாமணியில் பண்பினால் உயர்ந்து ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தனிப்பெருங் காப்பியத் தலைவனாகத் திகழ்கிறான்.{{Right|<b>தா.ஏ.ஞா.</b>}}
<section end="சீவகன்"/>
{{nop}}<noinclude></noinclude>
8u905eilm3ccsfhy1wdrk0be2ef3px3
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/422
250
647274
1948148
2026-06-20T07:31:46Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|400 பசு}}</noinclude><b>ஹிஸ்ஸார் இனப் பசு</b>. பஞ்சாபில் உள்ள ஹிஸ்ஸார் பகுதியில் இப்பசு வாழ்கிறது. கம்பீரத் தோற்றம், வெள்ளை நிறம், நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காதுகள் இவை ஹிஸ்ஸார் இனப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இவ்வினப் பசு மிகுதியாகப் பால் தராது.
<b>ஹல்லிகார் இனப் பசு</b>. மைசூரைச் சேர்ந்த அமிர்தமகால் நிறுவனம் உற்பத்தி செய்த முதல் இனம் ஹல்லிகார் இனப் பசுவாகும். உடலின் நிறம் சாம்பல் நிறமாகும். இரண்டு பக்கமும் புடைத்து, நடுவில் நீண்ட பள்ளம் உடைய நெற்றி, கரிய மூக்கு, வாய்ப் பகுதியில் குறுகி, நல்ல வடிவைத் தரும் முகம், மெல்லிய நீண்ட சதையுடைய கழுத்து, சிறிய குளம்பு, சாட்டை போன்ற வால், அகலமான பால் மடி இவை இவ்வினப் பசுவின் தோற்றமாகும். இதுவும் பால் மிகுதியாகத் தராது.
<b>நாகூர் இனப் பசு</b>. இது இந்தியாவில் ஜோத்பூரைச் சேர்ந்தது. இவ்வினப் பசு, தூய வெண்மை நிறத்துடன் இருக்கும். சிறிய தலை, தட்டையான நெற்றி, நன்கு வளர்ந்து, மேல் நோக்கி வளைந்த கொம்பு, உறுதியான கால், இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். பால் மிகுதியாகத் தராத இனமாக இது விளங்குகிறது.
<b>பாச்சூர் இனப் பசு</b>. இது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது.
<b>கிலாரி இனப் பசு</b>. மராட்டிய மாநிலத்தில் ஹோலாப்பூர், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினப் பசு, மிகுதியும் பால் தராது.
<b>டாங்கி இனப் பசு</b>. முந்தைய பரோடா மற்றும் மாங்க்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அகமது நகர் மாவட்டத்தில் உள்ள அங்காலா வட்டத்திலும், கட்ஸ், தானா, நாசிக், கோலாபா ஆகிய இடங்களிலும், இவ்வினப் பசு உள்ளது. இதுவும் மிகுதியாகப் பால் தராது.
<b>கேரிகார் இனப் பசு</b>. உத்திரப் பிரதேச லஷ்மியூர் இனத்தைச் சேர்ந்த இப்பசுவும் குறைவாகவே பால் தரும்.
<b>கேன்சுதா இனப் பசு</b>. உத்திரப் பிரதேச கேன் நதிக் கரையைச் சேர்ந்த இப்பசு, ஓரளவே பால் தரும். இது கேமவரியா என்றும் குறிப்பிடப்படும்.
<b>ராத் இனப் பசு</b>. இராஜஸ்தானத்தை சேர்ந்த இவ்வினப் பசு, சிக்கனப் பராமரிப்புக்குப் பெயர் பெற்றது. பொதுவாக, இப்பசு குள்ளமானது. மிகுதியாகப் பால் தரும் திறன் கொண்டது.
<b>மேவாட்டி இனப் பசு</b>. இது இந்தியாவில், வட மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தது. அகன்ற நெற்றி, உறுதி மிக்க கால், நீண்ட வால் இவை, இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது கூடுதலாகப் பால் தரும் திறன் உடையது.
<b>கிருஷ்ணா பள்ளத்தாக்குப் பசு</b>. ஷோலாப்பூர், மிராஜ், சங்கீலி, பெல்காம், சதாரா இவ்விடங்களில் மிகுந்து காணப் படும் இவ்வினப் பசுவின் தோற்றம் கிருஷ்ணா நதிக் கரை என்பர். சிறிய தலை, அகன்ற நெற்றி, வளைந்த கொம்பு, நீளமான கால் இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது மிகுதியாகப் பால் தரும் திறம் உடையது.
<b>கயலோ இனப் பசு</b>. இது மத்தியப் பிரதேச இனமாகும். வார்தா, சிந்த்வாரா போன்ற இடங்களில் காணப் படும். நீண்டமுகம், ஓரளவு வளர்ந்த கொம்பு, குட்டையான காது, குட்டையான வால் இவை, இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும். இது கூடுதலாகப் பால் தரும் திறன் உடையது.
<b>டியோனி இனப் பசு</b>. ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த இவ்வினப் பசு, வடக்குப் பகுதிகளில்தான் மிகுந்து காணப் படுகிறது. இது, காண்பதற்குக் கீர் இனத்தைப் போலவே தோற்றமளிக்கும். நடுத்தர அளவுள்ள தலை, எடுப்பான நெற்றி, ஓரளவு நீளம் உடைய வளைந்து தொங்கும் காது, முன்னும் பின்னும் வளைந்த கொம்பு, அகன்ற பால் மடி, நீண்ட காம்பு இவை இவ்வினப் பசுவின் தோற்றமாகும். இது மிகுதியாகப் பால் தரக் கூடியது.
<center>{{fs|120%|<b>அயல் நாட்டு இனப் பசு</b>}}</center>
<b>ஜெர்சி இனப் பசு</b>. ஜெர்சி, கேர்ன்சி ஆகியவை ஆங்கிலக் கால்வாயைச் சேர்ந்தவை. இவ்வினப் பசு ஏனைய அயல் நாட்டு இனப் பசுக்களை விடத் தூய்மையாகவும், விரைந்து மேயும் திறனுடனும் உள்ளது. பழுப்பு நிறமும், ஆழ்ந்த அன்பும் இவ்வினப் பசுவிற்கு உரித்தானவை. உலகிலேயே ஜெர்சி இனப் பசு தரும் பாலில் மட்டுமே கூடுதலாக வெண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
இந்திய சிந்தி இனத்துடன், ஜெர்சி இனச் சேர்க்கை<noinclude></noinclude>
98ubm8c3h0oni5x4anwaipl2xj5lul6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/211
250
647275
1948150
2026-06-20T07:39:33Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சீவ சம்போதனை"/> {{dhr}} <b>சீவ சம்போதனை</b>: இது சமணசமய சித்தாந்த நூல். மகத தேசத்தை ஆண்ட சிரேனிக மகாராசன் கேட்கக் கௌதம பணாதிபரால் கூறப்பட்டத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவ சம்போதனை|183|சீவனாம்சம்}}</noinclude><section begin="சீவ சம்போதனை"/>
{{dhr}}
<b>சீவ சம்போதனை</b>: இது சமணசமய சித்தாந்த நூல். மகத தேசத்தை ஆண்ட சிரேனிக மகாராசன் கேட்கக் கௌதம பணாதிபரால் கூறப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் தேவேந்திர மாமுனிவர். இந்நூலின் இறுதியில் உள்ள வெண்பாவில் ஆசிரியர் தம்முடைய பெயரைக் குறித்திருக்கிறார், தேவேந்திர மாமுனிவர் சீவசம்போதனையைப் பாவேந்தர் நற்றமிழால் பாடினார் என்பது அப்பகுதியாகும். அவருடைய காலமும் ஊரும் தெரியவில்லை. அவர் சமண சமயச் சங்கத்தைச் சார்ந்தவர் என்பதும் தெரியவில்லை.
