விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.11 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பயனர்:Booradleyp1/books 2 481457 1954506 1933554 2026-07-18T04:44:35Z Booradleyp1 1964 /* மு. கருணாநிதி */ 1954506 wikitext text/x-wiki ==அண்ணாத்துரை== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">அண்ணாதுரை ஒருங்கிணைப்பு முடிந்தவை = 104</div> <div class="NavContent" style="display:none;"> {{Multicol}} #[[பவழபஸ்பம்]] #[[மகாகவி பாரதியார்]] #[[பெரியார் — ஒரு சகாப்தம்]] #[[நீதிதேவன் மயக்கம்]] #[[பொன் விலங்கு]] #[[நாடும் ஏடும்]] #[[அறப்போர்]] #[[எட்டு நாட்கள்]] #[[அண்ணாவின் பொன்மொழிகள்]] #[[அன்பு வாழ்க்கை]] #[[உணர்ச்சி வெள்ளம்]] #[[உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு]] #[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] # [[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] #[[தமிழரின் மறுமலர்ச்சி]] #[[அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf]] #[[அட்டவணை:சமதர்மம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf]] # [[அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf]] #[[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] #[[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:புதிய பொலிவு.pdf]] #[[அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf]] #[[அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கொள்கையில் குழப்பமேன்.pdf]] #[[அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf]] #[[அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf]] #[[அட்டவணை:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf]] #[[அட்டவணை:அன்பழைப்பு.pdf]] #[[அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:பொன்னொளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf]] #[[அட்டவணை:முக்கனி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:புராண மதங்கள்.pdf]] #[[அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf]] #[[அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf]] #[[அட்டவணை:ஸ்தாபன ஐக்கியம்.pdf]] {{Multicol-break}} #[[அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf ]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf]] #[[அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]] #[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]] #[[அட்டவணை:நமது முழக்கம்.pdf]] #[[அட்டவணை:அண்ணா பேசுகிறார்.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:கதம்பம்.pdf]] #[[அட்டவணை:போராட்டம்.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]] #[[அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf]] #[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf]] #[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]] #[[அட்டவணை:திருமணம்.pdf]] #[[அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf ]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]] #[[அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf]] #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]] #[[அட்டவணை:ஜமீன் இனாம் ஒழிப்பு.pdf]] #[[அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:இலக்கியச் சோலை.pdf ]] #[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]] #[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]] {{Multicol-end}} </div></div></div> ==சங்க இலக்கிய அட்டவணைகள்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">சங்க இலக்கிய அட்டவணைகள்</div> <div class="NavContent" style="display:none;"> === ஒருங்கிணைப்பு முடிந்தவை === #[[அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf]] # [[அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf]] #[[அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf]] #[[அட்டவணை:நற்றிணை நாடகங்கள்.pdf]] #[[அட்டவணை:நற்றிணை-2.pdf]] #[[அட்டவணை:நற்றிணை 1.pdf]] #[[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] ===மெய்ப்பு முடிந்தவை === ===மெய்ப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பவை=== ===மேலும்=== #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 3.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 4.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 5.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 6.pdf]] #[[அட்டவணை:சங்க இலக்கியச் சொல்லடைவு.pdf]] #[[அட்டவணை:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf]] </div></div></div> ==தொ. பரமசிவன்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-22</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]] #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] #[[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]] #[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]] #[[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] #[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] #[[அட்டவணை:உரைகல்.pdf]] #[[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]] #[[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]] #[[அட்டவணை:இந்து தேசியம்.pdf]] #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]] #[[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] #[[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] </div></div></div> ==மேலாண்மை பொன்னுச்சாமி== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-22</div> <div class="NavContent" style="display:none;"> ===ஒருங்கிணைக்கப்பட்டவை === #[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] #[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]] #[[அட்டவணை:என் கனா 1999.pdf]] #[[அட்டவணை:சிபிகள் 2002.pdf]] #[[அட்டவணை:உயிர் நிலம்.pdf]] #[[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]] #[[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] #[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] #[[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] #[[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] #[[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]] #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]] #[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]] #[[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]] </div></div></div> ===முழுமையாக ஒருங்கிணைக்கப் படாதவை=== #[[அட்டவணை:மரம்.pdf]] #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] ==உதிரிகள்== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை</div> <div class="NavContent" style="display:none;"> ===ஒருங்கிணைவு முடிந்தவை=== #[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]] #[[அட்டவணை:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf]] #[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]] #[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]] #[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]] #[[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]] #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]] #[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]] #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]] </div></div></div> == சு. சமுத்திரம் == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-21</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:ஒத்தை வீடு.pdf]] #[[அட்டவணை:வேரில் பழுத்த பலா.pdf]] #[[அட்டவணை:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf]] #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:சமுத்திரம் கட்டுரைகள்.pdf]] #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]] #[[அட்டவணை:லியோ டால்ஸ்டாய்.pdf]] # [[அட்டவணை:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf]] #[[அட்டவணை:பூநாகம்.pdf]] #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]] #[[அட்டவணை:சாமியாடிகள்.pdf]] #[[அட்டவணை:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf]] #[[அட்டவணை:பூநாகம்.pdf]] #[[அட்டவணை:மூட்டம்.pdf]] #[[அட்டவணை:சத்திய ஆவேசம்.pdf]] #[[அட்டவணை:தாழம்பூ.pdf]] # [[அட்டவணை:வாடா மல்லி.pdf]] #[[அட்டவணை:புதிய திரிபுரங்கள்.pdf]] #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]] #[[அட்டவணை:தராசு (சிறுகதைகள்).pdf]] #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]] </div></div></div> ==சுரதா== [[ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா/நூற்பட்டியல்]] <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">நிறைவடைந்தவை-18</div> <div class="NavContent" style="display:none;"> #[[அட்டவணை:துறைமுகம்.pdf]] #[[அட்டவணை:வெட்ட வெளிச்சம்.pdf]] #[[அட்டவணை:முன்னும் பின்னும்.pdf]] #[[அட்டவணை:பட்டத்தரசி.pdf]] #[[அட்டவணை:அமுதும் தேனும்.pdf]] #[[அட்டவணை:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf]] #[[அட்டவணை:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf]] #[[அட்டவணை:புகழ்மாலை.pdf]] #[[அட்டவணை:பாவேந்தரின் காளமேகம்.pdf]] #[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]] #[[அட்டவணை:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf]] #[[அட்டவணை:சுவரும் சுண்ணாம்பும்.pdf]] #[[அட்டவணை:தேன்மழை.pdf]] #[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]] #[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]] #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]] #[[அட்டவணை:வார்த்தை வாசல்.pdf]] #[[அட்டவணை:உதட்டில் உதடு.pdf]] #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]] #[[அட்டவணை:சிறந்த சொற்பொழிவுகள்.pdf]] #[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]] </div></div></div> == வல்லிக்கண்ணன் == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வல்லிக்கண்ணன்</div> <div class="NavContent" style="display:none;"> === ஒருங்கிணைவு முடிந்தவை=== #[[அட்டவணை:இருட்டு ராஜா.pdf]] #[[அட்டவணை:அறிவின் கேள்வி.pdf]] #[[அட்டவணை:ஓடிப்போனவள் கதை.pdf]] #[[அட்டவணை:அடியுங்கள் சாவுமணி.pdf]] #[[அட்டவணை:குமாரி செல்வா.pdf]] #[[அட்டவணை:எப்படி உருப்படும்.pdf]] #[[அட்டவணை:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf]] #[[அட்டவணை:கேட்பாரில்லை.pdf]] #[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]] #[[அட்டவணை:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf]] #[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]] #[[அட்டவணை:ஈட்டி முனை.pdf]] #[[அட்டவணை:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf]] #[[அட்டவணை:அமர வேதனை.pdf]] #[[அட்டவணை:ஒய்யாரி.pdf]] === மெய்ப்பு முடிந்தவை === #[[அட்டவணை:கொடு கல்தா.pdf]] #[[அட்டவணை:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf]] #[[அட்டவணை:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf]] ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை === #[[அட்டவணை:அருமையான துணை.pdf]]-134 #[[அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf]]-237 #[[அட்டவணை:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf]]-195 #[[அட்டவணை:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf]]-133 -??? #[[அட்டவணை:ஒரு வீட்டின் கதை.pdf]]-139 #[[அட்டவணை:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf]]-19 #[[அட்டவணை:கல்யாணி முதலிய கதைகள்.pdf]]-89 #[[அட்டவணை:கார்க்கி கட்டுரைகள்.pdf]]-130 #[[அட்டவணை:காலத்தின் குரல்.pdf]]-58 #[[அட்டவணை:குஞ்சாலாடு.pdf]]-79 #[[அட்டவணை:கோயில்களை மூடுங்கள்.pdf]]-63 #[[அட்டவணை:சகுந்தலா.pdf]]-173 #[[அட்டவணை:சரஸ்வதி காலம்.pdf]]-194 </div></div></div> == [[ஆசிரியர்:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] == === ஒருங்கிணைவு முடிந்தவை === #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]]-முழுமையடையவில்லை #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf]] === மெய்ப்பு முடிந்தவை=== #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf]] ===மெய்ப்பு பார்க்க வேண்டியவை=== #[[அட்டவணை:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf]] #[[அட்டவணை:கலைஞர் ஆட்சியில் மகளிர் மேம்பாடு.pdf]] #[[அட்டவணை:கலைஞர் சொன்ன குட்டிக் கதைகள் 1987.pdf]] #[[அட்டவணை:கலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு.pdf]] #[[அட்டவணை:கருத்தோவியம்.pdf]] 9u0hybhk3hkvw6jefgxi6ykcsoivyik பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/133 250 598249 1954449 1822548 2026-07-17T12:57:01Z ஹர்ஷியா பேகம் 15001 1954449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இண்டால்|109|இண்டிகா}}</noinclude>கைப்பற்றியிருந்தனர். வான்பாப்பனின் ஆலோசனையின்படி இண்டன்பர்கு நாசிகளின் தலைவரான அடால்பு இட்லரைச் செருமனியின் வேந்தராக (Chancellor) அமர்த்தினார். இண்டன்பர்கு அரசியல் சூழ்ச்சியினை உணரும் திறமையின்றி, இட்லரின் கைகளில் வெறும் பொம்மையாகக் காணப்பட்டார். சூழ்ச்சியின்மூலம் இட்லர் {{larger|1934}} ஆம் ஆண்டில் தமது எதிர்க்கட்சியினரை அழித்தபோது, அந்நிகழ்ச்சியினைப் பாராட்டி வாழ்த்துத் தந்தி ஒன்று இண்டன்பர்க்கின் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அத்தகு தந்தியை இவர் அனுப்பியிருப்பாரா என்பது ஐயமே. நோய்வாய்ப்பட்டிருந்த இவர் {{larger|1934}}—ஆம் ஆண்டு ஆகசுட்டு {{larger|2}}—ஆம் நாள் நியுடெக்கு (Nudeck) நகரில் காலமானார். செருமனியின் வரலாற்றின் மிகவும் சிக்கலான காலத்தில் பொறுப்பான பதவிகளிலிருந்து திறம்படச் செயலாற்றியவர் இண்டன்பர்கு. இவர் பிறருடைய உழைப்பில் தமது புகழை வளர்ப்பவர் எனவும் இக்கட்டான குழ்நிலைகளில் முடிவெடுக்க இயலாதவர் எனவும் தனித்து நின்று செயலாற்றும் திறமையற்றவர் எனவும் பலவாறாக மதிப்பிடப்பட்டுள்ளார். இயலாத நிலையிலும் பதவி விலக மனமில்லாது இறக்கும்வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த பேராசைக்காரர் என்றும் இவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் தவறுகள் பல இழைத்திருந்தாலும், நாட்டுப்பற்று மிக்கவராய்ச் செருமனியின் வளர்ச்சியிலும் உயர்விலும் அக்கறை கொண்டு, அரும்பாடுபட்டார் என்பது மறுக்க இயலாதது. {{float_right|வ.இரா}} <section end="இண்டன்பர்கு"/> <section begin="இண்டால்"/> {{dhr}} <b>இண்டால்</b> என்பவர் மொகலாயப் பேரரசர் பாபரின் மூன்றாம் மகன்; உமாயூனின் தம்பி. காம்ரான் (Kamran), அசுகாரி (Askari) ஆகிவோர் ஏனைய தம்பியர். பாபர் காலமான மூன்று நாள்களுக்குப் பின்னர் உமாயூன் அரியணை ஏறினார். அவருக்குப் பல தொல்லைகள் வந்தன. அவற்றுள் ஒன்று அவருக்கு அவர் தம்பியரால் ஏற்பட்ட தொல்லையாகும். முதல் மகனே அரசுக்கட்டிலுக்குரியவன் என்னும் மரபினை மொகலாய மன்னர்கள் பின்பற்றாத காரணத்தால், உமாயூனின் மூன்று தம்பிகளும் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தனர். உமாயூன் தம்பியர் மீது இரக்கம் காட்டி, ஒவ்வொருவருக்கும் நாட்டின் பகுதிகள் சிலவற்றை அளித்து அவற்றை அவர்கள் ஆட்சிக்குட்படுத்தினார். அதன்படி ஆள்வார் (Alwar) பகுதி இண்டாலுக்குக் (Hindal) கிடைத்தது. அதன் விளைவாகப் பேரரசு ஒன்றுபட முடியாமல் நலிந்தது. <section end="இண்டால்"/> <section begin="இண்டிகா"/> {{dhr}} <b>இண்டிகா:</b> பாரத நாட்டின் பண்டைய வரலாற்றை அறிய உதவும் பல்வேறு ஆதாரங்களுள் மெகசுதனீசு என்பார் எழுதிய இண்டிகா என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இவர் கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் மௌரியப்பேரரசுக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டவர் ஆவார். மகா அலெக்சாந்தருக்குப் பிறகு, பாரசீகம், பாபிலோன் நாடுகளை ஆண்ட செலூகசு நிகேடார், இவரைக் கிரேக்கத் துதராக மௌரியரின் பேரவைக்கு அனுப்பியிருந்தார். இத்தூதர் சந்திரகுப்தப் பேரரசனுடன் (ஆட்சிக் காலம் ஏறத்தாழ கி.மு. {{larger|325—301)}} அவன் தலைநகராகிய பாடலிபுத்திரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். இவர் ஆக்கிய நூல் இண்டிகாவாகும். அந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. இவர் கூறிய செய்திகள் பிற நூல்களில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. சே. டபிள்யூ. மெக்ரிண்டல் (J.W. Magrintal) என்ற அறிஞர்தாம் முதலில் இதைக் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர், பேரறிஞர் இசுவான்பெகுக் (கி.பி. {{larger|1846)}} என்ற செருமசனியர், சிதறிக் கிடந்த மெகசுதனீசின் குறிப்புகளைத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார். இந்தியாவைப்பற்றி மேனாட்டினர்க்கு மிகுதியாகத் தெரியாத பண்டைக் காலத்தில், இந்நாட்டைப்பற்றிப் பல தவறான கருத்துகளையும் அவர்கள் கொண்டிருந்தனர், ஓரளவு அக்குறையை நீக்க இண்டிகா உதவியது. கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற இந்நூல் நான்கு பகுதிகளையுடையது. ஆனால் இது அட்டிகா மொழிப்பிரிவைச் சேர்ந்ததா அயோனிய மொழிப் பிரிவைச் சேர்ந்ததா என்பது விளக்கமாக அறியப்படவில்லை. இண்டிகாவில் காணப்பெறும் பின்வரும் குறிப்புகள் நம் சிந்தனைக்குரியன. ‘இந்திய நாடு கிழக்கு மேற்கில் {{larger|28,000}} இசுடாடியா, தெற்கு வடக்கில் {{larger|32,000}} இசுடாடியா {{larger|(15}} இசுடாடியா {{larger|1<math>\tfrac{3}{4}</math>}} கல்லுக்கு இணையானது). நீளமும் அகலமும் கொண்ட பரந்த நாடு. காலந்தவறாமல் இங்கே மழை பெய்வதால் பஞ்சம் ஏற்பட்டதில்லை, மலைகளுக்கும் ஆறுகளுக்கும் இந்நாட்டில் குறைவில்லை. போர்க்காலத்தில் கூட, இந்தியர்கள் தமது கடமையான வேளாண்மைத் தொழிலை விட்டுவிடாமல் ஊக்கமுடன் மேற்கொள்ளுகின்றனர். போர் புரிவதில் அறக்கொள்கை பின்பற்றப்படுகிறது. சிறந்த யானைகள் இங்கே மிகுதி. இதன் காரணமாகவே அயலவர் பலர் இங்கே படையெடுக்க அஞ்சினர்’. அலெக்சாந்தர் வடமேற்கு இந்தியாவிலிருந்து கங்கைப் பகுதிக்குப் படையெடுத்துச் செல்லாததற்கு மெகசுதனீசு கூறும்<noinclude></noinclude> a7w5e8vxdudh3e2eu2ajznsnardrx22 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/122 250 615990 1954436 1819646 2026-07-17T12:39:30Z ஹர்ஷியா பேகம் 15001 1954436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடைநிலை மயக்கம்|98|இடைநிலை மேலாண்மை}}</noinclude><b>ஈரொற்று உடனிலை:</b> மொழியிடையில் மூன்று மெய்கள் மயங்கும் நிமையையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ய, ர, ழ என்னும் மெய்களையடுத்து க, ச, த, ப, ங, ஞ, ந, ம சேர்ந்து ஈறொற்றாக நிற்கும். ஏனைய இடங்களில் ஈரொற்றுகள் இணைந்து றிற்கும் நிலை இல்லை. இவற்றுள் ரகரமும் ழகரமும் குறிலிணைகள் அல்லது நெட்டெழுத்தை அடுத்தே ஈரொற்றாக அமையும். பார்க்க, வாழ்க்கை என நெடிலையடுத்தே ரகர ழகரங்கள் மெய்யெழுத்துகளாக வந்தன. (எ—டு): ய்க்க் - வேய்க்குறை; ய்ச்ச் - வேய்ச்சிறை; ய்த்த் - வேய்த்தலை; ய்ப்ப் - வேய்ப்புறம்: ய்ங்க் -வேய்ங்குறை; யஞ்ச் - வேய்ஞ்சிறை; ய்ந்த் - வேய்ந்தலை ; ய்ம்ப் - வேய்ம்புறம்; ர்க்க் - வேர்க்குறை; ர்ச்ச் - வேர்ச்சிறை ; ர்த்த் - வேர்த்தலை; ர்ப்ப் - வேர்ப்புறம்; ர்ங்க் - வேர்ங்குறை; ர்ஞ்ச் - வேர்ஞ்சிறை; ர்ந்த் - நேர்ந்தனம்; ர்ம்ப் - வேர்ம்புறம்; ழ்க்க் - வீழ்க்குறை; ழ்ச்ச் - வீழ்ச்சிறை; ழ்த்த் -வீழ்த்தலை; ழ்ப்ப் - வீழ்ப்புறம்; ழ்ங்க் - வீழ்ங்குறை: ழ்ஞ்ச் - வீழ்ஞ்சிறை; ழ்ந்த் - வாழ்ந்தனம்; ழ்ம்ப் - வீழ்ம்புறம். ரகர ழகரங்கள் தனிக்குநிலையடுத்து வருதலில்லை. உய்த்தல், எய்தல் என்பவற்றில் யசுரம் உ, எ ஆகிய குறிலையடுத்து வருதல் போல ரகரமும் ழகரமும் வருதல் இல்லை. வடமொழிக்குரிய சில மெய்ம்மயக்கங்களைத் தமிழில் எழுதும்போது செய்ய வேண்டும் மாறுதல்களைச் சுட்டும் நன்னூலார், வீரசோழியர், முத்துவீரியர் முதலியோர் அம்மெய்களுக்கிடையே உயிரைப் புகுத்திப் பிரிக்கும் முறையைச் சுட்டுகின்றனர். க, ச, த, ப பிற மெய்களுடன் மயங்குவதில்லை. வடமொழி மெய்களான க்ய், ச்ய் போன்றவற்றிற்கு இடையே உயிரைப் புகுத்தி க்கிய, ச்சிய எனத் தமிழில் ஏற்கவேண்டும். வடமொழியில் ந/ன, ய, ர, ல இவற்றை இரண்டாம் மெய்யாக உடைய, தமிழ் அமைப்பில் இல்லாத மயக்கங்களுக்கிடையேயும் இகர உயிரைப் புகுத்த வேண்டும். இவ்விடங்களில் வல்லெழுத்தாக வரும் முன்னெழுத்து இரட்டித்து வரும். (எ—டு): க்ன - க்கின - விக்கினம்; க்ய் - க்கிய - வாக்கியம்; ச்ய் - ச்சிய - வாச்சியம்; ட்ய் - ட்டிய - நாட்டியம்; க்ர் - க்கிர - வக்கிரம்; ச்ர் - ச்சிர - வச்சிரம்; த்ர் - த்திர - கோத்திரம்; ப்ர் - ப்பிர - சுப்பிரம்; க்ல் - க்கில - சுக்கிலம்; ம்ல் - மில - ஆமிலம். மகர வகரங்களில் உகரம் வரும். மகர நகரங்கள் இரண்டாம் மெய்யாக வரும்போது, முன்னெழுத்து இரட்டிப்பதில்லை. (எ—டு): த்ம - தும - பதுமம்; க்வ - க்குவ - பக்குவம். இரண்டாம் மெய்யான நகரத்தின் முன்னர் அகரம் வரும். (எ—டு): த்ந் - தந் - அரதனம். ரகரம் பிற மெய்களுடன் மயங்கும், தமிழ் மொழியமைப்பில் இல்லாத மெய்ம்மயக்கங்களில் ரகரத்திற்குப் பின்னர் உகரம் வரும். (எ—டு): ர்த் - ருத்த - அருத்தம்; ர்க் - ருக்க - சருக்கம்; ர்ப் - ருப்ப - சருப்பம்; ர்ம் - ரும - தருமம். மொழி முதலில் வரும் மெய்மயக்கங்களையும் தமிழில் உயிர் புகுத்தி எழுதுதல் மரபு. (எ—டு): த்ய - திய - தியாகம்; ப்ர - பிர - பிரபந்தம்; க்ர - கிர- கிரமம்; க்லே - கிலே - கிலேசம்; த்வ் - துவ - துவாரம். {{float_right|பா.இரா.}} <section end="இடைநிலை மயக்கம்"/> <section begin="இடைநிலை மேலாண்மை"/> {{dhr}} <b>இடைநிலை மேலாண்மை:</b> எந்த ஒரு துறையின் அல்லது நிறுவனத்தின் அமைப்பையும் உயர் மேலாண்மை (Top Management), இடைநிலை மேலாண்மை (Middle Management), கீழ்நிலைப் பணியாளர் தொகுதி (Rank and file) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பிரிவுகளை நிருவாகப் பணியாளர் தொகுதி (Administrative Personnel), செயலாட்சிப் பணியாளர் தொகுதி (Executive Personnel), அடிமட்ட எழுத்தாளர்களின் தொகுதி (Clerical Personnel) என்றும் பிரிக்கின்றனர். அரசியல் தலைமை (Political Head)யிலும் நிருவாகத்திலும் செயலர் முதல் உதவிச் செயலர் வரையில் உயர் மேலாண்மை எனவும், சார்புச் செயலரிலிருந்து கூட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் வரையில் இடைநிலை எனவும் சொல்லப்படுகிறது. கீழ்நிலைப் பணியாளர் தொகுதி அனைத்துச் செயல்களையும் செய்கிறது. உயர் மேலாண்மை நிருவாகக் கொள்கைகளை வரையறுக்கிறது. இம்மேலாண்மை ஒரு துறையின் அதிகாரிகளைக் கொண்டியங்குகிறது. இவ்வுயர்நிலை மேலாண்மை அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். இது அமைப்பின் (Organisation) மூன்று பிரிவுகளுள் மிகச் சிறிய தாகும். இடைநிலை மேலாண்மை பரவலானதும் பணியாட்கள் நிறைந்ததுமாகும். வரவு செலவுத் திட்டமிடலையும் கட்டுப்பாடு மேற்கொள்வதையும் ஆட்சித்துறைத் தலைமையுடன் இணைத்ததால் தான், இன்றைய இடைநிலை மேலாண்மை தோன்றலாயிற்று. இது படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் (Department) வளர்ந்துவிட்டது. ஒரு நிறுவனத்தின் அல்லது துறையின் கொள்கை உருவாக்கும் பணியைச் செய்யும் மேற்பகுதியையும் கீழ்நிலைப் பணியாளர்<noinclude></noinclude> i3vduc2ub9i3ojkh47ko1kb50pavc9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/124 250 615992 1954437 1819651 2026-07-17T12:41:48Z ஹர்ஷியா பேகம் 15001 1954437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடைப்பாத்திய வழக்கு|100|இடைமருதூர்}}</noinclude>எனவே, பெரும்பாலான சிக்கல்களில் முடிவெடுப்பதற்குத் தேவையான அதிகாரங்கள் இவர்களிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன. இம் மேலாண்மை, பணியாளர்களின் ஒழுங்குணர்வைப் பாதுகாக்கிறது. அதனுடன் இது, பணியாளர்களின் ஊக்குவிப்புகள், விருப்பங்கள், காரணங்கள் ஆகியவைகளை அறிந்து, கீழ்மட்டத்திற்கு வழிகாட்டல்களைச் செய்கின்றது. இம்மேலாண்மையில்தான் பொதுச் சேவையின் புனிதத்தன்மை வெளிப்படுகிறது. இங்குத்தான் அச்சேவையின் உறுதியும் ஊக்கமும் புகழும் உருவாகின்றன. ஆக, இம்மேலாண்மையைப் பொறுத்தமட்டில் இது ஒரு வாழ்க்கைத் தொழில் சான்ற பணியாகும். பெருமளவு உயர் மேலாண்மையின் பயிற்சிக்களமாகவும் இடைநிலை மேலாண்மை இருக்கிறது. ஆக, இடைநிலை மேலாண்மை என்பது, ஒவ்வோர் அமைப்பிலும் ஆணிவேராக உள்ளது. இதனால் நிருவாகத் துறை தன் குறிக்கோள், நிருவாகச் சக்தி ஆகியவற்றுக்கு ஒப்ப நிமிர்ந்தும் நெளிந்தும் வளைந்தும் நல்லமுறையில் செயற்பட முடிகிறது. இம்மேலாண்மை அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் அளிக்கும் பங்கை உயர்த்தும் வகையில் இதை அமைத்துக் காப்பது சிறப்பாகும். {{float_right|சி.சி.}} <b>துணை நூல்கள்: செயபாலன். ந. & சோசப். என்.,</b> பொதுத்துறை ஆட்சியியல், பண்ணைப் பதிப்பகம், மதுரை, {{larger|1983}}.<br><b>இரமண ராவ். பி.வி.</b> பொதுத்துறை நிருவாகம் (Public Administration), நவோதயா பிரிண்டர்சு குண்டூர், {{larger|1974}}.<br><b>சச்சிதேவா & குப்தா,</b> பொதுத்துறை நிருவாகம் (Public Administration), அசத்தபிரகாசம், தில்லி, {{larger|1977}}.<br><b>விட்டுணு பகவான் (Vishnu Bhahavan) & வித்தியபூசன்,</b> பொதுத்துறை ஆட்சி (Public Administration), எசு. சாந்தன் கம்பெனி, இராம் நகர், தில்லி, {{larger|1983}}. <section end="இடைநிலை மேலாண்மை"/> <section begin="இடைப்பாத்தியவழக்கு"/> {{dhr}} <b>இடைப்பாத்தியவழக்கு:</b> இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக, வேறு மூன்றாம் ஆளிடமிருந்து வரவேண்டிய கடன் அல்லது பணம் குறித்தோ, அந்த மூன்றாம் ஆளின் கைவசமுள்ள அசையும் அல்லது அசையாத பொருள் குறித்தோ, தமக்குத்தான் பாத்தியப்பட்டது என்று மாறுபட்ட உரிமை கொண்டாடினால், மேற்படி மூன்றாமவர் அந்த மாறுபட்ட உரிமையாளர்கள் (Rival Claimants) மீது யார் உண்மையான உரிமையாளர் என்று முடிவு காணும் நோக்கத்துடன், நீதி மன்றத்தில் உரிமை இயல் வழக்குத் தொடர உரிமையியல் நடைமுறைச்சட்டத் தொகுப்பு (Civil Procedure Code) பிரிவு {{larger|88}} வழி செய்கிறது, அவ்வாறான வழக்கு ‘இடைப்பாத்திய வழக்கு’ (Inter Pleader Suit) என்று கூறப்படுகிறது. {{larger|(2)}} அல்வாறு வழக்குத் தொடர்பவர் வாதி என்றும், வழக்குத் தொடரப்படும் மாறுபட்ட உரிமையாளர்கள் பிரதிவாதிகள் என்றும் சொல்லப்படுவார்கள். {{larger|(3)}} எந்த நிலையில் அவ்வாறான வழக்கைத் தொடரலாம், அந்த வழக்குச் சம்பந்தமான சிறப்புக் குறிப்புகள் யாவை என்பன, அவ்வுரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு {{larger|88}}—ஆம் பிரிவிலும், அத்தொகுப்பின் கட்டளை {{larger|35}}—இல் அடங்கியுள்ள {{larger|1}} முதல் {{larger|6}} விதிகளிலும் காணப்படுகின்றன. {{larger|(4)}} தன் கைவசம் உள்ள பொருளைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும் ஏற்படும் செலவைக் கேட்கும் உரிமையைத் தவிர, வழக்கு சம்பந்தப்பட்ட பணத்திலோ, பொருள் மீதோ வாதி எவ்வித உரிமையும் கொண்டாடக் கூடாது. பிரதிவாதிகளுள் யார் உண்மையான உரிமையாளர் என்று வாதிக்குத் தெரியாதிருக்க வேண்டும். அவ்வாறான வழக்குத் தொடர்வதில் வாதிக்குப் பிரதிவாதிகளில் எவருடனும் கூட்டு (Collusion) இருக்கக்கூடாது. பிரதிவாதிகளுள் யார் உண்மையான உரிமையாளர் என்று நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுபவரிடம், வழக்குத் தொடர்புடைய பணத்தைச் செலுத்தவும், பொருளை ஒப்புவித்துவிடவும் வாதி தயாராக இருக்க வேண்டும். {{larger|(5)}} அவ்வாறான வழக்கு நடைபெறுவதில் வாதி தீவிரப்பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார். ஒரு பார்வையாளர் (Observer) போன்று அவரது நடவடிக்கை இருக்கும், பிரதிவாதிகள் தாம் தங்களுக்குள் யார் உண்மையான உரிமையாளர் என்பதை மெய்ப்பித்தற்கு முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இறுதியாக நீதிமன்றத்தின் முடிவையொட்டி வாதி நடந்து கொள்ள வேண்டும். <section end="இடைப்பாத்தியவழக்கு"/> <section begin="இடைமருதூர்"/> {{dhr}} <b>இடைமருதூர்:</b> சோழ நாட்டில் காவிரியின் தென்பால் விளங்கும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும் இடையிலமைந்துள்ள புகை வண்டி நிலையம் அமைந்த ஊராகும். இவ்விரு<noinclude></noinclude> 24nyvsqwgct6fgubr4uyjdc5bvob5iy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/125 250 615993 1954438 1819652 2026-07-17T12:43:32Z ஹர்ஷியா பேகம் 15001 1954438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடை மெய் இணை|101|இடை மெய் இணை}}</noinclude>நகரங்களிருந்தும் பேருந்தில் சென்றும் இதனை அடையலாம். இடைமருது எனவும் சொல்லப்படும் இவ்வூருக்கு மத்தியார்ச்சுனம் என்னுமொரு வடமொழிப் பெயரும் உண்டு. ஆந்திரமாநிலத்திலுள்ள சீரீசைலம் எனப்படும் மல்லிகார்ச்சுனத்திற்கும் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள புடார்ச்சுனத்திற்கும் இடையில் இருப்தல் இப்பெயர் பெற்றது என்று கூறப்படும். இவ்வூர் இறைவன் பெயர் மகாலிங்கேசுவரர். இவர் மருதவாணர் எனவும் அழைக்கப்படுவார். இறைவி பெயர் பெருநலமாமுலை நாவல்; நன்முலைநாயகி என்றும் வழங்கப் பெறும், தீர்த்தம் காவிரியாகும். மருது தல மரமாகும். தேவார முதலிகள் மூவரும் இந்தல இறைவனைப் பதிகங்கள் பாடிப் பரவியுள்ளனர் மாணிக்கவாசகரும் தம் திருவாசகத்தில் இத்தலத் திறைவனைப் பாடிப் போற்றியுள்ளார். கருவூர்த் தேவர் தம் திருவிசைப்பாலில் இத்தலத்தினைப் பாடியுள்ளார். பட்டினத்தடிகள் பாடியுள்ள திருவிடை மருதூர் மும்மணிக் கோவை பதினோராந்திருமுறையில் இடம்பெற்துள்ளது. இங்குள்ள திருக்கோயில் மிகவும் பெரியது; பெருமை வாய்ந்தது. இத்திருக்கோயில் திருவாவடுதுறைத் திருமடத்தின் அருளாட்சிக்கு உட்பட்டுத் நிகழ்கிறது. தைப்பூச நாளன்று இங்குள்ள காவிரித்துறையில் நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது, இதனை ஞானசம்பந்தர், ‘பொருந்திய தைப்பூச மாடி உலகம் பொலிவெய்த’ என்று குறிப்பிட்டுள்ளார். வரகுணபாண்டியன் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பிரமகத்திதோடம் நீங்கப்பெற்றான் என்பதும், உருத்திர உமையம்மை, விநாயகர், முருகன், பிரமன், திருமால் ஆகியோரும் இங்கு வழிபட்டனர் என்பதும் கூறப்படுகின்றன. கொட்டையூர்ச் சிவக்கொழுத்து தேகெர் இவ்வூருக்கு ஒரு தலபுராணம் பாடியுள்ளார். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் இத்தலத்திலிருந்து வழிபட்டமையால், அவர்களுக்கு முறையே கிழக்கு மேற்கு வாயில்களில் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலம் - மகாலிங்கத்தலம் - ஒரு பெருங்கோயிலாகவும், அதனுள் விலங்கும் ஏனைய தெய்வச் சந்நிதிகள் போல, தில்லை, ஆலங்குடி, சூரியனார் கோயில், வலஞ்சுழி, சுவாமிமலை, சீர்காழி, சேய்ஞலூர் ஆகிய தலங்களை முறையே நடராசர், ஆலமர் செல்வன், நவக்கோள், விநாயகர், முருகன், வைரவர், சண்டேசர் ஆகியோருக்குரிய சந்நிதிகளாகவும் கருதிப் போற்றும் மரபு இருந்து வருகிறது. <section end="இடைமருதூர்"/> <section begin="இடை மெய் இணை"/> {{dhr}} <b>இடை மெய் இணை</b> என்பது இரு உச்சங்களுக்கிடையில் (Peaks) அமையும் இரு மெய்களைக் (Consonant cluster) குறிக்கும். மொழியில் சொற்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளைக் கொண்டு அமைகின்றன. ஓர் அசையில் ஓர் உயிரும் ஓன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மெய்களும் இருக்கும். மெய்கள் இன்றியும் அசை அமையும். ஆனால், உயிரெழுத்துகள் இன்றி அசை அமையாது. ஓர் அசையில் ஓர் உயிர் மட்டுமே இருக்கும். இரண்டு உயிர்கள் வரின் இரண்டு அசையாகக் கொள்ளப்படும். ஆகவே, அசையின் அமைப்பு உயிர் (ஆ), மெய் + உயிர் + மெய் (வான்), உயிர் + மெய் (ஆல்), மெய் + உயிர் (மா) என நான்கு வகைப்படும். வாழ்க்கை, ஆய்ச்சி போன்ற சில சொற்களில் மெய் + உயிர் + மெய் + மெய் என மெய் இணைகளும் அசையில் வருதல் காணலாம். இவ்வகை அசைகள் வெவ்வேறு வகையில் இணைந்து (Differcat Combination) சொற்களில் வரும். ஆர்வம், ஆர் + வம் (உயிர் + மெய், மெய் + உயிர் + மெய்), அரசர், அ + ர + சர் (உயிர், மெய் + உயிர், மெய் + உயிர் +மெய்), வாழ்வு (மெய் + உயிர் + மெய், மெய் +உயிர்) போன்று அசைகள் சொற்களில் அமையும். மெய் + உயிர் + மெய் என்றும் அமைப்புக்கொண்ட அசைகளில் அசையின் தொடக்கத்தில் உள்ள மெய் தொடக்கம் (Onset) எனவும், இடையில் உள்ள உயிர் உச்சம் (Peak) எளவும், இறுதியில் உள்ள மெய் கடை (Coda) எனவும் சொல்லப்படும். அசைகள் தொடக்கம் இன்றியும் (Zero onset) கடை இன்றியும் (Zero coda) வருதலையும் காணலாம். மேலே கண்ட நான்கு வகை அசைகளில் முதல் வகை அசையும் மூன்றாம் வகை அசையும் தொடக்கம் இன்றியும், நன்காம் வகை அசை கடை இன்றியும் உள்ளமை தெளிவு. இரண்டு உச்சங்களுக்கிடையில் தோன்றும் மெய் இணை, ‘இடை மெய் இணை’ (Interlude) எனப்படும். அதாவது, முதல் அசையின் கடை மெய்யும், இரண்டாம் அசையின் தொடக்க மெய்யும் தெளிவாகப் பிரிக்க இயலாதபடி இணைந்து ‘இடை மெய் இணை’ உண்டாகிறது. தமிழில் துன்பம், வட்டம் போன்ற சொற்களில் இடை மெய் இணை வரக் காணலாம், இவற்றை உயிர், மெய் எனத் தனித் தனியாகப் பிரிக்கின், த் + உ + ன் + ப் + அ + ம் எனவும், வ் + அ + ட் + ட் + அ + ம் எனவும் பிரிபடும், ன் + ப், ட் + ட் இணைகள் இடை மெய் இணைகள், இவ்விணைகளைத் தொடக்கம் என்றோ கடை என்றோ கூற இயலாது. முதல் அசை உயிரின் கடை என்றோ அடுத்த அசை உயிரின் தொடக்கம் என்றோ பிரித்துக் கூற இயலாதபடி இவை இணைந்துள்ளன. ஆகவே, அமைப்பில் இவை முதல் அசை, இரண்டாம் அசை ஆகிய இரண்டிற்கும் உரியதாய் அமைகின்றன, {{float_right|எம்.சு.}} <section end="இடை மெய் இணை"/> {{nop}}<noinclude></noinclude> 4cxm1pjm8poj3bt0saaisp2svyshttj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/126 250 615994 1954440 1819659 2026-07-17T12:49:31Z ஹர்ஷியா பேகம் 15001 1954440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடையன் சேந்தன் கொற்றனார்|102|இடையாறு}}</noinclude><section begin="இடையன் சேத்தன் கொற்றனார்"/> {{dhr}} <b>இடையன் சேத்தன் கொற்றனார்</b> சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். சேந்தன் கொற்றனார் என்னும் பெயரைக் காணும்போது இவர் இயற்பெயர் கொற்றன் என்றும், தந்தையார் பெயர் சேந்தன் என்றும் அறிதல் கூடும். இடையன் என்பது இவரது மரபினைச் சுட்டுவதாகும். இவர் பெயர் இடையன் செங்கொற்றனார் என்றும் காணப்படுகிறது. இவர் பாடியது அகநானூற்றில் {{larger|375}} ஆம் பாடலாகவுள்ளது. பாலைத்திணையில் தலைமகள் கூற்றாக அமைந்த இப்பாடலில் ‘கல்லா இளையர் கலித்த கவலைக், கணநரி இனனொடு குழிஇ நிணள் அருந்தும்’ என்று பாலை நிலவழியின் கொடுமையைக் காட்டியுள்ளார். மேலும், இப்பாடல் சோழன் இளம்பெருஞ்சென்னி பாழி என்னும் அரணை அழித்து வம்பவடுகரை வென்ற வரலாற்றுச் செய்தியினைக் குறிப்பிட்டுள்ளார். <section end="இடையன் சேத்தன் கொற்றனார்"/> <section begin="இடையன் நெடுங்கீரனார்"/> {{dhr}} <b>இடையன் நெடுங்கீரனார்</b> சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் கீரன். இடையர் மரபினைச் சேர்ந்தவர். கீரன் என்னும் பெயர்த் தொடர்புடைய சங்கப் புலவர்கள் இருபத்து நால்வர் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. அவர்களுள் குறுங்கீரனார் என்ற பெயரில் ஒருவர் இருந்ததால், இவர் நெடுங்கீரனார் என அழைக்கப்பட்டார் போலும். நெடுங்கீரனார் என்பதே இயற்பெயர் என்ற கருத்தும் உண்டு. இவர் பாடியுள்ள பாட்டொன்று அகநானூற்றில் {{larger|(166)}} காணப்படுகிறது. மருதத் திணையிலமைந்த இப்பாடலில் பரத்தையோடு புனலாடிப் பின்னர்த் தலைவிபால் வந்த தலைவன், அவள் ஊடல் தணிக்க வேண்டி, யான் பரத்தையொடு புனலாடியிருந்தால், ‘உயர்பலிபெறூஉம் உருகெழு தெய்வம்’ என்னை அணங்குக என்று சூளுற்றதனை அறிந்த பரத்தை, ‘காவிரியில் நேற்று நம்மொடு ஆடியவர் யாரோ’ என்று சினந்து தம் அருகிலுள்ளார்பால் கூறுவது நயமிக்கதாக உள்ளது. <section end="இடையன் நெடுங்கீரனார்"/> <section begin="இடையார்ப்பாக்கம்"/> {{dhr}} <b>இடையார்ப்பாக்கம்</b> வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்றூர். இது சென்னையிலிருந்து {{larger|55}} கி.மீ. தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு இதனை ‘இடையாற்றுப்பாக்கம்’ எனச் சுட்டுகிறது. இங்கு, கி.பி. {{larger|12, 13}}—ஆம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கை, நந்தி, திருமால், பைரவர், தட்சிணாமூர்த்தி, சூரியன் முதலான உடைந்த சிற்பங்கள் பல காணப்படுகின்றன. சிவன் மேடு என்னும் இடத்திற்கு அருகில் உள்ள வயலில் சப்தமாதர் கோயில் ஒன்றுள்ளது. இங்குள்ள சப்தமாதர்களின் கீழ் வாகனங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூருக்கு மேற்கே ஏரிக்கரையில் கோயில் ஒன்றுள்ளது. இது பாழடைந்துள்ளது. இதன் விமானம் தூங்கானை மாட வடிவில் இருதளத்தைக் கொண்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனது (கி.பி. {{larger|1070—1120)}} காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள. இறைவர் ‘திருப்பாதகாடுடையார்’ என அழைக்கப்படுகிறார். இக்கோயிலைச் சந்திரசேகரன் ரவி என்ற சோழேந்திர சிம்ம ஆசாரியார் கட்டினார். சோழர் காலப் பெருமையை உணர்த்திக் கொண்டிருப்பது இவ்வூர் என்பது குறிப்பிடத்தக்கது. இராசவித்தியாதரச் சதுர்வே திமங்கலம் என்னும் பெயராலும் இது முன்பு குறிக்கப்பட்டது. இவ்வூர்க் கோயில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் உள்ளது. <section end="இடையார்ப்பாக்கம்"/> <section begin="இடையாற்று நாடு"/> {{dhr}} <b>இடையாற்று நாடு</b> பழந்தமிழ் நாட்டு அரசியல் பிரிவுகளுள் ஒன்று. இந்நாட்டின் தலைமையிடம் இலால்குடிக்கு அருகில் உள்ள இடையாற்றூர் ஆகும். முத்தரையர் நாட்டின் ஒரு பகுதியான விழா நாட்டின் மேற்குப் பகுதியில், கி.பி. {{larger|8, 9}} ஆம் நூற்றாண்டுகளில் இடையாற்றுநாடு அமைந்திருந்தது. இந்நாடு காவிரியின் வடகரையில் கொள்ளிடத்தின் இருமருங்கும் உள்ள ஊர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இதில் இன்றைய திருச்சி மாவட்த்திலுள்ள இவால்குடி வட்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தது. இடையாற்று நாடு தென்கரை (கொள்ளிடத்தின் தென்பகுதியும் காவிரியின் கரையும்), வடகரை என இரு பெரும்பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கரை நாட்டில் இலால்குடி வட்டத்தில் அடங்கிய கூகூர், பெருவங்கூர், மும்முடிச் சோழச் சதுர்வேதிமங்கலம் முதலான விழா நாட்டுப் பகுதிகள் இடையாற்று நாட்டில் அடங்கியிருந்தன. வடகரை இடையாற்று நாட்டில் இடையாற்று மங்கலம், தாளக்குடி, சிறுதையூர், கவிர போர்க்கட்டியூர், இருக்கை, சவனந்திராதபுரம், திருமணமேடு, முட்டியூர், நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம், சாத்தமங்கலம், கீழன்பில், சென்னிவாய்க்கால், பெரியவர்சீலி முதலிய ஊர்களும் அடங்கியிருந்தன. இடையாற்று நாடு முத்தரையர் நாட்டின் மேல் பகுதியில் (மீகூறு) இருந்த சிறப்பு மிக்க நாடு. {{float_right|ம.இரா.}} <section end="இடையாற்று நாடு"/> <section begin="இடையாறு"/> {{dhr}} <b>இடையாறு</b> பாடல் பெற்ற திருத்தலம். தென்னார்க்காடு மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வடமேற்கே ஏறத்தாழ ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுகர் இத்தலத்தை வணங்கியதாகக் கூறப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்<noinclude></noinclude> c834uy8k4xtktigr1m5oj6whvn5lg0m 1954441 1954440 2026-07-17T12:50:05Z ஹர்ஷியா பேகம் 15001 1954441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடையன் சேந்தன் கொற்றனார்|102|இடையாறு}}</noinclude><section begin="இடையன் சேத்தன் கொற்றனார்"/> {{dhr}} <b>இடையன் சேத்தன் கொற்றனார்</b> சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். சேந்தன் கொற்றனார் என்னும் பெயரைக் காணும்போது இவர் இயற்பெயர் கொற்றன் என்றும், தந்தையார் பெயர் சேந்தன் என்றும் அறிதல் கூடும். இடையன் என்பது இவரது மரபினைச் சுட்டுவதாகும். இவர் பெயர் இடையன் செங்கொற்றனார் என்றும் காணப்படுகிறது. இவர் பாடியது அகநானூற்றில் {{larger|375}} ஆம் பாடலாகவுள்ளது. பாலைத்திணையில் தலைமகள் கூற்றாக அமைந்த இப்பாடலில் ‘கல்லா இளையர் கலித்த கவலைக், கணநரி இனனொடு குழிஇ நிணள் அருந்தும்’ என்று பாலை நிலவழியின் கொடுமையைக் காட்டியுள்ளார். மேலும், இப்பாடல் சோழன் இளம்பெருஞ்சென்னி பாழி என்னும் அரணை அழித்து வம்பவடுகரை வென்ற வரலாற்றுச் செய்தியினைக் குறிப்பிட்டுள்ளார். <section end="இடையன் சேத்தன் கொற்றனார்"/> <section begin="இடையன் நெடுங்கீரனார்"/> {{dhr}} <b>இடையன் நெடுங்கீரனார்</b> சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் கீரன். இடையர் மரபினைச் சேர்ந்தவர். கீரன் என்னும் பெயர்த் தொடர்புடைய சங்கப் புலவர்கள் இருபத்து நால்வர் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. அவர்களுள் குறுங்கீரனார் என்ற பெயரில் ஒருவர் இருந்ததால், இவர் நெடுங்கீரனார் என அழைக்கப்பட்டார் போலும். நெடுங்கீரனார் என்பதே இயற்பெயர் என்ற கருத்தும் உண்டு. இவர் பாடியுள்ள பாட்டொன்று அகநானூற்றில் {{larger|(166)}} காணப்படுகிறது. மருதத் திணையிலமைந்த இப்பாடலில் பரத்தையோடு புனலாடிப் பின்னர்த் தலைவிபால் வந்த தலைவன், அவள் ஊடல் தணிக்க வேண்டி, யான் பரத்தையொடு புனலாடியிருந்தால், ‘உயர்பலிபெறூஉம் உருகெழு தெய்வம்’ என்னை அணங்குக என்று சூளுற்றதனை அறிந்த பரத்தை, ‘காவிரியில் நேற்று நம்மொடு ஆடியவர் யாரோ’ என்று சினந்து தம் அருகிலுள்ளார்பால் கூறுவது நயமிக்கதாக உள்ளது. <section end="இடையன் நெடுங்கீரனார்"/> <section begin="இடையார்ப்பாக்கம்"/> {{dhr}} <b>இடையார்ப்பாக்கம்</b> வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்றூர். இது சென்னையிலிருந்து {{larger|55}} கி.மீ. தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு இதனை ‘இடையாற்றுப்பாக்கம்’ எனச் சுட்டுகிறது. இங்கு, கி.பி. {{larger|12, 13}}—ஆம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கை, நந்தி, திருமால், பைரவர், தட்சிணாமூர்த்தி, சூரியன் முதலான உடைந்த சிற்பங்கள் பல காணப்படுகின்றன. சிவன் மேடு என்னும் இடத்திற்கு அருகில் உள்ள வயலில் சப்தமாதர் கோயில் ஒன்றுள்ளது. இங்குள்ள சப்தமாதர்களின் கீழ் வாகனங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூருக்கு மேற்கே ஏரிக்கரையில் கோயில் ஒன்றுள்ளது. இது பாழடைந்துள்ளது. இதன் விமானம் தூங்கானை மாட வடிவில் இருதளத்தைக் கொண்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனது (கி.பி. {{larger|1070—1120)}} காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள. இறைவர் ‘திருப்பாதகாடுடையார்’ என அழைக்கப்படுகிறார். இக்கோயிலைச் சந்திரசேகரன் ரவி என்ற சோழேந்திர சிம்ம ஆசாரியார் கட்டினார். சோழர் காலப் பெருமையை உணர்த்திக் கொண்டிருப்பது இவ்வூர் என்பது குறிப்பிடத்தக்கது. இராசவித்தியாதரச் சதுர்வே திமங்கலம் என்னும் பெயராலும் இது முன்பு குறிக்கப்பட்டது. இவ்வூர்க் கோயில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் உள்ளது. <section end="இடையார்ப்பாக்கம்"/> <section begin="இடையாற்று நாடு"/> {{dhr}} <b>இடையாற்று நாடு</b> பழந்தமிழ் நாட்டு அரசியல் பிரிவுகளுள் ஒன்று. இந்நாட்டின் தலைமையிடம் இலால்குடிக்கு அருகில் உள்ள இடையாற்றூர் ஆகும். முத்தரையர் நாட்டின் ஒரு பகுதியான விழா நாட்டின் மேற்குப் பகுதியில், கி.பி. {{larger|8, 9}} ஆம் நூற்றாண்டுகளில் இடையாற்றுநாடு அமைந்திருந்தது. இந்நாடு காவிரியின் வடகரையில் கொள்ளிடத்தின் இருமருங்கும் உள்ள ஊர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இதில் இன்றைய திருச்சி மாவட்த்திலுள்ள இவால்குடி வட்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தது. இடையாற்று நாடு தென்கரை (கொள்ளிடத்தின் தென்பகுதியும் காவிரியின் கரையும்), வடகரை என இரு பெரும்பிரிவுகளைக் கொண்டிருந்தது. தென்கரை நாட்டில் இலால்குடி வட்டத்தில் அடங்கிய கூகூர், பெருவங்கூர், மும்முடிச் சோழச் சதுர்வேதிமங்கலம் முதலான விழா நாட்டுப் பகுதிகள் இடையாற்று நாட்டில் அடங்கியிருந்தன. வடகரை இடையாற்று நாட்டில் இடையாற்று மங்கலம், தாளக்குடி, சிறுதையூர், கவிர போர்க்கட்டியூர், இருக்கை, சவனந்திராதபுரம், திருமணமேடு, முட்டியூர், நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம், சாத்தமங்கலம், கீழன்பில், சென்னிவாய்க்கால், பெரியவர்சீலி முதலிய ஊர்களும் அடங்கியிருந்தன. இடையாற்று நாடு முத்தரையர் நாட்டின் மேல் பகுதியில் (மீகூறு) இருந்த சிறப்பு மிக்க நாடு. {{float_right|ம.இரா.}} <section end="இடையாற்று நாடு"/> <section begin="இடையாறு1"/> {{dhr}} <b>இடையாறு</b> பாடல் பெற்ற திருத்தலம். தென்னார்க்காடு மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வடமேற்கே ஏறத்தாழ ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுகர் இத்தலத்தை வணங்கியதாகக் கூறப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார்<noinclude></noinclude> jrk41e3e82rqdh5ceoqodtk42ic2pn3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/127 250 615995 1954444 1819663 2026-07-17T12:53:39Z ஹர்ஷியா பேகம் 15001 1954444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடையாறு|103|இடைவினை}}</noinclude>இத்தலத்திற்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளார். இங்குச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. இறைவனின் பெயர் இடையாற்றீசர். அம்மையின் பெயர் சிற்றிடை நாயகி. இக்கோயிலின் புனித்தீர்த்தம் பெண்ணையாறு. <section end="இடையாறு1"/> <section begin="இடையாறு2"/> <b>இடையாறு{{sup|2}}</b> சேலம் மாவட்டம் வேலூருக்கு அருகில் இடையாறு ஒன்று உள்ளது. இது நன்செய் இடையாறு எனச் சொல்லப்பெறுகிறது. இங்குச் சிவன் கோயில் ஒன்றும் மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளன. இங்குள்ள இராசா கோயில் என்ற கவுண்டர்களின் குலதெய்வக் கோயிலில் இராச வாய்க்கால் வெட்டிய வேட்டுவ மாவீரன் அல்லாளன் இம்முடித் திருமலை இளையானுக்கு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இது காவிரியினின்றும் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. {{float_right|க.ம.}} <section end="இடையாறு2"/> <section begin="இடையெழு வள்ளல்கள்"/> {{dhr}} <b>இடையெழு வள்ளல்கள்</b> என்பது தமிழ்ப் புலவர்கள் வகுத்துக் கூறியுள்ள மூவகை வள்ளல்களுள் இடைப்பட்ட ஏழு வள்ளல்களைக் குறிக்கிறது. தம்மிடமுள்ளவற்றை வரையாது வழங்கும் வண்மையுடையோர் வள்ளல் எனப்படுவர். சங்க காலத்தில் வாழ்ந்தவர்களும் இதிகாச புராணங்களில் இடம்பெற்றுள்ளவர்களுமாகிய பெருங்கொடையாளிகள் {{larger|21}} பேர்களைத் தேர்ந்து அவர்களைத் தலையெழு வள்ளல், இடையெழுவள்ளல், கடையெழு வள்ளல் என்று வகைப்படுத்திக் கூறும் வழக்கு, தமிழ் இலக்கியத்தில் பண்டுதொட்டே இருந்து வருகிறது. தலை, இடை, கடை என்று பிரித்துச் சுட்டுவது அவர்களின் வள்ளன்மை நோக்கியன்று எனவும் கால அடைவு கருதியதாகலாம் எனவும் கூறப்படுகிறது. இம்மூவகையினருள், தலை, இடை ஆகிய வகையினரும் இதிகாச புராண மாந்தர்களாகக் காணப்படுகின்றனர். கடையெழுவள்ளல்கள் சங்க காலத்தில் வாழ்ந்த அரசரும் வீரருமாகிய கொடையாளிகளாவர். இடையெழு வள்ளல்கள் அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன் ஆகியோராவர். இப்பெயர்களுள் சில பாரதத்தில் இடம்பெற்றுள்ளன. கன்னன், பாரதக் கதை மாந்தருள் ஒருவனான கர்ணனைக் குறிக்கும். அவன் தான் இயற்றி ஈட்டிய அறத்தின் பயனையும் பிறர்க்கு. உவந்து வழங்கும் பெருவீரனாகத் திகழ்ந்தான். ஆனால், சிசுபாலன் போன்றோரின் கொடைத் தன்மையை அறிய இயலவில்லை. அக்குரனின் கொடை பற்றியும் அறிய முடியவில்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய கொடைப் பண்பினை விளக்குங்கால், குமட்டூர்க் கண்ணனார் அக்குரனின் கொடைப் பண்பினை உவமையாக்கி, ‘அக்குரன் அனைய கைவண்மையையே’ என்று சிறப்பித்துக் கூறியுள்ளார் (பதி. {{larger|14—7)}}, “அக்குரன் பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்; கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” என்று டாக்டர். உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பில் அக்குரனைத் தலையெழுவள்ளல்களுள் ஒருவனாகச் சுட்டியிருப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. தனையெழுவள்ளல்கள் பெயரில் அக்குரன் என்னும் பெயர் இடம்பெறவில்லை. <section end="இடையெழு வள்ளல்கள்"/> <section begin="இடைவினை"/> {{dhr}} <b>இடைவினை:</b> இது சமூக இடைவினையால் அமைந்ததாகும். இது இருவருக்கு அல்லது இருவருக்கு மேற்பட்ட மக்களுக்கிடையில் நிகழக் கூடிய தொடர்பாகும். மனிதனின் நடத்தை அல்லது செயல் மற்றவர்களை நோக்கியதாக இருக்கிறது. இந்நடத்தை அல்லது செயல் தனக்கென ஒரு விளக்கத்தைக் கொண்டு மற்றவர்களின்மேல் தன் செல்வாக்கைச் செலுத்தி, மற்றவர்களைச் செயற்படத் தூண்டும் பொழுது இவ்விடைவினை (Interaction) சமூகத்தன்மை பெறுகிறது. ஒருவர் செயலை மற்றவர் தெரிந்துகொண்டு அதற்கு மறுவினை செய்வதன் மூலம் இருவருக்குமிடையில் இடைவினை நிகழ்கிறது. <b>குறியீட்டு இடைவினைக் கோட்பாடு:</b> சமூக இடைவினைக் கோட்பாட்டின் சிறந்த விளக்கம், குறியீட்டு இடைவினை (Symbolic Interaction)யாகும். இதைப்பற்றிய கருத்தை மிகுதியாக ஆய்ந்தவர்கள் சார்லசு ஆர்ட்டன் கூலேயும் (Charles Horton Cooley) சியார்சு எர்பெர்ட்டு மீடும் (George Herbert Mead) ஆவர். ஆனால் முதன்முதலாகக் குறியீட்டு இடைவினைக் கருத்தைக் குறிப்பிட்டவர் பிளம்பர் என்பவராவார். பிற சமூகவியல் அறிஞர்கள் இதைச் சமூக இடைவினை என்று குறிப்பீட்டனர். மக்கள் குறியீடுகளால் மிகுதியாகத் தங்களுக்கிடையில் இடைவினை புரிகின்றனர். அவர்கள் குறிப்பாகச் சைகைகள், அங்க அசைவுகள், எழுத்து, வாய்ச்சொல் ஆகியவை மூலமாக இடைவினை புரிகின்றனர். பொதுவாகச் சொற்களுக்கு இயல்பான பொருள் எதுவும் இல்லை. சொல் உள்ளிருந்து எழும் ஒருவகை ஒலியாகும். இவ்வொளிக்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பொதுவான விளக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுது இந்த ஒலி புது விளக்கத்தைப் பெறுகிறது. ஆகவே வா, போ, நட, பார், கேள் போன்ற ஒலிகள் அதற்குரிய விளக்கத்தைப் பெற்ற குறியீடுகளாகின்றன. சில செயல்களில்<noinclude></noinclude> sq3m5xyhofmrkffujdynzmz2k69qmr0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/130 250 616012 1954446 1819713 2026-07-17T12:55:18Z ஹர்ஷியா பேகம் 15001 1954446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடைவினை|106|இண்டன்பர்கு}}</noinclude>விதத்தில் செயற்படவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் தொழிலகங்களில் பணியாளுக்கும் அவரைப் பணியில் அமர்த்துபவருக்கும் இடையில் நிகமும் இடைவினை இத்தகைய பகிர்ந்துகொள்ளும் நோக்குடையதாக இருக்கிறது. பணியாள் தனது அதிகாரியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்க வேண்டியிருக்கிறது. பரிசு என்பது பணத்தையோ பொருளையோ சாராத சமூகத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்; அதாவது, உணர்வு சார்ந்த பரிசு, சமூக உறவு போன்றதாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நண்பருக்கு வாழ்த்தாக அனுப்பக்கூடிய பொருள்கள் சில நெருக்கடி நேரங்களில் அவருக்கு உதவி செய்வனவாகவும் அமையலாம். தற்செயலாக மிகவும் நெருக்கமானவர்களுடன் கொள்ளும் இடைவினையிலும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்ட உறவுகள் இன்றியமையாதனவாக இருக்கின்றன. ஒருவர்மேல் மற்றவர் கொள்ளும் அன்பு மற்றவர் தம்மேல் திரும்பவும் அன்பு கொள்ள வேண்டும் அல்லது தாம் செய்த செயலுக்கு அவர் நன்றியுடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ததலின் அடிப்படையில் நிகழ்வதில்லை. இருப்பினும் அவ்வாறு எழும் எதிர்பார்ப்பு உறவின் ஒரு கூறாகும். அன்பைப் பெறுபவர் தாம் அன்பு செலுத்தாவிட்டால் முன்னவரின் அன்பு நிலைத்திருப்பதில்லை. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒருவன் ஒரு செயலைச் செய்யும்பொழுது, அதற்கொரு விளக்கம் தருகிறான். மற்றவர்களும் தன்னைப் போலவே அச்செயலுக்கு அந்த விளக்கத்தையே தந்து அச்செயலுக்கேற்ப எதிர்வினை ஆற்றுவர் என்று எதிர்பார்க்கிறான். இதே போன்து பரிமாறிக் கொள்ளும் அனைத்து விளக்கங்களும் அவர்களை அறியாமலேயே அவர்களது நனவிலியில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடைவினைச் சூழலிலும் தாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எண்ணத்தில் வைத்துக்கொண்டுள்ளனர். அதே போல மற்றவர்களும் எவ்வாறு எதிர்வினையாற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் செயற்படுகின்றனர். இவ்வாறு ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளக் கூடிய சமூக இடைவினையின் நிகழ்வால் மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது. <b>துணை நூல்கள்: David Popenue,</b> Sociology, Prentice-Hall, New Jersey, {{larger|1977}}.<br><b>Pani B. Horton and Chester L. Hunt,</b> Sociology, Mebraw-Hill, Tokyo, {{larger|1980}}. <section end="இடைவினை"/> <section begin="இண்டன்பர்கு"/> {{dhr}} <b>இண்டன்பர்கு (கி.பி. 1847—1934):</b> செருமானிய வரலாற்றின் சிறந்த காலத்தில் வாழ்ந்து பணியாற்றிப் பெருமித நிலை எய்தியவர் பால்பன் இண்டன்பர்கு என்பவராவர். இவர் முதல் உலகப் பெரும்போரின்போது பீல்டு மார்சல் (Field Marshall) பதவி பெற்றுச் செருமனியின் பெருந்தானைத் தலைவராக விளங்கினார். போரில் செருமனி தோல்வியுற்ற போது, தோல்வி கண்டு சோர் வடைந்த படைகளைச் செருமனிக்குக் கொணர்ந்தார்; அதே படைகளைக் கொண்டு செருமனியின் மக்களாட்சி அரசினைக் காப்பாற்றினார். இவர் {{larger|1925}}—ஆம் ஆண்டில் பெருவாரியான வாக்குகள் பெற்றுக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் முறையும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அடால்பு இட்லரைச் செருமனியின் சான்சலராகப் பதவியமர்த்தினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 130 |bSize = 468 |cWidth = 101 |cHeight = 135 |oTop = 233 |oLeft = 258 |Location = center |Description = }} {{c|இண்டன்பர்கு}} இண்டன்பர்கு (Hindenberg, Paul Von) கி. பி. {{larger|1847}}—ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இரண்டாம் நாள் இராணுவப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில், போலந்து நாட்டின் போசன் (Posen) நகரில் பிறந்தார். தான்சிகு (Danzig) நகரில் கி.பி. {{larger|1866}}—ஆம் ஆண்டில் இராணுவ அதிகாரியாகத் தமது வாழ்வினைத் தொடங்கினார். இராணுவ அதிகாரியாகப் பணியேற்றவுடனே தொடங்கிய ஆசுத்திரிய-பிரசியப் போரில் (Austro-Prussian War, கி.பி. {{larger|1866)}} பங்கேற்று வீர விருதினைப் பெற்றார். பின்னர், கி.பி. {{larger|1870—71}}—ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரெஞ்சு-பிரசியப் போரிலும் (Franco-Prussian War) வீர விருதினைப் பெற்றுச் சிறப்பெய்தினார். பிரான்சின் தலைநகரில் வரலாற்றுப் புகழ்மிக்க வெர்சாய் மாளிகையில் உதயமான செருமானியப் பேரரசினை வாழ்த்தி வரவேற்றார்.{{nop}}<noinclude></noinclude> ncwaccxkvudpnv3snqwozhomromtuvl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/137 250 616034 1954451 1819775 2026-07-17T12:58:20Z ஹர்ஷியா பேகம் 15001 1954451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இணக்க ஏற்பாடு|113|இணக்க ஏற்பாடு}}</noinclude>கொடுக்கும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பித் தராவிட்டால், சட்டப்படி அவர்களை எதுவும் செய்ய முடியாது. கடன் கொடுத்தவன் வயிறெரிய வேண்டியதுதான் என்று இண்டிகா கூறுகிறது. ஒருவனை மானபங்கம் செய்ய, அவனுடைய மயிரை மழிக்கச் செய்யும்படி அரசன் ஆணையிடுவது வழக்கமாகும். யானைகளை எவ்வாறு பிடித்தனர் என்பது பற்றியும் அவைகளுக்கு மருத்துவ உதவி எவ்வாறு செய்யப்பட்டது என்பதைப் பற்றியும் மெகசுதனீசு விரிவாக விவரித்துள்ளார். அதுபோலவே, சமூகத்தின் தலையாய பிரிவினராகிய தத்துவ ஞானிகளிடையே காணப்பட்ட இரு பிரிவுகளைப் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை பற்றியும் பல பக்கங்களில் வருணித்துள்ளார். இந்தியாவுக்கு அப்பாலுள்ள சில நாடுகளின் மன்னர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் பல குறிப்புகள் இண்டிகாவில் இடம் பெறுகின்றன. மெகசுதனீசு தரும் குறிப்புகளைத்தவிர, எரதோசுதனீசு, நியார்கசு முதலியவர்கள் எழுதியுள்ள வருணனைகளும் இந்நூலில் காணக்கிடக்கின்றன. மேலும் உலகின் தெற்குப் பகுதிகள் வெப்ப மிகுதி காரணமாக, மனித வாழ்க்கைக்கு ஏற்றனவாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பல சான்றுகள் அதன் இறுதிப்பகுதியில் விவரிக்கப்படுகின்றன. அறியன் என்ற கிரேக்கர் தரும் குறிப்புகளும் இண்டிகாவில் அடங்கும். {{float_right|டி.பா}} <b>துணை நூல்: Sathianatbier, R., and Balasubramanian, D.,</b> இந்திய வரலாறு; முதல் பாகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், {{larger|1960}}. <section end="இண்டிகா"/> <section begin="இணக்க ஏற்பாடு"/> {{dhr}} <b>இணக்க ஏற்பாடு:</b> ஒரு வழக்கில் தொடர்புடைய இருநாடுகள் தங்களுக்கு இடையேவுல்ல வழக்குகளை அல்லது முரண்பாடுகளை நடுவர் தீர்ப்புக்கு (Arbitration) விடுவதென்றுகூறி, அதனை ஏற்றுக் கொள்ளுவதற்கான கட்டுப்பாடுகளையும், நடுவராகச் செயற்படும் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், செயன்முறைகளையும் வரையறை செய்து, தங்களுக்கு இடையே செய்துகொள்ளும் முறையான ஒப்பந்தம் (Agreement) இணக்க ஏற்பாடு எனப்படும். இந்த ஒப்பத்தத்தைக் குறிக்கும் இணக்க ஏற்பாடு நாடுகளுக்கிடையே மட்டுமல்லாமல், தனி ஆட்களுக்குகிடையே மேற்கண்ட நோக்கத்திற்காகச் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தையும் குறிப்பதாகும். பண்டைய உரோமானியக் குடியுரிமைச் சட்டத்தில் (Roman Civil Law), தனி ஆட்கள் தங்களிடையே எழும் ஏதேனும் ஒருவழக்கைத் தங்களால் குறிப்பிடப்படும் மூன்றாம் ஆளின் தீர்ப்புக்காக விடுவதென்று தங்களுக்குள் செய்துகொள்ளும் உடன்படிக்கையைக் குறிப்பிடுதற்கு ‘இணக்க ஏற்பாடு’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. மேலும் இப்பொருளைக் குறிப்பிடும் ‘இணக்க ஏற்பாடு’ என்ற கலைச் சொல்லுக்குத் தாங்கள் தங்களுடைய வழக்கிலே நடுவர் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுவதாக, வழக்கிலீடுபட்டுள்ள இருவரும் அல்லது இரு கட்சியாரும் ஒருவருக்கொருவர் தரும் வாக்குறுதி (Promise) என்பதுதான் நேரான பொருள் ஆகும்; எனவேதான், இணக்க ஏற்பாடு என்னும் இத்தொடர், ஒரு வழக்கினை நடுவர் தீர்ப்புக்கு விடுவதென்று வழக்கிலீடுபட்டவர்கள் ஒத்துக்கொண்டு செய்யும் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் என்ற விரிந்த பொருளில் கையாளப்படுகிறது. மேலும், இத்தொடர் நடுவரின் உதவியின் வாயிலாக ஒரு வழக்கைத் தீர்க்கும் முறையை மட்டுமல்லாமல், நடுவர் தீர்ப்பின் வாயிலாகவோ வழக்காளிகள் ஒருவருக்கொருவர். சில சலுகைகளை விட்டுக்கொடுப்பதற்கு ஒத்துக்கொள்ளுவதன் வாயிலாகவோ ஒரு வழக்கைத் தீர்க்கும் முறையையும் உணர்த்துகிறது. பெரும்பாலும் பன்னாட்டு உறவுகளில் எழும் வழக்குகளில் தொடர்புடைய நாடுகள் வழக்கில் ஒன்றுக்கொன்று சிறிது விட்டுக்கொடுக்குமாறு செய்து, அந்த வகையில் அவற்றுக்கிடையே மோதலைத் தவிர்த்து, நல்லிணக்கத்தை உண்டாக்கும் முறையே கையாளப்படுகிறது. ஆகையால் இத்தொடர், வழக்கிடும் நாடுகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து, மோதலைத் தவிர்த்து, நட்புறவோடிருக்கும்படி செய்யும் உடன்படிக்கையையே பெரும்பாலும் உணர்த்துகிறது. வழக்காளிகள் தங்களுடைய தீவிரமான கோரிக்கைகளையோ உரிமைகளையோ ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்குமாறு செய்து, அவ்வகையில் ஒரு வழக்கிற்குத் தீர்வு காணுதல் தான் இணக்க ஏற்பாடு (Compromise) என்ற முறையின் நோக்கமாகும். ஆனால் விட்டுக்கொடுத்தல் என்பது வழக்காளிகள் எவரும் தமது அடிப்படை உரிமையை அல்லது நிலையை அழிக்கக்கூடிய அல்லது ஆதாரக்கொள்கைகளை விட்டுவிடக்கூடிய அளவுக்கு ஒத்துப்போகுமாறு அல்லது ஒப்பந்தம் செய்யுமாறு தீர்ப்பு இருக்குமானால், அத்தகைய இணக்க ஏற்பாடு தாழ்ச்சியை உண்டாக்கும் இணக்க ஏற்பாடு என்றும் பொருள்படும். இத்த நூற்தாண்டில் முதலாம் உலகப்போருக்குப் பின்னர் {{larger|(1914—18)}}, போரை நீக்கி, நாடுகளுக்கிடையே அமைதியையும் நல்லுறவையும் பாதுகாப்பையும் நிலவச்செய்யும் நேரக்கங்களுடன் நிறுவப்பட்ட பன்னாட்டுச் சங்கத்தில் (League of Nations) இணக்க ஏற்பாட்டு முறைக்கு வகை செய்யப்பட்டிருந்தது. இச்சங்கத்திற்கு ஆதாரமான ஒப்பந்தத்-<noinclude> வா. க. 3—8</noinclude> 6ru6w8xdsoqagrel401qju0gdm7mc08 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/139 250 616036 1954453 1820137 2026-07-17T12:59:20Z ஹர்ஷியா பேகம் 15001 1954453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணக்கம்|115|இணக்கம்}}</noinclude>மாட்டா. ஆகையால் பன்னாட்டு உறவுகளைப் பொறுத்தமட்டில் நாடு ஒவ்வொன்றும் இறைமை அல்லது தன்னாட்சி உரிமையுடைய நாடாகையால், அவை தாமாக விரும்பிப் பன்னாட்டு ஒப்பந்தங்களையும், இணக்க ஏற்பாடுகளையும் செயற்படுத்தினால்தான் அவை செல்லுபடியாகும். இறைமையுடைய வலுவற்ற நாடுகளும் வல்லரசுகளின் ஆதரவை நாடியே தம் பன்னாட்டு உறவுகளை அமைத்துக்கொள்ளும்படி தற்கால அரசியல் நிலை இருக்கிறது. <section end="இணக்க ஏற்பாடு"/> <section begin="இணக்கம்"/> {{dhr}} <b>இணக்கம்:</b> சமூக இடைவினை (Social-Interaction) பல்வேறு படிவங்களில் நிகழ்கிறது. அவற்றுள் முக்கியமானவை கூட்டுறவு (Co-operation), போட்டி (Competetion), பூசல் (Conflict), இணக்கம் (Accommodation), ஒருங்கிணைவு (Assimilation) என்பனவாகும். மனிதன் தன் அறிவுத்திறனால், தான் வாழ நேரிடும் புதிய சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதுடன் அதைத் தனக்கு ஏற்றதாகவும் ஆக்கிக்கொள்கிறான். இவ்வாறு அவன் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதை இணக்கம் எனலாம். அந்தச் சூழ்நிலை இயற்பியல் சூழ்நிலையாகவோ (Physical Environment) சமூகச் சூழ்நிலையாகவோ (Social Environment) இருக்கலாம். மாறிவரும் இந்தச் சூழ்நிலைகளுடன் அவன் தன்னை இணக்கமாக்கி வாழப் பழகிக்கொள்கிறான். சூழ்நிலையோடு தன்னை இணக்கப்படுத்திக் கொள்ளத் தவறினால் அவன் அழிவது உறுதி என்பதை உணர்ந்து கொள்கிறான். உயிரினங்கள் சூழ்நிலைக்கேற்ற வகையில் தம்மை மாற்றிக்கொண்டு வாழ வழி செய்துகொள்கின்றன. இதை உலக வாழ்வின் இயல்பு என்றே குறிப்பிடலாம். மேக்ஈவர் (MacIver), ‘மனிதன் தன்னுடைய சுற்றுப்புறச் சூழலுடன் இசைந்து போதலே இணக்கம்’ என்று வரையறை செய்கிறார். மனிதச் சமுதாயத்தில் இருவரிடையே அல்லது இரு பிரிவினரிடையே ஏற்படும் பூசலுக்கு விரைவிலோ காலங்கடந்தோ ஓர் உடன்பாடு (Compromise) ஏற்படுதல் இயல்பானதே, இதையே சமூகவியலறிஞர்கள் ‘இணக்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இரு குழுக்களிடையே வேற்றுமைகளும் மறைவான பகையும் அமைந்து, பூசல் ஏற்பட்டிருந்தாலும் அக்குழுக்களைச் சேர்ந்த தனி மனிதர்கள் ஒன்றுபட்டு வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை இணக்கம் என்று ஆக்பர்ன் (Ogburn), திம்காபு (Nimkoff) ஆகிய சமூகவியலறிஞர்கள் விளக்குகிறார்கள். இதிலிருந்து பிணக்கின் அடிப்படையில்தான் இணக்கம் ஏற்பட முடியும் என்பதை உணரலாம். பிணக்குத் தீர்ந்து இணக்கம் ஏற்பட்டாலும், ஒரு நேரத்தில் மறைந்திருக்கும் பகைமை மீண்டும் வெளிப்பட்டுப் பிணக்கை ஏற்படுத்தக்கூடும். ஆகவே இணக்கத்தின் பின் பிணக்கு புகைந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. இதனால்தான் சம்னர் (Sumner) என்ற சமூகவியலறிஞர் இணக்கத்தை, ‘எதிர்ப்பான அல்லது பகைமுகக் கூட்டுறவு’ (Antagmistic Corporation) என்று கூறுகிறார். உடன்பாடு என்னும் சொல் இணக்கத்துடன் தொடர்புடையதாகும். இருவருக்கிடையிலோ இரு குடும்பங்களுக்கிடையினோ இரு குழுக்களுக்கிடையிலோ இரு நாடுகளுக்கிடையிலோ பிணக்கு ஏற்பட்டால், பின்னால் வரப்போகும் அழிவைக் கருதி உடன்பாடு செய்து கொள்வதனால் பிணக்கைத் தவிர்க்கலாம். ஆனால் இரு சமயக் குழுவினரிடையே ஏற்படும் பிணக்கை உடன்பாடு செய்து கொள்வதன் மூலம் தவிர்ப்பது எளிதன்று. இரு பிரிவினரும் தங்கள் சமயக் கொள்கையினை விட்டுக்கொடுக்க முடியாத காரணத்தால் உடன்பாடு ஏற்படுவதே இயலாமற் போகலாம். இது போன்ற காலங்களில் ஒரு மதத்தினரை மற்றொரு மதத்தவர் பொறுத்துக் கொண்டு போகும் வழியைப் பின்பற்றலாம். சமரசம் (Conciliation), நடுவர் தீர்ப்பு (Arbitration) ஆகியவற்றுடன் இணக்கம் தொடர்புடையதாக இருக்கிறது. தொழிற்கூடங்களில் நிருவாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிணக்குகள், மாநிலங்களுக்கிடையே ஏற்படும் ஆற்றுநீர்த் தகராறுகள் போன்றவை மேற்குறித்த வழிகளால் தீர்த்து வைக்கப்படுவதால் இணக்கம் ஏற்படுகிறது. இணக்கத்தை ஏற்றுக்கொள்வதும் தவிர்ப்பதும் அவரவர் பண்பாட்டைப் பொறுத்தே அமைகிறதென ஆக்பர்னும் நிம்காபும் குறிப்பிடுகின்றனர். சில பண்பாட்டுக் குழுவினர் சமரசம் அல்லது உடன்பாடு செய்து கொள்வதை விரும்பமாட்டார்கள். உடன்பாடு செய்து கொள்வது ஒருவரின் வலிமையின்மையையே காட்டுகிறதென்று பெரும்பாலோர் கருதுவதால் அதை விரும்புவதில்லை. ஆனால் இரு சீனர்கள் தெருவில் சண்டையிட்டுக் கொண்டால் உடனே அதைப் பார்க்க ஒரு கூட்டம் கூடும்; பிறகு கூட்டத்தினர் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு அருகேயுள்ள தேநீர் விடுதிக்குச் செல்வர்; அங்கு வந்தோர் அனைவர்க்கும் தேநீர் வழங்கப்படும்; அப்போது சண்டையிட்டுக் கொண்டோர் ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொள்வர்; இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினரே நடுவர்களாக இருந்து தீர்ப்புச் சொல்வர்; இருவரில் எவரிடம் குறையுள்ளதோ<noinclude> வா. க. 3—8{{sub|அ}}</noinclude> atib9szv4dsk2rgj6osok7no6d46aue பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/140 250 616037 1954454 1822536 2026-07-17T13:00:13Z ஹர்ஷியா பேகம் 15001 1954454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணங்காதார்|116|இணங்காதார்}}</noinclude>அவரே எல்லோர்க்கும் வழங்கப்பட்ட தேநீர்ச் செலவை ஏற்றுக்கொள்வார்; அத்துடன் அச்சிக்கல் முடிவுற்று அவர்களிடையே இணக்கம் ஏற்படும். சில நேரங்களில் அலுவலர்கள் தாம் வேலை செய்யும் அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளால் சிலரிடம் இணங்கிச் செல்ல வேண்டியவர்களாகவுள்ளனர். மேல் அதிகாரிகளுக்கு மற்ற அலுவலர்கள் கீழ்ப்படிந்து வேலை செய்கிறார்கள். ஓர் அலுவலருக்குத் தலைமை அதிகாரியிடம் தனிப்பட்ட முறையில் பகை இருந்தாலும், அவர் தமக்கும் தலைவருக்குமுள்ள தகுதி, அதிகார எல்லை ஆகியவற்றைக் கருதிச் செயற்பட வேண்டி இருப்பதால் தாம் அவருடன் இணங்கிச் செயற்படுகிறார். இது போலவே சமூகத்தில் வசதி படைத்த செல்வர்களுடனும் செல்வாக்குடையோருடனும் ஏழைகள் தம் தகுதியை நினைத்து இணங்கிப் போவதைக் காணலாம். சமூகத்தில் பல்வேறு அடிப்படைகளில் உண்டாகும் பிணக்குகளை அப்படியே விட்டுவிட்டால் அவை சமூக ஒழுங்கையே குலைத்துவிடும். இதனால் பல சமூகச் சிக்கல்கள் உருவாகி அவை மக்களிடையே ஒற்றுமையைச் சீரழித்து விடும். ஆகவே சமூகத்தில் இணக்கம் எப்போதும் வலியுறுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்தால் சமூகம் பல சிக்கல்களுக்குள்ளாகி, நிலையற்றதாக மாறி முடிவில் அழிவுற நேரிடும். {{float_right|கோ.