விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.13 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/971 250 625236 1956846 1949514 2026-07-30T13:45:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுவோல்சுகி, அலெக்சாந்தர்|931|இசை}}</noinclude>செயற்படுகிறது. நாட்டின் மற்ற எல்லாச் செய்தித் தாள்களையும் போல இதுவும் சோவியத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வெளிவருவதாகும். <section end="இசுவெசுதியா"/> <section begin="இசுவோல்சுகி, அலெக்சாந்தர்"/> {{dhr}} <b>இசுவோல்சுகி, அலெக்சாந்தர் (கி.பி. 1856-1919)</b> என்பார் உருசியாவின் அரசியல் வல்லுநர். இவர் கி.பி. 1875-ஆம் ஆண்டில் அரசியல் தூதராகப் பணியில் சேர்ந்தார்; தென்மார்க்கின் (Denmark) தலைநகரான கோபன் ஏகனுக்கு (Copenhagen) 1903-ஆம் ஆண்டில் மாற்றப்பெற்றார். அங்கு இவர், உருசியாவுக்கும் தேனிய அரச குடும்பங்களுக்குமிடையே இருந்த உறவை வளர்க்க அரும்பாடுபட்டார். இதன் விளைவாகச் சார் மன்னர், இவரை 1905-ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராக அமர்த்தினார். இப்பதவி உயர்வு இசுவோல்சுகிக்கே (Izvolski. Alexander) வியப்பூட்டியது. இவர் வெளியுறவு அமைச்சராக இருந்த ஐந்தாண்டுக் காலத்தில் இரு பெரும் செயல்களைச் செய்தார். அவை, உருசிய-சப்பானிய உறவில் ஏற்படுத்திய நல்வளர்ச்சியும், ஆங்கில-உருசிய உடன்பாட்டை நிறைவுறச் செய்ததும் ஆம். இவர் 1908-9-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாசினிய (Bosnia) நெருக்கடியால் தோல்வியுற்றதால், இவருக்குச் சிறிதளவு இழுக்கு நேரிட்டது. உருசியாவைக் கேட்காமல் பாசுனியா எர்சிகோவினாவை (Bosnia-Herzekovina) ஆசுத்திரியா கைப்பற்றிக் கொண்டது, இவ்விழுக்கு ஏற்படக் காரணமாயிற்று. இசுவோல்சுகி 1910 முதல் 1916 வரை பாரிசில் தூதராகப் பொறுப்பேற்றார். அக்காலத்தில் இவர் மிக முயன்று பிரான்சுக்கும் உருசியாவுக்குமிடையே இராணுவ உடன்படிக்கை வலுப்பெற வழிவகை செய்தார். <section end="இசுவோல்சுகி, அலெக்சாந்தர்"/> <section begin="இசை"/> {{dhr}} <b>இசை</b>: கவின்கலைகளுள் முதன்மையானது இசையே. இசை எக்காலத்திலும் எந்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விதிமுறைகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு முழுமையான கலையாகும். இந்தியாவில் ஆயுர்வேதம் (மருத்துவக்கலை) தனுர்வேதம் (வில்வித்தை) அருத்தசாத்திரம் (அரசியல்) என்னும் மூன்று துணைமறைகளுடன் சேர்த்து இசை நான்காம் துணைமறையாகக் கந்தருவ வேதம் என்று வழங்கப்படுகிறது. உலகில் பல நாடுகளுக்கும் ஏழிசை பொருந்துவதாகும். இந்திய இசை இறை வழிபாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்ற தேவாரப் பாடல் அடியினை (சுந்தரமூர்த்தி நாயனார்-திருவாரூர்ப்பதிகம்) இதற்கு ஒரு சான்றாகக் கூறலாம். ஒலியே (நாதம்) இசைக்கு அடிப்படை ஆகும். ஒலியிலின்று சுருதிகளும் சுருதிகளினின்று சுரங்களும் சுரங்களினின்று இராகங்களும் தோன்றின. ஒலி தோன்றும் முறைகளையொட்டி அதனைக் கீழ்க்காணுமாறு பல வகைகளாகப் பிரிக்கலாம். இசையைப் பொதுவாக இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என்னும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இசையின் தனிப்பட்ட ஒலிக்குறிப்புகள் சுரங்கள் எனப்படும். ஒற்றைச் சுரங்கள் இனிமையாகத் தொடர்ந்து வந்து இசையை அமைக்கும் முறையை இன்னிசை என்று கூறுவர். இந்திய இசை இன்னிசை என்னும் வகையைச் சேர்ந்ததாகும். இவ்வாறு தனித்தனிச் சுரங்கள் தொடர்ந்து ஒலிக்காமல் ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள் (Chords) ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, ஒத்திசை (Harmony) ஆகும். மேனாட்டு இசை இந்த வகையினைச் சேர்ந்தது. {{center|ஒலி (நாதம்)}} <center> {| |1. ஆகத நாதம் || 1. வாய்ப்பாட்டு || 1. குரலினின்று உண்டாகும் ஒலி |- |2. அநாகத நாதம் || 2. இசைக்கருவிகளால் தோன்றும் ஒலி || 2. வில்லினால் இசைக்கருவியில் தோன்றும் ஒலி |- | || 3. குழல், நாகசுரம் போன்ற கருவிகளில் தோன்றும் ஒலி. || 3. காற்றுக் கருவிகளில் எழும் ஒலி |- | || || 4. தோற்கருவிகளில் எழும் ஒலி. |- | || || 5. கஞ்சக் கருவிகளில் எழும் ஒலி. |- |} </center><noinclude></noinclude> gcirxwnmm5sz4smomtwqapdybiornxp 1956847 1956846 2026-07-30T13:48:04Z Booradleyp1 1964 1956847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுவோல்சுகி, அலெக்சாந்தர்|931|இசை}}</noinclude>செயற்படுகிறது. நாட்டின் மற்ற எல்லாச் செய்தித் தாள்களையும் போல இதுவும் சோவியத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வெளிவருவதாகும். <section end="இசுவெசுதியா"/> <section begin="இசுவோல்சுகி, அலெக்சாந்தர்"/> {{dhr}} <b>இசுவோல்சுகி, அலெக்சாந்தர் (கி.பி. 1856-1919)</b> என்பார் உருசியாவின் அரசியல் வல்லுநர். இவர் கி.பி. 1875-ஆம் ஆண்டில் அரசியல் தூதராகப் பணியில் சேர்ந்தார்; தென்மார்க்கின் (Denmark) தலைநகரான கோபன் ஏகனுக்கு (Copenhagen) 1903-ஆம் ஆண்டில் மாற்றப்பெற்றார். அங்கு இவர், உருசியாவுக்கும் தேனிய அரச குடும்பங்களுக்குமிடையே இருந்த உறவை வளர்க்க அரும்பாடுபட்டார். இதன் விளைவாகச் சார் மன்னர், இவரை 1905-ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராக அமர்த்தினார். இப்பதவி உயர்வு இசுவோல்சுகிக்கே (Izvolski. Alexander) வியப்பூட்டியது. இவர் வெளியுறவு அமைச்சராக இருந்த ஐந்தாண்டுக் காலத்தில் இரு பெரும் செயல்களைச் செய்தார். அவை, உருசிய-சப்பானிய உறவில் ஏற்படுத்திய நல்வளர்ச்சியும், ஆங்கில-உருசிய உடன்பாட்டை நிறைவுறச் செய்ததும் ஆம். இவர் 1908-9-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாசினிய (Bosnia) நெருக்கடியால் தோல்வியுற்றதால், இவருக்குச் சிறிதளவு இழுக்கு நேரிட்டது. உருசியாவைக் கேட்காமல் பாசுனியா எர்சிகோவினாவை (Bosnia-Herzekovina) ஆசுத்திரியா கைப்பற்றிக் கொண்டது, இவ்விழுக்கு ஏற்படக் காரணமாயிற்று. இசுவோல்சுகி 1910 முதல் 1916 வரை பாரிசில் தூதராகப் பொறுப்பேற்றார். அக்காலத்தில் இவர் மிக முயன்று பிரான்சுக்கும் உருசியாவுக்குமிடையே இராணுவ உடன்படிக்கை வலுப்பெற வழிவகை செய்தார். <section end="இசுவோல்சுகி, அலெக்சாந்தர்"/> <section begin="இசை"/> {{dhr}} <b>இசை</b>: கவின்கலைகளுள் முதன்மையானது இசையே. இசை எக்காலத்திலும் எந்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விதிமுறைகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு முழுமையான கலையாகும். இந்தியாவில் ஆயுர்வேதம் (மருத்துவக்கலை) தனுர்வேதம் (வில்வித்தை) அருத்தசாத்திரம் (அரசியல்) என்னும் மூன்று துணைமறைகளுடன் சேர்த்து இசை நான்காம் துணைமறையாகக் கந்தருவ வேதம் என்று வழங்கப்படுகிறது. உலகில் பல நாடுகளுக்கும் ஏழிசை பொருந்துவதாகும். இந்திய இசை இறை வழிபாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்ற தேவாரப் பாடல் அடியினை (சுந்தரமூர்த்தி நாயனார்-திருவாரூர்ப்பதிகம்) இதற்கு ஒரு சான்றாகக் கூறலாம். ஒலியே (நாதம்) இசைக்கு அடிப்படை ஆகும். ஒலியிலின்று சுருதிகளும் சுருதிகளினின்று சுரங்களும் சுரங்களினின்று இராகங்களும் தோன்றின. ஒலி தோன்றும் முறைகளையொட்டி அதனைக் கீழ்க்காணுமாறு பல வகைகளாகப் பிரிக்கலாம். இசையைப் பொதுவாக இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என்னும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இசையின் தனிப்பட்ட ஒலிக்குறிப்புகள் சுரங்கள் எனப்படும். ஒற்றைச் சுரங்கள் இனிமையாகத் தொடர்ந்து வந்து இசையை அமைக்கும் முறையை இன்னிசை என்று கூறுவர். இந்திய இசை இன்னிசை என்னும் வகையைச் சேர்ந்ததாகும். இவ்வாறு தனித்தனிச் சுரங்கள் தொடர்ந்து ஒலிக்காமல் ஒத்த சுரங்களின் சுர அடுக்குகள் (Chords) ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, ஒத்திசை (Harmony) ஆகும். மேனாட்டு இசை இந்த வகையினைச் சேர்ந்தது. {{center|<b>ஒலி (நாதம்)</b>}} <center> {| |1. ஆகத நாதம்{{gap}} || 1. வாய்ப்பாட்டு || 1. குரலினின்று உண்டாகும் ஒலி |- |2. அநாகத நாதம் || 2. இசைக்கருவிகளால் தோன்றும் ஒலி || 2. வில்லினால் இசைக்கருவியில் தோன்றும் ஒலி |- | || 3. குழல், நாகசுரம் போன்ற கருவிகளில் தோன்றும் ஒலி.{{gap}} || 3. காற்றுக் கருவிகளில் எழும் ஒலி |- | || || 4. தோற்கருவிகளில் எழும் ஒலி. |- | || || 5. கஞ்சக் கருவிகளில் எழும் ஒலி. |- |} </center><noinclude></noinclude> rtvac0rqrz2u3z55o91c2rwllc0nq0e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/972 250 625237 1956849 1873517 2026-07-30T13:59:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|932|இசை}}</noinclude>ஒரே சுரத் தொகுதியில் ஒத்த சுரங்கள் பல, ஒரே நேரத்தில் இனிமையாக ஒலிக்கின்றன. எந்தச் சுரங்களை ஒருங்கமைத்தால் இனிய இசை உண்டாகும் என்று தேர்ந்தெடுப்பதில்தான் ஒத்திசையின் சிறப்பு உள்ளது. இசைக்கருவிகளின் தோற்றத்திற்குப் பிறகே ஒத்திசை தோன்றியது. பாக்கு (Bach), மோசார்ட்டு (Mozart), பீதோவன் (Beethoven), வாக்னர் (Wagner) ஆகிய நால்வரும் ஒத்திசையின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். தொகுப்பிசையில் (Polyphony) ஒவ்வொரு சுரத்திற்கும் வேறோர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும். முதலில் உள்ள சுரவரிசை ஆதார கீதம் எனப்படும். இணைச்சுரங்கள் ஒன்று சேர்ந்து அமைக்கும் ஆதாரகீதத்தில் வரும் சுரங்களுள் ஒவ்வொன்றிற்கும் மூன்று நான்கு சுரங்களைச் சேர்த்து இசையுண்டாக்கும் போது பல ஆதேய கீதங்கள் உண்டாகின்றன. ஆதலின் தொகுப்பிசை முறையில் விரிவான பாடல்களை அமைக்கமுடியும். பாலசடிரீனா (Palestrina) என்னும் இத்தாலிய இயலிசைப் புலவர். இம்முறையில் பல பாடல்களை இயற்றியுள்ளார். இந்தியாவில் இந்துசுத்தானி இசை, கருநாடக இசை என்னும் இரு பெரும் இசைப் பிரிவுகள் இன்று காணப்படுகின்றன. இந்துசுத்தானி இசை தென்னகத்து இசையிலிருந்து தோன்றியதாகும். இக்காலத்தில் இந்தியாவில் வழங்கி வரும் இசை முறைகள் பலவற்றையும் ஆராய்ந்தால், அவற்றிற்கு ஒரு பொதுவான அடிப்படை இருப்பதைக் காணலாம். இந்திய இசை வகைகள் யாவும் இன்னிசையின் பாற்பட்டவையே. இசையின் இலக்கணத்தைக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் பிதாகோரசு (Pythagoras) என்னும் கிரேக்க அறிஞர், இந்தியாவுக்கு வந்து கற்றுக்கொண்டு சென்று தம் நாட்டில் விளக்கினார். இவருடைய இசை விளக்கத்தில், இன்று இசையளவைகள் அல்லது மேளங்கள் (Scales) என்று குறிப்பிடப்படும் கருத்துகளுக்குக் கணிதமுறையில் விளக்கம் காணப்படுகிறது. இம்முறை ஒத்திசை முறையாக மேனாடுகளில் பரவிற்று. ஆதலின் உலகின் பல நாடுகளுக்கு இசையை வழங்கியது இந்தியாவே என்று கூறுதல் மிகையாகாது. இசையின் ஒலிக் குறிப்புச் சுரம் எனப்படும். சுரம் என்ற சொல் இனிமையுடையது எனப் பொருள்படும். ஏழிசையின் பெயர்கள் நாரதப்பரிவிரச உபநிடதத்தில் முதன்முதல் காணப்படுகின்றன. இப்பெயர்களின் முதலெழுத்துகள் சுரங்களாயின (சட்சம்-ச, ரிடபம்-ரி, காந்தாரம்-க, மத்தியமம்-ம, பஞ்சமம்-ப, தைவதம்-த, நிசாதம்-நி.) சங்க இலக்கியங்களில் குரல் (ச) துத்தம் (ரி) கைக்கிளை (க) உழை (ம) இளி (ப) விளரி (த) தாரம் (நி) என்னும் பெயர்கள் வழங்கப்பட்டன. ஏழு சுரங்களுள் சட்சம், பஞ்சமம் (ச, ப) ஆகிய இரு சுரங்களும் வேறுபாடற்றுக் கீழ்மேல் இயக்குகளில் ஒலிப்பவை. பிற சுரங்கள் வலியன (தீவிரம்), மெலியன (கோமளம்) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுரங்களுள் இயல்பு சுரங்கள் என்றும் வேறுபாட்டுச் சுரங்கள் என்றும் இரு பிரிவுகள் உள்ளன. ச, ப இரண்டும் இயல்பு சுரங்கள். கமபதறி ஆகிய ஐந்தும் வேறுபாட்டுச் சுரங்களாகும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இவ்வைந்து சுரங்களையே அடிப்படைச் சுரங்கள் என்றும் இவற்றினின்று தோன்றியவையே இயல்பு சுரங்கள் என்றும் குறிப்பிடுகின்றன. சுரங்கள் பின்வருமாறு குறியிட்டுக் காட்டப்படுகின்றன. <center> {| class="wikitable" |- !colspan="2"|சுரங்களின் பெயர்கள் !! !! சுரக்குறியீடுகள் |- |சட்சம் || ச || ச |- |சுத்த ரிடபம் (மெலியது)<br>(கோமள சுரம்) || ரி || ரி₁ |- |சதுச்ருதி ரிடபம் (வலியது) (தீவிர சுரம்) || ரி || ரி₂ |- |சாதாரண காந்தாரம் || க || க₁ |- |அந்திரகாந்தாரம் || க || க₂ |- |சுத்தமத்தியமம் || (மெ) ம || ம₁ |- |பிரதிமத்தியமம் || (வ) ம || ம₂ |- |பஞ்சமம் || ப || ப |- |சுத்ததைவதம் || (மெ) த || த₁ |- |சதுச்ருதிதைவதம் || (வ) த || த₂ |- |கைசிகிநிசாதம் || (மே) நி || நி₁ |- |காகிலிநிசாதம் || (வ) நி || நி₂ |- |} இயற்பியல் வல்லுநர்கள் எட்டுச்சுரங்களைக் கொண்ட இசைக்கவையைச் (Tuning Fork) செய்திருக்கிறார்கள். இதனின்று எழும் ஒலி, இந்திய கருநாடக இசையில் ச எனப்படும் சட்சத்தைத் தொடக்கமாகக் கொண்டு, சரிகமபதநிச எனப்படும் சங்கராபரணமேள ராக சுரங்களைக் குறிப்பது தெரியும். இந்த எட்டுச் சுரங்களுக்கும் இடைவெளிகள் உள்ளன. இதைப் பின்வருமாறு விளக்கலாம். <center> {| class="wikitable" |- !மேனாட்டு இசை !! கருநாடக இசை |- |C டோனிக்கு || ச சட்சம் |- |D இரண்டாவது (Second) || ரி இடபம் |- |E மேசர் மூன்றாவது (Major Third) || க காந்தாரம் |- |F True Fourth || ம சுத்த மத்தியமம் |-<noinclude>|} </center></noinclude> fewglxjsvhn7vyac7isjhyi6ln01z7v 1956852 1956849 2026-07-30T14:19:13Z Booradleyp1 1964 1956852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|932|இசை}}</noinclude>ஒரே சுரத் தொகுதியில் ஒத்த சுரங்கள் பல, ஒரே நேரத்தில் இனிமையாக ஒலிக்கின்றன. எந்தச் சுரங்களை ஒருங்கமைத்தால் இனிய இசை உண்டாகும் என்று தேர்ந்தெடுப்பதில்தான் ஒத்திசையின் சிறப்பு உள்ளது. இசைக்கருவிகளின் தோற்றத்திற்குப் பிறகே ஒத்திசை தோன்றியது. பாக்கு (Bach), மோசார்ட்டு (Mozart), பீதோவன் (Beethoven), வாக்னர் (Wagner) ஆகிய நால்வரும் ஒத்திசையின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். தொகுப்பிசையில் (Polyphony) ஒவ்வொரு சுரத்திற்கும் வேறோர் இணைச்சுரம் சேர்க்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும். முதலில் உள்ள சுரவரிசை ஆதார கீதம் எனப்படும். இணைச்சுரங்கள் ஒன்று சேர்ந்து அமைக்கும் ஆதாரகீதத்தில் வரும் சுரங்களுள் ஒவ்வொன்றிற்கும் மூன்று நான்கு சுரங்களைச் சேர்த்து இசையுண்டாக்கும் போது பல ஆதேய கீதங்கள் உண்டாகின்றன. ஆதலின் தொகுப்பிசை முறையில் விரிவான பாடல்களை அமைக்கமுடியும். பாலசடிரீனா (Palestrina) என்னும் இத்தாலிய இயலிசைப் புலவர். இம்முறையில் பல பாடல்களை இயற்றியுள்ளார். இந்தியாவில் இந்துசுத்தானி இசை, கருநாடக இசை என்னும் இரு பெரும் இசைப் பிரிவுகள் இன்று காணப்படுகின்றன. இந்துசுத்தானி இசை தென்னகத்து இசையிலிருந்து தோன்றியதாகும். இக்காலத்தில் இந்தியாவில் வழங்கி வரும் இசை முறைகள் பலவற்றையும் ஆராய்ந்தால், அவற்றிற்கு ஒரு பொதுவான அடிப்படை இருப்பதைக் காணலாம். இந்திய இசை வகைகள் யாவும் இன்னிசையின் பாற்பட்டவையே. இசையின் இலக்கணத்தைக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் பிதாகோரசு (Pythagoras) என்னும் கிரேக்க அறிஞர், இந்தியாவுக்கு வந்து கற்றுக்கொண்டு சென்று தம் நாட்டில் விளக்கினார். இவருடைய இசை விளக்கத்தில், இன்று இசையளவைகள் அல்லது மேளங்கள் (Scales) என்று குறிப்பிடப்படும் கருத்துகளுக்குக் கணிதமுறையில் விளக்கம் காணப்படுகிறது. இம்முறை ஒத்திசை முறையாக மேனாடுகளில் பரவிற்று. ஆதலின் உலகின் பல நாடுகளுக்கு இசையை வழங்கியது இந்தியாவே என்று கூறுதல் மிகையாகாது. இசையின் ஒலிக் குறிப்புச் சுரம் எனப்படும். சுரம் என்ற சொல் இனிமையுடையது எனப் பொருள்படும். ஏழிசையின் பெயர்கள் நாரதப்பரிவிரச உபநிடதத்தில் முதன்முதல் காணப்படுகின்றன. இப்பெயர்களின் முதலெழுத்துகள் சுரங்களாயின (சட்சம்-ச, ரிடபம்-ரி, காந்தாரம்-க, மத்தியமம்-ம, பஞ்சமம்-ப, தைவதம்-த, நிசாதம்-நி.) சங்க இலக்கியங்களில் குரல் (ச) துத்தம் (ரி) கைக்கிளை (க) உழை (ம) இளி (ப) விளரி (த) தாரம் (நி) என்னும் பெயர்கள் வழங்கப்பட்டன. ஏழு சுரங்களுள் சட்சம், பஞ்சமம் (ச, ப) ஆகிய இரு சுரங்களும் வேறுபாடற்றுக் கீழ்மேல் இயக்குகளில் ஒலிப்பவை. பிற சுரங்கள் வலியன (தீவிரம்), மெலியன (கோமளம்) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுரங்களுள் இயல்பு சுரங்கள் என்றும் வேறுபாட்டுச் சுரங்கள் என்றும் இரு பிரிவுகள் உள்ளன. ச, ப இரண்டும் இயல்பு சுரங்கள். கமபதறி ஆகிய ஐந்தும் வேறுபாட்டுச் சுரங்களாகும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இவ்வைந்து சுரங்களையே அடிப்படைச் சுரங்கள் என்றும் இவற்றினின்று தோன்றியவையே இயல்பு சுரங்கள் என்றும் குறிப்பிடுகின்றன. சுரங்கள் பின்வருமாறு குறியிட்டுக் காட்டப்படுகின்றன. <center> {| class="wikitable" |- !colspan="2"|சுரங்களின் பெயர்கள் !! !! சுரக்குறியீடுகள் |- |சட்சம் || ச || ச |- |சுத்த ரிடபம் (மெலியது)<br>(கோமள சுரம்) || ரி || ரி₁ |- |சதுச்ருதி ரிடபம் (வலியது) (தீவிர சுரம்) || ரி || ரி₂ |- |சாதாரண காந்தாரம் || க || க₁ |- |அந்திரகாந்தாரம் || க || க₂ |- |சுத்தமத்தியமம் || (மெ) ம || ம₁ |- |பிரதிமத்தியமம் || (வ) ம || ம₂ |- |பஞ்சமம் || ப || ப |- |சுத்ததைவதம் || (மெ) த || த₁ |- |சதுச்ருதிதைவதம் || (வ) த || த₂ |- |கைசிகிநிசாதம் || (மே) நி || நி₁ |- |காகிலிநிசாதம் || (வ) நி || நி₂ |- |} </center> இயற்பியல் வல்லுநர்கள் எட்டுச்சுரங்களைக் கொண்ட இசைக்கவையைச் (Tuning Fork) செய்திருக்கிறார்கள். இதனின்று எழும் ஒலி, இந்திய கருநாடக இசையில் ச எனப்படும் சட்சத்தைத் தொடக்கமாகக் கொண்டு, சரிகமபதநிச எனப்படும் சங்கராபரணமேள ராக சுரங்களைக் குறிப்பது தெரியும். இந்த எட்டுச் சுரங்களுக்கும் இடைவெளிகள் உள்ளன. இதைப் பின்வருமாறு விளக்கலாம். <center> {| class="wikitable" |- !மேனாட்டு இசை !! கருநாடக இசை |- |C டோனிக்கு || ச சட்சம் |- |D இரண்டாவது (Second) || ரி இடபம் |- |E மேசர் மூன்றாவது (Major Third) || க காந்தாரம் |- |F True Fourth || ம சுத்த மத்தியமம் |-<noinclude>|} </center></noinclude> mx3u5nexqvkzchuesoy9vs0caghwf5v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/973 250 625238 1956850 1873518 2026-07-30T14:13:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|933|இசை}} <center> {| class="wikitable"</noinclude>|- |G True Fifth || ப பஞ்சமம் |- |A Major Sixth || த தைவதம் |- |C¹ Octave || ச மேல்சட்சம் |- |} <center> இந்த ஒலி அந்தரங்கள் அல்லது இடைவெளிகள், ஏழாம் அல்லது ஐந்தாம் சுரவரிசைக் கோவைகளாக, (Octave & the Fitth) அமைந்திருக்கின்றன. உயர் ஒலி, கீழ் ஒலியைப் போன்று இரண்டு பங்கு உண்மையாக ஒலிக்கிறது. இம்முறை கிரேக்க இசையில் காணப்பட்டது. பழங்காலத்து இசை அளவையில் எப்.சி.எப் (FCF) என்ற அளவை காணப்படுகிறது. சி என்பது எப்-(F) என்னும் சரத்திலிருந்து ஐந்தாம் சுரமாகும். ஆதலின் FCFGC என்ற சுரவரிசை அமைக்கப்படின், ஒன்றிலிருந்து அடுத்தது ஐந்தாம் சுரம் என்ற முறை ஏற்படுகிறது. இது CDFGA என்ற ஏழிசைச் சுரவரிசையை (Pentatonic Scale) ஏற்படுத்துகிறது. இந்தச் சுரங்கள் எல்லாவற்றையும் பியானோவின் கீழ் ஒலிக்கட்டைகளினால் இசைத்தால், இவ்வொலி வரிசையைக் கேட்கலாம். பண்டைக்காலத்துச் சீன இசையும் இசுகாட்லாந்து இசையும் இத்தகைய ஏழிசை முறையில் அமைந்திருந்தன. இவ்வரிசையில் ஐந்தாம் சுரங்களுக்கு மாறாக ஏழாம் சுரங்களின் இடைவெளிகளைக் கொண்டு சுர வரிசை அமைக்கப்பட்டால், அது ஏழிசை அளவை (Diatonic Scale) எனப்படும். இம்முறை பிதாகரசு என்னும் பண்டைய கிரேக்க அறிஞர் அமைத்ததாகும். இது பிதாகரசு அளவை (Pythagorian Scale) எனப்படுகிறது. ஒவ்வொரு கீழ்ச் சுரத்திற்கும் அதற்கடுத்த மேல் சுரத்திற்கும் இடையே இருக்கும் பரவல் விகிதம் (Frequency Ratio) 1.5 முறையாகும். G என்ற சுரம் அதற்கடுத்த C ஐ விட 3/2 பங்கு பரவல் அதிகமுள்ளது. இதைப் போன்றே G Dஐ விட D 3/2 பங்கு அதிகமான பரவல் விகிதம் (3/2)²÷2=9/8 A/B = 1.125 ஆகும். இந்த இடைவெளியைப் பிதாகரசு A-B ஒர் இயக்கு (Tone) என்றார். இந்த இயக்கு C&D; D&E F/G G/A A/B ஆகியவற்றுக்கு இடையே ஏற்படுகிறது.EF, BC ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இடைவெளி 9/8-க்கும் குறைவானது. இது அரை இயக்கு (Hemitone) ஆகும் என்று பிதாசுரசு கூறினார். அவர் இதனை 256/243 - 1.0535 என்று கணக்கிட்டார். கிரேக்க இசையில் இந்த ஏழு சுரங்களும் இருந்தன. இது ஐரோப்பிய இசைப்புலவர்களால் பின்பற்றப்பட்டது. ஐரோப்பிய இசையில் இரண்டு இயக்குகளில் சுரவரிசைகள் அமைக்கப்பட்டன. இவை மேசர், மைனர் (Major, Minor) என்று வழங்கப்பட்டன. ஏழு சுரங்களை ஒரு முறை இசைத்த பின், திரும்பவும் அதே சுரங்கள் இசைக்கப்படுகின்றன. சுரவரிசை, இயக்கு (தாயி) எனப்படும். இயக்குகள்மெலிவு, சமன், வலிவு என மூவகைப்படும். இம்மூன்றையும் மந்தரம் மத்தியமம், தாரம் என வடமொழி இசை நூலார் வழங்குவர். மந்தரத்தாயி ‘தக்கு’ என்றும், தாரம் ‘எச்சுகதாயி’ என்றும் வழங்கப்படும். சங்கீதரத்தினாகரம் என்னும் நூல், இதயத்தில் உண்டாகும் ஒலியை மெலிவியக்கு (மந்தரம்) என்றும், கழுத்தில் உண்டாகும் ஒலியைச் சமனியக்கு (மத்தியமம்) என்றும், தலையில் உண்டாகும் ஒலியை வலியியக்கு (தாரம்) என்றும் குறிப்பிடுகிறது. வலியியக்கு மெலிலியக்கைப் போல் இரட்டிப்பாகவும், சமனியக்கு மெலிவியக்கைப் போல் இரட்டிப்பாகவும் இருக்கும். ஒரு சுரத்திற்கும் அதன் நேர் வலியியக்குச் சுரத்திற்கும் உள்ள சுருதி 1:2 என்ற விகிதத்தில் உள்ளது. மெலிவியக்குச் சுரம் ஒரு பங்கானால், அதன் நேர் சமனியக்குச் கரம் இரண்டு பங்காகும். அதன் நேர் வலியியக்குச் சுரம் மெலிவியக்குச் சுரத்தின் நான்கு பங்காகும். மெலிவியக்குக் குரல் (சட்சம்) வினாடிக்கு 120 அதிர்வெண்கள் ஆனால், சமனியக்குக் குரலுக்கும் வலியியக்குக் குரலுக்கும் முறையே 240, 480 அதிர்வெண்கள் ஆகும். இம்மூன்று இயக்குகளுக்கும் அப்பாற்பட்டு ஒலிக்கும் அனுமந்தரத்தாயி (மெலிவியக்கினைக் காட்டிலும் தாழ்ந்து ஒலிக்கும் சுரம்) அதிதாரத்தாயி (வலிலியக்கின் மேற்பட்டு ஒலிக்கும் சுரம்) என்னும் இரண்டு இயக்குகள் உள்ளன. (இவை பக்கம் 934-இல் குறியிடப்பட்டுள்ளமை காண்க). ஏழு சுரங்களும் ஒன்றை விட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிக்கும்பொழுது அது ஆரோசை எனவும், இறங்கும் வரிசையில் ஒலிக்கும்பொழுது அமரோசை எனவும் குறிப்பிடப்படும். இவற்றை வடமொழி இசை நூலார் ஆரோகணம் என்றும் அவரோகணம் என்றும் குறிப்பிடுவர். கரத்தைப் பழந்தமிழ் நூல்கள் கோவை எனக் குறிக்கின்றன. ஐந்து சுரங்களும் அவற்றின் வலியன மெலியன என்ற பிரிவுகளும் சேர்ந்து, 12 சுரங்களாகின்றன. இப்பன்னிரண்டு சுரங்களும், ஐந்தாம் சுர வரிசையாக (Fifth Scale) இச்சுரங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வரும் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. சரிகமபதநி சுரவரிசையில் குரலிலிருந்து (ச) இளி (ப) 5-ஆம் சுரம் ஆகும். அமரோசை முறையில் குரலிலிருந்து (ச) 5-ஆம் சுரம் உழை (ம) ஆகும். குரல்-இனி (ச-ப) குரல்-உழை (ச-ம) முறையில் 12 சுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் குழலோனின் அமைதி கூறுமிடத்து, அவன் குரல் இளி சேரும் சரியான ஒலி ஒருங்கிணைவை உணர்ந்தவனாக இருந்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ::ஏற்றிய குரலிளியென்றிரு நரம்பி ::னொப்பக் கேட்குமுணர்வினனாகி - (சிலம்பு அரங். 59-66){{nop}}<noinclude></noinclude> eoyfsnc2dbadutk6cl402lzvwjbh63e 1956851 1956850 2026-07-30T14:16:06Z Booradleyp1 1964 1956851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|933|இசை}} <center> {| class="wikitable"</noinclude>|- |G True Fifth || ப பஞ்சமம் |- |A Major Sixth || த தைவதம் |- |C¹ Octave || ச மேல்சட்சம் |- |} </center> இந்த ஒலி அந்தரங்கள் அல்லது இடைவெளிகள், ஏழாம் அல்லது ஐந்தாம் சுரவரிசைக் கோவைகளாக, (Octave & the Fitth) அமைந்திருக்கின்றன. உயர் ஒலி, கீழ் ஒலியைப் போன்று இரண்டு பங்கு உண்மையாக ஒலிக்கிறது. இம்முறை கிரேக்க இசையில் காணப்பட்டது. பழங்காலத்து இசை அளவையில் எப்.சி.