இந்நூல் உயிர்களுக்கு நன்மை பயப்பனவாகிய பன்னிரண்டு சிந்தனைகளைப் பற்றி (துவாதச அனுப்ரேட்சை) விளக்குவதால் ‘சீவ சம்போதனை’ என்று பெயர் பெற்றது. (சீவன்-உயிர்; அனுப்ரேட்சை - அடிக்கடி சிந்திக்க வேண்டியவை)
இந்நூல் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக உள்ளது. இதில் பன்னிரண்டு அத்தியாயங்களும் 550 பாடல்களும் உள்ளன. இந்நூலின் வசனப் பகுதி மணிப்பிரவான நடையாகவும், செய்யுட்பகுதி நல்ல தமிழ் நடையிலமைந்த வெண்பாவாகவும் உள்ளன வசனம் பெரும்பாலும் செய்யுட் கருத்தைச் சான்றுகளோடு விவரிப்பதாயினும், சிற்சில இடங்களில் செய்யுட் பொருளோடு தொடர்ந்தும் இருக்கிறது. கன்னட சீவசம்போதனையிலும் இங்ஙனமே அமைந்துள்ளது. கன்னட மொழியில் அதனை இயற்றியவர் பந்துவர்மன். இவ்விரண்டு நூல்களிலும் பல இடங்களில் சொற்களும் தொடர்களும் ஒரே மாதிரி இருப்பதனால் இவற்றைத் தமிழிலும் கன்னடத்திலும் சிறந்த புலமை வாய்ந்த ஒருவரே இயற்றியிருக்க வேண்டும்; அல்லது ஒருவருடைய நூலைப் பார்த்து மற்றவர் இயற்றியிருக்க வேண்டும். இந்நூலில் திருக்குறள் தொடர்களும், சீவக சிந்தாமணித் தொடர்களும் விரவியிருக்கின்றன.
இந்நூலில் கூறப்படும் சமண சமயக் கொள்கைகள் பன்னிரண்டு. அவையாவன: 1. அநித்யானுப்ரேட்சை (நிலையாமை). இது பல்வேறு பொருள்களின் நிலையாமையை அடிக்கடி சிந்தித்தலும், ஆன்மா ஒன்றே நிலையானது என்று மெய்யுணர்தலும் ஆகும். 2. அசரணம் (புகலிடமின்மை). இது, இந்திரனாயினும் இறப்பைத் தடுக்க இயலாது; அறமே உயிருக்கு அரணாவது எனச் சிந்தித்து ஒழுகுதல், 3. ஏகத்துவம் (தனித் தன்மை), இது அவரவர் வினைகள் அவரவரையே பற்றும் என்றும், பிறக்கும்போது தனியாகப் பிறந்தல் போல இறக்கும்போதும் தனியாகவே இறத்தல் வேண்டும் என்றும் உணர்தல். 4. அன்யத்துவம் (உறவற்ற தன்மை). இது, உயிரும் உடலும் ஒன்றுபட்டிருப்பினும் வெவ்வேறாகும் என்று உணர்தல். 5. சம்சாரம் (மாற்று). ஒரே உயிர் மக்கள், தேவர், நரகர், விளங்குகளாகிய பெளதிக மாற்றங்களை அடைதல். 6. உலகம்: இது மேல், நடு, கீழ் என மூன்று வகைப்படும். உயிர்கள் இம்மூவகை உலகிலும் மாறி மாறிப் பிறந்து முறையே இன்பமும் துன்பமும் அடையும் தன்மையுடையன. 7. அசுசித்வம் (அழுக்குடைத்தன்மை). இது, உடல், ஊன் உதிரங்களால் உண்டாகியது என்றும், அருவருப்புத் தன்மை உடையது என்றும் அடிக்கடி சிந்தித்தல், 8. ஆசுவரம் (ஊற்று). வினை ஊற்றே பிறவித்துன் பத்திற்கு மூல காரணம் என அடிக்கடி சிந்தித்து அறநெறி ஒழுகுதல், 9. சம்வரை (செறிப்பு). உயிர்களிடம் வினைகள் ஊற்றெடுக்க விடாமல் தடுத்தல் 10. நிர்ச்சரை (உதிர்ப்பு). உயிரினிடம் முன்னரே பற்றியுள்ள வினைகளுள் சிலவற்றைக் கழித்தல். 11. தருமம் (அறம்). வினையை வென்ற அருகன் உரைத்த அறமே உயிர்களுக்கு நன்மை ஊட்டுவதாகும் என்று உணர்ந்து அறநெறி ஒழுகுதல். 12. போதி துர்லபம் (அறிவு பெறற்கருமை). மக்களாகப் பிறத்தல் அரிது; அப்படிப் பிறப்பினும் கல்வி, அறிவு, ஒழுக்கம் என்னும் மும்மணிகளைப் பெறுதலரிது எனச் சிந்தித்து அறநெறி ஒழுகுதல்.
இப்பன்னிரண்டு கொள்கைகளையும் தனித்தனியாகச் சாதித்து நற்கதியடைந்த பன்னிருவர் வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆசுவரத்தின் உட்பிரிவுகளை விளக்க மேலும் ஐந்து கதைகளும், தருமத்தின் உட்பிரிவுகளை விளக்க மேலும் மூன்று கதைகளும் கூறப்பட்டுள்ளன.{{Right|<b>சு.சு.தே.</b>}}
<section end="சீவ சம்போதனை"/>
<section begin="சீவனாம்சம்"/>
{{dhr}}
<b>சீவனாம்சம்</b>: தன்னைச் சார்ந்து வாழ்வோருக்கு உணவு, உடை, உறையுள் முதலிய வாழ்க்கைத் தேவைகளை அல்லது அவற்றுக்கான பணத்தை வழங்குதல் வாழ்க்கைப் பொருளுதவி அல்லது சீவனாம்சம் எனப்படும். தன்னைச் சார்ந்து வாழும் குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் காத்தல் சட்டப் இவர்களைக் படி ஒருவருக்குள்ள கடமையாகும். கவனிக்காமல் இருப்பதையும், வாழ்க்கைத் தேவைகளை அளிக்காமல் ஒதுக்குவதையும் சட்டம் தடை செய்கிறது.
சீவானாம்சம் பெறுவது குறித்துக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125 முதல் 128 வரையிலான பிரிவுகள் விளக்குகின்றன. இப்பிரிவுகள் விரைவான மற்றும் குறைந்த செலவிலான பரிகாரத்தை வழங்குகின்றன. இப்பிரிவுகளின் நோக்கம் சார்ந்து வாழ்வோர் பட்டினி கிடந்து சாவதைத்<noinclude></noinclude>
t9e6hrtsdcf2zgum4v9tz6tqxb767nj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/423
250
647276
1948151
2026-06-20T07:58:47Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசு 401}}</noinclude>செய்வது பெரும் பயன் தந்துள்ளது. கன்று ஈனும் காலம், பால் தரும் காலம் ஆகியவற்றிலும், கூடுதலாகப் பால் தருவதிலும், ஆரோக்கியமான கன்று உற்பத்தியிலும் இப்பசு குறிப்பிடத் தக்கது.
<b>ஹோஸ்டைன் ஃபிரீசியன் இனப் பசு</b>. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகுதியாகப் பரவியுள்ளது. பருமனான உடல், குட்டையான முகம், வட்டமாக வளைந்திருக்கும் சிறு கொம்பு, அகன்ற பெரிய மடியில் சிறு காம்பு இவை இவ்வினப் பசுவின் பொதுத் தோற்றமாகும்.
இப்பசுவின் நிறம் கறுப்பும், வெளுப்பும் கலந்ததாகும். பால் மிகுதியாகத் தரும் ஹோஸ்டைன் இனத்தைச் சேர்ந்த ஸ்காக்வேல், கிரேஸ்ஃபுல் ஹாட்டி வகைப் பசுக்கள் மூன்று வேளை கறந்தாலும், பால் தரும் ஆற்றல் குன்றாதவை. ஃபிரிசியன் இனத்துடன், இந்தியப் பசுக்களைச் சேர்க்கை செய்ததன் மூலம் உருவான பிராவதி இனப் பசு நாள் ஒன்றுக்கு 50 லி. பாலைத் தருகிறது.
<b>அயர்ஷனர் இனப் பசு</b>. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவ்வினப் பசு குட்டையான முகம், வயிற்றுடன் ஒட்டிக் காணப் படும் மடி, குட்டையான காம்பு ஆகியவற்றைக் கொண்டது. வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தை உடையது. நடக்கும் போது, காண்பதற்கு மிக அழகாக இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த ஃபேர்டேல் பெட்டி ஜெம் என்னும் பசு ஆண்டிற்கு 15000 லி. பாலைத் தருகிறது.
<b>பழுப்பு ஸ்விஸ் இனப் பசு</b>. இவ்வகைப் பசு, ஸ்விஸ் நாட்டு ஆதி வாசிகளின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளில் இது பரவியுள்ளது. இவ்வினப் பசுவின் நிறம் பழுப்பு. நிறம் காரணமாகப் பழுப்பு ஸ்விஸ் எனப் படுகிறது. மேல் முதுகு, காதுகளின் உட்புறம் போன்ற இடங்களில் முடி முளைத்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வினத்தைச் சேர்ந்த வீஸ்ஹில் கீப்பர்ஸ் ரேவன் என்னும் பசு மூன்று வேளை பால் தரும் திறனுடையது.