க.}} <b>துணை நூல்: Maclver, R.M. & Page, CH.,</b> Society: An Introductory Analysis, New York: Holt, {{larger|1961}}. <section end="இணக்கம்"/> <section begin="இணங்காதார்"/> {{dhr}} <b>இணங்காதார்:</b> கிறித்தவ சமயத்தாரிடையே கோட்பாட்டினடிப்படையிலும் வழிபாட்டு முறையினடிப்படையிலும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பல பிரிவுகள் தோன்றின. அவர்கள் கி.பி. {{larger|16}}—ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறித்தவரெனவும் (Catholic Christians) மறுப்புரைக் கிறித்தவரெனவும் (Protestant Christians) இரு பெரும் பிரிவினராகப் பிரிந்தனர். மறுப்புரையாளர்களும் வைதிக நெறியாளர் (Orthodox Protestants) எனவும், அவர்களுடைய கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளாதவர் தீவிர சீர்திருத்தவாதிகள் (Radical Rcformers) அல்லது இணங்காதார் (Dissenters) எனவும் இரு பிரிவினராகப் பிரிந்தனர். ஆகையால் இணங்காதார் என்ற பெயர், மிதவாத மறுப்புரைக் கிறித்தவர் அல்லாத, தீவிர சீர்திருத்த வாதிகளடங்கிய எல்லாக் கிறித்தவப் பிரிவினரையும் குறிக்கும். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கடவுள் (தந்தை), கிறித்து (மகன்), தூய ஆவி (Holy Ghost) என்ற மூன்று புனிதப் பொருள்களையும் (Holy Trinity), கிறித்தவத் திருச்சபையின் தலைவராகிய போப்பையும் (Pope), கிறித்தவ வேத நூலாகிய விவிலியத்தினையும் (Bible), திருச்சபைக் குருமார்களையும், சிலை வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் ஒப்புக்கொள்ள, மூன்று புனிதப் பொருள்களையும், விவிலிய நூலையுமே மார்ட்டின் உலூதரால் தோற்றுவிக்கப்பட்ட மறுப்புரைக் கிறித்தவர்கள் ஒப்புக்கொண்டனர். கத்தோலிக்கர் ஏற்றுக்கொண்ட போப்பின் தலைமையை மறுத்த கிறித்தவரே மறுப்புரையாளர் எனக் குறிக்கப்பட்டனர். இவர்களே சீர்திருத்தக் கிறித்தவரெனவும் (Reformers) கூறப்பட்டனர். எடுத்துக்காட்டாகச் செருமனியில் இந்த இயக்கத்தைத் தொடங்கிய மார்ட்டின் உலூதரும் (Martin Luther), சுவிட்சர்லாந்திலிருந்த சீர்திருத்த இயக்கத் தலைவர் சுவிங்கிலி (Zwingli) என்பலரும் பிரஞ்சு சீர்திருத்த இயக்கத் தலைவர் சான் கால்வினும் (John Calvin) போப்பின் தலைமையை ஒப்புக்கொள்ளாத மறுப்புரையாளர்களே ஆயினும். சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையிலும் அவர்களிடையே வேறுபாடுகள் உண்டு. பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பரவிய மறுப்புரைச் சீர்திருத்த இயக்கம் பெருமளவில் கால்வின் என்பவருடைய கருத்துகளை ஒப்புக்கொண்டதேயாகும். ஆங்கிலக் கிறித்தவத் திருச்சபையில் இருந்து வந்த போப்பின் தலைமையை நீக்கிவிட்டு, அரசருடைய (அல்லது அரசின்) தலைமையை ஏற்படுத்திய பாராளுமன்றம், தீவிர மறுப்புரையாளர் வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய மறுத்தது. ஆங்கிலத் தீவிர மறுப்புரையாளர், தூய்மையாளர் (Puritans) அல்லது ஆங்கில மறுப்புரையாளர் திருச்சபையை (Anglican Protestant Church) ஏற்காதவர்கள் (Nonconformists) இணங்காதார் எனப்பட்டனர். இணங்காதார் கடவுள் ஒருவரே என்றும், மூன்று புனிதப் பொருள் இல்லையென்றும், கிறித்து இறைவன் அல்லர் என்றும், அவர் கடவுளால் படைக்கப்பட்டவரே என்றும், விவிலியம் ஒன்றே மக்களுக்கு உண்மையான வழிகாட்டி என்றும் கூறிச் சடங்குகளைப் புறக்கணித்தனர். அவர்களுள் சிலர், கால்வின் கூறிய மக்களையெல்லாம் இயக்கும் இறைவனின் சட்ட உண்மையையும், சான் இலாக்கு (John Locke) கூறிய பகுத்தறிவுக் கோட்பாட்டையும், சோசப்பு பிரீசுட்டிலி (Joseph Priestly) என்ற அறிவியலார் கூறும் கிறித்துவின் உயிர் மீட்பையும் (Resurrection), வியத்தகு நிகழ்ச்சிகளையும் (Miracles) கடவுளின் அனைத்து ஆற்றலையும், பகுத்தறிவு, ஒழுக்க வாழ்வு ஆகியவற்றின் மேம்பாட்டையும், அரசியல் சீர்திருத்தத்தையும் ஒப்புக்கொண்டனர். இவர்களிடையே கோட்பாட்டினடிப்படையில் வேறுபாடுகளும் உண்டு. பண்டைக்காலத்திலிருந்து<noinclude></noinclude> nc4pic89bxdl0onsvx4410ma460sn98 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/141 250 616044 1954457 1822537 2026-07-17T13:19:23Z ஹர்ஷியா பேகம் 15001 1954457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணங்காதார்|117|இணை உச்சரிப்பு}}</noinclude>கிறித்தவத் திருச்சபை தீவினையாளர்களுக்கு நரகமும் நல்வினையாளருக்கு வானுலகமும் கிடைக்குமென்னும் கருத்தைக் கூறிவரவும், ஓரிசென் (Origen) என்ற கி.பி. {{larger|3}}—ஆம் நூற்றாண்டைய துறவி, இறுதித் தீர்ப்பு நாளில் (Last Day) இறைவன் எல்லாரையும் தம்மிடம் அழைத்துக்கொள்ளுவாரெனவும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட இணங்காதார், யாவருக்கும் மீட்சி என்ற கொள்கையாளர் (Universalists) எனவும், புனித முப்பொருள்களை மறுத்துக் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை வற்புறுத்தும் ஒருமைக்கோட்பாட்டாளர் (Unitarans) எனவும் குறிப்பிடப்பட்டனர். இருசாராரும் இணங்காதார் என்ற பெரிய பிரிவில் அடங்குவர். ஒருமைக் கோட்பாட்டாளராகிய இணங்காதார் ஆங்கில மறுப்புரைக் கிறித்தவத் திருச்சபையினால் நிறுவப்பட்ட கொள்கைகளை மறுத்தமையால், அவர்கள் முரண்கோட்பாட்டாளர் (Ileretics) எனக் கருதப்பட்டுப் பாராளுமன்றச் சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டனர். ஆகையால் ஆங்கிலக் குற்றஇயல் சட்டங்கள் திருத்தப்படவேண்டுமென்று இணங்காதார் கூறி, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அமைப்புகளை நிறுவி, இயக்கங்களை நடத்தினர். அவர்கள் சமயக் கோட்பாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் கடுமையான முறைகளை விடுத்து, எளிய, தாராள முறைகளை ஆதரித்தமையால், அவர்களுக்குப் பொதுமக்களுடைய ஆதரவு இருந்தது. பாராளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றங்களிலும் தாராள இயல்புடைய தொழில்களிலும் (அதாவது சமய விரிவுரையாளர், பள்ளி ஆசிரியர் தொழில்களிலும்) அவர்கள் செல்வாக்குப் பெற்றும், தாராளச் சமூகச் சீர்திருத்தங்களை (Liberal Social Reforms) (அதாவது யாவருக்கும் வாக்குரிமை, தொழிலாளர் நலன்கள், பெண்கல்வி, சிறைக்கூடங்கள் சீர்திருத்தம், குற்ற இயல் சட்டச் சீர்திருத்தம், சமய உரிமைகள் முதலியவைகளை) ஆதரித்தும் வந்தமையால், கி.பி. {{larger|1844}}—ஆம் ஆண்டின் இணங்காதார் தொழுகை இல்லங்களின் சட்டத்தின்படி (Dissenters Chapels, Act. {{larger|1844)}} இணங்காதார் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளெல்லாம் நீக்கப்பட்டு, அவர்கள் ஆங்கில மறுப்புரைக் கிறித்தவர்களைப் போன்று எல்லா உரிமைகளும் பெற்ற முழுக்குடிமக்கள் ஆயினர். கடவுளின் தந்தை நிலையையும், மக்களின் உடன்பிறந்தோர் நிலையையும், இயேசுவின் ஒழுக்க இயலான அதிகாரத்தையும், அவர்கள் வலியுருத்தியமையாலும், என்றும் நிலைத்திருக்கும் நரகம் என்ற கருத்தை (The Idea of Eternal Hell) அவர்கள் மறுத்தமையாலும் சாதாரண எளிய மக்களெல்லாம் இணங்காதாருடைய நெறியை வரவேற்றனர். பல சமூகச் சீர்திருத்தங்கள் கி.பி. {{larger|19}}—ஆம் நூற்றாண்டிலும் {{larger|20}}—ஆம் நூற்றாண்டிலும் ஆங்கிலப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இதனால் இணங்காதார் பொதுவாழ்வு சீராக அமைவதற்குத் தொண்டாற்றினர் என்று தெரிகிறது. <section end="இணங்காதார்"/> <section begin="இணுவையந்தாதி"/> {{dhr}} <b>இணுவையந்தாதி</b> அம்பிகை பாகர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் ஈழ நாட்டில் யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் பிறந்தவர், இவரது காலம் கி.பி. {{larger|1884}} முதல் {{larger|1904}} வரை ஆகும். இவர் தணிகைப் புராணத்தில் உள்ள நகரப் படலம் வரை உரை எழுதியவர், சூளாமணியை உரைநடையில் எழுதிப் பதிப்பித்தவர். ‘அந்தாதி’ என்பது தொண்ணூற்றாறு வகைச்(பிரபத்தங்கள்) சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். நூலிலுள்ள ஒவ்வொரு பாடலிலுமுள்ள ஈற்று எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றுள் ஒன்றினை, அடுத்து வரும் பாடலின் முதலில் அமைத்தும், நூலின் இறுதிச் செய்யுளின் ஈறும் முதற்பாடலின் முதலும் ஒன்றாக இருக்குமாறு மண்டலித்து அமைத்தும் பாடுவதாகும். இணுவை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது பாடப்பட்டது போலும் இவ்விணுவை அந்தாதி. இப்போது இந்நூல் கிடைத்தற்கரிதாயுளது. {{float_right|வீ.சொ.}} <section end="இணுவையந்தாதி"/> <section begin="இணை உச்சரிப்பு"/> {{dhr}} <b>இணை உச்சரிப்பு: தனியொலிகள்:</b> பேச்சொலிகளுள் பெரும்பான்மையானவை வாயறையில் பிறப்பவையே. வாயறையில் உள்ள இயங்குறுப்பு தன் நிலையில் இருந்து எழுந்து சினையுறுப்பை அணுகுவதால், மூச்சுக்காற்றின் போக்கில் மாற்றம் விளைகின்றது. இதுவே பேச்சொலி பிறப்பிற்குச் காரணமாக அமைகின்றது. இவ்வாறு பிறப்பிக்கப்படும் ஒலிகள் தனியொலிகள் (Simple Sounds) எனப்படும். இவ்வகை ஒலிகள், ஓர் இயங்குறுப்பு ஒரு நிலையுறுப்பை அணுகி, ஒரே வகைத் தடையை உண்டாக்குவதால் பிறப்பவை. அதாவது, இயங்குறுப்பும் நிலையுறுப்பும் நெருங்கி உண்டாக்கும் தடையால் பிறப்பிக்கப்படும் ஒலிகள் தனியொலிகளாகும். <b>இணை உச்சரிப்பு:</b> ஒரே சமயத்தில் இரண்டிற்கு மேற்பட்ட ஒலியுறுப்புகள் செயற்படுவதாலோ ஒன்றிற்கு மேற்பட்ட தடைகள் விளைவிக்கப்படுவதாலோ பிறப்பிக்கப்படும் ஒலிகள் கூட்டொலிகல் (Complex sounds) எனப்படும். இவ்வகை உச்சரிப்பு முறை இணை உச்சரிப்பு (Co-articulation) எனப்படும். இணை உச்சரிப்பு முறையால் பிறப்பிக்கப்படும் மெய்யொலிகள் இருவகைப்படும். இவை சார்பொலிகள் (Co-articulated sounds), இணையொலிகள் (Double articulation sounds) என்பனவாகும்.{{nop}}<noinclude></noinclude> qtrjtnl4ki4t6ayvv77m2s964z0arrh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/143 250 616099 1954458 1822516 2026-07-17T13:20:39Z ஹர்ஷியா பேகம் 15001 1954458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணை உச்சரிப்பு|119|இணைக்குறளாசிரியப்பா}}</noinclude>ஒலிகளை உண்டாக்கும்போது முயற்சி ஒரே தன்மையாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். {| |- |k͡p, g͡d, b͡j || ||இணை அடைப்பிகள் |- |p͡s x͡j, e͡x || ||இணை உரசிகள் |- |r͡R || ||இணை அதிரி |- |m͡n, n͡n || ||இணை மூக்கொளி. |- |} மூக்குச் சார்பொலி (Nasalized sound)களையும் சிலர் இணை உச்சரிப்பு ஒலிகளில் அடக்குவர். இது தவறு. ஏனெனில், இணை உச்சரிப்பில் இரு இயங்குறுப்புகள் செயற்பட வேண்டும். மூக்குச்சார்பு ஒலி பிறக்கும் போது ஒரே இயங்குறுப்புத்தான் செயற்படுகிறது. ஆனால் மூச்சுக்காற்று, வாய், மூக்கு ஆகிய இரு அறைகளின் வழியாகவும் வெளியேறுகிறது. இதனால் வாயறையில் உண்டாகும் ஒலி மூக்கறையில் ஒலியூக்கம் (Resonance) பெற்று மூக்குச் சார்புடைய ஒலியாகத் தோன்றுகிறது. எனவே இது இணை உச்சரிப்பால் பிறப்பதன்று. எ-டு: {{left_margin|3em|ã,{{gap}} ĩ,{{gap}} ẽ,{{gap}}ũ,{{gap}}z̃,{{gap}}r̃,{{gap}}Ĩ }} <b>கூட்டுயிர்:</b> மெய்யொலிகளேயன்றி உயிரொலிகளும் இணை உச்சரிப்புப் பெற்றுவரும். இவற்றை ஈருயிர் என்பர். நா, வாயறையில் மேற்கொள்ளும் அமைப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு பல்வகை உயிரொலிகளும் பிறப்பிக்கப்படுகின்றன. நா ஓர் உயிரை உண்டாக்க மேற்கொள்ளும் அமைப்பு முறையிலிருந்து வரைந்து விடுபடாமல் மெதுவாக இயங்கி, அடுத்து ஓர் உயிரொலியை உண்டாக்க மேற்கொள்ளும் அமைப்புமுறையை அடையுமாயின் ஓர் உயிரொலி தொடங்கி வேறு ஓர் உயிரொலியாக இறுவதை உணரலாம். இவ்வகைக் கூட்டுயிர்கள் ஈருயிர்கள் (Dipthongs) எனப்படும். இவ்வகை ஒளிப்பு முறையால் இரண்டிற்கும் மேற்பட்ட உயிரொலிகளும்கூட இணைந்து அமையலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரே அசையின் உறுப்புகளாகவே அமையும். இவற்றில் அதிக முழக்கம் (Sonority) உள்ள உயிர் அசையுயிர் (Syllabic vowel} ஆக நின்று அசையின் கருவாகச் செயற்படும். மற்றவை பிறப்பைப் பொறுத்தவரை உயிரொலிகளாக இருப்பினும் மொழியமைப்பின் அடிப்படையில் நோக்கும்போது மெய்யொலிகளாகவே கொள்ளப்படும். கய், காய், விய், வீய், உய், ஊய், எய், ஏய், கொய், கோய் போன்ற சொற்களில் உள்ள யகரங்கள் அவற்றின் முன்னுயிர்களுடன் கூடிய ஈருயிர் அமைப்பின் பகுதியாகும். எனினும் தமிழ் மொழியின் அமைப்பின்படி இவை உயிர், மெய் ஆகிய இரண்டின் கூட்டமைப்பாகவே கொள்ளப்பட வேண்டியவையாகும். {{float_right|கே.மு.}} <b>துணை நூல்கள்: Abercrombie, D</b>., Elements of General Phonetics. Edinburgh University Press, 1967. <b>Haffner, R.M.S.</b>. General Phoneties, University of Wisconsin Press, U.S.A., 1949. <section end="இணை உச்சரிப்பு"/> <section begin="இணைக்குறளாசிரியப்பா"/> {{dhr}} <b>இணைக்குறளாசிரியப்பா</b> ஆசிரியப்பாவின் வகைநான்கனுள் ஒன்றினைக் குறிக்கும். அகவல் ஓசை பெற்று, அளவடிகொண்டதாய், இயற்சீர் மிக்கும் அயற்சீர் கலந்தும், ஆசிரியத்தளை கொண்டும், பிறதளை வரப்பெற்றும், நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் மட்டும் வரப்பெறாமல் அமைவது ஆசிரியப்பாவாகும். இது நேரிசையாசிரியப்பா, இணைக்குறளாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில் ஆசிரியப்பா என்று நால்வகைப்படும். இவற்றுள் இணைக்குறள் ஆசிரியப்பா, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் கொண்ட அளவடியாக அமைய, இடையிலுள்ள அடிகள் இருசீரடியாகவும், முச்சீரடியாகவும் அமைத்துப் பாடப்படும். அரிதாகச் சில இணைக்குறளாசிரியப்பாக்களின் இடையே ஐந்து சீரும் ஆறு சீரும் கொண்ட அடி இடம் பெறுதலும் உண்டு. ‘அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீரடியும் வருதற்குரித்து என்பர் வான்தமிழ் நாவலர்’ என்று யாப்பருங்கலக்காரிகையாசிரியர் ஒழிபியியலில்விதி வகுத்துக் காட்டியுள்ளார். ‘வெண்டளை விரவியும், ஆசிரியம் விரவியும் ஐஞ்சீரடியும் உளவெனமொழி’ (தொல், பொருள், செய்யுள், 63) என்பது தொல்காப்பியம். பண்டை இலக்கண உரையாசிரியர் பலரும் இப்பாவிற்குச் ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ என்னும் புறநானூற்றுப் பாடலை (235) மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இப்பாடலின் இடையிலுள்ள சில அடிகளைச் சீர் வரையறுத்தலில் உரையாசிரியர்கள் மாறுபடுகின்றனர். ஆசிரியப்பாவின் இடையே இரண்டு சீர், மூன்று சீர் அடிகள் வந்தமைக்கும், ஐந்து சீர், ஆறு சீர் அடிகள் அருகிவந்தமைக்கும் இப்பாடலின் இடையே அமைந்துள்ள அடிகளை ஏற்றவாறு சீர் பிரித்துக் காட்டியுள்ளனர். இதனால் இப்பாடல் அடிகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு காணப்படுகிறது. இளம்பூரணர் கருத்துப்படி 17 அடிகளாக அமையும் இப்பாடலை, டாக்டர். உ.வே.<noinclude></noinclude> k38468iuhemb51zjnyx18pi0f439lv4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/144 250 616105 1954459 1822539 2026-07-17T13:21:22Z ஹர்ஷியா பேகம் 15001 1954459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணைத்தமைத்தல்|120|இணைத்தமைத்தல்}}</noinclude>சாமிநாதையர் அவர்கள் {{larger|20}} அடிகளாகப் பதிப்பித்துள்ளார். எவ்வாறாயினும், இணைக்குறளாசிரியப்பாவின் இடையடிகள் நாற்சீரின் குறைந்தும் மிக்கும் வரும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்து விளங்குகிறது. <section end="இணைக்குறளாசிரியப்பா"/> <section begin="இணைத்தமைத்தல்"/> {{dhr}} <b>இணைத்தமைத்தல்</b> என்னும் கோட்பாடு நிருவாகத்திற்குச் சுதந்திரம் கொடுத்து, நிருவாகத்திறமையை மேம்படுத்துவதற்காக உருவான ஒரு கோட்பாடு ஆகும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஒரே தன்மையாக ஒரேவகையான அமைப்பின் மூலம் செய்ய முடியாதென்பதற்காக ஏற்பட்ட கோட்பாடு இணைத்தமைத்தல் (Incorporation) என்பது ஆகும். உலகநாடுகள் அனைத்தும் மக்களுக்குப் பணியாற்றுவதற்காகத் தங்கள் அரசாங்கங்களில் துறைகளை (Departments) ஏற்படுத்திப் பணியாற்றுகின்றன. துறைகள் சில வரையறுக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்குட்பட்டுச் செயற்படக் கூடியவையாகும். இவ்வொழுங்கு விதிகள் அரசாங்கம் புதிதாக மேற்கொள்ளக் கூடிய வணிக, பொருளாதார நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தொல்லை கொடுக்கின்ற காரணத்தினால், இணைத்தமைத்தல் கோட்பாட்டிற்கிணங்க அரசாங்கங்கள் இணையங்களை (Corporations) ஏற்படுத்தி வணிக, பொருளாதாரச் செயல்களைச் செயற்படுத்துகின்றன. அரசாங்கம் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி, மக்களது வாழ்வை வளம்பெறச் செய்யும் கடமையைக் கொண்டுள்ளது. இதற்காக அரசாங்கமே சில செயல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளும் செயல்களுள் ஒன்று வணிகப்பணி. மக்களது பொருள்வளங்களைப் பெருக்கும் எண்ணத்தோடு இப்பணியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இவ்வணிகப்பணியைச் செயற்படுத்துவதற்கு நிருவாக அமைப்புகள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். ஆனால் அதே வேளையில் பொது மக்களுக்குப் பொறுப்பாகவும் இயங்கவேண்டும். இவ்வித நிருவாக அமைப்புகள் மக்களின் பொருளாதார நிலைக்கேற்பவும் நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரத் தன்மைக்கேற்பவும் தம்மை மாற்றிக்கொண்டு, சூழ்நிலைக்கேற்ப நெகிழும் தன்மையோடு இயங்கவேண்டும், மாறுகின்ற சூழ்நிலைக்கேற்ப மாறாமல் இந்த நிருவாக அமைப்புகள் செயற் பட்டால், குறுகிய காலத்திற்குள்ளாக இந்த அமைப்புகள் இல்லாமல் போய்விடும். நிலைபேறாக நிலைத்து இவை இயங்க முடியாது. எனவே இணைத்தமைத்தற் கோட்பாட்டிற்கிணங்க அரசாங்கம் வணிக இணையங்களை உருவாக்கி, வணிகப் பணிகளை மேற்கொள்கின்றது. அரசாங்க நோக்கங்களைச் செயற்படுத்தும் அமைப்புகளில் வணிக இணையங்களும் இடம்பெறுகின்றன. அரசாங்கம் தன் பணிகளைச் செயற்படுத்துவதற்கு இணைத்தமைத்தனதாம் வணிக இணையங்கள். வணிக இணையங்களுக்கென்று தனியான கொள்கையோ நோக்கமோ இல்லை. இவை அரசாங்கத்தின் பொதுக் கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்படுத்தக் கூடியனவும் அல்ல. இக்கொள்கைகளையும் நோக்கங்களையும் விரைவில் நிறைவேற்றக் கூடிய அமைப்புகள் வணிக இணையங்கள். நிருவாகச் சுதந்திரம் நிதிச் சுதந்திரம் வணிக முறைக் கணக்கெடுப்பு ஆகிய மூன்று சுதந்திரங்கள் வணிக இணையங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. வணிக இணையங்கள் தம் பணியாளர் குழாங்களை உருவாக்குகின்றன. வணிகத்தின் தன்மைக்கேற்ப இவற்றின் பணியாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். பணியாளர்கள் ஊதியம், பதவி உயர்வு. பிற பணிக்கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இவை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் அரசாங்கத்தின் பணியாளர் குழாம் கொள்கைகளுக்கு எதிராக அமையக்கூடாது. அரசாங்கம் நிருணயித்துள்ள குறைந்தபட்சத் தகுதிகளைப் பின்பற்றித்தான் வணிக இணையங்களின் பணியாளர் குழாத்தின் கொள்கை அமையும். ஒரு பணி செம்மையாக நடைபெற வேண்டுமாயின், குறுக்கீடுகள் மிகுதியாக இருக்கக்கூடாது. அவ்வாறு குறுக்கீடுகளை மேலதிகாரத்திலுள்ள அரசாங்கம் வணிக இணையங்களுக்குக் கொடுத்தால், வணிக இணையங்கள் அக்குறுக்கீடுகளுக்குப் பதிலிறுக்கும் பணியில்தான் முதலில் இறங்கும். அவை செய்யக்கூடிய பணியில் கவனம் செலுத்த முடியாது. இதனால் பணி பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே தான் நிருவாகச் சுதந்திரத்தை அரசாங்கம் வணிக இணையங்களுக்குக் கொடுத்துள்ளது. வணிக இணையங்கள் தங்கள் வரவு செலவுத்திட்டங்களை உருவாக்க அதிகாரம் பெற்றுள்ளன. வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கி, அதன் மேல் நிருவாகப் பிரிவில் கொடுத்துச் செயற்படுத்துகின்றன. அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் வழங்குகின்ற மொத்த நிதியைப் பெற்றுக் கொண்டு வணிக இணையங்கள் இயங்குகின்றன. இவை தங்கள் செயல்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து நிதியைச் சேமிக்கின்றன. இணையங்கள் சேமிக்கின்ற நிதியை அவை தங்களுடைய சொந்த நிதியாக வைத்துக்கொள்ள அரசாங்கம் உரிமை கொடுத்துள்ளது. அரசாங்கத் துறைகள் ஒவ்வோராண்டும் அவை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழிக்கவில்லையேல், அந்த மீதமுள்ள நிதித்தொகை பொது நிதியாக மாறிவிடுமென்பதால் அவை திட்டமில்லா-<noinclude></noinclude> mmgnmpqkwvj58rx7cukfavpz4g3so3z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/146 250 616394 1954460 1822542 2026-07-17T13:22:52Z ஹர்ஷியா பேகம் 15001 1954460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணைத்தற் சோதனைகள்|122|இணைதல்}}</noinclude>வாய்ந்த அமைப்புகளும், இணைத்தமைத்தல் கோட்பாட்டிற்கிணங்க இயங்கக்கூடியனவாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கக்கூடிய தன்னிச்சையாக ஒழுங்குபடுத்தும் ஆணையங்களும் (Independent Regulatory Commissions) இணைத்தமைத்தல் கோட்பாட்டிற்கிணங்க அரசாங்கப் பணியைச் செய்யக்கூடியவையாகும். எனவே இணைத்தமைத்தற் கோட்பாடு நிருவாகத்திற்கு இன்றியமையாத ஒன்று. {{float_right|சி.ஞா,}} <section end="இணைத்தமைத்தல்"/> <section begin="இணைத்தற் சோதனைகள்"/> {{dhr}} <b>இணைத்தற் சோதனைகள்</b> கல்வி நிலையங்களின் தேர்வில் கொடுக்கப்படும் வினாத்தாளின் ஒரு பகுதியாக அமைந்திருப்பவை. இக்காலத்தில் இணைத்தற்சோதனைகளை (Matching Tests) உளவியல் முறையில் அமைக்கிறார்கள். இவை கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும். சோதனையின் பகுதியில் சில சுருத்துகள் கொடுக்கப்பட்டிருக்கும். இக்கருத்துகளுடன் இயைபு கொண்ட அல்லது நேர் எதிர்மாறான கருத்துகள் மறுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு மாணவர் இவற்றை எவ்வளவு விரைவாகவும் பொருத்தமாகவும் தடுமாற்றங்கள் இன்றியும் இணைக்கின்றார் என்பது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இத்தகைய சோதனைகளில் சிக்கலான கருத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கும். பொறுப்புகள் மிகுதியாக உள்ள வேலைகளுக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பொழுது நிகழ்த்தப்படும் தேர்வுகளிலும், இந்திய ஆட்சிப்பணித்தேர்வு போன்ற கடினமான தேர்வுகளிலும் இத்தகைய சோதனைகள் பல்வேறு வகைகளில் அமைக்கப்படுகின்றன. இணைத்தற் சோதனைகள் நுண்ணறிவுச் சோதனைகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கட்டைப் பகுதிகளை இணைக்கும் செயற்சோதனையாகவும் இணைத்தற் சோதனையைக் கொடுக்கலாம். இவை பொருள் உருவாக்கச் சோதனைகள் (Object Assembly Tests) என்று குறிப்பிடப்படுகின்றன. இச்செயற்சோதனைகளை நுண்ணறிவுச் சோதனையாகப் பயன்படுத்தக் கூடாது. கல்வி நிலையங்களில் உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளில் சாதனைச் சோதனைகளின் (Achievement Tests) ஒரு பகுதியாகவும் இணைத்தற் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைத்தற் சோதனைகள் எவ்விதத்தேர்வுகளிலும் தனித்துக் கொடுக்கப்படுவனவல்ல; சாதனைச் சோதனைகளின் ஒரு பகுதியாகவே உபயோகிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பு (B.Ed.) மாணவர்களுக்கும் இத்தகைய சோதனைகளை உருவாக்கும் பயிற்சி தரப்படுகின்றது. <section end="இணைத்தற் சோதனைகள்"/> <section begin="இணைதல்"/> {{dhr}} <b>இணைதல்:</b> பால் உணர்வுகளை நிறைவு செய்து கொள்ளவும் தன் குடியின் மரபினைத் தொடரச் செய்யவும் ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இணைதல் (Matting) ஆகும். உலகின் அனைத்துச் சமூகங்களிலும் இனணந்து வாழும் வாழ்க்கை, பல்வேறு முறைகளிலும் நிலைகளிலும் காணப்படுகிறது. ஒரு சில சமூகங்களில் திருமணத்திற்கு முன்பு மணமாகாதவர்கள் இணைந்து வாழும் முறையினை அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது. இவ்வித இணைதலில் பங்கேற்பவர்கள், குடும்ப அமைப்பை ஏற்காமல் நிலையற்ற முறையில் தற்செயலாக இச்செயலில் ஈடுபடுவதுண்டு. திருமணம் பால் உணர்வை நிறைவு செய்து கொள்வதை மட்டும் கொண்டிராமல், பல்வேறு சமூகச் செயற்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. தம் சமூகத்தினரால் ஒத்துக் கொள்ளப்பட்ட திருமண வாழ்வில் மணமானோர் ஒன்று கூடித் தம் மரபின் தொடர்ச்சிக்காகச் சந்ததியினரைத் தோற்றுவித்தலும், அவர்களுக்குத் தம் சமூகத்தின் பண்பாட்டு முறைமைகள், குணநலன்கள் ஆகியவற்றைக் கற்பித்தலும், பொருளாதாரச் செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து பொருளீட்டுதலும், பண்பாட்டால் விதிக்கப்பட்ட மரபுகளைக் குடும்ப அமைப்பில் ஏற்றுச் செயற்படுதலும் இவர்களின் கடமைகளாகின்றன. இணைதல் ஓர் உயிர்சார் செயலாகும். இது இனப்பெருக்க மக்கட்டொகையில் (Breeding Population) முதன்மையான நிகழ்வாவதுடன், மக்கட்டொகையின் படிமுறை வளர்ச்சியின் (Evolution) இயக்கத்தையும் சீராகக் கொண்டு செல்கிறது. இனப்பெருக்கக் கொள்கையில்படி இனப்பெருக்க மக்கள் தொகையில் ஒவ்வொருவரும் கருவளமுள்ள எதிர்பாலாருடன் இணைதல் நிகழ்வில் சமபங்கு கொள்ளலாம். இந்த நிலையிலேயே மரபுச் சமநிலையினை (Genetic Equilibirium) மக்கள் தொகை கொண்டிருக்கிறது எனலாம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது கல்வி, தகுதி, செல்வம், உயரம் முதலான காரணிகளை நோக்காமல் மணஞ் செய்துகொள்ளும் மக்கட்குழு, ‘தேர்வுக்கு உட்படாதவர்களுடன் இணையும் மக்கள் தொகை’ {Random Mating Population) எனப்படும். செயல் முறையில் ‘தேர்வுக்குட்படாதவருடன் இணையும் மக்கள் தொகை’ காண்பதரிது. வாழ்க்கைத் துணையினைத் தேர்வு செய்யும்போது புறத்தோற்றம், கல்வி, சமூக, பொருளாதாரத் தகுதி சமயம், மொழி, சாதி, வாழிடப் புவியமைப்பு முத-<noinclude></noinclude> 2vkppc14tx02va8lzyz6dlnbqkqck9z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/150 250 616419 1954461 1822451 2026-07-17T13:23:59Z ஹர்ஷியா பேகம் 15001 1954461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இணைப்படிமலர்ச்சி|126|இணைப்படிமலர்ச்சி}}</noinclude><b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973. <section end="இணைதல்"/> <section begin="இணைப்படி மலர்ச்சி"/> {{dhr}} <b>இணைப்படி மலர்ச்சி:</b> காலத்தினூடே மரபு வழியில் நிகழ்ந்துவரும் தொடர்ச்சியான உயிர் சார் மாற்றமே படிமலர்ச்சியாகும். இவ்வுலகில் உயிர் வாழும் அனைத்து உயிர்களிடத்தும் இவ்வினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வினைக்கு உட்பட்ட அனைத்து உயிரிகளும் (Organisms) தத்தம் உயிர்ப்பண்புகளின் அடிப்படையில் பல சிற்றினமாக (Species) விலங்குப் பேரினத்தில் (Animal Kingdom) வகைபடுகின்றன. பல உயிரிகளின் தொகுப்பான சிற்றினத்தில் அதன் உயிரிகள் அனைத்தும், பாகுபாடின்றிச் சுதந்திரமாக இனப்பெருக்க வினையில் ஈடுபடும். விலங்கினக் குழுக்கள் தம் இன நிலைபேற்றிற்காகத் தம்மை ஒத்த இனங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. மரபுவழியில் உயிரிகள், தம் வாழ்க்கைத் தேவைகளை அடையத் தம் சூழ்நிலையோடும் வாழிடக் காரணிகளோடும் தகவமைத்தோ போட்டியிட்டோ சார்ந்தோ வாழ முற்படுகின்றன. மேற்கூறிய பல்வேறு அமைப்புகளுடன் உயிரினக் குழுக்கள் வாழும்போது, அவை தம் உருவம், உடற் கூறு, மரபுப் பண்பு, வாழ்க்கை முறை முதலான பண்புகளில் தம் மூதாதையர்களை முற்றிலும் ஒத்தோ மாறுபட்டோ திரிந்த நிலையிலோ காணப்பெறும். இந்த இயல் நிகழ்ச்சிகள், இணைப்படி மலர்ச்சி (Parallel Evolution), குவியும் படிமலர்ச்சி (Convergent Evolution), விரியும் படிமலர்ச்சி (Divergent Evolution) ஆகிய பல நிலைகளில் அமைந்திருக்கும். இணைப்படிமலர்ச்சி, குவியும் படிமலர்ச்சி, விரியும் படிமலர்ச்சி ஆகிய இம்மூன்று நிலைகளிலும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே மூதாதையரைக் கொண்ட தொடர்புடைய இரு குழுக்கள் தகவமைந்த மலர்ச்சியினூடே (Adaptive Radiation) வேறுபட்ட சூழிடப் பரப்பிற்கேற்ப வெவ்வேறு பிரிவாக மலர்ந்து, பின்னர் ஒத்த சூழ்நிலைகளில் வாழ முற்படும்போது, வாழ்க்கை அமைப்பிலும் புறத்தோற்ற அமைப்பிலும் ஒத்துக் காணப்படும் மலர்ச்சி முறையே இணைப் படிமலர்ச்சியாகும். தொடர்பற்ற இரு குழுக்களின் கூறுகளும் தகவமைப்பும் ஒன்றையொன்று ஒத்துக்காணப்படும் நிலையே குவிதல் படிமலர்ச்சியாகும். இதற்கு நேர்மாறாகத் தம் உண்மை நிலையிலிருந்து பல்வேறு வாழிடச் சூழ்நிலைகளை ஏற்று வேறுபட்ட குழுக்களாகப் பிரியும் நிலை விரிதல் படிமலர்ச்சியாகும். இரண்டு உயிரிகளின் உடலமைப்பில் நெருக்கமான ஒற்றுமை காணப்படுமாயின், இவ்விரு உயிரிகள் தொகுதி வழி அமைப்பிலும் ஒன்றுபட்டுக் காணப்படும் வாய்ப்புண்டு என்பதே படி மலர்ச்சியியலின் அடிப்படைக் கருத்தாகும். உயிரினத் தொகுதிகளுக்கிடையே காணப்படும் ஒற்றுமையை முன்வைத்து, குவிதல் படிமலர்ச்சி, விரிதல் படிமலர்ச்சி ஆகியவற்றுள் இணைப்படிமலர்ச்சி எதனோடு தொடர்பு கொண்டது என்பதும் உற்றுநோக்க வேண்டியதாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 150 |bSize = 468 |cWidth = 426 |cHeight = 204 |oTop = 366 |oLeft = 24 |Location = center |Description = }}<noinclude></noinclude> n5q27yka3c7sfak8gqsp7qherseinw9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/151 250 616845 1954462 1823502 2026-07-17T13:24:52Z ஹர்ஷியா பேகம் 15001 1954462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணைப்படிமலர்ச்சி127||இணைப்பு}}</noinclude>படிமலர்ச்சியியலின் கோட்பாடுகளை விவரிக்கும் போது சிம்சன் (Simpson) இதன் பண்பினைச் சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார். தகவமைப்பிலும் அமைப்பு முறையிலும் ஒன்றுபட்ட குழுக்கள், தனித்தனியே ஒரே வழியில் தம் மரபுப் பண்புகளுடன் ஒன்றி, மாற்றத்தினை ஏற்றுக்கொண்டே செல்லும். இம்மாற்றம் இரு குழுக்களிலும் சம அளவினதாகக் காணப்பெறுமாதலால், ஒன்றை ஒன்று பெருமளவு ஒத்துக் காணப்படும். இணைப்படி மலர்ச்சி வரைபடத்தில் காணும்போது உண்மையான நிலையினைக் கொண்டிருந்த உயிரினத்தொகுதி விரிந்து, பல்வேறு சூழலில் பல குழுக்களாக வாழும் போது, ஒத்த சூழ்நிலை அமைப்புகள் அவ்வனைத்துக் குழுக்களையும் ஒரு திசையில் ஒத்த வாழ்க்கையுடனும் உடலமைப்புப் பண்புகளுடனும் கொண்டு செல்கின்றன. இதையே சிம்சன், அமைப்பொற்றுமை (Homologous), செயலொற்றுமை (Analogous) என்னும் கோட்பாட்டின் வழி நின்று மொழிவார். குவிதல் படிமலர்ச்சியில் தொடர்புற்ற உயிரினக் குழுக்கள், வாழ்க்கை முறையிலிருந்து உடலமைப்பு வரை ஒத்துக் காணப்படுகின்றன. இக்குழுக்களின் செயல்முறைகளில் காணப்படும் குவிந்த தன்மை, அமைப்பொத்தமுறை அல்லது செயலமைப்பில் ஒத்த பண்பு, இக்குழுக்களின் ஒருநோக்குடைய தகவமைப்பு முறையை வெளிக்காட்டுகிறது. இதனையே அமைப்பொற்றுமை முறையில் சிம்சன் விளக்குகிறார். தொடர்புடைய குழுக்களின் பண்புகள் அமைப்பொற்றுமை என்றும் இவை இணைப்படிமலர்ச்சிக்கு ஒத்த பண்பு என்றும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாகப் பறவைகளின் இறக்கையும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கையும் அமைப்பில் ஒற்றுமையுடையவை. இரு உயிரினத் தொகுதிகளும் வேறுபட்டிருந்தும் அதன் தகவமைப்பு முறைகள் ஒத்தசூழ்நிலையால் அமையப் பெற்றவை. இதுவே குவிதல் படிமலர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும், கடல் பாலூட்டிகளின் படகு போன்ற உடலமைப்பு நன்னீர் மீன்கள், கடல் மீன்கள் முதலானவற்றின் உடலமைப்பிற்கு ஒத்தவையாகும். மேற்கூறியது போன்றே இவ்விரு உயிரினக்குழுக்களும், வெல்வேறு மரபுப் பண்புகளைக் கொண்டிருந்தும் சூழிடப்பரப்பில் (Econiche) ஒத்த தகவமைப்பைக் கொண்டுள்ளதால், குவிதல் படிமலர்ச்சியை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை போன்ற எடுத்துக்காட்டுகளின் வழியில் இருவேறு குழுக்களின் அடிப்படையான ஒற்றுமைகளை மேலோட்டமாக அறிதல் இயலாது. ஏனெனில், உடற்கூற்று அமைப்பு, வளர்சிதைமாற்றம், பல்லமைப்பு, இரத்தச் சிவப்பணு முதலான பண்புகள் ஆகியவற்றைத் தாம் தோன்றுதற்குக் காரணமான இனத்திலிருந்து மாற்றம் பெறாமல் கொண்டிருக்கும். அமைப்பொற்றுமை, செயலொற்றுமை இரண்டுமே படிமலர்ச்சி இயலில் விலங்குகளின் அமைப்பு முறையினை விளக்குவனவாகும். அமைப்பொற்றுமைப் பண்புகள் ஒரே படிமலர்ச்சி வழியில் தொடர்ந்து வருவனவாகும். வெளவாலின் இறக்கையும் குரங்கின் முன்காலும் அமைப்பு முறையில் ஒற்றுமையுடையன. இதைப் போலன்றி வெளவாவின் இறக்கையும் வண்ணத்துப் பூச்சியின் இறக்கையும் செயல் ஒற்றுமை சார்ந்தனவாகும். இவ்விரண்டின் இறக்கைகள் செயல்முறையில் மட்டுமே ஒன்றுபட்டனவாகும். ஆனால் வௌவாலும் வண்ணத்துப்பூச்சியும் படிமலர்ச்சி வழியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகும். இணைப்படிமலர்ச்சியினை அமைப்பொற்றுமைப் படிமலர்ச்சி எனவும் (Homologous Evolution) குவிதல் படிமுறை வளர்ச்சி, செயல்ஒற்றுமைப் படிமலர்ச்சி எனவும் நினைவிற் கொண்டு, இவ்விரு உயிரியல்சார் விளைவுகளையும் வேறுபடுத்திப் பார்க்கலாம். {{float_right|கே.நி.}} <b>துணை நூல்கள்:</b> <b>Dobzhansky T.</b>, Genetics of the Evolutionary Process, Columbia University Press, New York, 1970. <b>Hanson E.D.</b>, Animal Diversity, Prentice Hall, Englewood cliffs, 1964. <b>Simpson G.G.</b>, The Meaning of Evolution, Yale University Press, New Haven. 1967. <section end="இணைப்படி மலர்ச்சி"/> <section begin="இணைப்பு"/> {{dhr}} <b>இணைப்பு</b> என்பது இக்கால ஆட்சி அமைப்பில் பல்வேறு ஆட்சித்துறைப் பிரிவுகளுக்கு இடையே தொடர்பில்லாத நிலை தோன்றுதலைத் தவிர்த்தலுக்காகக் கையாளப்படும் ஒரு செயல் முறையைக் குறிப்பதாகும். இதன் இன்றியமையாமை இக்கால நிருவாக அமைப்பிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இக்கால நிருவாகத்துறை அமைப்பானது (Departmental System of Organisation) பெருமளவில் படை அமைப்பை(Army Organisation) எடுத்துக்காட்டாகக் கொண்டு, பணிப்பாகுபாடு (Division of Labour) என்ற கொள்கையையும் அடுக்காட்சி முறையையும் (Hierarchical System or Organisation) பின்பற்றி அமைக்கப்பட்டது. ஓர் ஆட்சித் துறை செய்ய வேண்டிய பணியைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் துறையின் ஒரு பிரிவில் (Section) உள்ள பணியாளர் செய்கின்றனர். படை அமைப்பின் மேல் நிலையில் படைத்தலைவர் (General or Commander) என்னும் அதிகாரி இருந்து, படை வீரர்களனைவரும் அணிவகுத்துச் செல்ல வேண்டிய முறையைத் தீர்மானித்தல், படை முன்னேறிச் செல்ல வேண்டிய முறையைத் தீர்மானித்தல், படை முன்னேறிச் செல்ல<noinclude></noinclude> l6zf2q173pojf23vwe0n75x2gyff9ua பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/153 250 616852 1954463 1823514 2026-07-17T13:26:36Z ஹர்ஷியா பேகம் 15001 1954463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணைப்பு விளைவுகள்|129|இணையறவுக்கெழு}}</noinclude>tariat) மாநில அரசாங்கத்தின் அமைப்பும் வழியும் என்ற நிறுவனமும் (Organisation and Methods) இருக்கின்றன. <section end="இணைப்பு"/> <section begin="இணைப்பு விளைவுகள்"/> {{dhr}} <b>இணைப்பு விளைவுகள்:</b> குறிப்பிட்ட சில பொருளாதார நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகள் மேலும் பல பொருளாதார நடவடிக்கைகளுக்குக் காரணியாக விளங்கித் தொடர் விளைவுகளை உண்டாக்குமாயின் அதனை இணைப்பு விளைவுகள் (Linkage Effects) எனக் கூறுவர். பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கான கோட்பாடுகளை வகுத்து அவற்றைச் செயற்படுத்தும் முறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொருளியல் வல்லுநர்களுக்கு இப்பகுத்தாய்வு முறை ஒரு கருவியாக விளங்குகிறது. சிறப்பாக, ஒரு பொருளாதார நிலையை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்திற்கு முதலில் எத்துறைக்குத் தலையாய இடம் கொடுக்க வேண்டும்? முதலீடு, உற்பத்தி, பங்கீடு (Investment, Production, Distribution) ஆகியவற்றிற்கு எவ்வகையான முன்னுரிமை (Priority) அளிக்க வேண்டும் என்பன போன்றவற்றைப் பற்றிய முடிவுகளை எடுக்கவும் இது உதவுகிறது. ஒரு தொழிலின் அமைப்பும் திறமையும் பிற தொழில்கள் நிறுவப்படுவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாயிருக்கலாம். எஃகுத் தொழிற்சாலை (Steel Industry) நிலக்கரி, சுண்ணாம்புக்கல், இரும்புக் கனிமம் (Iron Orc) போன்ற பொருள்களின் தேவையைப் பெருக்குவதுடன் போக்குவரத்து, சுரங்கம், கட்டடம், எந்திர உற்பத்தி முதலிய துறைகளின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாயிருக்கிறது. இத்தகைய தொழிற்சாலை அதற்குத் தேவையான ‘பொருள்களை’ அளிக்கும் துறைகளில் (Suppliers’ Side) உண்டாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் பின்னோக்கிய இணைப்பு விளைவுகள் (Backward Linkage Effects) எனப்படும். மாறாக, உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பணிகள், பொருள்கள் வாயிலாகப் பல வகையில் நுகர்வோர் வழியில் (Consumers’ side) உண்டாக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னோக்கிய இணைப்பு விளைவுகள் (Forward Linkage Effects) எனப்படும். உற்பத்தி செய்யப்பட்ட எஃகினால் பிற தொழில்கள் நிறுவப்பட்டு, உள்நாட்டுத் தொழிற்றுறை, போக்குவரத்துத் துறை, வேளாண்மைத்துறை ஆகியவை வளம் பெறுகின்றன. இவை வளம் பெறும் நடவடிக்கைகள் முன்னோக்கிய இணைப்பு விளைவுகளாகும். எஃகு பின்னோக்கிய இணைப்பு விளைவுகளுக்கும். முன்னோக்கிய இணைப்பு விளைவுகளுக்கும் காரணியாகப் பொருந்தும் சிறந்த எடுத்துக்காட்டாகும். பொருளியலின் உள்ளீடு – வெளியீடு ஆய்வின் (Input-Output Analysis) அளவுகோலில் இணைப்பு விளைவுகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளின் ஆதாய விளைவுகளை அறிந்து செயற்பட முன்னேற்றமடைந்த நாடுகள் இவ்ஆய்வை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுகின்றன. அந்நாட்டு முதலீடுகள் பல துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதாயத்திற்கும் எங்கனகயில் தூண்டு தோலாயிருக்கின்றன என்பதை அறியவும் இணைப்பு விளைவுகள் பயன்படுகின்றன. உள்ளீடு-வெளியீடு ஆய்வுப் பட்டியலுடன் (Input-Output Analysis Schedule) முன்னோக்கிய, பின்னோக்கிய இணைப்பு விளைவுகள் ஒப்பிடப்பட்டு அவற்றிற்கிடையேயுள்ள இணைப்புக்கெழு (Correlation co-efficient) கண்டறியப்படுகிறது. வளர்ச்சிகுன்றிய பின்தங்கிய நாடுகளில் எத்தகைய முதலீடும் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்குமாகையால் இணைப்பு விளைவுகளை அளவிடும் தேவை எப்போதும் இருக்காது. <b>துணை நூல்:</b> <b>Kindleberger, P.C.</b>, & <b>Herrick, B.</b>, Economic Development, Mc Graw-Hill Kogakusha Limited, Tokyo, 1977. <section end="இணைப்பு விளைவுகள்"/> <section begin="இணைமணிமாலை"/> {{dhr}} <b>இணைமணிமாலை</b> தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் என்று கூறப்பெறும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வெண்பாவும் கலித்துறையும் மாறிமாறி அமைய, அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்கள் கொண்ட நூல் இரட்டை மணிமாலை எனப்படும். கலித்துறைக்கு மாறாக அகவல் அமைய, வெண்பாவும் அகவலுமாக மாறி மாறி நூறு பாடல்கள் கொண்டமைவதும் இப்பெயர் பெறும். அகவற்பாவிற்கு மாறாக அகவல் விருத்தம் இடம் பெறுவதும் உண்டு. இதன் இலக்கணம் பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபம் ஆகிய பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதன் இலக்கணத்தை, ‘இணை மணிமாலை தணிவில் அந்தாதியாய், மறையவர் பாவும் வணிகர் தம் பாவின், துறையும் இயைந்து ஈரைம்பது வருமே’ {{larger|(66)}} என்று பன்னிரு பாட்டியல் இயம்புகிறது. இப்பிரபந்தம் இன்ன பொருள் பற்றி அமைய வேண்டும் என்னும் வரையறை கூறப்படவில்லை. பிரபந்த மரபியலின் குறிப்புரையாசிரியர் ‘இப்பிரபந்தம் எதுவும் இப்போது இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். <section end="இணைமணிமாலை"/> <section begin="இணையுறவுக்கெழு"/> {{dhr}} <b>இணையுறவுக்கெழு:</b> இரண்டு மாறிகளின் (Variables) தொடர்பினைக் குறிக்கும் எண் இணை-<noinclude> வா. க. 3 – 9</noinclude> nmykpnpwv564le7rhn669pbvn0uqgbe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/154 250 616863 1954465 1823512 2026-07-17T13:35:47Z ஹர்ஷியா பேகம் 15001 1954465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இணையுறவுக்கெழு|130|இத்தாலி}}</noinclude>யுறவுக் கெழு (Correlation Co-efficient) ஆகும். இது “r” என்ற எழுத்தால் குறிக்கப்படும். பிரான்சிசு கால்டன் (Sir Francis Galton), கார்ல் பியர்சன் (Karl Pearson) ஆகியோர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக இரண்டு மாறிகளின் தொடர்பினைக் கணித முறையில் ஆராய்ந்தனர். பியர்சன் கண்டறிந்த கணிதமுறை, பெருக்கல் உந்தம் இணையுறவு (Product-Moment Correlation) என்று சொல்லப்படும். ஒரு மாறியின் மதிப்புக் கூடும்போது அல்லது குறையும்போது, அதனோடு தொடர்பு கொண்ட இன்னொரு மாறியின் மதிப்பும் கூடும் அல்லது குறையும். இது நேர் இணையுறவுக் கெழு (Positive Correlation Co-efficient) எனப்படும். ஒரு குழந்தையின் உயரம் கூடும்போது அதன் எடையும் கூடுதல் இவ்வகை இணையுறவுக் கெழுவுக்குச் சான்று. ஒரு மாறியின் மதிப்புக் கூடும் போது, இன்னொரு மாறியின் மதிப்புக் குறைதல் எதிர் இணையுறவுக் கெழு (Negative Correlation Co-efficient) எனப்படும். நெல் விளைச்சல் கூடும்போது அரிசி விலை குறைதல் எதிர் இணையுறவுக் கெழுவுக்குச் சான்றாகும். ஒரு மாறியின் மதிப்புக் கூடும்போது, இன்னொரு மாறியின் மதிப்புக் கூடவோ குறையவோ இல்லையென்றால், அவ்விரு மாறிகளும் தொடர்புடையன அல்ல எனலாம். உடல் எடைக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. இவ்விரண்டும் தொடர்பு ஏதுமற்ற மாறிகள் ஆகும். இணையுறவுக் கெழுவின் மதிப்பு {{larger|-1}} இல் இருந்து {{larger|+1}} வரைக்கும் இருக்கும். இதில் {{larger|+}} என்ற குறியீடு நேர் இணையுறவுக் கெழுவைக் குறிக்கும், அதே போல் {{larger|–}} என்ற குறியீடு எதிர் இணையுறவுக் கெழுவைக் குறிக்கும். {{larger|r=0}} என்பது இரண்டு மாறிகளுக்கும் இடையே தொடர்பற்ற நிலையைக் குறிக்கும். பியர்சன் முறையில், இணையுறவுக் கெழுவைக்காணக் கீழ்க்காணும் வாய்பாடு பயன்படுகிறது. :<math>r=\frac{N\sum x_y -\sum x\sum y}{[\sqrt{N\sum x^2 - (\sum x^2 })][\sqrt{N\sum y^2 - (\sum y^2 })]}</math> மேலே உள்ள வாய்பாட்டில் {{larger|r}} = இணையுறவுக் கெழு ஆகும். {{larger|N}} என்பது இரண்டு மாறிகளில் உள்ள கூறுகளின் (Sample) எண்ணிக்கையைக் குறிக்கும். {{larger|X, Y}} என்பன இரண்டு மாறிகளின் மதிப்புகள் ஆகும். {{larger|<math>\sum =</math>}} கூட்டு மதிப்பு ஆகும். “{{larger|0}}” விலிருந்து {{larger|0.20}}க்கு உட்பட்ட இணையுறவுக் கெழு வலுவற்றதாகும். {{larger|0.70}} விலிருந்து {{larger|0.90}}க்கு உட்பட்ட இணையுறவுக் கெழு வலுவுள்ளதாகும். பொதுவாக {{larger|+1, -1}} அல்லது “{{larger|0}}” மதிப்புள்ள இணையறவுள் கெழு கிடைப்பதரிது. வலுவுள்ள இணையுறவுக் கெழு, இரண்டு மாறிகளுக்குள்ள தொடர்பைக் குறிக்கும். காகம் கரைவதற்கும் சூரியன் உதிப்பதற்கும் நிறைய தொடர்பு இருந்தாலும், காகம் கரைவதன் காரணமாக சூரியன் உதித்தது என்று கூறிவிட முடியாது. இணையுறவுக்கெழு வலுவாக இருந்து, ஒரு மாறியின் மதிப்புத் தெரியுமானால், அடுத்த மாறியின் மதிப்பை முன்கூட்டியே கணக்கிட (Prediction) இயலும். <b>துணைநூல்கள்:</b> <b>Turney, B.L., and Robb, G.P.</b>, Statistical Methods for Behavioral Science, Intext Educational Publishers, New York, 1973. <b>Best, J.W.</b>, Research in Education, Printice-Hall of India, New Delhi, 1977. <section end="இணையுறவுக்கெழு"/> <section begin="இத்-உல்-பிதிர்"/> {{dhr}} <b>இத்-உல்-பிதிர்</b> என்பது இசுலாமியர்களின் சிறப்பான பண்டிகைகளுள் ஒன்று. இதனை இரம்சான் என்றும் கூறுவர். இப்பண்டிகை இரம்சான் மாதத்தின் இறுதிநாளில் வருகிறது. அமாவாசையை அடுத்த நாள் புதிய பிறை தோன்றும்போது இம்மாதம் தொடங்குகிறது. இத்திருநாளில் இசுலாமியர்கள் புத்தாடை உடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்று நமாசு என்னும் தொழுகையை நடத்துகிறார்கள். இந்த நாளில் நண்பர்களுக்கிடையே இரம்சான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். வறியவர்களுக்கும் வசதி குறைந்தோர்க்கும் இசுலாமியர்கள் ஐயம் இடுவர். இந்த நன்னாளை இசுலாமியர்கள் உலகெங்கும் மகிழ்ச்சித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். <section end="இத்-உல்-பிதிர்"/> <section begin="இத்தாலி"/> {{dhr}} <b>இத்தாலி</b> தென் ஐரோப்பாவின் மத்தியில் அமைந்துள்ள தொன்மையான தீபகற்ப நாடு, சார்டீனியா, சிசிலி என்னும் இரு பெரும் தீவுகளை இத்தாலி கொண்டுள்ளது. வடக்கில் ஆல்ப்சு மலைத்தொடர் அதன் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. ஆல்ப்சு மலைத்தொடர் இத்தாலியை அதன் வடமேற்கில் பிரான்சிலிருந்தும், அதன் வடக்கில்<noinclude></noinclude> qqtcyscp7tl20wa03l3qq2d89p3fwis பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/163 250 617167 1954467 1826078 2026-07-17T13:37:26Z ஹர்ஷியா பேகம் 15001 1954467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலி|139|இத்தாலி நாட்டில் கல்வி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf |Page = 163 |bSize = 468 |cWidth = 182 |cHeight = 251 |oTop = 59 |oLeft = 33 |Location = center |Description = }} இத்தாலியைப் பெரும் புகழுக்குக் கொண்டு செல்லும் கனவும் நனவாகாமல் கனவாகவே கழிந்தன. எனினும், இந்த அடிப்படையில் {{larger|1935-36}}-ஆம் ஆண்டில் இத்தாலியர் எத்தியோப்பியாமீது படையெடுத்து வென்றார்கள். அல்பேனியாவும் {{larger|1939}}-இல் கைப்பற்றப்பட்டது. இதனிடையில் இரண்டாம் உலகப் பெரும்போர் மூண்டது. அச்சு நாடுகளுடன் இணைந்துகொண்டால் விரைவில் வெற்றிகிட்டும் என்ற ஆசையினால் இத்தாலி, செருமனியுடன் இணைந்து கொண்டு பிரிட்டன், பிரான்சு போன்ற நேசநாடுகளை எதிர்த்தது, அது {{larger|1941}}-இல் உருசியா மீதும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மீதும் போர் தொடுத்தது. அது {{larger|1943}}-ஆம் ஆண்டளவில் தான் கைப்பற்றிய ஆப்பிரிக்கப் பகுதிகள் அனைத்தையும் இழந்தது. அந்நாட்டுப் படையரும் பெரும்பாலும் அழிவுற்றன. நேசப் படையினர் சிசிலியில் கரையிறங்கினர். அத்தீவு வெற்றிகொள்ளப்பட்டது. பின்னர் அன்சியோ, சாலர்னோ போன்ற இத்தாலியத் தீபகற்ப இடங்களும் கைப்பற்றப்பட்டன. இத்தாலியத் துறைமுகங்களும் மாநகரங்களும் தாக்கப்பட்டன. முசோலினியின் இருபத்தோராண்டு பாசிச ஆட்சி தூக்கியெறியப்பட்டதுடன், முசோலினியும் சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், {{larger|1945}}-ஆம் ஆண்டுவரை இத்தாலியில் போர் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. நேசப்படைகள் அங்கிருந்த செருமானியப்படைகளை முறியடித்து இறுதியில் வெற்றிபெற்றன. <b>இத்தாலியக் குடியாசு:</b> இத்தாலியில் {{larger|1945}}க்கும் {{larger|1948}}க்கும் இடையில் புதிய இத்தாலி பிறப்பதற்கான அறிகுறிகள் தோன்றின. மூன்றாம் விக்டர் இமானுவல் {{larger|1946}}-ஆம் ஆண்டு மே மாதம் {{larger|9}}-ஆம் நாள் முடிதுறந்தார். அவர் மகன் இரண்டாம் அம்பர்ட்டு (Humbert) முடிமன்னரானார். இத்தாலியில் {{larger|1946}}-ஆம் ஆண்டு சூன் {{larger|2}}-ஆம் நாள் முதல் முறையாகச் சுதந்தரமான தேர்தல் நடைபெற்றது. முடியாட்சியை நீக்கிவிட்டுக் குடியாட்சி முறையை இத்தாலியர்கள் நிலைநாட்ட விரும்பினர். இரண்டாம் அம்பர்ட்டு {{larger|1946}}-ஆம் ஆண்டு சூன் {{larger|13}}-ஆம் நாள் அரியணையை விட்டு இறங்கினார். புதிய அரசியல் அமைப்புச் சபைக்கான தேர்தல் நடைபெற்றது. மக்களாட்சி முறையின் அடிப்படையில் {{larger|1947}}-இல் அரசியலமைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தாலி குடியரசானபோது, கிறித்தவ மக்களாட்சிக் கட்சி, சமதருமக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் வலிமைபெற்றிருந்தன. அந்நாட்டில் {{larger|1948}}-ஆம் ஆண்டிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட அரசாங்கங்கள் வந்தன. அவை அனைத்தும் கிறித்தவ மக்களாட்சிக் கட்சி அரசுகளே யாகும். இத்தாலி ஐக்கிய நாடுகளின் அவையில் {{larger|1955}}-ஆம் ஆண்டில் உறுப்பு நாடாயிற்று, சோசியலிசுட்டுகள் கிறித்தவ மக்களாட்சிக் கட்சியுடன் {{larger|1962}}-இல் கூட்டுச்சேர்ந்து, {{larger|1976}}-வரை ஆட்சி நடத்தினர். இதனிடையில் பொதுவுடைமைக் கட்சியும் பெருகி வளர்ந்தது. இருப்பினும் அவர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. <b>இத்தாலியின் இன்றைய நிலை:</b> பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நிலையற்ற அரசாங்கங்கள் போன்றவற்றால் இத்தாலியில் பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன. பொதுவுடைமைக் கட்சியினரின் ஆதரவையிழந்த கிறித்தவ மக்களாட்சிக் கட்சி, சமதருமக் கட்சியின் ஆதரவில் {{larger|1980}}-இல் கூட ஆட்சியைக் கைப்பற்றிக் கூட்டாட்சி அரசினை உருவாக்கியது. <section end="இத்தாலி"/> <section begin="இத்தாலி நாட்டில் கல்வி"/> {{dhr}} <b>இத்தாலி நாட்டில் கல்வி:</b> ஒரே சீரான தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிக் கல்வியும், ஆனால் ஒரே குழப்பமான திருக்குமுறுக்கான மேல் நிலைப்பள்ளிக் கல்வியும் இத்தாலி நாட்டுக் கல்வி<noinclude></noinclude> l0zvpk4l196qtad6flhkpupa4lvhi4z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/165 250 617184 1954468 1826080 2026-07-17T13:38:29Z ஹர்ஷியா பேகம் 15001 1954468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலி நாட்டில் சுல்வி|141|இத்தாலிய அரசியலமைப்பு}}</noinclude><b>ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி:</b> ஆசிரியர் பயிற்சியிலும் மற்ற நாட்டுக் கல்வி அமைப்பிலிருந்து இத்தாலி நாடு முரண்பாடான நிலையில் உள்ளது. மழலையர் பள்ளி தொடக்கப் பள்ளி, ஆகியவற்றில் ஆசிரியர்களாக வேண்டும் என்றால், ஒருவர் நடுநிலைப் பள்ளிக் கல்வி முடித்த பின்பு முறையே மூன்றாண்டு ஆசிரியர் பயிற்சியும் (Scuola Magistral) நான்காண்டு ஆசிரியர் பயிற்சியும் (Institute Magistral) பெற்றாக வேண்டும். உயர் நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக வேண்டுமென்றால், ஒருவர் நான்காண்டுகளும் ஐந்தாண்டுகளும் பல்கலைக்கழகப் படிப்பும் தகுதித்தேர்வில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சிகளில் கல்வி உளவியல் குறைவான அளவே இடம்பெறுகிறது. மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் {{larger|93}} விழுக்காடு தனியார் பள்ளிகளே, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் {{larger|55}} விழுக்காடு தனியார் பள்ளிகளே. <b>உயர் கல்வி:</b> இத்தாலிய உயர் நிலைக்கல்வி பழைய நிலையிலிருந்து மாறிக் கொண்டு வருகிறது. இப்பொழுது {{larger|44}} நகரங்களில் {{larger|70}} பல்கலைக்கழகங்கள் உள்ளன. இருப்பினும், உரோம் (Rome), பொலக்னா (Bologna), நேப்பிள்சு (Naples), பாரி (Bari), பாலர்மோ (Palermo) ஆகிய ஐந்து அரசுப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே மிகுதியான மாணவர்கள் சேர்ந்து பயிலுகின்றனர். பிற வளர்ந்த நாடுகளில் உள்ள அளவுக்கு, இத்தாலிய உயர் கல்வி பற்பல துறைகளைக் கொண்டதன்று. இத்தாலியக் கல்வி சில துறைகளுடன் ஒரே சீரான (Monolithic) தன்மை கொண்டதாக உள்ளது. மேல்நிலைப் பள்ளிக்குப்பின், பல்கலைக் கழகக் கல்வியைத் தவிர வேறு வகையான கல்வி முறைகள் இங்கு இல்லை, குறுகிய காலச்சான்றிதழ், பட்டய வகுப்புகளில் (Certificate and Diploma Courses) இரண்டு விழுக்காடு மாணவர்களே சேர்ந்து பயிலுகின்றனர். பழைய கற்பித்தல் முறைகளையே ஆசிரியர் வகுப்பறைகளில் பயன்படுத்துகின்றனர். மாலை நேரக்கல்வி இன்னும் இத்தாலியில் பெரிய அளவில் இல்லை. தொலை தூரக்கல்வி (Distance Education) என்ற கருத்தும் இந்நாட்டில் இல்லை. இத்தாலியப் பல்கலைக்கழகங்களில் மாணவரது வருகைப் பதிவு (Daily Attendance) குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெயர்களைப் பதிவு மட்டுமே செய்து கொள்கின்றனர்; ஆனால், வகுப்பறைக்கு வருவதில்லை; பிற இடங்களில் பகுதி நேர வேலை பார்ப்பவர்களாக மாணவர்கள் உள்ளனர். அவர்கள் தேர்வு எழுத மட்டும் பல்கலைக் கழகத்திற்கு வருகின்றனர். இம்முறையினை {{larger|70}}-இலிருந்து {{larger|80}} விழுக்காடு மாணவர்கள் மேற்கொள்ளுகின்றனர். உயர் கல்வி அளவில், தனியார் பல்கலைக் கழகங்கள் மிகக்குறைவே, அரசு ஒப்புதலுடன் நான்கு கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருகின்றன. இப்பயிற்சி பெற்றவர்கள் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவோ உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களாகவோ ஆகலாம். இத்தாலியக் கல்வியில் {{larger|1979}}-ஆம் ஆண்டிலிருந்து சில புதிய போக்குகள் காணப்படுகின்றன. பல்கலைக் கழகத்திலுள்ள ஆசிரியர்கள் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்ற புதிய அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளனர். டாக்டர் பட்டத்திற்குஇணையான பட்ட மேற்படிப்பு (Doctorato di Ricerea) அண்மையில்தான் உயர் கல்வியில் கொண்டுவரப்பட்டது. இது மூன்றாண்டு ஆய்வுப் படிப்பாகும். புதிய கற்றல், கற்பித்தல் முறைகளை வகுப்பறையில் ஆசிரியர்கள் முயன்று பார்க்கின்றனர். பல்துறைகளையும் வளர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. <section end="இத்தாலி நாட்டில் கல்வி"/> <section begin="இத்தாலிய அரசியலமைப்பு"/> {{dhr}} <b>இத்தாலிய அரசியலமைப்பு:</b> இக்கால இத்தாலிநாடு கி.பி. {{larger|1859}}-ஆம் ஆண்டு முதல் {{larger|1871}}-ஆம் ஆண்டுவரை, இரண்டாம் விக்டர் இம்மானுவல் (King Victor Immanuel II) என்ற கார்டினிய இத்தாலிய அரசர், கவுண்ட்டுகவூர் (Count Cavour) என்ற அரசியலறிஞர், கரிபால்டி (Garibaldi) என்ற போர் வீரர், சோசப்பு மாசினி (Joseph Mazzini) என்ற சிந்தனையாளர் ஆகியோருடைய நன்முயற்சிகளின் விளைவினாலும் வெற்றியான போர்களினாலும் அரசியல் சூழ்வலியாலும் பலசிறு தனிநாடுகளை ஒரே அரசாங்கத்தின்கீழ் இணைத்ததனாலும் தோன்றியதாகும். இந்நால்வரும் நடத்திய இத்தாலி இணைப்பு இயக்கமே (Risorgimento} இத்தாலி என்ற ஒரு நாடு கி.பி. {{larger|19}}-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் ஐரோப்பாவில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இந்த இணைப்பு ஏற்படுவதற்கு முன்னரே இத்தாலியின் ஒரு பகுதியாகிய பீட்மாண்ட்டு-சர்டினியாவின் (Piedmont-Sardinia) அரசராகிய சார்லசு ஆல்பர்ட்டு (Charles Albert) என்பவர், கி.பி. {{larger|1848}}-ஆம் ஆண்டில் தம் நாட்டில் ஓர் அரசியலமைப்பை (Constitution) நிறுவும்<noinclude></noinclude> 12ujk4x0yag68ez2n7qrk3h7npj7ddd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/167 250 617393 1954472 1826088 2026-07-17T13:47:35Z ஹர்ஷியா பேகம் 15001 1954472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியக் குடியரசுக் கட்சி|143|இத்தாலியக் ... சமுதாயக்கட்சி}}</noinclude>Court) {{larger|15}} நீதிபதிகள் {{larger|9}} ஆண்டுக் காலத்துக்கு அலுவல் செய்கின்றனர். இந்த நீதிமன்றத்துக்கு அரசாங்கச் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒத்தவையா என்று ஆராயவும், நடுவண, உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகார எல்லை பற்றித்தோன்றும் வழக்குகளை ஆராயவும், பாராளுமன்றம் கொண்டுவரும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும், குடியொப்பத்துக்கு விடப்படவேண்டிய கேள்விகளைத் தீர்மானிக்கவும் அதிகாரங்கள் இருக்கின்றன. இத்தாலி நாட்டில் தேர்தல்கள் பாராளுமன்றத்துக்கும் உள்நாட்டுக் குழுக்களுக்கும் உள்ளூர்மன்றங்களுக்கும் (Communes) நடைபெறுகின்றன. அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு எல்லாக் குடிமக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கிறபடியால், இத்தாலி நாட்டில் கிறித்தவக் குடியாட்சி கட்சிக் (DC), இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி (PCI), இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி (PST), இத்தாலியச் சமூகக் குடியாட்சிக் கட்சி (Social Democratic Party), இத்தாலியத் தாராளக்கட்சி (PLI), இத்தாலியக் குடியரசுக்கட்சி (PRI) முதலிய அரசியற் கட்சிகள் தோன்றியுள்ளன. அரசாங்கமும் பல கட்சிகளின் உறுப்பினரையுடைய கூட்டு அரசாங்கமாகவே பெரும்பாலும் இருக்கிறது. <section end="இத்தாலிய அரசியலமைப்பு"/> <section begin="இத்தாலியக் குடியரசுக் கட்சி"/> {{dhr}} <b>இத்தாலியக் குடியரசுக் கட்சி</b> என்னும் அரசியல் கட்சி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இத்தாலியில் தோன்றிய பல அரசியல் கட்சிகளுள் ஒன்று ஆகும். இரண்டாம் உலகப்போரில் இத்தாலிய பாசிசச் சருவாதிகார அரசாங்கம், நாசிசச் செருமனியோடு சேர்ந்து போரிட்டு நேசநாடுகளால் தோல்வியடைய, அதனால் போரிலிருந்து விலகி, பாசிச அரசாங்கத்தை நீக்கிவிட்டு, ஒரு குடியரசாகத் (Republic) தன்னை நிறுவிற்று. பின்னர் முற்போக்குக் குடியாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு ஓர் அரசியலமைப்புச் சட்டம் அந்நாட்டிற்கு {{larger|1946}}-ஆம் ஆண்டில் வரையப்பட்டது; இவ்வரசியலமைப்பு {{larger|1948}}-ஆம் ஆண்டு முதல் நாளிலிருந்து செயற்பட்டு வருகிறது. இவ்வரசியலமைப்பில் குடிமக்களுக்குத் தங்களை அரசியல் கட்சிகளாக அமைத்துக்கொள்ளுகின்ற அரசியலுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் பயனாகப் பல அரசியற் கட்சிகள் இத்தாலியில் தோன்றின. இத்தாலியக் குடியரசுக் கட்சி (PRI என்னும் Italian Republican Party) என்பது, உண்மையில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இத்தாலிய விடுதலைக்கும் இணைப்புக்கும் (Unification) பாடுபட்ட ஓர் இயக்கத்தினின்றும் தோன்றிய அரசியற் கட்சி ஆகும். இடதுசாரிக் குடியாட்சிக் கட்சியினருடைய அரசியல் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் இக்கட்சியினர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். இக்கட்சி தோன்றிய ஆண்டு கி.பி. {{larger|1895}} ஆகும். இதில் தீவிரவாதக் கொள்கையாளரே செல்வாக்குடனிருந்தனர். அரசியலமைப்பு குடியரசாக (Republic) இருத்தல் வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கங்களுள் ஒன்று. மேலும், இக்கட்சி சமயக் குருமார் ஆதிக்கத்தை எதிர்த்தும் சமூகச் சீர்திருத்தங்களை ஆதரித்தும் வருகிறது. முசோலினியின் பாசிச ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்த இந்தக் கட்சி, {{larger|1943}}-ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றிற்று. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இத்தாலியர்கள் மன்னராட்சிக்கு எதிராக வாக்களித்தால்தான், புதிதாக அமைக்கப்படும் அரசாங்கங்களில் தாம் பங்கு கொள்ள இயலுமென்றும், அவ்வாறு முடியாட்சி நீக்கப்படாவிட்டால் தாம் பங்கு கொள்ள இயலாதென்றும் இது உறுதியாகக் கூறிவிட்டது. இதனுடைய உறுதிப்பாட்டின் விளைவாக {{larger|1946}}-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓர் அரசியலமைப்புக் குடியொப்பத்தில் (Constitutional Referendum) பெரும்பாலான இத்தாலிய வாக்காளர்கள், முடியாட்சியை நீக்கிக் குடியரசை நிறுவுதற்கு ஒப்புதல் அளித்தனர். போருக்குப் பிந்திய காலத்தில் இந்தக் கட்சிக்குப் பெருமளவு ஆதரவாளர் நாட்டில் இல்லை என்றாலும். இது இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி, இத்தாலியப் பொதுவுடைமைக்கட்சி, கிறித்தவக் குடியாட்சிக் கட்சி ஆகியவற்றினின்றும் தனித்தியங்கி, இத்தாலிய அரசியல் அரங்கில் நடு இடத்தில் இருந்தமையால், இதனுடைய ஆதரவு பல கூட்டணி அரசாங்கங்களுக்குத் தேவைப்பட்ட காரணத்தால், இது பல கூட்டணி அரசாங்கங்களில் இடம் பெற்றது. இவ்வாறு இது {{larger|1947}}-ஆம் ஆண்டிலிருந்து {{larger|1953}}-ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த நான்கு கட்சி ‘நடுத்தன்மை’ அரசாங்கங்களில் (Four Party ‘Centre’ Governments) பங்கு பெற்றது. இது {{larger|1953}}-ஆம் ஆண்டில் அரசாங்கத்திலிருந்து விலகிற்று, பின்னர், {{larger|1963}}-ஆம் ஆண்டில் வலுவான, நடுத்தன்மையுள்ள (அதாவது தீவிரமான வலது, இடது நிலைக்குச் செல்லாத) கட்சியாகக் கிறித்தவக் குடியாட்சிக் கட்சி வந்து இத்தாலியச் சமூகச் சமநிலைக் கட்சிகளோடும் இத்தாலியக் குடியரசுக் கட்சியோடும் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வந்தபோது, இத்தாலியக் குடியரசுக் கட்சி மீண்டும் அவற்றோடிணைந்து கூட்டு அரசாங்கம் உருவாவதற்கு உதவி செய்தது. இக்கட்சி சேர்ந்ததனால் அரசாங்கம் இடதுசாரி இயல்புடைய, நடுத்தன்மை உடைய கூட்டு அரசாங்கமாக (Centre Left Coalition) ஆயிற்று. <section end="இத்தாலியக் குடியரசுக் கட்சி"/> <section begin="இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி"/> {{dhr}} <b>இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி</b> என்ற இத்தாலிய அரசியற்கட்சி (Italian Democratic Socialist Party, PSDI), இக்கால<noinclude></noinclude> k3l9yojeqwc6qz64onh8ekg621kjnaf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/170 250 617560 1954473 1826092 2026-07-17T13:50:39Z ஹர்ஷியா பேகம் 15001 1954473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியச் சமநிலைச் சமுதாயக்கட்சி|146|இத்தாலியத் தத்துவம்}}</noinclude>(Anti-authoritarian), அரசு என்ற அமைப்பை எதிர்த்தல் (Anarchist), நாட்டுடைமைக்கு அல்லது கூட்டாண்மைக்கு (Collectivism) ஆதரவு தருதல் முதலிய நோக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வியக்கத்துக்கு நகரிய ஆலைத் தொழிலாளரும் இளம் சிந்தனையாளரும் ஆதரவளித்தார்கள். தென் இத்தாலியிலுள்ள வேளாண் தொழிலாளருடைய ஆதரவைப் பெறுதற்காகப் பன்னாட்டுச் சமநிலைச் சமுதாயத்தவர் (International Socialists) தோற்றுவித்த கலகங்கள், கி.பி. {{larger|1877}}-ஆம் ஆண்டில் பயனற்றுப் போயின; ஆகையால் பல தலைவர்கள் இவ்வியக்கத்தினின்றும் விலகிப் பலவகைப்பட்ட சமநிலைச் சமுதாயக் கட்சிகளை நிறுவினர். சமநிலைச் சமுதாயத்தவருள்ளும் மார்க்சியக் கருத்துகளை ஏற்றுக் கொண்டோரும் மறுத்தவரும் இருந்தனர். தலைமை அமைச்சர் சியோலிட்டி குறைந்த வருமானமுடைய வகுப்பாரின் வரிச்சுமையைக் குறைப்பதற்காகவும், அவர்களுக்குத் தொழிற்சங்க அமைப்பிலும் அரசியலிலும் கூடுதலுரிமை கிடைப்பதற்காகவும் ஏற்ற ஒரு நிதிக்கொள்கையை (Financial policy) வகுத்தார். இந்தச் சூழ்நிலையில்தான் இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி (PSI), அரசு வேண்டாக்கொள்கையாளரிடமிருந்து விடுபட்ட தனித்த ஓர் அரசியற் கட்சியாகக் கி.பி. {{larger|1892}}-இல் அமைக்கப்பட்டது. ஆயினும் சியோலிட்டி பதவியைத் துறந்து விட, இக்கட்சியும் அரசு வேண்டாக்கட்சியாளரும் சிசிலியில் நடந்த கலகத்துக்கு ஆதரவளிக்கவே, புதிய தலைமை அமைச்சர் கிரிசிப்பி (Crispi) விரிவாக அடக்குமுறைச் சட்டங்களைக் கையாண்டு, இக்கட்சியை {{larger|1894}}-ஆம் ஆண்டு அக்டோபரில் கலைத்தார், பின்னர், இக்கட்சியினர் பல்வேறு கட்சிகளுடன் இணைந்திருந்தனர். இவர்கள் புரட்சி முறையையும் தொழிலாளரின் சருவாதிகார ஆட்சி முறையையும் (Dictatorship of the Proletariat) ஆதரித்தனர். ஆனால், இவர்களுக்குப் பொதுமக்களிடையே பரவலான ஆதரவு இல்லை. இவர்களிடமிருந்து பிரிந்து, சிலர் {{larger|1921}}-ஆம் ஆண்டில் இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சியை அமைத்தனர். பாசிசக்கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியவுடன் முசோலினியின் சருவாதிகாரம் நிறுவப்பட்டதும், இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சியும் (PSI), அதனுடைய மற்றொரு பிரிவும் (PSU) இத்தாலி நாட்டிற்கு வெளியிற் சென்று {{larger|1930}}-ஆம் ஆண்டில் இணைந்தன. இவர்கள் {{larger|1927}}-ஆம் ஆண்டில் பொதுவுடைமையாளர்களுடன் சேர்ந்து, பாசிச எதிர்ப்புக் கூட்டணியை (Anti Fascist Action Coalition) அமைத்தனர். நாடு கடத்தப்பட்ட இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சியினரும் பொதுவுடைமையாளரும் ஒரு கூட்டுச் செயல் ஒப்பந்தத்தை (United Action Agreement) {{larger|1934}}-ஆம் ஆண்டில் செய்தனர். முசோலினி ஆட்சி வீழும் காலத்தில் நடந்த இத்தாலிய விடுதலைப்போரில், பல்வேறு வகையான சமநிலைச் சமுதாயக் கட்சியுடன் சேர்ந்து இவர்கள் பணிசெய்தனர். பாசிசத்துக்கு எதிரான கட்சிகள் இத்தாலிய விடுதலையை அடைவதில் காட்டிய ஒற்றுமை, விடுதலைக்குப் பின் நீடித்திருக்கவில்லை, பல அரசியற்கட்சிகளுள்ளும் கிறித்தவக் குடியாட்சிக் கட்சிக்கே பெருமளவு மக்களுடைய ஆதரவு இருந்தமையால், {{larger|1946}}-ஆம் ஆண்டிற்குப் பின் அதுவே பல அரசாங்கங்களை அமைக்கக் கூடிய ஆளுங்கட்சியாக இருந்தது. தொழிலாளர் ஒற்றுமை கொண்ட சமநிலைச் சமுதாயக் கட்சி (Socialist Party of proletarian Unity - PSIUP), சமநிலைச் சமுதாயக் கட்சியும் (PSI) {{larger|1943}}-ஆம் ஆண்டில் இலெவியோ பாசோ (Levio Passo) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட உழைப்பாளர் ஒற்றுமை இயக்கம் (Proletarian Unity Movement) என்ற அமைப்பும் இணைந்ததனால் தோன்றிய ஒரு கட்சியாகும். இத்தாலியும் ஒரு குடியரசு நாடாயிற்று. பின்னர் இத்தாலியச் சமநிலைச் சமுதாயக் கட்சி தனித்த ஓர் அரசியற் கட்சியாக இயங்குவதற்குப் போதிய அளவு மக்களுடைய ஆதரவு இல்லாமையால், அது மற்றக் கட்சிகளோடு இணைந்தே கூட்டு அரசாங்கங்களில் பங்கு பெற்று வருகிறது. <section end="இத்தாலியக் குடியாட்சிச் சமநிலைச் சமுதாயக்கட்சி"/> <section begin="இத்தாலியத் தத்துவம்"/> {{dhr}} <b>இத்தாலியத் தத்துவம்:</b> தாந்தே என்ற கவிஞர் அறவியல் சார்ந்த கிறித்தவத் தத்துவத்தை ஆராய முற்பட்டார். ஏனெனில், அது மனிதனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. அத்தத்துவம் வாழ்க்கைக்குத் துணையாவதன்றி, முத்தியடையவதற்கும் வழிவகுத்தது. தாந்தேயின் (Dante) கருத்துகள் தாமசு அக்குவினசு (Thomas Aquinas) இடமிருந்து பெறப்பட்டவையாகும். இவரது புகழ் பெற்ற நூலாகிய தெய்விக இன்பியலில் (Divine Comedy) இத்தாலியத் தத்துவத்தின் குழப்பநிலை தெளிவாகப் புலப்படுகிறது. போப்பிற்கும் அரசருக்கும் ஏற்பட்ட தகராறு, சமூகத்தில் வாழும் மனிதனுக்கும் தனித்து வாழ்கின்ற துறவிக்கும் ஏற்பட்ட வேறுபாடு ஆகியவை இவர் பாடல்களில் காணப்படுகின்றன. சமூக வாழ்வு, மனித விடுதலை, அமைதியை நோக்கித் தனிமையாகவும் உயர்ந்த நோக்குடனும் செய்கின்ற முயற்சி ஆகியவற்றுள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் இத்தாலியத் தத்துவத்திற்குத் தாந்தே கொடுத்த சிந்தனைகள். <b>பிசினோவும் பிக்கோவும்</b> (Ficino & Pico) பிளேட்டோவின் கொள்கையைப் பின்பற்றிக் கிறித்தவ சமயத்தை ஆதரித்தனர்; ஆன்மாவின் விடுதலையைப் பற்றியும் சிந்தித்தனர். அதே சமயத்தில், இவர்கள் சுதந்திரமான எண்ணத்திற்கும் மனித சக்திக்-<noinclude></noinclude> obs6h7mu97s0i5gnaelxmkzhr55l4t4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/746 250 623210 1954432 1861520 2026-07-17T12:13:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|706|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>சிலரைத் தவிர்ப்பதும், தவிர்த்தல் தேவையின் உட்பொருள்களாகும். விளையாட்டின் மூலம் மகிழ்ச்சியடைதலும். மற்றவர்களுடன் நகைச்சுவையாக உரையாடுதலை விரும்புவதும், விளையாட்டுத் தேவையின் உட்பொருள்களாகும். பயணம் அல்லது திட்டத்தை வகுத்து அதனை எடுத்து நடத்துதலும், எதனையும் ஒழுங்குறச் செய்தலும், குழப்பங்களுக்கு நல்ல தீர்வு காண்பதும், ஒழுங்குத் தேவையின் உட்பொருள்களாகும். புலன் சார் மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல் புலனுணர்வுத் தேவையின் உட்பொருளாகும். பழைமைப் பாதையிலேயே வாழ்தலும் எதிர்பாராத விளைவுகளுக்கு அஞ்சிப் புதுமையைத் தவிர்த்தலும் தீங்கு தவிர்ப்புத் தேவையின் உட்பொருள்களாகும். மேற்குறிப்பிட்ட தேவைகள் மனிதனின் ஆளுமையைப் பெருமாவிற்குப் பாதிக்கின்றன என்ற மர்ரே கருதினார்.{{Right|வ.தே.சு}} <b>ஆபிரகாம் மாசுலோ</b>: 1908-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார். விசுகான்சின் (Wisconsin) பல்கலைக்கழகத்தில் உயர்மட்டக் கல்வி கற்றார். விசுகான்சிலும் புரூக்லின் (Brooklyn) கல்லூரியிலும் உளவியல் பேராசிரியராகப பணியாற்றிய மாசுலோ 1967-ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கத்திற்குத் தலைவரானார். உளவியல் துறையில் பெரும் புகழ்பெற்று 1970-ஆம் ஆண்டு இறந்தார். மனிதனின் தேவைகள் எந்த அளவில் நிறைவு பெறுகின்றவோ அந்த அடிப்படையில், அவனுடைய ஆளுமை அமைகிறது என்று கூறுகிறார். ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய முழுத்திறன்களின் வளர்ச்சியில் நாட்டம் உண்டு என்னும் கருத்தினை மாசுலோ (Abraham Maslo) வலியுறுத்துகிறார். மனிதனின் தேவைகள் பல நிலைகளில் உள்ளன என்றும், இவைகளுள் ஆதாரத் தேவைகள் நிறைவு பெற்றால்தான் உயர்நிலைத் தேவைகள் (Meta Needi) எழும் என்றும் மாசுலோ கருதுகிறார். தன்னுடைய திறமைகளுக்கு ஏற்பத் தன்னிறைவு (Self Actualisation) பெறுபவன் ஆளுமைச் சமநிலை அடைகிறான். இத்தகைய ஆளுமையைப் பெற்றவனிடம் இயல்பான படைப்பாற்றல் மிக்க நடத்தை காணப்படும் என்று அவர் கருதுகிறார். மனிதர்களிடம் உடல் சார் ஊக்கிகள் வலுவாகக் காணப்படுகின்றன. இவை மனிதனின் அடிப்படைத் தேவைகளுடன் தொடர்பு கொண்டவை. இவைகளுக்கு மேல் அடுத்த தளத்தில் பாதுகாப்பு உணர்வுடன் தொடர்பு கொண்ட தேவைகள் (Safety Needs) காணப்படுகின்றன. அவைகளை அடுத்துச் சமூகத்தில் பிறருடன் தொடர்பு கொள்வதுடன் ஒட்டிய வேறு பல தேவைகள் அமைகின்றன (Affiliation Needs). இத் தேவைகள் நிறைவு பெற்றால் மனிதனிடம் சுய மதிப்புடன் தொடர்பு கொண்ட வேறு பல தேவைகள் (Esteem needs) காணப்படுகின்றன. இறுதியாக, மக்களை அவர்களுடைய திறமைகளுடன் இணைத்துத் தன்னிறைவு அடையச் செய்யும் தேவைகள் (Self Actualisation Needs) காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, அறிந்து கொள்ளத் தூண்டும் தேவை (Desire to Know), அழகியல் தேவைகள் (Aesthetic Needs) ஆகியனவும், தேவை அடுக்கின் மேல் தளத்தில் காணப்படுகின்றன. அடித்தளத்தில் உள்ள முதல் மூன்று வகைத் தேவைகளைக் குறைபாட்டுத் தேவை (Deficiency Needs)களின் அடிப்படையில் எழுபவை என்றும், மாசுலோ கூறுகிறார். குறைபாட்டுத் தேவைகள் ஓரளவேனும் நிறைவு பெற்றால்தான் வளர்ச்சித் தேவைகள் எழும். உண்மையான வளர்ச்சியும் தன்னிறைவும் கொண்டவன். சுதந்திரமாகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியோடும் படைப்பாற்றலுடனும் இயங்கிச் சமூக ஏற்புடைமையை அடைகிறான். அத்தகையவனுடைய ஆளுமை சமநிலை உடையதாக இருக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 746 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 140 |oTop = 45 |oLeft = 225 |Location = center |Description = }} {{center|ஆபிரகாம் மாசுலோ}} குறைபாட்டுத் தேவைகள் ஊக்குவித்தல் தேவைகளுடன் தொடர்பு கொண்டவை என்றும், உயர்நிலை ஊக்குவித்தல் (Meta motivation) தேவைகள் வளர்ச்சித் தேவைகளுடன் தொடர்பு கொண்டவை என்றும் உயர்நிலை ஊக்குவிப்புகள், எப்பொழுதும் நிறைவு பெறாத இயல்புடையன என்றும் மாசுலோ கூறினார். மக்களுள் ஒரு சிலர் மட்டுமே தன்னலமற்றவராகவும் பொதுநலம் கருதுபவராகவும் வாய்மை, தியாகம் ஆகியவற்றின் வழி இயங்குபவராகவும் இருக்கின்றனர். இதற்குத் தனிப்பட்ட காரணங்-<noinclude></noinclude> l2dnalruq5xlhr51k1wb53or7n0dre0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/747 250 623211 1954433 1861529 2026-07-17T12:20:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|707|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>களை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாசுலோ தன்னிறைவு அடைபவர்களிடம் இத்தகைய உயர்நிலை ஊக்குவிப்புகளைக் காண முடியும் என்று கூறினார், எல்லாத் தேவைகளும் நிறைவு பெற்றாலும் ஏதோ ஒரு குறைபாடு தம் வாழ்க்கையில் இருப்பதாக இந்த உயர்திலை ஊக்குவிப்பினர் கருதுகின்றனர். வாழ்க்கையின் உயர்வான பயன் மதிப்புகளைக் குறிக்கோள்களைக் கொண்டு இத்தகையவர் இயங்குகின்றனர். குறைபாட்டுத் தேவைகளின் குறிக்கோள்களை மாசுலோ குறைவு மதிப்புகள் (D. Values) என்றும், புறத்தேவைகளின் குறிக்கோள்களை நடத்தை மதிப்புகள் (B. Values) என்றும் குறிப்பிட்டார். குறைவு மதிப்புக்கள் நடத்தையில் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன, நடத்தை மதிப்புகள் நடத்தையில் முன்னியக்கத்தைத் தூண்டுகின்றன. நடத்தை மதிப்புகள் மனிதன் தன் வாழ்க்கையின் முழுமையான பொருளை உணர்ந்து கொள்ள உதவுகின்றன. தன்னிறைவுத் தேவையிருப்பவர்கள், தம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட உயர் நோக்கம் இருப்பதாக எண்ணி அத்தகைய நோக்கத்தின் அறைகூவலை எதிர்பார்த்திருக்கின்றனர். இத்தகைய நோக்கம் இவர்களின் தொழில் அல்லது பணியைப் பற்றியதாக இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சியாளர் தாம் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் உண்மையை அல்லது பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்காகவே செலவிடுகிறார். வேறுசிலர் வாழ்க்கையில் ஒழுங்கமைவு அழகியலமைவு ஆகியவற்றைப் பெரிதும் போற்றி மதிக்கிறார்கள், அவற்றிற்காகவே தம் வாழ்நாளைச் செலவிடுகிறாகள். தாய் தன் குழந்தையின் மீது காட்டும் பரிவும் இத்தகையதே. இப்பரிவு பயன் கருதாதது. வாழ்க்கையின் இயல்புடன் இணைந்துவிட்ட ஓர் இயங்கு முறையாக இத்தகைய உயர்நிலைத் தேவைகள் இருக்கின்றன. மாசுலோ குறிப்பிட்ட தேவை அடுக்கில் (Need Hierarchy) உடல்சார் தேவைகள் அடிப்படைத் தேவைகளாக அமைந்திருக்கின்றன. சில நேரங்களில் மனிதர்கள் தம் உடல்சார் தேவைகளைப் புறக்கணித்து விட்டுச் சமூக நலனுக்காகவோ, குடும்ப நலனுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ உணவு உயிர் ஆகியவைகளைத் தியாகம் செய்கின்றனர். உயர் மட்டத் தேவைகள் நிறைவு பெறுதலினால் கிடைக்கும் மன மகிழ்வு உடல்சார் தேவைகளைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது. பெரும்பாலானவர்களுக்குத் தம் உடல்சார் தேவைகள் நிறைவு பெறின் காப்புத் தேவைகள் எழுகின்றன. வாழ்க்கையில் நிலையான வருமானம், நல்ல உறுதியான இருப்பிடம், பகைவர்களிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை காப்புத் தேவைகளாகும். மக்கள் பெரும்பாலும் புதிய பாதைகளை வகுப்பதிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் தயக்கம் அடைவது காப்புணர்வின்மையைப் பற்றிய அச்சம் அவர்களின் மனத்தில் தோன்றுவதால்தான் என்று மாசுலோ கூறுகிறார். அன்புத் தேவைகளும் சார்புத் தேவைகளும் முன்குறிப்பிட்ட இருவகைத் தேவைகள் நிறைவுபெறின் ஏற்படுகின்றன. நகரப்புறங்களில் வாழ்பவர் ஒருவரையொருவர் அதிகமாகத் தெரிந்து கொல்ளாமல் ஒதுங்கியே வாழ்கின்றனர். இவர்களுக்குத் தனிமையுணர்வு ஏற்படுகிறது. அன்புத்தேவை என்பது இளம் பருவத்தினர் எதிர்பாலினத்தவருடன் கொள்ளும் உறவுகளையொட்டியதாகும். இத்தேவைகள் பாடல்களின் வழியிலும், இசை நாடகங்களின் வழியிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. மதிப்புத் தேவைகளைத் தன்மதிப்பு, தன்னலம், சுயமரியாதை போன்ற தேவைகள் என்றும் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் ஏற்றநிலை, புகழ், பெருமை போன்ற தேவைகள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இத்தகைய தேவைகள் மற்ற மூன்று அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்ற பின்னரே தோன்றும் என்று மாசுலோ கூறுகிறார், தன்னிறைவுத் தேவைகள் தனிமனிதன் தன் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி அவற்றினால் அவறும் மற்றவர்களும் பயன்பெற்றுள்ளனர் என்ற உணர்வினை அடைய விழையும் விருப்பத்தைக் குறிக்கும். பல்வேறு தொழில்களிலும் பணிகளிலும் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் தாம் செய்து வந்த தொழிலை வாழ்நாள் முழுவதும் தொடர்த்து செய்ய விருப்பம் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். தன்னிறைவு அடைபவர்கள் முழுமையான கதந்திரத்தை விரும்புகிறார்கள். இவர்கள் புரட்சிக்காரர்களாகவோ அரசுக் கட்டுப்பாடுகளை எதிர்ப்பவராகவோ இருப்பதில்லை. தன்னிறைவுத் தேவைகளுக்கும் அப்பால் எல்லை கடந்த தேவைகள் (Trancendence Needs) உள்ளன. இத்தேவையுள்ளவர்கள் தம் வாழ்க்கையின் பயன் மக்களுக்காக உழைப்பதே ஆகும் என்ற உணர்வினை உடையவராக இருக்கிறார்கள். நல்ல பதவியில் இருப்பவர் ஒருவர் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட எண்ணித் தம் பதவியைத் துறத்தலும் நல்ல பணியில் அமர்ந்திருப்பவர் நாடுகளிடையே அமைதியை உண்டாக்குவதற்காகத் தன் பணியைத் துறத்தலும் எல்லை கடந்த தேவையைக் குறிக்கின்றன. அட்டவணை 2 இல் மாசுலோவின் தேவை அடுக்கு விளக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தேவைகளைத் தவிர அழகுணர்-<noinclude></noinclude> aadrph93e0gej9ixtn2ly3bsv6xoqd3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/748 250 623213 1954434 1861543 2026-07-17T12:26:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|708|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>வுத் தேவைகளும் பலரிடம் காணப்படுகின்றன. எப்பொருளையும் அழகுணர்ச்சியுடன் காண்பது, ஒழுங்கமைவில் விருப்பம், முழுமை காணல் ஆகியவை அழகுணர்வுத் தேவையினுள் அடங்கும். தேவை அடுக்கில் காணப்படும் தேவைகள் நிறைவு பெறாமல் இருந்தாலோ அளவுக்கு அதிகமாகக் கிடைத்தாலோ மனிதன் பிறழ்வு ஆளுமையை அடைகிறான் என்று மாசுலோ கருதினார். அளவுக்கு மீறிய உணவு நோய்க்குக் காரணமாகும். அளவுக்கு மீறிய பால் நடத்தை பால்வினை நோய்களுக்கும், குற்ற உணர்வுக்கும் காரணமாகிறது. ஆதலின் அடிப்படைத் தேவைகளுக்கு ஓர் அளவும் கட்டுப்பாடும் இருப்பின் அடுத்த தேவைகளை நோக்கி மனிதன் நடைபோடுகிறான் என்று மாசுலோ கூறினார். காப்புத் தேவையும் இவ்வாறே அளவுக்குக் குறைவாக இருப்பின் குழந்தைகளிடம் காப்புணர்வின்மை உணர்வு காரணமாக எழும் ஆளுமைக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதேபோல் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும் குழந்தையின் ஆளுமையைப் பாதிக்கின்றன. அன்புத் தேவைகளைப் புறக்கணித்தலே பலவேறு உளக்கோளாறுகளுக்குக் காரணமாக அமைகிறது. அன்புத் தேவை ஒருவனுடைய வாழ்க்கையின் எப்பகுதியில் புறக்கணிக்கப்படுகின்றதுவோ அப்பகுதியையொட்டியே உளக்கோளாறுகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய முதுமையில் அன்புத் தேவை புறக்கணிக்கப்படின் அவர் உலகினின்று ஒதுக்கப்பட்டவராக உணர்கின்றார். ஏனெனில், முதுமை அடையும் பொழுது மனிதர்கள் தம் வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களை விட்டுப் பிரிந்தோ. அத்தகையவர்கள் மரணமடைந்து விட்டதனால் தனிமைப்பட்டோ விடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் தாயன்பும் பாசமும் கிடைக்காவிடில் அவர்களின் ஆளுமைச் சமநிலை பாதிக்கப்படுகிறது. மனச்சாட்சி, தன்னுணர்வு தன்முனைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில், ஒன்றுதல், பரிவு ஒத்துணர்வு, குற்ற உணர்வு, அவமானம் போன்ற உணர்வுகள் பெரும்பங்கு கொள்கின்றன. ஒருசிலர் மேற்கூறப்பட்ட உணர்வுகள் சற்றும் இன்றி நடந்துகொள்கின்றனர், இவர்கள் உளப்பிறழ்வு ஆளுமையினராகவோ உணர்வுகள் அற்ற கடின உளம் படைத்த வணிகராகவோ மற்றவர்களை இரக்கமின்றி அழிக்கும் அரசியல்வாதிகளாவோ இருக்கின்றனர். இதற்குக் காரணம் அன்புத் தேவை இவர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கப் பெறாமையே ஆகும் என்று மாசுலோ கருதினார். இளங்குழவிப் பருவத்தில் ஏற்படும் அன்புத் தேவை நிறைவின்மை குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அதனைப் பாதிக்கிறது. இத்தகையவர்கள் வளர்ச்சியடைந்தபின் தம் முழுத் திறமைகளையும் பயன்படுத்த இயலாதவர்களாகி விடுகின்றனர். அறநெறிக் கருத்துகளும் மனச்சாட்சியும் இத்தகையவர்கனிடம் உருத்திரிபடைந்து விடுகின்றன. இத்தகையவர்களிடம் இனம்புரியாத மன உளைச்சல், உள் இறுக்கம், பதற்றநிலை போன்ற இயல்புகள் அன்பிலாமையில் எதிரொலிப்புகளாகக் காணப்படுகின்றன. தாம் எதிர்பார்க்கும் மதிப்பும் மரியாதையும் வாழ்க்கையில் பலருக்குக் கிட்டுவதில்லை. இதுவே, அவர்களின் உளச் சமநிலையைப் பாதிக்கிறது. இதனால், மனக்குலைவுகளும் ‘நான் எதற்கும் பயனற்றவன்’ என்ற உணர்வும் அவர்களிடம் ஏற்படுகின்றன. மற்றவர்களால் இழிவு, குற்ற உணர்வு ஆகியவற்றிற்கு ஆளாக்கப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர். தேவையுணர்வு மனிதனுக்கு உடல்நிலையிலும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில தேவைகள் மனிதனால் உணரப்படாமலே அவனிடம் உயர்நிலைப் பிறழ்வு நிலைகளைத் (Metapathologies) தோற்றுவிக்கின்றன. ஒருவனுக்கு உயிர்ச் சத்து சி இல்லை என்ற உணர்வு ஏற்படாமலே இருக்கலாம். ஆனால் அவனுக்கு அதனால் உண்டாகும் இசுகர்வி (Scurvy) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சமநிலையான சூழமைவில் வளர்ந்தவர்கள் தன்னிறைவுத் தேவைகளை உணருகின்றனர். தேவை அடுக்குகளை முறையாக அளவுடன் அடைந்தவர்கள் ஆளுமைச் சமநிலை அடைகிறார்கள். நல்ல சூழமைவு, தேவைகளின் நிறைவு, சிறந்த உடல்நலம் இவை அடையப் பெற்றவர்கள் வாழ்க்கையில் தன்னிறைவு அடைகின்றனர். மாசுலோ தன்னிறைவு அமைந்தவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். உயர்நிலைத் தேவைகள் நிறைவு பெறாமையால் ஏற்படும் மனக்குலைவுகளின் காரணமாக எழும் கோளாறுகள் உயர்நிலைப் பிறழ்வு (Metapathology) எனப்படும். சிலர் தம்மைச் சுற்றிலும் நிகழும் அநீதிகளையும் தவறுகளையும் எவ்வித மனவெழுச்சியுமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் புதிய கருத்துகளையும் செயல்களையும் வரவேற்பதில்லை. உலகில் எந்த நிகழ்ச்சியையும் எந்த மனிதனையும் பொருளையும் ஆழ்ந்து உணர்ந்து அவற்றின் மீது ஈடுபாடு கொள்ள இயலாமைவையும், அறநெறிமுறைகளுக்கும் ஒழுக்கத்திற்கும் எவ்வித மதிப்பு அளிக்க முடியாத நிலைமையையும் தனிமனிதனின் திறமைகளை உணரமுடியாத நிலைமையையும் உயர்நிலைப் பிறழ்வு (Metapathology) என்று கூறலாம். தன்னிறைவுத் தேவை நிறைவு பெற்ற பல்வேறு<noinclude></noinclude> ja7gbxapdvrmmu3g3qkn5vw8n8m2ki2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/749 250 623215 1954435 1861549 2026-07-17T12:34:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b>}}<br> {{center|குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}} <center> {| | || குறைப்பாட்டுத் தேவைகள் || || வளர்ச்சித் தேவைகள் |- | || உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு || உளக்கோளாறு பதற்றம், உளக் || கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பெருத்தப்பாடு, சமூகவியல், || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறை || படைப்பாற்றல், இயல்புவயம், |-<noinclude>|} </center></noinclude> ocw1csymd3fo168yr125cnp2riabzsg 1954442 1954435 2026-07-17T12:51:05Z Booradleyp1 1964 1954442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b><br> குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- ! colspan="3"| குறைப்பாட்டுத் தேவைகள் !!colspan="3"| வளர்ச்சித் தேவைகள் |- | ||உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு || உளக்கோளாறு பதற்றம், உளக் || கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பெருத்தப்பாடு, சமூகவியல், || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறை || படைப்பாற்றல், இயல்புவயம், |-<noinclude>|} </center></noinclude> 2yyzv8rdetvss64a8mic0vtnmprr79b 1954443 1954442 2026-07-17T12:52:50Z Booradleyp1 1964 1954443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b><br> குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- ! colspan="3"| குறைப்பாட்டுத் தேவைகள் !!colspan="3"| வளர்ச்சித் தேவைகள் |- | ||உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு || உளக்கோளாறு பதற்றம், உளக் || கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பெருத்தப்பாடு, சமூகவியல், || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறை || படைப்பாற்றல், இயல்புவயம்,<noinclude>|} </center></noinclude> 7jbtniuuvvmgltf1ksy9xlfovg12i0f 1954445 1954443 2026-07-17T12:53:52Z Booradleyp1 1964 1954445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b><br> குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}} <center> {| |- ! colspan="3"| குறைப்பாட்டுத் தேவைகள் !!colspan="3"| வளர்ச்சித் தேவைகள் |- | ||உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு || உளக்கோளாறு பதற்றம், உளக் || கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பெருத்தப்பாடு, சமூகவியல், || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறை || படைப்பாற்றல், இயல்புவயம்,<noinclude>|} </center></noinclude> pp0wpe9uhhunr8dptguswjjf1q1dsbr 1954447 1954445 2026-07-17T12:55:28Z Booradleyp1 1964 1954447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b><br> குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}} <center> {| |- ! colspan="3"| குறைப்பாட்டுத் தேவைகள் !!colspan="3"| வளர்ச்சித் தேவைகள் |- | ||உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு || உளக்கோளாறு பதற்றம், உளக் || கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பெருத்தப்பாடு, சமூகவியல், || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறை || படைப்பாற்றல், இயல்புவயம், |-<noinclude>|} </center></noinclude> 0j5cto440quhaxgybtj3i9dcnmz3mx2 1954455 1954447 2026-07-17T13:06:03Z Booradleyp1 1964 1954455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|709|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>மனிதர்களை மாசுலோ ஆராய்ந்து பின்வரும் இயல்புகள் அவர்களிடம் இருப்பதாக அறிந்தார். ::1. மெய்ந்நிலை பற்றிய தெளிவான புலன்காட்சி, மெய்ந்நிலையுடன் ஒன்றி இயங்கும் இயல்பு, அறியாத ஒன்றைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஆராய்வூக்கம். ::2. தன்னையும், மற்றவர்களின் இயல்பு நிலையையும் ஏற்றுக்கொள்ளல். ::3. எளிமை, இயல்பு நிலை, தம் பயன் மதிப்புகளைத் தாமே தேர்ந்தெடுத்தல், தனித்தன்மை வாய்ந்த உள வாழ்க்கை. ::4. இலக்குசார் முடிவுகள் மனவெழுச்சிவயமின்றி எடுக்கப்படல். பணிவுடன் தாமும் ஒன்றுபடல். ::5. எதிலும் மிக்கப் பற்றிலாமை. தனிமை நாடுதல். (இவர்கள் தம் சிந்தனைகனைத் திசை திருப்பவும் மதிப்புகளைச் சீர் தூக்கவும் தனிமை நாடுகின்றனர்). ::6.உளத்தில் முடிவெடுத்தல், தம் நடத்தை பற்றி முடிவெடுத்தல், தன்னிச்சையாக இயங்குதல், ::7. சுதந்திரம் விரும்புதல், சூழமைவு நிலைமைகளினின்று தனித்து நின்று இயங்குதல். ::8. எதனையும் வியந்து போற்றும் இயல்பு, மிகச் சாதாரண நிகழ்ச்சிகளிலும் கூட மகிழ்வெய்தல். ::9. மிகைநிலை அனுபவங்கள் தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து எல்லை கடந்த தம் சிந்தனையில் ஆழ்ந்து, வியப்பில் மூழ்கி மன மகிழ்ச்சியில் திளைத்தல். ::10. எல்லோருடனும் உடன்பிறப்புத் தன்மை உணர்வு (Gemeinschaftsgefuhl) அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றை மற்றவர்களிடம் தாராளமாகக் காட்டுதல். ::11. மிகச் சில நண்பர்களைப் பெற்றிருத்தல், அந்நட்பு வலுவுடையதாயிருத்தல். ::12.மற்றவர்களுடன் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு, தன்னிறைவுவடைந்தவர்கள் எல்லா வகை மக்களையும் ஏற்றல். ::13. தம் வாழ்க்கையின் குறிக்கோள்கணைப் பற்றிய தெளிவான அறிவினை உடையராயிருத்தல். ::14. புறவயமான தீங்கற்ற நகைச்சுவையுணர்வு. தம்முடைய சொந்த முரண்பாடுகளையும் குறைகளையும் கண்டு தாமே நகைக்கும் இயல்புடைமை. ::15. படைப்பாற்றலும் புதுமை மனப்பாங்கும் கொண்டிருத்தல், இத்தகைய இயல்புகளைக் கொண்டிருக்கும் தன்னிறைவாளர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் பொருத்தப்பாடு அடைவதில்லை. மாசுலோவின் கருத்துப்படி சிறந்த இயல்புகளைக் கொண்டவர்கள் பண்பாட்டுத் தரங்களுக்கு அப்பால் தன்னம்பிக்கையுடனும் சுதந்திர மனப்பான்மையுடனும் வாழ்கிறார்கள். இவர்கள் சமூக ஏற்புத்தரங்கள், பண்பாட்டுத் தரங்கள் என்னும் கூரிய கத்திகளால் மழுங்க வைக்கப்படுவதில்லை. தன்னிறைவாளர்கள் முரண்பாடு கடந்த நிலையினராகவும் (Transcendence of Dichotomies) காணப்படுகின்றனர். அதாவது தன்னலம், பொதுநலம், கருமித்தனம், தாராள மனப்பான்மை, பகுத்தறிவு வயம், மனவெழுச்சி வயம், குழந்தைத்தனம், வயதுவந்தோர் நிலை போன்ற நேர் எதிரிடையான பண்புகள் இவர்களிடம் ஒருங்கிணைவு பெற்றுக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் இந்த நேர் எதிரிடைப் பண்புகளின் ஏதேனும் ஒரு விளிம்பு நிலையில் இருக்கின்றனர். இத்தகைய இரு விளிம்பு நிலைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி மிகுதியாக இருப்பின் அத்தகையவர்கள் உளநோயாளிகளாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று மாசுலோ கருதுகிறார். எடுத்துக்காட்டாக, வேலை-விளையாட்டு என்னும் இரு வேறு விளிம்பு நிலைகளில் இல்லாதவர்கள் தம் வேலை அல்லது தொழிலிலேயே விளையாட்டின் மூலம் கிடைக்கும் மன மகிழ்வை எய்துகிறார்கள். மாசுலோவின் கருத்துகள் மேலாண்மை உளவியலாரால் பெருமளவில் ஆராய்ச்சி செய்யக் கூடியனவாகக் கருதப்படுகின்றன. மேலாண்மை உளவியலில் மாசுலோவின் தேவை அடுக்கு, உயர்நிலைத் தேவை, தன்னிறைவு போன்ற கருத்துகள் இடம் பெற்துள்ளன. {{center|<b>அட்டவணை 1</b><br> குறைபாட்டுத் தேவைகளும் வளர்ச்சித்தேவைகளும் ஆளுமைக் கோளாறுகளைப் பாதிக்கும் முறை (மாசுலோ)}}<noinclude></noinclude> 7xki36kpth0nwi3hu2czxbqez4qgxg8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/750 250 623217 1954439 1861553 2026-07-17T12:44:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|710|ஆளுமைக் கோட்பாடுகள்}} <center> {| class="wikitable"</noinclude>|- |நோய், கருத்துத் திரிபு நோய், உளக்கிளர்ச்சிச் சோர்வுப் பிணி, முதுமைச் சோர்வுப்பிணி || கூறு மாற்றம், கிலி, உளப்பீடிப்புக் கட்டாயக் கோளாறு, சோர்வுக் கோளாறு, கற்பனை நோய்க் கோளாறு. || உளச்சிதைவு ஆளுமை உளத் தடுமாற்றம், சமூக எதிர்ப்பு, பணிவெதிர்ப்பு, || மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலை சார் தற்கருத்து, உடன்பாடான தன் உருவகம், பிறருக்கு மதிப்புக் கொடுக்கும் இயல்பு, உள நிறைவு. || யறிவு, அயற்படுத்தல், பொருளற்ற செயல், குறைவான குறிக்கோள்கள், படைப்புணர்விலா வாழ்க்கை. || ஆராய்வூக்கம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், நடத்தைப் பயன் மதிப்புகளைச் செயற்படுத்தல், உளநிறைவு, அனுபவங்கள், பணியில் ஈடுபாடு, உடன் பிறப்புணர்வு. |- |} {{center|<b>அட்டவணை 2</b><br> தேவை அடுக்கமைவும் ஆளுமை இயங்குமுறை நிலைகளும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- |தேவை அடுக்கமைவு || குறைப்பாட்டு நிலை || நிறைவு நிலை || எடுத்துக்காட்டு |- |1. உடல்சார் தேவைகள் || பசி, தாகம், பால்உந்து, இறுக்க நிலை, களைப்பு, உடல்நோய், வசிக்கத் தகுந்த இடமின்மை. || மனமகிழ்வு, இறுக்க நிலை நீங்குதல், உடல்நலம். || நல்ல உணவு உண்டபின் தோன்றும் மனநிறைவு |- |2. காப்புத் தேவைகள் || காப்புணர்வின்மை, ஏக்கம், இழப்பு உணர்வு, அச்சம், உளப்பீடிப்பு, உளக்கட்டாயம். || காப்புணர்வு, நலம், சமநிலை, அமைதி. || நிரந்தரமான முழுநேர வேலையில் அமர்ந்து காப்புணர்வு அடைதல் |- |3. அன்புத் தேவைகள் || தன்னைப்பற்றிய மிகையான உணர்வு, மற்றவரால் விரும்பப்படாமை, தான் ‘உதவாக்கரை’ என்ற உணர்வு, வெறுமை, தனிமை நிறைவின்மை, ஒதுக்கப்படுதல் || மனவெழுச்சி வெளியீடு, நிறை உணர்வு, நல உணர்வு, தன் வலிமை உணர்தல். || அன்பின் காரணமாக மற்றவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுதல். |- |4. மதிப்புத் தேவைகள் || தான் திறமையற்றவன் என்ற உணர்வு, எதிர்மறை உணர்வு, தாழ்வுமனப்பான்மை. || நம்பிக்கை, செயல் திறமை, தன் மதிப்பு. || ஏதேனும் ஒருசெயலைத் திறம்படச் செய்து முடித்ததும் அதற்காகப் பாராட்டப்படுதலும் |- |5. தன்னிறைவுத் தேவைகள் || அந்நிய உணர்வு, உயர் நிலைப் பிறழ்வுகள், வாழ்க்கையில் பொருளற்ற நிலை, சலிப்பு, வேறுபாடற்ற வாழ்க்கை முறை, குறைவான செயல்கள். || ஆராய்வூக்கம், நிறை அணுபவம், நடத்தை மதிப்புகள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், படைப்பாற்றல் மிகுந்த வாழ்க்கை. || நிகரற்ற அக அனுபவம் அடைதல். |- |} {{nop}}<noinclude></noinclude> 2zzb97gfrmwl6f5o56grrxbmkniin6m 1954448 1954439 2026-07-17T12:56:02Z Booradleyp1 1964 1954448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|710|ஆளுமைக் கோட்பாடுகள்}} <center> {|</noinclude>|- |நோய், கருத்துத் திரிபு நோய், உளக்கிளர்ச்சிச் சோர்வுப் பிணி, முதுமைச் சோர்வுப்பிணி || கூறு மாற்றம், கிலி, உளப்பீடிப்புக் கட்டாயக் கோளாறு, சோர்வுக் கோளாறு, கற்பனை நோய்க் கோளாறு. || உளச்சிதைவு ஆளுமை உளத் தடுமாற்றம், சமூக எதிர்ப்பு, பணிவெதிர்ப்பு, || மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலை சார் தற்கருத்து, உடன்பாடான தன் உருவகம், பிறருக்கு மதிப்புக் கொடுக்கும் இயல்பு, உள நிறைவு. || யறிவு, அயற்படுத்தல், பொருளற்ற செயல், குறைவான குறிக்கோள்கள், படைப்புணர்விலா வாழ்க்கை. || ஆராய்வூக்கம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், நடத்தைப் பயன் மதிப்புகளைச் செயற்படுத்தல், உளநிறைவு, அனுபவங்கள், பணியில் ஈடுபாடு, உடன் பிறப்புணர்வு. |- |} {{center|<b>அட்டவணை 2</b><br> தேவை அடுக்கமைவும் ஆளுமை இயங்குமுறை நிலைகளும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- |தேவை அடுக்கமைவு || குறைப்பாட்டு நிலை || நிறைவு நிலை || எடுத்துக்காட்டு |- |1. உடல்சார் தேவைகள் || பசி, தாகம், பால்உந்து, இறுக்க நிலை, களைப்பு, உடல்நோய், வசிக்கத் தகுந்த இடமின்மை. || மனமகிழ்வு, இறுக்க நிலை நீங்குதல், உடல்நலம். || நல்ல உணவு உண்டபின் தோன்றும் மனநிறைவு |- |2. காப்புத் தேவைகள் || காப்புணர்வின்மை, ஏக்கம், இழப்பு உணர்வு, அச்சம், உளப்பீடிப்பு, உளக்கட்டாயம். || காப்புணர்வு, நலம், சமநிலை, அமைதி. || நிரந்தரமான முழுநேர வேலையில் அமர்ந்து காப்புணர்வு அடைதல் |- |3. அன்புத் தேவைகள் || தன்னைப்பற்றிய மிகையான உணர்வு, மற்றவரால் விரும்பப்படாமை, தான் ‘உதவாக்கரை’ என்ற உணர்வு, வெறுமை, தனிமை நிறைவின்மை, ஒதுக்கப்படுதல் || மனவெழுச்சி வெளியீடு, நிறை உணர்வு, நல உணர்வு, தன் வலிமை உணர்தல். || அன்பின் காரணமாக மற்றவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுதல். |- |4. மதிப்புத் தேவைகள் || தான் திறமையற்றவன் என்ற உணர்வு, எதிர்மறை உணர்வு, தாழ்வுமனப்பான்மை. || நம்பிக்கை, செயல் திறமை, தன் மதிப்பு. || ஏதேனும் ஒருசெயலைத் திறம்படச் செய்து முடித்ததும் அதற்காகப் பாராட்டப்படுதலும் |- |5. தன்னிறைவுத் தேவைகள் || அந்நிய உணர்வு, உயர் நிலைப் பிறழ்வுகள், வாழ்க்கையில் பொருளற்ற நிலை, சலிப்பு, வேறுபாடற்ற வாழ்க்கை முறை, குறைவான செயல்கள். || ஆராய்வூக்கம், நிறை அணுபவம், நடத்தை மதிப்புகள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், படைப்பாற்றல் மிகுந்த வாழ்க்கை. || நிகரற்ற அக அனுபவம் அடைதல். |- |} {{nop}}<noinclude></noinclude> t77cp5833ye2zxfxltfmkzevsi6pjzo 1954450 1954448 2026-07-17T12:57:27Z Booradleyp1 1964 1954450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|710|ஆளுமைக் கோட்பாடுகள்}} <center> {|</noinclude>|நோய், கருத்துத் திரிபு நோய், உளக்கிளர்ச்சிச் சோர்வுப் பிணி, முதுமைச் சோர்வுப்பிணி || கூறு மாற்றம், கிலி, உளப்பீடிப்புக் கட்டாயக் கோளாறு, சோர்வுக் கோளாறு, கற்பனை நோய்க் கோளாறு. || உளச்சிதைவு ஆளுமை உளத் தடுமாற்றம், சமூக எதிர்ப்பு, பணிவெதிர்ப்பு, || மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலை சார் தற்கருத்து, உடன்பாடான தன் உருவகம், பிறருக்கு மதிப்புக் கொடுக்கும் இயல்பு, உள நிறைவு. || யறிவு, அயற்படுத்தல், பொருளற்ற செயல், குறைவான குறிக்கோள்கள், படைப்புணர்விலா வாழ்க்கை. || ஆராய்வூக்கம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், நடத்தைப் பயன் மதிப்புகளைச் செயற்படுத்தல், உளநிறைவு, அனுபவங்கள், பணியில் ஈடுபாடு, உடன் பிறப்புணர்வு. |- |} {{center|<b>அட்டவணை 2</b><br> தேவை அடுக்கமைவும் ஆளுமை இயங்குமுறை நிலைகளும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- |தேவை அடுக்கமைவு || குறைப்பாட்டு நிலை || நிறைவு நிலை || எடுத்துக்காட்டு |- |1. உடல்சார் தேவைகள் || பசி, தாகம், பால்உந்து, இறுக்க நிலை, களைப்பு, உடல்நோய், வசிக்கத் தகுந்த இடமின்மை. || மனமகிழ்வு, இறுக்க நிலை நீங்குதல், உடல்நலம். || நல்ல உணவு உண்டபின் தோன்றும் மனநிறைவு |- |2. காப்புத் தேவைகள் || காப்புணர்வின்மை, ஏக்கம், இழப்பு உணர்வு, அச்சம், உளப்பீடிப்பு, உளக்கட்டாயம். || காப்புணர்வு, நலம், சமநிலை, அமைதி. || நிரந்தரமான முழுநேர வேலையில் அமர்ந்து காப்புணர்வு அடைதல் |- |3. அன்புத் தேவைகள் || தன்னைப்பற்றிய மிகையான உணர்வு, மற்றவரால் விரும்பப்படாமை, தான் ‘உதவாக்கரை’ என்ற உணர்வு, வெறுமை, தனிமை நிறைவின்மை, ஒதுக்கப்படுதல் || மனவெழுச்சி வெளியீடு, நிறை உணர்வு, நல உணர்வு, தன் வலிமை உணர்தல். || அன்பின் காரணமாக மற்றவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுதல். |- |4. மதிப்புத் தேவைகள் || தான் திறமையற்றவன் என்ற உணர்வு, எதிர்மறை உணர்வு, தாழ்வுமனப்பான்மை. || நம்பிக்கை, செயல் திறமை, தன் மதிப்பு. || ஏதேனும் ஒருசெயலைத் திறம்படச் செய்து முடித்ததும் அதற்காகப் பாராட்டப்படுதலும் |- |5. தன்னிறைவுத் தேவைகள் || அந்நிய உணர்வு, உயர் நிலைப் பிறழ்வுகள், வாழ்க்கையில் பொருளற்ற நிலை, சலிப்பு, வேறுபாடற்ற வாழ்க்கை முறை, குறைவான செயல்கள். || ஆராய்வூக்கம், நிறை அணுபவம், நடத்தை மதிப்புகள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், படைப்பாற்றல் மிகுந்த வாழ்க்கை. || நிகரற்ற அக அனுபவம் அடைதல். |- |} {{nop}}<noinclude></noinclude> i1xxd1zgs0huoykzir49kwazk1j4yd1 1954452 1954450 2026-07-17T12:58:38Z Booradleyp1 1964 1954452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|710|ஆளுமைக் கோட்பாடுகள்}} <center> {|</noinclude>|- |நோய், கருத்துத் திரிபு நோய், உளக்கிளர்ச்சிச் சோர்வுப் பிணி, முதுமைச் சோர்வுப்பிணி || கூறு மாற்றம், கிலி, உளப்பீடிப்புக் கட்டாயக் கோளாறு, சோர்வுக் கோளாறு, கற்பனை நோய்க் கோளாறு. || உளச்சிதைவு ஆளுமை உளத் தடுமாற்றம், சமூக எதிர்ப்பு, பணிவெதிர்ப்பு, || மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலை சார் தற்கருத்து, உடன்பாடான தன் உருவகம், பிறருக்கு மதிப்புக் கொடுக்கும் இயல்பு, உள நிறைவு. || யறிவு, அயற்படுத்தல், பொருளற்ற செயல், குறைவான குறிக்கோள்கள், படைப்புணர்விலா வாழ்க்கை. || ஆராய்வூக்கம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், நடத்தைப் பயன் மதிப்புகளைச் செயற்படுத்தல், உளநிறைவு, அனுபவங்கள், பணியில் ஈடுபாடு, உடன் பிறப்புணர்வு. |- |} {{center|<b>அட்டவணை 2</b><br> தேவை அடுக்கமைவும் ஆளுமை இயங்குமுறை நிலைகளும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- |தேவை அடுக்கமைவு || குறைப்பாட்டு நிலை || நிறைவு நிலை || எடுத்துக்காட்டு |- |1. உடல்சார் தேவைகள் || பசி, தாகம், பால்உந்து, இறுக்க நிலை, களைப்பு, உடல்நோய், வசிக்கத் தகுந்த இடமின்மை. || மனமகிழ்வு, இறுக்க நிலை நீங்குதல், உடல்நலம். || நல்ல உணவு உண்டபின் தோன்றும் மனநிறைவு |- |2. காப்புத் தேவைகள் || காப்புணர்வின்மை, ஏக்கம், இழப்பு உணர்வு, அச்சம், உளப்பீடிப்பு, உளக்கட்டாயம். || காப்புணர்வு, நலம், சமநிலை, அமைதி. || நிரந்தரமான முழுநேர வேலையில் அமர்ந்து காப்புணர்வு அடைதல் |- |3. அன்புத் தேவைகள் || தன்னைப்பற்றிய மிகையான உணர்வு, மற்றவரால் விரும்பப்படாமை, தான் ‘உதவாக்கரை’ என்ற உணர்வு, வெறுமை, தனிமை நிறைவின்மை, ஒதுக்கப்படுதல் || மனவெழுச்சி வெளியீடு, நிறை உணர்வு, நல உணர்வு, தன் வலிமை உணர்தல். || அன்பின் காரணமாக மற்றவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுதல். |- |4. மதிப்புத் தேவைகள் || தான் திறமையற்றவன் என்ற உணர்வு, எதிர்மறை உணர்வு, தாழ்வுமனப்பான்மை. || நம்பிக்கை, செயல் திறமை, தன் மதிப்பு. || ஏதேனும் ஒருசெயலைத் திறம்படச் செய்து முடித்ததும் அதற்காகப் பாராட்டப்படுதலும் |- |5. தன்னிறைவுத் தேவைகள் || அந்நிய உணர்வு, உயர் நிலைப் பிறழ்வுகள், வாழ்க்கையில் பொருளற்ற நிலை, சலிப்பு, வேறுபாடற்ற வாழ்க்கை முறை, குறைவான செயல்கள். || ஆராய்வூக்கம், நிறை அணுபவம், நடத்தை மதிப்புகள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், படைப்பாற்றல் மிகுந்த வாழ்க்கை. || நிகரற்ற அக அனுபவம் அடைதல். |- |} {{nop}}<noinclude></noinclude> t77cp5833ye2zxfxltfmkzevsi6pjzo 1954456 1954452 2026-07-17T13:07:28Z Booradleyp1 1964 1954456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|710|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude><center> {| class="wikitable" |- ! colspan="3"| குறைப்பாட்டுத் தேவைகள் !!colspan="3"| வளர்ச்சித் தேவைகள் |- | ||உளப்பிறழ்வு || ஆளுமைக் கோளாறுகள் || இயல்பு நிலை || உயர்நிலை பிறழ்வு || நிறைகாணல் |- |உளப்பிணி, உளச்சிதைவு, நோய், கருத்துத் திரிபு நோய், உளக்கிளர்ச்சிச் சோர்வுப் பிணி, முதுமைச் சோர்வுப்பிணி || உளக்கோளாறு பதற்றம், உளக்கூறு மாற்றம், கிலி, உளப்பீடிப்புக் கட்டாயக் கோளாறு, சோர்வுக் கோளாறு, கற்பனை நோய்க் கோளாறு. || உளச்சிதைவு ஆளுமை உளத் தடுமாற்றம், சமூக எதிர்ப்பு, பணிவெதிர்ப்பு, கருத்துத் திரிபு, ஆளுமை, || உளப்பொருத்தப்பாடு, சமூகவியல்,மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலை சார் தற்கருத்து, உடன்பாடான தன் உருவகம், பிறருக்கு மதிப்புக் கொடுக்கும் இயல்பு, உள நிறைவு. || சலிப்பு, மெய்வழிச் சாராமை, குறையறிவு, அயற்படுத்தல், பொருளற்ற செயல், குறைவான குறிக்கோள்கள், படைப்புணர்விலா வாழ்க்கை. || படைப்பாற்றல், இயல்புவயம், ஆராய்வூக்கம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், நடத்தைப் பயன் மதிப்புகளைச் செயற்படுத்தல், உளநிறைவு, அனுபவங்கள், பணியில் ஈடுபாடு, உடன் பிறப்புணர்வு. |- |} </center> {{center|<b>அட்டவணை 2</b><br> தேவை அடுக்கமைவும் ஆளுமை இயங்குமுறை நிலைகளும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- |தேவை அடுக்கமைவு || குறைப்பாட்டு நிலை || நிறைவு நிலை || எடுத்துக்காட்டு |- |1. உடல்சார் தேவைகள் || பசி, தாகம், பால்உந்து, இறுக்க நிலை, களைப்பு, உடல்நோய், வசிக்கத் தகுந்த இடமின்மை. || மனமகிழ்வு, இறுக்க நிலை நீங்குதல், உடல்நலம். || நல்ல உணவு உண்டபின் தோன்றும் மனநிறைவு |- |2. காப்புத் தேவைகள் || காப்புணர்வின்மை, ஏக்கம், இழப்பு உணர்வு, அச்சம், உளப்பீடிப்பு, உளக்கட்டாயம். || காப்புணர்வு, நலம், சமநிலை, அமைதி. || நிரந்தரமான முழுநேர வேலையில் அமர்ந்து காப்புணர்வு அடைதல் |- |3. அன்புத் தேவைகள் || தன்னைப்பற்றிய மிகையான உணர்வு, மற்றவரால் விரும்பப்படாமை, தான் ‘உதவாக்கரை’ என்ற உணர்வு, வெறுமை, தனிமை நிறைவின்மை, ஒதுக்கப்படுதல் || மனவெழுச்சி வெளியீடு, நிறை உணர்வு, நல உணர்வு, தன் வலிமை உணர்தல். || அன்பின் காரணமாக மற்றவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுதல். |- |4. மதிப்புத் தேவைகள் || தான் திறமையற்றவன் என்ற உணர்வு, எதிர்மறை உணர்வு, தாழ்வுமனப்பான்மை. || நம்பிக்கை, செயல் திறமை, தன் மதிப்பு. || ஏதேனும் ஒருசெயலைத் திறம்படச் செய்து முடித்ததும் அதற்காகப் பாராட்டப்படுதலும் |- |5. தன்னிறைவுத் தேவைகள் || அந்நிய உணர்வு, உயர் நிலைப் பிறழ்வுகள், வாழ்க்கையில் பொருளற்ற நிலை, சலிப்பு, வேறுபாடற்ற வாழ்க்கை முறை, குறைவான செயல்கள். || ஆராய்வூக்கம், நிறை அணுபவம், நடத்தை மதிப்புகள் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தல், படைப்பாற்றல் மிகுந்த வாழ்க்கை. || நிகரற்ற அக அனுபவம் அடைதல். |- |} {{nop}}<noinclude></noinclude> hv49jy56tzwf1bm0osc1lbjmnjvgwyn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/751 250 623255 1954464 1861930 2026-07-17T13:31:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|711|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>{{center|<b>அட்டவணை 3</b><br> தேவை அடுக்கமைவும் தேவைகள் மனநிறைவைக் கொடுக்கக் கூடிய தொழில்களும் (மாசுலோ)}} <center> {| class="wikitable" |- ! !!தேவைகள் !!தொழில்சார் மனநிறைவுகள் |- |6. || உயர்நிலைத் தேவைகள் || உடன் உழைப்பவருக்கு உதவி செய்தல், தொழிலில் முழுமூச்சுடன் பயன் கருதாது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுதல், நிறுவனம் தன்னிடம் எதிர்பார்க்கும் பணித்திறன் அளவுக்கு மேல் மிகையான பணித்திறன் காட்டுதல். |- |5. || தன்னிறைவுத் தேவைகள் || படைப்பாற்றல்சார் நடத்தை, திறமைகளைப் பயன்படுத்தல், நாட்டங்களின் வழி இயங்குதல், ஆக்கவழிச் செயல்கள். |- |4. || மதிப்புத் தேவைகள் || சுதந்திரமும் பொறுப்பும் மிக்க பணிகளைச் செய்தல், பணியின் வழி மதிப்புப் பெறுதல், தன்னுடன் பணி செய்வோரினால் போற்றப்படுதல் |- |3. || அன்புத் தேவைகள் || உளத்திற்கு உகந்த குழுவினருடன் பணிசெய்தல், தன்னுடன் வேலை செய்பவர்களாலும் மேலதிகாரிகனாலும் விரும்பப்படுதல். |- |2. || காப்புத் தேவை || குடியிருக்க வீட்டை வாடகைக்கு எடுத்தல், வீடு வாங்குதல், நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியம்சார் பயன்கள், ஓய்வு ஊதியம், சேமிப்பு, உடை, சொத்து, மனைத்துணைப் பொருள்கள் ஆகியவற்றை வாங்குதல். |- |1. || உடல்சார் தேவைகள் || உணவு, தண்ணீர், உயிர் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைப் பெறுதல். |- |} </center> <b>சமூகத் தன்முனைப்புக் கோட்பாடு</b>: இது மனிதனின் ஆளுமை வளர்ச்சியைச் சமூகத்தின் முனைப்புக் காரணிகளின் அடிப்படையில் விளக்குகிறது. இக்கோட்பாட்டினர் சமூகப் பண்பாட்டுக் காரணிகளை ஆய்வதில் ஈடுபாடு கொண்டனர். எரிக்கு எரிக்சன் (Erik Erikson), ஆல்பிரெடு ஆட்லர் (Alfred Adler), காரன் ஆர்னை (Karen Horney) ஆகிய மூவரும் சமூகத் தன்முனைப்புக் கோட்பாட்டினர்களுள் (Ego Social Model) முதன்மையானவர்கள். உள்ளம் பற்றிப் பிராய்டு கூறிய அடிப்படைக் கருத்துக்களை எரிக்சன் ஏற்றுக்கொண்டார். உளவளர்ச்சியின் நிலைகள், பிராய்டு கூறியதைப் போல் பால் உந்து அடிப்படையில் அமையவில்லை. அதற்கு மாறாக அவை உளச் சமூகக் காரணிகளின் அடிப்படையில் அமைகின்றன என்று எரிக்சன் கருதினார். வளர்ச்சி நிலைகளைக் கடந்து வரும்பொழுது தன்முனைப்பு, பல நெருக்கடி நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்நெருக்கடி நிலைகளைச் சமாளித்து வெற்றி காண்பது தன்முனைப்புக்கு ஏற்படும் வெற்றி என்று எரிக்சன் கருதினார். வாழ்க்கை முறை அமைவதில் தன்முனைப்பின் பங்கு முதன்மையானது என்று பிராய்டு கருதினார். மனிதனின் சமூக ஈடுபாடு இயற்கையிலேயே அமைவதாகும். பிராய்டு கூறியதைப் போல் தற்காப்பு வழிமுறைகளில் தன்முனைப்பு அமைவதில்லை என்று ஆட்லர் கருதினார். உண்மையான தன்னுணர்வினை ஒருவன் அடையாத காரணத்தினால் பிறழ்வு நடத்தை ஏற்படுகிறது. மனிதனின் சமூகத் தேவைகளும் குழ்நிலைகளும் அவனுடைய ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு கொள்கின்றன. பண்பாட்டின் எதிர்பார்ப்புகளின் காரணமாகப் பல சிக்கல்களைத் தனிமனிதன் எதிர் நோக்க வேண்டியிருக்கிறது என்று ஆர்னை கருதினார். உளப்பகுப்புக்<noinclude></noinclude> 75cnrw7siaeqgauub4tqizp9917rf71 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/752 250 623256 1954466 1861933 2026-07-17T13:37:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|712|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>கோட்பாட்டின் அடிப்படையில் நின்று, தன்முனைப்புப் பற்றிய கோட்பாடுகளைச் சமூகத்தின் முனைப்புக் கோட்பாட்டினர், சமூகக் காரணிகளுடன் ஒட்டி அமைத்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 752 |bSize = 375 |cWidth = 101 |cHeight = 153 |oTop = 75 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|எரிக்கு எரித்சன்}} <b>எரிக்கு எரிக்சன்</b>: இவர் தனிமனிதனுடைய தேவைகளுக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே எழும் தொடர்பு, ஆளுமை வளர்ச்சியின் அடிப்படையாக அமையும் என்று கூறினார். இவர் தனிமனிதனின் சமூக வளர்ச்சி அவன் வாழ்நாள் முழுவதும் பரவி இருப்பதாகவும் அதனைத் தெளிவுபட்ட எட்டு வெவ்வேறு உளம்சார் சமூக நிலைகளாகப் (Psycho Social Stages) பிரித்து அறியமுடியும் என்றும் தெரிவித்தார். வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு நெருக்கடி எழும் என்றும், இந்த நெருக்கடி இருவேறுபட்ட இயல்புகளுக்கு இடையே நிகழும் போராட்டத்தைக் குறிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போராட்டங்களைப் பின்வருமாறு விளக்கலாம். <b>முதல் நிலை</b>: இந்நிலையில் எழும் போராட்டம் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே நிகழ்வதாகும். இது இளங்குழவிப் பருவத்தில் நிகழ்கிறது. இளங்குழவியின் தேவைகளை அதனைச் சார்ந்தோர் தக்க தருணத்தில் நல்ல முறையில் நிறைவேற்றி வந்தால் குழந்தையிடம் நம்பிக்கை வளர்கிறது. தன்னுடைய தேவைகள் உற்ற நேரத்தில் கிடைக்கப் பெறாவிட்டால் குழந்தையிடம் நம்பிக்கையின்மை வளர்கிறது. இப்பண்பு குழந்தையின் ஆளுமையிலும் பங்கு பெறுகிறது. <b>இரண்டாம் நிலை</b>: இந்நிலையில், மனப்பான்மைக்கும் சந்தேகம் அவமானம் ஆகியவற்றிற்குமிடையே போராட்டம் நிகழ்கிறது. இது குழந்தைப் பருவத்தில் நிகழ்கிறது. பெற்றோரின் ஏற்பு, அன்பு ஆகியவற்றை அடையும் குழந்தை, சுதந்திர மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறது. தற்செயலாக நிகழும் நிகழ்ச்சிகளால் பெற்றோர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற முடியாத குழந்தை, அவமானத்தையும் சந்தேகத்தையும் வளர்த்துக் கொள்கிறது. இந்நிலைக்கு ஏற்ற சிறப்பியல்புகள் தற்கட்டுப்பாடு, மன உறுதி, வீரம் ஆகியவை, ஏற்புடைய செயல்களையும் தவறான செயல்களையும் பிரித்தறியும் திறன் குழந்தைக்கு இந்நிலையில் ஏற்படுகிறது. <b>மூன்றாம் நிலை</b>: இந்நிலையில் ஏற்படும் போராட்டம், ஊக்கத்திற்கும் குற்ற உணர்விற்கும் இடையே நிகழ்வதாகும். இந்நிலை குழந்தையின் விளையாட்டுப் பருவத்தில் நிகழ்வதாகும் (நான்கிலிருந்து ஐந்து வயது வரை). இதனை இளம் பள்ளிப் பருவம் என்றும் கூறலாம், இந்நிலையில் எரிக்கு எரிக்சன், பிராய்டு எடுத்துரைத்த ஈடிபசு எலக்ட்ரா சிக்கல்களை, ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் முறையே அனுபவிப்பதாகக் கூறுகிறார். ஆண் குழந்தை, தன் தாயின் கவனத்தைத் தன் தந்தையிடமிருந்து தன்னிடம் திருப்புவதற்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொள்கிறது. இந்த முயற்சியில் குழந்தை மேம்பாட்டுளத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து வெற்றி பெற்றால், ஊக்கம் உடையதாகிறது. பெண்குழந்தை இந்நிலையில் தன் தந்தையிடம் மிகுந்த அன்புடையதாகிறது. தந்தையின் கவனத்தைத் தாயிடமிருந்து தன் மீது திருப்புவதற்காக அது பல முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முயற்சிகளில் தன் மேம்பாட்டுளத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நடந்து வெற்றி பெற்றால், அது ஊக்கம் உடையதாகிறது. இம்முயற்சியில் வெற்றி பெறாவிடில் குழந்தையிடம் குற்ற உணர்வு வளர்கிறது. இந்நிலையில் சிறப்பியல்பு ஊக்கமாகும். இந்நிலையில் குழந்தையின் குறிப்பிடத்தக்க சாதனை, குடும்பத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதை உணர்வதாகும். <b>நான்காம் நிலை</b>: இந்நிலையின் போராட்டம் விடாமுயற்சிக்கும் தாழ்வு மனப்பான்மைக்குமிடையே நிகழ்வதாகும். இந்நிலை குழந்தையின் பள்ளிப் பருவத்தைச் சேர்ந்ததாகும். குழந்தை தன் பெற்றோர் உலகத்தை விட்டுப் பள்ளியிலும் வேறிடங்களிலும் வெளியுலகத்தைக் காண்கிறது. சமூகத்தின் ஏற்பினையும் அங்கீகாரத்தையும் அடைவதில் குழந்தை வெற்றி பெற்றால் அது முயற்சி உடையதாகிறது. ஏற்பும் அங்கீகாரமும் குழந்தைக்குக் கிடைக்காவிட்டால் அது தாழ்மை உணர்வு அடைகிறது. இந்நிலையின்<noinclude></noinclude> 86dnnbha22oe02z3mfmbgfyr1lv2v6o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/753 250 623257 1954469 1861938 2026-07-17T13:40:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|713|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>சிறப்பியல்புகள் திறமையும் ஒழுங்கும் ஆகும். இந்நிலைக்கேற்ற சாதனை திறன்களைக் கற்றலாகும். <b>ஐந்தாம் நிலை</b>: இந்நிலையின் போராட்டம், ஒன்றுதலுக்கும் பங்குக் குழப்பத்திற்கும் இடையே நிகழ்வதாகும். இதனை ஒன்றுதல் நெருக்கடி (Identity Crisis) என்று எரிக்சன் குறிப்பிடுகிறார். இந்நிலை பள்ளிப் பருவக் குழந்தை ஊக்கநிலை அடையும்பொழுது தொடங்கி, இளமைப் பருவம் முழுவதும் நீடிக்கிறது. இளமைப் பருவத்தினர், தம் ஆர்வங்கள் சமூக அங்கீகாரம் அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் வெற்றி பெற்றால் இளையோரிடம் ஒன்றுதல் வளர்கிறது. சமூகத்தின் ஒதுக்கலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக இளையோர், பல காலப்பாணிகளிலும் (Fashion) சிறு குழுவமைப்புகளிலும் ஈடுபாடு கொள்கின்றனர்; இளைஞர் தலைவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். தம்முயற்சியில் வெற்றி பெறாவிட்டால் அவர்கள் சமூகத்தில் கொள்ளும் பங்கு என்ன என்பது குறித்துக் குழப்பம் அடைகின்றனர். இந்நிலையின் சிறப்பியல்புகள் நம்பிக்கையும் ஈடுபாடும் ஆகும். இந்நிலையில் இளையோரின் சாதனை, வாழ்க்கையின் நோக்கத்தைத் தெரிந்து கொள்வதாகும். <b>ஆறாம் நிலை</b>: இந்நிலையின் போராட்டம், மன நெருக்கத்திற்கும் ஒதுக்கலுக்கும் இடையே நிகழ்வதாகும். இளமைப் பருவத்துப் போராட்டத்திற்குப்பின் வயது வந்தோர் பருவத்தின் முதல் நிலையில், தெளிவான சமூக இடையுறவுகளை அடைவதில் வெற்றி பெற்றால், தனிமனிதன் மன நெருக்கத்தினை உணர்கிறான். ஆனால், புதுமைக் காலத்துச் சமூக அழுத்தங்களின் விளைவாகத் தனிமனிதன் பெரும்பாலும சமூக ஒதுக்கலுக்கு ஆளாகிறான். இந்நிலையின் சிறப்பியல்புகள், அன்பும் இணைத்தலுமாகும். இந்நிலையில் தனிமனிதனின் குறிப்பிடத்தக்க சாதனை, மற்றவர்களுடன் மன நிறைவு தரும் சமூகத் தொடர்புகள் கொள்ளுதலாகும். <b>ஏழாம் நிலை</b>: இது நடுத்தர வயதுப் பருவத்தைச் சேர்ந்த நிலையாகும். இந்நிலையின் போராட்டம் ஆக்கச் செயலுக்கும் தேக்கத்திற்கும் இடையே நிகழ்வதாகும். தனிமனிதன் தான் வாழும் வழியினை வகுக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டது இந்நிலையாகும். தனக்குப் பின்னரும் தலைமுறையினருக்குப் பயனுள்ள வகையில் ஆக்கத்திற்கான செயல்களில் ஈடுபடும் தனிமனிதனின் வாழ்க்கை இப்பொழுது தன்னிறைவு அடைகிறது. இம்முயற்சியில் வெற்றி பெறாமல் தோற்றுவிடும் மனிதன் சோர்வு அடைகிறான். அவன் வாழ்க்கை தேக்கம் அடைவதை உணர்கிறான். இந்நிலையின் சிறப்பியல்புகள் ஆக்கமும் பாதுகாப்பும் ஆகும். இந்நிலையில் தனிமனிதனின் சாதனை, பண்பாட்டு வளர்ச்சிக்கு வழிவகுத்தலாகும். <b>எட்டாம் நிலை</b>: இது தனிமனிதனின் வாழ்ககையின் இறுதி நிலையாகும். இது முதுமைப் பருவத்தில் நிகழ்கிறது. இந்நிலையின் போராட்டம் தன்முனைப்புச் சமநிலைக்கும் சோர்வுக்கும் இடையே நிகழ்கிறது. தன் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளுக்கு இடையில் தனிமனிதன் தானும் மனித வரலாற்றில் தன் பங்கினைச் செய்து முடித்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு, அவனுக்குத் தன்முனைப்புச் சம நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகள் யாவற்றிற்கும் தானே காரணம் என்ற கட்டாய உணர்வும், வாழ்க்கையை இழந்துவிட்டதாக எண்ணும் சோர்வு மனப்பான்மையும், வாழ்க்கைத் தோல்வியினை அவனுக்கு உணர்த்துகின்றன. இந்நிலையின் சிறப்பியல்பு மெய்ந்நிலை அடைதல் ஆகும். இந்நிலையில் தனிமனிதனின் சாதனை, வாழ்க்கையின் முழுமையையும் முடிவையும் ஏற்பதாகும். எரிக்கு எரிக்சனுடைய கருத்துக்கள் குழந்தை உளவியல் அறிஞர்களால் மிகுந்த அளவில் வரவேற்கப்பட்டன. குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் ஏற்படக்கூடிய இயல்பு நிலைத் தன்முனைப்பு வளர்ச்சி, இயல்பு பிறழ்ந்த தன்முனைப்பு வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியும், அவை ஆளுமை வளர்ச்சிக்கு எவ்வாறு அடிகோலுகின்றன என்பதைப் பற்றியும், எரிக்சன் விரிவாக எடுத்துரைத்தார். ஆளுமைக் கூறுகளைப் பற்றிய எரிக்சனது அடுக்கமைவு, அறிவியல் உலகத்தினர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும். எரிக்சன் எடுத்துரைத்த குழந்தைப் பருவ நிலைகள், பிராய்டின் வளர்ச்சியின் உளம் சார் பால் நிலைகளை (Psycho Sexual of Development) ஒட்டியதாக இருக்கின்றன. தனிமனிதனது ஆளுமை, சமூகத்துடன் ஒட்டி அமைகிறது என்பதை எரிக்சன் வலியுறுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல நிலைகளிலும் தனிமனிதன் புரியக்கூடிய சாதனைகளையும் அவளிடம் காணப்பட வேண்டிய சிறப்பியல்புகனையும் எடுத்துரைத்த எரிக்சன், அவ்வியல்புகளை அடைதல், அச்சாதனைகளில் வெற்றி பெறுதல் ஆகியவற்றிற்குரிய வழிமுறைகளை எடுத்துரைக்கவில்லை. <b>ஆ. ஆட்லர் ஆல்பிரெடு (கி.பி. 1870-1937</b>): தனிமனித உளவியல் (Individual Psychology) கோட்பாட்டைத் தோற்றுவித்த உளவியல் அறிஞர் ஆவார்.<noinclude> <b>வா.க. 2-90</b></noinclude> i58myh0x26mrvxzm4zr7b6qsgu00o86 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/754 250 623258 1954470 1861949 2026-07-17T13:43:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|714|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>இவர் பிராய்டின் உளப்பகுப்புக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டு, ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் உளவியல் கருத்துகளை எடுத்துரைத்தார். தனி மனிதனின் உள்ஊக்குத் திறனாகச் சமூக உந்துகளே விளங்குகின்றன என்றும், அவன் தன் வாழ்க்கைப் போராட்டங்களுக்குத் தன்னிறைவில் மட்டுமே தீர்வு காணமுடியும் என்றும் எடுத்துரைத்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 754 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 106 |oTop = 148 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|ஆல்பிரெடு ஆட்லர்}} வியன்னா நகரத்தில் கி.பி. 1870-ஆம் ஆண்டு பிறந்த ஆட்லர் 1935-ஆம் ஆண்டு வரையில் அங்கு வாழ்ந்து, அதற்குப் பின்னர்ச் செருமானிய நாசிப்படையினருக்கு அஞ்சி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியேறினார். இவர் 1937-ஆம் ஆண்டு இசுகாட்டுலாந்தில் இறந்தார். இவர் தொடக்கத்தில் கண் மருத்துவராகப் பயிற்சி பெற்றிருந்த போதிலும் பின்னர் உளவழி மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டார். பிராய்டின் கொள்கைகளைக் கற்று, ஆட்லர் உளப்பகுப்புக் கோட்பாட்டினரானார். உளவியல் சிந்தனைகளில் ஆட்லரின் ஈடுபாடு கண்டு பிராய்டு, இவரை உளப் பகுப்புக் கோட்பாட்டுக் கழகத்தின் தலைவராக அமர்த்தினார். ஆனால், சில காலத்தில் ஆட்லரின் கருத்துகள் உளப் பகுப்புக் கருத்துகளை விட்டு முழுமையாக விலகி நின்றதைக் கண்ட பிராய்டு, 1911 ஆம் ஆண்டு உளப்பகுப்புக் கோட்பாட்டுக் கழகத்தின் கூட்டத்தில் ஆட்லரைத் தம் உளவியல் கருத்துகளைத் தெளிவுற எடுத்து வைக்குமாறு கோரினார். ஆட்லரின் உரையிலும் அதற்குப் பின் கூட்டத்தினரிடையே நிகழ்ந்த கலந்துரையாடலிலும் ஆட்லரின் கருத்துகள், பிராய்டின் சுருத்துகளிலின்று முழுமையாக வேறுபட்டிருந்தது தெளிவாயிற்று. அக்கலந்துரையாடலின் நடுவில் ஆட்லர் கழகத்தை விட்டு வெளியேறினார். இவருடன் வேறு சில கழக உறுப்பினர்களும் வெளியேறினர். பின்னர் ஆட்லர் தனியாள் உளவியல் கோட்பாட்டினை விரிவாக உருவாக்கினார். ஆட்னர் குழந்தைகளின் உளநலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வியன்னா நகரத்தில் குழந்தைகள் வழிகாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். ஆட்லர் செய்த ஆய்வுக் கருத்துக்களும் கோட்பாடுகளும் அவருக்கு உளவியல் துறையில் ஒரு தனி இடத்தைத் தேடிக் கொடுத்தன. இந்த ஆய்வுகள் பின்வரும் பொருள்களைப் பற்றி அமைந்திருந்தன. தனிமனிதனின் தன்தாழ்வுச் சிக்கல்களை எதிர்த்து வாழ்க்கையில் முன்னேறுகிறான். மக்கள் பாதுகாப்பினைக் கருதியே காலப்பாணியைப் பின்பற்றுகின்றனர். பெண்களுக்குச் சமூகத்திலும் அரசியலிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையில் உயர்வு நிலை எய்த இயல்பு நிலையிலும் பிறழ்நிலையிலும் மக்கள் பாடுபடுதல் வேண்டும். மக்கள் தம் வாழ்க்கையில் உயர்நிலையை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடுகின்றனர். குழந்தைப் பருவத்திலிருந்தே போட்டி மனப்பான்மையும் மற்றவர்களைவிடச் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்முவம் எல்லோரிடமும் காணப்படுகின்றன. சமூகத்தில் தனிமனிதனின் வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மக்கள் எப்பொழுதும் பாதுகாப்பின்மையை எதிர்த்து இயங்கி வருகின்றனர். மற்றவர்கள் மீது அதிகாரம் செய்வதன் பொருட்டும் பொருள் ஈட்டுகின்றனர்; பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக ஆக்கிரமிப்புத் தன்மையுடன் இயங்குகின்றனர்; மற்றவர்களைக் காட்டிலும் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்க வேண்டும் என்றும் விழைகின்றனர். சமூகத்தில் பெண்களுக்கு ஆண்களுடன் சமமான ஏற்புத்தரம் கொடுக்கப்படவில்லை. பிறப்பில் பெண்கள் ஆண்களைப் போல் சமமான திறமையுடன் விளங்குகிறார்கள். பெண்கள் குறையறிவு உள்ளவர்கள் என்று பிராய்டு கூறியதை ஆட்லர் எதிர்க்கிறார். மனிதர்களின் தாழ்வு மனப்பான்மை நீண்ட காலம் நீடித்து இருந்தால் அவர்கள் உளநலம்<noinclude></noinclude> 070levt90n5g547j6kucc0jgimc6gb8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/755 250 623259 1954471 1861956 2026-07-17T13:46:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|715|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>பாதிக்கப்படும். குழந்தையின் நடத்தைகள், தன் குறைகளை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்களே. உடல் சமநிலை அடைவதற்கும் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனிதன் முயற்சியை மேற்கொள்ளுவதில்லை. அவனுடைய முயற்சிகள் யாவும், தன்னுடைய தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குச் செல்வதற்கே செலவழிக்கப்படுகின்றன. உயர்நிலை விழைதல் உந்து, மனிதனின் நடத்தைகளைப் பல்வேறு வகைகளில் செலுத்துகிறது. கற்பனை நோய்க் கோளாறுடையோரும், (Hypochondriacs) அதிகார வெறி கொண்டு அலையும் உளம் பிறழ்ந்தோரும், தம்முடைய முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். குழந்தைகளும் மாணவர்களும் தம்முடைய விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகின்றனர். வாழ்க்கை எப்பொழுதும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. மனிதன் தன் சொந்தக் குறைகளை நீக்குவதில் ஈடுபட்டு அதற்காக முயற்சி செய்வது, விரும்பத்தக்க முறையில் அமைந்த உயர்வு விழைதலின் பாற்படும். வருங்காலத்தில் அடைய விரும்பும் இலக்குகளுக்காக மக்கள் ஈடுபடும் நடத்தை, அவர்களின் நிகழ்காலச் செயல்களாக அமைகின்றன. இலக்குகளைப் பற்றிய உணர்வு இல்லாதவர்களும் தம்மையறியாமலே ஏதேனும் ஒரு பொருளை அடைவதற்காக எப்பொழுதும் பாடுபடுகின்றனர். தனிமனிதனின் நடத்தையைப் பற்றி ஆராயவேண்டுமென்றால் அவனுடைய இலக்குகள் என்ன என்பதை அறிந்து கொள்வதே பொருத்தமாகும். சில நேரங்களில் ஒருவன் எதைத் தவிர்க்கிறான் என்பதும், சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல், பொருள் தேடுதல், புகழ் விழைதல், அழகு விழைதல் ஆகியவையும் மக்களின் இலக்குகளுள் சில என்று கூறலாம். அன்சு வைகிங்கர் (Hans Valhinger) என்னும் தத்துவ அறிஞர் இயற்றிய நூல் (The Philosophy of ‘As If’) ஆட்லரைப் பெரிதும் கவர்ந்தது. வாழ்க்கையில் சில இலக்குகளை அடைதலைப் பயன் மதிப்புகளாக மக்கள் எண்ணுகின்றனர். இவர்கள் இலக்குகள், அடைய முடியாத இலக்குகளாக இருக்கலாம். ஆயினும் இவர்கள், அவற்றை அடையலாம் என்னும் நம்பிக்கையுடன் பாடுபடுகின்றனர், இதனால் இவர்களுடைய இலக்குகள் கற்பனைகளாகி விடுகின்றன. சில கற்பனைகள் தமக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்காதனவாக இருக்கின்றன. எ-டு. வாய்மையே வெல்லும். வேறு சில கற்பனைகள் மனிதர்களைத் தொல்லைகளில் ஆழ்த்திவிடும். ஆனால் ‘வணிகர் உண்மையைக் கடைப்பிடிப்பர்’ என்ற கற்பனை சோதித்து அறிந்து கொள்ள வேண்டியதாகும். வணிகர் எப்பொழுதும் உண்மையாக இருப்பர் என்ற முழு நம்பிக்கையுடன் ஒருவன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டால் அவனுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். சில கற்பனைகள் கருத்தியல்களாக (Ideals) உருக்கொள்கின்றன. ஆசிரியர், மருத்துவர் போன்றவர்கள் தம் தொழிலில் மிகையான சிறப்பு நிலை அடைய வேண்டும் என்ற கருத்தியல்களைக் கொண்டிருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் பாடுபடலாம். மக்கள் தம் வாழ்க்கையில் முதன்மையானவர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களுடன் தாம் கொள்ளும் இடையுறவைச் சிறப்புடையதாக்குகிறது. மருத்துவர் தன் நோயை நீக்கி விடுவார் என்ற நம்பிக்கை, நோயாளியை மருத்துவமின் கட்டளைகளை முழுமையாக ஏற்று அவற்றின் வழி நடக்கச் செய்கிறது. ஒரே மனிதனுக்குப் பல இலக்குகள் இருக்கலாம். அவற்றையடைய வேண்டும் என்ற உணர்வு எப்பொழுதும் அவனுடைய நனவடங்கு நிலையில் இருக்கிறது. தனிமனிதனின் பண்புகளும் திறன்களும், அவனுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கைப் பாணியை அமைக்கின்றன. தனிமனிதனின் வாழ்க்கைப் பாணியை அமைப்பதில் அவன் பெற்றோர்களும் குடும்பத்தினரும் பெரும்பங்கு கொள்கின்றனர். குழந்தைப் பருவத்திலேயே வாழ்க்கையின் பொருள் பற்றிய கருத்துப் படிப்படியாக அமைந்துவிடுகிறது. பரம்பரை, குடும்பத்தில் அவனுடைய பிறப்புநிலை, பெற்றோர்கள் அவன் மீது காட்டும் அன்பு எதிர்பார்ப்புகள், சில மாற்றமுடியாத நிகழ்ச்சிகள் போன்றவை வாழ்க்கைப் பாணியை அமைப்பதில் பெரும் பங்கு கொள்கின்றன. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களுடைய அன்பு கிட்டாத குழந்தைகள், தவறான வாழ்க்கைப் பாணியை அமைத்துக் கொள்கின்றன. உடல் ஊனமுற்ற குழந்தைகளும் நோயுற்ற குழந்தைகளும் மனவெழுச்சிப் பாதுகாப்புக் கிடைக்கப் பெறாத குழந்தைகளும் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றன. தனிமனிதனின் செயல்கள், சமூக ஈடுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவனுடைய ஆளுமையை ஆட்லர் வகைப்படுத்தினார். ஆட்லரின் வகைப்படுத்தலைப் பின்வருமாறு விளக்கலாம். ஆளும் வகையினர் (The Ruling Type) தம் சொந்த நலனுக்காகத் தீவிரமாகப் பாடுபடுகின்றனர். தாம் விரும்பும் பொருள்களையும் இலக்குகளையும் அடைவதற்காகக் கடுமையாக உழைக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைத் தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்<noinclude></noinclude> aky0uw0kcnb3dksg6pupko5n7p5thj5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/756 250 623260 1954474 1861999 2026-07-18T03:14:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|716|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>கொள்ளத் தயங்க மாட்டார்கள். இவர்கள் குறைவான செயல்களும் மிகையான சமூக ஈடுபாடும் கொண்டவர்கள். அடையும் வகையினர் (The Getting Type) குறைவான செயல்களையும் மிகுதியான சமூக ஈடுபாடுகளையும் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் நட்பு விழைபவர். தம் சொந்த ஈர்ப்புத் திறன் வாயிலாக மற்றவர்களிடமிருந்து உதவியும் பயனும் அடைவர். தம் பொறுப்புகளைத் தாமே செயற்படுத்த இயலாதவர். அதனால் மற்றவர்களைச் சார்ந்திருப்பர். தவிர்த்தல் வகையினர் (The Avoidance Type) குறைவான செயல்களும் குறைவான சமூக ஈடுபாடும் கொண்டவர்கள். இவர்கள் பொறுப்புகளை ஏற்கத் தயங்குவார்கள்; ஏமாற்றங்கள் மனக்குலைவுகள் போன்றவற்றைச் சமாளிக்க முடியாதவர்கள். மற்றவர்களிடம் பயனுறும் வகையில் பழகமாட்டார்கள். தம் வாழ்க்கையைப் பெரிய சிக்கலாக்கிக் கொள்வார்கள். <b>இயல்பு வகையினர் (The Normal Persons)</b>: இவர்கள் செயல்கள், சமூக ஈடுபாடு ஆகியவற்றில் மிகுந்து காணப்படுவர். இவர்கள் சிக்கல்களை வெல்லும் திறன் கொண்டவர்கள்; தம் குற்றம் குறைகளை உணர்ந்தவர்கள்; தவறுகளைத் திருத்திக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள்: வாழ்க்கையில் வெற்றி அடைபவர்கள். மனிதர்களின் தன்னுணர்வு (Self), படைப்பாற்றல் மிக்கது என்று ஆட்லர் கருதினார். தனிமனிதன், தன் கட்டுப்பாடுகளின் வாயிலாகத் தன் நடத்தையையும் பண்புகளையும் மாற்றிக் கொள்ளலாம். சமூகப் பொருத்தப்பாடுடைய மனிதரிடம் பின்வரும் பண்புகளைக் காணலாம் என்று ஆட்லர் கூறினார். வாழ்க்கையின் பயன் மதிப்புகளை அறிந்துள்ளவர் தாமாகச் சிந்திக்க வல்லவர்; தாழ்வு மனப்பான்மையை அகற்றுபவர்; மற்றவர்களுடன் சமநிலையுடனும் நட்புடனும் பழகுபவர்; மக்களினத்தை நேசிப்பவர்; வசதிக் குறைவுகளைப் பொருட்படுத்தாமல் அவற்றுடன் இயைந்து வாழ்பவர்; உலகியல்புடன் இயைபு கொண்டவர்; சமய, அறநெறி உணர்வுகள் கொண்டவர்; அழகியலுணர்வு நோக்குடையவர்; உளச் சமநிலை உடையவர். ஆட்லர், தனியாள் உளவியல் துறையில், தம் வாழ்நாள் முழுவதும் பல ஆய்வு அறிக்கைகளையும் நூல்களையும் எழுதினார். ஆட்லர் 1937-ஆம் ஆண்டு இசுகாட்லாந்தில் விரிவுரைப் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது காலமானார். <b>ஆர்னை, காரன் (கி.பி. 1885-1952)</b>: இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய உளவியல் அறிஞர்களுள் ஒருவர், மெய்ந்நிலைத் தன்னுணர்வுக்கும் கற்பனையில் மேம்பாட்டு நிலைக்கு உயர்த்தப்படும் தன்னுணர்வுக்கும் இடையில் காணப்படும் வேற்றுமைகளை, முதன் முதலில் எடுத்துரைத்த உளவியலார் இவரே, காரன் ஆர்னை (Karen Horney) கி.பி. 1885-ஆம் ஆண்டு செருமனி நாட்டிலுள்ள ஆம்பர்க்கு (Hamburg) நகரத்தில் பிறந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயின்ற ஆர்னை, உளமருத்துவத்தில் ஈடுபாடு கொண்டார்; பெர்லின் உளப்பகுப்புக் கழகத்தில் 1918-ஆம் ஆண்டு முதல் 1932 வரையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவர், 1932-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று அங்குச் சிகாகோ உளப்பகுப்புக் கழகத்தின் இணை இயக்குநராக இருந்தார். இவர் பிராய்டின் உளப்பகுப்புக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் நியூயார்க்கு உளப்பகுப்புக் கழகத்தில் 1934-ஆம் ஆண்டு பணிபுரிந்தார். உளப்பகுப்புப் பற்றிய தம்முடைய சொந்தக் கருத்துகளை வலியுறுத்தும் பொருட்டு ஆர்னை உளப்பகுப்பு முன்னேற்றச் சங்கத்தை (Association for the Advancement of Psycho-Analysis) நிறுவினார். பெண்களின் உளநிலை, உளச்சிக்கல் ஆகியவை பற்றிப் பிராய்டு எடுத்துரைத்த கருத்துகளை ஆர்னை ஏற்கவில்லை. எலக்டிரா சிக்கல் காரணமாகப் பெண்கள் ஆண்களின் தொழில்களையும் பொறுப்புகளையும் ஏற்க {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 756 |bSize = 375 |cWidth = 161 |cHeight = 190 |oTop = 233 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|காரன் ஆர்னை}}<noinclude></noinclude> k9hmcsxw8u7soxeuhs02qf8vxgg7fkj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/757 250 623263 1954475 1862013 2026-07-18T03:19:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|717|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>விரும்புவர் என்ற பிராய்டின் வாதத்தை ஆர்னை ஏற்கவில்லை. சூழ்நிலை அழுத்தங்கள், குழந்தையின் உள்ளத்தில் அடிப்படைப் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றன. குழந்தை இதனைச் சமாளிப்பதற்காகச் சில வழிமுறைகளைத் தேடுகிறது. இவ்வழிமுறைகள் நாளடைவில் தேவைகளாக மாறிவிடுகின்றன. பெற்றோர்களின் மிகைக் கண்டிப்பு, குழந்தையின் தன்னுணர்வு நசுக்கப்படுதல், அன்பிலாமை போன்ற காரணங்களினால் இச்சூழ்நிலைகள் உருவாகின்றன. இவ்வழிமுறைகள் சிலரிடம் உளக்கோளாற்றுத் தேவைகளாகவும் ஆகலாம் என்றும், பத்து உளக்கோளாற்றுத் தேவைகளை மக்களிடம் பெரும்பாலும் காணலாம் என்றும் ஆர்னை கூறினார். இத்தேவைகளைப் பின்வருமாறு ஆர்னை தொகுத்துள்ளார். ::<b>1. மக்களிடம் நெருங்கவைக்கும் தேவைகள்</b>: :::அ. அன்பு, ஏற்புடைமை ஆகியவற்றின் தேவை. இதனால், மனிதன் எல்லோரையும் மனநிறைவடையச் செய்ய முயற்சி செய்கிறான். எல்லோராலும் விரும்பப் படவும் விழைகிறான். :::ஆ. வாழ்வில் எப்பொழுதும் சார்ந்திருப்பதற்கும் ஆளுமை ஒன்றுதலுக்கும் ஒரு துணை தேவை. ::<b>2. மக்களுக்கு எதிராகச் செயற்பட வைக்கும் தேவைகள்</b>: :::அ. மற்றவர்களின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் மற்றவர்களை விடத் தான் மிகுந்த அறிவாளி என்று தெரியப்படுத்துவதற்கும் அதிகாரம். :::ஆ. மற்றவர்களைச் சுரண்டல் செய்யும் தேவை. :::இ. மதிப்பு, பொது மரியாதை ஆகியவற்றையடையும் தேவை. :::ஈ. தன்னை மிகையாக மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்னும் சுயமரியாதைத் தேவை. :::உ. அடைவுத் தேவை - மற்றவர்களுக்கு முக்கியமல்லாத எளிய சாதனைகளை நிறைவேற்ற விழையும் தேவை. ::<b>3. மக்களை விட்டுப் பிரிய வைக்கும் தேவைகள்</b>: :::அ. சுதந்திரத் தேவைத் தன்னிறைவு: மற்றவர்களிடம் நன்கு பழக முடியாத காரணத்தினால் தனிமையை நாடுதல். :::ஆ. செயல் சீர்மைத் தேவை, மற்றவர்கள் தன்னிடம் தவறு கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தினால் எக்காரியத்தையும் சீர்படச் செய்தல். :::இ. தன் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளுதல், தன்னடக்கமானவராகவும் தன்னிடம் தவறு காண்பவராகவும் இருத்தல். மனிதர்களின் தற்கருத்து அவர்களுடைய உண்மையான தன்னுணர்வையொட்டியதாக அமைந்திருப்பதில்லை. பெரும்பாலும் தன்னுணர்வு கருத்தியல் வயப்பட்டதாக (Idealised) அமைந்திருக்கிறது. அதாவது நம்மைப் பற்றிய உள உருவம் கருத்தியல் வயப்பட்டதாக அமைந்திருக்கிறது, ஒருவன் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள உள உருவம் அவனுடைய உண்மையான உள உருவத்தைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கலாம். இவ்வேறுபாட்டினை உணராதவர்கள் தம்முடைய தவறான தற்கருத்தினால் உண்மையான உள உருவத்திற்கும் இன்னல் விளைவிக்கின்றனர். இந்த முரண்பாடே உளக்கோளாறுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இவைகளைத் தவிர மக்களிடம் சிறப்புத்தேவை (Need for Perfection), உளக்கோளாறுசார் ஆசை, (Neurotic Desire) இகழ்ந்து கூறும் ஆசை (Desire to Humiliate) ஆகிய மூன்று தேவைகள் புகழ்த்தேவை என்ற அடிப்படைத் தேவையுடன் இணைந்து காணப்படுகின்றன. கருத்தியல் சார்ந்த உள உருவங்களைத் தம்முடைய தன்னுணர்வு எனத் தவறாக எண்ணுபவர்கள், அதாவது தம்மைப் பற்றிய மிகச் சிறந்த கருத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தாம் அறநெறியிலும் திறமைகளிலும் சிறந்து விளங்குபவராகவும் குற்றங்குறைகளற்றவராகவும், தூய்மையானவர்களாகவும் மக்களுள் மதிக்கத்தக்க மனிதர்களாகவும் இருக்கிறோம். என்று எண்ணுகிறார்கள் இவ்வுணர்வு சிறப்புத்தேவை எனப்படுகிறது. எந்தப் போட்டியிலும் தானே வெற்றியடையவேண்டும்; இலக்குகள் எத்தகையன வாயினும் அடைதற்கரியனவாயினும் வெற்றியே தன் குறிக்கோள் என்னும் உணர்வு உளக்கோளாறு ஆசை (Neurolic Desire) என்னும் தேவையாகும். இகழ்ந்து கூறும் தேவை என்பது, முதல் இரு தேவைகளும் அடையப் பெறாவிட்டால் மக்கள் ஈடுபடும் நடத்தையைக் குறிப்பதாகும். அதாவது அடைய முடியாத இலக்குகளும் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாத் திறமைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் ஆசையும் நிறைவு பெறாத நிலையை மக்கள் அடைதலாகும். இதனால் மனக்குலைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக மற்றவர்கள்மீது, முக்கியமாகத் தம் மேலதிகாரிகள்மீதும், தம்மீது அதிகாரம் செலுத்துபவர்கள்மீதும் தம்மைக் காட்டிலும் திறமை மிக்கவர்கள் மீதும் இனம்புரியாத வெறுப்பு<noinclude></noinclude> l2mlg784li42qd50cwv8ywwh25ys95x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/758 250 623264 1954476 1862017 2026-07-18T03:23:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|718|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>ஏற்படுகிறது. இந்த வெறுப்பு, மற்றவர்களைத் தம் சொற்களினால் இகழ்ந்து குற்றங்காணும் நோக்குடன் பேசும் இயல்புகளை இவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இத்தகைய தேவைகள் உள்ளத்தில் எழும் பொழுதே இவை அடைய முடியாதனவோ என்ற அச்சம் உடன் எழுகிறது. அதனால் இத்தேவைகளை உடனடியாக அடைய வேண்டும் என்ற துடிப்பும் உண்டாகிறது. பெருந்தலைவர்கள், எதேச்சாதிகாரிகள் போன்றோர் உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாம் வீழ்ச்சியடைய நேரிடுமோ என்ற அச்சத்தினால் அடங்காத அதிகார ஆசை கொள்கின்றனர். அச்சமே இவர்களின் புகழ்த் தேவைக்குத் தூண்டு பொருளாக இருக்கிறது. உளக்கோளாறு ஆளுமையினர், எப்பொழுதும் கனவிலும் கற்பனையிலும் மிதக்கின்றனர். இவர்களால் பிறருடன் பொருளுடைய நிலைத்த உளத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இவர்கள் தம்முடைய உண்மையான உளஉருவத்துடனோ தன்னுணர்வுடனோ இயைந்து இயங்குவதில்லை. தங்கள் தன்னுணர்வு பற்றிய மிகுந்த பெருமை வாய்ந்த கருத்தினைக் கொண்டுள்ளனர், இக்கற்பனைக் கருத்தை நிலை பெறச் செய்வதற்காக இவர்கள் பின்வரும் நான்கு சிறப்பான முறைகளைக் கையாளுகின்றனர். <b>உளக்கோளாறு சார் செருக்கு</b>: இவர்கள் தம்மிடம் இருக்கும் ஏற்பிலாப் பண்புகளைக் கற்பனையில் ஏற்புடையனவாக்கித் தாம் மிகச் சிறந்தவர்களாகவும் மற்றவர்களை அறிவிலிகளாகவும் எண்ணுகின்றனர். தம்முடைய உளத் தேவைகளைச் சிறப்பியல்புகளாக மாற்றி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக எளிதில் மற்றவர்களின் கருத்தேற்றத்திற்கு வயப்படும் தன்மை ஏற்பிலாப் பண்பாகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுவதால், இவர்கள் தம்மிடம் அத்தகைய பண்பு இருந்தால், அதனை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் பண்பு என்று மாற்றி விடுகின்றனர். இத்தகைய பண்பு தம்மிடம் இருப்பதாக செருக்குக்கொள்கின்றனர். இதனைப் போன்றே தன்னலம், ஆதிக்கம் போன்ற பண்பினைப் போட்டி மனப்பான்மை, நிகரற்று விளங்கும் விழைவு போன்ற பண்புகளாக மாற்றி விடுகின்றனர். மிகச் சிறிய எதிர்ப்பைக்கூட இவர்களால் தாங்க முடியாது. ஏனெனில் தம்முடைய அடிப்படை உளவலுவின்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற மிகை அச்சம் கொள்கிறார்கள். <b>உளக்கோளாறுசார் உரிமை</b>: (Neurotic Claim) உலகில் வாழ்வதற்கும் மிகச்சிறந்த பொருள்களைப் பெறுவதற்கும் தமக்கு உரிமை உண்டு என்று இவர்கள் எண்ணுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் குடும்பத்தினரால் மிகையான கவனத்திற்கும் அன்புக்கும் இலக்கான குழந்தை, வளர்ச்சியடைந்த பருவத்தில் மற்றவர்களின் அன்பும் கவனமும் தனக்கு உரிமைப் பொருள்களாகும் எனவும் பிறர் தன்னிடம் அன்பு செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர் எனவும் எண்ணுகிறது. அவர்கள் தன்னிடம் கவனம் காட்ட வேண்டியவர்கள் என்றும் எண்ணுகிறது. இத்தகைய கவனமும் அன்பும் கிடைக்கப் பெறாவிட்டால் இவர்கள் மனக் குலைவு அடைகிறார்கள். மக்களுடன் நெருங்கிப் பழகும் இயங்கும் முறையில் இவர்கள் ஈடுபட்டால், பிறரிடமிருந்து கைம்மாறு கருதா அன்பினை எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய அன்புக்கும் கவனத்திற்கும் இவர்கள் தாம் தகுதியுடையவரா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக இயங்கும் முறையில் இவர்கள் ஈடுபட்டால், உலகில் உள்ள எல்லாச் சிறந்த பொருள்களும் தமக்கு உரியனவே; பிறர் இதனை அடையும்போது தாம் மட்டும் ஏன் ‘அடையக்கூடாது’? என்ற மனப்பான்மையையும் உருவாக்கிக் கொள்கின்றனர், உலகில் காணப்படும் சிறந்த பொருள்களும் சந்தர்ப்பங்களும் தமக்குக் கிடைப்பதற்கேற்ற தகுதி தமக்கு இருக்க வேண்டும் என்ற உணர்வு இவர்களுக்கு ஏற்படுவதில்லை. மக்களிடமிருந்து ஒதுங்கி இயங்கும் முறையில் இவர்கள் ஈடுபட்டால் இவர்கள் நிகழக்கூடிய எச்செயலுக்கும் தாம் பொறுப்புடையரல்லர் என்றும் எண்ணுகின்றனர். தாம் எவ்வாறு மற்றவர்களைக் குறை கூறாமல் ஒதுங்கி இருக்கிறார்களோ அதே போன்று மற்றவர்களும் தம்மிடம் குறைக்காணக் கூடாது என்பது இவர்களின் அடிப்படைக் கருத்து. இத்தகைய உளக்கோளாறு நடத்தைகளை மாற்றுவதற்குத் தனிமனிதன் தன்னைப் பற்றிய உண்மையான தன்னுணர்வும் உளஉருவமும் பெறுதல் இன்றியமையாததாகும். தங்கள் குறைகளைச் சிறப்பியல்புகளாக மாற்றுவதைத் தவிர்ப்பதும், மனக்குலைவைத் தடுப்பதற்கான வழியாகும். நடைமுறைக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளை மனிதர்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்வதும் இதற்கு வழியாகும். வாழ்க்கையில் பல வசதிகளை அடையவும் சமூகப் படிநிலையில் நல்ல இடத்தைப் பெறவும் தனிமனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழல்கிறான். பெரும்பாலோருக்கு இந்த இலக்குகள் அடைய முடியாதனவாக ஆகிவிடுகின்றன. அதனால் தனிமனிதனின் மெய்யான தற்கருத்து மனக்குலைவடைகிறது. கற்பனையில் தோன்றிய அடைய முடியாத தற்கருத்துத் தனித்து நிற்கிறது. ஆர்னையின் உளவியல் கருத்துகள் உள, சமூகவியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude> qgozgo8l71lklytw794rzpu5dg4mv0b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/759 250 623266 1954478 1862030 2026-07-18T03:45:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|719|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>இவர் எழுதிய உளவியல் நூல்களுள் நம் காலத்திய உளக்கோளாறு ஆளுமை (The Neurotic Personality of Our Time, 1937), நம் உளப்போராட்டங்கள் (Our Inner Conflicts, 1945), மகளிர் உளவியல் (Feminine Psychology, 1967) என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.{{Right|வ.தே.சு}} <b>ஆளிடைக் கொள்கை, எரிக்குபெர்ன்</b>: இரு மனிதர்களுக்கிடையே ஏற்படும் இடையுறவுகளின் இயம்புகளைப் பகுத்தாய்வது இடையுறவுப் பகுப்பாய்வு (Transactional Analysis) எனப்படும். இருவரிடையே இடையுறவுகள் சிற்சில நேரங்களில் வினை-எதிர்வினை, இயங்குமுறை, சொல்லாடல் வழி நிகழ்வதைத் தவிர மனவெழுச்சிகளின் எதிர் வினைகளாகவும் அமைவதுண்டு. இத்தகைய மனவெழுச்சிப் பரிமாறல்களும் இடையுறவுகளுடன் சேர்த்துப் பகுத்தாய்வு செய்யப்படுவதால், இதனை இடைவினை என்று கூறுவதற்கு மாறாக இடையீடு என்று கூறுதல் சாலப் பொருத்தமாகும். இடையுறவுப் பகுப்பாய்வு, பிராய்டு விளக்கிய உளப்பகுப்புக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துகளைக் கொண்டதாகும். எரிக்கு பெர்ன் (Eric Berne) என்னும் இசுகாட்லாந்து அறிஞர், 1959-ஆம் ஆண்டு தம்முடைய ‘மக்கள் விளையாடும் விளையாட்டுகள்’ (Games People Play) என்னும் நூலில், இடையுறவுப் பகுப்பாய்வுக் கருத்துகளை வெளியிட்டார். இவரைத் தொடர்த்து சேம்சு ஆரிசு (James Harris) என்பார் எழுதி வெளியிட்ட ‘அயாம் ஓகே யூவார் ஓகே’ (I'm Ok You're Ok) என்னும் நூலில், இடையுறவுப் பகுப்பாய்வு பற்றி எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கங்களைக் கொடுத்தார். இடையுறவுப் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, நிறுவனங்களில் மனித உறவுகள், நடத்தைக் கோலங்கள் ஆகியவை பற்றிய செயல்முறை ஆய்வுகளை மேற்கொண்ட பெருமை தோரதி சோங்வார்டு (Dorothy Jongeward) என்னும் அம்மையாரையும் சேம்சு மூரியல் (James Muriel) என்னும் உளவியல் பகுப்பாளரையும் சாரும். இவர்களைத் தவிர வேறு ஆய்வாளர்களும் இடையுறவுப் பகுப்பாய்வு பற்றி நூல்கள் எழுதியுள்ளனர். மனித உள்ளத்தின் பலநிலைகளைப் பிராய்டு, இட்டு என்னும் பண்படா உளம், தன்முனைப்பு, மேம்பாட்டுளம் ஆகிய மூன்று கூறுகளாகப் பிரித்தார். இக்கூறுகளில் பண்படா உளம் என்பது, மனிதனின் பண்படாத அடிப்படை உந்துகளையும் ஆசைகளைவும் நிறைவேற்றிக் கொள்ளும் உளக்கூறாகவும், தன்முனைப்பு என்பது பண்படா உளத்தின் உந்துகளை வாழ்க்கையின் மெய்ந்நிலையோடு ஒட்டி நிறைவேற்றும் உளக்கூறாகவும், மேம்பாட்டுளம் என்பது சமயம், சமூகம், பண்பாடு, மனச்சாட்சி ஆகியவற்றோடு ஒட்டிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தித் தன்முனைப்பை அவ்வப்பொழுது கண்காணிக்கும் உளக்கூறாகவும் விளக்கலாம். இம்மூன்று உளக்கூறுகளுக்கும் இணையான உளக்கூறுகளைத் தன்முனைப்பு நிலை என்ற ஆளுமை அடிப்படையில் இடையுறவுப் பகுப்பாய்வு விளக்குகிறது. இவ்வுளக் கூறுகளைப் பின்வருமாறு எரிக்கு பெர்ன் ஆராய்கிறார். <center> {| |பெற்றோர் தன்முனைப்பு நிலை ||rowspan="3"|{{brace2|3|r}} || |- |வயதுவந்தோர் தன்முனைப்பு நிலை || {{rule|5em|align=}}|| தனிமனிதனின் ஆளுமை |- |குழந்தை தன்முனைப்பு நிலை || || |- |} </center> ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனிமனிதன் இம்மூன்று தன்முனைப்பு நிலைகளுள் ஏதாவது ஒன்றிலிருந்து இயங்குகிறான். ஒரு மனிதன் பெரும்பாலும் எந்தத் தன்முனைப்பு நிலையிலிருந்து இயங்குகிறான் என்பதைப் பொறுத்து அவன் ஆளுமை அமைகிறது. இவற்றுள் பெற்றோர் தன்முனைப்பு நிலை (பெ) என்பது, கண்டிப்பும் குற்றங் காணும் இயல்பும் நிறைந்த உளநிலை ஆகும். வயது வந்தோர் தன்முனைப்பு நிலை (வ) என்பது, அறிவுடன் பொருந்திய முறையில் சிக்கலைத் தீர்வு காணும் உளநிலை ஆகும். குழந்தைத் தன்முனைப்பு (கு) என்பது, மனவெழுச்சி வயப்பட்ட, உள்துடிப்புடன் பொருந்திய இயங்குமுறைக்கு ஏற்ற உளநிலை ஆகும். மற்றவர்களுடன் பழகும்பொழுது குறிப்பிட்ட எந்த நேரத்திலும் தனிமனிதன் இம்மூன்று உளநிலைகளுள் ஏதாவது ஒன்றிலிருந்து இயங்குகிறான். அவ்வாறு இயங்கும்பொழுதுதான் இடையீடு கொள்ளும் மனிதனின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட உளநிலைக்கு ஏற்ப அவன் நடத்தை அல்லது இயங்குமுறை அமைகிறது. இடையுறவு கொள்ளப்பட்டவன், தன்னுடைய ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உளநிலையிலிருந்து இயங்கலாம். இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். {| |இராமன் || : || இப்பொழுது மணி ஐந்தாகிவிட்டதா? |- | {{ts|vtt}}|கிருட்டிணன் || : ||நான் கடிகாரமல்ல. எத்தனை முறை உனக்குக் கூறுவது? மணி என்ன என்று தெரிய வேண்டுமானால் கடிகாரத்தைப் பார். |- |} இந்த உரையாடலைப் பின்வருமாறு பகுத்தாய்வு செய்யலாம்.{{nop}}<noinclude></noinclude> 8xaatodsdlv3o4mtjalas2h2n82lwfk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/760 250 623272 1954485 1862054 2026-07-18T04:08:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|720|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 760 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 65 |oTop = 35 |oLeft = 45 |Location = center |Description = }} இராமன் மணி என்ன என்று கேட்கும்பொழுது தன்னுடைய வ. தன்முனைப்பு நிலையிலிருந்து கிருட்டிணனின் வ. தன்முனைப்பு நிலைக்குத் தூண்டல் செய்கிறான். ஆனால் கிருட்டிணன் அதற்கு இணையாகத் துவங்கியிருந்தால் இப்பொழுது மணி ஐந்து என்றோ, எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றோ கூறியிருக்கலாம். அதற்கு மாறாக அவன் கண்டிப்பு நிறைந்த குற்றம் காணும் பெ. தன்முனைப்பு நிலையிலிருந்து இராமனின் கு. தன்முனைப்பு நிலைக்குத் தொடங்குகிறான். அதாவது தான் பெ. நிலையிலிருந்து இராமனை ஒரு சிறுவனைப்போல் அதட்டுகிறான். நிறுவனத்தில் பணிபுரியும் இருவரிடையே நிகழக் கூடிய பின்வரும் இடையீட்டினை வேறோர் எடுத்துக் காட்டாகக் காணலாம்: மேலாளர்: நீ தட்டச்சுச் செய்திருக்கும் மடலைப்பார். இவ்வாறு நீ பணிபுரிந்தால் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவாய். நீ எதற்கும் பயப்படாதவன். தட்டச்சர்: ஐயா, இனிமேல் கவனமாகப் பார்த்துத் தட்டச்சுச் செய்கிறேன். மேற்கண்ட உரையாடலின் /இடையுறவுகளைப் பின்வருமாறு பகுத்தாய்வு செய்யலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 760 |bSize = 375 |cWidth = 130 |cHeight = 60 |oTop = 330 |oLeft = 40 |Location = center |Description = }} இந்த மேலாளர் பெ. நிலையிலிருந்து தட்டச்சரின் கு. நிலைக்குத் தூண்டல் கொடுக்கிறார். தட்டச்சர் இதற்கு மேல் என்னால் சரியாகப் பணி செய்ய இயலாது என்று கூறியிருந்தால் கு. நிலையிலிருந்து தொடங்கியிருப்பார். ஆனால், தட்டச்சர் தக அமைவுக் குழந்தை நிலையிலிருந்து மேலாளரின் நிலைக்குத் தொடங்குகிறார். மேலாளர் ‘நீ தட்டச்சு செய்யும் கடிதங்களில் மிகையான தவறுகள் காணப்படுகின்றனவே. அச்சு இயந்திரம் சரியாக இயங்கவில்லையா? அல்லது உனக்குக் கவனக் குறைவு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் காரணங்கள் எவையேனும் இருக்கின்றனவா? இம்மடல்கள் மிக இன்றியமையாதவை இவைகளில் தவறு இருத்தல் கூடாது’- இவ்வாறு இயங்கியிருப்பதால் அவர் தன்னுடைய வ. நிலையிலிருந்து தட்டச்சரின் வ. நிலைக்கு இயங்குகிறார் அல்லது தூண்டல் செய்கிறார் என்று கொள்ளலாம். பெ. நிலையைப் பெர்ன் (Berne) மேலும் பல கூறுகளாகப் பிரிக்கிறார். கண்டிப்பும் கட்டுப்பாடும் குற்றம் காணலும் நிறைந்த நிலையைக் கண்டனப் பெற்றோர் நிலை என்றும், ஆதரவும் அரவணைப்பும் அன்பும் கொண்ட பெ. நிலையை, அரவணைப்புப் பெற்றோர் நிலை என்றும் கூறுகிறார். இதனைப் போன்றே கு. நிலையையும் பல கூறுகளாகப் பிரிக்கிறார். இவற்றுள் முதன்மையானவை அழிவு விழையும் குழந்தை நிலையும் மகிழ்ச்சிக் குழந்தை நிலையும் ஆகும். தனிமனிதன் தனக்குத்தானே துன்பத்தை தேடிக்கொள்ளும் விதத்தில் அவனுடைய கு. நிலை இயங்கினால், அவன் தன்னுடைய அ.கு நிலையிலிருந்து இயங்குகிறான் என்றும், சூழ்நிலைக்கேற்ப அடங்கி நடக்கும் தன்முனைப்பு நிலை தக அமைவுக் குழந்தை நிலை என்றும் சார்பு நிலையில் சமூக வயப்பாடு நிறைந்த முறையில் உட்டுடிப்பு வழி இயங்கும் தனிமனிதன் மகிழ்ச்சிக் குழந்தை நிலையிலிருந்து இயங்குகிறான் என்றும் இடையுறவும் பகுப்பாய்வு கூறுகிறது. அ.கு. நிலையை மேலும் இரு உட்பிரிவுகளாகப் பிரிக்க முடியும். புரட்சிக் குழந்தைநிலை அதாவது தன் கடமைகளையும் பொறுப்புகளையும் வேண்டுமென்றே செய்ய மறந்துவிடுவதும் செய்ய மறப்பதும் பு.கு. நிலையாகும். இதற்கு மாறாகப் பெ.வ. நிலைகளிலிருந்து மற்றவர்கள் எதைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்வதும் அதனைச் செயற்படுத்துவதும் ஆகிய இத்தகைய இயங்குமுறை இணக்கக் குழந்தை நிலை ஆகும். இம்மூன்று அடிப்படை உளக்கூறுகளில் வ.நிலை மிகச் சிறந்ததாகக் காணப்பட்டபோதிலும், தனிமனிதனின் ஆளுமைச் சமநிலைக்கு ஓரளவு அரவணைப்புப் பெ. நிலையும், அதனைப் போன்றே ஓரளவு ம.கு. நிலையும், கலந்த முழுமையான வ. நிலை இன்றியமையாதனவாகும். ஏனென்றால் முழுமையான வ. நிலை மட்டும் தனிமனிதனை வறட்சியான உளம்படைத்த பணியடிமையாக்கிவிடக்கூடும். ஆதலின் வ. நிலை மிகுந்தும் அ.பெ. நிலை குறைந்தும் ம. கு. நிலை சிறிதளவு கலந்தும் இருப்-<noinclude></noinclude> 3x5plwqol6dt0xiyad92ss24k3847b6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/761 250 623274 1954486 1862070 2026-07-18T04:15:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|721|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>பவன், வாழ்க்கையிலும் நிறுவனத்திலும் நன்கு இயங்க முடியும். அத்தகையோரிடம் ஓரளவு கண்டிப்பும் சிக்கல் தீர்க்கும் சிறந்த ஆற்றலும் அவ்வப்பொழுது ம.கு. நிலைக்கு வந்த மற்றவர்களிடம் உள்துடிப்புவய நடத்தையும் கலந்து காணப்படும். <b>வாழ்க்கை நிலைகள்:</b> தனிமனிதனின் வளர்ச்சிப் பருவத்தில் அவனுக்குத் தன்னைப்பற்றிய முழுமையான கருத்தும் மற்றவர்களைப் பற்றிய கருத்தும் உருவாகின்றன. இக்கருத்துருவாதலை இடையுறவுப் பகுப்பாளர், வாழ்க்கை நிலை (Life Position) என்று கூறுகின்றனர். தனிமனிதனின் தன்முனைப்பு நிலை அவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுதல் அடைகிறது. ஆனால், அவன் வாழ்க்கை நிலை மாறாமல் இருக்கிறது. ஏனெனில், இது அவனுடைய அனுபவங்களையும் அவனுக்குக் கிடைத்த வலுப்படுத்திகளையும் பொறுத்து அமைகிறது. இதன் பயனாக அவன் வாழ்க்கையில் ஒருசில முற்கோள்களை உருவாக்கிக் கொள்கிறான். இம்முற்கோள்கள் ‘நலம்’ என்ற நிலையின் அடிப்படையில் உருவாகின்றன. இந்த நலநிலைகளைப் பின்வருமாறு இடையுறவுப் பகுப்பாய்வு விளக்குகிறது. <b>‘நான் நலமில்லை நீ நலமில்லை’:</b> இது கண்டனப் பெற்றோரின் வாழ்க்கை நிலையாகும். மற்றவர்கள் செய்வது எப்பொழுதும் தவறாக இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். தன் முடிவே சரியானது என்றும் எண்ணுகின்றனர். இதனால் மற்றவர்களிடம் எப்பொழுதும் குற்றம் காண்கின்றனர். நான் நலமில்லை நீ நலம்: இந்நிலை சார்புக் குழந்தை நிலையிலிருந்து தோன்றுவதே, நான் நலம் நீ நலம்: இத்தகைய நிலையிலுன்னோர் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். <b>நான் நலம் நீ நலம்</b>: பொதுக் கல்வியினாலும் பணிச்சூழ்நிலைகளாலும் மனநலம் உடையவர்கள், இந்நிலையில் இயங்குகிறார்கள். இவர்கள் மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்துள்ளவர்கள். தனிமனிதனின் வாழ்க்கையில் சமநிலையான ஆளுமையைப்பெற இது உதவியாக இருக்கிறது. இடையுறவுகள் திறந்தவையாகவோ மூடியவையாகவோ அமையலாம். <b>திறந்த இடையுறவுகள்</b> இராமன் : நீ மேலாளரைப் பார்த்தாயா? கிருட்டிணன்: ஆம், கண்டேன். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 761 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 60 |oTop = 388 |oLeft = 20 |Location = center |Description = }} இந்த இடையுறவு திறந்த இடையுறவாக இருக்கிறது. இந்தத் தூண்டல் துலங்கல் இயங்குமுறை பின்வருமாறு அமைந்தால் அது மூடிய இடையுறவாக ஆகிவிடுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 761 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 60 |oTop = 62 |oLeft = 215 |Location = center |Description = }} ‘மேலாளரை எப்பொழுது பார்க்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்; இதற்காக இப்படியொரு கேள்வி கேட்கவேண்டாம்’. இது மூடிய இடையுறவாக ஆகிவிட்டது. இந்நிலை நான் நலமில்லை என்னும் வாழ்க்கை நிலையிலிருந்து எழுகிறது. உலகில் எல்லோருக்கும் ஏற்புடைமை நிகழ்வு (Stroke) தேவைப்படுகிறது. ஏற்புடைமை உடன்பாடாகவோ எதிர்மறைவாகவோ அமையலாம். நாம் காலையில் பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ வரும்பொழுது நம்மைப் பார்த்த மற்றவர் நலமா? என்றோ, ‘வணக்கம்’ என்றோ கூறி ஏற்றுக் கொள்ளுதலும், கண்ணோக்கினால் புன்முறுவல் காட்டி வரவேற்றலும், இத்தகைய செயல்முறைகளில் நாம் இயங்கும்பொழுது மற்றவர்களும் அதேபோன்ற இயங்குமுறைகளின்வழி நம் தூண்டலுக்குத் துலங்கினால் அது உடன்பாடு ஆகிறது. ஏற்புடைமை அறவே இல்லாத நிலை மக்களால் சகித்துக்கொள்ள முடியாத நிலையாகும். ஏற்புடைமை எதுவும் இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதாவது எதிர்மறைத் துலங்கலேனும் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. பெற்றோராலும் மற்றவர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட குழந்தை, ஏற்புடைமைக்காக ஏங்குகிறது, பிறரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு ஏற்புடைமை எதுவும் இன்றி வாழ்பவர்களும், ஏற்புடைமைக்காக ஏங்குகின்றனர். இத்தகையோர் தாம் மற்றவர்களின் ஏற்புடைமையைப் பெறுவதற்காகப் பலவிதமான தற்காப்பு வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இம்முறைகளை இடையுறவுப் பகுப்பாளர், உள விளையாட்டுகள் என்று கூறுகின்றனர். தனிமனிதனின் தன்முனைப்பு நிலைகளையும், அவனுடைய வாழ்க்கை நிலைகளையும் அவன் எந்த அளவிற்கு உள் விளையாட்டுகளை விளையாட நேரிடுகிறது என்பதையும் பொறுத்தே அவர்னுடைய தற்கருத்து உருவாகிறது. இத்தற்கருத்தை இடையுறவுப் பகுப்பாளர் வசனம் (Script)<noinclude></noinclude> 90i8rlrpvfzkjdqethzxp04haraiz5p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/762 250 623381 1954489 1948161 2026-07-18T04:22:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|722|ஆளுமைக் கோளாறுகள்}}</noinclude>என்று கூறுகின்றனர். வாழ்க்கையில் எல்லோருக்கும் வசனங்கள் அமைந்திருக்கின்றன. இக்காலத்தில் இடையுறவும் பகுப்பாய்வு மேலாண்மைத்திறன் முன்னேற்றத்தில் பெரும்பங்கு கொண்டிருக்கிறது. பணியாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இணைந்து பணி செய்யும் நிறுவனங்கள் பல்வேறு வகையான மனித நடத்தைக் கோலங்களையும் இடையுறவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளன. அதிகாரிகள் தம் மேலாளருடனும் தம் உடன் அதிகாரிகளுடனும் தம் கீழ்ப்பணி புரிபவர்களுடனும் சிறந்த முறையில் இயங்குவதற்கு இடையுறவுப் பகுப்பாய்வுப் பயிற்சி தரப்படுகிறது. இப்பயிற்சி, மனக்குலைவுசார் நடத்தைகளையும், பிறருக்கு ஊறு செய்யும் உரையாடல், இடையுறவு, செயல்கள் ஆகியவற்றையும் தவிர்க்கும் குறிக்கோளுடன் நடத்தப்படுகிறது. நிறுவனங்களில் மட்டுமன்றி, மருத்துவ இல்லங்களிலும், கல்வி நிலையங்களிலும், குடும்பத்திலும் இடையுறவுப் பகுப்பாய்வின் உதவியால் மக்கள் தத்தம் தன்முனைப்பு நிலை பற்றியும் பிறறுடய தன்முனைப்பு நிலை பற்றியும் அறிந்து, சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலும். <b>நடத்தைக் கோட்பாடு</b>: இது ஆளுமைக் கோட்பாடு பற்றிய அண்மைக் கால விளக்கமாகும். தனி மனிதனின் சூழ்நிலைத் தூண்டல்களுக்கு ஏற்ப அவனுடைய ஆளுமை அமைகிறது. ஆளுமைப் பண்புகள் நிலையாக அமைவதில்லை. அவை குறிப்பிட்ட தூண்டல்களுக்கு ஏற்ப அமைகின்றன என்ற அடிப்படைக் கருத்துகளைக் கொண்ட ஆளுமைக் கோட்பாடு நடத்தைக் கொள்கையாகும் (Behaviourism). நடத்தைச் கோட்பாட்டினருள் முதன்மையானவர்கள் வாட்சன் (Watson), அண்டர் (W. S. Hunter) இலாசுலே (Lashley. K.S) கத்ரி (Guthrie), கோல்ட்டு (Holdt), அல் (Hull), தார்ன்டைக்கு (Thorn dike Edward. L), பாவ்லவ் (Pavlov Ivan. P), இசுகின்னர் (Skinner. B. F), ஆகியவர்கள். இசுகின்னர் தானியங்கு ஆக்கநிலையிருத்தம் பற்றிய விரிவான சோதனைகளைச் செய்துள்ளார். பாவ்லவ் தம் பரிசோதனைகளின் வாயிலாக ஆக்க நிலையிருத்தம், கற்றல் நிகழ்முறை ஆகியவை பற்றிச் சில முடிவுகளை வெளியிட்டார். இம்முடிவுகள் உயிரியை ஒரு குறிப்பிட்ட நடத்தையை நோக்கிச் செலுத்தும்; உந்து, நடத்தையைத் திசைப்படுத்தும் தூண்டல், தூண்டலுக்கான துலங்கல், வலுப்படுத்திகள் ஆகியவை பற்றிய கருத்துக்கனைத் தெளிவுபடுத்தும். மனிதனின் வெளிப்படையான நடத்தையை மட்டிலுமே ஆராய்ந்து அவனுடைய ஆளுமையை அறியலாம் என்பதே நடத்தைக் கொள்கையாகும். மனித நடத்தை, இயக்க நடத்தை, குரல் நாண்களின் அசைவுகள், உள் உறுப்புகளின் இயக்கத்தினின்று எழும் நடத்தைகள் என மூன்று வகைப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் செயல்களும் உடல் இயக்கங்களின் விளைவாக ஏற்படுவனவே என்று வாட்சன் குறிப்பிட்டார். தூண்டல்-துலங்கல் தொடர்புகளாக ஏற்படும் மறிவினைகளை நடத்தையின் அடிப்படை ஆகும். இவை ஆக்கநிலையிருத்தலால் மாறுபட்டுப் பல்வேறு வகைப்பட்ட நடத்தைக்கோலங்களாக உருவெடுக்கின்றன என்று நடத்தைக் கொள்கையினர் கூறுகின்றனர். இவர்கள் மனிதனின் நடத்தையைப் பொருள்முதல் அணுகுமுறையில் (Materialistic Approach) நோக்குகின்றனர். தாலர்டு, மில்லர் (Dollard, Miller) ஆகியோர், ஆளுமை வளர்ச்சியில் அச்சம் முதன்மைத் தூண்டலாக விளங்குகிறது என்றும், அச்சத்தைத் தவிர்க்க உதவும் நடத்தைகள் ஆளுமையில் சிறப்பிடம் கொண்டுள்ளன என்றும் கூறினர். ஆல்பர்ட்டு பண்டுரா (Albert Bandura), இரிச்சாடு வால்டர்சு (Richard Walters) போன்றோரின் கோட்பாடுகளும் சமூக நிலைமைகளில் கற்றலின் சிறப்பை வலியுறுத்துகின்றன. பண்டூரா தம்முடைய நடத்தை மாற்ற விதிகள் (Principles of Behaviour Modifrotin) என்னும் நூலில், இக்கருத்தினைக் கூறியுள்ளார். இக்காலத்தில் நனவு அனுபவ இயல் (Phenomenology) மனித நல இயல் (Humanism) போன்ற கருத்துகளைச் சார்ந்த ஆளுமைக் கொள்கைகள் புகழ்பெற்று விளங்குகின்றன. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Maslow A.H,</b> Motivation & Personality, Harper & Row, New York, 1970.<br> <b>Erich Fromme.,</b> Beyond the Chains of illusion: My encounter with Mars and Freud, Simon and Schuster: New York, 1962.<br> <b>Freud, Sigmund,</b> An Outline of Psychoanalysis. Norton, New york, 1949.<br> <b>Dicaprio Nicholas S.,</b> Personality Theories, CBS College Pub. Co., New York, 1983.<br> <b>Samuel William,</b> Personality, Mc Graw Hill, London, 1981.<br> <b>Alfred Adler,</b> The Individual Psychology, Harper & Row, New York, 1956. <section end="ஆளுமைக் கோட்பாடுகள்"/> <section begin="ஆளுமைக் கோளாறுகள்"/> {{dhr}} <b>ஆளுமைக் கோளாறுகள்</b> தனி மனிதனின் சமூகச் செயல்களில் மிகுந்த அளவில் சிதை-<noinclude></noinclude> 7b13ius09kmfdxneda4048wxh1wbcz5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/763 250 623382 1954493 1862816 2026-07-18T04:30:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோளாறுகள்|723|ஆளுமைக் கோளாறுகள்}}</noinclude>வினை ஏற்படுத்தும் நடத்தைக் கூறுகள், ஆளுமைக் கோளாறுகள் என்று கருதப்படுகின்றன. ஆளுமைக் கோளாறுகளை அடையாளம் கண்டுகொள்ளும் உளவியல் துறை அண்மைக் காலத்தில் தோன்றியதாகும். பண்டைக் காலங்களில் இக்கோளாறுகளை உடையவர்கள் குற்றவாளிகளாகவோ நிலை நிலை தடுமாறி நடப்பவர்களாகவோ கருதப்பட்டனர். அமெரிக்க உளமருத்துவக் கழகத்தின், 1980-ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட நோயறியியல், புள்ளியியல் தொகுதியில் (Diagnostic & Statistical Manual) ஆளுமைக் கோளாறுகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. தனிமனிதனின் ஆளுமைக் கூறுகள், குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் பழக்க வழக்கங்களுடன் ஒன்றி வருபவையாகும். ஆனால், தனிமனிதனின் ஆளுமைக் கோளாறுகளுள் பல, அவனுடைய சமூகப் பொருத்தப்பாட்டினுக்கு இடையூறு விளைவிப்பனவாக விளங்குகின்றன. இக்கோளாறுகளை உடையவர்கள், பெரும்பாலும் தொல்லைக்கு உள்ளாவதில்லை. இவர்கள் தம்மை இயல்பு நடத்தையினராக எண்ணுகின்றனர். ஆளுமைக் கோளாறுகளுள் முதன்மையான சிலவற்றைப் பற்றிய விளக்கங்களை இங்குக் காணலாம். <b>1. கருத்துத்திரிபு ஆளுமை (Paranoid Personality)</b>: கருத்துத்திரிபு ஆளுமையினரிடம், கருத்துத்திரிபு உளநோயாளிகளைப்போல் திரிபுணர்வுகளோ (Delusions) மனநோய் அறிகுறிகளோ காணப்படுவதில்லை. ஆனால், இவர்களிடம் பரவலான ஒரு சந்தேக மனப்பான்மையும் மற்றவரிடம் நம்பிக்கையின்மையும் அதிக அளவில் காணப்படும். சிறு செயல்களில் மிகுந்த கவனம் செலுத்துவர். ஆனால், மிகச் சிறிய செயல்களிலும் காரணமின்றி ஐயப்படுவர். தங்களது நம்பிக்கையிலா மனப்பாங்கைச் சுட்டிக் காட்டுபவரிடம் ஐயப்படுவர். இது மிகை விழிப்பு மனப்பான்மை (Hyper Vigilant Attitude) எனப்படும். இவர்கள் தம்முடைய மிகை விழிப்பினால் எப்பொழுதும் ஒருவிதமான அச்சுறுத்தலை உணர்கிறார்கள். இவர்களுடைய நம்பிக்கைகளும் எண்ணங்களும் ஐயப்போக்கிலேயே உறைந்து விடுகின்றன. பெரும்பாலும் மற்றவர்களின் நட்பை இவர்கள் விரும்புவதில்லை. தம்மிடம் மற்றவர்கள் நட்பாக இல்லாமைக்கு இவர்கள், மற்றவர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள் என்னும் தற்காப்புக் காரணம் கற்பிக்கிறார்கள். இவர்கள் தனிமையை விரும்புபவர்கள்; நகைச்சுவையும் மெல்லுணர்வுகளும் அற்றவர்கள்; மிகவிரைவில் சினவயப்படுபவர்கள்; மற்றவர்களின் நடத்தைகளையும் செயல்களையும் மிகுந்த கண்காணிப்புடன் ஆய்வு செய்பவர்கள்; மற்றவர்கள் தம்மீது குற்றம் கண்டுபிடிப்பதை வெறுப்பவர்கள். இத்தகைய கருத்துத்திரிபு ஆளுமையினரால், குடும்பத்தில் மற்றவர்கள் மிகுந்த மனவேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பர். இத்தகையோர் எவர்களிடம் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை, துயரம் மிக்கதாகிறது. ஏனெனில் கருத்துத்திரிபு ஆளுமையினர் எப்பொழுதும், நம் குடும்பத்தினர் தமக்கு எதிராகச் சதி ஆலோசனை செய்கின்றனர் என்று குற்றம் சாட்டுவர். இவர்கள் கருத்துத் திரிபு ஆளுமைக் கூறுகளைக் கொண்டவரேயன்றிக் கருத்துத் திரிபு உளப்பிணியாளர்கள் அல்லர். <b>2. உளச்சிதைவு ஆளுமை (Schizoid Personality)</b>: உளச்சிதைவு ஆளுமையினர் தனிமையை விரும்புவர்; மற்றவரிடமிருந்து ஒதுங்கியிருப்பர்; நெருங்கிய நண்பர்கள் இல்லாமையால் இவர்கள் தனிமையில் செய்யக்கூடிய பணிகளில் ஈடுபடுவர். இவர்கள் பயனுள்ள சமூக உறவுகள் ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர். மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி இரக்கமோ கவலையோ கொள்ளமாட்டார்கள். மற்றவரிடம் தமக்குள்ள பகைமையை வெளிப்படையாகத் தெரிவிக்க மாட்டார்கள். அவர்கள் தம்மைப் புகழ்வதால் பெருமிதம் அடைய மாட்டார்கள். மாபெரும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வித்தகர்கள் சிலரிடம் இத்தகைய ஆளுமையைக் காணமுடியும். ஓரளவு தனிமை இருந்தால்தான் இவர்களுள் சிலர் ஏதாவது அருஞ்செயல் புரியக் கூடியவர்களாயிருப்பர். இவர்கள் மனவிரிசல் நோயாளிகளைப் போல் திரிபுணர்வுகளும் இல் பொருள் உணர்வுகளும் (Hallucinations) உடையவர்கள் என்று எண்ணக்கூடாது. இவர்கள் உளச்சிதைவு ஆளுமையினரேயன்றி (Schizophrenie Pre-disposition) உளச்சிதைவு நோயாளிகள் அல்லர். <b>3. தவிர்ப்பு ஆளுமை (Avoidance Personality)</b>: தவிர்ப்பு ஆளுமையினர், மற்றவர்களால் வெறுக்கப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். இதனால் இச்சூழ்நிலைகளை இவர்கள் பெரும்பாறும் தவிர்க்கின்றனர். இவர்கள் மற்றவர்களால் தாம் குறை கூறப்படுவதைத் தாங்க முடியாதவர்கள். தாம் எத்தன்மையினராயினும் எப்பொழுதும் மற்றவர்களால் ஏற்பினை எதிர்நோக்குபவர். தம் திறமைகளையும் அருஞ்செயல்களையும் குறைவாக மதிப்பிடுபவர்கள், உளச்சிதைவு ஆளுமையினர் மற்றவர்களைத் தவிர்க்கின்றனர். ஆனால், தவிர்ப்பு ஆளுமையினர் மற்றவர்களை விரும்புகின்றனர். மற்றவர்கள் தங்களை<noinclude></noinclude> lhcdmbjkvc72ryqacdky205dj2syprq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/764 250 623385 1954497 1862834 2026-07-18T04:36:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோளாறுகள்|724|ஆளுமைக் கோளாறுகள்}}</noinclude>ஏற்றுக் கொள்வார்களோ என்ற ஐயப்பாடும் கொள்கின்றனர். <b>4. வரம்பு ஆளுமை (Borderline Personality)</b>: இவர்களிடம் நிலையிலா நடத்தைக் கோலங்களும் மனநிலை மாற்றங்களும் காணப்படும். சில சமயங்களில் மனம் தளர்ந்த நிலையினராக இருப்பர்; மறுகணமே சினம் கொள்வர்; இவர்கள் அடங்காச் சினம் கொள்வதும் உண்டு. இவர்கள் தனிமையை வெறுப்பவர்கள்; சிற்சில சமயங்களில் தம்மைத் தாமே வருத்துபவராகவும் மாறிவிடுவர். <b>5. நடிப்பு (Histrionic Personality)</b>: இவர்கள் மற்றவர்களை மிகையாகச் சார்ந்திருப்பவர். இவர்கள் மற்றவர்கள் துன்பங்களைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்கள். தம்முடைய வாழ்க்கையின் மிக எளிய நிகழ்ச்சிகளையும் மிகுந்த மனவெழுச்சிகளுடன் வெளியிடுவர். தம் துயரங்களே இவர்களுக்கு மிகத் தலையாயவை. தம் மகிழ்ச்சியே மாபெரும் மகிழ்ச்சி எனக் கொள்வர். தம்மைப்பற்றிய செய்திகளைக் கூறி மற்றவர்களைச் சலிப்படையச் செய்வர். இவர்கள் மற்றவர்களிடம் மிக எளிதில் நட்புக்கொள்வர். ஆனால், தன்னலம் மிக்கவர்களாக இருப்பர். எப்பொழுதும் மற்றவர்களின் கவனம் தம்மைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விழைவர். அதற்கான வகைகளில் தம் நடத்தைகளை அவ்வப்போது மாற்றங்கள் செய்வர். ஆண்களைவிடப் பெண்கள் மிக்க அளவில் இத்தகைய ஆளுமையை உடையவர்களாக இருப்பதைக் காணலாம். இத்தகையோரைப் பண்டைக் காலங்களில் உளக்கூறுமாற்ற ஆளுமையினர் (Hysterical Personality) என்று குறிப்பிட்டனர். <b>6. தன்வழிபாட்டு ஆளுமை (Narcissistic Personality)</b>: இத்தகைய ஆளுமையினர், தன்னைப் பற்றி மிக உயர்ந்த கருத்துக் கொண்டிருப்பர். தம் திறமைகள், வெற்றிகள் ஆகியவற்றைப் பற்றிய கனவிலேயே மிதப்பர். நார்சிசசு (Narcissus) என்ற பண்டைய கிரேக்க மனிதன், ஒரு குளத்து நீரில் தெரிந்த தன்னுடைய உருவத்தைக் கண்டு அதன்மீது காதல் கொண்டான் என்றும், அதனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முடியாமல் அவன் அதை நோக்கியபடியே பட்டினிகிடந்து இறந்தான் என்றும், கிரேக்கக் கதைகள் கூறுகின்றன, தன்வழிபாட்டு ஆளுமையினர், நார்சிசைப் போன்று தன்வயப்பட்டவராகவும் மற்றவர்கள் தம்மை எப்பொழுதும் புகழ வேண்டும் என்றும் விரும்புவர். மற்றவர்கள் தம்மைச் குறைகூறுவதையோ பொருட்படுத்தாமையையோ அணுவளவும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். மற்றவர்களின் மன உணர்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். <b>7. சார்பு நிலை ஆளுமை (Dependent Personality)</b>: இத்தகையவர் தம் வாழ்க்கையின் முதன்மையான பொறுப்புகளை மற்றவர்களின் பொறுப்பில் விடுவர். தன்னம்பிக்கையில்லாமையே இதற்குக் காரணம் ஆகும். தம்முடைய தேவைகளை முதன்மையாகக் கருதாமல், தமக்காகப் பொறுப்பு ஏற்பவர்களை எப்பொழுதும் தம்முடனேயே வைத்துக்கொள்வர். இவர்கள் மற்றவர்களிடம் தமக்காக எதையும் எதிர்பார்ப்பதில்லை. வாழ்க்கையில் மிகச் சாதாரண முடிவுகளைக் கூட இவர்களால் தனித்து எடுக்க முடிவதில்லை. சொல்லொணாத தொல்லைகளை அனுபவித்து வந்த போதிலும் இவர்கள் தம்முடன் இருப்பவர்களைப் பிரியாமல் அவர்களைச் சார்ந்தே வாழ்வர். <b>8. கட்டாய ஆளுமை (Compulsive Personality)</b>: இவர்கள் தம் வாழ்க்கையில் கட்டுத்திட்டங்கள் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கு மிகுந்த சிறப்பிடம் கொடுப்பவர்கள். இவர்கள் நகைச்சுவையுணர்வு அற்றவர்கள்; வேலையே தலையாயது எனக் கருதுபவர்கள். இவர்கள் குறிப்பிட்ட பணியின் சிறுசிறு பகுதிகளுக்குச் சிறப்பு அளித்துவிட்டு, வேலையின் நோக்கத்தை மறந்துவிடுவார்கள். எந்தப் பணியையும் செவ்வனே செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது என்றும் அவ்வழி தாம் செய்யும் வழியே என்றும் பிடிவாதமாக இருப்பார்கள். சமூகத்தின் தொடர்புகளில் இணக்கமற்றவராய் இருப்பார்கள். சிறு காரியங்களிலும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள். இவர்களுடைய கட்டாய மனப்போக்கு, இவர்கள் எடுத்த பணியினைக் கால அளவிற்குள் முடிப்பதற்கும் மற்றவர்களுடன் இவர்கள் கொள்ளக் கூடிய சமூக உறவுகளுக்கும் பெருந்தடையாக இருக்கும். இவர்கள் எச்செயலிலும் நிறைவை (Perfection) எதிர்பார்ப்பவர்கள். <b>9. பணிவு-தாக்குதல் ஆளுமை (Passive-Aggressive Personality)</b>: மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பப் பணி வெதிர்ப்பு நிலை (Passive resistence) வாயிலாகத் தம்முடைய தாக்குதல் மனப்பான்மையை உணர்த்துபவர், பணிவுதாக்குதல் ஆளுமையினர் எனப்படுகின்றார். வேலைத் திறமையின்மை, வேலையில் மறதி, பிடிவாதம், உறுதியின்மை போன்றவைகளால், பணிவெதிர்ப்பினை இத்தகையோர் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகையோர் தமக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கப் பெறாமையால் சமூக எதிர்ப்பினை இவ்வாறு வெளிப்படுத்துவர், மற்றவர்கள் தம்மிடம் மிகுதியாக எதிர்பார்ப்பதாக எண்ணுவர். <b>சமூக எதிர்ப்பு ஆளுமை</b>: குழந்தைப் பருவத்தில் உருவாகும் அதிகார எதிர்ப்பு, பொய் கூறுதல், பள்ளி<noinclude></noinclude> 9irdz9qv97vox4gr64cp2uj7mkkzz6k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/765 250 623390 1954503 1948162 2026-07-18T04:40:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1954503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோளாறுகள்|725|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>செல்லாமை, வீட்டிற்கு வராமல் இரவில் வெளியே தங்கி விடுதல், திருடுதல் போன்ற நடத்தைக் கூறுகள் வயது வந்தோர் பருவத்தில் தொடர்ந்து காணப்படின் இவை, தனிமனிதனிடம் சமூக எதிர்ப்புக் கூறுகளாகின்றன. எர்வி கிளக்சுபி (Hervey Ceeckspey) என்பார் பின்வரும் ஆளுமைக் கூறுகள் சமூக எதிர்ப்பு ஆளுமையினரிடம் காணப்படுவன என்று வரையறுத்துள்ளார். 1. மிகையான நுண்ணறிவு, கவர்ச்சி, நட்பு ஆகிய பண்புகள் காணப்படும். வரவேற்கத்தக்க முதல் கருத்துப்பதிவை (First Impression) ஏற்படுத்துவர். 2. திரிபுணர்வு, திரிபுச் சிந்தனை, மனநிலை மாற்றம் ஆகியவை இல்லாதவர்- இயல்பான மனநிலையுடையவர், 3. பதற்ற நிலை அடையாதவர். 4. பொறுப்பற்ற தன்மையினர்-தம்மைச் சார்ந் திருப்போரிடம் (எ-டு. தம் குழந்தைகள்) பொறுப்பில்லாதவர். 5. பொய்வயப்பட்டவர்; நம்பிக்கை அற்றவர்; உண்மையை ஏளனமாக எண்ணுபவர்-கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மாட்டாதவர். 6. மற்றவர்களுக்குத் தாம் இழைக்கும் துன்பங்களுக்காக மனம் வருந்தாதவர். 7. தகுந்த ஊக்கியின்றியே சமூக எதிர்ப்புச் செயலில் ஈடுபடுபவர். 8. விவேகமற்றவர் தம் செயல்களின் விளைவுகளைக் கண்டு மனம் தெளியாதவர். 9. மற்றவர்களை விரும்பிய போதிலும் அன்பு செலுத்த முடியாதவர்; தன்னலவயப்பட்டலர். 10.உவகை, களிப்புப் போன்ற மனவெழுச்சிகளை உணர முடியாதவர். 11. அகநோக்குத்திறன் அற்றவர். தம் செயல்களைத் தாமே மதிப்பீடு செய்யமுடியாதவர். 12. மற்றவர்களுடன் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர். 13. விந்தையான நடத்தையுடையவர். 14. தமக்குத்தாமே ஊறுவிளைவித்துக் கொள்ளமாட்டாதவர். 15. சொந்த வாழ்க்கையில் இல்லற உறவு, மன நிறைவு தருவதாகவோ நிலைத்ததாகவோ இருக்காது. 16. வாழ்க்கையில் இலக்கு எதுவும் இல்லாதவர்; நிகழ்காலச் சம்பவங்களிலேயே வாழ்பவர். சமூக எதிர்ப்பு ஆளுமைக்குப் பரம்பரையும் காரணமாக இருக்கலாம். பொதுவாக ஆண் உயிரணுப்பிரிவில் ‘எக்சு, ஒய்’ என்ற உயிரணுக்கோல்களும் பெண் உயிரணுப் பிரிவில் ‘எக்சு, எக்சு’ என்ற உயிரணுக்கோல்களும் காணப்படுகின்றன. குற்ற நடத்தையில் ஈடுபட்டவர்களுள் பெரும்பாலோர் எக்சு (X), ஒய் (Y), ஒய் (Y), என்ற உயிரணுப்பிரிவை (அதாவது மிகையான ஓர் ஒய் உயிரணுக்கோல்) உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. ஆனால், இத்தகையோர் குறைந்த நுண்ணறிவினரா என்பதைப் பற்றி இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. சமூக எதிர்ப்பு ஆளுமையினரிடம் மின் மூளைமானியின் (Electro Encephalogram) உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகள், இத்தகையோரிடம் மூளை அலைப்பிறழ்வுகள் காணப்படுவதாகக் கூறுகின்றன. அதாவது மின் மூளை அலைகள் முதிர்ச்சியடையாத நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. இவ்வலைகள் முதிர்ச்சி நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஆதலின் இத்தகையோர் நுண்ணறிவு முதிர்ச்சி குன்றியவர்களாக இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. மனவெழுச்சிக்கான வலிமை வாய்ந்த சாதாரண மனிதனுக்குத் தூண்டல்களாக அமையக் கூடிய நிகழ்ச்சிகள், சமூக எதிர்ப்பு ஆளுமையினரின் தானியங்கு நரம்பு மண்டலத்தை, மனவெழுச்சி நிலைக்கு எழுப்புவதில்லை. குடும்பச் சூழ்நிலையும் சமூக எதிர்ப்பு ஆளுமைக்குக் காரணமாக அமைகின்றன. மேலும் மேம்பாட்டுளம், பயனுள்ள தன்முனைப்பு ஆகியவை உருவாகுவதற்கு இவர்களின் பெற்றோர் இவர்களுக்கு உறுதுணையாக இருக்காத காரணத்தினால், இவர்கள் பண்படா மனத்தின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றனர். <b>துணை நூல்</b>:<br> <b>Joseph Mehr,</b> Abnormal Psychology, CBS College Publishing. New York. 1983. <section end="ஆளுமைக் கோளாறுகள்"/> <section begin="ஆளுமை மதிப்பீடு"/> {{dhr}} <b>ஆளுமை மதிப்பீடு</b> என்பது, தனிமனிதனின் பண்புகளை உளவியல் விதிகளின் உதவியுடன் பலகூறுகளில் ஆராய்தலாகும். அன்றாட வாழ்க்கையில் ஒருவனுக்குப் பல்வேறு வகையான சமூக உறவுகள் ஏற்படலாம். இவ்வுறவுகளையொட்டிய நடத்தைகளைப் புரிந்து கொள்வதற்கு அவனுடைய ஆளுமையைப் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. தனிமனிதனிடம் காணக் கூடிய நிலையான நடத்தைக் கூறுகளை அவனுடைய ஆளுமைப் பண்புக்கூறுகள் என்று<noinclude></noinclude> 3njqxqquof5ls68f1qfm126c2lb43i3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/847 250 636765 1954519 1929426 2026-07-18T05:42:57Z Sridevi Jayakumar 15329 1954519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கல்வியாராய்ச்சிச்‌ செய்திப்‌ பரப்பல்‌|819|கல்வியராய்ச்சித்‌ தேசிய நிறுவனம்‌}}</noinclude>குச் செல்லும் வகையில் பரப்புதல் கல்வியாராய்ச்சிச் செய்தி பரப்பல் (Dissemination of Educational Research) எனப்படும். ஒர் ஆய்வாளர் செய்த கல்வியாராய்ச்சி முடிவுகள் முக்கியமாக மூன்று பார்வையாளர்களான 1. கல்வியாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிற ஆராய்ச்சியாளர்கள், 2. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பிற கல்வித் தொடர்பான நிறுவனங்களில் ஆராய்ச்சி முடிவுகளைப் பயன்படுத்தக் கூடியவர்கள் (Practitioners), 3. தேசிய, மாநில, வட்டார அளவில் கல்வித் திட்டங்களைச் செயற்படுத்துவோர், கொள்கைத் திட்டமிடுவோர் (Policy-makers) ஆகியோருக்குச் சென்றடைதல் வேண்டும். தேசிய கல்வி அமைச்சகத்தினர், மாநிலக் கல்வி அமைச்சகத்தினர், மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி நிருவாகிகள் ஆகியோரும் பார்வையாளர் எல்லைக்குள் அடங்குவர். பொதுவாக இந்தியாவில் கல்வியாராய்ச்சிச் செய்தி பரப்புதல் செய்தித்தாள்கள், ஆராய்ச்சியிதழ்கள், ஆய்வு நூல்கள், சிறு நூல்கள் (Monographs) போன்றவற்றாலும், தேசிய, மாநில பல்கலைக்கழக அளவில் நடைபெறும் கருத்தரங்கு, உரைக்கோவை (Symposium), கருத்துப் பட்டறை (Work-shop), மாநாடு (Conference) ஆகியவற்றின் மூலமாகவும் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் ஆராய்ச்சிச் செய்தி பரப்புதலில் பெருந்தடையாக உள்ளவை ஆய்வுக் கட்டுரையில் கலைச் சொற்களும் (Technical Terms) நுண்கருத்துகளும் ஆகும். அதன் காரணமாக, வயதுவந்தோர் கல்வி, பாடச் செயல் திட்டம் (Curriculum) போன்றவற்றில் அரசு நிறுவனங்களே சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுகின்றன. இந்தியாவிலுள்ள உயர்கல்வி ஆணையங்கள் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள் ஆகியன ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு வருகின்றன. பல்கலைக்கழகப் பணவுதவி ஆணையம் (University Grants Commission), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council for Educational Research and Training), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Social Sciences Research) போன்றவை தேசிய அளவில் நடைபெறும் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. அவை தவிர, பல பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கென்று செய்தி ஏடுகள் (News Letter) போன்ற இதழ்களையோ மாத இதழ்களையோ நடத்தி வருகின்றன. பரோடாவிலுள்ள (Baroda) கல்வியாராய்ச்சி வளர்ச்சிச் சங்கம் (Society for Educational Research and Development) 1972-இலிருந்து 1978 வரையிலான ஆராய்ச்சி முடிவுகளின் சுருக்கத்தை ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் சுருக்கம் தொகுக்கப்பட்டுள்ளது. புதுதில்லியிலுள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1978–ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கல்வியில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து வெளியிடும் பணி பேராசிரியர் எம்.பி. புச்சு (M.B. Buch) என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நடைபெற்று வருகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Husen, T. and Kogan, M.,</b> (eds.) Education Research and Policy: How Do They Relate? Pergamon, Oxford, 1984. <b>Myers, R.,</b> Connecting Worlds of Research; International Development Research Centre, Ottawa, Ontario, 1981. <section end="கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்"/> <section begin="கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்"/> {{dhr}} {{larger|<b>கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்</b>}} சப்பான் நாட்டுக் கல்வியமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் அரசு நிறுவனம். இது தோக்கியோ (Tokyo) நகரில் உள்ளது. இந்நிறுவனம் கல்வியாராய்ச்சி வளர்ச்சிக்கென்றே 1949-ஆம் ஆண்டு உள்ள தொடங்கப் பெற்றது. இது பயிற்சித் திட்டங்கள் (Training Programmes) எதையும் மேற்கொள்வதில்லை. சப்பான் நாட்டுக் கல்விக் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைத் தீட்டுவதற்குரிய ஆராய்ச்சிச் செய்திகளைத் தலையாய் தொகுத்துத் தருவது இந்நிறுவனத்தின் பணியாகும். இந்நிறுவனம் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது அரசின் தலையீடின்றித் தானாகவே முடிவு செய்து கொள்கிறது. கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனத்திற்குரிய நிதிகள் அனைத்தையும் சப்பான் தனது ஆண்டு வரவு சப்பான் செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்குகிறது. நாட்டில் இயங்கும் பிற கல்வியாராய்ச்சி நிறுவனங்கள், பணியிடைப் பயிற்சி நிறுவனங்கள், (Inservice Training Institutes) ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது. மேலும், இது உலகக் கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் தேசிய கல்வி மையமாகவும் விளங்குகிறது. கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனத்தில் ஐந்து ஆராய்ச்சித் துறைகள், ஓர் அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் (Research Centre for Science Education), ஒரு விரிவாக்கத் துறை (External Service<noinclude> <b>வா.க. 6 – 52அ</b></noinclude> qc1eo42cv87w2ozhih8yye0thea73w3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/817 250 636768 1954496 1925415 2026-07-18T04:35:53Z Sridevi Jayakumar 15329 1954496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Subiksha Parvathi" />{{rh|கரோட்டி|789|கரோலின்‌...}}</noinclude>என்பதில் ஆடு மாடுகள், வேளாண்மை, கரைநிலத்தில் அமைந்துள்ள இயந்திரத் தொழில் போன்றவை அடங்கும். ஆனால், ஓர் இருப்புப்பாதை நிறுவனம் அடங்காது. கரைநிலத்தைச் சார்ந்தவர்களின் உரிமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில், எவரும். நீரோட்டமொன்றைத் தடுக்கவோ தூய்மைக் குறைவுபடுத்தவோ அதிலிருந்து நீர் எடுக்கவோ செய்யின், அது அவர்கட்குத் தொல்லை விளைவிப்பதாகக் கருதப்படும். {{Right|<b>பு.வே.</b>}} <section end="கரைநிலஞ்சார்ந்த உரிமை"/> <section begin="கரோட்டி"/> {{dhr}} {{larger|<b>கரோட்டி</b>}} இந்தியாவின் முற்கால எழுத்து வகைகளுள் ஒன்று. இது பண்டைய காந்தாரம் (இக்காலக் கிழக்கு ஆப்கானிசுத்தானம்), வடக்குப் பஞ்சாபு பகுதிகளிலும், காசுமீரின் வடமேற்குப் பகுதிகளிலும் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை வழங்கி வந்த எழுத்து ஆகும். கரோட்டி (Kharosthi) என்ற சொல்லுக்கு கழுதையின் உதடு (கர–கழுதை, ஒசுத்த–உதடு) என்பது பொருள். கரோட்டி எழுத்துகள் கழுதையின் உதடு போல் பிளவுபட்டிருப்பதாகக் கருதி இப்பெயர் இடப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆயினும், இக்காலத்தில் (கெர் – உசுத்த) அரசின் தொண்டுக்குப் பயன்பட்ட எழுத்து என்ற பொருள் கொள்ளலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. பெரும்பாலும் பண்டைய காந்தாரப் பகுதிகளில் அரசியல் கணக்குகளும் கடிதங்களும் எழுத இவ்வெழுத்துப் பயன்பட்டது. இந்த எழுத்து இப்பகுதிகளுக்கு மேற்கே வழங்கி வந்த அராபிய எழுத்து வகையிலிருந்து தோன்றியது. இந்த வட்டாரத்தில் எல்லாக் கல்வெட்டுகளும் கரோட்டி எழுத்திலேயே எழுதப்பட்டன. கல்லிலும் சிற்பப் பல கைகளிலும் நாணயங்களிலும் பூவரச மரத்தின் பட்டைகளிலும் மரம், தோல் முதலியவற்றிலும் தங்கம், வெள்ளி, செப்பு உலோகத் தகடுகளிலும் எழுத்தாணியால் இவ்வெழுத்தை எழுதி வந்தார்கள். ஆப்கானிசுத்தானத்தில் சுவாத்துப் பள்ளத்தாக்கில் புதை பொருளாகக் கண்டெடுக்கப்பட்ட செப்புக் கிண்ணம், தட்சசீலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளிச் சுருள், வெள்ளிக்கிண்ணம் முதலியவற்றில் கரோட்டி எழுத்துகள் காணப்படுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இந்த எழுத்து பிராகிருத (பாசுத) மொழிக் கல்வெட்டுகளை எழுதப் பயன்பட்டது. இந்த எழுத்து வலமிருந்து இடமாக எழுதப்பட் டது. இந்த எழுத்தை எழுதும் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற சபடன் என்பவன் கருநாடகத்தில் சித்திரமுர்க்கம் பிராமிக் கல்வெட்டுகளை வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதியிருக்கிறான். மற்றபடி இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் கிடைத்த அனைத்துக் கரோட்டி கல்வெட்டுகளும் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவையாகும். கரோட்டியில் அகரத்திற்கு உள்ள குறியிலேயே சில கோடுகளைச் சேர்த்து இ,உ,எ,ஒ என்ற உயிர்களுக்கும் குறிகளை அமைத்துக் கொண்டார்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 817 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 23 |oTop = 113 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|அ{{gap|1em}}இ{{gap|1em}}உ{{gap|1em}}எ{{gap|1em}}ஒ}} க, ச, ட, த, ப போன்ற வர்க்க எழுத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று இணைந்தவையாக அமைந்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 817 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 23 |oTop = 174 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|ச{{sub|1}}{{gap|1em}}ச{{sub|2}}{{gap|1em}}ஜ{{gap|1em}}ஜ{{sub|2}}{{gap|1em}}த{{sub|3}}{{gap|1em}}த{{sub|4}}}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 817 |bSize = 480 |cWidth = 155 |cHeight = 23 |oTop = 213 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|ப{{sub|1}}{{gap|1em}}ப{{sub|2}}{{gap|1em}}ட{{gap|1em}}ட{{sub|2}}{{gap|1em}}ட{{sub|3}}{{gap|1em}}ட{{sub|4}}}} உயிர்மெய் எழுத்துகளும் பிராமியைப் போலவே மேலும் கீழும் குறுக்கிலும் கோடுகள் இணைக்கப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 817 |bSize = 480 |cWidth = 145 |cHeight = 23 |oTop = 305 |oLeft = 284 |Location = center |Description = }} {{center|க{{gap|1em}}கா{{gap|1em}}கி{{gap|1em}}கீ{{gap|1em}}ஒ}} இவ்வாறே குறில் குறியோடு கீழே தனித்து இடப்பட்ட குறி, நெடிலைக் குறித்தது. இந்த எழுத்து, அதிக வளர்ச்சியோ மாறுதலோ அடையாமல் தோன்றிய பிராமி எழுத்தின் பெரு வளர்ச்சிவினாலும், கரோட்டியை ஆதரித்த வடமேற்குப் பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர்களின் மறைவாலும் மறைந்தொழிந்தது. {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="கரோட்டி"/> <section begin="கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்:</b>}} இத்தீவுக்கூட்டம் மேற்குப் பசிபிக்குக் கடலில் நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் உள்ளது. பரப்பு 2150 ச.கி.மீ. கரோலின் தீவுகள் 1947-இல் ஐ.நா. சபையின் மேற்பார்வைக்கு உட்பட்ட ஒரு அமெரிக்கப் பொறுப்பாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. இவை செழிப்பு வாய்த்தலை. தாதுப் பொருள்கள் மிகுதியாக இங்கு உண்டு. மேற்குத் தீவுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே சீனாவுடன் தொடர்பு கொண்டிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள. இங்குப் போந்த முதல் ஐரோப்பியர் இசுபான்<noinclude></noinclude> orglc27xmujrw49x7ip91j7y77auany பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/801 250 640279 1954477 1924480 2026-07-18T03:42:20Z Sridevi Jayakumar 15329 1954477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருநாடகம்‌|773|கருநாடகம்‌}}</noinclude>கொல்லப்பட்டு கி.பி. 