எப் (FCF) என்ற அளவை காணப்படுகிறது. சி என்பது எப்-(F) என்னும் சரத்திலிருந்து ஐந்தாம் சுரமாகும். ஆதலின் FCFGC என்ற சுரவரிசை அமைக்கப்படின், ஒன்றிலிருந்து அடுத்தது ஐந்தாம் சுரம் என்ற முறை ஏற்படுகிறது. இது CDFGA என்ற ஏழிசைச் சுரவரிசையை (Pentatonic Scale) ஏற்படுத்துகிறது. இந்தச் சுரங்கள் எல்லாவற்றையும் பியானோவின் கீழ் ஒலிக்கட்டைகளினால் இசைத்தால், இவ்வொலி வரிசையைக் கேட்கலாம். பண்டைக்காலத்துச் சீன இசையும் இசுகாட்லாந்து இசையும் இத்தகைய ஏழிசை முறையில் அமைந்திருந்தன. இவ்வரிசையில் ஐந்தாம் சுரங்களுக்கு மாறாக ஏழாம் சுரங்களின் இடைவெளிகளைக் கொண்டு சுர வரிசை அமைக்கப்பட்டால், அது ஏழிசை அளவை (Diatonic Scale) எனப்படும். இம்முறை பிதாகரசு என்னும் பண்டைய கிரேக்க அறிஞர் அமைத்ததாகும். இது பிதாகரசு அளவை (Pythagorian Scale) எனப்படுகிறது. ஒவ்வொரு கீழ்ச் சுரத்திற்கும் அதற்கடுத்த மேல் சுரத்திற்கும் இடையே இருக்கும் பரவல் விகிதம் (Frequency Ratio) 1.5 முறையாகும். G என்ற சுரம் அதற்கடுத்த C ஐ விட 3/2 பங்கு பரவல் அதிகமுள்ளது. இதைப் போன்றே G Dஐ விட D 3/2 பங்கு அதிகமான பரவல் விகிதம் (3/2)²÷2=9/8 A/B = 1.125 ஆகும். இந்த இடைவெளியைப் பிதாகரசு A-B ஒர் இயக்கு (Tone) என்றார். இந்த இயக்கு C&D; D&E F/G G/A A/B ஆகியவற்றுக்கு இடையே ஏற்படுகிறது.EF, BC ஆகியவற்றிற்கு இடைப்பட்ட இடைவெளி 9/8-க்கும் குறைவானது. இது அரை இயக்கு (Hemitone) ஆகும் என்று பிதாசுரசு கூறினார். அவர் இதனை 256/243 - 1.0535 என்று கணக்கிட்டார். கிரேக்க இசையில் இந்த ஏழு சுரங்களும் இருந்தன. இது ஐரோப்பிய இசைப்புலவர்களால் பின்பற்றப்பட்டது. ஐரோப்பிய இசையில் இரண்டு இயக்குகளில் சுரவரிசைகள் அமைக்கப்பட்டன. இவை மேசர், மைனர் (Major, Minor) என்று வழங்கப்பட்டன. ஏழு சுரங்களை ஒரு முறை இசைத்த பின், திரும்பவும் அதே சுரங்கள் இசைக்கப்படுகின்றன. சுரவரிசை, இயக்கு (தாயி) எனப்படும். இயக்குகள்மெலிவு, சமன், வலிவு என மூவகைப்படும். இம்மூன்றையும் மந்தரம் மத்தியமம், தாரம் என வடமொழி இசை நூலார் வழங்குவர். மந்தரத்தாயி ‘தக்கு’ என்றும், தாரம் ‘எச்சுகதாயி’ என்றும் வழங்கப்படும். சங்கீதரத்தினாகரம் என்னும் நூல், இதயத்தில் உண்டாகும் ஒலியை மெலிவியக்கு (மந்தரம்) என்றும், கழுத்தில் உண்டாகும் ஒலியைச் சமனியக்கு (மத்தியமம்) என்றும், தலையில் உண்டாகும் ஒலியை வலியியக்கு (தாரம்) என்றும் குறிப்பிடுகிறது. வலியியக்கு மெலிலியக்கைப் போல் இரட்டிப்பாகவும், சமனியக்கு மெலிவியக்கைப் போல் இரட்டிப்பாகவும் இருக்கும். ஒரு சுரத்திற்கும் அதன் நேர் வலியியக்குச் சுரத்திற்கும் உள்ள சுருதி 1:2 என்ற விகிதத்தில் உள்ளது. மெலிவியக்குச் சுரம் ஒரு பங்கானால், அதன் நேர் சமனியக்குச் கரம் இரண்டு பங்காகும். அதன் நேர் வலியியக்குச் சுரம் மெலிவியக்குச் சுரத்தின் நான்கு பங்காகும். மெலிவியக்குக் குரல் (சட்சம்) வினாடிக்கு 120 அதிர்வெண்கள் ஆனால், சமனியக்குக் குரலுக்கும் வலியியக்குக் குரலுக்கும் முறையே 240, 480 அதிர்வெண்கள் ஆகும். இம்மூன்று இயக்குகளுக்கும் அப்பாற்பட்டு ஒலிக்கும் அனுமந்தரத்தாயி (மெலிவியக்கினைக் காட்டிலும் தாழ்ந்து ஒலிக்கும் சுரம்) அதிதாரத்தாயி (வலிலியக்கின் மேற்பட்டு ஒலிக்கும் சுரம்) என்னும் இரண்டு இயக்குகள் உள்ளன. (இவை பக்கம் 934-இல் குறியிடப்பட்டுள்ளமை காண்க). ஏழு சுரங்களும் ஒன்றை விட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிக்கும்பொழுது அது ஆரோசை எனவும், இறங்கும் வரிசையில் ஒலிக்கும்பொழுது அமரோசை எனவும் குறிப்பிடப்படும். இவற்றை வடமொழி இசை நூலார் ஆரோகணம் என்றும் அவரோகணம் என்றும் குறிப்பிடுவர். கரத்தைப் பழந்தமிழ் நூல்கள் கோவை எனக் குறிக்கின்றன. ஐந்து சுரங்களும் அவற்றின் வலியன மெலியன என்ற பிரிவுகளும் சேர்ந்து, 12 சுரங்களாகின்றன. இப்பன்னிரண்டு சுரங்களும், ஐந்தாம் சுர வரிசையாக (Fifth Scale) இச்சுரங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வரும் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. சரிகமபதநி சுரவரிசையில் குரலிலிருந்து (ச) இளி (ப) 5-ஆம் சுரம் ஆகும். அமரோசை முறையில் குரலிலிருந்து (ச) 5-ஆம் சுரம் உழை (ம) ஆகும். குரல்-இனி (ச-ப) குரல்-உழை (ச-ம) முறையில் 12 சுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் குழலோனின் அமைதி கூறுமிடத்து, அவன் குரல் இளி சேரும் சரியான ஒலி ஒருங்கிணைவை உணர்ந்தவனாக இருந்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ::ஏற்றிய குரலிளியென்றிரு நரம்பி ::னொப்பக் கேட்குமுணர்வினனாகி - (சிலம்பு அரங். 59-66){{nop}}<noinclude></noinclude> 5o7y1nx3x2hu90bmaouzvrif2oaz2uf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/974 250 625239 1956867 1873519 2026-07-31T04:01:39Z Booradleyp1 1964 1956867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசை|934|இசை}}</noinclude>{| | || || || ||ச ரி க ம ப த நி |- | || || || ||↑{{gap}}அதிதாரத்தாயி |- | || || ||சரிகமபதநி || |- | || || || {{gap}}வலிலியக்கு ||{{gap}}(தாரத்தாயி) |- | || ||சரிகமபதநி || |- | || ||சமனியக்கு || (மந்தரத்தாயி) |- | || சரிகமபதநி|| |- | || மெலிவியக்கு || (மந்திரத்தாயி) |- | ச ரி க ம ப த நி<br>... ... ... ... ... ... ... || |- | || (அனுமந்தரத்தாயி)|| |- |} {{center|ச ரி க ம ப த நி அதிதாரத்தாயி<br>{{center|↑}} சரிகமபதநி வலிலியக்கு (தாரத்தாயி)<br> சரிகமபதநி சமனியக்கு (மந்தரத்தாயி)<br> சரிகமபதநி (மெலிவியக்கு (மந்திரத்தாயி)<br>{{center|↓}} ச ரி க ம ப த நி<br>... ... ... ... ... ... ...}} {{center|(அனுமந்தரத்தாயி)}} ஏழு சுரங்களுள் முதல் 4 சுரங்களும் அவற்றின் வேறுபாட்டுச் - சுரங்களும் முதனிலைச் சுரங்கள் (பூர்வாங்கம்) என்றும், அடுத்த 3 சுரங்களும் அவற்றின் வேறுபாட்டுச் சுரங்களும் இறுதிநிலைச் சுரங்கள் (உத்தராங்கம்) என்றும் குறிப்பிடப்படும். இளிமுறையில் தோன்றிய பன்னிரண்டு சுரங்களினின்றும் 16 சுரங்கள் பிறக்கின்றன. இவ்வாறு ஓர் இயக்கியிலுள்ள 12 சுரங்கள் தோன்றுவதைப் பின்வருமாறு விளக்கலாம். {| |1. சட்சம் || ச || குரல் |- |2. சுத்தரிடபம் || ரி² || குறைத்துத்தம் |- |3. சதுசுருதி ரிடபம்<br>அல்லது சுத்தகாந்தாரம் || ரி⁴<br>க² || நிறைத்துத்தம் |- |4. சட்சுருதி ரிடபம் அல்லது<br>சாதாரண காந்தாரம் || ரி⁶<br>க⁴ || குறைக் கைக்கிளை |- |5. அந்தர காந்தாரம் || க⁶ || நிறைக்கைக்கிளை |- |6. சுத்தமத்தியமம் || ம² || குறை உழை |- |7. பிரதிமத்தியமம் || ம⁴ || நிறை உழை |- |8. பஞ்சமம் || ப || இளி |- |9. சுத்ததைவதம் || த² || குறை விளரி |- |10. சதுசுருதி தைவதம்<br>அல்லது சுத்தநிசாதம் || த⁴<br>நி² || நிறை விளரி |- |11. சட்சுருதிதைவதம் அல்லது<br>கைசிகி நிசாதம் || த⁶<br>நி⁴ || குறைத்தாரம் |- |12. காகிலி நிசாதம் || நி⁶ || நிறைத் தாரம் |- |}<noinclude></noinclude> 8pgal4ywc51wiigcn8484ip31b75as7 1956868 1956867 2026-07-31T04:19:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|934|இசை}}</noinclude>{| | || || || ||... ... ... ... ... ... ...<br>ச ரி க ம ப த நி |- | || || || ||↑{{gap}}அதிதாரத்தாயி |- | || || ||.{{gap|.6em}}.{{gap|.6em}}.{{gap|.6em}} .{{gap|.6em}} .{{gap|.6em}}.{{gap|.6em}}.<br>சரிகமபதநி || |- | || || || {{gap}}வலிலியக்கு ||{{gap}}(தாரத்தாயி) |- | || ||சரிகமபதநி || |- | || ||சமனியக்கு || (மந்தரத்தாயி) |- | || சரிகமபதநி<br>.{{gap|.6em}}.{{gap|.6em}}.{{gap|.6em}} .{{gap|.6em}} .{{gap|.6em}}.{{gap|.6em}}.|| |- | || மெலிவியக்கு || (மந்திரத்தாயி) |- |{{dhr}} |- | ||ச ரி க ம ப த நி<br>... ... ... ... ... ... ... || |- | || ||(அனுமந்தரத்தாயி)|| |- |} ஏழு சுரங்களுள் முதல் 4 சுரங்களும் அவற்றின் வேறுபாட்டுச் - சுரங்களும் முதனிலைச் சுரங்கள் (பூர்வாங்கம்) என்றும், அடுத்த 3 சுரங்களும் அவற்றின் வேறுபாட்டுச் சுரங்களும் இறுதிநிலைச் சுரங்கள் (உத்தராங்கம்) என்றும் குறிப்பிடப்படும். இளிமுறையில் தோன்றிய பன்னிரண்டு சுரங்களினின்றும் 16 சுரங்கள் பிறக்கின்றன. இவ்வாறு ஓர் இயக்கியிலுள்ள 12 சுரங்கள் தோன்றுவதைப் பின்வருமாறு விளக்கலாம். {| |1. சட்சம் || ச || குரல் |- |2. சுத்தரிடபம் || ரி² || குறைத்துத்தம் |- |3. சதுசுருதி ரிடபம்<br>அல்லது சுத்தகாந்தாரம் || ரி⁴<br>க² || நிறைத்துத்தம் |- |4. சட்சுருதி ரிடபம் அல்லது<br>சாதாரண காந்தாரம் || ரி⁶<br>க⁴ || குறைக் கைக்கிளை |- |5. அந்தர காந்தாரம் || க⁶ || நிறைக்கைக்கிளை |- |6. சுத்தமத்தியமம் || ம² || குறை உழை |- |7. பிரதிமத்தியமம் || ம⁴ || நிறை உழை |- |8. பஞ்சமம் || ப || இளி |- |9. சுத்ததைவதம் || த² || குறை விளரி |- |10. சதுசுருதி தைவதம்<br>அல்லது சுத்தநிசாதம் || த⁴<br>நி² || நிறை விளரி |- |11. சட்சுருதிதைவதம் அல்லது<br>கைசிகி நிசாதம் || த⁶<br>நி⁴ || குறைத்தாரம் |- |12. காகிலி நிசாதம் || நி⁶ || நிறைத் தாரம் |- |}<noinclude></noinclude> 5ma20189wj178bjy4q140wlj8t93wer பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/975 250 625240 1956854 1873520 2026-07-30T14:33:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|935|இசை}}</noinclude>இக்கால இசைப்புலவர்கள், இச்சுரங்களின் இயல்பு நிலைகளையே அந்தந்தச் சுரங்களின் கலப்பற்ற நிலை எனக் குறிப்பிடுகின்றனர். இச்சுரங்களை வேறுபடுத்தியறியும் பொருட்டு இவற்றைப் பின்வருமாறு எழுதுகின்றனர். <center> {| |சட்சம் || || -ச |- |ரிடபம் || சுத்த- || -ர |- | || சுதுசுருதி || -ரி |- | || சட்சுருதி || -ரு |- |காந்தாரம் || -சுத்த || -க |- | || -சாதாரண || -கி |- | || -அந்தர || -கு |- |மத்தியமம் || -சுத்த || -ம |- | || -பிரதி || -மி |- | || -பஞ்சமம் || -ப |- |தைவதம் || -சுத்த || -த |- | || சதுசுருதி || -தி |- | || -சட்சுருதி || -து |- |நிசாதம் || -சுத்த || -ந |- | || கைசிகி || -நி |- | || காகிலி || -நு |- |} </center> இம்முறையில் ஏதேனும் ஓர் இராகத்திற்கான ஆரோசை-அமரோசைகளை எழுதும் பொழுது பின்வருமாறு எழுதியபோதிலும், அவற்றைச் சரிகம... என்ற முறையிலேயே பாடுகின்றனர். ::(எ-டு. சரகுமபதநுச - தநிதபமகுரச - மாயாமாளவ கௌளம், சரிகுபதிச-சதிபகுரி-மோகனம்) <b>இராகங்கள்</b>: இந்திய இசை, இராகத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைத்தமிழ் மக்கள் இராகத்தைப் பண் என்று குறிப்பிட்டனர். விடியற்காலை, நண்பகல், மாலை போன்ற நேரங்களுக்கு ஏற்ற இராகங்களும் உள்ளன. தேவார இசை, பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூபாளம், மலயமாருதம், பௌளி, கலகடம், வலசி, தேசாட்சி, இரேவகுப்தி போன்றவை விடியற்காலையில் பாடவேண்டிய இராகங்கள். பிலகரி, கேதாரம், தன்னியாசி போன்றவை ஆதவன் உதயத்திற்கு முன் பாட வேண்டிய இராகங்கள். அசாவேரி, சாவேரி, தேவமனோகரி போன்றவை முற்பகலில் பாடவேண்டிய இராகங்கள். சிராகங்கள், மணிரங்கு, மத்தியமாவதி, பிருந்தாவனசாரங்கா, புட்பதிலகம் போன்றவை நண்பகலில் பாடவேண்டிய இராகங்கள். முகாரி, பேகடை போன்றவை பிற்பகலில் பாடவேண்டிய இராகங்கள். கல்யாணி, வசந்தம் போன்றவை மாலையில் பாடவேண்டிய இராகங்கள். கேதார கௌளம், நீலாம்பரி போன்றவை ஆதவன் மறையும் நேரத்தில் பாடவேண்டிய இராகங்கள். பைரவி, காம்போதி, சங்கராபரணம், ஆரபி போன்றவை காலவரையின்றி எல்லா நேரங்களிலும் பாடப்படும் இராகங்களாகும். ஒன்பது சுவைகளையும் உணர்த்தும் இராகங்கள் உள்ளன. சில இராகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சுவைகளையும் உணர்த்துகின்றன. சகானா, புன்னாகவராளி, நாதநாமக்கிரியை போன்றவை இரக்கச் சுவையையும், உசேனி, கமாசு, சுருட்டி போன்றவை இன்பச் சுவையையும், அடாணா, ஆரபி போன்றவை வெகுளிச் சுவையையும், தேவகாந்தாரி, பிலகரி, நாட்டை போன்றவை வீரச்சுவையையும், சாரங்கா, இந்துசுத்தானி பியாக்கு போன்றவை வியப்புச் சுவையையும், சாமா இராகம் அமைதிச் சுவையையும் குறிப்பிடும் இராகங்களாகும். சங்கீத மகரந்தம் என்னும் இசை நூலில், இத்தகைய இராகங்களுக்கான விளக்கங்கள் காணப்படுகின்றன. அன்னமாச்சாரியார் என்னும் இயலிசைப் புலவர் 91 இராகங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கோவிந்த தீட்சிதர் என்பவர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டுவந்த அச்சுதப்ப நாயக்கரின் அமைச்சராக இருந்தார். இவர் சிறந்த இசை வல்லுநராகத் திகழ்ந்தார். இவர் மகன் வேங்கடமகி என்பவர் தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கரின் (கி.பி. 1633-1673) அமைச்சராக இருந்தார். வேங்கடமகி சதுர்தண்டிப் பிரகாசிகை என்னும் இசை நூலை இயற்றினார். இவர் இந்நூலில் 72 மேளகர்த்தாக்களின் அமைப்பை விளக்கியுள்ளார். இவர் 19 மேளகர்த்தா இராகங்களே பழக்கத்திலிருந்தன என்றும், மற்ற 53 மேள கர்த்தா இராகங்கள் விளக்கப்படவில்லை என்றும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். முதலாம் துளசா மன்னர் (கி.பி. 1728-1736) இயற்றிய சங்கீத சாராமிருதம் என்னும் நூல் 72 மேளகர்த்தாக்களைப் பற்றிக் குறிப்பிபட்டுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய சங்கீத சூடாமணி என்னும் நூலில் 72 மேளகர்த்தா இராகங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. மேளகர்த்தா இராகங்களில் ஏழு சுரங்களும் ஆரோசையிலும் அமரோசையிலும் வரிசையாக வரும். ஆரோசையில் எந்த வரிசையில் சுரங்கள் வருகின்றனவோ அந்த வரிசையில் அமரோசை-<noinclude></noinclude> mdcvp7l9hk9ayb4gm04nc8tdeh217he பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/976 250 625241 1956857 1873521 2026-07-30T14:49:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|936|இசை}}</noinclude>யில் சுரங்கள் வரும். வேங்கடமகியின் 72 மேளகர்த்தா அமைப்பு, தென்னிந்திய இசையை (கருநாடக இசை) வடஇந்திய இசையினின்றும் பிரித்து வேறுபடுத்தியது. இது மேளகர்த்தாச் சக்கரம் என வழங்கப்படுகிறது. இச்சக்கரத்தின் உதவியினால் இதில் உள்ள எந்த இராகத்திற்கும் உடனே விளக்கம் கூறிவிடலாம். இச்சக்கரம் இருசமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் வரும் மேளகர்த்தாக்கள் பூர்வ மேள கர்த்தாக்கள் என்றும், இரண்டாம் பகுதியில் வரும் மேளகர்த்தாக்கள் உத்தர மேளகர்த்தாக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பூர்வமேளகர்த்தாக்களில் சுத்தமத்தியமச் சுரமும் (முறை உழை) உத்தர மேளகர்த்தாக்களில் பிரதி மத்தியமச் (நிறை உழை) சுரமும் வரும். இந்த 72 மேளகர்த்தாக்கள் பின்வரும் 12 சிறிய சக்கரங்களின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. ::1. இந்து - (மதி) ஒரே மதி இருப்பதனால் இது 1 என்னும் எண்ணைக் குறிக்கும். ::2. நேத்திரம் - (கண்) உயிரிகளுக்கு இரண்டு கண்கள் இருப்பதால், இது 2 என்ற எண்ணைக் குறிக்கும். ::3. அக்கினி - தக்கணம், ஆகவனீயம், காருகபத்தியம் என்னும் மூவகை அக்கினிகள் இருப்பதால், இது 3 என்னும் எண்ணைக் குறிக்கும். ::4. வேதம்-இருக்கு, எசுர், சாமம், அதருவம் என்னும் நான்கு மறைகள் இருப்பதால், இது 4 என்னும் எண்ணைக் குறிக்கும். ::5. பாணம்-காமனுடைய மலரம்புகள் தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலோற்பலம் என்னும் ஐந்து ஆதலின், இது 5 என்னும் எண்ணைக் குறிக்கும். ::6. இருது-வசந்தம், வேனில், கார், சரத்து, வேமந்தம், சிசிர் என்னும் பருவ காலம் ஆறு ஆதலின், இது 6 என்னும் எண்ணைக் குறிக்கும். ::7. இருடி-கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், சமதக்கினி, வசிட்டர், காசியபர், அத்திரி ஆகிய முனிவர் எழுவராதலின், இது 7 என்னும் எண்ணைக் குறிக்கும். ::8. வசு-ஆப, தருவ, சோம, தர, அனில, அலை, பரத்யூச, பிரபாச என வசுக்கள் எண் மராதலின், இது 8 என்னும் எண்ணைக் குறிக்கும். ::9. பிரமன்-பிரமர் ஒன்பதின்மராதலின் இது 9 என்னும் எண்ணைக் குறிக்கும். ::10. திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென் மேற்கு, ஆகாயம், பாதாளம் எனத் திசை பத்தாதலின், இது 10 என்னும் எண்ணைக் குறிக்கும். ::11. உருத்திரர்-உருத்திரர்கள் பதினொருவராதலின் இது 11 என்னும் எண்ணைக் குறிக்கும். ::12. ஆதித்தியர் - ஆதித்தியர் பன்னிருவராதலின் இது 12 என்னும் எண்ணைக் குறிக்கும். பண்டைத் தமிழ்நாட்டில், 32 தாய் இராகங்களை மக்கள் பாடி வந்தனர். இடபம், காந்தாரம் ஆகிய சுரங்களின் நான்கு கிளைகள் ஒவ்வொன்றுடனும் தைவதம், நிசாதம் ஆகியவற்றின் சுரங்களில் நான்கு சுரவேறுபாடுகள் உண்டாகும் பொழுது 16 பிரிவுகள் உண்டாகின்றன. இயற்றுடன் சுத்த மத்தியமம், பிரதி மத்தியமம் ஆகிய இருசுரங்கள் கூடும்பொழுது 32 (4 × 4 × 2 = 32) இராகங்கள் தோன்றுகின்றன. வேங்கடமகி விளக்கம் தந்த மேளகர்த்தா இராகங்கள் பின்வரும் முறையில் அமைக்கப்பட்டன. ::{| |3 ரிடபம் ||+ ||3 காந்தாரம் ||= ||6 ||சுர வேறுபாடுகள் |- |3 தைவதம் ||+ ||3 நிசாதம் ||= || 6 ||❠ |- |2 மத்தியமம் || || || = ||2 || ❠ |- |} ::6 × 6 × 2= 72 இராகங்கள். சுத்த காந்தாரம், சட்சுருதி இடபம், சுத்த நிசாதம், சட்சருதி தைவதம் ஆகிய 4 சுரங்களும் விவாதிச் சுரங்கள் எனப்படும். இவற்றுள் 9 அல்லது 2 விவாதிச் சுரம் வரும் மேளம் விவாதிமேளம் எனப்படும். மேளகர்த்தா இராகங்கள் தாய் இராகங்கள் ஆகும். இவற்றில் பிறந்த இராகங்கள் கிளை இராகங்கள் அல்லது சன்னிய இராகங்கள் ஆகும். சன்னிய இராகங்களின் பகுப்பினைப் பக். 937-இல் காண்க. கிளை இராகங்கள் வருச்சம், வக்கிரம், பாசாங்கம் என மூவகைப்படும். ஓர் இராகத்தின் ஆரோசை அமரோசை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிலோ இரண்டிலோ ஒன்று அல்லது இரண்டு சுரங்கள் விலக்கப்பட்டிருந்தால், அது வருச்ச இராகம் எனப்படும். ஆறுகரங்களையுடைய ஆரோசை அல்லது அமரோசைக்குச் சாடவம் என்று பெயர், ஆரோசை அமரோசையில் 5 சுரங்கள் இருந்தால், அது திறம் அல்லது அல்லது ஔடவம் எனப்படும். மூன்று சுரங்கள் விலக்கப்பட்ட கிளை இராகம் சுராந்தரம் அல்லது கிளை எனப்படும். வருச்ச இராகங்கள் எட்டு வகைப்படும். ஓர் இராகத்தின் ஆரோசை அமரோசை ஆகிய இரண்டிலுமோ ஏதேனும் ஒன்றிலோ சுரங்கள் வரிசையாக வராமல் திரிந்து வந்-<noinclude></noinclude> 4a9xaxa0asym171nsgyuh9wndrk3v2q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/977 250 625242 1956858 1873522 2026-07-30T15:00:47Z Booradleyp1 1964 1956858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசை|937|இசை}}</noinclude> {{center|சன்னிய இராகம்}} தால் அத்தகைய இராகங்கள் வக்கிர இராகங்கள் எனப்படும். இவற்றைப் பிறழ்ச்சிப் பண்கள் எனக் குறிப்பிடலாம். ::எ.டு. சரிகமபாமதாநிசா<br>சநிதபமகாமமரீகரிச {| |சன்னிய, சம்பூரண இராகம், வக்கிரமற்ற உபாங்கம், பாசாங்கம் || வருச்ச இராகம் || வக்கிர இராகங்கள் || || உபாங்கம் பாசாங்கம் |- | || சம்பூரண, சாடவ, ஒளடவ, சுராந்தரம், வக்கிர, வக்கிரமற்ற, பாசாங்கம், உபாங்கம் || || |- | || || வருச்சம் || வருச்சமற்ற || வருச்ச வருச்சமற்ற வக்கிர, வக்கிரமற்ற |- | || || சம்பூர்ண சாடவ ஔடவ || உபாங்கம் பாசாங்கம் || |- |} சில கிளை இராகங்களில் இனிமையின் பொருட்டு அவற்றின் தாய் இராகங்களில் காணப்படாத சுரங்கள் இடம் பெறுகின்றன. இத்தகைய இராகங்கள் பாசாங்க இராகங்கள் எனப்படும். தாய் இராகத்தின் சுரங்களையே கொண்டு அமைந்திருக்கும் கிளை இராகங்கள் உபாங்க இராகங்கள் எனப்படும். சாடவ - சம்பூரண முறையில் 6 கிளை இராகங்களும் ஒளடவ சம்பூரண முறையில் 15 கிளை இராகங்களும், சம்பூரண - ஒளடவ முறையில் 15 கிளை இராகங்களும், சாடவ-சாடவ முறையில் 36 இராகங்களும், இவற்றைப்போல் வேறு பல முறைகளில் இன்னும் பல இராகங்களும் கிடைக்கின்றன. இத்தகைய வருச்ச இராகங்கள் 483 என்று இசைவல்லுநர் கணக்கிட்டுள்ளனர். வருச்சலக்கிரபேத இராகங்களின் அட்டவணையைப் பக். 938-இல் காண்க. இந்திய இசை இவ்வாறு எல்லையற்ற இயல்பினைக் கொண்டிருக்கிறது. இதில் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளான பின்னரும் பலர் புதிய இராகங்களைக் கண்டுபிடிக்கலாம். இராகத்தை விளக்கமாகப் பாடும் முறை ஆளத்தி அல்லது ஆலாபனை எனப்படும். இதனை ஒருவர் மற்றவருக்குச் சுரப்படுத்தி எழுதிக் கற்றுக் கொடுக்க முடியும் என்றாலும் பழக்கத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. இசை மாணவர்கள் தாமே கற்பனையில் இராக ஆலாபனை செய்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகங்களின் போக்கு, சஞ்சாரம் எனப்படுகிறது. இராகங்களில் மிகுதியாகக் காணப்படும் சுர அடுக்குகள் மூர்ச்சனைகள் என்றும் நுட்பமான ஆலாபனைப் பகுதிகள் பிர்க்காக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்தில் இசை மாணவர்கள் புகழ்பெற்ற இசை வல்லுநர்களின் இராக ஆலாபனை இசைப் பதிவு நாடாக்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டு ஆலாபனையைக் கற்றுக் கொள்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகம், தாளம், பல்லவி, நிரவல் ஆகிய பகுதிகள் உள்ளன. இவை பழந்தமிழ் நாட்டில் ஆளத்தி என்று குறிப்பிடப்பட்டன. ஆளத்தி, காட்டாளத்தி, (தாளத்துடன் நிகழ்வது) நிறவாளத்தி (இராக ஆலாபனை மட்டும்) பண்ணாளத்தி (பண்ணுடன் இணைந்த கீதம், தீர்த்தளம், பதம் போன்றவை) என மூவகைப்படும். இராக ஆலாபனையில் 5 குற்றெழுத்துகளும் 7 நெட்டெழுத்துகளும் த, ந, ம ஆகிய மூன்று உயிர் மெய் எழுத்துகளும் மட்டிலுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதனைத்தவிர ‘ம்’ எனத் தொடங்கி இராகவிளக்கம் செய்யும் முறையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (அரங். 26-36 அடியார்க்கு நல்லார் உரை) தாளத்தில் த, ந, ம, ஆகிய 3 எழுத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. தாளம் இசையின் இன்றியமையாத பகுதியாகும். தாளம் கையினால் கொட்டப்படுவதால் அது கொட்டு அல்லது பாணி (கை) எனப்பட்டது. இசையைக் கால அளவிற்குள் கட்டுப்படுத்துவது தாளமே. பழந்தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த 108 தாளங்களின் விளக்கம் பஞ்சமரபு என்னும் நூலில் காணலாம். இந்நூலில் தாள மரபு என்னும்<noinclude> <b>வா.க. 2-118</b></noinclude> 27piamivx79zd4r724btfveivlcnsxk 1956859 1956858 2026-07-30T15:02:30Z Booradleyp1 1964 1956859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசை|937|இசை}}</noinclude> {{center|சன்னிய இராகம்}} தால் அத்தகைய இராகங்கள் வக்கிர இராகங்கள் எனப்படும். இவற்றைப் பிறழ்ச்சிப் பண்கள் எனக் குறிப்பிடலாம். ::எ.டு. சரிகமபாமதாநிசா ::::சநிதபமகாமமரீகரிச {| |சன்னிய, சம்பூரண இராகம், வக்கிரமற்ற உபாங்கம், பாசாங்கம் || வருச்ச இராகம் || வக்கிர இராகங்கள் || || உபாங்கம் பாசாங்கம் |- | || சம்பூரண, சாடவ, ஒளடவ, சுராந்தரம், வக்கிர, வக்கிரமற்ற, பாசாங்கம், உபாங்கம் || || |- | || || வருச்சம் || வருச்சமற்ற || வருச்ச வருச்சமற்ற வக்கிர, வக்கிரமற்ற |- | || || சம்பூர்ண சாடவ ஔடவ || உபாங்கம் பாசாங்கம் || |- |} சில கிளை இராகங்களில் இனிமையின் பொருட்டு அவற்றின் தாய் இராகங்களில் காணப்படாத சுரங்கள் இடம் பெறுகின்றன. இத்தகைய இராகங்கள் பாசாங்க இராகங்கள் எனப்படும். தாய் இராகத்தின் சுரங்களையே கொண்டு அமைந்திருக்கும் கிளை இராகங்கள் உபாங்க இராகங்கள் எனப்படும். சாடவ - சம்பூரண முறையில் 6 கிளை இராகங்களும் ஒளடவ சம்பூரண முறையில் 15 கிளை இராகங்களும், சம்பூரண - ஒளடவ முறையில் 15 கிளை இராகங்களும், சாடவ-சாடவ முறையில் 36 இராகங்களும், இவற்றைப்போல் வேறு பல முறைகளில் இன்னும் பல இராகங்களும் கிடைக்கின்றன. இத்தகைய வருச்ச இராகங்கள் 483 என்று இசைவல்லுநர் கணக்கிட்டுள்ளனர். வருச்சலக்கிரபேத இராகங்களின் அட்டவணையைப் பக். 938-இல் காண்க. இந்திய இசை இவ்வாறு எல்லையற்ற இயல்பினைக் கொண்டிருக்கிறது. இதில் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளான பின்னரும் பலர் புதிய இராகங்களைக் கண்டுபிடிக்கலாம். இராகத்தை விளக்கமாகப் பாடும் முறை ஆளத்தி அல்லது ஆலாபனை எனப்படும். இதனை ஒருவர் மற்றவருக்குச் சுரப்படுத்தி எழுதிக் கற்றுக் கொடுக்க முடியும் என்றாலும் பழக்கத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. இசை மாணவர்கள் தாமே கற்பனையில் இராக ஆலாபனை செய்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகங்களின் போக்கு, சஞ்சாரம் எனப்படுகிறது. இராகங்களில் மிகுதியாகக் காணப்படும் சுர அடுக்குகள் மூர்ச்சனைகள் என்றும் நுட்பமான ஆலாபனைப் பகுதிகள் பிர்க்காக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்தில் இசை மாணவர்கள் புகழ்பெற்ற இசை வல்லுநர்களின் இராக ஆலாபனை இசைப் பதிவு நாடாக்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டு ஆலாபனையைக் கற்றுக் கொள்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகம், தாளம், பல்லவி, நிரவல் ஆகிய பகுதிகள் உள்ளன. இவை பழந்தமிழ் நாட்டில் ஆளத்தி என்று குறிப்பிடப்பட்டன. ஆளத்தி, காட்டாளத்தி, (தாளத்துடன் நிகழ்வது) நிறவாளத்தி (இராக ஆலாபனை மட்டும்) பண்ணாளத்தி (பண்ணுடன் இணைந்த கீதம், தீர்த்தளம், பதம் போன்றவை) என மூவகைப்படும். இராக ஆலாபனையில் 5 குற்றெழுத்துகளும் 7 நெட்டெழுத்துகளும் த, ந, ம ஆகிய மூன்று உயிர் மெய் எழுத்துகளும் மட்டிலுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதனைத்தவிர ‘ம்’ எனத் தொடங்கி இராகவிளக்கம் செய்யும் முறையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (அரங். 26-36 அடியார்க்கு நல்லார் உரை) தாளத்தில் த, ந, ம, ஆகிய 3 எழுத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. தாளம் இசையின் இன்றியமையாத பகுதியாகும். தாளம் கையினால் கொட்டப்படுவதால் அது கொட்டு அல்லது பாணி (கை) எனப்பட்டது. இசையைக் கால அளவிற்குள் கட்டுப்படுத்துவது தாளமே. பழந்தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த 108 தாளங்களின் விளக்கம் பஞ்சமரபு என்னும் நூலில் காணலாம். இந்நூலில் தாள மரபு என்னும்<noinclude> <b>வா.