<b>ரெட்டேஸ் இனப் பசு</b>. 19ஆம் நூற்றாண்டில் இனச் சேர்க்கை செய்யப் பட்ட இவ்வினப் பசு, பால் தருவதற்கும், இறைச்சிக்கும் பயன் பட்டது. ஆனாலும், இது மிகுதியும் வளர்ச்சியடையாத, எங்கும் பரவலாகக் காணப் படாத இனமாக விளங்குகிறது.
<b>உடலமைப்பு</b>. பொதுவாக, நன்கு வளர்ச்சியுற்ற பசு சதைப் பற்றுள்ள உடலமைப்பைப் பெற்றுள்ளது. 1.5 மீ, உயரம் வரை வளர்கிறது. நன்கு வளர்ச்சியுள்ள 32 பற்களைப் பெற்றிருக்கிறது. 8 பற்கள் கீழ்த் தாடைக்கு முன்னாலும், 12 பற்கள் கீழ்த் தாடைக்குப் பின்னாலும், எஞ்சிய 12 பற்கள் மேல் தாடைக்குப் பின்னாலும் அமைந்திருக்கின்றன. பசு, கிளையில்லாத கொம்புகளைப் பெற்றிருக்கிறது. பிறக்கும் போது, இது கொம்புகளுடன் பிறப்பதில்லை. கன்று வளர, வளரக் கொம்புகள் வளரத் தொடங்குகின்றன.
<b>செரிமான மண்டலம்</b>. பசு ஓர்அசை போடும் விலங்காகும். இதன் வயிற்றை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை ரூமன், ரெடிக்குலம், ஓமேசம், அபோமேசம் ஆகும். இப்பகுதிகள் வயிற்றிலிருப்பதால், பசு விழுங்கிய உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து, மென்று அசை போட்டு, மீண்டும் விழுங்க முடிகிறது.
உணவை உண்ணும் போது, இவ்வுணவு உணவுக் குழல் மூலம் வயிற்றின் முதல் பகுதியான ரூமன் பகுதியை அடைகிறது. ரூமனும், ரெடிக் குலமும் கூடுதல் கொள்ளளவு உடைய கிடங்குப் பகுதிகளாக இருக்கின்றன. இப் பகுதியில் உணவு நன்றாகக் கலந்து, மென்மையாக மாறுகிறது. அதே சமயம், நுண்ணுயிரிகள் சிக்கலான கார்போஹைட்ரேட்டை எளிமையான கார்போ ஹைட்ரேட்டாக, அதாவது சர்க்கரை, ஸ்டார்ச்சாக மாற்றுகின்றன. இந்தச் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சிலிருந்து உயர் ஆற்றல் விலங்குகளுக்குக் கிடைக்கிறது. மேலும், நுண்ணுயிரிகள் புரதத்தையும்,பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் உருவாக்குகின்றன. திண்ம உணவு இவ்வாறு மென்மையாக மாறிய பின்னர், வயிற்றுத் தசைகளின் இயக்கத்தால், பசுவின் வாய்ப் பகுதிக்கு இவ்வுணவு செல்கிறது. பசு மீண்டும் உணவை மென்று, அசை போட்டு விழுங்குகிறது. இவ்வாறு விழுங்கப்பட்ட அசை போட்டு மென்ற உணவு, மீண்டும் ரூமனையும், ரெடிக்குலத்தையும் வந்தடைகிறது. அங்கு வேதி மாற்றம் ஏற்பட்ட பின்னர், உணவும், நீர்மமும் ஓமேசத்தை நோக்கிக் கீழிறங்கி விடும். அங்கு நீர்மம் முற்றிலுமாக உறிஞ்சப் படுகிறது. நீர் உறிஞ்சப் பட்ட உணவு பின்னர், அபோமேசத்தை அடைகிறது. அபோமேசத்தில் உள்ள வயிற்றுச் சுவர் செரிமானச் சாற்றைச் (Digestive juice) சுரக்கிறது. பின்னர் இந்தச் செரிமானச் சாறு உணவைச் செரிக்க வைக்கிறது. எனவே அபோமேசமே உண்மையான வயிறு (True stomach) எனப் படுகிறது.
<b>பொதுத் தோற்றம்</b>. அழகான தலை, அகலமான நெற்றி, ஒளியுடன் கூடிய கண்கள், முறையாக வளர்ந்த கொம்புகள், சிறிய ஆனால் நீண்ட காதுகள் காணப் படல், காதுகளின் ஓரங்களில் முடி நிறைந்து, உட்புறம் மஞ்சளாகவும், முதுகு,<noinclude><br>{{rh|அ. க. 14–26}}</noinclude>
qxfl3zzymwy3g5y4cz8v1vbpc8tt6v4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/212
250
647277
1948152
2026-06-20T08:09:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தடுப்பதும், அவர்கள் குற்றம் புரியாது பாதுகாத்தலும் ஆகும். சீவனாம்சம் குறித்துக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவனாம்சம்|184|சீவனாம்சம்}}</noinclude>தடுப்பதும், அவர்கள் குற்றம் புரியாது பாதுகாத்தலும் ஆகும்.
சீவனாம்சம் குறித்துக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் எல்லாச் சமயத்தைச் சார்ந்தவருக்கும் பொருந்தும். இவ்வழக்குகளை மாநகரக் குற்றவியல் நீதிபதி அல்லது முதல் வகுப்புக் குற்றவியல் நீதிபதி மட்டுமே விசாரணை செய்யலாம். இந்நீதிபதிகளால் அளிக்கப்படும் பரிகாரங்கள் குறிப்பாக உரிமையியல குணவகை கொண்டவையாக இருந்தாலும், நீதிபதிகள் தீர்ப்புச் செய்தவை யாவும் முடிந்த முடிபு அல்ல. இருதரப்பினரும் உரிமையியல் நீதிமன்றத்தில் தங்கள் உரிமைகளைக் குற்றவியல் நீதிபதியின் தீர்ப்புக்குப் பின்னரும் நிலைநாட்டலாம்.
பின்வரும் பகுதிகளில் வேளாம்சம் பெறத் தகுதியுடையோர், அவை வழங்கப் பெறும் நிலைகள், நீதிமன்றத்தின் ஆள்நிலைவரம்பு, நடைமுறைகள், சீவனாம்சத்தின் அளவு மற்றும் அவை வழங்கப்படும் முறை பற்றிக் காணலாம்.
<b>சீவனாம்சத்தகுதி</b>: வறிய நிலையிலிருக்கும் மனைவிக்கு வாழ்க்கைப் பொருளுதவி அளித்தல் கணவனின் கடமையாகும். மனைவி சட்டப்படி மணம் புரிந்தவராக இருத்தல் வேண்டும். இருவர் கணவன் மனைவி போன்று சேர்ந்து வாழ்ந்த காரணத்தால் மட்டுமே அப்பெண் சீவனாம்சம் பெறுதல் இயலாது. மணவிலக்குப் பெற்று மறுமணம் புரியாத மனைவி சீவனாம்சம் பெறத் தகுதியுடையவர். மனைவி எந்த வயதினராகவும் இருக்கலாம். அவர் இளவராகவோ உரிய வயதினராகவோ இருக்கலாம். குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்படி 18 வயதிற்குக் குறைந்த பெண்ணுக்குத் திருமணம் செய்தல் குற்றமாயினும், அவ்வாறு திருமணம் செய்த பெண் சீவனாம்சம் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
<b>முறை மணப்பிறப்பு மற்றும் முறையிலா மணப் பிறப்புக் குழந்தைகள்</b>: வறிய நிலையிலிருக்கும் இளவர் சீவனாம்சம் பெறத் தகுதியுடையவர். அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருப்பது ஒரு தடையன்று. பதினெட்டு வயதடையாத ஆண் மற்றும் பெண் குழந்தைகள் சீவனாம்சம் பெறத் தகுதியுடையவர். திருமணமான பெண் இளவராக இருக்கும் வேளையில் கணவரிடமிருந்தோ தந்தையிடமிருந்தோ இருவரிடமிருந்தோ சீவனாம்சம் பெறலாம். ஆனால், கணவரிடம் தகுந்த செல்வம் இல்லாத போது திருமணமான உரிய வயதடையாக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது தந்தையின் கடமையாகிறது.