1750-இல் முசாபர்-சங்கு ஐதராபாது நிசாமாக்கப்பட்டார். இது தியூப்ளேயின் பேரும் புகழும் உயரக் காரணமாக அமைந்தது. ஆனால், மிக விரைவில் கருநாடகத்தில் ஆங்கிலேயரின் தலையீட்டால், இராபர்ட்டு கிளைவின் தலைமையில் சென்ற பெரும்படை சந்தாசாகிபின் படைகளையும் பிரெஞ்சுப் படைகளையும் தோற்கடித்தது. ஐதராபாதின் நிசாமாக நியமிக்கப்பட்ட முசாபர் சங்கும் கொலை செய்யப்பட்டார். தியூப்ளேயும் பிரான்சுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். பின்னர் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் உள்நாட்டு அரசுகளுக்கிடையில் ஏற்படும் சண்டைகளில் தலையிடுவதில்லை என்று ஒப்புக்கொண்டனர். <b>மூன்றாம் கருநாடகப் போர்</b> (கி.பி. 1758 – 63): கி.பி. 1757-இல் ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் மூண்டது. அதுவே மூன்றாம் கருநாடகப் போர் ஏற்படக் காரணமாயிற்று. ஆங்கிலத் தளபதிகளான கிளைவு, வாட்சன் ஆகியோர் கி.பி. 1757-இல் பிரெஞ்சுக்காரர்களின் சந்திரநாகூரைக் கைப்பற்றினர். பிரெஞ்சுத் தளபதி கௌண்ட்-டி-லாலி என்பவர் ஆற்றல் மிக்கவர். அவர் கி.பி. 1758-இல் புனித தாவீது கோட்டையைக் கைப்பற்றினார்; சென்னையைப் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், இதற்கிடையில் வந்தவாசி என்னும் இடத்தில் நடந்த போரில் இலாலி தோற்கடிக்கப்பட்டுச் சிறை பிடிக்கப்பட்டார். பாண்டிச்சேரியும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் கி.பி. 1763-இல் முடிவுற, இந்தியாவிலும் போர் முடிவடைந்தது. பாண்டிச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போர் இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை ஒழித்தது. கருநாடகப் போர்கள் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையே ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியில், ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட அடிகோலின. இப்போர்களால் உள்நாட்டு அரசுகளின் வலுவற்ற தன்மையும் வெளிப்பட்டது. {{Right|<b>செ.ஆ.</b>}} <section end="கருநாடகப் போர்கள்"/> <section begin="கருநாடகம்"/> {{dhr}} {{larger|<b>கருநாடகம்:</b>}} மகாபாரத காலத்திலிருந்தே கருநாடகம் என்ற சொல் வழக்கிலிருந்து வந்துள்ளது. ‘கருநாடகம்’ என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிக் கன்னட மொழி அறிஞர்களிடையே இன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மொகஞ்சதாரோ நாகரிகம் பற்றிய சான்றுகளில் கூறப்பட்டுள்ள இனங்களில் ஒரு பிரிவினரே கருநாடகத்தில் வாழ்ந்தனர் என்று புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஈராசு (Heras) கருதுகிறார். அம்மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட குறி, ‘கண்’ ஆகும். எனவே, கண்ணை உடையவர்கள் என்ற பொருளில் கருநாடகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கருநாடர் என்று அழைக்கப்பட்டனர். ‘கன்னடிகா’ என்ற பழஞ்சொல் ‘கன்னானிர்’ என்ற சொல்லின் திரிபாகும். கன்னட மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் முக்கிய சொல்லே கருநாடகமாகும். கருநாடகம் என்ற சொல் ஒரு பகுதியைக் குறிப்பதாக மகாபாரதத்தின் வாயிலாக அறியலாம். புவியியலின் அடிப்படையில் கருநாடகம் இந்தியாவில் மிகப் பழைமை வாய்ந்த பகுதிகளுள் ஒன்றாகும். தக்காண பீடபூமியின் மையமாகவும், இந்தியத் தீபகற்பத் தென்பகுதியின் மையமாகவும் கருநாடக மாநிலம் விளங்குகிறது. தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 801 |bSize = 480 |cWidth = 171 |cHeight = 199 |oTop = 196 |oLeft = 256 |Location = center |Description = }} {{center|கருநாடகம்}} கருநாடக மாநிலத்தின் எல்லைகளாகக் கிழக்கே ஆந்திரமாநிலமும், வடக்கே மகாராட்டிர மாநிலமும் தெற்கே கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் அமைந்துள்ளன. கருநாடக மாநிலத்தின் மேற்கே அரபிக்கடலின் ஏறக்குறைய 350 மைல் நீளமுடைய கடற்கரைப்பகுதி அமைந்துள்ளது. இம்மாநிலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நில அமைப்புகள் பிற மாநிலங்களில் காணப்படாத வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருநாடக மாநிலத்தை ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கூறலாம். அவை, 1. கன்னடக் கடற்கரைப் பகுதி, 2. சாயாத்திசு என்ற பகுதி,<noinclude></noinclude> 2navylmz89wnt5kvwnjw4luiulkyfp5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/802 250 640280 1954479 1924481 2026-07-18T03:46:32Z Sridevi Jayakumar 15329 1954479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருநாடகம்‌|774|கருப்பொருள்‌}}</noinclude>3. கிழக்கு மலைத்தொடர்ப் பகுதி, 4. தெற்குப் பீடபூமிப் பகுதி, 5. வடக்குப் பீடபூமிப் பகுதி, 6. சப்மாண்டேன் பகுதி ஆகும். நில அமைப்பின் சிறப்புத் தன்மையின் அடிப்படையில் கருநாடக மாநிலத்தின் வரலாறும் பண்பாடும் அமைந்துள்ளன. பீடபூமிப்பகுதி அரசியல், பண்பாட்டுப் புரட்சியின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. பீடபூமிக்குக் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் உள்ள மலைப் பகுதியில் அரசியல் பிரிவுகளைக் காணலாம். பழங்காலத்திலும் மத்திய காலத்திலும், அரசர்களும் பாலிகார் மக்களும் நிலமானிய முறைகளை நிறுவினர். தட்பவெப்ப நிலை காரணமாகக் கருநாடகப் பகுதி பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கன்னடக் கடற்கரை நிலப்பரப்பு கோடைக்காலத்தில் குளுமையாகவும் மழைக்காலத்தில் மிகவும் குளிராகவும் இருக்கிறது. சமவெளிப் பகுதி கோடையில் வெப்பமாக உள்ளது. குளிர்காலத்தில் அதிகக் குளிராக இருக்கும். ‘தென்இந்தியாவின் கூரை’ என்று கருநாடக மாநிலம் சொல்லப்படுகிறது. கன்னடக் கடற்கரைப் பகுதியில் அதிக மழை பெய்வதால், நெற்பயிர் அதிகமாக விளைகிறது. அடர்ந்த காடுகள் இயற்கையாக வளர்கின்றன. இந்தச் செல்வங்களினால் கருநாடகத்தின் பொருளாதாரம் மிகவும் செழிப்பாக உள்ளது. இயற்கையின் விலை மதிப்பில்லாக் கொடையாக இம்மாநிலம் விளங்குகிறது. கருநாடகம் கைத்தொழிலுக்குப் புகழ் பெற்ற மாநிலம். கைத்தறி ஆடை உற்பத்தி, தந்தம், பிரம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவற்றால் அழகிய வேலைப்பாடுடைய பொருள்கள் செய்யும் தொழில்களுக்குச் சிறந்த இடமாகும். கல்வி, சுகாதாரம், பேருந்துப் போக்குவரத்து முதலிய துறைகளில் இம்மாநிலம் இந்தியாவில் நடுத்தர நிலையில் உள்ளது. கருநாடகத்தில் பத்திராவதி எஃகுத் தொழிற்சாலை, சந்தனத் தொழில் உற்பத்தி சோப்பு, சர்க்கரை முதலியவற்றை உற்பத்தி செய்யும் இயந்திரச் சாலைகள் ஆகியவை உள்ளன. இந்துசுத்தான் விமானத் தொழிற்கூடம், இயந்திர உற்பத்திச்சாவை, தொலைபேசிக் கருவி செய்யும் தொழிற்சாலை முதலிய தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய அரசின் உணவு ஆராய்ச்சிக்கூடம், டாக்டர் சி.வி. இராமன் பௌதீக ஆராய்ச்சிக்கூடம் ஆகியவை இம்மாநிலத்தில் இருக்கின்றன. பெங்களூர், மைசூர், பிருந்தாவனத் தோட்டம், நந்திக்குன்றம், கண்ணாடி மாளிகை, கிருட்டிண இராசசாகரம் முதலிய அழகிய இடங்களும், சோக்கு அருவி, பேலூர் கல்சித்திரங்கள், சாமுண்டீசுவரியில், மைசூர் மகாராசா அரண்மனை முதலிய காண்பதற்கு மகிழ்வு தரும் இடங்களும் கருநாடகத்தில் உள்ளன. கருநாடகத்தில் ஆண்டுதோறும் பல கோடி உரூபாய் பெறுமான தங்கம் வெட்டியெடுக்கக் கூடிய கோலார்த் தங்கச் சுரங்கமும் அமைந்துள்ளது. {{Right|<b>தா.எ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Mathanna, I.M.,</b> History of Modern Karnataka, Bangalore, 1980. <section end="கருநாடகம்"/> <section begin="கருப்பொருள்"/> {{dhr}} {{larger|<b>கருப்பொருள்:</b>}} மக்கள் உலகத்தில் வாழ்வாங்கு வாழும் முறையினை வகுத்துணர்த்த முற்பட்ட தொல்காப்பியர், உலகிற் காணும் காட்சிப் பொருள்களையும் கருத்துப் பொருள்களையும் நன்கு ஆராய்ந்து அவற்றை முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்று மூவகைப்படுத்தி, அந்த அடிப்படையில் தம் தொல்காப்பிய பொருளதிகாரத்தை அமைத்துள்ளார். அவற்றுள் முதற் பொருள், நிலம் காலம் (Space and Time) ஆகியவற்றில் இயல்பாகும் என்பதனை, ‘முதலெனப்படுவது நிலம் பொழு திரண்டின் இயல்பு’ என்று காட்டியுள்ளார். (தொல்.அகம். 4). கருப்பொருள் என்பது அந்த நிலத்தின்கண்ணே கருக் கொண்டு தோன்றும் பொருள்களையும், உரிப்பொருள் என்பது நிலம் பொழுதாலாகும் உலகில், கருக்கொண்டு தோன்றும் பொருள்களின் துணையோடு, மக்கள், பிற உயிர்களின் வாழ்வினும் வேறாய் உயர்ந்த வாழ்வினை வாழ்வதற்காக மேற்கொள்ளப்பெறும் ஒழுகலாறுகளையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு, அகப்பாடற்பொருளை முதல், கரு, உரி என வகுத்து நெறிப்படுத்தும் பாங்கு, தமக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் கொண்ட நெறி என்பதனைத் தொல்காப்பியர், ‘இயல்பென மொழிப இயல்புணர்த் தோரே’, ‘அவ்வகை பிறவும் கருவென மொழிப’ என்பன போன்று வரும் தொடர்களால் புலப்படுத்தியுள்ளார். கருப்பொருளை இளம்பூரணர், ‘இடத்தினும் காலத்தினும் தோன்றும் பொருள். அது தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு, செயல் முதலாயினவும், பறை, யாழ் முதலாயினவும் இன்னவான பிறவும் ஆகிப் பலவகைப்படும்’ என்று விளக்கியுள்ளார் (தொல்.அகம். முன்னுரை). முதற்பொருளாகிய உலகின் கருப்பொருள்களுள் ஒரு பகுதியாய் அமைந்த மக்கள், ஏனைய கருப்பொருள்களின் துணையோடு,<noinclude></noinclude> rlgp4wkui1v16qn0fd0uxa7zx7boxj5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/804 250 640379 1954480 1924624 2026-07-18T03:48:18Z Sridevi Jayakumar 15329 1954480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருப்பொருள்‌|776|கரும்பலகைப் பணிகள்}}</noinclude>ஒழுக்க நிலையாகிய உரிப்பொருளை ஏற்று வாழ்ந்து, உயர்வடைவதே மனித வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும் என்பதனைப் புலப்படுத்துவதே தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்தாகும். உலகில் கருக்கொண்டு தோன்றும் பொருள் கருப்பொருள். எனவே அது வரம்பின்றிப் பெருரும் என்பதனை உணர்ந்த தொல்காப்பியர் அதனைப் பகுத்து வகைசெய்து, ‘தெய்வம் உணாவே’ என்னும் நூற்பாவில் கூறியுள்ளார் (தொல்.அகம். 20). தெய்வம் உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டுவகைப்படுத்திக் கூறியவர், அது மேலும் வகை செய்வதற்குரியது என்பதனை ஏற்பாராய், ‘அவ்வகை பிறவும் கருவென மொழிப’ என்று அதற்கு வழியும் வகுத்துள்ளார். நச்சினார்க்கினியர் ஒவ்வொரு நிலத்திற்குமுரிய கருப்பொருள்களைக் குறிப்பிடுங்கால், பூ, நீர், ஊர் முதலியவற்றையும் கட்டி எடுத்துக்காட்டுத் தந்துள்ளார். ஒவ்வொரு நிலத்திற்கும் உரியனவாகக் கூறப் பெறும் கருப்பொருள்கள் வேறு நிலத்தின் கண்ணும் வரலாம் என்பதனையும் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த இலக்கிய அனுமதி, உலகியலை நோக்கி அளிக்கப்பட்டதாகும். குறிஞ்சி நிலத்தில் பிற நிலத்திற்குரிய கருப்பொருள்களும் அவ்வாறே ஒரு நிலத்தில் பிற நிலத்திற்குரிய கருப்பொருள்களும் கலந்து அமைவது உலகியலிற் காண்பதாகும். அதனை உளங்கொண்டு தொல்காப்பியர் கருப்பொருட் கலப்பினை – திணை மயக்கத்தை - இலக்கணப்படுத்தியுள்ளமை அவர்தம் நுண்ணறிவினைப் புலப்படுத்துகிறது. அகப்பாடல்களுள் இடம்பெறும் உள்ளுறை முதலியன கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டமையும். எனினும், அவ்வுள்ளுறை முதலியன கருப்பொருள்களுள் முதலில் வைத்து எண்ணப்பெற்ற தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு அமைதல் கூடாது என்பதனைத் தொல்காப்பியர், ‘உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக் கொள்ளும் என்ப குறியறிந்தோரே’ என்னும் நூற்பாவில் தெளிவுபடுத்தியுள்ளார் (தொல்.அகம். 50). அதனால், தெய்வம் நிலத்தில் தோன்றும் கருப்பொருள்களுள் ஒன்றாயினும், அது ஏனைய கருப்பொருள்களினும் சிறப்புடையது என்பது புலனாகிறது. ‘அவ்வகை பிறவும் கருவென மொழிப’ என்று தொல்காப்பியர் கூறியதனைக் கண்ட, பின் வந்த பொருளிலக்கண நூலார் கருப்பொருள் வகை உணர்த்துகையில் தாம் வேண்டும் பிறவற்றையும் இயைத்து இலக்கணங் கூறியுள்ளனர். நாற்கவிராச நம்பி தமது அகப்பொருள் விளக்கத்தில் கருப்பொருள் வகையினைக் கூறும்போது, ஆரணங்கு, உயர்ந்தோர், அல்லோர், புள், விலங்கு, பூ, ஊர், நீர், மரம், உணா, பறை, யாழ், பண், தொழில் ஆகிய பதினான்கு வகைகளைத் தொகுத்துக் கூறியுள்ளதோடு, ஒவ்வொரு நிலத்திற்கும் அவ்வகையிலமைந்த கருப்பொருள்களை தனித் தனி நூற்பாவில் விளக்கியுமுள்ளார் (நம்பி. 19,20). கருப்பொருள் கூறும் தொல்காப்பிய நூற்பாவில் ‘மக்கள்’ நேரே குறிப்பிடப்படவில்லை. எனினும் அடுத்து வரும் நூற்பாக்களில் திணைப் பெயர், திணை நிலைப் பெயர் என்று கூறுவதனால் அதனை அவர் உடன்பட்டமையினை உணரலாம். மக்களுள் உயர்ந்தோர், அல்லோர் என்ற வேறுபாடு அந்நூலில் காணப்படவில்லை. ஆனால் நம்பியகப் பொருளில் கருப்பொருள் வகையில் அமையும் மக்களை இரண்டு பிரிவாகப் பகுத்து, ‘உயர்ந்தோர் அல்லோர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு காலப்போக்கில் மக்கள் சமுதாயத்தில் தோன்றிய கருத்து மாறுபாட்டின் விளைவாக இருத்தல் கூடும். காலப்போக்கில் வளர்ச்சியுற்றுள்ள கருப்பொருள் வகை நிரல், மக்கள் வாழ்வில் இடம்பெறும் உணவு முதலிய அடிப்படைத் தேவைகளுக்கு மேலாக அமையும் கலை வாழ்வுக்குரிய தேவைகளின் வளர்ச்சியைக் காட்டுவனவாகவும் அமைகிறது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கருப்பொருள்"/> <section begin="கரும்பலகைப் பணிகள்"/> {{dhr}} {{larger|<b>கரும்பலகைப் பணிகள்:</b>}} கற்பித்தலில் கரும்பலகை தலையாய இடம் பெறுகிறது. எழுதுதல், வரைதல், மொழியைக் கற்பித்தல் ஆகியவற்றுக்குக் கரும்பலகை முதன்மையாகப் பயன்படும். கரும்பலகைக்குப் (Blackboard) பதிலாக இன்று சுண்ணப் லகை (Chalkboard) பெரிதும் பயன்படுகிறது. கரும்பலகை அதிகமான ஒளியை உறிஞ்சுவதால் படிப்பதற்கு எளிதாகும் வகையில் மிகுந்த ஒளியைப் பிரதிபலிப்பதில்லை. மேலும், வெள்ளை நிறச் சுவரில் கரும்பலகை இருப்பதால் சுவருக்கும் பலகைக்குமிடையே வேறுபாடு அதிகமாக உள்ளது. இது வாசிப்பதற்கு இடையூறாக உள்ளது. எனவே, கரும்பலகை இன்று பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை. சேமர் (Seymour) என்பார் குழந்தைகளும் முதியவர்களும் வெண்ணிறச் சுண்ணாம்புக்கட்டியால் எழுதியவற்றைக் கரும்பலகையிலிருந்து படிப்பதைவிட, கருநீலச் சுண்ணாம்புக் கட்டியால் வெளிர் மஞ்சள் நிறப்பலகையில் (Yellow-cream Board) எழுதியவற்றை 10 விழுக்காடு வேகமாகப் படிக்கின்றனர் எனத் தம் ஆய்வில் கண்டறிந்துள்ளார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது சில கருத்துக்கள், தலைப்புச் சொற்கள், சொற்றொடர்கள், வரைபடங்கள், குறியீடுகள், கேலிச்சித்திரங்கள் ஆகியவற்றை விளக்குவதற்கும் அல்லது உடனடியாக அவற்றை அழித்து விட்டுப் பிற கருத்துகளை எழுதுவதற்கும் சுண்ணப்பலகை கற்பித்தலில் பெரிதும் பயன்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> iy0kvgewage10f46e30ql8t0xt67cvf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/805 250 640380 1954481 1924632 2026-07-18T03:49:04Z Sridevi Jayakumar 15329 1954481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரும்பலகைப்‌ பணிகள்‌|777|கரும்பனூர்‌ கிழான்‌}}</noinclude>வகுப்பு தொடங்குவதற்கு முன்னரே கூட ஆசிரியர் சுண்ணப் பலகையில் படங்களையோ கருத்துகளையோ முன்கூட்டியே எழுதி வைக்கலாம். இதனால் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ள முடியும். படம் வரைவதிலே வீணாகும் நேரத்தைத் தவிர்க்க முடியும். மாணவர்களுக்குப் படம் வரையும் திறனை, வளர்த்திடல் ஆசிரியர் நோக்கமாக இருக்கும்போது, படம் வரைதலை ஆசிரியர் மாணவர் முன்னிலையிலேயே செய்து காட்டல் வேண்டும். சுண்ணப் பலகையைப் பயன்படுத்துகையில், தெளிவாக எழுத வேண்டும் (Legibility) என்பதை ஆசிரியர் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பின்னால் உட்கார்ந்திருக்கும் மாணவர்களுக்குத் தெரியாத வகையில் தெளிவில்லாமலும் சிறியதாகவும் ஆசிரியர் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். எழுத்துகள் பெரியனவாக, குறிப்பாக ஒவ்வொரு எழுத்தும் குறைந்தது 10 செ.மீ. நீளத்தில் இருப்பது நல்லது, முழு நீளச் சுண்ணக் கட்டியை அப்படியே எழுதப் பயன்படுத்தாமல், அதை இரண்டாக ஓடித்து எழுதுவது நல்லது. ஏனெனில் முழு நீளச் சுண்ணக் கட்டி எழுதும்போது எளிதில் உடைந்து விடும். சுண்ணப் பலகையில் எழுதும்போது வரிகள் நேராக இருக்கும்படி ஆசிரியர் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். பொதுவாக, சுண்ணப் பலகையில் ஆசிரியர் ஓரிடத்தில் நின்று கொண்டு மட்டும் எழுதாமல் எழுத எழுத நடந்துகொண்டேயிருந்தால், பலகையில் உள்ள எழுத்தை ஆசிரியர் மறைக்க இயலாது; மாணவர்கள் நன்கு பார்க்கமுடியும். வண்ண நிறச் சுண்ணக் கட்டிகளைப் பல அறிவியல் ஆசிரியர்கள் வகுப்பறையில் பயன்படுத்துகின்றனர். வேறுபடுத்திக் காட்ட வேண்டிய ஒரு சொல்லையோ ஒரு கணிதக் குறியீடு அல்லது சமன்பாட்டையோ ஒரு படத்தின் முக்கிய பாகங்களையோ குறித்துக்காட்ட ஆசிரியர் வண்ண நிறச் சுண்ணக் கட்டிகளைப் பயன்படுத்தலாம். எல்லா நிறங்களும் தெளிவாக எழுதுவதற்கு உதவுவதில்லை. எனவே, ஆசிரியர் வகுப்பறையின் பின்னால் நின்று, எவ்வகை வண்ணக் கட்டிகள் எழுத்துத் தெளிவுக்கு உதவுகின்றன என்று அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். வெண்பலகைகள் (White Boards), காந்தப் பலகைகள் (Magnetic Boards), துணிப் பலகைகள் (Cloth Boards) போன்றவை கற்பித்தலில் இன்றும் பெரிதும் பயன்படுகின்றன. வெண்பலகைகள் உறிஞ்சாத வெண்ணிற நெகிழியால் (White Plastic) ஆனது. இவற்றில் சுண்ணக் கட்டியால் எழுத முடியாது. இதற்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள கம்பள நுனி வண்ணப் பேனாக்கள் (Felt-tip Colour Markers) எழுதப்பயன்படுகின்றன. இப்பேனாக்களால் எழுதும் எழுத்துகளைச் சுண்ணக் கட்டி எழுத்துகளைப் போலவே எளிதில் அழித்துவிடலாம். இவை சுண்ணாம்புக் கட்டியை விட விலை அதிகம் என்பதால், பொதுவாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. காந்தப் பலகைகள் இரும்புத் தகட்டினால் செய்யப்பட்டவை; காந்தத்தால் செய்யப்பட்டவையல்ல. காந்தத் துண்டு அடிப்புறத்தில் வைக்கப்பட்டுச் சிறுசிறு கட்டைகளில் படங்கள், சொற்றொடர்கள் ஆகியன வரையவோ எழுதவோ செய்யப்படுகின்றன. காந்தப் பலகையில் இவை பார்வைக்கு வைக்கப்படும்போது, காந்தத் துண்டின் விசையால் காந்தப் பலகையில் ஒட்டிக் கொள்ளும், இவற்றை எளிதில் எடுக்கவோ மாற்றி வைக்கவோ முடியும். துணிப் பலகைகள் சில கம்பளத்தால் ஆனவை. இவை அறிவியல் கற்பித்தலுக்கு மிகவும் பயன்படுகின்றன. இப்பலகைகளில் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளின் (Aids) அடிப்பகுதி சொரசொரப்பான மண்தாளில் (Sand paper) செய்யப்பட்டிருப்பதால், அக்கருவிகளைத் துணிப் பலகைகளில் ஒட்டி வைத்தல் அல்லது பொருத்தி விடுதல் அல்லது கையில் எடுத்தல் மிக எளிது. துணிப் பலகைகளில், பொதுவாக இலேசான கற்பித்தல் கருவிகளைப் பொருத்துவது நல்லது. {{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Kemp, J.E.,</b> Planning and Producing Audiovisual Materials, Harper and Row, New York, 1980. <b>Minor, E. and H.R. Frye,</b> Techniques for producing Visual Instructional Media, McGraw - Hill, New York. 1977. <section end="கரும்பலகைப் பணிகள்"/> <section begin="கரும்பனூர் கிழான்"/> {{dhr}} {{larger|<b>கரும்பனூர் கிழான்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு வள்ளல். இவன் கரும்பனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். ‘கரும்பனூர் என்பது தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டத்திலுள்ளதோரூர்’ என்றும், அது ‘இப்போது கரும்பூர் என்று வழங்கப்படுகிற’ தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். நன்னாகனார் இவனைப் பற்றிப் பாடிய பாடலில் (புறம்-381) ‘கரும்பனூரன் காதல் மகன்’ என்னும் தொடர் காணப்படுவதால், இவன் தந்தையும் இவனும் ஒரு பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளனர் எனத் தெளியலாம். இவனைப் பற்றி நன்னாகனார் என்னும் புலவர் பாடிய இருபாடல்கள் புறநானூற்றில் (381, 384) இடம் பெற்றுள்ளன. அவர் அப்பாடல்களில் ‘இவனுடைய ஊர் மருத வளம் மிக்கு-<noinclude></noinclude> q6k78fol8b89nka5rkpe3jms5candmu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/806 250 640381 1954482 1924634 2026-07-18T03:57:51Z Sridevi Jayakumar 15329 1954482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரும்பிள்ளைப்‌ பூதனார்‌|778|கருமம்‌}}</noinclude>டையது; நெல்லும் கரும்பும் நறவும் மிகுதியாகக் கொண்டுள்ளது. அத்தகைய ஊருக்குத் தலைவனாக விளங்கியவன் பெருவள்ளலாயும் திகழ்ந்துள்ளான்’ என்னும் செய்தி கூறி இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவன் கொடைச் சிறப்பும் விருந்தோம்பல் பண்பும் மிக்குச் சான்றோரிடம் பெருவிருப்பும் பேரம்பும் கொண்டிருந்தான் என்னும் செய்தி திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டொன்றில் உள்ளதாகக் கூறுவர். இவனைப் பற்றிப் புறநானூற்றில் காணப்படும் நன்னாகனார் பாடல் (381), புலவர்கள் ஈயா மன்னர்தம் புறங்கடைத் தோன்றித் நாளத்தோடு கூடிய பாடலைப் பாடித் தம் வறுமையைச் சொல்லி இரத்தல் கூடாது என்றும், அவர்கள் வருத்தத்தையும் வறுமையையும் தானே போக்குவன், என்றும் கூறுகின்ற இவனது அறக்கோட்பாட்டை நயம்பட வியந்து போற்றுகிறது. {{Right|<b>சு.கோ.</b>}} <section end="கரும்பனூர் கிழான்"/> <section begin="கரும்பிள்ளைப் பூதனார்"/> {{dhr}} {{larger|<b>கரும்பிள்ளைப் பூதனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடல் பரிபாடலின் பத்தாம் பாட்டாய் அமைந்துள்ளது. அது வையையாற்றினைச் சிறப்பிப்பதாக உள்ளது. இவர் கருப்பு நிறத்தையும் பூதம் போன்ற பெரிய உடலமைப்பையும் கொண்டிருந்தமையால் இவ்வாறு பெயர்பெற்றார் என்பர். இவர் பாடிய பாடல், தலைவர் பிரிந்தமையால் வருத்தமுற்ற தலைவி நிலை கண்டு தோழி தலைவன்பால் பாணனைத் தூதுவிட, அவன் சென்று பாசறைக் கண் தலைவனைக் கண்டு, அவனுக்குக் கார்ப்பருவத்தின் வருதையையும் அதனால் மதுரையின்கண் வையையாற்றில் புதுநீர் பெருக்கெடுத்ததையும், அவண் நிகழ்ந்த நீரணி விழாவினையும் பிற செய்திகளையும் கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலில் இவர் பாண்டியனின் கொடையை வையையாற்றின் பேருதவிக்கு உவமையாகக் காட்டியுள்ளார். முகைப் பருவத்து மகளிர் முதலாக முதியவர் ஈறாகப் பல்வேறு திறத்து மகளிரும் மெல்ல மெல்ல நடந்து வந்தமை தாள விதியாலே கூட்டப்பட்ட பல இசைக் கருவிகளின் மெல்லிய நடை போன்றிருந்தது என உவமைப்படுத்துவதால், இவ்வாசிரியர் இசைப் பயிற்சியில் நாட்டம் உடையவர் என அறியலாம். {{Right|<b>சு.கோ.</b>}} <section end="கரும்பிள்ளைப் பூதனார்"/> <section begin="கருமம்"/> {{dhr}} {{larger|<b>கருமம்</b>}} என்னும் வடமொழிச் சொல், ‘செயல்’ என்று பொருள்படும். இது, இந்தியச் சமயங்களில் மறுபிறப்புக் கொள்கையோடு தொடர்புடையது. இந்து, புத்தம், சமணம் ஆகிய சமயங்கள் கருமம் (Karma) என்னும் கொள்கையினை வலியுறுத்துகின்றன. ஒரு மனிதன் செயற்படும் பொழுது, தான் செய்கின்ற கருமங்களின் பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்க வேண்டும். நல்ல செயல்கள் நல்ல பலனைத் தரும்; அதாவது முக்தி. நிருவாணம் முதலிய நிலைகளை அடையக் காரணமாகும். தீய செயல்கள் தீமையைத் தரும். பொதுவாக உயர்குடிப்பிறப்பும், நோய்களும், முன்னேற்றமான வாழ்க்கையும் முற்பிறவியில் ஒருவன் செய்த செயல்களின் பலன்களாகும். கருமம் என்பது ஒரு காரண விதி என்று கருதப்படுகின்றது. ஒருவன் செய்கின்ற கருமம், அவனை உலகில் பிறவி எடுக்கச் செய்கிறது. அதன் பயனாக இன்பமும் துன்பமும் அடைகின்றான். முக்தி அடைதல் என்பது எவ்விதச் செயல்களிலும் ஆசை வைக்காமல், பலன்களைத் துறத்தல் ஆகும். அதாவது பலன் கருதாமல் செயல் புரிவது என்று சிலர் கூறுகின்றனர். இதனைப் பகவத் கீதை, ‘நிட்காமிய கருமம்’ என்கின்றது. சமணர்களின் கருத்துப்படி, நல்ல செயல்களும் மனிதனைச் சடப்பொருளுடன் தொடர்பு கொள்ளச் செய்கின்றன. மேலும், கருமம் பிறவிக்குக் காரணமாக விளங்குவதால் அதனை ஒரு சக்தி எனக் கூறுவர். ஒரு மனிதன் சிறு உயிர்களுக்குத் தீமை செய்தாலும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். சமணர் உண்ணா நோன்பிருந்து தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வது தீயசெயலாகும் என்று வேறு சில சமயத்தவர் கருதுகின்றனர். மேற்கூறிய கருத்துகள் ஆய்வாளர், சமய வல்லுநர் ஆகியோரிடம் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. அவற்றுட் சில; எந்தவிதச் செயலும் செய்யாமலிருந்தால் முத்திநிலை எவ்வாறு அடைய முடியும், செயலின்றி இருப்பதும் ஒருவிதமான செயலோடு பிணைக்கும் தன்மையை ஏற்படுத்தும். உலகில் தன் கடமையைச் செய்து கொண்டிருப்பலன் பிறவியிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? எப்படிக் கருமம் வருங்காலப் பிறவியில் செயற்படுகிறது? சீவன் முத்தர்கள் (Jivan Muktas) இந்தப் பிறவியிலே முக்தி நிலையடைகிறார்கள். அவர்கள் எப்படிச் செயற்படாமல் வாழ்கிறார்கள்? மக்களின் நிகழ்கால வாழ்க்கை நிலை கடந்தகாலச் செயல்களின் அடிப்படையில் தான் இருக்கிறதென்றால் சுதந்திரமான எண்ணங்களுக்கு இடமேது? மேலே எழுப்பப்பட்ட வினாக்களுக்குச் சில விடைகள் தரப்படுகின்றன. சமணர்கள் கருத்துப்படி. கருமத்தினால் ஏற்பட்ட பயன்கள் அல்லது பலன்களைச் சிறந்த நோன்புகளினால் மாற்றிவிடலாம். பௌத்தர்களின் கருத்துப்படி, செயல்களைவிட எண்ணங்கள் தாம் கருமத்தின் அடிப்படைக் காரணம்.<noinclude></noinclude> 4y757k4qzon8gmszi9p93i48nu4ney9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/807 250 640382 1954483 1924642 2026-07-18T03:58:42Z Sridevi Jayakumar 15329 1954483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருமம்‌|779|கருமயோகம்‌}}</noinclude>கருமத்திற்கு ஆசை மற்றொரு காரணம்; அதனை ஒழித்து விட்டால் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும். சங்கரர் கருத்துப்படி, கருமம் என்பது அறியாமையின் அடிப்படையில் எழுந்தது, ஆன்மாவே உண்மையானது, மற்றவை யெல்லாம் உண்மையல்ல என்று அறிந்தவுடன் விடுதலை கிடைக்கின்றது. ஒரு மனிதன் வருங்காலத்தில் ஒரு துறவியாக அல்லது புனிதமான மனிதனாக மாறுவதற்கு எண்ணுவதுண்டு. அதற்கு இறையருள் துணை செய்வதுண்டு. பகவத் கீதையில், மனிதன் பயன்கருதாமல் கடமையைச் செய்ய வேண்டுமென்பதும், கடவுளிடம் தன்னை ஒப்படைத்துவிட்டால் கரும பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவான் என்பதும் கூறப்பட்டுள்ளன. மகாயான பௌத்தத்தில் (Mahayana Buddhism), ஒரு மதகுரு (Bodhi Sattva) தகுதியில்லாதவர்களையும் தம்முடைய தியாகத்தினால் ஈட்டிய புண்ணிய பலன்களைக் கொடுத்து நிருவாண நிலையடையச் செய்ய முடியும். கருமத்தால் ஏற்படும் பந்தங்களை அருளினாலும், நம்பிக்கையினாலும் ஒரு குரு நீக்கிவிடக்கூடும். கருமம் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி. சிறந்த மருத்துவ வல்லுநர்கள் கூட, ஒரு மனிதன் பண்புகளைத் தாய் தந்தையரிடமிருந்து மட்டும் பெறுவதில்லை என்ற கருத்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். மேலும், கருமத்தின் பலன்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு குயவன் தன் சக்கரத்தைச் சுழற்றும் செயலை நிறுத்திய பிறகும் அது சுழன்று கொண்டிருப்பதைப்போலக் கருமத்தின் பலன்கள் தொடரும். பௌத்தர் காரணம் (Cause) சரியாகத் தெரிந்தால், அதன் காரியத்தை (Effect) சரியாகக் கூறலாம் என்று கூறுகின்றனர். புத்தர் காலத்தில் வாழ்ந்த மக்காலி கோசாலா (Makkhali Gosala) ஊழ் வலிக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராயிருந்தார். ஆகையினால், கௌதமபுத்தர் அவரைக் குறை கூறினார். சமணர்கள், ஆன்மா எத்தகைச் செயலையும் செய்வதற்குத் தகுதியுடையதாகையால், கருமத்திற்கு அடிமையாக வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். கருமவிதி (Law of Karma) ஒழுங்காகச் செயற்படுதற்கு ஓர் இயக்குநர் தேவை என்றும், அவரே கடவுள் எனப்படுவாரென்றும், அவரை வணங்குவதின் மூலம் கருமபந்தங்களைக் குறைக்கலாம் என்றும் சிலர் நம்புகின்றனர். {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Dasgupta, S.N.,</b> A History of Indian Philosophy, Cambridge, 1922. <b>Paranjothi, V.,</b> Saiva Siddhanta, London, 1954. <b>Zimmer, H.,</b> Philosophies of India, New York, 1957. <section end="கருமம்"/> <section begin="கருமயோகம்"/> {{dhr}} {{larger|<b>கருமயோகம்</b>}} உயிர்கள் வீடுபேறடையப் பகவத் கீதை கூறும் வழிகளுள் ஒன்று. கருமம் என்பது செயல் என்றும், யோகம் என்பது இணைதல் அல்லது சேர்தல் என்றும் பொருள்படும். உயிர்கள் எத்தகைய செயல்களை எந்த முறையில் செய்தால் இறைவனை அடைய முடியும் என்பதனை விளக்குவதே கருமயோகம் ஆகும். உயிர் உடலில் நிவைத்திருக்கும் பொழுது அறியாமையினால் தன்னைப் பிரித்துணராது, உடலுடன் சேர்த்தே மனிதனாகக் கருதுகிறது. மனித வாழ்க்கை செயல்களால் ஆனது. செயல்கள் எண்ணங்களினாலோ சொற்களினாலோ உடல் நிலைகளினாலோ செய்யப்படுகின்றன. பொதுவாக மனிதர்கள் புலன்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பொருள்களை விரும்பி அல்லது வெற்றி போன்ற எதிர்காலப் பயன்களைக் கருதிச் செயல்களைச் செய்கின்றனர். இவ்வாறு பயன்கருதிச் செய்யப்படும் செயல்கள் காமிய கருமம் எனப்படுகிறது. இக்காமிய கருமங்களை மனிதன் தன்னுணர்வும் (அகங்காரம்), உடைமை உணர்வும் (மமகாரம்) கொண்டு செய்தால் அவை உயிரின் உயர்வுக்கு உதவுவதில்லை. மாறாக அவை மேன்மேலும் உயிர்களைத் தளைக்கு (பந்தத்திற்கு) உட்படுத்துகின்றன. மேலும் காமிய கருமங்கள், ஒருவன் விரும்பிய பயனை அளிக்காத நிலையில் அவனைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. கோபம் அம்மனிதனை ஒருவகைக் குழப்பத்தில் ஆழ்த்தி, முடிவில் அறநிலையிலிருந்தே தவறச் செய்து விடுகின்றது. செயல்கள் இவ்வாறு மேலும் தளையை உண்டாக்கும் என்பதால், செயல்கள் செய்வதை விட்டு விடுவதனாலோ அல்லது கடமைகளைத் துறந்து விடுவதனாலோ முழுமையை (Perfection) அடைந்து விடலாம் என்று கருதினால் அது தவறாகும். செயலற்ற நிலை என்பது இயலாத ஒன்று. ஏனெனில் மனித உடல் பருப்பொருளுக்கு அடிப்படையான பிரகிருதி என்னும் பொருளால் ஆனது. இப்பிரகிருதி சத்துவம் அல்லது தூய்மை, இராசசம் அல்லது செயல், தாமசம் அல்லது சோர்வு எனும் மூன்று குணங்களால் ஆனது. மனித உடலிலும்<noinclude></noinclude> hw5ml4kzdbhxcy2noflv9n0o1yd9w3l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/809 250 640386 1954484 1924650 2026-07-18T04:00:04Z Sridevi Jayakumar 15329 1954484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருமயோகம்‌|781|கருவூர் ஆனிலை}}</noinclude>வைசியர்களுக்கு உரிய கடமைகளாகும். ஏனையயோர்க்குப் பணிபுரியும் கடமை சூத்திரர்களுக்கு உரியதாகும். மனிதர்கள் தமக்கு இயல்பாய் அமைந்த கடமைகளுடன் ஐவகை வேள்விகளான இறைவனை வணங்குதல், புனித நூல்களைக் கற்றுத் தெளிதல், பெற்றோர்களையும் முன்னோர்களையும் பற்றிய உயர்ந்த எண்ணங்களை அவர்களின் நலனுக்காகச் சிந்தித்தல், பிற மனிதர்களுக்குச் சேவை செய்தல், ஏனைய உயிரினங்களின் நலனுக்குகந்ததைச் செய்தல் ஆகிய அன்றாடக் கடமைகளையும் செய்ய வேண்டும் என்று கீதை கூறுகின்றது. இவ்வேள்விகள் முறையே தேவ யக்ஞம், பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், மானுட யக்ஞம், பூதயக்ஞம் எனப்படுகின்றன. மனிதர்களுக்கு அவர்களுடைய இயல்புகளினால் (சுபாவம்) அமைந்த கடமைகளைச் செய்வது அறமாகும். இதைச் சுவதர்மம் எனப் பகவத் கீதை உரைக்கின்றது. எனவே, ஒருவர் தம் இயல்பால் தமக்கு அமையப் பெற்ற கடமைகளை மட்டுமே செய்ய வேண்டும். பிறருடைய கடமைகளைத் தம்மால் சிறப்பாகவும் முழுமையாகவும் செய்ய இயலும் என்றாலும் அவற்றைச் செய்யக்கூடாது. தமக்குரிய கடமைகளை நிறைவாகச் செய்ய இவலாது எனினும் அவற்றைச் செய்வதே முறையாகும். இவ்வாறு ஒருவர் தமக்குரிய கடமைகளை மட்டும் செய்வதனால் சமுதாயத்திற்கும், தமக்கும் நன்மை செய்தவராகின்றார். மேலும், இவ்வாறு கடமைகளைச் செய்வதனால் தம்மை உடலினின்றும் வேறான உயிராக உணர முடியும் அதனால் இறுதியில் இறைவனிடமும் கொண்டு சேர்க்கப்படலும் உண்டாகும். மனிதர்கள் தமக்குரிய கடமைகளைச் செய்யும் போது எந்தவிதப் பற்றுடனும் செய்யக்கூடாது என்கிறது பகவத் கீதை. பற்றுடன் தம் கடமைகளைச் செய்கின்றபோது அவை காரிய கருமங்கள் என்ற தன்மையைப் பெற்றுத் தளைக்குக் காரணமாகி விடலாம். இக்காரிய கருமங்கள். கருமங்களின் கட்டுப்பாட்டில் ஒருவரைப் பிடித்து வைத்துத் தொடர்ந்து பிறப்பு இறப்புச் சுழற்சியில் ஆழ்த்தி விடும். எனவே, தமக்குரிய கடமைகளைப் பற்றுதலின்றிச் செய்கின்ற போது, அவை பலன் கருதாத கருமங்களாகும். பலன் கருதாத கருமங்களாகச் செயல்களைச் செய்தால் அவை உயிர்களை இறைவனிடம் சேர்க்கும் யோகமாகி விடும். இதனையே பலன் கருதாத கருமயோகம் என்கிறது கீதை. பலன் கருதாத கருமயோகம் செயல்களின் பயன்களையே துறந்து விடக் கூறுகிறது; செயல்களைத்துறவிடக் கூறவில்லை. கடமைகளைக் கடமைக்காகவே செய்வதை மேலை நாட்டு அறவியலாகும் கூறுகின்றனர். இம்முறையையே வழிகாட்டிகளாக விளங்கும் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், மனிதனாக இருக்கின்ற எவராலுமே முழுவதும் எந்தப் பற்றுதலுமின்றிச் செயற்படுதல் என்பது இயலாததாகும். எனவே, பகவத்கீதை அனைத்துப் பற்றுதல்களையும் விட்டுவிட்டு இறைவன் மீது மட்டுமே பற்று வைத்துக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இக்கருத்தையே திருக்குறளும் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றது, இவ்வாறு இறைப்பற்று ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தமக்குரிய கடமைகளைச் செய்வது இறைத் தொண்டு அல்லது கைங்கரியம் என்று கூறப்படுகின்றது. இறைத் தொண்டு இறையடியார் தொண்டாகச் செற்யப்படும்பொழுது அது இன்னும் இறந்ததா கருதப்படுகிறது. இதன் பொருட்டே ‘மக்கள்தொண்டே மகேசன் தொண்டு’ என்று இன்றைய நாளில் பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும், செயல்கள் எந்த முறையில் செய்யப்பட்டாலும் அவை தமக்குரிய பயன்களை அளிக்காமல் இருப்பதில்லை. எந்தவிதப் பற்றுமின்றி இறையின் மீது கொண்ட ஒரே பற்றுதலுடன் பலன் கருதாக் கருமமாகச் செயல்களைச் செய்தாலும் அவையும் பயன்களைக் கொடுக்கவே செய்யும். அவ்வாறு வருகின்ற பயன்களைக் கருமயோகி இறைவனுக்கே அளித்துவிட வேண்டும், செயலின் பயன்களை இறைவனுக்கு அளிப்பது கரும பலத் தியாகம் எனப்படுகிறது. இந்நிலையில் கடமைகளைச் செய்கின்றவர்கள் தாம் செய்வதாகக் கருதாமல் இறைவனே செய்வதாகவும் அதன் பயன்களும் இறைவனுக்கே உரித்தானவை என்றும் கருதுகின்றனர். அத்தகையவர்களிடம் உடலின் இயல்புகள் அடங்கி உயிரின் இயல்புகள் விளங்கி நிற்கும். அவ்வுயிர்களே கருமயோகத்தால் இறைவனை இறுதியில் அடைகின்றன. {{Right|<b>பி.ஆர்.ந.</b>}} <section end="கருமயோகம்"/> <section begin="கருவூர்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்:</b>}} காண்க: கரூர். <section end="கருவூர்"/> <section begin="கருவூர் ஆனிலை"/> {{dhr}} {{larger|<b>கருவூர் ஆனிலை</b>}} இப்போது கரூர் என்று வழங்கப்பெறும் ஊரிலுள்ள சிவன் கோயிலின் பெயராகும். இவ்வூர், கொங்குநாட்டிலுள்ள ஏழு சைவத் திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பசுபதிநாதர்; இறைவி கிருபா நாயகி. அயன் அயர்ந்து துயில் கொண்ட போது காமதேனு பசுபதீசுவரரைப் பூசித்துப் பெற்ற வரத்தினால் படைப்புத் தொழில் செய்யும் நிறம் பெற்றது. அதனால், இவ்வூர் கருவூர் என்ற பெயர் பெற்றதென்றும், அயன் இறைவனை வழிபட்டு முதன்முதல் உலகைப்<noinclude></noinclude> q18kiqcfhoj03az78ddwzxth4ppd8fq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/810 250 640427 1954487 1924805 2026-07-18T04:17:17Z Sridevi Jayakumar 15329 1954487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்‌ ஓதஞானி|782|கருவூர்க் கதப்பிள்ளை}}</noinclude>படைக்கத் தொடங்கினதால் கருவூர் என்ற பெயர் பெற்றதென்றும் கூறுகின்றனர். கருவூர் ஆனிலைக் கோயிலின் முகப்பில் இராசகோபுரம் உள்ளது; ஏழுநிலைகளை உடையது. அதன் உச்சியில் 7 கலசங்கள் உள்ளன. சுற்றுப்புறச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள 17 கல்வெட்டுகளுள் 6 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை, கி.பி. 11,12,13–ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எழுநிலைக் கோபுரம் தாண்டினால் சிறிது நூரத்தில் மற்றொரு சிறுகோபுரம் தெரிகிறது. உட்கோபுரம் 5 நிலைகளையுடையது. அதன் முகப்பில் முன் மண்டபம் ஒன்றும் உள்ளது. அங்கு நூற்றுக்கால் மண்டபம் ஒன்று உள்ளது. அதனைப் புகழ்ச் சோழர் மண்டபம் என்று குறிபிடுகின்றனர். புகழ்ச் சோழர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராகத் திகழ்பவர். முதலில் உறையூரைத் தம் தலைநகராகக் கொண்ட புகழ்ச் சோழர் பின்னர்க் கருவூரைத் தலைநகராகக் கொண்டார். சிவகாமி யாண்டார், எறிபத்தநாயனார், கருவூர்த் தேவர் என்பார் வாழ்ந்த பெருமை இவ்வூருக்குண்டு. திருவிசைப்பாப்பாடிய கருவூர்த் தேவருக்கு இக்கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் கோயில் உள்ளது. திருஞான சம்பந்தர் கருவூருக்கு வந்து திருவானிலைக் கோயிலுட் புகுந்து இறைவனை வணங்கித் திருப்பதிகம் ஒன்று பாடினார். அது ‘தொண்டெலா மலர் தூவியேத்த நஞ்சுண்ட லாருயி ராய தன்மையர்’ என்று தொடங்குகிறது. கருவூர்ப்புராணம் ஒன்று கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. அதன் ஆசிரியர் பெயர் நூலில் காணப்படவில்லை. கருவூர்த் தவச் சிறப்பும் ஆனிலையப்பரை வழிபட்டுக் கதி பெற்ற புகழ்ச் சோழர், எறிபத்தர், கருவூர்த்தேவர் முதலியோர் பற்றியும் புராணத்தில் பேசப்பட்டுள்ளன. {{Right|<b>மு.மா.</b>}} <section end="கருவூர் ஆனிலை"/> <section begin="கருவூர் ஓதஞானி"/> {{dhr}} {{larger|<b>கருவூர் ஓதஞானி:</b>}} காண்க: ஓதஞானி. <section end="கருவூர் ஓதஞானி"/> <section begin="கருவூர்க் கண்ணம்பாளனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்க் கண்ணம்பாளனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் ஊர் கருவூர்; சேரநாட்டகத்துள்ளது. ஊர்ப்பெயரோடு இயற்பெயரைச் சேர்த்து இவர் வழங்கப்பெற்றுள்ளார். இவர் பெயர் கண்ணம்பாணனார் எனவும், கள்ளம்பாளனார் எனவும் காணப்படுகின்றன. ஏடெழுதுவோர் பிழையால் இவ்வேறுபாடு அமைந்திருக்கலாம். இவர் தம் பாடல்களாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் (180, 263), நற்றிணையில் ஒரு பாடலும் (148) ஆக மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவர் கூறிய குறை நயப்புப் பாடல் (அகம். 180) கற்றாரைப் பெரிதும் மகிழ்விக்கும் தன்மை வாய்ந்துள்ளது. நெய்தல் திணையில் அமைந்த அப்பாடலில், தலைவன் தோழியிடம் தலைவியைத் தன்னோடு சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறான். தோழியும் தலைவியிடம் தலைவனது எண்ணத்தை வெளிப்படுத்தி உடன்படுமாறு செய்கிறாள். தலைவி அறியாவண்ணம் மறைந்து தலைவன் நிற்க, தலைவி தன் பிரிவுத் துன்பத்தை எடுத்துக் கூறுவதோடு ஊர்மக்கள் அவர் தூற்றுவதனை எடுத்தியம்புவதாகவும் பொருள் கொள்ளுமாறு அப்பாடல் அமைந்துள்ளது. மேலும், அப்பாடல், குவளைக் கண்ணி சூட்டி, இளமுலை நோக்கி நெடிது நினைந்து, நில்லாது பெயர்ந்த தலைவனை அழகுறக் காட்டுகிறது. மற்றொரு பாடல் ‘மகட்போக்கிய தாய் சொல்லியது’ என்னும் துறையில் (அகம். 263) அமைந்துள்ளது. தலைவியின் உடன்போக்குணர்ந்த செவிலித்தாய் ஆற்றாமையால் தன்னெஞ்சிற்குச் சொல்லியதாக அமையும் அப்பாடலில், ‘ஒளிறுவேல் கோதை ஒம்பிக் காக்கும் வஞ்சியன்னவென் வளநகர் விளங்க இனிதிற் புணர்க்குவென் மன்னோ’ என்னும் வரிகள் இடம்பெற்றுள்ளன. செவிலித்தாய் வருந்திப் பேசுவதாக அமைந்த பகுதி இது. கோதை என்னும் சேர மன்னன் ஓம்பிக் காக்கும் வஞ்சி நகரம் தலைவியின் இல்லத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது. தலைவன் தலைவி இருவரும் உடன்போக்கினை மேற்கொள்ளாமல் இல்லத்திலேயே மணம் முடித்துக் கொண்டிருந்தால் அந்நிகழ்ச்சி தனது இல்லத்திற்கு மங்கலமாக அமைந்திருக்கும் எனக்கருதும் செவிலித்தாயின் மனநிலை அப்பாடலில் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்தம் நற்றிணைப் பாடல் (148) பாலைத் திணையில் அமைந்துள்ளது. தலைவனின் பிரிவுணர்ந்து வருந்தும் தலைவியை நோக்கித் தோழி வற்புறுத்தும் பாங்கில் உள்ள அப்பாடலில், மென்மொழி கூறியும் பெண்புலியின் பசித்துன்பத்தைத் தீர்த்தற்காக ஆண் புலி, ஆண்யானையின் புகர்முகத்தில் பாயும் காட்சி அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது. {{Right|<b>து.ப.</b>}} <section end="கருவூர்க் கண்ணம்பாளனார்"/> <section begin="கருவூர்க் கதப்பிள்ளை"/> {{dhr}} {{larger|<b>கருவூர்க் கதப்பிள்ளை</b>}} சங்கப் புலவருள் ஒருவர். இவரது ஊர் கருவூர். ‘கதப்பிள்ளையார்’ என்றும் ‘கருவூர்க் கந்தப்ப பிள்ளை’ என்றும் இவர் பெயர் காணப்படுகிறது. இவர் தொகை நூல்களான புறநானூற்றில் ஒரு பாடலும் (புறம். 380), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (குறுந். 64,265,380). நற்றிணையில் ஒரு பாடலும் (நற். 135) ஆக ஐந்து பாக்களைப் பாடியுள்ளார். {{nop}}<noinclude></noinclude> 3vb9mjspbt4z5z6ut8rt3avvc7uwj5x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/811 250 640439 1954488 1924872 2026-07-18T04:20:16Z Sridevi Jayakumar 15329 1954488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்க்‌ கதப்பிள்ளை|783|கருவூர்க்‌ கலிங்கத்தனார்‌}}</noinclude>இவர் தம் புறநானூற்றுப் பாடலில் நாஞ்சில் மலைத் தலைவன் வள்ளுவனைச் சிறப்பித்து இயன் மொழித் துறையில் பாடியுள்ளார். குறுநிலத் தலைவனான நாஞ்சில் வள்ளுவனின் வீரச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் அப்பாடல் புலப்படுத்துகின்றது. அவனை இப்புலவர் காணச் சென்றபோது, அவன்‌ பெருஞ்செல்வம்‌ கொடுத்து இவரைச்‌ சிறப்பித்‌திருக்கிறான்‌. ‘நாஞ்சில்‌ மமலயை உடைய வள்ளுவன்‌, பாண்டியருக்குத்‌ தானைத்‌ தலைவன்‌; பகை கொண்‌டார்க்கு நினைவுக்‌ கெட்டாத சேய்மையில்‌ உள்ளவன்‌; நட்புடன்‌ தன்பால்‌ வருவேரர்க்கு உள்ளங்கை போல நெருங்கிய அண்மையில்‌ உள்ளவன்‌; எங்கும்‌ மக்கள்‌ வறுமையுற்று வருந்தும்‌ காலம்‌ வந்தபோதிலும்‌, என்‌ சுற்றத்தார்‌. அத்துன்பமின்றி இனிது மகிழ்ந்துள்ளனர்‌’ என்று இப்பாடலில்‌ குறித்துள்ளார்‌. இவரது இப்பாடல்‌ இடைஇடையே சிதைந்துள்ளது. ‘வல்வேற்‌ சாத்தன்‌ நல்லிசை’ என்ற தொடரை, அடுத்து வரும்‌ அடி சிதைந்து போனதால்‌ ‘சாத்தன்‌’ என்பது யாரைக்‌ குறிக்கிறது என அறிய இயலவில்லை என்றார்‌ ஔவை சு. துரைசாமிப்பிள்ளை. ஆனால்‌, டாக்டர்‌ உ.வே. சாமிநாதையர்‌ ‘வல்வேற்‌ கந்தன்‌’ என்று இதனைப்‌ பாடங்கொண்டு, கந்தனென்பது நாஞ்சில்‌ மலைத்‌ தலைவர்‌ பரம்பரையிலுள்ளானும்‌, இப்பாட்டுடைத்‌ தலைவனுமாகிய ஒருவன்‌ பெயர்‌ என்று கூறியுள்ளார்‌. இப்பாடபேதத்‌தால்‌, நாஞ்சில்‌ வள்ளுவன்‌ ‘கந்தன்‌’ என்று அழைக்கப்‌பட்டதாகத்‌ தெரிகிறது. குறுந்தொகையில்‌ முல்லைத்திணையாக அமைந்த இவரது பாடல்‌ (64) தலைவன்‌ பிரிவை ஆற்றாமலிருந்த தலைவியிடம்‌ ‘அவர்‌ நின்‌ துன்பத்தை அறிவர்‌; ஆதலின்‌ விரைவில்‌ மீள்வர்‌’ என்ற தோழிக்கு, ‘அவர்‌ அறித்தவராயிருந்தும்‌ இன்னும்‌ வந்திலரே’ என்று தலைவி வருந்திக்‌ கூறுவதாக உள்ளது. வரை பொருள்‌ ஈட்டி வரத்‌ தலைவன்‌ பிரிய அவன்‌ வரையாது. பிரிந்தானென வருத்திய தலைவிக்கு, அவன்‌ பிரிந்த காரணம்‌ கூறித்‌ தோழி ஆற்றுவிப்பதாகக்‌ குறுந்தொகையில்‌ குறிஞ்சித்‌ திணையில்‌ அமைந்த இவரது பாடல்‌ (265) உள்ளது. குறுந்தொகையில்‌ பாலைத்‌திணையில்‌ அமைந்த இவரது பாடலும்‌ (380) தலைவன்‌ பிரிவையே மையமாகக்‌ கொண்டு தோழி தலைவிக்குக்‌ கூறுவதாக அமைந்துள்ளது. நற்‌றிணையில்‌ நெய்தல்‌ திணையாக உள்ள இவரது பாடல்‌ (135) வரையாது காலம்‌ நீட்டிக்கும்‌ தலைவனைத்‌ தோழி வரைவிற்கு உடன்‌படுத்துவதாக அமைந்துள்ளது. தொகை நாலுள்‌ ‘கருவூர்க்‌ கதப்பிள்ளைச்‌ சாத்தனார்‌’ என வேறொரு புலவர்‌ காணப்படுகிறார்‌. அவர்‌ மூன்று பாடல்களைப்‌ (அகம்‌ 309, நற்றிணை 343, புறம்‌ 168) பாடியுள்ளார்‌. அவர்‌ கருவூர்க்‌ கதப்பிள்ளையின்‌ மகனார்‌ எனக்‌ கொள்ளல்‌ தகும்‌. {{Right|<b>இராம.ச.</b>}} <section end="கருவூர்க் கதப்பிள்ளை"/> <section begin="கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்</b>}} சங்க காலப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. இவரைக்‌ கருவூர்க்‌ கந்தப்பிள்ளை சாத்தனார்‌ என்றும்‌ குறிப்பிடுகின்றனர்‌. இவர்‌ கருவூரைச்‌ சேர்ந்தவர்‌ என்றும்‌, கதப்பிள்ளை என்பது தந்தையார்‌ பெயராகலாமென்றும்‌, புலவர்தம்‌ இயற்பெயர்‌ சாத்தனார்‌ என்றும்‌ அறிஞர்‌கள்‌ கருதுகின்றனர்‌. இவரால்‌ பாடப்பெற்றவன்‌ குதிரை மலைத்‌ தலைவனும்‌, சேரனுடைய படைத்தலைவனுமான பிட்டங்கொற்றன்‌ எனப்படுவான்‌. இவர்‌ இயற்றியனவாக 3 பாடல்கள்‌ (அகம்‌. 309, நற்‌. 343, புறம்‌. 168) காணப்படுகின்றன. கருவூர்க்‌ கதப்பிள்ளை என்பவர்‌ இவரினும்‌ வேறானவர்‌. இவரது அ௧நானூற்றுப்‌ பாடல்‌ பாலைத்‌ திணையில்‌, ‘பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத்‌ தலைமகள்‌ சொல்லியது’ என்னுத்‌ துறையினைக்‌ கொண்டது. நல்ல போர்‌, திறங்‌கொண்டவனும்‌ திருந்திய வீரக்‌ கழலணிந்தவனும்‌ ஆகிய சேரனின்‌ சேவடியை யாவரும்‌ விரும்பிச்‌ செல்‌வதைப்‌ போன்று, குன்றுகள்‌ நிறைந்த நெறிகளையுடைய நம்‌ தலைவர்‌ வாழும்‌ நாட்டிற்கு நாமும்‌ சென்றால்‌ என்ன? என்று கேட்கும்‌ தலைவியின்‌ கூற்றின்வழி, அவளுடைய காதல்‌ உணர்வினை வெளிப்படுத்திக்‌ காட்டுகிறார்‌ புலவர்‌, ‘தலைமகள்‌ பிரிவிடை யாற்றாளாய்ச்‌ சொல்லியது’ என்னும்‌ துறையிலமைந்த நற்றிணைப்‌ பாடலில்‌, தலைவன்‌ சென்ற நாட்டிற்கு இப்‌‘பையுள்‌ மாலை’யும்‌ செல்‌லாதோ என்று தலைவி பிரிவுத்‌ துயரால்‌ நொந்து கூறுகின்றார்‌. இவர்தம்‌, புறநானூற்றுப்‌ பாடல்‌ பிட்டங் கொற்றனின்‌ கை வண்மையைச்‌ சிறப்பித்துப்‌ பேசுகிறது. {{Right|<b>க.கோ.</b>}} <section end="கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்"/> <section begin="கருவூர்க் கலிங்கத்தனார்‌"/> {{dhr}} {{larger|<b>கருவூர்க் கலிங்கத்தனார்‌</b>}} சங்க காலப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. கலிங்கத்தார்‌ என்பது இவர்‌ இயற்பெயராக இருக்கலாம்‌. இவ்வியற்‌ பெயரோடு கருவூர்‌ என்னும்‌ ஊர்ப்‌ பெயரையும்‌ சேர்த்துக்‌ கருவூர்க்‌ கலிங்கத்தார்‌ என வழங்கப்‌ பெற்றார்‌ என்பர்‌. பின்னர்க்‌ காலப்‌ போக்கில்‌ கருவூர்க்‌ கலிங்கத்தார்‌ என்பது கருவூர்க்‌ கலிங்கத்தனார்‌ என மருவி வழங்கியிருக்கலாம்‌. இவர்‌ பாடிய ஒரே பாடல்‌ அகநானூற்றில்‌ (183) அமைந்துள்ளது. பாலைத்‌ திணையில்‌ அமைந்த அப்‌பாடல்‌ தலைவன்‌ வருவதாகக்‌ கூறிச்‌ சென்ற பருவம்‌<noinclude></noinclude> obc008uefwdhg2lqb9d5b7jc87g41ki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/812 250 640713 1954490 1925284 2026-07-18T04:24:15Z Sridevi Jayakumar 15329 1954490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்க்கிழார்‌|784|கருவூர்ச் சேரமான் சாத்தனார்}}</noinclude>வந்தும் அவன் வாராமையால் துன்புற்றுக் கலங்கிய தலைவி தோழிக்குக் கூறுவதாக உள்ளது. இவர் அப்பாடலில் கார் பொழிவதற்குக் காலைப் பொழுதிலேயே வந்து விட்டது எனவும், இவ்வாறு காலைப் போதிலேயே வந்து பிரிந்து உறைவாரைத் துன்புறுத்தக் கிளம்பியதெனின் கூடிக் களிக்கவேண்டிய மாலைப் போதிலும் இரவுப் போதிலும் அக்கார் எத்தகைய கொடுமையினைச் செய்யுமோ எனவும் தலைவி தோழியிடம் வருந்திக் கூறுவதாக அமைத்துப் பாடியிருப்பது சிறப்பாக உள்ளது. {{Right|<b>சு.கோ.</b>}} <section end="கருவூர்க் கலிங்கத்தனார்‌"/> <section begin="கருவூர்கிழார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்கிழார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; வேளாளர் மரபினர். இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் (170) அமைந்துள்ளது. தலைவி கூற்றாக அமைந்த அப்பாடல் தலைவன் பிரிந்து சென்ற காலத்துத் தலைவி ஆற்றாள் எனக் கவலை கொண்ட தோழிக்கு, யான் ஆற்றியிருப்பேன் என்று கூறுவதாக உள்ளது. மலையருவி கொண்டு வந்த கொறுக்கைச்சியைக் குளத்தில் நீராடும் யானை உண்ணும் மலைநாட்டையுடையவனின் நட்பு கெடாது என்று தலைவி கூறுவது, அவள் அவன்மீது கொண்டுள்ள நட்பின் ஆழத்தையும் நம்பிக்கையையும் புலப்படுத்துவதாக உள்ளது. {{Right|<b>வீ. சே.</b>}} <section end="கருவூர்கிழார்"/> <section begin="கருவூர்க் கோசனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்க் கோசனார்</b>}} சங்ககாலப் புலவர். இவர் பாடியதாக நற்றிணையில் ஒருபாடல் (214) கிடைத்துள்ளது. தலைவன், தலைவி இருவர் தம் உளநிலையை அப்பாடல் சித்திரிக்கிறது. கருவூர் என்ற பெயரில் மேலைக் கடற்கரையில் ஒன்றும், காவிரிக் கரையில் ஒன்றுமாக இரண்டு ஊர்கள் உள்ளன. சேரரின் ஆட்சி காவிரிக் கரையில் பரவியபோது, தம் நாட்டுக் கருவூர்ப்பட்டினம் நினைவாகக் கருவூர் என்ற ஊரினைச் சேரர் கண்டார் என்பர். இவற்றுள் கோசனார். எந்தக் கருவூரினர் எனத் துணியுமாறில்லை. எவ்வாறாயினும் இவர் சேரநாட்டினர் எனக் கருதுவர். கோசிகர் என்பார் ஆடை நெய்யும் சேணியராகக் கருதப்பெறுவர். பின்னர், கௌசிகன் என்னும் வடமொழியின் சிதைவாகவும் கோசிகன் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவர் பெயரைக் கருவூர்க் கோசிகனார் என ஔவை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பர். ‘கார்காலத்து வருவேன்’ எனக் கூறிப் பொருள் தேடற்குப் பிரிந்த காதலர், கார்காலம் வந்தும் வரவில்லையே, எனத் தலைவி கூற்றாகப் பாடற் கருத்தமைந்துள்ளது. அதன்கண் தலைவன், தலைவி இருவர் தம் உளநிலையைச் சித்திரிக்கும் வகையில் சங்ககாலச் சமுதாயத்தைப் புலவர் விளக்குகிறார். ‘வீட்டில் சோம்பியிருப்போர், இசையும், இன்பமும், ஈதலும் பெறார்’ எனக் கூறித் தலைவன் பிரிந்து, மலைகளைக் கடந்து, பொருள் தேடச்செல்வது ஆடவர்தம் கடமைப் பற்றையும் புறவாழ்க்கையியல்பையும் புலப்படுத்தும். பிரியும் பொழுதே, ‘தலைவியின் கூந்தல் புதுமலர் அணியுமாறு மீள்வேன்’ எனத் தலைவியின் உளம் கொளுமாறு உறுதிமொழியினை வஞ்சினமாகத் தலைவன் கூறுவது அவன் காதல் வாழ்க்கையை–அகவாழ்க்கையை –காட்டுகிறது. இவர் பாடல் சங்ககால மாந்தர் தம் கடமை வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் காட்டுவதாக அமைந்துள்ளது. இல்லை என்ற சொல் ‘இனம்’ என அப்பாடலில் காணப்படுவது ஓர் அருகிய வழக்காகும். ‘மீண்டு வருவேன்’ எனத் தலைவன் கூறும் உறுதிமொழியில், புலவர் வஞ்சினம் என்ற சொல்லைக் கையாள்கிறார். புறவாழ்க்கையில் பயிலும் வஞ்சினம் என்ற சொல் ‘அகவாழ்க்கையில்’ பயிலப் பெறுவதும் அருகிய வழக்கே. செயலின் உறுதிப்பாடே வஞ்சினம் என்ற சொல்லின் அடிப்படைக் கருத்து என்பது பாடலால் புலனாகிறது. {{Right|<b>கோ.சி.</b>}} <section end="கருவூர்க் கோசனார்"/> <section begin="கருவூர்ச் சேரமான் சாத்தனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்ச் சேரமான் சாத்தனார்</b>}} கருவூரார்; சேர மரபினர். இவரைக் ‘கொங்குநாட்டுக் கருவூரினர் போலும்’ என்பர் உ.வே. சாமிநாத ஐயர். பண்டை சங்கப் புலவர்கள் சிவன், திருமால், முருகன் ஆகிய கடவுளர்க்குரிய பெயர்களையும் சாத்தன், தேவன், பூதன் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும் தங்கள் பெயர்களாகக் கொண்டிருந்தனர். இவர் பெயரால் கடவுளன்பு கொண்ட குடியில் வந்தவர் என்ற குறிப்பினை அறிய முடிகிறது. இவர் பாட்டாகக் கிடைத்துள்ளது குறுந்தொகைச் (268) செய்யுளொன்றே. இவர் பெயருக்குக் கருவூர்ச் சேரமான் சிரத்தன் என்பது பேதம். இப்பாடல் தோழி கூற்றாக அமைந்தது. தலைவியின் அன்பையும் அச்சத்தையும் ஒருங்குணர்ந்ததோழி அதற்கொரு மருந்தாகத் தலைமகன் தலைமகளை மணந்துகொள்ளுதல் அமையும் என உணர்ந்து, அதனைத் தலைவனுக்கு அறிவிக்க முற்படுவது பாடலின் கருத்தாகும். இரவில் வந்த தலைவரைக் காலம் மிகுதியும் கழிந்து விட்டது எனக் கூறித் திருப்பி அனுப்பவும் இயலாது, வழியிடைத் துன்பத்தை அறிந்ததனால் நாளை வருகின்றீர்களா? எனக் கேட்டு வரவேற்கவும் இயலாது மனத்தே துன்புறும் தலைவியின் நிலையினை, சேறிரோ எனச்செப்பலும் ஆற்றாம், வருவிரோ என வினவிலும் வினவாம், யாங்குச் செய்-<noinclude></noinclude> ch2stiuuhylx0ha5z5czjf1m44wro68 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/813 250 640714 1954491 1925285 2026-07-18T04:25:57Z Sridevi Jayakumar 15329 1954491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்த்‌ தேவர்‌|785|கருவூர்த்‌ தேவர்‌}}</noinclude>வாம் கொல்’ என்னும் பகுதி அழகுறக் காட்டுகிறது. தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் அன்புள்ளங்களையும், தோழியின் மனநடுக்கத்தையும் அளவில் துன்பத்தையும் விளக்கும் இப்பாடல் புலவரின் புலமைத் திறத்தினை நன்கு புலப்படுத்துகிறது. {{Right|<b>ப.மு.</b>}} <section end="கருவூர்ச் சேரமான் சாத்தனார்"/> <section begin="கருவூர்த் தேவர்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்த் தேவர்:</b>}} ஒன்பதாம் திருமுறையைப் பாடிய சைவ அருளாளர் ஒன்பதின்மருள் ஒருவர். இவர் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் கொங்கு நாட்டுக் கருவூரில் அந்தணர் குளத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இன்னதென அறிய இயலவில்லை. கருவூரார் என்றும் கருவூர்ச் சித்தர் என்றும் இவரைக் குறிப்பிடுவதுண்டு. கருவூர்த் தேவர் வேதாகமங்களையும் தமிழ் அருள் நூல்களையும் நன்கு கற்றவர். போக முனிவரிடம் உபதேசம் பெற்றவர் என்றும், காயகற்பம் உண்டவர் என்றும், சித்திகள் பல கைவரப் பெற்றவர் என்றும் இவரைப் பற்றிக் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 813 |bSize = 480 |cWidth = 160 |cHeight = 197 |oTop = 273 |oLeft = 43 |Location = center |Description = }} {{center|கருவூர்த் தேவர்}} ஒன்பதாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள 29 திருப்பதிகங்களுள் 10 திருப்பதிகங்கள் இவர் பாடியன. தில்லை, களந்தை, கோட்டூர், முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சுரம், திருப்பூவணம், சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சுரம், திருவிடைமரூதூர் ஆகிய பத்துத் திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள இறைவன் மீது பாடப்பெற்றவை அவை. அப்பதிகங்கள் கருவூர்த் தேவர் திருவிசைப்பா என வழங்கப்படுகின்றன. இவர்தம் பாடல்களின் எண்ணிக்கை 102 ஆகும். இவர் பாடல்கள் இனிமையும் எலிமையும் நிறைந்தவை. இவர்தம் திருப்பதிகங்களை ‘ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை’ என்றும், ‘ஆலையம் பாகின் அணைய சொற்கருவூர் அமுதுறழ் தீந்தமிழ்மாலை’ என்றும் திருக்கடைக் காப்புச் செய்யுட்களில் குறிப்பிடுகிறார். இவர்தம் வருணனைகளும் உவமைகளும் சுவை மிக்கவை. சிவபெருமான் திருமுகமும் திருக்கண்களும் தாமரை போன்றவை என்றும், திருவாய் செவ்வாம்பல் போன்றது என்றும், கண்டம் குவளை மலர் போன்றது என்றும் ஒரு பாடலில் இவர் வருணிக்கின்றார். மெல்லிய மழைத் துளிக்குக் கரையும் பச்சை மட்கலம் தீயில் வெந்தபின் பல காலம் நீருள் கிடப்பினும் கரையாமை போல முன்னர்ச் சிறிய துன்பத்துக்கும் நிலை கலங்கிய தம் உள்ளம் இறைவனது திருவருளால் பக்குவப்பட்டப்பின் பேரிடருக்கும் கலங்கா நிலை பெற்றது என ஒரு பாடலில் இவர் கூறுகிறார். இறைவனை ‘என் குடி முழுதாளும் குழகர்’ என்றும், ‘முலைகள் தந்தருளும் தாயினும் நல்ம முக்கணான்’ என்றும், ‘பிழையெலாம் பொறுத்து என் பிணி பொறுத்தருளாப் பிச்சர்’ என்றும் இவர் உருகிப் போற்றும் பாங்கு கற்போர் உள்ளத்தைக் கரைக்க வல்லதாகும். முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்து அக்கோயிலில் பெருவுடையாரை நிறுவுகையில் மருந்து இறுகாமல் இளகிய நிலையிலேயே இருந்தது என்றும், அதனை அறிந்த கருவூர்த் தேவர் கோயிலுட் புகுந்து தம் வாயிலிருந்த தம்பலச் சாற்றை உமிழ மருந்து இறுகிற்று என்றும் செவிவழிச் செய்றியொன்று திரவி வருகிறது. இவர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் திருக்கோயிலில் நின்று இறைவனை அழைக்க, இறைவன் வாராமையால் ‘இங்குக் கடவுள் இல்லை போலும்’ என்று கூறிச் சென்றாரென்றும், அதனால் அக்கோயில் பாழ்பட, இறைவன் இவரை அழைத்துக் காட்சியளித்த பின் கோயில் செழித்தது என்றும் கூறும் செவிவழிச் செய்தியும் உள்ளது. கருவூர்த் தேவர் கருவூர்த் திருவானிலைக் கோயிலில் இறைவனுடன் கலந்தார் என்பர். இவரது திருவுருவச் சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் (திருவானிலை) கோயிலிலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. {{Right|<b>ந.மெ.</b>}} <section end="கருவூர்த் தேவர்"/> {{nop}}<noinclude> <b>வா.க. 6 – 50</b></noinclude> 7p40o20y1ye46szr4266geo5bq9nkm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/814 250 640747 1954492 1925368 2026-07-18T04:28:15Z Sridevi Jayakumar 15329 1954492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்‌ நன்மார்பன்‌|786|கருவூர்ப்‌ பூதஞ்‌ சாத்தனார்‌}}</noinclude><section begin="கருவூர் நன்மார்பன்"/> {{dhr}} {{larger|<b>கருவூர் நன்மார்பன்</b>}} கடைச்சங்கம் மருவிய புலவருள் ஒருவர்; கருவூரினர். இவர் இயற்பெயர் நன்மார்பன். உறுப்பால் வந்த பெயர் என்பர் உ.வே. சாமிநாதையர். திருமால் மார்பு திரு உறையும் மார்பாதலின், அவும் மார்பு நன்மார்பு எனவும், அவன் நன்மார்பன் எனவும் வழங்கப்பெற்றான் எனவும், அவ்விறைவன் திருப்பெயரையே இவரும் கொண்டுள்ளார் எனவும் கூறுவர் சிலர். அகநானூற்றின் 277–ஆம் பாடல் இவரால் பாடப்பட்டது. தலைவன் சென்ற வழி அவண் போவார் உடலும் உள்ளமும் சோர்ந்துவிடுவதற்குக் காரணமாய கொடுமை நிறைந்தது என்ப; அந்த வழியில் பொருள் ஈட்டிவர வேண்டித் தன் தளரா உள்ளமும், தன் கைவேலும் அன்றி வேறு துணை இன்றிச் சென்ற தலைவன், வேனிற்காலம் வந்தபின்னும் வரவில்லையே என வாட்டமுறும் தலைவியின் உள்ள நிலை அப்பாட்டில் உணர்த்தப் பெற்றுள்ளது. அப்பாடலில், ‘தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப், பகல்கழி தோற்றம் போலப் பையென, நுதல் ஒளி கரப்ப’ என்ற உவமை சிறப்பாக அமைந்துள்ளது. தலைவன் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து விடுவான் என்ற எண்ணம் சிறிது சிறிதாக உறுதியாகுந்தோறும், தலைவியின் ஒளிவீசும் அழகிய நுதல் ஒளி குறைந்து, வெளிறிப் பசந்துபோகிறது. இதற்குப் பகற்காலத்தே ஞாயிற்றின் ஒளி சிறிது சிறிது சிறிதாக விளங்கித் தோன்றுந்தோறும், திங்களின் ஒளிஞன்றிக் குறைவதை உவமையாகக் கூறியிருப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. {{Right|<b>ப.மு.</b>}} <section end="கருவூர் நன்மார்பன்"/> <section begin="கருவூர்ப் பவுத்திரனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்ப் பவுத்திரனார்</b>}} சங்க காலப் புலவர். அக்காலப் புலவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிற் பெயர் பெற்றனர். இவர் தம் ஊராற் பெயர் பெற்றுள்ளார். பவுத்திரன் என்றும் பவுந்திரன் என்றும் இருவகையாக இவர் பெயர் வழங்கப்படுகிறது. பவுத்திரன் என்றால் மனத் தூய்மையுடையவன் என்பது பொருள். இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரே ஒரு பாடல் (162) காணப்படுகிறது. அது முல்லைத்திணை சார்ந்தது. வினைமுற்றி மீளும் தலைமகள் வழியிடை மலர்ந்துள்ள முல்லையிடம் உரைப்பதுபோல் அமைந்தது. வினைமேற்கொண்டு தலைவியைப் பிரிந்துசென்ற தலைவன், வினைமுடித்த பின் ஊரை நோக்கி வருகின்றான். கார்காலம் தொடங்கும் முன்பே வருவதாக உறுதியளித்திருந்தாலும். அவனால் சற்றுக் காலங் கடந்தே வர முடிகின்றது. அதற்குள் கார்காலமும் தொடங்கி, முல்லையரும்புகளும் தோன்றி விட்டன. கார் முகிலாற் காக்கப்பட்ட நீர்வளம் உடைய முல்லை நிலம் அது. புல் மேயச் சென்ற ஆக்கள் தத்தம் இல்லங்களை நோக்கிச் செல்கின்ற மாலை வேளை. அவ்வேளையில் முல்லை, தன்னைப் பார்த்து பூத்து நிற்கும் எள்ளி நகையாடுவதாகக் கொண்ட தலைவன், ‘நகுவை போலக் காட்டல், தகுமோ மற்று – இது தமியோர் மாட்டே!’ என்று உரைக்கின்றான். கூடினார் மாட்டுக் குறுநகை புரிந்தாலும் தகும்; ஆனால், தனித்திருப்போர் மாட்டு இது தகுமோ என்று தலைவியையும் உளப்படுத்தி உரைக்கும் பாங்கு இப்பாடலில் காணப்படுகின்றது. {{Right|<b>மு.த.</b>}} <section end="கருவூர்ப் பவுத்திரனார்"/> <section begin="கருவூர்ப் பூதஞ் சாத்தனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்ப் பூதஞ் சாத்தனார்</b>}} சங்க காலப் புலவர். இவர் பெயர் கருவூர்ப் பூதஞ்சேந்தனார், கருவூர்ப்பூதனார் மகனார்கொற்றனார் என்று வேறு இருவகையாகவும் குறிக்கப்பெறுகிறது. இவர் பெயரின் வழி, இவர் கருவூரினர் என்றும் இவர் தந்தை பெயர் பூதன் என்றும் துணியலாம். இவர்தம் ஒரே பாடல் நெய்தல் நிலக்குறிப்புடனுள்ளது. தம் பெயருடன் கருவூர் என்ற ஊரினை அடைமொழியாகப் பெற்ற புலவர் சிலர் சங்க காலத்து வாழ்ந்தனர். இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு பாடல் (50) உள்ளது. தலைவன் பரத்தை ஒழுக்கம் மேற்கொண்ட நிலையில், தலைவியின் பிரிவுத் துயரைத் தோழி பாணனுக்குக் கூறும் முறையில் நெய்தல் திணையில் பாடலை அமைத்துள்ளார். தலைவியின் கண்ணீர், தோழி தலைவன் களவு ஒழுக்கத்திலும் கற்பு ஒழுக்கத்திலும் இருவேறு உளநிலையினனாதலை எண்ணுதல், தோழி, பாணனிடம் தலைவியின் துயரைத் தலைவனிடம் சென்று கூறினால் என்ன என்று வினவல் ஆகியவற்றைக் கூறும் வாயிலாகத் தலைவியின் துயரை விளக்குகிறார். தலைவி தோழிக்கு மனையைச் சார்ந்த பனையில், இரவுப் பொழுதில் துணையைப் பிரிந்து உறங்காத அன்றிலைக் காட்டித் தன் கண்ணீரை மறைத்துக் கொள்கின்றாள். தோழியிடமும் தன் துயரை வெளிப்படக் கூறாத தலைவியின் பண்புநிலை புலனாகிறது. கற்புக் காலத்துத் தலைவியை எண்ணி வாராத தலைவன் பண்பு, களவுக் காலத்து இவன்தன் மாறான பண்பைத் தோழிக்கு நினைவுறுத்துகிறது. களவு வாழ்க்கை பிறர்க்குப் புலனாகாது மேற்கொள்ள வேண்டுவது. ஆனால், தலைவனோ மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாது சேரியில் இருப்பதையும், மீனவப் பெண்கள் களவு ஒழுக்கத்தை அலர் தூற்றுவதையும் பொருட்படுத்தாது, தன் உடனுறைவைத் தான் ஊர்ந்துவந்த தேர் மற்றவர்க்குப் புலப்படுத்திக் கொண்டு நிற்ப, பகலும் பிரியாது நெடும் பொழுது தலைவியுடன் பொழுது கழிக்கும் மனநிலையினனாய் இருந்தாள். இவ்வாறு களவுக் காலத்தும் கற்புக்<noinclude></noinclude> e0pwgq6qd9oxd7s6syh58pn5xvwh9gz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/815 250 640748 1954494 1925372 2026-07-18T04:31:35Z Sridevi Jayakumar 15329 1954494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருவூர்ப்‌...|787|கரூர்‌}}</noinclude>காலத்தும் தலைவனின் இருவேறான மனநிலையைப் புலவர் தோழிவழித் தெளிவுறுத்துகிறார். தோழி பாணனிடம் ‘தலைவனைச் சார்ந்து தலைவியின் துயரைக் கூறினால் என்ன?’ என வினவுவது, தலைவன் தலைவியர் இல்வாழ்க்கையில் தோழி பாணன் ஆகியோரின் கடமைப்பொறுப்பினைக் காட்டுவதாக உள்ளது. {{Right|<b>கோ.சி.</b>}} <section end="கருவூர்ப் பூதஞ் சாத்தனார்"/> <section begin="கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்"/> {{dhr}} {{larger|<b>கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சதுக்கம் என்பது நான்கு தெருக்கள் கூடுமிடம். அப்படிப்பட்ட இடங்களில் பூதங்கட்ருக்கோயில் எடுத்து வழிபடுவதைப் பண்டைத் தமிழகத்துப் பேரூர் மக்கள் மரபாகக் கொண்டிருந்தனர். அவ்வாறே, கருவூரிலும் ஒரு பூதம் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தின் 28–ஆம் காதையில் ‘சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து மதுக்கொள் வெள்ளி வேட்டோனாயினும்’ (சிலப் 28:147–148) என வரும் வரிகளால் கருவூரில் சதுக்கப் பூதம் இருந்தமை உறுதியாகிறது. வஞ்சியைக் கருவூரெனப் புறநானூற்றின் பழைய உரை (39:17) கூறுகிறது. இச்சதுக்கப்பூதத்தின் பெயர் இவருக்கு எய்தியது போலும். இவர் பாடியதாகப் புறநானூற்றின் 219-ஆம் பாடல் அமைந்துள்ளது. தம் மக்கள் மாண்பிலராயினர் என்ற மனவெறுப்பால் வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர்விடத் துணிந்த கோப்பெருஞ்சோழனை நோக்கி மனமுருகப் பாடியவர்களுள் இவரும் ஒருவர். அதில் இவர் கோப்பெருஞ்சோழனை, ‘உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல், முழுஉ வள்ளுர முணக்கு மள்ள’ என்று விளித்துள்ளார். உயிர் விடத் துணிதல் அரிது. உடல் சிறிதுசிறிதாகக் கழிய உயிரை விடுதம் அரிதினும் அரிது. கோப்பெருஞ்சோழன் மழை, வெயில், பனி, காற்று இவற்றிற்கு அஞ்சாது அவற்றால் உடல் அழிய உயிர்விடத் துணிந்துள்ளான் ஆதலின் அவனை வீரன் எனப் பொருள்படும் ‘மள்ள’ என்ற சொல்லால் விளித்துள்ளமை சிறப்பாகவுள்ளது. {{Right|<b>ப.