விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.11
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/172
250
617745
1954566
1827863
2026-07-19T06:09:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1954566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியத் தத்துவம்|148|இத்தாலியத் தாராளக் கட்சி}}</noinclude>வழியைப் பின்பற்றினால் முன்னேறலாம் என்றும் இவர் கூறினார்.
<b>மார்க்சின் கொள்கை:</b> இத்தாலிய நாட்டில் மார்க்சின் கொள்கை (Marxism) ஒரு சிறந்த தத்துவக் கொள்கையாக மக்களால் கருதப்பட்டது. இதற்குக் காரணம், மார்க்சின் முன்னோடியான எகலின் கொள்கை முன்பே மக்களைப் பெரிதும் கவர்ந்திருந்ததே. அண்டோனியோ இலாபிரியோலா (Antonio Labriola) என்பவர் மார்க்சிடம் தாம் அறிந்து கொண்ட வரலாற்றுப் பருப்பொருட்கோட்பாடு (Historical Materialism) சிந்தனைக்குரிய சிறந்த தத்துவக் கொள்கை என்று கருதினார். இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனரான அண்டோனியோ கிராம்சி (Antonio Gramsci) என்பவர் குரோசி (Croce) என்பவர் எழுதிய நூலைச் சிறையில் நன்றாகப் படித்தார்.
<b>வரலாற்றுக் கருத்தியல்</b> (Historical Idealism) என்பது பெனிடெட்டோ குரோசி (Benedetto Croce) என்பவரால் கடைப்பிடிக்கப்பட்டது. இவரைக் கவர்ந்தவர்கள் தி சாங்டிசு (De Sanctis), விக்கோ (Vico) இலாபிரியோலா (Labriola) முதலானோராவர். இவர்கள் தத்துவக் கொள்கைகளை வரலாறு, பொருளாதாரம், இலக்கியம் முதலியவற்றிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்கப் பயன்படுத்தினர். கொள்கையின் அடிப்படையில் குரோசி, உள்ளுணர்விற்கும் (intution) வரலாற்று அடிப்படையில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு கண்டார். ஆனால், செயற்கை அளவில் உயிருள்ள பொருள்களின் அடிப்படைத்தேவைகள் சில நிறுவனங்களையும் செயற்பாடுகளையும் மனித சமூக வாழ்வின் அடிப்படையில் ஏற்படுத்தின. இவற்றின் துணைக்கொண்டு மக்கள் தங்கள் திறமைகளையும் ஒழுக்க இயல்புகளையும் அறிந்து கொண்டார்கள். செண்டைல் (Gentile) என்பவர் ஒரு சிறந்த தத்துவஞானி. குரோசின் கொள்கை ஒர் ஒழுங்குமுறை (Methodology) என்றால், செண்டைலின் கொள்கை ஓர் உயர்ந்த மதிப்பீடு (Value) ஆகும். செண்டைல் என்பவர் எகலின் (Hegel) முழுமையான கருத்தில் ஏற்பட்ட உளதாந்தன்மைக்கும் (Existence) உள்ளுறைத் தன்மைக்கும் (Essence) இடையில் ஏற்பட்ட சிக்கலைமாற்றி, தனி மனிதனின் உணர்வினை முழுமையான உணர்வுடன் ஒன்று படுத்தினார். மனித அனுபவங்கள் எல்லாம் நாகரிகம் குறைந்த காலத்திலிருந்தே தொடங்கி வளர்ச்சியடைந்த ஆன்மிக உணர்வுகளேயாகும்.
<b>இருத்தல் கொள்கையும் பகுப்பாய்வும்:</b> {{larger|1950}}-ஆம் ஆண்டில் இருத்தல் கொள்கை (Existentialism) யில் பல கூறுகள் காணப்பட்டன. இலேம்பார்டி (Lambardi) என்பவர் கியர்க்கார்டின் (Kierkegaard) நூல்களை இத்தாலிய நாட்டில் கி.பி. {{larger|1936}}-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். கார்லோ மைக்கேல் இசுடோட்டெர்(Garlo Michaelsstaedter) என்பவரது ‘சொல்லாட்சிச் சிக்கலும் இணங்குவித்தலும்’ (Rhetoric and Persuasion) என்ற கட்டுரை மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இத்தாலியின் சிறந்த இருந்தல் கொள்கையினர் நிக்கோலா அப்பாகுநானே (Nicola Abbagnano) என்பவர். இருத்தல் கொள்கையின் சிறப்பியல்புகள் தனித்தன்மை (Individuality), ஒழுங்கமைப்பு (System), உள்ளுணர்வு (Intution), பொருந்தாத் தன்மை (Absurdity), தெரிவு செய்தலின் இயல்பும் உட்பொருளும் முதலியனவாகும்.
<section end="இத்தாலியத் தத்துவம்"/>
<section begin="இத்தாலியத் தாராளக் கட்சி"/>
{{dhr}}
<b>இத்தாலியத் தாராளக் கட்சி:</b> இதன் தோற்றம், பல்வேறு சிறிய நாடுகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் வெவ்வேறு அயல்நாட்டினால் ஆளப்பட்டுவந்த இத்தாலிய நாடுகளை ஒரே இத்தாளிய அரசாங்கத்தின் கீழ்த் தன்னுரிமை நாடாகக் கொண்டுவந்த இத்தாலிய இணைப்பு இயக்கத்தின் வரலாற்றில் (Italian Unification Movement) காணப்படுவதாகும். இத்தாலியத் தாராளக்கட்சியும் (Italian Liberal Party - PLI) இத்தாலியக் குடியரசுக் கட்சியும் (Italian Republican Party) இத்தாலிய இணைப்புக்குப் பேருதவி செய்த இரு அரசியல் இயக்கங்களினின்றும் தோன்றின. தாராளக் கட்சியின் நோக்கம் குடிமக்கள் ஒவ்வொருவருடைய தன் முயற்சியையும் (Initiative) தன்னுரிமையையும் (Freedom) வலியுறுத்துதலாகும். தொடக்கத்தில் இந்தப் பெயரோடு ஓர் அரசியற் கட்சி எதுவும் இத்தாலியில் இல்லை. மேற்கூறிய நோக்கங்களையுடைய சில கட்சியினரும் பாராளுமன்ற உறுப்பினரும் தங்களைத் ‘தாராள இயல்புடையோர்’ (Liberal) என்று கூறிக் கொண்டனர். உண்மையில் இத்தாலியத் தாராள அரசியற் கருத்துகளுக்குத் தம் அரிய கருத்துக்களாகிய இத்தாலிய ஒற்றுமை (Italian Unity), தன்னுரிமை முயற்சி (Free Enterprise) ஆகியவைகளை வழங்கியவர் கவுண்டுகாமில்லோதி கவூர் (Count Camillo di Cavour) என்ற அரசியலறிஞராவர். அவர் தொடங்கிவைத்த தாராள அரசியல் மரபு இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்தது. முசோலினியின் சருவாதிகார ஆட்சியில் பாசிசக் கட்சி ஒன்றைத் தவிர மற்ற அரசியற் கட்சிகளெல்லாம் ஒடுக்கப்பட்டு மறையவே, {{larger|1942}}-ஆம் ஆண்டில் தாராளக் கட்சியினர் பாசிச அரசாங்கத்துக்குத் தெரியாமல் செயற்படலாயினர். இவர்கள் {{larger|1944}}-ஆம் ஆண்டில் மறைவாகவே தங்களுடைய முதல் மாநாட்டுக் கூட்டத்தை (Congress) நடத்தினர். கவூர் பரப்பிய தாராளக்கருத்துகளை இருபதாம் நூற்றாண்-<noinclude></noinclude>
evufbcvtp52zyzx01nhashctwcpn9cl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/173
250
617747
1954567
1827864
2026-07-19T06:10:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1954567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியத் தொழிற் கட்சி|149|இத்தாலியத் தொழிற் கட்சி}}</noinclude>டில் பெனிடெட்டோ குரோசி (Benedetto Croce), இலுகி எய்நாடி (Luigi Einaudi) முதலிய இத்தாலியத் தாராள அரசியிற் சிந்தனையாளர்கள் வரவேற்றுப் பரப்பி மக்களைத் தாராளக் குடியாட்சி முறைக்கு ஆயத்தம் செய்தனர். இத்தாலியில் {{larger|1946}}-ஆம் ஆண்டிற்குப்பின் ஏற்பட்ட புதிய குடியரசு, குடியாட்சி அரசியலமைப்பின்படி, குடிகளுக்கு அரசியற் கட்சிகளை அமைப்பதற்கு உரிமைகள் வழங்கப்பட்டபடியால், பல அரசியற் கட்சிகள் தோன்றின; இத்தாலியத் தாராளக் கட்சியும் தோன்றிற்று. இது பொருளியலில் முதலாளித்துவத்தையும் (Capitalism), அரசியலில் சமயச் சார்பற்ற போக்கையும் (Laicism), அயல்நாட்டுக் கொள்கையில் பொதுவுடைமை அணிக்கு எதிராக அமெரிக்காவினால் அமைக்கப்பட்டுள்ள வட அட்லாண்டிக்கு இராணுவ ஒப்பந்தக் கூட்டமைப்பையும் (N.A.T.O.) ஆதரிக்கின்றது. இதற்கு ஆதரவாளர்கள் சிறு வணிகர்களே ஆவர். ஆயினும், இக்கட்சி இதுவரை ஒரு சிறுபான்மைக் கட்சியாகவே (Minority Party) இத்தாலிய அரசியலில் இருந்து வந்திருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் ஆறு சதவிகிதத்துக்கு மேல் இதற்கு வாக்குகள் கிடைத்ததில்லை ஆயினும், இது கடைப்பிடித்துவரும் தாராளக் கொள்கைகளுக்குப் பரவலாக மக்களுடைய ஆதரவு இருப்பதால், இது {{larger|1944}}-ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்த கிறித்தவக் குடியாட்சிக் கட்சி அமைத்துள்ள பல கூட்டு அரசாங்கங்களிலும் ஒரு சிறு பங்காளியாகக் கலந்து கொண்டு வந்துள்ளது. இதனுடைய தாராள அரசியற் கோட்பாடு, இத்தாலியில் பாசிசம் போன்றதொரு சருவாதிகார அரசாங்கம் மீண்டும் தலையெடுக்காதபடி மக்களை விழிப்புடனிருக்கச் செய்வதற்கும், இத்தாலியில் குடியாட்சி மரபு தழைத்து வருவதற்கும் பெரிதும் உதவி செய்கிறது.
<section end="இத்தாலியத் தாராளக் கட்சி"/>
<section begin="இத்தாலியத் தொழிற் கட்சி"/>
{{dhr}}
<b>இத்தாலியத் தொழிற் கட்சி:</b> வட இத்தாலிய நகரமான மிலானில் கி.பி. {{larger|1882}}-ஆம் ஆண்டில் இத்தாலியத் தொழிற் கட்சி (The Italian Labour Party) தோன்றிற்று. இங்கிலாந்தில் தொழிற் கட்சி தோன்றியதைப் போல, இத்தாலியிலும் ஆலைத் தொழிலாளர்களுடைய தொழிற் சங்கங்களைத் தோற்றுவாயாகக் கொண்டுதான் தொழிற் கட்சி என்னும் அரசியற் கட்சி தோன்றிற்று. வட இத்தாலிய மாநிலமாகிய இலாம்பர்டியில் (Lombardy) உள்ள ஆவைத் தொழிவாளர்களையெல்லாம் தொழிற்சங்கங்களிலிணைத்து விடுதலும் தொழிலாளர் நலனுக்குகந்த ஒரு திட்டத்தை வைத்து அதன் வாயிலாகத் தொழிற் சங்கத்தை ஆளுங்கட்சிக்கு எதிரான ஓர் எதிர்க் கட்சியாகச் செயற்பட ஆக்குதலும் இதன் குறிக்கோள்களாகும். வட இத்தாலியில் ஆலைத் தொழிலாளர்களும் நடு தென் இத்தாலியில் வேளாண் தொழிலாளர்களும் இருந்தனர். தொழில்களும் வேளாண்மையும் தனியார் வசமே இருந்தன. சமநிலைச் சமுதாயக் கருத்துகள் பரவின. தொழிலாளர்களுள் சிறிது வளம் படைத்தவர்களுக்கு ஏற்ற பல சீர் திருத்தங்களைச் சியோலிட்டியின் அரசாங்கம் ({{larger|1903}} முதல் {{larger|1911}} வரை) கொண்டுவந்தது. குழந்தைகளையும் பெண்களையும் தொழிலாளர்களாக அமர்த்துதல் தடை செய்யப்பட்டது. ஆலைத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் {{larger|24}} மணி நேர ஓய்வும் நெல்வயல்களில் வேலை செய்பவருக்குப் பல வசதிகளும் வழங்கப்பட்டன. தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தொழிலாளர் சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை பெற்றனர். இதனால் தொழிலாளர் இயக்கம் விரைவாக வளர்ந்தது. நில உழைப்பாளர் கழகங்களும் வளர்ந்து பரவின. பண்ணைத் தொழிலாளர்கள், குறைந்த கூலியையும் கடுமையான வேலை முறைகளையும் எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து, தேசிய வேளாண் தொழிலாளர் கூட்டமைப்பை நிறுவினர். இவர்கள், நிலம் நாட்டுடைமையாக்கப்படுதல் வேண்டுமென்று கூறினர். சிறிய நில உடைமையாளர்கள் நாட்டுடைமைக் கொள்கையை ஆதரிக்கவில்லை. சமநிலைச் சமுதாயக் கருத்துகளை ஏற்ற தொழிற் சங்கங்கள் {{larger|1906}}-ஆம் ஆண்டில் தொழிலாளரின் பொது இணைப்பமைப்பை (General Confederation of Labour) அமைத்துக் கொண்டன. பண்ணைத் தொழிலும் ஆலைத் தொழிலும் வளர்ச்சி அடைந்தன. முதலாம் உலகப் போர்க்காலத்திலும் அதற்குப் பின்னர் ஏற்பட்ட பாசிச ஆட்சியிலும் தொழிலாளர் வகுப்பு ஆட்சியாளருடைய கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. பாசிச ஆட்சி மறைந்தபின் இத்தாலியத் தொழிலாளரின் பொது இணைப்பமைப்பு (CGIL) {{larger|1944}}-ஆம் ஆண்டு மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், இது சோவியத்து நாட்டோடு சார்புடைய உலகத்தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பாக (Soviet - Oriented World Federation of Trade Unions) இருந்ததால், கத்தோலிக்கத் தொழிற் சங்கங்கள் இதனின்றும் பிரிந்து விடுதலை பெற்று இணைப்பமைப்பு (Free Confederation) ஏற்படுத்திக் கொண்டன. ஆயினும், தொழிற்கட்சி ஒரு தனி அரசியற் கட்சியாக இயங்கி, வாக்காளர்களுடைய பெரும் ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க இயலாமல் இருக்கிறது. இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி, மற்ற அரசியற்கட்சிகளோடு ஒத்துழைக்கும் கொள்கையையும், பொதுவுடைமைக் கோட்பாடுகளை நாட்-<noinclude></noinclude>
sapnqybo7y9zr12elgzauqeljacbv4f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/174
250
617749
1954568
1827866
2026-07-19T06:11:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1954568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி|150|இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி}}</noinclude>டின் இயல்புகளுக்கேற்றவாறு மாற்றிக் கொண்டு, ஐரோப்பியப் பொதுவுடைமை (Euro Communism) என்ற தாராள இயல்புடைய பொதுவுடைமைக் கொள்கையை வளர்ப்பதனால், இதற்கு இத்தாலியில் வரவேற்பு இருக்கிறது.
<section end="இத்தாலியத் தொழிற் கட்சி"/>
<section begin="இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி"/>
{{dhr}}
<b>இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி:</b> இது இத்தாலியச் சமூகச் சமநிலைக் கட்சி நடத்திய இலெகான் (Legon) காங்கிரசில் அக்கட்சி உடைந்த பிறகு, {{larger|1921}}-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி (Partio Communista Italiano - PCI). மேற்கு ஐரோப்பாவின் பொதுவுடைமைக் கட்சிகளுள் இது மாபெரும் கட்சி ஆகும். பாசிசச் சர்வாதிகாரத்தின் போது ({{larger|1926-43}}), இக்கட்சி தலைமறைவாகித் தன் பணிகளைச் செய்து வந்தது. பால்மிரோ தோக்லியாத்தி (Togliatti) போன்ற சில தலைவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். அந்தோனியோ, கிராம்சி (Cromsi) போன்ற தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். கட்சியின் பொதுச்செயலர் கிராம்சி நோய்வாய்ப்பட்டு மறைந்தார். முதலில் பாரிசு நகரிலிருந்தும் பின்னர், {{larger|1930}}-இல் மாசுகோவிலிருந்தும் இது குறிப்பாகத் தனிப்பட்டோர் உரிமைகளுக்காகப் பணி புரிந்தது. முசோலினியின் வீழ்ச்சிக்குப்பின், சர்வாதிகார ஆதிக்கத்திற்குப் பிறகு, இக்கட்சி சமூக சமதிலைக் கட்சி, கிறித்தவ மக்களாட்சிக்கட்சி ஆகியவற்றுடன் இணைந்து, முக்கூட்டு அரசாங்கத்தில் பங்கேற்றது. எனினும், கெடுபிடிப்போர் நிலைமையையொட்டி இக்கூட்டுறவு முற்றுப் பெற்று இக்கட்சி எதிர்ப்பு நிலைக்குப் போயிற்று. மாசுகோவிலிருந்து திரும்பிய தோக்லியாத்தி கட்சித்தலைமையை ஏற்றார். உலகப் பொதுவுடைமை இயக்கத்தினின்றும் ஒதுங்கிய இக்கட்சி, இசுடாலினின் முறையற்ற செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முற்படாமல் ஓரளவு தானியங்கியாகச் செயற்பட்டது. இதையொட்டி தோக்லியாத்தி, ‘சமதருமத்திற்கு இத்தாலியப் பாதை’ என்ற கொள்கையை {{larger|1956}}-இல் வெளியிட்டார். தனித்து இயங்கிய இக்கட்சியோடு முதலில் சமதருமவாதிகள் {{larger|1948}}-இல் தேர்தல் உறவு கொண்டு, சில ஆண்டுகட்டுப் பின்னர் விலகிக் கிறித்தவக் கட்சியுடன் சேர்ந்தனர். சமதருமவாதிகளுடன் ஏற்பட்ட உறவினால் கட்சியின் மதிப்பும் வலுவும் உயர்ந்தன. இது இடதுசாரியின் முக்கிய குரலாக விளங்கியது. பின்னர், {{larger|1973}}-இல் ‘வரலாறு தழுவிய உடன்பாடு’ என்ற புதிய கொள்கைப்படி, நாட்டின் பொருளாதார, சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் புதிய உத்தியைக் கையாண்டு, ஏனைய மக்களாட்சி கட்சிகளுடன் உறவு கொண்டது. கட்சியின் வாக்குகள் {{larger|1976}}-ஆம் ஆண்டுத் தேர்தலில் {{larger|27.6}} சதவீதத்திலிருந்து {{larger|34.4}} ஆக உயர்ந்தன. இது கூட்டு மந்திரி சபையில் சேர்ந்தது. இந்தத் தொடர்பு {{larger|1979}}-இல் முடிந்தது. அவ்வாண்டுத் தேர்தலில் சுட்சியின் வாக்கு {{larger|30.4}} சதமாகக் குறைந்தது. அது முதற்கொண்டு கட்சி தலைமை எதிர்க்கட்சியாக, கட்சிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வந்துள்ளது.
<b>அமைப்பு:</b> ஏனையபொதுவுடைமைக் கட்சிகளைப் போன்று, இத்தாலியக் கட்சி உட்கட்சி வேறுபாடுகளின்றி, மக்களாட்சிச் சம உரிமை மையக் கொள்கைக்கு ஏற்பக் கட்டுப்பாட்டுடன் செயற்படுகிறது. நாட்டில் நான்கு மட்டங்களில் உள்ள கட்சியமைப்பின் உச்ச நிலையில் உள்ள காங்கிரசு நான்கு ஆண்டுகட்கு ஒரு முறை கூடி, பொதுவான மேனிலைக் கொள்கைகளை விவாதிப்பதுடன் கட்சியின் மையக்குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. இது {{larger|32}} உறுப்பினர் கொண்ட அரசியல் பணி அரங்கத்தைத் (Political Bureau) தேர்ந்தெடுக்கிறது. இதினின்றும் பொதுச் செயலரைத் தலைவராகக் கொண்ட {{larger|7}} பேர் அடங்கிய செயற்குழு அமைகிறது. கட்சியின் அன்றாடப் பணிகளை இச்செயற்குழு கவனிக்கிறது. பன்னாட்டுப் பொதுவுடைமை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தும் இத்தாலியக் கட்சி கிழக்கு ஐரோப்பியக் கட்சி, பிரெஞ்சுக் கட்சி ஆகியவற்றினின்றும் வேறுபாடு கொண்டது. இது ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் பொதுவுடைமைத் தொகுதியில் உறுப்பினராயுள்ளது. இது தனது சொந்த அச்சுக்கூடத்திலிருந்து ஒரு நாள் செய்தித்தாளையும் (D'Unita) ஒரு வாரவெளியீட்டையும் (Renascita) இரண்டு இருமாத வெளியீடுகளையும் வெளியிடுகிறது.
இத்தாலியின் மிகப்பெரிய தொழிற்சங்கம், இத்தாலியப் பொதுத் தொழிலாளர் கூட்டுக்குழு ஆகியவை தவிர, இளைஞர், பெண்கள் பகுதிகள், கூட்டுறவுச் சங்கங்கள், உழவர் சங்கங்கள் ஆகியவற்றுடன் இது கூடி இயங்குகிறது. கட்சியின் தலைமைச் செயலகம் உரோம் நகரில் உள்ளது.
<b>கொள்கை:</b> கட்சியின் கொள்கை தனி உடைமையையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்தல். அண்மைக் காலத்தில் திறம்பட்ட அரசு முறை, சமாதானம், பொதுநலத்திட்டங்களுக்கான அதிக ஒதுக்கீடு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றை வற்புறுத்தி, இடது சாரி அரசு அமைவதற்காக விளம்பரம் செய்கிறது.
<b>உறுப்பினர் நிலை:</b> கட்சியில் {{larger|15}} இலட்சம், அதாவது, வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சியின்<noinclude></noinclude>
3qxryskdplcvh48lwz9guh4q4e35vmb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/178
250
618439
1954571
1863731
2026-07-19T06:16:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1954571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதயதுல்லா, சர் குலாம் உசேன்|154|இதாகோ}}</noinclude>(Jovine) என்பவரும், பிளாரன்சு மக்களுடைய எழுச்சியைப் பாலசெசியும் (Palazzeschi), பிரதோலினியும் (Pratolini) விவரிக்கின்றனர். பவேசே (Pavese), பெனோக்லியோ (Fenoglio), விட்டோரினி (Vittorini) முதலியோர் ஆங்கில, அமெரிக்க ஆசிரியர்களுடைய நூல்களைத் தத்தம் மொழிகளில் எழுதினர். இக்கால இத்தாலிய ஆசிரியர்கள் படிப்போரின் பல்வேறு சுவைகளுக்கு ஏற்ற விருந்தாகப் பல நூல்களும் எழுதியுள்ளனர். வரலாற்று நூல்களும் புதினங்களும் உளவியல் நாடக நூல்களும் எழுதப்பட்டுள்ளன. போசுகோலோ (Fascolo), இலியோபார்டி (Leopardi), குவாரிமோடோ (Quarimodo), உம்பர்ட்டோ சாபா (Umberto Saba), உங்கரட்டி (Ungaretti), மோண்டேல் (Montale) முதலியோர் புதிய கருத்துகளை வளரும் தலைமுறையினருக்கு வழங்கிய இக்காலத்தில் வாழ்ந்த, குறிப்பிடத்தக்க கவிஞர்கள் ஆவர்.
<section end="இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி"/>
<section begin="இதய துல்லா, சர் குலாம் உசேன்"/>
{{dhr}}
<b>இதய துல்லா, சர் குலாம் உசேன்</b> சிந்து மாநிலத்தின் நிலக்கிழார்களுள் ஒருவர். சிந்து மாநிலம் இந்தியப் பிரிவினைக்குமுன் பம்பாயுடன் இணைந்திருந்தது. அங்கு இசுலாமியர் {{larger|71}} விழுக்காட்டினராகவும் இந்துக்கள் {{larger|27}} விழுக்காட்டினராகவும் இருந்தனர். இது தனி மாநிலமாக்கப்பட்டுவிட்டால், இசுலாமிய மாநிலமாகிவிடும் என்னும் நோக்குடன் தான் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. மக்கள் எண்ணிக்கையை விடுத்து நோக்கினால், இந்துக்கள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்பதையும் உள்நாட்டு வெளிநாட்டு வாணிகம் இந்துக்களின் கையிலிருந்தது என்பதையும் உணரலாம். சிந்து மாநிலத்தில் பல்வேறு கட்சிகளும் செயலாற்றின. இசுலாமியரிடையேயும் பல கட்சிகள் இருந்தன. அனைத்து இசுலாமியக் கட்சிகளையும் இணைக்கப் பாடுபட்டவர் சர் குலாம் உசேன் இதயதுல்லா (Hidayathulla, Sir Gulam Hussain) ஆவார். {{larger|1935}}-ஆம் ஆண்டு இந்தியச் சட்ட அடிப்படையில் நடைபெற்ற தேர்தலில், சிந்து மாநிலத்தில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. அதனால் இவர் இசுலாமியரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அம்முயற்சி தோல்வியுறவே, இந்து இசுலாமியர் கூட்டு அமைச்சரவை யொன்றை இவர் அமைத்தார். இந்த அமைச்சரவையில் இவருக்குத் துணையாக இந்து ஒருவரும் இசுலாமியர் ஒருவரும் பொறுப்பேற்றனர். காங்கிரசு (Congress Party) எதிர்க்கட்சியில் இருந்தது. அதன் ஆர்ப்பாட்டத்தால் இதயதுல்லாவின் அமைச்சரவை {{larger|1938}}-ஆம் ஆண்டில் பதவியை இழந்தது. பின்னர், அல்லா பக்சு (Allah Baksh) என்பவர் பதவியேற்றார். ஆனால், அவரும் நீண்ட நாட்கள் பதவியில் இருக்கவில்லை.
ஆளுநர் மீண்டும் இதயதுல்லாவை அழைத்து அமைச்சரவை அமைக்கக் கேட்டுக்கொண்டார். இவர் {{larger|1942}}-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முசுலிம் லீகு (Muslim League) உறுப்பினர் இருவரையும் இந்து உறுப்பினர் இருவரையும் கொண்ட அமைச்சரவையை அமைத்தார். காங்கிரசுப் பேரவையினர் இந்து அமைச்சர்களின் வீடுகளுக்கெதிரில் மறியல் செய்தனர். அவர்களுள் ஒருவர் வீட்டில் குண்டு ஒன்றும் வெடித்தது. அதனால், இதயதுல்லாவும் சுயேச்சை இசுலாமிய உறுப்பினரும் முசுலிம் லீகிலேயே சேர்த்துவிட்டனர், இதயதுல்லாவின் ஆட்சி முடிவுற்றது.
<section end="இதய துல்லா, சர் குலாம் உசேன்"/>
<section begin="இதாக்கா1"/>
{{dhr}}
<b>இதாக்கா</b> மேற்குக் கிரீசு நாட்டிலுள்ள தீவு, இது அயோனியத் தீவுகளுள் ஒன்று, இதன் பரப்பளவு {{larger|96}} ச.கி.மீ. இது மலைப்பாங்கான பகுதிகளைக் கொண்டது. எனவே, உழுது பயிரிடத்தக்க நிலங்கள் இங்கு மிகக் குறைவு. ஒலிவ எண்ணெய், உலர்ந்த முந்திரிப்பழங்கள், தேறல் போன்றவை இங்கு உற்பத்தியாகும் சிறப்புப் பொருள்கள். இதாக்கா (Ithaca) ஒடீசியசு (Odysseus) என்ற கிரேக்க வீரரின் தாயகம் என்பது மரபுவழியான நம்பிக்கையாகும். இங்குத் தொன்மையான நினைவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.
<section end="இதாக்கா1"/>
<section begin="இதாக்கா2"/>
{{dhr}}
<b>இதாக்கா{{sup|2}}</b> என்பது அமெரிக்காவில் நியூயார்க்கு மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு நகரம். இது வேளாண்மைக்கும் கல்விக்கும் பெயர் பெற்ற நகரம். கோடைக் காலத்தில் இங்கு உல்லா சப் பயணிகள் கூடுவர். இங்கு எல்லாத் துறைகளும் கொண்ட கார்னல் (Cornell) பல்கலைக்கழகம் கி.பி. {{larger|1865}}-இல் நிறுவப்பட்டது. பல வேளாண்மைப் பயிற்சி நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன. மா. சு.
<section end="இதாக்கா2"/>
<section begin="இதாகோ"/>
{{dhr}}
<b>இதாகோ</b> அமெரிக்க ஐக்கிய நாட்டு மாநிலங்களுள் ஒன்று. இது இராக்கி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது இயற்கைச் செல்வங்கள் நிறைந்த ஒரு மாநிலம்.
<b>எல்லைகள்:</b> இதாகோ (Idaho) மாநிலத்தின் வடக்கில் கனடாவும், கிழக்கில் இராக்கி மலைத்தொடர்களைக் கொண்டுள்ள வோமிங்கு (Wymong) மோண்டானா மாநிலங்களும், தெற்கில் நிவாடா, உட்டா (Utah) மாநிலங்களும், மேற்கில் ஓரிகான் (Ooregon), வாசிங்டன் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன.
<b>பரப்பு:</b> இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பு {{larger|2,16,412}} ச.கி.மீ, ஆகும். இப்பரப்பளவில் {{larger|2279}} ச.கி.மீ. உள்நாட்டு நீர்நிலைகளாகும். இம்மாநிலத்தின் மக்கள் தொகை {{larger|9,43,935 (1980)}}.{{nop}}<noinclude></noinclude>
ra60btczw493isi640u0zxykrm3j0eq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/766
250
623404
1954538
1862921
2026-07-18T13:31:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|726|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>கூறலாம். தன்னம்பிக்கையின்மை, பணிவு போன்ற இயல்புகள் ஆளுமைப் பண்புக் கூறுகள் எனப்படும். இவை ஒவ்வொருவரிடமும் எந்த அளவில் காணப்படுகின்றன என்பதனை அறிய, ஆளுமை மதிப்பீட்டு (Assessment of Personality) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லா மொழிகளிலும் ஆளுமைக் கூறுகளைக் குறிக்கும் எண்ணற்ற சொற்கள் உள்ளன. ஆல்போர்ட்டு (Allport) என்னும் உளவியல் அறிஞர், ஆங்கில மொழியின் அனைத்துச் சொற்களுள்ளும் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டுச் சொற்கள், பண்புக் கூறுகளைக் குறிப்பனவாகும் என்று கணக்கிட்டுள்ளார். அடிப்படையாகக் கொள்ளக்கூடிய ஆளுமைப் பண்புக் கூறுகளைப் பற்றி உளவியல் அறிஞர்கள், பல ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். இந்த ஆய்வுகள் கீழ்க்காணும் சிக்கல்களை எழுப்புகின்றன:
1. பண்புக் கூறுகள் பெயர்கள் ஆகியவற்றைக் கொண்ட பட்டியலுக்கு வரம்பு இருக்க முடியாது. இதனால், ஆயிரக்கணக்கான பண்புச் சொற்களுக்கு ஏற்ற பண்புக் கூறுகளை வைத்துத் தனிமனிதனின் ஆளுமையை முடிவு செய்வது கடினமாகிறது.
2. இந்தப் பண்புக் கூறுகளுள் பல, ஒன்றையொன்று சார்ந்திருப்பவையாகும். அவற்றைக் குழுக்களாகச் சேர்க்க முடியும். குறிப்பிட்ட சில பண்புக் கூறுகள், வேறுசில பண்புக் கூறுகளைச் சார்ந்திருப்பவையாக இருக்கின்றன. இதனால், குறிப்பிட்ட சில பண்புகள் ஒருவரிடம் காணப்பட்டால், அவரிடம் அவற்றிற்கு ஒவ்வாத வேறுசில பண்புகள் காணப்படமாட்டா என்று கூற முடியும்.
3. இப்பண்புக் கூறுகளுள் சில, ஒருவனிடம் எப்போதும் காணப்படலாம்; சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவனிடம் அளவில் கூடியும் குறைந்தும் காணப்படலாம்.
இரேமண்டு காட்டெல் (Raymand Cattell) என்பார், மனிதர்களின் ஆளுமையைப் பற்றிய செய்திகளை மூவகைகளாகப் பிரித்துள்ளார். அவையாவன:
<b>1. வாழ்க்கைச் செய்திகள்</b>: மற்றவர்கள் ஒரு தனிமனிதனின் நடத்தையைப் பற்றிய உற்று நோக்கல்களின் அடிப்படையில் பெறும் செய்திகளும் மதிப்பீடுகளும் வாழ்க்கைச் செய்திகள் எனப்படுகின்றன.
எ-டு மனவெழுச்சி வயப்பட்ட அமைதியான, மரபு ஒட்டிய / மரபு நீங்கிய, அக்கறையுள்ள / அக்கறையற்ற, பண்புகள்.
<b>2. தன் விளக்க வினா நிரல்கள்</b>: இவை ஆட்படுநர் தம்மைப்பற்றித் தாமே கொடுக்கும் செய்திகளாகும்.
<b>3. அமைப்புசார் புறவயச் சோதனைச் செய்திகள்</b>: ஆட்படுநருக்குத் தாம் மேற்கொள்ளும் சோதனை எத்தகைய பண்புகளை மதிப்பீடு செய்வதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பது தெரியக்கூடாது. காட்டெலும் வார்பர்ட்டனும் (Warburton) நானூறுக்கு மேற்பட்ட இத்தகைய சோதனைகளை அமைத்துள்ளனர். வாழ்க்கைச் செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடு இன்றி இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்த பின்னர்க் காட்டெல் அவற்றின் பண்புத் தரமிட்டு புள்ளிகளுக்கு ஏற்ப அவற்றை வரிசைப்படுத்தினார். இவ்வரிசைப்படுத்தலைப் பின்னுள்ள அட்டவணையில் காணலாம். ஆளுமைச் சோதனைகளின் நுட்பங்கள் மக்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுவதால், ஆட்படுநர், தம்மிடம் உள்ள எத்தகைய பண்புகளை அளவீடு செய்வதற்கு எத்தகைய சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், சோதனையில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் எப்பண்புகளைக் குறிப்பிடுகின்றன என்பதையும் அறிந்திருந்தால், சோதனையின் முடிவுகள் நம்பிக்கைக்குரியனவாக இருக்க முடியாது. ஏனெனில் ஆட்படுநர் தம் சொந்தப் பண்புகளை மறைத்துத் தம்மிடம் இல்லாத பண்புகளை இருப்பனவாகக் கொண்டு, விடைகளை முரண்பாடாகக் கொடுப்பர். இக்காரணத்தினால் காட்டெல், எவருக்கும் புரியாத பெயர்களைப் பண்புகளுக்குக் கொடுத்தார். பாதுகாக்கப்பட்ட மனவெழுச்சிக் கூறுணர்ச்சி (Protected emoitional Sensitivity) என்பதனைப் பிரெம்சியா (Premsia) என்று காட்டெல் குறிப்பிட்டார். அட்டவணையில் காணப்படும் பதினாறு ஆளுமைப் பண்புகளும் ஒருவனிடம் எந்த அளவுக்குக் காணப்படுகின்றன என்பதை அளவீடு செய்வதற்காக அவர் ஓர் எழுதுகோல்-தாள் சோதனையை (Paper and Pencil Test) அமைத்தார். இது ஆளுமையின் பதினாறு காரணி- வினாநிரல் (Sixteen Personality Factor Questionnaire) எனப்படும். இப்பதினாறு காரணிகளைத் தவிர வேறு சில காரணிகளும் இருக்கலாம் என்று காட்டெல் எண்ணினார். அட்டவணையில் காணப்படும் விளக்கச் செய்திகள் உண்மையாக வாழ்க்கைச் செய்திகள் ஆகும். என்றும், கொடுக்கப்பட்டுள்ள நான்கு விளக்கக் காரணிகளைத் தவிர வி₅ வி₆ வி₇ என்னும் காரணிகளும் இருக்கின்றன என்றும் அவர் எண்ணினார். எல்லாக் காரணிகளைக் காட்டிலும் முதன்மையிடம் பெற்றிருப்பவை உணர்ச்சி மாறுநிலை ‘அ’ மிகை அறிவு ‘ஆ’ மிகைத் தன்முனைப்புத் திறன் ‘இ’ என்னும் மூன்று காரணிகளே ஆகும் என்றும் அவர் கருதினார். அ காரணியுடன் தொடர்புள்ள செய்திகம் இன்முகம், இனிய தன்மை, இணக்கம், ஒத்துழைப்பு, மற்றவர்களிடம் அக்கறை, தகவமைவு ஆகிய பண்புகளைக் குறிப்பிடும் உடன்-<noinclude></noinclude>
ospp9iqw347evyz6bm7sc3kb4b6z423
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/767
250
623410
1954539
1862937
2026-07-18T13:37:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|727|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>பாட்டு நிலையும், குற்றம் காணும் தன்மை, வளைந்து கொடுக்காத தன்மை ஆகிய பண்புகளைக் குறிப்பிடும் எதிர்மறை நிலையும் ஆகும். இவ்விரு எல்லைகளுக்கும் இடையில் நடுத்தர நிலையில் காணப்படும் பண்புகள், இயல்பு நிலையைக் குறிக்கின்றன. ஆ காரணி, மனப்பாங்கு, நுண்ணறிவு ஆகியவற்றைக் காட்டிலும், ஆற்றலையே மிகுதியாக மதிப்பீடு செய்கிறது.
ஆளுமையின் பதினாறு காரணி வினா நிரவில் இ காரணிக்கு மிகைப் புள்ளிகள் எடுப்போர், தம் நெடுநாளைய பழக்க வழக்கங்களைத் தேவைகளுக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் இயல்பும், இலக்குகனை அடையப் பெறாவிடில் ஏற்படும் மனக் குலைவினை ஏற்றுக்கொள்ளும் இயல்பும் உடையவராக இருப்பர். இத்தகையோர், அமைதியும் மெய்ந்நிலை உணர்வும் (Realistic), முதிர்ந்த அறிவும் கொண்டவராக இருப்பர். இ காரணியின் எதிர்மறைநிலையில் இருப்போர், உளத் தடுமாறல்களும் முடிவெடுக்க இயலாமையும் கொண்டவராகக் காணப்படுவர். இவர்கள் இ காரணியில் குறைவான புள்ளிகள் எடுப்பர். இவர்கள் மனநிலை மாற்றங்களும் உளச் சிக்கல்களும் நிறைந்தவராக இருப்பர்.
அட்டவணையில் காணப்படும் பதினாறு காரணிகளையும் காட்டெல், ஆதாரப் பண்புகள் (Source Traits) என்று குடுப்பிட்டார். சில ஆதாரப் பண்புகள் பரம்பரை வழி அமைந்தவை என்றும், மற்றவை சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றம் பெறுகின்றன என்றும், இவை இரண்டினின்றும் மேற்பரப்புப் பண்புகள் (Surface Traits) உருவாகின்றன என்றும், காட்டெல் கருதினார். மேற்பரப்புப் பண்புகளைப் புறவயச் சோதனைகளின் உதவியால் அறியலாம். இச்சோதனைகளிலிருந்து பெறப்படும் செய்திகள், சோதனைச் செய்திகள் (T. Data) எனப்படுகின்றன. சோதனைச் செய்திகளிலிருந்து பெறப்படும் காரணிகள், விளக்கச் செய்திகளிலிருந்தும் வாழ்க்கைச் செய்திகளிலிருந்தும் பெறப்படும் காரணிகளிலிருந்து வேறுபடுகின்றன. ஆயினும் பதினாறு ஆளுமைக் காரணிச் சோதனைகளை ஏற்கும் ஆட்படுநர்களின் விடைத்தாள்களில் காணப்படும் அளவைப் புள்ளிகள், ஒன்றுடன் ஒன்று இணைப்புள்ளனவா என்று சோதிக்கப்பட்டு, அப்பதினாறு பண்புகளை மட்டுமே காரணிப் பகுப்பாய்வு செய்ய முடியும். உளவியலில் ஆளுமை, நுண்ணறிவு போன்ற கூறுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருக்கும் காரணிகளைக் சுண்டுபிடித்துப் பல்வேறு சோதனைகளுக்கிடையில் காணப்படும் இணைப்பினை அறிய உதவும் புள்ளியியல் முறை, காரணிப்பகுப்பாய்வு எனப்படும். இதனைக் காரணிப் பகுப்பாய்வின் காரணிப் பகுப்பாய்வு என்றும் சொல்லலாம். இப்பகுப்பாய்வின் முடிவாகப் பெறப்படும் பண்புக் கூறுகள் இரண்டாமிடக் காரணிகள் எனப்படுகின்றன. இவ்விரண்டாமிடக் காரணிகள், சோதனைச் செய்திகளுடன் தொடர்புள்ளனவாகச் சில சமயங்களில் காணப்படுகின்றன.
{{center|<b>காட்டெலின் பதினாறு ஆளுமைக் காரணி வினா நிரல் அளவீடு செய்யும் பண்புகள்<br>புள்ளிகளின் விளக்கங்கள்</b>
}}
<center>
{| class="wikitable"
|-
! !! காரணி !! மிகை !! குறை
|-
|1. || அ || உணர்ச்சி மாற்ற நிலை தாராளமாகப் பழகுதல்<br> Affectothymia-Outgoing ||
உணர்ச்சி மாறா நிலை கட்டுப்பாட்டுடன் பழகுதல்<br>Sizothymia Reserved
|-
|2. || ஆ || மிகை ‘நு’ - நுண்ணறிவு மிகை<br>High ‘g’-Intelligent || குறை ‘நு’ நுண்ணறிவுக் குறை<br>Low ‘g’ Less intelligent
|-
|3. || இ || தன்முனைப்பு வலிமை மிகுதி-நிலையான<br>High ego strength-Stable || தன்முனைப்பு வலிமைக்குறைவு மனவெழுச்சி வயப்பட்ட<br>Low ego strength - Emotional
|-
|4. || ஈ || ஆதிக்கம்-வலியுறுத்தும்<br>Dominance-Assertiveness || பணிவு-அடக்கமான<br>Submissiveness-Humble
|-<noinclude>|}
</center></noinclude>
i0ykqt19gy53ap71ob042boawg2c0yt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/768
250
623419
1954540
1862976
2026-07-18T13:48:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|728|ஆளுமை மதிப்பீடு}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
|5. || உ || உற்சாகம் - கவலையற்ற<br>Surgency-Happy - go-lucky || உற்சாகமற்ற - காரியமனப்பான்மை கொண்ட<br>Sober - Desurgency
|-
|6. || ஊ || மிகை மேம்பாட்டுளம்-மனச்சாட்சி வயப்பட்ட...<br>High Super ego -Conscienteous || குறை மேம்பாட்டுளம்-சந்தர்ப்ப வயமான<br>Low Super ego - Expedient
|-
|7. || எ || பார்மியா - புதுச் செயல் ஈடுபாடு<br>Parmia - Venturesome || திரெக்டியா - கூச்சமுள்ள<br>Threctia - Shy
|-
|8. || ஏ || பிரெம்சியா - நெகிழ்வுளம்<br>Premsia -Tenderminded || ஆரியா - கடின உளம்<br>Harria - Tough minded
|-
|9. || ஐ || இறுக்க உளம் - ஐயங்கொண்ட<br>Protension - Suspicious || தளர் உளம் - நம்பிக்கை கொண்ட<br>Alaria - Trusting
|-
|10. || க || ஆடியா - கற்பனைத்திறன் உள்ள<br>Autia - Imaginative || பிராக்சர்னியா - செயல்வழியமைந்த<br>Praxernia - Practical
|-
|11. || த || தேரறிவு - தேரறிவு வாய்ந்த<br>Shrewdness - Shrewd || கூரறிவற்ற - வெளிப்படையான<br>Artlessness - Forthright
|-
|12. || ப || குற்றப்பாங்கு - அச்சமடையும்<br>Guilt proneness - Apprehensive || உறுதிப்பாங்கு - அமைதியான<br>Assurance - Placial
|-
|13. || வி₁ || தீவிரச் செயற்பாடு - சோதனை செய்யும்<br>Radicalism
- Experimenting || பழமைப்பாங்கு - பழமைப்பாங்குடைய<br>Conservatism - Conservative
|-
|14. || வி₂ || தன்னிறைவு - தன்னிறைவுள்ள<br>Self sufficiency - self sufficient || குழுச்சார்பு - குழுச்சார்புள்ன<br>Group adherence - Group dependent
|-
|15. || வி₃ || மிகைத் தற்கருத்து - கட்டுக்கடங்கிய<br>High self concept - controlled || ஒருங்கமைவுக்குறை - கட்டுப்பாடற்ற<br>Low integrative - Indisciplined
|-
|16. || வி₄ || வேலை காரணமாக மிகுதியான உள இறுக்கம் - உள இறுக்கமான<br>Ergic tension - tense || வேலை காரணமாக குறை உள இறுக்கம் - ஓய்வு மனப்பான்மையுள்ள<br>Low ergic tension - relaxed.
|-
|}
</center>
குறிப்பிட்ட செயலில் ஒருவர் ஈடுபடும்பொழுது அவருடைய நடத்தையில் காணப்படும் கூறுகளை மேற்பரப்புப் பண்புக் கூறுகள் என்று காட்டெல் கூறினார். ஆதாரப் பண்புக் கூறுகள் என்பன, ஒருவனிடம் வேரூன்றி விட்ட பண்புக் கூறுகளைக் குறிக்கின்றன. இவற்றை நேரடியாக உற்று நோக்க இயலாது. ஆனால், இவை தனிமனிதனின் நடத்தைகளை முடிவு செய்கின்றன. ஆதாரப் பண்புக் கூறுகள் மேற்பரப்புப் பண்புக் கூறுகளை முடிவு செய்கின்றன. மேற்பரப்புப் பண்புக் கூறுகள் நிலைத்த தன்மையனவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, தற்காப்பின்மை உணர்வு ஓர் ஆதாரப் பண்புக் கூறாகும். அதை நேரடியாக உற்று நோக்க இயலாது. ஆனால் அதனை ஒருவன், தன்னுடைய பொதுவான அமைதியின்மை, அச்சம் மனவெழுச்சிச் சமநிலையின்மை ஆகிய ஆதாரப் பண்புக் கூறுகள் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். காட்டெல் வகைப்படுத்திய ஆதாரப்பண்புக் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.{{nop}}<noinclude></noinclude>
31ykqivrh7nsv04t8wfqp7538n9jsos
1954541
1954540
2026-07-18T13:49:21Z
Booradleyp1
1964
1954541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|728|ஆளுமை மதிப்பீடு}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
|5. || உ || உற்சாகம் - கவலையற்ற<br>Surgency-Happy - go-lucky || உற்சாகமற்ற - காரியமனப்பான்மை கொண்ட<br>Sober - Desurgency
|-
|6. || ஊ || மிகை மேம்பாட்டுளம்-மனச்சாட்சி வயப்பட்ட...<br>High Super ego -Conscienteous || குறை மேம்பாட்டுளம்-சந்தர்ப்ப வயமான<br>Low Super ego - Expedient
|-
|7. || எ || பார்மியா - புதுச் செயல் ஈடுபாடு<br>Parmia - Venturesome || திரெக்டியா - கூச்சமுள்ள<br>Threctia - Shy
|-
|8. || ஏ || பிரெம்சியா - நெகிழ்வுளம்<br>Premsia -Tenderminded || ஆரியா - கடின உளம்<br>Harria - Tough minded
|-
|9. || ஐ || இறுக்க உளம் - ஐயங்கொண்ட<br>Protension - Suspicious || தளர் உளம் - நம்பிக்கை கொண்ட<br>Alaria - Trusting
|-
|10. || க || ஆடியா - கற்பனைத்திறன் உள்ள<br>Autia - Imaginative || பிராக்சர்னியா - செயல்வழியமைந்த<br>Praxernia - Practical
|-
|11. || த || தேரறிவு - தேரறிவு வாய்ந்த<br>Shrewdness - Shrewd || கூரறிவற்ற - வெளிப்படையான<br>Artlessness - Forthright
|-
|12. || ப || குற்றப்பாங்கு - அச்சமடையும்<br>Guilt proneness - Apprehensive || உறுதிப்பாங்கு - அமைதியான<br>Assurance - Placial
|-
|13. || வி₁ || தீவிரச் செயற்பாடு - சோதனை செய்யும்<br>Radicalism - Experimenting || பழமைப்பாங்கு - பழமைப்பாங்குடைய<br>Conservatism - Conservative
|-
|14. || வி₂ || தன்னிறைவு - தன்னிறைவுள்ள<br>Self sufficiency - self sufficient || குழுச்சார்பு - குழுச்சார்புள்ன<br>Group adherence - Group dependent
|-
|15. || வி₃ || மிகைத் தற்கருத்து - கட்டுக்கடங்கிய<br>High self concept - controlled || ஒருங்கமைவுக்குறை - கட்டுப்பாடற்ற<br>Low integrative - Indisciplined
|-
|16. || வி₄ || வேலை காரணமாக மிகுதியான உள இறுக்கம் - உள இறுக்கமான<br>Ergic tension - tense || வேலை காரணமாக குறை உள இறுக்கம் - ஓய்வு மனப்பான்மையுள்ள<br>Low ergic tension - relaxed.
|-
|}
</center>
குறிப்பிட்ட செயலில் ஒருவர் ஈடுபடும்பொழுது அவருடைய நடத்தையில் காணப்படும் கூறுகளை மேற்பரப்புப் பண்புக் கூறுகள் என்று காட்டெல் கூறினார். ஆதாரப் பண்புக் கூறுகள் என்பன, ஒருவனிடம் வேரூன்றி விட்ட பண்புக் கூறுகளைக் குறிக்கின்றன. இவற்றை நேரடியாக உற்று நோக்க இயலாது. ஆனால், இவை தனிமனிதனின் நடத்தைகளை முடிவு செய்கின்றன. ஆதாரப் பண்புக் கூறுகள் மேற்பரப்புப் பண்புக் கூறுகளை முடிவு செய்கின்றன. மேற்பரப்புப் பண்புக் கூறுகள் நிலைத்த தன்மையனவாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, தற்காப்பின்மை உணர்வு ஓர் ஆதாரப் பண்புக் கூறாகும். அதை நேரடியாக உற்று நோக்க இயலாது. ஆனால் அதனை ஒருவன், தன்னுடைய பொதுவான அமைதியின்மை, அச்சம் மனவெழுச்சிச் சமநிலையின்மை ஆகிய ஆதாரப் பண்புக் கூறுகள் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம். காட்டெல் வகைப்படுத்திய ஆதாரப்பண்புக் கூறுகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.{{nop}}<noinclude></noinclude>
qd2gm9d0gnl9ccygvin9hcdekqtyuua
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/769
250
623421
1954542
1862985
2026-07-18T13:52:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|729|ஆளுமை மதிப்பீடு}}</noinclude><center>
{| class="wikitable"
|-
!அடிப்படைப் பண்புக் கூறுகள் !! அடிப்படைப் பண்புக் கூறுகளுக்கு நேர் எதிரான பண்புக் கூறுகள்
|-
|1. ஆர்வமுள்ள, ஏற்குந்தன்மையுள்ள பெருந்தன்மையுள்ள || ஏற்குந்தன்மையற்ற, பகைமையுள்ள
|-
|2. நுண்ணறிவுடைய, சுதந்திரச் சிந்தனைத் திறமுள்ள || முட்டாள்தனமான, சிந்திக்கும் திறனற்ற
|-
|3. மனவெழுச்சிச் சமநிலை, மெய்ந்நிலையுணர்வு || மனவெழுச்சிச் சமநிலையின்மை, மெய்ந்நிலை உணர்வின்மை
|-
|4. ஆதிக்க மனப்பான்மை, தன்கருத்தை வலியுறுத்துகிற ||
பணிவு மனப்பான்மை, தன்கருத்தை வலியுறுத்தாத
|-
|5. மகிழ்ச்சியான || துன்பமான
|-
|6. பரிவுகாட்டுகிற.... || கடின உள்ளம் கொண்ட
|-
|7. அழகியல் சிந்தனை உணர்வு || பண்பாடற்ற உணர்வு
|-
|8. மனச்சாட்சிக்கு ஏற்ப நடத்தல், பொறுப்பான நடத்தை || முன்கோபம் - பொறுப்பற்ற நடத்தை
|-
|9. ஒத்துழைக்கும் தன்மை || ஒதுங்கியிருக்கும் தன்மை
|-
|10. தீவிரம் - விரைவு || ஊக்கமின்மை - உற்சாகமின்மை
|-
|11. மிகையுணர்வு || குறையுணர்வு
|-
|12. நட்பும் நம்பிக்கையும் || ஐயமும் பகையும்.
|-
|}
</center>
ஆளுமைச் சோதனைகளை அமைக்கும் பொழுது அவற்றில் நம்பகத்தன்மை (Reliability), ஏற்புத்தன்மை (Validity) ஆகிய இரு தகுதிகளும் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப் பார்த்தலும், இத்தகுதிகளுள் ஏதேனும் ஒன்றோ இரண்டோ அமையப் பெறாவிடின் இத்தகுதிகள் அமையுமாறு சோதனைகளை மாற்றியமைத்தலும் இன்றியமையாதனவாகும். ஆட்படுநர்களிடம் ஆளுமைச் சோதனைகள் ஒருமுறை கொடுக்கப்பட்டதன் விளைவாகப் பெறும் மதிப்பீட்டு அளவைகளுக்கும் அதே ஆட்படுநர்களிடம் அதே சோதனைகளை மறு முறை கொடுத்துப் பெறும் மதிப்பீட்டு அளவைகளுக்கும் வேறுபாடுகள் இல்லையென்றாலும் அத்தகைய வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தாலும் அத்தகைய சோதனைகள் நம்பகத்தன்மை உடையவை என்று கூறப்படும்.
காரணிப் பகுப்பாய்வு முறையை விளக்கும் பொருட்டு மாணவர்குழு ஒன்றினுக்கு எவரேனும் ஒரு குறிப்பிட்ட தலைவரின் அரசியல் வாழ்க்கை பற்றிய ஒரு செய்திப்படத்தைக் காட்டிய பின்னர், அவர்களிடம் அத்தலைவரின் பல ஆளுமைக் கூறுகளை ஒரு பத்துப்புள்ளி அளவையில் குறிப்பிடுமாறு கூறுவதாக வைத்துக் கொண்டால், அப்புள்ளிகள் முற்றும் இல்லை (0) என்பதிலிருந்து மிகையாக (10) என்னும் விடை வரையில் பரவியிருப்பதாகவும், தலைவரின் பண்புகள், அடக்கம், ஆதிக்கத்தன்மை, ஒழுங்கமைவு, தன்னம்பிக்கை, திறமை, படைப்பாற்றல், புறமுகம் என்னும் வரிசையில் பட்டியல் படுத்தப்பட்டிருப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்பண்புத் தொகுதிகளில் ஒவ்வொன்றிற்கான தனித்தனிப் பண்புகளும் மற்றப் பண்புத் தொகுதிகளுடன் இணைப்பாய்வு செய்யப்பட்டால், அட்டவணையில் காட்டியுள்ளபடி இணைப்பு (Correlation Matrix) அமையும்.{{nop}}<noinclude>
<b>வா.க. 2-92</b></noinclude>
sdphpni7wkn41qodsff0s0eqcr3ycpd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/770
250
623423
1954543
1862989
2026-07-18T13:59:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|730|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>{{center|ஆளுமைப் பண்புகளின் காரணிப் பகுப்பாய்வு அட்டவணை}}
<center>
{| class="wikitable"
|-
! !! ஆதிக்கம் !! ஆரவாரம் !! அடக்கம் !! ஒழுங்கமைவு !! தன்னம்பிக்கை !! திறமைமிக்க !! படைப்பாற்றலுடைய
|-
|ஆதிக்கம் || - || +0.9 || -0.6 || 0.1 || 0.0 || 0.1 || -0.1
|-
|ஆரவாரம் || || - || -0.7 || 0.0 || -0.1 || -0.1 || 0.1
|-
|அடக்கம் || || || - || 0.1 || 0.1 || 0.1 || 0.0
|-
|ஒழுங்கமைவு || || || || - || 0.0 || 0.1 || -0.1
|-
|தன்னம்பிக்கை || || || || || - || 0.8 || 0.6
|-
|திறமைமிக்க || || || || || || - || 0.9
|-
|படைப்பாற்றலுடைய || || || || || || || -
|-
|}
</center>
ஆதிக்கம், அடக்கம் ஆகிய இரு பண்புத் தொகுதிகளுக்கும் இடையே உள்ள இணைப்பு என்ன என்று கண்டுபிடிக்க வேண்டுமாயின், ஆதிக்கம் என்ற இடத்திலிருந்து வலப்புறமாகச் சென்று அடக்கம் என்னும் இடம் வரை செல்ல வேண்டும். அந்த இடத்தில் இருக்கும் எண் - 0.6. அட்டவணையின் குறுக்குவெட்டாகச் சில புள்ளிகளில் சிறு கோடுகள் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் ஒவ்வொரு மாறிக்கும் (Variable) காணப்படும் இணைப்பைக் குறிக்கின்றன. இவ்விணைப்பு எப்பொழுதும் 1 எனவே இருக்கும். இவ்விணைப்புக் குறியீட்டுக் கோடுகளுக்குக் கீழே எண் எதுவும் காணப்படவில்லை. ஏனெனில் அந்த எண்கள் குறுக்குக் கோட்டிற்கு மேலே காணப்படும் எண்களையே ஒத்திருக்கும். இந்தக் குறுக்குக்கோடு, அட்டவணையை இரு சரிபாதியாகப் பிரிக்கிறது. இரு பாதிகளும் ஒன்றையொன்று எல்லா வகைகளிலும் ஒத்திருக்கின்றன. ஆதலின் குறுக்குக் கோட்டின் கீழே இருக்கும் எண்கள் காட்டப்படுவதில்லை. அட்டவணையில் ஆதிக்கம் ,ஆரவாரம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று உடன்பாடாக இணைப்புப் பெறுகின்றன. (+0.9). இவை ஒவ்வொன்றும் அடக்கம் என்பதனுடன் எதிர்மறையாக இணைவு பெறுகிறது. (-0.6:-0.7) இம்மூன்று பண்புகளும் பகட்டுத்தன்மை (Flamboyance) என்றே ஒரே ஆளுமைக் கூறினுக்குள் அடங்கும் எனக் கொள்ளலாம். தன்னம்பிக்கை-திறமை (0.8), தன்னம்பிக்கை படைப்பாற்றல் (0.6) திறமை படைப்பாற்றல் (0.9) ஆகிய தொகுதிகளுக்கிடையே காணப்படும் இணைப்புகள் உடன்பாடானவை ஆகும். இவை மூன்றும் ஆற்றல் என்னும் பொதுவான பண்புடன் தொடர்பு கொண்டவை என்று கருதலாம். பகட்டுத்தன்மைத் தொடர்பான பண்புக் கூறுகள் ஆற்றல் தொடர்பான பண்புக் கூறுகளுடன் மிக மெல்லிய இணைப்பையே கொண்டுள்ளன. (கெழு:01 இலிருந்து 0.1 வரை). ஆதலின் பசுட்டுத்தன்மை, ஆற்றல் ஆகியவைகளின் புலன்காட்சியில் இத்தலைவரிடம் காணப்படும் இருவேறு காரணிகள் என்று அறியலாம். அதாவது பகட்டு என்னும் பண்பு இத்தலைவரிடம் மிகையாக இருப்பதாகக் காண்பவர், அவரிடம் ஆற்றல் மிகுந்தோ குறைந்தோ இருப்பதாகக் காண்பர், பகட்டுத்தன்மை அவரிடம் குறைந்து இருப்பதாகக் காண்பவரும் இதைப்போன்றே உணரலாம். ஒழுங்கமைவு என்னும் பண்பு, அட்டவணையில் மற்ற எந்தப் பண்புடனும் இணையாமல் இருப்பதால், இது முன் குறிப்பிட்ட இரு பண்புகளுடனும் தொடர்பற்ற தனிப்பண்பு எனக் கொள்ளலாம். அதாவது, ஒருவர் இத்தலைவரை பகட்டுத்தன்மையுடையவர் என்று கருதினாலும், ஆற்றல் மிக்கவர் என்று கருதினாலும், அக்கருத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி அவர் ஒழுங்கமைவு பெற்றவர் அல்லது அற்றவர் எனக் கருத முடியும்.
தனிமனிதனின் பண்புக் கூறுகளைப் பற்றிய தொடர்பற்ற தாறுமாறான செய்திகளைக் கணிதத் திட்பத்துடன் எடுத்துக் கூறும் திறன், காரணிப் பகுப்பாய்வின் சிறப்பாகும். மாணவர்கள் கொடுக்கும் தலைவரின் பண்பு பற்றிய கருத்துகளைப் பகட்டுத் தன்மை, ஆற்றல், ஒழுங்கமைவு என்னும் மூன்று<noinclude></noinclude>
rnwbclkwcy6hd5pjrmlv5xa7uq03t21
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/771
250
623455
1954544
1863415
2026-07-18T14:12:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|731|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>பெருந்தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம். பெரிதும் மிகுதியான பண்புகள் வகைப்படுத்தப்படும் பொழுது, காரணிப் பகுப்பாய்வில் கணிப்பொறி முறை (Computer System) பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காரணியின் தொடர்பான பண்புகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்து, காரணிகளை ஒன்றுக்கொன்று குறுக்கீடு இல்லாமல் தனிப்பட்டவைகளாக்குவதற்காக, இத்தகைய கணிப்பொறி முறை பயன்படுகிறது. மேலும் காரணிகள் பகுக்கப்படும் பொழுதும் பெயரிடப்படும் பொழுதும் அகவயப்பட்ட மதிப்பீடுகள் ஏற்பட வாய்ப்புகள் மிகையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பாட்டுத்தன்மை என்னும் பண்புக் கூறு சிலரால், வெளிப்பகட்டு என்றோ வேறு சிலரால் மக்களிடையே புகழ் என்றோ குறிப்பிடப்படலாம். ஆற்றல் என எடுத்துக்கொள்ளப்பட்ட பண்புக்கூறு, சுதந்திர மனப்பான்மை என்று குறிப்பிடப்படலாம். இதுவே காரணிப் பகுப்பாய்வு முறையின் குறை என்று கருதப்படுகிறது.
காட்டெல் குறிப்பிட்ட புறவயப்பட்ட, கவலையற்ற, புதுமைச் செயல் ஈடுபாடு கொண்ட என்னும் மூன்று பண்புகளின் ஒருங்கிணைவு, ஐசங்கினால் அமைக்கப்பட்ட ஆளுமைப்பட்டியலை ஒத்திருக்கிறது. காட்டெல் ஆதாரப் பண்புகளைத் தேர்ந்தெடுத்த முறை, மேலெழுந்தவாரியாகவும் புள்ளியல் கட்டுத்திட்டங்களுக்கு உட்படாததாகவும் இருப்பதாக உளவியலார் பலர் குறை கூறுகின்றனர். ஆயினும் காட்டெலின் ஆளுமைச் சோதனை முறை, இன்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆளுமையின் பதினாறு காரணிச் சோதனைமுறையின் உதவியால் வெளிப்படையாகக் கூறும் தன்மை (அ) கட்டுப்பாட்டுடன் உரையாடும் இயல்பு, பதற்ற நிலை (ஆ) தன்முனைப்பு வலிமை, அகமுகம்/புறமுகம், மனவெழுச்சி உறுதி/ மனவெழுச்சி உறுதியின்மை ஆகிய பண்புகளை இச்சோதனை முறையிலும், ஐசங்கின் ஆளுமைப்பட்டியலால் செய்யும் மதிப்பீட்டு முறைகளிலும் ஆய்ந்து காணும்போதும், ஒற்றுமைகள் காணப்படுகின்றன. புறத்தேற்றச் சோதனைகளில் ஆட்படுநர், தம்மை இயல்பு ஆளுமையினராகத் தெரிவிக்குமாறு விடைகளை அளித்து, இச்சோதனையின் நம்பகத்தன்மையைக் குறைக்க முடியும். மேலும் ஆட்படுநர் சோதனையை ஏற்கும்பொழுது, இருக்கும் மனநிலையைப் பொறுத்துச் சோதனைக்கு அளிக்கப்படும் துலங்கல்களும் விடைகளும் அமையும். இதனால் ஆட்படுநரின் உண்மையான ஆளுமைக் கூறுகள் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து விடுகின்றன. இச்சோதனை, தனிமனிதனின் பண்புகள் அவனுக்குத் தெரியாமலே கண்டுபிடிக்கப்பட்டுச் சில சந்தர்ப்பவாதிகளால் பாழ்பயனுக்கு ஆளாக்கப்படக் கூடிய வாய்ப்பினையும் ஏற்படுத்துகிறது என்று சமூகவியலார் கூறுகின்றனர்.
தனிமனிதனின் ஆளுமைப் பண்புகளை அறியச் சோதிடம், கைரேகை இயல், கையெழுத்தியல் போன்ற பல்வேறு முறைகள் மிகப் பழைய காலத்திலிருந்தே கையாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆளுமையின் ஒரு சில பண்புக் கூறுகளை அறியக் கால் (Gall) என்பார், தலையமைப்பியல் (Phrenology) என்னும் முறையைத் தோற்றுவித்தார். இலம் பிரோசோ (Lombrosa) என்பார், முக அமைப்பியல் (Physiognamy) என்னும் முறையையும் தோற்றுவித்தார். இவை உளவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆளுமை மதிப்பீட்டு முறைகளில் தலையாய சிலவற்றை இங்குக் காணலாம்:
<b>1. நேர்காணல் முறை</b>: இம்முறையில் தனிமனிதனை நேரில் கண்டு உரையாடி அவன் பேசும் முறை, விடையளிக்கும்போது ஏற்படும் தடைகள், நேர்காணலில் அவனுடைய மனவெழுச்சிகள் வெளிப்படும் முறை, ஆகியவற்றைக் கருத்தில் இருத்தி, அவனுடைய ஆளுமைப் பண்புகள் பற்றிய முடிவுக்கு வரமுடியும். நேர்காணலில் கேட்கப்படும் வினாக்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டு நேர்காணல் முறைகள் தரப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆட்படுநர் எல்லோருக்கும் ஒரே தன்மையான நேர்காணல் முறை கையாளப்படும். சூழ்நிலை மாற்றம், ஆட்படுநரின் சமூகப் பண்பாட்டு நிலை ஆகியவற்றிற்கு ஏற்ற நேர்காணல்கள் மாற்றியமைக்கப்படும். நேர்காணல் முறையில் ஆட்படுநரின் ஒப்புதல் இருப்பின், அவருடைய வரலாறு எழுதுமாறு கேட்கப்படும். தன்வரலாறுகளில் குடும்ப வரலாறு, குழந்தைப் பருவ அனுபவங்கள், உடல் வளர்ச்சி பற்றிய விவரங்கள், பள்ளி வாழ்க்கை பற்றிய குறிப்புகள், ஆர்வங்கள், நண்பர்கள் பற்றிய விவரங்கள், எதிர் காலத்திட்டங்கள் போன்றவை இடம்பெறும், நேர் காண்பவர், ஆட்படுநருடன் மன இணைப்பு ஏற்படுத்துதல் இன்றியமையாததாகும். நேர்காணல் நோக்கமும் ஆட்படுநருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஆட்படுநரின் ஒப்புதலுடன் நேர்காணல், நாடாப் பதிவு செய்யப்படலாம். ஒப்புதல் இல்லையெனில் நேர் காண்போர் குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம். நேர்காணல் முறையில் ஒருவனின் ஆளுமையைப் பற்றிய முடிவான மதிப்பீடு செய்வது கடினமான முறையாகும். இம்முறை அகவயப்பட்டதாகும். ஒருவனைப் பற்றிய முரண்பாடான முடிவுகளை நேர் காண்போர் பலர் தெரியப்படுத்தினால், எது உண்மையானது என்று முடிவு செய்தல்<noinclude></noinclude>
elklck9mgss901ft7q7rgywx8x3gz3w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/772
250
623456
1954545
1863425
2026-07-18T14:27:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|732|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>இயலாது. நேர்காணலின்போது நேர் காண்போர், தம் மனப்பான்மைகளையும் மனவெழுச்சிகளையும் வெளிப்படுத்தலாகாது.
<b>தர அளவு கோல்</b>: குறிப்பிட்ட ஆளுமைப்பண்புகள், தனிமனிதனிடம் எந்த அளவிற்கு அமைந்திருக்கின்றன என்று அறிய உதவும் முறையே, தர அளவு கோல் எனப்படும். ஒருவனிடம் காணப்படும் ஆளுமைப் பண்பின் அளவு, பொதுவாக 5, 7 அல்லது 9 புள்ளிகள் கொண்ட ஓர் அளவு கோலில் குறிக்கப்படுகிறது. இப்புள்ளிகள் அப்பண்பின் பல நிலைகளைக் குறிப்பவையாகும். ஒவ்வொரு புள்ளிக்கும் குறிப்பிட்ட மதிப்பு அல்லது தர அளவு கொடுக்கப்பட்டிருக்கும். ஆளுமை மதிப்பீடு செய்பவரின் முடிவுகளை, பல அலகுகள் கொண்ட அளவுகோலில் குறிக்க முடியும். தர அளவு கோல்கள் பலவகைப்படும்.
<b>வருணனைத் தர அளவு கோலில்</b> மதிப்பிடப்படும் பண்பின் பல அளவுகளைக் குறிக்கவல்ல பல வருணனைகள் காணப்படும். இவ்வருணனை அளவுகளுக்குக் குறிப்பிட்ட மதிப்பெண்கள் தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகத் ‘தன் கருத்தை வலியுறுத்தல்’ என்னும் ஆளுமைப் பண்பு பற்றிய அளவுகோல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: காண்க: படம் 1.
{{c|<b>படம் 1.</b><br>
பண்புக்கூறு: (தன்கருத்தை வலியுறுத்தல்)
}}
<center>
{| class="wikitable"
! colspan="5"| தர அளவுகள்
|-
!+2 !! +1 !! 0 !! -1 !! -2
|-
|பிறர்கருத்தை ஏற்காத தன்மை—பிறர் கருத்திற்கு மதிப்பு அளிக்காமை-ஆதிக்கப்போக்கு - தன்கருத்தே சிறந்தது என்று வாதாடுதல். || தன் கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்காமை—தீவிரமாகத் தன் கருத்தை வலியுறுத்தல். || சூழ்நிலை, காரண காரியம், தன் கருத்தின் சிறப்பு-இவற்றை ஆராய்ந்து இடம் பொருள் அறிந்து தன் கருத்தை வலியுறுத்தல். || தன் கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டவுடன் மறுப்பின்றித் தன் கருத்தை விட்டு விடல் — மறுப்பை உடனே ஏற்றுக்கொள்ளல். || தான் என்னும் உணர்வு இல்லாத தன்மை-பணிவு மனப்பான்மை.
|-
|}
</center>
{{c|<b>படம் 2.<br>
எ.டு: பண்புக்கூறு -(ஊக்கமுடைமை)</b>}}
<center>
{| class="wikitable"
|-
!மிக்க அதிகம் !! அதிகம் !! சராசரி !! குறைவு !! மிகக்றைவு
|-
!+2 !! +1 !! 0 !! -1 !! -2
|-
|}
</center>
<b>வரைபடத் தர அளவுகோலில்</b> ஒரு நேர்கோட்டின் மேல் அலகுகள் குறிக்கப்பட்டிருக்கும். இவை தரப்படுத்தப்படவேண்டிய பண்பின் மிகக் குறைந்த அளவிலிருந்து மிகுந்த அளவுவரை வரிசைப்படி குறிப்பனவாக அமைந்திருக்கும். மதிப்பிடப்படும் பண்பின் தரத்தினைத் தெளிவாக, அதற்கேற்ற அலகுக்கு நேராகக் குறிப்பிடல் வேண்டும். காண்க: படம் 2.
<b>தரமிடுதலின் பிழைகள்</b>: பிறருடைய பண்புகளை அளவிடும் பொழுது எல்லோரையும் அப்பண்புகளின் சராசரி அளவைக் குறிக்கும் புள்ளியிலேயே வைப்பது இயற்கையாக நிகழக்கூடும் பிழையாகும். இது தாராளமனப்பான்மைப் பிழை (Generosity Error) எனப்படும். ஒரு குறிப்பிட்ட பண்பு ஒருவனிடம் உள்ள அளவைக் கொண்டு, அதனுடன் தொடர்பு கொண்ட வேறு பண்புகளும் அதே அளவுக்கு அவனிடம் உள்ளன என்று முடிவு கட்டுவதே இப்பிழையாகும். இது ஒளிவினைவு (Halo Effect) எனப்படும்.
காப்புணர்வின்மை, ஒதுங்கியிருத்தல் போன்ற சில பண்புகளைத் தரமிடுதல் கடினம். இப்பிழைகளைத் தவிர்க்க இப்பண்புகளின் பெயர்களோடு அவற்றை விவரித்தல் வேண்டும். பண்புகளின் பெயர்களுடன் அவை வெளிப்படக்கூடிய நடத்தைகளை<noinclude></noinclude>
oiancaf9vcmh5g8rs7l0xa1qvpes6wt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/773
250
623457
1954546
1863438
2026-07-18T14:37:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|733|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>விவரித்தலும், தரமிடுதலில் நம்பகத்தன்மை கூடுதற்கு ஏதுவாகும். தரமிடுவோர்க்கு அதில் பயிற்சியளித்தலும் நன்மை பயக்கும்.
தனி மனிதனின் பல பண்புகளைத் தொகுத்து ஒருங்கு காட்டும் வரைபடம், ஆளுமையின் வடிவுருவம் (Personality Profile) என்று கூறப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒருவனுடைய ஆளுமை வடிவுருவத்தை வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விளக்கலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 773
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 170
|oTop = 130
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|ஆளுமை உரு வரைப் படிவம்}}
<b>தன்விவரப்பட்டியல்கள்</b>: இம்முறை, நேர்காணல் முறையைப் போன்றதாகும். இதனைத் தரப்படுத்தப்பட்ட நேர்காணல் என்றும் கூறலாம். இதனைக் குழுச் சோதனையாகவும் நடத்தலாம். தரப்படுத்தப்பட்ட தூண்டுதல் வினாக்கள் அடங்கிய தாள்களை ஒரே நேரத்தில் பலருக்குக் கொடுத்துச் சோதனைக்குட்படுத்தலாம். வினாக்களுக்கான விடைகள் ஆம், இல்லை, அறுதியிட்டுக் கூற முடியாது என்று அமைக்கப்பட்டிருக்கும். முதன்முதலில் தன்விவரப் பட்டியலை உருவாக்கியவர் உட்வர்த்து (Woodworth) என்பவர். முதலாம் உலகப் போரில் பங்கு பெற்ற போர் வீரர்களுக்கு ஆளுமைச் சோதனை முறையை உருவாக்க வேண்டுமென்று பேர்சிங்கு (General Pershing) என்பார் விரும்பினார். அவருடைய தூண்டுதலின் பயனாக உட்வர்த்து இச்சோதனை முறையை உருவாக்கினார்.
இப்பட்டியலிலிருந்து சில எடுத்துக் காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
::நீ வாழ்க்கையில் தோல்வியடைத்து விட்டாயா?
::நீ திக்குதல் தெற்றுதல் இன்றிப் பேசுகிறாயா?
::நீ குருதியைக் கண்டு அருவருப்போ மயக்கமோ அடைவதுண்டா?
::நான் பிறக்காமல் இருந்திருக்கக் கூடாதா என்று
::நீ சில சமயங்களில் எண்ணுகிறாயா?
::மக்கள் உன்னைப் புரிந்து கொண்டு உன்மீது
::பரிவு காட்டுவதாகக் கருதுகிறாயா?
::பிறர் உன்மீது மிகையாகக் குற்றம் காண்கின்றனரா?
::தலைவலி, மயக்கம் ஆகியவை உனக்கு வருவதுண்டா?
மினிசோட்டா பன்முக ஆளுமைப்பட்டியல், இச்சோதனை முறையின் அடிப்படை விதிகளின் மீது அமைக்கப்பட்டதே ஆகும்.
குறிப்பிட்ட பல வினாக்கள் அடங்கும் நிரலுக்கு, ஆட்படுநர் அளிக்கும் விடைகளின் அடிப்படையில், அவருடைய ஆளுமையை மதிப்பீடு செய்தல் வினா நிரல் முறை எனப்படும். இம்முறையில் பல சிறு வினாக்கள் ஒரு தாளில் அச்சடிக்கப்பட்டு ஆட்படுநரிடம் தரப்படும். ஒவ்வொரு வினாவுக்குப் பக்கத்திலும் பல விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள் தமக்கு ஒப்பாகும் விடையை மட்டும் ஆட்படுநர் குறிப்பிட வேண்டும், இதற்கு ஆளுமைப் பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வினாக்களைக் கொண்ட பல ஆளுமை வினா வரிசைகளும் பட்டியல்களும் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஆல்போர்ட்டின் ஆதிக்கப்பணிவு விளைவறிவும் வினாநிரல் (Allport's Ascendance Submission Reaction Scale), பெல் பொருத்தப்பாட்டுப் பட்டியல் (Bell Adjustment Inventory), மினிசோட்டா பன்முக ஆளுமைப் பட்டியல் (Minnesota Multiphasic Personality Inventory), நெமேன் கோல்சுடெட்டு குறையறி சோதனை (Neymen Kohlstedt Diagnostic Test), இவற்றுள் சிலவாகும். மினிசோட்டா ஆளுமைப் பட்டியலில் 550 கூற்றுகள் காணப்படுகின்றன. இவற்றைக் குழுச் சோதனை முறையாகவும் பயன் படுத்தலாம். ஆட்படுநர் தம் சொந்த மனப்பான்மைகளை வெளியிடாமல் மறைத்துப் பிறரால் ஏற்கக் கூடிய கருத்துகளை மட்டில் தெரிவிக்க முற்படுவர்.
ஆளுமையை அளவிடலில் சில தரப்படுத்தப்பட்ட நிலைமைகளைத் தோற்றுவித்து, அந்நிலைமைகளில் வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு நடந்து<noinclude></noinclude>
gu9pax12auuvbj7ro7h6f26gez9s1hn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/774
250
623459
1954547
1863459
2026-07-18T14:43:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|734|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>கொள்கிறார்கள் என்பதைக் கவனித்து, அவர்களின் ஆளுமைப் பண்புகளை அளவிடும் முறையில் நிலைமைச் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பத்து அல்லது பன்னிரண்டு ஆட்படுநர் கொண்ட குழுவிடம் ஒரு நடைமுறைச் சிக்கல் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் தீப்பிடித்துக் கொண்டுள்ளது என்று கற்பனை செய்து கொண்டு குழுவினர் சேர்ந்து தீயைப் பரவாமல் அணைத்தல், கிணற்றில் விழுந்து விட்ட ஒருவரைக்காப்பாற்றுதல் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
சில வேலைகளில் ஒரு குறிப்பிட்ட பண்பு ஒருவனிடம் அமைந்திருக்கிறதா என்று மதிப்பீடு செய்வதற்கு அப்பண்பு வெளிப்படக் கூடிய நிலைமையைத் தோற்றுவித்து, அந்நிலையில் ஒருவனைச் செயற்படவும் செய்யலாம். இராணுவத்தில் பெரிய பொறுப்பான பதவிகளுக்குத் தேவையான தகுதியை அறிய இத்தகைய நிலைமைச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. நெருக்கடி நிலைகளிலும் மனக்குலைவு தோற்றுவிக்கும் நிலைமைகளிலும் ஒருவன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதும், தலைமைத் தகுதி, சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்தல் போன்ற பண்புகளும், இவற்றில் மதிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஊருக்கு, ஒருவன் சில துணை ஆட்கள், தேவைப் பொருள்கள் ஆகியவற்றுடன் அனுப்பப்படுகிறான், பணியாள்களின் உதவியை அவன் பயன்படுத்துத்தன்மை தலைமைப் பண்பு, செயல் தெளிவு, அறிவு நுட்பம், ஒத்துழைக்கும் மனப்பான்மை ஆகியவற்றை அவன் செயற்பாடுகளிலிருந்து அளவிடலாம்.
தன்னைத்தானே கவனித்து ஒரு குறிப்பிட்ட ஆளுமைப்பண்பு எந்த அளவில் தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து, தரஅளவு கோலில் குறிப்பது தன்னைத் தரமிடுதல் (Self rating) ஆகும்.
ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட ஆட்படுநரைக் கூர்ந்து கவனித்து, ஒரு குறிப்பிட்ட பண்பு எந்த அளவில் அவரிடம் காணப்படுகிறது, என்று முடிவு செய்வது, ஆய்வாளர் தரமிடுதலாகும். இவ்விருமுறைகளிலும் தரமிடுதலில் அகவயப்படும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இதைத் தவிர்ப்பதற்குக் கீழ்க் காணும் முறைகளைக் கையாளலாம்.
1. பல ஆய்வாளர்களைக் கொண்டு ஆட்படுநரைத் தரமிடுதல்.
2. ஒரே ஆய்வாளர் சில காலம் கழித்து மீண்டும் ஆட்படுநரின் அதே பண்பின் அளவைத் தரமிடுதல்—இவ்விரு அளவைகளும் மாறுபடாமல் இருந்தால் தரமிடுதல் நம்பகத்தன்மையுடையது என்று கொள்ளலாம்.
3. ஒரு குறிப்பிட்ட பண்பிற்கு இரு வேறு பெயர்களைக் கொடுத்து ஆய்வாளரைக் கொண்டு ஆட்படுநரைத் தரமிடுதல், இரண்டிலும் முரண்பாடு இல்லையெனில் தரமிடுதல் நம்பகத்தன்மையுள்ளது எனக் கொள்ளலாம்.
<b>புறத்தேற்றச் சோதனைகள்</b>: ஆளுமைச் சோதனையில் கொடுக்கப்படுகின்ற நிலைமை, பொருள்கள் மனிதர்கள் ஆகியவற்றோடு ஆட்படுநரின் உள்ளம் இயல்பாக இயங்கும் தன்மையை அறியும் நுண் முறைகளே புறத்தேற்றச் சோதனைகள் (Projective Tests) என்று கூறப்படுகின்றன. தன்னுடைய உள்ளத்திற்குத் துயரத்தையும் இயைபிலாமையையும் அளிக்கிற பண்புக் கூறுகளை, ஆட்படுநர் மற்றவரிடத்துப் பொருத்திப் பார்க்கும் உளப்பகுப்பாய்வுத் கருதுகோளே, புறத்தேற்றம் ஆகும். தனிமனிதனின் உள்ளத்தில் ஏற்படும் ஆழ்ந்த போராட்டங்களையும் அச்சங்களையும் மற்றவரிடத்துக் காணும் இயங்கு முறையைப் பிராய்டு புறத்தேற்றம் என்று கூறினார். ஆளுமை அமைப்பினைப் பாதிக்கிற சில குறிப்பிட்ட உள இயங்கு முறைகளையும் புறத்தேற்றச் சோதனைகள் வெளிப்படுத்துகின்றன. இவை ஆட்படுநரின் விடைகளுக்கு அப்பால் சென்று உளநிலைகளைத் துருவி ஆராய்வன ஆகும். இவ்வகையைச் சார்ந்த சோதனைகளுள் மிகவும் சிறப்புடையதான இரு சோதனைகள், சொல் இயைபுச் சோதனையும் (Word Association Test) சொற்றொடர் நிறை சோதனையும் (Sentency Completion Test) ஆகும். மனக்குலைவுச் சோதனை (Frustration Test), பல்வேறு வகைகளைச் சார்ந்த ஓவியச் சோதனைகள், பெண்டரின் பார்வை — இயக்க முழுமைச் சோதனை (Bender Visual Motor-Gedalt Test), உரோர்சாக்கின் பொருள் இணைத்தறி சோதனை (TAT) ஆகியவை புறத்தேற்றச் சோதனைகள் ஆகும். புறத்தேற்றச் சோதனைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை விளக்கிப் பொருள் கூறும் சோதனைகள், மைத்தடச் சோதனைகள் எனப்படும்.
ஆட்படுநரின் பழைய அனுபவங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள், உளச்சிக்கல்கள் ஆகியவற்றைப் பொறுத்துத் தெளிவற்ற தூண்டல் வடிவம், உள்ளடக்கம் ஆகிய உள இயக்கங்கள் அமைகின்றன. இம்முறையில் அவனுடைய ஆழ்ந்த உள இயங்கு முறைகள் வெளிக் கொணரப்படுகின்றன. இக்காரணத்தினால் சோதனைத் தூண்டல்கள், உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தெளிவற்றதாக அமைக்கப்படவேண்-<noinclude></noinclude>
6ga8nr5rfoqn16wbjw6u2hu8hx0jmko
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/775
250
623462
1954548
1863470
2026-07-18T14:52:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை மதிப்பீடு|735|ஆளுமை மதிப்பீடு}}</noinclude>டும். இத்தகைய தூண்டல்கள், அமைப்பிலாத் தூண்டல்கள் எனப்படும். இத்தகைய தூண்டல்களுக்கு ஒருவர் அளிக்கும் துலங்கல், அவரின் ஆளுமையை நேரடியாக அவர் அறியாமலேயே வெளிக்காட்டுகிறது.
புறத்தேற்றச் சோதனைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது இக்கொள்கையே ஆகும். இத்தகைய புறத்தேற்ற நுண்முறைகளில் மைத்தடச் சோதனையும் பொருள் இணைத்தறி சோதனையும் இன்றியமையாதனவாகும்.
மைத்தடச் சோதனையை முதன் முதலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எர்மன் உரோர்சாக்கு (Rorschach, Hermann) என்னும் உளமருத்துவர் பயன்படுத்தினார். இச்சோதனையில் ஒரே பகுதிகளைக் கொண்ட பத்து மைத்தட உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாப் படிவங்களும், 8” அகலமும் 10” நீளமும் கொண்ட கெட்டியான தாள்களில் ஒட்டப் பெற்று அளிக்கப்படுகின்றன. கருப்பு வண்ண மைத்தடங்கள் (Inkblots) ஐந்தும், கருப்பும் சிவப்பும் சேர்ந்தவை இரண்டும், பல்வேறு வண்ணங்களைக் கொண்டவை மூன்றும் காணப்படும். ஆட்படுநரிடம் இந்த அட்டைகள் ஒவ்வொன்றாகக் காண்பிக்கப்படுகின்றன. மைத்தடங்களைப் பார்த்தவுடன் ஆட்படுநரின் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களும் துலங்கல்களும் எழுதிக் கொள்ளப்படுகின்றன. ஒரு மைத்தடம் பற்றிய துலங்கலைக் கூறிமுடித்தபின், அடுத்த மைத்தடம் காட்டப்பட வேண்டும். சோதனை முடிந்தவுடன் ஐயத்திற்குரியவை ஆட்படுதரின் உதவியுடன் தெளிவாக்கிக் கொள்ளப்படுகின்றன. இவ்வினாக்கள் சோதனை முடிவை மேலும் நம்பகத் தன்மையுள்ளனவாக்க உதவுகின்றன.
உரோர்சாக்கின் துலங்கல்களினால் ஆட்படுநரைப் பற்றிய கீழ்க்காணும் செய்திகளைப் பெற முடியும்:
::1. ஆட்படுநர் தம் அனுபவங்களையும் செயல்களையும் ஒழுங்கு முறையினுட்படுத்த உதவுகிற அறிவுக் கட்டுப்பாட்டின் தன்மை.
::2. சிக்கல்களை ஆட்படுநர் அணுகுகிற முறை.
::3. ஆட்படுநரின் படைப்பாற்றல், கற்பனைத் திறன்.
::4. பிறழ்வு அச்சங்கள், கிலிகள், மனக்குறைகள்.
ஆட்படுநர் அளிக்கிற பல்வேறு துலங்கல்கள் மூன்று கூறுகளில் மதிப்பிடப்படுகின்றன. அவை யாவன: இருக்குமிடம், முடிவு செய்வது, உள்ளடங்கிய பொருள்கள்.
<b>இருக்கும் இடம்</b>: மைத்தடத்தின் எப்பகுதி ஆட்படுநரின் விடைக்கு மையமாக அமைந்துள்ளது என்பதைக் குறிப்பது. (முழு மைத்தடம், பெரும் பகுதி, சிறு பகுதி) இத்தொடர்பில் பயன்படுத்தப்படுகிற சில குறியீடுகளாவன:
::மு (W) - முழுப்பகுதி
::வி₁ (D) - மிகுதியான விவரங்கள்
::வி₂ (d) பொதுவான சிறு விவரங்கள்
::வெ (S) - வெள்ளை நிறமான இடம்
<b>முடிவு செய்வது</b>: ஆட்படுநர் அளித்த விடையின் தன்மையை முடிவு செய்வதற்கு மைத்தடத்தின் எந்தக் கூறு காரணியாக அமைந்தது என்பது.
::அ (M) - அசைவு
::உ (F) - உரு
::நி (C) - நிறம்
::ப (k) - மேற்பரப்பான தோற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
<b>உள்ளடங்கிய பொருள்கள்</b>: மைத்தடங்களில் காணப்படும் பொருள்கள் (மனிதர்கள், உயிரற்ற பொருள்கள் போன்றவை). இதற்கான பொதுவான குறியீடுகள்:
::ம (H) - மனித உருவம்
::ல (A) - விலங்கு உருவம்
::மவி (Hd) - மனித விவரங்கள்
::லவி (Ad) - மிருக விவரங்கள்
::பொ (Obj) - மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள்
::த (pl) - தாவரம்
::உவி (At) - உடல்சார் விவரங்கள்
‘மு’, ‘வி₁’ ஆகிய குறியீடுகளால் பெரும்பாலும் அறிவுசார் செயல்கள் குறிக்கப்படுகின்றன, வெளிப்படையான மன எழுச்சிகள் ‘நி’ அல்லது ‘நி{{sub|அ}}’ என்று குறிக்கப்படுகின்றன. ‘அ’ என்ற குறியீடு உள்ளார்ந்த மனவெழுச்சி வயத்தைக் குறிக்கிறது.
மைத்தடச் சோதனையில் அளிக்கப்படும் விடைகளுக்குப் பொருள் காண்பதில் சில அடிப்படைக் கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன அவையாவன:
1. தம் மனவெழுச்சிகளைப் புறப்பொருள்களோடு இணைத்துத் தெளிவாக வெளிப்படுத்தும் இயல்புடையோர் அளிக்கும் விடைகள், மைத்தடங்களின் வண்ணங்களைக் கொண்டு பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
m621w0b4mscqbyjmqyczt6inka1k386
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/181
250
623562
1954572
1870324
2026-07-19T06:18:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1954572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதாகோ|157|இதிகாசங்கள்}}</noinclude>களில் உணவுப் பொருள்களை அடைக்கும் தொழில்கள், பால்பண்ணைப் பொருள்கள் தயாரித்தல் போன்றவை இங்கு நடைபெறுகின்றன. நம்பா என்னும் ஊரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாம் பெரும் சர்க்கரை ஆலையுள்ளது. இரசாயனப் பொருள் உற்பத்தி இதாகோவின் மூன்றாம் இடத்தைப் பெறும் தொழிலாகும். செயற்கை உரங்கள், பாசுபேட்டுத் தொழிற்சாலைகள் போன்றவை பொகாடெலோ நகரில் மிகுதி.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 181
|bSize = 468
|cWidth = 212
|cHeight = 161
|oTop = 171
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{center|மாநிலச் சட்டமன்றம் - பாய்சு}}
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெள்ளியை மிகுதியாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுள் இதாகோ முதலிடம் பெறுகின்றது. இங்குள்ள சன்சைன் சுரங்கம் உலகப் புகழ்பெற்றது.
<b>வரலாறு :</b> செவ்விந்தியர்கள் இம்மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தனர். இதாகோ பகுதியைக் கி.பி. 1805-ஆம் ஆண்டில் கண்டறிந்தவர்கள் மெரிவீதர் இலெவீசு (Meriwether Lewis), வில்லியம் கிளார்க்கு (William Clark) என்னும் இரு வெள்ளையர்களாவர். தாவீது தாம்சன் (David Thompson) என்னும் கனடா நாட்டுக் கண்டு பிடிப்பாளர் கி.பி. 1809-இல் மென்மயிர் வாணிகமையத்தை பெண்டுஓரில் ஏரிக்கரையில் நிலைநாட்டினார். என்றி எச். இசுபால்டிங்கு (Spalding) என்பாரும் அவருடைய மனைவியாருமே இதாகோவில் குடியேறிய முதல் வெள்ளைக்காரர்கள்.
இதாகோவில் கி.பி. 1860-ஆம் ஆண்டில் முதல் முதலாக மக்கள் குடியேறினர். இங்கு, கி.பி. 1862-இல் பொன் கண்டுபிடிக்கப்பட்டது. இதாகோ நிலப்பகுதி என்ற அமைப்பு, கி.பி. 1863 மார்ச்சு 4-ஆம் நாளில் இலெவீசுடன் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதாசோ கி.பி. 1890 சூலை 3-ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 43-ஆம் மாநிலமாக இணைந்தது.
இதாகோவின் தலைநகர் பாய்சு (Boise) என்னும் நகரமாகும். இதன் மக்கள்தொகை 1,02,160 (1680).
<section end="இதாகோ"/>
<section begin="இதிகாசங்கள்"/>
{{dhr}}
<b>இதிகாசங்கள் :</b> பண்டைக்காலத்தில் மக்கள், அரசர், தேவர் எப்படி இருந்தனர், அவர்களிடையே நடந்த நிகழ்ச்சிகள் யாவை என்பனவற்றைக் கதைகளாகக் கூறும் நூல்களே இதிகாசங்கள். இதிகாசம் என்பது ‘இப்படி முன் இருந்தது’ என்று பொருள்படும். வேதங்களின் முடிவாகவும் பிழிவாகவும் அமைந்தவை உபநிடதங்கள், உபநிடதங்களை அடுத்துத் தோன்றியவை இதிகாசங்கள். வேதங்களிலுள்ள பல மந்திரங்களுக்கு இதிகாசங்களைக கொண்டே பொருள் சொல்ல வேண்டியுள்ளது. எனவேதான், வேதத்தைச் சார்ந்த பிராமணப் பகுதிகளில், இதிகாச வேதம் என்றே சொல்லப்பட்டுள்ளது. அரசர் முன்னிலையிலும் வேள்விக் காலத்திலும் பிற சமயங்களிலும் இதிகாகங்கள் பாடப்பட்டு வந்தன. அரசனுடைய அவைக்களங்களில் அரசனை வாழ்த்திப் பாடிப் பரிசுபெற்றவர் ‘சூதர்’ என்று அழைக்கப்பட்டனர். பேரிடர்களால் துன்புறுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும் இதிகாசங்கள் படிக்கப்படுவதுண்டு.
வால்மீகி இயற்றிய இராமாயணமும் வியாசர் எழுதிய மகாபாரதமும் இதிகாசங்கள் ஆகும். இராமாயணம் சூரியவமிசத்தில் தோன்றிய இராமனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. சூரியவமிசக் கதையினைச் சொல்வது இராமாயணம். குரு வமிசக் கதையினைக் கூறுவது மகாபாரதம், இதிகாசங்களில் பண்டை இந்தியாவின் வரலாற்றுச் சாரம் உள்ளது என்று கூறுவர் வால்மீகியின் இராமாயணம் அறத்தை அடிநாதமாகக் கொண்டது. வியாசரின் மகாபாரதம் அறிவை அடிநாதமாகக் கொண்டது. இவை இரண்டும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்களை மக்களுக்கு எடுத்துரைப்பன. வீடு பற்றிய செய்திகள் இடையிடையே ஊடும் பாவுமாய்ப் பின்னிவர, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் இவை வலியுறுத்தி நிற்கின்றன. உண்மையைப் பேசு, அறத்தைப் பின்பற்றி நட என்று இவை போதிக்கின்றன. மகாபாரதத்தின் இறுதியில் கூறப்படும் ‘அகிம்சையே மேலான அறம்’ என்ற கோட்-<noinclude></noinclude>
p0q5rquwsur792hj7gqb2t06u5viem8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/183
250
623564
1954573
1870327
2026-07-19T06:25:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1954573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதிகாசங்கள்|159|இதிகாச பாகவதம்}}</noinclude>லும் பதினெட்டுப் பருவங்களாலும் ஆனது. உலகிலே மிகப்பெரும் நூல் என்னும் சிறப்பினை உடையது. நூலின் ஐந்திலொரு பங்கில் மையக்கதை அமைய ஏனையவற்றில் கிளைக்கதைகளும் அறவுரைகளும் அடங்கியுள்ள. நான்கு வேதங்களில் உள்ள கருத்துகள் கதைகளின் வழி இதன்கண் விளக்கப்படுகின்றமையால் இந்நூல் ‘ஐந்தாம்வேதம்’ எனவும்படும். கி.பி. நான்காம் நூற்றாண்டு அளவில், மகாபாரதம் இன்றிருக்கும் நிலையைப் பெற்றது என்பர். பாரதத்தில் வரும் சில தனிப்பட்ட கதைகளும் வியாக்கியானங்களும் வேதகாலத்திலே காணப்படுகின்றன. எனவே, பாரதம் படிப்படியாகக் காலந்தோறும் வளர்ந்து இன்றைய வடிவைப் பெற்றது என்பர்.
மகாபாரதம் தன்னுள் அரிவம்சம், பகவத்கீதை ஆகிய இரண்டையும் உடையது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை வலியுறுத்துகிறது. இது நீண்ட அறவுரைகளை உடைய இதிகாசம். பன்னிரண்டாம் பருவம் பதினாலாயிரம் சுலோகங்களை உடைய நீண்ட பருவமாகவும், பதினேழாம் பருவம் முந்நூற்றுப் பன்னிரண்டு சுலோகங்களை உடைய மிகச் சிறிய பருவமாகவும் உள்ளன. அரிவம்சம் கண்ணன் அவதார சரிதத்தைக் கூறுவது. இந்நூல் கதைக்களஞ்சியம் என்று சொல்வத்தக்கது. சகுந்தலைக்கதை முதற்பருவத்தில் உள்ளது. இதனைப் பின்னாளில் காளிதாசன் சாகுந்தலம் என்னும் உலகப்புகழ் பெற்ற காவியம் ஆக்கினார். மூன்றாம் பருவத்தில் பாண்டவர்களிடம் பொழுதுபோக்கிற்காகச் சொல்லப்பட்ட பல கதைகள் உள்ளன. இராமாயணக் கதை, கங்கை பூமிக்கு வந்தகதை, கலைக்கோட்டு முனிவர்கதை, சிபி மன்னன்கதை, சாவித்திரி கதை, நளன்கதை, பரதசாவித்திரி கதை என்னும் பல்வேறு கதைகள் உள்ளன. பாரதம் படைத்த வியாசர் தம் கால நடப்பு வாழ்க்கை முறைகளை வைத்துக்கொண்டு, எதிர் காலம் மிகச் சிறப்புடையதாக மலருமென்ற நம்பிக்கையுடன் படைத்துத் தந்துள்ளார். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்த பதினெட்டு நாள் போரைப்பற்றி இருபதாயிரம் சுலோகங்களில் வியாசர் கூறியுள்ளார். தத்துவம், சமயம், அரசநீதி, சத்திரிய தருமம், சட்டம் ஆகிய பல்வேறு அறவுரைகளைத் தன்னகத்தே கொண்டு, தேவர், அசுரர், முனிவர், மனிதர் பற்றிய பல கதைகள் சங்கிலித்தொடர்போலக் கதைக்குள் கதையாக வருகின்றன. ஓர் அற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டுத் தரும் முகத்தான் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதத்துள் ‘கிருட்டிண வேதம்’ எனப்படும் பதினெட்டு அத்தியாயங்களிலான பகவத்கீதை உள்ளது. இதனை ‘வைணவ சுமிருதி’ என்றும் கூறுவர்.
தரும சேத்திரமாகிய குருசேத்திரத்தில், பாரதப் போர் தொடங்க உள்ள நெருக்கடியான நிலையில், தன் உற்றார் உறவினர்களுடன் போர்புரிவதா என்று சஞ்சலமுற்ற அருச்சுனனுக்கும் (அடியார்) கண்ணனுக்கும் (இறைவன்) நடைபெற்ற உரையாடல் பகவத்சீதை. போர்செய்வது சத்திரியனின் தருமம்-கருமம்; கருமம்செய்; ஆனால் கரும பலத்தை (வினை செய்வதால் ஏற்படக்கூடிய பலாபலன்களில் ஆசை வைப்பதைக்) கைவிட்டுவிட வேண்டும் என்று கீதை வலியுறுத்தியது. கருமபலத்தைத் தியாகஞ் செய்யக் கீதை வழிகாட்டுகிறது. அருச்சுனனுடைய மயக்கமுற்ற மனநிலையை மாற்றித் தன் கடமைகளைச் செய்யுமாறு அவனுக்குப் பகவான் அறிவுரை கூறினார் என்பதை அடியாகக் கொண்டு, பிரம வித்தையான இந்தக் கீதோபநிடதம், பலருக்கும் பயனுள்ள பல செய்திகளைக் கூறுகிறது. பக்குவப்பட்டவர்களுக்கு இது யோக சாத்திரமாகவும் விளங்குகிறது. இந்து சமயத்தின் சமரச மனோபாவம் கீதையில் உள்ளது. எக்காலத்திற்கும் பொருத்தமான பேருண்மைகளை இக்கால மொழியில் கீதை கூறுகிறது. ‘கருமம் செய்’ என்றே கீதை தொடர்ந்து போதிக்கிறது, வேதகாலம், உபநிடத் காலம் ஆகியவற்றில் காணப்பட்ட இந்தியச் சமூகச் சிந்தனையின் வளர்ச்சியைக் கீதையில் காண்லாம்.
மகாபாரதம் பல்வேறு கதைவடிவங்களையும் பல்வேறு இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றுள்ளது. தமிழில் செவ்வியல் (Classical) வடிவங்களாக (பாரதவெண்பா, வில்லிபாரதம்) மட்டுமேயன்றி, நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் (Folk Form) கதைப்பாடல்களாகவும் (Folk Ballads) கூத்து இலக்கியங்களாகவும் பாரதக்கதை வளர்ந்துள்ளது. தமிழகக் கிராமங்களில் பாஞ்சாலியம்மன், திரௌபதையம்மன் கோயில்கள் பல்கின. அங்கெல்லாம் திருவிழாக்களில் பாரதம் படிக்கப்பட்டும் நடிக்கப்பட்டும் வருகின்றது. பகவத்கீதை மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக வெளிவந்துள்ளன. இந்து சமயத்தத்துவச் சிந்தனையாளர்களுக்கு இது அரும் பெருங்கருவூலமாக உள்ளது. இன்றளவும் இந்திய மண்ணில் இவ்விரு இதிகாசங்களும் பல்வேறு கலை, இலக்கிய வடிவங்களில் வெளிப்பட்டு வாழ்ந்து வருகின்றன. {{float_right|சு.வே.}}
<section end="இதிகாசங்கள்"/>
<section begin="இதிகாச பாகவதம்"/>
{{dhr}}
<b>இதிகாச பாகவதம்</b> வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பெற்றுச் செய்யுள் வடிவில் அமைக்கப்பட்ட நூல். கண்ணன் வரலாறு கூறுவனவாக வடமொழியில் ஏழு பாகவதங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றன் தமிழாக்கமே இந்நூல். பகவான்<noinclude></noinclude>
t3wgxv1ni21otrozf0nle5vy953mo0r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/184
250
623583
1954574
1870500
2026-07-19T06:26:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1954574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதிகாச பாசுவதம்|160|இதிமத்-உத்-தௌலா}}</noinclude>என்னுஞ் சொல் வைணவத்தில் சிறப்பாகக் கண்ணனைக் குறிப்பதால், அவனது வரலாற்றினைக் கூறும் நூல் பாகவதம் எனப்பட்டது. வியாசர் வடமொழியில் 18,000 சுலோகங்களால் அமைத்த இந்தப் பாகவதத்தினைச் செவ்வைச் சூடுவார் தமிழில் அமைத்துள்ளார். இவர் வேம்பத்தூர், நிம்பை நகர் என்னும் வேறு பெயர்களாலும் வழங்கப்படும் வேப்பற்றூரில் அந்தணர் மரபில் தோன்றினார். இச்செய்தியினைத் ‘தென் நிம்பை நகரமதில் வாழும் அந்தணரில், சிறந்த செவ்வைச் சூடுவார், சுருதி புகழ் பாகவத பௌராணம் ஓதினர்’ என்று ஒரு பழம்பாடற் பகுதி குறிப்பிடுகிறது. இவ்வாசிரியருக்கு மாதவ பண்டிதர் என்னும் சிறப்புப் பெயரும் உள்ளது. ‘வடமொழியில் பாகவதம் பாடிய வியாசரே, செவ்வைச் சூடுவார் எனத் தோன்றித் தமிழில் இப்பாகவதத்தினை இயற்றினார்’ என்னும் கருத்தில், ‘வியாத முனிவரனே மீள, உதிக்கும் நிம்பை மாதவ பண்டிதச் செவ்வைச் சூடி என உலகுபோற்ற, விதிக்கு மறையவர் குலத்தில் தோன்றி அருந்தமிழாலும் விளம்பினானே’ என வரும் செய்யுட்பகுதி இவர் சிறப்பினைக் குறிப்பிடுகிறது.
இந்நூல் 12 கந்தங்களையும், 155 அத்தியாயங்களையும் கொண்டு, 4973 பாடல்களால் அமைந்துள்ளது. இது ‘விண்டு பாகவதம்’ எனவும் வழங்கப்படும். நூலாசிரியர் வைணவராயினும், சைவ வைணவ வேறுபாடு கொள்ளாமல் பாடும் நெறியினர் என்பதனைச் சிவபெருமான், முருகன் முதலியோரைச் சிறப்பித்துப் பாடும் பகுதிகளால் அறியமுடிகிறது. நூலின் தொடக்கம் கடவுள் வாழ்த்து, கலைமகள் வணக்கம், அவையடக்கம் முதலியவற்றோடு, புராண அமைப்பில் கால உலக அளவுகள் பற்றியும் கூறுவதாக உள்ளது. வியாசர் தம் புதல்வர் சுகருக்கும் அவர் பரீட்சித்துக்கும் கூறப், பின்னர்ச் சூத முனிவர் நைமிசாரணிய முனிவருக்குச் சொல்லுவதாக நூல் அமைந்துள்ளது. முதல் கந்தம் திருமால் அவதாரங்கள் பலவற்றையும் சிறப்பித்துக் கூறுகிறது. இரண்டாம், மூன்றாம் கந்தங்களில் தத்துவங்கள் தோற்றம் பற்றியும் அவற்றின் இயல்புகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. நான்காம் கந்தம் சிவபெருமான் தக்கன் யாகத்தினை அழித்த சிறப்பு, முருகன் பிறப்பு முதலியனவற்றைச் சிறப்பிக்கிறது. ஆறாம் கந்தத்தில் ‘நாராயண கவசம்’ சிறப்பாக அமைந்துள்ளது. இராமாயணச் செய்திகள் ஒன்பதாம் கந்தத்தில் விரிவாகப் பேசப்படுகின்றன. மிக நீண்ட பத்தாம் கந்தம் 1682 செய்யுள்களைக் கொண்டுள்ளது. இதில் கண்ணன் அவதாரக் கதை மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பலராமனின் புனிதநீராடற் பயணங்கூறும் பகுதியில் தமிழகத்திலுள்ள பல தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பாகவதத்தினைக் கி.பி. 1881-ஆம் ஆண்டில் கோமளவல்லிபுரம் இராச கோபால் பிள்ளை அச்சில் பதிப்பித்தார். அவர் பதிப்பில் நூலாசிரியர் பெயர் திருக்குடந்தை ஆரியப்பப்புலவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நூலாசிரியர் பெயர் ‘செவ்வைச் சூடுவார்’ என்பது பின்னர் ஆராய்ச்சியால் தெளிவு பெற்றது. இந்நூலிற்கு டாக்டர் உ.வே. சாமிநாதையர் அரும்பதவுரையும் ஆராய்ச்சிக்குறிப்பும் வரைந்துள்ளார். ஐயரவருக்குப் பின் அவர் மகன் இந்நூலின் முதல் ஒன்பது கந்தங்கள் கொண்ட முதல் பாகத்தினை 1949-ஆம் ஆண்டிலும் எஞ்சிய மூன்று கந்தங்கள் கொண்ட இரண்டாம் பாகத்தினை 1953-ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார். இந்நூலின் இரண்டு பகுதிகளும் திருப்பதி திருமலை தேவத்தானத்தின் ஆதரவில் வெளியிடப்பட்டுள்ளன.