<b>உரியவயதை அடைந்த மனநலம் குன்றிய முறை மணப்பிறப்பு, முறையிலா மணப்பிறப்புக் குழந்தைகள்</b>: உரிய வயதை அடைந்த உடல் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகள் வறிய நிலையில் இருக்குங்கால் அவர்களைக் காத்தல் பெற்றோரின் கடமையாகும். ஆனால், திருமணமான உரிய வயதடைந்த மகளைக் காத்தல் தந்தையின் கடமையன்று. இத்தகையோரைக் காத்தல் கணவரின் கடமையாகும்.
<b>தந்தையும் தாயும்</b>: வறிய நிலையிலிருக்கும் தாய்- தந்தையருக்கு வாழ்க்கைப் பொருளுதவி அளித்தல் மகனின் கடமையாகும். பல மகள் மகன் அல்லது இருக்குங்கால் பெற்றோர் எல்லோரிடத்திலும் கேட்கலாம் அல்லது குறிப்பிட்ட ஒரு சிலரிடத்தில் மட்டுமே பரிகாரம் கேட்கலாம்.
<b>சீவனாம்சம் அளிக்கப்படுவதற்கான நிபந்தனைகள்</b>: 1. எவரிடத்திலிருந்து சீவனாம்சம் வேண்டப்படுகின்றதோ அவர் சீவனாம்சம் அளிக்கும் நிலையில் இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் சொத்து, நிலம், மற்றும் வேலை இருந்தால் மட்டுமே அவர் சீவனாம்சம் அளிக்கும் நிலையிலுள்ளார் என்று கூறுதல் இயலாது. ஒருவர் உடல் ஆரோக்கியமும் வலிமையும் உள்ளவராக இருந்தாலே அவர் தம் மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் காக்கும் தகுதி உடையவராகக் கருதப்படுவர். ஒருவர் நொடிப்பு நிலையிலிருந்தாலும், பிச்சை எடுத்தே வாழ்க்கையை நடத்தினாலும், அவர் வலிமையுடையவராக இருக்குங்கால் மனைவியைக் காத்தல் அவரது கடமையாகிறது.
<b>2. வாழ்க்கைப் பொருளுதவி அளிக்க மறுப்பு மற்றும் கவனியாமை</b>: மனைவி, தாய் தந்தையர் மற்றும் குழந்தைகளைக் கவனியாமல் இருத்தல் மற்றும் வாழ்க்கைப் பொருளுதவி அளிக்க மறுத்தல் சொல்லாலோ செயலாலோ ஏற்படலாம். இவை நேரடியாகவோ மறைவாகவோ இருக்கலாம்.
<b>3. வாழ்க்கைப் பொருளுதவி வேண்டுவோர்வறிய நிலையில் இருத்தல் வேண்டும்</b: வாழ்க்கைப் பொருளுதவி வேண்டுமுன்னர் தாய் தந்தையர், குழந்தைகள் மற்றும் மனைவி தங்களுக்கான வாழ்க்கைத் தேவைகளைப் பெற இயலாத நிலையில் இருக்க வேண்டும். ஒருவருக்குத் தேவையான செல்வம், சொத்து, நிலம் முதலியன இருக்குங்கால் அவர் வாழ்க்கைப் பொருளுதவி பெறுதல் இயலாது. வாழ்க்கைத் தேவைகளைப் பெற இயலாத நிலையில் உள்ள மனைவி மட்டுமே சீவனாம்சம் பெற இயலும்.
<b>4. திருமணமான உரிமை வயதடையாப் பெண்</b>: திருமணமான உரிமை வயதடையாப் பெண் தன்<noinclude></noinclude>
1zhci489brb7fi4skgqrytrucpn4st3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/213
250
647278
1948155
2026-06-20T08:25:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கணவர் நன்னிலையில் இருந்தால் சீவனாம்சம் வேண்டலாம். அவ்வாறு கணவர் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கமுடியாதபோது தந்தை நன்னிலையில் இருந்தால், தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவனாம்சம்|185|சீவானந்தம், ப.}}</noinclude>கணவர் நன்னிலையில் இருந்தால் சீவனாம்சம் வேண்டலாம். அவ்வாறு கணவர் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கமுடியாதபோது தந்தை நன்னிலையில் இருந்தால், தந்தையிடமிருந்து சீவனாம்சம் வேண்டலாம்.
5. கணவரிடமிருந்து வாழ்க்கைப் பொருளுதவி வேண்டுங்கால் மனைவி பிற ஆடவருடன் சேர்ந்து வாழ்தல் கூடாது; மனைவி பிற ஆடவருடன் சேர்ந்து வாழுங்கால் கணவன் வாழ்க்கைப் பொருளுதவி அளிக்க வேண்டியதில்லை. ஆனால், ஒரு தடவை மட்டும் பிற ஆடவருடன் புணர்தலால் மனைவி வாழ்க்கைப் பொருளுதவி பெறும் தகுதியை இழந்து விடமாட்டாள். மனைவி பிற ஆடவருடன் தொடர்ந்து புணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே தகுதி இழப்பாள், பிற ஆடவருடன் நேசமாக இருத்தல் புணர்தல் ஆகாது.
6. மனைவி கணவருடன் வாழ மறுத்தல் கூடாது. காரணமின்றி மனைவி கணவருடன் வாழ மறுத்தல் கூடாது. ஆனால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டாலோ வேறு பெண்ணுடன் வசித்தாலோ மனைவி கணவருடன் வாழமறுத்தல் தகுந்த காரணமாகும். எனவே மேற்கண்ட காரணங்களால் வாழ்க்கைப் பொருளுதவி வேண்டலாம்.
7. கணவர், மனைவி ஆகிய இருவர் சம்மதத்துடன் மனைவி தனியாக வாழுங்கால் வாழ்க்கைப் பொருளுதவி பெறுதல் இயலாது.
<b>நீதிமன்றங்கள்</b>: சீவனாம்சம் குறித்த வழக்குகளை மாநகரக் குற்றவியல் நீதிபதிகள் அல்லது முதல் வகுப்புக் குற்றவியல் நீதிபதிகள் மட்டுமே விசாரணை செய்யலாம், வேறு எந்த நீதியதிகளும் பிறப்பித்திடும் கட்டளைகள் செல்லாதவை ஆகும். சீவனாம்சம் குறித்த வழக்குகளை எதிர்தரப்பினர் எந்த நீதிமன்ற எல்லைக்குள் வசிக்கின்றாரோ அங்கோ அல்லது அவர் அல்லது அவர் மனைவி வசித்திடும் நீதிமன்ற எல்லைக்குள்ளோ, அவர் இறுதியாகத் தம் மனைவியுடன் எங்கு வசித்தாரோ அந்த நீதிமன்றத்திலோ விசாரணை செய்யலாம்.
<b>வாழ்க்கைப் பொருளுதவியின் அளவு</b>: நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்படும் வாழ்க்கைப் பொருளுதயிவின் அளவு ரூபாய் ஐந்நூறுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நீதிபதி எவருக்குச் சீவனாம்சம் அளித்திடல் வேண்டுமெனக் கட்டளையிடுகின்றாரோ அவருக்கு அளித்திடல் எதிர் மனுதாரரின் கடமையாகும். கட்டளை பிறப்பித்த நாளிலிருந்து வாழ்கைப் பொருளுதவி பெற மனுதாரர் தகுதி படைத்தவராவார். ஆனால், நீதிபதி, விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து மனுதாரர் வாழ்க்கைப் பொருளுதவி பெறத் தகுதியுடையவர் என அறிவிக்கலாம். அப்போது அந்நாளிலிருந்து வாழ்க்கைப் பொருளுதவி பெற மனுதாரர் தகுதி படைத்தவராவார். நீதிபதி கட்டளையிட்ட பின்னரும் வாழ்க்கைப் பொருளுதவி அளிக்காத எதிர்மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம். வாழ்க்கைப் பொருளுதவியைச் செலுத்தாதவர் மீது தண்டம் வசூலிக்க எம்முறை பின்பற்றப்படுகின்றதோ அம்முறையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.