மு.</b>}} <section end="கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்"/> <section begin="கரூர்"/> {{dhr}} {{larger|<b>கரூர்</b>}} தமிழகத்தின் தொன்மையான நகரம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சியை அடுத்த பெரிய நகரமாக இது விளங்குகிறது. கரூர் வருவாய்க் கோட்டத் தலைநகராகவும், பஞ்சாலைத் தொழில் நகரமாகவும் சிறந்து விளங்குகிறது. கொங்கு நாட்டின்கண் உள்ள பாடல் பெற்ற சிவத் தலங்கள் ஏழனுள் கரூர் முதன்மையானது. கைத்தறி நகரமான கரூர் தமிழகத்தின் சிறந்த தொழில் நகரமாகவும் புகழ் பெற்றுள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்து மேற்கே 70 கி.மீ. தொலைவில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கரூர், மதுரை–சேலம், திருச்சி–கோவை, மதுரை–பெங்களூர் நெடுஞ் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 815 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 198 |oTop = 62 |oLeft = 264 |Location = center |Description = }} {{center|கருர்}} சாலையில் அமைந்துள்ளது. திருச்சி–ஈரோடு தொடர் வண்டிப் பாதை கரூர் வழியாகச் செல்கிறது. கரூருக்கு மேற்கில் ஈரோடும், கிழக்கில் குளித்தலையும், தெற்கில் திண்டுக்கல்லும், வடக்கில் நாமக்கல்லும் அமைந்துள்ளன. கரூருக்கு அருகில் நெரூர் சோமூர், திருமுக்கூடல், ஆறுநாட்டார் மலை, திருவெஞ்சமாக்கடல் முதலான வரலாற்றுப் புகழ் மிக்க பகுதிகளும் உள்ளன. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கரூர் முன்பு கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கியது. இந்நகர் வஞ்சி, வஞ்சுளாரணியம், வஞ்சித்தாய் ஊர், ஆதிபுரம், கரபுரம், கர்ப்பபுர், கருவூர் பாற்கரபுரம், சண்மங்கலசேத்திரம், வீரசோழபுரம், முடிவழங்கு சோழபுரம் முதலான பெயர்களாலும் வழங்கப்பட்டது. ‘கரூர்ப் புராணம்’ என்னும் நூல் கரூரின் பழம் பெருமையை விரித்துக் கூறும், இந்தகரம் வஞ்சி என்னும் பெயரில் சங்க காலச் சேர வேந்தரின் தலைநகராகத் திகழ்ந்தது; பின்னர்ச் சோழ வேந்தர் முடிசூடும் கோநகராகவும் சில காலம் விளங்கியது. சங்க இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும், அயல்நாட்டவர் குறிப்புகளும் கரூரின் வரலாற்றை அறிய உதவுகின்றன. ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை, சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை முதலான சேர மன்னர்களும்; குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன், புகழ்ச்<noinclude> <b>வா.க. 6 – 50அ</b></noinclude> hho8tgxe4nhzv1xf6uqwspf5ot1d95v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/816 250 640752 1954495 1925395 2026-07-18T04:32:24Z Sridevi Jayakumar 15329 1954495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருர்‌|788|கரைநிலஞ் சார்ந்த உரிமை}}</noinclude>சோழன் முதலான சோழ வேந்தர்களும்; கோச் சடையன் இரணதீரன், முதலாம் இராசசிம்மன் பராந்தக நெடுஞ்சடையன் முதலான முற்காலப் பாண்டிய வேந்தர்களும் கோஇரவி கோதை என்னும் இடைக்காலச் சேரவேந்தன், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன் முதலான சோழ வேந்தர்களும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் முதலான பிற்காலப் பாண்டிய வேத்தர்களும் மதுரை நாயக்கர், விசயநகரப் பேரரசர், ஐதர் அலி, திப்புசுல்தான் முதலான வேந்தர்களும் கரூரை ஆட்சி செய்துள்ளனர். ஆங்கில – மைசூர்ப் போரின் போது கரூர் ஆங்கிலேயரின் இலக்காக இருந்தது. பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாகும் ஆங்கிலேயரும் கரூரைத் தம் ஆட்சியில் கொணர்ந்தனர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் கரூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்தனர். அவற்றில் சங்ககால எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உரோமானியப் பானை ஓடுகள், உரோமானிய மதுக்குடத்தின் பகுதிகள், உயர்ந்த மணிகள், சங்கு வளையல்கள், சாயத் தொட்டிகள், பொன் உருக்கப் பயன்படும் மூசைகள், கட்டடச் சிதைவுகள், சுடுமண் பொம்மைகள், இரும்புக் கத்திகள் ஆகியன கிடைத்துள்ளன. இதன் விளைவாகக் கரூர் சங்க காலத்தில் உரோம நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பும், கரூரின் வணிக, நாகரிகச் சிறப்பும் அறியப்படுகின்றன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. அவை அககூடசு (Augustus), தைபீரியசு (Tiberius), கிளாடிசு (Claudius), மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) முதலான உரோமப் பேரரசர்களால் வெளியிடப்பட்டவை. சங்க காலப் புலவர்களுள் பலர் கருவூரோடு தொடர்புடையவர். அவர்கள் கருவூர்க் கதப்பிள்ளை, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர் கிழார், கருவூர்க்கலிங்கத்தார், கருவூர்க் கோசனார் போன்றோரைக் குறிக்கலாம். கருவூர்த்தேவர், கருவூரார் போன்றோரும், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் எறிபத்த நாயனாரும் சிவகாமியாண்டாரும், புகழ்ச் சோழ நாயனாரும் கரூர் நகரில் வாழ்ந்தவரேயாவர். கரூரைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் விளையும் மிளகாய், கடலை, மஞ்சள், எள், பருப்பு, பயறு வகைகள் கரூர் தானிய மண்டிகளின் மூலம் விற்பனையாகின்றன. இவை இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கரூர் மிளகாய் ஈரான், ஈராக்கு முதலான நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கரூர்ப் பகுதியில் தயாராகும் வெல்லம், நெய், பாய், கடலை எண்ணெய் ஆகியன வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கொசு வலைத்துணி நெய்யும் எந்திரமும் கரூரில் தயார் செய்யப்படுகிறது. கரூரில் நகராட்சியினர் நடத்தும் பல தொடக்கப் பள்ளிகளும், தனியார் தொடக்கப் பள்ளிகளும், நகராட்சி மேனிலைப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், தொழில் நுட்பக் கல்விக் கூடமும், அரசினர் கலைக் கல்லூரியும் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியாளர் அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முதலானவை அமைந்துள்ளன. இங்கு அருங்காட்சியகம் ஒன்றும் உளது. கரூர், உந்து வண்டிகளுக்கு மேற்பகுதி அமைக்கும் தொழிலுக்குப் புகழ்பெற்றது. கரூர் நகரின்கண் அருள்மிகு கல்யாண பசுபதீசுவரர் ஆலயம், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், வஞ்சியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், வழங்கியம்மன் கோயில், கரூரார் சமாதி, வாசவி பரமேசுவரி ஆலயம், மாதா கோயில்கள், மசூதிகள் ஆகியன உள்ளன. இவற்றுள் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோயில் பழமைச் சிறப்பும் பெருமையும் கொண்ட ஒன்றாகும். தொன்மைச் சிறப்பு மிக்க இக்கோயிலில் பிற்காலச் சோழர், மதுரை நாயக்கர், விசயநகரவேந்தர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர், நாயக்கர் காலத்திய சிற்பங்களும் கலைப்பாணியும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. கருக்குத் தெற்கில் தான் தோன்றி மலையில் உள்ள கல்யாண வேங்கடரமண சாமி கோயில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டுள்ளது; வடக்கில் வெண்ணெய் மலையில் புகழ்மிக்க முருகன் கோயிலும் உள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை 93,804 (1981). {{Right|<b>ம.இ.</b>}} <section end="கரூர்"/> <section begin="கரைநிலஞ்சார்ந்த உரிமை"/> {{dhr}} {{larger|<b>கரைநிலஞ்சார்ந்த உரிமை:</b>}} நீரோட்டமொன்றின் கரை மருங்கில் உள்ளவர்கள், அந்நீரோட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குள்ள உரிமை, கரைநிலஞ்சார்ந்த உரிமை (Riparian Right) எனப்படும். கரைநிலஞ்சார்ந்த உரிமை நதி, கால்வாய் போன்ற இயற்கை நீரோட்டத்தை ஒட்டியே எழுகிறது. செயற்கை நீரோட்டதைப் பொறுத்தவரையில் கரைநிலஞ்சார்ந்த உரிமை, ஒப்பந்தம் அல்லது நீண்ட நாளைய அனுபவத்தின் அடிப்படையிலேயே எழுகிறது. கரைநிலத்தைச் சார்ந்தவர்கள் நீரோட்டதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என்றும், தம் குடும்பக்காரியங்களுக்கு மட்டுமே அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும், குடும்பக்காரியம்<noinclude></noinclude> 72lu42h52sya40391v9kfo34hl1j4hr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/818 250 640757 1954498 1925417 2026-07-18T04:37:01Z Sridevi Jayakumar 15329 1954498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தா|790|கல்கத்தா}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 818 |bSize = 480 |cWidth = 203 |cHeight = 162 |oTop = 67 |oLeft = 16 |Location = center |Description = }} {{center|கரோலின் தீவுகள்}} யர் (Spaniards). அவர்கள் கி.பி. 1526–இல் இங்குச் சென்றனர். எனினும், கி.பி. 1886க்குப் பிறகே அவர்கள் நிலையாகத் தங்கினர். அவர்கள் ஆட்சியும் உறுதியாயிற்று. இசுபானிய அமெரிக்கப் போருக்குப் பிறகு கி.பி. 1899-இல் இத்தீவுகள், செருமனிக்கு விற்கப் பெற்றன. சப்பானியர் 1914–இல் இதைக் கைப்பற்றினர். முதலாம் உலகப்போர் முடிவுற்றபின், 1920–இல் சர்வதேச சங்கத்தின் மேற்பார்வையின்கீழ்ச் சப்பான் இவற்றை ஆட்சி புரியவேண்டும் என்று தீர்மானிக்கப் பெற்றது. சப்பான் 1935-இல் இவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில், இப்பகுதி குண்டுகளுக்கு இரையாகிச் சேதமுற்றது. அமெரிக்கப்படையினர் இவற்றைத்தம் வசப்படுத்திக் கொண்டனர். போருக்குப் பிறகு, ஐக்கிய அமெரிக்காவின் பொறுப்பாட்சிப் பகுதியாக இவை அறிவிக்கப் பெற்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்"/> <section begin="கல்கத்தா"/> {{dhr}} {{larger|<b>கல்கத்தா:</b>}} இந்தியாவின் வங்காள மேற்கு மாநிலத்தின் தலைநகராகவும், இந்தியாவிலேயே மிகப்பெரிய நகரமாகவும், உலகத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகவும் கல்கத்தா திகழ்கிறது. இது கடல்மட்டத்திலிருந்து 18 முதல் 21 அடி உயரமுள்ளது. இந்நகரம் கங்கை ஆற்றின் துணையாறான ஊக்ளி நதியின் கழிமுகத்திலிருந்து 128 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நதியின் இருபக்கங்களிலும் இது விரிந்துள்ளது. ஆற்றின் கிழக்குப் பாகத்தில் 80 கி.மீ. தொலைவு விரிந்துள்ளது. நகரின் மொத்தப் பரப்பளவு 1250 ச.கி.மீ. ஆகும். இந்நகரின் இப்போதைய மக்கள்தொகை 3.1 மிலியனாகவும், அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற மக்கள்தொகை 7.5 மிலியனாகவும் உள்ளன. இந்நகர் மூலமாக வடகிழக்கு இந்தியாவோடும் கங்கைப் பிரதேசத்தோடும் துறைமுகத் தொழில்கள் நடைபெறுகின்றன. இந்நகரால் 180 மிலியன் மக்கள் பயனடைகிறார்கள். இந்நகரின் செல்வ நிலையில் வேறுபாடு மலிந்துள்ளது. மக்கள் எண்ணிக்கை 1220 மிலியன் ஆகும். பெரும்பாலோர் பசுதீசு (Bustes) என்னும் சேரிகளில்தான் வாழ்கின்றனர். இந்நகரில் 45,000 பேர் தெருமேடைகளில் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் வேறுபாடு அரசியல் மாற்றங்களாலும், அண்டை நாட்டிலிருந்து வரும் அகதிகளாலும் உண்டாகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 818 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 204 |oTop = 189 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|கல்கத்தா}} தொடக்கத்தில் இருந்த மூன்று கிராமங்களுள் ஒன்றின் பெயரே கல்கத்தா என்பது. கல்கத்தா என்பது காளிகட்டா (Kali Kata) என்பதன் ஆங்கில மாற்றமேயாகும். இது காளிதேவியின் வழிபாட்டிற்குத் தொடர்புடையது எனச் சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் காலி (Kali) என்றால் சுண்ணாம்பு என்று பொருள்படும்; இங்குச் சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்பட்டதால் இப்பெயர் அமைந்தது எனக் கூறுவர். கல்கத்தா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நகரம். போர்ச்சுகீசியர் கி.பி. 1530–இல் அடிக்கடி இங்கு வந்து போயினர். சாபு சார்னாக்கு (Job Charnack) என்னும் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழுவினரால் இந்நகர் கி.பி. 1686–இல்<noinclude></noinclude> 3c2s68zp3o027clcw89u2da4s2yynq8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/819 250 640758 1954499 1925418 2026-07-18T04:37:51Z Sridevi Jayakumar 15329 1954499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தா|791|கல்கத்தா இருட்டறை}}</noinclude>வணிக மையமாக நிறுவப்பட்டது. வில்லியம் கோட்டை கி.பி. 1696–இல் கட்டப்பட்டது. இதன் மூலம் அபினி, துணி வகைகள், பருத்தி முதலியவற்றை வணிகம் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கும் வங்காள நவாபான சிராசு உத்தவுலாவிற்குமிடையே கி.பி. 1756–இல் இருந்து 1757 வரை போர் நடந்தது. இறுதியாக் கி.பி. 1757 சூன் மாதம் இராபர்ட்டு கிளைவு நவாபைப் பிளாசிப் போரில் தோற்கடித்தார். வாரன் ஏசுடிங்சு இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தபோது கி.பி. 1774–இல் கல்கத்தா நகரின் ஆட்சி முறையும் காவல் நிருவாகமும் சீரமைக்கப்பட்டன. அக்காலத்தில் தலைமை நீதிமன்றமும் கல்கத்தாவில்தான் இருந்தது. இங்கு கி.பி. 1857–இல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கல்கத்தா கி.பி. 1912–வரை நாட்டின் தலைநகராக இருந்தது. பின்னர்த் தில்லி தலைநகராகியது. இந்நகரில் மிகப் பழைய கட்டடங்கள் ஆங்கில ஐரோப்பியக் கட்டடக்கலையைப் பின்பற்றியுள்ளன. இங்கு உள்ள தேசிய நூல் நிலையமும் இந்தியத் தேசிய கணக்கெடுப்பு நிறுவனமும் மிகவும் புகழ்பெற்றவை. ஆங்கிலேயர் காலத்தில் கல்கத்தா மிகுந்த வளர்ச்சி அடைந்தது. அதன் காரணம் பருத்தித் துணி வகைகளின் உற்பத்தியும் தேயிலை, சணல் ஆகியவற்றின் ஏற்றுமதியுமே ஆகும். இந்தியாவின் தொழிலாளர்களுள் 1/3 பகுதியினர் கல்கத்தாவில் கி.பி. 1921–இல் இருந்தனர். அவர்களது எண்ணிக்கை கி.பி. 1970–இல் அரை மிலியனாக உயர்ந்துள்ளது. உலகிலேயே சணல் உற்பத்தியில் மிக தூக்கிய இடத்தை இந்நகரம் வகிக்கிறது. சணலும் அதனைச் சார்ந்த தொழில்களும் ஔராவிலும் (Howrah), பாட்பாராவிலும் (Bhatpara) வளர்ந்துள்ளன. பொறியியல் தொழில்கள் இவ்விடங்களிலும் திடாகரிலும் (Titagarh) வளர்ந்துள்ளன. காகிதத் தொழிலும் இந்நகரில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஊக்ளி ஆறு (Hugly) வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்தில் உள்ள கால்டியா என்ற துறைமுக நகரில் பல பெரிய கப்பல்கள் வந்து தங்குகின்றன. அவற்றின் மூலம் தானியங்கள், எண்ணெய், கனிமத் தாதுக்கள் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. கல்கத்தாவில் மூன்று விதமான போக்குவரத்துகளும் வளர்ந்துள்ளன. அதன் சருவதேச விமான நிலையம் ‘தம்தம்’ (Dumdum) என்ற இடத்தில் உள்ளது. சாலைப் போக்குவரத்திற்காக அமிழ் தண்டூர் திகளும் (Trams) சில பகுதிகளில் ஓடுகின்றன. இந்தியாவிலேயே முதன்முதலில் இங்குத்தான் நிலத்தடி இருப்புப்பாதை போடப்பட்டது. <b>துணைநூல்:</b> <b>Lubell, H.</b> Prospects for Calcutta, G. Moorhouse, Calcutta, 1974. <section end="கல்கத்தா"/> <section begin="கல்கத்தா இருட்டறை"/> {{dhr}} {{larger|<b>கல்கத்தா இருட்டறை</b>}} என்ற நிகழ்ச்சி ஆங்கிலேயர்கள் இந்தியாவுடன் வாணிகம் செய்யத் தொடங்கிக் கல்கத்தாவில் கோட்டை ஒன்றை நிறுவிய பின், மீர்சா முகம்மது என்ற சிராசு உத்தௌலா வங்காளத்தின் நவாபு ஆனபின், கி.பி. 1756–ஆம் ஆண்டில் நடைபெற்றது. அச்சமயம் ஆங்கிலேயர்கள் நவாபிற்குத் தெரிவிக்காமல் கல்கத்தாக் கோட்டை அரண்களை வலுப்படுத்தினார்கள். அதனைச் சுற்றிலும் ஓர் அகழியையும் உருவாக்கினார்கள். பிரெஞ்சு, மராட்டியர் படையெடுப்பைத் தடுக்க இவற்றை உருவாக்கியதாகத் தெரிவித்தார்கள். நவாபு கல்கத்தாவில் பெரும் செல்வம் இருப்பதாகக் கேள்வியுற்றார். ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் தவறான முறையில் பயன்படுத்தியதால் நவாபின் மனம் துயருற்றது. மேலும், ஆங்கிலேயர்கள் கல்கத்தாவில் நவாபின் குற்றவாளிக் குடிமக்களுக்கு அடைக்கலம் தந்தனர். நவாபு குற்றவாளிகளைத் தண்டிக்கத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கடிதம் எழுதிக் கேட்டபோது ஆங்கிலேயர்கள் மறுத்துவிட்டனர். மேலும், நவாபைச் சார்ந்த நாராயண சிங்கு, நாராயண தாசு ஆகியோரையும் இழிவுபடுத்தினர். இவை யாவும் நவாபிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நல்ல தொடர்பின்றிப் பகைமை வளரச் செய்தன. பின்னர் அப்பகைமை போரை உருவாக்கிற்று. சிராசு உத்தௌலா முதலில் காசிம் பசாரைக் கைப்பற்றினார். பின்னர்க் கல்கத்தாவை முற்றுகையிட்டார். கல்கத்தா கி.பி. 1756–சூன் திங்கள் 20–ஆம் நாள் நவாபு வசமாயிற்று. கல்கத்தாவின் ஆளுநரான திரேக்கும் (Drake) மற்றவர்களும் சூன் 19–ஆம் நாள், சான் செப்பானியா ஆல்வெல் (John Zephaniah Holwell) என்பவரிடம் கல்கத்தாவை ஒப்படைத்துவிட்டுத் தப்பியோடிப் பால்டாவை (Falta) அடைந்தனர். அங்கிருந்து சென்னைக்கு உதவி வேண்டிச் செய்தி அறிவிக்கப்பட்டது. <b>இருட்டறை:</b> கல்கத்தாவை நவாபு கைப்பற்றியவுடன் ஆல்வெல்லையும் மற்றவர்களையும் கைது செய்தார். கல்கத்தா நவாபு வசம் ஆன அன்று இரவு 18 அடி நீளமும், 14 அடி 10 அங்குலம் அகலமும் உள்ள ஓர் இருட்டறையில் 146 கைதிகளை அடைத்து வைத்ததாகவும், 123 கைதிகள் மூச்சுத் திணறி மடிந்ததாகவும், மறுநாள் காலையில் அறையைத்<noinclude></noinclude> c2imknr51r2domu8b1173cdmjmxg2ht பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/820 250 640871 1954500 1925650 2026-07-18T04:38:43Z Sridevi Jayakumar 15329 1954500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தாப்‌ பல்கலைக்கழகக்‌ குழு|792|கல்கத்தாப்‌ பல்கலைக்கழகக்‌ குழு}}</noinclude>திறந்தபோது ஆல்வெல்லும் 23 பேர்களும் மட்டுமே உயிரோடிருந்ததாகவும் தம் தாய் நாட்டுப் பயணத்தின்போது (1757) ஆல்வெல் எழுதியுள்ளார். இதைப் பற்றி ஆங்கில ஆசிரியர்கள் ‘கல்கத்தா இருட்டறைக் கொலை’ என்று தலைப்பு இட்டு எழுதினார்கள். ஆல்வெல்லின் கூற்றுகளைக் கொண்டு இந்நிகழ்ச்சியை உறுதி செய்யச் சான்றுகள் இல்லை. இதற்குக் காரணம் ஆல்வெல் நம்பத்தகுந்தவர் அல்லர் என்பதே. மேலும் இந்நிகழ்ச்சி பற்றி இராபர்ட்டு கிளைவு சிராசு உத்தௌலாவை அடக்கிய முறையை வணிகக் குழு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், அவர்களின் மற்றக் கடிதங்களில் குறிப்புகள் உள்ளன. இருட்டறையும் வில்லியம் கோட்டையும் ஒன்றா என்று உறுதி செய்ய இயலவில்லை. ஆங்கிலேயர்கள் இறந்தவர்களுக்காக நவாபிடமிருந்து ஈட்டுத்தொகை பெற முயலவில்லை. இறந்தவர்களுள் (123) 56 பெயர்களின் விவரங்களே கிடைத்துள்ளன. அச்சிறு அறையில் 146 கைதிகளை அடைப்பது இயலாக் காரியமாகும். மேலும், இருட்டறையில் சில கைதிகளைச் சிறை வைத்திருக்கலாம். அவர்களுள் சிலர் காயம் அடைந்தவர்களாகவும் இருக்கலாம். சிறை வைக்கப்பட்டவர்களுள் சிலர் இறந்திருக்கலாம் என்பதில் ஓர் அளவு உண்மையுள்ளது. அதனை உறுதி செய்யத் தச்சுக்காரர்களின் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆல்வெல்லின் நண்பர்களோ நவாபின் பகைவர்களோ அல்லர். ஆனால், சமகாலத்திய ஆங்கில அல்லது முகம்மதியச் சான்றுகளில் இந்நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புகள் எவையுமில்லை. எனவே, வரலாற்று ஆசிரியர்கள் ‘கல்கத்தா இருட்டறை’ என்னும் நிகழ்ச்சி மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஒரு வரலாறு என்று கருதுகிறார்கள். இந்தியத் தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சுபாசு சந்திரபோசு (நேதாசி) கல்கத்தாவில் ஒரு சிறு போராட்டத்தை (1940-இல்) நடத்தி ஆங்கிலேயர்கள் நிறுவிய இருட்டறை நினைவுச் சின்னத்தை அகற்றினார். {{Right|<b>பு.எ.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Majumdar, R.C., (Ed.)</b> History and Culture of the Indian People Struggle for Freedom Vol-XI, Bharathiya Vidhya Bhavan, Bombay, 1969. <b>Sathinathier R.,</b> Political and Cultural History of of India Vol. III, Modern India, Madras, 1972. <section end="கல்கத்தா இருட்டறை"/> <section begin="கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு"/> {{dhr}} {{larger|<b>கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு:</b>}} கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் சில தனிப்பட்ட சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றுக்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கத்துடன் 1917-ஆம் ஆண்டில் செம்சுபோர்டு (Chelmsford) பிரபு என்பவரால், இலீட்சுப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த சர் மைக்கேல் சேட்லர் (Sir Michael Sadler) என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு எனப்பட்டது. இக்குழுவின் தலைவராகச் சேட்லர் இருந்ததால் இக்குழு சேட்லர் குழு (Sadler Commission) எனவும்பட்டது. கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியையும் நிலைமையையும் சிக்கல்களையும் ஆராய்ந்ததோடல்லாமல், பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களின் அமைப்பினையும் செயல்களையும் ஆராய்ந்தது. இக்குழு தொடக்க நிலைக் கல்வி பற்றி ஏதும் கருத்துக் கூறாமல், பல்கலைக்கழகக் கல்விக்கு அடிப்படையாக விளங்கும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பற்றியும் தன் அறிக்கையில் கருத்துக் கூறியுள்ளது. கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளின் எண்ணிக்கையும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதால், தாக்கா (Dacca) நகரில் மாணவர் தங்கிப் பயிலும் ஒரு பல் கலைக்கழகம் (Residential University) ஏற்படுத்தப்பட வேண்டும்; தேர்வு நடத்தும் உறுப்பாக மட்டும் கல்கத்தாப் பல்கலைக்கழகம் செயற்படாமல் கற்பித்தலைச் செய்யும் பல்கலைக்கழகமாகவும் விளங்க வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது. மேலும், பல்கலைக்கழக மையங்களைத் தொலைவான இடங்களில் ஏற்படுத்துதல், பெண் கல்வி வளர்ச்சி, தொழிற் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆகியவற்றின் தேவையையும் வலியுறுத்தியது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் அமைப்புப் பற்றிய பரிந்துரைகளுள், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அதிக அதிகாரங்கள் தருதல், திறமை மிக்க மாணர்வகளுக்கு ‘ஆனர்சு’ (Honours) என்னும் உயர் பட்டப்படிப்பு ஏற்படுத்துதல், பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் இணைப் பேராசிரியர்களையும் வல்லுநர் அடங்கிய தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுத்தல், பாடத்திட்டம், தேர்வு, ஆராய்ச்சி போன்றவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களை ஆராய்ந்து முடிவெடுக்கக் கல்விக் குழுவும் (Academic Council), பாடத்திட்டக் குழுவும் (Board of Studies) ஏற்படுத்துதல், ஊதியம் பெற்று முழு நேர அலுவலராகப் பணியாற்றும் துணைவேந்தரை நியமித்தல், மாணவர்களின் உடல்நலத்தை வளர்க்கும் நோக்கத்துடன்<noinclude></noinclude> 62ff6iu6hx6m7pju4knhcovs7zauuk8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/821 250 640874 1954501 1925657 2026-07-18T04:39:35Z Sridevi Jayakumar 15329 1954501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கத்தாப்‌ பல்கலைக்‌ கழகம்‌|792|கல்கத்தாப்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>உடற்பயிற்சி இயக்குநர் பல்கலைக்கழக அளவில் பணியமர்த்தம் செய்யப்படுதல், பல்கலைக்கழகங்களில் கல்விக்கென ஒரு கல்வியியற் புலம் (Faculty of Education) இருத்தல், பல்கலைக்கழக நுழைவு வகுப்பு (Intermediate Course), இளங்கலை வகுப்பு ஆகியவற்றில் கல்வியினை ஒரு பாடமாக வைத்தல் போன்ற பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை. உயர்நிலைப் பள்ளிக் கல்வி குறித்துக் கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு அளித்த பரிந்துரைகளுள் பல்கலைக்கழக நுழைவு வகுப்பு பல்கலைக்கழகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கெனத் தனிக் கல்லூரிகள் (Intermediate College) தொடங்குதல், அக்கல்லூரிகளில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருத்தல், பட்டப்படிப்பின் கால அளவை 3 ஆண்டுகளாக நீட்டித்தல், உயர்நிலைப் பள்ளிக் கல்வி, பல்கலைக்கழக நுழைவுக் கல்வி ஆகியவற்றை நிருவகிக்கத் தனி வாரியம் அமைத்தவ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழுவின் அறிக்கைக்குப் பின்னர்ப்பாட்னா, வாரணாசி, அலிகார், தாக்கா, மைசூர், அண்ணாமலைநகர் போன்றவிடங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்திய மொழிகள் பல்கலைக்கழகக் கல்வி நிலையில் ஓரளவு மதிப்புப் பெறவும் உயர்கல்வி ஆராய்ச்சி வளரவும் இவ்வறிக்கை ஊக்குவிப்பதாக அமைந்தது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு"/> <section begin="கல்கத்தாப் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>கல்கத்தாப் பல்கலைக் கழகம்:</b>}} கிழக்கிந்தியக் குழுவின் இயக்குநர் மன்றம் கி.பி. 1854-ஆம் கல்கத்தா, சென்னை, ஆண்டு சூலைத் திங்களில் பம்பாய் ஆகிய இடங்களில் பல்கலைக் கழகங்களைப் புதிதாக ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி, இந்தியாவிலிருந்த தலைமை ஆளுநருக்குக் (Governor General of India) கடிதம் எழுதியது. இதனடிப்படையில் கி.பி. 1857–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24–ஆம் நாள் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. இந்தியப் பல்கலைக் கழகங்களின் சட்டம் (The Indian Universities Act of 1904) பல்கலைக் கழகத் துறைகளில் பாடம் கற்பித்தலுக்கு வழிகோலியது. பின்பு 1917–இல் பட்ட மேற்படிப்புக்கும் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் கற்பித்தல் நடைபெற்றது. பின்னர் 1951-ஆம் ஆண்டுச் சட்டம் கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் கல்லூரிகள் (Affiliated College), பல்கலைக் கழகக் கல்லூரிகள் (University Colleges) ஆகியவற்றில் உயர்கல்வி கற்பித்தலுக்கு வகை செய்தது. கல்கத்தாப் பகலைக்கழகச் சட்டம் (The Calcutta University Act, 1966) பல்கலைக் கழக அமைப்பில் பல மாற்றங்களைச் செய்தது. அவை 1968-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தன. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில் கல்கத்தாப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகம் தொடங்கியபோது, இதன் ஆளுகை எல்லை இந்தியாவின் வட மாநிலங்கள் முழுவதும் பரவியிருந்தது. இப்பொழுது இப்பல்கலைக்கழகத்தின் மேற்கு வங்காளம், ஆளுகை திரிபுரா ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. விசுவ பாரதி (Visva Bharathi), சாதவ்பூர் (Jadaupur), பர்த்துவான் (Burdwan), வடக்கு வங்காளம் (North Bengal), இரவீந்திர பாரதி (Rabindra Bharathi), கல்யாணி ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக் கழகங்களின் ஆளுகை எல்லைகள் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் ஆளுகை எல்லைக்கு அப்பாற்பட்டவை. கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் கல்லூரிகள் 200க்கும்மேல் உள்ளன. அவற்றுள் பெரும்பாலான கல்லூரிகள் கழகத்தா நகரிலேயே அமைந்துள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) மொத்தம் 8 உள்ளன. இவை பல்கலைக் கழகத்தின் ஆட்சி பேரவை (Senate), கல்விக் குழு (Academic Council) ஆகியற்றுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்குபெற முடியும், கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் பொருளியல், கல்வியியல், ஒப்பியல், தத்துவம், தொல்லியல், வரலாறு, நூலகவியல், அரசியலறிவியல், சமூகவியல் போன்ற கலைத் துறைகளும், அரபு, பாரசீகம், காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, பாலி, சமசுகிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் பட்ட மேற்படிப்புத் துறைகளும் வேதியியல், வேளாண்மை, தாவரவியல், கணக்கு, இயற்பியல், விலங்கியல், உடற்கூற்றியல் (Physiology), கணிப்பொறி அறிவியல் (Computer Science) போன்ற அறிவியல் துறைகளும் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தில், பண்டைய இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, செயல்முறைக் கணக்கு (Applied Mathematics), கதிர்வீச்சு இயற்பியல் (Radio–Physics) ஆகிய துறைகள் உயர்கல்வியாய்வு மையங்களாக விளங்குகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் சகா அணுவாற்றல் இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics) என்னும் தேசிய உயர் கல்வி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு மாணவர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். {{nop}}<noinclude></noinclude> dchfnaxklcljna59h4fs96962trbjkh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/822 250 640876 1954502 1925660 2026-07-18T04:40:40Z Sridevi Jayakumar 15329 1954502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கணர்‌|794|கல்கணர்‌}}</noinclude>கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் புகுமுக வகுப்பு இல்லை; இளங்கலை முதுகலைப் பட்டப் படிப்புகள் மட்டுமே உள்ளன. பயிற்று மொழியாக ஆங்கிலமே பொதுவாக இருந்த போதிலும், இளங்கலைப்பட்டப் படிப்பு மாணவர்கள் வங்காள மொழியில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கல்கத்தாப் பல்கலைக் கழகம்"/> <section begin="கல்கணர்"/> {{dhr}} {{larger|<b>கல்கணர்:</b>}} இந்தியாவின் தொன்மையான வரலாற்று இலக்கியங்கள் சிலவற்றுள் முதன்மையாக இருப்பது. ‘இராசதரங்கணி’ என்னும் காசுமீர அரசர்களின் குலவரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூலின் ஆசிரியர் கல்கணர், இவர் கி.பி. 1150-ஆம் ஆண்டில் வடமொழியில் அதை இயற்றினார். கல்கணரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. இவரது நூலின் மூலம், இவர் கண்பகா (Canpaka) என்பவரின் புதல்வர் எனத் தெரிகிறது. காசுமீர அரசர் அர்சர் என்பவரின் அவையில் (கி.பி. 1089–1101) சண்பகா அமைச்சராக இருந்தார் என்றும், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அறிய முடிகிறது. கல்கணரே கி.பி. 1121–ஆம் ஆண்டு தம் இளவயதில் நேரில் கண்டு எழுதிய அரசியல் மாற்றங்கள் மூலம் இவரது பிறப்பின் ஆண்டைப் பொதுவாகக் குறிக்க முடிகிறது. இலோகரா (Lohara) வமிச வழியைச் சேர்ந்த செயசிம்மர் (Jayashmha) என்பவரின் காலத்தவர் (கி.பி. 1155) கல்கணர் என்றும் அறிய முடிகிறது. இராசதரங்கணி காசுமீரத்தின் வரலாற்றை எட்டுத் தொகுதிகளில் கூறுகிறது. காசுமீரத்தின் வரலாற்றை அறியக் கல்வெட்டுகள் மிகவும் அரிதாக உள்ளமையை இந்நூல் ஈடு செய்கிறது. இந்நூலினை எழுதக் கல்கணர் பல சான்றுகளையும் நூல்களையும் பயன்படுத்தினார். பில்கணர் எழுதிய விக்கிரமாங்க சரித்திரத்தையும் பாணரின் அர்ச சரித்திரத்தையும் காசுமீரத்தைப் பற்றிய பதினொரு வரலாற்றுச் செய்தித் திரட்டுகளையும் பயின்று, அவற்றில் நிலவிய குறைகளை உணர்ந்து, அவற்றை நீக்கித் தம் நூலுக்கு மூலமாகப் பயன்படுத்தினார். இவர் காசுமீரத்தின் நில அமைப்பையும் தன்மைகளையும் நன்கு அறிந்திருந்தார். நாட்டின் பல பாகங்கட்குச் சென்று சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கிடைத்த நாணயங்களையும் ஆராய்ந்து எழுதினார். இந்நூலில், காசுமீரத்தின் அரசர் இரணத்தியன் என்பவர் முந்நூறு ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது இவர் செவி வழிக் கதைகளையும் கேட்ட செய்திகளையும் வரலாற்றுக்குப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிழையாகும். ஆயினும், அவந்திவர்மன், உத்பல மன்னன் ஆகியோர் ஆட்சிக் காலம் தொடங்கி (கி.பி. 855) வரலாறு தக்க சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ளது. தம் கருத்துகளையும் கொள்கைகளையும் சேர்த்து வரலாற்று நிகழ்ச்சிகளை மாறுபடவோ மிகைப்படவோ கூறாமல் எழுதியுள்ளார். இந்நூலில் ஆண்டுகளின் கணக்கீழ் இலாக்கிக முறையைப் (Laukika era) பின்பற்றி உள்ளது. ஆனாலும் சக ஆண்டு (Saka era) முறையையும் பல இடங்களில் கையாண்டுள்ளதால் கணக்கீடு பிழையின்றி உள்ளது. காசுமீரத்தை ஆட்சிபுரிந்த கார்க்கோடா (Karkota) உத்பலா (Utpala) இலோகரா (Lohara) வமிச அரசர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இராசதரங்கணி, அரசர்களின் உதவி கொண்டு எழுதப்பட்ட நூலன்று. கல்கணர் இந்நூலை எழுதிய காரணம் என்ன என்று ஆராயும்போது இவருடைய குடும்பத்தின் அரசியல் தொடர்பு, இவர் தந்தைக்குப் பின் நிலவவில்லை. நிலவி இருப்பின் இவர் ஓர் அமைச்சராக இருந்திருப்பார். இவர் முறையாகப் பெற்ற கல்வியைப் பயன்படுத்த இராசதரங்கணியை இயற்றியதாகக் கருத்து நிலவுகிறது. இக்காரணங்களால் இந்நூலில் ஒரு தலைச் சார்பற்ற கருத்துகள் உள்ளன. காசுமீரத்தின் அரசியல் வரலாறு, அரசவை, இராணுவ முறை, வெளிநாட்டு உறவுகள், அரசியல் ஊழல்கள், மாற்றங்கள், குழப்பங்கள், காசுமீரத்தில் நிலவிய புத்தமதம் அதன் கொள்கை ஆகியவற்றைப் பற்றியும். சமுதாய இயல்பற்றி அறியச் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும், அக்காலக் கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் பற்றியும் இந்நூலால் அறிய முடிகிறது. நாட்டில் நிலவிய வறுமை, பஞ்சம், நெகுப்பு ஆகியவற்றால் மக்களுக்கு விளைந்த துன்பங்கள் பலவற்றையும் இவர் தரங்கணியில் குறித்துள்ளார். ஆதலால் இந்நூல் வரலாற்றுக் கருவி நூலாகத் திகழ்கிறது. கல்கணர் அக்கால வரலாறு எழுதும் முறையில் தலைசிறந்து விளங்கினார். தம் திறனாய்வு மூலம் தரங்கணியைப் பிற நூல்களிலிருந்து வேறுபடுத்தி அதற்குத் தனி மதிப்பும் சிறப்பும் சேர்த்தார். இவர் அக்கால வரலாற்று ஆசிரியர்களுள் சிறந்தவராகத் திகழ்கிறார். காசுமீர மொழியில் எழுதப்பட்ட இராசதரங்கணியை இசுடின் (Stein M.A.) என்பவர். கி.பி. 1900–இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். {{Right|<b>பு.எ.மோ.</b>}} {{nop}}<noinclude></noinclude> 6l2j4mdbk48sryl80vqru3vrqhi04bo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/823 250 640879 1954504 1925668 2026-07-18T04:41:52Z Sridevi Jayakumar 15329 1954504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்கி|795|கல்கி}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Ghoshal, U.N.,</b> Studies in Indian History and Culture, Orient Longmans, Calcutta, 1965. <b>Stein. M.A.,</b> (Trans.) Kalhana's Rajataranjgani, A Chronicle of the Kings of Kashmir, Vols, I & II, Delhi, 1961. <section end="கல்கணர்"/> <section begin="கல்கி"/> {{dhr}} {{larger|<b>கல்கி (கி.பி. 1899-1954):</b>}} இருபதாம்‌ நூற்‌றாண்டில்‌ தமிழையும்‌ தேசியத்தையும்‌ வளர்த்த தமிழ்‌ எழுத்தாளர்களுள்‌ கல்‌கியும்‌ ஒருவர்‌. தேசிய விடுதலைப்போர்‌, சமுதாய மறுமலர்ச்சி, தமிழ்ப்‌ பத்திரிகை, தமிழ்ப்‌ புதினம்‌ ஆகிய பல்வேறு நிலைகளிலும்‌ இவரது பணி பரவி நிற்கக்‌ காணலாம்‌. கல்கி கலப்புமணம்‌, கைம்பெண்‌ மணம்‌, மதுவிலக்குப்‌ போன்ற சமூகச்‌ சீர்‌திருத்தக்‌ கருத்துகளில்‌ மிக்க நாட்டம்‌ உடையவர்‌. இவர்‌ தமிழ்‌ உரைநடையை மக்களின்‌ அன்றாடப்‌ பேச்சு நடையோடு ஒட்டிய பழகுதமிழ்‌ நடையாக வளப்படுத்திக்‌ தமிழ்‌ மொழியின்‌ உரைநடைச்‌ செல்வாக்கை உயர்த்தினார்‌. தமிழில்‌ வரலாற்றுப்‌ புதினம்‌ என்னும்‌ ஒரு வற்றாத இலக்கிய வகையை வளப்படுத்‌தித்‌ தமிழ்ப்‌ புதினத்‌தின்‌ பரப்பைப்‌ பெருக்கிப்‌ பெருந்தொண்டு புரிந்தார்‌. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 823 |bSize = 480 |cWidth = 164 |cHeight = 205 |oTop = 290 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|கல்கி}} இவரது தேயப்பணியும்‌ சமுதாய மறுமலர்ச்சிப்‌ பணியும்‌ காலவேகத்தால்‌ மறக்கப்பட்டாலும்‌, ஓர்‌ எழுத்தாளன்‌ என்ற முறையில்‌ தமிழ்ப்‌ பத்திரிகை உலகுக்கும்‌, தமிழ்‌ இலக்கிய உலகுக்கும்‌ இவர்‌ ஆற்றியுள்ள பெருந்தொண்டு மறக்கப்படாது எப்போதும்‌ நிலைத்து நிற்கும்‌ தன்மையதாகும்‌. ‘கல்கி’ என்று புகழ்பெற்ற இவரது இயற்பெயர்‌ ரா. கிருட்டிணமூர்த்தி என்பதாகும்‌. இவர்‌ தஞ்சை மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம்‌ என்னும்‌ இடத்தில்‌ கி.பி. 1899–ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 9–ஆம்‌ நாள்‌ பிறந்தார்‌. இவர்‌ தந்தையார்‌ பெயர்‌ இராமசாமி ஐயர்‌. இவர்‌ புத்தமங்கலம்‌ தொடக்கப்‌ பள்ளியில்‌ தொடக்கக்‌ கல்வி பெற்றார்‌; அரிகதை கூறுவதிலும்‌ பசனைப்‌ பாடல்கள்‌ பாடுவதிலும்‌ தம்‌ 12 வயது முதல்‌ 17-ஆம்‌ வயது வரை கழித்தார்‌. பின்னர்த்‌ திருச்சி தேசிய உயர்நிலைப்‌ பள்ளியில்‌ மூன்றாம்‌ படிவத்தில்‌ சேர்ந்தார்‌. காந்தியின்‌ ஒத்துழையாமை இயக்கத்தில்‌ ஈடுபட்டுத்‌ தம்‌ கல்வியைப்‌ பாதியில்‌ நிறுத்தினார்‌. இவரது பணி தேசியம்‌, பத்திரிகை, இலக்கியம்‌ என்னும்‌ மூன்று நிலைகளில்‌ அமைந்துள்ளது. இவர்‌ காந்தியடிகளின்‌ விடுதலைப்‌ போராட்டத்‌தில் கலந்து கொண்டு மூன்றுமுறை (1921, 1931, 1940) சிறைவாழ்வை மேற்‌ கொண்டார்‌. தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ செயலாளர்களுள்‌ ஒருவராகவும்‌ தமிழ்‌ எழுத்தாளர்‌ சங்கத்‌ தலைவராகவும்‌ இவர்‌ பணியாற்றினார்‌. இவர்‌ வ.ரா., நாமக்கல்‌ கவிஞர்‌ பரலி. நெல்லையப்பர்‌ போன்ற தமிழ்‌ அறிஞர்களுக்கு நிதி திரட்டித்‌ தந்து உதவினார்‌. இவரது முயற்சியால்‌ எட்டையபுரத்தில்‌ பாரதிமண்டபம்‌ அமைக்கப்‌ பெற்றது. தூத்துக்குடி, வ.உ.சி. கல்லூரி அமைக்கவும்‌ இவர்‌ பெருமுயற்சி மேற்கொண்டார்‌. திரு. வி.க. மண்டபம்‌, காந்தி நினைவு மண்டபம்‌ முதலியவற்றைக்‌ கட்டுவதற்கும்‌ மக்களிடம்‌ நிதி திரட்டி உதவினார்‌. இவர்‌ முப்பது ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ பத்திரிகைத்‌ துறையில்‌ ஈடுபட்டு உழைத்தார்‌. திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ இராசாசி நடத்திய ‘விமோசனம்’ ஆகிய பத்திரிகையிலும்‌ ‘ஆனந்த விகடன்‌’ பத்திரிகையிலும்‌ (1930-41) சேர்ந்து பணியாற்றினார்‌. ‘கல்கி’ என்ற பத்திரிகையை 1941-இல்‌ இவர்‌ தொடங்கி நடத்தினார்‌. இவர்‌ பத்‌திரிகையில்‌ பெரும்பாலும்‌ ‘கல்‌கி’ என்ற புனைபெயரிலேயே எழுதினார்‌. இவரது நடை தெளிவும்‌ இனிமையும்‌ உடையது. இவர்‌ மிகையான வடசொற்களை நீக்‌கி மக்கஞுடைய அன்றாடப்‌ பேச்சு வழக்கிலிருந்து பெரிதும்‌ வேறுபடாத ஒரு எளிய நடையை உருவாக்கப்‌ பயன்படுத்தினார்‌. இத்தகைய எளிய நடையில்‌ நகைச்சுவை நயம்‌ மிக்கிருக்கும்‌. சிறுகதை, புதினம்‌ ஆகிய புத்திலக்கய வகைகளிலும்‌ கல்கியின்‌ எழுத்துப்பணி வெளிப்பட்டது. பல்ல-<noinclude></noinclude> 5f98iqfxxqo114mo2h9l8thacj2riw9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/825 250 640993 1954505 1925860 2026-07-18T04:43:56Z Sridevi Jayakumar 15329 1954505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்‌ – செப்புக்காலம்‌|797|கல்ப சூத்திரம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 825 |bSize = 480 |cWidth = 210 |cHeight = 167 |oTop = 73 |oLeft = 14 |Location = center |Description = }} {{center|அசோகரின் கல்சிக் கல்வெட்டு}} என்றும், விருசகணக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும், பௌணன் என்னும் அரசனின் ஆறாம் தலைமுறையில் வந்தவன் என்றும், சீலவர்மன் நடத்திய அசுவமேத வேள்வி மேடை இது என்றும் ஒரு மெய்க்கீர்த்தி கூறுகிறது. மற்றொரு மெய்க்கீர்த்தி சீலவர்மன் யுகசைலத்தின் அரசன் என்று கூறுகிறது. இந்த மேடை ஆகமங்களின் விதிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டது. கருட சயனம் எனப்படும் விரிந்த சிறகுகளையுடைய கருட வடிவமும் முக்கோணங்கள் இணைந்த உபயதப் ரௌக சிதி என்னும் வடிவமும் கொண்டு இம்மேடைகள் கட்டப்பட்டன. சிலவர்மன் யௌதேய மன்னர்களின் மரபைச் சார்ந்தவனாவன் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வரசன் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவனாவன். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கல்கி"/> <section begin="கல் - செப்புக்காலம்"/> {{dhr}} {{larger|<b>கல் - செப்புக்காலம்</b>}} (Chalcolithic Age): காண்க: செப்புக்காலம். <section end="கல் - செப்புக்காலம்"/> <section begin="கல்ப சூத்திரம்"/> {{dhr}} {{larger|<b>கல்ப சூத்திரம்:</b>}} இது சூத்திர இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது. கல்பசூத்திரங்கள் சமயச் சடங்குகளைப் பற்றியதாக இருத்தலால், இவை பிராமணங்களுடனும் ஆரணியங்களுடனும் நேரடித் தொடர்புடையவை. இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இவற்றை இரண்டாகப் பகுக்கலாம். அவை முறையே சுரௌத சூத்திரங்கள், கிரிய சூத்திரங்கள் (Srauta- Sutras and Grihya Sutras) எனப்படும். முதலாம் வகையில், பிராமணங்களில் போதிக்கப்பட்டுள்ள சடங்கு முறைகளும், பல புரோகிதர்கள் சேர்ந்து மட்டுமே நிகழ்த்தக்கூடிய சடங்குகளும் அடங்கும். இரண்டாம் வகை எளிதானது. குடும்பத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருவள், அன்றாடம் குடும்பத்திலே செய்ய வேண்டிய பிற பணிகளையும் வீட்டு யாகங்களையும் பற்றி இது போதிக்கிறது. சுரௌத சூத்திரங்கள் சுருதியை (Sruti) அடிப்படையாகக் கொண்டவை. கிரிய சூத்திரங்களும் தரும் சூத்திரங்களும் இசுமிருதியை இசுமிருதியை (Smriti=Tradition) அடிப்படையாகக் கொண்டிருந்தலின் இசுமார்த்த (Smarta) என்று சொல்லப்படுகின்றன. மூன்று யாகத்தீயை வளர்த்தல், முதற்பிறை நிலா வேள்விகள், முழுமதி வேள்வி (Fall-moon sacrifices), விலங்கைப் பலி கொடுத்தல், சோம வேள்வி, அதன் வகைகள் ஆகியவற்றை விளக்கிக் கூறுவதே சுரெளத சூத்திரங்கள் ஆகும். இச்சூத்திரங்கள் யாகங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளப் பயன்படுவதுடன், சமயத்தின் வளர்ச்சியையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளப் பயன்படுகின்றன. கிரிய சூத்திரங்கள், ஒரு மனிதனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நிகழ்த்தக்கூடிய பல்வேறு சமயச் சடங்குகள் பற்றிக் கூறுவதால், சுரௌத சூத்திரங்களைக் காட்டிலும் அதிக விரிவாகவே உள்ளன. மனிதன் தன் வாழ்வில், பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்குகளைச் செய்கிறான். அவற்றுள் திருமணம், கருவுறல், குழந்தைப் பிறப்பு உணவூட்டல், மயிர்களைதல், உபநயனம், காட்டுச் சடங்கு ஆகியவை குடும்பத்தில் வாழ்கின்றவனுக்கு முக்கியமானவையாகும். இந்த நடைமுறைகளைத்தான் இந்தோ-ஐரோப்பியர்களும் (Indo-Europeans) பின்பற்றியுள்ளனர். ஒருவன் அன்றாடம் ஐவருக்கு நிகழ்த்தக் கூடிய, ஐந்து பெரிய நிவேதனங்களைப் (Five great Sacrifices) பற்றியும் கிரிய சூத்திரங்கள் விரித்துரைக்கின்றன. அந்த ஐவர் முறையே கடவுளர், தீய ஆவிகள் (Demons), தந்தை, மனிதர், பிராமணர் ஆகியோர் ஆவர். வீடுகட்டுதல், உழவுசெய்தல், தோட்டமமைத்தல், கிணறு, குளம்வெட்டுதல், நோய் நீக்கல், பிசாசை ஓட்டுதல் முதலான சமயங்களில் மனிதன் செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும் இவை விரிவாகக் கூறுகின்றன. ஒருவன் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் ‘சுராதங்கள்’ (Sraddhas) எனப்படும். பிற்காலத்தில் ‘சுராதகல்பங்கள்’ என்னும் தனி நூலே இயற்றப்-<noinclude></noinclude> 1opnyl7itd3kcf6rewfbi2tormmd8d7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/826 250 640998 1954507 1925867 2026-07-18T05:20:02Z Sridevi Jayakumar 15329 1954507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்பொரு சிறுநுரையார்‌|798|கல்யாண சுந்தரமூர்த்தி}}</noinclude>பட வேண்டிய அளவிற்கு ஈமச்சடங்குகள் மிகுந்து விட்டன. கிரிய சூத்திரங்களின் தொடர்ச்சியாகத் தரும-சூத்திரங்கள் என்னும் மூன்றாம் வகை இலக்கியங்களும் தோன்றின. இவற்றில் மனிதன் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்களும், பிரபு வழக்கான சட்டங்களும் (Customary laws) கூறப்பட்டுள்ளன. சாத்திரங்களின் நான்காம் பிரிவாகச் சுல்வ-சூத்திரங்கள் (Sulva–Sutras) உள்ளன. இவை சுரௌத சூத்திரங்களுடன் நேரடியாக இணைந்தவை. வேதங்களின் உண்மைப் பொருளை உணரவும், வேதமந்திரங்களைப் பாராயணம் செய்து ஒப்பிக்கவும் சுரௌத, கிரிய சூத்திரங்கள் பயன்படுகின்றன. கருப்பு யசுர்வேதத்தைச் (Black Yajurveda) சார்ந்த பௌதாயன, ஆபசுதம்பப் பிரிவுகள் மட்டுமே கல்ப சூத்திரம் என்னும் பொதுத்தலைப்பில் மேற்கூறிய நான்கு சூத்திர மூலங்களைக் கூறுகின்றன. மற்ற வேதப்பிரிவுகள் (School) நான்கு வகையான சூத்திரங்கள் அடங்கிய கல்ப சூத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. {{Right|<b>ம.இ.</b>}} <section end="கல்ப சூத்திரம்"/> <section begin="கல்பொரு சிறுநுரையார்"/> {{dhr}} {{larger|<b>கல்பொரு சிறுநுரையார்:</b>}} இவர் புலவர்களுள் ஒருவர். ஊர், தொழில், சமயம் முதலிய பலவற்றின் அடிப்படையில் சங்ககாலப் புலவர் பெயர்கள் அமைந்துள்ளன. அத்தகு பெயர் பெற்ற புலவர் சிலர்தம் இயற்பெயர்கள் கண்டுகொள்ள இயலாமல் மறைந்துபோயின. எனவே, அவர்தம் பாடல்களைத் துய்த்த அறிஞர் பெருமக்கள் பாடலில் அமைந்துள்ள சிறந்த தொடர் ஒன்றாலேயே அப்புலமைச் சான்றோர்களைக் குறித்து வைத்தனர். அவ்வாறு அரிய தொடரால் குறிக்கப்பெற்ற புலவர்கள் அணிலாடுமுன்றினார், ஓரேருழவர் முதலியோராவர். கல்பொரு சிறுநுரையார் அவ்வாறு பெயர் பெற்றவராவார். இவர் பாடிய குறுந்தொகைப் பாடலில் (290) அமைந்துள்ள இனிய தொடர் ஒன்றால் இப்பெயரை இவர் பெற்றார். இவர்தம் இயற்பெயர் காலப்போக்கில் மறைந்து போய்விடப் பின்னர் இத்தொடரால், ‘கல்பொரு சிறுநுரையார்’ என இவர் குறிப்பிடப்பெற்றிருக்கலாம் அல்லது இத்தகு இனிய தொடரால் இவர் குறிப்பிடப்பெற்ற பிறகு, நாளடைவில் இச்சிறப்புப் பெயர் எஞ்ச இயற்பெயர் மெல்ல மறைந்து போயிருக்கலாம். <b>கல்பொரு சிறுநுரை:</b> வெள்ள நீரில் திரண்ட நுரை, அலைகளால் பாறையில் மோதி மோதி மெல்ல மெல்லக் கரைந்து போவது போலத் தலைவன் பிரிவை எண்ணி எண்ணித் தலைவி உயிர் தேய்ந்து போகும் என்பது இத்தொடர் தரும் பொருளாகும். இத்தகு எளிய உவமை வழி ஏக்க உணர்வைப் புலப்படுத்தும் புனையா ஓவியமாக இத்தொடர் நிகழ்வதால், இவர் தமிழ் இலக்கிய உலகில் இன்றும் வாழும் சிறப்புப் பெற்றுள்ளார். {{Right|<b>பொன்.சௌ.</b>}} <section end="கல்பொரு சிறுநுரையார்"/> <section begin="கல்யாண சுந்தரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>கல்யாண சுந்தரமூர்த்தி:</b>}} சிவபெருமான் பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொள்ளும் திருக்கோலமே கல்யாண சுந்தரமூர்த்தி என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானின் தேவியான தாட்சாயணி தன் தந்தை தட்சன் நடத்திய வேள்வித் தீயில் மறைந்து, இமவானின் மகளாகப் பிறந்து பார்வதி தேவி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். தாரகன் என்ற அசுரன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். சிவபெருமானின் மைந்தனால் மட்டுமே அவளை அழிக்க இயலும் எனக் கருதிய தேவர்கள் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் முடிக்க எண்ணினர். இறைவனும் தேவியை மணம் புரிந்துகொள்ளப் பார்வதி தேவி இருக்கும் இடத்திற்குக் கிழவேதியராகச் சென்று பசியாக இருப்பதாகக் கூறி உணவிட வேண்டினார். அவரைக் குளித்துவிட்டு வரும்படி தேவி கூற அருகில் உள்ள ஆற்றில் இறங்கிக் குளிக்கும்பொழுது, முதலை ஒன்று அவர் காலைக் கவ்வி இழுத்தது. உதவிக்காக இறைவன் தேவியை அழைத்தார். வேதியருக்குத் தன் கையினை நீட்டி உதவி செய்யத் தேவி தயங்கினாள். இறைவனுக்கு மட்டுமே தன் கையைத் தர நினைத்தாள். எனினும், ஆபத்தான அச்சமயத்தில் உதவ வேண்டும் என்பதற்காகக் கையை நீட்டிக் கிழவேதியரை ஆற்றிலிருந்து வெளிக் கொணர்ந்தாள். முதலை மறைந்தது. இறைவனும் தான் யார் என்பதை வெளிப்படுத்திய அளவில் பார்வதி தேவி மனமகிழ்ச்சி அடைந்தாள். பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை வராகபுராணம் என்னும் நூல் கூறுகிறது. இத்தெய்வ உருவ வடிவ நலனைப் பற்றி அம்சுமபேத ஆகமம், உத்தர காமிக ஆகமம், பூர்வகாரணாகமம் ஆகியவை கூறுகின்றன. ஒரு சமயம் முனிவர்கள் சிலர் வேதசிவாகமங்களில் தமக்குள்ள ஐயங்களைப் போக்கி அவற்றின் நுண்பொருளை விளக்கிக் கூறுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அதன்படி சிவபெருமான்<noinclude></noinclude> 0r1kojs0dbnra36khi7w4npfckxo3oh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/828 250 641212 1954508 1926145 2026-07-18T05:23:28Z Sridevi Jayakumar 15329 1954508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்யாண சுந்தரமூர்த்தி|800|கல்யாணி}}</noinclude>வாயிலின்‌ இடப்‌ படிக்கட்டின்‌ பக்கச்‌ சுவரிலும்‌ சிவபெருமானின்‌ திருமணக்‌ காட்சி, தொடர்‌ சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரைக்‌ கோயிலில்‌ கம்பத்‌தடி மண்டபத்‌ தூணிலும்‌, புதுமண்டபத்திலும்‌ இறைவனின்‌ திருமணக்‌ கோலம்‌ உள்ளது. அங்கு இறைவன்‌ கம்பீரமாக நிற்கத்‌ தேவி அருகில்‌ நாணத்துடன்‌ சற்றுக்‌ குனிந்த நிலையில்‌ இருக்க, அருகிலே திருமால்‌ கெண்டியிலிருந்து நீர்‌ வார்த்துத்‌ தன்‌ தங்கையான பார்வதி தேவியை மணம்‌ செய்து தரும்‌ காட்சி மிக அழகாகச்‌ செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின்‌ கீழ்ப்பகுதியில்‌ நான்முகன்‌ வேள்வித்‌தீ வளர்க்‌கிறார்‌. இவை நாயக்கர்‌ காலச்‌ சிற்பங்கள்‌ ஆகும்‌. செப்புத்‌ திருமேனிகளில்‌ சிவபெருமானையும்‌ தேவியையும்‌ மட்டுமே காணலாம்‌. இறைவன்‌ வலப்‌புறம்‌ உள்ள தேவியின்‌ வலக்கையைப்‌ பற்றிக்‌ கொண்‌டும்‌, தேவி நாணத்தோடு கண்களைக்‌ கீழே நோக்கக்‌ கொண்டும்‌ உள்ள திருமேனிகளை வடக்காலத்தார்‌, திருவீழிமிழலை, திருக்கோளிலி (திருக்குவளை), திருவேள்விக்குடி, திருவொற்றியூர்‌, திருமணஞ்சேரி ஆகிய கோயில்களில்‌ காணலாம்‌. திருவெண்காடு, கோனேரிராசபுரம்‌ ஆகிய இடங்களிலுள்ள செப்புத்‌ திருமேனிகளில்‌ சிவபெருமான்‌ இறைவியின்‌ வலக்‌ கரத்தைப்‌ பற்றிக்‌ கொண்டிருக்கிறார்‌. திருவெண்காட்டுக்‌ திருமேனியில்‌ அவர்களின்‌ இருபுறமும்‌ திருமாலும்‌ திருமகளும்‌ இருக்கின்றனர்‌. நாணமுற்ற மணப்பெண்‌ணைத் திருமகள்‌ ஒரு கையினால்‌ பின்பக்கம்‌ அணைத்துச்‌ சிவபெருமானை ஒட்டி நிற்கச்‌ செய்யத்‌ {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 137 |oTop = 389 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|கல்யாணசுந்தரமூர்த்தி – நாயக்கர்கால ஒவியம்‌}} தள்ளுவதைக்‌ காணலாம்‌. திருமால்‌ தாரை வார்த்‌துத்‌ தருவதற்காக நிற்கிறார்‌. கோனேரிராசபுரத்திலுள்ள திருமேனியில்‌ இறைவன்‌ இறைவி அருகே கெண்டி ஏந்திய திருமாலும்‌, கீழ்ப்புறத்தில்‌ நான்முகனும்‌ உள்ளனர்‌. கல்யாண சுந்தரமூர்‌த்தியின்‌ கோலத்தை ஓவியங்‌களில்‌ சிறப்பாக உத்தரகோசமங்கை, மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில்‌ காணலாம்‌. மதுரைக்‌ கோயில்‌ ஊஞ்சல்‌ மண்டபத்தில்‌ உள்ள ஓவியத்தில்‌, ஒரு மரத்‌தினடியில்‌ நின்று சொக்கநாதப்‌ பெருமான்‌ அங்கயற்கண்ணியம்மையின்‌ கரம்‌ பற்றுகிறார்‌. அழகராம்‌ திருமால்‌ தம்‌ தங்கையைச்‌ சுந்தரேசருக்குத்‌ தாரை வார்த்துத்‌ தருகிறார்‌. அவர்‌ தேவியர்கள்‌ அருகே நிற்கின்றனர்‌. இறைவனுக்கு அருகில்‌ இந்திரன்‌, அக்கினி முதலான எண்திசைக்‌ காவலர்களும்‌ நிற்கின்றனர்‌. கீழ்ப்பகுதியில்‌ தவமுனிவர்கள்‌ சூழ நான்முகன்‌ மண வேள்வி வளர்க்கிறார்‌. இது நாயக்க மாதேவி இராணிமங்கம்மாள்‌ காலத்திய ஓவியம்‌ ஆகும்‌. இம்மூர்த்தியை வழிபட்டால்‌ விரைவில்‌ திருமணம்‌ நடக்கும்‌; வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்‌கும்‌ என்பது கூறப்படுகிறது. {{Right|<b>கி.ஸ்ரீ.</b>}} <section end="கல்யாண சுந்தரமூர்த்தி"/> <section begin="கல்யாணி"/> {{dhr}} {{larger|<b>கல்யாணி:</b>}} இந்தியாவில்‌ ஆந்திரப்பிரதேசத்‌தில்‌ பீடார்‌ என்னுமிடத்திலிருந்து ஏறத்தாழ 58 கி.மீ. தொலைவில்‌ உள்ள இவ்வூர்‌ வரலாற்றுச்‌ சிறப்பு வாய்ந்தது. இது ஒரு பெரும்‌ இராச்சியத்தின்‌ தலைநகராக விளங்கிப்‌ புகழ்‌ பெற்றிருந்தது. தென்னிந்திய வரலாற்றில்‌ கி.பி. 11–ஆம்‌ நூற்றாண்டில்‌ சிறப்புற்றிருந்த சாளுக்கியர்கள்‌ இதைத்‌ தலைநகராகக்‌ கொண்டு ஆட்சி செய்தனர்‌. அடுத்த நூற்றாண்டில்‌ காலசூரிகள்‌ என்ற மரபினருக்கு இது தலைநகராக ஆயிற்று. பிறகு, தேவரியைச்‌ சேர்ந்த யாதவர்கள்‌ இங்கு ஆட்சிபுரிந்தனர்‌. இந்துக்களின்‌ ஆட்சிக்‌ காலங்‌களில்‌ கலைத்துறையிலும்‌ இலக்கியத்துறையிலும்‌ சமயத்துறையிலும்‌ கல்யாணி சிறப்புற்று விளங்கியது. வீரசைவ சமயத்தைப்‌ பரப்பிய பசவர்‌, சட்ட நூலாசிரியர்‌ விஞ்ஞானேசுவர்‌ முதலிய பெரியோர்கள்‌ இந்நகரில்‌ வாழ்ந்தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. பல அழகிய கோயில்கள்‌ இங்குக்‌ காட்சி அளித்தன. ஆனால்‌, இசுலாமியர்‌ ஆட்டி இங்கு ஏற்பட்ட பிறகு அவை அழிவுற்றன. அவ்விடங்களில்‌ மசூதிகள்‌ எழுப்‌பப்‌ பெற்றன. பாமினி அரசைச்‌ சேர்ந்த பீசப்பூர்‌-சுல்தான்கள்‌ கல்யாணியைத்‌ தம் ஆதிக்கத்தின்‌ கீழ்க் கொணர்ந்தனர்‌. பிறகு முகலாயர்களும்‌ இங்குப்‌ படையெடுத்தனர்‌. அவுரங்கசீபுக்கு கி.பி. 1656–ஆம்‌ ஆண்டில்‌ இந்நகர்‌ அடிபணிந்தது. பல்சலைச்‌ சிறப்புகளையும்‌ பல போர்களையும்‌ அழிபாடுகளையும்‌ கண்ட ஊர்‌ கல்யாணியாகும்‌. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கல்யாணி"/> {{nop}}<noinclude></noinclude> sf49ihc1el6g28cun51787jz0tibzyx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/829 250 641378 1954509 1926610 2026-07-18T05:25:42Z Sridevi Jayakumar 15329 1954509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்யாணிப்‌ பல்கலைக்கழகம்‌|801|கல்லாடம்}}</noinclude><section begin="கல்யாணிப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} {{larger|<b>கல்யாணிப் பல்கலைக்கழகம்</b>}} மேற்கு வங்காள மாநிலத்தில் 1960–ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம் வாழ்வியல் (Humanities), அறிவியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி வழங்க வசதியளிப்பதாகும். கல்கத்தா நகருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள கல்யாணி (Kalyani) என்னும் சிறிய நகரில் 700 ஏக்கர் பரப்பளவில் கல்யாணிப் பல்கலைக் கழகம் (University of Kalyani) அமைந்துள்ளது. மேற்கு வங்காளத்திலுள்ள நதியா (Nadia) மாவட்டத்தில் இப்பல்கலைக்கழகம் உள்ளது. வங்காள மொழி, தாவரவியல், வேதியியல், பொருளியல், கல்வியியல், ஆங்கிலம், வரலாறு, கணிதவியல், உடற்பயிற்சி, இயற்பியல், அரசியல், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் உள்ளன. இங்குள்ள அயல்நாட்டு மொழிப் புலத்தில் சீனமொழி கற்பிக்கப்படுகின்றது. இங்கு இளங்கலைப் பட்டத்திலிருந்து ஆய்வறிஞர் பட்டம் வரை பயிலுதற்கான வசதி உண்டு. கல்யாணிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் மிகக் குறைவே. சிமுராலி கல்வியியற் கல்லூரி (Simurali College of Education) இப்பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளது. கல்யாணிப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடத்துறைகளிலும் பயிற்று மொழியாகவும் தேர்வு மொழியாகவும் ஆங்கிலமே இருந்து வருகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கல்யாணிப் பல்கலைக்கழகம்"/> <section begin="கல்ராயன் மலை"/> {{dhr}} {{larger|<b>கல்ராயன் மலை</b>}} தமிழ்நாட்டில் சேலம், தென்னார்க்காடு மாவட்டங்களில் உள்ள மலைத் தொடர். ஆத்தூர் வட்டத்தில் உள்ள கல்ராயன் மலை ஆத்தூர் கல்ராயன் எனக் கூறப்படுகிறது. இம்மலைத் தொடர் 26 கி.மீ. வடக்கிலிருந்து தெற்காகவும் 37 கி.மீ. கிழக்கிலிருந்து மேற்காகவும் பரவியுள்ளது. இதன் தெற்குச் சரிவு மட்டுமே சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஆத்தூர் கல்ராயன் மலையைச் சமவெளி ஒன்று இரண்டாகப் பிரிக்கிறது. இச்சமவெளி தும்மல் என்னும் ஊரிலிருந்து பாப்பி நாயக்கன்பட்டி வரை செல்கிறது. இரண்டாகப் பிரிக்கப்பட்ட கல்ராயன் மலையின் வடபகுதி சின்ன கல்ராயன் என்றும், தென்பகுதி பெரிய கல்ராயன் என்றும் கூறப்படும். பெரிய கல்ராயன் மலை தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரிய கவுண்டன், குறும்ப கவுண்டன் நாட்டுப் பிரிவுகள் வரை சென்றுள்ளது. இம்மலைத் தொடரில் அவ்வையார் மலை, கோவில் மலை, நகலூர் மலை, கல்லூர் மலை போன்ற சிறு குன்றுகள் உள்ளன. இம்மலைத் தொடரில் உள்ள ஆற்றூர்க் கணவாய் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. சேலம் செல்பவர்கள் இதன் வழியாகச் செல்வர். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="கல்ராயன் மலை"/> <section begin="கல்லாடம்"/> {{dhr}} {{larger|<b>கல்லாடம்,</b>}} அகப்பொருள் மரபுபற்றிப் பிறந்ததொரு தமிழ் நூலாகும். கல்லாடர் என்னும் புலவர் இயற்றியதால், இந்நூல் இப்பெயர் பெற்றது என்பர். பதினைந்தடிச்சிறுமையும் அறுபத்தாறடிப் பெருமையுமுடைய நூறு அகவற்பாக்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்நூன்முகப்யின்கண், ‘யானைமுகக் கடவுள் வாழ்த்து’க் காணப்படுவதால், இந்நூல் காலத்தால் பிற்பட்டது என்று கருதப்படுகிறது. சங்க யாப்பாம் அகவற்பாவால் இந்நூல் புனையப் பெற்றிருப்பினும், அகப்பொருள் இலக்கியவகை வளர்ச்சியின் தொடர்ச்சியை எண்ணுவோர் இப்பனுவல் தேவாரக் காலத்திற்குப் பிற்பட்டது என்று கூறுவர். சங்ககால அகவற்பாவடிவமும், சமய நூல்களின் உள்ளுணர்வும், காதல் என்னும் கற்பனைப் பாடு பொருளும், பல கலைகள் காட்டும் அறிவுத் திறனும் இந்நூலின் செறிவிற்குக் காரணங்கள் ஆகின்றன. ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்றும், ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே’ என்றும் வழங்கி வருகின்ற முதுமொழிகள் இந்நாவின் திட்ப நுட்பத்தை விளக்கும் பெற்றியுடையன, இந்நூலினை முறையாகப் பயின்று புலமை பெற்றோர் பலகலை வல்லுநராகத் திகழ்வர் என்பதனையும், அவரைச் சொற்போரில் வெல்லுதல் அரிதாம் என்பதனையும் உணர்த்தவே, இம்முதுமொழிகள் தோன்றின என்பது பலர் கருத்தாம். ஆதலின், இம்முதுமொழிகள் உணர்த்தும் உட்பொருள் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. மொழித் திறத்தின் முட்டறுத்த புலமை நலனும் சொல்வன்மையும் இந்நூலால் எய்தலாமெனக் கருதிப் பலரும் இந்நூலினைக் கற்கத் தலைப்பட்டனர். சங்க இலக்கிய அகப்பொருள் இலக்கணத்தை யாப்பமைப்பில் பின்பற்றிப் பொருளமைப்பில் அதன் வளர்ச்சியைக் கொண்டுள்ளது. கல்லாடம் எனலாம். குறிப்பாகக் கூறினால், அகப்பொருள் அமைதியில் பழமையும் புதுமையும் விரவி, மாறுதலை நோக்கி விரைந்த காலத்து இந்நூல் எழுந்தது எனல் தகும். மணிவாசகப் பெருமான் பாடிய திருக்கோவையாரில் அகப்பொருளினைப் பாடுபொருளாக்கிச் சிற்றின்பத்தை முன்னிறுத்திப் பேரின்பத்தை உள்ளுறுத்திச் செல்லும் போக்கினைக் காணலாம். திருச்சிற்றம்பலக் கோவையாரில் யாப்பு வகையாலும்<noinclude> <b>வா.க. 6 – 51</b></noinclude> rhakblet7ebqsj2s3zl1sz6rkuividg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/830 250 641395 1954510 1926756 2026-07-18T05:26:31Z Sridevi Jayakumar 15329 1954510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடம்‌|802|கல்லாடர்}}</noinclude>பொருள்வகையாலும் தொல்காப்பியர் காட்டிய அகத்திணை இயல்பை விடுத்து வளர்ந்த அகப்பொருள் வளர்ச்சியைக் காணலாம். இத்தகைய வளர்ச்சியை இலக்கிய வகைமை வளர்ச்சி என்று ஏற்காமல் எதிர்த்த புலவர்கள் பற்றிய கதை அக்காலத்தில் உண்டு. திருக்கோவையாரின் அகப்பொருளியல்பினைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்லாடலும், அன்று சில புலவரிடையே இருந்தது என்பதனை அக்கதை மூலம் அறியலாம். திருக்கோவையாரில் அகத்திணை மரபு அடைந்த தளர்ச்சியினைப் பற்றிச் சிலர் சொல்லாட, அதனைக் கல்லாடனார் கண்டு திருக்கோவையாரின் சீரினை நிலைநாட்ட விழைந்து ‘கல்லாடம்’ என்னும் நூலினை யாத்தனர் என்பது தெரிகிறது. கல்லாடம் திருக்கோவையாரின் வழிநூலாகும். திருக்கோவையாரின் சீரினையும் சிறப்பினையும் நிலை நாட்டிய நூல் கல்லாடம் ஆகும். கல்லாடம் கற்றவர், திருக்கோவையை அகம் நுதலிய நூலாய் ஏற்பர் என்பது திண்ணம். கல்லாடம் கற்காதவர்கள் திருக்கோவையாரை அகப்பொருள் மரபினைச் சார்ந்த நூலாய் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே கல்லாடம் கற்றவனோடு கோவை நூலைக் குறைத்துக் கூறிச் சொல்லாடாதே என்னும் பொருள்படக் ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்ற முதுமொழி தோன்றியிருத்தல் கூடும். அதனால், இம்முதுமொழியும் சீரிய பொருளுடையதாகிறது. செந்தமிழ் மொழியினது சீரினையும் தெய்வத் திருவருளின் சிறப்பினையும் கல்லாடனார் தம் நூல் முழுவதிலும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் இந்நூலாசிரியர் நற்புலமை பெற்றவர் என்பதனைக் கல்லாடம் கற்போர் தெளிவர். சங்க இலக்கிய அகப்பாடல்கள் இறைச்சிப் பொருளையும் உள்ளுறை உவமத்தினையும் உயிர் நாடிகளாகக் கொண்டவை. ஆனால், கல்லாடமோ இறைவனுடைய திருவிளையாடல்களைக் குறித்துக் கூறும் குறிப்புகள் கொண்டவை. சிவபெருமான் செருக்குமிக்க பிரமன் தலையைக் கிள்ளித் தன் கையிற் பலிப்பாண்டமாகக் கொண்டதும், அப்பெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியதும், இடைக்காடர் பொருட்டு இறைவன் மதுரையை விடுத்து அப்புலவரைத் தொடர்ந்து போனலும், இலங்கை வேந்தன் செருக்குற்றுக் கைலையை அகழ்ந்தபோது இறைவன் தன் காற் பெருவிரலால் ஊன்றி அவனை அழுத்தியதும், பின்னர் அவன் துயர்க்கிரங்கி அருள் செய்ததும் முதலிய இன்னபிற தொன்மங்கள் பத்திச் சுவையுடன் கல்லாடத்தில் பாடப்படுகின்றன. மேலும், சைவ சமயத் தத்துவங்கள் இந்நூலின் கண் ஊடாடும் நுவல் பொருளாய்ச் சிறக்கின்றன. அன்றியும், பலவிடங்களில் சிற்றின்பத்தைக் காட்டிப் பேரின்பத்தைக் குறிப்பாற் சுட்டும் வித்தகம் இந்நூலின் மாண்பு எனல் வேண்டும். {{Right|<b>கதிர்.ம.</b>}} <b>கல்லாடம்{{sup|1}}:</b> திருவாசகத்தால் அறியலாகும் ஒரு சிவத்தலம். இது தமிழகத்தில் விளங்கிய ஒரூராகும். இங்குச் சிவபெருமான் உமையம்மை யொடு இனிதிருந்து அருளியவற்றைக் ‘கல்லாடத்துக் கலந்தினிதருளி, நல்லாளோடு நயப்புறவெய்தியும்’ (திருவா. கீர்த்தி. 11, 12) என்று மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார். கல்லாடீச்சுரமுடையார் கோயில் என்னும் ஒரு குறிப்பு, கல்வெட்டில் உள்ளதனை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="கல்லாடம்"/> <section begin="கல்லாடர்"/> {{dhr}} {{larger|<b>கல்லாடர்</b>}} சங்க காலப் புலவருள் ஒருவர். இவர் கல்லாடனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். காண்க: கல்லாடனார். <b>கல்லாடர்{{sup|2}}</b> கலாவியல் என்னும் பாட்டியல் நூலைச் செய்தவர். இவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறார். இவரது நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவருடைய நூற்பாக்களுள் சில பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல் உரைகளில் எடுத்தாளப் பெற்றுள்ளன. நூற்பாக்களால் ஆகிய இவரதுநூலில் சில குறட்பாக்களும் உள்ளன. <b>கல்லாடர்{{sup|3}}:</b> இவர் சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பதினோராந் திருமுறையினைச் சேர்ந்த திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் நூலை இயற்றியவர். ‘பிரிவின் தன்மை’ எனத் தொடங்கும் அந்நூல் 38 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவாலமைந்துள்ளது. சங்க காலக் கல்லாடர், அகப்பொருள் நூலாகிய கல்லாடத்தைச் செய்த கல்லாடர் முதலிய பிற கல்லாடர்களினின்றும் வேறு பிரித்து அறியும் வகையில் இவர் பெயர் கல்லாட தேவ நாயனார் என்று திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சிவனடியார்களுள் ஒருவராகத் திகழ்ந்த பாங்கினைக் கல்லாடதேவ நாயனார் என்ற பெயரும், சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இவர்தம் நூலும் உணர்த்துகின்றன. இவர் தொல்காப்பிய உரையாளராகிய இளம்பூரணருக்குக் காலத்தால் முற்பட்டவர். இவர் இயற்றிய திருக்கண்ணப்ப<noinclude></noinclude> mcodlig42opajwndt8lz8kfhtuiog24 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/833 250 641551 1954511 1927001 2026-07-18T05:29:12Z Sridevi Jayakumar 15329 1954511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடனார்‌|805|கல்லிடைக்குறிச்சி}}</noinclude>(நூ. 