<section end="இதிகாச பாகவதம்"/>
<section begin="இதிமத்-உத்-தௌலா"/>
{{dhr}}
<b>இதிமத்-உத்-தௌலா</b> என்பவர் சகாங்கீரின் மனைவி நூர்சகானின் தந்தையார். இவரது இயற்பெயர் கியாசு பெகு (Ghiyas Beg), இவர் பாரசீகத்திலிருந்து வேலைதேடி இந்தியாவுக்கு அக்பரின் ஆட்சிக் காலத்தில் வந்தவர். பெகின் நண்பர் ஒருவர் மூலம் இவர் பேரரசர் அக்பரிடம் அறிமுகமானார். தம் திறமையாலும் மதிநுட்பத்தாலும் கியாசுபெகு பதவி உயர்வு பெற்று, அரண்மனையை நிருவகிக்கும் பொறுப்பை ஏற்றார். இவர்தம் பல்வேறு திறமைகளைப் பாராட்டிப் பேரரசர் அக்பர் இவருக்கு இதிமத் - உத் - தெளலா (Ikmad-ud-Daulah) என்னும் பட்டம் வழங்கினார். இவரது மறைவுக்குப்பின், இவர் மகள் நூர்சகான் கி.பி. 1626-ஆம் ஆண்டில் ஆக்ராவில் இவருக்கு ஒரு கல்லறை கட்டினாள். இக்கல்லறை இந்தியப் பாணியும் பாரசீகக் கலைப்பாணியும் பொருந்தக் கட்டப்பெற்றது. இதனைச் சுற்றிலும் 180மீ. நீளமுள்ள மதிற்சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கல்லறையைச் சுற்றிலும் புல்வெளிகள், மலர்ப் பாத்திகள், மென்மையான பாதைகள், குளங்கள், நீரூற்றுகள், கட்டடம், தூய வெண்ணிறப் பளிங்குக் கற்கள் முதலியவை அழகுடன் மிளிர்கின்றன. இது சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விட்டம் 24மீ இக்கல்லறைத் தோட்டத்தின் நடுவில் எட்டுக் கோணத் தூபிகளும் மேல்மாடத் தளமும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வளைவுகளைக் கொண்ட திறப்புகள் காணப்படுகின்றன.
உட்புறம் பல அறைகள் உள்ளன. நடுவில் இதி மத்-உத்-தௌலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. வெண்ணிறப் பளிங்குக் கற்களுக்கிடையில் பல வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கல்லறைதான் முழுவதும்<noinclude></noinclude>
7b28kwyco3gorwzx8hiz4utoy02v936
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/185
250
623585
1954576
1870501
2026-07-19T06:32:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1954576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இதோபதேசம்|161|இந்தாப்பூர் போர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 185
|bSize = 468
|cWidth = 189
|cHeight = 132
|oTop = 77
|oLeft = 24
|Location = center
|Description =
}}
{{center|இதிமத்-உத்-தெளலா கல்லறை}}
லெண்ணிறப் பளிங்குக் கற்களாலேயே கட்டப்பட்ட மொகலாயரின் முதற் கட்டடமாகும்.
<section end="இதிமத்-உத்-தௌலா"/>
<section begin="இதோபதேசம்"/>
{{dhr}}
<b>இதோபதேசம்</b> என்பது மக்களைப் பக்குவப்படுத்த நல்ல அறிவுரைகளை நீதிக்கதைகள் மூலம் புகட்டுவதாகும். பக்குவப்பட்டவர்கள் பக்குவப்படாதவர்களுக்கு நீதியையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் நன்னடத்தையையும் கதைகள் மூலமாக எடுத்துக்கூறுவது என்றும் கூறலாம்.
பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து நீதி புகட்டும் கதைகள் பலவற்றைத் தொகுத்து இதோபதேசம் என்ற பெயரில் ஒரு நூலை நாராயணன் வடமொழியில் வெளியிட்டார். விட்டுணுசர்மன் அரசனின் பிள்ளைகளுக்கு நீதியை எடுத்துக்காட்டுவதற்காகப் பல கதைகள் கூறுகின்றான். ஒரு கதையிலிருந்து மற்றொரு கதை பிறக்கும். தொடக்கத்திலோ முடிவிலோ ஒவ்வொரு கதைக்கும் ஒரு நீதி சொல்லப்படும். எடுத்துக்காட்டாக, வலையில் வீழ்ந்த சிங்கத்திற்குச் சுண்டெலி உதவி புரிந்து தப்பிக்கவைத்த கதையைச் சொல்லலாம். இதனால் சிறியவர்களும் பெரியவர்களுக்கு உதவி செய்யமுடியும் என்ற நீதி எடுத்துச் சொல்லப்படுகிறது.
மேலும், மன்னர்கள் தங்களுடைய ஆட்சியைச் செம்மையாக நடத்துவதற்கு ஏற்ற ஐந்து நல்ல அறிவுரைகளும் அரசதந்திரங்களும் இதில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் நான்கு மித்திரபேதம், மித்திரலாபம், காகோ உலூகியம், அபரீசீட்தகாரம் ஆகும். இவற்றை விளக்கப் பல நீதிக் கதைகள் சொல்லப்படுகின்றன. நட்பாகவுள்ள மன்னர்களைப் பிரித்து, அவர்கள் பலத்தைக் குறைத்துத் தன்னாட்சியை வலுப்பெறச் செய்தல் மித்திரபேதம் ஆகும். மன்னர்கள் நட்புடன் இருந்தால் என்ன நன்மை பயக்கும் என்பதைக் கதை மூலமாகத் தெரிவித்தல் மித்திரலாபம் எனப்படும். இரண்டு மன்னர்கள் காகமும் கோட்டானும்போல் தீராப்பகைவர்களாக இருந்தால், நாட்டில் எவ்வாறு ஆட்சி செய்வது என்பதைத் தெரிவிப்பது காகோ உலூகியம் எனப்படும். அபரீசீட்தகாரம் என்பது, எக்காரியத்தைப் பற்றியும் நன்கு ஆலோசனை செய்து செயலில் இறங்குவது எனப் பொருள்படும். இதோபதேசத்தில் கூறப்பட்ட கருத்துகள் யாவும் மன்னர்களின் அரசதந்திரத்திற்குத் துணைபுரிகின்றன.
இந்நூளில் பேச்சுவழக்கில் இருக்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருவதற்காகப் பல நீதிக்கதைகள் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’, ‘பசுத்தோல் போர்த்திய புலி’ போன்ற பழமொழிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கதைகளில் விலங்குகள், பறவைகள், கடவுள் போன்ற பொதுப்பெயர்களே வருகின்றன. இதில் சொல்லப்பட்ட நீதிகள் எல்லாம் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியன.
<section end="இதோபதேசம்"/>
<section begin="இந்தளூர்"/>
{{dhr}}
<b>இந்தளூர்</b> நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல் பெற்ற வைணவத் தலங்களுள் ஒன்று. இத்தலம் சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்கு ஒரு கல் தொலைவிலுள்ளது. சந்திரன் வழிபட்டுச் சாப நீக்கம் பெற்ற தலமாதலால், ‘திருஇந்தளூர்’ என இவ்வூர் பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது. இவ்வூர் வடமொழியில் ‘சுகந்தவனம்’ என்று வழங்கப்பெறும், இங்கு ‘இந்துபுட்கரணி’ என்னும் தீர்த்தம் உள்ளது. இங்குள்ள திருக்கோயில் விமானம் வேதாமோத விமானமாகும். பெருமாள் பெயர் ‘மருவினிய மைந்தன்’ என்பதாகும். ‘பரிமள ரங்கன், என்றும் இவர் அழைக்கப்படுவார். இவர் இங்கு வீரசயன கோலத்தில் விளங்குகிறார். தாயார் பெயர் புண்டரீகவல்லி நாச்சியார் என்பதாகும். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றுள்ளது.
<section end="இந்தளூர்"/>
<section begin="இந்தாப்பூர் போர்"/>
{{dhr}}
<b>இந்தாப்பூர் போர்</b> பீசப்பூரை ஆண்ட ஏதில் சா (Adil shah) என்பானுக்கும் மொகலாயப் பேரரசர் சாசகானுக்கும் (Shahjaban) தக்காணத்தில் நடைபெற்ற போராகும். ஏதில்சாவைக் கீழ்ப்படியும்படி சாசகான் வற்புறுத்தினார். ஆனால், ஏதில்சா தன் உரிமையை விட்டுக் கொடுக்க உடன்படவில்லை. எனவே, அவனுடைய அரசை மூன்று பக்கங்களிலிருந்து மூன்று மொகலாயப் படைகள் தாக்கின. முதல் படை கான்-இ-தௌரானின் (Khan-i-Dauran) தலைமையில் வடகிழக்கில் பீடாரிலிருந்து<noinclude>
வா. க. 3 - 11</noinclude>
skr00z50s7abug5maah0xy7t01lpnvq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/186
250
623587
1954578
1870504
2026-07-19T06:33:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1954578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திமொழி|162|இந்திமொழி}}</noinclude>(Bidar) தாக்கியது. இரண்டாம் படை கான் சகானின் (Khan Jahan) தலைமையில் மேற்கில் சோலாப்பூரியிருந்து (Sholapur) தாக்கியது. மூன்றாம் படை கான்-இ-சமானின் (Khan-i-Zaman) தலைமையில் வடமேற்கில் இந்தாப்பூரிலிருந்து (Hindapur) தாக்கியது. இதனையே இந்தாப்பூர்ப் போர் என்பர். இப்போரில் பீசப்பூர் வீரர்கள் தலைநகரைக் காத்த போதிலும், அரசின் ஏனைய பகுதிகள் மொகலாயப் படைகளால் கடும் தாக்குதலுக்கும் அழிவிற்கும் ஆளாயின. பீசப்பூர் (Bijapur) சுல்தான் கி.பி 1636-ஆம் ஆண்டு மே மாதத்தில் மொசுலாயப் பேரரசருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டார். அதன்படி, பீசப்பூர் சுல்தான் மொகலாயப் பேரரசரின் ஆளுமையை ஒப்புக்கொண்டார்.
<section end="இந்தாப்பூர் போர்"/>
<section begin="இந்திமொழி"/>
{{dhr}}
<b>இந்திமொழி :</b> மொழியியல் வல்லுநர்கள் உலகில் வழங்கிவரும் மொழிகள் 2746 என்றும், இவற்றுள் 1200 மொழிகள் வட, தென் அமெரிக்காவிலும் 500 மொழிகள் ஆசுத்திரேலியாளிலும் பிற தீவுகளிலும் பேசப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளும் பல மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கப்படுகின்றன. புவியியல் அமைப்பு, சொற்களில் காணப்படும் ஒற்றுமை, ஒலி-ஒற்றுமை, இலக்கண அமைப்பு முறை முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டே மொழிக் குடும்பங்கள் பிரிக்கப்படுகின்றன.
<b>மொழிக் குடும்பம் :</b> காசுமீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவில் பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இங்குப் பேசப்படும் மொழிகளுள் முக்கியமானவை திராவிட மொழிகளும் ஆரிய மொழிகளும் ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை திராவிட மொழிகளாகக் கருதப்படுகின்றன. ஆங்கிலம், உருசிய நாட்டு மொழி, இசுபெயின் நாட்டு மொழி, செருமன், பிரெஞ்சு, சமசுகிருதம், போர்ச்சுகீசியம், இத்தாலி ஆகிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாகும். இந்தி, வங்காளம் முதலியன இந்தோ ஆரியன் குடும்பத்தைச் சேர்ந்தவை. இக்குடும்பம் இந்தோ ஐரோப்பியக் குடும்பத்தின் இனப்பிரிவாகும்.
இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ‘கேந்தம்’(Centum) பிரிவு என்றும் ‘சதம்’(Satem) பிரிவு என்றும் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் ‘ஒலி’யை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படுகிறது. ‘நூறு’ என்ற சொல்லிற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான சொற்களை அடிப்படையாகக் கொண்டு, கேந்தும், கேந்த, கேக்தோன், கேத், கந்த் என வழங்கும் சொற்களையுடைய மொழிகளான கிரேக்கம், இத்தாலி, கேல்டி, செருமனி, இத்தி, துகாரி முதலிய மொழிகள் ‘கேந்தம்’ பிரிவில் அடக்கப்படுகின்றன. அதுபோலவே சதம், சிப்தசு, இசுதோ மற்றும் சித்ச என்ற சொற்களைப் பயன்படுத்தும் ஆர்மினி, அல்பானி, பாரத்து, ஈரானி போன்ற மொழிகள் “சதம்” பிரிவில் அடக்கப்படுகின்றன. பாரத்து, ஈரான் ஆகியவற்றின் துணைப் பிரிவுகளுள் ஒன்று ஆரிய மொழி.
<b>வளர்ச்சி :</b> பண்டைக்கால வடமொழியும் இடைக்காலப் பாலி மொழியும் இக்காலத்தில் வழங்கி வரும் இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளும் ஆரிய மொழிகளாகும். இந்தி வட இந்தியாவின் பெரும் பகுதியில் பேசப்படும் மொழி.
இந்தி என்னும் சொல் சிந்தி என்ற வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. வட மொழியின் ‘ச’ என்னும் எழுத்து பாரசீகத்தில் ‘உற’ வாக மாறுகிறது. இந்தியாவில் பாரசீசு மக்களின் தொடர்பு ஏற்பட்டபோது அவர்கள் சிந்தியை ‘உறிந்தி’யாக ஒலித்தனர்.
வரலாற்று நோக்கில் இந்தி அபப்பிரம்ச மொழியினின்றும் மலர்ந்தது எனலாம். இந்தி கி.பி 10-ஆம் நூற்றாண்டில் அபப்பிரம்ச மக்கள் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இம்மொழி கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக வளர்ச்சியுற்றது. இடைப்பட்ட காலத்தில் ‘வச்சிர’ மொழியும் இலக்கிய மொழியாக ஆட்சி பீடத்தில் ஏறியது. கடிபோலி எனப்படும் இக்கால இந்தி, கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உரைநடை இலக்கியத்திலும் பின்பு செய்யுள் இலக்கியத்திலும் இடம் பெறலாயிற்று.
<b>இந்திமொழிப் பகுதி :</b> வரலாற்று நோக்கில் இந்தி இடைப்பட்ட இந்தியாவின் மொழிகளான வடமொழி, பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிறது. மேற்கில் இராசசுத்தானம் முதல் கிழக்கில் பீகார் வரையிலும் வடக்கில் மலைப் பகுதிகள் முதல் தெற்கில் தப்தி நதி வரையிலும் உள்ள ஏறக்குறைய 2310 கி.மீ. நீளமும் 1320 கி.மீ. அகலமும் கொண்ட பரந்த நிலப்பரப்பு, இந்தி மொழி பேசப்படும் பகுதியாகக் கருதப்படுகிறது.
பிரச, இராசசுத்தானி, மேவாடி, மாலன், செயபுரி, மார்வாடி, கடிபோலி, பாங்கரு, கன்னோசி, புந்தேல்கண்டி, அவதி, பகேலி, அத்தீசுகடி, மைதிலி, மகதி, போசுபுரி முதலியன இந்தியின் கிளைமொழி-<noinclude></noinclude>
czpb5czsz2030raobpgiiotbnxsqe3g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/188
250
623594
1954579
1870532
2026-07-19T06:36:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1954579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அரசியலமைப்புச் சட்டம்|164|இந்திய அரசியலமைப்புச் சட்டம்}}</noinclude>நோக்குடன் காதல் காப்பியங்களும் தோன்றலாயின. இக்காலத்தில்தான் ‘விரச’ என்பது இலக்கிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்காலப் படைப்புகளில் கேசவதாசர் என்பாரின் கவிப்பிரியா, இரசிக் பிரியா, இராமச்சந்திரிகா என்பனவும் பிகாரிலாவின் ‘சத்சயி’ யும் குறிப்பிடத்தக்கன.
<b>இக்காலம் :</b> மீண்டும் அபப்பிரம்ச மொழியில் இலக்கியம் தோன்றியதும், அதிலிருந்து கடிபோலி எனப்படும் இக்கால இந்தி வளர்ச்சியடைந்ததும் இக்காலப் பகுதியில்தான். ஆங்கிலேயரின் ஆட்சி இந்தி மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது எனலாம். இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் இக்கால இலக்கியத்தில் காணலாம். புதினம், சிறு கதை, நாடகம் போன்ற பலவகைப் பிரிவுகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன.
‘சாகேத்’ என்னும் நூலை இயற்றிய மைதிலி சரண் குப்தாவும் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்ற மகாதேவி வர்மா போன்ற கவிஞர்களும், பல வரலாற்று நாடகங்களை உருவாக்கிய சயகர், கர்பிர சாத்துசமூக நாடகங்களை எழுதிய இலட்சுமி நாராயண் மிசுரா போன்ற நாடக ஆசிரியர்களும், நாவல் இலக்கியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் பிரேம்சந்து, யசுபால் போன்ற புதின ஆசிரியர்களும், இராமச்சந்திர கக்கில் போன்ற திறனாய்வு ஆசிரியர்களும் தோன்றி இந்தி இலக்கியத்திற்குத் தொண்டு செய்து, அதன் வளர்ச்சிக்கு உதவினர்.
{{float_right|அ. உ.}}
<section end="இந்திமொழி"/>
<section begin="இந்திய அரசியலமைப்புச் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்திய அரசியலமைப்புச் சட்டம்</b> : இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு, 1935-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டப்படி (Government of India Act 1935) இந்திய அரசியல் அமைப்புச் செயற்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் அப்போது இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கில நாட்டில் தொழிற்கட்சி ஆட்சி உரிமையைக் கைப்பற்றியதும் கிளமண்ட்டு அட்லி (Clement Atlec) பிரதமரானார். அவர் காலத்தில் இந்தியா விடுதலை அடைந்தது. இந்தியாவின் அரசியல் அமைப்பை ஓர் அரசியல் நிருணய சபை மூலம் உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலப் பிரதமர் அட்லி ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் நாளில், இந்தியாவுக்கு விடுதலை வழங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர் அறிவித்தார். அதை இந்தியாவிலுள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
எனவே ஓர் அரசியல் நிருணய சபையை அமைப்பதற்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த அரசியல் நிருணய சபையில் பணிபுரியக்கூடிய உறுப்பினர்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக அரசியல் நிருணய உறுப்பினர்கள் மாநிலச் சட்டசபைகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முன்னரே குறிப்பிடப்பட்டுள்ள 1935-ஆம் ஆண்டைய இந்திய அரசுச் சட்டப்படி, மாநிலச் சட்டசபைகளுக்குத் தேர்வு நடத்தப் பட்டது. 10 இலட்சம் மக்களுக்கு ஒரு பேராளர் என்ற விகிதப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசியல் நிருணய சபையில் எத்தனை உறுப்பினர்கள் உண்டு என்பது தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள மூன்று சமூகங்களுக்கு அவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் பங்கு போட்டுக் கொடுக்கப்பட்டன. பொதுவானவர், இசுலாமியர், சீக்கியர் என்பவர்களே அந்த மூன்று சமூகத்தினர் ஆவார்கள். ஒரு சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்குத் தொடர்புடைய மாநிலச் சட்டசபையிலுள்ள அந்தச் சமூக உறுப்பினர்கள் பேராளர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இம்முறையில் அரசியல் நிருணய சபைக்குப் பேராளர்களைத் தேர்வு செய்யும் முறையானது 1946-ஆம் ஆண்டு சூலை மாதத்தில் முடிவு பெற்றது. இதில் மொத்தம் 296 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவராக இராசேந்திர பிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டார் (பின்னர் இவர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்).
இந்தியாவிலிருந்து பாகிசுத்தான் என்ற தனி நாடு 1947-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் பிரிக்கப்பட்டது. பாகிசுத்தான் 1947-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 15-ஆம் நாளில் சுதந்திரம் பெற்ற தனி நாடாகச் செயற்படத் தொடங்கியது. பாகிசுத்தானுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைத் தவிர்த்து, ஏனைய பகுதியைக் கொண்டு இந்தியா ஒரு சுதந்திர நாடாக அதே ஆகசுட்டு மாதம் 15-ஆம் தேதியிலிருந்து செயற்படத் தொடங்கியது. அவ்வாறு இரு நாடுகளும் சுதந்திரம் அடைவதற்கு 1947-ஆம் ஆண்டுச் சுதந்திரச் சட்டம் (The Indian Independence Act 1947) ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, புதிய அரசியல் அமைப்பு உருவாகும் வரை 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டமானது தேவையான மாறுதல்களுடன் சுதந்திர இந்தியாவுக்குச் செயற்படத்தக்கதாக ஆக்கப்பட்டது. பாகிசுத்தான் பிரிவினைக்குப்பின், எஞ்சியுள்ள பகுதிகளுக்குப் பேராளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து இந்திய அரசியல் நிருணய சபையில் பணியாற்றினார்கள், மேற் குறிப்பிட்ட அரசியல் நிரு-<noinclude></noinclude>
cglrcsa8r0acgld7nxurk2wi1c1t4v4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/217
250
623908
1954582
1872534
2026-07-19T06:42:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1954582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அரசியலமைப்புச் சட்டம்|193|இந்திய அரசு விருதுகள்}}</noinclude>
5. கேரளம்
6. மத்திய பிரதேசம்
7. தமிழ் நாடு
8. மகாராட்டிரம்
9. கர்நாடகம்
10. ஒரிசா
11. பஞ்சாபு
12. இராசசுத்தான்
13. உத்தரப் பிரதேசம்
14. மேற்கு வங்காளம்
15. சம்முவும் காசுமீரமும்
16. நாகாலாந்து
17. அரியானா
18. இமாசலப் பிரதேசம்
19. மணிப்பூர்
20. திரிபுரா
21. மேகாலயா
22. சிக்கிம்
<b>மைய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்</b>
1. தில்லி
2. அந்தமான், நிக்கோபார்த்தீவுகள்
3. இலட்சத் தீவுகள்
4. தாத்ரா நகரும் அவேலியும்
5. கோவா, தாமன், தையூ
6. பாண்டிச்சேரி
7. சந்திகார்
8. மிசோராம்
9. அருணாசலப் பிரதேசம்
<b>மொழிகள்</b>
1. அசாம்
2. வங்காளம்
3. குசராத்தி
4. இந்தி
5. கன்னடம்
6. மலையாளம்
7. காசுமீரம்
8. மராத்தி
9. ஒரியா
10. பஞ்சாபி
11. சமசுகிருதம்
12. சிந்தி
13. தமிழ்
14. தெலுங்கு
15. உருது
<section end="இந்திய அரசியலமைப்புச் சட்டம்"/>
<section begin="இந்திய அரசு விருதுகள்"/>
{{dhr}}
<b>இந்திய அரசு விருதுகள்:</b> பல்லேறு துறைகளில் பொதுநலனுக்காகச் சிறப்பான பணியாற்றுபவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. பெரும்பாலான விருதுகள் குடியரசு நாளன்று கொடுக்கப்படுகின்றன. இத்தகைய விருதுகளுள் சிறப்பானவை பின்வருவனவாம்.
1. <b>அருச்சுன விருது:</b> விளையாட்டுத் துறையில் தன்னிகரற்று விளங்கும் வீரர்களுக்கு 1961-ஆம் ஆண்டுமுதல் இவ்விருது வழங்கப்படுகிறது. சிறப்பான வீரர்களுக்கு வெண்கலச் சிலை வழங்கப்படுகிறது. பணம் வழங்கப்படுவதில்லை. இதற்கான பரிந்துரைகளைத் தேசிய விளையாட்டுக் கழகம் செய்கிறது. இப்பரிந்துரைகளை ஏற்று அனைத்திந்திய விளையாட்டு ஆலோசனைக் குழு ஆராய்கிறது. இறுதியாக முடிவு செய்யும் பொறுப்பு மைய அரசைச் சேர்ந்ததாகும். இவ்விருது பற்றிய இறுதி முடிவுகள் ஒவ்வோராண்டும், ஏப்பிரல் அல்லது மே மாதத்தில் அறிவிக்கப்படுகின்றன. இம்முடிவுகள் விளையாட்டுக்கால இதழ்களிலும் நாவேடுகளிலும் வெளியிடப்படுகின்றன. விருதுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு நூலொன்றை மையக் கல்வி அமைச்சு வெளியிடுகிறது.
2. <b>சிறப்பு ஏற்றுமதியாளர் விருது:</b> இது 1964-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை மத்திய வணிக அமைச்சு வழங்குகிறது. தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், மத்திய அரசுப் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள் ஆகியவர்களுள் ஏற்றுமதி வணிகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் 15 விருதுகள் வழங்கப்படுகின்றன. வெள்ளிச் சுழல் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கப்படுகின்தன.
3. <b>இந்திமொழிச் சட்டநூல் விருது:</b> இது 1965 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோராண்டும் போட்டிக்காக வரும் பல்வேறு சட்ட நூல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்-<noinclude></noinclude>
7q7nr8bs1uk9tn632jhytfdqerjlami
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/222
250
623915
1954584
1872981
2026-07-19T06:44:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1954584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அருங்காட்சியகம்|198|இந்திய அருங்காட்சியகம்}}</noinclude>வாளர், படத்தொகுப்பாளர், கதாசிரியர், உரையாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், பின்னணிப் பாடகர், பின்னணிப் பாடகி, நகைச்சுவை நடிகை, சண்டைக்காட்சி இயக்குநர் ஆகியோர் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தென்னிந்தியத் திரைப்படவர்த்தகர் சங்கம் அல்லது தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அனுப்பலாம். இதற்கு நுழைவுக்கட்டணம் இல்லை.{{float_right|ஆ.ஞா.}}
<section end="இந்திய அரசு விருதுகள்"/>
<section begin="இந்திய அருங்காட்சியகம்"/>
{{dhr}}
<b>இந்திய அருங்காட்சியகம்:</b> இந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களுள் மிகப் பழமையானது கல்கத்தாவிலுள்ளது. இது கி.பி. 1814-ஆம் ஆண்டில் ஆசியச் சங்கத்தினரால் (Asiatic Society) கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர் டாக்டர் நதானியல் வாலித்து என்னும் தென்மார்க்குத் (Denmark) தாவரவியலார் ஆவர். ஆசியச் சங்கம் கி.பி.1856-ஆம் ஆண்டில் அருங்காட்சியகங்களின் பெருகிவரும் சேகரிப்புகளை மாட்சிமையுள்ள அருங்காட்சியகத்தில் (Imperial Museum) சேமித்து வைக்க வேண்டி, இந்திய அரசுக்குக் குறிப்பாணை ஒன்றை அனுப்பியது. இதன் விளைவாகக் கி.பி.1866-இல் இயற்றப்பட்டதே இந்திய அருங்காட்சியகச் சட்டம். இச்சட்டம் இந்திய அருங்காட்சியகத்தின் நோக்கம், வடிவமைப்பு ஆகியவற்றை வரையறுத்துள்ளது. அருங்காட்சியகத்தை நிருவகிப்பதற்கென அறங்காவலர் குழுவொன்று (Board of Trustees) அமைக்கப்பட்டுப் புதிய கட்டிடமொன்றும் வழங்கப்பட்டது. இதன் பின்னர்க் கி.பி. 1875-ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் அருங்காட்சியகக் கூடங்கள் மாற்றப்பட்டுத் திருத்தியமைக்கப்பட்டு, கி.பி. 1878-ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டன. ஒவ்வொரு கூடமும் அந்தந்தத் துறையின் இந்திய அரசுப் பரப்பாய்வின் (Survery of the Government of India) மேற்பார்வையிலிருந்தது. தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 222
|bSize = 468
|cWidth = 375
|cHeight = 282
|oTop = 248
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|இந்திய அருங்காட்சியகத்தின் முகப்புத் தோற்றம் நன்றி: இந்திய அருங்காட்சியகம் - கல்கத்தா}}<noinclude></noinclude>
lic8jdagqbwfr23j8yd7cut468b8jrw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/225
250
623941
1954586
1872984
2026-07-19T06:46:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1954586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அலுவலகம்|201|இந்திய அலுவலகம்}}</noinclude>பொருள்கள், இந்தியத் தாதுப்பொருள்களின் மண்ணடுக்காய்வுகள் (Stratigraphy), தாதுப்பொருள்களின் தொழில்பண்புகள், வகைப்பாட்டுப் புவியியல் இவற்றைக் கொண்ட நான்கு பிரிவுகள் உள்ளன.
கல்கத்தாவிலுள்ள ‘இந்திய அருங்காட்சியகம்’ பொருள்களின் சேகரிப்பில் மிகப் பெரிய ‘பொருட்கலைக் களஞ்சிய’ மாகத் திகழ்கிறது. இவ்வருங்காட்சியகம் இயற்கையின் மேன்மையினையும் இந்தியாவின் கலை, பண்பாடு ஆகியவற்றையும் சிறப்புற எடுத்துரைக்கிறது. {{float_right|என்.அ.}}
<b>துணை நூல்:</b>
Indian Museum, General Guide Book, Published by Indian Museum, Calcutta, 1916.
<section end="இந்திய அருங்காட்சியகம்"/>
<section begin="இந்திய அலுவலகம்"/>
{{dhr}}
<b>இந்திய அலுவலகம்</b> என்பது, இந்தியா விடுதலை பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் ஆங்கில அரசாங்கம் இந்திய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்படுத்தியிருந்த ஒன்றாகும். இந்த இந்திய அலுவலகம் (India Office) ஆங்கில அரசாங்கத்தின் ஒரு பாகமாகவே கி.பி. 1858-ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்தது. இந்தியா முழுவதற்கும் ஒரு தலைமை அரசாங்கம் தலைநகரத்தில் இருக்கவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசாங்கத்துக்குத் தலைமையாக இங்கிலாந்தில் ஓர் அரசாங்கம் இருந்தது; இதுவே இந்திய அரசாங்கம் (Home Government) எனப்பட்டது.
ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் சுழகம் (English East India Company) இந்தியாவில் வாணிகம் செய்து பெரும்பொருளீட்டி, ஒரு பேரரசையும் இங்கு (Empire) நிறுவிய காலத்திலிருந்து கி.பி. 1858-ஆம் ஆண்டுவரை, ஆங்கில இந்தியப் பேரரசை அவ்வாணிகக்கழகத்தின் இயக்குநர் மன்றமும் (Court of Directors) பங்குதாரர் கழகமும் (Court of Proprietors), கி.பி. 1784-ஆம் ஆண்டின் பிட்டு இந்தியச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கட்டுப்பாட்டுக் கழகமும் (Board of Control). அதற்குத் துணை செய்த இரகசியக் குழுவும் (Committee of Secret) ஆட்சி செய்தன. இந்நிறுவனங்களின் பரிணாம வளர்ச்சியே இங்கிலாந்திலுள்ள இந்திய அரசாங்கமாக ஆயிற்று. கிழக்கிந்திய வாணிகக்கழகம் இந்திய அரசாங்கத்தைத் தனது இயக்குநர் மன்றத்தின் வாயிலாகக் கட்டுப்படுத்த அதிகாரம் பெற்றது. அவ்வாறே ஆங்கில அரசாங்கம் இந்தியாவின் குடிமை அரசாங்கத்தையும் (Civil Government). இராணுவ அரசாங்கத்தையும் (Military Administration), வரி வருமானங்களையும் (Revenues) கட்டுப்பாட்டுக் கழகத்தின் மூலமாகக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் முழு அதிகாரம் பெற்றது. இவ்வாறு இந்திய அரசாங்கமானது வாணிகக் கழகத்தின் கட்டுப்பாட்டிலும், ஆங்கில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் கி.பி. 1858-ஆம் ஆண்டு வரை இருந்த அமைப்பு இரு கட்டுப்பாட்டு முறை (Dual Control) எனப்படும்.
இந்திய சிப்பாய்ப் போர் கி.பி. 1857-58-ஆம் ஆண்டுகளில் நடந்து முடிந்த பின்னர், கி.பி. 1858-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி, மேற்படி இரு கட்டுப்பாட்டு முறை நீக்கப்பட்டு, கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாரிடமிருந்த இந்தியப் பேராசு நாடு அக்கழகத்தாரிடமிருந்து எடுக்கப்பட்டு, ஆங்கில அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டுப்பாட்டுக் கழகமும், இயக்குநர் கழகமும் இந்திய வரி வருமானங்களின் மீதும் இந்திய அரசாங்கத்தின்மீதும் செலுத்திவந்த உயர்தர அதிகாரங்களெல்லாம் ஓர் இந்தியச் செயலரிடம் (Secretary of State for India) கொடுக்கப்பட்டன. இதற்கு முன்னரே கட்டுப்பாட்டுக் கழக உறுப்பினருடைய எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட, அக்கழகத்தினருடைய அதிகாரங்களெல்லாம் அக்கழகத்தின் தலைவரையே வந்தடைந்தன; கட்டுப்பாட்டுக் கழகத்தின் தலைவரே நாளடைவில் இந்தியச் செயலராக ஆனார்.
இந்தியச் செயலரே இந்தியாவைப் பற்றிய எல்லாப் பொருள்களையும் பற்றி ஆங்கில அரசருக்கு ஆலோசனை வழங்குதற்பொருட்டு, கி.பி. 1858-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அமர்த்தப்பட்ட அரசியல் ஆலோசகர் (Constitutional Adviser) ஆனார். அவர் பழைய கட்டுப்பாட்டுக் கழகம், இயக்குநர் கழகம், கிழக்கிந்திய வாணிகக் கழகம், இரகசியக் குழு ஆகியவற்றுக்கு இந்திய அரசாங்கத்தின் மீதும், நிதிகள் மீதும் இருந்த முழுக்கட்டுப்பாட்டு அதிகாரங்களைப் பெற்றிருந்த காரணத்தினால், அவருக்கு இந்தியாவிலுள்ள அரசப் பேராளர் (Viceroy and Governor general) உள்பட எந்த ஆங்கில இந்திய அதிகாரிக்கும் ஆணைகள் (Orders) விடுப்பதற்கு முழு அதிகாரம் இருந்தது, இந்தியச் செயலருக்கு உதவியாக ஓர் இந்திய மன்றமும் (Council of India), ஒரு புதிய ஆட்சித் துறையும் (A New Department) கி.பி. 1858-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வாயிலாக நிறுவப்பட்டன. இந்தியச் செயலருக்கு இருந்த விரிவான அதிகாரங்களுள்ளும், பெரும் பொறுப்புகளுள்ளும் பல அவருடைய நேர்முகப்பொறுப்புகள் (Personal Responsibilities) ஆகும். மற்றப் பொறுப்புகளை அவர் தமது ஆலோசனைக்<noinclude>
வா. க. 3-26</noinclude>
0lsc3adsue9qc4mi4ruplc9wmr6aa1v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/227
250
623993
1954587
1872986
2026-07-19T06:47:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1954587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அலுவலகம்|203|இந்திய அழகியல்}}</noinclude>இந்நிறுவனத்துக்குத் தேவையான அதிகாரிகளை ஆலோசனை மன்றத்தில் செயலர் அமர்த்தினார்; சிறிய பதவிகளுக்கு இங்கிலாந்தின் குடிமையியல் பணி விதிகளுக்கேற்ப ஆட்கள் அமர்த்தப்பட்டனர். இவ்வலுவலகத்தில் ஒவ்வொரு துறைக்கும் நடைபெறும் கடிதப்போக்குவரத்துகளை நடத்துவதற்கு ஒரு செயலர் இருந்தார். இவ்வலுவலகத்தில் குறிப்பிடத்தக்கவர் நிதிச் செயலர் (Financial Secretary), நீதி, பொதுச் செயலர் (Judicial and Public Secretary), இராணுவச் செயலர்(Military Secretary), அரசியல் இரகசியச் செயலர் (Political and Secret Secretary), பொதுப் பணிகள் (Public works); வரி வருமானம், புள்ளி விவரம் (Revenue and Statistics); இந்திய ஐரோப்பிய தந்தி முறை இயக்குநர் (Director of Indo-European Telegraph), கணக்கதிகாரி, (Accountant General), பொருள்கள் துறை இயக்குநர் (Director, Store Department), பதிவு - பதிவேடுகள் (Registry and Records Department) பற்றிய அதிகாரி முதலியோராவர். மற்ற அலுவலர் இரயில்வே கழகங்களுக்கான அரசாங்க இயக்குநர், நூலகர், இந்திய மாணவர்களுக்கான செயலர், மருத்துவ அதிகாரிகள், சட்ட ஆலோசகர், இராணுவ உடைகள் ஆய்வாளர், பொதுப் பணிகளின் அளவையாளர், ஆங்கிலப் போர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்ட இந்தியப் படை அதிகாரிகள், தணிக்கை அதிகாரி முதலியோர் ஆவர்.
இத்தகைய விரிவான தலைமை அதிகாரமும் பரந்த அலுவலக அமைப்புமுடைய இந்தியச் செயலர் அலுவலகமானது, 1947-ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்படி இந்தியா என்றும், பாகிசுத்தான் என்றும் இரு இறைமை நாடுகளாக இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர், 1947 ஆகசுட்டு 14-ஆம் நாளிலிருந்து மறைத்து விட்டது. அச்செயலர் அலுவலகம் நீக்கப்படுதல் வேண்டுமென்று அச்சட்டத்தில் கூறப்பட்டது. இந்தியாவுடனும் பாகிசுத்தானுடனும் ஆங்கில அரசாங்கத்துக்கு உள்ள உறவுகளை நடத்தும் பொறுப்பு, பொது அரசு (Commonwealth) எனப்படும் தன்னாட்சி உரிமை நாடுகளுடன் ஆங்கில நாட்டு உறவுகளை நடத்தும் அலுவலகத்திடம் (Office of the Secretary of the Commonwealth Relations) ஒப்படைக்கப்பட்டது. இப்பொழுது பழைய இந்திய அலுவலகத்தின் சின்னங்களாக இருப்பவை இந்திய உயராணையர் அலுவலகமும் இந்திய அலுவலக நூல்நிலையமும் (India Office Library) ஆகும். பண்டைய இந்திய வரலாற்று ஏடுகளையும், அறிவியல், கலைகள், தொழில்கள், அரசாங்க முறைகள் முதலியவை பற்றிய ஏடுகளையும், ஆங்கில இந்திய அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்ற கடிதங்களையும், மற்ற எண்ணிறந்த பதிவேடுகளையும் இந்நூலகத்தார் திரட்டிப் பாதுகாத்து, ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுமாறு செய்து வருகின்றனர்; இது ஒரு பெருந்தொண்டு ஆகும்.
துணை நூல்கள்:
<b>Morriott, J.A.R</b>., English Political Institutions, Oxford, 1938.
<b>Lowell, S</b>., The Government of England, Macmilian, 1938.
<section end="இந்திய அலுவலகம்"/>
<section begin="இந்திய அழகியல்"/>
{{dhr}}
<b>இந்திய அழகியல்: அழகு: </b> அழகு என்பது உலகப் பொருள்களிடையே காணப்படும் ஒத்த தன்மை, இணக்க அமைப்பு, முரண், ஒழுங்கு, அருமை, தோய்வு, மோனம் என்பவற்றால் ஏற்படுவதாய உயிரால் உணரப்படும் சிறந்த தெய்விகப் பொருளாகும் என்பர் அறிஞர்.
அழகே வடிவமானது என்று ஒருவரால் மதிக்கப்படும் பொருள் மற்றொருவரால் அழகற்றது என்று, கூறப்படுவதைக் காணலாம். அவ்வாறாயின், அழகென்பது பொருளினிடத்து இல்லை; காண்பான் மனத்திடமே உள்ளது என்றாவது கூறிவிடலாமா எனில், அதுவும் இயலுவதாக இல்லை. காண்பான் மனத்திடத்தேதான் அழகு இருக்கிறதெனில், பொருள் இல்லாமலும் அவன் அழகை அநுபவிக்க வேண்டும். அதுவும் இயலாத காரியம். எனவே, ‘அழகென்பது பொருளிடத்தும் காண்பான் மனத்தும் ஒரு சேரத் தோன்றுகின்ற ஒன்றுதான் என நினைக்க வேண்டியுள்ளது’ என்று அ.ச. ஞானசம்பந்தனார் கூறுவர்.
அழகு என்பது ஒத்த தன்மையாலும் ஏற்படலாம். பச்சைப் பசேலென்று பாங்குடன் வளர்ந்த நெற்பயிர்த் தோற்றம் கண்ணுக்கு அழகளிக்கிறது. ஒத்த அறிஞர்கள் கூடிய அவை அறிவிற்கு அழகளிக்கிறது.
அழகு என்பது இணக்க அமைப்பாலும் ஏற்படலாம். பசுஞ்சோலையிலே ஆண்மயில் பெட்டை மயிலோடு இணக்கமாகத் தோகையை விரித்தாடும் காட்சி அழகு பயக்கும்.
அழகு என்பது முரணாலும் ஏற்படலாம். உலகமே வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) உடையதென்பர். சிவந்த மேனியுடையவர்கள் கருஙகூந்தல் கொண்டிருந்தால்தான் அழகு மிகுகிறது. வெள்ளை விழியிடையே கருமணியிருத்தலால் தானே விழிக்கே அழகு உண்டாகிறது. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவிலும் நிழலிலும் அழகு இருக்கத்தானே செய்கிறது.{{nop}}<noinclude></noinclude>
hbt1wjzx3zch2nr42zvh89km1tsv7ov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/230
250
624010
1954589
1872989
2026-07-19T06:48:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1954589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அழகியல்|206|இந்திய அளவையியல்}}</noinclude><b>உலகக் கலைவரலாற்றில் இந்தியக் கலை:</b> இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞர்கள், பொறிபுலன் கடந்த கடவுள் தன்மைக்கு அழகு வடிவம் தந்து நாட்டு ஒருமைப்பாட்டை வளர்த்துள்ளனர். இந்த ஆன்மிகச் சிறப்பினை உலகக் கலைக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால், நம்நாடு பன்னெடுங்காலமாகப் பிற நாடுகளுக்கு ஆன்மிக விழிப்புணர்வை நல்கி வந்துள்ளதை உணரலாம்.
மேனாட்டிலே கோதிக்கலை (Gothic Art)யிலுள்ள ஆன்மிக நிலைகளுக்குக் காரணம் கீழை நாடுகளின் ஆன்மிக விளக்கமே என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வணிகம் காரணமாகக் கடல் வழியாகவும் வடமேற்கெல்லை வழியாகவும் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இங்குக் கலந்து வாழ்ந்து, கலை வாழ்விலே பிணைப்புக் கொண்டிருந்தனர். யவனர்களாகிய அவர்கள் இங்கிருந்து பல கலை நுட்பங்களை அங்குக் கொண்டு சென்றும் தம் நாட்டிலிருந்து, சிலவற்றைக் கொணர்ந்து இங்குக் கொடுத்தும் கலையாக்கம் புரித்து அழகுக்கு அணி செய்தனர்.
தென்அமெரிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இந்தியக் கலைக் கூறுகள் தென்படுகின்றன என்று டாக்டர் சி.பி. இராமசாமி ஐயர் கூறுகிறார். ஆக, இந்தியக் கலையன்னை தன் ஆன்மிக அழகாற்றலால் உலகெங்கிலும் உலாவந்து தன் அடிச்சுவட்டைப் பதித்திருக்கின்றாள். இதனை விளக்கமாகக் கவனிக்கும்பொழுது தென் நாட்டிலுள்ள சிதம்பரம், தஞ்சை, காஞ்சி, வடநாட்டிலுள்ள சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள கோபுரங்களின் அமைப்புக் கூறுகளைக் கிரேக்கத்திலுள்ள பார்த்தனன் கோயிலில் காணலாமென்றும், மணிமேகலையில் வரும் கந்திற் பாவையையும் கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின் குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் என்ற முதியான் கோட்டத்தையும் நினைவுபடுத்துகின்ற வகையில் எரெக்கியம் என்ற சிறுகோயில் அமைந்துள்ளதையும் இரா. நாகசாமி குறிப்பிடுகிறார்.
சாவாவிலுள்ள போரோபுதூர் முதலிய இடங்களிலும் கம்போடியாவில் அங்கோர்வாட்டு (Angkorwat), பிரம்பானாம் (Prambanam), அங்கோர்தோம் (Angkorthom) என்னுமிடங்களிலும் பர்மாவில் பாகன் (Pagan) என்னுமிடத்திலும் அமைந்துள்ள இந்து, பௌத்தக் கோயில்கள் இந்தியாவின் ஆன்மிக வளத்தினையும் கட்டடக் கலை நுட்பத்தினையும் கொண்டு விளங்குகின்றன என்று இராதா கமல் முகர்சி குறிப்பிடுகிறார். சிறப்பாகக் கம்போடியாவிலே அங்கோர்வாட்டிலுள்ள சிற்பம் திருப்பாற் கடலைக் கடைகின்ற காட்சியினைச் சித்திரித்தல் நம் கலை மாண்பைப் போற்றுதலாகும்.
இலங்கையில் பொலனருவை, அநுராதபுரம் ஆகிய இடங்களிலுள்ள சிற்பமாட்சியும் சிகிரியாலிலுள்ள ஓவியமாட்சியும் இந்தியாவிடமிருந்து கற்ற கலைத்திறனுக்கு நற்சான்றுகளாக விளங்குகின்றன.
<b>முடிவுரை:</b> கலையைப் படைப்பவன் மட்டும் அழகநுபவம் (Aesthetic Experience) கொண்டு விட்டால் கலையின் பயனைப் பெற இயலாது, எந்த நோக்கத்துடன் கலை படைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினைச் சுவைஞனும் புரிந்து கொண்டு, அதனை அழகனுபவத்துடன் சுவைத்தால்தான் கலையின் பயனை நுகர வாய்ப்பேற்படும்.
‘ஓர் உணர்ச்சியோடு இயைந்து நுண்ணுணர் வால் எய்தும் அநுபவமே அழகியலநுபவம்’ (The aesthetic experience is the experience of intellectul joy accompanied by an emotion) என்று கூறுகிறார் தெகார்டே (Descartes). எனவே இந்தியக் கலையினில் ஒன்றுபட்டு இயைந்து ஆன்மிக வளத்தினையெய்திக் கலைக்கு உயிரெனத் திசுழும் அழகினை (இந்திய அழகியலை) விளக்கமுறச் செய்யலாம்.
{{float_right|ஏ.எஸ்.பி.}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gnana Sambandam, A.S.,</b> Ilakkiyak Kalai, Kazhaga Publication, Madras, 1960.
<b>Venkataswami, Mayilaisieeni.,</b> Thamilar Valartha Azhagu Kalaigal, Pari Nilayam, Madras 1969.
<b>Reid, L.A.,</b> A Study in Aesthetics, The Macmillan & Co., New York, 1931.
<b>Schiller, F.,</b> On the Aesthetic Education of man, Routledge & Keganpaul, 1954.
<section end="இந்திய அழகியல்"/>
<section begin="இந்திய அளவையியல்"/>
{{dhr}}
<b>இந்திய அளவையியல்:</b> சிந்தனை என்பது அறிவு மலரத் தொடங்கும்போதே தொடங்கும் ஒரு பண்பாகும். இது கல்வி அறிவு அற்றோரிடத்தும் ஏதுமறியாப் பிராணிகளிடத்தும் காணக்கிடப்பதாகும். ‘பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறு நுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்ப’ (புறம்.173) போன்ற வழக்குகள் இக்கருத்தை நன்கு தெளிவுபடுத்துன்றன. ஆனால் இந்தச் சிந்தனையைச் சீரிய வகையில் செம்மையுற அமைத்து நடத்திச் செல்வது அளவையியலாகும். ஆகவே அறிஞரும்,
<poem>“பண்ணிலார்க் கில்லாத பாட்டின் பயன்போலும்
கண்ணிலார்க் கில்லாத கவின்போன்று–மெண்ணிலா</poem><noinclude></noinclude>
e9kdx28ordac2epqxt09n40thht57zb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/237
250
624292
1954592
1873697
2026-07-19T06:50:39Z
ஹர்ஷியா பேகம்
15001
1954592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அளவையியல்||இந்திய அறிவாராய்ச்சியியல்}}</noinclude>கொள்கை புதிய கொள்கைக்கு மிக அண்மையானதே.
விசேடமாவது ஓர் அணுவை மற்றதினின்றும் பிரித்தறிய உதவும் தனிமைப் பண்பு ஆகும். பிரிவாற்றாத் தொடர்பாவது பொருளுக்கும் நிறம், சுவை போன்றவற்றிற்கும் உள்ள தொடர்பு ஆகும். இவர்கள் கருத்தில் காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறானதும் முன்பு இல்லாததும் காரியத்தில் இயல்வதுமாகும். இவர்களை அசத்காரியவாதிகள் என்பர். இவர்கள் இரு பரமாணுக்கள் ஓர் இரட்டையணுவையும், அவை மூன்று ஓர்பேரணுவையும் உருவாக்குகின்றன என்பர். அவை காணப்படும் இவ்வுலகை உருவாக்கியுள்ளன. பரமாணு கருதலளவையினாலேயே அறியத்தக்கது. காரணம் பொருட்காரணம் (Material cause), வடிவக் காரணம் (Formal cause), கருவி (Instrumental cause), என மூவகைப்படும். உலகின்கண் உணரப்படும் பொருள்கள் மேற் கூறியவற்றுள் ஏதேனும் ஒன்றன்கீழ் அமைக்கப்படக் கூடியதே.
<b>அறன்:</b> பொதுவாக வைதிக சமயமும் அதன் கண் காணப்படத் தக்க அற வழியும் இவர்கள் ஏற்றதே. இவர்கள் பெரும்பாலும் சைவர்களாவர். வேதங்கள் இறைவன் அளித்தவை என்று நம்பினார்கள். கருமம், மறுபிறப்பு முதலியன இவர்களால் ஏற்கப்பட்டன. கடவுள் உண்டு என்ற கருத்து இவர்களால் மிக வலுவான வாதங்களுடன் நிறுவப்பட்டது. படைப்பு, அழிவுகளை நிகழ்த்தவும், அணுக்களை இயக்கவும், பலன்தருவோனாகவும், வேதத்தைக் காண்பவனாகவும் இறைவன் காணப்பட்டான். இவ்வடிப்படைப் பொருள்களைப் பற்றிய தவறான அறிவை நீக்கி, சரியான அறிவு பெற்று இருத்தலே தொடர்பை நீக்கும் வழியாகவும் விடுதலைக்கு வித்தாகவும் கருதப்பட்டது.
அளவையியல் கோட்பாடுகள் மெய்ப்பொருட்கோட்பாடுகளுடன் கலந்து நிற்றல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அக்கருத்துகள் வளரும்போது காலப்போக்கில் சிக்கல் மிகும் காலங்களில் (When becomes complex), அவை மெய்ப்பொருள் கருத்துகளுக்குத் துணை (Subordinate) யாகிவிடுகின்றன். இவர்கள் காலத்திற்கேற்பக் கருத்துகள் மாற்றம் பெறலாம் என்பதை உணர்ந்தவர்களாக உள்ளனர். இத்துறை எத்துறையினருக்கும் எந்நாட்டவர்க்கும் பின்தங்கியது அன்று யாவரும் கருத்துச் சிக்கனத்தையும் தெளிவையும் (Precision of Thought) பெற இவர்கள் வழி வகுத்துத் தந்தனர். ஆகவே தான் ‘ஆற்றின் அளவு அறிந்து கற்க அவையஞ்சா, மாற்றங் கொடுத்தற் பொருட்டு’ எனவும், ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்’ எனவும் அறிஞர் பெருமக்கள் அளவையியலின் இன்றியமையாமையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். {{float_right|அ.ரா.}}
<b>துணை நூல்கள்:
Devasenapathi, V.A.</b>, Saiva Siddhanta as expounded in the Sivagnana Siddhiyar and its Six Commentaries, University of Madras, 1974.
<b>Ingalls, D.H.H.</b>, Materials for the Study of the Navya-Nyaya Logic, Cambridge, Mass., 1951.
<section end="இந்திய அளவையியல்"/>
<section begin="இந்திய அறிவாராய்ச்சியியல்"/>
{{dhr}}
<b>இந்திய அறிவாராய்ச்சியியல்:</b> அறிவு என்பது ஆன்மாவின் அறியும் தன்மை. அது இரண்டு வகைப்படும். ஒன்று ஞாபகம் (Remembrance); மற்றொன்று அனுபவம் (Experience).
<b>அனுபவம்:</b> அனுபவம் உண்மையான அனுபவம், பொய்யான தோற்றம் என இருவகைப்படும். உண்மையான அனுபவம் பொருள்களின் குணங்களை அறிதல். பொய்யான அனுபவம் அல்லது தோற்றம் என்பது சிப்பியில் வெள்ளி (Conch Shell - Silver) யைப் பார்ப்பது.
<b>அனுபவத்தின் வகைகள்</b> (Kinds of Experience) : உண்மையான அனுபவம் நான்கு வகைப்படும். அவை புலன்களால் அறிகின்ற அறிவு (Perceptual Knowledge), அனுமானம் (Inference), பொருள்களை ஒத்துப் பார்ப்பதில் (Comparison) கிடைக்கிற அறிவு, வேதங்களில் கிடைக்கிற அறிவு (Verbal Testimony) என்பன.
<b>புலனறிவு</b> (Perception): புலன்கன் (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன) பொருள்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகின்ற அறிவு. இது இரண்டு வகைப்படும்; ஒன்று தீர்மானிக்க முடியாதது (Indeterminate); மற்றொன்று தீர்மானிக்கக் கூடியது (Determinate).
பொருள்கள் தன்மையை அல்லது குணங்களைத் தீர்மானிக்க முடியாமலிருந்தால், அது தீர்மானிக்க முடியாத புலனறிவு எடுத்துக்காட்டு: இது ஒரு பொருள் (This is Something). பொருள்களின் தன்மையைத் தீர்மானிக்க முடிந்தால், அது தீர்மானிக்க முடிகிற (Determinate) புலனறிவு; எடுத்துக்காட்டு; இவன் நிறம் கறுப்பு. இவன் ஒர் அந்தணன்.
புலனறிவு மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, அழியாதது (Eternal) என்றும் அழிவது (Transitory) என்றும் பிரிக்கப்படுகிறது. முதலாம் பிரிவில் கடவுள் சேர்க்கப்படுகிறார். இரண்டாம் பிரிவில் மனிதனும் மற்ற உயிரினங்களும்<noinclude></noinclude>
1rha7adyndv2dzhr1gwbbiep6ctb6fx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/240
250
624345
1954594
1873707
2026-07-19T06:52:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1954594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய அறிவியற் கழகம்|216|இந்திய ஆட்சிச் சட்டம்}}</noinclude>யையும் ஒத்துக் கொள்கிறது. மீமாம்சை புலனறிவு, உவமை, சுருதி (Testimony), அருத்தாபத்தி (Poptulation); அனுபலாப்தி (Non-perception) ஆகியவற்றை ஒத்துக்கொள்கிறது.
அத்துவித வேதாந்தம், புலனறிவையும் அனுமானத்தையும் சுருதியையும் அறிவியற் கொள்கைகளாக ஒத்துக் கொள்கிறது. வேதங்கள் உலகம் தொடங்கிய நாள் முதலாக இருக்கின்றன. உலகம் அழிந்துவிட்டாலும் இறைவன் உள்ளத்தில் வேதக்கருத்துகள் அமைந்திருக்கும். மீண்டும் இறைவனால் உலகம் படைக்கப்படும் பொழுது அவை உலகத்தோடு தோற்றுவிக்கப்படும் என்று கருதுகின்றனர்.
<b>துணை நூல்கள்:
Datta & Chatterjee</b>, An Introduction to Indian Philosophy, University of Calcutta, 1968.
<b>Devasenapathi, V.A.</b>, Saiva Siddhanta, University of Madras, 1960.
<b>Piet, J.H.,</b> A Logical Presentation of the Saiva Siddhanta Philosophy, <b>Diocesan Press, Madras</b>, 1952.
<b>Panniah, V.</b>, The Siva Siddhanta Theory of knowledge, Annamalai University, 1952.
<b>Ramnath Sharma</b>, Logic, Kedar Nath Ram Nath & Co., Meerut, 1981.
<section end="இந்திய அறிவாராய்ச்சியியல்"/>
<section begin="இந்திய அறிவியற் கழகம்"/>
{{dhr}}
<b>இந்திய அறிவியற் கழகம்</b>: பம்பாயைச் சேர்ந்த சே.என். தாட்டா (J.N. Tata) என்பவரால் பெங்களூரில் (கர்நாடக மாநிலத்தில்) தோற்றுவிக்கப் பெற்றது. இந்தியாவின் தொழில் வளத்தை முன்னேற்ற உதவும் பாடத் துறைகளில் உயர்கல்வி அளிப்பதும் உயர்நிலை ஆய்வு நடத்துவதும் இக்கழகத்தின் தலையாய குறிக்கோளாகும். இந்திய அறிவியற் கழகம் (Indian Institute of Science) தொடங்கப்படும் போது, மூன்று துறைகளையும் இருபத்து நான்கு மாணவர்களையும் ஆறு கல்வியாளர்களையும் கொண்ட சிறிய கழகமாகத்தான் இருந்தது. ஆனால், இன்று இக்கழகத்தில் உள்ள அறிவியல், பொறியியல் ஆகிய துறைகள் இருபதுக்கு மேல் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. மேலும், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களும் இக்கழகத்தில் படிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர். இக்கழகத்தில் அறிவியல், பொறியியல் ஆகிய பாடத்துறைகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு ஆகியன உள்ளன. இங்கு ஏறத்தாழ இரண்டரை இலட்சம் நூல்களைக் கொண்ட பெரிய நூலகம் ஒன்றும் உள்ளது. இங்கு 2350 ஆராய்ச்சி இதழ்கள் தருவிக்கப்படுகின்றன. இக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சிப் பணிகளுக்காக மைய அரசு பல்கலைக்கழக நிலையினை (Deemed University) இதற்கு வழங்கியுள்ளது. இக்கழகம் தில்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Adademy), கல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கூட்டுக் கழகம் (Indian Science Congress Association) ஆகியவை போன்று, இந்திய அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. இக்கழகத்தின் வளாகம் 391 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
<section end="இந்திய அறிவியற் கழகம்"/>
<section begin="இந்திய ஆட்சிச் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்திய ஆட்சிச் சட்டம் (1935)</b>: இந்திய ஆட்சிச் சட்டம் 1935-ஆம் ஆண்டு ஆகசுட்டு இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இந்திய அரசியலுக்கு ஒரு கூட்டாட்சி அமைப்பினை வழங்கியது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நிருவாக அதிகாரங்கள், அரசியலமைப்புக் சட்டத்திலேயே மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. மாகாணங்களுக்கான அதிகாரங்கள், அசாம், வங்காளம், ஒரிசா, பீகார், மத்திய மாகாணங்கள், பஞ்சாபு, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து, பம்பாய், சென்னை, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பதினொரு மாகாணங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.
<b>சுதேச அரசுகள்:</b> இந்தியக் கூட்டாட்சி ஏற்பாட்டின்படி 1935-ஆம் ஆண்டு சுதேச அரசுகள் தங்களுக்கு முன்பிருந்த சுயேச்சையில் பெரிய பங்கினை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. கூட்டாட்சி மத்திய அரசு (Central Government) எல்லா உறுப்பு மாநிலங்கள்மீதும் ஒரே அளவு ஆதிக்கம் செலுத்த வேண்டுவதே முறையாயினும், சுதேச அரசுகளைப் பொறுத்தவரையில் ஒவ்வோர் அரசு மீதும் ஒவ்வொரு வகை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று ஆட்சிச் சட்டமே குறித்தது. கூட்டாட்சி மத்திய அரசு செலுத்தக்கூடிய அதிகாரங்களும் சிலவற்றை அச்சுதேச அரசுகளின் இசைவின்றிச் செலுத்த முடியாது; ஆனால், மாநிலங்களைப் பொறுத்த வரையில் அவை ஒவ்வொன்றின் மீதும் ஒரே வகை ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. மேலும், கூட்டாட்சி அமைப்பில் சேர வேண்டியது மாநிலங்களைப் பொறுத்தவரையில் கட்டாயமானது. சுதேச அரசுகள் தங்கள் விருப்பத்தின்பேரில் கூட்டாட்சியில் சேருபவை. அன்றியும், சுதேச அரசுகளின் இராச்சியங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மிகவும் வேறுபட்டவை, ஐதராபாத்திலிருந்து மிகச்<noinclude></noinclude>
9ni8z5nnw044usmrcf99b1wkwfo3b1u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/243
250
624350
1954596
1874047
2026-07-19T06:53:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1954596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஆட்சிச் சட்டம்|219|இந்திய ஆட்சிப்பணி}}</noinclude>மன்றமாக, 1937-இல் ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் நிறுவப்பட்டது.
<b>மைய அரசாங்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்</b>: மைய அரசாங்கம் 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி. எவ்வாறு அமைக்கப்பட்டிருந்ததோ. அந்த முறையில் பெரும்பாலும் தொடர்ந்து இயங்கி வந்தது. அரசியல் துறையை மட்டில் ஆங்கிலேய அரசின் பேராளர்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். அவர்கள் சுதேச சமசுதானங்களுடன் ஆங்கில அரசின் உறவுகளை நடத்திக் கொள்வதற்காக ஆங்கிலேய அரசால் அமர்த்தப்பட்டவர்கள். நாணயமாற்று, செலாவணி, அவற்றின் அன்றாட நிருவாகம் ஆகியவை தனியார் நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த இருப்பு வங்கியிடம் (Reserve Bank) ஒப்படைக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் புதிய சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாறு அமைச்சரவையினால் நடத்தப்பட்ட மாநில அரசுகள் அரசப்பேராளருடன் (Viccroy) கூடிய அமைச்சர் குழுவுக்குப் பொறுப்புடையவைல்ல என்று ஏற்கப்பட்டன. சிறப்பதிகாரங்களைச் செயற்படுத்தும்போதும், தம் இச்சையாகத் தம் முடிவுகளின்படி நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும் போதும், ஆளுநர், அரசப்பேராளரின் நேரடியான மேற்பார்வைக்குக் கட்டுப்பட்டவராவார். மாநிலங்களின் அவசர நெருக்கடி அறிவிப்பு அரசப் பேராளரால் அறிக்கையிடப்பட வேண்டும்: அவசரக்கால அரசாங்கமும் அரசப்பேராளருக்கே பொறுப்புடையதாகும். இந்திய ஆறுகளின் தண்ணீரைப் பயன்படுத்த மாநிலங்களுக்குள் போட்டி ஏற்படுகின்றபோது, அதுபற்றித் தீர்ப்புக் கூற அரசப்பேராளர் தனி வழக்குத் தீர்ப்பு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். இந்தியா முழுவதிலுமோ நாட்டின் எந்த ஒரு பகுதியிலோ அமைதிக்குப் பங்கம் வருகின்ற ஆபத்து நிலை இருந்தால் அரசப்பேராளர் நடவடிக்கை எடுப்பார். இதனால் மாகாணங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் அவருக்கு அக்கறை ஏற்பட்டதோடு நிலைமை மிகவும் சீர்குலையும் என்று கருதினால் மாநில அரசாங்கத்தில் அவர் தலையிடவும் வாய்ப்புகள் உண்டாயின. இந்தியா 15-8-1947-இல் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அதன் பின்பும் இச்சட்டம் தேவையான மாறுதலுடன் தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26-1-1950-இல் செயல்முறைக்கு வந்தது. இப்புதிய சட்டத்தின் 395-ஆம் பிரிவின்படி 1935- ஆம் ஆண்டு இந்திய ஆட்சிச்சட்டம் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.
<section end="இந்திய ஆட்சிச் சட்டம்"/>
<section begin="இத்திய ஆட்சிப்பணி"/>
{{dhr}}
<b>இத்திய ஆட்சிப்பணி</b>: மாவட்ட ஆட்சியர்கள், இணை ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் பல்வேறு அரசாங்க இலாக்காக்களின் தலைமைப் பொறுப்பேற்கும் செயலர்கள், இயக்குநர்கள், தலைமைச் செயலர்கள் ஆகியோருள் பெரும்பாலோர் இந்திய ஆட்சிப்பணியைச் (Indian Admi- nistrative Service) சார்ந்தவர்கள், இவர்கள் தங்கள் பெயரோடு வேறு எந்தப் பட்டத்தையும் சேர்த்துச் கொள்ளாது இ.ஆ.ப. என்னும் சுருக்கக் குறியீட்டை மட்டில் சேர்த்துக் கொள்வர். இந்தியாவின் எப்பகுதியிலும் பணிபுரியும் உரிமையும் கடமையும் கொண்டவர்கள் இவர்கள். இது போன்றே காவல் துறைப்பணிக்கும் அனைத்திந்திய அளவில் பணியாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். இவர்களை மத்திய வகையில் அரசும் மாநில அரசுகளும் தேவையான பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தபோது அவர்கள் இந்தியாவெங்கிலும் பணிபுரிய அலுவலர்களை அமர்த்தினர். இது தொடர்பாக, கி. பி. 1854-ஆம் ஆண்டு (Macaulay) ஓர் அறிக்கை அளித்தார். அவ்வறிக்கை இந்தியச் சீரியல் பணி (Indian Civil Service) என்னும் அமைப்பைப் பரிந்துரை செய்தது. இப்போதைய இ.ஆ.ப. அமைப்பிற்கு முன்னோடியாக இந்தியச் சீரியல் பணி (ஐ.சி.எசு) அமைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் இந்திய அளவிலான
பணிமுறை நடைமுறைக்கு வந்தது. அதன்படி இந்தியக் காவற்பணி (I.P.S.), இந்திய வனத்துறைப் பணி (I.F.S.). இந்தியக் கல்விப் பணி (Indian Educational Service), இந்திய வேளாண்மைப் பணி (Indian Agricultural Service), இந்தியச் சீரியல் விலங்கின மருத்துவப்பணி (Indian Civil Veterinary Service), இந்திய வனத்துறைப் பொறியாளர் பணி Indian Forest Engineering Service), இந்திய மருத்துவப் பணி (Indian Medical Service), இந்தியப் பொறியாளர் பணி (Indian Service of Engineers ) ஆகிய அமைப்புகள் செயற்பட்டன, மேற்குறிப்பிட்ட அமைப்புகள் 1906-ஆம் ஆண்டளவில் திட்டமிடப்பட்டு, 1919-ஆம் ஆண்டு சட்டப்படி முழுமையாகச் செயற்படத் தொங்கின. மாண்டெகு செம்சுபோர்டு (Montague Chelms Ford) 1921-ஆம் ஆண்டு பரிந்துரைத்தபடி இரட்டையர் ஆட்சி நடைமுறைக்கு வந்தபோது. மாநில அளவில் சில அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவற்றை அவர்கள் அம்மாநில ஆளுநரின்கீழ்ச் செயற்படுத்தினர். அந்நிலையில் அனைத்திந்திய ஆட்சிப்பணி முறையை எதிர்த்துத் தங்கள் மாநிலத்திற்குத் தேவையான பணியாளர்-<noinclude></noinclude>
nuhbmj3wvil4vpzzwjvbd4rzd91n2ee
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/246
250
624370
1954598
1874053
2026-07-19T06:55:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1954598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஆட்சிப்பணி|222|இந்திய ஆட்சிமுறை}}</noinclude>பயிற்சிக்குப் போகும் முன்னர் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் சில நாள் பயிற்சி பெறுகின்றனர். அம்மாநிலத்தில் அரசாங்க அலுவலர்களுக்கான நிருவாகப் பயிற்சி நிறுவனம் இருக்குமெனில் அங்குப் பயிற்சி பெறுகின்றனர். மாவட்ட அளவில் பயிற்சி பெறும்போது கீழ் மட்டத்திலிருந்து பல்வேறு நிலைகளில் நிருவாகப் பயிற்சி பெறுகிறார்கள். பெரும்பாலும் பல்வகைச் சிக்கல்களையும் கொண்ட மாவட்டங்களிலேயே இவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அம்மாவட்ட ஆட்சியருக்கு இப்பயிற்சியாளர்களைத் தனிப்பட்ட அக்கறையோடு கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. மக்களோடு தொடர்புடைய இப்பயிற்சியை முடித்துக்கொண்டு அம்மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் மாவட்ட அளவில் பயிற்சியைத் தொடங்கியது முதல் உயர் நிலைச்செயல்களைத் தலைமைச் செயலக அளவில் கற்றறியும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் முசோரியிலுள்ள தலைமைப் பயிற்சி நிலையத்தில் தமக்கென ஒதுக்கப்பட்ட ஆலோசகரோடு தொடர்பு வைத்துக் கொண்டு அறிவுரைகள் பெறுகிறார்கள். பயிற்சி பெறும் இப்பணியாளர்கள் அவ்வப்போது தாங்கள் தொடர்பு கொண்ட சிக்கல்கள் குறித்து அறிக்கைகள் தயார் செய்து தங்கள் தலைமை நிறுவனத்திற்கு அனுப்புகிறார்கள். இச்சிக்கல்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பாக முதல் ஆறுமாதக்காலப் பயிற்சியின் போதே மாவட்ட நிருவாகம் குறித்த பல்வேறு சிக்கல்களைக் குறித்து இவர்கள் அறிக்கைகள் அளிக்க வேண்டும். இவ்வறிக்கைகள் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டு இறுதி மதிப்பீட்டிற்கு உதவுகின்றன.
இவர்களது ஆறு மாதக்கால மாவட்டப் பயிற்சி அனுபவம், தலைமை நிறுவனத்தில் இவர்கள் பெறும் அடுத்த கட்டமான ஏழு மாதக் காலப் பயிற்சிக்குப் பெரிதும் துணை புரிகிறது. இறுதியில் மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு நடத்தும் தேர்வில் இவர்கள் பங்குகொண்டு தேறவேண்டும். அவ்வாறு தேர்ச்சியுற்றவர்கள் பயிற்சியாளர் என்னும் நிலையைக் கடந்து, அதிகாரி என்னும் தகுதியோடு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மாநில அளவில் இ.ஆ.ப. அலுவலர் ஒரு கோட்டத்தின் நிருவாகத் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். மாவட்ட ஆட்சியர் என்னும் பதவிக்குப் போவதற்கு முன்னதாக இவர் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து தலைமைச் செயலகத்தில் ஏதாவது ஒரு துறையில் துணைச் செயலரின்கீழ்ப் பணி புரிந்து, தம் நிருவாக அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ளவேண்டும். {{float_right|மு.சி.}}
<b>Maheswari Shriram</b>, Indian Administration, Orient Longmans, New Delhi, 1984.
<b>Shukla, V.N.</b>, Constitution of India, Eastern Book Company, Lucknow. 1950.
<b>Quraishi, M.A.</b>, Indian Administration, Pre and Post Independence, Ashish Publishing House, New Delhi, 1985.
<section end="இத்திய ஆட்சிப்பணி"/>
<section begin="இந்திய ஆட்சிமுறை"/>
{{dhr}}
<b>இந்திய ஆட்சிமுறை:</b> சட்டமன்றத்தால் சட்ட வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்ட நாட்டவர் விருப்பத்தைச் செயற்படுத்துதல்தான் ஆட்சிமுறை அல்லது நிருவாகம் (Administration) என்று கூறப்படும். இக்காலத்தில் காணப்படுகிற இந்திய ஆட்சி முறையின் அடித்தளங்களாக (Bases of Indian Administration) மனு, யாக்ஞவல்கிய உரிமை, குற்றஇயல் சட்டங்கள், எடேயா (Hedaya) என்னும் இசுலாமியச் சட்டம், ஆங்கிலக் குடிமை இயல், குற்ற இயல் சட்ட முறைகள். செர்சா என்ற ஆப்கானிய மன்னனாலும் (Sher - Shah) முகலாயப் பேரரசர் அக்பராலும் (Mughal Emperor Akbar) ஏற்படுத்தப்பட்ட நேரடித் தொடர்புடைய நிலவரிமுறை, சோழ மன்னர்களால் வளர்க்கப்பட்ட ஊராட்சிமுறை, அடுக்காக அமைந்த அதிகாரிகளாட்சிமுறை, ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக்கழகத்தாலும் ஆங்கிலப் பாராளுமன்றத்தாலும் நிறுவப்பட்ட அடுக்காட்சி முறை, மாவட்ட ஆட்சியர்கள் அலுவல் அமைப்பு, பாராளுமன்றக் குடியாட்சி முறை ஆகியவை இருக்கின்றன. ஆங்கில ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1757 முதல் 1947 வரையில்) இக்கால ஆட்சி முறைக்குரிய கொள்கைகளை ஒட்டிப் பல புதிய ஆட்சித்துறைகள் நிறுவப்பட்டன. சட்டம் செய்தற்குரிய அதிகாரங்களையும், மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் என்ற ஒரு தனியான அமைப்பையும், ஆட்சித்துறைகளையெல்லாம் சட்டங்களைச் செய்யுமாறு நடத்திக் கண்காணிக்கின்ற சட்டமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சரவையையும், உரிமைஇயல், குற்றஇயல் சட்டங்களை விளக்கி, உரிமைகளைப் பாதுகாத்து, நீதி வழங்குதற்கு நீதிமன்றங்களையும் இந்தியாவில் நிறுவியவர்கள் ஆங்கில ஆட்சியாளர்கள். ஆங்கிலப் பாராளுமன்றம் இயற்றிய ஒழுங்குமுறைச் சட்டம் (1773), இந்தியச் சட்டம் (1784), பட்டயச் சட்டங்கள் (Charter Acts, 1793, 1813, 1833, 1853) இந்திய அரசாங்கச் சட்டம் (1858), இந்தியச் சட்டமன்றங்களின் சட்டங்கள், (Indian Councils Acts, 1861, 1892, 1909), இந்திய அரசாங்கச் சட்டங்கள்<noinclude></noinclude>
pgiiizjt3fy4dtxr5fipzrytg73x82l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/250
250
624374
1954600
1874060
2026-07-19T06:57:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1954600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஆடலாசிரியர்கள்|226|இந்திய ஆடலாசிரியர்கள்}}</noinclude>மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, கல்வி, துப்புரவு, குடிநீர் வழங்குதல், பொதுப்பணிகள், சாலை அமைப்பு, பாதுகாப்பு முதலிய பணிகளை மக்களுடைய நலனுக்காக நிறைவேற்றி வருகின்றன.
<section end="இந்திய ஆட்சிமுறை"/>
<section begin="இந்திய ஆடலாசிரியர்கள்"/>
{{dhr}}
<b>இந்திய ஆடலாசிரியர்கள்</b>: இந்திய நடனங்களில் ஆடலாசிரியருக்குச் சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பரத நாட்டியத்தில் ஆடல் ஆசிரியர் ஆடல் கலைஞர்களால் வணங்கப்படுகிறார். தமிழகத்தில் தஞ்சையிலும் தஞ்சையை அடுத்துள்ள பல ஊர்களிலும் புகழ்பெற்ற இசை நாட்டிய அறிஞர் கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்துள்ளனர். இந்த ஆடலாசிரியர்கள் நட்டுவனார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் இசை, இலக்கியம், நடனம் ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோசி என்னும் மராத்திய மன்னரின் அரசவையில் இசை வல்லுநர்களாகவும் ஆடலாசிரியர்களாகவும் புகழ் பெற்று விளங்கிய சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரால் பரதநாட்டியத்தின் இந்த ஆடல் வரிசை முறை அமைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இவர்கள் அக்காலத்தில் இயலிசைப் புலவராக விளங்கிய முத்துசாமி தீட்சிதர் என்பவரின் மாணாக்கர்கள் ஆவர். அக்காலத்தில் பரத
நாட்டியம் சதிர் நாட்டியம் என்றும் சதிர் என்றும் குறிப்பிடப்பட்டு வந்தது. அலாரிப்பு முதல் தில்லானா வரையிலான இந்த நடன முறை, ‘சதிர் நாட்டியம்’ என்று கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பிடப்பட்டது.
அக்காலத்தில் ஒரு பொருள் பற்றிய ஆடல்முறை (ஏகார்த்த பிரயோகம்) என்னும் பரதநாட்டிய முறை பழக்கத்தில் இருந்து வந்தது. இம்முறையில் ஒரே கருப்பொருள் பற்றிய பாடல்களுக்கு ஒரே முறையில் நீண்ட நேரம் ஆடல் கலைஞர்கள் நடனம் ஆடி வந்தனர். இம்முறையில் ஆடலைக் காண்பவருக்கு ஆடல் எத்தகைய சிறப்புற அமைந்து இருந்தாலும் சலிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. ஆதலின் இம்முறையில் ‘தஞ்சை நால்வர்’ என்று புகழ் பெற்ற இந்த ஆடலாசிரியர்கள் வருணம், பதம், தில்லானா போன்ற பலவகைப்பட்ட மாறுபாடு கொண்ட ஆடல்களைப் பரதநாட்டியத்தில் புகுத்தி அதனைக்காண்போருக்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் செய்யப்படும் நடனமாக அமைத்தனர். இந்நால்வரின் வழி வந்தோர் பரத நாட்டியத்தில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தினர். தஞ்சை நால்வரே இக்காலத்தில் விளங்கிவரும் ‘ஆடலாசிரியர் மாணவர்’ பரம்பரைக்கு அடிகோலினர். இத்தகைய ஆடலாசிரியர்கள்
நட்டுவனார்கள் எனப் பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டனர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நட்டுவனார்களுள் சிலரைப் பற்றிய செய்திகளை இங்குச் சுருக்கமாகக் காணலாம்.
<b>மீனாட்சி சுந்தரம்பிள்ளை</b>: இவர் கும்ப கோணத்தை அடுத்த பந்தநல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய நட்டுவாங்க முறை பரத நாட்டிய உலகில் தனிச்சிறப்பைத் தேடித்தந்தது. இவருடைய நட்டுவாங்க முறையில் பரதநாட்டியத்தினைப் பயின்று புகழ்பெற்ற ஆடல் கலைஞர்களுள் ஈ. கிருட்டிண அய்யர், இராமகோபால், சாந்தா ராவ், மிருணாளினி சாராபாய், தாரா சௌதுரி ஆகியோரைச் சிறந்தவர்களாகக் குறிப்பிடலாம். ‘பந்தநல்லூர் முறை’ உலகெங்கிலும் புகழ்பெற்றது. மீனாட்சி சுந்தரம்பிள்ளை இசையிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். (காண்க: குடும்பவிளக்க அட்டவணைக்குறிப்புகள்). பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரம்பரையினரும், மாணாக்கர்களும் தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியாவெங்கணுமுள்ள அனைத்துலகப் புகழ் பெற்ற ஆடல் கலைஞர்களுக்கு நட்டுவனார்களாக இருந்து வந்துள்ளனர்; இன்றும் இருந்து வருகின்றனர். இத்தகைய ஒரு சிலரைப் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது.
<b>முத்துக்குமாரப்பிள்ளை</b>: இவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் காலத்தில் வாழ்ந்தவர். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டு மன்னார் கோவில் என்னும் ஊரில் கி.பி. 1874-ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்தில் தேவதாசிகள் மட்டுமே பரதநாட்டியம் ஆடி வந்தனர். முத்துக்குமாரப் பிள்ளை தாமே பல வேடங்கள் தரித்து ஆடல் கலைஞராகத் திகழ்ந்தார். இவர் தாய் யோகம் அம்மாள் என்பவரும் ஆடல் கலையில் சிறந்து விளங்கினார். முத்துக்குமாரர் பந்தநல்லூர் மகராசப்பிள்ளை, இராசமன்னார்குடி சபாபதி போன்றோரிடம் நடனம் பயின்றார். இவருடைய 9-ஆம் வயதில் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் பல ஆடல்கலைஞர்களிடமிருந்து அபிநயம் பயின்றார். இவர் இசையிலும் தேர்ச்சி பெற்றார். சங்கீத சுர ஞானபோதினி என்னும் இசை நூலைத் தமிழில் இயற்றியுள்ளார். இவர் சென்னையில் அடையாறு கலாச்சேத்திரம் என்னும் இசைக்கூடத்தில் 1939-ஆம் ஆண்டு முதல் ஆசிரியரானார். இவர் உருக்குமணி தேவிக்கு ஆசிரியராக இருந்து ஆடல் பயிற்றுவித்தவர்களுள் ஒருவர், பந்தநல்லூர் முறைக்கும் முத்துக்குமாரர் முறைக்கும் உள்ள வேறுபாடுகளை<noinclude></noinclude>
8r62ayqa7ei0p12nxl57tn4r3m2dnjd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/255
250
624379
1954602
1874265
2026-07-19T06:58:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1954602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|231|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை}}</noinclude>திருவேங்கட முதலியாரிடம் சென்றார். திருவேங்கட முதலியார் நடனத்திலும் இசையிலும் தேர்ச்சி பெற்றவர். ஏலப்பர் நடனமும் நட்டுவாங்கமும் பயின்றார். தம்முடைய பதினேழாம் வயதிலேயே ஏலப்பர் நடனப்பயிற்சிகள் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தஞ்சையைச் சேர்ந்த கந்தப்பப் பிள்ளையின் நட்பு ஏலப்பருக்குக் கிடைத்தது. அக்காலத்தில் கந்தப்பர் பாலசரசுவதிக்கு நடனப்பயிற்சி கற்றுத் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏலப்பருக்கு இனிமையான குரல் இருந்தது. ஏலப்பரும் கந்தப்பரின் நட்டுவாங்கக் குழுவில் சேர்ந்து நடனத்தின் நுட்பங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார். ஏலப்பரின் மகன் கியான் பிரகாசு என்பவர், உதயசங்கர் கலைக் கூடத்தில் நடன ஆசிரியராக இருந்தார்.
தண்டாயுதபாணி பிள்ளை, பார்வதி குமார், அடையாறு இலக்குமணன், குபேர்நாத தஞ்சோர்கர் போன்றோர் பரத நாட்டியத்தை நாடெங்கிலும் உள்ள மாணாக்கர்களுக்குப் பயிற்றுவித்துக் கலைப்பணி செய்து வருகின்றனர். தஞ்சைப் பரத நாட்டிய முறை இந்தியா முழுவதும் பல்வேறு கலைமன்றங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறந்த நடனக் கலைஞர்களும் தனித்தனியே நடனப்பயிற்சிக் கூடங்களை அமைத்துக் கலைப் பணி செய்து வருகின்றனர். இத்தகையவர்களுள் பந்தநல்லூர் சுப்பராயன் பிள்ளை, வழுவூர்ச் சாமராசு, கமலா, பதுமா சுப்பிரமணியன். கலாநிதி நாராயணன், கும்பகோணம் சண்முக சுந்தரம்பிள்ளை, பந்த நல்லூர் கோபாலகிருட்டிணன், தஞ்சைக்கிட்டப்பா போன்றவர்களைக் குறிப்பிடலாம். பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்திய நடனத்துறை ஏற்படுத்தப்பட்டு நடன ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மைசூர், பரோடா, கல்கத்தா, ஐதராபாத்து, பம்பாய் போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் நடனத்துறையை வளர்த்து வருகின்றன. {{float_right|எஸ்.கோ.}}
<b>துணைநூல்கள்:
Kothari, Sunil J.</b>, Bharata Natyam-Indian Classical Dance Art, Marg Publications, Bombay, 1982.
<b>Valsyayan, Kapila,</b> Classical Indian Dance in Literature & Arts, Sangeetha Nataka Academy, New Delhi, 1968.
<section end="இந்திய ஆடலாசிரியர்கள்"/>
<section begin="இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை"/>
{{dhr}}
<b>இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை</b> இந்தியாவில் கி.பி.8-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.18-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய கட்டடக் கலையாகும். இக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இசுலாமியர்கள் ஆட்சிபுரிந்துவந்தார்கள். இந்தியாவிற்கும் அரேபியாவிற்கும் பழங்காலத்திலேயே வாணிகத்தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் இருந்தனயெனினும், இந்தியாவில் இசுலாமியர்களின் ஆதிக்கம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில்தான் நிலைநாட்டப்பட்டது. அதற்கு முன்னரே இந்தியாவின் கலை, இலக்கியம், கட்டடக்கலை ஆகியவற்றின் கூறுபாடுகள் மேலை நாடுகளில், குறிப்பாக அரேபியாவில் பரவியிருந்தன. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் கசினி மாமூதுவின் தொடர்ச்சியான படையெடுப்புகள், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கோரி முகம்மதுவின் படையெடுப்பு ஆகியவற்றின் விளைவாகத் தில்லியில் நிலையான சுல்தானிய ஆட்சி அமைக்கப்பட்டது.
<b>கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகள்</b>: இசுலாமியர்களின் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் ஒரு புதிய பண்பாடும் கலையும் தோன்றின எனலாம். அரேபியாவில் இந்தியக் கட்டடங்களின் பாணியை வைத்துப் பழங்காலத்திலிருந்தே பல கட்டடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் சில மாறுதல்களைச் செய்து இந்தியக் கலையைத் தமது நாட்டில் புகுத்திய இசுலாமியர்கள், இந்தியச் கலைப்பாணி அழியாதபடியும் அதே காலத்தின் தங்களின் கலைப்பாணியைப் புகுத்தியும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளி வாசல்களையும், மசூதிகளையும், கோட்டைகளையும், கல்லறைகளையும், வெற்றிக் கம்பங்களையும் அமைத்தனர். இக்காலக் கட்டடங்கள், பல அணிவகைகளையும் அலங்கார அமைப்புகளையும் இயற்கைக் காட்சிகளையும் பெற்றுத் திகழ்ந்தன. புத்தரின் பிறப்புக் கதைகள், இந்தியத் தத்துவங்கள், சமணத் தத்துவங்கள் ஆகிய யாவும் இக்காலக்கட்டடங்களில் கலைவடிவில் தோற்றமளித்தன. ஆனால், இக்கட்டடங்களில் நபிகள் நாயகத்தின் உருவமோ வாழ்க்கை வரலாறோ காணப்படவில்லை. இசுலாமியக் கட்டடங்களில் மேல் வளைவுகளும் (Arch), பட்டைக் கூம்பு வடிவுடைய. கூரைகளும் (Pyramidal roof), கவிகைமாட (Dome) வடிவங்களும் காணப்படுகின்றன. சுவர்களில் மாடி முகப்புகள் சூரிய ஒளியைத் தடுக்கும்வண்ணம் அமைக் கப்பட்டன. எளிய கட்டமைப்புடைய திறந்த அரண்களும் (Kiosks), உயர்ந்த மினார்களும் (Minars) இக்காலத்தில் கட்டப்பட்டன. அணிவகைகள் சிறந்த முறையில் தரைகளிலும் சுவர்களிலும் செய்யப்பட்டன. பூவேலைப்பாடுகளும் வடிவியல் வளைகோடுகளும் (Geometrical Patterns) கட்டடங்களில் நிறைந்து காணப்பட்டன.
இசுலாமியர்களுக்கு முன்பே இந்தியாவில் கட்டடங்கள் கட்டச் சிறிதளவு சுண்ணாம்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இக்காலத்தில் சுண்ணாம்பு<noinclude></noinclude>
d8ru9gp8s5rw3uqpbfgdvgvl3fad3ya
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/284
250
624915
1954606
1871860
2026-07-19T07:01:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1954606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இசுலாமியக் கட்டடக்கலை|260|இந்திய இணையங்கள்}}</noinclude>நவாபின் படையில் தளபதியாக இருந்த கிளாட் அசுதின் (General Claude Hastin) என்ற பிரான்சு நாட்டு வீரன், ஐரோப்பியப் பாணியில் அமைந்த கட்டடத்தின் வரைபடத்தை உருவாக்கினான். இவனுக்காகக் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் பெயர் கான்சுடாண்டியா. இது இலக்னோவில் உள்ளது. நவாபு நசிருதின் ஐதரின் இரண்டு அரண்மனைகளும் சத்தார் மன்சில் (Chattar-Manzils) என்ற கட்டடமும் ஐரோப்பியக் கட்டடக்கலைப் பாணியிலமைந்த கட்டடங்களாகும். இக்கட்டடங்கள் முக்கோண வடிவிலான அடித்தளத்தையும் காரிந்தியன் தலைப்பையும் (Corinthian Capital) உரோமானிய வளைவுகளையும் ஒருங்கே கொண்டவை.
தென்னகத்தில் மைசூரில் திப்பு சுல்தான் பல கட்டடங்கள் கட்டினார். அவற்றுள் குறிப்பிடத்தக் அது தார்யா-தெளலத்-பாகு (Darya-Daulat-Bagh). ஐதர் அலி, திப்பு சுல்தான், திப்புசுல்தான் தாய் ஆகியோரின் ஒருங்கிணைந்த கல்லறை கும்பா (Gumbaz) எனச் சொல்லப்படுகிறது. இது சதுர அமைப்பை உடையது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 284
|bSize = 468
|cWidth = 183
|cHeight = 272
|oTop = 264
|oLeft = 56
|Location = center
|Description =
}}
{{center|திருமலை நாயக்கர் அரண்மனை - மதுரை}}
<b>பிற கோட்டைகளும் அரண்மனைகளும்:</b> இந்தியாவில் இக்காலத்தில் இருந்த இந்து அரசர்களும் தங்கள் பகுதிகளில் இந்திய இசுலாமியக் கலைப்பாணியில் பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டினார்கள். இராசசுத்தானில் இக்காலத்தில் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. மான்மந்திர் (Man mandir) என்ற அரண்மனையைக் குவாலியர் கோட்டையினுள் இராசா மான்சிங் கட்டினார். இம்மாளிகை மிக அழகாகக் கட்டப்பட்டது. இவ்வரண்மனையைத் தவிர ஆம்பர், செய்ப்பூர், பிகானீர், சோத்பூர் (Jodhpur), உதயபூர் (Udaipur), செய்சால்மர் (Jaisalmer), ஈர்க்சா (Orchha), தாடியா (Datia) போன்ற இடங்களில் உள்ள அரண்மனைகள் இக்காலத்தில் எழுந்தவையாம்.
தென்னகத்தில் இசுலாமியக் கட்டடக் கலைப்பாணியைப் பின்பற்றி விசய நகர அரசர்கள் அம்பியில் தாமரை மன்றத்தையும் (Lotus-Magal) ஐரோப்பியக் கலைப்பாணியைப் பின்பற்றி மதுரையில் திருமலைநாயக்கர் அரண்மனையையும் கட்டினர். இக்கட்டடங்கள் யாவும் பெரிதும் அழகும் கலை நுணுக்கங்களும் உள்ளனவாகக் காட்சி அளிக்கின்றன.
<b>துணை நூல்கள்:
::Percy Brown</b>, Indian Architecture (Islamic Period) D.P. Taraporevala Sons & Co. Pvt. Ltd, Bombay, 1981.
::<b>Sharma, Y.D.</b>, Delhi and its Neighbourhood, Published by the Director General, Archaeological Survey of India, New Delhi, 1974.
<section end="இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை"/>
<section begin="இந்திய இணையங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இணையங்கள்:</b> அரசாங்கப் பணிகளைச் செய்யும் ஆலோசனை நிறுவனங்கள் (Staff Agencies), துணை நிறுவனங்கள் (Auxiliary Agencies), பணி நிறுவனங்கள் (Line Agencies) ஆகியவற்றுள் பணிநிறுவனங்களின் ஒருவகையே இணையங்கள் (Corporations) எனவும், இந்திய அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டு அதனால் நடத்தப்படும் இணையம் இந்திய அரசு இணையம் (Indian State Corporations) எனவும் சொல்லப்படுகின்றன. பணி நிறுவனங்களில் மற்ற இரு வகைகளில் ஒன்றான ஆட்சித்துறைவகைப் பணிதிறுவனம்தான் (Departmental type of line agency) பொதுவாக ஆட்சி அமைப்பில் காணப்படுகிறது. இரண்டாம் வகையான சுதந்திர அல்லது தன்னுரிமை ஒழுங்குமுறைக்குழு என்பது (Independent Regulatory Commission). அமெரிக்காவிலும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. மூன்றாம் வகையான இணைய வகைப்பணி நிறுவனங்கள் (Corporation type of line agencies), உலகப் போர்-<noinclude></noinclude>
558dyt27olgdz52mxl2fqzhanedwvnm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/288
250
624929
1954607
1871921
2026-07-19T07:03:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1954607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|264|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>வேற்றிய பாசனம், நீர் வழங்குதல், மின் ஆற்றல் வெள்ளக்கட்டுப்பாடு, நீர்வழிப்போக்கு, காடுவளர்ப்பு,மண் அரிப்பு, நிலங்களைப் பயன்படுத்தல், குடி பெயர்ந்தோருக்கு மறுகுடியிருப்பு, துப்புரவு, மக்களுடைய பொருளாதார, சமூக நல்வாழ்வு ஆகிய 11 வகைத் திட்டங்களைப் பற்றிய உண்மையான ஆண்டறிக்கையை வரைந்தளித்தல் வேண்டும். அதே போல இணையம் ஓராண்டில் தேடிய வருமானம், செய்த செலவு, மூலதனச் செலவு (Capital Cost) முதலியவற்றைக் காட்டும் அறிக்கையை அரசாங்கத்துக்கு அனுப்புதல் வேண்டும். இவ்வகையில் அரசாங்கம் இணையத்தின்மீது தனது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. நடுவண அரசாங்கத்தின் நீர்ப்பாசன, மின் ஆற்றல் அமைச்சகத்தின் இவ்விணையம் கட்டுப்பாட்டில் இது இருக்கிறது. தனது திட்டங்களைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றும், பெருமளலில் அதனுடைய நிதி வீண்செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக்குழு (Estimates Committee) தன் ஐந்தாம் அறிக்கையில் சுட்டிக்காட்ட, அவற்றை
ஆராயப்பாராளுமன்றம் ஒரு குழுவை அமர்த்திற்று. குழு ஆராய்ந்து சில குறைபாடுகளை உண்மையென்று கூறியும், மற்றவற்றிலிருந்து இணையத்தை விடுவித்தும் அறிக்கை அளித்தது. இணையங்கள் திறம்படச் செயலாற்றுதற்கு அவற்றுக்கு மேலாண்மைத் துறையில் (Sphere of Management) கூடுதலளவு தன்னுரிமை இருத்தல் வேண்டுமென்ற கருத்துப் பரவலாக இருக்கிறது.
<b>துணைநூல்கள்:
::Robson, W.A.,</b> Nationalized Industry and Public Ownership, George Allen & Unwin Limited, London, 1960.
::<b>Gorwala, A.D.,</b> Report on the Efficient Conduct of State Enterprises, Planning Commission, New Delhi, 1951.
<section end="இந்திய இணையங்கள்"/>
<section begin="இந்திய இரயில்வேக்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இரயில்வேக்கள்</b> ஆசியாலிலேயே மிகப்பெரிய அமைப்புடையதாகவும், உலகிலேயே நான்காவது பெரிய அமைப்புடையதாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வேக்கள் ஒரு கோடிப் பயணிகளையும், 6,55,000 கண்டி (Tonnes) பொருள்களையும் 11000 இரயில்களில், நாட்டின் பல பகுதிகளுக்கும் சுமந்து செல்கின்றன. இவை நாள்தோறும் 13 இலட்சம் கிலோ மீட்டர் பாதையைக் கடக்கின்றன. மொத்தப் பொருள்கள் சுமப்பில் 80 சதவீதம் பொருள்களையும், மொத்தப் பயணிகளுள் 60 சதவீதம் பயணிகளையும் இரயில் போக்குவரத்துச் சுமந்து செல்கிறது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட
வற்றுள் மிகப்பெரிய நிறுவனமாக இது அமைந்துள்ளது. இந்திய இரயில்வேக்களில் 5896 கோடி உரூபாய் மூலதளமிடப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் சராசரி 2138 கோடி உரூபாயாகும். இந்திய இரயில்வேக்கள்தாம் நாட்டின் மிகப்பெரிய வேலை வாய்ப்பை அளிப்பனவாகும். இரயில்வேக்களில் பணி புரியோரின் எண்ணிக்கை 17 இலட்சம் ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு இரயில்வேக்கள் மிகவும் முன்னேறி உள்ளன.
<b>இரயில்வேக்களின் தோற்றமும் வளர்ச்சியும்:</b> இந்தியாவில் முதல் இரயில் பாதை, பம்பாய்க்கும் 22 கல்கள்தூரம் அமைக்கப்பட்டது தானாவிற்குமிடையே. முதல் இரயில் போக்குவரத்து, கி.பி. 1853-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள், 16-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்த இரயில் 14 இரயில் பெட்டிகளில் 400 பயணிகளைச் சுமந்து 33.6.கி.மீ. தொலைவு சென்றது. ஆனால், கி.பி. 1858-ஆம் ஆண்டிற்குப் பிறகே இரயில் போக்குவரத்தில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இரவில் போக்குவரத்துப் பற்றிப் பம்பாயைச் சுற்றிச் சில கல்கள் தொலைவில் வசித்த மக்களைத் தவிர, கி.பி.1857-ஆம் ஆண்டுவரை நாட்டின் பிற பகுதிகளில் இருந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. தலைப் போராட்டம் நாட்டின் போக்குவரத்து வளர வேண்டிய இன்றியமையாமையை உணர்த்தியது. அதனால், கி.பி. 1871-ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளையும் இணைத்துப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. ஆங்கிலேயத் தனியார் நிறுவனங்கள், இங்கு இரயில் போக்குவரத்தில் முதலீடு செய்தன. சில
பகுதிகளில் அரசே போக்குவரத்தை நிருவகித்தது. அக்வொர்த்துக் குழு 1921-இல் படிப்படியாக இரயில் போக்குவரத்தைத் தேசிய மயமாக்கக் கோரியது. கிழக்கு இரயில்வே 1925-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும், பர்மா இரயில்வே 1929-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும் கிழக்குப் பஞ்சாபு இரயில்வே 1930-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும் நாட்டுடைமை யாக்சுப்பட்டன. மேலும் அக்வொர்த்துக் குழு, இரயில்வே நிதியைப் பொது நிதியிலிருந்து பிரிக்கும் படி பரிந்துரை செய்தது.
இந்திய இரயில்வேக்கள் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பின்வரும் அட்டவணை, இரயில் மண்டலங்களின் பெயர்கள், தலைமையிடம், தண்ட வாள நீளம் ஆகியவற்றை விளக்கும்.
<b>அமைப்பு:</b> இரயில் அமைச்சகந்தான், இரயில் நிருவாகத்தின் தலைமையிடம் ஆகும். ஆனால், நிருவாகம் ‘இரயில்வே குழு’ என்று சொல்லப்படும் ஐவர்<noinclude></noinclude>
8ljoqueea1drvckxlmquvnx14p0nwez
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/294
250
625152
1954610
1872843
2026-07-19T07:04:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1954610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இராணுவம்|270|இந்திய இராணுவம்}}</noinclude>உள்ள பொறியியல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பாகும்.
இரயில் வண்டிகளையும், அவற்றின் உதிரிப் பாகங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சித்தரஞ்சன், வாரணாசி, பெரம்பூர், பெங்களூர், பாட்டியாலா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
{{float_right|டி.எஸ்.க.}}
<b>துணை நூல்கள்:</b>
::Indian Railways, Year Books 1976, 1977, 1978, 1980, 1981, 1982, 1983, Rail Bhawan, New Delhi, 1984-85.
::Explanatory Memorandum on Indian Railway Budget, Rail Bhawan, New Delhi, 1984-85.
<section end="இந்திய இரயில்வேக்கள்"/>
<section begin="இந்திய இராணுவம்"/>
{{dhr}}
<b>இந்திய இராணுவம்</b>: உலக நாடுகள் அனைத்திலும் அவற்றிற்கான பாதுகாப்பிற்குத் தனித்தனியே பல்வேறு படைகள் உள்ளன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் முதலிடம் வகிப்பனவாகும். இந்தியநாட்டில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். ஒவ்வொரு படையும் தனித்தனிப் படைத்தலைவரின் கீழ் இயங்கி வருகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகளின் ஒருங்கிணைந்த செயலுக்கு அடித்தளமாக விளங்குகிறது.
இராணுவம் என்பது பொதுவாகத் தரைப்படையைக் குறிக்கும். முப்படைகளுள் தரைப்படையே தலையாயதாகும். இந்தியாவை வேற்று நாடுகளின் படையெடுப்பினின்று பாதுகாக்கவும், உள்நாட்டில் அமைதியைப் பேணவும் எந்நேரமும் விழிப்புடன் செயற்படுவது இராணுவத்தின் கடமை ஆகும்.
உலகில் உள்ள மிகச் சிறந்த படைகளுள் ஒன்றாக இந்திய இராணுவம் கருதப்படுகிறது. இந்திய இராணுவத்தில் 8.5 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். உலகத்திலுள்ள பெரிய இராணுவங்களில் இந்திய இராணுவம் நான்காவதாகும். இந்திய இராணுவத்தில் பணி புரியும் போர் வீரன் முதலாகப் படைத்தலைவர் வரை அனைவரும் இந்தியரே ஆவர். குறிப்பிட்ட வயது, உடல், கல்வித்தகுதி உடையவர் யாவராயினும் இராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.
இந்திய இராணுவம் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, மையம் (Southern, Eastern, Western, Northern and Central) என ஐந்து கட்டளைகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்டளையும் (Command) ஒரு படைத்தலைவர் (Lieutenant-General) நிலையிலுள்ள அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ்ச் செயற்படுகிறது. ஒவ்வொரு கட்டளைப் பகுதியும் (Command) பிரதேசம் (Area) தற்சார்புச் சார் நிலைப் பிரதேசம், சார்நிலைப் பிரதேசம், (Independent Sub-Area and Sub-Area) எனப் பிரிந்து அமைந்துள்ளது. ஒவ்வொரு பிரதேசப் பகுதியும் படைத்துறைப் பணித்தலைவர் செனரல் தகுதியிலுள்ள அதிகாரியின் கீழ் அடங்கும். தற்சார்புச்சார்நிலைப் பிர தேசம், சார்நிலைப் பிரதேசம் ஆகியன படைப்பகுதி உயர்தலைவர் (Brigadier) தகுதியிலுள்ள அதிகாரியின் கீழ் அடங்கும்.
இந்திய இராணுவத்தில் பல்வேறு பிரிவுகளும் பணிப்பிரிவுகளும் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கன பின்வருவன: குடியரசுத் தலைவரின் மெய் காவற்படை (President's Body Guard), படைக்கலப் படைப்பிரிவு (Armoured Corps), பொறியாளர் படைப்பிரிவு (Corps of Engineers), அடையாளக் குறிப்படைப்பிரிவு (Corps of Signals), இளநிலை இராணுவப் படை (Infantry), இராணுவப் பணிப்பாதுகாப்புக் காவற்படைப் பிரிவு, இராணுவ அஞ்சல் பணிப் படைப்பிரிவு, இராணுவச் செவிலிப் பணிப் படைப்பிரிவு (Military Nursing Service), இராணுவ மருத்துவப் பணிப் படைப்பிரிவு (Army Medical Corps), இராணுவப் போர்த் தளவாடப் படைப்பிரிவு (Army Ordinance Corps), மின் மற்றும் இயந்திரப் பொறியாளர் படைப்பிரிவு (Corps of Electrical and Mechanical Engineers), இராணுவக் காவற் படைப்பிரிவு (Corps of Military Police), இராணுவ உடற்பயிற்சிப் படைப்பிரிவு (Army Physical Training Corps) புலனாய்வுப் படைப்பிரிவு (Intelligence Corps), இராணுவக் கல்லிப் படைப்பிரிவு (Army Education Corps).
இந்திய இராணுவத்தில் படைத்துறைப் பணி ஆணை பெற்றவர்கள் (Commissioned rank Officers) பின்வரும் தகுதியினை உடையவர்கள். ஒருவரே இரண்டாம் நிலை படைத்துணைத்தலைவர் பதவியிலிருந்து படைத்துறைப் பணித்தலைவர் பதவி வரை உயரக்கூடும்.
::(பதவி நிரலை அடுத்த பக்கத்திற் காண்க.)
இந்திய இராணுவத்தின் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புப் பற்றிய இன்றியமையாதனவெல்லாம், அரசியல் அலுவல்கள் பற்றிய அமைச்சகக் குழுவினால் முடிவெடுக்கப்படுகின்றன. அரசியல் அலுவல்கள் குறித்த அமைச்சகக் குழுவிற்குப் பிரதம மந்திரி தலைவராவார். பாதுகாப்பு அமைச்சகம், படைகளின் நிருவாகம், இயங்குமுறை ஆகியவற்றை முறைப்படுத்தி<noinclude></noinclude>
hqgjswggrb888qlehefwlwovaw0l9kd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/295
250
625153
1954612
1872845
2026-07-19T07:05:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1954612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இராணுவம்|271|இந்திய இராணுவம்}}</noinclude>{|
|-
|இரண்டாம் நிலைப் படைத்துணைத்தலைவர் || || Second Lieutenant
|-
|படைத்துணைத் தலைவர் || || Lieutenant
|-
|படைத்தலைவர் || || Captain
|-
|படைப்பிரிவின் தனித்துறைப் பணித்தலைவர் || || Major
|-
|துணைநிலைப் படைப் பகுதித்தலைவர் || || Lieutenant Colonel
|-
|படைப்பகுதித் தலைவர் || || Colonel
|-
|படைப்பகுதி உயர்தலைவர் || || Brigadier
|-
|படைத்துறைப் பணித்தலைவர் || || Major General
|-
|துணைநிலைத் தலைவர் || || Lieutenant General
|-
|படைப்பெருந்தலைவர் || || General
|}
வழி நடத்துகிறது. அரசின் கொள்கை பற்றிய முடிவுகளை முப்படைகளின் தலைமையகங்களுக்குத் தெரியப்படுத்தி, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்வதும், பாதுகாப்புச் செலவினங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதியினைப் பெறுவதும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமையாகும்.
இந்தியப் பாதுகாப்பிற்கு இந்தியா செலவிடுவது (உரூபா. 18,000 கோடி) மொத்தத் தேசிய வருவாயில் ஏறக்குறைய 3.5 சதவிகிதமாகும்.
இந்திய இராணுவத்தின் செயல் திறன் வியக்கத்தக்க ஒன்றாகும். இந்திய நாடு விடுதலை அடைந்த காலக்கட்டத்தில் காசுமீர், ஐதராபாது ஆகிய இடங்களில் இராணுவம் ஆற்றிய செயல் வரலாற்றில் இடம் பெறத்தக்கது.
முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் இந்திய நாட்டின் இராணுவத்தினர் வீரப் போர் புரிந்து புகழ் பெற்றனர். முக்கியமாக வட ஆப்பிரிக்கா, சிசிலி, இத்தாலியா, ஐரோப்பா, பர்மா ஆகிய நாட்டில் நிகழ்ந்த போர் முனைகளில் அவர்கள் செய்த அரும்பெரும் வீரச் செயல்களை உலகமே மெச்சியது.
கோவா, தமன் (Daman) தியூ (Diu) போன்ற போர்ச்ககீசியக் குடியிருப்புகள் 1960-இல் இந்தியாவோடு மறுபடியும் சேர இராணுவம் மிகவும் உதவியது.
சீனப்படைகள் இமயமலை எல்லையில் 1962-இல் ஆக்கிரமிப்புச் செய்தபோது இந்திய இராணுவம் இன்னுயிரையும் பொருட்படுத்தாது இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்து நாட்டைக் காத்தது.
பாகிசுத்தான் படையெடுப்பை 1965-இல் முறியடித்து நாட்டின் புகழ்க்கொடியை உலக அரங்கில் பறக்கவிட்டது இந்திய இராணுவம். பங்களாதேசம் உருவாவதற்கு 1971-இல் உறுதுணையாக நின்று இந்தியக் கண்டத்தின் பூகோளத்தையே திருப்பி வரைய உதவியது இந்திய இராணுவம்.