<b>சீவனாம்சக் கட்டளையை நீக்குதல்</b>: மனைவி பிற ஆடவருடன் தொடர்ந்து புணர்ந்து வாழ்தல் அல்லது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்தல் அல்லது கணவர் மற்றும் மனைவி தனித்தனியாக வாழ இசைந்து அவ்வாறு வாழ்வது நிரூபிக்கப்பட்டால் நீதிபதி சீவனாம்சம் குறித்துத் தான் இட்ட கட்டளையை நீக்கிவிடலாம். குற்றவியல் நீதிபதி சீவனாம்சம் குறித்துக் கட்டளை பிறப்பித்தபின் உரிமையியல் நீதிமன்றம் ஏதாவது முடிவு செய்திருப்பின். குற்றவியல் நீதிபதி தான் பிறப்பித்த கட்டளையைக் காப்பாற்றலாம்; நீக்கிவிடலாம். அதுபோன்று சீவனாம்சம் குறித்து நீதிபதி கட்டளையிட்ட பின் மனைவி மறுமணம் புரிந்திருப்பின், நீதிபதி தான் ஏற்கெனவே பிறப்பித்த கட்டளையை நீக்கிவிடலாம்.
சீவனாம்சம் பெறுபவரின் வாழ்க்கைச் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பின் அதனைக் கருத்திற்கொண்டு சீவனாம்சத்தின் அளவைக் குற்றவியல் நீதிபதி மாற்றியமைக்கலாம். அவ்வாறு மாற்றம் செய்யுங்கால் சீவனாம்சத் தொகையின் அளவு ரூ.500/க்கு மேல் மிகுதல் ஆகாது.{{Right|<b>மீ.அ.</b>}}
<section end="சீவனாம்சம்"/>
<section begin="சீவானந்தம்,ப."/>
{{dhr}}
<b>சீவானந்தம்,ப.</b> (1907-1963) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவருள் ஒருவர்; சுயமரியாதை இயக்கம், இந்தியத் தேசிய காங்கிரசு ஆகியவற்றிலும் இருந்துள்ளார்; சிறந்த மேடைப் பேச்சாளர்; இதழியல், இலக்கியத் துறைகளிலும் குறிப்பிடத்தக்கவாறு பணியாற்றியுள்ளார்.
சீவானந்தம் (சீவா) குமரி மாவட்டத்திலுள்ள பட்டம் பூதப் பாண்டி என்னும் ஊரில் 1907-இல் பிள்ளைக்கும் உமையம்மாளுக்கும் மகவாய்ப் பிறந்தார். இவரது இயற் பெயர் சொரிமுத்து; மூக்காண்டி என்னும் பெயரும் உண்டு.
இவர் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடுதலையை நாடகம், வலியுறுத்தும் செய்யுள்கள், புதினம் ஆகியவற்றை எழுதியுள்ளதாகத் தெரிகிறது.<noinclude></noinclude>
oenfr5fk04faih8iksvm7rijpydr2w7
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/424
250
647279
1948160
2026-06-20T08:30:45Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|402 பசு}}</noinclude>தலைப் புறம் வர வரச் சரிவாகவும், முதுகெலும்பு கண்ணுக்குப் புலனாகாமலும், முன்னங்கால்களை விடத் தொடைகள் நீளமாக மெலிந்தும், கால்களில் சதைப் பற்று இராமையும், எலும்பின் அமைப்பு கண்ணுப் புலனாவதும், இரு புறமும் சரிந்திருத்தலும், வயிற்றின் சரிவு முன் புறம் புடைத்தும், பின் புறம் சூம்பியும், அடி வயிறு, பெரிய மடி அமைவதற்கு ஏற்ப அகன்றும்,பால் ஊறிய பின்னர், மடியின் அடிப் பக்கம் அகன்று, பின் பக்கம் ரப்பர் பந்து போல் உருண்டு, தோற்றம் தருவதும், தொட்டுப் பார்க்கையில், பட்டுப் போல மென்மையாகவும், மடியில் பால் நரம்புகள் நீளமாகப் பரவி, கிளைத்துக் கண்களுக்கு எளிதில் புலனாகும் விதத்தில், காம்பு, நாக்கும் சமமாக ஒழுங்காக அமைந்திருப்பதும், இக்காம்புகள் சதுர வடிவிலும், கை விரல்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் வகையில் வசதியாகவும், பாலைக் கறந்த பின்னர், மடி காலியான பை தொங்குவதை போலப் பரவி இருப்பதும், மடிப்புகளுடன் வெறும் தோல் போல இருப்பினும், கூடுதலாகப் பால் தரக் கூடிய பசு மாட்டிற்கு உரியவையாகும்.
<b>உணவு முறை</b>. பொட்டு வகை, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, கோதுமைத் தவிடு, தோல் போன்ற சத்துணவு வகைகளையும், சோளத் தட்டை, மக்காச் சோளத் தாள், தினைத் தாள், சாமைத் தாள், ராகித் தாள், வைக்கோல் கட்டை போன்ற உலர்ந்த தீவனங்களையும், புல் வகைகளையும், பில்லிப் பயிறு, நரி பயற்றங் கொடி போன்ற கொடிப் பச்சைத் தீவன வகைகளையும், அகத்தி, அத்தி, அரசு, ஆச்சா ஆல், இலந்தை, இலவு, நெல்லி, பலா, புரசு, புன்கு, பூவரசு, மஞ்சள் கடம்பு , மந்தாரை, இலுப்பை, கருங்காலி, கருவேல், ஓதி, ஊஞ்சை, நாவல், நுணா, தூங்குமூஞ்சி, நிலப் பாலை, முருங்கை, கல்யாண முருங்கை, கொடுக்காப்புளி, வாத நாரயணன், வில்வம், விளா, வெள்வேல், வேங்கை, வேம்பு, மலையாத்தி, மலையிச்சை, மூங்கில், வாகை வகை ஆகிய மரங்களின் தழைகளையும், மாடுகள் விரும்பி உண்ணுகின்றன.
<b>சினை மாட்டிற்கான உணவு</b>. சினை மாட்டிற்கான உணவை எளிதில் செரிக்கும் வகையில், போதிய அளவு கொடுக்க வேண்டும். ஒரு பங்கு பருத்திக் கொட்டை, ஒரு பங்கு தவிடு, இரண்டு பங்கு புண்ணாக்கு, இரண்டு பங்கு தானியக் குறுணை, ஒரு பிடி உப்பு, உலோகச் சத்துக் கலவை ஆகியவற்றைக் கலந்து சினை மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.
கோதுமைத் தவிடு கொடுத்தால் மிகவும் நல்லது. சினை மாட்டிற்குச் செரிமானக் குறைபாடு ஏற்படாதிருக்கும் படி வைக்கோல் குறைத்துப் புல் கொடி, பசுந்தழை, அகத்திக் கீரை போன்ற பசும் தீவன வகைகளைக் கொடுத்தல் நலம்.
<b>கறவை மாட்டிற்கான உணவு</b>. பால் மிகுதியாகப் பெறக் கறவை மாட்டிற்குப் பசும் புல், பருத்திக் கொட்டை, தேங்காய்ப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, தவிடு, குறுணை உப்பு, உலோகச் சத்துக் கலவை, அகத்திக் கீரை இவற்றைக் கொடுத்து வர வேண்டும். கம்பங் கூழ், கேழ்வரகுக் கூழ், பூசணி, சுரைக்காய், வெள்ளரி, கிருணி , தர்ப்பூசணி ஆகியவற்றைக் கறவை மாட்டிற்குக் கொடுத்து வந்தால், கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்பத்தையும், வெக்கை நோயையும் தடுக்கலாம்.
<b>சேர்க்கை வகை</b>. பசுவைச் சேர்க்கை செய்யும் முறையில், ஐந்து நடைமுறைகள் உள்ளன. அவை உள் சேர்க்கை முறை, அயல் சேர்க்கை முறை, தரம் உயர்த்தும் முறை, சந்ததிச் சேர்க்கை முறை, தேர்வுச் சேர்க்கை முறை என்பன.
<b>உள் சேர்க்கை முறை</b> (Inbreeding), தாய்–மகன், தகப்பன்–மகள், சகோதரன்–சகோதரி போன்ற நெருங்கிய, நேர் உறவு உள்ள மாடுகளுக்குள் சேர்க்கையை ஏற்படுத்தி, இனப் பெருக்கம் செய்யும் முறை உள் சேர்க்கை முறையாகும்.
<b>அயல் சேர்க்கை முறை</b> (Cross breeding). ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இனங்களை, அதாவது, உள் நாட்டுப் பசுவுடன், அயல் நாட்டுப் பொலி காளையைச் சேர்த்து, இனப் பெருக்கம் செய்யும் முறையே, அயல் சேர்க்கையாகும். இச்சேர்க்கையால், சில சமயங்களில், அரிய, உயரிய சிறந்த கூடுதல் வருவாய் தரும் இனங்கள் தோன்றக் கூடும். சில சமயங்களில், பெரும் பயன் தரக் கூடிய இறைச்சி மாடுகளுக்கு உருவாக்கக் கூடும். பால் தரும் மாடுகள் உருவாகாமல் போவதும் உண்டு. உறுதியற்ற தன்மை நிலவுவதால், இம்முறை மிகுதியும் பின் பற்றப் படுவதில்லை.