க. 2-118</b></noinclude> rwd2wpz4ewhvzgg25o9ymhhu33uo1n7 1956860 1956859 2026-07-30T15:04:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|937|இசை}}</noinclude> {{center|சன்னிய இராகம்}} தால் அத்தகைய இராகங்கள் வக்கிர இராகங்கள் எனப்படும். இவற்றைப் பிறழ்ச்சிப் பண்கள் எனக் குறிப்பிடலாம். ::எ.டு. சரிகமபாமதாநிசா ::::சநிதபமகாமமரீகரிச {| |சன்னிய, சம்பூரண இராகம், வக்கிரமற்ற உபாங்கம், பாசாங்கம் || வருச்ச இராகம் || வக்கிர இராகங்கள் || || உபாங்கம் பாசாங்கம் |- | || சம்பூரண, சாடவ, ஒளடவ, சுராந்தரம், வக்கிர, வக்கிரமற்ற, பாசாங்கம், உபாங்கம் || || |- | || || வருச்சம் || வருச்சமற்ற || வருச்ச வருச்சமற்ற வக்கிர, வக்கிரமற்ற |- | || || சம்பூர்ண சாடவ ஔடவ || உபாங்கம் பாசாங்கம் || |- |} சில கிளை இராகங்களில் இனிமையின் பொருட்டு அவற்றின் தாய் இராகங்களில் காணப்படாத சுரங்கள் இடம் பெறுகின்றன. இத்தகைய இராகங்கள் பாசாங்க இராகங்கள் எனப்படும். தாய் இராகத்தின் சுரங்களையே கொண்டு அமைந்திருக்கும் கிளை இராகங்கள் உபாங்க இராகங்கள் எனப்படும். சாடவ - சம்பூரண முறையில் 6 கிளை இராகங்களும் ஒளடவ சம்பூரண முறையில் 15 கிளை இராகங்களும், சம்பூரண - ஒளடவ முறையில் 15 கிளை இராகங்களும், சாடவ-சாடவ முறையில் 36 இராகங்களும், இவற்றைப்போல் வேறு பல முறைகளில் இன்னும் பல இராகங்களும் கிடைக்கின்றன. இத்தகைய வருச்ச இராகங்கள் 483 என்று இசைவல்லுநர் கணக்கிட்டுள்ளனர். வருச்சலக்கிரபேத இராகங்களின் அட்டவணையைப் பக். 938-இல் காண்க. இந்திய இசை இவ்வாறு எல்லையற்ற இயல்பினைக் கொண்டிருக்கிறது. இதில் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளான பின்னரும் பலர் புதிய இராகங்களைக் கண்டுபிடிக்கலாம். இராகத்தை விளக்கமாகப் பாடும் முறை ஆளத்தி அல்லது ஆலாபனை எனப்படும். இதனை ஒருவர் மற்றவருக்குச் சுரப்படுத்தி எழுதிக் கற்றுக் கொடுக்க முடியும் என்றாலும் பழக்கத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. இசை மாணவர்கள் தாமே கற்பனையில் இராக ஆலாபனை செய்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகங்களின் போக்கு, சஞ்சாரம் எனப்படுகிறது. இராகங்களில் மிகுதியாகக் காணப்படும் சுர அடுக்குகள் மூர்ச்சனைகள் என்றும் நுட்பமான ஆலாபனைப் பகுதிகள் பிர்க்காக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இக்காலத்தில் இசை மாணவர்கள் புகழ்பெற்ற இசை வல்லுநர்களின் இராக ஆலாபனை இசைப் பதிவு நாடாக்களை வைத்துக்கொண்டு, அவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டு ஆலாபனையைக் கற்றுக் கொள்கிறார்கள். இராக ஆலாபனையில் இராகம், தாளம், பல்லவி, நிரவல் ஆகிய பகுதிகள் உள்ளன. இவை பழந்தமிழ் நாட்டில் ஆளத்தி என்று குறிப்பிடப்பட்டன. ஆளத்தி, காட்டாளத்தி, (தாளத்துடன் நிகழ்வது) நிறவாளத்தி (இராக ஆலாபனை மட்டும்) பண்ணாளத்தி (பண்ணுடன் இணைந்த கீதம், தீர்த்தளம், பதம் போன்றவை) என மூவகைப்படும். இராக ஆலாபனையில் 5 குற்றெழுத்துகளும் 7 நெட்டெழுத்துகளும் த, ந, ம ஆகிய மூன்று உயிர் மெய் எழுத்துகளும் மட்டிலுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதனைத்தவிர ‘ம்’ எனத் தொடங்கி இராகவிளக்கம் செய்யும் முறையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (அரங். 26-36 அடியார்க்கு நல்லார் உரை) தாளத்தில் த, ந, ம, ஆகிய 3 எழுத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. தாளம் இசையின் இன்றியமையாத பகுதியாகும். தாளம் கையினால் கொட்டப்படுவதால் அது கொட்டு அல்லது பாணி (கை) எனப்பட்டது. இசையைக் கால அளவிற்குள் கட்டுப்படுத்துவது தாளமே. பழந்தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த 108 தாளங்களின் விளக்கம் பஞ்சமரபு என்னும் நூலில் காணலாம். இந்நூலில் தாள மரபு என்னும்<noinclude> <b>வா.க. 2-118</b></noinclude> odc6kajbb0opnxdu6uesvrgg2ds6fb7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/978 250 625246 1956861 1873540 2026-07-30T15:24:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|938|இசை}}</noinclude><center> {| class="wikitable" |- !வ எண். !! இராக வகைகள் !! எண்ணிக்கை !! சாடவ-சாடவம் !! ஒளடவ ஒளடவம் !! வக்கிர சம்பூரணம் !! வக்கிர சாடவம் !! வக்கிர ஒளடவம் !! மொத்தம் |- |1. || சம்பூரணம் || 1 || 6 || 15 || 38 || 144 || 210 || 414 |- |2. || சாடவ-சாடவம் || 6 || 36 || 90 || 228 || 864 || 1260 || 2484 |- |3. || ஒளடவ ஒளடவம் || 15 || 90 || 225 || 570 || 2160 || 3150 || 6210 |- |4. || வக்கிர-சம்பூரணம் || 38 || 228 || 570 || 1444 || 5472 || 7980 || 15732 |- |5. || வக்கிர சாடவம் || 144 || 864 || 2160 || 5472 || 20736 || 30240 || 59616 |- |6. || வக்கிர ஒளடவம் || 210 || 1260 || 3150 || 7980 || 30240 || 44100 || 86940 |- | || மொத்தம் || 414 || 2484 || 6210 || 15732 || 59616 || 86940 || 171396 |- |} </center> பகுதியில் தாளத்தின் உறுப்புகளாகக் கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துருதம், இலகு, குரு, புலுதம் ஆகியவையும் அவற்றின் கால அளவுகளும் குறியீடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகத் துருவத்தில் வடிவு வட்டமதி என்றும், இலகுவின் வடிவு செங்கோல் என்றும், குருவின் வடிவு இளம் பிறை என்றும், புலுதத்தின் வடிவு படமெடுத்த நாகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர, சச்சபுட வெண்பா என்னும் தாளநூல், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் என்னும் மன்னரால் இயற்றப்பட்டது. இந்நூலில் 108 தாளங்களின் உறுப்புகள், கால அளவு போன்ற விவரங்கள் வெண்பா வடிவில் காணப்படுகின்றன. தாளத்திற்கு அனுத்ருதம், துருதம், இலகு, குரு, புலுதம், காகபதம் ஆகிய ஆறு உறுப்புகள் உண்டு. தாளத்தின் ஓர் எண்ணிக்கை அட்சரகாலம் எனப்படுகிறது. நான்கு அட்சர காலங்கள் கொண்டது ஒரு மாத்திரை இவற்றைப் பின்வருமாறு விளக்கலாம். ::{| !தாளத்தின் உறுப்பு !! தாளக்குறி !! கால அளவு |- |{{ts|vtt}}|அனுத்ருதம் || {{ts|vtt}}|U || ¼மாத்திரை<br>1 அட்சரகாலம் |- |{{ts|vtt}}|துருதம் || {{ts|vtt}}|O || ½ மாத்திரை<br>2 அட்சரகாலம் |- |{{ts|vtt}}|இலகு || {{ts|vtt}}|1 || 1 மாத்திரை<br>4 அட்சரகாலம் |- |{{ts|vtt}}|குரு || {{ts|vtt}}|8 || 2 மாத்திரை<br>8 அட்சரகாலம் |- |{{ts|vtt}}|புலுதம் || 1<br>8 || 3 மாத்திரைகள்<br>12 அட்சரகாலம் |- |{{ts|vtt}}|காகபதம் || {{ts|vtt}}|+ || 4 மாத்திரைகள்<br>16 அட்சரகாலம் |- |} இக்காலத்தில் முதல் மூன்று உறுப்புகளே எல்லாத் தாளங்களிலும் காணப்படுகின்றன. அனுத்ருதம் ஒரு தட்டு இதன் குறி U. துருதத்திற்கு ஒரு தட்டும் வீச்சும் இதன் குறி O. இலகுவிற்கு ஒரு தட்டும் 3 விரல் எண்ணிக்கையும் உண்டு; இதன் குறி 1. இலகுவில் திரிச்சிர இலகு, சதுர்ச்சிர இலகு, கண்ட இலகு, மிச்சிர இலகு, சங்கீரண இலகு ஆகிய ஐந்து வகைகள் உள்ளன. இவற்றை 3 | 4 | 1 | 5 | 9 என அட்சரகால வேறுபாடுகளைக் காட்டும் முறையில் எழுதலாம். இவற்றுக்கு ஒரு தட்டும் முறையே 2,3,4,6,8 ஆகிய விரலெண்ணிக்கைகளும் உள்ளன. அட்சர காலம் பின்வருமாறு குறியீடு செய்யப்படுகிறது. ::{| |எ-டு. || ப—½ அட்சரகாலம் || பா;;-4 அட்சரகாலம் |- | || ப—1 „ || பா;;-5 அட்சரகாலம் |- | || பா—2 „ || பா;;-6 „ |- | || ப;;—2 „ || |- | || ப;;—1 „ || |- |} இக்காலத்தில் துருவதாளம், மட்டிய தாளம், உருபக தாளம், சம்பைதாளம், திரிபுடைதாளம், அடதாளம், ஏகதாளம் ஆகிய 7 தாளங்களே பழக்கத்தில் இருக்கின்றன. இந்த 7 தாளங்களும் இவற்றுடன் இலகுவின் வகைகளும் சேர்ந்து 7 × 5 = 35 தாளங்களாகின்றன. இலகுவைத் தவிர ஏனைய தாள உறுப்புகள் திச்சிரகதி, சதுர்ச்சிரகதி, கண்டகதி, மிச்சிரகதி ஆகிய கதி வேறுபாடுகள் கொண்டனவாக இருப்பதால், 35 தாளங்களும் இந்த 5 தாள உறுப்புகளுடன் சேர்ந்து 35 ×5 = 175 தாளங்களாகின்றன. தாளமும் பாட்டும் ஒரே நேரத்தில்<noinclude></noinclude> 91w4ouuj1pymx6dkar9qp3mdzfs12ox பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/979 250 625248 1956862 1873550 2026-07-30T15:42:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|939|இசை}}</noinclude>தொடங்கினால் அது சம எடுப்பு என்றும், தாளத்திற்குப் பின் பாடல் தொடங்கினால் அது அனாகத எடுப்பு என்றும், தாளத்திற்கு முன் பாடல் தொடங்கினால் அது அதீத எடுப்பு என்றும் சொல்லப்படும். தாளம் அதன் போக்கின் அடிப்படையில் முதற் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என்று நான்கு வகைப்படுகின்றன. இந்த நான்கு கால வரிசைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் முதல் நடை (விளம்பகாலம்), வாரம் (மத்திமகாலம்), கூடை (துரித காலம்), திரள் (அதிதுரிதகாலம்) என்று குறிப்பிட்டனர். இக்காலத்தில் ஆதிதாளம், உரூபக தாளம், சாபு தாளம், சம்பை தாளம், ஏகதாளம் போன்ற தாளங்களே பழக்கத்தில் உள்ளன. கண்டசாதி அடதாளம் சில வருணங்களில் காணப்படுகிறது. இந்திய இசையில் ஒத்திசையின் அடிப்படைக் கருத்துக்களும் காணப்படுகின்றன. சுரங்களுக்கு இடையே இருக்கும் நட்பு அல்லது பகையின் அடிப்படையில் ஒத்திசை அமைந்துள்ளது. தொடர்பற்ற பல சுரங்களை ஒரே நேரத்தில் இசைத்தால் அது இனிமையாக இருக்க முடியும் என்றும், அவ்வாறு இனிமையாக ஒலிப்பதற்கு அச்சுரங்கள் பகைச்சுரங்களாக இருத்தல் கூடாது என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய இசைப் புலவர்கள் அறிந்திருந்தனர். சில சுரங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒலிக்கும். வேறு சில சுரங்கள் பொருந்தாமல் ஒலிக்கும். இந்தப் பொருத்த நியையை ‘இசையுணர் குறிநிலை’ என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். {{block_center|<poem>‘இணைகிளை பகை நட்பென்றிந் நான்கின்<br>இசைபுணர் குறிநிலை எய்தநோக்கி’ (சிலப். 8:33-34). நின்ற சுரத்திற்கு ஏழாம் சுரம் இணைச்சுரமாகும் எ-டு. ச-ப இணைச்சுரங்களாகும் (சரிரிககமமப 1 2 3 4 5 6 7). ரி-த இணைச்சுரங்களாகும் (ரிரிககமமபத 1 2 3 4 5 6 7). ‘இணை எனப்படுவது கீழும் மேலும் அணையத்தோன்றும் அளவின என்ப’ (சிலப். 8; 33 அடியார்க்கு நல்லார்) ஆரோசையில் இணைச்சுரங்கள் அமைவதைப் போல் அமரோசையிலும் இணைச்சுரங்கள் அமைகின்றன. (எ-டு). எ-டு. நி-க இணைச்சுரங்களாகும் (நிநிததபமமக 1 2 3 4 5 6 7). நின்ற சுரத்தினின்று ஐந்தாம் சுரம்-கிளைச்சுரம் அல்லது சுற்றம் எனப்படும். எ-டு. க- த கிளைச்சுரங்களாகும் (ககமமபத 1 2 3 4 5) ஆரோசை. ப-ரி கிளைச்சுரங்களாகும் (பமமககரி 1 2 3 4 5) அமரோசை.<br> நின்ற சுரத்திற்கு நான்காம் சுரம் நட்புச் சுரமாகும்.<br> எ-டு. ரி. ரி-ம நட்புச் சுரங்களாகும். (ரிரிககம 1 2 3 4) ஆரோசை.</poem>}}<noinclude></noinclude> swsmp7tpvwetslxklvoqjppnpnfix8a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/980 250 625249 1956863 1873555 2026-07-30T16:19:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|940|இசை}}</noinclude>{{block_center|<poem>த-ம நட்புச்சுரங்களாகும் (ததபமம 1 2 3 4) அமரோசை. நின்ற சுரத்திற்கு ஆறாம் சுரமும் மூன்றாம் சுரமும் பகைச் கரங்களாகும். எ-டு. ச-ம பகைச் சுரங்களாகும் (சரிரிககமம 1 2 3 4 5 6). க-ம பகைச் சுரங்களாகும் (ககமம 1 2 3).</poem>}} ::இணை, கிளை, நட்பு, பகை ஆகிய சுரத்தொடர்புகளைப் போல் வடமொழி நூலார் வாதி, சம்வாதி, அனுவாதி, விவாதி என்று சுரங்களின் தொடர்புகளை வகைப்படுத்தியுள்ளனர். சுரங்களுக்கு இடையே காணப்படும் இணை கிளை நட்பு பகை என்னும் தொடர்புமுறை, சோதிடத்தில் பன்னிரு இராசிகளில் கோள்களுக்குக் குறிப்பிடப்பட்டிருக்கும். தொடர்புகளைப் போன்று காணப்படுகிறது. சோதிட நூல் பன்னிரு இராசிகளும் 1 4 5 7 9 ஆகிய இடங்கள் சுபமான இடங்கள் என்றும், 2 3 6 8 11 ஆகியவை சுபமில்லாத இடங்கள் என்றும் கூறுகிறது. சோதிடக் கணக்கின் படி ஒரு கோள் நின்ற இராசியிலிருந்து ஐந்தாம் இடம் என்று கணக்கிடும்பொழுது நின்ற இராசியை ஒன்று எனக் கூட்டுகின்றனர், எ-டு. மேடத்திலிருந்து ஐந்தாமிடம் சிம்மம் ஆகிறது. ஆனால் இசை நூல்கள், நின்ற சுரத்திற்கு அடுத்த சுரத்திலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கிடுகின்றன. இசைக்கும் சோதிடத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பைப் பன்னிரு இராசி வீடுகளின் இடச் சிறப்புகளிலிருந்து அறியலாம். <center> எ-டு. ஒருகோள் நின்ற இராசியிலிருந்து {| |ஐந்தாமிடம் || புத்திர இடம்; || (சுபமான இடம்) |- |ஏழாமிடம் || களத்திர இடம்; || (சுபமான இடம்) |- |ஒன்பதாமிடம் || பிதா இடம் || (சுபமான இடம்) |- |நான்காமிடம் || மாதா இடம் || (சுபமான இடம்) |- |பதினொன்றாமிடம் || இலாப இடம் || (சுபமான இடம்) |- |ஆறாமிடம் || பகைவன் இடம் || (சுபமில்லாத இடம்) |- |எட்டாமிடம் || மரண இடம் || (சுபமில்லாத இடம்) |- |பன்னிரண்டாமிடம் || மோட்ச இடம் || இலய இடம் |- |} </center> ::பன்னிரு இராசி வீடுகளுக்கு அதிபதிகளும் அவர்களின் பகை நட்புத் தொடர்புகளும் இசைச் சுரங்களின் தொடர்புகளுக்குப் பொருந்துவனவாக இருக்கின்றன. இந்த இராசி வீடுகளில் இருக்கக் கூடிய கோள்களிடையேயும் பகை, நட்பு உறவுகள் உள்ளன.{{nop}}<noinclude></noinclude> n0k3266ct1yhduv3g2p0bk4xf4tprvi 1956864 1956863 2026-07-30T16:27:59Z Booradleyp1 1964 1956864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|940|இசை}}</noinclude>{{block_center|<poem>த-ம நட்புச்சுரங்களாகும் (ததபமம 1 2 3 4) அமரோசை. நின்ற சுரத்திற்கு ஆறாம் சுரமும் மூன்றாம் சுரமும் பகைச் கரங்களாகும். எ-டு. ச-ம பகைச் சுரங்களாகும் (சரிரிககமம 1 2 3 4 5 6). க-ம பகைச் சுரங்களாகும் (ககமம 1 2 3).</poem>}} ::இணை, கிளை, நட்பு, பகை ஆகிய சுரத்தொடர்புகளைப் போல் வடமொழி நூலார் வாதி, சம்வாதி, அனுவாதி, விவாதி என்று சுரங்களின் தொடர்புகளை வகைப்படுத்தியுள்ளனர். சுரங்களுக்கு இடையே காணப்படும் இணை கிளை நட்பு பகை என்னும் தொடர்புமுறை, சோதிடத்தில் பன்னிரு இராசிகளில் கோள்களுக்குக் குறிப்பிடப்பட்டிருக்கும். தொடர்புகளைப் போன்று காணப்படுகிறது. சோதிட நூல் பன்னிரு இராசிகளும் 1 4 5 7 9 ஆகிய இடங்கள் சுபமான இடங்கள் என்றும், 2 3 6 8 11 ஆகியவை சுபமில்லாத இடங்கள் என்றும் கூறுகிறது. சோதிடக் கணக்கின் படி ஒரு கோள் நின்ற இராசியிலிருந்து ஐந்தாம் இடம் என்று கணக்கிடும்பொழுது நின்ற இராசியை ஒன்று எனக் கூட்டுகின்றனர், எ-டு. மேடத்திலிருந்து ஐந்தாமிடம் சிம்மம் ஆகிறது. ஆனால் இசை நூல்கள், நின்ற சுரத்திற்கு அடுத்த சுரத்திலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கிடுகின்றன. இசைக்கும் சோதிடத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பைப் பன்னிரு இராசி வீடுகளின் இடச் சிறப்புகளிலிருந்து அறியலாம். <center> எ-டு. ஒருகோள் நின்ற இராசியிலிருந்து {| |ஐந்தாமிடம் || புத்திர இடம்; || (சுபமான இடம்) |- |ஏழாமிடம் || களத்திர இடம்; {{gap}}|| (சுபமான இடம்) |- |ஒன்பதாமிடம் || பிதா இடம் || (சுபமான இடம்) |- |நான்காமிடம் || மாதா இடம் || (சுபமான இடம்) |- |பதினொன்றாமிடம்{{gap}} || இலாப இடம் || (சுபமான இடம்) |- |ஆறாமிடம் || பகைவன் இடம் || (சுபமில்லாத இடம்) |- |எட்டாமிடம் || மரண இடம் || (சுபமில்லாத இடம்) |- |பன்னிரண்டாமிடம் || மோட்ச இடம் || இலய இடம் |- |} </center> ::பன்னிரு இராசி வீடுகளுக்கு அதிபதிகளும் அவர்களின் பகை நட்புத் தொடர்புகளும் இசைச் சுரங்களின் தொடர்புகளுக்குப் பொருந்துவனவாக இருக்கின்றன. இந்த இராசி வீடுகளில் இருக்கக் கூடிய கோள்களிடையேயும் பகை, நட்பு உறவுகள் உள்ளன.{{nop}}<noinclude></noinclude> b08p6h6g3z389mx5m1pgry1s3ajvaud பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/981 250 625250 1956869 1873558 2026-07-31T04:33:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|941|இசை}}</noinclude>{| class="wikitable" |- |மீனம்<br> (நி¹)<br> பகை <br>(10) || மேடம் <br>(நி²)<br> நட்பு<br> (11) || இடபம் <br>ச<br> நின்ற சுரம் <br>(12) || மிதுனம் <br>ரி¹ <br><br>(1) |- |த² <br>இணை <br>(9) || || || கடகம்<br> ரி²<br> (2) |- |மகரம்<br> த¹ <br>பகை <br>(8) || || || சிம்மம் <br>க¹ <br>பகை <br>(3) |- |தனுசு <br>ப <br>இணை <br>(7) || விருச்சிகம் <br>ம² <br>பகை <br>(6) || துலாம் <br>ம¹<br> கிளை <br>(5) || கன்னி <br>க² <br>நட்பு <br>(4) |- |} <b>இசைக்கருவிகள்</b>: உலகில் ஒலி எழுப்பக்கூடிய எப்பொருளையும் இசைக் கருவியாக்க முடியும். ஆனால், இசையோடு தொடர்பு கொண்ட கருவிகள் மட்டிலுமே இசைக் கருவிகள் எனப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்கள் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். எலும்புகளினாலும் மரத்தின் அடிப்பாகத்தினாலும் பல விதமான இசைக் கருவிகள் செய்து வந்தனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய குகைச் சுவர்ச் செதுக்குச் சித்திரங்கள், பிரான்சின் தென்பகுதியில் உள்ள இலெ திராய் பிரெரெ (Les Trois Freres) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சரித்திரங்களுள் ஒன்று விலங்கின் தோலைப் போர்த்திக் கொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவன் குழல் இசைப்பதைக் காட்டும் சித்திரம் ஆகும். தொடக்கக்கால மனிதன் சடங்குகளுக்கு இசைக் கருவிகளைப் பயன்படுத்தினான் என்பது இதிலிருந்து தெரிகிறது. மிகத் தொன்மை வாய்ந்த காலங்களில் இசைக் கருவிகள், மிகுந்த வன்மையான ஒலி எழுப்புவனவாகவே அமைந்திருந்தன. மனிதனின் நாகரிகம் வளர வளரப் பல்வேறு வகையான இசைக்கருவிகள் தோன்றின. உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக்கருவிகளுக்கும் அடிப்படையான இசைக்கருவிகள் கிழக்கு நாடுகளில்தாம் தோன்றின. பண்டைத் தமிழகத்தில் இசைக் கருவிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவை தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் எனப்படும். இந்நான்கு வகைக் கருவிகளும் சேர்ந்து இசைக்கும் பொழுது இசையை மிடற்றினால் பாடுபவரின் ஒலியுடன் சேர்ந்து ‘பஞ்சமாசத்தம்’ எனப்பட்டது. பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி முதலியன தோற் கருவிகள். வங்கியம் கொம்பு, தாரை, குழல் (குறுங்குழல், நெடுங்குழல்) காளம், சங்கு முதலியன துணைக்கருவிகள். யாழ், வீணை, கின்னரி (கின்னரம்) முதலியவை நரம்புக் கருவிகள். கைமணி, தாளம், கஞ்சு தாளம், கொண்டி (கொடி) முதலியன கஞ்சக் கருவிகள், பஞ்சமரபு என்னும் பண்டைய இசைத் தமிழ் நூல், பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி என்று குறித்துள்ளது. மேற்குறிப்பிட்ட வகைப்படுத்தல்களையொட்டிய மேனாட்டு இசைக் கருவிகளும், இசைக்கருவிகளினின்று எழும் ஒலிக்கேற்ப ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ::<b>இடியோபோன்கள்</b>: தானே ஒலி எழுப்பக் கூடியவை (Idiophones). ::<b>காற்று ஒலிக் கருவிகள்</b>: ஏரோபோன்கள் (Aero-<noinclude></noinclude> 6lqc71qy1o8sve2bmlt1rlzbajpmxmf 1956870 1956869 2026-07-31T04:35:56Z Booradleyp1 1964 1956870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|941|இசை}}</noinclude><center> {| class="wikitable" style="text-align:center; |- |மீனம்<br> (நி¹)<br> பகை <br>(10) || மேடம் <br>(நி²)<br> நட்பு<br> (11) || இடபம் <br>ச<br> நின்ற சுரம் <br>(12) || மிதுனம் <br>ரி¹ <br><br>(1) |- |த² <br>இணை <br>(9) || || || கடகம்<br> ரி²<br> (2) |- |மகரம்<br> த¹ <br>பகை <br>(8) || || || சிம்மம் <br>க¹ <br>பகை <br>(3) |- |தனுசு <br>ப <br>இணை <br>(7) || விருச்சிகம் <br>ம² <br>பகை <br>(6) || துலாம் <br>ம¹<br> கிளை <br>(5) || கன்னி <br>க² <br>நட்பு <br>(4) |- |} </center> <b>இசைக்கருவிகள்</b>: உலகில் ஒலி எழுப்பக்கூடிய எப்பொருளையும் இசைக் கருவியாக்க முடியும். ஆனால், இசையோடு தொடர்பு கொண்ட கருவிகள் மட்டிலுமே இசைக் கருவிகள் எனப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்கள் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். எலும்புகளினாலும் மரத்தின் அடிப்பாகத்தினாலும் பல விதமான இசைக் கருவிகள் செய்து வந்தனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய குகைச் சுவர்ச் செதுக்குச் சித்திரங்கள், பிரான்சின் தென்பகுதியில் உள்ள இலெ திராய் பிரெரெ (Les Trois Freres) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சரித்திரங்களுள் ஒன்று விலங்கின் தோலைப் போர்த்திக் கொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவன் குழல் இசைப்பதைக் காட்டும் சித்திரம் ஆகும். தொடக்கக்கால மனிதன் சடங்குகளுக்கு இசைக் கருவிகளைப் பயன்படுத்தினான் என்பது இதிலிருந்து தெரிகிறது. மிகத் தொன்மை வாய்ந்த காலங்களில் இசைக் கருவிகள், மிகுந்த வன்மையான ஒலி எழுப்புவனவாகவே அமைந்திருந்தன. மனிதனின் நாகரிகம் வளர வளரப் பல்வேறு வகையான இசைக்கருவிகள் தோன்றின. உலகில் இசைக்கப்படும் எல்லா இசைக்கருவிகளுக்கும் அடிப்படையான இசைக்கருவிகள் கிழக்கு நாடுகளில்தாம் தோன்றின. பண்டைத் தமிழகத்தில் இசைக் கருவிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவை தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் எனப்படும். இந்நான்கு வகைக் கருவிகளும் சேர்ந்து இசைக்கும் பொழுது இசையை மிடற்றினால் பாடுபவரின் ஒலியுடன் சேர்ந்து ‘பஞ்சமாசத்தம்’ எனப்பட்டது. பேரிகை, படகம், இடுக்கை, உடுக்கை, மத்தளம், சல்லி, கரடி முதலியன தோற் கருவிகள். வங்கியம் கொம்பு, தாரை, குழல் (குறுங்குழல், நெடுங்குழல்) காளம், சங்கு முதலியன துணைக்கருவிகள். யாழ், வீணை, கின்னரி (கின்னரம்) முதலியவை நரம்புக் கருவிகள். கைமணி, தாளம், கஞ்சு தாளம், கொண்டி (கொடி) முதலியன கஞ்சக் கருவிகள், பஞ்சமரபு என்னும் பண்டைய இசைத் தமிழ் நூல், பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி என்று குறித்துள்ளது. மேற்குறிப்பிட்ட வகைப்படுத்தல்களையொட்டிய மேனாட்டு இசைக் கருவிகளும், இசைக்கருவிகளினின்று எழும் ஒலிக்கேற்ப ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ::<b>இடியோபோன்கள்</b>: தானே ஒலி எழுப்பக் கூடியவை (Idiophones). ::<b>காற்று ஒலிக் கருவிகள்</b>: ஏரோபோன்கள் (Aero-<noinclude></noinclude> 2rvfa6hu7wuvl2lpndhtpmtrk13c7kp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/982 250 625252 1956871 1873591 2026-07-31T04:44:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|942|இசை}}</noinclude>phones) சாக்சோபோன், மவுத்து ஆர்கன், பைப்பு, ஆர்மோனியம். ::<b>மெம்பரபோன்கள்</b>: தோற்கருவிகள், திரம் (Drum). ::<b>கார்டோ போன்கள்</b>: (Chordophones) நரம்புச் கருவிகள், இலியூட்டு, இலயர், ஆர்ப்பு. ::<b>எலக்டிரோபோன்கள்</b>: மின் உதவியால் ஒலியை மிகுதியாகக் கொடுக்கும் கருவிகள். இசைக்குரிய கால அளவுகளைத் தீர்மானிப்பது தாளமே ஆகும். தாளம் முறைமாறினால் இசை மாறும். இசைக்குத் தாளமே உயிர் எனப்படும். இசைபாடுவோரே நம் கைகளினால் தாளம் போடுவதற்கு மாறாக இசைக்கருவியின் உதவியினால் தாளம் போடத் தொடங்கினர். தோற்கருவிகள் இசைக்குத் துணையாகவும் செய்திகளை ஓரிடமிருந்து மற்றோரிடம் அனுப்புவதற்கும் பயன்பட்டன. அரசர்களின் ஆணைகள், கொள்ளைக்காரர்களின் வருகை போன்ற செய்திகள் தோற் கருவிகளால் அறிவிக்கப்பட்டன. சில தோற் கருவிகள் தாமே முழங்குவன (தமருகம், உடுக்கை போன்றவை). குச்சியினால் ஒரு பக்கம் அடித்துத் தாக்குவதாலும் மறுபக்கம் தடவி வருடி உராய்வதாலும் முழங்குவது மற்றொரு வகை. (பெருமாள் மாடு வாத்தியம்). இக்கருவிகளை ஒரு முகமுடைய கருவிகள் என்றும் பலமுகமுடைய கருவிகள் என்றும் பிரித்துக் கூறலாம். உடுக்கை, பஞ்சமுக வாத்தியம் போன்ற தோல் மட்டில் பரப்பப்பட்ட மையமுடைய வெவ்வேறு வகையான முகமுடைய கருவிகள் என்றும் அவற்றை வகைப்படுத்தலாம். மிருதங்கம், தவில், கஞ்சிரா போன்றவை இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. நகரா, பேரி போன்றவை வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தோற்கருவிகளுள் முழவு, வன்மை மென்மை சமம், முதல், இடை, கடை, உத்தமம், மத்திமம், அதமம், நாள், காலம், வீரம், அகம், அகப்புறம், புறம், புறப்புறம், பன்மை என்னும் 17 முறைமைகள் உடையதாகும். முழவுகளின் பெயர்களைப் பஞ்ச மரபு பின்வருமாறு தொகுத்துரைக்கிறது. பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தாவில் தடாரி (தவில்), தடாகி (தவில்), அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்கு உபாங்கி (தொக்கவுபாங்கம்) துடி, பெரும்பறை ஆகிய முப்பதும் தோற் கருவிகளான முழவுகளாகும். இவை அக முழவு, அகப்புறமுழவு, புற முழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும் (சிலம்பு-உரை). முழவுகள் வன்மை, மென்மை, சமம், தலை, இடை, கடை, வீரம் என ஏழு வகைப்படும். இவற்றுள் வன்மைக் கருவிகள் நிசாளம், துடுமை, முரசு, பேரிகை, தேசி, திமிலை, குடமுழா, பாகம், (தப்பு) கணப்பறை, அடக்கப்பறை, சிறுபறை, மொந்தை, பெரும்பறை, நாழிகைப்பறை, துடி என்னும் பதினைந்தும் ஆம் எனக் கூறுவர். தக்கை, குடுக்கை, தகுணிச்சம், தண்ணுமை, உடுக்கை, பாங்கி, (விரலேறு பாங்கி), முழவு (அந்தரி முழவு), சந்திரவளையம், மொந்தை தடாரி, பைந்தொழில் தடாரி, தூம்பு, (கண்விடு தூம்பு) தமருகம் என்னும் பன்னிரண்டும் மென்மைக் கருவிகள். மத்தளம், சல்லி, படகம், கரடி என்னும் நான்கும் சமக் கருவிகள். கூத்த நூல் முழவை அகம், புறம், அகப்புறம், புறப்புறம், பன்மை, நாள் என ஆறாகக் கூறுகிறது. மத்தளம், சல்லி, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழவம் என்னும் ஏழும் தலைக் கருவிகள் (உத்தமக் கருவிகள்) ஆகும். தண்ணுமை, தக்கை, உடுக்கை, தகுணிச்சம் கண்விடு தூம்பு, விரலேறு, தமருகம், தடாரி, துடி, உபாங்கி, அமுதகுண்டலி, அந்தரி முழவு ஆகிய பன்னிரண்டும் இடைக்கருவிகள் (மத்திமமான கருவி). பறை, பாகம், சிறுபறை, அடக்கம் என்னும் நான்கும் அதமமான கடைக்கருவி. முரசு, நிசாளம், திமிலை, துடுமை என்னும் நான்கும் பன்மை முழவு. நாழி கைப்பறை என்பது நாள் முழவு. துடி என்பது காலை முழவு. மத்தளத்திற்கு அதிதேவதை நான்முகன், சல்லிக்கு அதிதேவதை நாராயணன், ஆவஞ்சிக்கு அதிதேவதை உருத்திரன். இடக்கையினால் வினைக் கிரியைக்கு இசைக்கப்படுவதால் இடக்கை எனப் பெற்றது. முதற் கருவிகள் ஏழும் பிரமன், விட்டுணு, உருத்திரன் ஆகியோர் மூவருக்கும் இசைக்கப்படும். இடைக்ககருவிகள் பன்னிரண்டும் வயிரவன், முருகன், துர்க்கை ஆகிய மூவருக்கும் இசைக்கப்படும். காளி, சாத்தன், காடுகாள் என்னும் மூவருக்கும் கடைக் கருவிகள் இசைக்கப்படும். மூவேந்தருக்கும் வீர முழவுகள் ஒலிக்கப்படும். முழவுகள் எந்த மரங்களினால் செய்யப்பட வேண்டும் என்பதும் அவற்றின் அளவுகள், அவற்றினின்று பிறக்கும் தாளச் சொற்கள், அச்சொற்களுக்குப் பிறப்பிடமான எழுத்துகள் ஆகியனவும் பஞ்ச மரபில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. நரம்புக்கருவிகள் மீட்டுக்கருவிகள், வில் கருவிகள் என இருவகைப்படும். யாழ், வீணை, கோட்டு வாத்தியம், சிதார், சரோது, சுரசிங்காரம், மாண்ட-<noinclude></noinclude> oev0escuf7e1u7h3dl7servgj9uq4xn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/983 250 625286 1956872 1873721 2026-07-31T04:49:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|943|இசை}}</noinclude>லின், சிதார், ஆர்ப்டி போன்ற சுருவிகளை மீட்டுக் கருவிகளாகக் கூறலாம். வயலின், சாரங்கி, தில்ரூபா போன்ற கருவிகளை வில் கருவிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். குழல், கிளாரினெட்டு, நாகசுரம், சுந்தரி, செனாய், சங்கு, கொம்பு போன்ற கருவிகள் துளைக்கருவிகள் ஆகும். இசைக்கருவிகள் வேறு அடிப்படைகளிலும் வகைப்படுத்தப்படலாம். தம்புரா, ஒத்து, தோனை, ஏக்தார் போன்றவை சுருதிக் கருவிகள், இக்காலத்தில் சில இசைக்கருவிகள் இசை நிகழ்ச்சிகளில் முதன்மையான இசைக் கருவிகளாக அமைகின்றன, (எ-டு. வயலின், வீணை, நாகசுரம், குழல், கோட்டு வாத்தியம், சிதார்). கடம், தவில், கஞ்சிரா போன்ற கருவிகள் இசையின் துணைக் கருவிகளாக மட்டிலுமே இசைக்கப்படுகின்றன. குடமுழா, திருச்சின்னம், பூரி, சங்கு, பஞ்சமுக வாத்தியம், துந்துபி, தாரை, செண்டை, சுத்தமத்தளம், கனகதப்பட்டை போன்ற கருவிகள் கோவில்களில் மட்டிலுமே இசைக்கப்படுகின்றன. தந்திபானை, கும்மடி, வில்லடிக் கருவி, சக்கை, சிப்ளா போன்றவை நாட்டுப் புறங்களில் இசைக்கப்படுகின்றன. கிளாரினெட்டு என்னும் மேனாட்டு இசைக்கருவி நம் நாட்டில் எல்லா இடங்களிலும் இசைக்கப்படுகிறது. தாளக் கருவிகளுள் மோர்சிங்கு, சலதரங்கம் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இக்காலத்தில் நம்நாட்டில் விளங்கும் தோற் கருவிகளுள் மிருதங்கம், தபலா, தோலக்கு, தவில் போன்றவைகளைக் குறிப்பிடலாம். தென்னிந்தியாவில் பெரும்பாலும் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் தோற்கருவி மிருதங்கம் ஆகும். இக்கருவியின் அமைப்பு இதில் இனிமையான ஒலியை எழுப்பக்கூடிய வகையில் உள்ளது. இதனைப் போன்றே தபலாவும் இனிமையான ஒலியை எழுப்பவல்லது. இவை இசைக்கு மட்டிலுமன்றி நடனத்திற்கும் தாளக்கருவிகளாக இருக்கின்றன. இசைக்கருவிகளை அவற்றின் ஒலி எல்லைக்கு ஏற்றவாறு பல வகைகளாகப் பிரிக்கலாம். எ-டு. இரண்டரை ஒலி எல்லைக் கருவி (குழல்) மூன்றரை ஒலி எல்லைக் கருவி (வீணை) நான்கு ஒலி எல்லைக் கருவி (வயலின்). இந்திய இசைக்கருவிகளில் எல்லா ஒலிக் குறிப்புகளையும் கமகங்களையும் இசைக்க முடியும். மேனாட்டு இசைக் கருவிகளை (பியானோ, ஆர்கன், ஆர்ப்பு) ஏழரை ஒலி எல்லை வரையில் இசைக்க முடிந்தாலும் அவற்றில் கமகங்களை இசைக்க முடியாது. நம்நாட்டு இசைக் கருவிகளுள் நாகசுரம், குழல் போன்றவைகளில் ஒரே நேரத்தில் ஒரு சுரத்தை மட்டிலுமே இசைக்க முடியும். ஆனால் வீணை, கோட்டு வாத்தியம், ஆர்மோனியம் போன்ற கருவிகளில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சுரங்களை இசைக்க முடியும். வீணை, கோட்டு வாத்தியம், ஆர்மோனியம் போன்ற கருவிகளில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சுரங்களை இசைக்க முடியும். வீணை, கோட்டுவாத்தியம், மகுடி, நெடுங்குழல் ஆகியவற்றில் சுருதியும் இசையுடன் ஒலிக்கும். வயலின், குழல் போன்ற கருவிகளில் சுருதியையும் உடன் இசைக்க முடியாது. <b>இசையியல்</b> என்பது இசையைப் பற்றி அறிவியல் ஆய்வு முறையில் கற்கும் துறை ஆகும். இது இக்காலத்தில் ஒரு தனித் துறையாக அமைந்துள்ளது. இசைப் புலவர்கள், இசைக் கருவிகள், இசை வகை, இசைக் குறியீடு போன்றவைகள் இசையியல் (Musicology) என்னும் துறையினுப்பட்ட பொருள்களாகும். பிரெடரிக் கிரிசாண்டர் (Friedrich Chrysander) என்னும் செருமானிய இசை வல்லுநர், கி.பி. 1863-இல் இசையியல் (Musicolgy) என்னும் சொல்லை (Musikwissenschaft) முதன்முதல் உருவாக்கினார். அறிவியல் துறைகளைப் பயிலும் முறையில் தொடக்கம், வளர்ச்சி என்ற படிப்படியான நிலைகளில் இசைத் துறையையும் பயின்று, உலகெங்கிலுமுள்ள இசைப் புலவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, விரிவான முறையில் இசையியலை அமைக்க வேண்டும் என்று கிரிசாண்டர் முயற்சி செய்து, அதில் வெற்றி கண்டார். அவர் பாக்கு (Bach) ஆண்டெல் (Handel) போன்ற இசைப் புலவர்களின் இசைப் படைப்புகனை முழுமையாகவும் ஆழ்ந்தும் ஆராய்ச்சி செய்தார். இவரைப் பின்பற்றிப் பல இசை வல்லுநர்கள், இசை ஆராய்ச்சிகள் நடத்தி இசைக் களஞ்சியம் உருவாக்கினர். இது ஆக்சுபர்டு இசை அகராதி (Oxford Dictionary of Music) என இரு தொகுதிகளாக வெளிவந்தது. உல்பிரிட்சு (Wool bridge) என்பவர் இதனை 1901-ஆம் ஆண்டு வெளியிட்டார். கிடோ ஆட்லர் (Guide Adler) என்பவர், ‘ஆசுத்திரியாவின் இசை நினைவுச் சின்னங்கள்’ (Monuments of Music in Austria) என்னும் பெயரில் 80 இசையியல் தொகுதிகளைக் கி.பி. 1894-இல் வெளியிட்டார். இவை உலகெங்கிலும் இசைக் களஞ்சியம் இயற்றும் கலைக்குத் தொடக்கமாயின. இக்காலத்தில் இன இசையியல் (Ethnomusicolgy) என்னும் துறை, மேனாடுகளில் பெருமளவில் இசைக் கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகிறது. இது மானிடவியல், சமூகவியல், மொழியியல், இயற்பியல் போன்ற துறைகளுடன் நெருக்கமான தொடர்புடையதாகும். பன்னாட்டு இசையின் வகைகள், முறை, தொடக்கம், பன்னாட்டு இசைக் கருவிகள், இசை வல்லுநர்கள் ஆகியவை பற்றிய முழுமையான அறிவு<noinclude></noinclude> 5oiunid4vy16hqgppyc1xsmqmkkptrs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/984 250 625287 1956873 1949515 2026-07-31T04:51:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசை|944|இசை}}</noinclude>பெற்றவர்கள் இசையியல் வல்லுநர் (Musicologist) என்று குறிப்பிடப்படுகின்றனர் <b>துணை நூல்கள்</b>:<br> <b>ஆபிரகாம் பண்டிதர்,</b> கருணமிருத சாகரம், தஞ்சாவூர், 1917.<br> அறிவனார், பஞ்சமரபு. (பதி.) வெ.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், ஈரோடு, 1975<br> <b>தனபாண்டியன், து.ஆ.,</b> புதிய இராகங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.<br> <b>Sambamurthy, P., A</b> Practical Course in Karnatic Music, Indian Music Publishing House, Madurai, 1982. <section end="இசை"/> {{nop}}<noinclude></noinclude> gxcrcpddbzuysw1yv3du7twgky04b89 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1956856 1956786 2026-07-30T14:45:36Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1956856 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 nsz2pqgkt0rrfkih1lytkor9v02sd40 1956866 1956856 2026-07-30T17:59:45Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1956866 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை......|சர்க்கரை......]] 664-664 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 foualrccclul33vbp9u6i2w5udiegp3 பயனர்:Bharathblesson/test 2 645148 1956895 1956838 2026-07-31T08:52:41Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1956895 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650- {{Multicol-end}} ha178rkbr6fomgdfdu04jpgw7nwoebq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/666 250 651148 1956842 2026-07-30T13:04:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னேற்றம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் கரும்பு உற்பத்தியில் காணப்பட்ட மிகப் பெரிய முன்னேற்றமாகும். இந்தியா சர்க்கரை உற்பத்தியில் நான்காம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்க்கரைத்‌ தொழில்‌|640|சர்க்கரைத்‌ தொழில்‌}}</noinclude>னேற்றம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் கரும்பு உற்பத்தியில் காணப்பட்ட மிகப் பெரிய முன்னேற்றமாகும். இந்தியா சர்க்கரை உற்பத்தியில் நான்காம் இடத்தை அடைந்துள்ளது. முதல் மூன்று இடங்களை உருசியநாடு (U.S.S.R.), பிரேசில் (Brazil), கியூபா (Cuba) போன்ற நாடுகள் வகிக்கின்றன. கரும்பு விளைவு செய்யும் நிலப்பரப்பளவில் இந்தியா முதலிடத்தையும், கியூபா, ஆசுத்திரேலியா அடுத்த இடங்களையும் வகிக்கின்றன. உலக சர்க்கரை உற்பத்தியில் 60 விழுக்காடு சர்க்கரை கரும்பிலிருந்தும், மீதி 40 விழுக்காடு கிழங்குகளிலிருந்தும் கிடைக்கிறது. இந்தியா, கியூபா, சாவா, சீனாபோன்ற நாடுகளில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலேயே சர்க்கரை உற்பத்தி செய்தனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19–ஆம் நூற்றாண்டு வரை கரும்பு விளைவு செய்தலுக்கு வட, தென் அமெரிக்கா, ஓசியானியா (Occania) தீவுகள் மிக விரைவில் தங்கள் விளைநிலங்களைப் பெருக்கின. இதன் விளைவாகச் சர்க்கரை ஆலைகளும் உருவாக்கப்பட்டன. உலகக் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் கி.பி. 1880க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக வீரியக் கரும்பு கூடுதல் விளைச்சலைப் பல நாடுகள் பெறவழிவகுத்தன. 1979–ஆம் ஆண்டில் உலகில் கரும்பு உற்பத்தி செய்த விளைநிலங்கள் 13.4 மிலியன் எக்டேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 5.8 மிலியன் எக்டேர் ஆசிய நாடுகளிலும், 2.5 மிலியன் எக்டேர் தென் அமெரிக்காவிலும் உள்ளன. பல நாடுகளில் கரும்புப் பயிர் செய்யும் நிலங்கள் மொத்த விளைநிலங்களின் பரப்பில் 5 முதல் 6 விழுக்காடாக உள்ளன. இந்தியாவின் விளை நிலப்பரப்பு 1.6 விழுக்காடு <b>இந்தியாவில் கரும்புத் தொழில்:</b> கரும்பின் பிறப்பிடம் இந்தியாவாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் கரும்பு விளைவு செய்யப்பட்டு வந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாமன்னர் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபொழுது கிரேக்க வீரர்கள் கரும்பைத் ‘தேன் நாணல்’ என்று குறிப்பிட்டதாக வரலாறு சொல்லுகிறது. அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து கரும்பை எடுத்துச் சென்று மேல்நாடுகளில் பரப்பினார் என்றும் கூறுவார்கள். எல்லா வகையான கரும்பு வகைகளும் இந்தியாவிலிருந்து சீனா, கிழக்கு, மேற்கு நாடுகளுக்குப் பரவினவெனக் குறிப்புகள் உள்ளன. கம்பஇராமாயணத்தில் விசுவாமித்திர முனிவர் உருவாக்கிய திரிசங்கு சொர்க்கத்தில் கரும்புப் பயிர் உருவானதென்று கம்பர் பாடியுள்ளார். புத்த இலக்கியங்களில் கரும்புப் பற்றிய குறிப்புகள் மிகுதியாக உள்ளன. 75 முதல் 80 விழுக்காடு வரை வட இந்தியாவில் அமைந்துள்ள விளைநிலங்களில் கரும்பு விளைவு செய்கின்றனர். தமிழ் நாட்டின் தென் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் கரும்பு பயிர் செய்யப்பட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் சம்மு, காசுமீரம், தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் கரும்பு பயிர் செய்யப்படுகின்றது. இந்தியாவில் பழங்காலத்தில் பயிரிட்டு வந்த கரும்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (i) மித வெப்ப வடக்குப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுக் குறைந்த விளைவு கொடுத்து வந்த சன்ன வகை, (2) மிக்க வெப்பமான தென் பகுதிகளில் பயிரிடப்பட்ட பருமனான சர்க்கரைச் சத்து மிகுந்த உயர் வகைக் கரும்பு. கரும்பு வகைகள் எளிதாகப் பூப்பதற்கும், அதனின்று வீரிய விதை உருவாவதற்கும் துணைசெய்யும் தட்ப வெப்ப நிலையைக் கொண்ட கோயம்புத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு 1912–ஆம் ஆண்டு மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்கு மையம் தொடங்கப் பெற்றது. கோவைக் கரும்பு மேம்பாட்டு நிலையம் செய்து காட்டிய நாணற் கரும்பை மேன்மையாக்குதல் என்ற முன்ணேரடி வெற்றி வழியை உலகெங்குமுன்ன மற்றக்கரும்பு ஆராய்ச்சி நிலையங்களும் பின்பற்றத் தொடங்கின. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இந்தியாவிலிருந்து முற்றுரிமை அடிப்படையில் ஏற்றுமதியான சர்க்கரை முற்றிலுமாக நின்று போய் அதற்கு மாறாகத் தரம் குறைந்த வெளிநாட்டு சர்க்கரை 1937–ஆம் ஆண்டுவரை பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் சர்க்கரைத் தொழில் 1903–ஆம் ஆண்டில் முதன் முதலாகப் பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாகாணங்களில் சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டதிலிருந்து உருவாயிற்று. இந்தியாவில் 1932–இல் 32 சர்க்கரை ஆலைகள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன. அதே ஆண்டில் சர்க்கரைத் தொழிலுக்கு வரிப்பாதுகாப்பு அளிக்கப் பட்டதையொட்டிச் சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 1932–ஆம் ஆண்டில் 137 ஆகவும், 1950–51 இல் 138 ஆகவும் காணப்பட்டன. 1950–51–இல் சர்க்கரை உற்பத்தி 11.34 இலட்சம் கண்டியாக இருந்தது, 1977–78–ஆம் ஆண்டில் 64.62 இலட்சம் டன் ஆகவும் உயர்ந்து அதற்குப் பிறகு சர்க்கரை உற்பத்தி குறையத் தொடங்கியது. இதற்கு மூல காரணம் கரும்பு உற்பத்தி செய்யும் நிலங்களின் பரப்பளவு குறைவாகும். எனவே 1978–79–இல் சர்க்கரை உற்பத்தி 58.64 இலட்சம் கண்டியாக இருந்தது, 38.59 இலட்சம் கண்டியாக 1979–80இல் குறைத்து, 1980–81<noinclude></noinclude> kqsa82pxwnbsu5inj5zbe61dzw1e85f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/667 250 651149 1956843 2026-07-30T13:15:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "–இல் 51.48 இலட்சம் கண்டியாக உயர்ந்தது. 1981–82–இல் 84.38 இலட்சம் கண்டியாக உயர்ந்து 1982–83–இல் 82.32 இலட்சம் கண்டியாகவும், 1984–85–இல் 61.43 இலட்சம் கண்டியாகவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்க்கரைத் தொழில்‌|641|சர்க்கரைத் தொழில்‌}}</noinclude>–இல் 51.48 இலட்சம் கண்டியாக உயர்ந்தது. 1981–82–இல் 84.38 இலட்சம் கண்டியாக உயர்ந்து 1982–83–இல் 82.32 இலட்சம் கண்டியாகவும், 1984–85–இல் 61.43 இலட்சம் கண்டியாகவும் குறையத் தொடங்கியது. 1984–85–இல் 359 சர்க்கரை ஆலைகள் 75 இலட்சம் கண்டி உற்பத்தித் திறனைக் கொண்டு செயற்படுகின்றன. கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் 1960–ஆம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தின. முதல் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை 1933–இல் ஆந்திரப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு நாட்டில் 4 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் 1935–இல் தோன்றின. இந்தியாவில் 1981–82–இல் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 320 சர்க்கரை ஆலைகளில் 154 ஆலைகள் கூட்டுறவுத் துறை சார்ந்தவை. மொத்த சர்க்கரை உற்பத்தியில் 56 விழுக்காடு வரை கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் அளித்தன. தமிழ் நாட்டில் 1985–86-இல் 12 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் செயற்பட்டன. தமிழகம் நாளொன்றுக்கு 46,400 கண்டிகள் கரும்பு அரவை செய்யும் உரிமம் பெற்றுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறைச் சர்க்கரை ஆலைகளின் பிழிதிறன் மட்டும் நாளொன்றுக்கு 21.950 கண்டிகள். நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் 10 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி தமிழகத்தின் பங்காகும். நாட்டின் 1985–86–ஆம் ஆண்டுச் சர்க்கரை உற்பத்தியாகிய 69 இலட்சம் கண்டிகளில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 7 இலட்சம் கண்டிகளாகும் (Tons). <b>சர்க்கரைத் தொழிலின் வளர்ச்சி:</b> 1951–ஆம் ஆண்டில் அரசு அளித்த ஊக்கத்தின் விளைவாகக் கரும்பிற்குக் குறைந்த விலையும், சர்க்கரைக்கு உயர்ந்த விலையும் குறிப்பிடப்பட்டன. இதனால் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1951–52–ஆம் ஆண்டில் 15 இலட்சம் கண்டியாக உயர்ந்தது. அரசாங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் சர்க்கரைத் தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. அதனால் சர்க்கரை உற்பத்தி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. 1950க்குப் பிறகு நாட்டின் சர்க்கரை உற்பத்தி சராசரியாக 2 மிலியன் கண்டியாக இருந்தது. அரசு கொடுத்த ஊக்கத்தின் வாயிலாக 1960–61–ஆம் ஆண்டில் 3 மிலியன் கண்டியாக உயர்ந்தது. 1960–1970 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி மிக அதிகமாக உயர்ந்தது. வட இந்தியாவில் கரும்புப் பயிர் நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டபடியால் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து கிடைத்த சர்க்கரையின் அளவு மிகவும் உயர்ந்து காணப்பட்டது. 85 விழுக்காடு சாக்கரை மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலிருந்து 1936–இல் கிடைத்தது. அம்மாநிலங்கள் 1960–61–இல் 60 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி செய்தன. கடந்த 20 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகச் சர்க்கரைத் தொழில் மிக வேகமாக மகாராட்டிரம், ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னேறியதன் விளைவாக உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களிலிருந்து கிடைத்த உற்பத்தி 1980–81–இல் 25 விழுக்காடாகக் குறைந்தது. மகாராட்டிரத்தின் பங்கு 40 விழுக்காடாக உயர்ந்தது. உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களை விடத் தென் மாநிலங்களின் உற்பத்தி அதிகமாகவும், உற்பத்திச் செலவு குறைவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1977–78–இல் 6.5 மில்லியன் கண்டி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதிக உற்பத்தியின் காரணமாகச் சர்க்கரை விலை குறையவே சர்க்கரைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடற்ற வெளி அங்காடியில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை. உரூ. 2.30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தச் சர்க்கரையின் அளிப்பு 1978–79–இல் 9.2 மிலியன் கண்டியாக உயர்ந்திருந்தது. ஆனால் தேவை 7 மிலியன் கண்டியாக இருந்தது. செயற்கை ஏற்படுத்திய தட்டுப்பாடும், அரசாங்க அமைப்பில் காணப்பட்ட குறைபாடுகளும் சேர்ந்து 1979–80–இல் ஒரு கிலோ சர்க்கரை விலை உரூ. 8–லிருந்து உரூ. 11 வரை ஏறிவிட்டது. இதனால் சர்க்கரை நுகர்வு சாதாரண மனிதனைப் பெருமளவுக்குப் பாதித்தது. இதனால் அரசு சர்க்கரைக்கு இரட்டை விலை குறிக்க வேண்டியதாயிற்று. சர்க்கரை உற்பத்தியும் அளிப்பும் 1980–81 இலிருந்து ஒரே சீராக இருந்து வருகின்றன. சர்க்கரை உற்பத்தி 1981–82 இல் 8.4 மிலியன் கண்டியாக இருந்து 1982–83 இல் 8.2 மிலியன் கண்டியாகக் குறைந்தது. சர்க்கரை உற்பத்தி 1983-84, 1984–85–இலும் மறுபடியும் குறையத் தொடங்கி 6 மிலியன் கண்டியாக ஆயிற்று. <b>சர்க்கரைத் தொழில் சிக்கல்கள்:</b> சர்க்கரைத் தொழில் முன்னேற்றம் பல சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றது. அவற்றுள், கச்சாப் பொருள் பற்றாக்குறை, அரசாங்கக் கொள்கை, கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளிடையே போட்டி, நாட்டுச் சர்க்கரை உற்பத்தியால் போட்டி, கூடுதல் சர்க்கரை விலை, கரும்புப் பாகு, கரும்புச் சக்கை போன்றவற்றைப் பயன்படுத்துவதில் இடர்ப்பாடு ஆகியவை முக்கியமானவையாகும். <b>அ. கரும்புப் பற்றாக்குறை:</b> கரும்புச் சாகுபடியையே முழுமையாக நம்பியிருக்கும் சர்க்கரைத் தொழில் சரியான அளவு கரும்பு கிடைக்காததால் பாதிப்புக்குள்-<noinclude> <b>வா.க. 8 – 41</b></noinclude> bmgt3rozu3govly1tdsk4ojggu10nyg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/668 250 651150 1956844 2026-07-30T13:25:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளாகிறது. 151.7 மிலியன் கண்டியாக 1978–79–இல் இருந்த கரும்பு உற்பத்தி 1979–80–இல் 128.8 மிலியன் கண்டியாகக் குறைந்ததையொட்டி, சர்க்கரை உற்பத்தி 1977–78–இல் 58..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்க்கரைத்‌ தொழில்‌|642|சர்க்கரைத்‌ தொழில்‌}}</noinclude>ளாகிறது. 151.7 மிலியன் கண்டியாக 1978–79–இல் இருந்த கரும்பு உற்பத்தி 1979–80–இல் 128.8 மிலியன் கண்டியாகக் குறைந்ததையொட்டி, சர்க்கரை உற்பத்தி 1977–78–இல் 58.44 இலட்சம் கண்டியிலிருந்து 1978–79–இல் 38.59 இலட்சம் கண்டியாகக் குறைந்தது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் 1983–84–இல் ஏற்பட்ட வறட்சி காரணமாக மறுபடியும் சர்க்கரை உற்பத்தி குறைந்தது. உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காணப்படும் சர்க்கரை ஆலைகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருப்பதால், தங்களுக்குத் தேவையான கரும்பைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுகிறது. கரும்பு அளிப்பில் தட்டுப்பாடு உள்ளதால் விலையும் உயர்ந்து விடுகிறது. கரும்பு ஒரு சாகுபடிப் பயிராதலால் அதன் உற்பத்தி நாட்டின் மழை அளவையும், தட்பவெப்பநிலையையும் பொறுத்து அமைகிறது. மேலும் கரும்பின் உற்பத்தி பிற வேளாண் விளைபொருள்களின் விலையையும், அரசு குறிப்பிடுகின்ற கரும்பின் விலையையும் பொறுத்து அமைகிறது. கரும்பின் விலைக்கும் வெல்ல உற்பத்திக்கும் இடையே உள்ள உறவு அரசு விலை பற்றிய கொள்கையைப் பொறுத்து அமைகிறது. இதனால் வல்ல உற்பத்தி அதிகரிக்கின்றது. <b>சர்க்கரை உற்பத்திச் செறிவில் மாற்றம்:</b> சர்க்கரை உற்பத்தியில் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் செறிந்திருந்த ஆலைகள் 1960–இல் 10 விழுக்காடு உற்பத்தி செய்து வந்தன. சீரற்ற உற்பத்தி முறை உற்பத்திச் செலவில் மாற்றம் ஏற்படுத்தியது. கரும்பை வெட்டியவுடன் அதனைப் பயன்படுத்தாவிட்டால் இனிப்புச் சக்தி (Sucrose Content) குறைந்து விடுகிறது. எனவே புதிதாக அமைக்கப்படும் சர்க்கரை ஆலைகளைக் கரும்பு விளைநிலங்களுக்கு அருகிலேயே அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 60 விழுக்காடு வரை உற்பத்தி பீகார் செய்த உத்தரப் பிரதேசம், மாநிலங்கள் 1980–81–இல் 28 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி செய்தன. இதே நிலை நீடித்தால் சர்க்கரை உற்பத்தி வட மாநிலங்களை விட்டுப் பிற மாநிலங்களில் செறிந்து விடும் என்றும், போட்டியும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்கள். <b>கூட்டுறவுத் துறையின் பங்கு:</b> சாக்கரை ஆலைகள் அமைப்பதில் கூட்டுறவுத் துறை பெரும் பங்கேற்கின்றது. 