இந்திய இராணுவம் போர்க்களங்களில் மட்டுயன்றி, இயற்கையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் மக்களின் உயிர் உடைமைகளைக் காக்கவும், சாலைகள் இருப்புப் பாதைகள் ஆகியவற்றை அமைக்கவும் அரும்பாடுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 1977-இல் ஆந்திராவும் தமிழ்நாடும் கடும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட காலத்திலும், 1978-இல் தமிழ்நாட்டில் நடந்த விவசாயப் போராட்டக் காலத்திலும், ஆந்திராவில் இனவெறிக் கலவரங்கள் நடந்த காலத்திலும், கடந்த மூன்றாண்டுக் காலமாகப் பஞ்சாபில் நடந்து வந்த மதவெறிப் போராட்டம், தீவிரவாதிகளின் கொடுஞ் செயல்கள் ஆகியன நிகழ்ந்த காலத்திலும் இராணுவத்தினர் தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களுக்கும் அரசுக்கும் தக்க உதவி செய்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றியது வரலாற்றில் நிலையாக இடம் பெறத் தக்கதாகும்.
இந்தியா படைக்கல உற்பத்தியில் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னேறி வருகிறது. சுதந்திர நாளின் போதும் குடியரசு நாளின்போதும் நடைபெறும் இராணுவ அணி வகுப்புகள் மலைப்பூட்டத்தக்கன.
இராணுவத்தில் செயற்கரிய செயல் புரிந்த ஆற்றலுடை மறவர்களுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. இவ்வகை விருதுகளுள் சிறந்தது பரம வீரச்சக்கரம். இது விடுதலைக்கு முன் ஆங்கிலேயர் வழங்கிய விக்டோரியா விருதுக்குச் சமமாகும்.
இவ்விருதுகள் பரமவீரச்சக்கரம், அசோகச் சக்கரம், பரம விசிட்ட சேவா பதக்கம், மகா வீரச் சக்கரம், கீர்த்திச் சக்கரம், வீரச் சக்கரம். விசிட்ட சேவா பதக்கம் எனப் பலதிறப்படும். {{float_right|எஸ்.பி.ம.}}
<section end="இந்திய இராணுவம்"/>
{{nop}}<noinclude></noinclude>
koscrjk6j7yg5khkgo9gvihkkq816hw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/296
250
625354
1954613
1874448
2026-07-19T07:06:08Z
ஹர்ஷியா பேகம்
15001
1954613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|272|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude><section begin="இந்திய இருப்புப்பாதைச் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்திய இருப்புப்பாதைச் சட்டம்</b>, இந்திய அரசால் இயற்றப்பட்டு 1890-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தாள் செயல்முறைக்கு வந்தது. இது அனைத்து இந்தியாவிற்கும் செல்லத்தக்கது. இது 1890-ஆம் ஆண்டைய இந்திய இருப்புப்பாதைச் சட்டம் (The Indian Railways Act 1890 - Act 9 of 1890) என்று சொல்லப்படும். இது பல தடவைகளில் திருத்தம் பெற்று இறுதியாக 1983-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது.
இருப்புப்பாதை என்ற சொல்லானது பயணிகள், விலங்குகள் சரக்குகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லக்கூடிய இருப்புப் பாதையைக் குறிக்கும் என்று இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. இருப்புப்பாதையை ஒட்டிய குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் அமைந்த நிலம், தண்டவாளம் மற்றும் அதையொட்டிய துணைக்கருவிகள், இருப்புப்பாதைக்குத் தொடர்புடைய இருப்புப்பாதை நிலையங்கள், அலுவலகங்கள், பண்டசாலை, கப்பல் துறை மேடை, பணிமனை, தொழிற்சாலை, இயந்திரங்கள், இருப்புப்பாதை நிருவாகத்துக்கு உரிமையுடைய அல்லது அந்த நிருவாகத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட, இருப்புப்பாதைப் போக்குவரத்துக்காக உள்நாட்டிலுள்ள நீர்ப்பகுதியில் அமைந்துள்ள கப்பல், தோணி, மிதவை தோணித்துறை ஆகியவை எல்லாம் மேற்கூறிய இருப்புப்பாதை (Railway) என்றசொல்லின் விளக்கத்தில் அடங்கும்.
ஓர் இருப்புப்பாதை தொடங்கப்படும் வகைமுறை குறித்து இச்சட்டத்தின் நான்காம் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியைப் படிக்கும்போது, புதிதாக ஓர் இருப்புப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு எடுப்பது இருப்புப்பாதை நிருவாகத்தின் பொறுப்பாகும் என்று கருத வேண்டியுள்ளது. ஆனால் இருப்புப்பாதை மீது செல்லக்கூடிய தொடர்வண்டிகளை இழுத்துச் செல்லக்கூடிய இயந்திரத்தை இருப்புப்பாதை நிருவாகமானது மத்திய அரசின் அனுமதியின் பேரில்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆய்வாளர் ஆய்வு செய்து, விதி முறைகளின்படி இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், தொடங்கவிருக்கும் இருப்புப்பாதைப் போக்குவரத்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் முன் அனுமதியின் அடிப்படையில்தான் இருப்புப் பாதை போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். மேற்கூறிய ஆய்வாளரின் ஆய்விலிருந்து குறைபாடுகள் எவையேனும் தெரியவந்தால் அவற்றை நீக்கிய பின்னர்த்தான் இருப்புப்பாதைப் போக்குவரத்து தொடங்கப்படவேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கும்போது விரும்பினால் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். அவ்வாறான கட்டுப்பாடுகள் நிறைவேற்றப்படாத நிலையில் மத்திய அரசு வழங்கிய அனுமதி செல்லா நிலையது ஆகும். ஏற்கெனவே இருக்கும் இருப்புப்பாதையைக் கூட்டுவது, மாற்றியமைப்பது ஆகிய செய்கைகளுக்கும் மேற்கூறிய விதிமுறைகள் பொருந்தும். பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலை இருக்கிறது என்று ஆய்வாளரின் அறிக்கையிலிருந்து தெரிய வந்தால் முன்பே தொடங்கப்பட்ட இருப்புப்பாதைப் போக்கு வரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடலாம். அவ்வாறு நிறுத்தப்படும் போக்குவரத்தானது குறைபாடுகளை நீக்கியபின் மறுபடியும் தொடங்கப்படலாம்.
விபத்தினால் இருப்புப்பாதைப் போக்குவரத்து தடைபட்டால் பழையபாதை சீரமைக்கப்படலாம். அல்லது இடைக்காலத்திற்கு மாற்றுப் பாதை அமைக்கப்படலாம். அவ்வாறான சூழ்நிலையில் மத்திய அரசால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆய்வாளரின் ஆய்வுக்குக் காத்திராமல் மேற்படி பாதைகளில் போக்குவரத்தைத் தொடங்கலாம். ஆனால் அவ்வாறான வேலைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பாக இருந்த இருப்புப்பாதை நிருவாகத்தின் பணியாள், அவ்வாறு போக்குவரத்தைத் தொடங்குவதில் ஆபத்து ஏதுமில்லை என்று எழுத்து மூலமான சான்றிதழ் வழங்கினால்தான் போக்குவரத்தைத் தொடங்கலாம்.
இருப்புப்பாதைத் தொடர்பான வேலைகளைச் செய்தல், செய்து முடிக்கப்பட்ட வேலைகளைப் பாதுகாத்தல் ஆகியவை இச்சட்டத்தின் மூன்றாம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. இருப்புப்பாதை அமைப்பது, அதையொட்டிய வேலைகளை நிறைவேற்றுவது தொடர்பாகக் கீழ்க்காணும் வேலைகளைச் செய்ய இருப்புப்பாதை நிருவாகத்துக்கு இச்சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வேலைகளைப் பிறருக்கு உரிமையுடைய சொத்துகளிலும் செய்யலாம். நிலம், தெரு, குன்று, பள்ளத்தாக்கு, சாலை, இருப்புப்பாதை, திராம் (Tram) பாதை, ஆறு, கால்வாய், நீரோடைகள், வடிகால், தண்ணீர்க் குழாய், வாயுக்குழாய், தந்திக்கம்பி ஆகியவற்றின் குறுக்கிலோ அடியிலோ மேலாகவோ வளைவுகள், கரங்கப்பாதைகள், பாலங்கள், கரைகள், பாதைகள், கால்வாய்ப்பாலம், நீர்க்குழாய், தூண்கள், வடிகால்கள் ஆகியவற்றை விருப்பம்போல் இருப்புப்பாதை நிருவாகம் அமைக்கலாம். சுரங்கப்பாதைகள், பாலங்கள், பாதைகள் அமைப்பதற்காகவும் அவற்றைப்பாதுகாப்பதற்காகவும் ஆறுகள்<noinclude></noinclude>
eegbjpaerxetwvnjvndzccrpwj40lj9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/302
250
625527
1954615
1875098
2026-07-19T07:07:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1954615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|278|இந்திய இனங்கள்}}</noinclude>தின்மீதோ பயணம் முடிவடையும் இடமுள்ள நிருவாகத்தின் மீதோ, விபத்து நடந்த இடமுள்ள நிருவாகத்தின் மீதோ வழக்குத் தொடரலாம்.
இருப்புப்பாதை வண்டிக்கு ஏற்படும் விபத்துக்குறித்து உடனடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட வேண்டும். விபத்துக் குறித்து விசாரணை செய்ய விதிகள் தயாரிக்கப்படலாம். இருப்புப்பாதை நிருவாக ஊழியர்கள் பணித்தொடர்பான விவரங்கள், இச்சட்டத்தின் 6A பகுதியில் அடங்கியுள்ளன. உள்ளாட்சித்துறை விதிக்கும் வரிக்கு, மத்திய அரசு அனுமதியிருந்தால்தான் இருப்புப்பாதை நிருவாசம் செலுத்தக் கடமைப்பட்டது. ஒவ்வோர் இருப்புப்பாதை ஊழியனும் இந்தியத் தண்டனைச் சட்டம் 9-ஆம் பகுதி, 409-ஆம் பிரிவு ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் பொது ஊழியனாகக் கருதப்படுவான். இருப்புப்பாதைப் போக்குவரத்து, பணிமனை, இருப்புப்பாதை நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றை மத்திய அரசின் அனுமதியின்றி, நீதிமன்ற ஆணையின்படியோ உள்ளாட்சித்துறைக்குச் சேரவேண்டிய பாக்கிக்காகவோ எடுத்துச் செல்வது கூடாது. ஆனால் இருப்புப்பாதையின் வருமானத்தை நீதிமன்ற ஆணையின்படி கைப்பற்றுதல் செய்வதற்குத் தடை ஏதுமில்லை.
தண்டனைகள் குற்றங்கள் ஆகியவை இச்சட்டத்தின் 9-ஆம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. முக்கியமான கூறுகள் மட்டும் குறிக்கப்படும். இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ள தவறுகள், குற்றங்கள் ஆகியவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இருப்புப்பாதை நிருவாகம் செய்யக்கூடிய தவறுகள் முதல் வகையாகும். எடுத்துக்காட்டாக மத்திய அரசின் அனுமதியின்றி, இருப்புப்பாதையைத் தொடங்குவது, வண்டிகளை இழுத்துச் செல்லும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்ற தவறுகளுக்கு நிருவாகமானது மத்திய அரசுக்குத் தண்டத் தொகை செலுத்த நேரிடும்.
இருப்புப்பாதை ஊழியர்கள் செய்யக்கூடிய குற்றங்கள் இரண்டாம் வகையாகும். கடமையிலிருந்து தவறுவது, கடமையிலிருக்கும்போது குடிபோதையிலிருப்பது, இருப்புப்பாதை வண்டிப் போக்குவரத்துத் தொடர்பான கடமையிலிருப்பவர் தமது பணியைப் புறக்கணிப்பது, இருப்புப்பாதை வண்டி ஓடுவதில் தடை ஏற்படுத்துவது, பணியிலிருக்கும்போது மற்றவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் விதிகளை மீறிச் செயல்களைச் செய்வது, ஏற்கனவே இருப்புப்பாதைப் பெட்டியில் உச்ச எண்ணிக்கையளவில் பயணிகள் இருக்கும் நிலையில், மேலும் பயணிகளை அப்பெட்டியில் ஏறச் சொல்வது போன்ற செய்கைகள் தண்டிக்கப்படத்தக்க குற்றங்களாகும்.
பொதுமக்கள் உட்பட எல்லோருக்கும் பொதுவான குற்றங்கள் மூன்றாம் வகையாகும். முறையான பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, மற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டி அல்லது இருக்கையில் பயணம் செய்யும் நிலையில் அதை விட்டுச் செல்ல மறுப்பது, உடனுள்ள பயணிகள் ஒப்புதலின்றிப் பெட்டியில் புகைபிடிப்பது, இருப்புப்பாதைச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது, பயணிகளை வேண்டும் என்றே தாக்குவது, இருப்புப்பாதை வண்டிக்குச் சேதம் விளைவிப்பது, இருப்புப்பாதை ஊழியனைப் பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய செய்கைகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.
<section end="இந்திய இருப்புப்பாதைச் சட்டம்"/>
<section begin="இந்திய இனங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இனங்கள்:</b> வரலாந்துத் தொடக்கக் காலத்திலிருந்தே பல்வேறு இனக்குழுக்கள் இந்திய நிலப் பரப்பிற்கு வரத் தொடங்கினர். இவர்கள் இந்தியாவின் மாறுபட்ட பல்வேறு புவியமைப்பில் பன்னெடுங் காலமாக உருவத்தோற்றத்திலும், உடற்கூற்று அமைப்பிலும் தகவமைந்து பல இனக்குழுக்களாகக் காணப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் காணப்படும் பல்வேறு இனங்களை வகைப்படுத்தப் பலகாலக் கட்டங்களில் மானிடவியலார் முயன்றனர். இவர்களுள் ஏ.சி. ஆடன் (A.C Haddon), எச்.எச். இரெய்சிலி (H.H. Risely), பி.எசு. குகா ( B.S.Guha), எசு.எசு. சர்க்கார் (S.S. Sarkar) ஆகியோர் முதன்மையானவர்கள். இவர்கள் அனைவருமே ஒத்த வகைப்பாட்டினைக் காட்ட முற்படவில்லை.
ஏ.சி.ஆடன் இந்தியப் புவிப்பரப்பை, தக்கணம் (Deccan), இந்துசுத்தான் (Hindustan), இமயமலைப் பகுதி (The Himalayas) என்னும் மூன்று பகுதிகளாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார். தக்கணப் பகுதியில் நீக்ரிட்டோ (Negrito), திராவிடரின் முந்தையோர் (Pre-Dravidian), திராவிடர், தென்பகுதிய குறுகி அகன்ற தலையினர் (Southern Brachyccphals), மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர் (Western Brachycephals) என்னும் ஐந்து இனங்களைக் காட்டுவார் ஆடன். நீக்ரிட்டோ இனத்தவர் தமிழகத்திலும் கேரளத்தின் திருவாங்கூர் மலைப் பகுதிகளிலும் காணப்படும் காதர் (Kadar) என்னும் தொல்பழங்குடிகள் என ஆடன் கூறுகிறார்.
திராவிடரின் முந்தையோர் இத்தியாவின் தொன்மையான மக்களாவர். இவர்கள் நீண்டு குறுகிய<noinclude></noinclude>
4c44eqi45y0cf8wsrrpof801c03zo93
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307
250
625603
1954618
1875814
2026-07-19T07:09:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1954618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய உச்சநீதிமன்றம்|283|இந்திய உச்சநீதிமன்றம்}}</noinclude>களில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். இவர்களின் தோலின் நிறம் மஞ்சள்; முகத்திலும் உடலிலும் மயிர் குறைவாகக் காணப்படும். மங்கோலியக் கண்களைப் பெற்றிருப்பர். காண்க; இனங்கள், மனிதர்.
<b>துணை நூல்கள்:
Guba, B.S.</b>, An Outline of the Racial Ethnology of India, Indian Science Congress Association, Calcutta, 1937.
<b>Haddon, A.C.</b>, Races of Man, Cambridge University Press, London, 1929.
<b>Sarkar, S.S.</b>, The Aboriginal Races of India, Book-land, Calcutta, 1954.
<section end="இந்திய இனங்கள்"/>
<section begin="இந்திய உச்சநீதிமன்றம்"/>
{{dhr}}
<b>இந்திய உச்சநீதிமன்றம்:</b> இந்தியாவிற்குத் தலையாய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) ஒன்று நிறுவுவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது இங்கிலாந்திலுள்ள அரசப் பேரவை 1950 சனவரி 26-ஆம் நாள் வரை வகித்துவந்த அதிகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் முதன்மை நீதிபதியையும் ஏழு நீதிபதிகளையும் உடையதாகும். நாடாளுமன்றம் விரும்பினால் இவ்வெண்ணிக்கையை உயர்த்தலாம். முதன்மை நீதிபதியைத் தவிர்த்து இப்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆகக் கூடியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதிகளாக இருந்தவர்களும், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டு கட்குக் குறையாமல் வழக்கறிஞராக அலுவல் பார்த்தவர்களும், சட்ட நுணுக்கத்தில் சிறந்த வல்லுநர்களாக இருப்பவர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியமர்த்தம் பெறத் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் 65 வயது வரை நீதிபதிகளாகப் பணியில் செயற்படுவார்கள். இந்தியாவின் முதன்மை நீதிபதியுடனும் தேவையானால் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடனும் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளுடனும் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் அவர்களைப் பணியமர்த்தம் செய்வார். நீதி செலுத்துவதில் மிகச் சிறப்பு என்னவென்றால், நீதிபதி அச்சமின்றி, தயவு தாட்சண்யங்களுக்கு உட்படாமல், தன் மனச்சாட்சிப்படி தீர்ப்பு வழங்க வேண்டும். ஆகவே, நீதிபதிகள் வகிக்கும் பதவி, நிருவாக அலுவலரின் மேற்பார்வையின்கீழ்ச் செயற்படுவது முறையன்று. பதவியைப் பற்றிய கவலை நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாது. இந்தக் கோட்பாடுகளை ஒட்டி, உச்ச நீதிமன்ற நீதீபதிகளைப் பதவியிலிருந்து விலக்குவது தொடர்பாகச் சிறப்பு முறை அரசியல் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற நடத்தை அல்லது திறமையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதியை விலக்க வேண்டுமானால், தகுந்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் முன் அளிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் வாதத்தைக்கேட்டுப் பாராளுமன்றம் விசாரணை செய்யவேண்டும். குற்றச்சாட்டை உறுதியானதாக, நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொண்டு, நீதிபதியைக் குடியரசுத் தலைவர் விலக்க வேண்டும். அப்படிப்பட்ட முடிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒவ்வோரவையிலும் வாக்களிக்க வந்துள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு என்ற விழுக்காட்டுக்குக் குறையாத அளவில் உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். மேலும் அவ்வாறு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்த அவையின், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையதாகவும் இருக்க வேண்டும். நீதிபதிகளைப் பணியமர்த்தம் செய்வது நிருவாகத் தலைவராக இருந்தாலும், விலக்குவது அவரிடம் இல்லை என்பது இதில் சிறப்பாகக் கவனிக்க வேண்டியதாகும். நீதிபதிகளின் ஊதியமும் படிகளும் இவ்வளவு என்று அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்திருக்கிறது. நீதிபதிகளின் ஊதியங்களும் அவற்றுக்குரிய உதவித்தொகைகளும் இந்திய இணைப்பு நிதியினின்று பெறப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் பெரும்பாலும் மேல்முறையீடு தொடர்பானதே. ஆயினும் இந்திய அரசினர் மாநில அரசுக்குள்ளோ இரு மாநில அரசுக்குள்ளோ நிகழும் அசல் வழக்குகளை (Original Suits) விசாரிக்கவும் இதற்கு அதிகாரம் உண்டு. உயர் நீதிமன்றங்கள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு மன்றமாகும். எத்தகைய முக்கியமான வழக்குகளை உச்சநீதி மன்ற விசாரணைக்குக் கொண்டு வரலாம் என்பது பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி செய்திருக்கிறது. மற்றும் அரசியல் சட்டத்தில் கூறியுள்ள அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கும், குடிகளின் பாதுகாவலையும் உரிமையையும் காப்பதற்கும் இன்றியமையாத பேராணைகளைப் (Writs) பிறப்பிக்கவும் இம்மன்றத்திற்கு அதிகாரம் உண்டு. (அப்பேராணைகளைப் பற்றி முழு விவரம் அறிய இந்திய அரசியல் சட்டம் என்ற கட்டுரையைக் காண்க.) அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் பொருள் கூற வேண்டிய சூழ்நிலைகளில் இம்மன்றத்தின் ஐந்து நீதிபதிகளுக்குக் குறையாதவர் சேர்ந்து விசாரணை செய்து முடிவு செய்வர்.
<b>தலைமை நீதிமன்றத்தின் அதிகாரம் (Jurisdiction of the Supreme Court):</b> இந்தியத் தலைமை நீதி-<noinclude></noinclude>
50pcsm7z845yyuft7ulhgi32hi6letb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/309
250
625606
1954620
1875831
2026-07-19T07:10:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1954620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய உதவி மன்றம்|285|இந்திய உதவி மன்றம்}}</noinclude>இந்தியாவின் தலைமை நீதிபதியோ அவர் குறிப்பிடும் உச்ச நீதிமன்ற நீதிபதியோ நீதிமன்ற உயர் அலுவலரோ நீதிமன்றத்திற்குத் தேவையான அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்துகொள்ளலாம். அவ்வலுவலர்களின் வேலை நிலைமை பற்றிய விதிகளையும் அவரே இயற்றிக் கொள்ளலாம். நீதிமன்ற அதிகாரிகளின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வுகால ஊதியம் உட்பட உச்ச நீதிமன்றத்தின் நிருவாகச் செலவுகளுக்கெல்லாம், ‘இந்திய அரசுத் தொகுறிதி’ யிலிருந்து நேரடியாகப் பணம் கொடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் வசூலிக்கும் கட்டணங்களும் மற்றத் தொகைகளும் அந்த அரசுத் தொகுநிதியில் செலுத்தப்படும். இந்த ஏற்பாடுகள் எல்லாம் உச்ச நீதிமன்றம் விருப்பப்படி செயலாற்றுவதற்குத் துணை செய்கின்றன.
<section end="இந்திய உச்சநீதிமன்றம்"/>
<section begin="இந்திய உதவி மன்றம்"/>
{{dhr}}
<b>இந்திய உதவி மன்றம்:</b> இந்தியாவிற்குக் கிடைக்கும் அயல் நாட்டு நிதி உதவி பெரும்பாலும் இந்திய உதவி மன்றம் வாயிலாகவே அளிக்கப்படுகிறது. இந்த மன்றம், 1958-ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, கனடா, சப்பான், ஆசுத்திரியா, பெல்சியம், தென்மார்க்கு (Danmark), பிரான்சு, இத்தாலி, நெதர்வாத்து, நார்வே, சுவீடன் ஆகிய பதின்மூன்று நாடுகளை உறுப்பினராகக் கொண்டு உலக வங்கியின் மேலாண்மையின் கீழ்த்தொடங்கப்பட்டது. இந்த மன்றம், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, இந்தியாவிற்குரிய அயல்நாட்டு உதவிகளைப் பற்றி ஆய்ந்து முடிவெடுக்கிறது.
ஒவ்வோராண்டும் இந்திய உதவி மன்றம் (Aid-India Club) சூன் மாதத்தில் பாரிசில் கூடுகிறது. இம்மன்றம் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், பொருளியல், நாட்டின் பொதுவான கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து, இந்தியாவிற்கு அந்த நிதியாண்டு-அதாவது சூலை முதலாம் தேதியிலிருந்து கிடைக்கும் நிதி உதவியினை வரையறுக்கிறது. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் பேராளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தொடர், உலக வங்கியின் சிறப்பு அலுவலரின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தியா பெறும் அயல் நாட்டு உதவிகளில், இந்திய உதவி மன்றத்தின் உதவி எண்பத்தெட்டு விழுக்காடாகும். திட்டக்காலங்களில் இந்திய உதவி மன்றம் இந்தியாவிற்கு அளித்துள்ள உதவியினை அட்டவண-1 விளக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றம் குறிப்பிடத்தக்க வகையிலான ஊக்கத்தை அளிக்கவில்லை. முந்திய காலத்தில் அமெரிக்கா மிகுதியான நிதியுதவியை அளித்துவந்த நாடாகும். உதவி பத்தொன்பது விழுக்காடு அமெரிக்காவினால் வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இரீகனின் ஆட்சியில் இந்தியாவிற்குக் கிடைக்கும் நிதியுதவி படிப்படியாகக் குறைந்து வருகிறது. அமெரிக்காவின் இக்கால நிதி உதவிக்கொள்கை இந்தியாவிற்குத் துணையாக இல்லை. உலக வங்கியின் 1984-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியா குறைந்த வருவாயுடைய நாடுகளுக்கான சிறப்பு முன்னுரிமைகளைப் பெறலாம் என்று கூறு-
{{center|அட்டவணை - 1}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இந்திய உதவி மன்றத்தின் உதவித் தொகை
|-
! காலம் !!colspan =2|உதவித்தொகை
|-
! !! கோடி<br>உரூபாயில் !! மொத்தத்தில்<br>விழுக்காடு
|-
|முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் || 4,153 || 92
|-
|ஆண்டுத் திட்டக் காலத்தில் (1966-69) || 2,985 || 93
|-
|நான்காம் ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் || 3,775 || 90
|-
|ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் || 4,469 || 74
|-
|1978-79 இலிருந்து 1983-84 வரை || 10,101 || 91
|-
|1950-51 இலிருந்து 1983-84 வரை || ||
|}<noinclude></noinclude>
2dr3igbydrrgudwecj7x3ut9spkg622
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/311
250
625629
1954623
1876037
2026-07-19T07:12:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1954623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்|287|இந்திய ஊரகங்கள்}}</noinclude>ததற்குக் காரணம் இந்தியா சப்பான் அளிக்கும் தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்ளாமையே யாகும். ஆனால் இந்தியாவின் கொள்கை எளிய முறைக் கடன் என்றாலும் பிற வாணிக முறைக் கடன் என்றாலும் கட்டுப்பாடுகளுடன் அளிக்கப்படும் கடனை ஏற்றுக்கொள்வதில்லை என்பதாகும். ஏனெனில் அக்கடன் நீண்டகாலத்திற்குப்பின் இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பது இந்தியாவின் கருத்து.
பொதுவான கண்ணோட்டத்தில் இந்திய உதவிமன்றம் இந்தியாவிற்கு அளித்து வந்துள்ள உதவிகள் குறிப்பிடத்தக்கனவாகும், இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நாட்டின் பொருளாதார எழுச்சிக்கும் இந்த நிறுவனம் பேரளவில் உதவி செய்துள்ளது. அண்மைக்காலத்தில் இதன் உதவி குறைந்துள்ளது. மறைந்த திருமதி இந்திராகாந்தி மேலை நாடுகள், வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கு மிகக் குறைந்த அளவில் கான் உதவி செய்து வருகின்றன என்று பலமுறை அந்நாடுகளின் பொறுப்பை வலியுறுத்தியுள்ளார். இது ஒரு வகையில் உண்மை என்றாலும் இன்று இந்தியா ஓரளவு வளர்ந்து, உணவு, பிற பொருளாதாரச் சூழ்நிலையிலும் ஓரளவிற்குத் தன்னிறைவு அடைந்துள்ளது. இதனால்தான் இந்தியா தன் முயற்சியினாலேயே முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பது மன்றத்தின் இன்றைய கருத்தாகும். {{float_right|இரா.செ.}}
<b>துணை நூல்கள்:
Sadau Mukherjee</b>, Who really aids India, Mc-Graw Hill, New York, 1978.
<b>Dalip. S. Swamy</b>, Multinational Corporation and the World Economy, Allied Publishers, Delhi, 1980.
<b>Goyal, S.K.</b>, The Impact of Foreign Subsidiaries on India's Balance of Payments, Oxford Publication, 1979.
<section end="இந்திய உதவி மன்றம்"/>
<section begin="இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்"/>
{{dhr}}
<b>இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்</b> இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மன நலக் காப்பகமாகும். இத்தகைய நிறுவனங்கள் பெங்களூரிலும் இராஞ்சியிலும் உள்ளன. இங்கு உளப்பிணியருக்கு மருத்துவம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் உளநோய், உளவியர், நரம்பியல் துறைகளுக்கான உயர் நிலைக்கல்வி அளிக்கப்படுகிறது. உளநோய் நரம்பியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் இங்குத் தங்கிப் படிக்கிறார்கள். உளநோய்ச் சமூகப் பணியாளருக்கும் உளநோய் நீக்கு உளவியலாருக்கும் இங்குப் பயிற்சி தரப்படுகிறது. உளவியல் நரம்பியல் துறைகளுக்கான சோதனைகள், அமைக்கப்பட்டுத் தரப்படுத்தப்படுகின்றன. உளவழி மருத்துவ முறைகள், நடத்தை மருத்துவ முறைகள், குடும்ப மருத்துவ முறை, குழு மருத்துவ முறை, உளவழிநாடக மருத்துவ முறை போன்ற பல மருந்திலாச் சிகிச்சை முறைகள் இங்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலுமிருந்து இந்நிறுவனங்களில் கல்வி கற்பதற்காகவும் ஆய்வு செய்வதற்காகவும் மாணவர்கள் வருகிறார்கள். இந்நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக உளநலவியல் துறையில் சிறந்த பணியாற்றி வருகிறது.
<section end="இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்"/>
<section begin="இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்"/>
{{dhr}}
<b>இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்:</b> 1968-ஆம் ஆண்டு உளநோய் நீக்கு உளவியலார்களின் (Clinical psychologists) நலனுக்காக நிறுவப்பட்டது. உளநோய் நீக்கு உளவியலார்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும் உளநோயாளர்களின் சமூக நலனுக்காகவும் இந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உளவியல் தொடர்பான பல கருத்துகளைக் கலந்தாய்வு செய்தற் பொருட்டுக்கருத்தரங்குகளை இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்(Indian Association of Clinical Psychologists) நடத்துகிறது. இச்சங்கம் இந்திய உளநோய்நீக்கு உளவியல் கால இதழ் ஒன்றையும் நடத்திவருகின்றது. இதன் பொறுப்பாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டுப் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இச்சங்கத்தின் உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இந்த ஆய்வு இதழ் உளவியல் தொடர்பான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றது.
<section end="இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்"/>
<section begin="இந்திய ஊரகங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய ஊரகங்கள்</b>: குடும்பங்கள் பெருகிய காலத்தில் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குடும்பங்கள் பல ஒரே இடத்தில் வாழத் தொடங்கின. இதுவே ஊரகங்கள் அமைவதற்குக் காரணமாக இருந்தது. பல ஊரகங்கள் சேர்ந்ததே நாடு எனப்பட்டது. பண்டைக் காலத்தில் நாடு என்பது மிகப் பரந்ததாக அமைந்திருக்கவில்லை. ஊரகங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையனவாக இருந்தன. ஊரகங்களுக்குப் பின்னர்த் தோன்றியவையே நகரங்கள், மெளரியர்கள், குப்தர்கள் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஊரக அரசியல் அமைப்பு முன்னேற்றமடைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் அரசாட்யில் இந்தியாவில் ஊரகங்களுக்கு இருந்துவந்த தன்-<noinclude></noinclude>
o3kcd220nop7ap2x6mucucwfe5qqlxi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314
250
625632
1954626
1876043
2026-07-19T07:13:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1954626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய ஊழியர் சங்கம்|290|இந்திய ஊழியர் சங்கம்}}</noinclude>வருகின்றன. தனிக் குடும்பங்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள், உணவு முறை, திருமண முறை போன்றவையும் மாறுதல் அடைந்து வருகின்றன. ஊரகங்களில் பெண்களும் கல்வி கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். கலப்புத் திருமணங்கள் மிகவும் குறைவாகவே நடைபெறுகின்றன. ஆயினும் குடும்ப நிலையைக் காட்டிலும் மனிதர்களின் கல்வி, செல்வம், சொத்து, தொழில், பதவி போன்றவை திருமணங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குழந்தைத் திருமணம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உணவு முறைகளும் மாற்றம் அடைகின்றன. உடைப்பாணியும் நகரத்து மக்களைப் போல் அமைந்து வருகின்றது. இளைஞர்கள் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிகின்றனர். ஊரகத்துப் பெண்கள் நகரத்துப் பெண்களைப் போல் உடை அணியத் தொடங்கியிருக்கின்றனர்; அழகுச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். ஊரகங்களில் மின் விளக்குகள் இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் எரி சாணவாயு அமைப்புக் (Gobar Gas Plant) காணப்படுகின்றது. மருத்துவ விடுதிகளும் பெரும்பாலான ஊரகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பொருளாதார அமைப்பும் மாறி வருகின்றது. இளைஞர்கள் நகரங்களில் வேலை தேடிச் செல்கின்றனர். வேளாண்மையில் மின் எந்திரங்களின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். ஊரகங்களில் வங்கிகள் செயற்படுகின்றன. ஊரகத் தொழில் வளர்ச்சிக்கு அரசு நிதி உதவி செய்கிறது. மக்களிடையே அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள், வானொலி ஆகியனவே அல்லாமல் சில ஊரகங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணப்படுகின்றன.
இந்திய ஊரகம் மாறிவரும் ஒரு சமுதாய அமைப்பாகக் காணப்படுகிறது. இந்திய ஊரகங்களில் வாழும் மக்கள் தொகை 45 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டங்கள் ஊரக மக்களின் வாழ்க்கையில் பெருமளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. காண்க; ஊரக வளர்ச்சித் திட்டம்.
<section end="இந்திய ஊரகங்கள்"/>
<section begin="இந்திய ஊழியர் சங்கம்"/>
{{dhr}}
<b>இந்திய ஊழியர் சங்கம்:</b> இதனைக் கோபாலகிருட்டிண கோகலே என்பவர் 1904-5 ஆண்டுகளில் நிறுவினார். இவர் மராட்டிய மாநிலத்தவர்; சிறந்த மேதை; உயர்ந்த பண்பாளர், இவர் இந்திய விடுதலைப் போருக்கான அடித்தளத்தை அமைதியான வழியில் அமைத்துக் கொடுத்தவர். இந்தியரின் நல்வாழ்வில் நாட்டமுள்ளவர்; பொதுப்பணியில் ஈடுபாடு மிக்கவர். இந்தியர் ஒவ்வொருவரும் பொது நன்மைக்காகத் தன்னலம், இன்பவாழ்வு, சொந்த விருப்பு, வெறுப்பு முதலியவற்றுக்கு இடமளிக்காது, பிறருக்காகப் பாடுபடும் உயர்ந்த சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். பொதுத் தொண்டுகள் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட சங்கமே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) ஆகும். இச்சங்கத்தின் வரன்முறைகள், உறுப்பினர், தலைவர் முதலியோர் தகுதிகள், ஆறு கொள்கைகள், ஏழு உறுதிகள் ஆகியனகொண்ட அரசியல் அமைப்பினைக் கோகலே (Gokhale) உருவாக்கிக் கொடுத்தார்.
இவர் இச்சங்கத்தின் வாயிலாக ஊழியர்களைத் திரட்டி, நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்றச் செய்தார். இந்தியாவின் அரசியல் வரலாற்றை இளைஞர்கள் நன்குணர வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தி, தீவிரமான பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டினார். இச்சங்கத்தின் கொள்கைகள், உறுதிகள், சிறப்புப் பணிகள் பின்வருமாறு:
<b>ஆறு கொள்கைகள்:</b>
1. தொண்டும் தியாகமும் புரியக்கூடிய மக்களை உருவாக்க வேண்டும்.
2. அரசியல் அறிவை மக்களுக்குப் புகட்டி அவர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
3. பலதரப்பட்ட வகுப்பினர்களை இணைத்து ஒற்றுமையுடன் செயற்படச் செய்தல் வேண்டும்.
4. பெண்கள் கல்வி, பின்தங்கியோர் கல்வி, தொழில் மற்றும் அறிவியற் கல்வி ஆகியவை பரவ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
5. இந்தியா தொழில் துறையில் முன்னேற்றம் காண ஆவன செய்தல் வேண்டும்.
6. வறுமையில் வாடும் ஏழை, எளியவர்களின் வாழ்வு மேம்பாடு அடைதல் வேண்டும்.
<b>எழு உறுதிகள்:</b>
1. இந்தியர்க்குப் பணிபுரிவதனையே சிந்தனையாகக் கொள்ளுதல் வேண்டும். தன்னால் முடிந்த நல்லதொரு சேவையை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும்.
2. தன்னலத்தைக் கருதிப் பொதுப்பணியில் ஈடுபடக்கூடாது.
3. இந்தியர் ஒவ்வொருவரும் பிறரைத் தம் உடன்பிறந்தோராகக் கருதல் வேண்டும். சேவை புரியும் காலத்தில் இனம், மொழி என்ற குறுகிய<noinclude></noinclude>
equodzakpugdhn5yx0x0qnjkm5n6el2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/315
250
625633
1954628
1876048
2026-07-19T07:14:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1954628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Illiyas noor mohammed" />{{rh|இந்திய ஊழியர் சங்கம்|291|இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி}}</noinclude>பாகுபாட்டுக்குள் அடைபடாமல் அனைவருக்கும் தொண்டு புரித்திட வேண்டும்.
4. போதுமென்ற மனம் இருத்தல் வேண்டும்; தனது முழுச் சக்தியின் எந்தவொரு பகுதியையும் தனக்காகப் பயன்படுத்தல் ஆகாது.
5. சங்கத்தின் நோக்கத்திற்காக எப்போதும் உழைத்தல் வேண்டும்.
6. ஐந்து ஆண்டுக் காலம் சிறப்புப் பயிற்சிகள் பெற வேண்டும். அக்காலத்தில் உறுப்பினர் தலைவரின் கட்டுப்பாட்டினுள் இருக்க வேண்டும்.
7. நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தலைவர் உறுப்பினரை அனுப்பிப் பணிபுரியச் செய்வார். அவரது ஆணைக்கும் அறியுரைக்கும் கட்டுப்பட்டு உறுப்பனர்கள் நடத்தல் வேண்டும்.
தலைவரிடம் சங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. சங்கத்திற்கான சட்டதிட்டங்கள் வரையறை செய்யப்பட்டன.
<b>சிறப்புப் பணிகள்:</b>
இதன் உறுப்பினர்கள் மக்களுக்குக் கருத்துரைகள் வழங்குதல், துண்டு அறிக்கைகள் வெளியிடுதல், நாளேடுகளின் மூலமாக நல்ல செய்திகளைக் கட்டுரை வடிவில் தருதல், பொதுமக்களின் கருத்தகளைத் திரட்டுதல் ஆகியவற்றைச் செய்தனர். சமுதாயப் பணிக்காக அமைந்துள்ள பிற சங்கங்களிலும் இணைந்து செயலாற்றினர். பல இனத்தவரும் ஒற்றுமையுடன் இருந்து பனிபுரிந்தனர்; தொண்டு மனப்பான்மையை வளர்த்தனர்; அரசு அலுவலகங்களுடனும் உழைப்பாளர்களுடனும் நட்புணர்வுடன் இருந்து பொதுத் தொண்டாத்தினர். இச்சங்கம் இந்தியத் தேசிய காங்கிரசுக்கும் ஒத்துழைப்பினை நல்கி, தேசிய இயக்கம் வளர்ச்சி பெற உதவியது.
சங்கத்தின் கிளைகள் சென்னை, நாகபுரி, பம்பாய், அலகாபாத்து, அம்பாலா, கட்டாக்கு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுச் சிறப்பான பணிகள் ஆற்றி வந்தன.
கோகலே 1915-இல் மறைந்தார். எனினும் இச்சங்கம் தொடர்ந்து பணியாற்றியது. பின்னர்த் தொடங்கப் பெற்ற ‘நிட்காமகர்ம மாதா’ என்ற சங்கத்தைக் கார்வே என்பாரும் ‘இந்திய சமுதாயத்தின் தொழிவாளர்கள்’ என்ற சங்கத்தை இலசபதிராயும் ‘இந்தியாவின் மைந்தர்கள்’ சங்கத்தை அன்னி பெசண்ட்டு அம்மையாரும் ‘சபர்மதி ஆசிரம’த்தைக் காந்தியடிகளும் தொடங்கியதற்கு இந்திய ஊழியர் சங்கமே காரணமாகும். இந்திய ஊழியர் சங்கம் சிறந்த நூலகத்தைக் கொண்டுள்ளது. இதை அமைத்துத் தந்த பெருமை கோகலேயைச் சாரும்.
{{float_right|தி.வீ.}}
<section end="இந்திய ஊழியர் சங்கம்"/>
<section begin="இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி"/>
{{dhr}}
<b>இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி:</b> இந்திய நாட்டின் ஏற்றுமதியைப் பெருக்கவும் ஏற்றுமதி, இறக்குமதி கார்த்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இவ்வங்கி 1982-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் மைய அரசால் நிறுவப்பட்டது. ஏற்றுமதிக் கடன்கள், பொறுப்புறுதிகள் ஆகியவற்றை 1982-ஆம் ஆண்டு வரையிலும் அளித்து வந்த இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து ஏற்றுமதி, இறக்குமதித் தொடர்பான பொறுப்புகள் யாவும் இவ்வங்கிக்கு மாற்றப்பட்டன.
இவ்வங்கியின் (Export and Import Bank of India) செலுத்தப்பட்ட மூலதனம் 75 கோடி உரூபாயாகும். இந்திய மைய அரசும் இந்திய மைய இருப்பு வங்கியும் (Reserve Bank of India) நீண்டகாலக் கடன்களை இவ்வங்கிக்கு வழங்கியுள்ளன. இக்கடன்களும் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து மாற்றப்பட்ட ஏற்றுமதிக் கடன் தொகையும் சேர்ந்து மொத்தம் 172 கோடி உரூபாய் மூலவளமாக இவ்வங்கிக்குச் சேர்க்கப்பட்டது. வங்கியின் தொகு பண மூலவளம் (Aggregate resources) 1982-ஆம் ஆண்டில் 360 கோடி உரூபாயாக இருந்தது. இது தவிர ஐரோப்பியத் தாலர் கடன் திட்டம் (Euro-dollar loan) வாயிலாக இவ்வங்கி 25 மிலியன் தாலர் கடனையும் பெற்றது.
<b>பணிகள்:</b> ஏற்றுமதி, இறக்குமதி சார்த்த தொழில்களுக்கும் அவை தொடர்பான வாணிக நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதி வசதிகளை இந்தியாவிலும் அயல் நாட்டிலும் அளிக்கப் பல திட்டங்களை இவ்வங்கி செயற்படுத்தி வருகிறது. இது நேரடியான நிதி உதவிகளையும் மறைமுகமான நிதி வசதிகளையும் வழங்குகிறது. ஏற்றுமதிக் கடனுறுதிச் சீட்டுகளை மறுகழிவு செய்கிறது. சரக்குகளைக் கப்பலில் ஏற்று முன் தேவைப்படும் நிதி உதவிகளையும் (Pre-Shipment Credit) அளிக்கிறது. இவற்றால் மூலதனப் பண்டங்களையும் (Capital Goods) பொறியியல் பொருள்களையும் ஏற்றுமதி செய்வோர் மிகுந்த பயனடைந்து ஏற்றுமதியளவைப் பெருக்கியுள்ளனர். வங்கியின் 77 விழுக்காடு நிதி உதவி போக்குவரத்துப் பொருள்களையும் மின்விசை எந்திரங்களையும் பங்கீட்டு எந்திரங்களையும் (Distribution Equipment) ஏற்றுமதி செய்ய வழங்கப்பெற்றுள்ளது.
அயல்நாட்டு வங்கிகளின் மூலம் நிதி வசதிகளையும் மறுகடன் (Financing & Relending) வசதிகனையும் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் பெற இவ்வங்கி உதவுகிறது. மேலும், இவர்கள் தொழில் நுட்ப உதவி-<noinclude>
வா. க. 3 - 19அ</noinclude>
6wv16bu6c6oa9z3uh32xi1gvmn41r7o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/981
250
632441
1954662
1935907
2026-07-19T07:53:08Z
Sridevi Jayakumar
15329
1954662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னிமாரா பிரபு|953|கன்னியாகுமரி}}</noinclude>அரிய நூல்கள் இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நூலகம் ‘தமிழ் நாட்டுக் குழந்தை நூற்றொகை’ என்னும் தமிழ் மாத இதழை 1963 சனவரியிலிருந்தும், ‘தமிழ் நாட்டு நூற்றொகை’ என்னும் தமிழ் மாத இதழை 1964 சூலையிலிருந்தும் வெளியிட்டு வந்தது; பின்னர், இவ்விரண்டு இதழ்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இதழாகத் ‘தமிழ் நாட்டு நூற்றொகை’ என்னும் பெயரில் 1969–ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.
இந்நூலகத்தில் இப்போது 114 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நூலகவியல் பயிற்சி பெற்றவர்களும் நிருவாகப் பயிற்சி பெற்றவர்களும் அடங்குவர். இந்நூலகம் 1980 ஏப்பிரல் முதல் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இடைவிடாது பணியாற்றி வருகிறது. இது குடியரசு நாள், சுதந்திர நாள், மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் ஆகிய மூன்று விடுமுறை நாட்களைத் தவிர்த்துப் பிற எல்லா நாட்களிலும் பணிபுரிகிறது. இந்நூலகத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கான புள்ளி விவரங்கள் அவ்வப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நூலகத்தின் நிதி நிலை முழுவதும் மாநில அரசைச் சார்ந்தது. குறிப்பாக, 1982-83–ஆம் ஆண்டில் இந்நூலகம் பல்வேறு பணிகளுக்காக மொத்தம் உரூ. 26,60,130 செலவிட்டுள்ளது. அவ்வாண்டில் சந்தாத் தொகை, காலக் கடப்புக் கட்டணம் போன்றவை மூலம் மொத்தம் உரூ. 20,01,750 கிடைத்துள்ளது.
{{Right|<b>சு.ஆ.</b>}}
<section end="கன்னிமாரா நூல் நிலையம்"/>
<section begin="கன்னிமாரா, பிரபு"/>
{{dhr}}
{{larger|<b>கன்னிமாரா, பிரபு,</b>}} இராபர்ட்டுபோர்க்கு, தமிழ்நாடு, சென்னை மாகாணமாக விளங்கிய காலத்தில், கி.பி. 1886-ஆம் ஆண்டில் அதற்கு ஆளுநராகப் பதவி ஏற்றவர். கன்னிமாரா பாரன் (Connemara Baron) என்பது இவருடைய பட்டப்பெயர். இவர் ஆட்சிக்காலத்தில், கி.பி. 1889–இல் கஞ்சம் மாவட்டத்தில் கொடிய வறுமை ஏற்பட்டது. ஆளுநர் நேரில் சென்று மக்களின் துயரங்களை
அறிந்து ஆவன அனைத்தையும் செய்து அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றார். இவர் மக்களின் நன்மையைக் கருதிப் பல சீர்திருத்தங்களைச் செய்தார். கல்கத்தா–சென்னை இருப்புப் பாதை வசதியை ஏற்படுத்தினார். உடல்நல இலாகாவைத் திருத்தி அமைத்தார். இவருடைய அறிவாற்றலையும் விடாமுயற்சியையும் மக்கள் புகழ்ந்தனர். இவர் பெயரால் ஒரு நூல்நிலையம் ஏற்படுத்தப் பெற்று, அது இன்றும் சிறப்புற விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அது கி.பி. 1896-இல் கன்னிமாரா நூல் நிலையம் என்ற பெயருடன் தொடங்கப் பெற்றது. இப்பொழுது அது அரசியலாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இவர் தந்தையின் பெயர் ஐந்தாம் மேயோ பிரபு. இவர்தம் அண்ணன் மேயோ பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவி வகித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டிலுள்ள ஏசு (Has) என்ற நகரில் பிறந்த இராபர்ட்டு போர்க்கு கன்னிமாரா பிரபு தப்ளின் (Dublin) கல்லூரியல் கல்வி கற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்; பின் பாராளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்தார்; பின்னர்த் தமது நாட்டின் பிரதமரின் உதவிச் செயலாளராய் அயல்நாட்டு அலுவல்களைத் திறமையுடன் செய்தார்; பின்னர் கி.பி. 1875-இல் அமர்த்தப் பெற்ற பதிப்புரிமைச் சட்ட ஆய்வுக்குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். இவ்வளவு பயிற்சியும் பெற்ற பிறகு தான் இவர் இந்தியாவுக்கு ஆளுநராக வந்தார். பழமைப் பற்றுக் கட்சியைச் (Conservative Party)
சேர்ந்த இவர் இங்கிலாத்தின் பிரிவி கௌன்சிலின் உறுப்பினர் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும். பழகுவதற்கு இவர் மிகவும் இனியவர் இவர் கி.பி. 1827-இல் பிறந்தார்; மரணமடையும் வரை (1902) நாட்டுக்காகப் பல சேவைகளை ஆற்றிப் பெருமை எய்தினார். தமது நாட்டுப் பாராளுமன்றத்திலேயே 18 ஆண்டுகள் அரிய சேவைகளைச் செய்த இவர் இந்தியர்களுக்காகவும் கடுமையாக உழைத்ததைப் போற்றாமலிருக்க இயலாது. சென்னையில் உள்ள கன்னிமாரா நூல்நிலையம் இவருடைய நினைவுக்கு அறிகுறியாக அமைந்திருப்பது மிகவும் பொருத்தமுடையதாகும். மக்கள் எல்லோரையும் இவர் தம் மக்களாகவே நேசித்தார். இவருக்கு மக்கட்பேறு இல்லை.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கன்னிமாரா, பிரபு"/>
<section begin="கன்னியாகுமரி"/>
{{dhr}}
{{larger|<b>கன்னியாகுமரி:</b>}} தமிழ்நாட்டில் தென்கோடிப் பகுதியில் உள்ள ஒரு பட்டினம். இது அமைந்துள்ள மாவட்டமும் இதே பெயரால் குறிக்கப்படுகிறது. இவ்விடம், சுற்றுலாப் பயணிகளுக்கும் புனிதப் பயணிகளுக்கும் மிக விருப்பமானது. இங்கு உள்ள சிவன் ஆலயமும் காந்தி நினைவுக் கட்டடமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குமரியாக அமர்ந்திருக்கும் தேவி, ஓர் அரக்கனை இங்கே மாய்த்து, இடையூறுகளைக் களைந்ததாகக் கதைகள் கூறுகின்றன. 1970-ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தருடைய சிலையை இங்கே நிறுவியுள்ளனர்.
{{nop}}<noinclude></noinclude>
pzoopatkw0kl89e6rwkzp1yot2e9cov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/982
250
632442
1954663
1935913
2026-07-19T07:54:43Z
Sridevi Jayakumar
15329
1954663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னியாகுமரி|954|கன்னோசி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 982
|bSize = 474
|cWidth = 351
|cHeight = 193
|oTop = 57
|oLeft = 65
|Location = center
|Description =
}}
{{center|கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறை}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 982
|bSize = 474
|cWidth = 184
|cHeight = 181
|oTop = 289
|oLeft = 44
|Location = center
|Description =
}}
{{center|கன்னியாகுமரி}}
கன்னியாகுமரி மாவட்டம் 1684 ச.கி.மீ. பரப்பை உடையது. இங்கு வேளாண்மையே மக்களின் முக்கிய தொழில், கைத்தறி நெசவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கன்னியாகுமரி"/>
<section begin="கன்னியாகுமரி மாவட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னியாகுமரி மாவட்டம்:</b>}} காண்க: தமிழ் நாட்டு ஆட்சிப் பிரிவுகள்.
<section end="கன்னியாகுமரி மாவட்டம்"/>
<section begin="கன்னோசி"/>
{{dhr}}
{{larger|<b>கன்னோசி:</b>}} இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருக்காபாது மாவட்டத்தில் உள்ளதொரு தொன்மையான வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நகரம். கன்னோசி, கன்னியாகுப்சம் (கூன்கன்னி) எனவும் கூறப்படும். கங்கைநதியின் துணை ஆறான காளி ஆற்றின் கரையில் கான்பூர் நகருக்கு வடமேற்கில் 80 கி.மீ. தொலைவில் கன்னோசி அமைந்துள்ளது. விசுவாமித்திரர் இந்நகரில் தான் பிறந்தார்.
தாலமி தமது நூலில் கன்னோசி பற்றிக் குறித்துள்ளார். குப்தர்கள் காலத்தில் இந்நகரம் தலை சிறந்த நகரமாக விளங்கியது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கன்னோசியை மௌகாரிகள் என்ற மரபினர் ஆட்சி செய்தனர். மௌகாரி அரசர் கிரக வர்மன் அர்ச பேரரசரின் தமக்கை இராச்சிய சிரீயை மணம் புரிந்து கொண்டார். கிரகவர்மன் கொலையுண்டபின் அர்சர் கன்னோசியைத் தமது அரசுடன் சேர்த்துக் கன்னோசியைத் தன் தலைநகரமாக்கிக் கொண்டார். அர்சர் (Harsha) கன்னோசியில் கி.பி. 643–இல் சமயப் பேரவையை நடத்தினார். இப்பேரவையில் பௌத்த, சமண, இந்து மதப் பெரியோர்களும், பல நாட்டு அரசர்களும் கலந்து கொண்டனர். சீனப்பயணி யுவான் சுவாங்
இப்பேரவையில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சமயச் சொற்பொழிவுகளும், ஊர்வலங்களும்<noinclude></noinclude>
o6anrw94541arjcyqeaksnahhwqp69x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/983
250
632444
1954664
1935928
2026-07-19T07:56:02Z
Sridevi Jayakumar
15329
1954664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசபாபதிப் பிள்ளை, கே.|955|கனகசபைப் பிள்ளை. வி}}</noinclude>கன்னோசியில் இக்காலத்தில் நடத்தப்பட்டன. இப்பேரவை 23 நாட்கள் நடைபெற்றது. அரசருக்குப் பின்னர் அர்சுனன் என்ற அரசரும் அவருக்குப் பின் யசோவர்மன் என்பவரும் கன்னோசியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இவர்களை அடுத்து வந்த கூர்சரப் பிரதிகாரர்கள் கன்னோசியைக் கைப்பற்றித் தங்களின் தலைநகரமாக்கிக் கொண்டனர். கசினிமாமூது இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது கன்னோசியை இராச்சியபாலன் என்ற அரசர் ஆண்டு வந்தார். கசினி முகம்மது இந்நகரைத் தாக்கி நகரின் ஏழு கோட்டைகளையும் தரைமட்டமாக்கினார். கசினியின் சூறையாடலுக்குப் பின் கன்னோசியைக் சுகடவாலர்கள் ஆட்சிபுரிந்தனர். கோரிமுகம்மது கி.பி. 1193–இல் ககடவால அரசர் செயச்சந்திரனை சந்த்வார் (Chandwar) என்ற இடத்தில் தோற்கடித்துக் கன்னோசியைக் கைப்பற்றினார். கன்னோசி இக்காலத்தில் அத்தர் போன்ற நறுமணப் பொருள்களுக்கும் புகையிலைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நகரத்தின் மக்கள் தொகை 41,019 (1981).
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கன்னோசி"/>
<section begin="கனகசபாபதிப்பிள்ளை, கே."/>
{{dhr}}
{{larger|<b>கனகசபாபதிப்பிள்ளை, கே. (கே.கே. பிள்ளை-1905-1981)</b>}} இவர் 1905–இல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டம், அல்லூரில் கோலப்ப பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரத்தில் முதுகலைப் பட்டம் (எம்.ஏ) பெற்றார். தெள்ளிச்சேரி அரசு கலைக்லூரியில் வரலாற்று விரிவுரையாளரானார். இறுதியாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ‘கசீந்திரம் கோயில்’ என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் டி.லிட். (D.Litt) பட்டம் பெற்றார். பின்னர், விடாமுயற்சியுடன் உழைத்து ‘சென்னை மாநிலத்தில் உள்ளாட்சி அரசின் வரலாறு’ (History of Local Self Government in the Madras Presidency) என்னும் ஆய்வுக் கட்டுரையை உருவாக்கினார். இதற்கு ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம், டி.பில். (D.Phil.) பட்டத்தை வழங்கியது.
வரலாற்றுத் துறையில் தனது ஆய்வுத்திறனால் நற்புகழ் பெற்ற இவர், 1954–இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையில் பேராசிரியராகவும் தலைவராகவும் அமர்த்தப்பட்டார்.
இவரால் தமிழில் எழுதப்பட்டு, இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூல் இவரது வரலாற்றுப் புலமையைத் தமிழக மக்களுக்கு உணர்த்தியது. இவரால் வெளியிடப்பட்ட ‘தமிழரின் சமுதாய வரலாறு’ (Social History of the Tamils Part I, 1969) என்னும் ஆங்கில நூல் தமிழரின் பண்பாட்டுப் பெருமையை உலகினருக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. சங்க காலத் தமிழர் வாழ்வினை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், இவரது ‘தமிழரின் சமுதாய வரலாறு’ உதவும். அடுத்து வரலாற்றுப் பின்னணியில் நற்றிணை (Narrinai in its Historical Setting) என்னும் இவரது ஆய்வு நூல் இவருக்கு மேலும் பெருமையைச் சேர்த்தது.
இவர் பல ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாக இருந்து, நன்னெறிப்படுத்தி, அவர்களை வரலாற்றறிஞர்களாக உருவாக்கியுள்ளார். சிலகாலம் இவர் வட்டாரப் படிப்புத்துறையின் (Department of Area Studies) தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மரபார்ந்த பண்பாட்டுக் கழகத்தின் (Institute of Traditional Culture) இயக்குநராகப் (1972) பதவிவகித்தார்.
பேராசிரியர் சி.டி.எச்.கோல் (Prof.G.D.H. Cole) கே.சி.வீரே (K.C.Wheare) முதலான மேலைநாட்டு வரலாற்று மேதைகளுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக இங்கிலாந்தில் இவர் பல கருத்தரங்குகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இவர் 1959 அக்டோபர் திங்களில் புவனேசுவரில் நடைபெற்ற, இருபதாம் அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், முதலாம் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் (South Indian History Congress) மாநாட்டுத் தலைவரானார் (1980). தமிழக அரசு நிறுவிய தமிழக வரலாற்றை எழுதும் குழுவின் தலைவராகவும் இவர் அமர்த்தப்பட்டார். மரபார்ந்த பண்பாட்டுக் கழகத்திலுடைய ஆய்விதழின் பதிப்பாசிரியராகவும் (Editor, The Bulletin of Traditional Culture) இவர் பணியாற்றினார்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கனகசபாபதிப்பிள்ளை, கே."/>
<section begin="கனகசபைப் பிள்ளை, வி."/>
{{dhr}}
{{larger|<b>கனகசபைப் பிள்ளை, வி. (கி.பி. 1885–1906)</b>}} தமிழில் வரலாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்ட அறிஞர்களுள் ஒருவர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய பழந்தமிழ் நாள்களை நுண்ணிதின் ஆராய்ந்து பண்டைத் தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்திய பெருமை இவர்க்கு உண்டு. ‘சென்னை மதிப்புரை’ (Madras Review) என்ற ஆங்கில இதழில் இவர் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ (The Tamils 1800 Years Ago) என்னும் நூலாக வெளியிட்டார். ‘தமிழர் தொன்மை’<noinclude></noinclude>
4hjh7h3a9fan46cmhbugtwch5tzgqu2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/984
250
632445
1954665
1935947
2026-07-19T07:56:52Z
Sridevi Jayakumar
15329
1954665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசபைப்பிள்ளை, வி.|956|கனகசபைப்புலவர்}}</noinclude>(The Indian Antiquary) என்ற ஆங்கிலத் திங்கள் இதழில் ‘தமிழ் வரலாற்றேடுகள்’ (Tamil Historical Texts) என்ற தலைப்பில் களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ‘இராசராச சோழன்’ (Raja Raja Chola), வங்காளம், பர்மா ஆகியவற்றில் தமிழர் வெற்றி (The Conquest of Bengal and Burma by Tamils) என்னும் சிறு நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 984
|bSize = 474
|cWidth = 134
|cHeight = 170
|oTop = 155
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{center|கனகசபைப் பிள்ளை, வி.}}
இவரது வாழ்க்கை வரவாறு பற்றிச் சிறிதளவே குறிப்புகள் கிடைக்கின்றன. இவர்தம் தந்தையார் விசுவநாத பிள்ளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மல்லாகம் என்னும் ஊரினர். அவர் தமிழகத்திற்கு வந்து சென்னை நகரில் பணியை மேற்கொண்டார். கல்வித் துறையில் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய அவர் உவின்சுலோ பாதிரியார் அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்க்கு உற்ற துணையாக இருந்து உதவிகள் புரிந்தார். இத்தகு தந்தையார்க்கு மகனாகப் பிறந்த கனகசபைப் பிள்ளை தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் வியப்பு இல்லை. வாழ்வூசியத்திற்காக மதுரையில் வழக்கறிஞராகவும், பின்னர்ச் சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளராகவும் பணியாற்றினாலும் தமிழ்த் தொண்டு புரிவதையே தவமாக ஏற்றார். தொழில் காரணமாக இவர் வேற்றூர் சென்ற போதெல்லாம் ஆங்காங்கே பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சுவடிகளைத் தேடித் தொகுத்து, டாக்டர் உ.வே. சாமி நாதையர் அவர்களிடம் கொடுப்பதுண்டு என்பர்.
{{Right|<b>மா.இரா.த.</b>}}
<section end="கனகசபைப் பிள்ளை, வி."/>
<section begin="கனகசபைப் புலவர்"/>
{{dhr}}
{{larger|<b>கனகசபைப் புலவர்:</b>}} கனகசபை என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல புலவர்கள் வாழ்ந்திருந்தனர். இங்குக் குறிப்பிடப்படும் கனகசபைப் புலவர் ஈழத்தில் அளவெட்டி என்ற ஊரில் வேளாண் குலத்தில் கி.பி. 1825–ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் வேலுப்பிள்ளை என்ற சைவ சமயம் சார்ந்த பெரியாருடைய மகனாகப் பிறந்து, பின்னர்க் கிறித்தவ மதத்தைத் தழுவினார். கவிபாடும் ஆற்றல் இயல்பாகவே கைவரப்பெற்றவர் கனகசபைப் புலவர். இவர் ஆங்கில மருத்துவமும் தமிழ் மருத்துவம் கற்ற தமிழ்ப் பாவாணர்.
தம் இளமைக்காலக் கல்வியை வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இவர் மேற்கொண்டார். அங்கு ஆங்கிலமும் தமிழும் சிறப்புறக் கற்றார். பின்னர் உவாட்டு என்ற ஆங்கில மருத்துவரை நாடி ஆங்கில மருத்துவத்தையும் சிறப்புறக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இவர் தந்தையார் தமிழ் மருத்துவராக இருந்தபடியால் இயல்பாகவே தமிழ் மருத்துவத் துறையிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். ஆங்கில மருத்துவத்தை இவர் கற்றிருந்தாலும் தமிழ் மருத்துவத்தைப் பின்பற்றி மக்களுக்குத் தொண்டு செய்து வரலானார்.
சங்ககால மருத்துவன் தாமோதரனாரைப் போலவே இவரும் மருத்துவத் தொழினுடன் தமிழ்ப் பணியையும் மேற்கொள்ளத் தவறவில்லை. சிறப்பு
மிக்க பாக்களை எளிய இனிய நடையில் இவர் பாடி வந்தமையால் இவருக்குப் ‘புலவர்’ எனப் பட்டம் தந்து மக்கள் சிறப்பித்தனர். இப்பட்டம் ‘புலவர் கனகசபை’ என்றிருந்தது போய், பின்னாளில் ‘கனகசபைப் புலவர்’ எனச் சிறப்படை பின்னொட்டியது. இவர் பாடிய சமயப் பாக்கள் மிகப் பலவாகும்.
இவர் 1759 செய்யுட்கள் அமைந்த ‘திருவாக்குப் புராணம்’ என்னும் கிறித்தவ சமயத் தொடர்புடையதான புராணம் ஒன்றை இயற்றியுள்ளார். அக்காலத்தில் சுன்னாகம் என்னும் இடத்திலிருந்த முத்துசாமிக் கவிராசர் கிறித்தவ மதத்தைக் கண்டித்து வெளியிட்ட ‘ஞானக்கும்மி’ என்ற நூலை மறுத்து, கனகசபைப் புலவர் ‘அஞ்ஞானக்கும்மி மறுப்பு’ என்னும் நூலை வெளியிட்டார். பின்னர் அந்நூலை, மறுத்து ‘அஞ்ஞானக்கும்மி மறுப்புக்கு மறுப்பு’ என்னும் நூலைக் கொக்குவில் சிலம்பநாத பிள்ளை என்பவர் பாடி வெளியிட்டார்.
இவ்வாறே ஆற்றுப்படை, மடல் போன்றன எழுதுவதிலும் இவர் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.<noinclude></noinclude>
ies2cibwsrunmburb33f9m0l54naewq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/985
250
632446
1954666
1935971
2026-07-19T07:58:13Z
Sridevi Jayakumar
15329
1954666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசுந்தரம் பிள்ளை, தி.த.|957|கனகதாசர்}}</noinclude>என்பதனை அழகர்சாமி என்பார்மீது இவர் சென்னையில் இருந்தபோது எழுதிய ‘மடல்’ என்ற நூலால் அறியலாம். அதற்காக வேலூரிலிருந்த அழகர்சாமியிடம் பல பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். வேலூரிலிருந்து இவர் திரும்பும்போது வழியிற்கண்ட சில புலவர்களை அழகர்சாமியிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்திய ஆற்றுப்படை நூலும் சிறப்புடையதாகும்.
இவருடன் பணியாற்றிய வீராசாமிச் செட்டியாரின் நரைத்த குடுமியும் இவரது கவிதைக் கண்ணிற்குத் தப்பவில்லை. இத்தகைய சிறப்பு மிக்க ‘மருத்துவக்கவிஞர்’ கி.பி. 1873–ஆம் ஆண்டில், தமது நாற்பத்தெட்டாம் வயதினில் காலமானார்.
{{Right|<b>அ.கோ.</b>}}
<section end="கனகசபைப் புலவர்"/>
<section begin="கனகசுந்தரம் பிள்ளை, தி.த"/>
{{dhr}}
{{larger|<b>கனகசுந்தரம் பிள்ளை, தி.த. (கி.பி. 1863-கி.பி. 1922)</b>}} யாழ்ப்பாணத்தில் உள்ள திருக்கோண மலையில் பிறந்தவர். கனகசுந்தரம் பிள்ளை, கதிரை வேற் பிள்ளை, கணேச பண்டிதர் போன்ற அறிஞர்களிடத்துப் பாடம் கேட்டவர்; ஆங்கிலத்தையும் தமிழையும் ஐயம் திரிபின்றிக் கற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்று இவர் பி.ஏ. பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சில காலம் ஆங்கிலப் பேராசிரியராகவும், அதன்பின் பச்சையப்பன் கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதித் தொகுப்புப் பணியில் ஈடுபட்டு இவர் துணைப்பதிப்பாசிரியராகவும் விளங்கினார்.
இவர் பதிப்பித்த நூல்கள் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியர் உரையும், தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரையும் ஆகும். சுன்னாகம் குமாரசாமிப் புலவருடன் இணைந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு புத்துரை எழுதி வெளியிட்டார். தமிழ் நாவலர் சரிதை, ஈழமண்டலத் தேவாரம், ஈழமண்டலத் திருப்புகழ் என்பன இவர்தம் குறிப்புரையோடு வெளிவந்தன. கம்பராமாயணத்தைத் திருத்தமான பாடல்களோடும் அரும்பத உரையுடனும் வெளியிடத் திட்டமிட்ட இவர் பாலகாண்டம் ஒன்றை மட்டுமே வெளியிட்டார். எஞ்சிய காண்டங்கள் வெளி வரவில்லை. தாம் தமிழ்த் தொண்டில் ஈடுபட்டதுபோலவே பிறரும் தமிழ்த் தொண்டு புரிதல் வேண்டும் என்னும் பேருள்ளம் இவர்க்கு இருந்தது. எனவே, ஒல்லும் வழியெல்லாம் தக்கார்க்கு உதவினார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரை வெளி வருவதற்கு இவரே காரணம் எனலாம். ஐயர் மறைந்த பின்னரே அந்நூல் வெளிவந்தது. மொழிபெயர்ப்புத் துறையிலும் கனகசந்தரம் பிள்ளை ஈடுபாடு கொண்டிருந்தார். இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் வரும் சில சிறந்த பாடல்களைத் தொகுத்து இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘இல்லாண்மை’ என்பது இவர் எழுதிய உரைநடை நூலாகும்.
{{Right|<b>மா.இரா.த.</b>}}
<section end="கனகசுந்தரம் பிள்ளை, தி.த"/>
<section begin="கனகநாசர்"/>
{{dhr}}
{{larger|<b>கனகநாசர்</b>}} தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்தில் வாழ்ந்த ஒரு துறவி, தார்வார் மாவட்டத்தில் காகினேல் என்னும் ஊரில் கி.பி. 1550–இல் பிறந்த இவர், கவிஞராகவும் கிருட்டிண பக்தராகவும் விளங்கினார். பீடாரின் பரமஞானி என்று அக்காலத்தில் புகழப் பெற்றார். இவர் தென் கன்னட மாவட்டத்திலுள்ள உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருட்டிணன் ஆலயத்தைச் சார்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடலானார். வைணவ சமயத்தின் ஒரு பிரிவான ‘துவைதக்’ கோட்பாடு வளர்ந்த அவ்விடம் கனகதாசரின் மனத்துக்கு மிகுந்த அமைதியை அளித்தது. இறை தத்துவம் பற்றி மத்துவாச்சாரியாரால் நிறுவப்பெற்ற எட்டு மடங்களின் அதிபதிகளும் புகழ்ந்து கூறியுள்ளனர். கனகதாசர் நரசிம்மமூர்த்தி பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய தோத்திரப் பாக்களில் அரிபக்தசாரம், இராமதியானம் முதலியன முக்கியமானவை. உடுப்பி கிருட்டிணன் கோயிலுக்கு அண்மையில் கனகதாசர் வாழ்ந்த ஒரு சிறு குடில் இன்றும் விளங்குகிறது. மக்கள் அதை வணங்குவதையும் காணலாம். கருநாடக மாநிலத்தில் கனகதாசரைப் பற்றிய பல கதைகள் மக்களிடையே வழங்குகின்றன. அவற்றுள் ஒரு கதை பின்வருமாறு அமைகிறது.
உடுப்பி கிருட்டிணன் கோயிலுக்கு ஒரு நாள் மாலை இவர் வந்தபொழுது இவர் ஒரு அரிசன வகுப்பைச் சேர்ந்தவராதலால், உள்ளே நுழையத் தடைவிதிக்கப்பட்டது. கண்ணனைக் காண முடியாத துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இவர் இருப்பிடம் சென்று அழத் தொடங்கி விட்டார். அதைப் பொறுக்க முடியாத கண்ணபெருமான் இவர் இருக்குமிடம் திரும்பி இவருக்குக் காட்சி கொடுத்தார் என கூறப்படுகிறது. அன்று திரும்பிய கண்ணனின் திருவுருவச் சிலை இன்றும் கனகதாசரின் குடில் நோக்கி அமைந்திருப்பதே அந்நிகழ்ச்சிக்குச் சான்று என்று கூறுகிறார்கள்.
<b>மற்றொரு கதை:</b> கனகதாசருடைய உண்மை அன்பைச் சோதிக்க ஒரு நாள் மடாதிபதி தன் கையில் ஒரு பொருளை மறைத்து வைத்துக் கொண்டு, பலர் நிரம்பிய ஒரு கூட்டத்தில் அப்பொருள் யாது என்று<noinclude></noinclude>
oeege62df90ot7czbpe0fswui3tdcx6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/986
250
632447
1954667
1935974
2026-07-19T07:58:56Z
Sridevi Jayakumar
15329
1954667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனடா|958|கனடா}}</noinclude>கேட்க எல்லோரும் சொல்ல அறியாமல் விழித்தனர். பின்பு கனகதாசரிடம் சென்று, இதில் என்ன இருக்கிறது எனக் கேட்க, இவர் தனது விடையை ஒரு செய்யுளாகவே இயற்றிக் கையில் உள்ள பொருள் சாளக்கிராமமே வாசுதேவச் சின்னமாகிய என்ற உண்மையை யாவரும் வியக்கும்படி கூறினராம். அச்செய்யுள் இன்றும் கருநாடகத்தில் பலரால் அன்புடன் ஒதப்பட்டு வருகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>துணைநூல்:</b>
<b>Saletove B.A.,</b> Ancient Karnataka History of Tuluwa, New Delhi, 1980.
<section end="கனகநாசர்"/>
<section begin="கனடா"/>
{{dhr}}
{{larger|<b>கனடா:</b>}} வடஅமெரிக்கக் கண்டத்தின் வடபகுதியை முழுமையாகப் பெற்றுள்ள நாடு கனடா ஆகும். இந்நாடு, உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய நாடாகவும், ஐரோப்பாவைப் போல் மிகப் பெரிய அளவினதாகவும், ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடாகவும் உள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 986
|bSize = 474
|cWidth = 205
|cHeight = 175
|oTop = 152
|oLeft = 252
|Location = center
|Description =
}}
{{center|கனடா இருப்பிடம்}}
கனடா என்ற பெயர் கனாட்டா (Kanata) என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். அதற்குக் கிராமம் அல்லது சமுதாயம் என்ற பொருள் உள்ளது. முதன் முதலாக கி.பி. 1534–இல் சேக்குவிசு கார்ட்டியர் (Jacques Cartier) என்பவர் எழுதிய குறிப்புகளில் கனடா என்ற சொல் காணப்படுகிறது.
<b>வரலாறு:</b> கனடாவின் வரலாறு மிக்க வியப்பு உண்டாகும் வண்ணம் உள்ளது. ஏனெனில், அதன் மக்கள் அகண்ட வெளியாக இருந்த நிலப்பரப்பில் ஓர் நாட்டை அமைத்தார்கள். அதன் தொடக்க காலத்தில், புதிய நிலப்பரப்பைக் கண்டு அறியச் சென்ற மாலுமிகளும், மதகுருக்களும், வணிகர்களும் கனடாவின் ஆறுகளின் ஒரப்பகுதிகளுக்குச் சென்று தங்கினர். அதன்பின்னர் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையே போர் மூண்டது. கனடா கி.பி. 1867–இல் ஆங்கிலேயப் பொது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு கூட்டாட்சி நாடாகியது. இந்நிலைக்குப் பின்னர் இந்நாடு, பல சீரான அரசியல் மாற்றங்களைப் பெற்று ஒரு சுதந்திர தேசிய நாடாக வளர்ச்சியுற்றது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 986
|bSize = 474
|cWidth = 171
|cHeight = 143
|oTop = 262
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|கனடா முக்கிய நகரங்கள்}}
வைக்கிங்கு (Viking) என்ற கப்பல் கி.பி. 1000–ஆம் ஆண்டில் அமெரிக்கக் கண்டத்திற்கு முதன் முதல் சென்றது. பின்னர் கி.பி. 1497-இல் சான் கேபட்டு (John Cabot) என்னும் ஆங்கிலேயர் கனடாவுக்குச் சென்றார். ஆனால், அவர் கரை அடைந்ததாகக் குறிப்புகள் இல்லை. சியோவானி தி வேரோசோனா (Giovanni de verra zono) என்னும் இத்தாலியர், கி.பி. 1524–ஆம் ஆண்டு முதலாம் பிரான்சிசு என்ற பிரஞ்சு மன்னரின் ஆணை பெற்றுக் கனடா சென்றார். அதன்பிறகு, பத்து ஆண்டுகள் சென்றபின் சேக்குவிசு கார்ட்டியே (Jacques Caratier) என்பவர் புனித இலாரன்சு (St. Lawrance) வளைகுடாவைக் கண்டறிந்தார். அவரது மூன்றாம் பயணத்தின் போது கனடாவில் குடியேற்றத்தை அமைத்தார் அவரை அடுத்துச் சாமுவேல் தி சாம்லின் (Samuel de Champlian) என்னும் பிரெஞ்சு மாலுமி கனடாவில் அக்கேடியா (Acadia) என்னும் குடியேற்றத்தை நிறுவினார். அவரே கி.பி. 1608-இல் கியுபெக்கு<noinclude></noinclude>
2fu2lcehv5eydykov78jwjwlemktmi2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/990
250
632451
1954669
1936159
2026-07-19T08:00:17Z
Sridevi Jayakumar
15329
1954669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனம் கிருட்டிண ஐயர்|962|கனம் கிருட்டிண ஐயர்}}</noinclude>இயங்குகின்றன. இப்பள்ளிகளில் கல்விசார் (Academic) பாடங்கள், வணிகத்தொழில், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பலதிறப்பட்ட பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கனடாவில் ‘சமுதாயக் கல்லூரிகள்’ (Community Colleges) எனப்படும் மேனிலைப் பின்கல்வி (Post Secondary Education) மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. முதன் முதலாகக் கனடாவில் 1960–ஆம் ஆண்டுகளில் சமுதாயக் கல்லூரிகள் தோன்றின. கனடாவில் 1978–இல் 173 சமுதாயக் கல்லூரிகள் இருந்தன. அவற்றில் மாணவர் சேர்க்கை 247,000. சமுதாயக் கல்லூரிகளில் தொழில் நுட்பம் வணிகவியல் பாடங்கள் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் நடத்தப்படுகின்றன. சமுதாயக் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களைப்போல் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்ல (Nondegree-granting Institutions). பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் ஏதாவதொரு மொழியில் மட்டுமே பாடம் கற்பிக்கப்படுகிறது.
கனடாவில் ஏறத்தாழ 68 பல்கலைக் கழகங்கள் (1978) உள்ளன. சில பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்திலும் சிலவற்றில் பிரெஞ்சு மொழியிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இன்னும் சில பல்கலைக் கழகங்களில் இவ்விரண்டு மொழிகளிலும் நடைபெறுகின்றன. ஆங்கிலமொழி வாயிலாக நடைபெறும் பல்கலைக் கழகங்களுள் ஆல்பர்ட்டா பல்கலைக் கழகம் பிரிட்டிசு கொலம்பியா (University of Alberta), பல்கலைக் கழகம் (University of British Columbia), மனிதோபா பல்கலைக் கழகம் (University of Manitoba), தொராண்டோ பல்கலைக்கழகம் (University of Toronto), மெக்சில் பல்கலைக் கழகம் (McGill University) ஆகியனவும், பிரெஞ்சு மொழியில் நடைபெறும் பல்கலைக் கழகங்களும், இலேவல் பல்கலைக் கழகம் (Lavel University), மாண்டிரீல் பல்கலைக் கழகம் (University of Montreal) ஆகியனவும் குறிப்பிடத் தக்கவை.
கனடாவின் மிகப்பெரிய இருமொழிவழிப் (ஆங்கிலம், பிரெஞ்சு மொழி) பல்கலைக் கழகம் ஒட்டாவாப் பல்கலைக் கழகம் (University of Ottawa) ஆகும். இலேவல் பல்கலைக் கழகம் கனடாவில் மிகப் பழமையானது. இது கி.பி. 1663-இல் ஏற்படுத்தப்பட்டது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கனடா"/>
<section begin="கனம் கிருட்டிண ஐயர்"/>
{{dhr}}
{{larger|<b>கனம் கிருட்டிண ஐயர்:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் பரம்பரையினர் அனைவருமே இசைக்கலைஞராக உடையார் விளங்கினர். இவர் திருச்சி மாவட்டம் பாளையம் வட்டத்திலுள்ள திருக்குன்றம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையில் தம் தந்தை இராமசாமி ஐயரிடம் முறையாக இசைபயின்றார். பின்னர்த் தஞ்சை அரசவைக் கலைஞரான பச்சைமிரியன் ஆதிப்பையரிடம் இசை பயின்று தனது இசைக் கலையை வளமாக்கிக்கொண்டார்; தஞ்சையில் அரசவைக் கலைஞரானார். அப்போது தஞ்சையை மராட்டிய மன்னர் அமரசிம்மன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அக்காலம் பொப்பிலி சமசுதானத்திலிருந்து இன்னிசை தஞ்சை வந்த ‘கனம்’ கேசவையாவின் நிகழ்ச்சி தஞ்சை அரசவையில் நடைபெற்றது. அதைக் கேட்ட மன்னரும் அவையோரும் மகிழ்ந்தனர். கனம், நயம், தேசிகம் என்னும் இசை மரபுகளில் ‘கன’ மார்க்கத்தைப் பாடிப் புகழ்பெற்றவர் ‘கனம்’ கேசவையா.
கனம் பாடுவதென்பது மூலாதாரத்திலிருந்து கம்பீரமான ஒலியை உண்டாக்கிப் பாடுவது. இம்முறையில், பாடத் தொடங்கும்போதே அந்த ஒலி ஊங் (ஹுங்) கார ஒலியுடன் எழுமென்றும், அது சிங்கத்தின் முழக்கம் போலிருக்குமென்றும், ஆரோகண அவரோகணத்தில் பலவகையான இசை விகற்பங்கள் (சங்கதிகள்) வருமாறும் அங்கசேட்டைகள் இல்லாமலும் பாடவேண்டுமென்றும் கூறுவர். இத்தகைய இசைமரபு அச்சமயம் தமிழகத்திலிருந்து மறைந்த நிலையிலிருந்தது. மன்னரின் விருப்பப்படி கிருட்டிண ஐயர் அந்த இசைமரபை முறையாகக் கேசவையாவிடம் கற்றார். முறைப்படி பயிற்சி செய்து, தஞ்சை அரசவையில் ‘தோடி’ போன்ற கனராகங்களைக் கனமார்க்கத்தில்பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘கனம்’ கேசவையாவே இவரை வியந்து பாராட்டினாராம். அன்று தொடங்கி இவர் ‘கனம் கிருட்டிண ஐயர்’ என்று அழைக்கப்பெற்றார். தஞ்சை, உடையார்பாளையம் ஆகிய இடங்களில் அரசவைக் கலைஞராக விளங்கினார்.
இவர், தமிழில் இசைப்பாடல்களை இயற்றும் வல்லமை பெற்றவர். இவர்தம் இசைப்பாடல்கள் அந்த அந்த இராகங்களின் உயிர்நிலைகளை (மூர்ச்சை) எடுத்துக் காட்டுவதற்கு ஏற்றபடி அமைந்திருக்கும்; உலக வழக்குச் சொற்களும், எளிய நடையும் பாடல் குறைந்த பதங்களும் கொண்டவை. இவர்களில் இயற்றமிழிலக்கண அமைதியைக் காட்டிலும் இசைப்போக்கிற்கு ஏற்ற சொற்கள் மிகுதியாக அமைந்திருக்கும்; இன்பச் சுவை மிகுந்த பாடல்களே அதிகம்; அத்துவிதப் பாடல்களும், மனத்திற்கு அறிவுரை கூறும் நீதிப்பாடல்களும் சிலவுண்டு, திருத்தலப் பாடல்களில் அந்த அந்தத் தலங்களுக்குரிய சிறப்புச் செய்திகளை அப்பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார்.<noinclude></noinclude>
323p47z0n8wzoqlcbcg0amrvp9k4nu6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/991
250
632452
1954670
1936160
2026-07-19T08:00:58Z
Sridevi Jayakumar
15329
1954670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனரகத் தொழில்கள்|963|கனரகத் தொழில்கள்}}</noinclude>வேலர்’, ‘முத்துவேலர்’, ‘முருகேசர்’ போன்றமுருகப் பெருமாளின் பெயர்களையே இவர் தன் பாடல்களில் முத்திரையாக வைத்துள்ளார். ஒரே ஒரு பாடலில் ‘கானலோலனே கனம் கிருட்டிணனுடன்’ என்று சிறப்பு அடையோடு கூடிய தம் இயற்பெயரையும் குறித்துள்ளார்.
இவரை ஆதரித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். தஞ்சை மன்னர்களான அமரசிம்மன், சரபோசி ஆகியோரும், உடையார்பாளையம் குறுநிலமன்னர்களான கச்சிரங்க உடையார், கச்சி கலியாணரங்கர் ஆகியோரும், பெருநிலக்கிழார் கவித்தலம் இராமபத்திரமூப்பனார் ஆகியோருமாவர். சங்கீத மும்மூர்த்திகளுள் சத்குரு தியாகராசசுவாமிகளை இவர் சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது.
மிகவும் அருமையானதும், மற்றவர்களால் கைவிடப்பட்டதுமான ‘கனம்’ என்னும் இசைமரபைத் தமிழகத்திற்கு மீட்டுத் தந்தவர் இவராவார். இவரால் ‘கனமார்க்கத்தின்’ இன்னிசை இனிமையைத் தமிழக மக்கள் உணர்ந்து இன்புற்றனர். இவர் 60 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தார்.
{{Right|<b>எம்.சீ.</b>}}
<section end="கனம் கிருட்டிண ஐயர்"/>
<section begin="கனரகத் தொழில்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கனரகத் தொழில்கள்</b>}} ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பிடம் வகிக்கின்றன. கனரகத் தொழில்களின் (Heavy Industries) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிற தொழில்கள் வளர்ச்சியுறும். இத்தொழில்களைத் தொடங்க மிகையான மூலதனம் தேவைப்படுகிறது. மூலதனத்தை (Capital) மிகுதிப்படுத்துவதன் மூலமே கனரகத் தொழில்களை உருவாக்க முடியும். கரைகத் தொழில்களின் வளர்ச்சியைப் பொறுத்தே ஒரு நாட்டின் துரிதப் பொருளாதார முன்னேற்றம் வரையறுக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக வேளாண்மையை நம்பியிருந்த அமெரிக்கா, இங்கிலாந்து, உருசியா, சப்பான் போன்ற நாடுகள் தலைசிறந்த தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியதற்குக் கனரகத் தொழில்களின் வளர்ச்சி முக்கிய காரணம் ஆகும்.
<b>சிறப்பியல்கள்:</b> சுனரகத் தொழில்களின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குகிறது. இத்தொழில்களில் உற்பத்தியாகும் இரும்பு, எஃகு, நிலக்கரி, பொறியியல் பொருள்கள் முதலியன பிற தொழில்களுக்கு மூல வளமாகப் பயன்படுகின்றன. துரித வேளாண்மை வளர்ச்சிக்குத் தேவையான கருவிகளைக் கனரகத் தொழில்கள் உற்பத்தி செய்கின்றன. இத்தொழில்களைச் சார்ந்து பல சிறு தொழில்கள் வளர்ச்சியடைவதால் வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. அவை கல்வியறிவு பெறாதவர், கல்வி கற்றோர், தொழில்நுட்பத் தொழிலாளர், ஆகியோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. கனரகத் தொழில்களின் வளர்ச்சி ஒரு நாட்டின் துரித மூலதனத் திரட்சிக்கு உதவுகிறது. மூலதனத் திரட்சி வீதம் கூடினால், முதலீட்டின் அளவு கூடும். முதலீட்டின் அளவு கூடினால், நாட்டில் பொருளாதார முன்னேற்றம் விரைவில் ஏற்படும்.
<b>இட அமைப்பு:</b> கனரகத் தொழில்கள் எங்கு ஏன் அமைக்கப்படுகின்றன என்பவை பற்றி ஆல்பிரடு வெபர் (Alfred Weber), சார்செண்டு (Sargant Florence) ஆகியோர் உருவாக்கிய கோட்பாடுகள் முதலாளித்துவ நாடுகளுக்கு மட்டுமே உகந்ததாக விளங்குகின்றன. வளர்ந்து வரும் திட்டமிட்ட சமத்துவப் பொருளாதார அமைப்புடைய நாடுகளில் இக்கோட்பாடுகள் செயற்படா. இ.எம். ஊவர் (E.M. Hoover) பருவம், காலச் சுழற்சி, தொழில் அமைப்புப் போன்ற காரணிகள் தொழில்கள் அமையும் இடத்தை வரையறுக்கின்றன எனக் கூறியுள்ளார். இக்கால அரசுகள் நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு, தொழில்கள் அமையும் இட ஒதுக்கீடு அதிகாரத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
<b>இந்தியாவில்:</b> தொழில் வளர்ச்சிக்கு இரும்பு, எஃகுத் தொழில் இன்றியமையா அடிப்படையாக உள்ளது. இரும்பு எஃகுத் தொழிலின் வளர்ச்சியைப் பொறுத்தே பொறியியல், இயந்திரத் தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சி வரையறுக்கப்படுகிறது. சே.என். தாட்டா (J.N. Tata) தனியார் துறையில் 1908-ஆம் ஆண்டு முதன் முதலில் சாம்செட்பூரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். அந்த ஆலைக்குப் பக்கத்தில் 40 முதல் 80 மைல் தூரத்திற்குள் அமைந்துள்ள பல வளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இதன் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாயின. குருமாகிசானி, குலைப்பாட்டு, பாதம்பகர், நேமுண்டி ஆகிய இடங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து இவ் ஆலைக்கு இரும்புத் தாதுப் பொருள்கள் வருகின்றன. நேமுண்டிச்சுரங்கம் 160 முதல் 176 கி.மீ. நீளத்துடன் ஆசியாவிலேயே பெரிய இரும்புத்தாதுச் சுரங்கமாக விளங்குகிறது. பொதுவாக இரும்புத் தாதுச் சுரங்கமும், நிலக்கரித் தாதுச் சுரங்கமும் அருகருகே இருந்தால் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும்.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் பொதுத் துறையில் உரூர்கேலா (ஒரிசா), பிலாய் (பீகார்), துர்காப்பூர் (மேற்கு வங்காளம்) போன்ற இடங்களில் மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலை-<noinclude>
<b>வா.க. 6 – 61அ</b></noinclude>
oigxbezpxmiwaqgihgto6f0a1zr5jkw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/994
250
632456
1954671
1936350
2026-07-19T08:01:43Z
Sridevi Jayakumar
15329
1954671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனரகத் தொழில்கள்|966|கனவு}}</noinclude>உள்ளடக்கிய 1.5 மிலியன் கண்டி கந்தகக்கல் தாதுக்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கந்தக அமிலத்தின் தேவை பெருகிக் கொண்டே செல்கிறது. அதன் தேவை 1960–61–இல் 5,98,000 கண்டியாகவும், 1965–66-இல் 12,44,000 கண்டியாகவும், 1978–79-இல் 32,00,000 கண்டியாகவும் இருந்தன. உரத் தொழிற்சாலைகள், இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள், அலுமினியத் தொழில்கள், இரயான் இழை உற்பத்தி செய்யும் ஆகியவை கந்தக அமிலத்தை தொழிற்சாலைகள் மிகையான அளவில் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் 69 கந்தக அமிலம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. கந்தக அமில உற்பத்தி 1973-இல் 13.30 இலட்சம் கண்டியாகவும், 1974-இல் 14.33 இலட்சம் கண்டியாகவும், 1975-இல் 13.77 இலட்சம் கண்டியாகவும் இருந்தன.
<b>உரத் தொழில்கள்:</b> உரத் தொழில், இரசாயனத் தொழில்களின் துணைத் தொழிலாகும். வேளாண்மைத் துறையில் மண்ணுக்கு வேண்டிய ஊட்டத்தை அளித்து அதனை வளப்படுத்த உரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தகுந்த அளவு உரம் உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டால் மண்ணின் உற்பத்தித் திறன் பெருகுகிறது; மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. பசுமைப் புரட்சி வெற்றி பெறவும், உணவு உற்பத்தி பெருகவும் உரத்தொழில் வளர்ச்சி இன்றியமையாதது.
சாணம், தழை, உரங்களோடு வெடியம் (Nitrogen) பயன்படுத்தினால் உற்பத்தியைப் பெருக்கலாம் என அறிவியல் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுவாக இரசாயன உரங்கள் என்பவை வெடியம் எரியகி (Phosphate) சாம்பரம் (Potassiam) ஆகியவற்றைக் குறிக்கும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய உரத்தொழிற்சாலை பீகாரில் உள்ள சிந்திரி உரத் தொழிற்சாலையாகும். இது 1947-இல் நிறுவப்பட்டு 1951–இல் உற்பத்தியைத் தொடங்கியது. கேரள மாநிலத்தில் ஆலப்புழைக்கு (Alwaye) அருகில் 1947-இல் திருவாங்கூர் உர இரசாயனத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. அது ஆண்டொன்றுக்கு 46,000 கண்டி கலச்சியம் கந்தகி (Ammonium Sulphate) உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
பொதுத் துறையில் சிந்திரி, நங்கல் (Nangal), உரூர்கேலா, ஆலப்புழை, திராம்பே (Trombay), நெய்வேலி, கோரக்பூர், இராம்ரபு (Ramrab) ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகள் உள்ளன. தனியார் துறையில் வாரணாசி, விசாகப்பட்டணம், குசராத்து, எண்ணூர் ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகள் உள்ளன. இருப்பினும் இந்தியாவின் மொத்த உர உற்பத்தி, தேவைக்கும் குறைவாக உள்ளது. அதனால் உர நுகர்வானது இந்திய வேளாண்மையில் மிகக் குறைவாக உள்ளது. எனவே, உற்பத்தி-நுகர்வு இடைவெளியைப் போக்க அண்மைக் காலத்தில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் 10க்கும் மேற்பட்ட உரத் தொழிற்சாலைகள் 7–ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் நிறுவப்பட்டுள்ளன.
{{Right|<b>ந.து.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kuchhal, S.C.,</b> Industrial Economy of India, Chaitanya Publishing House, Allahabad, 1980.
<b>Sharma, T.S. and Chauron, S.D.,</b> Industrial Economics, Dhiralal Agarwala and Company, Agra, 1981.
<section end="கனரகத் தொழில்கள்"/>
<section begin="கனவு"/>
{{dhr}}
{{larger|<b>கனவு</b>}} காண்பது மனித வாழ்வின் அன்றாட அனுபவமாகும். கனவிற் கண்ட பொருளை அறிந்து கொள்ள மனிதர்கள் பெரும் அக்கறை காட்டி வருகின்றனர். இக்காலத்தில் உளப்பகுப்பாய்வினர் கனவினைப் பற்றிப் பகுப்பாய்வு செய்து, கனவிற்கு விளக்கம் தரும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கனவு என்பது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு வழியாகும் என்கிறார் பிராய்டு (Freud). சமூகத்திற்கு ஒவ்வாத விருப்பங்கள் அல்லது அதனைப் போன்ற எளிதில் நிறைவேற்ற முடியாதபிற விருப்பங்களை நனவுநிலையில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சான்றாக, சிறையிலிருந்து கைதி வெளி வந்திட விரும்பினால் அவனால் அது முடிவதில்லை. அவனது விருப்பம் ஈடேறுவதில்லை. ஆனால், அது உள்ளத்துள் அமுக்கி வைக்கப்படுகின்றது. இவ்வாறு விருப்பங்கள் உள்ளத்துள் அமுத்திவைக்கப்பட்ட ஒரேயடியாக மறைந்து விடுவதில்லை; மாறாக அவை கனவாக வெளிப்படுகின்றன.
கனவின் வழியாக வெளிப்படுத்தப்படும் விருப்பங்கள் பாலுணர்வுத் தன்மையனவாக இருக்கின்றன என்கின்றார் பிராய்டு. இத்தகைய வேட்டைகளைச் சமூகம் அனுமதிப்பதில்லை. எனவே, இவை கனவினை ஒரு கருவியாக்கிக் கொண்டு வெளிப்படுகின்றன. ஓர் இளைஞன் ஒரு பெண்ணைச் சந்தித்துப் பேசிக் காதல் கொள்ள விரும்பினால், சமூகக் கட்டுப்பாட்டின் அச்சத்தின் விளைவாக அவனால் அவ்வாறு செய்ய இயலுவதில்லை. எனவே, அவன் அவ்வேட்கைகளை<noinclude></noinclude>
7tvma0ls92ddug1lapsksp3gehtq97o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/995
250
632457
1954672
1936361
2026-07-19T08:02:28Z
Sridevi Jayakumar
15329
1954672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனவு|967|கனவு}}</noinclude>அடக்கி வைக்கின்றான். இந்த எண்ணம் அவன் மனத்தை விட்டு நீங்குவதில்லை. ஆனால் அது அவனது நனவிலி நிலைக்குச் சென்று விடுகின்றது. நனவிலி நிலையிலிருந்து அதனால் அப்படியே வெளிப்பட முடிவதில்லை. ஏனெனில் உள்மனத் தணிக்கை உறக்கத்தின்போதுகூட அவ்வாறு வெளிப்பட விடுவதில்லை. எந்த ஒரு திரைப்படமும் அது திரையிடப்படுவதற்கு முன்னதாக அரசின் தணிக்கைக்கு உட்படுவதைப் போல, அமுக்கி வைக்கப்பட்ட விருப்பங்கள் மீளமனத்தின் (Super Ego) தணிக்கைக்குட்பட்ட பின்னரே கனவாக வெளிப்படுகின்றன.
நிகழ்கால வாழ்க்கைத் துன்பங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய ஒருவனின் நனவிலிநிலை மனப்பாங்கே கனவாக வெளிப்படுவதாகச் சுங்கு (Jung) என்பார் கருதுகின்றார். கனவாக வெளிப்படுவது நிறைவேற்றப்படாத எண்ணங்களே தவிரக் கனவிலி நிலை விருப்பங்களன்று என்பது உட்வொர்த்து (Woodworth) என்பாரின் வாதமாகும். தன்னிலையினை நிறுவுதலில் வெற்றியடையாதனவும் அதிகாரத்தன்மை ஊக்கிகளோடு தொடர்புடையனவுமான விருப்பங்களே கனவாக உருவெடுக்கின்றன என்பது அட்லர் (Adler) என்பாரின் கருத்தாகும். அமுக்கிவைக்கப்பட்ட விருப்பங்கள் தன்மையினால் வேறுபடினும், அமுக்கிவைக்கப்பட்ட விருப்பங்களின் வெளிப்பாடே கனவு என்னும் கருத்தினை அனைவரும் வலியுறுத்துவதைக் காணலாம்.
கனவு விருப்பங்களின் நிறைவேற்றமன்று. சில கனவுகள் பொருள் அற்றன; சில உடற்காரணங்களால் ஏற்படுவன; இன்னும் சில வாழ்க்கையின் குறிப்பிட்ட சில செயல்களுக்கான எதிரெதிர் செய்கைகளாகும். விருப்பங்களை நிறைவேற்றும் கனவுகளில் கூட எல்லா விருப்பங்களும் பாலுணர்வுத் தன்மையன என்றோ அதிகாரத் தன்மை ஊக்கிகள் பற்றியன என்றோ வாழ்வின் சிக்கல்கள் பற்றியனவென்றோ சொல்லுதற்கில்லை. கனவு ஒரு கூட்டுச் செயலாகும். சில கனவுகளில் சில ஊக்கிகள் ஒன்றுடன் ஒன்று மாறாட்டமாகின்றன. சில கனவுகள் முற்றிலும் முரண்பாடுடையனவாக இருக்கின்றன. எனவே, எல்லாக் கனவுகளும் விருப்பங்களின் நிறைவேற்றமே என்று சொல்வது ஒருதலையான கோட்பாகும்.
உளவாழ்வில் கனவுகள் இன்றியமையாத இடத்தினைப் பெற்றுள்ளன. அழுத்தி வைக்கப்பட்ட அல்லது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட, ஏமாற்றமடைந்த விருப்பங்கள் நனவிலி நிலையில் தங்கி நிற்கின்றன. இதுவே உள்ளுறை கனவுகளின் (Latent Dream) நிலையாகும். இத்தகைய வேட்கைகள் கனவாக வெளிப்படும்போது வெளிப்படு கனவு (Manifest Dream) எனப்படும். உள்ளுறை கனவினை வெளிப்படு கனவாக மாற்றும் செயல் கனவுப்பணி (Dream work) எனப்படும். இதில் விருப்பங்கள் பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன. அமுத்திவைக்கப்பட்ட, ஏமாற்றமடைந்த வேட்கைகளை வெளிப்படுத்துவதன் வாயிலாக ஒருவன் மன அமைதியினைப் பெறுகின்றான்.
கனவின் காரணமாகத் தன்னால் உறங்க முடிவதில்லை என்று ஒரு சராசரி மனிதன் சொல்லக் கேட்கலாம். ஆனால், கனவினாலேயே உறங்க முடிகின்றது என்கின்றார் பிராய்டு. சில நேரங்களில் உறக்கத்தின்போது தாக உணர்வு ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் கனவுகள் இல்லையெனில் உறங்கி இருக்க முடியாது. நிகழ்வது என்னவெனில், தண்ணீர் அருந்துவதைப் போல் கனவு காணும் போது, கனவில் கிடைக்கும் நீரின் உதவியால் சிறிது நேரத்திற்காவது அப்படியே உறங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், அது தாகவிடாயைத் தணிக்க முடியாது போகும்போது, உறக்கத்திலிருந்து எழுந்து உண்மையாகச் சிறிது நீர் அருந்துகின்றனர். இது உடல்சார் தேவைக்கான ஒரு சான்றாகும். இதனைப் போலவே உளவேட்கைகளும் தன்மைகளும் கனவின் வாயிலாக நிறைவேற்றப்பட்டு, உறக்கம் தொடர்கின்றது. தேர்வு பற்றிய அச்சத்தினாலும் கவலைகளினாலும் பாதிப்பிற்குள்ளான ஒரு மாணவன் அதனைப் பற்றிக் கனவு கண்டுகொண்டே உறக்கத்தினைத் தொடர்கின்றான். கனவு மட்டும் இல்லாமலிருந்தால் அம்மாணவனால் உறங்க முடியாது. கனவில் இன்ப துன்ப வேட்கைகள் வெளிப்படுகின்றன. கனவு இல்லைவெனில் இந்த உணர்வுகளும் வேட்கைகளும் பிறழ் நடத்தைகளாக வெளிப்பட்டு, அவை ஒருவனின் நல்லிணக்க நடத்தையில் பல்வேறு துன்பங்களை விளைவிக்கும். வேட்கைகளின் சிறிதும் துன்பமற்ற ஒரு வெளிப்பாடே கனவாகும். கனவினால் நேரமும் வீணாவதில்லை; துன்பமும் ஏற்படுவதில்லை; நல்லிணக்க நடத்தையிலும் சிக்கல் ஏதொன்றுமில்லை.
உளப்பகுப்பாய்வில் கனவுப் பகுப்பாய்வு வாயிலாகப் பலவித பிறழ்நிலைத் தன்மைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய ஆய்வில் தடையிலா இயைபு (Free Association) முறை பெரிதும் பயன்படுகின்றது. இதில் ஒருவன் தன் பகுத்தறிவினைப் பயன்படுத்தாது, கனவு நிகழ்ச்சிகளுடன் சில கருத்துகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்றான். இத்தகைய தொடர்புபடுத்தல் அவனிடத்தே உள்ள நனவிலி நிலைக் காரணிகளைக் காட்டுவதாகும். இதனைக் கொண்டு அவனது உளப்பிறழ் வினைகளைக் கண்டு கண்டுபிடித்திட முடியும்.
{{Right|<b>கி.இரா.</b>}}
<section end="கனவு"/>
{{nop}}<noinclude></noinclude>
sz9q0h32306gxl8s5e14uham6przopn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/996
250
632458
1954673
1936365
2026-07-19T08:03:00Z
Sridevi Jayakumar
15329
1954673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனவுப் பகுப்பாய்வு|968|கனவுப் பகுப்பாய்வு}}</noinclude><section begin="கனவுப் பகுப்பாய்வு"/>
{{dhr}}
{{larger|<b>கனவுப் பகுப்பாய்வு:</b>}} கனவுகளை ஆராய்வதென்பது உளப் பகுப்பாய்வு முறைகளுள் ஒன்றாகும். இது நோயாளியின் நனவிலி ஊக்கிகளை விளங்கிக் கொள்ளப்பயன்படுகிறது. உறக்கத்தில் நனவிலி ஊக்கிகள் தூண்டப்படும்போது அவற்றை நோயாளியின் மனத்தணிக்கை அல்லது உள்கட்டுப்பாடு முறையினால் ஒதுக்கிடவோ ஆழத்திற்கு அழுத்திடவோ முடிவதில்லை. நனவிலி ஊக்கிகள் கனவின் வெளிப்படு கருப்பொருளாக (Manifest Dream–content) மாற்றப்படுகின்றன. மேலும், அவற்றைத் திருப்திப்படுத்தவும் முயற்சி நடக்கின்றது. உறக்கத்தில் இவையெல்லாம் நிகழினும் உறக்கம் கலைவதில்லை. கனவு கண்டவர் கனவினைப் பற்றிச் சொல்கின்ற வருணனையே கனவில் வெளிப்படு கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கனவின் வெளிப்படு கருப்பொருளின் அடிப்படையில் சிகிச்சையாளரும் நோயாளியும் நனவிலி ஊக்கிகளையும் அவற்றின் மூலகாரணங்களையும் கண்டறிய முற்படுகின்றனர். இம்முறை நோயாளி தன் நனவிலி ஊக்கிகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திட உதவுகின்றது.
கனவுகளை விவரித்தலின் வாயிலாக எண்ணற்ற விருப்பங்களையும், மனப்போராட்டங்களையும், அடி மனத்திற்குத் தள்ளப்பட்ட எண்ணங்களையும், சாதாரண நனவு நிலைக்குக் கொண்டுவர முடியாத எண்ணங்களையும் ஆவல்களையும் வெளிப்படுத்திட இயலும். கனவு நிகழும்போது ஒருவரின் அடிமனம் (Unconscious-mind) செயற்படுகின்றது. இந்நிகழ்ச்சியின்போது அடிமனம் தன் நிலையில் கட்டுப்பாடற்றுக் காணப்படுகின்றது. ஆனால், அதன் காரணமாகக் கனவிற்கு எத்தகைய தணிக்கையும் இல்லையென்று கருதுவதற்கில்லை. அதற்கு முற்றிலும் மாறான கருத்துகளைப் பிராய்டு (Freud) தம் கனவுப் பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளார். அத்தணிக்கை ஒரு குறிப்பிட்ட வகையான வெளிப்பாட்டினை மட்டுமே நனவுநிலைக்கு உட்படுத்துகின்றது. அத்தகைய தேவைகளுக்கு ஒத்தமையும் வகையில் அடி மனத்து ஊக்கிகள் தன்னிறைவு அடையும் பொருட்டுச் சில ஒத்துக் கொள்ளக் கூடியதான முறைகளை மேற்கொள்கின்றன. அதன் காரணமாகத்தான் கனவின் வெளிப்படு பொருள்களும் மறை பொருள்களும் மாறுபடுகின்றன. கனவின் மறைபொருளினை வெளிப்படுத்தும் வகையில் அதன் வெளிப்படு பொருளினை உணர்ந்து கொள்ளுதல், வகைப்படுத்திக் கொள்ளுதல் என்பன கனவுப் பகுப்பாய்வின் செயலாகும்.
கனவுப் பகுப்பாய்வில் மனநோயாளி தன் கனவினை உண்மை நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டப்படுகின்றான். தன் கனவில் வரும் மனிதர்கள், பொருள்கள், நிகழ்ச்சகள் முதலானவற்றை முறையே அவற்றிற்குப் பொருத்தமான மனிதர்கள், பொருள்கள், நிகழ்ச்சிகளுடன் மனநோயாளி தன் கனவுநிலையில் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் எவ்விதமான தயக்கமும் இருக்கக்கூடாது. கனவின் பொருளுக்குப்பின் ஏற்படும் அவற்றுடன் தொடர்புடைய கருத்துகளை எவ்விதமான தருக்கமுறை அல்லது கருத்துக் குறுக்கீடுமின்றி ஒத்துக் கொள்ள வேண்டும். நோயாளி எவ்வளவுதான் விரும்பினாலும் அதற்கு மாறாக அடிமனத் தணிக்கைக்கு எதிர்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதனால், கனவினைப் பகுத்தாய்வதற்கு நீண்ட காலம் ஆகின்றது.