<b>தரம் உயர்த்தும் முறை</b> (Grading up). தரம் குன்றிய பசுவை உயர் வகைப் பொலிகாளையுடன் சேர்த்து, இனம் பெருக்கும் முறைக்குத் தரம் உயர்த்தும் முறை என்று பெயர். இச்சேர்க்கையினால் பிறக்கும் கன்று, நல்ல குருதியும், கெட்ட குருதியும் சம அளவில் கொண்டிருக்கும். அவ்வாறு பிறந்த புதுச் சந்ததிகளை, அதே வகைச் சிறந்த பொலிக் காளையுடன் சேர்த்துக் கொண்டே போனால், படிப் படியாகக் கெட்ட குருதி குறைந்து, நல்ல குருதி பெருகித் தரம் உயர்ந்த இனம் உருவாகும்.{{nop}}<noinclude></noinclude>
ae3jnxfklbbsk04zuyp78gag4lju42z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/214
250
647280
1948163
2026-06-20T08:40:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 214 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 135 |oTop = 35 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|சீவானந்தம், ப.}} தாழ்த்தப்பட்ட சாதியினர் உரிமைக்காக 1924-இல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீவானந்தம், ப.|186|சீறாப்புராணம்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 214
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 135
|oTop = 35
|oLeft = 63
|Location = center
|Description =
}}
{{center|சீவானந்தம், ப.}}
தாழ்த்தப்பட்ட சாதியினர் உரிமைக்காக 1924-இல் நடந்த வைக்கம் போராட்டத்தில் இவர் கலந்துகொண்டதால் பள்ளிப் படிப்பைக் கைவிட நேர்ந்தது. சிலகாலம் நெல்லை மாவட்டம் சேரன்மா தேவிப் ‘பரத்துவாச ஆசிரமத்தில்’ தங்கியிருந்தார். பின்பு, காரைக்குடிக்கு அண்மையிலுள்ள சிராவயல் என்னும் ஊரில் ‘காந்தி ஆசிரமம்’ என ஒன்றைத் தோற்றுவித்தார்; வோனத்தம் என்னும் பெயரைத் தாமே வைத்துக்கொண்டார்; அடுத்துத் தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டு ‘உயிர் இன்பன்’ எனப் பெயர் கொண்டிருந்தார்.
சீவா, 1927-இல் காந்தியடிகளைச் சந்தித்து வருணாசிரமக் கொள்கைக்குத் தம் மறுப்பைத் தெரிவித்தார்; சிராவயலுக்கு அருகில் உள்ள நாச்சியார்புரத்தில் ‘உண்மை விளக்க நிலையம்’ என்னும் புதிய ஆசிரமம் தொடங்கினார்.
சட்ட மறுப்புப் போராட்டம் காரைக்குடியில் 1932-இல் இவரது தலைமையில் நடந்தது. காலப் போக்கில் இவர் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார்.
இவர் ‘சனசக்தி’ வார இதழை 1937-இல் தொடங்கினார்; தொழிலாளர் போராட்டங்கள் பலவற்றை நடத்தினார்; புதிய தொழிற் சங்கங்களை உருவாக்கினார்; பின்னர் 1939-இல் தொடங்கிய உலகப் போரை எதிர்த்துப் பேசியமைக்காக இவர் இரண்டரை மாதச் சிறைத் தண்டனை பெற்றார்; விடுதலைக்குப்பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணம்மா என்பாரை மணந்துகொண்டார்.
சோவியத்து நாட்டைச் செருமனி (Germany) 1942-இல் தாக்கியதால், பொதுவுடைமைக் கொள்கையாளர் செருமனிக்கு எதிராகக் கிளம்பினர். செருமனியை எதிர்த்த ஆங்கில அரசு பொதுவுடைமையாளரை விடுதலை செய்தது.
நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள், தமிழகத் தமிழரோடு இணைய விரும்பினர். சீவா ‘அகில திருவிதாங் கூர்த் தமிழ் மாநாடு’ கூட்டித் தமிழர்களை ஒருங்கிணைத்தார்.
பம்பாயில் விமானப்படையினரும், கப்பற்படையினரும் தொடங்கிய வேலைநிறுத்தம் 1946-இல் உள்நாட்டுப் போராய் வளர்ந்தது. இவர் அதனை ஆதரித்ததால் அடக்குமுறைக்கு உள்ளானார். தம் முதல் மனைவி காலமானதால் சீவா 1948-இல் பத்மாவதி என்பாரை மணந்தார். இவருக்கு மூன்று மக்கள் பிறந்தனர்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, 1951-இல் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்தது. அதன் பின் 1952-இல் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் இவர் போட்டியிட்டுத் தென்சென்னைச் சட்டமன்ற உறுப்பினரானார். சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை (Senate) உறுப்பினராக 1955-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சீவா 1951க்குப்பின் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார். ‘தாமரை’ என்னும் இலக்கியத் திங்களிதழை 1959-இல் தொடங்கினார். ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ என்னும் அமைப்பை 1961 இல் உருவாக்கினார். மாசுக்கோவில் 1962-இல் நடந்த அமைதிக் குழு மாநாட்டில் கலந்துகொண்ட பின் இந்தியா திரும்பினார். இந்திய சீன எல்லைச் சிக்கல், சீனப் படையெடுப்பு வரை (1962) முற்றியது. சீவா சீனத்தின் போக்கைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களில் பேசினார். அதனால் இவரது உடல்நலங் குன்றியது. இவர் 1963-இல் காலமானார். இவரது பெயரில் ‘சீவா போக்கு வரத்துக்கழகம்’ இயங்கி வருகிறது.{{Right|<b>பா.ம.</b>}}
<section end="சீவானந்தம்,ப."/>
<section begin="சீறாப்புராணம்"/>
{{dhr}}
<b>சீறாப்புராணம்,</b> ஓ இசுலாமியச் சமயத் தமிழ்ப் பெருங்காப்பியமாகும். நபிகள் நாயகம் முகம்மது (சல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. நபிகளின் வாழ்க்கையை அரபு மொழியில் சீறதுன்னபி என்னும் சொல்லால் குறிப்பர். இச்சொல்லைச் சீறத் அல் நபி எனப் பிரிக்கலாம். அந்த அல்லது இந்ததீர்க்கதரிசியின் வாழ்க்கை என்பது அதன் பொருளாகும். (சீறத் -வாழ்க்கை, அல்- அந்த அல்லது, இந்த, நபி - தீர்க்க<noinclude></noinclude>
ndhdx8hl0grayotzm0s993jjtncnjbt
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/425
250
647281
1948164
2026-06-20T08:45:08Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1948164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசு 403}}</noinclude><b>சந்ததிச் சேர்க்கை முறை</b> (Live breeding). ஒரு சந்ததிக் கன்று, மற்றொரு சந்ததிக் காளையைச் சேர்க்கும் இம்முறை வழக்கத்தில் மிகுதியும் உள்ளது.
<b>தேர்வுச் சேர்க்கை முறை</b>. ஒரே இனத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட காளையுடன், பசுவைச் சேரச் செய்யும் முறைக்குத் தேர்வுச் சேர்க்கை என்று பெயர். இச்சேர்க்கையில் பிறக்கும் கன்று, உயர்ந்த வகையாக விளங்குகிறது.
இன்று பரவலாகக் கையாளப் படும் முறை, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் (Artificial insemination) முறையாகும். இம்முறையில், காளையும், பசுவும் ஒன்றுக்கொன்று நேராகச் சேருவதில்லை. உயர்ந்த வகைக் காளை விந்தைச் சேகரித்துப் பல பசுக்களைக் கருத்தரிக்கச் செய்கிறார்கள். இதற்கெனப் பயனாகும் ஒரு கருவி மூலம் ஒரு துளி விந்தைப் பசுவின் கருப்பையில் நேராகச் செலுத்திக் கருத்தரிக்கச் செய்வர். ஒரு காளை, ஒரு பசுவைக் கருத்தரிக்கச் செய்யும் விந்தைச் சேமித்து, இம்முறையில், நூற்றுக் கணக்கான பசுக்களைக் கருத்தரிக்கச் செய்யலாம். இயற்கை முறையில், சில சமயம் பசு கருத்தரிக்காமல் போய் விடுவது பசுவை உறுதியாகக் கருத்தரிக்கச் செய்யும். பொருளாதார முறையிலும் இது சிக்கனமானது.