32 இலட்சம் கண்டி (40 விழுக்காடு) சர்க்கரை 1977–78–இல், கூட்டுறவுத் துறையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்குக் காரணம் கூட்டுறவுத் துறையிலுள்ள சர்க்கரை ஆலைகள் உயர்ந்த பட்சக்கரும்பு அளிப்பைப் பெறுகின்றன. இதனால் பொதுத்துறை, தனியார் துறையிலுள்ள சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான கரும்பு கிடைப்பதில்லை. மேலும் கரும்பு சாகுபடியாளர்கள் யாவரும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் அங்கத்தினர்களாகப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணஉதவியும் அளிக்கப்படுகிறது. இறுதியில் சர்க்கரை ஆலைகளின் இலாபம் கரும்புச் சாகுபடியாளர்களுக்கிடையே பகிரப்படுகின்றது. <b>கரும்புச் சாகுபடியில் குறைவு:</b> சர்க்கரை உற்பத்தி நாட்டில் அதிகரிக்கக்கரும்பு சாகுபடியை மேம்படுத்திய பரப்பளவைக் கூட்ட வேண்டும். இந்தியாவில் கரும்பு உற்பத்தியும், கரும்பின் இனிப்புச் சக்தியும் (Sucrd&0 Content) மிகக் குறைவாகவே உள்ளன. இதனைத் தகுந்த விதத்தில் மாற்றி அமைத்தால்தான் சர்க்கரை ஆலைகளின் உற்பத்திச் செலவு குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது. <b>வெல்லம் (நாட்டுச் சர்க்கரை) உற்பத்தியினால் போட்டி:</b> 100 கண்டி கரும்பில் சர்க்கரை ஆலைகள் 10 கண்டி வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி செய்கின்றன. அதே அளவுக் கரும்பில் 7 கண்டி நாட்டுச் சர்க்கரையே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நிகர நட்டமே ஏற்படுகின்றது. நாட்டுச் சர்க்கரையின் உற்பத்தி அளவு குறைவாக இருந்தபோதிலும், சத்து மிகுந்த ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிட்ட அளவில் நுகரப்படுகிறது. மேலும், சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்கப்படும் கரும்பிற்கு விலை அரசாங்கத்தால் குறிக்கப்படுவது போல நாட்டுச் சர்க்கரை உற்பத்தியில் பயன்படும் கரும்பிற்கு விலை குறிக்கப்படுவதில்லை. இதனால் சர்க்கரை உற்பத்திக்கு மேல் நாட்டுச் சர்க்கரையின் உற்பத்தி அளவு கூடுகின்றது. இவ்வுற்பத்திகளுக்கிடையே நேர்மையான நிலையில் கரும்பு அளிப்பு செய்யப்படவில்லை என்றும் போட்டி அதிகமாயுள்ளது என்றும் கூறப்படுகின்றது. <b>சர்க்கரை அரசாங்கத்தின் உற்பத்தி பற்றிய கொள்கை:</b> சர்க்கரை உற்பத்தியில் நீண்டகாலமாக அரசின் கொள்கையில் மாற்றங்கள் காணப்பட்டு வந்தன கட்டுப்பாடு, கட்டுப்பாட்டைத் தவிர்த்தல், பாதிக் கட்டுப்பாடு போன்ற அரசுக் கொள்கைகள் அவ்வப் பொழுது தற்காலிகமாகக் குறுகிய காலக் கண்ணோட்டத்துடன் கையாளப்பட்டன. இதனால் நீண்ட கால அரசுக் (சர்க்கரை) கொள்கை இல்லாதிருந்தது. அரசு பாதிக் கட்டுப்பாட்டுடன் இரட்டை விலைக் கொள்கையை 1967–இல் அனுசரித்தது. சர்க்கரை ஆலைகள் 1967–68–இல் 60 விழுக்காடு சர்க்கரை உற்பத்தியைக் கட்டுப்படுத்திய விலையில் அரசுக்கு அளிக்க ஆணை பிறப்பித்தது. இதன்படி மீதியான<noinclude></noinclude> hvbuoo20jh4vsfgcw9ai4jf29poahu1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/669 250 651151 1956845 2026-07-30T13:37:27Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "40 விழுக்காடு சர்க்கரையை ஆலைகள் வெளி அங்காடியில் அங்காடி விலைக்கு விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது. பிறகு கட்டுப்படுத்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்க்கரைத்‌ தொழில்‌|643|சர்க்கரைத்‌ தொழில்‌}}</noinclude>40 விழுக்காடு சர்க்கரையை ஆலைகள் வெளி அங்காடியில் அங்காடி விலைக்கு விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தது. பிறகு கட்டுப்படுத்திய சர்க்கரை அளவை 65 விழுக்காடாக உயர்த்தியது. சனதா அரசு 1977–இல் பதவிக்கு வந்தவுடன் கட்டுப்பாட்டை முற்றிலுமாகத் தளர்த்தியது. மறுபடியும் காங்கிரசு அரசு பதவிக்கு வந்த பிறகு பாதிக் கட்டுப்பாட்டுடன் இரட்டை விலைக் கொள்கையைப் புகுத்தியது. இதனால் சர்க்கரை விலை உயர்ந்தது. இவ்வித மாறுபட்ட அரசின் கொள்கை சர்க்கரை உற்பத்தியாளர்களையும் வழங்குவோரையும் அதிகமாக ஆதரிக்க நுகர்வோருக்கு உயர்ந்த சர்க்கரை–விலை காரணமாகப் பாதிப்பு ஏற்பட்டது. 1984–85-இல் அரசு 12 இலட்சம் கண்டி சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. உற்பத்திச் செலவு விலை பற்றிய குழு 1985–இல் விடுத்த அறிக்கையின்படி கட்டுப்படுத்திய சர்க்கரையின் விலை குவிண்டால் உரூ. 351 ஆகக் குறிப்பிடப்பட்டது. சர்க்கரையின் சில்லறை விலை 1985–இல் உரூ. 4.40 ஆக உயர்ந்தது. <b>சர்க்கரை உற்பத்தி செய்வதில் சிரமம்:</b> இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்வதில் சிரமம் அதிகமாக உள்ளது. இதற்குக் குறைந்த கரும்பு மகசூல், குறைந்த ஆலை நாட்கள், திருப்தியான சூழ்நிலையில் இல்லாத சர்க்கரை ஆலைகள், தேவைக்கேற்ற கரும்பு அளிப்பின்மை போன்றவைகள் காரணமாகக் கூறப்படுகின்றன. மேலும் இந்தியாவின் சர்க்கரை ஆலைகளின் உற்பத்தித் திறன், கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை மிகவும் குறைவாகக் காணப்படுதல் முதலியவற்றால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள சர்க்கரை ஆலைக்களுக் கருகில் கரும்பு விளைநிலங்கள் உள்ளது போல், இந்தியாவில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் அவற்றிற்கென்று கரும்பு விளைநிலங்கள் வைத்திருக்கவில்வை. இதனால் கரும்பின் தரத்தையும் அளிப்பையும் கட்டுப்படுத்த இயாவில்லை. <b>சர்க்கரை விலையில் உயர்வு:</b> சர்க்கரை ஆலைகள் பெரும்பாலும் உற்பத்தியற்றவையாகவும், உற்பத்தியில் சிக்கனமில்லாதவையாகவும் காணப்படுவதால் அவற்றிலிருந்து குறைந்த அளவு உற்பத்தியாலும், நீண்ட ஆலை நாட்களினாலும், உயர் கலா வரியினாலும் உற்பத்திச் செலவு மிகுந்து காணப்படுகின்றது. இந்தியாவில் சர்க்கரையின் விலை உலக விலையை விட அதிகமாகவே உள்ளது. சர்க்கரை ஆலைகள் மொத்த உற்பத்தியில் கையாளும் முறைகளும், கள்ளச் சந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் நடைமுறைகளும் சர்க்கரை விலையை மிகுதிப்படுத்தியுள்ளன. நாட்டின் பல பாகங்களில் 1980–81–இல் சர்க்கரையின் விலை உரூ. 8–இலிருந்து உரூ. 11 வரை இருந்தது. ஆனால் உற்பத்தி உயர்வு ஏற்பட்டுச் சர்க்கரை மிகுதியாக அங்காடிக்கு வந்த பொழுது சர்க்கரை விலை குறைந்தது என்ற போதிலும், அரசின் சர்க்கரை விலைக் கொள்கை மாறாமல் இருந்தது. <b>சர்க்கரை ஆலைகளின் துணைப் பொருள்கள்:</b> சர்க்கரைத் தொழிலின் துணைப் பொருள்களாகிய (By–Products) கரும்புச் சக்கையையும், சர்க்கரைப் பாகையும் முழுவதுமாகப் பயன்படுத்தாமல், அவை வீணாகின்றன. கரும்புச் சக்கையைப் பெரும்பாலும் மக்கள் எரி பொருளாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சர்க்கரைப் பாகை ஏற்றவிதத்தில் பயன்படுத்தாமையால் அதிகமாக வீணாக்கப்பட்டது. இப்பொழுது சிறிய காகித ஆலைகள் சக்கையைப் பயன்படுத்திக் காகிதம் போன்றவை செய்ய முன்வந்துள்ளன. சர்க்கரைப் பாகு எரிசக்திச் சாராயம், உரங்கள், கால் நடைத் தீவனம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கு அடிப்படைக் கச்சாப் பொருளாகப் பயன்படுகிறது. இப்பொழுது ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் சர்க்கரை ஆலைகள் தங்களுடைய ஆலைக் கழிவுப் பொருள்களை முற்றிலுமாக, திறமையாகப் பயன்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. இதனால் சர்க்கரையின் உற்பத்திச் செலவு குறைக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட சிக்கல்கள் இருந்தும் இந்தியச் சர்க்கரைத் தொழில் அதிகமான முன்னேற்றத்தையே அடைந்துள்ளது. இத்தொழில் மேலும் ஓங்கிய நிலையை அடைவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசு நீண்ட கால நடவடிக்கைகளைக் கையாண்டு சர்க்கரைத் தொழிலைப் பாதிக் கட்டுப்பாட்டினாலும், இரட்டைவிலைக் கொள்கையினாலும், நுகர்வோரைப் பாதிக்காது உற்பத்தியாளரும் வளரும் விதத்தில் அமைத்தால், சர்க்கரைத் தொழில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடையும். மேலும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் அக, புறக் கட்டுமானங்கள் யாவும் நல்ல முறையில் நவீனப்படுத்தப்பட்டால் உற்பத்தி, தொழில் விரிவாக்கம் போன்றவை செயற்படுத்தப்படும் என்று வல்லுநர்கள் கருத்துக்குதரிவிக்கின்றார்கள். {{Right|<b>க.சொ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Kakde, J.R.,</b> Sugarcane Production, Metropolitan Book Co., (p) Ltd.. New Delhi, 1985. <b>Mathur, R.B.L.,</b> Handbook of Cane Sugar Technology, Oxford & IBH Publishing Co., New Delhi, 1981. <section end="சர்க்கரைத்‌ தொழில்‌"/> {{dhr}} {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 41அ</b></noinclude> cxc3chjxx9pr32tysanm62dxehwfagz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/670 250 651152 1956848 2026-07-30T13:58:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சர்க்கரைப் புலவர்"/> {{dhr}} {{larger|<b>சர்க்கரைப் புலவர்:</b>}} தமிழகத்தில் கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டுகளில் சர்க்கரை, சவ்வாது என்ற பெயர்களைக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்க்கரைப்‌ புலவர்‌|644|சர்க்சீசு}}</noinclude><section begin="சர்க்கரைப் புலவர்"/> {{dhr}} {{larger|<b>சர்க்கரைப் புலவர்:</b>}} தமிழகத்தில் கி.பி. 17, 18–ஆம் நூற்றாண்டுகளில் சர்க்கரை, சவ்வாது என்ற பெயர்களைக் கொண்ட புலவர்கள் பலர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுள் சர்க்கரை என்ற பெயரை உடையோரிற் சிலர் வருமாறு: <b>சர்க்கரைப் புலவர்{{sup|1}}:</b> இவரது காலம் கி.பி. 1645 முதல் 1670 வரை ஆகும். இராமநாதபுரத்தைச் சேர்ந்த கடாரம் என்ற ஊரினர். இவர் பொன்னெட்டி மாலைச் சர்க்கரைப் புலவர் எனவும், சிறு கம்பையூர் நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர் எனவும் வழங்கப்பெற்றார். தந்தை பெயர் சாந்தாப் பிள்ளை. திருச்செந்தூர்க் கோவை பாடியவர். சேது பதியின் அமைச்சர் தாமோதரன் வேண்டுகோளுக் கிணங்க வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை என்னும் உரைசெய்தவர். அந்த அமைச்சர்மீது கேள்விக் கோவை என்ற நூலைப் பாடியுள்ளார். சிறுகம்பையூர், கொந்தளம், குலம், கூத்திக்குடி முதலிய இடங்களில் மானியம் அளிக்கப் பெற்றவர். சைவசமயத்தைச் சார்ந்தவர். இவர் முகவை சமசுத்தானப் புலவராக விளங்கினார். <b>சர்க்கரைப் புலவர்{{sup|2}}:</b> இவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்; முகமதியப்புலவர். இவர் அரேபியாவிலுள்ள மெக்காத் தவத்தின் மீது மெதீனந்தாதி பாடியவர். சவ்வாதுப் புலவர் என்னும் முகமதியப் புலவரின் காலத்தவர். <b>சர்க்கரைப் புலவர்{{sup|3}}:</b> இவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டினர். சீனிச் சர்க்கரைப் புலவரின் மூன்றாம் புதல்வர். முகவை சமசுத்தானத்திலிருந்த சிறுகம்பையூர் நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவரின் பேரர். ஆதலால் இவர் இரண்டாம் சர்க்கரைப் புலவர் எனப்படுகிறார். சர்க்கரை முத்து முருகப்புலவர் என்பதும் இவரே. இவர் முகவை, சிவகங்கை சமசுத்தானங்களில் அவைக்களப் புலவராக விளங்கியவர். குன்றக்குடி முருகன்மீது மயூரகிரிக் கோவை பாடிய சாந்துப் புலவரின் தந்தை. மருதுபூபதியின் மெய் காவலராய் விளங்கிய தம் தனயனுக்குப் பிறகும் உயிர் வாழ்ந்தார் எனத் தெரிகிறது. அக்காலத்தில் தான் இவர் மிழலைச் சதகம் பாடி அரங்கேற்றினார். அதற்காக வேளாண் குலத்தலைவர்களால் வழங்கப்பட்ட மகமைப் பட்டயத்தைத் தம் இளைய மனைவியின் குமாரராகிய முத்து முருகப்புலவருக்குக் கிடைக்கச் செய்திருக்கலாமெனக் கருதுகிறார் மயூரகிரிக் கோவையைப் பதிப்பித்த சர்க்கரை இராமசாமிப் புலவர். வண்டுவனப் பெருமாள் ஊசல், திருவாடானை சித்திர கவியலங்காரம் முதலிய நூல்களும் இவர் பாடியன. இவர் பரம்பரையில் வந்த இராமசாமிப் புலவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராக விருந்தார். {{Right|<b>ப.சி.</b>}} <section end="சர்க்கரைப்‌ புலவர்‌"/> <section begin="சர்க்சீசு"/> {{dhr}} {{larger|<b>சர்க்சீசு (கி.மு. 485–465):</b>}} பண்டைய பாரசீக நாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் ஒருவரான பேரரசர் முதலாம் தேரியசின் (Darius) மகன் சர்க்சீசு (Xerxes) ஆவர். மன உறுதிமிக்க இளைஞரான இவர் பாரசீகப் பேரரசைச் சிறப்புடன் ஆட்சி செய்தார். இவருடைய வரலாற்றை அறியப் பெர்சி போலிசு கல்வெட்டும், வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படும் எரடோட்டசுவின் குறிப்புகளும் பயன்படுகின்றன. <b>எகிப்திய கலகம்:</b> கிரேக்கப் படையெடுப்பிற்கு நிதி திரட்டுவதற்காக முதலாம் தேரியசு எகிப்து மீது வரி விதித்ததால் அந்நாட்டு மக்கள் கலகம் செய்தனர். அதனை அடக்குவதற்குச் சென்றபொழுது தேரியசு வழியில் மரணமடைந்தார். எனவே, சர்க்சீசு அப்படைக்குத் தலைமை தாங்கிச் சென்று அக்கலகத்தை அடக்கினார். <b>கிரேக்கப் போர்:</b> பாரசீகத்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையே பேரரசர் அலெக்சாந்தர் காலம் வரை போர் நடந்து கொண்டேயிருந்தது. முதலாம் தேரியசு கி.மு. 490–இல் மாரத்தான் போரில் தோற்கடிக்கப்பட்டார். அவர் கி.மு. 486–இல் இறந்துவிட்டதால் சர்க்சீசு கி.மு. 481–இல் கிரேக்கத்தின் மீது படையெடுத்தார். அவர் ஒரு பெரும்படையுடன் சென்று எல்லசுபாண்டை (Hellespont) அடைந்து, படகுப் பாலம்மூலம் அதனைக் கடந்தார். தங்கள் முன் உள்ள பேராபத்தை உணர்ந்த கிரேக்கர்கள் இசுபார்டா (Sparta) தலைமையில் திரண்டெழுந்து போரிட்டனர். எனினும், ஈரேக்கத்தின் வடக்குப் பகுதியையும் மத்தியில் சில இடங்களையும் பாரசீகர்கள் கைப்பற்றினர். ஏதென்சு நகரம் அழிக்கப்பட்டதுடன் அக்ரபோலிசிலிருந்த கட்டடங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன. அலெக்சாந்தர் பாரசீக நாட்டின் மீது படை இது ஒரு முக்கிய காரணமாகும். பின்னர்ப் பாரசீகப் படையானது கிரேக்கர்களிடம் தரைப் போரிலும் கடற்போரிலும் தொல்லியடைந்து திரும்பியது. சர்க்சீசு கி.மு. 465-இல் கொல்லப்பட்டார். பெர்சிபோலிசு அரண்மனை முதலாம் தேரிய சால் தொடங்கப்பட்டுச் சர்க்சீசால் கட்டிமுடிக்கப்பட்டது. இவர் ஏதென்சு நகரை அழித்ததால் பேரரசர் அலெக்சாந்தர் பெர்சிபோலிசு நகரை அழித்துக் கட்டடங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். அவ்வரண்மனையில் சர்க்சீசால் கட்டப்பட்ட தூண்கள்<noinclude></noinclude> tvimtd1amc0sct6hwjrp8wrigaahhyt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/671 250 651153 1956853 2026-07-30T14:20:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிறைந்த 375 அடி நீளமும் 300 அடி அகலமும் உள்ள பெரிய அறை ஒன்று இருந்தது. இப்பொழுது அங்கு நிற்கும் சில தூண்களின் உயரம் 63 அடி. இந்தியாவில் காந்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்ச்சில்‌|645|சர்ச்சில்‌}}</noinclude>நிறைந்த 375 அடி நீளமும் 300 அடி அகலமும் உள்ள பெரிய அறை ஒன்று இருந்தது. இப்பொழுது அங்கு நிற்கும் சில தூண்களின் உயரம் 63 அடி. இந்தியாவில் காந்தாரமும் சிந்துவும் இவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. எனவே, கிரேக்கப் படையெடுப்பின் பொழுது இவரது படையில் பல இந்திய வீரர்கள் பணிபுரிந்தனர். இவருக்குப் பின்னர் தொடர்ந்து திறமையற்ற அரசர்கள் ஆட்சிக்கு வந்ததால் பாரசீகப் பேரரசு அழிந்தது. எனவே இவர் சிறந்த பாரசீக மன்னர்களுள் இறுதியானவராகக் கருதப்படுகிறார். {{Right|<b>சி.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Plantagent Somerset Fry,</b> The Hamlyn Children's History of the World, Hanlyn, London, 1974. <b>Esmond Wright (General Editor),</b> The Ancient World, Hamlyn, London, 1979. <b>Henry Lucas, S.</b> A Short History of Civilisation McGraw–Hill Book Co., New York, 1953. <section end="சர்க்சீசு"/> <section begin="சர்ச்சில்"/> {{dhr}} {{larger|<b>சர்ச்சில்:</b>}} சர் வின்சுடன் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாறு 20–ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் வரலாறு என்றே கூறலாம். போயர் போர் (Boer war) முதல், இரண்டாம் உலகப்போர் வரையிலான இங்கிலாந்து நாட்டின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். விக்டோரியா பேரரசி முதல், இரண்டாம் எலிசெபத்துப் பேரரசி வரை ஆறு ஆங்கில அரசுகளின் கீழ் இவர் பணியாற்றியிருக்கிறார். இராசதந்திரி, வீரர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இரண்டு முறை இங்கிலாந்தின் முதலமைச்சர் – இப்படிப் பல வகைகளில் சிறந்து விளங்கிய வின்சுடன் சர்ச்சிலுக்கு (Winston Churchill) இணையான வேரொருவரைப் புதிய கால வரலாற்றில் காண்பதரிது. வின்சுடன் சர்ச்சில் கி.பி. 1874–ஆம் ஆண்டு ஆக்சுபோர்டுசயர் (Oxfordshire) என்னும் இடத்தில் பிளென்கீம் (Blenhcim) அரண்மனையில் பிறந்தார். இவர் தந்தையான இரண்டால்பு சர்ச்சில் பிரபு (Lord Randolph Churchill) ஒரு சிறந்த பழமைப் பற்று வாய்ந்த அரசியல்வாதி. அழகுமிக்க சென்னி செரோம் (Jennie Jerome) என்னும் அமெரிக்கப் பெண் இவர் தாயாராவார். மால்பரோ (Marl borough) பிரபுவும் ஒரு சிறந்த போர் வல்லுநருமான சான் சர்ச்சில் (John Churchill) இவர் மூதாதையர்களுள் ஒருவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 671 |bSize = 480 |cWidth = 135 |cHeight = 160 |oTop = 59 |oLeft = 285 |Location = center |Description = }} {{center|வின்சுடன் சர்ச்சில்}} சர்ச்சில் தொடக்க காலத்தில் சிறப்புத் தன்மைக்கான அறிகுறி எதையும் பெற்றிருக்கவில்லை. இவர் ஒரு சராசரி மாணவராகவே விளங்கினார். இங்கிலாந்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றான ஆரோவில் (Harrow) நான்கு ஆண்டுகள் பயின்றபோது இவர் வகுப்பில் நிறுல்நியை மாணவராகவே இருந்தார். எனினும், படைப் பயிற்சித் தொடர்பான பாடங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. சான்துசுட்டிலுள்ள அரசாங்க இராணுவக் கலைக் கூடத்தில் (Royal Military Academy at Sandburst) இவர் சிறந்த முறையில் நேர்வு பெற்றார். ஆங்கிலப் படையில் கி.பி. 1895–இல் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் ஆகிய இடங்களில் நன்கு பணிபுரிந்தார். இந்தியாவில் இவர் பணிபுரிந்த காலை கொடூரமான பத்தானியர்களை (Fierce Pathans) அடக்கினார். இந்தியாவில் இவர் பணியாற்றிய காலத்தில் போலோ விளையாட்டிலும் படிப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். கிப்பன் (Gibbon), மெக்காலே (Macaulay), தார்வின் (Darwin) முதலியோர் நூல்களை ஆழ்ந்து கற்றார். வரலாற்று நூலாசிரியர்கள் இவரை மிகவும் கவர்ந்தனர். வின்சுடன் சர்ச்சில் 1900–ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினரானார். இவர் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இவர் 1904–இல் தடையில்லா வாணிகக் கொள்கையின் அடிப்படையில் தம் பழமைக் கட்சியிலிருந்து விலகித் தாராளவாதக் (Liberal) கட்சியில் சேர்ந்தார். அதனால் பழமைக் (Conservative) கட்சியினரால் மிகவும் தாக்கப்பட்டார்.<noinclude></noinclude> d0hx8lj9wdj6bwc4ywxrj6v9ksugvkh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/672 250 651154 1956855 2026-07-30T14:42:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியேற்ற நாடுகளுக்கான கீழ்நிலைச் செயலாளராகப் (Undersecretary for the Colonies) போயர்களுடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். சர்ச்சில் பிறகு உள்துறை அமைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்ச்சில்‌|646|சர்ச்சில்‌}}</noinclude>குடியேற்ற நாடுகளுக்கான கீழ்நிலைச் செயலாளராகப் (Undersecretary for the Colonies) போயர்களுடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். சர்ச்சில் பிறகு உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்று வேல்சு சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அடக்கினார். உள்துறை அமைச்சராகச் சர்ச்சில் துணிந்து செயற்பட்ட மற்றொரு நிகழ்ச்சி சிட்னி வீதி நிகழ்ச்சியாகும். இலண்டன் நகரின் கிழக்கு முனையில் இருந்த சிட்னி வீதியில் சில வெளிநாட்டுக் குழப்பக்காரர்கள் கொன்னையடிக்க முயன்று சில காவலர்களைக் கொன்றுவிட்டு, வீதியிலிருந்த ஒரு வீட்டினுள் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தனர். குளியலறையிலிருந்த சர்ச்சில் அதைக் கேள்விப்பட்டவுடன் அந்த இடத்தை அடைந்தார். இராணுவத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்தார். சிட்னி வீதியில் ஒரு இராணுவ முகாம் அப்போதைக்கு அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் முற்றுமாக அடக்கப்பட்டனர். கடற்படைத் துறைத் தலைவரான சர்ச்சில், 1911–ஆம் ஆண்டில் செருமானியப் படையெடுப்பிற்கான சாத்தியக் கூறுகளை மனத்திற்கொண்டு இங்கிலாந்தின் கடற்படை வளிமையை மிகுதிப்படுத்தினார்; கடற்படையில் புதுமைகள் பல புரிந்தார்; கவச வண்டிகளை உருவாக்கினார்; ஆண்ட்வெர்ப்பு (Antwerp) பாதுகாப்பில் 1914–இல் ஈடுபட்டார். இவருடைய மிகப் பெரிய அரசியல் வீழ்ச்சி 1915–இல் நிகழ்ந்தது. இவர் மிகத் துணிவுடன் கலிபோலி (Gallipoli) என்ற துருக்கியத் தீபகற்பத்திற்கு எதிரான ஒரு செயலில் ஈடுபட்டார். தார்டனலசை (Dardanelies) வற்புறுத்தி அதன் மூலமாக உருசியாவிற்கு ஓர் அளிப்பு (Supply line) ஏற்படுத்துவதே இவரது திட்டம், மிகத் துணிவுடன் தார்டனலசு (Dardanelles) கடல் தாக்குதலில் ஈடுபட்டார். இதில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர். வேறு வழி இன்றிக் கடற்படைத் துறையிலிருந்து சர்ச்சில் பதவி விலக நேர்ந்தது. சர்ச்சில், பிரான்சில் (France) சிறிது காலம் படைப் பணி புரிந்தார். இலாயிடு சார்சு (Lloyd George) அமைச்சரவையில் 1917–இல் போர் அமைச்சராகப் பதவி ஏற்ற சர்ச்சில், படையில் பல சீர்திருத்தங்கள் செய்தார்; துறையிலிருந்த ஐம்பது குழுக்களைப் பன்னிரு குழுக்களாகத் திருத்தி அமைத்தார்; சிறந்த அறிஞர்கள் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவையும் நியமித்தார்; உருசியாவில் இருந்து ஆங்கிலப்படைகள் திரும்பப் பெறுவதை ஆதரித்தார். குடியேற்ற நாடுகளின் அமைச்சராக 1921–இல் பதவியேற்ற சர்ச்சில், மத்திய கிழக்குச் சிக்கலுக்குத் தீர்வு காண முனைந்தார். டி.ஈ. இலாரன்சு என்பவரின் துணையுடன் கெய்ரோ (Cairo) மாநாட்டில் நல்லதோர் உடன்பாட்டைச் செய்து முடித்தார். ஈராக்கில் ஆங்கிலேயரின் செலவுகள் குறைக்கப்பட்டன. மத்திய கிழக்கில் புதிய அரபு மாகாணங்கள் நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர், 1924–இல் மீண்டும் பழமைக் கட்சியிற் சேர்ந்து, பால்டுவின் (Baldwin) அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். இவர் தம் முதல் நிதி அறிக்கையில் பொன் நாணயத் திட்டத்தை (Gold Currency) ஆதரித்தார். அது உலகப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுத்து; இரண்டாம் உலகப்போருக்கு வழி கோலியது. விதவைகள்; அனாதைகள் ஆகியோருக்கு ஈட்டுறுதித் திட்டம் கொண்டு வந்தார். இச்சமயத்தில் தான் இவர் இத்தாலியச் சருவாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். பால்டுவின் (Baldwin) அமைச்சரவை 1929–இல் வீழ்ச்சியுற்றபின், பத்தாண்டுக் காலத்திற்குச் சர்ச்சில் அரசியல் ஓய்வுகொள்ள நேரிட்டது. என் இளமை வாழ்க்கை (My Early Life) என்ற தம் வரலாற்று நூலை வெளியிட்டார். இவர் ஓவியக் கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். நெவில் சேம்பர்லேன் (Neville Chamberlaine) நாசி செருமனியின் கடுமையான நிபந்தனைகளை 1930–களின் நடுவில் போரைத் தவிர்க்கும் பொருட்டு ஏற்றார். சர்ச்சில் இந்தச் சமாதானக் கொள்கையை எதிர்த்தார்; இட்லரை எதிர்த்து உரைகளாற்றினார். ஆனால், 1939–இல் செருமனி போலந்தைத் தாக்கிய பிறகே சர்ச்சிலின் உரைகளில் ஆங்கிலேயர்கள் அக்கறை காட்டத் தொடங்கினர். அச்சமயத்தில் எழுந்த இந்தியத் தன்னாட்சிக் கிளர்ச்சிக்குச் சர்ச்சில் ஆதரவளிக்கவில்லை. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சர்ச்சில் மீண்டும் கடற்படைத் தலைவரானார் (The First Lord of the Admiralty) சேம்பர்லேன் பதவியிலிருந்து 1940–இல் விலகவே, சர்ச்சில் இங்கிலாந்தின் தலைமை அமைச்சரானார்; போர் அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்; அரசாங்கத்திலும் தேசத்திலும் ஒரு புதிய உணர்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தினார். இவர் சூன் மாதம் புகழ்பெற்ற தன்கிர்க்குச் (Dunkirk) சொற்பொழிவை நிகழ்த்தினார். ஆறு வாரங்களுக்குப் பின் பிரான்சு வீழ்ந்ததும் இங்கிலாந்து செருமனியுடன் மட்டுமே போரிட வேண்டியிருந்தது. ‘குருதி, கண்ணீர், வியர்வை<noinclude></noinclude> ljgq4pq7h5945k0nlyetgea853w4gsz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/673 250 651155 1956865 2026-07-30T17:58:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உழைப்பு இவை தவிர வேறெதையும் நான் தருவதற்கில்லை’, ‘நாமே வெல்வோம்’, ‘நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்’ என்ற புகழ்பெற்ற வீர உரைகளைச் சர்ச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சர்ச்சில்‌|647|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>உழைப்பு இவை தவிர வேறெதையும் நான் தருவதற்கில்லை’, ‘நாமே வெல்வோம்’, ‘நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்’ என்ற புகழ்பெற்ற வீர உரைகளைச் சர்ச்சில் நிகழ்த்தினார். போர் நடந்த ஒவ்வொரு நாளும் ஒரு சுருட்டை உறுதியாக உதடுகளுக்கிடையே இருத்திப் புகைத்துக்கொண்டும் ‘வெற்றி’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கான ‘V’ என்ற குறியைக் காட்டும் கை விரல்களுடனும் சர்ச்சில் காணப்பட்டார். இவர்தம் உணர்ச்சிமிக்க வீர உரைகள் போர்க்காலத்தில் ஆங்கில மக்களுக்கு உற்சாகமளித்தன. ஒரு திருப்பம் 1941–ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. சர்ச்சில் தம் எதிரியின் தவறுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டார். இட்லரின் உருசியப் படையெடுப்பு உருசியாவையும் போரில் ஈடுபடச் செய்தது. சர்ச்சில் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உருசியாவை நேச நாடுகளுள் ஒன்றாக வரவேற்றார். ‘அட்லாண்டிக்குச் சாசனம்’ வெளியிடப்பட்டது. சப்பான் முத்துத் துறைமுகத்தைத் (Pearl Harbour) தாக்கியதும், அமெரிக்காவும் போரில் இறங்கியது. செருமானியத் தாக்குதலை எதிர்த்து இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா ஆகிய நாடுகள் போருமன்பாடு (Grand Alliance) கண்டன. சர்ச்சில் பேருடன்பாடு காண்பதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்தார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உரூசுவெல்ட்டுடன் சர்ச்சில் நட்புக் கொண்டார். நாசிகளின் தோல்விகள் 1945–இல் விரைவாக நிகழ்ந்தன. முசோலினி கொல்லப்பட்டார். இட்லர் தற்கொலை செய்து கொண்டார். வடமேற்கு ஐரோப்பாவில் மே 4 ஆம் நாள் செருமானியப் படைகள் சரணடைந்தன. இந்த வெற்றியில் சர்ச்சிலின் பங்கு குறிப்பிடத்தக்கது. சண்டையின் முடிவில் சர்ச்சில்–உரூசுவெல்ட்டு நட்பு சீர்குலைந்தது. இசுடாலினுக்கு (Stalin) எதிரான சர்ச்சிலின் திட்டங்களில் உரூசுவெல்ட்டு ஒத்து ழைக்கவில்லை. சப்பான் சரணடைவதற்கு முன்பாகவே சர்ச்சிலின் போர்க்கால அரசு வீழ்ந்தது. இவர் சூலைத் திங்கள் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சித் தலைவரானார். புகழ்பெற்ற இரும்புத்திரைப் பேச்சினை (Iron Curtain Lecture) 1946–இல் நிகழ்த்தினார் சர்ச்சில் இவருக்கு இவ்வாண்டில் ‘தகுதி ஆணை’ (Order of Merit) என்ற விருது வழங்கப்பட்டது. பேரரசுக் கழகம் (Royal Academy) சர்ச்சிலின் ஓவியங்களை ஏற்றுக் கொண்டது. தம் ‘இரண்டாம் உலகப் போர்’ என்னும் நூலை வெளியிட்டார் சர்ச்சில். சர்ச்சில் 1949-ஆம் ஆண்டில் பாரிச வாயுவால் தாக்கப்பட்டார். இவர் ஈராண்டுகளுக்குப் பின் உட்போர்டு (Woodford) தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். எலிசபெத்துப் பேரரசி வெசுட்டுமினிசுடரில் 1951-ஆம் ஆண்டில் பதவியேற்ற போது அப்பெரு நிகழ்ச்சியில் சர்ச்சில் முக்கிய பங்கேற்றார். ‘பேரரசின் பெருவீரர் விருது’ (Knight of the Garter) இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத் திற்கான நோபெல் பரிசும் 1953–இல் இவரை வந்தடைந்தது. ஈராண்டுகள் கழித்துப் பிரதமர் பதவியைத் துறந்தார். இவரது இறுதிக் காலம் மிக அமைதியாகக் கழிந்தது. ‘ஆங்கில மக்கள் வரலாறு’ (The History of the English Speaking Peoples) என்னும் சிறந்த நூலை அக்காலத்தில் வெளியிட்டார். அமெரிக்கக் குடிமகனாக 1963–இல் இவர் சிறப்பிக்கப்பட்டார். இவ்வாறு ஒரு சிறப்பு மிக்க வாழ்வு நடத்திய வின்சுடன் சர்ச்சில் தம் 90–ஆம் வயதில் 1965–ஆம் ஆண்டு காலமானார். ஒரு சிறந்த தலைவருக்கான மரியாதைகளுடன் தாம் பிறந்த இடமான பிளென்கீம் மாளிகைக்கு அருகில் பிளேடன் கல்லறைத் தோட்டத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். {{Right|<b>சௌ.இல.</b>}} <section end="சர்ச்சில்‌"/> <section begin="சர்தார் படேல் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சர்தார் படேல் பல்கலைக் கழகம்:</b>}} குசராத்து (Gujarat) மாநிலத்தின் கய்ரா (Kaira) மாவட்டத்தில் வல்லப வித்தியாநகர் (Vallabh Vidyanagar} கன்னுமிடத்தில் நாட்டுப்புறச் சூழலில் சர்தார் படேல் பல்கலைக்கழகம் (Sardar Patel University) அமைந்துள்ளது. இக்காலக் கலைகள், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊர்ப்புறத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, நலிந்துவிட்ட சிற்றூர்களுக்குப் புத்துயிரூட்டு வதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் சர்தார் படேல் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. சர்தார் படேல் பல்கலைக் கழகத்தின் தாய் நிறுவனம் சாருட்டர் வித்தியா மண்டல் (Charutar Vidya Mandal) ஆகும். இது பாய்லால்பாய் படேல் (Bhailalbhai Patel) என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1947–இல் குசராத்து மாநிலத்தின் முதல் கலை, அறிவியல் கல்லூரி சாருட்டர் வித்தியா மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில் 1955-இல் பம்பாய்ச் சட்டத்தின்படி (Bombay Act) அவரது பெயரில் சர்தார்<noinclude></noinclude> mzxcaegfnt7le01jbndo3lqcfrbjurm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/267 250 651156 1956874 2026-07-31T05:26:57Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தொலைக்காட்சிகளும், தேசிய பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது வாஜ்பாய் தான் என்று கருத்துத் திணிப்புகளை உருவாக்கின. எந்த ஒரு ஊ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> தொலைக்காட்சிகளும், தேசிய பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது வாஜ்பாய் தான் என்று கருத்துத் திணிப்புகளை உருவாக்கின. எந்த ஒரு ஊடகமும் - காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று கூறவே இல்லை. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவையும் சேர்த்து இப்போது காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக 310 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதே எண்ணிக்கைதான் வாஜ்பாய்க்கு கிடைக்கப் போகிறது என்று முதல் சுற்றுக் கணிப்பில் ஊடகங்கள் கூறின. அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இடதுசாரிகள் 62 பேர் - இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தியாகும். மத்தியில் ஆட்சியை வழி நடத்துவதில், இவர்களின் பங்கு முக்கியமானதாக அமையும். தமிழ்நாட்டில் 'வர்ணாஸ்ரமக் கூட்டணி' 40 தொகுதி களிலும் கடும் தோல்வியைத் தழுவி நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்கராச்சாரிகளின் வழிகாட்டுதலோடு நடந்த ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக - மக்கள் தங்கள் சீற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். அதனால் தான் வாக்குகள் வித்தியாசங்களே லட்சக்கணக்கில் இருக்கின்றன. மூன்றாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி, “சமூகநீதிகாத்த வீராங்கனை”யின் ஆட்சியாக இல்லை என்பதை, இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டிருந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு - இப்படி ஒரு “துணிவான” முதல்வர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்ததில்லை என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல், இவருக்கு மட்டுமே இருக்கிறது என்றும், “அக்கிரகாரங்கள்" அம்மையாருக்கு புகழ் மாலை சூட்டின; அதற்கு தமிழர்களில் சிலரும் அரசு ஊழியர்களை அடக்கிய வீரத்தைப் பாராட்டிக் கடிதங்களை எழுதினர். அதிகாரத்தை முறைகேடாகப்பயன்படுத்துவதில் காட்டும் வீரம், உண்மையான வீரமாக இருக்க முடியாது. ரேஷனைப் பறி கொடுத்த ஏழைகள், கல்வியைப் பறி கொடுத்த ஒடுக்கப்பட்ட மக்கள், திருமணக் கடன், ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களைப் பறிகொடுத்த வறிய மக்கள், சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காவல் துறையால் தாக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அனைவ னவரும் ஒன்று சேர்ந்து அம்மையாரின் “வீரதீர பராக்கிரமத்துக்கு” தங்களின் அடக்கமான பதிலை வாக்குப் பெட்டிகளில் தந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த மதச்சார்பின்மை அணியை வாழ்த்துகிறோம்; 'பொடா' சட்டத்தை திரும்பப் பெறுதல்; கல்வியில் நுழைக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை அகற்றுதல்; தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட தனியார் துறை<noinclude>{{nop}}{{rv|265 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''265'''}}}}|{{left|{{larger|'''265'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0bfodfnqqtc2ubev2ykowx6eogoq4g1 1956875 1956874 2026-07-31T05:27:37Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1956875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> தொலைக்காட்சிகளும், தேசிய பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது வாஜ்பாய் தான் என்று கருத்துத் திணிப்புகளை உருவாக்கின. எந்த ஒரு ஊடகமும் - காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று கூறவே இல்லை. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவையும் சேர்த்து இப்போது காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக 310 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதே எண்ணிக்கைதான் வாஜ்பாய்க்கு கிடைக்கப் போகிறது என்று முதல் சுற்றுக் கணிப்பில் ஊடகங்கள் கூறின. அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இடதுசாரிகள் 62 பேர் - இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தியாகும். மத்தியில் ஆட்சியை வழி நடத்துவதில், இவர்களின் பங்கு முக்கியமானதாக அமையும். தமிழ்நாட்டில் 'வர்ணாஸ்ரமக் கூட்டணி' 40 தொகுதி களிலும் கடும் தோல்வியைத் தழுவி நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்கராச்சாரிகளின் வழிகாட்டுதலோடு நடந்த ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக - மக்கள் தங்கள் சீற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். அதனால் தான் வாக்குகள் வித்தியாசங்களே லட்சக்கணக்கில் இருக்கின்றன. மூன்றாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி, “சமூகநீதிகாத்த வீராங்கனை”யின் ஆட்சியாக இல்லை என்பதை, இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டிருந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு - இப்படி ஒரு “துணிவான” முதல்வர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்ததில்லை என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல், இவருக்கு மட்டுமே இருக்கிறது என்றும், “அக்கிரகாரங்கள்" அம்மையாருக்கு புகழ் மாலை சூட்டின; அதற்கு தமிழர்களில் சிலரும் அரசு ஊழியர்களை அடக்கிய வீரத்தைப் பாராட்டிக் கடிதங்களை எழுதினர். அதிகாரத்தை முறைகேடாகப்பயன்படுத்துவதில் காட்டும் வீரம், உண்மையான வீரமாக இருக்க முடியாது. ரேஷனைப் பறி கொடுத்த ஏழைகள், கல்வியைப் பறி கொடுத்த ஒடுக்கப்பட்ட மக்கள், திருமணக் கடன், ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களைப் பறிகொடுத்த வறிய மக்கள், சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காவல் துறையால் தாக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அனைவ னவரும் ஒன்று சேர்ந்து அம்மையாரின் “வீரதீர பராக்கிரமத்துக்கு” தங்களின் அடக்கமான பதிலை வாக்குப் பெட்டிகளில் தந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த மதச்சார்பின்மை அணியை வாழ்த்துகிறோம்; 'பொடா' சட்டத்தை திரும்பப் பெறுதல்; கல்வியில் நுழைக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை அகற்றுதல்; தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட தனியார் துறை<noinclude>{{nop}}{{rv|265 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''265'''}}}}|{{left|{{larger|'''265'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gedvtl48lk5vbpeoexsjgi6x0rpq3m1 1956876 1956875 2026-07-31T05:27:56Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> தொலைக்காட்சிகளும், தேசிய பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது வாஜ்பாய் தான் என்று கருத்துத் திணிப்புகளை உருவாக்கின. எந்த ஒரு ஊடகமும் - காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று கூறவே இல்லை. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவையும் சேர்த்து இப்போது காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக 310 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதே எண்ணிக்கைதான் வாஜ்பாய்க்கு கிடைக்கப் போகிறது என்று முதல் சுற்றுக் கணிப்பில் ஊடகங்கள் கூறின. அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இடதுசாரிகள் 62 பேர் - இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தியாகும். மத்தியில் ஆட்சியை வழி நடத்துவதில், இவர்களின் பங்கு முக்கியமானதாக அமையும். தமிழ்நாட்டில் 'வர்ணாஸ்ரமக் கூட்டணி' 40 தொகுதி களிலும் கடும் தோல்வியைத் தழுவி நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்கராச்சாரிகளின் வழிகாட்டுதலோடு நடந்த ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக - மக்கள் தங்கள் சீற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். அதனால் தான் வாக்குகள் வித்தியாசங்களே லட்சக்கணக்கில் இருக்கின்றன. மூன்றாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி, “சமூகநீதிகாத்த வீராங்கனை”யின் ஆட்சியாக இல்லை என்பதை, இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டிருந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு - இப்படி ஒரு “துணிவான” முதல்வர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்ததில்லை என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல், இவருக்கு மட்டுமே இருக்கிறது என்றும், “அக்கிரகாரங்கள்" அம்மையாருக்கு புகழ் மாலை சூட்டின; அதற்கு தமிழர்களில் சிலரும் அரசு ஊழியர்களை அடக்கிய வீரத்தைப் பாராட்டிக் கடிதங்களை எழுதினர். அதிகாரத்தை முறைகேடாகப்பயன்படுத்துவதில் காட்டும் வீரம், உண்மையான வீரமாக இருக்க முடியாது. ரேஷனைப் பறி கொடுத்த ஏழைகள், கல்வியைப் பறி கொடுத்த ஒடுக்கப்பட்ட மக்கள், திருமணக் கடன், ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களைப் பறிகொடுத்த வறிய மக்கள், சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காவல் துறையால் தாக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அனைவ னவரும் ஒன்று சேர்ந்து அம்மையாரின் “வீரதீர பராக்கிரமத்துக்கு” தங்களின் அடக்கமான பதிலை வாக்குப் பெட்டிகளில் தந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த மதச்சார்பின்மை அணியை வாழ்த்துகிறோம்; 'பொடா' சட்டத்தை திரும்பப் பெறுதல்; கல்வியில் நுழைக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை அகற்றுதல்; தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட தனியார் துறை<noinclude>{{nop}}{{rv|265 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''265'''}}}}|{{left|{{larger|'''265'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1yqfat62p15ckgl3m1w9rry4eaxei7u 1956877 1956876 2026-07-31T05:28:56Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> தொலைக்காட்சிகளும், தேசிய பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது வாஜ்பாய் தான் என்று கருத்துத் திணிப்புகளை உருவாக்கின. எந்த ஒரு ஊடகமும் - காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என்று கூறவே இல்லை. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவையும் சேர்த்து இப்போது காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக 310 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதே எண்ணிக்கைதான் வாஜ்பாய்க்கு கிடைக்கப் போகிறது என்று முதல் சுற்றுக் கணிப்பில் ஊடகங்கள் கூறின. அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இடதுசாரிகள் 62 பேர் - இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தியாகும். மத்தியில் ஆட்சியை வழி நடத்துவதில், இவர்களின் பங்கு முக்கியமானதாக அமையும். தமிழ்நாட்டில் 'வர்ணாஸ்ரமக் கூட்டணி' 40 தொகுதி களிலும் கடும் தோல்வியைத் தழுவி நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்கராச்சாரிகளின் வழிகாட்டுதலோடு நடந்த ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சிக்கு எதிராக - மக்கள் தங்கள் சீற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். அதனால் தான் வாக்குகள் வித்தியாசங்களே லட்சக்கணக்கில் இருக்கின்றன. மூன்றாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி, “சமூகநீதிகாத்த வீராங்கனை”யின் ஆட்சியாக இல்லை என்பதை, இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டிருந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு - இப்படி ஒரு “துணிவான” முதல்வர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்ததில்லை என்றும், இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல், இவருக்கு மட்டுமே இருக்கிறது என்றும், “அக்கிரகாரங்கள்" அம்மையாருக்கு புகழ் மாலை சூட்டின; அதற்கு தமிழர்களில் சிலரும் அரசு ஊழியர்களை அடக்கிய வீரத்தைப் பாராட்டிக் கடிதங்களை எழுதினர். அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில் காட்டும் வீரம், உண்மையான வீரமாக இருக்க முடியாது. ரேஷனைப் பறி கொடுத்த ஏழைகள், கல்வியைப் பறி கொடுத்த ஒடுக்கப்பட்ட மக்கள், திருமணக் கடன், ஓய்வூதியம் போன்ற நலத் திட்டங்களைப் பறிகொடுத்த வறிய மக்கள், சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காவல் துறையால் தாக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மையாரின் “வீரதீர பராக்கிரமத்துக்கு” தங்களின் அடக்கமான பதிலை வாக்குப் பெட்டிகளில் தந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த மதச்சார்பின்மை அணியை வாழ்த்துகிறோம்; 'பொடா' சட்டத்தை திரும்பப் பெறுதல்; கல்வியில் நுழைக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை அகற்றுதல்; தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட தனியார் துறை<noinclude>{{nop}}{{rv|265 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''265'''}}}}|{{left|{{larger|'''265'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7c5chwxsm5hsshjr8jtx9xv0vfhvttd பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/268 250 651157 1956878 2026-07-31T05:30:45Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான முதலீட்டு விற்பனைக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் தமிழுக்கு செவ்விய மொழி அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து இந்த ஆட்சி தனது பயணத்தைத் துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 20.05.2004}}<noinclude>{{nop}}{{rv|266 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''266'''}}}}|{{left|{{larger|'''266'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> opylu7ws5l8b9kiyqs9ztzwvo3zqt2a 1956879 1956878 2026-07-31T05:31:04Z Santharabanu 15679 1956879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான முதலீட்டு விற்பனைக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் தமிழுக்கு செவ்விய மொழி அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து இந்த ஆட்சி தனது பயணத்தைத் துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.05.2004}}<noinclude>{{nop}}{{rv|266 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''266'''}}}}|{{left|{{larger|'''266'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6ootv923qcqpr3yja6n0zuntdl794ia 1956880 1956879 2026-07-31T05:31:22Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1956880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான முதலீட்டு விற்பனைக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் தமிழுக்கு செவ்விய மொழி அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து இந்த ஆட்சி தனது பயணத்தைத் துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.05.2004}}<noinclude>{{nop}}{{rv|266 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''266'''}}}}|{{left|{{larger|'''266'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> enspttr8xgkqnnu7nzkopvy0d117c2f 1956881 1956880 2026-07-31T05:31:39Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1956881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான முதலீட்டு விற்பனைக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் தமிழுக்கு செவ்விய மொழி அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து இந்த ஆட்சி தனது பயணத்தைத் துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.05.2004}} {{dhr|10em}}<noinclude>{{nop}}{{rv|266 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''266'''}}}}|{{left|{{larger|'''266'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5r91jhlwbtv0kbp9s8zya81ogqxfmhs 1956882 1956881 2026-07-31T05:31:52Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1956882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இட ஒதுக்கீடு; சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடுகளை அமுல்படுத்துதல்; சமூகநீதித் திட்டங்களை அமுல்படுத்துதல்; அடித்தள மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான முதலீட்டு விற்பனைக் கொள்கைகளை மாற்றி அமைத்தல் தமிழுக்கு செவ்விய மொழி அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து இந்த ஆட்சி தனது பயணத்தைத் துவக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.05.2004}} {{dhr|10em}}<noinclude>{{nop}}{{rv|266 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''266'''}}}}|{{left|{{larger|'''266'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ha2ijwewj844hftjhtftqnjs0l3trbu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/639 250 651158 1956883 2026-07-31T05:55:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எ-டு. மரம் என்பது இயக்கம் இல்லாதது என்பதில், மரம், என்பது, இயக்கம், இல்லாதது ஆகிய நான்கும் சொல்நிலை இலக்கணவடிவங்களாகும் (Lexemes). மரம் என்பது,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்லிலக்கணம்|611|சொல்லிலக்கணம்}}</noinclude>எ-டு. மரம் என்பது இயக்கம் இல்லாதது என்பதில், மரம், என்பது, இயக்கம், இல்லாதது ஆகிய நான்கும் சொல்நிலை இலக்கணவடிவங்களாகும் (Lexemes). மரம் என்பது, இயக்கம் இல்லாதது, மரம் என்பது இயக்கம் இல்லாதது எனும் மூன்றும் தொடர்நிலை இலக்கண வடிவங்கள் (Nonce forms). இன்னோசை முதலியனவும் தனிச்சொல் நிலை இலக்கண வடிவங்களே ஆகும் (Lexemes). உருபன்களும் அவற்றின் கூட்டுகளுமாகிய சொற்களுக்கு அதனதன் அமைவு நிலையில் (Formal) இலக்கணங் காண்பதும், அது ஒவ்வொன்றும் தொடரில் பிற சொல்லோடு இயையும் இயைபு நிலையால் (Functional) இலக்கணங் காண்பதும் என ஒரு சொல்லின் இலக்கணத்தை இருவகையிலும் காணலாகும். சொல்லின் மரபுநிலைப் பொருளும் (Idiomatic or Lexical meaning) சொல்லின் இலக்கணப் பொருளைப் (Grammatical meaning) புலப்படுத்திச் சொல்லிலக்கணங்காண உதவுவதாகும். ஒவ்வொரு மொழியின் அமைப்பு நிலைக்குத் தக்கவாறு சொல்லிலக்கணங்கள் சிறிது வேறுபாட்டைப் பெற்றிருப்பினும் உலகமொழிகள் அனைத்திலும் சில ஒற்றுமைக் கூறுகளும் (Universalities) உள. பெயர் (Noun), வினை (Verb) முதலிய சொற்களும் பெயரில் வேற்றுமையும் (Case) வினையில் காலமும் (Tense) உலகமொழிகள் பலவற்றில் உள்ளன. இவைபோன்று பல ஒப்புமையுடைய இலக்கணக் கூறுகளை உலக மொழிகள் பெரும்பான்மையவற்றுள் காணவியலும். பெரிதும் கொற்றோடலில் பெயரும், வினையும் சிறப்புடைய இலக்கணக் கூறுகள், ஏனைய சொற்கள் யாவும் அவற்றை விளக்க, அவற்றைத் தொடர்ந்து வருவனவாகும். பெயர், வினை முதனிலைச் சொற்களாகவும், ஏனைய அவற்றின் துணைநிலைச் சொற்களாகவும் வரும் இத்தகைய பெயர், வினை ஆக்கத்திற்கும், அவற்றின் இலக்கணக் கூறுகளைப் புலப்படுத்துவதற்கும், பெயர், வினையாகிய முதனிலையோடு இணைந்து செயற்படுவன, துணைச்சொற்கள் அல்லது இடைச்சொற்கள் (Bound forms or clitics or Non-root morphemes) எனப்படும். சொல்லின் இலக்கணத்தை உணர்த்துவதற்கு இவற்றின் பங்கு மிகப் பெரிதாகும். சொற்றொடரிலக்கணத்திலும் இவற்றின் பங்கு மிகப்பெரிது. பெயர், வினை, பகர்பெயர்கள் (Pronouns), பெயரடை (Adjective), வினையடை (Adverb), முன்வேற்றுமைக்குறி (Pre-position) இணைப்புச் சொல் முதலிய பலவேறாகச் சொற்களை, இலக்கண வடிவங்களாகக் காண்பது போன்ற பல முறைகள் உலக மொழிச் சொல்லிலக்கணத்தில் காணப்படுகின்றன. தனி நின்ற பெயர் அல்லது வினை இன்னோசை (Intonation) போன்ற இலக்கணக் கூறுபாட்டோடு சொற்றொடராவதும் மொழியின் இயல்பாகும். சொற்தொடரில் பெயர், வினையை விளக்கவும், வினை, பெயரை விளக்கவுமாக இணைத்து செயற்படும். வேற்றுமை, பெயருக்கும் வினைக்கும் அல்லது முடிக்குஞ்சொல்லிற்குமுள்ள இயைபினை உறுதிப்படுத்துகின்றது. சொற்றொடரின் பெயருக்கும் வினைக்கும் பல இலக்கண இயைபுகள் வேண்டப்படுகின்றன. இல்லையேல் இலக்கணமில்லதாகக் (Ungrammatical) கருதப்படும். எனவே, பெயர், வினையாகிய இரண்டு சொல்லிலக்கணங்களும் மிக்க சிறப்பினைப் பெறுகின்றன. பெயர், வினைச்சொற்களே உலக மொழிகளில் பெரிதும் பல இலக்கணக் கூறுகளை உணர்த்துகின்றன. உயர்திணை (Rational), அஃறிணை (Irrational), உயிருள்ளன, உயிரில்லன, எண், பால், இடம், வேற்றுமை, காலம், மறை முதலிய இலக்கணக் கூறுகளை யுணர்த்துவன, பெயரும் வினையுமாகிய சொற்களே. அவற்றுள்ளும், பெயர், வினையாகிய முதனிலை அல்லது முதற் சொல்லோடிணைந்த துணைச்சொற்கள் அல்லது இடைச்சொற்களே குறிப்பிடப்பட்ட இலக்கணக் கூறுகளைப் பெரிதும் உணர்த்துகின்றன. ஆக, இலக்கணக் கூறுபாடுகளைப் பெரிதும் பெயர், வினைச்சொற்கள் உணர்த்துகின்றன அல்லது அவற்றுள்ளமைந்த துணைச்சொற்கள் உணர்த்துகின்றன. காட்டாக, பொன்னன்—என்னும் பெயர்ச்சொல் உயர்திணை, ஆண்பால், படர்க்கை என்னும் இலக்கணக் கூறுடையது. பொன் (ன்)+அ+ன்—என்பதில் துணைச் சொல்லாகிய அகரம் படர்க்கையிடம், ‘ன’கரம், ஆண்பால்; எனவே, உயர்திணை ஒருமை எண்ணுமாம். சென்றான் — என்னும் வினைச்சொல் உயர்திணை, ஆண்பால், படர்க்கை, இறந்தகாலம் என்னும் இலக்கணக் கூறுகளையுடையது. செல் (ன்) + ற் + ஆ + ன் — என்பதில் துணைச்சொல்லாகிய ‘ஆ’ காரம் படர்க்கையிடம்; னகரம், ஆண்பால்; எனவே உயர்திணை ஒருமையுமாம். ‘ற’ கரம் இறந்த காலம். {{nop}}<noinclude> <b>வா.