கனவுப் பகுப்பாய்விற்குப் பல தடைகள் நேரிடும் சில நேரங்களில் நோயாளி தன் கனவினைப் பாதியிலேயே நிறுத்திக் கொள்ளக்கூடும் அல்லது கனவிற்குப் பின் எதனையும் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாமல் போக நேரிடும். வேறு சில சமயங்களில் முரண்பாடான தன்மையில் பேச நேரிடும் அல்லது இந்தக் கனவுப் பகுப்பாய்வில் உற்சாகம் இழந்து, பகுப்பாய்வாளரிடம் கோபமடைந்து பேசக் கூடும். அதன் காரணமாகப் பகுப்பாய்விற்குக் குறிக்கப்பட்ட நேரத்திற்கு மனநோயாளி வந்து சேராமற் போகலாம். அப்போது தாம் முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கூறிவிடலாம். பகுப்பாய்விற்கு நோயாளி காட்டும் எதிர்ப்பு அவனது அடிமனத்தில் புதைந்து கிடக்கின்ற முரண்பாடுகள் பற்றி அவன் மிகவும் விழிப்புடன் இருப்பதைப் புலப்படுத்தும். முரண்பாடுகளை எதிரேற்றுச் சமாளிப்பதற்குப் பதிலாக, அச்சூழ்நிலையினைத் தவிர்க்கும் நோக்கில் ஏதேதோ போக்குகளைத் தேடிப் பிடித்திடுவான். அந்தச் சமயங்களில் நோயாளியின் ஒத்துழையாமைக்கான காரணங்களை அவனிடமே கேட்டறிந்து கொள்வது, அவனது ஒத்துழைப்பினைப் பெற ஒரு நல்ல வாய்ப்பாகும்.
நோயாளிக்கும் பகுப்பாய்வாளருக்கும் இடையே உணர்ச்சி மயமான ஓர் உறவினைக் கனவுப் பகுப்பாய்வு தோற்றுவிக்கும். அவ்வுறவு மகன்–தந்தை உறவிற்கு ஒப்பானதாகும். அத்தகைய உறவு ஏற்பட்டவுடன் நோயாளி தம் தயக்க நிலையினை எளிதில் உணர்ந்து கொள்வதுடன், பாலுணர்வு தொடர்பாகத் தான் அடக்கி வைத்திருந்த கருத்துகளைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் ஏற்படும் துன்பத்தினைத் தவிர்க்கவும் முடிகின்றது. பிராய்டு குறிப்பிடுகின்ற அடக்கிவைக்கப்பட்ட குழந்தைப் பருவ ஆக்கவுணர்வுகள் மனநோயில் சிறப்பான பங்காற்றுகின்றன. அத்தசைய உணர்வுகளை நனவு நிலைக்குக் கொண்டு வருவதன் வாயிலாக மனநோயினைப்<noinclude></noinclude>
7z9m8h53e5xxtphvnjho8j8sgdiltrc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/997
250
632459
1954675
1936373
2026-07-19T08:04:01Z
Sridevi Jayakumar
15329
1954675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனவுப் பகுப்பாய்வு|969|கனெக்டிகட்டு}}</noinclude>பெரும் அளவிற்குக் குணப்படுத்திட முடியும். மருத்துவத்தின்போது உணர்ச்சிமயமான ஓர் உறவு ஏற்படுவதாலும், சிகிச்சையாளர் நோயாளியின் அன்பிற்குப் பாத்திரமாகி விடுவதாலும் அவரை நோயாளி மிக நெருக்கமானவராக, இன்றியமையாதவராக, சக்திவாய்ந்த ஈர்ப்புத் தன்மையுடையவராகக் கருதுகிறார். நோயாளி பெண்ணாக இருப்பின் அவர் சிகிச்சையாளரைத் தம் கணவர் அல்லது காதலர்க்கு இணையாகக் கருதுகின்றார். இத்தகைய உணர்ச்சி மயனான உறவு சிகிச்சையின்போது தேவையே. சிகிச்சைக்குப் பின்னர் இத்தகைய உறவு வேண்டியதில்லை. எனவே, சிகிச்சையாளர் சிகிச்சைக்குப் பின்னர், இத்தகைய உறவிலிருந்து விடுபட்டுக் கொள்வதோடு, இந்த உறவிற்கு வேறோர் ஆதாரத்தினை ஏற்படுத்தி விடுவது நல்லது. இப்படிச் செய்வதனை மீண்டும் உறவினை மாற்றுதல் (Counter–transference) எனலாம். இத்தகைய உணர்ச்சி மயமான உறவுமுறையில் சிகிச்சையாளர் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். ஏதோ ஒருவகையில் சிகிச்சையாளர் நெருங்கிய தொடர்புடையவராகி விட்டால், நோயாளியிடம் பின்னர் நோயினைக் குணப்படுத்த முடியாமற் போய்விடும்.
உளப்பகுப்பாய்வில் சிகிச்சையாளரின் பங்கு மிதமானதாகும். அவர் நோயாளியிடம் கவனம் செலுத்துவதோடு நோயாளி சொல்வதையும் அனுதாபத்துடன் கேட்க வேண்டும். சிகிச்சையின்போது 95 விழுக்காடு நேரம் நோயாளி பேசித் தம் அச்சம், குற்றம், வெட்கச் செயல்கள், நம்பிக்கைகள் முரண்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவிக்கின்றார். இவ்வேளையில் நோயாளி ‘தான்’, ‘தன்முனைப்பு’ என்பவற்றிற்கிடையேயுள்ள முரண்பாட்டினை அறிந்து கொள்ளச் சிகிச்சையாளர் உதவிட வேண்டும். நோயாளி சொல்லிய செய்திகளையும் நடைமுறைகளையும் சிகிச்சையாளர் நன்கு பகுப்பாய்வு செய்யவேண்டும். இத்தகைய பகுப்பாய்வுச் சிகிச்சைகளின் வெற்றி, சிகிச்சையாளருக்கும் நோயாளிக்குமிடையே நிலவும் ஒத்துழைப்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இம்முறையின் உள்ளார்ந்த தத்துவ உண்மை என்னவெனில், நோயாளியின் அடி மனத்தில் உள்ள மிகையான காதல், வெறுப்பு, அச்சம், மனத்தைத் தாக்கும் வேறு உணர்ச்சிகள் ஆகியவற்றை அகற்றி மனத்தைத் தூய்மைப்படுத்தும் மூலவராகச் சிகிச்சையாளர் விளங்குகின்றார். இந்த உணர்ச்சிகளின் மூலம் பொருள்களை மாற்றுவதற்குச் சிகிச்சையாளர் முயலுகின்றார். இத்தகைய மாற்றத்தின்போது நோயாளியின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் வெளிப்படும், அப்போது நோயாளியின் துன்பத்திற்கான நோய்க்குறிகள் எல்லாம் ஒருமுடிவுக்குக் கொண்டுவரப்படும். அச்சமயம் சிகிச்சையை நிறுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் நோயாளி உணர்ச்சி மாற்றம் இன்றி எதிர்ப்புக் காட்டும் போது, சிகிச்சையை முடிவுறச் செய்யாமல் நிறுத்திக் கொள்ளலாம்.
{{Right|<b>கி.இரா.</b>}}
<section end="கனவுப் பகுப்பாய்வு"/>
<section begin="கனா நூல்"/>
{{dhr}}
{{larger|<b>கனா நூல்</b>}} இரவிற் காணும் கனவுகளுக்குப் பலன் கூறுகிறது. இந்நூல் அம்பர் என்னும் நகரத்தில் வாழ்ந்த கணபரத் தேவன் கூற, அவர் மகன் பொன்னவனால் எழுதப்பட்டது என்னும் செய்தியினை இதன் 23, 30–ஆம் செய்யுள்களால் அறிய முடிகிறது. இது அந்தாதித் தொடையாக 30 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களை உடையது. சிலப்பதிகார அடைக்கலக் காதையில், கோவலன் தான் வைகறையாமத்துத் தீயகனாக் கண்டதாகவும், அது நன்றன்று என்பதாகவும் மாடலனிடம் கூறுகிறான். அதற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் இந்நூலின் 2, 4, 10, 15–ஆம் செய்யுள்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பன்றி, குரங்கு, எருமை, கழுதை முதலிய விலங்குகளைக் கனவில் காணுதல் தீயதென்றும் பசு, எருது, யானை போன்றவற்றைக் காணல் நல்லதென்றும் இந்நூல் கூறுகிறது. மேலும், கனவை முதல் சாமத்தில் கண்டால் எவ்வளவு காலத்தில் பலிக்கும், மற்றச் சாமங்களில் கண்டால் எப்போது பலிதமாகும் என்பது போன்ற விவரங்களையும் கூறுகிறது. அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படுகிற செய்யுள்களுக்கும், கனாநூலிற் காணப்படும் அச்செய்யுள்களுக்கும் பாடவேறுபாடுகள் உள்ளன. அடியார்க்கு நல்லார் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு எனத் தெரிவதால் இந்நூலின் அதற்கு முற்பட்டதாகும்.
{{Right|<b>எம்.சீ.</b>}}
<section end="கனா நூல்"/>
<section begin="கனெக்டிகட்டு"/>
{{dhr}}
{{larger|<b>கனெக்டிகட்டு</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலம். பரப்பு 13046 சதுர கி.மீ. இதில் 382 சதுர கி.மீ. உள்நாட்டு நீர்ப்பரப்பாகும். இதற்கு வடக்கு எல்லையாக மசாசுசெட்சும். கிழக்கில் உரோடுத்தீவும், மேற்கில் நியூயார்க்கும் தெற்கில் அட்லாண்டிக்கு மாக் கடலும் உள்ளன. மக்கள்தொகை 3,107,576 (1980). இதில் 1,498,005 ஆடவர். 2,449,774 பேர் நகர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். 2,228,805 பேர் பத்தொன்பது வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
முதலில் இப்பகுதியில் ஆங்கிலேயர் கி.பி. 1634–இல் குடியேறினர். அம்மக்கள் கி.பி. 1629–ஆம் ஆண்டில் தமக்கென ஓர் அரசியலமைப்பைத் தயாரித்தனர். அது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். உலக வரலாற்றிலேயே சமூக<noinclude></noinclude>
qfcd1lnvogbehdjwn6goqgtmvknnqow
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/998
250
632460
1954676
1936379
2026-07-19T08:04:49Z
Sridevi Jayakumar
15329
1954676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனெக்டிகட்டு|970|கனோபிக்குச் சாடிகள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 998
|bSize = 474
|cWidth = 196
|cHeight = 191
|oTop = 73
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|கனோபிக்குச் சாடிகள்}}
ஒப்பந்த அடிப்படையில் அமைந்த முதல் அரசியலமைப்பு இதுவே என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் மன்னன் இரண்டாம் சார்லசு அந்த அரசியலமைப்பை கி.பி. 1662–இல் ஒரு பட்டயம் மூலம் உறுதி செய்தார். அது 1818–இல் மாற்றப்பட்டு மக்கள் ஆட்சி முறைப்படி புதிய மாநில அரசியலமைப்பு ஏற்படுத்தப்பெற்றது. இந்த மாநிலத்தின் தலைநகர் ஆர்ட்போர்டு (Hartford). இதன் மக்கள் தொகை 726,114 (1980). இதன் கி.பி. 1818-ஆம் ஆண்டு அரசியலமைப்பு, 1953-ஆம் ஆண்டிலும், பிறகு 1965–ஆம் ஆண்டிலும் மீண்டும் மாற்றப்பெற்று மக்களின் உடன்பாடு பெறப்பட்டது. இந்த அரசியலமைப்புப்படி, ஆளவை (Senate), பேராளர்கள் சபை (House of representatives) என்ற இரண்டு சபைகள் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெறுகின்றன. மாநில ஆளுநரும், உதவி ஆளுநரும் நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இம்மாநிலத்திலிருந்து மத்திய ஆளவை மனதிற்கு 2 உறுப்பினர்களும், கீழ்ச் சபைக்கு 6 பேராளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கனெக்டிகட்டு"/>
<section begin="கனோபிக்குச்சாடிகள்"/>
{{dhr}}
{{larger|<b>கனோபிக்குச்சாடிகள்:</b>}} இவை பண்டைய எகிப்தியக் கல்லறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புடைத்த அமைப்புடைய பெரிய சாடிகள். இவை இறந்தோரின் உள் உறுப்புகளைப் பதப்படுத்தி வைக்கவும், நறுமணத்தை உண்டாக்கவும் பயன்படுத்தப்பட்டன. ஒரு கல்லறையில் இருந்த நான்கு சாடிகளில் உடல் உள் உறுப்புகளான ஈரல், குடல், சிறு நீரகங்கள் போன்றவை காணப்பட்டன. சாடியின் மேற்பகுதி ஒரசு (Horus) கடவுளின் நான்கு புதல்வர்களைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மனிதத்தலை, மனிதக் குரங்கின் தலை, நரியின் தலை, பருத்துத் தலை உடையவர்கள் போன்று மேற் பகுதியைச் செய்துள்ளனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 998
|bSize = 474
|cWidth = 180
|cHeight = 192
|oTop = 206
|oLeft = 252
|Location = center
|Description =
}}
{{center|கனெக்டிகட்டு}}
கனோபிக்குச் சாடிகள் மரம் அல்லது கண்ணாம்புக் கல் அல்லது தீக்கல் ஏதேனுமொன்றால் செய்யப்பட்டவை. கனோபசு (Canopus) என்னும் நகரின் பெயரிலிருந்து கனோபிக்குச் சாடிகள் என்ற பெயர் ஏற்பட்டது. கனோபசு நகரம் பண்டைய எகிப்தின் துறைமுகப் பட்டினமாக விளங்கியது. அந்நகரம் நைல்நதியின் துணை ஆறான கனோபிக்கு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருந்தது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கனோபிக்குச்சாடிகள்"/>
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
t5d050l40worvf717lz684bm74fr312
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/862
250
642294
1954557
1929914
2026-07-19T05:48:23Z
Sridevi Jayakumar
15329
1954557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலம்பகமாலை|834|கலவரம்}}</noinclude>பாடியவை தில்லைக் கலம்பகமும் திருவாமாத்தூர்க் கலம்பகமும் ஆகும். சைவச்சார்பான கலம்பகங்களுள் மதுரைக்கலம்பகம், அருணைக்கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம் முதலியன சிறப்பாகக் குறிக்கத்தக்கன. சைவச் சார்புடையவற்றை நோக்க வைணவச் சார்பாய் வந்தவை மிகக் குறைவே. பிள்ளைப் பெருமாளையங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகம், முத்தமிழ்க் கவிவீரராக முதலியார் பாடிய திருவேங்கடக் கலம்பகம் என்னும் இரண்டும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மேநாட்டினரான வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம் பாடியுள்ளார். சென்ற நூற்றாண்டில் பூண்டி அரங்கநாத முதலியார் பாடிய கச்சிக் கலம்பகம் தனிப்படக் குறிப்பிடத்தக்கது. இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவற்றுள் மயூரகிரிக் கலம்பகம், சிரீவரமங்கைக் கலம்பகம், திருப்பேரைக் கலம்பகம் என்பவை குறிப்பிடத்தக்கன. ஏனைய சிற்றிலக்கியங்களைப் போலாது பேரளவில் இக்காலம் வரையில் தோன்றி வந்துள்ள காரணத்தால் இக்கலம்பக இலக்கியம் புலவர் பெருமக்களாலும் பொதுமக்களாலும் விரும்பி வரவேற்கப்பட்டது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாம்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="கலம்பகம்"/>
<section begin="கலம்பகமாலை"/>
{{dhr}}
{{larger|<b>கலம்பகமாலை:</b>}} இது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் என்று கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இதற்குப் பன்மணிமாலை என்ற பெயரும் உண்டு. பாட்டியல் கூறும் இலக்கண நூல்களுள் பன்னிரு பாட்டியல், இப்பிரபந்தத்தைக் கலம்பகமாலை என்றும் பிற பாட்டியல் நூல்கள் பலவும் பன்மணிமாலை என்றும் குறிப்பிடுகின்றன. பிரபந்த தீபிகை என்னும் நூல் இப்பிரபந்தத்தினைக் கலம்பகமாலை, பன்மணிமாலை ஆகிய இரு பெயராலும் குறிப்பிடுகிறது. கலம்பகம் என்னும் பிரபந்தத்தின் பண்பினோடு இப்பிரபந்தம் மிகுந்த தொடர்புடையது. கலம்பகப் பிரபந்தத்திலுள்ள ஒரு போகு அம்மனை ஆகிய உறுப்புகள் மட்டும் நீங்க எஞ்சியுள்ளவற்றால் இயல்வது இப்பிரந்தமாகும் என்று பன்னீருபாட்டியல் கூற, அவ்விரு உறுப்புக்களுடன் ஊசல் என்னும் உறுப்பையும் நீக்கிப் பாடுவது இப்பிரபந்தமாகும் என்று பிறப்பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. இப்பிரபந்தம் அந்தாதியாக அமையும் என்பதனைப் பிரபந்த மரபியல் கூறுகிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கலம்பகம் சில்குறை என்று சுவாமிநாதம் இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலம்பகமாலை"/>
<section begin="கலவரம்"/>
{{dhr}}
{{larger|<b>கலவரம்</b>}} இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 159, கலவரம் என்றால் என்ன என்பது பற்றி விளக்குகிறது. அதன்படி, இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் ஒரு பொது இடத்தில் பொது அமைதியைக் குலைக்கும் விதத்தில் சண்டையிட்டுக் கொள்வது கலவரம் (Affray) எனப்படும்.
<b>மெய்ப்பிக்கவேண்டிய கூறுகள்:</b> கலவரம் விளைத்தல் குற்றத்தைக் கண்டறிவதற்குப் பின்வரும் கூறுகள் மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். 1) இரண்டு அல்லது மேற்பட்டவர்களுக்கிடையில் சண்டை நிகழ்ந்திருத்தல் வேண்டும். 2) சண்டை பொது இடத்தில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். 3) சண்டை பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதாக இருந்திருத்தல் வேண்டும்.
<b>கலகம் விளைவித்தல் குற்றம் மற்றும் கலவரம் ஆகியவற்றிற்குள்ள வேறுபாடுகள்:</b> 1) கலகம் என்பது, ஒரு சட்டவிரோதமான கும்பல் (ஐந்து அல்லது மேற்பட்டவர்களைக் கொண்டது) அல்லது அதனுடைய உறுப்பினர் எவரேனும் அத்தகைய கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பலாத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்துவது. கலவரம் என்பது இரண்டு அல்லது மேற்பட்டவர்களால் பொது இடத்தில் பொது அமைதியைக் குலைக்கும் விதத்தில் செயல்களைச் செய்வது. கலவரத்தில் பொது அமைதியைக் குலைப்பதற்குப் பொது நோக்கம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 2) கலகம் விளைவித்தல் குற்றம் தனியார் இடத்தில் கூட நிகழலாம்; கலவரம் என்பது பொது இடத்தில் மட்டுமே நிகழ்வதாகும். 3) கலகம் ஒன்றில் சட்ட விரோதக் கூட்டத்தில் இருந்தவர் (தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் பலத்காரத்தை அல்லது வன்முறையைப் பயன்படுத்தியிருப்பினும் இல்லாதிருப்பினும்) அனைவரும் தண்டிக்கப்படுவர். ஆனால், கலவரத்தில், உண்மையில் ஈடுபட்டவர் மட்டுமே தண்டிக்கப்படுவர். 4) கலகம் விளைத்தலுக்குத் தண்டனை, இரண்டாண்டுச் சிறை அல்லது தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும். ‘கலவரம்’ செய்தலுக்குத் தண்டனை, ஒரு திங்கள் வரை சிறை அல்லது 100/– உரூபாய் வரை தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும்.
<b>கலவரம், தாக்குதல் வேறுபாடு:</b> 1) கலவரம் பொது இடத்தில் திகழ்தல் வேண்டும்; தாக்குதல் (Assault) பொது இடம் அல்லது தனிஇடம் இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். 2) கலவரம், இரண்டு அல்லது மேற்பட்டவர்களால் இழைக்கப்படுவது. தாக்குதலானது, சைகை அல்லது முன்னேற்பாடு எதனாலும் தம் அருகில் இருப்பவர் மீது குற்ற முறு வன்முறையைப் பயன்படுத்தும் வகையில் அச்சத்தை விளைவிக்கும் ஒருவரால் இழைக்கப்படுவது. 3) கலவரம், பொது அமைதிக்கு எதிரான குற்றம்;<noinclude></noinclude>
8lgvpr1qqshut37fd39f5lunilsu0jb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/863
250
642304
1954558
1930040
2026-07-19T05:49:42Z
Sridevi Jayakumar
15329
1954558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|835|கலவை அரசு}}</noinclude>தாக்குதல் தனியொருவருக்கு எதிரான குற்றம். 4) கலவரத்திற்குத் தண்டனை, ஒரு திங்கள் சிறை அல்லது 100/- உரூபாய் வரை தண்டத் தொகை; அல்லது அவை இரண்டுமாகும். தாக்குதலுக்குத் தண்டனை, மூன்று திங்கள் வரை சிறை அல்லது 100/- உரூபாய் வரை தண்டத்தொகை; அல்லது அவை இரண்டுமாகும்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கலவரம்"/>
{{larger|<b>கலவை அரசு:</b>}} அரசியலறிஞராகிய பிளேட்டோ, ‘சட்டங்கள்’ (Laws) என்னும் தம் நூலில், தம் முந்தைய கொள்கையாகிய ‘குறிக்கோளுக்கு ஒத்த அரசு’ என்ற கொள்கையைச் (Theory of an Ideal State) சிறிது மாற்றி, நடைமுறைக்கு ஏற்ற சிறந்த கொள்கைகளினடிப்படையில் அமையக் கூடிய அரசு பற்றி உருவாக்கிய கருத்தே கலவை அரசு அல்லது கலவை அரசாங்கம் (Mixed Government) என்று கூறப்படுகிறது.
<b>பிளேட்டோ கூறும் கலவை அரசு:</b> ஆளுவோருக்குப் பொருளீட்டும் கவலையோ, குடும்ப பாரமோ இருத்தலாகாதென்றும், ஆகைவால் அவ்வகுப்பாரைப் பொறுத்தவரை உடைமையும் குடும்பமும் பொதுவுடைமைக் கோட்பாட்டிலிருத்தல் வேண்டுமென்றும் (Communism of Property and Wives) பிளேட்டோ கூறினார். சமூக ஒருமைப்பாட்டுக்குத் தொழிற் பாகுபாடும் அதன் அடிப்படையில் வகுப்பு அமைப்பும் இருத்தல் வேண்டுமென்றும் அவர் கூறினார். பிற்காலத்தில் அவர் தாம் முதலில் கூறிய பொதுவுடைமைக் கருத்து நடைமுறைக்கு ஒத்துவராது என்று உணர்ந்து அதைவிடுத்துக் குடும்ப வாழ்க்கை உரிமையும், ஓரளவேனும் தனியார் உடைமை உரிமையும் தேவை என்று அவற்றை ஒத்துக்கொண்டார். பின்னர், மூன்று வகுப்பாரிடையேயும் ஒருமைப்பாடு ஏற்படுதல் வேண்டுமானால், ஒவ்வொரு வகுப்பும் மனிதனுடைய வெவ்வேறு இயல்பினடிப்படையில் (Different Tendency) அமைந்துள்ளபடியால், அவ்வகுப்புகளைத் தனித்தனியாகப் பிரித்து வைக்காமல், ஒரு இயல்பு மற்ற இயல்பைச் சமன் செய்யக் கூடியவாறு (Balance) அவற்றை இணைத்து அமைப்பது தான் கலவை அரசு என்றும் அவர் கூறினார். இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட, அல்லது எதிரான அரசியற் போக்குகளைச் (Political Strains) சமன்படுத்தினால், நிலையான தன்மை (Stability) அரசுக்கு ஏற்படும். பிளேட்டோ கூறிய இக்கலவை அரசு பற்றிய கொள்கைதான் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு அரசியலறிஞர் மாண்டேசுக்கியூ (Montasquiue) என்பவர் தம் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை (Theory of Separation of Powers) வகுப்பதற்கு வழிகாட்டியாக இருந்தது. இந்தக் கலவை அரசுக் கொள்கையினடிப்படையில் ஆங்கில அரசியலமைப்பு அமைந்திருப்பதாக மாண்டெசுக்கியூ கூறினார் பிளேட்டோ கூறும் கலவை அரசுக் கொள்கையில், அவர் முடியாட்சி பற்றிய கருத்தும் குடியாட்சிக் கொள்கையாகிய சுதந்தரமும் காணப்படுகின்றன. பாரசீகம் போன்ற அரசுகளில் முடியாட்சி எதேச்சாதிகாரத்தோடு இணைந்ததனாலும், ஏதென்சில் குடியாட்சி கட்டுக்கடங்காத சுதந்தர உணர்வை வளர்த்ததனாலும் அவை அழிந்தன. அதிகாரம் அறிவோடும், சுதந்திரம் ஒழுங்கோடும் இணைந்து, நிதானமான போக்கு வளர்ந்திருக்குமானால், அவை அழிந்திருக்கமாட்டா. தீவிர நிலையே அரசுக்கு அழிவைத் தரும். ஆகையால், ஒரு நல்ல அரசு என்பது, முடியாட்சியின் அடிப்படைக் கொள்கையாகிய பேரறிவும், சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மக்களாட்சிக் கொள்கையும் இணைந்த ஒன்றே ஆகும். அதுவே கலவை அரசுக் கொள்கையாகும்.
அரிசுட்டாட்டில் கூறும் நடைமுறைக்கொத்த மிகச் சிறந்த அரசு அல்லது கலவை அரசு என்பதில், அழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிர இயல்புகள் இல்லாத, மிதமான குடியாட்சிக்கூறுகளும், செல்வச் சிறு குடியாட்சிக் கூறுகளும் இணைந்துள்ளன; இதற்கு அரிசுட்டாட்டில் வழங்கும் பெயர் மிதமான குடியாட்சி என்பதாகும். அது அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம் (Constitutional Government) என்று பொருள்படும். இதில் செல்வச் சிறுகுடியாட்சியின் கூறுகளும், குடியாட்சியின் கூறுகளும் கலந்துள்ளன. இவ்வரசாங்கத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ள மிகப் பெரிய நடுத்தர வகுப்பார் மிகப் பெரிய செல்வருமல்லர், மிகப் பெரியவறியருமல்லர். இந்த வகுப்பினரே நாட்டை அழிவினின்றும் காக்கின்றனர். அவர்கள் இழிவு படுத்தப்படும் நிலையிலோ, கட்சியாகப் பிரிந்து பூசலிடும் நிலையிலோ இல்லை. நடுத்தர வகுப்பார் ஆட்சியாளர் தமக்குப் பொறுப்போடிருக்குமாறு செய்தற்கும், போதிய அளவு அதிகாரிகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நிறுவுவதற்கும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இதில் ஓரளவு சொத்துத் தகுதி இருத்தல் நன்று. அரிசுட்டாட்டிலின் கருத்துப்படி இசுபார்ட்டாவிலிருந்தது ஒரு கலவை அரசியலமைப்பு ஆகும். பிளேட்டோவைப் போல அரிசுட்டாட்டிலும் நற்பண்பு என்ற தகுதிக்குப் பதிலாகச் சொத்துத் தகுதியைக் கொள்ளுதல் கூடுமென்று கூறுகிறார். இவருடைய கருத்தின்படி சொத்து என்பது நற்பண்புக்கு அடையாளமன்று. ஆனால், சொத்துத் தகுதி என்பது நற்பண்பை ஓரளவேனும் நடைமுறையில் எட்டுதற்குரிய ஒன்று ஆகும். ஆகையால், அரிசுட்டாட்டில் கூறும் கலவை அரசு என்பது, மக்களுடைய நற்பண்பையும், எண்ணிக்கை-<noinclude>
<b>வா.க. 6 – 53அ</b></noinclude>
5zestwnurzb7exc5bgrnm1sf9m2djo1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/867
250
642330
1954559
1930371
2026-07-19T05:50:51Z
Sridevi Jayakumar
15329
1954559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலவை அரசு|839|கலாட்சேத்திரம்}}</noinclude>மாகச் சிதைந்து விடுகிறது பேரண்டத்திலும் சரி, தத்துவக் கருத்திலும் சரி காணப்படுகிற ஒரு விதி அல்லது சட்டம் என்னவெனில், இயற்கை முழுவதிலும் மாறுபாடும், எதிர்ப்பு இயல்பும் கலந்தே காணப்படுகின்றன. ஒன்றுக்கொன்று மாறான இயல்புடைய அரசியலமைப்புகளைச் சமநிலையில் வைத்திருத்தல் வாயிலாக நிலையான இயல்பை ஏற்படுத்துதல் கூடுமென்று கலப்பு அரசாங்கக் கொள்கை கூறுகிறது.
<b>பெந்தம் என்பவர் கூறிய கருத்து:</b> ஆங்கில நாட்டிலும் பல நாடுகளிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படுதற்குரிய பயன்வழிக் கொள்கையை (Theory of Utilitarianism) வகுத்து அளித்த செரிமி பெந்தம் என்ற அரசியற் சிந்தனையாளர் (கி.பி. 1748–1832), நீதித் துறையைச் சீர்திருத்தி அமைப்பதற்கான திட்டத்தை அளித்தார். பின்னர், அத்திட்டத்தில் தாம்கூறிய கருத்துகளை வைத்தே ஒரு தாராள இயல்புடைய அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கக் கொள்கையை வகுத்தார். அவருடைய கருத்தின்படி, ஒரு தாராள இயல்புள்ள அரசாங்கம் என்பது, ஒரு வலுவற்ற அரசாங்கம் அன்று. பாராளுமன்றமானது சட்ட இயல்பான இறைமை உடையதே. பொதுப்பணிகளைப் பற்றிய அறிவு மக்களுக்கு இருந்தால்தான், பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஓர் அரசாங்கம் ஏற்படுதல் இயலும். இறுதியான அரசியல் இறைமை அதிகாரம் மக்களிடத்திலேயே இருத்தல் வேண்டும். ஏனென்றால் அப்பொழுதான் அரசாங்கத்தின் நலன் என்பது பொதுமக்களுடைய நலனோடு ஒன்றுபட்டிருத்தல் இயலும். மக்களுடைய நலனும் திறமாகச் செயற்படுதல் வேண்டுமாயின், வயது வந்தோர் வாக்குரிமை (Universal Suffrage) அளிக்கப்படுதல் வேண்டும். கல்விப் பயிற்சியால்தான் அறிவு வளர்ச்சியுடைய வாக்காளரைத் தோற்றுவித்தல் இயலும். பாராளுமன்றம் வாக்காளருடன் ஒத்துழைத்தல் வேண்டுமாயின், அதனுடைய கால வரம்பு ஓராண்டாகக் குறைக்கப்படுதல் வேண்டும். நல்ல அரசாங்கம் ஏற்படுதலே குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அரசியல், சமூக சுதந்திரத்துக்கு அல்லது உரிமைகளுக்கு அரசாங்க நிறுவனங்களின் வாயிலாகப் பாதுகாப்புகளை ஏற்படுத்துதல் என்பது கூட அவ்வளவு முக்கியமன்று. ஆகையால், அரசாங்க நிறுவனங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகாரத்தில் கூடுதலாக வளர்ந்து விடாமல் தடுத்து அவற்றைச் சமநிலையில் வைத்திருத்தல் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கு ஏற்றது என்ற கலப்பு அரசாங்கக் கோட்பாட்டைப்பெந்தமும், சேம்சு இசுடூவர்ட்டு மில் என்பாரும் (James Stuart Mill) ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மக்களுடைய நல்ல கருத்துகளை எடுத்துக்காட்டவல்ல சட்ட மன்றமும், நிருவாகத்தைக் கட்டுப்படுத்தவல்ல சட்டமன்றமும் இருந்தால் மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுடைய நலனும், அரசாங்கத்தின் நலனும் இணைந்திருக்கும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Allan, D.J.,</b> The Philosophy of Aristotle, London, 1952.
<b>England, E.P.,</b> The Laws of Plato, Manchester, 1921.
<b>Harold J. Laski,</b> Political Thought in England from Locke to Bentham, London, 1920.
<b>Jacob, E.F.,</b> Essays in the Conciliar Epoch Manchester, 1953.
<section end="கலவை அரசு"/>
<section begin="கலாட்சேத்திரம்"/>
{{dhr}}
{{larger|<b>கலாட்சேத்திரம் (அடையாறு):</b>}} கலாட்சேத்திரம் என்றால் கலைகளின் புனித இடம் என்று பொருள்படும். இது சென்னை மாநகரின் ஒரு பகுதியான அடையாற்றில் திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் என்பவரால் 6.1.1936–இல் ஏற்படுத்தப்பட்டது. திருமதி உருக்குமணிதேவி தஞ்சாவூரில் 29.2.1904–இல் பார்ப்பனர் குடும்பத்தில் தோன்றினார். உண்மையான பன்னாட்டு உறவிற்கான ஒரு மையத்தை ஓர் உலக மொழியாகிய கலையின் மூலமாக உருவாக்குவதும், சிறந்த இளைஞர்களை உருவாக்குவதும் கலாட்சேத்திரத்தினுடைய குறிக்கோள், மக்கள் வளர்ச்சிக்குக் கலைகள் இன்றியமையாதன என்ற உணர்ச்சியை மக்களிடை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்நிறுவனம் நாட்டியத்தின் முதற்கடவுளான சிவபெருமானுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருக்கோயில்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த ‘சதிர்’ என்ற அரிய கலைக்கு உயர்வும் சமுதாயத் தகுதியும் ஏற்படுத்தியவர் திருமதி அருண்டேல். ‘சதிர்’ என்ற கொச்சைப் பெயர் மறைந்து பரதநாட்டியம் என்ற சிறப்புப் பெயருடன் நாட்டியக்கலை மறுமலர்ச்சி பெற்றது. இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் பரதத்தைக் கற்றுச் சீருடனும் சிறப்புடனும் விளங்குவதற்குத் திருமதி உருக்குமணிதேவியே காரணம்.
கலாட்சேத்திரத்தில் நாட்டியம், இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளைக் கற்பிக்க ஒரு நுண்கலைக் கல்லூரி உள்ளது. நம் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவ மாணவியர் இங்குப்<noinclude></noinclude>
4rp59wr9gn3xhx59yw0hcghhurf8jpe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/869
250
642343
1954560
1930497
2026-07-19T05:54:24Z
Sridevi Jayakumar
15329
1954560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலாட்டு|841|கலிக்கம்பர்}}</noinclude>1936–ஆம் ஆண்டு ஒரே ஒரு மாணவியுடன் தொடங்கப்பட்ட இக்கலைப்பள்ளி, அவ்வாலமர விழுதைப் போலவே இன்று ஆயிரக்கணக்கில் மாணவர்களைக் கொண்டு, கலைத் தொண்டாற்றி வருகின்றது. இந்தியப் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்குக் காரணமாகவும் இது விளங்குகிறது. இதைத் தோற்றுவித்து, வளர்த்துவிட்ட திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் 1986–ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் காலமானார்.
{{Right|<b>செ.ஆ.</b>}}
<section end="கலாட்சேத்திரம்"/>
<section begin="கலாட்டு"/>
{{dhr}}
{{larger|<b>கலாட்டு:</b>}} மதில்களையும் கோட்டையையுமுடைய இந்நகர் பாகிசுத்தானத்தில் 6600 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது உள்ளது. இந்நகரைச் (Kalat) சுற்றியுள்ள பகுதி ஆதிக்குடிகள் வாழும் ஒரு முகம்மதிய இராச்சியம். அதன் தலைவர்களுக்குக் ‘கான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. பலுச்சித்தானப் பகுதியில் கலாட்டும் குவெட்டாவும் சிறப்பு வாய்ந்த நகரங்களாகும். பழங்களும் பேரீச்சையும் இங்கு மிகுதியாக விளைகின்றன. கலாட்டு இராச்சியத்தின் பரப்பு 80,077 சதுர கி.மீ.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலாட்டு"/>
<section begin="கலாப்பகோசுத் தீவுகள்"/>
{{dhr}}
{{larger|<b>கலாப்பகோசுத் தீவுகள்:</b>}} கோலன் தீவுக் கூட்டம் எனப்படும் கலாப்பகோசுத்தீவுகள் பசிபிக்கு மாக்கடலில் நிலநடுப்பகுதியில் உள்ளன. கலாப்பகோசுத் தீவுகளின் (Calapagos) பரப்பு 7845.1 ச.கி.மீ. இசுபானியக் கடற்பயணி ஒருவர் இத்தீவுகளை முதலில் கண்டுபிடித்தார். ஈக்குவடார் நாட்டுக்கு இவை சொந்தமாயின. மிகப்பெரியனவாகிய ஆமைகள் இங்குக் காணப்பட்டதால் ஆமை என்ற பொருளுடைய கலாப்பகோசு என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்கு ஏற்பட்டது. அத்தகைய ஆமைகள் இப்பொழுது அங்கு இல்லை. ஈக்குவடார் கி.பி. 1832–ஆம் ஆண்டில் இந்தத் தீவுக் கூட்டத்தைப் பெற்றது. வனவிலங்குகள் பல இங்கு உள்ளன. சார்லசு தார்வின் தம் ஆராய்ச்சிக்காக கி.பி. 1835–இல் இத்தீவுகளின் காடுகளுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. மனித குல பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக்குத் தார்வினுக்கு இக்காடுகள் மிக உதவின. வனவிலங்குப் புகலிடம் ஒன்று இங்கே அமைந்துள்ளது. இத்தீவுகள் எரிமலைச் சிகரங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ஈக்குவடாருக்கும் இத்தீவுக் கூட்டத்திற்குமிடையே உள்ள தொலைவு 960 கி.மீ.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலாப்பகோசுத் தீவுகள்"/>
<section begin="கலாபிரியா"/>
{{dhr}}
{{larger|<b>கலாபிரியா:</b>}} தெற்கு இத்தாலியிலுள்ள ஒரு முந்நீரகம். இதன் பரப்பு 15,079 சதுர கி.மீ. திர்ரேனியன் கடலுக்கும் அயோனியன் கடலுக்குமிடையே உள்ள கலாப்பிரியா (Calabria), மெசினா கடற்காலினால், சிசிலித் தீவினின்று பிரிக்கப்படுகிறது. இம்முந்நீரகத்தை, இத்தாலியக் கால் புதை மிதி விரற்பகுதி (Toe of the Italian boot) என்று கூறலாம். கட்டன்சாரோ (Catanzaro) இதன் தலைநகராகும். மலைப்பாங்கான இப்பகுதியில் வேளாண்மை முக்கிய தொழில், ஒலிவு, உலர்ந்த கொடி முந்திரிப் பழங்கள், திராட்சை, நாரத்தை, எலுமிச்சை, கிச்சிலிப் பழங்கள், கோதுமை முதலியன இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. ஆடு மாடுகள் வளர்த்தல், மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் முக்கியமானவை.
வரலாறு: இப்பகுதியின் பழைய பெயர் புரூட்டியம் (Bruttium). இது கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து தான் கலாபிரியா என்று வழங்கப்படுகிறது. இ பகுதி கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சிசிலியன் நார்மானிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி. 1822-க்குப் பிறகு நேபிள்சு அரசின் ஒரு பகுதியாயிற்று. கரிபால்டி கி.பி. 1860-இல் புதிய இதாலியுடன் ஐக்கியப்படுத்தும் நோக்கத்துடன் இதை வென்றான். இங்குக் காணப்பட்ட நிலமானியக் கட்டுப்பாடுகள், மலேரியா நோய், நில நடுக்கங்கள் (குறிப்பாக, 1905, 1908–ஆம் ஆண்டுகளில்) பஞ்சம், போக்குவரவுச் சாதனக் குறைவுகள் முதலியன இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. {{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலாபிரியா"/>
{{larger|<b>கலிக்கம்பர்:</b>}} அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய கலிக்கம்பர் ‘செம்மை நீதியார்’ என்று சேக்கிழாரால் போற்றப்பட்டவர். இவர் தில்லையின் மேற்கில் உள்ள திருப்பெண்ணாகடத்தில் வணிகர் குலத்தே தோன்றியவர். இவர் அவ்வூரில் உள்ள தூங்கானைமாடத்தமர்ந்த சிவபெருமானுக்கு நாளும் திருத்தொண்டு செய்துவந்தார். மற்றோர் பற்றிலாது வாழ்ந்த இவ்வன்பர் அரனார் அடியார்க்கு அமுது செய்விக்கும் பேறு பெற்றார். இவர் நாடோறும் போனகம் நறுநெய் தயிர் தீம்பால் இனிய கனி ஆகிய எல்லாவற்றையும் விருப்பமுடன் கொடுத்து, மேலும் நிதியமும் வழங்கும் நியதியை மேற்கொண்டார்.
இவ்வாறு அடியார்க்கு அமுதுபடைக்கும் திருத்தொண்டு புரிந்துவரும் கலிக்கம்பர், தமது இல்லத்தில் திரு அமுது செய்யவரும் தொண்டர்களை எல்லாம் அன்புடன் முன்னர் சென்று அழைத்துத் திருவடிகளை விளக்குவார். அன்புடைய மனைவி உணவும் கறியமுதும் மற்ற சுவைப் பொருள்களையும் பக்குவமாக்கிய அளவில் பரிமாறத் தொண்டர்கள் உணவருந்திய பின் அவர்தம் மனைவி நீரளிக்க விருப்பத்துடன் திருவடிகளைத் தூய்மை செய்து இன்புறுவார்.
{{nop}}<noinclude></noinclude>
huw4yta6qnwn42t8hssewpmf5iyzas8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/870
250
642345
1954561
1930499
2026-07-19T05:58:02Z
Sridevi Jayakumar
15329
1954561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிக்காம நாயனார்|842|கலிகூலா}}</noinclude>இங்ஙனம் ஒழுகும் காலத்து ஒருநாள் தம் இல்லத்துப் பணி செய்த ஏவலர் ஒருவர் அடியவராகி அன்று கலிக்கம்பர் இல்லத்திற்கு வர அவர்க்கும் தொண்டர் திருப்பாதம் விளக்க முற்பட்டார். அப்போது மனைவியார் முன்பு ஏவல் செய்தவர் என்று கருதித் தயங்கினார். அது கண்ட கலிக்கம்பர் கொன்றை முடியார் அடியராகிய அவரை முன்பிருந்த நிலை கருதி வெட்கப்பட்டு இவள் நீர்வாரா தொழிந்தாள் என மனத்துள் எண்ணி, மனைவியார் கையிலிருந்த கரகத்தை வாங்கி வைத்துவிட்டு அவளது கையை வாளால் வெட்டி அக்கரசு நீரைத் தாமே எடுத்துத் திருத்தொண்டர் திருவடிகளை விளக்கி, ஆர்வமுடன் அமுது செய்வித்தார்.
இவ்வாறு அடியார் மீது கொண்ட பத்தியின் மேலீட்டால் கலிக்கம்பர் செய்த அச்செயலைச் சுந்தரர் ‘கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்’ எனத் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். மனைவியார் கை தடிந்த கலிக்கம்பர், இறைவன் மலர்ச் சேவடி வணங்கித் திருத்தொண்டு புரிந்து சிவபதம் அடைந்தார்.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கலிக்கம்பர்"/>
<section begin="கலிக்காம நாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>கலிக்காம நாயனார்:</b>}} சோழநாட்டில் காவிரியின் வடகரையில் உள்ள திருப்பெருமங்கலம் என்னும் ஊரில் சோழமன்னர்க்குப் படைத் தலைமைத் தொழில் பூண்ட வேளாளர் குடியில், சிறப்பாக ஏயர்கோக் குடியில் தோன்றியவர் கலிக்காமனார். இவர் ‘நிதியமாவன நீறுகந்தார் கழல்’ என்று துதியினால் வணங்கும் இயல்பினர். சிவநெறியிலும் அடியார் பத்தியிலும் சிறந்து விளங்கிய இவர் மானக்கஞ்சார நாயனாரின் அருமை மகளை மணந்துகொண்டார்; திருப்புன்கூர் இறைவனுக்குத் திருப்பணி செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி ஆரூர்ப் பெருமானைத் தூதுவிட்ட செய்தி கேட்டு ‘ஆண்டவனை அடியான் ஏவும் செயல் நன்றோ’ என வெகுண்டு, அவர் பால் சினங்கொண்டார். அது கேட்டுத் தம் பிழையுணர்ந்த சுந்தரர், தம்பால் கலிக்காமர் கொண்ட கடுஞ்சினத்தை மாற்றியருளுமாறு இறைவனை வேண்டினார்.
இவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளங் கொண்ட இறைவன் கலிக்காமர்க்கு வாட்டும் சூலை நோய்தன்னை அருளினார். அனல் செய் வேல் குடைவதுபோல் வேதனை தரும் சூலைநோயால் வருந்திய கலிக்காமர் இறைவனை வேண்ட ஈசர், வன்றொண்டர் தீர்க்கில் அன்றி அது தீராது என்றார். ‘வழிவழியாகச் சிவத்தொண்டு செய்து வரும் குடியில் பிறந்த என் நோயை அவனோ தீர்ப்பது’ எனக் கலிக்காமர் நினைத்தார். இறைவனும் சுந்தரை அணுகி ஏயர்கோன் உற்ற சூலை நோயை ‘நீ சென்று தீர்ப்பாயாக’ எனப் பணித்தார். ஆணை கேட்ட ஆரூரர் விரைந்துவர, ‘ஆரூரர் வந்தால் தீரும் இச்சூலை என்னில் இவ்வயிற்றினைக் கிழிப்பேன்’ என்று கூறி உடைவாளால் கிழித்தார்.
கலிக்காமருடன் உயிர்விட அவர்தம் மனைவியார் துணியும்போது, நம்பி ஆரூரர் நண்ணினார் என்று அடியவர்கள் கூற, உயிர்விட முனையாது, மற்றவர்களோடு அவரைப் பூரண கும்பத்துடன் வரவேற்றார். கலிக்காமர் நோம் தீர்க்க இறைவன் பணித்தனன் என்று கூறும் சுந்தரர்முன் அவர்கள் கலிக்காமனார் பள்ளி கொள்கிறார் என்றனர். சுந்தரர் அது கேட்டு அமையாது அவரை நான் விரைந்து காணுதல்வேண்டும் என்றார். சென்று அவரது நிலை கண்ட சுந்தரர் யானும் உயிர் துறப்பேன் எனக் குற்றுடைவாள் பற்றினார். அப்போது இறையருளால் கலிக்காமர் உயிர் பெற்றுச் சுந்தரரைத் தடுத்தார். இருவரும் அன்புடன் தழுவிப் பிரியா நட்பு கொண்டு புன்கூர்ப் பெருமானைப் போற்றினர். ஏயர்கோன் சிவத்தொண்டு புரிந்து சிவனடி, சேர்ந்தார்.
சுந்தரர் வரலாற்றோடு இயைபுடைமையால் இவர் வரலாறு கூறும் பகுதியினைச் சேக்கிழார் மிக விரிவாக 409 செய்யுட்களில் கூறியுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை ஏயர்கோன் கலிக்காமன், என்று தம் திருத்தொண்டத் தொகையுள் குறிப்பிட்டுள்ளார்.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கலிக்காம நாயனார்"/>
<section begin="கலிகூலா"/>
{{larger|<b>கலிகூலா:</b>}} உரோமப் பேரரசின் வரலாறு பல சிறப்புகளைப் பெற்றிருப்பதைப் போன்று பல குறைபாடுகளையும் உடையது. செங்கோலோச்சிய மன்னர்களும் அங்கு உண்டு; கொடுங்கோலர்களும் உண்டு. இரண்டும் கலந்த தன்மையைப் பெற்ற பேரரசர்களுள் கலிகூலாவும் ஒருவன். பொற்காலம் கண்ட அகசுதசு சீசருக்குப்பின் (Augustus Caesar) தைபீரியசு (Tiberius), ஆட்டிபுரிந்தான். பிறகு கி.பி. 37–ஆம் ஆண்டில் அகசுதசு செர்மானிகசு (Augustus Germanicus) என்பவன் தனது 25-ஆம் வயதில் பட்டத்திற்கு வந்தான். பாசறையில் கி.பி. 12-ஆம் ஆண்டில் இவன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும்போது காலிகே (Galigae) என்னும் போர்வீரரின் செருப்பை இவன் அணிந்திருந்ததால் இவனைக் கலிகூலா (Caligula) என்று குறிப்பிட்டனர். அப்பெயரே இவனுக்கு நிலையாக அமைந்துவிட்டது. கயசுசீசர் (Gaius Caeser) என்று அவன் தன்னைப் பெருமையாகக் கூறிக் கொண்ட போதிலும், கலிகூலா என்றே இவனை வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவன் தனது ஆட்சியின் தொடக்கக் காலத்தில் செங்கோலோச்சினான். மக்-<noinclude></noinclude>
pojw4eja7kl5sbfkffateg04uczq57m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/871
250
642348
1954562
1930503
2026-07-19T05:58:53Z
Sridevi Jayakumar
15329
1954562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கத்துப் பரணி|843|கலிங்கத்துப் பரணி}}</noinclude>கள் இவளைப் பாராட்டினர். பிறகு தனக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு கொடுங்கோலனாக மாறிவிட்டான். தன்னை மதிக்காதவர்களைக் கொலை செய்ய அவன் தயங்கவில்லை. தானே கடவுள் என்று கூறித் தன்னை வழிபடக் கோயில் ஒன்றையும் கட்டுவித்தான். அவனுடைய செயல்கள் யாவும் குடியாட்சி முறைக்கு எதிராக இருந்தன. குடியாட்சியில் அவனுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. இவனைக் கி.பி. 41-இல் இவன் மெய்காப்பாளர்களே வெட்டி வீழ்த்தினர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலிகூலா"/>
<section begin="கலிங்கத்துப் பரணி"/>
{{dhr}}
{{larger|<b>கலிங்கத்துப் பரணி:</b>}} முதல் குலோத்துங்க சோழனது (கி.பி. 1078-1118) கலிங்க வெற்றியைச் சிறப்பித்துப் பேசுவது இந்நூல்; சந்தநயம் பொருந்திய 594 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகும். வடகங்கர் குல வேந்தன் அனந்தபன்மன், முதற்குலோத்துங்கனுக்கு இரண்டு முறை திறை செலுத்தவில்லை. எனவே, படைத்தலைவனாகிய வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்தின்மீது படையெடுக்கப் பணித்தான் சோழன். வலிய மலையரண் கொண்ட கலிங்கத்தைக் கருணாகரன், நால்வகைப் படைகளையும் நடத்திச் சென்று வென்று மிக்க பொருளையும் கைப்பற்றினான். அனந்தபன்மனைப் பற்றிய சுவடு ஒன்றும் தென்படவில்லை. வென்ற பொருள்களுடன் சோழனை வந்து வணங்கினான். இந்த அரிய வரலாற்று நிகழ்ச்சி இந்நூலின் தோற்றத்துக்கு அடிப்படையாகும்.
இந்நூலை எழுதிய புலவர் கவிச்சக்கரவர்த்தி செயங் கொண்டார் ஆவர். இவர் சோழனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய ‘பரணி’ என்னும் பிரபந்த முறையில் இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயினை, மன்னன் பரிசாக அளித்தான் என்று கூறுவர். தோல்வியுற்றவர் பெயரைச் சார்ந்து பரணி இலக்கியம் வழங்கப்படும் மரபை ஒட்டி இந்தாத் பெயரும் அமைந்துள்ளது. தினைப்புனத்தில் பரணில் அமர்ந்து பறவைகளை ஓட்டுதல் போல், போர்க்களத்தில் யானை மீதமர்ந்து பகை வீரர்களைத் துரத்துவதால் செய்தி பற்றிக் கூறும் நூல் பரணி எனப்பட்டது என்பர். அரசனின் படைக்கலங்களால் அமைக்கப்பட்ட போர்ப்பரண் மீதிருந்து புலவர் இந்நூலைப் பாடுதலாலும் இப்பெயர் அமைந்தது என்பர். பரணி நாளில் பிறந்தானைப் பாடுதல் காரணமாகவும், பரணி நாளில் கொற்றவைக்கு வழிபாடு செய்தல் காரணமாகவும் இப்பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். பரணியின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் கூறப்படும். எழுநூறு யானைகளை வென்றவனுக்குப் பாடப்படுவது பரணி என்று பன்னிரு பாட்டியலும், ஆயிரம் யானைகளை வென்றவனுக்கு வகுப்பது பரணி என்று இலக்கண விளக்க பாட்டியலும் கூறுகின்றன. இவ்வகையில் கலிங்கத்தை வென்ற சோழனுக்கு இப்பரணி நூல் பாடப்பட்டதாகும். செயங்கொண்டார் தீபங்குடியைச் சேர்ந்தவர் என்பது தமிழ்நாவலர் சரிதையால் அறியப்படுகிறது. எனவே, சமணர் என்று சிலர் கருதுவர். ஆயின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உமாபதி முதலிய கடவுளரை வாழ்த்திப் பாடியிருத்தலின் இவர் சைவரென்றே தெரிகிறது என்று கா. சுப்பிரமணியபிள்ளை தனிய அறிஞர்கள் கூறுவர். பரணி இலக்கியங்களுள், காலத்தால் முற்பட்ட இப்பரணியைச் செய்த புலவர் ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார். ஒட்டக்கூத்தர் தம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில், கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவகஞ் செய்த சோழன் என்று புலவரையும், மன்னனையும் பாராட்டியுள்ளார்.
போர்க்களத்திலிருந்து மீண்ட தலைமகன்பால் ஊடல் கொண்ட தலைமகளது ஊடலைத் தீர்த்தற் பொருட்டுப் புலவர்கள் வாயிலாக நின்று ஊடல் தீர்த்தபின் தலைவன் சென்ற காட்டின் கொடுமை, அவனது வீரம், காட்டிலுள்ள பேய்கள் காளிக்குக் கூறுதல், காளிபேய்களுக்கு உரைத்தல் என்று இயற்றைக் கூறும் முறையில் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியை இந்நூல் கூறுகிறது.
இந்நூல் 13 பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை யாவன: கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம், காளிக்குக் கூளி கூறுயது, போர் பாடியது, களம் பாடியது.
கடவுள் வாழ்த்தில் குலோத்துங்கன் நீடுவாழ்வ எதற்கு உமாபதி, திருமால், நான்முகன், சூரியன் கணபதி, முருகன், நாமகள், உமையம்மை, சத்தமாதர்கள் ஆகியோர் வாழ்த்தப்படுகின்றனர். மறையவர், மழை, நாடு பற்றிய வாழ்த்தும் கூறப்படுகிறது.
கடைதிறப்புப் பகுதி இன்பச் சுவையை இனிமையுற எடுத்துரைப்பதாகும். பிரிவு நீட்டித்ததால் ஊடல் கொண்டு, தாளிட்ட கதவுகளைத் திறக்க மகளிர் மறுக்கின்றனர்; அதாவது வாயில் மறுக்கின்றனர். இந்நிலையில் புலவர் ஊடல் தணிக்கும்<noinclude></noinclude>
fg9ys8wa8tfs18v7wdmfj2yvdwl0zzf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/873
250
642352
1954563
1930513
2026-07-19T06:00:30Z
Sridevi Jayakumar
15329
1954563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கத்துப் பரணி|845|கலிங்கப்போர்}}</noinclude>நாட்டுநிலை ஆகியவற்றைக் காளிதேவி கூறுகிறாள். புலவர் அரசனைப் புகழ்வதில் கொண்டுள்ள ஈடுபாடு இப்பகுதியில் விளங்குகிறது. குலோத்துங்கன் ஆட்சிச் சிறப்பு வியந்து பாராட்டப்படுகிறது. கலிங்கப் போரின் வித்து இப்பகுதியில் ஊன்றப்படுகிறது.
காளிக்குக் கூளி கூறியது என்பதில், கலிங்கப் போரைக் கண்ணால் கண்டுவந்த கூளி, காளிதேவியிடம், போரின் போக்கு, பயன், போருக்கான காரணங்கள் ஆகியவற்றைக் கூறுகிறது. சோழன் படைச் சிறப்பு, கருணாகரன் படை நடத்திய திறம், படை சென்ற வழிகள், கடந்து சென்ற ஆறுகள் ஆகியவை விளக்கப்படுகின்றன. ‘சோழனுக்கு எளியனேயன்றி அவன் படைக்கு எளியனல்லன்’ என்று இகழ்ந்துரைத்த கலிங்க மன்னனுக்கு அமைச்சன் எங்கராயன் இடித்துக் கூறி அறிவுறுத்துகிறான். அதனைப் பொருட்படுத்தாமல் கலிங்க அரசன் போருக்குத் துணிகிறான். இருபடைகளும் போர்புரிகின்றன.
போர்பாடியது என்னும் பகுதி கலிங்கப்போர் பற்றியது. போர் நிகழ்ச்சிகள் துடிப்பான சொற்களால் வருணிக்கப்படுகின்றன. சோழப் படைகளின் செயல்திறத்தால் குருதி ஆறு பெருகியது; எரி பரவிற்று; வெட்டிய உடல்கள் குவிந்தன. வீரர்கள் கண்களை மூடினால் அவர்களைத் தாக்காமல் விடுத்த போரறமும் அங்குக் காணப்பட்டது. கலிங்க அரசன் எங்கோ ஓடி விட்டான். கலிங்க வீரர்கள் தப்பிப் பிழைக்க முந்திக்கொண்டு தமிழர், தமிழன் என்று அலறி ஓடினர்; ஆடையிழந்த சில கலிங்க வீரர், தம்மை அமணர் என்று சொல்லி உயிர்தப்பினர்; சிலர் வில் நாணைப் பூணூலாக அணிந்து, கங்கையாட வந்தவர்கள் என்று கூறிப் பிழைத்தனர்; சிலர் குருதி தோய்ந்த ஆடைகளைக் காவியாடைகளாகப் புனைந்து, தலைமுடி களைந்து, சாக்கியர் என்று கூறித் தப்பினர், சிலர் தம்மைத் தெலுங்கர் என்று கூறியும், யானை மணியைத் தாளமிட்டுக்கொண்டு, பாடிப்பிழைக்கும் பாணர்கள் என்று கூறியும், பிழைத்தனர். இவ்வாறு வேடமிட்டவர்களும், சித்திரங்களில் வரையப்பட்டிருந்தவர்களுமே தப்பியவர்கள். வெற்றி பெற்ற தொண்டைமான் கைப்பற்றிய பல்வகைப் பொருள்களையும் திரட்டி அபயன் முன் கொண்டு வந்து வைத்து வணங்குகிறான்.
களம் பாடியது என்னும் பகுதியில், கலிங்கப் போரை எடுத்துரைத்த பேய், போர்க்களத்தை நேரில் சென்று காணும்படி தேவியை வேண்டிக் கொள்கிறது. தேவியும் பேய்கள் சூழச் செல்கிறாள்; அங்குக் காணப்பெறும் வீரக் காட்சிகளையும், கொடிய தோற்றங்களையும், பரிவாரங்களுக்குக் காட்டுகிறாள்.
இப்பதின்மூன்று உறுப்புகளுள் கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, இராசபாரம்பரியம், அவதாரம் என்ற நான்கு தவிர ஏனைய ஒன்பதும் கொடிய போர் வருணனைகளைக் கொண்டு விளங்குகின்றன என்பது சுட்டத்தகும்.
இப்பரணி நூலை ஆங்கிலத்தில் சுருக்கமாகத் திரு.வி. கனகசபைப் பிள்ளை கி.பி. 1890–இல் மொழிபெயர்த்து இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளார். இக்காலத்தில் இந்நூல் பற்றி ஆராய்ச்சி நூல்கள் பல வந்துள்ளன.
{{Right|<b>ந.மா.</b>}}
<section end="கலிங்கத்துப் பரணி"/>
<section begin="கலிங்கப்போர்"/>
{{dhr}}
{{larger|<b>கலிங்கப்போர்:</b>}} மௌரியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் ஏறக்குறைய பாரத தேசத்தின் அனைத்துப் பகுதிகளும் அடங்கியிருந்த சமயத்தில், மகாநதிக்கும். கோதாவரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியாக இருந்த கலிங்கம் மௌரியப் பேரரசின் ஆளுகைக்கு உட்படாமல் ஒரு சிற்றரசின் கீழ் இருந்தது. இது வங்கத்திற்கும் பாரதத்தின் தென்பகுதிக்கும் இடையே கடல் போக்குவரத்துக்கும், தென்னகத்தின் சாலைப் போக்குவரத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகி குறுநில மன்னரால் ஆளப்பட்டு வந்தமையால் மௌரியப் பேரரசின் ஆதிக்கப் போருக்கு இலக்கானது. ஏனைய பல சிற்றரசுகள் மௌரியப் பேரரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டே செயல்பட்டன. ஆனால், போர்ச்சிறப்புப்பெற்ற கலிங்கம் அசோகரின் ஆளுகைக்கு உட்பட மறுத்ததால் கலிங்கப்போர் தவிர்க்க முடியாததாயிற்று.
அசோகர் முடிசூடிய 8–ஆம் ஆண்டில் தொடங்கிய கலிங்கப்போர் ஏறக்குறைய ஓராண்டுக் காலம் நடந்தது. அசோகரின் 13–ஆம் ஆட்சி ஆண்டின் (கி.மு. 256) 13-ஆம் கல்வெட்டு, கலிங்கப்போர் பற்றிய செய்திகளைத் தருகிறது. இப்போரில் ஏறக்குறைய 1,50,000 பேர் நாடு கடத்தப்பட்டனர்; 1,00,000 பேர் படுகாயம் அடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். துறவிகளும், அந்தணர்களும், கல்விமான்களும் கலிங்கப் போரின் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதுவரை யாரும் வெற்றி கொள்ள முடியாத கலிங்கம், பல்லாயிரக் கணக்கானோரின் இரத்த வெள்ளத்தில் அசோகரின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. நாடு பிடிக்கத் துடித்த அசோகனுக்குக் கலிங்கப்போரே கடைசிப் போரானது. வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த கலிங்கப் போரினால் அசோகப் பேரரசு இந்தியாவில் எந்தப் பேரரசும் அதுவரை பெறாத அளவு விரிவடைந்தது. பலரின் இறப்பைப் பார்த்த அசோகர் தம் நாடு பிடிக்கும் எண்ணம் மாறி, ஒரு புத்த துறவியாகி, இனிப்போர் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இவ்வகை-<noinclude></noinclude>
69kkuk9bv88racs8h0w15zxl1egs19n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/874
250
642356
1954564
1930520
2026-07-19T06:02:46Z
Sridevi Jayakumar
15329
1954564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிங்கம்|846|கலித்தாழிசை}}</noinclude>யில், கலிங்கப்போர் மௌரியப் பேரரசின் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது. பிற்கால மௌரியரின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்போர், ஒரு மாபெரும் பேரரசின் சமயக் கொள்கையைப் பாதித்ததுடன் அதுவே அப்பேரரசு அழியவும் காரணமாயிற்று.
{{Right|<b>இ.கா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Sen, R.K.,</b> Rock Edicts of Asoka, Calcutta, 1955.
<b>Thapar, Romila;</b> Asoka and Decline of Mauryas, Oxford, 1963.
<section end="கலிங்கப்போர்"/>
<section begin="கலிங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>கலிங்கம்:</b>}} இன்றைய தென் ஒரிசா பகுதி முற்காலத்தில் கலிங்கம் எனக் கூறப்பட்டது. கலிங்க நாடு வரலாற்றுச் சிறப்புடைய நாடாகும். பாலி என்ற அரசனின் மகன் ஒருவன் கலிங்கத்தை ஆண்டதாக மகாபாரதம் கூறுகிறது. அரிவமிசம், கருடபுராணம் போன்ற நூல்களில் கலிங்க நாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. யானைகளுக்குப் புகழ் பெற்ற நாடாகக் கலிங்கம் விளங்கியதைக் கௌடில்யரின் அர்த்தசாத்திரம் கூறுகிறது. பிளினி என்பவர் இந்நாட்டைக் ‘கலிங்காய்’ (Calingae) எனவும், இங்கு வாழ்ந்த மக்களை ‘மல்லர்’ என்றும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நாடு பௌத்தத்துடனும் தொடர்புடையதாக விளங்கியது. பௌத்த சமய நூல்களில் கலிங்க வரலாறு, பண்பாடு குறித்த செய்திகள் உள்ளன. அக்காலத்தில் இந்தியாவின் ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றாக இது விளங்கியது. புராணங்கள் கூறும் இரேனு (Renu) என்ற அரசரின் காலத்தில் இந்தியாவில் இருந்த ஏழு அரசுப் பிரிவுகளில் ஒன்றாக இது விளங்கியது. கலிங்க நாட்டின் முதல் தலைநகரம் ‘தண்டபுரம்’. கலிங்கத்தில் வறட்சி ஒன்று ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. கலிங்க நாடு இலங்கை, சிரீவிசயம் ஆகியநாடு நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கலிங்க நாட்டைப் பற்றிச் சிங்களர்களும் கிரேக்கர்களும் உரோமானியர்களும் அறிந்திருந்தவர். இலங்கையின் புத்தசமய நூல்களான மகாவமிசம், தீபவமிசம், ஆகிய நூல்களில் இலங்கை அரசர்கள் கலிங்க நாட்டு அரசர்களிடம் திருமண உறவு கொண்டமை கூறப்பட்டுள்ளது. மகத நாட்டை ஆண்ட நந்த மரபைச் சார்ந்த அரசர்கள் கலிங்கத்தைத் தங்களின் ஆளுகையின் கீழ்க் கொணர்ந்தனர் எனப் புராணங்கள் கூறுகின்றன. மௌரியப் பேரரசர் அசோகர் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து அப்பகுதியை மகதப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இப்போரே அசோகரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. அசோகருக்குப் பின், காரவேலன் என்ற அரசர் கலிங்க நாட்டின் சிறந்த அரசராக விளங்கினார். கீழைக் கங்கர்கள் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிங்கத்தை ஆண்டனர். கலிங்கம், சிங்கபுரம், கபிலை ஆகிய இரு நகரங்களைக் கொண்டு விளங்கியது எனத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. தமிழகத்தை ஆண்ட சோழ அரசர்கள் இந்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கலிங்கத்தைக் கிழைச் சாளுக்கியக் குறுநில மன்னர் மதுகாமார்ணவர் என்பவர் ஆட்சி செய்த பொழுது (கி.பி. 1019–1038) சோழ அரசர் முதலாம் இராசேந்திரன் கலிங்கத்தின் வழியாகக் கங்கைவரை படையெடுத்து வென்றார். கலிங்கத்தை கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அனந்தவர்மன் சோட கங்கன் சோழ மன்னருக்குத் திறை கொடுக்க மறுத்ததால், முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தலைவர் தொண்டைமான் கலிங்கத்தின் மீது படையெடுத்து அனந்தவர்மனை வென்றதாகக் கல்வெட்டுகளும், செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் கூறுகின்றன.
அனந்தவர்மனுக்குப் பின்னர் வந்தவர்கள் வங்காள இசுலாமியரின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திக் கலிங்கத்தைப் பாதுகாத்தனர். கலிங்க மன்னரான முதலாம் நரசிம்மன் (கி.பி. 1238–1264) என்ற அரசர் கொனாரக்கு என்னுமிடத்தில் சூரியனுக்குக் கோயிலமைத்தார். இவர் பூரி என்னுமிடத்திலுள்ள சகந்நாதர் கோயிலையும் புதுப்பித்தார். கங்க மரபின் கடைசி அரசரான நான்காம் பானு தேவரை அவர் தம் அமைச்சர் கபிலேந்திரர் கி.பி. 1434–இல் ஆட்சிப்பீடத்திலிருந்து இறக்கி விட்டுத் தாமே அரசரானார். கசபதி என்னும் மரபு கபிலேந்திரர் காலத்திலிருந்து கலிங்கத்தை ஆட்சி புரிந்தது. கபிலேந்திரர் தனது ஆளுகையை விரிவுபடுத்தினார். கசபதி மரபினர் கி.பி. 1541 வரை கலிங்கப் பகுதியை ஆட்சி செய்தனர். கலிங்கம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாமினி, விசய நகர அரசுகளுடன் தொடர்பு கொண்டு விளங்கியது.
கலிங்கம் சிறந்த நூலாடைகளுக்குப் பெயர் பெற்றது. தமிழிலக்கியங்கள் இங்கு நெய்யப்பட்ட ‘கலிங்கம்’ என்னும் ஆடைகளின் நேர்த்தியை விவரிக்கின்றன. வடஇந்திய நூல்களிலும், உரோமானியப் பயணிகளின் குறிப்புகளிலும் இங்கு நெய்யப்பட்ட கலிங்க ஆடைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கலிங்கம்"/>
<section begin="கலித்தாழிசை"/>
{{dhr}}
{{larger|<b>கலித்தாழிசை:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்-<noinclude></noinclude>
chnnemu8bkiqpdyv7awaenmpl64ets7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/875
250
642358
1954565
1930528
2026-07-19T06:07:33Z
Sridevi Jayakumar
15329
1954565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலித்துறை|847|கலித்தொகை}}</noinclude>கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள் பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றுள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கலித் தாழிசை என்பது கலிப்பாவினத்தின் மூன்று வகைகளுள் ஒன்றினைக் குறிக்கிறது. ஒத்த அடிகள் சிலவும் பலவும் வந்து, கடைசி அடி மிக்கு வருமாறு அமையும் செய்யுட்கள் கலித்தாழிசை எனப்படும். இரண்டடிகள் கொண்டு ஈற்றடி மிக்குவருவனவும், ஈற்றடி மிகுந்து மற்ற அடிகள் ஒவ்வாது வருவனவும் இவ்வகையில் அடங்கும். இத்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றாய் அடுக்கி வரும்போது, கலியொத்தாழிசை எனப்படும். தாழிசை ஒன்றாகவோ இரண்டாகவோ மூன்றின் மிகுந்தோ வருவதும் கலித்தாழிசை எனப்படும். தாழிசை மூன்றாய் அமைந்து வெவ்வேறு பொருள் பற்றி வந்தாலும் இப்பெயர் பெறும். ஈற்றடி மிகுந்தும் ஏனைய அடிகள் ஒத்தும் வரும் தாழிசைகள் ‘சிறப்புடைக் கலித்தாழிசை’ என்றும், ஏனைய அடிகள் ஒவ்வாது வருவன ‘சிறப்பில் தாழிசை’ என்றும் சொல்லப்பெறும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலித்தாழிசை"/>
<section begin="கலித்துறை"/>
{{dhr}}
{{larger|<b>கலித்துறை:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள், பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கலித்துறை என்பது கலிப்பாவினத்தின் மூன்று வகைகளுள் ஒன்றினைக் குறிக்கிறது. ஐஞ்சீரடிகளாகிய நெடிலடிகள் நான்கு கொண்டு அமையும் செய்யுள் கலித்துறை எனப்படும். இக்கலித்துறைச் செய்யுள்கள், அடிமறியாய் அமையுமாயின் கலிமண்டிலத்துறை என்றும், அடிமறியாய் அமையாவிடின் கலிநிலைத்துறை என்றும் கூறப்படும். அடிமறியாவது செய்யுளின் நான்கடிகளும் அடிதோறும் பொருள் முடிவுற, அவற்றை முறைமாற்றி வைப்பினும் பொருள் மாறுபடாதவாறு இருக்குமாறு பாடப்படுவதாகும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலித்துறை"/>
<section begin="கலித்தொகை"/>
{{dhr}}
{{larger|<b>கலித்தொகை:</b>}} பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் என வழங்கப்பெறும். பாட்டு எனப்படுவது பத்துப் பாட்டாகும். தொகை எனப்படுவது எட்டுத்தொகை நூல்களைக் குறிக்கும். கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று, எட்டுத்தொகை நூல்களுள், பாவின் பெயராலமைந்த தொகை நூல்கள் பரிபாடலும் கலித் தொகையுமாகும். கலித்தொகை, ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் இறப்பித்துக் கூறப்பெறுகிறது. அகன் ஐந்திணையாகிய அகப்பொருட் செய்திகளைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாக்களாகத் தொல்காப்பியனார் கலிப்பாவினையும் பரிபாட்டினையும் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்திற்கு முன்பேயே அகப்பொருள் இலக்கிய வழக்கில் பரிபாடலும் கலிப்பாவும் முதன்மை பெற்று விளங்கி என்பது தெரியவரும்.
கலிப்பா வெண்பா நடைத்து எனத் தொல்காப்பியனார் சுட்டுவர். கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகள் கலிப்பாவிற்கு உரியனவாகும். இது இசைப்பாட்டு வகையைச் சார்ந்தது.
சங்கத்துச் சான்றோர் தொகுத்த கலிப்பாட்டுகள் எனப் பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியல் உரையிலும், (தொல். செய். 149, 153, 153, 160) நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரையிலும் (இறை.நூ. 1) இந்நூலின் பாடல் எண்ணிக்கையினைப் புலப்படுத்தியுள்ளனர். சங்கத் தொகை நூல்களிற் சிதைவும் குறைவும் இன்றி, இன்று 150 கலிப்பாடல்களும் கிடைத்திருப்பது தமிழ் மக்களின் பேறு எனலாம்.
சிவபெருமான் வாழ்த்தாக அமைந்துள்ள கடவுள் வாழ்த்துடன், பாலைக் கலி 35 பாடல்களும், குறிஞ்சிக்கலி 29 பாடல்களும், மருதக்கலி 35 பாடல்களும், முல்லைக்கலி 17 பாடல்களும், நெய்கற்கலி 33 பாடல்களும் கொண்டு கலித்தொகை விளங்குகிறது. இவ்வைந்தனுள் மருதக்கலி, முல்லைக்கலி, குறிஞ்சிக் கலி ஆதிய மூன்றும், மருதப்பாட்டு, முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு என்றும் வழங்கின எனப் பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார்.
பாலைக்கலியினைச் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியினைக் கபிலரும், மருதக்கலியினை மருதன் இள நாகனாரும், முல்லைக் கலியினைச் சோழன் நல்லுருத்திரனாரும், நெய்தல் கலியினை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். இந்நூலினைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றிய குறிப்பு யாண்டும் காணப்படவில்லை. நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பிலிருந்து நெய்தற்கலியைப் பாடிய நல்லந்துவனாரே இத்தொகை நூலைத் தொகுத்துக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளார் என்று கொள்ள இடம் ஏற்படுகிறது.
கலித்தொகையின் ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப் பாடலுக்குரிய கூற்றுவிளக்கம் பற்றிய<noinclude></noinclude>
7way18ckjl2npka3wxbocjisf7tvs6d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/877
250
642375
1954569
1930614
2026-07-19T06:13:31Z
Sridevi Jayakumar
15329
1954569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலித்தொகை|849|கலிப்பகையார்}}</noinclude>இருள் தோன்றியதுபோலவும் கருதப்படும். அவன் வரைந்து கொள்ளுங்கால் தலைவியின் மேனியிற்றோன்றிய பசலை நோய் கதிரவன்முன் மாயும் இருளாகிவிடும்.
மருதக்கலி பாடியவர் புலவர் மருதன் இளநாகனார் ஆவர். மதுரையின் சிறப்பும் வையையாற்றின் வளமும் மருதக்கலியில் இடம் பெற்றுள்ளன. மதுரைக்கு வையைநீர்ப் பகையுண்டேயொழியப் போர்ப் பகை கிடையாது. மதுரையில் புலன்நா உழவர்கள் புது மொழி கூட்டுண்ணுகிறார்கள். வாழிய பூவொடு வாரல் எம் மனை எனக் கூறும் மதுரைத் தலைவி, ‘பரத்த’ என்று தகாதவொழுக்கம் மேற்கொள்ளும் தலைவனைக் குறிப்பிடுகிறாள். ‘முந்தையிருந்து மகன் செய்த நோய்த்தலை, லெந்த புண் வேல் எறிந்தற்றால்’ என்ற உவமை உன்னுந்தொறும் நயம் பயப்பதாகும். ‘நீயும் தவறிலை; நின் கை இது தந்த பூஎழில் உண்கண் அவளும் தவறிலள்,... யானே தவறுடையேன்’ எனத் தன்னையே நொந்துகொள்ளும் தலைவியின் பொருமல் இரங்கத்தக்கது.
சோழன் நல்லுருத்திரனார் பாடியது முல்லைக் கலியாகும். துச்சாதனனைக் கொன்ற வீமனின் வீரம் முல்லைக் கலியின் முதற் பாடலில் இடம்பெற்றுள்ளது. ஏறு தழுவுதல் என்னும் முல்லை நில வழக்கம் பல பாடல்களில் கிளத்தப்பட்டுள்ளது. ஏறடக்கித் தான், தான் விரும்பிய பெண்ணின் தோளினைத் தழுவுதல் வேண்டும். ஏனெனில், கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையிலும் ஆயமகள் தழுவ மாட்டாள். ஏறு தழுவி அடக்கிய நிலம், கௌரவர் நூற்று வரைப் பாண்டவர் ஐவர் வென்று அடக்கிய போர்க் களம் போலிருந்தது என்கிறார் சோழன் நல்லுருத்திரனார். ஆயரிடையில் காதல் மணம் கமழ்ந்தது.
ஐந்தாவதாக அமைந்துள்ள நெய்தற் கலியினைப் பாடியவர் நல்லந்துவனார் ஆவர். மாலைக் காலம் பிரிந்துறையும் தலைவிக்குத் துயர் செய்வது நன்கு புனையப்பட்டுள்ளது. நெய்தற்கலிப் பாடல்கள் அவலச் சுவையை மிகுவிப்பனவாகும். தலைவிக்கு மாலைக்காலம் வந்ததும் பசலை நோயும் உடன் வந்துவிடுகிறது. காதலர் தலைவியை விட்டு நீங்கும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் தலைவியின் அருகில் மேனியை வந்தடைந்து விடுகிறது. அவர் வந்து அவளைத் தொடும் பொழுதெல்லாம் அப்பசலை நோய் அவளை விட்டு நீக்கி விடுகிறது. மாலைநேரத்தில் இடையர் புல்லாங்குழல் இசைக்கத் தலைவியின் காதல் நோய் கைம்மிகுகிறது. நிரை வளை நெகிழ்ந்து கை முன் இறையினின்றும் கழன்று விழுகிறது. நெய்தல் கலியின் பாடலொன்று (16) ஆற்றுதல், போற்றுதல், பண்பு முதலானவற்றிற்கு விளக்கம் தருகிறது.
இவ்வாறாகக் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகைப் பாடல்கள் அகப்பொருள் நுட்பம் வாய்ந்தனவாய், வாழ்வியல் உண்மைகளை வகைமை பெற எடுத்துரைப்பனவாய் அமைந்து, படிக்குந்தோறும் இன்பம் பயப்பனவாய் விளங்குகின்றன.
{{Right|<b>சி.பா.</b>}}
<section end="கலித்தொகை"/>
<section begin="கலிப்பகையார்"/>
{{dhr}}
{{larger|<b>கலிப்பகையார்,</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் சான்றோர்களுள் ஒருவர். இவர் வரலாறு திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தில் காணப்படுகிறது. திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும். மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியார். அவர்க்குப் பன்னிரு வயது ஆன அளவில் அக்கால முறைப்படி ஒத்த சிறப்புடைய வேளாண் குலத் தலைவர் கலிப்பகையாரை மணம் பேசுமாறு திருநாவுக்கரசர் தந்தையார் புகழனார் மேலோரை அனுப்பிவைத்தார். கலிப்பகையார் மின்னார் செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமானுக்கு உண்மைத் தொண்டு செய்பவர். நாட்டை ஆளும் மன்னனிடம் அன்புடையவர். சிங்கமெனத் திகழும் வீரமுடையவர். காண்பதற்கு விருப்பத்தைத் தரும் பெருவனப்புக் கொண்டவர்.
அழகுமிக்க திலகவதியாரை மணம் பேச வந்தவர்களை வரவேற்று, குலம் பேசிக் குணம் பேசிக் குற்றமற்ற புகழனார் மணத்திற்கு இசைந்தார். இதனை மேலோர் கலிப்பகையார்க்கு அறிவித்தனர். மணவினை முடிவதன் முன்னதாக அந்நாட்டு அரசனோடு வடநாட்டரசன் பகை கொண்டு போர் தொடுக்க, அரசனின் ஆணைமேற்கொண்டு கலிப்பகையார் படையுடன் சென்றார்.
போர்க்களத்தில் பகையரசனுடன் கடுஞ்சமர் நடந்தது. பன்னாட்கள் அப்போர் வினையில் ஈடுபட்டிருந்தார் கலிப்பகையார். ஆயினும் முடிவில் பகையார் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார். உயிர் கொடுத்துப் புகழ்கொண்டார்.
அரசனின் ஏவலின்படி போர் முனைக்குச் சென்ற கலிப்பகையார் பகை அழிந்து, அமரர் உலகம் ஆள்வதற்குச் சென்றார் என்னும் சொல்லை உலகோர் கூறக்கேட்டார் திலகவதியார், எந்தையும் என் அன்னையும் அவர்க்கு என்னைக் கொடுக்க இசைந்தார்கள். அந்த முறையால் நான் அவர்க்கே உரியதாகிய இந்த உடலைச் சுமந்து வாழாமல், இந்த உயிரை அவர் உயிரொடு இசைவிப்பேன் எனத் துணிந்தார். தமக்கையாரின் இக்கொள்கையினை<noinclude>
<b>வா.க. 6 – 54</b></noinclude>
awo3kdb7nodssr5qpic1xghqjwnosrc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/878
250
642405
1954570
1930703
2026-07-19T06:14:22Z
Sridevi Jayakumar
15329
1954570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிப்பா|850|கலிப்பா}}</noinclude>அறிந்த மருள் நீக்கியார் அவரிடம் மன்றாடித் தம் பொருட்டு வாழுமாறு வேண்டினார்.
கலிப்பகையார் வரலாறு அவரது அளவற்ற வீரத்தினையும், அரசர் பணி மேற்கொண்ட கடமையுள்ளத்தினையும், அவரை மணத்தால் கணவராகக் கொள்ளாவிடினும் மனத்தால் வரித்த நிலையில் அவர் இன்றி வாழ விரும்பாத திலகவதியாரின் தூய உள்ளத்தினையும் காட்டுகின்றது.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கலிப்பகையார்"/>
<section begin="கலிப்பா"/>
{{dhr}}
{{larger|<b>கலிப்பா</b>}} தமிழில் வழங்கும் பாவகைகளுள் ஒன்று. பாக்களை ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி என நான்கு வகையாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். அவற்றுள் மூன்றாம் நிலையில் வைத்து எண்ணப்படும் கலிப்பா வெண்பா நடையை ஒத்து அமைவதாகும். கலிப்பா நான்கு வகையாக அமையும் என்பர் தொல்காப்பியர். அவை ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கவி என்பன. ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலும் காணப்படாத ஒரு தனித் தன்மை கலிப்பாவிற்கு உண்டு. கலிப்பா உறுப்புகளைப் பெற்று அமைவதே அதன் தனித்தன்மையாகும். தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறும் கலிப்பாவில் உறுப்புகளாக அமையும். கூறப் பெற்ற ஆறு உறுப்புகளும் பெற்று வருகிற கலிப்பாக்களும், ஒருசில குறைந்து வருகிற கலிப்பாக்களும் உள.
கலி உறுப்புகளுள் தரவு என்பது கலிப்பாவின் தலை உறுப்பாகக் கருதப்பெறுவது. பாவின் தன்மைக்கேற்ப அளவில் கூடியும் குறைந்தும் வரும். தாழிசை என்பது இரண்டாம் நிலையில் அமையும் உறுப்பாகும். தாழம்பட்ட ஓசையுடைமையால் இப்பெயர் பெற்றது. இது பெரும்பாலும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியே வரப்பெறும். அராகம் என்பது முடுகியல் ஓசையுடையது. துணை உறுப்பாகக் கொள்ளத்தக்கது. கலிப்பாவில் சில வகைகளே இவ்வுறுப்புடன் காணப்படும். அம்போதரங்கம் என்பது கடல் அலை போலப் பெரிதும் சிறிதுமாக அமையும் ஒரு துணை உறுப்பாகும். இதுவும் சில வகைகளில் மட்டிலும் காணப்படும். தனிச்சொல் என்பது கலிச்செய்யுளின் பல உறுப்புகளிலும் கூறப்படும் கருத்துகளை இணைப்பதற்கு வரும் ஓர் உறுப்பாகும். தனிச்சொல்லாக அமைவதனால் இப்பெயர் பெற்றது. சுரிதகம் கலிப்பாவின் இறுதியில் அமையும் சிறப்பான உறுப்பாகும். மற்றைய உறுப்புகளில் அமைந்துள்ள கருத்துகளைச் சுருக்கிக் கூறும் தன்மையுடையது. நத்தை போன்று சுரித்தலால் இப்பெயர் பெற்றது.
கலிப்பா இரண்டு பொருள்களில் சிறந்து வரும். ஒன்று காமம் நுதலிய பொருள். மற்றொன்று தேவர்களை வழிபடுகிற கடவுள் வாழ்த்துப் பொருள்.
ஒத்தாழிசைக்கலி, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புகள் பெற்று அமையும், இதன் மற்றொரு வகை தேவர்களை முன்னிலைப்படுத்தி வழிபடுவதாக அமையும். அது வண்ணகம், ஒருபோகு என இருவகைப்படும். வண்ணகம் என்பது ஒத்தாழிசைக்குக் கூறப்பெற்ற நான்கு உறுப்புகளுடன் எண் என்னும் ஓர் உறுப்புச் சேர்ந்து வரப்பெறும். மற்றொரு வகையாகிய ஒருபோகு கொச்சக ஒருபோகு எனவும், அம்போதரங்க ஒருபோகு எனவும் இருவகையாக அமையும். கொச்சக ஒருபோகு யாப்பினாலும் பொருளினாலும் வேற்றுமையுடையதாய் நான்கு பிரிவாக அமையும். அம்போதரங்க ஒருபோகு அறுபதடி மேல் எல்லையாகவும் முப்பதடி சிற்றெல்லையாகவும் கொண்டமையும், கலிவெண்பா என்பது பாடல் முழுமையும் ஒரே கருத்தமைய, வெண்பாவின் தன்மையாகிய வெண்சீர் பயின்று திரிபு இல்லாமல் வருவது என்று கூறுவர். இப்பாவில் சுட்டவில்லை. வேறு வகையைத் தொல்காப்பியர் கொச்சகக் கலி என்பது உறுப்புகள் கூறப்பெற்ற வரிசையில் அமையாமல் மாறுபட அமைந்தும். ஐஞ்சீர் அடுக்கியும், ஆறு உறுப்புகள் பெற்று வெண்சீர் பயின்றும் வருவதாகும். உறழ்கலி கூற்றும் அதற்குரிய மாற்றமும் இணைந்த நடைப்பாங்கில் அமைவதாகும்.
கலிப்பாவின் இந்நான்கு வகைகளையும் ஒத்தாழிசை, வெண்கலி, கொச்சகக்கலி என மூவகையாக அமிதசாகரர் குறித்துள்ளார். அவற்றுள் ஒத்தாழிசை நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை என மூன்று பிரிவாக அமையும். இவை மூன்றும் முறையே தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளையும், அம்போதரங்கம் என்னும் ஓர் உறுப்பைக் கூட்டி ஐந்து உறுப்புகளையும், அராசும் என்னும் உறுப்பை அவற்றுடன் கூட்டிஆறு உறுப்புகளையும் பெற்று அமையும்.
வெண்கலி என்பது இருவகையாக அமையும். ஒன்று வெண்கலிப்பா, மற்றொன்று கலிவெண்பா. கலித்தளை அமைத்து கலியோசை மிகுந்து வருவது வெண்கலிப்பா என்றும்; வெண்தளை அமைந்து வெள்ளோசை மிகுந்து வருவது கலிவெண்பா என்றும் கூறுவர்.
கொச்சகக் கலி என்பது ஐந்து பிரிவாக அமையும். அவை 1. தரவு கொச்சகம், 2. தரவினைக் கொச்சகம், 3. சிஃறாழிசைக் கொச்சகம், 4. பஃறா-<noinclude></noinclude>
cxwl6vqp0hoerqcx8rj8yckpfqbi89l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/879
250
642406
1954575
1930728
2026-07-19T06:28:42Z
Sridevi Jayakumar
15329
1954575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிபோர்னியா|851|கலிபோர்னியா}}</noinclude>ழிசைக் கொச்சகம், 5. மயங்கிசைக் கொச்சகம் என்பன. தரவு கொச்சகம் என்பது ஒரு தரவு வந்து கொச்சகக் கலிப்பாவாக அமைவது. தரவிணைக் கொச்சகம் என்பது இரு தரவு அமைந்து கலிப்பாவாக அமைவது. சிஃறாழிசைக் கொச்சகம் என்பது தாழிசைகள் சில அமைந்து வருவது. பஃறாழிசைக் கொச்சகம் என்பது தாழிசைகள் பல அமைந்து வருவது. மயங்கிசைக் கொச்சகம் என்பது கூறப்பெற்ற ஆறு உறுப்புகளும் முறையே வாராமல் மயங்கி வருவதும்; பிறதளை மயங்கியும், பிற அடி மயங்கியும், பிற பா மயங்கியும் வருவது ஆகும்.
கொச்சகம் என்பது சிறிதும் பெரிதுமாக மடிக்கப் பெறும் கொய்சகம் போன்று அடிகள் பெரிதும் சிறிதுமாக அமைவதால் பெற்ற பெயர் என்று கூறுவர். வழக்குச் சொற்களைக் கொச்சை என்று சொல்வது போல வழக்குச் சொற்கள் மிகுதியாக அமைவதால் கொச்சகம் எனப் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
{{Right|<b>சு.சா.</b>}}
<section end="கலிப்பா"/>
<section begin="கலிபோர்னியா"/>
{{dhr}}
{{larger|<b>கலிபோர்னியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் முப்பத்து ஒன்றாம் மாநிலமாக கி.பி. 1850-இல் இணைந்த பெருநிலப்பகுதி. இதன் பரப்பு 411,015 ச.கி.மீ. அமெரிக்காவின் மேற்கில் பசிபிக்கு மாக்கடலைச் சார்ந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 879
|bSize = 480
|cWidth = 188
|cHeight = 143
|oTop = 320
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|கலிபோர்னியா அமைவிடம்}}
சாக்கரமெண்டோ (Sacramento). இதற்கு வடக்கில் ஒரிகன் மாநிலமும், கிழக்கில் நெவாடாவும் அரிசோனாவும், தெற்கில் மெக்சிகோவும், மேற்கில் பசிபிக்கு மாக்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகையைப் பொறுத்தவரை அமெரிக்க மாநிலங்களில் முதலாவதாகவும், பரப்பைப் பொறுத்த வரை மூன்றாவதாகவும் உள்ள கலிபோர்னியா (California), பலதிறப்பட்ட தட்பவெப்பநிலைகளை உடையதாகும். மேற்குக் கடற்கரைப் பகுதி 1,930.8 கி.மீ. நீளமுள்ளது. இப்பகுதியில்பல சிறுமலைகள் கடற்கரை மலைத் தொடர்கள் என்னும் பெயரில் விளங்குகின்றன. சான்பிரான்சிசுகோவின் (Sanfrancisco) வடக்கில் அரேனா முனையிலிருந்து மாநிலத்தின் தெற்குக் கோடிவரை உள்ள நிலப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. காடுகள் நிறைந்த வடபகுதியில் மழை மிகுதி. பொன்வாயில் (Golden Gate) என்னுடமித்திற்குத் தெற்கில் குறிப்பிடத்தக்க பெரிய ஆறு எதுவும் கடலில் கலக்கவில்லை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 879
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 227
|oTop = 178
|oLeft = 254
|Location = center
|Description =
}}
{{center|கலிபோர்னியா}}
கலிபோர்னியா 58 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தின் பெருமைக்கு வேளாண்மையை விடத் தொழிற்பெருக்கமே காரணம் என்று கருதப்பட்டபோதிலும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இதுவே அமெரிக்க மாநிலங்களுள் தலையாயது. தக்காளி, சிவப்புமுள்ளங்கி, கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கொடி, திண்ணிய பூக்கோசுவகை, பசலைக்கீரை, வைந்நிற விதைகள் கொண்ட சிவப்புப் பழவகைகள் (straw–berry) முதலிய பல தானியங்கள் மற்ற மாநிலங்களை விட மிகுதியாக இங்கு விளைகின்றன. உலர்புல், திராட்சை, பருத்தி முதலியனவும் மிகுதியாகப் பயிராகின்றன.<noinclude>
<b>வா.க. 6 – 54அ</b></noinclude>
0ihqt40gmrdjayh52dqlx73inkd0yk5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/881
250
642408
1954577
1930758
2026-07-19T06:32:39Z
Sridevi Jayakumar
15329
1954577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலிபோர்னியா|853|கலியநாயனார்}}</noinclude>ஆண்டுச்சமரச உடன்பாட்டின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அங்கு அடிமை முறை புகுத்தப்படவில்லை. தலைநகர் கி.பி. 1854-இல் சாக்ரமெண்டோவுக்கு மாற்றப் பெற்றது. இலாசு ஏஞ்சல்சு (Los Angeles) முதலிய புதிய நகரங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. மக்கள்தொகை ஆண்டுதோறும் பெருகலாயிற்று.
அங்கு கி.பி. 1879-ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்ற மாநில அரசியல் அமைப்பு இன்றும் தொடர்ந்து வருது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்கெடுக்கப்படும் ஆளுநர் தலைமை நிருவாக அதிகாரியாக விளங்குகிறார். 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையும் சட்டமியற்றும் பணியைப் புரிகிறது. மேல்சபை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கீழ்ச்சபை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சட்டமன்றம் வழியாக அன்றி மக்கள் நேரடிச்சட்டம் ஆக்கும் உரிமையும் (Initiative), தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவுசெய்யும் குடியொப்ப முறையும் (Referendum), மீட்டழைப்பாணை உரிமையும் (Recall) இந்த அரசியலமைப்பில் இடம் பெறுகின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கலிபோர்னியாப் பல்கலைக் கழகம்:</b> அரசின் பண உதவியால் நடைபெறுகிறது. கலிபோர்னிய பல்கலைக்கழகம் (University of California) கி.பி. 1868–ஆம் ஆண்டு தொடங்கப்படுவதற்கான அரசு அனுமதியினைப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் கி.பி. 1869–இல் ஓக்லாந்து (Oakland) நகரில் முதன்முதலாக வகுப்புகள் நடந்தன. பின்னர் கி.பி. 1873-இல் இப்பல்கலைக்கழகம் பெர்க்கிலி (Berkeley) நகருக்கு மாற்றப்பட்டது.
கலிபோர்னியப் பல்கலைக்கழகம் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் தன்மையுடையது. இதன் நிருவாக அலுவலகங்கள் பெர்க்கிலியிலேயே உள்ளன. இளங்கலை, முதுகலை, அறிஞர் பட்டங்கள் (Doctor's Degrees) ஆகியவற்றை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. இங்கு 150–க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு வேளாண்மை விரிவாக்க மையத்தின் சேவையும் பொது விரிவாக்கப் பிரிவுச் சேவையும் உள்ளன.
கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திற்கென்றும் தனித்தனியே பாடப்பிரிவுகள் உள்ளன. பெர்க்கிலி வளாகத்தில் வணிக நிருவாகம், வேதியியல், கல்வியியல், பொறியியல், சுற்றுப்புறச் சூழலமைப்பியல் (Environmental Design), இதழியல், சட்டம், நாலகவியல், பொதுமக்கள் உடல் நலம், சமூகநலம் போன்ற பாடத்துறைகள் உள்ளன.
தேவிசு வளாகத்தில் (The Davis Campus) வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச் சூழலியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற துறைகள் உள்ளன.
இர்வின் (Irvin) வளாகத்தில் நிருவாகம், உயிர் அறிவியல் துறைகள் (Biological Sciences), கவின் கலை, வாழ்வியல், மருத்துவம், இயல்பறிவியல் (Physical Sciences), சமூக அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.
இலாசு ஏஞ்செல்சு (Los Angeles) வளாகத்தில் கட்டடக்கலை மற்றும் நகர்த்திட்டமிடல், பல் மருத்துவம், கல்வியியல், பொறியியல் மற்றும் செயலறிவியல், மேலாண்மை, மருத்துவம், சமூக நலன் போன்ற துறைகள் உள்ளன.
‘ஆற்றுப்புற வளாகத்தில்’ (The Riverside Campus), வேளாண்மைக்கும் வளிமண்டலத் தூய்மைக் கேட்டிற்கும் (Air Pollution) ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு நிருவாகம், கல்வியியல், வாழ்வியல், சமூக அறிலியல் போன்ற துறைகள் உள்ளன.
சாண்டியாகோ (San Diego), சாந்தா குருசு (Santa Cruz) ஆகிய இரு வளாகங்களில் பல கலைக் கல்லூரிகள் உள்ளன. சான் பிரான்சிசுகோ வளாகம் நலமருத்துவத் துறையில் (Health Sciences) கவனம் செலுத்துகிறது. இங்குள்ள ஆராய்ச்சி மையங்கள் மூட்டு வீக்கம் (Arthiritis), புற்றுநோய், வெப்ப மண்டலப் பகுதி சார்த்த நோய்கள் (Tropical Diseases) ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்கின்றன.
சாந்தா பர்பாரா (Santa Barbara) வளாகம் கல்வியியல், பொறியியல், படைப்பாக்கக் கல்வி (Creative Studies) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இங்குள்ள ஒரே கல்லூரியில் மட்டும்தான் இளநிலை அளவில் அணுவாற்றல் பொறியியல் (Nuclear Engineering) கல்வித் திட்டம் வழங்கப்படுகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கலிபோர்னியா"/>
<section begin="கலியநாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>கலியநாயனார்</b>}} பெரிய புராணம் போற்றும் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவர். தொண்டை நன்னாட்டில் சிறப்புடைய நகராகத் திகழ்வது திருவொற்றியூர். அது சிவபெருமான் நடம் பயிலும் திருப்பதியாகும். அந்நகரில் சச்கரப்பாடித் தெருவில் வாழ்ந்த தைல வணிகர் கலத்தில் கலிய<noinclude></noinclude>
19dtu9pavx2n47obo2daexwvuc1c8i0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/882
250
642409
1954580
1930759
2026-07-19T06:38:33Z
Sridevi Jayakumar
15329
1954580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியநாயனார்|854|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை}}</noinclude>நாயனார் தோன்றினார். சில ஏட்டுப்பிரதிகளில் இவர் புராணங் கூறும் பகுதியின் தலைப்பு கலிநீதி நாயனார் புராணம் எனக் குறிப்பிட்டுள்ளது. கலிக் கம்ப நாயனார் புராணத்தின் இறுதிப்பாடலில் ‘காதலன்பர் கலிந்தியார் தம் பெருமை கட்டுரைப்பாம்’ என வரும் தொடர் கொண்டு அவ்வாறு தலைப்பு அமைத்திருத்தல் கூடும்.
பெருஞ் செல்வராகிய இவர் முக்கண் இறைவனார்க்குத் திருத் தொண்டு செய்யும் இயல்பினர். பெற்ற செல்வப்பயன் தொண்டு செய்வதே என உணர்ந்து, ஒற்றியூர் இறைவன் கோயிலின் உள்ளும் புறமும் அல்லும் பகலும் திருவிளக்கு ஏற்றும் பணி பூண்டார். அத்திருத்தொண்டு நெடுநாள் நடைபெற்றது. உண்மைத் தொண்டரின் உள்ளப் பாங்கினை உலகிற்கு உணர்த்தும் இறையருளால் இவரது செல்வம் தேய்ந்து வறுமை சூழ்ந்தது. அப்போதும் திருப்பணியில் பின்வாங்கிடாத இப்பேராளர், எண்ணெய் விற்போரிடம் எண்ணெய் பெற்றுத் தம் தொண்டினைத் தொடர்ந்தார்.
வளமுடையார் சிலகாலம் இவர்க்கு எண்ணெய் வழங்கினர் பின்னை அவர்களும் நல்குதல் தவிர்க்கத் தளரும் மனமுடையவராய்க் கலியநாயனார் எண்ணெய் ஆட்டும் இயந்திரமுள்ள களத்தில் பணிபுரிந்து அதனால் வரும் கூலிகொண்டு திருத்தொண்டு செய்ய முனைந்தார். செக்கினில் எள் ஆட்டிப் பதமறிந்து எண்ணெய் எடுத்தும், செக்கினில் இழுக்கும் மாடுகளை ஒட்டியும் கூலி பெற்று, அதனால் விளக்கிடும் தம் விழுத்தொண்டினைச் செய்து வந்தார். இவர் செய்த பணிக்கு இளைஞர் பலர் முன்வந்தமையால் இவர்க்குத் தொண்டியற்றும் வாய்ப்புக் குறைந்தது. தம் இல்லத்தில் இனி விற்கக் கூடிய எப்பொருளும் இல்லை என்பதால், தம் மனையாளை விற்பதற்கும் துணிந்தார். ஆயினும் இவர்தம் மனைவியாரை வாங்கித் தனமளிக்கும் செல்வர் கிட்டாமையால் உள்ளம் நொந்தார். திருப்பணி தடைப்படுமே என வருந்தினார். ‘திருவிளக்கு அணையும் எனில் நானும் மாள்வன்’ என்று சூளுறவு பூண்டார். திருவிளக்குக்காகத் திரியிட்டு அகல்விளக்கினைக் கொண்டார். ‘எண்ணெய் இல்லை எனில் அதற்கு ஈடாக என் உதிரம் கொண்டு நிறைப்பேன்’ என்று எண்ணிக் கருவி கொண்டு தம்மிடற்றினை அறுக்க முனைந்த போது, கண்ணுதலார் கருணையுடன் நேர்வந்து இவரைத் தடுத்து ஆண்டார். மழவிடைமேல் இறைவன் திருக்காட்சியைக் கண்டு உச்சி மீது கூப்பிய கையராய் நின்றார் கலியர். இவர்தம் தொண்டினையும் துணிவினையும் பாராட்டி இறைவன் இவரைச் சிவபுரியில் இருக்கும்படி அருள்புரிந்தார்.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கலியநாயனார்"/>
<section begin="கலியாண கதை"/>
{{dhr}}
{{larger|<b>கலியாண கதை</b>}} இக்காலத்து இறந்துபட்ட ஒரு தமிழ்நூல். அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் இரு இடங்களில் ‘கலியாண கதை’ என்ற தொடர் மட்டுமே காணப்படுகிறது. 1) யாப்பருங்கலம் உறுப்பியலில், ஒரு செய்யுட்களில் பல தொடையும் பல தளையும் வந்தால் அவற்றை வழங்கும் முறை உணர்த்தும் சூத்திர உரையில், ‘இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொகுத்த செய்யுளந்தாதி விகற்பம் உதயணன் கதையும், கலியாண கதையும், பன்மணி மாலையும், மும்மணிக்கோவையும் என்றிவற்றுட் கண்டு கொள்க’ என்றும், 2) செய்யுளியலில் நிலை மண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்தும் சூத்திர உரையில், ‘உதயணன் கதையும், ‘கலியாண கதையும்’ ‘என்’ என்னும் அசைச் சொல்லால் இற்ற நிலைமண்டிலம்’ என்றும் உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். யாப்பருங்கலத்தின் வாயிலாகக் ‘கலியாண கதை’ என்று நூலின் பெயர் மட்டுமே காணப்படுகிறதேயொழிய, நூற்செய்திகள் ஏதும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, இந்நூல் இன்ன பொருள் பற்றியது என்பது அறியக் கூடவில்லை.
{{Right|<b>டி.எம்.பொ.</b>}}
<section end="கலியாண கதை"/>
<section begin="கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை"/>
{{dhr}}
{{larger|<b>கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை (1930–1959):</b>}} இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்; நாட்டுப்புற இசை, திரைப்படங்களுக்குரிய மெல்லிசை வடிவங்களைத் திறம்படக் கையாண்டு பொதுவுடைமை, பகுத்தறிவுக் கருத்துக்கள் ஆகியவற்றைத் திரைப்படப் பாடல்களாக்கி வெற்றியும் புகழும் பெற்றார். இவர் திருக்குறளையும், காந்தியடிகளின் வாழ்க்கையையும் பெரிதும் போற்றித் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
கலியாண சுந்தரம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டைக்கருகிலுள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் சிற்றூவில் 1930–இல் பிறந்தார். இவர் தந்தையார் அருணாசலம்பிள்ளை; தாயார் விசாலாட்சி அம்மையார். இக்குடும்பம் ஓர் எளிய உழவுக் குடும்பமாகும்.
கலியாண சுந்தரம் தம் ஊரிலிருந்த சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு வரையில் பயின்றார்; பின்னர் எந்தக் கல்வி நிறுவனத்திலும் பயிலவில்லை.
தம் இல்லத்திலேயே தமையன் கணபதியிடம் நைடதம், பாரதம், இராமாயணம் முதலிய தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். கலியாண சுந்தரத்தின் தந்தையும், தமையனும் பாடல் புனையும் திறன்<noinclude></noinclude>
kuw3lpba7d0lysw4nx842pjlf39rrc5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/883
250
642413
1954581
1930835
2026-07-19T06:40:56Z
Sridevi Jayakumar
15329
1954581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை|855|கலியாண சுந்தர முதலியார், பூவை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 883
|bSize = 480
|cWidth = 124
|cHeight = 139
|oTop = 66
|oLeft = 68
|Location = center
|Description =
}}
{{center|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை}}
பெற்றிருந்தனர். தந்தையின் ‘முசுகுந்த நாட்டு வழி நடைக் கும்மி’ அச்சேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு குடும்ப மரபுச் சூழ்நிலை காரணமாகக் கலியாண சுந்தரத்திடம் இளமை முதலே பாடல் புனையும் பழக்கம் இருந்தது.
கலியாண சுந்தரம் சிறுவராயிருந்தபோதே சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் தமையனும் பிறரும் புனைந்த பாடல்களைப் பாடுவதுண்டு. பின்னர், தாமாகவே பகுத்தறிவுக் கருத்தமைந்த பாடல்களைப் புனைந்துள்ளார்.
தமையன் கணபதியுடன் பொருளீட்டும் பொருட்டு 1948–இல் சென்னை சென்றார். சரியான தொழில் கிட்டாமையால் தம் ஊருக்குத் திரும்பினார். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எசு. துரைராசு என்பவர் சேலத்திலிருந்த ஒரு திரைப்பட நிறுவனத்தில் நடிகராயிருந்தார். அவரிடம் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டார் கலியாணசுந்தரம். அவர் பரிந்துரைப்படி 1949-ஆம் ஆண்டு மதுரையிலிருந்த ‘சக்தி நாடக சபா’வில் நடிகராகச் சேர்ந்தார்.
‘சக்தி நாடக சபா’ புதுச்சேரியில் நாடகம் நடத்தச் சென்றபோது, பாரதிதாசனைச் சந்தித்தார்; எதை எழுதினாலும் மேலே ‘வாழ்க பாரதிதாசன்’ என்று எழுதுமளவிற்குப் பாரதிதாசனிடம் பற்றுக் கொண்டிருந்தார்.
பாரதிதாசன் பரிந்துரையால் 1951–ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ என்னும் திரைப்படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால், வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. இப்படமும் 1956-இல்தான் வெளியானது.
பாரதிதாசனின் ‘குயில்’ இதழில் ‘அகல்யா’ என்னும் புனை பெயரில் (அ. கல்யாண சுந்தரம் என்பதன் சுருக்கம்) இவர் வெளியிட்ட பாடல் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றதாம். சில காலம் புதுச்சேரியில் பணியாற்றி மீண்டும் சென்னை சென்றார்.
சென்னையில் ப. சீவானந்தம் முதலிய பொதுவுடைமைக் கட்சியாளருடன் தொடர்பு ஏற்பட்டு நெருக்கமுண்டாயிற்று. கலியாண சுந்தரத்தின் தூண்டுதலால் பொதுவுடைமை இயக்கச் சார்பில் ‘மக்கள் நாடக மன்றம்’ உருவாக்கப்பெற்றது. இம்மன்றத்தின் முதல் நாடகமான ‘கண்ணின் மணிகள்’ 1954-ஆம் ஆண்டு தமிழக உழவர் சங்க மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்திற்குப் பாடல்கள் எழுதித் தந்து, நடித்தார் கலியாணசுந்தரம், இவர் பாடல்கள் பொதுவுடைமைக் கட்சி ஏடான ‘ஜன சக்தி’, அக்கட்சி சார்ந்த ‘தாமரை’ ஆகிய இதழ்களில் வெளியிடப்பெற்று வந்தன.
கலியாணசுந்தரத்திற்கு 1955-ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் பெருகின. அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருநூறுக்கு மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றினார். இவர் 1957-இல் கவுரவாம்பாள் என்பாரை மணந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.