<b>வெக்கை</b>. இது ஒரு கடுமையான தொற்று நோயாகும். இது மிக விரைவில், ஏனைய பசுக்களுக்கும், பரவித் தாக்கக் கூடியது. காய்ச்சல் மிகுதியாக இருத்தல், மூக்கு, கண், வாய், ஆசன வாய் போன்ற உறுப்புகள் சிவந்திருத்தல் ஆகியன இந்நோயின் அறிகுறியாகும். நுண்ணுயிர்க் கொல்லியால், வாய்ப் பகுதியை நன்றாகக் கழுவுதல், மலச்சிக்கலைப் போக்க விளக்கெண்ணெய் தருதல், நன்கு செரிமானம் ஆகக் கஞ்சியுடன் 25 துளி கார்பாலிக் அமிலம் தருதல், நோய் வாய்ப் பட்ட மாட்டைத் தனித்து வைத்தல் இவை, இந்நோயைக் குணப் படுத்த உதவும்.
வெக்கையில் பல வகை உண்டு. அவை, அனல் பறந்த வெக்கை, அவல் வெக்கை, அழல் வெக்கை, உடல் வெக்கை, உள் வெக்கை, குடல் வெக்கை, சீத வெக்கை, குத வெக்கை, பெரு வெக்கை, வறு வெக்கை, வெப்பு வெக்கை போன்றவையாகும்.
<b>அனல் பறந்த வெக்கை</b>. சிறுநீர், குருதி போல் காணப் படுதல், இந்நோயின் அறிகுறியாகும். பச்சைப் பயிறு, எள், தென்னம்பாளை ஆகியவற்றைச் சம அளவில் கலந்து, அரைத்து, மோரில் கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
<b>அழல் வெக்கை</b>. சாணத்துடன் சீதம் கலந்து வருதல் இந்நோயின் அறிகுறியாகும். வசம்பு, கவிழ் தும்பை இரண்டையும் சம அளவு எடுத்து, இடித்துச் சாறு பிழிந்து, எண்ணெய் கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
<b>உடல் வெக்கை</b>. கருநொச்சி இலை அல்லது இலவம் இலை இரண்டினுள் ஏதேனும் ஒன்றைக் கைப்பிடி அளவு காலை, மாலை இரு வேளை கொடுத்து வந்தால், இந்நோய் குணமாகும்.
<b>உள் வெக்கை</b>. அசை போடாமலிருத்தல், சிறுநீர் குறைந்து வருதல், உடல் சிவந்து விடுதல், சாணம் தீய்ந்து வருதல், இவை இந்நோயின் அறிகுறியாகும். நெய், மிளகு இவற்றுடன் அகத்திப் பட்டைச் சாறு கலந்து கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
<b>குடல் வெக்கை</b>. பெரும் இரைச்சலுடன், சாணம் கழித்தல், குடல் இற்று விழுதல் ஆகியன இந்நோயின் அறிகுறியாகும். ஒரு பிடி பிரண்டை, ஒரு கொத்து மிளகாய் இரண்டையும் மை போல நன்கு அரைத்துக் காட்டாமணக்கு இலையுடன் கொடுத்தால், இந்நோய் குணமாகும்.
<b>சீத வெக்கை</b>. உணவில் விருப்பமின்மை, மூக்கிலிருந்து அடிக்கடி நீர் வடிதல், தலை நடுக்கம், மயிர் சிலிர்த்தல் இவை இந்நோயின் அறிகுறியாகும். கற்பூரவல்லி இலையை அரைத்து, நல்லெண்ணெயில் குழைத்துக் கொடுப்பதாலும், எள்ளை நன்கு அரைத்து, வெண்ணெயில் கலந்து, உருட்டித் தருவதாலும், இந்நோய் குணமடையும்.
<b>சூத வெக்கை</b>. சாணத்துடன் குருதி வருதல், சாணம் கழிசலாக வெளி வருதல், கால்கள் நிலை கொள்ளாது நடுங்கியபடி இருத்தல், உணவில் விருப்பமின்மை இவை இந்நோயின் அறிகுறியாகும்.
<b>பெரு வெக்கை</b>. சாணம் கெடு நாற்றமாக வீசுதல் இந்நோயின் அறிகுறியாகும். கடுக்காய், கடப்பம் பட்டை இரண்டையும் நன்றாக அரைத்து, மோரில் கலந்து கொடுத்தல், சிறிது நேரம் கழித்து நீர் தருதல் ஆகியவற்றால் இந்நோய் குணமாகும்.
<b>வறு வெக்கை</b>. சாணம் ஆட்டுப் புழுக்கைப் போலச் சிறு, சிறு உருண்டையாக வெளி வருதல் இந்நோயின் அறிகுறியாகும். அதிமதுரம் , சீரகம், கிராம்பு, செண்பகப் பூ. ஏலக்காய் இவற்றை அரைத்து, எலுமிச்சம் பழம், பால் கலந்து கொடுக்க, இந்நோய் குணமாகும்.
<b>வெப்ப வெக்கை</b>. சாணம் சீதமாகக் கழிதல், மலச் சிக்கல், வயிற்றுப் பொருமல், களைப்படைதல், உணவில் விருப்ப-<noinclude><br>{{rh|அ. க. 14–26அ}}</noinclude>
8jj3adfmpg25i7n5u69s3ztay623ivr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/215
250
647282
1948165
2026-06-20T08:57:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தரிசி) சீறதுன்னபியின் சுருக்கமே சீறா ஆகும். புராணம் என்பது வடமொழியில் பழைமையான ஒரு கதையைக குறிக்கும். இங்குப் புனிதமான வரலாறு எனப் பொர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீறாப்புராணம்|187|சீனக் கிளர்ச்சி}}</noinclude>தரிசி) சீறதுன்னபியின் சுருக்கமே சீறா ஆகும். புராணம் என்பது வடமொழியில் பழைமையான ஒரு கதையைக குறிக்கும். இங்குப் புனிதமான வரலாறு எனப் பொருள்படுகின்றது. இசுலாமியப் பெருங்காப்பீயமான இந்நூல் தண்டியாசிரியர் கூறிய காப்பிய இலக்கணம் பொருந்த அமையப் பெற்றுள்ளது. அராபிய வாழ்வியலை அரவணைத்துச் சென்றாலும் தமிழ்க் காப்பியக் காதல் நெறியும் தமிழ் இலக்கண மரபு முறையும் அமைந்திருப்பதால் இக்காப்பியம் இசுலாமியப் பண்பாட்டையும், தமிழ்ப் பண்பாட்டையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.
இக்காப்பிய ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார் (கி.பி. 1642-1703). இவர் முன்னோர் அரபு நாட்ட சார்ந்தவர். ஆயினும், இவர் திருநெல்வேலியைச் நாகலாபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். எட்டயபுர மன்னர் அவையில் அவைக்களப் புலவராக வீற்றிருந்தார். வள்ளல் சீதக்காதியும், வள்ளல் அபுல் காசிமும் தூண்ட, கீழக்கரை செய்கு சதக்கத்துல்லா அப்பாவும் அவர் மாணவரும் கதை தர, இக்காப்பியத்தை இயற்றினார். இக்காப்பியம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாயினும் கி.பி. 1842-இல்தான் அச்சேறியது. சுவடித் தமிழ் நூல்களுள் முதன்முதலில் அச்சேற்றப்பட்ட நூல் சீறாப்புராணமாகும்.