க. 9 - 39அ</b></noinclude> rzvo4vfge3oqcgvxl8fox1spw6ifbjz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/640 250 651159 1956884 2026-07-31T06:25:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீரில் — நில்லற்க — என்பதில் நீர் + இல் - என ‘இல்’ - வேற்றுமையினையும், நில்+அல் (ற்) + க - என ‘அல்’ மறையினையும் உணர்த்துகின்றன. இவ்வாறே பிறவுமாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்லிலக்கணம்|612|சொல்லிலக்கணம்}}</noinclude>நீரில் — நில்லற்க — என்பதில் நீர் + இல் - என ‘இல்’ - வேற்றுமையினையும், நில்+அல் (ற்) + க - என ‘அல்’ மறையினையும் உணர்த்துகின்றன. இவ்வாறே பிறவுமாம். :ஆங்கிலத்தில், ::{| |- |Boy-Boys || - || என்பதில் ‘S’ என்னும் துணைச் சொல் (Bound form) பன்மை எண்ணை உணர்த்துகின்றது, பெயரில் |- |Man-Men || - || என்பதில் ‘e’ பன்மை எண்ணை யுணர்த்துகின்றது, பெயரில். |- |Say-Said || - || என்பதில் ‘d’ இறந்த காலத்தை யுணர்த்துகின்றது, வினையில். |- |Run-Ran || - || என்பதில் ‘a’ இறந்த காலத்தை உணர்த்துகின்றது வினையில். |- |} ஆயின், Hc, Boy ஆண்பால், படர்க்கை, ஒருமை என்னும் இலக்கணக் கூறுகளைப் பெயர்களே உணர்த்துகின்றன. ::{| |- |She, Girl || - || பெண்பால், படர்க்கை, ஒருமையென்னும் இலக்கணக் கூறுகளைப் பெயர்களே உணர்த்துகின்றன. |- |} திராவிட மொழிகளில் எதிர்மறைப் பொருளை அ, ஆ- துணைச் சொல்லாகவும், அல், இல்—முதல் சொல்லாகவும் துணைச் சொல்லாகவும் வினையில் நின்றுணர்த்தும். எனவே, வினையாலணையும் பெயரிலுமாம். ஆங்கிலத்தில், எதிர்மறைப்பொருனை, N, No, Not, Non, Un முதலியன உணர்த்திவருகின்றன. ::Eg. None - N (No) + One<br>Neither - Nor - N + either, N + or<br>Nothing - No + thing<br>Nobody - No<br>Not doing - Not<br>Non-linear - Non<br>Unequal - Un-<br>Impossible <br>Inadequate<br>Irresponsible என்பன பிற. வடமொழியிலும், ந, நி, அந் முதலியன மறைப்பொருளில் வருவன (எ.டு) நாத்தி, நிசப்தம், அநேகம். திராவிட மொழிகளில் வேற்றுமை உருபு யாவும் பெயரின்பின் (Postposition) வர, ஆங்கிலத்தில் முன் (Preposition) வரும். எ-டு. நூலில்-இல் ::In the Book - In By, with, to, for, from, of, in, on — முதலியன ஆங்கிலத்தில் பெயரின்முன் தனித்து நின்று வேற்றுமைப் பொருளுணர்த்துவன. இவ்வாறு சொல்லிலக்கணங்கள் மொழிக்கு மொழி உணர்த்தும் முறையில் வேறுபடினும் உணர்த்தும் இலக்கணக் கூறுகளில் ஒற்றுமை காண்பதியல்பு. திராவிட மொழிகள் பலவற்றிலும் ‘ன’ கரம், ஆண் பாலை, ‘ள’ கரம், ‘இ’ கரம் பெண்பாலை, ‘ர’ கரம் பலர்பாலை, ‘த’ கரம் ஒன்றன்பாலை, ‘அ’ கரம், ‘வ’ கரம் ‘கள்’ பலவின்பாலை உணர்த்துகின்றன, பெயர், வினையில், இவற்றிலிருந்து திரிந்த வடிவங்கள் பிறபல. இவ்வாறாகிய பால் காட்டும் இறுதி நிலையே (Gender Terminal) ஒருமை, பன்மை எண்களையும், உயர்திணை அஃறிணையாகிய திணைகளையும் உணர்த்துகின்றன. ::எ-டு. அவன் - ன் - ஆண், ஒருமை, உயர்திணை ::அவள், தோழி -ள், இ - பெண், ஒருமை, உயர்திணை ::அவர் - ர் - பலர், பன்மை, உயர்திணை ::அது - து- ஒன்று, ஒருமை, அஃறிணை ::பல, அவ், ஆக்கள் - அ,வ்,கள் - பல, பன்மை, அஃறிணை {| |- |ஏன்/யான் |- |ஏம்/யாம் || தன்மை |- |ஈன்/நீன் |- |ஈம்/நீம் || முன்னிலை |- |நீமிர் > நீவிர்> நீயிர்> நீர் |- |தான் |- |தாம் || படர்க்கை |- |} எனும் இடப்பெயர்கள் பெயராய் இடத்தையுணர்த்த இவற்றின் கூறுகள் வினையிறுதியில் வந்து இடத்தை<noinclude></noinclude> 3vt428ss8k9dpd3hvq7lztp2ozna88l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/641 250 651160 1956885 2026-07-31T06:45:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யுணர்த்துகின்றன. வந்தேன், வந்தேம் - ஏன், ஏம் - தன்மை. குறிப்பிடப்பட்ட பெயர்களும்; அவற்றின் திரிந்த வடிவங்களுமே திராவிட மொழியில் இடத்தை யு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்லிலக்கணம்|613|சொல்லிலக்கணம்}}</noinclude>யுணர்த்துகின்றன. வந்தேன், வந்தேம் - ஏன், ஏம் - தன்மை. குறிப்பிடப்பட்ட பெயர்களும்; அவற்றின் திரிந்த வடிவங்களுமே திராவிட மொழியில் இடத்தை யுணர்த்திவருகின்றன. இவற்றின் இறுதி ‘ன’ கரம் ஒருமையினையும், ‘ம’ கரம், பன்மையினையும் உணர்த்துவன. திராவிட மொழிகளில் ‘த’ கரம், ‘இ’ அல்லது ‘இன்’ இறந்த காலத்தையுணர்த்துவன. :எ-டு. பார்த்தான் - த் + ஆ + ன் - த் ::ஓடினான் - இன் + ஆ + ன் - இன்<br>உம், ம், ப், வ், க் முதலியன எதிர் காலத்தை உணர்த்துவன. :எ-டு. உண்ணும்-உம் ::என்மர்-ம்<br>என்பர்-ப்<br> ஆய்வர்-வ்<br>உண்கு-கு(க்) நிகழ்காலம் இன்று, தின்று முதலிய நிகழ்வு குறிக்கும் சில துணைச்சொல் கொண்டு உணர்த்தப்படுகின்றது. அ,இ,உ,ஆ,ஈ,ஊ, என்பன சுட்டுப் பொருள் தரச் சொல் முதலில் வருகின்றன. திராவிட மொழிகளில். எ,ஏ,யா,ஆ,ஓ என்பன முதலில், இறுதியில் வந்து வினாப் பொருளைத் தருகின்றன, அம்மொழிகளில். ::எ-டு. அங்கு, ஆங்கு -அ, ஆ -சுட்டு.<br>எவன், யாவன்-ஏ, யா-வினா. பால், (திணை, எண்), வேற்றுமை, காலம் வினையில் இடம் இவை முதலாகிய இலக்கணக் கூறுகள் திராவிட மொழியில் பெயர், வினையிலுள்ள துணைச்சொற்களாலேயே (Bound Forms) உணர்த்தப்படுகின்றன. பெயர்கள் பலவாறு வகைசெய்யப்பெற்றும் இலக்கணப் பொருளை, இலக்கணக் கூறுகளை உணர்த்துவது சொல்லிலக்கணமரபாகும். பொருள் ஒருவகையாகிய பகர் பெயர்களே (Pronouns) பலவகை பெற்று இலக்கணமுணர்த்துவனவாம். எ-டு. {| class="wikitable" |- |1.இடப்பெயர்-யான், நீ || (Personal Pronouns)-I, You. |- |2. சுட்டுப்பெயர்-அவன், அவள் || (Demonstrative Pronouns) He, She |- |3. வினாப்பெயர்-யாவன், யாவள், || (Interrogative Pronouns) - யாவர் - Who? |- |4.எண்ணுப்பெயர்-ஒன்று, இரண்டு || (Numeral Pronouns) -One, Two. |- |5. வரையறையில் பெயர்-சில, பல || (Indefinite Pronouns) -Some, many |- |6. முற்றுப்பெயர் - எல்லாம் || (Inclusive Pronouns) -All |- |7. எதிர்மறைப்பெயர் - இல்லது || (Negative Pronouns) -Nothing |- |இவ்வாறு பல. |- |} வினை, குறிப்பு (Appellative Verb), முற்றுக்கள் (Finites) இவற்றின் பெயர், வினை கொண்டு முடியும் எச்சங்கள் தன்வினை, பிறவினை செய்வினை செயப்பாட்டுவினை முதலிய பிறவுமாம். வினைளகை, வினையடியாகத் தோன்றும் பெயர் (Participial Nouns) என்பதும் ஓர்வகை முற்றுப்பெயராம். தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவகை முற்றும் ஒருமை, பன்மையாக இறுதிநிலை (Terminals) கொண்டே அல்லது துணைச்சொல் (Bound forms) கொண்டே வகைசெய்யப் பெறுகின்றன. வியங்கோள் வினை (Optative Verb) இறுதி நிலையில் அவ்வினையாகின்றது. பெயரெச்ச, வினையெச்சங்களும், இறுதியால் அவ்வவ்விலக்கணக் கூறடைகின்றன. வினையடி கொண்டவினை முற்றின் இறுதிநிலை பெற்றுப் பெயர் அல்லது பண்பு அல்லது எதிர்மறை அடிச்சொல்கொள்ளின் அது குறிப்பு வினையாகும் இலக்கணத்தது. பிறவினை, படுவினையும் துணைச்சொல்லால் (Bound forms) இலக்கணப் படுவனவேயாம். சொல்வகையால், சொல்லில் காணும் அடிச்சொல், அதனோடு சேர்க்கும் துணைச்சொல் அல்லது இடைச்சொல் (Bound forms or clitics) இயல்பால் சொல்லிலக்கணங்கள் வரையறை செய்யப்படுகின்றன. இவ்வாறாகிய பெயர், வினை, இடைச்சொற்கள் சொற்றொடரில் பிறசொல்லோடு இயையும் நிலையிலும் சொல்லிலக்கணம் உணர்த்தப்படும். சொற்கள், சிறப்பாகப் பெயர் நிலையில் ஒட்டித் தொகைச்சொல்லாகி ஓர் சொல்லிலக்கண வடிவம்<noinclude></noinclude> 026ww82by4c1f2k4yg3bbuo61mcssex பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/642 250 651161 1956886 2026-07-31T07:02:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறுதலுமாகும். இதன்வகை பலவாக இலக்கணங் கூறப்பெறும். எ-டு. யானைக்கொம்பு இது, இருசொல்லிணைந்து ஓர் பெயராக ஒலிப்பினும் தொகை நிலைத் தொடர் மொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|614|சொல்வகைப் பாகுபாடு}}</noinclude>பெறுதலுமாகும். இதன்வகை பலவாக இலக்கணங் கூறப்பெறும். எ-டு. யானைக்கொம்பு இது, இருசொல்லிணைந்து ஓர் பெயராக ஒலிப்பினும் தொகை நிலைத் தொடர் மொழியாகக் (Phrasal compound) கருதப்படும். இதுபோன்று அடிச்சொல் தொகை (Stem compound) வேர்ச்சொல் தொகை (Root compound) என்பனவுமாம். ஒரு சொல்லாயினும் அடுக்கிவர அடுக்குத்தொடர் (Repettive Phrase) ஆகின்றது. எ-டு புலி புலி. இதுபோன்று இடைவெளியின்றித் தொகுந்து இரட்டைக் கிளவியாக (Repetitive Compound) ஒரு சொல்லியல்பாய் வருதலுமுண்டு. எ-டு, குறுகுறுத்தல். இவை, ஒருசொல் நிலைப்படினும் தொடர்நிலைப் படுவனவுமாம். தொகைநிலையாகத் தொடர்நிலைப்படுவன, சொல்லிலக்கண வடிவத் தொடரே என்க, சொல்லிலக்கணத்தில் இதற்கிது பின்வரவேண்டும் என்ற முறையும் ஓர் இலக்கணக் கூறாகும். இவ்வகைச் சொல்லிலக்கணக் கூறுகள் பிறவும் பல உள.{{Right|<b>சி.சு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Caldwell, Robert,</b> Comparative Grammar of the Dravidian languages, Gian Publications, 1981.<br> <b>Gleason Jr. H.A.,</b> An Introduction to Descriptive Linguistics, Oxford and IBH Pub. Co., 1970.<br> <b>Hockett, Charles, F.,</b> A couse in Modern Linguistics, Oxford and IBH Pub. Co., 1970. <section end="சொல்லிலக்கணம்"/> <section begin="சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை"/> {{dhr}} <b>சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை</b>: சொல்லுதல் சொல்லும் பிதழ்நிலையாகிய உளப்பிணி உடையவர்கள் ஒருசிலரிடம் சொற்களைப் பேசும் நடத்தையில் (Verbal behaviour) தாறு ஏற்படுகின்றன. இவர்கள் மாறான போக்குகள் தொடர்பில்லாத வகையில் பேசுவர். இப்படிப்பட்ட பிறழ்வான பேச்சுத் தன்மை உளப்பிணிகளுள் ஒன்றான உணர்ச்சிவிண்டநிலை (Schizophrenia) அல்லது உளச்சிதைவு என்ற நோயில் மிகுதியாகக் காணப்படும். உணர்ச்சி விண்ட நிலை நோய்க்கு ஆட்பட்டவர் அருகிலிருக்கும் ஒருவர் பேசும் சொற்களையோ வாக்கியத்தையோ அப்படியே சொல்லிக் கொண்டிருப்பர். இதனையே சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை (Echolalia) என்பர், உணர்ச்சி விண்ட நிலை நோய் வகையில் ஒரு பிரிவினரான தன்னியக்கு உளச்சிதைவு (Catatonic Schizophrenia) நோயாளி இத்தன்மை மிகுதியாகக் காணப்படும். நோயாளி தன்னுடைய சிந்தனை ஓட்டத்தில் விடாத ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளக் கையாளும் ஒரு முயற்சியே இத்தகைய செயலாகும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இப்பிறழ்வு நிலையுடைய நோயாளி சில நேரங்களில் அவரிடம் கேட்கப்படும் வினாக்களில் உள்ள சொற்களையே சொல்லிப் பதில் மறுபடி மறுபடி சொல்லும் நிலை ஏற்படலாம், நோயாளி தன்னுடன் பேசிப் பேட்டி காண்பவருடன் வலுவான இணக்கப் போக்கைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதனை இது புலப்படுத்துகிறது. மேலும், புதிய மொழி ஒன்றைக் ஏற்றுக் கொள்பவர் போன்றும் நோயாளி நடந்து கொள்வார்.{{Right|<b>ஆர்.ப.</b>}} <section end="சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை"/> <section begin="சொல்வகைப் பாகுபாடு"/> {{dhr}} <b>சொல்வகைப் பாகுபாடு</b>: காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் உள்பொருளும் இல்பொருளும் எனப்படும் பொருள்களை உணர்த்தும் குறியீடுகளை மொழி என்றும், அம்மொழிகள் தனியாகவோ இணைந்தோ தொடர்ந்தோ கருத்துகளைத் தெரிவிக்க ஆக்கமுறும்போது அவற்றைச் சொல் என்றும் வழங்குதல் தொன்நூலோர் மரபு. இடைக்காலத்தே அவ்வரையறை தலர்ந்து மொழி, சொல் இரண்டும் ஒரு பொருளுடையவை போல வழங்கி வருவனவாயின. யாதானும் ஒரு பொருளின் தன்மையையோ செயலையோ, நிலைமையையோ விளக்க எழும் ஒரு சொல்லோ சொற்றொடரோ எவ்வெப்பொருளை எவ்வெக் கூறுகளான் விளக்குகின்றன என்பதை ஆராய்ந்து பகுத்துக் கொண்ட முறைமையே சொற் பாகுபாடாகும். இது எல்லா மொழிக்கும் பொது வானதோரிலக்கண மரபாகும். தமிழ் நூலார் சொற் பாகுபாட்டினை இருதிறமாகப் பகுத்துள்ளனர். ஒன்று இலக்கண வகைப்பாகுபாடு; மற்றொன்று இலக்கிய வகைப் பாகுபாடு. அவற்றுள் இலக்கண வகைப் பாகுபாடு இருவகைப்படும். ஒன்று பொருட்பாகுபாடு. பிறிதொன்று சொற்பாகுபாடு, அவற்றுள் பொருட்பகுப்பு உயர் திணைச்சொல் அஃறிணைச் சொல் என இரு தொகுதியாக நின்று ஆடுஉவறி சொல், மகடூஉவறி சொல், பல்லோறியுஞ்சொல், ஒன்றறிசொல், பலவறி சொல்<noinclude></noinclude> 5eoxlu6za3lryq1teu9caegi2905lot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/643 250 651162 1956887 2026-07-31T07:14:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என ஐந்து கூறாக விரியும். இவற்றைப் பிற்கால நூல்கள் ஆண்பாற்சொல், பெண்பாற் சொல், பலர்பாற் சொல், ஒன்றன்பாற் சொல், பலவின்பாற் சொல் என வழங்கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்வகைப் பாகுபாடு|615|சொல்வகைப் பாகுபாடு}}</noinclude>என ஐந்து கூறாக விரியும். இவற்றைப் பிற்கால நூல்கள் ஆண்பாற்சொல், பெண்பாற் சொல், பலர்பாற் சொல், ஒன்றன்பாற் சொல், பலவின்பாற் சொல் என வழங்கும். இப்பிரிவுகட்கு அடிப்படை இலக்கண வகைச் சொற்களுள் பொருளைச் சுட்டி நிற்கும் முதனிலைப் பெயர்களொடு கூடிவரும் இறுதி (விகுதி) இடைச்சொற்களேயாகும். அவை பெரும்பான்மையும் படர்க்கை முற்றுவினைச் சொல்லாகவே இருக்கும். பெயர்ச் சொற்களுள் தெளிவாகப் பால்காட்டாதனவெல்லாம் இருதிணைக்கும் பொதுவாக நிற்கும். அவற்றைப் பொதுப்பெயர் அல்லது விரவுப்பெயர் என்று கூறுவர். அவை ஆண்மைப் பெயர், பெண்மை பெயர், ஒருமைப் பெயர், பன்மைப் பெயர், முறைப் பெயர், முன்னிலைப்பெயர் என வகைப்பட்டு வரும். தன்மைப் பெயர்கள் உயர் திணைக்கே உரியவை என்பது தொல்காப்பிய மரபு. பிற்கால நூல்கள் இரு திணைக்கும் பொதுவெனக் கூறும். இவை தவிர மா, மரம், யானை, குதிரை என வரும் அஃறிணை இயற்பெயர்கள் யாவும் அஃறிணை இருபாற்கும் இருதிணைக்கண்ணும் உள்ள ஆண்பால் பெண்பால்களுக்கும் பொதுவாக வரும் விரவுப் பெயர்களாகும். (தொல்-சொல்-பெயரியல் சூ-6, 20, 22, 28). வினைச் சொற்களுள் தெளிவாகப் பால்காட்டாதனவெல்லாம் இருதிணைப் பொதுவினை அல்லது விரவுவினைச் சொற்களாகும் (தொல்-சொல்- வினையியல் 5,25). இலக்கண வகைச் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகும். அவற்றுள் பெயர்ச்சொற்கள், பொருட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், பண்புப்பெயர், சினைப்பெயர், தொழிற்பெயர் என ஆறாக விரியும். எண்ணுப்பெயர், பொருட்பெயருன் அடங்கும். இவை யாவும் வெளிப்படைப்பெயர், குறிப்புப் பெயர் என இரு திறனாக வரும் குறிப்புப் பெயருள் குறிப்பிடத்தக்கது ஆகுபெயர். எல்லாச் சொற்களும் காரணமுடையவையே என்பது தொன்நூலார் கொள்கை. பிற்கால நூல்கள் வடமொழிக் கொள்கையை ஒட்டி இடுகுறிப் பெயர், காரணப்பெயர் என இரண்டாகக் கொள்ளும். பெயர்ச்சொற்கள் எழுவாய் வேற்றுமை முதல் விளிவேற்றுமை ஈறான எட்டு வகை வேற்றுமைகளை அடையும். வினைச் சொற்கள் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இரு திறப்படும். தொழிற் பெயர்களின் அடியாகக் காலமுணர்த்தும் இடைச்சொற்களொடு வருவனவெல்லாம் தெரிநிலை வினையாகும். தொழிற் சொல்லல்லாத ஏனைய பெயர்களின் அடிப்படையில் உடைமைத் தன்மையையும் இடத் தன்மையையும் ஒப்புமையையும் பண்புப் பொருளையும், கொண்டு காலத்தைக் குறிப்பாக உணர்த்தி வருவளவெல்லாம் குறிப்பு வினைகளாகும். வினைச் சொற்களைக் காலம், இடம், பால் முதலியவற்றை வைத்துப் பலவாக எண்ணிக் கூறுவர். வினைச்சொற்கள்பால் உணர்த்தும் இறுதிநிலைகள் (விகுதி) இன்றி நிற்பின் அவை எச்சவினை எனப்படும். வினை முற்று இறுதி குறைந்து நிற்பது வினையெச்சம் என்றும், பெயர்த் தன்மை பெற்ற வினைமுற்று (வினையாலணையும் பெயர்) இறுதி குறைந்து நிற்பது பெயரெச்சம் என்றும் வழங்கப்பெறும். பிற்கால நூல்கள் வினை கொண்டு முடிபவை வினையெச்சம் என்றும், பெயர் கொண்டு முடிபவை பெயரெச்சம் என்றும் கூறும், பெயர்ப்பொருள் எண்வகை வேற்றுமையுறுதற்கு வினைகளே காரணமாகும். இடைச்சொற்கள் என்பவை பெயர்ச்சொல் வினைச் சொற்களில் அவற்றிற்கு உறுப்பாகவும், பெயர் வினைகளைச் சார்ந்து தனித்தும் வரும்; தனித்து நின்று பொருள் தரமாட்டா. இடைச் சொற்கள், சாரியையாக நிற்பன, வேற்றுமையுருபாக வருவன, காலமுணர்த்துவன, இசை நிறையாக வருவன, அசை நிலையாக நிற்பன, தத்தம் குறிப்பிற் பொருளுணர்த்தி வருவன, உவம உருபாக வருவன என ஏழுவகைப்படும். அவற்றுள் முதலன மூன்றும் பெயர்வினைகளின் பொருளை வேறுபடுத்த வரும். சாரியைகள் சொற்புணர்ச்சிக்கும் சொல்லாக் கந்திற்கும் துணைபுரிய வரும். அடுத்த இரண்டும் சொல்லுறுப்பாகவும் தனித்தும் பொருளின்றி வரும். தத்தம் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொற்கள் பெயர்வினைகளைச் சார்ந்து தனிப் பொருள் உணர்த்தி வரும். அவற்றுள் சில பெயர்த்தன்மையும் வினைத்தன்மையும் உற்று வரும். அவ்விடங்களில் அவை பெயராகவும், வினையாகவும் கொள்ளப்படும். உவம உருபிடைச் சொற்கள் வினைத் தன்மையுற்று முற்றாகவும் எச்சமாகவும் நின்று ஒப்புப்பொருள் உணர்த்தி வரும் (தொல்-சொல்-இடையியல் 1, 2, உவமயியல் 11-17). வண்டின் கால் (இன்) இரு மொழிப் புணர்ச்சியில் சாரியை. கண்டனன் (அன்) ஒருமொழியாக்கத்திற் சாரியை. சித்திரையாற் கொண்டான் (ஆன்) சித்திரைக்குக் கொண்டான் (இக்கு) இவை பொரும் நிலைக்குதவியாக வந்தன. சித்திரை என்பது ஆன்சாரியையால் விண்மீன் என்பதும் இக்குச் சாரியையால் சித்திரை என்பது திங்கள் என்பதும் உணரப்படும். பார்த்தான் (த்) உண்டான் (ட்) உண்கின்றான் (கின்று) உண்பான் (ப்) இவ்வினைச் சொற்களுள் த், ட் இறந்த காலத்தையும்<noinclude></noinclude> nexmw8syixs5hkcu5w46mydyfl4dt23 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/644 250 651163 1956888 2026-07-31T07:33:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கின்று நிகழ்காலத்தையும் ப் எதிர்காலத்தையும் உணர்த்தி நின்றன. சாத்தனைக் கண்டான் ஐ செயப்படுபொருளை உணர்த்தி வேற்றுமை உருபாக நின்றது. அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல்வகைப் பாகுபாடு|616|சொல் வடிவியல்}}</noinclude>கின்று நிகழ்காலத்தையும் ப் எதிர்காலத்தையும் உணர்த்தி நின்றன. சாத்தனைக் கண்டான் ஐ செயப்படுபொருளை உணர்த்தி வேற்றுமை உருபாக நின்றது. அது மற்று அவலங்கொள்ளாது. ‘மற்று’ அசைநிலையாக நின்றது, ‘ஏஎ இத்தொத்தன்’ ஏஎ இசைநிறையாக நின்றது. கூரியதோர் வாள்மன். மன் ஒழியிசைப் பொருள் குறித்து நின்றது. கண்ணனும் வந்தான். உம் எச்சப்பொருள் குறித்து வந்தது. புலியன்னமறவன். அன்ன என்பது உவம உருபாக ஒப்புப் பொருள் உணர்த்தி நின்றது. பிறன், மற்றையான் என்பவை இடைச்சொல்லடியாக வந்த பெயர்ச் சொற்கள். உரிச் சொற்கள் என்பவை எல்லாச் சொற்களுக்கும் முதலீலை (பகுதி)யாகத் தோன்றிப் பெயரும் வினையுமாக வரும். பெயர்-வினைகளுக்கு முதனிலையாகாமல் பெயர்ப் பொருளையும் வினைப் பொருளையும் சிறப்பிக்க அடையாக வந்து தம் பொருளை உணர்த்தி நிற்குமிடத்து அவை உரிச்சொற்கள் எனப்படும். உரிச்சொற்கள் சில இடங்களில் பெயர்ப் போலியாயும் வினைப் போலியாயும் வரும். அப்பொழுது அவை பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் கொள்ளப்படும். குழக்கன்று-குழ உரிச்சொல். குழவி - உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர். கருவி வானம். கருவி உரிச்சொல். இது போன்றவை மாறாமல் பெயர்-வினையாக அடையாகவே வரும். இலக்கிய வகைச் சொற்கள் நான்கனுள் இயற்சொல் என்பது கற்றார் கல்லார் யாவர்க்கும்பொருள் விளங்க வழக்குச் சொல்லாக நிற்கும். திரிசொல் என்பது பெரும்பான்மையும் கற்றார்க்கே பொருள் விளங்கச் செய்யுள் வழக்குச் செல்லாக நிற்கும் பல பொருளைக் குறிக்கும். ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும், பல சொல் ஒரு பொருளையும் குறிக்கும் சொற்கள் எல்லாம் திரி சொல்லாகும். திசைச் சொல் என்பது ஒவ்வொரு நில எல்லைக்குள் அவ்வந்நிலத்தார்க்குரிய வழக்காகிப் பிறநிலத்துள்ளார்க்கு வேறாகி வரும். இதனை வட்டார வழக்கு என்பார் சிலர். வடசொல் என்பது தமிழில் வழங்கும் வட சொற்கள் எழுத்தொலிகளால் வடமொழி ஒலியின்றித் தமிழ் அமைந்துநிற்கும். ஆரியச் சொல் சிதைந்து தமிழ் எழுத்துகளால் அமைவனவும் வடசொல்லாகும். வடசொல்லாவது ஆரியத்தோடொக்கும் தமிழ்ச் சொல் என்பார் இளம்பூரணர். ‘வடசொற் கிளவி வட எழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்பது தொல்காப்பியம். இதன்கண எழுத்தென்பதை ஒலிவடிவாகக் கருதாமல் பலர் வரிவடிலாகக் கருதியதே கருத்து வேறுபாட்டிற்குக் காரணமாகும். எனவே, தமிழ்ச் சொற்களின் வகைகள் பதின் மூன்றாகவும் அவற்றின் விரிகள் பலவாகவும் உள்ளமையறியலாம்.{{Right|<b>ச.பா.