‘நாடோடி மன்னன்’ (1958), ‘கல்யாண பரிசு’ (1957) ஆகிய படங்களுக்கு இவர் இயற்றித் தந்த பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. பாடலொன்றுக்கு 25 முதல் 5000 உரூபா வரை கலியாண சுந்தரத்திற்குக் கிடைத்தது.
இவர் மக்கள் கவிஞர், பாட்டாளிக் கவிஞர், இயற்கைக் கவிஞர், பாடல் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டார். இவர் 1959-இல் காலமானார்.
{{Right|<b>பா.ம.</b>}}
<section end="கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை"/>
<section begin="கலியாண சுந்தர முதலியார், பூவை"/>
{{dhr}}
{{larger|<b>கலியாண சுந்தர முதலியார், பூவை. (கி.பி. 1854–1918)</b>}} தொண்டை நாட்டினர். இவர் சென்னையை ஒட்டிய பறங்கி மலையில் கி.பி. 1854–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தையார் முதலியார்; தாயார் உண்ணாமுலையம்மை; குடியேறிய இடம் பூவிருந்தவல்லி, இவ்விடம் ‘பூவை’ என மருவியது.
இளமையில் நிகண்டு, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற நூல்வகைகளைத் தாமே கற்றார். செய்யுள் பாடுந்திறம் பெற்றார். திருமுருகாற்றுப்படையை நாளும் ஓதி முருகன் திரு-<noinclude></noinclude>
iztl0nxp0t3dx4zlm8go0zidlxaxz0k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/884
250
642417
1954583
1930840
2026-07-19T06:42:57Z
Sridevi Jayakumar
15329
1954583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியாண சுந்தர முதலியார், பூவை.|856|கலியாணசுந்தரனார், திரு.வி.}}</noinclude>வருள் பெற்றார். இவர் பூங்காவனக் கவிராயரிடம் கற்றார். இவர் ஒருநாள் பள்ளி முடிந்து ஒரு தோட்டத்தின் வழியாகச் சென்றார். தோட்டக் காவலன் சூரன் கோலால் அடிக்க, அவனைத் தண்டிக்க எண்ணி வசைப்பாடல் ஒன்றைப் பாடிக் காளிதேவியிடம் முறையிட்டார். காவலன் நொண்டியானான்.
இவர் சைவ நூல்களைப் புலவர் இராமலிங்கத் தம்பிரானிடம் கற்றார்; காஞ்சியில் சிவதீக்கை பெற்றார்; வடலூர் இராமலிங்க அடிகளின் திருவருள் நோக்கினை அடைந்தார். மேலும், கலியாண சுந்தரவென் கண்மணியே நின்பால், மலிவாகக் கல்வி வளரும் எனத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வாழ்த்தினையும் பெற்றார். செங்கற்பட்டுச் சொக்கநாதப்பிள்ளையிடம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், நன்னூல் விருத்தி பாடங்கேட்டார், அவதானம் செய்யவும் அவரிடம் பழகிக் கொண்டார். ‘அட்டாவதானி’ யாக விரும்பினார். திருக்கழுக்குன்றத்தில் கி.பி. 1878–ஆம் ஆண்டில் செகந்நாதப் பிள்ளை தலைமையில் பேரவை கூடியது. கைக்கும் புத்தகத்திற்கும் ஒரு சிலேடை வெண்பா பாடவேண்டுமென்று பணித்தனர். இவர் உடனே பாடினார். ‘பால்’ என்னுஞ் சொல் பத்து இடங்களில் வருமாறு ஒரு வெண்பாப் பாடுக என ஒருவர் சொல்ல உடன் பாடினார். இவர்தம் அவதானத் திறம் உணர்ந்து பேரவை ‘அட்டாவதானம்’ என்னும் பட்டம் வழங்கியது.
இவருக்கு கி.பி. 1879–இல் திருமணம் நிகழ்ந்தது. இரண்டு பெண்மக்களும் ஓர் ஆண்மகனும் தோன்றினர். தமக்குக் கற்பித்த செகந்நாதப் பிள்ளையிடம் பேரன்புற்றார். அன்பளிப்பாக வந்த பொருள்களையெல்லாம் ஆசிரியர்க்கே வழங்கினார். சைவசித்தாந்தத்தில் நாட்டம் கொண்டு, சொற்பொழிவுகள் பலவும் செய்தார். ‘நடராசசபை’ ஒன்றை நிறுவிப் புராணச் சொற்பொழிவு நிகழ்த்தினார். சிவனடியார் திருக்கூட்டம் ஏற்படுத்தினார். சித்தாந்தம் முதலிய இதழ்களில் கட்டுரை வரைந்தார்.
சென்னைக் கந்தக் கோட்டத்தில் தொலைந்து போன திருநீற்றுச் சம்புடம் பற்றிய கவலையை முருகனிடம் தெரிவித்தார். மீண்டும் அங்குச் சென்றபோது ஒருவனிடம் விலைபேசி, அதனைத் திரும்பப் பெற்றார்.
திருவிற்கோலம் கோயிலில் இறைவழிபாடு செய்தார். வெள்ளிப்பூண் பிடித்த தமது கைத்தடியை வைத்து மறந்துவந்து பின் சென்று தேடினார். தடி அகப்படவில்லை. ‘சுந்தரர்க்குக் கோல் கொடுத்த சோதியே! கல்யாண சுந்தரன் கோல் கொண்ட தென்ன சூழ்ச்சியோ’ - எனப் பாடினார். பின்னர் ஒரு நாள் சென்னை வரும் வேளை வழியில் வந்த கூட்டத்தில் ஒருவன் கையிலிருந்த தனது தடியை அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இவர் கி.பி. 1879–ஆம் ஆண்டு திருப்போரூர் சென்றபோது பாம்பொன்று காலிற் கடித்தது. முருகன் அங்குத் தோன்றி அவரைக் காத்தார். மயிலம் கோவிலுக்குச் செல்லும்போது கள்வனிடம் பறிகொடுத்த தமது பொருளும் கிடைக்கப் பெற்றார்.
மக்களும் மனைவியும் இறக்க உலகப் பற்றை வெறுத்தார். காஞ்சி ஞானப்பிரகாசரிடம் துறவு பூண்டார். இவர் 1918–இல் இறந்தார். உடல் திருவொற்றியூரில் அடக்கஞ் செய்யப்பட்டது.
திருப்பாசூர்ப் புராண வசனம், திருவலிதாய புராண வசனம், திருவேற்காட்டுப் புராண வசனம், சேக்கிழார் வரலாறு, திருவொற்றியூர் புராண வசனம், காளத்திப் புராண வசனம், சித்தாந்த சாதனக் கட்டளை, சித்தாந்த தசகாரியக் கட்டளை, திருவான்மியூர்ப் புராணம், மாசிலாமணியீசர் பதிகம், கற்பக விநாயகர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் என்னும் பன்னிரு நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.
{{Right|<b>து.ப.</b>}}
<section end="கலியாண சுந்தர முதலியார், பூவை"/>
<section begin="கலியாணசுந்தரனார், திரு.வி."/>
{{dhr}}
{{larger|<b>கலியாணசுந்தரனார், திரு.வி. (கி.பி. 1883-1953)</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் துள்ளம் என்னும் ஊரில் கி.பி. 1883-இல் பிறந்தார். இவர் தந்தையார் விருத்தாசல முதலியார்; தாயார் சின்னம்மாள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 884
|bSize = 480
|cWidth = 123
|cHeight = 170
|oTop = 372
|oLeft = 273
|Location = center
|Description =
}}
{{center|கலியாணசுந்தரனார் திரு.வி.}}
{{nop}}<noinclude></noinclude>
69gya6x0raypkecu8m2w9qx7eq1t1iv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/886
250
642420
1954585
1930937
2026-07-19T06:45:51Z
Sridevi Jayakumar
15329
1954585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியுகம்|858|கலீசியா}}</noinclude>எழுதித் தமிழ்த் தாய்க்கு அருந் தொண்டாற்றினார். இதனால் தமிழுலகம் இவரைத் இவரைத் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.’ என்று போற்றி மகிழ்கிறது. இவர் 1953–ஆம் ஆண்டு காலமானார்.
{{Right|<b>அ.அ.ம.</b>}}
<section end="கலியாணசுந்தரனார், திரு.வி."/>
<section begin="கலியுகம்"/>
{{dhr}}
{{larger|<b>கலியுகம்</b>}} நான்கு யுகங்களுள் கடைசியானது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என்பன மற்ற மூன்று யுகங்கள். இது மாபாரதப் போரின் முடிவிலிருந்து தொடங்குகிறது என்பது செவிவழிச் செய்தி. கலியுகத்தின் தொடக்கம் கி.மு. 3102-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 18-ஆம் நாள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த யுகம் 432,000 ஆண்டுகளைக் கொண்டது. இது உதிட்டிரன் யுகம் என்றும் பரதயுகம் என்றும் கூறப்படும். இரண்டாம் புலிகேசியின் அய்கொளே கல்வெட்டில் கலியுகம் முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுகத்தை சப்தரிசி ஆண்டு போன்று வானூலார் உருவாக்கினர்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கலியுகம்"/>
<section begin="கலிவிருத்தம்"/>
{{dhr}}
{{larger|<b>கலிவிருத்தம்:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள் பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றுள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. கலிவிருத்தம் என்பது அளவடி எனப்படும் நாற்சீரடி நான்கு கொண்டு அமையும் செய்யுளாகும். அடிமறியாய், நாற்சீர் நாலடியாய் வருவன கலிமண்டில விருத்தம் என்றும், அடிமறி ஆகாமல் அவ்வாறு வருவன கலிநிலை விருத்தம் என்றும் கூறப்படும். அடிமறியாவது செய்யுளின் நான்கடிகளும் அடி தோறும் பொருள் முடிவுற, அவற்றை முறை மாற்றி வைப்பினும் பொருள் மாறுபடாதவாறு இருக்குமாறு பாடப்படுவதாகும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலிவிருத்தம்"/>
<section begin="கலிவெண்பாட்டு"/>
{{dhr}}
{{larger|<b>கலிவெண்பாட்டு</b>}} என்பது தொல்காப்பியம் கூறும் கலிச்செய்யுள் வகை நான்கனுள் ஒன்றினைக் குறிக்கும். புணர்தல் முதலாகப் பெருந்திணை ஈறாக அமைந்த அகப்பொருள் ஏழனுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரிபில்லாது முடியும் பஃறொடை வெண்பா கலிவெண்பாட்டு எனப்படும். கலிவெண்பாட்டு என்றாலும் வெண்கலிப்பாட்டு என்றாலும் ஒக்கும். வெண்கலிப்பா என்பதும் கலிவெண்பா என்பதும் இதனையே கட்டும். தொல்காப்பியர் இதனை, ‘ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலால், திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே’ (தொல். செய். 147) என்று கூறியுள்ளார். கலிவெண்பாட்டிற்கு அடியளவு வரையறுக்கப்படவில்லை. செய்யுளின் பொருள் முடியும் வரை வேண்டிய அடிகள் வரப்பெறும்.
தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றிய யாப்பருங்கலம் முதலிய யாப்பியல் நூல்கள், கலிப்பா வகை மூன்றெனக் கொண்டு அவற்றுள் ஒன்றாக வெண்கலிப்பாவினைக் கூறுகின்றன. யாப்பருங்கலம் (85) கலிவெண்பாவிலக்கணத்தை, ‘தன் தளை ஓசை தழீஇநின்று ஈற்றடி, வெண்பா இயலது கலிவெண்பாவே’ என்று கூறுகிறது கலித்தளை பொருந்தி, கலியோசை தழுவி, ஈற்றடி வெண்பாவினைப் போல முச்சீரடியான் முடிவது கலிவெண்பாவாகும். சிலர் வெள்ளோசையினால் வருவது கலிவெண்பா என்றும், பிறவற்றால் வருவது வெண்கலிப்பா என்றும், கூறுகின்றனர். கலியால் வந்து, ஈற்றடி முச்சீராய் வெண்பாவே போன்று முடிவதனால் கலிவெண்பா என்பதும், வெண்பாவிற் சிறிது வேறுபட்டுக் கலித்த ஓசை கொண்டு வருவதனால் வெண்கலிப்பா என்பதும் காரணப் பெயர்களாகும். பாட்டியல் நூல்களுள் சிதம்பரப் பாட்டியல் கலிவெண்பாவினை வெண்பாவுடன் சேர்த்தும், வெண்கலிப்பாவைக் கலிப்பாவுடன் சேர்த்தும் கூறுகிறது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலிவெண்பாட்டு"/>
<section begin="கலீசியா"/>
{{dhr}}
{{larger|<b>கலீசியா:</b>}} போலந்துக்கலீசியா, இசுபானியக் கலீசியா என இரு கலீசியாக்கள் உள்ளன. ஆனால், இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவல்ல.
போலந்துக் கலீசியா கார்ப்பேதியன் மலைத் தொடர்களுக்கு வடக்கில் அமைந்துள்ளது. மேற்குக் கலீசியாவில் (Galicia) போலந்தியரும், கிழக்குக் கலீசியாவில் உக்ரேனியரும் பெரும்பான்மையினர். யூதர்களும் இங்கு வாழ்கின்றனர். இடைக்காலத் தொடக்கத்தில் கிழக்குக் கலீசியா அயல் நாட்டவர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உரோசிடிசிலா இனத்தவர்களின் ஆளுகையின் போது கி.பி. 1087–க்குப் பின் கிழக்குக் கலீசியா தனிப்பட்ட நாடாயிற்று. இரு கலீசியப் பகுதிகளும் கி.பி. 1200–இல் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆயினும் அங்கேரியின் (Hungary) ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. இளவரசர் மிசிட்டி சிலா கலீசியர்களின் ஆதிக்கத்தை கி.பி. 1219-இல் வலுப்படுத்தினார். ஆனால், ஆட்சியாளர்களுக்கும் போயர்கள் என்ற பிரிவினருக்குமிடையே உள்நாட்டுச் சச்சரவுகள் எழுந்தன. இளவரசர் உரோமனோவிக்கின் (Romanovic) கடும் முயற்சிகளால் கி.பி. 1228–க்குப் பின் உள்நாட்டுப் பூசல்கள் அடங்கின. அவர்தம் வழித் தோன்றல்களால் அங்கு கி.பி. 1325 வரை அமைதியான ஆட்சி நிலவியது. அதன் பின்னர்ப்பியாசுட்டு வம்சத்தினர் பொறுப்பேற்றனர். போலந்து மன்னர் கசிமீர் கி.பி. 1349–இல்<noinclude></noinclude>
drwrkdzhu7hw6cfn50c2l4ste13v7z2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/887
250
642421
1954588
1930947
2026-07-19T06:47:41Z
Sridevi Jayakumar
15329
1954588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலீபா|859|கலீம் காசானி மீர்சா அபு தாலிபு}}</noinclude>கலீசியாவைப் போலந்துடன் இணைத்தார். போலந்து கி.பி. 1772-இல் முதன் முறையாகப் பிரிக்கப்பட்ட போது கலீசியா ஆசுத்திரியா வசமாயிற்று. கலீசியாவுக்கு கி.பி. 1867-க்குப் பின் பல உரிமைகள் வழங்கப்பட்டன.
முதல் உலகப் போரின்போது கலீசியா ஒரு போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டது. கலீசியா 1914–இல் உருசியப் பகுதியாயிற்று. கலீசியர் 1918-இல் தம்மை விடுதலையுடைய மக்களாக அறிவித்துக் கொண்டாலும், 1919–இல் கலீசியா போலந்துப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நேசநாடுகளால் ஏற்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது 1939-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் உருசியா கிழக்குக் கலீசியாவைத் தனது பகுதியாக அறிவித்தது. மேற்குக் கலீசியா போலந்தின் பகுதியாக உள்ளது.
<b>இசுபானியக் கலீசியா:</b> ஐபீரியன் முந்நீரகத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பகுதி காசுடைல் பிரிவினரின் ஆட்சியின்போது கலீசியா என்ற பெயரில் வழங்கப்பட்டது, கல்லேய்சி என்னும் பிரிவினரிடமிருந்து இப்பெயர் உருவாயிற்று. போர்ச்சுகீசிய மொழியுடன் தொடர்புடைய மொழி இங்குப் பேசப்படுகிறது. விசிக்கோத்துகள் படையெடுப்பிற்குப்பின், பல அரசியல் சிக்கல்களுக்குப்பின் இது இசுபானியப் பகுதியாக உள்ளது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="கலீசியா"/>
<section begin="கலீபா"/>
{{dhr}}
{{larger|<b>கலீபா:</b>}} முகம்மது நபிக்குப் பிறகு இசுலாமியச் சமூகத் தலைவருக்கு வழங்கப்பெற்ற கலீபா (Kaliph) என்ற சொல்லுக்கு அராபிய மொழியில் மொழியில் பின்வந்தோர் அல்லது வாரிசுதாரர் என்பது பொருள். நபிகள் நாயகத்துக்குப்பின் வந்த அபூபக்கர், முதன் முதலில் கலீபா என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் இசுலாமியச் சமூகத்தினால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர். அபூபக்கர் தம் வாரிசைத் தாமே அமர்த்தி, அவருக்கு இப்பட்டத்தை வழங்கினார். முதலாம் வாவியா (Muawiyah) என்ற கலீபா, தம் புதல்வனையே தமக்குப் பின் வாரிசாக அமர்த்தி, வழி முறைக் கொள்கையைத் தொடங்கினார்.
கலீபாக்கள் பலர் தம் திறமையினால் பல நாடுகளை வென்று, முகமதிய சமயத்தைப் பரப்பினர். அவர்கள் சாதனைகளின் விளைவாக ஒரு பெரிய இசுலாமியப் பேரரசு உருவாயிற்று. கலீபாவுக்கு கி.பி. 9–ஆம் நூற்றாண்டு வரை இரண்டு கடமைகள் இருந்தன. ஒன்று அரசியல் தலைவர் என்ற முறையில் பேரரசின் அலுவல்களைக் கவனித்தல்; மற்றொன்று மதத்தலைவர் என்ற முறையில் சமயத் தொடர்பான அலுவல்களை மேற்பார்வை செய்தல். மதத்தலைவருக்குரிய ‘இமாம்’ என்ற பட்டமும் கலீபாவுக்கே உரியதாக இருந்தது. ஆனால், பிறகு கலீபாவின் அரசியல் ஆற்றல் குறையத் தொடங்கிம் கலீபாவின் மெய்க்காப்பாளராக இருந்த செல்சுக்குத் துருக்கியரின் அதிகாரங்கள் ஓங்கவே, கலீபா சமயத் தலைவராக மட்டுமே விளங்கலானார். அரசியல் ஆற்றல் மிகுதியாகப் பெற்றிருந்த இந்திய முகலாயப் பேரரசர்களும், துருக்கிச் சுல்தான்களும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டு வரை அரசியல் கலீபாக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தனர். முகலாயப் பேரரசு சிதைவுற்ற பிறகு துருக்கியச் சுல்தான் மட்டும் தனிச்சிறப்புப் பெற்ற கலீபாவாகவும் மதத்தலைவராகவும் விளங்கலானார். துருக்கிச் சுல்தானாக கி.பி. 1876–முதல் 1909 வரை பதவி வகித்த இரண்டாம் அப்துல் அமீது ஒரு அவன் கொடுங்கோலனாக இருந்த காரணத்தால், தன் பதவியையே இழக்க நேரிட்டது. நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக 1922-இல் துருக்கியில் குடியரசு ஆட்சிமுறை ஏற்பட்ட பிறகு, 1924-ஆம் ஆண்டிலிருந்து மதத் தலைவராக இருந்த கலீபா பதவியும் மறைந்தது.
தொடக்கக்காலத்தில் கலீபாக்களுக்குப் பல சிறப்பான கடமைகள் இருந்தன. சமயத் தொடர்பான அலுவல்களைக் கண்காணித்ததுடன் பேரரசைக் காப்பாற்றும் கடமையும், முறை வழங்கும் அதிகாரமும், படைகளைக் காக்கும் பொறுப்பும் பேரரசில் அமைதியை நிலைநாட்டும் கடமையும், கலீபாவின் கண்காணிப்பின்கீழ் இருந்தன. குடியரசு ஏற்பட்ட பிறகு பழைய நிலைமை அடியோடு மாறிவிட்டது. {{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலீபா"/>
<section begin="கலீம் காசானி மீர்சா அபு தாலிபு"/>
{{dhr}}
{{larger|<b>கலீம் காசானி மீர்சா அபு தாலிபு:</b>}} இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். பாரசீகத்தைச் சார்ந்த அமதான் (Hamadan) மாநிலப் பகுதியில் பிறந்த இவர் சீராசு நகரில் கல்வி கற்றார். கலீம் (Kalim Kashani Mirza Abu Talib), சகாங்கீர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பலவிடங்களுக்கும் சென்று இந்திய மக்களின் வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்தார். இவர் கி.பி. 1619–இல் தம் தாய்நாடு திரும்பி இரண்டாண்டிற்குப் பின்னர் மீண்டும் இந்தியா வந்தார். சாசகான் (Shajahan) அரசரான பிறகு, அவர்தம் அரசவைப் புலவராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அரசவையில் தலைமைக் கவிஞராகவும் உயர்த்தப்பெற்றார். இவர்தம் இசைநலஞ்சான்ற கசல் பாடல்கள் (Ghazals) எளிய இனிய நடையில் இந்திய உணர்வுகளை நன்கு புலப்படுத்துவனவாக அமைந்தன.<noinclude></noinclude>
kob7dtl8ta2xiwdwzkt50h4c2oypeyr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/888
250
642423
1954590
1930967
2026-07-19T06:49:14Z
Sridevi Jayakumar
15329
1954590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலீலியோ கலீலி|860|கலே}}</noinclude>இவர் பேரரசர் சாசகானின் புகழைச் சிறப்பித்துச் ‘சாசகான் நாமா’ (Shajahan Nama) என்னும் பெயரில் காவியம் பாடியுள்ளார். அதில் தைமூர் மற்றும் மொகலாய மன்னர்களின் சிறப்புகளும் பாடப்பெற்றுள்ளன. அதிலுள்ள வருணனைப் பகுதிகள் கற்பார் உளங்கவர்வனவாக உள்ளன. இவரது கவித்திறனை உணர்ந்த மன்னர் சாசகான், இவர்தம் எடையின் இருமடங்கிற்குச் சமமான பொன், வெள்ளி ஆகியவற்றைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார். சாசகான் நாமாவைத் தவிர, இவர் வேறு பல கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அன்பு, இரக்கம், அடக்கம் முதலிய நற்குணங்கள் சிறந்து விளங்கிய இக்கவிஞர் கி.பி. 1651-இல் காலமானார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலீம் காசானி மீர்சா அபு தாலிபு"/>
<section begin="கலீலியோ கலீல்"/>
{{dhr}}
{{larger|<b>கலீலியோ கலீல் (கி.பி. 1564–1642)</b>}} இத்தாலி நாட்டில் வானியல், இயற்பியல் ஆகியவற்றில் வல்லுநராக விளங்கியவர். இவர் கி.பி. 1564–ஆம் ஆண்டு பைசா (Pisa) என்னும் ஊரில் பிறந்தார். கலீலியோ கலீலியின் (Galileo Galilei) தத்துவ ஆராய்ச்சியில், செயலறிவுச் சார்பும் (Empiricism) ஐயப்படுதலும் காணப்பட்டன. அணுக் கொள்கை பின் மறுமலர்ச்சியும் தெய்வீகக் கூறுகளின் (Removal of Occult qualities) நீக்கமும் காரண காரியக்கோட்பாட்டுக்கு இவர் அளித்த புதிய திருப்பமாகும் இவருடைய நூல்கள் தத்துவத்தில் புலன் கடந்த நுண் பொருள் ஆராய்ச்சிக்கு (Metaphysics) எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 888
|bSize = 480
|cWidth = 123
|cHeight = 158
|oTop = 338
|oLeft = 80
|Location = center
|Description =
}}
{{center|கலீலியோ}}
கலீலியோ கி.பி. 1612-இல் வெளியிட்ட செய்தி இதழில் தண்ணீரில் அமைந்த பொருள்களைப் பற்றிய அறவுரையில் (Discourse on Bodies in water) அரிசுடாட்டிலின் கருப்பொருள் கொள்கையினை எதிர்த்தார். இவர் கி.பி. 1613-ஆம் ஆண்டு வெளியிட்ட ஞாயிற்றுப் பிழம்பிலுள்ள கரும்புள்ளி பற்றிய கடிதங்கள் (Letters on Sunspots) சமய சீர்திருத்த வாதிகளிடம் பெரிய எதிர்ப்பைத் தோற்றுவித்தன. அக்கடிதங்கள் பூமி ஞாயிற்றைச் சுற்றி வருவதையும், ஞாயிறு அசையாமலிருப்பதையும் வலியுறுத்தின. மேலும், இவர் விவிலியம் (Bible) கூறும் இயற்கை அமைப்புக் கருத்துகள் அறிவியலுக்குப் பொருந்தாதவை என்றும், இயற்கைப் பொருள்களைப் பற்றிய மனித அறிவு புலனறிவினாலும் பகுத்தறிவினாலும் தெரிந்து கொள்ளப்பட்ட உண்மைகளே என்றும் கூறினார். இவர் வால் வெள்ளியின் இயல்புகளை ஆராய்ந்தார்.
பருப்பொருள் சார்ந்த அறிவியல் (Physical Science) கலீலியோவின் காலம் வரை தத்துவத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அது பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்பட்டது. இவருக்குப் பின்னரே அறிவாராய்ச்சிக் கொள்கை (Theory of Knowledge) சிறப்பிடம் பெற்றுள்ளது. இவர் கணிதத்திற்குச் சிறப்பிடம் கொடுத்தார். கணிதம் இல்லாவிட்டால் ஒருவர் வளைந்து வளைந்து செல்கிற இருள்தோய்ந்த பாதையில்தான் செல்ல முடியும் என்பது இவர் கருத்து. தத்துவப் பயன்வழிக் கொள்கையினர் போன்று இவரும் முதன்மைக் (Primary) குணங்களுக்கும், துணைமைக் (Secondary) குணங்களுக்கும் இடையே வேற்றுமை கண்டார். இவர் மேனாட்டுத் தத்துவத்தில் ஐயக் கொள்கையைப் (Skepticism) புகுத்தினார். இவர் கி.பி. 1642–இல் காலமானார்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கலீலியோ கலீல்"/>
<section begin="கலே"/>
{{dhr}}
{{larger|<b>கலே</b>}} வரலாற்றுப் புகழ் பெற்ற துறைமுக நகரம். கலே (Calais) பிரான்சு நாட்டின் வடக்கில் உள்ளது. இத்துறைமுகம் பற்பல சோதனைகளுக்குள்ளாகி அழிவுற்று, மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு நேராக ஆங்கிலக் கால்வாயை அடுத்து, இங்கிலாத்தின் தோவர் (Dover) துறைமுகம் விளங்குகிறது. இவற்றிற்கிடையே உள்ள தூரம் சுமார் 37 கி.மீ. பண்டைய கலே ஒரு தீவாக இருந்து அழிவுற்றது. பிறகு பல செல்வந்தர்களின் முயற்சிகளால் புதிய கலே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சி கி.பி. 10-ஆம் நூற்றாண்டியிருந்து குறிப்பிடத்தக்க சிறப்புப் பெற்றுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆங்கிலேயர் இதைத் தம் வசப்படுத்திக்கொள்ளப் பலசமயங்களில் முயன்றனர். இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையே நடந்த நூற்றாண்டும் போர்க்காலத்திலும் இது பல தாக்குதல்களுக்கு உட்பட்டது. ஆங்கிலேயர் கி.பி. 1347-இல் ஓராண்டு முற்றுகைக்குப் பிறகு இதைத் தம் வசப்படுத்தினர். இரண்டு நூற்றாண்டுகள் இது ஆங்கிலே-<noinclude></noinclude>
q0jpvu94gk01qm2m981zbsunir45m2c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/889
250
642424
1954591
1930971
2026-07-19T06:49:54Z
Sridevi Jayakumar
15329
1954591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|861|கலை}}</noinclude>யர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரான்சு நாட்டுக் கைசுப் பிரபு பிரான்சிசு என்பான் கி.பி. 1558–இல் போரில் வெற்றி பெற்று, துறைமுகத்தை மீட்டுக் கொண்டான். இசுபெயின் (Spain) நாடும் கலேயின் மீது நாட்டங்கொண்டிருந்தது. இந்நகர் கி.பி. 1595 முதல் கி.பி. 1598-வரை இசுபெயின் நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. பிரான்சுக்கும் இசுபெயினுக்குமிடையே நடந்த வெர்வான்சு உடன்படிக்கைப்படி, இது மீண்டும் பிரான்சு நாட்டின் ஆட்சியின்கீழ் வந்தது.
வரலாற்றுப் புகழ் பெற்ற பல கட்டடங்களை இங்கே காணலாம். இந்நகரைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த அறுவருடைய தியாகத்தை நினைவு கூரும் சின்னம் ஒன்று வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. இடைக்காலத்திலிருந்தே இது ஒருதொழில் வளம் மிக்க நகராகவும், இங்கிலாந்துடன் இணையும் செய்திப் போக்குவரத்து மையமாகவும் விளங்கியுள்ளது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலே"/>
<section begin="கலை"/>
{{dhr}}
{{larger|<b>கலை</b>}} என்பது பல பொருளொருசொல். கலை என்றுஞ் சொல், செயல்திறன், ஆண்மான், ஆண் குரங்கு, சுறாமீன், மகரராசி, உடை, அமிசம், சந்திரனின் பதினாறு கூறு, ஒளி, சாத்திரம், நூலறிவு, மொழி, வண்ணப்பாட்டின் ஒரு பாகம், வித்தியா தத்துவம் ஏழனுள் ஒன்று, மரக்கவடு, மேகலை, காஞ்சியென்னும் இடையணிகள், மரவயிரம், கர்ப்பூர வகை முதலிய பல பொருள்களில் இலக்கிய ஆட்சி கொண்டுள்ளது; உலக வழக்கில் இன்னும் பல பொருள்களை உணர்த்தி வருகிறது. கணிதம், மந்திரம், தந்திரம் போன்ற யோகப்பயிற்சியால் கிட்டுஞ் சித்திகள், பல்வேறு திறமைகள் முதலியவற்றையும் இச்சொல் சுட்டிவருகிறது. ‘கலைச்சொற்கள்’ (Technical Terms) என்னும்போது ‘கலை’ என்பதன் பொருள் மேலும் விரிந்து செல்கிறது. எனினும், ஈண்டுக் ‘கலை’ என்பதற்குச் சிறப்பாக ‘அழகார்ந்த செயல்திறம்’ என்னும் பொருளடிப்படையில் பலவாறாக விரிந்து நிற்குங் கூறுகளைக் காணலாம்.
இயல்பாய்த் தோன்றிய பொருளை இயற்கையாகவும், மக்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளைக் கலையாகவும் அல்லது கலைப்படைப்பாகவும் கருதலாம். கலை என்பதற்கு அவ்வக் காலங்களில் மக்களின் வாழ்வியற் பண்பாட்டிற்கேற்பவும் நாகரிக வளர்ச்சிக்கேற்பவும், அவரவர் எந்த எந்தக் கோணத்தில் நோக்குகின்றனரோ அந்தந்தக் கோணத்தைப் பொறுத்தே விளக்கத் தரப்படுகிறது. எனவே, கலையை இன்னதுதான் என்று இலக்கண வரையறை கூறி விளக்கவியலாது. ஆனால், கலை பற்றிச் சிந்தித்துள்ள அறிஞர் பலரும் பல்வேறு கோணங்களில் உணர்ந்து விளக்கந்தர முனைந்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை இயன்றவரையில் மனத்துட் கொண்டு இயைத்துப் பார்த்துப் புரிந்து கொள்வதே ஏற்புடையதாகும்.
காண்கிற காட்சியிலும் கேட்கிற இன்னோசையிலும் மனங்கவிந்து நாட்டத்துடன் திரட்டப்படும் அழகுணர்வை, ஒருவன் எவ்வாறேனும் புறக்கருவி வாயிலாகப் புலப்படுத்த ஆர்வங் கொள்கிறான். அவன் கல்லைக் கருவியாகக் கொண்டு சிற்பத்தையும் வண்ணத்தைக் கருவியாகக் கொண்டு ஓவியத்தையும், ஓசையைக் கருவியாகக் கொண்டு இசையையும், நடிப்பைக் கருவியாகக் கொண்டு கூத்தையும், இவ்வாறே சிறப்பான ஒவ்வொன்றனையுங் கருவியாகக் கொண்டு ஒவ்வொரு கலையையும் வினைப்பாங்குடன் உருவாக்கலானான். இவ்வாறாக உருவாக்கப்பட்ட கலை பற்றிச் சிந்திக்கையில், கலை என்பது செயல் திறனைச் சிறப்பாக உணர்த்துகிறது. ‘வினையமை பாவையின் இயலி’ (நற். 352 – 1) என்னுடத்தில் வினையென்பது கலைப் படைப்பிலுள்ள செயல்திறனைக் குறித்துள்ளது. அந்தக்கலை அழகு ஏற்படுத்தும் வகையில், செய்வதையுங்குறிக்கும்; சுவை பயத்தலையும் பயன்பாட்டையுங்குறிக்கும். ஆகவே, கலையில் செயல்திறம் அழகு, சுவை, பயன் என்ற கூறுகளைக் காணலாம். பயன் என்னுங் கூறு மிகுதிப்படுமேயெனின் அது கம்மியம் (தொழில் – Craft) என்ற பிரிவில் அடங்கும்; அந்நிலையில் அது வன்கலையாகும். அழகுக்கூறே மிகுதியாக அமைந்து பயன்கூறு குறையுமேயெனின் அது அழகுக் கலையாகும். அதனை மென்கலை, கவின்கலை, கோமளக்கலை, அருங்கலை, இலலிதக் கலை என்பர்.
பொதுவாகக் கலையில் கற்பனை கவிந்து நிற்கும். அந்தக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஊக்கம், செயல்திறம் ஆகியவை ஒருமுகப்படும் ஒருவகைத் தவத்தின் வெளிப்பாடே கலையாகிறது. காலத்திற்குக் காலம் மக்கள் சமுதாயத்தையும் எண்ணங்களையும் அழகுணர்வுடன் கலை எதிரொலிக்கிறது; அது மக்களினத்தின் பதிவேடாகவும் பயன்படுகிறது என்பதே கலைத் திறனாய்வாளர்கள் பலரின் கருத்தாகும்.
<b>சிறப்பு விளக்கங்கள்:</b> பௌத்தர்களின் கொள்கைப்படி, ‘கலை என்பது ஒரு மனிதனின் உள்ளுணர்விலேயே காணப்படுவதாகும். எனவே, அது புறத்தேயுள்ள பொருளில் அமைவதன்று’ என்பது சிறப்புக் குறிப்பாகும். இந்துக்களோ உள்ளுணர்வு, புறத்தேயுள்ள பொருள் ஆகிய இரண்டையுமே கலையின் இரு கூறுகளாகக் காண்பார்கள்; மேலும், கலையிலுள்ள அழகுணர்வு என்பதே ஒரு சித்தவிருத்தி என்றும்,<noinclude></noinclude>
fgacftw7vydfl4y4xb6k5wqrf3twftv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/892
250
642434
1954593
1930994
2026-07-19T06:50:56Z
Sridevi Jayakumar
15329
1954593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|864|கலை}}</noinclude>நுட்பமான கலையாகவும், கட்டடக்கலை பயன் மிகுதியுடைமையால் தாழ்ந்த கலையாகவும் பாகுபடுத்தப்படுகன்றன. ஒவ்வொரு கலையிலும் உட்பிரிவுகளாகப் பாகுபாடுகள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, இசையைச் சிறிது காண்கையில் மிடற்றிசை (Vocal Music) என்றும், கருவியிசை (Instrumental Music) என்றும் வகைமையுண்டு. இசைக்கருவிகளுள் நரம்பிசைக்கருவி (Stringed Instrument), மோது இசைக்கருவி அல்லது தோற்கருவி (Percussion Instrument), துளைக்கருவி (Wind Instrument), கஞ்சக் கருவி (Bell-Metal Instrument) என வகைகள் உண்டு அவை ஒவ்வொன்றிலும் பல்வேறு இசைக்கருவிகள் உள்ளன. பொதுவாக, இசை நுட்ப நோக்கில் வகைமைப்படுத்தி இன்னிசை (Melodious Music) என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்திய இசையென்றும், ஒத்திசை அல்லது ஒருங்கிசை (Harmonious Music) என்பதனை அடிப்படையாகக் கொண்டு மேனாட்டிசையென்றும் காணலாம். இந்திய இசை என நோக்குகையில் கருநாடக இசை, இந்துசுதானி இசை ஆகிய உட்பிரிவுகள் உண்டு. இவ்வாறாகக் கலையின் பாகுபாடுகள் பலவாக விரிந்து பரந்துள்ளன.
இவ்வாறெல்லாம் பாகுபாடுகள் பலவாகவுள்ள கலைகளையெல்லாம் எவ்வாறேனும் எண்ணிக்கையடிப்படையில், வகைப்படுத்த முயன்றனர். அவ்வாறான முயற்சியின் விளைவாகக் கலைகள் 64 என்பது பொதுவாக எல்லா இந்தியப் பேரிலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்களும் தன்மையும் மக்கள் புரிந்து கொள்ளுதற்கு இராமாயணம், காதம்பரி, தசகுமார சரித்திரம் முதலிய காப்பியங்களும், வாத்சாயனர் எழுதிய காமசூத்திரமும், தண்டி எழுதிய காவியாதர்சமும், சில தந்திர சாத்திர நூல்களும் பயன்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்தநான்கு என்பதை, ‘எண்ணெண்கலையோர்’ என்று சிலப்பதிகாரம் (14:167) குறிப்பிடுதலாலும் அறியலாம்.
சமண நூல்கள் ஆடவர் கலைகள் 72 என்றும், மகளிர் கலைகள் 64 என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால், நூல்களில் வருணிக்கும் போது 72க்கு மேலும் கலைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் பல பழங்கலைகளின் உட்பிரிவுகளாகவுள்ளன. அனைத்தையும் நோக்குகையில் கலை என்ற வளாகத்துள் உலகத்தில் காணலாகும் பல துறைகளிலுமுள்ள வித்தைகளும் நுண்கூறுகளும் கொணரப்படும் முயற்சி தென்படும்.
அறுபத்து நான்கு கலைகளை ஆராய்ந்தால், அவற்றை அழகுக் கலைகள், அறிவுக் கலைகள், பயன்படு கலைகள், உடற்பயிற்சி, விளையாட்டு, பொழுதுபோக்கு, இன்பத்திற்கு உதவுபவை, சில்லறைப்பொது, அறிவுகள் என்ற வகைகளில் அடக்கக் காணலாம். அவற்றுள் முதலிடம் பெறுங் கலைகளாக (நிருத்தியம்), பாடல், இசைக் கருவிகள், வீணை — தமருகம், வாத்தியம், ஓவியம், கவிதை (காவியக் கிரியை) ஆகியவற்றை வாத்சாயனர் குறிப்பிடுகிறார். பிற கலைகளையெல்லாம் கவிதைக்கு உதவும் அறிவுகள், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவு, சொல் ஆகியவற்றின் தேர்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் உதவும் கலைகள், மொழிகளை அடிப்படையாகக் கொண்ட கலைகள், இலக்கியப் பயிற்சியுடன் தொடர்புள்ள வேறு சில கலைகள், வீட்டிலும் வாழ்க்கையிலும் அழகையும் சுவையையும் மேம்படுத்த உதவுவன, உடலலங்காரத்திற்கானவை, மற்ற அறிவுகள், விளையாட்டு பொழுதுபோக்கற்கானவை என்ற பிரிவுகளுள் அடக்கிக் காண்கிறார். இவற்றைத் தவிர 65–ஆவது கலையாகப் ‘புட்பசுகடிகா’ என்ற ஒன்றனைக் குறிப்பிடுகிறார். கலைகளைப் பற்றிய அட்டவணை நூல்களில் சிற்சில மாறுதல்களுடன் அமைந்துள்ளது.
நாட்டு நலத்திற்கும் பெருமைக்குமுரிய கலைஞான வகைகள் அறுபத்து நான்காகக் கணக்கிட்டு உரைக்கப்படும். அவையாவன 1. அக்கர இலக்கணம், 2. இலிகிதம், 3. கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. நீதிசாத்திரம், 8. சோதிடநூல், 9. தரும சாத்திரம், 10. யோகநூல், 11. மந்திரநூல், 12. சகுன நூல், 13. சிற்ப நூல், 14. மருத்துவ நூல், 15. உருவ சாத்திரம், 16. இதிகாசம், 17. காவியம், 18. அலங்காரம், 19. மதுர பாடனம், 20. நாடகம், 21. நிருத்தம், 22. சத்த பிரமம், 23. வீணை, 24. வேணு, 25. மிருதங்கம், 26. தாளம், 27. அத்திர பரீட்சை, 28. கனக பரீட்சை, 29. இரதப் பரீட்சை, 30. கச பரீட்சை, 31. அசுவ பரீட்சை, 32. இரத்தினப் பரீட்சை, 33. பூ பரீட்சை, 34. சங்கிராம இலக்கணம், 35. மல்யுத்தம், 36. ஆகருடணம், 37. உச்சாடனம், 38. வித்துவேடனம், 39. மதன நூல், 40. மோகனம், 41. வசீகரணம், 42. இரசவாதம், 43. காந்தருவ வாதம், 44. பைபீலவாதம்,
45. கௌத்துகவாதம், 46. தாதுவாதம், 47. காருடம், 48. நட்டம், 49. முட்டி, 50. ஆகாயப் பிரவேசம், 51. ஆகாயசமனம், 52. பரகாயப் பிரவேசம், 53. அதிரிச்யம், 54. இத்திரசாலம், 55. மகேந்திர சாலம், 56. அக்னித்தம்பம், 57. சலத்தம்பம், 58. வாயுத்தம்பம், 59. திட்டித்தம்பம், 60. வாக்குத்தம்பம், 61. சுக்கிலத்தம்பம், 62. கன்னத்தம்பம், 63. கட்கத்தம்பம், 64, அவத்தைப் பிரயோகம்.
{{Right|<b>செ.வை.</b>}}
<section end="கலை"/>
{{nop}}<noinclude></noinclude>
2lb8ron47jzipvvmui2e33kwsyhz7yd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/893
250
642435
1954595
1930998
2026-07-19T06:53:19Z
Sridevi Jayakumar
15329
1954595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக் களஞ்சியக்காரர்கள்|865|கலைக் களஞ்சியக்காரர்கள்}}</noinclude><section begin="கலைக் களஞ்சியக்காரர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கலைக் களஞ்சியக்காரர்கள்:</b>}} பிரான்சில் கி.பி. 1751-ஆம் ஆண்டில் சிறந்த அறிவுத் தொகுப்பு நூலாகக் கலைக் களஞ்சியம் (Encyclopapedia) 29 வெளியிடப்பட்டது. இவ்வரிய தொகுதிகளில் தொகுப்புக்குத் தரமான கட்டுரைகள் எழுதி உதவி செய்தும், பதிப்பிக்கும் பணிக்கு வேண்டும் பொருளுதவி செய்தும் வந்த நன்மக்களே கலைக்களஞ்சியக்காரர்கள் (Encyclopaedists) எனப்படுவோராவர். தி. அலம்பர்ட்டு (D’ Alombert), தெனிசு திடரோ (Denis Diderot), உரூசோ (Rousseau), தர்கே (Turgot), கண்டார்சே (Condorcet), பாம்படோர் அம்மையார் (Madame de Pompadour), வால்ட்டேர் (Voltaire) முதலியோர் கலைக்களஞ்சியக்காரருள் குறிப்பிடத்தக்கவராவர்.
<b>தி’ அலம்பர்ட்டு</b> (கி.பி. 1717-கி.பி. 1783): சிறந்த கணிதப் புலவராகவும், தத்துவ ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் புகழுடன் விளங்கிய தி’ அலம்பர்ட்டு பிறந்தவுடன் தாயினால் கைவிடப்பட்டு, பின்னர்த் தந்தையின் ஆதரவுடன் சிறிது கல்விப்பயிற்சி பெற்று, பின்னர்த் தாமே பயின்று வந்தார். இவர் கணிதத்தில் பல அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுப் புகழ் பெற்றதனால், பிரெஞ்சு அறிவியற் கழகம் (French Academy of Sciences) இவரை கி.பி. 1741–இல் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. இவர் கணிதத்தில் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறிய விதி அலம்பர்ட்டு விதி என்று கூறப்படுகிறது. இவர் அறிவுக்கும் இயற்கைக்கும் மதிப்புக் கொடுத்து, இறைவெளிப்பாடு, மறைநூல் மேற்கோள் சார்பு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளாமல், பழைய கொள்கைகளையும் நிறுவனங்களையும் புறக்கணித்து, சமூகச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டுமென்று கூறிய ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளராவார். இவர் சமயப் பொறையையும் ஆதரித்த அறிவு விளக்கக் காலத்தைச் (Age of Enlightenment) சேர்ந்தவர். இவ்வறிவு வளர்ச்சிச் சிந்தனையாளரோடு இவர் தொடர்பு கொண்டு, அறிவியல் மக்கள் நலனுக்காக அவர்களிடையே பரப்பப்படுதல் வேண்டுமென்று ஆர்வம் கொண்டார். அதன் காரணமாக இவர் கி.பி. 1746-இல் பிரெஞ்சுக் கலைக் களஞ்சியக்காரர்களோடு தொடர்பு கொண்டார். திடரோ கலைக் களஞ்சியத்தின் பொதுப் பதிப்பாசிரியராகவும், இவர் அதில் கணித, அறிவியல் கட்டுரைகளைப் பதிப்பிக்கும் ஆசிரியராகவும் அமர்த்தப்பட்டனர். கலைக்களஞ்சியத்திற்கு இவர் பல கட்டுரைகளை எழுதி, அவற்றின் வாயிலாகப் பல அறிஞர்களின் ஆதரவு கலைக்களஞ்சியத்துக்குக் கிடைக்குமாறு செய்தார். இவருடைய முயற்சியால் கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி கி.பி. 1751-இல் வெளிவந்தது; இவ்வாறு இவர் அதனை அறிமுகம் செய்து, அது எவ்வாறு தம் காலத்திய எல்லாத் துறை பற்றிய அறிவுத் தொகுப்பாகவும் அமைந்துள்ளதென்று காட்டினார். கலைக்களஞ்சியத்தைக் குறை கூறியவர்களுக்கு விடையாக, இவர் கலைக்களஞ்சியத்தின் மூன்றாம் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதினார். பின்னர்ச் செனிவாவைப் பற்றிக் கலைக்களஞ்சியத்தில் ஒரு கட்டுரைக்கு வேண்டிய செய்திகளைத் திரட்டுவதற்கு அந்நகருக்குச் சென்று, உருசேரவுடன் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் திரட்டிக் கலைக்களஞ்சியத்தில் வெளியிட, அந்நகர மக்கள் இவருடைய கருத்துகளை மறுக்க, அதன் பின்னர் இவர் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் பொறுப்பை விடுத்துக் கணித, அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார். இவர் புலமையின் காரணமாக இவரை அக்காலப் பிரசிய அரசர் இரண்டாம் பிரடரிக்கும், உருசிய அரசி காதரைனும் மதித்தனர். உரூசோவைப் போல இவரும் பல இசைக் கட்டுரைகளை எழுதிப் பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்துக்கு உதவினார். அவருடைய ஆய்வுகளும், கட்டுரைகளும், ஓர் அறிவியல் தத்துவத்தை (Philosophy of Science) வகுக்குமாறு இவரை உயர் நெறிப்படுத்தின. இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அறிவியலின் பல்வேறு கிளைகளுக்குமிடையே ஓர் உள் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய சில விதிகளை வகுக்குமாறு பகுத்தறிவாளர்களைத் (Rationalists) தூண்டின. இவருடைய கருத்துகள் எல்லா அறிவியல் தொகுதிகளுக்குமிடையே இறுதியாக ஓர் ஒருமைத் தன்மை (Unity) உள்ளதென்று யாவருக்கும் காட்டின.
<b>தெனிசு திடரோ</b> (கி.பி. 1713-கி.பி. 1784): பிரெஞ்சுக் கலைக்கிளஞ்சியத்தைப் பதிப்பித்த முதன்மைப் பதிப்பாசிரியர் திடரோ ஆவார். இவர் இளமையில் பாரிசில் தொடக்க, முதுகலைக் கல்விப் பயிற்சியை முடித்த பின்னர், அறிஞர்களான உரூசோ, காண்டிலேகு (Condillac) ஆகியோரின் நண்பர் ஆயினார். இவர் கி.பி. 1748–இல் கூட்டுப் பதிப்பாசிரியராக தி அலம்பர்ட்டுடன் சேர்ந்து, கலைக்களஞ்யெத்தைப் பதிப்பிக்கும் வேலையைத் தொடங்கினார். அவரே, அதற்குப் பல தரமான கட்டுரைகளை எழுதி வழங்கி, கி.பி. 1772-இல் கலைக்களஞ்சியப் பணியை நிறைவேற்றினார். இவருடைய கொள்கை நம்பிக்கையற்ற, ஐயப்பாட்டுக் கொள்கையாக (Skepticism) முதலிலிருந்து, பின்னர்ப் பொருளியல்வாதமாக (Materialism) ஆயிற்று.
<b>உரூசோ</b> (கி.பி. 1712–கி.பி. 1778) (காண்க: உரூசோ வாழ்க்கை வரலாறு.) திடரோவின் தூண்டுதலின்மேல் இவர் கி.பி. 1750-இல் திசான் கழகத்தார்<noinclude>
<b>வா.க. 6 – 55</b></noinclude>
rqhsm64scpqngsw8ad3i8b7lh7aaj4d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/895
250
642437
1954597
1931006
2026-07-19T06:54:27Z
Sridevi Jayakumar
15329
1954597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக் களஞ்சியக்காரர்கள்|867|கலைக்களஞ்சியம்}}</noinclude>என்றும், அறிவியல்களிலும் கலைகளிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி மக்களுக்கு இன்பம் கிடைக்குமாறு செய்வதே இயற்கை அவர்களுக்கு வகுத்த நிறைவான வாழ்க்கை ஆகுமென்றும், ஐரோப்பிய மக்களுக்கு எடுத்துக் கூறினார். இவ்வுயரிய கருத்தைக் கூறும் இவர் நூல் மனித சிந்தனை வரலாற்றில் ஒரு முக்கியமான நிலையைச் (Stage) சுட்டிக் காட்டிடுகிறதென்றும், அது கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தத்துவத்தைக் காட்டுவதோடு, இக்கால மனித அறிவின் போக்கை விளக்குகிறதென்றும் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இவர் தம் நூல்களின் வாயிலாக ஒரு கலைக்களஞ்சியத்துக்குப் பொருளளிக்கக் கூடிய அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்தார்.
இவர் பிரசிய மன்னர் இரண்டாம் பிரடரிக்கின் உற்ற நண்பராகப் பெர்லினில் சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர்ச் சுவிட்சர்லாந்துக்கு வந்தார்; செனிவா நகரத்து மக்களால் சமயப் பொறைக் கருத்துகளைத் துணிந்து வெளியிட்ட சுய சிந்தனையாளர் என்று வரவேற்பளிக்கப்பட்டார். ஆனால், இவருடைய சில கருத்துகளுக்கு எதிர்ப்பும் தோன்றிற்று. பிரஞ்சுக் கலைக்களஞ்சியத்தின் ஏழாம் தொகுதி கி.பி. 1757–இல் திடரோவினால் பதிப்பிக்கப்பட்ட போது, அதில் வால்ட்டேரின் தூண்டுதலின் பேரில் செனிவாவைப் பற்றி ஒரு கட்டுரையை தி’ அலம்பர்ட்டு எழுதிச் சேர்ந்திருந்தார். செனிவா நகர கால்வினிய கிறித்தவர்கள் நாடகம், இசை முதலிய நுண்கலைகளை ஒதுக்கிவிட்டு, கால்வின் வகுத்த கடுமையான கிறித்தவ வாழ்க்கை முறையைக் கையாண்டனர். அலம்பர்ட்டு எழுதி கட்டுரையில் செனிவாவில் ஒரு நாடக அரங்கை நிறுவுதல் வேண்டுமென்பதும் அங்குள்ள கிறித்தவக் குருமார்கள் கிறித்துவின் இறைமைத் தன்மையை (Divinity) மறுத்த பாராட்டுக்குரியவர்கள் என்பதும் கூறுப்பட்டிருந்தன. இத்தகைய சுதந்திர இயல்பின் கருத்துகளைக் கூறியவர் வால்ட்டேரே என்று யாவரும் உணர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, கலைக்களஞ்சிய வெளியீடு நிறுத்தப்பட்டது.
வால்ட்டேர் பிரான்சில் பெர்னி (Ferney) என்ற சிறு பண்ணை முதலாளியாக இறுதி நாட்களைக் கழித்தார். அங்கு இவர் உரிமையற்ற வேலையாட்களுக்கு உரிமை வழங்குதல் வேண்டுமென்றும், சித்திரவதைத் தண்டனைகளை ஒழித்து, மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருதல் வேண்டுமென்றும் உரையாற்றினார்; சமயப் பொறையை எதிர்த்த கிறித்துவத் திருச்சபையை இகழ்ந்து, எளிய இறைமைக் கோட்பாடே மனிதனுடைய எதிர்கால வாழ்வுக்கு உகந்ததென்று கூறினார்; அரசின் குடிமை அதிகாரத்தை வலியுறுத்தினார். இவ்வாறு வால்ட்டேர் ஒரு தாராள அரசியல் சிந்தனையாளராக விளங்கினார்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="கலைக் களஞ்சியக்காரர்கள்"/>
<section begin="கலைக்களஞ்சியம்"/>
{{dhr}}
{{larger|<b>கலைக்களஞ்சியம்:</b>}} கலை, களஞ்சியம் என்னும் இரண்டு தமிழ்ச் சொற்களால் ஆன கலைக் களஞ்சியம் என்னும் தொடர் ‘என்சைக்ளோபீடியா’ (Encyclopaedia) என்ற ஆங்கிலத் தொடருக்குரிய பொருளைக் குறிக்கிறது; அதாவது, எல்லாக் கலைகளையும் பற்றிய செய்திகளின் தொகுப்பு எனப் பொருள்படுகிறது. நெல்லைத் திரட்டிவைக்கும் இடம் நெற்களஞ்சியம் எனப்படுவதுபோல், கலைகள் தொடர்பான செய்திகளைத் தொகுத்துத் தரும் நூல் கலைக்களஞ்சியம் எனப்படுகிறது. ‘என்சைக்ளோபைடியா’ (Encyklopaideia) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து ‘என்சைக்ளோபிடியா’ என்னும் சொல்லை ஆங்கிலேயர்கள் தழுவிக்கொண்டனர். ஆங்கிலச்சொல் தமிழரோ அவ்வாறு செய்யாமல், தரும் பொருளை அடிப்படையாகக் கொண்டு கலைக் புதுச்சொல்லை உருவாக்கிக் களஞ்சியம் என்னும் கொண்டனர். மனிதன் பண்டுதொட்டுத் தன் அறிவு முயற்சியாலும், ஆன்ம முயற்சியாலும், உடல் உழைப்பாலும் எவ்வெவற்றைச் சாதித்தானோ, அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் தரும் ஒரு நூல் என்று இதனைக் கொள்ளலாம். மானுட வரலாற்றின் கூறுகளையெல்லாம் ஓரிடத்தே பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பினை அளிக்கிற காரணத்தால் கலைக் களஞ்சியம் மிகவும் இன்றியமையாத ஓர் உசாத் துணையாகிறது. பெரும்பயன் தரும் இத்தகைய கலைக்களஞ்சியம் எவ்வாறு உருவாகியது? என்னென்ன உடையது? எத்தனை வகைப்படும்? இந்திய மொழிகளில் இது எவ்வாறு வளர்ந்துள்ளது? இவை பற்றிய விவரங்கள் அறியத்தக்கவை.
அமைப்புகளை
<b>இன்றியமையாமை:</b> மனித வாழ்க்கையின் நெடிய பயணத்தின் மத்தியில் மக்கள் மேலும் முன்னேறிச் செல்லும் படிநிலையில் உள்ளனர். அவ்வாறு முன்னேறிச் செல்வதற்கு இருவகை அறிவு தேவைப்படுகிறது. ஒன்று, மானுட இனம் இதுவரை முன்னேறிய அளவும், அந்த முன்னேற்றத்தின்போது அதற்கு ஏற்பட்ட அனுபவமும் ஆகிய கடந்தகால வரலாறு; மற்றொன்று, இவ்வாறு கிடைத்த பழம் வரலாற்றை வைத்துக்கொண்டு மேலும் முன்னேறுவதற்கான தொலைநோக்கு அறிவு. இந்தப் பழம் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள உதவுவதுதான் கலைக்களஞ்சியத்தின் நோக்கம். இன்றைய மானுட இனத்தின் தெளிவான சிந்தனைக்கு முன்னையோர் பெற்ற அறிவுச் செல்வத்தை அறிந்து கொள்ளுதல் அடிப்படையானது என்று பழம்பெரும் கிரேக்க<noinclude>
<b>வா.க. 6 – 55அ</b></noinclude>
aiuky7tko576lfh7ov1an7fxmeb3oiu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/901
250
642581
1954599
1931471
2026-07-19T06:55:59Z
Sridevi Jayakumar
15329
1954599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்காட்சிக் கூடம்|873|கலைக்காட்சிக் கூடம்}}</noinclude>சிறந்து விளங்குவதைக் காணலாம். அறிவு வேட்கையால் இடைவிடாது பெருகிவரும் பல்துறைச் செய்திகளைத் தொகுத்துத் தரும் இப்பணியை இன்று பல நிறுவனங்கள் தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் செய்து வருகின்றன. தமிழ் மொழியில் இப்பெரும்பணியைச் செய்து நிறைவேற்றும் பொறுப்பைத் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் 1983-இல் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் மேற்பார்வையில் திரு. பி.எல். சாமி, டாக்டர் நா. பாலுசாமி ஆகியோரை முதன்மைப் பதிப்பாசிரியர்களாகவும் பல்துறை அறிஞர்களைப் பதிப்புக் குழுவினராகவும் கொண்டு சீரியமுறையில் 14 தொகுதிகள் வாழ்வியலிலும் (Humanities), 20 தொகுதிகள் அறிவியலிலும் (Science) வெளியிடும் திட்டத்தை மேற்கொண்டது. இதுவரை வாழ்வியலில் 6 தொகுதிகளும் அறிவியலில் 3 தொகுதிகளும் நிறைவு பெற்றுள்ளன. இந்நாள் துணைவேந்தர் டாக்டர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்.
<b>கலைக்களஞ்சியப் பயன்:</b> இத்துணை அளவு விரிந்த நிலையில் பல்வேறு நாட்டு மொழி அறிஞர்கள் பல்லாண்டுக் காலம் வருந்தி உழைத்துப் பெரும் பொருட்செலவில் படைத்தளிக்கும் இந்தக் கலைக் களஞ்சியங்களினால் பெறும் பயன் என்ன என்ற சிந்தனை மக்களுக்கு எழுவது இயல்பு, தனிப்பட்ட இன, மொழிகளின் பண்பாட்டு வரலாற்றினை அறியவும், உலகளாவிய நிலையில் மானுடப்பண்பாட்டினை அறியவும் இவை பயன்படுகின்றன என்பது ஒருவகை உடனடிப் பயன். மானுட அறிவு, அனுபவம், முயற்சி ஆகியவற்றால் விளைந்துள்ள கலைக்களஞ்சிய நூல்களை முழுமையாகப் பார்க்கும் அல்லது படிக்கும் ஒரு வாசகருடைய ஆன்ம அனுபவம் எவ்வாறு இருக்கும்? மானுட அறிவுப் பெருக்கத்தின் முழுமையை அச்சு வடிவில் காணும் ஒருவர் தம்முடைய அறிவின், அனுபவத்தின், முயற்சியின் சுருக்கத்தையும் முழுமையின்மையையும் எளிதில் உணருவார். அவ் உணர்ச்சி அவருக்கு மேலும் மேலும் கற்கவேண்டும் என்னும் அவாவையும் உந்துதலையும் ஊக்கத்தையும் தரும்.
{{Right|<b>அ.அ.ம.</b>}}
<section end="கலைக்களஞ்சியம்"/>
<section begin="கலைக்காட்சிக் கூடம்"/>
{{dhr}}
{{larger|<b>கலைக்காட்சிக் கூடம்,</b>}} அரும் பொருள்கள், சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலைப் பொருள்களைக் கண்டுகளிக்க வைக்கப்பட்டிருக்கும் இடம். அருங்காட்சியகங்கள், கலைப்பொருள்களை இடங்கள், தனியார் விற்க அழகுபடுத்தப்பட்ட கலைக்கூடங்கள், யாவும் இவற்றுள் அடங்கும். கலைக்காட்சிக் கூடம் என்ற பொருளுடைய சொல்லை 17–ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பயன்படுத்தினர். எனினும் இதன் பயனை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதன் அறிந்திருந்தான். தொடக்க கால மனிதன் தான் வசித்த குகைகளையே அழகுபடுத்தி ஓவியங்கள் பல தீட்டினான். அப்பொழுதே கலைக்காட்சிக் கூடம் பற்றிய கருத்து தோன்றிவிட்டது. தொன்மைக் காலத்தில் கோயில்கள் ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அழகு செய்யப்பட்டன. கலைக்காட்சி பற்றிய கருத்தைத் தொன்மையான நாகரிக மக்கள் அறிந்திருந்தனர்.
இந்தியாவில் பல்வேறு கோயில்களில் கலைக் காட்சிக் கூடங்கள் பல இருந்தன. இந்திய இலக்கியங்கள் சித்திரசாலை பற்றிக் குறிப்பிடுகின்றன. பெரோசா துக்ளக்கு அரும் பொருள் சேகரிப்பவரை நியமித்துப் பழம்பொருள்களைச் சேகரித்தார். எகிப்தில் கார்னாக்கிலுள்ள மாபெரும் கோயில்களும் இந்தியாவில் அசந்தா, எல்லோரா, தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில், சித்தன்ன வாசல் ஆகியவற்றிலுள்ள ஓவியக்கூடங்களும் சீனாவில் துங்உவாங்குக் (TungHuang) குகைகளும், மெசப்பொடோமியாவிலும் பாரசீகத்திலும் புதையுண்ட சின்னங்களும் பண்டைக்கால ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் பொருள்களின் சிகரங்களாகத் திகழ்கின்றன. ஏதென்சு நகரின் அகக்கோட்டை வாயிலின் வடக்குப் பகுதியில் சலவைக்கல் மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில் வரலாறு, புராணக் கதைகள் ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் பல இருந்தன.
கலைப்பொருள்களைச் சேகரிக்கும் பழக்கம் உரோமில் குடியாட்சிக் காலத்திலேயே தோன்றியது. கிரேக்க நகர அரசுக் கோயில்களில் போரில் கைப்பற்றப்பட்ட பல்வகைப் பொருள்களையும் கிரேக்கர்கள் வைத்தனர். உரோமானியச் செல்வர்கள் தனிப்பட்ட முறையில் பல அரும்பொருள்களைச் சேகரித்துத் தங்கள் வீடுகளில் வைத்தனர். விலைக்கு வாங்கிச் சேகரிக்கும் வழக்கமும் பின்னர்த் தோன்றியது. இதனால் நகரின் ஒரு பகுதி இப்பொருள்களை விற்கும் ஒரு பகுதியாகவே மாறியது. இலண்டனில் உள்ள பாண்டு (Bond) வீதியும் நியூயார்க்கு நகரின் 57–ஆம் கிழக்குச் சாலையும் இன்று அரும் பொருள்கள் விற்கும் வீதிகளாக உள்ளமைபோல் உரோமும் அக்காலத்தில் இதுபோன்ற பகுதிகளைப் பெற்றிருந்தது.
ஐரோப்பாவில் இடைக்காலத்தில் பொதுவாகக் கலைக்காட்சி மண்டபங்கள் இல்லை. கிறித்தவ மடாலயங்களே பொருள்களைச் சேகரிப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டன. நூலகங்கள் பலவும் கிறித்தவ மடாலயங்களால் தோற்றுவிக்கப்பட்டன. இருப்பினும் பொதுமக்களின் பார்வைக்கு அவை அனுமதிக்கப்பட<noinclude></noinclude>
c58qsv1amkie59bkv08ns05rlvw9tud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/904
250
642588
1954601
1931485
2026-07-19T06:58:00Z
Sridevi Jayakumar
15329
1954601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்கோட்டுத் தண்டு|876|கலைஞான தீபம்}}</noinclude>உரோடுத் தீவு அருங்காட்சியகமும் இதன் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டன.
இந்தியாவில் இருநூற்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றுள் கல்கத்தா, தில்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலுள்ள தேசிய அருங்காட்சியகங்களும், ஐதராபாதிலுள்ள சாலர்சங்கு அருங்காட்சியகமும், சென்னை அருங்காட்சியகமும் குறிப்பிடத்தக்கவை.
காண்க: அருங்காட்சியகங்கள், இசுமித் சோனியன் அருங்காட்சியகம், இந்திய அருங்காட்சியகம்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கலைக்காட்சிக் கூடம்"/>
<section begin="கலைக்கோட்டுத் தண்டு"/>
{{dhr}}
{{larger|<b>கலைக்கோட்டுத் தண்டு</b>}} என்பது ‘களவியல்’ என்னும் இறையனார் அகப்பொருளுரையால் அறியலாகும் ஒரு தமிழ் நூல்; இக்காலத்தில் இறந்து பட்டது. ஒரு நூல் எவ்வெவ் வகையாற் பெயர் பெறும் என்பதனை விளக்குமிடத்து இறையனார் களவியலுரையாசிரியராகிய நக்கீரர், இடுகுறியால் ஒரு நூலுக்குப் பெயர் அமையும் என்பதனை விளக்கும் எடுத்துக்காட்டாகக் ‘கலைக்கோட்டுத் தண்டு’ என்னும் இப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் நக்கீரர் காலத்திலேயே இறந்துபட்டிருப்பின், அதனை அவர் இடுகுறியாற் பெயர் பெற்றமைக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டிருக்க மாட்டார். அதனால், அவர் காலத்தில் இந்நூல் வழக்கில் இருந்திருக்கவேண்டும். நன்னூல் உரையாசிரியராக விளங்கும் சங்கர நமச்சிவாயப் புலவர் முதலியோர் இடுருதியால் நூல் பெயர் பெற்றமைக்கு இந்த நூலினை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளனர். களவியல் உரையாசிரியர் காலத்திற்குப் பின் வழக்கிறந்ததாகக் கருதப்படும் இந்நூலினைப் பின்னர்வந்த இலக்கண உரையாசிரியர்கள், முன்னோர் மொழி பொருளைப் போற்றும் வகையில் எடுத்துக் காட்டியிருத்தல்கூடும். ‘கலைக்கோட்டுத் தண்டு’ என்னும் இந்நூல் இக்காலத்தில் இல்லாமையாலும், இப்பெயர் இடுகுறியாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளமையாலும், இப்பெயர் கொண்டு இந்நூல் கூறும் பொருள் இதுவாகுமென்று ஊகித்துணரவும் வாய்ப்பில்லை.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலைக்கோட்டுத் தண்டு"/>
<section begin="கலைக்கோட்டு முனிவர்"/>
{{dhr}}
{{larger|<b>கலைக்கோட்டு முனிவர்:</b>}} கம்பராமாயணத்தில் பாலகாண்டத் திருஅவதாரப் படலத்தில் கலைக்கோட்டு முனிவர் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இவர் விபாண்டக முனிவருக்கு மகன்; மான் வயிற்றில் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறார். பிறக்கும் போதே மான் கொம்பு ஒன்று தலையில் உடையவராகப் பிறந்ததால் கலைக்கோட்டுமுனிவர் என்று அழைக்கப்பட்டார். இவரை இருசிய சிருங்கர் என்றும் கூறுவர்.
மகப்பேறு உண்டாகக் கலைக்கோட்டு முனிவரை அழைத்து வேள்வி செய்யவேண்டும் என்று தசரதனுக்கு வசிட்டர் அறிவுரை கூறுகின்றார். இவர் வரலாறு அப்பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
உரோம பாதனின் அங்க நாட்டில் நெடுங்காலம் மழையின்றிப் பஞ்சம் பெருகியது. கலைக்கோட்டு முனிவர் இங்கு வரின், மழை பெய்யும் என்று பெரியோர்கள் கூற, அரசனும் அம்முனிவரை மயக்கி அழைத்துவரக் கணிகை மகளிரை அனுப்புகிறான். தவநெறியில் ஈடுபட்ட முனிவரது குடிலின்கண் அவர்கள் தவசியர் போல வேடங்கொண்டு சென்றனர். அம்முனிவரும் அவர்களை வரவேற்று உபசரித்தார். இனிய கனிகளை அவர்கள் நல்க முனிவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் விரும்பிய வண்ணம் முனிவர் அங்க நாட்டெல்லையை அடையப் பெருமழை பொழிந்தது. அரசனும் முனிவரை வரவேற்று வீழ்ந்து வணங்கினான். மகளிர் செய்த வஞ்சமிது என முனிவர் உணர்ந்த போது, மன்னவன் பணிந்து வேண்ட முனிவர் சினம் நீங்கியது. தன் அரண்மனைக்கு அவரை அழைத்துச் சிங்காதனத்தில் இருத்தித் தன் மகள் சாந்தையை மணங்கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் அவளை மணந்து உரோமபாதன் அரண்மனையிலேயே தங்கி இருந்தார்.
வசிட்ட முனிவரின் அறிவுரைப்படி, தசரத மன்னன் அங்க நாட்டிலிருந்து கலைக்கோட்டு முனிவரை வரவழைத்துப் பெருமைப்படுத்தினான். பின்னர், இம்முனிவர் உதவியுடன் புத்திர காமேட்டி வேள்வி செய்தான். அதன் பயனால் மன்னன் மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் முறையே இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன் ஆகியோரை ஈன்றனர்.
{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="கலைக்கோட்டு முனிவர்"/>
<section begin="கலைஞான தீபம்"/>
{{dhr}}
{{larger|<b>கலைஞான தீபம்</b>}} வீரை கவிராச பண்டிதரால் இயற்றப்பெற்ற ஒருநூல், அவர் பழைய சேது சமத்தானத்தைச் சேர்ந்த ‘வீரசோழன்’ எனப்படும் வீரை நகரில் தோன்றியவர். அந்தணர் மரபினைச் சேர்ந்தவர். அவர் முன்னோர் வேம்பத்தூரிலிருந்து சென்றவராவர். ‘கவிராச பண்டிதர்’ என்பது அவரது சிறப்புப் பெயராகும். கலைஞான தீப நூலின் 96–ஆம் பாடலில் அமைந்துள்ள ‘தாரணி தன்னில் கவிராச சுந்தரன் தந்தனனால்’ என்னும் தொடரால் கவிராச பண்டிதர் என்பது சிறப்புப் பெயராகும் என்பதும், சுந்தரன் என்பது புலவர்தம் இயற்பெயராக இருத்தல்கூடும் என்பதும் புலாகின்றன. இந்நூல் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் ஆகியது. இந்நூலில் 101 செய்யுட்களில் முன் 50 செய்யுட்கள் தோத்திரமாகவும், பின் 50 செய்யுட்கள் சாத்திரமாகவும் அமைந்துள்ளன. இதன் 101–ஆம் பாடல் நூற்-<noinclude></noinclude>
1gfrfuhix07nmasnozn1ykkxma80aer
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/905
250
642589
1954603
1931486
2026-07-19T06:58:42Z
Sridevi Jayakumar
15329
1954603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைப்பு அதிகாரி|877|கலைப்பு அதிகாரி}}</noinclude>பயன் கூறுவதாக உள்ளது. நூல் முழுதிலும் சிவம், சத்தி ஆகிய இரண்டன் வேறுபாடற்ற நிலையினை ஆசிரியர் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இந்த நூலின் முழுப்பெயர் ‘புவனாம்பிகை கலைஞான தீபம்’ என்பதாகும். இதனை ஆசிரியர் முதற்செய்யுளில், ‘புவனை கலை ஞான தீபப் பனுவல்’ என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகையைப் பூரணி, புராதனி, திரிபுரை, அபிராமி, ஞானப்பசுங்கொடி முதலிய பெயர்களால் சுட்டி வழுத்தியுள்ளார். ‘எனக்குத் தொழில் கொடுந் தீதான பாவம் இயற்றிடுவது உனக்குத் தொழில் அது தீர்த்து என்னை ஆள்வது’ என்று இவர் தம் சிறுமையினையும், அதனை நீக்கி ஆளும் அம்பிகையின் அருள் திறத்தினையும் அழகுறக் காட்டியுள்ளார். நூலின் பிற்பகுதியில், அக்கினி சக்கரம், இந்திர சக்கரம், உலக வசியம், மோகச்சக்கரம், புவனை யந்திரம், மந்திரப் பயன், ஓமம், திருவடிப் பேறு போன்ற பல யந்திர தந்திரச் செய்திகளையும், சாத்திரச் செய்திகளையும் கூறியுள்ளார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கலைஞான தீபம்"/>
<section begin="கலைப்பு அதிகாரி"/>
{{dhr}}
{{larger|<b>கலைப்பு அதிகாரி:</b>}} நிறுவனக் கலைப்பு நடவடிக்கைத் தொடர்பாக உயர்நீதி மன்றங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்படுபவர் கலைப்பு அதிகாரி (Official Liquidator) எனப்படுவார். மாவட்ட நீதிமன்றங்களில் நொடிப்பு நிலையர் சொத்தாட்சி அலுவலர் (Official Receiver in Insolvency) அவற்றின் கலைப்பு அதிகாரியாக இருப்பார். மாவட்ட நீதிமன்றங்களில் நொடிப்பு நிலையர் சொத்தாட்சி அலுவலர் இல்லாத போது, மத்திய அரசு அரசுப் பதிவிதழ் (Official Gazette) மூலம் அறிவிப்புச் செய்து, கலைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும். மத்திய அரசு கலைப்பு அதிகாரிக்குத் துணைபுரிகின்ற வகையில் பல துணைக் கலைப்பு அதிகாரிகளையும் நியமிக்கும்.
கலைப்பு அதிகாரியின் பணி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அவர் சட்டப்படி செய்தவை அனைத்தும் சட்டப்படி செல்லுறத்தக்கவையாகும். கலைப்பு அதிகாரியின் பணியமர்வு அல்லது தகுதி நிலைக் குறைபாடுகள் அவற்றைப் பாதிப்புறச் செய்வதில்லை.
கலைப்பு அதிகாரியின் பணிக்கான ஊதியம், நிறுவனச் சொத்தினின்று சுட்டணமாகக் குறித்துரைக்கப்பட்ட ஒரு தொகை மத்திய அரசாங்கத்திடம் செலுத்தப்படும்.
மத்திய அரசு கலைப்பு அதிகாரியின் நடத்தையைக் கண்காணிக்கவும் கவனிக்கவும் மற்றும் அவர் நேர்மையாக நடந்திருக்கும்போது அல்லது கடனாளர் பங்குச் கடப்பாட்டாளரால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்போது அதனை விசாரிக்கவும் அதிகாரமுடையதாகும்.
<b>விவர அறிக்கை அனுப்புதல்:</b> கலைப்பு அதிகாரியின் பணியை இலகுவாக்கும் பொருட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை ஓர் அறிக்கையில் நிறுவன அல்லது இயக்குநர் செயலர் (Secretary) அல்லது மேலாளர் அல்லது நிறுவனத் தலைமை அலுவலர் (Chief Officer of the Company) கலைப்பு அதிகாரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். கலைப்பு அதிகாரி இடைக்காலக் கலைப்பு அதிகாரியாக (Provisional Liquidator) இருக்குமிடத்து, விவர அறிக்கை பின்வரும் நிலையில் அமைந்திருத்தல் வேண்டும். அ) நிறுவனச் சொத்துகள் (கையில் பணமாக உள்ளது எவ்வளவு, வங்கியில் உள்ளது எவ்வளவு என்று தனித்தனியே குறிப்பிடுதல் வேண்டும்). மாற்று முறை ஆவணங்கள் எவையேனும் இருப்பின் அவை; ஆ) நிறுவனத்தின் கடன்கள், பொறுப்படைவுகள் (Liabilities); இ) கடன் கொடுத்தவர் பெயர். முகவரி, தொழில் முதலான விவரங்கள், பிணைக் கடன்கள் (Secured Debts), பிணையிலாக் கடன்கள் (Unsecured Debts) குறித்த விவரங்கள் (இவற்றைத் தனித்தனியே குறிப்பிடுதல் வேண்டும்); ஈ) நிறுவனத்திற்கு வந்துசேர வேண்டிய கடன்தொகை, அது எவரிடமிருந்து வரப்பெறுதல் வேண்டுமோ அவர்தம் பெயர், முகவரி, தொழில்; உ) குறித்துரைக்கப்பட்ட மற்றைய விவரங்கள் அல்லது கலைப்பதிகாரியால் வேண்டப்படும் விவரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். இவ்விவர அறிக்கை பின்னர் நிறுவன இயக்குநர், செயவர், மேலாளர் அல்லது நிறுவனத் தலைமை அலுவலர் அளிக்கும் ஆணை உறுதிமொழியின் மீது (Affidavit) கலைப்பு அதிகாரியால் சரிபார்க்கப்படும்.
<b>கலைப்பு அதிகாரியின் அறிக்கை:</b> மேற்குறிப்பிடப்பட்ட வகையில் கலைப்பு அதிகாரி விவர அறிக்கையைப் பெற்றதும், பிரிவு 455–இன்படி நிறுவனக் கலைப்பிற்குக் கட்டளையிட்ட நாளிலிருந்து கூடிய விரைவில், அதாவது 6 திங்களுக்கு மேற்படாத நிலையில் அல்லது நீதிமன்றம் நீடித்த கால அளவிற்குள் நீதிமன்றத்திற்குத் தொடக்கநிலை அறிக்கை (Preliminary Report) ஒன்றைக் கொடுத்தல் வேண்டும். அவ்வறிக்கையானது, 1) நிறுவனம் வழங்கிய பங்குத்தொகை, சந்தாத்தொகை, அதில் செலுத்திய தொகை, சொத்து மதிப்பு, பொறுப்படைவுகள், மாற்றுமுறைப் பிணையம், பங்குக் கடப்பாட்டாளரிடமிருந்து வரவேண்டிய கடன் நிலுவை, பிணையாளரிடமிருந்து வரவேண்டிய கடன் நிலுவை, நிறு-<noinclude></noinclude>
q4nzsherxd5szxforxll7afz0qbkq68
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/906
250
642591
1954604
1931491
2026-07-19T07:00:43Z
Sridevi Jayakumar
15329
1954604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைப்பு அதிகாரி|878|கலைமகள்}}</noinclude>வனத்தின் அசையாநிலை மற்றும் அசைவியல் சொத்துகள் குறித்த விவரங்கள்; 2. நிறுவனம் நிகழ்வுறாது போனமைக்குக் காரணம்; 3. நிறுவனம் நிகழ்வுறாமைக்கு நிறுவனம் தொடங்கப்பட்டமை அல்லது நிறுவப்பட்டமை குறித்த விசாரணை அவசியமாக இருப்பின், அவை பற்றிய விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
<b>நிறுவனச் சொத்துக் காப்பாளர்:</b> நிறுவனம் ஒன்று கலைக்கப்படுவதற்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது அந்நிறுவனத்தின் அனைத்துச் சொத்துக்களுக்கும் கலைப்பு அதிகாரியே காப்பாளராக இருப்பார். நிறுவனத் தொடர்புடைய சொத்துக்கள் தம் பாதுகாப்பில் வரப்பெறுவதற்காகக் கலைப்பு அதிகாரி அந்நிறுவனச் சொத்தின் ஆளுகைக்கு உட்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நாடலாம். அவர்களும் அச்சொத்தை அவரிடம் மீட்டுத் தரச் சட்டத்திற்கு உகந்த முறையில் நடவடிக்கைகளை எடுப்பர்.
<b>அதிகாரங்கள்:</b> கலைப்பு அதிகாரிக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன. 1. நிறுவனத்தின் பெயரில் அல்லது நிறுவனத்திற்காக உரிமையியல், குற்றவியல் வழக்குத் தொடுத்தல், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல், எதிர்வாதம் புரிதல்; 2. நிறுவனம் கலைக்கப்படுவதைச் செம்மையாகச் செய்து முடிக்கத் தேவையான முறையில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துதல்; 3. நிறுவனச் சொத்தைப் பொது ஏலம் அல்லது தனிப்பட்ட ஒப்பந்தம் மூலம் விற்றல், உரிமை மாற்றம் செய்தல்; 4. நிறுவனத்தின் பேரில் தேவைப்படும் கடனைப் பெறுதல்; 5. நிறுவனத்தின் அனைத்துக் காரியங்களையும் முடிப்பதற்கும் அதன் பங்கைப் பிரித்தளிப்பதற்கும் தேவைப்படும் வகையில் செயற்படுதல் ஆகியன.
நீதிமன்ற அனுமதி இல்லாமல் கலைப்பு அதிகாரிக்குக் கூடுதலாக உள்ள அதிகாரங்கள் வருமாறு: 1. நிறுவனத்திற்காக ஆவணங்களும் (Documents) ஒப்பாவணங்களும் (Deeds) எழுதிக் கொடுப்பது, முத்திரையிடுவது; 2. நொடிப்பு நிலையற்ற பங்குக் கடப்பாட்டாளருக்குச் சேர வேண்டியதைப் பெறுவது; 3. நிறுவனத்தின் பெயரால் மாற்றுச் சீட்டுகள் (Bills of Exchange), உண்டியல் அல்லது கடனுறுதிச் சீட்டு (Promissory Note) வரைவது, ஏற்பது, ஏற்படுத்துவது, மேலெழுத்துச் செய்வது; 4. இறந்துவிட்ட பங்குக் கடப்பாட்டாளர் தம் சொத்துக்குத் தம் பெயரால் நிருவாக உரிமைப் பத்திரம் (Letters of Administration) பெறுவது; 5. அலுவல் நிமித்தம் தம் பணியைச் செய்வதற்கு முகவர் ஒருவரை நியமித்துக் கொள்வது; 6. பதிவாளர் தம் அலுவலகப் பதினாவணங்கள் (Records) விவரக் குறிப்புகளைக் கட்டணமின்றிப் பார்வையிடுவது போன்றவை.
<b>கடமைகள்:</b> 1. நிறுவனச் சொத்துகளைப் பெறுவது, அவற்றைத் தம் பொறுப்பில் வைத்துக் கொள்வது 2. கடனாளர், பங்குக் கடப்பாட்டாளர் பட்டியலைத் தயார் செய்வது; 3. கடனாளர், பங்குக் கடப்பாட்டாளர் தீர்மானத்திற்கேற்பக் கூட்டங்களை நடத்துவது, அவர்களது கருத்துரைப்படி செயலாற்றுவது; 4. நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆண்டிற்கு இரண்டுமுறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பது போன்றவை.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கலைப்பு அதிகாரி"/>
<section begin="கலைமகள்"/>
{{dhr}}
{{larger|<b>கலைமகள்</b>}} கல்விக்கும் கடவுள். தொன்மைக்காலத்திலிருந்தே கலைகளை வழிபடும் வழக்கம் இந்தியாவில் இருந்துவருகிறது. கலைமகள் சரசுவதி, வாக்கு, வாக்குதேவி, வாகீசுவரி, பாரதி, வாணி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுகிறாள். இந்துக்கள் மட்டுமன்றிப் பௌத்தர்களும் சமணர்களும் இத்தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த நூலான மணிமேகலையில் நாமிசைப்பாவை, சிந்தாதேவி, நந்தாவிளக்கு, வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி எனக் கலைமகள் குறிப்பிடப்பட்டுள்ளாள். இந்நூலில் கலைமகளின் கோயில் கலை நியமம் எனக் கூறப்பட்டுள்ளது. மச்சபுராணத்தில் கலைமகளின் தோற்றம்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குமர குருபரர் தில்லிக்குச் சென்று அங்கு அரசராக விளங்கிய பாதுசாவிடம் சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடினார். சரசுவதி அந்தாதி என்னும் நூலைக் கம்பர் இயற்றினார். கலைகள் அறுபத்து நான்கு எனப்படுவதால் கலைமகள் ‘கலைக்கூட்டப் பிணை’ என உருவகம் செய்யப்படுகிறாள். பிற்காலத்தில் புலவர்கள் நூல்களை எழுதும்பொழுது முதலில் கலைமகளை வணங்கியே எழுதினர். கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்; வெள்ளை அணி உடை உடுத்தி, வெள்ளை பூண்டிருப்பாள்; வெண்ணிறமுடையவளாகத் திகழ்வாள்.
கலைமகள் பிரமனின் மனைவியென்று புராணங்கள் கூறுகின்றன. இவள் பிரமன் நாவில் வீற்றிருப்பாள். பிரமவித்தையை முகமாகவும், நான்கு வேதங்களைக் கைகளாகவும், எண்ணையும் எழுத்தையும் கண்களாகவும், இசையினையும் இலக்கணத்தையும் இரு தனங்களாகவும், இதிகாச புராணங்களைத் திருவடிகளாகவும், ஓங்காரத்தை யாழாகவும் கொண்டு கலைமகள் விளங்குகிறாள்.
{{nop}}<noinclude></noinclude>
g1txqy1x2xsbs8te3uvaycaf2mem57k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/907
250
642592
1954605
1931501
2026-07-19T07:01:24Z
Sridevi Jayakumar
15329
1954605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைமகள்|879|கலைமகள் விழா}}</noinclude>நவராத்திரி விழாவில் கடைசி நாளன்று சரசுவதி (கலைமகள்) பூசையைக் கொண்டாடுகிறார்கள். கல்வியும் ஞானமும் வேண்டுவதற்காக இந்நாளில் கலைமகளுக்கு வழிபாடு செய்கிறார்கள். கலைமகள் கோயில்களிலே பல்வேறு வடிவங்களில் வைத்து வணங்கப் பெறுகிறாள். கலைமகளின் உருவ நலன்களைப் பற்றி விட்டுணு தருமோத்திம், பூரணகாரணாகமம், சுத்தசம்கிதை, தேவிமகாத்மியம் போன்ற ஆகம நூல்கள் எடுத்துரைக்கின்றன.
பல்லவர் காலத்தில் இராசசிம்மனால் எடுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலில் மூன்று இடங்களில் கலைமகளின் சிற்பங்களைக் காணலாம். கலைமகள் நான்கு கைகள் உடையவள்; வலக் கைகளில் அட்ச மாலையும் தியான முத்திரையும் இடக் கைகளில் குண்டிகையும், ஒலைச் சுவடிகளையும், தாங்கியிருப்பாள். இக்கோயிலில் மற்றோர் இடத்தில் உள்ள கலை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 907
|bSize = 480
|cWidth = 178
|cHeight = 260
|oTop = 237
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|கலைமகள் – 10–ஆம் நூற்றாண்டுச் சிற்பம் –<br>கங்கைகொண்ட சோழபுரம்.<br>நன்றி – தமிழ்நாடு அரசுத்<br>தொல்பொருள் ஆய்வுத்துறை.}}
மகள் வலது கைகளில் அட்சமாலையும் அபயமுத்திரையும், இடக் கைகளில் கமண்டலமும் மலரும் வைத்திருக்கிறாள்.
உத்தரமேரூர்ச் சுந்தரவரதப் பெருமாள் கோயிலில் கலைமகள் தாமரை மலர்மீது நான்கு கைகளுடன் வீற்றிருக்கும் நிலையில் சிற்பம் உள்ளது. தேலியில் காலடிக்குக்கீழே இருபுறமும் இரு அடியார் தேவியை வழிபடும் நிலையிலும், தலைக்கு மேலே உள்ள இரு யானைகளுள் ஒன்று குடத்திலிருந்து நீரைத் தேவியின் முடிமீது கொட்டும் நிலையிலும் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சிக்கு அடுத்துள்ள தடையூர்ச் சிவன் கோயிலிலும் தஞ்சைப் பெரிய கோயிலின் இடப்புற நுழைவு வாயிலின் அருகிலும் கலைமகள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கலைமகள் ஞான சரசுவதி எனக் கூறப் பெறுகிறாள். கைகளில் அட்சமாலை, கமண்டலம், ஞானமுத்திரை கொண்டு ஓலைச்சுவடியைத் தாங்கி, அமர்ந்த கோலத்தில் இவள் உள்ளாள். சிதம்பரத்தின் கோபுரங்களில் உள்ள தேவகோட்டங்களில் இவள் சிற்பங்கள் உள்ளன; தேவியின் பாதத்திற்குக் கீழே முன்னவர்கள் போற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளனர்.
பிற்காலத்தில் வீணை ஏந்திய நிலையில் இருக்கும் சரசுவதியின் திருவுருவங்களைக் காணலாம். நன்னிலம் வட்டத்தில் கூத்தனூர் என்ற ஊரில் சரசுவதிக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இவள் பிரமன் மனைவியாதலால் பிராமி எனவும், எல்லாவற்றையும் தாங்குவதால் பாரதி எனவும், வாக்குத் தெய்வமாதலால் வாணியெனவும், சரசு ஏரி போல் சுவைகளின் பிறப்பிடமாக விளங்குவதால் சரசுவதி எனவும் கூறப்படுகிறாள். வேத காலத்தில் சரசு ஆற்றையும் ‘வாக்’ தேவதையையும் மக்கள் வழிபட்டனர். அதுவே, பிற்காலத்தில் சரசுவதி என்று பெயர் ஏற்படக் காரணமானது. பிரமனுடன் இருக்கும் பொழுது இவள் அன்னப்பறவை (அம்சம்) மீதோ, மயிலின் மீதோ அமர்ந்திருப்பாள். கலைமகள் வாகீசுவரி தேன் வாகீசுவரி, சௌபாக்ய வாகீசுவரி எனவும் குறிக்கப்படுகிறாள். பௌத்த சமயத்தவர் கலை மகளை அறிவுக் கடவுளான மஞ்சுசிரீ (Manjusri) என்ற போதிசத்துவரின் மனைவியாகக் கருதுகின்றனர். கலைகளின் கடவுளாக விளங்கும் இவளைக் கிரேக்கர்கள் அதீனே எனக் கூறுகின்றனர். உரோமானியர் மினர்வா எனக் கூறுகின்றனர். காண்க: நவராத்திரி.
{{Right|<b>கி.ஸ்ரீ.</b>}}
<section end="கலைமகள்"/>
<section begin="கலைமகள் விழா"/>
{{dhr}}
{{larger|<b>கலைமகள் விழா</b>}} இந்து சமயத்தவர் கொண்டாடும் விழாக்களுள் ஒன்று. புரட்டாசி மாத<noinclude></noinclude>
3ijwfe7unl1eu595ryyrsy71edqcwgg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/908
250
642593
1954608
1931507
2026-07-19T07:03:39Z
Sridevi Jayakumar
15329
1954608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலோவே|880|கவர்ந்து கடத்தல்}}</noinclude>அமாவாசைக்கு அடுத்தநாள் ‘நவராத்திரி’ விழா தொடங்கும். ஒன்பது நாட்களில் கொண்டாடப் பெறும் இவ்விழா மூன்று கூறாக அமையும்.
முதல் மூன்று நாள் துர்க்கை பூசையும், அடுத்த மூன்று நாள் இலட்சுமி பூசையும், மூன்று நாள் சரசுவதி பூசையும் நிகழ்த்தப்படும். கடைசியாக ஒன்பதாம் நாளன்று கலைமகள் விழா கொண்டாடப்பெறும். கோவில்களிலும் வீடுகளிலும் இவ்விழா கொண்டாடப்பெறும். வீரமும் செல்வமும் கலையும் மனித வாழ்விற்குத் தேவை என்பதை வலியுறுத்தவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது. தாம் பெற்ற கலைஞானத்தை, கல்வி அறிவைப் பயன்படுத்தி வாழ்வு நடத்தும் மக்கள் கலைமகள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவர்.
கலைமகள் விழாவினை வீடுகளில் கொண்டாடுவோர் தத்தம் வீட்டைச் சுத்தம் செய்து மாக்கோலமிடுவர். புதிய மாவிலைத் தோரணங்களை இளம் வாழைக்கன்றோடு நிலைப்படியில் கட்டுவர். மகள் படத்தின்முன் புத்தகம், எழுதுகோல் போன்றவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றிற்குப் பொட்டிட்டும் பூவிட்டும் வழிபடுவர். பழவகைகளையும் பொரி கடலை, பருப்புச்சுண்டல் போல்வனவும் படைப்புப் பொருளாக வைக்கப்பெறும்.
கருவியைக் கொண்டு தொழில் நடத்துபவர்கள் இந்நாளில் அக்கருவிகளைச் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமமிட்டுப் பூச்சூட்டி, தேங்காய் உடைத்து, மணப்புகை காட்டி, கற்பூரம் காட்டிப் பூசை செய்வர். பழவகைகளையும் பொரி கடலையையும் சுண்டலையும் பூசைப் பொருள்களாகப் படைத்து அனைவர்க்கும் வழங்குவர். ஊர்தி உடையவர்கள் இளம் வாழைக்கன்றினை அதற்குச் சூட்டி, வீதி வலம் வருவர். கருவியை வைத்துப் பூசை செய்பவர்கள் இரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பர். இப்பூசையைச் சரசுவதி பூசை, ஆயுதபூசை என்று கூறுவர். அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து, தாம் பணியாற்றும் இடத்தில் மாலை வேளையில் கலைமகள் விழாவைக் கொண்டாடுவர். வசதி வாய்ப்புக்கேற்ப இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போல்வனவற்றையும் நடத்துவர். வீணையைக் கையிலேந்திய கலைமகளின் படமும் சிலையும் இவ்விழாவில் பெரிதும் இடம்பெறுவதுண்டு.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கலைமகள் விழா"/>
<section begin="கலோவே"/>
{{dhr}}
{{larger|<b>கலோவே</b>}} தென்மேற்கு இசுகாட்லாந்தில் (Scotland) உள்ள நிலப்பகுதி. இங்கு உள்ள இரின்சு (The Rhinns) ஒரு மலைப்பாங்கான முந்நீரகம். கலோவேப் (Galloway) பகுதி ஆடுமாடு வளர்ப்புக்குப் பெயர் பெற்றது. இங்கு உள்ள ஆடுமாடுகள் கொம்புகளற்றனவாகவும், கருநிறமுள்ளனவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்துள்ள தம்பிரீசும் (Dumfries) கலோவேயும் இணைந்து ஓர் உள்நாட்டு நிலப்பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தம்பிரீசு–கலோவே பகுதியின் பரப்பு 6,475 ச.கி.மீ.; மக்கள் தொகை 145,078 (1981). இப்பகுதி நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கலோவே"/>
<section begin="கவர்ந்து கடத்தல்"/>
{{dhr}}
<b>கவர்ந்து கடத்தல்: கடத்தல்:</b> கவர்ந்து கடத்தல் இந்தியாவிலிருந்து கடத்தல், சட்டப்படியான காப்பாளரிடமிருந்து கடத்தல் என இருவகைப்படும். இவற்றுள் இந்தியாவிலிருந்து கடத்தல் என்பது, ஒருவரை அவரது இசைவின்றி அல்லது அவருக்கு இசைவளிக்கும் சட்டப்படியான காப்பாளரது இசைவின்றி இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் கடத்திச் செல்வது. சட்டப்படியான காப்பாளரினின்று கடத்தல் என்பது, பதினாறு வயதிற்கு உட்பட்ட ஓர் ஆணை அல்லது பதினெட்டு வயதிற்கு உட்பட்ட ஒரு பெண்ணை அல்லது புத்தி சுவாதீன மற்ற ஒருவரை அவர் தம் சட்டமுறையிலமைந்த காப்பாளரது அனுமதியின்றி அழைத்துச் செல்வது.
ஒருவரை இந்தியாவினின்று கடத்திச் செல்லுவதற்கும், சட்டப்படியான காப்பாளரிடமிருந்து கடத்திச் செல்லுவதற்கும் ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
கவர்ந்து கடத்தலில் மேற்சுட்டியவற்றைத் தவிர மேலும் சில வகைகள் உண்டு. அவை: 1. வயது வாராத ஒருவரைப் பிச்சை எடுக்கச் செய்யும் பொருட்டு அல்லது வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் பொருட்டுக் கவர்ந்து கடத்தல். இதற்குப் பத்தாண்டுகள்வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
2. ஒருவரைக் கொலை செய்யும்பொருட்டு அல்லது அது போன்ற அபாயத்திற்கு உள்ளாக்கும் பொருட்டுக் கவர்ந்து கடத்தல். இதற்கு ஆயுள் சிறை அல்லது பத்து ஆண்டுக் கடுங்காவலும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
3. ஒருவரை மறைவாக அல்லது சட்ட விரோதமான வகையில் அடைத்து வைக்கும் உட்கருத்துடன் கவர்ந்து கடத்தல். இதற்கு ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
4. பெண்ணொருத்தியை அவளது விருப்பத்திற்கு மாறாக மணமுடிக்கும் வகையில் கவர்ந்து கடத்தல். இதற்குப் பத்தாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.<noinclude></noinclude>
exrjkn228jz4vbt4b2y34i2e4e7httc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/909
250
642598
1954609
1931516
2026-07-19T07:04:17Z
Sridevi Jayakumar
15329
1954609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்|881|கவனம்}}</noinclude>5. ஒருவரைக் கொடுங் காயத்திற்கு அல்லது அடிமை நிலைக்கு உள்ளாக்குதல்; அல்லது இயற்கைக்கு மாறான காமத்திற்கு அல்லது அத்தகைய அபாயத்திற்கு உள்ளாக்குதல் பொருட்டுக் கவர்ந்து கடத்துதல்; இதற்குப் பத்தாண்டுச் சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
6. பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தையொன்றின் வசமுள்ள அசைவியற் பொருளை நேர்மையற்ற முறையில் கைக்கொள்ளும் நோக்கில் அதனைக் கவர்ந்து கடத்தல்; இதற்கு ஏழாண்டுகள் சிறையும் தண்டத் தொகையும் தண்டனைகளாகும்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கவர்ந்து கடத்தல்"/>
<section begin="கவனம்"/>
{{dhr}}
{{larger|<b>கவனம்:</b>}} அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல நூற்றுக்கணக்கான தூண்டல்கள் ஒவ்வொரு மனிதரையும் தாக்குகின்றன. அத்தூண்டல்கள் அவரதம் பல்வேறு புலனுறுப்புகளைத் தூண்டுகின்றன. இருப்பினும், இயற்கையில் ஒருவர் அத்தூண்டல்களுக்கெல்லாம் துலங்கல்கள் (Response) செய்வது இயலாததாகும். எனவே, தூண்டல்கள் பலவற்றுள் அவருக்கு வேண்டிய தூண்டல் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் துலங்க வேண்டியுள்ளது. அவ்வாறு பல தூண்டல்களுக்கிடையே, குறித்த ஒன்றைத் தம் நனவு நிலையில் (Conscious State) தேர்ந்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட துலங்கலை உண்டாக்க வழி செய்யும் செயற்போக்குக் கவனம் (Attention) எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர் ஒருவர் பின் வரும் சூழ்நிலைத் தூண்டல்களான வீதிகளில் எழும் இரைச்சல், சந்தனத்தின் மணம், நண்பர்களின் உரையாடல், வானிலை மாற்றங்கள், கிரிக்கெட்டு விளையாட்டுப் பற்றிய தொலைக்காட்சி ஆகியவற்றுள் கிரிக்கெட்டுப் பற்றிய தொலைக்காட்சியைத் தேர்ந்தெடுத்துக் கவனிக்கிறார். ஏனைய தூண்டல்கள் அவரது கவனத்தின் விளிம்பிலேயே தங்கிவிடுகின்றன.
கவனத்தைப் பற்றி ஆராயும்போது பின்வரும் பல கேள்விகள் எழுகின்றன. அவையாவன: கவனத்திற்கு அடிப்படைக் காரணமாக நரம்பு மண்டலத்தில் அமைந்துள்ள மூளையுறுப்பு யாது? கவனத்தினின்று விளையும் புலனுறுப்பு, உடலுறுப்பு, தசை மாற்றங்கள் ஆகியவை யாவை? தூண்டல்களைக் கவனிக்கும் தொடர்புள்ள புலனுறுப்புகள் எப்பொழுதும் முழுத் திறனோடு செயற்படுகின்றனவா? ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் எத்துணை எண்கள், எழுத்துகள், புள்ளிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கவனிக்க இயலும்? ஒன்றுக்கும் மேற்பட்ட தூண்டல்களை ஒருவர் கவனிக்க இயலுமா? ஒரு வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஏனைய சூழ்நிலைத் தூண்டல்கள் எவ்வாறு பாதிக்கின்றன? கவனத்தைத் தீர்மானிக்கும் நிருமாணிகள் வகைகள் யாவை? கவனத்தின் யாவை?
<b>கவனத்திற்கு அடிப்படையான மூளையுறுப்பு:</b> கவனத்தைத் தீர்மானிக்கும் ஆதார நரம்பு மண்டலப் பகுதியாக நடுமூளையிலுள்ள (Mid-Brain) ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்பு (Ascending Reticular Activation System) அமைந்துள்ளது. இவ்வமைப்பு அடிமுளை (Brain Stem), மூளை நரம்பு உள்ள முடிச்சு (Thalamus) ஆகியவற்றிற்கிடையே நரம்புப்பின்னலைக் குறிக்கிறது. இதுவே, புலனுணர்வு மற்றும் உடற்பாகங்களின் தோரணைகளைப் (Posture) பற்றிய செய்திகளை வடிகட்டிப் பெரு மூளைக்கு அனுப்புகிறது.
ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்புப் பற்றிய பரிசோதனை ஒன்றில் அது உணர்வுகளை வடிகட்டி அனுப்பும் பாங்கு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையில் ஒரு பூனையின் செவியுணர்வு நரம்பின் செயல்களை மின்னணு முறையில் ஆராய்ந்தனர். முதலாவதாக, அப்பூனைக்கு அருகில் ‘க்ளிக் - க்ளிக்’ என்னும் ஒலிகளைத் தொடர்ச்சியாக எழுப்பி, அதன் செவிப்புலனைத் தூண்டினர். அப்போது பூனை அவ்வொலியை முழுமையாகக் கேட்டதற்கு அறிகுறியாக ‘மின்னணு நாடாவில்’ ஒரு குத்தூசி வடிவம் பதிவாகியது. பரிசோதனையின் இரண்டாம் கட்டமாக, அப்பூனையின் முன் ‘கிளிக் - கிளிக்’ ஒலிகளுடன் இரண்டு எலிகளைக் காட்டினர். அப்போது ஒலிகளைக் குறைவாகக் கேட்டதற்கான அறிகுறியை மின்னணு நாடாப் பதிவு காட்டியது. மூன்றாம் கட்டமாக, எலிகளை அச்சோதனையிலிருந்து அகற்றினர், ‘கிளிக்’ ஒலிகள் மட்டும் எழுப்பப்பட்டன. அப்போது பூனை முன்போலவே அவ்வொலிகளுக்கு மறுவினை புரிந்ததை மின்னணு நாடாப் பதிவு காட்டியது. இப்பரிசோதனை ஏறுமுகப் பின்னல் தூண்டும் அமைப்பு எவ்வாறு புலனுணர்வுகளை வடிகட்டித் தேவையானவற்றை மட்டும் மூளைக்கு அனுப்பும் நரம்பு மண்டலப் பகுதியாக அமைந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது.
<b>கவனத்தினின்று விளையும் உறுப்பு மாற்றங்கள்:</b> ஒருவர் கூர்ந்து கவனிக்கும்போது, பொதுவாக மூவகையான உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக, தொடர்பான புலனுறுப்பில் இணக்கம் (Adjustment) ஏற்படுகிறது. பிறகு, கவனத்தில் ஈடுபடுபவரின் உடற் பாகங்களின் தோரணைகளில் இணக்கம் ஏற்படுகிறது. இறுதியாக, அவரது தசைகள் முருக்கேறுகின்றன. சான்றாக, துணிச்சலுள்ள<noinclude>
<b>வா.க. 6 – 56</b></noinclude>
jmyx6gkxlmwlw8y1vipaemix92v4w3n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/912
250
642607
1954611
1931726
2026-07-19T07:05:12Z
Sridevi Jayakumar
15329
1954611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவனம்|884|கவனமின்மை}}</noinclude><b>விடாய்களும் பயன்மதிப்புகளும்:</b> ஒருவரின் தேவைகளும், அத்தேவைகளை நிறைவு செய்வதில் தொடர்பான தூண்டல்கள் எத்துணை அளவு பயனுள்ளவை என்பது பற்றிய எண்ணங்களும் பொருள்களின்பால் அவரது கவனத்தைத் தீர்மானிக்கின்றன. சான்றாக, பசியுடனிருக்கும். ஒருவர் வழியிலுள்ள ஏனைய கடைகளுள் சிற்றுண்டிக் கடைகளையே கவனிக்கிறார். மேலும், பழக்கத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கடையின் உணவு வகைகளே தமக்குப் பயன் அளிப்பதாக அவர் எண்ணுவதால் அக்கடையையே கவனித்துச் செல்கிறார்.
<b>கவனத்தின் வகைகள்:</b> கவனத்தைத் தானியங்கு கவனம் (Involuntary Attention), இயக்குக் கவனம் (Voluntary Attention), பழக்கக் கவனம் (Habitual Attention) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். கவனச் செயலில் ஈடுபட்டிருப்பவர் கட்டுக்கோப்பில் இல்லாமல் அதில் ஈடுபடுவதைத் தானியங்கு கவனம் என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பெண்ணை ஆண் பார்ப்பது, பட்டாசு ஒலியைக் கேட்பது, தலையின் மேல் விழுந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் கவனிப்பது போன்றவற்றைக் கூறலாம். இதற்கு மாறாக, ஓர் எண்ணத்தோடோ நம்பிக்கையோடோ பயன் கருதியோ சூழ்நிலைத் தூண்டல்களைக் கவனித்தலை இயங்கு கவனம் எனக் கூறுவர். சான்றாக, துணிமணிகள் வாங்கச் சிறந்த கடை ‘மல்லிகை’ என்னும் பெயர் கொண்ட துணிக்கடையே என எண்ணி அங்குச் செல்வது, பழனிக்குச் செல்ல வேண்டுபவர் பழனிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் செல்வது ஆகியவற்றைக் கூறலாம். பழக்கக் கவனம் ஒருவரிடம் பொதுவாகக் காணப்படும் நடத்தைத் தொடர்பானதாகும். சான்றாக, ஆசிரியர் தமக்கு வணக்கம் செலுத்தும் மாணவரைக் கவனித்து அறிவது, ஒருகுறிப்பிட்ட வீதி வழியாகப் பேருந்து நிற்குமிடத்திற்குச் செல்வது ஆகியவற்றைக் கூறலாம்.
{{Right|<b>இரா.பா.கி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>சண்முகம், தா.ஏ.,</b> உளவியல், இரண்டாம் பாகம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., சென்னை, 1966.
<b>Garrett, H.E.,</b> General Psychology, Eurasia Pub., New Delhi, 1964.
<b>Marx, M.H.,</b> Introduction to Psychology: Problems, Frocedures and Principles, Macmillan, New York, 1976.
<section end="கவனம்"/>
<section begin="கவனமின்மை"/>
{{dhr}}
{{larger|<b>கவனமின்மை</b>}} தகுந்த கவனத்துடன் நடக்க வேண்டிய கடமை ஒருவருக்குச் சட்டப்படி இருந்து அவர் அக்கடமையினின்று தவறுவதன் மூலமாய் மற்றொருவருக்குத் தீங்கு விளைவது கவனமின்மை (Negligence) யாகும். கவனமின்மை தற்கவனமின்மை (Contributory Negligence), தண்டனைக்குரிய கவனமின்மை (Culpable Negligence) என இரண்டு வகைப்படும்.
<b>தற்கவனமின்மை:</b> தாம் செய்யும் செயலினால் ஒருவர் தமக்கு நேரும் தீங்கைத் தவிர்த்துக் கொள்ளாமல் இருப்பது தற்கவனமின்மையாகும்.