முகம்மது நபியைத் தலைவராகவும் கற்சாபீபியைத் தலைவியாகவும் கொண்ட இவ்வரலாற்றுக் காப்பியம் முப்பெருங் காண்டங்ளையும் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாக்களையும் கொண்டதாக விளங்குகிறது. திருக்குர் ஆன்மறை உரைகளும், திருக்குறள் கருத்துக்களும் விரவியுள்ள இக்காப்பியம் நபி பெருமானின் பிறப்பு, திருமணம், ஆற்றல், வெற்றி ஆகிய அரும்பெறற் செய்திகளை அழகுறப் புனைந்து காட்டுகிறது. முதற் காண்டமான விலாதத்துக் காண்டம் பாட்டுடைத் தலைவரின் இளமைக்கால வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. ‘விவாதத்’ என்ற அரபுச் சொல்லுக்குப் ‘பிறப்பு’ என்பது பொருள். இறுதித் தூதர் நபிகளின் பிறப்பு இக்காண்டத்தில் முதன்மைப்படுத்தப் பெறுகின்றது. இரண்டாம் காண்டமான நுபுவ்வத்துக் காண்டத்தில் நபிகளுக்கும் அவர்தம் நண்பர்களுக்கும் பகைவர்கள் செய்த கொடுமைகள் இடம்பெறுகின்றன. நபி பெருமானாரின் அறிவுரைகளும் தீர்க்கதரிசனங்களும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. நபி எனுஞ்சொல் தொடர்புடையதே நுபுவ்வத்துக்காண்டம், இறுதிக் காண்டமான இசிறத்துக் காண்டத்தில் காப்பியத் தலைவர் அறப்பணிக்காகப் பிறப்பிடம் துறந்து வேற்றிடம் செல்லும் புனித பயணக் காட்சியைக் காணலாம். இசிறந்து என்ற அரபுச் சொல்லிற்கு இடம் பெயரல் என்பது பொருள். மக்காவிலிருந்து மதினாவிற்கு முகம்மது நபி சென்ற நிகழ்ச்சி இப்பகுதியில் கவிநயம் நனி சொட்டச் சொட்டப் பாடப் பெறுகின்றது. விலாதத்துக் காண்டம் 24 படலங்களையும், நுபுவ்வத்துக் காண்டம் 21 படலங்களையும், இசிறத்துக் காண்டம் 47 படலங்களையும் கொண்டிலங்குகின்றன. யாப்பமைதியில் திருத்தக்க தேவரையும் கம்பரையும் புலவர் உமறு பின்பற்றியுள்ளார்.
நபி நாயகத்தின் அறவாழ்வு அழகுறப் பாடப் பெற்றாலும் நபியின் வரலாறு முழுதும் இக்காப்பியத்தில் இடம் பெறாததால் சின்ன சீறா, சீறாப்புராணம் இரண்டாம் தொகுதி போன்ற நூல்களும், இப்புராணத்தைத் தழுவிக் கீர்த்தனம், நாடகம், வண்ணம், விளக்கு, வெண்பா, அம்மானை, பல வண்ண மாலை போன்ற பல சார்பு நூல்களும் எழுந்தன.
சீறாப்புராணத்திற்குப் பலர் உரை எழுதியிருப்பினும் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர் எழுதிய உரையே முழுமையான முதல் உரையாகப் போற்றப் பெறுகின்றது சிறப்பு உரையாசிரியராகத் திகழ்பவர் டாக்டர் கா.மு. சரீபு ஆவார். உமறுப்புலவர் பிற இலக்கியக் கருத்துகளைக் கையாண்ட வகைகளை இவ்வுரையாசிரியர் தமது உரையில் கூறுவதுடன் அரபுச் சொல், பாரசீகச் சொல் ஆகியவற்றிற்கு விளக்கமும் தத்துள்ளார். அறியாமைக்கும் மெய்யறிவுக்குமிடையே தோன்றும் போராட்டத்தை இக்காப்பியத்தில் காணலாம்.{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="சீறாப்புராணம்"/>
<section begin="சீனக்கடல்"/>
{{dhr}}
<b>சீனக்கடல்</b>: பசுபிக்குமாக் கடலின் ஒரு பகுதியான இது மலாயா முந்நீரகத்திற்கும் சப்பான் நாட்டுக்குமிடையே உள்ளது. இதைத் தெற்குச் சினக்கடல், கிழக்குச் சீனக்கடல் என்று பார்மோசாத் தீவு பிரிக்கிறது. தெற்குச் சீனக்கடல், பார்மோசா, பிலிப்பைன் தீவுகள், போர்னியோ, மலாயா முந்நீரகம், இந்தோசீனா, தென்கிழக்குச் சீனா முதலியவைகளால் சூழப்பட்டுள்ளது. கிழக்குச் சீனக் கடலைச் சூழ்ந்து பார் மோசா, சப்பான் தீவுகள், தென்கொரியா, கிழக்குச் சீனா ஆகிய பகுதிகள் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சீனக்கடல்"/>
<section begin="சீனக் கிளர்ச்சி"/>
{{dhr}}
<b>சீனக் கிளர்ச்சி</b>: கிளர்ச்சி இயக்கங்கள் சீனாவிற்குப் புதிதல்ல; மிகப் பழமையானவையாகும். முதல் ஆங்கிலேயப் போருக்கு முன்பு (கி.பி. 1839-42) இருபது ஆண்டுகளில் குவாங்கி, ஆன்சி (Hansi) வீச்சோவ் (Kweichow), பார்மோசா (Formosa) ஆகிய இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. பெருங் கிளர்ச்சிகள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின்<noinclude></noinclude>
dqxl9b8vu6rioo8embuie4u7f36uxpo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/254
250
647283
1948178
2026-06-20T11:48:45Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 254 |bSize = 480 |cWidth = 337 |cHeight = 229 |oTop = 65 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|கௌசாம்பி அரண்மனைச் சுவர்}} அதைத் தொடர்ந்து அலகாபாது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1948178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளசாம்பி|228|கெளசாம்பி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 254
|bSize = 480
|cWidth = 337
|cHeight = 229
|oTop = 65
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|கௌசாம்பி அரண்மனைச் சுவர்}}
அதைத் தொடர்ந்து அலகாபாது பல்கலைக்கழகம் 1948 முதல் தொடர்ந்து பல அகழாய்வுகளை இங்கு மேற்கொண்டது இவ்வகழாய்வுகளின் வாயிலாக இங்கு நான்கு காலகட்டத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது.
முதல் காலகட்டத்தில் (Period I) சிவப்புப் பானைகள் பயன்படுத்தப்பட்டன. அதன் காலம் கி.மு. 1165 முதல் கி.மு. 885 வரை என்றும், இரண்டாம் காலகட்டம் (Period II) வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற ஓடுகள் பயன்படுத்தப்பட்ட காலம் என்றும், அதன் காலம் கி.மு. 885க்கும் கி.மு. 605க்கும் இடைப்பட்டதாகும் என்றும் அறிஞர்கள் கணித்துள்ளனர். மூன்றாம் காலகட்டம் (Period III) வடஇந்தியப் பளபளப்பான கறுப்புப் பானையைப் பயன்படுத்திய (N.B.P.) மக்களின் காலமாகும் (கி.மு. 605 முதல் கி.மு. 45 வரை). நான்காம் பண்பாட்டுக் காலத்தை கி.மு. 45 முதல் கி.பி. 589 வரையுள்ள காலம் என்றும் கணித்துள்ளனர்.
இங்குள்ள பலிபீடம் மதிலின் கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. பலிபீடத்திலுள்ள உருவம் வடகிழக்காகப் பறப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. சதபதபிராமணத்தில் கழுகு போன்ற பலிபீடம் உள்ளமைக்குக் குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய பலிபீடத்தை மித்திர வம்சத்தைத் தோற்றுவித்த அரசன் தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஏனெனில், பலிபீடக் காலத்தைச் சார்ந்த மண் அடுக்கில் அவ்வரசனின் காசுகள் மிகுதியாகக் கிடைக்கின்றன. இங்கு விலங்குகள், மனிதர்கள் எலும்புக் கூடுகளும், மனிதர்களின் மண்டையோடும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அரண்மனை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது 315 மீ. நீளமும், 150 மீ. அகலமும் கொண்டது. இவ்வரண்மனையும் மூன்று கால கட்டங்களை உடையது. முதல் கால கட்டத்தில் அரண்மனை கூழாங்கற்களால் கட்டப்பட்டு மேலே பூச்சுக் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கால கட்டத்தில் செதுக்கப்பட்ட கருங்கற்களால் அது கட்டப்பட்டது. இதனைடுத்து வந்த காலத்தில் இது முழுமையாக அழிக்கப்பட்டுப் பின் கட்டப்பட்டது. இக்காலத்தில் செங்கற்கள் கொண்டும் கருங்கற்கள் கொண்டும் இல்வரண்மனை கட்டப்பட்டது. இதன் மேல் சுண்ணாம்புப் பூசப்பட்டுள்ளது. அரண்மனையின் முன்பகுதியில் மண்டபங்களும் அதைத் தொடர்ந்து அறைகளும் காணப்படுகின்றன. வடஇந்தியப் பளபளப்புமிக்க கருப்புப் பானை ஓடுகளின் (N.B.P.) பயன்பாட்டுக் காலத்திற்கு முன் இவ்வரண்மனை கட்டப்பட்டது என அறிஞர்கள் கருதுகின்றனர். புத்தரின்<noinclude></noinclude>
7c8tne5y6snhuwt6y4thpf1fmhionb6