</b>}} <section end="சொல்வகைப் பாகுபாடு"/> <section begin="சொல்வடிவியல்"/> {{dhr}} <b>சொல்வடிவியல்</b>: மொழியின் இலக்கண அமைப்பினைச் (Grammatical System) சொல்வடிவியல் (Morphology), தொடரியல் (Syntax) என இரு பெரும் பிரிவுகளாகப் பருத்தல் இயலும். ஒரு மொழியிலுள்ள அனைத்து உருபன்களையும் அவற்றில் வருகை முறைவையும் விளக்கும் பகுதியே சொல்வடிவியல் எனப்படும். குறிப்பாக இது சொற்களின் வடிவ அமைப்பினைப் பற்றிப் பேசும் பகுதியாகும். சொல்வடிவியல், தொடரியல் ஆகியற்றுக்கிடையே மயக்கம் (Overlapping) காணப்படுவதால் இவ்விரண்டையும் முற்றிலும் தனித்தனியே பிரித்தறிதல் இயலாதென அமைப்பு மொழியியலார் கருதுகின்றனர். மொழியில் பொருள் தரும் மிகச்சிறிய குறியீட்டு அடிவமே உருபன் (Morpheme) எனப்படும். பொதுவாக உருபன்கள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஒலியன்களைக் (Phonemes) கொண்டிருக்கும். ஒரு மொழியிலுள்ள உருபன்களைக் கண்டறிவதன் வாயிலாக அம்மொழியைப் புரிந்து கொள்ளலாம். <b>உருபுகளைப் பகுத்தறிதல்</b>: ஒரு மொழியிலுள்ள வாக்கியத்தில் அமையப் பெற்றுள்ள உருபுகளைப் பகுத்தறிவதன் வாயிலாக அனைத்து உருபன்களையும் கண்டறிய முடியும். உருபுகளைப் பகுத்தறிதலின் பொருட்டு வாக்கியத்திலுள்ள பொருள் தரும் ஒரு பகுதியினைப் பிரித்தெடுத்து அப்பகுதி, மொழியில் பிற இடங்களில் அதே பொருளில் வருகின்றதா என்பதனை முதலில் கண்டறிய வேண்டும். அங்ஙனம் வடிவம் வருமாயின் அப்பகுதியினை ஓர் இலக்கண வடிவம் எனலாம். தமிழில் ‘பழங்கள்’, ‘மரம்’ என்பன அதே பொருளில் பல இடங்களில் வழங்கப் பெறுவதால் இவற்றை இலக்கண வடிவங்களாகக் கொள்ளலாம். இதனை அடுத்த நிலையில் இலக்கண தினை மேலும்பொருள் தரும் வடிவங்களாகப் பகுக்க முடியுமா எனவும், பகுக்க முடியுமாயின் இலக்கண வடிவத்தினைப் பகுப்பதால் கிடைக்கப் பெறும் பகுதிகள் மொழியில் எவ்வா இடங்களிலும் ஒரே பொருளில் வழங்கப் பெறுகின்றனவா எனவும், இப்பகுதிகள் கட்டும்பொருளின் சேர்க்கை இலக்கண வடிவம் சுட்டும் பொருளுக்கு ணையாக வருகின்றதா எனவும் ஒப்பிட்டுக் கண்டறிய வேண்டும். {{nop}}<noinclude></noinclude> n1cgxcjtmfsnnqom1cz1unznrro8dxf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/645 250 651164 1956889 2026-07-31T07:47:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இலக்கண வடிவத்தினை மேலும் பொருள் தரும் வடிவங்களாகப் பிரிக்க முடியாத நிலையில் அவ்விலக்கண வடிவத்தினை ஓர் உருபாகக் கருதலாம். ‘மரம்’ என்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல் வடிவியல்|617|சொல் வடிவியல்}}</noinclude>இலக்கண வடிவத்தினை மேலும் பொருள் தரும் வடிவங்களாகப் பிரிக்க முடியாத நிலையில் அவ்விலக்கண வடிவத்தினை ஓர் உருபாகக் கருதலாம். ‘மரம்’ என்னும் இலக்கண வடிவம் மேலும் பொருள் தரும் வடிவங்களாகப் பிரிக்கமுடியாது அமைவதால் அது ஓர் உருபாகக் கருதப்படும். இலக்கண வடிவத்தினைப் பொருள் தரும் வடிவங்களாகப் பிரிக்க இயலுமாயின் அவ்விலக்கண வடிவம் கூட்டு வடிவம் எனப்படும். கூட்டு வடிவத்தின் பகுதிகள் அணைத்துச் சூழல்களிலும் அதே பொருளில் வருகின்றனவா என்பதனை மேலும் கண்டறிய வேண்டும். ‘பழங்கள்’ என்பதனைப் ‘பழம்’, ‘கள்’ எனப் பகுக்க இயல்வதால் இதனைக் கூட்டுவடிவமாகப் கருதலாம். ‘பழம்’, ‘கள்’ என்பன அனைத்துச் சூழல்களிலும் பொருளில் மாற்றமின்றி அமைவதாலும் மேலும் பொருள் தரும் வடிவங்களாகப் பிரிக்க முடியாததாலும் இவை தனித்தனி வடிவங்களாகப் பிரிக்க முடியாததாலும் இவை தனித்தனி உருபுகளாகக் கருதப்படுகின்றன. இங்ஙனம் ஒவ்வொரு இலக்கண வடிவங்களையும் பிற வடிவங்களோடு ஒப்பிட்டு மொழியிலுள்ள அனைத்து உருபுகளையும் பகுத்துக்காண முடியும். உருபுகளைப் பகுத்துக் கண்ட பின்னரே உருபன்களையும் மாற்றுருபுகளையும் கண்டறிதல் இயலும். <b>உருபு, மாற்றுருபு, உருபன்</b>: உரூபன்களைக் கண்டறியும் முயற்சியில் முதலில் பகுத்துக் காணப்பெறுவது உருபுதான் (Morph). மொழியிலுள்ள பொருள் தரும் மிகச் சிறிய வடிவங்கள் உருபுகள் எனப்படும். இவ்வுருபுகளைச் சுட்டும் வகையில் அமைக்கப்பெறும் குறியீட்டு வடிவங்களே உருபன்கள் எனப்படும். ஒவ்வொரு உருபனும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உருபுகளைக் கொண்டமையும். ஓர் உருபனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உருபுகள் அமையும் நிலையில் அவ்வுருபுகள் மாற்றுருபுகள் (Allamorphs) எனச்சுட்டப்பெறும், உருபனின் தனித் தனி வருகை உருபெனவும், ஓர் உருபனின் வெவ்வேறு வடிவங்களை மாற்றுருபுகள் எனவும் குறிப்பிடலாம். தமிழில் ‘வாய்’ என்ற உருபனுக்கு ‘வாய்’ என்ற ஒரே மாற்றுருபுதான் உண்டு. ஆனால் ‘கல்’ என்ற உருபனுக்கு ‘கற்’ ‘கல்’ என்னும் இரண்டு மாற்றுருபுகள் உண்டு. இரண்டு உருபுகள் வேற்றுநிலை வழக்கில் (Contast) வரும்பொழுது அவை ஓர் உருபனின் மாற்றுருபுகளாகக் கருதப்படுவதில்லை. ‘பழங்கள்’ ‘மரங்கள்’ என்பதில் ‘பழம்’, ‘மரம்’ என்பன வேற்று நிலை வழக்கில் வருவதால் இவ்விரண்டும் வெவ்வேறு உருபன்களின் மாற்றுருபுகளாகக் கருதப்படும். ‘கற்குடம்’, ‘கல் விடு’ என்பதில் ஒரே பொருளைத் தரும் ‘கற்’, ‘கல்’ என்னும் உருபுகள் துணை நிலை வழக்கில் (Complementary distribution) வருகின்றமையால் இவ்விரண்டும் ஒரே உருபனின் மாற்றுருபுகளாகக் கருதப்படும். ஈண்டுக் ‘கற்’ என்னும் மாற்றுருபு வல்லொலிக்கு முன்னரும், ‘கல்’ என்னும் மாற்றுருபு அரையுயிருக்கு (Semi vowel) முன்னரும் வந்து துணைநிலை வழக்கில் அமையப் பெற்றுள்ளன. சில சூழல்களில் மாற்றுருபுகள் உறழ்ச்சியில் (Free variation) வருவதுண்டு. உருபன்களைக் கண்டறியும் நிலையில் முதன்முதலில் பொருள் தரும் மிகச் சிறிய வடிவம் உருபெனவும், இவ்வுருபினைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பெறும் குறியீட்டு வடிவம் உருபன் எனவும், உருபனுக்குரிய உருபு மாற்றுருபு எனவும் சுட்டப் பெறும். உருபனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மாற்றுரு புகள் அமையும் நிலையில் இவ்வுருபுகள் ஒன்று வருமிடத்தில் பிறிதொன்று வாராது துணைநிலை வழக்கில் அமையும். ஒரே பொருளைச் சுட்டி வடிவால் வேறுபட்டமையும் மாற்றுருபுகளின் வடிவ வேறுபாட்டிற்கு ஒலியனோ உருபனோ சூழலாக அமையலாம். ஓர் உருபனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மாற்றுருபுகள் இருக்கும் நிலையில் ஒன்றை அடிப்படை வடிவமாக (Basic form) எடுத்துக் கொண்டு மற்றவற்றை அடிப்படை வடிவத்திலிருந்து வருவித்துக்காட்டுதல் வேண்டும். மாற்றுருபுகளை எளிமையாகவும், சுருக்கமாகவும் விளக்கப் பயன்படும் வடிவத்தையே அடிப்படை வடிவாகத் தெரிவு செய்தல் வேண்டும். ஓர் உருபனின் மாற்றுருபுகளை நிருணவிக்கும் போது பல்வேறு ஒலிமாற்றங்களைப் பயன்படுத்தலாம். இயல்பு மாற்றம் (Atomatic Alternation), இயல்பில்லா மாற்றம் (Non-Automatic Alternation), முறை மாற்றம் (Regular Alternation), முறையில்லா மாற்றம் (Irregular Alternation) ஓரினமாதல் (Assimilation), வேறினமாதல் (Dissimilation) போன்ற மாற்றங்கள் காரணமாக ஓர் உருபனுக்குப் பல்வேறு மாற்றுருபுகள் அமைய இடமுண்டு (காண்க: உருபொலியனியல் அமைப்பு). <b>உருபன்களைக் கண்டறிதல்</b>: நைடா என்னும் மொழிவியல் அறிஞர் மொழியின்கண் காணப்பெறும்<noinclude></noinclude> mhxwahltgzfxza39l766wp5qzdsyk7p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/646 250 651165 1956890 2026-07-31T07:58:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருபன்களைக் கண்டறிய ஆறு கொள்கைகளைக் குறிப்பிடுகின்றார். அனைத்துச் சூழல்களிலும் ஒரே பொருளைச் சுட்டும் முழுதொத்த ஒலியன் வடிவுடைய உருப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல் வடிவியல்|618|சொல் வடிவியல்}}</noinclude>உருபன்களைக் கண்டறிய ஆறு கொள்கைகளைக் குறிப்பிடுகின்றார். அனைத்துச் சூழல்களிலும் ஒரே பொருளைச் சுட்டும் முழுதொத்த ஒலியன் வடிவுடைய உருபுகள் எல்லாம் ஒரே உருபனாகக் கருதப்படும். ‘கண்கள்’, ‘வீடுகள்’, ‘வேர்கள்’, என்பனவற்றில் வரும் ‘கள்’ என்னும் பன்மைக் குறியீடு வடிவாலும் பொருளாலும் ஒத்திருப்பதால் ஒரே உருபனாகக் கருதப்படுகின்றது. வடிவால் வேறுபட்டுப் பொருளால் ஒத்து வருகின்ற உருபுகளின் வடிவ வேறுபாட்டினை உருபன்களின் சூழ்நிலையால் விளக்கப்பெறும் நிலையில் அவ்வுருபுகளை ஒரே உருபனைச் சார்ந்தவைகளாகக் கருதலாம். ‘வா’-, ‘வரு’-, ‘வ-’ ஆகிய மூன்றும் ஒரே பொருளைக் குறிக்கும் நிலையில் இவற்றின் வடிவ வேறுபாட்டினை உருபன்களின் சூழலால் விளக்குதல் இயலும். ‘வ-’ என்னும் உருபு இறந்தகால உருபனுக்கு முன்னரும் (வ-ந்த்-ஆர்), ‘வரு-’ என்னும் உருபு நிகழ்கால உருபனுக்கு முன்னரும் (வரு-கிறு-ஆர்), எதிர்கால உருபனுக்கு முன்னரும் (வரு-வ்-ஆர்) வருகின்றது. ‘வா-’ என்னும் உருபு இவை அல்லாச் சூழலில் வருகின்றது. இங்ஙனம் உருபன்களின் சூழ்நிலையால் வடிவ வேறுபாட்டையும் உருபுகளையும் ஒரே உருபனைச் சார்ந்தனவாகக் கருதலாம். பொருளாலும் வடிவாலும் வேறுபட்டு வரும் உருபுகளில் வெளிப்படையான வடிவ வேறுபாடும் உருவிலாக் கட்டமைப்பும் முறையே இருப்பின் வெளிப்படையான வடிவ வேறுபாட்டினை ஓர் உருபனாகக் கருதலாம். ஆங்கிலத்தில் Feet / fiyt / என்னும் பன்மை வடிவத்தில் பன்மையைக் குறிக்கும் குறியீடு இல்லை. கட்டமைப்புக் கருதி ஈண்டு இன்மை வடிவமே (Zero form) பன்மையைக் குறிக்கின்றது எனக் கொள்ளுதல் வேண்டும். எனினும் / fiyt / என்பதன் ஒருமை வடிவமாகிய foot / fut / என்பதற்கு / fiyt / என்பதற்குமிடையே காணப்படும் வடிவ வேற்றுமையினைப் புறக்கணித்தல் இயலாது. இந்த வடிவ வேறுபாட்டையும் (u>iy) ஓர் உருபனாகக் கருதலாம். தமிழில் பெறு, பேறு என்பவற்றுக்கிடையே காணப்பெறும் வடிவ வேறுபாட்டையும் இத்தகைய உருபனாகக் கருத இடமுண்டு. தொடர்பில்லாத பொருளையுடைய பல பொருள் ஒருசொல்லை வெவ்வேறு உருபனாகவும் தொடர்புடைப் பொருளுடைய பல பொருள் ஒரு சொல்லை ஒரே உருபனாகவும் கருதுதல் வேண்டும். ‘படி’ என்னும் சொல் வாயிற்படி என்னும் பொருளையும் கற்றல் என்னும் பொருளையும் குறிக்கும் நிலையில் இவற்றை இரு வேறு உருபன்களாகக் கொள்ளுதல் வேண்டும். ‘அடி’ என்னும் சொல் அடி என்னும் பெயராகவும், அடித்தல் என்னும் வினையாகவும் செயற்படும் நிலையில் அவற்றிடையே காணப்பெறும் பொருள் தொடர்பு காரணமாக அவற்றை ஓர் உருபனுக்குள் அடக்குதல் வேண்டும். தனித்து வரும் உருபுகளையும், உருபுகள் இணைந்து வரும் நிலையில் அவ்விணைப்பில் ஓர் உருபு தனித்து, அல்லது பிற உருபுகளுடன் இணைந்து வரும் நிலையில் அவ்வுருபுகளையும் தனித்தனி உருபன்களாகக் கருதுதல் வேண்டும். ‘பார்’ (நீ பார்) ‘கேள்’ (நீ கேள்) போல்வன தனித்து வருவதால் அவை தனித்தனி உருபன்களாகும். ‘வாழ்க்கை’, ‘சேர்க்கை’ என்பனவற்றில் வரும் ‘கை’ என்னும் உருபு தனித்து வாரா நிலையிலூம் ‘வாழ்’, ‘சேர்’ என்பன தனித்து வருவதால் இது தனி உருபனாகக் கருதப்படுகின்றன. ஆனால் ‘கை’ என்னும் உருபோடு இணைவன எல்லாம் தனித்து வரவேண்டுமென்பதில்லை. சில உருபுகள் ஒரே இணைப்பில் தான் வரும். ‘பிள்ளைத் தாய்ச்சி’ என்பதில் வரும் தாய்ச்சி. இந்த இணைப்பில் மட்டுமே வருகின்றது. ஆனால், ‘பிள்ளை’ என்பது தனித்தும் பிற இணைப்பிலும் வருவதால் ‘தாய்ச்சி’ என்பது ஓர் உருபனாகக் கருதப்படுகின்றது. மேலும் இல்வுருபன் ஒரே ஒரு இணைப்பில் மட்டும் வருவதால் இது ஓரிட வருகை உருபன் (Unique morpheme) எனப்படும். <b>உருபன் வகைகள்</b>: மொழியின் கண்ணுள்ள அனைத்து உருபன்களையும் அவற்றின் உள்ளமைப்பு, பிற உருபன்களோடு அவை கொண்டுள்ள தொடர்பு ஆகிய அடிப்படைகளில் பல்வேறு வகையினவாக வகைப்படுத்துதல் இயலும் (காண்க: உருபன் வகைகள்) <b>சொல் வகைகள்</b>: மொழியின் சொற்களில் காணப்பெறும் அனைத்து உருபன்களையும் அடி உருபன்கள் (Stem morphemes) எனவும், அடி அல் உருபன்கள் (Non-stem morphemes) எனவும் இரண்டாகப் பகுக்கலாம். ஒரு மொழியிலுள்ள அடி உருபன்களை சொல் திரிபுப் பண்பு (Inflectional behaviour) அடிப்படையிலும் தொடரியல் பண்பு (Syatactical behaviour) அடிப்படையிலும் பாகுபாடு செய்வதே சொல்வகைப் பாகுபாடு (Parts of speech Classification) எனப்படும். தமிழில் வேற்றுமை உருபாகிய சொல்திரிபு உருபுகளை (Inflectional affixes) ஏற்றுவரும் அடி உருபன் பெயர் எனவும், கால இடைநிலைகளாகிய<noinclude></noinclude> ajl9xz18bkwqxv4ffndclfjahybcuex பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/647 250 651166 1956891 2026-07-31T08:11:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொல்திரிபு உருபுகளை ஏற்றுவரும் அடி உருபன் வினை எனவும், சொல்திரிபு உருபுகளை ஏற்காமல் பெயரைச் சிறப்பித்துவரும் அடி உருபன் பெயரடை எனவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல் வடிவியல்|619|சொல் வடிவியல்}}</noinclude>சொல்திரிபு உருபுகளை ஏற்றுவரும் அடி உருபன் வினை எனவும், சொல்திரிபு உருபுகளை ஏற்காமல் பெயரைச் சிறப்பித்துவரும் அடி உருபன் பெயரடை எனவும். சொல்திரிபு உருபுகளை ஏற்காமல் வினையைச் சிறப்பித்து வரும் அடி உருபன் வினையடை எனவும், தொடர்நிலையில் அமையும் சொல் வேறுபாட்டு உருபன்களை ஏற்காத அடி உருபன் (Uninflected stem) ஒருநிலைச் சொல் (Particle) எனவும் ஐந்து வகையான சொல்வகைகள் காணப்படுகின்றன. <b>சொல்வடிவியல் செயற்பாடுகள்</b>: சொல்வடிவியல் செயற்பாடுகளாசிய ஆக்கம் (Derivation). திரிபு (Inflection) ஆகியவற்றின் அடிப்படையில் சொல் வடிவியல் சொல்லாக்கச் சொல்வடிவியல் (Derivational morphology) எனவும், சொல் திரிபுச் சொல் வடிவியல் (Inflectional morphology) எனவும் இரு வகையாகப் பாகுபாடு செய்யப்பெறும். அடிச்சொல்லுக்குள்ளே மாற்றம் நிகழ்வதன் வாயிலாகவும் (பாடு > பட்டு), அடிச்சொல்லுடன் சொல்லாக்க உருபினை (Derivational affix) இணைப்பதன் வாயிலாகவும் (செய் + கை), அடிச்சொல்லுடன் பிறிதோர் அடிச்சொல்லை இணைப்பதன் வாயிலாகவும் (பொன் + குடம் சொல்லாக்கம் நிகழப்பெறுகின்றது. அடிச்சொல்லுடன் சொல்திரிபு உருபினை இணைப்பதன் வாயிலாகச் (கல்+ஐ) சொல்திரிபு ஏற்படுகின்றது. சொல்திரிபு வாக்கியத்தில் காணப்பெறும் சொற்களுக்கிடையேயுள்ள தொடரியல் உறவினைப புலப்படுத்தி நிற்கும். <b>இலக்கணக் கூறுகள்</b>: இலக்கணப் பொருளைச் கட்டி, அகராதிப்பொருள் தரும் அடி உருபன்களின் பொருளைச் சிறப்பித்து நிற்கும் உருபன்களே இலக்கணக் கூறுகள் (Grammatical categories) எனப்படும். இலக்கணக்கூறுகளை அவற்றின் பயன் அடிப்படையில் பொதுவகை இலக்கணக் கூறு எனவும், சிறப்பு வக இலக்கணக்கூறு எனவும் இரண்டாகப் பகுக்கலாம். சிறப்பு வகை இலக்கணக்கூறு பொதுவகை இலக்கணக் கூறின் ஓர் அங்கமாக அமையப்பெறும். <b>உருபன் வரன்முறை</b>: உருபன்கள் சொல்லமைப்பில் ஒன்றையடுத்து மற்றொன்று அமையும் முறையே உருபன்களின் வரன்முறை எனப்படும். அனைத்து மொழிகளிலுள்ள சொல்லமைப்புகளில் உருபன்கள் சொல்லாக்கம், சொல்திரிபு என்னும் இரு முறைகளில் அமைகின்றன. இவ்விரு முறைகளும் சொல்லமைப்பினைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமன்றி இலக்கண விதிமுறைகளையும் அவ்விதி முறைகளில் பயன்படும் சொல்வகைகள், இலக்கணக் கூறுகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன. சொல்லமைப்பில் உருபன்கள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில்தால் அமையப்பெறும், தமிழில் பெயர்ச்சொற்களைப் பொறுத்த மட்டிலும் அடிச்சொல்லுடன் எண், பால் ஆகியவற்றைக் குறிக்கும் உருபுகள் இணையப் பெற்றும் (மரம்+கல்) வினைச் சொற்களைப் பொறுத்த மட்டினும் அடிச்சொல்லுடன் கால இடைநிலைகள் அல்லது எதிர்மறை இடைநிலைகள், இடக்குறியீடுகள், எண், பால் குறியீடுகள் ஆகியன இணையப்பெறும் (வ-ந்த்-ஆ-ன்; வார்-ஆ-ன்) அமையப்பெறும். தமிழில் பெரும்பாலும் ஒருநிலைச்சொற்கள் சொல்முடிப்பு உருபன்களாகச் (Word closing morphemes) செயற்படுகின்றன. உருபன்களின் மாற்றுருபுகளை விவரிக்கும் முறையில் விதிமுறை (Item and process), சேர்க்கை முறை (Item and arrangement), சொல்லடுக்கு முறை (Word and paradigm) ஆகிய முறைகள் கையாளப்பெறும். <b>விதிமுறை</b>: ஓர் உருபனுக்குப் பல்வேறு மாற்றுருபுகள் இருக்கும் நிலையில் அவற்றுள் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஏனையவற்றைப் பல விதிகளால் அடிப்படை வடிவத்திலிருந்து வருவிப்பதே விதிமுறையின் அடிப்படையாகும். விதிமுறையில் இறந்தகால உருபுகளாகிய ‘த்’, ‘ட்’, ‘ற்’, ஆகியவற்றைத் தனித்தனி உருபுகளாகக் கருதாமல் ‘த்’ என்பதனை அடிப்படை வடிவமாகக் கொண்டு அதிலிருந்து ‘ட்’, ‘ற்’ ஆகியவற்றை உருவாக்கி (ண்+த்>ண்ட்; ன்+த்>ன்ற்) விளக்கப்பெறும், இம்முறையில் ஒட்டுகளை இணைத்தல் (Affixation). இரட்டிப்பு (Reduplication) மாற்றம் (Modification) போன்ற பல்வேறு செயல்முறைகள் பயன்படுத்தப் பெறும். உருபன்களை ஆராயும் முறையில் விதி முறையே பழமையானது. <b>சேர்க்கைமுறை</b>: சொல்லின் அமைப்பினை விவரிக்கும் நிலையில் அதன்கண் காணப்பெறும் உருபன்களையும் அவை எத்தகைய வரிசை முறையில் அண்மையுறுப்புகளாக (Immediate Constituents) அமையப் பெற்றுள்ளன என்பதனையும் சேர்க்கைமுறை விளக்கும். சேர்க்கை முறையில் தமிழ் வினைச்சொற்கள் அடிச்சொல் - காலம்/எதிர்மறை - இடம் - எண் - பால் (பார்-தி-ஆ-ன்) என்ற வரிசைமுறையில் விளக்கப் பெறும். இம்முறையில் ஒவ்வொரு பொருட்கூறும்<noinclude></noinclude> pqor8eu76nd1fxbr0l82tvyu9y4b2z8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/648 250 651167 1956892 2026-07-31T08:22:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனித்தனியான உருபன்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் பொருட்கூறுகளைக் குறிக்க உருபன்கள் இல்லாத நிலையில் இன்மை வடிவம் (வார்-ஆ-ன்) அமைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சொல் வடிவியல்|620|சொலூட்ரியன் தொழிற்கூடம்}}</noinclude>தனித்தனியான உருபன்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் பொருட்கூறுகளைக் குறிக்க உருபன்கள் இல்லாத நிலையில் இன்மை வடிவம் (வார்-ஆ-ன்) அமைக்கப்பெறும் <b>சொல்லடுக்கு முறை</b>: சொற்களை அடிப்படை அலகுகளாகக் கொண்டு, சொல்லடுக்குகளின் (Paradigm வாயிலாகச் சொல்லியல் நுட்பங்களைத் தெளிவுபடுத் முறையே சொல்லடுக்கு முறை எனப்படும். ‘மரம்’, ‘மரங்கள்’ என்னும் இரண்டு சொற்களும் ஒரே சொல்லடுக்கில் அமையும் சொற்கள். இச்சொல்லடுக்கில் ‘மரம்’ என்னும் வடிவமே அடிப்படை வாய்பாட்டு வடிவமாகக் கருதப்படும். சொல்லடுக்கில் வாய்பாட்டு வடிவம் தவிர்ந்த பிற சொல்வடிவங்கள் சொல்திரிபு வடிவங்கள் எனப்படும். தமிழில் பெரும்பான்மையான சொல்லடுக்கில் காணப்பெறும் சொற்கள் விகுதிகளாகிய ஒட்டுகளை அடிச்சொற்களோடு இணைப்பதன் வாயிலாக வேறுபட்டமைகின்றன.{{Right|<b>ஏ.ஆ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bloomfield L.,</b> Language, New York, 1933.<br> <b>Glesson, A.H.,</b> An Introduction to Descriptive Linguistics, New York, 1955.<br> <b>Mathews, P.H.,</b> Morphology, Cambridge University Press, London, 1974.<br> <b>Nida,E,A.,</b> Morphology, the descriptive Analysis of words, Michigan University press, Michigan, 1949.<br> <b>Israel, M.,</b> The Treatment of Morphology in Tolkappiyam Madurai University, Madurai, 1973. <section end="சொல்வடிவியல்"/> <section begin="சொலூட்ரியன் தொழிற்கூடம்"/> {{dhr}} <b>சொலூட்ரியன் தொழிற்கூடம்,</b> தென் மேற்குப் பிரான்சில் நிலவிய பழங்கற்காலத் தொழிற் கூடமாகும். கடைப் பழங்கற்கால மனிதன் இப்பகுதியில் நேர்த்தியான கற்கருவிகளைச் செய்து பயன்படுத்தினான். அவர்கள் பல்வகையான கருவிகளைப் பயன்படுத்தினர். அலகுகள், துளைப்பான் (Borers) போன்ற கருவிகள் குறிப்பிடத்தக்கவை. சொலூட்ரியன் தொழிற்கூடம் (Solutrean Industry) மிகக் குறைந்த காலமே இப்பகுதியில் இருந்தது. அலகுகள் புன்னை இலை வடிவத்தைக் கொண்டு விளங்கின. சொலூாட்லியன் தொழில்நுட்பக் கருவிகல் முதலில் ஒருமுக வெட்டுப் பகுதியைக் கொண்டு விளங்கின. இடைக்காலச் சொலூட்ரியன் கருவிகளுள் புன்னை இலை வடிவ அலகுகளே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. பின்னர் இவை இருமுக வெட்டுப் பகுதிகள் கொண்ட கருவிகளாகச் செய்யப்பட்டன. எலும்பினால் செய்யப்பட்ட கருவிகளும் மரத்தால் செய்யப்பட்ட கருவிகளும் இத்தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்கவை. எலும்பு ஆடைகளைத் தைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தொழிற்கூட மக்கள் புடைப்புச் சிற்பங்களைச் செதுக்கினர்; குகைச் சுவர்களிலும் கற்பலகைகளிலும் ஓவியங்களைத் தீட்டினர். பல கருவிகள் வண்ணக் சுற்களாலும் மணிக் கல்வகைகளாலும் செய்யப்பட்டன. சொலூட்ரியன் தொழில்நுட்பம் பிரான்சில் தோன்றியதே என்று ஒரு சிலரும் பிரான்சிற்குக் குடியேறிய புதிய மக்களால் தோற்றுவிக்கப்பட்டதே என்று வேறு சிலரும் கூறுகின்றனர். சொலூட்ரியன் தொழில்நுட்பத்தை அடுத்துப் பெரிகோர்டியன், ஆரிக்னேசியன் (Perigordian and Aurignacican) தொழில் துட்பங்கள் தோன்றின. இவற்றை அடுத்து மெக்தலேனியன் (Magdalenian) தொழில் நுட்பம் தோன்றியது.{{Right|<b>சு.இரா.</b>}} {{nop}}<noinclude></noinclude> 82mc7qff849y1uco35d1lqz8o9v7ozh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/649 250 651168 1956893 2026-07-31T08:35:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சொலூட்ரியன் தொழிற்கூடம்"/> <section begin="சோ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சோ}} ச கரத்திற்கும் ஓ காரத்திற்கும் உரிய குறிப்புகளைப் பார்க்கவும். |- |சொ காரத்திற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="சொலூட்ரியன் தொழிற்கூடம்"/> <section begin="சோ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சோ}} ச கரத்திற்கும் ஓ காரத்திற்கும் உரிய குறிப்புகளைப் பார்க்கவும். |- |சொ காரத்திற்குக் கொடுக்கப்பட்ட உருவ வரலாறு இதற்கும் பொருந்தும். || ... || ... || .... || ... |- |புள்ளி இடப்படவில்லை புள்ளி இடும் வழக்கத்தை ஒழுங்காகப் பயிலாததால் மொழி அறிவை ஒட்டியே வாசித்து அறியப்பட வேண்டியிருக்கிறது. || ... || ... || ... || ... |- |கெ,செ,கே,சே என்ற எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்கவும், வீரமாமுனிவர் நெடிலுக்கு உரிய மேல் வளைவை அளித்தார் என்பது சொல்லப்படுகிறது. || ... || ... || ... || ... |- |} {{Right|கே.ஜி.கி.}} <section end="சோ"/> <section begin="சோக்கு நீர்வீழ்ச்சி"/> {{dhr}} <b>சோக்கு நீர்வீழ்ச்சி,</b> கருநாடக மாநிலத்தில் உள்ளதொரு நீர்வீழ்ச்சி, இது கெருசோப்பா நீர் வீழ்ச்சி (Gersoppa Falls) என்றும் கூறப்படும். சோக்கு நீர்வீழ்ச்சி (Jog Falls) சாராவதி (Sharavati) ஆற்றின் நீர்வீழ்ச்சியாகும். இது உத்தர் கண்ணாடு (Ottar Kannad) மாவட்டத்தின் அனாவர் (Honavar) என்ற இடத்திலுள்ள ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து 29 கி.மீ. நீளமுள்ளது. இந்நீர்வீழ்ச்சி மலை உச்சியிலிருந்து 253 மீ. நீர் வீழ்ச்சியாக வீழ்கிறது. இந்நீர்வீழ்ச்சி நான்கு பிரிவுகளாக விழுகிறது. ஒவ்வொன்றும் இராசா, உரோரர் (Roarer), இராணி, இரசக்கட்டு (Rocket) எனக் கூறப்படுகிறது. இந்நீர்வீழ்ச்சி விழுகின்ற அழகை ஆற்றின் இருமருங்கிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் காண்கின்றனர். சோக்கு நீர்வீழ்ச்சியில் நீர் மின்சக்தி எடுக்கும் முயற்சிகள் நடந்த வருகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 649 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 135 |oTop = 255 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|சோக்கு நீர்வீழ்ச்சி}} <section end="சோக்கு நீர்வீழ்ச்சி"/> <section begin="சோகன் பாணி "/> {{dhr}} <b>சோகன் பாணி</b> சப்பானில் தொடக்க கியன் காலத்தில் கி.பி. 794 முதல் கி.பி. 897 முடியச் சிற்பக் கலையில் பின்பற்றப்பட்ட பாணியாகும். பெளத்த மதச் சிற்பங்கள் இக்காலத்தில் சோகன் பாணியைப் (Jogan Style) பின்பற்றிச் செதுக்கப்பட்டன. புத்தரின் சிற்பங்கள் மிக்க வனப்புடன் இக்காலத்தில் செய்யப்பட்டன. இப்பாணியில் புத்தரின் சிற்பங்கள் வட்ட வடிவமான முகத்துடனும் தளதளப்பான மார்புகளுடனும் தடித்த உதடுகளுடனும் அகன்ற மூக்குடனும் கண்களுடனும் காணப்பட்டன. மரச்சிற்பங்கள் இக்காலத்தில் மிகுதியாகச் செய்யப்பட்டன. {{nop}}<noinclude></noinclude> obdlws1dqf7tg0gsfr4tdvvrgu8fo0o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/650 250 651169 1956894 2026-07-31T08:51:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சோகன் பாணிச் சிற்பங்களில் அலை அலையான அணிவகைகள் செதுக்கப்பட்டன. அதனால் ஆடைகள் மடிப்பு மடிப்பாகக் காணப்படுகின்றன. மடிப்புகளுக்கு இடைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1956894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோகாக்பூர்|622|சோகா-சாம்பில்}}</noinclude>சோகன் பாணிச் சிற்பங்களில் அலை அலையான அணிவகைகள் செதுக்கப்பட்டன. அதனால் ஆடைகள் மடிப்பு மடிப்பாகக் காணப்படுகின்றன. மடிப்புகளுக்கு இடைப்பட்ட பகுதி மிக ஆழமாகக் காணப்படுகிறது. இப்பாணி ஆப்கானிசுத்தானத்தில் பாமியன் என்ற இடத்தில் உள்ள புத்தரின் சிற்பத்திலும் காணப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 650 |bSize = 375 |cWidth = 115 |cHeight = 135 |oTop = 92 |oLeft = 37 |Location = center |Description = }} {{center|சோகன்பாணி மரச்சிற்பம்}} இக்கலைப் பாணியைப் பௌத்தமதப் புனிதப் பயணிகள் சப்பானுக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும். இக்கலைப்பாணி பௌத்தக் கடவுளர்களின் சிற்பங்களில் மட்டும் அல்லாமல் சிந்தோ (Shinto) கடவுளர்களின் சிற்பங்களிலும் காணபடுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சோகன் பாணி"/> <section begin="சோகாக்பூர்"/> {{dhr}} <b>சோகாக்பூர்,</b> மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இது முன்பு இரேவா (Rewa) சிற்றரகப் பகுதியில் இருந்தது, இது கோயிற் கட்டடக்கலைச் சிறப்புப் பெற்ற ஊராகும். இங்குள்ள, ஐகேயர் கோயில் வீரட்டேசுவரன் எனக் கூறப்படும் சிவனுக்குரியது. சோகாக்பூர் (Sohagpur) சுகேயர் கோயிலின் கூரை கூம்பு வடிவமானது. இக்கோயில் சந்தேலர், சௌகான், பரமார அரசர் ஆகியோரின் பேராதரவைப் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயிலின் சிற்பங்கள் மிக அழகானவை, கசுராகோவின் இளங் காதலர் சிற்பங்கள் போன்று இக்கோயிலிலும் அவ்வகைச் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் மாடக்குழிகளில் பல கைகளைக் கொண்ட சிவனுடைய நடனச் சிற்பம் ஒன்று மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் அருகில் அமர்ந்த நிலையிலுள்ள பார்வதியின் சிற்பம் உள்ளது. மணப்பெண்ணை அலங்கரிக்கும் சிற்பமும் கண்ணாடியைப் பார்த்து முகப்பூச்சுப் பூசும் பெண்ணின் சிற்பமும், காலில் பட்ட முள்ளை எடுக்கும் சிற்பமும் இங்குள்ள சிற்பங்களுள் மிக நேர்த்தியானவை.{{Right|<b>சு.இரா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 650 |bSize = 375 |cWidth = 156 |cHeight = 160 |oTop = 36 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|வீரட்டேசுவரன் கோயில்}} <section end="சோகாக்பூர்"/> <section begin="சோகா—சாம்பில்"/> {{dhr}} <b>சோகா—சாம்பில்</b>ஈலாமியர்களின் தொன்மையான ஊர். இது சூசாவிற்கு அருகில் உள்ளது. முற்காலத்தில் இது தூர் உண்டசி (Duruntashi) எனக்கூறப்பட்டது. இப்பொழுது ஈரானில் குசிசுத்தான் (Khusistan) பகுதியில் சோகா-சாம்பில்(Choga-zambil) அமைந்துள்ளது. ஈலாமியர்களின் தொன்மைச் சின்னங்கள் இவ்வூரில் உள்ளன. இவை கி.மு. 1500க்கும் கி.மு.1000க்கும் இடைப்பட்ட காலத்தவை. இங்கு ஈலாமிய அரசர் உண்டாசு-கால் (Untash-Gal) {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 650 |bSize = 375 |cWidth = 156 |cHeight = 98 |oTop = 335 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|சோகா- சாம்பில்}}<noinclude></noinclude> r5mw4cta2fi70lnx9wvi91b2ewpzny6