<b>தண்டனைக்குரிய கவனமின்மை:</b> குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவருக்கு அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்கை முன்னெச்சரிக்கையுடனும் தக்க கவனத்துடனும் இருந்து தவிர்க்கும் கடமையினின்று ஒருவர் தவறுவது தண்டனைக்குரிய கவனமின்மையாகும்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கவனமின்மை ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆயினும், ஒருவர் மற்றொருவரைக் கவனமின்மையால் கொன்றுவிடும்போது, அவர் மனிதக் கொலை அல்லது கவனமின்றி மரணம் விளைத்தல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார். எனினும், அவர் கொலைக் குற்றத் தண்டனையைவிடக் குறைந்த அளவு தண்டனையையே பெறுகிறார். கவனமின்மை தொடர்பான வழக்குகளில் கீழ்க்காணும் செயல்கள் கவனமின்மையால் ஏற்பட்டதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
<b>கவனமின்மைச் செயல்கள்:</b> நோயை ஏற்படுத்தும் வகையில் நத்தை போன்ற அழுகிய பொருள்களை இஞ்சிநீர்ப் புட்டியில் அடைத்து விற்பனைக்கு விடுவது சாலையோரங்களில் வண்டிகளை ஓட்டுவோர் கவனமற்ற முறையில் கடைகளில் செலுத்துவது; சாலையின் குறுக்கே நகராட்சியர் அல்லது மாநகராட்சியர் குழி தோண்டிய பகுதிகளைச் சிவப்பு விளக்குகள் அல்லது செங்கொடிகள் நட்டு உரிய முறையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யாதிருப்பது; அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் அறுவை செய்த இடத்திலிருந்து துணியை அகற்றாதிருப்பது; நல்ல மனநிலையில் உள்ள ஒருவருக்குப் பைத்தியம் பிடித்தவர் என்று சான்றிதழ் வழங்குவது; நோயாளிக்கு அளவுக்கதிகமாக மருந்து கொடுத்துத் தீங்கை ஏற்படுத்துவது; தொற்றுநோய் உள்ள ஒருவர் அந்நோயை எல்லோருக்கும் பரவும் வகையில் நடந்துகொள்வது போன்றவை கவனமின்மைச் செயல்களாகும்.
{{nop}}<noinclude></noinclude>
non8w300avwjj5c14nc6pxm31ye1wfk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/913
250
642627
1954614
1931837
2026-07-19T07:06:57Z
Sridevi Jayakumar
15329
1954614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிகுஞ்சர பாரதி|885|கவிசாகரப் பெருந்தேவனார்}}</noinclude><b>நட்ட ஈடு:</b> கவனமின்மையால் விளைந்த தீங்கிற்காக வாதி எதிர்வாதியிடமிருந்து நட்ட ஈடு கேட்கலாம். நட்டம், வாதியின் உடைமைக்கு ஏற்பட்டிருக்கும் போது, சேதமடைந்த சொத்தின் மதிப்பும் அதைச் சீர்படுத்துவதற்கு ஏற்படும் செலவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நட்ட ஈடு வழங்கப்படும். நட்டம், உடலுக்கு ஏற்பட்டிருக்கும்போது, தீங்குற்றவரின் வருமானம், பொருள் ஈட்டும் திறன், வயது, எதிர்காலத்தில் அவருக்கு ஏற்படக் கூடிய வருமானப் பாதிப்பு, ஆயுள் குறைவு, மருத்துவச் செலவு ஆகியவற்றைக் கணக்கிற் கொண்டு தீர்மானிக்கப்படும்.
வாதி ஒருவருக்குத் தற்கவனமின்மையால் (Contributory Negligence) தீங்கு விளைந்திருக்கும் போது, அவர் நட்ட ஈடு கேட்க முடியாது; வாதி ஒருவர் ஆபத்துகள் மிதந்த செயல்களைத் தாமாகவே முன்வந்து இசைந்து ஏற்று, அதனால் தீங்கு நேரிட்டபோது எதிர்வாதியிடமிருந்து நட்டஈடு கேட்க முடியாது. இசைந்து ஏற்பது தீங்காகாது (Volenti Non Fit Injuria) என்பது சட்ட முதுமொழி.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கவனமின்மை"/>
<section begin="கவிகுஞ்சர பாரதி"/>
{{dhr}}
{{larger|<b>கவிகுஞ்சர பாரதி:</b>}} இவர் கி.பி. 1810-இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருங்கரை கிராமத்தில் பிறந்தார். இவர் இளமையில் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை பெற்றார். இசையிலும் இவருக்கு நல்ல தேர்ச்சி ஏற்பட்டது. மதுரகவி பாரதியார் இவருக்குச் செய்யுள் இலக்கணம் கற்பித்தார். நல்ல இசைப் பாடல்களையும் சிறந்த கவிதைகளையும் இயற்றும் திறமை இவருக்கு அமைந்தது. இவர் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். இவரது செய்யுளியற்றும் ஆற்றலை வியந்து சிவகங்கை மன்னர் இவருக்குக் ‘கவி குஞ்சரம்’ என்னும் பட்டம் வழங்கினார். இப்பெயரே பிற்காலத்தில் இவருக்கு நிலைபெறுவதாயிற்று. இவரது இயற்பெயர் கோடீசுவர பாரதி என்பதாகும்.
கவிகுஞ்சர பாரதியின் சிறப்புகளைக் கேள்விப்பட்ட முத்துராமலிங்க சேதுபதி, இவரைத் தம் அவைக்களப் புலவராக்கினார். சேதுபதிகளின் வேண்டுகோளால் கச்சியப்பர் அருளிய கந்தபுராணத்தை இசைப் பாடல்களாகவும் விருத்தங்களாகவும் பாடினார். இது கந்தபுராணக் கீர்த்தனைகள் எனப்படும். இதனை முடிப்பதற்கு இவருக்கு 5 ஆண்டுகளாயின. இவருக்கு இந்நூல் பெரும் புகழை ஈட்டித் தந்தது. இவர் இயற்றிய பிற நூல்களாகிய பேரின்பக் கீர்த்தனைகள், அழகர் குறவஞ்சி, திருவேங்கட மாலை, மீனாட்சியம்மை அடைக்கல மாலை, கயற்கண்ணி மாலை முதலியனவும் புலவர் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டன. தம் வாழ்நாளின் பெரும்பகுதியை இசையிலும் இலக்கியத்திலும் ஈடுபடுத்திய இவர் கி.பி. 1896-இல் காலமானார். {{Right|<b>வி.சே.</b>}}
<section end="கவிகுஞ்சர பாரதி"/>
<section begin="கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்"/>
{{dhr}}
{{larger|<b>கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன் (கி.பி. 12–ஆம்.நூ.)</b>}} கல்வெட்டினால் அறியலாகும் தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் திருநாராயணபட்டன் என்பதாகும். இவர் அந்தணர் மரபில் தோன்றியவராவார். ‘கவிகுமுத சந்திர பண்டிதன்’ என்பது இவர்தம் புலமைச் சிறப்பால் பெற்ற பட்டப்பெயராதல் வேண்டும். இவர் புலவர்களாகிய குமுதமலர்களுக்கு இடையே விளங்கும் சந்திரனை ஒத்தவராவார் என்பதனை இவர்தம் பட்டப்பெயர் விளக்குவது. இவர் திரிபுவனி மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப் பெற்ற ஊரைச் சேர்ந்தவர். அது இன்றைய புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது. இப்புலவர் முதலாங் குலோத்துங்க சோழமன்னன்மீது, ‘குலோத்துங்க சோழ சரிதை’ என்றொரு காவியம் பாடி, அதனை அரசன் விரும்பியவாறு அத்திரி புவனியூர் மகாசபையார் முன் அரங்கேற்றினார். அதற்காக இப்புலவர் அவ்வூரில் இறையிலியாக நிலங்கள் பரிசளிக்கப் பெற்றார். இச்செய்திகள், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த திரிபுவனி ஊரிலுள்ள சிவன் கோயில் மண்டபத்தின் தெற்கு மதிற்சுவரில் இடம்பெற்றுள்ள முதற் குலோத்துங்க சோழ மன்னனின் 29–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்றுள்ளன. அக்காவியத்தை இவர் குலோத்துங்க சோழனின் கலிங்கப் படையெடுப்பிற்கு முன்னர்ப் பாடியிருத்தல்வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் இவர் வாழ்ந்த காலத்தினராவார். இவர் பாடிய ‘குலோத்துங்க சோழன் சரிதை’ இன்று கிடைக்கவில்லை.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்"/>
<section begin="கவிசாகரப் பெருந்தேவனார்"/>
{{dhr}}
{{larger|<b>கவிசாகரப் பெருந்தேவனார்</b>}} திருக்குறளைச் சிறப்பிக்கும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை இயற்றிய புலலர்களுள் ஒருவர். திருவள்ளுவமாலைச் செய்யுட்களுள் ‘எப்பொருளும் யாரும்’ எனத் தொடங்கும் வெண்பாவினைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அப்புலவரின் வேறாவார் என்பதனை உணர்த்துவதற்கு, கவிக்கடல் எனப் பொருள்படும் கவிசாகரம் என்னும் சிறப்பு அடைமொழியினைச் சேர்த்து இவர் ‘கவிசாகரப் பெருந்தேவனார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். பூவிற்குத் தாமரையும், பொன்னுக்குச் சாம்புநதமும், ஆவிற்கு அருமூனி ஆவும், தெய்வத்துள்<noinclude></noinclude>
exy18uw319fkgtfhb8r90ke8yf9fnod
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/914
250
642628
1954616
1931856
2026-07-19T07:08:01Z
Sridevi Jayakumar
15329
1954616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிதை|886|கவிதை}}</noinclude>திருமாலும்போல, வள்ளுவரின் திருக்குறள் வெண்பாபாவிற்குள் சிறந்து விளங்குகிறது என்று பாராட்டியுள்ளார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கவிசாகரப் பெருந்தேவனார்"/>
<section begin="கவிதை"/>
{{dhr}}
{{larger|<b>கவிதை:</b>}} ஓர் அனுபவத்தின் கற்பனை உணர்வைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் கொண்டு அவற்றின் பொருள், ஒலி, குறிப்பு ஆற்றல் (Suggestive Power) ஆகியவற்றின்மூலம் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்பாட்டைத் தோற்றுவிக்க முயலும் இலக்கிய வகையே கவிதை (Poetry) ஆகும். எல்லாச் சமுதாயங்களும் கவிதையையே தலைசிறந்த இலக்கிய வகையாகக் கருதுகின்றன. கவிதை, மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் மிகப் பழைய மக்களின் ஓசை நயமுடைய வாய்மொழிக் கதைகளிலுமே அதன் தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் தங்கள் வரலாறுகளின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கவிதைகளாகவே வெளிப்படுத்தினர். அப்பொழுது கவிதை இசையோடும் நாடகத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருந்தது. அத்தகைய பழம் பிறப்பு உடைமையால் கவிதையே மனித நாகரிகத்தின் முதிர்ச்சியையும் மனித அறிவின் நுண்மையையும் ஆற்றலையும் காட்டக்கூடியதாகும்.
ஓசையமைப்புகளைக் கவிதைகள் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றன. யாப்பு வகைகள் மொழிக்கு மொழி மாறுபடக் காணலாம். காலத்திற்கேற்பவும் பண்பாடுகளுக்கேற்பவும் கவிதைப் பொருள்கள் மாறுபடும். எளிதில் கூறவியலாத அனுபவங்களைக் கவிதை உவமைகள், உருவகங்கள் மூலமாக அறிவிக்க முயலுகிறது. கவியின்பம் எத்தகையதென்பதை விவரித்தலும் எளிதன்று. அதனை யோகியர் மோன நிலையில் பெறும் இன்பத்தோடும், கருத்தொருமித்த காதலர் அடையும் இன்பத்தோடும் ஒப்பிடுவர்.
எது கவிதையென்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ‘மிக உயர்ந்த சொற்களை மிகச் சீரிய முறையில் உள்ளடக்கியது கவிதையென்பார் கோலரிட்சு, வேர்ட்சுவொர்த்து (Wordsworth) அமைதியில் பெறப்பட்ட ஆற்றலுடைய உணர்ச்சிகளின் தன் வெளிப்பாடே கவிதை’ என்பார். எட்கார் ஆலன் போ (Edgar Allan Poe) ‘அழகை ஒலிநயத்தோடு படைப்பது கவிதை’ என்பார். ‘வாழ்வு பற்றிய ஆய்வே’ அது என்பார் ஆர்னால்டு.
கவிதை, அறிவியலிலிருந்து மிகவும் வேறுபட்டது. அவை இரண்டின் தன்மைகளும் வெவ்வேறானவை. அறிவியல் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு வெளிப்படையான நோக்குடன் அமைந்தது. கவிதைக்கு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய வெளிப்படையான நோக்கம் ஏதும் இல்லை. அறிவியல் கூறும் உண்மையினின்றும் கவிதை கூறும் உண்மை மாறுபாடுடையது. இவையிரண்டும் அளிக்கும் இன்பங்களும் வெவ்வேறு தன்மையானவையே. ஒன்று அறிவு கொளுத்துவதைத் தலைநோக்காகக் கொண்டது; மற்றது ‘ஊன் கலந்து உயிர்கலந்து’ உவட்டாத பேருவகையை அளிக்கும் நோக்குடையது. கவிதையினின்றும் உரைநடையை வேறுபடுத்திப் பார்க்கலாம். இரண்டும் ஒரே பொருள் பற்றிப் பேசலாம்; ஒரே வகையான உணர்ச்சிகளைத் தூண்டலாம். ஆனால், கவிதை சுருங்கச் சொல்லுவதையும், குறிப்பாக உணர்த்துவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதையும் உரைநடையைவிட மிகுதியாகக் கையாளும். உரைநடையிலும் ஓசை நயம் உண்டாயினும் கவிதைக்கு அது தனிச்சிறப்புச் செய்வதாக அமையும். கவிதை மொழியில் உருக்காட்சிகளுக்கும் (Images) குறியீடுகளுக்கும் (Symbols) அதிக இடமுண்டு.
கவிதை கதைப் போக்கினது (Narrative), நாடகப் பாங்கினது (Dramatic), தன்னுணர்ச்சிக் கூற்றினது (Lyric) என மூவகைப்படும். நாட்டாரின் கதைப் பாடல்களும் (Ballads) காப்பியங்களும் (Epics) கதை கூறும் வேறு நீண்ட பாடல்களும் முதல் வகையைச் சார்ந்தவை; கவிதை நடையில் யாக்கப்பட்ட துன்பியல், இன்பியல் நாடகங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை; சுருங்கிய அளவினதாக அமைந்து, கவிஞனின் அனுபவத்தைக் கற்பனை கலந்து தெரிவிக்கும் தன்னுணர்ச்சிப் பாக்கள் யாவும் மூன்றாம் வகையின.
தொல்காப்பியர் பொருளதிகாரச் செய்யுளியலில் ஏழு வகையான இலக்கிய வகைகளையும் அவற்றிற்குரிய முப்பத்து நான்கு கூறுகளையும் பகுத்துக் கூறுகிறார். கவிதையின் சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல் வேண்டுமாதலின் அதற்குரிய மெய்ப்பாடுகளைத் தொகுத்து எட்டு வகையென்றும், விரித்து முப்பத்திரண்டு என்றும் மெய்ப்பாட்டியலில் விளக்குகிறார். உவமையியலில் உவமையின் தன்மையும் அதன் வகைகளும், உவமைச் சொற்கள் வருமிடங்களும், உவமைக்குரிய மரபும் வேறுபாடுகளும் கூறப்படுகின்றன. மரபியல், கவிஞன் எவ்வாறு மரபு கெடாது சொற்களை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இளமை, ஆண்பால், பெண்பால் பெயர்கள் இவையெனக் குறிப்பிட்டு, நூலின் இலக்கணத்தையும் தருகிறது.
கவிதைக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. கவிதையால் சமுதாயத்திற்குப் பயன் விளைய வேண்டுமென்பதே பலரது கருத்தாகும். ஓரசு (Horace)<noinclude></noinclude>
mqaqa7l3e3utemif0uo6dmdogy2n6vp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/915
250
642946
1954617
1932480
2026-07-19T07:08:43Z
Sridevi Jayakumar
15329
1954617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிதை|887|கவிராச பண்டிதர், வீரை}}</noinclude>இன்பம், பயன் ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார். திரைடன் (Dryden), போப்பு (Pope), சான்சன் (Johnson) ஆகியோர் கவிதை வாழ்க்கையை உள்ளவாறும் மகிழ்வளிக்கும் முறையிலும் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்றனர். கோலரிட்சு கவிதையின் முதல் நோக்கம் இன்பம்; இரண்டாம் நோக்கம் உண்மை என்றார். வேர்ட்சுவொர்த்து தம் ஒவ்வொரு என்று கவிதையும் ஓர் அறம் கூறும் தன்மையது அறிவித்தார். செல்லி (Shelley), கவிதை இதயத்தைத் தாக்கியும் கற்பனையைத் தூண்டியும் ஒவ்வொருவரும் எல்லா உயிர்களின்பாலும் அன்பும் இரக்கமும் கொள்ள வழிசெய்யும் பயனுள்ள கருவியேயாகும் என்று வாதிட்டார். ஆனால், இவர்களுக்குப் பின்னால் வந்த கௌடியர் (Gautier), போதலேர் (Baudelaire), இரெனன் (Renan), பேடர் (Pater), ஆசுகார் ஒயில்டு (Oscar Wilde), சுவின்பர்ன் (Swinburne) போன்றோர் கவிதை கவிதைக்காகவே என முழங்கினர். அது வாழ்க்கைப் பயனையோ அறமுணர்த்துவதையோ குறிக்கோளாகக் கொள்ளக் கூடாதென்றும் வாழ்க்கையோடு தொடர்பு கொள்வதே அதற்குக் கேடு விளைவிக்கும் என்றும் கருதினர். ஆனால், மாத்யூ ஆர்னால்டு, தால்சுடாய் போன்றோர் வாழ்க்கையை நெறிப்படுத்த முன்வாராத கவிதை தேவையற்றது என்று தெளிவுபடுத்தினர். இன்றைய மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள் மகிழ்விப்பது, அறமுணர்த்துவது என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் அல்லவென்றும் இரண்டும் இயைந்து செயற்படுதல் கூடுமென்றும் கூறுவர்.
கோலரிட்சும் அவரைப் பின்பற்றி 20–ஆம் நூற்றாண்டின் புதுத் திறனாய்வாளர்களும் ஒரு கவிதையின் பொருள், நடை, சொற்கள், அணிகள் ஆகியவை ஒன்நோடொன்று உயிர்த் தொடர்புடையனவாய், கவிதையின் முழுத் தாக்கத்திற்குத் துணை செய்வனவாய் அமையவேண்டுமென்பர். ஒரு கவிதையின் பல கூறுகள் ஒரு மாலையில் அருகருகு வைத்துத் தொடுக்கப்பட்டுள்ள பூக்களைப் போல் அல்லாமல், ஒரு வளரும் செடியில் உள்ள பூக்கள், தண்டு, இலை, வேர் ஆகியவற்றோடு உயிர்த் தொடர்பு கொண்டிருப்பதைப் போன்று ஒன்றையொன்று சார்ந்தவையாய் அமைதல் வேண்டும். கோலரிட்சு ஒரு ‘முழுக்கவிதை அளிக்கும் இன்பம் அதன் பல கூறுகள் அளிக்கும் இன்பத்தோடு பொருந்தியதாய் இருத்தல் வேண்டும்’ என்றும், ‘படிப்போன் கவிதையின் முடிவுதரும் இன்பத்தை நோக்கிச் செல்லும் வழியிலும் அதற்கேற்ற இன்பம் துய்க்கும் பாங்கிலும் கவிதை அமைய வேண்டும்’ என்றும் தெளிவுபடுத்துவார். இதனையே தொல்காப்பியர் கூறும் நோக்கு என்னும் கோட்பாடு வலியுறுத்தக் காணலாம்.
ஒரு கவிதையில் கவிஞனின் ஆளுமை (Personality) எந்த அளவு இடம்பெறல் வேண்டும்? கவிஞனின் ஆளுமைக்கே முதலிடம் என்பது மேலைநாட்டுப் புனைவியலாரின் கருத்தாகும். ஆனால், செவ்வியலார் இதனை ஏற்பதில்லை. கவிஞனின் ஆளுமை அடியோடு மறைக்கப்பட்ட கவிதையே உயர்ந்த கவிதை என்பது எலியட்டின் கருத்தாகும். கவிஞன் தனது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டே கவிதை எழுத வேண்டியிருப்பினும், அவனது அனுபவத்தின் நிலையற்ற, சாரமற்ற கூறுகளை அறவே நீக்க வேண்டுவது அவன் கடமையாகும். அதன்மூலம் அவன் தற்சார்பற்ற தலைமையைக் (Objectivity) கவிதைக்கு அளிக்கமுடிந்தால் அது நெடுங்காலம் உயிருள்ள கவிதையாக வாழ வாய்ப்புண்டு.
ஒரு கவிதை நுண்மையும் ஆழமும் வெண்மையற்ற வளப்பமும் (Subtlety, Depth and Complexity) உடையதாக இருக்க வேண்டும். இச்சிறப்புகளைப் பெறாத எட்வர்டு, சார்சு காலத்துக் கவிதைகளை (Edwardian and Georgian Poetry) மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் புறக்கணிப்பர். சொல்ல வந்த பொருளை நேரடியாக வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பல பொருள்களைத் தரவல்லதையே உயரிய கவிதையென மதிப்பிடுவர். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி, அலங்கரிக்கப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிற்பம் போன்றதாக ஒரு கவிதை அமையவேண்டுமென்பர்.
{{Right|<b>ப.ம.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Coleridge, S.T.,</b> Biographia Literaria, (ed). George Watson, Dutton, New York, 1965.
<b>Eliot, T.S.,</b> On Poetry and Poets, Faber and Faber, London, 1957.
<b>Pound, Ezra,</b> Literary Essays of Ezra Pound, (ed. T.S. Eliot, Faber and Faber, London, 1954.
<b>Shelley, P.B.,</b> A Defence of Poetry, in English Critical Essays, (ed.) E.D. Jones, Oxford University Press, London, 1950.
<section end="கவிதை"/>
<section begin="கவிராச பண்டிதர், வீரை"/>
{{dhr}}
{{larger|<b>கவிராச பண்டிதர், வீரை:</b>}} இவர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்களுள் ஒருவர். பாண்டி நாட்டுச் சேது சமசுதானத்தைச் சேர்ந்த ஊர்களுள் ஒன்றான, வீரசோழன் எனப்படும் வீரை<noinclude></noinclude>
md5vuvzxr5sln9qyp05zhbutc3o6umq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/916
250
642947
1954619
1932483
2026-07-19T07:09:54Z
Sridevi Jayakumar
15329
1954619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுகாத்தி|888|கவுகாத்தி}}</noinclude>நகரில் அந்தணர் மரபில் இவர் பிறந்தார். அதனால் இவர் வீரைக் கவிராச பண்டிதர் எனப்பட்டார். தமிழ், வடமொழி ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையாலும், கவிபாடும் திறத்தாலும் அடைந்த சிறப்புப் பெயராலேயே இவர் வழங்கப்பட்டுள்ளார். இவர் இயற்பெயர் அறியக்கூடவில்லை. இவர்தம் புதல்வர் வீரை அம்பிகாபதி என்னும் பெயரில் சிறந்த புலவராகத் திகழ்ந்தவராவார். கவிராச பண்டிதர் சக்தி வழிபாட்டில் நாட்டம் மிகக் கொண்டிருந்தார். அதனால், ஆதிசங்கரர் வடமொழியில் இயற்றியுள்ள சௌந்தரியலாரி என்னும் தோத்திர-சாத்திர நூலை அழகுற மொழிபெயர்த்துக் கவிதை நூலாக்கியுள்ளார். இவர் ஆனந்தமாலை, வராகி மாலை என்னும் இரண்டு தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். வடமொழிச் சௌந்தரியலகரியினை இரண்டு பாகங்களில், 110 செய்யுட்கள் கொண்ட நூலாக ஆக்கியுள்ளார். அந்த நூலிற்கு அதன் ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் விளங்கிய சைவ எல்லப்ப நாவலர் சிறந்த உரை வரைந்துள்ளார். ஆதிசங்கரர் தம் ‘சௌந்தரியலகரி’ நூலில் திருஞான சம்பந்தரைத் ‘திரவிடசிசு’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் அதனைத் தமிழில் ‘கவுணியன் குலமதலை’ என மொழிபெயர்த்து ஆண்டுள்ளார். மேலும் இவர் கலைஞானதீபம் என்னும் பெயரில் சாத்திரமும் தோத்திரமுமாக அமைந்துள்ள ஒரு நூலையும் இயற்றியுள்ளார். இப்புலவர் தம் முதுமைக்காலத்தில் துறவு பூண்டு வீரை நகரிலேயே வாழ்ந்து சமாதி எய்தினார் என்றும், இவரது சமாதி இன்றும் ஆரில் உள்ளது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கவிராச பண்டிதர், வீரை"/>
<section begin="கவுகாத்தி"/>
{{dhr}}
{{larger|<b>கவுகாத்தி</b>}} அசாம் (Assam) மாநிலத்தின் தலைநகரம். பிரமபுத்திரா ஆற்றின் தென்கரையில் இயற்கையின் எழில் நிறைந்த பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுடன் உள்ள சுக்லேசுவர் மலை இதன் தெற்கே உள்ளது. இம்மலையடிவாரத்தில் மிகப்பெரிய நீர்நிலைகளும் நினைவுச் சின்னங்களும் (Monuments) இருக்கின்றன. இவையன்றி இந்துக்களின் புனித பல திருத்தலங்களும் இங்குள்ளன. இந்நகருக்கு மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள காமாக்கியா கோயிலும், பிரமபுத்திரா ஆற்றுக்கிடையில் மலைத்தீவு ஒன்றில் கட்டப்பட்டுள்ள உமானந்தா திருக்கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அகவக்கிரந்தா கோயில், நவக்கிரகக் கோயில், வசிட்டர் குடில் ஆகியவை இந்நகரின் அணித்தே அமைந்து இதை ஒரு புனிதத் திருவிடமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
இது வரலாற்றுச் சிறப்புடையது. பிரக்சோகசுபுரம் என்ற பெயருடன் பண்டைய இந்து அரசான காமரூபாவின் தலைநகராக கி.பி. 400-இல் இது விளங்கியது. இதுவே மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பாகதத்த மன்னனுடைய தலைநகராகவும் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் ஒரு போர்க்களமாயிற்று. அகோம் (Ahom) இனத்தவர்களும் முகமதியர்களும் இந்நகரைத் தம்வசமாக்க அடிக்கடி போரிட்டுக் கொண்டனர். ஐம்பது ஆண்டுகளில் 8 முறை இருவரும் மாறிமாறி இதைக் கைப்பற்றினர். இறுதியில் அகோம் இனத்தவர்கள் வெற்றி பெற்றனர். அவ்வினத்து அரசர் கி.பி. 1786–இல் இந்நகரைத் தமதரசின் தலைநகராக்கிக் கொண்டார். ஆனால், கி.பி. 1816-இல் பர்மியர்கள் இந்நகரைக் கைப்பற்றினர் என்றாலும், கி.பி. 1826–இல் அசாம் ஆங்கிலப் பேரரசிற்கு அளிக்கப்பட்டபோது இது அவர்களின் ஆட்சிபீடமாக மாறியது.
அசாமின் தலைநகராக விளங்கிய கவுகாத்தி (Gauhati) கி.பி. 1874–இல் அச்சிறப்பினை இழந்தது. ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற தட்பவெப்பத்தைச் சில்லாங்கு (Shillong) நகரில் கண்டமையால் அதை அவர்களின் உறைவிடமாக்கிக் கொள்ளத் தலை நகலைத் கௌகாத்தியிலிருந்து மாற்றினர். எனினும், இருநகரங்களுக்கிடையே தொடர்பு அமைய வேண்டி உந்துவண்டி வாகனங்கள் செல்லும் நல்லதொரு சாலையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.
நிலநடுக்கம் கி.பி. 1897-ஆம் ஆண்டு ஏற்பட்டதால் கௌகாத்தி நகரம் பெருஞ்சேதத்திற்கு உள்ளாகியது. அங்கிருந்த பெருஞ்செங்கல் கட்டடங்கள், அரசின் மாளிகைகள் அனைத்தும் அழிந்தன. அதன்பின்னர்ப் புதிதாக உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய கவுகாத்தியாகும். அசாமிலிருந்து பிரிந்து மேகாலயா மாநிலம் ஏற்பட்டபோது, மீண்டும் இந்நகரம் அசாம் தலைநகரமாக்கப்பட்டு இன்று பல சிறப்புகளையும் பெற்றுத் திகழ்கின்றது.
இந்நகரம் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள வணிகமையங்களுள் சிறப்பானது. மேலும் அசாம் மாநிலத்தில் உள்ள வணிகக் கூடங்களில் தலையாயது. இங்குத்தான் வணிகத்திற்காக ஆறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நகரில் எண்ணெய் சுத்தம் செய்யும் ஆலையும், அரசினால் நடத்தப்பெறும் வேளாண்மைப் பண்ணையும் இருக்கின்றன. காசரங்கா (Kasaranga) என்னுமிடத்தில் வனவிலங்குப் பாதுகாப்பு அகம் ஒன்றுள்ளது. அங்குள்ள விலங்குகளுள் காண்டாமிருகம் குறிப்பிடத்தக்கது. அரசுக்குச்<noinclude></noinclude>
31ugcwecf2j1z99wco4ldn3hy776gxb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/917
250
642948
1954621
1932487
2026-07-19T07:10:45Z
Sridevi Jayakumar
15329
1954621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி|889|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி}}</noinclude>சொந்தமான காகித ஆலை ஒன்றும் சோப்புத் தொழிற்சாலை ஒன்றும் இந்நகரில் இயங்குகின்றன. இவையன்றித் தலைக்குத் தடவும் வாசனைத் தைலங்கள், இங்குப் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கவுகாத்தி பட்டு நெசவிற்குப் பெயர் பெற்றது. அசாம் பட்டு எனப்படும் நேர்த்திமிகு பட்டுத் துணிகள் இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. உப்பும் தானிய வகைகளும் பருப்பு வகைகளும் எண்ணெய் வகைகளும் இங்குக் கிடைக்காதவை. அவற்றைப் பிற பகுதியிலிருந்து இந்நகர மக்கள் பெறுகின்றனர். இந்தியாவிலேயே மிகுந்த மழை பெய்யும் இடங்களுள் கவுகாத்தியும் ஒன்றாகும். அடிக்கடி மாரியிலும் கோடையிலும் பிரமபுத்திரா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.
தலைமை நீதிமன்றமும் அரும்பொருட்காட்சியகமும் இந்நகரிலேயே அமைந்துள்ளன. இந்நகரத்திற்கும் கல்கத்தாவிற்கும் இடையே வானவூர்தித் தொடர்பு உண்டு. கல்கத்தா நகரோடும் சிட்டகாங்கு நகரோடும் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>பி.இ.</b>}}
<b>கவுகாத்திப் பல்கலைக் கழகம்</b> கவுகாத்தி நகரின் சலூக்பரி (Jalukbari) என்னுமிடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரிகளுக்கு இணைப்புத் தகுதி (Affiliation) தரக் கூடியதாயும் கற்பித்தலைச் செய்வதாயும் மாணவர்கள் தங்கிப் பயிலுவதாயும், (Residential) இது விளங்குகிறது. பயிற்று மொழியும் தேர்வு மொழியுமாக ஆங்கிலமும் அசாமிய மொழியும் உள்ளன. பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக ஒரு சட்டக் கல்லூரியும் உள்ளது.
கவுகாத்திப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், கல்வியியல், நாட்டுப்புறவியல் (Folklore Research), வரலாறு, சட்டம், அரசியலறிவியல், நூலகவியல், மொழியியல் இதழியல் (Journalism), தத்துவம், வாணிக நிருவாகம் பொருளியல் போன்ற கலைப் பாடங்களும், வேளாண்மைத் தாவரவியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், கணிதவியல், நிலவியல், நிலப் பொதியியல் (Geology) போன்ற அறிவியல் பாடங்களும், அரேபிய மொழி, அசாமிய மொழி, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு மொழி, உருசிய மொழி ஆகிய மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கவுகாத்தி"/>
<section begin="கவுதமிபுத்திர சிரீ சதகர்னி"/>
{{dhr}}
{{larger|<b>கவுதமிபுத்திர சிரீ சதகர்னி:</b>}} ஆந்திர அல்லது சாதவாகன அரசர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் கவுதமி புத்திர சிரீ சதகர்னியே (Gautamiputra Sri Satakarni) ஆவார். புராணங்களில் இவர் இருபத்து மூன்றாம் ஆந்திர அரசர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் 21 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனரெனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் (Inscription) இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தாரெனக் கூறப்பட்டுள்ளது. சாகர் (Sakas) இனத்தைச் சார்ந்த மேற்குச் சத்திரபாகுகளுள் ஒருவரான நகபானர் (Nakapana) இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதையொட்டிக் கவுதமிபுத்திர சிரீ சதகர்னியினுடைய ஆட்சிக் காலத்தை வரையறுத்துள்ளார்கள். நகபானாவினுடைய இறுதி ஆண்டுக்காலம் கி.பி. 124 எனக் கணக்கிட்டுள்ளார்கள். கவுதமபுத்திர சிரீ சதகர்னி சாகர்களைத் தம் 18-ஆம் ஆட்சி ஆண்டில் தோற்கடித்ததாகக் கூறியுள்ளார். ஆகவே, சதகர்னியினுடைய ஆட்சி கி.பி. 106-இல் (124—18 = 106) தொடங்கியிருக்கக் கூடும். இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டால், இவருடைய ஆட்சி கி.பி. 130–இல் முடிவடைந்திருக்கக் கூடும்.
சதகர்னியினுடைய ஆட்சியைப் பற்றிய விவரங்களைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். அவற்றுள் முக்கியமானது கவுதமி பால சிரீயின் நாசிக்குத் (Nasik) கல்வெட்டாகும். பாலசிரீ என்பவர் சதகர்னியின் அன்னை. சதகர்னியைப் பின் தொடர்ந்து ஆட்சி செய்த சதகர்னியினுடைய மகனான வாசித்தி புத்திர சிரீபுலுமாயி என்பவருடைய ஆட்சியின் 19–ஆம் ஆண்டில் அக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றது. மற்றொன்று, சதகர்னி தம் 18-ஆம் ஆட்சி ஆண்டில் பனவசி (Banavasi) என்று சொல்லப்படும் வைசயந்தி (Vaijayanthi) என்னுமிடத்தில் அமைத்திருந்த வெற்றிப் பாசறையில் இருந்து வெளியிடப்பட்டது. இவையன்றி 13,000–க்கு மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் நாசிக்கு மாவட்டத்திலுள்ள சோகால்தெம்பி (Joghal Thembi) என்னும் இடத்தில் 1906-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 4,000 வெள்ளி நாணயங்கள் நகபானாலினுடையனவாகும். ஏனையவை சதகர்னியால் மீண்டும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டனவாகும். இவற்றிலிருந்து சதகர்னி நகபானாவைத் தோற்கடித்து அவருடைய ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றினார் என்றும், கைப்பற்றிய பிறகு அங்குப் புழக்கத்திலிருந்த உள்ளூர் நாணயங்களைக் கொண்டு வரும்படி செய்து அவற்றின் மீது தமது முத்திரையை இட்டிருக்க வேண்டும் என்றும் அறியலாம். இத்தகையதொரு பழக்கம் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது சதகர்னியினுடைய செயல் புதுமையானதாகத் தோன்றாது.
சதகர்னி சாகர்கள், யவனர்கள் மற்றும் பகலவர்கள் (Pahlavas) ஆகியோரை அழித்தார்; சகரதா<noinclude></noinclude>
93jx7tqzl8k3bd1tfy0dh3kltg8usja
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/918
250
642949
1954622
1932505
2026-07-19T07:11:25Z
Sridevi Jayakumar
15329
1954622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுந்தி அடிகள்|890|கவுந்தி அடிகள்}}</noinclude>(சத்ரபா) குடும்பத்தை அடியோடு ஒழித்தார்; சாதவாகனர் பெருமையை மீண்டும் நிலைநாட்டினார். தம் குலப்பெருமையை இவர் பெரிதும் உயர்த்தினார் என்று பாலசிரீ தமது நாசிக்குக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். இவர் வென்ற இடங்களின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. அவையாவன: சுராட்டிரா (குசராத்து), விதர்ப்பா (பீரார்), மாளவம், மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, நாசிக்கு நிகரத்தைச் சுற்றியுள்ள பகுதி, பூனா. தம் குதிரைகள் மூன்று கடல்களின் நீரைப் பருகியதாகச் சதகர்னி கூறுவதிலிருந்து இவர் பேரரசின் பரப்பை ஒருவாறு ஊகித்தறியலாம். மகாராட்டிரம், வடகொங்கணம், பீரார், குசராத்து, கத்தியவார், மாளவம் ஆகியவை இவருடைய பேரரசின் கீழ் இருந்தன. ஆந்திர தேசத்தில் இவருடைய ஆட்சி ஏற்படுத்தப் பெற்றதற்குப் போதிய சான்றுகள் இல்லை.
சதகர்னி சாதி முறையை மீண்டும் நிலைநிறுத்தினார். வேத தருமத்தில் இவர் கொண்டிருந்த அசையாப் பற்றின் காரணமாக ஏகபிராமணா என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் பிராமண மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த போதிலும் ஏனைய மதத்தினரைத் துன்புறுத்த வில்லை.
சதகர்னி சிறந்த கல்வியாளர். இவர் வேதத்தை நன்கு கற்றிருந்தார். சமசுகிருத மொழி இவர் காலத்தில் ஆதிக்கம் பெற்றது.
{{Right|<b>டி.ஆர்.இரா.</b>}}
<section end="கவுதமிபுத்திர சிரீ சதகர்னி"/>
<section begin="கவுவ்வ்தி அடிகள்"/>
{{dhr}}
<b>கவுவ்வ்தி அடிகள்:</b> இவர் சிலப்பதிகாரக் காப்பிய மாந்தருள் ஒருவர்; சமணசமயப் பெண் துறவி. வணிகத்திற்காக மதுரை நோக்கிச் செல்லும் கோவலன் கண்ணகியர்க்கு இவர் வழித் துணையாகிறார். இளங்கோவடிகள் இவர் வாயிலாகக் காப்பியத் தலைவி கண்ணகியின் பண்பு நலன்களையும், சமணசமய இயல்புகளையும் விளக்குகிறார்.
வழித் துணையாதற்கேற்பப் புகார் நகரின் புறத்தே அறிமுகமாகி, மதுரை நகர் வாயில்வரை தொடர்ந்து வருகிறார். பின்னர்க் கோவலன், கண்ணகி இருவர் தம் வழித்துயர் நீக்கியமை மாதரியால் நினைவுகூரப் உண்ணா பெறுகிறது. அவ்விருவர் இறப்பறிந்து கொண்டு உலக வாழ்வு நீத்தமை மாடல நோன்புனால் கூறப் பெறுகிறது. அறிமுகம், வழித்துணையாக அமைதல், உலக வாழ்வு துறத்தல் எனப் பாத்திர முழுமை விளக்கம் பெறுகிறது.
இவர் சிலப்பதிகாரத்துள் ‘காவுந்தி ஐயை’, ‘கவுந்தி’, ‘தவமுதல் கவுந்தி’, ‘கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி’, ‘மாதவத் தாட்டி’, ‘செய்தவத்தீர்’, ‘புண்ணிய முதல்வி’, ‘ஆசில் கொள்கை அறவி’, ‘இருந்தவ முதல்வி’, ‘தவந்தரு சிறப்பிற் கவுந்தி’ ‘தவம்பெருஞ் சிறப்பிற் கவுந்தி’, ‘கண்டறி கவுந்தி’, ‘குரவர்’ எனப் பலவாறு குறிக்கப்பெறுகிறார். சமண சமயப் பெண் துறவியர் கவுந்தி என்று வழங்கப் பெறுவர். இளங்கோவடிகள், துறவியெனப் பொதுத் தோற்றம் மேலோங்குமாறு பொதுமைப் பெயராலேயே குறிப்பிடுகிறார். தனிநிலை குறிக்கும் இயற்பெயரைக் கூறவில்லை.
இவர்தம் காப்பியச் செயற்பாடு கண்ணகிக்கு வழித் துணையாக அமைவதே. அதற்கேற்பாக் கண்ணகி வழிநடை வருத்தமுறும்போது அறிமுகமாகிறார். கோவலன் மதுரைக்குச் செல்வதன் உறுதியினை அறிந்து, கண்ணகியின் மெல்லடி காட்டு வழிக்கு ஏலாதென மொழிகிறார். சமய வழிபாட்டிற்காகத் தானும் மதுரை செல்லப் புறப்படுகிறார். வழியின் இயல்புகளைக் கூறி அவர்களுடன் செல்கிறார். வழிச் செலவின் ஒருபொழுது கோவலனும் கண்ணகியும் களைப்பாறத் தான் தனித்து அமர்ந்துள்ளார். பரத்தை ஒருத்தியும் அவளுக்குரிய வீணனொருவனும் கோவலன் கண்ணகியர் குறித்துப் பண்பிலாது மொழிய, கேட்ட கண்ணகி நடுங்கிக் காதைப் பொத்திக் கொள்கிறாள். கண்ணகியின் துயர்கண்ட கவுந்தி எள்ளுநர் போலும் என் பூங்கொடியை எனச் சினந்து அவர்களை நரியாகுமாறு சபிக்கிறார். கண்ணகியால் பகல் வெம்மையில் நடக்க முடியாது என்பதற்காக இரவில் நடக்க உடன்படுகிறார். வழிச் செலவின்போது அறவுரை கூறிச் செல்கிறார். மதுரைக்குள் சென்று தான் தங்குவதற்குரிய வணிகரைக் கண்டு வருமளவும் கண்ணகிக்குக் காப்பாக அமையுமாறு கோவலனால் வேண்டப்படுகிறார். மறுபொழுது, கோவலன் தன் கனவைக் கூறியவுடன் கனவின் பயன் தீதாகும் எனக் கருதிக் கண்ணகியைக் காக்க விரைகிறார். ஊருக்குள் வணிகரின் குடியிருப்பைச் சேர்ந்துவிடின் வருந்தீங்கைத் தவிர்க்கும் வாய்ப்பாகுமென இருவரையும் ஊருக்குள் உடனே செல்லுமாறு கூறுகிறார். அப்பொழுது மாதரியின் வருகையைக் கண்டு அவளின் நல்லியல்பை அறிந்து அடைக்கலம் பற்றி விரிவாகப் பேசி இருவரையும் அவளிடம் அடைக்கலப்படுத்துகிறார். கோவலன் கண்ணகி இருவர்தம் இறப்பை அறிந்து, அவர்தம் ஊழ்வினைப் பயன் இவ்வாறு அமைந்ததே என உண்ணாநோன்பிருந்து உயிர்விடுகிறார். இவ்வாறாக இவர்தம் காப்பியச் செயற்பாடான வழித்துணை அமைகிறது.
கற்பினைச் சிறப்பித்தல் காப்பிய நோக்கு. துறவறத்தைப் பெரிதும் போற்றும் சமணசமயத் துறவி வாயிலாகக் கற்புத் திறத்தால் கண்ணகி கடவுளா-<noinclude></noinclude>
0xsxpnheisg4fipuo3tg89wf8fabnuu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/920
250
642951
1954624
1932519
2026-07-19T07:12:44Z
Sridevi Jayakumar
15329
1954624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுனாசு|892|கவூர்}}</noinclude>நிற்பதால் அவர்களை வற்புறுத்தி நன்னிலையை மேற்கொள்ளச் செய்வர் அறிவர் எனத் தொல்காப்பியம் கூறும், மதுரைக் காஞ்சி இல்லற நோன்பேற்ற சாவகர் அறிவரை வழிபட, அவர்கள் சாவகர்க்கு அறிவுரை கூறுவதை விளக்குகிறது. கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளை வணங்குவதும் அவர் இவர்கள் மதுரைச் செலவுக்கு வழித்துணையாகி அறிவுரை கூறிச் செல்வதையும் நோக்கும்பொழுது பழந்தமிழ்ச் சமுதாயத்தின் அறிவர் போலக் கவுந்தியின் படைப்பு அமைவதாகக் கருத இடம் உண்டு.
{{Right|<b>கோ.சி.</b>}}
<section end="கவுவ்வ்தி அடிகள்"/>
<section begin="கவுனாசு"/>
{{dhr}}
{{larger|<b>கவுனாசு</b>}} உருசியக் குடியரசு ஒன்றியத்தில் இலிதுவேனிய மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரின் பெயரும் கவுனாசு (Kaunas) தான். 25,000 ச. மைல் பரப்புள்ள இப்பகுதியில் எலும்புத்தூள் தொழிலும், உலோகப் பொருள் கைத் தொழிலும், அணிகள் செய்தலும், வேளாண்மையும் முக்கியமானவை. இங்குப் பல ஏரிகள் உள்ளன. கப்பல்கள் போகக் கூடிய தூரனா, நீமன் என்ற இரு ஆறுகள் இங்கு ஓடுகின்றன. கவுனாசு நகரிலிருந்து தென்கிழக்கில் 112 கி.மீ. தொலைவில் மாநிலத் தலைநகரான வில்னா உள்ளது.
இதன் மக்கள்தொகை 3,52,000 (1976). இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் ஒர் அரணாகத் தோற்றுவிக்கப்பட்டது. இது கி.பி. 1795-ஆம் ஆண்டில், ஏற்பட்ட போலந்தின் மூன்றாம் பாகப்பிரிவினையின் படி உருசியாவுக்குக் கிடைத்தது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் செருமனி இதைக் கைப்பற்றிக் கொண்டது (1915). பின்னர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941 முதல் 1944 வரை இது செருமானியத் துருப்புகள் வசம் சிக்கியிருந்தது. இந்நகரம் ஓர் ஆற்றுத் (நீமன்) துறைமுகம்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கவுனாசு"/>
<section begin="கவூர்"/>
{{dhr}}
{{larger|<b>கவூர்</b>}} என்று சொல்லப்படும் கமில்லோ பென் சோ தி கவூர் (Cammillo Benso di Cavour) வட இத்தாலியில் உள்ள பியடுமாண்டு (Piedmont) பகுதியைச் சார்ந்தவர். இவர் கி.பி. 1810-இல் துயூரின் (Turin) என்னும் நகரில் பிறந்தார். இவர் தந்தை கவூர் பிரபு மைக்கேலே பென்சோ (Michele Benso, Marchese di Cavour); தாயார் அடெலேதி செல்லோன் (Adele di Sellon) கவூர்கள் பழமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பியடுமாண்டை கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட சவாய்க் குடும்பத்தினருக்குப் (House of Savoy) படை வீரர்களாகவும், அரசுப் பணியாளர்களாகவும் ஊழியம் செய்து வந்தனர். அடெலே செனீவா நாட்டினர்; கால்வினிசுட்டுச் சமயத்தைச் சார்ந்தவர்; இவர் பிறந்த நேரத்தில் பியடுமாண்டு நெப்போலியன் போனபார்ட்டின் ஆட்சியில் இருந்து வந்தது என்பதையும் அவ்வாட்சிக்குக் கவூர்கள் பேராதரவை அளித்திருந்தனர் என்பதையும் இங்கு நினைவுறுதல் பொருத்தமுடையது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 920
|bSize = 480
|cWidth = 143
|cHeight = 124
|oTop = 110
|oLeft = 286
|Location = center
|Description =
}}
{{center|கவூர்}}
நெப்போலியனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சவாய்க் குடும்பத்தினர் மீண்டும் பியட்மாண்டை ஆளும் உரிமைப் பெற்றனர். கவூரின் தந்தை சவாய்க் குடும்பத்துடன் மீண்டும் நட்புறவு கொள்வதில் வெற்றி கண்டமையால் அந்த நட்புறவைப் பயன்படுத்திக் கொண்டு தமக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும் என்பதால் கவூர் இராணுவப் பள்ளியில் சேர்வதற்கு இசைவு தெரிவித்தார். ஆயினும் அப்பள்ளியின் கடுமையான கட்டுத்திட்டங் வேண்டியவராகளுக்குக் கவூர் தம்மை உட்படுத்தனார். இவர் கி.பி. 1826–இல் பொறியாளர் பிரிவில் ஒரு அணுக்க முதன்மையராக (Lieutenant) நியமிக்கப்பட்டார். இராணுவப் பள்ளியில் கழித்த ஆறு ஆண்டுகளைத் தமது வாழ்க்கையில் மிக்க மோசமான பகுதியாக இவர் கருதினார். இராணுவக் கட்டுப்பாடு இவருடைய செருக்கையும், உயர்வு மனப்பான்மையையும் அதிகரிக்கச் செய்தனவேயன்றி வலுவிழக்கச் செய்யவில்லை. அரசியல் கருத்துக்கள் இவரைக் கவரத் தொடங்கின.
பியட்மாண்டில் கி.பி. 1821–ஆம் தோன்றிய புரட்சியின் போது வெளிப்பட்ட முற்போக்குக் கருத்துகளும் தேசிய உணர்ச்சியும் இராணுவப் பள்ளியில் பயின்று வந்த ஒரு சில மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றன. அவர்களுள் ஒருவர் செவிரினோ காசியோ (Severino Cassio) என்பவர். கமில்லோ அவரிடம் நெருங்கிப் பழகி வந்தமையால் நாட்டுப் பற்றும் முற்போக்கு உணர்ச்சியும் மேலிட்-<noinclude></noinclude>
kfmui9thj3q8aj7a8b8u9iau23mpnaq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/926
250
643012
1954627
1933102
2026-07-19T07:13:42Z
Sridevi Jayakumar
15329
1954627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்|898|கவேரகன்னி}}</noinclude>அரசு அறிவித்திருந்தது. ஆகவே, அதனுடன் போர் புரிந்து இணைப்பதென்பது கடினமான செயலாகத் தோன்றியது. அந்த நேரத்தில் சிசிலியில் புரட்சி ஏற்பட்டது. உடனே சிசிலிக்குப் புறப்பட ஆயத்தமானார். விக்டர் இம்மானுவேல் தமது சொந்தப் பணத்தை அவருக்குக் கொடுத்தார். கரிபால்டி படைக்கு ஆள் மற்றும் படைக்கருவிகளைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பியடுமாண்டு அரசு கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது. அவர் சிசிலியை வென்றவுடன் அதை ஐக்கிய இத்தாலியுடன் இணைத்துவிடும்படி கவூர் கேட்டார். கரிபால்டி மறுத்தார். பின்னர்க் கரிபால்டி தெற்கு இத்தாலிக்குள் நுழையத் திட்டமிட்டார். அந்த நேரத்தில் தெற்கு இத்தாலிய அரசர் முற்போக்குவாதிகளின் கண்டனத்திற்குள்ளானார். இல்லையெனில் அவர் இந்நட்புறவை ஆதரித்த பிரான்சு மற்றும் அதற்கு ஆதரவளித்த இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வெறுப்பைப் பெற நேரிடும். இந்த இக்கட்டிலிருந்து மீளக் கரிபால்டியைத் (Garibaldi) தெற்கு இத்தாலிக்குள் நுழைத்துப் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவளிக்கும்படி கூறுவதை விட வேறு வழியில்லை. கரிபால்டியும் தெற்கு இத்தாலிக்குச் சென்று பெரும் வெற்றி கண்டார். அங்குத் தம்மைச் சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டார். தியூரினில் கூடிய நாடாளுமன்றம் சிசிலி, மற்றும் தெற்கு இத்தாலியை இத்தாலிய அரசுடன் இணைத்துக் கொண்டதாகத் தீர்மானத்தை அங்கு நிறைவேற்றியது. உரோமைக் கைப்பற்றி விக்டர் இம்மானுவேலை இத்தாலிய அரசராக முடிசூட்டும்வரை அவற்றை இத்தாலி அரசுடன் இணைக்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதன் காரணமாக அதுவரை பட்டபாடு அனைத்தும் வீணாகிப் போய்விடும் நிலை ஏற்பட்டது. உரோமைத் தாக்கப் பிரான்சு உட்பட ஐரோப்பியப் பேரரசுகள் அனுமதிக்க மாட்டா. மேலும் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசுத்திரியா மீண்டும் இத்தாலி மீது படையெடுத்து வரலாம். மீண்டும் ஒரு முறை கவூரின் அரசியல் நுண்திறம் இத்தாலியைக் காப்பாற்றப் பயன்பட்டது. தம் அரசரைத் தெற்கு இத்தாலிக்குச் சென்று கரிபால்டியை உரோமைத் தாக்காமற் செய்யும்படி கவூர் கூறினார். அதற்கு நெப்போலியனுடைய சம்மதத்தையும் பெற்றார். ஆனால், போகும் வழியில் போப்பினுடைய ஆட்சிப் பகுதிகள் இருந்தன. அவற்றைப் போப்பின் ஊதியத்தைப் பெற்ற ஆசுத்திரியப் படைகள் பாதுகாத்து வந்தன. அவற்றைக் கலைக்கும்படி கவூர் போப்பைக் கேட்டார். அவர் மறுக்கவே அவர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்படி அரசரை வேண்டினார். போப்பின் படைகள் தோல்வி கண்டன. அதன் பின்னர்த் தக்க சமயத்தில் தென் இத்தாலியின் தலைநகரான நேபில்சுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் கரிபால்டி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். தெற்கு இத்தாலியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் இத்தாலிய அரசுடன் இணையவேண்டும் என்று தீர்மானித்தனர். இத்தாலிய நாடாளுமன்றத் தேர்தல் கி.பி. 1861–ஆம் ஆண்டு நடைபெற்றது. வெனிசு, உரோம் ஆகிய இடங்கள் நீங்கலாக ஏனைய இத்தாலியப் பகுதிகளின் பேராளர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கூட்டத்தின்போது தாம் பிறந்த இடமான நைசைப் பிரான்சுக்கு அளித்துவிட்டதற்காகக் கவூரை ஏசினர், கவூர் மிகப் பொறுமையுடன் நடந்து கொண்டார். இறுதியில் மன்னர் தலையிட்டு இருவரிடையேயும் நட்பை ஏற்படுத்தினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு 1861–ஆம் ஆண்டு சூன் மாதம் 5-ஆம் நாள் கவூர் இறந்தார். அரசர், உயிர் பிரியும் வரை அவருடன் இருந்தார். கவூர் மேற்கொண்ட மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளை அவருடைய இரும்பு போன்ற உடல்கூடத் தாங்கவில்லை. இவர் மறைந்தார் என்றாலும் இத்தாலிய ஐக்கியத்திற்குப் பெருங் காரணமாக இருந்தவர் கவூர் என்ற வகையில் இவர் அடைந்த புகழ் இன்றும் மறையவில்லை.
{{Right|<b>டி.ஆர்.இரா.</b>}}
<section end="கவூர்"/>
<section begin="கவேர கன்னி"/>
{{dhr}}
{{larger|<b>கவேர கன்னி:</b>}} காவிரியின் வேறு பெயர்களுள் ஒன்று. கவேரர் என்பவர் அரச மாதவரும் சிறந்த யோகியுமாவார். இறுதியில் தாம் வீடுபேறெய்துதலை விரும்பி, அதற்காகப் பிரமனை வேண்டி அறிய தவமியற்றினார். பிரமதேவன் அருளால் விட்டுணு மாயையினைப் புதல்வியாகப் பெற்று வீடு பேறெய்தினார். பின்னர், அப்புதல்வி பிரமன் ஆணையால் ஆறாகப் பெருகிச் சென்றாள். கவேரரின் புதல்வியாதலின் அந்த ஆறு கவேர கன்னி என்றும் காவேரி என்றும் பெயர்பெற்றது. இவ்வரலாறு ஆக்நேய புராணத்தின் இரண்டாம் பாகத்திலுள்ள காவேரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. காவிரித் தல புராணத்திலும் இச்செய்தி உள்ளது. சீத்தலைச் சாத்தனார் தம் மணிமேகலைக் காப்பியத்தில் கவேர கன்னி என்னும் பெயரால் காவிரியைக் குறிப்பிட்டுள்ளார். பூம்புகார் நகரத்தைக் குறிப்பிடும்போது, ‘கவேர கன்னி எனப்படும் காவிரியின் பெயரால் விளங்கும் நகரம்’ என்னும் கருத்தில், ‘கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய, தவாக்களி மூதூர்’ (மணி. 9:52–53) என்று குறிப்பிட்டுள்ளார். காவிரியின் – கவேரக் கன்னியின் - தந்தை பெயர் கவேரர் என்பதனைத் தவாநீர்க் காவிரிப் பாவை தன் தாதை சுவேரன் (மணி. 3:55, 56) எனக் கூறியுள்ளார். மேலும், கவேரன் தவஞ்செய்த வனம் காவிரிப்பூம்பட்டினத்தருகே இருந்தது என்றும், அது கவேர<noinclude></noinclude>
bpy3tlfyi2tuho12t4pd4ajoqgl007d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/927
250
643083
1954629
1933536
2026-07-19T07:16:25Z
Sridevi Jayakumar
15329
1954629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவைமகனார்|899|கழக முறை அரசு}}</noinclude>வனம் எனப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கவேர கன்னி"/>
<section begin="கவைமகனார்"/>
{{dhr}}
{{larger|<b>கவைமகனார்</b>}} சங்கப் புலவர்களுள் தாம் இயற்றிய பாடலுட் பயன்படுத்திய உவமையால் பெயர் பெற்ற புலவர்களுள் ஒருவர். இவர்தம் ஒரேபாடல் குறுந்தொகையில் 324–ஆம் பாடலாக அமைந்துள்ளது. நெய்தல் திணையில், தோழி தலைவனிடம் தலைவியை விரைந்து வரைந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தும் பாங்கில் அமைந்த அப்பாடலில், தலைவன் தலைவி ஆகியோர் நலன் கருதி வருந்தும் தோழியின் வருத்தத்திற்கு உவமையாக, இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால் அவற்றிற்காகத் தாய் வருந்தும் வருத்தம் கூறப்பட்டுள்ளது. அவ்வுவமையால் இப்புலவர் பெயர் பெற்றுள்ளார். தலைவியைக் காண்பதற்காக, இரவில் முதலை இயங்கும் கழியினை நீந்திக் கடந்துவரும் தலைவன், அவ்வாறு வருவதுணர்ந்தும் அறியாமையால் அதுபற்றி மகிழும் தலைவி ஆகிய இருவர் நிலையினையும் அறிந்த தோழி, ‘கவை மக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்’ என்று கூறுகிறாள். தோழியின் வருத்தத்திற்கு இரட்டைக் குழந்தைகள் (கவைமக) நஞ்சுண்டமை அறிந்த தாயின் வருத்தத்தினை உவமையாகக் கூறிய புலவரை, அவ்வுவமையால் பெயர் குறித்திருப்பது சிறப்பாக உள்ளது. உவமையிலுள்ள ‘கவை மக’ என்னும் தொடரால் ‘கவைமகவார்’ என்றே இருத்தல் வேண்டும் என்றும், அது கவை மகன் என்றோ கவை மகனார் என்றோ அமைந்திருப்பது, மாறுபட்ட வடிவமாகும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘கவைமக’ என்ற உவமையால், தலைவியும் தலைவனும் உடலால் வேறுபட்டவராயினும் அன்பினால் ஒன்றுபட்ட உள்ளத்தராவர் எனத் தோழி கருதிய குறிப்புப் புலனாகிறது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கவைமகனார்"/>
<section begin="கழக முறை அரசு"/>
{{dhr}}
{{larger|<b>கழக முறை அரசு</b>}} என்பது தொழிற் கழகங்களையும் வாணிகக் கழகங்களையும் சமூகத்தின் அடித்தளமாக உடைய ஓர் அரசாங்க அமைப்பைக் குறிப்பிடுகிறது. இந்தக் கழக முறையிலமைக்கப்பட்ட அரசு ஐரோப்பாவில் போர்ச்சுகல் நாட்டிலும், பாசிசக் கட்சியாருடைய ஆட்சிக் காலத்தில் (1922–1945) இத்தாலிய நாட்டிலும் தோன்றிற்று.
<b>அரசின் அமைப்பு:</b> கழக முறை அரசுக்கு (Corporative State) அடித்தளமாக இருப்பவை நாட்டின் பொருளாதாரத் துறையின் பல்வேறு கிளைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பணியாளர் கழகங்களும் (Employees’ Corporations), பணியாளரை அமர்த்துவோர் கழகங்களும் (Employers’ Corporations), ஆகும். இந்தக் கழகங்களே நாட்டின் உயரிய சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய தொகுதிகளாக ஆக்கப்பட்டன. ஆகையால் தான் இத்தகைய சட்டமன்ற, நிருவாக முறையை உடைய அரசு கழக முறை அரசு எனப்பட்டது.
பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் நிலத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படாமல் தொழிலாளர், அமர்த்துவோர் கழகங்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையுடைய பாராளுமன்றம் தொழில் வளர்ச்சிக்கும், வேலைச் சூழ்நிலைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்துதற்கும் உரிய விதிகளைச் செய்தல் வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளையே பொருளாதார அடிப்படையில் மாற்றி அமைத்தலால் கட்சி அரசியலுக்கே இடமில்லாமல், மக்கள் பொதுப்பணிகளை நடைமுறைக்கு ஏற்ப நிறைவேற்றுதல் இயலுமென்று கழக முறை அரசை ஆதரிப்போர் கூறுகின்றனர்.
முதல் உலகப் போரை அடுத்து (1914-1918) மேலை ஐரோப்பியத் தொழில் மயமான நாடுகளில், பொருளாதார உற்பத்தியில் முடக்கமும் வாணிகத்தில் தேக்க நிலையும் ஏற்பட்டன; தொழிலாளருக்கும் முதலாளிகளுக்குமிடையே பெரும்பூசல்கள் ஏற்பட்டன. உற்பத்தியில் முடக்கம் ஏற்படவே, வேலையற்ற துன்பநிலை பெருகிற்று. சோவியத்து உருசிய நாட்டில் வேளாண்மையையும், ஆலைத் தொழிலையும் நாட்டுடைமை ஆக்கி, யாவருக்கும் வேலை வாய்ப்பைக் கட்டாயமாக அளித்து, உற்பத்திப் பொருள்களை யாவருக்கும் பங்கிட்டு வழங்கக்கூடிய அதிகாரங்களையுடைய வரம்பற்ற முழு பொதுவுடைமைக் கட்சி என்னும் ஒரே கட்சியின் சருவாதிகார ஆட்சி தோன்றிற்று.
இத்தாலியிலும் 1919, 1922-ஆம் ஆண்டுகளுக்கிடையில் இருந்த குழப்பமான நிலையில், தனியார் உடைமை உரிமை முறையை ஒழிக்கக் கூடிய சமநிலைக் கட்சியாளர் (Socialists) ஆட்சிக்கு வரக் கூடுமென்ற அச்சநிலை தோன்றிற்று. அதை நன்கு உணர்ந்து கொண்ட பாசிசக் கட்சித் தலைவராகிய முசோலினி தாம் அதுவரை பின்பற்றி வந்த சமநிலைக் கொள்கைகளை விடுத்துத் தனியார் உரிமைகளைப் பாதுகாக்க வல்ல வரம்பற்ற அதிகாரங்களையுடைய அரசாங்கத்தை நிறுவும் பொருட்டுத் தம் கட்சியாளர்களைத் திரட்டிக் கொண்டு, உரோம் நகரத்துக்கு வந்து, அரசரிடமிருந்து அதிகார ஆணை பெற்று ஓர் ஆற்றல் மிக்க அரசாங்கத்தை அமைத்தார். அவர் இத்தாலியில் முன்பு இருந்துவந்த பாராளுமன்றக் குடியாட்சி<noinclude>
<b>வா.க. 6 – 57அ</b></noinclude>
5k3phodx7fw2gw2m1ouuv3exwzg15o4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/928
250
643084
1954630
1933537
2026-07-19T07:17:08Z
Sridevi Jayakumar
15329
1954630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழக முறை அரசு|900|கழக முறைச் சமநிலைக் கோட்பாடு}}</noinclude>முறையைத் தொடர்ந்து இருக்குமாறு செய்த போதிலும், தம் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய, ஒரு முழு வல்லமையுடைய அரசாங்கத்துக்குப் பாதுகாவலாக இருக்கும் பொருட்டு, பாசிசக் கட்சி ஒன்றே நாளா வட்டத்தில் நிலைபெற்ற கட்சியாக அமைந்து, கழகங்களின் வாயிலாகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக இருக்குமாறு செய்தார். ஒவ்வொரு தொழிலிலும் வாணிகத்திலும் பணியாளர்களும் முதலாளிகளும் குழுக்களாக (Syndicates) அமைக்கப்பட்டிருந்தனர். இதற்கு மேல்நிலை அடுக்குகளில் கூட்டமைவுகள் (Federation), இணைவுகள் (Confederations), கழகங்கள் (Corporations) முதலியவையும், எல்லாவற்றிற்கும் மேல் மட்டத்தில் கழகங்களின் தேசிய மன்றமும் (National Council of Corporations) அமைக்கப்பட்டிருந்தன.
இத்தாலிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு 1943–ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, இத்தாலிய அரசாங்க அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பாக இல்லாமல் தலைமை அமைச்சராகிய (Duce) முசோலினிக்கே பொறுப்போடிருந்தனர். தலைமை அமைச்சர் மற்ற அமைச்சர்களின் செயல்களை இயக்கி ஒருங்கிணைத்தார். பாராளுமன்றத்தால் எந்தப் பொருளும் கவனிக்கப்படுதற்குக் கொண்டு வரப்படுமுன்னர், அது தலைமை அமைச்சரின் முன்ஒப்புதலைப் பெறுதல் வேண்டும். பாராளுமன்றம் எந்த மசோதாவையாவது தள்ளுபடி செய்தால், 3 மாதம் கழித்து அதை மறு பரிசீலனை செய்யுமாறும், இரகசிய வாக்கெடுப்பின் வாடலாகத் தீர்மானிக்குமாறும் கேட்டு, அவர் சட்டமன்றத்துக்கு ஆணை விடுக்கலாம். ஒரு மன்றம் தள்ளுபடி செய்த மசோதாவை மற்ற மன்றம் ஆய்ந்து வாக்கெடுப்பில் தீர்மானித்தல் இயலும். சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே சட்ட ஆற்றலுடைய ஆணைகளை விடுக்கவும், அதை வெளியிட்ட 2 ஆண்டுகளுக்குள் பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்கவும் தலைமை அமைச்சருக்கு அதிகாரம் உண்டு. பாசிசப் பெருமன்றத்துக்கே (Fascist Grand Council) தலைமை அமைச்சருக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் இருந்தது. அது அரசாங்க இயந்திரத்தின் ஓர் உறுப்பு என்று சட்டத்திலேயே கூறப்பட்டது. மேல் சட்டமன்றத்தில் (Senate) தலைமை அமைச்சருடைய பரிந்துரையின்மீது அமர்த்தப்பட்ட பல உறுப்பினர்கள் இருந்தனர். பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான அமைச்சரவையில் தாம் தலைமை அமைச்சர் என்று அவர் தம்மைக் கூறிக் கொண்ட போதிலும், அவருடைய அரசாங்கச் செயல்களை இடித்துரைக்கவல்ல வலுவான எதிர்க் கட்சி சட்டமன்றத்திலோ நாட்டிலோ இல்லை. தொழிலாளர் கழகங்களையும் முதலாளிகள் கழகங்களையும் பாசிசக் கட்சியாரே கட்டுப்படுத்தினர். அவர்கள் அயல்நாட்டு உறவுகளில் அமைதி, குடியாட்சி முறை, சமநிலைக் கோட்பாடு முதலியவற்றை எதிர்த்து, அதிகாரக் குவிப்புடைய சருவாதிகார அரசாங்க முறையை ஆதரித்தனர். போர்ச்சுகல் நாட்டில் நிலவிய வேலை இன்மைச் சிக்கலும் நிலையற்ற குடியாட்சி அரசாங்கங்களும், டாக்டர் அண்டோனியோ சலசார் (Antonio Salazar) என்ற பொருளாதார வல்லுநருடைய சருவாதிகார ஆட்சி தோன்றவும், நாட்டின் படையினருடைய ஆதரவோடு அது நெடுங்காலம் நடைபெறவும் வழிவகுத்தன.
<b>மதிப்பீடு:</b> கழக முறை அரசு தோற்றத்தில் குடியாட்சியாக இருந்தாலும், அது உண்மையில் வல்லந்தத்தை ஆதாரமாகச் சார்ந்திருந்த சருவாதிகார ஆட்சியே ஆகும். வரலாற்றில் காணப்படுகிற எல்லாச் சருவாதிகாரிகளையும் போலவே கழக முறை அரசின் தலைவர்களும் தங்களை அரசியலமைப்புக்குட்பட்ட ஆட்சியாளர்களென்று தம் நாட்டவருக்கும் உலகத்தோருக்கும் காட்டிக் கொள்ளும் பொருட்டு குடியாட்சி மரபுகளான வயது வந்தோருக்கு வாக்குரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள், அவற்றுக்குப் பொறுப்பான அமைச்சரவை முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்கள் கட்சியார் மட்டுமே அரசின் சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். அவர்கள் தொழிலாளர், முதலாளி பூசலை நீக்கிப் பொருளுற் பத்தியையும் வேலை வாய்ப்பையும் அளித்துச் சமத்துவம் நிலைபெறச் செய்தனர். ஆனால், குடியாட்சியின் மற்றொரு முதன்மைக் கூறான சுதந்திரத்தை ஒடுக்கினர். இத்தாலியின் பாசிசக் கழக முறை அரசு போர்ச்செயல்களில் ஈடுபட்டுத் தோற்று மறைந்தது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Good, H.E. and Curay, M.,</b> The Working of a Corporative State, Nicholson and Watson, 1933.
<b>Schmidt, C.T.,</b> The Corporate State in Action, Gollancz, 1939.
<section end="கழக முறை அரசு"/>
<section begin="கழக முறைச் சமநிலைக் கோட்பாடு"/>
{{dhr}}
{{larger|<b>கழக முறைச் சமநிலைக் கோட்பாடு:</b>}} பிரிட்டனில் முதலாம் உலகப் போருக்கு முற்பட்ட ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டதும், தொழிலாளர் சம்பள முறையையும் (Wage System) ஊதியத்துக்காகப் பொருள் உற்பத்தி என்ற முறையையும் மற்றெல்லாச் சமநிலையாளர்களைப் போல<noinclude></noinclude>
he64fr958s9wivjvjz7epffg2auuj8w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/930
250
643092
1954631
1933546
2026-07-19T07:19:19Z
Sridevi Jayakumar
15329
1954631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழகமுறை சமநிலைக் கோட்பாடு|902|கழற்சிங்க நாயனார்}}</noinclude>மாறாகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைத்தொழில் வரத்தொடங்கிய நாள்முதலாக கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பெருமளவு முதல் வளமுடைய அளவிற் சிறிய முதலாளி வகுப்பும், முதல் வசதி இல்லாத அளவிற்பெரிய தொழிலாளர் வகுப்பும், சமூகத்தில் தோன்றிய சூழ்நிலையும், இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஊதியத்துக்கு உழைக்கிற அடிமை முறையும், நீண்ட நேரப்பணி, இடர்ப்பாடான பணிச்சூழ்நிலைகள், குறைந்த கூலி முதலிய குறைபாடுகளும் தோன்றின. இச்சூழ்நிலைகளில் சமநிலைக் கோட்பாடு வளருதல் தவிர்க்க முடியாததாயிற்று. பொருள் உற்பத்திக் காரணிகளை அரசாங்கமே ஏற்று, உற்பத்தியையும் பங்கீட்டையும் அதுவே கட்டுப்படுத்துதல் வேண்டுமென்ற சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதற்கு, அரசியலமைப்பின் வழியாக அமைதியாக இக்குறிக்கோளை அடைதல் வேண்டுமென்று பரிணாம வகைச் சமநிலைக் கோட்பாடுகள் (Evolutionary Types of Socialism) – அதாவது குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு (Democratic Socialism), பேபியனிசமென்னும் படிப்படியான சமநிலை முறை, கழகமுறைச் சமநிலைக் கோட்பாடு முதலியவை - கூறின. வல்லந்தப் புரட்சிமுறையை ஆதரித்தது காரல் மார்க்சின் சமநிலைக் கோட்பாடு ஆகும். கழகமுறைச் சமநிலைக் கோட்பாட்டில் அதிகாரப் பரவல் (Decentralisation of Powers), தன்னாட்சி உரிமை முதலிய குடியாட்சிக் கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக இக்கோட்பாடு தொழிலிலே கூட்டாட்சி அமைப்பை (Federalism) ஆதரிக்கிறது. ஆனால், இக்கோட்பாடு கூறும் தொழில் முறைப் பிரதி நிதித்துவம் என்பது (Functional Representation) எளிதில் முழுவதும் செயற்படுத்தக்கூடிய ஒன்று அன்று. தொழிலாளரும் மற்றவர்களைப் போலச் சேர்ந்து எடுக்கப்படுத்தற்கு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதோடு கூடத் தொழிலாளர்கள் மேற்சபையில் உறுப்பினர்களாக அமர்த்தப்படுவதற்கும் ஓரளவு வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கோட்பாட்டின்படி பாராளுமன்றமானது பலவகையாகப் பிரித்து அமைக்கப்படுமானால், அவற்றிற்கிடையே பல பொருள்களைப் பற்றி வேறுபாடுகளும், முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்பட வழி உண்டாகிறது. அப்போது அம்மோதல்களைத் தவிர்த்தற்கு அவற்றை விட உயர்ந்த அரசின் தலைமை அதிகாரம் தேவைப்படுகிறது. இக்குறைகளைச் சுட்டிக் காட்டுதற்காக, இதன்வழி நிறுவப்படும் பாராளுமன்றங்களைச் சிறுவர்கள் பொழுது போக்குக்காக அமைத்துக் கொள்ளும் சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பிட்டு எர்ன்சா (Hearnshaw) என்ற ஆசிரியர் கூறுகிறார்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Coker, F.W.,</b> Recent Political Thought, Appleton, 1934.
<b>Cole, G.D.H.,</b> Guild Socialism Restated, Allen & Unwin, London, 1921.
<b>Sidney Hook, Reason.,</b> Social Myths and Democracy, New York, 1940.
<section end="கழக முறைச் சமநிலைக் கோட்பாடு"/>
<section begin="கழஞ்சு"/>
{{dhr}}
{{larger|<b>கழஞ்சு</b>}} பண்டைத் தமிழகத்தில் வழக்கில் இருந்து நிறுத்தல் அளவை. இவ்வளவை முறை பெரும்பாலும் தங்கம் போன்ற மதிப்பு வாய்ந்த உலோகங்களுக்கும் மற்றப் பொருள்களுக்குமே பயன்பட்டது. 20 மஞ்சாடி கொண்டது 1 கழஞ்சாகக் கருதப்பட்டது. 56 முதல் 60 நெல் எடை கொண்டதை ஒரு கழஞ்சு என்பர். கழஞ்சு என்பது கழஞ்சு எடையுள்ள பொன் நாணயத்தையும் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கழஞ்சு"/>
<section begin="கழற்சிங்க நாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>கழற்சிங்க நாயனார்</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பல்லவர் குலத்தில் தோன்றிச் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்; சிவபெருமாள் திருவடிகளில் மாறாத அன்பு பூண்டு வாழ்ந்தவர். இம்மன்னர் பெரும்படையோடு வடபுலம் சென்று வாகை சூடிச் பிறப்புற்றவர். இவர் எப்போதும் சிவ சிந்தனையோடிருந்தமையால், சிவபெருமான் குடிகொண்ட எல்லாக் கோயில்கட்கும் சென்று வழிபட்டு வந்தார். அங்ஙனம் வாழும் நாளில் சிவபுரி எனத் திகழும் திருவாரூர் சென்று தியாகராசப் பெருமானை வழிபட விரும்பினார். தம் உரிமைத் தேவியோடும் அரசியல் ஆயத்தோடும் ஆரூர் அடைந்தார். அமைச்சர்கள் புடைகுழக் கழற்சிங்கர் மூலத் தானத்தே பெருமானை வழிபடும்போது, அரசியார் திருக்கோயிலை வலம் வந்து அதன் பெருமையினைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது பூத்தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தே புதுப்பூ விழுந்துகிடப்பதைக் கண்டு அதனை எடுத்து அரசி மோந்தாள். கோயில் பூமண்டபத்தில் திருத்தொண்டாற்றி வந்த செருத்துணையார் என்னும் அடியவர் அக்காட்சியைக் கண்ணுற்றார். தியாகராசப் பெருமானுக்குரிய புதுப் பூவினைப் பெண்ணொருத்தி மோந்து தீமையுரித் தாள் எனக் கருதி வெகுண்டார். ‘பரமர் செய்ய சடைமுடியில் ஏறுந்திருப்பூமண்டபத்து மலர் மோந்-<noinclude></noinclude>
240wiupicfp6knwchitk6b0ez0izs5d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/931
250
643104
1954633
1933564
2026-07-19T07:21:51Z
Sridevi Jayakumar
15329
1954633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழறிற்றறிவார் நாயனார்|903|கழாத்தலையார்}}</noinclude>திடும் மூக்கைத் தடிவன்’ என்று அரசியின் கூந்தலைப் பற்றிப் படியில் வீழ்த்திக் கருவியினால் அவள் மூக்கினை அரிந்தார். அரசியர் குருதி சோரத் துடித்து வீழ்ந்து அரற்றினார்.
தியாகராசப் பெருமானை வழிபட்டு வெளியே வந்த கழற்சிங்கர் தம் தேவி துன்பத்தால் அரற்றுவதைக் கண்ணுற்றார். பின்னர், இவ்வண்டத்துள்ளோருள் இந்த வெவ்வினை அஞ்சாதே செய்தார் யார்? எனக் கேட்டு நடந்ததை அறிந்தார். அரசியின் பிழையினையும் தண்டித்த செருத்துணையாரின் சிவப் பற்றினையும் கருதிய கழற்சிங்கர் அவரை அருகே அழைத்தார். ‘இதற்குற்ற தண்டம் தன்னை அவ்வடைவேயன்றோ தடிந்திடத்தகுவது’ எனக் கூறிக் கழற்சிங்கர் தம் உடைவாள் உருவி, ‘அக்கமழ்வாசப் பூத்தொட்டு முன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்பது’ என்று கூறி அரசியின் வளைக்கரத்தைத் துண்டித்தார். கழற்சிங்கரின் சிவபக்தியினைக் கண்ணுற்ற அனைவரும் பலபடப் பாராட்டிப் போற்றினர். விண்ணவரும் வியந்து மலர் தூவிப் போற்றினர் பின்னர்க் கழற்சிங்கநாயனார் புகழோடு இறைவன் திருவடிப் பேற்றினையடைந்தார். இந்நாயனார் சிறப்புகளை நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழார் சுவாமிகளும் பாராட்டிப் பாடியுள்ளனர். {{Right|<b>குரு.கோ.</b>}}
<section end="கழற்சிங்க நாயனார்"/>
<section begin="கழறிற்றறிவார் நாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>கழறிற்றறிவார் நாயனார்</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் நாயன்மார்களுள் ஒருவர். இவர் மலை நாட்டைச் சார்ந்த கொடுங்கோளூரில் தோன்றினார். சேரமன்னர் மரபைச் சேர்ந்த இவர், இளமையில் பெருமாக்கோதையார் என்ற பெயரோடு திகழ்ந்தார். உலகவியல்பும் அரச வாழ்வும் உறுதி பயக்காவெனக் கருதிய இவ்வடியார், திருவஞ்சைக் களத்தில் குடி கொண்ட சிவபெருமான் மீது பக்திகொண்டு நாடோறும் சிவத் தொண்டாற்றி வழிபட்டு வந்தார். அக்காலத்தே, சேரநாட்டையாண்ட செங்கோற் பொறையன் என்னும் மன்னன் தவமேற்கொண்டு காடு சென்றான். அரசனில்லாக் குறையுணர்ந்த அமைச்சர்கள் பெருமாக்கோதையாரை மன்னனாக்கக் கருதி முயன்றனர். பெருமாக்கோதையார் சிவபெருமானை வணங்கிச் சிவத்தொண்டு வழுவாது அரசியற்றும் ஆற்றலையும், யாரும் யாவும் கழறுவதை விளங்கிக் கொள்ளும் திறனையும் பெற்று முடிசூடினார். பிற உயிரினங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றமையால் இவர் கழறிற்றறிவார் எனப் பெயர் பெற்றார். முறைப்படி முடிசூடிய கழறிற்றறிவார் யானை மீது அமர்ந்து ஊர்வலம் வரும்போது, உவர்ப்பொதி சுமந்த வண்ணான் எதிர்வரக் கண்டார். மழைநீரில் உவர்கரைந்து, அவன் உடல் முழுதும் வெண்மைபூத்திருந்த கோலம் மன்னருக்குச் சிவனடியாரை நினைப்பூட்டியது. உடனே யானையினின்று இறங்கி அவனை வணங்கினார். ‘சிறியேன் அடிவண்ணான்’ என அவன் நடுங்கியபோது, ‘அடியேன் அடிச்சேரன், திருநீற்றின் திருவேடத்தை நினைப்பித்தீர், வருந்தற்க’ எனக் கூறி மன்னன் வழியனுப்பினான். மன்னனின் பக்திப் பெருக்கை அமைச்சர்களும் பிறரும் பலபடப் பாராட்டிப் போற்றினர்.
கழறிற்றறிவார் அரசாண்ட காலத்தே, ‘தேடும் பொருளும், செல்வமும் பிறவும் தில்லைக்கூத்தன் திருவடிகளே’ எனக் கொண்டு வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் வழிபாடு முடியும்போது, நடராசப்பெருமானின் பாதச் சிலம்பொலி கேட்டு மகிழும் பேற்றினைப் பெற்றார். இவர் காலத்தில் மதுரையம்பதியில் நாளும் இன்னிசையால் சிவபெருமானை வழிபட்ட பாணபத்திரன் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பொருள் தேவை ஏற்பட்டபோது சிவபெருமான் ‘மதிமலிபுரிசை’ எனத் தொடங்கும் பாசுரம் தீட்டிக் கொடுத்துக் கழறிற்றறிவார்பால் ஆற்றுப்படுத்தியருளினார். மன்னனும் அடியவருக்கு வேண்டும். பொருள் தந்து வழிபட்டு வழியனுப்பினார். சேரமான் ஒருநாள் வழக்கம் போல் சிவ வழிபாடியற்றும்போது நடராசப் பெருமானின் சிலம்பொலி கேளாமையுணர்ந்து வருந்தினார். தாம் புரியும் வழிபாட்டில் குறைநேர்ந்ததெனக் கருதிஉயிர்விடத் துணிந்தபோது, ‘சேரனே! இன்று வன்தொண்டன் சிற்றம்பலத்தில் நம்மைத் தமிழால் பாடிவழிபட்டான்; வயப்பட்டமையால் சிலம்பொலி தடைப்பட்டது’ எனச் சிவபெருமான் அசரீரியாகக் கூறினார். மகிழ்ந்த சேரமன்னன் தில்லையை வழிபடவும் வன்தொண்டரைக் காணவும் விழைந்து தில்லை சேர்ந்தார். பின்னர் வன்தொண்டர் கொடுங்கோளூருக்கு எழுந்தருளியபோது, அவரை வணங்கிப் பெரும் பொருளீந்து வழியனுப்பினார். வன்தொண்டராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் திருவுளப்படி யானை மீதேறிக் கைலாயம் சென்ற போது சேரமானும் குதிரையேறித் தொடர்ந்து சிவனடி சேர்ந்தார். நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சேக்கிழார். இச்சேரமான் திருக்கைலாயத்தில் சிவகணத் தலைமை பூண்டு சிவத்தொண்டில் திளைப்பதாகப் பாராட்டியுள்ளார். நம்பியாண்டார் நம்பியும் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் இத் ‘தென்னர்பிரான் கழறிற்றறிவாரை’ச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
{{Right|<b>குரு.கோ.</b>}}
<section end="கழறிற்றறிவார் நாயனார்"/>
<section begin="கழாத்தலையார்"/>
{{dhr}}
{{larger|<b>கழாத்தலையார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கழாத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராதலின் இவ்வாறு பெயர் வழங்கப் பெற்றுள்ளார். இருங்கோவேளின் முன்னோருள் ஒருவன் இவரை<noinclude></noinclude>
0c0ia7ktjhyexl517bd44xuylsfve5w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/932
250
643106
1954634
1933567
2026-07-19T07:23:55Z
Sridevi Jayakumar
15329
1954634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழார்க்கீரன் எயிற்றியனார்|904|கழிநெடிலடி}}</noinclude>இகழ்த்தமையால் அவனது நகரமாகிய அரையமென்பது அழிவுற்றது என்று கபிலர் பாடியிருத்தலின் (புறம். 202) இவர் சிறப்பு விளங்குகிறது. கபிலர் இவரைப் ‘புகழ்த்த செய்யுட் கழாஅத்தலை’ என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அதனால் இவர் கபிலர் காலத்தினை ஒத்த காலத்தையோ முற்பட்ட காலத்தையோ சார்ந்தவராவார் என்பது புலனாகிறது. இவர் பாடலில் அமைத்துள்ள உவமைகள் மிகவும் அழகு வாய்ந்தவையாகும். இவரால் பாடப்பட்ட அரசர்கள் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் சேரமான் பெருஞ்சேரலாதனுமாவர்.
இவர் பாடியனவாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (62, 65, 270, 288, 289, 368) இடம் பெற்றுள்ளன. தும்பைத்திணையில் கையறுநிலைப் பாடலாக 62–ஆம் பாடல் அமைந்துள்ளது. அப்பாடலில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் மண்ணாசை காரணமாகப் பொருது வீழ்ந்ததைக் கண்டு ஆறாத்துயரமெய்தி, ‘மறப்போர் வேந்தர் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த குடைகளும் தளர்ந்தன; முரசு ஒழிந்தன; போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந்தமையின் அமரும் உடன் வீழ்ந்தது. பெண்டிர் பச்சையிலை தின்னாது குளிர்ந்த நீரில் மூழ்காது அவர்தம் மார்பகம் பொருத்தி உயிர் துறந்தனர். இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்’ என்று கூறி இறுதியில் அவர்தம் புகழ் மேம்படுவதாக எனச் சிறப்பித்துள்ளார். அரசன் சிறந்த பல எருதுகளுள் மிகச் சிறந்ததனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உழவன்போலப் பெருமை பொருந்திய பழங்குடியில் பிறந்தவரிடத்து வழிவழியாக வரும் நற்பண்புகளைக் காத்து வரும் முதுகுடி மறவனைத் தேர்ந்தெடுத்தான் என்பதனைப் ‘பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி, வீறுவீ றாயு முழவன் போலப், பீடுபெறு தொங்குடிப் பாடுபல தாங்கிய, மூதிலாளருள் (புறம்.289) தேர்ந்தான்’ என இவர் பாடியுள்ளார். இதிலுள்ள உவமை நயமிக்கதாக உள்ளது.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="கழாத்தலையார்"/>
<section begin="கழார்க்கீரன் எயிற்றியனார்"/>
{{dhr}}
{{larger|<b>கழார்க்கீரன் எயிற்றியனார்</b>}} சோழ நாட்டிலுள்ள மயிலாடுதுறைக்குக் கிழக்கேயுள்ள சுழார் என்னும் ஊரினர். கீரன் என்பவரின் மகனாவார். எயிற்றியனார் என்னும் பெயரால் வேட்டுவக் குடியினர் என்பது பெறப்படும். கழார்க்கீரன் எயிற்றியன் என்னும் பெயர்க்குப் பாட வேறுபாடாகக் கிழார் கீரனெயிற்றியன், கிழார்க்கீரன் என்பன காணப்படுகின்றன. இவர் பாடியதாகக் குறுந்தொகை 330-ஆம் பாடல் ஒன்றே கிடைக்கிறது. மர்ரே பதிப்பு அப்பாடலோடு நற்றிணை 281, 312 ஆகிய இரு பாடலையும் இவரே பாடினார் எனக் குறிப்பிடும். கழார்க்கீரன் எயிற்றியார் என்று ஒரு பெண்பாற் புலவர் காணப்படுகிறார். அவர் கழார்க்கீரன் எயிற்றியனாரின் உடன் பிறப்பினராகக் கருத இடமுண்டு. ஆனால், எயிற்றியனாரின் வாழ்க்கைத் துணையாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கருதுவர்.
இவர் பாடிய குறுந்தொகைப் பாடல் (330) பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது என்னும் துறையிலமைந்தது. அப்பாடலில் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் பிரிந்துசென்ற நாட்டில் இல்லையோ எனத் தோழியைத் தலைவி வினவுகின்றாள். நற்றிணை 281–ஆம் பாடல் வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் துறையிலும், 312-ஆம் பாடல் பொருள் வலித்த தலைவன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது என்னும் துறையிலும் இயற்றப் பெற்றுள். தம்மூரை இப்புலவர், ‘வெல்போர்ச் சோழர் கழாஅர்’ என்று குறிப்பிடுவர். அவ்வூரில் மரத்தில் தங்கிப் பலி யுண்ணும் காக்கை நெடுங்கிளையில் மழைத்துளியொடு அசைந்துகொண்டு பலியுணவுடன் ஊனொடு கலந்த பெருஞ்சோற்றுத் திரளை உண்ண இருக்கும் என்னும் செய்தி குறிப்புப் பொருள் புலப்படுமாறு கூறப்பட்டுள்ளது. நற்றிணை 312–ஆம் பாடலும் வாடைக்காலத்துப் பனிக்குத் தலைவி வருந்துதலை உணர்த்தும். அப்பாடலில் பனிப்புதரில் உள்ள இண்டங்குழை வருடத் தன் சிறகு குவித்திருந்த கொக்கைப் பார்வைப் பறவையாக்கி, வேட்டுவன் அதன் கால் தளையை அவிழ்த்துவிட அது வருத்தத்துடன் மாரிக்காலத்தில் மாறிநிற்கும் என்னும் செய்தி உள்ளது.
{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="கழார்க்கீரன் எயிற்றியனார்"/>
<section begin="கழிநெடிலடி"/>
{{dhr}}
{{larger|<b>கழிநெடிலடி</b>}} என்பது தமிழில் யாப்பிலக்கண நூல்கள் விளக்கும் அடி வகைகளுள் ஒன்று. அடி தளைகளினால் ஆக்கப்பெற்றுத் தொடைக்குக் காரணமாக அமையும், செய்யுளுறுப்பாகும். நான்கு சீர்கள் ஒருங்கே தொடுத்து வருவது அடியாகும் என்பதனைத் தொல்காப்பியர் ‘நாற்சீர் கொண்டது அடியெனப்படுமே’ என்று (தொல். செய். 31) இலக்கணப்படுத்தியுள்ளார். நாற்சீரடி, நேரடி எனவும் அளவடி எனவும் வழங்கப் பெறும், நேரடியின மிக்கு வருவன நெடிலடி என்றும், அதனின் மிக்கு வருவன கழிநெடிலடி என்றும் கூறப்படுகின்றன. தொல்காப்பியர், எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாக அமைத்து, அந்த அடிப்படையில், குறளடி முதலாகக் கழிநெடிலடி ஈறாக அடிகளை ஐந்து வகைப்படுத்தி விளக்கியுள்ளார். செய்யுளடியில் எழுத்துகளை எண்-<noinclude></noinclude>
8cnv35wd45h4a0rkn1i4rqk47fq281u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/933
250
643108
1954635
1933569
2026-07-19T07:25:08Z
Sridevi Jayakumar
15329
1954635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழிநெடும் பள்ளத்தாக்கு|905|கழிவுத் தீர்வகங்கள்}}</noinclude>ணிக் கணக்கிடும்போது ஒற்றெழுத்தையும், குற்றுகர எழுத்துகளையும் நீக்கிவிடவேண்டும். நாற்சீர் கொண்ட ஓரடியில், 4-6 எழுத்து வரை அமைவது குறளடி என்றும், 7-9 எழுத்து வரை அமைவது சிந்தடி என்றும், 10-14 வரை அமைவது நேரடி என்றும், 15-17 எழுத்து வரை அமைவது நெடிலடி என்றும், 18–20 எழுத்து வரை அமைவது கழிநெடிலடி என்றும் கொள்ளப்படும். 20 எழுத்திற்கும் மிகுதியான எழுத்துகளைக் கொண்ட நாற்சீர் அடிப்பா இல்லை என்று கூறுவர்.
பிற்காலத்தில் தோன்றிய யாப்பருங்கலக் காரிகை போன்ற யாப்பிலக்கண நூல்கள் எழுத்தெண்ணி அடிகளை வகைசெய்யும் முறையைப் பின்பற்றாது, ஓரடியில் அமையும் சீர்களை எண்ணிக் குறளடி முதலாகக் கழிநெடிலடி வரையில் வகை செய்யும் முறையினை மேற்கொண்டன. அவ்வகையில் 6 சீர்களும் அதற்கு மேற்பட்ட சீர்களும் கொண்டமையும் அடியே கழிநெடிலடி என்று கொள்ளப்படும். இக்கழிநெடிலடிகள் ஆசிரிய விருத்தங்களிலேயே இடம்பெறும், ஓர் அடியில் இடம்பெற்றுள்ள சீர் எண்ணிக்கை அடிப்படையில் அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருந்தம், எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் என்று செய்யுட்களின் பெயர் கூறப்படும். எண்சீரினும் மிக்க சீர்கொண்ட அடிகளாலாகிய விருத்தங்கள் பிள்ளைத்தமிழ் போன்றவற்றில் மிகுதியாக இடம்பெறும். 64 சீர்கள் கொண்ட கழிநெடிலாசிரிய விருத்தம் போன் தனவும் இயற்றப்பட்டுள்ளன.
‘தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து’ என்னும் அடி எழுத்து வகையால், ஐந்தெழுத்தால் அமைந்த குறளடியாகவும், சீர்வகையால் நாற்சீர்கொண்ட நேரடியாகவும் கொள்ளப்படும். அவ்வாறே, ‘இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை’ என்னும் அடி எழுத்து வகையால், 19 எழுத்தால் அமைந்த கழிநெடிலடியாகவும், சீர் வகையால் நாற்சீற் கொண்ட நேரடியாகவும் கொள்ளப்படும். ‘மூவடிவினாலிரண்டு சூழ்சுடரு நாண, முழுதுலக மூடியெழின் முளைவயிர நாற்றி’ என்பது எண்சீரால் அமைந்த கழிநெடிலடியாகும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கழிநெடிலடி"/>
<section begin="கழிநெடும் பள்ளத்தாக்கு"/>
{{dhr}}
{{larger|<b>கழிநெடும் பள்ளத்தாக்கு</b>}} அமெரிக்காவில், வடக்கு அரிசோனாப் பகுதியில் உள்ளது. இப்பள்ளத்தாக்கு (Grand Canyon) கொலரோடா நதியினால் அரிக்கப்பட்டு, ஏறக்குறைய 300 கி.மீ. நீளமும் 6 கி.மீ. முதல் 30 கி.மீ வரை அகலமுமுடைய ஒரு குடைவாக உளது. இது கி.பி. 1540–இல் இசுபானியத் தளபதி கார்டனெசு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியினை கி.பி. 1869–இல் வெசுலிபவர் என்பவரும் 1911-இல் கோல்பு சகோதரர்களும் ஆராய்ந்தனர். இயற்கை எழில் நிறைந்த இந்தப் பள்ளத்தாக்கு இன்று அமெரிக்கத் தேசிய பூங்கா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குக் கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியன பயிராகின்றன. இங்குள்ள பாறைகள் பல வண்ணங்களில் உள்ளன.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="கழிநெடும் பள்ளத்தாக்கு"/>
<section begin="கழிவுத் தீர்வகங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கழிவுத் தீர்வகங்கள்</b>}} ஆதாய நோக்கத்துடன் பணியாற்றும் சிறு பண அங்காடிகளாகும். இவை குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று உயர்ந்த வட்டிக்குக் கடன் கொடுப்பதிலிருந்தும், தரகு பெறுவதிலிருந்தும் வருமானம் பெறுகின்றன. இவை குறுங்காலத்திற்குக் கடன் வாங்கிச் சற்று நெடுங்காலத்திற்குக் கடன் அளிக்கின்றன. கழிவுத் தீர்வகங்களின் (Discount Houses) நடவடிக்கைகள் முற்றிலுமாகப் பணத்துறைத் தொடர்புடையவை. எனவே, ஒரு நாட்டின் நிதித் துறையில் இவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றின் பணிகள் வலுவுடைய பண அங்காடியில் தலையாய சிறப்பிடம் பெறுகின்றன. கழிவுத் தீர்வகங்களின் பணியை ஆற்றுவதன் மூலமாகத்தான் மைய வங்கி இறுதி நிலைக் கடனீவதாகப் (Lender of Last Resort) பணியாற்றுகிறது. மக்களுக்கும் வங்கிகளுக்கும் கையிருப்புப் பணம் (Liquid Cash) வேண்டும்போது கிடைக்கும்படிசெய்ய, இக்கழிவுத் தீர்வகங்களையே மைய வங்கி பயன்படுத்துகிறது.
கழிவுத் தீர்வகங்கள் அரசின் கருவூல உண்டியல்களையும் (Treasury Bills) குறுங்காலக் கடனீட்டு ஆவணங்களையும் (Bonds) வாங்குவதன் மூலம் அரசுக்குக் கடன் கொடுப்போர் இனத்தில் சேர்கின்றன. வணிக உண்டியல்களை வாங்குவதன் மூலம் தனியார் துறைக்குக் கடன் கொடுக்கின்றன. இவை உண்டியல்களை வாங்கி, உடனே வங்கிகளுக்கும் மற்றவர்களுக்கும் விற்பதன் மூலம் ஆதாயத்தை அடைகின்றன. வங்கிகள் அல்லாத வாடிக்கையாளர்களுக்கும் உண்டியல்களை வாங்கித் தந்து தரகு பெறுகின்றன. வங்கி கடன் கட்டுப்பாடு செய்யும் காலத்தில் வணிகர்கள் இக்கழிவுத் தீர்வகங்கள் மூலமே கடன் பெறுவர்.
பண அங்காடியில் உள்ள துணை அங்காடிகளுள் ஒன்றே கழிவுத் தீர்வகங்களாகும். இவை வலுவான நிதியமைப்பையுடைய பெரிய நிறுவனங்கள். கூட்டுப் பங்கு நிறுவனமாகவோ கூட்டு வாணிகமாகவோ இவை இயங்குகின்றன. சில தனி ஆள்களும், ஓடும் தரகர்களும் (Running Brokers) இத்தொழிலைச்<noinclude></noinclude>
lmd9w3ppq3ehuzacsbcg9exvyys1la3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/934
250
643142
1954636
1933612
2026-07-19T07:25:48Z
Sridevi Jayakumar
15329
1954636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழுகுமலை|906|கழுகுமலை}}</noinclude>செய்வதுண்டு. இவர்கள் மாற்று உண்டியல்களைக் கழிவு செய்வார்கள். இருப்பதால்தான் மாற்று உண்டியல்களைச் சில நாடுகள் பெருமளவில் வணிகத்தில் பயன்படுத்துகின்றன. இத்தீர்வகங்கள் நல்ல வலிவுள்ள பண அங்காடியில் மிக்க திறமையுடன் பணியாற்றுகின்றன. இந்தியப் பண அங்காடி வலிவற்றதாக இருப்பதால் இவற்றின் பணி இந்தியாவில் மிகக் குறைந்த அளவேயுள்ளது. இவை, இலண்டன் பண அங்காடியில் (London Money Market) தலையாய பணியாற்றுகின்றன.
{{Right|<b>ரெ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Panandikar, S.G.,</b> Banking in India, Orient Long-mans, Madras, 1974.
<b>Panikkar, K.K.,</b> Banking Theory and Systems, S. Chand and Company Limited, Delhi, 1982.
<b>Vaish M.C.,</b> Monetary Theory, Vikas Publishing House Private Limited, Delhi, 1980.
<section end="கழிவுத் தீர்வகங்கள்"/>
<section begin="கழுகுமலை"/>
{{dhr}}
{{larger|<b>கழுகுமலை:</b>}} திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி வட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து 40 கி.மீ. தொலைவில், சங்கரநயினார் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர். முற்காலப் பாண்டியர் காலம் முதல் இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய்த் திகழ்கிறது.
இங்குள்ள மலைப்பாறையில் அமைந்துள்ள ‘வெட்டுவான் கோயில்’ என்னும் ஒற்றைக் கற்கோயில் ‘தென்னக எல்லோரா’ என்று புகழத்தக்க கலையழகு கொண்டது. மாமல்லையில் பல்லவர்கள் ஒற்றைக் கல் இரதங்களைச் செய்த காலத்தில் பாண்டியர்களும் அத்தகைய பணியில் கவனம் செலுத்தியிருந்தமைக்கு இவ்வெட்டுவான் கோயிலே சான்று. பெரும் பாறையில் திருச்சுற்று போன்று வெட்டி எடுத்து இடைப்பட்ட குன்றில் மேலிருந்து கீழாகச் செதுக்கிச் சிவன் கோயில் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இக்கோயிலின் கலைப்பணி முற்றுப் பெறவில்லை.
விமானத்தின் அடிப்பகுதி முற்றுப்பெறாமல் உள்ளது. கபோதத்தின் மேற்பகுதியான பிரத்தரம் இரண்டு அடுக்குகளை உடையது. கீழ் அடுக்கு மூலைகளில் கர்ணகூடும் நடுவில் சாலபஞ்சரமும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையில் சைத்திய பஞ்சரம் காணப்படுகிறது. சிகரங்களிலும் பஞ்சரங்களிலும் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 934
|bSize = 480
|cWidth = 370
|cHeight = 264
|oTop = 289
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|கழுகுமலை வெட்டுவான் கோயில்}}<noinclude></noinclude>
6ac7nhsuv5x3cdk91gpgs7840xfxe0v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/936
250
643147
1954637
1933619
2026-07-19T07:27:37Z
Sridevi Jayakumar
15329
1954637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கழுமலம்|908|கள்ளக் கடத்தல்}}</noinclude>ஒன்றான திருச்சுழியிலில் இருந்து வந்த பார்ப்பன வணிகன் மாணி சங்கர நாராயணன் என்பான் கோயிலில் விளக்கு எரிக்கத் தானமளித்துள்ளான். இக்கல்வெட்டு இவ்வூரைத் திருநேச்சுரம் என்று குறிப்பிடுகிறது.
முதலாம் இராசேந்திர சோழன், தன் காலத்தில் அவனது இளவரசர்களைச் சோழபாண்டியர்கள் என்ற பெயரில் பாண்டி நாட்டுப் பகுதிகளில் ஆளுநர்களாக நியமித்தான். சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற ஆளுநரின் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரில் உள்ளது.
வரலாற்றுக் காலந் தொடங்கிச் சைவமும் சமணமும் பிறந்தோங்கிய இவ்வூர் இக்காலத்தில் கால்நடைச் சந்தைக்குப் பெயர் பெற்ற இடமாகத் திகழ்கிறது. கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது. மக்கள்தொகை 11,616 (1981).
{{Right|<b>சொ.சா.</b>}}
<section end="கழுகுமலை"/>
<section begin="கழுமலம்"/>
{{dhr}}
{{larger|<b>கழுமலம்:</b>}} இப்பெயரில் சங்க காலத்தில் ஓரூர் இருந்துள்ளது. இவ்வூர் சேர அரசனுக்கு உரியதாகவும் பின்னர்ச் சோழமன்னன் இதனை வென்றகப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. பழையன் என்பவன் சோழமன்னனின் படைத்தலைவன். அவன், நன்னன் முதலான ஆறு படைத்தலைவர் கூடிப் பாசறை கொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கிப் பலரைக் கொன்று இறுதியில் இறந்துபட்டான். அதனை அறிந்த சோழன் பெரும்பூட் சென்னி சினந்தெழுந்து சேரனுக்குரிய கழுமலம் என்னும் ஊரைத் தாக்கி அங்கிருந்த கணையன் என்னும் சேரர் படைத் தலைவனையும் கழுமல ஊரையும் கைப்பற்றினான். இதனைக் குடவாயிற் கீரத்தனார் தம் அகப்பாடலில் (அகம். 44) குறிப்பிட்டுள்ளார். கழுமலம் குட்டுவனுக்கு உரியதென்பதனை ‘நற்றேர்க் குட்டுவன் கழுமலம்’ என்று சாகலாசனார் தம் அகப்பாட்டில் (அகம். 278) சுட்டியுள்ளார். சோழமன்னன் சேரனுக்குரிய கழுமல நகரைப் போரிற் கைப்பற்றிய செய்திக் குறிப்பு களவழி நாற்பது என்னும் நூலில் ‘காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்’ (36) என்று காணப்படுகிறது. பழமொழியிலும் கழுமலம் பற்றிய குறிப்புள்ளது.
<b>கழுமலம்{{sup|2}}:</b> தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்னும் தலத்திற்கு அமைந்துள்ள 12 பெயர்களுள் கழுமலம் என்பதொன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். திருக்கழுமலம் என்னும் பெயரில் தேவாரத்தில் பதிகங்கள் பாடப்பெற்றுள்ளன. கழுமலம் சிதம்பரம் மயிலாடுதுறைச் சாலையில் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காண்க: சீகாழி
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கழுமலம்"/>
<section begin="கழைதின் யானையார்"/>
{{dhr}}
{{larger|<b>கழைதின் யானையார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாகப் புறநானூற்றில் வல்வில்ஓரி பற்றிய 204–ஆம் பாடல் மட்டுமே உள்ளது. பாடல்களில் வரும் தொடர்களால் பெயர் பெற்ற தேய்புரிப் பழங்கயிற்றினார் பழங்கயிற்றினார் (நற். 284) தொடித்தலை விழுத்தண்டினார் (புறம். 243) ஆகியோரை நோக்கும்போது இவரும் ‘கழைதின் யானை’ என்ற தொடருடைய ஒரு பாடலைப் பாடியிருக்கலாம் என்றும், அப்பாடல், தொகை நூல்களைத் தொகுப்போர்க்குக் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் ஊகிக்கலாம்.
‘ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று’ என வரும் இவரது புறநானூற்றுப் பாடற்பகுதி, திருக்குறளில் வரும் இரவு, இரவச்சமென்ற அதிகாரங்கட்டு முன்னோடி எனக் கருதுமாறு உள்ளது.
{{Right|<b>க.இரா.</b>}}
<section end="கழைதின் யானையார்"/>
<section begin="கள்ளக் கடத்தல்"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளக் கடத்தல்:</b>}} சட்ட நெறிகளுக்குட்படாமல் நாடுகளிலிருந்து பொருள்களை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லுதலும், வேறு நாடுகளிலிருந்து பொருள்களைக் கொண்டு வருதலும் கள்ளக் கடத்தல் எனப்படும். வாணிக அடிப்படையில் செயற்படும் வணிகர் சுங்க வரி செலுத்தாமல் அதனைத் தவிர்க்க மறைமுகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இவ்வாணிகம் கள்ளக்கடத்தல் (Smuggling) எனப்படுகிறது. பண்டைக் காலத்திலிருந்து கடல் வழி வாணிகம் தனிச் சிறப்பிடம் பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. கடல் வழி வாணிகம் நடைபெற்ற காலத்திலிருந்து கள்ளக் கடத்தல் தொழில் இருந்து வருகிறது. விமானப் போக்குவரத்து மூலம் 20-ஆம் நூற்றாண்டில் பொருள்களை ஏற்றிச் செல்லத் தொடங்கிய பின்பு கள்ளக் கடத்தல் இல்வழியிலும் நடைபெறத் தொடங்கியது.