198) என்னும்‌ நூற்பாவில்‌ ‘கிழவோன்‌ என்பது ஆகார வழக்கின்மையின்‌ அது செய்யுள்‌ விகாரம்‌ அன்று; இயல்பாகிய ஈறு எனக்‌ கொள்க’ என்று கூறியிருப்பது அவரது உரைத்திறனுக்குச்‌ சான்‌றாகும்‌. இலக்கண உரையாசிரியர்க்கு இலக்கிய நுகர்ச்சி இன்றியமையாது வேண்டப்படுவதாகும்‌. இவர்‌ பல இலக்கியப்‌ பாடல்களை நுகர்ந்து அவற்றிற்கு இலக்‌கண அமைதி கூறியுள்ளார்‌. ‘நாணில மன்ற’ என்‌னும்‌ குறுந்தொகையுள்‌ ‘பிரிந்திசினோர்க்கு அழல்‌’ என ஆனிறுதிக்கண்‌ தொக்கு நின்றதால்‌ எனின்‌, அந்நிகரான வழக்கினுள்‌ இன்மையின்‌ செய்யுள்‌ விகாரம்‌ என்க (நூ. 107 உரை) என்பதை அத்தன்மைக்குச்‌ சான்றாகச்‌ கூறலாம்‌. கல்லாடர்‌ காலத்தால்‌ பிற்பட்டவராயினும்‌, அவரது உரை எளிமையும்‌ தெளிவும்‌ உடையதாக, முன்னோரின்‌ உரைகளை விளங்கிக்‌ கொள்ளத்தக்க நற்றுணையாக அமைந்துள்ளது. <b>கல்லாடர்‌{{sup|6}}</b> திருவள்ளுவமாலையில் ‘ஒன்றே பொருள்‌ எனின்‌ வேறென்ப’ என்னும்‌ வெண்பாவை இயற்றியவர்‌. {{Right|<b>சா.கி.</b>}} <section end="கல்லாடர்"/> <section begin="கல்லாடனார்‌"/> {{dhr}} {{larger|<b>கல்லாடனார்‌</b>}} சங்க காலப்‌ புலவர்களுள்‌ ஒருவர்‌. கல்லாடம்‌ என்னும்‌ ஊரிலுள்ளவராதலின்‌ கல்லாடனார்‌ என வழங்கப்‌ பெற்றார்போலும்‌ என்று உ.வே. சாமிநாதையர்‌ உரைப்பர்‌. திருக்கண்‌ணப்பதேவர்‌ அருளிய திருமறம்‌, பாட்டியல்‌ நூலொன்று, திருவள்ளுவமாலையின்‌ பாடலொன்று ஆகியவற்றைப்‌ பாடியவரும்‌ இக்கல்லாடனாரே என்‌பது உ.வே. சாமிநாதையர்‌ கருத்தாகும்‌. இவர்‌ பாடியனவாகச்‌ சங்கத்தொகை நூல்களில்‌ 14 பாடல்கள்‌ உள. புறநானூற்றில்‌ ஐந்து (23, 25, 371, 385, 391), அ௧நானூற்றில்‌ ஏழு (9, 83, 113, 171, 199, 209, 333), குறுந்தொகையில்‌ இரண்டு (260, 269). இவர்‌ சேரலர்‌, களங்காய்க்‌ கண்ணி நார்முடிச்‌ சேரல்‌, தலையாலங்‌கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌, செழியன்‌, தென்னர்‌, அகுதை, அம்பர்‌ கிழான்‌ அருவந்தை, ஓரி, காரி, நன்னன்‌, பாணன்‌, புல்லி, பொறையாற்றுக்‌ கிழான்‌, கோசர்‌, தொண்டையோர்‌ ஆகியோரைப்‌ பாடியுள்ளார்‌. இவர்‌தம்‌ பாக்களில்‌ பகைவரது நீர்‌நிலையை அழித்தல்‌, காவல்‌ மரத்தை வெட்டுதல்‌, முரசங்‌ கைப்பற்றுதல்‌ (புறம்‌. 23), போரில்‌ கொழுநர்‌ மாய்ந்தபின்‌ அவர்‌ மனைவிமார்‌ கைம்மை நோன்பு கொண்டு கூந்தலைக்‌ கொய்தல்‌ (புறம்‌. 25), வேலி ஆயிரம்‌ விளைக என வாழ்த்துதல்‌ (புறம்‌. 391), பல்லி ஒலிக்குந்தோறும்‌ வழிபடுதல்‌ (அகம்‌. 9). யானைக்‌ கன்றைக்‌ கள்விலைக்காகக்‌ கள்விற்போர்‌ மனைமுன்‌ கட்டுதல்‌ (அகம்‌. 83), உப்பு விற்று மாறாக நெல்‌ வாங்குதல்‌ (குறு. 269) முதலிய வழக்கங்கள்‌ இடம்‌ பெற்றுள்ளன. தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியனை மூன்று புறநானாற்றுப்‌ பாடல்களில்‌ (23, 25, 371) இவர்‌ சிறப்பித்துப்‌ பாடியுள்ளார்‌. அவனது ஆலங்கானப்‌ போரை அகநானூற்‌றிலும் (209) குறிப்பிட்டுள்ளார்‌. இவர்தம்‌ அகப்‌பாடல்கள்‌ இயற்கை நலம்‌ செறிந்தன. குருகு வானிற்‌ பறத்தல்‌, வண்டு ஊதப்‌ போதுகள்‌ மலர்தல்‌ (குறு. 260), வேனிற்‌ காலத்தில்‌ யானையினம்‌ மேகம்‌ நோக்கிக் கையெடுத்துப்‌ பிளிறல்‌ (அகம்‌. 333), மகளிர்‌ குற்றும்‌ உலக்கையொலி பக்கமலையிலுள்ள ஆந்தை ஒலியொடு இரட்டுதல்‌ (அகம்‌. 9), தலைவியின்‌ தந்தை சுறா எறிந்த புண்‌ ஆறி மீண்டும்‌ கடலில்‌ மீன்‌ வேட்‌டைக்குச்‌ செல்லல்‌ (குறு. 269) முதலிய செய்திகள்‌ குதிப்பிடப்பட்டுள. இவர்‌ பாடல்கள்‌ வரலாற்றுக் குறிப்‌பும்‌ தருகின்றன. வாகைப்‌ பெருந்துறைப்‌ போரில்‌ நன்‌னன்‌ போர்க்களத்தில்‌ மடியக்‌ களங்காய்க்‌ கண்ணி நார்முடிச்‌ சேரல்‌ தான்‌ முன்பிழந்த நாட்டைப்‌ பெற்‌றான்‌ என்பதை அகம்‌ 199-ஆம்‌ பாடலும்‌. காரி ஒரியைக்‌ கொன்று சேரலர்க்கு நாட்டை மீட்டுக்‌ கொடுத்ததை அகம்‌ 209-ஆம்‌ பாடலும்‌ உணர்த்துகின்‌றன. வறுமையுற்றவிடத்தும்‌ ஒருவரிடத்து நட்பில்‌ மாறக்கூடாது என்பதனையும்‌ உடம்பைவிட்டு உயிர்‌ செல்லுதல்‌, கூட்டைவிட்டுப்‌ பறவை பறத்தல்‌ போன்‌றது என்பதனையும்‌ அகம்‌ 113-ஆம்‌ பாடல்‌ புலப்‌படுத்தும்‌. நெடுஞ்செழியன்‌ பகைவரைக்‌ கொன்றபோது அவர்தம்‌ மனைவியர்‌ தம்‌ பிள்ளைகளைக்‌ காப்பாற்றுதற்காக இறவாது உயிர்‌ வாழ்ந்தனர்‌ என்ற செய்‌தியை வெளிப்படையாகக்‌ கூறாது, கலைமான்‌ புலியிடத்தகப்பட்டு மாளப்‌ பெண்மான்‌ தன்‌ குட்டிகளைத்‌ தழுவிக்கொண்டு வேளைப்பூவைக்‌ கறித்துண்ணும்‌ என்ற செய்தியைக்‌ கூறுவதன்‌ வாயிலாகக்‌ குறிப்பிற்‌ புலப்படுத்‌தியிருத்தல்‌ (புறம்‌. 23) நயமுடையதாகும்‌. {{Right|<b>இரா.சா.</b>}} <section end="கல்லாடனார்‌"/> <section begin="கல்லிடைக்குறிச்சி"/> {{dhr}} {{larger|<b>கல்லிடைக்குறிச்சி:</b>}} இவ்வூர்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ பொதியமலை அருகில்‌ தண்பொருநை ஆற்றின்‌ கரையில்‌ வலப்பக்கமுள்ள நீர்‌ வளமிக்க இடம்‌. இங்குப்‌ பார்ப்பனர்கள்‌ நிறைந்துள்ளனர்‌. நெசவுத்‌ தொழிலுக்கும்‌ இவ்வூர்‌ புகழ்‌ வாய்ந்தது. நாமதீப நிகண்டு இயற்றிய சிவசுப்பிரமணியக்‌ கவிராயரும்‌ பொதிகை நிகண்டு, சாமிநாதம்‌ என்னும்‌ இலக்கண நூல்‌ ஆகியவற்றை இயற்றிய அவர்‌ தந்தையாராகிய சாமிக்‌ கவிராயரும்‌ இவ்வூரினரே<noinclude></noinclude> qxit57bjqqxass1h0qcizotu74jhxsj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/834 250 641552 1954512 1927002 2026-07-18T05:30:37Z Sridevi Jayakumar 15329 1954512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித்‌ தன்னாட்சி|806|கல்லூரித்‌ தன்னாட்சி}}</noinclude>திருவாவடுதுறை ஆதீனக் கிளைமடம் ஒன்று இவ்வூரைச் சார்ந்த தளிச் சேரியில் இயற்கை அழகோடு கூடியதாயுள்ளது. இந்திய நாடு உரிமை பெற இவ்வூரினராய யக்ஞேசுர சர்மா, இலக்குமி சங்கரையர், கோமதி சங்கர தீட்சிதர் முதலியோர் பலர் காந்தியடிகளின் தலைமையின் கீழ்ப் பணியாற்றியதால் வெள்ளையராட்சியில் பல இன்னல்களுக்கு ஆளாயினர். தொழிற் அதிபர்கள் பலரையும் இவ்வூர் தன்னிடத்துக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ‘ஈசன் இஞ்சினியரிங் கம்பெனி,’ ‘சங்கர் சிமிண்டு’ முதலியவற்றைக் கூறலாம். வரலாற்று வல்லுநர், திரு. கே.ஏ. நீலகண்ட சாத்திரியாரின் சொந்த ஊரும் இதுவே யாகும். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="கல்லிடைக்குறிச்சி"/> <section begin="கல்லூரித் தன்னாட்சி"/> {{dhr}} {{larger|<b>கல்லூரித் தன்னாட்சி:</b>}} பல்கலைக் கழகத்தின் துணையின்றிக் கல்லூரிகள் தமக்குத் தேவைப்படும் பாடத்திட்டங்களைத் தாமே உருவாக்கிக் கொள்ளவும் தம் தேர்வுகளைத் தாமே நடத்திக் கொள்ளவும் உள்ள உரிமை கல்லூரித் தன்னாட்சி (College Autonomy) எனப்படும். தன்னாட்சிக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகளைப் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டு. மாணவர்களுக்குப் பட்டங்கள் அளிக்கும். பணியாளர்கள் ஊதியத்திலோ பணித் தொடர்பான விதிகளிலோ அரசாங்க மானிய விதிகளிலோ மாற்றம் எதுவுமிராது. புதிதாகவகுக்கப்படும் பாடத்திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருளுதவியைப் பல்கலைக்கழக நிதியுதவி ஆணையம் (University Grants Commission) முழுவதுமாக ஏற்று அளிக்கும். தன்னாட்சி ஒரு கல்லூரிக்கு முதலில் ஐந்து ஆண்டுகளுக்கே அளிக்கப்படும். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் வல்லுநர் குழு அக்கல்லூரிக்குச் சென்று, அது இயங்கும் முறையை உன்னிப்பாக ஆராய்ந்து பின்னர், அக்கல்லூரிக்குத் தன்னாட்சியைத் தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும். தவறான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தால் தன்னாட்சி உடனே நீக்கம் செய்யப்படும். கல்வியின் தரத்தை உயர்த்தவும் கல்வியைச் சமுதாயத் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கவும் கல்லூரிகளுக்கு வாய்ப்பு அளிப்பதே தன்னாட்சியின் நோக்கமாகும். தன்னாட்சி முறையில் ஆசிரியர்களே பாடத்திட்டங்களை உருவாக்கித் தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் பொறுப்புத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்பொறுப்பைத் தவறான முறையில் பயன்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்தவும் அவர்களது வாழ்க்கையைப் பாழாக்கி விடவும் கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்நிலையைத் தடுக்கப் பல வழிவகைகள் தன்னாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ளன. கல்வி வல்லுநர்கள் தன்னாட்சி முறையே இந்திய உயர்நிலைக் கல்வி மேம்பாடடைவதற்கு உறுதுணையாயிருக்கும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோத்தாரியின் தலைமையில் 1966–ஆம் ஆண்டு செயற்பட்ட கல்விக்குழு (Education Commission) தம் அறிக்கையில், ‘நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் முடியும் முன்னர் (1971–ஆம் ஆண்டுக்கு முன்) இந்திய நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஐம்பது கல்லூரிகளைத் தெரிந்தெடுத்து, அவற்றிற்குத் தன்னாட்சி உரிமை தர வேண்டும்’ எனப் பரிந்துரை செய்திருந்தது. இந்தியாவில் கல்வியின் தரம் மிகவும் நலிந்துள்ளதென்பது யாவரும் அறிந்த உண்மை. கல்வியின் உண்மையான நோக்கத்தை உணராது, தேர்வுகளில் எப்படியாவது தேறிப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயற்படும் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகப் பலர். இதனால், தேர்வுகளில் பெருமளவு ஊழல்களும் வன்முறைச் செயல்களும் ஏற்பட்டுள்ளன. மேலும், கற்கும் கல்வி உயர்தரமானதாக இருக்க வேண்டுமாயின், பாடங்கற்பிக்கும் ஆசிரியரே அப்பாடத்திட்டத்தையும் (Curriculam/ Syllabus) உருவாக்க வேண்டும். அவரே தம் மாணவர்களையும் மதிப்பீடு செய்து, அவர்களது திறமையை அளக்க வேண்டும் என்பது கல்வி வல்லுநர்களின் கருத்து. ஆனால், இப்போது பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் (Affiliated) கல்லூரிகளிலோ ஆசிரியர்களுக்கு இந்த இரு பொறுப்புகளும் தரப்படுவதில்லை. பல்கலைக்கழகம் நியமிக்கும் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்; மாணவர்களைத் தயார் செய்து பல்கலைக் கழகத் தேர்வுகளுக்கு அனுப்ப வேண்டும். ஆகவே, கல்வி புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்க வழியில்லை. அத்துடன், பல்கலைக்கழக அமைப்பின் நீக்குப் போக்கான சட்டதிட்டங்கள் காரணமாக, கல்வியில் எவ்வித முன்னேற்றங்களும் விரைவில் கொண்டுவர முடிவதில்லை. இவை காரணமாகவே கோத்தாரிக் கல்விக்குழு நாட்டின் தலை சிறந்த ஐம்பது கல்லூரிகளுக்குத் தன்னாட்சி தந்து, கல்வியின் தரமும் பயனும் முன்னேறுவதற்கான சோதனைகள் செய்ய அவற்றிற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து மதுரை, சென்னைப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சில கல்லூரிகளின் முதல்வரும் பேராசிரியர்களும் ஒன்று கூடித் தத்தம் கல்லூரிக்குத் தன்னாட்சி கிடைத்தால் தாம் எவ்வாறு பாடத்திட்டங்களையும் தேர்வு முறைகளையும் மாற்றியமைத்துக் கல்வியின் தரத்தை உயர்த்திக் கல்வியைப் பயனுள்ளதாக்க முடியும் என்றும், அதனைச்<noinclude></noinclude> nmeszk8hxyh1kvdsvlurslhfe468pvz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/837 250 641555 1954513 1927068 2026-07-18T05:31:31Z Sridevi Jayakumar 15329 1954513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித்‌ தன்னாட்சி|809|கல்வளையந்தாதி}}</noinclude>கிறது. (4) ஆசிரியர்களின்‌ வேலைச்‌ சுமை பெருமளவு மிகுகின்றது. இவற்றிற்குத்‌ தரப்படும்‌ விளக்கங்களாவன: (1) கல்லூரிகள்‌ யாவும்‌ ஒரே தரமுள்ளவையல்ல என்பதும்‌, சில சிறப்பு வாய்ந்தனவாகவும்‌ சில சிறப்பற்றனவாகவும்‌ உள்ளன என்பது யாவரும்‌ அறிந்த உண்மை, தன்னாட்சி இதனை வெளிப்படையாக்குகிறது; அவ்வளவுதான்‌. மேலும்‌, கல்லூரிகள்‌ அனைத்தும்‌ தம்‌ தரத்தை உயர்த்தித்‌ தன்னாட்சி பெற்றுக்‌ கொள்வதற்கு யாதொரு தடையுமில்லை. ஆகையால்‌, கல்வியின்‌ தரம்‌ உயர்வதற்கு இது பெரும்‌ தூண்டுகோலாயும்‌ அமையும்‌. (2) தன்னாட்சியில்‌ நிருவாகங்களுக்கு எள்ளளவும்‌ அதிக அதிகாரம்‌ கொடுக்‌கப்படுவதில்லை. தரப்படும்‌ தன்னாட்சி முத்றிலும்‌ கல்வி சார்ந்தது; நிருவாகத்தின்‌ அஇகாரத்தைக்‌ கூட்டுவதோ குறைப்பதோ இல்லை. (3) தன்னாட்சியால்‌ ஆசிரியர்களின்‌ ஒற்றுமை எவ்விதத்திலும்‌ குலைக்கப்பட வேண்டிய தேவையே இல்லை. (4) தன்‌னாட்சியில் ஆசிரியர்களது வேலைச்‌ சுமை மிகுவதில்லை. முன்போலவே வாரத்திற்கு 14 மணி அல்‌லது 16 மணி நேர வேலைதான்‌. ஆனால்‌, வேலையின்‌ பொறுப்பும்‌ ஆசிரியர்களது பணித்தகுதியும்‌ உயருகின்றன. இந்தியக்‌ கல்வி வல்லுநர்கள்‌ யாவரும்‌ தன்‌னாட்சிக்‌ கல்லுரி முறையை முழுமனத்துடன்‌ வரவேற்றுள்ளனர்‌. நலிந்து கிடக்கும்‌ இந்திய உயர்‌நிலைக்‌ கல்வி மேம்பாடடைய இது ஒரு முக்கியமான வழி என்று கூறியுள்ளனர்‌. இம்முயற்சி உரம்‌ பெற வேண்டுமானால்‌, இந்தியாவின்‌ பல பாகங்களிலுள்ள பல்கலைக்‌ கழகங்கள்‌ தமது கல்லூரிகளில்‌ சிறந்தவற்றை உடனே தெரிந்தெடுத்து அவைகளுக்குத்‌ தன்னாட்சி வழங்கி, அவை நாட்டின்‌ தேவைகளை நிறைவு செய்யும்‌ வகையில்‌ வெவ்வேறு பாடத் திட்டங்களை உருவாக்கி, புதிய கல்வி முறைகளைப்‌ புகுத்த, பற்பல வழிகளில்‌ இந்திய உயர்நிலைக்‌ கல்வியைத்‌ தரம்‌ உயர்ந்த பயனுள்ள கல்வியாக்கும்‌ சிறந்த பணியில்‌ ஈடுபட அவற்றிற்கு வாய்ப்பு அளித்‌தல்‌ அவசியம்‌. இணைந்தியங்கு பல்கலைக்‌ கழகத்தில்‌ தன்‌னாட்சிக்‌ கல்லூரிகள்‌ இயங்குவது உலகில்‌ இதுவே முதல்‌ முறையாகும்‌. ஆகையால்‌, தன்னாட்சி வந்த முதல்‌ ஆண்டிலிருந்தே பல நிறுவனங்களும்‌ தன்‌னாட்சிக்‌ கல்லூரிகளும்‌ கருத்தரங்குகள்‌ மூலமாகவும்‌, நேரில்‌ மாணவர்‌, ஆசிரியர்‌ நிருவாகங்களுடன்‌ கலந்‌துரையாடியும்‌ கல்லூரிகள்‌ இயங்கும்‌ முறைகளை மதிப்பீடு செய்து வந்துள்ளன. இவற்றின்‌ மூலமாக வெளிவந்துள்ள விவரங்கள்‌ மிகுந்த மகிழ்வு தரக்கூடியவையாக உள்ளன. பல்கலைக்கழக நிதியுதவிக்‌ குழுவும்‌ அரசாங்கமும்‌ சேர்ந்து 1981, 1983–ஆம்‌ ஆண்டுகளில்‌ அனுப்பிய மதிப்பீட்டுக்‌ குழுக்களின்‌ அறிக்கையில்‌, இத்தன்னாட்சிக்‌ கல்லூரிகள்‌ உண்மையாகவே கல்வி முறைகளைப்‌ புதுப்பித்து, புதிய பாடத்‌ திட்டங்களையும்‌ சீரிய தேர்வுமுறைகளையும்‌ புகுத்தியுள்ளனவென்றும்‌, தன்னாட்சியை 1988–ஆம்‌ ஆண்டு வரை நீடித்துத்‌ தரலாமென்றும்‌ பரிந்துரை செய்‌தன. ஆந்திரப்‌ பிரதேசத்திலுள்ள உசுமானியாப்‌ பல்கலைக்‌ கழகம்‌ தன்‌ நான்கு கல்லூரிகளிலிருந்து 17 பேராசிரியர்களையும்‌ முதல்வர்களையும்‌ தன்னாட்சிக்‌ கருத்தரங்கிற்கு அனுப்பிப்‌ பயிற்‌சி பெற்றபின்‌ இரு கல்லூரிகளுக்குத்‌ தன்னாட்சி அளித்துள்ளது. பஞ்சாபு, பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளரும்‌ கல்லூரி முதல்‌வர்களும்‌ அடங்கி ஒருகுழு சென்னைக்கு வந்து, அங்குள்ள தன்னாட்சிக்‌ கல்லூரிகளைப்‌ பார்வையிட்டு, முதல்வர்கள்‌ பேராசிரியர்களுடன்‌ கலந்துரை துரையாடியது. பின்னர்‌, அவர்கள்‌ தாம்‌ வெளியிட்ட அறிக்கையில்‌ தன்னாட்சிக்‌ கல்லூரிகளைப்‌ பெரிதும்‌ புகழ்ந்து, தன்னாட்சி முறையே உயர்நிலைக்‌ கல்வியை மேம்படுத்துவதற்கேற்ற வழி என்று திட்டமாக முடிவு செய்து, மற்றப்‌ பல்கலைக்‌ கழகங்களும்‌ இம்‌முறையைப்‌ பின்‌பற்ற வேண்டும்‌ என்று கூறியுள்ளனர்‌. கேரள அரசாங்கம்‌ கல்லி அதிகாரிகளும்‌ வல்லுநர்களும்‌ தமிழ்நாட்டிலுள்ள இரு தன்னாட்சி வல்லுநர்களும்‌ அடங்கிய குழு ஒன்றை நியமித்து, தன்‌னாட்சிக்‌ கல்லூரிகளின்‌ நன்மை தீமைகளையும்‌ அவை இயங்கும்‌ தன்மைகளையும்‌ ஆய்ந்து, அறிக்கை வழங்குமாறு பணித்தது. அக்குழு, கேரளாவின்‌ ஐந்து நகரங்களிலுள்ள பேராசிரியர்கள்‌, கல்வியாளர்கள்‌, ஆசிரியர்‌ சங்கப்‌ பேராளர்கள்‌, பொது மக்கள்‌ ஆகியோருடன்‌ கலந்துரையாடி, தமிழ்‌நாட்டில்‌ தன்னாட்சிக்‌ கல்லூரிகள்‌ இயங்கும்‌ விதங்‌களையும்‌ ஆய்ந்து, வெளியிட்ட அறிக்கையில்‌, கல்‌லூரித்‌ தன்னாட்சியே உயர்நிலைக்‌ கல்வியைப்‌ பயனுள்ளதாக்குவதற்கு ஏற்ற முறை என்று கூறியுள்‌ளது. இவ்வாறு தன்னாட்சிக்‌ கல்லூரிகளைப்‌ பார்வையிட்ட மதிப்பீட்டுக்‌ குழுக்களும்‌ இந்தியக்‌ கல்வி வல்லுநர்களும்‌ கல்லூரித்‌ தன்னாட்சி முறையே உயர்நிலைக்‌ கல்வியின்‌ தரத்தை உயர்த்தவும்‌ அதனைப்‌ பயனுள்ளதாக்கவும்‌ ஏற்ற முறையாகும்‌ என்றும்‌, இந்தியாவின்‌ பல்கலைக்‌ கழகங்கள்‌ அனைத்‌தும் தம் கல்லூரிகளில் சிறந்தவற்றைத்‌ தெரிந்‌தெடுத்து, விரைவில்‌ அவற்றிற்குத்‌ தன்னாட்சி வழங்கி, இந்தியக்‌ கல்வியைச்‌ சிறந்த முறையில்‌ பயனுள்ளதாக்க வேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தியுள்ளனர்‌. {{Right|<b>ம.அ.த.</b>}} <section end="கல்லூரித் தன்னாட்சி"/> <section begin="கல்வளையந்தாதி"/> {{dhr}} {{larger|<b>கல்வளையந்தாதி:</b>}} இது, ‘கல்வளை’ என்‌னும்‌ தலத்தில்‌ உள்ள பிள்ளையார்‌ மீது யமகம்‌,<noinclude></noinclude> c645zu7he3bojsf3d03oai4deqdd9lm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/838 250 641556 1954514 1927072 2026-07-18T05:37:42Z Sridevi Jayakumar 15329 1954514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வி|810|கல்வி உளவியல்‌}}</noinclude>திரிபு ஆகிய சொல்லணிகள் அமையக் கட்டளைக் கலித்துறையால், அந்தாதித் தொடையாகப் பாடப்பட்ட, நூறு செய்யுட்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகும். இதன் காப்புச் செய்யுன் ‘தார் கொண்ட பூ மல்லிகை’ எனத் தொடங்குகிறது. நூல், ‘கற்பக நாடர்’ என்று தொடங்கி, கல்வளைக் கற்பகமே என்று நிறைவுபெறுகிறது. ‘கற்பகம்’ என்று தொடங்கிக் ‘கற்பகமே’ என்று இந்நூல் மண்டலித்து முடிவது ஒரு சிறப்பாகும். செய்யுளின் நான்கு அடிகளிலும் உள்ள முதற்சீர் ஒன்றுபட்டிருப்பது ‘யமகம்’. இதன்படி, நூலின் முதற்செய்யுளில் உள்ள, ‘கற்பக’ என்ற சொல், நான்கு அடிகளிலும் வருகிறது. இவ்வாறு, இந்நூலில் பல செய்யுட்கள் உள்ளன. ‘திரிபு’ என்பது, செய்யுளின் முதற்சீரின் முதலெழுத்து நீங்கலாக மற்ற எழுத்துக்கள் ஒன்றுபட்டிருப்பது. இதன்படி, காப்புச் செய்யுளில் உள்ள, தார்கொண்ட, சீர்கொண்ட, பார்கொண்ட, கார் கொண்ட ஆகிய சீர்களில் முதலெழுத்து நீங்கலாக ஏனைய எழுத்துகள் ஒன்றுபட்டிருக்கின்றன. நூலின் முதற்செய்யுள், ‘கண்டவரே’ என்று முடிகிறது. இரண்டாம் செய்யுபர், ‘கண்டலம்’ என்று தொடங்குகிறது. இவ்வாறு ‘அந்தாதி’ முறையில் நூல் அமைந்துள்ளது. இதனை இயற்றிய ஆசிரியர், இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சார்ந்த, நல்லூரில் வாழ்ந்த வில்லவராய முதலியாரின் புதல்வராகிய சின்னத்தம்பி புலவராவார். அவர் இற்றைக்கு சற்றேறக் குறைய 200 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர். அவர் இளமையிலேயே கவிபாடும் திறம் படைத்தவர் என்பதனை, அவர் தந்தையாரைத் தேடிவந்த தமிழ்ப்புலவர், ஒருவருக்கு, அவர், விடையளித்த, வெண்பாவால் அறியலாம். அச்செய்யுள் ‘பொன்பூச்சொரியும்’ எனத் தொடங்குகிறது. அவர் இயற்றிய மற்றொரு நூல் மறைசையந்தாதியாகும். {{Right|<b>வீ.சொ.</b>}} <section end="கல்வளையந்தாதி"/> <section begin="கல்வி"/> {{dhr}} {{larger|<b>கல்வி:</b>}} காண்க: இந்தியக் கல்வி அமைப்பு, இந்தியப் பழங்கல்வி முறைகள். <section end="கல்வி"/> <section begin="கல்வி உளவியல்"/> {{dhr}} {{larger|<b>கல்வி உளவியல்:</b>}} கல்வி பயிற்றலுக்கும் கல்வி கற்றலுக்குமுள்ள அடிப்படையான உளவியற் கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் ஓர் இயல். பொதுவாகக் கல்வி உளவியல் கற்பவர், கற்கும் சூழ்நிலை கற்றலின் இயக்கம் ஆகிய மூன்று அடிப்படைகளைக் கொண்டது. குழந்தையின் நடத்தையை ஊக்குவிக்கும் ஆற்றல்கள், நாட்டங்கள், பிற ஊக்கிகள் ஆகியவற்றைப் பற்றியும், குழந்தைகளின் தனியாள் வேற்றுமைகளையும் வளர்ச்சியின்போது நிகழும் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், சமூக இயக்கங்கள் குழந்தையின் ஆளுமைக்கு எங்ஙனம், காரணமாக இருக்கின்றன என்பதையும், கற்போரைப் பற்றியும் அறிய இது உதவும், வகுப்பறையின் நிருவாகம், ஒழுங்கு, கருவிகள், கற்பித்தல் முறைகள் ஆகியவை கற்பித்தலுக்கு ஆற்றும் பங்குகள், சராசரி நுண்ணறிவுக்கும் கீழே உள்ள குழந்தைகளின் கற்பித்தலுக்கான வழிகள், புதிய மதிப்பீட்டு முறையின் பயன்கள், இன்றைய கல்விச் செயல் முறையின் பகுதிகளான கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு வழிகாட்டல், அறிவுரை கூறுதல் ஆரியா கற்றல் சூழல் பற்றி விளக்கும். கற்றலின் இயல்பு, அதன் நிகழ்முறை, கற்றலின் கோட்பாடுகள், குறிக்கோள் அடைவதற்கான திறன் மிக்க கற்றல் நெறிகள் ஆகியவற்றைக் கற்றலின் இயக்கம் விளக்கும். கல்வி உளவியல் வளர்ச்சி உளவியல், கற்றல் உளவியல், ஊக்குவித்தல் உளவியல், தனியாள் வேற்றுமை உளவியல், பொருத்தப்பாட்டு உளவியல் குழுநடத்தை உளவியல் ஆகிய அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது. <b>வளர்ச்சி உளவியல்</b> மனிதனின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை விளக்குகிறது. குழந்தைகளின் உடல்வளர்ச்சி, உள்ளவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சிகளின் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவை பருவத்திற்கேற்ப எவ்வாறு நிகழ்கின்றன என்பதை இப்பிரிவு விளக்குகிறது. மனித வளர்ச்சியைப் (உடல், உள்ளம், அறிவு) பொறுத்துத்தான் ஆசிரியர் பாடச் செயல்திட்டத்தை (Curriculum) அமைக்கவும். வளர்ச்சியின் பல்வேறு நிலைகளுக்கேற்பக் கற்பித்தலின் வகைகளை ஏற்படுத்தவும் இயலும். ஏனெனில், குழந்தைப் பருவத்திற்கேற்ற பயிற்று முறைகள் குமரப் பருவத்திற்கு உகந்தன ஆகா. <b>கற்றல் உளவியல்</b> ஆசிரியருக்குக் கற்றலின் வகைகளும் முறைகளும் எவ்வாறு நிகழ்கின்றன வென்பதையும் என்னென்ன காரணிகள் கற்றல் முறைக்கு உதவி செய்கின்றன என்பதையும் கூறுகிறது. மாணவர்களின் மறதிக்கான காரணங்கள் என்னென்ன? நினைவாற்றலுக்கான வழிகள் என்னென்ன? என்பதனையும் இவ்வுளவியல் விளக்குகிறது; ஆசிரியருக்கேற்படும் பல சிக்கல்களைத் தீர்க்க-<noinclude></noinclude> ij5ul06umrkkh1nswbhpvjnixf58uty பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/839 250 641557 1954515 1927073 2026-07-18T05:38:43Z Sridevi Jayakumar 15329 1954515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வி உளவியல்‌|811|கல்விச்‌ சுதந்திரம்‌}}</noinclude>வும் இது உதவுகிறது. கற்பித்தலின்போதும் வகுப்பறைச் சூழ்நிலையின்போதும் மாணவர் கற்கும் போதும் பல்வகைச் சிக்கல்கள் ஆசிரியருக்கு நேரிடுகின்றன. உளவியல் அறிஞர்கள் அத்தகைய சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை நீக்குதற்கான வழிமுறைகளை ஆசிரியர்களுக்கு அளிக்கின்றனர். <b>ஊக்குவித்தல் உளவியல்</b> கற்பவர் ஆர்வத்தோடு கற்பதற்குரிய பலவகையான ஊக்குவித்தல், தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை ஆசிரியருக்கு உணர்த்துகிறது. <b>தனியாள் வேற்றுமை உளவியல்:</b> மாணவர்களிடையே காணப்படும் நடத்தையில், பேச்சில், சாதனைகளில், சொல், செயல் திறனில், மகிழ்ச்சியில், பிறரோடு பழகுவதில் கோபம், அச்சம், கூச்சம் ஆகியவற்றின் வெளியீடுகளில் காணப்படும் ஏற்றத் தாழ்விற்குத் தனியாள் வேற்றுமை என்பது பெயர். அதாவது, ஆசிரியர் வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் பாடங்களைக் கற்பிக்கிறார். பின்னர் அவர்களைச் சோதிக்கிறார். ஆனால், அனைவரும் ஒரே தன்மையாக விடையளிப்பதில்லை. சிலர் நன்றாக எழுதுகிறார்கள்; சிலருக்கு ஒன்றுமே தெரிவதில்லை, ஒரு சிலருக்கு அரைகுறையாகத்தான் புரிந்திருக்கிறது. விடையளிப்பதிலும் அவர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் வேகமாகவும் வேறுசிலர் தாமதமாகவும் விடையளிப்பது கண்கூடு. இவற்றுக்கு என்ன காரணம் என்பதை ஆசிரியர் அறிய வேண்டும். ஆசிரியரும் தம் கற்பித்தலை மாணவர்களின் ஆர்வம், திறமை ஆகியவற்றிற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். செய்து கற்றல், கண்டறி முறை, குழவிப்பூங்கா முறை, கண்டுபிடித்தல் என்பன உளவியலாரின் கண்டுபிடிப்புகளாகும். <b>பொருத்தப்பாட்டு உளவியல்</b> ஏன் சில மாணவர்கள் வகுப்பில் மனவெழுச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சமுதாயப் பொருத்தப்பாடற்ற நடத்தைகள் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆசிரியருக்குக் கூறுகிறது. மனவெழுச்சியின் பாதிப்பும் சமூகப் பொருத்தப்பாடற்றலையும் கற்போரைத் தடுத்து நிறுத்தி வருகின்றன. அதாவது, பலனுள்ள கற்றலைத்தடை செய்கின்றன. <b>குழு நடத்தை உளவியல்:</b> மனிதனது மனமே அவனது நடத்தைக்குக் காரணம். அதுபோலவே குழு நடத்தைகளுக்கும் குழுமனம் என்று ஒன்று உண்டு. எனவேதான் தனிமனிதனின் சிந்தனைகள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவை அந்த மனிதனே ஒரு குழுவினுள் இருந்து செயற்படும்போது முற்றிலும் மாறுபடுகின்றன. தனிப்பட்ட மனிதனாக இருந்தபோது அவன் செய்யமுடியாத, செய்யத் துணியாத சில செயல்களைக் குழுவினுள் இருந்து செயற்படும்போது செய்து முடிக்கிறான். எனவே, குழுக்களின் இயக்கச் சக்தி, மனப்போக்குகள், நடத்தைகள் முதலியவற்றை விளக்குகின்ற குழு உளவியல் அல்லது சமூக உளவியல் ஆசிரியருக்குப் பெரிதும் பயன்படுகிறது. கல்வி கற்பதுடன் அது தொடர்பான கற்றல் விதி, கற்றலுக்கு ஏற்ற நிலைகள், கற்கும்போது களைப்பும் கவனமின்மையும் உண்டாகக் காரணம், அவற்றைப் போக்கும் வழிகள், நினைவாற்றல் வளர வழிகள் ஆகியவற்றைப் பற்றி அறிவிப்பதால் கல்வி உளவியல் ஆசிரியர் தம் பணியைச் செம்மையாகச் செய்ய உதவுகிறது. உளவியல் குழந்தையை, மையமாகக் கொண்ட கல்வி ஏற்பாட்டை அமைக்க உதவி செய்கிறது. தவறான நடத்தைப் போக்கு, அதற்கான காரணங்கள் ஆகியவற்றைக் களைந்து, நற்பழக்கம் உருவாக வழிமுறைகள் பலவற்றையும் கல்வி உளவியல் விளக்குகிறது. {{Right|<b>ஈ.ஞா.வே.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bower, G.H. and Hilgard, E.J.,</b> Theories of Learning, Prentice-Hall, Englewood Cliffs, New Jersy, 1981. <b>Gage, N.L. and Berhner, D.C.,</b> Educational Psychology, Houghton Miffin, Boston, 1979. <b>Good, J.G. and Brophy, J.E.,</b> Educational Psychology, Holt, Rinehart & Winston, New York, 1980. <section end="கல்வி உளவியல்"/> <section begin="கல்விச் சுதந்திரம்"/> {{dhr}} {{larger|<b>கல்விச் சுதந்திரம்:</b>}} பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எந்தவிதத் தடையோ தாம் பதவி நீக்கம் செய்யப்படுலோமா என்ற அச்சமோ இன்றி, தாம் உண்மை யென்றுணர்ந்த கருத்துகளைப் பற்றி எழுதவோ பிறருக்கு அவற்றை எடுத்துக் கூறவோ தேவைப்படும் உரிமை கல்விச் சுதந்திரம் (Academic Freedom) எனக் குறிக்கப்படுகிறது. வெளியாட்களின் குறுக்கீடுகளோ அச்சுறுத்தல்களோ இல்லாமல் உயர் கல்வி நிலையங்கள் தம் கல்விக் கொள்கைகளையும் செயல்களையும் உருவாக்கிக் கொள்ள உதவும் சூழ்நிலை இருத்தலும் கல்விச் சுதந்திரம் என்பதுள் அடங்கும். கல்வியாளர்களின் சுதந்திரத்திற்குத் தடையாக அமையக் கூடியவற்றுள் சமுதாயச் சட்ட திட்டங்கள், அரசியல், சமயம் ஆகியவற்றினுடைய<noinclude></noinclude> 8ghxz11x4amrl3d3ufdkplgoutbr3bo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/841 250 641564 1954516 1927128 2026-07-18T05:39:50Z Sridevi Jayakumar 15329 1954516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச்‌ சுதந்திரம்‌|813|கல்விச்‌ சுற்றுலா}}</noinclude>கல்விச் சுதந்திரம் சமய ஆதிக்கத்தின் விளைவாக மையக் காலங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மறையத் தொடங்கியதை அடுத்து, அந்நாடுகளில் தலைசிறந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் இச்சுதந்திரம் பற்றிய கருத்து மீண்டும் வலியுறுத்தப்பெற்றது. இலைடன், எல்ம்சுடெடு, ஐடல் பாகு போன்ற ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் கி.பி. 16–ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்க் கல்விச் சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கின. அறிவியல் ஆராய்ச்சிகள் பல்கலைக் கழகங்களின் பணிகளுள் ஒன்றாக ஏற்கப்பட்ட பின், கல்விச் சுதந்திரத்தின் இன்றியமையாமை மேலும் வலுப்பெற்றது. உண்மை அறிவு எழுவதற்குக் கட்டுப்பாடான ஆராய்ச்சி தேவை; எந்த ஒரு முடிவும் இறுதியானதென்று வாளாவிராமல் மேலும் மேலும் அது பற்றி விவாதிப்பது இன்றியமையாதது. பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றினுடைய பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்குச் சுதந்திரம் அடிப்படை என்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டினர். இச்சுதந்திரத்தில் மாற்றாரது. குறுக்கீட்டைக் கல்வியாளர் விரும்பவில்லை. தார்வின் (Darwin) போன்றோரது கருத்துக்களுக்குச் சமயத் தலைவர்களது எதிர்ப்பு எழுந்தது போன்ற நிகழ்ச்சிகளும் கல்விச் சுதந்திர இயக்கத்திற்கு வலுவூட்டின. மேலும், காலப்போக்கில் எழுந்த சமுதாய மாற்றங்கள் மக்களிடையே பரவலாகச் சுதந்திரப் பற்றை வளர்த்த போது, அதன் விளைவு கல்வி நிலையங்களையும் பாதித்தது. தொடக்கத்தில் கல்விச் சுதந்திரம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் நிலையில் மட்டும் தேவை எனப்பட்டாலும், இன்று இது உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் தேவையென்பது உணரப்பட்டுள்ளது. சுயாட்சிக் கல்லூரிகள் (Autonomous Colleges) பற்றிய கருத்தும் கல்விச் சுதந்திரத்தின் விளைவாகும். கல்விச் சுதந்திரத்தின் தேவை பற்றிக் குறிப்பிடும் போது, அதற்கு எல்லைகள் எவையும் இல்லை எனக் கருதக் கூடாது. தவறான கருத்துகளைப் பரப்புவது, குறுகிய தன்னல நோக்குடன் கற்பிப்பது, சமய அரசியல் இலக்குகளுக்குக் கல்விக் கூடங்களைப் பயன்படுத்துவது, சமுதாயத்தின் நிலைத் தன்மையைக் குலைக்க முற்படுவது ஆகியன நேர்மையான கல்விச் சுதந்திரத்துக்குள் அடங்கமாட்டா. ஆனால், இவ்வெல்லைகள் எவை என நிருணயிப்பதும் இவற்றை மீறுவோர் மீது முடிவெடுப்பதும் கல்வியாளர் குழுக்களைச் சார்ந்து அமைய வேண்டுமே தவிரப் பிறரைச் சார்ந்திருத்தல் கூடாது எனவும் கல்விச் சுதந்திரம் குறிப்பிடுகிறது. கல்விச் சுதந்திரத்தினை மாசுபடாமல் காப்பது ஆசிரியத் தொழில் நிறுவனங்களின் கடமைகளுள் ஒன்றாகும். கல்விச் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதாக அமைவது ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பதவிக் கால உரிமையும் ஊதிய உரிமையுமாகும். எந்த ஓர் ஆசிரியரும் அவர் கொண்டுள்ள கருத்துகளுக்காகப் பதவி நீக்கம் செய்யப்படக் கூடாது. அவர்தம் கருத்துகள் தவறானவை, அவற்றை அவர் மாணாக்கரிடையே பரப்புவது சமுதாயத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என முடிவெடுப்பது பிற ஆசிரியர்கள் கூடிச் செயற்படும் குழுக்களது உரிமையாகும். தொடக்கத்தில் ஆசிரியர் ஓரிரு ஆண்டுகள் பணியில் செயற்படும் போது, அவரது திறமை மதிப்பிடப்பட்டு, பின்னர்ப் பணியில் நிலையானவராக்கப்படுகிறார். இந்நிலையில் அவருக்குப் பதவி உரிமைநிலை முழு அளவில் இருத்தல் வேண்டும். இந்நிலையிலே தான், அவர் முழுச் சுதந்திரத்துடன் அச்சமின்றிக் கல்விப் பணியில் தொடர்ந்து ஈடுபட முடியும் என்னும் கருத்து இன்று அரசுச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்பட்டுள்ளது. இத்தகைய உரிமை பெற்ற கல்வியாளர்களின் சுதந்திரமான, நேர்மையான சிந்தனை நல்வாழ்விற்கு ஆதாரமாகும். {{Right|<b>எஸ்.ச.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Altbach, P.,</b> Comparative Perspectives on the Academic Profession, Praeger, New York, 1977. <b>Pincoffs, E.,</b> (ed.) The Concept of Academic Freedom, University of Texas Press, Austin Texas, 1972. <section end="கல்விச் சுதந்திரம்"/> <section begin="கல்விச்சுற்றுலா"/> {{dhr}} {{larger|<b>கல்விச்சுற்றுலா:</b>}} கல்விச் சுற்றுலா என்பது பள்ளி மாணாக்கர்கட்குத் தாங்கள் பயிலும் இடங்களில் இருந்து வெளியிடங்கட்குச் சென்று கல்வி அறிவை மேம்படுத்துவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு வகைப் பள்ளிப் புறச்செயலாகும். இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள், பாலகத்தில் (Creche) பயிலும் குழந்தைகள் முதல் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. மாணாக்கர்களின் வயது நிலை, வகுப்பு நிலை, கல்விச் சூழ்நிலைக்கான நோக்கங்கள், ஆகியவற்றிற்குத் தகுந்தாற் போன்று கல்விச் சுற்றுலாக்கள் வேறுபடுகின்றன. தொடக்க நிலையில், ஒரு மாணாக்கனுக்கு வகுப்புக்கு வெளியே உள்ள மரத்தைக் காண்பித்தாலும், மேல் நிலை ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகள் சென்று வந்தாலும் அவை இரண்டும் கல்விச் சுற்றுலா எனப்படும். வகுப்பறைக்கு வெளியே கற்றல் அனுபவம்<noinclude></noinclude> hz7ojj8fnnf1255v1chp5qyqry3l49c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/843 250 642167 1954517 1929047 2026-07-18T05:40:45Z Sridevi Jayakumar 15329 1954517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச்‌ சுற்றுலா|815|கல்விசார்‌ மானிடவியல்‌}}</noinclude>குறைந்த அளவில் சிறந்த குறிக்கோள்களைக் கொண்ட கல்விச் சுற்றுலாக்கள் நடத்துவது சிறந்த பயனுடையது. இவ்வகைக் கல்விச் சுற்றுலாக்கள் மாணாக்கரிடம் நன்கு ஊடுருவிப் பார்த்தல், கேட்டல், புதியன அறிதல், முழுமைக் கருத்து உணர்தல் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும். <b>இன்றைய நிலை:</b> ஒரு கல்விச் சுற்றுலா, சிறந்த கருக்கொண்டு, நல்லமுறையில் திட்டம் தீட்டப் பெற்றுச் சீரிய முறையில் நடத்தப்பெற்று, மதிப்பிடப்பட்டு, மதிப்பீட்டில் காணும் குறைகள் களைய வாய்ப்பளிக்க வல்லதாக அமைதல் வேண்டும். ஆனால், இன்று வளர்ந்துவரும் போக்கு, கல்விச் சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளைச் சுவைக்கவும், இனிமையாகப் பேசிப் பொழுது போக்கவும், ஆடவும், பாடவும் போன்ற களியாட்டங்கள் விரவும் நிலை மெல்ல மெல்ல அதிகமாகி வருவதைக் காணலாம். இவ்வகை நெகிழ்வுணர்வுகள் வேண்டியவை என்றாலும், அவையே கல்விச்சுற்றுலாவின் பயன்கள் என்று கருதும் நிலை மாறவேண்டும். <b>திட்டமிட்ட சுற்றுலா:</b> ஒவ்வொரு கல்விச் சுற்றுலாவும் ஆசிரியர்களால் கவனமுடன் திட்டமிடப்பட்டு, பள்ளியின் குறிக்கோள்களை நிறைவேற்றும் முறையில் படிக்கும் பாடங்களும் பாடத்திட்டமும் இயைந்தனவாக அமைதல் வேண்டும்; சிறப்புடன் திட்டமிடல் சுற்றுவசவின் பயனை விரிவாக்கும். நிகழ இருக்கும் ஒரு கல்விச் சுற்றுலாச் செல்லும் இடத்தைப்பற்றி ஆசிரியர் முன்கூட்டியே விவரங்களைத் திரட்டி மாணாக்கர்கள் ஆர்வத்திற்குப் பொருந்துமாறு இருக்குமா என அறிதல் இன்றியமையாதது. மேலும், காலக்கெடு முடிவு செய்யப்படுதல் வேண்டும். பள்ளி நிருவாக அனுமதி பெற்றோரின் அனுமதி ஆகியவற்றை முன்கூட்டியே பெற்றிருத்தல் வேண்டும். கல்விச் சுற்றுலா நிகழும் இடப்பொறுப்பாளர்கட்கு முன்கூட்டியே விவரம் அளித்து முன் ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். போக்குவரத்து வசதிகள் செய்யப்படுதல் வேண்டும். மாணாக்கர்கட்கு உள்ள சலுகைகள் பயன்படுத்தப்படுதல் வேண்டும். மேற்கண்ட நிலைகளை முடித்த பின்னர், ஆசிரியரும் மாணாக்கரும் கீழ்க்காணும் பொருள் பற்றி விவாதித்தல் வேண்டும். மாணாக்கர் ஆர்வ நிலை; கல்விச் சிக்கல்களைத் தீர்க்கவல்ல வாய்ப்பு; சுற்றுலாக் குறிக்கோள்களை வெளிப்படுத்தல்; பாட விளக்கத்திற்குத் தொடர்பான மற்றக் கருத்துக்களைச் சேகரித்தல்; கவனம் செலுத்த வேண்டிய கல்வி அனுபவங்கள் பற்றி விவரம் சேகரித்தல்; மாணாக்கரின் பாதுகாப்பும் நடத்தையும் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றித் திட்டமிட்டுக் குறித்தல் முதலியன. சுற்றுலா முடித்த பின்னர், ஆசிரியர் கல்விச் சுற்றுலாவை மதிப்பிடல் வேண்டும். கல்விச் சுற்றுலா எந்த அளவிற்குப் பயனைத் தந்துள்ளது? இதன் வெற்றிக்கான காரணங்கள் யாவை? காலக்கெடு சிறப்பாக அமைந்ததா? போக்குவரத்து வழிகள் நன்கு இருந்தனவா? இக்கல்விச் சுற்றுலா மீண்டும் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் செவ்வையாக எவ்வாறு நடத்த இயலும்? என்பன போன்றவற்றை ஆசிரியர் மதிப்பிடுதல் வேண்டும். அவ்வாறே. மாணாக்கரும் கல்விச் சுற்றுலா சென்றுவந்த பின்னர், வகுப்பு முழுதும் கல்விச் சுற்றுலாவின் பயனை நுகர்ந்ததா? எந்த இடம் மிகச் சிறப்பாக அமைந்தது? எவரேனும் ஆர்வம் இழந்தனரா? அவ்வாறு எனின் ஏன்? ஆர்வமும் கவனிப்பும் இறுதி வரை மாணாக்கரிடம் நீடித்திருந்தனவா? ஒழுங்குச் சிக்கல்கள் எவையேனும் ஏற்பட்டனவா? என்பன வற்றையும் விவாதித்தல் வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு, மதிப்பீடு செய்து சென்றுவரும் கல்விச் சுற்றுலாக்கள் அடுத்து வரும் ஆண்டிலும் மாணவர்களைக் கவர்ந்திடக் கூடியனவாக அமைதல் வேண்டும். {{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Edgar Dale,</b> ‘Audio Visual Methods in Teaching’, Dryden Press, New York, 1958. <b>Waffich, Schulker,</b> Audio Visual Materials: their Nature and Uses, Harper Brothers, New York, 1953. <section end="கல்விச்சுற்றுலா"/> <section begin="கல்விசார் மானிடவியல்"/> {{dhr}} {{larger|<b>கல்விசார் மானிடவியல்</b>}} பண்பாட்டு மானிடவியலின் பெரும் பிரிவுகளுள் ஒன்று. மானிடவியலின் கொள்கைகள், அணுகுமுறைகள் ஆகியவற்றுடன் சமுதாய மொழியியல், இனக்குழு ஆய்வு முறையியல் (Ethnomethodology), குறியீடு சார்ந்த இடைவினை (Symbolic Interaction) முதலான பிரிவுகளைச் சார்ந்த அறிவினையுங்கொண்டு, இனக் குழுக்களின் கல்வி முறைகள் பற்றி அறியும் கல்விசார் மானிடவியல் (Educational Anthropology) அண்மைக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட மானிடவியலின் ஓர் உட்பிரிவாகும். கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மானிடவியல் துறையில் உடல்சார் மானிட-<noinclude></noinclude> 7a17nbt1ldvvmxa2jfj9tkmy4ls7b2i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/846 250 642234 1954518 1929409 2026-07-18T05:41:38Z Sridevi Jayakumar 15329 1954518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விசார்‌ மானிடவியல்‌|818|கல்வியாராய்ச்சிச்‌ செய்திப்‌ பரப்பல்‌}}</noinclude>ஒருங்கிணைந்த பல ஆய்வுகளை 1970–க்குப்பிறகு நெறிப்படுத்தத் தொடங்கியதிலிருந்து அனைத்துக் கல்விசார் மானிடவியலாரும் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றினர். அவற்றுள் முதன்மையானவை கருவிசார்ந்த மாதிரி (Instrumental Model), இடைவினை மாதிரி (Interactional Model), அமைப்பியல் செயற்பாட்டுக் கொள்கை (Structural Functionalism), சூழலியல்சார் மாதிரி (Ecological Model) ஆகியவை யாகும். கருவி சார்ந்த மாதிரியைக் கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாறும் பண்பாட்டில் எவ்வாறு தனி ஒருவர் தம் கல்வித் தேவையைத் தேர்ந்தெடுத்து நிறைவு செய்து கொள்கிறார் என்பதையும், அவரது குறிக்கோளுக்கும் அவரது நடத்தை முறைகளுக்கும் இடையே உள்ள உறவுகள் எவ்வாறுள்ளன என்பதையும் அறிய இசுபிண்வர் கருவி சார்ந்த செயல்களின் பொருட்பட்டி (Instrumental Activities Inventory–IAI) என்னும் முறையைக் கையாண்டார். அதில் மரபு சார்ந்ததும் புதுவகையானதுமான 37 கருத்துப் படங்கள் உண்டு. ஆய்வுக்குட்படுபவர் ஒவ்வொருவரின் அறிதிறனைக் கொண்டு அவரது ஈடுபாட்டினை முடிவுசெய்வர். இடைவினை மாதிரியினைக் கொண்டு கல்லிப் பரிமாற்றத்தின் திறனை அறிய விழைகின்றனர். கியரிங்கு (Gearing) என்பார் இம்முறையினை உருவாக்கியவர். கல்வி கற்பதில் நேருக்கு நேர் செயல் வினையின் பங்கு இன்றியமையாதது. இடைவிளை புரிபவர்களுள் ஒருசாரார் ஆசிரியர்கள், மற்றொரு சாரார் வகுப்பறையிலுள்ள மாணவர்கள். இன்றுள்ள கல்வி நிறுவனங்கள் இனம், சாதி, வகுப்பு, மதம் ஆகிய நிலைகளில் பாகுபடுகின்றன. இந்த மாறுபட்ட நிலைகளில் இடைவினை புரிவோரின் தன்மைகள் பலவாறாக மாறுபடும்போது கற்றல் திறனின் அளவையும், மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் செயல் திறனையும் கியரிங்கு அளவிட இடைவினைக் கொள்கையை வகுத்தார். அவரது அணுகுமுறை மானிடவியலாளரிடையே சிறப்புப் பெற்றுள்ளது. இம்முறையை உட்பண்பாட்டு (Subculture) நிலையில் ஆராயும் போக்கு எனச் சிலர் சிறப்பித்துக் கூறுவர். மானிடவியலில் அமைப்பியல் கோட்பாடு, செயற்பாட்டியல் கோட்பாடு ஆகியவற்றின் தாக்கம் மிகுதியானது. ஒவ்வோர் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட செயலைக் கொண்டுள்ளது. அதன் செயல்கள் அந்த அமைப்பின் இயக்கத்திற்கும் நிலைபேறுடைமைக்கும் வழிவகுக்கின்றன என்னும் அக்கோட்பாட்டின் கருத்தினைக் கொண்டு, சமுதாயத்திற்கும் கல்வி நிறுவனத்திற்குமிடையே உள்ள அமைப்புகளையும் செயற்பாடுகளையும் ஆராய்வர். காண்க: அமைப்பியல்சார் மானிடவியல். சூழலியல்சார் மாதிரி ஆய்வுமுறை உளவியல் துறையினின்று பெறப்பட்டதாகும். கல்விசார் மானிடவியலில் இம்முறையினைக் கொண்டு பள்ளியின் சூழலுக்கு அந்தச் சூழ்நிலையில் வெவ்வேறு வகையான மாணவர்களும் ஆசிரியர்களும் பிற கல்வி சார்ந்த செயல்களும் கொண்டுள்ள தொடர்புகள் அறியப்படுகின்றன. உயிரியலிலும் சூழலியல்சார் மானிடவியலிலும் (Ecological Anthropology) இம்முறை விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றது. கல்விசார் மானிடவியல் 1970க்குப் பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இன்றைய வல்லுநர்கள் இருமொழிக் கல்வி, பல பண்பாட்டுக் கல்வி (Multi–cultural Education), சிறுபான்மையினர் கல்வி, கல்விசார்ந்த திட்டமிடுதல், சமுதாய மாற்றத்தில் கல்விநிலை முதலான பல துறைகளில் ஆய்வினைப் பெருக்கியுள்ளனர். குறிப்பாகப் பழங்குடிகளின் கல்வி நிலையை மேம்படுத்த அவர்களின் கிளைமொழியில் பாடநூல்கள் எழுதுவதும், படிப்படியாகக் கிளைமொயிலிருந்து தேசியமொழிகளில் பயில வகை செய்வதும், பழங்குடியினருக்கு எவ்வகைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதைத் திட்டமிடுதலும் இத்துறையின் முதற்குறிக்கோளாக உள்ளன. இதில் பல நிவைகளில் வெற்றியும் பெற்றுள்ளனர். {{Right|<b>சீ.ப.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Boas. F.,</b> Anthropology and Modern Life, Norton, New York, 1928. <b>Gearing, F.O.,</b> Anthropology and Education, In Hand Book of Social and Cultural Anthropology, ed. by J.J. Honigman, Rand McNally, Chicago, 1973. <b>Hansen, J.F.,</b> Socio-Cultural Perspectives on Human Learning: An Introduction to Educational Anthropology, Prentice-Hall, New Jersy, 1979. <b>Kneller, G.F.,</b> Educational Anthropology: An Introduction, Robert E. Krieger, New York, 1987. <section end="கல்விசார் மானிடவியல்"/> <section begin="கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்"/> {{dhr}} <b>கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்:</b> ஆராய்ச்சியாளர் ஒருவரின் கல்வியாராய்ச்சி முடிவுகளைப் பல்வேறு வகைப்பட்ட பார்வையாளர்களுக்-<noinclude></noinclude> olexi5kpjjmjnme585l9j76wqkj0d6i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/848 250 642240 1954520 1929430 2026-07-18T05:45:35Z Sridevi Jayakumar 15329 1954520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வியாராய்ச்சிப்‌ புதுமையாக்க மையம்‌|820|கல்வெட்டியல்‌}}</noinclude>Department), ஒரு பொதுக் கல்வி நூலகம் (Public Library of Education) ஆகியன உள்ளன. ஐந்து ஆராய்ச்சித் துறைகளும் கல்வி, வரலாறு, கல்வித் திட்டமிடல், பள்ளிப் பாடத்திட்டம், கல்வி மதிப்பீடு, ஒப்பியற் கல்வி ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன. அறிவியல் கல்வியாராய்ச்சி மையம் கற்பித்தல் முறைகள், அறிவியல் பாட உள்ளடக்கம், கணிதக் கல்வி, கற்பித்தல் கருவிகள் தயாரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது. விரிவாக்கத்துறை கல்வியாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பரப்புவதிலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது. கல்வித் தொடர்பான நூல்கள் செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகம் செயற்படுகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்"/> <section begin="கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்"/> {{dhr}} {{larger|<b>கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்:</b>}} பாரிசு நகரிலுள்ள மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில் (Organisation Economic Co–operation and Development–OECD) புதுமையாக்க 1968-ஆம் ஆண்டு, கல்வியாராய்ச்சிப் மையம் தொடங்கப் பெற்றது. இம்மையத்தின் முக்கிய குறிக்கோள்கள் 1) கல்வி ஆராய்ச்சியை வளர்த்தலும் மேற்கொள்ளுதலும், 2) கல்வியில் புதிய உத்திகளையும் முறைகளையும் புகுத்தி ஆராய, முன்னோடித் திட்டங்களை (Pilot Projects) வளர்த்தலும் மேற்கொள்ளுதலும், 3) உறுப்பு நாடுகளில் கல்வியாராய்ச்சி மற்றும் புதுமையாக்கத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புத் தருதல் ஆகியனவாகும். கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையத்திற்கான (Centre for Educational Research and Innovation – CERI) நிதியினைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் தரும் கொடைகளையும் (Grants) இம்மையம் கல்வியாராய்ச்சிக்காக ஏற்றுக்கொள்கிறது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பித்தலில் பயன்படுத்தப்படும் புதுமையாக்கங்கள் (Innovations) பற்றிய ஆய்வு; உலக அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் கல்வி மாறுதல்களைப் பற்றிய ஆய்வு; குறிப்பிட்ட கல்வித் தலைப்புகளில் வல்லுநர்களின் உயர் கருத்துகளைத் தொகுத்தல்; ஒரு குறிப்பிட்ட ஆய்வினை ஒரே சமயத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளுதல்; புதிய உத்திகள், முறைகள், கருத்துகள் ஆகியவற்றைக் கள ஆய்வு செய்து பார்த்தல் (Field Trials); இக்காலக்கல்விச் சிக்கல்கள், புதுமைகள் குறித்துப் பன்னாட்டுக் கல்வி அறிஞர்களைக் கூட்டிக் கருத்தரங்கு நடத்துதல் போன்றவை இம்மையம் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இம்மையத்தின் பணிகளைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆட்சிக்குழு மன்றத்தின் அறிவுரைகளுக்கேற்ப நடத்தி வருகிறது. ஆட்சிக்குழு மன்றத்தில் ஒவ்வோர் உறுப்பு நாடுகளிலிருந்தும் ஒரு கல்வி வல்லுநர் இடம் பெற்றுள்ளார். இம்மையத்தில் இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக உள்ளதால், ஒரு கல்வி வல்லுநர் இடம் பெற்றுள்ளார். {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்"/> <section begin="கல்வெட்டியல்"/> {{dhr}} {{larger|<b>கல்வெட்டியல்</b>}} பண்டைய வரலாற்றை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளுள் ஒன்று. பண்டைக்காலக் கல்வெட்டு எழுத்துகளை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். கல்வெட்டுகளைப் படித்தறியப் பன்மொழிப் புலமையும், பண்டைய எழுத்துகளைப் படிப்பதில் சிறந்த தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். வழக்கற்றுப்போன எழுத்துமுறை மொழி ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிந்திருப்பதோடு இக்கால இலக்கண வழிகளையும் அகராதிச் சொற்களையும் அறிந்திருத்தல் வேண்டும். கல்வெட்டுகளுக்கும் இக்காலத்தில் தாளில் எழுதுவதற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. தாளில் எழுதுவது நகலாக இருக்கலாம். ஆனால், கல்வெட்டு ஒருமுறை தான் எழுதப்படும். கல்லில் பொறிக்கப்படும் செய்திகள் கல்வெட்டுகள் என்று குறிப்பிடப்படும். கல்லில் மட்டுமன்றி, களிமண் பட்டிகைகள், உலோகம், தந்தம், சங்கு, மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள், மரம், கோரைத் தாள் ஆகியவற்றின்மீதும் எழுத்துகள் தொன்மைக் காலத்தில் எழுதப்பட்டன. கல்வெட்டுகள் முதல்நிலைச் சான்றுகளாகப் பயன்படுகின்றன. பண்டைய மனிதனின் வரலாற்று அறிவைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கிரேக்கம், மெசபொடோமியா, நைல் நதிக்கரை, சீனா, மாயன், தோல்தெக்கு, அசுதெக்கு, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்த நாகரிகங்களை அறியக் கல்வெட்டுகள் பேருதவிபுரிகின்றன. இந்தியாவில்தான் கல்வெட்டுகள் பெருமளவில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய இலக்கியங்களில் வரலாற்று, சமூக ஆதாரங்கள் காணப்படினும் அவை ஓரளவே உண்மை பயப்பனவாக உள்ளன. கால வரையிலமைந்த வரலாறோ தொடர்ச்சியான உண்மை வரலாறோ அவற்றில் காணப்படவில்லை. ஆனால், கல்வெட்டுகளின் மூலம் பண்டைக்கால அரசர்களின் வரலாறு, அவர்தம் குடும்பத்தார், நாட்டின் பரப்பளவு, வெற்றி பெற்ற நாடுகள், அவற்றின் பெயர்கள், அரசர்களின் பெயர்கள், புவியின் அமைப்பு, ஊர்களின் பெயர்கள், அரசு அலுவலர்கள், ஆட்சி முறை,<noinclude></noinclude> qqtar7go0ez0qtonc9c4tgwm4cxsm43 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/852 250 642275 1954521 1929624 2026-07-18T05:47:01Z Sridevi Jayakumar 15329 1954521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வெட்டியல்‌|824|கலகம்‌ விளைத்தல்‌ குற்றம்‌}}</noinclude>(இராசேந்திரன்) முதலியன]. தொடக்கத்திற்கும் முடிவில் வரும் பல்லவிக்கும் இடைப்பட்ட பகுதியில் அந்த அந்த ஆண்டு நிகழ்ச்சி பற்றிய செய்யுட் பகுதி இணைக்கப்பட்டது. முழுவதும் செய்யுள் வடிவத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையில் பல்லவன் குகைச் சுவரில் அந்தாதியாகக் காணப்படுகிறது. ஏறக்குறைய அந்த நூற்றாண்டிலேயே நன்னிலம் வட்டம் திருவிடைவாய் கோயிலில், தேவாரத் தொகுதியில் காணப்படாத பதிகம் ஒன்றும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் பலதிறப்பட்டவை. ஒரு நிலையான அமைப்பில் அவை எழுதப்பட்டன. ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கி முதலில் அரசனுடைய பட்டப் பெயர் அல்லது மிக அரிதாக அவனுடைய இயற்பெயரும் ஆட்சி ஆண்டும் கொடுக்கப்படும். ஏறக்குறைய கி.பி. 10–ஆம் நூற்றாண்டிலிருந்து நட்சத்திரமும் சேர்த்துக் காணப்படுகிறது. தென்பாண்டி நாட்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து யோகம், கரணம் இரண்டும் சேர்த்துக் கூறப்பட்டன. கலியுக ஆண்டு மதுரை (திருப்பரங்குன்றம், ஆனைமலை), வட ஆர்க்காடு (கிராமம்) கல்வெட்டுகளில் கி.பி. 9, 10–ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. சக ஆண்டு மிக அருகியே வழங்கிவந்தது. காலத்தை அடுத்துக் கீழ்க்காணும் வரிசையில் செய்திகள் கொடுக்கப்பட்டன; கோயில் உள்ள மண்டலம் அல்லது வள நாடு, நாடு அல்லது கூற்றம், ஊர், கோயிலின் பெயர் இராசஇராசேச்சுரம்), கொடுக்கப்படும் பொருள் பூமி, பொன், ஆடு முதலியன), இன்ன அறம் (விளக்கு, திருவமுது, திருமஞ்சனம் முதலியன). நிபந்தனை, இறையிலியா அல்லவா என்பது, இவ்வறச் செயல்களுக்குக் காரணமானவர்களின் கையெழுத்துகள் சான்றாளர்களின் கையெழுத்துகள் கல்வெட்டில் பொறிக்கப்படும். இறுதியில் வருவது ஓம்படைக்கிளவி எனப்படும். இவ்வறத்தைக் காப்பவர் பன்மாயேசுவரர் அல்லது ‘ஸ்ரீ வைஷ்ணவர்’ மற்றும் இவ்வறத்தைக் கெடுத்தார் பெறும் பாவம், காத்தார் பெறும் பயன் ஆகியவையும் கூறப்படும். <b>கன்னட நாட்டுக்கல்வெட்டுகள்:</b> கன்னட நாட்டுப் பகுதியில் கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. அப்பகுதிகளில் பிராமி, பண்டைய கன்னடம், இடைக் காலக் கன்னடம், தேவதாகரி, தந்திநாகரி முதலிய பல்வேறு எழுத்துகளில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கன்னட நாட்டின் மிகப் பழமையான கல்வெட்டு. அசோகரின் கல்வெட்டாகும். வடகரை மாதவப்பூர்க் கல்வெட்டு, பணவாசி மளவள்ளிக் கல்வெட்டு, சந்திர வள்ளிப்பாறைக் கல்வெட்டு, பாதாமிக் கல்வெட்டு போன்றவை குறிப்பிடத்தக்க கல்வெட்டுகளாகும். கன்னட நாட்டுக் கல்வெட்டுகள் அப்பகுதியின் வரலாற்றைக் கூறுவனவாக அமைந்துள்ளன. கதம்பர், கங்கர், சாளுக்கிய மரபினர் ஆகியோரின் ஆட்சியைப் பற்றி அறிய அவை உதவி புரிகின்றன. <b>கல்வெட்டுகளைப் படி எடுக்கும் முறை:</b> எழுதப்பட்டிருக்கும் கல்லை ஈரமாக்கித் தண்ணீரில் நனைத்து எடுத்த தாளை ஒன்றோ இரண்டோ அடுக்குகளாக அதன்மேல் வைத்து தூரிகையால் (Brush) அந்தத் தாளை எழுத்துப் பள்ளங்களில் அழுந்தும்படி அடிக்கவேண்டும். பிறகு மைப்பொடி (Lamp Black Powder), மை (Indian ink), கோந்து (Gum Arbic) இவற்றைக் கூட்டி அரைத்த கலவைப் பொடியை வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு அந்தத் தாளின்மேல் (அது ஈரமாக இருக்கும் பொழுதே) தூவவேண்டும். பிறகு ஓரளவு காய்ந்த பிறகு அந்தத் தாளை எடுத்துக் காயவைக்க வேண்டும். கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்து மிகத் தெளிவாகத் தோன்றும். செப்பேடுகளின் மேல் மையைத் தடவித் தாளை வைத்து அழுத்தி எடுக்க வேண்டும். வெளிச்சத்துக்கு எதிரில் வெள்ளைத் தாளைப் பார்த்தால் எழுத்து புலப்படும். இதுவே கல்வெட்டினைப் படியெடுக்கும் முறையாகும். {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Mahalingam, T.V.,</b> Early South ladian Palaeography University of Madras, Madras, 1974. <b>Sircar, D.C.,</b> Indian Epigraphy, Motilal Banarsi-dass, Delhi, 1965. <section end="கல்வெட்டியல்"/> <section begin="கலகம் விளைத்தல் குற்றம்"/> {{dhr}} {{larger|<b>கலகம் விளைத்தல் குற்றம்:</b>}} சட்ட விரோதக் கூட்டமொன்றின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அக்கூட்டத்தினர் அல்லது அவர்களில் ஒருவர் தமது பலாத்காரத்தை, வன்முறையைப் பயன்படுத்துவது கலகம் விளைவித்தல் குற்றம் (Rioting) ஆகும். இக்குற்றத்திற்கான தண்டனை இரண்டாண்டுகள் வரை சிறை வைப்பு அல்லது தண்டத் தொகை செலுத்தும்படி செய்தல் அல்லது அவை இரண்டுமாகும். குற்றமொன்றைக் கலகம் விளைத்தல் குற்றம் என்று உறுதிப்படுத்துவதற்கு, 1. எதிரிகள் ஐந்து அல்லது மேற்பட்டோராக இருந்து சட்ட விரோதமாகக் கூடியிருத்தல் வேண்டும்.<noinclude></noinclude> 0upgwbzueup38y35buciore4eisoglh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/853 250 642276 1954522 1929629 2026-07-18T05:48:13Z Sridevi Jayakumar 15329 1954522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலகம்‌ விளைத்தல்‌ குற்றம்‌|825|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்}}</noinclude>2. அவர்கள் பொதுவான நோக்கமொன்றால் உந்தப்பட்டிருத்தல் வேண்டும். 3. சட்ட விரோதக் கூட்டம் அல்லது அக்கூட்டத்தில் ஒருவர் தமது பலாத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். 4. பலாத்காரத்தைப் பொது நோக்கத்தை நிறைவேற்றுவதன் பொருட்டுப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். <b>வன்முறை (Violence):</b> வன்முறை என்றால் என்ன என்பது பற்றிப் பிரிவு 349-இல் இந்தியத் தண்டனைச் சட்டம், தெளிவாக விளக்கந்தரவில்லை. எனினும் ‘வன்முறை’ என்னும் சொல் ‘பலாத்காரம்’ என்னும் சொல்லைவிட முக்கியத்துவம் உடையதாகும். <b>ஐந்து அல்லது மேற்பட்டவர்கள்:</b> கலகம் விளைத்தல் குற்றத்திற்குக் குறைந்த அளவு ஐந்து பேர் இருந்து, அவர்கள் சட்ட விரோதக் கூட்டத்தின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பலாத்காரம் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஐவருக்குக் குறைவாகக் கூடுவது சட்ட விரோதமான கூட்டமாகாது. மேலும் அது தொடர்பான பலாத்காரமும் வன்முறையும் கலகம் விளைவித்தல் குற்றமாகாது; வேறு குற்றமேயாகும். <b>சட்டவிரோதக் கலகமும் கூட்டமும்:</b> சட்ட விரோதக் கூட்டமொன்றில் வன்முறையைப் பயன்படுத்தும் போது அது கலகம் விளைத்தல் குற்றமாகிறது. வன்முறையைப் பயன்படுத்தல் ஒன்றின் மூலமே கலகம் விளைத்தல் குற்றம் சட்ட விரோதக் கூட்டத்தினின்று வேறுபடுகிறது. <b>கலகமும் அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தலும்:</b> 1. கலகம் விளைத்தல் குற்றம் என்பது பொது அமைதி குலைக்கும் குற்றங்களின் கீழும், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் என்பது அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழும் வரும். 2. கலகம் விளைத்தல் குற்றமானது அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்று அவ்வளவு கடுமையான குற்றமன்று. ஆகையால், பின்னையது முன்னையதைக் காட்டிலும் கடுமையான தண்டனைக்குரியதாகும். 3. கலகம் விளைத்தல் என்பது தனித்த நோக்கம் (Private Purpose) உடையது; அரசுக்கு எதிராகப் போர்தொடுத்தல் என்பது பொதுத்தன்மை வாய்ந்தது. <b>அபாயகரமான ஆயுதங்கொண்டு கலகம் விளைத்தல்:</b> அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு அல்லது மரணத்தை விளைவிக்கின்ற வகையில் வேறு ஏதேனும் ஒன்றைக் கொண்டு கலகத்தை விளைவிக்கின்றபோது சம்பந்தப்பட்ட குற்றவாளி மூன்றாண்டுகள் வரை சிறை அல்லது தண்டத்தொகை அல்லது அவை இரண்டும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார். {{Right|<b>பு.வே.</b>}} <section end="கலகம் விளைத்தல் குற்றம்"/> <section begin="கலகாரி"/> {{dhr}} {{larger|<b>கலகாரி:</b>}} இது பாலைநிலம். இப்பாலைநிலம் 2,59,000 கி.மீ. பரப்புடையதாய்த் தென்னாப்பிரிக்கக் குடியரசைச் சேர்ந்த பாட்சுவானா (Botswana) நமிபியா பகுதிகளில் உள்ளது. ஆரஞ்சு ஆறும் சாம்பெசி (Zambezi) ஆறும் இதை அடுத்து ஓடுகின்றன. உலர்ந்த ஏரிப் படுகைகள் உள்ள இப்பகுதி சிகப்பு மணலைக் கொண்டது. மாரிக் காலத்தில் இங்கே புல் வளரும். சிற்சில பகுதிகளில் முட்செடிகளும் காடுகளும் உள்ளன. சில இடங்கள் ஆடு மாடுகள் மேயக் கூடியனவாக உள்ளன. இங்குச் சிறிது வேளாண்மையும் நடைபெறுகிறது. கடல் மட்டத்திற்கு மேல் 3000 அடி உயரத்திலுள்ள இங்கு மழை மிகவும் குறைவு. உப்புக் குட்டைகள் பல இங்கு உள்ளன. இங்குள்ள காடுகளில் யானை, வரிக்குதிரை, காண்டா மிருகம், சிங்கம் முதலிய விலங்குகள் உள்ளன. இங்கு வேட்டையாடுதல் நடைபெறுகிறது. பா-கலகாரி, புசுமன் எனப்படும் சாதிப்பிரிவுகள் இங்குள்ள மக்களிடையே உள்ளன. பரங்கி, வெள்ளரி இரண்டும் இங்கே பயிரிடப்படுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கலகாரி"/> <section begin="கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்"/> {{dhr}} {{larger|<b>கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்:</b>}} ஒரு சிறிய குழு கூடி, கற்பித்தல் நோக்கத்தை அடைவதற்காகப் பேச்சு, கேள்வி, செய்கை ஆகியவற்றால் தமக்குள் தொடர்பு கொள்வது கலந்துரையாடல் வழிக் கற்பித்தல் முறை (Discussion Method of Teaching) எனப்படும். குழுவில் 6 முதல் 10 வரையிலான உறுப்பினர் இருப்பர். இக்குழு உறுப்பினர் சிறப்பாக, 1. தலைவர் - நெறிப்படுத்துநர் (Leader-moderator) 2. பங்கு பெறுவோர் (Participant) என்னும் இரு பணிகளைச் செய்வர். பொதுவாகக் கலந்துரையாடல்வழிக் கற்பித்தலில் தலைவர் - நெறிப்படுத்துநராக ஆசிரியரும், பங்கு பெறுவோராக மாணவரும் அமைவர். குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் செயலும் கற்றலும் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. இவ்வகையான தாக்கம் விரிவுரை வழிக் கற்பித்தல், கணிப்பொறிவழிக் கற்பித்தல் (Computer - assisted Instruction) ஆகியவற்றில் இல்லை. {{nop}}<noinclude></noinclude> lae8hvw45584uuwrlq3c60p0lgwqapi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/854 250 642283 1954523 1929668 2026-07-18T05:49:46Z Sridevi Jayakumar 15329 1954523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலந்துரையாடல்வழிக்‌ கற்பித்தல்‌|826|கலந்துறை உரிமை மீட்டடைவிப்பு}}</noinclude>கலந்துரையாடல் வழிக் கற்பித்தல் முறையில் ஆசிரியரும் மாணவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கூட வேண்டும். இவ்வாறு கூடுவதற்கு இயலாதபோது தானே கற்றல் (Independent Study), தொலைக் காட்சிவழிக் கந்தல் (Televised Instruction) போன்ற கற்றல் முறைகளை மாணவர் பயன்படுத்திக் கொள்ளலாம். கலந்துரையாடல் வழிக் கற்பித்தலில் ஒவ்வொரு மாணவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழு உறுப்பினர் அனைவருடனும் பேசவோ செய்கையால் வெளிப்படுத்தவோ செய்கிறார். கலந்துரையாடல் வழிக் கற்பித்தலில் ஒவ்வொரு மாணவரும் குழுவிடம் தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை பெற்றவராகிறார். ஆனால், இவ்வகை உரிமை வகுப்பறைக் கற்பித்தலில் இருப்பது இல்லை; மாறாக, ஆசிரியர் கேள்வி கேட்பதும் ஏதோ ஒரு மாணவர் பதிலுரைப்பதும் ஆசிரியர் மீண்டும் கற்பிப்பதும் என்ற வகையில் வகுப்பறைக் கற்பித்தல் உள்ளது. கலந்துரையாடல்வழிக் கற்பித்தலில் ஓர் உறுப்பினர் பேச்சின் வாயிலாகவோ முகபாவனை (Facial Expression), கைச் சைகை, உடல் அசைவுகள் போன்ற மொழிசாராச் செய்கைகளின் வாயிலாகவோ தம் குழுவினருடன் பேச இயலும். மற்ற உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டோ செய்கைகளைப் பார்த்தோ கலந்துரையாடலில் பங்கு பெறுவர். கலந்துரையாடல் இளம் குழந்தைகளையும் கல்வியறிவு பெறாத வயதுவந்தோரையும் தம் கருத்துகளை வெளிப்படுத்தவும் புதிய கருத்துகளைக் கற்கவும் உற்சாக மூட்டுகிறது என்று பிரிட்சசு (Bridges, 1979) என்ற அறிஞர் கூறுகிறார். மேலும், கலந்துரையாடல் கருத்தியல் நுட்பச் சிந்தனையை (Abstract Thinking), வளர்க்க உதவும் என்பதும் கூறப்படுகிறது. கலந்துரையாடல் ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் குறிக்கோளையொட்டி அமையவில்லை எனில், கலந்துரையாடல் வெறும் மேலோட்டமான கருத்துகளைக் (Opinion) கூறும் நிகழ்ச்சியாக அமைந்து விடும். பாடம் முழுதறி திறன் (Subject Matter Mastery), மனப்பாங்கு மாற்றம் (Attitude Change) ஒழுக்க வளர்ச்சி, புதிய தீர்வு (Problem Solving), செய்தி வெளிப்படுத்தும் திறன்கள் போன்ற கற்றல் நோக்கங்களை ஆசிரியர் நிறைவேற்ற எண்ணுகையில், கலந்துரையாடல்வழிக் கற்பித்தல் முறை சிறப்பாக அமையும். {{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bridges, D.,</b> Education, Democracy and Discussion, National Foundation for Educational Research, slough, 1979. <b>Mckeachie, W.J.,</b> Teaching Tips: A Guidebook for the Beginning College Teacher, Health, Lexington, Massachusetts, 1978. <b>Stanford, G., and Stanford B.D.,</b> Learning Discussion Skills through Games, Citation Press, New York, 1969. <section end="கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்"/> <section begin="கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு"/> {{dhr}} {{larger|<b>கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு:</b>}} இந்துத் திருமணச் சட்டம், பிரிவு 9, சிறப்புத் திருமணச்சட்டம், பிரிவு 22, இந்திய மணமுறிவுச் சட்டம், பிரிவுகள் 32, 33 ஆகியவை உரிமை மீட்டடைவிப்பு (Restitution of Conjugal Rights) என்றால் என்ன என்பதைப் பற்றித் தெற்றென விளக்குகின்றன. இச்சட்டப்பிரிவுகளின்படி, கணவன் அல்லது மனைவி ஒருவர் கூட்டுறவினின்று ஒருவர் எந்தவித நியாயமான காரணமுமின்றிப் பிரிந்திருக்கும்போது, பாதிக்கப்பட்ட தரப்பினர், அவ்வாறு பிரிந்து சென்ற வரை மீண்டும் தன்னோடு சேர்ந்து வாழ வைப்பதற்குத் தீர்ப்பாணை வழங்கிட மாவட்ட நீதிமன்றமொன்றில் மனுச் செய்யலாம். நீதிமன்றமும் அம்மனுவிலுள்ள வாக்குமூலம் உண்மையானதென்று உளநிறைவடைகின்றபோது, அம்மனுவை ஏன் அனுமதிக்கக்கூடாது என்பதற்குச் சட்டமுறையான காரணம் எதுவும் இல்லையென்ற நிலையில், கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்குத் தீர்ப்பாணை வழங்கும். <b>மனுச் செய்ய உரிமையுடையவர்:</b> கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்கு கணவன் அல்லது மனைவி மட்டுமே மனுச் செய்ய முடியும்; மூன்றாமவர் எவரும் அவ்வாறு மனுச் செய்ய இயலாது. கலந்துறை மீட்டடைவிப்பிற்குச் செய்யப்படும் மனு, நல்லெண்ணத்தின்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும். எதிர்மனுதாரர் மனைவியாக இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் அவளுடைய உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்களை அம்மனு கொண்டிருத்தல் வேண்டும். மனு, வஞ்சகக் கூட்டின் அடிப்படையில் எழுந்ததாக இருத்தல் கூடாது. <b>தீர்வழி பெறுதற்குரிய சூழ்நிலைகள்:</b> கணவன் அல்லது மனைவி தன் வாழ்க்கைத் துணையை நியாயமான காரணத்தின் அடிப்படையில் பிரிந்திருக்கும் போது மட்டுமே இத்தகைய தீர்வழியைப் பெறுதல் முடியும். கணவன் சம்பாதிப்பதில்லை; தனக்குச் சரியான முறையில் துணிமணிகள் வாங்கித் தருவதில்லை; பெற்றோரை விட்டுவிட்டுத் தன்னோடு<noinclude></noinclude> 5rrwqh896rekmbmphd9easje3lwxk4x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/855 250 642284 1954524 1929669 2026-07-18T05:50:29Z Sridevi Jayakumar 15329 1954524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப்‌ பொருளாதாரம்‌|827|கலப்புப்‌ பொருளாதாரம்‌}}</noinclude>வந்து தனிக்குடித்தனம் நடத்த மறுக்கிறான் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மனைவியொருத்தி கணவனை விட்டுப் பிரிவது நியாயமானதாகாது. ஆனால், அவள் கணவனது ஆண்மையின்மை, முழுக் குருட்டுத்தன்மை, மேகநோய் அல்லது தொழுநோய், அயல்புணர்ச்சி போன்றவற்றைக் காரணங்காட்டித் தன் கணவனிடத்திலிருந்து பிரிவது நியாயமானதாகும். <b>நீதிமன்றம்:</b> கலந்துறை உரிமை மீட்டடைவிப்பிற்கான மனுவை ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும். மாவட்ட நீதிமன்றமொன்று அதிகாரம் வழங்குவதன் பேரில் சார்பு நீதிமன்றமும் (SubCourt) இம்மனுவை விசாரிக்க அதிகாரமுண்டு. மேலும், மாநில அரசிதழில் அறிவிக்கப்பட்டதன் பேரில் ஒரு கூடுதல் நீதிமன்றமும் இம்மனுவை விசாரிக்கலாம். ஆனால், ஒரு கோட்ட உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்கலாகாது. {{Right|<b>பு.