கள்ளக் கடத்தல், தனிப்பட்டோர் தாம் எடுத்து வரும் பொருள்களை வாணிக அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வாணிகக் கட்டுப்பாடுகள், நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் ஆகியவற்றை மீறி எடுத்து வருவதனாலும் ஏற்படுகிறது. கள்ளக்கடத்தல் அந்நாட்டினுடைய அயற்செலாவணிச் சட்டங்களையும் மீறி நடைபெறுகிறது. பொதுவாக, சில கவர்ச்சியான பொருள்களாலும், விலையுயர்ந்த தங்கம், வைரம், வெள்ளி போன்ற பொருள்களாலும் கள்ளக் கடத்தல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பொருள்களுக்கு எல்லா நாடுகளிலும் தேவை மிகுதிவாசு இருப்பதால், இத்-<noinclude></noinclude>
pnts823b44gkjxscdh16phi8mpwggt4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/938
250
643150
1954638
1933622
2026-07-19T07:29:02Z
Sridevi Jayakumar
15329
1954638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள்ளக் கடத்தல்|910|கள்ளத் தயாரிப்பு}}</noinclude>கள் கொண்டுவரும் பொருள்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது. போதைப் பொருள்களைக் கடத்துவோரைக் கண்டுபிடிப்பதற்குச் சிறப்புப் பயிற்சியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடல் வழியாக நடக்கும் கள்ளக் கடத்தலைத் தடுக்கக் கடல் காவற்படை (Coastal Guard) அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக் கடத்தல்காரர்கள், வெகு விரைவாகச் செல்லும் எந்திர விசைப் படகுகளைப் பயன்படுத்துவதால் மையஅரசு கடற்படையின் உதவியோடு கள்ளக் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை வகுத்துள்ளது.
கடல் காவல் துறையினருக்குத் தேவையான அளவு மிகுவிரைவு எந்திர விசைப் படகுகள் 1980–ஆம் ஆண்டிற்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளன. சுங்கத்துறை அதிகாரிகளிடையே நடக்கும் ஊழலைத் தடுப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளக் கடத்தலைத் தீவிரமான முறையில் தடுக்கும் அதிகாரிகளுக்கு அத்தொழில் தொடர்பானவர்களைப் பிடித்துக் கொடுப்பதன் மூலம் கள்ளக் கடத்தல் பொருள்களின் மதிப்பிலிருந்து ஒரு விழுக்காடு அல்லது இரண்டு விழுக்காடு பணத்தொகை விருது அளிக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை போகப் பல அரசு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ‘அயற் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்’ (Foreign Exchange Regulation Act, FERA) மூலம் அயல்நாட்டுச் செலாவணியில் நடக்கும் மறைமுக வாணிகத்தை அரசு கட்டுப்படுத்துகிறது. அண்மைக் காலத்தில் இச்சட்டத்தை மீறிய பல தொழில் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்றே கள்ளக் கடத்தல்காரர்களை விசாரணையின்றிச் சிறையில் பிடித்து வைப்பதற்கும் 1974–ஆம் ஆண்டு இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (MISA) பயன்படுத்தப்பட்டது. இப்பிரிவைப் பயன்படுத்தி இந்தியாவில் இயங்கி வந்த பெரும் கடத்தல் வல்லுநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் 500 கோடியிலிருந்து 600 கோடி உரூபாய் வரை கள்ளக் கடத்தல் நடைபெறுவதாகவும், தங்கம் கடத்துவதில் பெரும்பாலானோர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆய்வுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
‘அயற் செலாவணிப் பாதுகாப்பு, கள்ளக் கடத்தல் தடுப்புச் சட்டம்’ (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Act-COEF–POSA) என்ற சட்டத்தின் செயற்பாட்டை ஆராய்ந்த சில பொருளியல் அறிஞர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். அதில், இந்தியாவில் கள்ளக் கடத்தல் மூலம் ‘இணையான மற்றொரு அயல் வாணிகம்’ (Parallel Foreign Trade) நடைபெறுகிறது என்ற கருத்தும், இக்கள்ளக் கடத்தல் மூலம் நடைபெறும் அயல் வாணிகம் சட்ட அடிப்படையில் நடைபெறும் அயல் வாணிகத்தை விட மிகுதியானது என்ற கருத்தும் அடங்கியுள்ளன.
{{Right|<b>மு.நா.</b>}}
<b>துணை நூல்:</b>
Aspects of the Black Economy in India, Report of a study by National Insitute of Public Finance and Policy, Ministry of Finance, Government of India, 1985.
<section end="கள்ளக் கடத்தல்"/>
<section begin="கள்ளக்குறிச்சி"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளக்குறிச்சி</b>}} தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஊர். கள்ளக்குறிச்சி வட்டம் மாவட்டத்தின் மேற்கில், சேலம் கூடலூர் பாதையில் உள்ளது. குறிஞ்சி நில ஊர்கள், குறிச்சி என்ற பெயருடன் பல இடங்களில் உள்ளன. பஞ்சாயத்து ஒன்றிய ஆட்சி இங்கு நிலவுகிறது. இதன் மக்கள்தொகை 26,905 (1981).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கள்ளக்குறிச்சி"/>
<section begin="கள்ளத் தயாரிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளத் தயாரிப்பு:</b>}} ஒருவரை ஏமாற்றும் எண்ணத்தில் ஒரு பொருளைப் போல் மற்றொரு பொருளைத் தயாரிப்பது கள்ளத் தயாரிப்பு (Counterfeit) எனப்படும். ஒரு கள்ளத் தயாரிப்பு மூலப் பொருளைப் போல் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மூலத்தைப்போல் ஓரளவு இருந்தாலே போதுமானது.
இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 231 இன் படி கள்ள நாணயம் தயாரித்தலுக்கு ஏழாண்டுகள் வரை சிறையும் தண்டத் தொகையும்; பிரிவு 232 இன் படி இந்திய நாயணத்தைப் போன்று கள்ளத் தயாரிப்புச் செய்தலுக்கு ஆயுட்காலச் சிறை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய சிறையுடன் தண்டத் தொகையும் தண்டனைகளாகும். ஈண்டு, இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 231–இல் நாணயம் என்பது பணமாகப் பயன்படுத்தப்படும் பொருட்டு ஓர் அரசு வெளியிடும் அதிகார முத்திரையிட்ட உலோகத்தைக் குறிக்கும்; பிரிவு 232 இல் இந்திய நாணயம் என்பது, இந்திய அரசு அதிகார முத்திரையிட்டு வெளியிட்ட உலோகத்தைக் குறிக்கும். உலோகம் பணமாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டிருந்தாலும், அது இந்திய நாணயமாகவே கருதப்படும்.
இந்திய நாணயத்தில் பண்டமாற்று நாணயங்களான சிப்பிகள் (Cowries), முத்திரையிடப்படாத செப்புக் கட்டிகள், பதக்கங்கள் (இவைகள் இரண்டும்<noinclude></noinclude>
aptqfpmh5qbx4du53nrv2kftkdy1g60
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/939
250
643152
1954639
1933624
2026-07-19T07:30:33Z
Sridevi Jayakumar
15329
1954639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள்ளமனம்|911|கள்ளிலாத்திரையனார்}}</noinclude>பணமாகப் பயன்படுத்தப்படினும்) போன்றவை நாணயங்களாகக் கருதப்பட மாட்டா. ஆனால், நிறுவனத்தின் (Company) உரூபாயாக வெளியிடப்பட்ட நாணயம், இந்திய அரசின் அதிகாரத்தின்படி முன்பு பணமாகப் பயன்படுத்தப்பட்ட ‘பரூக்காபாத்’ (Farrukhabad) உரூபாய் போன்றவை இந்திய நாணயங்களாகக் கருதப்படும்.
<b>அரசு முத்திரை:</b> வருவாய்க்காக அரசு முத்திரையைக் கள்ளத்தனமாகத் தயாரிப்பவர்கள், இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 255 இன் கீழ் ஆயுட்காலச் சிறை அல்லது பத்தாண்டுகள் வரை சிறை மற்றும் தண்டத் தொகைபோன்ற தண்டனைகள் விதித்துத் தண்டிக்கப்படுவர்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கள்ளத் தயாரிப்பு"/>
<section begin="கள்ளமனம்"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளமனம்:</b>}} ஒருவருக்குச் சட்டவிரோதமான ஆதாயத்தையோ மற்றொருவருக்குச் சட்டவிரோதமான இழப்பையோ விளைவிக்கும் உட்கருத்துடன் எதையேனும் செய்கிற எவரும் அதைக் கள்ளமனத்துடன் (Dishonestly) செய்வதாகக் கருதப்படுவர்.
செயலொன்று கள்ளமனத்துடன் கூடியது என்பதற்குப் பின்வரும் இரண்டு கூறுகள் மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். 1) ஒருவருக்குச் சட்ட விரோதமான ஆதாயத்தை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். 2) மற்றொருவருக்குச் சட்டவிரோதமான இழப்பை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்.
சட்ட முரணான பயன், சட்டமுரணான இழப்பு என்பது பொருள் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
இச்சொல், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 378 (திருட்டு), 383 (அச்சுறுத்திப் பறித்தல்), 390 (கொள்ளையடித்தல்), 403 (சொத்தை நேர்மையற்ற முறையில் கையாடல்), 411 (திருட்டுச் சொத்தை நேர்மையற்ற முறையில் பெறுதல்) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>V.V. Raghavan,</b> Law of Crimes (A hand book), Orient Law House, Allahabad, 1980.
<section end="கள்ளமனம்"/>
<section begin="கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்:</b>}} ஊரால் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் இவரும் ஒருவர். கள்ளிக்குடி மதுரைக்கும் விருதுநகர்க்கும் இடையில் உள்ளது. இப்பெயர் தாங்கிய ஊர் நெல்லை மாவட்டத்திலும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ‘பூதம் புல்லர்’ என்பதற்கான பெயர்க் காரணம் தெரியவில்லை. இவர் பூதங்களை வழிபட்டவராக இருக்கலாம். ‘புல்லினத்து ஆயர்’ என்னும் வழக்கு மருவிப் புல்லர் என்றும் ஆகியிருக்கலாம். குறுந்தொகையின் 190–ஆம் பாடல் இவரால் பாடப்பெற்றது. முல்லைத் திணையில் அமைந்த இப்பாடல், ‘பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ என்னும் துறையில் அமைந்தது.
‘என் செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றார் தலைவர்; பாம்பின் பசிய தலை அறுந்து விழும் படியாக எழும் இடி முழக்கம் கேட்கும் இரவுப் பொழுல், ஆக்களைத் தேடிச்செல்லும் பொலி காளையின் கழுத்திலுள்ள ஒற்றை மணியின் குரல் தலைவனின் காதில் விழுமா?’ என்று ஏக்கத்தோடு குறிப்பிடுகிறாள் தலைவி.
நற்றிணை 333-ஆம் பாடலும் இவராற் பாடப் பெற்றதாகும். பாலைத் திணையில் அமைந்த இப்பாடல் ‘பொருள் வயிற் பிரிவின்கண், ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்துவது’ என்னும் துறையில் அமைந்தது.
இதிலும், ‘அரும்பொருட்கு அகன்ற காதலர்’ என்னும் தொடர் வருகின்றது. ‘பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன்’ கடந்து சென்ற நம் காதலரை நாம் கருதும்போதெல்லாம் சுவரின் கண்ணே பல்லி சொல்லா நின்றதாதலின் அகன்று போகிய காதலர் விரைவில் வருவர் எனத் தோழி தேற்றுகிறாள்.
{{Right|<b>மு.த.</b>}}
<section end="கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்"/>
<section begin="கள்ளிலாத்திரையனார்"/>
{{dhr}}
{{larger|<b>கள்ளிலாத்திரையனார்:</b>}} இவர் கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல்களாகப் புறநானூற்றில் இரு பாடல்களும் (175, 389) குறுந்தொகையில் ஒரு பாடலும் (293) கிடைத்துள்ளன. டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் புறநானூற்றுப் பதிப்பில் இவர் தொண்டை நாட்டிலுள்ள திருக்கள்ளில் என்னும் ஊரினர் என்றும் அத்திரிகுலத்தில் தோன்றியதால் ஆத்திரையனார் என்ற பெயர் பெற்றாரென்றும், அந்தணர் குலத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில் கள்ளில் என்னும் ஊர் திருக்கள்ளம் என்று வழங்கப்பெறுகிறது. குறுந்தொகைப் பாடலின் முதல்வரி ‘கள்ளில் கேளிர் கொண்டு, ஆத்திரை உள்ளூர்’ என்று இருப்பது அந்த அரிய தொடர் அடிப்படையில் கள்ளில் ஆத்திரையனார் என்று பெயர் பெற்றார் என்று கூறுவாருமுளர். இப்புலவர் குறுந்தொகைச் செய்யுளில் ஆதி அருமன் என்னும் வள்ளலையும், புறநானூற்றின் இரு செய்யுள்களிலும் வேங்கடத்தை ஆண்ட ஆதனுங்கன் என்ற கொடைவள்ளலையும் சிறப்பித்துப்<noinclude></noinclude>
9fqhb0q9bgnjbe0ojxx55xpr41745wl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/940
250
643154
1954640
1933628
2026-07-19T07:31:12Z
Sridevi Jayakumar
15329
1954640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள ஆய்வு முறை|912|கள ஆய்வு முறை}}</noinclude>பாடியுள்ளார். கள்ளுண்ண விரும்பி ஆயத்தத்தோடு சென்றவன் அது கிடைக்காது நுங்குக் காயைத்தின்று வந்தது போலப் பரத்தையை விரும்பிச் சென்ற தலைவன் அவளைப் பிரிந்து தலைவியை நோக்கி வந்தமை குறித்துத் தோழிக்கு வாயில் மறுத்தல் என்னும் துறையில் குறுந்தொகைப் பாடல் அமைந்துள்ளது. ‘ஊழ் மாறு அலைப்ப வருமேசேயிழை’ என்று தலைவன் வரவையும், ‘அளியேன் யானே’ என்று தன் நிலையையும் தலைவி கூறும் திறம் மிகவும் இன்பம் தரத்தக்கது.
இவர்தம் புறப்பாடல் களிலிருந்து இப்புலவர் ஆதனுங்கள் என்ற வள்ளலிடம் காட்டிய நன்றி மறவாமைச் சிறப்புத் தேற்றெனப் புலப்படுகிறது. ‘ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று கூறுவதனால் அவ்வள்ளல் புலவர் நெஞ்சத்தில் முழுமையாக இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. இருபாடல்களும் பாடாண் திணையின் இயன்மொழித் துறையில் அமைந்துள்ளன.
{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="கள்ளிலாத்திரையனார்"/>
<section begin="கள ஆய்வு முறை"/>
{{dhr}}
{{larger|<b>கள ஆய்வு முறை:</b>}} கள ஆய்வு என்பது, ஆய்வாளர் தாம் திட்டமிட்டுள்ள ஆய்விற்காகக் களத்திற்கு நேரிற்சென்று, தகவலாளியைச் சந்தித்து, உரையாடித் தரவினைச் சேகரிப்பதாகும். இதனை நேர்முகக் களஆய்வு முறை (Direct Field Method) எனலாம். பிறிதொரு முறை மறைமுக ஆய்வாகும் (Indirect Method), இதில் அஞ்சல் வழியாகத் தரவு திரட்டும் முறைமேற்கொள்ளப்படும். ஆய்வாளர் களத்திற்கு நேரிற்செல்லாமல், வினா ஏட்டினை அச்சடித்து அஞ்சல் வழியாகத் தகவலாளிகட்கு அனுப்பி, அவர் தரவினை எழுதி அனுப்பும்படி செய்து பெற்றுக்கொள்ளுதலாகும். கள ஆய்வின்மூலம், பலதுறையினரும் தத்தம் ஆய்விற்குத் தரவு திரட்டலாம். மொழியியலாரும், தம் ஆய்விற்கு இம்முறையில் கள ஆய்வு நடத்துகின்றனர். அதனை ‘மொழியியல் கள ஆய்வுமுறை’ (Linguistic Field Method) என்பர். நாட்டுப்புறவியலும், மானிடவியலும்கூட கள ஆய்வு சார்ந்த துறைகளாகும்.
கள ஆய்வு நடத்தத் திட்டமிடும் ஆய்வாளர், ஒரு முன்னோடிக் கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். முன்னோடி ஆய்விலிருந்து கிடைக்கும் அடிப்படைச் செய்திகளின் மூலமே முறையான கள ஆய்வினைத் திட்டமிட்டுச் செயலாற்றமுடியும்.
மொழியியல் கள ஆய்விற்குத் திட்டமிடுகின்றவர்கள், தங்கள் குறிக்கோள் என்ன என்பதையும் தங்களுக்குள்ள கால அளவினையும் உறுதி செய்து கொண்டு அதனைத் தொடங்கவேண்டும். ஓர் ஆய்வாளர் ஒரு மொழியையோ அதன் கிளைமொழி ஒன்றினையோ ஆராய விரும்பினால் அப்பேச்சு மொழி வழங்கும் இடம், பரப்பளவு, மக்கள் தொகை, செய்யும் தொழில், தட்பவெப்பநிலை, அவர்கள் அறிந்துள்ள மொழிகள் (தாய்மொழி மற்றும் பிற மொழிகள்), இனம், சமயம், சாதி, பண்பாடு, சமூக அமைப்பு, உணவு முறைகள், தங்கும் இடம், போக்குவரத்து வசதி என அம்மொழி பேசுகிற மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி அறிந்துகொள்ள வேண்டும். மேலும், ஆய்வாளர் தமக்கு முன், அத்துறையில் அம்மக்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் வெளிவந்துள்ள தகவல்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஆய்வாளர், தம் தரவு அமையவேண்டிய அடிப்படையில், அவை தகவலாளிகளிடமிருந்து வினாவிற்கு ஏற்ற விடையாக வரும் முறையில் வினாப்பட்டியலை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நல்ல வினா ஏடு அமைக்கப்பட்டுவிட்டால், களப்பணி நன்றாக அமையும். ஆதலின், வினாஏடு (Questionnaire) அல்லது பட்டியல் (Schedule) கள ஆய்விற்கு இன்றியமையாத கருவியாகும். அடுத்த முக்கியமான பணி கள ஆய்விளை எம்மொழி வழங்கும் பகுதியில் அல்லது நாட்டில் எந்தெந்த ஊர்களில் நடத்தவேண்டும் என்று தீர்மானிப்பதாகும். கள ஆய்விற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை, ஓர் இடத்திற்கும் மற்றோர் இடத்திற்கும் இடையில் உள்ள தூரம், அந்தந்த ஊரின் மக்கள்தொகையின் அளவு போன்றவற்றைக் கருத்திற் கொண்டு அமைதல் நல்லது.
இடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவு கவனம், தகவலாளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தவர் அல்லது சாதியினர், வெவ்வேறு தொழில் செய்வோர், அவர்களுள் ஆண்–பெண் விகிதம், படித்தோர்–படிக்காதோர், சிறியவர்–பெரியவர்–நடுத்தர வயதினர் போன்ற விவரங்களை அறிந்து, கள ஆய்வின் நோக்கத்திற்கு ஏற்பத் தகவலாளிகளைத் தேர்ந்தெடுக்கவும், எண்ணிக்கையை வகுத்துக்கொள்ளவும் வேண்டும்.
கொள்கையளவில், அம்மொழியைப் பேசுகிற அனைவருமே தகவலாளிகளாய்ச் செயற்படத் தகுதி படைத்தவர்களே. ஆனால், அவர்களுள் ஒரு சிலரே நல்ல தகவலாளிகளாக இருந்து, ஆய்வாளர் கேட்கும் வினாக்களுக்குச் சரியான விடையளிக்க முடியும். ஆய்வாளர் தம்முடைய முன்னோடி ஆய்வில் பலரைப் பேட்டி கண்டு, அவர்களுள் ஒருவரையோ ஒன்றுக்கு<noinclude></noinclude>
ez08v5q2eln2vdk3usmgoa9xesyfrnq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/942
250
643269
1954641
1933847
2026-07-19T07:31:56Z
Sridevi Jayakumar
15329
1954641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள ஆய்வு முறை|914|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்}}</noinclude>வினாப் பட்டியலை உற்றுநோக்கி நிரப்பும் பட்டியல், ஆவணப் பட்டியல் என்றும் வகைப்படுத்தலாம். மொழியியலிலும், நாட்டுப்புற மற்றும் சமுதாய மொழியியலிலும் ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் எவ்வாறு செயற்படுகின்றனர், அவர்தம் பழக்க வழக்கங்கள் யாவை, எவ்வாறு பேசுகிறார்கள் என்பனவற்றை ஆய்வாளர் உற்றுநோக்கி நிரப்ப இப்பட்டியல் உதவும். ஆவணங்கள், நிகழ்வு, வரலாறு போன்றவற்றிலிருந்து ஆய்வாளர் தரவு திரட்ட ஆவணப்பட்டியல் துணைசெய்யும். இந்திய மொழியியல் பரப்பாய்வு (Linguistic Survey of India) செய்த கிரையர்சன் (Grierson) மூன்று வகையான வினா ஏடுகளையே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளரும் தகவலாளியும் நேரடிப் பேட்டியின்பொழுது கலந்துரையாடி, திரட்டும் தரவு செம்மையானதாகவும் நம்பத் தகுந்ததாகவும் முழுமை பெற்றதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. பேட்டி கண்டு தரவுகளைத் திரட்டுவது ஒரு கலை.
கள ஆய்வின்பொழுது, ஆய்வாளர் தாம் சேகரித்த தரவினை உடனுக்குடன் ஆராய்ந்து, ஒப்பு நோக்கி, முதல் பேட்டியின்பொழுது விடுபட்ட செய்திகளையும், குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டியவற்றையும் திட்டமிட்டு, அடுத்த பேட்டிக்குத் தம்மை ஆயத்தம் செய்துகொள்ளவேண்டும். இதனை நைடா (E.A. Nida) களப்பணியில் பகுப்பாய்வு முறை என்று கூறுகிறார். பேட்டியில் கேட்கப்படும் வினாக்கள், தகவலாளிக்கு எளிதில் புரிந்துகொள்ளும் முறையில் அமைந்திருக்கவேண்டும். வினாக்களை ஐந்து பெரும் பிரிவாக அமைக்கலாம். அவை: 1. பெயர்கூறும் வினாவகை, 2. நிறைவு செய்ய வேண்டிய வினாவகை, 3. உரையாடல் வினாவகை, 4. கூறியபடி மாற்றும் வினாவகை, 5. திருப்பிக் கேட்கும் வினாவகை ஆகும்.
தகவலாளிகளிடமிருந்து மொழிச் செய்தியைத் திரட்டும்பொழுது, முதலில் சொற்களையும் பின்னர்ச் சிறுசிறு சொற்றொடர்களையும் கேட்டு எழுதிக் கொள்ள வேண்டும். அச்சொற்களைத் திருப்பிக் கூறி, தாம் எழுதிக்கொண்ட ஒலிக்குறிப்பு சர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இம்முறையினால் தரவின் தரம் உயர்வதுடன், தகவலாளிக்கும் ஆய்வாளர்மீது நம்பிக்கையும் உருவாகிறது. சொல்லடுக்குகளைத் திரட்டுவதே (Paradigms) மிகவும் கடினமான செயலாகும். ஆதலால், அக்கூறுகள் வாக்கியங்களில் வரும்படி அமைத்துக் கேள்விகள் கேட்கவேண்டும். தான் எதிர்பார்க்கும் ஒலியையோ, சொல்லையோ, இலக்கணக் கூற்றினையோ தகவலாளிக்கு நேரடியாக உச்சரித்துக் காட்டக்கூடாது. ஏனெனில், தகவலாளி அதனைக் கேட்டு, திருப்பிக் கூறுவதற்கு அது வழிவகுக்கும்; ஆதலால் கள ஆய்வில், ஆய்வாளர் தம்முடைய திறமையினால், சேகரிக்கும் செய்தியின் தரத்தையும் அளவினையும் கொண்டு தான், ஆய்வின் முடிவு சிறப்பாக அமையும். கள ஆய்வு இன்று பலதுறைகட்கும் இன்றியமையாத ஒரு பகுதியாக விளங்குவதில் வியப்பில்லை. இதனை ஆய்வாளர்கள் கற்றறிந்து செயற்படவேண்டும். {{Right|<b>கோ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>சீனிவாசவர்மா, கோ.,</b> கிளைமொழியியல் (இரண்டாம் பதிப்பு), அண்ணாமலைநகர், 1986.
<b>Nida, E.A.,</b> (Second Edition) Morphology; The Descriptive Analysis of Words, Ann Arbor, The University of Michigan Press, 1949.
<b>Samarin, William, J.,</b> Field Linguistics: A Guide to Linguistic Field Work, Holt, London, 1967.
<section end="கள ஆய்வு முறை"/>
<section begin="களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்"/>
{{dhr}}
{{larger|<b>களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,</b>}} பதிற்றுப்பத்தால் அறியலாகும். சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் தந்தை இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்; தாய் நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி வேளாவிக் கோமான் பதுமன் தேவி. பதிற்றுப்பத்துச் சேரமன்னர்களுக்கு, மருமக்கள் தாய உரிமை கூறுவோர், இம்மன்னனின் தந்தை வேளாவிக்கோ என்றும், தாய் பதுமன்தேவி என்றும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மாமன் முறையினன் என்றும் கூறுவர். நார்முடிச் சேரல்மீது, காப்பியாற்றுக் காப்பியனார் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இம்மன்னன் 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் பதிற்றுப்பத்தின் நான்காம் பதிகம் குறிப்பிடுகிறது. இம்மன்னன் பெயர், களங்காயினால் கண்ணியும், நாரால் முடியும், அமைத்துச் சூடியவன் என்னும் பொருளில் அமைந்த காரணப் பெயராகக் காணப்படுகிறது. காப்பியாற்றுக் காப்பியனார் தம் பதிற்றுப்பத்துப் பாடலில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்றே குறிப்பிட்டுள்ளார். கல்லாடனாரும் தம் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இப்பெயரையே சுட்டிப் பாடியுள்ளார். எனவே, இம்மன்னன் இப்பெயராலேயே புலவர் உலகில் மிக்க செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தமை புலனாகிறது. இம்மன்னன் பூழி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அதனை அகப்படுத்திக் கொண்டான் என்றும், கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தில் நன்னன் என்பானொடு போர் செய்து, அவனது வாகை மரத்தினை வெட்டி<noinclude></noinclude>
6vthw4ldtxq5yjdpsualm3dboka4swy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/943
250
643279
1954642
1933916
2026-07-19T07:33:36Z
Sridevi Jayakumar
15329
1954642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களப்பிரர்|915|களவழி நாற்பது}}</noinclude>வென்றான் என்றும், மேலும் இவன் பல போர்கள் புரிந்து களவேள்வி வேட்டதோடு, தன்னாட்டிங் தளர்ச்சியுற்ற குடிகளை வளப்படுத்தினான் என்றும் இவன் மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது. இவன் நெடுமிடல் என்னும் அஞ்சியொடு போர் செய்து அவனை வலியழித் தான் என்று காப்பியாற்றுக் காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். பெருவீரனாக விளங்கிய இம்மன்னன் பெருங்கொடையாளனாகவும் விளங்கியுள்ளான். இதனை ‘பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன்கலம் சிதறி’ (பதிற். 37) என்று காப்பியாற்றுக் காப்பியனார் இலக்கிய நயம்படக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்தின் நான்காம் பத்துப் பாடல்களுக்காகக் காப்பியாற்றுக் காப்பியனாருக்கு (பதிற். 31-40) இம்மன்னன் நாற்பது நூறாயிரம் பொன் பரிசளித்ததோடு, தான் ஆள்வதில் பாகமும் கொடுத்துச் சிறப்பித்தான்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்"/>
<section begin="களப்பிரர்"/>
{{dhr}}
{{larger|<b>களப்பிரர்:</b>}} கடைச்சங்கம் மருவிய காலமான கி.பி. 3–ஆம் நூற்றாண்டு தொட்டு முதற்பாண்டியப் பேரரசு தோன்றிய காலமான கி.பி. 6–ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் சிதறுண்ட பிரிவினராகப் பல இடங்களில் அரசோச்சியவர்கள் களப்பிரர். அவர்கள் யாரென்பது இதுகாறும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. தமிழ் நாவலர் சரிதை, பெரியபுராணம், யாப்பருங்கலக் காரிகை, அகநானூறு, கல்லாடம் போன்றவற்றுள் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முதலாம் நந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களின் கூரம் பட்டயம், காசாக்குடிப் பட்டயம் ஆகியன பல்லவர்கள் களப்பிரரை வென்ற செய்தியினைக் கொண்டுள்ளன. பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக் குடிப்பட்டயம் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ‘களப்பிரனென்னுங் கலியரசனை’ வென்றடக்கிப் பாண்டியராட்சிதனைப் செய்த புத்துயிர் பெறச் செய்தியைக் கூறுகிறது. பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு இச்செய்தியினை உறுதி செய்கிறது. இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய வேந்தனின் நெரூர்ப்பட்டயமும் களப்பிரரை வென்ற செய்தியைக் கூறுகிறது. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டில் நந்திவர்ம பல்லவ மல்லனது முடிசூட்டு விழாவிற்கு ‘முத்தரையன்’ என்பான் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவனைக் களப்பிரர் இனத்தவனென அறிஞர் சிலர் கருதுகின்றனர். செந்தலைத் தூண் கல்வெட்டில் காணப்படும் பெரும்பிடுகு முத்தரையன், கள்வர் கள்வன் எனப்படுவதால் அவன் களப்பிரருடன் இணைத்துப் பேசப்படுகிறான். எண்ணற்ற கன்னடக் கல்வெட்டுகள் அவர்களை களப்பு நாட்டவரெனக் கூறுகின்றன. ‘வட்டாரதகெ’ என்ற நூலும் இதனை உறுதி செய்கிறது. எவ்வாறிருப்பினும் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவு காரணமாகக் கருநாடகப் பகுதியின்றும் ஊடுருவித் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவி ஆங்காங்கு களப்பிரர், களப்பாளர், முத்தரையர் போன்ற பல பெயர்களில் ஆட்சி செய்திருத்தல் வேண்டுமென்பது ஏற்புடையதே. களப்பிரர் தமிழகத்தில் புகுந்தமையால் தமிழகத்தின் இலக்கியம், சமயக் கோட்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர்களது ஆட்சி மறைந்தது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="களப்பிரர்"/>
<section begin="களரியாவீரை"/>
{{dhr}}
{{larger|<b>களரியாவீரை:</b>}} இது தலைச்சங்கப் புலவர்கள் இயற்றிய நூல்களுள் ஒன்று. இச்செய்தி, ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும், தமிழ் வரம் பறுத்த தண்புனல் நன்னாடு’ எனத் தொடங்கும் சிலப்பதிகார வேனிற்காதையடிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் தெரிய வருகிறது. தலைச்சங்கம் பற்றி இவர் குறிப்பிடுமிடத்து ‘முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாகும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்’ என்று தெரிவிக்கிறார். இச்செய்தியைச் சங்கச் செய்திகளை வெளியிடும் ஒரு பழைய அகவற் பாடற் பகுதியும் உறுதி செய்கிறது.
‘செந்தமிழோர் புரிந்த செய்யுட் பெரும்பரி பாடலும், முதுமையடுத்த நாரையும் குருகும், கதியுறச் செய்த களரியா விரையும்’ எனவரும் பாவடிகளிலும் (சிலப். உரைப். அடிக்குறிப்பு) அடியார்க்கு நல்லார் குறித்த முறையிலேயே நூற்பெயர்கள் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். பரிபாடல் என்பது இசையமைதியுடையது ஆதலின் அதனை அடுத்துவரும் முதுநாரை முதுகுருகு களரியாவிரை என்பனவும் இசைப்பா நூலாதல் வேண்டும் எனக் கருதலாம். இறையனாரகப் பொருளுரையிலும் இந்நூல் தலைச்சங்க நூல்களுள் ஒன்றாகவே குறிக்கப்பட்டிருத்தல் காணலாம் (இறை. 1 உரை). இறந்துபட்ட தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="களரியாவீரை"/>
<section begin="களவழி நாற்பது"/>
{{dhr}}
{{larger|<b>களவழி நாற்பது:</b>}} பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று களவழி நாற்பது. களம் என்பது<noinclude>
<b>வா.க. 6 – 58அ</b></noinclude>
sfbtoaw9han8185quk6vmfxc7wtsliu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/944
250
643280
1954643
1933918
2026-07-19T07:34:57Z
Sridevi Jayakumar
15329
1954643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களவழி நாற்பது|916|கள விளையாட்டுகள்}}</noinclude>போர்க்களத்தைக் குறிப்பதாகும். போர்க்களத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கூறுவது இந்நூல்.
சங்க இலக்கியங்களில் போர்ச் செய்திகள் தனித் தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுள்ளனவேயன்றி, தொகுத்துரைக்கும் தனிநூல், முழுநூல் ஏதுமில்லை. போர்க்களத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் தனி நூல், முதல் நூல் களவழி நாற்பது தான்.
இந்நூலில் நாற்பத்தொரு பாடல்கள் உள. கடவுள் வாழ்த்துப் பாடல் இடம்பெறவில்லை.
இந்நூலாசிரியர் பெயர் பொய்கையார் ‘களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டியரசிட்ட அவனும்’ என்று கலிங்கத்துப்பரணி கூறுவதால் இந்நூலைப் பாடியவர் பொய்கையார் என்பது தெளிவு. ஆனால், இவர் சங்கப்புலவருள் ஒருவரா? அவரிலும் வேறானவரா என்பது ஆய்விற்குரியது.
சோழவரசன் செங்கணானின் வெற்றிச் சிறப்பை ஆசிரியர் இந்நூலில் எடுத்தோதுகிறார். சோழன் புனல் நாடன், செம்பியன், காவிரி நாடன் என்று குறிக்கப்பெறுகிறான். அரசனின் பெயர் செங்கண்மால், செங்கட்சினமால் என்று பல பாடல்களில் குறிக்கப்பெறுதலின் அரசன் செடகணான் என்று கருதப்படுகிறது.
செங்கணானுடன் போரிட்டுத் தோல்வியுற்ற சேர அரசன் கொங்கர் (14) என்றும், வஞ்சிக்கோ (39) என்றும் குறிக்கப்பெறுகிறான். ஆனால், சோழனால் தோற்கடிக்கப்பட்டவன் கணைக்கால் இரும்பொறை என்ற குறிப்பு எந்தப் பாடலிலும் காணப்பெற்றிலது. ஆயினும் பொய்கையார் இந்நூலைப் பாடிப் பரிசாக இரும்பொறையைச் சிறைவிடுத்தார் என்ற கருத்து நிலவுகிறது.
‘கழுமலம் கொண்ட நாள்’ (36) என்ற குறிப்பால் இருவருக்கும் போர் நடந்த இடம் கழுமலம் என்பதும், சோழன் இறுதியில் கழுமலத்தைக் கைப்பற்றினான் என்பதும் புலனாகும்.
‘களிறு எறிந்து பெயர்தல்’ ஆண்மகனுக்குக் கடமை என்பர் பொன்முடியார். களவழி நாற்பது களிற்றை மிகுதியும் எடுத்தியம்பும். இருபத்தாறு பாடல்களில் கனிற்றைப் பற்றிய குறிப்புண்டு, பிற்காலத்துத் தோன்றிய பரணி நூல்கட்கு முன்னோடியாகத் திகழ்வது களவழி நாற்பது. மேலும் களவழி என்ற புறத்துறையின் தனி வளர்ச்சியாகத் திகழ்வதும் ஆகும்.
‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே’ (17) என்ற பாடற் குறிப்பால் அக்காலத்தில் கார்த்திகை விளக்கிட்டமை பெறப்படும்.
போரின்கண் வீரர்களால் வெட்டப்பட்ட யானையின் துதிக்கை தரையிலே புரல்லது ‘உரும் எறி பாம்பிற்புரளும்’ பான்மைத்து என்ப. வெட்டுண்ட துதிக்கையிலிருந்து இரத்தம் சொரிவது பயனஞ்சொரி தருபை போன்று காணப்படுகிறது.
பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைபடப் பாடப்பெற்றுள. பாடலுள் பயிலும் உவமைகள் கற்பனை நயம்படச் சிறப்பாக அமைந்துள்ளன.
{{Right|<b>அ.வி.</b>}}
<section end="களவழி நாற்பது"/>
<section begin="களவியல்"/>
{{dhr}}
{{larger|<b>களவியல்:</b>}} காண்க: இறையனார்
<section end="களவியல்"/>
<section begin="களவிளையாட்டுகள்"/>
{{dhr}}
{{larger|<b>களவிளையாட்டுகள்:</b>}} விளையாடு களத்திற்குள்ளேயே நடைபெறும் விளையாட்டுகளுக்குக் களவிளையாட்டுகள் என்பது பெயர். ஓட்டப்பந்தய விளையாட்டுகள் (Track–racing), களப்போட்டி விளையாட்டுகள் (Field–events) ஆகிய இரண்டும் கள விளையாட்டுகளில் அடங்கும். விளையாட்டுத் திடலினுள் நடைபெறும் ஓட்டப் பந்தயம் (Running race) தடப் பந்தய விளையாட்டுக்கும், நீளந்தாண்டுதல் (Long jumping) களப்பந்தய விளையாட்டுக்கும் எடுத்துக்காட்டுகளாகும்.
நூறு மீட்டரிலிருந்து 5 கி.மீ. வரையான ஓட்டப் பந்தயங்களும் நீளந்தாண்டுதல், உயரந்தாண்டுதல், குதித்துத் தாண்டுதல், நீள்கழியால் தாண்டுதல் (Pole vault), தடை ஓட்டம் (Hurdle race) வட்டெறிதல் (Discus throw), ஈட்டியெறிதல், குண்டெறிதல், கயிறிழுந்தல் (Tug of war) ஆகியன களவிளையாட்டுகளாகும்.
களவிளையாட்டுகள் கி.பி. 1896–இல் ஒலிம்பிக்கு போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இவை ஒலிம்பிக்குப் போட்டிகளில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
களவிளையாட்டுப் போட்டிகளும் பந்தயங்களும், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றாலும், விளையாட்டுக் கழகங்களாலும், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றாலும் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றன. களவிளையாட்டுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பெறுகின்றன.
பள்ளி அல்லது கல்லூரி அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கள<noinclude></noinclude>
etkv3i4rlgit9f3osz8sbui3s3xbt8g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/945
250
643281
1954644
1933919
2026-07-19T07:35:34Z
Sridevi Jayakumar
15329
1954644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களைப்பு|917|களைப்பு}}</noinclude>விளையாட்டுகள் நடத்தப் பெறுகின்றன. போட்டிப் பந்தயங்களில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரமும் பரிசும் வழங்கப்படுகின்றன. காண்க. ஆட்டங்களும் விளையாட்டுகளும்: ஒலிம்பிக்கு ஆட்டங்கள்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="களவிளையாட்டுகள்"/>
<section begin="களைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>களைப்பு:</b>}} ஒருவன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்கின்றபோது அவனிடம் உண்டாகின்ற ஒரு சோர்வு நிலையைக் களைப்பு எனலாம். இந்த நிலைமை அவன்தன் செயல்வேகத்தையும் திறத்தையும் குறைப்பதோடு, செய்து முடிக்கும் வேலையின் அளவினையும் குறைக்கிறது. ஓய்வின்றித் தொடர்ந்து ஒரு வேலையைச் செய்வதும் கடினமான உழைப்பும் சிக்கலான வேலையும் களைப்பினை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக அவ்வேலையின் மீது அவனுக்கு நாட்டம் குறைவதோடு வெறுப்பும் ஏற்படும். களைப்பு வேகத் தடையாகிறது; வேலை செய்வோரின் உடலில் சில மாற்றங்களைத் தோற்றுவித்துச் சோர்வினைத் தருகிறது. செய்பொருளின் தரம் குறைந்திடவும் பேரிடர்கள், எதிர்பாரா இடையூறுகள், ஆகியன ஏற்படவும் களைப்பு காரணமாகிறது. இந்தக் களைப்பு உடல், உள்ளம் ஆகியவற்றோடு தொடர்புடையதென்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
களைப்பை முற்றிலுமாக அறிந்து கொள்வது எளிதன்று. அது போலவே அதனைக் கட்டுப்படுத்துவதும் முடியாமலிருக்கிறது. இருப்பினும் களைப்பு மூன்று பண்புக் கூறுகளைக் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை வேலையுணர்ச்சிகள், உடல் மாற்றம், செயற்பாட்டில் குறைவு என்பனவாகும்.
வேலையுணர்ச்சிகள் வேலையைச் செய்வோர் உணரும் உணர்ச்சியைக் குறிக்கிறது. ஒரு வேலையில் தொடக்கத்தில் இருக்கும் மகிழ்ச்சியான உணர்ச்சி குறைந்து கொண்டே வந்து, முடிவில் அவ்வேலையில் வெறுப்பு உணர்ச்சி அல்லது எவ்வுணர்ச்சியுமற்ற ஒரு நிலை ஏற்படக் கூடும். உள்ளத் தொடர்பான ஒரு வேலையைத் தொடர்ந்து அல்லது திருப்பித் திருப்பிச் செய்யும்போது, அவ்வேலையில் அதனைச் செய்பவனுக்குள்ள மகிழ்ச்சி என்னும் உணர்ச்சி வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் இவ்வாறு குறைவது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.
உடல் மாற்றங்கள் உடலில் ஏற்பட்டுள்ள களைப்பைக் காட்டும் அறிகுறிகளாகும். உடலில் கழிவுப்பொருட்கள் அல்லது ஒவ்வாத நச்சுத்தன்மை கொண்ட பொருள்கள் மிகுதியானதினால் ஏற்படும் ஒருவித வேதியல் மாற்றத்தின் விளைவே களைப்பு என்பர் உடற்கூறு வல்லுநர். வேலை செய்யும் போது உடலினுள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றின் விளைவாகத் தசை நார்களில் கரியமில வாயு, சூடு, ஒருவகை அமிலத் தன்மையான பொருள் ஆகியன மிகுகின்றன. இதனால் தசைநார்கள் வலிவிழந்து களைப்பைத் தருகின்றன.
உடல் வேலை செய்யும்போது இருதயத் துடிப்பும் மூச்சு விகிதமும் மிகுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் மிக்க ஒளியுள்ளதாக இருக்கும்போது களைப்பு விரைந்து ஏற்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இதைப் போலவே உடலில் சமநிலை குலையும்போதும் களைப்பு ஏற்படுகிறது. களைப்பு உடலுக்கு மிக இன்றியமையாததாகவும் அமைந்துள்ளது. களைப்பு உடலின் ஒழுங்குணர்வுக் கூறாகவும் நல்லிணக்கச் கூறாகவும் அமைந்துள்ளது.
செயற்பாட்டில் குறைவு என்பது களைப்பின் புறநிலைத் தன்மையைப் பற்றியதாகும். ஒரு வேலையின் தொடக்கத்தில் இத்தகைய குறைவு இருக்கிறது. இது வேலை நேரத்தைப் பொறுத்தும் வேலை செய்வோரின் தனியாள் வேறுபாடுகளைப் பொறுத்தும் வேலையின் தன்மையைப் பொறுத்துமிருக்கிறது. எனவே, வேலை தொடங்கங்கப்படும்போது வேலையில் வேகக் குறைவு காணப்படுவது ஒரு பொது மனப்பாங்காகும்.
இப்பண்புக் கூறுகள் மூன்றும் ஒரே நேரத்தில் வெளிப்படலாம்; அல்லது ஒன்றோ இரண்டோ வெளிப்பட்டு மற்றவை மறைந்தும் காணப்படலாம். எப்படியாயினும் களைப்பு இம்மூன்றினையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதே களைப்பைப் பற்றிய பொதுவான விதியாகும்.
களைப்பைப் போக்கிட முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மிக அதிக நேரமுமில்லாமல் மிகக் குறைந்த நேரமுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் நாடோறும் வேலை செய்வது களைப்பைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேலை நேரம் எப்படியிருப்பினும் வேலையின் கடுமையினால் களைப்பு ஏற்படும். இதனை ஓய்வு இடைவேளை மூலம் போக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து பணியாற்றும்போது ஏற்படும் களைப்பை இடையிடையே தேநீர் அருந்தியோ ஒருவர்க்குப் பிடித்தமான மோர், பீடி, சுருட்டுப் போன்ற ஏதே ஒன்றினைப் பயன்படுத்தியோ போக்கலாம். இவ்வாறு செய்தல் தேநீர் இடைவெளி (Tea Break) என்று சொல்லப்படுகின்றது. இந்தத் தேநீர் இடைவெளி வேலை செய்வோரிடையே ஒழுங்குணர்வினை மேம்படுத்துகிறது; உற்பத்தியைப் பெருக்குகிறது; விபத்தையும் குறைக்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
g88vip9gccg4mhmkrcgvtdxb6fk784v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/946
250
643388
1954645
1934269
2026-07-19T07:36:42Z
Sridevi Jayakumar
15329
1954645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களைப்பு|918|கற்காலம்}}</noinclude>கடின வேலை, சிக்கலான கருவிகளைக் கையாளுதல் ஆகியனவும் களைப்பைத் தருகின்றன. இந்நேரங்களில் வேலை செய்வோர் அதிகக் கவனம், அதிக ஆற்றல் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே களைப்பு ஏற்படுகிறது.
வேலை நடைபெறும் சூழ்நிலையில் போதிய ஒளியில்லாமை, மிகுந்த இரைச்சல், மிகுந்த வெப்பம், போதிய காற்றோட்டமின்மை ஆகியனவும் களைப்பு ஏற்படுவதற்கான மற்றைய காரணங்களாகும். இந்தச் சூழ்நிலைகளிலெல்லாம் பணியாளர் அதிக விழிப்புடனிருக்க வேண்டியிருப்பதுவும், அதிக ஆற்றலைச் செலவழித்து உழைக்க வேண்டியிருப்பதுவுமே களைப்பை ஏற்படுத்தும் காரணிகளாம். இச்சமயங்களில் உடல்களைப் படைவதைப் போலவே உள்ளமும் களைப் படைகிறது.
ஒருவர் அணியும் ஆடை, உண்ணும் உணவு பழக்க வழக்கம், தூக்கம், வீட்டின் சூழ்நிலை ஆகியவையும் களைப்பைக் கொடுக்கும் காரணக் கூறுகளாகும். செய்கின்ற வேலைக்கு ஏற்ப உடையணிந்தால்தான் தட்பவெப்ப நிலைகளின் தாக்குதல்களைத் தாங்கமுடியும். வேலையில் களைப்பும் உடனே ஏற்படாது. அது போலவே உணவும் இருப்பிடமும் உடல் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்தால் களைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அதிகம் நடக்க வேண்டி இருந்தால் காலணி அணியாவிடில் களைப்பு விரைவாக ஏற்படும். உடல்நலம் குன்றியோர் வேலை செய்யும்போது விரைவில் களைப்புறுவர்.
களைப்பை உளவியல் சோதனைகளைக் கொண்டு அளவிடலாம். களைப்பை அளவிட விரைவாகத் தட்டுதல் (Speed of Tapping), எதிர்வினை ஒருமுகப்பாடு (Reaction–Coordination), உடல் ஊசலாட்டம் (Body Sway), கையின் ஒரு நிலைப்பாடு (Hand Steadines), எளிய எதிர்வினைக் காலம் (Simple Reaction Time), சுடர் நடுக்கம் (Flicker) போன்ற சோதனைகள் பயன்படுகின்றன.
{{Right|<b>கி.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Fryer, D.H., and Henry, E.R.</b> (Eds) Handbook of Applied Psychology, Vol. I. Newyork; Rinehart, 1950.
<b>Puffenberger, A.T.,</b> Effects of Continuous work upon output and Feelings, Journal of Applied Psychology, 1928.
<section end="களைப்பு"/>
<section begin="கற்கா நாடு"/>
{{dhr}}
{{larger|<b>கற்கா நாடு:</b>}} இது செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 நாடுகளுள் ஒன்று. திசைச் சொல்லினை விளக்கும் தொல்காப்பியரும், நன்னூலாரும் கூறிய ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலம்’ என்ற தொடரை விளக்குங்கால் உரையாசிரியர்கள், செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரண்டு நாடுகள் என்று கூறி, அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். ‘தென்பாண்டி குட்டங் குடங்கற்கா’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பா அப்பன்னிரு நாடுகளையும் தொகுத்துக் கூறுகிறது. அதனைச் செந்தமிழ் வழங்கும் பகுதியினைச் சேர்ந்து, வட்டார வழக்குத் தமிழ் பயிலும் தமிழகப் பகுதிகள் பன்னிரண்டு என்றும் விளக்கியுள்ளார்கள். கற்கா நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப்புறத்திலமைந்த கற்கள் நிறைந்த நிலப்பகுதியாகும் என்று ஆய்வாளர்கள் கூறுவர். கற்களும் குன்றுகளும் மிக்கிருந்தமையால் அப்பகுதி கற்கா நாடு எனப்பட்டது. திசைச்சொற்களுக்கு எடுத்துக் காட்டுத் தரும்போது இலக்கண உரையாசிரியர்கள். ‘கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்பர்’ என்று காட்டியுள்ளனர். கொச்சிக்குக் கிழக்கிலுள்ள மலை நாடும் பழனி முதலிய நாடும் கற்காநாடு எனப்படும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கற்கா நாடு"/>
<section begin="கற்காலம்"/>
{{dhr}}
{{larger|<b>கற்காலம்:</b>}} மனித இன வரலாற்றில் கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திய முதல் காலப் பகுதி. வரலாற்றில், தொல் பழங்காலப் பகுதிகள், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (Pre historic age) வரலாற்று அண்மைக் காலம் (Proto-historic age) என இரண்டாகப் பகுக்கப்படும். இவற்றுள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினைப் பழைய கற்காலம் (Old stone age), புதிய கற்காலம் (New stone age) என்று அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில் பிரிப்பர்.
மேலும் மனிதனின் தொன்மை, தொழிலறிவு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. கற்காலத்தில் மனிதன் முதன் முதலில் கற்கருவிகளைப் பயன்படுத்தித் தன் தேவையையும் தன்னையும் பாதுகாத்துக் கொண்டான். உலக வரலாற்றில் கற்காலம் எல்லா நாடுகளிலும் ஒரே காலத்தில் தோன்றவில்லை. இக்காலம் இடத்திற்கு இடம் காலத்தால் மாறுபட்டுக் காணப்படுகிறது. இன்றளவும் கூடச் சில நாடுகளின் பழங்குடிகள் கற்கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகத் தென் பிலிப்பைனில் வாழும் குகை மக்களும், தசாடேசு (Tusadays) என்னும் இன மக்களும் இக்காலத்திலும் கற்கருவிகளையே பயன்படுத்துகின்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
mn2bouo5crsfhz41buwo8whek3xfb7k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/955
250
643513
1954646
1934849
2026-07-19T07:37:43Z
Sridevi Jayakumar
15329
1954646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|926|கற்பனை}}</noinclude>மக்கள் புதிய கற்கால மக்களின் முன்னோடிகள் ஆவர்.
இந்தியாவில் காணப்படும் கடைப்பழங்கற்கால நிலை ஐரோப்பாவில் இடைக்கற்கால நிலையுடன் சிறிது ஒத்துள்ளது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கடைப்பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கும் திருநெல்வேலிப் பகுதி தேரிகள் எனப் பெயர் பெற்றுள்ளன.
திருநெல்வேலித் தேரிகளிலும், வடஆர்க்காடு, செங்கற்பட்டு, மதுரை மாவட்டங்களிலும் மிக நுண்ணிய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் யாவும் விலைமதிப்புள்ள கல்வகைகளான படிகக்கல்வகை (Chert), பழுப்புநிற மணிக்கல்வகை (Jasper), வெண்ணிறமணிக்கல்வகை (Chaleedony), இரத்தினம் (Agate) போன்ற கல்வகைகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்டன. இக்கற்கருவிகள் மிகக் குறைவான அளவுடையவை. வெட்டுக் கருவிகள் பட்டைக் கத்தி, கரண்டிகள், பிறைகள், இருபக்க முனைகள் போன்ற கருவிகள் ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்க கற்கருவிகளாகும்.
<b>புதிய கற்காலம்:</b> புதிய கற்காலத்தில் மனிதளின் தொழில் நுட்பப்பண்பாட்டு அமைப்பில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. புதிய கற்கால மனிதன் உணவு சேகரிப்பதை விடுத்து உணவுப் பயிர்களைத் தானே பயிரிடும் கலையைக் கற்றான். வேட்டையாடுதல், மீன்பிடித்தல் காட்டுப் பழங்களைச் சேகரித்தல் போன்ற தொழில்களை மட்டும் செய்யாமல் வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கினான். வீட்டு விலங்குகளை வளர்க்கவும் மட்கலன்கள் செய்யவும் விலங்குகளின் மயிர்களைக் கொண்டு ஆடைகள் நெய்யவும் இக்கால மனிதன் தெரிந்து கொண்டான். இப்புதிய கற்காலக் கருவிகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டன. வழவழப்பான கருவிகளை இக்கால மக்கள் பயன்படுத்தினர். இவர்கள் வீடுகளில் வாழ்ந்தனர். சில கிராமங்கள் அரண்களாலும் சூழப்பட்டிருந்தன. அவற்றுள், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஏரி நகரங்கள் (Lake Towns) குறிப்பிடத்தக்கவை.
புதிய கற்கால மனிதன் வாழ்ந்த தடயங்கள் இந்தியாவில் கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே வட கருநாடகப் பகுதியில் பெருமளவில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, வட ஆர்க்காடு மாவட்டங்களில் அதிக அளவில் புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைத்துள்ளன. இக்கற்கருவிகளுள் கோடரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Chester Chard S.,</b> Man in Pre-history, McGraw-Hill Book Company, New York, 1969.
<b>Clark Grahame,</b> World pre-history– A New outline, Cambridge University Press, Cambridge, 1969.
<b>Piggott Stuart (Ed.)</b> The Dawn of Civilization, McGraw–Hill Book Company, New York, 1969.
<b>Sankalia, H.D.,</b> Pre-history and Proto-history of India and Pakistan, University of Bombay, 1962.
<section end="கற்காலம்"/>
<section begin="கற்பனை"/>
{{dhr}}
{{larger|<b>கற்பனை:</b>}} காலையில் உண்ட சிற்றுண்டியை நினைவில் கொண்டு, உண்டவற்றையும் அவற்றின் சுவைகளையும் உண்ணும்போது உடன் இருந்தவர்களையும் நினைவில் கொண்டு வரமுடிகிறதா? உணவு வகைகளின் விவரம், வண்ணம், மணம், சுவை, வெப்பம், விரும்பி உண்டது எது என்பனவெல்லாம் தெரிய முடிந்தால் சிறப்பு, பரிமாறியவர் அணிந்திருந்த உடையைப் பற்றிக் கூடச் சிலரால் சொல்ல முடிவதில்லை. இது நினைவாற்றல் அன்று; நிகழ்ச்சிகளை உருவமாக நினைத்துப் பார்க்கும் ஆற்றலாகும். அவ்வாறு பார்க்க முடிந்தால் பல வினாக்களுக்கு விடையளித்து விடலாம். மனத்தில் நின்ற காட்சியைப் பார்த்தே இன்னின்னவை என்று கூறிவிட முடியும். இவ்வாற்றல் எல்லோருக்கும் உண்டு. சிலரால் எளிதாக முடியும். வேறு சிலரால் உருவப்படுத்திப் பார்ப்பது எளிதாக முடிவதில்லை.
உருவம் சிந்தனையைத் தூண்டித்தா? அல்லது சிந்தனையினால் உருவத்தைக் காண முடிந்ததா என்ற வினாக்கள் எழுவது இயல்பு உருவம் சிந்திக்காது. ஆனால் சிந்தனை உருவத்தை உண்டாக்கும் என்பதுதான் உண்மை.
சொற்களற்ற சிந்தனை உணர்வாகும். சொற்கள் உணர்வைக்கூடத் தெளிவாக்கக் கூடியன. ஒரு சாதாரணக் கவிஞர் கவிதை எழுத எண்ணிச் சிந்திக்கத் தொடங்கியபோது, கண் தோன்றப் பார்வை என்றும், காடும் வானமும் தோன்றச் சோலை என்றும், நீர் தோன்ற நெகிழ்தல் என்றும் உருவகித்துக்கொண்டார். சொல்லாட்சி ஏற்கெனவே சிறந்திருந்ததனால் அவருக்குக் கற்பனை ஓட்டம் எளிதாக நிகழ்ந்தது. கற்பனையின் விரிவுக்குக் கற்பனைச் சிந்தனை முக்கியமாகிறது. எண்ணத்திலிருக்கும் எண்ணிறந்த கருத்துகளைப் பொதுவாகச் சொற்களாக<noinclude></noinclude>
qbfdjv0kojxjrcdkj8201mw5ivhzih5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/957
250
643515
1954647
1934917
2026-07-19T07:38:31Z
Sridevi Jayakumar
15329
1954647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பிக்கும் தகுதியாற்றல்|929|கற்பிக்கும் தகுதியாற்றல்}}</noinclude>டறியப்படுகின்றன. அதனால், மக்கள் எளிமையாகவும் இனிமையாகவும் எண்ணியதைப் பெற்றும் வாழ முடிகிறது.
கற்பனையால் புதிய சமுதாயத்தை உருவாக்கிப் பார்ப்பதால், அதற்கு ஆதரவானவற்றையும் முரணானவற்றையும் எண்ணிப் பொருத்தப்பாட்டை ஆராய்ந்து தக்கனவற்றை ஏற்கவும் தகாதனவற்றை நீக்கவும் பலவகைப் புரட்சிகளைச் செய்யவும் முடிகிறது. கற்பனை மக்கள் உயர்விற்கும் மகிழ்விற்கும் பெருந்துணை செய்கிறது. அதுபோலவே சிற்சில வேளைகளில் தவறான நம்பிக்கைகளுக்கும் தீய எண்ணங்களுக்கும் துணையாகிச் சமுதாயத்திற்குத் தீமைகளையும் விளைவிக்கிறது. கற்பனை, பண்பாட்டினால் சீரமைக்கப்படின் தீமைகள் தவிர்க்கப்படும்.
{{Right|<b>மா.பெ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Assagioli, R.L.,</b> Psychosynthesis: A Manual of Principles and Techniques Hobbs, New York, 1965.
<b>Luria, A.R.,</b> Mind of Memorist, Basic Books, New York, 1968.
<b>Ornstein, R.E.,</b> Psychology of Consciousness, Viking Press, New York, 1972.
<b>Wertheimer, M.,</b> Productive Thinking, Tauislock Publications, London, 1961.
<section end="கற்பனை"/>
<section begin="கற்பிக்கும் தகுதியாற்றல்"/>
{{dhr}}
{{larger|<b>கற்பிக்கும் தகுதியாற்றல்:</b>}} கற்பித்தலுக்குரிய தகுதியும் திறனும் பண்பும் கற்பிக்கும் தகுதியாற்றல் எனப்படும். இப்பண்புகளை வலியுறுத்தும் ஆசிரியர் பயிற்சி முறை, திறமைசார் ஆசிரியர் கல்வி (Competence-based Teacher Education-CBTE) அல்லது செயலாற்றல் சார் ஆசிரியர் கல்வி (Performance-based Teacher Education-PBTE) எனக் குறிக்கப்படும். இப்புதிய ஆசிரியர் பயிற்சிமுறை தொன்று தொட்டு இருந்துவரும் ஆசிரியர் கல்வியின் பயனில் லாமையை நீக்குவதற்காக ஏற்பட்டது. திறமையான ஆசிரியர்களின் செயல் அடிப்படையில் திறமைசார் ஆசிரியர் கல்விக்கு முற்போக்குத் தேவைகள் பெறப்படுகின்றன. அத்தேவைகள் தகுதிகள் என்று சொல்லப்படுகின்றன. கற்பித்தலும் அளவிடுதலும் தகுதிகளோடு தொடர்புடையன. கற்போருடைய முன்னேற்றம் தகுதிகளைச் செய்து காட்டுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. தகுதி என்பது தொழில் முறைப் பணிக்குப் போதுமான அளவு ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சுட்டுகிறது.
<b>திறமைசார் ஆசிரியர் கல்வி:</b> திறமைசார் ஆசிரியர் கல்வி என்பது தொன்றுதொட்டு வரும் ஆசிரியர் கல்வி முறைக்கு எதிராக 1960–இல் ஏற்பட்ட ஓர் இயக்கமாகும். இவ்வியக்கம் திறமைமிக்க ஆசிரியர்களை உருவாக்குவதற்கு அமைந்த பயனுள்ள முறை என்று ஒரு சிலராலும் இது ஓர் இயந்திரப் போக்குடையது என்று வேறு சிலராலும் கருதப்படுகிறது. பாடப் பொருள்களை உறுதி செய்வதிலும் ஆராய்ச்சியின் மூலம் அதன் பல்வேறு உட்கூறுகளைச் செம்மைப்படுத்துவதிலும் திறமைசார் ஆசிரியர் கல்வியின் பயன்முறை பெருமளவு உயர்வுடையதாக உள்ளது.
திறமைசார் ஆசிரியர் கல்வி, பயனுள்ள கற்பித்தல் பயிற்சியின் பல்வேறு கருதுகோள்களில் கவனம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டும் அவற்றையே அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது. இது ஆசிரியர் என்ன அறிய வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றைச் செய்து முடிக்க வேண்டும் என்பதனை வரியுறுத்துகிறது. திறமைசார் ஆசிரியர் கல்வியில் திறம்பட மாணவர்கள் எவற்றைச் செய்து காட்ட வேண்டும் என்பதைத் தேவைகள் விளக்குகின்றன. அத்தகைய தேவைகள் காணக்கூடிய வினைகளைப் (அமைத்துக்காட்டி, முறையாக அமைத்துக்காட்டி,) பயன்படுத்தி, காணமுடியாத வினைகளை (புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து கருதுதல்) நீக்க வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.
<b>தகுதிகளின் வரையறை:</b> திறமைசார் ஆசிரியர் கல்வியில் ஐந்து வகையான தகுதிகள் வரையறை செய்யப்படுகின்றன. முதலாவது, அறிவுநிலைத் தகுதிகள்; கற்போரிடம் எதிர்பார்க்கும் அறிவு, அறிவு சார்ந்த திறமைகள் ஆகியவை வரையறுக்கப்படுகின்றன. எ–டு: வினாக்களின் ஐந்து நிலைகளை வரிசைப்படுத்திச் சான்றுகள் தருக.
இரண்டாவது, செயல்நிலைத் தகுதிகள்; கற்போர் கற்றவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் கற்றவற்றைச் செய்து காட்டுவது மிகுதி. செயல் அடிப்படையில் அமைந்த தகுதிகள் திறன்களையும் வெளிப்படையான செயல்களையும் வரையறை செய்கின்றன. எ-டு: வகுப்பறையில் மாணவர்களைக் கலந்துரையாடலில் ஈடுபடச் செய்து அதன்மூலம் 50 விழுக்காடு மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்தல். மூன்றாவது, விளைவுகளின் அடிப்படையில் அமைந்த தகுதிகள்; வெற்றியின் அளவு கருவி என்பது ஒருவன் என்ன அறிந்திருக்கிறான் அல்லது செய்கிறான் என்பதை அறிதலைக் காட்டிலும் எவ்-<noinclude>
<b>வா.க. 6 – 59</b></noinclude>
tiuxmertibnd9foxlgkjmcxhshj3y3t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/959
250
643581
1954648
1935285
2026-07-19T07:39:19Z
Sridevi Jayakumar
15329
1954648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பிக்கும் தகுதியாற்றல்|931|கற்பித்தல் அறிவியல் கழகம்}}</noinclude>தனிக் கற்றலினால் விளையும் மிகுந்த பயன்களைப் பெற்றிருந்தனர்; தம் மாணவர்களால் உயர்ந்த செயல் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
மெப்ராசுகா (Mebroska) பல்கலைக் கழகம், ஊசுடன் (Houston) பல்கலைக் கழகம், ஓரிகான் (Oregon) ஆசிரியர் கல்லூரி, தோலிடோ (Toledo) பல்கலைக்கழகம் முதலியவை திறமைசார் ஆசிரியர் கல்வி சிறப்பானதே என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளன.
திறமைசார் ஆசிரியர் கல்வியின் முன்பே தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களின் இயல்புபற்றி மனிதப் பற்றுக் கோட்பாட்டுக் கல்வியாளர்கள் ஐயப்படுகிறார்கள். வளர்ச்சிக்கும் தானே முடிவு செய்யும் இயல்புக்கும் தானே புதுப்பித்தல் இயல்புக்கும் தானாதல் இயல்புக்கும் திறமைசார் ஆசிரியர் கல்வி இசைவாக அமையவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். ஆசிரியர்கள் தனித்தனித் தகுதிகளைப் பயன்படுத்திக் கற்பிக்கவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருங்கிணைந்த முறையைப் பயன்படுத்தியே கற்பிக்கின்றனர்.
ஆசிரியருடைய தகுதியை, மாணவர்களுடைய சாதனையை வைத்து மதிப்பீடு செய்வது எதிர்க்கப்படுகிறது. ஏனெனில் இது ஆசிரியருடைய அறிவு அல்லது செயலையும் மாணவர்களையும் தொடர்புபடுத்துகிறது.
<b>இன்றைய கேள்வியும் எதிர்காலப்போக்கும்:</b> திறமைசார் ஆசிரியர் கல்வியோடு தொடர்புடைய எல்லைச் செயல்முறைகளிலும் 1970 தொடக்கத்திலிருந்து எண்ணற்ற சிக்கல்கள் உருவாகி உள்ளன. ஒரு குறிப்பிட்ட தகுதியோ ஒருவகையான தகுதிகளோ பயன்மிகு கற்பித்தலோடு தொடர்புடையன என்று எச்சான்று புலப்படுத்துகிறது? குறிக்கோள் சாராக் கற்பித்தல் முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் திறமைசார் ஆசிரியர் பயிற்சிக் கல்வியைத் தர முடியுமா? திறமைசார் ஆசிரியர் கல்வி மனிதாபிமான மதிப்புகளை வழங்க முடியுமா? திறமைசார் ஆசிரியர் கல்வி கற்பித்தல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறதா? ஆசிரியர்களிடையே குறைந்ததாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அதிகப்படியான சாதனை நிலையாக மாறுகிறதா? திறமைசார் ஆசிரியர் கல்வியில் இறுதி நிலைத் தேவைகளையே வற்புறுத்துவதால், சேர்ந்து கற்பதற்கான வாய்ப்பினைப் புலப்படுத்துகிறதா? திறன் ஒதுக்கீடு அடிப்படையில் இது விரும்பத்தக்கதா? இக்கொள்கையைச் சோதிப்பதற்குப் பல்லாண்டு ஆராய்ச்சியும் வளப்படுத்துதலும் தேவை. ஆயினும் இவ்வியக்கம் செயற்படுத்துவதில் தொடக்க நிலையிலேயே இருப்பதால் விளைவினை உறுதிப்படுத்த இயலவில்லை.
{{Right|<b>சீனி.ச.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gary, D. Borich and Karbleen S. Fenton,</b> The Appraisal of Teaching, Addison-Wesley. Massachusetts, 1977.
<b>Michael J. Dunkin and Bruce J. Biddle,</b> The Study of Teaching, Holt, Rinechart and Winston, New York, 1974.
<section end="கற்பிக்கும் தகுதியாற்றல்"/>
<section begin="கற்பித்தல் அறிவியல் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>கற்பித்தல் அறிவியல் கழகம்</b>}} கல்வி ஆராய்ச்சிக்காகச் சோவியத்து நாட்டில் இயங்கி வரும் முதன்மையான நிறுவனம். இக்கழகம் 1943–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கற்பித்தல் கருவிகள், பொது மற்றும் கல்வி உளவியல், வளர்ச்சிசார் உடற்கூறுஇயல் ஆகியவற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்தல், சோவியத்து நாட்டிலும் பிற நாடுகளிலும் நிலவும் கற்பித்தல் கோட்பாடுகளையும் பள்ளிச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் முறைப்படி தொகுத்தல், புதிய கற்பித்தல் முறைகளை ஆக்கிப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகக் கற்பித்தல் அறிவியல் கழகம் (Academy of Pedagogical Sciences, USSR) 1967–இல் திருத்தியமைக்கப்பட்டது.
கல்வியியல், உளவியல் ஆகியவற்றின் வல்லுநர்கள், கற்பித்தல், கல்வியியல் தொடர்பான பிற துறை வல்லுநர்கள், புகழ் வாய்ந்த கல்வியாளர்கள் ஆகியோர் இக்கழகத்தின் உறுப்பினராகத் தகுதியுடையோராவர். இக்கழகம் சோவியத்து நாட்டுக் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்குவதோடு, ஆண்டுதோறும் தன் கல்வி நடவடிக்கைகள் குறித்த ஆண்டறிக்கையினையும் அளித்து வருகிறது. சோவியத்து அரசு தன் ஆண்டு வரவு சொவுத் திட்டத்திலிருந்து இக்கழகத்தின் வளர்ச்சிக்கெனப் பணம் ஒதுக்குகிறது. இக்கழகம் கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் புகழ் மிக்க கண்டுபிடிப்புகள், பணிகள் ஆகியவற்றுக்கும் பரிசு, பட்டயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
கற்பித்தல் அறிவியல் கழகத்தில் 50 முழு நேர உறுப்பினர்களும் 76 இணை உறுப்பினர்களும் (1982) உள்ளனர். இக்கழகத்தில் 13 ஆராய்ச்சி நிறுவனங்கள் நான்கு பெரிய துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்கழகம் ஆசிரியர்களுக்குக் கல்வியிலும் உளவியலிலும் உயர் ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றைக் கற்பித்தல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நடத்துகிறது.
{{nop}}<noinclude>
<b>வா.க. 6 – 59அ</b></noinclude>
m3odds5fi59k5f21fno72hqq2f0bo7g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/960
250
643582
1954649
1935293
2026-07-19T07:40:21Z
Sridevi Jayakumar
15329
1954649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தல் மாதிரிகள்|932|கற்பித்தல் மாதிரிகள்}}</noinclude>கற்பித்தல் அறிவியல் கழகத்துடன் இணைந்துள்ள 13 ஆராய்ச்சி நிறுவனங்களுள் 11 நிறுவனங்கள் மாசுக்கோ நகரில் மட்டும் அமைந்துள்ளன; இலெனின்கிராடு (Leningrad), கசன் (Kazan) ஆகிய நகர்களில் எஞ்சிய நிறுவனங்கள் உள்ளன. இக்கழகத்தில் 4,000 பேருக்கும் மேலாகப் பணி செய்கின்றனர்; 1700-க்கும் மேற்பட்டவர்கள் முழு நேர ஆராய்ச்சியில் உள்ளனர். இக்கழகம் மொத்தம் 6 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு வருகிறது. இவற்றின் மாத மொத்த விற்பனை மட்டும் 2 மிலியன் இதழ்களுக்கு மேலாக உள்ளது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கற்பித்தல் அறிவியல் கழகம்"/>
<section begin="கற்பித்தல் மாதிரிகள்"/>
{{dhr}}
{{larger|<b>கற்பித்தல் மாதிரிகள்:</b>}} மாதிரி என்பது முயற்சியையும் அதன் விளைவையும் தொடர்புபடுத்தும். ஆசிரியர் நடத்தை எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியரின் நடத்தை மாணவர் நடத்தையில் என்ன விளைவை ஏற்படுத்தும்? என்ற வினாக்களுக்குக் கற்பித்தல் மாதிரிகள் பதில் அளிக்க வல்லவை.
கற்பித்தல் மாதிரிகளை (Teaching Models) 1. மரபு வழிக் கற்பித்தல் மாதிரிகள் என்றும் 2. இக்காலக் கற்பித்தல் மாதிரிகள் என்றும் பிரிக்கலாம்.
எர்பார்ட்டு, சாக்கிரட்டீசு, கரோல் போன்றோர் மரபுவழி மாதிரி பற்றியும், கிளேசர், இசுடொலுரோ (Stolurow) போன்றோர் இக்கால மாதிரிகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர்.
<b>எர்பார்ட்டின் மாதிரிகள்:</b> உருசோவின் (Rousseau) கொள்கைகளும் பெசுடலொசி (Pestalozzi) செயல்முறைக் கொள்கைகளும் இணைந்து, எர்பார்ட்டின் மாதிரிக்கு (Herbartian Model) உருவம் கொடுத்தன. கல்வியில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு எர்பார்ட்டின் (Herbart) சிந்தனைக் கருத்துகள் ஒரு முடிவைக் கொடுத்தன.
எர்பார்ட்டு பாடத்தின் வளர்ச்சியை நான்கு படிநிலைகளில் விளக்குகிறார். அவை: முன்னுரை அல்லது தயாரிப்பு நிலை (Introduction), கற்பித்தல் (Presentation), ஒப்பு நோக்கல் அல்லது தொடர்புபடுத்தல் (Association), பொதுவிதி காணல் (Generalisation). அவருடைய கொள்கையைப் பின்பற்றியவர்கள் அவர் மாதிரியுடன் மற்றொரு படிநிலையையும் சேர்த்துக் கொண்டனர். அதுவே பயன்படுத்தல் (Application) என்பது.
எர்பார்ட்டு கொள்கைப்படி ஒர் ஆசிரியர் ஐந்து படி நிலைகளையும் கடைப்பிடித்தால் மாணவர்களிடம் சிறந்த கருத்தை உருவாக்க முடியும். அவை:
<b>தயாரிப்பு நிலை:</b> இந்நிலையில் நடத்தப்போகும் புதிய தலைப்பு கருத்து அல்லது நிகழ்ச்சி ஆகியவற்றுக்குத் தொடர்புடைய பழைய அனுபவங்களை நினைவூட்டும் வாய்ப்பை அளிக்கிறது. இது அடுத்த நிலையான கற்பித்தலுக்குப் பயன்படுகிறது.
<b>கற்பித்தல்:</b> மாணவர்களுக்குத் தெரியாத உண்மைகள், குறிக்கோள்கள், விதிகள் போன்றவற்றைக் கற்பித்தல் நிலை விளக்கும்.
<b>தொடர்புபடுத்தல்:</b> புதிய சொற்களின் சிறப்புகளும் தெரிந்த சொற்களும் ஒப்பிடப்படும். தெரிந்த செய்திக்கும் தெரியாத செய்திக்குமிடையே ஒரு தொடர்பு உண்டாகிறது. தெரிந்த, தெரியாத கருத்துகளில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் கண்டறியப்படுகின்றன.
<b>பொதுவிதி காணல்:</b> தொடர்புபடுத்தல் மூலம் ஆராய்ந்த பொதுவான கருத்துகள், நோக்கங்கள் ஆகியவற்றுக்குப் பொதுவிதி காணப்படும்.
<b>பயன்படுத்தல்:</b> இவ்வாறு கண்ட பொது விதியைப் பயன்படுத்துதல்.
<b>சாக்ரட்டீசு கற்பித்தல் மாதிரி:</b> சாக்கிரட்டீசு கருத்துப்படி, ஒவ்வொரு மனிதனும் உண்மையைக் கண்டுணரும் ஆற்றல் மிக்கவன். கற்றலும் கற்பித்தலும் வினா – விடைகளையுடைய அறிவு சார்ந்த உரையாடலாக இருக்க வேண்டும். பாடத்தைப் பற்றியும் கருத்தைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டதன் மூலமும், விவாதிப்பதின் மூலமும் ஆசிரியர் கருத்தை உருவாக்குகிறார். சாக்கிரட்டீசின் நான்கு படிநிலைகள் முறையே: 1. பொதுவான கருத்தைக் கூறல், 2. உரையாடல்வழிக் கற்றல், 3. விவரங்கள் சேகரித்தல், 4. பயன்படுத்துதல் என்பனவாகும்.
படிநிலைகள் — 1
{{center|
{{Box|தயாரிப்பு<br>நிலை}}→{{Box|கற்பித்தல்}}→{{Box|தொடர்பு<br>படுத்தல்}}→{{Box|பொதுவிதி<br>காணல்}}→{{Box|பயன்<br>படுத்தல்}}}}
{{nop}}<noinclude></noinclude>
i9jfso7mhm42xx5i7kdnvckhjdrl0wm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/963
250
643585
1954650
1935308
2026-07-19T07:41:09Z
Sridevi Jayakumar
15329
1954650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தலில் நுண்திறன்|935|கற்பித்தலில் நுண்திறன்}}</noinclude>மாற்றியமைப்பது, 2. மாணவர்கள் சாதனை மன நிறைவளிக்கக் கூடியதாக இல்லையென்றால் பாடப் பொருளைப் புதிதாகத் தயாரிப்பது போன்றவற்றைச் செய்கிறது.
{{Right|<b>கே.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gage, N.L.,</b> The Scientific Basis of the Art of Teaching, Teachers College Press, New York, 1978.
<b>Smith, BO. and Meux, M.O.,</b> A Study of the Logic of Teaching, University of Illinois Press, Urbana, Illinois, 1970.
<section end="கற்பித்தல் மாதிரிகள்"/>
<section begin="கற்பித்தலில் நுண்திறன்"/>
{{dhr}}
{{larger|<b>கற்பித்தலில் நுண்திறன்:</b>}} கற்பித்தல்-கற்றல் முறையின் பல சிக்கலான பகுதிகளை எளிமைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆய்வுக்கூடப் பயிற்சி முறை இது. ஆசிரியர் பயிற்சி பெறும் பயிற்சியாளர் ஒருவர் கற்பித்தல் செயலில் வரையறுக்கப்பட்டதும் ஒருமுகப்பட்டதுமான நிலையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதில் வரையறுத்தல் என்பது வகுப்பு அளவினையும் பாட அளவினையும் குறிக்கும் ஒருமுகப்படுத்துதல் என்பது கற்பித்தல் செயலைக் குறிக்கும். பயிற்சியாளர் ஒருவரின் கற்பித்தல் முறை கேள்விப் பதிவு நாடா (Audio Tape) அல்லது காட்சிப் பதிவு நாடா (Video Tape) கருவியில் பதிவு செய்யப்படும். பின்னர்ப் பயிற்சியாளர் பாடம் நடத்தி முடித்ததும், அவர் நடத்திய வகுப்பைப் பதிவு நாடாவைப் பயன்படுத்தி வகுப்பறைத் தொலைக்காட்சியில் (CCTV) காணலாம். இத்தகைய கருவிகள் கிடைக்காதபோது பயிற்சிக்கு மேற்பார்வையாளராயிருக்கும் ஆசிரியர், பயிற்சியாளருக்கு விளைவு கூறலாகப் (Feedback) பயிற்சிவாளரின் சொல்சார்ந்த, சொல் சாராத திறன்களை எழுத்து மூலம் தருவார். பின்னர் மேற்பார்வையாளரின் கருத்துகளின் அடிப்படையில் பயிற்சியாளர் தம் பாடத்தை நுணுகி ஆராய்ந்து, அதனை மாற்றி அமைத்து, உடனேயோ சில நாள்கள் கழித்தோ புதிய மாணவர்க்குக் கற்பிப்பார். இவ்வாது பாடத்தை மாற்றி அமைக்கிற சூழ்நிலை கற்பித்தல் பயிற்சியில் (Teaching Practice) முழுமை பெறும்வரை தொடர்ந்து நிகழும்,
பல புதிய கல்விமுறைகளைப் போலவே, ‘நுண்திறன் கற்பித்தல்’ தொடக்க நிலையிலும், அதன் வளர்ச்சி நிலையிலும் முழுமையான கருத்துணர்வையோ ஆய்வு முடிவுகளையோ அடிப்படையாகக் கொள்ளவில்லை. ஆலன் (Allen), இரயான் (Ryan) ஆகியோரால் இது ஒரு நினைவுப் படிவம் என்றே விளக்கப்படுகிறது. இதன் வினைவாக ஆசிரியப் பயிற்சியாளர்களும் இத்துறையில் தொடர்பு கொண்டுள்ள ஏனையோரும் இவ்வடிப்படையான கருத்தைத் தங்கள் கருத்துக்கு அரண் செய்வதாகக் கொண்டு இம்முறையின் அடிப்படையில் பல மாற்றங்களைச் செய்து, தங்கள் கருத்துக்களுக்கும் கருதுகோள்களுக்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளனர்.
நுண்திறன் கற்பித்தல் (Micro–Teaching) என்பது பயிற்சியாளர்கள் தங்கள் பயிற்சியின்போது பொருத்தமான எதையும் கற்றுக் கொள்ள முடியவில்லை என்ற வெறுப்புணர்விலிருந்து உருவான ஒன்று என்பது ஆலன், இரயான் ஆகியோர் கருத்து. இவர்கள் இசுடான்போர்டு (Standford) பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உருவாக்கிய இந் ‘நுண்திறன் கற்பித்தல்’ பெருமளவில் பொது மக்கள், கல்வியாளர்கள், தொன்றுதொட்டு வரும் முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரது வெறுப்புணர்வையும் மன நிறைவின்மையையும் நீக்கும் மாற்றமாகும். அமெரிக்காவில் 1950-க்கும் 1960–க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளிகளும் கல்லூரிகளும் பெரிதும் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆசிரியர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்ற அளவு உறுதியாகப் பெறுவதற்கு ஏற்ற திறன்கள் தங்களுக்குப் பயிற்சியின் போதோ பணியிடையிலோ அளிக்கப்படவில்லை என்று குறை கூறினர்.
பழைய முறையிலமைந்த ஆசிரியப் பயிற்சி பற்றிய ஒரு மதிப்பாய்வு ஓர் உண்மையைப் புலப்படுத்தியது. பழைய முறையில் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் ஆசிரியருக்குத் தேவையான கற்பித்தல் திறன்களை இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்டது என்றும், பயிற்சியின் முழு அணுகுமுறையும் அளவிடும் பயிற்சியாளர்களுக்குப் பயன்படவில்லை என்றும், பயிற்சியாளர் இறுதி நடத்தை (பயிற்சி பெற்ற பின் பயிற்சியாளர் பெற்ற திறன்கள்) எவ்வகையிலும் தொடக்க நடத்தையைக் (பயிற்சி பெறுவதற்கு முன் பயிற்சியாளரிடமிருந்த திறன்கள்) காட்டிலும் சிறப்புடையதாக அமையவில்லை என்றும் அம்மதிப்பாய்வு சுட்டிக்காட்டியது. கற்பித்தலில் நுண்திறன் இக்குறைகளைக் களைவதற்குப் பயன்படத் தொடங்கியது.
கற்பித்தலில் நுண்திறன் அமைப்பு, மாதிரி (Modelling), பயிற்சி (Practice), விளைவுகூறல் (Feedback) என்னும் மூன்று தொடர்நிலைகளைக் கொண்டது.
{{nop}}<noinclude></noinclude>
m1i1smqo2hc2rf0qxqj9bhfjhi0egj9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/965
250
643587
1954651
1935313
2026-07-19T07:42:08Z
Sridevi Jayakumar
15329
1954651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தலில் நுண்திறன்|937|கற்போர்வழிக் கற்பித்தல்}}</noinclude>திறனின் தன்மையைப் பொறுத்து அமைந்துள்ளன என்பதும் புலப்படுகிறது. சொல் சார்ந்த திறன்களின் செயல்களுக்கான விளைவு கூறல், கேள்விப் பதிவு நாடாக் கருவியின் மூலம் பயனுள்ள வழியில் வழங்கப்படுகிறது. காட்சிக் கூறுகள் மிகுந்த திறன்கள் பற்றிய விளைவுகூறல், காட்சிப் பதிவு நாடாக் கருவியின் மூலம் செம்மையாகப் புலப்படும். ஏதாவது ஒரு வகையில் ஒருமுகப்படுத்துதலை இணையாகக் கொள்ளாத விளைவு கூறல், மேற்பார்வையாளர் தரும் விளைவு கூறலில் அமைந்துள்ள தன்மையைக் காட்டிலும் குறைந்த விளைவையே தரும் என்று விளைவு கூறல் பற்றிய ஆராய்ச்சி புலப்படுத்துகிறது.
<b>நுண்திறன் கற்பித்தலில் பல்வேறுபட்ட தொடர் நிலைகள்:</b> 1. ஒரு பயனுள்ள கற்பித்தல் திறன் இனம் காணப்படுதல் (சான்று: ஆசிரியரின் எழுச்சித் தன்மை, கிளர் வினாக்கள், விளக்கம் தருதல்), 2. காணக் கூடிய நடத்தையின் அடிப்படையான திறன்கள் தெளிவாக விளக்கப்படுதல், 3. திறன் செய்து காட்டப்படுதல், 4. பயிற்சியாளரால் சிறு வகுப்பில் திறன் நிகழ்ந்தப் பெறுதல், 5. பயிற்சியாளமில் நிகழ்ச்சி பதிவு செய்யப்படுதல் (கேள்வி அல்லது காட்சிப்பதிவு நாடாவில்), 6. அது திரும்பவும் வழங்கப்படுதல், 7. விளைவுகூறல் (மேற்பார்வையாளரும் உடன் பயில்வோரும் பயிற்சியாளரின் செயல் குறை நிறைகளை மதிப்பிட்டு, அச்செயலில் முன்னேற்றம் காணக் கருத்துகளை வழங்குதல்), 8. பாடக்குறிப்பைச் செம்மைப்படுத்துதல் (விளைவுகூறலின் அடிப்படையில்), 9. வேறு மாணவர் குழுவில் பாடம் திரும்ப நடத்தப்பெறுதல், ஒரு பயிற்சியாளர் ஒரு திறனில் முழுத் தகுதி பெறும் வரையில் எண் ஐந்து முதல் ஒன்பது வரை உள்ள நிலைகள் திரும்பத் திரும்ப நிகழும்.
<b>நுண்திறன் கற்பித்தலின் சில விளைவுகள்:</b> நுண்திறன் கற்பித்தல் வகுப்பறைக் கற்பித்தலைப் பாதிக்கிறதா என்பதற்கான வலுவான சான்று நுண்திறன் கற்பித்தல் பற்றிய ஆராய்ச்சியில் புலப்படாதது முக்கிய குறையாக உள்ளது. இது தொடர்பாக மூன்று வகையான ஆராய்ச்சி அணுகுமுறைகள் உள்ளன.
<b>1. தொடர்புபடுத்துதல்:</b> நுண்திறன் கற்பித்தல் செயலுக்கும் அதன்பின் கற்பிக்கும் வகுப்பறைக் கற்பித்தல் செயலுக்கும் உள்ள தொடர்பில் கவனம் செலுத்துதல்.
<b>2. ஒரு முன்பரிசோதனை:</b> நுண்திறன் கற்பித்தலுக்கு முன்பும் பின்பும் அதில் பங்கு கொள்பவரின் கற்பித்தற் செயல் அளவிடப்படுதல்.
<b>3. ஓர் உண்மையான பரிசோதனை அணுகு முறை:</b> நுண்திறன் கற்பித்தலில் பங்கு கொண்டவர்களின் வகுப்பறைச் செயலும் நுண்திறன் கற்பித்தல் பற்றி அறிமுகப்படுத்தப்படாதவர்களின் வகுப்பறைச் செயலும் ஒப்பிடப்படுதல்.
தொடர்புபடுத்துதல் ஆராய்ச்சி முடிவுகளும் முன் பரிசோதனை ஆராய்ச்சி முடிவுகளும் நுண்திறன் கற்பித்தலுக்கு இசைவாகவே உள்ளன. ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளையே வழங்குகின்றன.
நுண்திறன் கற்பித்தல் விளைவு பற்றிய இருபது ஆண்டு ஆராய்ச்சி முயற்சியிலிருந்து வருகிற ஒரே முடிவு, கற்பித்தலில் பங்குகொள்வோர் இதனால் விளைவும் அனுபவத்தை மனதிறைவுடன் போற்றி மதிக்கிறார்கள் என்பதே.
{{Right|<b>சீனி.ச.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Allen D.W., Ryan, K.A.,</b> Microteaching, Addison, Wesley, Massachusetts, 1969.
<b>Brown, G.,</b> MicroTeaching - A Programme of Teaching Skills, Methuen, London, 1975.
<section end="கற்பித்தலில் நுண்திறன்"/>
<section begin="கற்போர்வழிக் கற்பித்தல்"/>
{{dhr}}
<b>கற்போர்வழிக் கற்பித்தல்:</b> மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடங்களைப் பாடத் தயாரிப்பாளரே (Programmer) நிரல்வழிக் கற்பித்தல் (Programmed Instruction) முறையில் கற்பிப்பது 1960–ஆம் ஆண்டுகளில் பெரிதும் பரவி இருந்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கற்பித்தல் முறைகள் ஒவ்வொரு மாணவரின் உண்மையான தேவைகளை நிறைவு செய்வதில் ஓரளவுக்குப் பலனளிக்காது போய்விட்டன. இக்குறையை நீக்கவே கற்போர்வழிக் கற்பித்தல் (Learner-Controlled Instruction) என்னும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. இம்முறையை 1961–ஆம் ஆண்டில் உருவாக்கியவர் இராபர்ட்டு மேகர் (Robert Mager).
கற்போர்வழிக் கற்பித்தல் முறையில் மாணவரே ஆசிரியரிடம் கேள்விகளை எழுப்புகிறார். மாணவர் எழுப்பும் கேள்விகளை வரிசைப்படுத்தி முறைப்படுத்துவதன் மூலம், அம்மாணவரே கற்பித்தலின் நோக்கங்களுக்குச் செல்ல ஆசிரியரைத் தூண்டுகிறார். கற்போர்வழிக் கற்பித்தயில் ஆசிரியரின் பங்கு வழிகாட்டுதல் அன்று; மாறாக, ஆசிரியர் மாணவரின் கேள்விகளுக்கு விடை கூறுவதாக அமையும், கற்போர் வழிக் கற்பித்தல் முதையில் மின்னணுவியல் (Electronics) பாடத்தை ஆறு மாணவர்கள் கற்ற விதத்தை மேகர் விவரித்துள்ளார். இப்புதிய முறை-<noinclude></noinclude>
i1hueqdhbci2qxuug3h46qffviecwuc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/966
250
643618
1954652
1935518
2026-07-19T07:42:48Z
Sridevi Jayakumar
15329
1954652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்றல் தேக்கம்|938|கற்றல் தேக்கம்}}</noinclude>யில் எளிய கேள்விகனிலிருந்தே கருத்து நிலை சார்த்த (Abstract) கேள்விகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர் என்று மேகர் கருதுகிறார்.
கற்போர்வழிக் கற்பித்தல் முறையில் பாடத் தொகுப்பு மாணவரின் அறிவுத் திறனுக்கு உகந்த வகையில் அமைக்கப்படுவதால், கற்றல் எளிதாகிறது; ஆசிரியருக்கும் மாணவருக்கும் நட்புணர்வுடன் கூடிய சூழல் எழுகிறது; மாணவர்களே தாம் அடைய வேண்டிய குறிக்கோள்களை முடிவு செய்கின்றனர்; கற்றலை வெளியிலிருந்து யாரும் திணிப்பது இல்லையாகையால், மாணவர் மிகுந்த ஊக்கத்துடன் கற்க ஏதுவாகிறது. கற்கும் பாடப்பகுதியைக் குறைந்த நேரத்தில் மாணவர் கற்பதாகச் சில ஆய்வு முடிவுகள் கூறும். இவையனைத்தும் கற்போர்வழிக் கற்பித்தலின் சிறப்புகளாகக் கூறப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் பாடத்தயாரிப்பு (Programme) அமைத்தல் எளிதன்று; அனைத்து மாணவர்களும் கற்பித்தல் குறிக்கோளை அடையும் வகையில் கேள்விகளை அடுக்கி வைத்தல் இயலாது. இம்முறையால் ஆசிரியருக்கு வேலைப்பளு மிகுந்து விடுகிறது. இவை போன்ற சில குறைபாடுகளும் கற்போர்வழிக் கற்பித்தலில் குறிக்கப்படுகின்றன.
துணை நூல்கள்:
<b>Chauhan, S.S.,</b> Innovations in Teaching Learning Process, Vikas, New Delhi, 1979.
<b>Mager, R.,</b> Learner – Controlled Instruction, Belmont Calif., Faron, 1973.
<section end="கற்போர்வழிக் கற்பித்தல்"/>
<section begin="கற்றல் தேக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>கற்றல் தேக்கம்:</b>}} கல்விப் பயிற்சியினால் ஏற்படும் கற்றலின் முன்னேற்றத்தை ஒரு வரைபடமாகக் காட்டலாம். இதைக் கற்றல் பாதை எனவும் கூறுவர். இத்தகைய வரைபடம் ஒரே சீராக இல்லாமல் இருக்கும். தொடக்கத்தில் மிகவும் குறைவாகவே கற்றலின் முன்னேற்ற வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். சிலமணி நேரம் அல்லது சில நாட்கள் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். இந்நேரத்தில் வரைபடத்தில் தொடர்த்து முன்னேற்றம் ஏற்படாது தேக்கம் அடைகிறது. அதாவது வரைபடத்தின் முன்னேற்றத்தில் எவ்வித உயர்வோ குறைவோ இல்லாமல் இருக்கும். அதாவது ஒரு படுக்கைக் கோடு கற்றல் பாதையில் தோன்றும். இவ்வாறு கற்றல் வேகத்தில் கற்றல் பாதையில் ஏற்படும் தேக்கமே கற்றல் தேக்கம் எனப்படும். (படத்தில் காண்க).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 966
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 189
|oTop = 64
|oLeft = 262
|Location = center
|Description =
}}
கற்றல் பாதையில் தோன்றும் தேக்கநிலையைக் கல்வி உளவியலறிஞர் ஆராய்ந்து விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் ஒருவன் எவ்வளவு கற்கிறான் என்பதை மேலுள்ள வரைபடம் விளக்கிக் காட்டுகிறது. கற்றலின் வீதத்தைப் பொறுத்தே கற்றல் பாதை அமைகிறது. பாதையின் உருவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். கற்றலின் வேகம் குறையுமானால் அதற்கான காரணங்கள் அவன் செய்யும் செயலின் தன்மை, அவனது திறன், ஆர்வம் இவற்றைப் பொறுத்தே அமைகின்றன. அதாவது, ஊக்கம் குறைதல், சலிப்பு, அக்கறை கொள்ளாமை, கற்றது போதும் என்ற மனப்பான்மை, திறமையில் நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்களினால் கற்றல் தேக்கம் ஏற்படுகிறது.
<b>கற்றல் பாதையின் பண்புகள்:</b> தொடக்கத்தில் கற்பவனின் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்களைச் சமாளித்து முன்னேறுவதற்கான காலம் ஆகும். தொடக்க கால இன்னல்களைச் சமாளித்தவுடன் கற்றல் வேகம் மிகுதியாகிறது. பயிற்சி, ஊக்குவித்தல், போட்டி ஆகியவற்றால் திடீரென உயரலாம். பின்னர்ச் சிறிது காலத்திற்குக் கற்றல் வேகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படமாட்டாது. என்னதான் தொடர்ந்து பயிற்சி செய்தாலும் எவ்வித மாற்றமும் காண இயலாது. இதுவே தேக்கம் அல்லது மேடு எனப்படும். பின்னர், விடாமுயற்சியினால் சிறிது காலத்திற்குப் பிறகு கற்றலின் வேகம்<noinclude></noinclude>
ink54q97dvqj3uhyern9diryinf3qqt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/968
250
643679
1954653
1935595
2026-07-19T07:43:29Z
Sridevi Jayakumar
15329
1954653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்றல் மாற்றம்|940|கற்றல் மையங்கள்}}</noinclude>லும், ஓடுதல், பந்தைக் குறிபார்த்தல், உடல்வலிமை ஆகியன ஒத்த கூறுகளாக இருப்பதால், ஒரு விளையாட்டில் தேர்ச்சி பெறின், அடுத்த விளையாட்டிலும் தேர்ச்சி பெறுவர் என்பது கற்றல்மாற்ற விதியாகும். அதுபோலத் தமிழைக் கற்ற ஒருவர் பிறமொழிகளைக் கற்பதை விட மலையாளத்தை விரைவில் கற்பார் என்பதற்குக் காரணம் இவ்விரு மொழிகளிலும் உச்சரிப்பு, தொடர் அமைப்பு, சொல் போன்ற ஒத்த கூறுகள் இருத்தலே.
<b>பொதுமைக் கூறுக் கோட்பாடு:</b> ஒரு செயலில் உள்ள விதிகள் அல்லது பொதுமைகளை ஒருவர் புரிந்து கொள்ளுகையில், அதே போன்ற மற்றொரு செயலில் இவ்விதிகள் கற்றல் மாற்றமாகப் பயன்படுகின்றன. என்பது சூடு (Judd) என்பாரின் கொள்கை. இக்கருத்தை விளக்கச் செய்த சோதனை இதுவே. நீருள்ள பாத்திரத்தின்கீழ் ஒரு நாணயம் வைக்கப்பட்டது. ஒரு மாணவர் குழுவிற்கு ஒளிவிலகலின் விதிகள் விளக்கப்பட்டன. மற்றொரு மாணவர் குழுவிற்கு இவ்விதிகள் கற்றுத் தரப்படவில்லை. இரு குழு மாணவர்களுக்கும் பாத்திரத்திற்குள் அமிழ்ந்திருந்த நாணயத்தைக் குறி வைத்துச் சுடும் போட்டி நடந்தது. ஒளிவிலகல் விதியைக் கற்ற மாணவர் குழு சரியாகக் குறி வைத்துச் சுட்டது. அவ்விதியைக் கற்காத மாணவர் குழு குறி வைக்கத் தவறியது. இச்சோதனையிலிருந்து விதிமுறைகளை ஒளிவிலகலில் கற்றலே குறி வைத்துச் சுடும் மற்றொரு செயலுக்கு மாற்றம் ஆகியது.
கற்றல் மாற்றம் ஆசிரியர்களுக்குத் தேவையான செய்திகளைச் சுட்டுகிறது. கற்றல் மாற்றம் தானாக நடைபெறாது. இதைக் கற்பிப்பதால் ஏற்படுத்த முடியும் என்பதும் பாடம் கற்பிக்கும்போது, முன்னர்க் கற்பித்த பாடச் செயலிலும் பின்னர்க் கற்பித்த பாடச் செயலிலும் உள்ள ஒத்த கூறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை ஆசிரியர் உணருதல் வேண்டும். அதே போல், ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் போதும் அதிலுள்ள விதி அல்லது பொதுமைகளை எடுத்துக் காட்டுவது இன்றியமையாதது. இவ்வாறு செய்வதால் மாணவரிடம் எதிர்மறைக் கற்றல் மாற்றம் நிகழ்வது தடுக்கப்படுகிறது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Biehler, R.F.,</b> Psychology, Applied to Teaching, Houghton Mifflin, Boston, Massachusetts, 1978.
<b>Bigge, M.L. and Hunt, M.P.,</b> Psychological Foundations of Education: An Introduction to Human Development and Learning, Harper and Row, New york, 1968.
<section end="கற்றல் தேக்கம்"/>
<section begin="கற்றல் மையங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கற்றல் மையங்கள்:</b>}} பொதுவாகப் பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலின் வழியே மாணவரின் கற்றல் இருந்து வருகிறது. இவ்வாறின்றி, மாணவர் தாமாகவே தம் சொந்த முயற்சியால் கற்றுக் கொள்ளுவதற்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்ட இடத்தினைக் கற்றல் மையம் (Learning Centre) எனக் கல்வியாளர்கள் வரையறுக்கின்றனர். பெரிதும் புகழ்ந்து பேசப்பட்ட தனியாள் கற்றல் (Individualisation of Learning), கண்டறந்து கற்றல் (Discovery Learning), கருவி வளம் வழிக் கற்றல் (Resource–based Learning) போன்ற கற்றல் முறைகள் 1960-ஆம் ஆண்டுகளில் வளர்ந்தபோது, கற்றல் மையத்தின் தேவை பெரிதும் உணரப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடக்க நிலைப் பள்ளி மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளும் கொண்ட கற்றல் மையங்கள் பள்ளியிலோ வேறு இடங்களிலோ இயங்குகின்றன.
சிறந்த கற்றல் மையத்திற்கு நான்கு கூறுகள் (Elements) இன்றியமையாதன. அவை: 1. மாணவர் கற்றுக் கொள்ளுவதற்கென்று ஓர் அறை; 2. பல வகைப்பட்ட, முறையாக வரையறுக்கப்பட்ட நூல்கள், பாடநூல்கள், கற்றல் துணைக் கருவிகள்; 3. மாணவர்க்குக் கடினமான இடங்களில் பயிற்றுவித்தல் உதவி (Tutorial Help) செய்யக் கூடிய வல்லுநர்கள்; 4. மாணவரின் வருகை, கற்றல் வளர்ச்சி ஆகியவற்றைக் கவனிக்கும் அமைப்பு ஆகியன.
கற்றல் மையம் ஓரளவு நூலகத்தைப் போல் இருப்பினும், இரண்டும் ஒன்றல்ல. நூலகத்தில் பல்வகையான கற்றல் நூல்கள் இருக்கும். ஆனால், அங்கு மாணவர்களின் வயது, திறன், ஆர்வம், தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுத்தி உருவாக்கப்பட்ட நூல்கள் (Structured Materials) இருப்பதில்லை. மேலும், கற்றல் மையத்தில் இருப்பது போன்று, மாணவர்களுக்குப் பயிற்றுவித்தலில் தேவைப்படும் போது உதவக்கூடிய வல்லுநர்கள் இருப்பதில்லை; நூலகங்களில் மாணவரின் வளர்ச்சி, கற்றலின் அளவு ஆகியவற்றை மதிப்பீடு செய்து அறிவிக்கும் அமைப்பு ஏதும் இல்லை.
கற்றல் மையங்களில் பலவகைகள் நடைமுறையில் உள்ளன. ஒரு பாடம் அல்லது அது தொடர்பான பாட அறிவு பற்றி நிரல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கும் இடம் கற்றல் ஆய்வகம் (Learning Laboratory) எனப்படுகிறது. இம்மாதிரி மையங்கள் அமெரிக்காவில் அதிகம். முன்அனுமதி<noinclude></noinclude>
f1rhuxvpslrx6lalis6yn6z3esva8zk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/969
250
643685
1954654
1935602
2026-07-19T07:44:36Z
Sridevi Jayakumar
15329
1954654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்றளி|941|கறுப்புப் பணம்}}</noinclude>மையங்கள் (Appointment Centres) என்று ஒரு வகைக் கற்றல் மையங்கள் இங்கிலாந்தில் உள்ளன. இங்கு எந்தவொரு பாடத் துறை குறித்து ஒரு மாணவர் முன்கூட்டியே சுற்க விருப்பம் தெரிவிக்கின்றாரோ, அவருக்குக் குறிப்பிட்ட நாளில் அப்பாடத்தை அவரே கற்றுத் தெளிவதற்குரிய தாமே கற்றுக் கொள்ள உதவும் நூல்கள் (Self–instructional Materials) ஆயத்த நிலையில் வைக்கப்படும். மாணவர் தாமே கற்றுக் கொள்ளலாம். இங்கிலாந்தில் கற்றல் வள மையம் (Learning Resource Centre) என்னும் மற்றொரு வகைக் கற்றல் மையமும் உள்ளது. இங்குக் கற்றல் துணைக் கருவிகள் தேவையான அளவுக்கு இருக்கும்; கற்க வரும் மாணவர்க்கு உதவ வல்லுநர்களும் இருப்பர்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Davies, W.J.K.,</b> Alternatives to Class Teaching in Schools and Colleges, Council of Educational Technology, London, 1980.
<section end="கற்றல் மையங்கள்"/>
<section begin="கற்றளி"/>
{{dhr}}
{{larger|<b>கற்றளி:</b>}} கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில், கற்றளி (கல்+தளி) எனப்படும். இதனைக் கட்டடக் கோயில் எனவும் சொல்லலாம். பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட கற்றளி முறை சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் பெருவளர்ச்சி பெற்றது. முதன் முதலாக அடி முதல் முடி வரை கருங்கற்களை அடுக்கிக் கற்றளிகளை அமைத்த பெருமை இராசசிம்ம பல்லவனைச் சாரும்.
கற்றளிகள் தோன்றுவதற்கு முன்பு தமிழகத்தில் மரக்கோயில்கள், களிமண் கோட்டங்கள், செங்கற் கோயில்கள். குடைவரைகள் ஆகியன இருந்தன. செங்கற் கோயில்கள் பல பிற்காலச் சோழர் காலத்தில் கற்றளிகளாக மாற்றப்பட்டன. கற்றளிகள் பல காலம் அழிவுறாமல் நிற்கும் சக்தி வாய்ந்தவை.
கற்றளிகள் முதலில் ஒரு தளத்துடன் கட்டப்பட்டன. பின்னர் அவை பல தளங்களுடனும் பல மண்ட பங்களுடனும் பரிவார தேவதைகளுக்கென்று தனிக் கோயில்களுடனும் வளர்ச்சியடைந்தன. காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், பனைமலைக் கோவில், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில், உத்தரமேரூர் சுந்தரவரதர் கோவில், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் முதலான பல்லவர் காலத்தனவும், சோழர் காலத்திய விசயாலய சோழீசுவரமும், சீனிவாச நல்லூர் அரங்கநாதர் கோயில், சோமூர் சோழீசுவரர் கோயில். திருமழபாடி வைத்திநாதசுவாமி கோயில், தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்ட சோழேச்சுரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திருபுவனம் கம்பகரேசுரர் கோயில் ஆகியனவும் இன்றும் பொன்றாது நிலயும் கற்றளிகள் ஆகும்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கற்றளி"/>
<section begin="கறுப்புப் பணம்"/>
{{dhr}}
{{larger|<b>கறுப்புப் பணம்</b>}} என்பதைப் பற்றிய விளக்கம் முழுமையாகப் கிடைப்பதரிது. இதனைக் குறித்துப் பல்வேறு வரையறைகள் அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ளன. கறுப்பு நிறம் என்பது பொதுவாகத் தீமைக் கருத்துடன் ஒப்பிடப்படுகிறது. பொது ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் ஆகிய பண்புகளை மீறிச் சட்டத்திற்கு உட்படாமல் இருப்பதுதான் கறுப்புப் பணத்தின் (Black Money) தன்மையென அதனை ஆராய்ந்த வாஞ்சுக் குழு (Wanchoo Committee) கூறியுள்ளது. இக்குழுவை இந்திய மைய அரசு 1969-ஆம் ஆண்டு அமர்த்தியது.
இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை (Black Market) போன்ற சொற்கள் மிகையான அளவில் வழக்கத்திலிருந்தன. போர்க் காரணமாகப் பல பொருள்களின் விற்பனை மீது கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அப்பொருள்களின் தேவை மிகுந்து பற்றாக்குறை காணப்பட்டதால் மக்கள் பதுக்கல் செய்யத் தொடங்கினர். அரசின் கட்டுப்பாடுகளை மீறி மறைவாகக் கொடுக்கப்பட்ட, வாங்கப்பட்ட பணம் கறுப்புப் பணம் என்றாயிற்று. காலப்போக்கில் கறுப்புப்பணம் பரவலாக எல்லாத் துறைகளிலும் வளரத் தொடங்கியது. மறைவான இடம் அல்லது கறுப்புச் சந்தை அல்லாத கொடுக்கல் வாங்கல்களிலும் கறுப்புப் பணம் வளரத் தொடங்கியது. இன்று கறுப்புப் பணம் என்கிற சொல், கணக்கில் வாராத பணத்தையும் (Unaccounted Money Income), மறைக்கப்பட்ட பணத்தையும் (Concealed Money) குறிக்கிறது. அதனோடு அரசுக்குத் தெரிவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் சொத்துகளும், கணக்கில் வாராத நகை, தங்கம், வெள்ளி, வீட்டுமனை முதலியவற்றை வைத்திருப்பதும் கறுப்புப் பணத்தில் அடங்கும்.
வரி ஏய்ப்பும், மறைமுகப் பொருளாதார நடவடிக்கைகளும் கறுப்புப் பணத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றன. உலகில் பொதுவாக எல்லா நாடுகளிலும் சட்டமுறைக்கு அப்பாற்பட்ட பொருளாதார, வாணிக நடவடிக்கைகள் இயங்குவதால் கறுப்புப் பணம் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இது ஓர் இணைப் பொருளா-<noinclude></noinclude>
avs46fp58xqc5wbuk8hh5fdfaq9sope
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/973
250
643698
1954655
1935646
2026-07-19T07:45:29Z
Sridevi Jayakumar
15329
1954655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கறுப்புப் பணம்|945|கன்பூசியசு}}</noinclude>தாள்களைச் செல்லாதவை என்று அறிவித்து, புதிய தாள்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்று பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
நாடு விடுதலை பெற்ற பின்னர் இந்தியாவின் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்குத் ‘தானாக முன்வந்து அறிவிக்கும் திட்டம்’ (Voluntary Disclosures Scheme) என்ற முறை, நான்கு முறை அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இத்திட்டம் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவில்லை. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலம்வரை உரூ. 277 கோடி வருமான வரி ஏய்ப்பவர்களால் அரசுக்கு இழப்பு எனத் தெரிவிக்கப்பட்டது. கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 1978-இல் உரூ. 1000 தாள்களும் அதற்குமேல் உயர்ந்த மதிப்புடைய உரூபாய் தாள்களும் செல்லாதவைகளாக (Demonetised) நடைமுறைப்படுத்தப்பட்டன. நெருக்கடி நிலை 1975–ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது உரூ. 250 கோடி அரசிற்குக் கிடைத்தது. இத்திட்டம் நேர்மையான முறையில் அரசுக்கு வரி செலுத்தியவர்களைத் தண்டிக்கும் முறையில் இருந்ததால் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாயிற்று.
அரசு ஆவணங்களின் விற்பனையின் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரலாம் என்ற முறையும் இந்தியாவில் பெருமளவில் வெற்றியடையவில்லை. பல்வேறு ஆய்வுக் குழுக்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என 1984–85–ஆம் ஆண்டைய இந்திய நிதிநிலை அறிக்கையிலிருந்து அறியப்படுகிறது. விரிவான சோதனைகள் (Searches) நடத்தி 1985–ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் கறுப்புப் பணம் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆயினும், கறுப்புப் பணம் இந்தியாவில் குறையவில்லை. இந்தியப் பொருளாதார அமைப்பிலுள்ள பல கட்டுப்பாடுகளை நீக்கினால், பெரிய அளவில் கறுப்புப் பணம் குறையுமென்று பல பொருளியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். தொழில் உரிமக் கொள்கையிலும் (Industrial Licences) மாற்றம் வேண்டுமென்று கூறுகின்றனர். இக்கருத்துகளை மனத்திற் கொண்டு இப்போதைய இந்திய அரசு தொழிற்றுறையிலும், ஏற்றுமதி, இறக்குமதித் துறைகளிலும் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தித் தனியார் துறைக்கு ஊக்கமளிக்கக் கூடியனவும் கறுப்புப் பணத்தை ஊக்குவிக்காதனவு மாகிய பல நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. உரிமக் கொள்கையில் (Licencing) பல விரும்பத்தக்க மாறுதல்களை அரசு கொண்டுவந்துள்ளது. வரி வீதத்தையும் குறைத்து, மொத்த வரி வருமானத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. அரசின் இப்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்து செயற்பட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் கறுப்புப் பண அளவும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளும் குறையலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்தியா போன்று வறுமை மிகுந்த மக்கள் வாழும் நாட்டில் சிலரிடம் மட்டும் செல்வம் மேலும் மேலும் குவிந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இச்செல்வர்களே சுறுப்புப் பணத்தை உற்பத்தி செய்கின்றனர் எனக் கூறுகின்றனர். எனவே, மிகக் கடுமையான நடவடிக்கைகளின் மூலமே கறுப்புப் பண வளர்ச்சியின் ஆற்றலைக் குறைக்க முடியுமெனப் பொருளியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
{{Right|<b>மு.நா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Shankar, N.</b> Acharya, Aspects of Black Economy in India, Report of a Study By National Institute of Public Finance and Policy, Government of India, Ministry of Finance, 1985.
<b>Uppal, J.S.,</b> India's Economic Problems — An Analytical Approach, Tata McGraw Hill Publishing Company Limited, New Delhi, 1983.
Wanchoo Report of Direct Taxes Enquiry Committee, Government of India, Ministry of Finance, New Delhi, 1973.
<section end="கறுப்புப் பணம்"/>
<section begin="கன்பூசியசு"/>
{{dhr}}
{{larger|<b>கன்பூசியசு (கி.மு. 551–479)</b>}} சீன வரவாற்றில் சிறப்பிடம் பெற்றவர்; எல்லோராலும் மதிக்கத் தகுந்தவர்; சிறந்த தத்துவஞானி. செல்வாக்குற்ற குடும்பத்தில் பிறந்தாலும், எளிமையான சூழ்நிலையில் வாழ்ந்தார்; தாமே பயின்று சிறந்த கல்வியாளர் ஆனார். கன்பூசியசு (Confucius) 20 வயதாகயிருக் கும்பொழுது கூலக் களஞ்சியத்தைக் (Granary) காக்கும் பணிபுரிந்தார்; அதன்பின், ஒரு மேற்பார்வையாளராகத் தம் சொந்த ஊரான இலூவில் (Lu) பணி செய்தார்; பின்னர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அரசியலில் இவருக்கு ஈடுபாடு உண்டு. அரசுத் தொடர்பான ஆலோசனைகள் இவரிடம் கேட்கப்பட்டன. அரசுக்கு ஆதரவாளர் எனக் கருதி இவரை எதிர்க்கட்சியினர் கொல்ல முனைந்தனர்.
இலூவிலுள்ள ஒரு பெரிய அதிகாரியும் கலகக்காரருமான ஒருவர் கன்பியூசியசின் உதவியை நாடினார். ஆனால், கன்பியூசியசு அவருக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்<noinclude>
<b>வா.க. 6 – 60</b></noinclude>
nfl64li74bb26v8hkqiu77hm0999g6a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/974
250
643732
1954656
1935730
2026-07-19T07:47:04Z
Sridevi Jayakumar
15329
1954656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்வர்கள்|946|கன்னட ஆய்வு மையம்}}</noinclude>சௌவின் (Chou) தலைநகருக்கு இலாவோ திசுச் (Lao Tzu) சடங்குகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகச் சென்றார். தம், 51–ஆம் வயதில் குற்றவியல் நடுவராகவும் (Magistrate), நீதித்துறை அமைச்சராகவும் பொதுப்பணித் துறைத் துணை அமைச்சராகவும் இவர் பணி செய்தார். தம் கருத்துகளுக்கு ஆட்சியாளர் உடன்படாததால், இவர் சௌவை விட்டு நீங்கித் தம் நண்பர்களுடன் 9 தனி அரசு நாடுகளை நோக்கி 13 ஆண்டுகள் பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளின் ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெறாததால், இவர் தம் 68–ஆம் வயதில் இலூவிற்கு வந்து மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். மேலும், இவர் இளவேனிற் காலம், இலையுதிர் காலங்களில் வெளிவருகின்ற வரலாற்றுப் பதிவேடுகளிலும் பணியாற்றினார்.
கன்பூசியசு சீனாவில் ஆசிரியராக அமர்ந்து பொது மக்களுக்கு இலக்கியமும், ஒழுங்கு முறைகளும் கற்றுக் கொடுத்ததன் மூலம் கல்வியின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட்டார். இவர் பண்டைய கருத்துக்களான பேரின்ப வீடு, மேலான மனிதன், மனித இயல்பு முதலானவை பற்றிய சிந்தனைகளை மாற்றியமைத்தார்; எப்பொழுதும் இறப்பைப் பற்றிப் பேசாமல் வாழ்க்கையைப்பற்றிப் பேசினார். மனிதன் தான் மேலான பாதையை வகுக்க முடியுமேயன்றி, பாதை மேலான மனிதனைத் தோற்றுவிக்காது. முழு நிறைவான மனிதனுக்கும் ஓர் ஒழுங்கான சமூகத்திற்கும் இணக்கமான முறையை அமைப்பதுதான் ஒரு பிறந்த குறிக்கோளாகும். அரசருக்கும் அமைச்சர்களுக்கும் தந்தைக்கும் மகனுக்கும், மூத்த சகோதரனுக்கும் இளைய சகோதரனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், ஒரு நண்பனுக்கும் மற்றவனுக்கும் இடையே மரியாதையும் கடமை உணர்வும் அமைய வேண்டும். ஓர் அரசன் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். மேன் மக்கள் ஒழுக்கமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பார்கள்; கீழ்மக்களோ எப்பொழுதும் ஆதாயத்தை நோக்கியே செயல்புரிவார்கள் என்று இவர் கூறினார். இவருடைய கொள்கைகளை அறிவியல் சார்ந்த மனித இனநலக் கோட்பாடு என்று கூறலாம்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="கன்பூசியசு"/>
<section begin="கன்வர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கன்வர்கள்</b>}} வடஇந்தியாவில், கி.மு. முதல் நூற்றாண்டில் ஆட்சி நடத்தியவர்கள். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகத நாட்டில் சுங்க குலம் ஆட்சிபுரிந்தது. தேவபூதி என்னும் சுங்க அரசன் அரசியலில் கருத்துச் செலுத்தாது போக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததால், அவன் அமைச்சனான வாசுதேவன் சூழ்ச்சி செய்து சுங்க அரசையே அழித்துவிட்டான். இவ்வாறு அரியணையைப் பெற்ற வாசுதேவன் கன்வ குலத்தைச் சார்ந்தவன். அவனால் நிறுவப் பெற்ற கன்வகுல ஆட்சி 45 ஆண்டுகள் நிலைத்திருந்தது. அக்குல மன்னர்கள் நால்வர்; வாசுதேவன் 9 ஆண்டுகளும், பூமிபுத்திரன் 14 ஆண்டுகளும், நாராயணன் 12 ஆண்டுகளும், சூசர்மன் 10 ஆண்டுகளும் ஆட்சி நடத்தினர். கன்வரைப் பற்றிய குறிப்புகள் புராணங்களிலும் காணக் கிடக்கின்றன. அவர்கள் பக்கத்திலிருந்த நாடுகளுடன் போர்கள் நடத்தி அவற்றைத் தம்முடைய மகத இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர் என்று ஒரு குறிப்பு உள்ளது. மேலும், புராணங்களின் கூற்றுப்படி ஆந்திரர்கள் அல்லது சாதவாகனர் கன்வர்களை அடக்கி அவர்கள் ஆட்சியை முடிவுறச் செய்தனர் என்பது தெரிகிறது. கன்வரின் பேரரசு, சுங்கப் பேரரசைவிடப் பரப்பில் குறைந்ததாகவே இருந்தது. கன்வராட்சி கி.மு. 27-இல் முடிவுற்றது. கன்வரின் வீழ்ச்சிக்குப் பிறகு குப்தர்களின் எழுச்சி வரை மகதவரலாறு இருண்டே இருந்தது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கன்வர்கள்"/>
<section begin="கன்னட ஆய்வு மையம்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னட ஆய்வு மையம்</b>}} மைசூர்ப் பல்கலைக் கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இம்மையம் கன்னட மொழித் தொடர்பான இலக்கியம், மொழி, பண்பாடு, கல்வி, ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல் போன்ற பலதுறைகளையும் வளர்ப்பதற்காக 1966-இல் உருவாக்கப்பட்ட ஓர் உயர்மட்ட ஆய்வு நிறுவனம் ஆகும். இதைப்போன்ற ஆய்வு மையங்கள் பெங்களூர்ப் பல்கலைக் கழகத்திலும் கருநாடகப் பல்கலைக் கழகத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வித் துறையில் மட்டுமன்றி, திருவாகத் துறையிலும் கன்னடம் முதன்மை இடமும் மதிப்பும் பெறச் செய்தல், மொழி கற்பித்தல், மொழி ஆராய்ச்சி, நூல் தொகுப்பு, அயல் மொழிகளிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து அயல் மொழிகளுக்கும். இலக்கியங்களை மொழிபெயர்த்தமைத்தல், கன்னட மொழியையும் பண்பாட்டையும் உலகம் தெரிந்து கொள்ளச் செய்தல் முதலியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வாராய்ச்சி மையம் தொண்டாற்றுகிறது.
இந்நிறுவனம் மொழி கற்பித்தல், தென்னிந்தியவியல் கற்பித்தல், மொழியியல் கற்பித்தல், நாட்டுப்புறவியல், ஆராய்ச்சி, நூல்வெளியீடு, நிருவாகம் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கி வேகமாக வளர்ந்து வருகிறது.
{{nop}}<noinclude></noinclude>
93v8t43vejivcfqfddk2dlcvbx7ou5v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/975
250
643737
1954658
1935736
2026-07-19T07:48:26Z
Sridevi Jayakumar
15329
1954658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னட ஆய்வு மையம்|947|கன்னமிடுதல்}}</noinclude><b>படிப்பும் ஆராய்ச்சிகளும்:</b> இந்நிறுவனம் மூன்று முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கிறது.
<b>1. கன்னடம் முதுநிலைப்பட்டம்:</b> பழைய, நடு, புதுக் கன்னடம், இலக்கியங்கள், மொழி, பண்பாடு, நாட்டுப்புறவியல், மொழியியல், திறனாய்வு, இலக்கிய, பண்பாட்டு, வரிவடிவ வரலாறுகள் எனப் பல துறை சார்ந்த பாடங்கள் இதில் அடங்கும்.
<b>2. மொழியியல் முதுநிலைப் பட்டம்:</b> ஒலியியல், பொதுமொழிபியல், சொற்பொருளியல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனப் பல பாடங்கள் இதில் அடங்கும். ஒலியியல் பயிற்சிக் கூடம் ஒன்றும் தனியாக இதில் இருக்கிறது.
<b>3. தென்னிந்தியவியல் முதுநிலைப்பட்டம்:</b> தென்னிந்திய வரலாறு, மொழிகள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல், வரிவடிவவியல், தத்துவம் எனப் பல துறை சார்ந்த பாடங்கள் இதில் அடங்கும்.
இவற்றோடு மூன்று பட்டயப்படிப்புகளும், மொழியியல், இந்திய இலக்கியங்கள், நாட்டுப்புறவியல், ஒரு கன்னடச் சான்றிதழ்ப் படிப்பும் அளிக்கப்படுகின்றன. சிறந்ததொரு நூலகத்துடனும் மொழிப் பயிற்சிக் கூடத்துடனும் செயற்பட்டு வருகின்றதால் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக இது உருவெடுத்திருக்கிறது. இதுவரை 47 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
<b>நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம்:</b> நாட்டுப்புறவியல் துறையின்கீழ் ஓர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. அதில் சுமார் 5,000 அரும் பொருள்கள் வகைப்படுத்தப்பெற்றுக் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன. இதுவரை நாட்டுப்புறவியல் தொடர்பாக நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டுப்புறவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு தொடங்குகிற திட்டம் செயலாக்கம் பெறவிருக்கிறது.
<b>இலக்கியப் பொருள் காட்சியகம்:</b> இலக்கியப் படைப்பாளரின் கைப்பிரதிகள், நூல்கள், கடிதங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், இன்னோரன்ன பல சிறப்பு வாய்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இக்காட்சியகம் அமைகிறது.
<b>கலைக்களஞ்சியம்:</b> இதன் சார்பில் 1968–ஆம் ஆண்டு ரூபாய் 25 இலட்சத்துடன் கலைக்களஞ்சியம் உருவாக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. திட்டமிட்ட 14 தொகுதிகளில் 12 தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இப்போது கர்நாடக அரசு ஒரு கோடி ரூபாய் அளித்து 30 தொகுதிகளில் கலைக் களஞ்சியத்தை விரிவாக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
<b>பாடநூல் மற்றும் மொழியியல் துறை:</b> மாநில மொழியாகிய கன்னடத்தில் கற்பிப்பதும் கற்பதும் முதன்மை பெற்றிருக்கும் இந்நேரத்தில் இக்குறிக்கோளைச் சிறப்பாகச் செயற்படுத்த அறிவியல் நூல்களையும் கலைப்பாட நூல்களையும் கன்னட மொழியில் வெளியிடும் பணி தொடர்கிறது. இதில் புதிய நூல்கள், மொழிபெயர்ப்புகள், கன்னடச் சொல்லாக்க நூல்கள் என 224 நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன.
தாசர் இலக்கியம் என்னும் திட்டத்தின் கீழ்ப் பல்கலைக் கழக மானியக் குழுவின் உதவியுடன் திட்டமிடப்பட்ட 112 நூல்களுள் 9 நூல்கள் வெளியாகியுள்ளன.
‘எப்பிகிராபிகா கர்னாடிகா’ என்னும் தலைப்பின் கீழ்க் கல்வெட்டுத் தொடர்பான 10 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
<b>இலக்கியநூல் தொகுப்பு:</b> ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதும் அவற்றை வெளியிடுவதும் இத்திட்டத்தில் அடங்கும். கைப்பிரதிகள் 5,000 பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் 103 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சி மையம், 1987–ஆம் ஆண்டு வரை இலக்கியம், எழுத்தாளர் தொடர்பாக 480 நூல்கள் வெளியிட்டுள்ளது.
{{Right|<b>ந.ந.</b>}}
<section end="கன்னட ஆய்வு மையம்"/>
<section begin="கன்னடம்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னடம்:</b>}} காண்க: திராவிட மொழிகள்.
<section end="கன்னடம்"/>
<section begin="கன்னமிடுதல்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னமிடுதல்</b>}} கன்னமிடுதலுக்கான இலக்கணம், இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 445–இல் காணப்படுகின்றது. இதன்படி, வீட்டினுள் அத்துமீறி நுழையும் ஒருவர், பின்வரும் ஆறு வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரு வீட்டினுள் அல்லது அதன் எந்தப் பகுதியிலாவது நுழைவது; அல்லது ஒரு குற்றத்தைச் செய்யும்பொருட்டு அந்த வீட்டினுள் அல்லது அதன் ஒரு பகுதியில் இருந்து அல்லது அங்கே ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, அந்த வீட்டை அல்லது அதன் ஒரு பகுதி எதையும் விட்டுப் பின்வரும் ஆறு வழிகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் வெளியேறுவது கன்னமிடுதல் (House-Breaking} எனப்படும்.
<b>ஆறுவழிகள்:</b> 1) வீட்டினுன் அத்துமீறி நுழைதலைச் செய்வதற்காகத் தம்மால் அல்லது அந்த வீட்டினுள் அத்துமீறி நுழைவதற்கு உடந்தையாய் இருப்-<noinclude>
<b>வா.க. 6 – 60அ</b></noinclude>
i8nb4ad4nqtrb59o6yueb6j6hkjau2n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/977
250
643762
1954659
1935856
2026-07-19T07:49:13Z
Sridevi Jayakumar
15329
1954659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னன்|949|கன்னன்}}</noinclude>இரவில் பதுங்கி வீட்டினுள் அத்துமீறி நுழைதலை அல்லது கன்னமிடுதலைக் கூட்டமாகச் செய்கையில், அவர்களில் ஒருவரால் மரணம் அல்லது கொடுங்காயம் விளையுமிடத்து, கூட்டாகச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஆயுள் சிறைத்தண்டனையோ பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் ஒருவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
{{Right|<b>பு.வே.</b>}}
<section end="கன்னமிடுதல்"/>
<section begin="கன்னன்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னன்:</b>}} இவன், மகாபாரதக் கதையுள் இடம் பெறும் முதன்மைப் பாத்திரங்களுள் ஒருவன். கர்ணன் என வழங்கப் பெறும் இவன், துரியோதனின் உயிர் நண்பன். யதுகுலத்தில் பிறந்த சூரசேனனுக்கும் மரிசை என்பவளுக்கும் பத்து ஆண்களும், ஐந்து பெண்மக்களும் பிறந்தனர். ஐந்து பெண் மக்களுள் பிருதை என்பவளும் ஒருத்தி ஆவள். சூரசேனன், தன் அத்தை மகன் குந்திபோசனிடம் இளமையில் தனக்குப் பிறக்கும் குழந்தையை அவனுக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தது போலவே பிருதையை அவனுக்குக் கொடுத்துவிட்டான். பிருதையைக் குந்திபோகன் வளர்த்த காரணத்தால் குந்தி எனப்பட்டாள்.
குந்தி சிறிய பெண்ணாக இருந்தபொழுது தன் தந்தையின் ஆணைப்படி துருவாச முனிவரை அடைந்து வேண்டிய பணிகளை அவருக்குச் செய்தாள், மகிழ்ந்த முனிவர், அவள் விரும்பிய கடவுள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும் வரமருளினார். சிறிய பெண்ணான குந்தி இதனை உணர்ந்தறிய வானில் செல்லும் கதிரவனை விரும்பி அழைத்தாள். கன்னியாயிருந்த குந்தி கதிரவன் அருளால் பெற்ற பிள்ளையே கன்னன். இவன் பிறந்தபொழுதே கவச குண்டலத்துடன் பிறந்திருந்தான்.
இவ்வாறு பிறந்தமைக்குக் கூறப்படும் வரலாறு வருமாறு: முன்னொருகால் ஆயிரக்கவசன் (சகசரகவசன்) என்ற ஓர் இராக்கதன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். அதனைக் கண்ட நரநாராயணர் அவனொடு போர்செய்து அவன் பூண்டிருந்த தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது கவசங்களையும் அறுத்துவிட்டனர். எஞ்சிய ஒரே கவசமிருக்கையில் அவன் சூரியனிடம் அடைக்கலம் புகுந்து உயிர் பிழைத்தான். அவனே மறுபிறப்பில் கவசத்துடன் பிறந்த கன்னன் ஆவான்.
கன்னியான குந்தி திருமணம் செய்துகொள்ளுமுன் பிள்ளை பெற்ற பழிக்கஞ்சி அக்குழந்தையைப் பட்டாடையில் பொதிந்து, ஒரு பெட்டியில் இட்டுப் பல்வகை அணிகலன்களையும் அதனுடன் இட்டு ஆற்றில் செலுத்தினாள். ஆற்றில் சென்ற அப்பெட்டி துரியோதனனின் தேரோட்டியான அதிரதன் என்பானுக்குக் கிடைத்தது. அவனும் அவன் மனைவி இராதையும் வானில் கேட்ட ஒலியின் ஆணைப்படி அக்குழந்தைக்குக் ‘கன்னன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர். கவச குண்டலங்களோடு பிறந்தமையாலும், பின்னாளில் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்தமையாலும் கன்னன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவதுண்டு.
கன்னன் இளமையிலேயே கொடையுணர்வு மிக்கவனாக விளங்கினான். குழந்தைப் பருவத்தில் அவன் தலையில் நவரத்தினச் சுட்டியை வைத்துத்
தாய் இராதை வெளியே சென்றிருந்தாள். அது போழ்து அவ்வழியே வந்த சப்த முனிவர்கள் கைதட்டிக் குழந்தை கன்னனை அழைக்க, அவன் தன் சுட்டியைத் தான் கேட்கின்றார்கள் என்று கருதி, அதனைச் சடையில் இருந்து இழுத்து எடுத்து நீட்டினான். அதனால், ஏழு முனிவர்களும் வியந்து, ‘நீ பெருங்கொடையாளியாக விளங்குக’, என்று வாழ்த்திச் சென்றார்கள்.
கன்னன் வளர்ந்த பின்னர்ப் பிராமண வடிவில் பரசுராமனிடம் வில் வித்தை பயிலச் சென்றான். ஒருநாள் பரசுராமன், கன்னன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தபோது இந்திரன் ஏவலால் ஒரு அரக்கன் வண்டு வடிவில் வந்து கன்னன் தொடையில் புகுந்து குடைய, கன்னன் அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தான். குருதி பொங்கிப் பெருகி உறங்கிக் கொண்டிருந்த பரசுராமனை விழிக்கச் செய்தது, குருதியைக் கண்டு வெகுண்ட பரசுராமன், அவன் பொறுமையால் சத்திரியன் என அறிந்து தன்னிடம் பொய்கூறி வஞ்சித்தமைக்காக, ‘நீ கற்ற வித்தை வேண்டியபொழுது உதவாது’ எனச் சபித்துவிட்டார்.
கன்னனுக்குத் தன் பெற்றோர், குலமரபு தெரியாது எனப் பிறர் பழித்தபோது அவனுக்கு வேண்டிய இடமும் சிறப்பும் செய்து, அவனை அரசனாக்கியவன் துரியோதனன். தமியோதனனும் கன்னனும் கொண்டிருந்த நட்பு, குறிப்பிடத்தக்க சிறப்புடையதாகும். ஒரு முறை துரியோதனன் மனைவி பானுமதியும் கன்னனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கும்பொழுது, தன் கணவன் துரியோதனன் வரக் கண்ட பானுமதி எழுந்து நிற்க, ஆட்டத்தில் தோற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவள் எழுந்து போகின்றாள் என நினைத்த கன்னன் அவள் மேகலையைப் பற்றி இழுத்தான். அதனால், மேகலை அற்று மணிகள் தெறித்தன. அதனைக் கண்ட துரியோதனன் நட்பின்<noinclude></noinclude>
ehugi2jp66bsyvxuyh6s079qwbv3ss0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/978
250
643763
1954660
1935859
2026-07-19T07:50:41Z
Sridevi Jayakumar
15329
1954660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னன்|950|கன்னி}}</noinclude>மேன்மையால் அம்மணிகளை எடுக்கவோ? கோக்கவோ? என்றான்.
அத்தகைய நல்ல நண்பனுக்கு இறுதிவரை உற்ற நண்பனாக வாழ்வதுவே தனக்குக் கடமையும் தருமமும் ஆகும் என்று கருதியவன் கன்னன். மேலும் செஞ்சோற்றுக் கடனைச் செலுத்திய சிறந்த பண்பாளன். கண்ணனால், பாண்டவர் தன் தம்பியரே என்றறிந்த போதும் அவர்களுடன் வந்து சேருமாறு அழைத்த போதும் நட்பினால் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் எண்ணத்தால் இறுதிவரை பாண்டவர்களுடன் சேரவில்லை. பாண்டவர்களிடமிருந்து நாடு தனக்குக் கிடைத்தாலும் அதனைத் துரியோதனனுக்கே கொடுப்பேன் என உறுதியுடன் நின்றவன் கன்னன்.
கண்ணன் வாயிலாகக் கன்னன் தன் பிள்ளை என்றறிந்த குந்தி, அவனைப் பாண்டவர் பக்கம் சேர வேண்டி அழைக்க அவன் மறுத்து விடுகின்றான். பெற்ற மகவின் மீது அன்பிலாமலோ அல்லது பழிக்கஞ்சியோ தன்னை நட்டாற்றில் விட்ட தாயினும், கருணை காட்டிய துரியோதனனை நட்டாற்றில் விட்டுத் தான் வரமாட்டேன் என உறுதியுடன் கூறினான். குந்தி அவனிடம் இரு வரங்களை வேண்டினாள். நாகாத்திரத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் எய்யக்கூடாதென்பதும், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைக் கொல்லக் கூடாது என்பதும் அவ்வரங்கள் ஆகும். கன்னன் அதற்குச், ‘சுத்த வீரன் ஒரு முறைக்கு மேல் செலுத்த மாட்டான்’ எனக் கூறுகிறான், தாயின் இரண்டாம் வரத்தையும் ஏற்றுக்கொள்கின்றான். மேலும், அவன் தன் தாயிடம் இரு வரங்களை வேண்டுகின்றான். தான் இறக்கும் வரை பாண்டவரிடம் தன்னை அவர்கள் தமையன் என்று கூறக்கூடாது என்பதும், தான் இறந்த பின்னரே உலகினருக்குக் கன்னன் குந்தியின் மகன் என்று உணர்த்துதல் வேண்டும் என்பதும் அவ்விரு வரங்கள் ஆகும். குந்தியும் அதனை ஏற்றுக் கொள்ளுகின்றான்.
பாரதப் போரில் அருச்சுனன் அம்புகளால் கன்னன் உயிர் பிரியவில்லை. அவன் செய்த புண்ணியங்களே அவனைக் காப்பதாகக் கண்ணன் கூறினான். இந்திரன் கவச குண்டலங்களே கன்னனுக்குப் பாதுகாப்பென்று அவற்றைப் பெற நின்றபோது, கதிரவன் அவன் கனவில் தோன்றி அவற்றைக் கொடுக்கக் கூடாதெனத் தடுத்தும் அதனைக்கேளாது தனது இயல்பான கொடையுள்ளத்தால், ‘தனக்கு அழிவு நேரிடும்’ என அறிந்தும் கொடுத்தான்.
பின்னாள் போர்க்களத்தும் அவ்வாறே தன் புண்ணியமனைத்தையும் கிழ வேதியனாக வடிவெடுத்து வந்த கண்ணனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான். கண்ணன் தன் உண்மை வடிவினைக் காட்டி வேண்டிய வரத்தைக் கேட்டபோதும், எப்பிறப்பில் யார்க்கும் இல்லையென்னாத வரத்தைத் தருக என வேண்டிய கொடையாளன் கன்னன்.
{{Right|<b>அ.கோ.</b>}}
<section end="கன்னன்"/>
<section begin="கன்னாட்டு சதுக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னாட்டு சதுக்கம்:</b>}} தில்லி நகரின் மத்தியில் உள்ள கடைத்தெரு (Shopping Centre). இந்த வாணிகச் சதுக்கத்தில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். இவ்வணிக மையத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் வெண்மை நிறங்கொண்டதாகவே இருக்கும். இந்த மையத்தில் தரைக்கு அடியிலும் (Under ground) கடைகள் உண்டு. தில்லிக்குச் செல்பவர்கள், இங்குத் தவறாமல் சென்று பொருள்களை வாங்குவர். சோசியம் கூறுபவர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் தாடியுடன் காணப்படுகின்றனர். நீண்ட, நெடிய, நெரிசல் மிக்க இந்த வணிக மையத்திலிருந்து, 1½ கிலோ மீட்டர் தொலைவில் கோல்டா பிரூசுசா என்னும் கோட்டை அரண்மனை (Kolta Firuz Shah, a fortress palace) உள்ளது. அது பிருசுசாவால் கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் அருகில் மேடை மீது நிறுவப்பட்ட அசோகர் தூபி உள்ளது. இதன் வடபுறம் காந்தியடிகளின் சமாதி நிறுவப்பட்டுள்ள இராசுகாட்டு (Rajkat) உள்ளது. காந்தியடிகள் வெள்ளிக்கிழமை சுடப்பட்டதால், வெள்ளிக்கிழமை தோறும் இங்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தில்லியிலிருந்து பாலம் விமானம் நிலையத்திற்குச் செல்லும் பாதையில் கன்னாட்டு சதுக்கம் (Cannaught Place) அமைந்துள்ளதால், வெளிநாட்டுப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கன்னாட்டு சதுக்கம்"/>
<section begin="கன்னி"/>
{{dhr}}
{{larger|<b>கன்னி:</b>}} மேடம் முதல் எண்ணிவரும் பன்னிரு வீடுகளுள் கன்னிராசி ஆறாம் வீடு ஆகும். புரட்டாசி மாதம் சூரியன் நிற்கும் இராசிவீடு என்று கூறலாம். 27 நட்சத்திரங்களை 12 வீடுகளுக்கும் பங்கிடும் முறையில் ஒரு இராசிக்கு 2½ நட்சத்திரங்கள் அமைவதுண்டு. அம்முறையில் உத்தரம் ¾, அத்தம் 1 சித்திரை ½ என்னும் விண்மீன்கள் கன்னியில் அமையும். இவை அனைத்தும் வானத்தில் கூடிநின்று பெண்போல் காட்சியளிப்பதாக உணர்ந்த முன்னோர் கன்னிராசி என்று பெயரிட்டனர். எனவே, மேற்கூறிய நட்சத்திரங்களில் பிறந்தோர் யாவரும் கன்னிராசியில் பிறந்தவராகக் கருதப்படுவர். ஆனால் பிறந்த நேரத்தை ஓட்டி, ஒருசிலர் இக்கன்னி வீட்டை இலக்கினமாகக் கொண்டு பிறப்பது உண்டு.<noinclude></noinclude>
hkdxxyxns8zhpy3unm13320bmzwy27s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/979
250
643764
1954661
1935863
2026-07-19T07:51:46Z
Sridevi Jayakumar
15329
1954661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னி|951|கன்னிமாரா நூல்நிலையம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 979
|bSize = 480
|cWidth = 353
|cHeight = 239
|oTop = 48
|oLeft = 73
|Location = center
|Description =
}}
{{center|கன்னாட்டு சதுக்கம்}}
எனவே, கன்னி இலக்கினம் கன்னிராசி இரண்டும் சிறிது வேறுபடும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒன்று பிறந்த நேரத்தை ஒட்டியது. மற்றையது நட்சத்திரத்தை ஒட்டியது; கோள்களில் புதனுக்குரிய வீடாக மிதுனம், கன்னி என்று ஈரிடங்கள் உண்டு. கன்னி வீடு புதனுக்குச் சொந்தவீடு மாத்திரமன்று; உச்ச வீடாகவும் கருதப்படுகிறது. கன்னி இலக்கினத்தில் பிறந்தோர் பொதுவாக இரக்கம் உடையவர்கள். சனிக்கோள் இவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது பொதுவிதி. ஆனால், சனி தனது வீடாகிய மகரம் கும்பம் என்பவற்றில் நிற்க வேண்டும். வேறிடங்களில் நிற்கும் சனி நன்மை செய்வதில்லை என்பது சோதிட நூல்களின் கருத்து.
கன்னி என்பது பருவமடைந்து திருமணத்தை எதிரிநோக்கி வாழும் குமரிப்பெண்ணையும் குறிப்பிடும். போகம் துய்க்கப்பெறாத நிலையில் கன்னி கழியாத பெண் என்பர். அனுபவம் எதுவுமின்றி. முதன்முதல் போர் புரிந்தால் கன்னிப் போர் என்றுரைப்பர். கன்னிவேட்டை என்பதும் மன்னர்கள் முதன் முதல் வேட்டையாடச் செல்வதைத் குறிக்கும். தென்குமரித் தெய்வம் திருமணமின்றித் தவக் கோலத்தில் நிற்பதால் கன்னி, குமரி, கன்னியாகுமர் என்று அழைக்கப்படுகிறாள். சிலவகைத் தேனீ, குளவி, ஒட்டுண்ணி இளத்தில் ஆண்பெண் கலப்பின்றி இன விருத்தி நடைபெறுவண்டு, அதனைக் கன்னியினப்பெருக்கம் என்று அறிவியலார் குறிப்பிடுவர்.
{{Right|<b>தே.ஆ.</b>}}
<section end="கன்னி"/>
<section begin="கன்னிமாரா நூல் நிலையம்"/>
{{dhr}}
{{larger|<b>கன்னிமாரா நூல் நிலையம்</b>}} கி.பி. 1896–ஆம் ஆண்டு ஏப்பிரல் 14–ஆம் நாள் இந்தியாவிலேயே முதல் நூலகமாகச் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகம் கி.பி. 1896-ஆம் ஆண்டு சென்னை ஆளுநராயிருந்த கன்னிமாரா பிரபு என்பவரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதால், அவர் நினைவாகக் ‘கன்னிமாரா பொது நூலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நூலகக் கட்டடம் ஆங்கிலோ-இத்தாலியக் கட்டடக் கலையினைப் பின்பற்றிக் கட்டப்பட்டதாகும். இது நீண்ட பெரிய வாசகர் மண்டபத்தையும் அழகிய படிப்பறையையும் மரத்தாலான புத்தக அடுக்கறைகளையும் கொண்டுள்ளது. கட்டடத்தின் தரை சலவைக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.<noinclude></noinclude>
hojgw55vthxr4lqlvsubvbympwvsapn
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1954555
1954390
2026-07-18T17:46:37Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1954555
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-
hwnb90dfkihtxms4qs75esxqrvpkbxe
1954674
1954555
2026-07-19T08:03:41Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1954674
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
fl4i5iia7gkqcty9p7h5qeiyvui9k0j
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1954549
1954389
2026-07-18T15:03:14Z
Sridevi Jayakumar
15329
1954549
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|வாழ்வியற் களஞ்சியம் 6]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ, ஃ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
|-
|}
</center>
</div></div></div>
==வா.க6 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகம்|கருநாடகம்]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருப்பொருள்|கருப்பொருள்]] 802-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பலகைப் பணிகள்|கரும்பலகைப் பணிகள்]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பனூர் கிழான்|கரும்பனூர் கிழான்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பிள்ளைப் பூதனார்|கரும்பிள்ளைப் பூதனார்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமம்|கருமம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமயோகம்|கருமயோகம்]] 807-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்|கருவூர்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஆனிலை|கருவூர் ஆனிலை]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஓதஞானி|கருவூர் ஓதஞானி]] 810-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கண்ணம்பாளனார்|கருவூர்க் கண்ணம்பாளனார்]] 810-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பிள்ளை|கருவூர்க் கதப்பிள்ளை]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்|கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்]] 811-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கலிங்கத்தனார்|கருவூர்க் கலிங்கத்தனார்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்கிழார்|கருவூர்கிழார்]] 812-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கோசனார்|கருவூர்க் கோசனார்]] 812-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ச் சேரமான் சாத்தனார்|கருவூர்ச் சேரமான் சாத்தனார்]] 812-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்த் தேவர்|கருவூர்த் தேவர்]] 813-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் நன்மார்பன்|கருவூர் நன்மார்பன்]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பவுத்திரனார்|கருவூர்ப் பவுத்திரனார்]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பூதஞ் சாத்தனார்|கருவூர்ப் பூதஞ் சாத்தனார்]] 814-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்|கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்]] 815-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரூர்|கரூர்]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரைநிலஞ்சார்ந்த உரிமை|கரைநிலஞ்சார்ந்த உரிமை]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோட்டி|கரோட்டி]] 817-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்|கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்]] 817-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா|கல்கத்தா]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா இருட்டறை|கல்கத்தா இருட்டறை]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு|கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு]] 820-822
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கணர்|கல்கணர்]] 822-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கி|கல்கி]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல் - செப்புக்காலம்|கல் - செப்புக்காலம்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ப சூத்திரம்|கல்ப சூத்திரம்]] 825-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்பொரு சிறுநுரையார்|கல்பொரு சிறுநுரையார்]] 826-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாண சுந்தரமூர்த்தி|கல்யாண சுந்தரமூர்த்தி]] 826-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணி|கல்யாணி]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணிப் பல்கலைக்கழகம்|கல்யாணிப் பல்கலைக்கழகம்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ராயன் மலை|கல்ராயன் மலை]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடம்|கல்லாடம்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடர்|கல்லாடர்]] 830-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடனார்|கல்லாடனார்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சி]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லூரித் தன்னாட்சி|கல்லூரித் தன்னாட்சி]] 834-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வளையந்தாதி|கல்வளையந்தாதி]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி|கல்வி]] 838-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி உளவியல்|கல்வி உளவியல்]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச் சுதந்திரம்|கல்விச் சுதந்திரம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச்சுற்றுலா|கல்விச்சுற்றுலா]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விசார் மானிடவியல்|கல்விசார் மானிடவியல்]] 843-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்|கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்]] 846-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்|கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்|கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வெட்டியல்|கல்வெட்டியல்]] 848-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகம் விளைத்தல் குற்றம்|கலகம் விளைத்தல் குற்றம்]] 852-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகாரி|கலகாரி]] 853-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு|கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்புப் பொருளாதாரம்|கலப்புப் பொருளாதாரம்]] 855-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்பு வங்கி முறை|கலப்பு வங்கி முறை]] 858-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலம்பகம்|கலம்பகம்]] 860-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
2856vgmedl68x9ac6ommpst9o5t19ai
1954677
1954549
2026-07-19T08:05:21Z
Sridevi Jayakumar
15329
1954677
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|வாழ்வியற் களஞ்சியம் 6]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ, ஃ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
|-
|}
</center>
</div></div></div>
==வா.க6 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-801
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகம்|கருநாடகம்]] 801-802
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருப்பொருள்|கருப்பொருள்]] 802-804
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பலகைப் பணிகள்|கரும்பலகைப் பணிகள்]] 804-805
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பனூர் கிழான்|கரும்பனூர் கிழான்]] 805-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரும்பிள்ளைப் பூதனார்|கரும்பிள்ளைப் பூதனார்]] 806-806
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமம்|கருமம்]] 806-807
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருமயோகம்|கருமயோகம்]] 807-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்|கருவூர்]] 809-809
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஆனிலை|கருவூர் ஆனிலை]] 809-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் ஓதஞானி|கருவூர் ஓதஞானி]] 810-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கண்ணம்பாளனார்|கருவூர்க் கண்ணம்பாளனார்]] 810-810
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பிள்ளை|கருவூர்க் கதப்பிள்ளை]] 810-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்|கருவூர்க் கதப்பின்ளைச் சாத்தனார்]] 811-811
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கலிங்கத்தனார்|கருவூர்க் கலிங்கத்தனார்]] 811-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்கிழார்|கருவூர்கிழார்]] 812-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்க் கோசனார்|கருவூர்க் கோசனார்]] 812-812
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ச் சேரமான் சாத்தனார்|கருவூர்ச் சேரமான் சாத்தனார்]] 812-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்த் தேவர்|கருவூர்த் தேவர்]] 813-813
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர் நன்மார்பன்|கருவூர் நன்மார்பன்]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பவுத்திரனார்|கருவூர்ப் பவுத்திரனார்]] 814-814
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பூதஞ் சாத்தனார்|கருவூர்ப் பூதஞ் சாத்தனார்]] 814-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்|கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்]] 815-815
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரூர்|கரூர்]] 815-816
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரைநிலஞ்சார்ந்த உரிமை|கரைநிலஞ்சார்ந்த உரிமை]] 816-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோட்டி|கரோட்டி]] 817-817
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்|கரோலின் தீவுகள் (அல்லது) கேரோலைன் தீவுகள்]] 817-818
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா|கல்கத்தா]] 818-819
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தா இருட்டறை|கல்கத்தா இருட்டறை]] 819-820
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு|கல்கத்தாப் பல்கலைக்கழகக் குழு]] 820-822
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கணர்|கல்கணர்]] 822-823
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்கி|கல்கி]] 823-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல் - செப்புக்காலம்|கல் - செப்புக்காலம்]] 825-825
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ப சூத்திரம்|கல்ப சூத்திரம்]] 825-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்பொரு சிறுநுரையார்|கல்பொரு சிறுநுரையார்]] 826-826
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாண சுந்தரமூர்த்தி|கல்யாண சுந்தரமூர்த்தி]] 826-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணி|கல்யாணி]] 828-828
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்யாணிப் பல்கலைக்கழகம்|கல்யாணிப் பல்கலைக்கழகம்]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்ராயன் மலை|கல்ராயன் மலை]] 829-829
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடம்|கல்லாடம்]] 829-830
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடர்|கல்லாடர்]] 830-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லாடனார்|கல்லாடனார்]] 833-833
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சி]] 833-834
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்லூரித் தன்னாட்சி|கல்லூரித் தன்னாட்சி]] 834-837
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வளையந்தாதி|கல்வளையந்தாதி]] 837-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி|கல்வி]] 838-838
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வி உளவியல்|கல்வி உளவியல்]] 838-839
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச் சுதந்திரம்|கல்விச் சுதந்திரம்]] 839-841
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விச்சுற்றுலா|கல்விச்சுற்றுலா]] 841-843
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்விசார் மானிடவியல்|கல்விசார் மானிடவியல்]] 843-846
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்|கல்வியாராய்ச்சிச் செய்திப் பரப்பல்]] 846-847
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்|கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம்]] 847-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்|கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம்]] 848-848
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கல்வெட்டியல்|கல்வெட்டியல்]] 848-852
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகம் விளைத்தல் குற்றம்|கலகம் விளைத்தல் குற்றம்]] 852-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலகாரி|கலகாரி]] 853-853
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல்]] 853-854
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு|கலத்துறை உரிமை மீட்டடைவிப்பு]] 854-855
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்புப் பொருளாதாரம்|கலப்புப் பொருளாதாரம்]] 855-858
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலப்பு வங்கி முறை|கலப்பு வங்கி முறை]] 858-860
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலம்பகம்|கலம்பகம்]] 860-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலம்பகமாலை|கலம்பகமாலை]] 862-862
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலவரம்|கலவரம்]] 862-863
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலவை அரசு|கலவை அரசு]] 863-867
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாட்சேத்திரம்|கலாட்சேத்திரம்]] 867-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாட்டு|கலாட்டு]] 869-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாப்பகோசுத் தீவுகள்|கலாப்பகோசுத் தீவுகள்]] 869-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலாபிரியா|கலாபிரியா]] 869-869
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிக்கம்பர்|கலிக்கம்பர்]] 869-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிக்காம நாயனார்|கலிக்காம நாயனார்]] 870-870
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிகூலா|கலிகூலா]] 870-871
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கத்துப் பரணி|கலிங்கத்துப் பரணி]] 871-873
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கப்போர்|கலிங்கப்போர்]] 873-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிங்கம்|கலிங்கம்]] 874-874
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலித்தாழிசை|கலித்தாழிசை]] 874-875
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலித்துறை|கலித்துறை]] 875-877
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிப்பகையார்|கலிப்பகையார்]] 877-878
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிப்பா|கலிப்பா]] 878-879
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிபோர்னியா|கலிபோர்னியா]] 879-881
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியநாயனார்|கலியநாயனார்]] 881-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண கதை|கலியாண கதை]] 882-882
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை]] 882-883
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாண சுந்தர முதலியார், பூவை|கலியாண சுந்தர முதலியார், பூவை]] 883-884
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியாணசுந்தரனார், திரு.வி.|கலியாணசுந்தரனார், திரு.வி.]] 884-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலியுகம்|கலியுகம்]] 886-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிவிருத்தம்|கலிவிருத்தம்]] 886-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலிவெண்பாட்டு|கலிவெண்பாட்டு]] 886-886
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீசியா|கலீசியா]] 886-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீபா|கலீபா]] 887-887
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீம் காசானி மீர்சா அபு தாலிபு|கலீம் காசானி மீர்சா அபு தாலிபு]] 887-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலீலியோ கலீல்|கலீலியோ கலீல்]] 888-888
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலே|கலே]] 888-889
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலை|கலை]] 889-892
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக் களஞ்சியக்காரர்கள்|கலைக் களஞ்சியக்காரர்கள்]] 893-895
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியம்]] 895-901
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்காட்சிக் கூடம்|கலைக்காட்சிக் கூடம்]] 901-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்கோட்டுத் தண்டு|கலைக்கோட்டுத் தண்டு]] 904-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைக்கோட்டு முனிவர்|கலைக்கோட்டு முனிவர்]] 904-904
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைஞான தீபம்|கலைஞான தீபம்]] 904-905
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைப்பு அதிகாரி|கலைப்பு அதிகாரி]] 905-906
==வா.க6 அட்டவணை 7 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைமகள்|கலைமகள்]] 906-907
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலைமகள் விழா|கலைமகள் விழா]] 907-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கலோவே|கலோவே]] 908-908
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவர்ந்து கடத்தல்|கவர்ந்து கடத்தல்]] 908-909
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவனம்|கவனம்]] 909-912
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவனமின்மை|கவனமின்மை]] 912-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிகுஞ்சர பாரதி|கவிகுஞ்சர பாரதி]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்|கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்]] 913-913
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிசாகரப் பெருந்தேவனார்|கவிசாகரப் பெருந்தேவனார்]] 913-914
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிதை|கவிதை]] 914-915
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவிராச பண்டிதர், வீரை|கவிராச பண்டிதர், வீரை]] 915-916
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுகாத்தி|கவுகாத்தி]] 916-917
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுதமிபுத்திர சிரீ சதகர்னி|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி]] 917-918
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுவ்வ்தி அடிகள்|கவுவ்வ்தி அடிகள்]] 918-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவுனாசு|கவுனாசு]] 920-920
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவூர்|கவூர்]] 920-926
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவேர கன்னி|கவேர கன்னி]] 926-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கவைமகனார்|கவைமகனார்]] 927-927
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழக முறை அரசு|கழக முறை அரசு]] 927-928
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழக முறைச் சமநிலைக் கோட்பாடு|கழக முறைச் சமநிலைக் கோட்பாடு]] 928-930
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழஞ்சு|கழஞ்சு]] 930-930
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழற்சிங்க நாயனார்|கழற்சிங்க நாயனார்]] 930-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழறிற்றறிவார் நாயனார்|கழறிற்றறிவார் நாயனார்]] 931-931
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழாத்தலையார்|கழாத்தலையார்]] 931-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழார்க்கீரன் எயிற்றியனார்|கழார்க்கீரன் எயிற்றியனார்]] 932-932
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிநெடிலடி|கழிநெடிலடி]] 932-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிநெடும் பள்ளத்தாக்கு|கழிநெடும் பள்ளத்தாக்கு]] 933-933
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழிவுத் தீர்வகங்கள்|கழிவுத் தீர்வகங்கள்]] 933-934
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழுகுமலை|கழுகுமலை]] 934-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழுமலம்|கழுமலம்]] 936-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கழைதின் யானையார்|கழைதின் யானையார்]] 936-936
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளக் கடத்தல்|கள்ளக் கடத்தல்]] 936-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளக்குறிச்சி|கள்ளக்குறிச்சி]] 938-938
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளத் தயாரிப்பு|கள்ளத் தயாரிப்பு]] 938-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளமனம்|கள்ளமனம்]] 939-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்|கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்]] 939-939
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள்ளிலாத்திரையனார்|கள்ளிலாத்திரையனார்]] 939-940
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கள ஆய்வு முறை|கள ஆய்வு முறை]] 940-942
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] 942-943
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களப்பிரர்|களப்பிரர்]] 943-943
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களரியாவீரை|களரியாவீரை]] 943-943
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவழி நாற்பது|களவழி நாற்பது]] 943-944
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவியல்|களவியல்]] 944-944
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களவிளையாட்டுகள்|களவிளையாட்டுகள்]] 944-945
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/களைப்பு|களைப்பு]] 945-946
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்கா நாடு|கற்கா நாடு]] 946-946
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்காலம்|கற்காலம்]] 946-955
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பனை|கற்பனை]] 955-957
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பிக்கும் தகுதியாற்றல்|கற்பிக்கும் தகுதியாற்றல்]] 957-959
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தல் அறிவியல் கழகம்|கற்பித்தல் அறிவியல் கழகம்]] 959-960
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தல் மாதிரிகள்|கற்பித்தல் மாதிரிகள்]] 960-963
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்பித்தலில் நுண்திறன்|கற்பித்தலில் நுண்திறன்]] 963-965
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்போர்வழிக் கற்பித்தல்|கற்போர்வழிக் கற்பித்தல்]] 965-966
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றல் தேக்கம்|கற்றல் தேக்கம்]] 966-968
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றல் மையங்கள்|கற்றல் மையங்கள்]] 968-969
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கற்றளி|கற்றளி]] 969-969
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கறுப்புப் பணம்|கறுப்புப் பணம்]] 969-973
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்பூசியசு|கன்பூசியசு]] 673-974
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்வர்கள்|கன்வர்கள்]] 974-974
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னட ஆய்வு மையம்|கன்னட ஆய்வு மையம்]] 974-975
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னடம்|கன்னடம்]] 975-975
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னமிடுதல்|கன்னமிடுதல்]] 975-977
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னன்|கன்னன்]] 977-978
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னாட்டு சதுக்கம்|கன்னாட்டு சதுக்கம்]] 978-978
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னி|கன்னி]] 978-979
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னிமாரா நூல் நிலையம்|கன்னிமாரா நூல் நிலையம்]] 979-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னிமாரா, பிரபு|கன்னிமாரா, பிரபு]] 981-981
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னியாகுமரி|கன்னியாகுமரி]] 981-982
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டம்]] 982-982
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கன்னோசி|கன்னோசி]] 982-983
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபாபதிப்பிள்ளை, கே.|கனகசபாபதிப்பிள்ளை, கே.]] 983-983
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபைப் பிள்ளை, வி.|கனகசபைப் பிள்ளை, வி.]] 983-984
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசபைப் புலவர்|கனகசபைப் புலவர்]] 984-985
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகசுந்தரம் பிள்ளை, தி.த|கனகசுந்தரம் பிள்ளை, தி.த]] 985-985
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனகநாசர்|கனகநாசர்]] 985-896
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனடா|கனடா]] 896-990
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனம் கிருட்டிண ஐயர்|கனம் கிருட்டிண ஐயர்]] 990-991
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனரகத் தொழில்கள்|கனரகத் தொழில்கள்]] 991-994
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனவு|கனவு]] 994-995
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனவுப் பகுப்பாய்வு|கனவுப் பகுப்பாய்வு]] 996-997
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனா நூல்|கனா நூல்]] 997-997
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனெக்டிகட்டு|கனெக்டிகட்டு]] 997-998
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கனோபிக்குச்சாடிகள்|கனோபிக்குச்சாடிகள்]] 998-998
rb7zsfy25t5al2aejabd26pbrf0yga3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/523
250
649858
1954550
2026-07-18T16:49:20Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்பொது இலக்கிற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எதிர் எதிர் நிலையில் நின்று அதை அடைய முயற்சி செய்வர். இத்தகைய இடைவினையில் தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இடைவினை|497|சமூக இடைவினை}}</noinclude>அப்பொது இலக்கிற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எதிர் எதிர் நிலையில் நின்று அதை அடைய முயற்சி செய்வர். இத்தகைய இடைவினையில் தொடர்புள்ள உறுப்பினர்களிடையே கூட்டு மனப்பான்மை இருக்காது. தாமே இலக்கை அடைந்திட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
பொதுவாக, போட்டி ஒரு மதிப்பு மிக்க பொருளைச் சுற்றியே அமையும். அந்தப் பொருளை அறிந்த நிலையில்தான் மக்களிடையே அதற்காகப் போட்டி அமையும். அதை அறியாத நிலையில் மக்களிடையே போட்டி எழ வாய்ப்பில்லை. மேலும், அந்தப் பொருள் எண்ணிக்கையளவில் குறைவாக இருக்கும்போதும் அரிதாகக் கிடைக்கும் நிலையிலும் அதற்குப் போட்டி இருக்கும். ஏனெனில், அந்த நிலையில்தான் அதற்கு மதிப்பு அமைகிறது. ஆனால், அப்பொருள் தாராளமாகக் கிடைக்கும் பொழுது அதற்கு மதிப்பு இல்லாமல் போகிறது. ஆகவே, அதற்குப் போட்டி இருக்காது. எடுத்துக் காட்டாக, தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள ஒரு வறண்ட பகுதியில் தண்ணீருக்குக்கடும் போட்டி இருக்கும். ஆனால் தண்ணீர் தாராளமாக, வசதியாகக் கிடைக்கிற பகுதியில் அதற்காக மக்களிடையே போட்டி இருப்பதில்லை. காற்று, சூரிய ஒளி ஆகியவற்றிற்கெல்லாம் போட்டி ஏற்படுவதில்லை. ஏனெனில் அவை எங்கும் தாராளமாகக் கிடைக்கின்றன. நாடுகின்ற பொருள் கிடைப்பதன் அளவு குறையக் குறைய, அதன் மதிப்பு உயருகிறது. அதனால், அதை நாடுவதும் மிகுகின்றது. அதன் காரணமாகப் போட்டியின் தன்மை கடுமையாகி, அதன் நிகழ்வு வேகமும் மிகுதியாகிறது.
சமூகத்தில் குறிப்பாகப் பதவி, அதிகாரம், தகுநிலை, புகழ், செல்வம் ஆகியவற்றுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் அவை எளிதில் கிடைப்பதில்லை. அவ்வாறே தாராளமாகவும் கிடைப்பதில்லை. போட்டி நிகழும் நிலைமைகள் என்றும் எங்கும் நிலவுகின்றன. அதன் காரணாமகப் போட்டி எல்லாக் காலத்திலும், எல்லாச் சமூகங்களிலும் நிலவுகின்ற தன்மையைக் கொண்டிருக்கிறது. போட்டி ஒரு தொடர்ச்சியான செயற்பாங்கு. போட்டியில் ஒருவர். போட்டிப் பொருளைக் கவர்ந்து வெற்றியடைந்தாலும், மற்றவர்களிடையே அப்பொருளை அடைவதில் போட்டி நீடித்துக் கொண்டே இருக்கும். ஒருவருடைய வெற்றியினால் போட்டி முடிவுக்கு வருவதில்லை.
போட்டியின் குறிக்கோள் விரும்பிய – நாடிய பொருளை அடைந்தே தீருவது என்பதுதான். போட்டியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் போட்டிப் பொருளை அடைந்தே தீருவது என்று வெற்றியின் மீதுதான் தம் கவனத்தைச் செலுத்துவர். ஆயினும் இந்த ஆவேசம் முறைப்படிதான் இருக்கும். சமூகத்தின் நெறிகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டே போட்டி அமையும். அவற்றைப் புறக்கணித்தோ மீறியோ போட்டி நடைபெறுவதில்லை.
போட்டி ஒரு குறுப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் காணப்படுவது கிடையாது. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமும் காணப்படுகிறது. அவ்வாறே சமூகத்தில் உள்ள பொருளாதாரத் துறை, வணிகத் துறை, அரசியல் துறை, மதத் துறை, விளையாட்டுத் துறை, கலைத்துறை எனப் பல்வேறு துறைகளிலும் போட்டி நிலவுகிறது.
இப்போட்டிகள் அனைத்தையும் சில குறிப்பிட்ட வகைகளுக்குள் அடக்கி விடலாம் என்று சான் கியூபர் (John Cuber) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். அவை முழுமையான போட்டி (Absolute Competition), ஒப்பீட்டு முறையான போட்டி (Relative Competition), ஆள் தொர்புடைய போட்டி (Personal Competition), ஆள் தொடர்பற்ற போட்டி (Impersonal Competition) என அமையும் என்கிறார். சில போட்டிகள் ஒரேயொருவர் மட்டுமே வெற்றியாளராகவரக் கூடிய முறையில் அமையும். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் வெற்றி பெற அவை அனுமதிப்பதில்லை. அத்தகைய போட்டிகள் முழுமையான போட்டிகள் எனப்படும். சட்டமன்றத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல், விளையாட்டுப் போட்டி ஆகியவை முழுமையான போட்டிகளாகும். இவ்வகைப் போட்டிகளில் ஒரேயொருவரே வெற்றியாளராக வர இயலும்.
சில போட்டிகள் ஒருவருக்கு மேல் வெற்றியாளராக வரக் கூடிய முறையில் அமையும். அத்தகைய போட்டிகளில் ஒரே ஒருவருக்கு மட்டுமே போட்டிப் பொருள் சொந்தமாவதில்லை. பணத்துக்கும் புகழுக்கும் தகுநிலைக்கும் நடைபெறும் போட்டியில் அவை ஒருவரிடம் மட்டுமே போய்க் குவிந்து விடுவது கிடையாது. பணப் போட்டியில் ஒருவர் பணத்தை திரட்டிப் பணக்காரரானால், மற்றொரு சூழ்நிலையில் வேறொருவர் பணத்தைத் திரட்டி அவரை மிஞ்சக் கூடும். அவ்வாறே தகுநிலை அல்லது புகழுக்கான போட்டியில் ஒருவர் ஒரு வழியில் வெற்றி பெற்றால், மற்றொரு சூழ்நிலையில் வேறொருவர் உயர்வான தகுநிலை அல்லது புகழை ஈட்டி மேலே வரக் கூடும். இவ்வாறு ஒப்பீட்டு நிலையில் போட்டியாளருக்கு வெற்றி அமையும் போட்டிகள் ஒப்பீட்டு முறையிலான போட்டிகள் எனப்படும்.
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 32</b></noinclude>
7m9z3jq9hf6dm9pq4ba9pnr5v0k141j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/524
250
649859
1954551
2026-07-18T16:58:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேறு வகைகளிலும் போட்டி அமையக் கூடும். அது ஆள் தொடர்புடைய போட்டி, ஆள் தொடர்பற்ற போட்டி என்ற வகையில் அமையக் கூடும். ஆள் தொடர்புடைய போட்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இடைவினை|498|சமூக இடைவினை}}</noinclude>வேறு வகைகளிலும் போட்டி அமையக் கூடும். அது ஆள் தொடர்புடைய போட்டி, ஆள் தொடர்பற்ற போட்டி என்ற வகையில் அமையக் கூடும். ஆள் தொடர்புடைய போட்டியில் போட்டியாளரை மையமாகக் கொண்டு போட்டி நடைபெறும். அத்தகைய போட்டியில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் எதிரியாகக் கருதிச் செயற்படுவர். ஒவ்வொருவரும் பிறரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருப்பர். விளையாட்டுக் களத்தில் நடைபெறும் போட்டி, அரசியல் களத்தில் திகழும் தேர்தல் ஆகியன இத்தகைய போட்டிகளே.
போட்டியாளரை மையமாகக் கொள்ளாமல், வெற்றியை மையமாகக் கொண்டு அமையும் போட்டிகள் ஆள் தொடர்பற்ற போட்டிகள் எனப்படும். இத்தகைய போட்டிகளில் ஒருவர் யார் யார் தம்முடன் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. தமது வெற்றியில் மட்டுமே குறியாக இருப்பர். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வோர் தமது நோக்கத்தை அறிந்திருப்பர். அதை அடைவதில் தாம் மற்றவர்களுடன் போட்டியிடுவதையும் உணர்ந்திருப்பர். ஆனால், தம்முடன் போட்டியிடுகிறவர்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்வதில்லை. அப்படியே ஒரு சிலரைத் தெரிந்திருப்பினும் அவரை எதிராளியாகக் கருதுவதில்லை. தமது வெற்றி ஒன்றின் மேல் தான் கண்ணாய் இருப்பர். இவ்வாறே நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற் குழுக்களிடையே நடைபெறும் போட்டியும் அமைகிறது. அவர்கள் தமது பொருளுக்குப் பொது மகளிடையே ஆதரவைத் திரட்டப் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம், சலுகை விலை, இலவசப் பரிசு, பொருளின் தரத்தை உயர்த்துதல் முதலான வழிகளைக் கையாளுவதுண்டு. ஆனால், அவர்கள் நேருக்கு நேர் சந்திப்பதில்லை. சில வேளைகளில் ஒருவரை யொருவர் அறியாமலும் இருப்பர்.
எத்தகைய வடிவத்தில் இருந்தாலும் சரி, போட்டி மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கு ஆற்றுகிறது. கூட்டுறவு, மனிதர்கள் சில காரியங்களை ஆற்ற உதவி புரிகிறது. போட்டி நிலையில் போட்டியாளர்களிடையே எழும் போட்டி மனப்பான்மை அவர்கள் தம் செயலைச் சிறப்பாகச் செய்யத் தூண்டுகோலாக அமைகிறது. அந்தத் தூண்டுதல் அவர்களைத் திறம்படச் செயற்பட வைக்கிறது. அதன் காரணமாக அவர்களுடைய வினைத் திறன், செயலூக்கம் ஆகியவை மிகுகின்றன.
மேலும், போட்டி நாட்டின் மேம்பாட்டுக்கும் வழிகோலுகிறது. பொருளாதாரத் துறையில் நிகழும் போட்டியினால் உற்பத்தியாளர்களிடையே ஒரு முனைப்பு எழுகிறது. அவரவர் தம் தொழிற்சாலைகளில் உற்பத்தியை மிகச்செய்து தரமான பொருள்களை உற்பத்தி செய்து, புதிய கண்டுபிடிப்புகளைத் தோற்றுவித்துச் சந்தையைப் பிடிக்கப் போட்டி போட்டுக் கொண்டு உழைக்கிறார்கள். இவர்களுடைய போட்டி மனப்பான்மையினாலும், அது தூண்டி விடுகிற கடும் உழைப்பினாலும், உற்பத்தி மிகுந்து, பொருளாதாரம் மேம்பாடு அடைகிறது.
<b>பூசல்:</b> போட்டியில் ஒரு பகை மனப்பான்மை புகும்போது, அது பூசல் ஆகிறது. ஒரு பொதுவான பொருளை அடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவினர் போட்டியிடும் நிலையில், அந்தப் போட்டியில் பகை உணர்வு இடம் பெறும்போது அது பூசல் ஆகிறது. பூசலில் ஒரு பிரிவினர் பிற போட்டியாளர்களைப் போட்டியிலிருந்து அகற்றி விட்டு அல்லது ஒழித்து விட்டுத் தாமே வெற்றி பெற வேண்டும் என்று முனைவர். அதற்காக அவர்கள் வன்முறையையும் கூடக் கடைப்பிடிப்பர். அவ்வாறு பூசல் ஒரு வன்முறை தழுவிய செயற்பாங்காக, ஒரு வகையான போராட்டமாகவே விளங்குகிறது. அப்போராட்டத்தில் ஒருவரோடு ஒருவர் பகை உணர்வோடு மோதி ஒருவர் மற்றவரை ஒழித்துக் கட்டும் முயற்சி நடைபெறும்.
போட்டி கடுமையாகிறபொழுது அந்தச் சூழ்நிலையில் போட்டி பூசலாக உருவெடுக்கிறது. அதாவது தீவிரமான போட்டியே பூசலாக உருவெடுக்கிறது. ஆயினும், போட்டிக்கும் பூசலுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. போட்டி தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாங்கு. அது தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். ஆனால் பூசல் அவ்வாறில்லை. அது விட்டு விட்டு நிகழும். பெரும்பாலான போட்டிகள் மனிதர்களுடைய உணர்வுக்கு உட்பட்டு அமைகின்றன. நாம் ஒரு போட்டியில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிற உணர்வு மனிதர்களுக்கு அமைகிறது. ஆயினும் சில வேளைகளில் தாம் போட்டியில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிற உணர்வே அவர்களுக்கு இல்லாத நிலையில், அவர்களுக்குத் தெரியாமலேயே போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் பூசல் அவ்வாறில்லை. அது மனிதர்களுக்குத் தெரிந்தே, அவர்கள் அதை உணர்ந்த நிலையிலேயே நிகழும். போட்டியில் ஒரு போட்டியாளர் தமது நலனிலேதான் குறியாய் இருப்பார். நாடிய பொருளை அடைந்து வெற்றி பெறுவது ஒன்றே அவருடைய குறிக்கோள். ஆனால், பூசலில் இரண்டு இலட்சியங்கள் அடங்குகின்றன. ஒன்று எதிரி<noinclude></noinclude>
l1ufhygqn5zq8uiqkap24enjgv9it52
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/525
250
649860
1954552
2026-07-18T17:08:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எப்படியும் ஓழிய வேண்டும் என்பது. மற்றொன்று நாடிய பொருளை அடைய வேண்டும் என்பது. பின்னதைக் காட்டிலும் முன்னதே முக்கியமாக விளங்கும். இத்தக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இடைவினை|499|சமூக இடைவினை}}</noinclude>எப்படியும் ஓழிய வேண்டும் என்பது. மற்றொன்று நாடிய பொருளை அடைய வேண்டும் என்பது. பின்னதைக் காட்டிலும் முன்னதே முக்கியமாக விளங்கும். இத்தகைய நிலையில் பூசலில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான வழிமுறைகளும், வன்முறையும் தயக்கமில்லாமல் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. ஆனால், போட்டி சமூக நெறிகளுக்கு உட்பட்டே நடைபெறும். அது தடம்புரளும் போது பூசல் தலை தூக்கும்.
இரு பிரிவினருக்கிடையே பற்றுகளும் மதிப்பீடுகளும் முரண்பட்டு மோதும்போதுதான் பூசல் தோன்ற ஏதுவான சூழ்நிலை ஏற்படுகிறது. பூசலின் தோற்றுவாயே இந்த மோதல்தான். இந்த மோதலே வன்முறைக்கு வழி வருக்கிறது. இந்த மோதல் பொருளராதார நிலையில், இன அளவில், மத அடிப்படையில், பண்பாட்டு அளவில் என்று எந்த நிலையிலும் நிகழலாம்.
பூசல் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமையக் கூடும் என்று மெக்ஈவர் (Mac Iver) என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார். நேரடியான பூசலில் இரு பிரிவுகளும் நேருக்கு நேராக, வெளிப்படையாக மோதிக் கொள்ளும். வாதம், மற்போர், நீதிமன்ற வழக்கு, தெருச் சண்டை, கலகம், புரட்சி, போர் முதலியவை நேரடியான பூசலுக்கு எடுத்துக்காட்டுகளாகும். மறைமுகமான பூசலில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவுடன் நேரடியாக மோதாமல் மறைமுகமாக அதற்கு எதிராக, அதை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபடும்.
பூசலில் வண்முறை கலந்திருப்பதால் அதைச் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்பாங்கு என்று கருத வேண்டியதில்லை. பூசல் சமூக மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றியிருக்கிறது. ‘கலகத்தில்தான் நியாயம் பிறக்கும்’ என்ற மூதுரைக்கேற்பப் பல சமூகங்களில் ஆதிக்கச் சக்திகளுக்கும் அடங்கிய மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களும் போராட்டங்களுமே புரட்சியாக மலர்ந்து, அதன் விளைவாகப் புதிய சமூக ஒழுங்கு ஏற்பட்டிருக்கிறது. பழமை வாதிகளுக்கும் புதுமை விரும்பிகளுக்கும் இடையே பூசல் ஏற்படுகிற பொழுதுதான், பூசலின் முடிவைப் பொறுத்தும் புதியதோர் உலகம் எழுகிறது. பூசல், மந்தமாகிப் போன சமூகத்தில் ஒரு துடிப்பை ஏற்படுத்திப் புதிய நிலையைத் தோற்றுவிக்கிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் சோவியத்து ஒன்றியத்திலும் சைனாவிலும் பிற நாடுகளிலும் ஏற்பட்ட அரசியல்–சமூக–பொருளாதார அமைப்பு முறை மாற்றங்கள் பூசலின் விளைவாகத் தோன்றியனவேயாகும்.
<b>இணங்குதல்:</b> பூசலினால் சமூகத்திற்கு நன்மை ஏற்பட்டாலுங் கூட, மனிதர்கள் தொடர்ந்து பூசலிட்டுக் கொண்டே இருக்க முடியாது. அவ்வப் பொழுது பூசலுக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். அது முடிவுக்கு வந்தாலொழியக் குழப்பநிலை நீங்கித் தெளிவு நிலை ஏற்பட இயலாது. ஆகவே, பூசலுக்கு முடிவு காணப் பூசலிடும் இரு பிரிவினரும் ஓர் இணக்கத்திற்கு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வரலாம். இத்தகைய செயலே இணங்குதல் என்பதாகும்.
ஒரு தொழிற் சச்சரவினால் பிரிந்து மோதிக் கொண்டு நிற்கிற ஒரு தொழிற்சாலை நிருவாகமும், அதன் தொழிலாளர்களும் தொழிற் சச்சரவுக்கு முடிவு கண்டு, தொழில் அமைதியைக் கொண்டு வர, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஓர் இணக்கத்துக்கு-உடன்படிக்கைக்கு வருகின்ற முயற்சி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, அவ்வாறே, கருத்து வேறுபாட்டால் பூசலிட்டுப்பிரிந்து வாழும் கணவன் மனைவியர் தமக்குள் கலந்து பேசி, ஒரு சமாதானத்திற்கு வருவதும் இணங்குதலே.
பொதுவாகப் பூசல் நிலவுகிற நிலையில்தான் அதை முடிவுக்குக் கொண்டு வர இணங்குதல் மேற்கொள்ளப்படுகிறது. கருத்து வேறுபாடுகளால் இரு பிரிவினர்களுக்கிடையே பிணக்கு அல்லது முரண்பாடு இடைவெளி–பிரிவு ஏற்பட்டு, அவர்களுக்கிடையே ஏற்படுகிற நிலையிலும் கூட இணங்குதல் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிணக்கோ முரண்பாடோ முற்றிப் வெளிப்படைப் பூசல் ஏற்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.
இணங்குதலைப் பல முறைகளில் கொண்டு வரலாம். அவற்றுள் முக்கியமானவை சமரச இணக்கம், கட்சி மாற்றம், பொறுத்துக் கொள்ளுதல், நடுவர் தீர்ப்பு, இடைநிறுத்தம், கீழடக்கம், தன்மயமாதல் ஆகியன.
<b>சமரச இணக்கம்:</b> இரு பிரிவினருமே தம்முள் கலந்து பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஓர் உடன்பாட்டிற்கு வரலாம். பேரம் பேசுவது இத்தகைய முயற்சியே.
<b>கட்சி மாற்றம்:</b> இம்முறையில் ஒரு பிரிவு தான் முரண்படுகிற எதிர்ப்பிரிவோடு பூசலிட்டுச் சண்டையிடாமல், தானாக ஒதுங்கிக் கொண்டு, வேறொரு பிரிவுடன் போய்ச் சேர்ந்து கொள்ளும், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்படுகிற மோதலில், தாழ்த்தப்பட்டவர்கள் சாதி<noinclude>
<b>வா.க. 8 – 32</b></noinclude>
mj7u7cx49gm9onn4bozllmfxxpap1wo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/526
250
649861
1954553
2026-07-18T17:16:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்துக்களோடு பூசல் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து இசுலாமிய அல்லது கிறித்தவ மதத்தில் சேர்ந்த கொள்வதுண்டு. இத்தகைய கட்சிமாற்ற முறையும் (Co..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இடைவினை|500|சமூக இடைவினை}}</noinclude>இந்துக்களோடு பூசல் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து இசுலாமிய அல்லது கிறித்தவ மதத்தில் சேர்ந்த கொள்வதுண்டு. இத்தகைய கட்சிமாற்ற முறையும் (Conversion) ஓர் இணக்கமே.
<b>பொறுத்துக் கொள்ளுதல்:</b> இம்முறையில் கருத்து வேறுபாடுகளால் பிணங்கி, பிரிந்து நிற்கிற இரண்டு பிரிவுகளில் ஒன்று தனது எதிர்ப் பிரிவின் நிலையைப் பரிவுடன் அணுகி, அந்தப் பிரிவோடு தனக்குள்ள வேற்றுமைகளைச் சிக்கலாக்காமல், அவற்றைப் பொதுத்துக் கொண்டு போகும். இப்படிப் பொறுத்துக்கொண்டு போவதும் (Toleration) ஓர் இணக்கமே.
<b>நடுவர் தீர்ப்பு:</b> இரு பிரிவினருமே தங்களுடைய பூசல் சிக்கலை மூன்றாம் மனிதர் ஒருவரிடம் ஒப்படைத்து, அவர் தரும் யோசனைப்படி ஓர் இணக்கத்திற்கு வரலாம், இது நடுவர் தீர்ப்பு (Arbitration) முறையாகும்.
<b>இடைநிறுத்தம்:</b> இரு தரப்பாரும் தமது பூசலைச் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைப்பது என்ற ஓர் உடன்படிக்கைக்கு வரலாம். இந்த முறையில் சிக்கலைத் தீர்த்து விடுவதில்லை. ஆயினும் ஏற்படுகிற இடை ஓய்வுக் காலத்தில் சிக்கல் ஆராயப்பட்டு அதைத் தீர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் தேடப்படும். இந்தத் தேடல், சிக்கலின் தீர்வுக்கு வழி கோலக் கூடும். போர்க் காலத்தில் ஏற்படுகிற போர் நிறுத்தம் இத்தகைய முறையே.
<b>கீழடக்கம்:</b> இந்த முறையில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவுக்குக் கீழ் அடங்கிப் போக முன்வரும். அதனால் பூசல் ஒரு முடிவுக்கு வரும். பூசலிடுகிற இரு பிரிவுகளில் தகுநிலை ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் போதுதான் இம்முறை செயற்படும். தாழ்வான தகுநிலை உடைய பிரிவே உயர்வான தகுநிலையுடைய பிரிவுக்குக் கீழ் அடங்கிப் போக முன்வரும்.
இவ்வாதான முறைகள் இணங்குதலுக்கு வழி கோலுகின்றன. இணங்குதல் பூசலை அல்லது பிணக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஆயினும், இணங்குதல் மட்டுமே பூசலை அல்லது பிணக்கை முடிவுக்குக் கொண்டு வாராது. பூசலை அல்லது பிணக்கை முடிவுக்குக் கொண்டு வருவதில் இணங்குதல் ஒரு முதற்படிதான். அதைத் தொடர்ந்து பல காரியங்கள் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் பூசலுக்கு அல்லது பிணக்குக்கு ஏற்பட்டமுடிவு நிலைத்து நிற்கும். ஒரு தொழிற்சாலை நிருவாகமும் அதன் தொழிலாலர்களும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வரும்போது, தொழிற் சச்சரவுக்கு ஒரு முடிவு ஏற்படலாம். ஆனால், அந்த முடிவு நிலைத்து நிற்க வேண்டுகாளால் எந்தப் பிரிவும் உடன்படிக்கையை மீறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும். இரு பிரிவினரும் அடிக்கடித் தம்முள் கலந்து பேசியும், கூட்டுப் பேர முறையைக் கடைப்பிடித்தும் இணங்குதலினால் ஏற்பட்ட முடிவை நீடித்து நிலைக்க வைக்க வேண்டும்.
<b>தன்மயமாதல்:</b> ஒரு குழுவும் மற்றொரு குழுவும் நெருங்கி வருகிற பொழுது, அந்த நெருக்கம் வலுப்பட்டு, ஒரு குழு மற்றொரு குழுவோடு இணைந்து ஒன்று படுவதுண்டு. அத்தகைய செயற்பாங்கு ஒருங்கிணைதல் அல்லது தன்மயமாதல் எனப்படுகிறது.
தன்மயமாதற் செயற்பாங்கில் ஒரு குழு மற்றொரு குழுவோடு இணைந்து ஒன்றி விட வேண்டும் என்பதில்லை. இரண்டு குழுக்களும் ஒன்றாகச் சேர்ந்து இணைந்து ஒரு பொதுவான, ஒருமித்த குழுவாக அமைவதும் உண்டு.
தன்மயமாதலால் ஒரு குறிப்பிட்ட விளைவு ஏற்படுகிறது. ஒருங்கிணைதல் ஏற்படும்போது, பண்பாட்டு வேறுபாடுகள் மறைகின்றன. இரண்டு குழுக்கள் தன்மயமாகும்போது, அவற்றிடையே நிலவிய பண்பாட்டு வேறுபாடுகள் மறைந்து ஒருமித்த பண்பாட்டு ஒழுங்கு ஏற்படுகிறது. மேலும், இரண்டு குழுக்களுக்கிடையே முதலில் பண்பாட்டுத் தொடர்பு ஏற்பட்டு, இரு பக்கமும் பிற பண்பாட்டுப் பேறு (Acculturation) நிகழ்ந்த பிறகே தன்மயமாதல் ஏற்படுகிறது.
தன்மயமாதல் ஏற்படச் சில நிலைமைகள் உதவுகின்றன. இரண்டு குழுக்களுக்கும் சகிப்புத் தன்மை இருந்தால், தன்மயமாதல் தடையின்றி அமையும். ஒரு குழு தன் அருகில் பிறிதொரு குழு இருப்பதற்கு வெறுப்புக் காட்டாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருந்தால், அந்த நிலைமை தன்மயமாதல் ஏற்படப் பெரிதும் உதவும். இரண்டு குழுக்களுக்கும் நெருங்கிய சமூக உறவு இருந்தால், அது தன்மயமாதலுக்கு வழி கோலும். நெருங்கிய சமூக உறவு அமையுமானால் ஒரு குழுவுக்கு மற்றொரு குழுவின் பண்பாட்டை அறியவும் அதைப் பின்பற்றவும் வாய்ப்பு அமையும். இரண்டு குழுக்களுக்கிடையே ஓரளவு பண்பாட்டு ஒற்றுமை இருந்தால் அந்த நிலைமை தன்மயமாதல் ஏற்படப் பெரிதும் உதவும். இரண்டு குழுக்களுக்குமிடையே திருமண உறவுகள் பரவலாக ஏற்பட்டால் அதுவும் தன்மயமாதலுக்குச் சுலபமாக வழிவகுக்கும். ஒரு குழு மற்றொரு குழுவைப் பரிவுடனும் நேயமுடனும் நடத்தினால் அது தன்மயமாதல் ஏற்படச் சுமுகமான<noinclude></noinclude>
8bhkbbd6dfo8q1pbqtxrc73pdi0aiy8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/527
250
649862
1954554
2026-07-18T17:33:08Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூழ்நிலையை உண்டாக்கும். இரண்டு குழுக்களுக்கிடையே சமமான பொருளாதார வாய்ப்புகள் நிலவினால், அதுவும் தன்மயமாதல் ஏற்பட வழிவகுக்கும். ஆனால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இடைவினை|501|சமூக இயக்கங்கள்}}</noinclude>சூழ்நிலையை உண்டாக்கும். இரண்டு குழுக்களுக்கிடையே சமமான பொருளாதார வாய்ப்புகள் நிலவினால், அதுவும் தன்மயமாதல் ஏற்பட வழிவகுக்கும்.
ஆனால், அவற்றுக்கு மாறான நிலைமைகள் இருந்தால், அவை தன்மயமாதல் ஏற்படுவதைத் தடை செய்யும். இரு குழுக்களுக்கிடையே பெருத்த இன வேறுபாடுகள் அமைந்து, அவை அந்த இன வேறுபாடுகளின் அடிப்படையில் ஒன்றையொன்று வெறுத்துக் கொண்டிருந்தால், அந்த நிலைமை அவர்களிடையே சுமுகமான உறவும், தன்மயமாதலும் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும். அவ்வாறே அவற்றிடையே பெருத்த பண்பாட்டு வேறுபாடுகள் நிலவினாலும், அவையும் தன்மயமாதலைத் தடுக்கும். இரண்டு குழுக்களும் இருவழித் தொடர்பு இன்றி விலகி நின்று தனித்து வாழ்ந்தால், அதுவும் தன்மயமாதலைத் தடுக்கும். ஒரு குழு தன்னை உயர்வாக, மேலாகக் கருதி, மற்றொரு குழுவை இழிவாகக் கருதி நடத்தும் நிலைமை நிலவினால், அந்த நிலைமையில் தன்மயமாதல் ஏற்பட வாய்ப்பு இருக்காது. அவ்வாறே ஒரு குழு தாழ்வு மனப்பான்மையில் ஒதுங்கி நின்றாலும் தன்மயமாதல் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு குழு மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தி, அதைக் கொடுமைகளுக்கு ஆளாக்கி, அதை வெறுப்பின் எல்லைக்கு விரட்டியிருந்தால், அந்த நிலைமையும் தன்மயமாதல் ஏற்படத் தடையாய் இருக்கும்.
இவ்வாறு சமூக இடைவினை பல்வேறு வடிவங்களில் அமைந்தாலும், அந்த வடிவங்கள் ஒன்றையொன்று விலகி அமைவதில்லை. கூட்டுறவோடு இயங்கும் ஒரு குழுவில் பூசலும் அடிக்கடி ஏற்படக் கூடும். அவ்வாறே பூசலிட்டுக் கொண்டிருக்கும் இரு குழுக்கள் ஒரு சூழ்நிலையில் கூட்டுறவோடு செயற்படவும் கூடும்.
{{Right|<b>சி.என்.ந.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Anderson, Walfred, A. and Parker, Frederick, B.</b> Society: Its Organization and Operation, Affiliated East West Press, New Delhi, 1966.
<b>Cuber, John F.,</b> Saciology: A Synopsis of Principles, Appleton–Century-Crofts, New York, 1959.
<b>Gillin, John L. and Gillin, John P.,</b> Cultural Sociology, The Macmillan Company, New York, 1949.
<b>Sangupta, Surajit.,</b> Introductory Sociology, New Central Book Agency, Calcutta, 1984.
<section end="சமூக இடைவினை"/>
<section begin="சமூக இயக்கங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சமூக இயக்கங்கள்:</b>}} ஒரு கூட்டுச்செயலின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற அல்லது தடுக்கின்ற முயற்சி சமூக இயக்கம் (Social Movement) எனப்படும். இது சமூக மாற்றத்திற்கான முக்கிய சமூக கருவிகளுள் ஒன்று. இயக்கங்கள் பொதுவாகச் சமூக மனக்குறைகளினால் உருவாகின்றன.
மக்களின் கூட்டு நடவடிக்கைகள் எப்போதுமே நீடித்து இருப்பதில்லை. நிலையான சமூக விளைவுகளை ஏற்படுத்துவதும் இல்லை, நாகரிக நடை உடை பாவனைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், எல்லாக் கூட்டு நடவடிக்கைகளுமே நிலையற்றவை என்றும் சொல்வதற்கில்லை. மக்கள் தங்கள் அதிருப்தியையும் மனக்குறைகளையும் வெளிப்படுத்த நீண்டகால முயற்சிகளை மேற்கொண்டு ஒழுங்கான முறையில் போராடித் தாம் வாழும் சமூகத்தில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். சில சமயம் வேண்டாத மாற்றங்களைத் தடுக்கிறார்கள். இத்தகைய நெறிப்படுத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் சமூக இயக்கங்கள் எனப்படும்.
சமூக இயக்கங்கள் தோன்றுவதற்கு முதற் காரணம் மனநிறைவின்மை. மனநிறைவோடு வாழும் மக்கள் கூட்டு முயற்சியால் உலகை மாற்ற முற்படுவதில்லை. மனநிறைவற்ற மக்கள் அனைவருமே எழுச்சி கொள்வதில்லை. முதலாளித்துவ நாடுகள் யாவற்றிலுமே அரசும், பணபலம் கொண்ட முதலாளிகளும் பொருளாதாரம், அரசியல் ஆகிய அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், மக்களிடம் மனநிறைவின்மை மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது என்பது சமூகவியல் அறிஞர்களின் புதிய கோட்பாடு. இவ்வாறு மனநிறைவற்ற மக்களைத் தனிப்பட்ட தலைவர்களோ அமைப்புகளோ தங்களுக்குச் சாதகமாக ஒன்று திரட்டும்போது சமூக இயக்கங்கள் தோன்றுகின்றன. இது எளிய செயலன்று. ஒரே எண்ணங்கொண்ட மக்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு இயக்கத்தில் சேர்ந்து ஈடுபடச் செய்வது பெரும் முயற்சிதான்.
ஒரு சமூக இயக்கத்திற்கு உறுதியான குறிக்கோள்கள், அந்தக் குறிக்கோள்களை அடையத் தெளிவான செயல்திட்டங்கள் ஆகியவை மிக இன்றியமையாதவை. பெரும்பாலும் முறைமையான அமைப்பு<noinclude></noinclude>
dcfq269p2wu1necs4ewo64kjh16hvza
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/154
250
649863
1954556
2026-07-19T05:28:27Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பொடா சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கு, தமிழ்நாடே
மிகச் சிறந்த முன்னுதாரணம். ஆனந்த் திரையரங்கத்தில் நடந்த கூட்டத்தில்
பேசிய பழ. நெடுமாறன் மற்றும் தோழர்கள் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்
கேள்வி கேட்ட போது, அங்கே எந்த சட்ட விரோத நிகழ்வுகளும்
நடக்கவில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்தார்.
அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, 'சட்ட விரோதமாகக் கூடியதாக' -
சிரிமினல் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சரி;
அதற்காக யாரும் கைது கூட செய்யப்படவில்லை; அதற்கு சில
மாதங்களுக்குப் பிறகு, இதே குற்றத்துக்காக பொடோவில் கைது செய்து,
ஓராண்டு வரை பிணையில் வெளியே வர முடியாத “பயங்கரவாதிகளாக”
இவர்கள் மாற்றப்படுகின்றனர். இதை விட பொடா சட்டம் முறைகேடாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவன் - 'பொடா' சட்டத்தின் கீழ்
தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தர்மபுரியில் கருத்தரங்கில்
பங்கேற்கச் செல்லும்போது, வழியில் சில இளைஞர்களை மடக்கி
‘பொடா'வில் கைது செய்துள்ளனர்.
'பொடா' சட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் பிணையில் விடலாமா
என்பதற்குக் கூட, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீண்ட
விவாதங்கள் நடத்த வேண்டிய அளவுக்கு, தெளிவற்ற, குழப்பமான சட்டமாக
இது இருக்கிறது.
இப்போது வந்துள்ள இத்தீர்ப்பின் மூலம் - பொடோ சட்டம் வழங்கியுள்ள,
சில பாதுகாப்புகளைக் கூட, சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ள
மறுத்திருப்பது, அம்பலமாகி இருப்பதோடு, 'பொடா' சட்டத்தின் கொடூரத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் நடராசன், சந்துரு
ஆகியோர் மிகச் சிறப்பான வாதங்களின் மூலம், இந்த உரிமையைப் பெற்றுத்
தந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். பொடா சட்டம் நகரத்
துவங்கியதற்கான ஒரு முன்னோடியே இந்தத் தீர்ப்பு!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.03.2003}}<noinclude>{{nop}}{{rv|152 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''152'''}}}}|{{left|{{larger|'''152'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lfkwomtnil3g9tuwum69b6qpj5oxypf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/528
250
649864
1954625
2026-07-19T07:13:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களால்தான் நீண்ட, நிலையான இயக்கங்களைத் தோற்றுவித்து நடத்தமுடியும். இத்தகைய அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு முறையாகச் சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இயக்கங்கள்|502|சமூக இயக்கங்கள்}}</noinclude>களால்தான் நீண்ட, நிலையான இயக்கங்களைத் தோற்றுவித்து நடத்தமுடியும். இத்தகைய அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு முறையாகச் சமூகப்படுத்தப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கென்று பங்குகளும் நெறிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றக்கூடிய தலைமை மிக இன்றியமையாதது. மற்ற அமைப்புகளைப் போலவே சமூக இயக்கத்திற்கான அமைப்பிலும் உட்பிரிவுகளும் உறுப்பினரிடையே ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் பல இன்னல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. இயக்கத்தின் குறிக்கோள்களே மாற்றப்படலாம். சுருங்கக்கூறின், மனித அமைப்புகளிலே ஏற்படக்கூடிய எல்லாக் குறைகளும் இங்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
ஒரு சமூக இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திச்செல்வது என்பது மிகப்பெரிய செயலாகும். ஒரு தலைவனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் இன்னல்களை எதிர்கொண்டு செயற்படும் திறமை வேண்டும். இயக்கத்தின் தொடக்க கட்டத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கவும், மக்களைக் கவரவும் தங்கள் மனக்குறையைப் பலமாக வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். பிறகு இயக்கத்தின் குறிக்கோள்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டவேண்டும். இயக்கத்தினால் ஏற்படப்போகும் சிறப்பான எதிர்காலம் பற்றி நம்பிக்கை அளிக்க வேண்டும். இயக்கத்தை நடத்திச்செல்லச் சிறந்த நிருவாகியாக இருப்பது இன்றியமையாதது. நிதி திரட்டும் திறமையும் வேண்டும். மக்கள் தொடர்பு சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவு திறமைகளும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவரால் ஒரு சமூக இயக்கத்தைத் திறம்பட நடத்திச் சென்று வெற்றி காணமுடியும்.
சமூக இயக்கங்களை அவற்றின் குறிக்கோள்கள், நடப்பு நிலை குறித்த அவற்றின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரிக்கலாம்.
1. பழமை விரும்பிகளால் தோற்றுவிக்கப்படுவது. அவர்கள் காலத்தைப் பின்னோக்கித் திருப்பி விட முனைபவர்கள். நிகழ் காலத்தைவிடப் பழங்காலமே மேன்மையானது என்பது அவர்கள் வாதம். ஆனால், அவர்கள் அறியாதது அல்லது அறிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், உண்மையான பழங்காலம் அவர்களின் கற்பனையில் காணப்படும் பழங்காலத்தைப் போன்று செழிப்பானது அன்று என்பதாகும்.
2. மற்றொரு வகையான சமூக இயக்கங்கள் மாறுதல்களை எதிர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்படுபவை. அவை சமூக மாற்றங்களினால் எதிர்காலத்தை மேன்மையுறச் செய்யலாம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களால் நடத்தப்படுபவை.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 528
|bSize = 480
|cWidth = 297
|cHeight = 204
|oTop = 362
|oLeft = 104
|Location = center
|Description =
}}
{{center|இயக்கத்தினர்}}
{{nop}}<noinclude></noinclude>
srzmz17pzfl654kqb2qv4hwfwr7pwlb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/529
250
649865
1954632
2026-07-19T07:19:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 529 |bSize = 480 |cWidth = 298 |cHeight = 202 |oTop = 102 |oLeft = 77 |Location = center |Description = }} {{center|பெண்ணுரிமை இயக்கம்}} 3. பிறிதொரு வகையான சமூக இயக்கம் நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இயக்கங்கள்|503|சமூக இயக்கங்கள்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 529
|bSize = 480
|cWidth = 298
|cHeight = 202
|oTop = 102
|oLeft = 77
|Location = center
|Description =
}}
{{center|பெண்ணுரிமை இயக்கம்}}
3. பிறிதொரு வகையான சமூக இயக்கம் நடப்பில் இருக்கும் சமூக அமைப்பை மாற்றுவதற்காக ஏற்படுத்தப்படுவதாகும். பெண்ணுரிமை இயக்கம் மற்றும் மேற்கில் தோன்றிய ஒரே பாலினர் சட்டப்படி சேர்ந்து வாழ உரிமை வேண்டும் இயக்கம் (Gay Liberation Movements) போன்றவற்றை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். சம உரிமைவேண்டும் இந்த மாதிரியான இயக்கங்கள் பொதுமக்கள் கருத்து, ஆதரவு, சட்டம் ஆகியவற்றின் மூலம் தங்கள் குறிக்கோள்களை அடைய முற்படுகின்றன.
4. இதற்கு மாறாகப் புரட்சிகளால் சமூகத்தை மாற்ற முற்படும் இயக்கங்களும் உண்டு. அவை சமூகத்தின் அடிப்படை அமைப்புகளையே (எடுத்துக்காட்டு: பொருளியல், அரசியல்) மாற்றிப் புதிய சமூகத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் இயக்கங்கள். ஒரு சில இயக்கங்களே தெளிவான குறிக்கோள்களுடன் நடப்பிலிருக்கும் அமைப்பை அழித்துவிட்டு, அதன் அழிவில் புதிய அமைப்பைத் தோற்றுவிக்க முயலுகின்றன. வேறுசில இயக்கங்கள் மாற்று அமைப்பைப் பற்றிய தெளிவான நோக்கங்கள் இல்லாமல் நடப்பிலிருக்கும் அமைப்பை அழிப்பதில் முழு முயற்சியில் ஈடுபடுகின்றன.
5. இன்னும் சில இயக்கங்கள் நடைமுறையில் இருக்கமுடியாத ஒரு கற்பனையான சமூகத்தை ஏற்படுத்த முயல்கின்றன. அவை நம்பிக்கையுள்ள ஒருசிலரைக் கொண்டு ஒரு தனிப்பட்ட சிறிய சமூகத்தை உருவாக்குவதால், மற்றவர்கள் அதைப்பார்த்துத் தாங்களும் அதைப்போல மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்படுவவை.
இயக்கங்களின் குறிக்கோள்களும் வழிமுறைகளும் மாறுபட்டாலும் அவற்றை வழிநடத்திச் செல்லத் தேவையான பண்புகள் பொதுவானவையே.
<b>1. ஆதரவாளர்கள்:</b> நேரமும் திறமையும் உள்ள ஆதரவாளர்கள் மிகத்தேவை. கல்லூரி மாணவர்கள் மிகவும் பொருத்தமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். கல்வியறிவு கொண்டவர்களாதலால் நோக்கங்களைப் புரிந்து செயற்படுகிறார்கள். தேவையான நேரமும் அவர்களுக்கு உண்டு. ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களை ஒன்றுதிரட்டுவது எளிதாகிறது. ஓர் இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் முதலியோரை அதில் ஈடுபடச் செய்யலாம். ஓர் இயக்கத்திற்குக் கொள்கையளவில் ஆதரவு அளிக்கும் எல்லோருமே அதில் நேரடியாகப்<noinclude></noinclude>
ih8zqlztlafrfehr6vj90ptrxetw15b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/530
250
649866
1954657
2026-07-19T07:47:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பங்கு கொள்வதில்லை. ஒரு தனிமனிதன் ஓர் இயக்கத்தில் சேரவேண்டுமானால் அதில் முன்னரே உறுப்பினராக இருக்கும் யாரையாவது அறிந்திருக்க வேண்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இயக்கங்கள்|504|சமூக இயக்கங்கள்}}</noinclude>பங்கு கொள்வதில்லை. ஒரு தனிமனிதன் ஓர் இயக்கத்தில் சேரவேண்டுமானால் அதில் முன்னரே உறுப்பினராக இருக்கும் யாரையாவது அறிந்திருக்க வேண்டும். அதில் பங்கு பெறுவதினால் அவர்தம் குடும்பம், பணி, அவர்தம் சமுதாயம் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
<b>2. பொருளாதாரம்:</b> ஒரு புதிய இயக்கத்தைத் தோற்றுவிக்க நிறையப் பொருள் தேவைப்படும். கூட்டங்கள் நடத்துவதற்கு வாடகை இடங்களை ஏற்பாடு செய்தல், செய்தித்தாள்களில் செய்திகளும் விளம்பரங்களும் கொடுத்தல், சுவரொட்டிகள், சிறு அறிக்கைகள் அச்சடித்தல் என்று உள்ளன. மேலும் பல தேவைகள் சட்ட உதவிக்கும் பணம் வேண்டும்.
<b>3. சட்ட நுணுக்கங்கள் பற்றிய அறிவுப்</b> போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாக நேர்ந்தால் வழக்குரைஞர்களின் திறமையான வாதம் தேவைப்படுகிறது. மனித உரிமைகளை நிலைநாட்டவும், தேவையாகும் இழப்பீடு வேண்டி வழக்காடவும் திறமைமிக்க வழக்குரைஞர்கள் தேவை. அதனால் இயக்கங்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய விளம்பரமும் கிடைக்கும். அது மேலும் உறுப்பினர்களைச் சேர்க்கவும் மக்களின் ஆதரவு கிடைக்கவும் உதவும்.
<b>4. செய்தித்துறைத் தொடர்பு,</b> இயக்கத்தின் நடவடிக்கைகள் செய்திகளாக வெளிவரும்போது தேவையான விளம்பரம் செலவில்லாமலேயே கிடைக்கும்.
சில சாதனங்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினாலே சில இயக்கங்கள் வலுப்பெற்று வளருவதில்லை. எடுத்துக்காட்டாகத் தென்னாப்பிரிக்கக் கறுப்பர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காததால் வலுவான போராட்டம் நடத்த வழியில்லை. ஓட்டுரிமை மறுக்கப்படுவதால் எந்தவொரு சமூக இயக்கமும் பெரிய அளவில் தோன்றி வளர வாய்ப்பில்லை.
<b>தடைகள்:</b> ஓர் இயக்கம் வலுப் பெறாததற்கோ வெற்றி பெறாததற்கோ பல காரணங்கள் உண்டு. பேச்சுரிமை மறுக்கப்பட்டாலும் பொதுக்கூட்டங்களுக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இயக்கம் வலுப்பெறாது. இயக்கம் பற்றிய செய்திகளை நாளேடு இருட்டடிப்புச் செய்தலும் பெரிய தடையாகும்.
சமூக இயக்கங்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பெரிய சிக்கல் ஆதரவு திரட்டுவது. அவர்கள் கொள்கைபரப்புதல் ஒரே நேரத்தில் பல பிரிவு மக்களைக் கவர்வதாக அமையவேண்டும். இயக்கத்தின் உறுப்பினர்களையும், எதிர்ப்பாளர்களையும், பொதுமக்களையும், செய்தியாளர்களையும் கவரும் வண்ணம் கொள்கைபரப்புதல் எளிய செயலன்று. பொதுமக்களைக் கவரும் சொற்றொடர்கள் உறுப்பினர்களுக்கு ஏற்புடைமை அல்லாதவையாக ஆகலாம். சிலர்கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கலாம். அதனால் ஏற்படும் சச்சரவுகள் வெளியே தெரியவந்தால் புதிய உறுப்பினர்கள் சேரும் வாய்ப்புகள் குறையலாம் அல்லது அறவே அற்றுப்போகலாம். மேலும், அரசு தலையிட்டு இயக்கத்தை ஒடுக்கிவிடும் வாய்ப்பும் உண்டு.
ஓர் இயக்கத்திற்கு உறுப்பினர் எண்ணிக்கையும் பொருள் வசதியும் தேவையான அளவு இருந்தால் பொதுமக்களிடம் ஆதரவு தேடவேண்டிய தேவையில்லை. ஆனால், அளவில் சிறியதாகவும் அடிக்கடி குற்றஞ்சாட்டலுக்கு ஆளாவதுமான இயக்கத்திற்குப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு திரட்டுவது தேவையாகிறது.
சில இயக்கங்கள் ‘நோக்கங்களின் இடப்பெயர்ச்சி’யால் (Goal Displacement) பாதிக்கப்படுவதுண்டு. இயக்கத் தலைவர்களும் முன்னணி உறுப்பினர்களும் சிலகாலம் இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தையே மறந்து செயற்படுவதுண்டு. இயக்க அமைப்பை ஒற்றுமையாகச் செயற்பட வைப்பதிலும் தங்கள் தலைமையைத் தங்கவைத்துக் கொள்வதிலும் இவர்களது சிந்தனை, செயல், திறமை, நேரம் யாவும் செலவாகின்றன.
சமூக இயக்கங்கள் தோல்வியுறுவதற்குச் சில காரணங்கள் உண்டு. இயக்கம் ஒடுக்கப்பட்டால், அதன் அமைப்பு சிதைவுற்றால் அல்லது அதன் தலைவர் மறைந்துவிட்டால் இயக்கம் செயலற்று அழிந்து போகிறது.
அதேபோல இயக்கங்கள் பல வகைகளில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுவது புரட்சிகள் மூலம் கிடைக்கப் பெறும் அரசியல் வெற்றிதான். எப்போதோ ஏற்பட்டாலும் உண்மையான ஆக்கபூர்வமான வெற்றி அதுதான், எடுத்துக்காட்டாக, 1917–இல் உருசியாவிலும், 1949-இல் சைனாவிலும் ஏற்பட்ட புரட்சிகளைச் சொல்லலாம்.
அரசியல் அதிகாரம் பெறாமலேயே வெற்றி பெறும் இயக்கங்கள் உண்டு. அவற்றின் குறிக்கோள்கள் அரசு ஒப்புதல் பெற்று நடைமுறையில் செயலாக்கப்படும்போது இயக்கம் வெற்றியடைகிறது. சில சமயம் குறிப்பிட்ட இயக்கம் தோல்வியடைந்தாற் போல் தோன்றினாலும், வெளிப் பார்வைக்குப் புலப்-<noinclude></noinclude>
1lr4pzzjje8h9wpueu1qjw6a24wk8b0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/531
250
649867
1954668
2026-07-19T07:59:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படாத வகையில் நிலையான சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுதந்திரத்தையும் நீதியையும் நிலைநாட்டுதற்குப் புரட்சியின் மூலம் அதிகாரத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக இயக்காற்றல்|505|சமூக இயக்காற்றல்}}</noinclude>படாத வகையில் நிலையான சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சுதந்திரத்தையும் நீதியையும் நிலைநாட்டுதற்குப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் இயக்கத்தினர் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டி வன்முறையில் ஈடுபட்டு எதிர்ப்பாளர்களை ஒழிக்க நேரிடலாம். தொடக்கத்தில் சொல்லப்பட்ட குறிக்கோள்கள் அப்போது அடிபட்டுப் போகின்றன. புரட்சி நீதிவை நிலைநாட்டவன்றி அதிகாரத்தைக் கைப்பற்றவே என்றாகிறது. இந்நிலையில் இயக்கமே பொய்யானதாகப் போகிறது.
ஆயினும், மக்கள் கனவு காணுவதை நிறுத்தப் போவதில்லை, உலகு கனவு நிலைச்சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளைக் கைவிடவும் போவதில்லை. முன்னோர்களின் அனுபவங்களும் அவர்கள் செய்த தவறுகளும் இவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்போவதில்லை. கூட்டு முயற்சிகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.
<b>வி.கோ.</b>
<section end="சமூக இயக்கங்கள்"/>
<section begin="சமூக இயக்காற்றல்"/>
{{dhr}}
{{larger|<b>சமூக இயக்காற்றல்:</b>}} சமூக மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவற்றைத் தோற்றுவிக்கும் முறைப்பாடுகளையும் சமூக இயக்காற்றல் (Social Dynamics) குறிக்கிறது. சமூகம் மாறுதல்களையும், வளர்ச்சியையும் பெற்று இயங்கிக்கொண்டிருக்கும் ஆற்றலைப் பெற்றது என்ற கருத்தை இது உணர்த்துகிறது. இது சமூகத்தை அறிவியல் அடிப்படையில் பார்க்கும் சமூகவியலின் (Sociology) ஒரு பிரிவாகச் சொல்லப்படுகிறது.
சமூகவியல். மனித சமூகத்தைப் பற்றிய அரிய விளக்கங்களையும், அவற்றைச் சார்ந்த அறிஞர் பலரின் ஆழ்ந்த சிந்தனைகளையும் கருத்துகளையும் ஆய்ந்து, தொகுத்து அளிக்கும் ஒரு பாடப்பிரிவு ஆகும். மனித சமூகத்தின் தோற்றம், அமைப்பு, வளர்ச்சி, மாற்றம் ஆகியவைகளையும், அவை ஏற்படுவதற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும், செயற்பாங்குகளையும், அவற்றால் உண்டாகும் விளைவுகளையும் சமூகவியல் விளக்குகிறது. மேலும், தனி மனிதனுக்கும் குழுவிற்கும் இடையே நிலவும் உறவையும், கூட்டு வாழ்க்கையில் வெளிப்படும் உறவு நிலைகளையும், சமுதாயத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் தகுநிலை, அதனால் அவருக்குச் சாரும் கடமை, உரிமைகளையும் சமூகவியல் படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வாறு தனக்கென்று ஓர் ஆராய்ச்சி முறையினையும், அணுகு முறையினையும் வளர்த்துக்கொண்டு வளர்ச்சிபெற்ற ஒரு முக்கிய பாடப்பிரிவாகச் சமூகவியல் இன்று விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பாடப்பிரிவினை முதன் முதலில் தம் சிந்தனையிலே கருவாக்கி எழுத்து வடிவிலே உருவாக்கி, சமூகவியல் என்னும் பெயர்சூட்டி, அதன் வளர்ச்சிக்கு வழிகோலியவர் பிரெஞ்சு நாட்டவரான ஆகசுட்டு கோம்டு (August Comte–1798–1857) என்னும் சமூகத் தத்துவ அறிஞராவார்.
இவர் சமூகவியலை இரு பெரும் கூறுகளாகப் பிரித்து விளக்கியுள்ளார். அவையாவன: 1) சமூக நிலைப்பாடு (Social Statics), 2) சமூக இயக்காற்றல் (Social Dynamics).
சமூக நிலைப்பாடு என்பது சமூக அமைப்புகளைக் குறிப்பது ஆகும். பல உள் அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தன்னகத்தே அடக்கிய பேரமைப்பாகச் சமூகம் திகழ்கிறது. சமூகம் ஒரு கூட்டமைப்பாக நிலைத்து இருப்பதற்கு இவ்வமைப்புகள் காரணமாகின்றன. இவை பொருளாதார் அமைப்பு, சமுதாய அமைப்பு, அரசியல் அமைப்பு, சமய அமைப்பு, பண்பாட்டு அமைப்பு முதலியனவாகும். இவை யாவும் ஒன்றோடொன்று பிணைந்து கூட்டாகச் செயற்பட்டு மனிதனின் சமூகத் தேவைகளை நிறைவேற்றிச் சமூகம் என்ற பெரிய கூட்டமைப்பைக் கட்டிக் காக்கின்றன. இவ்வமைப்புகளே சமூக நிலைப்பாட்டுக்கு அடித்தளமாக அமைகின்றன; இந்நிலைப்பாடு குறையாமல் இருக்கக் கடினத் தன்மையைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. சமூக மாற்றங்களோ, அவற்றிற்கு வழிகோலும் முறைப்பாடுகளோ தலைதூக்கும்போது இச்சமூக அமைப்புகள் ஒரு தடைச் சக்தியாகவும் செயற்படுகின்றன.
சமூக இயக்காற்றல் என்பது சமூக மாற்றங்களையும், வளர்ச்சியையும், அவற்றைத் தோற்றுவிக்கும் முறைப்பாடுகளையும் குறிக்கிறது. இயக்கம், ஆற்றல் என்ற இரண்டு சொற்களையும் உள்ளடக்கி இருப்பதால் இதன் பொருளை எளிதில் உணரலாம். சமூகம் என்பது இயங்காத, இயங்கக்கூடாத, இயங்க வேண்டியிராத அல்லது இயக்கம் அற்று தேக்க நிலையில் இருக்கும் ஒரு கூட்டமைப்பு அன்று. மாறாக, சமூகம் என்பது மாறுதல்களை ஏற்று அவற்றால் வளர்ச்சி பெறக்கூடிய, பெறவேண்டிய ஓர் அமைப்பு என்றே கொள்ளுதல் வேண்டும். சமூகம் என்பது மாறுதல்களையும் வளர்ச்சியையும் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பெற்றது என்ற கருத்தையே இயக்காற்றல் என்ற சொல் உணர்த்துகிறது.
{{nop}}<noinclude></noinclude>
2kh6kl938lak5c4mhj1if5y2rh7ii27