வே.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Manohar, V.R. and Chitaley W.W.,</b> The A.I.R Manual, Civil and Criminal, Volume XX, All India Reporter Ltd, Nagpur, 1979. <b>Saha A.N.,</b> Marriage and Divorce, Debooks Eastern Law House, Calcutta, 1981. <section end="கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு"/> <section begin="கலப்புப் பொருளாதாரம்"/> {{dhr}} {{larger|<b>கலப்புப் பொருளாதாரம்</b>}} சமூகக் குறிக்கோள்கள், தனியாரின் விகுப்பு வெறுப்புகள், அடிப்படை உரிமைகள், அரசின் பொறுப்புகள் ஆகியவற்றின் இன்றியமையாப் பொருளாதாரக் கூறுகளைச் செயற்படுத்தும் பொருளாதார அமைப்பைக் குறிக்கும். கலப்புப் பொருளாதாரத்தில் (Mixed Economy) தனியார் துறையும் பொதுத் துறையும் முரண்பாடற்ற கோட்பாடுகளுடன் இணக்கமாக, ஒன்றுக்கொன்று பதிலீடுகளாக அமைகின்றன. பொருளாதாரத்திட்ட முறைகளும் (Planning System) அங்காடி அமைப்பும் (Market Structure) சார்புத் தொடர்புடையாவாய்ச் சமூகப் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் நோக்குடையதாய் இயங்கும். இந்தியாவின் பொருளாதார அமைப்பு, சமூக சமநிலை மக்களாட்சிக் (Democratic Socialistic Pattern of Society) கலப்புப் பொருளாதாரமாகும். எனவுே, சமத்துவம் (Equality), விடுதலை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிற்கு இந்தியப் பொருளாதாரக் கொள்கையில் தலையாய முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. ஆசுத்திரேலியா (Australia), இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடு (USA), பிரான்சு (France), செருமனி (Germany), இத்தாலி (Italy), மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றி கி.பி. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் உச்ச கட்டத்தை அடைந்தன. அக்காலத்தைய ஆடம்சுமித்து (Adam Smith), மால்துசு (Malthus), இரிக்கார்டோ (Ricardo) போன்ற பொருளியல் வல்லுநர்கள் தனியார் முனைவு, போட்டி, மூலதன ஆக்கம் (Capital Formation) ஆதாயம், தொழில் நுட்பம் ஆகியவற்றைப் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதன எனக் கூறினர். அக்கருத்துகள் பிற்காலச் சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளத்தகாததாக உணரப்பட்டன. காரல் மார்க்சு (Karl Marx), முதலாளிகள் மிக்க ஆதாயம் பெறும் தன்னலநோக்குடன் உபரி மதிப்பை (Surplas Value) உயர்த்தித் தொழில் நுட்பங்களை புகுத்துகின்றதனால், வேலையின்மை பெருகித் தொழிலாளர் அல்லலுறுகின்றனர் எனவும், போட்டியினால் சிறு தொழில்கள் மூடப்படுகின்றன எனவும், உபரி மதிப்பைச் சுரண்டல் எனவும் கூறினார். மார்க்சின் கருத்துப்படி முதலாளித்துவத்தில் பொருளாதார வீக்கமும், மந்தமும் மாறி மாறி நிகழ்ந்து, இறுதியில் தொழிலாளர் புரட்சியின் மூலம் வகுப்புப் பிரிவினையற்ற சமுதாயம் உருவாகும். பொதுவுடைமை (Communism) அடிப்படையில் பொருளாதாரம் அமையும் என்பதாகும். அதன்படி சோவியத்து உருசியா (USSR), அங்கேரி (Hungary), செக்கோசுலேவேக்கியா (Czechoslovakia), போலந்து, பல்கேரியா (Bulgaria), யூகோசுலேவியா (Yugoslavia) சைனா போன்ற நாடுகளின் பொருளாதார அமைப்புகள் செயற்படலாயின. எதிர்முனைக் கோட்பாடுகளையுடைய பொதுவுடைமை, முதலாளித்துவம் ஆகியவற்றிற்கிடையே ஒரு நடுநிலையடைவதே கலப்புப் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். சமநிலைச் சமுதாயத்தைப் புரட்சி மூலமாகத்தான் பெறமுடியும் என்பது இல்லை முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளர் உயர்ந்த பொருளாதார வாழ்க்கை வசதிகளைப் பெற்றுள்ளனர். அங்குத் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பினைப் பிற வகைகளில் பெருக்கியுள்ளது. உபரி மதிப்பு முதலுக்குரிய ஊதியம், அதனைச் சுரண்டல் என எல்லாச் சூழ்நிலையிலும் கொள்ளலாகாது. சுரண்டலை ஒழிப்பதற்கு மக்களாட்சி அரசுகள் பல சட்டங்களை இயற்றிச் செயற்படுத்துகின்றன. அரசின் தலையீடு, திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் நலம் பேணல், இன்றியமையாத் தொழில்களை நாட்டுடைமையாக்கல் போன்றவை மூலம் சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க இயலும் என்பதற்கு இந்தியா, எகிப்து, பிரே-<noinclude></noinclude> 9hkuptw3u9p7qir2u9ec71ah4dbnl7h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/858 250 642288 1954525 1929705 2026-07-18T05:51:20Z Sridevi Jayakumar 15329 1954525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலப்புப்‌ பொருளாதாரம்‌|830|கலப்பு வங்கி முறை}}</noinclude>அரசு வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்தை வளர்ச்சியடையச் செய்வதுடன், தேவையான காலங்களில் வேளாண்மைக்கு வழங்கவேண்டிய உதவித் தொகையினைச் (Subsidies) கொடுத்து உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சிறு வேளாண்மையினர் சுரண்டப்படாமல் பாதுகாக்கப்படுகின்றனர். வறட்சிக் காலங்களுக்கும் பற்றாக்குறைக் காலங்களுக்கும் தேவையான உணவு இருப்புச் சேமிப்பாக (Buffer Stock) வைக்கப்படுகிறது. அரசு பங்கீட்டுமுறையை எல்லாக் காலங்களிலும் செயற்படுத்தவும், விலையைக் கட்டுப்படுத்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் அரசின் கொள்முதல் கொள்கை உறுதுணையாயுள்ளது. இந்திய அரசு வாணிகக் கழகம் (State Trading Corporation) இன்றியமையாப் பொருள்கள், பற்றாக்குறைப் பண்டங்கள், ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் ஆகியவற்றின் வாணிக நடவடிக்கைகளை ஏற்று நடத்துகிறது. தனியாருக்கும் இவற்றில் முக்கிய பங்கு உண்டெனினும் இக்கழகம் மூலம் நடவடிக்கைகள் ஒருங்கமைகின்றன. இந்திய அரசின் வரிக் கொள்கை (Taxation), பொதுச் செலவு ஆகியவை நாட்டின் செல்வம் சமநிலையில் பங்கிடப்பட அமைய உதவும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தனியுரிமை மற்றும் அங்காடிப் பொருளாதார அமைப்புக் கொண்ட மேலை நாடுகளில்கூட, அண்மைக் காலங்களில் அரசு மற்றும் பொதுத்துறையின் பங்கு படிப்படியாக வளர்ந்து வருவதைக் காணலாம். எனவே, அனைத்துப் பொருளாதார அமைப்புகளுமே, பல்வேறு வகைப்பட்ட கலப்புப் பொருளாதாரங்கள் எனக் கூறலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரித்தான சில சமூகப் பண்பாட்டு நிலைகள் உள்ளன. ஒரே நாட்டிலும்கூட மாறுபடும் சூழ்நிலைக்கேற்பப் பல புதிய விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் தனித் தன்மையைக் கருத்திற் கொண்டு கலப்புப் பொருளாதார அமைப்புப் பாணி அமைய வேண்டியது இன்றியமையாததாகிறது. பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொண்ட முறைகளை இந்தியாவும் பின்பற்றுவது என்பது பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற செயலாகும். எனவே, இந்தியப் பொருளியல் வல்லுநர்கள் இந்திய நாட்டுச் சிக்கல்கள். தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு புதிய அணுகுமுறையில் கலப்புப் பொருளாதாரம் வேரூன்ற வழி வகுத்துள்ளனர். இந்தியக் கலப்புப் பொருளாதாரத்திற்குப் பலர், பல விளக்கங்கள் அளித்துள்ளனர் எனினும், அவை அனைத்தும் சுட்டிக்காட்டும் குறிக்கோள் சொத்து மற்றும் வருமானப் பகிர்வைக் கூடியவரை சமமாக்க வேண்டுமென்பதும், அதனால் வறுமையிலிருந்து நாடு விடுதலை பெற்றுப் பொருளாதார வளமுடன் மக்கள் வாழவேண்டும் என்பதும் ஆகும். {{Right|<b>அ.கு.சா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Madan G.R.,</b> Economic Thinking in India, S. Chand & Company Ltd., 1981. <b>Namjoshi M.V.,</b> The Mixed Economy, Himalaya Publishing House, Bombay, 1984. <section end="கலப்புப் பொருளாதாரம்"/> <section begin="கலப்பு வங்கி முறை"/> {{dhr}} {{larger|<b>கலப்பு வங்கி முறை:</b>}} வைப்பு வங்கி முறை முதலீட்டு வங்கி முறை ஆகிய இரு வங்கிப் பணிகளையும் செயற்படுத்தும் முறை கலப்பு வங்கி முறை எனப்படும். வங்கிகள் அவை வழங்கும் கடன்களின் தன்மை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மரபு வழியில் பொது மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றுக் குறுங்காலக் கடன்களை மட்டும் அளிக்கும் வங்கிகள் வைப்பு வங்கிகள் (Deposit Banks) ஆகும். வாணிகம், தொழில் போன்றவற்றிற்கான நீண்ட காலக் கடன்களை வழங்கும் வங்கிகள் முதலீட்டு வங்கிகள் (Investment Banks) ஆகும். அண்மைக்காலத்தில் கலப்பு வங்கி முறை (Mixed Banking) உலகநாடுகளனைத்திலும் பெருமளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, தனியார் துறை இயங்கும் பொருளாதார அமைப்பையுடைய நாடுகளில் நீண்ட கால, குறுங்காலக் கடன் முதலீட்டுத் தேவைகள் மிக உயர்ந்த அளவு பெருகிக் கொண்டே செல்வதால், கலப்பு வங்கி முறை அத்தேவையை நிறைவேற்றி வளர்ச்சியடைகிறது. இங்கிலாந்து, இத்தாலி, பெல்சியம் (Belgium), செருமனி (Germany) ஆகிய நாடுகளில் கலப்பு வங்கி முறை நிதித்துறையின் இன்றியமையாச் சிறப்பியல்பாக விளங்குகிறது. வங்கியியல் கோட்பாட்டின்படி வணிக வங்கிகள் தொழிற்றுறைக்குக் குறுங்காலக் கடன்களை மட்டும் அளித்தன. அவை தொழில் நிறுவனங்களுக்குப் பணி முதலை (Working Capital) அளிப்பதால் அவற்றின் பணநீர்மைத்தன்மை (Liquidity) எக்காலத்திலும் பாதுகாக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியின் காரணமாக நீண்டகாலக் கடன் தேவை பெருகினமையால் காலப்போக்கில் தொழிற்றுறைக்கு நிலையான முதலை (Fixed Capital) அளிப்பதும் வங்கிகளின் பொறுப்பு என்ற கோட்பாட்டுக் கருத்து வளர்ச்சியடையலாயிற்று, இங்கிலாந்தில் தொழிற் புரட்சிக் காலத்தில், தொழிற்றுறைக்குத் தேவையான நிதி முதலீடு பெரும்பாலும் தனியாரிடமிருந்து பெறப்-<noinclude></noinclude> ptmfgcv9lbsi1b4lflo3m198e5rvlpn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/860 250 642290 1954526 1929710 2026-07-18T05:52:03Z Sridevi Jayakumar 15329 1954526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலம்பகம்‌|832|கலம்பகம்‌}}</noinclude>யாக்கப்பட்டு, அவை வேளாண்மை வாணிகம் தொழிற்றுறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான குறுங்காலக் கடன்களை அளிக்குமாறு நெறிப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்றுறையின் நீண்டகால நிதித் தேவையை நிறைவேற்றத் தொழில் மறுநிதிக் கழகம் (Refinance Corporation of Industry), மாநில நிதிக் கழகங்கள், இந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (Industrial Development Bank of India) போன்ற தனிநிதி நிறுவனங்கள் நிறுவப்பட்டுச் செயற்படுகின்றன. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கலப்பு வங்கி முறை"/> <section begin="கலம்பகம்"/> {{dhr}} {{larger|<b>கலம்பகம்</b>}} என்னும் சொல்லுக்குக் கலவை என்பதுதான் சொற்பொருள். ‘களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந்தொடையல்’ என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு, இவர் இங்கே சுட்டும் கலம்பகம் என்பதற்குப் ‘பலவகை மலர்கள்’ என்பது பொருள். பலவகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலை ‘கதம்பம்’ எனப்படும். ‘கதம்பகம்’ எனவும் வடமொழியில் இது வழங்கும். இதன் இரண்டாம் எழுத்தாகிய ‘த’, ‘ல’ வாக மாறுதல் ஒலிபியல்பில் நேர்வதே. தவிரவும் பாலி மொழியில் ‘கலம்ப’ ‘கலம்பக’ என்னும் சொல் வடிவங்களும் உள்ளன. ‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’ என வரும் பெரும்பாணாற்றுப்படை அடிக்கு (174) உரை கண்ட நச்சினார்க்கினியர், ‘பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை’ என்று விளக்கம் தருகிறார். கலம்பக இலக்கியத்திற்குக் ‘கலம்பக மாலை’ என்றும் ஒரு பெயருண்டு. பல்வகை நிறமும் வடிவமும் மணமும் கொண்ட மலர்களால் கட்டப்பெற்ற கதம்ப மலர்மாலை போன்று இந்த இலக்கிய வகையில் இடம்பெறும் பாக்களும் பொருள்களும் பல்வேறு வகைகளில் அமைகின்றன. எனவே, இந்த இலக்கியப் பெயர் உவமையாற் பெற்ற பெயராகும். பா, பாவினங்களுள் பெரும்பாலானவற்றையும் கலம்பக இலக்கியத்துள் காணலாம். பொருள்களை நோக்கினால் அகம், புறம் என்னும் பொருள்கள் காட்சி தருகின்றன. நகை முதலிய ஒன்பான் சுவைகளும் இதன்கண் மிளிர்தல் காணலாம். ஒருபோகு, வெண்பா, கலித்துறை என்னும் மூன்றும் கலம்பகத்தின் முதற்கண் அமைதல் வேண்டும் என்பது மரபு. இவற்றை ‘முதலுறுப்பு’ என வெண்பாப் பாட்டியல் குறிப்பிடுகிறது. முதலுறுப்பிற்கு முன்னர்ப் பாயிரமாக வழிபடு தெய்வ வணக்கம், குருவணக்கம் அவையடக்கம் பற்றிய செய்யுட்களும் பெரும்பான்மையான கலம்பகங்களில் காணப்படுகின்றன. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், திருவேங்கடக் கலம்பகம் முதலியன இதற்குச் சான்றாகும். இத்தகு பாயிரப் பகுதி கலம்பக நூலுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதன்று. முதலுறுப்புத் தவிர இந்த இலக்கியத்தின் இடம் பெறும் செய்யுள் வகைகளையும் பாட்டியல் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவை வெண்டுறை, கலிவிருத்தம், கலித்தாழிசை, மருட்பா, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம் என்பனவாம். இவற்றோடு காலப் போக்கில் ஆசிரியத்துறை, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகைகளும் சேர்க்கப்பெற்றன. இடையிடையே வெண்பாவும் கலித்துறையும் விரவி வருதல் காணலாம். மடக்கு, வண்ணம், சந்தம் முதலியன அமையவும் பாடல்களை அங்கங்கே யாத்தனர். இந்நூலுள் வரும் பாடல்களை அந்தாதியாக அமைத்துப் பாடுதல் புலவர் வழக்கு நூலின் இறுதியும் முதலும் அந்தாதியிற் போல மண்டலித்து வரும் வகையில் அமைப்பர். சிற்றிலக்கியங்கள் பொதுவாகத் தெய்வங்களையும் அரசர்களையும் சான்றோர்களையும் தலைவர்களாகக் கொண்டு பிறந்துள்ளன. எனிலும், பத்தியெழுச்சியின் காரணமாகத் தெய்வங்களின்மேல் பாடப்பெற்ற இலக்கியங்களே மிகுதியாயுள்ளன. தெய்வங்களைக் குறித்து எழுந்த கலம்பங்களுக்கு அத்தெய்வப் பெயர்களோடு சார்த்திப் பெயர் சூட்டுவதில்லை. தெய்வங்கள் எழுந்தருளியுள்ள ஊர்ப் பெயரைச் சார்த்தியே வழங்கப்படுகின்றன. மதுரைக் கலம்பகம், தில்லைக் கலம்பகம், திருவருணைக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலியன எடுத்துக்காட்டுகளாம். ஏனையோரைப் பற்றிப் பாடப்பெறும் கலம்பகங்கள் அந்தந்த நூலின் தலைவர் பெயருடன் சேர்த்துக் கூறப்படுகின்றன. ஆளுடைய பிள்யையார் திருக்கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், அம்பலவாண தேசிகர் கலம்பகம் முதலியன இதற்குச் சான்றாம். பாடல் தொகையிலும் கலம்பகங்களுக்குள்ளே வேறுபாடு உண்டு. தேவர்களுக்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது வேளாளர்க்கு முப்பது என்றும் அளவில் பாடுதல் வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன. அமைச்சர் என்பதற்குப் பதிலாக, ‘அரசனால் ஏவப்பெற்றவர்களுக்கு எழுபது’ என நவநீதப் பாட்டியல் தெரிவிக்கிறது. கலம்பக இலக்கியங்களை நோக்கும்போது இவ்வரையறை தவிர்த்து வருதலும் காணப்படுகிறது குறுநில மன்னரை அரசரைப் போல-<noinclude></noinclude> 9lksgv47o884r1wyp0j08ugr1q6c2hm பயனர்:Bharathblesson/test 2 645148 1954537 1954412 2026-07-18T08:45:19Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1954537 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} 368ty467qtzilon0wvh3yg0ql9gx9v2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/516 250 649848 1954527 2026-07-18T06:08:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிடத்தக்கவை. கொப்பரைத் தேங்காய், தானியங்கள், அரிசி, புகையிலை, வாசனைத் திரவியங்கள் முதலியனவும் இங்கு உற்பத்தியாகின்றன. இத்தீவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செவ்ரே உடன்படிக்கை|488|செவ்வப்ப நாயக்கர்}}</noinclude>குறிப்பிடத்தக்கவை. கொப்பரைத் தேங்காய், தானியங்கள், அரிசி, புகையிலை, வாசனைத் திரவியங்கள் முதலியனவும் இங்கு உற்பத்தியாகின்றன. இத்தீவுக்கு முதலில் கி.பி.1512-இல் போர்ச்சுகீசியார் சென்றனர். பிறகு கி.பி.17-ஆம் நூற்றாண்டின் அங்குச் சென்ற தச்சுக்காரர் (Dutch) போர்த்துக் கீசியரை விரட்டிவிட்டு, உள்நாட்டு மக்களுடன் போர் நடத்தித் தம் ஆதிக்கத்தை நிறுவினர். உள்நாட்டினருக்கும் தச்சுக்காரருக்கும் இடையே கி.பி. 1666 முதல் 1669 வரை நடந்த போருக்கு மகசர் (Makasar) போர் என்பது பெயர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அயலவர் ஆதிக்கம் அத்தீவில் முடிவுற்றுப் புதிதாக அமைந்த இந்தோனீசியக் குடியரசின் 10 மாகாணங்களுள் செலெபீசுத் தீவும் ஒன்றாகியது. அம்மாறுதல் 1950-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. செலெபீசுத்தீவு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இதன் வடக்கில் உள்ள கடலுக்குச் செலெபீசுக் கடல் என்ற பெயர் அமைந்துள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="செலெபீசு"/> <section begin="செவ்ரே உடன்படிக்கை"/> {{dhr}} <b>செவ்ரே உடன்படிக்கை</b>: முதல் உலகப் போருக்குப்பின் வெற்றிகண்ட நேசநாடுகள், தோல்வியுற்ற துருக்கியுடன் 1920-ஆம் ஆண்டு இவ்வுடன்படிக்கையைச் செய்து கொண்டன. கீழ்க்கண்ட கூறுகளை இது கொண்டிருந்தது. 1) துருக்கி, ஆசியா மைனர், திரேசு, ஏட்ரியா நோபிள், கலிபோலி ஆகிய பகுதிகளைக் கிரேக்கத்திற்குக் கொடுத்துவிட வேண்டும். 2) எகிப்து, சூடான், சைப்பிரசு, மொராக்கோ, துனீசு ஆகிய பகுதிகளில் துருக்கி தான் கொண்டிருந்த உரிமைகளை விட்டுவிட வேண்டும். 3) அரேபியா, மெசபடோமியா, சிரியா, பாலசுத்தீனம் ஆகிய பகுதிகளில் துருக்கியின் ஆதிக்கம் நீக்கப்பட வேண்டும். 4) துருக்கியப்படை 50,000 வீரர்களை மட்டும் உடையதாகக் குறைக்கப்பபட வேண்டும். 5) பிரான்சு, சிரியாவின் காப்பு நாடாகவும், பிரிட்டன் மெசபடோமியா பாலசுத்தீனம் ஆகிய பகுதிகளின் காப்பு நாடாகவும், அறிவிக்கப்பபட வேண்டும். 6) அந்நாட்டின் விமானப் படை வெற்றி பெற்ற நேச நாடுகள் பால் ஒப்படைக்கப்படல் வேண்டும். 7) கான்சுடாண்டிநோபிள், அலெச்சாத்திரியா ஆகிய துறை முகப்பகுதிகள் அனைத்து நாடுகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும். ஆனால், செவ்ரே (Sevres) உடன்படிக்கையைத் துருக்கியில் அப்போது முசுதபா கமால் பாசாலின் தலைமையில் செயற்பட்ட துருக்கிய தேசியக் கட்சியினர் கடுமையாக எதிர்த்ததால், இவ்வுடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆயினும், இந்நிகழ்ச்சியின் பின்விளைவாக 1923-ஆம் ஆண்டு துருக்கி, நேச நாடுகளோடு இவாசேன் உடன்படிக்கைவைச் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. அதன் படி துருக்கி கீழ்க்கண்ட செயல்களை ஏற்க நேரிட்டது: 1 ) சிமிர்னா, கான்சுடாண்டிநோபிள், கிழக்குத் திரேசு ஆகிய பகுதிகளில் துருக்கியின் இறைமை ஏற்கப்பட்டது. 2) அராபியப் பகுதியில் துருக்கியின் ஆதிக்கம் பழிக்கப்பட்டது. 3) சிரியாவுக்குப் பிரான்சும், மெசபடோமியா மற்றும் பாலசுத்தீனம் ஆகியவற்றுக்கு பிரிட்டனும் காப்பு நாடுகளாக்கப்பட்டன. 4) தார்டெனெல்சு நீர்ச்சந்தி வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் செவ்ரே உடன்படிக்கையின் முக்கிய கூறுகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டன.{{Right|<b>மா.கா.</b>}} <section end="செவ்ரே உடன்படிக்கை"/> <section begin="செவ்வப்ப நாயக்கர்"/> {{dhr}} <b>செவ்வப்ப நாயக்கர் (கி.பி.1532-1563)</b> தஞ்சை நாயக்க மரபினைத் தோற்றுவித்தவர், திம்மப்ப நாயக்கருக்கும் பையாம்பிகாவிற்கும் மகனாகப் பிறந்தவர் சின்னசெய்வர். இவர் தளவாய் செவ்வப்ப நாயக்கர், அடப்பம் சின்ன செவ்வப்ப நாயக்கர், வீர செவ்வப்ப பூபதி, திம்மப்ப சின்ன செவ்வநிருபதி, கர்நாடக சிம்மாசன காரிய துரியர், தஞ்சை செவ்வப்ப பூபதி முதலான பெயர்களால் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிக்கப்பெறுகிறார், விசயநகரப் பேரரசர் அச்சுதராயரின் கொழுந்தியார் மூர்த்தியாம்பாளின் கணவரான இவர், கி.பி. 1532-இல் அச்சுதராயரால் தஞ்சை நாயக்க அரசின் முதல்வராக அமர்த்தப்பட்டார். இவர் 21 ஆண்டுகள் தஞ்சைப் பகுதியை ஆண்டு, தெலுங்கு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார்; சமயத் துறையில் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். பல திருக்கோயில்களைப் புதுப்பித்து அறக்கொடைகள் அளித்தார். இவர் சோழமண்டலம், தொண்டை மண்டலத்தின் தென்பகுதிகள் ஆரியவத்தை ஆட்சி புரிந்து வந்தார். மதுரை, செஞ்சி நாயக்கர்களைக் காட்டிலும், இவர் விசயநகரப் பேரரசருக்கு மிகவும் உதவியாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டார். தஞ்சை மண்டல ஆட்சி தனியாகத் தொடங்கப்பட்ட நிலையில், அச்சுதராயரே உடனிருந்து, நிருவாக வசதிக்காக, செவ்வப்பரிடமிருந்து திருச்சிராப்பள்ளி மதுரை மண்டலத்திற்கும், மதுரை நாயக்கர் விசுவநாதரிடமிருந்த வல்லம், தஞ்சை மண்டலத்திற்கும் மாற்றப்பட உதவினார். இவர், பேரரசின் தளபதிகள் இராமராயர், விட்டலதேவராயர் ஆகியோர் கி.பி. 1345-இல் திருவனந்தபுரம் உதய மார்த்தாண்டவர்மாவின் மீது படையெடுத்தபோது, படையுதவியும் பிற உதவிகளும் புரிந்தார். புகழ்மிக்க<noinclude></noinclude> cwbajj3qd16dz8gluj0xy2cr4sw6isy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/517 250 649849 1954528 2026-07-18T06:50:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைக்கோட்டைப் போரிலும் இவர் பேரரசுக்கு உதவினார் போலும். பக்திமானாகிய இவர் கோயில் குளங்களையும், பிற குளங்களையும், செப்பனிட்டார். தஞ்சை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செவ்வப்ப நாயக்கர்|489|செவ்வைச் சூடுவார்}}</noinclude>தலைக்கோட்டைப் போரிலும் இவர் பேரரசுக்கு உதவினார் போலும். பக்திமானாகிய இவர் கோயில் குளங்களையும், பிற குளங்களையும், செப்பனிட்டார். தஞ்சையில் உள்ள சிவகங்கைக் குளத்திற்குச் செவ்வப்பனேரி எனப் பெயரிட்டார். சிவகங்கைக் கோட்டையையும் பழுது பார்த்தார். திருவண்ணாமலை அருணாசலநாதர் கோயில் பதினொரு நிலைப் (அடுக்கு) பெருங்கோபுரத்தைக் கட்டுவித்தார். விருத்தாசலம், காஞ்சிபுரம் கோயிற் சுற்று மதில்களைக் கட்டினார்; திருப்பதி, சிவசைலம் கோயில் விமானங்களுக்குப் பொன்வேய்ந்து புகழ்பெற்றார். காவிரியின் இருமருங்கும் இருந்த பல சைவ, வைணவ கோயில்களுக்குப் பல திருப்பணிகள் புரிந்தார், பிற மதத்தினருக்கும் புல சலுகைகள் அளித்தார், மாத்துவ சமயக் குரு விசயேந்திர தீர்த்த சிரீபதிக்குச் சிற்றூர் ஒன்றினைத் தானமாக வழங்கினார். தஞ்சைச் சூரியனார் கோயிலில் வாழ்ந்து வந்த சிவாக்கிர யோகியார் திருவீழி மிலையில் தங்க விரும்பியதால், அங்கோர் மடங்கட்டிக் கொடுத்தார். தஞ்சைத் தரணியைச் சேர்ந்த மூவலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் திருப்பணிக்காக, செவ்வப்பர் பத்து வேலி நிலம் தானமளித்தார், இவர் கி.பி. 1549-இல் பிராமணர்களுக்கு உணவளிக்கவும், சந்நியாசிகளை உபசரிப்பதற்கும் நிலதானம் செய்தார். நாகப்பட்டினத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்திய போர்த்துகீசியருக்குத்தக்க பாதுகாப்பு அளித்ததுடன், அவர்கள் வாணிகம் புரியவும் அனுமதியளித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கியம் நன்கு வளர்ந்தது. கிரியாதீபிகை, சைவ சந்நியாச பத்ததி என்னும் வடமொழிச் சமய நூலை இயற்றிய சிவாக்கிர யோகிகள் செவ்வப்பரால் ஆதரிக்கப்பட்டார். சிவாக்கிர யோகியார் இயற்றிய சிவநெறிப் பிரகாசம் என்ற தமிழ்நூல் கி.பி. 1545-இல் இவரது அவையில் அரங்கேற்றப்பட்டது. இவரது ஆட்சியின் இறுதிப் பகுதியில் பன்மொழிப் புலவரும் அரச தந்திரியுமான கோவிந்த தீட்சிதர் இவருக்கு அமைச்சராக அமர்த்தப்பட்டார். தீட்சிதர் பல நூல்கைள இயற்றியுள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் சரசுவதிமகால் நூலகம் சிறப்புற்றது. தன் மகன் அச்சுதப்ப நாயக்கருக்குச் செவ்வப்பர் கி.பி. 1563-இல் இளவரசுப் பட்டம் கட்டி, ஆட்சியில் ஈடுபடுத்தி, தனது இறுதிக்காலம் வரையில் இறை பணியில் ஈடுபட்டார். கி.பி. 1580-இல் காலமான இவருடைய திருவுருவச் சிலைகள் தஞ்சைப் பெரிய கோயிலில் அம்மன் கோயில் முன்பும், தஞ்சை வேங்கடரமணசாமி கோயிலிலும் உளதென்பர். அச்சுதப்பருக்கு அடைக்காய் தரும் பணிசெய்து அடப்பம் என்னும் பட்டம் பெற்ற இவர், ஒரு மண்டலத்தின் அதிபதியாக உயர்த்தப்பட்டதிலிருந்து இவர் திறமையை நன்கு அறியலாம். மதுரை மண்டலத்திலிருந்து பிரிந்த தஞ்சை மண்டலம், எல்லாத் துறைகளிலும் மேம்பட்டு விளங்கச் செல்வப்ப நாயக்கர் அரும்பாடுபட்டார். விசய விலாசம், பிராச கோபால விலாசம் ஆகியன இவரது பெருமையைப் பேசுகின்றன. சுதந்திர தஞ்சை நாயக்கர் அரசைத் தோற்றுவித்த பெருமைக்குரியவச் இவரே என்று தஞ்சாவூர் ஆந்திர ராசுலு சரித்திரம் முதலிய நூல்கள் இவரைப் பாராட்டுகின்றன.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Subramanian., N.,</b> History of Tamil Nadu (A.D. 1565-1956) Koodal Publisbers, Madurai, 1982.<br> <b>Vriddhagirisan, V.,</b> The Nayaks of Tanjore, Annamalai University, 1942. <section end="செவ்வப்ப நாயக்கர்"/> <section begin="செவ்வைச் சூடுவார்"/> {{dhr}} <b>செவ்வைச் சூடுவார்</b>:பாகவதம், வேதவியாசரால் இயற்றப் பெற்றது. அதனைத் தமிழிற் பாடியோர் இருவர். ஒருவர் செவ்வைச் சூடுவார்; மற்றொருவர் அருளாளதாசர். செவ்வைச் சூடுவார் இயற்றிய நூல் சிரீபாகவத புராணம் என்றும் இதிகாச பாகவதம் என்றும் வழங்கப்பெறுகிறது. செவ்வைச் சூடுவார் பாண்டிய நாட்டில் மதுரைக்கு வடக்கே வைகைக் கரையிலுள்ள வேம் பற்றூரில் பிறந்தவர்; அந்தண மரபினர். இவரியற்றிய பாகவத நூலின் சிறப்பு நோக்கி, வேத வியாசரே செவ்வைச் சூடுவராகத் தோன்றிப் பாடினார் என்று ஒரு தனிப்பாடல் கூறும். தமிழில் பாகவதம் பாடியவர் செவ்வைச்சூடுவார் அல்லர்; ஆரியப்ப புலவரே என்னும் கருத்தை மறுத்து, வேம்பற்றூராரே பாடினார் என்று ரா. ராகவையங்கார் வலியுறுத்தி விளக்கியுள்ளார். வேம்பத்தூரில் செவ்வைச்சூடுவார் மட்டுமன்றி, தத்துவராயர், ஈசான முனிவர், சிரீபட்டர், பெருமாளையர், கவி குஞ்சரமையர், முத்துவேங்கட சுப்பையர் போன்ற அறிஞர் பெருமக்கள் தோன்றியுள்ளனர். வடமொழியிலுள்ள இதிகாச பாகவதம் 18,000 சுலோகங்களைக் கொண்டது. செவ்வைச்சூடுவார்<noinclude></noinclude> a23noz2jtiql3ety9qbyounsbnjpj07 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/518 250 649850 1954529 2026-07-18T07:09:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இயற்றிய பாகவதம் 15 சந்தங்களையும் 155 உட்பிரிவுகளையும் 4973 பாடல்களையும் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதியை விரித்துப் பாடாமல் ஐந்து பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செறுசேரி நம்பூதிரி|490|செறுமர்}}</noinclude>இயற்றிய பாகவதம் 15 சந்தங்களையும் 155 உட்பிரிவுகளையும் 4973 பாடல்களையும் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதியை விரித்துப் பாடாமல் ஐந்து பாடல்கள் அளவில் பாடியுள்ளார். அவை திருமால் வணக்கம் கலைமகள் வணக்கம், சுகமுனிவர் வணக்கம், நூற் பெருமை, அவையடக்கம் முதலியவையாகும். பொதுவாகக் கடவுள் வாழ்த்துப் பகுதியை அடுத்து அமையும் பாயிரம் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. ‘இந்த நூலின் இசைத்ததென் காரணம் என்னில் அந்தமாதி மற்றும் இடையினும் ஞானமாம் அதனால் சிந்தை சேரும் வெந்துயர் தவிர்த்திட இது தெரித்தான்’ என்று படைப்பின் புண்ணியப் பயனைக் கூறியுள்ளார். செவ்வைச் சூடுவார் காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் சிறந்த வைணவர். திருமாலைப் பற்றி வரும் இடங்களில் திருமாலின் குணங்களையும் பெருமைாளையும் பத்திச் சுவைபடப் பாடுவார். பரசுராமன் தலயாத்திரை சென்ற போது தமிழ்நாட்டின் ஊடே சென்றாரெனப் பாடுவார். அதனைக் கூறும் ‘தெண்டிரை நிலத்தொருதிலக மாரிய, தண்டமிழ் நாட்டகம் சார்த்திட்டானரோ’ என்னும் பகுதி, செவ்வைச் சூடுவார் மொழிப் பற்றும் நாட்டுப்பற்றும் மிக்கவர் என்பதை விளக்குகின்றது. நூலின் இறுதியில் நூல் கற்போருக்கு வாழ்த்துக் கூறி முடித்துள்ளார். செவ்வைச் சூடுவார் பாடிய பாகவதத்தின் செம்மைப் பதிப்பு டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்புரையுடன், அவர் புதல்வர் கல்யாண சுந்தரமையரால் வெளிவந்துள்ளது.{{Right|<b>அ.வி.</b>}} <section end="செவ்வைச் சூடுவார்"/> <section begin="செறுசேரி நம்பூதிரி"/> {{dhr}} <b>செறுசேரி நம்பூதிரி</b>: இவர் மலையாள மொழிக் கவிஞர்களுள் ஒருவர். இவர்தம் பெற்றோர் காலம் முதலியன பற்றி அறிவதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. வடகேரளத்தில் இருந்த கோலத்திரி என்னும் பகுதியின் குறுநில மன்னராக விளங்கிய உதயவர்மனது ஆத்தான கவிஞராக விளங்கியவர் என்பதனை இவர்தம் காவியத்திலிருந்து அறியமுடிகிறது. மலையாள இலக்கிய வரலாற்றின் ஆசிரியர் பரமேசுவரன் நாயர், இவரது காலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள மொழியில் ‘கிருட்டிண பாட்டு’ அல்லது ‘கிருட்டின காதா’ எனப்படும் காவியத்தை இவர் இயற்றியுள்ளார். இவரை ஆதரித்த உதயவர்மனின் விருப்பத்தை ஏற்று இக்காவியம் பாடப்பட்டது என்றும், அவன் மனைவியான அரசி அக்காவியம் பாடுவதற்கான சந்தத்தை அமைத்துத் தந்தார் என்றும் கூறுகின்றனர். இவருடைய காவிய நடையில் புதிய இயல்புகன் நன்கு புலப்படுகின்றன. மலையாள மொழியில் மணிப் பிரவாளச் செல்வாக்கு மிக்க காலத்தில் இவர் வாழ்ந்தவராயினும் அதன் ஆதிக்கத்திற்கு ஆட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தம் காப்பியத்திற்குக் கருவாகக் கிருட்டிணள் கதையைத் தேர்ந்தெடுத்ததாலும், அதனால், ஆரியப் பண்பாட்டோடு தொடர்புடைய கருத்துகளைக் கூறவேண்டியிருந்ததாலும், காப்பியத்தில் ஓரளவு வடமொழிச் சார்பு தவிர்க்க இயலாததாக அமைந்தது. இவரே வடமொழிப் புலமையும், புராண இதிகாசத் தோய்வும் மிக்கவராக இருந்தும், தம் காப்பியத்தைக் கேரள மக்களுக்காக, நடைமுறை மலையாளத்தில் சிறந்த கவிதைகளில் இயற்றியுள்ளார். இக்கால மலையாளக் கவிதை இயல்புகள் பல உருவாவதற்கு வித்திட்டவர் இவராவார். இவரது ‘கிருட்டிண காதா’ காப்பியம் ஆற்றொழுக்கான நடை, எளிமை, வீறுடைமை முதலிய பண்புகள் பெற்று விளங்குகிறது. பொருள் செறிந்த அணி நலம் மிக்க இவர்தம் காப்பியத்தின் தெனிவின்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொற்சிலம்பம் ஆடுவதில் நாட்டங்கொள்ளாத இவரது காப்பியத்தில் சொற்சித்திரங்கள் அழகுற அமைந்து விளங்குகின்றன. இவர்தம் காப்பியத்தில் கண்ணனை நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவராகவே வருணித்துள்ளார். கோகுலம் பற்றி இவர் வருணித்துள்ளன. கேரளப் பகுதியில் நிகழும் பருவ காலங்களின் வருணனைகளாகவே உள்ளன. நுட்பமான நகைச்சுவை காவியத்தில் உரிய இடங்களில் திகழ்கிறது. இவர் தம் காவியத்தில், வடமொழி, தமிழ்மொழிச் சொற்களைக் குறைவாகவே கையாண்டுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="செறுசேரி நம்பூதிரி"/> <section begin="செறுமர்"/> {{dhr}} <b>செறுமர்</b>: செறுமர்கள் அல்லது செறுமக்கள் என்போர் கேரள நாட்டைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒருவகையினர். வட மலபார் மாவட்டத்தில் இவர்கள் புலையர் எனவும் வழங்கப்படுகிறார்கள். இவர்களுள் கணக்கன், புலச்செருமன், ஏராளன், கூடான், உரோவன் என்னும் உட்பிரிவுகள் உண்டு. ஆளன், பறம்பன் என்னும் உட்பிரிவினர்களும் சில பகுதிகளில் வாழ்கின்றனர். செறுமர் என்னும் சொல் சேரமக்கள் என்பதன் மரூஉ என்றும், இதன் பொருள் சேரநாட்டின் பழங்குடிகள் என்றும் ஒரு சாரார் கருதுவர். மற்தொரு சாரார் செறிய (சிறிய) மக்கள் என்பதே செறுமன் என மருவிற்று என்பர். இதன் பொருள் சிறிய, தாழ்ந்த அல்லது காப்பாற்றப்பட வேண்டிய மக்கள் என்பதாகும். புலையன் என்னும் சொல் தீட்டு என்-<noinclude></noinclude> rexk3kmmyvfc7vqama4pirrk0qsksop பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/519 250 649851 1954530 2026-07-18T07:29:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதனின்றும் பெறப்படுகிறது என்பர். சிலர், செறுமர் என்னும் பெயர் இப்பிரிவினரின் சிறிய உடற்கட்டைக் குறிக்கிறது அல்லது செறை (சிறு அணைக்கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|செறுமர்|491|செறுமர்}}</noinclude>பதனின்றும் பெறப்படுகிறது என்பர். சிலர், செறுமர் என்னும் பெயர் இப்பிரிவினரின் சிறிய உடற்கட்டைக் குறிக்கிறது அல்லது செறை (சிறு அணைக்கட்டு-சிறை) அல்லது தாழ்ந்த நெல்வயல் என்பதனைக் குறிக்கிறது என்பர். உலோகன் என்பவர், சேர நாடு என்னும் பெயர் இச்செறுமர்களின் நாடு எனப் பொருள்படும் எனவும், சேரமான் பெருமாள் என்னும் பெயர் இவர்களுடைய அரசரின் பெயரையே குறிப்பிடும் எனவும் கருதுகிறார். செறுமர்களும் 39 பிரிவுகள் இருப்பதாகம் கூறுவர். இப்பிரிவினருள் தமக்குள்ளேயே மணம் புரிந்து கொள்ளும் அகமண (Endogamy) முறையினரும் தம் சாதியைத் தவிர்த்துப் பிற பிரிவினரையே மணக்கும் புறமண (Exogamy) முறையினரும் உள்ளனர். பெரும்பாலும் உழவுத்தொழில் கூலிகளாகப் பணிபுரியும் இவர்களில் சில பகுதியினர் பாய், கூடைகள் முடையும் பணிகளும் செய்கின்றனர். பண்டை நாடுகளில் சேர நாட்டின் பல பகுதிகளைத் தாம் ஆட்சி புரிந்ததாகப் புலையர்களிடையே ஒரு வாய்வழிக் கதை நிலவுகிறது. புலையரசர்கள் வழிவந்த ஆய்க்கரை எசமானன் என்பவரை வடக்கு மலையாளத்தைச் சேர்ந்த புலையர்கள் தங்கள் தலைவராகக் கருதி மரியாதை செய்கின்றனர். திருவனந்தபுரத்தில் வெள்ளிக் குளக்கரையில் அமைந்த புலையனார் கோட்டை என்னும் ஒன்றில் புலையரசர் ஒருவர் ஆட்சி புரிந்ததாகக் கதை உண்டு. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி வழிபாடு ஒரு புலையனோடு நெருங்கிய தொடர்புடையது, அனந்தன் காட்டில் தன் கணவனோடு வாழ்ந்துவந்த புலப் பெண் ஒருத்தி ஒருநாள் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டாள். வியப்பு மேலிட்டு அவ்விடத்திற்குச் சென்றவள், பாம்பு ஒன்றினால் பாதுகாக்கப்பட்டுக் கிடந்த ஒரு குழந்தையைக் கண்டாள். அதனை எடுத்துப் பாலூட்டி வளர்த்தாள். பாம்பு பாதுகாத்தமையினால் அக்குழந்தை, தெய்வத் தன்மையுடைதாகக் கருதப்பட்டது. இவ்வியப்புச் செய்தியைப் கேல்வியுற்ற திருவனந்தபுரம் அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பத்மநாப சுவாமிக்கு ஒரு கோவில் கட்டினார். செறுமர்களில் ஒரு பிரிவினர் இறையர் எனப்படுவர். இவர்கள் புலையரைக் காட்டிலும் சற்று உயர்ந்த சமூக மதிப்பு உடையவர்கள். தங்கள் எசமானரின் வீட்டின் இறை (இறைவானம்) வரை இவர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் புலையரோ எவரையும் பார்த்தாலோ அணுகினாலோ தீட்டு ஏற்பட்டுவிடுமாம். இவர்களை நிலத்தோடு கட்டுண்ட அடிமைகளாகக் கருதி விற்பதும் வாங்குவதுமான வழக்கம் ஆங்கில ஆட்சியாளராலும், வழக்குரை மன்றங்களாலும் தடை செய்யப்பட்டது. இம்முறை கி.பி. 1862-ஆம் ஆண்டில் அடிமை முறை சட்டப்படி, தடை செய்யப்பட்டபோதிலும் மறைமுகமாக இப்பழக்கம் கேரளத்தில் அதன் பின்னும் நீடித்து வந்துள்ளது. அடிமைகளை ‘வள்ளி’ ஆள் (‘வள்ளி’- அடிமைக்குக் கொடுக்கப்படும் நெல்) என்னும் பெயரால் வழங்குதல் இன்றும் நீடிக்கிறது. என்பார் மானிடவியல் அறிஞர் அனந்தகிருட்டிணன். உயர் சாதியினரைக் காணும் செறுமர் ஒருவர் 30 அடிக்கு அப்பால் நிற்கவேண்டும். அதற்குமேல் செறுமர் ஒருவர் நெருங்கிவிட்டால் உயர் சாதியார் தீட்டுக் கழிப்பதற்காகக் குளிக்கவேண்டும். பிராமணர் வாழும் கிராமத்தையோ அவர்களின் கோவிலையோ குளத்தையோ செறுமர்கள் நெருங்கக்கூடாது. நெருங்கிவிட்டால் தீட்டுக் கழிக்கப்பட வேண்டும். பொது நடைப்பாதையிலும் உயர் சாதியாரை எதிர்ப்படும் செறுமன் உடனே விலகிச் சென்று, சேறு சகதியானாலும் அதன்மீது தான் நடந்து செல்லவேண்டும். செறுமர்கள் கடைத்தெருக்களில் நுழையக் கூடாது. செறுமர்களில் ஒரு பிரிவினரான புலையர், பிராமணர்களிடமிருந்து 90 அடியும், நாயர்களிடமிருந்து 64 அடியும் விலகி நிற்கவேண்டும். ஆனால் புலைச் செறுமர், பறையர், நாயாடி உல்லாடன் ஆகியோரைக் காணும்போது 90 அடியோ, 64 அடியோ விலகி நிற்காது, சற்றுத்தள்ளி நிற்பர். செறுமர்கள் நில உடைமையாளர்களாலும், எசமானர்களாலும் வேளாண்மைக் கருவிகளாகவே கருதப்பட்டார் என்பார் கோபாலபணிக்கர். ஆண்டு முழுவதும் செறுமர்கள் நிலத்தில் உழைக்க வேண்டும். அவர்கள் குடியிருக்க ஒதுக்கிடமும் அன்றாடக் கூலி நெல்லும் நில உடைமையாளரால் வழங்கப்படும். கூலியில் பெரும்பகுதியைச் செறுமர்கள் குடிப்பதற்கே செலவிட்டுவிடுகிறார்கள் என்கிறார் பணிக்கர். ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகைக் காலங்களில் செறுமர்களுக்கு ஓரிரு நாள்கள் விடுமுறை கிடைக்கும். செறுமர்களின் உறைவிடம் சாலை அல்லது குடிசை எனப்படும். இவர்களின் திருமணச் சடங்கில் மணமகனின் உடன்பிறந்தாள் முக்கிய பங்கு பெறுகிறாள். பெண் பருவம் அடைந்தவுடன் தனிக்குடிசையில் ஒதுக்கி வைக்கப்படுவாள். பருவச் சடங்கிற்கு ‘வல்லோன்’ எனப்படும் சாதித் தலைவர்களில் ஐவரும்,<noinclude></noinclude> g3t7mxpqlfzvqm3xzmq333b5w6dzdaq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/520 250 649852 1954531 2026-07-18T07:40:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவர்களுடைய கரையைச் (குழு) சேர்ந்தவர்களும் அழைக்கப்படுவார்கள், பறையன் ஒருவன் பறை முழக்கு, வாச்சியம் ஆகியவற்றுக்கு இசைய ஒரு மணி நேரம் மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்சியாங்கு|492|சென்டார்}}</noinclude>அவர்களுடைய கரையைச் (குழு) சேர்ந்தவர்களும் அழைக்கப்படுவார்கள், பறையன் ஒருவன் பறை முழக்கு, வாச்சியம் ஆகியவற்றுக்கு இசைய ஒரு மணி நேரம் மலைப்பாட்டுப் பாடுவான். ஏழு தேங்காய்களை உடைத்து அவற்றின் நீரைச் சொரிந்தபின் தண்ணீரால் நீராட்டி ஏழுநாள் தனியிடத்தில் இருத்தி அதன் முடிவில் எண்ணெய்க் குளிப்பு முடித்து, புத்தாடை அணிவித்து ஒப்பனைகள் செய்து உறவு முறையாருக்கு விருந்தளித்த பின் பருவமடைந்த பெண்ணை மீண்டும் தம் உறைவிடத்திற்கு அழைத்துச் செல்வர். இது வள்ளுவப் புலையர்களிடம் காணப்படும் சடங்காகும். தந்தை வழியில் பெண் கொள்ளலாமேயன்றித் தாய் வழியில் பெண் கொள்ளுதல் கூடாது எனச் செறுமர்களிடையே தடை செய்யப்பட்டுள்ளது. புலையர்களின் தலைவன் ஒவ்வொரு கரைக்கும் (குழு) வள்ளுவன் என்னும் பூசாரியை தியமிப்பான், ஒவ்வொரு திருமணத்திலும் புலையர்கள் வள்ளுவருக்கு ஐந்து வெற்றிலை, ஒரு பாக்கு, இரண்டு புகையிலை, நாற்பத்தொன்பது சக்கரம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். நீண்ட குடை, ஐந்து வண்ணக்குடை, தொடி, நீண்ட தங்கக் காது வளையம், அடைப்பைப் பெட்டி ஆகிய பெருமைக்குரிய ஐந்து சின்னங்களை வள்ளுவர் வைத்துக்கொள்ளலாம். முக்காலியில் அமர்தல், சமக்காள விரிப்பில் அமர்தல், சடங்குகளில் மேளம் கொட்டுதல் முதலியன அவர்களுடைய சிறப்பு உரிமைகளாகும். மகர மாதத்தில் (தை) ஒரு சனிக்கிழமையன்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சாசுதான் கோட்டையில் புலையர் குழுமி விழா எடுப்பார்கள். செறுமர்கள் கோல்களி, வட்டக்களி, தட்டின்மேல் களி என்னும் விளையாட்டுகளில் விரும்பி ஈடுபடுவார்கள். ‘சாவர்’ என வழங்கப்படும் இறந்துபட்ட முன்னோர்களின் ஆவியைப் புலையர் வணங்குவர். புலையர் இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் உடையவர். காதுகுத்தல் இவர்களிடையே ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும்.{{Right|<b>கோ.ச.</b>}} <section end="செறுமர்"/> <section begin="சென்சியாங்கு"/> {{dhr}} <b>சென்சியாங்கு</b> சீனாவில் கியாங்சு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். சென்சியாங்கு (Chen-Chiang or Chin-Kiang) துறைமுகம் யாங்டீசுயாங்கு ஆறும் பெரிய கால்வாயும் கலக்குமிடத்தில் உள்ளது. இது சிறப்பான ஒரு வாணிகத்தலம். இங்குத் தொழில்கள் பல உள்ளன. பட்டு, திராட்சை, ஊறுகாய் வகைகள் முதலியன மிகுதியாகக் கிடைக்கின்றன. காகிதம் தொடர்பான பொருள்களும், மருந்து வகைகளும் இயந்திரக் கருவிகளும், பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்சியாங்கு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ‘சங்’ மரபு ஆட்சியிலேயே அறியப்பட்டிருக்கின்றது. பின்னர் வந்த ‘மிங்’ ‘மஞ்ச’ குலங்களின் ஆட்சியிலும் இது செழித்தோங்கியது. தைப்பில் கலகக்காரர்கள் கி.பி. 1857-இல் இங்குப் பல சேதங்கள் விளைவித்தனர். அயல்நாட்டு வாணிபத்திற்காக இது கி.பி. 1859-இல் திறந்துவிடப்பட்டது. ஆங்கிலேயரின் மேலாண்மை இங்கு 1927-ஆம் ஆண்டு வரை நிலவியது, பிறகு சீனாவுக்குத் திரும்பவும் அளிக்கப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சென்சியாங்கு"/> <section begin="சென்டார்"/> {{dhr}} <b>சென்டார்</b> என்பது பாதியளவு மனித உடலமைப்பையும் பாதியளவு குதிரை உடலமைப்பை யும் பெற்ற ஓர் உயிரினம். இவ்வகை உயிரினம் கிரேக்கத் தொன்மலியலில் கூறப்பட்டுள்ளது. சென்டார் (Centaur) இனத்தவர்கள் கிரீசின் (Greece) வடக்குப் பகுதியில் தெசாலி (Thesaly), அர்காடியா (Arcadin) ஆகிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர். இவர்கள் காட்டுமிராண்டித்தனமாகவும் சட்டத்திற்கு உட்படாதவர்களாகவும் இருந்தனர். சென்டார் இனத்தவரின் அண்டைய பகுதியில் வாழ்ந்த இலப்பித்து (Lapith) மக்களின் அரச குடும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 520 |bSize = 375 |cWidth = 168 |cHeight = 165 |oTop = 265 |oLeft = 192 |Location = center |Description = }} {{center|சென்டார்}}<noinclude></noinclude> 0chdhqok36y2i78ed3kcm3arbp2xlef பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/521 250 649853 1954532 2026-07-18T07:56:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பத்தில் நடந்த திருமண விருந்தின்போது குடிபோதையிலிருந்த சென்டார் ஒருவன் மணமகளைத் தாக்கிவிட்டான். அதனைத் தொடர்ந்து நடந்த போரில் இலப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்டினவியர்|493|சென் பௌத்தம்}}</noinclude>பத்தில் நடந்த திருமண விருந்தின்போது குடிபோதையிலிருந்த சென்டார் ஒருவன் மணமகளைத் தாக்கிவிட்டான். அதனைத் தொடர்ந்து நடந்த போரில் இலப்பித்துகள் சென்டார்களைத் தோற்கடித்தனர். இப்போரின் சில முக்கிய நிகழ்ச்சிகள் ஒலிம்பியாவில் உள்ள கோயிலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவர்களின் தோற்றம் பற்றிவழங்கப்படும் தொன்மக் கதைப்படி, மலைப் பகுதிகளில் வாழ்ந்த காட்டுமிராண்டிகளும் காட்டுப் பகுதிகளைச் சேர்ந்த விலங்குத் தன்மையுடைய ஆண்களுக்கப் புற்றுப்பாதியளவு மனிதத் தன்மையும் பாதியளவு விலங்குத் தன்மையும் கொண்ட தோற்றத்தைப் பெற்றனர். தொடக்க காலச் சித்திரங்களில் இவ்வினத்தின் தோற்றத்தைக் காணமுடிகிறது. மனிதன் முன் பக்கமும் குதிரையின் உடல், பின்னங்கால்கள் முதலாயின பின்பக்கமும் இருக்குமாறு இந்த உருவம் வரையப்பட்டுள்ளது. இவர்கள் காட்டு மரங்களின் கிளைகளைக் கொண்டு சண்டையிட்டமை சித்திரங்களால் அறியக்கிடக்கிறது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="சென்டார்"/> <section begin="சென்டினலியர்"/> {{dhr}} <b>சென்டினலியர்</b>: அந்தமான் தலைநகரமான போர்ட்பிளேரிலிருந்து வடமேற்கே சற்றேறக்குறைய முப்பது கி.மீ தூரத்தில் ஐம்பத்தெட்டு ச.கி.மீ. களைக் கொண்டது வடக்குச் சென்டினல் (North Sentenel) தீவு. இந்தத் தீவில் வாழும் முது பழங்குடியினரே சென்டினலீவர் (Scatenalese). இவர்கள் அந்தமானில் வாழும் நீக்ரிட்டோ (Negrito) பழங்குடிகளுள் ஓரினத்தவர். சென்டினலியரோடு முதன்முதலில் கி.பி.1867-ஆம் ஆண்டு அம்பிரே (Humfray) என்பவர் தொடர்பு கொண்டார். பிறகு கி.பி. 1886-இல் போர்ட்மன் (M.V. Porman) என்பவர் அவர்களுடன் தொடர்பு கொள்ளப் பெருமுயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அவரைப் போன்றே போனிங்டன் (Bonigton) என்ற ஆங்கிலேயரும் 1926-ஆம் ஆண்டு சென்டினலியரைச் சந்திக்க மேற்கொண்ட முயற்சி வீணாயிற்று, சிப்ரியானி (Cipriani) என்னும் இத்தாலிய நாட்டு மானிடவியலறிஞர் இவர்களை ஆராய 1954-ஆம் ஆண்டு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. அதன் பிறகு 1957-ஆம் ஆண்டு அந்தமான் அரசாங்கத்தினர் ஒரு குழு அமைத்து சென்டினல் தீவிற்குச் செல்ல முயன்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியைத்தான் கண்டது. அந்தமான் பழங்குடி நல அமைப்பு (Andaman Adim Janjati Vikas Samiti) 1976-ஆம் ஆண்டு முதற் கொண்டு சென்டினலியர்களுடன் நட்புக்கொள்ளப் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இன்று வரை சென்டினலியர் பற்றிய (சரியான செய்திகள் தகுந்த சான்றுகளுடன் கிடைக்கவில்லை). சென்டினலியர் மக்கள் தொகையைப் பற்றி இதுவரை அரசாங்கத்தாரால் ஊகித்துத்தான் கூறப்பட்டுள்ளது. குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி 1911, 1921-ஆம் ஆண்டுகளில் 117 எனவும், 1931 இல் 50 என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத் தடுத்து வரும் கணக்கெடுப்புகளில் சென்டினலியர்கள் பற்றி ஏதும் கூறப்படவில்லை. சென்டினலியப் பழங்குடிகள் தோற்றத்திலும் உடல் அமைப்பிலும் ஓங்கி, சாரவாப் பழங்குடிகளை ஒத்து இருக்கின்றனர். இவர்கள் காட்டின் கிடைக்கும் மரப்பட்டைகள் பெரிய இலைகள் போன்றவற்றை ஆடையாக அணிகின்றனர். ஆண்கள் தங்கள் இடுப்புப் பகுதிக்கு மேலே சுமார் முக்கால் அடி அகலம் கொண்ட மரப்பட்டையை அணிந்துள்ளார்கள். பெண்கள் இனக்குறியை மட்டும் மறைக்குமளவிற்கு அணிகின்றனர். வாழ்க்கை முறைகளைப் பற்றிச்சில கருத்துகள் கிடைத்துள்ளன. இவர்கள் சாரவர்கள் போன்று சமுதாயக்கூடார வாழ்க்கையின்றித் தனித் தனிக்குடிசைகளைக் கட்டிப்பகுதிக் குழுக்களாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் சற்றேறக்குறைய 15 முதல் 20 குடிசைகளையோ குடும்பங்களையோ கொண்டது என்று கூறப்படுகிறது. சென்டினலியர்கள் வேட்டையில் திறமை மிக்கவர்கள். அவர்கள் காட்டில் கிடைக்கும் மிருகங்களைவில், அம்பு ஆகியவற்றால் கொன்று உணவாக உட்கொள்கின்றனர். இதனுடன் காட்டில் இடைக்கும் கிழக்கு, கனிவகைகளையும் உண்கின்றனர். கடலில் கிடைக்கும் பலவகை மீன்கள், ஆமைகள் ஆகியவற்றை அம்பு கொண்டு பிடித்து உண்கின்றனர். அரசின் நலத்திட்டங்கள் இன்று சென்டினவியரை வெளி உலகத்தாருடன் பழக்குவதிலும் அவர்களை மேம்படுத்துவதிலும் உதவி வருகின்றன.{{Right|<b>து.வெ.</b>}} <section end="சென்டினலியர்"/> <section begin="சென் பௌத்தம்"/> {{dhr}} <b>சென் பௌத்தம்</b>: புத்தமதம் இந்தியாவெங்கினும் பரவியது, தெற்கே இலங்கையிலும் கிழக்கே பச்மா, தாய்லாந்து, கம்போடியாவிலும், வடக்கே திபெத்து, சீனா, சப்பான் ஆகிய நாடுகளிலும் மேற்கேமைய ஆசியாவிலும் பரவியது, இலங்கை, பர்மா, கம்போடியா, தாய்லாந்து முதலிய இடங்களில் பரவியபௌத்தம் ஈனயானம் (Hinayana) அல்லது தேரவாதம் எனப்பட்டது. திபேத்து, சீனா, சப்பான் முதலிய<noinclude></noinclude> 0uo77byxj753hcqfkhp0gyp4fxcikgw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/522 250 649854 1954533 2026-07-18T08:11:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இடங்களில் பரவிய பௌத்தம் மகாயானம் என வழங்கப்பட்டது. திபெத்தில் வழங்கிய பௌத்தம் இரினியின் மாபா (Rnyinmapa) எனப்பட்டது. சீனாவில் சான் (Chan) பௌத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென் பௌத்தம்|494|சென்னிமலை}}</noinclude>இடங்களில் பரவிய பௌத்தம் மகாயானம் என வழங்கப்பட்டது. திபெத்தில் வழங்கிய பௌத்தம் இரினியின் மாபா (Rnyinmapa) எனப்பட்டது. சீனாவில் சான் (Chan) பௌத்தம் எனப்பட்டது. சான் என்பது வடமொழியில் தியானம் (Dhyana) எனப் பொருள்படும். சப்பானில் சென் பௌத்தம் ((Zen Buddhism) எனப்பட்டது. போராசிரியர் உசுட்டன் சுமித்து (Huston Smith) சென் பௌத்தம் கீழ்நாடுகளில் புனிதமான ஆன்மிகம் எனக் கருதப்பட்டது என்று கூறுகிறார். சென் பௌத்தம் தியானத்தில் கவனம் செலுத்தியது. கொள்கைகளிலும் சடங்குகளிலும் வணக்கத்திலும் கவனம் செலுத்தவில்லை. மேலான ஆன்மிக அநுபவம் (Enlightenment) பெற வேண்டுமென்றால் மொழிக் கட்டுப்பாடு, பகுத்தறிவினால் ஏற்படும் தடை முதலியவைகளை மீற வேண்டும் என அது கூறியது. புனிதமான நூல்கள் சென் பௌத்தத்தில் பல இருந்தாலும், ஆன்மிக ஞானம் நூல்களைப் படிப்பதனால் கிடைப்பதில்லை. பூக்களை வைத்துச்செய்த (The Flower Sermon) பௌத்தரின் சொற்பொழிவு சென்கொள்கையைத் தெளிவாகக்காட்டியது. ஒரு சமயம் புத்தரை அவருடைய சீடர்கள் மலை மேலிருக்கும் பொழுது சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது புத்தர் ஒன்றுமே பேசவில்லை. ஒரு தங்கத் தாமரைப் பூவை முகத்தின் முன்னே வைத்து ஒரு மணி நேரம் தியானம் செய்து கொண்டே நின்று கொண்டிருந்தார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. ஆனால், மகாகாசியபா (Maha Kasyapa) என்பவர் புத்தரிடம் சென்று, அதுவே சிறந்த முறை என்று கூறினார். உடனே அவரைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். தியானத்திலமர்ந்த புத்தர் முன்னே இருந்த தடைகள் எல்லாம் நீங்கின. மகா காசியப்பா விளக்கின் ஒளியைக் கண்டார். சென் பௌத்தம் கூறுவதென்னவெனில் ஆன்மிக ஞானமானது திடீரென்று ஒருவருக்குக் கிட்டும். ஆனால் இதிலிருந்து அதற்குத் தயாராக இருக்க வேண்டாம் என்று கூறவில்லை. நீண்டகாலப் பயிற்சி தேவை. மனதை அமைதிப்படுத்த ஒழுக்கம் தேவை. பகுத்தறிவினைப் பயன்படுத்த வேண்டாம். எந்த விதமான வெளியே உள்ள சக்தியினாலும் அது ஏற்படுவதன்று; திடீரென்று ஏற்படும். ஒரு மனிதன் மொழி, பகுத்தறிவ முதலியவைகளினால் ஏற்படும் தடைகளைக் கடந்து செல்வானேயானால், அவனுக்கு உள்ளுணர்வு (Intution) ஏற்பட்டு, உண்மை திடீரெனப் புலப்படும். சென் ஆசிரியர்கள் நீண்ட காலப் பயிற்சி தேவை என்று கூறுகின்றனர். அதற்கு மூன்று நிலைகள் தேவை. அவை தியானம், கோன் (Koan), குருவை நேர்காணல் ஆகியவையாகும். கடைசியில் உண்டாவது சதோரி (Satori) அதாவது ஆன்மிக உணர்வு (Realisation). கோன் என்றால் ஒரு சிக்கல் அல்லது கேள்விகளால் திகைக்க வைத்தல் (Muddle) என்று பொருள். கேட்பார் குரு சீடர்களிடம் பின்வரும் கேள்விகள் உங்கள் மூதாதையர்கள் பிறக்குமுன், அவர்கள் முகம் எப்படியிருந்தது? ஒரு கை தட்டினால் என்ன ஓசை கேட்கும்? கேள்விகள் சரியல்ல என்று கூறுதல் சரியான விடையாகாது. சரியான விடை கிடைப்பதற்குப் பகுத்தறிவு பயன்படாது. உள்ளுணர்வு தேவை உள்ளுணர்வு ஏற்பட்டவுடன் மனிதன் மற்ற உயிர்களுடன் உள்ள ஒன்றிய தன்மையை உணர்ந்து இன்பம் அனுபவிக்கிறான். இத்தகைய அனுபவத்துடன் நின்றுவிடாமல், அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உலகில் இருந்தாலும், இங்கேயுள்ள இன்ப துன்பங்களினால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். வெற்றியோ தோல்வியோ அவர்களை உணர்விழக்கச் செய்யாது. கீதையில் கூறப்படும் இசுதிதப்பிரக்ஞன் (Sthita Prajna) அல்லது திரிகுணாதீதன் (Trigunatita) போல இருக்க வேண்டும், அமெரிக்க இளைஞர்கள் சென் பௌத்தக் கொள்கைகளில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார்கள்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Suda. J.P.,</b> Religion in India - A Study of their Evental Unity., Sterling Publishers Pvt. Ltd,, New Delhi, 1978. <section end="சென் பௌத்தம்"/> <section begin="சென்னமல்லையர்"/> {{dhr}} <b>சென்னமல்லையர்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் தமிழ் நாட்டிலுள்ள சிதம்பரத்தில் பச்சைகந்தையர் மடத்தில் வாழ்ந்தார். இவர் வீரசைவர் மரபில் தோன்றியவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த நாளில் சிவ சிவ வெண்பா என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூல் வெண்பா யாப்பிலமைந்து ஒவ்வொரு வெண்பாவும் சிவ சிவ என விளித்துப் பாடப்பட்டுள்ளதால் அவ்வாறு பெயர்பெற்றது என்பர். அந்நூல் 133 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வெண்பாவும் குறள் கருத்தொன்றையும் அதை விளக்கும் கதையொன்றின் சுருக்கத்தையும் கொண்டு விளங்குகின்றது. அதாவது திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு குறளைத் தேர்ந்து வெண்பாவின் முன்னிரண்டடிகளில் கூறியும், பின்னிரண்டடிகளில் அதனை விளக்கும் ஒரு கதையைச் சுருக்கி எடுத்துக்காட்டாகக் கூறியும் வெண்பாக்கள் அமைந்துள்ளன. அது பயில்வோருக்கு இனிமை பயப்பதாக உள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சென்னமல்லையர்"/> <section begin="சென்னிமலை"/> {{dhr}} <b>சென்னிமலை</b>: தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் பெரியார் மாவட்டத்தில் பெருந்துறை<noinclude></noinclude> 8b4stgn43rs8x18h2ut822dxq06edc5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/523 250 649855 1954534 2026-07-18T08:25:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வட்டத்தில் இவ்வூர் அமைத்துள்ளது. இது பெருந்துறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னிமலை என்ற சிறப்புமிகு மலையின் மலையின் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்னிமலை|495|சென்னை}}</noinclude>வட்டத்தில் இவ்வூர் அமைத்துள்ளது. இது பெருந்துறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னிமலை என்ற சிறப்புமிகு மலையின் மலையின் பெயரே இவ்வூருக்கும் ஆயிற்று. அந்த உச்சியில் சுப்பிரமணியர் கோயில் ஒன்று உள்ளது பெரியார் மாவட்டத்திலுள்ள மிகச் சிறந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தொன்மை வாய்ந்த ஆலயத்திற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வேளாளர் ஆவர். இங்கு ஆண்டுதோறும் தைத் திங்களில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். சென்னிமலையின் மக்கள்தொகை 11,357(1981). இக்கணக்கில் 10,997 இந்துக்களும், 247 இசுலாம் சமயத்தைச் சார்ந்தவர்களும், 113 கிறித்தவர்களும் அடங்குவர். தமிழ்நாட்டுப் புகழ்மிகு நெசவு மையங்களான கோயம்புத்தூர், ஒண்டிப்புதூர், பவானி, சிவகிரி, சத்தியமங்கலம், தர்மாபுரம், புளியம்பட்டி, சலத்தூர், குண்டலம் ஆகியவற்றோடு ஒத்த அளவு சிறப்பினைச் சென்னிமலையும் பெற்றுள்ளது. அழகுமிகு வண்ணப்புடவைகளை உற்பத்திச் செய்வதில் நெகமம், சலத்தூர், பலவாடி, மலையாண்டிப் பட்டினம், பவானி, காங்கேயம், குண்டலம், மந்திரிப் பாளையம், பெரியபாளையம், அம்மாபாளையம், சிவகிரி ஆகிய மையங்களோடு போட்டியிடும் அளவுக்கு சென்னிமலை உயர்வு பெற்று விளங்குகிறது. ஆக்கிராவைப் போன்று பஞ்சாலான தரை விரிப்புகளையும் செயற்கைப் பட்டுகளையும் இவ்வூர் நெசவாளிகள் உற்பத்தி செய்கின்றனர். சென்னிமலையில் நெய்யப்பட்ட துணிகளின்மீது பாடு மிகுந்த சித்திரங்களை அச்சடிக்கும் வேலையும் நடைபெறுகிறது. சென்னிமலை படுக்கை விரிப்பு செய்வதில் உலகப் புகழ் பெற்றது. இங்கே தயாரிக்கப்படுகிற படுக்கை விரிப்புகள் மேலை நாட்டவரின் கவனத்தை ஈர்ப்பதால், தமிழ் நாட்டிலிருந்து படுக்கை விரிப்புகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் அந்நியச் செலாவணியும் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கின்றது. சென்னிமலை நெசவாளர்களின் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் தமிழ்நாட்டிலேயே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இச்சங்கத்தின் தலைவராக நெடுங்காலமாகப் பணியாற்றி சென்னிமலையின் புகழை நாடறியச் செய்தவர் எம்.பி. நாச்சிமுத்து முதலியார். பண்டைய நாள்களில் சென்னிமலைப் பகுதிகளில் கனிமப் பொருள்கள் மிகுதியாகக் கிடைத்ததற்கும் இரும்பைத் தனியாகப் பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்றதற்கும் சான்றுகள் உள்ளன.{{Right|<b>பொன்.சு.</b>}} <section end="சென்னிமலை"/> <section begin="சென்னை"/> {{dhr}} <b>சென்னை</b>: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை ஆகும். இது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கே வங்கான விக்குடாவையும், மற்ற மூன்று திக்குகளிலும் செங்கற்பட்டு மாவட்டத்தையும் எல்லைகளாகப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் நான்காம் பெரிய நகரமாகும். இந்நகரின் பரப்பளவு சுமார் 130 ச.கி.மீ. மக்கள்தொகை 32,76,622 (1981). இவர்களில் இந்துக்கள் 2,764,286 போர்களும், இசுலாமியர் 265,881 பேர்களும், கிறித்தவர்கள் 220,211 பேர்களும், சமணர்கள் 22,812 பேர்களும் 1278 பௌத்தர்கள் 317 பேர்களும், சீக்கியர்கள், பேர்களும், மற்ற சமயத்தவர்கள் 1623 பேர்கள், எந்தச் சமயப்பதிவும் அல்லாதார் 214 பேர்களும் உள்ளனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 523 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 165 |oTop = 222 |oLeft = 222 |Location = center |Description = }} இந்நகர் கி.பி.1639-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 370 ஆண்டுக்கு முன்னர் இன்து உயர்நீதிமன்றக் கட்டடம் உள்ள இடத்தில் சென்னக் கேசவர் கோயில் ஒன்று இருந்தது. இக்கோயிலைச் சுற்றிலும் ஒரு குப்பம் இருந்தது. அதற்கு சென்னக்<noinclude></noinclude> ggr9fmvksvkluj05hc6f8n1uxct4fyw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/524 250 649856 1954535 2026-07-18T08:33:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 524 |bSize = 375 |cWidth = 258 |cHeight = 162 |oTop = 47 |oLeft = 52 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 524 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 202 |oTop = 225 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்னை|496|சென்னை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 524 |bSize = 375 |cWidth = 258 |cHeight = 162 |oTop = 47 |oLeft = 52 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 524 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 202 |oTop = 225 |oLeft = 43 |Location = center |Description = }} {{dhr}} {{center|அரசு அருங்காட்சியகம் சென்னை}} {{nop}}<noinclude></noinclude> k8noptka14551vbl2j8h8m2eqcwuqgu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/525 250 649857 1954536 2026-07-18T08:44:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேசவபுரம் என்பது பெயர். ஆங்கிலேயர் வருகை தந்தபோது அவர்கள் புனித சார்சு கோட்டையைக் கட்டுவதற்கு அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோர் இடம் அளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1954536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சென்னை|497|சென்னை}}</noinclude>கேசவபுரம் என்பது பெயர். ஆங்கிலேயர் வருகை தந்தபோது அவர்கள் புனித சார்சு கோட்டையைக் கட்டுவதற்கு அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோர் இடம் அளித்தனர். எனவே, அவர்களின் தந்தை சென்னப்ப நாய்க்கன் என்பவரின் நினைவாகக் கோட்டையின் வடக்கே உள்ள ஊர் ‘சென்னப்பட்டினம்’ என்று குறிக்கப்பட்டது. சென்னப்பட்டினத்திற்குத் தெற்கே உள்ள ஊர் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னரே ‘மதராசு’ என்று வழங்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்று சேர்த்து ‘மதராசுப்பட்டினம்’ என்ற பெயராலும், தமிழர்கள் ‘சென்னைப் பட்டினம்’ என்ற பெயராலும் குறிக்கத் தொடங்கினர். சென்னையில் ஐரோப்பியர் குடியேற்றம் தொடங்கிய பின்னரே இந்நகரில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி தொடங்கியது. இசுலாமிய ஆட்சியின் கீழ் 16-ஆம் நூற்றாண்டு வரையில் இருந்த சென்னை, பின்னர் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பிய வல்லரசுகளின் மேலாண்மைப் போட்டியின் போர்க்களமாக மாறியது. முதன்முதலில் சென்னைக்கு வந்த போர்ச்சுக்கீசியர் கி.பி. 1504-ஆம் ஆண்டிலேயே சாந்தோம் என்ற குடியிருப்பை நிருமாணித்தனர். பின்னர்ப் சென்னை நகரம் கி.பி. 1746-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர் வயமாயிற்று. ஆனால், கி.பி. 1749-ஆம் ஆண்டிலிருந்து இந்நகர் ஆங்கிலேயர்களின் கோட்டையாயிற்று. இது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களின் முழு ஆளுமையின் கீழ் வந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது (1947), சென்னையும் பிறமாவட்டங்களும் சேர்ந்து சென்னை மாநிலமாக உருவெடுத்தது. இந்தியாவிலேயே முதல் கிறித்தவக்கோயிலும், முதல் மருத்துவமனையும், முதல் பொழுதுபோக்கு நிலையமும், முதல் நகராட்சியும் சென்னையில்தான் தோன்றின. கூவம், அடையாறு என்ற ஆறுகளும், பக்கிங்காம் கால்வாயும் சென்னையின் நடுவில் ஓடுகின்றன. சென்னையில் சார்சு நகர் (George Town), இராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை, தியாகராயநகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அண்ணாநகர், அண்ணாமலைநகர், காந்திநகர், இந்திராநகர், அசோக்நகர், கே.கே.நகர் முதலிய சிறப்புமிகு பகுதிகள் உள்ளன. சென்னைக் கடற்கரை உலகத்திலேயே இரண்டாவது நீண்ட அழகிய உல்லாசக் கடற்கரையாகும். இக்கடற்கரை வடக்கே துறைமுகத்திலிருந்து தெற்கே அடையாறு வரை சுமார் 10 கி.மீ. நீளமுள்ளது. இதில் சாந்தோம் வரையிலுள்ள பகுதி ‘மெரினா’ எனப்படும். உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரி, புனித சார்சு கோட்டை, சென்னைப் பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, பொதுப்பணித்துறை, இராணி மேரிக் கல்லூரி, அனைத்து இந்திய வானொலி நிலையம், காவல் துறைத் தலைமை அலுவலகம், சாந்தோம் கிறித்தவக் கோயில், பிரமஞான சபையின் உலகத் தலைமை நிலையம் ஆகியவைகளுக்குரிய கட்டடங்களும், உலகத்திலேயே மிகப் பெரிய ஆலமரமும் இக்கடற்கரையை ஒட்டியே உள்ளன. சென்னையில் இருபெரும் இருப்புப்பாதை நிலையங்கள் உள்ளன. அவற்றில் எழும்பூரிலிருந்து செங்கற்பட்டு, விழுப்புரம், திருச்சி வழியாகத் தெற்கே செல்லும் பாதையும், மத்திய நிலையத்திலிருந்து (Central) விசாகப்பட்டினம் வழியாக வடக்கேயும், அரக்கோணம் வழியாக மேற்கேயும் செல்லும் பாதைகளும் உள்ளன. பன்னாட்டு விமான தளம் ஒன்று பீனம்பாக்கத்திலும், உள்நாட்டு விமான தளம் மற்றொன்று திரிசூலத்திலும் உள்ளன. சென்னையிலுள்ள துறைமுகம் செயற்கையானது. இது கி.பி. 1876-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இத்துறைமுகத்தை கி.பி, 1881-ஆம் ஆண்டில் கடுமை புயல் தாக்கியது. எனவே, மீண்டும் துறைமுகம் புதுப்பிக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் நிலக்கரி, கற்கரி, தாது எண்ணெய், உலோகங்கள், உரம், காயிதம், இயந்திர உதிரிகள், இருப்புப்பாதைச் சாமான்கள் போன்றவை இறக்குமதியாகின்றன. தோல் பஞ்சு, காய்கறி, எண்ணெய் வித்துகள், புகையிலை, புண்ணாக்கு போன்றவை ஏற்றுமதியாகின்றன. சென்னையில் மிகப் பழமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும், சுமார் 46 கல்லூரிகளும், அரசு பொருட்காட்சிச் சாலையும், கன்னிமாரா நூல் நிலையமும், ஆளுநர் அரண்மனையும், குதிரைப் பந்தயத்திடலும் உள்ளன. இவையன்றி, பஞ்சாலைகள், இயந்திரத் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற் சாலைகள், மற்றும் இரும்புப் பெட்டிக் தொழிற் சாலை, திரைப்படத் தொழிற்சாலைகள் ஆகியவைகளும் உள்ளன. பிரம்பு வேலை, நெசவு, மீன்பிடித்தல் போன்ற தொழில்களையும் சென்னை மக்கள் மேற்கொண்டுள்ளார். சென்னையில் ஈர வெப்பநிலை நிலவுகிறது. மேத்திங்களில் வெப்பம் மிகுதியாகவும், சனவரித் திங்களில் குளிர் மிகுதியாகவும் காணப்படுகிறது. ஆண்டில் சராசரி 50 அங்குல மழையைச் சென்னை நகரம் பெறுகின்றது. இதில் மூன்றில் இரண்டு பகுதி வட<noinclude> <b>வா.க. 9 - 32</b></noinclude> appxljngutqkgofl6vnxz16hr4oefq7